-
7th June 2006, 07:40 PM
#1
Senior Member
Veteran Hubber
PAATHASAARI
பாதசாரி.
பாthaசாri
paaதsaaரி
paathasaari
AN
ANTHOLOGY
OF JOURNEYS......
A
TODDLER'S HISTORY
WITHOUT DATES......
THROUGH
BLUE BLOOD......
REACHING
YOUR HEARTS
VIA MY BRAIN......
OR
VICE-VERSA....
LONG LONG AGO,
SO LONG AGO,
VERY LONG AGO,
NOBODY CAN SAY HOW LONG AGO,
THERE LIVED A FELLOW CALLED PAATHASAARI,
WHO WRITES ....
-
7th June 2006 07:40 PM
# ADS
Circuit advertisement
-
7th June 2006, 08:04 PM
#2
Moderator
Platinum Hubber
±ýÉÅ¡¸ þÕ측Р±ýÚ ¦º¡øÄ¢ '±ýÉÅ¡¸ þÕìÌõ' ±ýÈ ¬Å¨Äì ¸¢ÇôÀ¢ Å¢ð¼¡îÍ.¯ÁÐ ¦¾¡¼÷ þÉ¢¾¡¸ Å¡úòÐì¸û.
¯Â¢÷, ¯¼ø þÃñÊý Á£Ðõ «¾£¾ ÀüÚûÇ
À¢ÃÒ Ã¡õ
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
7th June 2006, 08:25 PM
#3
Senior Member
Veteran Hubber
உயிர் தமிழுக்கு,உடல் தமிழர்க்கு!
பாதசாரி.
GENRE:கட்டுரை
முகவுரை:
உலகிலேயே விசித்திரமானவற்றின் பெயர் சொல்லுங்கள் பார்ப்போம்?என்ன யோசிக்கிறீர்களா,தெரியவில்லையா?'பெயர்' தான் அது.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் : தலையில் சூடியிருக்கும் ரோஜாவுக்கோ,அண்டை வீட்டு ஜிம்மிக்கோ,ஏன் படைத்தவன் என்று கருதப்படும் பூசையறை கடவுள் படத்துக்கோ தெரியுமா இன்னது தான் அவர்களுக்கு இடுகுறியாகவோ காரணமாகவோ வந்த பெயரென்று?!!பெயர்க்காரணத்திற்கான பீடிகைதான்,அதனை பின் காண்போம்,முதலில் இயற்றுபவன்?ஒரு பள்ளி மாணவன்,இறுதியாண்டு.ஊர்சுற்றி.சுமாராகப்படிப்பேன்.கே ள்விக்குறிகள் அவ்வளவுதான்,இனி அறிமுகம்.நண்பர்களே,நான் கடந்து வந்த பாதை மிகவும் சிறியது,எளியது.ஆனாலும் பகிர்தல் நோக்கோடு வந்துள்ளேன்,மையமெனும் கலங்கரை விளக்கொளியில்.
"கரைவரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால்கூட
ஏறிநின்று போர் தொடுப்போம்"
(நா.முத்துக்குமார்)
இக்கவி என்னை மிகவும் கவர்ந்தது.இது ஒத்தே அனுதினமும் பல பிரச்சனைகளை தாண்டி ஒற்றை நாள் கடந்து காலண்டரிலிருந்து பறக்கிறது.அதனால் ஈட்டிய பட்டறிவின் மூலம் தினமொரு பிரம்மாஸ்திரத்தை துணையாய் அழைத்துக்கொண்டு மறுநாள்போருக்கு புறப்படுகிறோம்.உதாரணங்கள் தேவையில்லை.நான் பார்த்த முகங்களும் புத்தகங்களும் ஒருசேர என்னை உந்துதலளித்து எழுத வைத்தது.அவற்றின் மறுபரிமாணமாம் கட்டுரையை எழுதக்கிட்டிய முதற்பக்கங்கள் இவை.காதினின்று ரத்தம் வழிந்தால் என் பள்ளியில் கட்டுரைப்போட்டி முதற்பரிசளித்தோரை சபியுங்கள்.சரி என்ன எழுதப்போகிறாய் நீ? என்ன தெரியுமுனக்கு? என்று வினவினால்,அதற்கு விடை- என்னை பாதித்த இடங்களையும் மனிதர்களையும் பற்றி,என் பாதையைப்பற்றி.வரலாறு எனக்கு பிடிக்கும்,அதையும் குழைத்து.மனதில் பதிந்த சுவடுகளை,வானத்துக்கு மேலேயுள்ள மனிதாபிமானமாம் 'fictuos' வஸ்துவைப்பற்றியோ சுவிஷேசச் சொற்பொழிவைப் போலவோ,சித்த மருத்துவன் போலவோ அரசியல் உரையன்னவோ இது இருக்காது.
"எனக்கு அம்மாவைப் பிடிக்கும்,அம்மாவுக்கு அப்பாவைப் பிடிக்கும்,அப்பாவுக்கு தம்பியைப் பிடிக்கும்,எங்கள் எல்லோருக்கும் சோறு பிடிக்கும்":இந்த ஈழப்பிஞ்சின் குரலைப்போன்ற ஒரு ஆழ்ந்த நிதர்சனத்தை தர விழைகிறேன்.எறும்பளவோ,எறும்பின் வாயளவோ,அதன் ஆகாரமளவோ,ஆகாரத்தின் அணுவளவோ மிகையோடு.இம்முயற்சி எனக்கு வெற்றிமுரசாகவும்,வெற்றிமுகடாகவும் அமைய வாழ்த்தக்கேட்கும் வாசகயாசகன்,
நெறியன்,
இரா.கு. வெங்கடேஷ்.
-
7th June 2006, 10:55 PM
#4
Senior Member
Diamond Hubber
-
8th June 2006, 05:19 PM
#5
Senior Member
Veteran Hubber
#1
அத்தியாயம் #1.
வாழ்க்கை என்பது பயணம்.குழந்தையிலிருந்து முதுமையை நோக்கி,ஏழ்மையிலிருந்து வளமையை நோக்கி என பல்பரிமாணங்களாய்.அவ்வித பயணங்களின் தொகுப்பு இத்திரி.ஆனால் வழக்கமான பயணக்கட்டுரைகள் போலவோ,சுற்றுலா முடித்த மாணவனது பதிவாகவோ, டைரிக்குறிப்பாகவொ அன்று.சரி சவடால் போதும்,நிரூபணமிதோ.
தமிழ்நாட்டை வரைபடத்தில் காணின் முகம் போல் காட்சி தரும்.கூடவே பன்னீர்த்துளியாய் கமழவேண்டிய ஈழமோ கண்ணீர்த்துளி போல.ஆகட்டும்,சென்னைக்கு வருவோம்-மாநிலத்துக்கண்ணாய் இருக்கும் தலைநகரம்.அங்கு பல்லவ நாட்டினின்று புலம்பெயர்ந்த ஒரு பொறியியல் குடும்பத்தின் வாரிசு அடியேன்.மேற்கு மாம்பலத்தில்,ஆலந்தூரில்,தாமஸ் மவுண்டில்,பட் ரோட்டில்,சென்னை ட்ரேட் செண்டரில் என பல முகவரிகள் விவரம் தெரியாத எனக்கு.தற்போது போரூர்.ஒரு நாள் "தனியாக சென்று வருவேன்" என தம்பட்டம் அடித்துக்கொண்டு தி.நகர் புறப்பட்டேன்.அது தான் என் முதல் பயணம்.ஆனால் first impression best impression-ஆக இருக்கவில்லை.49-a பஸ் ஏறிய நான்,பேசிக்கொண்டே வந்தேன்.அருகிலிருந்தவன் "கலிகாலம்,கலிகாலம் எவனையுமே நம்ப முடியறதில்லை",என்றான். பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தவன் தோளில் சாய்ந்தும் கொண்டேன்.பேருந்து நிற்க தி.நகரில் இறங்கினேன்.அப்போது பையில் துழாவியபின் தான் தெரிந்தது,தோளை கொடுத்தவன் தோலை பறித்துக்கொண்டானென.சொச்சம் மொத்தமாக அறுபது ரூபாய் நைந்து,நசுங்கி அவ்வளவே.
" வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ"
(கவியரசு கண்ணதாசன்)
ரேடியோ பாட்டு அருகில்,சோகத்தை பகிர்ந்து கொள்ள.
எப்படியும் இல்லம் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையோடு,தொடர்ந்தேன்.பேருந்து நிலையம் திரும்பினேன்,அதே பஸ்ஸில் ஏறி வந்துவிட்டேன்.அட,தி நகரில் என்ன நடந்தது என்று சொல்லவில்லையே.... வழியிலொருத்தன் மூணு பத்து ரூபா எனக்கூவிக்கூவி கைக்குட்டை விற்றுக்கொண்டிருந்தான்.என் வயது இருக்கும்,வியாபாரி!ஒரு அம்மாவிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தான்:
"மூணு பத்து விலை கட்டுப்படியாகது,நீ நாலு குடு,வாங்கிக்கறேன்"
"சரிம்மா உனக்கும் வேணாம்,எனக்கும் வேணாம்,40 ரூபாய்க்கு எட்டு எடுத்துக்கோ"
என வேகமாக சொன்னதில்,அவருக்கு புரியவில்லை,கண்ணை சுழற்றிக்கொண்டே வாங்கிக்கொண்டுவிட்டார்,ஒன்றையே ஐந்து ரூபாய்க்கு!
பிறகு தான் ரங்கநாதன் தெருவில் நுழைந்தேன்.ரங்கநாதனது ஆலயமாகட்டும்,தெருவாகட்டும் பேதமின்றி எங்கும் நெரிசல்மயம்,அங்கே....
..
-
8th June 2006, 05:23 PM
#6
Senior Member
Diamond Hubber
-
9th June 2006, 11:45 AM
#7
Senior Member
Platinum Hubber
†¾É¢ò¾ý¨Á§Â¡Î ¾ÃôÀÎõ ¾ÃÁ¡É þò¦¾¡¼÷ þÉ¢§¾ ¦¾¡¼Ã Å¡úòÐì¸û!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th June 2006, 08:22 PM
#8
Junior Member
Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
seper vengiiiiiiiiii
keep it up
kumar
-
10th June 2006, 09:22 PM
#9
Member
Junior Hubber
¦Åí¸¢.. ¿øÄ ¸Å¢¨¾¸û ¾Õ¸¢È£÷¸û. ¦¾¡¼÷óÐ ±ØÐí¸û
¸Å¢¨¾ìÌ ¸Å¢¨¾Â¢ø ºó¾¢ì¸Ä¡õ «Êì¸Ê þÉ¢§Áø
«ýÒ¼ý
³ÂôÀý
செந்தமிழா எழுந்து வாராயோ..!
-
11th June 2006, 09:12 AM
#10
Senior Member
Veteran Hubber
அங்கே மனிதமுகத்தின் மிருகப்பார்வையை முதல் முறையாக உணர்ந்தேன்.லாபநோக்கில் உலகமே ஒரு முழு வியாபாரப்பாறை ஆகிவிட்டது.இவ்வாறெல்லாம் யோசித்து நின்றிருக்கையில் ஒரு ஐஸ்-கிரீம் வாங்கி இதயத்தை குளிர்வித்தேன்.ராணுவ டாங்கி அளவில் ஒரு குழு என்னை வாரியணைத்து இழுத்துச்சென்றது.இலவசமாக என்னை ரயில் நிலையம் அழைத்துச் சென்றுவிட்டனர்.அத்தெருவில் சிந்திய சில்லறையை பொறுக்குவது கம்பசூத்திரத்துக்கு நிகரான வேலை!மீண்டும் சாலையை சுத்தப்படுத்தியபடி என்னிடம் இருந்த காசுகளை முகர்ந்தெடுத்தேன்.மறுமுனை வந்து சேர்வதற்குள் ஆயுளில் முக்கால் பகுதி கழிந்துவிட்டது.அங்கே ஒரு சிறுவனிடம் புத்தகக்கடை எங்கிருக்கிறது என்று கேட்க அவன் தெரியாதென்றான்.டஜன் பேர் அதே பதிலைத்தான் சொன்னார்கள்.பதிமூன்றாமவன் ஒரு மிகச்சிறந்த புத்தகக்கடையினைக்காட்டினான்.புத்தகம் எழுதுபவர்கள் வறுமையில் வாடியிருந்ததை கேட்டிருக்கிறோம்,புத்தகத்தில் வறுமை?அக்கடையில் இருந்தது-ஆடை வறுமை.வெளியிலும் அதே போல் பல விதமாய் கீழ்த்தர சாதனங்கள்.கடைசியில் தெற்கு உஸ்மான் வீதியில் சேகர் என்றொருவரை சந்தித்தேன்.உத்தமர்.புத்தகங்கள் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்.ஞானம் போதிமழையாய் சொறிந்தது.அவர் சொன்னதையே என் தமிழாசிரியையும் சொன்னார்:பிறந்தநாட்களுக்கு ஆடைகளோடு புத்தகங்களும் வாங்கினால் எத்துணை பெர் மகிழ்ச்சியடைகிறார்கள் தெரியுமா,உங்களையும் சேர்த்து?புத்தகம் வாங்க நிறைய நேரமாகும்,அப்படி புரட்டுகையில் கவிக்கோவின் இவ்வரிகள் மேற்சொன்ன காரியத்துடன் தொடர்புடனும் இருந்தமையால் மேற்கோள் காட்டுவிக்கிறேன்:
"புத்தகங்களே
சமர்த்தாய் இருங்கள்
பிள்ளைகளை கிழித்துவிடாதீர்கள்"
(கவிக்கோ அப்துல் ரகுமான்)
ஆனால் நான் இன்னும் குரூரமானவற்றை விவரிக்கவில்லை....
Bookmarks