-
26th April 2020, 12:53 PM
#3661
Junior Member
Diamond Hubber
********************************
கருணை உள்ள ,
இதயத்தில்...
கடவுள் எம்ஜிஆர்
குடி இருப்பார்.....!!!
********************************
அள்ளி கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு .....
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு -
என்று சொன்னார் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்.
அவரது வாக்கு தத்துவப்படி
மலேசியா நாட்டில் ,
"மலேசிய தமிழ் கலைஞர்கள் குரல் இயக்கம் " (Persatam Suara Artis Tamil Malaysia) சார்பில் , தலைவர் அப்பு என்கிற பாலசந்திரன் தலைமையில் , துணைத் தலைவர் திரு. ராமசந்திரன் மற்றும் ,கலைக் குடும்பத்தை சேர்ந்த திரு. மதன் (பொருளாளர்)உதவித் தலைவர்கள் மூர்த்தி , ரமேஷ் , சேகர் (ட்ரம்மர்) இணைந்து ,
கொரோனா (covid -19) வைரஸ் தாக்கத்தினால் , அரசின் ஆணைக்கிணங்க வீட்டை விட்டு வெளிவர முடியாமல் தவிக்கும் நலிந்த கலைஞர்களுக்காக நிதி திரட்டி ,,,,உதவிக்கரம் நீட்டி , கருணை வள்ளல் எம்ஜிஆர் அவர்களின் வழியில் மனிதநேயத்தை தமது உழைப்பின் மூலம் பதிவு செய்துள்ளார்கள்.
ஆம் , கலைத்தொழில் ஒன்றையே நம்பி முடங்கிய நிலையில் இருந்த சக கலைஞர்களின் வீடுகளை தேடிச்சென்று , தரம் உயர்ந்த மளிகை பொருட்களை கொடுத்து , ஆதரவு கரம் நீட்டியதில்...மலேசிய தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நமக்கு கிடைத்த தகவல்படி உதவிக்கரம் நீட்டியவர்களின் விவரம் மற்றும் உதவி பெற்றவர்களின் விவரம் , உங்களது பார்வைக்காக....
( உதவி கொடுத்தவர்கள் / பெற்றவர்கள் சிலரது பெயர் விடுபட்டதற்கு மன்னிக்கவும்)
SPONSORS DETAILS
*************************
1 - Balachandar - 5 pax
2 - Gurudevar - 5 pax
3 - Mathan. - 100 Rm
4 - Moorthy - 100 Rm
5 - Ramesh - 100 Rm
6 - Rama Dp - 100 Rm
7 - Gandi Dasan - 100 Rm
8 - Sai Lilli - 200 Rm
9 - John - 100 Rm
10 - Mgr Suresh - 100Rm
11 - Kalai @ boy - 100 Rm
12 - Elavarasu - 100 Rm
13 - Boy se'ban - 100 Rm
14 - Magin guitar - 100Rm
15 - Kalai singer -100 Rm
16 - Annapoorani - 100Rm
17 - Dato Kamalanadan - 100 Rm
18 - Kalaiyarasan kapar - 200 Rm
19 - Joseph - 100 Rm
20 - Gv Shan - 50 Rm
****************************
உதவி பெற்றவர்கள் விவரம்....
பாடகர்கள் :
1 - K.S. கதிரவன்
2 - Tms. பழனி
3 - ராஜ் ( ஈப்போ)
4 - தர்மென்
5 - பாலா - புவனேஷ்வரி
6 - மேகநாதன்
7 - ஜான்சன்
8 - சிவா சாகா
9 - பரம்
10 - விஷ்ணு
11 - லேட் ஜேசுதாஸ் family
பாடகிகள் :
****************
12 - ரோகிணி
13 - லட்சுமி
14 - மலர் கமல்சுகு
15 - நளினா
16 - விசால் குமுதா
17 - கிறிஸ்டினா fly
18 - சாலினி
19 - ப்ரஸிலியா fly
20 - காயத்ரி fly
21 - அருணா
22 - ப்ரியா
23 - சித்ரா
24 - சௌம்யா
25 - ரோஸிலின்
மேலும்.......
Drummer
***********,**
26 - Kutti
27 - Mahalingam
Bango player
*****************
28 - Anbu
29 - Late.Balakrishnan fly
30 - Arokya sami
31 - Shekar
Comedian
*************
32 - Late AMR.Perumal fly
Clarinetist
**************
33 - Balan
Keyboardist
****************
34 - Late. George fly
35 - Steven
Lyricist
************
36 - Shankar
Percussionist
******************
37 - Ramu
38 - M.C. Albert
Guitarist
***********
39 - Aaru
40 - Krishnadass @ Appu
Actor
********,
41 - Hari krishna fly
*******************************
இன்னும்...இன்னும்..
உதவிக்கரம் நீட்டிய கருணை உள்ளங்கள் மற்றும் ,
உதவிகள் பெற்ற நம் உறவுகளின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
(இது முதல் பாகம்)
*******************************
நல் மனதோடு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் ,
மலேசிய தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப் பட்டுள்ளது
Tittle & Edited by :
Amudha Surabhi Dr. MGR Charitable Trust - B' lore
அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை - பெங்களூர்
என்றும்....
உப்பிட்டவரை உள்ளலவு நினைக்கும் ,
நனறி மறவாத...
இதயதெய்வத்தின்
புனித வழியில் ,
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி
அட்மீன் ,
"உழைக்கும் குரல்" தளம்
&
ஆர்.ஜி.சுதர்சன்
அட்மீன் ,
ஆண்டவன் mgr குடும்பத் தளம்
தகவல் வெளியீடு :
"உழைக்கும் குரல்" மாத இதழ்
...... Thanks...
-
26th April 2020 12:53 PM
# ADS
Circuit advertisement
-
26th April 2020, 12:56 PM
#3662
Junior Member
Diamond Hubber
கருத்தாழமிக்க பாடல்கள் அனைத்தையும் ரசித்து கேட்டு மகிழ்ந்து கருத்துகளை உள்வாங்கி வியந்தேன்
பகிர்கிறேன் நண்பர்களுக்காக...
♦ *அனைத்தும் முத்தான பாடல் தொகுப்பு*
*காசிவிஸ்வநாதன் ராம்* 👍
*பாடல்கள்:*
1.நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா
♦2. தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
3. வாங்கய்யா வாத்தியா ரய்யா
♦4. விவசாயி விவசாயி
5. ஒரு தாய் மக்கள் நாமென்போம்
6. தர்மம் தலை காக்கும்
7. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
8. எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு
♦9. ஓடி ஓடி உழைக்கனும்
ஊருக்கெல்லாம் கொடுக்கனும்
10. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
♦11. உழைக்கும் கைகளே
உருவாக்கும் கைகளே
12. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
♦13. கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
♦14. மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
15. போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே.
♦ 16. ஏய் மனுசன மனுசன சாப்பிடுறான்டா தம்பி பயலே
♦ 17. உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
18. சத்தியம் நீயே தர்மத்தாயே
19. ஆண்டவன் உலகத்தின் முதலாளி
... Thanks...
-
26th April 2020, 12:58 PM
#3663
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 01:06 PM
#3664
Junior Member
Diamond Hubber
மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...
இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.
01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.
02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.
03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
`#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம்....... Thanks...
-
26th April 2020, 01:09 PM
#3665
Junior Member
Diamond Hubber
திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் மருத்துவ கல்லூரி ஒன்று முதலமைச்சர் கோட்டாவாக 25 சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தது முதலமைச்சரின் பார்வைக்கும் வந்தது. அப்போது பலரும் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கோரிக்கை மனுக்களும் வந்தவண்ணம் இருந்தது அப்போது புரட்சித் தலைவரோடு இருந்த ஒரு அன்பர் திரு டாக்டர் புரட்சித் தலைவரிடம் நமக்கு வந்த 25 கோட்டாவை கட்சி நிதிக்காக செயல்படுத்தலாம் என்று கூறுகிறார் அதற்கு நம் புரட்சித்தலைவர் சிரித்துக் கொண்டு சரி பார்ப்போம் என்றார். பின்பு ஒரு அதிகாரியை அழைத்து நமக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வந்து இருக்கிறதல்லவா அந்த மனுக்களை எல்லாம் எடுத்து வாருங்கள் என்று கூறினார். அந்த அதிகாரியும் எடுத்து வந்தார் அந்த மனுக்களை பத்து நாட்கள் ஆராய வேண்டிய மனுவை பத்து நிமிடங்களில் 25 நபரையும் தேர்ந்தெடுத்தார். அப்போது அங்கிருந்த அன்பர் ஒருவர் புரட்சித்தலைவர் இடம் கேட்டார் என்ன தலைவரே இவ்வளவு சீக்கிரத்தில் தெரிந்தெடுத்து விட்டீர்கள் எப்படி என்று கேட்டார். அதற்கு திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் அவரிடம் கூறிய வார்த்தை என்னவென்றால் எரியாத விளக்கில் எண்ணெய் ஊற்றி ஒளியைக் கொடுக்கவேண்டும் அதைத்தான் செய்தேன் என்றார். அந்த அன்பருக்கு புரியாததால் மீண்டும் கேட்டார் புரியவில்லை தலைவரே 10 நிமிடங்களில் எவ்வாறு 25 கோட்டாவும் 25 நபர்களின் மனுக்களுக்கும் தேர்வு செய்தீர்கள் என்றார். அதற்கு புரட்சித் தலைவர் அவர்கள் என்ன செய்தார் என்றால் மனுக்களில் தகப்பனார் அல்லது காப்பாளரின் கையெழுத்து மனுவில் கட்டாயம் தேவை அதை வைத்து தேர்ந்தெடுத்தார் அதாவது ஆங்கில் இருக்கும் கையெழுத்து இட்டது தனியாகவும் தமிழில் கையொப்பமிட்ட மனுவை தனியாகவும் பிரித்து, அதில் எதுவும் தேர்ந்தெடுக்காமல் கைநாட்டு இட்ட மனுக்களை மட்டும் கையெழுத்திட்டு தேர்ந்தெடுத்தார். இப்போது உங்களுக்கு அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பது இப்போது நமக்கும் புரிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு இறைவன் வாழ்ந்த மண்ணில் தான் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ....!!
நன்றி அன்பர்களே... .......... Thanks...
-
26th April 2020, 01:10 PM
#3666
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 01:13 PM
#3667
Junior Member
Diamond Hubber
நள்ளிரவு நேரம் திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் ராயப்பேட்டை அலுவலகத்திலிருந்து ராமாபுரம் வீடு செல்வதற்காக காரில் புறப்படுகிறார். வந்து கொண்டிருக்கும்போது ஒரு சாலையோரத்தில் ஒரு மனிதர் கந்தல் துணியுடன் காலில் செருப்பு இல்லாது ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். அதை நம் திரு தலைவர் காரிலிருந்து ஜன்னலோரமாக காண்கிறார் உடனே உத்தரவிடுகிறார் யாரோ ஒருவர் ஒரு குழந்தையை கடத்திக்கொண்டு போகிறார் போல் உள்ளது அவரை வலி மறையும் என்று உத்தரவிடுகிறார் அதேபோல் காவல் அதிகாரிகளும் அவரை தடுத்து கையில் உள்ள குழந்தையை பார்க்கிறார்கள் குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது அதைக்கண்ட வாத்தியார் குழந்தையை தூக்கிக்கொண்டு எங்கே செல்கிறீர்கள்? என்று கேட்கிறார் மேலும் இது யாருடைய குழந்தை? என்று கேட்கிறார் அதற்கு அந்த மனிதர் என்னுடைய குழந்தை ஐயா மிகவும் ஜுரத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆகையால் மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறேன் என்றார் அந்த மனிதர் அதற்கு நம் வாத்தியார் குழந்தையின் உடலை தொட்டு பார்க்கிறார் குழந்தைக்கு ஜுரம் வீசுகிறது என்று அறிகிறார் அறிந்த உடனே சரி வாருங்கள் காரிலே ஏருங்கள் என்று தமது காரில் ஏறச் சொல்கிறார் ஆனால் அந்த மனிதர் ஏற மறுக்கிறார் பரவாயில்லை ஏறுங்கள் என்று மீண்டும் வாத்தியார் கூறுகிறார் பின்பு அந்த மனிதர் காரில் ஏறி தலைவரோடு பயணம் செய்கிறார் வாத்தியாரின் கார் ஒரு டாக்டர் வீட்டின் அருகில் நிற்கிறது வாத்தியார் காரைவிட்டு இறங்கி அந்த வீட்டின் கதவை தட்டுகிறார் உடனே கதவு திறக்கப்படுகிறது திறந்ததும் அந்த டாக்டர் வாத்தியாரை பார்த்து வியப்படைந்தார் ஐயா நீங்கள் இந்த நேரத்தில் என்று கூற அதற்கு நம் வாத்தியார் இந்த குழந்தையின் உடல்நலம் சரியில்லை ஆகையால் இக்குழந்தைக்கு வைத்தியம் செய்ய வேண்டும் ஆகையால் தான் தங்களை நாடி வந்தோம் என்கிறார் வாத்தியார். அதைக்கேட்ட டாக்டர் குழந்தைக்கு சிகிச்சை செய்கிறார் சிகிச்சை செய்த டாக்டருக்கு ஊதியம் கொடுக்கிறார் நம் வாத்தியார் டாக்டர் வேண்டாம் என்கிறார் அதற்கு நம் வாத்தியார் நீங்கள் செய்த வேலைக்கு தகுந்த ஊதியத்தை நாம் கொடுத்தே ஆகவேண்டும் ஆகையால் இதை படியுங்கள் என்று வலுக்கட்டாயப்படுத்தி கொடுக்கிறார் வேறுவழியின்றி அந்த டாக்டரும் வாங்கிக் கொள்கிறார் பின்பு வாத்தியாருக்கு ஒரு யோசனை வருகிறது மருத்துவமனைக்கு மக்கள் தகுந்த நேரத்தில் செல்ல வேண்டுமென்றால் நாம் அரசு சார்பாக ஆம்புலன்ஸ் வசதியை செய்து தர வேண்டும் என்ற எண்ணம் வருகிறது அதேபோல் செயல்படுத்தியும் காண்பித்தார் இதை அறியாது வரலாறு தெரியாத திமுக தங்களால் தான் 108 என்னும் ஆம்புலன்ஸ் அமைக்கப்பெற்றது என்று இன்று பதிவிட்டு வருகிறார்கள் உண்மையிலே சொல்லப்போனால் நம் திரு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் கொண்டுவந்ததுதான் ஆம்புலன்ஸ் வசதி என்பதை நாம் அறிவோம் தற்போதும்... ............ Thanks...
-
26th April 2020, 01:14 PM
#3668
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 01:17 PM
#3669
Junior Member
Diamond Hubber
அன்பேவா அன்றும் இன்றும் என்றும் காலத்தால் அழியாத காதல் காவியம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி இவர்களின் இனிமையான நடிப்பு வாலியின் அருமையான பாடல் எம் எஸ் வி யின் இனிமையான இசை ஆருர்தாஸ் அவர்களின் சுவை குன்றா வசனம் ஏ சிதிருலோக சந்தரின் இயக்கம் தயாரித்த avm மற்றும் ஒளிபரப்பிய சன் tv மற்றும் பங்குகொன்ட அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் இது போல ஒரு படம் எந்த ஜென்மத்திலும் வரபோவதுமில்லை இதற்கு ஈடுஇணை ஈதுமில்லை அன்புடன் எம் எஸ் மணியன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணிசங்கம்💐🙏🏽... Thanks...
-
26th April 2020, 01:18 PM
#3670
Junior Member
Diamond Hubber
கருணைமிகு கதிரவா!
காஞ்சித் தலைவா!
உமது
சுடரொளி பட்டு
சுபிட்சம் அடந்தவர்கள்
அகிலத்தில் ஆயிரம் ஆயிரம்!
அந்த!
ஆயிரத்தில் ஒருவர் - இன்றும்
உதய சூரியனோடு உலா வருகிறார்.
நல்லாண்மை நாயகர்,
இலக்கியக் காவலர்,
கலக்கம் காணாத காவிய நடிகர் எம்ஜிஆர்!
இவர்
கண்டியில் பிறந்தார்
கேரளத்தில் வளர்ந்தார்
தமிழகத்தில் வாழ்ந்தார்/ ஆண்டார்.
தன்னை வாழ வைத்த தமிழகத்தை,
தமிழக மக்களை...
வாழ வைத்தும் மகிழ்ந்தார்!
"இருந்தாலும் மறைந்தாலும்,
பேர் சொல்ல வேண்டும்!
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்"
போர்!!!
போற்றிப் பாடும்,
புறநானூற்று வீரர் / 'மதுரை வீரர்' எம்ஜிஆர்.
எப்பொழுதும் என்ன கொடுப்பார்?
ஏது கொடுப்பார்?
எதிர் பார்ப்பார் எங்கும் இருப்பார்!
ஆனால்?
எதையும் கொடுப்பார்! - தனது
இதயமும் கொடுப்பார்!
என்பதை ஏழை எளிய மக்களின்
உள்ளம் மட்டுமே சொல்லும்,
வாழையின் குணம் உடைய
வள்ளலின் அருமையை/ பெருமையை!..... Thanks...
Bookmarks