Page 349 of 402 FirstFirst ... 249299339347348349350351359399 ... LastLast
Results 3,481 to 3,490 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #3481
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    எனது தலைவன் குடிசையில் வாழ்வோர் இல்லங்களில் மட்டுமல்ல குடிசையே இல்லாத இது போன்ற நடைபாதை வாசிகளின் உள்ளங்களிலும் வாழ்கிறார் ! என்பதற்கு இந்த படமே சாட்சி ! ஓங்குக என் தலைவன் புகழ்




    நன்றி திரு.யுகேஷ் பாபு.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3482
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆஜானுபாகுவான, ஆண்மை மிக்க வில்லன் பி.எஸ்.வீரப்பா.

    1950களில் வந்த வில்லன்களில் மட்டுமல்ல அதன் பிறகு 1960களில் வில்லன்களாக தமிழ்த்திரையில் நின்றவர்கள் எவரையும் விட மகத்துவம் நிறைந்தவர் வீரப்பா.

    வில்லன் வீரப்பாவின் முக்கிய படங்கள் என்று சில சொல்வதென்றால்
    மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956)
    ’அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம் திறந்திடு சீஸே!’

    மகாதேவி ( 1957 )
    சாவித்திரியை அவர் காமம் பொங்கப் பார்க்கும் பார்வை.
    ’அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரண தேவி!’
    எம். என்.ராஜம் அவரைப்பார்த்து வெட்கம், நாணம் கலந்து ’அத்தான்’ என்று குழையும்போது எரிச்சலுடன் வீரப்பா ’சத்தான இந்த வார்த்தைகளில் செத்தான் கருணாகரன்!’
    ’அப்படி அபசகுனமாக சொல்லாதீர்கள் அத்தான்’ என்று
    எம்.என்.ராஜம் உடனே பதறும்போது ’சொல்லுக்கெல்லாம் கொல்லும் சக்தி இருந்தால் உலகம் என்றோ அழிந்திருக்குமடி!’
    சந்திரபாபுவிடம் சீறல் ’கிளியைக் கொண்டு வரச்சொன்னால் குரங்கைக் கொண்டு வந்து விட்டாயே!’

    'பெற்றவளுக்கில்லாத அக்கறை உனக்கென்னடி?’

    ராஜராஜன் (1957)
    ’புகழ்ந்து பாடமாட்டானா இந்தப் புலவன்? பட்டினி போடுங்கள்! நான்கு நாள் பட்டினி கிடந்தால் கலிப்பா, வெண்பா என்று பொழிந்து தள்ளி விடமாட்டானா! ஹா ஹா ஹா ‘

    நாடோடி மன்னன் (1958)
    நாடோடி மன்னன் படத்தில் ’பிங்களனோ ஒரு அப்பாவி’ என்று நம்பியாரை எள்ளி நகையாடுவார்.
    புதிய சட்டங்கள் பற்றி எம்.ஜி.ஆர் எடுத்துச்சொல்லும்போது ‘கற்பழித்தால் மரணதண்டனை.” என்ற சட்டம் குறித்து உடனே,உடனே வீரப்பா அதிர்ச்சியாகி முகத்தில் கடும்கோபக்குறி காட்டுவார். என்ன ஒரு வில்லத்தனம்!

    வஞ்சிக்கோட்டை வாலிபன் (1957)
    மிகப்பிரபலமான அந்த வசனம்! ’சாதுர்யம் பேசாதடி என் சதங்கைக்கு பதில் சொல்லடி’ என்று வைஜயந்திமாலா பொங்கி, பத்மினிக்கு நடன சவால் விடும்போது வீரப்பாவின் ஆரவார குதூகலம். ’சபாஷ்! சரியான போட்டி!’ வீரப்பாவின் வசனத்துக்கு தியேட்டரே அதிரும்!

    சிவகெங்கைச் சீமை (1959)
    ’நள்ளிரவில் துள்ளி விழும் மருது பாண்டியரின் தலை!’ ஹாஹாஹா.
    (ஜஞ்சஞ்சஞ்சங் ரீரிகார்டிங்க்) இடைவேளை! படத்துக்கு இடைவேளை!

    இடைவேளைக்குப்பின் கூட சிவகெங்கைச் சீமையில் வீரப்பா பொறி சிந்தும் வெங்கனல் வசனங்கள் பிரமிக்க அடிக்கும்.
    ’கொள்ளையடித்தவன் வள்ளலாகிறான்!..... பல மண்டை ஓடுகளின் மீது சாம்ராஜ்யங்கள் அமைக்கப்படுகின்றன!......ஹாஹாஹா!..’
    வெள்ளையர்களுக்கெதிரான மருது பாண்டியர்களின் போராட்டம் தான் சிவகெங்கைச்சீமை. வெள்ளைக்காரன்கள் இருந்தால் தான் என்ன! சிவகெங்கைச்சீமையில் வில்லன் வீரப்பா மட்டும் தான்!

    வீரப்பாவின் உச்சமான பெர்ஃபாமன்ஸ் என்றால் மகாதேவி, நாடோடி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், சிவகெங்கைச் சீமை என்ற நான்கு படங்கள் தான்.


    courtesy net

  4. Likes Scottkaz liked this post
  5. #3483
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்னடா காணோமேன்னு பாத்தேன். நண்பர் திரு.ஆதிராம் வந்துட்டாருய்யா..... அய்யய்ய்ய்யோ... மறுபடியும் முதல்லேருந்தா? நா எஸ்கே.......ப்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. #3484
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    avar vera rks vers kalai sir

  7. #3485
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    friends intha varam special show ethuvum sathyam complexil illaiya ? ingae ore sivantha mann collection discussion panrangalae

  8. Thanks Scottkaz thanked for this post
  9. #3486
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    avar vera rks vers kalai sir
    திரு.ஆர்.கே.எஸ். உணர்ச்சி வசப்படுவாரே தவிர, நல்ல மனுசன். மூட்டி விடமாட்டார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. #3487
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நம்பியார் : "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா..."
    எம்ஜிஆர் : சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்..".

  11. Thanks Scottkaz thanked for this post
  12. #3488
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks Scottkaz thanked for this post
  14. #3489
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களுக்கு,

    தர்மராஜா படம் நஷ்டம் என்றதும் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு கோபம் வந்து விட்டது. சிவந்த மண் பிரச்சினைக்கு பதில் சொல்லியிருக்கிறார்.

    உரிமைக்குரல் படம் மூலம்தான் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டேன் என்று திரு.ஸ்ரீதர் சொல்லியிருக்கிறார். அதை திரு.முரளி அவர்கள் மறுக்காதது மகிழ்ச்சி. விரைவில் விவரங்கள் நண்பர்கள் மூலம் பதிவிடப்படும் என்று நம்புகிறேன்.

    உரிமைக்குரல் படப்பிடிப்பின்போது எம்ஜிஆர் ஸ்ரீதரை பாடாய் படுத்தினார் என்பது திரு.முரளியின் கருத்து. அதை ஒப்புக் கொள்கிறார்களா? என்றும் கேட்டிருக்கிறார். உண்மையில் ’பாடாய் படுத்தினார்’ என்ற வார்த்தையே நான் கொடுத்த விவரத்தில் இல்லை. அதில் இருப்பதை கீழே தருகிறேன்.

    //உரிமைக்குரல் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருக்காக தன்னுடைய தனித்தன்மையை நிறைய இழந்தார் ஸ்ரீதர். இயக்குனரிடம் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். ஏனெனில் பெரும் நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிகரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது அக்கறை. ஸ்ரீதருக்கும் இது புரிந்ததால் விட்டுக்கொடுத்தே போனார். //
    (மக்கள் திலகம் திரி பக்கம் 334 பதிவு.3332)

    ‘அடம் பிடிப்பது’ என்றுதான் உள்ளது. அதுவும் கூட நஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதருக்கு இப்படம் வணிக ரீதியாக பெரிய லாபத்தை தரவேண்டும் என்பது அவரது (மக்கள் திலகத்தின்) அக்கறை என்றும் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்கள். அந்தப் படம் மட்டுமல்ல, தான் நடிக்கும் எல்லாப் படங்களுக்குமே தான் நினைக்கும்படி வரவேண்டும் என்றுதான் மக்கள் திலகம் அடம் பிடிப்பார். படம் நன்றாக வரவேண்டும் என்பதில் அவருக்கு உள்ள அக்கறை அது. மகிழ்ச்சியாக ஒப்புக் கொள்கிறோம்.

    ரசிகர் மன்ற நோட்டீசை வைத்துக் கொண்டு பேசுபவர்களிடம் லாஜிக் எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார். அதைத்தான் நான் ஏற்கனவே சொன்னேன். எங்களிடமாவது ரசிகர் மன்ற நோட்டீஸ் இருக்கிறது. உங்களிடம் அதுகூட இல்லாமல் எழுதுகிறீர்களே? என்று.

    சிவாஜியின் சாதனை சிகரங்கள் என்று தனி ஸ்டிக்கியே போட்டு திரு.முரளி அவர்கள் எழுதியிருக்கிறார்.

    அதில் உள்ள தவறுகளை பார்ப்போம்.

    1.ராஜ ராஜ சோழன் திரைப்படம் 100 நாட்கள் தமிழகத்தின் எந்த திரையரங்கிலும் ஓடவே இல்லை. ஆனால், 100 நாள் படம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்.3 பதிவு.29. மற்ற சில படங்களுக்கு தியேட்டர் பெயர் இருக்கும். இந்தப் படத்துக்கு 100 நாள் ஓடிய தியேட்டர் பெயரும் இல்லை)

    2. சென்னையில் ‘ராஜா’ திரைப்படம் 2 தியேட்டர்களில் (தேவிபாரடைஸ், ராக்சி) 100 நாள் ஓடியது. ஆனால் சாதனை சிகரங்களில் 3 தியேட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அகஸ்தியாவும் சேர்த்து. (சாதனை சிகரங்கள் பக்கம்.3 பதிவு.26). சமீபத்தில் இதை திரு.குமார் சார் மக்கள் திலகம் திரியில் சுட்டிக் காட்டியபோது கூட திரு.முரளி அதை மறுக்கவில்லை.

    3. திருவருட்செல்வர் திரைப்படம் தமிழகத்தின் எந்த திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடவே இல்லை. சாந்தி தியேட்டர் திரையரங்கு வளாகத்தில் கல்வெட்டு வைத்துள்ளார்கள். அதில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களில் 100 நாட்கள் ஓடியதை படத்தின் பெயருக்கு பக்கத்திலேயே ‘h’ என்றும், வெள்ளி விழா கொண்டாடிய படங்களை ‘s’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிலும் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியதாக, அதாவது ‘h’ என்று குறிப்பிடப்படவில்லை.

    அதேபோல, சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் நண்பர் திரு.சந்திரசேகர் அவர்கள் ஒரு ‘வரலாற்றின் வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நக்கீரன் பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ளது. அதில் கடைசியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியலும் ஓடிய விவரங்களும் தரப்பட்டுள்ளன. அதிலும் திருவருட் செல்வர் 100 நாட்கள் ஓடியதாக இல்லை.

    திரு.முரளி அவர்களின் பதிவுக்கு முன்னால் பதிவு எண்.1612 திரு.ஆதிராமும் திருவருட்செல்வர் சுமாராக போனது என்று கூறியுள்ளார்.

    ஆனால், சாதனை சிகரங்களில் திருவருட்செல்வர் 100 நாட்கள் ஓடியபடம் என்று திரு.முரளி குறிப்பிட்டுள்ளார். (சாதனை சிகரங்கள் பக்கம் 3 பதிவு 21). கவனித்துப் பார்த்தால் தியேட்டர் பெயரும் இருக்காது.

    இப்படி எல்லாம் அந்த சாதனை சிகரங்கள் தவறான தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் விதண்டாவாதம் செய்கிறோம். லாஜிக் இல்லை என்று திரு.முரளி கூறுகிறார்.

    நான் மேலே கூறியவற்றை எல்லாம் சரிபார்த்துவிட்டு (இதெல்லாம் சாம்பிள்தான்) அந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த நோட்டீசை பார்த்தால் நாம் அடித்து விடவில்லை என்ற உண்மை நடுநிலையாளர்களுக்கு விளங்கும்.


    Quote Originally Posted by mgrraamamoorthi View Post

    உண்மைகளை ஒப்புக் கொள்ள மனம் இல்லாதவர்களிடம் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறுதான். இருந்தாலும் நடுநிலையாளர்களுக்கு உண்மையை விளக்க வேண்டியுள்ளதே.என்ன செய்ய?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 10th September 2015 at 09:26 PM.

  15. Thanks Russellrqe, Scottkaz thanked for this post
    Likes Russellrqe, Scottkaz liked this post
  16. #3490
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் உள்ளும் புறமும் தூய்மையுடன் துலங்க வேண்டும். புறத்தே நல்லவனாகவும் உள்ளத்தே வஞ்சகனாகவும் இருப்பது தகாது.

    - புரட்சித்தலைவர்

  17. Thanks Scottkaz thanked for this post
    Likes Scottkaz liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •