-
6th April 2020, 01:11 PM
#2901
Junior Member
Diamond Hubber
1969ல்தான் தங்க சுரங்கம், அடிமைப்பெண், நம்நாடு, மற்றும் சிவந்த மண் ஆகிய எம்ஜிஆர்,சிவாஜி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெளியானது. இதில் தங்க சுரங்கம் மார்ச் மாதம் 28ம்தேதி சார்லஸ் திரையரங்கில் வெளியாகி 18 நாளில் படம் தூக்கப்பட்டது. சிவாஜி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. சிவாஜி ரசிகர்களால். ரொம்பபில்ட் அப் கொடுத்த படம் தங்க சுரங்கம். அது முடிந்தவுடன் சிவாஜி ரசிகர்கள் தங்கள் ஒட்டு மொத்த கவனத்தையும் சிவந்த மண் மீது வைத்தார்கள்.
தலைவருக்கு 1969ம ஆண்டு ஏப்ரல் வரை எந்த படமும் வெளியாகவில்லை.எம்ஜிஆருக்கு கடைசியாக வெளியான படம் 1968ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான காதல் வாகனம். அந்த நேரம் எம்ஜிஆரின் 100வது படம் ஒளிவிளக்கு ஓடிக்கொண்டிருந்ததால் அதன் தரத்திற்கு சற்று குறைவான காதல் வாகனம் சுமாரான படமானது. ஆக நீண்ட நாட்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் படம் பார்க்காமல் பரிதவித்து கொண்டிருக்கும் போது வெளியான படம்தான் அடிமைப்பெண். 1969 மே 1ம் தேதி. தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் வெளியானது.
அடிமைப்பெண்ணுடன் காவல்தெய்வம் என்ற சிவாஜி கெஸ்ட் ரோலிலும் சிவகுமார் லட்சுமி ஜோடியாக நடித்த படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னால் பல தடவை இதோ வருகிறது அதோ வருகிறது என்று பலமுறை தேதி அறிவித்து விளம்பரங்கள் வந்தது.
ஆனால் அந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருந்ததால் அது முடிந்தவுடன் படம் வெளியாகும் என்று உறுதியான தேதியாக மே 1ம் தேதி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அன்று தொழிலாளர்கள் தினம். இப்போது போல் அப்போது விஷேசமாக கொண்டாட மாட்டார்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள். ஒரு 100 அல்லது 200 பேர்கள் ஒன்று சேர்ந்து அமைதியாக ஒரு ஊர்வலத்தை நடத்தி விட்டு சாயந்தரம் ஒரு மீட்டிங் நடத்துவார்கள். அவ்வளவு தான் மே தினம் முடிவடைந்து விடும்.
ஆனால் 1969 மே தினம் எம்ஜிஆர் ரசிகர்களால் வெகு விமரிசையாக அடிமைப்பெண் வெளியான திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது. ரசிகர்களும் உள்ளாட்சி தேர்தலை விட அடிமைப்பெண் வெளியாகும் தேதியைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். எனவே ஆரம்ப காட்சி அடிமைப்பெண் பார்ப்பதென்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று என்று தெரிந்து விட்டது. இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.
அதற்காக எம்ஜிஆர் ரசிகர்கள் மீனவர்கள் பலருடன் பழகியிருந்ததால் அவர்களிடம் நீங்கள் போகும் போது என்னையும் கூட்டிச் செல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். அவர்களும் உறுதியாக கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லியிருந்தார்கள். மீனவ நண்பர்கள் ரொம்ப பலசாலிகள் நாட்டு படகு பணி நிறைவடைந்தவுடன் கடலிலே செலுத்தும் போது பெரிய பெரிய வடக்கயிறுகளை கட்டி இழுக்கும் போது அவர்களின் புஜத்தை பார்த்தால் மேரு மலை போல் காட்சியளிக்கும். தரை மேல் பிறக்க வைத்தான் என்ற படகோட்டியின் பாடல்தான் அவர்களின் சமூக பாடலாக மாறிப்போனது. இன்று வரை அது தொடரந்து கொண்டுதான் இருக்கிறது. தலைவருக்காக தன் இன்னுயிரையும் மனமுவந்து தருவார்கள். அவர்கள் கூட்டத்தில் நின்று விட்டால் யாரும் அவர்களை தாண்டி செல்ல முடியாது. அவர்கள் என்னை நடுவில் நிற்க வைத்து கொண்டு சுற்றி நின்று கொண்டார்கள். ஆனால் கவுண்டர் திறந்தவுடன் அத்தனை பேரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறும் போது எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டது.. நான் மூச்சு திணறுவது கண்டு அவர்கள் தம்பி நீ முதலில் போய்விடு என்று அனைவரையும் அணை போட்டு தடுத்தது போல தடுத்து என்னை உள்ளே அனுப்பி விட்டார்கள். எனக்கு மூச்சு நின்று திரும்பி வந்தது போல இருந்தது.
ஒருவழியாக தியேட்டருக்குள்ளே சென்று அவர்கள் கூடவே இருந்து படத்தை பார்த்தேன். படம் பார்த்ததை விட ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு களித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.. வசனத்தையோ பாடல்களையோ எதையுமே என்னால் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை. ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரை தாண்டி ரோடு வரை ஆக்கிரமித்தது. ஒரே ஆட்டம்,விசில் சத்தம் என்று பயங்கரமாக இருந்தது. அந்த சத்தத்தில் அசோகனின் குரல் கூட எடுபடவில்லை. படம் ஒன்றுமே புரியாமல் மீண்டும் அடுத்த காட்சி பார்க்க முயற்சி செய்தும் பார்க்க முடியாமல் இரவுக்காட்சிக்கு நண்பர்கள் பிளாக்கில் எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கியிருந்தார்கள்.
2வது முறையாக பார்த்தும் திருப்தி ஏற்படாததால் கிட்டத்தட்ட 14 முறை பார்த்தேன். அப்படி ஒரு பிரமிப்பை ஏற்படுத்திய படம் அடிமைப்பெண். ஓபனிங் காட்சியில் ஒற்றை காலில் சண்டை செய்யும் போதே தலைவரின் புதுமையான சிந்தனை வெளிப்பட்டது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பிரமாண்டம், புதுமை என்று படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது.குறிப்பாக ஜெய்ப்பூர் அரண்மனை, பாலைவனத்தில் ஒட்டகம் சுற்றி வளைக்கும் காட்சி,சிங்க சண்டை என்று ரசிகர்கள் ஆனந்த தாண்டவம் ஆடினார்கள் இப்போது உள்ளது போல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் ஒரிஜினலாகவே தலைவர் சிரமப்பட்டு எடுத்திருப்பார். இப்போது வந்த பாகுபலி போன்ற படங்கள் சிஜி(Computer Graphics) வேலைக்காக பல நூறு கோடிகள் செலவு செய்து விட்டு ஆஹா பிரமாண்டம் என்று கூறும்போது தலைவரின் தொழில் நுட்ப திறமையை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது.
அந்த வருடம் மே மாத லீவுக்கு மக்கள் ஊருக்கு போவதை நிறுத்தி விட்டு குடும்பத்தோடு அடிமைப்பெண்ணை கண்டு ரசித்தார்கள்.50 நாட்களில் சனி,ஞாயிறு காலை காட்சி செவ்வாய்,வெள்ளி மாட்னி ஷோ தவிர மற்ற அனைத்து காட்சிகளும் கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்தே ஓடியது. 50 நாட்களில் மட்டும் ரூபாய் 78678.23வசூலாக கொட்டியது. 100 நாட்களில்ரூபாய் 105816.13. வசூலாக கலெக்ட் செய்து ஒரு மாபெரும் சாதனையை உண்டாக்கியது.
இனிமேல் இதுபோல் ஆகக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் மன்றத்தில் சேர்ந்தால் ஓபனிங் ஷோ டிக்கெட் வாங்கி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டதால் நடிகப் பேரரசர் எம்ஜிஆர் கலைக்குழுவில் உறுப்பினராக சேர்ந்தேன். இப்போது உள்ளது போல் ரசிகர் ஷோ வெல்லாம் தரமாட்டார்கள். எத்தனை பேருக்கு டிக்கெட் வேண்டும் என்று கேட்டு எம்ஜிஆர் மன்றத்தினர் டிக்கெட்டுகளை வாங்கி மன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பார்கள்.
நம்நாடு படத்திலிருந்து மன்றத்தின் மூலமாக தள்ளு முள்ளு இல்லாமல் டிக்கெட் பெற்றாலும் தியேட்டருக்குள் நுழைந்து செல்வதும் ஒரு கஷ்டமான விஷயம்தான். இதை எல்லாம் தாண்டி நடிகப் பேரரசர் எம்ஜிஆர் படம் பார்ப்பதே தீபாவளி சிறப்பாக கொண்டாடியதை போலதான்.
மீண்டும் அடுத்த பதிவில்.!
தூத்துக்குடி நண்பர் ......... Thanks.........
-
6th April 2020 01:11 PM
# ADS
Circuit advertisement
-
6th April 2020, 01:14 PM
#2902
Junior Member
Diamond Hubber
மக்களின் இதயக்கனி, இதய தெய்வம் -எம்.ஜி.ஆர். !
எம்.ஜி.ஆர். அரசியல் கட்சி தொடங்கியதுமே புரட்சிநடிகர் என்பதை விலக்கிவிட்டு புரட்சித் தலைவர் ஆக்கினர். இவரும் அரசியல் வாழ்விலும் ஆட்சியிலும் தன்னைப் புரட்சித் தலைவராக நிரூபிக்க விரும்பவில்லை. அதைவிடத் தன்னை மக்களின் தலைவராக நிலைநாட்டவே விரும்பினார். அதில் வெற்றியும் பெற்றார்...
mgr
இரண்டிலும் தன்னுடைய பலமும் பக்க பலமும் என்ன என்பதை உணர்ந்திருந்ததுதான் வெற்றிக்குக் காரணம். சினிமாவில் அவர் புகழ்பெற்றிருந்த 20 ஆண்டுகளில் திரைப்படத்தின் போக்கு பலவிதங்களில் மாறினாலும், தனது ரசிகர்கள் எதை விரும்புவார்கள் என்பதைத் துல்லியமாக உணர்ந்து அதற்கேற்ற படங்களைக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அதுபோல, அரசியலில் தன்னை ஆதரிப்பவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கான தேவைகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டவர். சினிமா, அரசியல் இரண்டிலும் தனது போட்டியாளர்களின் போக்குகளை உற்று நோக்கி தன் பயணத்தில் கவனம் செலுத்தியதும் எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம் (எம்.ஜி.ஆர் அகம் - புறம்) என்று கணித்துள்ளனர்.....
mgr
பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம், உலகத் தமிழ் மாநாடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதி, பாரதிதாசன் பெயர்களில் பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்து, இலங்கைத் தமிழர் நலம், காவேரி நடுவர் மன்ற கோரிக்கை, தெலுங்கு கங்கைத் திட்டம் என்று தமிழர் வளர்ச்சிக்கு ஆழமாகக் கால்கோள் செய்தார். சத்துணவுத் திட்டம், சைக்கிளில் டபுள்ஸ் செல்ல அனுமதித்தது, நியாய விலைக் கடையில் குறைந்த விலையில் அரிசி, பாமாயில், சர்க்கரை தந்தது, கிராம நிர்வாக அலுவலர் எனும் பரம்பரை பதவிகளை ஒழித்தது, இலவச வேட்டி சேலை, புயல் வெள்ளக் காலங்களில் உடனடி நிவாரணம் என இவர் மக்களுக்காக நடைமுறைப்படுத்திய திட்டங்கள் ஏராளம்....
mgr
மக்கள் இவரது ஆட்சியில் நடந்த அடக்குமுறைகளைப் பற்றியோ, மதுக்கடைகளைப் (டாஸ்மாக்) பற்றியோ, ஊழல்களைப் பற்றியோ, சுயநிதிக் கல்வித் தந்தைகளாகக் கட்சிக்காரர்களைப் படைத்தது பற்றியோ, பெரியாரின் சமூக நீதியைக் குலைத்தது பற்றியோ, நக்சலைட்டுகளை மனித உரிமைக்கு எதிராக நசுக்கியது பற்றியோ, கச்சத்தீவை சொன்னபடி மீட்காதது பற்றியோ, உள்ளாட்சி அமைப்பை உடைத்தது பற்றியோ, அடாவடி வரிவசூல் பற்றியோ, மேலவை கலைப்பு போன்ற எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இவை எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் நடந்ததாக நம்பினர். இவர் பேரைச் சொல்லி யார் யாரோ சம்பாதித்துக் கொண்டார்கள் என்றே எண்ணிக் கொண்டனர். எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மீண்டதும் அமெரிக்க சிகிச்சைக்குப்பின் மீண்டதும் இவரைத் தனிப்பிறவியாகவும் தெய்வப் பிறவியாகவும் கருத வைத்தது மக்களின் இதயக்கனி, இதய தெய்வம் ஆனார்............ Thanks.........
-
7th April 2020, 04:41 PM
#2903
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
104/2020
எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
25,50,75,100,125,150,175,200,225,250 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது...
சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது...
படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,
கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .
20 வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
1978க்கு பிறகு 2019 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம்ஜிஆர் சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் .......... Thanks.........
-
7th April 2020, 04:52 PM
#2904
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆர் திரை உலகில் நடித்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய படங்களை பார்த்து லட்சக்கணக்கான ரசிகர்கள், பின் கோடானுகோடி ரசிகர்களாக உருவானார்கள் .
எம்ஜிஆர் திமுக இயக்கத்தில் சேர்ந்த நேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் திமுக தொண்டர்களாக மாறினார்கள் .
எம்ஜிஆர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த ரசிகர்கள் இரவு பகலாக தேர்தல் நேரத்தில் திமுகவிற்காக உழைத்தார்கள் .
எம்ஜிஆர் 1967ல் குண்டடிப்பட்டபோது எம்ஜிஆருக்காக ரத்ததானம் செய்தார்கள் .
எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் உலகளவில் அனைத்துலகஎம்ஜிஆர் மன்றங்களாக மாறியது .
எம்ஜிஆர் அவர்களுக்கு 1972ல் சோதனையான கால கட்டத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆற்றிய பங்களிப்பு உலக சாதனை .
எம்ஜிஆர் 1972ல் அதிமுக உருவாக்கிய நேரத்தில் ஒட்டு மொத்த எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் அனுதாபிகள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கான மக்கள் அதிமுகவில் இணைந்தார்கள் .
எம்.ஜி.ஆர்., 1977 பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றிக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் உழைத்தார்கள் .
1977ல் எம்ஜிஆர் மக்கள் பேராதரவோடு தமிழக முதல்வராக உயர்வு பெற்றார் .
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தினார் . ஆனாலும் அவர் நடித்த படங்கள் மறு வெளியீடுகளில் மகத்தான சாதனைகள் புரிந்தது .
எம்ஜிஆர் ரசிகர்கள் காலப்போக்கில் இளமையிலிருந்து முதுமை நிலைமைக்கு சென்று இருந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலரும் இன்றும் அவர் நினைவாகவே எம்ஜிஆர் ரசிகர்களாக வாழ்கிறார்கள்
அதிசயம் ...
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திய 1977க்கு பிறகு பிறந்தவர்கள்
எம்ஜிஆர் மறைவிற்கு 1987க்கு பிறகு பிறந்தார்கள்
இன்றைய வளர்ந்து வரும் புதிய தலைமுறை ரசிகர்கள் எம்ஜிஆர் ரசிகர்களாக இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
எம்ஜிஆரை நேரிலே பார்த்திரா தவர்கள் பலரும் எம்ஜிஆரின் நடிப்பையம் , அவருடைய வீர தீர சண்டைக்காட்சிகள் , மக்களுக்கு கூறிய கொள்கை மற்றும் நல்லொழுக்க காட்சிகள் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஈர்ப்பாக உள்ளது .
70 வருடங்கள்
7 தலை முறை சினிமா ரசிகர்கள்
லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள்
இன்னமும் உயிர்ப்புடன் எம்ஜிஆர் ரசிகர்களாக உலகமெங்கும் இருப்பது எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் .........இது மிகையாகாது... Thanks.........
Last edited by suharaam63783; 7th April 2020 at 04:54 PM.
-
8th April 2020, 07:25 PM
#2905
Junior Member
Diamond Hubber
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
சரோஜாதேவி
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
ஜெயலலிதா
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
வெண்ணிற ஆடை நிர்மலா
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
மஞ்சுளா
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
லதா
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பத்மினி
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
ராஜ சுலோச்சனா
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
அஞ்சலி தேவி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
ராஜஸ்ரீ
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
சாவித்திரி
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பானுமதி
சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
கே.ஆர். விஜயா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
லக்ஷ்மி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
வாணிஸ்ரீ
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
சௌகார் ஜானகி
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
ரத்னா
அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
எல் .விஜயலட்சுமி
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
தேவிகா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
பத்மப்ரியா
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
ராதா சலுஜா
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
காஞ்சனா
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை.......... Thanks.........
-
8th April 2020, 07:26 PM
#2906
Junior Member
Diamond Hubber
#மக்கள்_திலகம்
#புரட்சி_நடிகர்
#வாத்தியார்
#பொன்மனச்_செம்மல்
#இதயக்கனி
#புரட்சித்தலைவர்
இப்படி எம்ஜிஆர் க்கு பல பட்டப் பெயர்கள் இருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர் செய்த இந்த செயலுக்கு என்ன பெயர் கொடுக்கலாம் என்று நீங்களே
சொல்லுங்கள்.
அது மெடிக்கல் காலேஜுக்கு இடம் வேண்டி விண்ணப்பித்தவர்களின் தேர்வுப் பட்டியல். முதல்வர் எம்.ஜி.ஆரின் கையொப்பத்திற்கு வருகிறது. அதைப் பார்வையிட்ட எம்.ஜி.ஆர்,,பெற்றோர் கையொப்பம் இட்ட இடத்தை முதலில் பார்க்கிறார்?
கை நாட்டு வைக்கப்பட்டிருந்த அப்ளிகேஷன்கலுக்கு முதலிலும்,,தமிழில் கையொப்பமிட்டிருந்த அப்ளிகேஷன்களுக்கு அடுத்ததாகவும்,,ஆங்கிலத்தில் கையொப்பமிட்டிருந்த படிவங்களுக்குக் கடைசியாகவும் கையொப்பமிடுகிறார்??
எம்.ஜி.ஆர் ஏன் அப்படிச் செய்தார்?
தலைவர் ஏன் இப்படி செய்தார் என்று உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன் பதில் தெரிந்தவர்கள் கண்டிப்பாக #கமெண்ட் பண்ணுங்கள்.......... Thanks.........
-
8th April 2020, 07:33 PM
#2907
Junior Member
Diamond Hubber
MGR வாழ்க
பங்குனி 27 வியாழன்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர் பெயர் கே ஏ கிருஷ்ணசாமி
இவர் தென்னகம் என்ற ஒரு திமுக ஆதரவு பத்திரிகையை நடத்தினார்
எம்ஜிஆர் அவர்கள் திமுகவில் இருக்கும் காலத்திலேயே இவர் எம்ஜிஆரின் தீவிர விசுவாசி
,1972 அக்டோபர் மாதம் 8 ந்தேதி
திருக் கழு குன்றத்தில் நடந்த அண்ணா
பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில்
திமுக அமைச்சர்கள் அனைவரும் சொத்து கணக்கு காட்டவேண்டும் எண்று
பேசினார்
இந்தசெய்தியை தனது தென்னகம்
பத்திரிக்கையில் வெளியிட்டார்
அடுத்து சிலநாட்களில் திமுக. வில் இருந்து MGR அவர்களைநீக்கிவிட்டார்கள்
அடுத்தநாள் கே ஏ கிருஷ்ணசாமி அவர்களையும் திமுகவில் இருந்து நீக்கிவிட்டார்கள்
எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தார்
அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு தென்னகம் என்று எம்ஜிஆர் அறிவித்தார்
அண்ணா திமுக வின் முதல் பொதுக்கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது
அந்தப் பொதுக் கூட்டத்திலேயே கிருஷ்ணசாமி அவர்கள் பேசும்பொழுது
இன்று முதல் நம் தலைவரை புரட்சித்தலைவர் MGR / என்றுதான் அழைக்கவேண்டும் என்று கூறினார்
எம்ஜிஆர் அவர்களே நீங்கள்ஆணையிட்டாள் முதலமைச்சர் கருணாநிதியின் தலையை வெட்டி உங்கள் காலடியில் கொண்டு வந்து சமர்ப்பிப்பேன் என்று கே எஸ் கிருஷ்ணன் கிருஷ்ணசாமி பேசினார்
இவர் இப்படிப் பேசிய காரணத்தினால்
கருணாநிதி அவர்கள்
இவரை
தலைவெட்டி கிருஷ்ணசாமி என்று கூறுவார்
அடுத்து நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்றார்
தன்னுடைய அமைச்சரவையில் கிருஷ்ணசாமி அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்
அடுத்து எம்ஜிஆருக்கு வந்த சோதனையான காலகட்டத்தில் எல்லாம் தோளோடு தோள்கொடுத்து நின்றார்
இவருடைய மகள் திருமணம் சென்னையில்முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில் நடக்கும் என்று ஏற்பாடு செய்திருந்தார்கள்
எம்ஜிஆர் இவருடைய திருமணத்திற்கு காலையில் ஜானகி அம்மாவுடன் சென்று கொண்டிருந்தார்
திடீரென்று எம்ஜிஆர் அவர்கள் வேறொரு திருமண மண்டபத்திற்கு செல்லுமாறு கட்டளையிட்டார்
அங்கு சென்று அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்
நடிகர் ராமராஜன் நடிகை நளினி திருமணத்தை எம்ஜிஆர் ஜானகி அம்மையார் இருவரும் நடத்தி வைத்தார்கள்
பிறகு கே ஏ கிருஷ்ணசாமி வீட்டு திருமணத்திற்கு எம்ஜிஆர் சென்றார்
இப்படி எம்ஜிஆருக்கு சோதனையான காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு உறுதுணையாக நின்ற. K.A. கிருஷ்ணசாமி வீட்டு திருமணத்திற்கு கூட செல்லாமல்
நடிகர் ராமராஜன் திருமணத்திற்கு சென்றார் எம்ஜிஆர் ஜானகி அம்மையார்
அடுத்த சிலநாட்களில் ராமராஜன் நளினி இருவருக்கும் எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் விருந்து வைத்தார்
நளினிக்கு தங்க நகை பரிசளித்தார்
MGR
////////////////////////////////////////?/////////////
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதே
இது நல்ல தாய் வயிற்றில் கருவாகி உருவான ஒரு மனிதன் கடைப்பிடிப்பார் கள்
/////////////////////////////////??????????????
ஆனால் எம்ஜிஆர் வீட்டில் ஜானகி அம்மையாரின் கையில் உணவை வாங்கி அருந்திய நடிகர் ராமராஜன்
எம்ஜிஆர் கையால் பல பவுன் எடையுள்ள தங்க நகையை
ராமராஜனின் மனைவிக்கு எம்ஜிஆர் அளித்ததை பெற்றுக்கொண்ட ராமராஜன்
,எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி அவர்களின் ஆட்சியை கலைப்பதற்கு ஜெயலலிதாவிற்கு துணை போனார் நடிகர் ராமராஜன்
எங்களைப் போன்ற உண்மையான எம்ஜிஆர் ரசிகர்களின் வயிறு எரிந்தது
எம்ஜிஆரிடம் ஒரு ரூபாய் கூட உதவி பெறாத நாங்கள் எம்ஜிஆருக்கு நாயைப்போல் நன்றியுடன் விசுவாசமாக இருக்கிறோம்
எம்ஜிஆர் வீட்டு உணவு அருந்தி பல ஆயிரம் ரூபாய் உதவி பெற்ற கழுதைகள்
எம்ஜிஆருக்கு துரோகம் செய்தனர்
ஜானகி அம்மையாரின் ஆட்சியை கவிழ்க்க ஜெயலலிதாவுக்கு துணைபோன ராமராஜனை
துரோகி என்று கூறி ஜெயலலிதா அண்ணா திமுகவிலிருந்து ராமராஜனை நீக்கினார்
உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள்சாபமிட்ட காரணத்தினால் ராமராஜன் மார்க்கெட் இழந்தார்
இன்று செல்லாக்காசாகி தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்
எம்ஜிஆர் குடும்பத்திற்கு செய்த துரோகம் அவரை விடவில்லை
கட்சிக்காக உயிரைக் கொடுத்து பாடுபட்ட கே ஏ கிருஷ்ணசாமி வீட்டு திருமணத்திற்கு கூட செல்லாத எம்ஜிஆர்
இந்தக் துரோகத்திற்கு துணை போன இந்த கழுதையின் திருமணத்திற்கு சென்றார் எம்ஜிஆர்
வாழ்க கே ஏ கிருஷ்ணசாமி அவர்களின் எம்ஜிஆர் பக்தி
கே ஏ கிருஷ்ணசாமி போன்றவர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்
ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை முதல்வராக வர முடிந்தது
கே ஏ கிருஷ்ணசாமி போன்றவர்கள் கட்சியை வளர்த்து வைத்த காரணத்தினால்தான்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது
கே ஆர் கிருஷ்ணசாமி அவர்கள்
திமுகவை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவரான
K.A.மதியழகனின் தம்பி
மதியழகன் திமுகவில் அமைச்சராக இருந்தார்
பிறகு சபாநாயகராகவும் இருந்தா
இவருடைய சொந்த ஊர் / கணியூர்
பழனியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது........ஒரு ரசிகரின் ஆதங்க பதிவு... Thanks...
-
8th April 2020, 07:35 PM
#2908
Junior Member
Diamond Hubber
......... Thanks.........
-
8th April 2020, 07:37 PM
#2909
Junior Member
Diamond Hubber
-
8th April 2020, 07:54 PM
#2910
Junior Member
Diamond Hubber
கனியூர் குடும்பம்
என்று அண்ணாவால் அழைக்கப்பட்டவர்கள்...!
சட்ட அமைச்சராக இருந்தவர்...!
ஆயிரம் விளக்கு தொகுதியில் சிறுபாண்மையினரின் செல்ப்பிள்ளை...!
இரண்டு முறை இவரிடம் முக. ஸ்டாலின் அவர்கள் அதே தொகுதியில் தோல்விகண்டார்.
இவர் மறைந்த போது கலைஞர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்...!
கே. எ. கே. உடல் அவர் வீட்டு மாடியில் இருந்ததால், ஜெயலலிதா அவர்கள் படியில் என்ற இயலாளதால் கீழ் பகுதியில் வந்து அஞ்சலி செலுத்தினார்......... Thanks.........
Bookmarks