-
17th November 2019, 06:02 AM
#11
Senior Member
Devoted Hubber
அரசியல் வரலாறு தெரியாமல், விபத்தில் பதவி வகித்துக் கொண்டிருக்கும், சிவாஜியை விமர்சிக்கும் அதிமுக அமைச்சர்களே, (விபரம் தெரிந்தவர்கள், சிவாஜியை பற்றி பேசுவதில்லை)
1949, செப்படம்பர் 18ம் தேதி திமுக, அண்ணாதுரை தலைமையில் உதயமாகிறது.
1952ல் அதாவது, பராசக்தி வருவதற்கு முன் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.
... பராசக்தி திரைப்படம் வெளிவந்ததற்கு பின்,
சிவாஜி அவர்கள் திமுகவிற்காக
பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து,
நிதி வசூலித்து கொடுத்து, கட்சி வளர்ச்சிக்காக உழைக்கிறார்.
சிவாஜி செல்லும் இடமெல்லாம்,
மக்கள் வெள்ளமென திரண்டனர். சிவாஜியின் பேச்சை கேட்க இளைஞர்கள் தவம் கிடந்தனர்.
அதன்பிறகு, 1956ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது,
1962 ல் நடைபெற்ற தேர்தலில், திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது,
ஆனாலும், முதல்வர் வேட்பாளர், அண்ணாதுரை அவர்களோ, அவரது சொந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் தோல்வியடைந்தார்.
முதன்முதலாக, திமுக ஆட்சியை கைப்பற்றியது
1967ல், மேலும், முதல்வர் வேட்பாளர் அண்ணாதுரை அவர்கள் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1949ல் ஆரம்பித்த திமுக ஆட்சியை பிடிக்க
18 ஆண்டுகள் ஆனது...
ஆனால், சிவாஜி மட்டும் அரசியலில் தோற்றார், என்று பேசும் மேதாவிகளே,
சிவாஜி அவர்கள் மட்டும், கட்சி ஆரம்பித்து, 6 மாத காலத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சியை பிடிக்க வேண்டும்...
இது என்ன நியாயம்.
சிவாஜி மட்டும் தான் அரசியலில் தோற்றார் என்பது போல் ஒரு மாயையை, இன்றைய அரசியல்வாதிகளும்,. மேலும், ஊடகங்களும் தவறான தகவல்களை மக்களிடத்தில் பரப்புகின்றனர்.,
இவர்களுக்கு காலம் தான் பதில் சொல்லும்....
நன்றி Sundar Rajan ( F Book)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th November 2019 06:02 AM
# ADS
Circuit advertisement
Bookmarks