-
1st May 2020, 02:37 PM
#111
Junior Member
Diamond Hubber
நானும் ஸ்முல் மற்றும் ஸ்டார் மேக்கர் ஆப்களில் மொத்தமாக 2300 பாடல்கள் பாடி விட்டேன்! அதில் "ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்" என்ற குடியிருந்த கோயில் தலைவர் பாடலை பாடமுடியவேயில்லை! மிகவும் சிரமப்படுகிறேன்! குரல் சில இடங்களில் உச்ச ஸ்தாயி, சில இடங்களில் மூச்சடக்கி தம் கட்டவேண்டியுள்ளது! கண்ணருகில் பெண்மை குடியேற-வில் தொடங்கி உலகையே மறந்து விளையாடு உகுகு உகுகு உகுகு ஹோ என முடிக்கவேண்டும்! மூச்சு விடாமல் முடிக்கவேண்டும்! T.M.சௌந்தரராஜன் மிகவும் சிரமப்பட்டிருப்பார்! குரல் சில சமயம் பிசிருகிறது! மூச்சு போகிறது! சில சமயம் ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா சரியா வரவில்லை! இரண்டுமுறை பதிவு செய்து ட்ராப்ட்டில்(draft) சேமித்துள்ளேன்! எதற்கு சொல்கின்றேனெனில் தற்போது மூச்சுவிடாமல் பாடியது இது என அடிக்கடி பீலா விடுகிறார்கள்!நம் பாடக/ இசை வித்தகர்கள் எல்லாம் இப்படியா பீற்றிக் கொண்டார்கள்? எனது கணிப்பு:- ஒரு திறமையான வாய்ப்பாட்டு பாடகன் ஆகவேண்டும் என்றால் புரட்சித்தலைவனின் இந்த ஒரு பாடலை மட்டும் சாதனை செய்தால் போதும்! எப்படிப் பட்ட பாடலையும் பாடி விடலாம்!! பாடுவேன்! முடிப்பேன்! வெற்றி பெற்று உங்களுக்காக பதிவிடுவேன்! நம்பிக்கை இருக்கிறது. தலைவரை/ குரலழகரை/ மெல்லிசை மாமன்னரை வணங்கி எனக்கருள வேண்டும் என வேண்டிக்கொண்டு ஏகலைவனாகி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்...காலை வணக்கம்!...... Thanks SR
-
1st May 2020 02:37 PM
# ADS
Circuit advertisement
-
1st May 2020, 02:42 PM
#112
Junior Member
Diamond Hubber
MGR Filmography (1962 Film 55) Poster
1962ஆம் ஆண்டு சித்திரைப் பிறப்பன்று எம்ஜியாருக்குப் புத்துயிர் கொடுக்க வெளியானது தாயைக் காத்த தனயன்.அதே ஆண்டு சுதந்திர தினத்தில் முத்திரைபதித்தது எம்ஜிஆரின் அடுத்த படமான குடும்ப தலைவன்.
எம்ஜியாரின் ஆஸ்தான தயாரிப்பாளரில் ஒருவரான சின்னப்பா தேவர் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு வழக்கம்போல ஆரூர்தாசின் கதை வசனத்தில் கேவி மகாதேவன் இசையமைக்க, எம்ஏ திருமுகம் இயக்க, எம்ஜியார் படங்களில் தவறாது தோன்றும் சரோஜாதேவி, அசோகன், எம் ஆர் ராதா அனைவரும் நடித்தனர்.
மொத்தம் ஏழு பாடல்கள், ஏழும் ஹிட் ஆகின. மாறாதைய்யா மாறாது பாடலுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து அருமையாக இருந்தார்
வழக்கமான ஆக்ஷன் சீக்வன்ஸுகள் மட்டுமல்லாமல் எம்ஜியாருக்கும் அசோகனுக்கும் சரோஜா தேவிக்கும் இடையேயான கடைசி 15நிமிடங்ள் பல உணர்ச்சிகரமான காட்சிகளையும் கொண்டிருந்தது இந்தப் படம். எம்ஆர் ராதாவின் தந்தை வேடமும். பொய் சீதா(கதாநாயகி பெயர்) வேடமும் அதை அழகான சஸ்பென்ஸ்ஃபுல் த்ரில்லராகச் செய்திருந்ததும் எம்ஜிஆர் உண்மையான சீதாவை கண்டுபிடிப்பதும் படத்தின் வெயிட்டை அதிகரித்தன.
ஆக்ஷன், செண்டிமெண்ட், இசை போன்ற மசாலாக்களை எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்து பர்ஃபெக்ட்லி பேக்கேஜ்ட் ஃபிலிம் என்பதற்கான உதாரணங்களில் இப்படமும் ஒன்றானது.120 நாட்கள் ஓடி வெற்றிபடமாகியதுடன் எம்.ஜிஆர்க்கு என்று குடும்ப செண்டிமெண்ட் உடன் கதைகள் எழுதபட்டன........ Thanks...
-
1st May 2020, 03:36 PM
#113
Junior Member
Diamond Hubber
*வணக்கம்.*
*ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி...*
*கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி...*
*உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவது எங்கே சொல் என் தோழா...*
*உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே...*
*ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் குடுக்கனும்...*
*உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்...*
*உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...*
*நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே*
*இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே...*
*உழைப்பவரே உயர்ந்தவர்*
*மேதின வாழ்த்துகள்...*..........
💪🏻 🙏🏻........ Thanks...
-
1st May 2020, 03:40 PM
#114
Junior Member
Diamond Hubber
கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்...
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள்....
ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்...
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல்...
காரில் தலைவர் செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்........ Thanks mr.Sendra Sigaram...
-
1st May 2020, 04:55 PM
#115
Junior Member
Diamond Hubber
#சமூக நலத்திட்டங்களின் பிதாமகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்:
__________________________________
#மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் "அம்மா உணவகம்" இன்று அனைவராலும் பாரட்டப்படுகிற திட்டமாக உள்ளது. ஆனால் 1982ஆம் ஆண்டே புரட்சித்தலைவரின் சிந்தையில் உதித்த அற்புத திட்டம்தான் இது. புரட்சித்தலைவர் 1982ஆம் ஆண்டு செயல்படுத்திய் அந்த திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் "அம்மா உணவகம்".
________________________
*#விதவைகள், கைவிடப்பட்ட தாய்மார்களுக்கு வேலைவாய்ப்பு
*நியாய விலையில் பொருள்கள் வழங்கி, சமையற் கூடங்கள் அமைத்து மலிவு விலையில் இட்லி-தோசை-சாதம்.
________________________
#திட்டம்:
______
#இந்த திட்டத்தின் கீழ் விதவைகளும், ஆதரவற்ற தாய்மார்களும் பணிபுரிவார்கள்.
#முதலாவதாக இந்த திட்டம் 5 நகரங்களிலும் திட்டம் "ஏ"யின் கீழ் 30 பிரிவுகள் அமைக்கவும், திட்டம் "பி"யின் கீழ் 30 பிரிவுகள் அமைக்கவும் அரசு அனுமதி அளித்தது.
#முதற்கட்டமாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
#தாய்மார்களே இந்த உணவு வகைகளை சுகாதாரமாக தயாரித்து தருவார்கள். பாக்கெட்டில் அடைத்து சுத்தமான முறையில் விற்க அரசு ஏற்பாடு செய்யப்பட்டது.
#சென்னை நகரில் பத்து பிரிவுகளும், கோவை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் தலா 5 பிரிவுகளும் அமைக்கப்பட்டது.
#முதல் திட்டத்தின்படி இதனை ஏற்கும் தாய்மார்கள் தங்கள் வீடுகளிலேயே உணவு வகைகளை சமைத்து அவைகளை விற்பனைக்கு எடுத்துச் செல்வார்கள். இந்தத் தாய்மார்கள் உணவு வகைகளை உள்ளூர் பள்ளிகளிலும், அலுவலங்கள் மற்றும் இதர பொது இடங்களில் விற்பார்கள்.
#சுகாதார உணவு:
_____________
#சுகாதாரத்தை காப்பதற்காக உணவு வகைகளை பைகளில் அடைத்து விநியோகம் செய்ய சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்படி செயல்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கடனில் 25 சதவிகிதம் மானியமாக தரப்படும். அது அதிகபட்சமாக 500 ரூபாய்க்கு மேல் இருக்காது.
#மானியம்:
_______
#இரண்டாவது திட்டத்தின்படி (பி வகை) ஒரு பொது இடத்திலிருந்து உணவுப் பொருகள் விற்பனை செய்யப்படும்.
#பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகிய சூழ்ந்துள்ள ஒரு இடத்தில் வாடகை கட்டிடம் ஒன்றில் உணவுகளை வைத்து விற்பனை செய்வது இதன் நோக்கமாகும் அல்லது வேலையற்றோர் அமைத்துள்ள சிற்றுண்டி ஸ்டால்கள் போல ஏற்படுத்தி அதன் மூலம் உணவுப் பொருட்களை விற்பனை செய்யலாம்.கடை உரிமையாளரை தவிர இரு உதவியாளர்களையும் அவர்கள் அமர்த்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின்படி தொழில் தொடங்கும் பெண்களுக்கு உதவியில் 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் 2500 ரூபாய் வரை மானியமாக கொடுக்கப்படும்.உணவுப் பொருள்களை நியாய விலையில் வழங்குதற்காக இந்த இரு திட்டங்களும் சிபாரிசு செய்யப்பட்டது.
#துரிதமாக செய்ய குழு:
_________________
#இந்த திட்டத்தை துரிதமாக செயல்படுத்தவும், அதனை மேற்பார்வையிடவும் சமூக நல இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.இந்தக் குழு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனிடமிருந்து நியாய விலையில் அரிசி மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுத் தரும்.
#இந்தத் தொழில் தொடங்க முன்வரும் தாய்மார்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெறவும், உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான கடைகளை அமைக்கவும் குழு உதவி செய்யும்.
#உள்ளூர் நிலைமைகள் மற்றும் செலவுகளைக் கணக்கிட்டு உணவுப் பொருள்களுக்கு விலை நிர்ணயிக்கும் பொறுப்பையும் கமிட்டி ஏற்றுக் கொள்ளும்.
#குறுகிய காலப் பயிற்சி:
__________________
#இதில் ஈடுபடும் பெண்களுக்கு சமையல் செய்வதில் குறுகிய கால பயிற்சி ஒன்றும் தரப்பட்டது. சமையல் தொடர்பான முக்கிய பாடங்கள், சுகாதாரம் போன்றவற்றில் அவர்களுக்கு பயிற்சிகள் தரப்பட்டது. பயிற்சி காலத்திலேயே கடன் கொடுக்கும் வங்கிகளுடன் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது........... Thanks mr.Jayaraman.........
-
1st May 2020, 04:58 PM
#116
Junior Member
Diamond Hubber
*புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி அறிஞர் அண்ணா போற்றுவது...*
*ஒரு முறை தென் மாவட்டங்களில் சிறப்புரை நிகழ்த்திவிட்டு, அறிஞர் அண்ணா காரில் வந்து கொண்டிருக்கிறார். பயணக் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காகக் காரிலிருந்து இறங்கி சாலையோரத்தில் நிற்கிறார்.*
*அந்த வழியே வந்து கொண்டிருந்த விவசாயக் கூலிப் பெண்கள் அண்ணாவின் காரைப் பார்க்கிறார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். காட்டிய அதே கொடி அண்ணாவின் காரிலும் பறக்கிறது. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள்: "நீங்கள் எங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா?” அண்ணா அவர்கள் புன்னகை ததும்பப் பதிலளிக்கிறார்; "ஆம், நான் உங்கள் எம்.ஜி.ஆர். கட்சிதான்!” இந்த நிகழ்ச்சியை விவரித்து ‘தம்பிக்கு' எழுதிய கடிதத்தில் "அந்தப் பெண்கள் நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா என்று கேட்டபோது நான் அளவில்லா மகிழ்ச்சியுற்றேன். நாம் செல்லாத ஊர்களுக்கும், நம்மை தெரியாத பாமர மக்களிடத்திலும் எம்.ஜி.ஆர். நமது கொடியைக் கொண்டு சென்றிருக்கிறாரே என்று வியந்து போனேன். உச்சிப் பொழுதிலும், நாம் உறங்கும் வேளையிலும்கூட எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நமது கருத்துக்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது உண்மையல்லவா....” என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா .*
*"திமுக என்றால் எம்.ஜி.ஆர்.; எம்.ஜி.ஆர். என்றால் எங்கள் வீட்டுப் பிள்ளை " இதுதான் கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் அபிப்பிராயம். இதைப் புரிந்து கொண்டதால்தான், 'யாருக்கும் கிடைக்காத கனியொன்று மரத்தில் பழுத்துத் தொங்கியது. யார் மடியில் விழுமோ என்று எல்லோரும் ஏங்கித் தவித்தபோது, அக்கனி என் மடியில் விழுந்தது. மடியில் விழுந்த கனியை என் இதயத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டேன்' என்று அண்ணா எம்.ஜி.ஆரை கொண்டாடினார்.*
*1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் தமிழக வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாகும். அப்போது தேர்தல் நிதியாக எம்.ஜி.ஆர். ஒரு இலட்சம் ரூபாய் தந்தபோது அண்ணா சொன்னார் : "தம்பீ, இந்த ஒரு இலட்ச ரூபாய் பெருந்தொகைதான், ஆனால் நானோ இதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு உன் முகத்தைக் காட்டு, அது பல இலட்சம் வாக்குகளைப் பெற்றுத்தரும்!” என்றார். அந்தத் தேர்தலின்போது தான் தமிழகத்தை உலுக்கிய துயரச் சம்பவம் நடந்தது. இளைஞர்கள் கொதித்தார்கள்; தலைவர்கள் திகைத்தார்கள்; பெண்கள் அழுது புலம்பினார்கள்; ஆம், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.*
*அண்ணா கேட்டுக்கொண்டபடி எம்.ஜி.ஆர். தனது முகத்தை மக்களுக்குக் காட்ட முடியவில்லை . ஆனால், குண்டடிபட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட அவருடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள், தமிழ்நாடு எங்கும் ஒட்டப்பட்டன. பார்த்துப் பதறிய மக்கள் தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளிக் குவித்தார்கள். கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றி பெற்றன. வெற்றிக்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், அண்ணாவிற்கு மாலை அணிவிக்கச் சென்ற மக்களிடம் குறிப்பாக கே.ஏ.மதியழகன் ஊரான கணியூர் மற்றும் கோவை நகரக் கழகப் பொறுப்பாளர்களிடம் “இந்த வெற்றிக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. முதலில் அவருக்கு இந்த மாலையை சூட்டுங்கள்" என்று அண்ணா உணர்ச்சிபொங்கப் பேசினார்.*
*திமுக வளர்ந்தது, வெற்றி பெற்றது, ஆட்சி அமைத்தது எம்.ஜி.ஆரால்தான் என்பதை உணர்வதற்கு அறிஞர் அண்ணாவின் கூற்றே வரலாற்றுச்சான்று...!!!....... Thanks...
-
1st May 2020, 05:11 PM
#117
Junior Member
Diamond Hubber
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 18 வெள்ளிக்கிழமை
முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது ஊழல் செய்து
அண்ணா திமுக ஒரு ஊழல் கட்சி என்ற பெயரை வாங்கிக் கொடுக்காத
உத்தமத் தலைவன் MGR
நம்வள்ளலுடன்இருப்பவர்
கன்னட நடிகர் ராஜ்குமார்
1966 ஆம் ஆண்டு பெங்களூரில்
கண் இழந்தோர்கள்கலந்துகொண்ட நிகழ்ச்சி நடந்தது
நம்தங்கத்தலைவர் MGR
. ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
அப்போது நம்வள்ளல் கண்இழந்தோர்களுக்கு
50000 ரூபாய் நன்கொடையாக கொடுத்தார்
நம் வள்ளல் பேசும் போது நான் கால்ஒடிந்து வீட்டில் இருந்த போது
கண்இழந்தோர்கள் இரண்டுபேர்என்னை பார்க்க வந்தனர் .
நீங்கள் என்னைபார்ப்பதற்க்கு ஏன் சிரமத்துடன் வந்தீர்கள் என்று கேட்டேன்
அவர்கள் சொன்ன பதில் எங்களுக்கு கண் இல்லை என்றாலும்
உங்களை நாங்கள் தொட்டுப்பார்த்துகொள்கிறோம் என்று
என்னை தோட்டுப்பார்த்தார்கள்
அந்த அன்பை என்னால் மறக்க முடியவில்லை
MGR திமுகவில் இருந்த போது
இந்த நிகழ்ச்சி நடந்தது
இப்படி பட்ட வள்ளலுக்கு சில பூச்சிகள்
துரோகம் செய்ததை என்னால்
மறக்க முடியவில்லை...
++++++++++++++++++++++++++++++++++
இப்படிப்பட்ட தர்மங்களை எல்லாம் எம்ஜிஆர் நடிகராக இருந்த காலகட்டத்தில் இருந்தே தொடர்ந்து செய்து வருகிறார்
எம்ஜிஆர் தர்மம் செய்த காரணத்தினால் தான் ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை முதல்வராக வர முடிந்தது
எம்ஜிஆர் இப்படிப்பட்ட தர்மங்களை செய்த காரணத்தினால் தான் தமிழ்நாட்டில் இன்னும் எம்ஜிஆர் கட்சி ஆட்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது
++++++++++++++++(+++++++++++?+++++
சினிமா உலகில் மார்க்கெட் இழந்த பலநடிகர் / பலநடிகை
மண்ணாங்கட்டி கள்அண்ணா திமுகவில் சேர்ந்தார்கள் /அவர்கள எம்ஜிஆர் கூடவே இருந்து குழி பறிக்க ஆரம்பித்தார்கள்
அந்த மண்ணாங்கட்டிகள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்
தன்னுடைய சொந்த பணத்தில்
எம்ஜிஆரை போல் ஏழை மக்களுக்கு பண உதவி செய்திருந்தால்
அந்த மண்ணாங்கட்டியின் ரசிகர்கள்
முகநூலில் தங்களுடைய ஐடியில் பதிவாக வெளியிடவும்
+++++++++++++++++++++++/+++++/++
300 கோடியில் வளர்ப்பு மகனுக்கு கல்யாணம்
கஞ்சா வியாபாரம் செய்தார் எண்று
வளர்ப்பு மகனை சிறையில் அடைத்தார்கள்
+++++++++++++++++++++++++++++++
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது
மாயா உலகமடா பரமானந்தம்
சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைகள்
குன்னக்குடிக்கு அன்னக் காவடிஎடுத்தாலும்
எம்ஜிஆரின் கால் தூசிக்கு யாரும் ஈடாக முடியாது..... இணையாக முடியாது....... Thanks PM.,
-
1st May 2020, 05:19 PM
#118
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவர் முதல்வராக இருந்த. காலத்தில் தி.மு.க.என்ற கட்சி தவிர மற்ற அனைத்து கட்சியினரும்.அவர் மீது தனிப்பட்ட மதிப்பு மரியாதை வைத்திருந்தனர் அதனால் எந்த ஒரு போராட்டம் மறியல் என்றாலும் புரட்சித்தலைவரிடம் அனுமதி கேட்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கு அல்ல. அவர்கள் எப்போதும் எதாவது ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பத்து பதினைந்து பேர் ஒன்று கூடி புரட்சித்தலைவரிடம் அனுமிதி கேட்க செல்வார்கள் அப்படி செல்பவர்கள் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடைய விருந்தோம்பல் உபசரிப்பு அன்புடன் கட்டி அனைத்து அவர்களை வரவேற்கும் பணிவு நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்பதற்கு முன்பு இவர் கேட்டு ஆச்சரியம் படசெய்துவிடுவார் அதனாலே அவர்கள் வந்த நோக்கம் மறந்து திரும்பிவிடுவார்கள் இப்படி ஒவ்வொரு முறையும் சென்று புரட்சித்தலைவரின் அன்பில் கட்டுப்பட்டு திரும்புவது வழக்கமாகியது ..இப்படியே சென்றால் நாம் போராட்டம் நடத்துவது எப்படி நம்ம எதிர்ப்பு எப்படி காட்டுவது என்பது புரியாமல் தவித்தனர்.பிறகு ஒரு முடிவு செய்தனர். பத்து பதினைந்து பேர் போனால்தான் எம். ஜி. ஆர் விருந்தோம்பல் உபசரித்து அனுப்பிகிறார் .அதே ஐநூறு ஆயிரம் பேர் ஒன்றாக சென்றால் அவரால் எப்படி அனைவருக்கும் உணவு கொடுக்க முடியும். அதனால் ஒரு முறை அப்படி செய்வோம் என்று முடிவு செய்து. புரட்சித்தலைவர்க்கு எந்த வித தகவலும் சொல்லாமல் தீடீரென்று ஒரு நாள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடி புரட்சித்தலைவரின் அலுவலகம் நோக்கி மிக பெரிய பிராண்டமான ஊர்வலமாக சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் எதோ கோரிக்கை வைக்கவேண்டும் என்று மிக பெரிய ஊர்வலம் உங்களைக் நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி புரட்சித்தலைவர்க்கு தெரிவிக்கப்படுகிறது. உடனே தனது உதவியாளர் அழைத்து வந்தவர்கள் அனைவரும் வெயிலில் நிற்க வேண்டாம் அவர்களது கோரிக்கை எதுவாயினும் நிறைவேற்றுகிறேன் சிறிது நேரத்தில் வருகிறேன். அது வரை அருகில் உ ள்ள திருமணம் மண்டபத்தில் இருக்க சொல்லுங்க என்று தகவல் கூறி அனுப்பினார்.
உதவியாளர் புரட்சித்தலைவர் சொன்ன தகவலை ஊர்வலம் வந்தவர்களிடம் கூறுகிறார். அவ்வளவு பேரும் அருகே உள்ள திருமணம் மண்டபம் சென்றனர்.
அங்கே சென்றவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியானார்கள் காரணம். வந்துருந்த ஆயிரம் பேருக்கும் பிரமாண்டமான சமபந்தி அறுசுவை உணவு பரிமாறு பட்டு தயராக இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு தலைவர்தான் நீங்கள் வருவிர்கள் என்பதால் உணவு தயாராக இருக்க சொன்னார். என்றனர். ஆயிரம் பேரும் வயிறு நிறைவுடன் உணவு உண்டு சென்றனர். உண்ட உணவுக்கு நன்றி சொல்வதா .அல்லது போராட்டா கோரிக்கை வைப்பதா என்பது புரியாமல். தவித்தனர் .
கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் இதைப்பற்றி புரட்சித்தலைவரிடம் கேட்டார். உங்களுக்கு இவ்வளவு பேர் வருவார்கள் என்று முன்பே தெரியுமா. இத்தனை பேருக்கு உணவு கொடுக்கப்பட்டது எப்படி சாத்தியம் ஆனது என்று கேட்டார். அதற்கு புரட்சித்தலைவர் கூறிய பதில்
ஆயிரம் பேர் என்பது குறைவு அடுத்த முறை இருபாதாயிரம் பேரை அழைத்து வாருங்கள் அத்தனை பேருக்கும் உணவு தரகூடிய தகுதியை ஆண்டவன் உங்கள் மூலம் தருகிறார். உங்கள் கோரிக்கை போராட்டம் எல்லாம் என் கண்ணூக்கு தெரியல. வந்தவர்கள் எத்தனை பேர் பசியில் இருப்பார்கள் எந்த சூழ்நிலையில் வந்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன் .உங்கள் போராட்டம் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் வயிற்று போராட்டம் அந்த நேரத்தில் மட்டும்தான் நிறைவேற்ற முடியும்
முதலில் வயிற்றுபசியை போக்குவோம் பிறகு மற்றதை பார்ப்போம் என்பதுதான் என் மனதில் தோன்றியது தவிர மற்றப்படி இனிமேல் தான் சிந்திக்கனும் என்றார்
புரட்சித்தலைவர் பதிலை கேட்டதும். கல்யாணசுந்தரம் தன்னையறியாமல் புரட்சித்தலைவர் கைகளைப்பிடித்து கண்ணீர் மல்க முத்தமிட்டார்........... Thanks...
-
1st May 2020, 05:20 PM
#119
Junior Member
Diamond Hubber
தமிழ் மக்கள் எம் ஜி ஆருக்கு கொடுத்த ஆதரவு உலக சரித்திரத்தில் பொறிக்க வேண்டியது
எம் ஜி ஆர் பணத்தை விட மனிதநேயத்தை நேசித்தார் மக்கள் தங்களை விட எம் ஜி ஆரை அதிகம் நேசித்தார்கள்
தன்பசியை விட மற்றவர் பசி ஆறி பார்பதில் சுகம் கண்டார் எம் ஜி ஆர் மக்கள் எம் ஜி ஆர் புகழ் வளர்ச்சி கண்டு சுகம் பெற்றார்கள்
அனாதையாக வந்த தன்னை ஆளாக்கி நாட்டை ஆளவைத்த மக்களுக்கு அரணாக இருந்து காத்தார் எம் ஜி ஆர் மக்கள் தங்களை காத்த எம் ஜி ஆரை காவல்தெய்வமாக கொண்டாடுகிறார்கள்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்..... Thanks...
-
1st May 2020, 05:21 PM
#120
Junior Member
Diamond Hubber
*“தாயே துணை”-தாயைத் தெய்வமாகப் போற்றிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!*
*“தாயில்லாமல் நானில்லை*
*தானே எவரும் பிறந்ததில்லை*
*எனக்கொரு தாய் இருக்கின்றாள்*
*என்றும் என்னைக் காக்கின்றாள்”*
*-‘அடிமைப் பெண்’ படத்தில் மக்கள் திலகம் பாடிய பாடலைக் கேட்டிருப்பீர்கள். ‘அவள் தான் அன்னை மகாசக்தி’ என்று முடியும் பாடலில் வெளிப்பட்டிருக்கும் அவருடைய தாயின் மீது வைத்திருந்த அளப்பரிய பாசம்...*
*“அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்” – என்று பாடியிருப்பார் ‘பெற்றால் தான் பிள்ளையா?’ படத்தில்...*
*வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்.. அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்” என்று பாடியிருப்பார் ‘தேடி வந்த மாப்பிள்ளை’ படத்தில்...*
*“அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி” என்று உணர்த்தியிருப்பார் ‘தொழிலாளி’ படத்தில்...*
*“தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்னல்கள் தந்தாலுமே அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா எனக்கது நீயாகுமா?” என்றிருப்பார் ‘தாயின் மடியில்’ படத்தில்...*
*தெய்வத் தாய்’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, தாயைக் காத்த தனயன், குடியிருந்த கோவில் – இவை எல்லாமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த சில படங்களின் பெயர்கள்.*
*இதற்கெல்லாம் மூலம் எம்.ஜி.ஆர் தன்னுடைய தாய் ‘சத்யா அம்மையார்’ மீது வைத்திருந்த உண்மையான நேசமும், அன்பும் தான்...*
*இளமைக் காலத்தில் அவர் கஷ்டப்பட்டபோது, தாயின் அன்பு தான் அவரை அரவணைத்திருக்கிறது. வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வைத்திருக்கிறது.*
*தான் வசித்த ராமாவரம் தோட்டத்தில் “தாயிற் சிறந்த கோவிலுமில்லை” என்ற முதுமொழிக்கேற்ப தன்னுடைய தாய் சத்யா அம்மையாருக்குக் கோவில் எழுப்பி, தினமும் அங்கு வணங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.*
*எத்தனையோ கோப்புகளிலும், கடிதங்களிலும் கையெழுத்திட்டிருக்கிற புரட்சித்தலைவர் அதைத் துவங்கும் முன்பு “தாயே துணை” என்று தமிழில் எழுதியே ஆரம்பித்திருக்கிறார்.*
*மற்றவர்கள் தாயைப் பற்றி மேடையில் பேசுவார்கள், எழுதுவார்கள்...*
*ஆனால் தாய் மீது வைத்திருந்த பேரன்பைச் செயலில் காட்டி வாழ்ந்திருக்கிறார் சத்தியத்தாயின் மகத்தான புதல்வர்...*....... Thanks...
Bookmarks