-
24th September 2019, 02:10 AM
#1341
Junior Member
Diamond Hubber
-
24th September 2019 02:10 AM
# ADS
Circuit advertisement
-
24th September 2019, 02:34 AM
#1342
Junior Member
Diamond Hubber
-
24th September 2019, 10:52 AM
#1343
Junior Member
Diamond Hubber
வேலை வாய்ப்பு அளித்த பொன்மனச் செம்மல் :
முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கங்கை அமரனின் மகன் பிரபுவின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு புகழ் சேர்த்ததுடன் ஒரு மிருதங்க வித்வானின் கோரிக்கையையும் அதே இடத்தில் தீர்த்து வைத்தார்.விழாவில்
பேசிய மிருதங்க வித்வான் அழுத்தமாக ஒரு கோரிக்கையைச் சொல்லி வைத்தார்.இசைக் கல்லூரியில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு
வேலைவாய்ப்பு முதல்வர் உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.உடனே
அமைச்சரை எம்.ஜி.ஆர் அழைத்து தன் சார்பில் ஒரு உத்தரவை சொல்லும்படி பணிக்க,அவரும் இசைக் கல்லூரி பட்டதாரிகளுக்கு, வேலை வாய்ப்பு உறுதி அளித்து உத்தரவிடுவதாக முதல்வர் சொல்லச் சொன்னார்.அதை மகிழ்வோடு
சொல்கிறேன் என்று பிரகடனப்படுத்தி விட்டார்.கங்கை அமரனின் பையன் மாஸ்டர்
பிரபு எம்.ஜி.ஆர் காலில் விழுந்து வணங்கியதும்,தன்னுடைய பரிசாக தங்கச் சங்கிலியை அணிவித்து பாசத்துடன் தட்டிக் கொடுத்தார் புரட்சித் தலைவர்.
-தேவி 1985............ Thanks...
-
25th September 2019, 03:52 AM
#1344
Junior Member
Platinum Hubber
வரும் வெள்ளி முதல் (27/9/19) சிவகாசி லட்சம் அரங்கில்* மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் தூள் கிளப்பிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறும்*
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
-
25th September 2019, 03:57 AM
#1345
Junior Member
Platinum Hubber
குமுதம் ரிப்போர்ட்டர்*----------------------------------
ரஜினி* எம்.ஜி.ஆர். ஆக முடியாது .---------------------------------------------------
பூச்சாண்டி காட்டி வரும் இவரை அவரது ரசிகர்களே நம்பிவிட* தயாராக இல்லை .தானும் ஒரு எம்.ஜி.ஆராக* வலம்* வரலாம் என்று தமிழகத்தில் ரஜினி நினைப்பு*வைத்தால் அது 100 சதவிகிதம் தவறு . கருவாடு மீனாகலாம் ..ஆனால் ஒருபோதும் ரஜினி எம்.ஜி.ஆர். ஆகவே முடியாது .
கோதை ஜெயராமன், மீஞ்சூர் .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
25th September 2019, 05:50 PM
#1346
Junior Member
Diamond Hubber
வரும் 27.09.2019 வெள்ளிக்கிழமைமுதல் சிவகாசி லட்சம்.டி.டி.எஸ். பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் இருவேடத்தில் தூள்கிளப்பிய வெள்ளிவிழாக் காவியம்" எங்க வீட்டுப் பிள்ளை" வெற்றிப்பவனி வருகின்றார்... நன்றி ...மதுரை எஸ்.குமார்..... Thanks.........
-
25th September 2019, 05:51 PM
#1347
Junior Member
Diamond Hubber
மதுரை அனுப்பானடி - பழநி ஆறுமுகா DTS., திரையரங்கில் வரும் வெள்ளிக்கிழமை முதல் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் "அடிமைப்பெண்"... வெற்றிப்பவனி... நன்றி ... மதுரை.எஸ் குமார்............. Thanks.........
-
25th September 2019, 05:56 PM
#1348
Junior Member
Diamond Hubber
மெட்ராஸ் காரங்களே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு கலக்கிய மதுரை இரசிகர்கள். இத்தனைக்கும் "நினைத்ததை முடிப்பவன்" இந்த வருஷம் நான்காவது முறையாக அங்கு திரையிடப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்..
மண்ணுலகை விட்டு மட்டுமே மறைந்து எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்ற புரட்சி தெய்வத்தின் புகழை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் எம்ஜிஆர் பக்தர்களைக் காணும் போது உண்மையிலேயே ஒரு சிலிர்ப்பு தான் ஏற்படுகின்றது. நாங்க கூட படம் ஆரம்பிக்கும் முன் வெளியேயும், படம் போட்ட பின் உள்ளேயும் கொண்டாட்டத்தை தூள் பரத்துவோம். ஆனா, இன்ட்ரோல்ல பொதுவாக கன்ட்ரோலா தான் இருப்போம். ஆனால், இவிங்க அப்ப கூட அளப்பரைய நிறுத்தலயே. மதுரை பக்தர்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் ✌...... Thanks...
-
25th September 2019, 05:58 PM
#1349
Junior Member
Diamond Hubber
*" நினைத்ததை முடித்தவர்** "
தலைவர் அவருக்கு பாரத் பட்டம் வழங்கிய போது கூறிய பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்.
"எனக்கு இன்று இவ்வளவு இரசிகர்கள் இருப்பது ஒன்றும் பெருமையில்லை. அது ஒரு பெரிய வெற்றியும் கிடையாது. ஆனால், என் காலத்துக்குப் பின்னும் எனக்காக இரசிகர்கள் இருந்து, எனது இலட்சியங்களும் கொள்கைகளும் கடைபிடிக்கப் படுமேயாயின் அதுதான் உண்மையான வெற்றி" என்றார். இன்று வரை அதற்கு எந்தக் குறையும் ஏற்பட்டு விடாமல் தலைவரின் புகழ் நாளுக்கு நாள் ஏற்றம் மட்டுமே காண ஏதுவாக அவரது பக்தர்கள் இருந்து வருகிறார்கள், இலட்சக்கணக்கான , கோடான கோடிக்கணக்கான இரத்தத்தின் இரத்தங்களின் தலைவரின் ஆசான் எடுத்துரைத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டின் வெளிப்பாடு இது.
"என்றும் ஆளும் எங்களாட்சி இந்த மண்ணிலே" ✌✌✌✌ என்று ஆணித்தரமாக அன்றே கூறிய கலியுகக் கடவுளின் கூற்றினை மெய்யாக்கிக் கொண்டிருப்பவர்களும் அவர்கள் தான், அதிமுக வின் ஆணிவேரே இவர்கள் தான். இவர்கள் இல்லையென்றால் இந்த ஆட்சி இல்லை, பட்டம், பதவி எதுவுமேயில்லை. இதற்கு முன்பிருந்தவர்களும் உண்மை எம்ஜிஆர் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. உண்மையிலேயே எதையுமே எதிர்பார்க்காத, தன் தலைவரின் புகழ் ஒன்றே குறி என்று வாழ்கின்ற மக்கள் கூட்டத்தை நிகழ் காலத்தில் காண்பதரிது. குவாட்டர், பிரியாணிக்கு விலை போகாத முரட்டு பக்தர்கள் படை அது. அத்தகைய தியாக உள்ளம் படைத்தவர்கள் தொண்டுள்ளம் கொண்டவர்களை உலகில் வேறெங்கும் காண இயலாதென்பது தெள்ளத்தெளிவு. தன் தலைவன் செய்த தியாகத்திற்கும், தொண்டிற்கும் அவர் வழியில், நன்றி மறவாமல் ப்ரதி உபகாரம் செய்து வரும் உன்னத உள்ளங்களின் எண்ணங்களை தயவுசெய்து களங்கப்படுத்தி விடாதீர்கள். இதுவரை, கண்டுகொள்ளாமல் இருந்த போக்கையும் மாற்றிக் கொள்ளுங்கள். நாம் மதுரை சென்ட்ரலில் கண்ட தொண்டர் படையைப் போன்றதொரு படை சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்கள் தொடங்கி சிற்றூர்கள் வரை பரவி அங்கிங்கெனாதபடி வியாபித்து இருக்கிறது. அவர்களின் பரிசுத்தமான எண்ணங்களை மதிக்க வேண்டுமென்று
ஆட்சியிலும், கட்சியிலும் இருப்பவர்களை கேட்டுக் கொள்வோம். இனிமேலாவது உண்மை நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு புரட்சித் தலைவரின் வழியில் ஊழலற்ற ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் ஆட்சியைத் தர வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தலைவர் பக்தர்களின் எண்ணமாகும். தொடர் வெற்றியைக் கழகம் அடையவும் அவ்வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும் அஃதொன்றே துணை நிற்கும். தலைவரின் வழியில் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றமடைய பாடுபடுவோம். தலைவரின் புகழுக்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாமல் காப்பதே ஒவ்வொரு எம்ஜிஆர் தொண்டனின் கடமையாகும்.
வாழ்க புரட்சித் தலைவர் நாமம் ✌✌
வளர்க பொன்மனச்செம்மல் புகழ் ........... Thanks...............
-
26th September 2019, 12:10 AM
#1350
Junior Member
Platinum Hubber
கடந்த வாரம் காஞ்சி பாலசுப்ரமணியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள்*நடைபெற்றது .
தகவல் உதவி ;: காஞ்சி* நண்பர்**திரு.செல்வராஜ் .
Bookmarks