-
21st September 2014, 01:55 AM
#1
Senior Member
Seasoned Hubber
A song from Vijay's latest movie...
திரைப்படம்: கத்தி (2014)
வரிகள்: பா. விஜய்
இசை: அனிருத்
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்
http://withfriendship.com/videos/raj...om-Kaththi.php
யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்
ஊர் செய்த தவமோ
இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காப்பாற்றிடும்
இவன் ஆதி சிவன்
அடி வேர் தந்த
வேர்வைக்கு
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும்
நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்
கை வீசும் பூங்காத்தே
நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல்
நிழல் போல நடந்தாயோ
முறை தான் ஒரு முறை தான்
உனை பார்த்தால் அது வரமே
நினைத்தால் உனை நினைத்தால்
கண்ணில் கண்ணீர் மழை வருமே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்
அடி வேர் தந்த
வேர்வைக்கு
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும்
நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்
-
21st September 2014 01:55 AM
# ADS
Circuit advertisement
-
22nd September 2014, 05:01 AM
#2
Senior Member
Diamond Hubber
இயக்குநர் ஸ்ரீதர் ஒரு புதிய படத்துக்காகப் பாடலொன்றைப் பதிவு செய்ய கவிஞர் தஞ்சை ராமையாதாஸிடம் வந்தார், பாட்டுச் சூழலைச் சொன்னார்.
உடனடியாக, தஞ்சை ராமையாதாஸ் எழுதிய வரி ‘நம்பினா நம்புங்க, நம்பாக்காட்டி போங்க.’
அந்த வரிகள் கதைக்குப் பொருத்தமாக இருப்பினும் ஸ்ரீதருக்குப் பிடிக்கவில்லை ‘முதல் பாட்டு இப்பதான் பதிவு செய்யறோம், இப்படி எழுதினா நல்லா இருக்காது’ என்றார்.
’சரி, மாற்றிக் கொடுக்கறேன்’ என்றார் தஞ்சை ராமையா தாஸ், ‘ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா.. இது ஓகேயா?’
அவர் தமாஷாகதான் சொன்னார், ஆனால் ஸ்ரீதருக்கு அது பிடித்துவிட்டது, ‘இதுக்கு என்ன அர்த்தம்?’ என்றார்.
’யாருக்குத் தெரியும்?’ என்றார் தஞ்சை ராமையாதாஸ், ‘கதைப்படி இது குறவர்கள் பாடுறது, அவங்க மொழி உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது,சும்மா எழுதறதுதான்.’
’அர்த்தம் இல்லாட்டியும், கேட்க சுகமா இருக்கு, தைரியமாப் பதிவு செய்ங்க, நல்ல வரவேற்பைப் பெறும்.’
அவர் சொன்னது அப்படியே பலித்தது. பாட்டு சூப்பர் ஹிட்.
( இணையத்தில் படித்தது )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2014, 05:28 AM
#3
Senior Member
Veteran Hubber
Originally Posted by
madhu
’யாருக்குத் தெரியும்?’ என்றார் தஞ்சை ராமையாதாஸ், ‘கதைப்படி இது குறவர்கள் பாடுறது, அவங்க மொழி உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது,சும்மா எழுதறதுதான்.’
’அர்த்தம் இல்லாட்டியும், கேட்க சுகமா இருக்கு, தைரியமாப் பதிவு செய்ங்க, நல்ல வரவேற்பைப் பெறும்.’
The lyricist was taken to task for writing such a song ! I learnt to play one of the songs from Amara Deepam in Bul Bul Tarang - pachchai kiLi paadudhu pakkam vandhe aadudhu !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks