Results 1 to 10 of 38

Thread: கண்ணுக்குள்ளே என்னைப் பாரு

Threaded View

  1. #34
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கவிதைச் சரம்

    கவிதைச் சரம்... சாதாரணமாகவே கவிதை மலர்களால் சரம் தொடுப்பதென்றால் கற்பனை ஊற்று பொங்கி எழுமன்றோ...
    அதுவும் நடிகர் திலகத்தின் புன்னகை தவழும் மதிமுகம் என்றால் கேட்கவும் வேண்டுமோ..

    தொடுப்போமே..கவிதைச்சரத்தை சூடுவோமே..



    முதலடியை முன்னதாக முடிவெடுத்துக் கொள்வோமே
    தொடர்கின்ற வரிகளிலே இலக்கியமாய்ப் படைப்போமே..

    இதோ...

    முதலடி --- நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்..

    தொடக்கமாக அடியேனின் பணிவான படைப்பு

    நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்
    உன் தடம் பார்த்து விழி பூத்திருந்தேன்
    புன்னகை தவழும்
    உன் மதிமுகமே
    இருளைப் போக்கி
    இன்னொளி வீசுமே
    வீசும் இன்னொளி
    வாசல் முழுவதும்
    உன் வரவுரைக்கும்
    உளம் மகிழ்ந்தாடும்...
    என் மனம் உரைப்பது
    எவர்க்கும் உரைக்கும்
    எம்முள் நீ இன்னும்
    வாழ்ந்து வருவதை..


    ....

    இனியென்ன

    தொடருங்கள் நண்பர்களே..

    சி.க. சார் ... உங்களைத்தான்...
    வாசு சார்... உங்களைத்தான்...
    கோபால் சார்... உங்களைத்தான்...
    முரளி சார்... உங்களைத்தான்...
    சிவாஜி செந்தில்... உங்களைத்தான்...
    இங்குள்ள நண்பர்கள்
    அனைவருமே
    உங்களைத்தான்..
    வாருங்கள்..
    கலைத்தாயின் தவப்புதல்வனுக்கு
    கவிதைச்சரம் சூட்டுங்கள் ...

    தொடர்ந்து இது போன்ற அபூர்வ நிழற்படங்களை இங்கு பகிர்ந்து கொண்டு சூட்டி மகிழ்வோம் கவிதைச்சரம்..
    Last edited by RAGHAVENDRA; 26th December 2014 at 10:47 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •