-
12th May 2021, 01:58 PM
#11
Senior Member
Devoted Hubber
அனைவரையும் சமமாக மதிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக சிவாஜி இருந்ததற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன்.
பத்திரிகைக்காக நேர்காணல் செய்ய நடிகர் பிரபுவை அவர் இருந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திக்கச் சென்றேன். இடைவேளை நேரத்தில் எனக்கு பேட்டி கொடுத்தார். அங்கு ஒரேயொரு நாற்காலி மட்டும்தான் இருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டு பிரபு எனக்கு பேட்டி கொடுக்க, நான் அவர் பேசுவதை நின்று கொண்டே பதிவு செய்துகொண்டிருந்தேன். சற்றுநேரம் முன்புவரை பிரபு நடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் பஞ்சத்திற்காகவோ, வறுமைக்காகவோ நடிகர் பிரபு நடிக்க வரவில்லை. ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி அவர் சிவாஜி கணேசனின் மகன். அந்த வாரம் பத்திரிகையில் அந்த பேட்டி வெளியானது. அதை படித்துவிட்டு பிரபு ஃபோன் செய்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் அந்த பேட்டியில் 'அறையில் இருந்த ஒரே சேரில் அமர்ந்து கொண்டு பிரபு பேட்டி கொடுத்தார்' எனக் குறிப்பிட்டிருந்தேன். அவர் எனக்கு சீட் கொடுக்கவில்லை என்பதற்காக நான் அதை எழுதவில்லை. சிவாஜி கணேசனின் மகனாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் அவ்வளவு சிரமப்பட்டு நடிப்பதை குறிப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு எழுதினேன். சிவாஜி கணேசன் அந்தப்பேட்டியை படித்துவிட்டு பத்திரிகைக்காரனை உட்கார சொல்லாமல் நீ என்ன பண்ணிக்கிட்டிருந்த எனத் தன்னைத் திட்டியதாகக் கூறி, மீண்டும் மன்னிப்பு கேட்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான்கூட அப்படி யோசிக்கவில்லை. ஆனால், அந்த மகாகலைஞன் அதை எந்த கோணத்தில் யோசித்திருக்கிறார் பாருங்கள். கிண்டலுக்காக சிவாஜி கணேசன் மீது நிறைய விஷயங்கள் இட்டுக்கட்டி சொல்லப்படுவது உண்டு. ஆனால், என்னுடைய அனுபவத்தில் அவர் மகாநடிகர் மட்டுமல்ல; மிகச்சிறந்த மனிதரும்கூட -
நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன்.
Thanks Subbiah
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th May 2021 01:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks