-
10th September 2015, 06:54 AM
#11
Senior Member
Seasoned Hubber
ஸ்ரீதர், ஏபிஎன் இருவருமே பொருளாதார ரீதியில் நஷ்டப்பட்டவர்கள் என்பது உண்மையே. ஆனால் அவை நிச்சயமாக நடிகர் திலகத்தின் படங்களால் அல்ல என்பதும் வரலாறு நிரூபித்த உண்மையாகும். ஸ்ரீதரைப் பொறுத்த மட்டில் அவளுக்கென்று ஓர் மனம், அலைகள் என பரீட்சார்த்தமான படங்களை எடுக்கிறேன் என, சிவந்தமண் மூலம் தான் ஈட்டிய லாபத்தை விரயம் செய்தார். இரு படங்களுமே தோல்வியடைந்தன. அதே போல ஏபிஎன் அவர்களும் கண்காட்சி மேல் நாட்டு மருகள் என வெவ்வேறு படங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் மூலம் தான் ஈட்டிய லாபத்தை விரயம் செய்தார். இதன் பின்னரே இவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து படம் எடுக்கச் சென்றனர். இதுதான் வரலாறு. நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்து நஷ்டமடைந்தேன் என்று மனசாட்சி உள்ள எந்த தயாரிப்பாளருமே இது வரை கூறியதில்லை. ஏபிஎன்னைப் பொறுத்த மட்டில் திருமலை தென்குமரி மட்டுமே நல்ல லாபத்தைத் தந்தது. மேல் நாட்டு மருமகள் நல்ல புகழைப் பெற்றாலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. சென்னையிலும் ஓரிரு பெரு நகரங்களிலும் மட்டுமே இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே போல் தான் அ்கத்தியர் திரைப்படமும், பெரு நகரங்களில் மட்டுமே ஓரளவிற்கு வசூல் செய்தது. சென்னையில் அகத்தியர் நல்ல வரவேற்பைப் பெற்றதும் உண்மை.
இன்னும் சொல்லப்போனால் ஒரு விநியோகஸ்தர் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைத் திரையிட்டு அதன் மூலம் தான் ஈட்டிய வருவாயில் ஒரு திரையரங்கினை வாங்கிப் புதுப்பித்து, அவர் பின்னாளில் அத்திரையரங்கின் பெய்ராலேயே அடையாளம் காணப்பட்டார். இது அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியதாகும்.
Last edited by RAGHAVENDRA; 10th September 2015 at 06:58 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
10th September 2015 06:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks