Page 251 of 397 FirstFirst ... 151201241249250251252253261301351 ... LastLast
Results 2,501 to 2,510 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2501
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    vasu: When I visit you in Neyveli I expect all those dishes in the pictures to be served for dinner !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2502
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    vasu: When I visit you in Neyveli I expect all those dishes in the pictures to be served for dinner !
    No doubt sir. Certainly. Varugave.. Varukgave.. varuvalai (Fish) saappida varukgave. Saappiduveergalaa?
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2503
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    No doubt sir. Certainly. Varugave.. Varukgave.. varuvalai (Fish) saappida varukgave. Saappiduveergalaa?
    Yes! My dinner here is chicken or fish ! I don't eat beef, pork or lamb/mutton ! Doctor's orders ! When I visit India I go for pomfret and prawns !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. Likes vasudevan31355 liked this post
  7. #2504
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    kalakkal mullum malarum alasal vasu sir.. esp raman aandaalum ravanana aandaalum and nitham nitham nel soru..wow.. pictures are tempting (aanaa naan saappida maattEnE).. intha karuvaadu meenai vEga vachchu kaaya vaippaangaLaa..(oru chiinna doubt)..

  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  9. #2505
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    'தினம் குடிச்சா ஒடம்பு அது ரொம்பப் பெருக்குமய்யா '-

    இந்த வரி கூழுக்கும் பொருந்தும் சரக்கிற்கும் பொருத்தும் எல்லாவற்றுக்கும் பொருந்தும் .

    படாபட் ஜெயலக்ஷ்மி திறமையான நடிகை.கொச்சையாக சொல்வதானால் 'நாட்டு கட்டை' போன்ற கதாபாதிரங்களுக்கு மிகவும் பொருத்தமானவர் . தியாகம் திரை படம் மிக சிறந்த உதாரணம். வாசு அதாவது எம் ஆர் ஆர் வாசு மூக்குத்தி ஒன்று வாங்கி கொண்டு படாபட் இடம் கொடுத்து
    "பூவோடு சேர்த்து கொடுக்கிறேன் மாட்டிகிறயா இல்லை மாட்டி விடட்டா"
    என்று சொல்லும் போது படாபட்
    "மாட்டுவையா மாட்டுவே ஏமாந்தவள் எவளாவது மாட்டுவா அவளை (மன்னிக்கவும்) அவள்ட்ட மாட்டு " பின்னி எடுத்துருவாங்க .

    ஷோபாவை போல் மிக சிறந்த நடிகை . காதல் தோல்வியில் சாதல் (தற்கொலை) ஆனவங்க .

    சாப்பாடு கடை புகைப்படங்கள் தேடி தேடி போட்டு உள்ளீர்கள். அருமையிலும் அருமை



    படாபட் உடன் இருப்பது யார் சந்திர மோகனா ?
    gkrishna

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  11. #2506
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்...
    படத்திற்கு மகேந்திரன் ஒரு க்ளைமேக்ஸ் வைத்தாரென்றால், தங்கள் இசைப் படத்திற்கு தாங்கள் வைத்த க்ளைமாக்ஸ்..
    எதிர்பாராதது..

    நித்தம் நித்தம் நெல்லுச் சோறு...
    பாட்டைப் பற்றிச் சொல்லி அதன் நிழற்படங்களையும் கொடுத்த தங்கள் பாணி மிகவும் அருமை..

    நிழற்படங்களை மிகவும் ரசித்தேன் (சைவங்களை மட்டும் தான் எனச் சொல்ல வேண்டுமா என்ன)

    சூப்பர்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #2507
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    'வாசு அதாவது எம் ஆர் ஆர் வாசு மூக்குத்தி ஒன்று வாங்கி கொண்டு படாபட் இடம் கொடுத்து
    குரும்பூர் குப்புசாமி ரேஞ்சுக்கு எங்ககிட்டேயேவா?
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #2508
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 21)



    'முள்ளும் மலரும்' பாடல்கள்... தொடர்கிறது...

    'அடிப்பெண்ணே! பொன்னூஞ்சல் ஆடும் இளமை'



    சரத்பாபு நெஞ்சில் திருமண ஆசை விதைத்தவுடன் ஷோபாவின் மனதுக்குள் மோகனமாக மலரும் பாடல். இளம் பெண்ணின் நெஞ்சத்தில் கூத்தாட ஆரம்பிக்கும் எண்ணங்கள். தன் அழகைத் தானே ரசிக்கும் ஆரம்பம். துள்ளாட்டம் போடும் மனம். இயற்கையோடு தன்னை இனைத்துப் பார்த்து மகிழும் இளமை. நாணம், கூச்சம் கலந்த குதூகல மனநிலை.

    பஞ்சுவின் அருமையான பாடல். ராஜாவின் வழக்கமான ராஜாங்கம். ஜென்ஸியின் 'கிறீச்' குரலில். சில வார்த்தைகளை புரியாதபடி உச்சரிப்பார். ஆனாலும் இனிமைதான்.

    கோபால் போனில் பேசும் போது சொன்னது ஞாபகம் வருகிறது. இந்தப் பாடலுக்கு முன்னமேயே எம்.எஸ்.விஸ்வநாதன் 'அவர்கள்' படத்தில் 'காற்றுக்கென வேலி' பாடலை காட்டாற்று வெள்ளம் போல் கொடுத்துவிட்டதால் இந்த பாடல் கொஞ்சம் அமுங்கிப் போனது என்று.




    இயக்குனர் மகேந்திரன் இப்பாடலை அப்படியே பாலு மகேந்திரவைப் படமாக்க சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டது போல் தெரிகிறது. பாலு மகேந்திரா 'என் ஷோபா' என்று அடிக்கடி உரிமையோடு கூறிக் கொள்வதை நிரூபணம் செய்வது போன்ற பாடலாக்கம். இஷ்டத்திற்கு ஷோபாவை வித வித போஸ்களில் நிற்க வைத்து, படுக்க வைத்து, ஓடவிட்டு, குளிக்க விட்டு, ரவிக்கையற்ற புடவையுடன் அழகு பார்த்து ஸ்டில்களாக எடுத்துத் தள்ளி ஆசையைத் தீர்த்துக் கொண்டிருப்பார்.

    ராஜாவின் துள்ள வைக்கும் இசை. அதுவும் பாடலின் துவக்க இசையும், முடிவடையும் போது இனிக்கும் அந்த நீள் இசையும் வெகு அற்புதம். ஜென்ஸி 'பூமிக்கோ ஒரு தாஹம்' என்று 'க' எழுத்தையெல்லாம் 'ஹ' வாக மாற்றி உச்சரித்து தமிழின் மேன்மையைக் காப்பாற்றுவார். இந்த விஷயங்களில் ராஜா கவனம் செலுத்தாதும் குறையே. இனிமை மட்டும் இருந்தால் போதுமா? உச்சரிப்பில் கவனம் தேவைதானே?

    எப்படி இருந்தாலும் நல்ல பாடல்.


    மிக முக்கியமான ஒன்று. 'முள்ளும் மலரும்' படத்தில் 5 பாடல்கள்தாம். இந்த இடத்தில்தான் மகேந்திரனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்ட வேண்டும். டைட்டில் பாடலை விட்டு விடுவோம். மற்ற நான்கும் பார்த்தீர்களானால் நான்கும் வெவ்வேறு ரகம். மிக அழாக 4 பாடல்களையும் 4 வித கோணங்களில் தந்து நம்மை திக்கு முக்காடச் செய்திருப்பார் இயக்குனர்.

    'செந்தாழம்பூவில்' மிக அருமையான இயற்கையை பெண்ணாக கற்பனை செய்து ரசனையோடு பாடும் கிளாஸ் ரகம்

    'ராமன் ஆண்டாலும்' எடுத்துக் கொண்டால் ஆவேச ஆர்ப்பாட்ட லோ கிளாஸ் ரகம்

    'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு' சாப்பாட்டைப் பற்றியே சுற்றும் சலிக்காத ரகம்

    'அடிப் பெண்ணே' காதல் கொண்டவளின் மனநிலையை விளக்கும் அழகு ரகம்

    ஒன்று அமைதியுடன் மிகப் பொருத்தமாக ஜேசுதாஸிற்கு
    ஒன்று களேபர கலாட்டா பண்ணும் பாலாவிற்கு
    ஒன்று நாட்டுப்புற ஜனரஞ்சக மெட்டில் வாணிக்கு
    ஒன்று இளமைத் துடிப்பான ஜென்ஸிக்கு

    சரத்தின் ரசனை நிலைக்கும், ரஜினியின் கோப நிலைக்கும், 'படாபட்'டின் மாறாத சாப்பாட்டு ரசனைக்கும், ஷோபாவின் பூரிக்கும் இளமைத் துடிப்பான கனவுகளுக்குமான பாத்திரங்களுக்கு அழுத்தம் தரக்கூடிய, மிகத் தேவையான, வாழ்நாள் முச்சூட நம்மை ரசிக்க வைக்கும் பாடலகள். அனாவசிய திணிப்பு என்று எதுவுமே கிடையாது. இது படத்தின் வெற்றிக்கு மேலும் வழிவகுத்தது என்று கூறலாம். அது போல குறைந்த பாடல்களே என்பதால் ராஜாவும் பார்த்து பார்த்து செதுக்க முடிந்தது.

    இப்போது 'முள்ளும் மலரும்' இறுதிப் பாடலை முழுதாக வரிகளுடன் ரசிக்கலாம்.




    அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
    வண்ணங்கள் தோன்றும் இயற்கை
    உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
    கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
    பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
    அடிப்பெண்ணே

    அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
    வண்ணங்கள் தோன்றும் இயற்கை

    வானத்தில் சில மேகம்
    பூமிக்கோ ஒரு தாகம்
    பாவை ஆசை என்ன
    பூங்காற்றில் ஒரு ராகம்
    பொன்வண்டின் ரீங்காரம்
    பாடும் பாடல் என்ன

    சித்தாடை கட்டாத செவ்வந்தியே
    சிங்காரப் பார்வை சொல்லும் சேதி என்னவோ

    அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
    வண்ணங்கள் தோன்றும் இயற்கை
    உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
    கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
    பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
    அடிப்பெண்ணே
    அடிப்பெண்ணே

    நீரோடும் ஒரு ஓடை
    மேலாடும் திருமேடை
    தேடும் தேவை என்ன
    பார்த்தாலும் ஒரு ராணி
    பாலாடை இவள் மேனி
    கூறும் ஜாடை என்ன
    ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே
    கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ

    அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
    வண்ணங்கள் தோன்றும் இயற்கை
    உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
    கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
    பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
    அடிப்பெண்ணே
    அடிப்பெண்ணே


    Last edited by vasudevan31355; 9th January 2015 at 11:32 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #2509
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    vasu: I was joking about dinner. Don't plan on rushing to Cuddalore or Porto Novo to fish for pomfret! I am a light eater. It becomes even lighter when I travel. When we travel we usually carry dark chocolate and nuts( almond, cashew, pistachio,walnut and hazelnut). You can feed me pattaaNikkadalai or pottukkadalai I miss here ! I like boiled raw peanuts (mallakkottai? ) !
    Last edited by rajraj; 6th January 2015 at 10:54 AM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  16. Likes kalnayak, chinnakkannan liked this post
  17. #2510
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    'முள்ளும் மலரும்' பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகின்றன. 'மதுர கானங்கள்' தொடர்களிலேயே என்னை பெண்டு நிமிர்த்திய படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் மனம் முழுக்க ஒரு திருப்தி பரவிக் கிடப்பதை மறுப்பதற்கில்லை.


    இந்தப் படத்தைப் பற்றி நான் இங்கு எழுதிய பதிவுகளை பற்றி இயக்குனர் மகேந்திரன் அவர்கள் வரை எடுத்துசென்று என்னையும், 'மதுர கானங்கள்' திரியையும் பெருமைப் படுத்திய அன்பு நண்பர் கோபால் அவர்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.



    மிகப் பொறுமையாக சகிப்புத் தன்மையோடு பெரிய மனது வைத்து என்னுடைய 'முள்ளும் மலரும்' பதிவுகளை படித்து ரசித்து என்னைப் பாராட்டிய அனைத்து அன்பு நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி!

    இப்படத்தின் பதிவுகளுக்காக எனக்கு தனிமடல்கள் அனுப்பிப் பாராட்டிய உள்ளங்களுக்கும், அலைபேசியில் பாராட்டிய நெஞ்சங்களுக்கும், 'லைக்'குகளை அள்ளி வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும், 'முள்ளும் மலரும்' பதிவுகளைப் பற்றி பொறுமையுடன் கேட்ட இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றி! நன்றி! நன்றி!
    Last edited by vasudevan31355; 6th January 2015 at 10:53 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes kalnayak, sss, Russellmai, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •