PDA

View Full Version : Ponmanachemmal m.g.r. Filmography news & events



Pages : 1 2 [3]

Stynagt
12th July 2013, 07:18 PM
http://i41.tinypic.com/2rqhmp0.jpg

nice photo..and a painful work to expose the picture. Thanks thirupoor ravichandran sir..

iufegolarev
12th July 2013, 09:06 PM
Dear Prof.

Congrats for having been part of wonderful festival conducted for Sri.MGR.

Welcome back to this thread with double the vigor.

As a matter of fact, your information pertaining to Sri.MGR is a good asset for all the generations. It includes me as well.
I hope it will also help me to correct any mistakes if any and that i may have had in my mind in the form of assumption / presumption.

Am sure, as a professor, you will be one of the right person to provide information with sanctity.

Wishing you all the best and once again congratulations for all your achievements thus far and that would happen in future as well.

Best Regards
Subbu.

idahihal
12th July 2013, 09:16 PM
எனது வேண்டுகோளை ஏற்று உடனடியாகவே பொன்மனச்செம்மல் பிலிமோகிராபி நியூஸ் அண்ட் இவண்ட்ஸ் திரியில் குமாரி படத்தின் திரைக்கதை, பாடல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்த பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். போனில் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள். திரியில் எனக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளீர்கள். உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.

idahihal
12th July 2013, 09:27 PM
மக்கள் திலகதின் 27வது படம் குமாரி. அவரது முதல் படத்தின் முழுமையான வீடியோ கிடைக்காவிடினும் அதில் ஒரு காட்சியை காணும் பாக்கியத்தை நாம் பெற்றோம். தொடர்ந்து இரு சசோதரர்கள் படத்தின் வீடியோ மாடர்ன் சினிமாவால் வெளியிடப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைத்துள்ளது. ஆனால் இது வரை பார்க்க இயலவில்லை. தட்சயக்ஞயம், வீரஜெகதீஸ், மாயாமச்சீந்திரா படங்களின் வீடியோவும் கிடைக்கவில்லை. பிரகலாதா , அசோக்குமார் வீடியோக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சீதா ஜனனம், தமிழறியும் பெருமாள் , ஜோதி மலர் வீடியோக்கள் கிடைக்கவில்லை. அரிச்சந்திரா, மீரா மிக எளிதாகக் கிடைக்கின்றன. சாலி வாகனன், ஸ்ரீமுருகன் கிடைக்கவில்லை. அதன் பின்னர் வந்த அத்தனை படங்ளின் வீடியோக்களும் கிடைக்கின்றன. குறிப்பாக மக்கள் திலகம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பின்னர் வெளிவந்த அத்தனை படங்களும் கிடைக்கின்றன. விதிவிலக்கு குமாரி மற்றும் நாம். இதில் குமாரி படத்தின் கதை வசனம் காலம் சென்ற திரு.விஜயன் (மக்கள் திலகத்தின் வளர்ப்பு மகளது கணவர் மற்றும் மன்னாதி மன்னன் மாதஇதழ் ஆசிரியர் )அவர்களால் கதை வசனம் மட்டும் வெளியிடப்பட்டது. நாம் படத்தின் நெகடிவ் நல்ல நிலையில் உள்ளது என பத்திரிக்கை செய்திகளில் படித்தேன். (1992ல்) அவற்றின் தற்போதைய நிலை தெரியவில்லை. தெரிந்தவர்கள் தகவல் அளிக்கவும்.

idahihal
12th July 2013, 09:56 PM
http://i39.tinypic.com/2zrkjeq.jpg

idahihal
12th July 2013, 10:07 PM
http://i41.tinypic.com/flj8t0.jpg

ujeetotei
12th July 2013, 10:12 PM
Thank you very much Professor Selvakumar Sir for refreshing the Ponmanachemmal filmography thread after a very long time.

ujeetotei
12th July 2013, 10:19 PM
Olikirathu Urimaikural Publisher and UK Golden Movies Proprietor Mr.Thangavel had watched some reels of Kumari to release in DVD format but the reels was very bad and there was no audio.

ujeetotei
12th July 2013, 10:31 PM
After reading the story of Kumari, slightly resembles MGR being expelled from DMK in real life.

ujeetotei
12th July 2013, 10:37 PM
Ad about Kumari release.
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/kumari_zps1d49f2e5.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/kumari_zps1d49f2e5.jpg.html)

ujeetotei
12th July 2013, 10:38 PM
A detailed ad but no information about theater names.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/kumari_coming_zps069800e6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/kumari_coming_zps069800e6.jpg.html)

siqutacelufuw
13th July 2013, 09:34 AM
A detailed ad but no information about theater names.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/kumari_coming_zps069800e6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/kumari_coming_zps069800e6.jpg.html)


A Reliable Information :

The film 'KUMARI" was released at Chennai in Paragon & Broadway Theatres.

It is also understood that the film ran for 100 days at Tiruchy - Roxy.

Thanks & Regards, S. Selvakumar


Endrum M.G.R.
Engal Iraivan

siqutacelufuw
13th July 2013, 10:20 AM
இந்த திரி தொடர, என்னை எல்லா வகையிலும் ஊக்குவித்து,

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்த எம். ஜி. ஆர். பக்தர்களுக்கும், அருமை நண்பர் சுப்பு உட்பட அனைத்து அன்பர்களுக்கும், எனது பணிவான நன்றி !

எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !


அன்பன் : சௌ செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

siqutacelufuw
13th July 2013, 10:24 AM
மக்கள் திலகத்தின் 28வது திரைப்படம் " என் தங்கை" பற்றிய தகவல்


1. படம் வெளியான தேதி : 31-05-1952

2. படத்தை தயாரித்த நிறுவனம் : அசோகா பிக்சர்ஸ், குகை, சேலம்.


3. கதாநாயகன் : மக்கள் திலகம்


4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : ராஜேந்திரன்


5. பாடல்கள் : பாரதிதாசன், மருதகாசி, சரவணபவா நந்தர், சுரதா, ராஜகோபாலன், நரசிம்மன்


6. இசை அமைப்பு : சி. என். பாண்டுரங்கன்


7. வசனம் : வில்லன் டி. எஸ். நடராஜன்


8. இயக்குனர் : சி.எச். நாராயணமூர்த்தி, எம். கே. ஆர் நம்பியார்.


9. கதை - மூலக்கதை : வில்லன் டி. எஸ். நடராஜன், திரைக்கதை : சி.எச். நாராயணமூர்த்தி

10. படத்தில் பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : எம். ஜி. சக்கரபாணி பி. எஸ். கோவிந்தன்,

பி. வி. நரசிம்மபாரதி, டி.ஆர்.பி. ராவ்,

மாதுரி தேவி, இ.வி. சரோஜா, எம். என். ராஜம்,

வி. சுசீலா, எஸ். ஆர். ஜானகி மற்றும் பலர்.------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

படத்தின் சிறப்பம்சம் :


1. அண்ணன் - தங்கை பாசத்தை அருமையாக வெளிப்படுத்தி, பின்னாளில் வெளிவந்த இதர

அனைத்து மொழி படங்களுக்கும் ஒரு முன்னோடியாக திகழ்ந்த திரைப்படம்.


2. இலங்கையில் அதிக நாட்கள் ஓடி வரலாற்று சாதனை புரிந்த படம்.


3. திருச்சி ஜுபிட்டர் அரங்கில் வெள்ளிவிழா கண்ட திரைப்படம்.


4. சென்னை - சித்ரா, பிரபாத், சரஸ்வதி மற்றும் மதுரை நியூ சினிமா, சேலம் ஒரியண்டல், கோவை அசோக் ஆகிய திரை அரங்குகளில் 100 நாட்களை கடந்த வெற்றிப்படம். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.


அன்பன் : சௌ செல்வகுமார்





என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

oygateedat
13th July 2013, 01:21 PM
http://i40.tinypic.com/qn39kk.jpg

oygateedat
13th July 2013, 01:23 PM
http://i43.tinypic.com/2w23m39.jpg

oygateedat
13th July 2013, 01:25 PM
http://i40.tinypic.com/vyocd0.jpg

siqutacelufuw
13th July 2013, 05:04 PM
மக்கள் திலகத்தின் 28வது திரைப்படம் " என் தங்கை" கதைச் சுருக்கம்

காஞ்சிபுரத்தில் வசிக்கும் ராஜேந்திரன் தன் தம்பி செல்வரத்தினத்தின் படிப்பிற்காக கஷ்டப்பட்டுப் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறான். சென்னையிலே, செல்வம் (செல்வரத்தினம்) ராஜம் என்ற கல்லூரி மாணவியை காதலிக்கிறான்.

ராஜேந்திரன் சித்தப்பா கருணாகரம் பிள்ளை வஞ்சக நெஞ்சினன். அவன் மகன் சூரியமூர்த்தி சென்னையிலே படித்துக் கொண்டிருக்கிறான். அவன் மேரி என்ற கிறிஸ்துவப் பெண்ணைக் காதலிக்கிறான். ராஜேந்திரன் தன் தங்கை மீனாவின் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால் துரதிர்ஷ்டம் குறுக்கிடுகிறது. தோழியின் வீட்டிலிருந்து மழையிலே நனைந்து கொண்டு வரும் போது ஏற்பட்ட
இடி மின்னலால் கண்களை இழந்து குருடியாகிறாள் மீனா. இதையறிந்த
சகோதரன் செல்வம் துடித்துப் போய் வீடு திரும்புகிறான்.

காதலன் செல்வத்தை தேடிக் கொண்டு ராஜம் தன் தந்தை வீராசாமிப் பிள்ளையுடன் காஞ்சிக்கு வருகிறாள். விரைவில், ராஜம் - செல்வம் திருமணத்தை முடித்துவிட முடிவு செய்கின்றனர். முதலில், ராஜேந்திரனுக்கு கல்யாணம் செய்து பின் செல்வத்துக்கு செய்யலாம் என்று சொன்ன தன் தாய் குணவதியிடம் தங்கைக்கும், தம்பிக்கும், திருமணம் செய்யாமல் தான் செய்து கொள்வதில்லை
என்று சத்தியம் செய்கிறான் ராஜேந்திரன்.


பரீட்சையிலே பெயிலாகி வீடு திரும்பிய சூரியமூர்த்தி ராஜேந்திரன் குடும்பத்துக்கு பல வழிகளிலும் உதவுகின்றான். சென்னை சென்றிருந்த செல்வம் தாயின் அபாய நிலையினைத் தந்தி மூலம் அறிந்து ஓடோடி வருகிறான். குணவதி இறந்து விடுகிறாள். நாட்கள் பல உருண்டோடுகின்றன.


ஆண் உடையிலே சூரியமூர்த்தியைத் தேடிக் கொண்டு காஞ்சிபுரம் வருகிறாள் மேரி. வேறு ஜாதிப் பெண்ணைத் தன் மகன் மணம் செய்து கொள்வதை
விரும்பாத கருணாகரம் பிள்ளை மேரியை வீட்டை விட்டு விரட்டுகிறார்.

தாய் இறந்தபோது சொன்ன வார்த்தையைக் காப்பற்றுவதற்காக வஞ்சகச் சித்தப்பாவிடம் வீட்டை அடகு வைத்து தம்பியின் கலியாணத்தை நடத்தி விடுகிறான் ராஜேந்திரன். ஆரம்பத்தில் மீனா மீது அன்பு மழை பொழிகிறாள், ராஜம். நாளடைவில் அது மாறுதல் அடைகிறது. மீனாவைப் பல வித
கொடுமைப் படுத்துகிறாள். ஓர் நாள் தங்கையைத் தம்பி அடிக்கப் போவதைப் பார்த்துக் கொண்டு வந்த ராஜேந்திரன் கொதித்துப் போய் தம்பியை அடித்து விடுகிறான். இதையே காரணமாக வைத்துக் கொண்டு செல்வத்தை சென்னைக்கு அழைத்துச் சென்று விடுகிறாள் ராஜம். அச்சாபிசிலே (printing press) வேலை செய்து கொண்டிருந்த ராஜேந்திரனின் வேலையும் போய் விடுகிறது. வறுமையின் சீற்றம் நாளுக்கு நாள் அதிகமாகிறது.


சூரியமூர்த்தியை எதிர்பார்த்து ஏமாந்த மேரி பல கஷ்டங்களுக்குள்ளாகி கடலில் விழப் போகும் பொது, ஒரு பாதிரியால் காப்பாற்றப்பட்டு நர்ஸாகிறாள். வீரசாமிப் பிள்ளை செல்வத்திடம் பத்தாயிரம் ரூபாயை கொடுத்துக் குதிரைப் பந்தயத்துக்கு அனுப்புகிறார். பணம் போய் விட்டதை அறிந்த வீராசாமிப் பிள்ளை மாரடைப்பால் மரணமடைகிறார். அன்றிலிருந்து செல்வம் குதிரைப் பந்தயத்தைத் தோழனாக கொள்கிறான். கைப்பொருள் குறைந்து கொண்டே வருகிறது. கடைசியில், ராஜத்தின் தாலியையும் கேட்கிறான், விற்பதற்கு.

வீராசாமிப் பிள்ளை இறந்ததை விசாரிக்க ராஜேந்திரன் சென்னை வருகிறான். ராஜேந்திரனைக் கண்ட ராஜம் அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். தம்பி கெட்டு விட்டதைப் பார்த்து மனமுடைந்து வீடு திரும்புகிறான், ராஜேந்திரன். மேரி விஷயமாகத் தனக்கும் தந்தைக்கும் தகராறு ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறுகிறான் சூரியமூர்த்தி.

தாலியை விற்பதற்கு கேட்ட செல்வத்திடம் நியாயத்தை எடுத்துரைத்து அவனைத் திருந்தும்படி செய்கிறாள் ராஜம். அன்று மாலை காரில் இருவரும் புறப்பட்டுச் செல்கிறார்கள். ஒரு விபத்து ஏற்பட்டு ராஜம் இறந்து விடுகிறாள். செல்வம் தன் கை, கால்களை இழந்து காஞ்சிபுரம் சென்று அண்ணன் காலடியில் விழுந்து உயிர்
விடுகிறான்.


கருணாகரம் பிள்ளையால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட ராஜேந்திரனும், மீனாவும் வழியில் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு சென்னையை அடைகிறார்கள்.
அங்கு ரிக்ஷா இழுத்துக் கொண்டிருக்கும் சூரியமூர்த்தியை சந்திக்கின்றனர். மீனாவின் பசிக்குச் சாப்பாடு கொண்டு வரச் சென்ற சூரியமூர்த்தியைக் கருணாகரம் பிள்ளை சந்தித்து, வீடு திரும்ப வேண்டுகிறார். மறுத்து விடுகிறான் மகன். பின் தொடர்ந்த கருணாகரம் பிள்ளை, வேகமாக வந்த மோட்டாரினால் தாக்குண்டு
ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.

அங்கு நர்ஸாக இருக்கிறாள் மேரி. அவளையும், அவனையும், மணம் செய்து
கொள்ளும்படி சொல்லி உயிர் விடுகிறார் கருணாகரம் பிள்ளை.

வெகு நேரமாகியும், சூரியமூர்த்தி வராததைக் கண்ட ராஜேந்திரன் தங்கைக்கு ஆகாரம் கொண்டு வர கிளம்புகிறான். பெட்டித் தூக்கி கிடைத்த இரண்டணாவுக்கு தோசை வாங்கித் திரும்பிய ராஜேந்திரன் வழியிலே பிச்சை கேட்ட நொண்டிக்கு அந்த தோசையை கொடுத்து விட்டு திரும்பும் சமயம் ஒரு அவன் கையில் பண பர்ஸை எறிந்து விட்டு ஓடி விடுகிறான்.



திருடனை துரத்தி வந்தவர்கள் ராஜேந்திரனை திருடன் என மதித்து அடிக்கின்றனர். மீனா, தன் அண்ணன் அடிபடுவதைக் கேட்டு பொறுக்காமல் தடுமாறி ஓடி வரும்பொழுது விழுந்து இறந்து விடுகிறாள்.



மற்றவை திரையில் காண்க !


அன்பன் : சௌ செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

oygateedat
14th July 2013, 06:46 AM
http://i42.tinypic.com/21njx55.jpg

Richardsof
14th July 2013, 07:03 AM
http://i39.tinypic.com/ajqd6q.jpg

Richardsof
14th July 2013, 07:07 AM
courtesy- nadigarthilagam .com


http://i1146.photobucket.com/albums/o528/imagivity/song%20book%20covers/EnThangaiSBC_zps30e6e04e.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/song%20book%20covers/EnThangaiSBC_zps30e6e04e.jpg.html)

Richardsof
14th July 2013, 10:29 AM
courtesy- pradeepbalu sir

http://youtu.be/oIFVcdYtTic

Stynagt
14th July 2013, 11:51 AM
http://i42.tinypic.com/21njx55.jpg
நிஜ அண்ணன் தங்கையை நிழலில் கொண்டு வந்து திரையுலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய 'என் தங்கை' திரைப்படத்தின் அபூர்வ பதிவுகளை வெளியிடும் திரு. செல்வகுமார் அவர்களுக்கும், தலைவரின் புகைப்படங்களை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக நிறைய நேரம் செலவு செய்து மிகவும் நேர்த்தியாக பதிவிடும் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி...இவரது சிறந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

siqutacelufuw
14th July 2013, 11:58 AM
மக்கள் திலகத்தின் 28வது திரைப்படம் " என் தங்கை" திரைப்படத்தில் இடம் பெற்ற
பாடல்களின் முதலிரண்டு வரிகள் :


1. ஆண் - பெண் ஜோடிப்பாடல் : காதல் வாழ்விலே மகிழ்ந்தோம் - கவலை தவிர்ந்தோம்

நாம் கவலை தவிர்ந்தோம்



2. குழுப்பாடல் : தீம் தன தீம் ! தன தீம் ! தீம் தன தீம்

அழகாய் பொம்மை வைத்தே -

கொலுவைச் சிங்காரித்தே



3. ஜோடிப்பாடல் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே

ஆறு வந்து கடலில் சேருதே - வாலிபம் போலே

ஆசை வளருதே.



4. தனித்த குரலில் பெண் பாடல் : தீன தயாபரி தாயே ... அம்பா ... திருவாகும் உருவே

நீ அருள்வாய் தேவி ... மானிலமதில் நீயே கதி



5. நகைச்சுவை ஜோடிப் பாடல் : குட்லக் ! குட்லக் ! குட்லக் ! என் வாழ்விலே

(வசன நடை ) கட்டக் கந்தல் இல்லாத ஏழை

கஷ்டம் நீக்கும் , குபேரன் ஆக்கும்



6. தனித்த பெண் குரலில் சோகப்பாடல் : மீளா துயரமோ மாதா ... மனமிளகாதா

கண்களிரண்டும் இழந்தவன் பேதை



7. தனித்த குரலில் பெண் பாடல் : அன்னையே , அன்னையே , அன்னையே

அருள் தாரும் மேரி தாயே - ஊழ்வினையதாலே

நானே --- உள்ளம் உடைந்து நொந்தேன்



8. தனித்த குரலில் பெண் பாடல் : இன்பமே சிறுதும் அறியாத பெண் ஜன்மம் (பல்லவி)

துன்பம் என் வாழ்வினில் இல்லாத நாளில்லை

பேதை யாது செய்வேன் கண்ணில்லாத (சரணம்)



9. ஜோடிப்பாடல் : என் இன்ப ஜோதியே ! உன் அன்புப் பார்வையால்

இன்பத்தென்றல் எந்தன் வாழ்வில் இசைந்தே வீசுதே



10. தனித்த குரலில் ஆண் பாடல் : வாழ்வதிலும், நலம் சூழ்வதிலும் புவி மக்களெல்லாம்

ஒப்புடையார் .. ஏழ்மையில் மக்களை தள்ளுவதோ !



11. பின்னணிப்பாட்டு : வறுமைப்புயலாலே துயரக்கடல் மேவும் (தொகையறா)

கருவிலே உருவான காயம் !



================================================== ====================================




அன்பன் : சௌ செல்வகுமார்





என்றும் எம். ஜி ஆர்

எங்கள் இறைவன்

pammalar
14th July 2013, 03:14 PM
மக்கள் திலகத்தின் 28வது திரைப்படம் " என் தங்கை" பற்றிய தகவல்


1. படம் வெளியான தேதி : 31-05-1952


படத்தின் சிறப்பம்சம் :


1. அண்ணன் - தங்கை பாசத்தை அருமையாக வெளிப்படுத்தி, பின்னாளில் வெளிவந்த இதர

அனைத்து மொழி படங்களுக்கும் ஒரு முன்னோடியாக திகழ்ந்த திரைப்படம்.


2. இலங்கையில் அதிக நாட்கள் ஓடி வரலாற்று சாதனை புரிந்த படம்.


3. திருச்சி ஜுபிட்டர் அரங்கில் வெள்ளிவிழா கண்ட திரைப்படம்.


4. சென்னை - சித்ரா, பிரபாத், சரஸ்வதி மற்றும் மதுரை நியூ சினிமா, சேலம் ஒரியண்டல், கோவை அசோக் ஆகிய திரை அரங்குகளில் 100 நாட்களை கடந்த வெற்றிப்படம். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------




அன்பன் : சௌ செல்வகுமார்





என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

[b]பேரன்புக்குரிய நண்பர் பேராசிரியர் செல்வகுமார் சார்,

எப்பொழுதும் போல் புதுப்பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் மீண்டும் தாங்கள் பொன்மனச்செம்மல் Filmography திரியில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் குறித்த அரிய பதிவுகளை அளிக்கத் தொடங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வெற்றியோடு தொடரட்டும் தங்களது திருப்பணியாகிய இந்தத் திரிப்பணி ! தங்களது சேவையாலும், ஏனைய அனைவரது பங்களிப்புகளாலும் இத்திரி ஒரு தகவல் களஞ்சியமாக விளங்கப் போவது திண்ணம்.

தற்போது இடம்பெற்றுவரும் "என் தங்கை" குறித்த தகவல்கள், நிழற்படங்கள் அசத்தல் ! பாசத்தைப் பொழியும் அண்ணனாக அண்ணல் எம்.ஜி.ஆர். அவர்கள் அருமையாக நடித்திருப்பார்.

"என் தங்கை" குறித்த தங்களது முதல் பதிவில், படத்தின் சிறப்பம்சம் என்கின்ற பகுதியில், தாங்கள் அளித்துள்ள சென்னை சம்பந்தப்பட்ட புள்ளிவிவரத்தில் சில சிறுதிருத்தங்கள்:

"என் தங்கை", 31.5.1952 சனிக்கிழமையன்று சென்னை மற்றும் தென்னகமெங்கும் வெளியானது. சென்னையில் சித்ரா, பிராட்வே, சரஸ்வதி ஆகிய மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 'சித்ரா'வில் 31.5.1952லிருந்து 6.8.1952 வரை 68 நாட்கள் ஓடியது. 7.8.1952 வியாழனன்று 'சித்ரா'வில் திலீப்குமார் நடித்த "ஆன்" ஹிந்தித் திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பு வெளியானது. அதே போல், 'பிராட்வே'யில் 31.5.1952 தொடங்கி 14.8.1952 வரை 76 நாட்கள் ஓடியது. சுதந்திரத் திருநாளான 15.8.1952 வெள்ளியன்று 'பிராட்வே'யில் என்.டி.ஆர். கதாநாயகனாக நடித்த விஜயா-வாஹினியின் ஹாஸ்யச் சித்திரமான "கல்யாணம் பண்ணிப்பார்" திரைப்படம் வெளியானது. 'சரஸ்வதி'யில் 100 நாள் ஓடியதா என்பது பற்றி ஆராய்ந்துதான் கூற வேண்டும். 'சரஸ்வதி'யில் அடுத்து வெளியான படம் பற்றிய தகவல் தற்பொழுது என்னிடம் இல்லை. சித்ரா, பிராட்வே அரங்குகளிலேயே 100 நாட்களை எட்டாதபோது 'சரஸ்வதி'யில் மட்டும் 100 நாட்கள் ஓடியிருக்க வாய்ப்புகள் இல்லை அல்லது மிகமிகக் குறைவு. மேலும். சித்ரா, பிராட்வே அரங்குகளில்கூட இடையில் வேறு ஏதாவது படம் வெளியானதா என்பது பற்றியும் தகவல்கள் இல்லை. எனவே ஓடிய நாட்களை அதிகபட்சம் ஓடிய நாட்களாகவே கொள்ள வேண்டும்.

ஆக, "என் தங்கை"யின் சென்னைப் புள்ளிவிவரம் (approx.):

சித்ரா - 68 நாட்கள் (அதிகபட்சம்)
பிராட்வே - 76 நாட்கள் (அதிகபட்சம்)
சரஸ்வதி - 100 நாட்களுக்கு குறைவாக (அதிகபட்சம்)

சென்னையைப் பொறுத்தவரை, "என் தங்கை" வர்த்தகரீதியாக வெற்றிப்படம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

அன்புடன்.
பம்மலார்.

ujeetotei
14th July 2013, 07:57 PM
I had watched En Thangai in Satellite TV in early 90s. I was very astonished on the story part. As there is no action scene for our Thalaivar. MGR had mentioned that the movie had a lucrative run and the producers (Asoka Pictures) had mailed him and praised about his performance in En Thangai. And further MGR states that this is the only movie and only producer to thank him after his commitment in his entire film career.

ujeetotei
14th July 2013, 07:58 PM
MGR attended the function in Trichy for its victory day and the photo was also publihsed in Olikirathu Urimaikural magazine.

iufegolarev
15th July 2013, 10:15 PM
பேரன்புக்குரிய நண்பர் பேராசிரியர் செல்வகுமார் சார்,


"என் தங்கை", 31.5.1952 சனிக்கிழமையன்று சென்னை மற்றும் தென்னகமெங்கும் வெளியானது. சென்னையில் சித்ரா, பிராட்வே, சரஸ்வதி ஆகிய மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 'சித்ரா'வில் 31.5.1952லிருந்து 6.8.1952 வரை 68 நாட்கள் ஓடியது. 7.8.1952 வியாழனன்று 'சித்ரா'வில் திலீப்குமார் நடித்த "ஆன்" ஹிந்தித் திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பு வெளியானது. அதே போல், 'பிராட்வே'யில் 31.5.1952 தொடங்கி 14.8.1952 வரை 76 நாட்கள் ஓடியது. சுதந்திரத் திருநாளான 15.8.1952 வெள்ளியன்று 'பிராட்வே'யில் என்.டி.ஆர். கதாநாயகனாக நடித்த விஜயா-வாஹினியின் ஹாஸ்யச் சித்திரமான "கல்யாணம் பண்ணிப்பார்" திரைப்படம் வெளியானது. 'சரஸ்வதி'யில் 100 நாள் ஓடியதா என்பது பற்றி ஆராய்ந்துதான் கூற வேண்டும். 'சரஸ்வதி'யில் அடுத்து வெளியான படம் பற்றிய தகவல் தற்பொழுது என்னிடம் இல்லை. சித்ரா, பிராட்வே அரங்குகளிலேயே 100 நாட்களை எட்டாதபோது 'சரஸ்வதி'யில் மட்டும் 100 நாட்கள் ஓடியிருக்க வாய்ப்புகள் இல்லை அல்லது மிகமிகக் குறைவு. மேலும். சித்ரா, பிராட்வே அரங்குகளில்கூட இடையில் வேறு ஏதாவது படம் வெளியானதா என்பது பற்றியும் தகவல்கள் இல்லை. எனவே ஓடிய நாட்களை அதிகபட்சம் ஓடிய நாட்களாகவே கொள்ள வேண்டும்.

ஆக, "என் தங்கை"யின் சென்னைப் புள்ளிவிவரம் (approx.):

சித்ரா - 68 நாட்கள் (அதிகபட்சம்)
பிராட்வே - 76 நாட்கள் (அதிகபட்சம்)
சரஸ்வதி - 100 நாட்களுக்கு குறைவாக (அதிகபட்சம்)

சென்னையைப் பொறுத்தவரை, "என் தங்கை" வர்த்தகரீதியாக வெற்றிப்படம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

அன்புடன்.
பம்மலார்.

ஒஹ்.....அப்படியா ! ஆச்சர்யமாக இருகிறதே சார் !

இரண்டு data வுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறதே ? இதில் எது சரி ...எது திருத்தப்படவேண்டியது ?

காரணம் prof அவர்கள் தகவல் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. காரணம் அவர் prof . ஆராயாமல் வெளியிடமாட்டார் என்பது அனைவரது எண்ணம் நான் உட்பட..நீங்களும் அதே போல்தான் ...Encyclopaedia of film Data with related documents . நீங்களோ வெளிவந்த, எடுக்கப்பட்ட தேதிகளையும் அதற்க்கு பின்னர் வந்த படங்கள் பற்றிய தகவல்வரை வெளியிட்டுளீர்கள் ...ஒரே குழப்பம்...

எது எப்படியோ...தகவல் களஞ்சியம் தொடரட்டும்...அடுத்த பதிவுக்கு பதிவிறக்கம் செய்ய காத்திருக்கும் சுப்பு..!

siqutacelufuw
16th July 2013, 09:52 AM
மக்கள் திலகத்தின் 29வது திரைப்படம் " நாம்" படம் பற்றிய தகவல்

1. படம் வெளியான தேதி : 05-03-1953

2. படத்தை தயாரித்த நிறுவனம் : ஜுபிடர் பிக்சர்ஸ் & மேகலா பிக்சர்ஸ்
3. கதாநாயகன் : மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : குமரன்
5. பாடல்கள் : மு கருணாநிதி
6. கதை வசனம் : மு கருணாநிதி
7. இசை அமைப்பு : சிதம்பரம் எஸ். ஜெயராமன்
8. இயக்குனர் : ஏ. காசிலிங்கம்
9. படத்தில் பங்கு பெற்ற இதர கலைஞர்கள் : எம் ஜி சக்கரபாணி, பி. எஸ். வீரப்பா, எம். என். நம்பியார், எம். எம். ஏ. சின்னப்பா தேவர், வி. என். ஜானகி, பி. கே. சரஸ்வதி, எஸ். ஆர் ஜானகி, எம். எஸ். எஸ். பாக்கியம் உட்பட மற்றும் பலர்.

குறிப்பு : இத்திரைப்படம் காஷியின் "காதல் கண்ணீர்" என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டது.

இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.

http://i42.tinypic.com/8xtvd5.jpg



அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

oygateedat
16th July 2013, 10:58 AM
http://i41.tinypic.com/2r2u98y.jpg

oygateedat
16th July 2013, 11:01 AM
http://i40.tinypic.com/2ikw36r.jpg

oygateedat
16th July 2013, 11:04 AM
http://i41.tinypic.com/2mgmctd.jpg

oygateedat
16th July 2013, 11:07 AM
http://i43.tinypic.com/2njx3xl.jpg

siqutacelufuw
16th July 2013, 01:15 PM
மக்கள் திலகத்தின் 29வது திரைப்படம் " நாம்" திரைப்படத்தின் கதைச் சுருக்கம் :

நமக்காகப் பணி புரிய உலகிலே எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். அவர்களில் பலரை நாமே அழித்து விட்டோம். இந்தக் கொடுமைக்குப் " பிரயாச்சித்தமே" கிடையாதா ? உண்டு !இனியும் தொடர்ந்து அந்த செயலில் ஈடுபடக் கூடாது. அவர்கள் செத்தாலும் அவர்கள் கொள்கையை சாக விடக்கூடாது.



இந்த உண்மையையுரைக்கும் வாலிபனாகத்தான் குமரன் பகுத்தறிவுபுரியில் நடை போட்டான். மக்களை வாழ்விக்க எண்ணம் கொண்ட அந்த மறுமலர்ச்சியாளனின் வாழ்வு அவிழ்க்க முடியாத சிக்கலாயிருந்தது. அவன் ஆசைக் கோபுரத்துக்கு அடித்தளம் அமைக்க ஒரு அருமையான ஆதாரம் இருந்தது.



அதுதான் ஜமீன் சொத்துக்கு உயில் இந்த உயிலை மறைத்து விட்டு உப்பரிகையில் உலவினான் ஒரு உன்மத்தன். மலையப்பன் எனும் மனித மிருகம் உயிலைக் கைப்பற்றி சதி விளையாட்டுக்களில் மூளையை செலவிட்டான், ஞ்சீவி என்ற வைத்தியன். சஞ்சீவி ஒரு அழகான பெண்ணுக்கு தகப்பன். அந்த பெண் பிரேமாவை குமரனுக்கு மணம் செய்து வைத்து பிறகு உயிலையும் குமரனிடம் தந்து மகளை ஜாமீன்தாரிணியாக்க கனவு கண்டான் சஞ்சீவி. ஆனால், குமரனின் இதயங் கவர்ந்தவள் மீனா. அவள் மலையப்பனின் தங்கை.


குமரன், தனக்குச் சொந்தமான சொத்து ஒரு சூதுக்காரனால் சுருட்டிக் கொள்ளப்பட்டது என்பதை மரணப் படுக்கையில் விழுந்த மாதாவின் வாயிலாக அறிகிறான். மலையப்பனின் சூழ்ச்சியால் மாதாவைப் பறி கொடுத்த குமரன் சூழ் நிலையின் சாகசத்தால் மீனாவை சந்தேகிக்கிறான். வைத்தியனிடம் உயிலைப் பற்றிக் கேட்கிறான்.


"வழக்கு நடத்த பணம் தேடு, பிறகு உயிலைத் தேடு" என யோசனை சொல்லுகிறான் அந்த வஞ்சகன்.

பிரேமாவை குமரன் மணந்தால்தான் உயிலை அவனிடம் தருவது என்ற முடிவுள்ளவன் சஞ்சீவி. குமரன் வெளியூர் செல்கிறான். குத்துச்சண்டை வீரனாகிறான். அவனை சாய்த்து விட சதி பண்ணுகிறான் மலையப்பன். குமரன் தப்புகிறான். குமரன் மீதுள்ள காதலால் பிரேமா தந்தையிடமுள்ள உயிலை கொண்டு வந்து தருகிறாள். அதற்குப் பரிசாக காதல் முத்தம் கேட்கிறாள். அவனோ, சகோதரி என அழைக்கிறான்.


குமரனிடம் உயில் கிடைத்தது தெரிந்த மலையப்பன் குடிசைக்கு தீ வைக்கிறான். குமரன் இறந்து விட்டதாக ஊரிலே பேச்சு. ஆனால், அவன் வைத்தியன் வீட்டிலே ரகசியமாக பாதுகாக்கப்படுகிறான். குமரனிடம் உயில் இல்லை இப்போது. எரிந்து விட்டதாகக் கூறுகிறான். ஆனால், உயில் மீனாவிடம் கிடைத்தது யாருக்கும் தெரியாது. குமரன் ஜமீன்தாராக முடியாது எனக் கண்ட வைத்தியன் பிரேமா - குமரனைக் காதலிக்கக் கூடாது எனத் தடுக்கிறான். பிரேமா கேட்க வில்லை அந்தக் காதலை, முறிப்பதற்காக குமரன் முகத்தை விகாரப் படுத்துகிறான் வைத்தியன்.

விகாரமடைந்த குமரன் வெளியில் கிளம்ப வெட்கப்பட்டு, இரவிலே திரிகிறான். ஊரிலே பிசாசு பிரச்சாரம் பரவுகிறது. அந்தப் பயங்கரப் பிரச்சாரத்திலிருந்து குமரன் தப்புகிறான். மக்களுக்கு தொண்டாற்றுகிறான். சிறையும் செல்கிறான்.

அந்த நேரத்தில், நேர்மையற்றோர் கிளம்பி மக்களைப் பழைய பாதைக்குத் திருப்புகிறார்கள். மக்களுக்காக ஊழியம் செய்தவணை மக்களே எதிர்க்கிறார்கள். ஆம், நம்மை நாமே எதிர்க்கும் கொடுமை நடைபெறுகிறது.

இதன் முடிவுதான் என்ன ?

எதிர்த்தவர்கள் இன்ப வாழ்த்துக்கள் கூறினார்கள்.

================================================== ============================

"நாம்" திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள் தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

Stynagt
16th July 2013, 04:52 PM
இடையறாது பணியிலும் இதய தெய்வத்தின்
இயற்கை பரிணாமங்களை இணையில்லா அழகுடன்
இடைவிடாது இங்கே பதிவிடுவதில் இன்பம் காணும்
இனிய நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு
இதயங்கனிந்த நன்றி ! நன்றி !

புரட்சித்தலைவரின் பொக்கிஷங்களை பொன்போல்
பாதுகாத்து வைத்திருக்கும் பேராசிரியர் செல்வகுமார்
அவர்களுக்கும் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் ரசிகர்கள்
சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்....

Richardsof
16th July 2013, 05:20 PM
http://i39.tinypic.com/2rwnadv.jpg

Richardsof
16th July 2013, 05:24 PM
the hindu -review

M.G. Ramachandar, V.N. Janaki, M.N. Nambiar, P.S. Veerappa, M.G. Chakrapani, P.K. Saraswathi, S.R. Janaki, R.M. Sethupathi, S.M. Thirupathisami, T.M. Gopal, M. Jayashree, A.C. Irusappan, M.M.A. Chinnappa (Chinnappa Thevar), D.K. Chinnappa

During the 1950s, M.G. Ramachandran spelt his name as Ramachandar for a short period in his movies, and Naam was one of them. He felt Ramachandar sounded stylish. Besides, he wanted to distinguish himself from another popular actor of that period, T.R. Ramachandran.

Naam was a joint venture of Jupiter Pictures and Mekala Pictures, in which Mu. Karunanidhi, Rajaram (a noted film journalist), MGR and Janaki were partners. Karunanidhi wrote the screenplay, dialogue and lyrics, based on the story Kaadhal Kanneer (Tears Of Love) by Kashi, a talented screenwriter who is today forgotten.

The story revolves around Kumaran (MGR), a young man with progressive views about life and society. He’s the heir to a zamindari estate, which he learns from his mother in her death bed. However, the will and the related testament are hidden by a vicious Malayappan (Veerappa). A rural doctor Sanjeevi (M.G. Chakrapani) is also interested in the property and wants his daughter (Saraswathi) to marry Kumaran. But, Kumaran is in love with Malayappan’s sister Meena (Janaki). But when she gets possession of the will, Kumaran suspects her intentions, and leaves the village. In the city, he becomes a boxing champion. Meanwhile, Malayappan sets fire to Kumaran’s house and people assume he’s dead, but he is saved by Meena. More complications arise about the missing will, and simultaneously, the boxer, whose face is disfigured, moves around at night, giving rise to rumours about a ghost in the village. However, the truth is finally revealed, and the lovers are united.

A. Kasilingam, a talented editor too, directed the film and held good control over the film and its narration. The film’s music was composed by noted singer Chidambaram S. Jayaraman (of ‘Indru Poyi Naalai Vaa…’ fame). Besides Jayaraman, singers including Nagoor Hanifa, A.M. Raja, Jikki, M.L. Vasanthakumari, A.P. Komala, K.R. Chellamuthu and T.R. Gajalakshmi lent their voices. Despite this line-up and meaningful lyrics, the songs did not become popular.


Remembered for: The interesting storyline, meaningful dialogue, impactful direction, good performances by MGR, Chakrapani, Veerappa, Janaki and Saraswathi.

ujeetotei
16th July 2013, 10:39 PM
Naam movie release with theater names.



http://i125.photobucket.com/albums/p49/kannantheking/naam_1_zpse96e52ec.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/naam_1_zpse96e52ec.jpg.html)

Forwarded by Olikirathu Urimaikural Editor B.S.Raju

ujeetotei
16th July 2013, 10:43 PM
Another ad

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/naam_2_zps62528024.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/naam_2_zps62528024.jpg.html)

ujeetotei
16th July 2013, 10:59 PM
Naam movie print is not available. Before 1982 most of my family members have watched this movie in Vijaya Talkies Arumbakkam. My brother has told me that the movie is not with MGR formula, MGR gets beaten mostly, he suffers a lot.

The movie was produced by MGR, M.G.C., P.S.Veerappa and Karunanidhi all were partners, after watching the rush MGR told the movie is missing in entertainment, all of them was against MGR's words but finally the movie not fared in box office. Though MGR performance was superb than En Thangai. The scene (image provided by Tirupur Ravichandran) were MGR face burnt was the highlight of the movie. My brother told me the scene were MGR shows his pain while face was disfigured and the subsequent scenes having difficulty in showing his face to people, his reaction was awesome. My brother had not witnessed such a emotional acting from other MGR movies. This movie showcased MGR's acting performance.

I had the opportunity to handle the above image, chance given by MGCB Pradeep. MGR was lying in the platform to his right will be M.G.Chakrapani. There is also another image from this movie. This image is from recently published MGR album.

siqutacelufuw
17th July 2013, 05:28 PM
மக்கள் திலகத்தின் 29வது திரைப்படம் " நாம்" திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள்



1. குழுப்பாடல் : மாரி மகமாயி மாரி மகமாயி
ஆயி எங்கள் காளியம்மா

2. தனித்த ஆண் குரல் பாடல் : ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகான் - பல்லாயிரம் வேதம்

3. காதல் ஜோடிப்பாடல் : பேசும் யாழே ... பெண் மானே
வீசும் தென்றல் நீதானே ... நீல வானே

4. தனித்த குரலில் பெண் பாடும் பாடல் : மணமில்லா மலர் நானம்மா ! மாதர் உலகில்
வாழ்வே அறியா மணமில்லா மலர் நானம்மா !


5. தனித்த குரலில் பெண் பாடும் பாடல் : பேசும் யாழே ... பெண் மானே
(சோகத்தில் மீண்டும் பாடுவது) வீசும் தென்றல் நீதானே ... நீல வானே

6. கிராம வாசிகள் பாடும் கோரஸ் பாடல் : ஹா! ஹா! வருவாய் வருவாய்
வைபோக சுந்தரியே

7. கதாநாயகன் கிராம வாசிகளுடன் பாடும் பாடல் புதியதோர் பாதை வகுப்போம் ..... நாம் கெட்ட போரிடும் பாதையை சாய்ப்போம்... நாம்

8. தனித்த ஆண் குரல் பாடல் : வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ... அருமை
மிகுந்த எங்கள் அறிஞர் அண்ணா வாழ்கவே !


9. பின்னணிப்பாடல் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ...
பகையும் பழியும் பாம்பெனத் தீண்டும் உலகில் ================================================== ============================


அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

idahihal
19th July 2013, 10:45 PM
நாம் திரைப்படம் மக்கள் திலகம் தம் துணைவியார் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து நடித்த கடைசி படம். மக்கள் திலகம் கலைஞர், காசிலிங்கம், பி.எஸ்.வீரப்பா, ஆகியோருடன் கூட்டாகச் சேர்ந்து தயாரித்த கடைசிபடம். ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை. உரிமைக்குரல் மாத இதழ் வெளியிட்ட வெற்றி சரித்திரம் வீடியோ சிடியில் இன்னமும் சில அபூர்வமான புகைப்படங்கள் உள்ளன. மற்றபடி படத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பு மிக மிக அற்புதமாக இருக்கும். ஆனால் படம் எம்.ஜி.ஆர் படங்களைப் போல விறுவிறுப்பாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இல்லை என்று எனது தந்தை இப்படம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1988ஆம் ஆண்டு வரை இதன் நெகடிவ் மற்றும் விசிஆர் கேசட் பிரதிகள் நல்ல நிலையில் இருப்பதாக தேவி வார இதழில் ஒரு கட்டுரை வந்தது. விசிடியாக உள்ளதாக என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும் மக்கள் திலகம் ஒரு வினாடி மட்டுமே தோன்றும் காட்சியாக இருந்தாலும் அவை யாவும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். மக்கள் திலகத்தின் அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள். இந்தப் பொக்கிஷங்களைத் தேடிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இந்த அபூர்வ புகைப்படங்கள் அல்லது விடியோக்கள் வைத்திருப்போர் தகவல் தெரிவிக்கவும்.

idahihal
21st July 2013, 02:40 PM
http://i39.tinypic.com/4awi.jpg
நாம் படத்தில் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களுடன் நம் தலைவர்

idahihal
21st July 2013, 02:42 PM
http://i40.tinypic.com/2dhw55x.jpg

idahihal
21st July 2013, 07:02 PM
http://www.raaga.com/a/?t0001485
நாம் திரைப்படப் பாடலின் இணைப்பு மேலே தரப்பட்டுள்ளது.

Richardsof
22nd July 2013, 10:15 AM
அருமை நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின்

அயராத உழைப்பில் பொன்மனச்செம்மலின் திரைப்பட

பட்டியல் படி வரிசையாக படங்களின் கதை சுருக்கம் ,பாடல்கள்

மற்றும் இதர விபரங்கள் என்று பதிவிட்டு வரும் இந்த இனிய

தருணத்தில் பொன்மனச்செம்மல் திரிக்கு 5 நடசத்திர அந்தஸ்து

கிடைத்துள்ளது என்று பெருமையுடன் தெரிவித்து

கொள்கின்றேன் .

siqutacelufuw
22nd July 2013, 10:27 AM
அருமை நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின்

அயராத உழைப்பில் பொன்மனச்செம்மலின் திரைப்பட

பட்டியல் படி வரிசையாக படங்களின் கதை சுருக்கம் ,பாடல்கள்

மற்றும் இதர விபரங்கள் என்று பதிவிட்டு வரும் இந்த இனிய

தருணத்தில் பொன்மனச்செம்மல் திரிக்கு 5 நடசத்திர அந்தஸ்து

கிடைத்துள்ளது என்று பெருமையுடன் தெரிவித்து

கொள்கின்றேன் .


]Dear Vinoth Sir,

I am happy to note that this Thread was awarded with 5 Star Status, within short span of time. But for the unstinted co-operation of all Thread users and Viewers, this would not have been possible.

I am grateful and thankful to all concerned. [/SIZE]

எல்லாப் புகழும் எங்கள் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களுக்கே !


அன்பன் :


சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
23rd July 2013, 06:09 PM
மக்கள் திலகத்தின் 30வது திரைப்படம் " பணக்காரி " படம் பற்றிய தகவல்
1. படம் வெளியான தேதி : 01-05-1953

2. படத்தை வெளியிட்ட நிறுவனம் : உமா & ஓம் பிலிம்ஸ்

3. கதாநாயகன் : வி.நாகையா

4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : சுந்தர்

5. பாடல்கள் : பாபநாசம் சிவன், ராமையாதாஸ், லட்சுமணதாஸ், குயிலன்

6. இசை அமைப்பு : எஸ். வி., வெங்கட்ராமன்

7. இயக்குனர் : கே. எஸ். கோபாலகிருஷ்ணன்

8. படத்தில் பங்கு பெற்ற இதர கலைஞர்கள் : ஜாவர் சீத்தாராமன், சி. வி. வி. பந்துலு, டி.எஸ். துரைராஜ், கே.ஏ. தங்கவேலு, டி.ஆர். ராஜகுமாரி, கே. ஆர். செல்லம்., டி.எஸ். ஜெயா, குமாரி பாரதி, கே. எஸ். தங்கமுத்து, மற்றும் பலர்.


குறிப்பு :

இப்படத்தில் நமது பொன்மனச்செம்மல் வில்லனாக நடித்திருப்பார்


இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.



அன்பன் : சௌ. செல்வகுமார்



என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன்

siqutacelufuw
23rd July 2013, 06:10 PM
"பணக்காரி" படத்தில் நம் மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் - நடிகை டி.ஆர். ராஜகுமாரியுடன்

http://i41.tinypic.com/28sprfn.jpg

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
23rd July 2013, 06:36 PM
Leo Tolstoy’s classic ‘Anna Karenina’ was made into a Hollywood movie in 1935 by Clarence Brown with the iconic star Greta Garbo playing Anna. It was filmed earlier as a silent movie in 1928 named Love, again with Greta Garbo as Anna and the ‘great lover’ John Gilbert in the male lead. The novel and the 1935 Hollywood version were popular in India and the story was filmed in Tamil in 1953 as Panakkari by K. S. Gopalakrishnan (the maker of Chakradhari) under the technical supervision of the renowned Newtone Studio founder-cinematographer-filmmaker, Jiten Bannerjee.
http://i44.tinypic.com/xnf2id.jpg
T. R. Rajakumari, the then dream girl, played the Tamil Anna and Chittoor V. Nagaiah as the suspecting husband who ill-treats her for being friends with an army officer (M. G. Ramachandran). The original story of misunderstanding between the couple due to the wife’s friendship with another man was more or less followed in the Tamil version. MGR’s role was somewhat villainous. While old timers ‘Javert’ Seetharaman and C. V. V. Panthulu played their supporting roles effectively, Mangalam, the woman the army man discards was also impressive. In a sequence, Panthulu (playing an elderly husband) carrying on with his young daughter’s attractive dance teacher, signals her to come up to his bedroom, leaving the daughter to dance to a gramophone record! While the dancer is busy upstairs, the gramophone record which has a crack, goes on playing the same word, hearing which the wife rushes out of the kitchen and catches the husband and the dance teacher red-handed. Though this sequence is hilarious, the moviegoers in those days thought it was in bad taste. There is also another scene the Tamil audience didn’t relish much — the husband (Nagaiah) introduces his lovely wife (Rajakumari) to his army friend and the man and the woman shake hands. It was also why the public rejected the movie, despite its impressive cast and production values.

The film had pleasing music (S. V. Venkataraman) with lyrics by Papanasam Sivan, Thanjai Ramaiah Das, Lakshmana Das and Kuyilan. Gopalakrishnan, a graduate, took part in the Freedom Movement and also worked in movies. He was associated with S. S. Vasan and directed the Gemini Studios’ box office hit of 1948, Chakradhari. Though he made a few films, he didn’t meet with much success. He is scarcely remembered today and many mistake him for the other K. S. Gopalakrishnan, a successful Tamil filmmaker.

However, Panakkari failed at the box office, mainly because of its ‘anti sentimental’ storyline. During the same period, another film, Pitchaikkari, a remake of a Malayalam film, proved a major hit and gave rise to a joke in the Madras movie circles —‘Those who bought Panakkari became pitchaikkaarans (beggars), while buyers of Pitchaikkari became panakkarans (rich men)!

Remembered for its different storyline, high production values and impressive performances by Nagaiah, Rajakumari and MGR.

RANDOR GUY

courtesy- the hindu

Stynagt
23rd July 2013, 07:09 PM
அருமை நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின்

அயராத உழைப்பில் பொன்மனச்செம்மலின் திரைப்பட

பட்டியல் படி வரிசையாக படங்களின் கதை சுருக்கம் ,பாடல்கள்

மற்றும் இதர விபரங்கள் என்று பதிவிட்டு வரும் இந்த இனிய

தருணத்தில் பொன்மனச்செம்மல் திரிக்கு 5 நடசத்திர அந்தஸ்து

கிடைத்துள்ளது என்று பெருமையுடன் தெரிவித்து

கொள்கின்றேன் .
நம் நட்சத்திர நாயகனின் திரிகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் ஆகிய இரண்டும் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற செய்தி தேனினும் இனிய செய்தி..இந்த தகுதி பெற அயராது பாடுபட்ட பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு.வினோத், திரு.ரவிச்சந்திரன், திரு. ஜெய்ஷங்கர், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. மாசானம், திரு. ரூப், திரு. சைலேஷ் பாபு, திரு. எம்ஜிஆர் பாஸ்கரன் மற்றும் நம் திரியின் அனைத்து நண்பர்களுக்கும், மேலும் இந்த திரியை பார்த்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும், நம் இதய தெய்வத்தின் பக்தர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் .எம்ஜிஆர்.

ujeetotei
23rd July 2013, 08:35 PM
MGR acted in the role of Count Vronsky that is the Army Officer in Panakari.

ujeetotei
23rd July 2013, 08:38 PM
தலைவர் தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத கதை அமைப்பில் நடிததற்கு காரணம் வயிற்று பிழைப்புக்காக என்று தன்னுடைய வாழ்கை வரலாற்றில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ujeetotei
23rd July 2013, 08:47 PM
Image from Panakari
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/panakari1_zps09e6903a.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/panakari1_zps09e6903a.jpg.html)

From B.S.Raju magazine.

ujeetotei
23rd July 2013, 08:48 PM
Another Image from Panakari

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/panakari2_zps5c103d39.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/panakari2_zps5c103d39.jpg.html)

idahihal
25th July 2013, 12:39 AM
அன்பு செல்வகுமார் சார் அவர்களுக்கு,
தாங்கள் பொக்கிஷமாக வைத்துள்ள பொன்மனச்செம்மல் அவர்களது படங்கள், பாடல்கள் பற்றிய விபரங்கள், கதைச்சுருக்கம் ஆகியவற்றை அழகுற பதிவிட்டு மாபெரும் சேவை செய்து வருகிறீர்கள். ஒரு சிறு வேண்டுகோள். அந்தப் பாடல்களை எழுதிய கவிஞர் தம் பெயரினையும் பாடலினைப் பாடிய பின்னணிப் பாடகர்கள் பற்றிய விபரங்களையும் சேர்த்து வெளியிட வேண்டுகிறேன்.

idahihal
25th July 2013, 12:51 AM
பணக்காரி படம் மக்கள் திலகம் வில்லனாக நடித்த படம் என்பதைத் தவிர வேறு விபரங்கள் எதுவும் தெரியவில்லை. வில்லன் பாத்திரமாக இருப்பினும் சமூக அவலங்களைச் சாடும் ஒரு பாத்திரமாக இது அமைந்திருந்தது என்று ஒரு பத்திரிக்கையில் படித்த ஞாபகம். எந்த சூழ்நிலையில் இந்தப் படத்தினை தலைவர் ஒப்புக் கொண்டார். கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பா போன்ற விபரங்களை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். ஏனென்றால் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பின் இப்படி ஒரு பாத்திரத்தை அவர் ஏற்றிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். செல்வகுமார் சார் தான் இது பற்றி விளக்க முடியும். ஆவலுடன் ... ... ... பல படங்கள் கதாநாயகனாக நடித்த பின் வயிற்றுப் பிழைப்பிற்காக இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டிருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். பின்னணியினை விளக்கவும்.

oygateedat
26th July 2013, 06:13 PM
http://i43.tinypic.com/hvw4zk.jpg

oygateedat
26th July 2013, 06:25 PM
http://i41.tinypic.com/ioq614.jpg

siqutacelufuw
26th July 2013, 06:26 PM
மக்கள் திலகத்தின் 30வது திரைப்படம் " பணக்காரி " படத்தின் கதைச்சுருக்கம் :

ஆண்களுடன் சகஜமாகப் பழகுவதிலே எவ்வளவு ஆபத்திருக்கிறதென்று பிரேமா ஆலோசிக்க வில்லை. ஆழ்ந்து சற்று சிந்தித்திருப்பாளேயானால், தன் கணவன் பாலு தன்னை அவ்வாறு சகஜமாக பழகும்படி சொன்ன போதே அதற்கு அணை போட்டு தடுத்திருப்பாள்.

பாவம் ! பிரேமா பேதமின்றி பழகினாள். ஆனால், பாலு அதைச் சந்தேகித்தார். சூழ்நிலைகள் அப்படி சதி செய்து விட்டன. இதனால் அவர்கள் வாழ்க்கையிலேயே ஒரு பெரிய சூறாவளி தோன்றியது.

அமைதி நிலவிய அவர்கள் குடும்பம் அலங்கோலமாகப் போய்விட்டது. இதை விதியின் விளையாட்டென்பதா அல்லது வீண் பழியால் ஏற்பட்ட விபரீதம் என்று முடிவு கட்டுவதா ?


இல்லா விட்டால், தவறான எண்ணம் ஏதுமின்றி சுந்தர் என்ற பள்ளித் தோழனோடு, ஒரு நண்பன் என்ற முறையில் பிரேமா பழகி வந்ததை பாலு சந்தேகிப்பாரா ? அவர் தானே சுந்தரை டீ சாப்பிட வீட்டிற்கு அழைத்தார் ? அது முதல் அவளும் சுந்தரும் அடிக்கடி சந்திக்கலானார்கள். ஆனால், அவள் தூய்மையாகப் பழகுவதைப் போலவே சுந்தரும்

பழகுவான் என்று அவள் நினைத்தாள். ஒரு சமயம், சுந்தர் சற்று வரம்பு மீறிப் போன போது அவள் அழைத்து கண்டித்தாள். ஆனால், பாலு அவளுக்கும், சுந்தருக்கும் கள்ளக் காதல் இருப்பதாக குற்றம் சாட்டினார். விசித்திரம் தான்.

அவரென்ன செய்வார் பாவம் ! வம்பளக்கும், உலகம், வதந்திகளை உலவ விட்டது. அவருக்கு, உண்மை நிலை புரியாமல் போய் விட்டது. அதனால்தான் அவர் அவளைக் கண்டித்தார். அவள் சுந்தரைப் பார்க்கவோ அவனோடு பேசவோ கூடாது என்று கட்டளையிட்டார்.

அந்தக் கட்டளையை மீறும் நோக்கத்தோடு, பிரேமா மறுபடியும் சுந்தரைப் பார்க்கப் போக வில்லை. சுந்தர் குதிரையிலிருந்து விழுந்து, ஆபத்தான நிலையில் இருக்கிறான் என்று தகவல் கிடைத்ததும், நண்பனைப் பார்த்து விட்டு வரலாம் என்றுதான் அவள் போனாள். ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல், தப்பர்த்தம் செய்து கொண்டு அவளை வீட்டை விட்டே துரத்தி விட்டார் பாலு. பெற்ற பிள்ளையையும், தன்னுடன் அனுப்ப மறுத்து விட்டார். பரிதாபம். ! அவளைத் தொடர்ந்த வீண் பழி, அத்துடன் நின்றதா ! இல்லை !


பிரேமா ஒரு விபத்திற்குள்ளாகி தன் சிநேகிதி உஷா வீட்டில் சிகிச்சை பெற்று வருவதையறிந்த சுந்தர் அவள் வைத்தியப் பொறுப்பை, தான் ஏற்றுக் கொள்கிறான். இதனால், ஊர் வம்பு வரம்பு மீறி வளர்ந்து விடுகிறது. பிரேமா குணமடைகிறாள்; சுந்தர் தனது உண்மை குணத்தைக் காட்டுகிறான். அப்போதுதான் அவனைப் புரிந்து கொள்கிறாள் பிரேமா. உடனே, அங்கிருந்து தனது அண்ணன் வீட்டிற்கு செல்கிறாள்.

ஆனால், அங்கு அண்ட இடமின்றி விரட்டினாள், அவள் அண்ணி. புகலிடம் இல்லாத பிரேமா அங்கிருந்து புறப்படுகிறாள். .

பிரேமாவின் வாழ்க்கையை மட்டுமா கொந்தளிக்க வைத்தான் இந்த சுந்தர் ? பத்மா என்ற பெண்ணின் வாழ்விலும், இவனால் எத்தனை அலை மோதல்கள் ! இல்லா விட்டால், பூபதிக்குப் போட்டியாக சுந்தர் வருவானா ? இதைக்கண்டு பூபதி மனமுடைந்து சென்று விடுவானா ?

போட்டியாகத் தான் வந்தானே ! ஒரு நிலையில் இருக்கக் கூடாதா ? புஷ்பத்திற்குப் புஷ்பம் தாவும் பட்டாம் பூச்சியைப் போல பிரேமாவைப் பார்த்ததும், சுந்தர் அவளைப் பின் தொடர்ந்து செல்லவா வேண்டும் ?

மற்ற விவரங்கள் திரையில் .

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
26th July 2013, 06:53 PM
'பணக்காரி' என்ற ஒரு படத்திலே நடித்தேன். 'அன்னாகரினா' என்ற ரஷிய நாவலை மொழி பெயர்த்து தயாரித்த படம். அதில் நான் வில்லனாக நடித்தேன். இன்னொருவர் மனைவியை காதலிக்க்கிறேன். அவளும் விரும்புகிறாள். 'அன்னாகரினா' கதையில் மாற்றம் செய்து க்ளைமாக்ஸ் முடித்தோம் என்று மக்கள் திலகம் பணக்காரி படம் பற்றி கூறியதாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

oygateedat
26th July 2013, 07:46 PM
http://i44.tinypic.com/ornwo7.jpg

oygateedat
27th July 2013, 06:16 AM
http://i41.tinypic.com/2yudez7.jpg

siqutacelufuw
31st July 2013, 05:34 PM
பொன்மனச்செம்மல் நடித்த 30வது திரைப்படமாகிய "பணக்காரி" படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள் :




1. ஜோடிப்பாடல் : கனி மதுர மழலை மொழி கண்ணே ! எங்கள்
ஆசை அமுதே ! வாழ்வில் இன்பம் பெருக

2. குழுப்பாடல் : பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்போடு நாம் பாடக் கண்களிலே

3. அறிவுரைப் பாடல் : காலம் தெரிந்து வாழ வேண்டும் பெண்ணே !
பருவ காலம் ....சீலம் நிறைந்து வாழ வேண்டும்

4. ஆனந்தப் பாடல் : பியூட்டியிலே போட்டியிலே பத்மா - பர்ஸ்ட்
பர்சனாலிட்டியிலெ

5. தனித்த குரலில் பெண் பாடல் : சுந்தரின் சோடியாய் விளங்குவேன்
வாழ்விலே மே தினி மேலே
மனம் நினைப்பதெல்லாம் பெறுவேன்

6. தனித்த குரலில் பெண் பாடல் : கலையில் இன்பம் காணுமே கவலை எல்லாம்
மறந்திடவே - அவனியில் அமுத கான

7. ஜோடிப்பாடல் : அவனியிலே இயற்கை எழில் போல ஆனந்தம்
வேறில்லையே ! அழகினிலே பிரேமா
உன்னைப்போல


8. தனித்த குரலில் ஆண் பாடல் : அம்மா வென்றே நீ அழைத்திடும் குரலிலே
பெற்ற அன்னையிலும் அன்பே பொங்குதே


9. தனித்த குரலில் பெண் பாடல் : உலக இயல்பு இதுவே ... மாநில தெய்வ அருள்
ஒன்றே என்றும் நம் துணையாமே !


10. சோகப்பாடல் : நீதி எங்கே -- அநீதி எங்கே ? நினைத்துப் பாராமலே
நிந்தனை பேசிடும் உலகத்திலே பெண்கள்


================================================== ===========================

ஓங்குக எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். புகழ் !

அன்புடன் :

சௌ..செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
31st July 2013, 06:08 PM
பொன்மனச்செம்மல் நடித்த 31வது திரைப்படமாகிய "ஜெனோவா" படத்தினைப் பற்றிய தகவல் :
1. படம் வெளியான தேதி : 05-06-1953
2. படத்தை தயாரித்த நிறுவனம் : சந்திரா பிக்சர்ஸ், ஆலப்புழை
3. கதாநாயகன் : மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : சிப்ரஸோ
5. பாடல்கள் : சுரதா, ரமணி
6. இசை அமைப்பு : விஸ்வநாதம், ஞானமணி, கல்யாணம்
7. வசனம் : சுரதா, இளங்கோவன், நெடுமாறன்
8. இயக்குனர் : எப். நாகூர்
9. கதை - ஸ்வாமி பிரம்மவரதன்
10. படத்தில் பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : பி. எஸ். வீரப்பா, எம். ஜி. சக்கரபாணி, ஆர். பாலசுப்ரமணியம்
பி. எஸ். சரோஜா, ஜுனியர் கண்ணாம்பா, ராஜாமணி ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++

படத்தின் சிறப்பம்சம் :


1. மக்கள் திலகத்தின் படத்துக்கு முதல் முறையாக எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படம்.

2. இதே கதையை தழுவி, மலையாள மொழியிலும் எடுக்கப்பட்டது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.


அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

oygateedat
31st July 2013, 07:33 PM
http://i42.tinypic.com/33beqdd.jpg

oygateedat
31st July 2013, 09:04 PM
http://i40.tinypic.com/122lrac.jpg

oygateedat
31st July 2013, 09:34 PM
http://i40.tinypic.com/2aagfus.jpg

oygateedat
31st July 2013, 09:38 PM
http://i41.tinypic.com/9k2v09.jpg

Richardsof
1st August 2013, 05:35 AM
http://i39.tinypic.com/302xgg0.jpg


http://i41.tinypic.com/1zxtt6x.jpg

ujeetotei
1st August 2013, 01:37 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/j_theaters_zpsf34f8893.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/j_theaters_zpsf34f8893.jpg.html)

Clear ad for Jenovah.

ujeetotei
1st August 2013, 01:38 PM
MGR Image from Jenovah

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/j_1_zpsec8bf0c0.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/j_1_zpsec8bf0c0.jpg.html)

ujeetotei
1st August 2013, 01:39 PM
Another image.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/j_2_zpsfe2e087e.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/j_2_zpsfe2e087e.jpg.html)

oygateedat
3rd August 2013, 05:24 PM
http://i40.tinypic.com/v8g976.jpg

idahihal
5th August 2013, 12:59 AM
ஜெனோவா திரைப்படம் இன்றைக்கும் பார்த்து மகிழலாம். வெளியீடு மாடர்ன் சினிமா டிவிடி வடிவில்.

siqutacelufuw
5th August 2013, 06:28 PM
பொன்மனச்செம்மல் நடித்த 31வது திரைப்படமாகிய "ஜெனோவா" படத்தின் கதைச்சுருக்கம் :


பிரபந்த தேசத்து இளவரசி ஜெனோவா தன் தோழிகளுடன் கோச்சு வண்டியில் உல்லாசமாகப் பாடிக்கொண்டு போகிறாள். அச்சமயம், குதிரைகள் கட்டுக்கடங்காமல் போய் விடவே, அவர்களுக்குப் பின் வந்து கொண்டிருந்த ஆர்தீன தேசத்து அரசன் சிப்ரஸோ குதிரைகளை நிறுத்தி இளவரசியையும், அவளது தோழிகளையும் காப்பாற்றுகிறான்.

தன் நன்றிக்கு அறிகுறியாக இளவரசி ஒரு மாலையை பரிசளிக்க, அரசன் தன்னை இன்னாரென்று தெரிவிக்காமல் தனக்கு பரிசு வேண்டாமெனச் சொல்லுகிறான். இளவரசி மறுபடியும் அவனை நிர்ப்பந்திக்க, சிப்ரஸோ அப்பரிசை வாங்கிக் கொண்டு தன் மந்திரி கோலோவுடனும், தன் பரிவாரங்களுடனும் கலந்து கொள்கிறான்.

ஆர்தீன தேசத்து மந்திரி கோலோ, அரசர் பிரபானந்தரை அவரது அரண்மனையில் சந்தித்து, சிப்ரஸோ மகாராஜா, மறுநாள் வருவதாகத் தெரிவிக்கிறான். அங்கிருந்து, புது மாளிகைக்கு செல்லும் வழியில் இளவரசி ஜெனோவவை கோலோ சந்தித்து அவள் பேரில் காதல் கொள்கிறான்.

மறுநாள், அரசர் சிப்ரஸோவுக்கும், இளவரசி ஜெனோவாவுக்கும் திருமணம் நடக்கிறது. அதன்பின் அவர்கள் பரிவாரங்கள் புடை சூழ ஆர்தீன தேசத்தை அடைகின்றனர். தளபதி அன்னாஸ், அரசனையும், அரசியையும் வரவேற்கிறான்.

சிப்ரஸோ வும், ஜெனோவாவும் சதுரங்கம் விளையாடும் சமயத்தில், அரண்மனைச் சேவகன் கிராதூஸின் உயர்ந்த குணத்தை பற்றி பேசுகின்றனர். மூர் நாட்டு மன்னன் ஆர்தீன தேசத்து மக்களுக்கு துன்பம் கொடுப்பதை நிறுத்த சிப்ரஸோ தன் மனைவி ஜெனோவாவை, மந்திரி கோலோ, தளபதி அன்னாஸ், அரண்மனைச் சேவகன் கிராதூஸ் முதலியோரின் கவனிப்பில் விட்டு போருக்குச் செல்கிறான். தான் கருவுற்றிருப்பதைத் தன் கணவனிடம் சொல்ல வில்லையே என ஜெனோவா வருத்தப்படுகிறாள்.

மன்னன் சிப்ரஸோ போரில் ஈடுபட்டிருக்கும் சமயம், ஜெனோவாவை அடைய கோலோ முயல்கிறான். தன் எண்ணம் பலிக்காததால் அரண்மனைச் சேவகன் கிராதூஸுடன் ராணி கள்ள நட்பு கொண்டதாக ஒரு பொய்க் குற்றத்தை சாட்டி அரண்மனைச் சேவகன் கிராதூஸையும், ஜெனோவாவையும் சிறையில் அடைக்கிறான்.

பகைவர்களை ஜெயித்து வெற்றியுடன் தன் நகர் திரும்பி வரும் சிப்ரஸோ மகாராஜாவை மந்திரி கோலோவும் தளபதி அன்னாஸும் வரவேற்கின்றனர். சிறையிலிருக்கும் ராணியும், அரண்மனைச் சேவகன் கிராதூஸும், தங்கள் துன்பங்கள் தீருமென்று எண்ணுகின்றனர்.

ஜெனோவாவை காணாத அரசன் சிப்ரஸோ கோலோவிடம், "அரசி எங்கே" என்று கேட்கிறான். அதற்கு கோலோ, அரசி - கிராதூஸ் கள்ள நட்பையும், அதனால் ராணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்றும் அதற்கு அடையாளமாக அரசியின் முத்திரை மோதிரத்தையும் காண்பிக்கிறான். இது உண்மையாக இருக்குமா என்ற மனக் குழப்பத்துடன் அரசன் சிறைக்கு செல்ல, அங்கே அரசன் சிப்ரஸோ ஜெனோவாவையும், அவள் குழந்தையையும் பார்க்கிறான். ஜெனோவா ஆசையுடன் அரசனை அணுகுகிறாள். வெறுப்பும், கோபமும் கொண்ட அரசன் ஜெனோவாவைத் தள்ளி, கிராதூஸுக்கு மரண தண்டனையையும், ஜெனோவாவையும், குழந்தையையும், துஷ்ட மிருகங்கள் சஞ்ஜரிக்கும் காட்டிலிட்டு வர தன் சிப்பாய்களுக்கு உத்தரவிடுகிறான்.

மழையிலும்,.வெய்யிலிலும் அவதிப்பட்டு, அன்ன ஆகாரமின்றி, தன் குழந்தையுடன் கஷ்டப்படும் ஜெனோவாவிற்கு தேவமாதாவின் அருள் கிடைத்து ஒரு குகையில் வாழ்கிறாள்.

கோலோவும், அன்னாஸும் சதி செய்து, களங்கமற்ற அரசனைக் கைது செய்து, சபையை கூட்டி, அரசனுக்கு பைத்தியம் என்று ஜனங்களை நம்ப வைத்து, அரசன் சிப்ரஸோவை காவலில் வைக்கின்றனர். இச்சங்கதியை அறிந்த ரோஸி, சூழ்ச்சியால் அரசனை தப்புவிக்கிறாள்.


அரசன் சிறையிருந்து தப்பிய செய்தியை ஞானம் மூலம் அறிந்த அன்னாஸ், கோலோவைப் பார்க்க புறப்படுகிறான். ரோஸி அதைத் தடுத்து, அரசனுக்கு துரோகம் செய்யக் கூடாதென்று சொல்ல, வாக்குவாதம் வலுக்கிறது. கோபமடைந்த அன்னாஸ், ரோஸியை கொன்று விடுகிறான். அரண்மனையில், கோலோவுக்கும், அரசனுக்கும் கத்தி சண்டை நடக்கிறது. அன்னாஸ், அரசனைக் கொல்ல வரும் சமயம், ஆரோக்கியம் அன்னாசைக் கொன்று விடுகிறான். சண்டையில், காயமுற்ற கோலோ தப்பி ஓடுகிறான்.

அரண்மனையில் அரசன் மன நிம்மதியில்லாமல் அரண்மனையை விட்டுப் போய் விடுகிறான்.

காட்டில், ஒரு அருவியினருகில் கோலோவுக்கும், சிப்ரஸோவுக்கும், சண்டை நடக்கிறது. அதில், சிப்ரஸோ, கோலோவை கொன்று விடுகிறான். மிக்க களைப்புடன், கரையை அடைந்த அரசனை ஒரு சிறுவன் அழைத்துச் செல்கிறான். ஜெனோவா தன் மகனைக் காணாது தேடி வரும் சமயத்தில் சிப்ரஸோவும், ஜெனோவாவும் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர்.


--- பிரிந்தவர் கூடினால் பேசவும் இயலுமோ ......


முற்றிற்று


அன்பன் : சௌ. செல்வக்குமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
12th August 2013, 06:09 PM
பொன்மனச்செம்மல் நடித்த 31வது திரைப்படமாகிய "ஜெனோவா" படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள் மட்டும்.

1. குழுப் பாடல் : லல்ல லால்லா லல்லலல்லா புது மலர்
வனந்தனைப் பாராய் இளந்தென்றல் உலாவுது நேராய்

2. தனித்த பெண் குரலில் பாடல் : புதிதான குதுகூலம் தானே நினைவில் வந்தே .. கொஞ்சி
கொஞ்சி விளையாடல் ஏனோ .. புதுமையில் மலருதே

3. காதல் ஜோடிப்பாடல் : கண்ணுக்குள் மின்னல் காட்டும் தெய்வ காதல் ஜோதியா
சிலை போல மௌனம் நீயே - செய்வதேனோ மானே !


4. காதல் ஜோடிப்பாடல் : நாமே ஜீவ சுகம் உல்லாசம் தேடும் நேரமே
போற்றிடு கவி போலவே புதுமை தரும் காதல் லோகமே

5. காதல் ஜோடிப்பாடல் : ஆசையே அலை மோதுதே கசப்பாகுதே மநேமே தினமே
தேடியே மனம் ஓடுதே அன்பே என் ஆருயிரே !

6. தனித்த பெண் குரலில் பாடல் : துணை நீயே ... தேவத் தாயே ! அகில லோக ஜோதி நீயே
கன்னி மரியே தாயே நீயே !



7. தனித்த பெண் குரலில் பாடல் : காதல் வாழ்வில் கனியான கதிரே ! கண்ணான கண்ணே !
கருமாமணியே ... ஆசையெல்லாம் வீணானதே !


8. நடனப்பாடல் : பம் பம் பம் பம் சிலம்பம் ! பம் பம் பம் பம் சிலம்பம்
எண்ணாமலே கண்ணே என்று சும்மா சொல்லாதே

9. பெண் தனித்துப் பாடும் சோகப் பாடல் : பரிதபமில்லையா பரலோகமாதா பரதேசியானோம்
பாரிலே .... முறையாகுமா இனியேது செய்வோம்

10. பெண் தனித்துப் பாடும் சோகப் பாடல் தாயே ... ஜீவ ஜோதியே..... ஜெகமதில் எம் பாக்கியமே !
பாத சேவை பாபம் நீங்கும் ...பாரிலெங்கும் ஞான தீபம்

11. தனித்த பெண் குரல் பாடல் : ஆனந்தம் ஆனந்தம் காணேணே ஆதியே ... ஏ ஆதாரம் நின் மா ஜோதியே ...ஏ வானொடும்



12. தனித்த ஆண் குரல் பாடல் : செய்த பாபத்தினலே நான் படும் வேதனை போதாதோ ! வெய்யிலிலே புழு போல ஆக முறையோ !


================================================== =================================

அன்பன் : சௌ.செல்வ குமார்


என்றும் எம். ஜி. ஆர்.

எங்கள் இறைவன் !

siqutacelufuw
12th August 2013, 06:51 PM
பொன்மனச்செம்மல் நடித்த 32வது திரைப்படமாகிய "மலைக்கள்ளன்" படத்தினைப் பற்றிய தகவல் :


1. படம் வெளியான தேதி : 22-07-1954

2. படத்தை தயாரித்து வெளியிட்ட நிறுவனம் : பக்ஷிராஜா
3. கதாநாயகன் : நமது மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : "மலைக்கள்ளன்", குமாரவீரன், அப்துல் ரஹீம்
5. கதா நாயகி : நடிகை பி. பானுமதி
6. பாடல்கள் : கவிமணி தேசிகவி விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், பாலசுப்ரமணியன், , ராமையாதாஸ், மக்களன்பன்
7. இசை அமைப்பு : எஸ். எம். சுப்பையா நாயுடு

8. தயாரிப்பாளர் - இயக்குனர் : எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
9. வசனம் : மு. கருணா நிதி.
10. படத்தில் பங்கு பெற்ற இதர கலைஞர்கள் : ஸ்ரீராம், டி.எஸ். துரைராஜ், எம். ஜி. சக்கரபாணி, டி. பாலசுப்ரமணியன், இ. ஆர். சகாதேவன், எஸ். எம். சுப்பையா, பி. எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா சாந்தா, சாயி, சுப்புலக்ஷ்மி மற்றும் பலர்.

http://i43.tinypic.com/2v86c6h.jpg

குறிப்பு :

1. நாமக்கல் கவிஞர் கதையில் உருவான திரைப்படம்.

2. ஆறு மொழிகளில் தயாரான படம்.

3. ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் தமிழ் படம்.

4. இப்படத்தில் நமது பொன்மனச்செம்மல் 3 கதா பாத்திரங்களில் தோன்றி மகிழ்விப்பார்.

5. சென்னை காசினோ, பிரபாத், சரஸ்வதி, மதுரை தங்கம், திருச்சி வெல்லிங்டன்,
சேலம் ஓரியண்டல், கோவை கர்னாடிக், நெல்லை ரத்னா, வேலூர் - தினகரன்,
இலங்கை யாழ் நகர் - சென்ட்ரல் மற்றும் பெங்களூர் - லட்சுமி ஆகிய
அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு
புதிய சாதனை படைத்தது.

6. மக்களன்பன் என்ற ஒரு புதிய பாடலாசிரியர் நம் மக்கள் திலகம் படத்துக்கு பாடல் எழுதியுள்ளார் என்பது கவனிக்கத் தக்கது.


இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"

Richardsof
12th August 2013, 07:22 PM
http://i44.tinypic.com/eimdqh.jpg

http://i41.tinypic.com/262nrpd.jpg

Richardsof
12th August 2013, 07:29 PM
1954_ம் ஆண்டு ஜுலை 22_ந்தேதி வெளிவந்த படம் "மலைக்கள்ளன்", எம்.ஜி.ஆரை "சூப்பர் ஸ்டார்" அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்தப்படம், கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. பட்சி ராஜா அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு டைரக்டர் செய்தார். பொதுவாக பட்சிராஜா ஸ்டூடியோ அதிகப் படங்களைத் தயாரிப்பதில்லை. ஆனால் தயாரிக்கும் படங்கள் `சூப்பர் ஹிட்' படங்களாக அமைவது வழக்கம். பாகவதர் நடித்த "சிவகவி", பி.யு.சின்னப்பா நடித்த "ஆர்யமாலா", "ஜகதலபிர தாபன்" ஆகியவை பட்சிராஜா தயாரிப்புதான்.

அதேபோல, "மலைக்கள்ள"னும், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படம் தயாரானதில் ஒரு சுவையான பின்னணி உண்டு.

"மலைக்கள்ளன்", நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். "பராசக்தி" வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. "மனோகரா" படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

"நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்" என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார்.

இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். "மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்" என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.

உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். "நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

(1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)

கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.

கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய_ இனிய நடையில் எழுதியிருந்தார்.

எம்.ஜி.ஆரும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகா தேவன், சந்தியா, சுரபி பால சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரராக வந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக்கதை தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் இந்தியில் திலீப்குமார் நடித்தார்.

எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே நடித்தனர். "மலைக்கள்ளன்" 6 மொழிகளிலும் மகத்தான வெற்றி பெற்றான்.


Courtesy-malaimalar

Richardsof
12th August 2013, 07:33 PM
விமர்சன சுருக்கம்
மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.
கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.
ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான்.
நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.
கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை
வசனம்: மு. கருணாநிதி
இசை: சுப்பையா நாயுடு
தயாரிப்பு: பட்சிராஜா
டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

ujeetotei
13th August 2013, 10:10 AM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/malaikallan4_zps6641343f.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/malaikallan4_zps6641343f.jpg.html)

ujeetotei
13th August 2013, 10:14 AM
From the Book State Awards for Films 1955, Ministry of Information and Broadcasting, New Delhi.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/mk_silvermedal_zps6d954fa2.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/mk_silvermedal_zps6d954fa2.jpg.html)

ujeetotei
13th August 2013, 10:22 AM
The famous Song


http://www.youtube.com/watch?v=iw3zAZn_iss

ujeetotei
13th August 2013, 10:23 AM
Full Movie of Malai Kallan uploaded by Raj Video Vision.


http://www.youtube.com/watch?v=X8al4lX6uro

ujeetotei
13th August 2013, 10:25 AM
Malai Kallan Ad

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/MGR%20Movie%20Ads/malai_kallan_running.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/MGR%20Movie%20Ads/malai_kallan_running.jpg.html)

ujeetotei
13th August 2013, 10:37 AM
From Wikipedia

A blend of Robin Hood and The Mark of Zorro, written by Namakkal Kavignar Va. Ramalingam Pillai (Namakkal Kavignar). A well-known writer, poet, artist and freedom fighter, he was nominated as the Poet Laureate of the Madras Government in 1949. Malaikkallan had been prescribed as the non-detailed text for the high school curriculum in the early 50s, and the story had become very popular.

S.M.Sriramulu Naidu of Pakshiraja Studio in Coimbatore secured the rights to the story and decided to make a movie of it, in 6 languages- Tamil (Malaikkallan/ MGR), Telugu (Aggi Ramudu/ N. T. Rama Rao), Malayalam (Thaskaraveeran/ Sathyan), Kannada (Bettada Kalla/ Kalyan Kumar), Hindi (Azaad/ Dilip Kumar) and Sinhalese (Surasena). Sriramulu Naidu booked Bhanumati to play the role of heroine, Poonkothai (Tamil) and Saradha (Telugu).

Except Azaad that had music by C. Ramchandra, S. M. Subbaiah Naidu composed music for the movie in all the other languages.

Vijayapuram is a beautiful hillside hamlet appears serene and restful to a casual passerby. But the happenings there are far from tranquil. Dacoities, burglaries and even kidnappings seem to be commonplace occurrences. One established perpetuator of at least some of the crimes is Kaathavarayan, his secret accomplices being some well-known public figures like the rich young wastrel Veerarajan and the Kuttipatti Zamindar.

The other dacoit is apparently the mysterious Malaikkallan. Legends are galore on his fabulous wealth, awe-inspiring exploits, contempt for the unprincipled rich, concern for the poor and needy indeed he seems to be running a veritable empire in some hidden hillock no one actually seen him.

There is also the wealthy middle-aged bachelor Abdul Kareem, who seems to disappear at regular intervals from Vijayapuram, claiming business calls at far-off places. In this hotbed of intrigue and suspicion blooms an innocent rose Poonkothai, daughter of the upright Sokkesa Mudaliar. Veerarajan is the cousin of Poonkothai and desires to marry her, but his evil reputation ensures the impossibility of such an alliance. Having lost her mother at an early age, Poonkothai is brought up by her widowed aunt Kamakshi Ammaal. Kamakshi Ammal's only son Kumaraveeran went missing many years back.

Faced by stringent public criticism for their failure to tackle the audacious crimes, Sub-Inspector Arumugam arrives in Vijayapuram. But his assistant Constable Karuppiah is a bungling coward and is more a hindrance than a help in his investigations. It is at this juncture that one night when mudaliar is away, Poonkothai is kidnapped. The happenings of that eerie night keep the village tongues wagging for many days thereafter. Two sidekicks of Kathavarayan are found tied and hanging upside down, and a piece of Poonkothai’s jewellery is recovered from them. Kamakshi AmmaaL is found tied-up and unconscious, and a mysterious errand-boy hands over to the attending doctor a herb that revives her at once. Poonkothai is said to be in the custody of Malaikkallan, who has cleverly waylaid Kathavarayan’s men and taken away Poonkothai. Kathavarayan faces the ire and ridicule of Veerarajan at the behest of whom he had engineered Poonkothai’s kidnapping. Goaded by this humiliation, he now sends his men far and wide in search of Poonkothai. Meanwhile Poonkothai is safe in the magnificent hideout of Malaikkallan perceiving his genuine concern for the downtrodden and the reverence with which he is held by his people, her contempt and mistrust turn gradually into admiration and leads to love.

Several confounding twists and turns later the truant pieces of the puzzle fall in place. Kathavarayan and Veerarajan get their well-deserved comeuppance. Malaikkallan and Abdul Kareem both turn out to be the same person who is the long missing Kumaraveeran. All is well that ends with the happy marriage of Poonkothai and Kumaraveeran.

Stynagt
14th August 2013, 07:52 PM
பொன்மனச்செம்மல் நடித்த 32வது திரைப்படமாகிய "மலைக்கள்ளன்" படத்தினைப் பற்றிய தகவல் :


1. படம் வெளியான தேதி : 22-07-1954

2. படத்தை தயாரித்து வெளியிட்ட நிறுவனம் : பக்ஷிராஜா
3. கதாநாயகன் : நமது மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : "மலைக்கள்ளன்", குமாரவீரன், அப்துல் ரஹீம்
5. கதா நாயகி : நடிகை பி. பானுமதி
6. பாடல்கள் : கவிமணி தேசிகவி விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், பாலசுப்ரமணியன், , ராமையாதாஸ், மக்களன்பன்
7. இசை அமைப்பு : எஸ். எம். சுப்பையா நாயுடு

8. தயாரிப்பாளர் - இயக்குனர் : எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
9. வசனம் : மு. கருணா நிதி.
10. படத்தில் பங்கு பெற்ற இதர கலைஞர்கள் : ஸ்ரீராம், டி.எஸ். துரைராஜ், எம். ஜி. சக்கரபாணி, டி. பாலசுப்ரமணியன், இ. ஆர். சகாதேவன், எஸ். எம். சுப்பையா, பி. எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா சாந்தா, சாயி, சுப்புலக்ஷ்மி மற்றும் பலர்.

http://i43.tinypic.com/2v86c6h.jpg

குறிப்பு :

1. நாமக்கல் கவிஞர் கதையில் உருவான திரைப்படம்.

2. ஆறு மொழிகளில் தயாரான படம்.

3. ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பெற்ற முதல் தமிழ் படம்.

4. இப்படத்தில் நமது பொன்மனச்செம்மல் 3 கதா பாத்திரங்களில் தோன்றி மகிழ்விப்பார்.

5. சென்னை காசினோ, பிரபாத், சரஸ்வதி, மதுரை தங்கம், திருச்சி வெல்லிங்டன்,
சேலம் ஓரியண்டல், கோவை கர்னாடிக், நெல்லை ரத்னா, வேலூர் - தினகரன்,
இலங்கை யாழ் நகர் - சென்ட்ரல் மற்றும் பெங்களூர் - லட்சுமி ஆகிய
அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு
புதிய சாதனை படைத்தது.

6. மக்களன்பன் என்ற ஒரு புதிய பாடலாசிரியர் நம் மக்கள் திலகம் படத்துக்கு பாடல் எழுதியுள்ளார் என்பது கவனிக்கத் தக்கது.


இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
"
பேராசிரியர் செல்வக்குமார் அவர்களின் மலைக்கள்ளன் பதிவுகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். இந்த படத்தின் கதை- கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, பாடல்கள் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை மற்றும் ராமையாதாஸ் என்ற பெரும் ஜாம்பவான்கள் உருவாக்கத்தில் உருவான மாபெரும் புரட்சிக்காவியம். இந்த ஜாம்பவான்கள் மத்தியில் ஒரு புதுமுக பாடலாசிரியர் மக்களன்பன் என்பவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதில் தலைவருக்கு இணை தலைவர்தான்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..

Scottkaz
20th August 2013, 01:23 PM
http://youtu.be/lpuBXWDIAMY

Scottkaz
20th August 2013, 01:24 PM
http://youtu.be/Y5_5zeJDTNY

Scottkaz
20th August 2013, 01:25 PM
http://youtu.be/stzaQakDNBw

Scottkaz
20th August 2013, 01:26 PM
http://youtu.be/SPcy_yvEUb8

idahihal
22nd August 2013, 11:30 PM
ராமமூர்த்தி சார்,
மலைக்கள்ளன் படத்தின் வீடியோ பதிவிற்கு நன்றி.

செல்வகுமார் சார்.
மலைக்கள்ளன் படம் பற்றி மேலும் பல தகவல்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். மேலும் ஒவ்வொரு பாடலையும் குறிப்பிடும் போது அந்தப் பாடலை எழுதியவர் யார், பின்னணி பாடியவர்கள் யார் என்ற விபரங்களையும் பதிவு செய்ய தங்களை ஏற்கனவே கேட்டுக் கொண்டேன். அதனை மறுபடியும் நினைவுபடுத்துகிறேன். நன்றி.

Richardsof
31st August 2013, 12:17 PM
மக்கள் திலகத்தின் ''மலைக்கள்ளன் '' படம் பற்றிய பதிவுகள் - தகவல்கள் - வீடியோ வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

Richardsof
1st September 2013, 07:16 AM
மக்கள் திரியின் நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் இனிய தகவல் .

நம் ஆவணதிலகம் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான ''மக்கள் திலகம் மலர் மாலை ''-1

முதல் பதிப்பு வெற்றிகரமாக பெங்களுர் நகரில் 14.4.2013ல் நடந்தேறியது .


தற்போது மக்கள் திலகத்தின் மலர்மாலை -1 இரண்டாம் பதிப்பு விற்பனைக்கு வர உள்ளது .

1.9.2013 ''இதயக்கனி '' மாத இதழின் பின் அட்டையின் உள் புற அட்டை படத்தில்

மக்கள் திலகத்தின் மலர் மாலை -1 விளம்பரம் வந்துள்ளது .
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MAKKALTHILAGAMMALARMAALAIONEADPERFECT_zps8f610845. jpg.html)

Richardsof
1st September 2013, 07:17 AM
மக்கள் திலகம் மலர் மாலை -1 புத்தக விமர்சனம் .

எம்ஜியார் ரசிகர்கள் கூறிய கருத்துக்கள்
.
வின்ஸ்டன் டான் - என்னுடைய நீண்ட நாள் கனவு இந்த மலர் மாலை புத்தகம் மூலம் நிறை வேறி உள்ளது .

ரவி .- மக்கள் திலகத்தின் அட்டகாசமான .இது வரை பார்க்காத நிழற் படங்கள் அடங்கிய தொகுப்பு பிரமாதம் .

நீலகண்டன் - திரு பம்மலாரின் தலையங்கம் - வைர வரிகள் .

முரளி - 134 எம்ஜிஆர் படங்களும் மனதை கொள்ளை அடிக்கிறது .

வெங்கடேஷ் - எம்ஜிஆருக்கு இந்த மாதிரி யாரும் இது வரை புத்தகம் போடவில்லை .

மோகன் குமார் - உலக தரம் வாய்ந்த உன்னத புத்தகம் .
http://i39.tinypic.com/6tp7o5.jpg
மணி - எம்ஜிஆரை நேரில் பார்ப்பது போல உணர்வு தூண்டுகிறது .

கண்ணன் - புதுமையான முயற்சி -திரு பம்மலாரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி .

கஜநாத் சிங்- எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்யும் இந்த காலத்தில் இப்படி ஒரு மெகா சைசில் மக்கள் திலகத்தின் சினிமா படங்கள் வந்திருப்பது சாதனையே .

ஜெய் - நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மலர் மாலை புத்தகம்
வெளியிட்டிருப்பது மூலம் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது .

தாமஸ் - எங்கள் எம்ஜிஆரின் எல்லா போஸ் படங்களும் சூப்பர் .

யூனுஸ் - உலக வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஹீரோ எம்ஜிஆருக்கு இப்படி ஒரு பிரமாண்ட மலர் படைத்த திருபம்மலாரை எப்படி பாராட்டினாலும் தகும் .

வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தொடரும் ....

RAGHAVENDRA
1st September 2013, 07:51 AM
வினோத் சார்,
பம்மலாரின் புத்தகத்தை பாராட்டி தங்களிடம் பகிர்ந்து கொண்ட நண்பர்களின் கருத்துக்களுக்குப் பாராட்டுக்கள்.

குறிப்பாக


ஜெய் - நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மலர் மாலை புத்தகம்
வெளியிட்டிருப்பது மூலம் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது .


இந்தப் பாராட்டளித்த ஜெய் சாருக்கும் என் நன்றிகள்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இக்காலத்தில், இது போன்ற புத்தகத்தை பம்மலார் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களோடு நிறுத்தி விடாமல் அந்தக் காலத்துக் கலைஞர்கள் அனைவருக்கும் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

siqutacelufuw
4th September 2013, 05:27 PM
பொன்மனசெம்மலின் 32வது திரைப்படமாகிய "மலைக்கள்ளன்" கதைச் சுருக்கம்

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு" ... இது வள்ளுவர் வாக்கு

அந்த பொய்யா மொழியை மெய்ப்பிக்கும் வகையில் நின்றான் மலைக்கள்ளன் !

மலைக்கள்ளன் ..... ஆம், அவன் மலையிலே மறைந்து, வாழும் கள்ளனாகத்தான் காலங் கடத்தி வந்தான். ஏன் ?
கொலை, கொள்ளைகளை நடத்தி, மலை போல் செல்வத்தைக் குவிக்க வேண்டுமென்ற பேராசையினாலா ...... ? அல்லது பிறர் துன்பத்தின் மீது
தனது இன்ப மாளிகையை அமைத்துக் கொண்டு ஆனந்த வாழ்வு நடத்த வேண்டுமென்ற எண்ணத்தினாலா ?

இல்லை ; அவன் சுயநலவாதியல்ல ; பொது நலத் தொண்டன் ! அப்படிப்பட்ட அந்த அதிசயக் கள்ளனின் அந்தரங்கம் என்ன ? அவன் மலையிலே மறைந்து வாழ நேர்ந்ததின் மர்மம் என்ன ?

அதுதான் கதை !

மலைக்கள்ளன் ஏழைகளின் தோழனாக, பகல் வேஷம் போடும் பணக்காரர்களின் பரம வைரியாக வாழ்ந்தான். துஷ்டர்களை அடக்கும் முயற்சியில் துணிகரமான செயல்களைச் செய்தான். அதனால், உண்மையறியாத உலகம் அவனுக்கு "கொலைகாரன்", "கொள்ளைக்காரன்" என்ற பட்டம் சூட்டியது.
சுருங்கச் சொன்னால் விஜயபுரி வட்டாரமே "மலைக்கள்ளன்" என்ற பெயரைக் கேட்டதும், இடியோசை கேட்ட நாகம் போல பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது.

பூங்கோதை, விஜயபுரி மிராசுதாரான சொக்கேசமுதலியாரின் ஒரே மகள் அழகில் அல்லி மலர்.; தைரியத்தில் அல்லி ராணி. அவள் மீது மையல் கொண்டான் வீரராஜன். வீரராஜன், சொக்கேசரின் தங்கை மகன் தான். ஆனால் அவனுக்கு பெண் தர சொக்கேசர் விரும்ப வில்லை. பூங்கோதையும் சம்மதிக்க வில்லை. காரணம் வீரராஜன் ஒரு அழகு விரும்பி. ... அயோக்கிய சிகாமணி என்பது தான்.

வீரராஜனின் அக்ரமச் செயல்களுக்கு அவனது அத்யந்த நண்பரான குட்டிபட்டி ஜமீன்தார் உடந்தையாக இருக்கிறார். அவர்களுக்கு கொள்ளை காத்தவராயன் கையாளாக இருக்கிறான். ஒரு நாள் சொக்கேசர் பூங்கோதைக்கு மாப்பிள்ளையைத் தேடி வெளியூருக்கு போயிருந்த சமயத்தில், வீரராஜன், காத்தவராயனை
ஏவி, நள்ளிரவிலே பூங்கோதையைத் தூக்கிவரும்படி செய்கிறான்.


ஆனால், இதை தன் சகாக்கள் மூலம் அறிந்த மலைக்கள்ளன், காத்தவரயனின் ஆட்களிடமிருந்து தந்திரமாகப் பூங்கோதையை மீட்டு தன் மலை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் போயிருந்த சமயத்தில் ஏற்பட்ட அவஸ்தைகளை எண்ணி, சொக்கேசர் மிகவும் வேதனை அடைகிறார். சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகமும், ஏட் கருப்பையாவும், எப்படியோவது பூங்கோதையை கண்டு பிடித்து வீடு சேர்ப்பதாக ஆறுதல் கூறுகின்றனர்.

மலைக்கள்ளன் வீட்டிற்குச் சென்ற பூங்கோதையை, அங்கிருந்த சின்னி என்பவன் அன்புடன் உபசரிக்கிறான். முதலில் மலைக்கள்ளன் மீது வெறுப்புக் கொண்டிருந்த பூங்கோதை, அவனது நேர்மையான நடத்தையைக் கண்டு, அவன் மீது விருப்பும், விசுவாசமும் கொள்கிறாள் மேலும், பூங்கோதையின் விருப்பபடியே மலைக்கள்ளன், தன் நண்பர் ரஹீமின் கோச்சு வண்டியில் அவளை வீட்டிற்கு அனுப்பவும், அதே சமயத்தில் அவளைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் காத்திருந்த காத்தவராயனது ஆட்கள் ஏமாறும்படி செய்யவும் ஏற்றதோர் திட்டம் வகுத்து அதன்படியே செய்கிறான். அதனால் பூங்கோதையை வீரராஜனிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டதாகப் பெருமை பேசிய காத்தவரயானும் பூங்கோதையை தன் மனைவியாக்கி கொள்ளலாம் என்று பகற் கனவு கண்ட வீரராஜனும் ஏக்கமும், ஏமாற்றமும் அடைகின்றனர். ஆனால் , அதே சமயத்தில் பூங்கோதையை மீண்டும் பார்க்க நேர்ந்த்ததால், காமாக்ஷியம்மாளும், சொக்கேசரும் ஆச்சரியமும், ஆனந்தமும் அடைகின்றனர்.


இந்நிலையில் குட்டிபட்டி ஜமீன்தார் சொக்கேசருக்கு தர வேண்டிய பாக்கியை பைசல் செய்யும் விஷயமாக சொக்கேசரை அரியபுரத்திற்கு வரும்படி செய்து, அங்கே முன்னேற்பாட்டின்படி அவரை இரகசியமாக ஒரு வீட்டில் போட்டு அடைத்து விடுகின்றனர். வீரராஜன் தனக்குப் பூங்கோதையை கல்யாணம் செய்து கொடுப்பதோடு, அவரது ஆஸ்தி முழுவதையும் தன் பேரில் எழுதி வைக்கும்படியும் சொக்கேசரை வற்புறுத்துகிறான் . மேலும் அவரை வற்புறுத்தி தன் ஆபத்தை நீக்க, உடனே தன்னை வந்து பார்க்கும்படி பூங்கோதைக்கு ஒரு கடிதம் எழுதித் தரும்படியும் செய்கிறான். பிறகு அந்த கடிதத்தை, தனது ஆசை நாயகியான ஜானகியின் மூலம் பூங்கோதைக்கு அனுப்பி, அவளை தந்திரமாகத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறான்.

தந்தையைக் காணத் தவித்து கொண்டிருந்த பூங்கோதையிடம், வீரராஜன் ஆசை வார்த்தைகளைப் பேசி பூங்கோதையை பலவந்தம் செய்யவும் முற்படுகிறான்.
அவனது சூழ்ச்சியை அறிந்து, தடுக்க முன்வந்த ஜானகியின் கழுத்தை நெறித்துக் கொன்று விடுகிறான். அந்த சமயத்தில் மலைக்கள்ளன் அங்கே தோன்றி, அவனைக் கட்டிப் போட்டு விட்டு பூங்கோதையை அவளது வீடு சேர்க்கிறான்.


சொக்கேசரைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வெகு சிரமப்பட்டு சொக்கேசரின் இருப்பிடத்தை அறிந்து, அப்துல் ரஹீம் சாயபுவின் உதவியால் தகுந்த ஏற்பாடுகளுடன் சென்று ,சொககேசரை மீட்டு, வீரராஜன் குட்டிபட்டி ஜமீன்தார், காத்தவராயன் ஆகியவர்களை கைது செய்கிறார். மேலும், அப்துல் ரஹீம் தன் நண்பனான மலைக்கள்ளனிடமிருந்து பல கேஸ்களில் திருட்டுப் போன பொருள்களை எல்லாம், அதற்கு சம்பந்தப்பட்ட ஆட்களையும் கொண்டு வந்து சேர்க்கிறார். ஆகவே, மலைக்கள்ளன் மீது சுமத்தப் பட்டிருந்த குற்றங்கள் எல்லாம் நிவர்த்தியாகின்றன.

பூங்கோதையையும், தன்னையும் காப்பற்றியதற்காக சொக்கேசர், அப்துல் ரஹீம், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியவர்களுக்கு ஒரு விருந்து வைக்க ஏற்பாடு செய்கிறார். விருந்தின் போது அப்துல் ரஹீம், சொக்கேச முதலியாரின் குடும்பத்துக்கு மலைக்கள்ளன் செய்த உதவிகளுக்கு பிரதியுபகாரமாக, பூங்கொதையை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கும்படி சொக்கேசரை கேட்கிறார். காமாஷியம்மாள் அதைக் கேட்டு ஆத்திரப்படுகிறாள் .ஆனால், அப்துல் ரஹீம், மலைக்கள்ளனது பூர்வாங்கத்தைப் பற்றிய உண்மைகளைச் சொன்னதும் அவள் ஆத்திரம் ஆனந்தமாக மாறுகிறது.

அப்துல் ரஹீம், மலைக்கள்ளனைப் பற்றி காமஷியம்மாளிடம் வெளியீட்ட உண்மைகள் தான் என்ன ?

மர்ம மனிதனாகவே வாழ்ந்த அந்த மலைக்கள்ளன் யார் ?

அவனது அந்தரங்கங்கள் அனைத்தும் அறிந்த வைத்திருந்த அப்துல் ரஹீம் யார் ?

மலைக்கள்ளன் வீட்டிலிருந்த சின்னி யார் ?

மலைக்கள்ளன் பூங்கோதையின் மீது காதலின் முடிவென்ன ?

என்ற வினாக்களுக்கெல்லாம் விளக்கம் தேவையா ? விரைந்து செல்லுங்கள் பஷிராஜாவின் மலைக்கள்ளனைப் பார்க்க !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்



.




.

siqutacelufuw
4th September 2013, 05:31 PM
இத்திரியினில் பொன்மனசெம்மலின் முதல் படத்திலிருந்து பதிவிட்டு வரும் படத்தகவல் மற்றும் கதைச் சுருக்கம் இவை யாவும் எனது முன் அனுமதியின்றி புத்தகமாகவோ அல்லது வேறு வடிவங்களிலிலோ பிரசுரிக்கலாகாது.

மீறி வெளியிட்டால் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன் : சௌ. செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
4th September 2013, 06:33 PM
மக்களை மலைக்க வைத்த மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் திரைப்படத்தின் கதைசுருக்கத்தை பதிவு செய்த பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இத்தனை கோடி ரசிகர்கள் மத்தியில் உலகநாயகன் எம்ஜிஆர் திரைப்படங்கள் 134-ன் பாட்டுபுத்தங்களை (திரைப்படம் வெளியானபோது வெளியிடப்பட்டது) தன்னகத்தே வைத்து எம்ஜிஆர் ரசிகர்களுக்கெல்லாம் பெரிய ரசிகராக தாங்கள் இருப்பது கண்டு நாங்கள் பேருவகை அடைகிறோம். தங்களின் இதுபோன்ற பதிவுகளை என்றென்றும் எதிர்பார்க்கும்
அன்பன் கலியபெருமாள்
http://i39.tinypic.com/11uzwhk.jpg

idahihal
5th September 2013, 01:41 AM
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்களை அற்புதமான முறையில் காலவரிசைப்படி பதிவேற்றும் மகத்தான தொடர்ந்து புரிந்துவரும் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இது உங்களால் தான் முடியும். தொடரட்டும் தங்களது பெரும்பணி.

siqutacelufuw
6th September 2013, 10:24 AM
பொன்மனசெம்மலின் 32வது திரைப்படமாகிய "மலைக்கள்ளன்" படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள் :



1. தனித்த குரலில் ஆண் பாடல் : தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு

2. தனித்த குரலில் பெண் பாடல் : உன்னை அழைத்தது யாரோ .... அவர் ஊரெதுவோ பேரெதுவோ (பல்லவி)
சின்ன வயதினிலே .... நான் எண்ணிய எண்ணங்களே ! (அனுபல்லவி)
வட்ட வடிவ நிலாவிலே .... ஒளி வந்து உலகினில் பாயுதே (சரணம்)

3. தனித்த குரலில் பெண் பாடல் : நாளை வதுவை மணமென்று நாளிட்டு பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ் (விருத்தம்)
நீலி மகன் நீ அல்லவோ (பல்லவி)
மாலி உந்தன் மாமன் மாடோட்டும் ஜாதி .... வனமாலி (அனு பல்லவி)

4. தனித்த குரலில் பெண் பாடல் : பெண்களாலே உலகிலே பெருமை காணும் இன்பம் தோணும் (பல்லவி)
கல்லா மூடர் கணவனும் ஆனால் .... வாழ்விலே வார்த்தைகள் பேசி ஆனந்தம் (அனு பல்லவி)
குடித்தனம் காத்திட உதவுவான் .... என்றும் குலமது ஓங்கிட வழி தேடுவாள் (சரணம்)

5. தனித்த குரலில் ஆண் பாடல் : எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே ..... நம் நாட்டிலே

6. குறவன் - குறத்தி பாடல் : ஓ ..... ஓ ... அம்மே ...... ஓ ..... ஓ ... அய்யா ...... ஓ ஸாமி
மசியா வேலைக்கெல்லாம் மருந்திருக்குது பாருங்க

7. தனித்த குரலில் பெண் பாடல் : நல்ல சகுனம் நோக்கி செல்லடி ..... சென்று நான் படும் பாடு அவர்க்குச் சொல்லடி (பல்லவி)
அல்லகற்றி அன்பர்க்கானந்தம் தரும் நேசர் (அனு பல்லவி)
வண்ண மலர்கள் ஏதும் வாசம் தருவதில்லை (சரணம்)

8. தனித்த குரலில் பெண் பாடல் : வாராய் இன்பம் தாராய் (விருத்தம்)
நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ரோஜா (பல்லவி)
அறிவு வானிலே அழகுடன் மேவும் நிலவென இன்றே (அனு பல்லவி)
மாதரின் பெருமை விளங்க நானே (சரணம்)

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
7th September 2013, 04:37 PM
"மலைக்கள்ளன்" படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் :

படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கான பல்லவியை எழுதும்போது கவிஞர் ஒருவருக்கும், படத் தயாரிப்பாளர் பக்ஷிராஜா எஸ். எம். ஸ்ரீராமுலு வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது.

"இனிமேல் உங்கள் படத்துக்கு பாட்டெழுத மாட்டேன் என்று பக்ஷிராஜா எஸ். எம். ஸ்ரீராமுலுவிடம் கூறி விட்டு கோபமாக சென்று விட்டார் அந்த கவிஞர். அப்போது உடனிருந்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்தக் கவிஞர் கேட்க வில்லை.

இந்த நிலையில் அந்த கவிஞர் எழுதிய ஒரு பல்லவி மட்டும் நமது மக்கள் திலகத்துக்கு மிகவும் பிடித்து போனது. எப்படியாவது, அந்தக் கவிஞரை திரும்பவும் அழைத்து வந்து அந்தப் பாடலை எழுதச் சொல்லலாம் என்றும், அப்பாடலை "மலைக்கள்ளன்" படத்தில் சேர்த்து விடலாம் என்று மக்கள் திலகம் கருதினார். அந்தக் கவிஞரை அழைத்து விஷயத்தை சொன்ன போது, அந்தக் கவிஞரோ, ஸ்ரீராமுலுவின் படம், அததற்கு தான் நான் பாட்டெழுத முடியாது எனவும், தன்னை மன்னிக்க வேண்டும், என்று கூறி விட்டு போய் விட்டார். நமது பொன்மனசெம்மலுக்கு என்ன செய்வதென்று புரிய வில்லை. அருகில் இருந்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு, "அய்யாமுத்து" என்பவர் கோவையில் இருக்கிறார் எனவும், அவரை அழைத்து அந்த பல்லவிக்கு ஏற்ப ஒரு பாடலை எழுதி வாங்கி விடலாம் என்று யோசனை கூறினார். நமது கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார். உடனே, கோவை அய்யாமுத்துவைத் தேடி அலைந்தார்கள். வயலிலே, உழுது கொண்டிருப்பதாக கூறி அதே கோலத்தோடு அவரை அழைத்தும் வந்தார்கள். அவரும், அந்தப் பாட்டை முடித்துக் கொடுத்தார். பாட்டும், ஒரே நாளில் பிரபலம் ஆயிற்று. அப்படி, பிரபலம் ஆன அந்தப் பாடலில் பல்லவி எது தெரியுமா ? "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?" பல்லவி தான் அது ! இந்த சிறப்பு மிக்க பல்லவியை எழுதிய அந்தக் கவிஞர் தான் தஞ்சை இராமையாதாஸ்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

orodizli
7th September 2013, 09:59 PM
பேராசிரியர் செல்வகுமார் அவர்களின் மலைக்கள்ளன் வரலாறு படைத்த திரைபடத்தை பற்றி அரிய பெரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும்போது இனிய உவகை ஏற்படுகிறது...மக்கள்திலகதிற்கு என்ன ஒரு தீர்க்க தரிசனம் இருந்தால் வேண்டிய பாடலை தேர்வு செய்யும் மனோதிடத்தை பெற்றிருப்பார் ? அவ்வாறே தேர்வு செய்ய பட்ட பாடலும் எக்காலதிர்க்கும் பொருத்தமான ஒன்ற திகழுகிறது என்பது உள்ளகை நெல்லிக்கனி என்றே கருதலாம்...

ujeetotei
7th September 2013, 11:01 PM
"மலைக்கள்ளன்" படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் :

படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கான பல்லவியை எழுதும்போது கவிஞர் ஒருவருக்கும், படத் தயாரிப்பாளர் பக்ஷிராஜா எஸ். எம். ஸ்ரீராமுலு வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது.

"இனிமேல் உங்கள் படத்துக்கு பாட்டெழுத மாட்டேன் என்று பக்ஷிராஜா எஸ். எம். ஸ்ரீராமுலுவிடம் கூறி விட்டு கோபமாக சென்று விட்டார் அந்த கவிஞர். அப்போது உடனிருந்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்தக் கவிஞர் கேட்க வில்லை.

இந்த நிலையில் அந்த கவிஞர் எழுதிய ஒரு பல்லவி மட்டும் நமது மக்கள் திலகத்துக்கு மிகவும் பிடித்து போனது. எப்படியாவது, அந்தக் கவிஞரை திரும்பவும் அழைத்து வந்து அந்தப் பாடலை எழுதச் சொல்லலாம் என்றும், அப்பாடலை "மலைக்கள்ளன்" படத்தில் சேர்த்து விடலாம் என்று மக்கள் திலகம் கருதினார். அந்தக் கவிஞரை அழைத்து விஷயத்தை சொன்ன போது, அந்தக் கவிஞரோ, ஸ்ரீராமுலுவின் படம், அததற்கு தான் நான் பாட்டெழுத முடியாது எனவும், தன்னை மன்னிக்க வேண்டும், என்று கூறி விட்டு போய் விட்டார். நமது பொன்மனசெம்மலுக்கு என்ன செய்வதென்று புரிய வில்லை. அருகில் இருந்த இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு, "அய்யாமுத்து" என்பவர் கோவையில் இருக்கிறார் எனவும், அவரை அழைத்து அந்த பல்லவிக்கு ஏற்ப ஒரு பாடலை எழுதி வாங்கி விடலாம் என்று யோசனை கூறினார். நமது கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார். உடனே, கோவை அய்யாமுத்துவைத் தேடி அலைந்தார்கள். வயலிலே, உழுது கொண்டிருப்பதாக கூறி அதே கோலத்தோடு அவரை அழைத்தும் வந்தார்கள். அவரும், அந்தப் பாட்டை முடித்துக் கொடுத்தார். பாட்டும், ஒரே நாளில் பிரபலம் ஆயிற்று. அப்படி, பிரபலம் ஆன அந்தப் பாடலில் பல்லவி எது தெரியுமா ? "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?" பல்லவி தான் அது ! இந்த சிறப்பு மிக்க பல்லவியை எழுதிய அந்தக் கவிஞர் தான் தஞ்சை இராமையாதாஸ்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Thanks for sharing this information sir. This is the first time I came to know about this incident.

orodizli
14th September 2013, 10:18 PM
so many thanks to proffessor mr.selvakumar sir, for your kind loyally contribution to this ponmana chemmal thread...your sharing information is useful to the new visitors & other hubbers... where this song books of ancient films by thiru mgr, so rare collections, then you have mighty magnet power and blessings of sri mgr...

siqutacelufuw
26th September 2013, 03:11 PM
பொன்மனச்செம்மல் நடித்த 33வது திரைப்படமாகிய "கூண்டுக்கிளி" படத்தினைப் பற்றிய தகவல் :

1. படம் வெளியான தேதி : 26-08-1954


2. படத்தை தயாரித்த நிறுவனம் : ஆர். ஆர். பிக்சர்ஸ்

3. கதாநாயகன் : மக்கள் திலகம்

4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : தங்கராஜ்

5. கதாநாயகி :


6. பாடல்கள் : தஞ்சை ராமையாதாஸ், .கவி. கா.மு. ஷெரிப், மருதகாசி மற்றும் விந்தன்

7. இசை அமைப்பு : கே. வி. மகாதேவன்

8. திரைக்கதை, வசனம் : விந்தன்

9. இயக்குனர் : டி.ஆர். ராமண்ணா

10. படத்தில் பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : கே. சாரங்கபாணி, பிரண்ட் ராமசாமி, இ. ஆர். சகாதேவன், டி. கே. ராமராஜன், கொட்டாப்புளி ஜெயராமன், எதார்த்தம் பொன்னுசாமி, குசலகுமாரி , ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி,கே.எஸ்.அங்கமுத்து, ராகினி (நடனம்)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++

படத்தின் சிறப்பம்சம் :


1. ஆர். ஆர். பிக்ஸர்ஸ் .சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் மக்கள் திலகத்தின் படமிது.

2. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம்.

3. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வில்லனாக நடித்திருப்பார்.

4. இப்படத்திற்கு பின்னணி பாடிய கலைஞர்கள் : (டி..எம். எஸ். தவிர) : இசைக்குயில் பி. ஏ. பெரியநாயகி, குமாரி ரத்னம், ராதா ஜெயலட்சுமி, ராணி, வி. என். சுந்தரம் ஆகியோர்.


இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

orodizli
26th September 2013, 11:01 PM
தமிழ் திரைபட உலகின் ஒரு லேண்ட்மார்க் என கூறப்படும் படம்தான் கூண்டுக்கிளி- இதில் இரு திலகங்களும் சேர்ந்து நடித்த போதும் படத்தின் திரைகதை & இயக்கம் போதுமான அளவில் ருசிகரமாக படைக்க பட வில்லை என்பது படத்தின் எதிர்பார்த்த வெற்றியை அது அடையவில்லை என்பதே ஒரு காரணமாகும்...மக்கள்திலகம் மற்றும் நடிகர்திலகம் இருவரும் இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் எனவும் தீர்மானித்தது இந்த திரைப்படம் வெளிவந்த பொழுதுதான் என கூறப்பட்டதை கேட்டுருக்கிறேன்...

siqutacelufuw
27th September 2013, 11:06 AM
பொன்மனச்செம்மல் நடித்த 33வது திரைப்படமாகிய "கூண்டுக்கிளி" படத்தின் கதை சுருக்கம் :
================================================== =============

ஜீவா !

இவனைப் போன்ற ஒரு வேடிக்கை மனிதனை நீங்கள் இதுவரை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்க மாட்டீர்கள். அவன் ஒரு தனிப் பிரகிருதி : பச்சையாக சொல்லப் போனால் பைத்தியம்.

எத்தனைப் பெண்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் ? அந்தப் பெண்களுக்கு நடுவே எத்தனை ஆண்கள் "கோபியர் கொஞ்சும் ரமண" னாக, சாட்சாத் சியாமள வர்ணனாக எடுத்து திரிகிறார்கள் ? அதையெல்லாம் விட்டுவிட்டு, மங்களா தான் வாழ்க்கையின் ஜீவனாக வேண்டுமாம், இந்த ஜீவாவுக்கு !
ஆனால், அவளோ, தங்கராஜின் வாழ்க்கை ஜீவனாக ஆகிவிட்டாள் ......

இது முதல் சிக்கல்.


அந்த தங்கராஜோ ஜீவாவின் ஆருயிர் நண்பனாக இருந்து விட்டான் ......

இது இரண்டாவது சிக்கல்.


அவனை (தங்கராஜூவை) கைப்பிடித்த மங்களாவுக்கோ, முதல் கடவுள் கற்பு, இரண்டாவது கடவுள்தான் அவளைப் படைத்தவன். .....

இது மூன்றாவது சிக்கல்


இந்த சிக்கல்களுக்கிடையே அவள் தங்கராஜின் "கூண்டுக்கிளியாககவா இருந்தாளா ? அதுவும் இல்லை; கொஞ்சும் கிளியாக வேறு இருந்து விட்டாள்.......

இது நான்காவது சிக்கல்.


எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு சிக்கல் இருந்தது ! அதுதான் மங்களாவையும், குழந்தை கண்ணனையும் நண்பன் ஜீவாவிடம் ஒப்படைத்து விட்டு தங்கராஜ் அவனுக்காக ஆறு மாதங்கள் சிறைக்குக்ப் போன சிக்கல். ........

இது ஐந்தாவது சிக்கல்.


இப்படி எத்தனை சிக்கல்கள் அவன் கதையில் ? .......

இவை எல்லாவற்றுக்கும் விடை காண வேண்டுமானால் சொக்கியை சந்தியுங்கள் திரையில் : அவள் சொல்வாள் உங்களுக்கு பதில்..

குறிப்பு : ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில், நமது மக்கள் திலகத்தின் பெயர் முதலில் இடது புறத்தில் இடம் பெற்றுள்ளது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2013, 11:11 AM
"கூண்டுக்கிளி" படத்தில் நம் மக்கள் திலகம் மற்றும் பி.எஸ். சரோஜா தோன்றும் ஒரு காட்சி

http://i42.tinypic.com/i1libk.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
27th September 2013, 12:39 PM
"கூண்டுக்கிளி" படத்தில் மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்து தோன்றும் காட்சி http://i43.tinypic.com/2i88ahh.png

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
27th September 2013, 08:12 PM
பொன்மனச்செம்மல் நடித்த 33வது திரைப்படமாகிய "கூண்டுக்கிளி" படத்தினைப் பற்றிய தகவல் :

1. படம் வெளியான தேதி : 26-08-1954


2. படத்தை தயாரித்த நிறுவனம் : ஆர். ஆர். பிக்சர்ஸ்

3. கதாநாயகன் : மக்கள் திலகம்

4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : தங்கராஜ்

5. கதாநாயகி :


6. பாடல்கள் : தஞ்சை ராமையாதாஸ், .கவி. கா.மு. ஷெரிப், மருதகாசி மற்றும் விந்தன்

7. இசை அமைப்பு : கே. வி. மகாதேவன்

8. திரைக்கதை, வசனம் : விந்தன்

9. இயக்குனர் : டி.ஆர். ராமண்ணா

10. படத்தில் பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : கே. சாரங்கபாணி, பிரண்ட் ராமசாமி, இ. ஆர். சகாதேவன், டி. கே. ராமராஜன், கொட்டாப்புளி ஜெயராமன், எதார்த்தம் பொன்னுசாமி, குசலகுமாரி , ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி,கே.எஸ்.அங்கமுத்து, ராகினி (நடனம்)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++

படத்தின் சிறப்பம்சம் :


1. ஆர். ஆர். பிக்ஸர்ஸ் .சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் மக்கள் திலகத்தின் படமிது.

2. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம்.

3. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வில்லனாக நடித்திருப்பார்.

4. இப்படத்திற்கு பின்னணி பாடிய கலைஞர்கள் : (டி..எம். எஸ். தவிர) : இசைக்குயில் பி. ஏ. பெரியநாயகி, குமாரி ரத்னம், ராதா ஜெயலட்சுமி, ராணி, வி. என். சுந்தரம் ஆகியோர்.


இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

திரு. செல்வகுமார் சார். தங்களின் கூண்டுக்கிளி திரைப்படத்தின் பதிவுகள் அருமை. பொக்கிஷம் போல் பாதுகாத்த தியேட்டர் பாட்டுபுத்தகத்திலிருந்து எடுத்து போட்டு அசத்தி விட்டீர்கள். உலக தமிழரின் நாயகன் இப்படத்தின் கதாநாயகன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

idahihal
28th September 2013, 08:37 AM
செல்வகுமார் சார்,
கூண்டுக்கிளி படத்தின் பதிவுகள் மிக அருமை. இந்தப் படத்தின் அபூர்வ புகைப்படங்கள் பலவற்றை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி.

oygateedat
29th September 2013, 09:16 AM
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு

தாங்கள் பதிவிட்ட கூண்டுக்கிளி படம் பற்றிய செய்திகள் மற்றும் புகைப்படம் அருமை. பாராட்டுக்கள்

ujeetotei
29th September 2013, 10:01 PM
BLAST FROM THE PAST
Goondukili 1954

Goondukili was the only film in Tamil cinema featuring both the top heroes, MGR and Sivaji Ganesan, which expectedly made history at many levels, some of it not so complimentary. Bringing the two stars together was indeed an achievement for Ramanna (T. R. Rajakumari’s brother, sound recordist-turned-producer-director). Written by Vindhan, a socially and politically conscious writer of his day, the film is a love triangle in which a man (Sivaji Ganesan) loses his mental balance as he cannot marry the girl of his dreams (Saroja). She becomes the wife of his best friend (MGR), who has no clue about his earlier disappointment in love. He provides solace to his disturbed friend in his home where the latter is shocked to see his heartthrob. It was a villainous role for Sivaji Ganesan who did similar anti-hero characters during the early 1950s in films such as Andha Naal, Thuli Visham, Thirumbi Paarand now Goondukili.

Though the film was well made, the casting of the two top heroes did not go down well with their fans who caused problems for the makers. The film was long under production due to differences of opinion between the actors and, as a result, certain scenes written by Vindhan could not be shot. When the film was released, it ran into more problems from the respective fan clubs of the heroes. It had to be withdrawn from circulation in many places. As a result, Ramanna and the production company, RR Pictures, lost heavily. Learning a bitter lesson from the sad experience, he launched a film based on folklore, Gulebakavali, which turned out to be a box office hit and compensated him for his earlier losses. (Ramanna told this writer later that his lack of experience — he was quite young at that time — in film direction and handling strong personalities such as MGR and Sivaji Ganesan were the main reasons for the debacle even though the film had an interesting storyline, good dialogue and music).

The film had excellent photography (M. A. Rehman assisted by Rajabathar, Ramanna’s brother). The music was by K. V. Mahadevan. Not many are aware that the tune composed for this film by Mahadevan, ‘Mayakkum maalai pozhudhu...’, could not be used for many reasons and was subsequently used by Ramanna in Gulebakavali for which the music composers were Viswanathan-Ramamurthy. This song is still popular. (The lyrics were by Thanjai Ramaiah Das, Ka. Mu. Sherif, Maruthakasi and Vindhan.) ‘Konjum kiliyaana pennai….sariyaa thappaa?’, written by Vindhan and rendered by T. M. Soundararajan, became a big hit. B. S. Saroja (Mrs. Ramanna in private life) as the wife caught in a vortex of emotions enacted the role admirably.

Remembered for: Being the only film featuring Tamil cinema icons M. G. Ramachandran and Sivaji Ganesan, a casting that was never repeated!
RANDOR GUY

ujeetotei
29th September 2013, 10:11 PM
Both Makkal thilagam and Nadigar thilagam contested a battle for best acting in this film.

siqutacelufuw
8th October 2013, 09:49 AM
மக்கள் திலகத்தின் 33வது காவியமாகிய "கூண்டுக்கிளி" யில் இடம் பெற்ற பாடல்களின் முதலிரண்டு வரிகள்

1. தனித்த் ஆண் குரலில் பாடல் : மாநிலத்தின் இருள் நீக்க வானில் வரும் ஜோதியே
(தொகையறா)

ஆனந்தமாய் வாழ வேணுமே மாந்தர் நாட்டிலே
(பல்லவி)

அமைதி சூழப் பசியும் பிணியும் பகையுமே அகல
(சரணம்)

2. தனித்த குரலில் பெண் பாடல் : ஓஹோ ....ஓஹோ.... ஹோ.... ஹோ....(பல்லவி)

அம்மா வாராளென்று சொன்னாடின்னுத்தான் இந்த
(அனு பல்லவி) தனித்த குரலில் பெண் பாடல் :

ஆடு தன் துருப்பு, அதையே நீ திருப்பு !
(சரணம்)

3. குழுப்பாடல் : ராமனே ஆண்டாலென்ன, ராவணனே ஆண்டாலென்ன ?
ராத்திரிப பூவாவுக்கே லாட்டரி .... வாழ்க்கை
லைட்டெரிய பணந்தானே பாட்டரி !

4. மீண்டும் குழுப்பாடல் : காயாத கானகத்தே நின்றுலாவும் நற் காரிகையே !
மேயாத மான் புள்ளி மேவாத மான்

5. தனித்த குரலில் பெண் பாடல் : எனக்குத் தெரியலே ! நெஜமா எனக்குத் தெரியலே ! (பல்லவி)
உங்களைக் கண்டவுடன் உடம்பெதுக்கு சில்லுக்கணும் ?

6. தனித்த் ஆண் குரலில் பாடல் : சொல்ல வல்லாயோ ? கிளியே சொல்ல நீ வல்லாயோ ? (பல்லவி)
வல்ல வேல் முருகன் தனை இங்கு வந்து கலந்து மகிழ்ந்து (அனு பல்லவி)

7. ஜோடியுடன் கூடிய குழுப்பாடல் : லல்லல ..... லல்லல .... லல்லலலா .....
வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே தீப நன்னாளை அன்பாக கொண்டாடுவோம்

8. தனித்த் ஆண் குரலில் பாடல் : கொஞ்சுங் கிளியான பெண்ணைக் கூண்டுக்கிளி யாக்கிவிட்டுக்
கெட்டி மேளம் கொட்டுவது சரியா, தப்பா ?

9. தனித்த குரலில் பெண் பாடல் : .... பார் !....பார்!.... பார்!......பார் என் மகளே பார், பார் .(பல்லவி)
இருந்த வீடு இரவல் வீடு, இருக்கப் போவதுன் சொந்த வீடு


குறிப்பு : இந்தக் காவியத்தில், பின்னணிக் குரலில் பாடல்களை பாடியவர்கள் (t.m.s. தவிர்த்து)

1. டி வி. ரத்தினம், 2. பி. ஏ. பெரிய நாயகி 3. மகாதேவன் 4. வி. என். சுந்தரம் மற்றும் ராணி ஆகியோர்.


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
8th October 2013, 09:50 AM
http://i39.tinypic.com/33ygvpt.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
9th October 2013, 04:55 PM
நமது மக்கள் திலகத்தின் 33வது படத்தில் இடம் பெற்ற கீழ்க்கண்ட 6வது பாடலின் சிறப்பு என்னவென்றால் அப்பாடல் மகா கவி பாரதியார் அவர்களால் எழுதப்பட்டது.

அப்பாடலின் மொத்த வரிகள் வருமாறு :

(பல்லவி)

சொல்ல வல்லாயோ ? கிளியே சொல்ல நீ வல்லாயோ ?

(அனு பல்லவி)

வல்ல வேல் முருகன் தனை இங்கு வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று

(சரணம்)

தில்லை யம்பலத்தே .....நடனம்
செய்யும் அமரர் பிரான் ! .... அவன்
செல்வத் திருமகனை ..... இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று (சொல்ல)

அல்லிக் குளத்தருகே ... ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே .... அங்கோர்
முல்லைச் செடியதன்பால் .... செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்ற தென்னவென்று (சொல்ல)

பாலைவனத் திடையே ..... என் கை
பற்றி நடக்கையிலே .... தன் கை
வேலின் மிசை ஆணை வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று (சொல்ல)




ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
30th October 2013, 03:02 PM
[COLOR=#0000ff]

[B][COLOR="#FF0000"]பொன்மனச்செம்மல் நடித்த 34வது திரைப்படமாகிய "குலேபகாவலி" படத்தினைப் பற்றிய தகவல் :

1. படம் வெளியான தேதி : 29-07-1955

2. படத்தை தயாரித்த நிறுவனம் : ஆர். ஆர். பிக்சர்ஸ்

3. கதாநாயகன் : மக்கள் திலகம்

4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : தாசன் முல்க்

5. கதாநாயகி :: T.R. ராஜகுமாரி

6. வசனம் மற்றும் பாடல்கள் : தஞ்சை ராமையாதாஸ் .


7. இசை அமைப்பு : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

8. இயக்குனர் : டி.ஆர். ராமண்ணா

9. படத்தில் பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : கே. ஏ. தங்கவேலு, சந்திரபாபு, E.R. சகாதேவன், ஏ. கருணாநிதி, T.K. ராமராஜன், T.R. ராஜகுமாரி, G. வரலட்சுமி, ராஜம் சுலோச்சனா, E.V. சரோஜா, S.D. சுப்புலட்சுமி மற்றும் பலர்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++

படத்தின் சிறப்பம்சம் :


1. ஆர். ஆர். பிக்ஸர்ஸ் .சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது படமிது.

2. மக்கள் திலகம் அவர்கள் புலியுடன் போரிடும் காட்சி பிரசித்தி பெற்றது. .

3. இப்படத்திற்கு பின்னணி பாடிய கலைஞர்கள் : (டி..எம். எஸ். தவிர) : திருச்சி லோகநாதன், ஏ. எம். ராஜா, வெங்கடேசன்,
பி. லீலா, ஜிக்கி, கே. ஜமுனாராணி, ஏ. ரத்தினமாலா

இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.

http://i40.tinypic.com/hrem4y.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
10th November 2013, 12:54 PM
பொன்மனச்செம்மல் நடித்த 34வது திரைப்படமாகிய "குலேபகாவலி" படத்தின் கதை சுருக்கம் :
----------------------------------------------------------------------------------------------------------------------

குலேபகாவலி , இல்லை இல்லை அவள் பலே பகாவலி. அதனால்தான், நகாவலி ராஜ்யத்தின் ராணி பகாவலியாக அவளால் இருக்க முடிந்தது.
அப்பப்பா ! அவளிடம் ஆண்கள் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாடு ............ கொஞ்சமா , நஞ்சமா ?

அந்தப் பெண் சிங்கத்தைப் பார்க்கும் பேதைகள் எல்லாம் தாங்களும் அவளைப் போல நகாவலி ராஜ்ஜியத்தின் ராணியாக இருக்கக் கூடாதா என
ஏங்குவார்கள் !

அவள்தான் அப்படியென்றால் பகடையாடி மன்னாதி மன்னர்களையெல்லாம் பைத்தியங்களாக்கிய லக்கு ----- எப்படி தெரியமா ? அந்த அழகியை பார்க்கும் ஆண்கள் எல்லாம் "சொக்கு, சொக்கு" என்று சொக்கிப் போனார்கள். அவளிடம், சொக்கட்டான் --- ஆடித் தோற்று அவள் சொன்னபடி நெல் குத்தி, மாவு இடித்து, தண்ணீர் இறைத்துத் தாசானுதாசர்களாகக் காலத்தை கழித்தார்கள்.

இந்தப் பெண் சிங்கங்களை வெல்ல இவ்வளவு பரந்த உலகத்தில் ஒரு ஆண் சிங்கம் கூட இல்லையா ? என்ற கேள்வி எட்டு திசைகளிலும் எதிரொலி செய்தது. "இதோ இருக்கிறேன்" என்று பாய்ந்து வந்தது ஆண் சிங்கம்...... அவன்தான் தாசன்முல்க் !

அவன் தந்தை ஜைனன் முல்க் எதிர்பாராத விபத்தால், தன் கண்களை இழந்திருந்தான். இழந்த கண்களை மீண்டும் பெற வேண்டுமானால், குலேப் பூ வேண்டும்......அந்தப் பூவோ, நகாவலி ஆட்சியின் கீழ் இருந்தது. எட்டிப் பறித்து விட முடியுமா ? ஊ ஹூம் !

அந்த அபூர்வ பூவை அடைய வேண்டுமானால் எத்தனயோ ஆபத்துக்களைக் கடக்க வேண்டும். என்ன செய்வான் தாசன் முல்க் ? அல்லாவின் அருளால், அவற்றில் பலவற்றை அவன் ....... கடந்து விட்டான். கடைசியில் ......

சிங்கம் அல்ல ........பசி தீர்ந்ததும் சும்மா இருந்து விட ! புலி எத்தனை பேரை அடித்து தின்றாலும் எப்போதும் பசியோடிருக்கும் பயங்கரப் புலி !
அதை வெல்ல வேண்டி இருந்தது தாசன்முல்க்.

இவன் ஐந்தடி உயரம். அந்தப் புலியோ பதினாறு அடி நீளம் ! இவன் கையில் ஒரே ஒரு கத்தி. அதன் கையிலோ இருபது கூர்மையான கத்திகள். ஆம், அடித்துக் கிழிக்கும் அதன் நகங்களைத் தான் சொல்கிறோம். இவன் தலை அதன் வாய்க்குள் நுழைந்து விடும். அதன் தலையோ இவன் வாய்க்குள்
நுழையவே நுழையாது. அப்புறம் ....... ?

இவன் கதி என்ன ? அதை வென்றானா ? அந்த அபூர்வப் பூவை அடைந்தானா ? அவன் தந்தை ஜைனன் முல்க் இழந்த பார்வையை மீண்டும்
பெற்றாரா ? எத்தனயோ ஆண்களை தங்கள் அழகால் அடிமை கொண்ட ..... பகாவலியும், லக்பெஷ்வாவும் தாசன் முல்கின் வீரத்துக்கு முன்
தலை வணங்கினார்களா ?

இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் எப்பொழுதுதான் படத்தைப் பார்ப்பது.

அதோ இரண்டாவது பெல் கூட அடித்து விட்டது. ..... படத்தைப் பாருங்கள்.

================================================== ================================================== ==========

இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் எப்பொழுதுதான் படத்தைப் பார்ப்பது ?

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !அனபன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
10th November 2013, 12:57 PM
பொன்மனச்செம்மல் நடித்த 34வது திரைப்படமாகிய "குலேபகாவலி" படத்தி ல் இடம் பெற்ற பாடல்கள் :

================================================== =====================

1. இறை வணக்க பாடல் : ஜெயமே பெறவே ஜெகமே புகழவே (தொகையறா)
நாயகமே நபி நாயகமே நலமே அருள் நபி நாயகமே

2. நகைச்சுவை ஜோடிப்பாடல் பாராண்ட மன்னரெல்லாம் ... பதுங்கிருந்த பூமியில்
இந்த பச்சோந்திக் கூட்டமெல்லாம் பகல் வேஷம் போடுதய்யா

3. ஜோடிப்பாடல் வில்லேந்தும் வீரனெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
என்னை வெற்றி பெற முடியாது .... நீர் கற்ற வித்தையும் செல்லாது

4. ஜோடிப்பாடல் வில்லேந்தும் வீரனெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே......
என்ன வேணும் துரையே .... இஷ்டம் போல் கேள் இனியே !


5. தனித்த ஆண் குரல் பாடல் மாயா வலையில் வீழ்ந்து, மதியே இழந்து தன்னை மறந்தான்
பெரும் பாவி மனமே ! காயாபுரிக் கோட்டையை கற்கோட்டையாய்

6. தனித்த குரலில் ஆண் பாடல் கையைத் தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே
காதலின் வேகந்தானா...(தொகையறா)
தெய்வீக காதல் கனிந்திடும் தேகத்திலே ஒரு சக்தியுண்டு

7. தனித்த பெண் குரல் பாடல் சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்கள் ஜவாப்பு
நிக்காப் புருஷன் போல வந்து ஏமாந்தும் என்ன வீராப்பு ?

8. குழுப்பாடல் அம்பாலா ..... பீம்பாலா .......... லீபாலா ... பீபா ..... ஹீ பாலா
ஸோலாஜி... பாலாஜி....... ஜாலாஜி ....ஜல் ஜல் ஜல் ஜல்.. லாஜி

9. தனித்த ஆண் குரல் பாடல் நகாவலி நாட்டிலே ... பகாவலி ஆட்சியிலே நியாயமாய்
வாழவும் வழியில்லே.

அநியாயம் இது அநியாயம் இந்த ஆட்சியிலே .... இது அநியாயம்
இங்கே ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

10. பெண்கள் குழுப் பாடல் கண்ணாலே பேசும் பெண்ணாலே .... ஆண்கள் தன்னாலே மயங்கும்
காலமே !
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ... ஓ ... ஓ ...ஓ . தன்னாலே



11. காதல் ஜோடிப்பாடல் மயக்கும் மாலை பொழுதே நீ போ, போ இனிக்கும் இன்ப இரவே
நீ வா வா .... ...... இன்னலை தீர்க்க வா

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !


அனபன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
10th November 2013, 03:18 PM
http://i41.tinypic.com/igj6sy.jpg

Richardsof
10th November 2013, 03:20 PM
http://i39.tinypic.com/2h6ssif.jpg

idahihal
24th November 2013, 06:16 PM
http://i40.tinypic.com/2h85rw2.jpg

idahihal
24th November 2013, 06:17 PM
http://i44.tinypic.com/mjy881.jpg

idahihal
24th November 2013, 06:29 PM
http://i43.tinypic.com/2lng3vd.jpg

idahihal
24th November 2013, 06:32 PM
http://i40.tinypic.com/21j56yb.jpg

idahihal
24th November 2013, 06:37 PM
குலேபகாவலி படத்தின் கதைச்சுருக்கம், பாடல்கள் பற்றிய அருமையான ஆவணங்களைப் பதிவிட்ட பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றிகள் பல.

ujeetotei
25th December 2013, 11:21 AM
Thanks Professor Selvakumar Sir. Sometimes it is difficult to find this thread any idea apart from accessing this thread without bookmarking?

Scottkaz
27th September 2014, 07:08 PM
http://i62.tinypic.com/k0j8ms.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

oygateedat
8th February 2015, 05:34 PM
http://s15.postimg.org/kbe65bj8b/Photo1597.jpg (http://postimg.org/image/ldocnv21j/full/)

siqutacelufuw
11th February 2015, 01:18 PM
நீண்ட இடைவெளிக்கு பின்பு, PONMANACHEMMAL M.G.R. FILMOGRAPHY NEWS & EVENTS என்கின்ற இந்த திரியினில், அன்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் நம் மக்கள் திலகம் நடித்த காவியங்கள் பற்றிய தொகுப்பினை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்.

நம் கலைச்சுடர் அவர்கள் நடித்த 35வது காவியம்

http://i62.tinypic.com/fcil2f.jpg

முதல்,

திரி தொடர்கிறது. திரி பதிவாளர்கள், பதிவிடப்படும் அந்தந்த காவியம் குறித்த பொதுவான தகவல்களை மட்டும் இந்த திரியினில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த திரியில் இடம் பெறும் காவியங்கள் படைத்த மறு வெளியீட்டு சாதனைகளை, சகோதரர் திரு. ராமமூர்த்தி அவர்களால் துவக்கப்பட்ட " மறு வெளியிட்டிலும் மக்கள் திலகத்தின் சாதனைகள்" என்ற திரியினில் பதிவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

siqutacelufuw
11th February 2015, 01:21 PM
பொன்மனச்செம்மல் நடித்த 35வது காவியம் " அலிபாபாவும் 40 திருடர்களும்" பற்றிய தகவல் :

1. படம் வெளியான தேதி : 14-01-1956

2. படத்தை தயாரித்த நிறுவனம் : மாடர்ன் தியேட்டர்ஸ்

3. கதாநாயகன் : மக்கள் திலகம்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : அலி பாபா

5. கதாநாயகி :: பி.பானுமதி

6. கதை, வசனம் : ஏ. எல். நாராயணன்

7. பாடல்கள் : ஏ. மருதகாசி .

7. இசை அமைப்பு : என். தட்சிணாமூர்த்தி

8. இயக்குனர் : டி.ஆர். சுந்தரம்


9. பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : பி.எஸ்.வீரப்பா, கே . சாரங்கபாணி, கே. ஏ. தங்கவேலு, எம்.ஜி. சக்கரபாணி , ஒ. ஏ. கே. தேவர், எம். என். ராஜம், வித்யாவதி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++

படத்தின் சிறப்பம்சம் :

1. தென்னகத்தின், தமிழகத்தின் முதல் முழு நீள வண்ணக்காவியம்.

2. நூறு நாட்களை கடந்த வெற்றிக்காவியம்.

================================================== ============================

இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.

siqutacelufuw
11th February 2015, 01:25 PM
பொன்மனச்செம்மல் நடித்த 35வது காவியம் " அலிபாபாவும் 40 திருடர்களும்" கதை சுருக்கம் :

பாக்தாத் நகரின் ஆடலழகி மாறி மார்ஜியானா. அவள் ஆட்டத்திலே மக்கள் பரவசமடைந்திருக்கும் சமயத்தில், அமீர் காசிம்கானின் தளபதி ஷேர்கான், அவளை அரண்மனைக்கு இழுத்து செல்ல முயலுகிறான். அந்த சமயத்தில் அலிபாபா குறுக்கிட்டு ஷேர்கானை விரட்டி . அடிக்கிறான்.
அலிபாபா, அமீர் காசிம்கானின் உடன் பிறந்தவன். அமீரால் வஞ்சித்து விரட்டப்பட்டவன். அலிபாபாவின் தீரத்தை கண்டு மார்ஜியானா. தன் மனதை பறி கொடுக்கிறாள்.

தங்கைஆயிஷாவின் விருப்பப்படி, மார்ஜியானாவையும், அவளது சகாவான தவுலத்தையும், தன் வீட்டிலேயே தங்க வைக்கிறான், அலிபாபாவும். தவுலத்தும் ஒரு நாள் எதிர்பாராத விதமாக, கள்வர் தலைவன் அபு ஹுசேன் குகையை கண்டு பிடித்து விடுகிறார்கள் . அலிபாபா, அந்த குகைக்குள் நுழைந்து, தவுலத்தின் உதவியுடன் ஏராளமான பொன்னை மூட்டை கட்டிக்கொண்டு புறப்படுகிறான்.

அலிபாபா எப்படி அவ்வளவு பொன் தேடினான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அமீர்கான் அவனை விருந்துக்கு அழைக்கிறான். விருந்துக்கு சென்ற அலிபாபா அண்ணன் அமீர்கானின் கபட நாடகத்தில் மயங்கி, “மாய வார்த்தையை” அவனுக்கு சொல்லி விடுகிறான். உடனே, அபாண்ட பழி சுமத்தி, அலிபாபாவை கைது செய்து, மரண தண்டனை விதிக்கிறான் அமீர்.

மார்ஜியானா, அலிபாபாவை, தன் கையாலே நடனமாடிக் கொல்வதற்கு அனுமதி பெற்று, நடனமாடியபடி, தன் கையிலிருந்த கத்தியால் அலிபாபாவின் கட்டுக்களை அறுத்து விட்டு விடுகிறான்.

கட்டறுபட்ட அலிபாபா அங்கிருந்த வீரர்களுடன் கத்தி சண்டையிடும் பொழுது, அமீர் காசிம்கான், மர்ம குகையை அடைந்து அங்குள்ள பொருட்களை மூட்டை கட்டி கொண்டு திரும்புகையில், கதவு திறக்கும் மந்திரத்தை மறந்து விடுகிறான். அப்போது அங்கு வந்த அபு ஹுசைன் அமீர் காசிம்கானை கொன்று, தலைகீழாக தொங்க விடுகிறான்.

அமீரை தேடி வந்த அலிபாபா, அவனின் பிணத்தை தன் வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறான்.

அபு ஹுசைன் பிணத்தை காணாததால் அலிபாபாதான் எடுத்துச் சென்றிருக் க வேண்டும் என அறிந்து, தன் சகாக்களை பீப்பாயில் அடைத்து, மாறு வேடத்தில், அலிபாபாவின் அனுமதியுடன், அவன் மாளிகையை அடைகிறான்.

மாறு வேடந்தாங்கியவனை அடையாளம் கண்டு கொள்கிறாள் மார்ஜியானா. இதையறிந்த அபு ஹுசைன், மார்ஜியானாவை இரகசியமாக சிறை செய்கிறான்.

மிகுதியை காண வெள்ளித்திரைக்கு வாருங்கள் !

siqutacelufuw
11th February 2015, 01:28 PM
பொன்மனச்செம்மல் நடித்த 35வது காவியம் " அலிபாபாவும் 40 திருடர்களும்" பாடல்கள் :

பாடல் 1 : அழகான பொண்ணு நான், அதுக்கேத்த கண்ணுதான் (தனித்த பெண்குரல் பாடல்)

பாடல் 2 : சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே (ஆண் பெண் ஜோடிப்பாடல்)

பாடல் 3 : மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்த போதிலே
(கதாநாயகன்-கதாநாயகி காதல் பாடல்)

பாடல் 4 : நாம் ஆடுவதும் பாடுவதும் காசுக்கு (நடனம் மற்றும் குழுப்பாடல்)

பாடல் 5 உன்னை விட மாட்டேன், உண்மையில் நானே ! (தனித்த பெண்குரல் பாடல்)

பாடல் 6 உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா... செய்யடா
(தனித்த ஆண் குரல் பாடல்)

பாடல் 7 சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க தனித்த பெண்குரலில் நடனப்பாடல்)

பாடல் 8 : அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி, அமீர் பூபதி (தனித்த பெண்குரல் பாடல்)

பாடல் 9 என் நா(ஆ)ட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே, நானதில் தவறேனே
(தனித்த பெண்குரல் பாடல்)

*****

oygateedat
11th February 2015, 10:46 PM
http://s12.postimg.org/soglelod9/WP_20140518_017.jpg (http://postimg.org/image/hove2zxy1/full/)

idahihal
18th February 2015, 12:06 AM
அன்பு பேராசிரியர் அவர்களுக்கு,
நன்றிகள் கோடி. எங்கள் வேண்டுகோளை ஏற்று மீண்டும் பொன்மனச் செம்மல் திரியை சுடர்விடச் செய்தமைக்கு.அலிபாபாவும் 40 திருடர்களும். தென்னகத்தின் முதல் வண்ணப்படம். (கேவா கலர்). சிவப்பு வண்ணம் சற்று தூக்கலாக இருக்கும் கேவா கலர் இயற்கையான வண்ணமாக இல்லாவிடினும் முதல் படம் என்ற அளவில் அது அளித்த பிரமிப்பு இன்னமும் மாறவில்லை. மக்கள் திலகத்தின் அழகு படிப்படியாக பொலிவு பெற்று மெருகேறி மலைக்கள்ளன் படத்தில் கலைச்சூரியனாக பிரகாசித்தது என்றால் இந்தப் படத்தில் அதற்கும் மேல் . சாகசச் காட்சிகளில் அதிக அளவு சிரமம் எடுத்துக் கொண்டு மக்கள் திலகம் அவர்களே தாவுவது வேகமாக குதிரை மீது ஏறிச் செல்வது உயரத்தில் இருந்து குதிப்பது மேசைகளின் மீது தாவி வழுக்கிய படி செல்வது என அத்தனை சண்டைவீரர்கள் செய்வதையும் டூப் போடாமல் தானே செய்து பிரமிப்பூட்டியிருப்பார் . ஆனால் சமீப காலமாக இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் கூட எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு படத்தை முடித்தார் சுந்தரம். எம்.ஜி.ஆரால் கூட டூப் நடித்த காட்சிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற ஒரு கதை (எம்.ஜி.ஆர் இரண்டு நாள்கள் அவசரமாக சென்னைக்கு சென்று விட்டதால் டூப்பை வைத்து சண்டைக் காட்சி, காதல் காட்சி ஆகியவற்றை முடித்து படத்தை வெளியிட்டார் என்று ஒரு பத்திரிக்கையில் வந்தது . அதை அப்படியே பலரும் உண்மைத் தன்மையை அறியாமலே பிரசுரித்து வருகிறார்கள். பேராசிரியர் சார் நீங்கள் இது பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். ) இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர் படம். இன்றைக்கும் ரசிக்கும் வகையில் உள்ள அருமையான படம்.

siqutacelufuw
24th February 2015, 03:32 PM
அன்பு பேராசிரியர் அவர்களுக்கு,
நன்றிகள் கோடி. எங்கள் வேண்டுகோளை ஏற்று மீண்டும் பொன்மனச் செம்மல் திரியை சுடர்விடச் செய்தமைக்கு.அலிபாபாவும் 40 திருடர்களும். தென்னகத்தின் முதல் வண்ணப்படம். (கேவா கலர்). சிவப்பு வண்ணம் சற்று தூக்கலாக இருக்கும் கேவா கலர் இயற்கையான வண்ணமாக இல்லாவிடினும் முதல் படம் என்ற அளவில் அது அளித்த பிரமிப்பு இன்னமும் மாறவில்லை. மக்கள் திலகத்தின் அழகு படிப்படியாக பொலிவு பெற்று மெருகேறி மலைக்கள்ளன் படத்தில் கலைச்சூரியனாக பிரகாசித்தது என்றால் இந்தப் படத்தில் அதற்கும் மேல் . சாகசச் காட்சிகளில் அதிக அளவு சிரமம் எடுத்துக் கொண்டு மக்கள் திலகம் அவர்களே தாவுவது வேகமாக குதிரை மீது ஏறிச் செல்வது உயரத்தில் இருந்து குதிப்பது மேசைகளின் மீது தாவி வழுக்கிய படி செல்வது என அத்தனை சண்டைவீரர்கள் செய்வதையும் டூப் போடாமல் தானே செய்து பிரமிப்பூட்டியிருப்பார் . ஆனால் சமீப காலமாக இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் கூட எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு படத்தை முடித்தார் சுந்தரம். எம்.ஜி.ஆரால் கூட டூப் நடித்த காட்சிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற ஒரு கதை (எம்.ஜி.ஆர் இரண்டு நாள்கள் அவசரமாக சென்னைக்கு சென்று விட்டதால் டூப்பை வைத்து சண்டைக் காட்சி, காதல் காட்சி ஆகியவற்றை முடித்து படத்தை வெளியிட்டார் என்று ஒரு பத்திரிக்கையில் வந்தது . அதை அப்படியே பலரும் உண்மைத் தன்மையை அறியாமலே பிரசுரித்து வருகிறார்கள். பேராசிரியர் சார் நீங்கள் இது பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். ) இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர் படம். இன்றைக்கும் ரசிக்கும் வகையில் உள்ள அருமையான படம்.


மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம், மிக மிக கண்டிப்பானவர். படப்பிடிப்பின் போது, நமது மக்கள் திலகத்தின் எதிர் பாராத தாமத வருகையினால், ஒரு சில காட்சிகள் டூப் போட்டு, எடுக்கப்பட்டன என்பது உண்மையே. ஆனால், அந்த பத்திரிகை கூறியபடி, அந்த டூப் காட்சிகள், நம் பொன்மனசெம்மல் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை என்பது தவறான செய்தி. நான் கேள்விப்பட்ட வரையில், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், திரைக்கலைஞர்களை பயமுறுத்த இப்படிப்பட்ட தந்திரங்களை கையாள்வார் என்பதே ! ஆனால்,, காதல் மற்றும் சண்டை காட்சிகளில், முழுமையாக இறுதியில் நடித்தவர் நம் மனம் கவர்ந்த மக்கள் திலகமே !

இன்னும் ஓரிரு தினங்களில், நமது பொன்மனச்செம்மல் நடித்த 36வது காவியம் " மதுரை வீரன் " பற்றிய தகவல் பதிவிடப்படும்.

siqutacelufuw
26th February 2015, 09:05 AM
பொன்மனச்செம்மல் நடித்த 36வது காவியம் " மதுரை வீரன் " பற்றிய தகவல் :

1. படம் வெளியான தேதி : 13-04-1956

2. படத்தை தயாரித்த நிறுவனம் : கிருஷ்ணா பிக்சர்ஸ்

3. கதாநாயகன் : மக்கள் திலகம்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : வீரன்

5. கதாநாயகி :: பி.பானுமதி

6. வசனம் : கவியரசு கண்ணதாசன்

7. பாடல்கள் : கவியரசு கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ், .

8. இசை அமைப்பு : ஜி. ராமநாதன்

9. இயக்குனர் : டி. யோகானந்

10. பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : பத்மினி, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் , திருப்பதி சாமி, ஒ. ஏ. கே. தேவர்,:டி எஸ். பாலையா, டி. கே. ராமசந்திரன், ஆர். பாலசுப்ரமணி, மற்றும் பலர்.

11. பின்னணி பாடியவர்கள் : டி எம். சவுந்தரராஜன், பி. லீலா, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி. பானுமதி ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++

படத்தின் சிறப்பம்சம் :

1. திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் 100 நாட்கள் ஒடிய முதல் தமிழ் திரைப்படம்.

2. 33 திரையரங்குகளில், நூறு நாட்களை கடந்த சாதனையை , இன்றும் எந்த கருப்பு-வெள்ளை படமும் முறியடிக்க வில்லை.

================================================== ============================

http://i61.tinypic.com/2vcgf3m.jpg

http://i58.tinypic.com/ifwrax.jpg

இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.

siqutacelufuw
4th March 2015, 12:49 PM
பொன்மனச்செம்மல் நடித்த 36வது காவியம் " மதுரை வீரன் " கதைச்சுருக்கம்
================================================== ===

துளசி அய்யா : (நடிகர் ஆர். பாலசுப்ரமணி)

வாரணவாசிப் பாளையாதிபதி நான். பிள்ளை இல்லா குறை தீர, என் மனைவி ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தாள் . கழுத்திலே மாலை இருக்கிறது. நாட்டுக்காகாது என்றார் சாஸ்த்ரீகர் காட்டிலே கொண்டு போய் விட்டு விட்டேன்.

சின்னான் : (கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்)

தொட்டியம்பாளயத்திலே நான் செருப்பு தைக்கிறவனுங்க. நானும், என் பொஞ்சாதி செல்வியுமா காட்டுக்கு போனோம்,. குழந்தையை கண்டெடுத்தோம். "வீரன்" னு பேரு வெச்சோம். நல்லா வளத்தோம். பயலுக்கு, இருபது வயசு ஆனபோது ..........

பொம்மி : (நடிகை பானுமதி)

ஆற்றிலே விழுந்த என்னை காப்பாற்றினார். தொட்டியம்பாளையத்து அரச குமாரி நான். கண்டேன் அவரை, காதலித்தேன், அப்பா பொம்மண்ண மகாராஜா தடுத்தார். நரசப்பன் எனது ..........

நரசப்பன் : ( டி. எஸ். பாலையா)

தாய் மாமன். உரிமை எனக்கு. நானும் தடுத்தேன் அரசரோடு சேர்ந்து. பொம்மியை அரண்மனையிலேயே காவல் வைத்தேன். திருமணத்துக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால், அந்த பயல் வீரன், அர்த்த ராத்திரியிலே கன்னி மாடத்தில் புகுந்து அவளை சிறை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான். விடுவேனா ? படை கொண்டு மோதினேன். உதை வாங்கி திரும்பினேன். இனி நமது படைகளால் காரியமாகாது என்று தெரிந்து, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கனை நாடினேன். உதவி கோரினேன்.

விஜயரங்க சொக்கன் (திருப்பதி சாமி) :

கோரியதை கொடுத்தேன். வீரனைப் பிடித்து வர பணித்தேன். பிடித்து வந்தார்கள். பார்த்தேன். உண்மை வீரன் என்பதை உணர்ந்தேன். ஆகவே, பொம்மி அவனுக்கே என்று தீர்ப்பளித்தேன். அதோடு, மதுரை மன்னரும், எனது மைத்துனருமான திருமலை நாயக்கருக்குத் தளபதியாக அனுப்பி வைத்தேன்.

திருமலை மன்னன் : (ஒ. ஏ. கே. தேவர்)

வந்தான் வீரன். வரவேற்பு கொடுத்தேன். பழைய தளபதி குடிலனின் பதவியை குறைத்தேன். வீரனை முதல் தளபதியாக ஆக்கினேன். அழகர் மலை, சுருளி மலை, பிரான் மலைக் கள்ளர்களைப் பிடிக்க ஆணையிட்டேன். வீரன் ஊரடங்கு சட்டம் போட்டான். உற்சாகமாகவே பணி புரிந்தான். அப்போது .........

வெள்ளையம்மாள் : ( நடிகை பத்மினி)

அரண்மனை நாட்டியக்காரியான நான் அவரைக் கண்டேன். காதல் கொண்டேன். அவரும், என்னை விரும்பினார். பொம்மி அறிந்தாள். துடித்தாள். என்னிடம் வந்து கெஞ்சினாள் . தன் கணவரை பாராதே என்றாள். சம்மதித்தேன். அப்போதே வீரர் வந்தார். என் மீது ஆசை வைத்திருந்த திருமலை மன்னரும் தவறான பாதையில் இறங்கினார். அவருக்கு துணை புரிந்தது .....................

குடிலன் : ( நடிகர் டி. கே. ராமசந்திரன்) .

நானும், மாறு வேடத்தில் என்னோடு இருந்த நரசப்பனும், நரசப்பன் முறைப் பெண்ணை இழந்தான். நான் பதவி குறைக்கப்பட்டேன். ஆத்திரம் வராதா ?. குற்றங்களை அழகாக ஜோடித்தோம். மாறு கால், மாறு கை வாங்கும்படி ஆணையிட்டான் திருமலை மன்னன். கொலைக்களத்துக்கு அவனை இழுத்து சென்றோம். .................

மதுரை ஜனங்கள் :

செய்தி அறிந்தோம். பொம்மியும், வெள்ளையம்மாளும், ஆவேசத்துடன் கொலைக்களத்துக்கு ஓடிஇருக்கிறார்கள் எபதை அறிந்தோம். இதோ, அங்கே போய்க்கொண்டே இருக்கிறோம். நீங்களும் வாருங்கள், என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் .

குறிப்பு : இந்த கதை சுருக்கம் சற்று புதுமையான முறையில், ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நடை மாறாமல், அதே எழுத்து வடிவத்தில் இங்கு பதிவிடப் பட்டுள்ளது.

siqutacelufuw
4th March 2015, 02:18 PM
பொன்மனச்செம்மல் நடித்த 36வது காவியம் " மதுரை வீரன் " - இடம் பெற்ற பாடல்கள் :
================================================== ==========

பாடல் 1. (வாழ்த்துப்பாடல்) செந்தமிழா எழுந்து வாராயோ
சிங்காரத் தாய் மொழியை பாராயோ (பல்லவி)

பாடல் 2 (குழுப்பாடல்) சும்மாயிருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்

பாடல் 3 (தனிப்பாடல்) வாங்க மச்சான் வாங்க ...... வந்த
வழியை பாத்து போங்க

பாடல் 4 (தனிப்பாடல்) முத்துப்போல் பல்லழகி (தொகையறா)
தேடி வந்தேனே புள்ளி மானே (பாட்டு எடுப்பு)

பாடல் 5 (தனிப்பாடல்) தெந்தினத் தின்னானே ... தின்னானே (பல்லவி)
குன்றுதோ ராடிவரும் குமர வடிவேலன் (பாட்டு எடுப்பு)

பாடல் 6 (தனிப்பாடல்) அவர்க்கும், எனக்கும் உறவு காட்டி, அருள் புரிந்தது கதையா ?

பாடல் 7 (தனிப்பாடல்) வாங்க மச்சான் வாங்க ...... சொந்த வழியெப் பார்த்துட்டீங்க

பாடல் 8 (தனிப்பாடல்) ஆடல் காணீரோ .. விளையாடல் காணீரோ
(பல்லவி) திருவிளையாடல் காணீரோ

பாடல் 9 (ஜோடிப் பாடல்) நாடகமெல்லாம் கண்டேன் ....... உந்தன் ஆடும் விழியிலே

பாடல் 10 (ஜோடிப் பாடல்) ஏச்சிப் பிழைக்கும் தொழிலே - சரிதானா
எண்ணிப்பாருங்க ... ஐயா எண்ணிப்பாருங்க .

பாடல் 11 (தனிப்பாடல்) கடமையிலே உயிர் வாழ்ந்து கண்ணியமே
கொள்கையென மடிந்த வீரா

idahihal
23rd March 2015, 12:58 AM
அன்பு சகோதரர் பேராசிரியர் அவர்களுக்கு
நன்றிகள் பல. மதுரைவீரன் பாட்டுப் புத்தகத்தில் வித்தியாசமான முறையில் அமைந்திருந்த கதைச் சுருக்கம் வியக்க வைத்தது. அப்போதே மாறுபட்ட சிந்தனையுடன் அமைத்திருக்கிறார்கள். அருமை. இது வரை பார்த்ததில்லை. வாய்ப்புக்கு நன்றி. மேலும் தங்களிடம் பல நாட்களாக எனது வேண்டுகோள் ஒன்று. மக்கள் திலகத்தின் பாடல்களின் ஆசிரியர் விபரங்களுடன் பதிவிட வேண்டுகிறேன். இன்று பல ஊடகங்களிலும் தவறுகள் மலிந்து காணப்படுகின்றன. உதாரணமாக வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் எழுதியதென்றும், மருதகாசி எழுதிய பாடலை வாலி எழுதியதென்றும் குறிப்பிடுகிறார்கள். சரியான விபரங்களை தங்களால் மட்டுமே தெரிவிக்க முடியும். எனவேமுதல் படம் தொடங்கி எல்லா பாடல்களையும் குறிப்பிட்ட தாங்கள் அதனை எழுதிய ஆசிரியர்களின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

siqutacelufuw
17th April 2015, 11:48 AM
பொன்மனச்செம்மல் நடித்த 37வது காவியம் " தாய்க்குப்பின் தாரம் " பற்றிய தகவல் :

1. படம் வெளியான தேதி : 21-09-1956

2. படத்தை தயாரித்த நிறுவனம் : தேவர் பிலிம்ஸ்

3. கதாநாயகன் : மக்கள் திலகம்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : முத்தையன்

5. கதாநாயகி :: பி.பானுமதி

6. கதை, வசனம் : க. அய்யாபிள்ளை

7. பாடல்கள் : தஞ்சை ராமையாதாஸ், கவி. லட்சுமணதாஸ், அ. மருதகாசி,
வில்லன் டி.எஸ். நடராஜன், சாண்டோ சின்னப்பா தேவர்

8. இசை அமைப்பு : கே. வி. மகாதேவன்

9. இயக்குனர் : எம். ஏ. திருமுகம்

9. பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : டி எஸ். பாலையா, ஈ.ஆர். சகாதேவன், காக்கா ராதாகிருஷ்ணன், சாண்டோ சின்னப்பா தேவர், பி. கண்ணாம்பா, சுரபி பாலசரஸ்வதி, ஜி . சகுந்தலா, கே. ரத்னம், கே. ஆர். சாரதாம்பாள், மற்றும் பலர்.

10. பின்னணி பாடியவர்கள் : டி எம். சவுந்தரராஜன், ஏ. எம். ராஜா, எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி.பானுமதி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++

படத்தின் சிறப்பம்சம் :

1. தாய்குலத்தின் ஏகோபித்த ஆதரவினை பெற்று, 100 நாட்கள் கடந்த வெற்றிக்காவியம்.

2. மக்கள் திலகத்தின் தொடர்ந்து வந்த சரித்திர காவியங்களிலிருந்து வேறுபட்டு, சமூக
கதையமைப்பு கொண்ட சிறந்த காவியம்.

3. நம் மக்கள் திலகத்தின் பலத்த ஆதரவுடன், சாண்டோ சின்னப்பா தேவரை தமிழ் திரையுலகில் ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்திய, தேவர் பிலிம்ஸாரின் முதல் படம்.

4. இந்த காவியத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை வில்லன் நடிகர் நடராஜனுடன் இணைந்து சின்னப்பா தேவர் அவர்கள் ஒரு பாடலை இயற்றியுள்ளார்.


================================================== ============================

இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.

================================================== ====================================

siqutacelufuw
17th April 2015, 02:04 PM
பொன்மனச்செம்மல் நடித்த 37வது காவியம் " தாய்க்குப்பின் தாரம் " கதைச்சுருக்கம் :

துரைசாமி பண்ணையார், துறையூர் கிராமத்திலே பெருஞ்செல்வந்தர். ஆனால், கிராம பொங்கல் விழா "முதல் மரியாதை" அவர் மைத்துனர் ரத்தினம் பிள்ளைக்கு இருந்து வந்தது. இதனால் பொறாமை கொண்ட அவர் தன் தங்கை புருஷன் குடும்பம் என்றும் பாராமல், அவரை பழிவாங்க திட்டமிட்டார்.

ஒரு நாள் பண்ணையார், தாசி செல்வாவின் வீட்டுக்கு போய் கொண்டிருந்த போது, வழியில் தனக்கு மரியாதை செய்ய வில்லை என்று ரத்தினம் பிள்ளையின் வேலைக்காரன் கருப்பையாவை அடித்துக் காயப்படுத்துகிறார். இதையறிந்த, ரத்தினம் பிள்ளை மகன் முத்தையன், பண்ணையாரை தாசியின் வீட்டிற்கே சென்று பதிலுக்கு தாக்கி விட்டு வருகிறான்.

முத்தையன் தன்னை அடித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரத்தினம் பிள்ளையிடம் பண்ணையார் வற்புறுத்துகிறார். ஆனால், ரத்தினம் பிள்ளையோ, "தலை வணங்கும் வழக்கம் தலைமுறையிலேயே இல்லை" என்று சொல்லி விட்டார். அடிபட்ட வேதனை, அலட்சியமாக பேசி விட்டதனால் ஆத்திரம் எல்லாம் சேர்ந்து பண்ணையாரின் கோபத்தை கிளறுகின்றன. உடனடியாக, ரத்தினம் பிள்ளையின் தோட்டம், துறவு, நஞ்சை, புஞ்சை முதலியவற்றை, ஆட்களை ஏவி, நாசமாக்குகிறார்.

பெரியவர்கள் பகை இப்படி இருக்கும்போது, முத்தையனுக்கும், பண்ணையார் மகள் சிவகாமிக்கும், காதல் ஏற்படுகிறது. இரு குடும்பங்களுக்கிடையே பகை வளரும் வேகத்தில், இவர்களின் காதலும் வளர்கிறது.

ஒரு நாள் முத்தையன் தோட்டத்தில் காவல் இருக்கும் போது, பண்ணையார் ஆட்கள், செங்கோடன் என்ற கொலைகாரக்காளையை தோட்டதுக்குள்ளே .விரட்டுகிறார்கள். முத்தையன் காளையை கல்லால் அடிக்கிறான். அதை சாக்காக வைத்து, அவனை கட்டிப்பிடித்து தூக்கி கொண்டு சென்று ஒரு இருட்டறையில் அடைக்கின்றனர் பண்ணையார் ஆட்கள்.

இந்த செய்தியறிந்த ரத்தினம் பிள்ளை, பண்ணையாரிடம் போய், தனது மகனை விடுதலை செய்யும்படி கேட்கிறார். பண்ணையார், தன் காளையை கல்லால் அடித்த காரணத்துக்காக முத்தையன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். ரத்தினம் பிள்ளை, காளையை பற்றி இழிவாக பேசுகிறார். தனது காளையை இழிவாக பேசியதால், ரத்தினம் பிள்ளை அதை அடக்கி விட்டால், அவன் மகன் முத்தையனை விடுதலை செய்வதாக பண்ணையார் கூறுகிறார். சவால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

களத்துக்கு காளை கொண்டு வரப்படுகிறது. ரத்தினம் பிள்ளை அதனுடன் போரிட்டு - குத்துண்டு கீழே சாய்கிறார். இந்த நிலையில், ரத்தினம் பிள்ளை மனைவி மீனாட்சி சேதியறிந்து ஓடி வருகிறாள். ஆனால், அவள் கணவனோ இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான். சாகும்போது, பிள்ளை தன் மனைவி மீனாட்சியிடம், பண்ணையாரை கொலை செய்யாமல், அவர் செய்த தவறுக்கெல்லாம், ரத்தக்கண்ணீர் வடித்து, காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி செய்யச் சொல்லி உயிர் துறக்கிறார். அதன்படியே மீனாட்சியும் சபதம் எடுக்கிறாள்.

இதற்கிடையில், சிவகாமி முத்தையனை தப்புவிக்க செய்கிறாள். ஆனால், முத்தையனுக்கு வழியிலேயே, தன் தந்தையின் பிணம் சுடுகாட்டுக்கு கொண்டு போகப்பட்ட செய்தி தெரிவிக்கப்படுகிறது. அலறியடித்து கொண்டு முத்தையன் சுடுகாட்டுக்கு ஓடுகிறான். ஆனால், அதற்குள், தந்தையின் சடலம் எரிந்து சாம்பலாகி விட்டிருந்தது. தாயிடம் ஓடி வந்தான் முத்தையன்.

மீனாட்சி, முத்தையனிடம் அவன் தந்தையின் இறுதி ஆசையை சொல்கிறாள். அப்போது அவள் செய்த சபதத்தையும் வெளியிடுகிறாள். முத்தையன், தந்தையின் ஆசையையும், தாயின் சபதத்தையும் நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறான்.

முத்தையன் தப்பியது சிவகாமியால்தான் என்று பண்ணையார் சந்தேகிக்கிறார். சிவகாமிக்கு, முன்பை விட அதிகப்படியான கட்டுக்காவல் வைக்கப்படுகிறது. என்றாலும், அதையும் மீறி அவள் தன் அத்தான் முத்தையனை சந்தித்து வருகிறாள்.

பண்ணையாருக்கு "ஊர் வதந்தி" காதில் விழுகிறது. காணாததற்கு தாசி செல்வா வேறு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறாள். சிவகாமிக்கு, சீக்கிரமே, திருமண ஏற்பாடு செய்யுமாறும், திருமண சமயத்தில் முத்தையன் ஏதாவது குழப்பம் செய்வான் என்றும், எனவே, அவனை தன் வீட்டில் கொண்டு வந்து அடைத்து விட்டு, மணம் முடித்த பின்பு வெளியில் அனுப்பி விடலாம் என்றும் அவள் யோசனை கூறுகிறாள். அதன்படி, பண்ணையார் சிவகாமிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.

தந்தையின் மின்னல் வேக ஏற்பாட்டை சிவகாமி முத்தையனுக்கு எழுதி, ஆவன செய்யுமாறு வற்புறுத்துகிறாள். ஆனால், அவள் முயற்சி தோல்விடைகிறது.

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தினத்துக்கு முன் இரவு, முத்தையன்
பண்ணையார் ஆட்களால் தூக்கி வரப்பட்டு தாசி செல்வா வீ ட்டில் போடப்படுகிறான். தாசி, அவனை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துகிறாள். முத்தையன் மறுக்கிறான். இது சமயம் பண்ணையார் எதிர்பாராத விதமாக அங்கு வந்து விடுகிறார். செல்வா தன் தவறை மழுப்புகிறாள். ஆனால், பண்ணையார், அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளி, கதவை பூட்டுகிறார். அதே ஆத்திரத்தில், தன் வீட்டுக்கு வருகிறார்.

பண்ணயாரின் "பாடி கார்டு' மாயாண்டி, பண்ணையார் வீ ட்டுக்குள் நுழைந்ததும், சிவகாமியீன் திருமணத்தின் போது, தனக்கு நிலம் தருவதாக சொன்னைதை நினைவூட்டுகிறான். பண்ணையார் தர முடியாது என்று கூறி அவனையும் தன் வீ ட்டை விட்டு துரத்துகிறார்.

வெளியேற்றப்பட்ட மாயாண்டி தற்செயலாக தாசி செல்வாவை சந்திக்கிறான். இருவரும், பண்ணையாருக்கு எதிராக சதியாலோசனை நடத்துகின்றனர்.

திருமணத்தன்று முத்தையன் மாறு வேடத்தில், கல்யாண கும்பலோடு கும்பலாக கலந்து கொண்டு சிவகாமியை அழைத்துக்கொண்டு ஒட சந்தர்ப்பம் பார்க்கிறான்.

செல்வா - மாயாண்டி சதி நிறைவேறியதா ?
முத்தையன் தந்திரம் பலித்ததா ?
பண்ணையார் முன்னெச்சரிக்கை பலன் தந்ததா ?
மீனாட்சியின் சபதம் என்னவாயிற்று ?
ரத்தினம் பிள்ளையின் "ஆசைக்கனவு" பூர்த்தி செய்ய்யப்பட்டதா ?

எல்லாவற்றுக்கும் பதில் ..... வெள்ளித்திரையில் காண்க !
, . . .

siqutacelufuw
17th April 2015, 02:37 PM
பொன்மனச்செம்மல் நடித்த 37வது காவியம் " தாய்க்குப்பின் தாரத்தில் இடம் பெற்ற பாடல்கள் :
================================================== ============
சகோதரர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் கேட்டு கொண்டதன்படி, பாடல்களை இயற்றியவர் பெயர் இனி பாடல்கள் பற்றி தெரிவிக்கும்போது இடம் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். பாடல் எழுதியவர் பெயர் அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது

பாடல் 1. (தனித்த ஆண் குரல் பாடல்) : மனுஷனை மனுஷன் சாபிடறாண்டா அருமைத்தம்பி, இது மாறுவதெப்போ ?
வாழுவதெப்பொ எழைத்தம்பி ! (அ. மருதகாசி)

பாடல் 2 (பெண் குரல் பாடல்) : காதல் வியாதி பொல்லாதது - அது கண்ணும் காதும் இல்லாதது.
(தஞ்சை ராமையாதாஸ்)

பாடல் 3 (பெண் குரல் பாடல்) அசைந்தாடும் தென்றலே .... தூது செல்லாயோ.. தேன் அமுதான கவிபாடி சேதி
சொல்லாயோ (தஞ்சை ராமையாதாஸ்)

பாடல் 4 (ஜோடிப்பாடல்) : விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடே (தஞ்சை ராமையாதாஸ்)

பாடல் 5 (ஜோடிப்பாடல்) : ஆஹா நம் ஆசை நிறைவேறுமா .... கடல் அலையைப்போல மறைந்து போக
நேருமா (கவி. லட்சுமணதாஸ்)

பாடல் 6 (தனித்த பெண் குரல் பாடல்) : நாடு செழித்திட நாளும் உழைத்திட நல்ல மனம் வேண்டும்
(கவி. லட்சுமணதாஸ்)

பாடல் 7 (தனித்த ஆண் குரல் பாடல்) தந்தையைப்போல் உலகிலே தெய்வமுண்டோ ... ஒரு மகனுக்கு
(தஞ்சை ராமையாதாஸ்)

பாடல் 8 (குழுப்பாடல்) கந்தா வரம் தந்தாளுவாய் ... திருசெந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய் ... நீண்ட பாடல்
(வில்லன் டி.எஸ். நடராஜன், சாண்டோ சின்னப்பா தேவர் இயற்றியது)

பாடல் 9 (ஜோடிப்பாடல் - வருத்தமுடன்) ... என் காதல் இன்பம் இதுதானா ?
(தஞ்சை ராமையாதாஸ்)

oygateedat
17th April 2015, 09:07 PM
http://s1.postimg.org/iv0v3otxb/image.jpg (http://postimage.org/)

idahihal
19th April 2015, 12:44 AM
அன்புசகோதரர் பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல. எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டமைக்கு மட்டமல்ல. சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்கள் பாடல் எழுதியுள்ளார் என்ற அபூர்வ தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கும். இது வரை அறியாத ஒன்று. சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களின் திறமையை அறிந்து கொள்ள பலருக்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும் தொடரட்டும் தங்களது சேவை.

Richardsof
19th April 2015, 06:48 AM
தாய்க்கு பின் தாரம் - மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி சித்திரத்தின் கதை ,பாடல்கள் பற்றி விரிவாக எழதிய இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி .

siqutacelufuw
22nd April 2015, 02:12 PM
"தாய்க்குப் பின் தாரம்" காவியத்திலிருந்து சில காட்சிகள் :

http://i58.tinypic.com/ridpqg.jpg

siqutacelufuw
22nd April 2015, 02:14 PM
http://i57.tinypic.com/2jd2etc.jpg

siqutacelufuw
22nd April 2015, 02:15 PM
http://i58.tinypic.com/10psqw7.jpg

siqutacelufuw
22nd April 2015, 02:16 PM
http://i62.tinypic.com/214t7hg.jpg

siqutacelufuw
22nd April 2015, 02:17 PM
http://i57.tinypic.com/x4qh4o.jpg

siqutacelufuw
22nd April 2015, 02:18 PM
http://i58.tinypic.com/rl04k8.jpg

siqutacelufuw
22nd April 2015, 02:20 PM
http://i61.tinypic.com/33cyk5k.jpg

siqutacelufuw
22nd April 2015, 02:33 PM
http://i62.tinypic.com/dmpok9.jpg

Russellzlc
24th April 2015, 04:29 PM
அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு,

தலைவர் நடித்த திரைக்காவியங்களின் கதை, மற்றும் திரைப்படத்தைப் பற்றிய அரிய தகவல்களையும் சிறப்புகளையும் பதிவிட்டு வருவதற்கு நன்றி. இந்தப் பதிவுகள் தலைவரின் திரையுலக சாதனைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் அழியாத கல்வெட்டுக்களாக காலமெல்லாம் திகழும்.

தலைவரின் 37வது காவியமான தாய்க்குப் பின் தாரம் பற்றிய விவரங்கள் அருமை. அதிலும் இந்தப் படத்தில் ஒரு பாடலை சாண்டோ திரு.சின்னப்பா தேவர் அவர்கள் வில்லன் நடிகர் நடராஜனுடன் சேர்ந்து இயற்றியுள்ளார் என்பது பலருக்குத் தெரியாத செய்தி. வருங்காலத் தலைமுறைக்கு இது ஒரு ஆவணம்.

தாய்க்குப் பின் தாரம் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. 1957ம் ஆண்டு தேர்தலில்தான் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக முதல் முறையாக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் சின்னம் காளைமாடு. தாய்க்குப் பின் தாரம் படத்தில் காளை மாட்டை தலைவர் அடக்குவது போன்ற காட்சி உண்டு. அந்த தேர்தலில் காளை மாட்டை தலைவர் அடக்குவது போன்ற சுவரொட்டிகள் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன. இது மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் எழுச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்ட தலைவரின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது தாய்க்குப் பின் தாரம்.

சகோதரர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் 2012 -ம் ஆண்டு கோவையில் தாய்க்குப் பின் தாரம் வெளியான விளம்பரத்தை பதிவிட்டுள்ளார். அதை வெளியிட்டவர் வசந்தம் மூவிஸ் ஷாஜகான். அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது அவர் வெளியிட்ட விளம்பரத்திலேயே தெரிகிறது. 1957-ல் மட்டுமல்ல, 2012-லும் கூட திமுகவினருக்கு தாய்க்குப் பின் தாரம் படம் உதவுகிறது என்பது இப்படத்தின் சிறப்பு.

இப்படத்தின் மூலம்தான் ஸ்டண்ட் நடிகராக இருந்த சாண்டோ திரு.சின்னப்பா தேவர்கள் அவர்கள் தலைவரின் ஆதரவோடு பட முதலாளியாக உயர்ந்தார். தலைவரை வைத்து அதிக படமெடுத்த தயாரிப்பாளர் என்ற பெருமையையும் தமிழகத்தின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றார் திரு.தேவர் அவர்கள்.

சாலிவாஹனன் என்ற திரைப்படத்தில் தலைவருக்கு சிறிய வேடம். அதில் நடித்த கதாநாயக நடிகருடன் தலைவருக்கு கத்தி சண்டை காட்சி. கதாநாயகனை விட தலைவர் சிறப்பாக கத்தி சண்டை காட்சியில் நடித்துள்ளார். இது குறித்து இயக்குநரிடம் கதாநாயக நடிகர் புகார் செய்துள்ளார். படத்தின் இயக்குநர் கதாநாயகனுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதுபற்றி, உடன் நடிக்கும் ஸ்டண்ட் நடிகரிடம் தலைவர் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அந்த ஸ்டண்ட் நடிகரும் தலைவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். ‘உங்களிடம் திறமை இருக்கிறது, கண்டிப்பாக முன்னுக்கு வருவீர்கள்’ என்று கூறியுள்ளார்.

அதன்படியே, சில ஆண்டுகளில் தலைவர் கதாநாயகனாக உயர்ந்தார். அப்படி உயர்ந்தபோது தனக்கு ஆறுதல் கூறிய அந்த ஸ்டண்ட் நடிகரையும் படத் தயாரிப்பாளராக உயர்த்தி விட்டார். அந்த ஸ்டண்ட் நடிகர்தான் சாண்டோ திரு.சின்னப்பா தேவர். தலைவர் நடித்துக் கொடுக்க அவர் தயாரித்த முதல் படம்தான் தாய்க்குப் பின் தாரம். இந்த தகவலை சமீபத்தில் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘மன்னாதி மன்னன்’ நிகழ்ச்சியில் இயக்குநர் கரு.பழனியப்பனும் தெரிவித்தார்.

தலைவரின் படங்களை தொடர்ந்து ஆவணப்படுத்துங்கள், அதன் மூலம் வருங்காலத் தலைமுறைக்கு தொண்டாற்றுங்கள் என்று தங்களை அன்போடு கோருகிறேன் பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களே. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellrqe
25th April 2015, 08:36 AM
செல்வகுமார் சார்
தாய்க்கு பின் தாரம் -படத்தின் அனைத்து பகுதிகளையும் அழாகாக பதிவிட்டு உள்ளீர்கள் .மிக்க நன்றி சோக நடிப்பில் நம் மக்கள் திலகம் சிறப்பாக நடித்துள்ளது மூலம் தான் ஒரு மிக சிறந்த நடிகர் என்பதை நிருபித்து உள்ளார் .

siqutacelufuw
2nd May 2015, 01:18 PM
பொன்மனச்செம்மல் நடித்த 38வது காவியம் " சக்கரவர்த்தி திருமகள் " பற்றிய தகவல் :

1. படம் வெளியான தேதி : 18-01-1957

2. படத்தை தயாரித்த நிறுவனம் : உமா பிக்சர்ஸ் - ஆர். எம். ராமநாதன் (ஏ. எல். எஸ். வெளியீடு)

3. கதாநாயகன் : மக்கள் திலகம்

4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : "உதயசூரியன்" (திராவிட முன்னேற்றக் கழக சின்னத்தை பிரபலப்படுத்தும் விதத்தில் வைக்கப்பட்ட பெயர்)

5. கதாநாயகி :: அஞ்சலி தேவி

6. கதை பி. ஏ. குமார்

7. வசனம் : இளங்கோவன்

8 . பாடல்கள் : மகாகவி . சுப்பிரமணிய பாரதி தஞ்சை ராமையாதாஸ், கே. டி. சந்தானம், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, கு. மா. பாலசுப்ரமணியம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். கிளவுன் சுந்தரம்

9. . இசை அமைப்பு : ஜி. ராமநாதன்

10. இயக்குனர் : ப. நீலகண்டன்

9. பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் : கலைவாணர் என். எஸ். கே., பி. எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், கே. ஏ. தங்கவேலு, டி. பி. பொன்னுசாமி பிள்ளை, எஸ்.கே. கரிக்கோல்ராஜ், குண்டுமணி, கொட்டாபுளி ஜெயராமன், எஸ். வரலட்சுமி, டி ஏ. மதுரம், டி. பி. முத்துலட்சுமி, பி. சுசீலா, லட்சுமி பிரபா, மற்றும் பலர்.

10. பின்னணி பாடியவர்கள் : கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஜிக்கி. டி. வி. ரத்தினம், சீர்காழி கோவிந்தராஜன். எஸ். வரலட்சுமி,. ஏ. பி . கோமளா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++

படத்தின் சிறப்பம்சம் :


1. திராவிட முன்னேற்றக் கழக சின்னத்தை பிரபலப்படுத்தும் விதத்தில், கதாநாயகனுக்கு உதயசூரியன் என்ற பெயர் வைக்கப்பட்டது.

2. திரைப்படம் முடிந்த பின்பு, காதல் பாடலை இடம் பெறச்செய்தது, ஒரு வித்தியாசமாக, புதுமையாக இருந்தது, என தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் பேசப்பட்டு பாராட்டப்பட்டது.

3. ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி அவர்களிடம் உதவியாளராக, ஒளிப்பப்திவாளர் கர்ணன் பணி புரிந்த மக்கள்திலகத்தின் படம்.

4. வாஹினி, நெப்டியூன் (சத்யா) நியூட்டோன் ஆகிய ஸ்டுடியோக்கள் மட்டுமல்லாமல் ரேவதி ஸ்டுடியோவிலும் எடுக்கப்பட்ட திரைப்படம்.

5. மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஒரு பாடல் இக்காவியத்தில் இடம் பெற்றுள்ளது.


================================================== ============================

இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.

================================================== ============================

siqutacelufuw
5th May 2015, 10:27 PM
http://i57.tinypic.com/rwt15l.jpg

siqutacelufuw
5th May 2015, 10:28 PM
பொன்மனச்செம்மல் நடித்த 38வது காவியம் " சக்கரவர்த்தி திருமகள் " கதைச்சுருக்கம் :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அரசர்களுக்கெல்லாம் அரசராக விளங்குகிறார் மருத நகரத்து சக்கரவர்த்தி மார்த்தாண்ட பூபதி. அவருடைய ஒரே மகள் கலா மாலினி. அவளை மணக்க பல நாட்டு இளவரசர்களும் போட்டியிட்டார்கள். அவளுக்கு தகுந்த கணவனை தேர்ந்தெடுக்க சக்கரவர்த்தி மூன்று போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெறுபவருக்கு கலாமாலினியுடன் மருத நகரத்து மணிமுடியும் கிடைக்கும் என அறிவித்தார். பல நாட்டு இளவரசர்களும் வந்து கூடி விட்டார்கள். இந்த நிலையில் -


தோழி துர்க்காவுடன் குதிரையேற்ற பயிற்சிக்கு ஆணுடையில் புறப்பட்ட கலா, கள்வர்களால் வழி மறிக்கப்படுகிறாள். காவேரிப்பட்டினத்து இளவரசனாகிய உதய சூரியன் கள்ளர்களோடு போரிட்டு, கலாவை காப்பாற்றுகிறான். கலா, தன்னுடைய பெயர் கலா மோகன் என்றும், போட்டியிலே கலந்து கொள்ளவே தானும் வந்திருப்பதாக கூறி விடை பெறுகிறாள்.. முதற் போட்டியிலேயே உதய சூரியன் வெற்றி பெறுகிறான். கலா, தோழி உடையிலேயே உதயசூரியனை சந்தித்து, தன்னை கலாமோகனின் தங்கை என்று கூறி, அன்பு பரிசாக ஒரு ரத்தின மாலையை கொடுத்து விட்டு போகிறாள்.

உதய சூரியன் இரண்டாவது போட்டியிலும் வெற்றியடைகிறான். உதய சூரியனின். அழகும், வீரமும், தோழி துர்க்காவின் மனதை கவருகின்றன. எப்படியாவது உதய சூரியனை அடைய வேண்டுமென்று திட்டமிடுகிறாள்.

கலாவுக்கும், உதய சூரியனுக்கும் காதல் வளருகிறது. உதய சூரியன், மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெறுகிறான். கலா தான் ராஜகுமாரி என்று உண்மையை கூறிகிறாள். உதய சூரியன் வியபடைகிறான். திருமணம் நடக்கிறது. முகத்திரை அணிந்திருக்கும் கலாவின் கழுத்திலே மாங்கல்யத்தை கட்டுகிறான் உதய சூரியன்.

தீயவளான துர்க்கா சூழ்ச்சியால், கலாவுக்கு மயக்க மருந்து அளித்து தளபதி பைரவனுடன் அனுப்பி வைக்கிறாள். கள்ளக்காதலனுடன் கலா ஓடி விட்டதாக சக்கரவர்த்தியை நம்ப வைக்கிறாள். துர்க்கா. மானத்தை காப்பாற்ற, துர்க்காவை கலாவாக நடிக்கும்படி வேண்டுகிறார் சக்கரவர்த்தி.

இதனிடையில், பைரவனிடமிருந்து தப்பிய கலா காட்டுக்கூட்டத்திடம் சிக்கி கொள்கிறாள். காட்டுத்தலைவன் கலாவை மணக்க நாள் குறிக்கிறான்.


சாந்தி முகூர்த்த அறையிலேயே கலாவை காண ஆவலுடன் வந்த உதய சூரியன் வேறு ஒருத்தியை கண்டு திடுக்கிடுகிறான். துர்க்கா தானே ராஜகுமாரி என்றும், வேறு யாரோ உதய சூரியனை ஏமாற்றி விட்டதாகவும் கூறுகிறாள். உதய சூரியன், கலாவை தேடிப் புறப்படுகிறான்.

காட்டு தலைவனுக்கும், கலாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. அவர்கள் குல வழக்கப்படி மணப்பெண்ணுக்கு சூடு போட வருகின்றனர். கலா கதறுகிறாள். காட்டுப்பாதை வழியே சென்ற உதய சூரியன் கலாவின் குரல் கேட்டு ஓடி வந்து போரிடுகிறான். இது சமயம், சக்கரவர்த்தியின் மெய்காப்பாளனான துர்ஜயன் கலாவை கொல்ல அம்பு எய்கிறான். அம்பு குறி தவறி காட்டு ராஜாவை கொல்கிறது. சினமடைந்த காட்டு கூட்டம் கலாவை கல்லறையில் போட்டு மூடுகின்றனர்.

காட்டுப்பெண் திரிசடை கலாவை தப்புவிக்கிறாள். கலா சென்ற விபரத்தை உதய சூரியனிடம் தெரிவிக்கிறாள்.

தப்பித்து சென்ற கலா ஆற்று வெள்ளத்தில் சிக்கிய போது, அவளை நாட்டியக்காரி மோகனமாலை என்பவள் காப்பாற்றுகிறாள்.

துர்க்கா தனக்கு பிறந்த நாள் கொண்டாடுகிறாள். தன்னுடைய பெயரில் வேறொருத்தி இருப்பதையறிந்த கலா, விழாவில் வந்து நாட்டியமாடுகிறாள், கலாவை கண்ட துர்க்காவுக்கு தூக்கி வாரிப் போடுகிறது.

கலாவை தீர்த்து கட்டுவது என்ற முடிவுக்கு வருகிறாள்.

சதிகாரர்களின் கூற்று நிலைத்ததாக சரித்திரத்தில் சான்றுகள் கிடையாது. துர்க்காவின் வேடம் கலைந்தது.

எங்கே ? எப்படி ? எப்ப்போது ? ..................... பதில் வெள்ளித்திரையில் ! .

================================================== ==================================

siqutacelufuw
5th May 2015, 10:33 PM
http://i60.tinypic.com/2mbt6t.jpg

siqutacelufuw
7th May 2015, 09:05 PM
" சக்கரவர்த்தி திருமகள் " காவியத்தில் இடம் பெற்ற பாடல்கள் :
------------------------------------------------------------------------------------------------------------

பாடல் 1 டேப் பாடல் : சீர்மேவும் குருபதம் சிந்தையொடு வாக்கிலும் (தொகையறா)
சங்கத்து புலவர் பலர் - தங்கத்தோடப் பொற்பதக்கம்
(இயற்றியவர் : கிளவுன் சுந்தரம்)

பாடல் 2 குழுப்பாடல் ஆடவாங்க அண்ணாத்தே ... அஞ்சாதீங்க அண்ணாத்தே
. (இயற்றியவர் : கு. மா. பாலசுப்ரமணியம்)

பாடல் 3 குழுப்பாடல் கண்ணாளனே வாருங்க ... கண்ணாலே பாருங்க
(இயற்றியவர் : கு. மா. பாலசுப்ரமணியம்)

பாடல் 4 தனித்த குரலில் பெண் பாடும் பாடல் : சொல்லாலே விளக்கத்தெரியலே அதை சொல்லாமலும் இருக்க முடியலே
(இயற்றியவர் : கு. சா. கிருஷ்ணமூர்த்தி)

பாடல் 5 காதல் ஜோடிப்பாடல் : எல்லையில்லா இன்பத்த்திலே ... நாம் இணைந்தோம் இந்த நாளே
(இயற்றியவர் : கு. மா. பாலசுப்ரமணியம்)

பாடல் 6 குழுப்பாடல் நலுங்கிட்டு பார்ப்போமடி -- ராணிக்கு அலங்காரம் செய்வோமடி
(இயற்றியவர் : கே. டி. சந்தானம்)

பாடல் 7 தனித்த குரலில் பெண் பாடும் பாடல் : எண்ணமெல்லாம் இன்பக்கதை பேசுதே ... என்றும் இல்லா புது வசந்தம் வீசுதே !
(இயற்றியவர் : கு. சா. கிருஷ்ணமூர்த்தி)

பாடட்ல் 8 தனித்த குரலில் ஆண் பாடும் பாடல் : தில்லித்துருக்கர் செய்த வழக்கமடி ! பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்
(இயற்றியவர் : மகாகவி. சுப்ரமணிய பாரதி)

பாடல் 9 தனித்த குரலில் பெண் பாடும் பாடல் ... ஏமாற்றம் தானா என் வாழ்விலே...இன்பம் வீசாதோ இனிமேலே
(இயற்றியவர் : எஸ். வரலட்சுமி)

பாடல் 9 ஜோடிப்பாடல் .......... நினைச்சதெல்லாம் தப்புண்ணு தாடையிலே போட்டுக்க வேணும்
(இயற்றியவர் : தஞ்சை ராமையாதாஸ்,

பாடல் 10 தத்துவப்பாடல் பொறக்கும் போது, மனிதன் பொறக்கும் போது பொறந்த குணம்
(இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)


பாடல் 11 : எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ ? வஞ்சனையாலே .... வலை வீசியே
(இயற்றியவர் : கு. மா. பாலசுப்ரமணியம்)

பாடல் 12 : காதலென்னும் சோலையிலே ராதே ராதே ... நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே
(இயற்றியவர் : கு. மா. பாலசுப்ரமணியம்)

mgrbaskaran
13th September 2015, 02:43 PM
http://i48.tinypic.com/2gvixcw.jpg

மேலும் ஒரு மைல்கல்லாக பொன்மனச்செம்மல் எம்ஜியார்


திரியை அளித்து ஆனந்தகடலில் நீந்தவிட்ட பேராசிரியர்

திரு செல்வகுமார் சார் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்


அதேபோல் திரி துவங்க காரணமாக இருந்த நண்பர்கள்

திரு வினோத் சார் ,திரு ராகவேந்திரன் சார் இருவருக்கும்

எனது நன்றிகள்
இணையற்ற தலைவனின்
இணையில்லாப் புகழ் தனை
இணையத்தில் வழங்கும்
இறைவன் எம் ஜி ஆரின்

இரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களுக்காக

இளமைக் கால திரைப்படங்கள்

இதுவரை காணா இலக்கியங்கள்

இனிய தமிழில் படைக்கும்

இறைவன் தொண்டன் அன்பன்

பேராசிரியர் : சௌ. செல்வகுமார்

அற்புதப் படைப்புகள்

நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து

தலைவன் புகழ் பாட

இறைவன் அருள் புரிவாராக

mgrbaskaran
14th September 2015, 02:42 AM
மக்கள்திலகத்தின் அபிமன்யு திரைபடத்தில் தலைவர் தோன்றும் காட்சிகள்
நமது மக்கள்திலகத்தின் இளமை தோற்றமும் இயற்கை நடிப்பும் மற்றும் தலைவரின் அழகையும் கண்டு களியுங்கள்

http://s571.beta.photobucket.com/user/1MGR/media/MGR-Abhimanyu--1948/MGRAbhimanyuTFMLover.mp4.html?sort=3&o=0#

thanks tmflover
அற்புதம்

அர்ஜுனனாக எத்தனை அழகு


நன்றி