-
15th November 2020, 06:46 PM
#11
Senior Member
Devoted Hubber
வசூல் சக்ரவர்த்தி அய்யன்தான் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
கருப்பு வெள்ளை படங்களில், இன்றளவும் எவராலும் முந்திட முடியாத வசூல் படம், அய்யனின் பட்டிக்காடா பட்டணமா மட்டுமே.
வண்ண படங்களில் இன்றளவும் வசூலில் சக்ரவர்த்தியாக திகழ்வது அய்யனின் திரிசூலம்தான்.
திரு.எம்ஜி.ஆர் அவர்களின் படங்களும் வெற்றிகள் பெற்றன. ஆனால், எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களின் வெற்றியை மிக பிரமாண்டமான வெற்றி என்று மக்களிடம் மிகை படுத்தி சொன்னவர்கள், திராவிட கட்சியை வளர்ப்பதற்காக மேடைகள் தோறும் கூச்சமின்றி முழங்கியவர்கள். அதை மக்களும் நம்பினார்கள்.
உண்மையில் அய்யனின் படங்களை விட திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் படம்தான் வசூலில் உயர்வு என்றால், பெரிய நிறுவனங்கள், உயர்ந்த இயக்குன்கள் திரு.எம்.ஜி.ஆர் அவர்களை படம் எடுப்பதற்காக ஏன் அணுகவில்லை? என்பது ஆயிரம் கேள்விகள்.
திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் அய்யனின் படங்களை விட உயர்வான வசூல் என்றால், திரு. எம்.ஜி. ஆர் அவர்களின் படங்களின் எண்ணிக்கை அய்யனின் படங்களின் எண்ணிக்கையை விட ஏன் ?குறைந்தது என்ற கேள்விகளும் எழுகின்றது.
எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களும் வசூலித்தது. ஆனால் வசூலில் அய்யனின் படங்களை வென்றது என்பதை ஏற்க முடியாது.
அய்யனுக்கு முன்பே திரை உலகம் கண்ட திரு. எம்.ஜி.ஆர் அவர்ளை பிறகு வந்த அய்யன் அவர்கள் முந்தி செல்ல காரணம், அய்யன்தான் உண்மையான வசூல் ராஜா என்பதே சாட்சி.
மணமிருக்கும் மலர்களையே வண்டுகள் மொய்க்கின்றன. வியாபாரம், நல்ல லாபமும் ஈட்டுகின்ற பொருள்களுக்கே தேவைகள் கூடுகின்றன. நல்ல பொருள்களே சந்தையை அலங்கரிக்கின்றது.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு கொள்கையை கடைபிடித்தார்கள். அதாவது, தனது படமானது ஓரவிற்கு ஓடிய பிறகே தனது அடுத்த படத்தை வெளியிட செய்வார்கள்.
ஆனால் அய்யனின் படங்கள் வெளியிட பட்டுக்கொண்டே இருக்கும். காரணம், அய்யனின் படங்களின் அசையாத வசூல் நம்பிக்கை.
திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் பி சென்றர்களிலும், அதிகமாக சி சென்றர்களிலுமே அதிகமாக ஓடும். எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் விளம்பரமாவதற்கு இந்த பி , சி சென்றரகளும் ஒரு காரணமே.
அய்யனின் படங்கள் எ , பி சென்றர்களிலே அதிகமாக வெற்றியை சூடியது என்பதும் ஒரு காரணம்.
அய்யனின் படங்களின் வெற்றிகள் மேடைகளின் முழங்கவில்லை. அதற்கான தேவையும் இருந்ததில்லை.
திரு.எம்.ஜி.ஆர் அர்களின் படங்கள் மேடைகளிலே மிகையாக முழங்கப்பட்டது. அதனால் மக்களும், விவேக் போன்ற நாய்களும் நம்பின. நம்புகின்றனர்.
திரை உலகில் அய்யன், திரு. எம்.ஜி.ஆர் இவர்களின் காலங்களில் வசூலின் சரித்திரங்களை கண்டது அய்யனின் சித்திரங்களே என்பதை மறுப்பவர்கள், தங்களையே தாங்கள் ஏமாற்றுகின்றார்கள். நன்றிகள்.
Thanks Selvaraj.f
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th November 2020 06:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks