-
16th December 2020, 09:51 AM
#1471
Junior Member
Diamond Hubber
நம் இதயதெய்வம் முதல்வர் ஆன பின் ஒரு இந்திய பிரபல ஆங்கில நாளேடுக்கு பேட்டி கொடுத்து இருந்தார் அதில் ஒரு சிறந்த பதில்...
கேள்வி...
கருணாநிதி அவர்கள் ஒரு முன்னாள் முதல்வர் சிறந்த வசன கர்த்தா மற்றும் படைப்பாளி....அவரை நீங்கள் சந்தித்த முதல் களத்திலேயே எப்படி உங்களால அவரை வெல்ல முடிந்தது?
தலைவர் பதில்....
அவருக்கு நீங்கள் குறிப்பிட்ட அனைத்து திறமைகளையும் நான் நன்கு அறிவேன்..
அவர் ஒரு திரைக்கதை ஆசிரியர் என்றால் நான் அதை உணர்ந்து நடித்து கொண்டு இருந்த நடிகர்..
காட்சிகளில் அவர் எங்கு எங்கு ட்விஸ்ட் அதாவது திருப்பங்கள் வைப்பார் என்று நான் நன்கு உணர்ந்தவன்
அவரை போல பல கதாசிரியர்களை சந்தித்தவன் நான் என்பதை ஏனோ அவர் மறந்து விட்டார்...அதனால் ஏற்பட்ட சம்பவங்களே பின்னால் நடந்தவை என்றார்.
ஆங்கில பத்திரிகை நிருபர் வியப்பில் ஆழ்ந்து விட்டார்... அடுத்த கேள்வி கேட்க அவருக்கு சில நிமிடங்கள் ஆகிவிட்டன
அதுதான் நம்ம தலைவர்..... வாழ்க அவர் என்றும்...நன்றி.
உங்களில் ஒருவன் நெல்லை மணி....தொடரும்....
-
16th December 2020 09:51 AM
# ADS
Circuit advertisement
-
16th December 2020, 09:52 AM
#1472
Junior Member
Diamond Hubber
#கண்ணியவானா
நடிகை விஜயகுமாரியை
புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக்க பலர் , பலமுறை முயச்சித்தபோதும் திட்டவட்டமாக முடியாது என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
தங்கையாக நடிக்க மட்டுமே சம்மதித்திருக்கிறார் . நடித்தும்
இருக்கிறார் .
இதை விஜயகுமாரியும் உறுதிச்
செய்திருக்கிறார்.
தன் நண்பன் , தன் இயக்கத் தோழன்
எஸ்.எஸ்.ஆருடைய மனைவி என்ற ஒரே
காரணத்திற்காக விஜயகுமாரியோடு
ஜோடியாக நடிக்க மறுத்தவர் புரட்சித்
தலைவா் .
ஆனால் , ரஜினியோ நண்பனின்
மனைவியுடன் அல்ல , நண்பனின்
மகளுடனே ஜோடி சேர்ந்து நட்புக்கும்
மூப்புக்கும் ஒவ்வாத அடையாளத்தைச்
செய்தார் .
‘லிங்கா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக
நடித்தவர் சோனாக்சி சின்ஹா , சத்ருகன்
சின்ஹா – நடிகை பூனம் தம்பதியரின்
மகள் .
ஆனாலும் நம் வருங்கால முதல்வர் (!) ,
ஆமாம் ரஜினி எந்த மேடையில்
ஏறினாலும் , நமது பண்பாடு ,
கண்ணியம் என்று பேசத் தவறியதே
இல்லை .
அவரின் பண்பாடு சார்ந்த மேடை
வசனங்களுக்கு விசிலடித்துக் கை
தட்டுபவர்கள் இதனை ஒருபோதும்
கருத்தில் கொள்வதில்லை .....sk...
.
-
16th December 2020, 09:53 AM
#1473
Junior Member
Diamond Hubber
எம் ஜி ஆர் உருவாகணும் இயற்க்கையாக
எம் ஜி ஆரை உருவாக்க முடியாது சேர்க்கையாக
நடிப்பவர் எல்லாம் எம் ஜி ஆர் அல்ல
எம் ஜி ஆரிம் வள்ளல் குணம் இயற்க்கையிலே இருந்தது
மனிதநேயம் பிறவியிலே இருந்தது
கருணனை மனம் கூடபிறந்தது
எம் ஜி ஆரோடு
திறமை பிறப்பிலே பதிந்திருந்தது
துணிவு ரத்ததிலே எம் ஜி ஆரிடம் இருந்தது
வீரம் என்றும் எதிலும் வெல்லும் அளவுக்கு இந்தது எம் ஜி ஆரிடம்
சுயநலம் என்றும் இல்லாதிருந்தது எம் ஜி ஆரிடம்
சொத்து சுகம் தன் குடும்பத்தார்க்கு மட்டும் என்று எண்ணாத மனம் எம் ஜி ஆருக்கு இந்தது
தன் உடமைகள் எல்லாம் மக்களுக்கே என கொடுக்கும் பொன்மனம் எம் ஜி ஆரிடம் இருந்தது
பாமரை தமிழரை கயவர் துன்புறித்த போதும் தமிழரை இலங்கை படை தாக்கிய போது காக்கும் வீரமனம் எம் ஜி ஆரிடம் இருந்தது
இது போல் சகலகலாவல்லவனாக நினைத்ததை முடிக்கும் சக்தி கொண்டவராக ஏழைகளின் ஒளிவிளக்காக மின்னியதாலே தமிழ் மக்கள் எம் ஜி ஆரை தன் தலைவராக தன் முதல்வராக தங்கள் காவல் தெய்வமாக கொண்டனர்
ஆனால் இன்று
தமிழ் மக்களை சினிமா பைத்தியமா நினைத்து தமிழ் திரையில் நடித்து பல கோடிகளை சேர்த்து அதை தமிழர்களுக்கு எதற்க்கும் பயன்படுத்தாமல் தமிழகத்தின் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் சுயநலமாக தன் மாநிலத்தில் சொத்துக்களை முதலீடு செய்து சுகவாழ்வு வாழ்தந்து விட்டு வயதாகி பொழுது போக்க என்பது போல் தமிழர் அரசியலில் இறங்கி பதவி அடைய துடிப்பதும் அதை ஒர் கும்பல் ஆதரிப்பதும் வடிகட்டிய சுயநலம் ஆன்மீகம் மதம் என்று மக்களை குழப்பி தன் தோல்வியை மக்கள் தோல்வி என மக்களை கேவைபடுத்தி நடக்கும் அரசியலை மக்கள் தக்க நேரத்தில் நல்ல பாடம் புகட்டி உணர்த்துவார்கள் தமிழன் சினிமா பைத்தியம் அல்ல என்று
நடிப்பவன் எல்லாம் நாடாளமுடியாது...
எம். ஜி .ஆர் ., பொன்மனத்தோடு நடப்பவன் தான் நாடாளமுடியும்...
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........arm...
Last edited by suharaam63783; 16th December 2020 at 09:55 AM.
-
16th December 2020, 09:56 AM
#1474
Junior Member
Diamond Hubber
# எல்லோருக்கும் வணக்கம்,
பதிவுகள் போட கொஞ்சம் தாமதமாகி விட்டது, காரணம் ஒரு மாதம் கூடுதலாக இடை விடாத பணிச் சுமை,
அதனால் தலைவரின்
புகழ் பாட முடியாமல் தவித்துப் போய் விட்டேன்,
இனி தொடர்ந்து பதிவுகள் போட முயற்சிக்கிறேன்,
#என்னதான் பணிச் சுமை இருந்தாலும் நம்ம கனடா மன்னாரன் கம்பெனி தங்கவேலு பதிவையும், சென்னை "நகைச்சுவை மணி " போண்டா மணி பதிவையும் படிக்க தவறுவதில்லை, காரணம் எவ்வளவு தான் உடல் மனம் இரண்டும் கஷ்டப்பட்டாலும் இவர்கள் இருவரின் பதிவுகளைப் பார்த்ததும் குபீர் என்று சிரிப்பும் வந்து விடும் கூடவே நம் உடல் வேதனையும் பறந்து விடும்,
அந்த அளவுக்கு சென்ஸ் ஆப் ஹியூமர் இரண்டு பேருக்கும் அதிகம், அதுவும் யார் அதிகமாக பிறரை சிரிக்க வைப்பது என்னும் போட்டியில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை ( ஏங்க நம்பலியா? சத்தியமாங்க)
உதாரணத்துக்கு நம்ம " போண்டா மணி " போட்டிருக்கும் ஒரு பதிவை பாருங்கள்
அதை படித்த பிறகாவது நான் சொல்றது சரிதான்னு
கண்டிப்பாக ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்,
சரி பதிவுக்கு போவோமா !
" வரும் 2020" சட்ட மன்ற தேர்தலுக்காக
எல்லா அரசியல் கட்சி களும் போட்டி போட்டுக் கொண்டு யார் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பதில் தொடங்கி மக்களைக் கவர என்ன செய்யலாம் என்று மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்,
போதாக் குறைக்கு இரண்டு மூன்று நாளைக்கு முன்பு 70 ஆவது பிறந்தநாள்? ( நம்பித் தொலைப்போம் ) கொண்டாடிய பெரிய தாத்தா வேறு கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து தமிழ் நாட்டை சிங்கப்பூர் லெவலுக்கு கொண்டு வராமல் ஓய மாட்டேன் என்று சொல்லிக் கொண்டு
ஹைதெராபாத்தில் தமிழ் மக்களுக்காக எல்லா கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு உயிரே போனாலும் பரவாயில்லை என்று நடித்துக்கொண்டிருக்கிறார், ( இந்த ஒண்ணுக்காகவாவது இன்ஸ்டன்ட் காப்பி மாதிரி அவர் நடிச்சு முடிஞ்சதும் முதலமைச்சர் நாற்காலியில் தமிழக மக்கள் உட்கார வைத்து விட மாட்டார்களா என்ன? )
இன்னொரு பக்கம் பார்த்தால் " அம்மா மினி கிளினிக் " திட்டத்தை தொடங்கி வைத்து நம்ம எடப்பாடியார் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்,
இன்னொரு பக்கம் அய்யா ஸ்டாலின் அவர் மகன் உதயநிதி யுடன் சேர்ந்து பழைய
"நமக்கு நாமே " மாதிரி " தமிழகத்தை" மீட்டெடுக்காமல் விட மாட்டேன் என்று சூளுரைத்து களம் இறங்கியிருக்கிறார்,
நம்ம "மக்கள் நீதி மய்யம் " கமல் அய்யா வுக்கு "பேட்டரி லைட் "
சின்னம் கிடைக்கலயாம்,
அவர் வேற என்னை விஸ்வரூபம் எடுக்க வைத்து விடாதீர்கள் என்று கொதித்து கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்( ஒரு வேளை தலைவர்
"காவல்காரன் " படத்தில் டார்ச் லைட்டுடன் சுரங்கப் பாதைக்குள் ஸ்டைலா வருவாரே
அந்த ஸ்டில்லைப் போட்டு ஓட்டு கேட்க முடியாதோ என்று வருத்தப் படுறார் போல)
இப்படி ஆளாளுக்கு ஆலாப் பறந்து கொண்டிருக்க , அட ஏன்யா இப்படி பறக்குறிய உங்களுக்கெல்லாம் நான் ஒரு சுலபமான வழி சொல்லித் தாரேன் அதை மட்டும் செய்யுங்க வர்ற தேர்தல்ல நீங்கதான் முதலமைச்சர் என்று சொல்லி ஒரு வழியையும் சொல்லியிருக்கிறார்,
அது வேற ஒண்ணும் இல்லீங்க சென்னை கடற்கரையில் இருந்து புடுங்கி எடுத்து மணிமண்டபத்தில்(? )
வைத்துள்ள கணேசன் சிலையை யார் பழையபடி கடற்கரையில் கொண்டு வைப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போவது நிச்சயம் என்று நம் "போண்டா மணி " அவர்கள் ஒரு அருமையான கருத்தை சொல்லி பதிவு போட்டிருக்கிறார் ( இந்த ரகசியத்தை கண்டிப்பாக அனைத்து கட்சிகளும் செயல் படுத்துவார்கள் என்று நம்புவோம்,
என்ன ஒரே ஒரு சிக்கல் எல்லா கட்சிகளும் இந்த ஒற்றை வாக்குறுதியை கொடுக்கும் பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கும் அது ஒன்றுதான் பெரிய சிக்கலாக இருக்கப் போகிறது,
யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்பதை அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும், ( அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவேன் என்ற ஒரே ஒரு வாக்குறுதி கொடுத்ததன் மூலம்தான் ஒரு சதவிகித வாக்குகள் கூடக் கிடைத்து ஜெயலலிதா ஆட்சியை பிடித்தாராம்,
எனவே அரசியல் கட்சிகள் ஒரு தடவைக்கு நூறு தடவை யோசித்து நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்
( நம்ம " போண்டா மணி " நல்லா காமெடி பண்ணுவாப்பல என்று நான் சொன்னதற்கு சில பேர் நம்பியிருக்க மாட்டீர்கள், இப்போ என்ன சொல்றீங்க? )
சரி அடுத்தது நம்ம கனடா தங்கவேலுவின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி க்கு வருவோம் ( பாவம் ராத்திரியெல்லாம் கொட்டக் கொட்ட முழிச்சி முன்னர் இலங்கையில் இருந்த போது தானே
நடத்தி வந்து நாலு பேர் கூட படிக்காத " சிம்மக் குரல் " என்னும் எவரும் சீந்தாக்குரல் நிறைய ஸ்டாக் இருக்கும் போல ,
அதில் தான் முன்பு எழுதிய பொய் பித்தலாட்டங்களை இப்போதும் பெரிய எழுத்து கண்ணாடி போட்டுக்கிட்டு தினசரி இருக்கும் நாலைந்து வட்டுகளுக்கு கடை பரப்பி சாந்தி அடைய முயற்சிக்கும் தங்கவேலுவே உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்,
சரி விஷயத்துக்கு வருவோம்
" பாபு " படம் தலைவரின் " நீரும் நெருப்பும் " படத்தை வென்றதாம்
சரி "பாபு " படத்தின் தமிழ் நாடு முழுக்க உள்ள வசூல் விபரத்தை வெளியிடு பார்ப்போம்,
எத்தனை அரங்கில் 50 நாள் ஓடியது, எத்தனை அரங்கில் 100 நாள் ஓடியது?
B & C யில் அதன் ஓடிய விபரங்கள் என்ன? வசூல் என்ன?
வெளியிட முடியுமா புளுகுண்ணி தங்க வேலு?
A சென்டர் என்று சொல்லப் படும் நகரங்களில் ஒன்றிரெண்டை தவிர வேறு எங்கு "பாபு " ஓடியது?
B& C சென்டர்களில் ஒரு வாரம், இரண்டு வாரம் கூட ஓடாத ஒரு படத்தை வெற்றிப்படம் என்று சொல்லி நீ மட்டும்தான் சொறிந்து கொள்ள வேண்டும், கூடவே போண்டாவையும் கூப்டுக்க,
உனக்கெல்லாம் கொஞ்சம் கூட சூடு சுரணையே இல்லையா? இப்படி பொய்யா புளுகித் தள்ளுற?
உங்கள் குத்தகை அரங்கங்களிலும் சொந்த அரங்கிலும் 100 நாள் ஓட்டி விட்டால் வெற்றிப்படம் ஆகி விடுமா? ( சென்னையில் மட்டும் வசூல் வேற பத்து லட்சம் என்று புருடா விடுவது, வேறு எங்கும் வசூல் காண்பிக்க முடியாது
காரணம் படம் எப்படிப்பட்ட தோல்வி என்று எடுத்த திருலோகச் சந்தருக்கே நன்றாகத் தெரியும் )
ஆனால் " நீரும் நெருப்பும் " சென்னை யில் 100 நாட்கள் ஓடா மலே தேவி பாரடைஸ் மற்றும் அரங்குகளிலும் எத்தனை லட்சம் வசூல் என்ற விபரம் உனக்குத் தெரியுமா புளுகுண்ணி?
தமிழ் நாடு முழுக்க A, B, C மூன்று சென்டர்களிலும் ஜெய பேரிகை கொட்டிய படம், இன்று வரை கொட்டிக் கொண்டிருக்கும் படம்
அந்த படத்தைப் பற்றி விமர்சிக்க ஒரு தகுதி வேண்டாமா?
தலைவர் " சந்திரோதயம் " படத்தில் சொல்வது போல எனக்கு எதிரியாய் இருக்கக்கூட ஒரு தகுதி வேண்டும்,
அப்படிப்பட்ட தகுதி கணேசனுக்கு உள்ளதா என்ன?
முதல் தடவை வெளியாவதுடன் பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்படும் கணேசன் படங்கள் என் தலைவனுடன் போட்டி போட முடியுமா?
வெட்டிப்பயலுக்கு பேச்சு என்ன வேண்டிக் கிடக்கு?
இதே போல் இங்கே வெற்றி என்று சொல்லப்பட்ட " சவாலே சமாளி " இலங்கையில் " நீரும் நெருப்புடன் மோத முடியாமல் சரணாகதி அடைந்த கதை உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்,
இல்லை என்றால் நினைவூட்ட ஆதாரத்தை இத்துடன் இணைத்துள்ளேன்
தெரிந்து கொள்,
இந்த கொரோனா காலத்தில் யாருடைய படங்கள் வெற்றி முரசு கொட்டுகிறது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை
கடைசி கட்ட முயற்சியாக மதுரை சென்ட்ரலில் கழிந்த ஞாயிறு "ராசபார்ட் ரங்கதுரை "க்கு ஒரு 50 டிக்கெட் கிழித்து விட்டு என்னா ஒரு பில்டப்பு,
அது மட்டுமா திருப்பூர்
மனிஷ் அரங்கில் பள்ளி மாணவர்கள் படம் பார்க்க வந்தார்களாம் ( பள்ளிக்கூடம் திறந்தாச்சா என்ன? )
தலைவர் படங்கள் தமிழகம் முழுக்க ஓடுகிறதே, இதைப் பற்றி தங்கவேலு என்ன சொல்வாரோ தெரியவில்லை,
போதாக்குறைக்கு " அன்பே வா " வேறு 18 ந் தேதி முதல் தமிழகம் முழுக்க பவனி வரப்போகுது
( இதுவும் அமெரிக்க சதியாய் இருக்குமோ?
காரணம் கணேசன் படத்தை தியேட்டர்காரங்க எடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்களாமே அப்படியா? )
அடுத்தது நம்ம தங்கவேலு இலங்கை தகவல்கள் என்ற பெயரில் சும்மா அள்ளி விடுறது,
காரணம் யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைப்பு
" உலகம் சுற்றும் வாலிபன் " படத்தைப் பற்றி அன்றைய நாட்களில் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டதை அப்போதே அன்றைய
" உரிமைக்குரல் பத்திரிகையில் டேவிட் சார் அம்பலப் படுத்தியிருந்தார்
அதை மீண்டும் கோடாங்கி உனக்கு ஞாபகப் படுத்துகிறேன்
யாழில் 115 நாள் ஓடி "தங்கப்பதக்கம் " வசூல் 4, 20, 903
"உலகம் சுற்றும் வாலிபன் " வெறும் 67 நாளில் 4, 22, 302 வசூலை ஏற்படுத்தி தகரத்தை தூக்கி எறிந்தது
அது மட்டுமல்ல நீ தொண்டை வறள கத்திக் கொண்டிருக்கும்
" வசந்த மாளிகை " லி டோ, வெலிங்டன் இரண்டிலும் 106 நாள் மொத்த வசூல் 3, 46, 148
" உலகம் சுற்றும் வாலிபன்" ஸ்ரீதர், மனோகரா இரண்டிலும் வெறும் 50 நாள் வசூல் 3, 75, 502
அடுத்து யாழ் மனோகராவில் தலைவரின் "இதயக்கனி " 14நாளில் மொத்த வசூல் 104, 545
"நினைத்ததை முடிப்பவன்" 14 நாளில் மொத்த வசூல் 102, 926
"தங்கப்பதக்கம் " 14நாள் மொத்த வசூல் 102, 173
இன்னும் நிறைய இருக்கு,
யாரிடம் கயிறு திரிக்கிறாய்? அதை வேற எங்காவது வச்சு க்க புளுகுண்ணி ( ஆதாரம் எல்லாமும் இத்துடன் இணைத்துள்ளேன் )
அடுத்து தலைவரின் " நாளை நமதே " சாதனைகள்
யாழ் ராணி யில் வெறும் 24 நாளில் ஹவுஸ்புல் காட்சிகள் 101
இதற்கு முன் 102 நாள் ஓடி " அவள் ஒரு தொடர்கதை மொத்த வசூல் 3, 34, 862
"நாளை நமதே " வெறும் 69 நாளில் பெற்ற வசூல் 3, 35, 404
இந்த சாதனை மட்டுமல்ல " நாளை நமதே " காலை 10.30 க்கு முன் காண்பிக்கப்படாது என்று அறிவிப்பு வைத்த பிறகும் ரசிகர்களின் நெரிசல் காரணமாக அதிகாலை 2.20 க்கே திரையிடப் பட்டது
மேலும் முதல் நாளில் திரையிட்ட 8 காட்சிகளும் ஹவுஸ்புல்,
கணேசன் எந்த படமும் திரையிட்ட நாளில் 8 காட்சிகள் ஹவுஸ்புல் ஆனதா சரித்திரமே இல்லை,
அது வரை திரையிட்ட கணேசனின் அத்தனை படங்களையும் வெறும் ஆறு வாரத்தில் ஓட ஓட அடித்த பெருமையும் " நாளை நமதே " க்கு உண்டு,
அடுத்து ஈழத்தின் மட்டுநகரில் " உலகம் சுற்றும் வாலிபன் " ஓடிய நாட்கள் 116
தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகள் 27,
மொத்த ஹவுஸ் புல் காட்சிகள் 112
நள்ளிரவுக் காட்சிகள்
10
அனைத்தும் ஹவுஸ் புல்
மொத்தம் காண்பிக்கப்பட்ட காட்சிகள் 341
மொத்த வசூல் 1, 94, 726
" தங்கப்பதக்கம் " முதல் நாள் வசூல் 780 ரூபாய் 30 சதம்
" உலகம் சுற்றும் வாலிபன் 341 ஆவது காட்சி வசூல் 788 ரூபாய் 85 சதம்
மட்டு நகரில் கணேசன் படங்கள் ஓடி முடிய வசூல்
வசந்த மாளிகை 49 நாள் ஓடி முடிய 78, 362, 75
தங்கப்பதக்கம் 43 நாள் ஓடி முடிய வசூல் 49, 102, 60
எங்கள் தங்க ராஜா 30 நாள் ஓடி முடிய வசூல் 40, 112, 30
மன்னவன் வந்தானடி 22 நாள் ஓடி முடிய வசூல் 14, 435, 10
நாலு படமும் சேர்த்து மொத்த வசூல் 182, 012.75
இந்த பன்றிக் குட்டிகளுக்கு தலைவரின் பதிலடி ஒரே படம் "உலகம் சுற்றும் வாலிபன்" 116 நாள் மொத்த வசூல் 1, 94, 726.00
மட்டு நகர் ரீகல் அரங்கில் 50 ஹவுஸ் புல் காட்சிகள் ஓடிய ஒரே படம் தலைவரின் " இதயக் கனி " மட்டுமே
ஓடிய நாட்கள் 70
மொத்த வசூல் 1, 15, 701
தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் 14,
மொத்த ஹவுஸ் புல் காட்சிகள் 56
இன்னும் நிறைய இருக்கிறது,
தேவைப்பட்டால் தங்கவேலுக்கு இன்னும்
கொடுப்போம் !.....J.JamesWatt...
-
16th December 2020, 11:36 PM
#1475
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்பே*வா " டிஜிட்டல் திரைப்படம்* 18/12/20* முதல் வெளியாகும்*அரங்குகள் விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை :* தேவி காம்ப்ளெக்ஸ்* -தினசரி* பிற்பகல் 12.45* *மாலை 4 .00 மணி*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *இரவு* 07.15 மணி*
* * * * * * * * * * * ஆல்பட் காம்ப்ளெக்ஸ் -பிற்பகல் 3 மணி /மாலை 6.30 மணி*
* * * * * * * * * * *பி.வி.ஆர்..அண்ணா நகர் - தினசரி மாலை 6 மணி*
* * * * * * * * * * *பி.வி.ஆர். ஸ்கைவாக் -தினசரி பிற்பகல் 3 மணி*
* * * * * * * * * *பி.வி.ஆர்.,க்ராண்ட் மால், வேளச்சேரி -தினசரி* பிற்பகல் 2.45மணி*
* * * * * * * * ஏ.ஜி.எஸ்., வில்லிவாக்கம் -தினசரி மதியம் 12 மணி*
* * * * * * * *ஏ. ஜி.எஸ்., நாவலூர்* - தினசரி பிற்பகல் 3.15 மணி*
* * * * * * * * * ஏ.ஜி.எஸ். மதுரவாயல் - தினசரி மாலை 6 மணி*
* * * * * * * * *ஏ.ஜி.எஸ்., தி. நகர்* -* தினசரி* -பிற்பகல் 3.45 மணி*
* * * * * * * * *வேலா சினிமாஸ், திருநின்றவூர் -தினசரி காலை 11.30 மணி*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *மாலை 6.30 மணி*
* * * * * * * * *பி.வி.ஆர். பல்லாவரம்* -காலை 11.30 மணி*
* * * * * * * * மூலக்கடை- சண்முகா - தினசரி பிற்பகல் 3 மணி /இரவு 9.45மணி*
மதுரை - சினிப்பிரியா, அண்ணாமலை , சோலைமலை*
கோவை - ப்ரூக்ளின் , கே.ஜி.காம்ப்ளெக்ஸ், அர்ச்சனா தியேட்டர் .
நெல்லை - முத்துராம் காம்ப்ளெக்ஸ், ரத்னா தியேட்டர் .
திண்டுக்கல் - உமா*
போத்தனூர் - அரசன்*
மற்ற அரங்குகள் விவரம் அறிந்ததும் அறிவிக்கப்படும்* .
* * * * * * * * **
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2020, 08:08 AM
#1476
Junior Member
Diamond Hubber
1965 ஆம் ஆண்டு வெளிமாநிலத்தில் கார்வார் என்ற கடல் பகுதியில் நம் மன்னரின் "ஆயிரத்தில் ஒருவன்" படப்பிடிப்பு அங்கே நடந்து கொண்டு இருந்தது..
இப்போது இருக்கும் பெப்சி விஜயன் அப்பா சாமிநாதன் அவர்கள் ஏற்பாட்டில் 60 க்கும் மேற்பட்ட துணை சண்டை காட்சி நடிகர்கள் இதரர்கள் அங்கு சென்று இருந்தனர்...
அந்த குழுவுக்கு பொறுப்பு தாதா மிராசி, மற்றும் சித்திரா லட்சுமணன் ஆவர்.
நம்பமுடியாது....இதுவே உண்மை...
அதிகாலை 6 மணிக்கு கடலுக்குள் 15 கிலோ மீட்டர் உள்ளே போய் 2 மிக பெரிய கப்பல்களில் படப்பிடிப்பு நடைபெறும்
தலைவர் அம்மையார் நம்பியார் நாகேஷ் மற்றவர்கள் அனைவரும் ஒரு மின் மோட்டார் பொறுத்த பட்ட படகில் இணைத்து இழுத்து செல்ல பட பின் துணை நடிகர்கள் மீண்டும் கரைக்கு அந்த மின் மோட்டார் படகின் மூலம் அந்த கப்பல் களுக்கு போய் சேர்வர்.
உணவு உடை மாற்றம் மற்றவை எல்லாம் கடலுக்குள் அந்த கப்பல்களில் தான்..
மாலை 5 மணி ஆனவுடன் படப்பிடிப்பு முடிந்து மேலே சொன்ன படி அவர்கள் கரை திரும்ப பின் துணை நடிகர்கள் அடுத்து கரை திரும்புவார்கள்.
ஒரு நாள் துணை நடிகர்கள் வந்த படகை இழுத்து வந்த மின் மோட்டார் படகு கரைக்கு வந்து சேர பின்னால் துணை நடிகர்கள் வந்த படகு கயிறு அறுந்து விட கரை வந்து சேரவில்லை.
மின் படகை ஓட்டி வந்தவர் திகைத்து மீண்டும் திரும்பி இணைப்பு கயிறை சரி செய்து கடலுக்குள் செல்வதற்குள்.
அங்கே காற்றின் வேகம் காரணம் ஆக துணை நடிகர்கள் வந்த படகில் தண்ணீர் நிரம்ப துவங்க அனைவரும் துடி துடித்து போகின்றனர்....தகவல் தொழில் நுட்பம் இல்லாத காலம் அது.
படகில் புகுந்த கடல் நீரை வாரி வாரி இறைத்து ஊற்றி கொண்டு இருக்கும் போது அந்த மின் படகு மீண்டும் வந்து கயிறை கட்டி கரை நோக்கி பயணம் செய்தது.
கரையில் இருட்டில் அதுவரை நடந்தது அறியாமல் அவரவர் களைத்து போய் முன்னணி நடிகர்கள் ஓய்வெடுக்க போக.
தப்பித்து பிழைத்து வந்த அந்த துணை நடிகர்கள் கரை அருகில் வந்து சேர்ந்த போது அங்கே இருட்டில் ஒரு உருவம் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தது.
கரையில் இவர்கள் அனைவரும் பத்திரம் ஆக இறங்கிய உடன் அவர்கள் அனைவரையும் தனி தனி தனியாக கட்டி அணைத்து கண்ணீருடன் வரவேற்க நின்ற அவர்.
இந்த உலகின் மாபெரும் மனித நேய செம்மல் நம் தங்க தலைவனை பார்த்த உடன்....
ஒட்டு மொத்த கூட்டமும் கண்ணீர் கடலில் மூழ்கியது....
அதனால் தான் அகிலமே சொன்னது சொல்கிறது...சொல்ல போகிறது...தலைவா. நீ " ஆயிரத்தில் ஒருவன்", "லட்சத்தில் ஒருவன்", "கோடியில் கோடிகளில் ஒருவன்", என்று.
வாழ்க தங்கதலைவர் எம்ஜிஆர் புகழ்..நன்றி
தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி......
எனக்கு என்ன என்று இல்லாமல் இக்கரை அவர்கள் திரும்பும் வரை அக்கறை ஓடு நின்ற நெருங்கும் தலைவரின் நினைவு நாள் பதிவுகளில் அனல் பறக்கும்...
விழிகளில் வழியும் கண்ணீருடன்.....
-
17th December 2020, 08:09 AM
#1477
Junior Member
Diamond Hubber
எம். ஜி. ஆர்., உருவாகணும் இயற்கையாக
எம் ஜி ஆரை உருவாக்க முடியாது சேர்க்கையாக
நடிப்பவர் எல்லாம் எம் ஜி ஆர் அல்ல
எம் ஜி ஆரிம் வள்ளல் குணம் இயற்க்கையிலே இருந்தது
மனிதநேயம் பிறவியிலே இருந்தது
கருணனை மனம் கூடபிறந்தது
எம் ஜி ஆரோடு
திறமை பிறப்பிலே பதிந்திருந்தது
துணிவு ரத்ததிலே எம் ஜி ஆரிடம் இருந்தது
வீரம் என்றும் எதிலும் வெல்லும் அளவுக்கு இந்தது எம் ஜி ஆரிடம்
சுயநலம் என்றும் இல்லாதிருந்தது எம் ஜி ஆரிடம்
சொத்து சுகம் தன் குடும்பத்தார்க்கு மட்டும் என்று எண்ணாத மனம் எம் ஜி ஆருக்கு இந்தது
தன் உடமைகள் எல்லாம் மக்களுக்கே என கொடுக்கும் பொன்மனம் எம் ஜி ஆரிடம் இருந்தது
பாமரை தமிழரை கயவர் துன்புறித்த போதும் தமிழரை இலங்கை படை தாக்கிய போது காக்கும் வீரமனம் எம் ஜி ஆரிடம் இருந்தது
இது போல் சகலகலாவல்லவனாக நினைத்ததை முடிக்கும் சக்தி கொண்டவராக ஏழைகளின் ஒளிவிளக்காக மின்னியதாலே தமிழ் மக்கள் எம் ஜி ஆரை தன் தலைவராக தன் முதல்வராக தங்கள் காவல் தெய்வமாக கொண்டனர்
ஆனால் இன்று
தமிழ் மக்களை சினிமா பைத்தியமா நினைத்து தமிழ் திரையில் நடித்து பல கோடிகளை சேர்த்து அதை தமிழர்களுக்கு எதற்க்கும் பயன்படுத்தாமல் தமிழகத்தின் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் சுயநலமாக தன் மாநிலத்தில் சொத்துக்களை முதலீடு செய்து சுகவாழ்வு வாழ்தந்து விட்டு வயதாகி பொழுது போக்க என்பது போல் தமிழர் அரசியலில் இறங்கி பதவி அடைய துடிப்பதும் அதை ஒர் கும்பல் ஆதரிப்பதும் வடிகட்டிய சுயநலம் ஆன்மீகம் மதம் என்று மக்களை குழப்பி தன் தோல்வியை மக்கள் தோல்வி என மக்களை கேவைபடுத்தி நடக்கும் அரசியலை மக்கள் தக்க நேரத்தில் நல்ல பாடம் புகட்டி உணர்த்துவார்கள் தமிழன் சினிமா பைத்தியம் அல்ல என்று
நடிப்பன் எல்லாம் நாடளமுடியாது
எம் ஜி ஆர் பொன்மனத்தோடு நடப்பவன் தான் நாடாளமுடியும்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........arm...
-
17th December 2020, 08:09 AM
#1478
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆரின் நடிப்பை பலவிதமாக பல தரப்பினர்கள் விமர்சனம் செய்து உள்ளார்கள் .
எம்ஜிஆரின் நடிப்பு என்பது - தென்றல்- மென்மையாக கையாளும் நடிகப்பேரசர்.
வீரமான காட்சிகளில் - புயலாய் ஜொலித்தவர் .
காதல் காட்சிகளில் கனிரசம் சொட்ட பல காதலர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழும் அளவிற்கு பல காதல் கீதங்களை தந்த உலகபேரழகு மன்மதன் .
கொள்கை பாடல்கள் - இவரை போல் பாடியவர் எவருமில்லை
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன மகிழ்வுடன் பார்க்கும் அளவிற்கு பொழுது போக்கு
படங்களை தந்தவர் .
எல்லா வகை சண்டை காட்சிகளிலும் தனி முத்திரை பதித்து தன்னுடைய திறமைகளை வெளி
படுத்தி சண்டை பிரியர்களை இன்று வரை தன்னுடைய நிரந்தர ரசிகராக வைத்திருப்பவர் .
எம்ஜிஆர் என்ற பெயரை கேட்டாலே குதூகலித்து அவருடைய பிம்பத்தை திரையில் பார்க்கும்
போதும் ஒரு தனி மனிதன் அடையும் இன்பத்தின் எல்லைக்கே சென்று சிரித்து ஆனந்தமடையும்
ரசிகன் இன்று கோடிக்கணக்கில் இருப்பது உலகில் எம்ஜிஆர் என்ற நடிகருக்கு மட்டுமே
என்பது வரலாற்று உண்மையாகும் .
எம்ஜிஆர் என்ற மாபெரும் மன்னாதி மன்னன் - மறையவில்லை .
ரசிகர்களின் உள்ளங்களில் தினமும் வாழ்கிறார் .-
ஊடகங்களில் தினமும் தோன்றுகிறார் .....
திரை அரங்குகளில் பவனி வருகிறார் ...
மனம் திறந்து மக்கள் திலகத்தை பாராட்டும் நல்லவர்கள் ..புகழ் மாலை சூடுகிறார்கள் ....
உலக திரைப்பட வரலாற்றில் சாதனை இங்கும் எம்ஜிஆர் வாழ்கிறார் ..........
-
17th December 2020, 08:10 AM
#1479
Junior Member
Diamond Hubber
#பக்தியும் #பிரசாதமும்
நம்ம வாத்தியாரின் தீவிர ரசிகர்
ஒருவர்...எப்படிப்பட்ட ரசிகர் தெரியுமா???
வாத்தியார் சேலத்திற்கு ஷூட்டிங் வரும்போதெல்லாம், உணவு சாப்பிட்ட பின் அந்த இலையை அந்த ரசிகர் தான் எடுப்பார்...(அந்த ரசிகரின் பெயர் சரியாக நினைவில் இல்லை)
அப்படிப்பட்ட ஒரு பாசம், பக்தி
வாத்தியார் மீது...
இப்படியே வருடங்கள் கடந்தது...
வாத்தியார் அஇஅதிமுகவைத் தோற்றுவித்த சமயம்...
சேலத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடந்தது. அதில் அஇஅதிமுகவும் நின்றது...
அதற்கு கழகத்தின் சார்பில் சில விஐபிக்களும் வேட்பாளராகப் போட்டியிட ஆவலாக இருந்தனர்...
எதிர்பாராவிதமாக வாத்தியார் அந்த ரசிகரைக் கூப்பிட்டு... 'நீங்க தான் வேட்பாளர்...' னு அறிவித்தார்...
அவ்வளவு தான், அந்த ரசிகர் பிரமிப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்...
அந்த ரசிகருக்கும் தான் வேட்பாளராக நிற்க ஆசை...!!!
அதை எப்படித் தெரிவிப்பது என்று சங்கோஜப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் தான், வாத்தியார் அப்படித் திருவாய் மலர்ந்தருளினார், முக்காலமும் உணர்ந்த வாத்தியார்...
பின்ன...
தனக்கு எதுவுமே செய்யவில்லையென்றாலும் கூட மற்றவர் வாழ்வில் ஒளியேற்றும் ஒளிவிளக்காகிய நம்ம வாத்தியார்.... தனக்குப் பல காலம் சேவை செய்த ஒரு அதிதீவிர பக்தருக்குத் தம் கருணைமழையைப் பொழியாமலா இருப்பார் .....?!?!?!.........bsm.........
-
17th December 2020, 08:12 AM
#1480
Junior Member
Diamond Hubber
Mgr ஆட்சியை தருவேன் - ரஜினிகாந்த்
mgr போல ஆட்சி செய்வேன் - கமல்ஹாசன்
நான் கருப்பு mgr - விஜயகாந்த்
mgr போல ஏழைகளுக்காக பாடுபடுவேன் - விஜய்
mgr போல ஆட்சி ஆள என்னாலும் முடியும் - t.ராஜேந்தர்
*ஒருத்தன் கூட கருணாநிதி போல னு சொல்லல...*.........
Bookmarks