மதுரை சென்ட்ரல் தியேட்டர் பகுதி,
நடிகர்திலகத்தின் ரசிகர்களால்
திருவிழா கோலம் பூண்டது.

ஆம், இதயங்களே,
மாலை 5.30 மணியிலிருந்து ரசிகர்கள் தியேட்டர்
நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள்.

நான் செல்வதற்கு சிறிது காலதாமதமாகி விட்டது, என்னால் தியேட்டருக்குள் செல்ல முடியவில்லை, அந்தளவிற்கு தியேட்டர் வாசலில் ரசிகர்கள் கூடியிருந்தார்கள்.

அனைவருடைய முகத்திலும் சந்தோசம் தாண்டவமாடியது..... தலைவனை பார்க்க் போகிறோம் என்ற எண்ணத்தில்....

குடந்தை M.V.சிவாஜி சேகர் அவர்கள் கொண்டு வந்திருந்த 108 தேங்காயை ரசிகர்கள் ஒவ்வொருவரும், தலைவருக்கு ஆரத்தி சுற்றி உடைத்தனர். தேங்காய் நீரால் அந்த பகுதியே நீர்க்கோலமானது.

மலர் பாண்டியன் அவர்கள், ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

கொரோனா காலமானதால், தியேட்டரில் குறிப்பிட்ட அளவிற்கே டிக்கெட் கொடுக்கப்பட்டது. 6.50 மணிக்கெல்லாம் அரங்கு நிறைந்தது..

இதறகு முன் திரையிட்ட எந்த படமும் செய்யாத
வசூல் சாதனையை படைத்தது ராஜபார்ட் ரங்கதுரை...

இவ்வெற்றிக்கு வித்திட்ட அனைத்து அன்பு இதயங்களுக்கும்,

எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்....


Thanks Sundar Rajan