-
15th October 2017, 10:07 PM
#1
Senior Member
Devoted Hubber
athavan ravi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th October 2017 10:07 PM
# ADS
Circuit advertisement
-
16th October 2017, 07:44 AM
#2
Senior Member
Devoted Hubber
Sundar Rajan.
Sundar Rajan
அன்பிற்குரியரிய சிவாஜியவாதிகளே,நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் கலையுலகிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் என்பது அனைவரும்... அறிந்ததே.
கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்து தான் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாக பல முறை சொல்லி இருக்கிறார்
நமது நடிகர்திலகம்.
பின்னாளில் திரையில் உச்சம் தொட்ட போதும் கட்டபொம்மன் நாடகத்தை நடத்தியுள்ளார் நமது நடிகர்திலகம்.
கட்டபொம்மன் திரைப்படமாக்கபட்டு் மாபெரும் வெற்றியும், பல சாதனைகளையும் நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல், உலகளவில் தமிழின் பெருமையையும், தமிழனின் பெருமையையும் உயர்த்தியது.
திரைப்படமாக வந்த பின்னரும் பலமுறை நாடகம் நடத்தி அதன் மூலம் கிடைத்த வருவாய் ரூபாய் 25 இலட்சத்தை கல்விக் கூடஙகளின் வளர்ச்சிக்கு கொடுத்து உதவியவர் உண்மை கர்ணன் சிவாஜி அவர்கள். இன்றைய மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும்.
மதுரையில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் கலர் படம் கட்டபொம்மன், மதுரை வந்த நடிகர் திலகம் மதுரை நகராட்சியால் சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழகத்தில் ஒரு அரசு சார்ந்த அமைப்பின் சார்பாக கௌரவிக்கப்பட்டவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்.
1960-ல் கெய்ரோவில் நடந்த ஆசியா -ஆப்ரிக்கா திரைப்பட விழாவில் கலந்து சரித்திர சாதனையாக சிறந்த படத்திற்கான விருதை வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் சிறந்த நடிகர் விருதை பெற்றவர் சரித்திரநாயன் சிவாஜி அவர்கள்.
இன்றும் கட்டபொம்மனை இன்றை சமுதாயத்திற்கு நினைவுபடுத்திக் கொண்டிருப்பவர் நமது நடிகர்திலகம்.
கட்டபொம்மனின் நினைவுநாளில் கட்டபொம்மனை வணங்குவோம்.
மக்கள்தலைவரை போற்றுவோம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks