Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அந்தக் கடவுளைப் போல்
    அத்தனை அழகில்லை.

    ஆனாலும்,
    அகன்று பரந்த
    அந்த முகத்தில்
    அவளுக்குப் போலவே உண்டு-
    கருணை விழிகள் ரெண்டு.

    அவளுக்கிருப்பது போல்
    இப்படியும்,அப்படியுமாய்
    முளைத்த கைகள்
    நான்கில்லை இங்கே.

    இடுப்புக்குக் கீழே
    வழிந்து நீளும்
    இரண்டே கைகள்.

    இரண்டுமே,
    கோடிக் கோடி ஜனங்கள்
    தம் கண்களில்
    நன்றிகளோடு
    ஒற்றிக் கொண்டவை.

    அவள் திருமேனியில்
    இறுகி மினுக்கும்
    பட்டாடை இல்லை இங்கே.

    தொள தொளவென்று
    அணிந்த உடைகள்..
    அந்த வெள்ளை மனசு
    போலவே
    மிகத் தாராளம்.

    அவள் போல் அமர்ந்து
    அருளாட்சி செய்ய
    வெண் தாமரை இருக்கை
    இல்லை இங்கே.

    அலைந்தலைந்து
    நல்லது செய்த
    அந்த அன்புருவத்தின்
    வீற்றிருப்பெல்லாம்
    ஏழையரின் இதயங்களில்.

    அவள் மடியிருந்து
    கனிவான இசை சிந்தும்
    கை வீணை கிடையாதிங்கே.

    சத்திய எச்சில் தெறிக்கப்
    பேசுகிற பேச்சிலெல்லாம்
    சங்கீத இனிமை இங்கே.

    சரஸ்வதி அல்ல.

    நாங்கள் வணங்கிப் பணியும்
    கல்விக் கடவுளுக்கு
    "காமராஜ்" என்று பெயர்.

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •