கோலமாவேய் கோலமாவேய்
கூவி வரும் வயசாளியிடம்
பாட்டி கூடையிறக்கச் சொல்லி
தொட்டுப் பார்த்து
என்னடா நறநறப்பு பத்தாதே
ம்ம் இவ்ளோதான் தருவேன்..
பேரம் பேசுவாள்
அவனும் பாதியாய்க் குறைத்தாலும்
வாங்கிச் செல்வான்..
இப்போது எனது பேத்தி
ஆனை விலைக்கு
ப்ளாஸ்டிக் கவரில்
வாங்கி வருகையில்
கோலமாவு விற்பவனின்
அழுக்கு உருவம்
நிழலாடுகிறது கண்ணில்
Bookmarks