வெற்றிகள் கிடைக்கிற
திசைநோக்கி விழிகாட்ட...

சான்றோரின் சபை நோக்கி
வழிகாட்ட...

எங்கள் மன்னவன் வந்தான்.


மன்னவன்
விழிகாட்டிய
திசையெந்தன்
திசையென்று...

அவன் வழிகாட்டிய
சபை நின்று
புகழ் வெல்லும்
திடம் கொண்டு...

இந்தச் சின்னவன் வந்தான்.