-
31st March 2019, 10:15 PM
#11
Senior Member
Devoted Hubber
வசந்த மாளிகை பற்றிய பல செய்திகள்.
கோவை மாவட்டத்தில் ஆர். எஸ். புரத்தில் கோடீஸ்வரரின் மகன் ஒருவர் பெரும் மாளிகை கட்டி வந்தார்.காதலிக்காக அவர் கட்டி வந்ததுதான். ஆனால் அது ஒரு தலைக் காதல்.விவேக் என்ற ஜமீன்தாரின் மனைவி மேல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் மேல் காதல் வயப்பட்டிருந்தார்.விவேக் கொலை செய்யப்பட்டார்.பத்திரிக்கைகள் வசந்தமாளிகையை சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளியிட்டு இருந்தன.விவேக் ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர்தான். பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர். எங்களூர்காரர்.என் தங்கச்சி படிச்சவ படத்தில் வரும் வில்லன் மாளிகை விவேக் குடும்பத்தை சேர்ந்ததுதான்.
வசந்த மாளிகை திரைப்படம் ஓடும் நேரம் 2.42 மணிகள்.ஆனால் நாங்கள் இதை தியேட்டரில் பார்த்தது மூன்றே முக்கால் மணி நேரத்திற்கும் மேல்.ஆச்சர்யமாக உள்ளதா?
இப்படம் 1979. களில் பொள்ளாச்சி அவுட்சைட் டூரீங் தியேட்டரில் திரையிடப்பட்டது. எத்தனை முறை தேய்ந்த பிரிண்டோ? தலைவர் ஏன்? ஏன்? ஏன்? என்று பாடுவார்.பிலிம் கட்டாகும்.மறுபடியும் ஒட்ட வைத்து ஓட்டினால் ஐந்து அல்லது பத்து நிமிடம் ஓடும்.பிலிம் கட்டாகும்.இதேதான் கடைசி வரை.
படம் விட்டு வெளியே வந்தால் தியேட்டரின் கொள்ளளவுக்கு மேல் மூன்று மடங்கு கூட்டம்.
ஆனாலும், அன்று இரவுக் காட்சி ரத்து.வசந்தமாளிகை ஒரே ஒரு ஷோ ஓட்டப்பட்டதென்றால் அது அந்த தியேட்டராக மட்டும் தானிருக்கும்.
1992 ல் கோவை கே ஜி அரங்கில் வசந்த மாளிகை புது பிரிண்ட்டுடன் திரையிடப்பட்டது.பட ரிலீஸ் அப்போது பிரபலமாக இருந்த அக்கினியாயி அம்மன் பிக்சர்ஸ்.25 நாட்கள் ஓட்டப்பட்டு பெரும் வசூல் சாதனை செய்யப்பட்டது.92 க்கு மேல் எந்த பழைய படமும் நவீன அரங்குகளில் 15 நாட்கள் கூட ஓட்டப்பட்டதில்லை.அதை முறியடித்தது கர்ணன். கோவை தர்ஷனா 50 நாட்கள்.
புரூக் பீல்டில் 63 நாட்கள். ஆனால் இது புது வெர்ஷனில் டிஜிட்டலில் செய்யப்பட்டது.
ராமா நாயுடு ஆந்திராவில் இருந்து கொண்டு விநியோகஸ்தரிடம் வசூல் பற்றி விசாரிப்பார்.நான் அருகில் இரண்டு முறை இருந்து பார்த்துள்ளேன்.
கே.ஜி.யில் 25 நாட்கள் ஓடிய பழைய படமென்றால் அது வசந்த மாளிகைதான்.
கேஜியில் எடுத்து பொள்ளாச்சி atscயில் படம் திரையிடப்பட்ட போது வந்திருந்த இளைஞர் கூட்டம் வியக்க வைத்தது. அந்தப்படத்திற்கு நான் கேட்ட அதிகமான சவுண்ட் வேறு புதிய படங்களுக்கு கூட நான் பார்த்ததில்லை.இரண்டு வாரங்களை பூர்த்திசெய்து சிறு நகரமான பொள்ளாச்சியில் அப்படம் சாதனை படைத்தது.இதுவும் வேறு பழைய படங்கள் அதற்குப் பின் செய்யாத சாதனை தான்.மறுபடியும் ஆச்சர்யமாக இரண்டு மாத இடை வெளியில் துரைஸில் திரையிடப்பட்டு ஒரு வாரத்தை தாண்டியது.குறுகிய கால இடைவெளியில் பழைய படம் ஒன்று இரண்டு அரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டு சாதனையும் வசந்தமாளிகைக்கு உண்டு.நான் இங்கு குறிப்பிட காரணம் அப்போது அத் திரையரங்குகளில் புதிய படங்கள் மட்டும் தான் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தன.கர்ணனும் முதலில் atsc. யில் ஒரு வாரமும் பின் ஒரு மாத இடை வெளியில் துரைஸில் ஒரு வாரமும் ஓடியது.
ஒரு பழைய படம் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்படுவதிலும் வசந்த மாளிகை சிறப்பு பெறுகிறது.
குடிப்பழக்கம் தவறுதான்.கதாநாயகன் சதா குடித்துக் கொண்டிருப்பது போல் காட்டியும் படத்தை உச்சத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டதும் வசந்தமாளிகைக்குத் தான்.
மிகப் பெரிய காதல் காவியம் வசந்தமாளிகை சொல்லப்பட்டாலும், கதாநாயனும் நாயகியும் படம் முழுவதும் இணைந்து நடித்தாலும் காதலை நேரிடையாகச் சொல்லலாத காட்சிகளை கொண்ட படம்.
காதலுக்கான பிராண்ட்டட் சினிமா என்று எல்லோராலும் சொல்லும் படம்.
அரிதிலும் அரிதாக இரண்டு பழைய படங்களின் ஷீட்டிங் காட்சிகளை தான் இணையத்தில் காண முடிகிறது.ஒன்று தில்லானா மோகனாம்பாள்.இன்னொன்று வசந்தமாளிகை.
திரைப்படங்களில் அதிகமாக போஸ்டர்கள் காட்டப்பட்ட படமும் வசந்தமாளிகை.சமீபத்தில் வெளியான மேற்கு தொடர்ச்சி மலை படத்திலும் கூட இப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை காணலாம்.ஆங்கிலப்படம் ஒன்றிலும் இப் படத்தின் போஸ்டர் காண்பிக்கப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டில் வெள்ளிவிழா ஓடிய படம் ஒன்று இலங்கையிலும் வெள்ளிவிழா ஓடிய படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
நன்றி செந்தில்வேல் செல்வராஜ்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st March 2019 10:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks