-
10th February 2015, 11:57 AM
#41
Senior Member
Senior Hubber
பாட்டெழுத வந்துவிட்டுப் பாதியிலே நின்றுவிட்டேன்
..பாவையவ்ள் ஈரவிழிப் பார்வையினால் வந்தவினை
கூட்டிவிடும் ஆவலினை கூர்விழியின் தன்மையது
..கூப்பிட்டுப் பேசத்தான் நினைப்பதுவும் தெரியலையே
நோட்டமிடும் உள்மனசு நோகவைத்தே சொல்வதுவோ
..நொந்தபடி ஏதேனும் சொல்வதற்கே கண்பேச்சு
வாட்டமிலை வஞ்சிமுகம் மறுபடியும் காணையிலே
..வண்ணவிதழ் புன்னகைக்க வந்ததுவே பூக்கவிதை..
-
10th February 2015 11:57 AM
# ADS
Circuit advertisement
-
11th February 2015, 12:45 PM
#42
Senior Member
Senior Hubber
கனிந்தது காலம் கவிதை வரைய
சிந்தனையில் தேடினேன் கருவினை
எடுக்கப்போனேன் எழுதுபொருள்
துணையானவள் மறித்து நின்றாள்
கண்டுகொண்டேன் கருப்பொருள்
அனைவருக்கும் வரும் எதிர்ப்பொருள்.
Last edited by kalnayak; 11th February 2015 at 12:58 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
12th February 2015, 11:06 AM
#43
Senior Member
Senior Hubber
அசிங்கம் செய்ய யாருமில்லா தைரியத்தில் இயற்கை
வானம் என்னும் சுவற்றிற்கு நீல வண்ணம் பூசுகிறது
நிலைமை பார்த்து மேகப் பஞ்சுகளால் ஓவியம் வரைகிறது
மழையைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டு வானவில் எழுகிறது.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th February 2015, 01:17 AM
#44
Senior Member
Senior Hubber
நாளை நாளைமறு நாள் காதலர் தினம் முன்னிட்டு காதல் பாடல்கள் வடிக்கவும்..
**
பெரியமுள் சின்னமுள்ளை சுத்திசுத்தி வாரதுபோல்
..பேதையென் நெஞ்சுவொன்னை நெனச்சபடி இருக்குதய்யா
கரியநிறக் கரடியொண்ணு காட்டுவழி போகுதின்னு
..கலங்காமப் போனமக்கள் கதறித்தான் திரும்பவர
சரியாத்தான் பாத்தீரா மிருகந்தான் கண்டீரா
..சாக்கெனவே சொன்னீரா எனச்சொல்லிப் போனவரே
கரியாட்டம் ஒடம்புலதான் காத்திரமா இருப்பீரே
…கரடிவுமை அடிச்சதுவோ கன்னிமனம் துடிக்குதய்யா.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th February 2015, 10:26 AM
#45
Senior Member
Senior Hubber
உயிர்களை காக்கும் கதிரவன் ஆண்பால்
உயிர்களை கொண்ட பூமியோ பெண்பால்
புதன், வெள்ளி முதலான கிரகங்கள் ஆண்பால்
புவிப் பெண்ணை சுற்றும் திங்கள் அவன்
சந்திரனென்று ஆணாய் திரிகிறான்
புலவருக்கோ காதலியின் சகோதரியாய்
நிலாப் பெண் தெரிகிறாள். என்ன
திங்கள் ஒரு திருநங்கையோ இல்லையதை
சுடராய் அணிந்து கொண்ட அர்த்தநாரியோ?
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
13th February 2015, 03:09 PM
#46
Senior Member
Senior Hubber
கண்ணுக்குள் நீரோட காமாட்சிப் பாட்டியவ
..கலங்கித்தான் பார்த்திருந்தா தொலைக்காட்சிப் பெட்டியதை
என்னாச்சோ ஏதாச்சோ சீரியலில் சோகமென்ன
…என்றபடி எச்சுமியும் எட்டித்தான் பார்க்கையிலே
வண்ணவண்ண சேலைதனை வாகாகக் கட்டிக்கிட்டு
...வக்கணையா மீன்கொழம்பு செய்முறையைச் சொல்லிநிற்க
நன்னாத்தான் இருக்குதுடி ஏதுக்குக் கலங்குறவ
. நன்றாகச் சொல்லிவிடு என்றேதான் கேட்டுவிட
மென்சிரித்தாள் காமாட்சி ஒண்ணுமிலை எச்சுமியே
…மேலாக ஒருநினைவு என்றுசொலி நிறுத்தியவள்
கண்குளமாய்ப் போனகதை நெஞ்சுக்குள் பொங்கியெழ
…காலையிலே மார்க்கெட்டு வெரசாத்தான் தாம்போயி
சின்னமீனு பெரியமீனு நல்லமீனாப் பொறக்கிவந்து
… சிட்டெனவே குழம்புவைக்க மகன்விரும்பி சாப்பிடவும்
பின்னதொரு நாளிலிந்த முதியோரின் இல்லத்தில்
…பிள்ளையவன் சேர்த்ததையும் சொல்லவில்லை அக்கிழவி..
Last edited by chinnakkannan; 13th February 2015 at 03:55 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th February 2015, 02:05 PM
#47
Senior Member
Senior Hubber
தோற்றவர் வெல்வதும், வென்றவர் தோற்பதும் காதலில் மட்டும்தானே
தோற்றம் பார்த்து மட்டும் வரும் காதல் தொடர்ந்து வெல்வது இல்லையே
தோகையாக வருடும் காதல் நினைவு காதலித்து தோற்றவர்க்கு சாத்தியம்
தோணும் வரியை எழுதினேன் காதலர் தினத்தில் தோற்றவர் ஆதரவிற்கு
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
15th February 2015, 10:24 AM
#48
Senior Member
Senior Hubber
காணி நிலங்கேட்டேன் கண்டுவந்தே தந்தாய்
நாணி வணங்கி நலமாய் - வாணியுனைப்
பக்குவமாய் நான்வணங்கிப் பாதம் பணிகின்றேன்
சொக்கும் எழுத்தெனக்குச் சொல்..
-
15th February 2015, 10:38 AM
#49
Senior Member
Senior Hubber
நாணும் பலசெயல்கள் நற்புவியில் செய்திருந்து
காணும் காட்சிகளே உண்மையெனப் - பேணித்
தானிருந்தேன் நீக்கினாய் தக்கபடி வாணிநீ,
ஆணியே ஆயிற் றது..
-
15th February 2015, 10:47 AM
#50
Senior Member
Senior Hubber
நற்றமிழில் பாட்டெழுத நாட்டமுடன் தாளெடுத்தால்
கற்பனையோ ஓடுதே காதத்தில் - உன்பதத்தில்
வாணியே வீழ வரந்தந்தாய் இங்கெனக்கு
ஆணியே சொல்லுக் கது..
Bookmarks