ஏழாம் பாகத்தில் நுழையும் இந்த திரி மென்மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.6ஆம் பாகத்தைவிட இதை விரைவாக முடிக்க இந்த திரியின் தூண்களான முரளி சார்,ராகவேந்தர் சார்,பம்மல் சார் மற்றும் சாரதா மேடம் தலைமையில் உறுதிமொழி ஏற்ப்போம்.

இந்த பாகத்தை தொடங்கி வைக்க சாரதா மேடம் மிக மிக பொருத்தமானவர்.அவர் ஆசைப்படுவது போல 70ஆம் பாகத்தையும் நடிகர்திலகத்தின் அருளாசியோடு நிச்சயம் அவர்தான் தொடங்கி வைப்பார்.

முரளி சார்,
சாய்பாபாவின் சிலை அன்னைஇல்லத்தில் பூஜிக்கப்படும் செய்தி பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.மற்ற மாநிலத்தை சேர்ந்த யாருக்காவது இந்த பெருமை கிடைத்திருந்தால் அந்த மாநிலத்தின் முன்னனி பத்திரிக்கைகளிளெல்லாம் அதுதான் தலைப்பு செய்தியாகியிருக்கும்.அது அந்த மாநில மக்களுக்கு கிடைத்த பெருமையாக கருதி எல்லோரும் அவரை கொன்டாடியிருப்பார்கள்.ஆனால் இங்கே அது கடைசிபக்க செய்தியாகவும் வரவில்லை என்பது வேதனையிலும் வேதனை.எப்போதும் சொல்லுவதைப்போல நடிகர்திலகம் தமிழகத்தில் பிறந்தது அவர் செய்த துரதிருஷ்டம்.