அமுதசுரபி இதழில் 'மரபுக்கவிதை' போட்டி பகுதியை நிறுத்திவிட்டு, ஏதாவது புதுப்பகுதியைத் தொடங்கலாமா என்று வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கு பதிலாக நான் அனுப்பிய வாசகர் கடிதம்:
இளவட்டம் மரபுக்கவி மாட்சியதை உணர்தற்கு
சிலநட்டம் புதுமைக்கு ஏற்பட்டால் பழுதில்லை
களைகட்டித் தொடரட்டும் அப்பகுதி அடியேனும்
தளைதட்டா கவியெழுதி பரிசுபெறும் காலம்வரை
(மார்ச் இதழ்)
Bookmarks