-
31st January 2021, 09:38 PM
#811
Senior Member
Devoted Hubber
உத்தமபுத்திரன் தொடர்ந்து பீம்சிங் இயக்கத்தில் பதி பக்தி படத்தில் நடித்தார் . அம்மையப்பன் படம் தோல்வி கண்டதால் ராசி இல்லாத இயக்குனர் என்ற பெயர் பீம்சிங்குக்கு வந்தது .அந்த விமர்சனங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு சொந்தமாக படம் எடுக்கும்படி கலைவாணர் யோசனை சொன்னதன் பேரில் சோலைமலை வேலுமணி எம் எஸ் விஸ்வநாதன்ராமமூர்த்தி சேர்ந்து புத்தா பிக்சர்ஸ் தொடங்கி பராசக்தி முதல் சிவாஜியை நன்கு அறிந்தவர் என்பதால் சிவாஜி நடிக்கவேண்டும் என்று கேட்டவுடன் நீங்கள் தைரியமாக ஆரம்பியுங்கள் நான் உங்களு...க்கு பக்க பலமாக இருக்கிறேன் என்று உறுதி கூறினார் .புத்தா நிறுவனம் தரமானவெற்றி படங்களை தயாரித்தது என்றால் அதற்க்கு ஆரம்ப காலத்தில்அதற்கு உரம் இட்ட சிவாஜிதான் காரணம் என்று பீம்சிங் கூறியிருக்கிறார் . சிவாஜி உருவாக்கிய தயாரிப்பாளர் எண்ணிக்கை மிக நீளமானது ,பந்துலு ஶ்ரீதர் பீம்சிங் பாலாஜி சந்தானம் குகநாதன் மோகன் ஆர்ட்ஸ் மோகன் ,ராம அரங்கண்ணல் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது .மிக சாமான்யர் பலரை தயாரிப்பாளர் ஆக்கிய பெருமை சிவாஜிக்கு உண்டு .குடும்ப சிக்கல்கள் நிறைந்த கதையை 1958ம் ஆண்டு மார்ச் மாதம்14 ந்தேதி பதி பக்தி படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து ராசியான இயக்குனர் ஆனார் .அந்த வருடம் துவக்கத்தில் வந்த படங்கள் அனைத்தும் ஓடாத நிலையில் இந்த படமாவது ஒடி தமிழ் திரையுலகை காப்பாற்றியது என்று வாகினி அதிபர் நாகி ரெட்டி கூறினாராம் .
courtesy net
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st January 2021 09:38 PM
# ADS
Circuit advertisement
-
31st January 2021, 09:41 PM
#812
Senior Member
Devoted Hubber
உங்களுக்குத் தெரியுமா?
டிஜிட்டல் கர்ணன் 2012 சாதனைகள்...
மார்ச் 16, 2012- ல் டிஜிட்டலில் திரையிடப்பட்ட...
நடிகர்திலகத்தின் கர்ணன் அதே வருடம் ஆகஸ்ட் 15 க்குள், 5 மாத காலத்தில், அதாவது 150 நாட்களுக்குள் மொத்தம் 304 அரங்குகளில் திரையிடப்பட்டு, இணைந்து 510 வாரங்கள் ஓடி, 5 கோடி ரூபாய்க்கும்மேல்
வசூலை வாரிக் குவித்தது.
அதாவது,
சென்னையில் திரையிடப்பட்ட 14 அரங்குகளில் இணைந்து 70 வாரங்களும்,
செங்கை மாவட்டத்தில் திரையிட்ட 25 அரங்குகளில் இணைந்து 36 வாரங்களும்,
வட ஆற்காட்டில் திரையிட்ட 25 அரங்குகளில்,
இணைந்து 49 வாரங்களும்,
தென்னாற்காடு, பாண்டி பகுதிகளில் 25 அரங்குகளில் இணைந்து 33 வாரங்களும்,
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையிட்ட 53 அரங்குகளில், இணைந்து 79 வாரங்களும்,
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் திரையிட்ட 38 அரங்குகளில் இணைந்து 61 வாரங்களும்,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், 29 அரங்குகளில், இணைந்து 54 வாரங்களும்
மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் திரையிட்ட 39 அரங்குகளில் 53 வாரங்களும்,
சேலம், தருமபுரி மாவட்டங்களில் திரையிட்ட 47 அரங்குகளில் இணைந்து 66 வாரங்களும்,
பெங்களூர் மற்றும் கோலாரில் 8 அரங்குகளில் இணைந்து 9 வாரங்களும் ஓடி மகத்தான வசூல் சாதனைப் படைத்தது.
இது வெறும் 5 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையாகும். அதுவும் தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில் நிழ்ந்த அதிசயம்.
நடிகர்திலகத்தை நடிப்பில் மட்டுமல்ல... இது போன்ற திரையுலகச் சாதனைகளையும் வென்று விடலாம் என்பது பகலில் தோன்றும் கனவு. கல்லில் நார் உறிக்கும் செயல்.
நடிகர்திலகம் நிஜத்தில் மட்டுமல்ல...
மின்பிம்பங்களிலும் அவரே ஒரிஜினல் கர்ணன்.
சிவாஜியும் சினிமாவும் ஒன்னு!
இதை அறியாதவன் வாயில் மண்ணு!!
Thanks Vaannilaa
courtesy net
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
4th February 2021, 07:15 AM
#813
Senior Member
Devoted Hubber
உங்களுக்குத் தெரியுமா ...?
1956 ல் சென்னை மாநகரில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை சுமார் 34.
அதில் 22 திரைகளில் இரண்டுமாத காலத்திற்கு அய்யனின் திரைப்படங்களே ஓடிக்கொண்டிருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா....
உண்மைதான்.
சென்னையின் எப்பகுதிக்குச் சென்றாலும் அவரின் திருமுகமே அரங்குகளில் நிழலாக இருந்தது. மிச்சமிருந்த இடங்களில்தான் மற்றவர்களின் படங்கள் ஓடின....
அந்த வரலாற்றுப் பட்டியல் உங்கள் பார்வைக்காக...
1. 14:01:1956 நான் பெற்ற செல்வம்
பாரகன் / உமா/ ராஜகுமாரி/ கிருஷ்ணா
2. 14:01:1956 நல்லவீடு
கெயிட்டி / காமதேனு / மகாலட்சுமி/
மகாராணி
3. 25:01:1956 நானேராஜா
அசோக்/ சன் / கபாலி / முருகன் /
பிரைட்டன் / நூர்ஜகான்
4. 03:02:1956 தெனாலி ராமன்
நியூகுளோப் / ஸ்டார் / ராக்ஸி / கிரவுன்
5. 17:02:1956 பெண்ணின் பெருமை
காசினோ/ பிராட்வே / மகாலட்சுமி
6. 25:02:1956 ராஜா ராணி
வெலிங்டன் / உமா / கிருஷ்ணா
இவற்றில் எல்லா திரைப்படங்களும் அன்றைக்கு 5 வாரங்களுக்குக் குறையாமல்
ஓடியது என்பதே வசூலுக்கான சாட்சி.
இதில் அதிசயம் என்னவெனில், அய்யனின் இந்த ஆறு படங்களும் 1956 ஜனவரி 14 ல் இருந்து 1956 பிப்ரவரி 25க்குள்,
வெறும் 41 நாட்களில் வெளியாகி உள்ளன என்பதுதான்.
மேலும், 1956 ல் தமிழ் சினிமாவில் வெளியான மொத்த நேரடித் திரைப்படங்கள் 33. அதில் நடிகர்திலகம் நடித்தவை 9. கிட்டதட்ட நான்கில் ஒரு பங்கு.
இதையெல்லாம் படித்தப்பின்பு உங்களுக்கு ஒன்று புரிந்திருக்குமே...!?
அன்றைக்கு நடிகர்திலகத்தைத் திரையுலகிலிருந்து ஒழித்தேத் தீரவேண்டும் என்று எதிரிகள் ஏன் வரிந்துகட்டிக் கொண்டு நின்றார்கள் என்ற ரகசியம்.
இத்தகைய அளப்பரிய சாதனைகளை யெல்லாம் இன்றைய மீடியாக்களின் காதுகளில் யார் போய் சொல்வது?
Thanks Vaannilaa
courtesy net
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th February 2021, 07:20 AM
#814
Senior Member
Devoted Hubber
ஊருக்கு ஒரு பிள்ளை 5/02/1982 --- 39 ஆண்டுகள் நிறைவு.
Thanks Vcg Thiruppathi
Last edited by sivaa; 6th February 2021 at 07:22 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th February 2021, 07:23 AM
#815
Senior Member
Devoted Hubber
தங்கைக்காக 6/02/1971----இன்று 50 ஆண்டுகள் நிறைவு
Thanks Vcg Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th February 2021, 07:26 AM
#816
Senior Member
Devoted Hubber
வா கண்ணா வா 6/02/1982---இன்று 39 ஆண்டுகள் நிறைவு.
Thanks Vcg Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th February 2021, 07:33 AM
#817
Senior Member
Devoted Hubber
தர்த்தி (ஹிந்தி) 6/02/1970 ----இன்று 51 ஆண்டுகள் நிறைவு.
Thanks Vcg Thiruppathi
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th February 2021, 07:36 AM
#818
Senior Member
Devoted Hubber
இன்று ( 06-02-21)
ஜெயா டிவி நெட்வொர்க்கில் குதூகலமான திரைப்படங்கள் ஒளி பரப்பாகிறது,
ஜெயா டிவியில் பிற்பகல் 2:30 க்கு புதிய பறவை அதற்கு முன்பாக காலை 11:30 க்கு பரம்பரை
ஜெயா மூவியில் பிற்பகல் 1:00 மணிக்கு முதல் மரியாதை தொடர்ந்து 4 மணிக்கு அரிமா நம்பி,
மேலும் தீர்ப்பு பகல் 12 மனிக்கும் இரவு 7 மனிக்கும் முரசு டிவியில்
ராஜ் டிஜிட்டலில் இரவு 10:30 க்கு லாரி டிரைவர் ராஜாகண்ணு,
Thanks Sekar Parasuram
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th February 2021, 07:38 AM
#819
Senior Member
Devoted Hubber
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
கோவையில் நமது நடிகர்திலகத்தின் திரைப்படம் தொடர்ந்து வெளியாகி வெற்றிநடை போட்டது.
சில காலமாக நடிகர்திலகத்தின் திரைப்படம் கோவையில் வெளியாகவில்லை.
லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருகிறது...
கோவை டிலைட் தியேட்டரில்,
பிப்ரவரி 6 முதல்,
நடிகர்திலகம் இருவேடங்களில் கலக்கும், அட்டகாசமான திரைப்படமான
என்னைப் போல் ஒருவன்...
கொரோனாவிற்கு பின்,
கோவையில் வெளிவரும் நடிகர்திலகத்தின்
முதல் படம் என்னை போல் ஒருவன்.
மதுரை சிவாஜி கோட்டை என்பதை, மதுரை வாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள், நிரூபித்து வருகிறார்கள்.
அதே போல், கோவையும் சிவாஜி கோட்டை தான் என்பதை, கோவை வாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் நிரூபிப்பார்கள்.....
மதுரையை போல், கோவையிலும்,
வருடத்திற்கு 5 அல்லது 6 நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும்...
ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று,
என்னை போல் ஒருவன் திரைப்படத்தை திரையிடும், முரளி பிலிம்ஸ், முரளி அவர்களுக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை அன்பு இதயங்களின் அலப்பறை ஆரம்பமாகட்டும்...
Thanks Sundar Rajan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th February 2021, 08:04 AM
#820
Senior Member
Devoted Hubber
தமிழ்த்திரை உலகம் மட்டுமல்ல, இந்தியத் திரை உலகமே கொண்டாடும் அதி அற்புதமான நடிகர்.
சர்வதேசத் திரை உலகில் சிறந்த நடிகர்கள் என்று அறியப்பட்ட அனைவருமே வியந்து பார்த்த, உன்னதமான ஒரே நடிகர்.
நடிகர் என்பதைத் தாண்டி, மிக உயர்ந்த மனிதர். சிறந்த தேச பக்தர், தெய்வ பக்தர்.
கேமராவுக்கு முன்பு தவிர, வேறெந்த இடத்திலும் வேசம் போடத் தெரியாதவர்..
தனி மனித வாழ்விலும் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்ததோடல்லாமல், தனக்கென வாழாத தகைமையாளர்.
தன் படங்களின் மூலம், அருமையான வாழ்வியல் தத்துவங்களை மட்டுமல்ல, அன்பு, பாசம், நேர்மை, கடமை, ஒழுக்கம், வீரம், தெய்வ பக்தி, தேச பக்தி, காதல், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் போன்ற எண்ணற்ற சிறந்த கருத்துக்களைப் பரப்பியவர்...
அன்றும் இன்றும்.. ஏன், என்றும் பல கோடி மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
அவருடைய புகழையும், சிறப்புக்களையும் இன்னும் உயர உயரக் கொண்டு செல்லும் உயரிய நோக்கத்துடன்... குறிப்பாக, இளைய தலைமுறையினர் அவருடைய சிறப்புகளை இன்னும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் துவங்கப்பட்ட You Tube சேனல்தான்,
'என்றென்றும் சிவாஜி'.
நடிகர்திலகத்தின் அருமைப் பிள்ளைகள் அனைவரும் இந்தச் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து, ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
உங்கள் ஆதரவு, இந்தச் சேனல் மேன்மேலும் வளர்வதற்கு மட்டுமல்ல, நடிகர் திலகத்தின் புகழை மேன்மேலும் பரப்பும் எங்கள் முயற்சிக்கு இன்னும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்.
சேனலுக்கான கீழ்க்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்து, சப்ஸ்கிரைப் செய்யுமாறு வேண்டுகிறோம்.
https://youtube.com/channel/UCjXJshADoeVEdCcgcHTBHVw
Thanks Nagarajan Velliangiri
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks