-
9th December 2014, 09:45 AM
#111
Junior Member
Veteran Hubber
The first scene of Ithayakani and fans reaction captured in the below video clip.
https://www.facebook.com/video.php?v...81181701418905
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th December 2014 09:45 AM
# ADS
Circuit advertisement
-
9th December 2014, 11:07 PM
#112
Junior Member
Platinum Hubber
05/12/2014 முதல் திரையுலகின் கலைப் பேரொளி எம்.ஜி.ஆர். அவர்களின்
"ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகளில் , சென்னையை அடுத்த செங்குன்றம்
நடராஜாவில் வெற்றிகரமாக பிரகாசிக்கிறது.
தகவல் உதவி : திரு. பாண்டியன் , ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th December 2014, 10:14 PM
#113
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th December 2014, 10:19 PM
#114
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th December 2014, 10:27 PM
#115
Junior Member
Diamond Hubber
Last edited by ravichandrran; 10th December 2014 at 10:47 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th December 2014, 10:29 PM
#116
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th December 2014, 10:35 PM
#117
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th December 2014, 11:14 PM
#118
Junior Member
Diamond Hubber
நாடோடி மன்னனின் சாதனை
கோவை ராயல் திரை அரங்கில் 16.05.2014 அன்று திரையிடப்பட்டு 11 நாட்கள் ஓடியது.
கோவை டிலைட் திரை அரங்கில் 1.8.2014அன்று திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.
வருகின்ற வெள்ளி முதல் (12.12.2014) மறுபடியும் ராயல் திரை அரங்கில் இந்த வெற்றிக்காவியம் திரையிடப்பட உள்ளது.
வீராங்கனின் வெற்றி விஜயம் கொங்கு மண்டலத்தில் சென்ற
வருடங்களைப் போன்றே இந்த வருடமும் தொடருகிறது.
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------
Last edited by ravichandrran; 10th December 2014 at 11:17 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th December 2014, 08:49 AM
#119
Junior Member
Devoted Hubber
வானத்தை போல பரந்துவிரிந்தது எது? கடலைப்போல ஆழமானது எது? எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு இருக்கும் அன்பு என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். ஆமாம் காலங்கள் கடந்தாலும் இன்று கூட கடவுளாக மதிக்க படுபவர் ஆவார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். நடிகராக நடைபோட தொடங்கிய அவரது பயணம், நல்ல சிந்தனைகளாலும், நல்ல செயல்களாலும், அவரை நாடாளும் தலைவர் நிலைக்கு கொண்டு சென்றது. இது அந்த கருணை உள்ளத்திற்கு காலம் இட்ட கட்டளை. சினிமாவில் சேர்ந்து புகழ் ஏணியில் ஏறி தங்கள் வசதிகளை சேர்த்து/பெருக்கி கொண்டோர் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். புகழ் ஏணியில் ஏறவில்லை, மக்களால் புகழ் ஏணியின் உச்சத்திற்கு ஏற்ற பட்டார். மக்கள் ஆதரவு அவருக்கு மமதையை தந்ததில்லை. மாறாக அவருக்கு மக்கள் மீது மாறாத பற்றை வளர்த்தது. திரையிலே பார்த்து ரசித்து விட்டு, திரை அரங்கை விட்டு வெளியே வந்தபிறகு மறந்துவிட அவர் வெறும் நடிகர் அல்ல. நாடு போற்றும் நல்லவர். கடைசங்கம் கண்ட ஏழு வள்ளல்களோடு, கருணை உள்ளம் கொண்ட எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இந்த வள்ளலின் வாழ்க்கை அவர் நடித்த திரை படங்களோடு பின்னிபிணைந்து இருந்தது. ஆகவேதான் மக்கள் அவரை எங்க வீட்டு பிள்ளை, ஏழைகளின் காவலன், அவர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்தார். திரை உலகின் முடிசூடா மன்னனாக, தனிபிறவியாக விளங்கினார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த பாடலுக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார் இந்த ஏழைபங்காளன். தான் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல், தான் நடந்து வந்த பாதையில் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நினைவோடு மனம் தளராமல் நடைபோட்டார் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். தான் உயிராய் மதித்த நடிப்பு தொழிலை விட்டு விட்டாலும், தனக்கு நல்வாழ்வு தந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய அரசியலை பற்றுகோடாக கொண்டு, அந்த புரட்சிநடிகரின் பாதை மக்களின் நலனுக்காகவே பயன் பட்டது.
எடுத்து கெடுக்கும் கரங்களின் மத்தியிலே, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதருக்கு சமுக அக்கறை இருந்தது. மற்றவர்க்கு உதவும் குணம், கொடைத்தன்மை இருந்தது. ஆகவேதான் சமுதாய நலனை பாடல்கள் வாயிலாகவும், நல்ல எண்ணங்களை வசனங்கள் மூலமாகவும், தன் படங்களில் காட்சிகள் மூலமாகவும், விளக்கி வந்தார். அந்த வாரிதந்த பாரிவள்ளலை, மக்கள் இன்னமும் தங்களின் எங்க வீட்டு பிள்ளை என்று கொண்டாடி வருவது இயற்கையே.
மரணத்தையே மண்டியிட செய்த மாமனிதர். எமனின் பாச கையிற்றைகூட மக்களின் பாசத்தால் அறுத்தெறிந்த மனிதபுனிதர். இந்த இதய வேந்தனை, ஏற்றமிகு புனிதரை மக்கள் இன்னமும் தங்கள் மனங்களிலே கோட்டைகட்டி குடி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவரின் புகழுக்கு எதை ஒப்பிடுவது - இமயமலையா? அண்டமா? அகிலமா? ஆதவனா? அல்லாவின் கருணையா? கிறிஸ்துவின் கிருபையா? கிருஷ்ணனின் கீதையா?
காலத்தை வென்ற காவிய நாயகன்.
வங்ககடலோரம் தங்கமகன் உறங்குகிறார். அவர் படைத்தது சாதனையா? சரித்திரமா? இல்லை இல்லை என்றும் வாழும் சகாப்தம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th December 2014, 02:01 PM
#120
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
ravichandrran
நாடோடி மன்னனின் சாதனை
கோவை ராயல் திரை அரங்கில் 16.05.2014 அன்று திரையிடப்பட்டு 11 நாட்கள் ஓடியது.
கோவை டிலைட் திரை அரங்கில் 1.8.2014அன்று திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.
வருகின்ற வெள்ளி முதல் (12.12.2014) மறுபடியும் ராயல் திரை அரங்கில் இந்த வெற்றிக்காவியம் திரையிடப்பட உள்ளது.
வீராங்கனின் வெற்றி விஜயம் கொங்கு மண்டலத்தில் சென்ற
வருடங்களைப் போன்றே இந்த வருடமும் தொடருகிறது.
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------
கோவையில் ராயல் திரையரங்கில் மே மாதம் திரையிடப்பட்டு 11 நாள் வெற்றிகரமாக ஓடி, 3 மாதங்களுக்குள்ளாகவே அருகிலேயே அமைந்துள்ள டிலைட் திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டு, வெற்றிகரமாக 14 நாட்கள் ஓடி, மீண்டும் 4 மாதத்தில் ராயல் திரையரங்கில் ஒரு படம் வெளியிடப்படுகிறது என்றால் அது நிச்சயம் தலைவர் படமாக மட்டுமே இருக்க முடியும். இன்றும் கூட, தலைவரின் இந்த பாக்ஸ் ஆபிஸ் பவரையும் மக்களை கவர்ந்திழுக்கும் திறனையும் என்னவென்று சொல்ல?.... சாதனைகளுக்கு சொந்தக்காரர் தலைவரே என்பதைத் தவிர. கொங்கு மண்டல தளபதி திரு.ரவிச்சந்திரனுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks