-
19th March 2020, 12:16 PM
#2801
Junior Member
Diamond Hubber
மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கி
சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.
1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.
அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு. மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது. 1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!
ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.
அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.
தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலுவுக்கு உதவுவதற்காக அவரது ‘ஆயிரத் தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். ‘‘தொலைபேசியில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டு ‘கால்ஷீட்’ கொடுத்தார்’’ என்று பின்னர், 5-2-1971 தேதியிட்ட ‘சித்ராலயா’ இதழில் பந்துலு நன்றியுடன் கூறியிருந்தார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முதலில் பந்துலுதான் இயக்குவதாக இருந்தது. இடையே அவர் இறந்து விட்டதால் எம்.ஜி.ஆரே படத்தின் இயக்குநராக பணியாற்றினார்.
சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘தெய்வத்தாய்’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அப்போது, கடுமையான அரிசிப் பஞ்சம் இருந்தது. மக்கள் அவதிப்படும் நிலையில், படம் வெற்றி பெற்றதற்காக 100வது நாள் விழா தேவையில்லை என்று எம்.ஜி.ஆர். கூறியதால் வெற்றி விழா கொண்டாடப்படவில்லை
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண் களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங் கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங் கவும் உத்தரவிட்டார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட 33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும் தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’
இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்ற
எம்.ஜி.ஆரின் 100-வது படம் ‘ஒளிவிளக்கு’. 1968-ம் ஆண்டில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. மதுரையில் 21 வாரங்கள் ஓடியது. மறு வெளியீடுகளிலும் சக்கைபோடு போட்டது. 1979-ம் ஆண்டு இலங்கையில் மறு வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘ஒளிவிளக்கு’.
அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது......... Thanks.........
-
19th March 2020 12:16 PM
# ADS
Circuit advertisement
-
19th March 2020, 12:20 PM
#2802
Junior Member
Diamond Hubber
19.03.2020 இன்று தலைவரின் துணுக்குகளில்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது திருத்தணி ஆந்திராவுடன் சேர்க்கப்பட்டது.
போராட்டம் வடக்கு எல்லையிலிருந்து நடத்தி திருத்தணியை
தமிழகத்து மீட்டார்
ம.பொ.சி.
பின்நாளில் அவர் குடல் நோயால் பாதிக்கப்பட்ட போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை............... Thanks...
-
19th March 2020, 12:23 PM
#2803
Junior Member
Diamond Hubber
அவருக்கு தைரியம் சொல்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கான
செலவுகளையும் செய்து
குணப்படுத்தி மா.பொ.சியை மீட்டார்
எம்ஜிஆர்.
பின்நாளில் தலைவர் மா.பொ.சியைப் பார்த்து
இனி ஒவ்வொரு பிறந்த நாள் விழா விலும் தாங்கள் விரும்பியதை வாங்க நான் தவறாமல்
கலந்து கொண்டு அந்த வயதுக்கு ஏற்றபடி
உ.ம் 80 என்று வைத்தால் 80000.00 ரூபாய் கவரில் தருவேன் என்று
தந்தவர் நம் தலைவர்....... Thanks...
-
19th March 2020, 12:28 PM
#2804
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர்., நடித்த "மதுரை வீரன் "படம் தமிழகத்தில் திரையிட்ட 33திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடியது.எந்த கறுப்பு வெள்ளைப்படமும் சாதிக்க வில்லை.பெங்களூரிலும் இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது.தலைவர் கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளிவிழா படம் இதுவே.ரூபாய் 1 கோடி தாண்டிய வசூல் செய்த முதல் படமும் இதுதான். திரையுலக வசூல் சக்கரவர்த்தி என எல்லோரும் எம்.ஜி.ஆர். அவர்களை கூற தொடங்கியது இந்த பட வெற்றி யினால் தான்......... Thanks.........
-
19th March 2020, 12:29 PM
#2805
Junior Member
Diamond Hubber
முன்னெல்லாம் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு டபுள்ஸ் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது
போனால் போலீஸார்
அபராதம் விதிக்கப்படும்.
தலைவர் முதல்வரானதும் டபுள்ஸ் சைக்கிளில் செல்வாம் என உத்தரவிட்டார்.
ஏழைகளின் இதய தெய்வம் அல்லவா......... Thanks.........
-
19th March 2020, 12:30 PM
#2806
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆர் படங்களை முதல் நாளிலேயே பார்த்து விட ரசிகர்கள் துடிப்பார்கள்.
அந்த ஆர்வமே சோகமாய் முடிந்தது.
சேலத்தில் 1975 ம் ஆண்டு மே 9ம் தேதி
நினைத்ததை முடிப்பவன் படம் வெளியானது.
சேலத்தில் ஜெயா தியேட்டரில் முதல்நாள்
கூட்டநெரிசலில் 4பேர்
இறந்தனர்கள்.மேலும்
சிலருக்கு காயம்.
தலைவர் கேட்டதும்
அங்கு சென்று ஆறுதல்
மற்றும் கருணைத் தொகையும் வழங்கினார்......... Thanks.........
-
19th March 2020, 12:32 PM
#2807
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆர் நடித்த" நாடோடி மன்னன் "படம்
1959 ம் ஆண்டு திருவண்ணாமலை கிருஷ்ணா திரையரங்கில் மறுவெளியீடு செய்யப்பட்டது.
சினிமாஸ்கோப் போன்ற நவீன உத்திகள் இல்லாமல் தினசரி 3 காட்சிகளாக
மறுவெளியீட்டில் 100
நாட்கள் ஓடிய ஒரே முதல் படம்
நாடோடிமன்னன்........... Thanks.........
-
19th March 2020, 12:34 PM
#2808
Junior Member
Diamond Hubber
சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த தெய்வத்தாய் படம் 100நாட்கள் ஓடியது. அப்போது கடுமையான அரிசிபஞ்சம் இருந்தது. மக்கள் அவதி ப்படும் நிலை.படம் வெற்றிவிழா தேவையில்லை என
எம்ஜிஆர் கூறியதால்
கொண்டாடப் படவில்லை........ Thanks...
-
19th March 2020, 05:37 PM
#2809
Junior Member
Platinum Hubber
ரகசிய*போலீஸ் 115 படத்திற்கு*திரண்ட பக்தர்கள் கூட்டம்*
------------------------------------------------------------------------------------------
தென்னக ஜேம்ஸ் பாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து முதல் வெளியீட்டிலும், அதன்பின் பல வெளியீடுகளிலும் வசூலில் புரட்சி செய்து சாதனை புரிந்த " ரகசிய போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில் புதிய தொழில்நுட்ப்பதில் கடந்த வாரம் சென்னையில் சுமார் 10 அரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டது .
முன்னதாக திருச்சி, கரூர், பழனி,தேனீ, சேலம் ,சேலம் மாவட்டத்தில் .;8 அரங்குகள் ,மதுரை (2 வாரங்கள் ) வெளியாகி புதிய படங்களுக்கு சவால் விடும் வகையில் வசூல் சாதனை செய்துள்ளது .
சென்னை பேபி ஆல்பட்டில்* தினசரி 2 காட்சிகள் (மாலை /இரவு ) 13/03/20 முதல் நடைபெற்றது.* ரசிகர்கள் / பக்தர்கள் பேராதரவு,மற்றும் வரவேற்பை முன்னிட்டு ஞாயிறு மாலை (15/03/20) காட்சி , இரவு காட்சி* ஆல்பட்டில் திரையிடப்பட்டது .ஞாயிறு* மாலை சிறப்பு காட்சிக்கு , கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை பக்தர்கள் குழு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது .* அதன்படி ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை இடைவிடாது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள் அரங்க வளாகத்தில் ஒலித்த வண்ணம் இருந்தது .வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் பிரத்யேக கட் அவுட் தயார் செய்து , அரங்க வாயிலில் அமைத்து , மலர்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது .மாலை 6 மணியளவில் புரட்சி தலைவரின் கட் அவுட்டுக்கு பூஜைகள், பாலபிஷேகம், இளநீர் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது . அரங்கத்தின்*வாயில் அருகில் சாலையில் சரவெடிகள், பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருந்தன .பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த உள்ளூர் ,மற்றும் வெளியூர் பக்தர்கள் திரண்டு வந்திருந்து இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
ஞாயிறு மாலை காட்சியில் சென்னை ஆல்பட்டில் சுமார் 700 நபர்களுக்கு மேல் காட்சியை ரசித்ததாக நெல்லை நண்பர் திரு.வி.ராஜா , அரங்க ஊழியர்களிடம் விசாரித்து* தகவல் தெரிவித்தார் .* பெரும்பாலான ரசிகர்களுக்கு ஆல்பட்டில் ஞாயிறு மாலை காட்சி திரையிடுவது தெரியாது .தினசரியில் முறையான விளம்பரம் இல்லை .* சென்னை தி.நகரில்* சர் பி.டி.தியாகராயர் அரங்கில் ,உரிமைக்குரல் மாத இதழ் நடத்தும்*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 103 மனித நேய விழா, மற்றும் 1970ல் வெளியான மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களின்* பொன்விழா நிகழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள்* சுமார் 400 நபர்கள்* கலந்து கொண்டிருந்ததால்கணிசமான பக்தர்கள் ஆல்பட் அரங்கிற்கு வரமுடியாமல் போய்விட்டது .இல்லாவிடில், அட்வான்ஸாக அரங்கு நிரம்பி வழிந்திருக்கும்**
கொரானா வைரஸ் நோய்* அச்சுறுத்தலை மீறி* இப்படி ரசிகர்கள் /பக்தர்கள்*திரண்டு வந்து காட்சியை ரசித்தது சென்னையில் ஆல்பட்* அரங்கில் மிகவும் ஆச்சர்யம் என்று அரங்க ஊழியர்கள் பேசிக் கொண்டதாக நெல்லை நண்பர் திரு.ராஜா தகவல் அளித்தார் .
ஒளி விளக்கு படத்தில் நடிகர் சோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பார்த்து என்ன வாத்தியாரே, மாங்குடி கிராமமே காலியாகிறது கொடிய நோயால். சீக்கிரம்*புறப்படு என்று கூறும்போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பதில் சொல்வார் . இந்த நோயே என்னை கண்டால் பறந்து போய்விடும் என்று . அதுபோல எம்.ஜி.ஆர்.*பக்தர்கள் நோயை கண்டு அசராமல், அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு நல்ல வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியான தருணம் .
பல ஆண்டுகளாக , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களுக்கு திரை அரங்குகளில் பேனர் அமைத்து , பூஜைகள் , மலரலங்காரம் , ஆராதனைகள் செய்து சிறப்பிக்கும்* திரு. ஷிவ பெருமாள் மற்றும் ஈ பாஸ்கரன் தலைமையிலான கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை குழுவிற்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில்*நெஞ்சார்ந்த நன்றிகள்
-
20th March 2020, 03:02 PM
#2810
Junior Member
Diamond Hubber
" படகோட்டி" திரைப்படத்தில் இடம்பெற்ற " கல்யாணப் பொண்ணு" முழுமையான பாடல்..
திரைப்படத்திலும் இல்லாத முழுமையான 78 Rpm இசைத்தட்டு பதிவு !
தவறாமல் கேட்டு மகிழுங்கள் நண்பர்களே !
இதோ ....
யாரும் பார்க்காத முகத்தை
கேட்காத சுகத்தை
கேளாது தரும் வளையல்
கைகளிலே ஓசை வர
கண்களிலே ஆசை வர
பெண்ணோடு வரும் வளையல்
அவ முன்னழகை சொல்லிக் கொண்டு
பின்னழகை அள்ளிக் கொண்டு
பின்னோடு வரும் வளையல்...
வாலி அவர்கள் இயற்றிய வரிகள்
ஆனால் அன்றைய பாடல் புத்தகத்தில் கூட இந்த வரிகள் இடம் பெறவில்லை என்பது நண்பர்கள் சொன்ன தகவல்...
( அன்றைய தணிக்கை குழுவினர் மேற்குறிப்பிட்ட வரிகளை அகற்றி இருக்கலாம் )
இருப்பினும் அன்றைய இசைத்தட்டு நிறுவனம் இப்பாடலை முழுமையாக தந்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்வோம் !.......... Thanks.........
Bookmarks