-
28th April 2020, 03:43 PM
#3911
Junior Member
Diamond Hubber
இலங்கைத் தமிழருக்காக கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தவர் நம் இதயதெய்வம் புரட்சித் தலைவர்.....இதில் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் சிவாஜி கணேசன் வள்ளுவர் கோட்டம் அப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒரு தடவை நடிகர் திலகம் வள்ளுவர் கோட்டம் அப்படி ஒவ்வொரு இடத்திலும் உண்ணாவிரதம் இருந்தார்கள்..... Thanks...
-
28th April 2020 03:43 PM
# ADS
Circuit advertisement
-
28th April 2020, 03:52 PM
#3912
Junior Member
Diamond Hubber
தங்கம்.....
மனசு தங்கம்.
உடல் தங்கம்
எண்ணம் தங்கமா
உண்மையில் தலைவர் சம்பாதித்த பணத்தில், எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் சென்னையை விலைக்கு வாங்கி இருக்க முடியும். தலைவருக்கு அம்மாதிரியான எண்ணம் இல்லை.
காரணம்...அவர் வள்ளல்...... Thanks...
-
28th April 2020, 03:57 PM
#3913
Junior Member
Diamond Hubber
அவர் கட்சி தொடங்கி அடுத்த நாளே தேர்தல் வந்திருந்தாலும் அவர் புரட்சி தலைவர் தான் ஜெயித்திருப்பார். 4. ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை......Well said. Absolutely true...... Thanks...
-
28th April 2020, 04:00 PM
#3914
Junior Member
Diamond Hubber
கருணாநிதி பதவில் இருந்தஅதிகாரத்தை கையில் வைத்து சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி கையெழுத்து வாங்கி.பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் அன்றே சொன்னார்கள் புரட்சி தலைவர் வென்று விடுவார் என்று.அது தானே நடந்தது.வெட்டிவீரன் துரை முத்துவும் மண்டியிட்டது தலைவரிடம் தான்.மன்னிக்கும் குணம் இருந்ததால் அவர் மக்களின் தலைவரானார்.மெடக்குறிச்சி சுப்பம்மா போன்ற முகவரி இல்லாதவரை அமைச்சராக்கினார்.மந்திரக்கோல் அங்கே மந்திரம் செய்தது...... Thanks...
-
28th April 2020, 04:01 PM
#3915
Junior Member
Diamond Hubber
நான் தலைவரை நேரில் பார்த்தது இல்லை ஆனால் நினைவு தெரிந்த காலம் முதல் எம்ஜிஆர் என்றால் இனம் புரியாத பாசம் இன்று வரை!.....கண்கள் பனிக்கின் றது கண் கொள்ளா தலைவரைநினைக்கும் பொழுது ....இதுபோல் ஒரு மாசற்ற மானிக்கம் இனி கிடைக்குமா .நான் இரண் மூன்று முறை ஐந்து அடி தூரத்தில் பார்த்து இருக்கிறேன் .அதுபோதும் எனக்கு...... Thanks...
-
28th April 2020, 04:11 PM
#3916
Junior Member
Diamond Hubber
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 15. செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
1984 ஆண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டது
துரோகி எஸ்டி சோமசுந்தரம் அண்ணா திமுக வில் இருந்து கொண்டேதனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கினார்
ஜெயலலிதா கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை மதிப்பது கிடையாது
என்று கூறி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நகரச் செயலாளர்கள் பல ஒன்றியச் செயலாளர்கள் சில மாவட்டச் செயலாளர்கள் 15 எம்எல்ஏக்களை ஆதரவு திரட்டி விட்டார்
அதில் 15 எம்எல்ஏக்களுக்கு மேல் இருந்தார்கள்
இந்த 15 எம்எல்ஏக்களுடன் தான் வெளியே சென்று கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தார்
எம்ஜிஆர் அவர்கள் பொதுக்குழுவைக் கூட்டி சோமசுந்தரத்தைகட்சியில் இருந்து நீக்கி விட்டார்
அப்பொழுது 5 எம்எல்ஏக்கள் தான் எஸ்டி சோமசுந்தர த்துடன் வெளியே சென்றார்கள்
அப்பொழுது 15 எம்எல்ஏக்கள் எஸ்டி சோமசுந்தரத்துடன் வெளியே சென்றிருந்தாள்
அண்ணா திமுக ஆட்சி கவிழ கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கும்
எஸ் டி சோமசுந்தரம் போட்ட கணக்கு தவறியது
எஸ்டி சோமசுந்தரம் எந்தந்த எம்எல்ஏக்களை தன்னுடன் வருவார்கள் என்று நினைத்தாரோ அவர்கள் யாரும் அவர் பின்னால் செல்லவில்லை
ஒரு மாதத்திற்குப் பிறகு எம் ஆர் .கோவேந்தனை எம்ஜிஆர் அமைச்சராக நியமித்தார்
++++++++++++++++++++++++++++++++++
கல்கி பத்திரிகையில் வந்த பேட்டியை
பதிவிடுகிறேன்
எம் ஆர் கோவேந்தன் எம்எல்ஏ அவர்களிடம்
கல்கி பத்திரிகை நிருபர் கேள்வி கேட்கிறார்
நீங்கள் அமைச்சர் ஆவீர்கள் என்று எதிர் பார்த்தீர்களா
எம் ஆர் கோவேந்தன் பதில்
நான் எனது ஊரில் இருந்து பஸ் ஏறி வெளியூருக்கு சென்று கொண்டிருந்தேன்
என்னுடைய பஸ்ஸை முந்திக்கொண்டு ஒரு அரசாங்க ஜீப் ஒன்று வந்து
நான் சென்று கொண்டிருந்த பஸ்சை நிறுத்தினார்கள்
பஸ்ஸிற்குள் சில அதிகாரிகள் உள்ளே வந்தார்கள்
என்னை கண்டுபிடித்து என் அருகில் வந்தார்கள்
எம்ஜிஆர் உங்களை அமைச்சராக அறிவித்துள்ளார்
உங்களைப் புறப்பட்டு சென்னைக்கு வரச் சொல்லி இருக்கிறார் என்று தகவல் கூறினார்கள்
என்னால் நம்ப முடியவில்லை
நான் அமைச்சராவேன் என்று எந்தக் காலத்திலும் நான் நினைக்கவில்லை
சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த என்னை எம்ஜிஆர் அமைச்சர் ஆக்கினார்
இவ்வாறு கல்கி பத்திரிக்கைக்கு எம்எல்ஏ எம்ஆர் கோவேந்தன் பதிலளித்தார்
++++++++++-++++++++++++++++++++++++
இந்தப் படத்தில் அருமை தலைவன்எம்ஜிஆர் அவர்கள்
எம்ஆர் கோவேந்தன் அமைச்சர்
பதவிஏற்றவுடன்
அவருக்கு மாலை அணிவிக்கிறார்
+++++++++++++++++++++++++++++++++
அமைச்சர் எம் ஆர் கோவேந்தன்
பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்
எம்ஜிஆர் மறைந்தவுடன் ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்த அமைச்சர்களில் எம்எல்ஏக்களில்இவரும் ஒருவர்
உப்பிட்ட எம்ஜிஆரை உயிருள்ளவரை நினைத்தவர்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்...... Thanks PM...
-
28th April 2020, 05:41 PM
#3917
Junior Member
Diamond Hubber
பல்லாண்டு வாழ்க!!
----------------------------------
கார்த்திகேயன்!!
இந்தப் பெயரில் ஒரு எம்.ஜி.ஆர் இளைஞன்!!
சிவனின் நெற்றியில் இருந்து வந்த பொறி!-முருகன்!
அவனின் அழகை உள்ளத்திலும் உடலிலும் கொண்ட
இவனின் சீருக்கு இது ஒன்று போதாதா?-வேறு
எவனின் தயவு இவனுக்குத் தேவை? என்றாலும்-
விமனின் ஒட்டு மொத்த ஆதரவு பெற்று
எமனின் ஆட்டத்தையே அசைத்துப் பார்த்த
எம்.ஜி.ஆரின் அருள் அதிர்வும் இந்த இளைஞன் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கி வருகிறது!!
நாம் பலமுறை ஒரு விஷயம் குறித்துப் பெருமைப் பட்டு வருகிறோம்!!
இளைஞர்களின் புதிய ரத்தங்கள் பொய்கையாகிப் பொழிகின்றன! எம்..ஜி.ஆர் பெயரைச் சொல்லி!!
இளைஞர்கள்,,குறிப்பாக முக நூல்-வாட்ஸ்-அப் ஊடகங்களில் வரிசையாக வரத் துவங்கி,,
தரிசையாக அரசியல் களத்தில் இருந்த வெற்றிடத்தை
நிரப்பத் தொடங்கியுள்ளனர்!
சென்னை,பள்ளிக் கரணை அருகில் ஜல்லடன்பேட்டைப் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயனும் அந்த வரிசையில் ஒருவர்!
இவரது சித்தப்பா மாணிக்கம்!
அப்பகுதி முன்னாள் கவுன்சிலர்!
திரு மாணிக்கமும்,,கார்த்திகேயனை உரமேற்றி,,தரமேற்றி அதிலே எம்.ஜி.ஆரை உருவேற்றிக் கருவேற்றி உலா வரச் செய்வதில் உள்ளம் பூரிக்கிறார்!!
வேக ரத்தம் கொண்ட இளையவர் கார்த்திக்கின் செயல்களில்,,எண்ணங்களில் உள்ளத்தில் இப்படி எல்லாப் புறத்திலும் அடக்கம் கொப்பளிக்கிறது!
பெரியோர்களை மதிப்பதில் ஆகட்டும்,,
அவர்களது அனுபவங்களை உள் வாங்குவதில் ஆகட்டும் அசாத்திய அமைதி காக்கிறார்!
அமைதி ஒருவனது எண்ணங்களை நிதானப் படுத்தும். பின்னர் அவற்றை நேர்ப்படுத்தும். அதற்கு அடுத்ததாக தரமான செயல்களாக வெளிப்படுத்தும்!!
தன் வீட்டில் ஆளுயர எம்.ஜி.ஆர் படத்தை வைத்துத் தொழுது வரும் கார்த்திக்,, இந்த வகை சூட்சுமத்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்!
பொறியியல் படித்துள்ள கார்த்திக்கின் விருப்பப்
பொரியல்--ஜெ வின் திரு நாமம்!!
வளமானஃ எதிர் காலத்தை நோக்கிப் பயணிக்கும்--
கார்த்திகேயனை,,அவரது இந்த இனிய பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்வோமா???!......... Thanks...
-
28th April 2020, 05:45 PM
#3918
Junior Member
Diamond Hubber
[என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்.
M.G.R. அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான். ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.
என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.
என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர். அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.
உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான்........ Thanks...
-
28th April 2020, 05:57 PM
#3919
Junior Member
Diamond Hubber
Cont-2
என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..
‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’
பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...
‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”
உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.
புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.
நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது. 1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை சர்வதேச அளவில் எம்.ஜி.ஆரு.க்கு மட்டுமே உண்டு....... Thanks...
-
28th April 2020, 06:00 PM
#3920
Junior Member
Diamond Hubber
புரட்சித் தலைவர் முதல்வர் ஆவதற்கு முன்பு ஆனந்தவிகடனில் நான் ஏன் பிறந்தேன் என்ற தொடர் எழுதினார்கள் அந்த தொடரை தற்போது முழுவதுமாக வெளியிட வேண்டும் என தாங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என் போன்று பலபேர் அந்த தொடரை படிக்க விரும்புகின்றோம் ஏனென்றால் ஆனந்த விகடன் வார இதழ் அந்த தொடரை மறுபதிப்பு செய்யவில்லை ஆகையால் அந்த பணியை தாங்கள் செய்து புரட்சித் தலைவர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்த வேண்டும் செய்வீர்களா?...... Thanks Sakthi Ananthan...
Bookmarks