முகப்பு > தற்போதைய செய்திகள்
இறைக்குருவனார் மறைவு: வைகோ இரங்கல்
By dn
First Published : 24 November 2012 02:21 PM IST
புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, தமிழ்கூறும் நல் உலகின் தலைசிறந்த தமிழ் அறிஞர், இலக்கியச்செம்மல் புலவர் இறைக்குருவனார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அன்பு மருமகனும், தனித்தமிழ் ஆர்வலருமான இறைக்குருவனார் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் உயர்வுக்காகவும், தமிழ் இனத்தின் உரிமை வாழ்விற்காகவும் அர்ப்பணிப்புடன் தொண்டாற்றியவர் ஆவார்.
புலவர் இறைக்குருவனார் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், தமிழ்யின உணர்வாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்..
Bookmarks