-
28th November 2014, 02:09 PM
#3051
Junior Member
Newbie Hubber
Mr.Gopal's (Jaipal) posting on 13th April 2012 in Part-9(page-279 # 2784).
Since hubbers have raised a relevant issue,let us have wide choice of his Films (Ofcourse restricted for obvious reasons indicated)to choose and write appreciation &Critical reviews/Opinions.
1952- Parasakthi
1953-Thirumbi Paar
1954-Manohara,Andha Naal,Kalyam Panniyum Bramhachari,Thuli Visham,koondu Kili,Thooku Thooki,Ethirparadhadhu
1955-Mudhal thedhi,Mangayar Thilagam,Koteeswaran
1956-Naan petra Selvam,Nane raja,Pennin Perumai,Raja Rani,Amara deepam,Rangon radha
1957-Makkalai Petra Maharasi,Pudhayal,Manamagal Thevai
1958-Uthama Puthiran,Annaiyin Aanai,Sabash Meena
1959-Veera Pandiya Kattabomman,Maragatham,Aval yaar,Baga Pirivinai
1960-Irumbu Thirai,Deiva Piravi,Padikkatha Medhai,Pavai Vilakku
1961-Pava Mannippu,Pasa Malar,Ellam Unakkaga,Palum Pazhamum,Kappalottiya Thamizhan
1962-Parthal Pasi theerum,Valarpirai,Padithal mattum Podhuma,Bale Pandiya,Alaya Mani
1963-Arivali,Iruvar Ullam,Kulamagal Radhai,Paar magale paar
1964-Karnan,Pachai Vilakku,Andavan kattalai,Kaikadutha Deivam,Pudhia Paravai,Navarathri
1965-shanthi,Thiruvilayadal,Neelavanam
1966-Motor Sundaram Pillai,Mahakavi Kalidas,Saraswathi Sabatham,Selvam
1967-Kanthan Karunai,Pesum Deivam,Thangai,Paladai,Thiruvarutchelvar,Iru Malargal,Ooty Varai Uravu
1968-Galatta kalyanam,En Thambi,Thillana Mohanambal,Enga Oor Raja,Uyarntha Manidhan
1969-Thanga Churangam,Kaval deivam,Anjal Petti 520,Nirai kudam,Deiva Magan,Sivantha Mann
1970-Virtnam veedu,Ethiroli,Raman Ethanai ramanadi,Engiruntho Vanthal,Padhukappu
1971-Kulama Gunama,Sumathi En sundhari,Savale Samali,Thenum Palum,Babu.
1972-Raja,Gnana Oli,Pattikada pattanama,Vasantha maligai,Needhi
1973-Bharatha Vilas,Engal thanga raja,Gowravam,Rajapart Ranga Durai,Manitharil manickam
1974-Sivagamiyin Selvan,Thanga Padakkam,Anbai Thedi
1975-Avanthan Manithan,Anbe aruyire,Pattum Bharathamum
1976-Uthaman,Rojavin Raja
1977-Deepam,Ilaya Thalaimurai,Annan Oru Koil
1978-Andhaman Kathali,Thyagam,Ennai Pol Oruvan,General chakravarthi,
1979-thirisoolam,Kavarimaan,Naan Vazha vaipen
1980-Rishi Moolam
1981-Kalthoon,Lorry Driver rajakannu,Keez Vanam Sivakkum
1982-Hitler umanath,Vaa Kanna vaa,Thyagi,Thunai,Parikshaikku Neramachu
1983-Miruthanga Chakravarthi,Vellai Roja
1984-Vazhkai,Dhavaki Kanavugal
1985-Mudhal Mariadhai,Rajarishi
1986-Sadhanai,Marumagal,Anandha Kanneer,Viduthalai,Thaikku oru thalattu
1987-Anbulla Appa
1992-Thevar Magan,Chinna Marumagal,Naangal,
1996-Oru Yatra Mozhi
1997-Once more
1998-En Aasai Rasave
1999-Padayappa,Pooparikka Varugirom
May I request Honourable judge to dismiss the petition which is baseless. (Did Mr.Pattakathi provide any ID Proof before filing the petition?)
Last edited by Gopal.s; 28th November 2014 at 02:18 PM.
-
28th November 2014 02:09 PM
# ADS
Circuit advertisement
-
28th November 2014, 02:48 PM
#3052
Junior Member
Veteran Hubber
நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் நீள்வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்ற கோள்கள்
கோள் 2 : Planet Mars Manorama ! செந்தமிழ்த் திரையின் செவ்வாய்க் கோள் மனோரமா ஆச்சி
பூமிப் பந்துக்கு அடுத்தபடி சூரியனின் நடிப்பொளிக் குடும்பத்தில் வளமும் வாழ்வும் பெற்று ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஜில்ஜில்லென்று மூழ்கடித்த ஆல் இன் ஆல் நடிப்பு ரமாமணி ! தில்லானா மோகனாம்பாளில் நடிகர்திலகத்துடன் அவர் வளையவரும் காட்சிகள் அனைத்துமே நடிகர்திலகத்துக்கு பெருமையும் பெருமிதமும் சேர்த்திட்ட வாழ்நாள் சாதனைப் பதிவுகள் ! அப்படத்தை நினைக்கும்போதே சிவாஜி பத்மினியை மீறி மனோரமாவும் மனதில் வருவதே அவர் நடிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் ! ஞானப்பறவை திரைப்படம் அவருக்கு நடிகர்திலகத்தின் கதாநாயகி அந்தஸ்தை நிறைவு செய்தது. 'பொம்பளை சிவாஜி' என்ற வர்ணிப்புக்குப் பொருத்தமானவரே !
Last edited by sivajisenthil; 28th November 2014 at 04:18 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th November 2014, 02:55 PM
#3053
Junior Member
Diamond Hubber
watch the clip from 7.08 sathyaraj play the vasantha maligai song yarukkaga
-
28th November 2014, 05:32 PM
#3054
Junior Member
Diamond Hubber
rajini copied sivaji mannerisms in this song
sivaji song is antha naal nabagam
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th November 2014, 05:37 PM
#3055
Junior Member
Veteran Hubber
Dear Yukesh,
It is not antha naal gnyaabagam. It is from the film Imayam.
Regards
RKS
Originally Posted by
Yukesh Babu
rajini copied sivaji mannerisms in this song
sivaji song is Film : IMAYAM - Sakthi Ennada...Un Buddiyennada...
.....
-
28th November 2014, 06:24 PM
#3056
இணையத்தில் இன்று படித்தது ... நன்றி : http://onlysuperstar.com
சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி சில தகவல்கள்:
ஒருவர் எத்தனைக் காலம் இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதைவிட, மறைந்த பிறகு எத்தனை பேர் இதயங்களில் குடியிருக்கிறார் என்பதை வைத்தே ஒருவரது சிறப்பை பற்றிய முடிவுக்கு வந்துவிடலாம். அந்தவகையில், சிவாஜி கணேசன் அவர்கள், இன்னும் பல கோடி இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அவரை போன்ற தொழில் பக்தி மிக்க நடிகரையும், பல் துறை அறிவைப் பெற்ற நடிகரையும் பார்ப்பது அரிது.
சிவாஜி அவர்களை பற்றிய பல அரிய தகவல்கள் வெளியுலகிற்கு கொண்டு போய் சேர்க்கப்படவில்லே என்பதே என் கருத்து.
சிவாஜி அவர்கள் நடித்த திரைக்காவியங்கள் சாகாவரம் பெற்றவை, வினையற்ற செல்வத்தை தரக்கூடியவை என்பதை ‘கர்ணன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த உலகிற்கு உணர்த்தியது.
எல்லாவிதமான உணர்ச்சிகளையும் முகபாவனைகளில் வெளிப்படுத்தும் திறமை ஐயாவிற்கு உண்டு….சமீபத்தில் மெருகூட்டப்பட்டு வெளிவந்த "கர்ணன்" திரைப்படத்தில் சிவாஜி அவர்களின் நடிப்பாற்றலை திரையில் கண்டு பிரமித்துப் போனேன்…! என்ன ஒரு நடிப்பு !! இவருக்கு தேசிய விருது வழங்காததால் "தேசிய விருது" ஒரு மணிமகுடத்தை இழந்துவிட்டது….!
சிவாஜி அவர்களின் மேலும் பல தரமான படைப்புக்கள் இதே போன்று நவீன தொழில்நுட்பத்தில் வெளியாகி இன்றைய தலைமுறையினரை சென்று சேருமானால், அதை விட சிறப்பு எதுவும் இருக்க முடியாது.
சிறு வயதில் தாம் கல்வி கற்க இயலாமல் போனதை நினைவு கூறும் வகையில் இன்றைக்கு போக ரோட்டில் இருக்கும் வீட்டை கட்டும்போது சிறு குழந்தைகள் இருவர் படிப்பது போன்ற சிற்பத்தை வீட்டில் நிர்மாணித்தார் சிவாஜி. இன்றைக்கு கூட அன்னை இல்லத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் இதை கவனிக்கலாம்.
படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது சிவாஜி அவர்களுக்கு அறவே பிடிகாத ஒன்றாகும். ஒரு நடிகனுக்கு கரெக்ட் டயத்துக்கு ஷூட்டிங் வர முடியலேன்னு சொன்னா அவன் நடிக்கிரதையே விட்டுடனும் என்ற கொள்கை உடையவர் சிவாஜி. (சூப்பர் ஸ்டாரின் நேரம் தவறாமை இவரிடம் கற்றுக்கொண்ட ஒன்றாகும்).
சூப்பர் ஸ்டாரின் இக்கட்டான காலகட்டங்களில் உடனிருந்து பல ஆலோசனைகளை கூறியிருக்கிறார் திரு.சிவாஜி.
தமக்கும் திரு.சிவாஜி அவர்களுக்கும் இடையே இருந்த பந்தத்தை சூப்பர் ஸ்டார் பல தருணங்களில் கூறியிருக்கிறார். குறிப்பாக சிவாஜி சிலை திறப்பு விழாவிலும், சந்திரமுகி 200 வது நாள் விழாவிலும்.
மேற்படி இரு விழாக்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி சிவாஜி அவர்களைப் பற்றி ஆற்றிய உரை, உள்ளத்தை உருக்குவதாகும்.
பிடிங்க சம்பளம் ஒரு கோடி
தமது சொந்த படமான படையப்பாவில் சிவாஜி அவர்களை தனக்கு தந்தையாக நடிக்க வைக்க ரஜினி முடிவு செய்த பிறகு, அவரை நேரில் சென்று சந்தித்து, அவர் காலில் விழுந்து வணங்கி, “நான் படையப்பா. இந்த படையப்பாவுக்கு நீங்க தான் அப்பா…” என்று ஒரே வரியில் கூறி சிவாஜி அவர்களின் கால்ஷீட்டை பெற்றார் ரஜினி. தவிர, “யாரோ யாரோ இன்னிக்கி இண்டஸ்ட்ரியில கோடி ரூபாய் சம்பளம் வாங்குறாங்க…. ஆனா நடிப்புக்கே இலக்கணம் வகுத்த மேதை நீங்க. பிடிங்க சம்பளம் ஒரு கோடி” என்று படையப்பாவில் நடிக்க ஒப்புக்கொண்ட சிவாஜி அவர்களை கௌரவித்தார் ரஜினி அவர்கள். (படையப்பா படத்தில் சிவாஜி அவர்கள் பெற்ற அந்த ஊதியம் தான் அவர் தம் திரையுலக வாழ்வில் பெற்ற அதிக பட்ச ஊதியமாகும்.)
படையப்பா படத்தின் துவக்க நாள் விளம்பரத்தில் கூட, நடிகர் திலகம் திரு.செவாலியே சிவாஜி அவர்களின் ஆசியுடன் இன்று முதல் படப்பிடிப்பு துவங்குகிறது என்று விளம்பரம் அளிக்கப்பட்டது.
படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த சூழலில் கூட படையப்பாவில் நடிக்க சிவாஜி ஒப்புக்கொண்டார் என்றால் அதற்க்கு காரணம் சூப்பர் ஸ்டார் மேல அவர் வைத்திருந்த அன்பு என்றால் மிகையகாகாது. “பிரபு, ராம்குமார் மாதிரி இவனும் என்னோட மகன்தாண்டா” என்று உரிமையோடு அடிக்கடி சொல்வார் செவாலியே.
1999 ஆம் ஆண்டு, தமிழ் புத்தாண்டு தினத்தன்று உற்சாகத்தோடு இருந்தது அன்னை இல்லம். சிம்மக்குரலோனிடம் ஆசி பெற எண்ணற்றோர் வந்த வண்ணமிருந்தனர். தன்னிடம் ஆசி பெற வந்த அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவரான பூமிநாதனிடம், சிவாஜி, “ரஜினி ரொம்ப நல்லவன். சினிமா உலகில் அவனை மாதிரி நல்லவனை நான் பார்த்ததில்லை. குழந்தை மாதிரி… மனசுக்குள் எதையும் ஒளிச்சு வெச்சுக்கமாட்டான். ‘தப்பு’ன்னு தோணினா மனசுல பட்டதை டப்புன்னு சொல்லிடுவான். அவன் ஒரு வெகுளிடா!’” என் மனம் திறந்து தாய்மை தெறிக்க பேசியுள்ளார் சிவாஜி.
2001 ஆம் ஆண்டு சிவாஜி அவர்கள் காலமான போது, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார் ரஜினி. ரஜினி இதுவரை யார் இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (என் தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கூட நான் கலந்துக்கலை. ஆனால் சிவாஜி சாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கிட்டேன் என்று சந்திரமுகி 200 வது நாள் விழாவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் சூப்பர் ஸ்டார்.)
=========================================
எனக்கு தெரிந்த வரையில் கண்ணில் காந்த சக்தி (அதாவது கண்கள் மூலம் சொல்ல வேண்டியதை வசனம் இல்லாமல் கூறும் சக்தி )உடைய நடிகர்களில் முதலில் நிற்பவர் செவாலியே சிவாஜி அவர்கள் .
உதாரணமாக படிக்காதவன் படத்தில் தலைவரை (ரஜினியை) அவர் தம்பி என்று கூப்பிடும் கட்சியில் அவர் கண்கள் சொல்லும் வார்த்தைகள் ஆயிரம் வசனங்களுக்கு சமம் . அந்த கட்சியையும் தோரணையும் வேறு ஒருவராலும் செய்ய முடியாது . அடுத்ததாக அதே சக்தியை நம்ம சிவாஜியிடம் முதலில் பார்க்க முடிந்தது தர்மதுரை படத்தில் . அந்த படத்தில் ஒரு காட்சியில் தனது மனைவி த்ரோகம் செய்த தம்பிகளுக்கு உதவும் படி கேட்பார் . அந்த சீன் ல தலைவரின் கண்கள் மட்டும் புல் பிரேமில் காட்டப்படும் . அப்பா என்ன ஒரு powerful eyes and expression.
எனக்கு தெரிந்து வேறு எந்த ஒரு நடிகருக்கும் இந்த பாக்கியத்தை ஆண்டவன் கொடுக்க வில்லை . இதெல்லாம் கூடவே பொறந்ததுன்னு நெனைக்கிறேன் .
திரை உலகமே அஞ்சலி செலுத்த வேண்டிய சிவாஜி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .
Last edited by sss; 28th November 2014 at 06:29 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
29th November 2014, 03:58 PM
#3057
Junior Member
Diamond Hubber
சற்று முன் படித்த ஒரு "நம்ப முடியவில்லை"..
1982 –ல் “கோழி கூவுது” வெளிவந்தபோது ..சிவாஜி ரசிகர்களாகிய நண்பர்கள் நாங்கள் அனைவரும் பூரித்துப் போனோம்...!
எங்க சிவாஜி மகன் பிரபு நடிச்ச படமில்லையா..?
புரசைவாக்கம் டவ்டன் ராக்ஸி தியேட்டரில் , கல்லூரி நண்பர்களோடு , இரவுக் காட்சியாக ...எத்தனை முறை இந்த படத்தைப் பார்த்திருப்போம் என எங்களுக்கே தெரியாது...தினமும் கூட தியேட்டருக்குப் போவோம்..
சிவாஜி மகன் பிரபு நடித்த படம் என்பதால் நானும்... சிலுக்கிற்காக நண்பன் ஆத்மராவும்..
இளையராஜா இசைக்காக என் நண்பர் ஜெயராஜும்... பலமுறை இந்தப் படத்தைப் பார்த்திருப்போம்..!
[ என்ன சாங்க்ஸ் ..?... “பூவே இளைய பூவே”... “ஏதோ மோகம்..ஏதோ தாகம்”..]
..எங்கள் எல்லோருக்குமே இந்தப் பட நாயகி விஜியைப் பிடிக்கும் என்பது வேறு விஷயம்..
ஆனால் ..இன்று சற்று முன் நான் படித்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது...
“கோழி கூவுது” படத்தில் குமரி முத்துவோடு இணைந்து , ஒரு உயரமான நடிகர் காமெடி என்ற பெயரில் கோமாளிக் கூத்து செய்திருப்பார்...
”அண்ணே அண்ணே”...பாடலைக் கூட அவர்தான் பாடுவார்..
அவர் ஏதோ ஒரு சாதாரண துணை நடிகர் என்றுதான் இத்தனை நாள் எண்ணி இருந்தேன்...ஆனால் ..இப்போதுதான் தெரிந்தது...அந்த “அண்ணே அண்ணே” வேறு யாருமில்லை..
“வீர பாண்டிய கட்டபொம்மன்”படத்தில் சிவாஜியோடு இணைந்து மிரட்டிய “நீர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவரோ?”....ஜாக்சன் துரைதான் அந்த “கோழி கூவுது” கோமாளி “அண்ணே அண்ணே”வாம்...அவர் பெயர் பார்த்திபனாம்...
இனி .. சென்னை புரசைவாக்கத்தின் இன்றைய சரவணா ஸ்டோர்ஸ்சை கடந்து போகிறபோதெல்லாம் ..கண்டிப்பாக , ஒரு நிமிஷம் மனசு கனத்துப் போகும்...
நாங்கள் தினமும் இரவுக் காட்சி பார்த்து மகிழ்ந்த அன்றைய ராக்ஸி தியேட்டர் ..இன்று இடித்து தரை மட்டமாக்கப்பட்டு காணாமல் போனது ஒரு சோகம்..
அன்று வீரபாண்டியக் கட்டபொம்மனோடு சரிக்கு சரியாக ..சமமாக உறுமி உரையாடிய பார்த்திபன் என்ற ஜாக்சன் துரை கோமாளியாக "கோழி கூவுது"வில் ஆட வைக்கப்பட்ட அவலம் இன்னொரு சோகம்...!
# ஆனாலும் ஒரு ஆறுதல் செய்தி...
திரு பார்த்திபன் அவர்கள் 1/10/2014 அன்று சிவாஜி கணேசன் 86 வது பிறந்த நாளில் நடைபெற்ற சிவாஜி பிரபு சாரிடி டிரஸ்ட் மூலமாக பாராட்டப்பட்டாராம்...வாழ்த்துக்கள் !!
நண்பர் ஒருவரின் பதிவிலிருந்து...
“சினிமா சில பேரை மட்டுமே வெளிச்சம் பாய்ச்சி அடையாளம் காட்டியிருக்கிறது ..
பலரை அது கொன்றிருக்கிறது. காலம் முழுவதும் அங்கீகாரத்திற்கு போராடி வெல்லமுடியாமல் போகும்போது ..அந்த துயரம் ஒரு மனிதனின் மரணத்திற்கு ஒப்பானதாகும்..”
courtesy net
-
29th November 2014, 08:20 PM
#3058
Senior Member
Seasoned Hubber
யுகேஷ் பாபு சார்
நடிகர் திலகம் தொடர்பான தகவல்கள் / நிழற்படங்கள் பதிவிட்டு வரும் தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th November 2014, 12:22 AM
#3059
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
தர்மம் எங்கே ரிலீஸ் நேரம் பார்த்த அனுபவம் தொடர்கிறது.
கடந்த பதிவின் இறுதி பகுதி
சண்டையில் தோற்று நம்பியார் ஆற்றில் குதித்து போய்விட கொடுங்கோல் ஆட்சி ஒழிந்து மக்கள் நடிகர் திலகத்தை தோளில் ஏற்றி அரியணையேற்றும் காட்சியோடு இடைவேளை. ஒரு சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின்போது the atmosphere was electric என்று எழுதுவார்கள். அதாவது அந்த இடத்தில வீசும் காற்றை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற அர்த்தத்தில். அன்றைய தினம் மதுரை ஸ்ரீதேவி தியேட்டரில் அத்தகைய சுற்றுசூழல்தான் நிலவியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
இடைவேளை நேரத்திலும் ஒரே ஆரவாரம் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அதே நேரத்தில் படம் தொடங்கவதற்கு முன்பு நடந்த ஒரு விஷயம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். படத்திற்கு வந்திருந்த ஒரு ரசிகரின் கைகெடிகாரம் காணாமல் போனது பற்றியும் அதன் காரணமாக அனைவரும் சோதனை செய்யப்பட்டதையும் சொல்லியிருந்தேன். இடைவேளை நேரத்திலும் அது தொடர்ந்தது. இதை பார்த்தவுடன் என் கஸின் நீ தனியாக உட்கார வேண்டாம். எனக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்து விடு என்று சொல்லி கூட்டி போய்விட்டான். ஸ்ரீதேவியில் கீழே 90 பைசா டிக்கெட் சேர்கள் அதற்கு முந்தைய வகுப்புகளை விட சற்றே உயரமாக அமைந்திருக்கும். 90 பைசா சேரில் முதல் வரிசையில் அமர்ந்தால் முன்னால் அமரிந்திருப்ப்பவரின் தலை மறைக்கிறது என்ற பிரச்சனைக்கே இடமில்லை. இடைவேளைவரை அப்படி முதல் வரிசையில் அமர்ந்து பார்த்த நான் இடைவேளைக்கு பிறகு பின் வரிசைக்கு சென்று கஷ்டப்பட்டு விட்டேன். 12 வயது சிறுவன் என்கின்றபோது இந்த பிரச்சனை அதிகமாகவே இருந்தது. இனி படத்திற்கு வருவோம்.
நடிகர் திலகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் கூடி நிற்கும் போராளிகள் கோஷம் எழுப்புவார்கள். நாட்டை காத்த உத்தமன் வாழ்க! கொடுங்கோல் ஆட்சியை வேரறுத்த தலைவன் வாழ்க என்று வசனங்கள் வரும்போது இடைவேளையில் கிடைத்த நேரத்தில் மீண்டும் எனர்ஜி கிடைத்த மக்கள் இடைவேளைக்கு பிறகு வந்த இந்த முதல் காட்சியிலே மீண்டும் அலப்பரையை ஆரம்பித்து விட்டனர். இந்தக் காட்சி முடிந்தவுடன் ஜெஜெ பாடி ஆடும் நான்கு காலமும் உனதாக பாடல் வந்தது. [இந்தப் பாடல் காட்சி சில நாட்கள் இருக்கும். சில நாட்கள் இருக்காது. ஏன் என்று யாருக்கும் காரணம் தெரியாது] அழகாக படமாக்கப்பட்டிருந்த இந்த பாடல் காட்சியைப் பற்றி எங்களுக்கு ஒரு குறை. இந்த பாடலில் ஜெஜெ மற்றும் ஆண் வேடத்தில் குமாரி பத்மினியும் ஆடுவார்கள். குமாரி பத்மினியை ஆண் வேடத்தில் ஆட வைக்காமல் அந்த பாடல் காட்சியில் நடிகர் திலகம் நடித்திருந்தால் மிகப் பிரமாதமாக அமைத்திருக்கும் என்பது எங்கள் எண்ணம்.
அதன் பிறகு முத்துராமன் தனக்கு பதவி கிடைக்கும் என நினைத்து சபைக்கு வருவது, அங்கே நான்கு திசைகளுக்கும் மார்த்தாண்ட நாயகர்களாக வேறு நபர்களை நடிகர் திலகம் அறிவித்து விட முத்துராமன் கோபமுற்று வெளியேறும் காட்சி. [இந்த காட்சியில் மார்த்தாண்ட நாயகர்களை நியமிக்கும்போது அவர்களை காட்டக் கூட மாட்டார்கள் என்று ஒரு முறை கோபால் எழுதியிருந்தார். ஆனால் அது தவறு. நான்கு பேர்களும் காண்பிக்கப்பட்டு அவர்கள் சுற்றி நிற்பவர்களின் கையொலியை ஏற்றுக் கொள்வதாகவே காண்பிக்கப்படும்]
முத்துராமன் தன கோபத்தை குமாரி பத்மினியிடம் காண்பித்து மெதுவாக நடிகர் திலகத்திற்கு எதிராக மாறும் காட்சிகள். அதற்கு நம்பியாரின் படையில் சிப்பாயாக இருந்த செந்தாமரை அவரிடம் சேர்ந்து அவரை மெதுவாக மாற்றுவது போன்ற காட்சிகள் வரும். இதற்கு நடுவில் நடிகர் திலகம் -ஜெஜெ இடையிலான ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி நன்றாக workout ஆகியிருக்கும். ஒவ்வொரு முறையும் நடிகர் திலகம் ஜெஜெவிடம் அந்தரங்கமாக ஏதோ சொல்ல விழைய அவரும் என்ன என்று ஒரு ஹஸ்கி குரலில் கேட்பது நன்றாக ரசிக்கும்படியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று அவர்களை நெருங்க விடாமல் தடுக்க ஜெஜெ ஏமாற்றத்துடன் செல்வது எல்லாம் மக்கள் ரசித்துப் பார்த்தனர்.
குமாரி பத்மினி முத்துராமனை கூட்டிக் கொண்டு மாளிகைக்கு வரும் காட்சி. தங்கையை பார்த்தவுடன் பரவசமடையும் நடிகர் திலகம், முத்துராமன் ஏதோ ஒன்றை பேச விரும்புவதை உணர்ந்து என்ன என்பதை முகபாவத்திலே கேள்வியாக மாற்றும் அந்த லாவகம் படபடவென கைதட்டல்கள் விழுகிறது. முத்துராமன் எதிர்பார்ப்பது பதவி என்று தெரிந்ததும் நடிகர் திலகம் கேமராவைப் பார்த்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்களே பதவியில் இருப்பது நாட்டிற்கு நல்லதில்லே என்பார். கைதட்டல் இடியாய் இறங்கியது. நான் பதவியில் இருந்தாலென்ன நீ இருந்தாலென்ன என்று நடிகர் திலகம் முத்துராமனிடம் சொல்லும்போது அதற்கு முத்துராமன் "சேகர் முன்னாடியெல்லாம் உனக்கு பேசவே தெரியாதுன்னு சொல்வாங்க! இப்போ எவ்வளவு அழகா பேசறே" என்றவுடன் ஒரு சிறு புன்னகையுடன் நடிகர் திலகம் "இப்போலாம் மக்கள் நான் பேசுவதை கவனித்து ஏற்றுக் கொள்கிறார்கள்" என்பார். தியேட்டரே இரண்டுபட்ட கட்டம் அது.
இதற்கு பின் முத்துராமன் மேலும் கொதிப்படைந்து போவது, நம்பியார் படை தலைவனாக இருந்த எஸ்வி ராமதாஸ் மற்றும் செந்தாமரையும் ஒரு கூட்டதை சேர்த்து முத்துராமனை தலைவராக்குவது என்று காட்சிகள் விரிந்தன.
இதன் பின் மக்கள் சிலர் ஒரு குழுவாக வந்து முத்துராமனின் அராஜகம் பற்றி சொல்ல முதலில் அவர்கள் சொல்வதை நம்ப மறுக்கும் நடிகர் திலகம் அவர்களை சத்தம் போட சட்டென்று அவருக்கே முன்னொரு நாளில் இதே போல் தானும் நம்பியாரிடம் மோதியது நினைவிற்கு வர, அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி அனுப்பி விட்டு உள்ளே சென்று துப்பாக்கியை எடுப்பார். தடுக்கும் ஜெஜெவை தள்ளி விட்டு விட்டு போவார். உங்கள் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் என்று கேட்கும் ஜெஜெவிடம் தனி மனிதன் போகலாம். ஆனால் என் கொள்கை தொடரும். அதை உயர்த்திப் பிடிக்க மனிதர்கள் வருவார்கள் என்பார் நடிகர் திலகம். மக்களுக்கு வேறொரு தலைவன் கிடைக்கலாம் ஆனால் எனக்கு என்று ஜெஜெ கேட்கும்போது இங்கே ஒரே ஆரவாரம்.
முறை தவறி நடக்கும் முத்துராமனை தட்டிக் கேட்டு [அப்போதும் ஒரு சண்டை உண்டு. நீளமாக இல்லாமல் உடனே முடிந்து விடும். இருந்தாலென்ன நமது ரசிகர்களுக்கு அலப்பரை செய்ய சொல்லியா கொடுக்க வேண்டும்?] அவரை கொல்லாமல் பிழைத்துப் போ என்று பார்வையாலே மிரட்டி விட்டு போவார் நடிகர் திலகம். கேட்கணுமா?
இதற்கு நடுவே நடிகர் திலகம் ஜெஜெவிடம் தன காதலை வெளிப்படுத்தி கல்யாணம் செய்துக் கொள்கிறேன் என்று சொன்னதும் வரும் பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே பாடல் காட்சி. மீண்டும் தியேட்டர் அதகளமானது. ஒரு காட்சியில் நடிகர் திலகம் ஜெஜெயிடையே நடக்கும் ஒரு உரையாடலின்போது ஜெஜெ நடிகர் திலகத்தைப் பார்த்து பெருந்தலைவரே என்பார். தியேட்டர் மீண்டும் அலறியது.
சூழ்ச்சிகாரர்களின் சதி புரியாமல் நடிகர் திலகத்தை ஊருக்கு வெளியே உள்ள பாழடைந்த கோட்டைக்கு தனியே வர சொல்லும் முத்துராமன், தனியே வரும் நடிகர் திலகத்தை கொல்ல ஆணையிடும் ராமதாஸ், திகைத்து போய் என்ன சொல்கிறாய் என்று முத்துராமன் கேட்க அதுவரை கூட்டத்திலே ஒரு ஆளாக மறைந்து நிற்கும் நம்பியார் தன்னை வெளிபடுத்திக் கொள்ள அந்த சஸ்பென்சை மக்கள் ரசித்தார்கள். துரோகி என்று நம்பியாரை பார்த்து முத்துராமன் சீற " நீதான் துரோகி. நாளை வரலாறு உன்னைத்தான் பழிக்கும்" என்று பதிலடி கொடுக்கும் வசனமெல்லாம் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இறுதிக் காட்சி. துப்பாக்கிகள் முழங்க கோட்டையின் திறந்த வெளி மைதானத்தில் நடிகர் திலகம் ஓடி தப்பிக்கும் காட்சி [இந்த காட்சியின் படமாக்கம் சற்றே சொதப்பியிருக்கும். சற்று மெனக்கெட்டிருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்] கோட்டைக்கு உள்ளே ஒரு ஹாலில் தொட்டி போன்ற அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில விஷப்பாம்புகள் சுற்றிக் கொண்டிருக்க மேலிருந்து ஜெஜெவை தொங்கவிட கயிறு மெதுவாக அறுந்து கீழே வர நடிகர் திலகம் நம்பியாரிடம் சண்டை போடும் காட்சியெல்லாம் த்ரில்லாகவே மக்கள் பார்த்தனர். இறுதியில் நம்பியார் தொட்டிலில் விழுந்து பாம்புக்கடி ஏற்று உயிர் துறப்பார். தர்மம் எங்கேன்னு கேட்டவங்களுக்கெல்லாம் தர்மம் இங்கேன்னு சொல்ல வச்சுட்டே சேகர் என்று முத்துராமன் சொல்ல கரகோஷம்தான்.
படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போதும் ஒரே ஆரவாரம்தான். படம் பெரும் வெற்றி பெறும் என்ற கணிப்பே எனக்கு இருந்தது. அதற்கேற்றார்போல முதல் வாரத்தில் தியேட்டர் பக்கமே போக முடியவில்லை, அப்படி கூட்டம் என்று கஸின் வந்து சொல்லிக் கொண்டேயிருந்தான். முதல் பத்து நாளைக்கு அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல். அதன் பிறகு படத்திற்கு வரவேற்பு குறைய ஆரம்பித்தது என்ற பேச்சு வந்தது. படத்தின் கதை இடைவேளையோடு முடிந்து விட்டது. அதன் பிறகு வந்தவற்றை பொது மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. 1972-ஐ பொறுத்தவரை 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை தொடும் வாய்ப்பை இழந்த ஒரே படம் என்ற பட்டதை தர்மம் எங்கே பெற்றது. 8 வார படமாக ஆனாலும் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் படம் தர்மம் எங்கே!
படம் வெளிவந்து 36 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் AC திருலோக்சந்தரிடம் பேசிக் கொண்டிருந்தபோது எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்தப் படம் 100 நாட்கள் ஒடவிலையே என்ற வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டபோது அவர் ஒரு விஷயம் சொன்னார். ஒரு ஆங்கிலப் படத்தின் inspiration-ஐ வைத்துதான் தர்மம் எங்கே படத்திற்கு திரைக்கதை அமைத்தோம். அதில் இறுதியில் கதாநாயகன் [Lawrence Oliver தான் நாயகன் என்று அவர் சொன்ன ஞாபகம்] துப்பாக்கி குண்டுகளால் சல்லடை கற்களாய் துளைக்கப்பட்டு உயிர் விடுவான். அவனின் நல்ல மனதை புரிந்துக் கொள்ளாமல் அவனை பழி வாங்க துணை போன அவன் மைத்துனன் தன தவறை உணர்ந்து திருந்துவதுதான் கிளைமாக்ஸ். ஆனால் நாங்கள் நாயகனை சாகடிக்க விரும்பவில்லை. அவன் தப்பிப்பதாக மாற்றி அமைத்தோம். ஒரு வேளை சோக முடிவாக அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்குமோ என்னவோ என்றார் ACT.
எது எப்படியோ, அது போன்ற உணர்ச்சிக் குவியலான ஒரு மக்கள் கூட்டத்தையும் அந்த ஆவேசத்தையும் அதே அளவில் நான் அதற்கு முன்பும் பார்த்ததில்லை. அதற்கு பின்பும் பார்த்ததில்லை. அந்த வகயில் தர்மம் எங்கே என்றுமே ஸ்பெஷல்தான்.
(தொடரும்)
அன்புடன்
-
30th November 2014, 12:34 AM
#3060
நடிப்பு சக்ரவர்த்தியின் திக்விஜயம் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் தொடர்கிறது.
நேற்று வெள்ளி முதல் சென்னை ஓட்டேரி சரவணாவில் நடிகர் திலகத்தின் வெற்றிக் காவியம் பார்த்தால் பசி தீரும் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
Bookmarks