PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events



Pages : 1 2 3 4 5 6 [7] 8

RAGHAVENDRA
7th October 2014, 11:40 PM
அடுத்து..

ஓம். நமசிவாய...

ஒரு முன்னோட்டம்...

ஹிந்தியில்...

http://www.youtube.com/watch?v=S5wvNGifnSU

RAGHAVENDRA
11th October 2014, 09:24 AM
Sivaji Ganesan Filmography Series

104. Thiruvilaiyadal திருவிளையாடல்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Sivan1.jpg

தணிக்கை – 16.07.1965
வெளியீடு – 31.07.1965

தயாரிப்பு – ஸ்ரீ விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்

நடிகர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி கணேஷ், திருமதி கே.பி.சுந்தராம்பாள், மனோரமா, ஜி.சகுந்தலா, பேபி சுசரிதா
கௌரவ நடிகர்கள் – டி.எஸ்.பாலய்யா, முத்துராமன், நாகேஷ், ஓ.ஏ.கே.தேவர், கருணாநிதி, டி.ஆர்.மகாலிங்கம், கே.சாரங்கபாணி, ஏ.பி.நாகராஜன், ஈ.ஆர்.சகாதேவன், பி.டி.சம்பந்தம், டி.என்.சிவதாணு, திருமதி தேவிகா

பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பாலமுரளிகிருஷ்ணா, சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி

பாடல்கள் – தவத்திரு சங்கர்தாஸ் சுவாமிகள் – ஞானப்பழத்தை, கவிஞர் கண்ணதாசன், உதவி – பஞ்சு அருணாசலம்

சங்கீதம் – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், உதவி – புகழேந்தி

ஒளிப்பதிவு டைரக்டர் – கே.எஸ்.பிரசாத்

ஒளிப்பதிவு – வி.செல்வராஜ், ராஜன். உதவி – கணேச பாண்டியன், பத்மநாபன், கே.தங்கவேலு

ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ்.ரங்கசாமி

ஒலிப்பதிவு – கே.துரைசாமி, உதவி- ஆர்.எஸ்.வேதமூர்த்தி, டி.டி.கிருஷ்ணமூர்த்தி, ஜோ அலோஷியஸ், மாதவன்

எடிட்டிங் – ராஜன், டி.ஆர்.நடராஜன்

கலை – கங்கா, உதவி-செல்வராஜ்

அரங்கம் – எம்.எஸ்.ராமசாமி.
அரங்க நிர்மாணம் – ஜி.மதுரை, என்.கிருஷ்ணன், கே.வீர்ராகவன்
அரங்க அலங்காரம் – சினி கிராஃப்ட்ஸ், ஃபிலிமோ கிராஃப்ட்ஸ், வாஹினி

ஓவியம் – ஆர்.முத்து, வி.பரமேசுவரன்
மோல்டிங் – சிதம்பரம், உதவி – ஜெயராமன்

எலெக்டிரிஷியன்ஸ் – சி.என்.புருஷோத்தமன், டி.எம்.தக்ஷிணாமூர்த்தி, உதவி-ஜெயராம் நாயுடு

ஃப்ளோர் இன்-சார்ஜ் – சாரதா ஸ்டூடியோ - என்.எஸ்.நாகப்பன், ஏ.எம்.சுந்தரம், எஸ்.பி.பாலு, என்.பஞ்சாபகேசன்

நடன அமைப்பு – பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, சின்னி-சம்பத், உதவி-லக்ஷ்மி நாராயணன்

ஸ்டண்ட் – சாரங்கன் கோஷ்டியினர்

ஆடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன், சி.கே.ராஜமாணிக்கம். உதவி – சி.கே.ஹரி, நாகலிங்கம்

மேக்கப் – ரங்கசாமி, ராமசாமி, மாணிக்கம், தக்ஷிணாமூர்த்தி, பீதாம்பரம், பெரியசாமி, பத்மநாபன், சேதுபதி

ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ், உதவி – என்.நரசிங்க ராவ், ஏ.சங்கர் ராவ்

விளம்பரம்- மின்னல் – சாந்தி ப்ப்ளிஸிடி சர்வீஸ்
டிஸைன்ஸ் – பக்தா

நிர்வாகம்- கே.வெங்கடாசலம், கே.என்.வைத்தியனாதன்

புரொடக்ஷன் நிர்வாகம் – எஸ்.வி.ராஜகோபால், டி.என்.ராஜகோபால்

ஸ்டூடியோ நிர்வாகம் – டி.வி.வைத்தியநாதன்
புரோகிராம்ஸ் – எஸ்.எஸ்.சேதுராமன், ஏ.சுந்தரேசன்

ஸ்டூடியோ – சாரதா- லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்

பிரண்ட்ட் அண்ட் பிராஸ்ஸ்டு அட்
ஜெமினி ஸ்டுடியோஸ் லேபரட்டரி, சென்னை

ஆதரவாளர் – சென்ட்ரல் டாக்கி டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், திருச்சி 8

அஸோஸியேட் டைரக்டர் – கே.கே.ஸம்பத்குமார்

திரைக்கதை வசனம் டைரக்ஷன் ஏ.பி.நாகராஜன்

RAGHAVENDRA
11th October 2014, 09:25 AM
திருவிளையாடல் விளம்பர நிழற்படங்கள் – பம்மலாரின் ஆவணப் பொக்கிஷத்திலிருந்து..



'விரைவில் வருகிறது' விளம்பரம் : தினத்தந்தி : 10.2.1965
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4203a.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : வெண்திரை : ஆகஸ்ட் 1965

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4217a.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 7.8.1965

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4210a.jpg

50வது நாள் : தினத்தந்தி : 18.9.1965

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4212a.jpg

75வது நாள் : The Hindu : 13.10.1965

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4214aa.jpg

100வது நாள் : தினத்தந்தி : 7.11.1965

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4205a.jpg

100வது நாள் : The Hindu : 7.11.1965

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4204a.jpg

25வது வெள்ளிவிழா வாரம் : தினத்தந்தி : 14.1.1966

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4218a.jpg

RAGHAVENDRA
11th October 2014, 09:26 AM
திருவிளையாடல் –
பம்மலாரின் ஆவணப் பொக்கிஷம் – தொடர்ச்சி


வெண்திரை : ஜூன் 1965 : அட்டைப்படம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4237a.jpg
[தனது தொடக்க இதழான 'ஜூன் 1965' இதழின் அட்டையில், "திருவிளையாடல்" திரைக்காவியத்தினுடைய புகைப்படத்தை வெளியிட்டு முதல் இதழிலேயே பெருமை தேடிக் கொண்டது 'வெண்திரை' சினிமா மாத இதழ்]

இதே இதழின் உள்ளே பிரசுரமான காவியக்காட்சிகள்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4241a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4242a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4243a.jpg

RAGHAVENDRA
11th October 2014, 09:26 AM
கல்கி 22.08.1965 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ThiruvilaiyadalKalkiReviewfw.jpg

RAGHAVENDRA
11th October 2014, 09:27 AM
திருவிளையாடல் பாடல்/காட்சிகளின் அணிவகுப்பு

பாட்டும் நானே பாவமும் நானே - ஐந்து இசைக் கருவிகள் - ஐந்து பாத்திரங்கள் - ஐம்புலன்களையும் கட்டிப் போடும் அட்டகாசமான நடிப்பு, இசை, குரல், வரிகள் --

நடிகர் திலகம், கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்தர்ராஜன், கண்ணதாசன் கூட்டணி - கேட்கவும் வேண்டுமோ - காலத்தால் அழியாத காவிய கானம்

http://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0

RAGHAVENDRA
11th October 2014, 09:28 AM
சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்,
சங்கை அறுந்துண்டு வாழ்வோம், உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை--

இந்தப் பாத்திரத்திற்கு வேறு நடிகரை அழைத்திருந்தாராம் ஏ.பி.என். அவர்கள். அந்த நடிகர் நடிகர் திலகத்தின் நாடகக் குழு உறுப்பினர். ஆனால் நடிகர் திலகம் இப்பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து இயக்குநரிடம் விடுத்த ஆலோசனை - ஐயா இப்பாத்திரத்தை தாங்களே ஏற்று நடிக்க வேண்டும். இயக்குநருக்கோ தயக்கம். இருந்தாலும் தயக்கத்தை உதறிவிட்டு தானே ஏற்று நடிக்க முன் வந்தார். நமக்கு காலத்தால் அழிக்க முடியாத சிறந்த காட்சி கிடைத்தது. இதோ காணுங்கள்...

http://www.youtube.com/watch?v=m-xLGALYZyk

RAGHAVENDRA
11th October 2014, 09:28 AM
பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வெச்சாரு - இவரு
போன வருஷம் மழையை நம்பி வெத வெதச்சாரு
ஏட்டுக்கணக்கை மாத்தி மாத்தி எழுதி வெச்சாரு - ஈசன்
போட்ட கணக்கை மாத்தவில்லே போய் விழுந்தாரு ...

என்பது போன்ற கருத்தாழமிக்க வரிகளை கண்ணதாசன் புனைய, நெஞ்சைத் தொடும் ராகத்தை மெல்லிய மெட்டில் மகாதேவன் அமைக்க, சௌந்தர்ராஜன் ஜீவனுள்ள குரலில் பாட, இவர்களின் கடின உழைப்பை திரையில் அங்கீகரித்து உயிர் கொடுத்த நடிகர் திலகத்தின் சிறந்த நடிப்பில் மற்றொரு பாடல்

பாத்தா பசு மரம் படுத்து விட்டா நெடுமரம்

http://www.youtube.com/watch?v=3Fu0546rs1g

RAGHAVENDRA
11th October 2014, 09:29 AM
இதற்கு முன்பும் இதற்கு பின்பும் வராத வர முடியாத நடிகர்கள், காட்சி, உரையாடல், ஒளிப்பதிவு, வேகம்.....

நாகேஷ் என்றால் தருமி, என்று முத்திரை பதித்த படம்... வார்த்தைகளில் அடங்காத வர்ணிக்க முடியாத சிறப்புகளைக் கொண்ட காட்சி

திருவிளையாடல் என்றால் தருமியின் காட்சி இல்லாமலா...

http://www.youtube.com/watch?v=6JRjHh91Gx4

RAGHAVENDRA
11th October 2014, 09:29 AM
நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு, மீனவனை எதிர்பார்ப்பது உண்மையோ பொ்ய்யோ தெரியாது, ஆனால் அநத மீனவன் நடையை நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்.

http://www.youtube.com/watch?v=aTDV10y_Eko

RAGHAVENDRA
11th October 2014, 09:30 AM
நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு, மீனவனை எதிர்பார்ப்பது உண்மையோ பொ்ய்யோ தெரியாது, ஆனால் அநத மீனவன் நடையை நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்.

http://www.youtube.com/watch?v=aTDV10y_Eko

RAGHAVENDRA
11th October 2014, 09:32 AM
மாணவனுக்கு சந்தேகம் வந்தால் அறிவில் தெளிவு. கணவனுக்கு சந்தேகம் வந்தால் வாழ்வில் முறிவு. மன்னனுக்கு சந்தேகம் வந்தால்...
வந்தது....
சந்தேகம் தீர்ந்ததா..
தீர்ந்தது...
திருவிளையாடல் போல் அதற்கு முன்னும் பின்னும் ஒரு சிறந்த காவியம் வரப்போவதில்லை என்ற தீர்மானம் பிறந்தது...

அந்த சந்தேகம்... அதற்கான காரணம்...

http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ

RAGHAVENDRA
11th October 2014, 09:32 AM
டி.ஆர்.மகாலிங்கம் ஐயா,

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை, நீ இருக்கையிலே நாங்கள் இருந்ததும் பெரும் சாதனை...

http://www.youtube.com/watch?v=HdhAu6fbeIA

RAGHAVENDRA
11th October 2014, 09:33 AM
எத்தனை ஆண்டுகள், எத்தனை கலைஞர்கள், எத்தனை உழைப்பு, இவற்றின் உருவமே திருவிளையாடல் படைப்பு... இதனைப் பற்றிக் கூற

http://www.youtube.com/watch?v=8BN5bdI0GY4

RAGHAVENDRA
11th October 2014, 09:50 AM
சிறப்புச் செய்திகள்


1. வடநாட்டு ஃபிலிம்ஃபேர் பத்திரிகையின் 1965ம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படமாக தேர்ந்தெடுக்கப் பட்டது.

2. சிவலீலா என்ற பெயரில் நாடகமாக நடிக்கப்பட்டு பின்னர் படமாக்கப்பட்டது.

3. சிறந்த மாநில மொழிப்படங்களுக்கான இரு விருதுகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் பெற்றது.

4. தமிழகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டுமென்றாலும், எந்த ஒரு விழாவானாலும் முதலில் ஒலிபரப்ப அல்லது ஒளிபரப்ப தேர்ந்தெடுக்கப்படும் திரைக்காவியம்.

5. தேவர்கள் கண்ணிமைக்க மாட்டார்கள் என்பது புராணங்களில் கூறப்படும் ஐதீகம். இதற்கேற்ப சிவனாகத் தோன்றும் காட்சிகளில் நடிகர் திலகம் கண்ணிமைக்காமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


- தகவல் உதவி பம்மலார் மற்றும் வந்தியத்தேவனின் வரலாற்றுச் சுவடுகள் நூல்.

RAGHAVENDRA
11th October 2014, 09:50 AM
திருவிளையாடன் சென்னையில் திரையிடப்பட்ட அரங்குகள்
சாந்தி,கிரௌன், புவனேஸ்வரி
- புகழ் பெற்ற சாந்தி கிரௌன் புவனேஸ்வரி என்ற இணைந்த திரையரங்க வெளியிடுகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்.
திருவிளையாடல் மாபெரும் வெற்றித் திரைக்காவியம்...

சென்னை சாந்தி – 179 நாட்கள்
சென்னை கிரௌன் – 179 நாட்கள்
சென்னை புவனேஸ்வரி – 179 நாட்கள்
மதுரை ஸ்ரீதேவி – 167 நாட்கள்
சேலம் சாந்தி – 132 நாட்கள்
திருச்சி சென்ட்ரல் – 132 நாட்கள்
கோவை ராஜா – 132 நாட்கள், தொடர்ந்து டைமண்ட் 28 நாட்கள்
நாகர்கோவில் தங்கம் – 111 நாட்கள்
கரூர் லைட்ஹவுஸ் – 106 நாட்கள்
குடந்தை டைமண்ட் – 104 நாட்கள் தொடர்ந்து நியூடோன் 48 நாட்கள்
பாண்டி நியூகமர்ஷியல் – 101 நாட்கள்
நெல்லை ரத்னா – 100 நாட்கள்
தஞ்சை யாகப்பா – 100 நாட்கள்

மற்றும்

காஞ்சி கிருஷ்ணா – 84 நாட்கள்
பல்லாவரம் ஜனதா – 74 நாட்கள்
வேலூர் ராஜா – 84 நாட்கள்
தாம்பரம் நேஷனல் – 70 நாட்கள்
பெங்களூர் லட்சுமி – 78 நாட்கள்
பெங்களூர் ஸ்டேட்ஸ் – 70 நாட்கள்

மேலும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 80 நாட்கள் வரை ஓடி மாபெரும் வசூல் சாதனை புரிந்த புராண காவியம்.

- தகவல் உதவி பம்மலார் மற்றும் வந்தியத்தேவனின் வரலாற்றுச் சுவடுகள் நூல்.

RAGHAVENDRA
11th October 2014, 09:54 AM
National Film Award 1965

http://iffi.nic.in/Dff2011/13th_NFA/13th_NFA_img_0.jpg

http://iffi.nic.in/Dff2011/13th_NFA/13th_NFA_img_4.jpg

http://iffi.nic.in/Dff2011/13th_NFA/13th_NFA_img_31.jpg

JamesFague
11th October 2014, 09:55 AM
Excellent work Mr Raghavendra Sir and there are lot of informations in this film where all of them

are still relevent not only for today but also in the years to come.


Regards

RAGHAVENDRA
11th October 2014, 10:01 AM
திருவிளையாடல் நிழற்படங்கள்...

http://suriyantv.com/wp-content/uploads/2012/08/11.png

http://www.tamilfilmnews.com/wp-content/uploads/2012/08/thiruvilaiyadal.gif

http://1.bp.blogspot.com/-MGWxZm0NsHQ/Uwci2fsl7CI/AAAAAAAANsM/Hfeek-rBJmA/s1600/Nagesh_in_Thiruvilaiyadal.jpg

http://antrukandamugam.files.wordpress.com/2014/01/ap-nagarajan-thiruvilaiyaadal.jpg?w=487

RAGHAVENDRA
11th October 2014, 10:05 AM
பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது கவிஞர் கா.மு.ஷெரீஃப்...?

இதோ ஒரு விவாதத்தின் சுட்டி



“பாட்டும் நானே” யாரெழுதியது?

https://kavikamu.files.wordpress.com/2012/04/paattum-naane.jpg?w=645

திருவிளையாடல் படத்தில் “பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடல்கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்று பரவலாக நம்பப்படும் வேளையில் நான் இவ்வலையில் அது கவி.கா.மு.ஷெரீப் அவர்களால் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டதற்கு ஏதேனும் வலுவான ஆதாரங்கள் உங்களிடத்தில் இருக்கின்றதா? என்று வாசகர்கள் வினவுகிறார்கள். திரு.ஜெயகாந்தன் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவரிடம் தாராளமாக கேட்டுக் கொள்ளலாம். திரு.ஜெயகாந்த்தன் எழுதிய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலின் நகலை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். – அப்துல் கையூம்

https://kavikamu.files.wordpress.com/2012/04/sheriff-1.jpg?w=645

https://kavikamu.files.wordpress.com/2012/04/sheriff-2.jpg?w=645

ஆதாரம்:

நூல் : ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்,

ஆசிரியர் : ஜெயகாந்தன்

வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 17


மேற்காணும் சுட்டி இடம் பெற்ற இணையப்பக்கத்திற்கான இணைப்பு - https://kavikamu.wordpress.com/page/2/

RAGHAVENDRA
11th October 2014, 11:19 AM
GENEROSITY / MAGNANIMITY / APPRECIATION ... WHATEVER YOU MEAN ... THE WORD IS SIVAJI GANESAN ..

A SAMPLE

http://www.sylvianism.com/wp-content/uploads/2009/07/thiruvilayadal006.jpg



"The story was conceived by A. P. Nagarajan, who wrote the screenplay as a five-part play. The stories were taken from an ancient Tamil epic, Thriuvilayadal Puranam, which consists of 64 stories, written by 64 nayanmargal (Saivate devotees). These Saivates were the devotees of Lord Shiva.[3] Actor Nagesh, who played a crucial role in the film, wrote in his biography,

“ "Everyone kept telling me that I had done a superb job and at times stole the scene from the hero, so I was extremely scared it might not see the light of day as the director was struggling to trim the film's length. One day when I was in the recording theatre, Sivaji [Ganesan] walked in and wanted to see the "Dharumi" piece. He did not notice me in the dark sound engineers' room. He watched it once and then wanted to see it again – by this time I was sure that my scene, especially the solo lamenting, would be axed. To my astonishment, Sivaji turned and said, 'Do not remove a single foot from this episode as well as the episode featuring T. S. Balaiah. These will be the highlights of the film. This is my opinion, but as the director, you have the final say. Whatever dubbing additions have to be done, get that fellow (Nagesh), lock him up in the studio and don't let him run away till he completes it to your satisfaction. He has done outstanding work.' Such was his generosity to his fellow actors."[4]"


- QUOTED FROM THE WIKIPEDIA PAGE OF THE MOVIE THIRUVILAIYADAL : http://en.wikipedia.org/wiki/Thiruvilayadal_(1965_film)

gkrishna
11th October 2014, 11:56 AM
நன்றி ராக வேந்தர் சார்
பாட்டும் நானே பாவமும் நானே பாடல் கா மு ஷெரிப் எழுதியதா அல்லது கண்ணதாசனா என்று நமது மதுர கானம் இதழில் கேள்வி கேட்டு இருந்தேன். நீங்கள் வெளியிட்ட திரு ஜெயகாந்தன் அவர்களின் கட்டுரையை ஒட்டியே அந்த கேள்வியை கேட்டு இருந்தேன்.
தெளிவு பிறக்க வைத்ததற்கு நன்றி

Russellbpw
11th October 2014, 03:21 PM
திருவிளையாடன் சென்னையில் திரையிடப்பட்ட அரங்குகள்
சாந்தி,கிரௌன், புவனேஸ்வரி
- புகழ் பெற்ற சாந்தி கிரௌன் புவனேஸ்வரி என்ற இணைந்த திரையரங்க வெளியிடுகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்.
திருவிளையாடல் மாபெரும் வெற்றித் திரைக்காவியம்...

சென்னை சாந்தி – 179 நாட்கள்
சென்னை கிரௌன் – 179 நாட்கள்
சென்னை புவனேஸ்வரி – 179 நாட்கள்
மதுரை ஸ்ரீதேவி – 167 நாட்கள்
சேலம் சாந்தி – 132 நாட்கள்
திருச்சி சென்ட்ரல் – 132 நாட்கள்
கோவை ராஜா – 132 நாட்கள், தொடர்ந்து டைமண்ட் 28 நாட்கள்
நாகர்கோவில் தங்கம் – 111 நாட்கள்
கரூர் லைட்ஹவுஸ் – 106 நாட்கள்
குடந்தை டைமண்ட் – 104 நாட்கள் தொடர்ந்து நியூடோன் 48 நாட்கள்
பாண்டி நியூகமர்ஷியல் – 101 நாட்கள்
நெல்லை ரத்னா – 100 நாட்கள்
தஞ்சை யாகப்பா – 100 நாட்கள்

மற்றும்

காஞ்சி கிருஷ்ணா – 84 நாட்கள்
பல்லாவரம் ஜனதா – 74 நாட்கள்
வேலூர் ராஜா – 84 நாட்கள்
தாம்பரம் நேஷனல் – 70 நாட்கள்
பெங்களூர் லட்சுமி – 78 நாட்கள்
பெங்களூர் ஸ்டேட்ஸ் – 70 நாட்கள்

மேலும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 80 நாட்கள் வரை ஓடி மாபெரும் வசூல் சாதனை புரிந்த புராண காவியம்.

- தகவல் உதவி பம்மலார் மற்றும் வந்தியத்தேவனின் வரலாற்றுச் சுவடுகள் நூல்.


அந்த ஆண்டு வந்த தமிழ் படங்களில் மிக உச்ச பட்ச வசூல் பிரளயம் ஆயிற்றே திருவிளையாடல் !

வந்த தருனமோ - திமுக வின் தீவிர ஹிந்தி எதிர்ப்பு, நாஸ்தீக கொள்கை , யுத்த நேரம் ப்ளாக் அவுட் சமாச்சாரங்கள் - நகரில் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது நடந்த ஆக்ரமணம் - இவ்வளவு கடினமான நேரத்திலும் இப்படி ஒரு அசுர வசூல் !

திருவிளையாடல் - தெய்வத்தின் தெய்வம் !

Gopal.s
11th October 2014, 10:05 PM
திருவிளையாடல்- 1965.

சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.

1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.

திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)

முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).

இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)

இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.

உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.

"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).

இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )

நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.

கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.

இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.

முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.


அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.

அடுத்த episode love teasing பிரச்சினை.

அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.

இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.

இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )

முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.

என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.


சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.

சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)

குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).

மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.

அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.

கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.

நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?

ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.


இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.

Russellmai
11th October 2014, 10:19 PM
டியர் இராகவேந்தர் சார்,
நடிகர் திலகத்தின் திருப்பு முனை காவியங்களில் ஒன்றான திருவிளையாடல் திரைப்படம் தொடர்பான விபரங்களை,அத்திரைப்பட பாடல்களின் காணொளி
மற்றும் திரைப்பட பத்திரிக்கை விளம்பரங்களுடன் பதிவிட்டமைக்கு எனது நன்றிகள்.
கோபு.

RAGHAVENDRA
22nd October 2014, 07:38 PM
Sivaji Ganesan Filmography Series

105. NeelaVaanam நீலவானம்

http://i.ytimg.com/vi/AUJKwygGd3s/maxresdefault.jpg



தணிக்கை –04.12.1965
வெளியீடு – 10.12.1965

தயாரிப்பு – பட்டு ஃபிலிம்ஸ்
PRODUCER: PATTU FILMS MADRAS


நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா, ராஜஸ்ரீ, நாகேஷ், எஸ்.வி.சஹஸ்ரநாம்ம், வி.கே.ராமசாமி, சீதாலட்சுமி, மற்றும் பலர்
Cast:
DEVIKA, RAJASHRI, NAGESH, S.V. SAHASRANAMAM, V.K.RAMASAMY, SEETHALATCHUMI AND OTHERS.

கதை வசனம் – கே.பாலச்சந்தர்
STORY & DIALOGUE: K. BALACHANDER

பாடல்கள் கண்ணதாசன்
LYRICS: KANNADASAN
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சதன்
PLAYBACK: T.M.SOUNDARARAJAN, P.SUSHEELA, L.R. EASWARI, SADHAN

ஒலிப்பதிவு இயக்குநர் – டி.எஸ்.ரங்கசாமி
RECORDING DIRECTOR: T.S. RANGASAMY
ஒலிப்பதிவு – டி.ஆர்.சாரங்கன்
RECORDING: T.R. SARANGAN
நடன அமைப்பு – டெஸ்மாண்ட், மாதவன்
CHOREOGRAPHY: DESMOND, MADHAVAN

கலை – கங்கா
ART : GANGA

உடைகள் – பி.ராமகிருஷ்ணன்
COSTUME: P. RAMAKRISHNAN

ஒப்பனை – ரங்கசாமி, பாண்டியன், பத்ரய்யா, சிவராம், ராமசாமி
MAKE UP: RANGASAMY, PANDIYAN, BADHRAIYA, SIVARAM, RAMASAMY

ஸ்டில்ஸ் - சிம்மய்யா
STILLS: SIMMAIAH


விளம்பர டிஸைன்ஸ் – சீநி சோமு
PUBLICITY DESIGNS: SEENI SOMU
விளம்பரம் – எலிகண்ட் ப்ப்ளிசிட்டீஸ்
PUBLICITY: ELEGANT PUBLICITIES
மக்கள் தொடர்பு – ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்
PRO: FILM NEWS ANANTHAN

அரங்கப் பொருடகள் – சினி கிராஃப்ட்ஸ்
SET PROPERTIES: CINE CRAFTS

ஸ்டூடியோ – சாரதா – லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்
STUDIO: SARADHA (LESSEES OF MAJESTIC STUDIOS)

ஸ்டூடியோ நிர்வாகம் – டி.வி. வைத்தியநாதன்
STUDIO EXECUTIVE: T.V. VAIDHYANATHAN

ப்ராசஸிங் – ஜெமினி ஸ்டூடியோஸ் லேபரட்டரி
PROCESSING DONE AT: GEMINI STUDIOS LABORATORY

ப்ரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் – எம்.லட்சுமணன்
PRODUCTION EXECUTIVE: M. LATCHUMANAN

படத்தொகுப்பு – ஆர்.தேவராஜன்
EDITING: R. DEVARAJAN

இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
MUSIC: MELLISAI MANNAR M.S. VISWANATHAN

ஒளிப்பதிவு – எம்.கர்ணன்
CINEMATOGRAPHY: M. KARNAN

உதவி டைரக்ஷன் – எஸ்.தேவராஜன், கே.தங்கமுத்து, யூ.மோஹன், தியாகராஜன்
ASSISTANT DIRECTION: S. DEVARAJAN, K. THANGAMUTHU, U. MOHAN, THIYAGARAJAN

தயாரிப்பாளர் – வரதன்
PRODUCER: VARADHAN

டைரக்ஷன் – பி. மாதவன்
DIRECTION: P. MADHAVAN

RAGHAVENDRA
22nd October 2014, 07:39 PM
ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷப் புதையல்



ஷூட்டிங் ஸ்பாட்

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஜூலை 1965

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NVSS1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NVSS2-1.jpg


அட்டைப்படம் : சினிமா கதிர் : ஆகஸ்ட் 1965

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NV3-1.jpg


அட்டைப்படம் : பேசும் படம் : அக்டோபர் 1965


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NV4-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 3.12.1965

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NV1-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 10.12.1965

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NV2-1.jpg

குறிப்பு:
"நீலவானம்", சென்னை 'சித்ரா'வில் 63 நாட்களும், 'மஹாராணி'யில் 56 நாட்களும், 'சயானி'யில் 56 நாட்களும், 'ராம்' திரையரங்கில் 52 நாட்களும் மிக வெற்றிகரமாக ஓடியது. மதுரை 'நியூசினிமா'வில் 56 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. மேலும், கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றி பெற்று, ஒரு 'நல்ல வெற்றிக்காவியம்' என்கின்ற நிலையை அடைந்தது.


நன்றி - பம்மலார் அவர்கள்

RAGHAVENDRA
22nd October 2014, 07:47 PM
நீலவானம் – சிறப்புச் செய்திகள்

1. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களுக்குத் தனியாக இசையமைக்கத் தொடங்கிய திரைப்படம்
2. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய முதல் படம். இத்திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதினார். இன்னொரு திரைப்படம் எதிரொலி.
3. இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் ஏற்ற கதாபாத்திரம் சாந்தி திரையரங்கில் பணிபுரிவதாக அமைக்கப்பட்டிருந்தது.
4. தேவிகாவின் சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதிரைப்படம்
5. இத்திரைப்படத்தில் இசையரசி பி.சுசீலா அவர்கள் பாடிய ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே என்ற பாடல் அவருடைய மிகச்சிறந்த பாடல்களில் முக்கியமானதாக ரசிகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
6. ராஜஸ்ரீ நடிகர் திலகத்திற்கு இணையாக நடித்த படம். ஓ லிட்டில் ஃப்ளவர் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல் நடனம் இன்றளவும் ரசிகர்களால் உற்சாகத்துடன் வரவேற்கப்படுகிறது.

RAGHAVENDRA
22nd October 2014, 07:50 PM
நீலவானம் – பாடல்கள்
1. ஓ..லக்ஷ்மி, ஓ..மாலா – எல்.ஆர்.ஈஸ்வரி
2. ஓ..லிட்டில் ஃப்ளவர் – டி.எம்.சௌந்தர்ராஜன்
3. ஓஹோ..ஹோ.. ஓடும் எண்ணங்களே... பி.சுசீலா
4. ஓஹோ ஹோ....ஓடும் எண்ணங்களே.. சோகம் – பி.சுசீலா
5. சொல்லடா வாய் திறந்து அம்மா என்று .. பி.சுசீலா
6.மங்கல மங்கையும் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

RAGHAVENDRA
22nd October 2014, 07:50 PM
நீலவானம் ... திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி..

http://www.youtube.com/watch?v=8nAdIbrwrLs

RAGHAVENDRA
22nd October 2014, 07:54 PM
நீலவானம் திரைப்படத்தினைப் பற்றிய முரளி சாரின் அற்புதமான கட்டுரை

26th April 2009, 11:05 PM


நீல வானம்

தயாரிப்பு: பட்டு பிலிம்ஸ்

கதை வசனம் : கே. பாலச்சந்தர்

இயக்கம் : பி.மாதவன்

வெளியான நாள்: 10.12.1965

நாயகன் பாபு ஒரு அநாதை. ஒரு செல்வந்தர் உதவியினால் படித்து பட்டம் பெறுகிறான். வேறு வேலை கிடைக்காததால் தியேட்டரில் வேலை செய்கிறான். ஒரு சமயம் ஒரு பெண் ஒட்டி செல்லும் காரில் லிப்ட் கேட்டும் ஏறும் பாபு நாளைடைவில் அந்த பெண் விமலாவை காதலிக்க ஆரம்பிக்க அவளும் அவனை விரும்புகிறாள். அவளுக்கு தாய் இல்லை. தந்தை மட்டுமே இருக்கிறார். ஒரு மாமனும் இருக்கிறான். தினம் விமலாவின் காரில் ஏறி செல்லும் பாபு ஒரு நாள் தவறுதலாக விமலாவின் கார் என்று நினைத்து வேறு ஒரு காரை நிறுத்தி விட அதிலிருப்பது வேறொரு பெண் கௌரி. வெகுளியாக பேசும் அவள் தன் பிறந்த நாளுக்கு அவனை அழைக்க பாபுவும் செல்கிறான். அங்கே செல்லும் போதுதான் தன்னை படிக்க வைத்த செல்வந்தர் மில் ஓனர் சோமநாதனின் ஒரே மகள்தான் கௌரி என்பது அவனுக்கு தெரிய வருகிறது. பிறந்தநாள் விழாவில் வைர நெக்லஸ் காணாமல் போக, பாபு மீது சந்தேகப்பட்டு சிலர் கேள்வி கேட்க, சிலர் அவன் அணிந்திருக்கும் கோட்டை கழட்ட, சட்டையில்லாமல் வந்திருக்கும் பாபு அவமானத்தில் வெளியேறுகிறான்.

அவன் வீடு தேடி வந்து வந்து மன்னிப்பு கேட்கும் கௌரியும் அவளது தந்தையும் அவனுக்கு அவர்களது நிறுவனத்தில் வேலை தருகின்றனர். எல்லோருடனும் கலகலப்பாக பேசிக்கொண்டு, பக்கத்து வீடு தோழியுடன் செல்ல சண்டை போட்டுக் கொண்டு வளைய வரும் கௌரியின் வாழ்வில் ஒரு பெரிய சோகம் இருக்கிறது. அடிக்கடி வயிற்று வலியினால் அவதிப்படும் அவளை டாக்டர் பரிசோதித்து விட்டு அவளுக்கு வயிற்றில் புற்று நோய் அதுவும் கர்ப்பப்பையையும் பாதித்திருக்கிறது என்ற அதிர்ச்சியான செய்தியை சொல்கிறார். அனால் அவள் பெற்றோர்கள் கௌரியிடமிருந்து இதை மறைத்து விடுகிறார்கள்.

இதனிடையே பாபு விமலா கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். விமலாவின் மாமன் பிரகாஷ் கௌரியை திருமணம் செய்ய நினைக்கும் போது யாரோ சொல்வதை கேட்டு பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட கல்யாணத்தை பற்றி மிகுந்த கற்பனை செய்து வைத்திருக்கும் கௌரி மிகுந்த வருத்தம் அடைகிறாள். பாபு விமலாவை காதலிக்கும் விஷயம் தெரியாமல் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி கௌரி கேட்க பாபு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்க, இதை கேட்டுக்கொண்டிருக்கும் சோமநாதன் பாபுவை தனியாக கூட்டி சென்று தன் மகளின் நிலைமையை விளக்கி சொல்லும் சோமநாதன், அவளை திருமணம் செய்து கொள்ளும்படி பாபுவை மன்றாடி கேட்டுக் கொள்கிறார். பாபு தன் நிலைமையை எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் வற்புறுத்தவே, தனக்கு வாழ்வளித்த அவரை மீற முடியாமல் பாபு கல்யாணத்திற்கு ஒத்து கொள்கிறான். கௌரியின் நோய் பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையினால் அவன் பணத்திற்கு ஆசைப்பட்டு கௌரியை மணந்து கொள்வதாக நினைத்து கொள்ளும் விமலா, பாபு மீது மிகுந்த ஆத்திரமும் கோபமும் அடைகிறாள். திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்திற்கு பிறகு பாபுவையும் கௌரியையும் சந்திக்கும் விமலா அவர்கள் கொடைக்கானல் செல்வதை தெரிந்து கொண்டு அங்கும் வந்து விடுகிறாள். தினசரி கடிதங்களை அனுப்பி வைக்கிறாள். பாபுவை நேரிலும் சந்தித்து தொல்லை செய்ய அவன் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறான். சென்னை திரும்பும் பாபு, சோமநாதனின் உடல் நல குறைவு காரணமாக கம்பெனியின் நிர்வாக பொறுப்பை ஏற்கிறான். கௌரி மூலமாக அங்கே வேலையில் சேரும் விமலா அங்கும் தன் திட்டத்தை தொடருகிறாள்.

கௌரிக்கு இப்போது வலி அதிகமாகவே டாக்டரிடம் காண்பிக்க அவர் நோய் முற்றிய நிலையில் இருப்பதாகவும் அவளின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் சொல்கிறார். சூழ்நிலையை சமாளிக்க கௌரியிடம் அவள் கர்ப்பமாக இருப்பதாக பாபு சொல்கிறான். குழந்தைக்காக ஏங்கிய கௌரிக்கு இது மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கிறது. அதை உண்மை என்றே நம்பும் கௌரி தனக்கு வளைகாப்பு நடத்த சொல்கிறாள். வளைக்காப்பு நடை பெறுகிறது. அந்த நேரத்தில் பன்னாட்டு மருத்துவர்களின் காஃன்பிரன்ஸ் டெல்லியில் நடப்பதை அறிந்து கொள்ளும் பாபு அங்கு சென்று டாக்டர்களை சந்திக்கிறான். முதலில் மறுக்கும் அவர்கள் பிறகு சென்னை வந்து கௌரியை பரிசோதிக்க ஒப்புக் கொள்கின்றனர்.

இதற்கிடையே தன் கணவனின் வாடிய முகத்தையும் இரவில் தனியாக கண் கலங்குவதையும் பல முறை பார்க்கும் கௌரி, பாபு கிழித்து போட்ட ஒரு போட்டோ-வின் ஒரு பகுதியை பார்த்து விட அவளுக்கு சந்தேகம் அதிகமாகி விடுகிறது. இதைப் பற்றி விமலாவிடம் விலாவரியாக பேச மனம் பொறுக்க முடியாமல் விமலா தான் அந்த பெண் என்பதை உணர்த்தி விட்டு போய் விடுகிறாள்.

டெல்லியிலிருந்து திரும்பும் பாபுவை எதிர்கொண்டு ஏன் இந்த உண்மையை மறைத்தீர்கள் என்று கௌரி கேட்க, தன் பழைய காதலை பற்றி கேட்கிறாள் என்ற உண்மை புரியாமல் அவளுக்கு நோய் பற்றி தெரிந்து விட்டது என்று நினைத்து பாபு உண்மையை சொல்லி விட கௌரிக்கு மீண்டும் மிக பெரிய அதிர்ச்சி. அவளை மிகுந்த பாடுபட்டு சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்கும் நேரத்தில், நோய் முற்றி கௌரி இறந்து போகிறாள். அவள் நினைவாகவே பாபு தொடுவானத்தை நோக்கி நடந்து போவதோடு படம் நிறைவு பெறுகிறது.

(தொடரும்)

அன்புடன்

மேற்காணும் கட்டுரை இடம் பெற்ற பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=394188&viewfull=1#post394188


பாகம் இரண்டு


26th April 2009, 11:10 PM


நீல வானம் - Part II


இயக்குனர் சிகரம் முதன் முறையாக நடிகர் திலகத்துடன் இணைந்த படம். மாதவன் இயக்கத்தில் பாலச்சந்தர் கதை வசனம் எழுதினார். கான்சர் எனப்படும் புற்று நோய் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வை அடிப்படையாக வைத்து ஒரு இயல்பான கதை கே.பி எழுதியிருக்க அதை தெளிவாக கையாண்டிருந்தார் மாதவன்.

நடிகர் திலகத்தை பொறுத்தவரை அனாயாசமாக செய்த படங்களில் ஒன்று நீலவானம். எப்போதும் அவரது படங்களில் அவரது வேடங்கள் பலதரப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும். இதிலும் அப்படியே. ஹாப்பி கோ லக்கி கய்-யாக ஆரம்பிக்கும் அவரது பாத்திரம் பிறகு நன்றி, தியாகம், குற்ற உணர்வு, கோபம், நேசம், தவிப்பு, துடிப்பு, இயலாமை, முனைப்பு, ஏமாற்றம் என பல உணர்வுகளில் பயணித்து இறுதியில் சோகம் மற்றும் விரக்தியில் முடியும். இவை அனைத்தையும் கலந்து கொடுத்திருப்பார் சிவாஜி.

காரில் லிப்ட் கேட்டு போய் விட்டு, தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் போது ராஜஸ்ரீயிடம் மாட்டிக் கொண்டு அசடு வழிவது, ராஜஸ்ரீயின் கார் என்று நினைத்து தேவிகாவின் காரை நிறுத்தி விட்டு பிறகு அந்த காரிலும் பயணம் செய்யும் போது வெகுளியாக பேசும் தேவிகாவிடம் தானும் வெகுளியாக பேசுவது, தன் ஒண்டு குடித்தன போர்ஷனுக்கு வரும் தேவிகா உடைந்து போன சேரில் உட்கார்ந்து விடாமல் இருக்க அவர் காட்டும் முகபாவங்கள், தேவிகாவின் பிறந்த நாள் விழாவில் நகையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு அணிந்திருக்கும் கோட்டை கழட்ட வெறும் உடலோடு நிற்கும் அவரை அனைவரும் கேலி செய்து சிரிக்க அவமானம் தாங்காமல் கூனி குறுகி வெளியேறுவது, செய்த தவறுக்கு பரிகாரமாக தேவிகாவின் மில்லில் வேலை போட்டு கொடுக்க அதை ராஜஸ்ரீயிடம் வந்து ஸ்டைலாக சொல்வது, என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்கும் தேவிகாவை பார்த்து பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நிற்க அந்த நேரம் அங்கு வரும் சகஸ்ரநாமத்தை பார்த்து விட்டு தன்னை தவறாக புரிந்து கொண்டு விட்டாரோ என்று அவர் காட்டும் பதைபதைப்பு, தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி யாசகம் கேட்கும் சகஸ்ரநாமதிடம் மறுத்து பேச முடியாமல் தவிப்பது, பணத்திற்காக விலை போய் விட்டதாக குற்றம் சாட்டும் ராஜஸ்ரீயிடம் உண்மையை சொல்ல முடியாமல் துடிப்பது, கல்யாணத்திற்கு பிறகு தன்னை பழி வாங்குவதற்காக கடிதங்களையும் போட்டோகளையும் ராஜஸ்ரீ அனுப்ப அதை பார்க்கும் தேவிகாவிடம் மென்று முழுங்கி சமாளிப்பது, தான் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று ஆசை ஆசையாய் சொல்லும் மனைவியிடம் அவள் கொஞ்ச நாட்கள் தான் உயிரோடு இருக்க போகிறாள் என்பதை சொல்ல முடியாமல் மருகுவது, அவளின் வயிற்று வலிக்கு காரணம் கர்ப்பம் என்று பொய் சொல்ல அப்போது கல்யாணத்திற்கு முன்பும் வலி வந்ததே என்று கேட்கும் தேவிகாவிடம் சமாதானம் சொல்வது, குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று சொல்லும் தேவிகாவிடம் விளையாட்டாய் பேர்கள் சொல்லி விட்டு அந்த பேச்சை ரிகார்ட் செய்து வைத்து பிறகு போட்டு காட்டி கிண்டல் செய்வது, எப்போதும் மனக் கவலையில் முழுகி இருக்கும் தன்னிடம் விஷயம் தெரியாமல் விஷம் கக்கும் ராஜஸ்ரீயிடம் கோபத்தை வெளிக் காட்ட முடியாமல் துடிப்பது, வாய் தவறி பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று தேவிகாவிடம் பாடி விட்டு சட்டென்று உண்மை உறைக்க கலங்குவது, சர்வதேச டாக்டர்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் டாக்டர்கள் தேவிகாவின் நோய் குணப்படுத்த முடியாத ஒன்று என்று கை விரிக்க, தன் மனைவிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என்று மன்றாடுவது, டெல்லி சென்று திரும்பி வரும் தன்னை எதிர்கொண்டு என்கிட்டேந்து இந்த உண்மையை ஏன் மறைச்சீங்க என்று தேவிகா கேட்க தன் பழைய காதலை பற்றி கேட்கிறாள் என்பது தெரியாமல் "நீ கூடிய சீக்கிரம் சாக போறங்கற உண்மையை உன்கிட்டயே நான் எப்படிமா சொல்லுவேன்" என்று போட்டு உடைக்க இப்படி வேறு ஒன்னு இருக்கா என்று தேவிகா கேட்க அப்போதுதான் அவசரப்பட்டு உண்மையை சொல்லி விட்டோமே என்று துடித்து போவது, ட்ரீட்மென்ட்-கு ஒத்து கொள்ள வைக்க மனைவியிடம் முன்பு அவள் சொன்ன டெய்லி பீச்சுக்கு போகலாம், சினிமாக்கு போகலாம், நிறைய கடலை உருண்டை சாப்பிடலாம் என்று சொல்லி சிரிக்க முயன்று முடியாமல் உடைந்து போய் அழுவது, தேவிகா எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, வர மறுக்கும் சகஸ்ரநாமதிடம் "எனக்கு மட்டும் வருத்தமில்லை, சோகமில்லை சந்தோஷமாக இருக்கு" என்று கோபமாக கத்தி விட்டு ஒரு முறைப்போடு "வாங்க" என்று சொல்லி விட்டு போவது, இப்படி படம் முழுக்க நடிகர் திலகம் பிச்சு உதற, நமக்கு சரியான நடிப்பு விருந்து.

தேவிகாவின் நடிப்புலக வாழ்க்கையிலே மிக சிறந்த படம் நீலவானம் என்றால் அது மிகையாகாது. ஒரு வெகுளியான அனைவரையும் நம்பும் பெண்ணாக,நோய் பாதிக்கப்பட்டு அனால் அதை பற்றி தெரியாதவராக, டாக்டர் என்றால் பயந்து நடுங்குபவராக, பக்கத்து வீடு தோழி தம்பட்டம் அடித்து கொள்வதை வந்து அப்பாவிடமும் கணவனிடமும் சொல்லி குறைப்பட்டு கொள்வதாகட்டும் ["அவ கல்யாணத்திலே கை கழுவுற தண்ணியிலே கூட ஏலக்காய் போட்டிருந்தாங்களாம்"], தன் அறையில் பாம்பு எப்போதாவது வரும் என்று சிவாஜி சொன்னவுடன் பயந்து கொண்டே அப்படி இப்படி பார்த்து கொண்டு பேசுவதிலும் சரி, வலி பொறுக்க முடியாமல் துடிப்பதிலாகட்டும், அதை குழந்தை உதைப்பதால் ஏற்படும் வலி என்று சொல்லி சிரிப்பதிலாகட்டும், தன் கணவன் தங்கு பிடித்த முறையில் தலை சீவ வேண்டும் என்று ஹேர் ஸ்டைல்-ஐ மாற்றி அமைப்பது, பிறகு தான் இறந்து போக போகிறோம் என்று தெரிந்தவுடன் கல்யாணத்திற்கு முன்பு இருந்த அந்த பழைய ஸ்டைல்-ஐ மீண்டும் அமைப்பது, கொடைக்கானலில் கணவனோடு வருங்காலத்தை பற்றி ஏராளமான கனவுகளுடன் ஆடிப் பாடி மகிழ்வது, தன்னை கேட்காமல் ராஜஸ்ரீயை ஏன் வேலைக்கு சேர்த்தாய் என்று கோவப்படும் கணவனை பார்த்து பயந்து போய் அழுவது, தன் கணவன் கல்யாணத்திற்கு முன்பு காதலித்திருப்பான் என்ற சந்தேகத்தை மன வருத்ததோடு ராஜஸ்ரீயிடம் பேசுவது, "ஆறிலே சாகலாம் அறியா வயசு, நூறிலே சாகலாம் அனுபவிச்ச வயசு ஆனா பதினாறிலே மட்டும் சாக கூடாது அது ரொம்ப கொடுமையான விஷயம்ங்க" என்று கதறுவது, தன் நோய் பற்றி உண்மை தெரிந்தவுடன் அவரிடம் வரும் ஒரு விரக்தி கலந்த முதிர்ச்சி என பல்முக பரிணாமம் காட்டியிருப்பார். தன்னுடைய படங்களை பற்றிய one liner -ல் "திருமதி தேவிகாவின் மிக சிறந்த நடிப்பை இதில் காணலாம்" என்று நடிகர் திலகம் குறிப்பிட்டிருப்பார். வஷிஷ்டரே பிரம்மரிஷி பட்டம் கொடுத்து விட்டார் எனும்போது அதற்கு மேல் சிறப்பாக நாம் என்ன சொல்லி விடப் போகிறோம்?

நடிகர் திலகத்தோடு இந்த படத்தில் நடித்த ராஜஸ்ரீ, தன் பங்கை சரியாக செய்திருப்பார். சகஸ்ரநாமத்திற்கு ஏற்ற பாத்திரம். படத்தில் ராஜஸ்ரீயின் தந்தையாக வி.கே.ராமசாமியும், மாமனாக நாகேஷும் இருந்தாலும் இந்த கதைக்கு சற்றும் ஒட்டாத காமெடி அவர்களோடது. சீரியஸான கதைக்கு ஒரு outlet என்ற முறையில் செய்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் கே.பியிடமிருந்து இப்படி ஒரு அபத்தத்தை எதிர்பார்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

மற்றபடி அவரது வசனங்கள் வெகு இயல்பு. தன் மகளுக்கு வாழ்வளிக்க சொல்லி சிவாஜியிடம் சகஸ்ரநாமம் பேசும் காட்சிகள் கூட மெலோ டிராமாவாக செய்யாமல் இயல்பாக இருக்கும். அது போல் அந்த கால படங்களில் வரும் டாக்டர்கள் போல் இல்லாமல் யதார்த்தமாக நோய் பற்றி பேசுபவர்களாக அமைத்திருப்பார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டும் "ரொம்ப வலி அதிகமானா நோவல்ஜின் கொடுங்க" என்று டாக்டர் சொல்லும் போது அந்த காலத்திலேயே தியேட்டரில் பயங்கர சிரிப்பொலி கேட்கும்.

காமிரா கர்ணன். அவரின் பிற்காலத்தில் அவர் செய்த ஆங்கில் (angle)சேட்டைகள் எதுவும் இல்லாமல் இயல்பாக இருக்கும். மெல்லிசை மன்னர்கள் பிரிந்த பிறகு முதன் முதலாக எம்.எஸ்.வி தனியாக இசையமைத்த நடிகர் திலகத்தின் படம் [இன்னும் சொல்ல போனால் இதுதான் முதல் படமோ என்று எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் கலங்கரை விளக்கம் தான் தனியாக எம்.எஸ்.வி இசையமைத்து வெளி வந்த முதல் படம் என்று சொல்கிறார்கள். க.வி. ரிலீஸ் தேதி எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்]. அந்த பிரிவு தன்னை பாதிக்கவில்லை என்பதை மெல்லிசை மன்னர் உணர்த்தியிருப்பார்.

ஒ லட்சுமி ஒ மாலா - நீச்சல் குளத்தில் ராஜஸ்ரீ பாடும் பாடல் - ஈஸ்வரி

ஒ லிட்டில் பிளவர் - நடிகர்திலத்திற்கு இந்த படத்தில் இந்த ஒரே பாடல் தான். அவரது ஸ்டைல் நடை பற்றி கேட்க வேண்டுமா.? சரணத்தில் உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே என்று ஸெல்ப் மாக்கிங்-ம் (self mocking) உண்டு.

ஓஹோ ஒ ஓடும் எண்ணங்களே - கொடைக்கானலில் வைத்து எடுத்திருப்பார்கள். தேவிகா தன் ஆசையை எல்லாம் பாடலாக பாட உள்ளுக்குள் நடிகர் திலகம் மருகும் காட்சி. குறிப்பாக

வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மோதும் பனியில் அலைவோம் இங்கே

என்ற வரிகளும்

நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா

என்ற வரிகளும் மனதை வாட்டும். பாடலின் போது Round ஹாட், கூலிங் கிளாஸ் சகிதம் நடிகர் திலகம் நிற்க தியேட்டரில் கைதட்டல் + விசில் பறக்கும்.

மங்கல மங்கையும் மாப்பிளையும் வந்து - வளைக்காப்பு பாடல் - சுசிலா + ஈஸ்வரி. "தாமரை கோயிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகை செண்டாக" என்று கண்ணதாசனின் தமிழ் விளையாடலை இதில் கேட்கலாம்.

சொல்லடா வாய் திறந்து அம்மா என்று - சுசிலாவின் மிக சிறந்த பாடல்களில் ஒன்று. சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்று கண்ணதாசன் எழுதிய வரிகள்.

மலரில்லாத தோட்டமா
கனியில்லாத வாழையா
மகனில்லாத அன்னையா
மகனே நீ இல்லையா

என்ற வரிகளின் போது சுசிலாவும் தேவிகாவும் கிளப்பியிருப்பார்கள்.

இவை அனைத்தும் இருந்தும் நூறு நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை இந்த படம் தொட முடியாமல் போனது வருத்தமே. நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஆனால் 100 நாட்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் போன படங்களில் ஆண்டவன் கட்டளைக்கு அடுத்தபடியாக நீலவானம் இடம் பிடிக்கும். படத்தின் மைய இழையே சோகம் என்பதால் மக்களுக்கு அதை ஏற்பதில் ஒரு தயக்கம் இருந்ததா, இல்லை திருவிளையாடல் என்ற இதிகாச காவியம் தமிழகமெங்கும் ஏற்படுத்திக் கொண்டிருந்த தாக்கத்தினால் இந்த படம் பாதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை[திருவிளையாடல் வெளியாகி 132 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஓடிக் கொண்டிருந்த போதுதான் அடுத்த படமாக நீலவானம் வெளியானது].

எப்படி இருப்பினும் நடிகர் திலகத்திற்காகவும் தேவிகாவிற்கும் வேண்டியே பார்க்க வேண்டிய படம் நீலவானம்.

அன்புடன்


முரளி சாரின் கட்டுரையின் பாகம் 2 இடம் பெற்ற பதிவிற்கான இணைப்பு

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=394189&viewfull=1#post394189

RAGHAVENDRA
22nd October 2014, 08:04 PM
நீலவானம் பாடல் காட்சிகளுக்கான காணொளிகள்

ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே

http://www.youtube.com/watch?v=ygjqxrk-Hsc

மங்கல மங்கையும் – ஒலி மட்டும்

http://www.youtube.com/watch?v=_GEh0RWW_4g

ஓ..லிட்டில் ஃப்ளவர்

http://www.youtube.com/watch?v=jJY0JYCGBjg

ஓ..லக்ஷ்மி... ஒலி மட்டும்

http://www.youtube.com/watch?v=zki3No-BHNI

சொல்லடா வாய் திறந்து

http://www.youtube.com/watch?v=0e6d1uWErlQ

RAGHAVENDRA
22nd October 2014, 08:09 PM
1965 ... நிறைவு...

தொடங்க இருப்பது... புதிய அத்தியாயம்... 1966ம் ஆண்டு...

இந்த உலகக் கலைஞனின் புதிய பரிமாணம்....

சகாப்த நாயகனின் புதிய அத்தியாயம்...

புதிய தலைமுறை ரசிகர்கள் ... புதிய பாத்திரங்கள்...

அது வரை காணாத நடிகர் திலகத்தின் ஸ்டைல்களின் துவக்கம்...

1966 துவக்கமே... சூப்பரோ சூப்பர்...

காத்திருங்கள்..

Gopal.s
1st November 2014, 08:05 AM
Next Movie in Filmography.



மோட்டார் சுந்தரம் பிள்ளை- 1966.

ஒரு லாரி டிரைவர் ,அமெரிக்காவில், இரு குடும்பங்களை இரு நகரங்களில் ,ஒருவருக்கு தெரியாமல்,மற்றதை வைத்திருந்து, அவர் ஒரு விபத்தில் இறந்து விட,இரு மனைவியரும் ,இழப்பீடு கோரி ,காப்பீட்டு நிறுவனத்தை அணுகிய பிறகே உண்மை தெரிந்தது என்ற பர பரப்பான உண்மை கதையை, "The Remarkable Mr .Penny Packer" என்ற பெயரில் நாடகமாகவும்,பிறகு இதே பெயரில் ஹாலிவுட் படமாகவும் வந்து வெற்றி கண்டது.

வேப்பத்தூர் கிட்டு என்ற ஜெமினி கதை இலாகா எழுத்தாளர், இதை வாசனுக்கு சிபாரிசு செய்து, திரைக்கதை அமைத்தார். இதில் நடிக்க ,நடிகர் திலகமே சரியானவர் என்று முடிவு செய்து,அவரை 1962இல் அணுகிய போது ,என்ன காரணத்தாலோ மறுத்து விட்டார். வாசன் வேறு வழியின்றி, அசோக் குமாரை வைத்து, க்ருஹஸ்தி என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கி வெற்றி கண்டார்.இந்த படத்தை பார்த்த சிவாஜி ,இதில் நடிக்க ஒப்புதல் கொடுக்க மளமளவென்று ,ஜெமினி நிறுவன தயாரிப்பாக ,அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில், வளர்ந்து 1966 இல் வெளியாகி, வெற்றி கண்டது. சிவாஜி,சற்றே உடல் நிலை சரியின்றி,ஓய்வு எடுத்து,துரும்பாக இளைக்க தொடங்கிய 1966 இல் வந்த நான்கே படங்களில் ஒன்றானது.

ஒரு கார் garage வைத்திருக்கும் சுந்தரம் பிள்ளை தன் பழைய vintage காரிலேயே பயணிக்கும் பெரிய குடும்பஸ்தர். மனைவி மீனா, பிள்ளைகள் பாபு,விஜி,ராஜி,லல்லி,நிர்மலா,மாலா,விமலா,கமலா , அக்கா, அக்கா மகன் சாம்பு என அழகான குடும்பம். வெள்ளி இரவு வீடு வந்து, மனைவி மக்களுடன் தங்கி ,திங்கள் காலை தன் தொழிற்சாலை வேலைக்கு பட்டணம் செல்லும் குடும்பஸ்தர். மென்மையான, அதிர்ந்தும் பேசாத நற்பண்பாளர்,அனைவராலும் மதிக்க படும் பெரிய மனிதர், பல உதவிகள் சமூகத்துக்கு புரிபவர். மூத்த பெண் கமலா கல்யாணம் ஆகியும், கணவர் படித்து கொண்டிருப்பதால் ,புகுந்த வீட்டின் நிர்பந்தத்தின் பேரில், பிறந்த வீட்டிலேயே ,தாம்பத்யம் துறந்து ,தங்கியுள்ளாள்.அந்த ஊர் ஸ்டேஷன் மாஸ்டர் பையன் சேகரை, இரண்டாவது பெண் விமலா காதலிக்கிறாள் . சேகரின் தங்கை ரேவதியை சாம்பு விரும்புகிறான். மூன்றாவது பெண் மாலா ,principal பையன் மோகனை விரும்புகிறாள். இதற்கிடையில், மீனா கற்பமாகி, சுந்தரம் பிள்ளைக்கு ஒன்பதாவது குழந்தை பிறக்கிறது.கமலாவின் கணவன் கோபால் அப்பாவுக்கு தெரியாமல், சுந்தரம் பிள்ளை வீட்டுக்கு வந்து ,மனைவி கமலாவுடன் தங்கி செல்கிறான்.

பெண்களின் விருப்பம் அறிந்த சுந்தரம் பிள்ளை , principal ,ஸ்டேஷன் மாஸ்டர் வீடு சென்று சம்பந்தம் பேசி முடித்து, நிச்சயதார்த்த நாளை குறித்து,
நாளும் வருகிறது.

சம்பந்திகள் கூடி இருக்கும் போது ,சுந்தரம் பிள்ளைக்காக அனைவரும் காத்திருக்க, கண்ணன் என்ற விடலை சிறுவன் வீட்டுக்கு வந்து சுந்தரம் பிள்ளைதான் தன தந்தை என்றும்,அவசரமாய் school fees காட்ட பணம் வேண்டியிருப்பதால், factory சென்று அங்கும் இல்லாததால், விலாசம் விசாரித்து இங்கு வந்ததாக சொல்ல வீடே அல்லோல கல்லோல பட்டு நிச்சயதார்த்தம் நிற்கிறது. வீடு வரும் சுந்தரம் பிள்ளை கண்ணனை அன்போடு உபசரித்து பணம் கொடுத்து ,விடை கொடுக்கிறார். மொத்த குடும்பமே ,சுந்தரம் பிள்ளைக்கு எதிராக திரள, சுந்தரம் பிள்ளை வீட்டை விட்டு கிளம்புகிறார்.பிறகு,குடும்பத்தினர் வற்புறுத்தலால் திரும்பி வந்து, எல்லோரையும் சமாதான படுத்துகிறார். மீனா ஒருநாள், கணவனின் அடையாறு வீட்டின் தகவல் தெரிந்து அங்கே செல்ல, அங்கே தாயிழந்து தனித்து வாழும் லீலா,ரமேஷ்,கண்ணன்,சாந்தி என்ற நான்கு குழந்தைகளும் தன கணவன் குழந்தைகளே என்றறிந்து, இறந்த தாயில் படத்தை பார்த்து மயங்கி விழுகிறாள்.இதற்கிடையில் , கணவன் படிப்பு முடிந்து கமலா புகுந்த வீடு சென்று, அங்கே அவள் ஏற்கெனெவே கற்பம் என்ற உண்மை தெரிந்து திருப்பி கொண்டு விட படுகிறாள்.அங்கு ஏற்கெனெவே சுந்தரம் பிள்ளை வேண்டி வற்புறித்தி வர வழித்த ஸ்டேஷன் மாஸ்டர், பிரின்சிபால் இவர்களுடன் மூத்த சம்பந்தியும் அமர வைக்க பட்டு ,தன கதையை சொல்கிறார்.

மாமா வீட்டில் வளரும் சுந்தரம் பிள்ளை மாமாவின் இளைய பெண் மரகதத்தை விரும்ப, மாமா தன மூத்த பெண் மீனாவை அவள் விருப்பபடிsundaram உடன் கல்யாணம் செய்ய திட்டமிடுகிறார். அக்கா விருப்பமறிந்து ,மரகதம் ,காதலை விட்டு கொடுத்து அந்த திருமணத்தை நடத்தி வைக்கிறாள்.சுந்தரம் தன அக்கா கணவர் வேலை வாங்கி கொடுக்க ,குடும்பத்துடன் ரங்கூன் செல்கிறான்(யுத்த காலம்) அங்கு ஒரு விபத்தில் ,மனைவி, அக்கா குடும்பம் இறந்து விட்டதை எண்ணி, திரும்பி ஊர் வந்து சேர்கிறான். தன தவறையுணர்ந்த மாமா வற்புறுத்தலின் பேரில் மரகதத்தை மீண்டும் மணக்கிறான். திடீரென்று, அக்கா,அவள் மகன் சாம்பு, மீனா அனைவரும் உயிரோடு திரும்புவதாக சேதி வர, மாமாவின் கடைசி ஆசை படி, இருவருக்கும் பாதகம் வராமல், இருவரோடும் ஒருவர் அறியாமல் இன்னொருவரோடு குடும்பம் நடத்துகிறான்.கடைசியில் எல்லோரும் உண்மையறிந்து ,சமாதானமாகி சுபமாய் முடியும்.


நடிகர்திலகத்தின் மிக சிறந்த படங்களில் ஒன்றாக ,பல விமரிசகர்கள் இதை கொண்டாடுகிறார்கள். நடிகர்திலகத்தின் நடிப்பும் மிக மிக சிலாகிக்க படுகிறது. நடிகர்திலகம்,ஒரு இடத்தில் கூட குரலையே உயர்த்த மாட்டார். உடலசைவுகள் பத்திரத்தை ஒட்டியே இருக்கும். பின்னால் அவரின் கதாநாயகிகளாய் வலம் வந்த ஜெயலலிதா, காஞ்சனா ஆகியோருக்கு அப்பாவாக. அதுவும் ,அவர்கள் இருவருடனும் முதல் படம். அகில இந்தியாவிலும், இந்த தைரியம் , இமேஜ் என்பதை நடிப்பு திறமையால் உடைக்கும் திறமை, ரசிகர்களுடன் உள்ள நம்பிக்கை ,எவனுக்கும் இன்று வரை கிடையாது.

குழந்தைகள் ,மனைவி ஆகியோருடன், subtle demonstrative பாணியில் தன் வாஞ்சை,பாசம் ஆகியவற்றை வெளிபடுத்தும் அழகு. வாரம் ஒரு முறை குடும்பத்துடன் கழிக்கும் ,தலைவன் பாத்திரத்துக்கு அவ்வளவு மெருகு சேர்க்கும். இந்த பாத்திரத்தில், ஒரு குற்ற உணர்ச்சியில்லாத , எச்சரிக்கையான ஒரு உணர்வினை படம் முழுதும் தேக்கி ,தனது அசைவுகள் வசனம் பேசும் முறை அனைத்திலும் காட்டுவார். குழந்தை பிறக்க போகும் செய்தியை ஒரு மென்மையான கூச்சத்துடன்,இயல்பாய் அணுகும் கட்டம் இருக்கிறதே ,அடடா. வீட்டுக்கு வந்து,குழப்பத்துக்கு காரணமான மகனுக்கு, துளிகூட ,வேண்டா விருந்தாளி என்ற உணர்வோ, அல்லது குற்ற உணர்வோ எழ கூடாது, என்று அழகாய் உபசரணை செய்து, அனுப்பிய பிறகு, சிறிது uneasiness காட்டுவார். குடும்பத்தினருடன், பிடிபட்ட உணர்வு இன்றி, அவர்கள் நம்பிக்கையை தெரிந்து கொள்ளும் காட்சி, சிறியது ஏமாற்றத்துடன் வெளியேறும் காட்சி, பிறகு தான் தவறு செய்தவன் அல்ல என்ற ரீதியில் எல்லாரையும் பேச்சாலும்,செயலாலும் அணைத்து செல்லும் காட்சிகள்.(எவ்வளவு வேறுபாடு காட்டுவார் ,முன்னாள் வந்த பார் மகளே பார், வர போகும் உயர்ந்த மனிதன் சாயல்கள் துளியும் வராமல்)முரண்டும், சுந்தரராஜன்(சம்பந்தியை) உட்கார வைத்து உண்மையை உணர்த்த , ஒரு சில decibel கண்டிப்போடு உயர்த்தி பணிய வைப்பாரே!!!flashback காட்சியில் சைக்கிள் ஓட்டி வரும் காட்சியில், சிறிது இளைக்க ஆரம்பித்து,இளமையும்,அழகும்,துறுதுறுப்பும் மின்ன அவ்ளோ அழகுனா அப்படி ஒரு அழகு. ஒவ்வொரு வேறு பட்ட உறவுகள் ,நண்பர்களுடன் வேறு பட்ட சூழ்நிலைகளில் பேசும் போது ,subtle acting முறையில் staleness வர வாய்ப்புள்ளது. ஆனால் நடிகர்திலகம்,அதை handle செய்திருக்கும் விதம், ஏன் இன்று வரை இத்தனை கோடி பேர் உலக நடிப்பு மேதைகளில் முதல்வர் என்று கொண்டாடுகிறோம் என்ற காரணம் விளங்கும்.

supporting cast ,நிறைய கூட்டமாக வர வேண்டியிரு ப்பதால் ,NT தவிர யாருக்குமே தனி கவனம் போகாவிட்டாலும், சௌகார், பண்டரி பாய், மணிமாலா மனதில் நிற்பார்கள்.(சரோஜாதேவிக்கு பின் பின்னழகு ராணி என்றால் மணி மாலாதான்). எல்லாரும் ,அவரவர் பங்கை நன்கு பண்ணியிருப்பார்கள். crowded shots ,அபார கவனத்துடன் கையாள பட்டிருக்கும். ரவிச்சந்திரன்,சிவகுமார்,சுந்தரராஜன்,ஜெயலலிதா, காஞ்சனா எல்லோருக்கும் நடிகர்திலகத்துடன் முதல் படம்.

நகைச்சுவை காட்சிகள்,ஆனந்த விகடனில் தொடராக வந்த,தேவன் அவர்களின் துப்பறியும் சாம்பு ,நகைச்சுவையை ஒட்டி அமைந்திருக்கும்.(நாகேஷ் பெயரும் சாம்பு) கதையின் போக்கை ரொம்ப நெருடாமல், சுமாராக இருக்கும். வித்தியாசமான இந்த கதைக்கு, சுவாரஸ்யம் கெடாமல்(அத்தனை பாத்திரத்துக்கும் தேவையான spacing ,காட்சிகள் கொடுத்து) கம்பி மேல் நடக்கும் வித்தையை நன்றாக கையாண்டு,இயல்பான ,உயிரோட்டமான, பாத்திரத்தின் தன்மைக்கு இடைஞ்சல் தராத வசனங்களையும் அமைத்திருப்பார் வேப்பத்தூர் கிட்டு. (கிட்டு, கே.ஜே .மகாதேவன், கொத்த மங்கல ம் சுப்பு போன்றோரை தமிழ் பட உலகம் இன்னும் நன்றாக பயன் படுத்தி இருக்கலாம்).எஸ்.எஸ்.பாலன் இந்த படத்தை மிக நன்றாக ,தந்தை மேற்பார்வையில் கையாண்டிருப்பார். அந்த நாய்க்குட்டியை அழகாக பயன் படுத்தியிருப்பார்.குழந்தையை காட்ட ,எல்லோரும் பார்க்க முந்தும் காட்சியில் ,நாய் குட்டியும் முண்டியடித்து பார்க்கும். சிவாஜிக்கு எதிராக குடும்பமே அம்மா பக்கம் நிற்கும் போது ,நாய் குட்டியும் அம்மா பக்கம் போகும் அழகு.(நீயுமா என்று சிவாஜி செல்லமாக வெதும்புவார்).

சிவாஜி-மணி மாலாவிற்கு ஒரு நல்ல duet கொடுத்திருக்கலாம். காத்திருந்த கண்களே ,MSV இசையில் super -hit பாடல்.ரவிச்சந்திரன்-ஜெயலலிதா ஜோடி கண் படும் அளவு அவ்வளவு பொருத்தம்.மற்ற பாடல்கள் ஓகே ராகம்.(துள்ளி துள்ளி விளையாட, மனமே முருகனின், ஜிகு ஜிகு ஜிகு , காதல் என்றால் என்ன)MSV க்கு வாழ்க் கை படகு அளவு scope உள்ள படமல்ல.

மற்ற படி ஜெமினி நிறுவங்களின் பிரம்மாண்ட படங்களை விடவும்,இன்றளவும் பேச படுகிற படம் இது. (மற்றவை சந்திரலேகா ,ஒளவையார்,வஞ்சிகோட்டை வாலிபன்,இரும்புத்திரை ).

RAGHAVENDRA
1st November 2014, 08:43 AM
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES

106. MOTOR SUNDARAM PILLAI

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/MSPNTFW_zps47bdcf77.jpg

தணிக்கை 21.01.1966
வெளியீடு 26.01.1966

மோட்டார் சுந்தரம் பிள்ளை
நடிக நடிகையர் –
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வி.நாகையா, சௌகார் ஜானகி, ரவிச்சந்திரன், ஜெயலலிதா, மணிமாலா, சிவக்குமார், காஞ்சனா, சூர்யகுமார், குமாரி சரஸ்வதி, நாகேஷ், ச்ச்சு, எஸ்.ராமராவ், பண்டரிபாய், சுந்தர்ராஜன், குட்டி பத்மினி மற்றும் பலர்

கதை வசனம் – வேப்பத்தூர் கிட்டு

பாடல்கள் – கொத்தமங்கலம் சுப்பு, வாலி

இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

ஒளிப்பதிவு – வி.எல்லப்பா

ஒலிப்பதிவு – காந்தி

எடிட்டிங் – எம்.உமாநாத்

கலை – எஸ்.ஜானகிராமன்

தயாரிப்பு – எஸ்.எஸ்.வாசன்

இயக்கம் – எஸ்.பாலு

மோட்டார் சுந்தரம் பிள்ளை விளம்பர நிழற்படங்கள் – உபயம் ஆவணத்திலகம் பம்மலார் அவர்கள் மற்றும் இதயவேந்தன் வாசகர் வட்டம் வரலாற்றுச்சுவடுகள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/msprelfw_zps72b6ec7d.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/msp100fw_zpsbad1718e.jpg

RAGHAVENDRA
4th November 2014, 09:49 PM
சிறப்பு செய்திகள்

சென்னையில் வெளியான திரையரங்குகள்
சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி

100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்

மதுரை – கல்பனா – 100 நாட்கள்
திருச்சி – பிரபாத் – 100 நாட்கள்


1. கிராந்தி ஹிந்திப் படத்தின் தமிழாக்கம்

2. மஞ்சி குடும்பம் என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது.

3. இப்படத்திற்காக சினிமா கதிரின் அவ்வாண்டின் சிறந்த நடிகராக நடிகர் திலகத்தைத் தேர்ந்தெடுத்தது.

4. இமேஜ் என்கின்ற வளையத்தை உடைத்தெறிந்து 13 குழந்தைகளுக்கு தந்தையாக தன்னுடைய 38 வயதிலேயே நடித்த உலகப் பெருநடிகர் நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பிற்கு சிறந்த உதாரணம் மோட்டார் சுந்தரம் பிள்ளை.

5. நடிகர் திலகத்துடன் ஜெயலலிதா, காஞ்சனா, மேஜர் சுந்தர்ராஜன் இணைந்த முதல் படம்.

6. எஸ்.எஸ்.வாசன் தயாரிக்க அவரது புதல்வர் எஸ்.பாலு இயக்கிய படம்.

RAGHAVENDRA
4th November 2014, 09:50 PM
பாடல்கள்

1. காதல் என்றால் என்ன

2. காத்திருந்த கண்களே.

3. எதிரில் வந்த்து பொண்ணு

4. குபுகுபு குபுகுபு நான் என்ஜின்

5. துள்ளித்துள்ளி விளையாட துடிக்குது மனசு

6. மனமே முருகனின் மயில்வாகனம்

7. பெண்மை என்ற பிறவி

8. டிங்டாங் டிங்டாங் டிங்கு லலா...

RAGHAVENDRA
9th November 2014, 10:13 AM
மோட்டார் சுந்தரம் பிள்ளை - காணொளிகள்

மனமே முருகனின் மயில் வாகனம்

https://www.youtube.com/watch?v=-uKUXueJYDc

காத்திருந்த கண்களே

https://www.youtube.com/watch?v=oRS_BNiuWcA

துள்ளித் துள்ளி விளையாட

https://www.youtube.com/watch?v=WmSEM7ikSQ8

காதல் என்றால் என்ன

https://www.youtube.com/watch?v=fXdO8iCu6t4

gubu gubu nan en

https://www.youtube.com/watch?v=EfKWO6mI7GY

full movie:

https://www.youtube.com/watch?v=e_IlX0JFDZw

RAGHAVENDRA
9th November 2014, 10:48 AM
Sivaji Ganesan Filmography Series

107. Mahakavi Kalidas மகாகவி காளிதாஸ்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/MKKfw_zpsde1c4f09.jpg

வெளியீடு 19.08.1966
தயாரிப்பு – கல்பனா கலா மந்திர்
நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், கே.பி.சுந்தராம்பாள், சௌகார் ஜானகி, எல்.விஜயலட்சுமி, நாகேஷ், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஆர்.முத்துராமன், வி.கேராமசாமி, ஆர்.எஸ்.மனோகர், ஏ.கருணாநிதி, ஈ.ஆர்.சகாதேவன், ஜி.சகுந்தலா, சி.கே.சரஸ்வதி, மற்றும் பலர்

கௌரவ நடிகர்கள் – நாகேஷ், எஸ்.வி.சகஸ்ரநாம்ம்

ஸ்டூடியோஸ் – சாரதா, பிரதம நிர்வாகி – டி.வி.வைத்யநாதன்
ஆர் சி ஏ முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது

ப்ராசஸிங் – விஜயா லேபரட்டரி, பி.எம்.விஜயராகவலு

அரங்கப் பொருட்கள் சினி கிராப்ட்ஸ்

பின்னணி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, பொன்னுசாமி

திரைக்கதை வசனம் கு.மா. பாலசுப்ரமணியம்

பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், கு.மா. பாலசுப்ரமணியம்

ஒலிப்பதிவு – T.D. கிருஷ்ணமூர்த்தி

ஆபரேடிவ் கேமிராமேன் – கே.எஸ். மணி, ஏ.ப்பி. ராமானுஜம்

நடன அமைப்பு பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, உதவி லக்ஷ்மி நாராயணன், சந்திரகலா

கலை ராமசாமி,
உடையமைப்பு – எஸ்.நடராஜன்

ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ், என். நரசிங்கராவ், ஏ.சங்கர் ராவ்

ஒப்பனை கே.நவனீதம், ஆர்.ரங்கசாமி, எம்.கே.சீனிவாசன், எம்.ராமசாமி

விளம்பர டிசைன்ஸ் – ஜி.ஹெச். ராவ்
விளம்பரம் அருணா அண்ட் கோ

உதவி டைரக்ஷன் – எஸ்.சிவகுமார், சொ.மீனாட்சி சுந்தரம்

படத் தொகுப்பு ப்பி.வி.நாராயணன்

ஒளிப்பதிவு டைரக்டர் ஆர்.ஆர்.சந்திரன்

ஒலிப்பதிவு டைரக்டர் ட்டி.எஸ்.ரங்கசாமி

அசோஸியேட் டைரக்டர் – க.நாராயணன்

இசை திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், உதவி புகழேந்தி

தயாரிப்பு டைரக்ஷன் – ஆர்.ஆர்.சந்திரன்

RAGHAVENDRA
9th November 2014, 11:10 AM
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.8.1966
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4355a-1.jpg



ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..

RAGHAVENDRA
9th November 2014, 11:11 AM
கல்கி 04.09.1966 இதழில் வெளிவந்த மகாகவி காளிதாஸ் விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/KalidasKalkireviewfw.jpg

மஹாகவி காளிதாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பினைப் பற்றி பேசும் படம் இதழில் வெளிவந்த செய்தித் துணுக்கு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ppkalidasshootcoveragefw.jpg

RAGHAVENDRA
9th November 2014, 11:12 AM
மகாகவி காளிதாஸ் திரைப்படத்தைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள்... மீள் பதிவுகள்...
நெய்வேலி வாசு சாரின் பதிவு
http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=727296&viewfull=1#post727296

20.08.2011 – 2.15 pm



அன்பு முரளி சார்,

'மகாகவி காளிதாஸ்' பற்றிய தங்களது குறை திரு.ராகவேந்திரன் சார் மூலம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் திருப்திக்காக இதோ என்னுடைய பங்கு....

'கல்லாய் வந்தவன் கடவுளம்மா....
அதில் கனியாய் கனிஞ்சவ தேவியம்மா...
புல்லாய் முளைச்சவ சக்தியம்மா....
அதில் பூவா மலர்ந்தவ காளியம்மா..ஆ..ஆ..ஆ...'

கையில் அந்த ஊதுகுழலென்ன..
தலையில் உச்சிக் குடுமி என்ன.....
இரு கைகளிலும் வளையங்கள் என்ன...
கருப்பு நிற கட்-பனியன் என்ன...
கையில் பிடித்துள்ள கொம்பு என்ன...
அதில் அழகாய்த் தொங்கும் சிறு மூட்டை தான் என்ன....
ஆடுகள் மேய்க்கும் அழகென்ன ....
ஊதுகுழல் ஊதும் உதட்டசைவுதான் என்ன...
நடந்து வரும் நடையழகுதான் என்ன....

நடிப்புச் சுரங்கத்தை வாரிக் கொடுத்த பாரியே!
ஏன் எங்களை விட்டுப் பிரிந்தாய்?...
இந்த நன்றி கெட்ட உலகம் வேண்டாமென்றா?...

(குறிப்பு : இந்தப் பாடலின் 1.09 நிமிடத்திலிருந்து 1.15 நிமிடம் வரை மிக உன்னிப்பாக அன்பர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.)
https://www.youtube.com/watch?v=9mzZVgQRzwg

RAGHAVENDRA
9th November 2014, 11:13 AM
மகாகவி காளிதாஸ் திரைப்படத்தைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள்... மீள் பதிவுகள்...

அன்பு நண்பர் கார்த்திக்கின் பதிவு...
http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=727307&viewfull=1#post727307

20.08.2011 – 3.06 pm


வாசுதேவன் சார்,

'மகாகவி காளிதாஸ்' பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

மார்கழி மாதம் அதிகாலையில் எங்கள் தெரு கோயிலில், வருடாவருடம் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஒலிபரப்புவார்கள். மற்ற புராணப்பட பாடல்கள் இருக்கிறதோ இல்லையோ, மகாகவி காளிதாஸ் பாடல்கள் நிச்சயம் இருக்கும். அதனால் எங்கள் தெரு மக்களுக்கு இப்படப் பாடல்கள் மனப்பாடம்...

கல்லாய் வந்தவன்...
சென்று வா மகனே...
மலரும் வான் நிலவும்... (இரண்டு வெர்ஷன்)
காலத்தில் அழியாத காவியம் பல தந்த...
யார் தருவார் இந்த அரியாசனம்...

இப்படி, இந்தப்படத்தின் பாடல்களை எப்போது எங்கே கேட்டாலும் மார்கழி மாத அதிகாலைப்பொழுது என் நினைவுக்கு வரும்.

RAGHAVENDRA
9th November 2014, 11:14 AM
அடியேனின் பதிவிலிருந்து..

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=727258&viewfull=1#post727258

20.08.2011 – 7.49 am



காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கலை மன்னனே..
காளி தாஸ் என்னும் கவிஞனை வடித்த மாபெரும் கலைச் சிற்பியே

என்று அந்தத் திரைக்காவியத்தைப் பற்றியும் நடிகர் திலகத்தைப் பற்றியும் பேசிக் கொண்டே எழுதிக் கொண்டே இருக்கலாம்.

அப்பாவி இடையனாக தேங்காயச் சில்லுகளை எடுத்து மாறு வேடத்தில் வந்திருக்கும் காளியிடம் நீட்டும் காட்சியா, அல்லது சென்று வா மகனே பாடல் காட்சியில் தான் மிகப் பெரிய உயரத்தை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை அறியாத அந்த கள்ளங்கபடமற்ற முகத்தையும் அந்த நடையினையும் சொல்வதா, தன்னுடைய திருமணத்தைப் பற்றிய விவரம் அறியாமல் முதலிரவு அறையில் பழங்களை ருசிக்கும் குணத்தை மெச்சுவதா, தனக்கு காளியின் அருள் கிடைத்ததும் கோயிலில் யார் தருவார் அந்த அரியாசனம் என்று கணீரென்று பாடுவதை சொல்வதா

“நடிகர் திலகம் ராஜ்ய சபா உறுப்பினராய் நியமனம் செய்யப் பட்டு, பதவியேற்ற நாளையொட்டி, தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியு்ம் நிகழ்ச்சியில் ஒளிபரபப் பட்ட முதல் பாடல், யார் தருவார் இந்த அரியாசனம் என்பது குறிப்பிடத் தக்கது”
தர்பாரில் சைகையிலேயே ஒவ்வொரு கேள்விக்கும் அப்பாவியாக கையைக் காட்ட, அதற்கு மனோகர் தனி வியாக்கியானம் செய்ய, தன் முகத்தில் அப்பாவித்தனத்தையும் பெருமிதத்தையும் ஒரு சேர காட்டும் அந்த பாவத்தை சொல்லுவதா, புலவரான பின் தன்னுடைய உடல் மொழியிலேயே அந்தப் பாத்திரத்தின் சிறப்பினைக் கொண்டு வந்த பாங்கை சொல்வதா....

ஒவ்வொரு காட்சியும் பல முறை பார்த்து ஆய்வு செய்ய வேண்டிய திரைக்காவியம் மஹாகவி காளிதாஸ்...
…..

இப்படிப் பல்வேறு பரிணாமங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் திலகத்தின் புகழ் மகுடத்தில் மற்றோர் வைரக்கல், மாணிக்கக் கல், மஹாகவி காளிதாஸ்.

RAGHAVENDRA
9th November 2014, 11:15 AM
மகாகவி காளிதாஸ் திரைப்படத்தைப் பற்றிய முரளி சாரின் பதிவுகள்
Part 1
15.7.2009 01:07 AM - http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=418855&viewfull=1#post418855



மகாகவி காளிதாஸ். - Part I


தயாரிப்பு : கல்பனா கலா மந்திர்

இசை : கே.வி.மகாதேவன்

இயக்கம்: ஆர்.ஆர். சந்திரன்

வெளியான நாள்: 19.08.1966

வட மொழி இலக்கியத்தில் மிகப் பெரிய நிபுணனும் பல காவியங்களை படைத்தவனுமான காளிதாசன் வரலாற்றை தமிழில் சொல்லும் ஒரு முயற்சியாக இந்த படம் உருவாக்கப்பட்டது. ஒரு கிராமத்தில் எதுவுமே தெரியாத ஒரு முட்டாள் எப்படி காளி அருள் பெற்று மேதையானான், போஜ மன்னனின் அரசவையில் தலைமை புலவன் பதவியை அடைந்தான், பின் அவன் சந்தித்த வீழ்ச்சி பற்றி சொல்கிறது இந்த படம்.

கிராமத்தில் ஆடு மேய்க்கும் சின்னான். அவனுக்கு தாய் தந்தை இல்லை. அவனை வி.கே.ஆர் - சி.கே.சரஸ்வதி தம்பதியினர் வளர்த்து வருகிறார்கள். சின்னானுக்கு உலகமே தெரியாது. தன்னை வளர்த்தவர்கள் மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கும் அவன் ஒரு சாப்பாட்டுப் பிரியன். குறிப்பாக இனிப்புகள் அதிலும் லட்டு என்றால் உயிர். காளி மேல் மிகுந்த பக்தி வைத்திருப்பவன். ஊருக்கு வெளியே உள்ள காளி கோவிலை தினம் சுத்தப்படுத்தி விளக்கு ஏற்றி வைப்பது அவன் வழக்கம். அதே ஊரில் உள்ள பூங்காவனம் என்ற பெண் அவனை விரும்புகிறாள். தன் மீது மிகுந்த பக்தி வைத்திருக்கும் சின்னானுக்கு காளி ஒரு வயதான மூதாட்டி உருவில் இடையே இடையே வந்து உதவுகிறாள்.

அந்த நாட்டு மன்னனுக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவள் மிகுந்த அறிவாளி. அவளை அறிவுப் போட்டியில் வெல்பவனுக்கே மகளை திருமணம் செய்து கொடுப்பதாக அறிவிக்கிறான் மன்னன். ஆனால் இளவரசியை யாராலும் வெல்ல முடியவில்லை. தோற்பவர்களை பல வகையிலும் அவமானப்படுத்தும் அரசனின் மேல் புலவர்கள் அனைவருக்கும் கோவம் வருகிறது. அரசனை பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். ஒரு முட்டாளை புலவன் போல் நடிக்க செய்து இளவரசியை திருமணம் செய்ய வைப்பது என்று தீர்மானம் எடுக்கின்றனர்.

அவர்கள் தேடிச் செல்லும் வழியில் நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டும் சின்னானை பார்க்கிறார்கள். அவனே இதற்கு சரியானவன் என்று முடிவு செய்கிறார்கள். அவனுக்கு பலவகை ஆசை காண்பித்து அவனை அழைத்து செல்கிறார்கள். அவனது தோற்றத்தையும் ஆடையையும் மாற்றி அவனை கொலு மண்டபத்திற்கு கூட்டி சென்று இன்று சைகையினால் மட்டுமே பேசுவார் என்று சொல்லி, இளவரசி கேட்கும் சைகைகளை வேறு மாதிரி புரிந்துக் கொண்டு சின்னான் சைகை செய்ய அதற்கு வேறு விளக்கம் கொடுத்து அவனை வெற்றி பெற வைத்து விடுகிறார்கள். கல்யாணமும் நடந்து விடுகிறது. முதலிரவன்று உண்மை தெரிந்து விட இளவரசி அவனை காளி கோவிலிற்கு கூட்டி செல்கிறாள். அங்கே மனம் உருகி வேண்டும் தம்பதியினரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் காளி, சின்னானை மேதையாக்குகிறாள். அவனிடம் போஜ மன்னனின் அரண்மனைக்கு செல்லும்படி கூறுகிறாள். இளவரசியையும் விலாசவதி என்ற பெயரில் போஜ மன்னனின் சபையினில் பாடகியாக்குகிறாள்.

தன் வளர்ப்பு பெற்றோரை சந்தித்து விட்டு போஜ மன்னனை சந்திக்க வரும் காளிதாசன் கோவிலில் வைத்து விலாசவதியை பார்க்கிறான். அவளை வர்ணித்து ஒரு கவிதை பாட, அவன் பாடலில் பொருட்குற்றம் இருப்பதாக மன்னன் சொல்ல [அதாவது அன்று அமாவாசை, ஆனால் நிலவு வருவதாக காளிதாசன் பாடி விடுகிறான்] காளிதாசன் நிலவை வரவழைப்பதாக சவால் விடுகிறான். காளி அருளால் நிலவும் உதிக்கிறது. காளிதாசன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, போஜ மன்னன் அவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான்.

போஜ மன்னனின் அரசவையிலே தலைமைப் புலவர் தண்டி கவிராயர். அவருக்கு மன்னன் மீது சற்று கோபம். காரணம் மன்னன் காளிதாசனுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கிறான் என்று. ஆனால் காளி தேவியே அசரீரி வடிவில் காளிதாசனை புகழ்ந்து பேச தண்டியும் ஏற்றுக் கொள்கிறார்.

அரசவை நாட்டியக்காரி மோகனாவிற்கு காளிதாசன் மேல் ஈர்ப்பு. ஆனால் காளிதாசனோ விலாசவதியை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். மோகனா அவனை அடைய செய்யும் முயற்சிகள் தோல்வியுறுகின்றன.

போஜ மன்னனின் சபையில் இருந்து காளிதாசன் சாகுந்தலம், மேக சந்தேசம், குமார சம்பவம், ரகு வம்சம் போன்ற காவியங்களை படைக்கிறான். அவன் புகழ் பரவுகிறது. அரசி காளிதாசனின் கவிதையின் பால் மிகுந்த ஈடுப்பாடு கொண்டவள். அவனோடு இலக்கிய சர்ச்சைகளில் நேரம் காலம் தெரியாமல் ஈடுபடுகிறாள். ஒரு சமயம் அரசியின் ஓவியத்தைப் பார்த்து விட்டு சாமுத்திரிகா லட்சணத்தின்படி அரசிக்கு ஒரு மச்சம் இருக்க வேண்டும் என்று சொல்ல அது சரியாக இருக்கிறது. இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் மோகனா காளிதாசனை பழி வாங்க காளிதாசனையும் அரசியையும் இணைத்து அவதூறு பரப்புகிறாள்.

ஒரு கட்டத்தில் விலாசவதியே இதை உண்மை என்று நம்பி காளிதாசனோடு சண்டையிட, நகர் வலத்திற்கு வந்த மன்னன் இதைக் கேட்டுவிட்டு துடித்துப் போகிறான். அது அவனை நோயில் தள்ளுகிறது. மனம் வெறுத்துப் போன காளிதாசன் தன் ஊர் கோவிலுக்கு சென்று தங்குகிறான்.

காளிதாசனை காணாமல் மேலும் உடல் நலிவுறும் மன்னன் ஒரு வரி கவிதையை எழுதி அதை நிறைவு செய்பவர்களுக்கு பாதி ராஜ்ஜியத்தை பரிசளிப்பதாக அறிவிக்கிறான். இதற்கு ஆசைப் படும் மோகனா காளிதாசனின் ஊருக்கு சென்று அவனை சந்திக்கிறாள். அவனிடம் பொய் சொல்லி காளிதாசனை கவிதையை நிறைவு செய்ய வைத்து பிறகு அவன் தலையை வெட்டி விடுகிறாள்.

கவிதையை படித்தவுடன் நடந்ததை புரிந்துக் கொள்ளும் மன்னன் மோகனாவை வெட்டி வீழ்த்துகிறான். காளிதாசனை தேடி செல்லும் போஜ மன்னனும் அங்கே நண்பனை காப்பாற்ற முடியாமல் உயிர் துறகின்றான். நண்பவர்கள் இருவரும் காளியின் அருளால் வானுலகம் செல்கின்றனர்.

அன்புடன்


Part 2 15th July 2009, 01:16 AM
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=418857&viewfull=1#post418857


மகாகவி காளிதாஸ். - Part II


மகாகவி காளிதாஸ். நடிகர் திலகத்தின் நடிப்புலக பயணத்தில் மறக்க முடியாத ஒரு மைல்கல். நடிகர் திலகத்தின் நடிப்பு அபாரமாக வெளிப்பட்ட படங்களில் காளிதாசிற்கும் நிச்சயமான இடம் உண்டு. இரண்டு வித குணாதிசயங்கள். அதை அப்படியே அனாயசமாக செய்திருப்பார். கிளாஸிக் என்று சொல்லப்படுகிற தரத்தில் அவரது நடிப்பு அமைந்திருக்கும்.

முதலில் வடி கட்டின அப்பாவி மற்றும் சாப்பாட்டு பிரியன். முதல் அறிமுக காட்சியிலே தூங்கி எழுந்து வந்து கண்களை மட்டும் தண்ணீரால் துடைத்துக் கொண்டு குளித்து விட்டேன், சாமி கும்பிட்டு விட்டேன் என்று தட்டின் முன் அமர்ந்து ஆவலோடு தோசை எங்கே என்று கேட்க கூழை கொண்டு வரும் தாயிடம் கோபித்துக் கொள்வது, நண்பன் தன் தங்கைக்கு கல்யாணம் என்று சொன்னவுடன் விருந்து இருக்கிறதா இனிப்பு இருக்கிறதா என்று கேட்கும் அந்த பரபரப்பு, பெரிய லட்டு இருக்கும் என்று சொன்னவுடன் இம்மாம் பெரிய லட்டு? நான் மம்மட்டி கொண்டு வரேன், உடைச்சு திங்கலாம் என்று சொல்லுவது, திருமணத்திற்கு போக கூடாது என்று அப்பன் சொல்லி விட முணுமுணுத்துக் கொண்டே ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி போவது, அங்கே காளியே மூதாட்டி உருவில் ஆடுகளை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னவுடன் கல்யாணத்திற்கு போய் விருந்து சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டுவது, அங்கே தன் தந்தையை கண்டவுடன் வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொள்வது, தன் இலையை தவிர தன் தாய் இலையிலும் அடுத்திருக்கும் பெண் இலையிலுமிருந்து லட்டு எடுத்து வைத்துக் கொள்வது, கோவிலுக்கு சென்றவுடன் லட்டை சாப்பிடும் போது என்ன சாப்பிடுகிறாய் என்று கேட்கும் மூதாட்டியிடம் மண்ணாங்கட்டி என்று சொல்வது அதை எனக்கும் கொடு என்று சொல்லும் போது சின்ன ஒரு விள்ளல் கொடுத்து விட்டு "பிக்கவே வர மாட்டேங்குது" என்று முனகுவது, நம்ம வீட்டிலும் விருந்து வைக்கலாம் என்று தந்தையிடம் சொல்ல அவர் விருந்து வைக்க காரணம் வேண்டுமே என்று கேட்க எனக்கு கல்யாணம் பண்ணி வை. அந்த முன்னிட்டு விருந்து வைக்கலாம் என்று அப்பாவியாக சொல்லுவது - இப்படி பிய்த்து உதறியிருப்பார், படிக்காத மேதை ரங்கனுக்கு பிறகு அப்படியே காளிதாஸ் சின்னான் என்றே சொல்லலாம்.

அது மட்டுமா? புலவர்கள் அவரை ஏமாற்றி குடுமியை வெட்டியவுடன் அழுவது, அவர்கள் ஊருக்கு போகும் போது குடுமியை திருப்பி தருகிறோம் என்று சொல்வதை அப்பாவியாக நம்புவது, மன்னன் அரண்மனைக்கு கூட்டி சென்றவுடன் போட்டி மண்டபத்தில் அவர் காட்டும் முக பாவம், கல்யாணம் முடிந்து முதலிரவன்று உப்பரிக்கையில் தெரியும் நிலவைப் பார்த்து விட்டு வீட்டுக்குள்ளே நிலாவை வச்சிருக்காங்கபா என்று கமென்ட் அடிப்பது, அறையில் வைத்திருக்கும் பலகாரங்களை எடுத்து சாப்பிட்டு விட்டு அங்கே தொங்கி கொண்டிருக்கும் சேலையை["எங்க அம்மாவுக்கு அங்கே மாத்து சேலையே இல்லை. இங்கே தோரணமாக தொங்க விட்ருக்காங்க"] சுருட்டி எடுத்து வைத்துக் கொள்வது, உண்மை தெரிந்து அழும் இளவரசியிடம் நீ அழுவாதே! நான் வேலை செஞ்சு உனக்கு காஞ்சி ஊத்துறேன் என்று சொல்லுவது - இப்படி அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை அவர் வெளிப்படுத்தும் விதத்தை காட்சிக்கு காட்சிக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.

எப்போதுமே இயல்பான நகைச்சுவையில் வெளுத்து வாங்கும் நடிகர் திலகம் இந்தப் படத்திலும் அதை திறம்பட செய்திருப்பார். சந்தைக்கு போய் விட்டு பலகாரங்களை வாங்கி கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்து விட்டு "பாதி பலகாரத்தை வர வழியிலே குரங்குக்கு போட்டேன், மீதியை உனக்கு கொண்டு வந்திருக்கேன்" என்பது, மன்னனிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்று இவர் கேட்க மனோகர் ஒவ்வொன்றாக சொல்லி கடைசியில் யானை படை, குதிரை படை, காலாட்படை என்று சொல்ல, இவர் கையை சொறிந்துக் கொண்டே படை என்பது, இளவரசியிடம் புலவர்களைப் பற்றி சொல்லும் போது "அந்த புளுவங்க தான் இப்படி சொல்ல சொன்னாங்க" என்று சொல்லுவது [ஒரு படிப்பறிவில்லாதவனின் சொல் பிரயோகம் மட்டுமல்லாது புலவர்களின் உண்மை சொருபத்தையும் குறிக்குமாறு சொல்லுவார்], இப்படி அதையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட சின்னான் காளிதாசனாக மாறியவுடன் தான் என்ன ஒரு மாற்றம்! அந்த கம்பீரம், அந்த ராஜ நடை, அந்த நிமிர்ந்த தோள்கள், அறிவின் தேஜஸ் வெளிப்படும் அந்த முகம், அந்த குறு நகை அப்படியே வெளிப்படுத்தியிருப்பார். முதலில் போலி புலவனாக நுழையும் போது காட்டும் நடைக்கும், காளிதாசனாக அருள் பெற்றவுடன் கோவிலிலிருந்து அவர் நடந்து போகும் அந்த ஸ்டைல் நடைக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்! அவர் கோவிலில் வைத்து போஜ மன்னனிடம் சவால் விடுவது, சௌகாரிடம் காட்டும் அந்த காதல்[ "என் முகத்தை நிலவு என்று சொன்னீர்களே! இப்போது நெருங்கி வரும் போது விலகி போகிறீர்களே" என்று கேட்கும் சௌகாரிடம் "இல்லை நிலவு என் அருகில் வரும் போது என் நிழல் பின்னே விழுகிறதா என்று பார்த்தேன்" என்று அவர் சொல்லுவதே அழகு]. அது போல் தன்னை நெருங்கி நெருங்கி வரும் எல். விஜயலட்சுமியிடம் அவர் தனக்கே உரிய பாணியில் பதில் சொல்லி விட்டு விலகி போவதை அழகாக செய்திருப்பார்.

தன் மனைவியே தன்னையே சந்தேகப்படுகிறாள் என்று தெரிந்தவுடன் அவளிடம் கொள்ளும் கோபம், முகத்தில் தெரியும் அந்த வருத்தம் கலந்த சீற்றம் எல்லாமே நன்றாக இருக்கும். தன்னிடம் மரண கவி பாடச் சொல்லும் மன்னனிடம் அவர் தன் உணர்ச்சிகளை கொட்டுவது, கடைசியில் கே.பி.எஸ். தன்னைப் பற்றி பாடும் போது எல்லாவற்றையும் துறந்த ஒரு மனோ நிலயை வெளிப்படுத்துவது - இப்படி படம் முழுக்க நடிகர் திலகத்தின் நடிப்பு சாம்ராஜ்யம் கொடி கட்டி பறக்கும். நமக்கு தான் இங்கே எழுத இடம் இல்லாமல் போகும்.

இந்த மன்னனுக்கு முன்னாள் மற்றவர்கள் எல்லோரும் குறுநில மன்னர்கள் அளவுக்கு கூட வரவில்லை என்பதுதான் உண்மை. சௌகாருக்கு வழக்கம் போல் கலங்கி அழும் வேடம். போஜ மன்னனாக முத்துராமன், வில்லன் போல அறிமுகமாகி சிறிது நேரத்திலேயே மாறி விடும் தண்டி கவிராயராக சகஸ்ரநாமம், தில்லானாவுக்கு ஒரு ஒத்திகை போல வில்லன் வேடம் [கௌரவ தோற்றம்] செய்யும் நாகேஷ், வழக்கமான சரளமான நகைச்சுவையில் வி.கே.ஆர் நடித்திருக்க இரண்டு அதிசயங்கள். எப்போதும் வில்லி வேடம் செய்யும் சி.கே.சரஸ்வதி இதில் அன்புள்ள அம்மா. கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த எல். விஜயலட்சுமி இதில் வில்லி வேடம் அழகாக செய்திருப்பார். நடிகர் திலகத்துடன் நடிக்கும் முதல் வாய்ப்பு என்பதால் இதை அவர் ஏற்றுக் கொண்டார் என்று சொல்லுவார்கள்.

கே.பி.எஸ் அவர்களுக்கு இரண்டு பாடல்கள் மற்றும் சில வசனங்கள் தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. சின்னானை ஒரு தலையாக காதலிக்கும் பூங்காவனமாக மாலதி நடித்திருப்பார். மனோகர் வில்லன் தான். ஆனால் வில்லத்தனம் வேறு மாதிரி இருக்கும்.

அன்புடன்


Part 3 - 15th July 2009, 01:32 AM –
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=418865&viewfull=1#post418865


மகாகவி காளிதாஸ் - Part III


படத்திற்கு இசை திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் மாமா. பாடல்கள் கண்ணதாசன் மற்றும் கு.மா. பாலசுப்ரமனியன்.[இவர் தான் திரைக்கதை வசனமும் கூட].

1. கல்லாய் வந்தவன் கடவுளம்மா- ஆடுகளை மேய்த்துக் கொண்டே சின்னான் பாடும் பாடல்

2. சென்று வா மகனே வென்று வா- புலவர் கூட்டம் சின்னானை அழைத்துச் செல்லும் போது கே.பி.எஸ் பாடும் பாடல். அந்த காலக்கட்டத்தில் பெருந்தலைவர் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவரையும் வாழ்த்துவதாக கண்ணதாசன் எழுதிய பாடல் என்று ஒரு செய்தி. [அதை நிரூபிப்பதைப் போல் ஒரு வரி எழுதியிருப்பார் - அறிவுலகம் உன்னை அழைக்கிறது.]

3. யார் தருவார் இந்த அரியாசனம- சின்னான் காளிதாசனாக மாறிய பின் அந்த கோவிலில் வைத்தே பாடும் பாடல்.

4. மலரும் வான் நிலவும்- காளிதாசன் தனியாகவும் பின் விலாசவதி தனியாகவும் பாடும் பாடல்.

5. கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்- காளிதாசன் தன் காவியங்களை படைக்கும் போது பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்.

6. காலத்தில் அழியாத காவியம் தர வந்த- படத்தின் இறுதியில் காளிதாசனை பார்த்து கே.பி.எஸ். பாடும் பாடல். நடிகர் திலகதிற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும்.

இது தவிர சில விருத்தங்கள் [சிறு பாடல்கள்] - கோவிலில் பாடும் தங்கமே தாமரை, மன்னன் உடல் நலிவுற்று கிடக்கும் போது பாடும் பிறப்புற்றேன். பிறகு தாய் தந்தையரை சந்திக்கும் போது பாடும் பாடல். இந்த பாடல்களின் முதல் வரிகளை பார்க்கும் போதே பாடல்கள் எல்லாம் தேன் துளிகள் என்பதும் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள் என்பதும் விளங்கும்.

காமிராமென் ஆர்.ஆர்.சந்திரன் தான் இந்த படத்தை தயாரித்து இயக்கியவர். கு.மா. பாலசுப்ரமணியனின் திரைக் கதை சின்னான் காளிதாசனாக மாறும் வரை சுவையாக பின்னப்பட்டிருக்கும். பிறகு காளிதாசனின் கவிதை காவியங்களை பற்றி பேசாது அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை போஃகஸ் செய்தது ஒரு பின்னடைவு. காளியின் அருளால் கவியாவது இதன் பின்னாலே வெளியான சரஸ்வதி சபதத்திலும் தொடர்ந்தது. Better packaged என்ற கோணத்தில் சரஸ்வதி சபதம் மக்களை அதிகம் கவர்ந்தது என்று சொல்லலாம்.மேலும் மன்னனுக்கு வரும் இலக்கிய சந்தேகம், அதற்கு பரிசு, அதே முத்துராமன் அதே நாகேஷ் இவையெல்லாமே இந்த படத்திற்கு ஒரு வருடம் முன்பு வெளியான திருவிளையாடலை நினைவுபடுத்தியது.

நடிகர் திலகம் புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் இந்த 1966 வருடத்தில் தான் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி நடிகர் திலகத்தின் உடல் நலக் குறைவு காரணமாக ஏற்பட்டது. ஜனவரி 26 அன்று மோட்டார் சுந்தரம் பிள்ளை வெளியான பிறகு அடுத்த படமாக மகாகவி காளிதாஸ் ஆகஸ்ட் 19 அன்று வெளியானது. ஒரு வார இடைவெளியில் ஆகஸ்ட் 26 அன்று நடிகர் திலகம் கௌரவ தோற்றத்தில் நடித்த தாயே உனக்காக வெளியானது. அடுத்த ஒரு வாரத்தில் செப்டம்பர் 3 அன்று சரஸ்வதி சபதம் ரிலீஸ். எனவே எப்போதும் போல் நடிகர் திலகத்தின் படங்களே ஒன்றுக்கு இன்று போட்டியாக வந்ததன் விளைவு காளிதாஸ் தன் தரத்திற்கேற்ற தகுதியான வெற்றியைப் பெற முடியாமல் போனது.

எப்படி இருப்பினும் நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பிற்காகவே பார்க்க வேண்டிய படம் மகாகவி காளிதாஸ்.

அன்புடன்

PS: ஒரு வசனம் அது பேசப்படும் காலத்தைப் பொறுத்து அதற்கு வரவேற்போ எதிர்ப்போ உண்டாகும் எனபதற்கு இந்த படத்தில் வரும் ஒரு வசனமே உதாரணம். முப்பேறும் பெறுக என்று சொல்லச் சொல்லும் புலவரிடம் அதை உச்சரிக்க வராமல் நடிகர் திலகம் மூப்பனார் என்பார். இந்த வசனத்திற்கு எழுபதுகளின் இறுதியில் நடிகர் திலகமும் மூப்பனாரும் நண்பர்களாக இருந்த போது பலத்த கைதட்டலை நான் பார்த்திருக்கிறேன். எண்பதுகளின் மத்தியில் இருவரும் பிரிந்த பிறகு இதே வசனத்திற்கு எதிர்ப்பு கூக்குரலையும் கண்டிருக்கிறேன்.

RAGHAVENDRA
9th November 2014, 11:17 AM
மகாகவி காளிதாஸ் காணொளிகள்

காலத்தில் அழியாத
https://www.youtube.com/watch?v=l1kYJFo-uBU

யார் தருவார் இந்த அரியாசனம்
https://www.youtube.com/watch?v=Fm7QOXpd3jU

மலரும் வான் நிலவும்
https://www.youtube.com/watch?v=FHk-SqY8gbk

கல்லாய் வந்தவன் கடவுளம்மா
https://www.youtube.com/watch?v=9mzZVgQRzwg

கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்
https://www.youtube.com/watch?v=HpPOKaKrbrU

RAGHAVENDRA
9th November 2014, 11:25 AM
1966ல் மகாகவி காளிதாஸ், தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் என தொடர்ச்சியாக வாரா வாரம் வெளியீடு..

வெள்ளி விழா கொண்டாட வேண்டிய படங்களெல்லாம் இது போல் தொடர்ச்சியாக வெளியீடு கண்டு நம் படங்களுக்கு நம் படங்களே போட்டியாய் அமைந்ததனால் அரங்குகள் கிடைப்பதும் கஷ்டமாயின. இப்போது போல பகலில் ஒரு படம் மாலையில் ஒரு படம், இரவில் ஒரு படம் என்கின்ற சங்கதியெல்லாம் இல்லாத கால கட்டம் அது.

மகாகவி காளிதாஸ் - 19.08.1966

தாயே உனக்காக - 26.08.1966

சரஸ்வதி சபதம் - 03.09.1966

என்ன சொல்ல..

RAGHAVENDRA
5th December 2014, 10:28 PM
Sivaji Ganesan Filmography Series

108. SARASWATHI SABATHAM சரஸ்வதி சபதம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Vidyapathy1-1.gif

தணிக்கை 18.08.1966
வெளியீடு 03.09.1966

தயாரிப்பு – ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி கணேஷ், ஜெமினி கணேசன், நாட்டியப்பேரொளி பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா, மனோரமா, வி.நாகையா, கே.சாரங்கபாணி, ஜி.சகுந்தலா, பேபி சுசரிதா, ஈ.ஆர்.சகாதேவன், நாகேஷ், பி.டி.சம்பந்தம், டி.என்.சிவதாணு, சிவகுமார், செந்தாமரை, எஸ்.ஏ.கண்ணன், மற்றும் பலர்.

பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், சுசீலா, ஆதம்ஷா

பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்,
ஆபரேடிவ் காமிராமேன் – ஆர்.ராஜன், கே.எஸ்.மணி
ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ்.ரங்கசாமி
ஒலிப்பதிவு – டி. சிவானந்தம்
எடிட்டிங் – ராஜன், டி.ஆர். நடராஜன்
கலை – கங்கா
அரங்க அலங்காரம் – நியோ ஃபிலிமோகிராஃப்ட்ஸ்
நடன அமைப்பு – கோபாலகிருஷ்ணன், பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி
குஸ்தி அமைப்பு – ஆஸாத் மிஸ்டர் மெட்ராஸ்
குதிரைச்சவாரி – ஸ்டண்ட் சாரங்கன் கோஷ்டியினர்
யானை “சீதா” – நேஷனல் சர்க்கஸ் கம்பெனி
ஆடை அலங்காரம் – சி.கே.ராஜமாணிக்கம்
மேக்கப் – ரங்கசாமி, தனகோடி, பத்ரையா, சேதுபதி, பத்மனாபன்
ஸ்டில்ஸ் – முருகப்பன் – எம்.ஆர்.பிரதர்ஸ்
விளம்பர நிர்வாகம் – மின்னல், சாந்தி பப்ளிசிட்டீஸ்
விளம்பரம் – ஆஸ்பி லித்தோ ஒர்க்ஸ்
டிசைன்ஸ் – ‘பக்தா’
புரொடக்ஷன் நிர்வாகம் – எஸ்.வி.ராஜகோபால், டி.என்.ராஜகோபால்
ஸ்டூடியோ நிர்வாகம் – டி.வி.வைத்யநாதன்
ஃப்ளோர் இன்சார்ஜ் – சாரதா – என்.பஞ்சாபிகேசன், பி.எஸ்.கீர்த்திவாசன், மைக்கேல்
அரங்கம் – பி.ஆர்.ராமனாதன், ராம்மூர்த்தி
அரங்க நிர்மாணம் – சாரதா – மதுரை கிருஷ்ணன், வீர்ராகவன்
ஓவியம் – ஆர். முத்து, வி.பரமசிவம்
மோல்டிங் – சிதம்பரம், ஜெயராமன்
Printed and Processed at ஜெமினி ஸ்டூடியோஸ் லேபரட்டரி, சென்னை - 6

ஒளிப்பதிவு டைரக்டர், தந்திரக்காட்சிகள் – கே.எஸ்.பிரசாத்
அஸோஸியேட் டைரக்டர் – கே.கே.சம்பத்குமார்
ஸ்டூடியோ – சாரதா (லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்)
இசை – திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்


திரைக்கதை வசனம் டைரக்ஷன் – ஏ.பி.நாகராஜன்

RAGHAVENDRA
5th December 2014, 10:30 PM
பொம்மை மாத இதழில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ssabathamAdfw.jpg

சரஸ்வதி சபதம் திரைக்காவியத்தின் விமர்சனம், குமுதம் 29.09.1966 இதழிலிருந்து..

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/SSabadhamreview.jpg

RAGHAVENDRA
5th December 2014, 10:33 PM
ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து




முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 3.9.1966

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4480a.jpg

100வது நாள் விளம்பரம் : தினமணி : 11.12.1966

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/SS100.jpg



குறிப்பு:
100 நாள் அரங்குகள் மொத்தம் ஏழு, அவையாவன:

1. சென்னை - சாந்தி - 133 நாட்கள்

2. சென்னை - கிரௌன் - 133 நாட்கள்

3. சென்னை - புவனேஸ்வரி - 133 நாட்கள்

4. மதுரை - ஸ்ரீதேவி - 104 நாட்கள்

5. கோவை - ராஜா - 104 நாட்கள்

6. சேலம் - சாந்தி - 100 நாட்கள்

7. திருச்சி - சென்ட்ரல் - 100 நாட்கள்

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
5th December 2014, 10:35 PM
அன்புச்சகோதரர் நெய்வேலி வாசு அவர்களின் பொக்கிஷத்திலிருந்து...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SarasvathiSabathamDVDRipXviDwwwdesibbrgcom.jpg

RAGHAVENDRA
5th December 2014, 10:37 PM
சரஸ்வதி சபதம் திரையரங்க ஒரிஜினல் பாட்டுப்புத்தகத்தின் முகப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/15yiuxj_zps162608da.jpg

RAGHAVENDRA
5th December 2014, 10:40 PM
பாடல் காட்சிகள்

ராணி மகாராணி

http://www.youtube.com/watch?v=WiukQ-1H2b0

அகர முதல எழுத்தெலாம்

https://www.youtube.com/watch?v=UTBqjfjR7OM

தெய்வம் இருப்பது எங்கே

https://www.youtube.com/watch?v=Ry7xzM477BI

பத்மினியின் நாட்டியம்

https://www.youtube.com/watch?v=H1ruu74-JiY

தாய் தந்த பிச்சையிலே

https://www.youtube.com/watch?v=U-zhB_T1ga4

யானைக் காட்சி

https://www.youtube.com/watch?v=YIPFopNqSos

கல்வியா செல்வமா வீரமா

https://www.youtube.com/watch?v=wDYIjKZwYO4

கோமாதா என் குலமாதா

https://www.youtube.com/watch?v=-26lPG-4wOU

உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி

https://www.youtube.com/watch?v=auJTPzuMbhI

RAGHAVENDRA
5th December 2014, 10:45 PM
நமது நண்பர் ராகேஷ் அவர்களின் விரிவான ஆய்வு

பதிவு செய்யப்பட்ட நாள் 9.12.2008

பதிவிற்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=348437&viewfull=1#post348437

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 5 பக். 122


Saraswathy Sabatham

Written & Directed by A.P. Nagarajan.
Music: K. V. Mahadevan
Starring, Nadigar Thilagam Sivaji Ganesan, Savithiri, Deviga, Padhmini, Gemini Ganesan, K.R. Vijaya, Nagesh, Manorama, and many others.



Disclaimer: I am treating the characters of this film as just that – movie characters. Not as gods and goddesses. That is in different forum. This is film forum, and is for the film industry alone. So, for the religious types, I apologise beforehand if you find anything offensive (Discussing APN’s religious epic hardly can offend), as I only treat them as fictional characters. Hope you can bear with me.



Imagine a debate session turned into a three hour movie. Well, in case of Saraswathy Sabatham, it becomes a very interesting and tremendously entertaining debate movie.

In Saraswathy Sabatham, three goddesses are in loggerheads with each other, and instead of zapping each other with their powers – as would other films with fueding deities would resort to – they decide to test it out with their chosen taskbearers.

The goddeses are Saraswathy played by the proto-Mery, Streep, Savithiri (I say this specifically because Streep reminds me of Savithiri, look-wise, and of course talent-wise too), with Letchumi played by super gorgeous Devika (now you know why they say “Mahaletchumi mathiri irukka) and Shakti by Padmini (good actress, better dancer).

The argument between them is simple: who is greater. It’s not the ego, but it’s more of competition between departments. All office going employees know this. Sales department thinks they are the heart of the organization. Marketing thinks they are the brain. The administration feel that they are the senses. “Oh yeah, without heart, human life cannot function” “You say that, without brain there is even no reason to live” etc. You know. You’ve been there.

This is the same thing that happens at the beginning of the movie. And the first 20 minutes of arguing and debating is so intense, and is so intellectual, I got brain tired. Granted I am not exactly a bright person, I did take time to absorb what is going on and what reasoning behind the arguments was.

The culprit behind the argument between these powerful goddess is none other than NOV. Sorry, I mean, the Loki of east, Narathar, played with adequate humour, mischief and with that twinkle in the eye that only NT can.

Carrying his Veenai (?) and the claps, swaying literally towards and from one goddess to another, Narathar becomes the victim of his own little joke as we discover later. I watched delightfully as he suffers comically trying to talk each other out.

But before I go on, I would like to remember this as more of a NT the Star epic, not NT the Actor masterpiece. This is an “issue film” with NT in it, not a character study that we need NT to suffer from on screen (we love to see him suffer onscreen, don’t we NT fans?). Granted the beginning scene of the mute requires NT the Actor, it moves on as he brings pure presence and charisma that assure us that, hey, take it easy, the good guy will take care of the situation.

As NT fans let’s get few things out of the way. The things we want from NT the Star.

a) laser sharp dialogue delivery – check.
b) Majestic walk – check
c) Outperforming composer, lyricist and singer during song sequence – check
d) Electrifying screen presence – check
e) Oozing charisma – check
f) looking good? – you betcha!

Alright, we got them out of the way. Let’s look at the issue.

It’s education versus power and wealth. It has been ongoing issue ever since the cavemen decided that thinking can get them one step ahead in search for survival. The wise one led, but later, the brave one did, and then, the ones which amassed wealth, got the wise ones to advice and the wealthy ones to finance, became the leader.

Kannadhasan was not joking when he wrote, “Kaasey-taan, kadavulapaa, andtha kadavullukm ithu theriyumapaa”, Kannadhasan was not kidding too when he said, in respect of people before him (and us), “Nam munoorgaal moodargal alla”. I look at this film and I agree, our recent munnoorgal, NT and the talents of his time, are not “moodargal.

Moving on, we realize now, that education, alas, became just the tool you needed occasionally to fix thing. In a poem, poet Vairamuthu wrote that Saraswathy (education) is washing dishes in a politician’s house.

The writer director A.P. Nagarajan understood this centuries old dilemma and covered the three cornered fight in a three hour cerebral visual extravaganza. And he did a brilliant job, not because he did well, but because he understood very well who the winner should be. He know what the poor and powerless among us, which is a majority, who worship knowledge, want as an outcome of this film.

Of course, throughout the course of the film, we know who the winner is, and also helped by the fact that the winner is played by NT. Of course, the climax tells you differently, but in the entire journey from the films start, you know where the filmmakers stand. Look at NT’s character and you know what I am talking about.

Once blessed with wisdom and powerful intellectual diction, NT’s Vidhyabathi is a cool cat that smiles his way to the victory even when subjected to some really intellectually insulting moments (you know by the look of his face that the others challenging them are morons and deserves kick in the rear ala Goundamani/Senthil), or physically torturous moments.

Note the moment in the temple, after the verbal clash with the queen. The people in the background (it’s always them!!) disses him for talking back to queen, to which he promptly response, “Selvaakku, Sollvaaakkai adakkalaamaa!”, and walks away disgusted, and clearly very irritated. Queen or not, don’t waste his time.

Later, when he walks into the palace when was challenged for a debate (he didn’t want to, his dad pressures him), he measures the scene as he walks and notes with a smirk that everything around him are just glitter and pompous nothing that should actually bow to his intellect. Oh, how I love that scene. NT, walking majestically, with that knowing smile in his face, looking at others like lion looking at the poor victim it has just forgiven and let go. Brilliant!

The film is full of bham, wham, and explosive moments that owes to brilliant writing by A. P. Nagarajan. When you feel one issue has been addressed, he throws in another. You have in one corner, a very self assured, and smiling Vidhyabathi, the wise one just wanting to throw himself in entirety into service to god. But on the other corners, are the prosperous queen (K.R. Vijaya delivering an average performance) and the courageous chief in command (Gemini Ganesan, who is basically miscast but did his best) are at each others throat as well. This is a much needed subplot because we know the wise one stays away from power struggle, he just wants to be one with the ultimate truth.

I keep moving away from what I should actually do: recommend this film to those who haven’t seen it. The new NT fans who should also appreciate great work by the writers and directors who knew how to utilize the talents of the greatest actor Tamizh film industry so far.

There is so much in this film that one or five viewing is not enough. As I told Joe recently, I watched it again in a space of one week (DVD, good copy) and I was again struck by the brilliance of it all.

My grouses? Oh, apart from the casting of KR. Vijaya and Gemini Ganesan, who did their best, I always have this nagging dissatisfaction for the composer K. V. Mahadecan’s background scores. Maamaa (as he is known in the industry) is excellent in composing songs. All the songs in this film are wonderful. But when it comes to background score, I am afraid I have been too spoilt by the mesmerizing hooks by M.S. Viswanathan.

I suppose I have said what I wanted to say. This film is now threatening to take over Karnan as my favourite Purana/historical epic Tamizh film. Of course, Karnan is huge…but this one has bigger brain.

Before I sign off, here is a parting shot by NT as Vidhyabathi when he is ordered to be taken as prisoner: “Nalla Aatchi, Uyarntha Arasu, Sirantha Talabathi….paavam makkal!”. Sounds familiar?


மேற்கண்ட பதிவிற்கு சகோ. சாரதா அவர்களின் பதில் பதிவு
அதற்கான இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=348632&viewfull=1#post348632
பதிவு செய்த நாள் 9.12.2008

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 5 பக்க. 128


டியர் ராகேஷ் (groucho070)

சரஸ்வதி சபதத்தை வித்தியாசமான கோணத்தில் ஆய்வு செய்திருந்த விதம் அருமை.

பாத்திரப்படைப்புகள் நம் மனதைக்கவர முக்கிய காரணங்களில் ஒன்று, பாத்திரத்திற்கேற்ற நாயகியரை ஏ.பி.என். தேர்ந்தெடுத்த விதம் சொல்லலாம்.

சாந்தமான சாவித்திரியை சரஸ்வதியாகவும் (நீங்கள் குறிப்பிட்டது போல்) அழகான தேவிகாவை லட்சுமியாகவும், விழிகளில் கோபத்தைக்காட்டும் பத்மினியை சக்தியாகவும் காண்பித்ததுடன் அவர்கள் அறிமுகமும் பாருங்கள் எவ்வளவு நேர்த்தி என்று.

மூவரில் சற்று பருமனான சாவித்திரியை கையில் வீணையுடன் அமர்ந்திருக்கும் நிலையில் அறிமுகம் ('கோமாதா' பாடலின் இடையில் வரும் இடையிசைச் செருகல்களை வாசிக்க கே.வி.எம்.மாமா இன்னொரு முறை பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்), அழகான (ஆனால் ஆடத்தெரியாத) தேவிகாவை நின்ற நிலையில் அறிமுகம், ஆட்டத்தில் கரைகண்ட பத்மினியையோ ஆடவைத்தே அறிமுகம் என ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து செய்திருக்கும் ஏ.பி.என்.னின் நுட்பமே தனி.

கடவுளர்கள் ஜோடிகளாகத் தோன்றுகிறார்களே தவிர (அதிலும் இதில் ஆண் கடவுளர்கள் டம்மிகள், சிவகுமார் உள்பட) ஆனால் அவர்களால் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவருக்குமே ஜோடிகள் இல்லை. அதாவது ஏ.பி.என். அதில் வெட்டித்தனமாக மெனக்கெடவில்லை.

அரசவையில் மாறி மாறி வாதம் செய்யும் அந்த மூவரையும் சற்று நிறுத்தி, அவர்கள் மேல், அரண்மனைத்தோட்டத்தில் பூப்பறித்துக்கொண்டிருக்கும் ஊமையையும், யாரோ போடும் மல்யுத்தத்தைக் கண்ணால் பார்க்கவே பயந்தோடும் கோழையையும், கிழிந்த உடையும் கையில் திருவோடும், பஞ்சடைந்த கண்ணுமாக பிச்சையெடுக்கும் பிச்சைக்காரியையும் சற்றே பொருத்திப்பாருங்கள்.... எப்பேர்ப்பட்ட கலைஞர்களையெல்லாம் நாம் பெற்றிருந்தோம் என்று நம் நெஞ்சு விரியும். ('பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானமா' இந்த வரிகளைக்கேட்கும்போதெல்லாம் படுபாவி கண்ணதாசனை உதைத்தால் என்ன என்று தோன்றுகிறதல்லவா?. கவிஞர் என்றால் அதற்காக இவ்வளவு திறமையா?).

ஆளுக்கு ஆள், மனத்துக்கு மனம் சுவைகள் வேறுபடலாம். அந்த வகையில் இன்னும் எனமனதில் 'ராணி மகாராணி, ராஜியத்தின் ராணி' பாடல் தேவைதானா என்றே தோன்றுகிறது. அது வித்யாபதியின் தரத்தைச் சற்று கீழிறங்கச்செய்வது போலில்லையா?. நரஸ்துதி பாடுவதில்லை என்றவர் அந்நிலையிலேயே உறுதியாக நின்றிருக்க வேண்டாமா?. இது என் கருத்து. அதே சமயம் இன்னும் சிலருக்கு இதுவே படத்திலுள்ள சிறந்த பாடலாக தென்படக்கூடும். அதற்குத்தான் முதலிலேயே பீடிகையைப்போட்டுவைத்தேன்.

இப்படம், புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கற்பனைக்கதையைத் தழுவி உருவானதுதான். 'திருவிலையாடலை'ப் போல புராணங்களில் இருந்தோ, 'கர்ணனைப்'போல இதிகாச சரித்திரங்களில் இருந்தோ பிறந்தது அல்ல என்பதால் அவற்றை விட இது சற்று மாற்றுக்குறைவு என்பது உண்மைதான் (சுவை சற்று கூடியிருக்கலாம்). இதுவும் தனிப்பட்ட என் கருத்துதான். மற்றவர்கள் வேறுபடலாம், (சூப்பர் ஸ்டார் உள்பட). அதில் தவறில்லை.


முரளி சாரின் பதில் பதிவு

பதிவு செய்த நாள் – 9.12.2008
இதற்கான இணைப்பு -
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=348737&viewfull=1#post348737

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி பாகம் 5 பக். 131



Rakesh,

Excellent. I know that something is cooking when you said that you had been writing the review. But when it got delayed, I thought that you were getting into the nuances. But this angle is different.

Now coming to the film, at the very outset it had a unique thing. An actor playing two different roles but not blood related ones. Though this was earlier tried by Chandrababu, this was the first time it was tried in a mythological film and that too by a Hero.

Rakesh, as you rightly said, the film is out and out based on an argument and if you care to check, the events that unfold on the screen would be so fast paced that you would start to feel that the story is happening on a single day.

I would say APN as a dialogue writer was brilliant. The arguments he advanced on behalf of all the three were interesting and the special attraction was he used them to highlight the situations that were prevailing at that point of time. While talking about Veeram, APN pinpointed the Chinese and the Pakistani aggression that happened a year before the release of SS. [1965 Sep - Pak War and 1966 Sep 3rd - SS release]. The dialogue would be something like this வீரம் மட்டும் இல்லையென்றால் அந்நிய நாட்டான் நமது நாட்டின் மீது படை எடுக்கிறான், நமது பகுதியை வசமாக்கி கொள்ளப் பார்க்கிறான்.

Kannadasan's pen had a field day for this movie. The lyrics were extraordinary. The one you left out, Kalviyaa Selvamaa Veeramaa, had seperate charanams for all the three. Especially the lines

படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா; பொருள்
படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா;
படித்தவன் படைத்தவன் யாராயினும்
பலம் படைத்து விட்டால் அவனுக்கு இணையாகுமா

summarised the happenings of the world.

அகர முதல எழுத்தெல்லாம் was a class on its own. Kannadasan had once said that it was a challenge thrown by APN at him when he asked him to start every line with a உயிரெழுத்து. Mama tuned the lyrics after it was written. TMS was at his very best. But of course that one man simply beat all of them hands down.

Regarding Rani Maharani, it was included for the common man (like பார்த்தா பசு மரம்) and that proved a great hit.

Vidyapathi was created out and out for NT. The transformation from a dumb to the man with a gift of the gab was superbly done by NT. The make up and the costume and the hair do all added up. Especailly the blue silk costume. The entire theatre would be waiting for that moment. When KRV asks the pulavar to be brought in, the question GG asks and KRV replies would add pep.

யாரந்த புலவர்?

வருவார் பாருங்கள்.

காமிரா திரும்ப, நடையிலே நூறு வகை காட்டியவன் ராஜ நடை நடந்து உள்ளே நுழைந்து, ராகேஷ் சொன்னது போல எனக்கு முன் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம் என்ற பார்வையை முகத்திலே தவழ விட்டு அங்கே வீசப்படும் கேள்விகளையெல்லாம் அலட்சியமாக எதிர் கொண்டு இறுதியில் சிறை தண்டனை பெற்று போகும் வரை அங்கே அரங்கேறும் ஸ்டைல் யாராலும் வெல்ல முடியாத ஒன்று.

ஆலய தரிசனத்தின் போது ராணியின் கண்கள் அலை பாய்வதை கண்டு ஒரு விஷம புன்னகையுடன் "அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிப்பாடில்லை" என்று பாடுவது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

One interesting info was in the climax, when the elephant comes for beheading Vidyapathi, NT acted without dupe. You could see him lying down when the elephant lifts his leg. Ganesha was aware of Ganesan and no harm came.

Rakesh, never thought that I am going to write down so much when I opened the PC. Your post made me to.

RAGHAVENDRA
5th December 2014, 10:48 PM
சரஸ்வதி சபதம் நிழற்படங்கள் .. பல்வேறு இணையதளங்களிலிருந்து..

http://i.ytimg.com/vi/OHDLyB70GJo/0.jpg

http://cinemachaat.files.wordpress.com/2012/05/saraswathi_sabatham_poster.jpg

http://v019o.popscreen.com/eHk4cTVtMTI=_o_nagesh-comedy---saraswathi-sabatham-tamil-movie-scene-.jpg

http://v027o.popscreen.com/TXNqTFY0d0Z2ZzQx_o_saraswathi-sabatham-tamil-movie-scene---sivaji-ganesan-.jpg

http://i.ytimg.com/vi/N8yynJrapOQ/hqdefault.jpg

http://cinemachaat.files.wordpress.com/2012/05/saraswathi-and-brahma.png?w=300&h=225

http://i.ytimg.com/vi/BxnJAnaihfs/hqdefault.jpg

http://sim05.in.com/2/f2b46df53b068878349a2c572a4e01b8_ls_t.jpg

http://s1.dmcdn.net/BOtis/x240-pmo.jpg

http://cinemachaat.files.wordpress.com/2012/05/matching-pink-outfits.png

RAGHAVENDRA
23rd December 2014, 08:50 AM
Sivaji Ganesan Filmography Series

109. Selvam செல்வம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Selvam1-1.jpg?t=1321356088

தணிக்கை – 07.11.1966
வெளியீடு – 11.11.1966
தயாரிப்பு – வி.கே.ஆர். பிக்சர்ஸ்
நடிக நடிகையர் –
நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், கே.ஆர்.விஜயா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், எம்.வி.ராஜம்மா, பத்மஸ்ரீ வி.நாகையா, எம்.எஸ்.சுந்தரிபாய், ரமாப்ரபா
கௌரவ நடிகர் – நாகேஷ்
இசை – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவேன்
நாதஸ்வரம் – சைதாப்பேட்டை நடராஜன் & பார்ட்டி
நடனம் – விஜயராணி, பானுமதி, சுகுணா
காமிரா – ஆர்.சம்பத்
கலை – பி. நாகராஜன்
எடிட்டிங் – ஆர். தேவராஜன்
மூலக்கதை – பி.எஸ்.ராமய்யா
வசனம் உதவி – கோமல் ஸ்வாமிநாதன்
பாடல் ஒலிப்பதிவு ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி, சாரதா ஸ்டூடியோ
வசனம் ஒலிப்பதிவு – கே.ஆர்.ராமசாமி
நடன அமைப்பு – பி.எஸ்.கோபால கிருஷ்ணன்
மேக்கப் – ரங்கசாமி, தனகோடி, பத்மனாபன், மாணிக்கம், ரவீந்திரன்
ஆடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன், நடராஜன், குப்புசாமி
விளம்பரம் – எலிகண்ட்
ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ்
விளம்பர டிஸைன்ஸ் – பக்தா
பிராசஸிங் – பி.எம். விஜயராகவலு-விஜயா லேபரட்டரி
புரொடக்ஷன் நிர்வாகம் – முகிலன்
ஸ்டூடியோ – சாரதா, பிரசாத், பரணி
வி.கே.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகம் – வி.கே.முத்துராமலிங்கம்
தயாரிப்பு – வி.கே. ராமசாமி
திரைக்கதை வசனம் டைரக்ஷன் – இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
***

செல்வம் விளம்பரம் மற்றும் பத்திரிகை கட்டுரைகளின் நிழற்படங்கள் ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து



முதல் வெளியீட்டு விளம்பரம் : குமுதம் : 1966
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5115-1.jpg


நடிகர் திலகம் பற்றி அவரது ஆருயிர் நண்பர் - "செல்வம்" தயாரிப்பாளர் திரு.வி.கே.ஆர்.

வரலாற்று ஆவணம் : கல்கி : 20.4.1997
['கல்கி' வார இதழில் விகேஆர் எழுதிய 'தேரோட்டம்' தொடரிலிருந்து...]

முதல் இரண்டு பக்கங்கள்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5116-1.jpg

முதல் பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5117-1.jpg
இரண்டாவது பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5118-1.jpg

மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5119-1.jpg

சிறப்பு வண்ணப் புகைப்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Selvam1-1.jpg

RAGHAVENDRA
23rd December 2014, 08:53 AM
வாசு சாரின் தயவில் செல்வம் படத்தின் அட்டகாசமான நிழற்படங்கள்.. மேலே உள்ள பதிவில் முதலில் உள்ள படமும் வாசு சாரின் உபயமே.

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/109.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1VOB_000891656.jpg?t=1321354794

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1VOB_002446296.jpg?t=1321355129

RAGHAVENDRA
23rd December 2014, 08:55 AM
காணொளிகள்

இதுவரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு

https://www.youtube.com/watch?v=v0vaEBlJAt8

அவளா சொன்னாள்

https://www.youtube.com/watch?v=7YPCHYNItqk

உனக்காகவா நான் எனக்காகவா

https://www.youtube.com/watch?v=hyLXwmeg6Vw

இதே பாடல் வாழையடி வாழை படத்தில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=-ZB5GB9YuCs

RAGHAVENDRA
23rd December 2014, 08:56 AM
செல்வம் படத்தினைப் பற்றி மிக விரிவாக எழுத வேண்டி உள்ளதால் பாடல்களைப் பற்றிய விவரங்களும் அவற்றுடன் இடம் பெறும்.

RAGHAVENDRA
24th December 2014, 12:42 AM
Sivaji Ganesan - Definition of Style 12


செல்வம் - அணு அணுவாக ரசிக்க வேண்டிய உன்னதத் திரைக்காவியம்...

இறைவா உனக்கு கோடான கோடி நன்றிகள்... இந்த நூற்றாண்டில் நான் பிறந்ததற்கு, இந்த யுகபுருஷன் காலத்தில் வாழ்ந்ததற்கு, அவருடன் பழகும் வாய்ப்புத் தந்தமைக்கு..


எத்தனை விதமான முகபாவங்கள்.. ஒவ்வொரு ஃப்ரேமிலும் கலக்கும் நடிகர் திலகம்..

முழுப்படத்தையும் முழுதுமாய் விவரிக்க கொள்ளை ஆசை..

பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதை வைத்துக்கொள்வோம்..

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக இப்போது..(காட்சியைப்பற்றிய வர்ணனையைத் தொடரும் வண்ண எழுத்துக்களில் இடம் பெற்றுள்ள வாக்கியங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பறறிய குறிப்புகள்)

குறிப்பு..
காணொளியில் இக்காட்சி 1.16.20 ல் தொடங்குகிறது.

https://www.youtube.com/watch?v=v0vaEBlJAt8

செல்வம் வள்ளியை விரும்புகிறான்.. அவள் மேல் தீராத மோகமும் காதலும் கொண்டிருக்கிறான். அவன் தாயாரோ முறைப்பெண்ணை அவனுக்குக் கட்டி வைக்க விரும்புகிறாள்.. அவளைப் பார்க்கும் போதெல்லாம் செல்வத்திற்கு வள்ளியின் முகமே நினைவுக்கு வருகிறது.
தன் மனப்போராட்டத்தில் ஜெயிக்க முடியாமல் வள்ளியைப் பார்க்கக் கிளம்பி விடுகிறான்.
வள்ளியின் வீட்டுக்கு வருகிறான்.
பின்பக்கத்தில் துளசி மாடத்தில் வள்ளி பூஜை செய்வதைப் பார்க்கிறான்.
...இந்த இடத்தில் வாயிற்கதவருகில் நின்று நடிகர் திலகம் பார்க்கும் பார்வையை கவனியுங்கள்.. இந்தப் பார்வையில் ஓர் தாபம் தென்படுகிறது.

அந்த சூழ்நிலை அவனுக்குள் ஒரு தாபத்தை ஏற்படுத்துகிறது..
வள்ளியிடம் நெருங்குகிறான்..
சுற்றுமுற்றும் பார்த்தவாறே அப்பா இல்லே எனக் கேட்டு அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்கிறான்..
அப்பா இல்லே என்று கேட்கும் போது வாய்ஸ் மாடுலேஷனைக் கவனியுங்கள் ... அ என்ற எழுத்து ஹ என்று ஒலிக்கும்.. அந்த ஹ விலேயே அந்த விரக தாபம் வெளிப்படுவதை உணரலாம்

வரத்துக்கு ரொம்ப நேரமாகும்னு சொல்லு என்றவாறே அவளைத் தீண்டுகிறான்... இதை எதிர்பாராத வள்ளி சற்றே அச்சமும் நாணமும் மேற்கொண்டு விலகி ஓடுகிறாள்..
அவளைத் தொட முற்படும் போது நடையில் ஒரு வேகத்தைக் கூட்டுவதை கவனியுங்கள்..இதே சமயம் அந்த அச்சமும் நாணமும் கலந்த உணர்வை கே.ஆர்.விஜயா அற்புதமாக வெளிப்படுத்துவதை கவனியுங்கள்.

இனிவரும் விநாடிகளில் மௌனம்.. இருவருமே விரகத்தில் ஏங்கத் துவங்குகின்றனர்.. வள்ளி பெண்மைக்கே உரிய எச்சரிக்கை உணர்வை மேற்கொள்கிறாள்.

இப்போது நடிகர் திலகம், கே.ஆர்.விஜயா இருவருமே போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் இருவரையும் மீறி அங்கே இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி.யின் திறமை வெளிப்படுகிறது. கால்களை ஒரு வித்தியாசமான கோணத்தில் வைத்துக் கொண்டு கைகளை பாக்கெட்டின் அருகே கொண்டு சென்று நடிகர் திலகம் அபிநயம் புரியும் ஸ்டைல்.. இதைப் பார்த்து நாணத்தோடு கே.ஆர்.விஜயா சிரிக்கும் போது அவரும் ஸ்கோர் செய்து விடுகிறார்.

செல்வம் உள்ளே நுழையும் போது வேகமாக ஒலிக்கும் பாங்கோஸ் இசை இப்போது மீண்டும் வேகமெடுக்கிறது.
அவள் குடத்தை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டுச் செல்ல முற்படுகிறாள்.
செல்வம் அவளைக் கேட்கிறான் ஏன் சிரிக்கிறாய் என.
அதற்கு அவள் சொல்கிறாள். உங்களை நான் எத்தனை நாள் பார்த்திருக்கிறேன்.. எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்.. எனக் கேட்கிறாள்..
இப்போது இந்தக் கட்டத்தில் நடிகர் திலகத்தின் கைகளை கவனியுங்கள்.. கைகளைப் பின்னால் கட்டியவாறே விரல்களால் அபிநயம் புரிகிறார்.

அவள் சிலேடையாக சொல்கிறாள்.. நான் பார்க்காததெல்லாம் உங்கள் முகத்தில் இருக்கு
அதற்கு அவன் கேட்கிறான். என்ன இருக்கு...
அவள் சொல்கிறாள்.. என்னென்னவோ இருக்கு..

இப்போது சிணுங்கிக் கொண்டே நடிகர் திலகம் சொல்வதைக் கேளுங்கள்.. ம்ஹேஹே... அது மனசிலிருக்கு என்று சொல்லும் போது குரலில் ஏற்படும் மாற்றத்தைக் கேளுங்கள்..எவ்வளவோ என்று சொல்லிக்கொண்டு கை விரலை வாயருகில் கொண்டு சென்று சட்டென்று எடுத்து விடுகிறார்..நான் எப்படி என்று வரியை முடிக்காமலே சமாளிக்க முற்படுகிறார்...

தன் மனசில் எத்தனையோ இருக்கிறது என்கிறார்.. அவள் அதை என்னவென்று கேட்கிறாள்...
பாடல் துவங்குகிறது.

இப்போது இந்தப் பின்னணியில் இப்பாடலைப் பாருங்கள்..

தமிழ்த்திரையுலக வரலாற்றில் மோகத்தையும் தாபத்தையும் இவ்வளவு அழகாக கொண்டு வந்த காட்சி வேறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை..

RAGHAVENDRA
24th December 2014, 01:16 AM
http://www.vallamai.com/wp-content/uploads/2014/09/K.V.M..jpg

செல்வம் படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்துடன் சேர்ந்து கதாநாயக அந்தஸ்தைப் பகிர்ந்து கொள்பவர் திரை இசைத் திலகம் எனலாம்.
இவரைத் தவிர வேறு யாரையும் இப்படத்திற்கு இசையமைப்பாளராய் நினைத்துப் பார்க்க முடியவில்லை, மெல்லிசை மன்னர் உள்பட..
ஒவ்வொரு காட்சியிலும் திரை இசைத் திலகத்தின் பின்னணி இசை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள்ளும் ஜீவனைப் புகுத்தி இத்திரைப்படத்தை காவியமாக்கியுள்ளது.
பாடல்கள்... அந்தந்த உணர்வுகளை மிகச்சிறப்பாய் வெளிக்கொணரும் காரணிகளாய் விளங்குகின்றன..

கேவி.மகாதேவனின் இசை வரலாற்றில் ஒரு மைல்கல் செல்வம் திரைக்காவியம்..

சரியான இசையமைப்பாளரை இத்திரைக்காவியத்திற்கு தேர்வு செய்த வி.கே.ஆருககும் அவரை நன்கு பயன்படுத்திக்கொண்ட கே.எஸ்.ஜி. அவர்களுக்கும் நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
24th December 2014, 07:59 AM
செல்வம் திரைக்காவியத்தைப் பற்றிய முரளி சாரின் ஆய்வு...



செல்வம் - Part I


தயாரிப்பு: வி.கே.ஆர். பிக்சர்ஸ்

திரைக்கதை வசனம் இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

வெளியான நாள்: 11.11.1966


[இந்தப் படத்தைப் பற்றி NOV ஏற்கனவே ஒரு விமர்சனம் எழுதியிருப்பதால் இங்கே சுருக்கமாக கதை. NOV எழுதியதன் லிங்க் http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=675].

ஊரில் பெரிய பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசு செல்வம். தந்தை இல்லை. தாய் மட்டுமே. தாய் ஜாதகத்திலும் ஜோஸ்யத்திலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். ஜோஸ்யர் கிழிக்கும் கோட்டை தாண்டாதவர். வெளிநாடு சென்று படித்து விட்டு வரும் செல்வம் சொந்த ஊரில் ஒரு உர தொழிற்சாலையை நிறுவி வெளிநாட்டு நிபுணரை வரவழைத்து தொழிலாளிகளுக்கு பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்கிறான்.

செல்வத்திற்கு இரண்டு மாமன்கள். ஒருவர் செல்வம் வீட்டிலேயே இருக்கிறார். அவருக்கு ஒரு மகள். அடுத்த மாமா அதே ஊரில் தனியாக வசிக்கிறார். அவர் மகள் வள்ளி. செல்வமும் வள்ளியும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறார்கள். அது அனைவருக்கும் தெரியும். செல்வத்தின் அம்மா இவர்கள் இரண்டு பேரின் ஜாதகங்களை ஜோஸ்யரிடம் காண்பிக்க இந்த திருமணம் நடந்தால் ஒரு வருடத்தில் செல்வம் இறந்து விடுவான் என்று சொல்லி விடுகிறார். செல்வத்தின் தாய் வள்ளியிடம் சென்று தன் மகனை மறந்து விடும்படி சொல்கிறாள். செல்வம் வந்து கேட்டால் அவனை பிடிக்கவில்லை என்று சொல்ல சொல்கிறாள். அவளும் அப்படியே சொல்ல செல்வம் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைக்கிறான்.

ஆனால் செல்வத்தால் வள்ளியை மறக்க முடியவில்லை. ஒரு வேகத்தில் அவளையும் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு செல்ல அங்கே வள்ளி திருமணம் நடைபெறப் போகும் நேரம். முருகன் வள்ளி திருமாங்கல்யத்தை எடுத்து செல்வம் வள்ளி கழுத்தில் கட்டி விடுகிறான். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் செல்வத்தின் தாய் அவர்களை ஏற்றுக் கொள்கிறாள். மீண்டும் ஜோஸ்யரை நாட அவர் ஒரு பரிகாரம் சொல்கிறார். அதாவது கணவன் மனைவி ஒரு வருடம் சேராமல் இருந்தால் இந்த தோஷம் நீங்கி விடும் என்று சொல்ல செல்வமும் வள்ளியும் அதை ஏற்றுக் கொள்கின்றனர். வள்ளி அவள் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.

ஜோஸ்யர் மேலும் ஒரு விஷயம் சொல்கிறார். செல்வத்திற்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தால் இந்த தோஷம் நிரந்தரமாக விலகி விடும் என்று. செல்வத்தின் தாய் வீட்டோடு இருக்கும் தன் தம்பியிடம் வெளியூரிலிருக்கும் அவன் மகளை வரவழைக்க சொல்கிறாள். உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாத அந்த மாமன் மகளின் அருகாமை செல்வத்தை சற்றே சலனப்படுத்த அவன் அதிலிருந்து மீள்கிறான். செல்வத்தை பார்த்துக் கொள்ள ஊரிலியே ஒரு பெரிய டாக்டர் ஏற்பாடு செய்யப்படுகிறார். இளமை உணர்வுகளால் தூண்டப்படும் செல்வம் வள்ளியை காண அவள் வீட்டிற்கு செல்ல அவள் அவன் செய்துக் கொடுத்த சத்தியத்தை நினைவுபடுத்தி அவனை திருப்பி அனுப்பி விடுகிறாள்.

வீட்டில் இருக்க பிடிக்காமல் தொழிற்சாலை கெஸ்ட் ஹௌசில் டாக்டருடன் போய் தங்குகிறான் செல்வம். அங்கே டாக்டரிடம் தன் நிலைமையைப் பற்றி விவாதிக்கிறான். மூட நம்பிக்கைகள வேண்டாம் என்றும் நேர் வழியில் சென்றால் நிச்சயம் நன்மைகளே விளையும் என்கிறார் டாக்டர். அடுத்த அறையில் வெளிநாட்டு நிபுணரும் அவர் மனைவியும் நெருக்கமாக ஆடும் நடனம் செல்வத்தின் உணர்வுகளை தூண்டி விட தன் மனைவியை தேடி போகிறான். முதலில் தடுக்கும் வள்ளி பின் செல்வத்தின் நிர்பந்தத்தினால் உடன்படுகிறாள். செல்வத்தை தேடி வரும் டாக்டர் மட்டும் விஷயத்தை தெரிந்துக் கொள்கிறார். செல்வத்தின் வீட்டில் இருக்கும் பெண்மணி வள்ளி வீட்டு வாசலில் கார் நிற்பதையும் செல்வமும் டாக்டரும் வள்ளி வீட்டிலிருந்து வெளியே வந்து கார் ஏறி செல்வதை பார்த்துவிட்டு செல்வத்தின் தாயிடம் போய் சொல்கிறாள். செல்வத்தின் தாய் வள்ளியை மீண்டும் அவர்கள் வீட்டிற்கே கூட்டி செல்கிறாள்.

இதற்கிடையில் வள்ளி கர்ப்பமடைக்கிறாள். இதை செல்வத்தின் தாய்க்கு தெரியாமல் மறைக்கும் பொறுப்பு டாக்டரின் தலையில் விழுகிறது. ஜோஸ்யர் கொடுத்த ஒரு வருட கெடு முடியும் நாள் நெருங்க நெருங்க செல்வத்திற்கும் பயம் தோன்ற ஆரம்பிக்கிறது. ஜாதகத்தில் நம்பிக்கை என்பதை விட தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோமே அதன் மூலம் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று மனதளவில் குழம்ப குழம்ப, பரிகாரங்களும் பூஜைகளும் முழு வீச்சில் நடைபெற அந்த கெடுவின் கடைசி நாளும் வர அந்த இறுதி நிமிடங்கள், அந்நேரம் அரேங்கேறும் புதிய திருப்பங்கள், ஜோசியம் பலித்ததா, செல்வத்தின் நிலைமை என்ன வள்ளியின் நிலை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

அன்புடன்

(தொடரும்)

பதிவிட்ட நாள் நேரம் 14th December 2010, 09:25 PM

பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7&p=596383&viewfull=1#post596383




செல்வம் - Part 2

இந்தப் படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் படங்களின் generic nature என்று சொல்வோமே அதில் ஒரு மாற்றத்தை ஆரம்பித்து வைத்த படம் என்று சொல்லலாம். அதுவரை அவர் படங்கள் என்றாலே சீரியஸ் கதைகள் அழுத்தமான காட்சியமைப்புகள் என்ற நிலையிலிருந்து ஒரு light hearted படம் என்ற மாறுதலை கொண்டு வந்த படம். இதற்கு முன்னரே அவர் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, பலே பாண்டியா போன்ற இவ்வகைப் படங்கள் செய்திருக்கிறார் என்றால் கூட அவை அழுத்தமான படங்களுக்கு நடு நடுவே வந்தவை. அது மட்டுமல்ல இவை மூன்றும் முறையே 1954,58,62 -ம் ஆண்டுகளில் வந்தவை. அவற்றை தொடர்ந்து அது போன்ற படங்கள் வரவில்லை. ஆனால் செல்வம் வெளிவந்த பிறகு இந்த light hearted படங்கள் வரிசையில் ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், அஞ்சல் பெட்டி 520, சுமதி என் சுந்தரி என்று வரிசையாக வெளியாக ஆரம்பித்தன.

நடிகர் திலகம் இந்த செல்வம் பாத்திரத்தை ப்பூ என்று ஊதியிருப்பார். தாயை மிகவும் நேசிக்கிற தாயின் உணர்வுகள் புண்படக் கூடாது என்று நினைக்கிற மகன், அதே நேரத்தில் சின்ன வயதிலிருந்தே தான் நேசித்த கல்யாணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்ட முறைப்பெண், ஜாதக தோஷம் காரணமாக அந்த முறைப்பெண் தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என்கின்ற போது என்னமாய் அதை வெளிப்படுத்துகிறார்! அவரின் அறிமுக காட்சியிலே முறை பெண்ணின் மீது உள்ள ஆசை வெளிப்பட்டு விடும். காரின் ஜன்னல் வழியாக தலையை எட்டிப் பார்த்துக் கொண்டே வரும் செல்வம், அவள் இருக்கும் இடம் வந்தவுடன் இறங்கி ஓடிவந்து பேசும் இடம், மாமா வீட்டிற்கு போகும் இவரைப் பார்த்தவுடன் கதவை திறக்காமல் விஜயா நிற்க, இவர் ஒளிந்துக் கொண்டு விஜயா கதவை திறந்தவுடன் சட்டென்று உள்ளே நுழைந்து விஜயாவிடம் வம்பு
பண்ணுவது இங்கேயெல்லாம் இளமை துள்ளும் நடிகர் திலகத்தை பார்க்கலாம். சின்ன சின்ன கிண்டல் வசனங்களை ஒரு comic sense கலந்து பேசுவதில் எப்பவுமே நடிகர் திலகம் பிரமாதப்படுத்துவார். இதிலும் அதை நிறைய பார்க்கலாம். அம்மாவின் ஜோஸ்ய மற்றும் சாஸ்திர சம்பிரதாய அதீத நம்பிக்கைகளை கிண்டல் செய்வதாகட்டும் [குளிப்பதற்கு நல்ல நேரம் போய்விடப் போகிறது என்று சொல்லும் அம்மாவிடம் இரண்டு வருஷத்திலே நிறைய improvement], கல்யாணத்தைப் பற்றி விஜயாவிடம் பேச அவர் பத்துக்குள்ளே ஒரு நம்பர் சொல்லுங்க என்று கேட்க நாசமாப் போச்சு என்று சலிப்பதாகட்டும், அந்த கிண்டல் வெளிப்படும் இடங்களை ஜாலியாக பண்ணியிருப்பார். வெளிநாட்டிலே என்ன படிச்சிட்டு வந்தே, என்ன செய்யப் போறே என்று கேட்கும் மாமனிடம் என்ன செய்யப் போறேன் என்பதை அவர் விவரிக்கும் இடம் வெகு வெகு இயல்பு.

தன் அத்தையின் சொல்படி வீடு தேடி வரும் சிவாஜியை பிடிக்கவில்லை என்று கதவை திறக்காமலே விஜயா சொல்லிவிட அதுவரை அமைதியாக இருக்கும் நடிகர் திலகத்தின் முகம் அப்படியே மாற, என்னை ஏன் வெறுக்கிறே என்று கேள்வி கேட்டு பதில் இல்லாமல் திரும்பி போக எத்தனிக்கும் போது, விஜயா கதவை திறக்க சிவாஜி கோவத்தில் காரணம் சொல்லு என்று அவள் கழுத்தைப் பிடிக்க மாமா நாகையா அவர் வேறொருவருக்கு மனைவியாக போகிறவ, அவளை தொட்டு பேசாதே என்று சொல்ல கோவத்தில் வார்த்தை வராமல் ஓஹோ! வேறொருவனுக்கு மனைவியா, பாக்கிறேன் எவன்னு பாக்கிறேன் என்று விருட்டென்று திரும்பி போவதில் ஆரம்பித்து அந்த கோவம் சற்றும் குறையாமல் வீட்டிற்கு சென்று தன் தாயிடம் அவ மனசை யாரோ கலைச்சிருங்காங்க அவங்க மட்டும் என் கையில் கிடைச்சா-னு ஆத்திரத்தை கொட்டுவது, உடனே மாமா வீட்டிலே போய் பேசணும்-னு அம்மாவை வற்புறுத்துவது, அம்மா இப்போது வேண்டாம் என்று சொன்னவுடன் சரி என்று அரைகுறை மனசுடன் மாடிப்படி ஏறுவது, திடீரென்று சடசடவென்று இறங்கி வந்து அவ எப்படிமா இப்படி சொன்னா என்று குமுறுவது மீண்டும் அம்மா சொல்படி படியேறி விட்டு ஆற்ற முடியாமல் இறங்கி வந்து குலுங்குவது - இந்த இடங்களில் ஒரு நடிப்பு சாம்ராஜ்யத்தையே நடத்தியிருப்பார். தனக்கு இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து வைப்பதற்கு ஊரிலிருந்து வரவழைக்கப்பட்ட மற்றொரு மாமன் மகளின் அருகாமை தன்னை எப்படி சலனப்படுத்துகிறது என்பதை அவர் ரங்காராவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கி தயங்கி சொல்லும் இடம் இன்னொரு class act.

தன்னை அலைகழிக்கும் உணர்வுகளை அடக்க முடியாமல் மனைவியை தேடி போக அங்கே எங்க வந்தீங்க என்ற மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முகம் அஷ்டகோணலாக மாற, உங்களை சின்ன வயசிலிருந்து பார்த்திட்டு இருக்கேன், ஆனா இன்னிக்கு உங்க முகத்திலே இருக்கிறதை மாதிரி பார்த்ததேயில்லை என்று மனைவி சொல்ல என் மனசிலே இருக்கிறதை எப்படி சொல்லுவேன்-னு கேட்கும் அந்த இடம், கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்-ல் நெருக்கமாக இருக்கும் வெளிநாட்டு தம்பதியினரைப் பார்த்தவுடன் அவருக்குள் ஏற்படும் அந்த தவிப்பு, உடனே மீண்டும் மனைவியை நாடி செல்ல, மனைவி தடுக்க எதையுமே அனுபவிக்காம நான் போயிட்டேனா என்று சுய இரக்கம் கொள்ளும் இடம், இவை எல்லாமே எந்த கதையானாலும் தன் நடிப்பு என்றுமே சுடர் விட்டு பிரகாசிக்கும் என்பதை நடிகர் திலகம் உணர்த்தும் இடங்கள். தன் உணர்வுகளுக்கு வடிகால் கிடைத்தவுடன் உண்மை நிலை உறைக்க தாய்க்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோமே அதன் மூலம் ஆபத்து வந்து விடுமோ என பயப்படும் இடங்கள் எல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம். கிளைமாக்ஸ் காட்சி அவர் மேல் இன்னும் அழுத்தமாக அமைக்கப்பட்டிருந்தால் அவர் நடிப்பின் சிறப்பை இன்னமும் ரசித்திருக்கலாம்.

கே.ஆர்.விஜயா நாயகி. நடிகர் திலகத்தோடு புன்னகை அரசி ஜோடியாக நடித்த முதல் படம். இதற்கு முன்பு கை கொடுத்த தெய்வம், சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும் ஜோடியாக நடிப்பது இந்தப் படத்தில்தான் ஆரம்பித்தது. பின்னாளில் நடிகர் திலகத்தோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமையை பெறுவதற்கு இந்த படமே தொடக்கமாக இருந்தது.

சில நேரங்களில் வெகு இயல்பாக இருக்கும் விஜயாவின் நடிப்பு சில நேரங்களில் melodrama-வாக இருக்கும். உன் அத்தானை நீ கல்யாணம் செய்துக் கொள்ள கூடாது என தன் அத்தை சொல்லும் போது அந்த அதிர்ச்சியை இயல்பாக வெளிப்படுத்தும் அவர், சில வசனங்கள் முடிந்த பிறகு சொல்றது நீங்கதானா, கேட்கறது நான்தானா என்று பேசும் இடம் ஒரு உதாரணம். கதைப்படி இப்படிப்பட்ட ஒரு இருதலைக் கொள்ளி காரக்டர் என்பது ஒரு சவாலான பாத்திரம் படம் வெளிவந்த காலக்கட்டத்தின் தன்மையை மனதில் கொண்டு பார்த்தால் பெரிதாக குறை சொல்ல முடியாதபடி நடித்திருப்பார்.

ஜோஸ்யத்தின் மீதும் ஜாதகத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்ட தாயாக எம்.வி.ராஜம்மா அதை நன்றாக செய்திருப்பார். கே.எஸ்.ஜி.யின் படங்களில் தவறாமல் இடம் பெறும் இருவர் இதிலும் உண்டு. ரங்காராவ் மற்றும் சகஸ்ரநாமம். இருவருமே தங்களின் இயல்பான நடிப்பிற்கு புகழ் பெற்றவர்கள். இதில் ரங்காராவிற்கு டாக்டர் வேடம், நகைச்சுவை கலந்த அந்த வேடத்தில் கலக்கியிருப்பார் SVR. எல்லாவற்றையும் விளக்கிவிட்டு ஒவ்வொரு முறையும் புரியுதா என்று கேட்டுவிட்டு வரும் பதிலில் திருப்தி இல்லாமல் என்ன புரிஞ்சுதோ என்று கேட்டு விட்டு போவது அவரின் முத்திரை. காமடியும் கை வந்த கலை என்று சொல்லாமல் சொல்கிறார்.

சகஸ்ரநாமத்திற்கு சிவாஜியின் தாய் மாமன் வேடம். அதை எப்போதும் போல் இயல்பாக செய்திருக்கிறார். அவரின் டயலாக் டெலிவரியே அவருடைய பாதி வேலையை செய்துவிடும். வீட்டில் இருந்துக் கொண்டே கூனி வேலை பார்க்கும் பெண்மணியாக சுந்தரிபாய். அவருக்கேற்ற ரோல். ரமாபிரபா நடிகர் திலகத்தின் மற்றொரு முறைப் பெண்ணாக மேகலா என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் படத்தின் surprise நாகையாதான். நாகையா என்றாலே நம் நினைவிற்கு வரும் அந்த மனம் தளர்ந்த பயம் நிறைந்த நடுங்கும் குரலில் பேசும் உருவத்திற்கு மாறாக ஒரு ரோல். கே.ஆர்.விஜயாவின் தந்தையாக தன் சகோதரியின் மூட நம்பிக்கைகளைப் பார்த்து அதற்கு எதிராக வாதிடும் அந்த கதாபாத்திரத்தை சில காட்சிகளே வந்தாலும் பளிச்சென்று செய்திருக்கிறார் நாகையா. நாகேஷ் கதாகாலட்சேபம் செய்பவராக கிளைமாக்ஸ்-ல் மட்டும் தலை காட்டுகிறார். படத்தை தயாரித்தது வி.கே.ராமசாமி என்றாலும் அவர் படத்தில் இல்லை.

பி.எஸ்.ராமையாவின் கதைக்கு திரைக்கதை வசனம் இயக்கம் கே.எஸ்.ஜி. கைகொடுத்த தெய்வம் என்ற அற்புதமான படத்திற்கு பிறகு நடிகர் திலகத்துடன் மீண்டும் இணைந்த படம். உறவு கொள்ள முடியாத கணவன் மனைவி என்ற விஷயத்தின் மேல் கேஎஸ்ஜிக்கு ஒரு அலாதி விருப்பம் இருந்ததோ என்று தோன்றுகிறது. சாரதா, கற்பகம் பிறகு செல்வம் என்ற மூன்று படங்களையும் பார்க்கும்போது அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது. காரணங்கள்தான் ஒவ்வொன்றிலும் வேறு. ஜோஸ்யத்தின் மீது நம்பிக்கை வைப்பது சரியா தவறா என்பதே கதையின் முடிச்சு. அதை ஒரு முழு நீள திரைப்படமாக்குவது என்பது சற்று கடினமான காரியமே. அதை முடிந்தவரையில் தொய்வில்லாமல் நகர்த்தி செல்ல கே.எஸ்.ஜி. முயன்றிருப்பார். கே.எஸ்.ஜியின் படங்கள் பெண்களை குறி வைத்தே எடுக்கப்பட்டவையாய் இருக்கும். இந்த படத்திலும் அதைத்தான் செய்திருப்பார். வசனங்கள் வெகு இயல்பாக வந்து விழும். ஜோஸ்யதையும் ஜாதகத்தையும் நம்புவதுதான் சரியானது என்று சொல்லுகிறாரோ என நினைக்கும் போது கிளைமாக்ஸ்-ல் வரும் அந்த ட்விஸ்ட் முதல் முறை பார்பவர்களுக்கு ஒரு சின்ன ஷாக்.[வெளிவந்த காலகட்டத்தில் நடந்ததை சொல்கிறேன்].

அன்புடன்

(தொடரும்)

பதிவிட்ட நாள் நேரம் 14th December 2010, 09:31 PM

பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7&p=596385&viewfull=1#post596385


செல்வம் - Part 3



செல்வம் - Part III

அன்றைய காலக்கட்டத்தில் [60-களின் மத்தியில் மன்னர்கள் பிரிந்த பிறகு] இசையமைப்பாளரைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி அல்லது கே,வி.எம், பாடல்களுக்கு கண்ணதாசன் அல்லது வாலி என்று இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு ஒரு அடையாளம் வைத்துக் கொண்டிருந்தனர். அந்த ட்ரெண்டை சற்றே மாற்றியவர் கே.எஸ்.ஜி. கற்பகத்தில் பாடல்கள் அனைத்தையும் வாலிக்கு கொடுத்தவர் கை கொடுத்த தெய்வம் மற்றும் சித்தி படங்களில் கண்ணதாசனை எழுத வைத்தார். 1966 ல் சித்தி படத்திற்கு கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணி என்றால் அதே 1966 ல் வெளியான செல்வம் படத்திற்கு திரை இசை திலகத்தையும் வாலியையும் பயன்படுத்தினார். படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் ஆலங்குடி சோமு எழுதினார்.

இசையமைப்பாளராக மாமா வந்ததன் காரணம் தயாரிப்பாளர் வி.கே.ஆர். அவர் ஏ.பி.என்னுடன் சேர்ந்து தயாரிப்பில் பங்கு கொண்ட மக்களைப் பெற்ற மகராசி, வடிவுக்கு வளைக்காப்பு போன்ற படங்களில் மாமாதான் இசை. எனவே தனியாக சொந்த படம் எடுத்தபோது அதே அடிப்படையில் கே.வி.எம் இசை அமைத்தார்.

1. என்னடி இத்தனை வேகம் - ஆலங்குடி சோமு எழுதிய பாடல் படத்தின் ஆரம்பத்தில் நடிகர் திலகத்தின் வருகையை எதிர்பார்த்து கே.ஆர். விஜயா பாடும் பாடல். நடுவில் வந்து நடிகர் திலகம் சேர்ந்து கொள்வார். டி.எம்.எஸ்-சுசீலா பாடியிருப்பார்கள். இருவரும் சேர்ந்து இருந்தாலும் தனி தனியே பாடுவது போல் காட்சி அமைப்பு. இரண்டும் வெவ்வேறு டியூன் போல தோன்றும்.

2. அவளா சொன்னாள் இருக்காது - மிக மிக பிரபலமான பாடல். எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று விஜயா சொல்லிவிட நடிகர் திலகம் மனம் வெறுத்து பாடுவது. வாலியின் வார்த்தைகள் வலுவாக வந்து விழும்.

உப்புக் கடல் நீரும் சக்கரையாகலாம்

முப்பது நாளும் நிலவை பார்க்கலாம்

சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்.

என்ற சரணத்தையும் மிஞ்சும் வண்ணம் அடுத்த சரணம்.

அன்னை தந்த பால் விஷமுமாகலாம்

என்னை பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்

என்று பாடிவிட்டு வலது கையை மேலே உயர்த்தி

நீ சொன்னது எப்படி உண்மையாகலாம் என்று வெடிக்கும் போது இங்கே தியேட்டர் அதிரும். கொள்ளிடம் ஆற்றங்கரையில் வைத்து படமாக்கப்பட்டிருக்கும்.

3. லில்லி லல்லி ஜிம்மி பப்பி - ரமாபிரபா நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு பாடும் பாடல் - ஈஸ்வரி பாடியிருப்பார்.

4. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல - விஜயாவை தேடி வரும் நடிகர் திலகம் தன் உள்ளக்கிடக்கையை பாடலாய் வெளிப்படுத்த விஜயா பாடலிலே பதில் சொல்வார். இந்துஸ்தானி ராகமான தேஷ் எனப்படும் ராகத்தில் அமைந்த பாடல் என்று சொல்வார்கள். மிக பிரபலமான பாடல் என்பதை சொல்ல வேண்டியதில்லை. டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் அழகாய் மெருகு படுத்தியிருப்பார்கள். பாடலின் இறுதியில் சிவாஜியிடம் சத்தியத்தை நினைவுபடுத்தும் செயற்கையான அந்த இடத்தை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் படமாக்கமும் நன்றாய் இருக்கும்.

5. எனக்காகவா நான் உனக்காகவா - தாராபுரம் சுந்தரராஜன் ஜமுனா ராணி பாடிய, படத்தில் montage ஆக இடம் பெறும் பாடல். முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் வரும். தாராபுரம் சுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் பின்னாளில் இசையமைப்பாளராகி ராமண்ணாவின் நீச்சல் குளம் போன்ற படங்களுக்கு இசை அமைத்தாலும் கூட அவர் பேர் சொல்லும் பாடலாக இன்றும் விளங்குவது இந்தப் பாடல்தான். மெலடி என்பதன் அர்த்தத்தை இதில் தெரிந்துக் கொள்ளலாம்.

மலர் மீது பனி தூங்க

மரம் மீது கனி தூங்க

மலை மீது முகில் தூங்க

மடி மீது நீ தூங்க

நீராட நதியா இல்லை?

இளைப்பாற நிழலா இல்லை?

பசியாற உணவா இல்லை?

பகிர்ந்துண்ண துணையா இல்லை?

கதையின் சூழலுக்கு மிகப் பொருத்தமாக அமைந்த வாலியின் வரிகள்.

திரையுலகில் பல வருடம் நடிப்பிலும் தயாரிப்பிலும் அனுபவமுள்ள வி.கே.ஆர். சற்று சிரம திசையில் இருந்தபோது நடிகர் திலகத்தை அணுக அவர் உதவி செய்வதற்காக உடனே செய்த படமே செல்வம். குறைந்த பொருட்செலவில் தயாரான இந்தப் படம் 1966 நவம்பர் 11 தீபாவளியன்று வெளியானது. சென்னை சித்ரா,மதுரை சென்ட்ரல், கோவை, சேலம் போன்ற நகரங்களில் இந்தப்படம் 1967 பொங்கல் வரை ஓடியது. அதாவது 64 நாட்கள். சென்னையில் மற்ற இரண்டு அரங்குகளிலும் திருச்சி போன்ற நகரங்களிலும் 57 நாட்கள். வழக்கம் போல் நடிகர் திலகத்தின் இன்னொரு படமே போட்டியாக வரும் காட்சியும் சென்னை சித்ராவில் அரங்கேறியது. கந்தன் கருணை படத்திற்காக செல்வம் மாறிக் கொடுத்தது. இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவென்றால் அதே தீபாவளிக்கு வெளிவந்த எந்த பிரம்மாண்ட கலர் படங்களும் செல்வம் ஓடிய நாட்களை தாண்ட முடியவில்லை.

படம் வெளிவந்த பிறகு சிரம திசையிலிருந்து மீண்டார் வி.கே.ஆர். மறு வெளியீடுகளில் மிக நன்றாக போன படங்களில் செல்வமும் உண்டு. அப்போதும் வி.கே.ஆருக்கு லாபமே.

நடிகர்திலகத்திற்காகவே பார்க்கலாம்.

அன்புடன்

பதிவிட்ட நாள் நேரம் 14th December 2010, 09:40 PM
பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7&p=596389&viewfull=1#post596389



Thank you Murali Sir

RAGHAVENDRA
24th December 2014, 08:02 AM
முரளி சாரின் பதிவுகளுக்கு ரெஸ்பான்ஸ் பதிவாக சகோ. சாரதா அவர்களின் அருமையான ஆய்வு..



டியர் முரளியண்ணா,

சுருக்கமாகச்சொல்கிறேன் என்று துவங்கி மிக மிக விளக்கமாக விவரித்து விட்டீர்கள். 'செல்வம்' திரைப்பட திறனாய்வு சூப்பர். உங்களது திறனாய்வு அருமை என்று சொல்வது, தேன் இனிக்கிறது என்று சொல்வதைப்போல.

...

இந்தக்குறிப்பிட்ட காட்சியை நீங்கள் விவரிக்கும் விதம், திரையில் நேரில் பார்ப்பதுபோலிருக்கிறது. ஏற்கெனவே நான் பலமுறை சொன்னது போல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகர்திலகத்தைப் பற்றி புகழ்ந்து பேசும் வி.ஐ.பி.க்கள் இதுபோன்ற காட்சிகளையெல்லாம் குறிப்பிட்டு சிலாகித்துப் பேசுவது கிடையாது. ஸ்டீரியோ டைப்பாக ஓரிரண்டு காட்சிகளையே திருப்பித்திருப்பி சொல்லி, மக்களை சலிப்படையச்செய்கின்றனர். இனி அம்மாதிரி நிகழ்ச்சிகளில் 'அதிகம் தெரியாத' வி.ஐ.பி.க்களுக்கு பதிலாக, விவரம் தெரிந்த உங்களைப்போன்ற தீவிர ரசிகர்களை அழைத்து விவரிக்கச்செய்யலாம்.

'எனக்காகவா.. நான் உனக்காகவா' முழுப்பாடலையும் காட்சியமைப்பையும், கே.எஸ்.ஜி.பிற்காலத்தில் (1973) தான் எடுத்த (முத்துராமன். பிரமீளா நடித்த) வாழையடி வாழை படத்தில் பயன்படுத்தியிருப்பார்

'என்னடி இத்தனை வேகம்' பாடலும், 'அவளா சொன்னாள்.. இருக்காது' பாடலும் தஞ்சை மாவட்டம் கல்லணையில் படமாக்கப்பட்டவை. அப்போதைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் மல்லியம் கிராமத்தைச்சேர்ந்த இயக்குனர் கே.எஸ்.ஜி., பெரும்பாலும் தன் படங்களின் வெளிப்புறக்காட்சிகளை தனது மல்லியம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலேயே வைத்துக்கொள்வார். கற்பகம் படத்தின் அவுட்டோர் காட்சிகள் அனைத்தும் அங்கேதான் எடுக்கப்பட்டன. 'பக்கத்துவீட்டு பருவமச்சான்' பாடலின் கடைசியில் சாவித்திரி ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நின்று பாடுவாரே அதுதான் மல்லியத்திலுள்ள கே.எஸ்.ஜி.யின் வீடு. 'சித்தி' படத்தில் ஜெமினி பத்மினி பாடும் 'தண்ணீர் சுடுவதென்ன' பாடல் மல்லியம் காவேரி ஆற்றில் படமானது. (இவரது உறவினரான மல்லியம் ராஜகோபாலின் 'சவாலே சமாளி' படத்தில் வி.எஸ்.ராகவனும், டி.கே.பகவதியும் நின்று பேசும் மரப்பாலமும் மல்லியம் காவேரி ஆற்றின் மீது அமைக்கப்பட்டதுதான்).

கே.எஸ்.ஜி.யின் அடுத்த படமான 'பேசும் தெய்வம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருச்சி விமான நிலையத்தின் உட்புறத்தில் எடுக்கப்பட்டது. முன்பெல்லாம் விமான நிலையங்களில் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடத்த நிலையத்தார் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் விமான நிலையக்காட்சிகளின் போது, அப்போதைய சென்னை விமான நிலையத்தை வெளிப்புறத்தில் தூரத்தில் காட்டிவிட்டு, பின்னர் ஓஸியானிக் ஓட்டல் அல்லது அட்லாண்டிக் ஓட்டல் ரிஸப்ஷன்களை விமான நிலையத்தின் உட்புறமென்று காட்டுவார்கள்.

ஆனால் பேசும் தெய்வத்தின் கிளைமாக்ஸ் திருச்சி விமான நிலையத்தின் உள்ளேயே படமாக்கப்பட்டது. ஏர்போர்ட்கள் மத்திய அரசின் பொறுப்பில் இருந்தபோதிலும், படப்பிடிப்புக்காக முதல்வர் பக்தவத்சலம் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக்கொடுத்தவர் நடிகர்திலகம்தான்.

செல்வம் ரிலீஸானபோது சரஸ்வதி சபதம் பல ஊர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதுசரி, 'செல்வம்' படத்தோடு வெளியான மற்ற கலர்ப்படங்கள் செல்வம் அளவுக்கு ஓடவில்லையென்று குறிப்பிடுள்ளீர்களே, அது 'சர்க்கஸ் படம்'தானே. அவை ஓடிய 'நாள்' எத்தனை என்று பிறர் 'பார்க்க சொல்லலாமா?'


பதிவிட்ட நாள் நேரம் 15th December 2010, 11:21 AM
பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7&p=596587&viewfull=1#post596587

JamesFague
24th December 2014, 11:21 AM
The colour photo of STYLE KING IN SELVAM Simply Superb.

RAGHAVENDRA
25th December 2014, 10:32 AM
செல்வம் - பாடல்களின் விவரங்கள் .. ஒரிஜினல் பாட்டுப்புத்தகத்தில் உள்ளவாறு


1. என்னடி இத்தனை வேகம் - ஆலங்குடி சோமு - p. சுசீலா
2. காற்றிலே ஒடியும் கொடியிடை - ஆலங்குடி சோமு - t.m.சௌந்தரராஜன்
3. அவளா சொன்னாள் - வாலி - t.m.சௌந்தரராஜன்
4. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல - வாலி - t.m.சௌந்தரராஜன், p. சுசீலா
5. ஒண்ணு ரெண்டு மூணு - வாலி - எல்.ஆர்.ஈஸ்வரி
6. வா வா வா எனக்காகவா நான் உனக்காகவா - வாலி - தாராபுரம் சௌந்தரராஜன், கே.ஜமுனா ராணி
7. எது வந்தால் தானென்ன - உளுந்தூர்பேட்டை சண்முகம் - சீர்காழி கோவிந்தராஜன்

RAGHAVENDRA
25th December 2014, 10:51 AM
https://www.youtube.com/watch?v=gkq4J363TIU

என்னடி இத்தனை வேகம் - பாடலின் துவக்கத்தில் நடிகர் திலகம் விமானத்திலிருந்து இறங்கும் காட்சி..

துரதிருஷ்டவசமாக டிவிடியில் ஒரே விநாடி வந்து போகிறது. படத்தில் அவர் இறங்கி ஓடி வந்த பிறகு இன்னும் ஓரிரு விநாடிகள் மிட்-க்ளோஸப்பில் உண்டு. அந்தக் காட்சி தான் பம்மலாரின் கலர் ஸ்டில்லில் உள்ளது. கலர் ஸ்டில்லில் முழு உருவம் இருந்தாலும் படத்தில் மிட் க்ளோஸப்பில் மார்பு வரையில் திரையில் அட்டகாசமாக இருக்கும். அதுவும் அதில் ஒரு வசீகரப் புன்னகையோடு தலைவர் தந்த போஸ் ... ஆஹா.. ஆயுள் முழுமைக்கும் அது ஒன்றே போதும்..

5.45 விநாடியில் காற்றிலே ஒடியும் கொடியிடை பாடல் நடிகர் திலகம் பாடத் துவங்குகிறது. அந்த படிக்கட்டுகளின் உச்சியில் அவர் நிற்கும் ஸ்டைல், இறங்கி கே.ஆர்.விஜயாவை நோக்கி ஓடி வரும் வேகம், மரத்திலே படரும் வரிகளின் போது அவரின் சூப்பர் நடை...

ஒரிஜினல் படப்பிரதியில் படிக்கட்டு முழுதும் சூப்பர் வேகத்தில் ஓடி வருவார். டிவிடியில் இந்த இடம் ஜம்ப்பாகிறது.

இந்தப் பாட்டிற்காகவே இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடி யிருக்க வேண்டும்.

RAGHAVENDRA
27th December 2014, 05:35 PM
Sivaji Ganesan Filmography Series

Guest Roles

Thaye Unakkaga தாயே உனக்காக

http://www.thehindu.com/multimedia/dynamic/01908/23fr-nadigar-FI_23_1908920e.jpg

கதை – BALLAD OF A SOLDIER “ஒரு போர் வீரனின் பாட்டு” என்னும் ரஷ்யக் கதையின் தழுவல்

http://upload.wikimedia.org/wikipedia/en/4/42/1961_ballada_o_soldate.jpg
Written by:
Valentin Yezhov
Grigori Chukhrai

http://en.wikipedia.org/wiki/Ballad_of_a_Soldier

தணிக்கை – 24.08.1966
வெளியீடு – 26.08.1966

தயாரிப்பு – ஸ்ரீ கமலாலயம்
திரைக்கதை பாடல் கவிஞர் கண்ணதாசன்
வசனம் ஏ.எல். நாராயணன்
கௌரவ நடிகர்கள் – பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், நாகேஷ்
கௌரவ நடிகைகள் – பத்மினி, விஜயகுமாரி, தேவிகா, ஜெயல்லிதா, சாந்தகுமாரி

நடிக நடிகையர்
சிவகுமார், மனோகர், வி.கே.ராமசாமி, வி.ஆர்.ராஜகோபால், முஸ்தபா, சுந்தர்ராஜன், ஸ்ரீராம், ராமதாஸ், கன்னையா, மாஸ்டர் பாபு, புஷ்பலதா, மனோரமா, சி.கே.சரஸ்வதி, குமாரி சச்சு மற்றும் பலர்

இசை திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்
பின்னணி – சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, ஜமுனா ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, வசந்தா
நடன அமைப்பு – தங்கப்பன், ஜெயராமன், மாதவன்

ஒலிப்பதிவு பாடல்கள் அண்ட் ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்க்சாமி
ஒலிப்பதிவு வசனம்- சாரங்கன்
ஒப்பனை – கிருஷ்ணராஜ், தனக்கோடி, செல்வராஜ், ரங்கசாமி, கோபால், ராமசாமி

புகைப்படம் – எம். முருகப்பன்
பொதுமக்கள் தொடர்பு – பி.ஜி. ஆனந்தன்
அலுவலக நிர்வாகம்- பி.ஆர்.எஸ். ராமனாதன், கே.நடராஜய்யர்
விளம்பரம் எலிகண்ட்
விளம்பர ஓவியம் – ஜி.ஹெச்.ராவ்
அலங்காரப் பொருள்கள் – நியோ பிலிமோகிராப்ட்ஸ்
ஆடைகள் நடராஜ் டெக்ஸ்டைல்ஸ், சென்னை
ஸ்டூடியோ – சாரதா- லெஸ்ஸீஸ் - மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ், ஜெமினி
லாபரேட்டரி – விஜயா, வி.டி.எஸ்.சுந்தரம்
ஆடை அணி மணி – வி.ஜானகிராம்
தயாரிப்பு நிர்வாகம் – எம்.சி.கே.தாஸன்
கலை – ஆர்.ராதா
எடிட்டிங் – ஆர்.தேவராஜன்
படப்பிடிப்பு – சி.நமசிவாயம்
ஆபரேடிவ் கேமராமேன் – ஏ.நடராஜ்
உதவி டைரக்ஷன் – முத்துக்குமார், எஸ்.முருகேசன், பி.அழகப்பன்
உரிமையாளர் – ஜே.எல்.கம்பைன்ஸ், சென்னை – 34
கூட்டுத்தயாரிப்பு – கே.முருகேசன்
தயாரிப்பு – ஆர்.எம். கண்ணப்பன்
டைரக்ஷன் – பி.புல்லையா

RAGHAVENDRA
27th December 2014, 05:36 PM
தாயே உனக்காக விளம்பர நிழற்படங்கள்...
http://www.nadigarthilagam.com/papercuttings/thaye.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/ThayeBommaiAd.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/Thayenewspaperad.jpg

www.nadigarthilagam.com இணையதளத் தொகுப்பிலிருந்து..

RAGHAVENDRA
27th December 2014, 05:39 PM
தாயே உனக்காக திரைக்காவியத்தில் இடம் பெற்ற நடிகர் திலகத்தின் காட்சிகளைப் பற்றிய வாசு சாரின் அற்புதமான ஆய்வுரை



நடிகர் திலகத்தின் அற்புத கௌரவத் தோற்றத்தில் அழியா 'கெளரவம்' பெற்ற திரை ஓவியம் 'தாயே உனக்காக'. நாட்டுக்கு சேவை செய்து உயிரை தியாகம் செய்யும் அற்புதமான ராணுவ கேப்டன் கதாபாத்திரம் நடிகர் திலகத்திற்கு. 'Ballad of a soldier' ("ஒரு போர் வீரனின் பாட்டு") என்னும் ரஷ்ய கதையின் தழுவல் தான் 'தாயே உனக்காக'. சோவெக்ஸ்போர்ட் என்ற ரஷ்ய பிலிம் கம்பனி கதை உரிமை அளித்தது.

திரு.சிவக்குமார் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். (சிவக்குமாரின் நண்பராக ஒரு சிறு வேடத்தில் திரு. விஜயகுமார் அவர்கள் நடித்திருப்பார்.) திரு கே.வி .மகாதேவன் இசையமைப்பில், திரு பி.புல்லையா அவர்கள் இயக்கத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக நாட்டியப் பேரொளி பத்மினி நடித்திருந்தார்.

பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்...
கருநீல மலை மேலே தாய் இருந்தாள்..
ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்...

போன்ற நல்ல பாடல்கள் கொண்ட படம்.

ராணுவ அதிகாரியாக மிடுக்குடன் நம் பத்மஸ்ரீ அவர்கள். போரில் காயமுற்று மருத்துவமனையில் ராணுவ வீரரான சிவக்குமாரிடம் தன் மனைவியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போதும், பிளாஷ்பேக்கில் வரும் அந்த மிக அரிய டூயட் பாடலில் பத்மினி அவர்களுடன் மலையாள மற்றும் கன்னட உடை அணிந்து அந்தந்த கலாச்சாரங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் காண்பிக்கும் போதும், போருக்குப் போகுமுன் பத்மினியிடம் உணர்ச்சி மயமான வசன மழை பொழிந்து விட்டு விடை பெறும் போதும் படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் நம்மை ஆட்டிப் படைத்து விடுகிறார் நடிக வள்ளல்.

'பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்' என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீரென்ற பின்னணிக் குரலோசையில் தேச பக்தியை நினைவூட்டும் விதமாக, தென்னிந்திய கலாச்சார உடைகளில் நடிகர் திலகம் புகுந்து விளையாடுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.


மேற்காணும் பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=730220&viewfull=1#post730220
பதிவிட்ட நாள் நேரம் – 26.08.2011 காலை 11.28 மணி


http://www.dailymotion.com/video/x16srjf_thaye-unakkaga-1966-pazhagu_shortfilms

http://www.youtube.com/watch?v=v7j3wNe-PEs

RAGHAVENDRA
27th December 2014, 05:41 PM
மற்ற காணொளிகள்

யேசுநாதர் பேசினால்

http://www.youtube.com/watch?v=u0v9Ux2Lup8

காவேரியில் தேம்ஸ் நதி


http://www.dailymotion.com/video/x16srjk_thaye-unakkaga-1966-kaveryil_shortfilms

கருநீல மலைமேலே

http://www.youtube.com/watch?v=lq5r-8ARgyk

அமைதிப் புறாவே

http://www.youtube.com/watch?v=0X-ykDR3uvU

RAGHAVENDRA
27th December 2014, 05:42 PM
தாயே உனக்காக நெடுந்தகட்டின் முகப்பு

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQQolKC3ERMqhgwyOgxW8-whtleUwNbm7viLdZU_cbVuiar_Pjo

RAGHAVENDRA
27th December 2014, 05:47 PM
அடுத்து.....

நடிகர் திலகத்தின் திரை உலகப் பயணத்தில் திருப்புமுனையாக, முற்றிலும் புதிய பரிமாணத்தில் ரசிகர்கள் நடிகர் திலகத்தை தரிசித்த, புதிய தலைமுறை ரசிகர்களை உருவாக்கிய

1967

RAGHAVENDRA
27th December 2014, 05:52 PM
1967 ...

இவ்வாண்டு வெளிவந்த படங்களைப் பற்றிப் பார்க்கும் முன்..

இந்த திருப்புமுனை ஆண்டினைப் பற்றி தனியாக சொல்லவேண்டியதாகிறது.

இதற்கு சரியான நண்பர்..

வேறு யார்..

நம்ம முரளி சார் தான்..

முரளி சார்..

1967ம் ஆண்டின் நடிகர் திலகத்தின் திரையுலகத் திருப்புமுனையைப் பற்றி ஒரு அறிமுகப் பதிவினை எழுத வேண்டுகிறேன்.

அதற்குப் பிறகு தொடரலாம் என விரும்புகிறேன்.

Murali Srinivas
8th January 2015, 09:00 PM
1967

நடிகர் திலகத்திற்கு இது ஒரு திருப்புமுனையான ஆண்டு. ஆகவே அதை பற்றி நான் எழுத வேண்டும் என்று ராகவேந்தர் சார் சொல்லியிருக்கிறார். என்னை எழுத சொன்னதற்கு நன்றி.

1967 உண்மையிலே திருப்புமுனையான ஆண்டுதான், பல்வேறு தளங்களிலும். இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் தலையெழுத்து முற்றிலுமாக மாறிய ஆண்டு. மாற்றங்கள் தவிக்க முடியாதது என்றாலும் தமிழகத்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது பற்றி whether it was for good or not என்று 47 வருடங்களுக்கு பிறகு கேள்வி எழுப்பினால் நமக்கு எதிர்மறையான பதிலே கிடைக்கிறது. அதே நேரத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் அல்லது இமேஜ் makeover பற்றிய கேள்விக்கு நமக்கு positive ஆன பதிலே பெருவாரியான மக்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.

1952-ல் தொடங்கி இடைவெளியில்லாமல் நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் 1967- முதல் தான் நடிக்கும் படங்களின் genre -ல் ஒரு மாற்றத்தை கொடுத்தார். ஆழமான கதையம்சம் அழுத்தமான பாத்திரப் படைப்புகள் உணர்ச்சிக் குவியலான திரைக்கதை என்ற பாதையில் பயணம் செய்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் அதை தாண்டி நகைச்சுவை மிளிரும் பொழுது போக்கு படங்களுக்கும் மற்றும் action oriented பொழுது போக்கு படங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்தார்.

அதற்கு முன் அவர் நகைச்சுவை படங்கள் செய்திருக்கிறாரே என்ற கேள்வி எழும். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா மற்றும் பலே பாண்டியா ஆகியவற்றை மறந்து விட்டு பேசவில்லை. ஆனால் அவை few and far in between என்ற வகையிலேயே அமைந்திருந்தது. முறையே அவை வெளியான வருடங்களை பார்த்தோமென்றால் [1954,1958,1962] நான் சொல்வதன் அர்த்தம் புரியும். அது போன்றே murder mysteries ஆன புதிய பறவை, கல்யாணியின் கணவன் போன்ற படங்களிலும் கூட சண்டைக் காட்சிகள் கிடையாது. அல்லது மிக மிக அரிதாகவே அமைந்திருந்தது.

இப்படி ஒரு மாற்றத்தை அவர் 1967- ல் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று கேட்டால் தமிழ் சினிமா வரலாற்றில் சற்றே பின்னோக்கி செல்ல வேண்டும்.

60-களின் மத்தியில் தமிழ் சினிமாவில் மாற்றங்கள் வீச ஆரம்பித்த காலம் என குறிப்பிடலாம். அதுவும் தவிர அதே காலகட்டத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வு நம்முடைய பாட்டுடைத் தலைவனான நடிகர் திலகத்தின் வாழ்வில் நடந்தது.

தமிழ் சினிமாவில் 60-களின் மத்தியில் புதிய வரவுகளாக பலர் அறிமுகமானார்கள். நடிகர்களை எடுத்துக் கொண்டோமென்றால் ஏவிஎம் ராஜன், சிவகுமார், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த் போன்றவர்க-ள் அறிமுகமாகி அதிலும் ஜெய் மற்றும் ரவி கதாநாயகனாகவே நிலை பெற்றார்கள். கேஆர்.விஜயா, ஜெயலலிதா வெண்ணிற ஆடை நிர்மலா, வாணிஸ்ரீ போன்றவர்களின் திரையுலக பிரவேசமும் அந்த காலகட்டத்தில்தான் நிகழ்ந்தது. இவர்களின் வரவோடு அன்றைய இந்தி திரையுலக தாக்கமும் சேர்ந்துக் கொண்டது. இந்தி பட தாக்கம் என்று குறிப்பிடுவது பெரும்பாலும் நாயகன் நாயகி வெளிப்புற பாடல்காட்சிகள், அவற்றில் முன் காலங்களில் இல்லாத அளவிற்கு ஆடலுக்கு முக்கியத்துவம் பின் இளைஞர்களை கவர்ந்திழுக்க சண்டைக் காட்சிகள், மற்றும் கிளப் டான்ஸ் போன்றவை இடம் பெற ஆரம்பித்தன.

அந்த காலகட்டத்தில் நகைச்சுவைக்கு காதலிக்க நேரமில்லை, தேன் மழை, suspense வகைக்கு அதே கண்கள், ஜேம்ஸ் பாண்ட் பாணியில் வல்லவன் ஒருவன், இசை கலந்த காதலுக்கு இதய கமலம், பொழுதுபோக்கை விரும்புபவர்களுக்கு குமரிப் பெண் என்று வெரைட்டியாக படங்கள வந்த நேரம்.

இந்த மாற்றத்தினால் அன்றைய முன்னணி நாயக நாயகியரும் பாதிக்கப்பட்டனர். நாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெமினி எஸ்எஸ்ஆர் போன்றவர்களுக்கு பாதிப்பு அதிகம். எஸ்எஸ்ஆர் ஒரு முதல் நிலை கதாநாயகன் என்ற நிலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார். ஜெமினிக்கும் இறங்குமுகம்தான். ஆனால் அவ்வப்போது சில படங்கள் வந்து ஜெமினியை காப்பாற்றிக் கொண்டிருந்தது. ராமு, பணமா பாசமா போன்ற படங்களை சொல்ல வேண்டும். ஆனால் பணமா பாசமா முதற்கொண்டே அவர் heroine oriented subject படங்களான பூவா தலையா, தாமரை நெஞ்சம், இரு கோடுகள், காவிய தலைவி போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்க வேண்டிய நிலைமை.

இந்த புது வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொண்டவர்கள் சிவாஜி -எம் ஜி ஆர் இருவரும். ராஜகுமாரி மந்திரி குமாரி காலம் முதல், வருடத்தில் ஒரு படமேனும் ராஜா ராணி பாத்திரங்களையுடைய சரித்திர கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை 1963 வரை செய்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் படவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை புரிந்துக் கொண்டு பழைய பாணியிலிருந்து மாறுபட்டு 1964 முதல் முழுக்க சமூக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன் பாணியிலிருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்டிருந்த come september ஆங்கிலப் படத்திலிருந்து inspiration உட்கொண்டு உருவான அன்பே வா படத்தில் அவர் நடித்ததை இங்கு உதாரணமாக கூற வேண்டும்.

நமது நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அவரும் சற்றே light hearted subjects செய்யலாமா என்ற யோசனையில் இருக்கும் நேரம். இதே சமயத்தில் அவர் ஒரு முக்கியமான முடிவு எடுத்தார். 50-களின் மத்தியில் திராவிட இயக்கத்தினரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவர் [அவர் எந்த திராவிட இயக்கத்திலும் உறுப்பினராக இருந்ததேயில்லை] காங்கிரஸ் பேரியக்கத்தின் அனுதாபியாகவும் பெருந்தலைவரின் தொண்டராகவும் அறியப்பட்டுக் கொண்டிருந்தார். 1965-ல் அன்றைய தமிழக இந்திய அரசுகள் சந்தித்துக் கொண்டிருந்த கடுமையான சோதனைகளை பார்த்த அவர் தன்னாலான உதவியை செய்வதற்காக காங்கிரஸ் பேரியக்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். நமது எல்லையில் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினால் ஏற்பட்ட சோதனைகளை இந்திய அரசாங்கம் எதிர் கொள்ள இங்கோ மொழிப் போராட்டம் தூண்டி விடப்பட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருந்தவர்கள், போரினால் ஏற்பட்ட உணவு தானிய பற்றாக்குறை போன்றவற்றை வைத்து அரசியல் செய்தவர்கள் பெருகிவிட, இந்த சூழலில் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதை தன் கடமையாக நினைத்த நடிகர் திலகம் அதை முறைப்படி செய்தார்.

இந்த அரசியல் நிகழ்வை இங்கே குறிப்பிட காரணம் அதற்கு முன்னரே சிவாஜி- எம்ஜிஆர் இருவரிடையே அல்லது அவர்கள் ரசிகர்களிடையே நிலவிய போட்டி இந்த நிகழ்வினால் மேலும் வலுவடைந்தது. அதனாலும் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் கதைகளின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

நடிகர் திலகத்திற்கு 1966 ஜனவரி 26 அன்று பதமஸ்ரீ விருது கிடைத்தது. அன்றுதான் அவர் நடித்த 106-வது படமான மோட்டார் சுந்தரம் பிள்ளையும் வெளியானது. பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்கு பல்வேறு ஊர்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஓய்வு ஒழிச்சல் இல்லாத அவரது வேலைப் பளு காரணமாக டைபாயிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடுமையான முறையில் பாதிக்கப்பட்ட அவர் இரண்டு மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார். ஆனால் blessing in disguise என்று சொல்வார்களே அது போல் இந்த சுகவீனம் ஏற்கனவே இளைத்துக் கொண்டிருந்த அவர் உடலை மேலும் இளைக்க வைத்தது. அதன் காரணமாக அவரது உடல் ஸ்லிமாகி அன்றைய 20-25 வயது இளைஞர்களுக்கு சவால் விடும் வண்ணம் படு சிக்காக ஸ்மார்டாக படப்பிடிப்புகளுக்கு திரும்பினார். .

இந்த நேரத்தில் நடிகர் பாலாஜியை பற்றி நாம் பேச வேண்டியிருக்கிறது. ஜெமினியின் ஔவையார் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகி பின் துணை நாயகன், இணை நாயகன் ஆக உயர்ந்து ஒரு சில படங்களில் நாயகனாகவும் இடம் பிடித்து வரும் நேரத்தில்தான் இந்த புது வெள்ள பிரவாகம். அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பாலாஜியும் ஒருவராகப் போனார். ஆனால் அதனால் நிலைகுலைந்து விடாமல் தனக்கு தெரிந்த ஒரே தொழிலான சினிமா தொழிலில் வேறு என்ன செய்ய முடியும் என்று ஆக்கப்பூர்வமாக யோசித்து அவர் எடுத்த முடிவுதான் தயாரிப்பாளர் ஆவது. தன் மூத்த மகளான சுஜாதாவின் பெயரில் [இரண்டாவது மகள் சுசித்ரா - மோகன்லாலின் மனைவி, மகன் சுரேஷ் பாலாஜி] சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்த காரணமாக இருந்தவரான ஜெமினியை நாயகனாக்கி அண்ணாவின் ஆசை என்ற படத்தை தயாரித்து 1966-ல் வெளியிட்டார். படம் வர்த்தக ரீதியில் சரியாகப் போகவில்லை என்றாலும் கூட தைரியமாக ரிஸ்க் எடுத்து பிசினஸ் செய்யக் கூடியவர் என்பதை அவர் பிரபல இந்தி நடிகர் அசோக்குமார் அவர்களை தன் முதல் படத்திலேயே நடிக்க வைத்ததன் மூலம் நிரூபித்தார்.

அண்ணாவின் ஆசை சரியாக போகவில்லை என்றதும் பாலாஜியும் அவருக்கு பொருளாதார பின்புலமாக இருந்த சுதர்சன் சிட்பண்ட் வேலாயுதன் நாயரும் [கேஆர்விஜயாவின் கணவர்தான்] ஆலோசனையில் ஈடுபட அவர்களுக்கு தோன்றிய ஐடியாதான் நடிகர் திலகத்தை நாயகனாக்கி படம் எடுப்பது என்பது.

பாலாஜி சென்று நடிகர் திலகத்தைப் பார்க்க, பாலாஜியை ஒரு இளைய சகோதரன் போலவே கருதியிருந்த நடிகர் திலகம் சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டார். விசி.சண்முகத்திற்கும் சம்மதம். ஆனால் பாலாஜி ஒரு கண்டிஷன் போட்டார். அதுநாள் வரையில் எந்த தயாரிப்பளாரும் நடிகர் திலகத்தை காட்டாத ஒரு கோணத்தில் நடிகர் திலகத்தை காட்டப் போகிறேன். அதற்கு நீங்கள் மறுப்பு சொல்லக் கூடாது என்றார். சரி என்று சொல்லப்பட்டாலும் கூட எந்த மாதிரியான subject என்பது முடிவாகாமலே இருந்தது.

பாலாஜியைப் பொறுத்தவரை அன்றைய சூழலில் மக்களின் குறிப்பாக இளைஞர்களின் விருப்பமாக இருந்த action oriented film வகையை சார்ந்த படமாக தயாரிக்க விரும்பினார். அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் என்னவென்றால் அதுவரை action genre -ல் படங்கள் செய்யாத நடிகர் திலகம் அப்படி ஒரு படம் செய்யும்போது அவருக்கும் comfortable -ஆக இருக்க வேண்டும், audience -ற்கும் convincing ஆக இருக்க வேண்டும். பாலாஜி எதிர்கொண்ட மற்றொரு சவால் என்னவென்றால் நடிகர் திலகம் நடிக்கும் படம் என்றால் அதை பெரிதும் எதிர்பார்த்து வருவது அவரின் core constituency ஆன தாய்குலங்களும் நல்ல நடிப்பை எதிர்பார்த்து வரும் ரசிகர் கூட்டமும்தான். ஆகவே என்னதான் action படம் எடுத்தாலும் மேற்சொன்னவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அப்படி இருந்தால்தான் படம் வணிகரீதியாக வெற்றி அடையும். இல்லையென்றால் வணிகரீதியில் நஷ்டம் அடைவதுடன், நடிகர் திலகத்திற்கும் அவப்பெயர் வந்து சேரும். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது பாலாஜிக்கு தோன்றிய ஐடியாதான் வெற்றிகரமாக ஓடிய பிறமொழிப் படத்தை ரீமேக் செய்வது.

இப்படி பல parameters -ஐ அலசி ஆராய்ந்து அதற்கேற்றபடி பாலாஜி தெரிவு செய்த படம்தான் தேவ் ஆனந்த ஹீரோவாக நடித்த இந்திப் படமான Baazi . ஆனால் அது 1951-ல் வெளிவந்த படம். அதை 1967-க்கு ஏற்றவாறு மாற்றும் பொறுப்பு இயக்குனர் A .C திருலோகசந்தர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

பார்த்தால் பசி தீரும் படத்தின் கதை ACT யின் கதை என்றாலும் அது ஏவிஎம் படமாகவே தயாரானது. அதன் பிறகும் ஏவிஎம் வளாகத்துக்குள்ளேயே இயக்குனராக வலம் வந்துக் கொண்டிருந்த ACT-யை வெளியே இழுத்துக் கொண்டு வந்தார் பாலாஜி. இந்தி Baazi யை தமிழக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்த ACT அதை நடிகர் திலகத்திடம் திரைக்கதையாக சொல்ல நடிகர் திலகம் impress ஆனார். தங்கை படம் கருக் கொண்டது. படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது. அதே வேகத்தில் நிறைவு பெற்று வெளியானது. action mood வகையை சார்ந்த தங்கை படத்தை ரசிகர்களும் பொதுமக்களும் இரு கரம் நீட்டி வரவேற்றனர். வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட அரங்க உரிமையாளர்களுக்கும் லாபத்தையும் தாண்டிய வசூலை வாரி வழங்கினாள் தங்கை.

Action படங்களில் நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்தது மட்டும்தானா 1967-ல் ஏற்பட்ட மாற்றம் என்று கேட்டால் அது மட்டும் இல்லை என்றே சொல்ல வேண்டும். தங்கை வருவதற்கு முன்னரே மேக்அப்பே இல்லாமல் நடித்த நெஞ்சிருக்கும் வரை படத்தை வெளியிட்டார்[ஒரு முன்னணி கதாநாயகன் ஜோடியும் இல்லாமல் மேக்கப் இல்லாமல் அதுவும் பொது தேர்தல் சமயத்தில் வெளியிடுவதற்கு அகில இந்தியாவிலேயே நமது நடிகர் திலகத்தை தவிர வேறு யாராவது இருக்கிறார்களா என்ன?].

Action படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும் உணர்ச்சிப்பூர்வமான கதைகளையும் அவர் விடவில்லை. அதனால்தான் ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், அஞ்சல் பெட்டி 520, சுமதி என் சுந்தரி போன்ற நகைச்சுவை படங்களிலும், என் தம்பி, தங்க சுரங்கம், திருடன், சிவந்த மண் போன்ற Action படங்களிலும் நடிக்கும்போதும் கூட திருவருட்செல்வர், இரு மலர்கள், உயர்ந்த மனிதன், தெய்வ மகன், வியட்நாம் வீடு போன்ற அவர் மட்டுமே செய்யக்கூடிய படங்களிலும் அவர் நடித்தார்.

இந்தப் பதிவு ஒரு நீண்ட பதிவாக போய்விட்டது. காரணம் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் 1967-ல் ஏற்பட்ட மாற்றம் என்பது ஒரு சில வரிகளில் சொல்லி முடிக்கக்கூடிய ஒன்றல்ல. அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு ரசிகர்களும் பொது மக்களும் அதை ஒப்புக் கொண்டதன் பின்னில் உள்ள சமூக உளவியல் காரணங்கள் ஆழமாக உட்செல்பவை. ஆராயப்பட வேண்டியவை. அதை பற்றி பேசுகிறோம் எனும்போது பல்வேறு சமூக அரசியல் தளங்களில் நாம் சஞ்சரிக்க வேண்டியிருக்கிறது.

உலகத்தில் வெகு சில நடிகர்களுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் ஸ்டார் என்ற வகையிலும் ஆக்டர் என்ற வகையிலும் அங்கீகாரங்கள் கிடைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட வெகு சிலரில் முதன்மையானவர் நமது நடிகர் திலகம், அந்த அங்கீகாரம் உறுதிப்படுத்தப்பட்டதும் தொடர்ந்து இறுதி வரை நிலைத்து நின்றதற்கும் காரணமான முத்திரை பதித்த ஆண்டு 1967.

நடிகர் திலகத்தை திரையில் எப்படி பார்க்க வேண்டும் என்று ஒரு சாதாரண ரசிகன் நினைப்பானோ அது திரையில் வெளிப்பட்ட ஆண்டு 1967. இன்றைக்கும் கூட அவர் மறைந்து ஏறத்தாழ 14 ஆண்டுகள் ஆகப் போகின்ற சூழலிலும் கட்சி, அரசியல், ஆட்சி, அதிகாரம், பணப்புழக்கம் போன்ற எந்தவித லாபநோக்கங்களும் இல்லாமல் நடிகர் திலகம் என்ற மனிதனுக்காக மட்டுமே இன்றைக்கும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு அடித்தளமிட்ட ஆண்டு 1967.

இப்படி ஒரு பதிவிற்கு வாய்ப்பளித்த ராகவேந்தர் சாருக்கும் இந்த நீண்ட நெடிய(!) பதிவை பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றி!


.

அன்புடன்

RAGHAVENDRA
8th January 2015, 09:57 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/muraligrtgsfilmography67_zpsb3c98ab3.jpg

RAGHAVENDRA
8th January 2015, 10:00 PM
முரளி சார்
மிக்க நன்றி. பம்மலார் ஆவணத்திலகம், வாசு சார் ஆய்வுத் திலகம் என்றால் தாங்கள் நினைவுத் திலகமாய்த் திகழ்கின்றீர்கள். பாராட்டுதற்கு நிஜமாகவே வார்த்தைகள் முட்டுகின்றன. "உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது, அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது..." என்ற இந்த வரிகளைத் தான் இரவல் வாங்க வேண்டும்.
தங்களுக்கு மீண்டும் என் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
8th January 2015, 10:19 PM
1967 --- நடிகர் திலகத்தின் திருப்புமுனை ஆண்டு... ரசிகர்களுக்கும் தான்... அதுவரை இருந்த தலைமுறைகள் மட்டுமின்றி புதிய தலைமுறை ரசிகர்கள் உருவானது 1967ம் ஆண்டில் தங்கை திரைப்படம் மூலமே.
திருவிளையாடல் மூலம் பெண்கள் மத்தியில் தனக்கிருந்த அசைக்க முடியாத பேராதரவை மேலும் பரவலாக்கிய ஆண்டு 1967.
கல்லூரி மாணவியர் மத்தியில் நடிகர் திலகத்தின் புகழ் மேலும் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிய ஆண்டு 1967.
ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டோர் தங்கள் உள்ளத்து பக்தியையும் இறைநம்பிக்கையையும் பிரதிபலிக்கும் பிம்பமாக நடிகர் திலகத்தை முற்றிலும் எண்ணத் தொடங்கிய ஆண்டு 1967. திருவிளையாடலில் தொடங்கிய இந்த ஈடுபாடு கந்தன் கருணையில் மேலும் பரவியது. மிச்சம் மீதி இருந்ததையும் 1968ல் திருமால் பெருமை மூலம் தன் வசமாக்கி தன் ஆளுமையை முழுமையாக ஆன்மீக நெறியாளர்களிடம் நடிகர் திலகம் செலுத்திய ஆண்டு 1967.
காதல் என்பது மிகவும் கொடியதாக கருதப்பட்ட காலத்தில் நேரில் சந்திக்க இயலாத காதலர்கள், அப்படி சந்திக்க நினைத்தாலும் அதை தெரிவிக்க முடியாத காதலர்கள், அதற்கென பயன்படுத்த ஓர் உபாயத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு ... ஆம்... பேசும் தெய்வம் மூலம் காதலர்களிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கு கடிதத்தின் அவசியத்தை ஆழமாக உணர்த்திய ஆண்டு 1967..
அது மட்டுமா... இறைவனின் அவதாரமாக புனித ஆன்மாவாகத் திகழ்ந்த காஞ்சி மாமுனிவரின் ஆசியைப் பெற, அவருடைய தரிசனத்திற்காக மக்கள் ஏங்கிக் கிடந்த காலத்தில் அவராலேயே அழைக்கப்பட்டு நடிகர் திலகம் ஆசி பெற்ற ஆண்டு 1967.
மாதக் கணக்கில் இடைவெளி விட்டு ஒவ்வொரு படத்தையும் வெளியிடும் நடிகர்கள் மத்தியில் ஒரே நாளில் இரு படங்களை வெளியிட்டு இரண்டும் பெரும் வெற்றி பெற்ற வரலாற்றை நடிகர் திலகம் படைத்த ஆண்டும் 1967. ஊட்டி வரை உறவு இரு மலர்கள் இரண்டுமே ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே நூறு நாட்கள் கண்டதும் அதை இன்று வரை மற்றவர்களால் முறியடிக்க முயலாமல் இருப்பதும் என இந்த சாதனையை நடிகர் திலகம் நிகழ்த்திய ஆண்டும் 1967.

இவையெல்லாவற்றையும் மீறி, ஒரு மிகப் பெரிய அரசியல் சூறாவளியில் சிக்கினாலும் காங்கிரஸ் என்ற கப்பலை மூழ்க விடாமல் செய்து அதற்கு ஆக்ஸிஜன் கொடுத்து அதை இன்று வரை மக்கள் மனதில் நிலைக்கச் செய்த பெருமையான சாதனையை நடிகர் திலகம் நிகழ்த்திய ஆண்டும் 1967..

நடிகர் திலகம் என்கின்ற ஒற்றை மதிற்சுவர் திராவிட சுனாமியை எதிர் கொண்டு தாங்கி காங்கிரஸ் என்ற மாளிகையை கட்டிக் காத்து இன்று வரை பராமரித்துக் கொண்டுள்ளது. கட்டிடம் சிதிலமடைந்தாலும் நடிகர் திலகம் என்கின்ற பலமான அஸ்திவாரத்தில் எழுந்த காங்கிரஸ் என்கின்ற மாளிகை இன்றும் மிச்சம் மீதி இருக்கும் நிலையில் பரிதாபமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அந்த அஸ்திவாரத்தை பலமாக நடிகர் திலகம் அமைத்துக் கொடுத்த ஆண்டும் 1967..

இவை மட்டுமின்றி இன்னோர் முக்கியமான நிகழ்வும் குறிப்பிட வேண்டும். முழுக்க முழுக்க சென்னை சாந்தி திரையரங்கின் நிர்வாகம் நடிகர் திலகத்திடம் வசம் அமைந்ததும் இவ்வாண்டு தான். 1967ல் நெஞ்சிருக்கும் வரை திரையிடப்பட்ட போது தான் சாந்தி திரையரங்கின் நிர்வாகியாக நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய உறவினர் பொறுப்பேற்றார்.

இந்த ஆண்டின் சிறப்பை மிக அருமையாக எழுதிய முரளி சாருக்கு மீண்டும் நன்றி.

RAGHAVENDRA
1st March 2015, 07:31 PM
Sivjai Ganesan Filmography Series

110. Kandankarunai கந்தன் கருணை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/kknt02_zpsagil1seb.jpg

தணிக்கை – 10.01.1967
வெளியீடு – 14.01.1967

தயாரிப்பு – AL. ஸ்ரீநிவாசன் - ஏஎல்.எஸ். புரொடக்ஷன்ஸ்

நடிக நடிகையர் ... படத்தின் டைட்டில் கார்டில் உள்ளபடி
நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், ஜெமினி கணேஷ், கே.பி. சுந்தராம்பாள், நடிகையர் திலகம் சாவித்திரி கணேஷ், ஜெயலலிதா, கே.ஆர். விஜயா, அசோகன், பாலாஜி, ஈ.ஆர்.சகாதேவன், நாகேஷ், வி. கோபால கிருஷ்ணன், சிவகுமார், எஸ்.வி.ராமனாதன், எஸ்.வி.ராமதாஸ், மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் காதர், இசைமணி சீர்காழி கோவிந்தராஜன், ..எஸ்.வரலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, மனோரமா, அம்பிகா, மணிமாலா, குமாரி ராதா, பேபி செல்வி... மற்றும் பலர்

பின்னணி பாடியவர்கள்
டி.எம். சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல். ராகவன், எஸ்.சி. கிருஷ்ணன், எஸ்.வி. பொன்னுசாமி, ஆதம்ஷா, டி.எம். தங்கப்பன், சைதை நடராஜன் (நாதசுரம்), பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ஜமுனா ராணி, ஏ.பி. கோமளா,

மேக்கப் – ரங்கசாமி, கோபால், ராமசாமி, பத்மனாபன், தக்ஷிணாமூர்த்தி, சேதுபதி

ஆடை அலங்காரம் – ஸி.கே. ராஜமாணிக்கம், காந்தி, ஸ்ரீநிவாசன்

ஆபரணம்- ஸோமு ஆச்சாரி, கிருஷ்கோ ஷாப்பிங்

ஸ்டில்ஸ் – முருகன் (M.R. BROS)
விளம்பர டிஸைன்ஸ் - G.H.RAO
தயாரிப்பு நிர்வாகம் – வீரய்யா
புரொடக்ஷன் மேனேஜர் – எஸ்.வி. கல்யாணம்
டைரக்ஷன் உதவியாளர்கள் – எஸ்.ஆர். தசரதன், எம். கருப்பையன், தஞ்சை மதி
ஸ்டூடியோ – சாரதா (லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்)
Recorded on RCA Sound System
ஸ்டூடியோ நிர்வாகம் – டி.வி. வைத்தியநாதன்
அரங்கம் – பி.ஆர். ராமனாதன், பி. ராமமூர்த்தி
அரங்க நிர்மாணம் – ஜி. மதுரை, என். கிருஷ்ணன்,
அரங்க அலங்காரம் – சினி கிராஃப்ட்ஸ்
உடைகள் – ‘ஸாரி சென்டர்‘
ஓவியம் – ஆர். முத்து, வி. பரமசிவம்
மோல்டிங் – எம். சிதம்பரம், ஆர். ஜெயராமன்
ஸ்டண்ட் – சோமு
ஆபரேடிவ் கேமிராமேன் – கே.எஸ். மணி, எஸ்.வி. பத்மனாபன்
ஒலிப்பதிவு – சிவானந்தம், உதவி – ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ், ட்டி.டி. கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ். மாதவன்
ப்ரிண்டட் அண்ட் ப்ராசஸ்டு அட் ஜெமினி ஸ்டூடியோஸ் கலர் லாபரட்டரி
பாடல்கள் சில – தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் (திருப்பரங்குன்றத்தில்)
நடன அமைப்பு – பி.எஸ். கோபால கிருஷ்ணன்
எடிட்டிங் – ஆர். தேவராஜன்
கலை – கங்கா
ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ். ரங்கசாமி
ஒளிப்பதிவு டைரக்டர், தந்திரக் காட்சிகள் – கே.எஸ். பிரசாத்
சங்கீதம் – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்,
அஸோஸியேட் டைரக்டர் – கே.கே. ஸம்பத்குமார்
திரைக்கதை வசனம் டைரக்ஷன் – ஏ.பி. நாகராஜன்

RAGHAVENDRA
1st March 2015, 07:33 PM
கந்தன் கருணை – சிறப்பு செய்திகள்




1. நடிகர் திலகத்தின் வெற்றி வேல் வீரவேல் பாடலுக்கான அட்டகாசமான ராஜநடை, பின்னாட்களில் ஓர் இலக்கண நடையாக அமைந்தது குறிப்பிடத் தக்கது.

https://www.youtube.com/watch?v=4QfGkxX_WLg


2. 1967ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களுக்குப் பெற்றுத் தந்த திரைக்காவியம்.

http://iffi.nic.in/Dff2011/15th_nff/15th_nff_1967_img_30.jpg

3. பூவை செங்குட்டுவன் இயற்றி, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையமைப்பில் சூலமங்கலம் சகோதரிகள் பாடி பக்திப் பாடல் இசைத்தட்டாக வெளிவந்த தொகுப்பில், திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடல் மிகப் பிரபலமாகி மக்களிடம் சென்றடைய, அப்பாடல் திரைப்படத்தில் பயன் படுத்தப்பட்டது.

4. இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஒலித்த அறுபடை வீடு கொண்ட திருமுருகா பாடல் காலத்தை வென்று மிக மிக பிரபலமாக இன்றும் விளங்குகிறது.

5. 1969ம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பு துவங்கப்பட்ட போது அன்று இரவு 7.45 மணிக்குத் துவங்கிய தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் முதலில் ஒலிபரப்பான பாடல் அறுபடை வீடு கொண்ட திருமுருகா.

6. அருட்செல்வர் ஏ.பி.என். அவர்களின் இயக்கத்தில் கந்தன் கருணை திரைக்காவியம், முருகன் திருவிழாக்கள் தோறும் அந்நாட்களில் தவறாமல் கோயில்களில் திரையிடப்பட்டது.

RAGHAVENDRA
1st March 2015, 07:34 PM
பாடல் காணொளிகள்

அறுபடை வீடு கொண்ட
https://www.youtube.com/watch?v=ZMPyfZDubSE

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
https://www.youtube.com/watch?v=d9mhH4naphg

சொல்ல சொல்ல இனிக்குதடா
https://www.youtube.com/watch?v=ZCEVEOB7hao

என்றும் புதியது
https://www.youtube.com/watch?v=eVTf_BSYZqo

குறிஞ்சியிலே பூ மலர்ந்து
https://www.youtube.com/watch?v=kl19Zpf3TpA

வெள்ளிமலை பொதிகைமலை
https://www.youtube.com/watch?v=qLn7W0dXF64

கந்தனுக்கு ஞானவேல்
https://www.youtube.com/watch?v=cqI-ABHw574

மனம் படைத்தேன் உன்னை
https://www.youtube.com/watch?v=VIbl3osjVJA

வெள்ளிமலை மன்னவா
https://www.youtube.com/watch?v=mcaNMjgrYSQ

ஆறுமுகமான பொருள்
https://www.youtube.com/watch?v=d0uOqMo0y2E

குறிஞ்சியிலே பூமலர்ந்து
https://www.youtube.com/watch?v=POpJgopo0D0

Russellbpw
1st March 2015, 10:54 PM
Sivjai Ganesan Filmography Series

110. Kandankarunai கந்தன் கருணை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/kknt02_zpsagil1seb.jpg

தணிக்கை – 10.01.1967
வெளியீடு – 14.01.1967

தயாரிப்பு – AL. ஸ்ரீநிவாசன் - ஏஎல்.எஸ். புரொடக்ஷன்ஸ்

நடிக நடிகையர் ... படத்தின் டைட்டில் கார்டில் உள்ளபடி
நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், ஜெமினி கணேஷ், கே.பி. சுந்தராம்பாள், நடிகையர் திலகம் சாவித்திரி கணேஷ், ஜெயலலிதா, கே.ஆர். விஜயா, அசோகன், பாலாஜி, ஈ.ஆர்.சகாதேவன், நாகேஷ், வி. கோபால கிருஷ்ணன், சிவகுமார், எஸ்.வி.ராமனாதன், எஸ்.வி.ராமதாஸ், மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் காதர், இசைமணி சீர்காழி கோவிந்தராஜன், ..எஸ்.வரலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, மனோரமா, அம்பிகா, மணிமாலா, குமாரி ராதா, பேபி செல்வி... மற்றும் பலர்

பின்னணி பாடியவர்கள்
டி.எம். சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல். ராகவன், எஸ்.சி. கிருஷ்ணன், எஸ்.வி. பொன்னுசாமி, ஆதம்ஷா, டி.எம். தங்கப்பன், சைதை நடராஜன் (நாதசுரம்), பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ஜமுனா ராணி, ஏ.பி. கோமளா,

மேக்கப் – ரங்கசாமி, கோபால், ராமசாமி, பத்மனாபன், தக்ஷிணாமூர்த்தி, சேதுபதி

ஆடை அலங்காரம் – ஸி.கே. ராஜமாணிக்கம், காந்தி, ஸ்ரீநிவாசன்

ஆபரணம்- ஸோமு ஆச்சாரி, கிருஷ்கோ ஷாப்பிங்

ஸ்டில்ஸ் – முருகன் (M.R. BROS)
விளம்பர டிஸைன்ஸ் - G.H.RAO
தயாரிப்பு நிர்வாகம் – வீரய்யா
புரொடக்ஷன் மேனேஜர் – எஸ்.வி. கல்யாணம்
டைரக்ஷன் உதவியாளர்கள் – எஸ்.ஆர். தசரதன், எம். கருப்பையன், தஞ்சை மதி
ஸ்டூடியோ – சாரதா (லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்)
Recorded on RCA Sound System
ஸ்டூடியோ நிர்வாகம் – டி.வி. வைத்தியநாதன்
அரங்கம் – பி.ஆர். ராமனாதன், பி. ராமமூர்த்தி
அரங்க நிர்மாணம் – ஜி. மதுரை, என். கிருஷ்ணன்,
அரங்க அலங்காரம் – சினி கிராஃப்ட்ஸ்
உடைகள் – ‘ஸாரி சென்டர்‘
ஓவியம் – ஆர். முத்து, வி. பரமசிவம்
மோல்டிங் – எம். சிதம்பரம், ஆர். ஜெயராமன்
ஸ்டண்ட் – சோமு
ஆபரேடிவ் கேமிராமேன் – கே.எஸ். மணி, எஸ்.வி. பத்மனாபன்
ஒலிப்பதிவு – சிவானந்தம், உதவி – ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ், ட்டி.டி. கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ். மாதவன்
ப்ரிண்டட் அண்ட் ப்ராசஸ்டு அட் ஜெமினி ஸ்டூடியோஸ் கலர் லாபரட்டரி
பாடல்கள் சில – தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் (திருப்பரங்குன்றத்தில்)
நடன அமைப்பு – பி.எஸ். கோபால கிருஷ்ணன்
எடிட்டிங் – ஆர். தேவராஜன்
கலை – கங்கா
ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ். ரங்கசாமி
ஒளிப்பதிவு டைரக்டர், தந்திரக் காட்சிகள் – கே.எஸ். பிரசாத்
சங்கீதம் – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்,
அஸோஸியேட் டைரக்டர் – கே.கே. ஸம்பத்குமார்
திரைக்கதை வசனம் டைரக்ஷன் – ஏ.பி. நாகராஜன்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/kandhankarunai_zpsqwoce7tg.gif (http://s501.photobucket.com/user/subbuchennai/media/kandhankarunai_zpsqwoce7tg.gif.html)

100 DAYS ADVERTISEMENT

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/100days_zpsipixyfqw.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/100days_zpsipixyfqw.jpg.html)

Russellbpw
1st March 2015, 11:05 PM
congrats for nadigar thilagam part 15 thread on achieving the 5 star status

RAGHAVENDRA
26th March 2015, 07:40 AM
அடுத்து

பல்வேறு சிறப்புகளைப் பெற்ற

நெஞ்சிருக்கும் வரை

RAGHAVENDRA
26th March 2015, 09:44 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/sivajistatuenenjirukkumsongfw_zpsyzxf3nnn.jpg

நிழற்படம் ...
நினைவுகளை மீட்டும்...
காலத்தைக் காட்டும்..
நேரத்தை ஓட்டும்...
உறவுகளைக் கூட்டும்...
எல்லாம் வல்லது..
ஆனால்..
நிழற்படம்..
மனிதனை அழ வைக்குமா...
ஆம்.. அழ வைக்கும்...
நிழற்படம்...
மனிதனை உணர்ச்சி வசப்படுத்துமா..
ஆம்.. உணர்ச்சி வசப்படுத்தும்..
நிழற்படம்..
உயிர் பெறுமா...
ஆம்... உயிர் பெறும்...
நிழற்படம்...
நம்மை ஓ..வென்று கதற வைக்குமா..
நிச்சயம் செய்யும்...
செய்வீர்கள்...
தான் காலடி பதித்து ஆடிப்பாடிய
தலத்தில்..
தானே சிலையாய் நிற்கும்..
அந்த உன்னதக் கலைஞனை
நினைத்தால்...
இந்த நிழற்படம்...
இதையெல்லாம் செய்ய வைக்கும்...
இதோ ...
நம் கண்ணீர் இந்த சிலையை
நனைப்பதும்..
அதில் அந்த சிலையும் உருகுவதும்..
அதில் உள்ள அந்த உயிர்
ஓடி வந்து நம்மைத் தேற்றுவதும்..
இதெல்லாம் நடக்கத்தானே செய்கின்றன...
இந்த வறண்ட பூமி
இந்தக் கோடையில்
தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்கின்றது..
நம்முடைய கண்ணீரால்...

RAGHAVENDRA
9th May 2015, 09:06 AM
Sivaji Ganesan Filmography Series

111. ENJIRUKKUMVARAI நெஞ்சிருக்கும் வரை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/NenjirukkumvaraiFW_zpsyskek2sg.jpg

தணிக்கை - 27.02.1967
வெளியீடு - 02.03.1967

தயாரிப்பு - சித்ராலயா

நடிக நடிகையர்
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், முத்துராமன், கோபாலகிருஷ்ணன், ராகவன், மாலி, செந்தாமரை, கே.ஆர்.விஜயா, கீதாஞ்சலி,

பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், வாலி - நெஞ்சிருக்கும்

பாடியவர்கள் - டி.எம்.எஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி

ரிகார்டிங் ரீரிகார்டிங் - டி.எஸ்.ரங்கசாமி, உதவி - வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ்

வசன ஒலிப்பதிவு - எம்.ராமச்சந்திரன் - பரணி, டி.சிவானந்தம் - சாரதா

நடனம் - பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, சுந்தரம் உதவி - சந்திரகலா
மேக்கப் - நாஞ்சில் சிவராம், ரங்கசாமி

உடை அலங்காரம் - பி.ராமகிருஷ்ணன்

புரொடக்ஷன் நிர்வாகம் - கே.ஆர்.சண்முகம்

ஆபீஸ் நிர்வாகம் - வி.எஸ்.சர்மா

பப்ளிசிடிஸ் - எலிகண்ட்
பப்ளிசிடி டிசைன்ஸ் - புஷ்பன், பரணிகுமார்

செட் பிராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்
செட் அலங்காரம் - சம்மந்தம், பிள்ளை
செட்டிங்ஸ் - டி.வி.குமார் - பரணி, ஜி.மதுரை, என்.கிருஷ்ணன், கே.வீர்ராகவன் - சாரதா
மோல்டிங் - சிதம்பரம் - சாரதா
சினி எஃபெக்ட்ஸ் - ஆர்.முனுசாமி - பரணி, முத்து, பரமசிவம் - சாரதா

ஸ்டூடியோ புரோக்ராம்ஸ் - எம்.ராமச்சந்திரன் - பரணி, ஏ.சுந்தரேசன், ஏ.எம்.சுந்தரம், பஞ்சாபிகேசன், பாலு - சாரதா

ஸ்டூடியோ - பரணி, சாரதா

அவுட்டோர் யூனிட் - மூவி ஸர்வீஸஸ், பிரசாத் யூனிட்

Processed & Printed at VIJAYA LAB By S. RANGANATHAN

கலை - கங்கா

எடிட்டிங் - என்.எம். சங்கர்

ஸ்டில்ஸ் - திருச்சி அருணாசலம்

ஒளிப்பதிவு - பாலகிருஷ்ணன்

துணை வசனம் - கோபு

உதவி டைரக்ஷன் - என்.சி.சக்கரவர்த்தி, ஆர்.ஸ்ரீதர் பாபு, எம்.பாஸ்கர்

இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன், உதவி - கோவர்தன், ஹென்றி டேனியல்

அசோசியேட் டைரக்ஷன் - சி.வி.ராஜேந்திரன்

கதை வசனம் டைரக்ஷன் - ஸ்ரீதர்

RAGHAVENDRA
9th May 2015, 09:07 AM
காணொளிகள்

நெஞ்சிருக்கும் எங்களுக்கு

https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU

முத்துக்களோ கண்கள்

https://www.youtube.com/watch?v=ED0bwUuSQMg

பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி

https://www.youtube.com/watch?v=IAw7hI6-Ehw

நினைத்தால் போதும் பாடுவேன்

https://www.youtube.com/watch?v=qD-xjwNmLLY

எங்கே நீயோ நானும் அங்கே – 1

https://www.youtube.com/watch?v=klGcrlvRXBQ

கண்ணன் வரும் நேரமிது

https://www.youtube.com/watch?v=DNJ9kWmWKTQ

RAGHAVENDRA
9th May 2015, 09:09 AM
நெஞ்சிருக்கும் வரை - முரளி அவர்களின் நெஞ்சைத் தொடும் ஆய்வுப் பதிவு

15th September 2007, 05:29 PM

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=253687&viewfull=1#post253687



NENJIRUKKUM VARAI

What shall I say about this movie? A Classic in Black and White, perhaps the best of NT - Sridhar combo,IMO. Again as it happened to so many such classics of NT, this is a film that never got the recogonition due to it either commercially or in the form of critical acclaim. A novel attempt by Sridhar and kudos to NT for doing such a deglamourised role at the peak of his career.

Set in a area where the economically downtrodden and daily wage earners are put up in Madras, the story revolves around 2 friends and the house owner's family. NT and V.Goplakrishnan are unemployed people doing bits and pieces jobs to make both ends meet. They stay in a portion of a house where the other portion is occupied by the owner V.S.Raghavan and his daughter KRVijaya.

Because they don't have a permanent job, their rent is always under arrears (5 Rs per month -1967) and VSR is always after them. KRV has a soft corner for them and tries to help them. Though very rough and tough outwardly, VSR also has a soft corner and asks KRV to provide them food, whenever it is possible.

VG suffers from a heart ailment and Dr.advises him not to do any hard working job which would tax his heart. He is a person who longs for food and NT always tries to provide him with that.

NT is in love with KRV but he is unable to spell it out due to the fact that he is jobless and is not sure of what KRV thinks of him. Meanwhile, while looking for a job at Central station, he meets Muthuraman who had come from Bangalore who has lost his bag and his purse. Impressed by his honesty, NT takes him to their home and VSR who initially refuses to allow him later relents. MR is basically a rich person who had lost his parents while he was very young and his uncle had usurped his property. A case is going on, he informs them. The very arrival of MR strikes a cupid's arrow in KRV. After a while they both express their feelings to each other.

NT is trying for a permanent job but since he is unable to pay a deposit of Rs 100/- (!), it eludes him. MR informs about his love to NT which is a shock to him. He slaps MR only to find later that KRV also reciprocates the same. He hides his dissapointment and promises them that he will arrange for the wedding once MR's case is over. VG one night finds MR and KRV at the garden and he knowing NT's love for KRV tries to react but NT stops him. MR receives a telegram that his case is in the final stage and he is sure of winning.He leaves for Bangalore promising KRV that he will come back and marry her.He wins the case and his big property comes back to him. He puts up his own office and he appoints a manager (Maali) for the same.

NT one night finds VG with a lot of money and he shouts at him for hiding something from him and refuses to talk to him. Impressed by NT, the supervisor of that lorry parcel company (again so natural) recommends him to the boss without deposit and NT rushes home with food packets (VG so fond of food) to celebrate the same and waits for him only to find VG being carried home by some people in a serious condition. It transpires that VG indeed had been working and saving the wages for NT's deposit. But the heart ailment snatches his life. Dissaster again strikes them when VSR falls ill and in spite of medical attention dies, asking NT to take care of KRV.

MR after setting right his business rushes to Madras but he is shocked when he sees a wall writing near the house which talks about the "Live- In" of NT and KRV without marriage. When a resident of that area also says the same about them, he watches them from a distance and his misunderstanding grows. He returns without meeting them. When NT also sees the wall writing, he decideds enough is enough and takes KRV to Bangalore.

When NT meets MR, he is cold shouldered and when MR refuses to marry KRV without telling the reason, NT has no other way but to forcefully secure his consent for the marriage. MR puts one condition that after marriage NT should not visit his house nor should he attempt to see them. The marriage takes place and KRV
unaware of all these gets the shock of her life when MR informs her that he has been forced to marry her and she would remain his wife only for the name sake. KRV takes it in her stride. MR by now starts moving with Geetanjali, the sister of Maali and they go out together to all places. NT unable to find the reason for MR's sudden change of heart finds a job in a petrol bunk in Bangalore itself and when he sees MR with Geetanjali, he goes to their house to talk about it. He finds KRV not happy and tells her that he is not going to take it lightly the behaviour of MR. MR sees him leaving his house and again it raises his suspicion. He starts drinking and unable to bear his acid words (again he is not revealing the exact reason) KRV gives in writing that she has no objection in he marrying any other woman.

NT again confronts MR and on learning that KRV had given her consent in writing snatches away the letter forcefully and destroys it. Insulted badly in front of Geetanjali, MR fully drunk goes to the Petrol bunk where NT works in the middle of the night and tries to shoot him only to find there are no bullets. At that time he tells NT that he is a betrayer and KRV is a characterless woman and drives away. NT unable to take this takes the revolver left by MR only to find that there are 3 bullets in its chambers.

He rushes to their house and tries to kill MR if he is not apologising for what he had uttered. MR again accuses them and only now KRV realises the reason behind his repulsion. NT realising that things are going out of control does an extreme thing to make MR realise his mistake and there ends the saga.

About NT, coming back with a separate post.

Regards

RAGHAVENDRA
9th May 2015, 09:10 AM
முரளி அவர்களின் பதிவு - தொடர்ச்சி

15th September 2007, 08:54 PM

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=253701&viewfull=1#post253701




There are many films of NT where he had given out a restrained performance but which never got the so called critics accolade. IMO, NT's portraying of Raghu in NV is a performance bordering on the brilliant among his all such roles. From the start to the finish, he is so casual and restrained but that leaves a deep impact on you. The way he utters the dialogues is itself a treat to watch.

From the begining when he brings in VG suffering from chest pain, when he is confronted by VSR, the replies by him "Sir, sagarathu romba easy ana vaazharathuthan kashtam. indha paya nenju vali nandhu nadu roadile surundu vizhundutan. vizhundhavan appadiye sethu poyirukka koodathu? innum evvalu kashtam anubhavikanumo, pozhachitan. Namma mammool vadagai sandaiyai apprum vachukovome". VSR asks him "avanukku enna kodukka pore? " NT replies "Kodukka vendiyathu apple juice, kodukka porathu 2 tumbler paanai thanni".

VG tells NT "Namma pakkathu theruvile oru periya veedu irukku" udane NT sarcastica " evanavathu athai un peyarile uyil ezhuthi vaikka porana". When KRV asks him to accompany her as some rowdy elements eve tease her, NT " Yaar athu, ennai pathi avangalukku theriyathu. Nee Panic in Bangkok parthirukiya, athule oru fight varum, andha mathiri pandhadi vidren" ithai solli vittu "pasanga vatta sattama irupangala?" , KRV " Illai", udane avarathu muga bhavathai paarka vendume "Dhairiyama vaa". Avargalai thandi vandhavudane "Paarthiyaa, naan oru paarvai paarthavudan bayandhutungaa". A scene to relish.

There is a scene when KRV is having food and NT offers to serve her. KRV is embarassed but NT insists on. The casual manner in which he does the scene is so cool. Another scene when he gives just 3 Rs as rent (VG "Saapida kooda illame ungallukka kondu vandhom"), VSR asks KRV to give them food. Immediately both of them jump and the way they start serving themselves before even KRV could start, you feel you are watching two persons in live being so hungry.When MR informs about his love his reaction is one of anger. But when he listens to the conversation between MR and KRV, you have to watch his face standing sodewards and when he tells MR to leave the house " manapoorvama raji-yai virumbalai-nu sollittu po" the camera shows his back with his right hand pointing towards the door. When MR puts his face on that hand and cries, NT's face turn towards right and you see his right side of the face and a single eye. It expresses the happiness overshadowing the dissapointment, a thing only NT can do.

Another nice scene is NT telling VG about how he feels that his love has failed. "Idhayathile oru vali vin vin-nu irukku, ana athu oru small dissapointment. Konja naalile sariyaidum". Even the death scenes of VG and VSR where there were every chances of they becoming melodramatic, he does it in a exemplary manner. His reaction when he sees the wall writing and his reaction later at the house is again noteworthy.

But the scene which takes the cake is where NT meets MR at his Bangalore office. He asks all the other employees to wait outside (to the Anglo- Indian typist " Madam, can you go out for 10 minutes, thank you" his pronounciation and gesture,wow!). When everybody leaves, he sits on MR's table and speaks so
enthusiastically not noticing MR is least interested. When MR tells him " Mudhale keezha erangu, table-i vittu erangu, get out of the table", udane NT mugam konjam konjamaga maari than anindhirukkum shirt-ai paarthukondu konjam kooni kuruguvar. Superb. When he realises that MR is adamant, his reaction would become aggressive and when MR finally agrees he leaves. MR " ana oru Nibandhanai", he would turn so stylishily with the camera focussing him from the ground and with a sarcastic look "enna nibandhanai", I was reminded of the thunderous applause it used to generate in theatres.

After the marriage when he visits their house, KRV asks him " Neenga eppadi irukeenga" ,atharkku with a resigned look " Naana, First class, first class- same shirt, same pant, first class" again a stroke of genius. The scene where he confronts MR who is in the company of Maali and Geethanjaali, the way he dismisses Maali from his presence and his act of torning the consent letter written by KRV and showering it on the head of the Geethanjaali without uttering a word, he never ceases to excite you.

I can go on and on and on but it would be repeating the obvious. Raghu character would always remain as a glittering diamond. NT's decision to do this role with his own hair do and without make up during that period is all the more praiseworthy.

Coming to others, MR is natural in the first half but when he becomes rich and starts showing animosity, he is different with always a curt look in his face, though the character demands it. Raji should be KRV's one of the best roles of her. Sridhar brings out the best in her. VG as Peter has given out a memorable performance whereas VSR as the rough exteriored but kind hearted is superb in this cameo. Another notable feature is there is no comedy track but one never feels the need for it.

N.Balakrishnan's camera work, Sridhar's down to earth dialogues (helped by Gopu) and his screen play and direction (though it seems that he is a bit not sure about how to take it forward in the second half) are the plus points.

Again MSV and Kannadasan at their best (though Vaalee chips in with one song " Nenjirukkum Engalukku").

Muthukalo Kangal ----- This ever green number will find place in top most duests of NT. A soul stirring one.

Nenjirukkum Engalukku -------- The trio sings this song. It starts from Central station and ends at Beach. The interlude between the first and second charanam is done in a single shot and you should see NT style walk. Another irony which I noticed was this song ends at the junction of Beach road and Radhakrishnan Salai and there was a fountain it seems during that time (1966? because this was released in Feb 1967) and when NT finally finishes "Naalai endra naalirukku, vazhendhe theeruvom" he stands exactly, yes you guessed it correct, at the place where his statue stands now.

Poo Mudipal Indha Poongoozhali ------ Watch this song for the poetic beauty, Sridhar's deft handling coupled with NT's expressions (this is the song where TMS voice suits NT perfectly even in dialogue)

Kannan Varum Neramithu --------- PS at her best in this dance song.

Enge Neeyo --------- One of the Super songs that doesn't need any description.

Ninaithal podhum Paaduven --- SJ's soulful rendering for Geetha.

Sridhar once remarked about this film"If only had I not listened to the distributors' words and tampered with the second half " he left it incomplete without indicating what was planned originally. Still this remains as one of his best.

For those who have not seen it, don't miss it.

To sign off, I am reminded of the booklet published during 1970 which included the comments of NT about every film of him. In that, his comment on this movie was just one word

Nenjirukkum Varai - Ninaivirukkum

Regards

RAGHAVENDRA
9th May 2015, 09:11 AM
சகோதரி சாரதா அவர்களின் ஆய்வு

Saradhaa’s Post

16th September 2007, 07:15 PM

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=253751&viewfull=1#post253751


'நினைத்தால் போதும் பாடுவேன்'

சில படங்களில் ஒருசில பாடல்கள் ஓகோ என்று HIT ஆகும்போது, சில நல்ல மெலோடியஸ் பாடல்கள் பின்னால் தள்ளப்படுவது வாடிக்கை.

உதாரண்மாக 'எங்க வீட்டுப் பிள்ளையி'யில் "நான் ஆணையிட்டால்" பாடல் சூப்பர் HIT ஆக, அதைத்தொடர்ந்து 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்' பாடலும் 'குமரிப்பண்ணின் உள்ளத்திலே' பாடலும் மக்களால் பேசப்பட, அருமையான மெலோடியான 'மலருக்கு தென்றல் பகையானால்' பாடல் பின்னுக்கு தள்ளப்பட்டது.

அதுபோலவே, குடியிருந்த கோயில் படத்தில் "ஆடலுடன் பாடலைக்கேட்ட்" சூப்பர் HIT ஆக, தொடர்ந்து 'துள்ளுவதோ இளமை', பின்னர் 'நான்யார் நான்யார்', 'நீயேதான் எனக்கு மணவாட்டி' மற்றும் 'என்னைத்தெரியுமா' பாடல்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்க, அருமையான மெலோடியான "குங்குமப்பொட்டின் மங்கலம்" பாடல் நிழலில் தள்லப்ப்பட்டது.

நான் மேற்சொன்ன பாடல்களில் எந்த ஒன்றும் அடுத்ததற்கு சளைத்ததல்ல. அத்தனையுமே தேன் சொட்டும் பாடல்களே. ஆனால் ரேஸில் ஓடும்போது சில நல்ல பாடல்கள் பின் தங்கி விடுகின்றன (அல்லது தங்க வைக்கப்படுகின்றன).

அப்படி ஒரு நிலைமைதான் 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் இடம் பெற்ற "நினைத்தால் போதும் பாடுவேன்" என்ற அற்புதப் பாடலுக்கும் நேர்ந்தது. ஏன் அப்படி?. கதாநாயகனும் கதாநாயகியும் இடம் பெறாத பாடல் என்பதாலா?.

தமிழ்த்திரையிசையிலேயே வித்தியாசமாகப் படமாக்கப்பட்ட "பூ முடிப்பாள் இந்தப்பூங்குழலி" பாடலுக்கும், அருமையான டூயட் பாடலான 'முத்துக்களோ கண்கள்' பாடலுக்கும் (இன்றும் இந்தப்பாடலைப்பாடாத மேடை ஆர்க்கெஸ்ட்ராக்களே கிடையாது), சோகத்தைபிழிந்து தரும் 'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு' பாடலுக்கும் நடுவே
'கண்னன் வரும் நேரமிது' பாடலும்
'நினைத்தால் போதும் பாடுவேன்' பாடலும்
சற்று ஒதுக்கி வைக்கப்பட்டன என்பது வேதனையான உண்மை.
ஆனால் தரத்தில் எந்தப்பாடலுக்கும் இவை குறைந்தவை அல்ல.

'மெல்லிசை மன்னரின்' இசையில் எஸ்.ஜானகி அவர்கள் பாடிய ஏராளமான அருமையான பாடல்களில் ஒன்று இது.

(மெல்லிசை மன்னரின் இசையில் ஜானகி அவர்கள் பாடிய இசைக்கடலின் சில துளிகளை வேறொரு இடத்தில் பட்டியலிட்டிருக்கிறேன். காரணம், எந்த தொலைக் காட்சியில் யார் தோன்றி எஸ்.ஜானகியைப் பற்றிப் பேசினாலும் 'எஸ்.ஜானகி என்ற ஒரு பாடகி பிறந்ததே 1976க்குப்பின் தான் என்பது போன்ற ஒரு திட்டமிட்ட மாயை பரப்பப் பட்டு வருகிறது).

எடுத்த எடுப்பிலேயே பஞ்சமத்தில் துவங்கும் பாடல் இது.

நினைத்தால் போதும் பாடுவேன்
அனைத்தால் கையில் ஆடுவேன்
(அப்படியே ஸ்தாயி இறங்கி)
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்னை மாற்றுவேன்

தொடர்ந்து இடையிசையில் சிதார் மற்றும் ஃப்ளுட் உடன் தபேலா. சட்டென்று இவை நின்று (சிவாஜி துப்பாக்கியுடன் ஓடிவரும் காட்சியை காட்டும்போது) வெறும் வயலின் மட்டும், பின்னர் காட்சி மாறி கீதாஞ்சலியின் நடனத்தைக் காட்டும்போது மீண்டும் ஃப்ளூட் மற்றும் தபேலா, மீண்டும் அதே பிட்டை வயலினில் வாசித்து நிறுத்த, சோலோவில் தபேலா, தொடர்ந்து ஜானகியின் நீண்டHUMMING சட்டென்று வயலின் அழுத்தலோடு பாடல் சரணத்துக்குள் நுழைய..... அப்பப்பா என்ன ஒரு இடையிசை....!!!!

பாலின் நிறம் போன்ற அழ்கான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல
ஏக்கம் வரும்போது எல்லோர்க்கும் சொல்ல

ஆகா... எஸ்.ஜானகியின் குரலில்தான் என்னென்ன மாடுலேஷன்கள். மெட்டமைத்தவர் யார். மெல்லிசை மன்னரல்லவா?

பாடலின் இறுதியில் வரும் நீண்ட வயலின் மற்றும் ஜானகியின் நீண்ட HUMMING படத்தில் இடம் பெற்றிருந்தபோதிலும், சிவாஜி கே.ஆர்.விஜயாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தொலைவில் ஒலிப்பதாக காட்டப் படுவதால், சற்று மாற்றுக் குறைந்து விடுகிறது.

ஸ்ரீதர் ஏன் இப்படி செய்தார் என்பதுதான் விளங்கவில்லை.

இப்பாடலில் கீதாஞ்சலியின் நடனம் கண்ணுக்கு அருமையான விருந்து. அதுவும் ஒரே ஷாட்டில் அவர் சுழன்று சுழன்று ஆடும்போது அருமையோ அருமை.

RAGHAVENDRA
10th May 2015, 08:36 AM
http://i.ytimg.com/vi/P2MJpoGthTg/hqdefault.jpg

சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அப்போதே கிளையை ஆரம்பித்து விட்டதோ என்று சொல்லும் அளவிற்கு ஒரு திரையரங்கையே கோயிலாக மக்கள் பாவிக்கக் காரணமாயிருந்த உன்னத குடும்பச் சித்திரம்...

காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த ஒரு எளிதான உத்தியை மிகவும் பிரபலமாக்கிய பாடல் இடம் பெற்ற திரைக்காவியம்..

அடுத்து இத்திரியில் ...

RAGHAVENDRA
10th May 2015, 10:05 PM
Sivajai Ganesan Filmography Series

112. Pesum Deivam பேசும் தெய்வம்

http://i.ytimg.com/vi/P2MJpoGthTg/hqdefault.jpg


தணிக்கை - 04.04.1967
வெளியீடு - 14.04.1967
தயாரிப்பு - ரவி புரொடக்ஷன்ஸ்

நடிக நடிகையர்
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், உலக நாட்டியப் பேரொளி பத்மினி, சௌகார் ஜானகி, நாகேஷ், எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சஹஸ்ரநாம்ம், சத்யன், வி.எஸ்.ராகவன், கே.கண்ணன், ஜி.சகுந்தலா, சுந்தரிபாய், சூர்யகலா, ஜெயபாரதி, குழந்தை ராணி, சந்திரா மற்றும் பலர்

மேக்கப் - தனகோடி, ரங்கசாமி, ராமசாமி, கிருஷ்ணராஜ், சீனிவாசன், செல்வராஜ், பாலகிருஷ்ணன்

உடை அலங்காரம் - பி.ராமகிருஷ்ணன், விவேகாநன்தன், தம்மு

நடனம் - கள்ளபார்ட் நடராஜன், சாந்தா மற்றும் நடனக் குழுவினர்

நடன அமைப்பு - பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், தங்கராஜ், சின்னி சம்பத்
பாடல்கள் - வாலி

பாடியவர்கள் -டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.லீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி, சரளா

பாடல்கள் ஒலிப்பதிவு - டி.எஸ்.ரங்கசாமி - சாரதா ஸ்டூடியோ, உதவி - ஆர்.வேதமூர்த்தி, ஜோ.அலோஷியஸ்.

ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவி.எம்.ஸ்டூடியோஸ்.
வசனம் ஒலிப்பதிவு - எஸ்.பிரசன்னகுமார் - பரணி, கே.ஆர்.ராமசாமி - பிரசாத்

செட்டிங்ஸ் - டி.வி.குமார், வி.குமார், சி.குப்புச்சாமி
எலக்ட்ரீஷியன்ஸ் - டி.செல்வராஜ், என்.பக்கிரிசாமி, பி.தணிகாசலம்
மோல்டிங் - சுப்பராயன்
பெயிண்டிங் - ஆர்.முனுசாமி, பி.சுப்ரமணியம்

வெளிப்புறப் படப்பிடிப்பு - "சித்ரா மூவீஸ்", சென்னை - 17

ஸ்டில்ஸ் - டி.ஐ. சாந்தாமியான்,
விளம்பர டிசைன்கள் - ஜி.ஹெச்.ராவ்
விளம்பரம் - எலிகண்ட்

அலங்காரப் பொருள்கள் - சினி கிராப்ட்ஸ்
எவர்சில்வர் பாத்திரங்கள் - ருத்ரா டிரேடர்ஸ், சென்னை-17.
பித்தளைப் பாத்திரங்கள் - பொன்னி ஸ்டோர்ஸ், சென்னை-17.

புரொடக்ஷன் நிர்வாகம் - கே.என்.சுந்தரம், ஆர்.ராஜப்பா

ப்ராஸஸிங் லேபரடரி by பி.எம்.விஜயராகவலு

எடிட்டிங் - ஆர். தேவராஜன்

ஒளிப்பதிவு டைரக்டர் - ஆர். சம்பத்

உதவி டைரக்ஷன் - கே.பி.ரங்கநாதன், ஏ.கே.சுப்ரமணியம்

இசை - திரை இசைத் திலகம் - கே.வி.மகாதேவன், உதவி - புகழேந்தி

தயாரிப்பு - பாலு

திரைக்கதை வசனம் இயக்கம் - "இயக்குநர் திலகம்" கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

RAGHAVENDRA
10th May 2015, 10:06 PM
பேசும் தெய்வம் விளம்பர நிழற்படம் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5713-1.jpg

RAGHAVENDRA
10th May 2015, 10:07 PM
பேசும் தெய்வம் - காணொளிகள்

அழகு தெய்வம் மெல்ல மெல்ல
டி.எம்.எஸ்., பி.சுசீலா


http://www.dailymotion.com/video/x15myjh_azhagu-deivam-pesum-deivam-1967_shortfilms

RAGHAVENDRA
10th May 2015, 10:08 PM
பிள்ளை செல்வமே -

எஸ்.ஜானகி


http://www.dailymotion.com/video/x15myil_pillai-selvame-pesum-deivam-1967_shortfilms

RAGHAVENDRA
10th May 2015, 10:08 PM
இதய ஊஞ்சலாடவா
டி.எம்.எஸ்., பி.சுசீலா


http://www.dailymotion.com/video/x15mym1_idhaya-oonjal-pesum-deivam-1967_shortfilms

RAGHAVENDRA
10th May 2015, 10:09 PM
பத்து மாதம் சுமந்திருந்தேன்
டி.எம்.எஸ்., பி.சுசீலா


http://www.dailymotion.com/video/x2fp5lm

RAGHAVENDRA
10th May 2015, 10:09 PM
நான் அனுப்புவது கடிதம் அல்ல
டி.எம்.எஸ்.


https://www.youtube.com/watch?v=Gr4uqoBw-Iw

RAGHAVENDRA
10th May 2015, 10:10 PM
நூறாண்டு காலம் வாழ்க
சூலமங்கலம் ராஜலட்சுமி,


https://www.youtube.com/watch?v=gZLrOhpwbnA

RAGHAVENDRA
10th May 2015, 10:10 PM
பேசும் தெய்வம் திரைக்காவியத்தைப் பற்றி நம் மய்யம் இணைய தளத்தில் நடிகர் திலகம் திரியின் வேறோர் பாகத்தில் முரளி சார் மற்றும் சகோதரி சாரதா அவர்களின் பதிவுகள் ...


முரளி சாரின் ஆய்வு..
நாள் - 15.05.2009, பகல் 12.29

இணைப்பு -
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=399571&viewfull=1#post399571



பேசும் தெய்வம் Part I

தயாரிப்பு : ரவி புரொடக்ஷன்ஸ்

கதை வசனம் இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

வெளியான நாள்: 14.04.1967

சென்னையில் பெரிய செல்வந்தர் ரங்காராவ். மனைவி சுந்தரி பாய். ஒரு மகள் திருமணமாகி மதுரையில் வசிக்கிறாள். கணவர் கலெக்டர். ஒரே மகன் சந்துரு சட்டக் கல்லூரியில் படிக்கிறான். நாகர்கோவிலை சொந்த ஊராக கொண்ட அந்த பெற்றோர்கள் மகனுக்கு வேண்டியே சென்னையில் தங்கியிருக்கிறார்கள். தந்தையைப் பொறுத்த வரை திருப்பதி ஏழுமலையான் தான் எல்லாம். அவனிடம் உரிமையோடு எனக்கு இது இது வேண்டும் என்று லிஸ்ட் போட்டு கோரிக்கை வைப்பவர். தாயோ மகனுக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லும் சந்துரு ஒரு நாள் ஒரு பெண்ணை பார்க்கிறான். அவள் அழகில் கவரப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அவளும் அவனை விரும்பவுதை உணர்கிறான். அவள் பெயர் லட்சுமி, அவள் யாருமற்ற அனாதை என்பதை தெரிந்து கொள்ளும் சந்துரு தன பெற்றோர்களை சம்மதிக்க வைக்க தன் அக்கா கணவரின் உதவியை நாடுகிறான். அவர் உதவியால் கல்யாணம் நடக்கிறது.

சில வருடங்கள் உருண்டோடுகின்றன. ஆனால் சந்துரு லட்சுமி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் மனது வருத்தப்படுவதை நினைத்து சந்துருவும் லட்சுமியும் அப்செட் ஆகிறார்கள். வீட்டு வேலைக்காரி வேலம்மாள் மளிகை சாமான்களை தெரியாமல் எடுத்து செல்வதை பார்த்து விடும் லட்சுமி அவளை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க அவள் தன் குடும்ப கஷ்டத்தை கூறுகிறாள். அவளுக்கு ஏற்கனவே ஆறு குழந்தைகள். இப்போது ஏழாவது குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள். கணவன் சரியில்லை. குழந்தை இல்லை என்று கவலைப்படும் நீங்கள் என் குழந்தைகளில் ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று அவள் சொல்ல இருப்பது வேண்டாம் பிறப்பதை எடுத்துக் கொள்ளலாம் என்று சந்துருவின் தந்தை சொல்ல அதன்படி செய்கிறார்கள். குழந்தை பிறந்ததும் அதை சீராட்டி வளர்க்கிறார்கள். ஆனால் டிப்திரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தையை சரியான நேரத்தில் டாக்டரிடம் காண்பிக்காததால் (வேலைக்காரியின் பேச்சை கேட்டுக் கொண்டு) குழந்தை இறந்து விடுகிறது. அதே நேரத்தில் மயங்கி விழும் லட்சுமி கர்ப்பம் தரித்திருப்பதாக டாக்டர் கூற மீண்டும் மகிழ்ச்சி பொங்குகிறது. ஒரு ஆண் குழந்தை பிறந்து வளர்கிறது. அதற்கும் டிப்திரியா தாக்க ஆனால் இந்த தடவை தக்க சமயத்தில் சிகிச்சை கொடுக்கப்பட குழந்தை பிழைத்துக் கொள்கிறது.

ஒன்றிரண்டு வருடங்களுக்கு பிறகு இப்போது சந்துரு சென்னையில் ஒரு மூத்த வழக்கறிஜரிடம் பணியாற்றுகிறான். அவனது பெற்றோர்கள் இப்போது நாகர்கோவிலில் வசிக்கிறார்கள். குழந்தை பாபுவை அல்லும் பகலும் கவனித்துக் கொண்டு அவனைப் பற்றியே கவலைப்படுவதால் லட்சுமியின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. பலவீனமான இதயமாக இருப்பதால் அதிர்ச்சி தரும் செய்திகளை அவளிடம் சொல்ல வேண்டாம் என்று டாக்டர் அறிவுறுத்துகிறார். இந்நிலையில் சந்துருவின் அக்கா மகளுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு கோட்டயம் நகரில் வைத்து நடக்கிறது. லட்சுமி உடல் நிலை காரணமாக போகாமல் இருக்க பாபுவை கூட்டிக் கொண்டு சந்துரு கல்யாணத்திற்கு போகிறான். அங்கே பழைய நண்பர்கள் கூட்டத்தை சந்திக்க அனைவரும் சீட்டு கச்சேரியில் மூழ்குகிறார்கள். குழந்தை பாபு அழ சந்துருவின் அம்மா சந்துருவிடம் விட்டு செல்கிறாள். குழந்தை வேறு சில குழந்தைகளை பார்த்து விட்டு அவர்களுடன் விளையாடப் போகிறான். ஆனால் ஆட்டத்தில் ஆழ்ந்திருக்கும் சந்துரு இதை கவனிக்கவில்லை. ஒரு பொம்மைக்கு சண்டை போடும் குழந்தை வீட்டின் முன் உள்ள ஏரிக்கரையில் நிறுத்தி வைத்துள்ள படகில் ஏறி பொம்மையை எடுக்க முயற்சிக்க கயிற்றால் கட்டாமல் நிறுத்தி வைத்துள்ள படகு நகர்ந்து ஏரியில் தானே செல்லுகிறது.

குழந்தையை காணாமல் அனைவரும் தேட ஏரிக்கரையில் குழந்தையின் ஒரு செருப்பு கிடக்கிறது. குழந்தை என்னவாயிற்று என்று தெரியாமல் சந்துரு தவிக்கும் போது லட்சுமி போன் செய்கிறாள். நிலைமையை சமாளிக்க குழந்தை தூங்குவதாக பொய் சொல்லுகிறான். அக்காள் கணவர் கலெக்டர் என்பதால் தன் செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் துறையை வைத்து தேட செய்கிறார். ஆனால் தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. அவரே சந்துருவிடம் சென்னைக்கு செல்லுமாறும் குழந்தையை தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு வந்திருப்பதாகவும் லட்சுமியிடம் சொல்ல சொல்லுகிறார். சந்துருவும் அப்படியே செய்கிறான். ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கும் லட்சுமியிடம் குழந்தையை பிரிந்த ஏக்கம் என்று சொல்கிறான். ஆனால் அடுத்தடுத்து நடக்கும் சில சம்பவங்களினால் லட்சுமிக்கு சந்தேகம் வருகிறது.

இந்த நேரத்தில் பர்மாவிலிருந்து யுவான்சென் என்ற செல்வந்தர் தன் மனைவியுடன் இந்தியாவிற்கு வருகிறார். எல்லா வசதிகளும் இருந்தும் அவர்களுக்கு குழந்தை செல்வம் இல்லை. எனவே இந்திய குழந்தை ஒன்றை தத்தெடுக்க இந்தியாவிற்கு வந்திருப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார்கள். அவர்கள் பல அனாதை இல்லங்களுக்கு விஜயம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் மனதுக்கு பிடித்த குழந்தை கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கேரள மாநிலத்திற்கு செல்லும் அவர்கள் கடற்கரையில் அழகான குழந்தையை பார்க்கிறார்கள். மீனவ குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பாபு அவர்களை பார்த்தும் ஒட்டிக் கொள்கிறான். ஏரியில் தானே பயணித்த படகை ஒரு மீனவன் பார்த்து அதிலிருக்கும் பாபுவை எடுத்து தன் குடும்பத்தோடு தங்க வைத்திருப்பதை தெரிந்து கொள்ளும் அவர்கள் அவனுக்கு பணம் கொடுத்து பாபுவை கூட்டி செல்கிறார்கள்.

இங்கே லட்சுமிக்கு சந்தேகம் வளர்ந்து குழந்தையை உடனே பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க சந்துரு அவளை மதுரைக்கு கூட்டி செல்கிறான். அங்கே அக்காள் கணவர் குழந்தையை கொடைக்கானல் கான்வென்ட்- ல் சேர்த்திருப்பதாகவும் யாரும் பார்க்க முடியாது என்றும் சொல்ல லட்சுமியோ பாபுவை தூரத்திலிருந்தேனும் பார்க்க வேண்டும் என்று கெஞ்ச கான்வென்ட் சுவருக்கு வெளியே மலை சரிவில் நின்று வரிசையாக செல்லும் குழந்தைகளில் ஒன்றை காண்பித்து அதுதான் பாபு என்று சொல்ல, என் பாபுவை எனக்கு தெரியும். நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று கதறும் லட்சுமி மயங்கி விழ டாக்டர்கள் குழந்தை வந்தால் தான் அவள் நிலைமை சீராகும் என்று சொல்லி விடுகிறார்கள். எப்போதும் உங்கள் திருப்பதியானை பற்றி சொல்லுவீர்களே இப்போது அவன் எங்கே என்று மகனே கேள்வி கேட்க மனம் கலங்கி மன்றாடும் தந்தையின் கையில் நண்பர் கொடுத்து விட்ட திருப்பதி பிரசாதத்தை வேலைக்காரன் கொண்டு தருகிறான். பிரசாதம் சுற்றி வந்திருக்கும் பேப்பரில் தங்களுக்கு வேண்டிய குழந்தை கிடைத்து விட்டதாகவும் தாங்கள் பர்மா திரும்புவதாகவும் யுவான்சென் தம்பதிகளின் பேட்டியும் குழந்தை பாபுவுடன் நிற்கும் புகைப்படமும் வெளியாகியிருப்பதை பார்க்கிறார். அவர்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து பர்மா செல்வதையும் அறிந்து கொள்ளும் சந்துரு & லட்சுமி மதுரையிலிருந்து விமானத்தில் திருச்சி சென்று விமான நிலையத்தில் அந்த தம்பதிகளை சந்தித்து உண்மையை சொல்லி குழந்தையை வாங்கி கொள்கிறார்கள். ஆனால் யுவான்சென்னின் மனைவியோ குழந்தையை பிரிய மனமில்லாமல் தான் பர்மா வரவில்லை என்று கதறி அழ, அவளது நிலை கண்டு பொறுக்காமல் லட்சுமியே அவளிடம் குழந்தையை கொடுத்து விடுகிறாள். அவர்கள் விமானத்தில் சென்று விடுகின்றனர்.

சென்னை திரும்பும் சந்துரு லட்சுமி தம்பதியினர் குழந்தையை மறக்க முடியாமல் தவிக்க அப்போது யுவான்சென் தம்பதியினர் குழந்தை பாபுவுடன் வீட்டிற்கு வருகிறார்கள். மீண்டும் ஒரு மகிழ்ச்சியான திருப்பத்துடன் படம் நிறைவு பெறுகிறது.

(தொடரும்)

RAGHAVENDRA
10th May 2015, 10:11 PM
முரளி சாரின் ஆய்வு..
நாள் - 15.05.2009, பகல் 12.33

இணைப்பு -
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=399572&viewfull=1#post399572


பேசும் தெய்வம் Part II

தமிழகத்தில் திராவிட இயக்கம் தன் கொள்கைகளை திரைப்படம் என்ற வலிமையான ஊடகம் மூலமாக பரப்பி வந்த காலத்தில் அதற்கு மாற்றாக அதே ஊடகத்தை பயன்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் எதிர்த்து அதற்கு மாற்றாக இறை நம்பிக்கையை ஊட்டும் கதைகளை திரைப்படம் வாயிலாக மக்களுக்கு சொன்னவர் ஏ.பி.என். என்றால் அதே பாதையில் பயணம் செய்தவர் கே.எஸ்.ஜி. அப்படி, அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையும் உலகத்திலே மிகவும் உயர்ந்த செல்வமாக கருதப்படும் மழலை பாக்கியமும் சேர்ந்த ஒரு கதை கிடைத்த போது பேசும் தெய்வம் பிறந்தது. ரசிகர்களையும் மகிழ்ச்சிப் படுத்தக்கூடிய டைட்டில் என்ற வகையில் டபுள் ஓகே.

அறுபதுகளில் வந்த நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்களை எடுத்துக் கொண்டால் அந்த கதாபாத்திரங்களை எல்லாம் நடிகர் திலகம் அனாயசமாக ஊதி தள்ளியிருப்பார். அந்த லிஸ்ட்-ல் பேசும் தெய்வம் சந்துருவிற்கும் இடம் உண்டு.

இந்த படத்தில் வெகு இளமையாக சிக்கென்று இருப்பார். முதல் பகுதியின் பாதி வரை ரொம்ப ஜாலியாக ரொமன்ஸ் பண்ணுவார். பத்மினியை பார்த்த பிறகு அந்த உணர்வை ஒரு தவிப்போடு நாகேஷிடம் சொல்லுவது, பத்மினியை அருகில் பார்த்தவுடன் சொல்ல நினைத்தது வார்த்தையாக வராமல் தடுமாறுவது, அத்தான் உதவியோடு கல்யாணத்தை முடிப்பது வரை அந்த மூட் நிலை கொள்ளும். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்கவில்லையே என்று மூட் மாறும் போது ஒரு டல்னஸை பிரதிபலிப்பது, பிறக்கப் போகும் குழந்தையை தருகிறேன் என்றதும் வேலைக்காரிக்கு விழுந்து விழுந்து பணிவிடை செய்வது, குழந்தை இறந்து போனவுடன் மனம் கலங்கி பேசுவது, தனக்கே குழந்தை பிறந்தவுடன் வரும் அந்த சந்தோஷம், குழந்தையை கல்யாணத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொன்னவுடன் பத்மினி குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவரின் முக பாவம், சட்டென்று வரும் கோபம், உடனே மனைவியின் மன நிலயை புரிந்துக் கொண்டு இயல்பான பேச்சுக்கு திரும்புவது, கல்யாணத்தில் சீட்டு கச்சேரியில் மூழ்கியவர்கள் எப்படி இருப்பார்களோ அதை அப்படியே வெளிப்படுத்துவது, குழந்தையை காணோம் என்றதும் சாதாரணமாக இருக்கும் அந்த முகம், அந்த பேச்சு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது, ஊருக்கு வந்த பிறகு பத்மினியிடம் உண்மையையும் சொல்ல முடியாமல் பொய்யும் சொல்ல முடியாமல் தவிப்பது கொடைக்கானலில் பள்ளிகூடத்திற்கு வெளியிலிருந்து குழந்தையை பார்த்து விட்டு பத்மினி அது என் பாபு இல்லை என்று சொன்னவுடன் சும்மா சொல்லாதே என்று சத்தம் போட்டு விட்டு பத்மினியின் நேரடி பார்வையை தாங்க முடியாமல் மெல்லிய குரலில் நல்லாப் பாரு என்று திரும்பிக் கொள்வது - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

பத்மினியை பொருத்த வரை முதலில் மாணவி என்பது சிறிது நெருடலாக இருந்தாலும், சிவாஜியை சந்திக்கும் முன்பும் அதற்கு பின்பும் அவர் காட்டும் அந்த பருவ ஏக்கங்கள் சிறிது ஓவராக இருந்தாலும் திருமணத்திற்கு பின் அந்த பாத்திரத்தின் முதிர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். குழந்தையை ஊருக்கு அனுப்பும் அந்த காட்சி அவர் நடிப்புக்கு ஒரு உரைகல். கணவனின் நடவடிக்கைகள் இயல்புக்கு மாறாக இருப்பதை எண்ணி குழந்தைக்கு என்னவோ என்று பதறுவதை நன்றாக செய்திருப்பார்.

படத்தில் ஸ்கோர் செய்பவர்கள் என்று இருவரை சொல்லலாம். முதலில் ரங்காராவ். அவரது காஷுவல் நடிப்பு பிரச்சிதி பெற்றது என்றாலும் இந்த படத்தில் அதை எடுத்து சொல்ல வேண்டும். ஏழுமலையானிடம் அவர் ஒன் டு ஒன் பேசுவதே அழகு. அதீத உரிமையோடு அவர் கோரிக்கைககளை வைப்பது, மனைவியிடமும், மகனிடமும், மருமகன் மற்றும் மருமகளிடமும் அவர் தன் தரப்பை எடுத்து சொல்வது எல்லாம் ரஸகரம்.

இன்னொருவர் சகஸ்ரநாமம். எந்த சூழ்நிலையிலும் அலட்டிக் கொள்ளாத அந்த காரக்டர், பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், உணர்ச்சிவசப்படும் எல்லோரையும் அவர் சமாதானப்படுத்துவது, சூழ்நிலையை சமாளிக்க அவர் தரும் லாஜிக் ஐடியாக்கள், இப்படி ஒருவர் நம் பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பார்வையாளர்களுக்கு ஒரு எண்ணம் வரும்.

அம்மா வேடத்தில் சுந்தரி பாய் வழக்கம் போல். நாகேஷ் முதல் அரை மணி நேரத்தோடு சரி. படத்தின் இறுதிக் கட்டத்தில் சௌகார் மற்றும் சத்யன் என்ட்ரி. சத்யனின் திறமையை வெளிப்படுத்தக் கூடிய அளவுக்கு அந்த வேடம் இல்லையென்றால் கூட அந்த திருவனந்தபுரம் - நாகர்கோவில் வட்டார தமிழ் இனிமையாக இருக்கும். குழந்தையை பத்மினி எடுத்துக் கொண்டு விட ஏர்போர்ட்-ல் வைத்து கதறும் அந்த ஒரே சீன் மட்டுமே சௌகாருக்கு வாய்ப்பு என்றாலும் அதில் ஸ்கோர் செய்திருப்பார்.

முதலில் படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த கே.எஸ்.ஜி பிறகு படங்களை இயக்க ஆரம்பித்தார். அந்த படங்கள் வெற்றி பெற்றவுடன் நடிகர் திலகத்தின் படத்தை இயக்கினார். முதலில் கை கொடுத்த தெய்வம். 1964-ல் வந்த அந்த படத்திற்கு பிறகு 1966-ல் நடிகர் திலகம் நடித்த வி.கே.ஆரின் சொந்த படமான செல்வம் படத்தை டைரக்ட் செய்தார். பிறகு தானே நடிகர் திலகத்தை வைத்து பேசும் தெய்வம் ஆரம்பித்தார். 1961-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்ற பத்மினியை மீண்டும் தமிழ் திரையுலகிற்கு சித்தி மூலமாக கொண்டு வந்த கே.எஸ்.ஜி இதில் மீண்டும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜோடியான நடிகர் திலகத்தையும் நாட்டியப் பேரொளியையும் இணைத்தார். 1961-ல் வெளி வந்த ஸ்ரீவள்ளிக்கு பிறகு அவர்கள் இணைந்தது இந்த படத்தில் தான் [1962 -ல் வெளி வந்த செந்தாமரை படத்தில் இந்த ஜோடி இருந்தது. ஆனால் அது வெகு நாட்களாக படப்பிடிப்பில் இருந்த படம். பிறகு 1966-ம் ஆண்டு வெளியான சரஸ்வதி சபதம் படத்தில் சேர்ந்து நடித்தாலும் ஜோடியாக நடிக்கவில்லை. அதே வருடத்தில் வெளியான தாயே உனக்காக படத்தில் இருவருமே கௌரவ வேடத்தில் தோன்றியிருந்தனர்].

படத்தின் துவக்கத்தில் கே.எஸ்.ஜியின் குரல் ஒலிக்கும் போது ஒரு டாகுமெண்டரி பீல் வந்தாலும் கூட அதை மேற்கொண்டு கதை சொன்ன விதத்தில் சரி செய்திருப்பார். பெண்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்திருந்த கே.எஸ்.ஜி அதற்கேற்றார் போல் காட்சிகள் அமைப்பார். திருப்பதி கோவிலில் துலாபாரம் கொடுக்கும் போது எல்லா நகையும் வைத்தும் தராசு முள் கீழ் நோக்கியே இருக்க பத்மினி தாலியை கழட்டி தராசில் வைக்கும் காட்சி அந்த வகையை சார்ந்தது.[அந்த காலக் கட்டங்களில் தியேட்டரில் பெண்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தை இந்த காட்சி அள்ளிக் கொள்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்]. பெண்களை நம்பி எடுத்த இந்த படமும் அவரை ஏமாற்றவில்லை.

நாம் இதுவரை பதிவு செய்த படங்களிலிருந்து பேசும் தெய்வம் வித்தியாசப்படுவது இசையமைப்பில். ஆம், இந்த படத்திற்கு இசை - திரை இசை திலகம் மாமா மகாதேவன். பாடல்கள் வாலி. இந்த படத்தில் இந்த கூட்டணி மிக பெரிய வெற்றி பெற்றது. இதற்கு முன் வாலி முதன் முறையாக நடிகர் திலகத்தின் அன்புக் கரங்கள் படத்திற்கு எழுதினார். பிறகு பேசும் தெய்வத்திற்கு முன் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு என்ற ஒரே பாடலை எழுதினார். ஆனால் அவருக்கு இந்த பட பாடல்கள் தான் பெரும் புகழ் தேடி தந்தது.

1.நான் அனுப்புவது கடிதம் அல்ல- டி.எம்.எஸ்.

வாலி எதுகை மோனைகளுக்கு பெயர் பெற்றவர். அது இந்த பாடலில் சிறப்பாக இருக்கும்.

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

இந்த பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தோற்றமும் வாயசைப்பும் அருமையாக இருக்கும்.

2. அழகு தெய்வம் மெல்ல மெல்ல- டி.எம்.எஸ்

இதில் ராஜ உடையில் வரும் நடிகர் திலகம் முதல் சரணத்தில்
"இளநீரை சுமந்து நிற்கும் தென்னை மரம் அல்ல" என்ற வரியின் போது ஒரு சின்ன நடை நடப்பார். நான் முதன் முதலில் இந்த படத்தை பார்த்தது ஒரு மறு வெளியீட்டின் முதல் நாள் (வெள்ளிகிழமை) மதியக் காட்சி. அதிகமாக பொது மக்களே வந்திருந்த அந்த காட்சிக்கே தியேட்டர் அதிர்ந்தது என்றால் ரசிகர்கள் அதிகமாக இருக்கும் காட்சிகளில் சொல்லவே வேண்டாம்.

3. இதய ஊஞ்சல் ஆடவா- டி.எம்.எஸ், சுசீலா.

இந்த டூயட் பாடல் முதலில் மெலடியாகவும் பிறகு கள்ளபார்ட் நடராஜன் அன் கோஷ்டி ஆடும் போது ஷோக்கா ஜொலிக்குதப்பா என்று குத்து ஸ்டைல்-க்கு மாறும். தியேட்டரில் ஆட்டம் கூடும்.

4. பத்து மாதம் சுமக்கவில்லை செல்லையா- டி.எம்.எஸ்,சுசீலா.

முந்தைய பாடல் போலவே இதுவும் ஸ்லோ பிறகு பாஸ்ட் என்று பீட்ஸ் மாறி மாறி வர ரசிகர்கள் ஆட்டம் அணை மீறும்.

5. நூறாண்டு காலம் வாழ்க- ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி, சரளா.

குழந்தையை தொட்டிலிட்டு பாடும் பாடல்.

6. பிள்ளை செல்வமே பேசும் தெய்வமே- சுசீலா

குழந்தையை வைத்து கொண்டு சௌகார்,சத்யன் பாடும் பாடல்.

இந்த படத்தை பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் வெளியான முதல் நடிகர் திலகம் படம். ஆனால் அரசியலில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் தன் படங்களை அது எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை நடிகர் திலகம் நிரூபித்தார். படம் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் கூட அனைவருக்கும் லாபம் ஈட்டி தந்த படமாக அமைந்தது. படம் வெளியாகி 35 நாட்களுக்குள் (வழக்கம் போல்) அடுத்த படமான தங்கை வெளியானது. அடுத்த நான்கு வாரத்தில் கிட்டத்தட்ட இதே போன்ற கதையம்சம் கொண்ட பாலாடை வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

படம் வெளியான போது சென்னை கெயிட்டி தியேட்டரில் திருப்பதி கோவில் போலவே அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது என்பது சிறப்பு செய்தி.

மொத்தத்தில் பார்க்கலாம், ரசிக்கலாம்.

RAGHAVENDRA
10th May 2015, 10:11 PM
சகோதரி சாரதா அவர்களின் ஆய்வு
19.05.2009, இரவு 7.57

இணைப்பு
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=401673&viewfull=1#post401673




...
பேசும் தெய்வம்' நடிகர்திலகத்துக்கும், வாலிக்கும் நெருக்கத்தை ஏற்படுத்திய படம். குறிப்பாக 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல' பாடலும், நான் அனுப்புவது கடிதம் அல்ல பாடலும் அப்போது ரொம்ப பாப்புலர். 1967ல் தங்கை, நெஞ்சிருக்கும் வரை, ஊட்டிவரை உறவு என்று மெல்லிசை மன்னர் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த நேரத்தில் மாமாவுக்கு புகழ் வாங்கித்தந்த பாடல்கள் இவை. 'பத்துமாதம் சுமக்கவில்லை செல்லையா' பாடலின் இடையே 'கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா' என்று ட்யூன் வேகமாக மாறும்போது தியேட்டரே ஆட்டம் போடுமாம். சமீபத்தில் த்மிழ்சினிமா 75வது ஆண்டு கொண்டாட்டம் என்ற தலைப்பில் சன் டிவியில் இப்படம் ஒளிபரப்பப் பட்டபோது, பலருடைய கேள்வி 'இம்மாதிரி அருமையான படமெல்லாம் எப்போ வந்தது?. நாங்க பார்த்ததே இல்லையே' (பாவம், அவ்ங்களெல்லாம் 80களில் வந்த ப்டங்களைப்பார்த்து சிவாஜியை எடைபோட்டவர்கள்).

RAGHAVENDRA
11th May 2015, 08:27 AM
http://i.ytimg.com/vi/7J7EhdIuiqM/hqdefault.jpg

அடுத்து...

அதுவரை இருந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிக் கொணர்ந்து அவரின் Action Hero திறமையை உரக்க ஒலித்த படம்...

தங்கை

Gopal.s
17th May 2015, 01:03 PM
a recap of Mr Murali Srinivas old post

தங்கை

தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்

இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்

வெளியான நாள்: 19.05.1967

மதன் என்ற பள்ளி சிறுவன் தன் வயதையொத்த நண்பர்கள் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு மண்டபத்தின் முன் அமர்ந்து தன் பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் வற்புறுத்தியும் படிப்பிலே கவனமாக இருக்கும் அவனின் புத்தக பையை பறித்துக் கொண்டு ஓடும் அந்த சூதாட்ட கும்பல் ஒரு திருட்டில் ஈடுபடுகிறது, போலீஸ் வரும் போது அனைவரும் தப்பித்து ஓடி விட மதன் மாட்டிக் கொள்கிறான். அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். அவனின் விதவை தாயும் தங்கையும் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள்.

காலம் ஓடுகிறது. வாலிபனாக திரும்பி வரும் மதன் தன் தாயையும் தங்கையும் தேடுகிறான். தாய் இறந்த செய்தியும் தங்கை வடிவு ஒரு பிச்சைக்காரியைப் போல் சாப்பாட்டுக்கு அலையும் அவலத்தையும் தெரிந்து கொள்கிறான். தன் தங்கையை தன்னுடன் அழைத்து சென்று தங்க வைக்கிறான்.ஆனால் ஜெயிலுக்கு போய் வந்தவன் என்பதால் அவனுக்கு எந்த வேலையும் கிடைக்காமல் போகவே பிழைக்க வழி இல்லாமல் சூதாட தொடங்குகிறான். ஆனால் அதிலும் தன் தேவைக்கு பணம் கிடைக்கும் வரை மட்டுமே விளையாடுவது என்ற கொள்கையில்(!) உறுதியாக இருக்கிறான். இவனின் சூதாடும் திறமை அறிந்து ஒரு பெரிய சூதாட்ட கிளப்பின் ஏஜென்ட் ஒருவன் மதனை அங்கே அழைத்து செல்கிறான். அங்கே அந்த கிளப்-ன் தலைவனே [அறுபதுகளுக்கே உரிய முகம் மட்டும் இருளில் இருக்க குரல் மட்டும் கேட்கும் பாஸ்] எவ்வளவோ முயற்சித்தும் பணத்தாசைக்கு மயங்காமல் மதன் வர மறுக்கிறான்.

மதனின் தங்கைக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அந்த சேரி பிரதேசத்தில் சேவை மனப்பான்மையோடு ஒரு மருத்துவமனை நடத்தும் லீலா என்ற டாக்டர் அவளை பரிசோதித்து அவளுக்கு காச நோய் அறிகுறி இருப்பதாக சொல்கிறாள். அவளை அதற்கென இருக்கும் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. வேறு வழியில்லாமல் மதன் அந்த சூதாட்ட கிளப்-ல் இணைகிறான். இதற்கு முன் லீலாவின் பிறந்த நாள் விழாவிற்கு செல்லும் மதனை போலீஸ் இன்ஸ்பெக்டரான தன் அத்தை பையன் ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் லீலா. அவளின் தந்தையார் உலகநாதன் என்ற பெரும் தொழிலதிபர் என்பதை தெரிந்து கொள்ளும் மதனால் அவரை அப்போது சந்திக்க முடியாமல் போகிறது.

கிளப்-ல் சேரும் மதன் தன் திறமையினால் எல்லா சூதாட்டங்களிலும் வெற்றி பெறுகிறான். சட்ட விரோதமாக நடைபெறும் இந்த சூதாட்டங்களை தடை செய்து குற்றவாளிகளை பிடிக்கும் பொறுப்பு ஸ்ரீதர் கையில் கொடுக்கப்படுகிறது. பல விதங்களிலும் முயற்சி செய்யும் ஸ்ரீதருக்கு தோல்வியே கிடைக்கிறது.

கிளப்-ல் நடனமாடும் லலிதா மதனை ஒரு தலையாக காதலிக்கிறாள். அவள் மேல் மதனுக்கு அன்பிருந்தாலும் காதல் இல்லை.

மதனை காதலிக்கும் லீலாவை அவரது தந்தை கண்டிக்கிறார். ஸ்ரீதரை கல்யாணம் செய்துக் கொள்ள சொல்கிறார். ஆனால் லீலா கேட்பதாக இல்லை. லீலாவின் தந்தை தொழிலதிபர் மட்டுமல்லாமல் பல நல்ல காரியங்களுக்கு குறிப்பாக மருத்துவமனைகளுக்கு உதவி செய்யும் வள்ளலாகவும் விளங்குகிறார். அவரின் நிதி உதவியில் நடைபெறும் மருத்துவமனையில் தான் தங்கைக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. அங்கே லீலாவுடன் வரும் அவர் மதனிடம் தன் பெண்ணை விட்டு விலகும்படி எச்சரிக்கிறார். அவரது குரல் மதனுக்கு பரிச்சயமுள்ளது போல் தோன்றுகிறது.

சிகிச்சை பெறும் தங்கை வடிவுக்கோ தன் அண்ணன் தன்னை விட்டு விட்டு எப்போதும் வெளியே போவது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. அது போல் லீலாவிற்கும் மதனின் திடீர் மாற்றமும் பணமும் சந்தேகத்தையும் கோபத்தையும் கொடுக்கிறது.

இதற்கிடையே கிளப்பிற்கு மாறு வேடத்தில் வரும் ஸ்ரீதரை அடையாளம் கண்டு கொண்டு மதன் திருப்பி அனுப்பி விடுகிறான். போலீஸ் ஸ்டேஷன்-ல் சென்று சந்திக்கும் மதனை, ஸ்ரீதர் சூதாட்ட கும்பலை பிடிக்க உதவி செய்யுமாறு வேண்ட, மதன் மறுத்து விடுகிறான். இதற்கிடையே கிளப்-ல் தன்னுடன் சூதாடிய ஒரு வங்கி அதிகாரி,மகளின் திருமணத்திற்கு அதிக பணம் வேண்டுமே என்பதற்காக அலுவலக பணத்தை வைத்து சூதாடியதையும் தோற்றவுடன் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கும் மதன் அன்று முதல் சூதாடுவதில்லை என்ற முடிவெடுக்கிறான். அது மட்டுமல்லாமல் மதன் பாஸ்-ன் அறைக்கு சென்று அவர் வேறு யாருமல்ல லீலாவின் தகப்பனார் உலகநாதன்தான் என்பதை தான் தெரிந்து கொண்டு விட்டதை வெளிப்படுத்துகிறான். ஆனால் அவரை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் மதனை தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார் உலகநாதன். அவன் தங்கையையும் கடத்தி அவனையும் கொல்வது என்பது திட்டம். கிளப்-ல் நடனமாடும் லலிதாவை மிரட்டி மதனை போன்-ல் பேசி வரவழைக்கும்படி செய்கிறார்கள். கிளப்பிற்கு வரும் மதனை துப்பாக்கியால் சுட நடக்கும் முயற்சியில் லலிதா தன்னை பலியிட்டுக் கொள்கிறாள். கொலைப் பழியை மதன் மேல் போட, தப்பித்து செல்லும் மதனை போலீஸ் துரத்துகிறது. ஸ்ரீதர் மதனை துப்பாக்கியில் சுடுகிறான்.

வீட்டிற்கு வரும் ஸ்ரீதர் தன் தாய் மாமனான உலகநாதனிடம் மதனை சுட்டுக் கொன்று விட்டதாக சொல்லி பல உண்மைகளை வாக்கு மூலமாக வாங்க, மற்றொரு வாசல் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் நுழையும் மதனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் உலகநாதன். தன்னைப் பிடிக்க போடப்பட்ட திட்டங்கள் இவை என்று அறிந்தவுடன் தன் முடிவை தானே தேடிக் கொள்ள, மருத்துவமனையிலிருந்து தங்கை வடிவு குணமாகி வெளி வர, மதனும் லீலாவும் இணைய அனைத்தும் நலம்.


இந்த படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் மிக சிறப்பான நடிப்பில் வெளியான படம் என்றோ மிக பெரிய வெற்றிப் படம் என்றோ அதிகம் விமர்சிக்கப்படாத படம் என்றோ சொல்ல முடியாது. ஆனாலும் இந்த படத்தை நாம் அலசலுக்கு எடுத்துக் கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மாறுதலை கொண்டு வந்த படம் என்ற முறையில் இதை எடுத்துக் கொள்வோம்.

அதுவரை [1967] கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் வரை நடிகர் திலகம் பலதரப்பட்ட வேடங்கள் செய்திருந்தாலும் action வேடங்கள் என்று சொல்லப்படும் சண்டைக்காட்சிகள் இடம் பெறும் படங்களை அவர் செய்யவில்லை. அது தேவை என்று அவர் நினைக்கவுமில்லை. எம்.ஜி.ஆர். படங்களில் அதுவே முக்கிய கவர்ச்சியாக இருந்த போதும் அது இங்கே இடம் பெறவில்லை. 1964- 65 காலக்கட்டத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் அறிமுகமான பிறகு அவர்களது படங்களிலும் சண்டைக் காட்சிகள் இடம் பெற துவங்கின. அது மட்டுமல்ல சின்ன சின்ன நடன அசைவுகளும் [குறிப்பாக ட்விஸ்ட் டான்ஸ்] பாடல் காட்சிகளில் இடம் பெற ஆரம்பித்தன. இள வயது நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மனதளவில் இந்த விஷயம் ஒரு சின்ன ஏக்கமாக வளர ஆரம்பித்தது.

இந்த நேரத்தில் தான் பாலாஜி நடிகரிலிருந்து தயாரிப்பாளர் என்ற நிலைக்கு உயர்ந்தார். ஆனால் அவரது முதல் படமான அண்ணாவின் ஆசை தோல்வியை தழுவியது. உடனே அவர் சென்ற இடம் அன்னை இல்லம். நடிகர் திலகமும் உடனே ஒத்துக் கொண்டார். முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்திற்கு திருலோகச்சந்தர் இயக்குனர் பொறுப்பை ஏற்றார். ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் தான் தங்கை. கதையை கேட்டதும் நடிகர் திலகம் சிறிது தயங்கினார். வேறு கதை பார்க்கலாமா என்று கூட கேட்டிருக்கிறார். ஏ.சி.டி. ஒரு முறை சொன்னார் "சிவாஜி நாடகத்தில் நடிக்கும் காலத்திலேயே நாட்டியம் ஆட பழகியவர். தூக்கு தூக்கி படத்தில், காவேரி படத்தில் எல்லாம் சிறப்பாகவே நடனம் ஆடியிருக்கிறார். அதன் பிறகு அவர் அதை முயற்சி செய்யவில்லை. அவ்வளவுதான். அது போல் சண்டைக் காட்சிகள் என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உங்களால் செய்ய முடியும் என்று சொன்னேன். அதன் பிறகுதான் ஒத்துக் கொண்டார்."

இப்படி சொல்லும் போது படத்தில் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் என்றோ நடனக் காட்சிகள் என்றோ நினைத்தால் ஏமாந்து போவோம். முதல் அரை மணி நேரத்தில் ஒரு சண்டைக் காட்சி. அதன் பிறகு கிளைமாக்ஸ்-ல் தான் சண்டை. அது போல ஒரு பாடல் காட்சியில் மட்டுமே ட்விஸ்ட் ஆடுவார். ஆனால் இந்த சின்ன மாற்றம் பிற்காலத்தில் அவர் action படங்களை தயக்கமில்லாமல் செய்ய உதவியது. பொதுமக்களும் தங்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் அவர் பிற்காலத்தில் செய்த படங்களுக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது என்றும் சொல்லலாம்.

அது மட்டுமல்ல பாலாஜி என்ற Top notch தயாரிப்பாளர் உருவாவதற்கும், நடிகர் திலகத்தை வைத்து மிக அதிகமான படங்களை தயாரித்தவர் என்ற பெருமையை அடைவதற்கும், சிவாஜி ரசிகர்களின் மனத்துடிப்பை மிக சரியாக உணர்ந்தவர் என்ற பெயர் எடுப்பதற்கும் பாலாஜிக்கு இந்த தங்கை பெரிதும் உதவி புரிந்தாள். அது போல் சிவாஜியை வைத்து மிக அதிகமான படங்கள் [20] வரை இயக்குவதற்கும், நடிகர் திலகத்தோடு ஒரு நல்ல புரிதல் உண்டாவதற்கும் ஏ.சி.டி. அவர்களுக்கு இந்த தங்கை பயன்பட்டாள்.

பெற்றால்தான் பிள்ளையா பட விஷயத்தில் வசனகர்த்தா ஆரூர்தாஸ் மீது கோபம் இருந்தும் கூட பாலாஜியும் ஏ.சி.டி.யும் ஆரூர்தாஸ் வேண்டும் என்று சொன்னபோது எந்த வித மறுப்பும் சொல்லாமல் நடிகர் திலகம் ஏற்றுக் கொண்டதின் விளைவு ஆரூர்தாஸ் என்ற திறமையான வசனகர்த்தா தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கும் தங்கை திரைப்படம் ஒரு காரணமாக இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.

விமர்சனத்திற்கு செல்வோம்.


நடிகர் திலகம் ப்பூ என்று ஊதி தள்ளிய வேடங்களில் ஒன்று இந்த மதனகோபால் என்ற மதன். அவரது Light Hearted கேரக்டர்களில் ஒன்று இந்த படம். Style quotient என்று சொல்வார்களே அது தூக்கலாக வெளிப்பட்ட படம். தங்கையின் மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணனாக அவர் பல படங்களில் நடித்துள்ளார், ஆனாலும் இந்த படத்தில் எந்தளவிற்கு இருக்க வேண்டுமோ அதை மட்டுமே செய்திருப்பார். ஐந்து ரூபாய்க்கு மேல் விளையாட மாட்டேன் என்று எழுந்து போகும் இவரை ஒரு ரவுடி முகத்தில் குத்து விட கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஒரு சின்ன சிரிப்போடு வருவார்.[இந்த விஷயத்திலும் இன்றைய ஹீரோ-கள் புதுமை என்று பிற்காலத்தில் பண்ணியதை அன்றே செய்திருப்பார்]. பக்கத்தில் வந்து இரண்டு கைகளையும் ரவுடியின் முகத்திற்கு நேரே நீட்டி, கை தட்டி விட்டு ஒரு நாலு பஞ்ச் கொடுப்பார். ஓபனிங் ஷோ-வில் முதன் முதலாக அதை பார்த்த போது ரசிகர்கள் தியேட்டரில் செய்த ஆரவாரம், விசில் பற்றி பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அது போல் கிளப்பிற்கு முதன் முதலில் வரும் போது டான்ஸ் பார்த்து விட்டு, தன்னை மறந்து எழுந்து ஒரு சின்ன ஸ்டெப் போட்டு விட்டு எல்லோரும் பார்ப்பதை பார்த்தவுடன் வெட்கப்பட்டு நெளிவது ரசிக்கும்படி செய்திருப்பார். காஞ்சனாவை சிகரெட்டால் சுடும் ராமதாசை எதிர்பாராத நேரத்தில் குத்துவது, ஆஸ்பத்திரி வாசலில் கூடியிருக்கும் கூட்டத்தை விரட்டுகிறேன் என்று கே.ஆர்.விஜயாவையும் டாக்டர் என்று தெரியாமல் மிரட்டுவது, அவருடன் காரில் போகும் போது தன் நிலை பற்றி காஷுவலாக பேசுவது, பிறந்த நாள் விழாவில் இன்ஸ்பெக்டர் சொந்தக்காரன் என்று விஜயா சொன்னவுடன் எனக்கும் அவங்களுக்கும் சரிப்பட்டு வராது என்று கமன்ட் அடிப்பது, பாட வேண்டும் என்று சொன்னவுடன் சின்ன ட்விஸ்ட் ஸ்டெப்ஸ் வைத்து ஆடும் அழகு, கிளப்-லும் போலீஸ் ஸ்டேஷன்-லும் பாலாஜியோடு பேசும் கிண்டல் கலந்த ஸ்டைல், பாலாஜி ஒரு கையால் மறு கையில் தட்டுவதை அவருக்கே செய்து காண்பிப்பது, காரில் வைத்து தன் மகளை காதலிக்க கூடாது என்று சொல்லும் மேஜரிடம் பதில் சொல்லாமல் சிரிப்பது, அவர்தான் தன் பாஸ் என்று தெரிந்துக் கொண்டேன் என்று அவரிடமே போய் சொல்வது, தங்கை தான் வாங்கி கொண்டு வந்த சாப்பாட்டை அவசரமாக பிடுங்கி சாப்பிடுவதை பார்த்து விட்டு வருத்தப்படுவது, தன்னால் ஒருவன் தற்கொலை செய்துக் கொண்டான் என்று தெரிந்ததும் வந்து கையை பொசுக்கி கொள்வது, தன்னை சந்தேகப்படும் விஜயாவை அடித்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர் முகம் மாறுவது - அவருக்கென்ன எந்த ரோலாக இருந்தாலும் எனக்கு ஒன்று தான் என்பதை உணர்த்தியிருப்பார்.

மற்ற கதாபாத்திரங்களை பொறுத்த வரை, இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி நீட்டாக செய்திருப்பார். வெளியில் தொழிலதிபர் உள்ளே சூதாட்ட கிளப்-ன் பாஸ் என்ற வழக்கமான ரோல் மேஜருக்கு. அவரும் வழக்கம் போல். நாயகி விஜயா. டாக்டர் ரோல்.ஆனால் அவரை விட கிளப் டான்சராக வரும் காஞ்சனாவிற்கு நல்ல ஸ்கோப். அவரும் அதை குறையில்லாமல் [அந்த காலக்கட்டத்தில் நாயகியின் பாத்திரப்படைப்பில் இயல்பாகவே அமையும் அபத்தங்களை தவிர்த்து பார்த்தால்] செய்திருப்பார். நாகேஷ் தான் ஏஜன்ட். ஆனால் நகைச்சுவை பஞ்சம். தங்கை வடிவாக வரும் பேபி கௌசல்யா முதல் இரண்டு மூன்று காட்சிகளுக்கு பிறகு முழுக்க பெட் Ridden.

ஆரூர்தாஸின் வசனங்கள் முதல் பதினைந்து நிமிடங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் இயல்பாக எழுதியிருப்பார். எந்த திரைப்படமும் அது வெளியாகும் காலக்கட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ பிரதிபலிப்பது உண்டு. இதிலும் காரில் செல்லும் போது மேஜர் சிவாஜியை கேள்வி கேட்க அதை தடுக்க நினைக்கும் விஜயா ரேடியோவை வைக்க அதில் மளிகை சாமான்கள் விலை சொல்லுவார்கள். [அப்படி கூட ஒரு நிகழ்ச்சி வானொலியில் இருந்ததா என்ன?] அதில் துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ஒரு ரூபாய் எழுபத்திரண்டு பைசா என்று வரும். [இன்றைக்கு கிலோ ருபாய் எண்பதெட்டு என்று நினைக்கும் போது -ம்ம்].

திருலோகச்சந்தரை பொறுத்த வரை ஏற்கனவே எடுக்கப்பட்ட கதை, நடிகர் திலகம் மாதிரி ஒரு ஹீரோ. எனவே அவர் வேலை ஈசியாக முடிந்தது.

இனி பாடல்களுக்கு வருவோம். கண்ணதாசன் - எம்.எஸ்.வி. கூட்டணி.

1. தத்தி தத்தி தள்ளாட- எல்.ஆர். ஈஸ்வரி - கிளப் டான்ஸ் - காஞ்சனாவின் அறிமுக பாடல். நாகேஷின் சில நல்ல ஸ்டெப்ஸ்-ஐ பார்க்கலாம்.

2. கேட்டவரெல்லாம் பாடலாம் - படத்தில் அதிக பாப்புலர் ஆன பாடல். இந்த பாடலின் ட்யுன் போடும்போது தான் நான்கு ட்யுன்களில் எதை செலக்ட் செய்வது என தெரியாமல் இறுதியில் சுஜாதா சினி ஆர்ட்ஸ் ஆபிசிற்கு வந்த போஸ்ட்மானை தேர்ந்தெடுக்க சொன்னதாக சொல்வார்கள். சாரதா இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறார். நடிகர் திலகத்தின் ட்விஸ்ட் மற்றும் ஸ்டையிலான கைதட்டல் ஆகியவை இடம் பெறும். இதையே சிறிது நீட்டி ஊட்டி வரை உறவு படத்தில் ஹாப்பி இன்று முதல் ஹாப்பி பாட்டில் செய்வார். இந்த பாட்டின் ஆரம்பத்தில் நடிகர் திலகத்தின் சில க்ளோஸ் அப் ஷாட்-களை பாஸ்ட் மெர்ஜிங் என்ற முறையில் சட்டென்று என்று மாறி மாறிக் காட்டுவார்கள். கவனித்து பார்த்தால் தெரியும். அது மட்டுமல்ல 1967-யிலேயே இதை முயற்சித்திருப்பது ஆச்சர்யம்.

3. தண்ணீரிலே தாமரை பூ - படத்தின் இன்னொரு அருமையான பாடல். நடிகர் திலகத்தின் குணசித்திர நடிப்பை காண வந்த ரசிகர்களுக்கு விருந்து. பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடல். குறிப்பாக கடைசி சரணத்தில்

எனக்கென இருப்பது ஒரு விளக்கு
இதனுடன் தானா உன் வழக்கு

என்ற வரிகளின் போது ரசிகர்கள் கைதட்ட பெண்கள் கண்ணீரை துடைத்துக் கொள்வார்கள். படத்தில் மீண்டும் ஒரு முறை பின்னணி இசை இல்லாமலும் இந்த பாடல் ஒலிக்கும்.

4. சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது - விஜயாவிற்கு ஒரே பாடல். கோபத்தில் இருக்கும் சிவாஜி மெது மெதுவாக இயல்பு நிலைக்கு வருவதை இதில் காணலாம்.

5. இனியது இனியது உலகம் - காரிலிருந்து இறக்கி விடப்படும் நடிகர் திலகம் ரோட்டில் பாடிக் கொண்டே வரும் காட்சி. இன்றைய OMR ரோடு என்று சொல்லுவார்கள். இதிலும் ஸ்டைல்தான் பிரதானம். பாடலின் முடிவில் அந்த வழியாக வரும் லாரியை கை காட்டி நிறுத்த முயற்சிக்க, காமிராவிற்கும் சிவாஜிக்கும் நடுவில் வரும் லாரி நிற்காமல் போக அடுத்த ஷாட்-ல் நடிகர் திலகம் தொங்கிக் கொண்டே போவது போல் வரும். தியேட்டரில் விசில் பறக்கும்.

6. நினைத்தேன் என்னை அழைத்தேன் உன்னை - கிளைமாக்ஸ் லீட் சீன், காஞ்சனா ஆடிப் படும் காட்சி. சரணத்தில் ஈஸ்வரி பிரமாதப்படுத்தியிருப்பார்.

இந்த படம் வெளி வருவதற்கு முன் வழக்கம் போல் கிண்டல் கேலி எல்லாம் இருந்தது. கணேசன் சண்டை காட்சியில் நடித்தால் யார் பார்ப்பது போன்ற கமன்ட்கள் அடிக்கப்பட்டன. இந்த படம் வெளியான போது இதற்கு போட்டியாக ஒரு படமும் வந்தது. எல்லா கிண்டல்களையும் புறந்தள்ளி மக்கள் தங்கையை வரவேற்றார்கள். சென்னையில் திரையிடப்பட்ட நான்கு அரங்குகளிலும் 50 நாட்களை கடந்தது படம். அவை

சித்ரா - 70 நாட்கள்

கிரவுன் - 70 நாட்கள்

உமா - 50 நாட்கள்

ஜெயராஜ் - 50 நாட்கள்.

மதுரையிலும் திருச்சியிலும் சேலத்திலும் 8 வாரங்களை கடந்த இந்த படம் கோவை - இருதயாவில் அதிகபட்சமாக 77 நாட்கள் ஓடியது. திருவருட்செல்வர் வெளியானதால் சென்னை- கிரவுன் போன்ற இடங்களில் 100 நாட்கள் ஓடும் வாய்ப்பை இழந்தது.

கொசுறு தகவல்- போட்டியாக வெளியான படத்தைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வந்த முதல் படம், தமிழக ஆட்சி மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்த ஜனவரி 12- ல் நடந்த சம்பவத்திற்கு பிறகு வெளியான முதல் படம், சொந்த சகோதரரே இயக்கிய படம். இவை அனைத்தும் இருந்தும் எந்த அரங்கிலும் 50 நாட்களை கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை. எப்போதும் போல் பாக்ஸ் ஆபிஸ் கிங் தான் மட்டும்தான் என்பதை நடிகர் திலகம் மீண்டும் நிரூபித்தார்.

மொத்தத்தில் நடிகர் திலகத்தின் entertainer படங்களின் ஆரம்பம். ரசிக்கும்படியாகவே இருந்தது.

அன்புடன்

PS: 1.எங்கேயும் [மலேஷியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் கூட] இப்போது கிடைக்காத இந்த தங்கை திரைப்படத்தின் சிடியை ஒரு பிரதி எடுத்து எனக்கு கொடுத்ததற்கும்

2. சென்னை கோவை நகரங்களில் இந்த படம் ஓடிய சரியான நாட்களை உறுதிப்படுத்தியதற்கும் நண்பர் சுவாமிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

uvausan
17th May 2015, 06:02 PM
திரு கோபால் - உங்கள் பதிவு படம் வந்த தினத்திற்க்கே என்னை அழைத்து சென்று விட்டது - மிகவும் ரசித்து எழுதி உள்ளீர்கள் - இந்த படத்தை இன்று பார்க்க நேரிட்டாலும் , புதுமையாகவும் , அருமையாகவும் , இளமையின் உச்ச்சக்கட்டமாகவும் இருக்கும் - ஒரு விதமான புதுமை காவியம் என்று கூட இந்த படத்தை சொல்லலாம் - பாசம் நிறைந்த அண்ணன் - அதை பெரும் அதிர்ஷ்ட்டமான ஒரு தங்கை , சூதாட்டம் புகை மண்டலம் போல படத்தை விறுவிறுப்புடன் அழைத்துச் செல்கின்றது - நடு நடுவே இளமையின் ஆதிக்கம் - அழகின் அரவணைப்பு -- பாடல்கள் காதுகளில் தேனை உற்றிக்கொண்டெ இருக்கும் - எண்ணங்கள் அந்த தேனை பருக வரும் வண்டுகள் போல நம்மை சுற்றிக்கொண்டே இருக்கும் -

தெரிந்த வில்லன் - இருந்தாலும் அவன் படத்தின் கடைசி வரை ஆர்வத்தை கொல்வதில்லை . "நல்ல நேரம்" விஜயா அல்ல - நன்றாக உடல் மெலிந்த விஜயாவை பார்க்கிறோம் ... கண்களை உருட்டும் பாலாஜி இல்லை படத்தில் - நிஜ வாழ்க்கையில் கோடிஸ்வரனாக ( இந்த படம் மூலமாக ) மாறவிருக்கும் ஒரு சாதாரண , அடக்கம் மிக்க பாலாஜியை சந்திக்கிறோம் . சிவந்த மண் மூலம் சாதனை படைக்க இருக்கும் காஞ்சனாவை யும் பார்க்கிறோம் .

சிகரம் தொட்ட நடிப்பு , இளமையின் ஆதிக்கம் கொண்ட உடல் கட்டு , அழகின் அழகு - துள்ளும் , துடிக்கும் காட்ச்சிகள் - ந.தியுடன் நாமும் சேர்ந்து "கேட்பவர் எல்லாம் பாடலாம்" என்று இன்றும் , என்றும் பாட வைக்கும் ஒரு படம் இது .

அன்புடன்

Gopal.s
17th May 2015, 06:57 PM
எல்லோரையும் மயக்கிய மங்கை என்று நடிகர்திலகத்தால் புகழ பட்ட தங்கை

என்ற pathbreaking சிவாஜி anti -sentiment படத்தை 1967 (கடலூர்),1971(சொரத்தூர் ஜோதி) யில் பார்த்த பிறகு மறுமுறை நேற்று பார்த்தேன்.

என்னை ஆச்சர்ய படுத்தியது .Hats off sivaji &Thirulokchandar . formatting &execution அருமை.

ஆனால் u tube இல் மசமசவென்று உள்ளது. நல்ல DVD எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை.பழைய இருவர் உள்ளம் நிலையிலே இன்று இப்படம்.

இப்படம் ஒரு மூன்று வெவ்வேறு புள்ளிகளில் நகரும். ஆனால் இணைப்பிலே ஒரு logic ,nerrative surprise என்ற ஒரு professional perfection கொண்ட திரைக்கதை.

சிவாஜி- அவர் துயர் மிகுந்த இளமை பருவம் -தங்கை- அவர் பிரச்சினை.

அழகான முக்கோண குறுக்கீடுகளாய் நல்லெண்ணம் கொண்ட குடும்ப காப்பாள டாக்டரம்மா கே.ஆர்.விஜயா ,தோழமையுடன் கூடிய சம நிலை well wisher காஞ்சனா, ஊசலாடும் சிவாஜி அருமையாய் வந்திருக்கும்.

சூதாட்டம், அது சார்ந்த சில குழப்பங்கள் ,திருப்பங்கள், நல்லெண்ண போலீஸ் பாலாஜி என்ற action ,பொழுதுபோக்கு சார்ந்த இன்னொரு track .

ஆனால் அனைத்தையும் வழி நடத்துவது protogonist சிவாஜியின் எண்ணங்கள்,தேவைகள், குழப்பமான ethics ஆகியவை.

நடிகர் திலகம் இந்த படத்தில் பாத்திரம் உணர்ந்து நடித்த வசீகர பாங்கு சொல்லி மாளாது.

restraint மிகுந்த extravert பாத்திரம்.

மிக துயரங்களுக்கு ஆட்பட்ட, சிறையில் ஆங்கிலம் உட்பட எல்லா அறிவும் பெற்றும், சமூக அங்கீகாரம் இன்றி வறுமையில் உழன்று சூதாடினாலும் போதுமென்ற மனமும், தேவைகளின் பாற்பட்டு சூதாட்ட பிடியில் சிக்கி அதுவே தொழில்,ஆசை, பொழுது போக்கு என்ற addiction நிலைக்கு தள்ள படுவது , எந்த வித inhibition இல்லாத தன் நிலையை புரிந்த, தாழ்வு மனப்பான்மை இல்லாத extravert .

என்ன ஒரு execution ,style ,perfection . திரைக் கதையின் மூன்று புள்ளிகளிலும் பாத்திரத்தை நூல் கோர்க்கும் துல்லியத்துடன் கையாண்டிருப்பார்.

கே.ஆர்.விஜயா, காஞ்சனா ,பாலாஜி,மேஜர் அனைவருமே நல்ல துணை பாத்திரங்கள்.

எம்.எஸ்.வீ. இசை முதல் பாடல் தவிர மற்ற ஐந்தும் அருமை.(கேட்டவரெல்லாம் , தண்ணீரிலே,சுகம், இனியது, நினைத்தேன் உன்னை) பாடல்களின் lead scenes (ஏற்கெனெவே எழுதி விட்டேன்) .

எனக்கு மிக மிக பிடித்த காட்சிகள் .

மேஜர்-கே.ஆர்.விஜயாவுடன் காரில் பயணிக்கும் ,இனியது பாட்டுக்கு முந்திய காட்சி.

மழையில் நனைந்து காஞ்சனா வீட்டிற்கு செல்லும் காட்சி.

பிரிண்ட் மச மச வென்று இருந்ததால் கேமரா ,எடிட்டிங் பற்றி விமரிசிப்பது கஷ்டம்.

சிவாஜியின் குறிப்பிட வேண்டிய படங்களில் ஒன்று தங்கை. என் பாலாஜி வரிசை- ராஜா,தீபம்,தங்கை, தியாகம், நீதி.

Subramaniam Ramajayam
17th May 2015, 07:26 PM
THANGAI ENNAI SIVAJI RASIKAN el erunthu SIVAJI VERIYAN AGA MARRIYAPADAM

RAGHAVENDRA
18th May 2015, 07:35 AM
தங்கை திரைப்படத்தை இணையத்தில் பார்த்து பிரதி எப்படி உள்ளது என்று பார்த்தால் கோபால் சொன்னது போல் சுமாராகத் தான் உள்ளது.

ஆனால் அதிர்ச்சி என்றால் அப்படி ஓர் அதிர்ச்சி..

தங்கை படத்தின் டைட்டிலில் பின்னணியில் ஒலிப்பது, விஜயா படத்தின் டைட்டில் இசை..

என்ன கொடுமை சார் இது.. மெல்லிசை மன்னர் போன்ற மிகப் பெரிய படைப்பாளிக்கு இப்படி ஓரு மரியாதையா..

ஆண்டவனே.. தெரியாதவர்கள் இது மெல்லிசை மன்னரின் இசை என்றல்லவா எண்ணுவார்கள்...

இல்லை.. எனக்குத் தான் சரியாகத் தெரியவில்லையா...

யாராவது விளக்குங்களேன்.

இதற்கு ஆபத்பாந்தவனாக வரக்கூடியவர் வாசு சார் தான்.

RAGHAVENDRA
19th May 2015, 08:40 AM
Sivaji Ganesan Filmography Series

113. THANGAI தங்கை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/Thangai1967_zpsnispawdc.jpg


தயாரிப்பு சுஜாதா சினி ஆர்ட்ஸ்
தணிக்கை - 04.05.1967
வெளியீடு - 19.05.1967

நடிக நடிகையர்
நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, பாலாஜி, நாகேஷ், சுந்தர்ராஜன், ராமதாஸ், மைசூர் சுதர்ஸன், ஹரிகிருஷ்ணன், மாஸ்டர் ஸ்ரீதர், காஞ்சனா, பேபி கௌசல்யா, பேபி நளினி, மற்றும் பலர்

வசனம் - ஆரூர்தாஸ்

பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்

பின்னணி பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி

பாடல்கள் ஒலிப்பதிவு - ரங்கசுவாமி - சாரதா, ஜே.ஜே.மாணிக்கம் - ஏவி.எம்.,
ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம், உதவி - கே.சம்பத், ஜி.வி.ராம்மூர்த்தி
வசனம் ஒலிப்பதிவு - கே.ஆர்.ராமசாமி

அரங்க நிர்மாணம் - சி.குப்புசாமி
பெயிண்டிங் - சுப்பிரமணியன்
செட் ப்ராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்
துணை நடிகர்கள் ஏஜெண்ட் - மூர்த்தி

பிராஸ்ஸிங் - விஜயா லேபரட்டரி by S.R. ரங்கநாதன்
ஸ்டூடியோ - பிரசாத், வீனஸ்-பத்மினி கம்பைன்ஸ், ஜெமினி, கோல்டன்
புரொடக்ஷன் நிர்வாகம் - ஆர். கிருஷ்ணமூர்த்தி, உதவி - டக்லஸ் கன்னையா
ஆபீஸ் நிர்வாகம் - கே.வி.நாகையா
ஒப்பனை - ரங்கசுவாமி, ராமசாமி, திருநாவுக்கரசு, கிருஷ்ணன்
ஸ்டில்ஸ் - சாரதி
விளம்பர டிசைன்ஸ் - எஸ்.ஏ. நாயர்,
விளம்பரம் - ஏரீஸ் அட்வர்டைசிங் பீரோ
பொதுமக்கள்த் தொடர்பு - பிலிம் நியூஸ் ஆனந்தன்
ஆடை அலங்காரம் - ஜானகிராம்
சண்டைப்பயிற்சி - ஸ்டண்ட் சோமு, நடனம் - அழகிரிசாமி
நடனப் பயிற்சி - சோப்ரா, உதவி - ராமு, புலியூர் சரோஜா
கலை - ஆர்.பி.எஸ். மணி
படத்தொகுப்பு - பி.கந்தசாமி
ஒளிப்பதிவு - டி.முத்துசுவாமி, உதவி - துவாரகநாத்
இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
ஸீனோரியோ டைரக்ஷன் - ஏ.சி.திருலோக்சந்தர்
டைரக்ஷன் - ஏ.சி.திருலோக்சந்தர்

RAGHAVENDRA
19th May 2015, 08:58 AM
தங்கை பாட்டுப்புத்தகம் சீட்டுக்கட்டு வடிவில் அச்சடிக்கப்பட்டது. அதனுடைய முதல் மற்றும் கடைசிப் பக்கங்களின் நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/THANGAISBCFW_zpsvmaohfoi.jpg

RAGHAVENDRA
19th May 2015, 08:59 AM
பாடல்களின் விவரங்கள்



1. தத்தித் தத்திப் பக்கம் வந்த - எல்.ஆர்.ஈஸ்வரி
2. கேட்டவரெல்லாம் பாடலாம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
3. தண்ணீரிலே தாமரைப்பூ - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. சுகம் சுகம் - பி.சுசீலா
5. இனியது இனியது உலகம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
6. தண்ணீரிலே தாமரைப்பூ - டி.எம்.சௌந்தர்ராஜன்
7. நினைத்தேன் உன்னை - எல்.ஆர்.ஈஸ்வரி

RAGHAVENDRA
19th May 2015, 09:04 AM
தங்கை விளம்பர நிழற்படங்கள் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...


நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்

தங்கை

[19.5.1967 - 19.5.2012] : 46வது ஆரம்ப தினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : காஞ்சி : 4.6.1967

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5820-1.jpg

52வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 9.7.1967

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5821-1.jpg
குறிப்பு:
1. சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில் 50 நாட்கள் முதல் 77 நாட்கள் வரை ஓடிய "தங்கை", ஒரு சிறந்த வெற்றிக்காவியம்.

2. "தங்கை"யின் 50வது நாள் சென்னைப் பதிப்பு விளம்பரம் கிடைத்தவுடன் இங்கே இடுகை செய்கிறேன்.


பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
19th May 2015, 09:05 AM
தங்கை - பாடல் காட்சிகள்

இனியது இனியது உலகம்
https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA

கேட்டவரெல்லாம் பாடலாம்

https://www.youtube.com/watch?v=qiHOx9uIhlQ

த்த்தித்த்த்திப் பக்கம் வந்து

https://www.youtube.com/watch?v=LfB6WPluvvk

RAGHAVENDRA
19th May 2015, 09:09 AM
வாசு சாரின் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதப் பதிவு...

இணைப்பு -

http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=873298&viewfull=1#post873298
நாள் 8.06.2012 காலை 8.35 மணி



நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள்.(வீடியோ தொடர்) 1)



படம்: தங்கை.

படம் வெளி வந்த ஆண்டு: 19.5.1967

தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்.

சண்டைப் பயிற்சி: 'ஸ்டன்ட்'சோமு அவர்கள். உதவி: அழகிரிசாமி அவர்கள்.



நடிகர் திலகம் அவர்கள் பல படங்களில் அற்புதமான சண்டைக்காட்சிகளில் அனாயாசமாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் அவர் ஸ்டைலே தனிதான். ஆக்ஷன் படங்களிலும் தன்னால் மிளிர முடியும் என்பதை அவர் 'தங்கை' படத்தின் மூலம் அட்டகாசமாக நிரூபித்தார். அந்த ஆரம்பமே அமர்க்களம்தான். நடிகர் திலகம் பாச,பந்த,உணர்வுகளின் சங்கமக் காவியங்களில் இருந்து சற்றே விடுபட்டு ஆக்ஷன் முவிகளில் கவனம் செலுத்த பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் என்றும் தங்கையைச் சொல்லலாம். அதற்கு வித்திட்டவர் கே.பாலாஜி அவர்கள். நடிகர் திலகத்தின் ஆக்ஷன் திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர் அவரே. அதே போல இளைஞர்களைக் கவரும் நடிகர் திலகத்தின் அருமையான ஸ்டைலான performance-க்கும் வழி செய்தது 'தங்கை'.

இந்த சண்டைக்காட்சியைப் பாருங்கள். என்ன ஒரு அற்புதமான ஸ்டைல்! எதிரியுடன் தன் இரண்டு கைகளை சேர்த்துத் தட்டியபடியே களத்தில் இறங்கி,வில்லன் கத்தியை எடுத்தவுடன் முகத்தில் காட்டும் அந்த expression, சண்டை முடிந்தவுடன் எதிரியை வீழ்த்திவிட்டு, அவன் மேல் அப்படியே அமர்ந்து இடது கரத்தால் ஸ்டைலாக வாயில் சிகரெட்டை வைக்கும் அந்த ஸ்டைலை எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த சண்டைக்காட்சி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்தது நிஜம்.

எனவேதான் நடிகர் திலகம் சண்டைக்காட்சிகளிலும் பிரமாதப் படுத்தினார் என்பதை அனைவரும் அறியும் வண்ணம் 'நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள்' என்ற தலைப்பில் ஒரு வீடியோ தொடராக தரலாமே என்ற எண்ணம் எழுந்தது. மறைத்து புதைக்கப்பட்ட நடிகர் திலகத்தைப் பற்றிய பல உண்மைத் தகவல்கள் நம் அன்பு பம்மலார் அவர்கள் மூலம் வெளிவந்து வெற்றிக்கொடி நாட்டுவது போல சண்டைக்காட்சிகளில் நடிகர் திலகம் சுமார் ரகமே என்ற மாயை நொறுங்க தொடங்கப்படுவதுதான் இந்த 'நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள்' வீடியோத் தொடர். நிச்சயம் இத்தொடர் உங்கள் அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையுடன் இதைத் தொடங்குகிறேன். வழக்கம் போல் தங்கள் அனைவரது அன்பும், ஆதரவும் இத்தொடருக்கும் கிடைக்கும் என்று திடமாக நம்புகிறேன். இத்தொடரில் வரும் சண்டைக்காட்சிகளைப் பற்றிய தங்கள் அனைவரது எண்ணங்களையும், கருத்துக்களையும் மிக்க ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

நன்றி!




முதன்முறையாக இணையத்தில் 'தங்கை' படத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான சண்டைக்காட்சி தரவேற்றப்பட்டு தங்கள் அனைவருக்காகவும் இதோ...

https://www.youtube.com/watch?v=vJEu0_q9uiA

RAGHAVENDRA
8th June 2015, 06:50 AM
Sivaji Ganesan Filmography Series

114. Paalaadai பாலாடை

http://www.inbaminge.com/t/p/Paaladai/folder.jpg

தணிக்கை - 12.06.1967
வெளியீடு - 16.06.1967

தயாரிப்பு - கமலா பிக்சர்ஸ்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, K.R. விஜயா, நாகேஷ், V.K.ராமசாமி, V. கோபாலகிருஷ்ணன், செந்தாமரை, மனோரமா, T.P. முத்துலட்சுமி, மற்றும் பலர்

நடனம் - ராஜேஸ்வரி

கதை வசனம் பிலஹரி (T. ராமன்)

பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன், தஞ்சைவாணன்

பின்னணி பாடியவர்கள்
T.M.சௌந்தர்ராஜன், P. சுசீலா, K. ஜமுனா ராணி, தாராபுரம் சௌந்தர்ராஜன்

ஒலிப்பதிவு டைரக்டர் - T.S. ரங்கசாமி

ஒலிப்பதிவு - T.D. கிருஷ்ணமூர்த்தி உதவி - R.S.வேதமூர்த்தி, ஜோ. அலோஷியஸ்

ஆபரேடிவ் காமிராமேன்- D.S.பாண்டியன்

மேக்கப் - ரங்கசாமி, தனகோடி, M.ராமசாமி, ரவி

உடைகள் - P. ராமகிருஷ்ணன், உதவி - P.S. நடராஜன், குப்புசாமி

நடன அமைப்பு - சின்னி-சம்பத், தங்கப்பன், சுந்தரம்

ஸ்டில்ஸ் - C. பத்மனாபன்

செட் ப்ராபர்டீஸ் - சினி கிராப்ட்ஸ்
விளம்பரம் - எலிகண்ட்
டிசைன்கள் - பக்தா

ப்ராஸஸிங் - T. ராமஸ்வாமி, ஏவி.எம்.ஸ்டூடியோஸ் லாபரட்டரி, சென்னை-26.

அரங்க அமைப்பு - B.R. ராமநாதன், S. ராம மூர்த்தி, G. மதுரை, N. கிருஷ்ணன், K. வீர்ராகவன்

வண்ணக்கலை - R. முத்து, V. பரமசிவம்

ஸ்டூடியோ - சாரதா - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோ

ஸோல் புரொப்ரைட்டர் - ஸ்ரீ A.L. சீனிவாசன்

ஸ்டூடியோ பிரதம நிர்வாகி - T.V. வைத்தியநாதன்
ஸ்டூடியோ புரோக்ராம்ஸ் - A. சுந்தர்ராஜன்

Recorded on RCA Sound System

நிர்வாகம் - K.S. துரை,

கலை - கங்கா, உதவி - பாபு

எடிட்டிங் - A. பால்துரைசிங்கம்

உதவி டைரக்ஷன்- S.S. வாசன், S.K. அன்வர் ஜான், எம்.குருசாமி

இசை திரை இசைத் திலகம் - K.V. மகாதேவன, உதவி - புகழேந்தி

ஒளிப்பதிவு டைரக்டர் - G. விட்டல் ராவ்

தயாரிப்பு - M.R. சந்தானம்

திரைக்கதை - டைரக்ஷன் - A. பீம்சிங், அஸோஸியேட் டைரக்ஷன் - திருமலை-மகாலிங்கம்

RAGHAVENDRA
8th June 2015, 06:54 AM
பாலாடை - பாடல்களின் விவரங்கள்

1. பட்டாடை தொட்டில் கட்ட வேண்டும் - பி. சுசீலா - கண்ணதாசன்
2. எங்கே எங்கே எங்கே - டி.எம்.சௌநதர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன்
3. அப்படி என்ன பார்வை அங்குமிங்கும் - பி.சுசீலா - கண்ணதாசன்
4. டூயட்டு டூயட்டு - தாராபுரம் சுந்தர்ராஜன், கே.ஜமுனா ராணி - தஞ்சைவாணன்

RAGHAVENDRA
8th June 2015, 06:55 AM
பாலாடை காணொளிகள்



முழுப்படம் காண

https://www.youtube.com/watch?v=6wIbVFwpm8c


எங்கே எங்கே எங்கே என் கண்ணுக்கு விருந்தெங்கே

https://www.youtube.com/watch?v=xBb_i4V0SIM

RAGHAVENDRA
19th June 2015, 09:48 PM
திரைப்படப்பட்டியல் திரியில் அடுத்து....

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Appar1.jpg

Perception of Vision ... இந்த அறிவியல் கூற்றை வைத்து மேலே உள்ள படத்தை Mouse மூலம் ஸ்க்ரால் செய்து கொண்டே வந்தால் பின்னணியில் உள்ள கதவு பக்கவாட்டில் நகர்வது போல் தோன்றுகிறது. நடிகர் திலகம் காட்சியளிக்கும் நிழற்படம் கூட நடிக்கும் போலிருக்கிறதே...

Gopal.s
20th June 2015, 06:14 PM
திருவருட்செல்வர் அப்பர் பாத்திரம் ,அவர் முன்னரே ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளையில் ஒத்திகை பார்த்து விட்டு கடலையும் சாப்பிட்டு விட்ட ஒன்று. துறவமைதி கலந்த ஒடுக்கமும் ,செயல்பாடு நிறைந்த பழுத்த முதுமையும் ,அவர் தான் நேரில் கண்டு,பதிய வைத்த சந்திரசேகர சாமிகளை (காஞ்சி பெரியவர்)role model (முன்மாதிரி பிரதி)ஆக வைத்து நடித்த விதம்,நடிகர்திலகத்தின் நடிப்பின் வீச்சு,broad Spectrum ,இரு வேறு பட்ட துருவ நிலைகளை துரித தயாரிப்பில் அடையும் மேதைமை,அவரால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று உலகத்துக்கு ஓங்கி சொன்னது.இந்த பாத்திரம் ஒரு குறிஞ்சி மலர்.(பூக்கவே முடியாத ஒரு முறை மட்டுமே பூப்பது எதுவாவது இருந்தால் அதை பிரதியிட்டு கொள்ளுங்கள்)

அந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவரின் ஒப்பனைக்கு அன்றைய கால கட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாத அளவு சித்திரவதையை ஒத்த கஷ்டம்.அந்த நடை ,அவர் எல்லோருக்கும் கற்று கொடுத்த அதிசய பாடம்.ஒரு கூன் வந்த ,புத்துயிர்ப்போடு இயங்கும் முதியவரின் balance தடுமாறும் துரித நடை,V வடிவில் பாதத்தையும்,U வடிவில் முட்டியையும் வைத்து அவர் நடக்கும் விதமே அந்த பாத்திரத்தின் பாதி வேலையை செய்து விடும்.(இதே படத்தில் மன்னனின் சிருங்காரம் கலந்த கம்பீர நடையழகும்,சுந்தரரின் சிறிதே பெண்மை கலந்த சுந்தர நடையழகும் கண்டு ரசிக்க, வேறுபாட்டை உணர ஒரு reference point )அதே போல கூன் உடம்பு காரன் தன்னை நிமிர்த்த எத்தனித்து செய்ய வேண்டிய சிரமமான முயற்சியை ,அந்த பாத்திரம் நிமிரும் தருணங்களில் நடிப்பால் உணர்த்தும் விந்தை.

பேச்சில் ஒரு பற்றற்ற அமைதி கலந்த உறுதி இருந்தாலும் ,வயதுக்கேற்ற ஒலி சிதறலும் கொண்டிருக்கும்.அப்பூதி அடிகளின் இல்லத்தில் ,அவர் ஒரு முட்டியை உயர்த்தி,கைகளை அதில் அமர்த்தி ,முகத்தை நம்மை நோக்கி குவிந்து விரியும் கைகளில் சார்த்தி அமைதி ,சாந்தம்,தவம் கலந்த ஒரு மோகன அரை சிரிப்புடன் காட்டும் gesture ,காஞ்சி பெரியவர் சந்திப்பில் நமக்கு கிடைத்த வரம்.நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன் என்ற எண்ணிக்கை ,நானே அறியா புதிர். இது larger than life பாத்திரத்தை Meisner பள்ளியில் பாற்பட்ட பூரணத்துவம் கொண்ட நடிப்பின் சாதனையாகும்.

கடைசி காட்சியில் உடலை இழுத்து அவர் அனைத்து புலன்களும் மங்கி தளர்வு பெற்ற நிலையிலும் ,காளத்தி செல்ல எத்தனிக்கும் காட்சி நம்மை வேறு லகுக்கே கூட்டி சென்று தன்னிலை மறக்க செய்யும்.

RAGHAVENDRA
22nd June 2015, 07:51 PM
Sivaji Ganesan Filmography Series

115. Thiruvarutchelvar திருவருட்செல்வர்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/TVC.jpg


தணிக்கை - 10.07.1967
வெளியீடு - 28.07.1967

தயாரிப்பு - ஸ்ரீ விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்

நடிக நடிகையர் -

நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், நடிக மன்னன் ஜெமினி கணேஷ், நடிகையர் திலகம் சாவித்திரி கணேஷ், நாட்டியப்பேரொளி பத்மினி, முத்துராமன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், மனோரமா, பத்மஸ்ரீ நாகையா, ஜி.சகுந்தலா, குட்டி பத்மினி, கே.சாரங்கபாணி, ஈ.ஆர்.சகாதேவன், டி.என்.சிவதாணு, பி.டி.சம்பந்தம், வி.கோபாலகிருஷ்ணன், கே.வி.ஸ்ரீனிவாசன், மாஸ்டர் பிரபாகரன், மாஸ்டர் அண்ணாதுரை, எஸ்.ஆர்.தசரதன், கரிக்கோல்ராஜ், செந்தாமரை, எஸ்.ஆர்.கோபால், சிவசூரியன், சந்திரன்பாபு, குண்டுகருப்பையா, பாலசுந்தரம், ஆதம்ஷா, எஸ்.வி.ராஜகோபால்,

சிவன்-சக்தி நடனம் - குமாரி வித்யா மூர்த்தி, எஸ்.ஆர்.ராஜு

மேக்கப் - ரங்கசாமி, தனகோடி, பத்மனாபன், ராமசாமி, தக்ஷிணாமூர்த்தி, சேதுபதி

ஆடை அலங்காரம் - சி.கே.ராஜமாணிக்கம், காந்தி, தம்பு

ஸ்டூடியோ - சாரதா - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோ

ஸ்டூடியோ நிர்வாகம் - டி.வி.வைத்தியநாதன்

ஓவியம் - ஆர்.முத்து, வி.பரமசிவம்
மோல்டிங் - எம்.சிதம்பரம், ஆர்.ஜெயராமன்
அரங்க நிர்மாணம் - ஜி.மதுரை, என்.கிருஷ்ணன், கே.வீர்ராகவன்
அரங்க நிர்வாகம் - பி.ஆர்.ராமனாதன், எஸ்.ராம்மூர்த்தி
பிரத்யேக ஒளி அலங்காரம் - ஏ.ஆர்.சிங்காரம்
அரங்க அலங்காரம் - சினி கிராஃப்ட்ஸ், நியோ பிலிமோ கிராஃப்ட்ஸ்

ஸ்டில்ஸ் - முருகப்பன் - எம்.ஆர்.பிரதர்ஸ்

விளம்பர நிர்வாகம் - மின்னல், சாந்தி பப்ளிசிட்டீஸ்
டிசைன்ஸ் - பக்தா
விளம்பரம் - ஆஸ்பி லித்தோ வொர்க்ஸ்
டைட்டில்ஸ் - கே.எஸ்.ஆர்ட்ஸ்

பிரிண்டட் அண்டு பிராஸஸ்ட் அட் - ஜெமினி ஸ்டூடியோ லாபரட்டரி, சென்னை-6.

புரொடக்ஷன் நிர்வாகம் - எஸ்.வி.ராஜகோபால், டி.என்.ராஜகோபால்
நிர்வாகம் - கே.வெங்கடாசலம், கே.என்.வைத்தினாதன்

நடன அமைப்பு - பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்

ஒலிப்பதிவு - டி.சிவானந்தம், உதவி - ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ், கே.ரங்கபாஷ்யம், எம்.துரைக்கண்ணு
ஆபரேட்டர் - ஆர். அனந்தராமன்
ஒலிப்பதிவு டைரக்டர் - டி.எஸ்.ரங்கசாமி

கலை - கங்கா, உதவி - செல்வராஜ்

எடிட்டிங் - ராஜன், டி.ஆர்.நடராஜன்

ஆபரேடிவ் காமிராமேன் - எஸ்.வி.பத்மனாபன், கே.எஸ்.மணி,
ஒளிப்பதிவு டைரக்டர் - கே.எஸ்.பிரசாத்

சங்கீதம் - திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், உதவி - புகழேந்தி

உதவி டைரக்ஷன் - எஸ்.ஆர்.தசரதன், எம்.கருப்பையன், தஞ்சை மதி

அஸோஸியேட் டைரக்டர் - கே.கே.ஸம்பத்குமார்

திரைக்கதை வசனம் டைரக்ஷன் - ஏ.பி.நாகராஜன்

RAGHAVENDRA
22nd June 2015, 07:53 PM
திருவருட்செல்வர் விளம்பர நிழற்படங்கள்

18.08.1968 தினமணி கதிர் இதழில் வெளிவந்த விளம்பரம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/TVCRunningAdfw.jpg

தினமணி கதிர் 11.08.1968 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/TVCKadhirReviewfw.jpg

RAGHAVENDRA
22nd June 2015, 07:54 PM
பம்மலாரின் ஆவணப்பொக்கிஷத்திலிருந்து




http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Appar1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4180a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4170a.jpg

'பேசும் படம்' அட்டைப்பட விளம்பரம் : வெள்ளிவிழா மலர் ஆகஸ்ட் 1967

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4178a.jpg

அய்யன் சிவாஜி அப்பர் ஆகிறார்..... : பொம்மை : ஆகஸ்ட் 1967

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4188a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4185a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4186a.jpg

RAGHAVENDRA
22nd June 2015, 07:55 PM
பாடல்களின் விவரங்கள்


1. கலைமகள் துணைகொணடு - கண்ணதாசன - பி.சுசீலா கோரஸ்
2. உலகெல்லாம் உணர்ந்தற்கரியான் - பெரிய புராணச் செய்யுள் - டி.ம்.சௌந்தர்ராஜன்
3. ஆத்து வெள்ளம் காத்திருக்கு - கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன், எல்.ஆர்.ஈஸ்வரி கோரஸ்
4. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி - கண்ணதாசன் - சீர்காழி கோவிந்தராஜன்
5. பித்தா பிறைசூடி - சுந்தரர் தேவாரம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
6. சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
7. காதலாகிக் கசிந்து - திருஞானசம்பந்தர் தேவாரம் - மாஸ்டர் டி.எல்.மகராஜன்
8. மாசில் வீணையும் - திருநாவுக்கரசர் தேவாரம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
9. பண்ணினோர் மொழியாள் - திருநாவுக்கரசர் தேவாரம் - டி.எம்.சௌந்தர்ராஜன்
9. தாள் திறவாய் - கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன், மாஸ்டர் டி.எல்.மகராஜன்
10. சதரம் மறைதான் - திருஞானசம்பந்தர் தேவாரம் - மாஸ்டர் டி.எல்.மகராஜன்
11. அப்பன் நீ அம்மை நீ - திருஞானசம்பந்தர் தேவாரம் - மாஸ்டர் டி.எல்.மகராஜன்
12. ஆதி சிவன் தாள் பணிந்து - கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன். பி.சுசீலா
13. நாதர் முடிமேலிருக்கும் - கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன்

Murali Srinivas
28th June 2015, 12:39 AM
நமது அருமை சகோதரி சாரதா அவர்கள் எழுதிய அற்புதமான பதிவு. என்ன காரணத்தினாலோ அவர் அதை நீக்கி விட்டார். நல்லவேளை பிரபா அதை quote பண்ணி போஸ்ட் செய்த பதிவு இருக்கிறது. அதிலிருந்து (முழுமையாக இல்லாவிட்டாலும் கூட) உங்கள் பார்வைக்கு!

திருவருட்செல்வர்

அவரிடம் அடகுவைக்கப்பட்ட நம் இதயங்கள் மீட்கப்படவேயில்லை. கொண்டேபோய்விட்டார்.

திகைப்பூட்டும் "திருவருட்செல்வர்" ( 2 )

'பேரன்புமிக்க ரசிகப்பெருமக்களுக்கு நன்றி கலந்த வணக்கம்' என்ற வசீகரமான ஏ.பி.என்.னின் குரலைத்தொடர்ந்து 'மாமா'வின் வேகமான இசை வெள்ளத்துடன் எழுத்துக்கள் ஓடி முடிந்ததும்....

சிவப்பு, நீலம், பச்சை என பலவண்னத்திரைகள் ஒவ்வொன்றாக விலக, நடன மங்கையர் கோரஸாக வாழ்த்திசைக்க, நடன மண்டபத்தின் பிரதானக்கதவு திறக்க, கம்பீரமாக நடந்து வரும் பாதங்களில் மலர் தூவ்ப்பட, நடந்து வந்த கால்கள் நின்றதும் கேமரா அப்படியே மேலே உயர... இந்த அற்புதக்காட்சியைக் காணக்காத்திருந்த ரசிகர்களின் கையொலியால் அரங்கமே அதிர...... நடிப்புலகின் நாயகன் அறிமுகம்.

"மன்னவன் வந்தானடி தோழி' பாடல் ஒலிக்க, அந்த ‘தோழி’ என்ற வார்த்தை எப்போது முடியுமென்று காத்திருக்கும் ரசிகர்களின் அபார எதிர்பார்ப்பான அந்த கம்பீர நடையுடன் 'நடிகர்திலகம்' (நடையிலும் திலகம்) நட்ந்துவர, மீண்டும் திரையரங்கின் சுவர்களின் விரிசல் விழும் அளவுக்கு கைதட்டல் எழும்ப, 'சே... இது மாதிரி நடக்க இனி ஒருவன் பொறந்து வரணும்யா' என்று ஆங்காங்கே குரல்கள்

அதைப்பலமடங்காகப்பெருக்கும் வண்ணம் நாட்டியப்பேரொளி தன் நடத்தால் உயர்த்திப்பிடிக்க, அம்ர்ந்திருக்கும் நிலையிலேயே ஒவ்வொரு அசைவுக்கும் நடிகதிலகம் முகபாவம் காட்ட...

உண்மை தாயே, அந்த கேள்விக்கும் விடை தெரிந்தால்தான் உறங்கிக்கொண்டிருக்கும் என் உள்ளத்துக்கும் விழிப்பு வரும்". (ஏ.பி.என்.ன்னின் என்ன ஒரு சொல்விளையாட்டு)

திகைப்பூட்டும் "திருவருட்செல்வர்" ( 3 )

சிவனே அடியாராக வேடம் புனைந்து, ‘இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே’ என்ற பாடலுடன் வர

யாரிவன் பித்தன்?. பாட்டனாம், பரம்பரையாம், அடிமையாம், சாசனமாம்….. தள்ளாத கிழவனுக்கு பொல்லாத வேளை வந்துவிட்டது’ என சுடு சொற்களால் அர்ச்சிக்க, கிழவரோ, வழக்குரை மன்றம் செல்கிறார்.

….. பெரிய புராணச்செய்யுளான “பித்தா, பிறைசூடிப்பெருமானே” என்ற பாடல், சௌந்தர் ராஜன் என்ற கலைவாணியின் மகனின் கம்பீரக்குடலில் துவங்க, தொடர்ந்து கண்னதாசன் என்ற சரஸ்வதியின் புத்திரனின்… ‘சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே.. உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே’ என்ற ஊனையும் உயிரையும் ஒருசேர உருக வைக்கும் பாடல்…

பக்திப்பெருக்கில் எந்த ஊன் உருக – அந்த

பரவசத்தில் உள்ளே உயிர் உருக

சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக – எந்தன்

சந்ததியே உந்தனுக்கு அடி பணிய – இறைவா

சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே

எல்லோரும் பக்தியுடன் சுற்றிவரும் வண்ணம், திருவெண்னை நல்லூர் கோயிலை அப்படியே சாரதா ஸ்டுடியோவில் கொண்டு வந்து வைத்த கலை இயக்குனர் கங்காவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கங்கா அமைத்த சிறந்த அரங்குகளில் இது ஒன்று என்றால் அது மிகையில்லை.

திகைப்பூட்டும் "திருவருட்செல்வர்" ( 4 )

குளோசப்பில் காண்பிக்கும்போது பஞ்சடைந்து சுருங்கிப்போயிருக்கும் கண்களும், சுருக்கம் விழுந்த கன்னங்களும், நரைத்துப்போன தலையுமாக கூனிக்குறுகி அவர் நிற்கும்போது, கைதட்டத்தோன்றாது… கையெடுத்துக் கும்பிடத்தோன்றும் . ஆம் அங்கே நாம் காண்பது நடிகர்திலகமல்ல. சைவப்பழமான அப்பர் சுவாமிகள்.

திருவிளையாடலிலும், சரஸ்வதி சபதத்திலும் பிரமாண்டமும், கலைஞர்களின் திறமையும் தான் நம்மை அதிகமாக ஆக்ரமித்ததே தவிர, இந்த அளவு பக்திப்பரவசத்தை நம் உயிரில் பாய்ச்சவில்லை என்பதை சற்று ஒப்புக்கொள்ளவே வேண்டும்.

திண்ணையில், வலது கையைச்சுருட்டி நெற்றிப்பொட்டில் வைத்தவாறு, மறைந்த காஞ்சிமுனிவரைப்போல அவர் அமர்ந்திருக்கும் அந்தக்கோலம்….. மெய் சிலிர்த்துப்போகும்.

நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே – உனக்கு

நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே

ஆதி சிவன் தலையமர்ந்த ஆணவமா - அவன்

அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா

அதற்குமேல் தன்னால் ஒரு அடி கூட நகரமுடியாத நிலையில் 'திருக்காளத்தி நாதனைக்காணமுடியவில்லையே' என மூர்ச்சையாகி விழ, காளத்திநாதன் கைலாயத்திலிருந்து தமபதி சமேதராய் நடனமாடி காட்சி தருவதோடு படம் நிறைவடைகிறது.


நன்றி சாரதா!

அன்புடன்

Subramaniam Ramajayam
28th June 2015, 10:52 AM
The biggest boxoffice hit movie of 1972
vasantha maligai not only in tamilnadu overseas also
no equals for vasanthamaligai.

RAGHAVENDRA
2nd July 2015, 05:59 PM
அடுத்து...

https://www.tamilsurabi.com/wp-content/uploads/2015/02/1424441021_hqdefault.jpg

RAGHAVENDRA
3rd July 2015, 07:24 PM
Sivaji Ganesan Filmography Series

116. Ooty Varai Uravu ஊட்டி வரை உறவு

http://upload.wikimedia.org/wikipedia/en/9/9d/OotyVaraiUravu.jpg


தணிக்கை - 18.09.1967
வெளியீடு - 01.11.1967

தயாரிப்பு - கே.சி.ஃபிலிம்ஸ்

நடிக நடிகையர்
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலையா, முத்துராமன், வி.கே.ராமசாமி, நாகேஷ், கே.ஆர்.விஜயா, எல்.விஜயலக்ஷ்மி, சச்சு, சுந்தரிபாய்,

பாடல்கள் - கண்ணதாசன்
பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி

ரிகார்டிங் - டி.எஸ்.ரங்கசாமி- சாரதா, சுவாமிநாதன் - வாஹினி
ரீரிகார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவி.எம்.
நடனம் - பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி
மேக்கப் - நாஞ்சில் சிவராமன், ரங்கசாமி, சங்க்ர் ராவ், உதவி - எஸ்.கிருஷ்ணன், வி.ஆர்.மணி
உடை அலங்காரம் - பி.ராமகிருஷ்ணன், உதவி - டி.கஜராஜன், எஸ்.பாபுராஜ்
ஆபீஸ் நிர்வாகம் - நடராஜய்யர், வீரப்ப செட்டியார்
செட் பிராபர்டீஸ் - சினி கிராப்ட்ஸ்,
செட் அலங்காரம் - சம்பந்தம் பிள்ளை
விளம்பரம் - செம்பி பப்ளிஸிடீஸ்
விளம்பர டிசைன்ஸ் - பரணி
உதவியாளர்கள் - ஒளிப்பதிவு - டி.பிலிப்ஸ், எடிட்டிங் - துரைராஜன், கலை - பாபு
அவுட்டோர் யூனிட் - மூவீ சர்வீஸ், பிரசாத் புரொடக்ஷன்ஸ்
ஸ்டூடியோ - சாரதா, ஜெமினி, விஜயா, வாஹினி
Processed and Printed at Gemini Color Laboratory
கலை - கங்கா
ஸ்டில்ஸ் - திருச்சி அருணாசலம்
எடிட்டிங் - என்.எம்.சங்கர்
ஒளிப்பதிவு - என்.பாலகிருஷ்ணன்
துணை வசனம் - கோபு
உதவி டைரக்ஷன் - சக்கரவர்த்தி, ஆர்.ஸ்ரீதர் பாபு, எம்.பி.பாஸ்கர்
இசை - மெல்லிசை மன்ன்ன் எம்.எஸ்.விஸ்வநாதன், உதவி - கோவர்த்தனம்
அசோஸியேட் டைரக்ஷன் - சி.வி.ராஜேந்திரன்
Produced by Kovai Chezhiyan
தயாரிப்பு - கோவை செழியன்
கதை, வசனம், டைரக்ஷன் - ஸ்ரீதர்.

RAGHAVENDRA
3rd July 2015, 07:25 PM
ஊட்டி வரை உறவு பேசும்படம் விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/OVUPPAdfw.jpg

RAGHAVENDRA
3rd July 2015, 07:28 PM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..


நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

ஊட்டி வரை உறவு


[1.11.1967 - 1.11.2011] : 45வது உதயதினம்

சாதனைப் பொன்னேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சினிமா கதிர் : நவம்பர் 1967
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4927-1.jpg

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.2.1968

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4924-1.jpg

காவிய விளம்பரம் : பொம்மை : 1967

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4928-1.jpg

ஸ்பெஷல் ஸ்டில்ஸ்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/OVU1-1.jpg

RAGHAVENDRA
3rd July 2015, 07:38 PM
ஊட்டி வரை உறவு - காணொளிகள்

தேடினேன் வந்த்து

https://www.youtube.com/watch?v=wiPBzW4-wrY

பூமாலையில் ஓர் மல்லிகை

https://www.youtube.com/watch?v=ZUKgEbxc7vg

அங்கே மாலை மயக்கம்

https://www.youtube.com/watch?v=3V6WCBctu6Q


ஹேப்பி இன்று முதல் ஹேப்பி

https://www.youtube.com/watch?v=mXQ5Xd578RA


புது நாடகத்தில் ஒரு நாயகி

https://www.youtube.com/watch?v=m5EH9yGdxas

ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்

https://www.youtube.com/watch?v=oVWMAwvi2kA

யாரோடும் பேசக் கூடாது - ரீமிக்ஸ் - காட்சி ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்.

https://www.youtube.com/watch?v=vXr9_eFiuDc

RAGHAVENDRA
3rd July 2015, 07:53 PM
ஊட்டி வரை உறவு - சிறப்புச் செய்திகள்

1. முதலில் வயது 18 ஜாக்கிரதை என்ற பெயரிலும் பிறகு காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டும் நடிகர் திலகம், கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் நடித்து சில ஆயிரம் அடிகள் படமாக்கப் பட்டன. பிறகு படம் நின்று விட்டது. மீண்டும் கே.ஆர்.விஜயா நடிக்க முதலிலிருந்து படம் எடுக்கப்பட்டது. இதைக்குறிக்கும் வகையிலேயே கவியரசர் அவர்கள் புது நாடகத்தில் பாடலை எழுதியதாக சொல்வார்கள்.
2. ஒரே நாளில் அதற்கு முன்னரும் நடிகர் திலகம் இரு படங்களை வெளியிட்டிருக்கிறார். கூண்டுக்கிளி-தூக்குத்தூக்கி, கள்வனின் காதலி- கோடீஸ்வரன், அடுத்தடுத்த நாட்களில் அவள் யார்-பாகப்பிரிவினை, மீண்டும் ஒரே நாளில் பாவை விளக்கு-பெற்ற மனம், என படங்கள் வெளியாகியுள்ளன. அதே போல் ஊட்டி வரை உறவு-இருமலர்கள் இரண்டும் ஒரே நாளில் அதாவது 01.11.1967 அன்று வெளியாகி இரண்டும் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது தமிழ்த் திரையுலக வரலாற்றில் நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனை. இது மீண்டும் 1970ம் ஆண்டிலும் அவரால் நிகழ்த்தப்பட்டது. 100 ஆண்டு திரையுலக வரலாற்றில் முறியடிக்கப்படாத சாதனையாகும். மேலும் அந்த நாளில் - அதாவது 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று வெளியான இதர படங்களான நான். காதலித்தால் போதுமா, விவசாயி ஆகியவையும் போட்டி போட்டன. கிரௌன் புவனேஸ்வரி இரு திரையரங்குகளும் விவசாயி படங்களைத் திரையிட்டதால், பிராட்வே மற்றும் சயானி திரையரங்குகளில் ஊட்டி வரை உறவு வெளியானது. இதில் சயானி திரையரங்கிற்கு இரு மலர்கள் படமும் போட்டி போட்டது. ரேஸில் ஊட்டி வரை உறவு வென்றது. இரு மலர்கள் ராக்ஸி திரையரங்கிற்கு சென்றது என கேள்விப்பட்டுள்ளோம். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், அருகருகே இருந்த இரு திரையரங்குகளில் - பிராட்வேயில் ஊட்டி வரை உறவு மற்றும் பிரபாத்தில் இருமலர்கள் வெளியாகி இரண்டும் அரங்கு நிறைவுகளோடு வெற்றி நடை போட்டதும் நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கற்களாகும்.

3. பாடல்களைப் பொறுத்த வரையில், ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டு சூப்பர் ஹிட்டாகிய பாடல், யாரோடும் பேசக் கூடாது பாடல் படத்தில் இடம் பெறாத்து ஏமாற்றமே.

RAGHAVENDRA
3rd July 2015, 07:57 PM
Sivaji Ganesan Filmography Series

117. Iru Malargal இரு மலர்கள்

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/02/IruMalargal00001.jpg

http://i61.tinypic.com/65qxl4.jpg

http://i59.tinypic.com/oapslj.jpg

http://i58.tinypic.com/33tscqv.jpg

http://i59.tinypic.com/2wp8481.jpg

தணிக்கை - 27.10.1967
வெளியீடு - 01.11.1967
தயாரிப்பு - மணிஜே சினி ப்ரொடக்ஷன்ஸ்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா, நாகேஷ், நாகையா, மனோரமா, பேபி ரோஜா ரமணி, மாதவி மற்றும் பலர்

கதை டைரக்ஷன் - ஏ.சி.திருலோக்சந்தர், எம்.ஏ.
வசனம் - ஆரூர்தாஸ்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன், உதவி - ஆர்.கோவர்த்தன்
ஒலிப்பதிவு பாடல்கள் அண்ட் ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவி.எம்.
ஒலிப்பதிவு வசனம் - எஸ்.சி. காந்தி, என். ரகுநாதன் - ஜெமினி
பாடல்கள் - வாலி
ஒளிப்பதிவு - தம்பு
ஆபரேடிவ் காமிராமேன் - கே.எஸ்.பாஸ்கர ராவ்
எடிட்டிங் - பி.கந்தசாமி
ஒப்பனை - டி.தனக்கோடி, ரங்கசாமி, ராமசாமி, எம்.சி.மாணிக்கம்
உடைகள் - பி.ராமகிருஷ்ணன், தம்மு, கே.கமால்
நடனம் - ஏ.கே.சோப்ரா, பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்
புரோகிராம் - ஆர்.ரமணி - ஜெமினி
செட்டிங்ஸ் - பி.ஆர். நாராயணசாமி, ஏ.ராமானுஜம், வி.பி.ஆர்.மூர்த்தி, டி.ஆர்.சடகோபன்
சீனிக் எஃபெக்ட் - ஆர்.லோகநாதன், ஆர்.செல்வராஜ்
டைரக்ஷன உதவி - டி.எஸ்.பாலன்
எடிட்டிங் உதவி - சிவம்
கலை - ஏ.பாலு,
ஸ்டில்ஸ் - சாரதி
ஸ்டூடியோ அண்ட் லாபரட்டரி - ஜெமினி
உதவி டைரக்ஷன் - நாஞ்சில் எஸ்.ராஜேந்திரன், ப.புகழேந்தி

கதை - பாட்டுப்புத்தகத்தில் உள்ளபடி

"கடவுள் நல்லவரா, கெட்டவரா?"
"நல்லவர்தான்!"
"சிலருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிற அந்தக் கடவுள் சிலருக்கு ஏன் துக்கத்தைக் கொடுக்கணும்?"

"கடவுள் தந்த இருமலர்கள்
கண் மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
..........
அலையில் மிதந்த மலர் கண்டு
அதன் மேல் கருணை மனம் கொண்டு
தலையில் இறைவன் சூடிக்கொண்டான்
தானே அதனைச் சேர்த்துக் கொண்டான்!"

RAGHAVENDRA
3rd July 2015, 07:59 PM
இருமலர்கள் - பாடல்களின் விவரங்கள்


1. மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் - வாலி - டி.எம்.சௌந்தர்ராஜன்
2. மன்னிக்க வேண்டுகிறேன் - வாலி - பி.சுசீலா டி.எம்.சௌந்தர்ராஜன்,
3. வெள்ளி மணி ஓசையிலே - வாலி - பி.சுசீலா
4. மகராஜா ஒரு மகராணி - வாலி - டி.எம்.சௌந்தர்ராஜன், - பாட்டுப்புத்தகத்தில் குறிப்பிடவில்லை, இசைத் தட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷோபா, சதன்
5. கடவுள் தந்த இருமலர்கள் - வாலி - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
6. மன்னிக்க வேண்டுகிறேன் - வாலி - பி.சுசீலா, டி.எம்.சௌந்தர்ராஜன்
7. அன்னமிட்ட கைகளுக்கு - வாலி - பி.சுசீலா

RAGHAVENDRA
3rd July 2015, 08:01 PM
ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...



நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

இரு மலர்கள்

[1.11.1967 - 1.11.2011] : 45வது உதயதினம்

சாதனைப் பொன்னேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சினிமா கதிர் : நவம்பர் 1967

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4926-1.jpg

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.2.1968

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4925-1-1.jpg

சிறப்பு நிழற்படம் : பொம்மை : 1967

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4929-1.jpg

RAGHAVENDRA
3rd July 2015, 08:03 PM
இரு மலர்கள் - நமது மய்ய நண்பர்களின் கருத்துப் பரிமாற்றங்கள்.

வாசு சாரின் பதிவு

http://www.mayyam.com/talk/showthread.php?11441-%26%232990%3B%26%232985%3B%26%232980%3B%26%233016% 3B%26%232965%3B%26%233021%3B-%26%232965%3B%26%232997%3B%26%232992%3B%26%233009% 3B%26%232990%3B%26%233021%3B-%26%232990%3B%26%232980%3B%26%233009%3B%26%232992% 3B-%26%232965%3B%26%233006%3B%26%232985%3B%26%232969% 3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%23302 1%3B-%26%232986%3B%26%233006%3B%26%232965%3B%26%232990% 3B%26%233021%3B-4&p=1234210&viewfull=1#post1234210



ரவி சார்!

தந்தை கருவின் கரு தொடரில் அம்சமாக நடிகர் திலகத்தின் 'இரு மலர்கள்' படப் பாடலான 'மகராஜா' பாடலைப் போட்டு தூக்கத்தைக் கெடுத்ததற்கு உங்களுக்கு என்ன தண்டனை அளிப்பது?

http://i.ytimg.com/vi/RpgUkozdBpI/hqdefault.jpg

எனக்கும், முரளி சாருக்கும் உயிரோடு கலந்த பாட்டு. நிச்சயம் ரசிக வேந்தர் சண்டைக்கு வருவார். அவருக்கும் இது உயிர்தான். அப்புறம் கோ வருவார். இப்படிப் போய்க் கொண்டேதான் இருக்கும்.

எவ்வளவு அழகு நடிகர் திலகம்! மன்மதனுக்கெல்லாம் மன்மதன் அவர்.

'ஓடிப் பிடித்து விளையாட ஒரு தம்பிப் பாப்பா' வை

மகள் ரோஜாரமணி இவரிடம் கேட்டு கோரிக்கை வைக்க,

வாயைப் பிளந்தவாறே 'டக்'கென்று மனைவி பக்கம் திரும்பி 'அதான் சொல்றாளே...அப்புறம் என்ன? ரெடியாகிறது'....என்று ராணியம்மாவை மனது வைக்க கைஜாடை காட்டி அழைத்து,

'ஆகட்டும் தாயே! அது போல் நீங்கள் நினைத்தை முடிப்பேன் மனம் போல'

என்று மகளின் கட்டளைக்கு மகிழ்ச்சியுடன் அடிபணிந்து,

அப்படியே மனைவியை அணைத்து, ஓரக்கண்களால் 'தன்னம்பிக்கை'யை கண்களில் காட்டி, பெருமிதம் பொங்க, ஆண்மை நிறைந்த சிங்கமாய் கட்டிலுக்கு உள்ளுக்குள் ரெடியாவதை, அடுத்த தொட்டிலுக்கு மனைவியை ரெடியாகச் சொல்வதை மறைமுகமாக இவர் காட்டும் தோரணை இருக்கிறதே! ஒரு சில வினாடிகளே! அந்தக் கண்கள்தான் எப்படியெல்லாம் விரிந்து சுருங்கி ஜாலங்கள் புரிகின்றன! அந்த புருவங்கள்தான் என்ன மாதிரி ஏறி இறங்குகின்றன!

ரவி! அப்படியே உங்களை.... ஆ....நற... நற.

முரளி சார்
http://www.mayyam.com/talk/showthread.php?11441-%26%232990%3B%26%232985%3B%26%232980%3B%26%233016% 3B%26%232965%3B%26%233021%3B-%26%232965%3B%26%232997%3B%26%232992%3B%26%233009% 3B%26%232990%3B%26%233021%3B-%26%232990%3B%26%232980%3B%26%233009%3B%26%232992% 3B-%26%232965%3B%26%233006%3B%26%232985%3B%26%232969% 3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%23302 1%3B-%26%232986%3B%26%233006%3B%26%232965%3B%26%232990% 3B%26%233021%3B-4&p=1234284&viewfull=1#post1234284


தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

கோடானு கோடி நன்றிகள் to ரவி & வாசு.

வாசு, நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை! அதிலும் " மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா" என்ற வரிக்கு வலது கையை இடுப்பிலிருந்து ஸ்டெப் பை ஸ்டெப்பாக உயர்த்துவாரே, அந்த இடத்திலேயே நான் சரண்டர்.

வேண்டாம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்

வாசு, ஒரு விஷயம் தெரியுமா? விளையாட்டு பிள்ளை படத்தை 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மகாலட்சுமியில் ரிலீஸ் செய்த திரு ரகுபதி அவர்கள்தான் [ நமது ஹப்பிலும் உறுப்பினர்] இரு மலர்கள் படத்தின் rights -ஐ வைத்திருக்கிறார். அவரை பார்க்கும்போதெல்லாம் [நமது NT FAnS மாதாந்திர திரையிடலுக்கு ரெகுலராக வருவார்] நல்ல ஒரு A/c தியேட்டரில் இரு மலர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அவரும் நிச்சயமாக என்பார். பார்க்கலாம்!

RAGHAVENDRA
3rd July 2015, 08:04 PM
வாசு சார் பகிர்ந்து கொண்ட நிழற்பட அணிவகுப்பு
http://padamhosting.me/out.php/i123783_vlcsnap-2011-11-02-14h34m54s136.png
http://padamhosting.me/out.php/i123784_vlcsnap-2011-11-02-14h37m34s195.pngட
http://padamhosting.me/out.php/i123782_vlcsnap-2011-11-02-14h35m34s24.png
http://padamhosting.me/out.php/i123781_vlcsnap-2011-11-02-14h34m33s178.png
http://padamhosting.me/out.php/i123780_vlcsnap-2011-11-02-14h33m20s214.png
http://padamhosting.me/out.php/i123779_vlcsnap-2011-11-02-14h35m22s157.png
http://padamhosting.me/out.php/i123778_vlcsnap-2011-11-02-14h34m12s231.png
http://padamhosting.me/out.php/i123777_vlcsnap-2011-11-02-14h31m53s120.png

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00005.jpg
http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00003.jpg

RAGHAVENDRA
3rd July 2015, 08:04 PM
காணொளிகள்
மாதவிப் பொன்மயிலாள்
https://www.youtube.com/watch?v=B2iCWboDSFI

மன்னிக்க வேண்டுகிறேன்
https://www.youtube.com/watch?v=gcIMRuugcPU

மகராஜா ஒரு மகராணி
https://www.youtube.com/watch?v=YifS0OtnvPA

அன்னமிட்ட கைகளுக்கு
https://www.youtube.com/watch?v=FfGqjXfIYlQ

வெள்ளி மணி ஓசையிலே
https://www.youtube.com/watch?v=tUyBqJzBuv8



கடவுள் தந்த இரு மலர்கள்
https://www.youtube.com/watch?v=CH1eAJBQiwA

மன்னிக்க வேண்டுகிறேன் - சோகம்
https://www.youtube.com/watch?v=0D8stjYCp9Y

RAGHAVENDRA
3rd July 2015, 08:10 PM
இரு மலர்கள் - சிறப்புச் செய்திகள்

1. ஒரே நாளில் அதற்கு முன்னரும் நடிகர் திலகம் இரு படங்களை வெளியிட்டிருக்கிறார். கூண்டுக்கிளி-தூக்குத்தூக்கி, கள்வனின் காதலி- கோடீஸ்வரன், அடுத்தடுத்த நாட்களில் அவள் யார்-பாகப்பிரிவினை, மீண்டும் ஒரே நாளில் பாவை விளக்கு-பெற்ற மனம், என படங்கள் வெளியாகியுள்ளன. அதே போல் ஊட்டி வரை உறவு-இருமலர்கள் இரண்டும் ஒரே நாளில் அதாவது 01.11.1967 அன்று வெளியாகி இரண்டும் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது தமிழ்த் திரையுலக வரலாற்றில் நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனை. இது மீண்டும் 1970ம் ஆண்டிலும் அவரால் நிகழ்த்தப்பட்டது. 100 ஆண்டு திரையுலக வரலாற்றில் முறியடிக்கப்படாத சாதனையாகும். மேலும் அந்த நாளில் - அதாவது 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று வெளியான இதர படங்களான நான். காதலித்தால் போதுமா, விவசாயி ஆகியவையும் போட்டி போட்டன. கிரௌன் புவனேஸ்வரி இரு திரையரங்குகளும் விவசாயி படங்களைத் திரையிட்டதால், பிராட்வே மற்றும் சயானி திரையரங்குகளில் ஊட்டி வரை உறவு வெளியானது. இதில் சயானி திரையரங்கிற்கு இரு மலர்கள் படமும் போட்டி போட்டது. ரேஸில் ஊட்டி வரை உறவு வென்றது. இரு மலர்கள் ராக்ஸி திரையரங்கிற்கு சென்றது என கேள்விப்பட்டுள்ளோம். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், அருகருகே இருந்த இரு திரையரங்குகளில் - பிராட்வேயில் ஊட்டி வரை உறவு மற்றும் பிரபாத்தில் இருமலர்கள் வெளியாகி இரண்டும் அரங்கு நிறைவுகளோடு வெற்றி நடை போட்டதும் நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கற்களாகும்.

2. பாடல்களைப் பொறுத்த வரையில், மகராஜா ஒரு மகராணி பாடலை, ரோஜா ரமணிக்காக பாடியவர் ஷோபா அவர்கள். பின்னாளில் ஷோபா சேகர் என பாடல்களைப் பாடியவர். நடிகர் விஜய் அவர்களின் தாயார்.

3. மாதவிப் பொன்மயிலாள் பாடல், படம் வெளியான கால கட்டத்தில், பல கல்லூரி மாணவிகள் தங்கள் கல்லூரி ஆண்டு விழாக்களில் நடனமாடியது மிகவும் பிரபலமான அப்பாடல் எந்த அளவிற்கு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கு சான்று.

4. கரகரப்ரியா ராகத்திற்கு மெல்லிசை மன்னரின் இப்பாடலைத் தான் பெரும்பாலும் எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள்.

5. விவிதபாரதி தொடங்கிய புதிதில், தேன்கிண்ணம் நிகழ்ச்சியின் இடையே சினிமா கேள்வி பதில் பற்றிய புதிர் நிகழ்ச்சி இடம் பெறும். அதில் ஒரு நிகழ்ச்சியில், நெற்றியை மூன்றாம் பிறையை ஒப்பிட்டு எழுதிய பாடல் எது எனக் கேட்கப்பட்ட போது பெரும்பாலானோர் எழுதிய சரியான விடை மாதவிப்பொன் மயிலாள் பாடலே.

RAGHAVENDRA
31st July 2015, 06:25 AM
Sivaji Ganesan Filmography Series

118. Thirumal Perumai திருமால் பெருமை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/NTTP01_zpsivzntfms.jpg

தணிக்கை - 08.02.1968
வெளியீடு - 16.02.1968

தயாரிப்பு - திரு வெங்கடேஸ்வரா மூவீஸ்

நடிக நடிகையர் -
நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, கே.ஆர்.விஜயா, சௌகார் ஜானகி, ராஜசுலோசனா, மனோரமா, ஜி.சகுந்தலா, டி.பி.முத்துலக்ஷ்மி, கே.ஆர்.தேவகி, எம்.எல்.பானுமதி, குட்டி பத்மினி, எம்.என்.நம்பியார், ஈ.ஆர்.சகாதேவன், நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், சிவகுமார், எஸ்.ராமராவ், ஏ.கருணாநிதி, பி.டி.சம்பந்தம், மாஸ்டர் பிரபாகரன், மாஸ்டர் காதர், எஸ்.என்.லக்ஷ்மி, புஷ்பமாலா, ஷண்முகசுந்தரி, மற்றும் பலர்.

நடனம் - குமாரி சரளா

பின்னணி பாடியவர்கள் -
டி.எம்.சௌந்திர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, மாஸ்டர் மகாராஜன், சைதை நடராஜன் - நாதஸ்வரம்.

மேக்கப் - ரங்கசாமி, தனகோடி, பத்மனாபன், ராமசாமி, தக்ஷிணாமூர்த்தி, சேதுபதி, ராமு

ஆடை அலங்காரம் - ஸி.கே.ராஜமாணிக்கம்-தம்பு

ஸ்டில்ஸ் - முருகப்பன் - எம்.ஆர்.பிரதர்ஸ்
விளம்பர நிர்வாகம் - எலிகண்ட்
விளம்பரம் - ஆஸ்பி லித்தோ ஒர்க்ஸ்
டிசைன்ஸ் - பக்தா
டைடில் கார்ட்ஸ் - கே.எஸ்.ஆர்ட்ஸ்
குதிரைச் சவாரி ஸ்டண்ட் அமைப்பு - சாமிநாதன் - வெங்கடேசன்

புரொடக்ஷன் நிர்வாகம் - ஓ.என்.நாராயணசாமி, எஸ்.வி.ராஜகோபால்

ஆபீஸ் நிர்வாகம் - எம்.கே.எஸ். மணி

ஸ்டூடியோ - சாரதா - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்

ஸ்டூடியோ நிர்வாகம் - டி.வி.வைத்தியநாதன்

ஆபரேடிவ் காமிராமேன் - என்.கார்த்திகேயன், ஏ.பி.ராமானுஜம்

ஒலிப்பதிவு - டி.சிவானந்தம்

பிரிண்டட் அண்டு ப்ராஸ்ஸடு அட் ஜெமினி ஸ்டூடியோஸ் கலர் லாபரட்ரி, சென்னை-6.

பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
பிரத்தியேகப் பாடல்கள் - திவ்விய பிரபந்தப் பாசுரங்கள், பாரதியார் பாடல்

நடன அமைப்பு - பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்

எடிட்டிங் - ராஜன், டி.ஆர்.நடராஜன்

கலை - கங்கா

ஒலிப்பதிவு டைரக்டர் - டி.எஸ்.ரங்கசாமி

ஒளிப்பதிவு டைரக்டர் - W.R.சுப்பா ராவ்

சங்கீதம் - திரை இசைத் திலகம் - கே.வி.மகாதேவன், உதவி - புகழேந்தி

உதவி டைரக்ஷன் - எஸ்.ஆர்.தசரதன், எம்.கருப்பையன், தஞ்சை மதி

அஸோஸியேட் டைரக்டர் - கே.கே.ஸம்பத்குமார்

திரைக்கதை வசனம் டைரக்ஷன் - ஏ.பி.நாகராஜன்

RAGHAVENDRA
31st July 2015, 05:05 PM
திருமால் பெருமை - காணொளிகள்

ஸ்ரீ ஹரிஹரி கோகுல ரமணா


http://www.dailymotion.com/video/x1dcovl_hari-hari-gokula-ramana-sivaji-ganesan-k-r-vijaya-thirumal-perumai-tamil-devotional-song_music


பல்லாண்டு பல்லாண்டு


http://www.dailymotion.com/video/x1dcqt1_pallandu-pallandu-sivaji-ganesan-k-r-vijaya-thirumal-perumai-tamil-devotional-song_music

RAGHAVENDRA
31st July 2015, 05:06 PM
திருமால் பெருமை - காணொளிகள்

கோபியர் கொஞ்சும் ரமணா


http://www.dailymotion.com/video/x1dcpen_gopiyar-konjum-ramana-sivaji-ganesan-padmini-tamil-devotional-song_music

திருமால் பெருமைக்கு நிகரேது


http://www.dailymotion.com/video/x1dcpm2_thirumal-perumaikku-sivaji-ganesan-padmini-tamil-devotional-song_music

RAGHAVENDRA
31st July 2015, 05:09 PM
திருமால் பெருமை - காணொளிகள்

மலர்களிலே பல நிறம் கண்டேன்


http://www.dailymotion.com/video/x1dcosp_malargaliley-pala-niram-kandaen-thirumal-perumai-sivaji-ganesan-kutti-padmini-tamil-devotional-song_music

கரையேறி மீன் விளையாடும்


http://www.dailymotion.com/video/x1dcp8l_karai-yeri-meen-vilaiyaadum-sivaji-ganesan-padmini-tamil-classic-song-thirumal-perumai_music

RAGHAVENDRA
31st July 2015, 05:12 PM
திருமால் பெருமை - காணொளிகள்

மார்கழித் திங்கள்


http://www.dailymotion.com/video/x1dcoz6_maargazhi-thingal-sivaji-ganesan-k-r-vijaya-thirumal-perumai-tamil-devotional-song_music

காக்கைச் சிறகினிலே


http://www.dailymotion.com/video/x1dcp18_kakaichiraginile-nandalala-sivaji-ganesan-k-r-vijaya-thirumal-perumai-tamil-devotional-song_music

RAGHAVENDRA
31st July 2015, 05:13 PM
திருமால் பெருமை - காணொளிகள்

கண்ணனுக்கும் கள்வனுக்கும்


http://www.dailymotion.com/video/x1dcp4c_kannanukkum-kalvanukkum-sivaji-ganesan-sowcar-janaki-tamil-classic-song-thirumal-perumai_music


பச்சைமாமலை போல் மேனி


http://www.dailymotion.com/video/x1dcpah_pachai-ma-malai-pol-meni-sivaji-ganesan-padmini-tamil-devotional-song_music

RAGHAVENDRA
31st July 2015, 11:03 PM
திருமால் பெருமை அபூர்வ ஆவணம் - விளம்பர நிழற்படம். நடிகர் திலகம் இணையதளத்தொகுப்பிலிருந்து..


http://www.nadigarthilagam.com/papercuttings3/thirumalperumaiprerelease.jpg

http://www.nadigarthilagam.com/papercuttings/thirumalperumai.jpg

RAGHAVENDRA
29th October 2015, 02:40 PM
Sivaji Ganesan Filmography Series

119. Harichandra ஹரிச்சந்திரா


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/HCCollagefw_zpsy1i8f19j.jpg


தணிக்கை - 01.08.1966
வெளியீடு - 11.04.1968



தயாரிப்பு - பிரமோதா பிலிம்ஸ்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - ஹரிச்சந்திரன்
டி.எஸ்.பாலையா - வீரபாகு
கே.ஏ.தங்கவேலு - நாக்ஷத்ரயன்
எம்.என்.நம்பியார் - விஸ்வாமித்திரன்
வி.கே.ராமசாமி - காலகண்டன்
ஓ.ஏ.கே.தேவர் - காசிராஜா
முஸ்தஃபா - மந்திரி
அஜீத்சிங் - இந்திரன்
ராமாராவ் - விஸ்வாமித்ரனின் சிஷ்யன்
மாஸ்டர் ஆனந்தன் - லோகிதாஸ்
சி.ஆர்.சுப்பராமன் - வேட்டைக்காரன்
எம்.பால்ராஜ் - சிவன்
ஜி.வரலட்சுமி - சந்திரமதி
டிபி.முத்துலட்சுமி - காலகண்டி
மோகனா - வீரபாகுவின் மனைவி
கனகஸ்ரீ - பார்வதி
மற்றும் பலர்
வசனம் - ஏ.கே.வேலன், உதயகுமார்
பாடல்கள் - லேட் தஞ்சை ராமையாதாஸ், உதயகுமார்
பாடியவர்கள்
டி.எம்.சௌந்தர ராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், பால சரஸ்வதி, ராணி, உடுத்தா சரோஜினி
இசை திரை இசைத்திலகம் கே.வி.மஹாதேவன்
நடன அமைப்பு - கோபி கிருஷ்ணா, வெம்பட்டி சத்யம்
நடனம் - ஈ.வி.சரோஜா, குசலகுமாரி, கோபி கிருஷ்ணா, சசி
ஒளிப்பதிவு - மஸ்தான், ஆர்.ஆர்.சந்திரன்
ஒலிப்பதிவு - மோகன்
பாடல்கள் ஒலிப்பதிவு அண்ட் ரீரிக்கார்டிங் - கண்ணன் - ரேவதி
கலை - கங்கா, கிருஷ்ணகுமாரி
ஒப்பனை - பத்ரையா, ரங்கசாமி, பெரியசாமி, ராமு
ஆடை அலங்காரம் - சி.கே.கண்ணன், கே.வீராசாமி
அரங்க நிர்மாணம் - ஈ.கணபதி
ஸ்டில்ஸ் - எம்.சத்தியம், லட்சுமணராவ்
புரொடக்ஷன் நிர்வாகம் - டி.செந்தாமரை, ராமு
ஸ்டூடியோ - பிரகாஷ்
ப்ராஸ்ஸிங் விஜயா லாபரட்டரீஸ் - எஸ்.ஆர்.ரங்கநாதன்
எடிட்டிங் - பாபு
தயாரிப்பு - ஜி.வரலட்சுமி
டைரக்ஷன் - கே.எஸ்.பிரகாஷ் ராவ்.

ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷப் புதையல்




'51வது நாள்' விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 17.8.1968


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5665-1.jpg

குறிப்பு:
1. சென்னை மற்றும் தென்னகமெங்கும் "ஹரிச்சந்திரா", 1968-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக, 11.4.1968 வியாழனன்று வெளியானது.

2. சிங்காரச் சென்னையில் வெளியான 4 அரங்குகள் : பாரகன், ஸ்ரீமுருகன், சரஸ்வதி, சீனிவாசா

3. மதுரை ஏரியாவில் மட்டும் இக்காவியம், "கலாட்டா கல்யாணம்[12.4.1968]", "என் தம்பி[7.6.1968]" காவியங்களுக்குப்பின், 28.6.1968 வெள்ளியன்று வெளியானது.

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
29th October 2015, 02:42 PM
ஹரிச்சந்திரா பாட்டுப்புத்தகத்தின் அட்டை (ஒரிஜினல் பாட்டுப்புத்தகம் அல்ல)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/HCSBCFRFW_zpsgvakxzx7.jpg

பாடல்களின் விவரங்கள்

1. பொன்னுடனே பொருள் நிறைந்து - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன் மற்றும் கோரஸ்
2. நீதிதேவன் உலகில் - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்
3. உள்ளம் கலங்குதே - தஞ்சை ராமய்யாதாஸ் - எஸ்.சி.கிருஷ்ணன்
4. ஆட மயில் வேணுமா - தஞ்சை ராமய்யாதாஸ் - கே.ராணி, உடுத்தா சரோஜினி
5. காசியில் வாழும் கருணைக்கடலே - உதயகுமார் - டி.எம்.சௌந்தர்ராஜன்
6. உலகம் அறியா புதுமை - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்
7. மண்டை ஓடும் கையுமாக - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்
8. நரனையும் நீ படைத்தாய் - தஞ்சை ராமய்யாதாஸ் - ஆர்.பாலசரஸ்வதி
9. ஓராம் மாதம் உடலது தளர்ந்து - தஞ்சை ராமய்யாதாஸ் - ஆர்.பாலசரஸ்வதி
10. யாரடி கள்ளி நீ - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்
11. ஆதியிலும் பறையனல்ல - தஞ்சை ராமய்யாதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன்
12. விண்ணவர்க்கெதியே போற்றி - உதயகுமார் - டி.எம்.சௌந்தர்ராஜன்
13. யார் போய் சொல்லுவார் - டி.எம்.சௌந்தர்ராஜன்

RAGHAVENDRA
29th October 2015, 02:43 PM
ஹரிச்சந்திரா காணொளிகள்

இறந்த்து மண்மேல்

https://www.youtube.com/watch?v=EYjTYoi1i7M

யாரடி கள்ளி நீ ஆதியிலும் பறையனல்ல

https://www.youtube.com/watch?v=6Wc9psmFsGA


உலகம் அறியாத புதுமை

https://www.youtube.com/watch?v=Z6tfy5NK_kQ

இங்கேருக்கு உலகம் இங்கேருக்கு

https://www.youtube.com/watch?v=0E6UYbOZRxU

காசியில் வாழும் கருணைக்கடலே

https://www.youtube.com/watch?v=rqNArua9Gbw

நரனையும் படைத்தாய்

https://www.youtube.com/watch?v=x5bfLrC6sL0

பொன்னுடனே பொருள் நிறைந்து மன்னர் வாழ்கவே

https://www.youtube.com/watch?v=5J4BjFH5PLI


ஆடும் மயில் வேணுமா

https://www.youtube.com/watch?v=VXwPAC9vOl4

RAGHAVENDRA
4th November 2015, 08:30 PM
ஹரிச்சந்திரா படத்தைப் பற்றிய கோபால் அவர்களின் பதிவு

நாள் - 20.04.2012
பதிவு பாகம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 9
பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=847982&viewfull=1#post847982



ஹரிச்சந்திரா-1968
கலாட்டா கல்யாணத்துடன் சேர்ந்து வந்த பருவம் தவறி வந்த பயிர்.ஜி.வரலக்ஷ்மி தயாரிப்பில் அவரது கணவர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் (ஆமாம் -வசந்த மாளிகை,அவன் ஒரு சரித்திரம் ,கருடா சௌக்யமா படங்களின் இயக்குனர்.)இயக்கத்தில்,கே.வீ.மகாதேவன் இசையில்,ஏ.கே.வேலன் வசனம்(வணங்கா முடி?),ஆர்.ஆர்.சந்திரன்(மகாகவி காளிதாஸ் பட இயக்குனர்)மஸ்தான்(ராஜா பட காமெரா)சேர்ந்து காமெரா,கோபிக்ரிஷ்ணா குழுவினரின் அற்புத நடனம் என்று வந்தும் வெற்றி எல்லையை தொடாத படம்.
நான் இந்த படத்தை அனாதையை (மற்ற நண்பர்கள் வர மறுத்து விட்டனர்)போல் எழுபதுகளின் ஆரம்பத்தில் கீத்து கொட்டாய் ஒன்றில் பார்த்த ஞாபகம்.அந்த ஞாபகத்தில் எழுதுகிறேன்.
எனக்கு அந்த வயதில் சடேரென்று பொட்டில் அடித்தது,நடிகர் திலகத்தின் ஆரம்ப சூரிய வணக்க பாடல்.கர்ணன் வந்து ,மூன்றே வருடங்கள்.ஆனால் எவ்வளவு வித்யாசமான வணக்கம்.மிதமான கம்பீரம்,சாந்தி தவழும் முகம்,சாத்வீக,சத்திய மன்னனாக வித்யாசமான வணக்கம்.(ஒரே மாதிரி போலீஸ் அதிகாரி,மன்னன் என்று பாத்திரங்கள் அமைந்தாலும் ,நடிப்பு கடவுள் காட்டும் வித்தியாசம் அபாரம்.)வாசு சார் சொன்ன படி தேஜஸ் பொலிந்த முகத்தோடு,அளவான கம்பீரம கொண்டு,மிதமாக குரல் கொண்டு,சத்திய திரு உருவாக வளம் வருவார்.பிறகு,ஒரு காட்சியில் (காட்டில்)
ஒரு அந்தணர் தூங்க இவர் காவலுக்காக முழித்து இருந்து ,அடுத்த காட்சியில் அந்த களைப்பை கண்களில் கொண்டு வருவார்.சுடுகாட்டு தத்துவ காட்சி ஒன்றில் வசனம் என்னை கவர்ந்தது.(அந்த வயதில்).இளைத்து ,இளமை கூடிய முதல் மன்னர் படம் .ஆனால் ஒரு குழந்தையின் தந்தையாக நடிப்பில் முதிர்ச்சி காட்டி வயதை காட்டுவார்.(பின்னாட்களில் துஷ்யந்த மன்னனாக எங்கிருந்தோ வந்தாளில் எவ்வளவு இளமையாக ,அழகாக ஜொலிப்பார் நம் கடவுள்?)உருக்கம்,பிரிவு இதெல்லாம் தலைவருக்கு மீன் குஞ்சு நீந்துவது போல்.
படம் தோற்றதற்கு காரணங்கள் -ஹரி சந்திரன் கதையிலே லாஜிக் இருக்காது.இவ்வளவு பொன் கொடுத்து ஒரு வேலை காரியையும்,வெட்டியானையும் யாராவது வாங்குவார்களா? ஹரி சந்திர மன்னருக்கான ஆரம்ப காட்சிகளில் மனைவி ,மகன் உடன் நெருக்கம் காண்பித்து உறவு மனதில் தங்காததால் ,பின்னாட்களின் பிரிவின் சோகம் நம்மை உறுத்தாது.ஜி.வரலக்ஷ்மி(அஞ்சலி உருவம்,சந்த்யா குரல்)பொருந்தாத மனைவி(அம்பிகாபதி போல்).சுமார் இசை(உலகம் அறியாத,காசியில் வாழும்).அந்த வயதில் நான் ஆச்சர்ய பட்டது காவல் காரன் படத்தில் வரும் ஓறாம் மாதம் உடலது பாடல் சோகமாக ஒலிக்கும்.பின் பகுதி கொஞ்சம் இழுக்கும்.
ஆனால் நமது கடவுளுக்காக இதை பார்க்கலாம்.

RAGHAVENDRA
15th November 2015, 03:42 PM
Sivaji Ganesan Filmography Series

120. Galatta Kalyanam கலாட்டா கல்யாணம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/gkcollage01fw_zpsmqsxng1c.jpg

தணிக்கை 30.03.1968
வெளியீடு 12.04.1968

தயாரிப்பு - ராம்குமார் ஃபிலிம்ஸ்

நடிக நடிகையர்
பத்மஸ்ரீ சிவாஜி கணேசன், ஜெயல்லிதா, ஏவிஎம் ராஜன், நாகேஷ், சோ, கே.ஏ.தங்கவேலு, வி.எஸ்.ராகவன், மாலி, வி.கோபாலகிருஷ்ணன், ஜோதிலட்சுமி, மனோரமா, குமாரி ச்ச்சு, ராஜேஸ்வரி, சுந்தரிபாய், சீதாலட்சுமி, தேவமனோகரி, மற்றும் பலர்

கதை ஸ்ரீதர்-கோபு
பாடல்கள் - வாலி
பின்னணி - டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சி.எஸ்.கணேஷ் சங்கர்-கணேஷ்
ஒலிப்பதிவு டைரக்டர் - ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி
ஒலிப்பதிவு - t.d. கிருஷ்ணமூர்த்தி
நடனம் - தங்கப்பன்
சண்டைப்பயிற்சி - சாமிநாதன், வெங்கடேசன்
மேக்கப் - ரங்கசாமி, கோபால், ராமசாமி, கிருஷ்ணராஜ், ராகவன், சிங், சுந்தரம், நாராயணசாமி
உடைகள்- பி.ராமகிருஷ்ணன், சீனிவாசன்
செட் பிராபர்டீஸ் - சினி கிராஃப்ட்ஸ்
செட் அலங்காரம் - ஏ.பெரியசாமி
விளம்பரம் - எலிகண்ட்
விளம்பர டிசைன்கள் - பக்தா பரணிகுமார்
தயாரிப்பு நிர்வாகம் - டி.எஸ்.ஜம்பு, அப்பா ராவ்
ஸ்டூடியோ - சாரதா - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்
rECORDED ON RCA SOUND SYSTEM
வெளிப்புறப் படப்பிடிப்பு - மூவி சர்வீஸ்ஸ், பிரசாத் ப்ரொடக்ஷன்ஸ்
ப்ராஸ்ஸிங் - விஜயா லேபரட்டரி, பை எஸ்.ரங்கநாதன்
ஆபரேடிவ் கேமரா மேன் - ஏ. சோமசுந்தரம்
ஒளிப்பதிவு டைரக்டர் - பி.என்.சுந்தரம்
ஸ்டில்ஸ் - திருச்சி கே.அருணாச்சலம்
கலை கங்கா
எடிட்டிங் - என்.எம்.சங்க்ர்
இசை மெல்லிசை மன்ன்ன் எம்.எஸ்விஸ்வநாதன்
திரைக்கதை வசனம் - கோபு
டைரக்ஷன் - சி.வி.ராஜேந்திரன்

http://www.nadigarthilagam.com/papercuttings3/galattaprerelease.jpg

http://www.nadigarthilagam.com/papercuttings3/galatta75.jpg

RAGHAVENDRA
15th November 2015, 03:47 PM
ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...




கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்


கலாட்டா கல்யாணம்


[12.4.1968 - 12.4.2012] : 45வது ஆண்டு கொண்டாட்ட தினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5685-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 20.7.1968

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5686-1.jpg


குறிப்பு:
1. 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : சென்னை - சாந்தி[106 நாட்கள்] மற்றும் கிரௌன்[106 நாட்கள்].

2. சென்னை [சயானி]யில் 77 நாட்களும், மதுரை [ஸ்ரீ மீனாக்ஷி]யில் 70 நாட்களும் மற்றும் திருச்சி, சேலம், கோவை போன்ற மாநகரங்களில் ஒவ்வொன்றிலும் முறையே 70 நாட்களும், ஏனைய பல ஊர்களின் அரங்குகளில் 56 நாட்களும் ஓடிய இக்காவியம் ஒரு சூப்பர்டூப்பர்ஹிட் காவியம்.


பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
15th November 2015, 04:07 PM
கலாட்டா கல்யாணம் பாடல் காட்சி - எங்கள் கல்யாணம்


https://www.youtube.com/watch?v=ZpDSEwPYu6w

RAGHAVENDRA
15th November 2015, 04:07 PM
கலாட்டா கல்யாணம் பாடல் காட்சி - நல்ல இடம்


https://www.youtube.com/watch?v=G9BPzusiYJY

RAGHAVENDRA
15th November 2015, 04:08 PM
கலாட்டா கல்யாணம் பாடல் காட்சி அப்பப்பா நான்


https://www.youtube.com/watch?v=kAntINJE0s0

RAGHAVENDRA
15th November 2015, 04:08 PM
கலாட்டா கல்யாணம் பாடல் காட்சி - மெல்ல வரும் காற்று


https://www.youtube.com/watch?v=8XK-ePgi-EU

RAGHAVENDRA
15th November 2015, 04:09 PM
கலாட்டா கல்யாணம் பாடல் காட்சி - உறவினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி


https://www.youtube.com/watch?v=23vREAmmbgs

RAGHAVENDRA
15th November 2015, 04:12 PM
கலாட்டா கல்யாணம் படத்தின் முகப்பிசை

https://www.mediafire.com/?zpq5f1ch3p9ajmn

RAGHAVENDRA
15th November 2015, 04:13 PM
கலாட்டா கல்யாணம் திரைப்படத்திற்காக பதிவு செய்யப்பட்டு படத்தில் இடம் பெறாத பாடல்..

மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ...


இசையரசியின் குரலில் கேட்கத் திகட்டாத அபூர்வ கானம்

http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong465.ram

நன்றி இசையரசிக்கான இணையதளம்


மன்னன் ஒருவன் பாடல் வரிகள் ஆங்கிலத்தில்

mannan Oruvan Manjaththil Vandhaano
gangai Yamunai Ondraagak Kandaano
mannan Oruvan Manjaththil Vandhaano
gangai Yamunai Ondraagak Kandaano

noolidai Vannam Kandaan
minnal Endraan Pinnik Kondaan
thaamaraik Kannam Kandaan
muththam Kondaan Thaen Endraan

noolidai Vannam Kandaan
minnal Endraan Pinnik Kondaan
thaamaraik Kannam Kandaan
muththam Kondaan Thaen Endraan
mannan Oruvan Manjaththil Vandhaano

enaik Kaanath Thudippaan Iravallavo
thudippodu Nadippaan Edhais Sollavo
nadippodu Padippaan Karam Pidippaan
sugam Vadippaan Kadhai Mudippaan

mannan Oruvan Manjaththil Vandhaano
gangai Yamunai Ondraagak Kandaano
mannan Oruvan Manjaththil Vandhaano

imaikkaamal Rasippaan Azhagallavo
kuraikkaamal Koduppaan Suvaiyallavo
aahaaa Ahaaa Aaaa Ahaaa Ahaaa Aa
imaikkaamal Rasippaan Azhagallavo
kuraikkaamal Koduppaan Suvaiyallavo
pudhup Paadhai Vaguppaan Enai Ninaippaan
varavazhaippaan Udal Anaippaan

mannan Oruvan Manjaththil Vandhaano
gangai Yamunai Ondraagak Kandaano
aaahaaa Ohooo Laaalaaa La

நன்றி - View more at http://www.friendlysms.com/tamil-lyrics/galaatta-kalyanam/mannan-oruvan-manjaththil-517351.html

RAGHAVENDRA
15th November 2015, 04:27 PM
கலாட்டா கல்யாணம் சிறப்பு செய்திகள்

1. போர் வீரர் நிதிக்காக நடிகர் திலகம் தலைமையில் கலைக்குழு சென்றிருந்த போது நடத்தப்பட்ட ஓரங்க நாடகமே கலாட்டா கல்யாணம். அவசர அவசரமாக எழுதி மேடையேற்றப்பட்டு மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
2. இதன் காரணமாக இந்நாடகத்தையே படமாக்க நடிகர் திலகம் விரும்பினார்.
3. அனுபவம் புதுமை படத்தைப் பார்த்து சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட நடிகர் திலகம், கலாட்டா கல்யாணம் படத்திற்கு யாரை இயக்குநராகப் போடுவது எனக் கேள்வி எழுந்த போது தானே முன்மொழிந்து சிவிஆரிடம் இயக்குநர் பொறுப்பை ஒப்படைத்தார்.
4. சி.வி.ஆர். நடிகர் திலகத்துடன் தொடர்ந்து பல படங்கள் பணியாற்ற சிறந்த துவக்கமாக அமைந்தது கலாட்டா கல்யாணம் திரைப்படத்திற்கு மக்களிடம் பெற்ற வரவேற்பு. திறமையைக் கண்டறிந்து ஊக்குவதில் நடிகர் திலகத்தின் திறமைக்கு உதாரணம் கலாட்டா கல்யாணம்.
5. நடிகர் திலகத்தின் படங்களில் சித்ராலயா கோபு தனியாக வசனம் எழுதிய முதல் படம் கலாட்டா கல்யாணம். தொடர்ந்து சுமதி என் சுந்தரி, மூன்று தெய்வங்கள் என அவரும் நடிகர் திலகத்தின் படங்களுக்கு வசனம் எழுதினார்.
6. மெல்லிசை மன்னரின் மிகச் சிறந்த இசைத்திறமைக்கும் அவருடைய புகழ்க்கிரீடத்தில் ஓர் மகுடமாகவும் அமைந்தது கலாட்டா கல்யாணம்.
7. சங்கர் கணேஷ் இரட்டையரில் கணேஷ் இப்படத்தில் ஒரு பாடலைப் பாடியது குறிப்பிடத்தக்கது. அப்போது தான் அவர்கள் இசையமைப்பாளர்களாக அறிமுகமான புதிது. மகராசி மூலம் அறிமுகமாகி மக்களிடம் புகழ் பெறத்துவங்கிய கால கட்டம்.
8. சென்னை அண்ணா நகரில் சுற்றுலா வர்த்தக பொருட்காட்சி நடைபெற்ற போது அதில் ஒரு பாடல் காட்சி முழுக்க படமாக்கப்பட்டது. இன்று அந்த பொருட்காட்சி மைதானம் எங்கே எனத் தேட வேண்டும்.
9. சுமதி என் சுந்தரி படத்தில் இடம் பெற்ற ஒரு தரம் ஒரே தரம் பாடல், இந்தப் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது என அப்போது ஒரு செய்தி வந்தது. நடிகர் திலகத்துடன் ஜெயலலிதா ஜோடியாக நடித்த முதல் படம் என்பதால் நல்ல இடம் நீ வந்த இடம் பாடலும் மற்றும் இதை காதலுக்காக குறிப்பிடும் வகையில் இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம் என்பது போல் வாலி வரிகளை எழுதியிருப்பார் என்றும் கூறப்பட்டது.
10. இளமை கொஞ்சும் எழிலுடன் நடிகர் திலகம் கலாட்டா கல்யாணம் படத்தில் தோன்றிய போது, முதல் நாள் முதல் காட்சியில் பல கல்லூரி மாணவிகள் துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் ரசிகர்கள் சொல்வர்.
11. ஏராளமான சிறப்புக்களைக் கொண்ட கலாட்டா கல்யாணம் இன்னும் பல ஆண்டுகளானாலும் சிவாஜி ரசிகர்கள் நெஞ்சில் தனியிடம் பெற்று ஆட்சி செலுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.

RAGHAVENDRA
15th November 2015, 11:24 PM
கலாட்டா கல்யாணம் பாட்டுப்புத்தகத்தின் முகப்பு

http://www.nadigarthilagam.com/songbookcovers/galattasbc.jpg

RAGHAVENDRA
24th November 2015, 01:38 PM
Sivaji Ganesan Filmography Series

121. ENN THAMBI என் தம்பி

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/ENTHAMBICOLLAGEFW_zpsuvmbuxmi.jpg

தணிக்கை 13.05.14968
வெளியீடு 07.06.1968

தயாரிப்பு - சுஜாதா சினி ஆர்ட்ஸ்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாலாஜி, நாகேஷ், சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, வி.நாகையா, சரோஜாதேவி, பண்டரிபாய், சுந்தரிபாய், பேபி ரோஜாரமணி, மாதவி, தேவமனோஹரி, ராஜேஸ்வரி மற்றும் பலர்.
கௌரவ நடிகை -- ராஜசுலோசனா

மூலக்கதை - ஜகபதி பிக்சர்ஸ்
வசனம் - ஏ.எல்.நாராயணன்

பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்

பின்னணி பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

பாடல்கள் ஒலிப்பதிவு ரீரிக்கார்டிங் - டி.எஸ்.ரங்கசாமி - சாரதா ஸ்டூடியோ

RECORDED ON RCA SOUND SYSTEM

வசனம் ஒலிப்பதிவு - கே.ஆர்.ராமசாமி - பிரசாத்ஸ டி.டி. கிருஷ்ணமூர்த்தி - சாரதா, மூசா இப்ராஹிம் - வாசு

பிராசஸிங் - எஸ்.ரங்கநாதன் - விஜயா லேபரட்டரி

ஸ்டூடியோ - சாரதா, பிரசாத், வாசு

புரொடக்ஷன் நிர்வாகம் - ஆர்.கிருஷ்ணமூர்த்தி

ஒப்பனை - திருநாவுக்கரசு, ரங்கசாமி, ராமசாமி, சகாதேவராவ், நாராயணசாமி,

ஸ்டில்ஸ் - சாரதி,

விளம்பர டிசைன்ஸ் - எஸ்.ஏ. நாயர்
விளம்பரம் - ஏரீஸ் அட்வர்டைசிங் பீரோ
பொதுஜன தொடர்பு - பிலிம்நியூஸ் ஆனந்தன்
நடனப்பயிற்சி - சோப்ரா
கலை - ஆர்.பி.எஸ்.மணி
படத்தொகுப்பு - பி.கந்தசாமி
ஒளிப்பதிவு டைரக்டர் - தம்பு
ஆபரேடிவ் காமிராமேன் - பாஸ்கர்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
டைரக்ஷன் - ஏ.சி.திருலோக்சந்தர்

RAGHAVENDRA
24th November 2015, 01:40 PM
என் தம்பி
கருத்து !
(பாட்டுப்புத்தகத்தில் உள்ளபடி)

குடும்பம் என்பது ஒரு மரத்தைப் போல. இலை, கிளை, மலர், காய், கனி, இவைகளோடு பார்க்கும்போது தான் மரத்தின் அழகையும், மதிப்பையும் நாம் உணருகிறோம். அதைப்போல, அண்ணன்-தம்பி, தாய்-தந்தை, இத்தனை உறவினர்களோடு ஒரு குடும்பத்தைப் பார்க்கும்போது தான் ஒற்றுமையின் சிறப்பை, ஒரு குடும்பமாக இருக்கும் மதிப்பை நாம் தெரிந்து கொள்ளுகிறோம். இலையில்லையேல், கிளையில்லை, கிளையில்லையேல் மலரில்லை, மலரில்லையேல் காய் இல்லை, கனியில்லை. அதைப்போல பாசத்தின் ஆதாரமத்திலே தான் ஒரு குடும்பத்தின் உயர்வே இருக்கிறது. காலமெனும் பூமியில் வளரும் இந்த குடும்ப மரத்தில் விதிச்சூறாவளி அடிக்கும்போது காயும், கனியுமாக இருந்த மரம் அசைகிறது-ஆடுகிறது. புயல் ஓய்ந்தபின் மீண்டும் பூத்து, காய்த்து சிரிக்கிறது.

இந்த உண்மையின் உண்மையைச் சொல்லுகிறது என் தம்பியின் கதை.

இதற்கு வெள்ளித்திரை விளக்கம் தரும்.

RAGHAVENDRA
24th November 2015, 01:43 PM
என் தம்பி - கம்பெனி பாட்டுப்புத்தகத்தின் முகப்பு

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/12301743_1211097282240982_4500831577325537065_n.jp g?oh=335778ea01da9991a7b265d5988c7802&oe=56B33AAD&__gda__=1459263180_1ea7dc02a1daed83303a70aa74ce8b8 6

RAGHAVENDRA
24th November 2015, 01:45 PM
என் தம்பி - கம்பெனி பாட்டுப் புத்தகத்தின் பின் அட்டை

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12289617_1211097605574283_305189891960010954_n.jpg ?oh=58df14255dee8a4bd31ed68634a8edbf&oe=56F8DBD5

RAGHAVENDRA
24th November 2015, 01:48 PM
என் தம்பி விளம்பர நிழற்படங்கள் ... நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து..

http://www.nadigarthilagam.com/papercuttings3/enthambi50.jpg

http://www.nadigarthilagam.com/papercuttings3/enthambi51.jpg

http://www.nadigarthilagam.com/papercuttings3/enthambiprerelease.jpg

RAGHAVENDRA
24th November 2015, 01:51 PM
என் தம்பி திரைப்படத்தைப் பற்றிய நமது முரளி சாரின் ஆய்வுப் பதிவுகள்...

நாள் - 3rd January 2010, 12:18 AM
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=462046&viewfull=1#post462046


என் தம்பி - Part I

தயாரிப்பு : சுஜாதா சினி ஆர்ட்ஸ்

இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்

வெளியான நாள்: 07.06.1968

நகரம் என்றும் சொல்ல முடியாமல் அதே சமயம் கிராமம் என்றும் இல்லாமல் உள்ள ஒரு நடுவாந்திர ஊர். அங்கே மிகப் பெரிய செல்வந்தர் முருகபூபதி. அவரின் மனைவி இறந்து விடவே இரண்டாம் திருமணம் திருமணம் செய்திருக்கிறார். மூத்த மனைவியின் மூலமாக ஒரு மகனும் இரண்டாவது மனைவி மூலமாக ஒரு மகன் ஒரு மகள் ஆகியோர் அவருடைய வாரிசுகள். தவிர, கணவனை இழந்த விதவை தங்கையும் அவரது மகன் மற்றும் மகளும் அந்த வீட்டிலே வளர்கிறார்கள். தம்பி முறையாகும் அவரது சித்தப்பா மகனும், அவரது மகளும் பர்மாவிலிருந்து அகதிகளாக இங்கே வந்திருக்கிறார்கள். ஒரே மகள் உமா போலியோ நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவள் மேல் மூத்த மகன் கண்ணன் உயிரையே வைத்திருக்கிறான். அந்த பெண்ணும் அப்படியே.

எல்லா நல்ல குணங்களும் பொருந்திய கண்ணன் ஜமீன் விவகாரங்களையும் கணக்கு வழக்குகளையும் கவனித்துக் கொள்ள இளைய மகன் விஸ்வம் ஊதாரியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். வீட்டிலே வளரும் அத்தை மகள் ராதாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். தம்பியின் மீது மிகுந்த பாசம் கொண்ட கண்ணன் அவனை திருத்த பல முயற்சிகள் மேற்கொண்டும் பலன் ஒன்றுமில்லை.

இந்நிலையில் விஸ்வத்தின் செயல்பாடுகள் பொறுக்க முடியாமல் ஜமீந்தார் அவனது கைகளுக்கு பணமே போகாமல் செய்து விட ஒரு நாள் இரவில் தந்தையின் பீரோ சாவியை எடுத்து பணத்தை திருட முயற்சிக்கும் போது அவர் பார்த்து விட கடுமையான வாக்குவாதம் முற்றி விஸ்வம் தந்தைக்கு நேராக துப்பாக்கியை எடுத்து நீட்ட அது அவரது இதயத்தை பாதித்து நெஞ்சு வலி வந்து விடுகிறது.

படுக்கையில் விழும் அவர் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். வக்கீலை அழைத்து உயில்எழுதுகிறார். அதன்படி சொத்துகளை நிர்வகித்து வரும் பொறுப்பையும் மூத்த மகன் மற்றும் சகோதரியிடம் ஒப்படைக்கிறார். மறுக்கும் கண்ணனிடம் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள செய்யும் அவர் யாருக்கும் தெரியாத குடும்ப ரகசியம் ஒன்றை கண்ணனின் காதில் சொல்கிறார். உயில் விஷயம் தெரிந்து தந்தையோடு சண்டை போடும் விஸ்வதிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே முருகபூபதிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறார்.

தந்தையின் மறைவிற்கு பிறகு சொத்துக்களை நிர்வகித்து வரும் கண்ணன் தம்பியை திருத்தி விட முயற்சிக்கிறான். ஆனால் மேலும் விஸ்வத்தைப் பற்றி தவறான செய்திகளே வருகிறது. எஸ்டேட் பங்களாவில் வேலைக்கார பெண்ணிடம் பழகுவது பற்றி புகார்கள் வர, கண்ணன் அதைப் பற்றி விசாரிக்கிறான். அலட்சியமாக பதில் சொல்லும் தம்பியை பார்த்து நீ திருந்தவே மாட்டியா என்று கேட்டு போகும் அண்ணனின் குரல் விஸ்வத்தின் மனதில் எதிரொலிக்கிறது. மறு நாள் காலை அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. பக்திமானாக படியில் இறங்கும் விஸ்வம் அனைவரிடமும் திருந்தி விட்டேன் என்கிறான். கோவிலுக்கு போகிறான்.

கண்ணனுக்கு பெரும் சந்தோஷம். அந்த நேரத்தில் கண்ணன் ராதா இவர்களுடன் வெளியே செல்லும் தங்கை உமா தண்ணீரில் தவறி விழுந்து விட, காப்பற்ற செல்லும் கண்ணனும் சிக்கிக் கொள்கிறான். அவனுக்கு நீச்சல் தெரியாது என்ற விவரத்தை அப்போதுதான் ராதா தெரிந்துக் கொள்கிறாள். குதிரையேற்றம், வாள் பயிற்சி போன்றவற்றில் எல்லாம் தேர்ச்சி பெற்ற கண்ணன் நீச்சல் பயிற்சி பெறாததன் காரணம் அவனுக்கு நீரில் ஒரு கண்டம் இருப்பதாக ஜோசியர் சொன்னதை நம்பி அவனது தந்தை நீச்சல் சொல்லி தரவில்லை என்ற விஷயத்தை கண்ணன் சொல்கிறான்.

இந்நிலையில் விஸ்வம் ஒரு நாள் தங்கள் தந்தைக்கு ஒரு நினைவிடம் அமைப்பதற்கு பக்கத்திலுள்ள தீவில் இடம் பார்த்திருப்பதாகவும் அதை பார்க்க வர வேண்டும் என்று சொல்லி கண்ணனை அழைத்துப் போகிறான். மோட்டார் படகில் செல்லும் கண்ணன் படகு வேறு திசையில் பயணிப்பதை பார்த்து காரணம் கேட்க விஸ்வம் தன் சுயரூபத்தை காட்டுகிறான். சொத்து முழுவதும் கண்ணன் கையில் இருப்பதால் வாழ்நாள் முழுக்க கண்ணனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அது தன்னால் முடியாது,ஆகவே கண்ணனை ஒழித்து விட்டு தான் சொத்தை அடைய போவதாக சொல்கிறான். கண்ணனுக்கு நீச்சல் தெரியாது என்பதால் இந்த படகில் அழைத்து வந்து விட்டு பாதி வழியில் ஆற்றில் குதித்து விடுகிறான். வெகு வேகமாக ஓடும் மோட்டார் படகை சமாளிக்க் முடியாமல் கண்ணன் திணற, படகு ஒரு பெரிய பாறையில் மோதி விபத்துக்குள்ளாகிறது.

வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க விஸ்வமும் அவர்களுடன் சேர்ந்து சோகமாக இருப்பது போல் நடிக்கிறான். குழந்தை உமா அண்ணனை காணாமல் படுத்த படுக்கையாகி விடுகிறாள். இதற்கிடையே இப்போது சொத்தின் ஒரே பராமரிப்பாளாரான தன் அத்தையிடம் சொத்துகளையும் தன் பெரியம்மா [கண்ணனின் அம்மா] நகைகளையும் கேட்டு ரகளை செய்யும் விஸ்வம் வீட்டை விட்டு வெளியேறப் போவதாக மிரட்டுகிறான். நகைகளைப் பற்றி தெரியாது என்று சொல்லும் அத்தை சொத்துகளை தர சம்மதிக்கிறாள். முன்பு தன் அண்ணனிடம் தன் மகள் ராதாவை இந்த வீட்டு மருமகளாக்குகிறேன் என்று சொன்ன வாக்குறுதியை நினைவுப்படுத்தி விஸ்வம் ராதாவை மணந்துக் கொள்கிறேன் என்கிறான். ராதாவிற்கும் அவள் அண்ணன் சபாபதிக்கும் இதில் துளியும் விருப்பமில்லை. ஆனால் அவர்களது தாய் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறாள்.

இந்த நேரத்தில் எஸ்டேட் வேலைக்காரன் ஒருவன் சபாபதியிடம் வந்து பக்கத்து கிராமத்தில் ஒரு நாடக குழு முகாமிட்டிருப்பதாகவும் அதில் கள்ளபார்ட் போடும் நடிகன் கண்ணனைப் போலவே இருப்பதாக சொல்கிறான். நாடகத்தை பார்க்க செல்லும் சபாபதி நாடக நடிகன் கந்தப்பாவை பார்த்து பிரமித்துப் போகிறான். காரணம் அச்சு அசல் அவன் கண்ணனைப் போலவே இருப்பதால். அவனிடம் சென்று விஷயங்களை விளக்கி கண்ணனாக நடிக்க சொல்ல அவன் முதலில் மறுக்கிறான். யாருக்கும் தெரியாமல் சபாபதி அவனை கூட்டிக் கொண்டு வந்து குழந்தையை காட்டவே, அந்த பெண்ணிற்காக நடிக்க ஒப்புக் கொள்கிறான்.

தன்னை ஒருதலையாய் காதலிக்கும் பர்மா மாமாவின் மகளிடமிருந்து பூட்டி கிடக்கும் அவர்களின் ஒரு வீட்டு சாவியை வாங்கி அங்கே கந்தப்பாவை தங்க வைத்து சபாபதி அவனை கண்ணனாக மாற்ற பயிற்சி கொடுக்கிறான்.

சொத்துகளை விஸ்வம் பெயருக்கே மாற்ற ஏற்பாடு செய்து அதை அனைவர் முன்னாலும் செய்ய போகும் நேரத்தில் கந்தப்பா, கண்ணனாக உள்ளே நுழைய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. விஸ்வம் மட்டும் அதிர்ச்சி அடைகிறான். அதை வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் கூட அவன் மனதில் குழப்பங்கள்.

வந்திருப்பவன் கண்ணன் அல்ல என்ற சந்தேகத்தை விஸ்வம் வெளிப்படுத்தி பல பரிட்சைகளை வைக்க அவை அனைத்திலும் கண்ணன் வெற்றிப் பெறுகிறான். இறுதியாக சிறு வயதில் போட்ட வாள் சண்டையை நினைவுப் படுத்தி சண்டைக்கு அழைக்கும் தம்பியின் சவாலை ஏற்று ஜெயித்துக் காட்டும் கண்ணன் தன்னை கொல்ல, வாள் முனையில் விஷம் தடவியிருக்கிறான் தம்பி என்று தெரிந்ததும் துடித்துப் போகிறான்.

நீ என் அண்ணன் இல்லை. பணம் தருகிறேன், வீட்டை விட்டு போய் விடு என்று சொல்லும் தம்பியிடம் பேரம் பேசும் கண்ணன் அவன் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்கிறான். ஆனால் பேரம் பேசும் போது அதை கேட்டு விடும் அத்தை அவனை தவறாக புரிந்துக் கொண்டு விடுகிறாள். சபாபதியும் உண்மையை சொல்ல, தான் கந்தப்பா அல்ல கண்ணன்தான் என்ற உண்மையை கண்ணன் சொல்ல யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஆற்றில் விழுந்த தன்னை ஒரு நாடக குழு காப்பாற்றியதாகவும், அதன் மூலமாகதான் தான் உயிர் பிழைத்து வந்ததாகவும், குடும்பத்தில் உள்ள குழப்பங்களை தீர்க்கவே வேறு வேடத்தில் வந்ததாகவும் கண்ணன் சொல்வது எடுபடாமல் போகிறது. அவனை வீட்டை விட்டு துரத்துகிறார்கள். அப்போது இறக்கும் தருவாயில் தன் தந்தை தன்னிடம் சொன்ன ரகசியம் நினைவிற்கு வருகிறது. மீண்டும் வீட்டுக்குள் செல்லும் அவன் பாரம்பரியமான குடும்ப நகைகளை தந்தை எங்கே வைத்திருக்கிறார் என்பது தனக்கு தெரியும் என்றும் அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு தான் கண்ணன் என்பதை நிரூபிப்பதாக சொல்லி விட்டு செல்கிறான். இதை கேட்டு அவன் பின்னே செல்லும் தம்பி, அண்ணன் நகைகளை எடுத்தவுடன் அதை பிடுங்கி கொண்டு அண்ணனை கொல்ல முயற்சிக்க, அந்த முயற்சியில் அவன் இயந்திரத்திற்கு அடியில் மாட்டிக் கொள்ள, அவனை அண்ணன் காப்பாற்றுகிறான். அவனின் நல்ல மனது புரிந்து தம்பி மனம் மாற, எல்லாம் இனிதே முடிவடைக்கிறது.

....


RAGHAVENDRA
24th November 2015, 01:53 PM
என் தம்பி திரைப்படத்தைப் பற்றிய நமது முரளி சாரின் ஆய்வுப் பதிவுகள்...

நாள் 3rd January 2010, 12:29 AM
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=462047&viewfull=1#post462047


என் தம்பி - Part II

நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுதுவதற்கு முன் என் நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம். 1964 முதல் 1974 வரை எந்த சிவாஜி படத்தையும் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். காரணம் உடல் மெலிந்து ஸ்லிம் -மாக இளைமையான சிக்கென்ற நடிகர் திலகத்தை பார்ப்பதற்கே போகலாம் என்பான். ஒரு பிரபல ஒளிப்பதிவாளர் சொன்னதையும் இங்கே சொல்ல வேண்டும். தமிழ் சினிமா நடிகர்களிலேயே காமிரா மூலமாக எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகாக தெரியக் கூடிய ஒரே முகம் நடிகர் திலகத்துடையதுதான் என்றார் அவர். என் தம்பி பார்க்கும் எவரும் இந்த இரண்டு கருத்துகளையும் ஆமோதிப்பார்.

நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அவருக்கு இந்த ரோல் a stroll in the park. அவ்வளவு இலகுவாக கையாண்டிருப்பார். சின்ன விஷயம் என்றாலும் அதை உன்னிப்பாக உள்வாங்கி வெளிப்படுத்தக் கூடியவர் என்பதற்கு இந்த படமும் ஒரு சான்று. முதல் பகுதியில் ஒரு செல்வந்தர் வீட்டு மகன், நடுவில் நாடகக்காரன் பிறகு மாளிகையில் நடிக்க வந்தவன், இறுதியில் உண்மையான கண்ணனாக வெளிப்படுவது இப்படி ஒரே கேரக்டர் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தும்.

தங்கை பாசத்தை வெளிப்படுத்த அவருக்கு சொல்லியா தர வேண்டும்? போலியோ பாதித்த ரோஜாரமணியின் மேல் கொண்ட பாசம் எந்த இடத்திலும் மெலோடிராமாவாக போகாமல் கச்சிதமாக செய்திருப்பார். முத்து நகையே பாடலில் கண்ணழகையும் கையழகையும் முகத்தில் தவழும் ஆனந்த புன்னகையோடு பாடி விட்டு அடுத்த வரியில் காலழகு பார்த்தால் என்று காலைப் பார்த்து விட்டு சட்டென்று புன்னகை மறைந்து கண்ணில் நீர் கட்டி நிற்க [இது ஒரே ஷாட்-ல் வரும்] பார்ப்பது, அந்த கண்ணீர் கன்னத்தில் வழியாமல் தன்னை சமாளித்துக் கொண்டு அடுத்த வரியை பாடுவது என்பது அந்த யுக கலைஞனுக்கு மட்டுமே சாத்தியம். அது போல் படத்தில் இரண்டு டூயட்கள். முதல் பாடலில் [அடியே நேற்று பிறந்தவள்] aristocratic behaviour என்றால் இரண்டாவது பாடலில் [அய்யையா மெல்ல தட்டு] வெஸ்டேர்ன் டான்ஸ் தெரியாத வேஷம் போட வந்த ஒரு நாடக நடிகன் எப்படி தடுமாறுவான் என்பதை அசலாக செய்திருப்பார்.

இந்த படத்தில் ஸ்டைல்-க்கு ஒரு புதிய பாடமே நடத்தியிருப்பார். இரவு வெகு நேரம் கழித்து வரும் தம்பியிடம் விசாரிக்கும் போது White & White போட்டு அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் ஸ்டைல் சூப்பர் [இந்த போஸைதான் மறக்க முடியுமா டி.வி. நிகழ்ச்சியில் உபயோகித்தார்கள்].கந்தப்பா கண்ணனாக மாறி பங்களாவில் நுழையும் காட்சி.வாசலில் வந்து நிற்கும் ஸ்டைல் அதை தொடர்ந்து உள்ளே நடந்து வரும் ஸ்டைல் இவை அனைத்திற்கும் தியேட்டரே அதிரும். வெகு நாட்களுக்கு பின் அவர் கத்தி சண்டை போட்ட படம். இதில் முதலில் கத்தி பிடித்து நிற்பதிலாகட்டும் பின் படிகளில் ஏறிச் சென்று இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டு இரண்டு ஸ்டெப் தாவி தாவி கத்தியை வீசும் போது தியேட்டரே ரகளையாய் இருக்கும்.

தம்பியின் மீது காட்டும் பாசமும் பரிவெல்லாம் அவருக்கு ப்பூ.நாடக நடிகனாக வரும் போது லைவ்லி -யாக செய்திருப்பார். நாடக மேடையின் மீது அவருக்கு இருந்த பக்தி அவரது வசனங்களிலும் உடல் மொழியிலும் வெளிப்படும். [சங்கர தாஸ் சுவாமிகள் சொன்ன வசனங்களெல்லாம் ரத்தத்தில் ஊறியிருக்கு]. அவருக்கு இயல்பாக இருந்த நகைச்சுவை உணர்ச்சிக்கும் இந்த நாடக கலைஞன் ரோல் மிகவும் உதவி செய்தது.

தெற்கத்தி கள்ளனடா பாடலுக்கு அவர் ஆடும் நடனம் unbelievable. தேர்ந்த நடனக் கலைஞரான ராஜசுலோச்சனாவுடன் போட்டி போட்டு ஆடும் அந்த ஆட்டம் ஒரு நாடக கூத்தாடியை கண் முன்னே கொண்டு நிறுத்தும்.

சரோஜாதேவி வருவார், வசனம் பேசுவார், பாடலுக்கு வாய் அசைப்பார். பாலாஜி தம்பி. பொதுவாகவே பாலாஜியின் உடல் மொழியில் தென்படும் திமிர் (இல்லை) மெஜஸ்டிக் லுக், பணக்கார திமிரை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்திற்கு நன்றாக சூட் ஆனது.

நாகேஷ் இந்த படத்தில் முழு நீள ரோல். கந்தப்பாவை கண்ணனாக மாற்றும் போதும் சினிமா பாட்டு பாடியே தன்னைக் கொல்லும் மாமா பெண்ணிடம் சிக்கி தவிக்கும் போதும் ரசனையாக பண்ணியிருப்பார். பர்மா அகதி அப்பா மகளாக வி.கே.ஆர்., மாதவி. எல்.ஆர்.ஈஸ்வரி பின்னணிக் குரலில் மாதவி பாடும் பிரபல பாடல்களின் இரண்டடிகள் எல்லாம் சூழ்நிலைக்கேற்ப அமைக்கப் பட்டிருக்கும். மேஜர், பண்டரிபாய், சுந்தரி பாய், நாகையா போன்ற பாலாஜி படத்தின் ஆஸ்தான நடிகர்கள் எல்லோரும் இதிலும் உண்டு. பக்த பிரகலாதா மூலம் பிரபலமான பேபி ரோஜாரமணி போலியோ தங்கையாக வருவார். [இந்த பேபி குமாரியான போது பாலாஜிதான் அவரது என் மகன் படத்தில் மீண்டும் வாய்ப்புக் கொடுத்தார்].

.....

RAGHAVENDRA
24th November 2015, 01:54 PM
என் தம்பி திரைப்படத்தைப் பற்றிய நமது முரளி சாரின் ஆய்வுப் பதிவுகள்...

நாள் 3rd January 2010, 12:42 AM
http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=462049&viewfull=1#post462049


என் தம்பி - Part III

தங்கை என்ற action பரீட்சை எழுதி பாஸ் செய்த பிறகு நடிகர் திலகத்தை வைத்து அடுத்த ஸ்டெப் எடுத்தார் பாலாஜி. அதுதான் என் தம்பி. மீண்டும் தெலுங்கு படம். ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கில் தயாரித்த படம். [இந்த ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் உரிமையாளர் வி.பி. ராஜேந்திர பிரசாத் அவர்கள்தான் பின்னாளில் நடிகர் திலகத்தை வைத்து எங்கள் தங்க ராஜா, உத்தமன் மற்றும் பட்டாக்கத்தி பைரவன் படங்களை எடுத்தவர். அவரது மகன் ஜெகபதி பாபு இன்று தெலுங்கில் ஹீரோ].

முந்தைய படத்திலிருந்து நாயகியும் வசனகர்த்தாவும் இதில் மாறினார்கள். K.R. விஜயாவிற்கு பதிலாக சரோஜாதேவி. ஆரூர்தாஸிற்கு பதிலாக ஏ.எல்.நாராயணன்.

பாலாஜியின் அபிமான நடிகையாய் இருந்தவர் சரோஜாதேவி. அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பி இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார். புதிய பறவைக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இடைவெளியில் நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்தார் அபிநய சரஸ்வதி. அவரின் கல்யாணத்திற்கு பிறகு அவர் நடிகர் திலகத்தோடு மீண்டும் இணைந்ததும் இந்தப்படத்தில்தான்.

ஆலகாலா என்று பாலாஜியால் அன்போடு அழைக்கப்பட்டவர் ஏ.எல். நாராயணன். வசனம் எழுதுவதில் இவர் வாலி. அதாவது எதுகை மோனை தூக்கலாக இருக்கும். இந்த படத்தில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் அனைத்து பாலாஜி படங்களுக்கும் எழுதினார். 1984 -ல் வெளியான விதி படத்தின் மூலமாக மீண்டும் ஆரூர்தாஸ் பாலாஜி காம்பில் நுழைந்தார்.

படத்தில் சண்டை காட்சிகளே இல்லாமல் ஆனால் படம் முழுக்க ஒரு action மூட் என்று சொல்வோமே, அதை அதுவும் ஒரு குடும்பக் கதையில் ஏ.சி.டி. செவ்வனே நிலை நிறுத்தியிருந்தார். படத்தில் வரும் கத்தி சண்டை, பிறகு இறுதி காட்சியில் இரண்டு மூன்று punches, இவை மட்டுமேதான் இருக்கும். எந்த இடத்திலும் படம் போரடிக்காமல் போகும். கிளைமாக்ஸ் காட்சியில் பரம்பரை நகைகள் ஒரு பாழடைந்த கிணற்றில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அந்த லாஜிக் சறுக்கலை [தெலுங்கு மூலம்] மறந்து விட்டால் படத்தை ரசிக்கலாம்.

கவியரசர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் பாடல்கள் பெரிய ஹிட்.

1. முத்து நகையே - டி.எம்.எஸ் - இரண்டு முறை வரும்.

முதலில் சந்தோஷமாக இறுதியில் சோகமாக. மிகவும் ஹிட்டான பாடல்.

2. அடியே நேற்று பிறந்தவள் நீயே - டி.எம்.எஸ்.- சுசீலா டூயட்.

மெலோடியில் எம்.எஸ்.வி. பின்னியிருப்பார். அதிலும் வாடைக் காற்றில் வெளியில் நின்றால் போர்வை போல தழுவிக் கொண்டு என்ற வரிகள் சுகம்.

3. தெற்கத்தி கள்ளனடா - சீர்காழி பாடும் நாடக மேடை பாடல்.

தென்னாட்டு சிங்கம்டா சிவாஜி கணேசனடா என்ற வரிகளுக்காகவே ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்த்தார்கள், கேட்டார்கள்.

4. அய்யையா மெல்ல தட்டு - டி.எம்.எஸ். சுசீலா டூயட். Western -Folk இரண்டையும் மன்னர் அழகாக மிக்ஸ் செய்திருப்பார்.

வெஸ்டேர்ன் மற்றும் டப்பாங்குத்து இரண்டையும் நடிகர் திலகம் மாறி மாறி ஆடும் போது இங்கே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான்.

5. தட்டட்டும் கை தழுவட்டும் - சுசீலா. சரோஜாதேவியின் கூந்தலில் உள்ள பூவைப் சாட்டையின் மூலமாக பறிக்கச் சொல்லும் பரிட்சையின் போது வரும் பாடல். ஒரு பாஸ்ட் பீட்.

சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் [மிட்லண்ட்,அகஸ்தியா,ராக்ஸி,ராம்] 8 வாரங்களை கடந்து ஓடிய இந்த படம் அதிக பட்சமாக மதுரை சென்ட்ரல் மற்றும் சேலம் சாந்தியில் 12 வாரங்கள் [84 நாட்கள்] ஓடியது. மதுரையிலும் சேலத்திலும் ரிலீஸ் ஆன தியேட்டரிலிருந்து ஷிப்ட் ஆன அரங்குகளில் 100 நாட்களை கடந்தது. வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு எல்லாம் நிறைந்த லாபத்தைக் கொடுத்தது. மறு வெளியீடுகளில் சக்கைப் போடு போட்ட படம் இது.

இதன் பாக்ஸ் ஆபிஸ் பற்றி பேசும்போது ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும். முன்பு மதுரையில் third party ரிலீஸ் என்று ஒன்று இருந்தது. ஒருவர் விநியோகஸ்தராகவோ அரங்க உரிமையாளராகவோ இல்லாவிடினும் படவிநியோகத்தில் பங்கு கொள்ளும் முறை இது. விநியோகஸ்தரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட படத்தின் பிரதியை சில குறிப்பிட்ட நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து ஒரு தியேட்டரில் ரிலீஸ் செய்து வரும் லாபத்தை எடுத்துக் கொள்வது. இதில் சிக்கல் என்னவென்றால் விநியோகஸ்தருக்கு வாடகை, தியேட்டருக்கு வாடகை, கேளிக்கை வரி அதை தவிர போஸ்டர் பேப்பர் விளம்பரம். இந்த செலவுகள் அனைத்தும் போக வசூல் வந்தால் லாபம். இல்லை போனது போனதுதான். இந்த third party distribution எல்லோருக்கும் கொடுக்க மாட்டார்கள். விநியோகஸ்தருக்கு நன்கு தெரிந்த ஆட்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். இனி விஷயத்திற்கு வருகிறேன்.

1982 -ம் ஆண்டு. எனது நண்பனின் அண்ணன் விநியோக துறையில் இருந்தார். அதை வைத்து எங்கள் நண்பர்கள் ஒரு நான்கு பேர் சேர்ந்து இது போல் அவ்வப்போது third party distribution செய்து வந்தார்கள். ஒரு பெரிய படம் செய்ய வேண்டும் என்று ஆசை. சேது பிலிம்ஸ் பெரிய கம்பெனி. அவர்களிடம் சென்று பேசினார்கள். சிவாஜி படம் செய்ய வேண்டும் என்று அவர்கள் எண்ணம். மதுரையில் உள்ள அலங்கார் திரையரங்கு ஒரு வார காலம் ப்ரீ-யாக இருந்தது. இவர்கள் விநியோகஸ்தரிடம் தொகையும் பேசி விட்டார்கள். ஆனால் என்ன படம் என்பது முடிவாகவில்லை. நண்பர்கள் ராஜா வேண்டும் எனக் கேட்கிறார்கள். விநியோகஸ்தரோ அதை தவிர வேறு எந்த படம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று சொல்லி என் தம்பி பற்றி சொல்லுகிறார்.[பாலாஜி படம் எல்லாம் அவர்கள்தான் Distribution. ராஜா எப்போது வெளியிட்டாலும் வசூல் அள்ளும் என்பதால் வெளி ஆட்களுக்கு தர மாட்டேன் என்கிறார்]. மூன்று பேருக்கு என் தம்பி நன்றாக போகும் என்பது எண்ணம். நான்காவது நண்பருக்கு சந்தேகம். ஆகவே தடுத்து விட்டார்.

இவர்கள் வேண்டாம் என்று சொன்னவுடன் வேறு ஒருவர் விநியோகஸ்தரிடம் பேசி படத்தை வாங்கி அதே தேதியில் அதே அலங்கார் தியேட்டரில் ஒரு வாரத்திற்கு வெளியிட்டார். என் தம்பி படம் வெளியான வெள்ளிகிழமை மாட்னி முதல் கடைசி நாளான வியாழன் இரவு காட்சி வரை மொத்தம் 23 காட்சிகளும் ஹவுஸ் புல்.[தினசரி 3,சனி ஞாயிறு 4 காட்சிகள். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள்]. எல்லா செலவுகளும் போக பத்தாயிரத்திற்கு மேல் லாபம். 27 வருடங்களுக்கு முன் மிக பெரிய தொகை இது. நண்பர்களால் வெகு காலத்திற்கு இந்த ஏமாற்றத்தை மறக்க முடியவில்லை. எப்போது மறு வெளியீடு கண்டாலும் வசூலை குவிக்கும் படம் என் தம்பி என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். படத்தை நடிகர் திலகதிற்காகவே பார்க்கலாம்.

அன்புடன்

RAGHAVENDRA
24th November 2015, 01:57 PM
என் தம்பி - முரளி சாரின் பதிவிற்கு சகோதரி சாரதா அவர்களின் பதில் பதிவு.


நாள் - 3rd January 2010, 06:48 PM

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=462153&viewfull=1#post462153

டியர் முரளி,

'என் தம்பி' திரைப்பட திறனாய்வு மிக, மிக அருமை. பலமுறை பார்த்த படமாயினும், உங்கள் எழுத்து வடிவில் பார்த்தபோது புதிய பரிமாணத்தில் பார்க்க முடிந்தது. நடிகர்திலகம் ஸ்டைல் ராஜாங்கம் நடத்திய படங்களில் இதுவும் ஒன்று. ஒரு சின்ன குறை. பாடல்களைப்பற்றி மிகச்சுருக்கமாக முடித்துக் கொண்டீர்கள். இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம்.
'தட்டட்டும் கை தழுவட்டும்
திட்டத்தை வெல்லட்டும்
நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ... ஏனோ... ஏனோ...'
பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்தது. அதிலும் அதில் ஒலிக்கும் படு வேகமான பாங்கோஸ், மன்னரின் முத்திரை.

இந்தப்படத்தில், நாடகத்தில் வரும் 'நான் பொறந்தது தஞ்சாவூரு சூரக்கோட்டையிலே' பாடல் மெட்டும், இதையடுத்து வெளியான தில்லானா'வில் மனோரமாவின் நாடகப்பாடல் மெட்டும் ஒரே மெட்டாக அமைந்தது எப்படி என்பதுதான் ஆச்சரியம். இத்தனைக்கும் வெவ்வேறு இசையமைப்பாளரகள். வெவ்வேறு இயக்குனர்கள்..?.

ரோஜாரமணி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சில ஆண்டுகளுக்கு முன் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அவர் அருகில் அமர்ந்து ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. ஏராளமான நட்சத்திரங்கள் தென்பட்டனர். அப்போது, இருக்கைகளின் எண்களைப்பார்த்து அமர வைத்துக்கொண்டிருந்தவரால் அழைத்து வரப்பட்ட ரோஜாரமணி, எங்கே அமரப்போகிறாரோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது எனது வலப்புற இருக்கையில் வந்து அமர்ந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் (அறிமுகப்படுத்திக்கொள்ள என்ன இருக்கு) , ரொம்ப நாள் பழகியவர் போல பேசத்துவங்கி விட்டார்.

நடிகர்திலகம் பற்றி அதிகம் பேசினார். அவரைப்பற்றிக்குறிப்பிட்டபோதெல்லாம் ஒன்று கண்கலங்கினார், அல்லது உணர்ச்சி வசப்பட்டார். 'ஒரு காலத்தில் நான் இல்லாத சிவாஜி அங்கிள் படமே கிடையாது. அப்படி எல்லாப்படத்திலும் நான் இருந்திருக்கிறேன்' என்றார். அவர் நடித்த பல படங்களைப்பற்றி ஒவ்வொன்ன்றாக நினைவூட்டினேன். ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாகப் பேசினார். 'சிவாஜி அங்கிள் இல்லைங்கிறதை நினைச்சுப் பார்க்கவே முடியலை' என்று கலங்கினார். மேடையில் நிகழ்ச்சி பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தது. இருவருமே அதைப்பற்றி கவலைப்படவில்லை. 'யார் இந்தப்பொம்பளை, ப்ரோக்ராம் பார்க்க விடாமல் இடைஞ்சலாக?' என்று அவர் நினைக்கவில்லை. மிகவும் ஆர்வமாகப்பேசினார். 'ஸாரி, ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனோ?' என்று (சும்மா சம்பிரதாயத்துக்காகக்) கேட்டேன். 'நோ.. நோ.. அதெல்லாமில்லை. நீங்க பேசுங்க' என்றார். எங்கள் உரையாடல் மற்றவர்களுக்கு இடஞ்சலாக இருக்குமோ என்று நினைத்த நேரங்களில், குனிந்து என் காதோடு பேசினாரே தவிர பேச்சை நிறுத்தவில்லை.

எனது பேவரிட் பாடலான 'அன்னமிட்ட கைகளுக்கு' (இரு மலர்கள்) பாட்டைக் குறிப்பிட்டபோது, ஒரு சின்னக்குழந்தையின் குதூகலத்தோடு என் கையைப் பிடித்துக் கொண்டவர், 'ஐயோ, அது எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டுங்க' என்றார் (அச்சமயத்தில் தருணே வளர்ந்த பையனாக இருந்திருப்பான்). நடிகர்திலகத்தின் படம அல்லாது நாங்கள் பேசிய ஒரே வெளிப்படம் 'வயசுப்பொண்ணு' மட்டுமே.

போகும்போது, அவருடைய போன் நம்பரைத் தந்து 'ஒரு நாளைக்கு போன் பண்ணிட்டு வீட்டுக்கு வாங்க' என்றார். என்னால் போக முடியவில்லை. சமயம் வாய்க்காதது ஒருபுறம் என்றால், நாங்கள் சந்தித்தால் பேச வேண்டிவற்றை ஏற்கெனவே பேசிவிட்டோம் என்பது இன்னொரு காரணம். வீட்டுக்கு அழைப்பார் என்று தெரிந்தால், அத்தனை விஷயங்களையும் அரங்கிலேயே பேசியிருக்க மாட்டேன். ரோஜாரமணியை சந்தித்து உரையாடியது என்னால் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று.

முரளி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘Third Party Distribution’ பற்றிய விவரங்கள் ரொம்ப சுவாரஸ்யமாக உள்ளன. இது எப்படி?. சென்னை காஸினோ சந்திலுள்ள 'மீரான் சாகிப் தெரு' விநியோகஸ்தர்கள் போலவா?.

RAGHAVENDRA
24th November 2015, 02:13 PM
என் தம்பி பாடல் காட்சிகள்

முத்து நகையே

https://www.youtube.com/watch?v=ea1tW8G5DvA

அடியே நேற்றுப் பிறந்தவள்

https://www.youtube.com/watch?v=j3sSOuowgdM

ஐயையா மெல்லத் தட்டு

https://www.youtube.com/watch?v=DhLq_BV7jew

தட்டட்டும் கை தழுவட்டும்

https://www.youtube.com/watch?v=BTNvznQYGIA

முத்து நகையே சோகம்

https://www.youtube.com/watch?v=Abx4gUGqAlU

RAGHAVENDRA
24th November 2015, 02:16 PM
என் தம்பி பாடல்களின் விவரங்கள்

1. முத்து நகையே உன்னை நானறிவேன் - டி.எம்.சௌந்தர்ராஜன்
2. அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
3. தெற்கத்திக் கள்ளனடா - சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி
3. ஐயையா மெல்லத் தட்டு - பி.சுசீலா, டி.எம்.சௌந்தர்ராஜன்
4. தட்டட்டும் கை தழுவட்டும் - பி.சுசீலா
5. முத்து நகையே - சோகம் - டி.எம்.சௌந்தர்ராஜன்

RAGHAVENDRA
26th November 2015, 09:05 PM
Sivaji Ganesan Filmography Series

122. Thillana Mohanambal தில்லானா மோகனாம்பாள்

https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12241431_1010690202314985_7663537308520833937_n.jp g?oh=191d1cce5e286752ee7b3b052bf7cc14&oe=56AE062A


தணிக்கை- 10.07.1968
வெளியீடு - 27.07.1968

தயாரிப்பு - ஸ்ரீ விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்

மூலக்கதை - கொத்தமங்கலசம் சுப்பு - கலைமணி


நடிக நடிகையர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, மனோரமா, நடிப்புச் செல்வர் டி.எஸ்.பாலையா, ஏவி.எம்.ராஜன், பாலாஜி, எம்.என்.,நம்பியார், நாகேஷ், கே.ஏ.தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், வி.நாகையா, எஸ்.வி. சகஸ்ரநாம்ம், கே.சாரங்க்பாணி, ஈ.ஆர..சகாதேவன், ஏ.கருணாநிதி, பி.டி.சம்பந்தம், எஸ்.ராமராவ், செந்தாமரை, கள்ளபார்ட் நடராஜன், குண்டு கருப்பையா, டி.என்.சிவதாணு, சந்திரன்பாபு, எஸ்.ஆர். தசரதன், அம்பிகா, சி.கே.சரஸ்வதி, எம்.சரோஜா, உதயசந்திரிகா, எம்.பானுமதி, ஷண்முகசுந்தரி, கல்பலதா, லக்ஷ்மி - நடனம், மற்றும் பலர்.

மேக்கப் - ரங்கசாமி, தனகோடி, மாணிக்கம், கிருஷ்ணராஜ், நாராயணசாமி, திருநாவுக்கரசு, பத்மனாபன், ராமு, தக்ஷிணாமூர்த்தி, சேதுபதி

ஆடை அலங்காரம் - சி.கே.ராஜமாணிக்கம், பி.ராமகிருஷ்ணன், தம்பு
ஸ்டூடியோ - சாரதா லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்

ஸ்டூடியோ நிர்வாகம் - .டி.வி.வைத்தியநாதன்
அரங்க நிர்வாகம் - எம்.எஸ்.ராமசாமி, பி.எஸ்.காளிமுத்த
அரங்க நிர்மாணம் - ஜி.மதுரை, என்.கிருஷ்ணன், கே.வீர்ராகவன்
அரங்க ஓவியம் - ஆர்.முத்து, பி.பரமசிவம்
அரங்க அலங்காரம் - சினி கிராஃப்ட்ஸ், நியோ ஃபிலிமோகிராஃப்ட்ஸ்
மோல்டிங் - எம்.சிதம்பரம், ஆர். ஜெயராமன்
ஸ்டில்ஸ் - முருகப்பன் - எம்.ஆர்.பிரதர்ஸ்,
டிசைன்ஸ் - பக்தா
விளம்பர நிர்வாகம் - மின்னல் - சாந்தி பப்ளிசிட்டீஸ்
விளம்பர அச்சகம் - ஆஸ்பி லித்தோ பிரஸ்
டைட்டில்ஸ் - கே.எஸ்.ஆர்ட்ஸ்
பிரிண்டட் அண்டு பிராஸஸ்டு அட்
ஜெமினி ஸ்டூடியோஸ் கலர் லாபரட்டரி, சென்னை-6.
புரொடக்ஷன் நிர்வாகம் - எஸ்.வி.ராஜகோபால், டி.என்.ராஜகோபால்
நடன அமைப்பு - பி.எஸ்.கோபால கிருஷ்ணன்
பின்னணி பாடியவர்கள் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.சி.கிருஷ்ணன்
நாதசுர இசை - மதுரைச் சகோதரர்கள் எம்.பி.என்.சேதுராமன், எம்.பி.என்.பொன்னுசாமி,
தவுல் - டி.எஸ்.சந்தானம், டி.வி.வெங்கடேசன்

பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்

ஒலிப்பதிவு - டி.சிவானந்தம்
ஒலிப்பதிவு டைரக்டர் - ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி
கலை கங்கா
எடிட்டிங் - ராஜன்-டி.ஆர்.நடராஜன்
அவுட்டோர் யூனிட் - ஸ்ரீ விஜயலக்ஷ்மி போட்டோ சவுண்ட்ஸ், சென்னை-18.
ஆபரேடிவ் காமிராமேன் - பாபு, ஏ.பி.ராமானுஜம்
ஒளிப்பதிவு டைரக்டர் - கே.எஸ்.பிரசாத்
சங்கீதம் - திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்
உதவி டைரக்ஷன் - எஸ்.ஆர். தசரதன், எம்.கருப்பையா, தஞ்சைமதி
தயாரிப்பு நிர்வாகம் - சி.பரமசிவம் - முருகு.
நிர்வாகம் - கே.என்.வைத்தினாதன்
அஸோஸியேட் டைரக்டர் - கே.கே.ஸம்பத்குமார்
திரைக்கதை, வசனம், டைரக்ஷன் - ஏ.பி.நாகராஜன்

RAGHAVENDRA
26th November 2015, 09:06 PM
1968ம் ஆண்டிற்கான 16வது தேசிய விருதுகளில், சிறந்த மாநில மொழிப் படமாகத் தேர்வு செய்யப்பட்டு, தயாரிப்பாளருக்கு ரூ.5.000 ரொக்கப்பரிசும், இயக்குநருக்குப் பதக்கமும் பெற்றுத் தந்தது.

http://iffi.nic.in/Dff2011/16th_nff/16th_nff_1970_img_22.jpg

http://iffi.nic.in/Dff2011/16th_nff/16th_nff_1970_img_2.jpg

மேலும் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது கே.எஸ்.பிரசாத் அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.

http://iffi.nic.in/Dff2011/16th_nff/16th_nff_1970_img_41.jpg

RAGHAVENDRA
26th November 2015, 09:09 PM
தில்லானா மோகனாம்பாள் விளம்பர நிழற்படம் மற்றும் பத்திரிகை விமர்சன நிழற்படங்கள் ... நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/thillanabommaiad.jpg

தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பற்றி 11.08.1968 தேதியிட்ட கல்கி வார இதழில் வெளிவந்த விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thillanakalkireview01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thillanakalkireview02fw.jpg

RAGHAVENDRA
26th November 2015, 09:19 PM
தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பற்றிய பேசும் படம் பத்திரிகையின் கணிப்பு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thillanapesumpadamcoveragefw-1.jpg


... நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து...

RAGHAVENDRA
26th November 2015, 09:22 PM
கணேசர்களும் நாதஸ்வரங்களும் - பேசும் படம் கட்டுரை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thillanapesumpadamnewsfw.jpg

... நடிகர் திலகம் இணையதளத்திலிருந்து...

RAGHAVENDRA
26th November 2015, 09:23 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thillanapesumpadamQA.jpg

RAGHAVENDRA
26th November 2015, 09:42 PM
ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷங்கள்..



WORLD CINEMA's BLOCKBUSTER

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.8.1968

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4120a.jpg

ஆறாவது வாரம் [NSC Areas] : தினத்தந்தி : 31.8.1968


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4122a.jpg

75வது நாள் : தினத்தந்தி : 9.10.1968


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4123a.jpg

100வது நாள் : தினத்தந்தி : 3.11.1968

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/MAGAZINE_0003.jpg

பேசும்படம் ஆகஸ்ட் 1968 அட்டைப்பட விளம்பரம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/TM1.jpg

RAGHAVENDRA
26th November 2015, 09:49 PM
ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷங்கள்..தொடர்ச்சி...


காவியக் காட்சிகள்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4124a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4160a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4129a.jpg


குமுதம் ஜங்ஷன் 13.5.2003


அட்டைப்படம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4169a.jpg

கவர் ஸ்டோரி

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4136a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4137a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4138a.jpg

இரு அபூர்வ க்ளிக்ஸ்

'நாதஸ்வர சக்கரவர்த்தி'யாக நடிகர் திலகம், ஏ.பி.என்.

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/TM2.jpg

சிக்கலார் பார்ட்டி

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/TM3.jpg

RAGHAVENDRA
26th November 2015, 09:52 PM
தில்லானா மோகனாம்பாள் - காணொளிகள்

நலம்தானா

https://www.youtube.com/watch?v=Du-jHKRvLLg

RAGHAVENDRA
26th November 2015, 09:53 PM
நாதஸ்வரம் - 1

https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw

RAGHAVENDRA
26th November 2015, 09:53 PM
நாதஸ்வரம் - 2

https://www.youtube.com/watch?v=lStfK_y034k

RAGHAVENDRA
26th November 2015, 09:54 PM
மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன

https://www.youtube.com/watch?v=gjSKFZlzjEk

RAGHAVENDRA
26th November 2015, 09:55 PM
பாண்டியன் நானிருக்க

https://www.youtube.com/watch?v=YDUzDwY2Bs0

RAGHAVENDRA
26th November 2015, 09:56 PM
லூயி மல்லேவின் குறும்படம்...

https://www.youtube.com/watch?v=qrDBrcLpQQc

RAGHAVENDRA
26th November 2015, 09:56 PM
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே

https://www.youtube.com/watch?v=XAATvR7kXWk

RAGHAVENDRA
26th November 2015, 09:57 PM
ரயில் வண்டிக் காட்சி

https://www.youtube.com/watch?v=3YmfXL5zIg8

RAGHAVENDRA
26th November 2015, 09:57 PM
நடிகர் திலகம் மனோரமா காட்சி

https://www.youtube.com/watch?v=Wm1Lo09HRYY

RAGHAVENDRA
26th November 2015, 10:01 PM
ஆவணத்திலகம் பம்மலாரின் கேள்வி பதில் தொகுதியிலிருந்து...

மீள்பதிவு...



கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 204

கே: "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் சிவாஜி கணேசனா நாதஸ்வரம் வாசிக்கிறார்? (எம்.ஆர்.பிரேமா-வசந்தா, சென்னை- 7)

ப: இப்படிச் சந்தேகமேற்படச் செய்வதால்தான் அவரை நடிகர் திலகம் என்கிறோம் !

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1968)

அன்புடன்,
பம்மலார்.

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=715936&viewfull=1#post715936

RAGHAVENDRA
26th November 2015, 10:03 PM
ஆவணத்திலகம் பம்மலாரின் கேள்வி பதில் தொகுதியிலிருந்து...

மீள்பதிவு...



கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 205...


கே: "தில்லானா மோகனாம்பாள்" வெள்ளிவிழாக் கொண்டாடுமா? (பி.சாந்தகுமாரி, அண்ணாமலை நகர்)

ப: பிறகு வந்த படங்களைப் பார்க்கும்போது, கதை, பாடல், இசை, நடிப்பு போன்ற எல்லா அம்சங்களும் நிறைந்த அந்தப்படம் ஏன் பொன்விழாக் கொண்டாடக் கூடாது என்றே நான் கேட்க விரும்புகிறேன்.

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1968)

அன்புடன்,
பம்மலார்.

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=715937&viewfull=1#post715937

RAGHAVENDRA
26th November 2015, 10:06 PM
தில்லானா மோகனாம்பாள் ... நிழற்பட அணிவகுப்பு...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANANT_zpsyfawfgmx.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:07 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANApadmini_zps4nyxkiuz.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:08 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANATSB_zpsactsutgu.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:09 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANAAVMR_zpseg9h34kn.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:09 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANANAGESH_zpsxgcv2cn1.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:10 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANAMANORAMA_zps1j55gbek.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:11 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANANAGAIAH_zpsmatzuizf.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:11 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANABALAJI_zpsccbyvmei.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:12 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANAMNN_zpsbxinheq8.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:13 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANAKAT_zpsfdigz8sr.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:13 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANAMSAROJA_zpsg0wtapyi.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:14 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANAKSP_zps1wvkmhvl.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:15 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANAMBANUMATHY_zpshuqpcrfx.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:15 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANACKS_zpsrfw6xqli.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:16 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANAAMBIKA_zpstxhgqhla.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:16 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANAERS_zpspjdjhzpa.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANASRAMARAO_zpsb0uysrsp.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANAAKPDS_zps9pkaw1id.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/THILLANA/THILLANACB_zpsxdcufahh.jpg

RAGHAVENDRA
26th November 2015, 10:20 PM
தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பற்றிய திறனாய்வுகள், விமர்சனங்கள், ஏராளமாக, அவ்வப்போது நம் திரிகளில் விவாதிக்கப்பட்டு வருவதால் அவை இங்கே இடம் பெறவில்லை. என்றாலும் இத்திரைக்காவியத்தைப்பற்றி ஏற்கெனவே நம்முடைய மய்யத்தில் கருத்துரைகளைப் பகிர்ந்து கொண்டுள்ள நண்பர்கள் அவற்றை இங்கே மீள்பதிவு செய்யக் கோருகிறேன். இதுவரை எழுதாதவர்கள் அல்லது புதிய தலைமுறை ரசிகர்கள், தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

RAGHAVENDRA
30th November 2015, 12:02 AM
Sivaji Ganesan Filmography Series

123. ENGA OOR RAJA எங்க ஊர் ராஜா

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/EORCollage_zpsmyyfpgre.jpg

தணிக்கை - 17.10.1968
வெளியீடு - 21.10.1968

தயாரிப்பு - அருண் பிரசாத் மூவீஸ்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கௌரவ நடிகை சௌகார் ஜானகி, எம்.என்.நம்பியார், நாகேஷ், மனோரமா, வசந்தா, கனகதுர்க்கா, மற்றும் பலர்.

கதை வசனம் - பாலமுருகன்
பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
ஒலிப்பதிவு டைரக்டர் - ஒலிப்பதிவு மேதை டி.எஸ். ரங்கசாமி
ஒலிப்பதிவு - டி.ஆர். சாரங்கன்
கலை - பி.நாகராஜன்
நடனம் - பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்
சண்டைப் பயிற்சி - திருவாரூர் எம்.எஸ்.தாஸ்
உடைகள் - பி.ராமகிருஷ்ணன்
ஒப்பனை - எம்.ரங்கசாமி, எம்.கோபால், எம்.ராமசாமி, எம்.மாணிக்கம்
ஸ்டூடியோ - சாரதா - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்
ஸோல் புரொப்ரைட்டர் - ஏ.எல்.ஸ்ரீநிவாசன்

Recorded on RCA Sound System

ஸ்டூடியோ பிரதம நிர்வாகம் - டி.வி.வைத்தியநாதன்

ப்ராஸ்ஸிங் - டி.ராமசாமி - ஏவி.எம்.ஃபிலிம் லாபரட்டரி, சென்னை-26.

செட் ப்ராபர்டீஸ் - நியோ ஃபிலிமோ கிராஃப்ட்ஸ்
அவுட்டோர் யூனிட் - மூவி சர்வீஸ், ஏ.பி.ஆர். யூனிட்

விளம்பரம் - எலிகண்ட் பப்ளிசிடீஸ்
விளம்பர டிசைன்கள் - சீநி சோமு

ஸ்டில்ஸ் - சிம்மையா -ஆனந்த்

தயாரிப்பு நிர்வாகம் - கே. தங்கமுத்து

ஒளிப்பதிவு - ஏ.சோமசுந்தரம்

எடிட்டிங் - ஆர்.தேவராஜன்

ஒளிப்பதிவு டைரக்டர் - பி.என். சுந்தரம்

இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

அஸோஸியேட் டைரக்டர் - எஸ்.தேவராஜன்

உதவி டைரக்டர் - யூ.மோஹன்

தயாரிப்பு டைரக்ஷன் - பி.மாதவன், பி.ஏ.

RAGHAVENDRA
30th November 2015, 12:03 AM
பொம்மை மாத இதழில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம் .. நடிகர் திலகம் இணைய தளத்திலிருந்து...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/EORBommaiAdFW_zpsaduvadug.jpg

RAGHAVENDRA
30th November 2015, 12:06 AM
ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...


கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

...


பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்[/'



http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4837-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4836-1.jpg

RAGHAVENDRA
30th November 2015, 12:07 AM
எங்க ஊர் ராஜா டைட்டில் இசை

https://www.mediafire.com/?3iabmgzolx4jcgs

RAGHAVENDRA
30th November 2015, 12:08 AM
பாடல் காட்சி காணொளி

யாரை நம்பி நான் பொறந்தேன்

https://www.youtube.com/watch?v=ZvXxGrgqWY4

RAGHAVENDRA
30th November 2015, 12:09 AM
பாடல் காட்சி காணொளி

என்னடி பாப்பா சௌக்கியமா

https://www.youtube.com/watch?v=JuP8eusOzsA

RAGHAVENDRA
30th November 2015, 12:10 AM
பாடல் காட்சி காணொளி

அத்தைக்கு மீசை வெச்சிப் பாருங்கடி

https://www.youtube.com/watch?v=Mq5HUJSAOx8

RAGHAVENDRA
30th November 2015, 12:11 AM
பாடல் காட்சி காணொளி

பரமேஸ்வரி ராஜேஸ்வரி

https://www.youtube.com/watch?v=YN_bt0WuODE

RAGHAVENDRA
30th November 2015, 12:11 AM
பாடல் காட்சி காணொளி

ஏழு கடல் சீமை

https://www.youtube.com/watch?v=p36pPEucSyo

RAGHAVENDRA
30th November 2015, 12:18 AM
எங்க ஊர் ராஜா திரைப்படம் தெலுங்கில் தர்ம தாதா என்ற பெயரில் 1970ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு வெளியானது.. நாகேஸ்வர ராவ், காஞ்சனா, நாகபூஷணம், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர். சில காட்சிகள் கலரில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு சலபதி ராவ் இசையமைத்திருக்க, ஏ.சஞ்சீவ ராவ் இயக்கியிருந்தார்.

https://upload.wikimedia.org/wikipedia/en/d/d9/Dharmadata.jpg

இப்படத்தின் காணொளிகள் சில

எவ்வடிகோஸம் எவடுன்னாடு - யாரை நம்பி நான் பொறந்தேன்..

https://www.youtube.com/watch?v=SbWsFshce4c

ஜோ லாலி.. தாலாட்டுப் பாடல்.. தமிழில் இல்லை..

https://www.youtube.com/watch?v=mzyWgDjm_EE

ஓ நான நீ மனசே - ஏழு கடல் சீமை ..

https://www.youtube.com/watch?v=_c2nbQxfvVw

பரமேஸ்வரி ராஜேஸ்வரி - கலரில்

https://www.youtube.com/watch?v=lrBf9CNSAkI

சின்னாரி புல்லெம்மா - என்னடி பாாப்பா

https://www.youtube.com/watch?v=gStNFFD36EI

ஹலோ இன்ஜினீயர் ... அத்தைக்கு மீசை வெச்சிப் பாருங்கடி..

https://www.youtube.com/watch?v=yFaVkOP95Bo

RAGHAVENDRA
1st December 2015, 08:07 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xla1/v/t1.0-9/12308242_1012837205433618_3983450498272717075_n.jp g?oh=1dd7c8a495d3cc33344983e631d22a3c&oe=56DF5114

RAGHAVENDRA
4th December 2015, 09:40 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpl1/v/t1.0-9/12308811_1014448565272482_134831029987057357_n.jpg ?oh=d2b918cb2bc4640763cd1b791a01c8b4&oe=56E70534&__gda__=1457583288_d92d04e0d7924cf77aa3fcdcbf25a18 8

First time on internet. Enga Oor Raja original Song Book Cover. The unique design made waves at the time of release of the film. The sliding of the wrapper on front produced two images and the book was a craze then.

Sharing for the benefit of new generation to know how much pains did a producer and the unit of the film took to take the film to the masses.

RAGHAVENDRA
4th December 2015, 10:54 PM
LakshmiKalyanam

124. Lakshmi Kalyanam லக்ஷ்மி கல்யாணம்

https://i.ytimg.com/vi/J7gsIvcbSM0/maxresdefault.jpg

http://i.ytimg.com/vi/YbTYvxy44bI/maxresdefault.jpg


தணிக்கை - 08.11.1968
வெளியீடு - 15.11.1968

தயாரிப்பு - கிருஷ்ணாலயா / ஏஎல். ஸ்ரீநிவாசன் -ஏஎல்.எஸ்.புரொடக்ஷன்ஸ்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, எம்.என்.நம்பியார், சோ, வி.கே.ராமசாமி, ஏ.கருணாநிதி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.ராமதாஸ், கே.பாலாஜி, பி.டி.சம்பந்தம், வி.எஸ்.ராகவன், எஸ்.ராமராவ், வி.கோபாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், நிர்மலா, சி.கே.சரஸ்வதி, எஸ்.என்.லக்ஷ்மி, சண்முகசுந்தரி மற்றும் பலர்.

பின்னணி பாடியவர்கள்
டி.எம்,சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

ஸ்டூடியோ - சாரதா - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்

Recorded on RCA Sound System

ஒலிப்பதிவு - சிவானந்தம்

ஆடை அலங்காரம் - பி.ராமகிருஷ்ணன், நஹீம், வி.கெங்காதரன்

நிர்வாகம் - ஆர். கிருஷ்ணமூர்த்தி

மேக்கப் - ரங்கசாமி, கிருஷ்ணராஜ், ராமு, நாராயணசாமி, பெரியசாமி, திருநாவுக்கரசு, செல்வராஜ்.

ஸ்டில்ஸ் - முருகப்பன் (M.R.Bros.)

விளம்பரம் - ஜி.ஹெச். ராவ்

அரங்க அலங்காரம் - சினி கிராஃப்ட்ஸ்

நடன அமைப்பு - லெக்ஷ்மி நாராயணன்

ஸ்டண்ட் - சாமிநாதன், வெங்கடேசன்

ப்ராஸஸிங் - ஏ.தியாகராஜன் - ஸ்ரீநிவாசா லேபரேட்டரீஸ், சென்னை-26.

புரொடக்ஷன் மானேஜர் - எம்.சி.கே.தாஸன்

தயாரிப்பு நிர்வாகம் - எஸ்.வீரய்யா

கலை - எம்.அழகப்பன்

உதவி டைரக்ஷன் - கே.ஆர். முருகானந்தம், வி.எஸ்.முருகேசன்

கதை வசனம் பாடல்கள் உதவி - பஞ்சு அருணாசலம், பி.வி.மக்களன்பன்

ஒளிப்பதிவு டைரக்ஷன் - ஜி.ஆர். நாதன்

ஆபரேடிவ் கேமிராமேன் - ஏ.நடராஜ்

எடிட்டிங் - பி. பக்தவத்சலம்

ஒலிப்பதிவு டைரக்டர் - ஒலிப்பதிவு மேதை - டி.எஸ்.ரங்கசாமி

இசையமைப்பு - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

கதை வசனம் பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
துணை வசனம் - ஏஎல். நாராயணன்

ஒளிப்பதிவு அண்ட் டைரக்ஷன் - ஜி.ஆர். நாதன்

RAGHAVENDRA
4th December 2015, 10:55 PM
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..




முதல் வெளியீட்டு விளம்பரம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5131-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : டிசம்பர் 1968

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5026-1.jpg

RAGHAVENDRA
4th December 2015, 10:56 PM
பதிவுத்திலகம் வாசு சாரின் நிழற்படத் தொகுப்பிலிருந்து...

வாசு சாரின் பதிவிற்கான இணைப்பு -http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=767781&viewfull=1#post767781



http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ01DAT_003312240.jpg?t=1321330698

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ01DAT_001525360-1.jpg?t=1321331464

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ01DAT_001522040-1.jpg?t=1321331365

http://3.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TGwkvmMe98I/AAAAAAAAB-M/uSdH1c4fiZk/s1600/Lakshmi+Kalyanam_YaarandaManithan_tamilhitsongs.bl ogspot.com.VOB_thumbs_%5B2010.08.18_23.51.24%5D.jp g

RAGHAVENDRA
4th December 2015, 10:57 PM
லக்ஷ்மி கல்யாணம் - பாடல்களின் விவரங்கள்

1. ராமன் எத்தனை ராமனடி - பி.சுசீலா
2. பிருந்தாவனத்துக்கு வருகின்றேன் - பி.சுசீலா
3. யாரடா மனிதன் அங்கே - டி.எம்.,சௌந்தர்ராஜன்
4. போட்டாளே உன்னையும் ஒருத்தி - டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி
5. தங்கத் தேரோடும் வீதியிலே - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
6. வெட்ட வெளிப்பொட்டலிலே பட்ட மரம் ஒன்று - டி.எம்.,சௌந்தர்ராஜன்

RAGHAVENDRA
4th December 2015, 11:00 PM
பாடல் காட்சிகள்

தங்கத் தேரோடும் வீதியிலே

https://www.youtube.com/watch?v=oaM_xKSMHlg

ராமன் எத்தனை ராமனடி

https://www.youtube.com/watch?v=JMgbBfBTb6Q

யாரடா மனிதன் அங்கே

https://www.youtube.com/watch?v=Di6a4VogInA

பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்

https://www.youtube.com/watch?v=3OlXR8QkWnU

வெட்ட வெளிப்ப1ட்டலிலே

https://www.youtube.com/watch?v=YexKxLPSR28

போட்டாளே உன்ன1யும்

https://www.youtube.com/watch?v=UjrV08eC6XQ

RAGHAVENDRA
9th December 2015, 12:01 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/125NEXTFW_zpstcryr1lq.jpg

நடிகர் திலகத்தின் 125வது வெற்றித் திரைக்காவியம் ... அடுத்து ...

RAGHAVENDRA
11th December 2015, 09:13 AM
Sivaji Ganesan Filmography Series

125. UyarndhaManidhan உயர்ந்த மனிதன்

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12366395_1017112751672730_5813238557431249078_n.jp g?oh=a22a93df2d13da47f6b6a70ff3d6c82e&oe=56DC7B65

தணிக்கை -25.11.1968
வெளியீடு - 29.11.1968
தயாரிப்பு - ஏவி.எம்.ப்ரொடக்ஷன்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, எஸ்.ஏ.அசோகன், சுந்தர்ராஜன், வாணிஸ்ரீ, பாரதி, மனோரமா, ஜி.சகுந்தலா, சீதாலட்சுமி, எஸ்.என்.பார்வதி, கே.ஆர்.தேவகி, சிவகுமார், வி.கே.ராமசாமி, வி.நாகையா, எஸ்.வி.ராம்தாஸ், வி.எஸ்.ராகவன், நம்பிராஜன், வசந்தகுமார், பூர்ணம் விஸ்வநாதன், டைப்பிஸ்ட் கோப் மற்றும் பலர்.

திரைக்கதை வசனம் - ஜாவர் என். சீதாராமன்

பாடல்கள் - வாலி

பின்னணி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா

ஒலிப்பதிவு - பாடல்கள் - ஜே.ஜே.மாணிக்கம், வசனம் - சி.டி.விஸ்வநாதன்

Recorded on RCA Sound System

ஒளிப்பதிவு டைரக்டர் - பி.என். சுந்தரம்
ஒளிப்பதிவு - ஏ. சோமசுந்தரம்

கலை - ஏ.கே. சேகர்

நடன அமைப்பு - ஏ.கே. சோப்ரா, ராமு

எடிட்டிங் - எஸ். பஞ்சாபி, ஓ. நரசிம்மன்

ப்ராஸஸிங் - சர்தூல் சிங் சேத்தி, டி.ராமசாமி - ஏவி.எம். ஃபிலிம் லேபரட்டரி, சென்னை-26.

மேக்கப் - டி.எம். ராமச்சந்திரன், எம். ரங்கசாமி

செட்டிங்ஸ் - வி.நாகன் ஆசாரி

உடைகள் - பி.ராமகிருஷ்ணன், கே.ஏ. காதர்

ஸ்டில்ஸ் - ஆர்.பி. ராஜமாணிக்கம்

செட் அலங்கார உதவி - பி.எல்.ஷண்முகம்

புரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் - ஆர். ரெங்கஸ்வாமி

புரொடக்ஷன் மானேஜர் - சி. மோகன்

உதவி டைரக்டர்கள் - எஸ்.எல்.நாராயணன், ஆர்.பட்டாபிராமன், வி.எஸ்.ஷண்முகம்

இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

ஸ்டூடியோ - ஏவி.எம்.ஸ்டூடியோஸ், சென்னை - 26

தயாரிப்பு - எம்.முருகன், எம்.குமரன், எம்.சரவணன்

இயக்குநர் - கிருஷ்ணன்-பஞ்சு

RAGHAVENDRA
11th December 2015, 09:15 AM
உயர்ந்த மனிதன் விளம்பர நிழற்படங்கள் - ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..




முதல் வெளியீட்டு விளம்பரம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UMAd1-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : டிசம்பர் 1968

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UMAd2-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 20.12.1968


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UMAd3-1.jpg

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 8.3.1969


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/UM-1.jpg

RAGHAVENDRA
11th December 2015, 09:20 AM
பதிவுத் திலகம் வாசு சாரின் பொக்கிஷத்திலிருந்து



http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/uyarntha-manithan-dvd.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um4.png?t=1322535295
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um5.png?t=1322535397
http://i40.photobucket.com/albums/e231/vincidaleo/um/5.jpg
http://i40.photobucket.com/albums/e231/vincidaleo/um/2.jpg
http://i40.photobucket.com/albums/e231/vincidaleo/um/3.jpg
http://i40.photobucket.com/albums/e231/vincidaleo/um/6.jpg
http://i40.photobucket.com/albums/e231/vincidaleo/um/4.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um8.png?t=1322535545
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/um2.jpg

RAGHAVENDRA
11th December 2015, 09:20 AM
பதிவுத் திலகம் வாசு சாரின் பொக்கிஷத்திலிருந்து .... தொடர்ச்சி...




http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-184107.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-184175.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-184467.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-185638.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-187075.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_001392892.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_001595562.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_001600600.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_003329362.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/UyarnthaManithan-Uyirvanicomavi_003363930.jpg

RAGHAVENDRA
11th December 2015, 09:31 AM
உயர்ந்த மனிதன் - சிறப்புச் செய்திகள்


1. நடிகர் திலகத்தின் 125வது படம் என்கிற பெருமையைப் பெற்ற திரைக்காவியம்.
2. 125வது பட விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு எங்கிருந்தாலும் வாழ்க என நடிகர் திலகத்தை வாழ்த்தியதும், இந்நிகழ்ச்சியே முதலமைச்சர் என்கிற முறையில் அவர் மேடையேறிப் பேசிய கடைசி நிகழ்ச்சி என்பதும் வரலாற்றில் இடம் பெற்று விட்டது. இந்நிகழ்ச்சியில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவாண் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
3. தன்னைத் தரக்குறைவாக மேடைகளில் பேசிய எஸ்.ஏ.அசோகனையும் இப்படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வைத்து தன் சொந்த விருப்பு வெறுப்புகளைத் தன் தொழிலில் கொண்டு வராமல் உயர்ந்த மனிதன் என்கிற சொல்லுக்கு உயிர் கொடுத்த உத்தம புருஷர் நடிகர் திலகம் என்பதை நிரூபித்த படம்.
4. கடைசி நேரத்தில் ஒரு பாடலை சேர்க்க தீர்மானித்து, பாடலைப் பதிவு செய்து, நேரமின்மை காரணத்தால் கொடைக்கானல் சென்று படமாக்க முடியாமல், ஸ்டூடியோவிலேயே செட் அமைத்து படமாக்கப்பட்ட பாடல், தேசீய விருது அளவிற்கு மிகச் சிறந்த பாடலாகவும் அமைந்த சிறப்புக்குரிய பாடல், நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா.
5. நடிகர் திலகம் வாணிஸ்ரீ முதன்முறையாக இணைந்த படம்.
6. தேசிய திரைப்பட விருதுகளில் முதன் முறையாக பின்னணிப் பாடகர், பாடகியருக்கான விருது அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் விருதினையே இசையரசி பி.சுசீலா அவர்கள், உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் அவர் பாடிய நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா பாடலுக்காகப் பெற்றது சிறப்புக்குரியதாகும்.
http://iffi.nic.in/Dff2011/16th_nff/16th_nff_1970_img_3.jpg
தேசிய திரைப்பட விருதுகளுக்கான இணையப் பக்கத்திற்கான இணைப்பு - http://iffi.nic.in/Dff2011/Frm16thNFAAward.aspx

RAGHAVENDRA
11th December 2015, 09:43 AM
உயரந்த மனிதன் - கோபால் சாரின் சிறப்புரை



உயர்ந்த மனிதன்- 1968 தெய்வத்தின் 125 ஆவது சித்திரம்.

சிலருக்கு மட்டும் வாழ்க்கை வச படுவதில்லை. ஆணாக(பணக்கார??) பிறந்தாலும் ,பலன் பூரணமாய் அனுபவிக்க படுவதில்லை.சூழ்நிலை கைதி -அதுவும் ராஜலிங்கம் போல் எல்லோருக்கும் நல்லவனாக வாழ விரும்பும் உயர்ந்த மனிதனுக்கு....

எல்லோருக்கும் எதிர்காலம் குறித்து குழப்பம் உண்டு.நிகழ் காலம் குறித்து அதிருப்தி உண்டு. ஆனால் ராஜுவுக்கோ எதிர்காலம் சூன்யம்.நிகழ்காலம் தண்டனை.கடந்த காலமோ குழப்பம். அவன் அறிவு,விருப்பம் எதுவும் பயன் படாமல் அவன் நாட்கள்.... பாரம்பரியம்,கெளரவம்,மனசாட்சி எல்லாவற்றையும் கேள்வி குறியாக்கி கேலி செய்கிறது.அவன் சுதந்திரம் பெற்ற மனிதனாக வாழவே இல்லை.

பார் மகளே பார் படத்தில் NT கதாபாத்திரம்தான் உயர்ந்த மனிதனில் NT தந்தை பாத்திரம் -சங்கரலிங்கம்.தன் அந்தஸ்துக்கு குறைந்த எதுவுமே துச்சம்.அடுத்தவர் சுதந்திரத்தை பிடுங்கி (மகன் ஆனாலும்) அடிமை படுத்தும் சுயநல மூர்க்கன்.எல்லாவற்றையும் வாய் மூடி மௌனியாய் சகித்து வாழும் ராஜு தான் விரும்பிய ஏழை பெண்ணை மணந்து சில காலம் வாழ்கிறான். ஆனால் கண்ணெதிரே தந்தையால் அவள் எரிக்க பட்டு, ஒரே மாதத்துக்குள் மருமணம் புரிய நிர்பந்திக்க பட்டு, ஒட்டாமல் அமைதி வாழ்க்கை வாழும் அவன் வாழ்க்கையில், சத்யா என்ற அநாதை ஒருவன் வேலையாளாய் நுழைந்து ,அன்பிற்கு பாத்திரமாகி,சோதனை கடந்து ,இறுதியில் சத்யா தன் மகனே என்ற உண்மை தெரிந்து சுபம்.

உருவம்,உள்ளடக்கம் எதிலும் சோதனை முயற்சி செய்யாமல் , சில பாத்திர வார்ப்புகள்,சில பாத்திர திரிபுகள், நேர்மையான ஆற்றோட்டமாய் திரைகதை. அற்புதமான வசனங்கள். மிக மிக நேர்த்தியான நடிப்பு, இவற்றை வைத்து அற்புதமான படத்தை கொடுத்தனர் கிருஷ்ணன்-பஞ்சு,மற்றும் ஏ.வீ.எம்.(உபயம்-உதர் புருஷ்-பெங்காலி)

காட்டாற்று வெள்ளமாய் ஓடிய சிவாஜியின் 68 ஆம் வருடத்திய நடிப்பில் அணை போட்டு வரம்பில் நிறுத்திய இரு படங்கள் தில்லானாவும்,உயர்ந்த மனிதனும்தான். இதில் அவர் பங்கு தில்லானாவை விட காம்ப்ளெக்ஸ் ஆனது. அவர் விரும்பாத பாத்திரம்.(விரும்பியது டாக்டர் பாத்திரம்).வேறு எந்த படத்திலாவது அவர் பாத்திரம் படத்திலேயே இந்த அளவு சுய விமரிசனத்திற்கும் ,பிறர்(முக்கியமாய் நெருங்கிய நண்பன்) விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்குமா என்பது சந்தேகம்.
கோழை,சில உயர்ந்த மனிதர்கள்,சூன்யமாய் பொய் வாழ்க்கை, சுமைதாங்கி,தியாகி,தனது சுய துக்கம் சுகம் நினையாத பொதிமாடு,என்று சுயமாகவும்,
கோழை,சுயநலக்காரன்,அப்பனை சமாளிக்க முடியாதவன்,தன்னை நம்பியவர்களை காப்பாற்ற முடியாதவன்,என்று டாக்டரும்,
ஜென்டில்மன்,பொய்யன்,காட்டுமிராண்டி என்று மனைவியும்,
உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்று சுந்தரம் மகள் கவுரியாலும்
விமரிசிக்க படும் இந்த ராஜு யார்?

சுருக்கமாக சொன்னால் ,தன சுயத்தை இழந்து வாழ்பவன். அதனால்,பிறரால்,அவரவர் சௌகரியத்திற்கு விமரிசிக்க படுபவன். இப்போது புரிந்திற்குமே சிங்கத்திற்கு சற்றே தீனி கிடைத்திருக்கும் என்று?

உ.ம வை வித்தியாசமான படமாக்குவது டாக்டர் பாத்திரம். நண்பன் என்றாலே,பின்னால் விரோதியாக போகும் இந்நாள் alter -ego என்ற சம்பிரதாயத்தை முறியடித்து, ஒரு தாட்சண்யம் இல்லாத மனசாட்சி,இங்கிதமற்ற இரக்கமற்ற உறுத்தி கொண்டே இருக்கும் அனுகூல சத்ரு, சங்கீதத்தில் கவுன்ட்டர்-பாயிண்ட் என்று சொல்லும் படியான அபஸ்வர இசைவு . தனக்கு சொந்தமில்லாத பொருளை ,விட்டு கொடுத்து விட்ட பாவனையில்,தானும் அந்த அசம்பாவித சம்பவத்தில் கூட இருந்தும் தன்னாலும் தான் ஆசை பட்டவளை காப்பாற்ற முடியாத உண்மையை வசதியாக மறந்து,கல்யாணமும் செய்து கொள்ளாமல் எல்லா சந்தர்பங்களிலும் ராஜுவை இடித்து கொண்டே இருக்கும் ஒரு பாத்திரம்.ஆனால் மக்களின் மனதில் ராஜுவை விட அதிக இடம் பிடிக்கும் வாய்ப்பு. ராஜு அபார சுய இரக்கம்,சுய வெறுப்புக்கு ஆளாகி ஒருவித துறவு நிலை குற்ற உணர்வுடன் இந்த சித்ரவதை நண்பனை விரும்பி ஏற்கும் மேசொகிஸ்ட்(Masochist) ஆன மனநிலையை வெளிபடுத்துவான் நட்பின் உயர்வை காட்ட ஒரு காட்சியும் வலிந்து இருக்காது.

இதன் protoganist ஆக வந்த நடிப்பு கடவுளின் படம் நெடுக மிளிரும் நடிப்பை விவரிக்க இந்த பகுதி சமர்ப்பணம்.
இந்த படத்தின் அழகே,அவர் வசனம் பேசும் காட்சிகளை விட reaction காட்டும் காட்சிகள் அதிகம். சிவாஜியின் மேதைமை ஜொலிக்கும்.

முதல் காட்சியிலேயே அந்தந்த பத்திர வார்ப்புகள் சித்திரிக்க படும்.நாடகத்தனம் கொஞ்சம் இருந்தாலும் சிவாஜியின் magic அதனை சமன் செய்யும்.

ரொம்ப uneasy restraint என்று சொல்லப்படும் பாணியில் தந்தை எதிரே நடப்பதில் ஒட்டாமல், நடப்பதை மனதளவில் அங்கீகரிக்காமல் ஆனால் எந்த வெளிப்படையான எதிர்ப்பும் காட்டாமல் கடந்து செல்வார். தனது சம நண்பன் கோபாலுடன் சமமில்லாத பால்ய நண்பன் சுந்தரத்திற்கு நேர்ந்த ஒரு அநீதியை கூட ஒட்டாமல் துறவு நிலையாய் விளக்குவார். பிறகு சிறிது குற்ற உணர்வு உறுத்த நான் உன்னை சம நிலையில் அங்கீகரிக்கிறேன் என்ற தேற்றலோடு, சிகரெட் கொடுத்து சமாளிப்பார். அனால் ராஜு ,கோபால்,சுந்தரம் உடன் பழகும் விதம் சமூக நிர்பந்த நியதிற்குட்பட்டே (சமம், சமமின்மை )இருக்கும்.பின்னால் ராஜுவின் எந்த act of commission ,omission எல்லாவற்றுக்கும் இந்த ஒரு காட்சியே நம் மனநிலையை தயார் செய்து விடும்.

கதையின் நாயகி,பார்வதியிடம் பழகும் போது inhibition துறந்து உரக்க பேசுவார்,நையாண்டி செய்வார்,இயல்பை மீறி நடப்பார்.பார்வதி அந்தஸ்தில் குறைந்திருப்பதும்,சுந்தரத்திற்கு கொடுக்க இயலாத முக்கியத்துவத்தை இந்த உறவிற்கு கொடுக்க முடிவதும், ஒரு அசட்டு தைரியத்தையும் அவருக்கு அளிக்கும்.(தந்தையை மீறியும் ,சமாளிக்கலாம் என்று) ஒரு liberated மனநிலையில் இருப்பார். இந்த மனநிலை பின்னால் ஒரே ஒரு காட்சியில் வெளிப்படும்.அதை பிறகு பார்க்கலாம்.
ஆனால் மனைவி எரிபடும் காட்சியில், ஒரு ஊமை புலம்பலோடு,ஒரு குழந்தையின் இயலாமை கதறலோடு முடிப்பார். பிறகு தந்தை தன்னை மறுமணத்திற்கு ,துப்பாக்கியை வைத்து தற்கொலை மிரட்டலோடு ,மன்றாடும் போது, கோபம்,அதிர்ச்சி,இயலாமை,சுய-வெறுப்பு,விரக்தி அத்தனையையும் ஒரு பத்து நொடி close -up ஷாட்டில் காட்டி விடுவார்.(சிவாஜிக்கு இது புதிதல்ல).அரை மனதோடு சம்மதிக்கும் காட்சியில் அடுத்த பத்தொன்பது வருட வாழ்கை சித்திரம் நமக்கு கோடி காட்ட பட்டு விடும்.

வயதான பிறகு,வரும் காட்சிகளின் அழகு மனைவி விமலாவுடன் பாந்தமான ,இதமான ஆனால் ஒட்டாத ஒரு உறவு.(விமலாவின் இயல்பே அதற்கு ஒரு காரணம் என்றாலும்). நண்பன் கோபாலுடன் வரும் அனைத்து காட்சிகளிலும்,இதமோ,இங்கிதமோ இல்லாத கோபாலின் பேச்சுகளுக்கு, ஒரு தந்தை,ஒரு ரெண்டுங்கெட்டான் நண்பன்,குத்தும் தன மனசாட்சி மூன்று நிலையிலும் கோபாலை வரித்து ,மிக அழகாக கையாள்வார்.அவருக்கு ஒருவேளை உறுத்தல் குறைய ,ஈகோவை கோட் ஸ்டாண்டில் மாட்ட,தந்தையின் இழப்பை சரி செய்ய , இந்த நண்பன் அவசிய தேவை போலும்!

கோபாலுடன் நண்பன் என்ற உரிமையில் பேசும் கணங்கள்,கோபாலின் உடல்நிலை சம்பந்தமான இடங்கள்.கோபால் நிதானம் தவறும் இடங்கள்.குழந்தையை போல் நடத்துவார். இந்த இடங்களை கையாள இனி ஒரு நடிகன் பிறப்பது இயலாது.(பாத்திரத்தை அதன் குணாதிசயம்,கதையியல்பு,மனோதத்துவ பின்னணியில் புரிந்து,அதை நேர்த்தியுடன் செயல் படுத்தும் நடிப்பு வெளிப்பாடு.)

சோர்ந்து இருக்கும் போது ,உடல் கோளாறு என்று டாக்டரை கூப்பிடும் இடத்தில், விமலா,கோபால் இருவருக்குமான இடம் ,ராஜுவின் உடல் மொழியில்,பொய் அனுசரணையுடன் பிசைதலுக்கு இசையும் காட்சியில் ஒரு revelation போல பரவச படுத்தும்.

NT யின் நடிப்பு பரிமாணங்களை அலசும் போது ,இந்த படத்தில் மறக்க முடியாத இன்னொரு புது பரிமாணம், சத்யாவுடன் அவருக்கு develop ஆகும் உறவு. பல படங்களில் இந்த மாதிரி உறவுகள் வரும் போது pre -Emptive & Prevailing mood பாணியிலோ அல்லது விரோத அடிப்படையிலோ தான் பிளாட் development premise ஆக இருக்கும். இந்த படத்திலோ முற்றும் புது பரிமாணம். அதை சிவாஜி ஆண்டிருக்கும் விதம் ஒரு தனி சுவை. ஒரு வெகுளி தனமான ,rawness கொண்ட படிப்பறிவில்லா ஒரு பையன் மேல் ஒரு soft -corner என்பதற்கு மேல் செல்ல மாட்டார். முதல் முறை பார்க்கும் போது சாதா அறிமுகம், டாக்டர் சிபாரிசில் வேலை என்பதுடன் , மற்ற படி எந்த ஒரு கவனிப்பும் காட்ட மாட்டார். சத்யன் ஆங்கிலம் தெரியாமல் ,விமலாவுடன் மாட்டி கொண்டு முழிக்கும் காட்சியில் ஆகட்டும், பிறகு சம்பளத்தை கொடுத்து ஆசிர்வாதம் வழங்கும் காட்சியில் ஆகட்டும்(முதலில் அம்மாவிடம் என்பார்) ,ஒரு செல்லமான தோரணையில் ஒரு நல்ல ரெண்டுங்கெட்டான் வேலைகார பையன் என்ற அளவிலேயே நிற்கும். அம்மா படத்திற்கு நேர்ந்த அவமானத்தை சகிக்காமல்,சத்யம் விலக விரும்பும் காட்சியில் கூட டாக்டரிடம் ,முதல்லே அவனுக்கு புத்தி சொல்லு என்று பொறுப்பை டாக்டரிடம் கொடுப்பார். டாக்டர் குடித்து விட்டு நிதானம் இழக்கும் காட்சியிலும் ,வேலையாளாகவே நடத்தி வெளியேற சொல்வார். ஆனால் டாக்டரின் மரணத்திற்கு பிறகான வெற்றிடத்தில்,சத்யனின் பிரத்யேக அக்கறை தன்மையிலும்,retire ஆன மாணிக்கம் என்ற முதிய வேலையாளின் வேண்டுகோள் படியும் துளி அக்கறையும் , நெருக்கமும் கூடும் வெகு இயல்பாக. அந்த சாப்பிடும் காட்சி ஒரு கவிதை. பிறகு கூட மனைவியின் தலையீட்டில் சத்யன் பாதிக்க படும் போது ஓவர்-ரியாக்ட் செய்யாமலே அன்பை விளக்குவார்.

விமலாவுடன் வரும் வெடிக்கும் காட்சியில்(வசனப்படியே கட்டுபடுத்தி வைத்திருந்த எரிமலை) கொஞ்சம் ஏமாற்றம்.வழக்கமான NT பாணி முத்திரைகளுடன் கூடிய சாதாரண சீற்றமாய் வெளிப்படும். அந்த காட்சியில் நான் எதிர்பார்த்த நடிப்பு, நெருப்பில் தன மனைவியை காப்பாற்ற தவறி ,பொய் வாழ்கை வாழும் ஒருவனின் ,inhibition துறந்த சீற்றம்.Incoherent ஆய் துவங்கி,கோபமாய் வெடித்து,நிலை உணர்ந்து படி படியாய் அடங்க வேண்டிய காட்சி. ஆனால் follow thru காட்சியில் நடிப்பு தெய்வம் நிலைமையை சீர் செய்யும். கோபம் சிறிதே அடங்கி,சோபாவில் கால் போட்டிருக்கும் போது ,சமாதானமாய் shoe அவிழ்க்க வரும் வரும் மனைவியிடம் பிணக்கமுற்ற சமாதான கோடி காட்டும் அந்த சிறிய கால் மாற்றும் gesture கோடானு கோடி கதை பேசி விடும்.

விமலாவிடம் வெடித்த பின் ,planter 's conference செல்ல ,புறப்படும் போது, விமலா சத்யனை கூப்பிட்டு போக சொல்லும் போது ,ஒரு அன்னியோன்யமான ,ஆச்சர்யத்தை வார்த்தையின்றி வெளிப்படுத்துவார். அந்த வெடிப்புக்கு பின், விமலாவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில்,டிரைவர் சுந்தரத்தை பழைய சிறு வயது நண்பராக்கி, பார்வதியுடன் இருந்த போது அடைந்த சுதந்திரத்தை உணர்வார்.

அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்.வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம் வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!

அடுத்த காட்சியில் அவர் வாக்கிங்கிற்கு சுந்தரத்தை அழைக்கும் போது தொப்பியை கழற்ற சொல்லும் gesture . கவுரி-சத்யா காதலை உணர்ந்து அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.

கடைசி காட்சி (நாகேஷ் அவர்களை ஒரு விமான பயணத்தில் சந்தித்த போது இக்காட்சியை சிலாகித்தார்).Acting is not about discipline ,Technic , Perfection ,control and execution alone .Some times you loose your control and self to surprise yourself to surprise the audience .இதற்கு நல்ல உதாரணம் அவர் திருட்டு பழி விழுந்து தன நம்பிக்கையை குலைத்த சத்யாவை manhandle செய்யும் விதம்.(தில்லானா காட்சியில் அடிக்காமல் பாய்வார்) தன்னிடம் பேசும் கவுரி
விமலாவிடம் பேசாதே என்ற விஷயத்தை பேச முயலும் போது ,விமலா இருக்கும் போது இந்த விஷயத்தை என் பேசுகிறாய் என்பது போல் உடல் மொழி ,முகபாவத்தில் சொல்லும் அழகில்....

இந்த படத்தின் தனி சிறப்பு ஆற்றோட்டமான திரைகதை. Flashback அது இது என்று போட்டு (நிறைய சந்தர்பங்கள் இருந்தும் ) கதையின் மெல்லிய ஓட்டத்தை சிதைக்காமல், நேரடியாக கொண்டு சென்றிருப்பார்கள். ஜாவர் சீதாராமனின் வசனங்கள் (அந்த நாள்,ஆண்டவன் கட்டளை) தமிழ் பட நியதிகளை மீறாமல் , பாத்திர இயல்புகளை முன்னிறுத்தி ,மிக polish ஆக இருக்கும். கோபால்-ராஜூ உரையாடல்கள்,விமலா-ராஜூ, தொழிலாளி-முதலாளி உறவு சார்ந்தவை,கோபால் மரண காட்சி, கொடைக்கானல் காட்சிகள் குறிப்பிட வேண்டியவை.(ஒருவேளை உதர் புருஷ் வசனங்களை மொழி மாற்று செய்திருப்பார்களோ என்ற அளவு வித்யாசமாக இருக்கும்.) Hats off ஜாவர்.மற்ற படி ரொம்ப Technical விஷயங்கள் தேவை படாத கதை.

கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியுடன் பிணங்கி (குங்குமம்)இந்த படத்தில் இணைந்தார். அமைதியான துருத்தாத இயக்கம்.
அடுத்த படி சரியான பாத்திர தேர்வு. சுந்தர் ராஜன் ,டாக்டர் வேஷத்திற்கு தேர்வு செய்ய பட்டிறிந்தாலும் ,அவரால் நேர் அல்லது எதிர் நிலைகளில் இயங்கியிருக்க முடியுமே தவிர நேர்-எதிர்,எதிர்-நேர் என்ற கோபாலின் புதிர் நிலை மனபான்மைகளுக்கு அசோகனின் கோமாளி தனம் கலந்த mystic ஆன நடிப்பு ஒரு புதிர் தன்மையை நிலை நிறுத்துகிறது.(Dark knight Heath Ledger போல்) .அசோகன் நல்ல தேர்வு.

வாணிஸ்ரீ ஒரு அற்புதம்.அறிமுகமாகி இரண்டாம் வருடத்தில் ஒரு rawness , Passion ridden poor teenager , பாத்திரத்துக்கு பொருத்தம். சௌகார், sophisticated ,obsessive -compulsive குணங்கள் நிறைத்த இந்த பாத்திரத்திற்கு இரண்டாவது nomination கூட இருக்க முடியாது. சிவகுமார் இதே குணாதிசயம் கொண்ட மனிதர்.கேட்கவா வேண்டும்?
நாகையா,சுந்தர ராஜன்,ராமதாஸ் அத்தனை பெரும் நல்ல பங்களிப்பை செய்திருப்பார்கள்.

இசை புரட்சி நிகழ்த்தியிருப்பார் விஸ்வநாதன்.(ராமமூர்த்தியை பிரிந்த பின் தனியாய் போட்ட படங்களிலேயே மிக சிறந்த படம்) பால் போலவே,வெள்ளிக்கிண்ணம்தான்,என்-கேள்விக்கென்ன பதில்,அந்த நாள் என்ற பாடல்கள் வாலி கூட்டணியில்.உறுத்தாத பின்னணி இசை.

ஏ.வீ.எம்.செட்டியார் சிவாஜியை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி (இந்த படத்தை re-make செய்ய முடியாது என்று சொன்னார்)

கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியை best perfectionist என்று பாராட்டினார்கள்.

ரசிகர்களின் பார்வையில் இன்றளவும் மறக்க முடியாத படம்.

RAGHAVENDRA
11th December 2015, 09:49 AM
உயர்ந்த மனிதன் - பாடல்களின் விவரங்கள்

இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்கள் - வாலி

1. நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா - பி.சுசீலா
2. வெள்ளிக்கிண்ணம் தான் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
3. என் கேள்விக்கென்ன பதில் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
4. அத்தானின் முத்தங்கள் - பி.சுசீலா
5. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - டி.எம்.சௌந்தர்ராஜன். மேஜர் சுந்தரராஜன்.

JamesFague
11th December 2015, 09:55 AM
Superb Body Language by NT in this film which no other actor can match forever.

RAGHAVENDRA
11th December 2015, 10:31 AM
உயர்ந்த மனிதன் - திரு முத்தையன் அம்மு அவர்களின் பொக்கிஷப் பதிவிலிருந்து...



http://i62.tinypic.com/28mkcc1.jpg


மேலும் கண்ணைக் கவரும் உயர்ந்த மனிதன் நிழற்படங்கள் ... திரு முத்தையன் அம்மு அவர்களின் பங்களிப்பில்...

http://www.mayyam.com/talk/showthread.php?11355-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-15&p=1224112&viewfull=1#post1224112

RAGHAVENDRA
11th December 2015, 12:45 PM
உயர்ந்த மனிதன் - பாடல் காட்சிகள்

அத்தானின் முத்தங்கள்...

https://www.youtube.com/watch?v=cepwzi21AkE

RAGHAVENDRA
11th December 2015, 12:45 PM
உயர்ந்த மனிதன் - பாடல் காட்சிகள்

என் கேள்விக்கென்ன பதில்

https://www.youtube.com/watch?v=xPofOU6YGvI

RAGHAVENDRA
11th December 2015, 12:47 PM
உயர்ந்த மனிதன் - பாடல் காட்சிகள்

வெள்ளிக்கிண்ணம் தான்

https://www.youtube.com/watch?v=4BdsKO2Aoac

RAGHAVENDRA
11th December 2015, 12:48 PM
உயர்ந்த மனிதன் - பாடல் காட்சிகள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

https://www.youtube.com/watch?v=rXRnAigZCVg

RAGHAVENDRA
11th December 2015, 12:49 PM
உயர்ந்த மனிதன் - பாடல் காட்சிகள்

நாளை இந்த வேளை பார்த்து

https://www.youtube.com/watch?v=uePGiT9g2Z0

RAGHAVENDRA
14th December 2015, 09:05 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/12342383_1018959918154680_8012356846791115748_n.jp g?oh=71636ce69dde8cc4b380d809837b4be5&oe=56D54A20

RAGHAVENDRA
15th December 2015, 08:23 AM
Sivaji Ganesan Filmography Series

126. Anbalippu அன்பளிப்பு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/anbalippuimgfw_zpsd3wrluof.jpg


தணிக்கை - 27.12.1968
வெளியீடு - 01.01.1969
தயாரிப்பு - கமலா மூவீஸ்

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், அபிநய சரஸ்வதி பி. சரோஜா தேவி, எம்.என்.நம்பியார், நாகேஷ், வி.கே.ராமசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன், செந்தாமரை, விஜய நிர்மலா, கீதாஞ்சலி, பண்டரிபாய், சச்சு, மற்றும் பலர்.

வசனம் - ஆரூர்தாஸ்

பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்

பின்னணி பாடியவர்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், தாராபுரம் சுந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, பி.பி.ஸ்ரீநிவாஸ்

ஒலிப்பதிவு - ஜே.ஜே.மாணிக்கம்.

ரீரிக்கார்டிங் - ஜே.ஜே.மாணிக்கம் - ஏவிஎம், ஏ.ஆர்.சுவாமிநாதன் - விஜயா

ஒலிப்பதிவு வசனம் - வி.எஸ்.எம்.கோபால் ராம் - ஏவிஎம்

கலை - ஏ.பாலு

செட்டிங்ஸ் - வி.நாகன் ஆச்சாரி

அரங்கப்பொருட்கள் - சினி கிராஃப்ட்ஸ்

மேக்கப் - ஆர்.ரங்கசாமி, சகாதேவராவ், மாணிக்கம், கே.ராமன், எம்.ராமசாமி, மாதவ ராவ், நாராயணசாமி, பாண்டியன்

உடைகள் - பி.ராமகிருஷ்ணன், கே.ஏ.ரெஹ்மான்

நடனம் - ஏ.கே. சோப்ரா

சண்டப்பயிற்சி - டி.வெங்கடேசன், சாமிநாதன்

வெளிப்புறப்படப்படிப்பு - பிரசாத் புரொடக்ஷன்ஸ் யூனிட், விஜயலக்ஷ்மி போட்டோ சவுண்டு யூனிட்

விளம்பரம் - எலிகண்ட்
விளம்ர டிசைன்கள் - ஈஸ்வர்
டைட்டில் டிசைன் - டைட்டில்

புரொடக்ஷன் நிர்வாகம் - எம்.கே.ராமன்
ஆபீஸ் நிர்வாகம் - எஸ்.சிவலிங்கம், மதுரை பத்மனாபன்

ஸ்டில்ஸ் - சாரதி

ஆபரேடிவ் காமிராமேன் - கே.எஸ்.பாஸ்கர் ராவ்

ப்ராஸஸிங் - டி.ராமசாமி - ஏவி.எம்.பிலிம் லாபரட்டரி, சென்னை-26.

ஸ்டூடியோ - ஏவி.எம்.

உதவி டைரக்ஷன் - நாஞ்சில் எஸ். ராஜேந்திரன், ப.புகழேந்தி, டி.எஸ்.பாலன்

எடிட்டிங் பி. கந்தசாமி

ஒளிப்பதிவு டைரக்டர் - தம்பு

இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்விஸ்வநாதன்

தயாரிப்பு - எஸ். காந்திராஜ்

கதை டைரக்ஷன் - ஏ.சி. திருலோகசந்தர்.

RAGHAVENDRA
15th December 2015, 08:24 AM
அன்பளிப்பு - விளம்பர நிழற்படங்கள் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து



காவிய விளம்பரம் : பொம்மை : ஜனவரி 1969

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5468-1.jpg

முதல் வெளியீட்டு விளம்பரம்


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5466-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1969


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5471-1.jpg


இரண்டாவது வார விளம்பரம் : தினத்தந்தி : 8.1.1969


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5467-1.jpg

RAGHAVENDRA
15th December 2015, 08:36 AM
அன்பளிப்பு - பாடல்களின் விவரங்கள்

பாடலாக்கம் - கவிஞர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

1. வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
2. தேரு வந்தது போலிருந்த்து - டி.எம்.சௌந்தர்ராஜன்
3. என் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. மாதுளம் பழத்துக்குப் பெயர் தான் மாதுளம் - பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
5. எனக்குத் தெரியும் - எல்.ஆர்.ஈஸ்வரி
6. கோபாலன் எங்கே உண்டோ - டி.எம்.சௌந்தர்ராஜன், தாராபுரம் சுந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, கோரஸ்

RAGHAVENDRA
15th December 2015, 08:36 AM
பாடல் காட்சிகள்

வள்ளி மலை மான் குட்டி எங்கே போறே

https://www.youtube.com/watch?v=HFP_8KGB3d0


தேரு வந்தது போலிருந்தது

https://www.youtube.com/watch?v=0eTOWFNLasw


மாதுளம் பழத்துக்கு மாதுளம்

https://www.youtube.com/watch?v=jeMhToHx0NI


எனக்குத் தெரியும்

https://www.youtube.com/watch?v=FxPyFYOZa3U


என் வேஷப் பொருத்தம்

https://www.youtube.com/watch?v=TbEnzRg1lkw


கோபாலன் எங்கே உண்டோ

https://www.youtube.com/watch?v=jcl0Z3c3tgU

RAGHAVENDRA
15th December 2015, 08:40 AM
அன்பளிப்பு - சிறப்பு செய்திகள்


1. மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த முதல் படம்.
2. நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் ஆங்கிலப் புத்தாண்டு நாளான ஜனவரி 1ம் தேதியில் வெளியான ஒரே படம்.
3. வள்ளிமலை மான்குட்டி பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

sss
15th December 2015, 01:41 PM
அன்புள்ள திரு வீயார் அவர்களுக்கு

அன்பளிப்பு அணிவகுப்புக்கு மிக்க நன்றி....
மக்கள் கலைஞர் வெளிநாட்டில் இருந்து நடிகர் திலகம் வீட்டுக்கு வரும் காட்சியில் நடிகர் திலகம் வலது கை விரலில் ஒரு பேண்ட் எய்ட் சுற்றி இருப்பதைப் பார்த்தேன்...அந்த ஒரு சில காட்சியில் மட்டும் அது இருந்தது...கையில் சிறிய அடிப்பட போதும் பட பிடிப்பைத் தள்ளி வைக்காமல் நடித்துள்ளார் என நினைக்கிறேன்..

நன்றி..
சுந்தர பாண்டியன்

sss
15th December 2015, 01:48 PM
தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பற்றிய திறனாய்வுகள், விமர்சனங்கள், ஏராளமாக, அவ்வப்போது நம் திரிகளில் விவாதிக்கப்பட்டு வருவதால் அவை இங்கே இடம் பெறவில்லை. என்றாலும் இத்திரைக்காவியத்தைப்பற்றி ஏற்கெனவே நம்முடைய மய்யத்தில் கருத்துரைகளைப் பகிர்ந்து கொண்டுள்ள நண்பர்கள் அவற்றை இங்கே மீள்பதிவு செய்யக் கோருகிறேன். இதுவரை எழுதாதவர்கள் அல்லது புதிய தலைமுறை ரசிகர்கள், தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அன்புள்ள திரு வீயார் அவர்களே
கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையில் தில்லானா மோகனாம்பாள் பட காட்சிகள் இருந்தது ... நன்றி...
மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற மற்ற கலைஞர்கள் ... ஏ.கருணாநிதி, பி.டி. சம்பந்தம், ராமராவ், மனோரமா நாடக குழுவில் ஆர்மோனியம் வாசிப்பவர் (???) என எல்லோரையும் படத்துடன் அறிமுகம் செய்ய வேண்டுகிறேன்...

நன்றி
சுந்தர பாண்டியன்

RAGHAVENDRA
15th December 2015, 06:24 PM
அன்பு சுந்தரபாண்டியன்
தங்கள் பாராட்டிற்கும் ஆலோசனைக்கும் உளமார்ந்த நன்றி.
தாங்கள் கூறியவாறே மற்றவர்களின் படங்களும் சேர்க்கப்பட்டு விட்டன.
மனோரமாவின் குழுவில் ஹார்மோனியம் வாசிப்பவர் சந்திரன் பாபு. அவர் ஏ.பி.என். படங்களில் தவறாமல் இடம் பெறுவார்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
17th December 2015, 12:48 AM
Filmography திரியில் அடுத்து

https://www.youtube.com/watch?v=AgUzhulHAvk

டிரைலருக்கு நன்றி அன்பிற்கினிய நெய்வேலி வாசு சார் மற்றும் யூட்யூப் இணையதளம்

RAGHAVENDRA
20th December 2015, 11:08 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/miscel/thanx_zpsakgyrhnq.jpg

நடிகர் திலகம் திரைப்பட விவரங்களுக்கான திரி துவங்கப்பட்ட போது எத்தனை பெரிய பணி என்பதை ஓரளவு அனுமானித்திருந்தாலும் அதனுடைய செயலாக்கத்தின் போது தான் அதன் முழுமையான பரிமாணம் தெரிய ஆரம்பித்தது. 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மக்கள் தலைவர் காவிய நாயகன் நடிகர் திலகத்தின் பங்களிப்பினையும் அவருடன் பணியாற்றியவர்களின் விவரங்களையும் சேகரித்து இங்கே அளிக்கலாம் என்ற எண்ணம் தோன்றி அதை செயல்படுத்தத் துவங்கிய போது அதற்கான வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற ஐயமும் தோன்றியது. ஆனால் சுமார் இரண்டு ஆண்டுகளாக இதில் தொடர்ந்து சிவாஜி ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்களின் அமோக ஆதரவில் இன்று

2,00,000 இரண்டு லட்சம்

என்கிற எண்ணிக்கையைக் கடந்து பயணிக்கிறது. இதற்காக அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

தொடர்ந்து அனைவரின் ஆதரவையும் பங்களிப்பையும் எதிர்நோக்கித் தொடர்கிறது பயணம்.

அன்புடன்
ராகவேந்திரன்

Richardsof
20th December 2015, 11:15 AM
http://i68.tinypic.com/656cdh.gif