-
6th July 2017, 04:57 PM
#11
Senior Member
Devoted Hubber
Jahir Hussain
எம் கே டி,, பி யூ சி போன்றோர்கள் தங்கள் குரல்களிலேயே பாடி நடித்த காலங்கள்,,, பத்து இருபது பாடல்கள் இருந்தாலும் எல்லாமே ஒன்று போல இருக்கும்,,, குரல் வித்தியாசம் இல்லாமல் வசனங்களை ராகம் போட்டு இழுத்து வருவது போல தோன்றிய காலகட்டத்தில் சிவாஜி வருகை,,, ஆண்மை நிறைந்த குரல் வசனம் உச்சரிக்கப் பயன்பட்டது,, பாடல்களுக்கு சி எஸ் ஜே முதற்கொண்டு எஸ் சி கிருஷ்ணன் வரை வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டது,, டி எம் எஸ் வருகைக்குப் பின் மொத்தமும் புரட்டிப் போடப்பட்டது,,, பாடலின் தன்மைக்கு ஏற்ற...வாறு அவரே குரல்களில் வித்தியாசங்களை அறிமுகப் படுத்தினார்,, சிவாஜிக்கும் எம் ஜி ஆருக்கும் குரல் வித்தியாசம் காட்டினார்,, அதிலும் பிரத்யோகமாக சிவாஜிக்கு சோகப் பாடல்களுக்கு ஹாஸ்ய பாடல்களுக்கு டூயட் பாடல்களுக்கு மற்றும் இதரவகை பாடல்களுக்கு என்று விதவிதமான குரல்களில் தனியாவர்த்தனம் செய்தார்,,, அதுபோக 70களில் எஸ் பி பி ஜேசதாஸ் போன்றோரும் 80களில் வாசுதேவனும் சிவாஜி பாடல்களை ஷேர் பண்ணிக் கொண்டனர்,, அத்தனை பாடகர்களுக்கும் சளைக்காமல் எத்தனை எத்தனை விதமான லிப் மூவ்களை கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது,,,
பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன்கூட சிவாஜிக்கு பாடியிருக்கிறார்,,, புதிய பாடகர்களிடம் அவர் அறிவுரைப்பது ஒன்றுதான்,, எனக்காக உங்கள் குரல் மாற்றி பாட வேண்டாம்,,, இயற்கையான உங்கள் குரலில் பாடுங்கள்,,, அதற்கேற்றவாறு நான் வாயசைத்துக் கொள்கிறேன் என்பார்,,, திரையில் காணுமபோது அச்சு அசலாக குரலுக்கேற்ற லிப் மூவ்மெண்ட் இருக்கும்,,, கதாபாத்திரங்களை மட்டுமே அவர் கற்பனை வார்க்கவில்லை பாடல்களிலும் பாடகர்களிடமும் அவர் தனது கற்பனைக்கு ஏற்றவாறு தன் பக்கம் திருப்பிக் கொண்டவர்,,, எத்தனையோ பாடலாசிரியர் பாடல்களில் அவர் நடிதது இருப்பினும் அந்தந்த வரிகளுக்கு ஏற்றவாறு தன் உடல் மொழியை பயனபடுத்தியவர்,,,
பாடல்களுக்கு சிவாஜியின் வாயசைப்பெல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் பதியப்படவேண்டிய சாதனைகளாகவே இருக்கும்.
அத்தனைத் துல்லியம், அத்தனைப் பொருத்தம், அத்தனை கனகச்சிதம், அத்தனை உணர்வுபூர்வம்.
இதனை வெறும் வாயசைப்பு என்று மட்டும் பார்க்கமுடியாது.
பாடலின் வரிகள் உணர்த்தும் உணர்ச்சிகளை முகத்தில் கொண்டுவந்து நிறுத்தித்தான் வாயசைப்பார். அதற்கேற்ப உடல் அசைவுகளில் உடல்மொழி வெளிப்படும்.,
கண்கள் பாடலின் வரிகளுக்கேற்ப உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயாராகிவிடும்.
பாடலின் வரியில் உச்சகட்ட சோகத்தை வெளிப்படுத்தும் வரிகள் வரும்போது வெளியேறுவதற்காக அவர் கண்களில் சில சொட்டுக் கண்ணீர் தயாராகக் காத்திருக்கும். கவிஞர்களின் எந்த வரிக்கு அந்தக் கண்ணீர் கண்களிலிருந்து இறங்கி கன்னத்தில் வழிய வேண்டுமென்பது அந்தக் கலைஞனுக்குத் தெரியும்.
பாடலில் அந்த வார்த்தை வரும்போது அந்தக் கண்ணீர் சட்டென்று கண்களிலிருந்து இறங்கி கன்னத்தின் வழியே சரசரவென்று வழியும்.
வசன உச்சரிப்புகளை மட்டுமே சிலாகித்து வந்த நமக்கெல்லாம் அவர் பாடல் வரிகளுக்கு ஏற்றது போலவும் பின்னணி இசைக்கு இணையாகவும் நடித்ததும் வரலாற்றில் பதியம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்,,,
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th July 2017 04:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks