PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

vasudevan31355
14th June 2013, 08:59 AM
பரவாயில்லை, தேநீரை வாசு சார் தருவார், டின்னரை கோபால் சார் பார்த்துக் கொள்வார். நமக்கு வேட்டை தான்

சார்! இந்த தடவை ஆளை விடக் கூடாது. அமுக்கிட வேண்டியதுதான்

vasudevan31355
14th June 2013, 09:17 AM
எனக்கு சகஸ்ரநாமம் என்றொரு நண்பர் உண்டு. அவரிடம் சொல்லி செல்வம் பட ஜோசியர் மூலம் நாள் கிடைத்தது.(நடிகர்திலகத்தை ஒன்றா இரண்டா என்று தவிக்க வைத்த அதே நம்பிக்கைக்குரிய ஜோசியர் தான்)

வேற கண்ணோட்டத்தில செல்வத்தையே நெனச்சுகிட்டு இருந்தா எப்படி? தப்புதப்பாத்தான் வரும். அது 'இருமலர்கள்' போட்டோ. தெரியும்டா என்று சமாளிச்சு அடுத்த பதிவை போடாதே.

Gopal.s
14th June 2013, 09:28 AM
மு- - -,
அது ஜோசியர் பதிவு. போடும் போது ஸ்டில் பார்க்க கூட இல்லை.

Gopal.s
14th June 2013, 09:39 AM
சார்! இந்த தடவை ஆளை விடக் கூடாது. அமுக்கிட வேண்டியதுதான்
மதமாற்றம் போல, அனைவரும் convert ஆவதாக ஒப்புக்கு சொன்னால் கூட(சும்மா டின்னெர் முடியும் வரை), ஒரு வினோத நண்பர் செலவில் டின்னெர் பிரச்சினை தீர்ந்து விடும்.

RAGHAVENDRA
14th June 2013, 09:56 AM
மெனுவிலேயே நோக்கம் புரியுதா வாசு சார்

vasudevan31355
14th June 2013, 10:12 AM
மு- - -,


எதையுமே முழுசா செய்ய மாட்டியா?:)

Richardsof
14th June 2013, 10:12 AM
இனிய நண்பர் கோபால்

மக்கள் திலகம் - நடிகர் திலகம் விருந்தோம்பல் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும் .உண்மையான ரசிகர்கள் யாரும் மாற மாட்டார்கள் .
ஆனால் அன்புக்கு கட்டுப்பட்டு விருந்து படைப்பார்கள் .

உங்களுக்கு எங்கள் விருந்து என்றும் உண்டு .

vasudevan31355
14th June 2013, 10:15 AM
மெனுவிலேயே நோக்கம் புரியுதா வாசு சார்

ஓ... நல்லாப் புரியுதே சார்!

mr_karthik
14th June 2013, 10:48 AM
ஆண்டவன் கட்டளை

முதல் வெளியீட்டின்போது (1964) பார்க்கவில்லை. அப்போது சின்னஞ்சிறுவன். பின் எப்போது முதலில் பார்த்தேன்?. 1971-ல் ஊரிலிருந்து வந்திருந்த உறவினர் சிலரை வழியனுப்ப எக்மோர் ரயில் நிலையம் சென்றபோது (போகும்போது டாக்சி, வரும்போது இரண்டே பேர் என்பதால் புறநகர் ரயில்) புறநகர் ரயிலுக்கு டிக்கட் எடுக்குமிடதுக்கு வெளியில் பளிச்சென்ற போஸ்ட்டர் 'இப்பொழுது நடைபெறுகிறது சன் தியேட்டரில்' என்ற வாசகத்துடன் அட்டகாசமான 'ஆண்டவன் கட்டளை' போஸ்ட்டர். அதைப்பார்த்ததும் முடிவு செய்து விட்டேன். நாளை போய்விட வேண்டுமென்று. காரணம் மறுநாள் வியாழக்கிழமை.கடைசி நாளாக இருக்கலாம் என்பதால் அவசரப்பட்டேன்.

மறுநாள் நண்பர்களிடம் சொன்னபோது அதில் ஒருவன் சொன்னான்.. 'டேய் அவசரக்காரா, இதுக்காக மன்னடியிலிருந்து தேனாம்பேட்டை போறேங்கிறியே. இதைப் பார்த்தியா' என்று கையிலிருந்த தினத்தந்தி பேப்பரை விரித்துக் கட்டினான். அதில் 'நாளை முதல் பிரபாத்தில் தினசரி 3 காட்சிகள் ஆண்டவன் கட்டளை' என்ற விளம்பரம் வெளியாகியிருந்தது. அவ்வளவுதான் மனம் குதியாட்டம் போட்டது. பின்னே விட்டுக்குப் பின்புறம் உள்ள தியேட்டரிலேயே வருகிறதென்றால் வேறென்ன வேண்டும்?. 'அப்படின்னா நாளைக்கே போயிடுவோம்' என்று நான் சொன்னதும் 'இப்பவும் அவசரப்படுறான் பாரு. நாம எல்லோரும் இந்தப்படத்தை முதல் முறையாக பார்க்கபோறோம். அதை ஹவுஸ்புல் காட்சியில் பார்த்தால்தான் நல்லாயிருக்கும். சண்டே ஈவ்னிங் ஷோ போவோம்' என்றான் இன்னொருத்தன். சரியென்று பட்டதால் அதுவே முடிவாயிற்று. இருந்தாலும் வெள்ளி சனியில் தியேட்டர் விசிட் தவறவில்லை எனக்கு.

முதல் நாளில் இருந்தே நல்ல கூட்டம். கடைசி இரண்டு கிளாஸ் புல்லானது மற்ற கிளாஸ்களிலும் கௌரவமான கூட்டம். அப்படீன்னா ஞாயிறு நிச்சயம் ஹவுஸ்புல் என்று முடிவு செய்து கொண்டேன். ஞாயிறு அன்று மாலை நாலரைக்கெல்லாம் சென்றுவிட்டோம், எப்படியும் சுவர் தடுப்புக்குள் போய் நின்றுவிட வேண்டும் என்பதற்காக. அப்போதே நாலைந்து பேர் உள்ளே நின்றனர். நேரம் ஆக ஆக கூட்டம் சேரத்தொடங்கியது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது.

கியூவில் நிற்கும்போதே ஒரு பெரியவர், 'நான் இந்தப்படத்தை பத்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்' என்று ஆரம்பித்து படத்தின் சிறப்புக்களை அள்ளிக்கடாசினார். அப்போது இன்னொருவர் 'பெரியவரே கதையைச் சொல்லிடாதீங்க' என்று உஷார்படுத்தினார் (அவரும் முதல் தடவை பார்க்கிறார் போலும்). அவ்வப்போது வெளியில் எட்டி எட்டி பார்த்துக்கொண்டோம் நல்ல கூட்டம். மேட்னி ஷோ முடிந்ததும் டிக்கட் விநியோகம் துவங்கியது. இடையில் நுழைந்தவர்கள் எல்லாம் வாங்கியது போக, கிட்டத்தட்ட 25 வது டிக்கட் கிடைத்தது. பால்கனிக்கு அடுத்த கிளாஸ். உள்ளே போய் இடம் போட்டு, அங்கிருந்தவரை பர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வெளியில் வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். எதிர்பார்த்தது போலவே ஹவுஸ்புல் போர்டு போட்டதும் மன்றத்தினர் பட்டாசு வெடித்தனர். உள்ளே ஓடினோம். விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.

'இந்தியன் நியுஸ் ரிவியூ' ஓடி முடிந்ததும் படம் தொடங்கியது. (தொலைக்காட்சிகளில் செய்திகள் துவங்கப்பட்டபின் தியேட்டர்களில் நியூஸ் ரீல் காட்டும் வழக்கம் நிறுத்தப்பட்டது). சென்சார் சர்டிபிக்கேட்டை அடுத்து பி.எஸ்.வி. பிக்சர்ஸ் எம்ப்ளம் பார்த்ததுமே கைதட்டல். ப்ரொபசர் கிருஷ்ணன் தரிசனத்தின்போது உச்சகட்ட கைதட்டல். இம்மாதிரி ஆரவாரத்தோடு பார்ப்பதை மிஸ்பண்ண இருந்தோமே என்று ஒருகணம் நினைத்தேன். ப்ரொபசர் கிளாஸில் பாடம் நடத்தும் போது அவரது ஒவ்வொரு அசைவும் ரசிக்கப்பட்டது. அப்போது கேமரா திரும்பி மாணவர்களைக் காட்டும்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த இரட்டை ஜடைபோட்ட தேவதையைக் கண்டதும் கைதட்டல். பக்கத்திலிருந்தவன் என் விலாவில் இடித்து 'டேய் உங்காளுடா' என்றான். எனக்கு அதெல்லாம் கவனமில்லை. பத்து ஈக்கள் உள்ளே போனால் கூட தெரியாதவண்ணம் வாய் பிளந்திருக்க, 'இப்படி ஒரு அழகா, இதற்கு முன் எத்தனையோ படத்தில் பார்த்திருக்கிறோமே. இவ்வளவு கியூட் தெரியலையே' என்ற யோசனையுடன் இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். (இத்தனைக்கும் இதற்கு முன் எங்கிருந்தோ வந்தாளில் தலைவருக்கு அண்ணியாக, யாருக்கோ ஜோடியாகவெல்லாம் பார்த்தாகி விட்டது). ப்ரொபசர் கிருஷ்ணனைக் கவர்வதற்காக அவர் அடிக்கடி தனது இரட்டை ஜடையை முன்னால் இழுத்துவிட்டுக் கொண்டு காந்தப்பார்வை பார்க்கும்போது தியேட்டரில் உற்சாகமான கலகலப்பு. ப்ரொபசர் தடுமாறுகிறாரோ இல்லையோ நாம் கிளீன் போல்ட்.

நடிகர்திலகம் தன தாயாருடன் பேசும் காட்சி படத்தின் ஜீவனான காட்சிகளில் ஒன்று. அதில் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் கிடைத்தது. ஹாஸ்டல் விசிட் சென்ற இடத்தில் மாணவிகள் விளைக்கை அணைக்க, சக மாணவி என்று நினைத்து ப்ரோபசரைக் கட்டிப்பிடிக்க, அந்த ஸ்பரிசத்தை எண்ணியபடியே தடுமாறும் இடத்தில் தலைவரின் பெர்பாமன்ஸுக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ். அதன்பிறகு தலைவரின் மனசாட்சி உலுக்கி எடுக்கும் இடம்தான் ராகவேந்தர் சார் வர்ணித்த இடம். அந்தக்காட்சி முழுக்க அடங்காத கைதட்டல். ஒரு பழைய படத்துக்கு புதுப்படம் போல வரவேற்பு கிடைத்ததைப்பார்க்க உற்சாகம் தாளவில்லை.

'அலையே வா' பாடலைப்பற்றி எழுதி உணர்த்த முடியாது. பார்த்து உணர வேண்டும். உணர்ந்தோம். இப்போது தொலைக்காட்சி வசதியிருப்பதால் அடிக்கடி பார்ப்பதால் அதன் அருமை பலருக்குத் தெரியவில்லை. தியேட்டரை விட்டால் வேறு கதியில்லை என்ற அந்த காலகட்டத்தில் நின்று உணர்ந்து பார்த்தால் அதன் அருமை தெரியும்.

ஆவலுடன் காத்திருந்த அடுத்த பாடல்..

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையுடன் புதருக்குள் இருந்து ரயில் தோன்றி பாலத்தில் பயனிக்கத்தொடங்கியபோதே கைதட்டல் எழுந்தது. அப்படியே கேமரா திரும்பி படகில் இருக்கும் லட்சிய ஜோடியை காட்டும்வரை கைதட்டல் ஓயவில்லை. கருப்பு வெள்ளையிலேயே இவ்வளவு அற்புத ஒளிபபதிவா என அசர வைத்தது. என்ன ஒரு நேர்த்தி.

ஒரு தத்துவப்பாடலையே டூயட் பாடலாக்கிய கவியரசர் கண்ணதாசனின் திறமை. அதற்கு ஏற்ற இசையை வழங்கி உச்சத்துக்கு கொண்டு சென்ற மெல்லிசை மன்னர்களின் சாதனை. அதனை கணீரென்று பாடி கலக்கிய சௌந்தர்ராஜன் சுசீலாவின் அற்புதம். நடித்தவர்களைப் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஐயாமார்களே... இயக்குனர் சங்கர் ஆயிரம் டூயட்டுகளைப் படமாக்கி இருக்கலாம். ஆனால் அவரது சிறந்த பத்துகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையில்லை. பாடல் முழுக்க கைதட்டலும் விசிலும் கேட்டுக் கொண்டேயிருந்தன. நானோ வேறொரு உலகத்தில், ஏனென்றால் இதில் பங்கேற்ற அனைவரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள். அழகான பாடலின் முடிவில் தாங்கவொண்ணா துயரம்.

அடுத்த பாடல்.... தன்னுயிர் தந்து மன்னன் உயிர்காத்த அந்த வாயில்லா ஜீவனின் உடலை அடக்கம் செய்துவிட்டு மன்னர்களின் இசைக்கேற்ப தளர்நடை நடக்கும் மன்னனைக் கண்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. "ஆறு மனமே ஆறு" என்று தொடங்கியதும் ஆறு தெருக்களுக்கு கேட்கும் வண்ணம் கைதட்டல். ஒவ்வொரு படைவீட்டுக்கும் செல்லும்போது விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் என கெட்-அப் மாறும்போதும் கைதட்டல் அடங்கவில்லை. கடைசியில் கடலை தின்னும் காட்சியில் எப்படியிருந்திருக்கும் என்று சொல்லணுமா. முன்சீட்டிலிருந்து ஒருவர் எழுந்து இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு கத்தினார் "பாவி, இதுக்கெல்லாம் நீதான்யா, நீ மட்டும்தான்யா".

என்ன அற்புத உணர்வைத்தந்த காவியம் "ஆண்டவன் கட்டளை".

vasudevan31355
14th June 2013, 11:24 AM
சபாஷ் கார்த்திக் சார்! அருமையோ அருமை. நீண்ட நாட்கள் பட்டினி போட்டதற்கு வட்டியும் முதலுமாக தந்து ஜமாய்த்து விட்டீர்கள். கார்த்திக் சாரா கொக்கா! படம் பார்க்க இருந்த ஆர்வம், பார்க்கும் போது இருந்த ஆர்வம், ரசிகர்களின் கமெண்ட், அரங்கு நிறைவு, ஆர்ப்பாட்ட ரசிப்பு ஆரவாரங்கள், நடுவில் மறக்காமல் ஜொள்ளு, (ஆமாம் தியேட்டரில் ஈக்களே இல்லையாமே!) பாடல்களின் மினி அலசல் என்று எல்லாவற்றிலும் 100 கிராம் தந்து 1 கிலோ மகிழ்ச்சியைக் கொடுத்து விட்டீர்கள். இப்படி வருவீர்களா? நீங்கள் குறிப்பிட்ட அந்த முதியவர் மட்டுமல்ல நம் தலைவரை பாவி என்று செல்லமாக அழைக்காத நபர்களும் உண்டோ! ஏனென்றால் அது "ஆண்டவன் கட்டளை"

Gopal.s
14th June 2013, 11:32 AM
L .K .G ,ஹை ஸ்கூல் கூட போகாமல் PHD பண்ண விரும்பும் (பிரம்மச்சரியம் to துறவு)ப்ரொபசர் கிருஷ்ணனுக்கு அகம்-புறம் இரண்டும் சோதனைக்குள்ளாவது வியப்புக்குரியதல்ல.

புற சோதனையில் பரிதாப தோல்வியுடன் திரும்பும் கிருஷ்ணன் (வயதுக்கேற்ற ஆண்மைக்கு திட்டத்துடன் விட பட்ட சவாலை இந்த நேர்க் குணமுள்ள பேராசிரியர் எதிர் கொள்ள முடியாமல் முதல் பந்தில் CLEAN BOWLED ஆன சச்சின் போல பரிதாப நிலையில்
அக சோதனையில் இறங்குவார்)

ஆனால் மருந்தை குடிக்கும் போது தேவதையை நினைக்காதே என்ற பலவீன நோக்குடன் தொடங்குவதில்தான் ஆபத்தே. மருந்தை விட இந்த தேவதையின் நினைவையே அதிகம் பருகுவார். தன்னுடைய லட்சியங்களை கொல்ல வேண்டிய இந்த துர்பாக்கிய பேராசிரியருக்கு , duncan ஐ கொலை செய்த Macbeth போராட்டமே. moral values ஒரு புறம்,Vacillating own conscience நடுநிலை தவறிய நடுவராய் ,Tortured by the thoughts of passion மறுபுறம்.....

தொடர்ந்து பேராசிரியர் என்ன செய்தார் என்று தொடர்வோம்.

Gopal.s
14th June 2013, 11:55 AM
கார்த்திக் சார்,
ரசிகர்களை குதூகலத்தில் தள்ளி time Machine போல பின் நோக்கி போக வைக்க வேண்டுமா, கூப்பிடு கார்த்திக் சாரை,கூப்பிடு முரளி சாரை என்றாகி விட்டது. (சென்னை,மதுரை என்றால்)
கிராமம் என்றால் நம்மிடையே ஒரு கிராம ராஜன் உருவாகி தூள் கிளப்புகிறார்..
மிக்க நன்றி.
மாயாவியை கண்டு பிடிக்க ஒரு மாத விடுமுறையில் வருகிறேன்.பிரபாத் டாக்கீஸ் பின்புறம் 70 களில் வசித்த சிறுவனை பற்றி பெரிமேசன் (அல்லது குலோத்துங்க சோழன்)போல துப்பு துலக்கி மர்மத்தை விடுவிக்க போகிறேன்.

kalnayak
14th June 2013, 12:38 PM
கார்த்திக் சார்,
அற்புதம், அபாரம்!!! ஆண்டவன் கட்டளை - தரிசனம் அபூர்வ விவரிப்பு. அழகிய திரைப்படம். இன்னும் இவ்வளவு பேச வைக்கிறது என்பதிலேயே அதன் உயர்ச்சி தெரிகிறது. நானும் 80-களின் துவக்கத்தில் திருச்சி-க்கு ஒருமுறை சென்றபோது திருச்சி-பிரபாத் தியேட்டர்-இல் பார்த்து ரசித்திருக்கிறேன். எனக்கும் மிக பிடித்த படம். பின்னர் தொலைக்காட்சிகளில் ஓரிரு முறைதான் பார்க்க முடிந்தது. எல்லோரும் எழுதியதை படித்த பின்பு உடனடியாக பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாகிறது. முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுக்கள்.

vasudevan31355
14th June 2013, 12:41 PM
ஆடைகளுக்கேன்றே பிறந்த ஆணழகர் (தொடர் 1)

அனைவருக்கும் வணக்கம். புதிதாக மேலும் ஒரு விஷுவல் தொடர். நம் இதயதெய்வத்தின் புகழை மேலும் மெருகூட்டக் கூடிய வகையில். ஆம். நடிகர் திலகத்தின் உடை ரசனையை விளக்கும் விஷுவல் தொடர்.

நடிகர் திலகத்தின் உடை அணியும் ரசனையை வியக்காதவர்களே இருக்க முடியாது. அந்தக் காலக் கட்டத்திலேயே உடைகளில் அதிநவீன நாகரீகத்தைப் புகுத்தி அனைவர் கவனத்தையும் ஈர்த்தவர் அவர். பலர் பலமுறை நம் ரசிகரல்லாதோர் கூட அவருடைய உடைகள், அவற்றை அவர் அணியும் பாங்கு, நேர்த்தி, உடைகளில் காட்டிய உன்னத டிசைன்கள் இவற்றை மனதாரப் புகழ்ந்ததை பலமுறை கேட்டிருக்கிறேன்.

பொதுவாகவே உடைகள் அணியும் விதத்தில் நடிகர் திலகம் மிகவும் பெயரும் புகழும் பெற்றவர். தனது திரைப்படத் தொழிலில் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் வல்லுநர் அவர். அந்த அசாத்திய திறமை அவருக்கு முதல் படத்திலேயே வந்து விட்டது.

முதலில் திரைப்படங்களில் அவர் எப்படிப்பட்ட உடைகளை அணிந்தார், அதை எவ்வாறு அணிந்தார், அணிவதில் கூட எத்தகைய ஸ்டைல்களைக் காட்டினார் என்று எழுதுவதை விட நிழற்படங்களாக சிறு விளக்கங்களுடன் அளித்தால் இப்போதுள்ள தலைமுறையும் வருங்கால தலைமுறைகளும் நன்கு தெரிந்து கொள்ள முடியும் என்ற ஆவலில் எழுந்ததே இந்தத் தொடர்.

தனது தொழில் அல்லாது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி அவர் உடைகளில் செலுத்திய கவனம் கூட இந்தத் தொடரில் வெளியாகும்.

இப்போது முதலில் 'பராசக்தி'

இந்த முதல் காவியத்திலேயே அவரின் ஆடைகள் சாம்ராஜ்யம் தொடங்கியது. ஏனென்றால் பணக்கார குணசேகரன் அணிந்த ஹைகிளாஸ் ஆடைகள், அவன் ஏழ்மை நிலையைத் தொட்டதும் ஏற்பட்ட உடைகளின் உருமாற்றம் என்று இருவேறுபட்ட உணர்வுகளை உடைகளின் மூலமும் வடித்துக் காட்ட அவருக்குக் கொடுக்கப் பட்ட முதல் சந்தர்ப்பம். சந்தர்ப்பத்தைத் தவற விடுபவரா நம் ஆருயிர்த் திலகம்?. இப்போது பார்க்கலாம்.

நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்வின் நம் கண்களுக்கு விருந்தளித்த முதல் உடை. கிட்டத்தட்ட நைட் டிரஸ். அவருக்கு அவ்வளவு மேட்சாகக் கவர் ஆகும். ஷர்ட், பேன்ட் இவற்றின் மேலிருந்து கீழ் நோக்கி வரும் அழகான கோடுகள் இன்னும் அவரை அழகாகக் காட்டும்.

இதை எப்படி உடுத்தியிருப்பார் என்று கவனியுங்கள். அதுதான் விசேஷம். இரவில் படுத்து காலையில் கண் விழிக்கையில் full hand ஷர்ட்டின் கைப்பகுதிகளை ஏனோதானோவென்று அரைகுறையாக மடித்தும் மடிக்காதது போல உடுத்தியிருப்பார். இரவில் தூங்கி எழுந்தவனின் ஆடைகள் எப்படி சரிசெய்யப் படாமல் இருக்குமோ அப்படியே அணிந்திருப்பார். அப்போதே அப்படி ஒரு பெர்பெக்ஷன்.

http://imageshack.us/a/img571/8365/parashakthidvdripmovie7.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-41.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-41.jpg.html)

ஹோட்டலில் அணிந்து வரும் அழகான டிரஸ் பொறுப்பாக கோட்டை ஹேங்கரில் மாட்டிய பிறகு. வாட்சில் டைம் பார்க்கும் அழகைப் பாருங்கள். அதில் ஒரு அவசரம் தெரியும்..

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-41.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-41.jpg.html)

கைகள் மடித்துவிடப்பட்ட நிலையில். 'டை' அருமையாக உள்ளது. .

http://imageshack.us/a/img153/5360/parashakthidvdripmovie9.png

புதுப் பெண்ணின் மனதைத் தொட்ட அழகான, அம்சமான full covered உடை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-26.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-26.jpg.html)

காதலியை வசப்படுத்தும் அருமையான கோட் சூட், டையுடன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7-10.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/7-10.jpg.html)

உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த famous கோர்ட் உடை. கை மடித்து விடப்பட்ட ஸ்டைல் என்றுமே புகழ்க் கொடி நாட்டும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-19.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4-19.jpg.html)

கிளைமாக்ஸ் காட்சியின் கலக்கல் neck cover பனியன் டைப் உடை. அந்த சிரிப்பு அப்படியே நெஞ்சை அள்ளிக் கொண்டு போய்விடும்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-12.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/5-12.jpg.html)

போனஸ் ஸ்டைல் போஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-13.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/6-13.jpg.html)

Richardsof
14th June 2013, 12:51 PM
வாசுதேவன் சார்

நீங்கள் என்னென்ன பதிவிட்டாலும்


இனிமை

புதுமை

அருமை

அட்டகாசமான ஆரம்பம்

அமர்க்களம் தொடரட்டும்

உங்களின் அசூர உழைப்பு - பாராட்டப்படவேண்டும்

Gopal.s
14th June 2013, 12:53 PM
வாசு,
அமர்க்களமான ஆரம்பம் .முதல் படத்திலிருந்தே துவங்குகிறாய் வேலையை. நடக்கட்டும்.
50 களில் அகில இந்திய அளவில் ஒரு வடக்கிந்திய பத்திரிகையால் "Best Dressed Man" in Indian Cinema வாக தேர்ந்தெடுக்க பட்டவராயிற்றே?
என்னா அழகு, handsome நம் திராவிட மன்மதன்? அனைத்து உடைகளும் அவருக்காகவே தவம் இருந்து அவரை அடைந்தது போல பொருந்தும் அழகு!!!!

KCSHEKAR
14th June 2013, 01:00 PM
டியர் கார்த்திக் சார்,

நீண்ட நாளைக்குப் பிறகு தங்களுடைய "ஆண்டவன் கட்டளை" திரைப்பட வர்ணணை, எப்போதும்போல நாங்களும் தங்களுடனேயே அமர்ந்து திரைப்படத்தைப் பார்த்த திருப்தியைத் தந்தது. நன்றி.

KCSHEKAR
14th June 2013, 01:03 PM
டியர் வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தின் ஆடையழகிற்கென்று ஒரு தொடர். முதல் படத்திலேயே, நைட் டிரஸ் முதல் வரை அழகினை தாங்கள் ஆராதித்திருக்கும் பாங்கு அருமை.

kalnayak
14th June 2013, 01:08 PM
வாசு சார்,
புதுத்தொடர் துவக்கத்திலேயே பிரமாதப்படுத்தி விட்டீர்கள். அதுவும் முதல் படத்திலிருந்தே. வரப்போகும் பதிவுகளை நினைத்தால்... ஒன்ஸ் மோர்-லேயிலும் கலக்கியிருப்பாரே. என்ன சொல்வது? அபாரம். உங்களை இதற்க்காக கேட்டுக் கொண்ட ராகுல்-க்கும் நன்றி.
ஒரு சின்ன விண்ணப்பம். எல்லாத் தொடர்களையும் சிறிது இடைவேளை மட்டுமே விட்டு அடிக்கடி கவனியுங்கள்.

JamesFague
14th June 2013, 01:40 PM
Mr Vasu Sir,

Your new series on Dressing of NT is simply Superb. Whenever Gnana Oli shown
I will definitely come to chennai to watch Mr Antony as well as our friend Mr Gopal.

Mr Karthik Sir,

NIce writeup on Andavan Kattalai. We expect many more from you.

parthasarathy
14th June 2013, 04:39 PM
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

எனக்கு இன்று காலை 11.00 மணி முதல் மாலை வரை ஒரு முக்கிய மீட்டிங் இருந்தது. அதற்காக சில ஸ்லைடுகளை தயார் செய்து கொண்டிருந்தேன்.
இருப்பினும், பொறுக்க முடியாமல் இந்த சிறிய பதிவினை பாதி எழுதி மீட்டிங்கிற்குச் சென்று மீதியை எழுதிப் பதிகிறேன்.

"ஞான ஒளி" - இது உங்கள் உள்ளத்தில் எந்த அளவிற்கு ஊடுருவி இருக்கிறது என்பது தங்கள் "கொடைக்கானல்" பதிவு சாட்சி.

இது தங்களுக்கு மட்டுமல்ல. எனக்கும் அதே தான். நான் ஏற்கனவே "நடிகர் திலகத்தின் படங்கள் - அசல் தமிழில் - மொழியாக்கம் வேறு மொழிகளில்" என்ற தலைப்பில், பத்து படங்களைப் பற்றி விரிவாக எழுதியதில் "ஞான ஒளி" பற்றி மூன்று பாகங்களாக எழுதியிருந்தேன். மறுபடி ஒரு சிறிய பதிவு.

ஒரு முறை என் வீட்டிற்கு முக்கிய விருந்தினர் வந்திருக்கும் போது, (1996) அப்போது தான் ரொம்ப நாளைக்கப்புறம் அந்தப் படத்தை டிவியில் பார்க்கிறேன்.

அந்தோணி கைதாகி, பின்னர், பரோலில், லாரன்சுடன் மறுபடி, அடைக்கலம் பாதிரியாரின் விருப்பத்தின் பேரில் (அவர் இறக்கப் போகிறார் என்று அவருக்கே தெரிந்து அதற்கு முன், தான் எடுத்து வளர்த்த முரட்டுப்பயலை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டுமென்று மேஜரிடம் சொல்லியதால்), வீட்டிற்கு வர, வாயிற்படியருகே நின்று கொண்டிருக்கும், முரட்டுப் பயலை, "ஏண்டா அங்கேயே நிக்கிற? வாடா!" என்று பாதிரியார் அழைக்க, ஒரு குழந்தை போல் ஓடோடிச் சென்று, உட்கார்ந்து கொண்டிருக்கும் பாதிரியாரின் மடியில் முகத்தைப் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழுவாரே!! என் கண்களில் அருவி போல் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது!!! என் மனைவி என்னருகே வந்து "விருந்தினர் இருக்கிறார்கள்" என்று காதோரம் கிசு கிசுத்த பின்னரும், என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. மேலே பார்க்க முடியவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கும்போது, இடைவேளைக்குப் பின்னர் (முன்னர் சொன்ன காட்சியை மறுபடி பார்க்கும்போது மறுபடியும் தொண்டை அடைக்க அழுதாகியாயிற்று), அதே போல் அழுது விட்டேன் - மகள் மேரி தந்தை அந்தோணியைப் (இப்போது அருண்) பார்க்க அவர் வீட்டிற்குப் போகும் போது, மகளைப் பார்த்து, "அம்மா உன்னை உனது வீட்டில் பார்த்தபோது, உன்னை மகளே என்று கூட சொல்ல முடியவில்லை - லாரன்ஸ் உடனே வந்துட்டான் - இப்போ" என்று கூறி, மகளை பாசத்துடன் தழுவும் காட்சி! ஏக்கம், நெடு நாள் கழித்துப் பார்க்கும் போது தொனிக்கும் பாசம், விதி நம்மை இத்தனை நாள் பிரிந்து விட்டதே எனும் சோகம் இன்னும் எத்தனையோ எண்ணங்கள்... அத்தனையையும் வெளிப்படுத்தி, பின்னர் பிரிஜ்ஜைத் திறந்து பழங்களை எடுத்து (இரண்டு கைகளிலும் பொருட்களை எடுத்துக் கொண்டு, பிரிஜ்ஜைக் காலால் மூடும் சமயோசிதம் கலந்த ஸ்டைல்! வாவ்!!) மேசையில் வைத்து, இவர் மட்டும் கஞ்சியை சாப்பிடும் போது, மகளைப் பார்த்து "உனக்கும் வேண்டுமா" என கேட்டு, அவருக்கும் பரிமாறும் போது, கண் கலங்குவாரே - மகளுடன் சேர்ந்து! இதயம் என்ற ஒன்று இருக்கும் எந்த மனிதனும் அழாமல் இருக்க முடியுமா? இதோ இப்போது இதை டைப் செய்யும் போதும், கண்களில் கண்ணீர் பீறிடுகிறது!

சிறு வயதில் "ஞான ஒளி"யைப் பார்க்கும் போது இடைவேளைக்குப் பின், ஸ்டைலில் பின்னும், "அருணை"தான் ரசித்திருக்கிறேன் (றோம்?). புத்தி தெளியத் தெளிய, வாழ்க்கை புரியப் புரிய, இது போன்று எத்தனையோ படங்களில் (நடிகர் திலகத்தின் படங்கள் தான்!), எத்தனையோ காட்சிகளை ரசிக்கத் துவங்குகிறேன் (றோம்?)

ஒன்று கவனித்தீர்களா? (நானே கவனிக்கவில்லை!) மேலே எங்கேயாவது, நடிகர் திலகம் என்று எழுதியிருக்கிறேனா என்று! அந்தோணி என்று தான் எழுதியிருக்கிறேன். கதாபாத்திரமாகவே அல்லவா மாறியிருக்கிறார்!

என் இதயத்தை ஊடுருவிய படங்களில் என்றும் "ஞான ஒளி" முதல் இடத்தில் தான் எப்போதும் இருக்கும்.

எனக்குத் தெரிந்து அவருடைய most intense பங்களிப்புகளில், முதல் இரண்டு இடம் "ஞான ஒளி" மற்றும் "ஆலய மணி"க்கே கிடைக்கும்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
14th June 2013, 04:43 PM
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

நீங்களும் என்னை பலத்த அலுவலுக்கிடையில், எழுத வைத்து விட்டீர்கள்.

ரொம்ப நாளைக்கப்புறம் "ஆண்டவன் கட்டளை" உங்களை இங்கு பெரிய அளவில் வரவழைத்திருக்கிறது. அற்புதம்.

முதலில், தியேட்டரில் இந்தப் படத்தை "ராம்" தியேட்டரில் 1982-ல் என் நண்பனுடன் பார்த்த போது, அரங்கில் எழுந்த ஆர்ப்பரிப்பு இன்னும் நினைவில் இருக்கிறது. எல்லா முக்கிய காட்சிகளையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் ஒரு காட்சி. அவர் மனதில் காதல் பிறந்தவுடன் உடை, சிகை அலங்காரம் மாறி, கல்லூரிக்கு கையில் குடை இல்லாமல் இரண்டு புத்தகங்களை மட்டும் (அதை அவர் பிடித்துக் கொண்டிருக்கும் ஸ்டைல் - 1964-ல்!) வைத்துக் கொண்டு, வகுப்பறைக்குள் வந்து அந்தப் புத்தகங்களை மேஜையில் லாகவமாக போட்டு விட்டு, மாணவர்களைப் பார்த்த ஸ்டைல் - எனக்குத் தெரிந்து, ஆபரேட்டர் கூட படம் ஓட்டுவதை மறந்து கைத் தட்டி இருப்பார்!.

படம் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து hang over போகாமல், டைரியில் "இன்று ஆண்டவன் கட்டளை பார்த்தேன். இந்தப் படத்தில், நடிகர் திலகம் தான் நடிக்க வேண்டும் என்பது ஆண்டவன் இட்ட கட்டளை போலும்!" என்று எழுதி வைத்தேன். இன்னும், அதை பத்திரமாக வைத்திருக்கிறேன்.

நினைவுகளை அசை போட வைத்ததற்கு நன்றிகள் பல.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

mr_karthik
14th June 2013, 05:06 PM
ஆண்டவன் கட்டளை பதிவைப் பாராட்டிய வாசுதேவன் சார், (இரண்டாவதாகப் பாராட்டிய) கோபால் சார், கல்நாயக் சார், சந்திரசேகர் சார், சித்தூர் வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

கோபால் சார், இப்போது துப்பறிய வந்தால் தங்களுக்கு எந்த தடயமும் கிடைக்காது. ஏனென்றால் இப்போது பிரபாத் தியேட்டரும் இல்லை. அந்த ஏரியாவில் இருந்த சிறுவனும் இப்போது கர்நாடகாவில் ரெய்ச்சூர் மாவட்டத்தில்.

mr_karthik
14th June 2013, 05:13 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தின் உடையலங்காரம் தொடர் முதல் பதிவே களைகட்டுகிறது. ஒவ்வொரு ஸ்டில்லுக்கும் நீங்கள் தரும் விளக்கம் அருமை. போகப்போக எப்படி அசத்த்ப்போகிறது என்பதற்கு முதல் பதிவே அத்தாட்சியாக அமைந்துள்ளது.

நாயகியர் தொடர், ஸ்டண்ட் காட்சிகள் தொடர் இவற்றோடு ஆடையலங்காரத் தொடரும் சேர்ந்து திரியை (எங்களையும்) ஒரு வழி பண்ணப்போகிறது.

தொடர் சிறக்க வாழ்த்துக்கள்.

mr_karthik
14th June 2013, 05:42 PM
அன்புள்ள பார்த்தசாரதி சார்,

'ஞானஒளி' ஒரு அற்புத சுரங்கம், தோண்டத் தோண்ட வந்துகொண்டேயிருக்கும். ஒரு அருமையான காட்சியை விவரித்துள்ளீர்கள். மகள் கூழ் குடிக்கும் காட்சியைப் பார்த்து நடிகர்திலகம் கண்களில் பாசம் பொங்க ரசிக்கும் காட்சி பார்க்கப்பார்க்க திகட்டாதது. முன்பு நானும் இக்காட்சி பற்றிய குறிப்பொன்றை எழுதியிருந்தேன். வேலைப்பளுவுக்கு நடுவில் தங்களின் பங்களிப்புக்கு நன்றி.

ஆண்டவன் கட்டளையில் நீங்கள் சொன்ன அக்காட்சி முக்கிய தருணங்களில் ஒன்று. புரொபஸரிடம் கணப்படும் மாற்றத்தை, மாணவர்களில் ஒருவரான சந்திரபாபு சந்தேகம் கலந்த வியப்போடு பார்ப்பார். நடை உடைகளில் மாற்றம் மட்டுமல்லாது, வகுப்பிலும் காதலின் உயர்வு பற்றிப் பாடமெடுப்பார்.

iufegolarev
14th June 2013, 08:39 PM
பாகம் - 2 : அனைவராலும் காப்பியடிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் உடை அலங்கார நளினம்..!

"நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !! திரி நண்பர்கள் அனைவரும் இது எப்படி இருக்கிறது என்ற உங்களுடைய மேலான கருத்தினை, மற்றும் இந்த முயற்சியின் நிறை குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இதுபோல விஷயங்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். !



http://www.youtube.com/watch?v=i1GVPnyk9Ew&feature=em-upload_owner


கோபால் சார்
இடும் பதிவுக்கு கருத்து சொல்ல சொன்னால் ஒன்னும் சொல்றதில்ல ....ஆனா நீங்க போடற பதிவுக்கு மட்டும் நாங்க பதில் சொல்லனுமா?

என்ன ஞ்யாயம் சார் இது !!

vasudevan31355
15th June 2013, 03:14 PM
நன்றி முரளி சார். ஞான ஒளி நம்மிடையே ஏற்படுத்தியிருக்கும் தா(க்)கத்தை தணித்துக் கொள்ள அருமையானதொரு வழியை சொல்லி மிகக் குஷியடையச் செய்து விட்டீர்கள். நம் நமது NT FAnS அமைப்பின் சார்பாக ஞான ஒளியை தரிசனம் செய்வதற்கு தாங்கள் முயற்சி செய்வதாகக் கூறியிருப்பதைக் கண்டு என்னைவிட சந்தோஷப் படுபவர்கள் இருக்கவே முடியாது. அதற்காக தங்களுக்கு என் கோடானுகோடி நன்றிகள். சித்தூராரும் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கும் என் நன்றிகள். எனதருமை செல்லமும் வியட்நாம் விட்டு தற்காலிக விடுதலை பெற்று ஒளியின் ஜோதியில் கலக்க இருப்பதாய் சொல்லி இருக்கிறது. ராகவேந்திரன் சார், பம்மலார் பற்றி சார் கேட்கவே வேண்டாம். அமர்க்களப் படுத்தி விடுவோம் நமது NT FAnS அமைப்பின் சார்பாக திரையிடப்பட்ட படங்களில் இப்படி ஒரு படத்திற்கு இதுவரை இம்மாதிரி ஒரு அமர்க்களம் நடக்கவில்லை என்று சொல்லுமளவிற்கு. காத்துக் கிடக்கிறேன்.

vasudevan31355
15th June 2013, 03:28 PM
ஆ.பி.ஆணழகன் தொடருக்கு உற்சாக வரவேற்பு தந்த அருமை நண்பர் வினோத் சார், கோபால்ஜி, கல்நாயக் சார், சித்தூர் வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார், கார்த்திக் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

vasudevan31355
15th June 2013, 03:33 PM
கல்நாயக் சார்,

நிச்சயம் தாங்கள் கூறியபடி முயற்சி செய்கிறேன் சார். நேரம்தான் பெரும் பிரச்சனை. ஒவ்வொரு பதிவிற்கும் நிறைய நேரம் பிடிக்கிறது. ஒரு சண்டைக் காட்சி தொடருக்கோ, நாயகியர் தொடருக்கோ அல்லது ஆடைகள் தொடருக்கோ அதை முழுமையாய் பதிவிட குறைந்தது மூன்று மணி நேரமாவது பிடிக்கிறது. இந்தத் தொடர்கள் அல்லாது நிறைய பதிவுகள் அதாவது ஆய்வுப் பதிவுகள், ஸ்டில் பதிவுகள், வீடியோப் பதிவுகள், நம் நண்பருடன் ஒரு ரிலாக்ஸுக்காக சில அரட்டைப் பதிவுகள், கருத்துப் பரிமாற்றங்கள் என்று ஒரு நாளின் பெரும்பான்மையான நேரத்தை நமது திரிக்காக சந்தோஷத்துடன் செலவிட்டு வருகிறேன். இதுவல்லாமல் filmography, school of acting திரிகளில் வேறு பதிவிட வேண்டியுள்ளது. ஆபிஸ் போய்விட்டு வரும் நேரம் போக, தூங்கும் நேரம் போக மீதி பெரும்பான்மையான நேரங்களை நமது திரியே ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதில் எனக்கு பூரண மனதிருப்தியே!

vasudevan31355
15th June 2013, 03:48 PM
பார்த்த சாரதி சார்,

நன்றி! 'ஞானஒளி' யின் அற்புதக் காட்சிகளை எழுதி ஏகத்துக்கும் டென்ஷனை ஏற்படுத்தி விட்டீர்கள். அதுவும் அந்த பிரிட்ஜை மூட முடியாமல் கால்களால் மூட முயற்சிக்கும் கண்கொள்ளாக் காட்சி. நேற்று பலமுறை அந்தக் காட்சியையே போட்டுப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். தங்களைப் போலதான் எனக்கும். பாசமலருக்குக் கூட அழாத கல்லுளிமங்கன் என்னை ஆண்டனி அரைநொடியில் கரைத்து விடுவான். கதற வைத்து விடுவான். அவனுக்குள்ள சக்தியே தனி. சக்தியே தனி. சக்தியே தனி. அவனைக் கண்டால், அவன் பட்டதையெல்லாம் நினைத்தாலே போதும். கண்களில் கங்கை வழிந்தோடும். முரட்டுப் பயல் மட்டுமல்ல எதற்குமே கொடுத்து வைக்காத பாவி. அவனைப் போல வேதனைப் பட்டவனை உலகத்தில் எங்கும் காண முடியாது. அவனுக்கு யாருமே இல்லை. மகளே இருந்தும் இல்லை. தனி மரமாய்த் தவித்தவன்.

ஆனால் அவனுக்கு நான் இருக்கிறேன். நீங்கள் இருக்கிறீர்கள். நாம் எல்லோருமே இருக்கிறோம். அதை அவனும் உணர்ந்தே இருக்கிறான்.

இருந்தாலும்

கண்களில் கண்ணீருடன் அவனையே நினைத்து உருகும் அவன் பக்தனான பித்தன்.

நெய்வேலி வாசுதேவன் இல்லை இல்லை கடலூர் வாசு(தேவன்)

vasudevan31355
15th June 2013, 03:53 PM
ஹாய் சவுரி சார்!

நேற்றைய நாளை மறக்க முடியாமல் செய்து விட்டீர்கள். நன்றி!

vasudevan31355
15th June 2013, 04:05 PM
நேற்று சவுரி சார் நெய்வேலிக்கு எங்கள் வீட்டிற்கு வந்திருந்து என்னை குதூகலிக்க வைத்து விட்டார். நேற்று மதியம் முதல் இரவு வரை ஒரே ஜாலிதான். வேறு என்ன செய்திருப்போம்? தலைவரைத் தவிர வேறு ஏதும் பேசியிருப்போமா! பேசித் தீர்த்து விட்டோம். நிறைய வீடியோக் காட்சிகள் பார்த்து மகிழ்ந்தோம். முக்கியமாக என் ஞான ஒளி, கருடா சௌக்கியமா, தங்கப் பதக்கம், காத்தவராயன், சாந்தி, முக்கியமாக ராமன் எத்தனை ராமனடி, என்மகன், ராஜா, கல்தூண், தியாகம் என்று மதியம் இரண்டு மணிக்கு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தவர்கள் இரவு எட்டு மணிக்கு மேல்தான் அவ்விடத்தை விட்டே நகர்ந்தோம். நல்லா என்ஜாய் பண்ணினோம். வியட்நாமிலிருந்து கோபால் போன் செய்து சவுரி சாரிடம் பேசினார். இரண்டும் என்னென்னவோ பேசிக் கொண்டன. (அவுங்களுக்குள்ள 1000 இருக்கும். நமக்கென்ன!)

பிறகு சவரி சார் ஒன்பது மணிக்கு ஊருக்குப் புறப்பட்டு விட்டார். நிஜமாகவே பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்

நன்றி சவுரி சார்.

இப்படி நாமெல்லோரும் ஒரு நாள் முழுக்க ஒரு தனி ரூம் எடுத்து தங்கினால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும். ஏற்பாடு செய்து விடவா?

vasudevan31355
15th June 2013, 04:19 PM
கார்த்திக் சார்,

கைகளில் மாய, வசியக் கோல் பிடித்து எழுதுவீர்களோ! திரும்பத் திரும்ப தங்களின் ஆண்டவன் கட்டளைப் பதிவைப் படிக்க வைத்துக் கொண்டே இருக்கிறீர்களே!

vasudevan31355
15th June 2013, 04:55 PM
எங்கள் குலம் தழைக்க வைக்க வந்த கோமகன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/545170_528854607139513_347817683_n.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/545170_528854607139513_347817683_n.jpg.html)

vasudevan31355
15th June 2013, 05:06 PM
ஸ்டில் புதிர்

நடிகர் திலகம்

ஸ்ரீராமனாக

வில்லை எடுத்து

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/anbukkarangallvob_006721919.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/anbukkarangallvob_006721919.jpg.html)

வளைத்து

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/anbukkarangallvob_006722919.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/anbukkarangallvob_006722919.jpg.html)

பின் வில்லை முறித்து

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/anbukkarangallvob_006725319.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/anbukkarangallvob_006725319.jpg.html)

சீதையைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரியும் காட்சி எந்தத் திரைப்படத்தில்? (ராமன் என்ன ஒரு அழகு!)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/anbukkarangallvob_006724239.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/anbukkarangallvob_006724239.jpg.html)

vasudevan31355
15th June 2013, 06:36 PM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 2)

'பணம்' படத்தின் வித்தியாசமான ஜமீன்தார் டைப் உடையில் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7fd8c32b-2f26-4a96-8a62-ccfd4f3bb7a1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/7fd8c32b-2f26-4a96-8a62-ccfd4f3bb7a1.jpg.html)

வீட்டில் வேட்டி சட்டையுடன் பரண்மேல் அமர்ந்திருக்கும் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/pa.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/pa.jpg.html)

சாதரணமான ஷர்ட்டில்.

http://img231.imageshack.us/img231/9267/vlcsnap2011110509h57m00.png

வித்தியாசமான மேலாடை அதிகமில்லாத கிராமப்புற ஆடை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/p-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/p-1.jpg.html)

vasudevan31355
15th June 2013, 07:01 PM
Father's day (16-6-2013)

http://www.oocities.org/thirunallar/siv28.jpg

Gopal.s
16th June 2013, 08:50 AM
கோபால் சார்
இடும் பதிவுக்கு கருத்து சொல்ல சொன்னால் ஒன்னும் சொல்றதில்ல ....ஆனா நீங்க போடற பதிவுக்கு மட்டும் நாங்க பதில் சொல்லனுமா?

என்ன ஞ்யாயம் சார் இது !!
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.

vasudevan31355
16th June 2013, 02:43 PM
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.

இது வல்லவன் வகுத்ததடா
வருவதை எதிர் கொள்ளடா

vasudevan31355
16th June 2013, 03:10 PM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 3)

''பரதேசி' தெலுங்குப் படத்தில் நாகேஸ்வரராவுடன் தலைவர். நடிகர் திலகம் அணிந்திருக்கும் ஷர்ட்டில் இரு பாக்கெட்டுகளிலும் டிசைன் வைத்து தைத்திருப்பதைப் பாருங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/pa.jpg

'பராசக்தி' யில் மேலும் ஒரு உடையழகைக் காட்டும் ஸ்டில்

http://upload.wikimedia.org/wikipedia/en/c/cc/Parasakthi_cast.jpg

iufegolarev
16th June 2013, 04:54 PM
இன்று தந்தையர் தினம் :

நம்முடைய தந்தையார் போல உள்ள, என்றும் நம் நினைவிலும் மனத்திலும் நீங்காமல் இருக்கும் நமது திரை உலக சித்தர் நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இருந்து சில பாடல்கள் நம் திரி நண்பர்கள் பார்வைக்கு !

என்றும் நம் அன்புள்ள அப்பா !

மகளுக்கு மணமுடிக்கும் தந்தை அவரின் மனநிலை - புதிய உறவு வருகின்ற சந்தோஷம் மற்றும் மகளை பிரிய போகிறோமே என்ற ஒரு வருத்தம்...!

நம் சிம்மத்திற்கு கிடைத்த அருமையான மற்றும் ஒரு தந்தையார் வேடம் ! சித்தரின் சிறப்பை கேட்கவேண்டுமா ? பின்னி இருப்பார் பின்னி !!!

https://www.youtube.com/watch?v=vEOryOab15I



https://www.youtube.com/watch?v=MNx6Oz7KDxc

Marionapk
16th June 2013, 04:56 PM
good very nice

iufegolarev
16th June 2013, 05:08 PM
சிறிது சிந்தித்தோமேயானால் சில வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே காட்சியமைப்பில் வந்த மற்றும் ஒரு பாடல்.

அதுவும் திரை உலக சித்தர் நம் நடிகர் திலகத்தின் நடிப்பில் வெற்றிகண்ட " நீதிபதி " திரைப்படத்தில் வரும் பாசமலரே அன்பில் விளைந்த ஆசை மலரே ...மணமுடிக்கும் நாள் வந்ததோ...என்ற பாடல்...!

இதில் தனது மருமகனிடம் தன் மகளின் நிலை குறித்து விளக்கி கண் போல காக்கவேண்டும் என்பதை உரைக்கும் வரியில்...கண்களால் அந்த அர்த்தத்தை புரியவைக்கும் திறன்.....அடேயப்பா ! எந்த நடிகனால் முடியும் ? நாம் இந்த பாடலில் காண்பது நடிகர் திலகம் என்ற கலைஞனை அல்ல !
ஒரு நல்ல தந்தையை என்றே கூறவேண்டும் !

தலைமுறையை தாண்டும் நடிப்பு !! நம் திரி நண்பர்களுக்காக !

https://www.youtube.com/watch?v=YKo4y7B1iWI

iufegolarev
16th June 2013, 05:24 PM
திரி நண்பர்களுக்கு

நேற்றைய முன்தினம் நம் நண்பர் திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்கள் இல்லம் சென்றது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. பேருந்தை விட்டு இறங்கியவுடன் தயாராக என்னை அழைத்துசெல்ல வந்திருந்தார் நமது நெய்வேலியார்.

விருந்தோம்பல் என்றால் இதுதான் என்று கூறுகின்ற அளவிற்கு அப்படி ஒரு கவனிப்பு ! நான் நன்றாக உண்பவன் என்று எதை வைத்து நினைத்தாரோ தெரியவில்லை. அவ்வளவு உணவு வகைகள்...! கிட்டத்தட்ட

https://www.youtube.com/watch?v=YhvySbMt2tw


நினைவுபடுத்துவது போல.

எனக்கோ வெறும் சாம்பார் பொரியல் இருந்தாலே போதுமே..! என்னால் அவ்வளவு உணவுவகைகளை உண்ணமுடியவில்லையே என்ற ஒரு குறைதான் !

நெய்வேலியாரே ! என்னே உமது விருந்தோம்பல் ! பலே !

உணவருந்திவிட்டு...கணினி முன்பு உட்கார்ந்ததுதான் இரவு 8 மணி ஆனதே தெரியவில்லை. ! ஹ்ம்ம்..! காத்தவராயன் முதல் போப்பிலிராஜா வரை...ஒரு அலசல் !
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு relaxation எனக்கு ! தெம்பாக உள்ளது இப்போது..!

நெய்வேலியாரே ! நீங்கள் கூறியது போல நான் தயார்..! ஒரு வெள்ளிகிழமை மதியம் கிளம்பி இரவு வந்துவிடுகிறேன்..Return ஞாயிறு மாலை .!
2 நாட்கள் தூள் கிளப்பி விடலாம் !

iufegolarev
16th June 2013, 05:27 PM
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.கர்ணா ...

வஞ்சகன் கண்ணனடா ! (அவருக்கு இன்னொரு பெயரும் உண்டு இனிஷியலுடன் ?)

mr_karthik
16th June 2013, 06:38 PM
நமது திரியில் அதிகம் விவாதிக்கப் படாத ஸாரி, அறவே விவாதிக்கப் படாத 'ஜெனரல் சக்ரவர்த்தி' யின் 36-வது ஆண்டு துவக்க நாள். (16.06.1978 - 16.06.2013)

நடிகர்திலகம், புன்னகையரசி, கவிதா மற்றும் பலர் நடித்த திரை ஓவியம்.

100 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிக்காவியம்.

டி.யோகானந்த் இயக்கத்தில், அகில இந்திய சிவாஜி ரசிகர்மன்ற தலைவர் சின்ன அண்ணாமலை அவர்கள் தயாரிப்பு.

மெல்லிசை மன்னரின் இசையில், 'ஓ மைடியர் டாக்டர்' , 'அழகிய கிளிகளின் ஊர்வலம்', 'நீ என்ன கண்ணனா நான் என்ன கம்சனா' போன்ற இனிய பாடல்களைக் கொண்ட படம்.

நமது ரசிகர்கள் இத்திரைக்காவியம் குறித்த தங்களது விமர்சனங்களை, கருத்துக்களை, அனுபவங்களை, காட்சிகளை, விளம்பரங்களை பகிர்ந்து கொள்ளலாமே.

இதே போல, வரும் 26-ம் தேதி, நமது திரியில் கண்டுகொள்ளபடாத இன்னொரு காவியம் 'உத்தமன்' 38-வது ஆண்டு உதய தினம். அதைக் கொண்டாட இப்போதே தயாராவோம்...

mr_karthik
16th June 2013, 07:48 PM
அன்புள்ள முரளி சார்,

தாங்கள் குறிப்பிட்டிருந்த வரலாற்றுப்பதிவைப் படித்தேன். அசந்து போனேன் என்பதே உண்மை. தியாகம் திரைக்காவியம் மதுரை சிந்தாமணியில் வெளியான மார்ச் 4 முதல் அது வெள்ளி விழாவைப் பூர்த்தி செய்யும் வரை, நடிகர்திலகம் படங்கள் மட்டுமல்ல, தமிழில் வெளியான மொத்தப்படங்கள் என்னென்ன, அவை எந்தெந்த நாட்களில் வெளியாயின. தமிழ்ப்படங்கள் மட்டுமல்லாது பிறமொழிப்படங்களும் கூட மதுரையில் எப்படியெல்லாம் தியாகத்துக்கு அச்சுறுத்தலாக, சவாலாக விளங்கின. புதிய தமிழ்ப்படங்கள், பிறமொழிப்படங்கள் மட்டுமல்லாது நடிகர்திலகத்தின் பழைய படங்களே கூட எப்படி போட்டிக்கு வந்தன. அவையனைத்தையும் புறங்கண்டு தியாகம் எப்படி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, வெள்ளிவிழா கொண்டாடி ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தது என்ற வரலாற்று ஏட்டினை, தங்களால் மட்டுமே பதிக்க முடியும் என்பதை கல்வெட்டில் பொறித்து விட்டீர்கள்.

வருங்கால தலைமுறையை விடுங்கள். அப்போது வாழ்ந்த தலைமுறைக்கே தெரியாத விவரங்கள் இவை. நீங்கள் ஒரு வரலாற்றுச்சுரங்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எப்படி சின்னச் சின்ன விவரங்களைக்கூட விட்டுவிடாமல் தங்களால் தொகுக்க முடிகிறது என்பது உண்மையில் ஆச்சரியமே.

எனது இந்தப்பதிவு நான் அடைந்த வியப்பின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டுமே.

சென்னையில் இந்தப்படத்துக்கு எதிரியாக வந்த படத்துக்கு இன்று உதய தினம் அதைத்தான் சென்ற பதிவில்கூட நினைவூட்டியிருக்கிறேன். எல்லாப்படங்களையும் சிவாஜியின் தம்பியே கெடுத்துக்கொண்டிருந்தால் எப்படி?. மன்றத்தலைவர் நான் எதற்கு இருக்கிறேன். என் பங்குக்கு நானும் கெடுக்க வேண்டாமா என்று களமிறங்கிய நாள் இன்று.

சாந்தியில் தியாகத்தை தொடர்ந்து ஓட விடுமாறு அதன் விநியோகஸ்தர்களான 'ஜே.சி.எஸ்.என்டர்பிரைசஸ்' எப்படியெல்லாம் கெஞ்சினார்கள் என்று எங்களுக்குத் தெரியும். நேரில் பார்த்தவர்கள் நாங்கள். தூக்கிக்கடாசி விட்டார்களே பாவிகள். அந்தக்கோபத்தில்தான், நன்றாக ஓடிக்கொண்டிருந்த கிரௌனிலும் அடுத்த வாரத்திலேயே (111 நாட்களில்) படத்தை எடுத்து விட்டனர் விநியோகஸ்தர்கள். (1967-ல் ஊட்டிவரை உறவுக்குப்பிறகு, சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷன் மாறி சாந்தி, மகராணி, அபிராமி என்ற காம்பினேஷனில் வந்த படம் ஜெனரல் சக்ரவர்த்தி (தியாகத்தின் சத்ரு) ...

Gopal.s
16th June 2013, 07:52 PM
சுப்பு,
நல்ல முயற்சி. நன்கு ரசித்தேன். பூங்கா wrong choice .நீங்களரியாமல் கசடுகள் பின்னணியில் வந்து விடும்.பின்னணியை நீலமாக்கி,வேண்டிய background பின்னால் சேருங்கள். உங்களுக்கும்,நண்பருக்கும் நன்றி,வாழ்த்துக்கள்.

Gopal.s
16th June 2013, 07:58 PM
கார்த்திக் சார்,
தங்களின் வயிற்றெரிச்சல் நம் எல்லோருக்குமே உண்டு. ஆனாலும் தியாகம் அந்த வருடத்தின் highest grosser ஆனது நமக்கெல்லாம் பெருமையே. புதிய பறவைக்கும், சிவந்த மண்ணுக்கும் சாந்தி theatre மறுக்க பட்டதில் இருந்தே ..... திரும்ப யோசித்தால் நாம்தான் தலைசுற்றி கீழே விழுவோம்.

iufegolarev
16th June 2013, 08:18 PM
திரை உலக சித்தர் சிவாஜிகணேசன் -
நடிகர் திலகத்தின் இசை அறிவை பற்றியும் அவர் வெளிபடுத்தும் நுனுகங்களின் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.Part 2.விமர்சனங்கள் வரவேற்கபடுகிறது....

http://www.youtube.com/watch?v=i3AXdlCYAXU

Gopal.s
16th June 2013, 08:29 PM
Sowri,
Thoroughly enjoyed Part 2 .(Rather enjoying midway).You could have included pasamalar piano. I happened to watch a channel while I was in U.S. They telecasted a piano play and finguring style is 100% Pasamalar.What a perfection.
As I have mentioned in one of my earlier postings, miruthanga chakravarthi 1)Lost touch with Miruthangam.2)Tension due to competition and challenge with his own son.3)Age Factor. 4)Anxiety and you observe his lip sync with thala. The oozing blood could have been avoided.

RAGHAVENDRA
17th June 2013, 07:50 AM
புதிய நண்பர் ரமேஷ் சத்யநாராயணன் அவர்களே,
தங்களுடைய முதல் பதிவினையே நம் நடிகர் திலகம் திரியில் இட்டு பெருமை பெற்று விட்டீர்கள். நமக்கெல்லாம் பெரு மகிழ்வை யூட்டி விட்டீர்கள். தங்களைப் பற்றி அறிய ஆவலாயுள்ளோம். தங்களுடைய வரவு இங்கே, good, very nice

RAGHAVENDRA
17th June 2013, 07:55 AM
நண்பர்களே,
சொந்த வேலை காரணமாக சில நாட்கள் வெளியூர் சென்றிருந்த படியால் இங்கு பங்கேற்க முடியவில்லை. அதற்குள் .... வியப்பையூட்டும் மலைப்பூட்டும் வண்ணம் அருமையான பதிவுகள்.

வாசு சார்,
முக்கியமாக குறிப்பிட வேண்டியது வாசு சாரின் ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன். ... தொடர் ... இது வரை இல்லாத அளவிற்கு புதிய அளவில் இத்தொடர் வரவேற்பைப் பெறப் போவது உறுதி. அதற்கு நம் அனைவரும் உறுதுணையாய் இருப்போம். வாசு சார் ஜமாயுங்கள்..

சாரதி சார்,
ஞான ஒளி பற்றிய தங்கள் பதிவும் வாசு சாரின் பதிவும் கண்களைக் குளமாக்கி விட்டன. நடிகர் திலகம் என்றாலே உணர்ச்சி மயம் தானோ...

கோபால் சார்,
தொடருங்கள் தங்கள் உலக அதிசயத்தை..

கார்த்திக்,
எல்லா ரசிகர்களைப் போலவே தங்களுடைய ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

சௌரி சார்,
தங்களுடைய வீடியோக்களை நான் இனிமேல் தான் பார்க்க வேண்டும். நிதானமாக எழுதுகிறேன்.

பெயர் விட்டுப் போன மற்ற நண்பர்களனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்

ScottAlise
17th June 2013, 08:25 AM
ஜெனரல் சக்ரவர்த்தி
1978 ல் நம்மவருக்கு பல படங்கள் வெளிவந்தது . கிட்ட தட்ட 8 படங்கள் . வெற்றியின் விகிதம் மிக அதிகம் முதலில் வந்த அந்தமான் காதலி 100 நாட்கள் , தியாகம் கேட்கவே வேண்டாம் அப்படி ஒரு ஓட்டம் அதுக்கு அப்புறம் வந்த என்னை போல் ஒருவன் சாராசரி வெற்றி படம் , ஆனால் புண்ணிய பூமி மட்டும்அந்த வருடம் ஏமாற்றிவிட்டது.
இந்த நிலையில் தான் சின்ன அண்ணாமலை நம்மவர் வை ஒரு மாறுப்பட படத்தில் நடிக்க வைத்து , வெற்றி பட இயக்குனர் யோகானந்த் அவர்களை ஒருங்கிணைந்து ஒரு படம் தயாரிட்டார் .
அந்த படம் தான் ஜெனரல் சக்கரவர்த்தி

இந்த படம் சிறந்த குடும்ப சித்திரம்

ஜெனரல் சக்கரவர்த்தி மிக சிறந்த குடும்ப தலைவர் , மனைவி KR விஜய ஒரு டாக்டர் , மகள் கவிதா காலேஜ் படிக்கிறார் . நன்றாக இருக்கும் குடும்பத்தில் கவிதாவினால் ஒரு பிரச்சனை வருகிறது , அவர் கல்யாணம் ஆகும் முன்பே கருவுற்றகிறார், அதுக்கு காரணம் மோகன் (மோகன் ஷர்மா, கோலங்கள் தொடரில் வரும் தேவயானியின் தந்தை) அவர் இறந்து விடுகிறார். இதை அறிந்த KR விஜயா தான் கர்ப்பமாக இருபதாக அனைவரையும் நம்ப வைக்கிறார் , இதை NT கண்டு பிடித்து விடுகிறார் , இந்த பிரச்னையை NT எப்புடி தீர்வு காணுகிறார் என்பதே கதை

இந்த படத்தில் என்னக்கு பிடித்த காட்சி :

NT வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வரும் தன் நண்பர்களை கலாய்க்கும் காட்சி , மிக சரளமாக வெவ்வேறு பாஷையை பேசுவார் , இந்த காட்சியின் பாதிப்பு தான் கமல் நடித்த பஞ்சதந்திரம் காட்சி
இந்த படத்தில் காமெடி என்ற பெயரில் நம்மளை சோதித்து இருப்பார்கள் , அதுவும் அந்த கட்டபொம்மன் காமெடி , கிட்ட தட்ட ஒரு parody அந்த காட்சியை அனுமதித்தது நடிகர் திலகத்தின் விசாலா மனசை காட்டுகிறது ,
நீ என்ன கண்ணனா நான் என்ன கம்சனா பாடல் காட்சியில் நம்மவர் காட்டும் உக்கரம் , கண்களில் இருக்கும் ஒரு வித பரபரப்பு , அதை எதிர்கொள்ள பயப்படும் KR விஜயா , கவிதா வின் நடிப்பு அந்த படலை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்கிறது .
படத்தின் மிக பெரிய பலம் திரைக்கதை , ஒரு குடும்ப கதையை ஒரு வித த்ரில்ளீர் போல கொண்டு சென்று இருப்பார்

ஆரம்பத்தில் சாதரணமாக செல்லும் படம் , அதுவும் நம்மவர் ஆப்ரிக்கா சென்ற உடன் ஆமை வேகத்தில் நகரும் , நம்மவர் திரும்பி வந்த உடன் கொஞ்சம் வேகம் பிடிக்கும் , நம்மவர்க்கு ,உண்மை தெரிந்த உடன் சுடு பிடிக்கும் கதை , இறுதி வரை அதே வேகத்தில் முடிகிறது

vasudevan31355
17th June 2013, 08:35 AM
கோபால்,

ஸ்டில் புதிர் ஒன்று போட்டிருந்தேனே! எங்கே பதிலைக் காணோம்? நழுவி தப்பிக்க வேண்டாம். பதில் சொல்லு. அது ஒண்ணும் வேற்றுமொழிப் படமில்லை. ஒரிஜினல் தமிழ்ப்படம்தான்.

vasudevan31355
17th June 2013, 08:45 AM
என்னை போல் ஒருவன் சாராசரி வெற்றி படம்

ராகுல்,

தவறு. விவரம் தெரியாமல் எழுத வேண்டாம். எ.போல்.ஒருவன் வசூலில் நிமிர்த்து கட்டிய ஒரு படம். பேய் வசூலை வாரிக் குவித்த படம். இத்தனைக்கும் தியாகம் 04.03.1978 அன்று வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் போதே என்னைப் போல் ஒருவன் 19.03.1978 அன்று வெளியாகி வசூல் பிரளயம் செய்தது. இத்தனைக்கும் நீண்ட நாள் தயாரிப்பில் வேறு இருந்த படம். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படங்கள் வசூலில் தோற்றுத்தான் போய் இருக்கின்றன. ஆனால் எ.போல்.ஒருவன் மாதிரி சில படங்கள் விதிவிலக்கு. எங்கள் கடலூரிலேயே கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ஓடி கலக்கியது. அதனுடைய வசூல் விவரங்கள் நமது ரசிகர் மன்ற நோட்டீஸ்களில் கொடுக்கப்பட்டது என்னிடம் உள்ளது. ரசிகர் மன்ற நோட்டீஸ் வசூல்களை வெளியிட்டால் சில பிரச்னைகள் வரும் என்று நான் வெளியிடுவதில்லை.

தயவு செய்து விவரமறியாமல் எழுத வேண்டாம்.

Gopal.s
17th June 2013, 09:18 AM
நாகிரெட்டியார் சொன்னது.....

உழைப்பாளி' படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே "பைரவதீபம்' (தெலுங்கு), கறுப்பு வெள்ளை (தமிழ்) படங்களுக்காக தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டியால் திட்டமிடப்பட்டது.

கறுப்பு வெள்ளை படத்தை இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் டைரக்ட் பண்ண, சிவாஜிகணேசன் அவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், அவர் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிக்கக்கூடாது, நடிக்க முடியாது என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினார். எனவே, நடிகர் திலகம் நடிக்கவில்லை என்றதும் எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்தியது. அதனால் அவரது கதாபாத்திரத்தில் மாறுதல் செய்து, கறுப்பு வெள்ளை படத்தில் மலையாள நடிகர் திலகன் நடித்தார். கே.எஸ். சேதுமாதவனுக்குப் பதிலாக மனோபாலா படத்தை இயக்கினார்.

Gopal.s
17th June 2013, 09:21 AM
புதிர் போட்டிகளில் ,இனி கலந்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளேன். புதியவர்களுக்கும், ஆரம்ப நிலை ரசிகர்களுக்கும் உரிய வாய்ப்பை வழங்கும் எனது முடிவை மற்ற ரசிகர்களும் வரவேற்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.
ஜெய் ஹிந்த் ....

RAGHAVENDRA
17th June 2013, 09:28 AM
Nadigar Thilagam's films in TV Channels this week

Channel Date Time Movie

J MOVIES
19.6.13 6 AM PANAM
22.6.13 1 PM VIETNAM VEEDU
18.6.13 5 PM AVAN THAN MANITHAN

JAYA TV
18.6.13 10 AM UTHAMA PUTHIRAN
19.6.13 10 AM NEELA VAANAM
22.6.13 10 AM ETHIROLI
19.6.13 8.30 PM PUDHIYA PARAVAI

K TV 18.6.13 1 PM ETHIROLI

MEGA 24 20.06.13 6.30 PM VETRIKKU ORUVAN

MEGA TV 19.06.13 12.00 NOON VAA KANNA VAA

MURASU TV
18.06.13 7.30 PM MOHANA PUNNAGAI
22.06.13 7.30 PM UTHAMA PUTHIRAN

POLIMER TV 23.06.13 1.00 PM JALLIKKATTU

RAJ DIGITAL PLUS
21.06.13 10 AM MANGAIYAR THILAKAM
18.06.13 1 PM PATHI BAKTHI

VASANTH TV
19.06.13 2 PM JALLIKKATTU
20.06.13 2 PM NEETHIPATHI
23.06.13 2 PM MARUTHA NATTU VEERAN

ZEE TAMIL 20.06.13 2 PM RISHI MOOLAM

RAGHAVENDRA
17th June 2013, 09:32 AM
புதிர் போட்டிகளில் ,இனி கலந்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளேன். புதியவர்களுக்கும், ஆரம்ப நிலை ரசிகர்களுக்கும் உரிய வாய்ப்பை வழங்கும் எனது முடிவை மற்ற ரசிகர்களும் வரவேற்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.
ஜெய் ஹிந்த் ....

.......

ScottAlise
17th June 2013, 09:42 AM
Vasu Sir,

I guess it was not a 100 days movie but I do know it collected very well at box office

Sorry for the mistake , it won't happen

vasudevan31355
17th June 2013, 09:55 AM
புதிர் போட்டிகளில் ,இனி கலந்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளேன். புதியவர்களுக்கும், ஆரம்ப நிலை ரசிகர்களுக்கும் உரிய வாய்ப்பை வழங்கும் எனது முடிவை மற்ற ரசிகர்களும் வரவேற்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.
ஜெய் ஹிந்த் ....

தெரியல்லன்னு சொல்லிட்டுப் போயேன்! இதுல கௌரவம் என்ன கௌரவம் வேண்டிகிடக்கு ? இதுக்கு மட்டும் தில் இருந்தா பதில் சொல்லு. இல்லை தெரியல்லன்னு உண்மையை ஒத்துக்கோ! சப்பை கட்டு கட்டாதே.

RAGHAVENDRA
17th June 2013, 09:59 AM
டியர் கார்த்திக்,
ஜெனரல் சக்கரவர்த்தி மறக்க வொண்ணா திரைப்படம். முழுக்க முழுக்க சிவாஜி ரசிகர்களின் கண்ணோட்டத்திற்கென்றே அமைந்த படம். தீபம் தியாகம் என பல்வேறு ரசிகர்களின் ஈர்ப்பைப் பெற்ற 1977-78 கால கட்டத்தில் ஜெனரல் சக்கரவர்த்தி, நம் படமாக அமைந்தது ஒரு மகிழ்ச்சியே. படம் சற்றே அவ்வப்போது தொய்வைக் கண்டாலும் டான்சேனியா மாநாட்டில் நடிகர் திலகத்தின் ராணுவ அதிகாரிகளுடனான சந்திப்புக் காட்சி மிகச் சிறப்பு. அந்த கம்பீரம் வேறெ யாருக்கு வரும்.

ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படத்தின் போது நான் சாந்தி திரையரங்கில் நடிகர் திலகத்தின் படப் பட்டியலை வைத்திருந்தேன். அது ஆனந்த விகடனை வரவழைத்ததோடு., அதையொட்டி வெளி வந்த துணுக்கு ஸ்பெஷல் விகடன் வெளியீட்டில், மூன்றாம் அல்லது நான்காம் பக்கத்தைத் திருப்பினால் முதல் செய்தியாக இதனை வெளியிட்டிருந்தார்கள். அது வரை இருந்ததை விட அதிக வேகமாக சூடு பிடித்தது, நம்முடைய நடிகர் திலகத்தின் மீதான பிடிப்பு.. ரசிகன் என்பதைத் தாண்டி முழு மூச்சாய் வெறியனாக மாற்றி விட்டது, ரத்தத்தில் ஊறி விட்டது. அதற்குப் பிறகு, ஒவ்வொரு படத்திற்கும் புதிய புதிய வடிவங்கள், எண்ணங்கள், எழுத்துக்கள் என வித விதமாய் சார்ட்டுகளைத் தயாரிக்க வைத்து, உசுப்பி விட்டது. இதற்கென்றே பின்னர் தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது இன்னும் உத்வேகத்தைத் தந்தது. அதற்குப் பிறகு NO LOOKING BACK .

முதல் நாள் முதல் காட்சியில், நீ என்ன கண்ணனா பாட்டைத் தியேட்டரில் பார்த்த சந்தோஷம் ... வார்த்தையில் சொல்ல முடியாதது. ரொம்ப நாள் கழித்து முழுக்க முழுக்க சிவாஜி ரசிகர்களே நிறைந்திருந்த காட்சியல்லவா... மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்.... அதே போல் அந்த டான்சேனிய வீரரைப் போல் நீக்ரோ உடையில் வரும் போதும் அமர்க்களம். அதற்கு சற்றும் குறையாத வண்ணம் ஓ மை டியர் டாக்டர்....

இந்த ஓ மை டியர் டாக்டர் பாட்டை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தொலைக்காட்சிகள் இந்த மாதிரி பாடல்களைப் போடாமல் திரும்பத் திரும்ப தேய்ந்த ரிக்கார்டுகளைப் போல் சில பாடல்களையே போடும் போது மிகவும் வருத்தமாயும் உள்ளது. நம்மை நாமே ஆறுதல் படுத்திக் கொள்ள நம்முடைய இந்த மய்யம் இணைய தளமும் யூட்யூப் இணைய தளமும் இருக்கின்றதோ பிழைத்தோம். அவர்களுக்கு நம் நன்றி.

ஓ மை டியர் டாக்டர் என்னை வெகுவாக வெகுவாக வெகுவா... எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் .... கவர்ந்த பாடல்

பார்ப்போமா

http://youtu.be/p0k_vXT-3zs

இப்பாடலை நல்ல தரத்தில் தரவேற்றியுள்ள ராஜ் வீடியோ விஷன் நிறுவனத்திற்கு நம் உளமார்ந்த நன்றி.

பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசையிலேயே மெல்லிசை மன்னர் சூழலை விளக்கி விடுகிறார்.

நடிகர் திலகமோ .. மனிதர் துவக்கத்தில் சோம்பல் முறித்து உடலை சிலுப்பிக் கொண்டு வரும் போதே நம்மை கட்டிப் போட்டு விடுகிறார்.

வாசு சார்... உங்களுடைய சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

RAGHAVENDRA
17th June 2013, 10:08 AM
இனி இன்று நம் தூக்கத்தைக் கலைக்கப் போகிற பாடல் ... இரவு முழுதும் இந்தப் பாட்டை ... அல்ல அல்ல... இன்னும் சில தினங்களுக்கு .... நம்முள் ஓரு hang overஐ உண்டாக்கப் போகிற பாடல்...

http://youtu.be/RvzIQsSnb-c

RAGHAVENDRA
17th June 2013, 10:37 AM
ஒவ்வொரு சிவாஜி ரசிகர் மனதிலும் ஆழ ஊடுருவும் பாடல்...

என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை..

நடிகர் திலகம் சின்னச் சின்ன பின்னோட்டங்களைக் கொடுக்கும் போது ... ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

குறிப்பாக இந்த வரிகளைக் கேளுங்கள்.. பாருங்கள் ...

பாசமென்னும் பூமலர கால நேரம் கிடையாது ...

ஒரு சின்ன சிரிப்பு ...

http://youtu.be/RLNiWOweWlA

சங்கர் கணேஷ் இசையில் மறக்க வொண்ணா இனிமையான பாடல். வாணி ஜெயராம் .... சிம்ப்ளி சூபர்ப்...

RAGHAVENDRA
17th June 2013, 10:41 AM
நெஞ்சங்கள் படத்தில் டி.எம்.எஸ். குரலில் நடிகர் திலகத்திற்கு சூப்பர் டூயட் பாடல். சங்கர் கணேஷ் இசையில் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

http://youtu.be/ODMikTUTq2M

casual ஆக வந்து அட்டகாசம் பண்ணும் நடிகர் திலகத்தைப் பாருங்கள்.

தேவி திரையரங்கில் ரசிகர்களின் அளப்பரையை அமோகமாக் பெற்ற வரிகள்...

அஞ்சாதவன் கெஞ்சாதவன் என்
ஆண்மை தெரியாதா
தன்மானமும் என் வீரமும்
இவ்வூரே அறியாதா

அடுத்தவர் கண்டித்தால்
தாங்கும் நெஞ்சல்ல
அடங்கிட ஒடுங்கிட
கோழை நானல்ல.

RAGHAVENDRA
17th June 2013, 10:52 AM
இனி கோபாலுக்காகவும் இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காகவும்

நெஞ்சங்கள் படம் முழுமையாக யூட்யூப் இணைய தளத்தில்

http://youtu.be/Z4s7LmdXQb4

Gopal.s
17th June 2013, 11:00 AM
பார்க்கவில்லை என்று யார் சொன்னாங்க ? 86 வரை பார்க்காத படமே இல்லை. நெஞ்சத்தில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்?

iufegolarev
17th June 2013, 11:20 AM
இந்திய திரை உலகின் முதல் உலக நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை போற்றும் பாடல்


http://www.youtube.com/watch?v=CM1NvdUMW0Y

vasudevan31355
17th June 2013, 11:24 AM
பார்க்கவில்லை என்று யார் சொன்னாங்க ? 86 வரை பார்க்காத படமே இல்லை. நெஞ்சத்தில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்?

த்சொ... த்சொ... த்சொ... த்சொ... த்சொ... த்சொ... த்சொ...

chinnakkannan
17th June 2013, 11:29 AM
அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்..

என்னைப் போல் ஒருவன் மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்ததாக நினைவு..ஒரே மாதிரி முக அமைப்பு ஒரே மாதிரி சீரிய உடைகள் வைத்துக் கொண்டு இரட்டை ரோல்களில் வித்யாசம் காட்டுவதற்கு சிவாஜி ஒருவரால் மட்டுமே முடியும்.. நான் மிகவும் ரசித்த படம் + பாடல்..வேலாலே விழிகள்..


ராகுல்,

தவறு. விவரம் தெரியாமல் எழுத வேண்டாம். எ.போல்.ஒருவன் வசூலில் நிமிர்த்து கட்டிய ஒரு படம்.
தயவு செய்து விவரமறியாமல் எழுத வேண்டாம்.

Gopal.s
17th June 2013, 11:41 AM
அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்..

என்னைப் போல் ஒருவன் மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்ததாக நினைவு..ஒரே மாதிரி முக அமைப்பு ஒரே மாதிரி சீரிய உடைகள் வைத்துக் கொண்டு இரட்டை ரோல்களில் வித்யாசம் காட்டுவதற்கு சிவாஜி ஒருவரால் மட்டுமே முடியும்.. நான் மிகவும் ரசித்த படம் + பாடல்..வேலாலே விழிகள்..

என் சின்ன கண்ணனுக்காக Special ......

என்னை போல் ஒருவன்- சில நினைவுகள்.

நான் சென்னை வந்த புதிதில், அனைத்து புது படங்களையும் ஜெமினி colour lab இல் ரிலீஸ் முன்பே பார்த்து விடுவேன். அப்படி நான் நான் பார்த்த படங்களில் ஒன்று என்னை போல் ஒருவன். 1975 இல் Re -Recording செய்யாமல் ஒரு முறையும், செய்த பிறகு இரு முறைகளும் எல்லா projection இலும் பார்த்தேன்.

ராமண்ணா ,இந்த படம் வளரும் போது ,நிறைய சிறு படங்கள் எடுத்து , இந்த படம் லேபில் இருந்து clear பண்ண முடியாத சங்கடத்தில் மாட்டியிருந்தார். (ஸ்ரீதர் வைர நெஞ்சத்தின் போது இதே தவறை செய்தார்.அவளுக்கென்று ஓர் மனம்,அலைகள், ஒ மஞ்சு என்று). பிறகு இந்த படம் 1978 இல் வந்து நன்றாகவே ஓடியது.(லேப் ரிலீஸ் செய்த ஞாபகம். சென்னையிலும்,வெளியூர் களிலும் வேறு வேறு தினங்களில்) இது வந்திருக்க வேண்டிய 1973/1974 இல் வந்திருந்தால் வெள்ளி விழா கண்டு block buster ஆகியிருக்கும்.

சிவாஜி-ராமண்ணா இணைவில் வந்த மிக சிறந்த படம் இதுதான். படு விறுவிறுப்பான neat &clean திரைகதை. சக்தி கிருஷ்ணசாமி வசனங்கள் படு crisp .ராமண்ணா மிக நன்றாக இயக்கி இருப்பார். ஹிட் பாடல்கள். சாரதா,உஷாநந்தினி,ஆலம் (படு cute pair .வேலாலே,மௌனம் இரண்டுமே என் favourite .)மற்றவர் காணாத ஒரு கட் ஆன பாடலை நான் லேப் projection இல் பார்த்தேன். அது கிளைமாக்ஸ் காட்சியில் உஷா நந்தினியுடன் இழு இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் என்கிற ஹிப்பி டான்ஸ்.

சிவாஜியின் ஆரம்ப காட்சிகள் அமர்க்களம். அம்மாவிற்கு மருந்து,சிகிச்சை பற்றி துச்சமாக பேசி shock குடுப்பார்.(இமேஜ் ஆவது மண்ணாவது, பாத்திரம்தான் எங்கள் தலைவருக்கு).சாரதாவுடன் ஒரு duet வைத்திருக்கலாம்.நல்ல ஜோடி.
ஆள் மாறாட்ட காட்சிகளில் அத கள காமெடி. மாறு வேடங்கள் ரொம்ப (christian father ,electrician ) sensible ஆக கையாள பட்டிருக்கும்.சிவாஜி படு casual ஆக இரண்டு ரோல்களை பண்ணியிருப்பார். பொழுது போக்கு படத்திற்கு உரிய relaxed நடிப்பு. பிரமாதமாய் வந்திருக்கும். ரொம்ப நாள் தயாரிப்பினால் உருவத்தில் கொஞ்ச continuity மிஸ் ஆகும் சில காட்சிகளில் மட்டும். ஆனால் நடிப்பில் consistency காட்டி NT குறை தெரியாமல் கவனித்து கொள்வார். அனாவசிய காமெடி track கிடையாது.படம் படு சுறுசுறுப்பு. ரெண்டு பார்ட் கிளைமாக்ஸ் -ரெண்டுமே விறு விறுப்பு .

என்னுடைய favourite entertainer .

ScottAlise
17th June 2013, 11:52 AM
Dear Gopal Sir,

How could you watch it in Lab,its very interesting, Pl elaboarate, also You have mentioned about watching movie with Re recording, How did you feel before & after re recording

What is lab release?

iufegolarev
17th June 2013, 11:56 AM
என் சின்ன கண்ணனுக்காக Special ......
என்னை போல் ஒருவன்- சில நினைவுகள்.(நன்றி சௌரி ராஜன் சார்.)

நான் சென்னை வந்த புதிதில், அனைத்து புது படங்களையும் ஜெமினி colour lab இல் ரிலீஸ் முன்பே பார்த்து விடுவேன். அப்படி நான் நான் பார்த்த படங்களில் ஒன்று என்னை போல் ஒருவன். 1975 இல் Re -Recording செய்யாமல் ஒரு முறையும், செய்த பிறகு இரு முறைகளும் எல்லா projection இலும் பார்த்தேன்.

ராமண்ணா ,இந்த படம் வளரும் போது ,நிறைய சிறு படங்கள் எடுத்து , இந்த படம் லேபில் இருந்து clear பண்ண முடியாத சங்கடத்தில் மாட்டியிருந்தார். (ஸ்ரீதர் வைர நெஞ்சத்தின் போது இதே தவறை செய்தார்.அவளுக்கென்று ஓர் மனம்,அலைகள், ஒ மஞ்சு என்று). பிறகு இந்த படம் 1978 இல் வந்து நன்றாகவே ஓடியது.(லேப் ரிலீஸ் செய்த ஞாபகம். சென்னையிலும்,வெளியூர் களிலும் வேறு வேறு தினங்களில்) இது வந்திருக்க வேண்டிய 1973/1974 இல் வந்திருந்தால் வெள்ளி விழா கண்டு block buster ஆகியிருக்கும்.

சிவாஜி-ராமண்ணா இணைவில் வந்த மிக சிறந்த படம் இதுதான். படு விறுவிறுப்பான neat &clean திரைகதை. சக்தி கிருஷ்ணசாமி வசனங்கள் படு crisp .ராமண்ணா மிக நன்றாக இயக்கி இருப்பார். ஹிட் பாடல்கள். சாரதா,உஷாநந்தினி,ஆலம் (படு cute pair .வேலாலே,மௌனம் இரண்டுமே என் favourite .)மற்றவர் காணாத ஒரு கட் ஆன பாடலை நான் லேப் projection இல் பார்த்தேன். அது கிளைமாக்ஸ் காட்சியில் உஷா நந்தினியுடன் இழு இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் என்கிற ஹிப்பி டான்ஸ்.

சிவாஜியின் ஆரம்ப காட்சிகள் அமர்க்களம். அம்மாவிற்கு மருந்து,சிகிச்சை பற்றி துச்சமாக பேசி shock குடுப்பார்.(இமேஜ் ஆவது மண்ணாவது, பாத்திரம்தான் எங்கள் தலைவருக்கு).சாரதாவுடன் ஒரு duet வைத்திருக்கலாம்.நல்ல ஜோடி.
ஆள் மாறாட்ட காட்சிகளில் அத கள காமெடி. மாறு வேடங்கள் ரொம்ப (christian father ,electrician ) sensible ஆக கையாள பட்டிருக்கும்.சிவாஜி படு casual ஆக இரண்டு ரோல்களை பண்ணியிருப்பார். பொழுது போக்கு படத்திற்கு உரிய relaxed நடிப்பு. பிரமாதமாய் வந்திருக்கும். ரொம்ப நாள் தயாரிப்பினால் உருவத்தில் கொஞ்ச continuity மிஸ் ஆகும் சில காட்சிகளில் மட்டும். ஆனால் நடிப்பில் consistency காட்டி NT குறை தெரியாமல் கவனித்து கொள்வார். அனாவசிய காமெடி track கிடையாது.படம் படு சுறுசுறுப்பு. ரெண்டு பார்ட் கிளைமாக்ஸ் -ரெண்டுமே விறு விறுப்பு .

என்னுடைய favourite entertainer .

திரி நண்பர்களுக்கு ஒரு விஷயம் என்னை போல் ஒருவனை பற்றி.

என்னை போல் ஒருவன் திரைப்படத்தின் மற்றும் ஒரு சிறப்பு - விளம்பரபடுத்தாத சிறப்பு.

பணக்கார சிவாஜி பிரமை பிடித்தவர் போல இருப்பார் தான் தான் கொலை செய்தோம் என்று எண்ணி. கிராமப்புற சிவாஜி அதை கண்டுபிடித்து, பின்பு உண்மை குற்றவாளியை அதாவது கொல்லப்பட்டதாக கருதப்படுபவரை கண் முன் நிறுத்துவார்.

அப்போது அந்த பிரமைபிடித்தது போல உட்கார்ந்திருக்கும் சிவாஜிக்கு பழைய நினைவுகள் அசைபோடும் ஒரு Flashblack காட்சி .
இந்த காட்சியில் முதல் முறையாக " Reverse Shot " யுக்தி பயன்படுத்தி இயக்குனர் புதுமை செய்திருப்பார். அதாவது துப்பாகியால் சுடப்பட்டு விழுந்ததுதுமுதல் இருவரும் போராட்டாம் நடத்தி பின்பு இவர் இருக்கும்போது அந்த குண்டடிபட்ட நபர் (ராமதாஸ்) வருவது..பின்பு அவர் கதவை திறப்பது, கதவு மூடீருப்பது ஆகிய காட்சிகள் " Reverse " கய்யாளபட்டிருக்கும் .

இந்த பாணியை இரு வருடம் முன்னால் வந்த கமல் நடித்த மன்மதன் அம்பு திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு பின்பற்றியிருபார்கள்.

Reverse யுக்தி மட்டும் அல்ல மற்றும் பல புதிய யுக்திகள் நம்முடைய நடிகர் திலகத்தின் திரைப்படத்தில் தான் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது அக்காலத்தில்

goldstar
17th June 2013, 11:56 AM
பாகம் - 2 : அனைவராலும் காப்பியடிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் உடை அலங்கார நளினம்..!

"நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !! திரி நண்பர்கள் அனைவரும் இது எப்படி இருக்கிறது என்ற உங்களுடைய மேலான கருத்தினை, மற்றும் இந்த முயற்சியின் நிறை குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இதுபோல விஷயங்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். !


NT360,

Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off .

I have some what missed these videos, excellent, marvelous, fabulous and very good comments by Anand and best videos presentation. I have thoroughly enjoyed and watched many times.

Hats off to you, Anand and other guy (not sure his name) asking questions. Very good effort.

Thanks again.

Cheers,
Sathish

Gopal.s
17th June 2013, 12:06 PM
Dear Gopal Sir,

How could you watch it in Lab,its very interesting, Pl elaboarate, also You have mentioned about watching movie with Re recording, How did you feel before & after re recording

What is lab release?
ஜெமினி கலர் லேப் எனது சொந்தகாரர்களுடையது. அங்கு இருந்த projection theatre ,ஸ்பெஷல் ஆக திரையுலக சம்பத்த பட்டவர்களுக்கும், lab technicians உக்கும் மட்டுமே.நான் B .Tech படித்தது சென்னை கிண்டியில் என்பதால் என் cousin information கொடுத்ததும் ,projection க்கு ஓடி விடுவேன்.(All gemini colour movies before release பாத்திருக்கேன் 1976-1981)
film centre ,பிரசாத் கலர் படங்களுக்கே theatre செல்வேன்.
இந்த படத்தை லேப் இல் இருந்து பணம் கட்டி clear பண்ண முடியாமலும் ,re -recording முடிக்க முடியாமலும் பண கஷ்டத்தில் மாட்டியது. அதனால் Lab தானே release பண்ணி தனது dues clear பண்ணி கொண்டது என்ற ஞாபகம்.
இந்த படத்தில் Action sequence தவிர்த்து re -recording இல்லாமலும், அதனுடன் சேர்த்து பார்த்ததற்கும் பெரிய வித்யாசம் தோணவில்லை.

yoyisohuni
17th June 2013, 12:27 PM
தந்தையர் தினத்துக்கு நல்ல பாடல்களை தொகுத்து வழ்ங்கியிருக்கும் ரசிகப் பெருமக்களே,
தந்தை என்றால் mindless பாசம் மட்டும் தானா? தங்கப்பதக்கத்தில் நம் தங்கத்துக்கு தங்கம் வழங்கபட்டதே
அருமையான "தந்தை"யுமானார் என்பதால் தான். தாயுமாகி, தந்தையுமாகி, நல் ஆசானாக நல்வழிப்படுத்த நினைக்கும் தந்தை. அதை ஏற்கும் பக்குவமற்ற அரைவேக்காடு தனையன்.

பிள்ளையை கடிந்து அறம் வளர்க்கும் தந்தை, சிறுவன் தூங்கிய பின் மெதுவாய் முத்தமிடும் அன்புத் தந்தை.
இப்படிப் பட்ட தந்தைகளில் சேவை அல்லவா நம் நாட்டுக்குத் தேவை.

"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" அவர் பல்கலைக் கழகமாக விளங்கினார். இறுதியில் தேறாத மாணவனை, just pass செய்து அவ்வுலகம் அனுப்பிவிட்டு, மிடுக்குடன் பதக்கம் பெறும் உதாரணத் தந்தை.


வாசுதேவன்31355 ஐயா,
உங்கள் "ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன்" தொடரின் பல ரசிகர்ளில் நான் ஒருவன். உங்களை ஆவலுடன் தொடர்கிறேன்.

Gopal.s
17th June 2013, 12:57 PM
கரெக்ட் காட்டு பூச்சி சார்.

chinnakkannan
17th June 2013, 01:29 PM
கோபால் சார் என்.டி. 360 டிக்ரீஸ்.. நன்றிகள் பல.. நல்ல ரைட் அப்.. ம்ம் மெளனம்பேசியதே..வாவ் என்ன ஒரு இனிமையான பாடல்.. மறுபடி நன்றிகள்..நிறைய எழுத முடியவில்லை இப்போது..மன்னிக்க..

iufegolarev
17th June 2013, 01:35 PM
NT360,

Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off Hats off .

I have some what missed these videos, excellent, marvelous, fabulous and very good comments by Anand and best videos presentation. I have thoroughly enjoyed and watched many times.

Hats off to you, Anand and other guy (not sure his name) asking questions. Very good effort.

Thanks again.

Cheers,
Sathish

Dear Sathish,
Thanks for your feedback and response.

The other guy asking questions is Myself ..:-)

Gopal.s
17th June 2013, 01:37 PM
Dear Sathish,
Thanks for your feedback and response.

The other guy asking questions is Myself ..:-)
இவருக்கு NT னே நெனப்பு போலிருக்கு. Double Role வேறு!!!????????????????????

RAGHAVENDRA
17th June 2013, 01:51 PM
டியர் சின்னக் கண்ணன் சார்
என்னைப் போல் ஒருவன் பற்றிய தங்கள் கருத்துரை சரியானது மட்டுமல்ல, தங்கள் உள்ளத்திலிருப்பதை அப்படயே கூறும் தங்கள் நல்ல எண்ணத்தையும் காட்டுகிறது. பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
17th June 2013, 01:52 PM
டியர் ராகுல் ராம்
ஜெனரல் சக்கரவர்த்தி - தங்கள் பார்வையில் .... சிறப்பு... இது போல் அரிய படங்களைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். தங்கள் தமிழும் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது. பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
17th June 2013, 01:55 PM
என்னைப் போல் ஒருவன் படத்தைப் பற்றி கருத்துக்களைக் கூறிவிட்டு, பார்வைக்குத் தராமல் இருந்தால் தகுமா.

மௌனம் கலைகிறதே .... மயக்கம் வருகிறதே...

மெல்லிசை மன்னரின் சூப்பர் ரிதம் பாடலின் சிறப்பை மேலும் அதிகப் படுத்துகிறது..

தலைவரோ ... கேட்கவே வேண்டாம். ..

http://youtu.be/n7Qzz_2u-bQ

RAGHAVENDRA
17th June 2013, 01:56 PM
பின்னணி இசை இல்லாமலும் பின்னணி இசையோடும் படம் ஒரே மாதிரி இருந்ததா... கோபால் சார் .... இது உங்களுக்கே டூ மச்சாகத் தெரியவில்லை ....

iufegolarev
17th June 2013, 01:57 PM
இவருக்கு NT னே நெனப்பு போலிருக்கு. Double Role வேறு!!!????????????????????

Ha..Ha...Ha...! Gopal Sir,

Tanjore Kusumbu? மனசுல நிக்கறா மாதிரி நச்சுனு ஒன்பது வேடம் நம் தலைவர் புனைந்திருக்கிறார். அவர் அபிமானியாக இருந்து நான் ஒரு சாதாரண டபுள் ரோல் கூட செய்யவில்லைஎன்றால் என்னுடைய சித்தர் அவர் என்று சொல்லுவதில் என்ன கர்வம் எனக்கு இருக்கபோகிறது ?

RAGHAVENDRA
17th June 2013, 01:58 PM
தந்தையர் தினத்துக்கு நல்ல பாடல்களை தொகுத்து வழ்ங்கியிருக்கும் ரசிகப் பெருமக்களே,
தந்தை என்றால் mindless பாசம் மட்டும் தானா? தங்கப்பதக்கத்தில் நம் தங்கத்துக்கு தங்கம் வழங்கபட்டதே
அருமையான "தந்தை"யுமானார் என்பதால் தான். தாயுமாகி, தந்தையுமாகி, நல் ஆசானாக நல்வழிப்படுத்த நினைக்கும் தந்தை. அதை ஏற்கும் பக்குவமற்ற அரைவேக்காடு தனையன்.

பிள்ளையை கடிந்து அறம் வளர்க்கும் தந்தை, சிறுவன் தூங்கிய பின் மெதுவாய் முத்தமிடும் அன்புத் தந்தை.
இப்படிப் பட்ட தந்தைகளில் சேவை அல்லவா நம் நாட்டுக்குத் தேவை.

"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" அவர் பல்கலைக் கழகமாக விளங்கினார். இறுதியில் தேறாத மாணவனை, just pass செய்து அவ்வுலகம் அனுப்பிவிட்டு, மிடுக்குடன் பதக்கம் பெறும் உதாரணத் தந்தை.


Perfect tribute to Father's Day

iufegolarev
17th June 2013, 02:02 PM
இந்திய திரை உலகின் முதல் உலக நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை போற்றும் பாடல்


http://www.youtube.com/watch?v=CM1NvdUMW0Y

Howz it ?

Gopal.s
17th June 2013, 02:02 PM
பின்னணி இசை இல்லாமலும் பின்னணி இசையோடும் படம் ஒரே மாதிரி இருந்ததா... கோபால் சார் .... இது உங்களுக்கே டூ மச்சாகத் தெரியவில்லை ....
இசை- M .S .V .
என்னா இருந்துட போவுது .... டோட்டோய் டொடண்டோய் ..... தெ போ ...தெ போ ....தெ போ....
டொ டடோய்....டொ டடோய் .... டொ டடோய் ..... டொ ட்டோய்.....
toooooooooooooooooooo ing .............

iufegolarev
17th June 2013, 02:22 PM
கட்டபொம்மனாக நடிகர் திலகம் நடித்த ஒரே காரணத்தினால், எங்கே கட்டபொம்மனுக்கு ஏதாவது நம் ஆட்சியில் செய்தால், நடிகர் திலகத்தை மக்கள் மேலும் மேலும் நேசித்துவிடுவார்களோ என்ற கேவலமான தாழ்புனற்சியில் திமுக மற்றும் எந்த அரசாங்கமும் தங்களுடைய எந்த ஒரு ஆட்சிகாலத்திலும் கட்டபொம்மனுக்கு ஒரு துரும்பை கூட எடுக்காதபோது, அதை பற்றி சற்றும் கவலைபடாமல், பொருட்படுத்தாமல் கட்டபொம்மன் நாடகம் மற்றும் திரைப்படத்தால் தான் அடைந்த புகழையும் பெயரையும் மனதிற்கொண்டு அந்த விஸ்வாசத்தை காட்டும்விதமாக ஒரு தனி மனிதனாய் கட்டபொம்மனுக்கு ஒரு சிலை நிறுவி, கயித்தாரில் தான் நடிக்கும் ஆரம்ப காலத்தில் வாங்கிய கட்டபொம்மனின் இடத்தை அரசாங்கத்திற்கு இலவசமாக பத்திரம் செய்து கொடுத்த உன்னதமான வள்ளல் பெருந்தகை நம் நடிகர் திலகம்.,

கட்டபொம்மன் சிலையை திரு சஞ்சீவ ரெட்டி முன்னிலையில் கர்மவீரர் காமராஜ் அவர்கள் திறந்து வைக்கும் ஆவணம் !
மக்கள் வெள்ளம் அலைகடல் என எழுந்து வந்து பாராட்டும் காட்சி. !

2435

iufegolarev
17th June 2013, 02:33 PM
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் :

நடிகர் திலகத்தால் உலக தமிழர்களுக்கு நினைவூட்டப்பட்ட அறிஞர்கள் பெரியவர்கள் வரிசையில் அடுத்து இடம்பெறபோவது -

Advanced Make-up யுக்தி என்று தயாரிப்பாளர்கள் அவஸ்தைப்படும் அளவிற்கு காசை கரியாகும் நடிகர்கள் மத்தியில் வெறும் 500 ருபாய் செலவில் நம் கண் முன் வரவைத்து அருள்பாலிக்கசெய்த திருவருட்செல்வர் - அப்பர் !!

http://www.youtube.com/watch?v=kpCzej-Sr04

iufegolarev
17th June 2013, 02:53 PM
அசல் திரைப்படத்தில் " சிங்கம் என்றால் எந்தந்தைதான்" என்ற அதி அற்புதமான வைரமுத்து எழுதிய பாடல்.

அசல் திரைபடத்தில் அந்த பாடலை கொலை செய்திருப்பார்கள் அது வேறு விஷயம்.

ஆனால் அந்த பாடலை நாம் கண்மூடி கேட்டோமேயானால் நம் திரை உலக சித்தர் தான் அனைவருக்கும் நினைவில் வருவார். (அதனால்தானோ என்னவோ வயிதெரிச்சல் பிடித்த சில புல்லுருவிகள், அந்த பாடலை முழுதுமாக பயன்படுத்தாமல் ஏனோ தானோ என்று படத்தில் சேர்த்திருப்பார்கள்)

நானும் எனது நண்பர் திரு ஆனந்த் அவர்களும் இந்த பாடலை எடுத்துகொண்டு, அதில் நடிகர் திலகத்தின் பல்வேறு காட்சிகளை கொண்டு ஒரு காட்சியாக செய்தால் என்ன என்று எண்ணியதன் விளைவு இந்த ஒளி ஒலி காட்சி.

அதை செய்து முடித்தவுடன் எனக்கு மின்னல் போல ஒரு யோசனை தோன்றியது. நாம் ஏன் இதை நடிகர் திலகத்தின் புதல்வர் திரு பிரபு (நான் பிரபு அவர்களின் ரசிகன் கூட ) நினைத்துபாற்பதுபோல செய்யகூடாது என்று.

என் எண்ணத்தை திரு ஆனந்த் அவர்களிடம் கூற, அவரும் சரி செய்யலாம் என்று சொல்ல, டூயட் திரைப்படத்தில் வரும் காட்சியை பயன் படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நான் சொல்ல அந்த காட்சியை கட் செய்து ஆரம்பத்தில் (Prelude) அந்த saxophone இசை யுடன் இணைத்தோம்.

எப்படி இருக்கிறது? ரசிக்கும்படி இருக்கிறதா ? என்று திரி நண்பர்கள் கூறவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் !

https://www.youtube.com/watch?v=EcqXs94XVe8

RAGHAVENDRA
17th June 2013, 04:18 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/SivajiFansEvents/TMSTRIBUTETIRUPURFANSFW_zpsa311bc29.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/SivajiFansEvents/TMSTRIBUTETIRUPURFANSFW_zpsa311bc29.jpg.html)

திருப்பூர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பாக மறைந்த திரு டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களுக்கு திருப்பூர் மாவட்ட தலைமை சிவாஜி மன்ற பொதுச்செயலாளர் அரிமா ஆர். சத்ருக்கன் தலைமையில் நினைவு அஞ்சலி செலுத்தப் பட்டது.
திருப்பூர் புஷ்பா திரையரங்கம் அருகிலும் பின்னர் மாவட்ட தலைமை சிவாஜி மன்ற தலைமை அலுவலகத்திலும் அஞ்சலி செலுத்தப் பட்டது. சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் பாலு, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி அவர்களும் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைமை சிவாஜி மன்ற தலைவர் திரு ஜி.கே.பிரசன்ன குமார், பொது செயலாளர் அரிமா திரு ஆர். சத்ருக்கன், பிரபு எஸ். பழனிசாமி, அவர்களும், பொருளாளர் திரு எஸ்.பி.பெரியசாமி அவர்களும் மற்றும் மாவட்ட தலைமை சிவாஜி மன்றத்தின் மற்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ScottAlise
17th June 2013, 06:39 PM
Dear Gopal Sir,

Thank you very much for your prompt response

ScottAlise
17th June 2013, 06:40 PM
Dear Ragavendran sir,

Thank you very much for your words of appreciation. Also pl integrate NT.com with thread 11

ScottAlise
17th June 2013, 06:41 PM
Dear NT sixty degree,

Your work was so fabulous, I posted this video in Part 10 thread, glad to know that you have taken painstaking work for NT, especially Sax intro was too good

ScottAlise
17th June 2013, 06:43 PM
Is enakul oruvan good print available online

iufegolarev
17th June 2013, 07:03 PM
Dear NT sixty degree,

Your work was so fabulous, I posted this video in Part 10 thread, glad to know that you have taken painstaking work for NT, especially Sax intro was too good

Dear Ragulram,

Many thanks for your motivating appreciation. In fact, i should give the credit for handling the technical part of it and sequencing the postures of NT inline with the meaning of the lines of that song to my good friend Mr.Anand even though the concept was conceptualized from my end.

Thanks a million for your appreciation.

iufegolarev
17th June 2013, 07:07 PM
Dear Ragulram,

This is our second effort of collating multiple postures of NT for the song Ulaganayaganae from Dasavatharam and that's the one you see below because we sincerely feel that BY ALL MEANS, OUR நடிகர் திலகம் சிவாஜி கணேசன் is the இந்திய திரை உலகின் முதல் உலக நாயகன்


http://www.youtube.com/watch?v=CM1NvdUMW0Y

JamesFague
17th June 2013, 07:43 PM
Chinna Marumagal available Moserbear combo with Anbalippu & Manamagan Thevai.

Mr Vasu Sir,

Your tit for tat with Mr Gopal is very interesting. Hope to join for grand lunch with
you at Neyveli very soon.

JamesFague
17th June 2013, 08:08 PM
Mr Vasu Sir,

Your new series on Dressing Style of NT is very interesting and superb.
But don't forget the stunt Series where we can show the otherside of
our NT.

vasudevan31355
18th June 2013, 12:38 AM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 4)

http://www.hindu.com/cp/2009/03/13/images/2009031350291601.jpg


திரையுலகில் அதுவரை கண்டிராத புதுமையான ஆடைகளை உடுத்தி தன்னை 'திரும்பிப் பார்'க்க வைத்த நம் பரந்தாமனின் பகட்டான ஆடைகளின் அணிவகுப்பு பிரம்மாண்டம்.

ஆடைகள் ஸ்பெஷல் பதிவு.

நடிகர் திலகத்தின் ஆடைகளின் ரசனைக்கு முதலிடம் கொடுக்கப்பட்ட பெருமை பெற்ற படம் 'திரும்பிப்பார்'. நடிகர் திலகம் இதில் அணிந்து வரும் ஆடைகளைப் புகழாத பத்திரிக்கைகளே அப்போது இல்லை என்று என் தாயார் அவர்கள் அடிக்கடி கூறுவார். முழுக்க முழுக்க நடிகர் திலகத்தின் ஆடைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட காவியம்.

இந்தப் படத்தின் ஸ்டில்களை எடுத்து பதிவு செய்ய ரொம்பத்தான் திணறிப் போனேன். எதை எடுப்பது எதை விடுவது என்று ஒரே குழப்பம். கிட்டத்தட்ட இப்படத்தில் அவர் அணிந்துவரும் அத்தனை உடைகளையும் இந்தத் தொடரில் காட்டியுள்ளேன். இதற்காக மட்டும் எனக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக பிடித்தது. மிக மிக சிரமப்பட்டு இப்பதிவை அளித்துள்ளேன்.

ஏனென்றால் வருங்காலத் தலைமுறை நாம் இப்போது அணியும் ஆடைகளையெல்லாம் நடிகர் திலகம் அப்போதே அணிந்து விட்டாரே என்று ஆச்சரியப் பட வேண்டும் என்பதற்காகவே இந்த உழைப்பு.

அதுமட்டுமல்ல! நடிகர் திலகத்தின் ஒவ்வொரு உடைகளையும் காணும் போது பிரம்மிப்பு அடங்கவில்லை. இப்போதைய டிரண்டையெல்லாம் அப்போதே இப்படத்தில் அவர் புகுத்தியிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. விதவிதமான உடைகள், அதற்கேற்ற ஸ்டைல்கள். என்னை மிகவும் கவர்ந்தது அந்த பைரவன் டைப் உடையும், கூலிங் கிளாசும்.

என்ன மனிதரய்யா அவர்! இப்படி ஒரு dress sense ஆ?! என்ன ஒரு முன் சிந்தனை! என்ன ஒரு கற்பனை! என்ன ஒரு தீர்க்க தரிசனம்!

நடிப்பில் மட்டுமல்லாது ஆடைகளிலும் புதுமை புகுத்திய ஆணழகன் அல்லவோ நம் திலகம்!

இப்போது ஆடைகளைப் பார்ப்போம்

Full covered NightGown.

(பாக்கெட்டில் கைகளை விட்டிருக்கும் பக்கா ஸ்டைல்.)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/33.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/33.jpg.html)

மேல் துண்டணிந்து பவ்யமாக வணங்கும் அழகு

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/27.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/27.jpg.html)

அட்டகாசமான ஜமீன்தார் பாணி உடை (என்ன ஒரு போஸ்!)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/26.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/26.jpg.html)

அகன்ற பெரிய காலர்கள் வைத்த 'சிக்'கான உடை

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/25.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/25.jpg.html)

குளோஸ்-அப்பில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/24.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/24.jpg.html)

கட்டம் போட்ட ஷர்ட்டோடு கூடிய கோட் மாடல் ஷர்ட்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/23-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/23-1.jpg.html)

கழுத்தைச் சுற்றி போடப்பட்டிருக்கும் மெல்லிய அற்புத டிசைன் கிளாத்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/22-5.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/22-5.jpg.html)

தலைவர் அணிந்திருக்கும் இந்தக் கோட்டின் பின்புற வடிவமைப்பை பாருங்கள். முதுகின் நடுவில் அருமையான பிளிட்கள் வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/20-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/20-2.jpg.html)

ஆஹா! இந்தக் கோட்டுக்கும், அந்த கூலிங் கிளாஸிற்கும், கையில் புகையும் சிகரெட் ஸ்டைலுக்கும்... தலைவர் அப்படியே அள்ளிக் கொண்டு போய்விடுகிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/21-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/21-3.jpg.html)

vasudevan31355
18th June 2013, 12:41 AM
இந்த உடையில் உட்கார்ந்திருக்கும் ஸ்டைலைப் பாருங்க

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/19-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/19-2.jpg.html)

கழுத்தைச் சுற்றி அணிந்திருக்கும் துண்டு. வரிக்கோடிட்ட அருமையான ஷர்ட்.
ஸ்பெஷல் உடை பதிவு. முகவாய்க்கட்டையில் கை வைத்திருக்கும் ஸ்டைல் சூப்பர்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/18-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/18-2.jpg.html)

அப்போதே 'பட்டாக்கத்தி பைரவன்' ஸ்டைலைக் காண்பித்து விட்டாரே!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/17-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/17-3.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/16-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/16-2.jpg.html)

சிம்பிளாக பெல்ட் இல்லாமல் inn செய்யப்பட்ட இந்த ஆடை கூட தலைவருக்கு எவ்வளவு 'ஜம்'மென்று இருக்கிறது!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/15-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/15-3.jpg.html)

அரசியல்வாதியின் உடையில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/14-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/14-4.jpg.html)

அருமையான கைவைத்த கோடுகளிட்ட நெக் பனியன். inn செய்துள்ளது எவ்வளவு பெர்பெக்ட்டாக இருக்கிறது!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/13-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/13-4.jpg.html)

கழுத்து வரை மூடியிருக்கும் புல் கோட்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/12-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/12-4.jpg.html)

அற்புதமான, மிக மிகப் புதுமையான டிசைன். என்ன ஒரு டேஸ்ட்!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/11-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/11-4.jpg.html)

அருமையான கோட், சூட், டையில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/10-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/10-6.jpg.html)

vasudevan31355
18th June 2013, 12:43 AM
இந்த டிசைனின் புதுமையைப் பாருங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/9-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/9-6.jpg.html)

குளோஸ்-அப்பில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/8-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/8-6.jpg.html)

half coat

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7-11.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/7-11.jpg.html)


கோட்டின் நடுவே கட்டப்பட்ட ஸ்டைலான துணியின் முடிச்சு முன்னால் அழகாகத் தொங்குவதைக் கவனியுங்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-13.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/5-13.jpg.html)

கழுத்தோடு பின்னும் T ஷர்ட் மாடல் மிக அருமையாக இருக்கிறது. இப்போதைய மாடர்ன் trend ஐ எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/28.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/28.jpg.html)

குளோஸ்-அப்பில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-20.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4-20.jpg.html)

இது ஒரு ஸ்டைல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-27.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-27.jpg.html)

ஆஹா! புல் பிளாக் கோட். வாயில் பைப் புகைவதையும், அந்த ஆர்ப்பாட்ட சிரிப்பையும் பாருங்கள். குறுந்தாடி இல்லாத 'பார் மகளே பார்' சிவலிங்கம் கெட்-அப் போல.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-42.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-42.jpg.html)

இந்த ஷர்ட்டின் டிசைன் அமர்க்களம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-42.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-42.jpg.html)

அழகான T ஷர்ட். அம்சமான பூ சிரிப்பு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/30.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/30.jpg.html)

vasudevan31355
18th June 2013, 01:05 AM
ஒரு அன்பு வேண்டுகோள்

மேற்கண்ட ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 4) தொடரை மிகவும் உன்னிப்பாக கவனிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அவசரமாக scroll செய்ய வேண்டாம். ஒவ்வொரு உடையாகக் கூர்ந்து கவனியுங்கள். அவருடைய பின் பக்க கோட் டிசைன்களையும் சேர்த்து. நன்றி!

venkkiram
18th June 2013, 02:17 AM
NT360 Degree/Sowri Sir,

சிவாஜி ஸ்டைல் - புகைப்பிடித்தல் மற்றும் உடைக்கான காணொளி சிறப்பாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. நன்றிகள் பல. என் நன்பர்களுக்கும் தெரியப்படித்தினேன் அதைப் பார்க்குமாறு. தொடரட்டும் உங்களின் ஆராய்ச்சிக் காணொளிகள் தொகுப்பு!

Subramaniam Ramajayam
18th June 2013, 05:45 AM
ஒரு அன்பு வேண்டுகோள்

மேற்கண்ட ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 4) தொடரை மிகவும் உன்னிப்பாக கவனிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அவசரமாக scroll செய்ய வேண்டாம். ஒவ்வொரு உடையாகக் கூர்ந்து கவனியுங்கள். அவருடைய பின் பக்க கோட் டிசைன்களையும் சேர்த்து. நன்றி!

Excellent mr vasudevan very nice treat for eyes. please continue.

RAGHAVENDRA
18th June 2013, 06:16 AM
The father-figures of Indian cinema

article that appeared in The New Indian Express as quoted below:




http://media.newindianexpress.com/article516753.ece/binary/original/logo_500x60.png

The father-figures of Indian cinema
17th June 2013 07:38 AM

http://media.newindianexpress.com/Sivaji-Ganesan--kaml.jpg/2013/06/17/article1634990.ece/alternates/w460/Sivaji-Ganesan-&-kaml.jpg

Tamil films have always captured the different moods and roles of dads in their hues – the dad, who’s the closest to his daughter, the strict authoritarian dad and the dad who is his son’s best friend. Every era of Tamil cinema has seen major actors slip into the roles of doting fathers as visualised by their directors. Back in the 50s and 60s, if Sivaji Ganesan got into the skin of the role with ease in Paar Magale Paar as the status conscious father, S V Ranga Rao, the suave Telugu actor played some memorable roles as the girl’s father in Sabash Meena and Engal Veetu Pillai.

Anbulla Appa, starring Sivaji and Nadiya as father and daughter respectively, could possibly be classified as the movie that characterised the father in all elements. Sivaji as the doting father to a motherless child, the film was a tear-jerker and became a benchmark of sorts for films that explored a similar theme.

Mani Rathnam’s arrival heralded a new type of father – a father with a separate dimension to his character, exuding with warmth and love and an instinctive paternalism even in the face of trouble or danger. Nayagan’s Velu Nayakan was this way – his troubled relationship with his daughter, who resented his nefarious activities, notwithstanding. Raghuvaran’s role, on the other hand, as the father of a mentally-challenged child in Anjali, dwelt upon the father’s bond with his little girl, as he convinced his heart-broken wife (Revathi) to come to terms with reality.

Later on, his Kannathil Muthamittal saw Madhavan play the role of a writer-father who supports his 9-year-old adopted daughter’s quest to find her biological mother.

If Raghuvaran found himself in a new avatar after Anjali, this generation’s favourite villain, Prakash Raj, juggled both with villany and fatherhood with ease in Arindhum Ariyamamalum. As Arya’s foster dad, Raj couldn’t have been more convincing as he realises he has another son, who is his own.

However, it was Abhiyum Naanum that saw the actor in his best as the dad who is too possessive about his daughter (Trisha). His nonchalant portrayal of the helpless dad, grappling with the fear of separation from his daughter, who is about to get married, is one of the best father roles from the recent times.

Suriya’s role in Vaaranam Aayiram, a Gautham Vasudev Menon flick, projected the father as the hero and inspiration for a son. As Menon’s tribute to his own father, the film cut across generations with a whiff of pensiveness, as the son revisits some treasured moments with his father, after his death.

In the same league as Suriya, Vikram had a tryst with paternal emotions on screen in Deiva Thirumagal. Narrating the story of a mentally-challenged father who seeks custody of his daughter, the film had a well-executed emotional connect with a commendable performance by Vikram.

Most importantly, father role portrayals have marked the coming of age of Tamil cinema. What was once seen as character roles that had some fine performances by acting legends like T S Balaiah and M R Radha has gone on to become a challenge to portray for leading actors, who have executed the task with aplomb.



Link for the page quoted above: http://newindianexpress.com/entertainment/tamil/The-father-figures-of-Indian-cinema/2013/06/17/article1635009.ece

iufegolarev
18th June 2013, 08:35 AM
Dear Venkiram
This deep rooted research oriented series on costumes of Nadigar Thilagam in his films, is essayed by Neyveli Vasudevan Sir and not Sowri/NT 360 as referred by you.

Dear Raghavendra Sir,

Going by the reply of Mr.Venkiram, I think Mr.Venkiram was referring to the Videos that I had posted though am not sure too which one he is mentioning too.

Regards

RAGHAVENDRA
18th June 2013, 08:57 AM
dear raghavendra sir,

going by the reply of mr.venkiram, i think mr.venkiram was referring to the videos that i had posted though am not sure too which one he is mentioning too.

Regards

ok souri sir. I deleted my post and find what you point out is correct.

vasudevan31355
18th June 2013, 09:22 AM
டியர் ராகவேந்திரன் சார்,

"ஓ மை டியர் டாக்டர்", "நீ என்ன கண்ணனா", "மௌனம் கலைகிறது", 'நெஞ்சங்க'ளில் இருந்து 'என்னையன்றி உன்னோடு கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை", "அச்சப்படும் அன்புக்கிளி" 'நெஞ்சங்கள்' முழு திரைப்படம் என்று அள்ளி வழங்கி விட்டீர்கள். மிக்க நன்றி!

vasudevan31355
18th June 2013, 09:25 AM
தந்தையர் தினத்துக்கு நல்ல பாடல்களை தொகுத்து வழ்ங்கியிருக்கும் ரசிகப் பெருமக்களே,
தந்தை என்றால் mindless பாசம் மட்டும் தானா? தங்கப்பதக்கத்தில் நம் தங்கத்துக்கு தங்கம் வழங்கபட்டதே
அருமையான "தந்தை"யுமானார் என்பதால் தான். தாயுமாகி, தந்தையுமாகி, நல் ஆசானாக நல்வழிப்படுத்த நினைக்கும் தந்தை. அதை ஏற்கும் பக்குவமற்ற அரைவேக்காடு தனையன்.

பிள்ளையை கடிந்து அறம் வளர்க்கும் தந்தை, சிறுவன் தூங்கிய பின் மெதுவாய் முத்தமிடும் அன்புத் தந்தை.
இப்படிப் பட்ட தந்தைகளில் சேவை அல்லவா நம் நாட்டுக்குத் தேவை.

"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" அவர் பல்கலைக் கழகமாக விளங்கினார். இறுதியில் தேறாத மாணவனை, just pass செய்து அவ்வுலகம் அனுப்பிவிட்டு, மிடுக்குடன் பதக்கம் பெறும் உதாரணத் தந்தை.


வாசுதேவன்31355 ஐயா,
உங்கள் "ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன்" தொடரின் பல ரசிகர்ளில் நான் ஒருவன். உங்களை ஆவலுடன் தொடர்கிறேன்.

மிக்க நன்றி காட்டுப் பூச்சி சார். தந்தையர் தின 'தங்கப் பதக்கம்' தங்களின் வித்தியாசமான நச்சென்ற பதிவு. அருமை!

ScottAlise
18th June 2013, 09:43 AM
சிவந்த மண்
இந்த படத்தை பத்தி ஏற்கனவே பலர் இங்கே அழகாக வெவ்வேறு விதங்களில் அலசி இருக்கிறார்கள் இதை அனைத்தையும் தாண்டி இந்த பதிவை நீங்கள் படிக்கலாம்,ஏனென்றால் இங்கே என்னை விட சிவாஜி சார் யை பற்றி நிறைய எழுதி , அறிந்தவர்கள் இருகிறார்கள் .
நான் இந்த பதிவில் விவரிக்க போவது இந்த படம் வெளி வந்த பொழுது ,என் தந்தை இந்த படத்தை எப்படி பார்த்தார் , அந்த தியேட்டர் atmosphere எப்படி இருந்தது என்றதை பத்தி தான் , இதை போல் என் தந்தை தான் பார்த்த ஏகப்பட்ட சிவாஜி , MGR படங்களை பார்த்ததை என் கிட்ட சொல்லி இருக்கார் ,

என் அப்பா விவரித்ததில் இருந்து என் நினைவில் இருந்து ஒரு பதிவு :

இந்த படம் ரிலீஸ் சமயத்தில் ஏக பட்ட எதிர்பார்ப்பு என் என்றால் 1969 ல் ஏக பட்ட படங்கள் நம்மவருக்கு , அதுவும் இந்த படம் வருவதுக்கு முன்பு வரிசையாக 100 நாட்கள் படங்கள் , 1969 ல் ஏக பட்ட variety படங்கள் வேற , திருடன் , தெய்வமகன் etc
அதனால் ஏக பட்ட எதிர்பார்ப்பு , நம்ம திரி நண்பர்கள் upload செய்த பேப்பர் scans யை பார்த்து வேற இவர் ஏக பட்ட குஷியில் மிதந்து கொண்டு இருந்தார்

எங்க அப்பா படம் பார்க்க செல்வதே ஒரு தனி கதை , அதை அவர் விவரிக்கும் பொழுதே என்னக்கு ஒரு அலாதி குஷி

இந்த படம் வந்தது ஒரு தீபாவளி அன்று .

எங்க அப்பா முதல் நாள் மாலையில் அந்த தியேட்டர்க்கு சென்று அங்கே செய்ய பட்ட அலங்காரங்களை பார்த்து இன்னும் excitement அடைந்தார் .
புரண்டால் தூக்கம் வர வில்லை அன்று இரவு , எங்க அப்பா படித்து , சென்னையில் chrompet ல் . அவர் சொன்ன தியேட்டர் பல்லாவரம் ஜனதா இல்லை தம்பரம் நேஷனல் இரண்டில் எதோ ஒன்று
எங்க தாத்தா வீட்டில் 5 தென்னைமரம் இருக்கும் , ஒவ்வொரு பையனும் ஒரு மரம் வளர்க வேண்டும் , எங்க அப்பா தனுடைய மரத்தில் கொஞ்சம் பணம் ஒளித்து வைத்து இருப்பார் ,
காலையில் குளித்து விட்டு , புது உடை அணிந்து கொண்டு நேராக சிவந்த மண் ஓடும் அரங்குக்கு விரைந்தார்
அந்த தியேட்டர் யை அடையும் பொது பாடல் ஒளித்து கொண்டு இருக்கும் , இதுக்கு பொருள் படம் இன்னும் ஆரம்பிக்க வில்லை , தியேட்டர் முகப்பு முழுவதும் பிரமாண்டம் , ரசிகர்கள் தூள் படுத்தி இருந்தார்கள் ,

படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்கள் முன்பு மங்கள இசை ஒலிக்கும்
மங்கள இசை ஒலிக்க ஆரம்பித்து , என் அப்பவோ வெளியில் , மன்ற தோழர்கள் அனைவரும் டிக்கெட் முழுவதும் தீருந்து போய் உள்ளே சென்று விட்டார்கள் , எப்படியோ என் அப்பாவும் ஒரு டிக்கெட் யை வாங்கி உள்ளே சென்று விட்டார்

உள்ளே செல்ல முடியாத அளவுக்கு ஒரே குட்டம் , புது சட்டை, pant அனைத்தும் வியர்வைகளில் குளித்து இருந்தது, உள்ளே தரை டிக்கெட்
மணலை குமித்து செட்டில் ஆனார் ,
டைட்டில் போடும் போதே ஒரே கிளாப்ஸ், மற்றும் whistle . அந்த தீபாவளி முதலே திரையை சுற்றி கலர் விளக்கு மின்னும் பழக்கம் வந்தது என்று தெரிந்து கொண்டேன் (அனந்த விகடன் தீபாவளி மலர்)
நம்ம நடிகர் திலகம் அறிமுகம் ஆகும் காட்சியில் , சிவாஜி முகமே தெரிய வில்லை , ஏனென்றால் அப்படி ஒரு ஆர்பாட்டம் , அற்பரிப்பு , கரகோஷம் கூடவே , கலர் lights வேற உற்சாகத்துக்கு கேக்க வேணுமா
இதே உற்சாகம் zurich காட்சிகள் முழுவதும் இருந்ததாம் அதுவும் அந்த ராஜா ராணி யிடம் பாடல் முழுவதும் கலர் பல்பு களின் கண்காட்சி வேறு

ஊர் திரும்பும் காட்சி யும் அதான் ப்ளேன் சண்டை காட்சி கூட நன்றாக recieve செய்யப்பட்டது , முதல் பாதியில் icing in the cake போலே ஆங்கில படங்களுக்கு இணையான காட்சியில் திரையை மக்கள் முற்றிக்கை இட்டார்கள் என்று சொல்வதே சரி ஆகும்.

இண்டர்வல் சமயத்தில் இந்த படத்தை பற்றி நல்ல கருத்து வர தொடங்கியதால் ரசிகர் மனதில் ஒரே மகிழ்ச்சி அதை தொடர்ந்து
இரண்டாவது பாதியில் காப்பலை தகர்க்கும் காட்சி , அதுக்கும் மேலே பெரிய பாடல் (2 ரெகார்ட் )பட்டது ராணி பாடல் ஆரம்பித்தது தான் ,
தியேட்டர் இரண்டாக கிழிந்தது , ரசிகர்களின் உற்சாகத்தில் ,தொண்டர்ந்து வந்த ballon சண்டையும் ரசிகர்களை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு சேர்த்தது ,
படம் முடிந்து வெளிய வந்த உடன் கொஞ்ச நேரம் அடுத்த காட்சி தொடங்கியதும் அதே உற்சாகம், இதை அனைத்தையும் கண்டு களித்து வீர நடை போட்டு சென்றார் என் தந்தை

ScottAlise
18th June 2013, 09:43 AM
Dear NT Sixty Degree,

Thank you for giving me a great morning with NT's dasavatharam

P_R
18th June 2013, 11:12 AM
Tons of pages unread in the last several weeks, including Gopal's series.
I should try and catch up sometime. But one thing I quickly wanted to share (sorry if this was already discussed a few pages back and I missed it).

A few weeks back in Ananda Vikadan, Adoor Gopalakrishnan mentioned about two Sivaji films he liked in his college days (Dindikkal Gandhigram univ. apparently!)

Parasakthi - he mentioned being enamoured by the performance and the lines - and a complete 'breakaway from the mould' that the film was. He said he had many lines 'committed to memory'.

And another performance he singled out was VeerapANdiya Kattabomman.

I have not seen many of his interviews and only some of his films. And for that reason these comments from him came as a bit of a pleasant surprise.

As you may now, his films/sensibilities tend towards a highly understated, subtle pace of progression, performances and near-complete absence of dramatics of any sort. They mood and rhythm envelop you. For this reason he is - even unfairly - ridiculed as being inaccessible and artsy.

To some extent it can also be said that he is quite fastidious about how his films are meant to be and has some - dare I say rigid- view on mainstream aesthetics (folks like equanimus/kid_glove, who are more familiar with his works and interviews may correct me if my view is wrong).

Even in that interview he talks about not using stars as it undermines what he wants to be the 'feel of his films'.

One digression:Naseeruddin Shah, in another recent interview, actually faults these 'parallel cinema' folks for not being collaborative enough regarding actors - i.e. not giving the actors the space to create but being very rigid. It is an interesting point as these filmmakers are often intent on killing any traces of performance at all - thus making it that much difficult for many of us, who are used a degree of pronounced and observable theatricality - to appreciate the acting. But it is indeed a viewpoint to acknowledge - even if not agree - that when one 'observes' a performance to some extent it is a deviation from taking a scene/movie in as a whole and relegating actors to 'mere' people who populate the celluloid. Great filmmakers like Robert Bresson take the extreme route of never using professional actors, and removing any trace of expression/reaction at all - it can be a very odd experience to see and develop a taste for his films, given how we have experienced films/storytelling. But one has to experience how he makes us (the audience) internalize the tension, reactions, empathy even as the actors show no expression!

While Adoor is not quite Bresson, it is clear from his films where his partiality lies.

So, for such a filmmaker to appreciate Sivaji's performances, was actually quite delightfully interesting.
It shows the ability to appreciate an artist in the aesthetic context in which the performance is ensconced, even if that itself is very very different from the aesthetic that Adoor himself subscribes to.

yoyisohuni
18th June 2013, 12:44 PM
ஆடைகள் தொடர், கண்ணுக்கு விருந்து...ஆகா...ஆகா..ஆகா...பெஸ்ட் டேஸ்ட் சார். எனக்கு அவருடைய இரவு உடையின் அழகு மிகவும் கவர்ந்து. 'பார் மகளே பார்' திரைப்படத்தில் வரும் பாடல்காட்சிகளிலும் இரவு உடையில் கச்சிதமாக பொருந்தியிருப்பார். சூப்பரோ சூப்பர்.

KCSHEKAR
18th June 2013, 12:44 PM
அசல் திரைப்படத்தில் " சிங்கம் என்றால் எந்தந்தைதான்" என்ற அதி அற்புதமான வைரமுத்து எழுதிய பாடல்.

எப்படி இருக்கிறது? ரசிக்கும்படி இருக்கிறதா ? என்று திரி நண்பர்கள் கூறவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் !



Very Very Nice - Thanks

mr_karthik
18th June 2013, 12:45 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

தங்களின் ஆடைக்குப்பின்னே ஆணழகன் தொடர் மிக அருமையாக, அட்டகாசமாக செல்கிறது. சமீபத்தில் பதித்த 'திரும்பிபார்' படத்தின் ஆடை அணிவகுப்பு அற்புதமோ அற்புதம். நானும் திரும்பிப்பார் படம் பார்த்திருக்கிறேன். ஆனால் தலைவர் இத்தனை அட்டகாசமான உடையலங்காரத்துடன் உலா வருவதை நீங்கள் தனிப்பட்ட ஸ்டில்களாக பதித்த பின்புதான் உணர முடிகிறது. 1954 - லேயே தலைவர் என்னவெல்லாம் ஸ்டைல் காட்டியுள்ளார் என்பதை உணர வேண்டியவர்கள் உணரட்டும்.

திரும்பிப்பார் உடையலங்காரத்தை திரும்பிப் பார்க்கவைக்க நீங்கள் ஐந்து மணிநேரம் தியாகம் செய்திருப்பது மலைக்க வைக்கிறது. திரும்பிப்பார் படத்தின் ஸ்டைலை அன்பர்கள் திருப்தியாக பார்த்து முடிக்கும் வரை ஓய்வெடுத்து, பின் அடுத்த படத்தைத் துவங்குங்கள்.

தங்கள் அயராத உழைப்புக்கு அளவில்லா பாராட்டுக்கள். ..

KCSHEKAR
18th June 2013, 12:56 PM
ஒரு அன்பு வேண்டுகோள்
மேற்கண்ட ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 4) தொடரை மிகவும் உன்னிப்பாக கவனிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அவசரமாக scroll செய்ய வேண்டாம். ஒவ்வொரு உடையாகக் கூர்ந்து கவனியுங்கள். அவருடைய பின் பக்க கோட் டிசைன்களையும் சேர்த்து. நன்றி!

Dear Vasudevan Sir,

Your analysis are excellent. Thanks

goldstar
18th June 2013, 06:41 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_Kamaraj_zps4dd1510d.png

goldstar
18th June 2013, 06:42 PM
இப்போதைய தமிழ் சினிமாவைக் கவனிக்கிறீர்களா... பிடித்திருக்கிறதா?''

''திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நான் அதிகம் பார்த்தது தமிழ் சினிமாக்களைத்தான். அப்போது எல்லாம் மிக நீளமாகவும், புராணமயமாகவும் இருக்கும். அந்தச் சமயத் தில்தான் கருணாநிதியின் கதை வசனத்தில் 'பராசக்தி’ படம் வெளியானது. சிவாஜி வெகு சிறப்பாக நடித்திருப்பார். அதுவரை வெளியான இந்தியத் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம், பராசக்தி. பல முறை ரசித்துப் பார்த்து 'பராசக்தி’ வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்துவைத்திருந் தேன். 'வீரபாண்டியக் கட்ட பொம்மன்’ படமும் அவ்வளவு பிடித்தது.

J.Radhakrishnan
18th June 2013, 08:26 PM
ஒரு அன்பு வேண்டுகோள்

மேற்கண்ட ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 4) தொடரை மிகவும் உன்னிப்பாக கவனிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அவசரமாக scroll செய்ய வேண்டாம். ஒவ்வொரு உடையாகக் கூர்ந்து கவனியுங்கள். அவருடைய பின் பக்க கோட் டிசைன்களையும் சேர்த்து. நன்றி!


டியர் வாசு சார்,

தலைவரின் ஆடை அலங்கார தொடரை படித்து வருகிறேன், மிக நன்று. திரு கார்த்திக் அவர்கள் குறிப்பிட்டதை போல் "திரும்பிப்பார்" படத்தை எத்தனையோ முறை பார்த்த போதும் தங்களின் "ஸ்டில்" களின் அணிவகுப்பை கண்டவுடன் தான் இப்போதைய டிரண்டையெல்லாம் அவர் அப்போதே புகுத்தியுள்ளது வியப்பை அளிக்கிறது.

Gopal.s
19th June 2013, 07:02 AM
வாசு,
ரொம்பவே உழைக்கிறாய். எல்லோராலும் கவனிக்க பட்டிருக்க முடியாத திரும்பி பார் பட உடை அணிவகுப்பு உன்னுடைய பதிவுகளில் மகுடம். Round Neck Tuck -in Striped டி ஷர்ட் ,கட்டமிட்ட safari model ,trendy Goggles என்று அமர்கள படுத்தியிருக்கிறார்.

Gopal.s
19th June 2013, 07:22 AM
Tons of pages unread in the last several weeks, including Gopal's series.
I should try and catch up sometime. But one thing I quickly wanted to share (sorry if this was already discussed a few pages back and I missed it).

A few weeks back in Ananda Vikadan, Adoor Gopalakrishnan mentioned about two Sivaji films he liked in his college days (Dindikkal Gandhigram univ. apparently!)

Parasakthi - he mentioned being enamoured by the performance and the lines - and a complete 'breakaway from the mould' that the film was. He said he had many lines 'committed to memory'.

And another performance he singled out was VeerapANdiya Kattabomman.

I have not seen many of his interviews and only some of his films. And for that reason these comments from him came as a bit of a pleasant surprise.

As you may now, his films/sensibilities tend towards a highly understated, subtle pace of progression, performances and near-complete absence of dramatics of any sort. They mood and rhythm envelop you. For this reason he is - even unfairly - ridiculed as being inaccessible and artsy.

To some extent it can also be said that he is quite fastidious about how his films are meant to be and has some - dare I say rigid- view on mainstream aesthetics (folks like equanimus/kid_glove, who are more familiar with his works and interviews may correct me if my view is wrong).

Even in that interview he talks about not using stars as it undermines what he wants to be the 'feel of his films'.

One digression:Naseeruddin Shah, in another recent interview, actually faults these 'parallel cinema' folks for not being collaborative enough regarding actors - i.e. not giving the actors the space to create but being very rigid. It is an interesting point as these filmmakers are often intent on killing any traces of performance at all - thus making it that much difficult for many of us, who are used a degree of pronounced and observable theatricality - to appreciate the acting. But it is indeed a viewpoint to acknowledge - even if not agree - that when one 'observes' a performance to some extent it is a deviation from taking a scene/movie in as a whole and relegating actors to 'mere' people who populate the celluloid. Great filmmakers like Robert Bresson take the extreme route of never using professional actors, and removing any trace of expression/reaction at all - it can be a very odd experience to see and develop a taste for his films, given how we have experienced films/storytelling. But one has to experience how he makes us (the audience) internalize the tension, reactions, empathy even as the actors show no expression!

While Adoor is not quite Bresson, it is clear from his films where his partiality lies.

So, for such a filmmaker to appreciate Sivaji's performances, was actually quite delightfully interesting.
It shows the ability to appreciate an artist in the aesthetic context in which the performance is ensconced, even if that itself is very very different from the aesthetic that Adoor himself subscribes to.
P _ R ,

சத்யஜித் ரே சிவாஜியை இந்தியாவின் மிக சிறந்த நடிகர் என்று பாராட்டியுள்ளதோடு ,செவாலியே பட்டம் தொடர்பாக முந்திய recipient என்ற முறையில் reference ற்கு வந்த போது ,most deserving என்று comment செய்திருந்தார். (புதுவை அரசாங்கம் நாலு வருடம் அதை தாமதிக்க வைத்த கதை வேறு), பாலு மகேந்திரா ,கோபி(சிதம்பரம்),Nana Patekar போன்றோர் நம் ரசிகர்களே.

அப்போது இருந்த தவறான புரிதல் காரணமாக ,சாமி வரும் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது என்பது போல,அரைகுறை விமர்சகர்கள் ஆன வெங்கட் சாமிநாதன், theoder பாஸ்கரன், விட்டல் ராவ் போன்றேரே main stream சினிமா மற்றும் அது சம்பத்த பட்ட நடிப்பை விமர்சித்துள்ளனர் .ஒரு முறை மாலன் அதிகப்ரசங்கி தனமாக எதோ பேச கோபமடைந்த கமல் சத்யஜித் ரே ஒன்றிரண்டு உருப்படியான படங்களையே கொடுத்துள்ளார். ஆனால் சிவாஜியோ பல பிரமாதமான படங்களை,தனது நடிப்பால் சிறப்பித்துள்ளார். ஆகையால் சிவாஜிதான் மேதை என்று சீறிய ஞாபகம்.

P _ R -இப்போது தனி திரியில் அந்த தொடர் தொடருகிறது முன் பகுதிகள் தொகுக்க பட்டு.Sivaji Ganesan School of Acting
http://www.mayyam.com/talk/showthread.php?10377-Sivaji-Ganesan-School-of-Acting

Gopal.s
19th June 2013, 07:47 AM
அடூர் கோபாலகிருஷ்ணன் ,நம் திரி நண்பர்களுக்கு அறிமுகமாகி விட்ட படியால், அவரின் மிக பெரிய ரசிகனாகிய இந்த கோபால்,s என்கிற கோபாலகிருஷ்ணன் கீழ்கண்ட படங்களை பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன்.

கொடியேட்டம் ,எலிபத்தாயம்,முகாமுகம்,அனந்தரம் .

RAGHAVENDRA
19th June 2013, 08:15 AM
அடூர் கோபால கிருஷ்ணன் .. இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர். ஒரு முறை அவருடைய திரைப்படங்களின் தனித் திரையிடலை கமல் ஏற்பாடு செய்தார். இதே ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில் தான். பல ஆண்டுகளுக்கு முன்னர். படம் முடிந்த பின்னர் அவருடன் கலந்துரையாடல். படம் பார்க்க வந்திருந்தவர் கிட்டத்தட்ட அரங்கு நிறைந்த அளவிற்கு இருந்தாலும் கலந்துரையாடலில் பங்கு பெற்றோர் மொத்தம் 10 பேர் கூட இல்லை. அந்த 10ல் அடியேன் ஒருவன். கேள்விகளுக்கு அடூர் சார் மிகவும் பொறுமையாக விளக்கமளித்தார். படத்தைப் பற்றிய கேள்விகள் மட்டுமின்றி பொதுவாக இந்திய உலக சினிமா வைப் பற்றியும் பேச்சு வந்தது. ஓரிரு அதிகப் பிரசங்கிகள் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டுவது போல இந்திய சினிமாவை கேவலமாக விமர்சித்தனர். அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததோடு நம் கலையை நாமே தூற்றக் கூடாது என்று கூறினேன். நடிகர் திலகத்தைப் பற்றியும் பேச்சு வந்தது. அப்போதும் இதே மிகை நடிப்பைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டார். அதற்கு நான் பதில் சொல்ல எத்தனிக்கும் முன் அடூராரே கூறி விட்டார். நாம் கேட்கும் அதே கேள்வியை அவரே கேட்டார். நடிப்பு என்றால் என்ன, என்று கூறி விட்டு இதில் எந்த வித அளவுகோலும் இல்லை என்றார். தன்னுடைய படங்களைப் பொறுத்த வரையில் நடிகர்களை முன்னிறுத்துவதில்லை என்பது கொள்கை என்ற போதிலும் நடிகர் திலகம் விதி விலக்கு, அவரை வைத்து வாழ்நாளில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் என்னிடம் கூறினார்.

மறக்க முடியாத நாட்கள் அவை.

கமல் அவர்கள் நடிகர் திலகத்தின் மேலும் தமிழ் சினிமாவை உயர்த்துவதன் நோக்கத்தின் மேலும் எந்த அளவிற்கு ஈடுபாடு கொண்டிருந்தவர் என்பதை நேரிலேயே நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் கமலைப் பற்றி நான் விரிவாக எழுத வேண்டும். எழுதுகிறேன்.

அதே போல் கோபி அவர்களும் நடிகர் திலகத்தின் மேல் மிகுந்த ஈடுபாடு உடையவர். கொடியேட்டம் திரைப்படம் மார்க்ஸிஸ்ட் தத்துவங்களைப் பற்றிய படம் என்றால் எலிப்பதாயம் ஒரு காவியம். இன்றளவில் இந்தப் படத்தை மிஞ்சி இன்னொருவர் எடுகக்கும் வாய்ப்பு இல்லை. குறைந்தது 4 முறை நான் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன்.

RAGHAVENDRA
19th June 2013, 08:20 AM
http://youtu.be/Ex1Fzuy_-kk

நடிகர் திலகத்தின் பால் அன்பு கொண்ட கோபி அவர்கள் நடித்த எலிப் பத்தாயம் திரைப்படத்திலிருந்து ஒரு சின்ன காட்சி. ஒரு மேற்கோளுக்காகத் தான் இங்கே தரப்படுகிறது. அனந்தரம், மதிலுகள் என அவருடைய சிறந்த திரைப்படங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவை.

RAGHAVENDRA
19th June 2013, 08:24 AM
இதே கால கட்டத்தில் மிளிர்ந்த இன்னொரு மலையாள இயக்குநர் ஜி. அரவிந்தன். இவருடைய படங்களும் தனித்துவம் மிக்கவை. தமிழ் குடும்பத்தை அடிப்படையாக வைத்து இவர் எடுத்த சிதம்பரம் திரைப்படம் உலக அளவில் பேசப் பட்டது.

இது போன்ற இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற சிறந்த மேதைகளை நாம் நம்முடைய சிவாஜி கணேசன் நடிப்புப் பள்ளி திரியில் வாய்ப்பு அமையும் போது அறிந்து கொள்வோம்.

Gopal.s
19th June 2013, 08:55 AM
சிதம்பரம் "கோபி " தனது ஹிந்து பேட்டியில் தனக்கு பிடித்த நடிகராய் சிவாஜியை குறிப்பிட்டு ,அவரை போல variety தந்தவர் யாருமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சிதம்பரம் பட அரவிந்தன் ஒரு குறிப்பிட பட வேண்டிய இயக்குனர். இவருடைய இயக்கத்தில் என்னை கவர்ந்தவை - போக்கு வெயில்,கும்மாட்டி,எஸ்தப்பன் .

mr_karthik
19th June 2013, 11:01 AM
நடிகர்திலகத்தை அரைவேக்காட்டுத் தனமாக விமர்சிப்பவர்கள் பட்டியலில் வெங்கட சாமிநாதன், தியோடர் பாஸ்கரன், விட்டல் ராவ் இவர்களோடு "ராண்டார் கய்" என்பவரையும் சேருங்கள். இந்த ஆளும் சமயம் வாய்க்கும்போதெல்லாம் நடிகர்த்திலகத்தைக் குறை சொல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்...

Peterubb
19th June 2013, 11:18 AM
Hello to everybody,

I have been reading this thread and quite enjoying it. I have been one of many a crore fans of Mr.Sivaji Ganesan. Personally, I feel there is no one that could equal him in any department. when i say this, I mean, any actor of the past, present and also future to come.

I have always felt that even Mr.Kamalahassan choose the path of Mr.Sivaji and only then the recognition for him to this large extent has come. had he been doing masala films just like the ones before apoorva sahodarargal, am not sure, he would have been recognized at a larger scale by the media. This is my opinion.

Be it Dilipkumar (or) Rajkumar (or) Rajkapoor (or) Prithvirajkapoor (or) be it is ANR, NTR, or Jaggiah (or) be it is Rajkumar (or) Ambrish (or) Anant/Sankar Nag (or) Late.Vishnuvardhan (or) be it is Mr.Sathyan (or) Madhu (or) Mohanlal (or) Mammooty (or) Late Sri.Thilakan...(or) Mr.S.V.Rangarao (or) S.V.Subbiah (or) M.R.Radha (or) Mr.Nagiah (or) Mr.MGR (or) Mr.Kamalahassan (or) even that if it is Mr.Marlon Brando (or) Duston Houghman (or) Omar Sheriff (or) Gregory Peck at the International Level....If we compare, each of them have one specific strong point. Whereas it is ONLY Mr.Sivaji Ganesan, who has the capability to shoulder any type of role, be it is hero, villain, comedian, character, Negative shade etc., and excel in all the roles.

It is so unfortunate that the so called and claimed as writers / critics like Randor Guy/ Theodre Baskaran who does n't have any standard and are always biased (biased to the extent of calling the substandard actors as excellent for their performance) Tamilnadu will never prosper as it is surrounded by only biased guys in political and cine arena who does not recognize talented personalities.

Indian Government does not have any capacity (or) capability to judge the performance of Sivaji ganesan. Let them give National Award to any chotta motta guys as they have been doing it from the 50s. absolutely no issues. Mr.Sivaji Ganesan has seen International Awards at his very young age and that too in just 7 years of his coming to cine field which no other Indian Actor has achieved (or) can dream to achieve.

Gopal.s
19th June 2013, 11:26 AM
Hello to everybody,

I have been reading this thread and quite enjoying it. I have been one of many a crore fans of Mr.Sivaji Ganesan. Personally, I feel there is no one that could equal him in any department. when i say this, I mean, any actor of the past, present and also future to come.

Indian Government does not have any capacity (or) capability to judge the performance of Sivaji ganesan. Let them give National Award to any chotta motta guys as they have been doing it from the 50s. absolutely no issues. Mr.Sivaji Ganesan has seen International Awards at his very young age and that too in just 7 years of his coming to cine field which no other Indian Actor has achieved.
Welcome Mr.Gani. I am in agreement with you on point to point. Pl.keep your valuable contribution going.

mr_karthik
19th June 2013, 11:27 AM
அன்புள்ள சௌரி அவர்களுக்கு,

தற்போது நடிகர்திலகம் திரியில் பல்வேறு அருமையான விடியோ பதிவுகளை அளித்து வருகிறீர்கள். அவை எந்த அளவுக்கு சிறப்பானவைகளாக இருக்கக்கூடும் என்பது, அவற்றுக்கு நீங்கள் தரும் விளக்கங்கள் வாயிலாகவும், அவற்றுக்கு மற்றவர்கள் அளிக்கும் பின்னுட்டங்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.

ஆனால் வீடியோ பதிவுகளைக் கண்டுகளிக்கும் வசதி என்னுடைய கணினியில் இல்லையாதலால், உங்களுடையது என்றில்லை, எந்த வீடியோ பதிவையும் பார்க்கமுடிவதில்லை. (நண்பர்கள் அளிக்கும் பாடல் காட்சிகள் உள்பட).

'என்னடா, எல்லோரும் நம் பதிவைப் பார்த்து பாராட்டும்போது இவன் மட்டும் கல்லுளி மங்கன் போல இருக்கிறானே' என்ற எண்ணம் தங்கள் மனதில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இப்பதிவு. தங்களுடைய பல அரிய முயற்சிகளைக் கண்ணுறும் பாக்கியம் இல்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய உண்டு.

சில திரைப்படங்களில் காது கேளாதவர் முன்னிலையில் ஒருவர் சில செய்திகளைச்சொள்ள, அவர் வாயசைப்பைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நபர் இறுதியில், "நீங்க ஏதோ சொல்றீங்கன்னு தெரியுது. ஆனால் என்ன சொல்றீங்கன்னுதான் புரியலை" என்று சொல்வரே அந்த பரிதாப நிலைதான் தற்போது எனக்கும்..

mr_karthik
19th June 2013, 11:47 AM
வருக திரு கனி பாண்டியன் அவர்களே,

தங்கள் முதல் பதிவே முத்தான பதிவாக அதுவும் நடிகர்திலகத்தின் திரியில் பதித்ததன் மூலம் "நல்ல இடம் நீங்கள் வந்த இடம்" என்று பாடத்தோன்றுகிறது. தொடர்ந்து தங்கள் சீரிய பங்களிப்புகளை அள்ளி வழங்குங்கள்.

வாழ்த்துக்கள்...

KCSHEKAR
19th June 2013, 12:20 PM
Welcome Mr.Gani Pandian,

RAGHAVENDRA
19th June 2013, 12:27 PM
First impression is the Best impression ... saying goes like this and always it is proved right. Example Mr. Gani Pandian's debut here.

Welcome Mr Gani. Your words on NT makes us all happy and emotive and reflective of our sentiments.

Eager to read more from you.

RAGHAVENDRA
19th June 2013, 10:54 PM
மிக மிக அபூர்வமான நிழற்படம்.

சென்னை தேவி வளாகத்தில் தேவி பேரடைஸ் திரையரங்கில் நடிகர் திலகத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் ராஜா ஓடிக் கொண்டிருந்த போது திரையரங்கில் அதன் பெயர்ப்பலகையின் தோற்றம்

http://epaper.timesofindia.com/Repository/getimage.dll?path=TOICH/2011/08/20/58/Img/Pc0580300.jpg

இதே சமயத்தில் தேவி திரையரங்கில் கன்ஸ் ஆப் நவரோன் திரைப்படம், தேவி பேரடைஸில் வெளியாகி ராஜாவுக்காக வழிவிட்டு தேவி பாலாவில் ஷிப்ட் செய்யப் பட்ட ஷர்மிலி, திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்ததையும் தெரிவிக்கும் நிழற்படம்.

நன்றி - http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JQ0gvMjAxMS8wOC8yMCNBcjA1ODAw

RAGHAVENDRA
19th June 2013, 11:00 PM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Ramkumar1.jpg

Dear friends,
I am happy to share with you all, the appreciation by our beloved brother Shri Ramkumar Ganesan, who is a visitor of our hub. I brought to his information our new thread Sivaji Ganesan School of Acting and he has expressed his happiness of the same. I am giving below the text of his message to me:



I am very happy and proud about what you'll are doing.
Prof.Narayanaswamy and Ka.Bharat can be included/interviewed.
They remember many scenes.Also Mr.Nandakumar.{NTFan and TV actor}
Mr.Marudhumohan is doing a thesis on Shri.Sivaji at the Madras University.
Regards and Best of luck,
ramkumar


Thank you Sir, your words of appreciation will be a boost to us and I am happy the hard work of Gopal has reached the Annai Illam, the divine and sacred place for us.

RAGHAVENDRA
20th June 2013, 07:49 AM
திரைப்படப் பட்டியலில் அடுத்து இடம் பெறப் போகும் திரைப்படம்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/df/Veerapandiya_Kattabomman_Poster.jpg/220px-Veerapandiya_Kattabomman_Poster.jpg

yoyisohuni
20th June 2013, 10:19 AM
ஆகா சூப்பர். அருமையாக காலை பொழுது துவங்கிருச்சு. நன்றி.

iufegolarev
20th June 2013, 10:19 AM
Hello to everybody,

I have been reading this thread and quite enjoying it. I have been one of many a crore fans of Mr.Sivaji Ganesan. Personally, I feel there is no one that could equal him in any department. when i say this, I mean, any actor of the past, present and also future to come.

I have always felt that even Mr.Kamalahassan choose the path of Mr.Sivaji and only then the recognition for him to this large extent has come. had he been doing masala films just like the ones before apoorva sahodarargal, am not sure, he would have been recognized at a larger scale by the media. This is my opinion.

Be it Dilipkumar (or) Rajkumar (or) Rajkapoor (or) Prithvirajkapoor (or) be it is ANR, NTR, or Jaggiah (or) be it is Rajkumar (or) Ambrish (or) Anant/Sankar Nag (or) Late.Vishnuvardhan (or) be it is Mr.Sathyan (or) Madhu (or) Mohanlal (or) Mammooty (or) Late Sri.Thilakan...(or) Mr.S.V.Rangarao (or) S.V.Subbiah (or) M.R.Radha (or) Mr.Nagiah (or) Mr.MGR (or) Mr.Kamalahassan (or) even that if it is Mr.Marlon Brando (or) Duston Houghman (or) Omar Sheriff (or) Gregory Peck at the International Level....If we compare, each of them have one specific strong point. Whereas it is ONLY Mr.Sivaji Ganesan, who has the capability to shoulder any type of role, be it is hero, villain, comedian, character, Negative shade etc., and excel in all the roles.

It is so unfortunate that the so called and claimed as writers / critics like Randor Guy/ Theodre Baskaran who does n't have any standard and are always biased (biased to the extent of calling the substandard actors as excellent for their performance) Tamilnadu will never prosper as it is surrounded by only biased guys in political and cine arena who does not recognize talented personalities.

Indian Government does not have any capacity (or) capability to judge the performance of Sivaji ganesan. Let them give National Award to any chotta motta guys as they have been doing it from the 50s. absolutely no issues. Mr.Sivaji Ganesan has seen International Awards at his very young age and that too in just 7 years of his coming to cine field which no other Indian Actor has achieved (or) can dream to achieve.

Dear Kani,

Kudos to your debut writeup.

I second what you had mentioned. There is none across the globe who could be compared to Nadigar Thilagam when it comes to level playing field. The point that you had mentioned about Mr.Kamalahassan is quite true too. As a matter of fact, I had mentioned the same when i was writing in the name of Barrister Rajinikanth(The id was banned though, not due to this reason) Even, now, I have had healthy debate of the evolution of Kamal is only from the past 20 years and not before that. That's a very valid and true statement though some may find it hard to digest,yet truth is always truth.

With reference to National Award - Many may boast of getting that and many would desire to get that. But, the 5 or 6 member or even 10 member team do not have the capacity to understand the nuances of Nadigar Thilagam right from day one. They are fit to give awards to substandard actors for any favour. Since hay days National Awards were available for political favours and now both for purchase and political favour ( to please internal politics mostly) absolutely, we have seen the trend since 50's.

Nadigar Thilagam was recognized by the US, Europe which forms 2/3rd of the Globe. Asia - forget it, we all know Asian countries are the most corrupted in nature. So, no value for talented.

Great Start ! More should follow !

vasudevan31355
20th June 2013, 10:47 AM
நிஜ வேட்டைக்கார் நடிகர் திலகம்.

''வேங்கையின் மைந்தன்' நிஜ வேட்டைக்காரரான உண்மை சம்பவம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/NavaratriTamilMovieWatchOnlineDVD-Part3-TamilMovieWaves_2vob_000998997.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/NavaratriTamilMovieWatchOnlineDVD-Part3-TamilMovieWaves_2vob_000998997.jpg.html)

சென்னை போக் ரோடிலுள்ள உள்ள நடிகர் திலகம் சிவாஜியின் 'அன்னை இல்ல'த்திற்குள் நுழைந்தால் போர்டிகோவைத் தாண்டியதும் வரவேற்பறை இருக்கும்.

அதன் நடுநாயகமாக நின்று நம்மை வரவேற்பது அல்லது பயமுறுத்துவது 'பாடம்'செய்யப்பட்டு உயிர்க் களை ததும்ப நிறுத்தப்பட்டுள்ள ஒரு பதினாறு அடி வேங்கைப்புலி ஆகும். அது நடிகர் திலகமே சுட்டு வீழ்த்தியது என்பதுதான் சிறப்பம்சம். இதுதவிர காட்டெருமைத் தலை, மான் தலை, யானைக் கொம்பு, யானைத் தந்தங்கள் என்று வகைவகையான மிருகங்களின் தலைகள் மற்றும் உடல் பகுதிகள் சுவரில் தொங்கும்.

நடிகர் திலகம் மிகச் சிறந்த வேட்டைக்காரர் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு அந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது, அவர் வேட்டையாட மூலகாரணமாய் அமைந்த நிகழ்ச்சி என்ன என்பது பலருக்குத் தெரியாது. அது ஒரு துயரமான சம்பவத்தின் தொடர் நிகழ்ச்சி ஆகும்.

நடிகர் திலகத்திற்கு தன் தங்கை பத்மாவதி மீது கொள்ளைப் பிரியமும், பாசமும் உண்டு. குடும்பம் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இருந்த போது தங்கை பத்மாவதிக்கு திடீரென்று கக்குவான் இருமல் வியாதி ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டார். எத்தனையோ வகையான வைத்தியம் பார்த்தும் பலனில்லை.அப்போது நடிகர் திலகம் பாய்ஸ் கம்பெனியில் நடிகராக இருந்தார். விடுமுறையில் திருச்சிக்கு வந்த நடிகர் திலகம் தங்கையின் நிலைமையைக் கண்டு கவலையடைந்தார்.

யார் யாரிடமோ தங்கையைக் குணப்படுத்த என்ன வழி என்று விசாரித்தார். ஒரு முதியவர் மட்டும் வழி சொன்னார். கக்குவான் இருமலைக் குணப்படுத்த கருங்குரங்கைச் சுட்டு பஸ்பம் செய்து கொடுத்தால் நோய் குணமாகி விடும் என்பதுதான் அந்த வழி.

உடனே நடிகர் திலகம் கருங்குரங்கு எங்கே இருக்கும் என்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் கேட்டு துளைக்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கு சிலர் பெரம்பலூர் காடுகளில் கருங்குரங்குகள் திரியும் என்று சொல்லியிருக்கின்றனர். இதைக் கேள்விப்பட்டவுடன் சில நண்பர்களை அழைத்துக் கொண்டு கருங்குரங்கு வேட்டைக்குப் புறப்பட்டு விட்டார் நடிகர் திலகம். அதில் முக்கியமான நண்பர் திரு.கேப்ரியேல் அவர்கள்.

கேப்ரியேல் அவர்களிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்தது. அதை எடுத்துக் கொண்டு அனைவரும் பெரம்பலூர் காட்டில் புகுந்து கருங்குரங்கைத் தேடி அலசினார்கள். அதிர்ஷ்டவசமாக ஒரு கருங்குரங்கு மாடிக் கொண்டது. உடனே கேப்ரியேல் குரங்கைச் சுட துப்பாக்கியை எடுத்தார். உடனே நம் தலைவர் "என் தங்கைக்காக நானே அந்த கருங்குரங்கைச் சுடுகிறேன்... கொடு துப்பாக்கியை", என்று கூறி துப்பாக்கியைப் பிடுங்கி குரங்கைக் குறிவைத்தார். முன்பின் துப்பாக்கியைப் சுட்டு பழக்கமில்லை தலைவருக்கு.

ஆனால் ஆர்வமும், தன் தங்கை குணமாகவேண்டுமே என்ற பாசமும் அவரை துப்பாக்கியை சுட வைத்தது.

குறிபார்த்துச் சுட்டார்.

கருங்குரங்கு நடிகர் திலகம் குறியிலிருந்து தப்பவில்லை. கிறீச்சிட்டு அலறியவாறே கீழே விழுந்தது. நடிகர் திலகத்தின் முதல் குறியே அவரது முதல் படம் போல மாபெரும் வெற்றி.

இந்த சம்பவமே நடிகர் திலகத்தை வேட்டையாட வித்திட்ட சம்பவமாகும். பிற்காலத்தில் அதே நண்பர் கேப்ரியேல் அவர்களுடன் தொடர்ந்து பல வேட்டைகளுக்கு சென்று வென்று வந்துள்ளார் நடிகர் திலகம்.

ஆனைமலைக் காடுகளில் அதிகம் வேட்டைக்கு சென்று வருவார். அங்கு வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் என்ற நண்பருடன் வேட்டைக்கு சென்று வருவது நடிகர் திலகத்திற்கு வழக்கம். ('இதயம் பேசுகிறது' வார இதழில் 'வனத்தில் கண்ட சில வசந்தங்கள்' என்ற தலைப்பில் வேட்டைக்காரன்புதூர் திரு.முத்து மாணிக்கம் அவர்கள் நடிகர் திலகத்தின் வேட்டை அனுபவங்களை தொடராக எழுதி அந்து பெரும் வரவேற்பு பெற்றது சிலருக்கு நினைவிருக்கலாம். விரைவில் அந்த தொடரை அனைவருக்கும் அளிக்க முயற்சி செய்கிறேன். பல சுவையான தகவல்கள் அதில் உள்ளன அபூர்வ நிழற்படங்களோடு.)

ஆனைமலைக் காட்டில் முதல் பெரிய வெற்றி ஒரு காட்டு எருமையை தலைவர் சுட்டு வீழ்த்தியதுதான். அதன் தலை அன்னை இல்லத்தை அலங்கரிப்பதை இன்றும் காணலாம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/NavaratriTamilMovieWatchOnlineDVD-Part3-TamilMovieWaves_2vob_001015647.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/NavaratriTamilMovieWatchOnlineDVD-Part3-TamilMovieWaves_2vob_001015647.jpg.html)

அடுத்த மிகப் பெரிய வெற்றிதான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த பதினாறு அடி வேங்கை. அந்தப் புலியுடன் தலைவர் படு ஸ்லிம்மாக நிற்பது போன்ற அந்த அற்புத போஸ் மிக மிக ஃபேமஸ் அன்றும் இன்றும் என்றும்.

தமிழ்வாணன் அவர்கள் எழுதிய 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்ற மிக மிக அரிய நூலை நூலை வெகுநாட்களுக்குப் பிறகு தேடிக் கண்டுபித்தேன். இக்கட்டுரையின் சில குறிப்புகள் அதிலிருந்து எடுக்கப்பட்டது.

mr_karthik
20th June 2013, 11:12 AM
அன்புள்ள ராகவேந்தர் சார், பல்லாயிரம் நன்றிகள். தேவி பாரடைஸ் திரையரங்கில் 'ராஜா' திரைக்காவியத்தின் பெயர்ப்பலகையுடன் கூடிய அபூர்வ நிழற்படத்தை பதிவிட்டு எண்ணங்களை அப்படியே பின்னோக்கி ஓட வைத்ததற்கு.

மறக்க முடியுமா அந்த இனிய நாட்களை?. படத்தில் காணப்படுவது திரையரங்கின் பக்கவாட்டில் உள்ள (தேவி பாரடைஸ் அரங்கின்) டிக்கட் கவுண்டர்கள். காலையில் தவிர்த்து மற்ற நேரங்களில் வெயிலே விழாமல் குளுகுளு என்றிருக்கும் அருமையான இடம். ரசிகர்கள் கூடிப்பேச மிக ஏதுவான இடம். ராஜா படம் வெளியாகும் முன்பு தேவி பாரடைசில் ராஜா பட ஸ்லைடுகளும், அந்த ஸ்லைடுகள் போடும்போது நடிகர்திலகத்தின் குரலில் படத்தைப் பற்றிய அறிமுக வர்ணனைகளும் ஒலிக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டு, அதற்காகவே 'ஷர்மிலி' படத்தைப் பார்த்தோம். நடிகர்திலகத்தின் கம்பீரக்குரலில் படத்தைப்பற்றிய மூன்று நிமிட வர்ணனையில் மெய்மறந்தோம்.

படத்தின் ரிச்னஸுக்கு ஏற்ற திரையரங்கில் வெளியானதின் மிக மிக சந்தோஷம். டைட்டில் மியூசிக், ரீரிக்கார்டிங்கின்போது மெல்லிசை மன்னரின் வோகல் எபெக்ட்டுகளுக்கெல்லாம் சைட் ஸ்பீக்கர்கள் திறந்துவிடப்பட்டு, தேவிபாரடைசில் அப்படத்தைப் பார்ப்பதே ஒரு இனிய அனுபவமாக ஆகிப்போனது.

அங்கு ராஜா தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக 45-வது நாளாக ஓடிக்கொண்டிருக்கும்போதே, அதன் அருகிலுள்ள பிளாசாவில் ஞானஒளி ரிலீசானது. அப்படத்துக்காக நுழைவாயிலிருந்து தியேட்டருக்கு திரும்பும் இடம் வரையில் வலது பக்கம் (முதியவர் பழைய போட்டோக்களை விற்றுக்கொண்டிருக்கும் பக்கம்) நீளமான பேனர்கள் வைத்திருந்தனர். தேவி தியேட்டரில் படியிறங்கி வருவோர்க்கு அந்த பேனர்கள் பளிச்சென்று தெரியும். அதுபோக அதன் முகப்பிலிருக்கும் சர்ச்சில் மாலையானதும் நியான் லைட்டில் அமைக்கப்பட்ட சிலுவை சிவப்பு வண்ணத்தில் பளிச்சென எரிந்து கொண்டிருக்கும்.

ராஜா படம் ஓடும்போதுதான் அந்த தியேட்டரின் லிப்டில் எத்தனை முறை மேலே போய், சுற்றி சுற்றி இறங்கும் படியில் கீழே வந்திருப்போம். ஹும்....., அதெல்லாம் கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத ஒரு பொற்காலம்...

sankara1970
20th June 2013, 01:08 PM
Dear Vasu

quite interesting! thalivarin intha photo eppothu eduthathu?

vasudevan31355
20th June 2013, 01:33 PM
Dear Vasu

quite interesting! thalivarin intha photo eppothu eduthathu?

dear sankara sir,

athu 'navarathiri' padaththin still. oru matchingirkaaga vendi athaip pottirukkiren. nandri!

vasudevan31355
20th June 2013, 02:00 PM
நடிகர் திலகம் கௌரவ நடிகராகக் கொடிநாட்டிய 'தர்த்தி' இந்திப் படத்தின் ரிக்கார்ட் கவர் முகப்பு. கவரின் முகப்பில் ராஜேந்திர குமார், வஹிதா ரஹ்மான், எகிப்து பிரமிட் செட் இருக்கிறது. நம்ம ஆளு இல்லாதது ஒரு குறை.

http://www.recordsindia.com/cart/images/uploads/dharti_rare_angel_bollywood_lp.gif

vasudevan31355
20th June 2013, 02:02 PM
'பாலும் பழமும்' காவியத்தில் தலைவரின் பாந்தமான தோற்றம்

http://www.thehindu.com/multimedia/dynamic/01469/28MP_PAALUM_PAZHAM_1469198g.jpg

vasudevan31355
20th June 2013, 02:19 PM
கார்த்திக் சார்,

தங்களின் 'ராஜா' தேவி பாரடைஸ் அரங்கின் அனுபவங்கள் சுவை படம் வெளியாகுமுன்னே தலைவரின் குரலில் கம்பீரமாய் ஒலிக்கும் வர்ணனையைக் கேட்க 'ஷர்மிலி' படத்தைப் பார்த்ததாக தாங்கள் குறிப்பிட்டிருப்பது தங்களுடைய ஞாபகசக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. அப்படியே பிளாசாவில் 'ஞான ஒளி' வீசியதைக் குறிப்பிட்டு சற்று மறந்திருந்த என்னை மறுபடி உசுப்பி விட்டு விட்டீர்கள்

http://img856.imageshack.us/img856/5225/sharmeelee1971dvdripx26.jpg

ஷர்மிலியும் எனக்கு மிக மிக பிடித்தபடம். சசிகபூரின் சுறுசுறுப்பில், ராக்கியின் அழகில், கிஷோரின் கிறுகிறுக்கும் குரல் வளத்தில் மிளிரும் நம் கண்ணையும் கருத்தையும் கவரும் "ஓ.. மேரி.... ஓ..மேரி... ஓ..மேரி ஷருமிலி" பாடலை மறக்க முடியாதே... அந்தப் பாடல் அப்படியே நம்மைக் கட்டி போட்டு விடுமே!


http://www.youtube.com/watch?v=-cZOA3gD0-g&feature=player_detailpage

vasudevan31355
20th June 2013, 02:26 PM
மிக மிக அபூர்வமான நிழற்படம்.

சென்னை தேவி வளாகத்தில் தேவி பேரடைஸ் திரையரங்கில் நடிகர் திலகத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் ராஜா ஓடிக் கொண்டிருந்த போது திரையரங்கில் அதன் பெயர்ப்பலகையின் தோற்றம்



Excellent raghavendran sir.

KCSHEKAR
20th June 2013, 02:54 PM
டியர் வாசுதேவன் சார்,

நிஜ வேட்டைக்காரர் நடிகர் திலகம் - தமிழ்வாணன் அவர்கள் எழுதிய 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்ற நூலிலிருந்து தாங்கள் தந்திருக்கும் அரிய தகவல்களுக்கு நன்றி.

KCSHEKAR
20th June 2013, 02:56 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தேவி பாரடைஸ் திரையரங்கில் ராஜா வெளியீட்டின்போது எடுக்கப்பட்ட் புகைப்படம் குறித்து ttimes of india நாளேட்டில் வெளியான பதிவை வெளியிட்டதற்கு நன்றி.

Gopal.s
20th June 2013, 03:03 PM
ராஜான்னா ராஜாதான் .நன்றி ராகவேந்தர் சார்.
ஷர்மீலி பத்தி எழுதனும்னு இருந்தேன். வாசு எழுதிட்டாப்லே.தேங்க்ஸ் பா.
ஞான ஒளி நுழைக்க படுவதை எதிர்பார்த்தேன்.
பாலும் பழமும் -stills பார்த்தாலே அந்த கால டாக்டர் கள் இந்த ஸ்டைல் காப்பியடித்த காரணம் தெளிவாகிறது.

RAGHAVENDRA
20th June 2013, 03:25 PM
வாசு சார்
பாலும் பழமும் ஸ்டில் படு சூப்பர்... எங்கிருந்து தான் பிடிக்கிறீர்களோ... சரோஜா தேவியின் கண்கள் பேசாத மொழியும் பேசுமே...

iufegolarev
20th June 2013, 04:43 PM
அன்புள்ள நெய்வேலியார் அவர்களே

நடிகர் திலக உடையலங்கார அணிவகுப்பு அருமை. அதுவும் பண்டிட் ஜவஹர்லால் நேரு பாணியில் அமைந்த அந்த திரும்பிப்பார் ஷெர்வானி மாடல் சூட் அதி அற்புதம்.

ஒவ்வொரு உடையும் மிக நேர்த்தியாக தேர்ந்தெடுக்க பட்டிருக்கவேண்டும். எந்த உடை போட்டாலும் நமது சித்தருக்கு சிக்குன்னு இருக்கு. அதுதான் அவதாரத்தின் பொருள்.

உதாரணமாக அந்த Round neck மாடல் T -shirt பாருங்கள் பிரமாதமாக நம் சித்தருக்கேன்றே வடிவமைந்தது போல உள்ளது.

பின்னாளில் நடிகர் திலகத்திற்கு அடுத்தது அவரது மகன் திரு.பிரபுவிற்கு மட்டுமே மிக சிறந்து விளங்கியது அந்த ரவுண்டு நெக் T -Shirt . வேறு எந்த நடிகர்களுக்கும் எடுப்பாக இருக்கவில்லை என்று கூறினால் மிகையாகாது.

அவருடைய மிகச்சிறந்த உடை அலங்காரம் நீங்கள் வண்ணத்தில் பார்க்க விரும்பினால், நிச்சய தங்கசுரங்கத்தை மிஞ்சும் உடை அலங்காரம் எதுவும் இல்லை. இந்திய நடிகர்கள் எவரும் அதுபோல ஒரு Combination & Style இதுவரை உடையலங்காரத்தில் ஒரு British Style கொண்டுவந்ததில்லை.

அடேயப்பா...என்ன ஒரு HAndsome அதில் நம்முடைய சித்தர்....என்ன சொல்கிறீர்கள் வாசுதேவன் சார் ? சரிதானே நான் உரைத்தது?

மிகுந்த ச்ரத்தை எடுத்து பிரமாதமாக தொகுத்து...லட்சம் எழுத்துக்கள் சொல்லும் விஷயத்தை..ஒரு சில வார்த்தைகளால், புகைப்படத்தால் இங்கு பகிர்ந்துகொண்டு உரைதிருகிரீர்கள்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வளர்க உங்கள் தொண்டு ! வளரட்டும் உங்கள் நற்பணி..!

RAGHAVENDRA
20th June 2013, 04:57 PM
வாசு சார்
ஷர்மிலி படத்தைப் பற்றிய நினைவலைகள் கார்த்திக் சொன்னது போல் அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விட்டது. பாடல்கள் ... எந்தக் காலத்திலும் நெஞ்சை விட்டகலாதவை. இந்தப் படத்தின் இடைவேளையில் ராஜா ஸ்லைடு போடும் போது 30 வினாடிகளுக்கு மேல் நடிகர் திலகத்தின் குரல் ஒலிக்கும் போது அரங்கமே இரண்டாகும். இந்திப் பட ரசிகர்கள் வியப்போடு பார்ப்பதையும் கவனித்திருக்கிறோம். சிலரிடம் விளக்கியும் சொல்லி யிருக்கிறோம். இடை வேளையில் தேவி பேரடைஸ் ஜன்னல் வழியாக பிளாசா தியேட்டரில் house full போர்டு பார்ப்போம். இங்கும் அதே. ஒரே சமயத்தில் அடுத்தடுத்த திரையரங்குகளில் ஒரே நடிகரின் படங்கள் அரங்கு நிறைவைக் காண்பதும் பெரிய விஷயம். அதையும் நம் நடிகர் திலகம் செய்திருக்கிறார்.

தேவி பேரடைஸே கதி என்று இருந்த காலங்கள் மறக்க முடியாதவை.

iufegolarev
20th June 2013, 05:01 PM
அன்புள்ள சௌரி அவர்களுக்கு,

தற்போது நடிகர்திலகம் திரியில் பல்வேறு அருமையான விடியோ பதிவுகளை அளித்து வருகிறீர்கள். அவை எந்த அளவுக்கு சிறப்பானவைகளாக இருக்கக்கூடும் என்பது, அவற்றுக்கு நீங்கள் தரும் விளக்கங்கள் வாயிலாகவும், அவற்றுக்கு மற்றவர்கள் அளிக்கும் பின்னுட்டங்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.

ஆனால் வீடியோ பதிவுகளைக் கண்டுகளிக்கும் வசதி என்னுடைய கணினியில் இல்லையாதலால், உங்களுடையது என்றில்லை, எந்த வீடியோ பதிவையும் பார்க்கமுடிவதில்லை. (நண்பர்கள் அளிக்கும் பாடல் காட்சிகள் உள்பட).

'என்னடா, எல்லோரும் நம் பதிவைப் பார்த்து பாராட்டும்போது இவன் மட்டும் கல்லுளி மங்கன் போல இருக்கிறானே' என்ற எண்ணம் தங்கள் மனதில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இப்பதிவு. தங்களுடைய பல அரிய முயற்சிகளைக் கண்ணுறும் பாக்கியம் இல்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய உண்டு.

சில திரைப்படங்களில் காது கேளாதவர் முன்னிலையில் ஒருவர் சில செய்திகளைச்சொள்ள, அவர் வாயசைப்பைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நபர் இறுதியில், "நீங்க ஏதோ சொல்றீங்கன்னு தெரியுது. ஆனால் என்ன சொல்றீங்கன்னுதான் புரியலை" என்று சொல்வரே அந்த பரிதாப நிலைதான் தற்போது எனக்கும்..


திரு கார்த்திக் அவர்களுக்கு

தங்களுடைய வாழ்த்திற்கு நன்றி.

தொழில் நுட்பம் இவ்வளவு அதீதமாக வளர்ந்த நிலையில் கண்ணொளியை காணமுடியவில்லை என்று கூறுவதை கேட்கும்போது வருத்தமாகவும் அதே சமயம் ஆச்சர்யமாகவும் உள்ளது. தாங்கள் தங்களுடைய ஆபீசில் இருந்துகொண்டு இதை பார்கிறீர்கள், பதிவுகள் இடுகிறீர்கள் என்றால் நீங்கள் சொல்வது ஆச்சர்யம் அல்ல. காரணம், Firewall கொண்டு இதுபோன்ற சைட் களை கம்பெனி யின் IT department பிளாக் செய்திருப்பார்கள். வீட்டில் இருந்துகொண்டு பழைய மாடல் கைபெசிமூலம் இதை செய்கிறீர்கள் என்றால் அப்போதும் உங்களால் பார்க்கமுடியாது. ஆனால் கம்ப்யூட்டர் அல்லது மடிக்கணினி வைத்திருந்தால் நிச்சயம் பார்க்காலம். வழி இருக்கிறது. !

மேலும் நம் திரியில் அனைவரும் பாராட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அது நிச்சயம் நிறைவேறாது என்பது எனக்கு நன்றாக தெரியும். மேலும் எதிர்பார்தால்தானே ஏமாற்றம் ? இல்லையென்றால் ? நம் சித்தர் பாடலில் உள்ளது போல..."கடல் அளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்...அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன். உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கார்த்திக் அதை உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கார்த்திக்..!

எது எப்படி இருந்தாலும் புரிந்துகொண்டமைக்கு நன்றி..!

RAGHAVENDRA
20th June 2013, 05:01 PM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் .... தொடரில் இன்னும் வரப் போகும் படங்களை நினைத்தாலே இனிக்கிறது. உடைகளாலேயே ஒரு புதிய தலைமுறை ரசிகர்களை உருவாக்கிய ....

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTSIYDM_BR8lsHUK9pkOdE-1XnlIx16spG_U8Tdnf_oPEE4DqxP

இந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இந்த படத்தை எண்ணற்ற முறை பார்த்ததற்கு இந்த உடையலங்காரமும் முக்கிய காரணமாயிற்றே..

Gopal.s
20th June 2013, 05:34 PM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் .... தொடரில் இன்னும் வரப் போகும் படங்களை நினைத்தாலே இனிக்கிறது. உடைகளாலேயே ஒரு புதிய தலைமுறை ரசிகர்களை உருவாக்கிய ....
இந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இந்த படத்தை எண்ணற்ற முறை பார்த்ததற்கு இந்த உடையலங்காரமும் முக்கிய காரணமாயிற்றே..
இந்த பேராசைதான் வேணாம் என்கிறது. இன்னும் பத்தையே தாண்டலை காத்திருங்கள் ஒரு வருடம். எனக்கு மட்டும் துடிப்பில்லையா?

mr_karthik
20th June 2013, 06:17 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

நடிகர்திலகத்தின் முதல்வேட்டை அனுபவம் மிக மிக அருமை. 'நிஜ வேட்டைக்காரன்' என்ற தலைப்பு வெகு பொருத்தம். நடிகர்திலகம் அவர்களின் அன்னை இல்லத்தில் நுழைந்தால் உயிரோடு நிற்பது போன்ற புலியைக்காணலாம். எருமைத்தலை, யானைத்தந்தம் எல்லாம் காணலாம். ஆனால் சாதாரண ரசிகனால் இவற்றைஎல்லாம் காணமுடியுமா?. அதே நேரம் எம்.ஜி.ஆர். அடிமைப்பெண் படத்தில் போராடிய சிங்கத்தினை சாதாரண ரசிகனால் இன்றும் காண முடியும்.

இதற்காகத்தான் ரசிகர்களும் நடிகர்திலகத்தின் மீது உயிரையே வைத்திருக்கும் பக்தர்களும் காலம் காலமாகக் கேட்டு நிற்கும் 'நடிகர்திலகம் நினைவு இல்லம்'.

சகோதரர் சந்திரசேகர் அவர்கள் தலைமையில் நடிகர்திலகம் சமூக நலப்பேரவை அரசுடன் போராடிவரும் 'சிவாஜி மணிமண்டபம்' என்பது வேறு. நாம் குறிப்பிடும் 'நினைவு இல்லம்' என்பது வேறு. சரியான உதாரணம் சொல்வதானால், 'மணிமண்டபம்' என்பது மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடம் போல. அதே சமயம் 'நினைவு இல்லம்' என்பது தி.நகர் ஆற்காடு முதலி தெருவிலிருக்கும் 'எம்.ஜி.ஆர்.நினைவு இல்லம்' போல.

திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களில் பலர் அங்கிருக்கும் ஸ்டில்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, நடிகர்திலகத்தின் ரசிகர்களும், மக்கள்திலகத்தின் ரசிகர்களும் அதிகம் மொய்ப்பது அங்குள்ள ஷீல்டு கேலரிகளைத்தான். தங்கள் அபிமான நட்சத்திரத்தின் என்னென்ன படங்கள் அங்கு ஓடி சாதனை புரிந்திருக்கின்றன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இவ்விரு ரசிகர்களுக்கு இருக்கும் அளவு, வேறெந்த ரசிகர்களுக்கும் கிடையாது. தேவி காம்ப்ளெக்ஸ், ஆல்பர்ட் போன்ற அரங்குகளில் ரசிகர்களின் ஆர்வத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் 'ஷீல்டுகேலரிகள்' அமைத்து தங்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை புரிந்த திரைப்படங்களின் 100-வது நாள், மற்றும் வெள்ளிவிழா ஷீல்டுகளை அழகுற வைத்துள்ளனர். ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் இவ்வாறு காட்சிக்கு வைப்பதில்லை. மேலும் இவ்விரு நட்சத்திர நாயகர்களும் சாதனை புரிந்த பல திரையரங்குகள் இப்போது மறைந்து விட்டன.

இருப்பினும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு இல்லத்துக்கு சென்றால் அனைத்து திரைப்படங்களின் சாதனை ஷீல்டுகள், அவருக்கு அளிக்கப்பட பரிசுப் பொருட்கள், இன்னும் தங்கள் தலைவரைப்பற்றிய அறிய ஆவணங்கள், தலைவரோடு போராடிய சிங்கம் என அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டு களித்திட / அறிந்திட முடியும்.

ஆனால் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு...?????????.

மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம்தான் அரசால் கட்டப்பட்டதே தவிர, தி.நகரிலுள்ள அவரது நினைவு இல்லம் அரசால் உருவாக்கப்பட்டது அல்ல. அவரது துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டு, ராமாவரம் தோட்ட இல்லத்திலிருந்து பல லாரிகளில் பரிசுப்பொருட்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு, நினைவு இல்லத்தில் அழகுற அமைக்கப்பட்டு ஜானகி அம்மையாரால் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. நான் பலமுறை சென்று பார்த்து விய்ந்திருக்கிறேன்.

நடிகர்திலகம் மறைந்து 12 ஆண்டுகள் முடிந்து விட்டனவே. அவருக்கும் இதுபோன்ற நினைவு இல்லம் அமைவது எப்போது?.

பார்க்க ஏங்கியவர்கள் எல்லாம் பரலோகம் சென்ற பிறகா?...

Gopal.s
20th June 2013, 07:44 PM
ஆனால் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு...?????????.
நடிகர்திலகம் மறைந்து 12 ஆண்டுகள் முடிந்து விட்டனவே. அவருக்கும் இதுபோன்ற நினைவு இல்லம் அமைவது எப்போது?.
..
நாம்தான் ஒருங்கிணைந்து போராடி நம் சக்தியை காட்ட வழியில்லாமல் போய் விட்டது. எந்த கட்சிக்கும் நாம் வேண்டியவர் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் 70% ஆவது அவர் ரசிகர்கள்தான்.நமக்கு தலைவரை விடுங்கள் ,ஒரு சக்தி வாய்ந்த தலைமை குணமுள்ள
co ordinator கூட missing .

Marionapk
20th June 2013, 08:58 PM
Nadigarthilagam only actor who didn't act in public(out of shooting hours) He is a real person in personal and public

ScottAlise
20th June 2013, 10:57 PM
என் தம்பி


நான் மிகவும் ரசித்த நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை பொழுது போக்கு சித்திரங்களில் ஒன்று
படத்தின் டைட்டில் போடும் போதே கதை தொடங்கி விடும் . கதை என்று பார்த்தல் படத்தின் டிக்கெட் பின்னாடி எழுத கூடிய கதை தான் ஆனால் விறுவிறுப்பு டாப் கிளாஸ் .
ஒரு குடும்பத்தில் அண்ணன் , தம்பி இருவருக்கும் நடக்கும் கதை தான் , good Vs Evil . நடிகர் திலகம் குட், பாலாஜி -evil (வில்லன்)
இந்த படத்தை பார்க்காதவர்கள் முதல் பாதியை மிகவும் கவனமாக பாருங்கள் ஏனெனில் இதன் தாக்கம் இரண்டாம் பாதியில் தெரியும்

இந்த படத்தில் நடிகர் திலகம் மிகவும் ஒல்லியாக , கவர்ச்சியாக இருப்பர் , அவர் அறிமுகம் ஆகும் காட்சியில் இருந்தே நம்மை வசீகரித்து விடுகிறார் அழகான வேஷ்டி சட்டையில் . அவர் ஆபீஸ் ல் இருக்கும் பொழுது அவர் அணிந்து இருக்கும் கோட் -சூட் டாப், அதுவே அவர் comeback டைம் ல் அவர் அணிந்து இருக்கும் கோல்ட் கலர் கோட் சூட் வித் bow ஒரு வித ராயல் லுக் யை கொடுக்கும்
(வாசு சார் யின் தொடருக்கு இந்த படம் ஒரு நல்ல தினி என்று நினைக்கிறன் )

தவறு செய்யும் தம்பியை கண்டிக்க காத்து இருக்கும் சமயத்தில் ஒரு புத்தகம் படித்து கொண்டு இருப்பார், பாலாஜி வரும் சமயம் ஒரு பார்வை அழுத்தமாக அவரை நோக்கி, பாக்கும் பாங்கு, நம்ம ஆளுக்கு மட்டுமே உரித்தான ஒன்று அதுவும் அந்த காட்சியில் அவர் அணிந்து இருக்கும் வெள்ளை பைஜாமா குர்தாவும் , வெள்ளை ஷூ வும் அந்த கரண்ட் லூக்யை grandeur ஆக்கும் .
இந்த படத்தில் அவர் ஆடையை பற்றி சொல்லி கொண்டே போகலாம்
மேலே குறிப்பிட அந்த காட்சியில் அவர் போட்டோ , மற்றும் சாட்டையை சுழறும் காட்சியில் அவர் அணிந்து இருந்த கோட் , கத்தி சண்டையில் அவர் அணிந்து இருக்கும் embroidery செய்த சட்டை உடன் கத்தி யை கீழே நோக்கி இருக்கும் ஸ்டில் இன்றும் famous ( இந்த ஸ்டில் யை பார்த்து நான் இதை உத்தமபுத்திரன் என்று நினைத்த காலம் உண்டு ) கத்தி சண்டையில் பிச்சு உதறி இருப்பார் , கிட்ட தட்ட 6 நிமிடம் ஓடும் காட்சி இது .
பணக்காரன் கிருஷ்ணா ஒரு விதம் என்றால் கூத்து கலைஞர் கண்ணப்பா அப்பவிதனத்தின் உச்சம் . நாகேஷ் உடன் அவர் உரையாடும் காட்சி , அந்த ரோல் ல் கழுத்தை அவர் அசைக்கும் விதம் , பட் , புட் சொல்லும் விதம் அனைத்தும் நம்மை சிரிக்க வைக்கிறது .
நடிகர் பாலாஜி நம்மவரை வைத்து தயாரித்த சித்திரங்களில் இது முதல் படம் என்று நினைக்கிறன்
இந்த படத்தை தொலைகாட்சியில் பார்க்கும் வாய்ப்பு என்று வரை கிடைக்க வில்லை
பாலாஜியை வெற்றி பட தயாரிப்பாளர் என்ற முத்திரை உடன் வலம் வர செய்த படம்

iufegolarev
20th June 2013, 11:06 PM
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் :

நடிகர் திலகத்தால் உலக தமிழர்களுக்கு நினைவூட்டப்பட்ட அறிஞர்கள் பெரியவர்கள் வரிசையில்

திருவருட்செல்வர் - அப்பர் !!

http://www.youtube.com/watch?v=kpCzej-Sr04


திருநாவுகரசர் அல்லது அப்பர் - ஒரு குறிப்பு

மண் வளமும் நீர்வளமும் நிறைந்த செழிப்பான, தென்பெண்ணை நதி தீரம் கொண்ட மத்திய தமிழகத்தில் (நடு நாடு ) உள்ள திருமுனைப்பாடி என்ற சாம்ராஜ்யத்தில் திருவாமூரில் வேளாள குல தம்பதியராம் புகழனார்-மாதினியார் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருடைய தமக்கை திலகவதியார். திருநாவுக்கரசர் சிறு பிராய பெயர் மருள்நீகியார் என்பதாகும்

இவரது இளமை காலத்தில் சமண சமயத்தின் தீவிர பக்தராக இருந்தார். சூலை நோய்ப்பட்டு பின்னர் இவர் திலகவதியார் வேண்டுதலால் மீண்டும் சைவ ஞானியானார் திருநாவுகரசர்.

"மருள் நீக்கியார்" "திருநாவுகரசர்" என்ற பெயரில் அழைக்கப்பட்ட காரணம்
திருவதிகை வீரட்டானேசுவரர் மருள் நீக்கியார், " கூற்றாயினவாறு விலக்க கிலீர்" எனும் திருப்பதிகத்தை பாடியதும், அதை கேட்டு மகிழ்ந்து உவந்து இன்று முதல் நீங்கள் நாவுக்கே அரசர், அனைவரும் தங்களை திருநாவுகரசர் என்று மரியாதை பொங்க அழைப்பார்கள் என்று புகழ் பெயரை கொடுத்தார்.

மகேந்திர பல்லவ மன்னன் (சமணர்) இவரை - மதம் மாறியதற்காக - பலவித கொடிய தண்டனை கொடுத்தும், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். " நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் " என வீர முழக்கமிட்ட சிவஞானச்சிங்கமிவர். முடிவில் கொடிய மன்னனே, இவரது இனிய நண்பனானான்.

" மாசில்வீணையும் " ; " சொற்றுணை வேதியன் " முதலான இவரது பலநூறு தேவாரப்பாடல்கள். சாத்திர, தோத்திரக் கனிகளின " பழச்சாறு " ஆகும்.

சைவத்திருத்தலங்கள் தோறும் சென்று, இறையருள் பெற்றுப் பதிகம் பாடிய முதுபெரும் ஞானப்பழமாகத் திகழ்ந்தவர்.

திருநாவுகரசர் அப்பர் என்றழைக்கப்பட்ட காரணம்

இவரை போன்று, அன்னை பார்வதியின் அருள் பாலித்தவர் திருஞான சம்பந்தர். இவர் குழந்தை, நாவுக்கரசர் முதியவர் இருப்பினும், இருவரும் பல திருத்தங்களிலே இணைந்து பதிகம் பாடித் தந்துள்ளனர். திருஞான சம்பந்தர் நாவுக்கரசர் அவர்களை அழைத்ததுதான் " அப்பர் " எனும் திருப்பெயர். அப்பன் என்றால் மரியாதை இல்லை என்பதால் அப்பர் என்றழைத்தார்.

திருக்கயிலையைக் கண்டு தொழ வடநாடு வரை நடந்தார் - ஸ்ரீ திருநாவுக்கரசர்; வயோதிகத்தால் தளர்ந்து இயலாமையால் வாடியது கண்ட சிவனே, இவரை இமயச்சாரலியே உள்ள திருக்குளத்திலே மூழ்கச் சொல்லி திருவையாற்றிலே எழ வைத்து, திருக்கையிலையின் காட்சியை தந்தருளி ஆட்கொண்டார் என்கிறது வரலாறு.

தொடரும் ........

Subramaniam Ramajayam
21st June 2013, 06:00 AM
வாசு சார்
ஷர்மிலி படத்தைப் பற்றிய நினைவலைகள் கார்த்திக் சொன்னது போல் அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விட்டது. பாடல்கள் ... எந்தக் காலத்திலும் நெஞ்சை விட்டகலாதவை. இந்தப் படத்தின் இடைவேளையில் ராஜா ஸ்லைடு போடும் போது 30 வினாடிகளுக்கு மேல் நடிகர் திலகத்தின் குரல் ஒலிக்கும் போது அரங்கமே இரண்டாகும். இந்திப் பட ரசிகர்கள் வியப்போடு பார்ப்பதையும் கவனித்திருக்கிறோம். சிலரிடம் விளக்கியும் சொல்லி யிருக்கிறோம். இடை வேளையில் தேவி பேரடைஸ் ஜன்னல் வழியாக பிளாசா தியேட்டரில் house full போர்டு பார்ப்போம். இங்கும் அதே. ஒரே சமயத்தில் அடுத்தடுத்த திரையரங்குகளில் ஒரே நடிகரின் படங்கள் அரங்கு நிறைவைக் காண்பதும் பெரிய விஷயம். அதையும் நம் நடிகர் திலகம் செய்திருக்கிறார்.

தேவி பேரடைஸே கதி என்று இருந்த காலங்கள் மறக்க முடியாதவை.

GOOD REMEMBRANCE OF OLDEN DAYS. Seen SHARMEELEE more number of times just to see the trailor of RAJA in paradise. Bygone days which will nevercomeback. comeback.

KCSHEKAR
21st June 2013, 10:40 AM
டியர் வாசுதேவன் சார்,

"நிஜ வேட்டைக்காரர்" பதிவு மூலம் என்னுடைய பழைய நினைவுகளையும் கிளறிவிட்டுள்ளீர்கள். நானும் முதன்முதலில் அன்னை இல்லத்தில் நுழைந்தபோது அவர் வீழ்த்திய புலி எங்கே என்று நோட்டமிட்டமிட்டபடியேதான் சென்றேன். அதேபோல் அங்கிருந்த யானைத் தந்தங்கள், தாங்கள் கூறியுள்ள மற்றவையெல்லாம் கண்டு வியந்திருக்கிறேன்.

தலைவருடைய அலுவலகத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற பிறகுகூட, பல நாட்கள் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அந்தப் புலியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேன்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்படும். ஆனால் பலரும் இருக்கும் நேரத்தில் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.

விடுவேனா?? ஒருநாள், நடிகர்திலகத்திடமே கோரிக்கையை வைத்துவிட்டேன். அவரும் என் ஆசையை நிறைவேற்றிவைத்தார். நடிப்புப் வேங்கையுடன் அவர் வீழ்த்திய வேங்கையும் இருக்க நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம், அந்தப் புகைப்படத்தை எடுத்த நபர் கடைசிவரை எனக்கு அதனைத் தரவேயில்லை.

அதன்பிறகு மீண்டும் ஒருநாள், தலைவர் வீழ்த்திய வேங்கையுடன் மட்டும் புகைப்படம் எடுத்துக்கொன்டேன்

நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த இறைவனுக்கும் நன்றி.

1989 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது:
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Shekar-Tiger_zps9ce9ef16.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Shekar-Tiger_zps9ce9ef16.jpg.html)

KCSHEKAR
21st June 2013, 10:49 AM
டியர் செளரி சார்,

நடிகர் திலகத்தால் உலக தமிழர்களுக்கு நினைவூட்டப்பட்ட அறிஞர்கள் பெரியவர்கள் என்று தங்களுடைய வரிசையான பதிவுகள் அருமையாக உள்ளன. தங்களுடைய பணி பாராட்டத்தக்கது. நன்றி.

vasudevan31355
21st June 2013, 11:15 AM
'திரும்பிப்பார்' ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் தொடருக்கு பெரும் வரவேற்பு அளித்து ரசித்துப் பாராட்டிய அன்புள்ளங்கள் கோபால் சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், சந்திரசேகரன் சார், சுப்பிரமணியம் ராமஜெயம் சார், ராதா கிருஷ்ணன் சார், அன்பு காட்டுப் பூச்சி சார் சார், பெயர்க்காரணம் அறியலாமோ) சவுரி சார், கைபேசியில் அனைத்துப் பதிவுகளுக்கும் பாராட்டுகள் தெரிவித்த அன்புத்தம்பி செந்தில் மற்றுமுள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.

vasudevan31355
21st June 2013, 11:27 AM
சவுரி சார்,

நன்றி!

தங்களின் 29 நிமிட கருத்து பரிமாற்ற 'நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல்' வீடியோவை இப்போதுதான் கண்டு களித்தேன். இவ்வளவு நாள் நேரமின்மை காரணமாக பார்க்க இயலவில்லை. ஒரே வரியில் சொல்வதென்றால் மிக மிக வித்தியாசமான முயற்சி. ரசித்துப் பார்த்தேன். கையில் உள்ள எளிய சாதனங்களைக் கொண்டு ஒரு திரைப்பட ரேஞ்சுக்கு முயற்சி செய்து நடிப்பிற்கும் மேல் நடிகர் திலகத்தை விலாவாரியாக அலசி ஆராய்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் இது போன்ற புதிய முயற்சிகள்.

அதே போல

அனைவராலும் காப்பியடிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் உடை அலங்கார நளினம் (பாகம் - 2) ம் அமர்க்களம். அருமையான அலசல். அவரைக் காப்பியடிக்க முடியாதவர்கள் இருக்கவே முடியாது. இடையிடையே வரும் ஒளிக் காட்சிகள் பின்னணி இசைக் கோர்ப்புகள் அனைத்தும் தங்கள் இருவரின் மேம்பட்ட உழைப்பைக் காட்டுகின்றன. அன்பு நண்பர் ஆனந்துக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். ஆனந்த் அவர்களை மையத்தில் உறுப்பினராக்குங்கள்.

vasudevan31355
21st June 2013, 12:20 PM
நடிகர் திலகத்தால் உலக தமிழர்களுக்கு நினைவூட்டப்பட்ட அறிஞர்கள் பெரியவர்கள் வரிசையில் திருவருட்செல்வர் - அப்பர் பற்றி தாங்கள் சிரமப்பட்டு தொகுத்துள்ள விஷயங்கள் அற்புதம். அப்பருக்கும் எங்கள் கடலூருக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. கல்லிலே கட்டி கடலிலிலே போட்டும் அப்பர் அப்பனருளால் மிதந்து வந்து கரையேறிய பெருமையைப் பெற்றது எங்கள் கடலூரில்தான். அதற்கான ஆதாரங்களை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் பெரிய கோவிலில் காணலாம். அப்பரின் அருளாசி பெற்று அவர் ஈஸ்வரன் மேல் பாடிய பதிகங்களால்தான் பாடலீஸ்வரர் கோவில் என்று இன்றும் பெரிய கோவில் பெயர் பெற்று விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க பாதிரிமரம் இந்தக் கோவிலில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சி தருவதால் இவ்வூருக்கு திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயர் நிலைத்ததாக பெயர்க் காரணம் கூறுவார்கள்.

எங்கள் கடலூரை தங்கள் ஆன்மீகப் பதவின் மூலம் நான் நினைத்து பெருமைப்பட வைத்ததற்கு தங்களுக்கு என் பக்தி மனம் கமழும் நன்றி!

vasudevan31355
21st June 2013, 12:24 PM
டியர் சந்திரசேகரன் சார்,

நன்றி!

நடிப்புப் புலியின் கைகளால் வேட்டையாடப்பட்ட வேங்கைப் புலியின் அருகே சமூக நலப் புலியாய் தாங்கள் நிற்பதைக் கண்டு பெரு மகிழ்ச்சியடைந்தேன். கண்ணைக் கவரும் அற்புதமான புகைப்படம்.

vasudevan31355
21st June 2013, 12:44 PM
ராகுல்,

'என் தம்பி' பற்றி என்தம்பி நீ எழுதிய ஆய்வு அருமை. அதுவும் நடிகர் திலகத்தின் உடையலங்காரங்களைப் பற்றி நிறையவே குறிப்பிட்டு விட்டாய். கத்திச் சண்டையையும் மறக்காமல் குறிப்பிட்டு இருக்கிறாய்.

பாலாஜி அவர்கள் முதலில் தலைவரை வைத்து தயாரித்தது சுஜாதாவின் 'தங்கை' திரைப்படம்தான். வெளியான நாள் தங்கை 19.05.1967. அடுத்துதான் 'என் தம்பி' வெளியானது. வெளியான நாள் 07.06.1968. கிட்டத் தட்ட ஒரு வருட இடைவெளி.

தொலைக்காட்சியில் அதாவது ஜெயா மூவிஸ் சேனலில் என் தம்பி படத்தை அடிக்கடி போடுகிறார்கள். கண்காணித்துக் கொண்டே இருந்தால் பார்த்து விடலாம்.

vasudevan31355
21st June 2013, 01:00 PM
அகில இந்திய சிவாஜி மன்ற செயலாளர் திரு எம்.எல்.கான் அவர்கள் எனக்கு ஈ மெயிலில் தலைவருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சில அனுப்பியிருந்தார். இப்போது அவை நமது பார்வைக்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/khanwithnadigarthilagam1-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/khanwithnadigarthilagam1-1.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/khanwithnadigarthilagam1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/khanwithnadigarthilagam1.jpg.html)

KCSHEKAR
21st June 2013, 01:07 PM
Dear Mr.Rahul,

Your Post about En Thambi is very good.

vasudevan31355
21st June 2013, 03:38 PM
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 10

இந்த அருமையான சண்டைக் காட்சியை இளைய திலகத்தின் தீவிர ரசிகர் திரு சவுரி சார் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்

Don't Miss It

படம்: சங்கிலி

http://i.ytimg.com/vi/GFoEBMHOvx4/0.jpg

வெளிவந்த ஆண்டு: 14.04.1982

தயாரிப்பு: அருண் சுஜாதா கம்பைன்ஸ் (S.D.குணசேகரன்)

சண்டைப்பயிற்சி : விஜயன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sangili1mp4_000169720.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sangili1mp4_000169720.jpg.html)

நடிகர் திலகம் மோதும் வில்லன் : 'இளைய திலகம்' பிரபு

இயக்கம்: C.V.ராஜேந்திரன்

பதை பதைக்க வைக்கும் சண்டைக்காட்சி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sangili3mp4_001125360.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sangili3mp4_001125360.jpg.html)

ரேஷன் பொருட்களைப் பதுக்கி கள்ள மார்க்கெட் தொழில் செய்யும் 'சர்தார்' ராஜாளி ஒரு காலை இழந்த பயங்கரவாதி. போலீஸ் நுழைய முடியாத அந்த பகுதிக்கு அநியாயத்தைத் தட்டிக் கேட்க நுழைகிறார் புதிதாக பதவி ஏற்றிருக்கும் டி.எஸ்.பி.சரவணன். ராஜாளிக்கும் சரவணனுக்கும் வாக்குவாதம் முற்றிப் போக அது சண்டையாக மாறுகிறது. தன் அப்பா கொடுத்த திரிசூலத்துடன் டி.எஸ்.பி.சரவணனை எதிர்கொள்ளத் தயாராகிறான் ராஜாளி. அவன் சவாலை ஏற்று அவனுடன் மோதத் தயாராகிறார் சரவணன். அப்போதுதான் சரவணனுக்குத் தெரிகிறது ராஜாளி ஒரு காலை இழந்தவன் என்று. எனவே சரவணனும் தன்னுடைய ஒரு காலை துணியால் கட்டிக்கொண்டு ராஜாளியுடன் பயங்கரமாக மோதுகிறார். அனல் பறக்கும் சண்டையில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தீர்மானிக்க முடியாத நிலை. இருவரும் சமபலத்துடன் மோதுகிறார்கள். முடிவு?... நீங்களே காணுங்கள்.

'சர்தார்' ராஜாளியாக நிஜத் தனயன்

டி.எஸ்.பி.சரவணனாக நிஜத் தந்தை (நடிப்புலகிற்கும் சேர்த்து)

ஆம்... நடிகர் திலகமும், இளையதிலகமும் அற்புதமாக மோதிக்கொள்ளும் மெய்சிலிர்க்கும் சண்டைக்காட்சி. இளையதிலகத்தின் அமர்க்களமான அறிமுகம். அப்பாவின் புகழ் பாடியபடியே அப்பாவுடன் மோதும் காட்சி. அதுவும் முதல் படத்திலேயே அப்பாவுடன் மோதல். நடிகர் திலகத்திற்கும் பிரபுவுடன் மோதும் முதல் சண்டைக்காட்சி.

எப்படி இருக்கும்?!

எதிர்பார்த்ததைவிடவும் அற்புதமாக யாராலும் மறக்க முடியாத சண்டைக்காட்சியாய் அமைந்து விட்டது. திரிசூலத்தை தன் தந்தையிடம் பிரபு தூக்கிப் போட்டு எழுந்திருக்க, ஒரு கால் இல்லாத பிரபுவை பார்த்து ஒரு சில வினாடிகளை பிரபுவின் நிலைகண்டு பரிதாபப்பட எடுத்துக் கொண்டு, பின் தன் ஒரு காலைக் கட்டிக்கொண்டு, உடனே உக்கிரமாய் பிரபுவுடன் மோத ஆரம்பிப்பார் நடிகர் திலகம். திரிசூலங்களுடன் இருவரும் மோதிக் கொள்ளும் போது ஒரு கட்டத்தில் நடிகர் திலகத்தை பிரபு கீழே தள்ளி விடுவார். பின் கீழே விழுந்த நடிகர் திலகத்தை எழுந்து மீண்டும் தன்னுடன் சண்டையிடும்படி சிரித்தவாறே "எழுந்திரு" என்பது போலத் தலையாட்டுவார். அதற்கு நம் நடிகர் திலகத்தின் பதில் expression ஐ பார்க்க வேண்டுமே! ("அட பொடிப்பய! நான் பார்த்துப் பொறந்த பய! என்னையே கீழே தள்ளிட்டு எழுந்திருக்க வேற சொல்லி நக்கல் பண்றியா? பரவாயில்லையே" என்ற சொந்த மகனைப் பற்றிய பெருமைப் பூரிப்பு! ) அட்டகாசமான ஒரு நையாண்டி நக்கல் சிரிப்பை பதிலுக்கு சர்வ சாதாரணமாகக் பிரதிபலிப்பார். மறுமுறையும் ஒரு சந்தர்ப்பத்தில் நடிகர் திலகம் மீண்டும் கீழே விழுந்துவிட, இளையதிலகம் நாக்கை மடித்துக் கடித்து மீசையை முறுக்குவது செம ஜோர். பின் திரிசூலங்கள் இல்லாமல் இருவரும் ஒற்றைக்காலில் நொண்டிக்கொண்டே ஒருவரையொருவர் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொள்ள மொத்தத் தியேட்டரும் சீட் நுனியில். ராஜாளியின் மிக வேகமான கோபமான தாக்குதல்களை லாவகமாக தலைவர் சமாளிக்கும் சாமர்த்தியம், அந்த வயதிலும், (54) சற்று உடல் ப ருத்திருந்த நிலையிலும், நடிகர் திலகம் இளம் வயது பிரபுவுடன் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் அதுவும் ஒரு காலைக் கட்டிக் கொண்டு ஒற்றைக்காலில், பெரும்பாலும் 'டூப்' இல்லாமல் சண்டை செய்வது மெய் சிலிர்க்க வைக்கிறது. அதுவும் மோதுவது மகனுடன் என்பதால் எந்த காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாமல் இன்னும் அதிக சிரத்தை எடுத்து அந்த சண்டைக் காட்சியை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விடுவார் நடிகர் திலகம். இளைய திலகமும் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஆக்ரோஷம் காட்டி, தந்தையுடன் மோதி, கைத்தட்டல்களை அள்ளுவார். நடிகர் திலகம் ரசிகர்கள் பிரபு ரசிகர்கள் என்று தனித்தனி கோஷ்டிகள் வேறு உருவாக ஆரம்பித்தன.

மீண்டும் சொல்கிறேன். நடிகர் திலகத்தின் அனாயாசமான உழைப்பு இந்த சண்டைக்காட்சியில் தெரியும். இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் நடிகர் திலகத்திற்காக சில இடங்களில் போடப்பட்டிருக்கும் 'டூப்' பிரமாதமாக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பார் நடிகர் திலகத்தைப் போலவே... அவரது உடல்வாகு போலவே... காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சி.வி.ஆர்தான். சி.வி. ராஜேந்திரன் இயக்கிய அத்துனை படங்களிலும் சண்டைகாட்சிகள் படு நேர்த்தியாகவும், கவனமாகவும், அதே சமயம் ஸ்டைலாகவும்,அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். தலைவரை அழகு மன்மதனாக ஜொலிக்க வைத்து பெயர் வாங்கிய இயக்குனர் சண்டைக்காட்சிகளிலும் நடிகர் திலகத்திற்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தார். டூப் செலக்ஷனிலும் ஆள் பலே கில்லாடி. நன்றி C.V.R .

இந்த சண்டைக் காட்சி முடியும்போது தவறி பக்க வாட்டில் செருகிக் கொண்டிருக்கும் திரிசூலத்தின் மீது பிரபு தவறி விழப் போவார். தலைவர் அவரை திரிசூலம் குத்திவிடாமல் தடுத்துக் காப்பாற்றி விடுவார். காப்பாற்றி முடித்ததும் அந்த திரிசூலத்தையும், பின்பு பிரபுவையும் இரண்டு முறை மாறி மாறிப் பார்ப்பார் பாருங்கள். அடப் போங்கப்பா! என்ன லுக் சாமி அது! ("இந்தத் திரிசூலம் உன் மேலே படாமல் காப்பாற்றி விட்டேன் பார்த்தாயா! அது உன்னைக் குத்தியிருந்தால் என்னாவது? எவ்வளவு கூர்மையான திரிசூலம்! என்னால் பிழைத்தாய்!")

முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9kfMawmQpc8

Gopal.s
21st June 2013, 04:59 PM
வாசு,
நீங்கள் சொல்வது போல இளமை நாட்களை விடவே சுறு சுறுப்பாய் 23 வயது மகனுக்கு ஈடு கொடுப்பார் சிவாஜி. இந்த சண்டை காட்சி நான் ரசித்த ஒன்று. உங்கள் சுறுசுறுப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. மூன்று தொடர்கள் மாறி மாறி. குறைந்த பட்ஷம் 3 மணிநேர தின உழைப்பு. உங்களை என்ன சொல்லி பாராட்ட வாசு?

vasudevan31355
22nd June 2013, 08:49 AM
இன்று 'தினத்தந்தி' (22-6-2013) இதழில் வெளிவந்த 'சினிமாவின் மறுபக்கம்' என்ற தொடரில் 'பாசமலர்' காவியம் உருவான விதம் பற்றி ஆரூர்தாஸ் அவர்கள் எழுதியுள்ள அட்டகாசமான கட்டுரை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-43.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-43.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-43.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-43.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-28.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-28.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-21.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4-21.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-14.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/5-14.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-14.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/6-14.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7-12.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/7-12.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/8-7.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/8-7.jpg.html)

vasudevan31355
22nd June 2013, 08:57 AM
நிழற்படங்கள் தனியாக

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-44.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-44.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima2.jpg.html)

vasudevan31355
22nd June 2013, 08:58 AM
பாசமலரின் சாதனை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima3.jpg.html)

vasudevan31355
22nd June 2013, 09:00 AM
நடிகர் திலகத்தால் நல்வாழ்வு பெற்ற ஆரூர்தாஸ்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4.jpg.html)

vasudevan31355
22nd June 2013, 09:03 AM
http://thumbnails103.imagebam.com/24586/467d2e245858781.jpg

http://i2.ytimg.com/vi/aYcO5_bK9c0/hqdefault.jpg

'பாசமலர்' காவியத்தில் நடிகர் திலகத்தின் அபார பங்களிப்பைப் பற்றி ஆரூர்தாஸ் அவர்கள் குறிப்பிடுவதைப் படிக்கையில் கண்களில் நீர் நிறைகிறது. இப்படி ஒரு உடல் வருத்தம் செய்து காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக தன்னை முழுவதுமாக வருத்திக் கொண்ட அந்த நடிப்புலக மாமேதை நடிகரல்ல. கடவுள்தான்.

vasudevan31355
22nd June 2013, 09:24 AM
SILVER JUBILEE CELBRATIONS OF "PASAMALAR" - Very Rare Collections

Thanks to Thamizhthirai.com

'பாசமலர்' வெள்ளி விழா நிகழ்ச்சிப் படங்களை அப்-லோட் செய்த நல்லுள்ளங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/423599_203859303053173_1335542517_n.jpghttps://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/422787_203859329719837_1040229344_n.jpg
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/428656_203859416386495_861025933_n.jpghttps://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc1/428678_203859446386492_1778025550_n.jpg
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/430219_203859483053155_1330073879_n.jpghttps://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/429611_203859533053150_1639194444_n.jpg

vasudevan31355
22nd June 2013, 09:46 AM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/429096_203859849719785_918182223_n.jpghttps://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/429753_203859869719783_1717221638_n.jpg
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/426250_203859899719780_1797596683_n.jpghttps://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc1/423722_203859913053112_405804601_n.jpg
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc1/425260_203859943053109_1700534737_n.jpghttps://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/418389_203859963053107_240094778_n.jpg
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/420246_203860006386436_1894147290_n.jpghttps://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc1/428198_203860029719767_1647843165_n.jpg
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc1/426815_203860143053089_169477120_n.jpghttps://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/422069_203860089719761_1548317676_n.jpg

vasudevan31355
22nd June 2013, 09:50 AM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/418574_203860206386416_856131281_n.jpghttps://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/422948_203860176386419_1775208690_n.jpg
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/416882_203860226386414_417429930_n.jpghttps://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/430274_203860299719740_797589597_n.jpg
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc1/419361_203860249719745_1850864697_n.jpghttps://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/416894_203860283053075_1723890880_n.jpg

Gopal.s
22nd June 2013, 09:54 AM
வாசு சார்,

கான் புகைப்படங்கள் படு அழகு.

தமிழ் திரை பாசமலர் கொண்டாட்டங்கள் அடடா!!!

பாசமலர் நினைவலைகளுக்கு நன்றி. நான் larger than life முடிந்ததும் எடுக்க போகும் காவியம்.

vasudevan31355
22nd June 2013, 10:00 AM
நன்றி கோபால் சார்.

Gopal.s
22nd June 2013, 12:25 PM
எனக்கு பிடிபடாத விஷயம் சில NT படங்களுக்கு ரசிகர்களி டம் கிடைத்த cold shoulder மற்றும் blanket rejection . சொல்ல பட்ட காரணங்கள் சுவாரஸ்யமானது. இந்த மாதிரி படத்திலா NT நடிப்பது மற்றும் இது ஒரு சாதாரண நடிகர் செய்ய வேண்டிய ரோல் ஆச்சே? என்பது போல. இத்தனைக்கும் அனைத்து ரசிகர்களிலும் maturity ,ரசனை, தேர்ந்த அறிவு கொண்டவர்கள் சிவாஜி ரசிகர்களே. அவர் எந்த மாதிரி பாத்திரம் ஏற்றாலும் ஆதரித்து அவர் இமேஜ் வலையில் சிக்காமல் பார்த்து கொண்ட பெருமைக்குரியவர்கள்.
ஆனால் இந்த மாதிரி ரசிகர்களாலேயே கை விட பட்ட இரு படங்களை நான் ரசித்திருக்கிறேன். ஒன்று அன்பே ஆருயிரே ,இன்னொன்று லாரி டிரைவர் ராஜாகண்ணு.
ஒன்று middle urban class காமெடி ரசிகர்களை target செய்தது. இன்னொன்று கடைகோடி C சென்டர் ரசிகனுக்காக.
அன்பே ஆருயிரே படு ஜாலியான காமெடி டிராமா. NT தன் அந்தஸ்தை மறந்து ஒரு அப்பாவி deprived வாலிபன் பாத்திரத்தை ஜாலியாக செய்திருப்பார். dialogue comedy ,situational comedy ,slapstick என்று எல்லாவற்றையும் தெளித்திருப்பார்கள் திருலோக் சந்தர், A .L .நாராயணன். விசுவநாதன் சாரின் இரண்டு பிரமாத பாடல்கள் ,மூன்று கேட்கும்படி பாடல்கள்.இதை கை விட்ட காரணம் விளங்கவில்லை.
LDR இடைவேளை வரை படு ஜாலி. குத்தால அருவி எனக்கு பிடித்த குத்து பாட்டு. படத்தின் நோக்கமே கீழ்தட்டுதான் என்றதும் நாமும் மனத்தடைகளை அகற்றி கீழ்தட்டு ஆகிவிட வேண்டாமா? அந்த வகையில் சிறப்பாக உருவாகி இருந்தால் (சித்ரா பவுர்ணமி,தர்மராஜா போல ஏமாற்றாமல் ) ரசிக்க வேண்டியதுதானே?எனக்கு பிடித்ததே நம்பியார் வித்யாசமான "நாகா "காட்சிகள். புலி வேஷ காரனுடன் நாகமாக மோதல்,கடைசி காட்சி கண்ணாடி தொட்டி நக்கல் இவைதான். ஆனால் மூளையை கழற்றி விட்டு (இயக்குனரும் தெரிந்தே செய்த சுவாரஸ்ய தவறுதானே?)ரசிக்காமல் நமது விமரிசகர்கள்,பொது மக்கள் ரியலிஸ்ட் ஆக criticise பண்ணுவது எனக்கு வியப்பை தரும்.
நடிகர்திலகத்தின் தனித்துவமே இதுதானே? ஒரு புறம் உலக நடிகனாக தில்லானா வையும் மறுபுறம் சாமானிய கீழ்தட்டு ரசிகர்களின் ஸ்டார் ஆக பட்டை கிளப்பியதும்தானே?
நிஜமாகவே மிக அதிகம் வணிகத்தில் சாதித்தவை திரிசூலம், தியாகம், சந்திப்பு போன்ற சாமான்ய மக்களுக்கான படங்கள்தானே என்னும் போது ,நாமும் அவரை எல்லா படங்களிலும் ரசிப்பதுதானே சரி?படம் சிறப்பாக இல்லாமல் இருந்தால் விமரிசித்து ஒதுக்கலாம். ஆனால் Blanket rejection on someother pretext ?

vasudevan31355
22nd June 2013, 12:40 PM
எனக்கு பிடிபடாத விஷயம் சில NT படங்களுக்கு ரசிகர்களி டம் கிடைத்த cold shoulder மற்றும் blanket rejection . சொல்ல பட்ட காரணங்கள் சுவாரஸ்யமானது. இந்த மாதிரி படத்திலா NT நடிப்பது மற்றும் இது ஒரு சாதாரண நடிகர் செய்ய வேண்டிய ரோல் ஆச்சே? என்பது போல. இத்தனைக்கும் அனைத்து ரசிகர்களிலும் maturity ,ரசனை, தேர்ந்த அறிவு கொண்டவர்கள் சிவாஜி ரசிகர்களே. அவர் எந்த மாதிரி பாத்திரம் ஏற்றாலும் ஆதரித்து அவர் இமேஜ் வலையில் சிக்காமல் பார்த்து கொண்ட பெருமைக்குரியவர்கள்.
ஆனால் இந்த மாதிரி ரசிகர்களாலேயே கை விட பட்ட இரு படங்களை நான் ரசித்திருக்கிறேன். ஒன்று அன்பே ஆருயிரே ,இன்னொன்று லாரி டிரைவர் ராஜாகண்ணு.
ஒன்று middle urban class காமெடி ரசிகர்களை target செய்தது. இன்னொன்று கடைகோடி C சென்டர் ரசிகனுக்காக.
அன்பே ஆருயிரே படு ஜாலியான காமெடி டிராமா. NT தன் அந்தஸ்தை மறந்து ஒரு அப்பாவி deprived வாலிபன் பாத்திரத்தை ஜாலியாக செய்திருப்பார். dialogue comedy ,situational comedy ,slapstick என்று எல்லாவற்றையும் தெளித்திருப்பார்கள் திருலோக் சந்தர், A .L .நாராயணன். விசுவநாதன் சாரின் இரண்டு பிரமாத பாடல்கள் ,மூன்று கேட்கும்படி பாடல்கள்.இதை கை விட்ட காரணம் விளங்கவில்லை.
LDR இடைவேளை வரை படு ஜாலி. குத்தால அருவி எனக்கு பிடித்த குத்து பாட்டு. படத்தின் நோக்கமே கீழ்தட்டுதான் என்றதும் நாமும் மனத்தடைகளை அகற்றி கீழ்தட்டு ஆகிவிட வேண்டாமா? அந்த வகையில் சிறப்பாக உருவாகி இருந்தால் (சித்ரா பவுர்ணமி,தர்மராஜா போல ஏமாற்றாமல் ) ரசிக்க வேண்டியதுதானே?எனக்கு பிடித்ததே நம்பியார் வித்யாசமான "நாகா "காட்சிகள். புலி வேஷ காரனுடன் நாகமாக மோதல்,கடைசி காட்சி கண்ணாடி தொட்டி நக்கல் இவைதான். ஆனால் மூளையை கழற்றி விட்டு (இயக்குனரும் தெரிந்தே செய்த சுவாரஸ்ய தவறுதானே?)ரசிக்காமல் நமது விமரிசகர்கள்,பொது மக்கள் ரியலிஸ்ட் ஆக criticise பண்ணுவது எனக்கு வியப்பை தரும்.
நடிகர்திலகத்தின் தனித்துவமே இதுதானே? ஒரு புறம் உலக நடிகனாக தில்லானா வையும் மறுபுறம் சாமானிய கீழ்தட்டு ரசிகர்களின் ஸ்டார் ஆக பட்டை கிளப்பியதும்தானே?
நிஜமாகவே மிக அதிகம் வணிகத்தில் சாதித்தவை திரிசூலம், தியாகம், சந்திப்பு போன்ற சாமான்ய மக்களுக்கான படங்கள்தானே என்னும் போது ,நாமும் அவரை எல்லா படங்களிலும் ரசிப்பதுதானே சரி?படம் சிறப்பாக இல்லாமல் இருந்தால் விமரிசித்து ஒதுக்கலாம். ஆனால் Blanket rejection on someother pretext ?

யார் அது?!!!!!!!.... கோபாலா! ம்ஹூம்.... நான் நம்ப மாட்டேம்பா.... அய்யா புண்ணியவான்களே! யாரோ கோபாலின் user nameஐயும், paasword ஐயும் எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டு விளையாடுகிறீர்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. கோபால்! தெரியாமல் நடந்த தவறு மன்னித்து விட்டு விடுங்கள். ID, password ஐ மாற்றி விடுங்கள்.

நான் பார்த்ததில்லே கேட்டதில்லே புதுசு
இப்போ படபடன்னு அடிக்குதய்யா மனசு....:)

vasudevan31355
22nd June 2013, 12:46 PM
கோ,

தேர் +வடம் + இருவர் அல்லது மூவர். மற்ற நண்பர்கள்?

yoyisohuni
22nd June 2013, 12:48 PM
ஆடைகளின் அழகரை தொகுக்கும் அன்பரே, நமது காட்டுப்பூச்சியை தெரியாதா? நம்ம "சின்னக் கவுடணமணி" அண்ணன் சந்தானம் அவர்களின் சிறுத்தை படத்தை நினைவுறுத்துவதற்காகவே போட்டோ வேறு போட்டு வைத்திருக்கிறேனே!

vasudevan31355
22nd June 2013, 12:50 PM
லாரி ட்ரைவர் ராஜாக்கண்ணு

சபாஷ்! தெய்வமே வரம் கொடுத்துடுச்சி...இனிமே என்ன? பூந்து வெள்ளாடு ராஜா.

http://padamhosting.com/out.php/i141776_vlcsnap2012020112h06m50s230.pnghttp://padamhosting.com/out.php/i141777_vlcsnap2012020112h07m53s101.png
http://padamhosting.com/out.php/i141778_vlcsnap2012020112h07m46s28.pnghttp://padamhosting.com/out.php/i141779_vlcsnap2012020112h07m40s221.png
http://padamhosting.com/out.php/i141780_vlcsnap2012020112h07m25s77.pnghttp://padamhosting.com/out.php/i141781_vlcsnap2012020112h07m00s81.png

yoyisohuni
22nd June 2013, 12:50 PM
"கிக்கான ஃபிகர் எப்படி மக்கான ஃபிகரு" என்ற அனாலிஸஸுக்காகவே அவரின் பரமரசிகனாகி விட்டேன்.
சரி, ஆணழகரை தொடருவோம்.

Gopal.s
22nd June 2013, 12:54 PM
ஆடைகளின் அழகரை தொகுக்கும் அன்பரே, நமது காட்டுப்பூச்சியை தெரியாதா? நம்ம "சின்னக் கவுடணமணி" அண்ணன் சந்தானம் அவர்களின் சிறுத்தை படத்தை நினைவுறுத்துவதற்காகவே போட்டோ வேறு போட்டு வைத்திருக்கிறேனே!
சின்ன கவுண்டமணி நம் favourite வடிவேலு. சந்தானம் சின்ன விவேக்.என்னோட favourite சந்திரபாபு,சுருளிராஜன், கவுண்டர் , வடிவேலு, சந்தானம்.

vasudevan31355
22nd June 2013, 12:55 PM
லாரி ட்ரைவர் ராஜாக்கண்ணு

http://i1.ytimg.com/vi/hh8yZZ3hRgY/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/4xn2EN2xwtE/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/_meD8n91Ikk/0.jpghttp://i1.ytimg.com/vi/LPr2Tk_aXqk/hqdefault.jpg

Gopal.s
22nd June 2013, 12:56 PM
குத்தால அருவி, கடைசி கிளப் டான்ஸ் போடுவியா அதை விட்டு? (முடிஞ்சா கலர் நாயகி சாப்பாடு)

vasudevan31355
22nd June 2013, 12:57 PM
சின்ன கவுண்டமணி நம் favourite வடிவேலு. சந்தானம் சின்ன விவேக்.என்னோட favourite சந்திரபாபு,சுருளிராஜன், கவுண்டர் , வடிவேலு, சந்தானம்.

என்னுடைய favourite கோபால்.:-D

vasudevan31355
22nd June 2013, 01:04 PM
குத்தால அருவி, கடைசி கிளப் டான்ஸ் போடுவியா அதை விட்டு? (முடிஞ்சா கலர் நாயகி சாப்பாடு)

அடப்பாவி! கெழவியாகிப் போச்சய்யா அது!

vasudevan31355
22nd June 2013, 01:23 PM
குத்தால அருவி, கடைசி கிளப் டான்ஸ் போடுவியா அதை விட்டு?


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HuFyRppws24

vasudevan31355
22nd June 2013, 01:38 PM
"கிக்கான ஃபிகர் எப்படி மக்கான ஃபிகரு" என்ற அனாலிஸஸுக்காகவே அவரின் பரமரசிகனாகி விட்டேன்.


நானும் தங்களோடு சேர்ந்து கொள்கிறேன்.

KCSHEKAR
22nd June 2013, 01:59 PM
டியர் வாசுதேவன் சார்,

தினத்தந்தியில் வெளிவந்த ஆரூர்தாசின் பாசமலர் அனுபவங்களையும், அதனோடு பாசமலர் வெள்ளிவிழா புகைப்படங்களையும் சுடச்சுட பதிவு செய்து அசத்தியுள்ளீர்கள். நன்றி.

iufegolarev
22nd June 2013, 09:07 PM
எனக்கு பிடிபடாத விஷயம் சில nt படங்களுக்கு ரசிகர்களி டம் கிடைத்த cold shoulder மற்றும் blanket rejection . சொல்ல பட்ட காரணங்கள் சுவாரஸ்யமானது. இந்த மாதிரி படத்திலா nt நடிப்பது மற்றும் இது ஒரு சாதாரண நடிகர் செய்ய வேண்டிய ரோல் ஆச்சே? என்பது போல. இத்தனைக்கும் அனைத்து ரசிகர்களிலும் maturity ,ரசனை, தேர்ந்த அறிவு கொண்டவர்கள் சிவாஜி ரசிகர்களே. அவர் எந்த மாதிரி பாத்திரம் ஏற்றாலும் ஆதரித்து அவர் இமேஜ் வலையில் சிக்காமல் பார்த்து கொண்ட பெருமைக்குரியவர்கள்.
ஆனால் இந்த மாதிரி ரசிகர்களாலேயே கை விட பட்ட இரு படங்களை நான் ரசித்திருக்கிறேன். ஒன்று அன்பே ஆருயிரே ,இன்னொன்று லாரி டிரைவர் ராஜாகண்ணு.
ஒன்று middle urban class காமெடி ரசிகர்களை target செய்தது. இன்னொன்று கடைகோடி c சென்டர் ரசிகனுக்காக.
அன்பே ஆருயிரே படு ஜாலியான காமெடி டிராமா. Nt தன் அந்தஸ்தை மறந்து ஒரு அப்பாவி deprived வாலிபன் பாத்திரத்தை ஜாலியாக செய்திருப்பார். Dialogue comedy ,situational comedy ,slapstick என்று எல்லாவற்றையும் தெளித்திருப்பார்கள் திருலோக் சந்தர், a .l .நாராயணன். விசுவநாதன் சாரின் இரண்டு பிரமாத பாடல்கள் ,மூன்று கேட்கும்படி பாடல்கள்.இதை கை விட்ட காரணம் விளங்கவில்லை.
Ldr இடைவேளை வரை படு ஜாலி. குத்தால அருவி எனக்கு பிடித்த குத்து பாட்டு. படத்தின் நோக்கமே கீழ்தட்டுதான் என்றதும் நாமும் மனத்தடைகளை அகற்றி கீழ்தட்டு ஆகிவிட வேண்டாமா? அந்த வகையில் சிறப்பாக உருவாகி இருந்தால் (சித்ரா பவுர்ணமி,தர்மராஜா போல ஏமாற்றாமல் ) ரசிக்க வேண்டியதுதானே?எனக்கு பிடித்ததே நம்பியார் வித்யாசமான "நாகா "காட்சிகள். புலி வேஷ காரனுடன் நாகமாக மோதல்,கடைசி காட்சி கண்ணாடி தொட்டி நக்கல் இவைதான். ஆனால் மூளையை கழற்றி விட்டு (இயக்குனரும் தெரிந்தே செய்த சுவாரஸ்ய தவறுதானே?)ரசிக்காமல் நமது விமரிசகர்கள்,பொது மக்கள் ரியலிஸ்ட் ஆக criticise பண்ணுவது எனக்கு வியப்பை தரும்.
நடிகர்திலகத்தின் தனித்துவமே இதுதானே? ஒரு புறம் உலக நடிகனாக தில்லானா வையும் மறுபுறம் சாமானிய கீழ்தட்டு ரசிகர்களின் ஸ்டார் ஆக பட்டை கிளப்பியதும்தானே?
நிஜமாகவே மிக அதிகம் வணிகத்தில் சாதித்தவை திரிசூலம், தியாகம், சந்திப்பு போன்ற சாமான்ய மக்களுக்கான படங்கள்தானே என்னும் போது ,நாமும் அவரை எல்லா படங்களிலும் ரசிப்பதுதானே சரி?படம் சிறப்பாக இல்லாமல் இருந்தால் விமரிசித்து ஒதுக்கலாம். ஆனால் blanket rejection on someother pretext ?

அட .....கோபால் சார் ....தாங்களா இப்படி கூறுவது? அதுவும் lorry driver rajakannu மற்றும் 80 களில் வந்த நடிகர் திலகம் திரைப்படங்களை பற்றி கூறுவது.......என்ன அதிசயம் !!

நீங்கள் தான் 80 களில் வந்த திரைப்படங்களை கரித்து கொட்டுவீர்களே? ஏன் இந்த திடீர் மனமாற்றம் ? இதை போல மிருதங்க சக்ரவர்த்தி, ராஜ ராஜ சோழன்(80 களில் வந்த திரைப்படம் இல்லையென்றாலும் ), கருட சௌக்யமா?, திரைப்படத்தில் உங்கள் எண்ணங்களில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? பொதுவாக முதல் மரியாதை மற்றும் தேவர் மகன் (திரு.கமலஹாசன் படம் என்பதால்) இந்த இரண்டு படங்களை மட்டுமே பாராட்டியவர் ஆயிற்றே தாங்கள் !

ஏதோ நடக்கிறது ! ஹ்ம்ம்...! நடப்பவை நல்லதாக இருந்தால் சரி !

iufegolarev
22nd June 2013, 09:13 PM
MURASU தொலைகாட்சியில் பலமுறையாக ......! திரையிடப்பட்டு வந்த மெகா ஹிட் திரைப்படம், நடிக மாமன்னன் திரை உலகின் சித்தர் சிவாஜி கணேசன் பார்த்திபனாக, விக்ரமனாக அனைத்து நடிகர்களுக்கும் நாயகன், வில்லன் பாத்திரத்தை எப்படி நடிக்கவேண்டும் என்று கற்றுகொடுத்த "உத்தம புத்திரன்"

http://www.youtube.com/watch?v=E0tbhP9lZsg

Gopal.s
22nd June 2013, 09:18 PM
அட .....கோபால் சார் ....தாங்களா இப்படி கூறுவது? அதுவும் lorry driver rajakannu மற்றும் 80 களில் வந்த நடிகர் திலகம் திரைப்படங்களை பற்றி கூறுவது.......என்ன அதிசயம் !!

நீங்கள் தான் 80 களில் வந்த திரைப்படங்களை கரித்து கொட்டுவீர்களே? ஏன் இந்த திடீர் மனமாற்றம் ? இதை போல மிருதங்க சக்ரவர்த்தி, ராஜ ராஜ சோழன்(80 களில் வந்த திரைப்படம் இல்லையென்றாலும் ), கருட சௌக்யமா?, திரைப்படத்தில் உங்கள் எண்ணங்களில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? பொதுவாக முதல் மரியாதை மற்றும் தேவர் மகன் (திரு.கமலஹாசன் படம் என்பதால்) இந்த இரண்டு படங்களை மட்டுமே பாராட்டியவர் ஆயிற்றே தாங்கள் !

ஏதோ நடக்கிறது ! ஹ்ம்ம்...! நடப்பவை நல்லதாக இருந்தால் சரி !
ஏன் துணையை மனமுவந்து பாராட்டியுள்ளேனே ?

iufegolarev
22nd June 2013, 10:06 PM
நம்முடைய திரி நண்பர்களுக்கு -

மையம் திரியில் முதன் முதலாக நாட்டிய பேரொளி பத்மினி அவர்களின் பேட்டி - நடிகர் திலகம் பற்றி அவர் உரைப்பது கேட்டாலே மெய்சிலிர்கிறது ! சிவாஜி மாதிரி இன்னொரு நடிகர் வரமுடியாது ! அவரோடது ஒரு Era !

http://www.youtube.com/watch?v=sbzd0XwWqDA


Part 1

http://www.youtube.com/watch?v=Rh1TaM09hdw

Murali Srinivas
23rd June 2013, 12:06 AM
தவிர்க்க இயலாத சூழல், இரவு நேரங்களில் ஏற்படும் குறைந்த மின் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக ஒரு வாரமாக எந்தப் பதிவும் இட முடியவில்லை. Sorry. பதிவுகளிட்டு கலக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கார்த்திக்,

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைந்து வருடங்கள் அதாவது 1967 முதல் 1982 வரை என்று வைத்துக் கொள்ளலாம் அந்தக் காலக் கட்டங்களில் நடைபெற்ற திரைப்பட அரசியல் நிகழ்வுகள் நமது நெஞ்சிலே பசுமரத்தாணி போல பதிந்திருப்பதால் அந்த நாட்களைப் பற்றி எழுதும் போது நடையில் ஒரு உற்சாகம் வருகிறது.

இதை அடிக்கடி தொடர முயற்சிக்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
23rd June 2013, 12:12 AM
வாசு சார்,

முதலில் பிடியுங்கள் உங்களுக்கான பாராட்டுகளை. நாயகியர் விஷுவல் தொடர், சண்டைக் காட்சி தொடர் இவற்றை தொடர்ந்து ஆடை அலங்கார அணிவகுப்பு தொடரும் அற்புதம். இதை ஆரம்பிக்க போகிறீர்கள் என் நீங்கள் சொன்னபோது உங்களுக்கு வாழ்த்து தெரிவித்த நான் என்ன நினைத்திருந்தேன் என்றால் நடிகர் திலகம் ஆடை அலங்காரத்தில் ஜொலித்த சில பல படங்களை நீங்கள் மேற்கோள் காட்டப் போகிறீர்கள் என்று. ஆனால் முதல் படம் தொட்டு ஒவ்வொன்றையும் அலச போகிறீர்கள் என்பது sweet surprise. அதிலும் திரும்பிப் பார் பதிவின் மூலமாக இந்த திரியின் Super Star பதிவாளர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டீர்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. நமது மையத்தின் வேறு சில section-களில் மட்டுமே தென்படும் ஒரு சிலரை [சின்ன கண்ணன் மற்றும் காட்டு பூச்சி போன்றவர்களை எல்லாம்] இந்த திரியின் பதிவாளர்களாக மாற்றியிருக்கிறீர்கள் என்று சொன்னால் அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

[சின்ன கண்ணன், நீங்கள் மதுரையா? என்னைப் போல் ஒருவன், தங்கம் என்ற வார்த்தைகளைப் பார்த்ததும் ஒரே சந்தோஷம்]

பாச மலர் படத்தின் வெள்ளி விழாப் புகைப்படங்களுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது நடிகர் R.S சிவாஜி அவர்களுக்குதான். தயாரிப்பாளர் நடிகர் M.R சந்தானம் அவர்களின் மகனும் இயக்குனர் சந்தான பாரதி அவர்களின் சகோதரருமான இவர்தான் இந்த புகைப்படங்களை முதன் முதலாக Facebook-ல் அப்டேட் செய்தார்.[இந்தப் படத்தை மோகன் ஆர்ட்ஸ் மோகன் அவர்களுடன் இணைந்து தயாரித்தவர் M.R சந்தானம் எனபது உங்களுக்கு தெரிந்த செய்தி. பின்னர் அவர்கள் இருவரும் இதே பானரில் குங்குமம் படத்தையும் தயாரித்தனர்].ஆனால் அங்கிருந்து அதை மற்றவர்கள் எடுத்து போட்டுக் கொண்டனர்.

இனி உங்கள் main விஷயத்திற்கு வருகிறேன். ஞான ஒளி திரைப்படத்தை நமது NT FAnS அமைப்பின் சார்பில் நிச்சயமாக திரையிடுவோம். ஆனால் அது நண்பர் கோபால் வரும் போது இயலுமா என்று தெரியவில்லை. காரணம் கோபால் அடுத்த மாதம் வருவதாக சொல்லியிருக்கிறார்.

அடுத்த மாதம் [ஜூலை] அருண் போலவே மிக முக்கியமான நபர் ஒருவர், அவர்தம் [திரைப்பட] வாழ்க்கையில் சிறப்பான கட்டத்தை கடக்க இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதை கொடுத்து சிறப்பு செய்ய வேண்டுமென்று முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அநேகமாக ஜூலை 14-ந் தேதி அந்த நிகழ்வு இருக்கலாம். ஆகையால் அதற்கு அடுத்து வரும் மாதங்களில் நாம் ஆண்டனி/அருண் இருவரையும் வரவேற்போம்.

அன்புடன்

Murali Srinivas
23rd June 2013, 12:15 AM
சின்ன கண்ணன் வேலாலே விழிகள் பற்றி சொன்னார். அவருக்காக இந்த பதிவு.

மெல்லிசை மன்னரின் ஒரு இசை நிகழ்ச்சியில் கேட்ட தகவல். பொதுவாக கர்நாடக இசைக் கச்சேரிகளில் பல்வேறு ராகங்களில் அமைந்துள்ள பல்வேறு கீர்த்தனைகள் பாடப்படும். ஆனால் ராகங்களில் காலையில் பாடும் ராகம் மாலையில் பாடும் ராகம் என்றெல்லாம் உண்டு. அவற்றை முறையற்ற நேரங்களில் பாடினால் ராக தோஷம் ஏற்படும் என்றும் அது பாடகருக்கு நன்மை செய்யாது என்று ஒரு நம்பிக்கை. ஆனால் கச்சேரி என்று வந்து விட்டால் இன்ன ராகத்தை பாட மாட்டேன் என்றெல்லாம் ஒதுக்க முடியாது. ஆகவே ராக தோஷம் ஏறபடக் கூடிய பாடல்களை பாடிய பிறகு கச்சேரியை நிறைவு செய்வதற்கு முன் தோஷ நிவாரணியான ராகத்தில் அமைந்துள்ள பாடலை பாடகர் பாடி தோஷ நிவர்த்தி செய்துக் கொள்வது வழக்கமாம்! அப்படி தோஷ நிவர்த்தி தரும் ராகம் மத்யமாவதி. அந்த மத்யமாவதி ராகத்தில் அமைந்திருக்கும் பாடல்தான் வேலாலே விழிகள். இந்த தகவலை சொல்லிவிட்டு அந்த மெல்லிசை நிகழ்ச்சியில் இந்த அமுதத்தை செவிக்குணவாக வழங்கினார்கள்!

அன்புடன்

Murali Srinivas
23rd June 2013, 12:16 AM
பாஞ்சாலகுறிச்சியின் சிங்கத்தை வரவேற்க தயாராவோம். நமது திரியில் மட்டுமல்ல. மும்பை நகரத்தில் இந்த சிங்கத்திற்கு மெருகேற்றும் வேலை மிக சுறுசுறுப்பாக நடைபெறுகிறதாமே ? படத்தின் உரிமையை வைத்திருப்பவர்கள் இப்போதே வணிகம் பேச ஆரம்பித்து விட்டனராமே? City NSC ஏரியாவின் வணிக தொகையை கேட்டாலே அதிருகிறதாமே?

அன்றும் இன்றும் என்றென்றும் சாதனை சித்திரத்தின் மறு பெயராக விளங்கி கொண்டிருக்கும் சிம்மக் குரலோனின் Magnum Opus-ஐ வரவேற்க தயாராவோம்!

அன்புடன்

RAGHAVENDRA
23rd June 2013, 01:12 AM
அடுத்த மாதம் [ஜூலை] அருண் போலவே மிக முக்கியமான நபர் ஒருவர், அவர்தம் [திரைப்பட] வாழ்க்கையில் சிறப்பான கட்டத்தை கடக்க இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதை கொடுத்து சிறப்பு செய்ய வேண்டுமென்று முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அநேகமாக ஜூலை 14-ந் தேதி அந்த நிகழ்வு இருக்கலாம். ஆகையால் அதற்கு அடுத்து வரும் மாதங்களில் நாம் ஆண்டனி/அருண் இருவரையும் வரவேற்போம்.
அன்புடன்

பிராணநாதா, பிரபோ, லிங்கேஸ்வரா, சித்தமெல்லாம் நிறைந்தவனே, என்னைப் பார்க்க மாட்டாயா...

RAGHAVENDRA
23rd June 2013, 07:11 AM
Congratulations Sowri Sir for reaching 100 valuable posts within a short span of time. Keep on posting more and more to reach many landmark numbers

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/miscel/SOWRI100JUNE2013_zpsb23fd307.jpg

This image is in 3D. view with 3d glasses.

Gopal.s
23rd June 2013, 07:31 AM
அட பாவிகளா,
வேண்டியவனாக இருந்தால் பத்து, இருபதெல்லாம் கொண்டாடி மகிழ்வீர்கள் போல ?
நூறுக்கு வாழ்த்துக்கள்.

Gopal.s
23rd June 2013, 07:50 AM
யார் அது?!!!!!!!.... கோபாலா! ம்ஹூம்.... நான் நம்ப மாட்டேம்பா.... அய்யா புண்ணியவான்களே! யாரோ கோபாலின் user nameஐயும், paasword ஐயும் எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டு விளையாடுகிறீர்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. கோபால்! தெரியாமல் நடந்த தவறு மன்னித்து விட்டு விடுங்கள். ID, password ஐ மாற்றி விடுங்கள்.

நான் பார்த்ததில்லே கேட்டதில்லே புதுசு
இப்போ படபடன்னு அடிக்குதய்யா மனசு....:)
சிறப்பாக இல்லையென்றால் விமரிசிக்கும் உரிமை. சரியா படி ராஜா.

எல்லாரும் மேலத்தான் படிக்கிறீங்களே தவிர அடில்லெ உள்ள matter ஐ படிக்க
மாட்டேன்றீங் களே? ----இப்படிக்கு ரங்கன்.

iufegolarev
23rd June 2013, 09:21 AM
ஏன் துணையை மனமுவந்து பாராட்டியுள்ளேனே ?

ஒ அப்போ துணை நீங்க பாராட்டாம கூட இருப்பீங்களா? அந்த படத்தை பார்த்த யாரும் பாராட்டாம இருந்தா அவங்க மனுஷங்களே இல்லே அது தெரியுமோ? :-)

iufegolarev
23rd June 2013, 09:25 AM
அட பாவிகளா,
வேண்டியவனாக இருந்தால் பத்து, இருபதெல்லாம் கொண்டாடி மகிழ்வீர்கள் போல ?
நூறுக்கு வாழ்த்துக்கள்.

என்னது....எனக்கு ராகவேந்தர் சார் ஒரு advance congrats போட்டவுடனேயே திரியில ஒரு தீஞ்ச நாத்தம் வருதே......அதுவும் வெளியூரிலேர்ந்து வர்ற தீஞ்ச நாத்தம் மாதிரி இருக்கு ?

திருபரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருக திருத்தணி மலைமீது எதிரொலிக்கும் இந்த பாடல் அன்று...அதே பாடல் சற்று மாற்றி....சென்னை மாநகரில் நீ பாராட்டினால் ராகவேந்திர...VIETNAAM நாட்டில் இருந்து தீஞ்ச நாத்தம் வரும்...இது இன்று..!

வாசுதேவன் சார்....அந்த phenoil அல்லது room freshner edunga சார் !!! ஹி..ஹி..

iufegolarev
23rd June 2013, 11:15 AM
Congratulations Sowri Sir for reaching 100 valuable posts within a short span of time. Keep on posting more and more to reach many landmark numbers

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/miscel/SOWRI100JUNE2013_zpsb23fd307.jpg

This image is in 3D. view with 3d glasses.

DEAR RAGHAVENDRAN SIR,

MANY MANY THANKS FOR YOUR KIND WISHES....WITH OUR SIDHDHAR's BLESSINGS and ALL WISHES OF OUR FRIENDS IN HUB, I SHALL TRY TO CONTRIBUTE WHATEVER THAT I COULD TO BRING OUT SIDHDHAR's LAURELS TO THE YOUNGER AND FUTURE GENERATIONS.. !

MY SPECIAL THANKS TO GOPAL SIR.... :-) NEYVELIYAAR :-) MR.KARTHIK, Mr.RAGULRAM, Mr.GOLDSTAR SATISH, MURALI SRINIVAS SIR (SPECIAL MENTION) & OUR GOOD & MOST UNDERSTANDING FRIENDS - VINODH Sir, MAASANAM SIR !

Gopal.s
23rd June 2013, 12:54 PM
சின்ன கண்ணன் வேலாலே விழிகள் பற்றி சொன்னார். தோஷ நிவர்த்தி தரும் ராகம் மத்யமாவதி. அந்த மத்யமாவதி ராகத்தில் அமைந்திருக்கும் பாடல்தான் வேலாலே விழிகள்.
மத்யமாவதியின் மற்ற நல்ல பாட்டுக்கள்.
முத்துக்களோ கண்கள்
மதன மாளிகையில்.

mr_karthik
23rd June 2013, 01:07 PM
அடுத்த மாதம் [ஜூலை] அருண் போலவே மிக முக்கியமான நபர் ஒருவர், அவர்தம் [திரைப்பட] வாழ்க்கையில் சிறப்பான கட்டத்தை கடக்க இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதை கொடுத்து சிறப்பு செய்ய வேண்டுமென்று முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அநேகமாக ஜூலை 14-ந் தேதி அந்த நிகழ்வு இருக்கலாம். ஆகையால் அதற்கு அடுத்து வரும் மாதங்களில் நாம் ஆண்டனி/அருண் இருவரையும் வரவேற்போம்.


பிரிஸ்டிஜ் பத்மநாபன்....?

mr_karthik
23rd June 2013, 01:14 PM
அன்புள்ள நண்பர்களுக்கு,

இரண்டு பக்கங்களுக்கு முன் நான் பதித்திருந்த நடிகர்திலகத்தின் நினைவு இல்லம் பற்றிய பதிவுக்கு தனி மடலில் பல கண்டனங்கள் வந்துள்ளன. அப்பதிவை நான் நீக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளன. மாற்று முகாம் நண்பர்களிடம் இருந்து “உதாரணத்துக்கு எங்கள் தலைவர் நினைவு இல்லத்தை இழுக்காதே” என்று வந்த கண்டனத்தையாவது ஒப்புக்கொள்ளலாம். ஆனால் நமது நண்பர்கள் சிலரே கூட எனது பதிவைப் புரிந்துகொள்ளாமல், பதிவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். (அந்தக் கண்டனங்களை திரியிலேயே பதித்திருந்தால் பலரும் படித்து உண்மையை உணர்ந்திருக்க முடியும்).

இருப்பினும் எனது பதிவில் ஆட்சேபத்துக்குரிய விஷயம் ஏதும் இல்லையாதலால், பதிவை நீக்காதது மட்டுமல்ல. அதில் ஒரு புள்ளியைக்கூட எடிட் செய்யாமல் அப்படியே விட்டிருக்கிறேன். பார்ப்போர் உண்மையை தெரிந்துகொள்ளட்டும்.

இத்தனைக்கும் தவறான எந்த கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. எம்.ஜி.ஆர். அவர்கள் ராமவரம் தோட்ட இல்லத்துக்குச் சென்றபின் தி.நகர் ஆற்காடு முதலி தெரு இல்லம். 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்' அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அதைத்தான் ஜானகி அம்மையார் 'எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக' மாற்றியமைத்தார். அதேபோல ராயப்பேட்டை பெசன்ட் ரோடு 'சிவாஜி பிலிம்ஸ்' அலுவலக கட்டிடம்தான் (போக்ரோடு 'அன்னை இல்லத்தில்' குடியேறும் முன்னர்) நடிகர்திலகத்தின் இல்லமாக இருந்து வந்தது. கடைசி மகள் தேன்மொழி தவிர மற்ற அனைவரும் அங்கு பிறந்தவர்கள்தான். இப்போது அந்த 'சிவாஜி பிலிம்ஸ்' கட்டிடத்தைப் புதுப்பித்து அதை நடிகர்திலகம் நினைவு இல்லமாக மாற்றினால் என்ன?. இதற்கு எந்த அரசைக்கேட்க வேண்டும்?. எந்த நடிகர் சங்கத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் வேண்டும்?. எதுவும் தேவையில்லை. ஜானகி அம்மையார் தனியொருவராக தன கணவருக்கு நினைவு இல்லம் அமைக்க எடுத்த முயற்சியை, (தற்போது மூன்றாவது தலைமுறையும்கூட நடிக்க வந்திருக்கும் நிலையில்) நடிகர்திலகத்தின் வாரிசுகளால் நிறைவேற்றி தந்தைக்கு மரியாதை செலுத்த முடியாதா?.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஏழு நகரங்களில் நடிகர்திலகத்தின் முழு உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நடிகர்திலகத்தின் வாரிசுகளின் பங்களிப்பு எதுவுமில்லை (சிலை திறப்பு விழாக்களில் கலந்துகொள்வது தவிர).

எனவே நினைவு இல்லமாவது அமைத்து தந்தைக்கு பெருமை சேர்க்கட்டுமே என்ற தொனியில் கேட்டிருந்தேன். அதற்கு வந்த எதிர்ப்பைப்பார்த்து மலைத்தேன். நடிகர்திலகத்தின் நினைவு இல்லத்துக்கு நமக்குள்ளேயே இவ்வளவு எதிர்ப்பா? என்று எண்ணி அதிர்ந்தேன்.

வாழ்க அவர்கள்.... ஒழிக நான்......... (இனியும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திரியிலேயே எதிர்க்கலாம். மறைமுகம் தேவையில்லை)..

iufegolarev
23rd June 2013, 01:36 PM
திரு கார்த்திக் அவர்களுக்கு

நீங்கள் எழுதிய கருத்தை நானும் படித்தேன். அது முழுவதும் உங்களுடைய கருத்துதான். அதை எழுதவும், பிரசுரிக்கவும் தங்களுக்கு முழு உரிமை மற்றும் அதிகாரம், சுதந்திரம் இருக்கிறது.

நீங்கள் எழுதிய பதிவு மிகவும் ஞாயமானதாகும் மற்றும் மறுப்பதற்கோ அல்லது எதிர்பதர்க்கோ அதில் ஒன்றுமே இல்லை.
இந்த கருத்தை நானும் வழிமொழிகிறேன். !

நல்ல பேரை எடுக்கவேண்டும் என்பதற்காக ஜால்ரா தட்டுவது மட்டும் ஒரு உண்மையான ரசிகனின் கடமையல்ல என்பதை அதை மட்டுமே செய்பவர்கள் உணரவேண்டும் என்பதுதான் எனது விருப்பமும் கூட.

திரு.முசிரிபுத்தன் அவர்கள் மற்றும் திரு.சின்ன அண்ணாமலை அவர்களிடயே, அவர்களுக்குள்ள உள்ள வித்தியாசத்தை திரியில் எழுதினால் மட்டும் போதாது. திரு.முசிரிபுத்தன் அவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை atleast நாமாவது கற்றுகொள்ளலாமே ?

மாற்று முகாம் நண்பர் யாராக இருப்பினும், அவருக்கு அவரது கருத்தை உரைக்க சுதந்திரம் இருக்கிறது.
அதே நேரத்தில் உங்களை அதை செய்யாதே இதை செய்யாதே என்று கூறும் அதிகாரம், உங்களுடைய சுதந்திரத்தில் தலையிடும் உரிமை அவர்களுக்கும் அறவே கிடையாது, அது ஞாயமான விஷயமாக இருக்கும் பட்சத்தில் !

நல்லது கெட்டதை தக்க தருணத்தில் எடுத்துரைப்பது ஒரு உண்மையான ரசிகனின் கடமையாகும் என்பது எனது கருத்து !

நீங்கள் எழுதிய பதிவு 100% உண்மை. ஆகையால் உங்கள் பதிவை தயவு செய்து நீங்கள் நீக்கவோ edit செய்யவோ வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன் !

iufegolarev
23rd June 2013, 01:55 PM
அன்புள்ள நண்பர்களுக்கு,



இருப்பினும் எனது பதிவில் ஆட்சேபத்துக்குரிய விஷயம் ஏதும் இல்லையாதலால், பதிவை நீக்காதது மட்டுமல்ல. அதில் ஒரு புள்ளியைக்கூட எடிட் செய்யாமல் அப்படியே விட்டிருக்கிறேன். பார்ப்போர் உண்மையை தெரிந்துகொள்ளட்டும்.

இத்தனைக்கும் தவறான எந்த கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. எம்.ஜி.ஆர். அவர்கள் ராமவரம் தோட்ட இல்லத்துக்குச் சென்றபின் தி.நகர் ஆற்காடு முதலி தெரு இல்லம். 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்' அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அதைத்தான் ஜானகி அம்மையார் 'எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக' மாற்றியமைத்தார். அதேபோல ராயப்பேட்டை பெசன்ட் ரோடு 'சிவாஜி பிலிம்ஸ்' அலுவலக கட்டிடம்தான் (போக்ரோடு 'அன்னை இல்லத்தில்' குடியேறும் முன்னர்) நடிகர்திலகத்தின் இல்லமாக இருந்து வந்தது. கடைசி மகள் தேன்மொழி தவிர மற்ற அனைவரும் அங்கு பிறந்தவர்கள்தான். இப்போது அந்த 'சிவாஜி பிலிம்ஸ்' கட்டிடத்தைப் புதுப்பித்து அதை நடிகர்திலகம் நினைவு இல்லமாக மாற்றினால் என்ன?. இதற்கு எந்த அரசைக்கேட்க வேண்டும்?. எந்த நடிகர் சங்கத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் வேண்டும்?. எதுவும் தேவையில்லை. ஜானகி அம்மையார் தனியொருவராக தன கணவருக்கு நினைவு இல்லம் அமைக்க எடுத்த முயற்சியை, (தற்போது மூன்றாவது தலைமுறையும்கூட நடிக்க வந்திருக்கும் நிலையில்) நடிகர்திலகத்தின் வாரிசுகளால் நிறைவேற்றி தந்தைக்கு மரியாதை செலுத்த முடியாதா?.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஏழு நகரங்களில் நடிகர்திலகத்தின் முழு உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நடிகர்திலகத்தின் வாரிசுகளின் பங்களிப்பு எதுவுமில்லை (சிலை திறப்பு விழாக்களில் கலந்துகொள்வது தவிர).

பங்கு இருக்கிறது.

அதில் பங்கு பெற வந்தவர்களின் செலவுகளை இவர்கள் ஏற்றது ! எவரிடமும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், வரும் காலங்களில் இவர்கள் வெளியே பேசும்போது "நாங்க சிலை திறப்பு விழாவிற்கு போனோம் ஒரு காபி கூட அவங்க பசங்க வாங்கித்தரல என்று தூற்றும் கேடுகெட்ட கும்பல் இவர்கள் என்பது நடிகர் திலகத்தின் வாரிசுகளுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் அவர்களின் எல்லா செலவையும் இவர்கள் ஏற்றுகொண்டார்கள். எவனுடைய ஓசி சேவையும் தேவை இல்லை என்பதால்.

விமான கட்டணம் மற்றும் தங்கும், போக்குவரத்து செலவு, உணவு மற்றும் பிற செலவுகள் நடிகர் திலகத்தின் வாரிசுகள் செலவு செய்ததுதான். நம் நடிகர் திலகத்தின் மேல் உண்மையிலயே அபிமானம் இருந்திருந்தால் அதில் பங்குபெற வந்தவர்கள் தங்கள் சொந்த செலவில் வந்து சென்றிருபார்கள்.

செலவை அன்னை இல்ல வாரிசுகள் ஏற்றுகொண்டதால் இவர்கள் வந்தார்கள் ! இல்லையேல் ? வீட்டில் வெட்டியாக இருந்தால் கூட ....."ஷூட்டிங் இருந்துச்சு அதனால வரமுடியல என்ற புளித்துப்போன புளுகை அவிழ்த்துதான் விட்டிருப்பார்கள்.

நமக்கு தெரியாதா பங்குபெற வந்தவர்கள் யோக்யதையை பற்றி?

"நடிகர் திலகத்தை பார்த்து தான் நான் சினிமாவுக்கு வந்தேன்...பேசகற்றுகொண்டேன்...பல்விளக்க கற்றுகொண்டேன்...குளிக்க கற்றுகொண்டேன்" என்று அடித்தளத்தில் உள்ள சாமான்ய ரசிகனை(Front Benchers) உசுப்பிவிடும் விதத்தில் பேசி நடித்து விசில் அடிக்கவும், கைதட்டல் பெறவும் மைக் கிடைத்தவுடன் சம்ப்ரதாயதுக்கு பேசி செல்லும் கூட்டம்தானே !

mr_karthik
23rd June 2013, 02:48 PM
அன்புள்ள சௌரி சார்,

என்னுடைய பதிவின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கும், அதற்கு நீங்கள் அளித்திருக்கும் 100 சதம் ஆதரவுக்கும் மிக்க நன்றி. நடிகர்திலகத்தின் சிலை திறப்பு விழாக்களின்போது அவரது வாரிசுகளின் பங்களிப்பை சிறப்பாக உணர்த்தியமைக்கு நன்றி. அதுபோல ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளன்று கலைத்துறை வித்தகர்களுக்கு விருதும் பணமுடிப்பும் வழங்கும் சேவையையும் கையாண்டு வருகின்றனர் என்பதும் உண்மை. இவைகளின் உச்சமாக 'நினைவு இல்லத்தையும்' நிறுவி நடிகர்திலகத்துக்கு நிரந்தரப் புகழையும், ரசிகர்களின் கனவையும் ஒருசேர நிறைவேற்றிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

நாம் வேறெதையும் கேட்கப்போவதில்லை...

Marionapk
23rd June 2013, 02:58 PM
kARTHIK Sir,

What you pointed in thread is 100% true and perfect .Every fan of our acting god is always worry about the point you mentioned in thread.
The opponent side they are creating the publicity and picturised publickly. But we are not do like that.Even the Annai Illam great personilities didnot take any positive action in this matter sofar. Respectful Ramkumarji has himself admitted the idea of publicity thought has overcome as like divya film making degitilized the great karnan. I admit your feelings and participate your sincere and dedication affection on Nadigarthilagam.

Gopal.s
23rd June 2013, 04:48 PM
கார்த்திக் சார்,
நடிகர்திலகத்துக்கு மணிமண்டபம், நினைவு இல்லம் அமைய வேண்டும் என்ற ஆசை ,ஒவ்வொரு உண்மையான மானமுள்ள தமிழர்களின் நியாயமான ஆசை. அவர் ஓயாமல் உழைத்தது அனைத்து தமிழர்களுக்காகவும் தானே? நாமெல்லோருமே அவருக்கு கடன் பட்ட நெஞ்சங்கள்தானே? அரசாங்கம்தான்,ஒவ்வொரு தமிழன் சார்பிலும் இதை நிறைவேற்ற வேண்டும்.

Richardsof
23rd June 2013, 06:15 PM
thanks savuri sir

http://i40.tinypic.com/2hx8rns.jpg

mr_karthik
23rd June 2013, 06:29 PM
அன்புள்ள ரமேஷ் நாராயணன் சார்,

தங்கள் அன்பான பதிவுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. தங்களைப்போன்றவர்களின் விருப்பங்களும் கோரிக்கைகளும் எட்ட வேண்டியவர்களுக்கு எட்ட வேண்டும் என்பதே நமது ஆவல்.

தொடர்ந்து பதிவுகளை பங்களியுங்கள்.

mr_karthik
23rd June 2013, 06:48 PM
கார்த்திக் சார்,
நடிகர்திலகத்துக்கு மணிமண்டபம், நினைவு இல்லம் அமைய வேண்டும் என்ற ஆசை ,ஒவ்வொரு உண்மையான மானமுள்ள தமிழர்களின் நியாயமான ஆசை. அவர் ஓயாமல் உழைத்தது அனைத்து தமிழர்களுக்காகவும் தானே? நாமெல்லோருமே அவருக்கு கடன் பட்ட நெஞ்சங்கள்தானே? அரசாங்கம்தான்,ஒவ்வொரு தமிழன் சார்பிலும் இதை நிறைவேற்ற வேண்டும்.


அன்புள்ள கோபால் சார்,

அரசின் சார்பில் அமையவுள்ளது மணிமண்டபமா, அல்லது நினைவு இல்லமா?. மணிமண்டபம் எனில் நமது விருப்பங்கள் நிறைவேற வழியில்லை. விசேஷ நாட்கள்தவிர மற்ற நாட்களில் அது வௌவால்கள் அடையும் / சோம்பேறிகள் துங்கும் மண்டபமாகவே அமைந்து விடும். (தஞ்சாவூரில் உலகத் தமிழ் மாநாட்டின்போது அமைக்கப்பட்ட இரு மணிமண்டபங்கள் சான்று)

எதுவாயினும் கடந்த 12 ஆண்டுகளாக அரசின் சார்பில் ஒரு துரும்பும் அசைக்கப்படவில்லை. அரசுக்குச் சொந்தமான எத்தனையோ நல்ல இடங்கள் இருந்தும் வில்லங்கமான இடத்தை ஒதுக்கியதே இந்த பணி நடைபெறாமல் தடுக்கத்தான்.

இதுவே வெளிநாடாக இருந்திருந்தால் இவர் பெயரில் ஒரு ஊரையே உருவாக்கி இருப்பான். என்ன பாவம் செய்தாரோ தமிழ்நாட்டில் பிறந்து தொலைத்து விட்டார்.

பாகிஸ்தான் எல்லைப்பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர்க்கு தனிநாடு, காவிரி நீர்ப்பங்கீடு இவற்றோடு நடிகர்திலகம் நினைவு இல்லம் விஷயத்தையும் நமது பேரன் பேத்திகள் பேசிக்கொண்டேயிருக்க வைத்து விட்டுப்போவோம்...

ScottAlise
23rd June 2013, 07:56 PM
Dear Karthik Sir,

Your views are 100 % true, not even a single word aiming a bad remark, its nothing but truth infact a very good idea from your side, But really can't figure out when it can be materialsed , but hoping our NT's soul will guide to it

Kudos Karthik sir

iufegolarev
23rd June 2013, 07:57 PM
sun life தொலைகாட்சியில் இன்று திரை உலகின் சித்தர் சிவாஜி கணேசன் அவர்கள் மூன்று வேடங்கள் பூண்ட
தமிழ் திரை உலகில் முதல் முதலில் oscar விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் " தெய்வ மகன் "

[SIZE=3]தெய்வ மகனுக்கு முன்னும் சரி பின்னும் சரி பல படங்கள் தகுதியுடயவயாக இருந்தாலும் ஏன் அவைகள் பரிந்துரைக்கப்படவில்லை என்று என்னுடைய கேள்வி திரு.முக்தா ஸ்ரீனிவாசன் மற்றும் திரு.வியெட்னாம் வீடு சுந்தரம் அவர்களிடம் நான் சமீபத்தில் சந்தித்தபோது கேட்டேன்.

அப்போது அவர்கள் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் பொதுவாக எல்லா வருடமும் ஏதாவது ஒரு படம் டெல்லி வரை நடிப்பிற்காகவும், சிறந்த திரைபடத்திர்காகவும் சென்றுள்ளதாகவும் பல அரசியல் தாழ்புணர்ச்சி காரணமாக அவைகள் ஏதாவது ஒரு காரணம் சொல்லி விருதுக்கு பரிந்துரை மறுக்கபட்டதேன்று கூறினார்கள்.

அந்த கட்சி..இந்த கட்சியா என்று நான் கேட்டபோது ...அது எந்தக்கட்சி என்று எல்லாருக்கும் தெரியும் இவ்வளவு ஏன் சிவாஜிக்கே தெரியும். ஆனா அவர் இத பத்தி எல்லாம் கவலைப்படவே மாட்டார், அவர் பாட்டுக்கு நடிப்பு, நடிப்பு, நடிப்பு...ஆபீஸ் போயிட்டு வர்ற மாதிரிதான்.....morning 7 to midnight 2 வரைக்கும் 3 schedule ...என்று சிரிப்புடன் நிறுத்திகொண்டார்கள்.

1980 களில் இருந்து மீடியாவின் கை பலமானதை தொடர்ந்து அரசியல் நேரிடையாக விளையாடவில்லை ஆனால் லோப்ப்யிங் (Lobbying) கலாசாரம் நிறைய பின்பற்றப்பட்டது என்றும் கூறினார்கள்.[/SIZE=3]

http://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk

Subramaniam Ramajayam
23rd June 2013, 08:50 PM
அன்புள்ள சௌரி சார்,

என்னுடைய பதிவின் நியாயத்தை புரிந்து கொண்டதற்கும், அதற்கு நீங்கள் அளித்திருக்கும் 100 சதம் ஆதரவுக்கும் மிக்க நன்றி. நடிகர்திலகத்தின் சிலை திறப்பு விழாக்களின்போது அவரது வாரிசுகளின் பங்களிப்பை சிறப்பாக உணர்த்தியமைக்கு நன்றி. அதுபோல ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளன்று கலைத்துறை வித்தகர்களுக்கு விருதும் பணமுடிப்பும் வழங்கும் சேவையையும் கையாண்டு வருகின்றனர் என்பதும் உண்மை. இவைகளின் உச்சமாக 'நினைவு இல்லத்தையும்' நிறுவி நடிகர்திலகத்துக்கு நிரந்தரப் புகழையும், ரசிகர்களின் கனவையும் ஒருசேர நிறைவேற்றிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

நாம் வேறெதையும் கேட்கப்போவதில்லை...

Krtik sir. your brief is certainly very correct and also a good reminder to the concerned people in ANNAIILLAM and also to the state GOVT. concerned. Unfortunately nobody is not taking any steps\nor interested in the matter even after 12 years of NT'S DEMISE.
SOMETHING EITHER NINAIVU MANDAPAM OR MANIMANDAPAM HAS TO BE CREATED OTHERWISE PEOPLE WILL FORGET NT VERY SOON.
WE NEED MORE COORDINATORS TO TAKE UP THE ISSUES PROPERLY.

iufegolarev
23rd June 2013, 09:12 PM
1972, தமிழ் திரைஉலகில் உள்ள அனைவரும் ஒரு நடிகனின் வெற்றியை பார்த்து இதைவிட உச்ச வெற்றி எவராலும் தொடமுடியாது என்று முடிவுக்கு வந்த வருடம் - ராஜா - Deviparadise திரை அரங்கில் வசூலில் புதிய புயலை உருவாகிய திரைக்காவியம்.

வெளிவந்த 50 நாட்களுக்குள் அத்தனை முந்தைய சாதனைகளையும் முறியடித்து தொடர்ந்து 107 housefull காட்சிகள் மற்றும் DEVIPARADISE அரங்கில் 50 நாள் வசூல் மட்டும் ருபாய் 4,64,457.80 பை முந்தைய அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டன !

தேவிபாரடீஸ் 50 நாள் வசூல் = ருபாய் 4,64,457.80 அகஸ்தியா 50 நாள் வசூல் = ருபாய் 2,00,912.21 மற்றும் ராக்சி 50 நாள் வசூல் = ருபாய் 2,00,469.45 ஆக மொத்தம் 50 நாட்களில் ருபாய் 8,66,839.46 வசூல் பிரளயத்தில் சென்னை நகரமே மூழ்கடிக்கப்பட்டது .

அந்த ராஜா திரைபடத்திலிருந்து நமது சித்தர் மிகுந்த இளமை பொலிவுடன் பெரும்அழகனாக, மிகவும் ஸ்டைல் ஆகவும் நம்முடைய வாசுதேவன் சார் தொகுக்கும் அருமையான ஆடை அலங்காரத்துடன் தோன்றும் காட்சி.

http://www.youtube.com/watch?v=tgiT9UaXG-Y

iufegolarev
23rd June 2013, 11:02 PM
நடிப்பிற்கும் வயதிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தும் நம் சித்தர் !

எத்தனை இளைய தலைமுறை நடிகர்கள் புது புது டெக்னிகுடன் வந்தாலும் எவ்வளவு ஆங்கிலபாணியை பின்பற்றினாலும் கண நேரத்தில் தவிடு பொடியாக்கி காட்சியை நடிப்பால் கவர்ந்து சென்றுவிடும் திறம்படைத்த சித்தர் நம் நடிகர் திலகம். அப்படி ஒரு உதாரணகாட்சி தேவர் மகன் திரைப்படத்திலிருந்து....இதன் ஹிந்தி மற்றும் கன்னட வடிவை பார்பவர்களுக்கு நான் உரைப்பது விளங்கும் !

அந்த தேவருக்கு உரித்தான கம்பீரம்..மற்றும் Body language...Body language Modulation...என்று நேற்று வந்தவர்களெல்லாம் வீம்பளக்கும் வேளையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் , ஒரு வினாடியில் ஆத்திரம் முற்றி தனது மகனின் சட்டையை பிடித்து கோவம் கொப்பளித்து முறைத்து பின்பு ஒரு வினாடியில் தன் சுய நிலைக்கு வந்து மகன் தோள் அளவு வளர்ந்தவன் என்பதை உணர்ந்தவர் போல தூசு தட்டுவதுபோல சட்டையை சரி செய்யும் பாங்கு....இதனை மிஞ்சும் Body Language, Modulation எந்த நடிகரிடமாவது உண்டோ ?

http://www.youtube.com/watch?v=8C9Omqq8qyU

iyzecota
24th June 2013, 06:03 AM
நடிப்பிற்கும் வயதிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தும் நம் சித்தர் !

எத்தனை இளைய தலைமுறை நடிகர்கள் புது புது டெக்னிகுடன் வந்தாலும் எவ்வளவு ஆங்கிலபாணியை பின்பற்றினாலும் கண நேரத்தில் தவிடு பொடியாக்கி காட்சியை நடிப்பால் கவர்ந்து சென்றுவிடும் திறம்படைத்த சித்தர் நம் நடிகர் திலகம். அப்படி ஒரு உதாரணகாட்சி தேவர் மகன் திரைப்படத்திலிருந்து....இதன் ஹிந்தி மற்றும் கன்னட வடிவை பார்பவர்களுக்கு நான் உரைப்பது விளங்கும் !

அந்த தேவருக்கு உரித்தான கம்பீரம்..மற்றும் Body language...Body language Modulation...என்று நேற்று வந்தவர்களெல்லாம் வீம்பளக்கும் வேளையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் , ஒரு வினாடியில் ஆத்திரம் முற்றி தனது மகனின் சட்டையை பிடித்து கோவம் கொப்பளித்து முறைத்து பின்பு ஒரு வினாடியில் தன் சுய நிலைக்கு வந்து மகன் தோள் அளவு வளர்ந்தவன் என்பதை உணர்ந்தவர் போல தூசு தட்டுவதுபோல சட்டையை சரி செய்யும் பாங்கு....இதனை மிஞ்சும் Body Language, Modulation எந்த நடிகரிடமாவது உண்டோ ?

http://www.youtube.com/watch?v=8C9Omqq8qyU
Really superb performance of Nadigar Thilagam in Devar Magan penned and produced by Kamal Haasan.

RAGHAVENDRA
24th June 2013, 08:33 AM
Nadigar Thilagam films in TV channels this week

CHANNEL DATE TIME MOVIE

J MOVIES
28.06.2013 6 AM KALYANAM PANNIYUM BRAMACHARI

JAYA TV
29.06.2013 10 AM ANNAI ILLAM
28.06.2013 8.30 PM GNANA OLI

KALAIGNAR TV
27.06.2013 1.30 PM DEIVA PIRAVI (?)

MEGA 24
26.06.2013 6.30 PM THIYAGAM
27.06.2013 6.30 PM THEERPPU
28.06.2013 6.30 PM NEEDHIYIN NIZHAL

MEGA TV
27.06.2013 12 NOON VAZHKKAI
29.06.2013 12 NOON NALLATHORU KUTUMBAM

MURASU TV 29.06.2013 7.30 PM SANTHIPPU

RAJ TV
25.06.2013 1.30 PM NAN VAZHA VAIPEN
27.06.2013 1.30 PM RAJA RAJA SOZHAN

ZEE TV 25.06.2013 2 PM MARUMAGAL

Gopal.s
24th June 2013, 09:45 AM
கார்த்திக் சார், முரளி சார்,
மாஞ்சு மாஞ்சு எழுதி கொண்டிருக்கும் நடிப்பு பள்ளி திரியில் உங்கள் பங்களிப்பும் சேரலாமே?
எனக்கும் கொஞ்சம் கூடுதல் உத்வேகம் பிறக்கும். ரொம்ப மெனக்கெட வேண்டிய பணி .நம் தேர்ந்த ரசிகர்களே பாராமுகமாக இருப்பது எனக்கு கொஞ்சம் வருத்தமே. எழுதுவதிலிருந்து உங்கள் புரிதல், கூடுதல் பங்களிப்பு,ஆலோசனை இருந்தால் பாதையை எனக்கு தெளிவாக்குமே?

vasudevan31355
24th June 2013, 10:14 AM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 5)

அன்பு' நிறைந்தவரின் அழகான ஆடைகள்.

நன்றி பம்மலார் சார்

http://www.freewebs.com/pammalar/Anbu1.jpg

இணையத்தில் இதுவரை வெளிவராத ஸ்டில்கள்

'அன்பு' திரைப்படத்திலும் அழகருக்கு ஆடைகளுக்கு குறைவில்லை. இந்தப் படத்திலும் நிறைய ஆடைகள். ஆடைகளின் மெருகு மேலும் கூடியிருப்பது புலனாகிறது. குறிப்பாக தமிழில் முதன் முதலாக நடிக்கப்பட்ட ஓரங்க நாடகக் காட்சி 'ஒதெல்லோ'. இந்த நாடகத்தில் தலைவர் 'ஒதெல்லோ'வாக அணிந்திருக்கும் ஆடை பின்னி எடுக்கிறது. அதற்காக அவருடைய மெனக்கெடலும், ஆடை வடிவமைப்பாளரின் பங்கும் போற்றுதலுக்குரியது

'பராசக்தி' யின் அறிமுகக் காட்சி 'அன்பி'லே தொடர்கிறது. அழகான striped நைட் டிரெஸ் உடன் கூடிய காலை வணக்கம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-45.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-45.jpg.html)

இன்னிங் செய்யப்பட்ட மெல்லிய பெரிய கட்டங்களுடன் பரிமளிக்கும் chek ஷர்ட்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/16-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/16-3.jpg.html)

அழகு மிளிரும் striped shirt.

http://images.bergdorfgoodman.com/ca/1/products/mx/BGN1M2H_mx.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/15-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/15-4.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/12-5.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/12-5.jpg.html)

இதுவும் check shirt தான். ஆனால் pant இன் வடிவமைப்பு அசத்துகிறது. சும்மா நச்சென்று காலேஜ் ஸ்டூடென்ட் போல தலைவர் அவ்வளவு இளமையாக ஜம்மென்று இருக்கிறார்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/14-5.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/14-5.jpg.html)

RAGHAVENDRA
24th June 2013, 10:15 AM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQEc2djgV6autD0pUwlfk4qKUiLILbgx BDv50HOL0SBu0_bwbZm

இன்று கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள். தங்களையும் நடிகர் திலகத்தையும் பிரித்துப் பார்க்க எங்களால் முடியவில்லை. நீங்கள் இருக்கும் இடத்தில் அவர் இருப்பார். அவர் இருக்கும் இடத்தில் நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் இருவரும் இருக்கும் இடத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார் எங்களுடன் மெல்லிசை மன்னர். அவருக்கும் இன்று பிறந்த நாளாயிற்றே.

vasudevan31355
24th June 2013, 10:16 AM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 5) தொடர்கிறது....

ஆஹா! ஆஹா! என்ன ஒரு ஸ்டைல்! இந்த ஸ்டில்லை எடுத்து வேறு ஸ்டில்லை எடுக்கவே எனக்கு மனம் வரவில்லை. எனக்கு மிக மிக பிடித்த போஸ். White shirt வெளியே தெரிய black & black இல் அதத்தல் கோட் சூட்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/13-5.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/13-5.jpg.html)

இதைக் காணும் போது 'என்ன என்ன இன்பமே'(மோ)ஏற்படவில்லை?

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/11-5.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/11-5.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/10-7.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/10-7.jpg.html)

இந்த அம்சமான டிசைனை பாருங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/9-7.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/9-7.jpg.html)

'ஒதெல்லோ' கலக்கல் டிரஸ்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/8-8.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/8-8.jpg.html)

சற்று குளோசப்பில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/7-13.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/7-13.jpg.html)

இந்த சிம்பிளான ஜிப்பாவில் என்ன ஒரு classic look!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-15.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/6-15.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-15.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/5-15.jpg.html)

Full hand white shirt இல் கைகளைக் கட்டியபடி மெல்லிய சோகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-44.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-44.jpg.html)

Gopal.s
24th June 2013, 10:35 AM
எல்லோரையும் மயக்கிய மங்கை என்று நடிகர்திலகத்தால் புகழ பட்ட தங்கை என்ற pathbreaking சிவாஜி anti -sentiment படத்தை 1967 (கடலூர்),1971(சொரத்தூர் ஜோதி) யில் பார்த்த பிறகு மறுமுறை நேற்று பார்த்தேன்.

என்னை ஆச்சர்ய படுத்தியது .Hats off sivaji &Thirulokchandar . formatting &execution அருமை.

ஆனால் u tube இல் மசமசவென்று உள்ளது. நல்ல DVD எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை.பழைய இருவர் உள்ளம் நிலையிலே இன்று இப்படம்.

இப்படம் ஒரு மூன்று வெவ்வேறு புள்ளிகளில் நகரும். ஆனால் இணைப்பிலே ஒரு logic ,nerrative surprise என்ற ஒரு professional perfection கொண்ட திரைக்கதை.

சிவாஜி- அவர் துயர் மிகுந்த இளமை பருவம் -தங்கை- அவர் பிரச்சினை.
அழகான முக்கோண குறுக்கீடுகளாய் நல்லெண்ணம் கொண்ட குடும்ப காப்பாள டாக்டரம்மா கே.ஆர்.விஜயா ,தோழமையுடன் கூடிய சம நிலை well wisher காஞ்சனா, ஊசலாடும் சிவாஜி அருமையாய் வந்திருக்கும்.
சூதாட்டம், அது சார்ந்த சில குழப்பங்கள் ,திருப்பங்கள், நல்லெண்ண போலீஸ் பாலாஜி என்ற action ,பொழுதுபோக்கு சார்ந்த இன்னொரு track .

ஆனால் அனைத்தையும் வழி நடத்துவது protogonist சிவாஜியின் எண்ணங்கள்,தேவைகள், குழப்பமான ethics ஆகியவை.

நடிகர் திலகம் இந்த படத்தில் பாத்திரம் உணர்ந்து நடித்த வசீகர பாங்கு சொல்லி மாளாது.
restraint மிகுந்த extravert பாத்திரம். மிக துயரங்களுக்கு ஆட்பட்ட, சிறையில் ஆங்கிலம் உட்பட எல்லா அறிவும் பெற்றும், சமூக அங்கீகாரம் இன்றி வறுமையில் உழன்று சூதாடினாலும் போதுமென்ற மனமும், தேவைகளின் பாற்பட்டு சூதாட்ட பிடியில் சிக்கி அதுவே தொழில்,ஆசை, பொழுது போக்கு என்ற addiction நிலைக்கு தள்ள படுவது , எந்த வித inhibition இல்லாத தன் நிலையை புரிந்த தாழ்வு மனப்பான்மை இல்லாத extravert .
என்ன ஒரு execution ,style ,perfection . திரைக் கதையின் மூன்று புள்ளிகளிலும் பாத்திரத்தை நூல் கோர்க்கும் துல்லியத்துடன் கையாண்டிருப்பார்.

கே.ஆர்.விஜயா, காஞ்சனா ,பாலாஜி,மேஜர் அனைவருமே நல்ல துணை பாத்திரங்கள்.

எம்.எஸ்.வீ. இசை முதல் பாடல் தவிர மற்ற ஐந்தும் அருமை.(கேட்டவரெல்லாம் , தண்ணீரிலே,சுகம், இனியது, நினைத்தேன் உன்னை) பாடல்களின் lead scenes (ஏற்கெனெவே எழுதி விட்டேன்) .

எனக்கு மிக மிக பிடித்த காட்சிகள் .
மேஜர்-கே.ஆர்.விஜயாவுடன் காரில் பயணிக்கும் ,இனியது பாட்டுக்கு முந்திய காட்சி.
மழையில் நனைந்து காஞ்சனா வீட்டிற்கு செல்லும் காட்சி.

பிரிண்ட் மச மச வென்று இருந்ததால் கேமரா ,எடிட்டிங் பற்றி விமரிசிப்பது கஷ்டம்.

சிவாஜியின் குறிப்பிட வேண்டிய படங்களில் ஒன்று தங்கை. என் பாலாஜி வரிசை- ராஜா,தீபம்,தங்கை, தியாகம், நீதி.

Gopal.s
24th June 2013, 10:35 AM
வாசு சார் ,நெஞ்சங்கள் பார்த்தேன். புது வகை கதை கரு.(அசலூரிலிருந்து)மேஜர் சுவாரஸ்யத்தை கூட்டாமல் குட்டி சுவர் ஆக்கி விட்டார். ஆனால் நடிகர்திலகம் படு casual .அந்த காலகட்டத்தில் Energy level தேவை படாத distressed பாத்திரங்களில் அவர் நன்றாகவே சோபித்தார் .இதுவும் அந்த ரகமே.

vasudevan31355
24th June 2013, 10:58 AM
வாசு சார் ,நெஞ்சங்கள் பார்த்தேன்.ஆனால் நடிகர்திலகம் படு casual .அந்த காலகட்டத்தில் Energy level தேவை படாத distressed பாத்திரங்களில் அவர் நன்றாகவே சோபித்தார் .இதுவும் அந்த ரகமே.

கோ,

ரொம்ப ரொம்ப. கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே மாட்டார். வில்லன்களிடமிருந்து குழந்தை மீனாவைக் காப்பாற்றும் காட்சிகளைக் கூட நிதானமாக அதே சமயம் வேகமான திக் திக் ஆக்ஷன்கள் செய்யாமல் புத்திசாலித்தனமாக அதிகம் பேசாமல் வெகு ஈஸியாகச் செய்வார். அப்போது அவ்வளவாக கவனிக்கவில்லை. எனக்கு இப்போது பார்க்கும் போது அவரை ரொம்ப ரொம்ப வித்தியாசமாய் ரசிக்கச் செய்தது. something in it. ஆய்வில் எழுதுகிறேன்.

ஆங்...மறந்து விட்டேனே! நேற்றே நாம் போனில் தங்கையைப் பற்றி நிறைய பேசி விட்டதால்.... ஓகே.

yoyisohuni
24th June 2013, 11:19 AM
இவைகளின் உச்சமாக 'நினைவு இல்லத்தையும்' நிறுவி நடிகர்திலகத்துக்கு நிரந்தரப் புகழையும், ரசிகர்களின் கனவையும் ஒருசேர நிறைவேற்றிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.


சிவாஜியின் ரசிகர்கள் மட்டுமல்ல நண்பரே, அனைத்து தமிழக மக்களும், - கலை, அதன் நுணுக்கம், உயர்வு, அருமை பெருமை தெரிந்தவர்களும், காலத்தின் சுவடுகளாக இப்படியும் ஒரு கலைஞன் அந்நாளிலேயே எப்படி திறமை வெளிப்படுத்தியிருந்தான் என வருங்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள அனைவரும் இதற்கு உடன் படவேண்டும்.

இன்றைய தலைமுறையின் பின்னரும் பல நூறு வருடங்களும் மேலும், இம்மனிதன் வாழ்ந்ததற்கு அடையாளமும் சான்றும் விட்டுச் செல்வது நம் கடமை, அல்ல நம் பெருமையும் கூட.

தமிழ்நாடும் இந்தியப்பெருநாடும் இம்மேதைக்கு உரிய மரியாதை தரவில்லை. குறைந்தபட்சம் அவரின் சரித்திர சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்.

vasudevan31355
24th June 2013, 11:23 AM
சிவாஜியின் ரசிகர்கள் மட்டுமல்ல நண்பரே, அனைத்து தமிழக மக்களும், - கலை, அதன் நுணுக்கம், உயர்வு, அருமை பெருமை தெரிந்தவர்களும், காலத்தின் சுவடுகளாக இப்படியும் ஒரு கலைஞன் அந்நாளிலேயே எப்படி திறமை வெளிப்படுத்தியிருந்தான் என வருங்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள அனைவரும் இதற்கு உடன் படவேண்டும்.

இன்றைய தலைமுறையின் பின்னரும் பல நூறு வருடங்களும் மேலும், இம்மனிதன் வாழ்ந்ததற்கு அடையாளமும் சான்றும் விட்டுச் செல்வது நம் கடமை, அல்ல நம் பெருமையும் கூட.

தமிழ்நாடும் இந்தியப்பெருநாடும் இம்மேதைக்கு உரிய மரியாதை தரவில்லை. குறைந்தபட்சம் அவரின் சரித்திர சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்.

சபாஷ்! முற்றிலும் உண்மை.

KCSHEKAR
24th June 2013, 12:54 PM
எதுவாயினும் கடந்த 12 ஆண்டுகளாக அரசின் சார்பில் ஒரு துரும்பும் அசைக்கப்படவில்லை. அரசுக்குச் சொந்தமான எத்தனையோ நல்ல இடங்கள் இருந்தும் வில்லங்கமான இடத்தை ஒதுக்கியதே இந்த பணி நடைபெறாமல் தடுக்கத்தான்.

இதுவே வெளிநாடாக இருந்திருந்தால் இவர் பெயரில் ஒரு ஊரையே உருவாக்கி இருப்பான். என்ன பாவம் செய்தாரோ தமிழ்நாட்டில் பிறந்து தொலைத்து விட்டார்.

பாகிஸ்தான் எல்லைப்பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர்க்கு தனிநாடு, காவிரி நீர்ப்பங்கீடு இவற்றோடு நடிகர்திலகம் நினைவு இல்லம் விஷயத்தையும் நமது பேரன் பேத்திகள் பேசிக்கொண்டேயிருக்க வைத்து விட்டுப்போவோம்...

திரு.கார்த்திக் சார்,

உங்கள் கருத்து / ஆதங்கம் சரியானதே. காவிரிப் பிரச்சினையோ, இலங்கைப் பிரச்சினையோ, அதற்காக போராட்டங்கள் இன்றுவரை நடந்துகொண்டுதானே இருக்கிறது?

நம்பிக்கைதானே வாழ்க்கை! அழுத பிள்ளைதான் பால்குடிக்கும் என்பதற்கேற்ப நம் கோரிக்கையை தமிழக அரசாங்கத்திற்கு தெரிவித்துக்கொண்டே இருப்போம்.

விரைவில் நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, நடிகர்திலகத்திற்கு மணிமண்டபம் (பராமரிக்கப்படாத மற்றவை போலில்லாமல்) சிறப்பான முறையில், தமிழக அரசால் அமைக்கப்படும் காலம் வந்தே தீரும்.

mr_karthik
24th June 2013, 12:56 PM
அன்புள்ள கோபால் சார்,

நடிகர்திலகத்தின் ஸ்கூல் ஆப் ஆக்டிங் பற்றிய தங்களின் தொடரை தொடர்ந்து படித்து, மகிழ்ந்து, மலைத்து வருகிறேன். அதில் பங்களிக்கக்கூடாது என்பதெல்லாம் இல்லை.

ஆனால், மேல்நாட்டுப் படங்கள் பற்றிய எனது அறிவு கொஞ்சம் குறைவு. (முழுப்பொய்...., உண்மை என்னவென்றால் மிக மிக குறைவு). பிறந்தது முதலே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் ஆசாமி நான். எனவேதான் தெரியாத விஷயத்தைப்பற்றி மூக்கை நுழைக்க விரும்புவதில்லை. 'பாராட்டலாமே' என்று கேட்கலாம். ஒரு அருமையான தொடராக வந்துகொண்டிருக்கும் கட்டுரைகளுக்கு நடுவே இரண்டு அல்லது மூன்று வரிப் பாராட்டுக்களால் இடையூறு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தினால்தான் அவற்றையும் தவிர்த்து விடுவது. பாராட்ட வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது நமது பொதுத்திரி.

JamesFague
24th June 2013, 01:53 PM
Mr Karthik Sir,

I fully agreed with your views on NT's Ninaivu Mandapam. Hope our KC Sir will take the necessary
steps with the co-opeation of all our hubbers.

Mr Vasu Sir,

Your new series on NT's Dressing shows how much time and pain you have undertaken
by you. We are all proud of your contribution. Pls continue your excellent work.

mr_karthik
24th June 2013, 01:55 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'ஆடைகளுக்கேன்றே பிறந்த ஆணழகன்' தொடரில் அன்பு படத்தில் நடிகர்திலகத்தின் உடையலங்கரமும், அவற்றை மேம்படுத்திக்காட்டும் அவரது ஸ்டைலும் படு சூப்பர். என்ன ஆச்சரியமெனில், அந்த காலகட்டத்திலேயே இவ்வளவு ஸ்டைலான உடைகள் தமிழ்ப்படவுலகில் வந்து விட்டன என்பதும், மற்றவர்கள் அரச உடைகளில் வந்துகொண்டிருந்தபோது நம் தலைவர் இவ்வளவு லேட்டஸ்டான உடைகளில் படங்களில் பவனி வந்துள்ளார் என்பதும்தான்.

நமது முரளி அவர்கள் சொன்னதுபோல, ஆடைகளுக்கேன்றே பிறந்த ஆணழகன் தொடர் என்றதும், அவர் ஸ்டைலாக உடையணிந்த தங்கச்சுரங்கம், சொர்க்கம், ராஜா, வசந்த மாளிகை, சுமதி என் சுந்தரி போன்ற சில படங்களை மட்டும் அலசுவீர்கள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் பிலிமோகிராபி போல ஒவ்வொரு படமாக அலசி (ஒரு சிலரை) அதிர வைப்பீர்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.

தங்கள் அயராத உழைப்புக்கு நடிகர்திலகத்தின் ஒவ்வொரு ரசிகரும் கடன்பட்டு விட்டோம். பல தொடர்களை மாறி மாறி தந்து எங்களை கடனாளியாக ஆக்கிக்கொண்டே இருக்கிறீர்கள்...

mr_karthik
24th June 2013, 02:21 PM
அன்புள்ள கோபால் சார்,

அவர் இமேஜ் பார்க்காமல் நடித்தார் என்பதற்கு 'தங்கை' படமும் ஒரு சான்று. ஒரு சீனில், பாங்க் கேஷியரான செஞ்சி கிருஷ்ணன், தன் மகளின் திருமணத்துக்காக பேங்க் பணத்தை வைத்து சூதாடி, தோற்றுப்போனதும் 'போச்சு, போச்சு' என்று புலம்பிக் கொண்டு போகும்போதும், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும்போதும், தாய்க்குலத்தின் வசவுகள் நம் தலைவருக்கு கிடைத்ததை தியேட்டரில் நேரில் பார்த்திருக்கிறேன்...

Richardsof
24th June 2013, 02:43 PM
இனிய நண்பர் கார்த்திக் சார்

1947 முதல் 1952 வரை

ராஜகுமாரி - என் தங்கை வரை மக்கள் திலகம் அவர்கள் பல வித்தியாசமான நவீன ஆடைகள் - அரச உடைகள் அணிந்து பல புதுமைகள் புரிந்துள்ளார் .
1959-1977 வரை

நடித்த பல படங்களில் ரசிகர்கள் மயங்கும் வண்ணம் புதுமையான ஆடைகள் அணிந்து வந்தார் . அன்று அவர் அணிந்த உடைகளை இன்றைய தலைமுறையினர் அணிந்த வருவது மகிழ்ச்சியே

அதே போல் நடிகர்திலகத்தின் ஆடை அலங்காரம் தொடர் மிகவும்

அருமை வாசு சார் .

Gopal.s
24th June 2013, 03:46 PM
எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று ...
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.

Gopal.s
24th June 2013, 04:11 PM
அன்புள்ள கோபால் சார்,

அவர் இமேஜ் பார்க்காமல் நடித்தார் என்பதற்கு 'தங்கை' படமும் ஒரு சான்று. ஒரு சீனில், பாங்க் கேஷியரான செஞ்சி கிருஷ்ணன், தன் மகளின் திருமணத்துக்காக பேங்க் பணத்தை வைத்து சூதாடி, தோற்றுப்போனதும் 'போச்சு, போச்சு' என்று புலம்பிக் கொண்டு போகும்போதும், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும்போதும், தாய்க்குலத்தின் வசவுகள் நம் தலைவருக்கு கிடைத்ததை தியேட்டரில் நேரில் பார்த்திருக்கிறேன்...
அது மட்டுமா? என்னை போல் ஒருவன் சேகர் பாத்திரம் , காலுக்கு மருந்து கேட்கும் அம்மாவை துச்சமாய் தூக்கி எரியும் . அப்பா... என்ன ஒரு confidence &Guts .

kalnayak
24th June 2013, 04:15 PM
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே ... அது வடிக்கும் கவிதைகள் ஆயிரம், எல்லாம் உன் எண்ணமே.