-
25th December 2011, 07:20 AM
#11
Moderator
Diamond Hubber
ராதா கல்யாணம்-200
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `ராதா கல்யாணம்' தொடர், 200-வது எபிசோடை எட்டுகிறது.
கீர்த்தி தன் தங்கையைப் போல் பாவிக்கும் ராதாவின் வாழ்க்கை மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறாள். அதன் காரணமாகவே ராதாவின் கழுத்தில் இருக்கும் தாலியை அறுத்தெறிந்து அவளுக்கு ஒரு புதிய வாழ்க்கை அமைத்துக் கொடுக்க நினைக்கிறான். ஆனால் ராதாவோ தன் உயிர் போனாலும் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாள்.
ராதாவின் வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருப்பதையும், அதை ராதா மறைப்பதையும் நன்கு உணர்ந்த கீர்த்தி, ராதாவை அவளின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு கீர்த்தியும், ராதாவும் கோவிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, அச்சமயம் குடிகார சேவகனை கீர்த்தி கண்டுவிட கீழே மயங்கி விழுகிறாள். கீர்த்தியை பரிசோதிக்கும் வைத்தியர், கீர்த்தி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கூற, வம்சியின் அம்மா உட்பட அனைவரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆனால் அந்த சந்தோஷத்தை நீடிக்க விடாமல், குழந்தை பெற்றவுடன் கீர்த்தியின் உயிர் பிரிந்துவிடும் என்ற அபாய செய்தியை அவர் கூற, அனைவரும் கலங்கிப் போகிறார்கள்.
ராதாவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்களை உணரும் கீர்த்தி அடிக்கடி மயங்கி விழுகிறாள். ராதாவின் தாலி பற்றிய உண்மையை கீர்த்தி அறிந்தாளா? கீர்த்தியின் உடல் நிலையை வம்சி அறிந்தானா? தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி
-
25th December 2011 07:20 AM
# ADS
Circuit advertisement
Bookmarks