PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 11



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

rsubras
14th September 2013, 11:45 PM
தொடர்ந்து என்தம்பி (1968),திருடன்(1969),எங்கிருந்தோ வந்தாள்(கலர் 1970), ராஜா(1972),நீதி(1972),என்மகன் (1974),உனக்காக நான்(1976),தீபம்(1977),தியாகம்(1978),நல்லதொரு குடும்பம்(1979),தீர்ப்பு(1982),நீதிபதி(1983),பந்தம ்
(1985),மருமகள்(1986),விடுதலை(1986),குடும்பம் ஒரு கோவில் (1987) என இறுதி வரை நம் விசுவாசியாக வெற்றி கண்டு ,மிக சிறந்த நண்பராகவும் இறுதி மூச்சு வரை தொடர்ந்தார்.



did we have any detailed discussion about Viduthalai, the type of role I would have loved to see Shivaji in (although he did not have as much screen space as one would have wanted in that multi starrer film) the nakkals, naiyyandis, the kambeerams etc,....

or Marumagal where Sivaji illustrated that old age has a beauty and that can be portrayed as beautifully as in that movie..

Gopal.s
15th September 2013, 05:56 AM
did we have any detailed discussion about Viduthalai, the type of role I would have loved to see Shivaji in (although he did not have as much screen space as one would have wanted in that multi starrer film) the nakkals, naiyyandis, the kambeerams etc,....

or Marumagal where Sivaji illustrated that old age has a beauty and that can be portrayed as beautifully as in that movie..
Both are nice roles of sivaji and he handled them very differently in his unique way of execution. We will take it up for sure. But my humble request is that regular hubber like you can do it for our pleasure.

Gopal.s
15th September 2013, 06:42 AM
Vasu Sir,

Eagerly looking for your series on Dresses. Heroines, Dresses,Stunt Scenes serials have lot of fans. Pl.Sir Continue as we are longing for it.

vasudevan31355
15th September 2013, 07:54 AM
வார்ரே வா... ராஜா... அது இந்திர லோகம். எழுதினாதான் தீரும் நம் ஆசையின் தாகம். நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.

http://dd508hmafkqws.cloudfront.net/sites/default/files/styles/sliderimage_crop/public/mediaimages/gallery/2013/Feb/scan0027_0.jpg

vasudevan31355
15th September 2013, 08:11 AM
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 6)

மிக அபூர்வமான 'துளிவிஷம்' படத்தில் வில்லனாக நமது மன்னவர் கொடி கட்டிப் பறப்பார். கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி. இந்தப் படத்தில் தலைவர் உடுத்தியிருக்கும் ராஜ உடைகள் அற்புதத்திலும் அற்புதம். விதவிதமான அரச உடைகளில் அதுவும் பிரமாதமான பூக்களிட்ட embroidery உடைகளை டிசைன் டிசைனாக அவர் அணிந்து வரும் அழகே அழகு. ஆடைகள் அவரால் பெரும் அழகே தனி. இவ்வளவு அழகான ஆடைகளுடன் நம் இதய தெய்வத்தை கம்பீரமாக பார்க்க நாள் போதாது.

இனி 'துளிவிஷம்' படத்தில் மிக மிக அபூர்வமான இதுவரை இணையத்தில் வெளிவராத தலைவரின் ஆடைகள் ஸ்டில்ஸ்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/imageedit_2_8233296874.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/imageedit_2_8233296874.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/imageedit_4_9668733511.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/imageedit_4_9668733511.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/imageedit_17_8675240349.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/imageedit_17_8675240349.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/imageedit_13_3622647099.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/imageedit_13_3622647099.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/imageedit_15_6072259396.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/imageedit_15_6072259396.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/imageedit_11_9804336074.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/imageedit_11_9804336074.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/imageedit_8_8805499449.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/imageedit_8_8805499449.jpg.html)

vasudevan31355
15th September 2013, 08:18 AM
ராஜ பரிவாரங்களுடன் 'ராஜா'வை கோபால் சார் தொடரட்டும்

புகழ் மாலைகளுடன் 'ராஜா'வை பூஜித்தபடி நான் அவரைத் தொடருவேன்.

vasudevan31355
15th September 2013, 08:22 AM
கோபால் சார்,

பிரமாதம். ஆர்வத்தை அதிகமாகத் தூண்டுகிறீர்கள். ராஜாவின் எழிலுக்கு முன் அனைவரும் ......

http://ttsnapshot.com/out.php/i19403_vlcsnap-2012-08-07-07h00m48s161.png

Gopal.s
15th September 2013, 08:39 AM
ராஜா-1972.

சிவாஜியே இப்படத்தில் சொல்வது போல ராஜான்னா ராஜாதான். நம் ரசிகர்கள் மற்றுமல்ல, பொதுமக்கள்,மாற்று அணியினர் எல்லோரும் ஈர்த்து லயித்து ,ரசித்த படம். இது ஒரு jamesbond action movie genre என்றாலும் ,நேரடியாக ரெயின் கோட் போட்டு கொண்டு, கருப்பு கண்ணாடி மாட்டி கொண்டு (குல்லா), துப்பாக்கி தூக்கி ,வில்லன்களுடன் நேரடியாய் மோதி,ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சல்லாபிக்கும் வழக்கமான jamesbond அல்ல. The departed என்ற ஆஸ்கார் பரிசு பெற்ற படத்தில் , வில்லன்களின் பாசறையில் போலிஸ் ஆள் ஒருவரும், போலிஸ் பாசறையில் வில்லன் ஆள் ஒருவரும் ஊடுருவி ஒருவர் யார் என்று மற்றவருக்கு தெரியாமல் , திரைக்கதை ஜாலம் புரிந்து எனது favourite இயக்குனர் Scorcese அதகளம் புரிவார் எனது அபிமான நடிகர்கள் matts Damon ,Decaprio போன்றோரை வைத்து.

வில்லன் பாசறையில் ஊடுருவி(Mole), அங்கு எல்லோர் அபிமானத்தையும் பெற்று முன்னேறி ,கடைசியில் போலிஸ் கஸ்டடி யில் இருந்து வெளியேறும் வில்லன் ஆள் ஒருவன் இந்த உண்மை தெரிந்து ,பிறகு உச்ச காட்சியில் ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்து விஞ்ச பார்க்கும் ,மிக சிறந்த ,சுவாரஸ்யமான ,ட்விஸ்ட் நிறைந்த,roller coaster ride போன்ற உச்ச கட்ட காட்சியுடன் முடியும் மிக மிக சுவாரஸ்யமான இளமை ஸ்டைல் திருவிழா இந்த படம். ஹிந்தி மூலம் நாராயணன் என்ற கதாசிரியர் எழுதியது.தமிழ் வசனம் வேறோர் நாராயணன்.

சி.வீ.ராஜேந்திரன் படம் என்றாலே இளசுகளுக்கு கொண்டாட்டம்.(இந்த படம் வந்த போது பதிமூன்று வயசு இளசுதானே) அப்போது படித்த இளைஞர்களின் கனவு நாயகன் ,திராவிட மன்மதன் நடிகர்திலகம் ,கலை செல்வியுடன், பாலாஜி தயாரிப்பில், சின்னி சம்பத் நடனம்,மாதவன் சண்டை,ராமகிருஷ்ணன் உடை,மஸ்தான் கேமரா ,மெல்லிசை மன்னர் இசை என்று பக்கா வின்னிங் டீம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? எதிர்பார்ப்பை மீறியே, எல்லா தரப்பினருக்கும் கல்யாண விருந்து போல தீனி கொடுத்த அற்புதம் ராஜா....

இந்த படத்தை பொறுத்த அளவில் நான் உள்ளே நுழைந்து உளவியல்,நடிப்பின் நுணுக்கம் என்றெல்லாம் உங்களை சோதிக்க மாட்டேன். ஏனெனில்,படம் முழுக்க இளமை,சுவாரஸ்யம்,ஸ்டைல்,energy மட்டுமே.

பாச மலர் ராஜசேகரன் ,தில்லானா சண்முகம்,திருவருட்செல்வர் அப்பர்,தெய்வ மகன் கண்ணன், வியட்நாம் வீடு பத்மநாபன்,பாபு என்று திராவிட மன்மதன், தான் சுந்தர புருஷனாக மட்டுமே தோன்றி ரசிகர்களை வசீகரிக்க எண்ணியதில்லை.எல்லா பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து ,தன் இளமை,அழகு இவற்றை மறைத்து பாத்திரத்திற்கேற்ப தோன்றிய நடிகர்திலகம் தன் முழு இளமை, ஆண்மை, அழகு, வசீகரம் எல்லாவற்றையும் குறையாமல் நமக்கு வழங்கிய படங்கள் கலாட்டா கல்யாணம்,தங்கச்சுரங்கம்,நிறை குடம்,தெய்வ மகன்(விஜய்),சிவந்த மண்,எங்க மாமா, சுமதி என் சுந்தரி, ராஜா,வசந்த மாளிகை போன்றவை.இதிலும் ராஜா ஒரு குறிஞ்சி மலர்.

என்னத்தை சொல்ல!!! அழகென்றால் அப்படி ஒரு அழகு, இளமைஎன்றால் அப்படி ஒரு இளமை, ஸ்டைல் என்றால் அப்படி ஒரு ஸ்டைல்,துறுதுறுப்பென்றால் அப்படி ஒரு துறுதுறுப்பு, சுறுசுறுப்பென்றால் அப்படி ஒரு ஒரு சுறுசுறுப்பு அதுவரை திரையுலகம் பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை,காட்சிக்கு காட்சி அப்படி ஒரு வசீகரம் நிறைந்த இளமை துள்ளும் (என்ன ஒரு energy level )ஸ்டைல் ஆன ஒரு நாயகனை கண்டதில்லை.

இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றும் நடிகர்திலகம் திரும்பி திரும்பி இதே மாதிரி படங்களில் சிக்கி கொள்ளவும் இல்லை என்பதே நடிகர்திலகத்தை வித்யாசம் காட்டியது.

உடைகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால்....

பொதுவாக அவர் trend setter .well dressed man of indian screen என்ற விருதை ஒரு வடக்கிந்திய பத்திரிகை 1958 இல் அவருக்கு அளித்து மகிழ்ந்தது.

அந்த சுந்தரனுக்கு எல்லா வித வேடங்களும் பொருந்தியது போல எல்லா வகை உடைகளும் பொருந்திய அழகை என் சொல்ல?வேட்டி சட்டை,ஜிப்பா,சுரிதார்,சட்டை,பேன்ட் ,கோட் சூட்,அரச உடைகள், இதிகாச புராண உடைகள்,படு படு ultra modern உடைகள் எல்லாமே கன கச்சிதமாக பொருந்தியது அந்த திராவிட ஆண்மை நிறை அழகனுக்கு.

இந்த படத்தில் ஜெர்கின் எனப்படும் ஜாக்கெட், கோட், tie ,மற்றும் scarf போன்ற உடைகள்.


முதல் காட்சியில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜாங்கம்.விஸ்வத்தின் அடுத்த அறையில் அடை பட்ட அழகான ஜெர்கின் அணிந்த ராஜா.சிகெரெட் lighter உடன் விஸ்வம் போலிசோடு அதிக சண்டையும் வச்சிக்காதே ,அதிக தொடர்பும் வச்சிக்காதே ,பொறுமையாய் இரு என்று லேசான தலையாட்டலுடன் ,எவ்வளவு நாளா நடக்குது என்று கேட்கும் விஸ்வத்திடம் நாலு நாளா என்று கூல் தொனியில் சொல்வது, நம்பிக்கையான ஆள் கேட்கும் விஸ்வத்திடம் ஆழமான குறுகுறு பார்வையுடன் ,தன் மேல் நம்பிக்கை வைக்க சொல்வது என்று முதல் காட்சியிலேயே தன்னுடைய வித்தியாச வேடத்துக்குள் அனைவரையும் ஈர்த்து கட்டி போட்டு விடுவார்.

ராதாவை ,ஹோட்டல் அறையில் சந்திக்கும் முதல் காட்சி டீசிங் கலந்த காதல் அறிமுக ஆரம்ப காட்சியில் நடிக்க விரும்புவோருக்கு இளமை பாடமே நடத்த பட்டு விடும்.ராதாவின் அழகை வியப்பு விழிகளால் பருகி ,பொய் ஆச்சர்யம் காட்டி அழகை விமர்சிக்கும் ஆரம்பம், indifference காட்டும் ராதாவிடம் ஜாலியாக credibility நிரூபிக்கும் cuteness ,பார்க்க மாட்டேங்களா வைரங்களை எனும் ஸ்டைல்,தன் பெயரை வித விதமாக சொல்லி கடி ஜோக் அடித்து தானே ரசிப்பது, முடிவில் கிளம்பும் போது ஆப்பிளை ஒரு அவசரம் கலந்த விழைவுடன் கடித்து விடை பெறுவது-இளமை குறும்பின் உச்சம் தொடும்.

நீ வர வேண்டும் பாடல் ராஜா சொல்லும் ஸ்டைல் களை கட்டி விடும்.அதிலும் முகம் தடவும் கையை ராதா தட்டி விட ,போலிசை காட்டியதும் அவர் கையை எடுத்து முகத்தில் வலுகட்டாயமாய் தேய்த்து கொள்ளும் இளமை டீசிங் குறும்பு.

பாபுவிடம் கூட்டி சென்றதும் அவரை கட்டி வைத்து விசாரிக்கும் காட்சி . ஈர்ப்பு நிறைந்த கிண்டலின் உச்சம். குமாரிடம் ஒவ்வொரு முறை அடிபடும் போதும் வித விதமான ஜாலி கமெண்ட் .முகத்தை கெடுத்துடாதே என்று சொன்னாரில்லை மடையா... ஏண்டா அடிக்கரத்துக்குன்னே சம்பளமா... அதே மாதிரி ராதாவுடன் சந்திப்பை இதயம் அடித்த அழகை கண்ணை அடித்து குதூகலிக்க வைப்பார்.(தடக் தடக்).முடிந்து தன் கயிற்றை அறுத்து வில்லன்களை அட்டாக் பண்ணி, surprise கொடுத்து lighter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.

குமாரின் துரோகம் பற்றி பாபுவிடம் சொல்லி ,அவர் தூக்கி எரியும் சாவியை expert என்று இடது கையால் பிடிக்கும் ஸ்டைல்.பாபுவை தாக்கி விட்டு தப்பியோட பார்க்கும் குமாரை ,ஸ்டைல் ஆக சிகெரெட் தனது ஆள்காட்டி கட்டை விரலில் குவித்து கீழ் விட்டு தேய்க்கும் அழகு. பிறகான அற்புத சண்டை காட்சி.

ஒரு நேருக்கு நேர் சண்டை காட்சியில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்? ஒரு சமமான அல்லது மிகை பலம் கொண்ட வில்லன். சம யுத்தம். சம வாய்ப்பு. சிறிதே திட்டமிடல். சவால் விடும் gestures . சுறுசுறுப்பு நிறைந்த rhythmic manly Grace ,நல்ல கட்டமைப்பு இவைதானே? இவை அத்தனையும் கொண்ட சண்டை காட்சிதான் குமாருடன் ராஜா மோதும் சுவாரஸ்ய குதூகல சண்டை காட்சி.முதல் பாய்ந்து இரு முறை அட்டாக் பண்ண சுலப வாய்ப்பு எதிரிக்கு கொடுக்கும் போது முகத்தில் ஒரு scheming look தெரியும்.பிறகு லாவகமாய் நகர்ந்து அட்டாக் ஆரம்பிக்கும் போது ஒரு aggression தெரியும். எதிரெதிரில் குறி பார்க்கும் போது ஒரு cautious anticipation தெரியும்.எதிரி குறி வைக்கும் போது அந்த அடி பட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வை react செய்து உணர்த்துவார்.(அடி படும் போது வலி வேதனை ) ஒரு பம்பரம் போல் சுழன்று சுழன்று திரும்பி graceful stylish சுறுசுறுப்பு காட்டும் நேர்த்தி.கண்ணை அடித்து ,ஒரு கூல் பார்வையுடன் எதிரியை challenge பண்ணுவார். ஒரு சண்டை காட்சியில் கூட தன்னை மீற யாருமில்லை என ஓங்கி சொன்ன அற்புத காட்சி.

அதே போல ராதா தன் அம்மாவிடம் பேசுவதை ஒட்டு கேட்கும் போது ராதாவிடம் துப்பாக்கி முனையில் உள்ளே வரும் போது அம்மாவிடம் விசாரிப்பு, பிறகு ஒரு பொய்யை சொல்லும் போது நேர்பார்வை தவிர்த்த ,கையை தனது வாயை மறைக்கும் தோரணையில் வைத்து பேசும் இடம் உளவியல் அறிஞர்கள் ,பொய் சொல்வர் செய்யும் சில செயல்களை படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் உளவியல் நடிப்பதிசயம்.

பாபு நம்மை தொடர்கிறார் என்று அறிவிக்கும் ராதாவிடம் ,அதை கவனித்து பின் romance பண்ணுவது போல் நடிக்கும் நுணுக்கம்.(பாபு சந்தேகம் தவிர்க்க). ஜம்பு வந்ததும் ஹூம் ஹூம் என்று ஸ்டைல் ஆக கை காட்டும் ஆமோதிப்பு,தங்கத்தை தொட்டதும் கையை தட்டி விடும் அவசர அலட்சிய எச்சரிக்கை , தொடரும் விறுவிறுப்பான சண்டை காட்சி ,ஜம்புவிடம் கத்தியை காட்டி ஓடுடா என்ற மிரட்டல் தொனியில் காட்டுவது.

தொடரும் ramantic marvel கல்யாண பொண்ணு lead scene (அப்புறம்தான்....).நீ வெக்கத்தோடு என்னை ஒர கண்ணால் பார்க்க (ராதா முறைக்க)சரி நான் பாக்கிறேன்னு வெச்சிக்க.

சிவாஜியின் நடன காட்சிகளில் ஒரு அபாரமான டான்சர் grace , கடின movements , ஸ்டைல்,சுறுசுறுப்பு,professionalism மிளிரிய கால கட்டம். கல்யாண பொண்ணு அதற்கு அற்புத உதாரணம்.ஒரு back and sideways ஸ்டெப்ஸ் போட்டு துவங்குவாறே அதை சொல்வதா ,கைகளை விரித்து hop step பாணியில் ஒன்றை செய்வாரே அதை சொல்வதா, தெய்வத்தால் எதுதான் முடியாது?

இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.

தொடர்ந்த நாகலிங்கத்தை சந்திக்கும் காட்சியில் தாராவை கண்டதும் காட்டும் கண நேர சங்கடம் கலந்த முகபாவம்..(தாராவின் நிலைக்கு ராஜாவும் காரணமே)

இரண்டில் ஒன்று காட்சி ஊடல் கலந்து காதல் விருந்து. திராட்சை நிற உடையில் (திராட்சை ஆணின் காம விழைவையும்(libido&virility), பச்சை நிறம் பெண்ணின் அழைப்பை ஏற்று பிள்ளை பெறும் விழைவையும் (Fertility)குறிக்கும். சி.வீ.ஆர் கலர் psychology )அழகு கொண்ட இளமை குறும்புடன் ,கண்ணில் தெறிக்கும் கிண்டலுடன் அவர் ஒவ்வொரு ஜன்னலாக எட்டி பார்க்கும் அழகு. ஒரு bull fight gesture கொண்டு அறைக்குள் நுழைந்து, அணைக்கும் போது செல்ல நிமிண்டல், என்று இரண்டில் ஒன்றல்ல ஒன்றே ஒன்று என நாம் குதூகலிக்கும் ஒரே காட்சி.

இறுதி காட்சி நடிகர்திலகம் நினைத்தாலும் அவருடைய திறனை கட்டு படுத்த முடியாது என்று அவர் காட்டும் சுவாரஸ்ய வெளியீடு.

இந்த காட்சி முழுதுமே வில்லனை பிடிக்க திட்டமிட்டு ,அது விஸ்வம் தலையீடு மற்றும் அம்மாவின் கடத்தல் என்பதினால் மாற்று திட்டமிடல் என்பதை முன்னிறுத்தி ,விஸ்வத்தின் எதிர்பாராத நடவடிக்கை அதனை கெடுக்கும் போதும் ,சுதாரிக்க வேண்டிய அவசரம். சிவாஜியின் முகபாவங்களில், ஒரு ஆசுவாசம் (திட்ட படி),அவசரம், குழப்பம் (நிலைமை எல்லை மீறும் போது),குறிப்புகள் (எல்லாம் கட்டுக்குள் என்று நண்பர்களுக்கு உணர்த்துவது),சமாளிக்கும் அவசரம், மற்றோரை குறிப்புணர்த்தி தன்னோடு தொடர சொல்லும் அவசரம் நிறைந்த எச்சரிக்கை தொனிக்கும் timing கொண்ட சமாளிப்புகள் .இந்த கட்டத்தில் அவர் முக பாவங்களை தொடருங்கள். பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்..
அவர் அன்னை சித்திரவதை படுத்த படும் போது , அதை தாங்கி கொள்ளவும் முடியாமல்,தடுக்கவும் முடியாமல்,வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல்,ஆத்திரத்தை கட்டு படுத்தவும் முடியாமல் துடித்து ,எதிரிகளுக்காக சிரித்து சமாளிப்பது போல அவர் காட்டும் நடிப்பு. (ஆம்.நடிப்பது போன்ற நடிப்பு).

இதை பற்றி குறிப்பிடாத விமரிசனங்களே வெளி வந்ததில்லையே?

Gopal.s
15th September 2013, 11:04 AM
I have completed the review of Raja. Vasu Sir, Pl.Continue.

Gopal.s
15th September 2013, 12:22 PM
திரியில் ntf என் தம்பி பற்றி செய்தியே காணோமே?

iufegolarev
15th September 2013, 01:04 PM
கோபால் சார்,

உங்களுடைய "ராஜா" நடை அற்புதம்.

1972 வின் " hero 72 " அல்லவா நம் திரை உலக சித்தர்.

ராஜா திரைப்படம் மூலம் நடிகர் திலகத்தின் மற்றொரு முகம் இந்த திரை உலகம் கண்டது. அதுவரை அவருடைய திரைப்படங்களில் மசாலா என்ற ஒரு விஷயம் இருப்பது அவ்வளவு துல்லியமாக எடைபோடபடவில்லை.

ராஜா திரைப்படத்தை பார்த்தோமேயானால் அவரின் நடை, உடை, பாவனை எல்லாமே முதல் ரகம்.

விதவிதமான உடைகள் இவை அனைத்தும் ஏனோ தானோ என்ற வண்ணத்தில் இல்லாமல் ஒரு hollywood முறையில் இருக்கும்.

அதுவும் அந்த கருப்பு நிற transparent ஷர்ட் இரண்டில் ஒன்று பாடலில் வரே...வா ..! கலைச்செல்வியும் அதற்கேற்றார்போல shorts போட்டுகொண்டு வருவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

ராஜாவின் வசூல் பற்றி சொல்ல தேவையே இல்லை !

குறிப்பாக DEVIPARADISE திரையரங்கு வரலாற்றில் 1972 ராஜாவிற்கு முன் வெளிவந்த அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனைகளை சர்வ சாதாரணமாக சொடுக்கு போடும் நேரத்தில் குறைவான நாட்களிலேயே "ராஜா " மிகவும் ஸ்டைலாக முறியடித்தது என்றால் அது மிகையில்லை.

ராஜான்னா ராஜாதான் !

https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY

vasudevan31355
15th September 2013, 01:39 PM
கோபால் சார்,

அழகான வர்ணனை. அழகு சாம்ராஜயத்தின் சக்கரவர்த்தியை 'ராஜா' பதிவின் மூலம் மீண்டும் மீண்டும் பெருமையடைய வைத்ததற்கு நன்றி.

ஆயிரக்கணக்கான சண்டைகாட்சிகள் இருக்கலாம். இந்த மாதிரி ஒரு ஸ்டைல் சண்டைக்காட்சி அதற்கு முன்னும் பின்னும் ஏது? படு அலட்சியமான பார்வை. ஒவ்வொரு முறையும் புலிக்குட்டி போல துள்ளி விழுந்து எழும் அற்புதம். தியேட்டர்களின் இருக்கைகள் ஆரவாரத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் உடைபட்டு கிழிந்து தொங்கிய அற்புதங்களும், களேபரங்களும் நிகழ்ந்த அதிசய சண்டைக் காட்சி.

"Excuse me mam"என்று 1972-லேயே சொல்லும் ஸ்டைல்
வில்லனை விழுங்கும் ஏளனப் பார்வை
விழுந்தவுடன் துள்ளி எழுந்து நிற்கும் வேகம்
தீர்க்கமாக எதிராளியைக் கணிக்கும் கழுகுக் கண்கள்
வில்லனைக் கண்ணடித்து வெறுப்பேற்றும் நக்கல்
எதிரியின் பிடியில் சிக்கும்போது வலியை உதட்டைக் கடித்து வாய்வழி காண்பித்தல்
கழுத்தில் தொங்கும் மிக அழகான அந்த சின்ன கருப்பு 'டை'
டார்க் ப்ளூ பேன்ட், ஓவர்கோட், உள்ளே தெரியும் வெள்ளை நிற ஷர்ட்

'ஸ்டைல்' என்ற சொல்லின் மொத்த உருவமே!

உன்னை வெல்ல இனி உலகில் யார்?


https://www.youtube.com/watch?v=YCcymIVgvf4&feature=player_detailpage

Gopal.s
15th September 2013, 01:51 PM
நடிகர்திலகத்தின் உருவாக்க ஆரம்ப நாட்களில் பங்கு கொண்டவரும்,நடிகர்திலகத்தின் தீவிர ரசிகருமான (125 வது பட விழா பேச்சு ஒரு சாம்பிள்.) ,ஒரு நேர்மையான அரசியல் தலைவரும் ,தலைமை பண்புகள் நிறைந்தவரும்,படித்தவரும்,சிறந்த பேச்சாளருமான அறிஞர் அண்ணா பிறந்த நாளுக்கு மனதார வாழ்த்துக்கள்.

vasudevan31355
15th September 2013, 01:52 PM
உலகப் பெரு நடிகர்களின் 'ராஜா'

http://ttsnapshot.com/out.php/i19394_vlcsnap-2012-08-07-07h00m30s232.pnghttp://ttsnapshot.com/out.php/i19397_vlcsnap-2012-08-07-07h05m37s235.png
http://ttsnapshot.com/out.php/i19398_vlcsnap-2012-08-07-07h06m56s10.pnghttp://ttsnapshot.com/out.php/i19400_vlcsnap-2012-08-07-07h07m59s110.png

vasudevan31355
15th September 2013, 01:54 PM
'பட்டிக்காடா பட்டணமா'வில் நம் 'ராஜா' கட்-அவுட்டின் தோற்றம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Pattikada_Pattanama_CD2avi_002681014.jpg

vasudevan31355
15th September 2013, 01:55 PM
'ராஜா'ன்னா ராஜாதான்...

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/R-7.jpg

vasudevan31355
15th September 2013, 02:01 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/qewrtyu.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/rtyukl.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/yuii.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/dfghj.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sfdghjhkl.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/rtyujk.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/FCVGB.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/dsfghj.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/werty.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/tyguhij.jpg

vasudevan31355
15th September 2013, 02:01 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/asdfghjk.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ASDfghjuk.jpg

vasudevan31355
15th September 2013, 02:04 PM
http://ttsnapshot.com/out.php/i5982_raja-3.pnghttp://ttsnapshot.com/out.php/i5983_raja-4.png
http://ttsnapshot.com/out.php/i5984_raja-5.pnghttp://ttsnapshot.com/out.php/i5988_raja-9.png
http://ttsnapshot.com/out.php/i5987_raja-8.pnghttp://ttsnapshot.com/out.php/i5981_raja-2.png
http://ttsnapshot.com/out.php/i5985_raja-6.pnghttp://ttsnapshot.com/out.php/i5986_raja-7.png

RAGHAVENDRA
15th September 2013, 02:48 PM
நமது சொக்கலிங்கம் சார் தந்த தகவல்

சினிமா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பழைய திரைப்படங்கள் சென்னைத் திரையரங்குகளில் திரையிடப் படுகின்றது. அதில் இடம் பெறும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள், அவை திரையிடப் படும் அரங்குகள் மற்றும் காட்சி நேரங்களின் விவரங்கள்..


நாளை 16.09.2013 திங்கள் - அபிராமி வளாகம் - மாலை 6.30 மணி - பாசமலர்
17.09.2013 - செவ்வாய் - நண்பகல் காட்சி - சத்யம் வளாகம் - கர்ணன்
18.09.2013 - புதன் - நண்பகல் காட்சி - உட்லண்ட்ஸ் வளாகம் - ஆண்டவன் கட்டளை
19.09.2013 - வியாழன் - நண்பகல் காட்சி - Four Frames - கௌரவம்
20.09.2013 - வெள்ளி - நண்பகல் காட்சி - உட்லண்ட்ஸ் வளாகம் - சவாலே சமாளி
23.09.2013 - திங்கள் - நண்பகல் காட்சி - உட்லண்ட்ஸ் வளாகம் - கலாட்டா கல்யாணம்

iufegolarev
15th September 2013, 05:36 PM
கோபால் சார்,

உங்களுடைய "ராஜா" நடை அற்புதம்.

1972 வின் " hero 72 " அல்லவா நம் திரை உலக சித்தர்.

ராஜா திரைப்படம் மூலம் நடிகர் திலகத்தின் மற்றொரு முகம் இந்த திரை உலகம் கண்டது. அதுவரை அவருடைய திரைப்படங்களில் மசாலா என்ற ஒரு விஷயம் இருப்பது அவ்வளவு துல்லியமாக எடைபோடபடவில்லை.

ராஜா திரைப்படத்தை பார்த்தோமேயானால் அவரின் நடை, உடை, பாவனை எல்லாமே முதல் ரகம்.

விதவிதமான உடைகள் இவை அனைத்தும் ஏனோ தானோ என்ற வண்ணத்தில் இல்லாமல் ஒரு hollywood முறையில் இருக்கும்.

அதுவும் அந்த கருப்பு நிற transparent ஷர்ட் இரண்டில் ஒன்று பாடலில் வரே...வா ..! கலைச்செல்வியும் அதற்கேற்றார்போல shorts போட்டுகொண்டு வருவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

ராஜாவின் வசூல் பற்றி சொல்ல தேவையே இல்லை !

குறிப்பாக DEVIPARADISE திரையரங்கு வரலாற்றில் 1972 ராஜாவிற்கு முன் வெளிவந்த அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனைகளை சர்வ சாதாரணமாக சொடுக்கு போடும் நேரத்தில் குறைவான நாட்களிலேயே "ராஜா " மிகவும் ஸ்டைலாக முறியடித்தது என்றால் அது மிகையில்லை.

ராஜான்னா ராஜாதான் !

https://www.youtube.com/watch?v=LjD4VL33cnY

.....

vasudevan31355
15th September 2013, 06:13 PM
ராஜா-1972.

இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றும் நடிகர்திலகம் திரும்பி திரும்பி இதே மாதிரி படங்களில் சிக்கி கொள்ளவும் இல்லை என்பதே நடிகர்திலகத்தை வித்யாசம் காட்டியது.



ராஜாவுக்கு அடுத்ததாக ஆண்டனியாகவும், அருணாகவும் முற்றிலும் வித்தியாசம் காட்ட இந்த ஒரு ராஜாவாலேதான் முடியும். கூண்டிலே அடைபடாத, அடைத்து விட முடியாத சிங்கமல்லவா!

vasudevan31355
15th September 2013, 06:34 PM
ராஜா-1972.

(தடக் தடக்).முடிந்து தன் கயிற்றை அறுத்து வில்லன்களை அட்டாக் பண்ணி, surprise கொடுத்து lighter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.



காமெரா லைட்டரால் 'தம்' பற்றவைத்து முதலில் மேடத்தை 'க்ளிக்' செய்து பின் லைட்டரை கைகளால் மேல்கீழ் வாக்கில் பிடித்தபடி இரண்டு முறை ஷேக் செய்வார். அடுத்து ரொம்ப காஷுவலாக இருப்பது போன்ற பாவனையில் சிகரெட்டுடன் சிரித்தபடியே அடியாள் ஒருவனின் பின் பக்கத்தைத் தட்டியபடியே குமாரிடம் வருவார். வந்து "ஸாரி... மை டியர் சன்" என்றபடி அப்போது குமாரை 'கிளிக்' செய்து முன் செய்தது போலவே மூன்று முறை லைட்டரை மேலும் கீழும் ஷேக் செய்வார். அடுத்து சேரில் அமர்ந்திருக்கும் பாலாஜியிடம் சென்று அவரை 'கிளிக்' கி மறக்காமல் மூன்று முறை லைட்டரை ஷேக் செய்வார். லைட்டர் அணைந்து அணைந்து போய் சிகரெட் பற்ற வைக்க முடியாமல் போகிறது என்று அனைவரும் நம்ப வேண்டுமென்று வேண்டுமென்று நாடகம் நடத்துவார். ஷேக் பண்ணுவதற்கு வேறு காரணமும் உண்டு.

இந்த எமகாதகன் எல்லாவற்றையும் அதி நுணுக்கமாகத் தெரிந்து கொண்டுதான் தொழிலிலேயே இறங்குவார் போல் இருக்கிறது. என்ன ஒரு தொழில் பக்தி!

vasudevan31355
15th September 2013, 06:45 PM
ராஜா-1972.

ஒரு நேருக்கு நேர் சண்டை காட்சியில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்?



வில்லன் குமார் ஒரு நேரத்தில் இவரின் இரு கைகளையும் வசமாகப் பிடித்து முறுக்கிக் கீழே கொண்டு வரும்போது கீழுதட்டைப் பற்களால் கவ்வி அந்த வலியை ஒரு செகண்ட் காண்பிப்பார் பாருங்கள்!அடாடா!அடாடா!அடாடா!அடாடா!

vasudevan31355
15th September 2013, 06:52 PM
ராஜா-1972.
கல்யாண பொண்ணு அதற்கு அற்புத உதாரணம்.ஒரு back and sideways ஸ்டெப்ஸ் போட்டு துவங்குவாறே அதை சொல்வதா ,கைகளை விரித்து hop step பாணியில் ஒன்றை செய்வாரே அதை சொல்வதா, தெய்வத்தால் எதுதான் முடியாது?


நிற்கவே மாட்டார். துருதுறுவென்று ஆடிக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருப்பார். படகில் "ஒருபக்கக் காதல் இரு பக்கமாக சம்மதம் சொல்பவள் நீயல்லவோ" வின் போது குனிந்தபடி இவர் நிற்கும் போது அந்த வயலட் நிற கோட் பின் பக்கமாக காற்றில் ஆடும் அழகு. கோடி முறை பார்த்திருப்பேன்.

mr_karthik
15th September 2013, 06:55 PM
அன்புள்ள கோபால் சார்,

ராஜா படத்தில் நடிகர்திலகத்தின் பெர்பாமென்ஸை அலசோ அலசென்று அலசித்தள்ளி விட்டீர்கள். நடிகர்திலகத்தை மட்டுமே மையமாகக்கொண்டு அலசியதாலோ என்னவோ மற்ற சிறப்பம்சங்களைத் தவிர்த்து விட்டீர்கள். கேமரா, லொக்கேஷன், வித்தியாசமான ரீ-ரிக்கார்டிங் இசை என்று அனைத்தையும் ஒரு பிடி பிடிப்பீர்கள் நான் என்று எதிர்பார்த்தேன். இருப்பினும் ஆய்வு முழுமையாகவே இருந்தது. அது சரி நடிகர்திலகத்தை சுற்றித்தானே எல்லாமே. எல்லாத்தரப்பு ரசிகர்களையும் ஒருசேர ஈர்த்த படமல்லவா?. வித்தியாசமான படமென்பதை வித்தியாசமாகத் துவங்கும் டைட்டிலே நமக்கு உணர்த்திவிடும். நீங்களே குறிப்பிட்டது போல பக்கா வின்னிங் டீம் அமைந்தது இப்படத்துக்கு.

மிக அருமையான விமர்சனத்தை பதித்துள்ளீர்கள். மற்றவர்களின் அதிரடிகளும் வந்து களை கட்டும் என எதிர்ப்பார்க்கிறோம்...

vasudevan31355
15th September 2013, 06:57 PM
ராஜா-1972.

இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.



லேசாக ராதாவைப் பார்த்து துப்பாக்கியை தன் கன்னத்தின் பக்கமாக வைத்து மிக லேசான தலையசைவில் தான் ஒரு போலீஸ் அதிகாரிதான் என்று ராதாவிற்கு மட்டுமே உணர்த்துவார். அற்புதமாய் இருக்கும்.

vasudevan31355
15th September 2013, 07:11 PM
ராஜா-1972.

இறுதி காட்சி நடிகர்திலகம் நினைத்தாலும் அவருடைய திறனை கட்டு படுத்த முடியாது என்று அவர் காட்டும் சுவாரஸ்ய வெளியீடு.



பாலாஜி தன் அம்மாவை மனோகர் கொடுமைப்படுத்தியவுடன் தாங்கமாட்டாமல் மனோகரை புரட்டி எடுப்பார். பண்டரிபாய்க்கும் பாலாஜி அவர் மகன்தான் என்று தெரிவிக்கப்பட்டு விடும். அம்மாவின் கால்களில் அழுதபடியே பாலாஜி சென்று விழுவார். ரங்காராவ் "இது என்ன குழப்பத்துக்கு மேலே குழப்பம்?" என்று குழம்புவார். மனோகர் "என்ன பாபுவோட அம்மாவா? என்று ஆச்சரியப்படுவார். அப்போது அவர் பக்கமாக திரும்பி நிற்கும் நடிகர் திலகம் "ஆமாம்... பாபுவோட அம்மா...உனக்குத் தெரியாது? என்று சொன்னபடி இடது கையில் பிடித்திருக்கும் ஹேன்ட் கர்சிப்பை ஒரு உதறு உதறியபடி திரும்புவார்.
அருமையோ அருமை! excellent ஆக இருக்கும்.

mr_karthik
15th September 2013, 07:21 PM
நிற்கவே மாட்டார். துருதுறுவென்று ஆடிக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருப்பார். படகில் "ஒருபக்கக் காதல் இரு பக்கமாக சம்மதம் சொல்பவள் நீயல்லவோ" வின் போது குனிந்தபடி இவர் நிற்கும் போது அந்த வயலட் நிற கோட் பின் பக்கமாக காற்றில் ஆடும் அழகு. கோடி முறை பார்த்திருப்பேன்.
'நேரில் வந்த ரதியோ மதியோ' வரிக்கு தன இடுப்பில் கைவைத்துக்கொண்டு இடுப்பை லேசாக பின்பக்கம் அசைக்கும் லாவகம், முதல் சரணம் முடிந்து பல்லவி துவங்கும்போது, ஒரே சீராக தாவித்தாவி ஓட்டமும் நடையுமாக செல்லும் அழகு...

இரண்டாவது சரணத்தில் ஆட முடியாதபடி படகில் ஏற்றிவிட்டு விட்டார் இயக்குனர். இருந்தும்கூட சரணம் முடிவில் தரைக்கு வந்ததும் 'நீ ஆடியாடி போகும் வேகம் பொண்ணுக்கு சரிதானா' என்ற வரியில் தன் வித்தையைக் காட்டுவார்.

vasudevan31355
15th September 2013, 07:29 PM
ராஜா-1972.

இறுதி காட்சி



கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் நீடிக்கும் படு சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கிளைமாக்ஸ். எல்லை மீறிய புத்திசாலித்தன வெளிப்பாடுகள். நாயகர் கோஷ்டியும் சரி... வில்லன் கோஷ்டியும் சரி... நீயா நானா போட்டி. மாறி மாறி வெற்றி தோல்வி. நம்பகமற்ற நம்பகத்தன்மை. தான் யாரன்று நிரூபிக்கப் பாடுபடும் விஸ்வம். விஸ்வம் வெற்றி பெறும் போதெல்லாம் தாழியை உடைக்கும் நடிகர் திலகமும், பாலாஜியும், மேஜரும். ஒரு வினாடி அப்படி இப்படி கவனம் சிதறினால் கிளைமாக்ஸ் பார்த்ததே வேஸ்ட் என்றாகி விடும். ஆனால் கவனம் சிதறாது. நகத்தைக் கடித்தபடியேதான் பார்க்க வேண்டும். "அதுதான் விஸ்வம் என் கூட இருக்கிறானே" என்று மேஜர் வகையாக மனோகரை மாட்டிவிடும் போது திரையரங்கில் பொது ஜனங்களிடமிருந்து எழும் ஆரவாரமே அனைவரும் கிளைமாக்ஸுக்கு அடிமை என்று தெரிந்து விடும். அப்படி ஒன்ற வைத்து விடும் அவ்வளவு பெரிய கிளைமாக்ஸ் காட்சி.

இந்த கிளைமாக்ஸ் காட்சி பாதிப்பு சிவிஆரின் 'சங்கிலி'யில் மீண்டும் வெளிப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அதே ராஜா, மேஜர், மனோகர் கூட்டணி இருக்கும் சுவாரசயமாகவே இருக்கும். ஆனால் ராஜாவை நெருங்க முடியுமா?

ஒ.கே கோபால். உங்களின் அருமையான ராஜாவிற்கு மறுபடி மீண்டும் நன்றி. இன்னும் விரிவாக நிறைய எழுதலாம். நேரம்தான் இல்லை. என்னுடைய feedback இல் தவறிருந்தால் சொல்லுங்கள்.
ராஜ கனவுகளுடன் இன்று ஜம்மென்று உறங்குவேன்.

mr_karthik
15th September 2013, 07:34 PM
பழைய பாகங்களில் ராஜாவைத்தேடிய போது சாரதாவின் பதிவு ஒன்று கண்ணில் பட்டது. வழக்கம்போல லபக்கிட்டேன். (இதே போல முரளி சார் எழுதிய அற்புத பதிவொன்று உள்ளது. தேடிக்கொண்டிருக்கிறேன்).

இப்போதைக்கு ஓவர் டு சாரதா மேடம்.......

"எப்போது யார் 'ராஜா'வைப்பற்றிப் பேசினாலும் அதில் உடனே நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எழும். அந்த அளவுக்கு என் மனதுக்கு மிக நெருங்கிய படங்களில் ஒன்று. (பார்த்தசாரதி சார், நான் சொன்னேனே 'கேட்டகரி நம்பர்: 3' படங்கள் எனக்கு நெருக்கமானவை என்று. அவற்றில் ராஜா, தங்கச்சுரங்கம், என்னைப்போல் ஒருவன், சுமதி என் சுந்தரி... இப்படி நிறைய).

முரளி, சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உங்களைப்போலவே ரிமோட்டால் சேனல்களை கிண்டிக்கொண்டிருந்தபோது ஒரு இந்தி சேனலில், பள்ளியில் சிறுவர்களின் பாக்ஸிங் போட்டி நடந்துகொண்டிருந்தது. அடடே இது ஜானி மேராநாம் படத்துவக்கம்போலிருக்கிறதே என்று கூர்ந்து பார்க்க, அடுத்த காட்சியிலேயே அது உறுதியானது. தாய் பூஜை செய்துகொண்டிருக்க, பையன்கள் பள்ளியில் வாங்கிய 'கப்'புக்காக சண்டையிட்டுக்கொள்ள, காட்சி மாறி இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பேசிக்கொண்டே மாடிப்படியில் இறங்கி வரும் காட்சி. ரிமோட்டை எடுத்து சோபாவின் கீழே வைத்துவிட்டேன். (எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் என் பையன் வந்து, 'ரிமோட்டைக் கொடும்மா, இன்னைக்கு முக்கியமான கிரிக்கெட் மேட்ச் பார்க்கனும்' என்று கேட்க, 'போய் அப்பா ரூம்ல சின்ன டிவில பாரு' என்று அனுப்பிவிட்டேன்).

படம் ஓட ஓடத்தான், தமிழில் 'ராஜா'வை சி.வி.ஆர். எவ்வளவு சுவாரஸ்யப் படுத்தியிருந்தார் என்பது தெரிந்தது. தேவ் ஆனந்தின் அறிமுகக்காட்சி, ஆரஞ்சுகலர் முடி வைத்த கடத்தல் கையாளுடன் அவர் போனில் பேசும் காட்சி எல்லாம் சப்பென்றிருந்தது. டென்னிஸ் ராக்கெட் டீப்பாயின் மீது கிடக்க ஜஸ்ட் ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, டீப்பாயின் மேல் கால்களைநீட்டி வைத்துக்கொண்டு 'மேராநாம் ஜானி' என்று பேசும்போது நம் நினைவுக்கு வருவது, கையில் டென்னிஸ் ராக்கெட்டுட்ன் சுழல்நாற்காலியில் அமர்ந்து 'என் பெயர ராஜா' என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு மாதிரி சுழன்று சுழன்று ஸ்டைல் காட்டும் நடிகர்திலகமும், அவ்வாறு செய்ய வைத்த சி.வி.ஆரும்.

அதே போலத்தான் 'ஓ..மேரி ராஜா' பாடல் காட்சியும். மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டதால் நீங்கள் சொன்னதுபோல தேவ்ஜியும் Hema-வும் ரோப்காரில் போக, போலீஸ் ஆபீஸர் இன்னொரு ரோப்காரில் துரத்தும் காட்சி. 'ராஜா'வில் இப்பாடல் கேரளாவில் எடுக்கப்பட்டதால், கடலோர பாறைப்பகுதிகளில் போலீஸாரால் பின்தொடரப்பட, நடிகர்திலகத்தின் சேட்டைகளால் எரிச்சலுறும் ஜெயலலிதா, அவர் கையைத்தட்டிவிட, 'சுற்றிலும் போலீஸ் பார்த்துக்கொண்டிருக்கிறது' என்று இவர் ஜாடை காட்ட, உடனே அவர் தட்டிவிட்ட கையைக் கன்னத்தில் தேய்த்துக்கொள்ள, இவர் அந்தக்கைக்கு முத்தம் கொடுக்க, அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் 'சாந்திகுமார்' பொறாமையில் உதட்டைக்கடிக்க.... எவ்வளவு ரம்மியமான காட்சி. அத்ற்கேற்றாற்போல காஸ்ட்யூம். மெரூன்கலர் சாரி, மெரூன்கலர் புல்ஸ்லீவ் ஜாக்கெட்டில் கலைச்செல்வி கொள்ளை அழகென்றால், அத்ற்கு ஈடு கொடுத்து, வெள்ளை பேண்ட், கிரீம்கலர் ஷர்ட், ஒருமாதியான மஞ்சளும் பிரௌனும் கலந்த கோட், வெளிர் நீல நிற ஸ்கார்ப் என்று நடிகர்திலகமும் அசத்துவார். கொச்சின் ஏர்போர்ட்டில், 'வைரங்கள் எங்கே' என்று கேட்கும் செல்வியிடம் 'கோட்டில் இருக்கு' என்று கோட்டைக்கழற்றி அவருக்குப் போர்த்திவிடும் இடத்தில் பேண்ட், 'டக்-இன்' செய்யப்பட்ட ஷட்டில் படு ஸ்மார்ட் எங்க அண்ணன்.

அதுபோலவே, தன்னை ஏமாற்றி விட்டு பணத்துடன் தப்பியோடப்பார்க்கும் ரந்தாவாவைப்பிடிக்க காரில் தேவ்ஜியும், பிரானும் போகும் கட்டமும் ரொம்பவே படுசுமார். அதையே தமிழில் கற்பனை செய்து பாருங்கள்.
'பாபு, நான் கொண்டுவந்த பெட்டியை இன்னைக்கு ஒருத்தர் கையில பார்த்தேன்'
'யெஸ், குமார் எடுத்திட்டுப்போயிருக்கான். உரிய இடத்துல சேர்த்துடுவான்'
'உங்களுக்கு நம்பிக்கை அதிகம்'
'அவன்கிட்டே நாணயம் அதிகம்'
'அந்த நாணயத்துக்கு குறுக்கே ஒரு பொண்ணு வந்தா...?'
'ராஜா, என்ன சொல்றே? குமாருக்கு...'
'காதலிக்க வேண்டிய வயசுதானே..?'
'யெஸ், அவன் அடிக்கடி ஒரு டான்ஸ் பொண்ணைப்பார்க்கப்போவான்'.
'மை டியர் சார், எனக்குத்தெரிஞ்சவரைக்கும் அள்ளிக்கொடுக்கும் முதலாளியைவிட அள்ளி அணைக்கும் காதலியின் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்'
'ராஜா, உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?'
'எக்ஸ்பர்ட்'
பாலாஜி கார் சாவியைத்தூக்கிப்போட (அதுக்கும் ஒரு சவுண்ட் கொடுப்பார் MSV), சாவி நடிகர்திலகம் கையில் கிடைத்த அடுத்த வினாடி, நீலநிறக்கார் போய்க்கொண்டிருக்கும் (அதுதான் சி.வி.ஆர்). மஸ்தானின் அற்புத ஒளிப்பதிவில், கார் குறுகலான சந்தில் போகும் காட்சி டாப் ஆங்கிளில் காட்டப்பட, மெல்லிசை மன்னர் சும்மாயிருப்பாரா?. தனது அதிரடி சவுண்டோடு Vocal Humming ஐயும் கலந்து அசத்துவார்.............

(சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளத்தில் துவங்கி, கிருஷ்ணன் தலையில் கிரீடம் சூட்டப்படும் கடைசிக்காட்சி வரை, அணு அணுவாக இப்படத்தை பிரிச்சு மேயணும்போல இருக்கு. என்ன செய்வது? பத்து பக்கம் ஆகுமே).

Thank you Saradha mam.....

mr_karthik
15th September 2013, 07:59 PM
கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் நீடிக்கும் படு சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கிளைமாக்ஸ். எல்லை மீறிய புத்திசாலித்தன வெளிப்பாடுகள். நாயகர் கோஷ்டியும் சரி... வில்லன் கோஷ்டியும் சரி... நீயா நானா போட்டி. மாறி மாறி வெற்றி தோல்வி. நம்பகமற்ற நம்பகத்தன்மை. தான் யாரன்று நிரூபிக்கப் பாடுபடும் விஸ்வம். விஸ்வம் வெற்றி பெறும் போதெல்லாம் தாழியை உடைக்கும் நடிகர் திலகமும், பாலாஜியும், மேஜரும். ஒரு வினாடி அப்படி இப்படி கவனம் சிதறினால் கிளைமாக்ஸ் பார்த்ததே வேஸ்ட் என்றாகி விடும். ஆனால் கவனம் சிதறாது. நகத்தைக் கடித்தபடியேதான் பார்க்க வேண்டும்.
கிளைமாக்ஸ் சண்டையில்கூட ஒரே ஒரு கதாநாயகன் ஐம்பது பேரை அடித்து வீழ்த்துவதாக காட்டாமல் இரு பக்கமும் சமமான 'மேன்பவர்' கொடுத்து சண்டையை சுவாரஸ்யமாக்கி இருப்பார் சி.வி.ராஜேந்திரன்.

வில்லன் கோஷ்டியில் ரங்காராவ், மனோகர், கே.கண்ணன், மற்றும் சில அடியாட்கள், நாயகன் கோஷ்டியில் நடிகர்திலகம், பாலாஜி, மேஜர், ஒன்றுக்கு மூன்றாக சந்திரபாபு இப்படி கிளைமாக்ஸ் சண்டை களை கட்டும்...

sivank
15th September 2013, 08:01 PM
Hey friends,

It has been a very long time since I wrote in this thread. I must accept that I have missed really a lot in those days. What a wonderful analysis Gopal brings in his writings. What Pammalr does with Statistics, Ragavendra sir does with his passion and Vasu´s viedeos gopal brings with analysis. Wonderful. Nice to see, nice to read. All in all Murali has got his friends to share the burden which to carried along with saradha, btw, where is she? Nice to see Karthik back in full form. I enjoy reading ganpat´s beautiful narrations.

It is really a wonderful feeling being a NT fan :smile:

sivank
15th September 2013, 08:02 PM
Here I found something in Luckylookonline.com

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார். கிரிட்டிக்கலி அக்ளெய்ம்ட் ஆன இப்படம், ஏனோ பாக்ஸ் ஆபிஸில் சோடை போனது.

இப்படம் வந்திருந்தபோது விகடனில் எழுதப்பட்ட விமர்சனத்தில் சிவாஜியின் மிருதங்க நடிப்பு தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மிருதங்கம் வாசிப்பதை பார்க்கும்போது, வலிப்பு நோய் வந்தவரை பார்ப்பது போல இருக்கிறது என்று விகடன் காரசாரமாக எழுதிவிட்டது. இந்த விமர்சனத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பினார்கள். இதையடுத்து விகடன், புகழ்பெற்ற மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறது. நிஜ மிருதங்க வித்வான்களை மிஞ்சும் வகையில் சிவாஜியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது என்று அவர்கள் சான்றிதழ் தர, விகடன் மனப்பூர்வமாக தன் வாசகர்களிடம் மன்னிப்பு கோரியது.

செய்த பாவத்துக்கு பரிகாரமாக அடுத்த ஓராண்டுக்கு விகடனில் விமர்சனமே வராது என்றும் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படியே விகடனும் ஓராண்டுக்கு சினிமா விமர்சனம் எழுதவேயில்லை.

mr_karthik
15th September 2013, 08:09 PM
பாலாஜி: "ராதா, ராத்திரியோடு ராத்தியா கோயில் நகைகளை காளிதாஸ் (நாகையா) துந்தனாவுக்கு மாத்திடுவான். சரியா நாலு மணிக்கு கோயில் கதவு திறக்கும். கிருஷ்ணன் சிலைக்கு முன்னால் நகைகள் அடங்கிய துந்தனா இருக்கும். மீரா வேஷத்தில இருக்கிற நீ கடவுளை கும்பிட்டு விட்டு துந்தனாவை எடுத்தால் யாரும் சந்தேகப் பட மாட்டாங்க".

ஜெயலலிதா: "பாபு, இதுவரைக்கும் மனிதர்களை மட்டும்தான் ஏமாத்தினே. இப்ப கடவுளையும் ஏமாத்தனுமா"

பாலாஜி: "என்ன ராதா இப்படி சொல்லிட்டே. நம்ம எல்லார் மனசிலேயும் அவன் தானே இருக்கான். இப்ப என்னமோ என் மனசுக்குள்ள இருந்துகிட்டு 'எடுடா நகையை'ங்கிறான். நான் எடுக்கிறேன் .thats all".

(there will be a big laugh and applause from audience).

Gopal.s
15th September 2013, 08:21 PM
Here I found something in Luckylookonline.com

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார். கிரிட்டிக்கலி அக்ளெய்ம்ட் ஆன இப்படம், ஏனோ பாக்ஸ் ஆபிஸில் சோடை போனது.

இப்படம் வந்திருந்தபோது விகடனில் எழுதப்பட்ட விமர்சனத்தில் சிவாஜியின் மிருதங்க நடிப்பு தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மிருதங்கம் வாசிப்பதை பார்க்கும்போது, வலிப்பு நோய் வந்தவரை பார்ப்பது போல இருக்கிறது என்று விகடன் காரசாரமாக எழுதிவிட்டது. இந்த விமர்சனத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பினார்கள். இதையடுத்து விகடன், புகழ்பெற்ற மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறது. நிஜ மிருதங்க வித்வான்களை மிஞ்சும் வகையில் சிவாஜியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது என்று அவர்கள் சான்றிதழ் தர, விகடன் மனப்பூர்வமாக தன் வாசகர்களிடம் மன்னிப்பு கோரியது.

செய்த பாவத்துக்கு பரிகாரமாக அடுத்த ஓராண்டுக்கு விகடனில் விமர்சனமே வராது என்றும் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படியே விகடனும் ஓராண்டுக்கு சினிமா விமர்சனம் எழுதவேயில்லை.
மிருதங்க சக்கரவர்த்தி மிக பெரிய வெற்றி படம். உமையாள்புரம் சிவராமன் சிவாஜியின் performance பற்றி மிக மிக சிலாகித்திருந்தார். அந்த இறுதி காட்சி ஒரு அபூர்வம். பல நாட்களாக மிருதங்கத்தை தொடாமல் விட்டவர் (சபதம் காரணமாய்) ,திடீரென்று போட்டியில் குதிக்க வேண்டிய நிர்பந்தம் அதுவும் முதிர்ந்த வயதில். மகனுடன் தோற்க கூடாது என்ற நிர்பந்தம். தொடர்ந்த பயிற்சியின்மை ,வயது முதிர்ச்சி, anxiety எல்லாம் சேர்ந்து அவரை மெனகெட வைப்பதாய் காட்சி. அவர் தாளத்தை வாயால் சொல்லி வாசிப்பார். சிவாஜியின் நடிப்பு மிக அர்த்தமுள்ளது.
ஆனந்த விகடன் ஒரு வருடன் விமர்சனத்தை நிறுத்தியது வேறொரு காரணம்.அதற்கும் ,மிருதங்க சக்ரவர்த்திக்கும் சம்பந்தமில்லை.

Gopal.s
15th September 2013, 08:28 PM
கார்த்திக் சார்,

நீங்கள் சொன்ன படி ராஜாவில் நான் தொட்டது நம் பாட்டுடை தலைவனை மட்டுமே.

re-recording marvel இந்த படம். பாடல்கள் ஓகே ரகம்.என்னுடைய விருப்பம் உயிருக்கு தருவது விலை,இரண்டில் ஒன்று. ஆனால் படமாக்க பட்ட விதம்,outdoor locations ,மஸ்தான்(தாரா) படபிடிப்பு ,நடிகர்திலகத்தின் நடிப்பு எல்லாம் சேர்ந்து பாடல்களின் தரத்தை உயர்த்தின. ரீ ரெக்கார்டிங் ,டைட்டில் தொடங்கி இறுதி காட்சி வரை இளமை விறுவிறுப்பு கொண்டு படத்தின் தரத்துடன் சேர்ந்து பயணிக்கும்.

இந்த படத்தில் பாலாஜி,மனோகர், ரந்தா,பத்மா கன்னா,மற்றும் அந்த சிவப்பு தலையர் உட்பட அனைவரும் படு ஸ்டைலிஷ்.ரங்காராவ் ரசித்து பண்ணியிருப்பார். (சிரிப்புத்தான் சகிக்காது)

நாராயணன் வசனங்கள் இளமை துள்ளும்.

நல்ல டீம் வொர்க்.

sivank
15th September 2013, 08:30 PM
You should know it best Gopal. I just posted what I read at his blog.

parthasarathy
15th September 2013, 09:18 PM
'பட்டிக்காடா பட்டணமா'வில் நம் 'ராஜா' கட்-அவுட்டின் தோற்றம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Pattikada_Pattanama_CD2avi_002681014.jpg

Dear Vasudevan Sir (of course all our fellow hubbers too),

I was having this particular still (cream colour shirt with a scarf), which appeared in Pesum Padam), for years in my diary. I used to replace this still to the new diary year on year.

Dear Gopal Sir,

Great review on my favourite "Raja".

Regards,

R. Parthasarathy

parthasarathy
15th September 2013, 09:22 PM
லேசாக ராதாவைப் பார்த்து துப்பாக்கியை தன் கன்னத்தின் பக்கமாக வைத்து மிக லேசான தலையசைவில் தான் ஒரு போலீஸ் அதிகாரிதான் என்று ராதாவிற்கு மட்டுமே உணர்த்துவார். அற்புதமாய் இருக்கும்.

Not only this. Closely observe his voice change over from a normal tone to a barritone voice and that too only for this scene.

Regards,

R. Parthasarathy

RAGHAVENDRA
15th September 2013, 10:23 PM
மிகவும் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக படத்தைப் போலவே சூப்பர் ஹிட் விவாதமாக ராஜா படத்தைப் பற்றிய விவாதம் சென்று கொண்டிருக்கிறது. கேன்டீன் வியாபாரமும் நடக்க வேண்டும் அல்லவா. அதற்காக இடைவேளை விடுவதாய் நினைத்துக் கொண்டு குறுக்கிடுவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். மிகச்சிறப்பான தகவல் மற்றும் நிழற்படப் பகிர்வுக்காகவே இந்த பீடிகை

கோவை நண்பர் செந்தில் அவர்கள் முகநூலில் பகிர்ந்து கொண்டுள்ள நிழற்படம் மற்றும் தகவல். உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ்ப் படத்திற்கு ஒரு திரையரங்கில் படப்பிடிப்பு நடப்பதாகக் காட்சி போலும். விவரம் தெரியவில்லை. அந்த திரையரங்கில் நடிகர் திலகத்தின் நவராத்திரி திரைப்படம் ஓடுவதாக படப்படிப்பு நடைபெற்றுள்ளது. அந்தத் திரையரங்க படப்பிடிப்புக்காக கட்அவுட் பேனர் போன்றவை ரம்மியமாக உள்ளன. செந்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்த நிழற்படங்களை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/s720x720/1231297_230505770439030_594848173_n.jpg

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/q72/s720x720/1236972_230505967105677_1678717643_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/s720x720/546996_230506133772327_1359311905_n.jpg

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/s720x720/942186_230506223772318_894560583_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/s720x720/560538_230505200439087_354746240_n.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/s720x720/9905_230505360439071_1993569923_n.jpg

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/q71/s720x720/543926_230505563772384_797374227_n.jpg

RAGHAVENDRA
15th September 2013, 10:40 PM
'பட்டிக்காடா பட்டணமா'வில் நம் 'ராஜா' கட்-அவுட்டின் தோற்றம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Pattikada_Pattanama_CD2avi_002681014.jpg

ராஜா படத்தை விட இந்த கட்அவுட்டைப் பார்க்க வருவதற்காகவே வட சென்னையிலிருந்து நண்பர்கள் புடைசூழ கிட்டத் தட்ட தினமும் வருவார்கள். இன்னும் சொல்லப் போனால் பல மன்றங்கள் ஷிப்ட் முறை போன்று மாற்றி மாற்றி மாலை அணிவித்து வந்தது மறக்க முடியாத விஷயமாகும். கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டு எதிரில் இருந்த உடுப்பி ஹோட்டலில் காபி ஆர்டர் பண்ணிவிட்டு [முடிந்தால் டிபன்] அந்த பேனரையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பேன். மிகவும் தத்ரூபமாக உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். இந்த போஸ் படத்தில் முழுமையாக இடம் பெறாதது மிகவும் வருத்தமாக இருக்கும். அதற்காகவே இந்த பேனரை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்போம்.

அதுவும் தேவி பேரடைஸில் எம்.எஸ்.வி.யின் டைட்டில் இசை தனி அனுபவத்தை ஏற்படுத்தும். மீண்டும் ஒரு முறை இப்படத்தை தேவி பேரடைஸில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதா என்ற ஏக்கத்தை உண்டாக்கியது ராஜா. குறிப்பாக ரந்தாவா சண்டைக் காட்சியில் ஒவ்வொரு அடியும் அரங்கில் இடியாய் எதிரொலிக்கும். பிரம்மாண்டமான தியேட்டரில் ஒலி அமைப்பு அட்டகாசமாய் துல்லியமாய் ஒலிக்கும் போது பார்க்கும் அனுபவம் அலாதி.

ராஜா படத்தின் வெற்றிக்கு மெல்லிசை மன்னரின் பங்கு குறிப்பிடத் தக்கது. பின்னணி இசை மிரட்டும். அதே போல் கண்களைக் கொண்டு வா பாடலைத் தியேட்டரில் கேட்கும் போது எல் ஆர் ஈஸ்வரியின் ஹஸ்கி குரல் நம் காதில் வந்து ரகசியமாய் சொல்லி விட்டுப் போவது போல் இருக்கும்.

நிச்சயமாக தேவி பேரடைஸில் ராஜா பாடத்தைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை நண்பர்கள் தமிழகத்தின் வேறு எந்த திரையரங்கிலும் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.

RAGHAVENDRA
15th September 2013, 10:43 PM
வாசு சார்
கோபாலின் ராஜா பதிவிற்கு தங்களுடைய பதில் பதிவுகள் சூப்பர்.

கார்த்திக் சார், சாரதி சார், சிவன் சார் மற்றும் நண்பர்களுக்கு,
ராஜா நம் அனைவரையும் எப்படி சுண்டி இழுக்கிறது பார்த்தீர்களா.

Gopal.s
16th September 2013, 05:27 AM
வாசு,
தூள் கிளப்பி விட்டாய். உன்னுடைய ஸ்டில் எல்லாமே அழகு. துணை பதிவுகள் உன் ரசனையின் உச்சம்.நீ வந்தாலே தனி களைதான்.
கார்த்திக் சார்,
உங்கள் பதிவு ,சாரதாவின் மீள் பதிவு எல்லாமே superb சாரதா எல்லா சிவாஜி ரசிகர்களாலும் நேசிக்க படுபவர். ஏன் இப்போது தலை காட்டுவதே இல்லை?
சாரதி,
ரொம்ப நாள் கழித்து. தொடர்ந்து பதிவிட்டு எங்களை குஷி படுத்துங்கள்.
ராகவேந்திரா ஐயா
உங்களுக்காக காத்திருக்கிறோம்.நீங்கள் ராஜாவை மகாராஜா ஆக்கி விட மாட்டீர்களா?

Subramaniam Ramajayam
16th September 2013, 07:08 AM
ராஜா படத்தை விட இந்த கட்அவுட்டைப் பார்க்க வருவதற்காகவே வட சென்னையிலிருந்து நண்பர்கள் புடைசூழ கிட்டத் தட்ட தினமும் வருவார்கள். இன்னும் சொல்லப் போனால் பல மன்றங்கள் ஷிப்ட் முறை போன்று மாற்றி மாற்றி மாலை அணிவித்து வந்தது மறக்க முடியாத விஷயமாகும். கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டு எதிரில் இருந்த உடுப்பி ஹோட்டலில் காபி ஆர்டர் பண்ணிவிட்டு [முடிந்தால் டிபன்] அந்த பேனரையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பேன். மிகவும் தத்ரூபமாக உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். இந்த போஸ் படத்தில் முழுமையாக இடம் பெறாதது மிகவும் வருத்தமாக இருக்கும். அதற்காகவே இந்த பேனரை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்போம்.

அதுவும் தேவி பேரடைஸில் எம்.எஸ்.வி.யின் டைட்டில் இசை தனி அனுபவத்தை ஏற்படுத்தும். மீண்டும் ஒரு முறை இப்படத்தை தேவி பேரடைஸில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதா என்ற ஏக்கத்தை உண்டாக்கியது ராஜா. குறிப்பாக ரந்தாவா சண்டைக் காட்சியில் ஒவ்வொரு அடியும் அரங்கில் இடியாய் எதிரொலிக்கும். பிரம்மாண்டமான தியேட்டரில் ஒலி அமைப்பு அட்டகாசமாய் துல்லியமாய் ஒலிக்கும் போது பார்க்கும் அனுபவம் அலாதி.

ராஜா படத்தின் வெற்றிக்கு மெல்லிசை மன்னரின் பங்கு குறிப்பிடத் தக்கது. பின்னணி இசை மிரட்டும். அதே போல் கண்களைக் கொண்டு வா பாடலைத் தியேட்டரில் கேட்கும் போது எல் ஆர் ஈஸ்வரியின் ஹஸ்கி குரல் நம் காதில் வந்து ரகசியமாய் சொல்லி விட்டுப் போவது போல் இருக்கும்.

நிச்சயமாக தேவி பேரடைஸில் ராஜா பாடத்தைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தை நண்பர்கள் தமிழகத்தின் வேறு எந்த திரையரங்கிலும் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.

devi paradise- raja trailors--rajapicture- 26th even show- meeting with cvr-- aravarangal--aarpattangal--
marakkamudiyatha anubhavangal. Ninaithale inikkum.

RAGHAVENDRA
16th September 2013, 09:47 AM
Raja while we are discussing, Jaya TV is screening this film at 10 am on 18.09.2013

TV Schedule of NT's films this week


THIRUMAL PERUMAI – J MOVIES – 17.09.2013 – 6 AM
KALYANIYIN KANAVAN – J MOVIES - 19.09.2013 – 1 PM
RAJA – JAYA TV – 18.09.2013 – 10 AM
HARICHANDRA – 18.09.2013 – MURASU TV – 7.30 PM
ANBULLA APPA – 21.09.2013 – MURASU TV – 7.30 PM
NERMAI – POLIMER TV – 22.09.2013 – 2 PM
NATCHATHIRAM – RAJ DIGITAL PLUS – 17.09.2013 – 4 PM
THEERPPU – RAJ TV – 17.09.2013 –1.30 PM
SANTHIPPU – RAJ TV – 18.09.2013 –1.30 PM
NAAM IRUVAR – RAJ TV – 19.09.2013 –1.30 PM
SAVALE SAMALI – RAJ TV – 20.09.2013 –1.30 PM
SAADHANAI – RAJ TV – 21.09.2013 –1.30 PM
LAKSHMI VANTHACHU – ZEE TAMIZH – 17.09.2013 – 2.30 PM
AVAN THAN MANITHAN – ZEE TAMIZH – 19.09.2013 – 2.30 PM

iufegolarev
16th September 2013, 11:05 AM
மிருதங்க சக்கரவர்த்தி மிக பெரிய வெற்றி படம். உமையாள்புரம் சிவராமன் சிவாஜியின் performance பற்றி மிக மிக சிலாகித்திருந்தார். அந்த இறுதி காட்சி ஒரு அபூர்வம். பல நாட்களாக மிருதங்கத்தை தொடாமல் விட்டவர் (சபதம் காரணமாய்) ,திடீரென்று போட்டியில் குதிக்க வேண்டிய நிர்பந்தம் அதுவும் முதிர்ந்த வயதில். மகனுடன் தோற்க கூடாது என்ற நிர்பந்தம். தொடர்ந்த பயிற்சியின்மை ,வயது முதிர்ச்சி, anxiety எல்லாம் சேர்ந்து அவரை மெனகெட வைப்பதாய் காட்சி. அவர் தாளத்தை வாயால் சொல்லி வாசிப்பார். சிவாஜியின் நடிப்பு மிக அர்த்தமுள்ளது.
ஆனந்த விகடன் ஒரு வருடன் விமர்சனத்தை நிறுத்தியது வேறொரு காரணம்.அதற்கும் ,மிருதங்க சக்ரவர்த்திக்கும் சம்பந்தமில்லை.

Gopal Sir,

You have exactly mentioned the situation of the sequences. Many Fools ( including IDHAYAM PESUGIRADHU MANIAN & THOSE DAYS ANANDA VIKATAN) who commented those days, who comment these days in different sites do not know the significance and logic of the scene. Such people will come out with desperate attacks everytime in one or the other form against Nadigar Thilagam ONLY.

Unfortunately OUR STATE ESPECIALLY, has more such distilled idiots and fools amidst intellectuals, can't help it. !

Regards

Gopal.s
16th September 2013, 12:54 PM
Gopal Sir,

You have exactly mentioned the situation of the sequences. Many Fools ( including IDHAYAM PESUGIRADHU MANIAN & THOSE DAYS ANANDA VIKATAN) who commented those days, who comment these days in different sites do not know the significance and logic of the scene. Such people will come out with desperate attacks everytime in one or the other form against Nadigar Thilagam ONLY.

Unfortunately OUR STATE ESPECIALLY, has more such distilled idiots and fools amidst intellectuals, can't help it. !

Regards
இந்த வகை நடிப்பை Astraud ஸ்கூல் என்பதில் வகை படுத்த படும்.உள்ளே இருக்கும் ஆத்மாவின் துடிப்பை முகத்தில் cruelty முறையில் வெளிபடுத்த படுவது.

இந்த படம் எனக்கு பிடித்தமில்லா விட்டாலும், சிவாஜியின் நடிப்பு மிக மிக துல்லியமான கதையோடு ஒட்டிய ஒன்றே. விமரிசனர்கள் என்று அந்த காலத்தில் இருந்தவர்கள் எதிலும் ஆழமாக சென்று ஆராயும் மனநிலை இல்லாத சராசரிகள்.
என்ன செய்வது?

ஏன்?சிவாஜி நினைத்திருந்தால் திருவிளையாடல் போல இலகுவாக வாசித்திருக்க முடியுமே? ஏன் அவர் அப்படி செய்யவில்லை என்று யோசிக்கும் அறிவு கூட இல்லாத மடையர்கள் விமரிசகர்களாய் உலவி கொண்டிருந்தனர். உண்மையான அறிவுள்ள என் போன்ற உண்மை விமரிசகர்கள் ,வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பொறியாளர்,மருத்துவர்,சி.ஏ என்று உரு மாறி ,இந்த மாதிரி போலிகளை விமரிசகர்கள் ஆக்கி விட்டோம் .என்ன செய்வது?

gkrishna
16th September 2013, 01:12 PM
ராகவேந்தர் சார் கோபால் சார் வாசு சார் கார்த்தி சார் முரளி சார் N T சார் மற்றும் எல்லா சார்களக்கும்
ராஜா சார் பற்றி எழதுவதற்கு தனி திரி ஒன்றை தொடங்கலாம்
அவ்வளவு விஷயம் உள்ளது.
ராஜா மற்றும் விஸ்வம் அறிமுகம் ஆகும் போலீஸ் லாக் up காட்சி ஓன்றே போதும் அந்த படத்தின் வெற்றியை குறிக்க
ராஜா ரம்பத்தை வைத்து கம்பியை உடைக்கும் காட்சி
அந்த வெள்ளை kaiidi போட்ட சிகப்பு கலர்
ஸ்லாசன்கேர் டென்னிஸ் ராக்கெட் பற்றி பேசும் காட்சி
விஸ்வம் தண்ணி அடிக்கும் காட்சி
சந்திரபாபு அடி வாங்கும் காட்சி
விஸ்வம் "வித் pleasure "
என்று அடி தொண்டையில் பேசும் காட்சி
பிறகு பாபுவை சந்திக்கும் போது "பாபு ராஜாவை நான் கொஞ்சமா நம்பினேன் கொஞ்சமா ஏமாந்தன் நீ முழுக்க நம்பிட்டே "
எந்த ஊரிலாவது 175 டேய்ஸ் உண்டா சார்

Gopal.s
16th September 2013, 02:04 PM
Krishnaji,

It crossed 50 Days in most of the release centres and ran for 100 days in Chennai,Madurai and Trichy. It was a smashing super-hit and created new record in Devi Paradise in collection breaking all previous ones.

mr_karthik
16th September 2013, 02:10 PM
ராஜா படத்தை விட இந்த கட்அவுட்டைப் பார்க்க வருவதற்காகவே வட சென்னையிலிருந்து நண்பர்கள் புடைசூழ கிட்டத் தட்ட தினமும் வருவார்கள். இன்னும் சொல்லப் போனால் பல மன்றங்கள் ஷிப்ட் முறை போன்று மாற்றி மாற்றி மாலை அணிவித்து வந்தது மறக்க முடியாத விஷயமாகும். கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டு எதிரில் இருந்த உடுப்பி ஹோட்டலில் காபி ஆர்டர் பண்ணிவிட்டு [முடிந்தால் டிபன்] அந்த பேனரையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்திருப்பேன். மிகவும் தத்ரூபமாக உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். இந்த போஸ் படத்தில் முழுமையாக இடம் பெறாதது மிகவும் வருத்தமாக இருக்கும். அதற்காகவே இந்த பேனரை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருப்போம்.

'ராஜா' பாட்டுப் புத்தகத்தின் முகப்பு அட்டையிலும், பல்வேறு செய்தித்தாள் விளம்பரங்களிலும் இடம்பெற்று, 'ராஜா' என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் இந்த அட்டகாசமான போஸ், படத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போனது பெரிய ஏமாற்றமே. இந்த காட்சியை தவற விடக்கூடாது என்று, நடிகர்திலகம் - பாலாஜி இடையே நடக்கும் சண்டைக்காட்சியை கண் இமைக்காமல் கவனித்துக் கொண்டிருப்போம் . அப்படியும் அந்தக் காட்சி சட்டென்று கடந்து சென்று நம்மை வினாடியில் ஏமாற்றி விடும்....

Subramaniam Ramajayam
16th September 2013, 02:16 PM
Krishnaji,

It crossed 50 Days in most of the release centres and ran for 100 days in Chennai,Madurai and Trichy. It was a smashing super-hit and created new record in Devi Paradise.

Not only at deviparadise and also at ROXY central madras created new records of collection till closing date.

vasudevan31355
16th September 2013, 02:50 PM
'ராஜா' ரிலீஸ் (கடலூர் பிளாஷ்பேக்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_001255554.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1VOB_001255554.jpg.html)

நம் ராஜா நடித்த 'ராஜா' கடலூர் நியூசினிமாவில் வெளியானது. அண்ணா மேம்பாலத்திற்குக் கீழே அதாவது கடிலம் ஆற்றுப் பாலத்தின் இறககத்தில் அமைந்துள்ள பழமையான அரங்கு நியூசினிமா. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'ராஜா' ரிலீஸுக்கு முன்னால் வரை நியூசினிமா திரை அரங்கில் தரை மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுக்க கவுண்டர்கள் ஓப்பனாக இருக்கும். வெயில்,மழை இவற்றை பொருட்படுத்தாமல் வெட்டவெளியில் மணிக்கணக்கில் கியூவில் நின்றுதான் டிக்கெட் எடுக்க வேண்டும். அரங்கு நிறைந்து விட்டால் அடுத்த ஷோவிற்கு கூட்டம் எங்கும் போகாமல் அப்படியே நின்றவாக்கிலேயே தொடரும். ஒருவரையொருவர் விடாமல் கைகளோடு அணைத்துக் கொண்டு மற்றவர்கள் குறுக்கே நுழைந்துவிடாத வகையில் நிற்பார்கள். தரை டிக்கெட் ஐம்பது காசுகள். பெஞ்ச் டிக்கெட் ரூபாய் 1.10. தியேட்டரின் மெயின் கேட்டிற்கு உள்ள நுழைந்தால் அங்கு first class மற்றும் செகண்ட் கிளாஸ் டிக்கெட் கவுண்ட்டர்கள் இருக்கும். அங்கு நமக்கு வேலையே இல்லை. அதனால் தியேட்டர் நிர்வாகம் தரை பெஞ்ச் டிக்கெட் வாங்குபவர்களுக்காக வேண்டி roof உடன் கூடிய நீண்ட கவுண்டர் சுவர்களை 'ராஜா' படத்திற்காகவே புதிதாக ஸ்பெஷலாகக் கட்டியது. ராஜாவின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு மிக அதிகமாக எல்லோரையும் தொற்றிக்கொள்ள அதிகமாக பரபரப்பானது தியேட்டர் நிர்வாகம். கடலூர் முனிசிபாலிட்டி சேர்மன் தங்கராஜ் முதலியார் அவர்களின் கைவசம் தியேட்டர் இருந்தது. ராஜாவிற்காக திரையரங்கு ஓரளவிற்கு புதுப்பிக்கப்பட்டது. அதில் முக்கியமானது நான் மேலே குறிப்பிட்ட தரை டிக்கெட், மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுப்பதற்கான புது கவுண்ட்டர்கள் கட்டப்பட்டதுதான். தரை டிக்கெட் கவுண்டர்களை இரண்டு வளைவுகளாகச் சென்று திரும்பி டிக்கெட் எடுக்கும்படி கட்டியிருந்தார்கள். 26.01.1972 அன்று 'ராஜா' ரிலீஸ்.

ஆனால் கடலூர் சில விஷயங்களில் சாதனை படைத்தது. 'ராஜா' தமிழ்நாடெங்கும் 1972 குடியரசு தினத்தன்று ரிலீஸ் என்றால் எங்கள் கடலூரில் 25-1-1972 அன்று அதாவது ஒரு தினம் முன்னதாகவே ரிலீஸ் ஆகி விட்டது. (இது போல எனக்குத் தெரிந்து கௌரவம்,வெள்ளை ரோஜா இரு படங்களும் ரிலீஸுக்கு முந்தின நாளே கடலூரில் வெளியாகி விட்டன. இதில் விசேஷம் என்னவென்றால் நான் குறிப்பிட்ட மூன்று படங்களும் கடலூர் நியூசினிமாவில்தான் ரிலீஸ் ஆயின) 'ராஜா' 25-1-1972 இரவு சிறப்பு ரசிகர் காட்சியாகத் திரையிடப்பட்டு விட்டது. அதனால் ரசிகர் மன்றத்தினர் அனைவரும் முன்தினம் இரவே ராஜாவைக் கண்டு களித்து விட்டனர். படத்தின் ரிசல்ட் 'ஓகோ'வென இருந்தது. ராமாபுரத்தில் இருந்து ரசிகர்கள் பலர் சைக்கிளில் கடலூர் சென்று ரசிகர் ஷோ பார்த்து விட்டு திரும்பி படத்தின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அடுத்த நாள் (26.01.1972) காலை நான் அம்மாவுடன் பஸ்ஸில் கடலூர் நியூசினிமா சென்று விட்டேன். முதல் நான்கு நாட்களுக்கு ஐந்து காட்சிகள் என்று ஞாபகம். முன்தினம் பார்த்த ரசிகர்கள் அடுத்தநாளும் கடலூர் நோக்கி படையெடுத்தனர். படம் பிரம்மாண்ட வெற்றி என்ற செய்தி வேறு பரவி விட்டது. சென்னை சாந்தி தியேட்டரில் அனைவரையும் வசீகரித்த அதே தலைவரின் ஸ்டைல் கட் அவுட் தியேட்டரின் மெயின் கேட்டிற்கு மேலே ஏற்றப் பட்டிருந்தது. பிரம்மாண்டமான பஞ்சு மாலைகள் தலைவரின் கழுத்தை அலங்கரித்தன. தலைவரின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த ஸ்கார்ப் அப்படியே தத்ரூபமாக காற்றில் பறப்பது போன்றே இருந்தது. கடலூர் மெயின் சாலையில் தியேட்டர் அமைந்திருந்ததால் அனைவர் கண்களும் ராஜாவின் மீது. கட்டுக்கடங்காத கூட்டம். ஜனம் அலைமோதுகிறது. டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா என்ற குரல்கள்தான் எங்கும் எதிரொலிக்கின்றன. அன்று ஐந்து காட்சிகள். அப்போதெல்லாம் காலை ஒன்பது மணி காட்சிக்கு பெண்கள் அதிகமாக வரவே மாட்டார்கள். ஒரு பத்து பதினைந்து பெண்கள்தாம். அதனால் டிக்கெட் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். பெண்கள் டிக்கெட் ஆண்களுக்கு செல்லாது. சிறுவர்களுக்கு செல்லும். பெண்கள் டிக்கெட் கொடுத்து முடிந்ததும் சிறிது நேரம் வெயிட் செய்து பார்த்து விட்டு பின் மீதி டிக்கெட்களை ஆண்களுக்கு கொடுத்து விடுவார்கள். நான் அம்மாவுடன் பெண்கள் கவுண்ட்டரில் நின்று நடப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கவனித்துக் கொண்டிருந்தேன். அரங்கின் வெளியே முழுக்க கொடிகளும், தோரணங்களுமாகவே தெரிந்தன. போலீஸ்காரர்கள் மூன்று நான்கு பேர் இருக்கும். சமுத்திரம் போன்ற கட்டுக்கடங்காத ரசிகர்களை கட்டுப்படுத்த பிரம்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறத் துவங்கியது. மணி சரியாக எட்டு இருக்கும்.

திடீரென்று ஒரே மேளதாள சப்தம். கூடவே வானவேடிக்கை வேறு. வெடிச் சப்தங்கள் காதைக் கிழிக்க ஒரு இளைஞர் பட்டாளம் தியேட்டரில் புயலெனப் புகுந்தது. ஒரு ஐம்பது பேருக்கு மேல் இருக்கும். ஒரு வண்டியில் மூட்டைகளாக அடுக்கப்பட்டு அதன் பின்னாலே சிலர் வந்தனர், பின் மூட்டைகளை இறக்கி அவிழ்த்தனர். பார்த்தால் அவ்வளவு ஆப்பிள் பழங்கள். வந்த கோஷ்டி சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது. சிலர் கோணி ஊசிகளை எடுத்து ஆப்பிளின் உள்ளே செருக, சிலர் சணல் கொண்டு தைத்து ஆப்பிள்களை மிகப் பெரிய மாலையாக அரைமணி நேரத்தில் தொடுத்து விட்டனர். இப்போது பிரம்மாண்டமான ராட்சஷ ஆப்பிள் மாலை தயார். அதிர்வேட்டுகள் முழங்க தலைவரின் கட்-அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்டது. அப்போது இந்த அலங்காரமாலை எல்லோருக்கும் ரொம்பப் புதுசு. "ஆப்பிள் மாலை டோய்" என்று பலர் அதிசயத்தில் வாயைப் பிளந்தனர். கொஞ்ச நேரத்தில் அந்த ஆப்பிள் மாலை அனைவரையும் கவர்ந்து விட்டது. தலைவரின் கட்-அவுட் மேலும் அழகுடன் பரிமளித்தது.

முதன் முதலில் ஒரு கட் அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்ட பெருமையை ராஜா பெற்றார். (இது கடலூர் சினிமா ரசிகர்கள் இன்றளவும் பெருமையாக பேசி மகிழும் விஷயம்) பின் ஒரே கூச்சலும் குழப்புமாகவே இருந்தது. நான் அம்மாவை விட்டு விட்டு வந்து இந்த வேடிக்கை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவோ என்னை விட வில்லை. கூட்டத்தில் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயம் அவர்களுக்கு. நான் ஒரு ஓரமாக நின்று பார்த்து விட்டு வருகிறேன் என்று அடம் பிடித்து வந்து ஒரு இடத்தில் safe ஆக நின்று கொண்டேன்.

சரியாக ஒன்பதரை மணிக்கெல்லாம் டிக்கெட் கொடுப்பதற்கான பெல் கொடுத்து விட்டார்கள். அவ்வளவுதான். கூட்டம் நிலைதடுமாற ஆரம்பித்தது. அதுவரை ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக நின்றிருந்த கியூ கண்மண் தெரியாமல் சிதறியது. ஒருவர் மேல் ஒருவர் ஏறிக் குதித்து டிக்கெட் கவுண்ட்டரை நெருங்க முண்டியடித்தனர். போலீஸ்கார்களால் சமாளிக்க முடியாமல் லத்தியைக் கையில் எடுத்து கண்ட மேனிக்கு சுழற்ற ஆரம்பித்து விட்டனர். ஒரே அடிதடி. துணி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் டிக்கெட் எடுக்க சில பேர் தாவிக் குதித்தனர். நிற்பவர்கள் தலை மேல் கால்வைத்து பலர் ஓடினர். கீழே இருப்பவர்கள் வலி தாங்காமல் அவர்களைத் திட்டித் தீர்த்தனர்.

அப்போதுதான் கட்டியிருந்த புதிய கவுண்ட்டர் சுவர் சரியாகக் காயாமல் வேறு இருந்ததால் நெரிசலின் காரணமாக அப்படியே பெயர்த்துக் கொண்டு இடிந்து விழுந்தது. சிலருக்கு நல்ல காயம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டம் நெருக்கித் தள்ளியது. இதையெல்லாம் கண்டு மிரண்டு போன நான் பயந்து போய் அம்மாவிடம் ஓடி வந்து விட்டேன். அம்மா அதற்குள் டிக்கெட் எடுத்து விட்டார்கள். பெண்கள் கவுண்ட்டரை சுற்றி பயங்கரமான ஆண்கள் கூட்டம் டிக்கெட்டுக்காக வெயிட் செய்தது. (கவுண்ட்டர் சுவர் முதன் முதல் கூட்ட நெரிசலால் இடிந்து உடைந்து விழுந்த பெருமையும் ராஜாவிற்கே சொந்தம்)

இதற்குள் டிக்கெட் எடுக்காத ஒரு கூட்டம் மெயின் கேட்டின் மேல் ஏறித் தாவி குதிக்க வேறு ஆரம்பித்து விட்டது. தியேட்டர் ஊழியர்கள் ஆளுக்கொரு கழியை எடுத்துக் கொண்டு இரும்பு கேட்டின் மேல் ஏறிக் குதிப்பவர்களை வாங்கு வாங்குவென்று வாங்கினர். அதில் சிலர் அவர்களிடமிருந்தே கழியைப் பிடுங்கி தியேட்டர் சிப்பந்திகளை பதம் பார்த்தனர். யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மா மிகவும் மிரண்டு போய் என் கையை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு பெண்கள் அமரும் இருக்கைக்கு சென்று விட்டார்கள். அதற்குப் பிறகு வெளியே என்ன நடந்தது என்று தெரியாது. டிக்கெட் கிடைத்த சந்தோஷத்தில் கூக்குரலிட்டு விசிலடித்தபடி பலர் தரை டிக்கெட்டுக்கான சாயும் வசதிகள் இல்லாத மூட்டைப் பூச்சிகளின் மூர்க்கத்தனமான கடிகள் கொண்ட மொட்டை பெஞ்ச்களில் தங்கள் நண்பர்களுக்காக துண்டுகளை விரித்து இடம் போட்டனர். வேறு யாராவது வந்து உட்கார்ந்தால் மவன் தொலைந்தான்.

படம் போட்டதும் கடலின் பேரிரைச்சல் போல அப்படி ஒரு இரைச்சல். தலைவரின் அறிமுகக் காட்சியில் ஆர்ப்பாட்டம். ஆரவாரம். கூடை கூடையாய் பூக்களின் உதிரிகள் பறக்கின்றன. விசில் ஒலிகளும், கைத்தட்டல்களும் காதைக் கிழித்தன. தியேட்டர் முழுதும் ஒரே ஜனக்கடலாகக் காட்சியளித்தது. உட்கார்ந்து பார்த்தவர்கள் அளவிற்கு நின்றவாறே பலர் நம் ராஜாவின் ஸ்டைல் ரகளைகளைக் கண்டு மகிழ்ச்சித் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ரந்தாவாவுடனான அந்த ஈடுஇணையில்லாத சண்டைக்காட்சியின் போது முன் இருக்கைகளை எட்டி உதைத்து சிதைத்து ரசிகர்கள் காட்டிய உற்சாக மிகுதியின் மகிழ்வான உணர்வுகளின் வெளிப்பாட்டை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தலைவரின் நடிப்பைப் போல. அதற்குப் பிறகு உள்ளே நடந்த அமர்க்களத்தை சொல்லவும் வேண்டுமா?! படம் பார்த்தவர்களில் பாதி பேருக்கு மேல் ஆளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வழங்கப்பட்டது. (இதுவும் ஒரு சாதனை) காலை ஒன்பது மணி காட்சி முடிந்து திரும்பும்போது நண்பகல் 12 மணி காட்சிக்கு காலையில் இருந்தது போல இருமடங்கு கூட்டம் அலைமோதிக் கொண்டு நின்றது.

கடலூர் நியூசினிமாவில் ஒரு மாதத்துக்கு ஓடி வசூலில் தன்னிகரில்லா சாதனையைப் படைத்தார் ராஜா. பிறகு மறு வெளியீடுகளிலும் கடலூரில் ராஜாவின் சாதனை எவரும் விஞ்ச முடியாதது.

'ராஜா' நினைவலைகளை தட்டி எழுப்பிய என்னருமை கோபால் சாருக்கு நன்றி.

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

rsubras
16th September 2013, 02:55 PM
Both are nice roles of sivaji and he handled them very differently in his unique way of execution. We will take it up for sure. But my humble request is that regular hubber like you can do it for our pleasure.

sir, naan orathula ninnu intha phd. literature level thesis lam enjoy pannitu irukkaravan.....ennai poi kindal panreengale :)... namakku comment adikkathan theriyum........ detailed ah athuvum interesting ah (especially when there is something special) narrate panna theriyaathu :)

rsubras
16th September 2013, 02:59 PM
http://www.rediff.com/entertai/2001/jul/26bala.htm

Gopal.s
16th September 2013, 03:24 PM
வாசு,
அந்த BATIK என்ற வகை படும் டிசைன் கொண்ட ஆரம்ப காட்சி ஜெர்கின் தலைவரின் மீது எவ்வளவு அழகாக உள்ளது!!!!
உங்கள் கடலூர் நியூ சினிமா அனுபவம் எனக்கு relate பண்ண கூடியது.நான் நியூ சினிமாவில் 1965 முதல் 1979 வரை படங்கள் பார்த்துள்ளேன்.(கடைசி படம் உதிரி பூக்கள்) உங்கள் அனுபவங்கள் நீங்கள் எழுதும் முறை உங்களை தேர்ந்த எழுத்தாளாராக காட்டுகிறது. நீங்கள் உங்கள் சிறு வயது அனுபவங்களை தொகுத்து சிறிதே ஒரு larger objective சேர்த்து அழகான நாவல் ஒன்று எழுதலாம். ஒரு copy இன்றே புக் செய்கிறேன்.

mr_karthik
16th September 2013, 03:53 PM
Following is the 'Release-Mela' celeberations of the Great RAJA at Madurai Central theatre, narrated by our Murali Srinivas sir, re-prodeuced here from previous part, due to Raja Fever now...

Now, over to our Murali sir.....

அந்த நாள் ஞாபகம்

ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. ஒவ்வொரு ஸ்டைல் போஸிற்கும் ஆரவாரம். ஹோட்டல் ரூமில் டென்னிஸ் ராக்கெட்-ஐ கொடுக்க செல்லும் போது வரும் கிண்டல், நீ வர வேண்டும் பாடலில் வரும் விளையாட்டுகள், ஏர்போர்ட்-ல் போலீஸ் அழைத்து செல்ல அங்கே வைத்து தான் சிவாஜி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது தெரிய வரும் அழகான ட்விஸ்ட் இவை எல்லாமே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. மேஜர் கொடுக்கும் சிகரெட் லைட்டர் கேமரா, மைக்ரோபோன் போன்றவை அன்று ஒரு புதுமையாக இருந்தது.

விமானத்தில் கொச்சி செல்லும் போது வருவார் இரண்டாவது சந்திரபாபு. அவர் பேசும் ஒரு வசனத்திற்கு மட்டும் பலத்த எதிர்ப்பு கூக்குரல்கள் எழுந்தன [நீரும் நெருப்பும்]. கொச்சி ஏர்போர்டில் போலீஸ், டைரியை சோதனையிட அதில் இருக்கும் நீளமான சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே நடிகர் திலகம் போலீசிற்கு ஆஃபர் செய்யும் இடம் செம கிளாப்ஸ்.

நான் முன்பே சொன்னது போல படம் விறு விறு. ஆகவே சிவாஜியை கட்டி வைத்து பாலாஜி கேள்வி கேட்கும் இடம், மயிலாப்பூரில் சென்று செக் பண்ணுவது என்று படம் படு ஸ்பீட். இந்த நேரத்தில் பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். அதுவரை தமிழ் சினிமாவில் வராத முறையில் கார்கள் செல்லும் போது இசை+ பின்னணி குரல் ஒலித்த விதம் ரசிகர்ளை வெகுவாகவே கவர்ந்தது. மெல்லிசை மன்னர் பிரமாதப்படுத்தியிருந்தார்

ஆனால் தியேட்டரே எழுந்து ஆடியது ரந்தாவா சண்டைக்காட்சியின் போதுதான். அதிலும் நடிகர் திலகம் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சிகரெட்டை கடைசி பப் எடுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கி விட்டு "நான் எப்பவும் கடன் வச்சுகிறதிலே" என்று ஆரம்பிக்கும் போது சேரில் எழுந்து நிற்க ஆரம்பித்த மக்கள் சண்டை முடிந்து தான் கீழே இறங்கினார்கள்.

அதன் பிறகு சிவாஜி ரங்கராவ் சந்திப்பு பிறகு பத்மா கண்ணாவின் கண்களை கொண்டு வா டான்ஸ் எல்லாம் கொஞ்சம் அமைதி. மறுபடியும் கவர்ச்சி வில்லன் கண்ணனோடு சண்டை காட்சி வர சூடு பிடித்தது. அதிலும் கண்ணன் மாற்று முகாமை சேர்ந்தவர் என்பதால் சூடு + கோஷங்கள் அதிகமாகவே ஒலித்தது. அது முடிந்து கல்யாண பொண்ணு பாடல். மறுபடியும் ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச். பெரியவர்களுக்கே மறைக்கும். எனக்கு சுத்தம். நான் என் கஸினிடம் "என்ன இது ஆ ஊ -ன்னா சேர் மேல ஏறிறாங்க" என்று கேட்க அவன் ரொம்ப சிம்பிளா "ஓபனிங் ஷோ-ன்னா அப்படிதான் இருக்கும்" என்றான். பாட்டோடு இன்டெர்வல். வெளியில் வருகிறோம். அடுத்த ஷோவிற்கு அப்போதே வரிசை நிற்கிறது. படம் ஓஹோ என்று இங்கிருந்து சொல்ல வெளியே சர வெடிகள் தெருவையே ஒரு வழி ஆக்கியது.

இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்தது. நடிகர் திலகத்தை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஜெஜெ சொல்வதற்கு ஏற்ப பாலாஜி செயல்படுவார். பிறகு அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் திட்டத்தை பாலாஜி போடுவார். சிறிது நேரத்திற்கு சிவாஜி இல்லாமலே காட்சிகள் ஓடும். கங்கையிலே ஒடமில்லையோ பாடல் காட்சியில் எல்லாம் தியேட்டர் அமைதியாகவே இருந்தது. அந்த காட்சியின் முடிவில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிகர் திலகம் தோன்றிய போது மறுபடியும் தியேட்டரில் பயங்கர ஆரவாரம்.

இதன் பிறகு தான் கதையின் முக்கிய திருப்பமாக மனோகர் வந்து பாலாஜியை சந்திக்கும் காட்சி. உண்மைகளை ஒவ்வொன்றாக மனோகர் உடைத்து கடைசியாக "பாபு, இந்திய மாப்-லே தெற்கு கூர்மையா இருக்கு. தெற்கே இருக்கும் போலிஸாருக்கும் அறிவு கூர்மை" என்று சொல்லும் காட்சியில் பலத்த கைதட்டல். சிவாஜி - பாலாஜி சண்டை, பிறகு பாலாஜியை மேஜரிடம் கூட்டிக் கொண்டு போய் நம்ம சந்தர் என்று அறிமுகப்படுத்துவது, ரங்கராவ் போட்டோவை பார்த்து விட்டு ராஜா இவன்கிட்டே தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு" என்று மேஜர் சொன்னவுடன் நடிகர் திலகம் போட்டோவை குத்தும் காட்சிக்கும் ஒரே அப்ளாஸ்.

இதற்கு பிறகு படம் பயங்கர ஸ்பீட். இரண்டில் ஒன்று பாட்டில் ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் நடிகர் திலகம் உள்ளே நுழைய பார்க்க அது ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அடுத்து கிளைமாக்ஸ். தமிழ் பட வரலாற்றிலே ராஜாவில் வந்தது போல அவ்வளவு நீண்ட கிளைமாக்ஸ் (கிட்டத்தட்ட 20- 25 நிமிடங்கள்) இடம் பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் (இன்று பார்த்தால் கூட) இருக்கும். பணடரிபாயை மனோகர் சாட்டையால் அடிக்க நடிகர் திலகம் கர்சிஃபை பல்லில் கடித்தபடி தொடர்ந்து சிரிப்பார். கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும். அதை அடக்கி கொண்டு அவர் சிரிக்க சிரிக்க இங்கே தியேட்டரில் ரசிகர்களின் உணர்ச்சி அணை உடைத்து பாய்ந்தது.

படம் முடிய ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஒரே சுரத்தில் அனைவரும் படம் பிடித்திருப்பதாக சொல்ல, வெளியே வருகிறோம். பின் பக்க கேட் வழியாக வர வேண்டும். அந்த இடத்தில் சர வெடிகளை தொடர்ந்து கொளுத்த, நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷங்கள், கைதட்டல், டான்ஸ், ஆரவாரம் என்று கூட்டம் மேலமாசி வீதி முழுக்க ஆடிப்பாடிக்கொண்டே போனது. ஒரு பகுதியினர் முன்பக்க கேட் பக்கம் வந்து அதே போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மூன்று மணி நேர நினைவுகளை அசை போட்டுக்கொண்டே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

(Thank you Murali sir)...

IliFiSRurdy
16th September 2013, 04:00 PM
Raja while we are discussing, Jaya TV is screening this film at 10 am on 18.09.2013


[/size][/color][/b]

தகவலுக்கு நன்றி ராகவேந்தர் சார்!
நிச்சயமாக பார்த்துவிடுவேன் .
ஆனால் எத்தனாவது தடவை என்பது
எனக்கும் என் மனசுக்கும் மட்டும்தான் தெரியும்!

Gopal.s
16th September 2013, 04:07 PM
ஆஹா... ஆஹாஹா .....
பம்மலார் இல்லாத குறையை ராகவேந்தர் மீள்பதிவிட்டு தீர்க்கிறார் என்றால், முரளி,சாரதா இல்லாத குறையை மீள்பதிவிட்டு தீர்க்கிறார் கார்த்திக்.
இருவருக்குமே நன்றி.
(எனக்குத்தான் இந்த மாதிரி யாருமே அமையவில்லை. நானே எனக்கு மீள்பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.)

KCSHEKAR
16th September 2013, 05:26 PM
ஆஹா... ஆஹாஹா .....
பம்மலார் இல்லாத குறையை ராகவேந்தர் மீள்பதிவிட்டு தீர்க்கிறார் என்றால், முரளி,சாரதா இல்லாத குறையை மீள்பதிவிட்டு தீர்க்கிறார் கார்த்திக்.
இருவருக்குமே நன்றி.


எங்களை பதிவுகளைவிட்டு மீளா வகையில் அமைந்துள்ள மீள் பதிவுகளை அளிக்கும் நண்பர்களுக்கு நன்றி. (தங்களுக்கும்தான் கோபால் சார்.)

goldstar
16th September 2013, 06:21 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT1_zpse3e6bffb.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT2_zps22023c0f.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT4_zpsb7df3b37.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT5_zps2f8e5259.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT3_zps01b0a5d2.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT9_zpse68af396.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT6_zpsf1f10737.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT7_zpsfd6f6507.png

kalnayak
16th September 2013, 06:35 PM
வாசுதேவன் சார்,
நீண்ட நாட்களுக்குப்பின் வந்த என்னை நியூ சினிமா திரை அரங்கைப்பற்றி எழுதி என் இளமைக்காலங்களை நினைவு படுத்தி என்னையும் எழுத வைத்துவிட்டீர்கள். நான் 1978-களின் பிந்தியில் வந்து கடலூரில் குடி கொண்டவன். நாங்கள் குடியிருந்ததோ புதுப்பாளையம் என்னும் பகுதி - நியூ சினிமா-விர்க்கு அருகில் இருந்த பகுதி. அதிகமான திரைப் படங்களை குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களை இங்கேதான் பார்த்திருக்கிறேன். ரிஷிமூலம், நான் வாழ வைப்பேன் போன்ற படங்கள் துவங்கி. (ராஜா திரைப்படம் - நான் மிகச்சிறுவனாக இருந்த காலத்தில் வந்ததால், அதன் வெளியீடு காலத்தைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. பின்னர் ஒருமுறை திண்டுக்கல் அருகே ஒரு திரை அரங்கில் என் உறவினர்களோடு பார்த்திருக்கிறேன்.) நடிகர் திலகத்தின் பழைய திரைப்படங்கள் நியூ சினிமா-வில் திரையிடப்படும் போதெல்லாம் நீங்கள் சொல்கின்ற (பலே பாண்டியா, அமர தீபம், தெய்வ மகன், சிவந்த மண், ஆலய மணி, ...) உற்சாக கொண்டாட்டங்களை கண்டிருக்கிறேன். ஏன் பழைய படம் பார்ப்பதற்க்கு இப்பிடி அடிதடியா என்று மனதிர்க்குள் ஒருபக்கம் வைதுகொண்டே, ஒரு பக்கம் பெருமைப் பட்டுக்கொண்டும் செல்லுவோம். நீங்கள் சொல்கின்ற அதே ரூ. 0.50 மற்றும் ரூ.1.10 டிக்கெட்-களில் நானும் பல படங்களை பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் சில படங்களை 50 பைசா டிக்கெட்டில் பார்த்துவிட்டு, அதன் இருட்டு இரட்டை சந்துகளில் செல்வதற்கு பயந்து (அதற்கு இப்படி ஒரு வரலாறு இருப்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது) பின்னர் எப்போதும் உயர் வகுப்பு டிக்கெட்-களையே (அதிகமாக ரூ.1.10) எடுத்துக்கொண்டு படம் பார்த்திருக்கிறேன். ஆக பல வருடங்களாக டிக்கெட் விலைகளில் மாற்றம் இல்லாமலேயே இருந்திருக்கிறது. அப்புறம் நீங்கள் சொல்கின்ற புது படங்களில் வெள்ளை ரோஜாவை ரிலீஸ் அன்று (ஒரு தீபாவளி அன்று) மாலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன். நான் கடலூர் வந்த புதிதில் கோபால் சார் சொல்கின்ற உதிரிப்பூக்கள் படத்தையும் இங்குதான் பார்த்திருக்கிறேன். உங்கள், கார்த்திக் சார், கோபால் சார், ராகவேந்திரா சார் மற்றும் முரளி சாரின் பழைய அனுபவங்கள் எல்லோருக்கும் இளமைக்கால நினைவுகளை அசை போட வைக்கின்றன. நானும் கடலூரான் ஆகிபோனதினால் உங்கள் அனுபவம் என்னை அசைத்து போடுகின்றன.

மற்றபடி நீங்கள் சிறிய ஓய்விர்க்குபிறகு திரும்ப வந்து உங்களது தொடர்களாகிய நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சிகள், ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் மற்றும் நாயகியர் தொடர்களை தொடர்வது கண்டு மிக மகிழ்ச்சி. சொல்ல மறந்துவிட்டேன் ... பாடலியில் வெற்றிக்கு ஒருவன் - நானும் அங்கேதான் பார்த்திருக்கிறேன். (எங்கள் வீட்டு சிறுகுழந்தை எங்களோடு பார்த்து விட்டு அந்த படத்தை வெற்றிக்குறவன் என்று மழலையாக சொல்லிக்கொண்டிருந்தது வேறு விஷயம்.) அப்போது நடிகர் திலகத்திர்க்கு ஸ்ரீப்ரியா ஜோடியாக அதிகமான படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

mr_karthik
16th September 2013, 06:50 PM
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது மீள்பதிவு அல்ல. என்னுடைய சொந்த (புதிய) பதிவு...

'ராஜா’வில் 'தாரா' (பத்மாகன்னா)

நான் முன்னரே ஒரு பதிவில் சொல்லியிருந்தது போல, ராஜாவில் பத்மா கன்னா ஏற்றிருந்த தாரா ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவன். முதன்முதல் ராஜா பார்த்தபோது, வில்லனின் கூட்டத்தில் ஒருவனைக் காதலிப்பதால் அந்தக்கூட்டத்தில் ஒருத்தியோ என்று தோன்றியது. ஆனால் போகப்போக எவ்வளவு நல்லமனம் படைத்தவள் என்று தெரிகிறது. வில்லன் கூட்டத்தில் இருந்துகொண்டு சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளுக்கு துணையாக இருந்து வரும் காதலன் குமாரை (பயில்வான் ரந்தாவா) தன் காதலை மையமாக வைத்து நல்வழிப்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பி ஓடி நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்ற அவளது ஆசை கிட்டத்தட்ட கைக்கெட்டும் தூரத்தில் வரும்போது ராஜாவின் தலையீட்டால் தவிடு பொடியாகிறது. பெரிய பாஸுக்கும் (ரங்கராவ்), சின்ன பாஸுக்கும் (பாலாஜி) கூட தான் தப்பி ஓடும் திட்டம் தெரியாமலிருக்க, குமாரைப் பின்தொடர்ந்த ராஜாவால் சின்ன பாஸ் பாபுவுக்கும், பின்னர் பாபு மூலம் பெரிய பாஸ் தர்மலிங்கம் (என்கிற நாகலிங்கத்துக்கும்) தெரிய வர அவள் வாழ்க்கையே திசை மாறிப்போகிறது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் சிங்கப்பூர் நோக்கிப் பறக்கப் போகிறோம் என்ற ஆவலுடன் 'இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாமே' என்று கேட்க, அதற்கு குமார் 'நேரமில்லை தாரா. மாட்டினால் என்ன தண்டனை தெரியுமா?' என்று கேட்க, 'மரண தண்டனை' என்ற பதிலுடன் கண்ணாடிக்கதவை உடைத்து தாழ்ப்பாளை திறக்கும் பாபு (பாலாஜி)யைக் கண்டதும், 'ஐயோ வந்துட்டான்களே' என்ற மிரட்சி கண்களில் தெரிய, (நமக்கு 'ஐயோ பாவம குழந்தை' என்ற பரிதாபம் ஏற்படும்) குமார் பாபுவுடன் சண்டையிடும்போது தாராவும் தன் பங்குக்கு உதவுவாள்.

வந்திருப்பவன் பாபு மட்டும்தான் என நினைத்து அவனை அடித்து வீழ்த்தி விட்டு, பணப்பையுடன் புறப்படும்போது திடீரென்று வாசலில் ராஜா தோன்ற மீண்டும் அதிர்ச்சி. அப்புறம்தான் அந்த ஹை-லைட்டான சண்டைக்காட்சி. அதற்கு முன்னதாக சிகரெட்டை கீழே போட்டு அணைப்பதும், 'அன்னைக்கு கொடுத்தியே ஞாபகம் இருக்கா? நான் யார் கிட்டேயும் கடன் வச்சுக்கிரதில்லே' என்ற வசனத்தோடு குமார் முகத்தில் பஞ்ச் விடுவதும், அதனை தொடர்ந்து மோதிரத்தை வாயால் ஊதியவாறு தாராவைப்பர்த்து 'எக்ஸ்கியுஸ் மி மேம்' என்றவாறு ஸ்டைலாகப் படியிறங்கி குமாரை நோக்கிப் போவதும் கைதட்டலை அள்ளும்.

சண்டையிட்டு குமாரைப் பிடித்தாகி விட்டது. (தலைவரின் இருப்பிடத்தை ராஜா தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக, தன்னைப்பின் தொடராமல் இருக்க, இன்னொரு காரை துப்பாக்கியால் சுட்டு பஞ்சராக்கி விட்டு 'வந்தவழியே நடந்துபோ' என்று சொல்லும் இரக்கமில்லாத சின்ன பாஸ்), துப்பாக்கி முனையில் பெரிய பாஸ்இடமும் கொண்டு சென்றாகிவிட்டது. கருணையில்லாத பாஸ், தன் காதலனுக்கு மரண தண்டனைதான் அளிப்பார் என்று தெரியும். இருந்தும் தன் காதலனை உயிரோடு விட்டால் போதும் என்று தன்னையே விலையாகப் பேசுகிறாள். தன்னை அவள் அழகுக்கு அடிமைப்படுத்தி விட்டால் காதலனுக்கு விடுதலை அளிப்பதாக கூறும் பாஸின் வார்த்தையை நம்பி, பாடிக்கொண்டே (முகத்தைத்தவிர வெளிக்காட்டாத) தன் உடலை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்த, படிப்படியாக அவள் அழகுக்கு அடிமையாகும் பாஸ். ('கண்களை கொண்டு வா' பாடலில் ‘பாஸ்’ ரங்கராவ் நடிப்பு சூப்பர்). தன் காதலனை பாஸ் நிஜமாகவே விடுதலை செய்யச் சொல்கிறார் என்று நம்பி 'என்னை மன்னிச்சுடு குமார்' என்று மன்றாடும் தாரா.

கோயில் கொள்ளையை வெற்றிகரமாக முடித்ததற்காக பாஸை சந்திக்க பாபு ராஜாவை அழைத்துச்செல்ல, அங்கே தாராவைப் பார்க்கும் ராஜாவுக்கு அதிர்ச்சி. 'இவள் குமாரின் காதலியல்லவா?. இங்கே எப்படி?' என்பது போல பாபுவைப்பார்க்க, 'நடந்ததை அப்புறம் சொல்கிறேன்' என்று பாபுவும் கண் ஜாடையில் உணர்த்துகிறான். அதே நேரம் ராஜாவை தாரா பார்க்கும் பார்வையில் 'என்னுடைய இந்த நிலைமைக்கு நீயும் ஒரு காரணமல்லவா' என்ற ஏளனம் தென்படும் (முக்கிய காரணமே அவர்தான் என்பது நமக்கு மட்டுமே தெரியும்). எல்லாம் பார்வைப் பரிமாற்றங்கள் மட்டுமே. (பின்னே பக்கத்தில் பெரிய பாஸ் இருக்கிறாரே) . ஆனால் அப்போதும் கூட தன் காதலன் குமார் எங்கோ உயிருடன் இருக்கிறான் என்றே தாரா நம்பிக்கொண்டிருக்கிறாள்.. பாவம.

மீண்டும் தாரா வருவது அவளது இறுதிக்காட்சியில்தான். லம்பாடி வேடத்தில் வந்து பெரிய பாஸிடம் மாட்டிக்கொள்ளும் ராதா (ஜெயலலிதா)விடம் பாஸ் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கும் தாரா, அவளுக்கு அந்த இருப்பிடத்தைக் கட்டிக்கொடுத்தது யார் என்று விசாரிக்கும்போது, 'நிச்சயம் குமாராயிருக்க முடியாது, ஏன்னா, அவனை எப்பவோ கொன்னுட்டேன்' என்று சொல்ல அதிர்ச்சியடையும் தாரா, துப்பாக்கி முனையில் ராதாவை விடுவிக்கிறாள். ஆனால் குமாரின் முடிவை நினைத்து கண்கலங்கி நிற்கும் கணத்தில் பாஸ் துப்பாக்கியைப் பிடுங்கி தாராவை சுட பரிதாபமாக உயிரை விடுகிறாள்.

(இவ்வளவு அற்புதமான துப்பறியும் படத்தில் அனாவசிய சாவுகள் இல்லை. அனைவரும் உயிருடனேயே பிடிக்கப்படுகிறார்கள். மூன்றே மரணங்கள் துவக்கத்தில் இன்ஸ்பெக்டர் சங்கர், பின்னர் குமார், அப்புறம் தாரா).

எப்போது 'ராஜா' வைப் பார்த்தாலும் தாரா (பத்மாகன்னா) வின் மரணத்துக்கு என் இருசொட்டு கண்ணீர் உண்டு....

goldstar
16th September 2013, 06:53 PM
டியர் கார்த்திக் சார்,

நன்றி!ஆனால் இந்த சிறிய பதிவுக்கு மூல காரணாமாய் இருந்த கோல்ட் ஸ்டாருக்கும், அட்டகாசமான தங்களுக்கே உரித்தான பாணியில் 'வெற்றிக்கு ஒருவன்' பதிவைத் தந்து கடலூர் நினைவுகளை பின்னோக்கிப் பார்க்க வைத்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! தங்களின் ஜோரான வெற்றிக்கு ஒருவனுக்கு என்னுடைய சிறிய பரிசு.


Thank you Vasu and Karthik sir. I am glad and happy that my small effort of "Vettrru Oruvan" stills made to write about VO details and its always make more happy and complete satisfaction when ever Karthik sir write about his Chennai theater experience of NT movies as his style is very unique and we cannot get these details any where.

Karthik sir, I will keep publish NT's 1980 movies and you please keep write about these movies and make us happy and soak us in happy moods for days to come.

Cheers,
Sathish

ScottAlise
16th September 2013, 07:28 PM
Wow Raja all the way

Vasu sir cuddalore experience, Karthik sir's, பத்மாகன்னா write up, (special claps) and Gopal sir


big thanks to all
But I could not write as Iam in outstation audit for 2 weeks(still one week to go) ,I cannot control my excitement so typing from mobile phone

Dear Gopal sir,

I will defnitely write about Thooku tookhi , its a great honour that a senior like you asking to write
Vasu sir,

Your series on dreesing sense of NT in thuli visham, superb- saw from my mobile phone

anasiuvawoeh
16th September 2013, 08:08 PM
Dear friends,I also come across the same situation with my close friends.recently I told them that in a temple function to do abhisekam,lot of people will bring milk,few intellectuals like those who comment NT will bring water and think that abisekam will be only of water.But they don't understand that when many people pour milk,the water mixes with it and become invisible.like that a few pouring bad comments will get mixed in the praise poured by lakhs of fans.So let us not mind them.Thanks/Regards
Gopal Sir,

You have exactly mentioned the situation of the sequences. Many Fools ( including IDHAYAM PESUGIRADHU MANIAN & THOSE DAYS ANANDA VIKATAN) who commented those days, who comment these days in different sites do not know the significance and logic of the scene. Such people will come out with desperate attacks everytime in one or the other form against Nadigar Thilagam ONLY.

Unfortunately OUR STATE ESPECIALLY, has more such distilled idiots and fools amidst intellectuals, can't help it. !

Regards

vasudevan31355
16th September 2013, 09:06 PM
டியர் கார்த்திக் சார்,

ராஜாவுக்கு தாங்கள் அளித்துள்ள அழகிய பின்னூட்டங்கள் ஆகட்டும்... பத்மாகன்னா பற்றிய பரிதாபப்பட வைக்கும் பதிவாகட்டும் மிக மிகச் சிறப்பு. மிகுந்த ரசனையுடன் வர்ணித்திருக்கிறீர்கள். பாலாஜியுடன் வில்லனின் கோட்டைக்கு முதன் முதல் நுழையும் ராஜா ரங்காராவிடம் பாலாஜியால் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அங்கு வில்லனுக்கு விஸ்கி கொண்டு வரும் பரிதாபத்துக்குரிய அந்த தாராவைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஐயோ! இந்தப் பெண் எப்படி இங்கு வந்து மாட்டினாள்? என்று ஒரு செகண்ட் குற்ற உணர்ச்சியில் தாராவை நோக்குவார் நடிகர் திலகம். அதில் பரிதாபமும், பச்சாதாபமும் தெரியும். அதே சமயம் பாலாஜியிடம் என்ன இது என்பது போல ஒரு முறை முறைப்பார். இதற்கே தாராவை ஒரே முறைதான் சந்தித்திருப்பார் ராஜா. அதுவும் தாரா தன் காதலனின் உயிருக்காக வேண்டி, அவளுடைய ஜோடிப்பறவை சுட்டு வீழ்த்தப்பட்டது தெரியாமலேயே கொத்தடிமை போல வில்லனின் போகப் பொருளாகி, அவனுக்கு ட்ரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுக்கும் வேலைக்காரியாய் அவள் இருக்கும் போது அவள் மேல் பரிதாபம் ஏற்படாமல் என்ன செய்யும்?

ராஜாவின் அட்டகாசங்களில் தாராவை மறக்காமல் அவள் நினைவை தங்கள் பதிவின் மூலம் இங்கே நினைக்கச் செய்ததற்கு நன்றி!

திரையுலகம் காணாத சிறு அழகுப் புதுக் கவிதை. வில்லன் கையாளின் கவிதைக் காதல். ஆனால் அமரத்துவம் நிறைந்தது. போலீஸ் திருடன் சண்டைகளுக்கு மத்தியில் மனதை நோகச் செய்த மயிலிறகுக் காதல்.

vasudevan31355
16th September 2013, 09:11 PM
டியர் ராகவேந்திரன் சார்,

மிக்க நன்றி! முகநூல் நண்பர் மூலமாக நவராத்திரி படம் திரையரங்கில் நடைபெறுவது போலவும், அங்கு ஷூட்டிங் நடை பெறுவதாகவும் தாங்கள் அளித்துள்ள பதிவு உள்ளத்தை உவகையுறச் செய்தது. நிஜமாகவே நவராத்திரி படம் ஓடுகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அருமையான தலைவர் கட் அவுட், மாலை, பேனர்கள் என்று தூள் கிளப்பியுள்ளார்கள். வித்தியாசமான பதிவும் கூட. மிக மிக ரசித்தேன். தங்களுக்கும், முகநூல் நண்பருக்கும் மனமார்ந்த நன்றி!

iufegolarev
16th September 2013, 09:34 PM
http://www.rediff.com/entertai/2001/jul/26bala.htm

Reproducing for everybody's benefit - Courtesy Mr.RS




'I have lost my brother'

S Balaji

The father-in-law of Malayalam superstar, Mohanlal, Balaji has the distinction of producing the maximum number of Sivaji films and acting as Sivaji’s brother in many films.

"With his death, I lost my own brother,” said Balaji, his eyes moist:

I still remember I had to stand in a queue for two days to get a ticket of Sivaji’s first film, Parasakthi. He was amazing in the film. People talked only about him those days. He was a craze in Tamil Nadu.

At the time, I was working as a production assistant at Narasu’s Studio. When I heard that my boss Narasu had booked Sivaji for A S A Swamy's Thulivisham, my happiness knew no bounds. Ever since I saw Parasakthi, I was eager to meet him.

When Sivaji came to the studio, Narasu introduced us. What I liked most about him was that he did not behave like a star. When he came to know I was also interested in acting, he asked the director to give me a role too. That's how I got a small role in the film. It was another matter that only one scene of mine escaped the editor’s scissors.

Even though he had become a major star acting in all the major production companies, Sivaji was extremely friendly with everyone.

Whatever I have achieved in life is thanks to three people: my schoolmaster S S Subbaraman (who made me act in school dramas), Gemini Ganesan (who introduced me to films and is like a godfather to me), and Sivaji Ganesan. Gemini Ganesan had given me a chance to act in Avvayyar in 1950.

In 1952, I was introduced to Sivaji.

He and I were not in touch between 1954 and 1960. In 1960, Gemini was to act as Sivaji’s brother in Padithal Mattum Potuma, but was not very keen on it. So he asked me to step in. When he introduced me to Sivaji after a gap of six years, Sivaji said, "As if I do not know Balaji! I know him very well!"

My role in the film was a major one, and the film became a huge hit in Tamil Nadu. Afterwards, Sivaji started recommending me if there was a second role in any of his films.

That was the beginning of our friendship. It strengthened further when I started producing my own films.

I made my first film in 1965 with Gemini Ganesan. It was my way of thanking him and showing my gratitude.

My second film was Thangai with Sivaji. Do you know how I signed him? One day I met him at Gemini studios and said, "Annai, I am producing a film and you should act in it."

Immediately, he brushed me aside, saying, "Poda, you a producer? You must be joking!"

He did not believe me. But when he realised that I was serious about making a film, without even batting his eyes, he said, “Get a good story and a director, and I'm in!"

The funniest thing was that Thangai was an action film. Sivaji was known as an emotional hero. It was M G Ramachandran who did all the fights in his films.

Sivaji was very skeptical about the action scenes. But I assured him the film would give him a new image. He agreed reluctantly. He was so sure that people would not accept him as a fighting hero.

Fortunately, the film was Ame a big success! Till then, only MGR was applauded when he fought, but with Thangai, Sivaji also started getting credit for his fight scenes. After that, every film of his had at least one fight!

As an actor, he was phenomenal. He would ask me whether he had performed well after each shot. Was it necessary for a person of his stature to ask me that question? Still, he wanted assurance from the producer.

Sometimes I used to say, "No, that was not good. We will have one more take."

Immediately, he would say, “Balaji didn’t like the shot. Let me do it again." He wanted everything to be perfect.

I am also a perfectionist. That was why he liked me as a producer. All the 16 films that we made together were successes. He used to do two films a year for me, while other producers had to wait for years to get his dates. That was not because he considered me his friend or a brother; it was only because I am a disciplined and meticulous filmmaker.

Later, I made films with Kamal Haasan and Rajnikanth. That did not affect our friendship. He knew I am a producer and I had to make films. He was very understanding and open-hearted. Soon, I stopped production because of ill health. He, too, stopped acting.

The beauty of our relationship is that it went beyond films and production. Whenever he passed my house, he would drop in. The truth was he just couldn’t pass by without coming home. I would also visit him regularly.

We are on poda-vada (informal) terms! He was a very reserved person, and friendly, too. He was one of my closest friends. We were always there for each other. He was by my side when my wife passed away. He took control of the situation and saw to it that everything was done properly.

Whenever he introduced me to some overseas dignitary, he would say, "Meet Balaji, my boss." The moment they left, he would tell me, “Now, don’t think too much of yourself just because I called you my boss."

I never thought that he would leave this world so soon.

Just two days before his death, I met him at the hospital. He was reluctant to get up. Then his wife said, “Your friend has come. Won’t you get up?”

He just looked at me and said, “I can’t, my friend.” I felt very bad. To cheer him, I said, "Annai, you are okay and you are getting up and talking to me."

He asked the nurse to prop the bed, and the first thing he asked me was, “Did you drive?” He knew I always drove my vehicle, and he objected to me driving after my two kidney transplants. That day, we talked for a very long time about the good old days.

I used to pick him up every day when he was shooting for my films -- I enjoy driving and he enjoyed sitting in the car when I drove!

I still remember once we were going to shoot the film Neethi in Mysore. We flew from Madras to Mysore and my car was waiting for us at the airport. As usual, I drove. Sivaji's wife was also there.

Suddenly one of the tyres got punctured. I was really worried. It was 2000 hrs, not a soul visible anywhere. In the car was one of the top actors and it was dark everywhere but Sivaji was calmness personified.

He got out and took the stepney and changed the tyre himself. Imagine Sivaji Ganesan changing a car tyre. Later, I used to tease him about it.

Of late, we used to talk only about the old times. During rainy days, he would call me for a drive and we would drive to the beach. We loved drinking gin mixed with tender coconut water when it rained.

Two months back ago, he called me and said it's been a long time we enjoyed the rain together.

What more can I say, with his passing away, I have lost my brother.

As told to Shobha Warrier

Shakthiprabha
16th September 2013, 10:51 PM
Hi everybody. I am a small drop in the ocean of NT fans.
I am too impressed by gopal and vasudevan write ups.
So many other shares of karthik, raghavendran etc no words to say enough thanks.
Each post is a Thesis enough.

This post is just to say, I LOVE SHIVAJI a lot, but I am not a blind fan who says whatever he did is to my liking. I am like a child who would say "dad what u did is wrong" or a devotee who would question my deity.

To me mruthanga chakravarthy was too much to digest, I used to not like shivaji sir's performance in that song. Seriously gopal's write up on how the MIND of an old man, who is otherwise not too vibrant to keep up the competition, who lost touch, who is remembering how to do it by sayiang the jathi himself, who is worried about nothing of his body language just the tune of mruthangam.

gopal, u hit the nail. I should say i would look at this song with a new understanding now. Same goes to vasudevan's gnaana oli, its my fav movie too, but the way u loved it, u described it, make us yearn to watch all again.

I am reading all of u. Thankyou. keep up.

RAGHAVENDRA
16th September 2013, 11:55 PM
சக்திப்ரபா
வெகு நாட்களாயிற்று தங்கள் பதிவுகளைப் பார்த்து. இது கனவா நனவா என்கிற ஐயப்பாடே வந்து விட்டது போல மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் வரவு புத்துணர்வூட்டுகிறது. தங்களுக்கு மிக்க நன்றி.

தங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் மிருதங்க சக்கரவர்த்தி படத்தைப் பற்றிய அபிப்ராயம் ஒன்று விழுந்து விட்டது. இக்காட்சியமைப்பு, இது படமாக்கப் பட்ட விதம் போன்றவை நிச்சயம் இந்த ஐயத்தையும் தவறான அபிப்ராயத்தையும் போக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

இதே மிருதங்கத்தை இளைய வயதில், கே.ஆர்.விஜயாவின் பக்க வாத்தியமாக வாசிக்கும் பொழுது அவருடைய நடிப்பை கவனித்தீர்களானால் தங்களுக்கு அந்தப் பாத்திரத்தின் தன்மை விளங்கும். கவலை அறியாத வயது, வேகம் போன்றவை அப்பாத்திரத்தில் பிரதிபலிப்பதோடு அவருடைய வாசிப்பிலும் அது தெரியும். தாளங்களுக்கு கைகளின் வேகம் ஒரே அளவுதான் என்றாலும் அதை வாசிக்கும் போது உடல் நலம் முக்கிய பங்கு வகிக்கும். ஒரே வித்வான் இள வயதில் வாசிப்பதற்கும் வயோதிகத்தில் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கொண்டோமானால் அப்போது அந்த வித்தியாசத்தை நன்கு உணரலாம். வயதாக ஆக அந்த வாத்தியம் அவர் சொல்வதைக் கேட்கும் ஜீவனாக மாறி விடுகிறது, ஒரு ஆளுமை வந்து விடுகிறது. அந்த ஆளுமையின் வேகத்திற்கும் வயோதிகத்தின் இயலாமைக்கும் இடையே அவருடைய சுயமரியாதையும் தன் பங்கிற்கு அந்த மனிதருக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சவாலில் ஜெயிக்க வேண்டும், அதுவும் மோதுவது தன் மகனே என்கிற போது தன்னை மறந்த ஒரு ஆளுகை அவருக்குள் ஏற்பட்டு அது அந்த வாசிப்பில் பிரதிபலிக்கிறது. இத்தனை உணர்வுகளைக் கொண்டு உத்வேகத்தை வரவழைத்துக் கொண்டு அவர் வாசிக்கும் போது தன்னையறியாமல் அவருடைய வாய் முணுமுணுத்துக் கொண்டே, அந்த தாளத்தோடு பயணிக்கிறது.

இதனைத் தான் இந்த படத்தில் நடிகர் திலகம் சாதித்துக் காட்டியிருக்கிறார். இந்தப் பாடலில் வெறும் மிருதங்கம் வாசிப்பதோடு நில்லாமல் அந்தப் பாத்திரத்தின் அத்தனை உள்ளுணர்வுகளையும் கொண்டு வரவேண்டும்.

இதையெல்லாம் படப்பிடிப்பு சமயத்தில் நேரிலேயே நாங்கள் கண்டு பிரமித்து நின்றது நிஜம். அதுவும் இந்த இறுதிக் கட்ட காட்சியின் படப்பிடிப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலையரங்கில் கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்களுக்கு ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நாங்களெல்லாம் அதிர்ஷ்டசாலிகளாக அந்தப் படப்பிடிப்பைப் பார்க்கும் வாய்ப்புப் பெற்றோம். கர்நாடக சங்கிதத்தில் மிருதங்கத்தில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் நடிகர் திலகத்தின் வாசிப்பினை ஒவ்வொரு நுணுக்கமும் தவற விடாமல் செய்ததைக் கண்டு வியந்து நின்றார்கள். அது மட்டுமின்றி ஒவ்வொரு டேக்கிற்கு முன்பும் அவர்களைக் கேட்டுக் கொண்டே தன் நடிப்பைத் தொடர்ந்தார் நடிகர் திலகம்.

ஏராளமான ரசிகர்கள் சாட்சியாக பாத்திரத்தின் தன்மைக்கு கடுகளவு ஊறு கூட நேர்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்துப் பார்த்து எடுக்கப் பட்ட காட்சி இது.

இளம் வயதில் சுகமான ராகங்களே பாடலுக்கு மிருதங்கம் வாசிக்கும் காட்சி

http://youtu.be/Y5xxzt_zxH0

க்ளைமேக்ஸ் சவால் காட்சி

http://youtu.be/FnvSiVhqrZs

goldstar
17th September 2013, 05:19 AM
http://fundoomovies.com/ups/raja-(old).jpg

vasudevan31355
17th September 2013, 07:20 AM
(நமக்கு 'ஐயோ பாவம குழந்தை' என்ற பரிதாபம் ஏற்படும்)கார்த்திக் சார்,

ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Gopal.s
17th September 2013, 07:33 AM
சக்தி,

நீண்ட நாள் கழித்து வருகை தருவதற்கு நன்றி.

இப்போது துண்டு துண்டாக டீவீயில் காட்சிகள் ,பாடல்கள் வருவதால் நடிகர்திலகத்தை பற்றி நாம் நிறைய பேசுவதும் அவசியமாகிறது. மற்ற நடிகர்கள் எந்த பாத்திரம் எந்த சூழ்நிலையானாலும் கவலை படாமல் ஒரே மாதிரி நடித்து கொண்டிருந்ததால், அவர்கள் சம்பந்த பட்ட பாடல்களை ,காட்சிகளை சுலபமாக பார்வையாளர்கள் கடந்து செல்ல முடியும்.

ஆனால் நடிகர்திலகத்தின் காட்சிகளையோ,பாடல்களையோ பார்பவர்களுக்கு படத்தின் கதை,சூழ்நிலை ,பாத்திர படைப்பு இவைகள் தெரிந்திருந்தால்தான் முழுமையாக ரசிக்க முடியும். அவர் காதல் காட்சிகளோ, நடன காட்சிகளோ,சண்டை காட்சிகளோ,உணர்ச்சி மிகு காட்சிகளோ,ஒரே மாதிரி அமைப்புக்குள் வராமல் , அந்தந்த பாத்திரத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும்.அவர் அளவு சோதனை முயற்சிகள் செய்தவர் உலக அளவில் விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தனை சோதனை முயற்சிகளிலும் நூறு சதவிகித வெற்றி பெற்றவர் அவர் ஒருவரே.

நடிப்பின் மிக நுண்ணிய நுணுக்கங்கள் புரிந்து தன் அபார திறமையினால் அதனை செய்தும் காட்டிய ஒப்பிலா மேதை.

எல்லாம் புரிந்த தெரிந்த எனக்கும் ,இன்னும் புரிந்து கொள்ள நிறைய உள்ளது என்று நாள் தோறும் உணர்த்தும் மேதை நடிகர்திலகம்.

தொடர்ந்து பங்களியுங்கள்.எங்களுக்கும் உற்சாகம் மிகும்.

Gopal.s
17th September 2013, 07:42 AM
கார்த்திக் சார்,
உங்கள் சொந்த பதிவு ,சோக பதிவாக மலர்ந்து விட்டது. இப்போது சொன்னால் நம்புவீர்களோ ,மாட்டீர்களோ பாலாஜி பட வில்லி மற்றும் item girls அல்லது துணை கதாநாயகிகள் பற்றி எழுதுவதாக இருந்தேன். காஞ்சனா முதல் சினேகலதா வரை . நீங்கள் பத்மகன்னா பற்றி அற்புதமாக வரைந்து ,சுமையை குறைத்து விட்டீர்கள். தொடர்ந்து நீங்களே எழுதுங்கள். தங்கை-காஞ்சனா, திருடன்-விஜயலலிதா, எங்கிருந்தோ வந்தால்-ஜெயகுமாரி, ராஜா-பத்மா கன்னா,நீதி-சகுந்தலா, என் மகன்-சினேகலதா (இவரை பற்றி நிறைய எழுதலாம்),தீபம்-சத்யப்ரியா,தியாகம்-படாபட்.
தொடருங்கள்.

Gopal.s
17th September 2013, 07:47 AM
சிவன் சார்,
தொடர்ந்து பங்களியுங்கள். எங்களுக்கு இதனால் glucose குடித்த விளையாட்டு வீரன் போல சக்தி.

ராகுல்- தூக்கு தூக்கி யை ஒரு தூக்கு தூக்கேன் பார்க்கலாம்.

ராகவேந்தர் சார்,
தங்கள் illustration உடன் கூடிய explanation பிரமாதம்.ஒன்றை மறந்து விட்டீர்கள்.வயதானவருக்கு டச் விட்டு போச்சு.
அதுதான் மெயின் பாயிண்ட். சங்கீத காரர்களுக்கு தொடர்ந்த பயிற்சி அவசியம்.

Gopal.s
17th September 2013, 07:49 AM
Welcome Kalnayak Sir. only person missing is Adiram. He is the one who instigated me to write about Raja.
பாகம்- 10 இல் ஆதிராம் அவர்களின் பதிவு.
Quote
Gopal sir,

Ok, 'Raja' padaththukku Index (poruladakkam) pottutteenga.

Next ovvoru pointtaaga eduththu deeppaaga analayse pannuveengannu edhirpaarkkirom. Because Index itself very cute and neat. We already enjoyed your deep analysis for serious movies. But now want to enjoy your smart analyse for a commercial entertainment Raja.

adhuvaraikkum naanum Vasudevan sirum Vaira Nenjaththai asai pottukkondu irukkirom.
Unquote

RAGHAVENDRA
17th September 2013, 08:21 AM
1972ல் ராஜா .... கிட்டத்தட்ட அனைத்து ஹப்பர்களையும் -வரவழைத்து விட்டது. அது தான் ராஜாவின் பவர். இருந்தாலும் பம்மலார், முரளி சார், சாரதா போன்ற ஸ்டால்வர்ட்ஸ் மிஸ்ஸிங்... அது நிறையவே தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து நீதி... இத்துடன் 1972 நிறைவடையும். வசந்த மாளிகை .. இன்னும் நிறைய அலச வேண்டும் என்றாலும் அதற்கென உள்ள திரியில் பார்த்துக் கொள்ளலாம்.

இன்னும் ராகுல் ராமின் தூக்குத் தூக்கி, கோல்ட் ஸ்டாரின் ரிஷிமூலம் அணிவகுப்பில் காத்திருக்கின்றன.

திரியின் பங்களிப்புத் திலகம் வாசு சாரின் ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் தொடர், நாயகியர் தொடர் என அவை இடம் பெற வேண்டும்.

கோபால் சாரின் ஐட்டம் பெண்கள் தொடர்...

இவையன்றி அவ்வப்போது தகவல் பரிமாற்றங்களும் இடம் பெற வேண்டும்.

இவற்றை முறைப் படுத்தும் வகையில் ஆலோசனை கேட்டிருந்தேன்.

ஜோ சார் கருத்துச் சொன்னது போல் மற்றவர்களிடமிருந்து வரவில்லை என்றாலும் தற்காலிகமாக ஒரு ஏற்பாடாக எண்ணம் தோன்றுகிறது.

Turn முறையில் ஒருவர் ஒரு விவாதம் அல்லது கருத்துப் பரிமாற்றத்தைத் தொடங்கி வைத்து அதற்கு மூன்று நாட்கள் என வைத்துக் கொண்டு நான்காவது நாள் மற்றொருவர் இன்னொரு விவாதம் அல்லது கருத்துப் பரிமாற்றத்தைத் தொடங்கி வைக்கும் வகையில் அமைத்துக் கொண்டால் என்ன எனத் தோன்றுகிறது.

யார் யார் என்ற வரிசைக் கிரமத்தை திரியிலேயே இளையவர் பிரஸ்தாபிக்கட்டும். அவரை விட அடுத்த மூத்தவர் அதனை வழிமொழியட்டும். அதனை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளலாம். அந்தந்த வரிசைப் படி விவாதங்கள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

இது நடைமுறையில் எவ்வளவு சாத்தியம் எனத் தெரியவில்லை. மற்றவர்களும் இதில் உள்ள சாதக பாதகங்களைக் கூறலாமே. எல்லோரும் கூடி ஒரு முடிவுக்கு வந்து விட்டால் அதனை நடைமுறைப் படுத்தி விடலாம்.

ஒவ்வொரு விவாதத்திலும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லை யென்றால் அவருடைய விவாதம் அவருடைய வரிசையில் இடம் பெறாமல் கடைசியில் தள்ளப் படும் என வைத்துக் கொள்வோம். அப்போது அனைவரும் பங்களிப்பார். தவிர்க்க முடியாத காரணமிருந்தால் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் விட்டு விடலாம்.

இது வெறும் யோசனை மட்டுமே.

RAGHAVENDRA
17th September 2013, 08:24 AM
கோபால் சார்

Item girl - நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்த வரையில் இது மிகவும் முக்கியம் வாய்ந்த சப்ஜெக்ட். பல படங்களில் இது கதையின் போக்கையே நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை மிகவும் விரிவாக நீங்கள் எழுத வேண்டும்.

முக்கியமாக விஜயலலிதா ... முதல் இடத்தில் என் அனுமானத்தில் இருப்பவர். எதிரொலி, திருடன் போன்ற படங்கள் இவரைச் சுற்றித் தான் நகருகின்றன.

இப்போதே தயார் செய்யுங்கள்.

Gopal.s
17th September 2013, 08:34 AM
ராகவேந்தர் சார்,

1972 -வசந்த மாளிகையில் துவங்கியதை நீதி,பட்டிக்காடா பட்டணமா படங்களோடு நிறைவு பெறும். பிறகு Item Girls ஆரம்பிக்கலாம். இது நானும் கார்த்திக் சாரும் இணைந்து தொகுத்து, நீங்கள் படங்கள் வழங்கினால் அமர்க்களமாய் நகரும். (வாசு சார் நாயகியர்,சண்டை,உடை என்று நிறைய வைத்திருப்பதால் அவரை இழுக்க தயக்கம்)
என்ன சொல்கிறீர்கள்?

RAGHAVENDRA
17th September 2013, 08:39 AM
தாராளமாக...யார் எப்போது வேண்டுமானாலும் தொடங்குங்கள். எழுதுங்கள். என்னைப் பொறுத்த வரையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஒரு விவாதம் முடிந்த பிறகு மற்றொன்று என்ற நடைமுறை இருந்தால் குழப்பம் இல்லாமலும் ஒன்றுக்கொன்று இடையில் திசை மாறாமலும் இருக்க வசதியாக இருக்கும் அவ்வளவே. கால வரையறை கூட வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக நீண்ட நாட்களுக்கு இழுக்காமல் இருப்பதற்காக ஒரு ஏற்பாடு இருந்தால் நல்லதாக இருக்கும் என்பது தான். So that every body will take interest in posting. அதுவும் ஒவ்வொருவரும் தவறாமல் ஒரு கருப்பொருளில் விவாதத்தைத் தொடங்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

அது சரி, இதுவே ஒரு விவாதப் பொருளாகி விடப் போகிறது. இதனை சட்டென்று முடிக்க வேண்டும்...

joe
17th September 2013, 08:53 AM
நடிகர் திலகத்துக்கு நாமகரணம் சூட்டிய எங்கள் கலகக்கார கிழட்டுத் தோழன் புகழ் வாழ்க!

http://www.chennaibest.com/cityresources/entertainment/movies/img/sivajievrperiyar.jpg

Gopal.s
17th September 2013, 09:01 AM
நடிகர் திலகத்துக்கு நாமகரணம் சூட்டிய எங்கள் கலகக்கார கிழட்டுத் தோழன் புகழ் வாழ்க!

http://www.chennaibest.com/cityresources/entertainment/movies/img/sivajievrperiyar.jpg
என் பார்வையை விசால படுத்தி, என் மனித நேயத்தை அகல படுத்திய கலக மனிதன்.
எங்கள் நடிகர்திலகத்திற்கு அளிக்க பட்ட பட்டங்களிலே,அவர் பெயரோடும் ,உயிரோடும் இணைந்து விட்ட "சிவாஜி" உயர்வானது ,உன்னதமானது.
நடிகர்திலகத்தின் வாழ்கை கனவுகளிலே ஒன்று முழு படமும் பெரியாராக நடிப்பது.
ஆனால் சிறிய காட்சியில் 1960 இல் பெற்ற மனம் (மு.வ.கதை) படத்தில் பெரியாராக தோன்றுவார்.
ராகவேந்தர் சார்,பதிவிட இயலுமா?

Gopal.s
17th September 2013, 09:16 AM
பெரியார்.(நான் புரிந்து கொண்ட வரை)

பெரியார் கடவுள் மறுப்பு, உயர்சாதி எதிர்ப்பு இவற்றை கருவியாக்கி ,சமுதாய சாதி இறுக்கத்தை இளக செய்யவும் ,மூட நம்பிக்கை உடைப்பையும் ,அடிமை விலங்கருப்பதையும் மைய நோக்கமாக கொண்டவர்.

தலித்தை விட தாழ்த்த படுவது தலித்தின் மனைவியே என்று புரிந்து ,பெண் விடுதலைக்கு தளம் அமைத்தவர்.

மாற்று கருத்துகளை ஒடுக்க நினைக்காமல், கேட்டு பொறுமையாக விடையளித்தவர்.

தன் கலகம் தனி மனித எதிர்ப்பாகவோ,இன துவேஷமாக மாறி சமூக கொந்தளிப்பு நேராமல் இயக்கத்தை நேரியக்கமாக நடத்திய தூய்மையாளர்.

அவர் பேச்சை மூன்று முறை நேரில் கேட்டு ,நிறைய படித்து தெரிந்தது எனக்கு வாழ்வில் பாதை காட்டியது.

இப்போது எனக்கு உள்ள வருத்தங்கள்-

அவர் போட்ட பாதையில் நடப்பதாக கூறுபவர்களே,சாதி இன துவேஷத்தை முன்னிறுத்துவது.

எல்லாமே விவாதத்துக்கு,கேள்விக்குரியது என்று சொன்ன அவரை பற்றியே விவாதிக்க விடாமல் அடக்க பார்ப்பது.

தெய்வங்களின் சிலைகளை நீக்கி விட்டு அதற்கு பிரதியாக மனித சிலைகளை வணங்கும் மூட வழக்கங்களை வளர்ப்பது.(புத்தருக்கு நேர்ந்த அதே விபத்து)

RAGHAVENDRA
17th September 2013, 09:26 AM
http://www.nadigarthilagam.com/songbookcovers/petramanamsbc.jpg

Gopal.s
17th September 2013, 09:33 AM
சினிமா நூற்றாண்டு விழா வை முன்னிட்டு கீழ்கண்ட நடிகர்திலகத்தின் படங்கள் திரையிட படுகின்றன.
சத்யம் - 17/09/2013- கர்ணன்
உட்லண்ட்ஸ் -18/09/2013- ஆண்டவன் கட்டளை
20/09/2013- சவாலே சமாளி
23/09/2013-கலாட்டா கல்யாணம்
அபிராமி- 16/09/2013- பாச மலர்
4 பிரேம்ஸ் - 19/09/2013- கவுரவம்

பரிசோதனை முயற்சியான அந்த நாள், தேச விடுதலையை முன்னிறுத்தி உலக புகழ் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன், ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்ட புதிய பறவை,நம் கலாசார தூதுவன் தில்லானா மோகனாம்பாள், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்ய பட்ட தெய்வ மகன் போன்றவை எப்படி விடு பட்டன என்பது வியப்புக்குரியது.

vasudevan31355
17th September 2013, 10:08 AM
விசுவாசமான விஸ்வம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000613379.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000613379.jpg.html)

இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றியும் எழுத வேண்டும். ராஜாவில் விஸ்வத்தின் (மனோகர்) பங்கு மிக முக்கியமானது. செம அலட்சியமான கேரக்டர். கதையை ஆரம்பித்து வைத்து அதே போல கிளைமாக்ஸில் நுழைந்து களேபரம் பண்ணும் கேரக்டர். சிங்கப்பூரிலிருந்து வரும் விஸ்வத்தை போலீஸ் பின்தொடர்ந்து சென்று கண்காணிக்கத் தொடங்க, சிகப்புத்தலை மனிதன் விஸ்வத்திற்கு ரகசியமாய்த் தகவல் தந்து விட்டு நழுவ, ஹோட்டலில் ரூம் எடுத்து பால்கனியிலிருந்து விஸ்வம் தன்னை போலீஸ் நோட்டமிடுவதை கண்காணித்து, கொஞ்சமும் பதட்டமில்லாமல் டென்னிஸ் ரேக்கட்டுடன் வெளியே வந்து, டென்னிஸ் கோர்ட்டில் விளையாடி, பின் பில்லியர்ட்ஸ் விளையாடுமிடம் வந்து, அங்கு விளையாடும் ஒரு வயதானவருக்கு எந்த பந்தைப் போட வேண்டும் என்று இயக்குனர் சி.வி.ஆருக்கு (முன்னால்) சொல்லியும் கொடுத்து, பின் ரேக்கட் ஸ்டாண்டில் சிகப்பு கைப்பிடி போட்ட ரேக்கட்டை வைத்து விட்டு, அங்கிருக்கும் கண்ணாடியைப் பார்த்து, துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, வேறு ஒரு ரேக்கட்டை மாற்றி எடுத்துக் கொண்டு, அங்கு ஒன்றும் தெரியாதது போல அமர்ந்து கூல் ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டிருக்கும் மப்டி போலீஸ் அதிகாரிகளிடம் நக்கலாக வாயில் கவ்விக் கொண்டிருக்கும் சிகரெட்டுக்கு நெருப்பு பற்ற வைக்க சொல்லிக் கேட்கும் (மனோகரின் அந்த சிரிப்பு கலந்த நக்கலான பார்வை சூப்பர் )அந்த சில நிமிடக் காட்சிகளில் விஸ்வம் வில்லனாக இருந்தாலும் ஈஸியாக நம் மனதில் 'பச்'சென்று ஒட்டிக் கொள்வான். அதே போல விறுவிறுப்பையும் தொடக்கி வைப்பான்.

பெர்மிட் இல்லாமல் மது குடித்து போலீஸ் வந்து கேட்கும் போது "அதான் ஆகஸ்ட் 30 இலிருந்து ரத்து செய்யப் போறாங்களே... அப்புறம் பெர்மிட் எதுக்கு?" என்று தன் தவறுக்கு வரப் போகும் அரசாங்கத்தின் ஆணையை சாதகமாக்கி தப்பித்துக் கொள்ள நினைக்கும் புத்திசாலி. ஆனால் விஸ்வம் புத்திசாலியாக இருந்தாலும் அவனை ஈஸியாக கோபப்படுத்தி விடலாம். லஞ்சத்திற்கு மயங்காத அதிகாரியிடம் கோபமுற்று கான்ஸ்டபிளின் (சந்திரபாபு) தத்தக்கா..பித்தக்கா செயல்களில் கோபம் உச்சத்துக்கு ஏற, அவனை ஓர் அறை அறைந்து போலீஸ் வசம் சிக்கும் அவசர புத்திக்கும் சொந்தக்காரன்.

தாடிக்கார வாலாவுடன் விஸ்வம் கைகொடுத்து நிற்கும் போட்டோவில் விஸ்வத்தை மறைத்து தாடிக்காரன் யாரென்று கமிஷனர் கேட்க "தெரியாது" என்று ஆணித்தரமாகக் கூறும் விஸ்வம் மறைந்த விஸ்வத்தின் பகுதியை கமிஷனர் பிறகு பிரித்துக் காட்ட, "அறிமுகமில்லாத இரண்டு பேர் அசந்தர்ப்பமாக எங்காவது நின்றிருப்போம்... அதை எவனாவது போட்டோ எடுத்திருப்பான்... அதை ஒரு சாட்சியாக வச்சுகிட்டு என்னை குறுக்குக் கேள்வி கேட்டால் என்ன நியாயம்?" என்று எகத்தாளமாக வாதிடுவான். பயம் என்பது அறவே இருக்காது. ஜெயிலில் ராஜா ஒரு கேடியாக நாடகாமாடுவது தெரியாமல் அவனுடைய வலையில் அழகாக மாட்டுவான் விஸ்வம். போலீஸ்காரனிடமே தம்முக்கு நெருப்பு கேட்கும் துணிவு கொண்ட அவன் ராஜாவின் தம்மிற்கு நெருப்பு பற்ற வைக்க நேர்ந்தது அவனுடைய துரதிருஷ்டமே. "நம்பிக்கைங்கிறது அண்ணன் தம்பிகிட்ட கூட இல்லாமல் இருக்கலாம்... ஆனா திருடன்கிட்ட கண்டிப்பா இருக்கணும்" என்ற ராஜாவின் தந்திரப் பேச்சை நம்பிக் கெட்ட கெட்ட அப்பாவி.

ஜெயிலில் இருந்து திரும்பும் விஸ்வம் சின்ன பாஸ் பாபுவை சந்திப்பான். "குமார் இருந்த இடத்தில் யாரோ ராஜாவாமே?!" என்று கேட்பான். அது அவன் அனுப்பி வச்ச ராஜா என்பது அப்போதுதான் அவனுக்கே தெரியும். பெரிய பாஸை சந்திக்க துடிதுடிக்கும் விஸ்வம் அதற்கு ஏற்பாடு செய்ய சொல்லி பாபுவைக் கேட்க பாபு அது முடியாத காரியம் என்று கூற ராஜா மட்டும் தலைவரை எப்படி சந்தித்தான் என்று விஸ்வம் எதிர்க் கேள்வி கேட்பான். "தலைவர் தான் அவனை சந்திக்கணும்னு ஆசைப்பட்டாரு" என்று பாபு கூற பொறாமைத் தீ மனதில் பற்றி எரிய விஸ்வம் பாபுவிடம் " நீ அவனைப் பற்றி பிரமாதமா பாராட்டிப் பேசியிருப்பே" என்று நக்கலடிப்பான்..(எதிரும் புதிருமாக இருவரும் சேரில் அமர்ந்து முதுகைக் காட்டிக் கொண்டிருப்பது காட்சிக்கு இன்னும் ஆழத்தைக் கொடுக்கும்... அர்த்தத்தையும் கொடுக்கும்.) "பாராட்டும்படியா ராஜா பெரிய காரியங்களை சாதிச்சிருக்கானே" என்று பாபு பதிலுரைப்பான். அதற்கு விஸ்வம் தரும் சற்றே ஆத்திரமும், கோபமும் எரிச்சலும் கலந்த பதிலைப் பாருங்கள்.

"ஏன்? இத்தனை வருஷமா நாங்க எதையுமே சாதிக்கலையா?"

(மனோகரின் இந்த டயலாக் டெலிவிரி ரொம்ப ரொம்ப பிரமாதமாக இருக்கும்)

"என்னடா புதுசா வந்தவனை இப்படி தூக்கிப் பிடிக்கிற? நானெல்லாம் பழுத்துக் கொட்டை போட்டவன்...நான் செய்யாததையா அவன் செஞ்சுட்டான்? சும்மா நிறுத்துடா! என்று அந்த வார்த்தைகளுக்கு நமக்கும் பாபுவுக்கும் சேர்த்து அர்த்தம் புரிய வைப்பான் விஸ்வம்.

"எவ்வளவு உழைத்தோம்... நேற்று வந்த ராஜா பாஸை சந்தித்தித்து விட்டானே... அதுவும் போலீஸ் அதிகாரி என்று தெரியாமல் இந்த பேக்குகள் அவனை நம்பி மோசம் போகிறதே" என்று ராஜாவைக் காட்டிக் கொடுப்பவனும் விஸ்வமே.

கிளைமாக்ஸில் விஸ்வத்தின் பங்கு மகத்தானது. அதைப் பற்றி நிறைய எழுதி விட்டதால் விஸ்வாசமான விஸ்வத்தை (அவனைப் பொறுத்த வரை அவன் ரொம்ப கரெக்ட்) விசால மனதுடன் பாராட்டி
அவனை வாழ்த்தி விடைபெறுகிறேன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000706872.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000706872.jpg.html)

இப்போது மனோகர். விஸ்வமாக செம கலக்கு கலக்குவார். கவர்ச்சியான அழகு. அந்த நீண்ட அடர் கிருதா ஸ்டைல் அவருக்கு மிக பொருத்தம். அலட்சிய வசன உச்சரிப்பு, அதே போல அலட்சிய அங்க அசைவுகள்... கேரக்டரை உள்வாங்கி புரிந்து நடிக்கும் வெகு இயல்பான நேர்த்தி... டென்னிஸ் உடையில் பின்னி எடுப்பது, நடிகர் திலகத்துடன் ஜெயிலில் கலக்குவது, பாலாஜியிடம் நக்கலான குத்தல் பேச்சுக்கள், கிளைமாக்ஸில் மாட்டி கொண்டு விழி பிதுங்குவது என்று ஆர்ப்பாட்டமாகச் செய்திருப்பார்.

பாலாஜி இவரை நன்றாக யூஸ் செய்வார். ராஜா, நீதி, என் மகன், உனக்காக நான் என்று சுஜாதா சினி ஆர்ட்ஸின் மனம் கவர்ந்த வில்லன். இவருக்கென்ற பிரத்தியோக ஸ்டைலால் நடிகர் திலகத்தின் ரசிகர்களையும் ஈர்த்தவர். சென்டிமென்ட்டாக நடிகர் திலகத்துடன் இவர் பணிபுரிந்த பெரும்பான்மையான பல படங்கள் ஹிட்.

ஆமாம்! ஒரு சந்தேகம் ரொம்ப நாளாகவே! பாலாஜி ஏன் தன் படங்களில் நம்பியார் அவர்களை யூஸ் செய்யவில்லை? இதற்கே இருவரும் மலையாளிகள்தானே! யாருக்காவது காரணம் தெரியுமா? முரளி சார், கார்த்திக் சார் ப்ளீஸ்.

vasudevan31355
17th September 2013, 10:24 AM
.இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் அவர்கள் ராஜாவில் ஒரு காட்சியில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355002/VTS_02_1VOB_000662795.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355002/VTS_02_1VOB_000662795.jpg.html)

Gopal.s
17th September 2013, 10:26 AM
மனோகர்....
என் மனம் கவர்ந்த ஸ்டைல் வில்லன். வண்ணக்கிளி, நான், ராஜா,மீண்டும் வாழ்வேன்,நீதி,எங்கள் தங்க ராஜா போன்ற படங்களில் மிக மிக ரசித்துள்ளேன். வாசு சார், ரொம்ப நன்றி.

உண்மைதான் .பாலாஜி நம்பியாரை உபயோக படுத்தியதில்லை. பாலாஜி அம்மாதான் கேரளா பக்கம்.அப்பா நம்ம ஆள்தான். பாலாஜி ,ராஷ்மி (y .G .P ) அவர்களின் அரை சகோதரர்.அப்பா ஒருவரே. நம் Y .G .மகேந்திராவின் மாமா.

JamesFague
17th September 2013, 10:35 AM
Mr Vasu Sir,

Excellent writeup of Raja and pls write about Mr Kannan of En Thambi and also post the sword fight
scene in the stunt series.

I had an opportunity to see the above movie at chennai with our friends on sunday. What an
amazing experience to watch the movie. Our NT simply superb in all aspects. Typical theatre
experience.

RAGHAVENDRA
17th September 2013, 10:44 AM
ராஜா - அடியேனின் பங்களிப்பாக மெல்லிசை மன்னரின் இசை பற்றிய அலசல் ... தொடரும்...

KCSHEKAR
17th September 2013, 11:11 AM
டியர் வாசுதேவன் சார்,

ராஜா - விஸ்வத்தைப் (மனோகர்) பற்றிய உங்களுடைய விமர்சனம் பிரமாதம். விஸ்வத்தைப் போலவே வித்தியசமாக சிந்திக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

vasudevan31355
17th September 2013, 11:12 AM
ராஜா - அடியேனின் பங்களிப்பாக மெல்லிசை மன்னரின் இசை பற்றிய அலசல் ... தொடரும்...

ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்.

RAGHAVENDRA
17th September 2013, 11:17 AM
ராஜா - திரைப்படத்தின் முகப்பிசை

https://soundcloud.com/veeyaar/raja-title-music

இந்த இசையைக் கேட்கும் மாத்திரத்திலேயே ஒரு த்ரில்லர் படத்திற்குண்டான தயாரிப்பினை இசை மூலம் நமக்களித்திருக்கிறார் மெல்லிசை மன்னர். இந்தப் படத்தில் ஆங்காங்கே ட்ரம்ஸ் ஒலியும் கோரஸ் குரல்களும் பரவசப் படுத்துவதோடு அந்தக் காட்சிக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. டைட்டில் இசையிலேயே அதற்கான முஸ்தீபைத் தந்து விடுகிறார். அதுவும் குறிப்பாக ராஜா ராஜா ராஜா என பல்வேறு மாடுலேஷன்களில் குரலிசைக்கும் போது திகிலை ஊட்டும் தோரணை தெரிகிறது. படத்துடன் கேட்கும் போது அதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

RAGHAVENDRA
17th September 2013, 11:21 AM
பொதுவாக ஹீரோ அறிமுகக் காட்சி, அதுவும் குறிப்பாக இந்த மாதிரி ஆக்ஷன் படங்கள் என்றால், இசை ஆரவாரமாக ஆர்ப்பாட்டமாக ஒலிப்பது வழக்கம். அதை இந்தப் படத்தில் முற்றிலும் உடைத்து விட்டார் மெல்லிசை மன்னர். நடிகர் திலகத்தைப் போன்று இவரும் அந்த கதாபாத்திரத்திற்குள்ளேயே நுழைந்து விடுகிறார். காட்சியமைப்பும் அதற்கேற்றார்போல் அமைந்து விட்டதால், மிகவும் மென்மையாக விசில் ஒலியுடன் கதாநாயகனை அறிமுகப் படுத்துகிறார் இயக்குநர். அதற்கேற்றார்போல் விசில் ஒலியை பிரதானமாக வைத்து அறிமுக பின்னணி இசையில் கலக்கியிருப்பார் எம்.எஸ்.வி. கேளுங்கள்.

https://soundcloud.com/veeyaar/raja-hero-intro-bgm

RAGHAVENDRA
17th September 2013, 11:30 AM
ரயில்வே ஸ்டேஷனில் நாயகி இறங்குவது தொடங்கி நாயகனைக் காண்பதற்காக வெளியில் தேடி ஓடி வரும் அந்த விநாடி வரை நாயகிக்கும் வில்லனின் கையாளுக்கும் ஏற்படும் திகிலும் பரபரப்பும் இசையிலேயே மெல்லிசை மன்னர் வெளிப்படுத்தியிருப்பார். ரயில் நின்றவுடன் துவங்கும் ட்ரம்ஸ், ட்ரம்பெட் மற்றும் கிடார் கருவிகளின் இசை காட்சியை நமக்கு உணர்த்தி விடுகிறது. அதைத் தொடர்ந்து அந்த தேடுதலுக்காக புல்லாங்குழலைப் பயன் படுத்தியிருப்பார், காற்றில் புல்லாங்குழல் ஓசை உலவுவது போல் வெட்ட வெளியில் நாயகி அவனைத் தேடுவதை இசையின் மூலம் தெரியப் படுத்தும் யுக்தி மெல்லிசை மன்னருக்கே உரித்தானது. [தேடுதல், அச்சப் படுதல், பரபரப்படைதல் இந்த மாதிரி சூழலில் புல்லாங்குழல் இசை மிகப் பொருத்தமாக இருப்பதோடு உள்ளுக்குள் நமக்கு அந்த உணர்வை ஊட்டி விடும். இதை மிகச் சிறப்பாக பயன் படுத்தியவர் மெல்லிசை மன்னர். இதற்கு முன்னர் சுமதி என் சுந்தரி படத்தில் ஜெயலலிதா ரயிலில் இறந்து இறங்கி நள்ளிரவில் அடைக்கலம் தேடும் போதும் இதே உணர்வை புல்லாங்குழல் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் ]. வெளியே வந்து பார்க்கும் போது போலீஸ் இருப்பதைப் பார்த்து அந்தக் கூட்டத்திற்கே இயல்பான பரபரப்பை நாயகியும் கையாளும் மேலும் அடைய, அதனை அந்த கோரஸ் குரல்களில் வெளிப்படுத்தியிருப்பார். நாயகனைக் கண்டதும் அப்படியே நாயகியின் முகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி மனதில் மகிழ்ச்சியுண்டாகும். அப்போது இசையும் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.

மறக்க முடியாத பின்னணி இசை

https://soundcloud.com/veeyaar/nee-varavendum-prelude-bgm

RAGHAVENDRA
17th September 2013, 12:04 PM
ஒரு பக்கம் பரபரப்பு, திகில் போன்ற காட்சிகள், இன்னொரு பக்கம் ரொமான்ஸ் காட்சிகள் என இருந்தாலும் நகைச்சுவைக் காட்சிகளிலும் மெல்லிசை மன்னரின் கொடி ரெக்கை கட்டி பறக்கிறது. குறிப்பாக ஹோட்டலில் பார் டெண்டராக வேலை செய்யும் சந்திரபாபுவின் அறிமுகக் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் இசை அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். அட்டகாசமான அந்தப் பின்னணி இசையைக் கேளுங்கள்.

https://soundcloud.com/veeyaar/chandrababu-at-bar-scene-raja

iufegolarev
17th September 2013, 12:22 PM
பெரியார்.(நான் புரிந்து கொண்ட வரை)

பெரியார் கடவுள் மறுப்பு, உயர்சாதி எதிர்ப்பு இவற்றை கருவியாக்கி ,சமுதாய சாதி இறுக்கத்தை இளக செய்யவும் ,மூட நம்பிக்கை உடைப்பையும் ,அடிமை விலங்கருப்பதையும் மைய நோக்கமாக கொண்டவர்.

தலித்தை விட தாழ்த்த படுவது தலித்தின் மனைவியே என்று புரிந்து ,பெண் விடுதலைக்கு தளம் அமைத்தவர்.

மாற்று கருத்துகளை ஒடுக்க நினைக்காமல், கேட்டு பொறுமையாக விடையளித்தவர்.

தன் கலகம் தனி மனித எதிர்ப்பாகவோ,இன துவேஷமாக மாறி சமூக கொந்தளிப்பு நேராமல் இயக்கத்தை நேரியக்கமாக நடத்திய தூய்மையாளர்.

அவர் பேச்சை மூன்று முறை நேரில் கேட்டு ,நிறைய படித்து தெரிந்தது எனக்கு வாழ்வில் பாதை காட்டியது.

இப்போது எனக்கு உள்ள வருத்தங்கள்-

அவர் போட்ட பாதையில் நடப்பதாக கூறுபவர்களே,சாதி இன துவேஷத்தை முன்னிறுத்துவது.

எல்லாமே விவாதத்துக்கு,கேள்விக்குரியது என்று சொன்ன அவரை பற்றியே விவாதிக்க விடாமல் அடக்க பார்ப்பது.

தெய்வங்களின் சிலைகளை நீக்கி விட்டு அதற்கு பிரதியாக மனித சிலைகளை வணங்கும் மூட வழக்கங்களை வளர்ப்பது.(புத்தருக்கு நேர்ந்த அதே விபத்து)
என்னதான் சொல்லுங்கள்..

எனக்குள் இருக்கும் ஒரு ஞாயமான கேள்வி. அது பெரியார் ஆதரவாளர்க்கும் சரி அல்லாதவர்க்கும் சரி.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை (பிராமணர்கள்) மட்டுமே ஜாதி த்வேஷம் செய்கிறார்கள் என்று சாடியவர் பெரியார் அவர்கள். பாம்பை பாப்பானை பார்த்தால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி என்று அறைகூவல் விடுத்தவர்கள் என்றால் எந்தளவுக்கு ஜாதி த்வேஷம் இருந்தது என்பதை அறியலாம்.

அந்த காலத்தில் வேறு பல சமூஹதினர்களும் ஜாதிவெறி கொண்டவர்களாக கண்டிப்பாக இருந்திருக்கிறார்கள். உதாரணம் தேவர் சமூஹம். தேவர் - தலித் த்வேஷம் எவரும் அறியாதது இல்லை...வெட்டு குத்து நிகழ்வு அவளவு சாதாரணம்.

அப்படி இருக்கையில் ஏன் பிராமணர்களை மட்டுமே சாடினார்கள்? தேவர்களை சாடவில்லை? காரணம் பிராமணர்கள் வாய்மூடி இருப்பார்கள்...ஆனால் தேவர் சமூஹத்தினர் ? வாய் திறந்தாள் அரிவாள் தான் பேசும் ! அதனால் வாய் திறக்கவில்லை இவர்கள். அப்போ இளிச்சவாயர்கள் பிராமணர்கள் ! இவர்கள் முழுமையான சமூக சீர்திருத்தவாதிகள?

சரி அதை விடுவோம் ! கூத்தாடி..கூத்தாடி என்று ஒரு புறம் கூறியவர்கள் ....அப்படி கூதாடியவர்களுடன் எதற்கு உறவு வைத்துகொண்டு கொஞ்சி குழைந்தார்கள் ஆதிகாலத்திலிருந்தே ?

கேட்டால் நட்பு வேறு அரசியல் வேறு என்பார்கள்..! மக்கள் என்றுமே ஆட்டுமந்தைகள் தானே என்ற எண்ணம் தான் காரணம் ! சீர்திருத்தம் கொண்டுவருகிறேன் என்று கூறி இன்று தமிழகம் எவ்வளவு சீரழிந்து போயிருக்கிறது என்பதை சற்று ஆராயிந்தால் புரியும்.

joe
17th September 2013, 12:35 PM
சீர்திருத்தம் கொண்டுவருகிறேன் என்று கூறி இன்று தமிழகம் எவ்வளவு சீரழிந்து போயிருக்கிறது என்பதை சற்று ஆராயிந்தால் புரியும்.

:rotfl:

Gopal.s
17th September 2013, 12:53 PM
சுப்பு,
எதனோடும் ஒட்டாமல் சம்மந்தா சம்மந்தமில்லாமல் பதிவு போடுவதை நிறுத்துங்கள்.உங்கள் மூர்க்க பதிவுகளால் ராகவேந்தர் சாரின் அற்புதமான பதிவுகளுக்கு இடைஞ்சல் உண்டாகி விட்டது. ஏன் இப்படி ஊரோடு ஒட்டாமல் எரிச்சல் உண்டாக்குகிறீர்கள்?
ஒருவர் நிழலை இன்னொரு சாதியினர் நிழல் கூட தீண்ட கூடாது என்று அழிச்சாட்டியம் செய்வது எவ்வளவு பெரிய அநீதி? ஏன் வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

vasudevan31355
17th September 2013, 12:54 PM
சக்திப்ரபா அவர்களே!

தங்கள் மறு வருகைக்கு நன்றி! ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரியில் சங்கமிக்க வந்துள்ளீர்கள். என் மனம் நிறைந்த நல் வருகையினைத் தெரிவிக்கிறேன். தங்களின் அன்பான பாராட்டிற்கும் மிக்க நன்றி! தொடர்ந்து தங்கள் பங்களிப்பை எதிர்நோக்கும்

நெய்வேலி வாசுதேவன்.

vasudevan31355
17th September 2013, 12:58 PM
ராஜா பதிவுகளைப் பாராட்டிய ராகவேந்திரன் சார்,கோபால் சார், சந்திரசேகரன் சார், வாசுதேவன் சார், தம்பி ராகுல்ராம், ராமஜெயம் சார், கிருஷ்ணா சார், கை பேசியில் பாராட்டு தெரிவித்த அன்பு பம்மலார் சார், வினோத் சார், ஏனைய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

vasudevan31355
17th September 2013, 01:02 PM
ராகவேந்திரன் சார்,

ராஜாவின் பின்னணி இசையை தங்கள் அபார உழைப்பின் மூலம் ஆனந்தமாகக் கேட்டபடி இருக்கிறேன். மிக வித்தியாசமான முயற்சி. தவிரவும் தரமும் மிக நன்றாக உள்ளது. இதிலுள்ள பின்னணியின் கஷ்டம் எனக்கு புரியும். மேலும் அருமையான பல ராஜா ரிங் டோன்கள் எனக்கு தங்களால் கிடைத்துள்ளது. நன்றி!

mr_karthik
17th September 2013, 01:06 PM
டியர் வாசுதேவன் சார்,

என்னுடைய பதிவுகளுக்கு தாங்கள் மனமுவந்து அளித்திருக்கும் விரிவான பாராட்டுக்கு நன்றி. பாராட்டும்போது தாராவின் நிழற்படங்கள் சிலவற்றைப் பதிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன் (எதிர்பார்க்கிறேன்).

'ராஜா' திரைக் காவியம் கடலூரில் வெளியானபோது தாங்கள் முதல் நாள் காலைக்காட்சி பார்த்த இனிய அனுபவங்களையும் அப்போது அங்கு நிகழ்ந்த அதிரடியான சம்பவங்களையும் தங்களுக்கே உரித்தான சுவையான நடையுடன் பதித்துள்ளீர்கள். தங்களுடைய பதிவு கோபால் அவர்களையும், கல்நாயக் அவர்களையும் கடலூருடன் சொந்தம் கொண்டாட வைத்து அவர்களின் மலரும் நினைவுகளையும் தட்டி எழுப்பி பதிவிட வைத்து விட்டது.

'ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர்' தொடரில் காணக்கிடைக்காத துளி விஷம் பட ஆடை அணிவகுப்பைத் தந்து அசர வைத்து விட்டீர்கள். தாங்கள் உழைப்பும் தேடலும் அசாத்தியமானது. சண்டைக்காட்சிகள் தொடரும், நாயகியர் தொடரும் கூட மீண்டும் விறுவிறுப்பாக தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.

என்னுடையது எல்லாம் வெறும் எழுத்துக்கள் மட்டுமே. ஆனால் தங்களுடையது தேடல், தொகுத்தல், பதித்தல் என பல நிலைகளை உள்ளடக்கியது. இருப்பினும் சளைக்காமல் தொடர்வது, நடிகர்திலகத்தின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அளவற்ற பற்றினை வெளிக்கொணர்கிறது.

தாங்கள் பதிவுகள் யாவற்றுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்....

Gopal.s
17th September 2013, 01:08 PM
ராகவேந்தர் சார்,
தொடருங்கள் .தங்கள் இசைவான இசை பதிவுகளை துளி துளியாக பருகி மகிழ்கிறேன். இடையில் வந்த தொந்தரவுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.(வேறு வழி?சுப்புவுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதே?)

vasudevan31355
17th September 2013, 01:25 PM
டியர் கல்நாயாக் சார்,

வெகு நாட்கள் ஆனது போல் உள்ளது தங்கள் பதிவைப் பார்த்து. நலம்தானே! நீங்கள் எங்கள் ஊர்க்காரர் ஆயிற்றே! புதுப்பாளையத்தில் எந்தத் தெருவில் தாங்கள் இருந்தீர்கள்? நிச்சயமாக நாம் சந்தித்திருக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். ஏனென்றால் தலைவர் படங்கள் நடக்கும் தியேட்டர்களைத் தவிர வேறு கதி என்று எங்களுக்கு எதுவும் இல்லை. நீங்களும் நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அனைத்து படங்களுக்கும் வந்துள்ளீர்கள். அதனால் கண்டிப்பாக தங்களை எனக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை. தாங்களும் நியூசினிமா திரையரங்கைப் பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள். எனவே எனக்கு மிக க்ளோஸ் ஆகி விட்டீர்கள். (முக்கியமாக அந்த கும்மிருட்டு தரை டிக்கெட் கவுண்ட்டர் வளைவுகள். ரசித்துச் சிரித்தேன்.) காலம் வரும் போது நாம் நிச்சயம் சந்தித்து மகிழலாம். பாடலியில் 'வெற்றிக்கு ஒருவன்' ரசிகர் காட்சிக்கு வந்திருந்தீர்களேயானால் மிகப் பெரிய அமர்க்களத்தை கண்டு களித்திருப்பீர்கள். இன்னும் நிறைய கடலூர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏற்கனவே 'சந்திப்பு' முத்தையா அரங்கு அனுபவங்களை தாங்கள் மகிழ்வுடன் இங்கே பகிர்ந்து கொண்டது நன்கு நினைவிருக்கிறது.

தங்களுடைய மேலான பாராட்டுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

vasudevan31355
17th September 2013, 02:08 PM
டியர் கார்த்திக் சார்,

தங்களின் உயர்வான உளமார்ந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! என்ன ஒரு ஆச்சர்யம் பாருங்கள்...தங்களின் பதிவைப் பார்ப்பதற்கு முன்னர்தான் அடடா! நம்ம கார்த்திக் சாரின் மனம் கவர்ந்த குழந்தை தாராவின் ஸ்டில்களை கொஞ்சம் எடுத்து போடலாமே என்று எடுத்துக் கொண்டிருந்தேன். அப்லோட் செய்வதற்குள் ஒரு முறை திரியை விசிட் செய்தால் தாங்கள் தாரா படம் வேண்டுமெறு பதிவு போட்டிருக்கிறீர்கள். செம்மையான வைப்ரஷன். கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். நடிகர் திலகத்தின் அன்பு இதயங்களைத் தவிர வேறு யாருக்குக் கிடைக்கும் இத்தகைய vibrations?!


இதோ! உங்கள் தாரா. தன் உண்மைக் காதலால் நம் நெஞ்சங்களில் இன்றளவும் வாழும் தாரா. (பத்மா கன்னா)

வெளிநாடு கிளம்ப காதலனுக்காக காத்திருக்கும் தாரா.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355003/VTS_02_2VOB_000797732.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355003/VTS_02_2VOB_000797732.jpg.html)

காதலன் குமாரின் மடியில் மெய்மறந்து கிறங்கிக் கிடக்கும் தாரா.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355003/VTS_02_2VOB_001270704.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355003/VTS_02_2VOB_001270704.jpg.html)

பாபுவிடம் வசமாகச் சிக்கும் தருணத்தில் காதலர்கள் குமாரும், தாராவும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355003/VTS_02_2VOB_001284084.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355003/VTS_02_2VOB_001284084.jpg.html)

நாகலிங்கம் முன் காதலனுக்காகப் பரிந்து பேசும் தாரா.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355003/VTS_02_2VOB_001656556.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355003/VTS_02_2VOB_001656556.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355003/VTS_02_2VOB_001697063.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355003/VTS_02_2VOB_001697063.jpg.html)

'மனச பத்திரமாப் பார்த்துக்குங்க...தவறிடப் போகுது'..

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355003/VTS_02_2VOB_001739639.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355003/VTS_02_2VOB_001739639.jpg.html)

நாகப் பாம்பு முன் நாட்டியத் தாரகையாக தாரா. (நான் உயிருக்குத் தருவது விலை)....

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355003/VTS_02_2VOB_002005438.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355003/VTS_02_2VOB_002005438.jpg.html)

ராஜா குமாருடன் பாஸை சந்திக்க வரும்போது கொத்தடிமையாய் தாரா.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355003/VTS_02_3VOB_001995323.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355003/VTS_02_3VOB_001995323.jpg.html)

ராதாவைக் காப்பற்ற காதலன் உயிர் பறிக்கப்பட்டதைத் தெரிந்து நாகலிங்கத்தின் உயிருடன் விலை பேசும் தாரா.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355003/VTS_02_5vob_000219497.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355003/VTS_02_5vob_000219497.jpg.html)

பரிதாபமாக உயிரை விட்டு காதலன் குமாரை சென்றடையும் தாரா.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355003/VTS_02_5vob_000242636.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355003/VTS_02_5vob_000242636.jpg.html)

Gopal.s
17th September 2013, 02:25 PM
அப்படியே என் ஆசை கிளி சினேகலதாவையும் போட்டால் என்னவாம்?

iufegolarev
17th September 2013, 02:28 PM
சுப்பு,
எதனோடும் ஒட்டாமல் சம்மந்தா சம்மந்தமில்லாமல் பதிவு போடுவதை நிறுத்துங்கள்.உங்கள் மூர்க்க பதிவுகளால் ராகவேந்தர் சாரின் அற்புதமான பதிவுகளுக்கு இடைஞ்சல் உண்டாகி விட்டது. ஏன் இப்படி ஊரோடு ஒட்டாமல் எரிச்சல் உண்டாக்குகிறீர்கள்?
ஒருவர் நிழலை இன்னொரு சாதியினர் நிழல் கூட தீண்ட கூடாது என்று அழிச்சாட்டியம் செய்வது எவ்வளவு பெரிய அநீதி? ஏன் வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

Dear Sir

First of all ..you cut your crap...when everybody was writing about films, who asked to write about Pagutharivu thandhai and other mannankatti? Don't push your thoughts into others and you have that silly habit of doing that very very regularly and comfortably write as if you are a better Judge..! Everybody knows about you and me..!

When you are writing about Raja and other films, you should have continued writing about it without putting up articles of pagutharivu and pagukkaadha arivu and who asked to write about ideologies of Periyaar ? You guys can write anything and everything as per your whims and fancy and you just want everybody to accept your views as universal truth is it? And, you will claim that am distracting !

Am sorry...! You have your views and so is mine !

If you guys want to operate as a Group yourselves...please go ahead and do it...I care a damn for that. Am aware of the interests and am above your intentions !

If you guys have answer for my question, please answer else choose to keep quiet and praise yourselves for your writings ! If any one can answer properly let them answer else let them not SAMAALICHUFY by putting up some rolling cartoons. Putting up Lols...Rolling cartoons...are equivalent to VAADHAADA VAKKILAADHA VAAYIDHA VAANGUM VAKIL"e

I Never advocated...I said the same treatment had they had guts, they should have extended to other communities who do the same even worse than that, till now...! This is not advocating Gopal Sir.


Regards

Gopal.s
17th September 2013, 02:40 PM
சுப்பு சார்,
இன்று பெரியாரின் பிறந்த தினம். நாம் நடிகர்திலகத்தின் வாழ்க்கையில் அவரோடு பயணித்த மனிதர்களை நினைவு கூறும் மரபை கடை பிடிப்பதால் நானும் ஜோவும் இதனை பதித்தோம். அத்துடன் விட்டு விட்டு ,ராகவேந்தரை ரசிக்க ஆரம்பித்த போது தான்....
சரி.இத்துடன் விடுங்கள். நாம் தொடரலாம்.

joe
17th September 2013, 02:43 PM
If any one can answer properly let them answer else let them not SAMAALICHUFY by putting up some rolling cartoons. Putting up Lols...Rolling cartoons...are equivalent to VAADHAADA VAKKILAADHA VAAYIDHA VAANGUM VAKIL"e

This looks targeted me . So I have to answer .

இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள் . யார் யாருக்கெல்லாமோ இங்கே புகழ் மாலைகள் சூட்டப்படும் போது சிவாஜி கணேசனுக்கு 'சிவாஜி' என்ற பெயர் நிலைக்க காரணமாய் இருந்த பெரியாரின் நினைவை இங்கே அளித்ததில் யாருக்கும் எரிச்சல் இருந்தால் அதற்கு எதுவும் செய்ய முடியாது .யாரை கடைசி வரை சிவாஜி போற்றினாரோ , யாரை போல் வேடம் புனைய வேண்டும் என்ன விரும்பினாரோ அவரைத் தான் இங்கே குறிப்பிட்டுள்ளேன் .

திரு.கோபாலுக்கு எதிர்வினையாக நீங்கள் தொடுத்துள்ள கேள்விகள் பெரியார் பற்றி எந்த புரிதலுமோ , குறைந்த பட்ச அறிதலுமோ இல்லாமல் மேலோட்டமாக போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போகும் ரீதியில் தான் இருந்தது ..அவை பொருட்படுத்தி பதிலிறுக்கும் தகுதியுடைத்தன்று என்றே நினைக்கிறேன் . அதிலே சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழித்து விட்டதாக கூறப்பட்டதை படித்த போது எனக்கு சிரிப்பு வந்தது .அதையே பதிந்திருக்கிறேன் . பெரியாரால் தமிழகத்தில் என்ன சீர்திருத்தம் நடந்தது , சமூக நீதி அமைந்தது , அடித்தள மக்கள் எவ்வாறு சுயமரியாதையும் எழுச்சியும் பெற்றார்கள் என்பதற்கு என் போன்ற ஒடுக்கப்பட்ட , அடித்தள சமூகத்திலிருந்து வந்தவர்கள் உணர முடியும் .. அதை சீரழிவு என நினைப்பவர்கள் நினைத்து விட்டு போகட்டுமே .

iufegolarev
17th September 2013, 02:48 PM
Gopal Sir,

I do respect the Marabu. I did not comment anything when the same Marabu was followed for Anna.

But it did not end up with following the "Marabu" when Periyar subject was brought in.

Therefore, I shared my views / Anguish and did not advocate for any particular community. Had that community had that community feeling like other community, that community would not have been the same community now. Anyway, nothing to argue from here..Will continue the regular discussion. Thanks for the response.

vasudevan31355
17th September 2013, 02:49 PM
அப்படியே என் ஆசை கிளி சினேகலதாவையும் போட்டால் என்னவாம்?

ஆசைக்கிளியே கோபமா? :)

iufegolarev
17th September 2013, 02:57 PM
This looks targeted me . So I have to answer .

இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள் . யார் யாருக்கெல்லாமோ இங்கே புகழ் மாலைகள் சூட்டப்படும் போது சிவாஜி கணேசனுக்கு 'சிவாஜி' என்ற பெயர் நிலைக்க காரணமாய் இருந்த பெரியாரின் நினைவை இங்கே அளித்ததில் யாருக்கும் எரிச்சல் இருந்தால் அதற்கு எதுவும் செய்ய முடியாது .யாரை கடைசி வரை சிவாஜி போற்றினாரோ , யாரை போல் வேடம் புனைய வேண்டும் என்ன விரும்பினாரோ அவரைத் தான் இங்கே குறிப்பிட்டுள்ளேன் .

திரு.கோபாலுக்கு எதிர்வினையாக நீங்கள் தொடுத்துள்ள கேள்விகள் பெரியார் பற்றி எந்த புரிதலுமோ , குறைந்த பட்ச அறிதலுமோ இல்லாமல் மேலோட்டமாக போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போகும் ரீதியில் தான் இருந்தது ..அவை பொருட்படுத்தி பதிலிறுக்கும் தகுதியுடைத்தன்று என்றே நினைக்கிறேன் . அதிலே சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழித்து விட்டதாக கூறப்பட்டதை படித்த போது எனக்கு சிரிப்பு வந்தது .அதையே பதிந்திருக்கிறேன் . பெரியாரால் தமிழகத்தில் என்ன சீர்திருத்தம் நடந்தது , சமூக நீதி அமைந்தது , அடித்தள மக்கள் எவ்வாறு சுயமரியாதையும் எழுச்சியும் பெற்றார்கள் என்பதற்கு என் போன்ற ஒடுக்கப்பட்ட , அடித்தள சமூகத்திலிருந்து வந்தவர்கள் உணர முடியும் .. அதை சீரழிவு என நினைப்பவர்கள் நினைத்து விட்டு போகட்டுமே .

Please check for Samudhaaya Seerthiruththam....Latest news flash -
கருப்பசாமி பாண்டியன் மீது செக்ஸ் புகார் ; குற்றாலம் பங்களாவில் நடந்தது என்ன ? Just check the Dinamalar news site. Is this the Samudhaaya Seerthiruththam?

I was not referring to what you are mentioning ! I was referring to a question as to Why did the same was not carried forward to all communities who involved in Castism. When people can say they are not against Brahmins ...they are against Brahminism..Why they said Paamba paatha vidu..Paappaana paatha Adi..? Thevar community - Didn't they involve in what certain section of Brahmins did? Why his mouth was SHUT when that happened?

முதலில் உங்களுடைய ஊர் எது..? உங்களுடைய சமுதாயம் என்ன? உங்களுடைய சமுதாயம் ஒடுக்கப்பட்டது என்று யார் கூறினார்கள் ? அப்படி ஒடுக்கபட்டதாக நினைப்பது ஒரு பிராமன சமுதாயத்திநாலா அல்லது ஒரு பிராமனநாலா ? அதற்க்கு என்ன சாட்சி? நீங்கள் அடித்தளம் என்று கூறுகிறீர்கள் ! யார் உங்களை அடித்தளமாக அடையாளம் காட்டப்பட்டது? பிராமனநாலா அல்லது திராவிடம் பேசிய பேசுகின்ற அரசியல்வாதியால? நீங்களே உங்களை அடித்தளம், ஒடுக்கப்பட்ட சமுதாயம் என்று கூறும் அளவுக்கு திராவிடம் உங்களை போல நல்ல பகுத்தறிவு உள்ளவர்களை கூட மாயை என்ற மூடியை போட்டு மறைத்து தான் வைத்துள்ளது திரு joe !

First of all, Why you are saying you were from Adithala Samooham? It is your mistake...it is one's own Inferiority Complex that invited a situation to create the problems. There are lots and lots of questions that I can ask and even Mr. Veeramani will have no answer.

Neither this is the forum, Nor the time !

vasudevan31355
17th September 2013, 03:03 PM
ராஜாவின் மூலம் 'ஜானி மேரா நாம்' ஒரு விஷுவல் பார்வை

http://123tamilforum.com/imgcache/30/69365.jpg

http://123tamilforum.com/imgcache/30/69369.jpghttp://123tamilforum.com/imgcache/30/69370.jpg
http://123tamilforum.com/imgcache/30/69371.jpghttp://123tamilforum.com/imgcache/30/69372.jpg
http://123tamilforum.com/imgcache/30/69367.jpghttp://123tamilforum.com/imgcache/30/69366.jpg

Gopal.s
17th September 2013, 03:05 PM
ஏதேது... லேசில் விட மாட்டீர்கள் போல....
ராஜா படம் பற்றிய விவாதம் என்பதால் அதை ஒட்டியே விடையளிக்கிறேன்.
ராஜா படத்தில் ராஜாவின் டார்கெட் நாகலிங்க பூபதி(தர்மலிங்கமாக உலவி கொண்டிருக்கும்).குமார்,விஸ்வம்,பாபு எல்லாம் கருவிகள்.
பாஸ் தான் டார்கெட்.
புரிந்ததா .....மிஸ்டர்.சுப்ரமணியம் என்கிற சௌரி என்கிற பாரிஸ்டர் என்கிற 360 degrees ?

joe
17th September 2013, 03:07 PM
கருப்பசாமி பாண்டியன் மீது செக்ஸ் புகார் ; குற்றாலம் பங்களாவில் நடந்தது என்ன ? Just check the Dinamalar news site. Is this the Samudhaaya Seerthiruththam?

ஓ! கருப்பசாமி பாண்டியன் செக்ஸ் குத்தம் பண்ணினா பெரியார் தான் காரணமா ?
இப்போதுள்ள காங்கிரசு காரன் செக்ஸ் குத்தம் பண்ணினா காந்தியார் தான் காரணமா? :rotfl:


I was not referring to what you are mentioning ! I was referring to a question as to Why did the same was not carried forward to all communities who involved in Castism. When people can say they are not against Brahmins ...they are against Brahminism..Why they said Paamba paatha vidu..Paappaana paatha Adi..? Thevar community - Didn't they involve in what certain section of Brahmins did? Why his mouth was SHUT when that happened?

நீங்க பெரியாரை படித்ததில்லை என தெரிகிறது . அதற்கு மேல் சொல்வதற்கில்லை .



First of all, Why you are saying you were from Adithala Samooham? It is your mistake...it is one's own Inferiority Complex that invited a situation to create the problems.

அபாரம் ! உங்களுக்கு புரியுறது நெம்ப கஷ்டம் :)


There are lots and lots of questions that I can ask and even Mr. Veeramani will have no answer.

உண்மை தான் .. அவரு தெறிச்சு ஓடிர மாட்டாரு ? :)


Neither this is the forum, Nor the time !

தப்பிச்சேண்டா சாமி !

vasudevan31355
17th September 2013, 03:08 PM
ஜானி மேரா நாம்' ஜோடி தேவ் ஆனந்த் மற்றும் ஹேமாமாலினி

http://img577.imageshack.us/img577/5155/vlcsnap2011053020h24m50.pnghttp://img718.imageshack.us/img718/4285/vlcsnap2011053023h02m05.png

iufegolarev
17th September 2013, 03:09 PM
ஓ! கருப்பசாமி பாண்டியன் செக்ஸ் குத்தம் பண்ணினா பெரியார் தான் காரணமா ?
இப்போதுள்ள காங்கிரசு காரன் செக்ஸ் குத்தம் பண்ணினா காந்தியார் தான் காரணமா? :rotfl:



நீங்க பெரியாரை படித்ததில்லை என தெரிகிறது . அதற்கு மேல் சொல்வதற்கில்லை .




அபாரம் ! உங்களுக்கு புரியுறது நெம்ப கஷ்டம் :)



உண்மை தான் .. அவரு தெறிச்சு ஓடிர மாட்டாரு ? :)



தப்பிச்சேண்டா சாமி !


Good ....that's precisely why i said.....VAAIDHA VAANGUM VAKKATHTHA VAKKIL !

vasudevan31355
17th September 2013, 03:12 PM
ஜானி மேரா நாம்'

http://img151.imageshack.us/img151/7975/vlcsnap2011060613h24m52.pnghttp://img198.imageshack.us/img198/2778/vlcsnap2011060613h25m18.png

http://123tamilforum.com/imgcache/30/69368.jpg

http://img857.imageshack.us/img857/1319/vlcsnap2011060613h24m41.png

http://img8.imageshack.us/img8/8239/vlcsnap2011060613h22m46.png

http://img827.imageshack.us/img827/8901/vlcsnap2011060613h25m02.png

http://img850.imageshack.us/img850/3167/vlcsnap2011060613h25m43.png

http://img815.imageshack.us/img815/1687/vlcsnap2011060613h26m09.png

joe
17th September 2013, 03:14 PM
Good ....that's precisely why i said.....VAAIDHA VAANGUM VAKKATHTHA VAKKIL !

இருக்கட்டும் . உங்களை போன்ற மேதாவிகளிடமிருந்து இகழ்தலையும் தூற்றுதலையும் பெறுவதில் பெருமை கொள்கிறேன்.

mr_karthik
17th September 2013, 04:12 PM
டியர் வாசுதேவன் சார்,

தாராவின் அருமையான நிழற்படங்களை தங்கள் அருமையான கமெண்ட்களோடு பார்ப்பதற்கு மிக மிக அற்புதமாக உள்ளது. நன்றிகள் பல.

இதென்ன சார் வைப்ரேஷன்?. தாராவை அடுத்து விஸ்வத்தை அலசலாம் என்று நினைத்து திரியைத் திறந்தால் அடுத்த இன்ப அதிர்ச்சி. விஸ்வத்தை மிக சூப்பராக அலசித்தள்ளிவிட்டீர்கள். நமக்குள் இப்படி ஒரு வைப்ரேஷனா. அசந்து விட்டேன்.

இப்போதே சொல்கிறேன். அடுத்து "ஜம்பு"வை பற்றி நான்தான் எழுதுவேன்....

Gopal.s
17th September 2013, 04:31 PM
கார்த்திக் சார்,
கனியிருப்ப காய் கவர்ந்தற்று. ஜம்புவை பற்றி வாசுவே எழுதட்டும். நாம் ஜாலியாக காஞ்சனா,ஜெயகுமாரி, சகுந்தலா,பத்மாகன்னா,சினேகலதா,சத்யப்ரியா,விஜயலலிதா, விஜயஸ்ரீ,ஆலம் என்று புகுந்து விடலாம் என பார்த்தால், வில்லன்களிடம் தஞ்சம் புகுகிறீர்களே? என்ன இது?

Gopal.s
17th September 2013, 05:10 PM
நடிகர்திலகத்தோடு ஜோடியாக (நேரடி) நடித்த கதாநாயகிகள் 59 பேர்.ஜோடியாக நடித்த படங்கள் எண்ணிக்கையில்.
பத்மினி-32 , கே.ஆர்.விஜயா-32,ஜெயலலிதா-18,
சரோஜாதேவி-17,சுஜாதா-16,தேவிகா-12,ஸ்ரீப்ரியா-11,சௌகார்-11,சாவித்திரி-11,வாணிஸ்ரீ-9, மஞ்சுளா-9,பண்டரி பாய்-8,பானுமதி-7,லக்ஷ்மி-7,ஜமுனா-7,எம்.என்.ராஜம்-6,உஷா நந்தினி-5,வடிவுக்கரசி -4,ஸ்ரீவித்யா-3,வைஜயந்தி மாலா-3,ஜி.வரலக்ஷ்மி-3,பாரதி-2,விஜயகுமாரி-2,அம்பிகா-2,ராதா-2,ஸ்ரீதேவி-2,ஸ்ரீரஞ்சனி-2,கிருஷ்ணகுமாரி-2,வசந்தா-2,சாரதா-2,அஞ்சலிதேவி-2,மைனாவதி-2,லலிதா-2,ராஜசுலோச்சனா-2,லதா-1,காஞ்சனா-1,மாலினி-1,வெண்ணிற ஆடை நிர்மலா-1,மணிமாலா-1,விஜயஸ்ரீ-1,விஜய நிர்மலா-1,பத்மப்ரியா-1,எஸ்.வரலக்ஷ்மி-1,மாலினி பொன்சேகா-1,சிலோன் கீதா-1,ரீனா-1,ராதிகா-1,ஜெயசுதா-1,குசலகுமாரி-1,பிரமிளா-1,மாதுரி தேவி-1,சரிதா-1,ராஜஸ்ரீ-1,கமலா-1,ருக்மிணி-1,சந்தியா-1,மனோரமா-1,சுமித்ரா-1,ஜெயபாரதி-1.

Gopal.s
17th September 2013, 05:34 PM
நடிகர்திலகம்
மொத்தம் 49 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன்-95,கே.வீ.மகாதேவன்-38,விஸ்வநாதன்-ராமமூர்த்தி-24,இளையராஜா-23,ஜி.ராமநாதன்-18,சங்கர் கணேஷ்-9,டி.ஜி.லிங்கப்பா-6,எஸ்.வீ.வெங்கட்ராமன்-5,கங்கை அமரன்-5,எஸ்.எம்.சுப்பையா நாயுடு-4,டி.ஆர்.பாப்பா-4,சுதர்சன்-3,சந்திர போஸ்-3,சக்கரவர்த்தி-3,சி.என்.பாண்டுரங்கன்-2,எஸ்.தக்ஷிண மூர்த்தி-2,டி.சலபதிராவ்-2,எஸ்.ராஜேஸ்வர் ராவ்-2,குன்னக்குடி -2,மனோஜ் கியான்-2,வித்யா சாகர்-2,தேவா-2,ஆதிநாராயண ராவ்-1,எம்.ஜி.நாய்டு-1,தண்டாயுத பாணி-1,என்.எஸ்.பாலகிருஷ்ணன்-1,கண்டசாலா-1,கிருஷ்ண மூர்த்தி-1,ராம்நாத்-1,பீ.என்.ஆர்-1,கோவிந்த ராஜுலு-1,ஏ.எம்.ராஜா-1,டி.கே.ராமமூர்த்தி-1,ஜி.தேவராஜன்-1,புகழேந்தி-1,கோவர்தனம்-1,வீ.குமார்-1,சங்கர்-ஜெய்கிஷன்-1,கே.ராகவன்-1,எம்.ஏ.ரவீந்தர்-1,தேவேந்திரன்-1,எம்.ரங்கா ராவ்-1,டி.ராஜேந்தர்-1,ஜே.வீ.ராகவலு-1,
அம்சலேகா-1,ஸ்ரீராஜா-1,கீதப்ரியன்-1, ஏ.ஆர்.ரகுமான்-1.

Gopal.s
17th September 2013, 06:15 PM
நடிகர்திலகம் 96 இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார்.((கௌரவ வேடங்கள் நீங்கலாக)
ஏ.சி.திருலோகச்சந்தர்-20,ஏ.பீம்சிங்-18,பீ.மாதவன்-15,சி.வீ.ராஜேந்திரன்-14,கே.விஜயன்-14,டீ.யோகானந்த்-13,ஏ.பீ.நாகராஜன்-12,வீ.ஸ்ரீனிவாசன்-8,பீ.ஆர்.பந்துலு-7,கிருஷ்ணன்-பஞ்சு-7,ஸ்ரீதர்-7,கே.சங்கர்-7,ஆர்.கிருஷ்ணமூர்த்தி-7,எல்.வீ.பிரசாத்-6,ராமண்ணா-6,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்-5,கே.எஸ்.பிரகாஷ் ராவ்-5,கே.சோமு -5,தாதாமிராசி-3,ப.நீலகண்டன்-3,சி.எச்.நாராயண மூர்த்தி-3,வீ.பீ.ராஜேந்திர பிரசாத்-3,ஏ.காசிலிங்கம்-3,எஸ்.பீ.முத்துராமன்-3,கார்த்திக் ரகுநாத்-3,மேஜர் -3,ஏ.எஸ்.ஏ.சாமி-2,வேம்பு-2,ஆர்.எம்.கிருஷ்ண சாமி-2,வீ.எஸ்.ராகவன்-2,பீ.எஸ்.ரங்கா-2,பீ.புல்லையா-2,டி.பிரகாஷ் ராவ்-2,டி.ஆர்.ரகுநாத்-2,எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாய்டு-2,வீ.சுந்தரம்-2,அமிர்தம்-2,ஏ.ஜகந்நாதன்-2,பாரதி ராஜா-2,ராஜசேகர்-2,,என்.எஸ்.கே-1,டி.ஆர்.சுந்தரம்-1,எம்.நடேசன்-1,எஸ்.டீ.சுந்தரம்-1,ஜி.ஆர்.ராவ்-1,எஸ்.பாலச்சந்தர்-1,எஸ்.ஏ.முருகேஷ்-1,சுந்தர் ராவ் நட்கர்னி-1,ஜே.சிங்கா-1,ஏ.சுப்பா ராவ்-1,ராமகிருஷ்ணா-1,பீ.ஸ்ரீதர் ராவ்-1,கே.ஜே.மகாதேவன்-1,எஸ்.எஸ்.வாசன்-1,எஸ்.எஸ்.பாலன்-1,ஆர்.எஸ்.மணி-1,ஏ.சுப்பா ராவ்-1,ஏ.டி.கிருஷ்ணசாமி-1,பீ.ஆர்.சந்திரன்-1,ஜி.ஆர்.நாதன்-1,டி.என்.பாலு-1,கே.பாலச்சந்தர்-1,எஸ்.ராமநாதன்-1,சாவித்திரி-1,மல்லியம் ராஜகோபால்-1,சாணக்கியா-1,எஸ்.ஏ.கண்ணன்-1,ஏ.வின்சென்ட்-1,அப்பச்சன்-1,எம்.ஏ.திருமுகம்-1,கே.பாப்பையா-1,துரை-1,விஜய நிர்மலா-1,ராஜகணபதி-1,எஸ்.எஸ்.கே-1,கிருஷ்ணா-1,கே.பாக்யராஜ்-1,பாரதி வாசு-1,ஏ.எஸ்.பிரகாசம்-1,பாலச்சந்திர மேனன்-1,மனோஜ் குமார்-1,தாசரி நாராயண ராவ்-1,கே.ராகவேந்திர ராவ்-1,மணிவண்ணன்-1,சந்தான பாரதி-1,சி.குக நாதன்-1,பரதன்-1,மனோபாலா-1,பிரதாப் போதன்-1,எஸ்.ஏ.சந்திர சேகர்-1,ஆர்.வீ.உதயகுமார்-1,ஹாசன்-1,பிரசாந்த் குமார்-1,கே.எஸ்.ரவிக்குமார்-1,ஏ.வெங்கடேஷ்-1.ராம்சந்தர்-1.கஸ்தூரி ராஜா-1.

vasudevan31355
17th September 2013, 07:52 PM
கார்த்திக் சார்,
கனியிருப்ப காய் கவர்ந்தற்று. ஜம்புவை பற்றி வாசுவே எழுதட்டும். நாம் ஜாலியாக காஞ்சனா,ஜெயகுமாரி, சகுந்தலா,பத்மாகன்னா,சினேகலதா,சத்யப்ரியா,விஜயலலிதா, விஜயஸ்ரீ,ஆலம் என்று புகுந்து விடலாம் என பார்த்தால், வில்லன்களிடம் தஞ்சம் புகுகிறீர்களே? என்ன இது?

கார்த்திக் சார் ஜம்புவை ஜம்மென்று அலசுவார். அவர் எழுதினால் மிக மிக அற்புதமாக இருக்கும். ஆனந்தமாக ரசிக்கலாம். கவர்ச்சி வில்லன் கூட கலக்குவாரே! எத்தனையோ படங்களில் அவர் தலை காட்டியிருந்தாலும் அவருக்கு மிகவும் பெயர் வாங்கிக் கொடுத்த கேரக்டர் அல்லவா! அதுவும் தலைவர் ரசிகர்களின் பாராட்டைப் பெறுவதென்றால் சும்மாவா? பூவோடு சேர்ந்தால் நாரும் மணம் பெறும் அல்லவா!

இரண்டாவது நடிகர் திலகம் அல்லாது மற்ற திறமைசாலிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து அவர்களின் திறமையை அலசிப் பாராட்டுவதில் நமது திரிக்கு ஈடேது? என்ன நான் சொல்றது?

vasudevan31355
17th September 2013, 07:55 PM
கோ,

நடிகர் திலகத்துடன் பணிபுரிந்த நாயகியர் மற்றும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் லிஸ்ட் சூப்பர். எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ஆமாம்! தெலுங்கெல்லாம் ஒழுங்காகச் சேர்த்து விட்டீர்களா? சரி! சரி! திட்டாதீர்கள். நான் செக் செய்து கொள்கிறேன்.

vasudevan31355
17th September 2013, 07:56 PM
கோ,

உங்கள் item girls லிஸ்ட்டில் வாணிஸ்ரீயை விட்டு விட்டீர்களே!:-D

vasudevan31355
17th September 2013, 08:10 PM
ரந்தாவாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தது பி.டி.ரட்சகன் என்று நினைக்கிறேன். தெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் பழைய டப்பிங் படங்களின் நாயகர்களுக்கு (குறிப்பாக என்.டி. ஆர், காந்தாராவ்) அதிகமாக பின்னணிக் குரல் கொடுக்கும் நபர். வானொலி நாடகங்களிலும் பிரசித்தம். பத்மாகன்னாவிற்கு?....

vasudevan31355
17th September 2013, 08:37 PM
திருச்சி மக்கள் நல இயக்கம் சார்பாக நடிகர் திலகம் அவர்களின் 86 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் விழாவிற்காக தீட்டப்பட்டுள்ள சுவர் விளம்பரம்.

https://mail.google.com/mail/?ui=2&ik=ed72bc0595&view=att&th=14111a30c1a145ff&attid=0.1&disp=inline&realattid=f_hlht5qya0&safe=1&zw

https://mail.google.com/mail/?ui=2&ik=ed72bc0595&view=att&th=14111a30c1a145ff&attid=0.2&disp=inline&realattid=f_hlht5r0f1&safe=1&zw

vasudevan31355
17th September 2013, 08:38 PM
https://mail.google.com/mail/?ui=2&ik=ed72bc0595&view=att&th=140d2e550cc21197&attid=0.1&disp=emb&realattid=ii_140d2e44b85c741a&zw&atsh=1

goldstar
18th September 2013, 05:30 AM
ஒலி - ஒளி தரம் சற்று சுமார்தான் இருந்தாலும் நடிகர் திலகம் திரி நண்பர்கள் மட்டுமல்லாது அனைத்து நல்ல இதயங்களுக்கும் இந்த காட்சி சமர்ப்பணம் !


Thank you NT360, watched this video after long time and we really miss NT and drops are keep coming from eyes after seeing our NT's speech.

Thanks again.

Cheers,
Sathish

Gopal.s
18th September 2013, 08:54 AM
தெய்வ மகன்-1969

செப்டம்பர் ஐந்தாம் தேதி 44 ஆம் வருடத்தை கடந்த தெய்வ மகன் காவியத்தை நடிகர்திலகத்தின் நடிப்பம்சத்தை மட்டும் அலசிய பதிவின் மீள் பதிவு.
ஒருங்கிணைக்க பட்டு.

மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).

பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.

நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.

இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?

எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும்,
Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.


எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.

தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.

சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.

ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.

அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.

விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....

இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."

நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.
இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )

டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.

கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?

சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )

முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.

விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.

டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .

கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.

காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.

ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?


விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.

விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.

கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.

நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).

தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?

தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).

அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)

கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.

எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.

goldstar
18th September 2013, 09:59 AM
தெய்வ மகன்-1969

http://ts2.mm.bing.net/th?id=H.4882532831660969&pid=1.7

http://ts4.mm.bing.net/th?id=H.4825959530627943&pid=1.7

http://www.einthusan.com/images/covers/DEIVA-MAGAN.jpg

http://ts1.mm.bing.net/th?id=H.5022930989942224&pid=1.7

http://ts4.mm.bing.net/th?id=H.4861672171571971&pid=1.7

http://dozeu380nojz8.cloudfront.net/uploads/video/horizontal_cover/2047/large_6e09ec2910_deiva_megan__1_.jpg

http://www.freewebs.com/pammalar/Kannan1.jpg

goldstar
18th September 2013, 09:59 AM
http://drop.ndtv.com/albums/ENTERTAINMENT/cinema-100films/dieva-magan.jpg

http://i.ytimg.com/vi/V_Ntwjckp6o/0.jpg

http://i.ytimg.com/vi/1r4xuC_9hKo/0.jpg

http://i.ytimg.com/vi/EMsSaz4AeME/0.jpg

http://i.ytimg.com/vi/kNskMory0aE/0.jpg

http://i.ytimg.com/vi/-DY19Vp784Q/0.jpg

http://i.ytimg.com/vi/Josn11_oBqE/0.jpg

RAGHAVENDRA
18th September 2013, 10:07 AM
நடிகர் திலகத்தின் 305 படங்களில் திரும்பத்திரும்ப பிரபலமான படங்களையே அலசுவதால் வேறு படங்கள் இவருக்கு இல்லை போலிருக்கிறது என்கிற எண்ணத்திற்கு இடம் கொடுக்காமல் மிக மிக அபூர்வமாக, இதுவரை விவாதிக்கப் படாத படத்தை எடுத்துக் கொள்ளுமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். கோபால் சார், Let us explore more of his films very rare and hither to not discussed.

இதனைத் தொடங்கி வைக்க சரியானவர் நம் வாசு சார் தான். வாசு சார் தெய்வ மகன் முடிந்த பின்னர் தாங்கள் தேர்ந்தெடுக்கும் படத்தை நாம் விவாதிப்போமே.

Choice is yours.

RAGHAVENDRA
18th September 2013, 10:11 AM
quoted from wikipedia



List of submissions to the 42nd Academy Awards for Best Foreign Language Film

The following 24 films, all from different countries, were submitted for the 42nd Academy Awards in the category Academy Award for Best Foreign Language Film. The titles highlighted in blue and yellow were the five nominated films, which came from Algeria, France, Sweden, the USSR and Yugoslavia.
Algeria, submitting a film for the first time, became the first African country to receive an Oscar nomination in this category. Algeria ending up winning the award (for the only time) for the political thriller Z, a co-production with France

India Deiva Magan Tamil தெய்வ மகன் A. C. Tirulokchandar


wikipedia page link: http://en.wikipedia.org/wiki/List_of_submissions_to_the_42nd_Academy_Awards_for _Best_Foreign_Language_Film

also see

http://en.wikipedia.org/wiki/List_of_Indian_submissions_for_the_Academy_Award_f or_Best_Foreign_Language_Film

RAGHAVENDRA
18th September 2013, 10:21 AM
வாசு சாரைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் தம்முடைய பங்கிற்கு ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.

என் நினைவுக்கெட்டியவரை இங்கு பங்கு கொள்ளும் அன்பர்கள்

ஜோ
முரளி ஸ்ரீநிவாஸ்
ராகேஷ்
சக்திப்பிரபா
சாரதா
கார்த்திக்
பார்த்தசாரதி,
ராதாகிருஷ்ணன்
சுப்ராஸ்
வாசு தேவன்
பம்மலார்
சித்தூர் வாசுதேவன்
சுப்பு
கல்நாயக்
ஆதிராம்
கண்பத்
கிருஷ்ணாஜி
சிவன் கே
சங்கரா 1970

இன்னும் பெயர் விட்டுப் போன நண்பர்கள் இருப்பின் அவர்கள்

வினோத் சார், தாங்களும் தங்களுக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

மேற்கூறிய வரிசையில் விடுபட்டுப் போன பெயர்களும் இங்கே குறிப்பிடப் பட்ட பின்னர், அகர வரிசை அல்லது சிறியவரிலிருந்து பெரியவர் என்ற வரிசையில் நாம் ஒவ்வொருவராக ஒவ்வொரு படத்தைப் பற்றிய விவாதங்களை நடத்தலாமே.

RAGHAVENDRA
18th September 2013, 10:28 AM
தெய்வ மகன் - முரளி சாரின் பதிவு மீண்டும் இங்கே

பாகம் 1 நாள் 01.04.2008

http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=289528&viewfull=1#post289528



தெய்வ மகன் - என் மனதிற்கும் சிந்தைக்கும் மிக நெருக்கமான படம். மீண்டும் பார்த்த போது தோன்றிய சில எண்ணங்களை பதிகிறேன்.

சங்கர் - பணக்கார தந்தை. இயற்கையாகவே அமைந்த விகாரமான முக அமைப்பினால் தனக்கு நேர்ந்த அவமானங்கள்,புறக்கணிப்புகள் தன் மகனுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் ஒரு முடிவினால் கடைசிவரை மன துன்பம் அனுபவிக்கும் ஒரு மனிதன்.

முதல் காட்சி. முகம் தெரியவில்லை என்றாலும் கூட அந்த துடிப்பு, சந்தோஷம், துள்ளல் எல்லாம் தெரியும் அந்த நடையிலேயே. டாக்டரிடம் பேசும் போது உள்ள மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பு, அது ஏமாற்றமாக மாறும்போது தளர்ந்து போகும் அந்த நடை. இரண்டு நடைக்கும் எவ்வளவு வித்யாசம்? குழந்தையை கொல்ல மாட்டேன் என்று மறுக்கும் டாக்டரிடம் தன் தரப்பு நியாயத்தை சொல்வது.[ என்னை உண்மையிலே நேசிக்கறவங்க என் உயிர் நண்பனான நீயும் என் மனைவியும்தான். மத்தவங்க எல்லாம் என் பணத்துக்காக என்னை மதிக்கிறாங்க.]

நண்பன் தான் கொடுத்த பணத்தை தூக்கி எறிந்து விட்டு நட்பு முறிந்து விட்டது என சொன்னவுடன் மௌனமாக வெளியேறுவது, இப்படி முதல் காட்சியில் இளமையாக இருக்கும் போது இரு வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த பாத்திரம் 25 வருடங்களுக்கு பின் ஒரு கம்பீரமான ஆளுமையை வெளிப்படுத்தும்போது நடிகர் திலகம் அதை அழகாக கையாள்வர்.

தனக்கு முன்னால் வளைந்து நெளிந்து நின்று பணம் கேட்கும் மகனிடம் (Just a Lakh and Fifty thousand) கடுமை காட்ட முடியாமல் வரும் சிரிப்பை அடக்கி கொண்டு அவர் காட்டும் expressions ஓஹோ! இதில் இன்னொன்றும் சுட்டி காண்பிக்கப்பட வேண்டியது. நடிப்புதானே என்று சும்மா கிறுக்காமல் செக்-ஐ எழுதுவார். எழுத்தி முடிக்கும் போது மகன் நாற்காலிக்கு பின் பக்கமாக சுற்றி வர அவனை சைடு-ல் திரும்பி பார்த்து விட்டு செக்-ஐ கிராஸ் செய்வார். மகன் பக்கவாட்டில் வருவதும் அவர் திரும்பி பார்ப்பதும் ஒரே டைம்-ல் நடைபெறும். பார்ப்பவர்களுக்கு இரண்டும் வேறு வேறு ஆட்கள் என்றே தோன்றும். மிக சரியாக அந்த timing-ஐ அவரால் மட்டுமே செய்ய முடியும்.

அந்த நீளமான படிக்கட்டில் அந்த தாளக்கட்டு மாறாமல் அவர் இறங்கி வரும் அழகு. மனைவி கோவிலில் பார்த்தது தன் மூத்த மகனாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு டாக்டர் வீட்டிற்கு வருவார். டாக்டர், நண்பனாக பழகாமல் விலகி நின்று பேச, வாய் தவறி ஒருமையில் அழைத்து விட்டு உடனே "Sorry, Dr. ராஜு" என்று style-aga கூறுவது. இறுக்கம் தளர்ந்து விடை பெறும்போது மாடியிலிருந்து ஒலிக்கும் சிதார் இசையை கேட்டு விட்டு அவர் காட்டும் அந்த தவிப்பு, எதையோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தவிப்பது, அதை புரிந்து கொண்டு டாக்டர் " உன் மகனை பார்க்கணுமா?" என்று கேட்க முகமெல்லாம் பூரிப்பாக "ஆமாம்" என்று சொல்லிவிட்டு அதை கேட்க தனக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை உணர்ந்தவராக பேசாமல் வெளியேறுவது. திலக முத்திரைகள்.

இளைய மகனை காதலிக்கும் பெண்ணிடம் கடுமையாக பேசுவது போல பாவனை செய்வது, இளைய மகனின் கல்யாணத்தன்று தன் மனைவிக்கு ஒரு விலை மதிப்பில்லாத பரிசு கொடுக்க போவதாக சொல்வது, இதெல்லாம் அவருக்கு child's play.சுருக்கமாக ஒரு கம்பீர performance.

கண்ணன் மற்றும் விஜய் பற்றி -விரைவில்


பாகம் 2
நாள் 05.04.2008

http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=290877&viewfull=1#post290877



தெய்வ மகன் - கண்ணன்

கண்ணன் - பரிதாபத்திற்கு உரிய அதே சமயம் நம் மனதில் ஒரு பிடிப்பு அந்த பாத்திரத்தின் மேல் ஏற்படுத்தக்கூடிய திரைக்கதை அமைப்பு. சிறுவனாக இருக்கும் போதும் ஆரம்பிக்கும் அந்த கோபமும் ஆவேசமும் கடைசி வரை குறையாது வெளிப்படும். தான் அனாதை இல்லை என்று தெரிந்ததும் பாபா (நாகையா) கொடுத்த டைரி-ஐ புரட்டி பார்க்கும் ஆவேசம், மருத்துவமனையில் டாக்டர்-ஐ மிரட்டும் கோபம், தன் தாய் தந்தையரை தெரிந்து கொள்ள எந்த காரியத்தையும் செய்ய தயாராக இருப்பது இவை அந்த கதாபாத்திரத்தை வலுவாக நிலை நிறுத்தும் களங்கள். அவற்றை நடிகர் திலகம் தன் பாணியில் மெருகேற்றியிருப்பார்.

படத்தின் தலைப்பிற்கேற்ப கதாநாயகன் கண்ணன்தான். முதல் இரண்டு காட்சிகளில் சாதாரணமாக வரும் அவர், அனாதை இல்லத்திலிருந்து வெளியேறி கடைத்தெருவில் திருடனிடம் சண்டை இடும் காட்சியிலிருந்து அந்த Body Language அப்படியே மாறும். டாக்டர் வீட்டிற்கு வரும் அவரை பார்த்ததும் அவர் யார் என்று தெரிந்து கொள்ளும் டாக்டர், அவரை தவிர்க்க முயற்சிக்க,கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து ஒரு கட்டத்தில் டாக்டரின் கழுத்தை நெரிப்பார். [என் தாய் தந்தையார் யார்னு தெரிஞ்சுக்க நான் எதையும் செய்ய தயங்க மாட்டேன்]. அதற்கு முன் தான் அந்த காலை உதைத்து, முடிகற்றை முன்னால் வந்து விழ,ஆட்காட்டி விரலை சுட்டி " டாக்டர்" என்று கத்துவது.[ தியேட்டர் அலறும் என்பதை சொல்லவே வேண்டாம்].

பிறகு டாக்டர் வீட்டில் அடைக்கலம். அங்கே மாடியில் எப்போதும் சிதாரும் இசையுமாக இருப்பவர் ஒரு நாள் இரவு சொல்லாமல் கொள்ளாமல் தன் தாய் தந்தையரை பார்க்க வீட்டிற்கு போகிறார்.

முதலில் தாய். படுத்திருக்கும் தாயின் கால்களுக்கு பூக்களை அர்ச்சனை செய்து விட்டு கண்ணீர் துளியை காணிக்கையாய் சிந்தும்போது, தாயன்புக்கு ஏங்கும் ஒரு இளைஞனை கண் முன்னே நிறுத்துவார்.

அடுத்து தம்பி அறை. அதில் நுழைபவர் அங்கே மாட்டியிருக்கும் இளம் பெண்ணின் கவர்ச்சி படத்தை பார்த்து விட்டு ஒரு வெட்கம் கலந்த ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார் (இருட்டாக தெரியும் முகத்தில் அந்த இரண்டு கண்கள் மட்டும் வெளிச்சம் உமிழும்). அடுத்து தம்பியின் சுவரில் மாட்டியிருக்கும் புகைப்படத்தின் அழகை ரசிப்பார்,( மாசு மருவில்லாத கன்னத்தை தன் விரல்களால் தடவும் அழகு).

அடுத்து டேபிளின் மேல் இருக்கும் போட்டோ-வை எடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் அணிந்திருக்கும் முழுக்கை சட்டையின் வலது மணிக்கட்டு பாகத்தை வைத்து துடைக்கும் ஸ்டைல் இருக்கிறதே, சூப்பர். தீடீரென்று தம்பி வந்து விட தன்னை பார்த்து திருடன் என்று சத்தம் போட அவனை அணைத்துக்கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு, சத்தம் கேட்டு அனைவரும் வந்து விட தாய்,தந்தை மற்றும் தம்பியை ஒரு சேர பார்க்கும் அந்த நேரம், அந்த முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்.

அதை டாக்டரிடம் போய் பாட்டாக வெளிப்படுத்தும் விதம். பாடலின் நடுவே வேக வேகமாக படி ஏறிவிட்டு அதே வேகத்தில் இறங்குவார். ஆரவாரம் அலை மோதும் (இதையே 10 வருடம் கழித்து திரிசூலத்திலும் செய்திருப்பார்). ஒவ்வொருவரை பற்றியும் பாடலில் சொல்லும்போது அந்த முகத்தில் வந்து போகும் உணர்ச்சிகள். கை அசைப்புகள். "விதி எனு நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது" எனும்போது அந்த இடது கை மட்டுமே சைகை காட்டும். "தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே" என்ற வரியின்போது காமிரா லோ ஆங்கிளிலிருந்து அவரை பார்க்க இரண்டு கைகளையுமே தலைக்கு மேல் தூக்கி உள்ளங்கைகள் தரையை பார்க்க ஒரு போஸ் கொடுப்பார். கேட்க வேண்டுமா கைதட்டலுக்கு.

அடுத்து தாயை கோவிலில் வைத்து பார்க்கும் காட்சி. தூணுக்கு பின்னால் மறைந்து நின்று பார்க்கும் அந்த கண்கள் அதில் தெரியும் அந்த உணர்ச்சிகள் [ " என் வயிறெல்லாம் என்னவோ செய்யுதே" என்று பண்டரிபாய் சொல்லும் வசனம் படம் பார்க்கும் எல்லோருக்குமே பொருந்தும்).

இதற்கு நடுவில் டாக்டரின் பெண் தன் இசையால் ஈர்க்கப்பட்டு மாடிக்கு வந்து பேச அதுவரை வாழ்க்கையில் அனுபவித்திராத ஒரு உணர்வு - ஒரு பெண்ணின் சிநேகம். அது மனதுக்குள் திறக்கும் ஜன்னல். தன் முகத்தை எங்கே பார்த்துவிடுவாளோ என்று மறைத்து கொண்டு, அவள் சென்றவுடன் ஓடி சென்று அவள் நின்ற அந்த பால்கனி கைப்பிடியை பிடித்து முழங்காலிட்டு அவள் சென்ற திசையையே பார்த்து சிரிப்பாரே, கிளாஸ்.

தந்தை கொடுத்த பிளாங் செக்கை டாக்டர் கொண்டு கொடுக்கும் காட்சியிலும் அந்த பாத்திரத்தின் சிறப்பு தன்மை வெளிப்படும். எனக்கு தெரியாம வெளியே போறே என்று சொல்லும் டாக்டரிடம் " இந்த கிளியை யாரும் பிடிக்கவும் முடியாது! புரிஞ்சிக்கவும் முடியாது" என்பார். அதற்கு டாக்டர் " பிடிக்க முடியாது-னு சொல்லு ஒத்துகிறேன். ஆனால் புரிஞ்சுக்க முடியாது-னு சொல்லாதே! உங்கப்பா உன்னை புரிஞ்சிக்கிட்டார்" என்கிறபோது " என்ன சொல்றீங்க டாக்டர்"-னு கேட்டு விட்டு உடனே அதற்கான பதிலையும் சொல்வார்." கோவிலிலே எங்கம்மாவை பார்த்தேன். எதையுமே கணக்கு போட்டு பார்க்கிற எங்கப்பவோட வியாபார புத்தி இதையும் முடிச்சு போட்டு கண்டு பிடிச்சிருக்கும்" என்பார்.

டாக்டர் " என்ன கண்ணா இன்னிக்கு நல்ல டிரஸ் போட்டிருக்கே"
கண்ணன் " உடல் தான் வெள்ளையா இல்லை. உடையாவது வெள்ளையாக இருக்கட்டுமே-னு தான்" .

அழகா இல்லாத ஆண்களை பெண்கள் விரும்புவார்களா என்று கேட்கும் கண்ணனிடம் டாக்டர் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒதேல்லோ நாடகத்தை பற்றி சொல்ல, அவர் கையை பற்றி கொண்டிருக்கும் கண்ணன் இரும்பு பிடியாய் இறுக்க, வலி தாங்காமல் கையை உருவிக்கொண்டு " ஆமாம், இதெல்லாம் நீ ஏன் கேட்கிறே?" என்று வினவ, கண்ணன் " மண்ணை தோண்டி தங்கம் இருக்கா வைரம் இருக்கா-னு தேடற மாதிரி இதயங்களை தோண்டி அன்பு இருக்கா பாசம் இருக்கா-னு பார்க்க தோணுது டாக்டர்" என்று சொல்லிவிட்டு சிரிக்கும் அந்த சிரிப்பு!

தந்தையை போலவே வேறு ஒரு குணாதிசியமும் காட்டுவார். தன்னை சந்திக்க வரும் சங்கரிடம் "பையன்-னு தெரிஞ்சுமா சுட்டிங்க" ? என டாக்டர் கேட்க இல்லை என்பதை ஒரு முக சுளிவிலே காட்டுவார் தந்தை. அதே முகபாவத்தை தந்தையை பார்க்க வரும் கண்ணனும் வெளிப்படுத்துவார். முதல் குழந்தை ஆண் குழந்தைனா பெத்தவங்க ரொம்ப அன்பு செலுத்துவாங்களாமே என்று மகன் கேட்க, உண்மைதான் என்று தந்தை சொல்ல முன்பு தந்தை காண்பித்த அதே முகபாவத்தை காண்பித்து "இல்லை பொய்" என்பார்.

ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த ஸ்டைல், அந்த முக பாவம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. சுருக்கமாக சொன்னால் ஒரு அசாதாரண நடிப்பு, நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.

அடுத்து விஜய்



பாகம் 3
நாள் 07.04.2008

http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=291219&viewfull=1#post291219



விஜய் என்ற விஜயன் - தெய்வ மகன்

இரண்டாவது மகன். அவனது தாயை பொருத்த வரை ஒரே மகன். மிக மிக செல்லமாக வளர்க்கப்பட்ட மகன். பொதுவாகவே செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பணக்கார வீட்டு பையன் போல் இல்லாமல்(ராஜேஷ் இங்கே குறிப்பிட்டது போல்) பயந்த சுபாவம் கொண்ட அம்மா செல்லமாக வளர்ந்த ஒரு மேல்தட்டு பிள்ளை.

கதையை பொறுத்தவரை சங்கர் மற்றும் கண்ணன் பாத்திரங்கள் முக தழும்புடன் காட்சியளிக்க, அதற்கு நேர்மாறாக பால் வடியும் முகத்தோடு அழகாக தோன்றுபவர். இந்த பாத்திரத்தை நடிகர் திலகம் வேறு மாதிரி வித்யாசப்படுத்தியிருப்பார். அதாவது ஒரு பெண்மை கலந்த நளினத்தை இந்த பாத்திரத்தில் நாம் பார்க்கலாம். இதன் Body Language வேறுப்பட்டதாக அமைந்திருக்கும். நகத்தை கடிப்பது, நடையில் ஒரு பெண்மை [தன் ஒரிஜினல் ராஜ நடையில் ஒரு சின்ன மாற்றம் செய்திருப்பார். சாரதா இங்கே சொன்னது போல இடுப்பை வளைத்து ஒரு நடை], ஆங்கிலம் கலந்த பேச்சு தமிழ் என்று விரியும்.

இந்த பாத்திரத்தை பொறுத்தவரை லுக் மட்டுமல்ல, படத்திற்கு தேவையான காதல் மற்றும் இளமை காட்சிகளுக்கும் இவர்தான் பொறுப்பு. கதையின் அடிநாதம் பெற்றோர் - மகன் பாசப்பிணைப்பு. அந்த மெயின் ரூட்டில் வராமல் ஆனால் அந்த கதையோடு பின்னி பிணைந்தவாறே பார்ப்பவர்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுவார். இவரை வைத்துதான் பட கிளைமாக்ஸ் நடக்கும்.

நான் ஏற்கனவே இந்த திரியில் பலமுறை சொன்னது போல், இந்த படம் வெளி வந்த காலக்கட்டத்தில் (1969) நடிகர் திலகத்தின் படங்களும் ஒரு Entertainment Based-ஆக மாறி கொண்டிருந்த காலம். ஆகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்ய வேண்டும். அதற்கும் இந்த பாத்திரம் பயன்பட்டது.

அவர் அறிமுகமாகும் அந்த தூண்டில் காட்சியிலிருந்து அமர்க்களம் ஆரம்பமாகிவிடும். முதலில் கவனிக்க வைப்பது அந்த பேச்சு. நுனி நாக்கு ஆங்கிலம் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலான வார்த்தைகளுக்கு கூட ஆங்கிலத்தையே பயன்படுத்துவார். அவர் எந்த அளவிற்கு கேரக்டர் study செய்வார் என்பதற்கு இந்த ரோல் ஒரு உதாரணம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஒரு சில காட்சிகளை சொல்லலாம். சாதரணமாக வீட்டில் ஒரு திருடனை பார்த்தவுடன் கூட " Thief!Thief" என்றுதான் சொல்லுவார். நம்பியாரிடம் "ஏன்டா, என்னை threaten பண்ணறே? " என்பது, "Thirsty-யாக இருக்கு. ஐஸ் வாட்டர் கொடுங்கடா" என்பது. அம்மாவிடம் (அப்பா இருப்பது தெரியாமல்) "டாடி ஒரு ஜப்பான் பொம்மை. கீ கொடுத்தால் ஆடும்" என்பது, முதலில் JJ-விடம் நடிக்கும் போது ஒவ்வொரு பொய்யிலும் மாட்டிகொள்வது.

தந்தையிடம் நேருக்கு நேர் நின்று பேச அச்சப்படும் கேரக்டர். வளைந்து நெளிந்து அம்மாவின் பின்னால் ஒளிந்து பேசுவது ரசனையான காட்சி. பிஸினஸ் பண்ண பணம் வேண்டும் என்று கேட்பதில் கூட ஒரு ஸ்டைல் (Just a Lakh and Fifty thousand). ஹோட்டல் என்பதைக்கூட ஹோடேல் என்னும் ஆங்கில பாணி உச்சரிப்பு. ஹோட்டலில் நடந்த திருட்டை சரி செய்வதற்காக அப்பாவிடம் பணம் கேட்க வரும் காட்சி. அதில் உணர்வுகளை எப்படி நிமிட நேரத்தில் மாற்றி காட்டுவார். பணம் கேட்கும்போது தயக்கம், தந்தை கோபப்படும்போது பின் வாங்கும் பயம், பிளாங் செக்கை பார்த்தவுடன் உடன் சந்தோஷம், அதற்கு நன்றியாக ஒரு Flying Kiss என்று கலக்கியிருப்பார். தன் ஹோட்டலில் டப்பாங்குத்து ஆடும் JJ-வை அவர் பார்க்கும் பார்வை, பளார் என்று அறைந்துவிட்டு அறைக்கு கூடிக்கொண்டு போய் சத்தம் போடும்போது ஒரு காதலின் possessiveness வெளிப்படும். அந்த காட்சியில் மட்டுமல்ல JJ பார்க்-இல் கண்ணன் பற்றி பேசும் போது வரும் கோபத்திலும் அது தெரியும், ("எனக்கு முன்னாடியே யாரோ ஒருத்தன் புல் புல் தாரா நல்லா வாசிப்பான்னு சொல்லிட்ருக்கே").

மற்ற இரண்டு கதாபாத்திரங்களும் உணர்வு பூர்வமாக நம்மை கலங்க வைப்பார்கள் என்றால் விஜய் நம்மை மயங்க வைப்பார்.

Gopal.s
18th September 2013, 10:50 AM
ராகவேந்தர் சார்,

ஆயிரம் புலவர்கள் இருந்தாலும் நாம் பேசுவது சில புலவர்களை பற்றி மட்டுமே. அவர்கள் எழுதிய பல காவியங்கள் இருந்தாலும், நாம் தேர்ந்தெடுத்து ஆய்வது சில காவியங்களை மட்டுமே. அதிலும் ஆய்வின் தரம், புதிய மீள்பார்வைகள், பலவித கோணங்கள், இவை அந்த காவியத்தையே சுவாரஸ்ய படுத்தி,மக்களுக்கு புது நோக்கு கொண்டு அந்த காவியங்களை மீண்டும் படிக்க தூண்டும் இல்லையா?காலத்தால் பிற்பட்ட, குறைந்த அளவே பழைய விஷயங்களுக்கு ஒதுக்க முடியும், புதிய தலைமுறையை ஈர்க்கவும் வேண்டும்.

நாம் பேசுவது ஒரு உலத்திலேயே சிறந்த திறமையை பற்றி. மற்ற திரிகளை போல உயர்வு நவிர்ச்சி அர்ச்சனைகள், சராசரிக்கும் கீழானவற்றை மிகை படுத்தல், எல்லாவற்றையும் பற்றி மொக்கையான பார்வை மற்றும் பொத்தாம் பொதுவான விமரிசனங்கள் போன்றவை நடிகர்திலகம் போன்ற பல உன்னதங்களை நம்மிடையே விட்டு சென்றோர்க்கு அவசியமில்லாதது.

விமரிசனம் என்பது வார்த்தை விளையாட்டு மற்றும் எழுதும் திறனோ மட்டும் அல்ல. நாம் பார்த்ததை ,உணர்ந்ததை சரியான பார்வையில் மற்றோர் மனதிற்கு எடுத்து சென்று அவர்கள் பார்த்தவற்றை புதிய கோணத்தில் பார்க்க உதவுதல்.நாம் எழுதுவது அந்த படத்தை பார்க்கும் அனைவரும் உணர வேண்டும்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்லும் விஷயங்களுக்கு உடன் பட்டே நான் என்னுடைய பங்களிப்பை செய்து வந்தேன்.

நீங்கள் எழுவதை பார்த்தால் நான் dominate செய்து மற்றவர் பங்களிப்பை தடுப்பது போலல்லவா உள்ளது?

நீங்கள் கேட்டு விட்டதால் நீதி,பட்டிக்காடா பட்டணமா முடிந்ததும் கீழ்கண்ட படங்களை அலசலாம்.

வளர் பிறை,எல்லாம் உனக்காக,முதல் தேதி,நானே ராஜா,ரங்கோன் ராதா, தேனும் பாலும்,ராஜபார்ட் ரங்கதுரை,பாட்டும் பரதமும்,மருமகள்,விடுதலை.

Gopal.s
18th September 2013, 10:54 AM
இதை இதை இதைத்தான் நான் விரும்புகிறேன். முரளி சாரின் பதிவுகளிலும், என் பதிவுகளிலும் எத்தனை வித்யாசங்கள்?கோணங்கள்?உன்னத விஷயங்களில்தான் இவ்வளவும் வெளி வரும்.

Gopal.s
18th September 2013, 10:57 AM
Choice is yours.
I heard this words somewhere else. Definitely not from a Hero.

KCSHEKAR
18th September 2013, 11:41 AM
டியர் கோபால் சார்,

தங்களின் தெய்வமகன் மீள்பதிவு = முதல் பதிவு போல சுவாரசியம். சங்கர் - கண்ணன் - விஜய் என்று கேரக்டர் அலசல் அருமை.

நடிகர்திலகத்தின் திரைப்பட இயக்குனர்கள், நாயகியர், இசையமைப்பாளர்கள் என்று அனைத்து புள்ளி விபரங்களையும் நினைவுபடுத்தியதற்கு நன்றி.

Gopal.s
18th September 2013, 11:44 AM
எனக்கு தெரிந்து ,ரொம்பவும் விவாதிக்க படாத பிரபல படங்கள்-
தூக்கு தூக்கி
பாக பிரிவினை
தெய்வ பிறவி
பாலும் பழமும்
திருவிளையாடல் .
ராகவேந்தர் சார் கூறிய படி இவைகளை விரிவாக எழுதலாம்.

RAGHAVENDRA
18th September 2013, 12:06 PM
என்னைப் பொறுத்த மட்டில் நான் விரும்பி விவாதங்களில் பங்கு கொள்ள எண்ணும் படங்கள்

1. காவேரி
2. தெனாலி ராமன்
3. வாழ்விலே ஒரு நாள்
4. மணமகன் தேவை
5. ராணி ல்லிதாங்கி
6. பாக்கியவதி
7. குறவஞ்சி
8. எல்லாம் உனக்காக
9. மருத நாட்டு வீரன்
10. வளர் பிறை ... பெரும்பாலானோர் பார்த்திருக்க மாட்டார்கள். எனவே விரிவான விவாத்த்திற்கு வாய்ப்பிருக்காது
11. பந்த பாசம்
12. சித்தூர் ராணி பத்மினி
13. அறிவாளி
14. கல்யாணியின் கணவன்
15. ரத்த திலகம்
16. அன்னை இல்லம்
17. அன்புக் கரங்கள்
18. செல்வம்
19. பாலாடை
20. திருமால் பெருமை
21. லட்சுமி கல்யாணம்
22. அன்பளிப்பு
23. குருதட்சணை
24. அஞ்சல் பெட்டி 520
25. நிறைகுடம்
26. திருடன்
27. பாதுகாப்பு
28. இரு துருவம்
29. தங்கைக்காக
30. அருணோதயம்
31. பிராப்தம்
32. தேனும் பாலும்
33. எங்கள் தங்க ராஜா
34. மனிதரில் மாணிக்கம்
35. தாய்
36. வாணி ராணி
37. என் மகன்
38. அன்பைத் தேடி
39. மனிதனும் தெய்வமாகலாம்
40. அன்பே ஆருயிரே
41. பாட்டும் பரதமும்
42. உனக்காக நான்
43. கிரகப் பிரவேசம்
44. உத்தமன்
45. ரோஜாவின் ராஜா
46. அவன் ஒரு சரித்திரம்
47. இளைய தலைமுறை
48. நாம் பிறந்த மண்
49. என்னைப் போல் ஒருவன்
50. புண்ணிய பூமி
51. ஜெனரல் சக்கரவர்த்தி
52. பைலட் பிரேம்நாத்
53. ஜஸ்டிஸ் கோபிநாத்
54. கவரிமான்
55. இமயம்
56. பட்டாக்கத்தி பைரவன்
57. எமனுக்கு எமன்
58. விஸ்வ ரூபம்
59. மோகன புன்னகை
60. சத்திய சுந்தரம்
61. ஊருக்கு ஒரு பிள்ளை
62. வா கண்ணா வா
63. கருடா சௌக்கியமா
64. வசந்த்த்த்தில் ஓர் நாள்
65. தியாகி
66. துணை
67. பரீட்சைக்கு நேரமாச்சு
68. ஊரும் உறவும்
69. நெஞ்சங்கள்
70. இமைகள்
71. மிருதங்க சக்கரவர்த்தி
72. சிரஞ்சீவி
73. தராசு
74. வாழ்க்கை
75. தாவணி கனவுகள்
76. வம்ச விளக்கு
77. பந்தம்
78. நாம் இருவர்
79. நேர்மை
80. ராஜ ரிஷி
81. சாதனை
82. மருமகள்
83. ஆனந்தக் கண்ணீர்
84. லட்சுமி வந்தாச்சு
85. ராஜ மரியாதை
86. அன்புள்ள அப்பா
87. விஸ்வநாத நாயக்கடு
88. அக்னி புத்ருடு
89. ஒன்ஸ் மோர்
90. ஒரு யாத்ரா மொழி
91. என் ஆச ராசாவே
92. மன்னவரு சின்னவரு
93. பூப்பறிக்க வருகிறோம்

Gopal.s
18th September 2013, 12:17 PM
mudinthaal pangu peruven. ezhuthungal.

mr_karthik
18th September 2013, 12:24 PM
திரியின் தன்மை சற்று மாறுபட்டுப் பயணிக்கத் துவங்கியிருப்பதால், எழுதத் துவங்கிய சில பதிவுகளை பாதியில் நிறுத்தியுள்ளேன். அதற்கான காலம் வரும்போது பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில்.....

‘ஐட்டம் fபிகர்ஸ்’ வரிசையில் “ஜெய்குமாரி”யின் பதிவு பாதியில் நிற்கிறது.

“ராஜாவில் ஜம்பு” பதிவு பாதியில் நிற்கிறது

‘ரிலீஸ்மேளா’ வரிசையில் “ரிஷிமூலம்” பாதியில் நிற்கிறது

இப்போது திரியில் ஒவ்வொரு படமாக அலச முடிவெடுத்திருப்பதால் அவற்றுக்கான சமயம் வரும்போது பதிவிடுகிறேன்.

முடிவெடுத்தபடி ஒவ்வொரு படமாக துவக்கி அலசுங்கள். அவற்றை பற்றி எனக்கு ஏதேனும் தெரிந்தால் நானும் பதிவுகளில் இணைந்து கொள்ள முயற்சிக்கிறேன்.....

Gopal.s
18th September 2013, 12:33 PM
திரியின் தன்மை சற்று மாறுபட்டுப் பயணிக்கத் துவங்கியிருப்பதால், எழுதத் துவங்கிய சில பதிவுகளை பாதியில் நிறுத்தியுள்ளேன். அதற்கான காலம் வரும்போது பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில்.....

‘ஐட்டம் fபிகர்ஸ்’ வரிசையில் “ஜெய்குமாரி”யின் பதிவு பாதியில் நிற்கிறது.

“ராஜாவில் ஜம்பு” பதிவு பாதியில் நிற்கிறது

‘ரிலீஸ்மேளா’ வரிசையில் “ரிஷிமூலம்” பாதியில் நிற்கிறது

இப்போது திரியில் ஒவ்வொரு படமாக அலச முடிவெடுத்திருப்பதால் அவற்றுக்கான சமயம் வரும்போது பதிவிடுகிறேன்.

முடிவெடுத்தபடி ஒவ்வொரு படமாக துவக்கி அலசுங்கள். அவற்றை பற்றி எனக்கு ஏதேனும் தெரிந்தால் நானும் பதிவுகளில் இணைந்து கொள்ள முயற்சிக்கிறேன்.....
ஆமாம். மிகவும் மாறுபட்டு பயணிக்க உள்ளது. ஊருக்கு ஒரு பிள்ளை,தராசு,நேர்மை, நாம் இருவர் போன்ற படங்களிலிருந்து துவங்கலாம். எங்கேயடா கொஞ்சம் நன்றாக ,அமைதியாக ,எல்லோரும் ஒருங்கிணைந்து செல்கிறதே என்று பார்த்தால்.....

sivank
18th September 2013, 12:47 PM
Dear friends.

I have already expressed my wish to Murali during my last visit to India to write about all the films of NT. Can´t we start from Parasakthi. we can have all the discussions we want for a period of maximum one week. It can be extended or shortened accordingly to the discussion which may come along with it.

In this way we can discuss about all the fims of NT not only most famous or else

It is my humble request

Gopal.s
18th September 2013, 12:54 PM
Dear friends.

I have already expressed my wish to Murali during my last visit to India to write about all the films of NT. Can´t we start from Parasakthi. we can have all the discussions we want for a period of maximum one week. It can be extended or shortened accordingly to the discussion which may come along with it.

In this way we can discuss about all the fims of NT not only most famous or else

It is my humble request
Very Good and Novel suggestion. Atleast we go in ascending order one movie a week, the ultimate will happen after 4 years only.(200 weeks saved atleast)

RAGHAVENDRA
18th September 2013, 01:09 PM
திரியின் தன்மை சற்று மாறுபட்டுப் பயணிக்கத் துவங்கியிருப்பதால், எழுதத் துவங்கிய சில பதிவுகளை பாதியில் நிறுத்தியுள்ளேன். அதற்கான காலம் வரும்போது பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில்.....

‘ஐட்டம் fபிகர்ஸ்’ வரிசையில் “ஜெய்குமாரி”யின் பதிவு பாதியில் நிற்கிறது.

“ராஜாவில் ஜம்பு” பதிவு பாதியில் நிற்கிறது

‘ரிலீஸ்மேளா’ வரிசையில் “ரிஷிமூலம்” பாதியில் நிற்கிறது

இப்போது திரியில் ஒவ்வொரு படமாக அலச முடிவெடுத்திருப்பதால் அவற்றுக்கான சமயம் வரும்போது பதிவிடுகிறேன்.

முடிவெடுத்தபடி ஒவ்வொரு படமாக துவக்கி அலசுங்கள். அவற்றை பற்றி எனக்கு ஏதேனும் தெரிந்தால் நானும் பதிவுகளில் இணைந்து கொள்ள முயற்சிக்கிறேன்.....

கார்த்திக்,
ஒரு முறைப்படுத்தல் ஆலோசனை மட்டும் தான் பதிவிடப் பட்டிருக்கிறது. இதனை நம் நண்பர்கள் எல்லோரும் பரிசீலனை செய்து அவர்களுக்குத் தோன்றக் கூடிய - உங்களையும் சேர்த்தே - கருத்துக்களும் ஆலோசனைகளும் ஒருங்கிணைத்து நாம் ஒரு வழிமுறையைக் கடைப்பிடித்த பிறகே அந்த புதிய பாணியில் தொடரலாம். தற்போதைக்கு நம் தன்மை இப்போதுள்ளவாறே உள்ளது. எனவே தங்களுடைய மேலான பதிவுகளை எழுதுங்கள். நாம் அநைவருமே அதில் பங்கு கொள்ளலாம். இதன்றி இன்னும் நமக்கு 1972ன் படங்கள் பாக்கியுள்ளன. இவையெல்லாம் விவாதிக்கும் சமயத்திலேயே புதிய தன்மைக்கான கருத்துக்களும் பெறப் பட்டு அதனை ஒருங்கிணைத்து மேற்கொள்ளலாம். அது கூட என்னுடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமே நான் கூறியுள்ளேன். இது போன்று ஒவ்வொருவரின் கருத்தையும் நாம் அறிந்தால் தான் புதிய ஐடியாக்கள் கிடைக்கும்.

Subramaniam Ramajayam
18th September 2013, 01:11 PM
After our friends' discussions in our thread, WATCHING RAJA in jaya tv today was more interesting just like watching AFRESH. HATS OFF TO OUR FRIENDS.

RAGHAVENDRA
18th September 2013, 01:14 PM
சிவன் சார்
தங்களின் ஆலோசனை மிகவும் சிறப்பாக உள்ளது. நம்முடைய திரைப்படப் பட்டியல் திரியில் வரிசைக்கிரமமாக படங்கள் விவரங்கள் தரப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு படத்துடையும் தொடர்புடைய அனுபவங்கள், தகவல் பகிர்வுகள் அங்கே இடம் பெறலாம். படங்களைப் பற்றிய விமர்சனங்கள், ஆய்வுகள் இந்தத் திரியில் இடம் பெறலாம். அந்த வகையில் திரைப்படப் பட்டியல் திரியில் தாங்கள் நடிகர் திலகத்தின் அந்தந்த படங்களை முதலில் எங்கு பார்த்தீர்கள், அது தொடர்பான தங்கள் அனுபவங்கள், தகவல்கள் போன்றவற்றை அங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். இந்த வேண்டுகோளை நம் ஒவ்வொருவருக்குமே நான் வைக்கிறேன். கோபால் கிட்டத் தட்ட ஒவ்வொரு படத்திற்கும் தன் பங்களிப்பை சிறப்பாக தந்து வருகிறார். அதே போல் அனைவரும் வர வேண்டும்.

IliFiSRurdy
18th September 2013, 02:13 PM
வாசு சாரைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் தம்முடைய பங்கிற்கு ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.

மேற்கூறிய வரிசையில் விடுபட்டுப் போன பெயர்களும் இங்கே குறிப்பிடப் பட்ட பின்னர், அகர வரிசை அல்லது சிறியவரிலிருந்து பெரியவர் என்ற வரிசையில் நாம் ஒவ்வொருவராக ஒவ்வொரு படத்தைப் பற்றிய விவாதங்களை நடத்தலாமே.

நன்றிகள் கோடி ராகவேந்தர் சார்.
என்னையும் அங்கீகரித்து இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் சேர்த்துகொண்டதற்கு!
சரி இந்த ஜாம்பவான்கள் தங்கள் அனுபவத்தை எழுதுவது போல நாமும் முயற்சித்தால் என்ன என நினைத்தபோது..
தோன்றிய முத்து#1..

தெனாலிராமன்:

பிஸ்கட்,சாக்கொலேட்,வாழை,த்ராஷை, பட்சணங்கள் (இனிப்பு காரம்)வறுவல் போன்ற லஞ்ச பொருட்களுடன், மூன்று வயதான
என்னை கூட்டிக்கொண்டு என் தாயார் காசினோ அரங்கிற்கு சென்ற கதையை இன்றும் பரணி பாடுவார்.news reel முடியும் வரை அமைதியாக சாப்பிட்டுகொண்டிருந்த நான், titles தொடங்கியதும் தீவிர வாதியாக மாறி, கையில் கொடுத்த பழங்களை விட்டெறிந்து, "இந்த நிமிடம் வீட்டிற்கு போக வேண்டும்" என அலற,Titlecards ஓடும்போது,நான் பழங்களை screen நோக்கி விட்டெறிந்ததை பார்த்த மற்றவர்கள்
இந்த சிறு வயதில் இப்படி ஒரு தீவிர சிவாஜி ரசிகனா.!!என வியந்திருக்க,சாம தான பேத தண்ட உபாயங்கள் எதுவும் உதவாத நிலையில் 'தாயார்' 'அம்மா'வாகி என்னை இழுத்துக்கொண்டு வெளிநடப்பு செய்தார்.ஆனால் அடுத்த சந்தர்ப்பத்திற்கு அவர் சுமார் 55 ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது.சென்ற ஆண்டு Raj TVயில் இதை போடும் போது கூட ஒரு வித பயத்துடன்தான் அவர் என்னுடன் அமர்ந்து பார்த்தார்.

இது அருமையான படம்..தலைவர் வசன உச்சரிப்பில் கவனமாக இருந்த காலம்.ஒவ்வொரு வார்த்தையும் தேன் போல காதில் ஒலிக்கும்.தெனாலி ராமன் என்பதால் படம் முழுவதும் அவர் முகத்தில் குறும்பு கொப்பளிக்கும்."தில காஷ்ட மகிஷ பந்தனம்" ஒன்று போதும்..

தலைவர் எனும் ஜம்போ ஜெட் தமிழ் திரையுலகம் எனும் ஓடு பாதையில் மெதுவாக ஓடத்தொடங்கி takeoffக்கு தயாரான படங்களில் ஒன்று.

A great entertainer.

Gopal.s
18th September 2013, 02:29 PM
ஜமுனா கூட அந்த படத்தில் படு அழகாக cute ஆக இருப்பார்.

பானுமதி நல்ல வில்லி என்பதை தெனாலி ராமன்,ராஜபக்தி படங்களில் நிரூபித்திருப்பார்.

ஒரு படத்திற்கே அவர் வில்லியாக மாறிய கொடுமை அம்பிகாபதியில் நிகழ்ந்தது.

Gopal.s
18th September 2013, 05:20 PM
நினைத்ததை சாதித்து விட்டீர்களே ராகவேந்தர் சார்.நடிகர்திலகத்தின் ஆத்மா உங்களை வாழ்த்தட்டும். கல கல வென்று சென்று கொண்டிருந்த திரியை ஆள் அரவமில்லாமல் பண்ணி விடும் உங்கள் நோக்கம் மிக உயர்ந்தது.

Gopal.s
18th September 2013, 05:22 PM
இவ்வளவு அரசியல் கூர்மையும் நாட்டுக்கு பயன் படாமல் போய் விட்டதே?

anasiuvawoeh
18th September 2013, 08:27 PM
Dear Sir,in vijay role,when he get hurt by the stone thrown by the heroine,NT will shout oh!blood,my own blood in english which added dimension to the he was brought up by the rich parents,It was excellent,
தெய்வ மகன் - முரளி சாரின் பதிவு மீண்டும் இங்கே

பாகம் 1 நாள் 01.04.2008

http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=289528&viewfull=1#post289528



பாகம் 2
நாள் 05.04.2008

http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=290877&viewfull=1#post290877



பாகம் 3
நாள் 07.04.2008

http://www.mayyam.com/talk/showthread.php?6549-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-4&p=291219&viewfull=1#post291219

anasiuvawoeh
18th September 2013, 08:37 PM
Dear Ganpat Sir.very short and sweet flashback.Especially the punch,"Thaayaar" Amma" vaagi.
நன்றிகள் கோடி ராகவேந்தர் சார்.
என்னையும் அங்கீகரித்து இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் சேர்த்துகொண்டதற்கு!
சரி இந்த ஜாம்பவான்கள் தங்கள் அனுபவத்தை எழுதுவது போல நாமும் முயற்சித்தால் என்ன என நினைத்தபோது..
தோன்றிய முத்து#1..

தெனாலிராமன்:

பிஸ்கட்,சாக்கொலேட்,வாழை,த்ராஷை, பட்சணங்கள் (இனிப்பு காரம்)வறுவல் போன்ற லஞ்ச பொருட்களுடன், மூன்று வயதான
என்னை கூட்டிக்கொண்டு என் தாயார் காசினோ அரங்கிற்கு சென்ற கதையை இன்றும் பரணி பாடுவார்.news reel முடியும் வரை அமைதியாக சாப்பிட்டுகொண்டிருந்த நான், titles தொடங்கியதும் தீவிர வாதியாக மாறி, கையில் கொடுத்த பழங்களை விட்டெறிந்து, "இந்த நிமிடம் வீட்டிற்கு போக வேண்டும்" என அலற,Titlecards ஓடும்போது,நான் பழங்களை screen நோக்கி விட்டெறிந்ததை பார்த்த மற்றவர்கள்
இந்த சிறு வயதில் இப்படி ஒரு தீவிர சிவாஜி ரசிகனா.!!என வியந்திருக்க,சாம தான பேத தண்ட உபாயங்கள் எதுவும் உதவாத நிலையில் 'தாயார்' 'அம்மா'வாகி என்னை இழுத்துக்கொண்டு வெளிநடப்பு செய்தார்.ஆனால் அடுத்த சந்தர்ப்பத்திற்கு அவர் சுமார் 55 ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது.சென்ற ஆண்டு Raj TVயில் இதை போடும் போது கூட ஒரு வித பயத்துடன்தான் அவர் என்னுடன் அமர்ந்து பார்த்தார்.

இது அருமையான படம்..தலைவர் வசன உச்சரிப்பில் கவனமாக இருந்த காலம்.ஒவ்வொரு வார்த்தையும் தேன் போல காதில் ஒலிக்கும்.தெனாலி ராமன் என்பதால் படம் முழுவதும் அவர் முகத்தில் குறும்பு கொப்பளிக்கும்."தில காஷ்ட மகிஷ பந்தனம்" ஒன்று போதும்..

தலைவர் எனும் ஜம்போ ஜெட் தமிழ் திரையுலகம் எனும் ஓடு பாதையில் மெதுவாக ஓடத்தொடங்கி takeoffக்கு தயாரான படங்களில் ஒன்று.

A great entertainer.

IliFiSRurdy
19th September 2013, 06:30 AM
Dear Ganpat Sir.very short and sweet flashback.Especially the punch,"Thaayaar" Amma" vaagi.

Thank you very much Pon Ravichandran Sir!

Gopal.s
19th September 2013, 06:59 AM
தோஷம் அகன்று விட்டது. திரியின் மீது கண் பட்டிருக்கும். பம்மலாரின் பிறந்த நாள் நெருங்குகிறது. நாம் திரியை பழைய நிலைக்கு உயர்த்துவோம்.

கார்த்திக் சார், தயவு செய்து எனக்காக உங்கள் ஜெயகுமாரி,ஜம்பு, ரிஷிமூலம் பதிவுகளை போடுங்கள். ஒரு பிரத்யேக நண்பனின் அன்பு வேண்டுகோள்.
என் சார்பில்---

நீதி, பட்டிக்காடா பட்டணமா முடிந்ததும் ,சிவாஜியின் காதல் காட்சிகள்-நான் ரசித்தவை என்று ஒரு தொடர் ஆரம்பிக்க உள்ளேன். இது 1952 முதல் 1999 வரை அனைத்து(??) படங்களையும் அணைத்து(!!!) செல்லும் தொடர்.(ஒரு முப்பது எபிசொட் ஆவது வரும்).

குறுக்கே நந்திகள் மறைப்பதை பொருட்படுத்த வேண்டாம் என்று பல நண்பர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பிதற்றல்களை சட்டை செய்யாமல் போவதே நமக்கு மரியாதை.

மீண்டும் வலியுறுத்துகிறேன். Filmography என்பது வேறு. தேர்ந்தெடுத்த ஒத்த ரசனை உள்ளவர்களுடன் பகிர்வது என்பது வேறு. விமரிசனம் என்பது வேறு. புகழ் மாலை என்பது வேறு. ஆய்வு என்பது வேறு. எல்லா படங்களும் ஆய்வுக்குரியது அல்ல. பல நண்பர்கள் அதிருப்தியை வெளியிட்டும் ,அவ்வப்போது அனாவசிய தலையீடுகள் தொடர்கின்றன.

நான் மீண்டும் ஒன்றை குறிப்பிடுகிறேன். நண்பர்கள் அவர்களுக்கு பிடித்த எதை வேண்டுமானாலும் எழுதட்டும்.ஆனால் அவரவர் பாணியில் எழுதட்டும். கார்த்திக் சார் பாணியில் தராசு,முரளி சார் பாணியில் நாம் இருவர்,கோபால் பாணியில் நேர்மை, என்று மற்ற பதிவர்களை அவமதித்து ,இது வரை போட்ட பதிவுகளை கேலிக்குரியதாக்க வேண்டாம். இது சிவாஜியை ,விவேக் மிமிக்ரி செய்யும் போது நமக்கு உண்டாக்கும் கோபத்துக்கு நிகரானது.ராகுல் ராம் இதைத்தான் சிரஞ்சீவி பதிவில் செய்து வாசுவின் அற்புதமான, சுவையான ஞான ஒளி பதிவை அவமான படுத்தினார்(அதுவும் சூட்டோடு சூடாக. ரெண்டு வருஷம் கழித்து செய்திருந்தாலாவது சுமாராக மன்னித்து விடலாம்). இது தொடர வேண்டாம். அவரவர் சொந்த பாணியில் எதையேன் செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகிறேன்.

RAGHAVENDRA
19th September 2013, 07:43 AM
தோஷம் அகன்று விட்டது. திரியின் மீது கண் பட்டிருக்கும். பம்மலாரின் பிறந்த நாள் நெருங்குகிறது. நாம் திரியை பழைய நிலைக்கு உயர்த்துவோம்.

கார்த்திக் சார், தயவு செய்து எனக்காக உங்கள் ஜெயகுமாரி,ஜம்பு, ரிஷிமூலம் பதிவுகளை போடுங்கள். ஒரு பிரத்யேக நண்பனின் அன்பு வேண்டுகோள்.
என் சார்பில்---

நீதி, பட்டிக்காடா பட்டணமா முடிந்ததும் ,சிவாஜியின் காதல் காட்சிகள்-நான் ரசித்தவை என்று ஒரு தொடர் ஆரம்பிக்க உள்ளேன். இது 1952 முதல் 1999 வரை அனைத்து படங்களையும் அணைத்து செல்லும் தொடர்.(ஒரு முப்பது எபிசொட் ஆவது வரும்).

குறுக்கே நந்திகள் மறைப்பதை பொருட்படுத்த வேண்டாம் என்று பல நண்பர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பிதற்றல்களை சட்டை செய்யாமல் போவதே நமக்கு மரியாதை.

மீண்டும் வலியுறுத்துகிறேன். Filmography என்பது வேறு. தேர்ந்தெடுத்த ஒத்த ரசனை உள்ளவர்களுடன் பகிர்வது என்பது வேறு. விமரிசனம் என்பது வேறு. புகழ் மாலை என்பது வேறு. ஆய்வு என்பது வேறு. எல்லா படங்களும் ஆய்வுக்குரியது அல்ல. பல நண்பர்கள் அதிருப்தியை வெளியிட்டும் ,அவ்வப்போது அனாவசிய தலையீடுகள் தொடர்கின்றன.

நான் மீண்டும் ஒன்றை குறிப்பிடுகிறேன். நண்பர்கள் அவர்களுக்கு பிடித்த எதை வேண்டுமானாலும் எழுதட்டும்.ஆனால் அவரர்கள் பாணியில் எழுதட்டும். கார்த்திக் சார் பாணியில் தராசு,முரளி சார் பாணியில் நாம் இருவர்,கோபால் பாணியில் நேர்மை, என்று மற்ற பதிவர்களை அவமதித்து ,இது வரை போட்ட பதிவுகளை கேலிக்குரியதாக்க வேண்டாம். இது சிவாஜியை ,விவேக் மிமிக்ரி செய்யும் போது நமக்கு உண்டாக்கும் கோபத்துக்கு நிகரானது.ராகுல் ராம் இதைத்தான் சிரஞ்சீவி பதிவில் செய்து வாசுவின் அற்புதமான, சுவையான ஞான ஒளி பதிவை அவமான படுத்தினார்(அதுவும் சூட்டோடு சூடாக. ரெண்டு வருஷம் கழித்து செய்திருந்தாலாவது சுமாராக மன்னித்து விடலாம்). இது தொடர வேண்டாம். அவரவர் சொந்த பாணியில் எதையேன் செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகிறேன்.

Is this not dominating attitude?

Gopal.s
19th September 2013, 07:49 AM
Where is domination? I told clearly that they can write about anything in their own way without mimicking anyone. Anything wrong?

Gopal.s
19th September 2013, 08:01 AM
ராகவேந்தர் சார்,
கூவி கூவி பலரை அழைக்கிறீர்களே? அவர்களில் பலர் தங்கள் மீது வருத்தத்தில் இருந்தும் ,உங்கள் வயது கருதி மௌனம் காத்து திரியில் பதிவதை தவிர்த்து மௌன வாசகர்களாய் தொடர்கின்றனர்.
மிக மிக ஆசையுடன்,passion உடன் பதிவிடும் என் போன்ற சிலரையும் irritate செய்து அடக்க பார்க்கிறீர்கள். என்னதான் சாதிக்க போகிறீர்கள்? தனிப்பட்ட முறையில் என்னிடம் பல தர பட்ட சிவாஜி ரசிகர்களும் நொந்து கொண்ட (ஏ.ஆர்.எஸ் போன்றோர்,உங்கள் மிக நெருங்கிய சகாக்கள் உட்பட) 80 களின் படங்களை தூக்கி பிடித்து எதை சாதிக்க எண்ணுகிறீர்கள்?நாமே விரும்பாத குப்பை பண்டங்களை இங்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு பரிமாறி ,என்ன காண போகிறோம்?ஏன் திரும்ப திரும்ப கீறல் விழுந்த ,பழைய தேவையில்லாத குப்பை கூடையில் போட வேண்டிய, ரெகார்ட் போல ஒரே பல்லவியை கீச்சு கீச்சென்று ஒரே விஷயம் ?????

RAGHAVENDRA
19th September 2013, 08:16 AM
மீண்டும் வலியுறுத்துகிறேன். Filmography என்பது வேறு. தேர்ந்தெடுத்த ஒத்த ரசனை உள்ளவர்களுடன் பகிர்வது என்பது வேறு. விமரிசனம் என்பது வேறு. புகழ் மாலை என்பது வேறு. ஆய்வு என்பது வேறு. எல்லா படங்களும் ஆய்வுக்குரியது அல்ல. பல நண்பர்கள் அதிருப்தியை வெளியிட்டும் ,அவ்வப்போது அனாவசிய தலையீடுகள் தொடர்கின்றன.

எல்லாப் படங்களும் ஆய்வுக்குரியது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். தாங்கள் ஆய்வு செய்ய விரும்பவில்லை என்றால் விட்டு விடுங்கள். மற்றவர்களை உத்தரவிட தாங்கள் யார். நான் ஏற்கெனவே கூறியது போல் இங்கு ஒரு குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மை நிலவுவது போல் உள்ளது. மாடரேட்டர் கூறட்டும் இந்தப் படங்களைப் பற்றி எழுதக் கூடாது என்று அல்லது குறிப்பிட்ட சிலர் எழுதக் கூடாது என்று. அதை விட்டு தாங்கள் கூறும் படங்கள் மட்டும் தான் இங்கு விவாதிக்கப் பட வேண்டும் என்றால் this seem like domination.

நான் என் கருத்தை யார் மீதும் இது வரை திணித்ததில்லை. என்னுடைய அபிப்ராயத்தை ஏற்பதும் ஏற்காததும் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை. 200க்கு மேல் படங்களைப் பற்றிப் பேசமாட்டேன் என்பது எப்படி தங்களுக்குள்ள உரிமை அதே போல் அனைத்துப் படங்களைப் பற்றியும் அதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றியும் விவாதிப்போம் என்பதற்கும் உரிமை உள்ளது. இதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே பாணியை ஒன்றுக்கு மேற்பட்டோர் எழுதலாம். அது உலகம் முழுதும் பொதுவானது. ஆனால் மற்றவர்களின் கருத்தைத் தன் கருத்தாக வெளியிடுவது தான் தவறு. இதை தாராளமாக சுட்டிக் காட்டலாம். ஒவ்வொருவர் தங்களைப் போல் எழுத்தில் மேதாவியாக இருப்பார்கள். ஒவ்வொருவர் மற்றவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு தாமும் அதே போல் எழுதினால் என்ன என விரும்புவார்கள். இது உலகில் உள்ளது தான்.

We can find fault in copying but not following a style.

புதியவர்கள் இளையவர்கள் அவர்கள் விரும்பிய படங்களை அல்லது அதில் நடிகர் திலகத்தின் நடிப்பை எழுத ஆர்வத்துடன் வரும் போது அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்பது மரபு சார்ந்த ஒன்று.

அவர்கள் எழுத்தில் தவறிருந்தால் சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ளச் செய்வது தான் மனிதாபிமானம்.

மீண்டும் மீண்டும் தங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதும் விவாதம் செய்வதும் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தங்களுடைய சிறந்த அறிவாற்றல், அற்புதமான எழுத்து நடை, நடிகர் திலகத்தின் நடிப்பில் தாங்கள் செய்யும் ஆய்வு முறை, அதனை வெளிப்படுத்தும் நேர்த்தி, இது யாருக்கும் இல்லாத சிறந்த விஷயமாகும். இதனைத் தங்களுடைய கோபமான பதிவுகள் மறைக்கின்றன என்பது வருத்தம் தருகிறது.

RAGHAVENDRA
19th September 2013, 08:25 AM
ராகவேந்தர் சார்,
கூவி கூவி பலரை அழைக்கிறீர்களே? அவர்களில் பலர் தங்கள் மீது வருத்தத்தில் இருந்தும் ,உங்கள் வயது கருதி மௌனம் காத்து திரியில் பதிவதை தவிர்த்து மௌன வாசகர்களாய் தொடர்கின்றனர்.
மிக மிக ஆசையுடன்,passion உடன் பதிவிடும் என் போன்ற சிலரையும் irritate செய்து அடக்க பார்க்கிறீர்கள். என்னதான் சாதிக்க போகிறீர்கள்? தனிப்பட்ட முறையில் என்னிடம் பல தர பட்ட சிவாஜி ரசிகர்களும் நொந்து கொண்ட (ஏ.ஆர்.எஸ் போன்றோர்,உங்கள் மிக நெருங்கிய சகாக்கள் உட்பட) 80 களின் படங்களை தூக்கி பிடித்து எதை சாதிக்க எண்ணுகிறீர்கள்?நாமே விரும்பாத குப்பை பண்டங்களை இங்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு பரிமாறி ,என்ன காண போகிறோம்?ஏன் திரும்ப திரும்ப கீறல் விழுந்த ,பழைய தேவையில்லாத குப்பை கூடையில் போட வேண்டிய, ரெகார்ட் போல ஒரே பல்லவியை கீச்சு கீச்சென்று ஒரே விஷயம் ?????

Irritate செய்வது யார் என்பது எல்லோருக்கும் தெரியும். குப்பை பண்டங்கள் என்பது போன்ற தங்களுடைய தனிப்பட்ட அபிப்ராயங்களுக்குத் துணை சேர்ப்பது தாங்களே அன்றி என்னை சொல்ல வேண்டாம். யார் எனக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்று பார்த்து நான் பதிவிடுவதில்லை. என் கருத்தை ஏற்பவர்களும் இருப்பார்கள் அல்லவா.

80களை எழுதாமல் தாங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்களோ அதைத் தான் 80களை எழுதி நான் சாதிக்கப் போகிறேன்.

தங்களுடைய ஆளுமை இங்கு இருக்க வேண்டும், தாங்கள் தான் இங்கு ஆட்சி செலுத்த வேண்டும், தங்கள் நட்பு வட்டாரம் மட்டுமே இங்கு பதிவிட வேண்டும் என்பதைத் தெளிவாக இங்கு உரைத்து விடுங்கள். இது சிவாஜி ரசிகர்கள் பங்கெடுக்க சரியான இடமல்ல என்பதை நான் தீர்மானித்து ஒதுங்கி விடுகிறேன்.

Gopal.s
19th September 2013, 09:50 AM
No more arguements and I give up. You won. Pl.Continue your way. As i expected here comes the threat of quitting .Nowadays ,you are predictable.

Gopal.s
19th September 2013, 09:56 AM
நடிகர் திலகத்தின் 305 படங்களில் திரும்பத்திரும்ப பிரபலமான படங்களையே அலசுவதால் வேறு படங்கள் இவருக்கு இல்லை போலிருக்கிறது என்கிற எண்ணத்திற்கு இடம் கொடுக்காமல் மிக மிக அபூர்வமாக, இதுவரை விவாதிக்கப் படாத படத்தை எடுத்துக் கொள்ளுமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். கோபால் சார், Let us explore more of his films very rare and hither to not discussed.

இதனைத் தொடங்கி வைக்க சரியானவர் நம் வாசு சார் தான். வாசு சார் தெய்வ மகன் முடிந்த பின்னர் தாங்கள் தேர்ந்தெடுக்கும் படத்தை நாம் விவாதிப்போமே.

Choice is yours.
மன்னியுங்கள் ராகவேந்தர் சார் தங்கள் மனம் புண் பட்டிருந்தால். செப்டம்பர் மாதமானதால் தெய்வமகன்,புதிய பறவை,வசந்த மாளிகை போன்ற காவியங்களை தவிர்க்க இயலாது. தாங்கள் "போதும் இதெல்லாம்" என்ற பாணியில் பதிவு போட்டு ,மற்றதை கெடுத்ததில் எனக்கு வருத்தமே.
நான் இனி எதிலும் தலையிட போவதில்லை. தெய்வமாகி விட்ட அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அனைவரும் செயல் பட்டால் எனக்கு மகிழ்ச்சியே.
தங்களோடு நிறைய முரண் பட்ட போதிலும்,நடிகர்திலகம் ஒருவருக்காகவே உடல்,பொருள்,ஆவியை கொண்டிருக்கும் உங்களை போன்ற வழிகாட்டி எங்களுக்கு மிக அவசியம்.தடங்கலுக்கு வருந்துகிறேன்.
தொடரலாம்.

RAGHAVENDRA
19th September 2013, 10:04 AM
No more arguements and I give up. You won. Pl.Continue your way. As i expected here comes the threat of quitting .Nowadays ,you are predictable.

No threats, Yes it's predictable. I agree. I am going to gain nothing if it's a threat. Every time I give up and continue posting only because it's for NT.

RAGHAVENDRA
19th September 2013, 10:11 AM
மன்னியுங்கள் ராகவேந்தர் சார் தங்கள் மனம் புண் பட்டிருந்தால். செப்டம்பர் மாதமானதால் தெய்வமகன்,புதிய பறவை,வசந்த மாளிகை போன்ற காவியங்களை தவிர்க்க இயலாது. தாங்கள் "போதும் இதெல்லாம்" என்ற பாணியில் பதிவு போட்டு ,மற்றதை கெடுத்ததில் எனக்கு வருத்தமே.
நான் இனி எதிலும் தலையிட போவதில்லை. தெய்வமாகி விட்ட அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அனைவரும் செயல் பட்டால் எனக்கு மகிழ்ச்சியே.
தங்களோடு நிறைய முரண் பட்ட போதிலும்,நடிகர்திலகம் ஒருவருக்காகவே உடல்,பொருள்,ஆவியை கொண்டிருக்கும் உங்களை போன்ற வழிகாட்டி எங்களுக்கு மிக அவசியம்.தடங்கலுக்கு வருந்துகிறேன்.
தொடரலாம்.

நான் எதைக் கெடுத்தேன்..
தெரியாத படங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயத்தை மட்டும் தான் நான் சொன்னேன். என்னால் இங்கு என்ன ஊறு நேர்ந்து விட்டது என விளக்கலாமே.
அது மட்டுமல்லாமல் தெய்வ மகன் திரைப்படத்தை அலசுவதில் எனக்கு என்ன மன வருத்தம் ஏற்படப் போகிறது. எல்லோரையும் விட அதிக சந்தோஷம் தான் கிடைக்கும். அதற்கென பின்னணி இசை கோப்பெல்லாம் தயாரித்து வைத்திருந்தேன். தங்கள் பதிவைத் தொடர்ந்து என்னுடைய பதிவையும் அளித்திருந்தேன்.

தாங்கள் ராஜாவைப் பற்றி தொடங்கிய விவாதம் முற்றுப் பெற்றதா இல்லையா எனத் தெரியாத நிலையில் திடீரென இது வந்ததா இல்லையா. ஒரு படத்தை முழுதும் அலசிய பிறகு மற்றதை எடுத்துக் கொள்ளலாமே என்கிற என் கருத்தினைத் தான் வலியுறுத்தினேன். அபூர்வமான திரைப்படங்களைப் பற்றியும் கூட இப்போது வேண்டாம் ஒரு வரையறை வந்த பின் வைத்துக் கொள்ளலாம் எனச் சொன்னேன். பட்டியலும் கூட என் தனிப்பட்ட விருப்பத்தைத் தானே சொன்னேன்.

இவற்றில் எங்கிருந்து நான் கெடுக்கும் விஷயம் வந்தது.

இதையெல்லாம் தாங்கள் சிந்தித்தால் என் மீது ஏதும் தவறில்லை என்பதை புரிந்து கொள்வீர்கள்.

இதைப் பற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை எனக்கும் இல்லை.

Brianengab
19th September 2013, 10:27 AM
Raghavendra nd Gopal sir,

A kind request.. There s no limitation to discuss abt sivaji sir.. 300 padangalaiyum 'discuss' pandrathil entha thavaru ondrum illai ena ninaikkiren.. Gopal sir, thaangale sila sivaji sir padangalai 'kuppai' endru solvathu varutham alikkirathu.. ennai pondra pira 'Silent readers'galum padikka nernthaal manavarutham adaivar.. Apart frm famous films, u cn disuss other non-famous movies also..v r the young generation people wil knw lot abt sivaji sir.. ithil thavaru ondrum illai...

kuppai endru sollappadum sila padangalil sivaji sir'in nadippil kurai ondrum irunthathillai.. vayathil siriyavan kooruvathaaga ninaikka vendaam.. ther r number of 'young sivaji fans cum silent readers' r reading all ur posts.. :)

joe
19th September 2013, 10:39 AM
ther r number of 'young sivaji fans cum silent readers' r reading all ur posts.. :)

:thumbsup:

Gopal.s
19th September 2013, 10:42 AM
Raghavendra nd Gopal sir,

A kind request.. There s no limitation to discuss abt sivaji sir.. 300 padangalaiyum 'discuss' pandrathil entha thavaru ondrum illai ena ninaikkiren.. Gopal sir, thaangale sila sivaji sir padangalai 'kuppai' endru solvathu varutham alikkirathu.. ennai pondra pira 'Silent readers'galum padikka nernthaal manavarutham adaivar.. Apart frm famous films, u cn disuss other non-famous movies also..v r the young generation people wil knw lot abt sivaji sir.. ithil thavaru ondrum illai...

kuppai endru sollappadum sila padangalil sivaji sir'in nadippil kurai ondrum irunthathillai.. vayathil siriyavan kooruvathaaga ninaikka vendaam.. ther r number of 'young sivaji fans cum silent readers' r reading all ur posts.. :)
Agreed Boss. I am a purist and believe in authenticity. But I take your advice serious and correct myself.

vasudevan31355
19th September 2013, 11:47 AM
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 11

இந்த அருமையான சண்டைக் காட்சியை அருமை நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ07DAT_000074296.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ07DAT_000074296.jpg.html)

Don't Miss It

படம்: தங்கைக்காக

வெளிவந்த ஆண்டு: 06.02.1971

தயாரிப்பு: ஜுபிடர் ஆர்ட் மூவிஸ் (திருமதி புளோரிடா பெர்னாண்டோ)

சண்டைப்பயிற்சி : திருவாரூர் தாஸ். உதவி-மணி மற்றும் காசீம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ02DAT_000091296.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ02DAT_000091296.jpg.html)

நடிகர் திலகம் மோதும் வில்லன் : நம்பியார் மற்றும் ஸ்டன்ட் மென்.

இயக்கம்: D.யோகானந்த்

அதி வேகமான சுறுசுறு விறுவிறு சண்டைக்காட்சி .

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ07DAT_000087736.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ07DAT_000087736.jpg.html)

நடிகர் திலகம் பங்கு பெறும் மற்றொரு அற்புதமான ஸ்டன்ட். தங்கை லஷ்மியை வில்லன் நம்பியாரின் கூடாரத்திலிருந்து காப்பற்றிக் கொண்டுவரும் சண்டை. சுற்றி மொய்க்கும் வில்லன்களுடன் சுழன்று சுழன்று நடிகர் திலகம் அவர்களைப் பந்தாடும் காட்சி. கண்ணாடி பிரேம்கள் கொண்ட தடுப்பு ரூமுக்குள் நடக்கும் வேகம் நிறைந்த சண்டை. வில்லனின் அடியாட்களை கைகளாலும், கால்களாலும் இடைவெளி இல்லாமல் விட்டு தாக்கும் அற்புதம். பார் விளையாட்டு போல பாரில் தொங்கிக் கொண்டே கால்களைக் கொண்டு உதைப்பார். பாரில் ஒரிஜினலாக தலைகீழாகத் தொங்கிக் கொண்டு கீழே உள்ள மொட்டைத் தலையனை அவன் மொட்டையிலேயே அறைந்து தள்ளுவார். பாரிலிருந்து கீழே குதித்து, எதிர்க்கும் இரு அடியாட்களில் ஒருவன் கழுத்தை லாவகமாகத் தாவிபிடித்து, கைகளால் சுற்றி வளைப்பார். அதே நேரத்தில் இன்னொரு அடியாளின் கழுத்தைக் கால்களால் பின்னுவார். கண்ணாடி பிரேம்கள் உடைந்து நொறுங்க, பீரோ சாய்ந்து கீழே விழ, படு வேகமான குத்துக்களை எதிரிகள் மீது பாய்ச்சுவார். லஷ்மியை இழுத்துக் கொண்டு படிக்கட்டுகளின் வழியே ஓடி வரும் போது தடுக்கும் அடியாளை கீழே படுத்தவாறு கால்களால் கிடுக்கிப் பிடி போட்டு அப்படியே தூக்கிக் கிடாசுவார். சர்வசாதரணமாக அதிவேகத் திறமையின் வெளிப்பாட்டில் நம்மை திக்கு முக்காட வைப்பார். இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப pause செய்து பாருங்கள். தெரியும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ07DAT_000158136.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ07DAT_000158136.jpg.html)http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ07DAT_000073640.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ07DAT_000073640.jpg.html)

அதைவிட முக்கியமான வாயைப் பிளக்க வைக்கும் காட்சி இப்போது வருகிறது. தன்னைத் தாக்க வரும் மொட்டைதலை அடியாளின் இடுப்பை வளைத்துப் பிடித்து, படுக்கை வசத்தில் அவனை அப்படியே அலாக்காகத் தூக்கி, இடுப்பில் கிடுக்கிப் பிடி போட்டு, பக்கத்தில் இருக்கும் பில்லரில் அவன் மொட்டைத்தலையை மோதி மோதி எடுப்பார். (மேலே இடதுபுற ஸ்டில்லைக் காண்க) பார்க்கையில் அப்படியே சப்த நாடியும் ஒடுங்கி பிரம்மித்துப் போய் விட்டேன். அப்பாடி! என்ன ஒரு அனாயாசமான திறமை! அசகாய சூரத்தனம்!. என்ன ஒரு உடல் திறன்! அந்த அடியாள் எப்படியும் எண்பது கிலோ எடை கொண்டவராக இருக்க வேண்டும். அந்த ஆளை சர்வ சாதாரணாமாகத் தூக்கி தூணில் மோதுவார். இவரால் முடியாதது என்று எதுவுமே கிடையாதா?! ராட்சஷன்பா!

இதன் பிறகு தாக்க வரும் இரு ஆட்களையும் பக்கவாட்டில் இரு புறமும் பிடித்து, அவர்களின் கைகளை முறுக்கி கீழே பிரட்டி மண்ணைக் கவ்வச் செய்வார். பிறகு மெயின் வில்லன் நம்பியாரிடம் அருமையாக மோதுவார். அதில் தற்காப்புத் தடுப்புகளை அற்புதமாகச் செய்வார். கால்களாலும், கைகளாலும் மாறி மாறி அட்டாக் கொடுப்பார்.

நான் மூக்கின் மேல் விரல் வைத்த அற்புதமான சண்டைக்காட்சிகளில் இதுவும் ஒன்று. பல பர் மறந்திருக்கலாம். இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சண்டைக் காட்சியை அளிப்பதில் மிக்க பெருமிதம் எனக்கு. மறுபடியும் ஒரு அன்பு வேண்டுகோள். திரும்பத் திரும்ப மூன்று நான்கு முறை இந்த அட்டகாச சண்டையைக் காணுங்கள். முக்கியமான இடங்களில் pause செய்து பாருங்கள். இந்த சண்டைகாட்சியின் மகத்துவமும், தலைவரின் அசாத்திய திறமையும், அசுர உழைப்பும் மேலும் நமக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கும். எம்.எஸ்.வி. அவர்களின் ரீ-ரெகார்டிங் வேறு இந்த சண்டைக்காட்சிக்கு மேலும் வலு சேர்க்கும்.

நன்றி!

முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9U6PYkGrqCU

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

Gopal.s
19th September 2013, 12:00 PM
வாசு சார்,
வினோத்துக்கு சமர்ப்பிக்க பட்ட இரண்டாவது சண்டைக்காட்சி(முதல் ஒன்று நானும் என் வில்லனும் மோதிய ஆக்ரோஷ சண்டை.வழக்கம் போல draw .) அருமை. எனக்கு பிடித்த சண்டை காட்சிகளுள் ஒன்று. எங்கிருந்துதான் பிடித்து இழுத்து வருவீர்களோ? நடிகர்திலகம் 80 களிலும் சில சண்டை காட்சிகளை நன்கு பண்ணியுருப்பார்.(நேர்மை)

joe
19th September 2013, 12:04 PM
எனக்கு கூட ஒரு சின்ன யோசனை இருக்கு.

வாரத்துக்கு ஒரு முறையாவது அதற்கான தேவை இருப்பதால் , தனியாக " ராகவேந்திரர் - கோபால் பஞ்சாயத்து திரி" என்று தனியாக ஒரு திரி ஆரம்பிக்கலாம் . ராகவேந்திரரும் கோபாலும் பிரச்சனை ஆரம்பித்ததும் அங்கே சென்று பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு வழக்கம் போல இங்கே தொடரலாம் .

எப்பூடி ? :)

Richardsof
19th September 2013, 12:11 PM
எனக்காக '' தங்கைக்காக '' சண்டை காட்சியினைஅர்ப்பணித்த உங்களின் விரல்களுக்கும் - கண்களுக்கும் நல் இதயத்திற்கும் எனது கனிவான நன்றி .

MY FAVOURITE SONG

http://youtu.be/e1RW7HhNN68

FAVOURITE SCENE FROM SATHYAM
http://youtu.be/tTOYpVX7nBk

Gopal.s
19th September 2013, 12:43 PM
எனக்கு கூட ஒரு சின்ன யோசனை இருக்கு.

வாரத்துக்கு ஒரு முறையாவது அதற்கான தேவை இருப்பதால் , தனியாக " ராகவேந்திரர் - கோபால் பஞ்சாயத்து திரி" என்று தனியாக ஒரு திரி ஆரம்பிக்கலாம் . ராகவேந்திரரும் கோபாலும் பிரச்சனை ஆரம்பித்ததும் அங்கே சென்று பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு வழக்கம் போல இங்கே தொடரலாம் .

எப்பூடி ? :)

நல்ல யோசனை. சண்டை காட்சி இன்னும் மயிர்கூச்செறியும் படி அமைய scope உண்டு. ஆனால் நாட்டாமையாக முரளிதான் என் சாய்ஸ்.அவர்தான் தமிழ் சினிமா போலீஸ் மாதிரி சமர்த்தாக எல்லாம் முடிந்து ,நிதானமாக வருவார்.

joe
19th September 2013, 01:19 PM
நல்ல யோசனை. சண்டை காட்சி இன்னும் மயிர்கூச்செறியும் படி அமைய scope உண்டு. ஆனால் நாட்டாமையாக முரளிதான் என் சாய்ஸ்.அவர்தான் தமிழ் சினிமா போலீஸ் மாதிரி சமர்த்தாக எல்லாம் முடிந்து ,நிதானமாக வருவார்.

முரளி சாரை நாட்டாமை துண்டுடனும் சொம்புடன் கற்பனை செய்து பார்ர்த்தேன் :rotfl:

KCSHEKAR
19th September 2013, 02:17 PM
Agreed Boss. I am a purist and believe in authenticity. But I take your advice serious and correct myself.

அப்பாடா? நன்றி!

Gopal.s
19th September 2013, 02:38 PM
அப்பாடா? நன்றி!
You too Brutus?

Shakthiprabha
19th September 2013, 04:02 PM
I find what Raghavendran says makes lot of sense. IT becomes a cliche discussing same KNOWN movies of NT. Ofcourse gopal, vasudevan and the likes do amazzzzzzzzing analysis throwing extrodinary dimensions of the character. I love such unbiased character analysis. But then there are movies which raghavendran mentioned, which probably ppl like me have not heard, atleast not known about NT's share there.

So lets travel side by side. Do take one movie at a time, a known one followed by unknwon rare one (even if its not so fantastic 80s runs) how about that?

P.s: I should say gopal, your view on characater analysis of paasa malar and mudhal mariyathai was TYPICAL DITTO of what I thought about the movie. My sympathy was fully with gemini and mn rajam for having married such a annan thangai duo. Vadivukkarasi in mudhal mariyathai a character who, probably my heart goes out for.

//ஆனால் நாட்டாமையாக முரளிதான் என் சாய்ஸ்.அவர்தான் தமிழ் சினிமா போலீஸ் மாதிரி சமர்த்தாக எல்லாம் முடிந்து ,நிதானமாக வருவார்.//

Nowadays theerpu would always be well balanced irrespective of who holds the naattamai post. ivarum sari, avarum sari....
idhuvum righttu athuvum righttu.

Having said a LOTTT more than needed, I take a break and quietly go back to the last seat / last bench to watch the show, let the presentation go on :wave:

Gopal.s
19th September 2013, 04:37 PM
All Friends,

Pl.Note that I gave a long list of movies for review yearwise wayback on 13th April ,2012 in 9th part.(Even today people can visit and verify.I am cutting&Pasting the same below) The choice of movies are not based on popularity or commercial success alone but acceptable and versatile to many sections of viewers. That time people made hue and cry but recently they came out with such list.(mainly Ragavendhar questioned my intension of making such selection created furor but yesterday he did the same by selecting some movies. Why this double standard favouring himself?) You can notice ,I have not excluded his after 1980 but limited the choice not to harm his greatness. Since,people are misreading my suggestions,I have to come out with my old list suggested for reviews. Ofcourse,it is only suggestion.(I did pick up quite a number of them and did justice)

1952- Parasakthi
1953-Thirumbi Paar
1954-Manohara,Andha Naal,Kalyam Panniyum Bramhachari,Thuli Visham,koondu Kili,Thooku Thooki,Ethirparadhadhu
1955-Mudhal thedhi,Mangayar Thilagam,Koteeswaran
1956-Naan petra Selvam,Nane raja,Pennin Perumai,Raja Rani,Amara deepam,Rangon radha
1957-Makkalai Petra Maharasi,Pudhayal,Manamagal Thevai
1958-Uthama Puthiran,Annaiyin Aanai,Sabash Meena
1959-Veera Pandiya Kattabomman,Maragatham,Aval yaar,Baga Pirivinai
1960-Irumbu Thirai,Deiva Piravi,Padikkatha Medhai,Pavai Vilakku
1961-Pava Mannippu,Pasa Malar,Ellam Unakkaga,Palum Pazhamum,Kappalottiya Thamizhan
1962-Parthal Pasi theerum,Valarpirai,Padithal mattum Podhuma,Bale Pandiya,Alaya Mani
1963-Arivali,Iruvar Ullam,Kulamagal Radhai,Paar magale paar
1964-Karnan,Pachai Vilakku,Andavan kattalai,Kaikadutha Deivam,Pudhia Paravai,Navarathri
1965-shanthi,Thiruvilayadal,Neelavanam
1966-Motor Sundaram Pillai,Mahakavi Kalidas,Saraswathi Sabatham,Selvam
1967-Kanthan Karunai,Pesum Deivam,Thangai,Paladai,Thiruvarutchelvar,Iru Malargal,Ooty Varai Uravu
1968-Galatta kalyanam,En Thambi,Thillana Mohanambal,Enga Oor Raja,Uyarntha Manidhan
1969-Thanga Churangam,Kaval deivam,Anjal Petti 520,Nirai kudam,Deiva Magan,Sivantha Mann
1970-Virtnam veedu,Ethiroli,Raman Ethanai ramanadi,Engiruntho Vanthal,Padhukappu
1971-Kulama Gunama,Sumathi En sundhari,Savale Samali,Thenum Palum,Babu.
1972-Raja,Gnana Oli,Pattikada pattanama,Vasantha maligai,Needhi
1973-Bharatha Vilas,Engal thanga raja,Gowravam,Rajapart Ranga Durai,Manitharil manickam
1974-Sivagamiyin Selvan,Thanga Padakkam,Anbai Thedi
1975-Avanthan Manithan,Anbe aruyire,Pattum Bharathamum
1976-Uthaman,Rojavin Raja
1977-Deepam,Ilaya Thalaimurai,Annan Oru Koil
1978-Andhaman Kathali,Thyagam,Ennai Pol Oruvan,General chakravarthi,
1979-thirisoolam,Kavarimaan,Naan Vazha vaipen
1980-Rishi Moolam
1981-Kalthoon,Lorry Driver rajakannu,Keez Vanam Sivakkum
1982-Hitler umanath,Vaa Kanna vaa,Thyagi,Thunai,Parikshaikku Neramachu
1983-Miruthanga Chakravarthi,Vellai Roja
1984-Vazhkai,Dhavaki Kanavugal
1985-Mudhal Mariadhai,Rajarishi
1986-Sadhanai,Marumagal,Anandha Kanneer,Viduthalai,Thaikku oru thalattu
1987-Anbulla Appa
1992-Thevar Magan,Chinna Marumagal,Naangal,
1996-Oru Yatra Mozhi
1997-Once more
1998-En Aasai Rasave
1999-Padayappa,Pooparikka Varugirom

Hope this clarifies my stand .

அப்போது ராகவேந்திரன் சாரின் பதிவு பின் வருமாறு....

Quote
டியர் கோபால்,
தங்களுடைய கருத்துக்களுக்கு என்னுடைய கண்டனங்களை கடுமையான முறையில் தெரிவிக்க விரும்புகிறேன். இத்திரியில் இதைப் போன்று எழுதி நானும் சிவாஜி ரசிகர் தான் என்று கூறி சிலர் முன்னர் எழுதி அவரை விமர்சிப்பதற்கு இந்தப் படங்களை கேடயமாக பயன் படுத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு சரியான பதிலடியை முன்னர் அளித்துள்ளனர் நம்முடைய நண்பர்கள். அவர்களுடைய பட்டியலில் தாங்களும் இணைந்து விட்டீர்களோ என்கிற ஐயத்தை தங்களுடைய கருத்து தோற்றுவிக்கிறது.

கிட்டத் தட்ட பாதிக்கு மேல் அவர் படங்களை நாம் ஒதுக்கி விட வேண்டும் என்பது போல் எழுதியுள்ளீர்கள்.
Unquote

இப்போது அவரே ஒரு லிஸ்ட் போட்டு முக்கால் வாசியை ஒதுக்கி விட்டார். தன்னுடைய சாய்ஸ் என்று. ஏன் அவரே அவரை contradict செய்கிறார்?நான் எது சொன்னாலும் எதிர்க்கிறார் என்பதை நான் அண்ணனாக மதிக்கும் பெரியவர் விளக்குவாரா?

Gopal.s
19th September 2013, 05:13 PM
பக்கம் 216 பதிவு எண் 2152 இல் அவர்(Ragavendhar sir)
(18/09/2013)தேர்ந்தெடுப்பாக அவர் கொடுத்தது 93 படங்களே. நான் தேர்ந்தெடுத்தது (13/04/2012) 147 படங்கள். அதிக படங்களை ஒதுக்கிய குற்றவாளி யார்? என்னை விட குறைவான நடிகர்திலகத்தின் படங்களை தேர்வு செய்து விட்டு என்னை மட்டும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி எவ்வளவு முறை அவமான படுத்தியுள்ளார்?
இன்று அவரே புகழும் இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடங்கு முன் அவர் செய்த அர்ச்சனைகள்...
இத்தனைக்கும் ஒரு வருத்தம் கூட தெரிவித்ததில்லை இது வரை. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் கோப படும் போது அவரை மதித்து வருந்தியுள்ளேன். தன்னை புனித பசுவாக அவர் நிலையுருத்த முயல்வதால் ,நான் தன்னிலை விளக்கமாக இதனை அளிக்கிறேன்.

Gopal.s
19th September 2013, 05:54 PM
Dear All,
This is not to point fingers at Mr.Ragavendhar but clarified my stance. I am willing to start with clean slate from today and not dragging it further.

Russelldwp
19th September 2013, 07:21 PM
மன்னியுங்கள் ராகவேந்தர் சார் தங்கள் மனம் புண் பட்டிருந்தால். செப்டம்பர் மாதமானதால் தெய்வமகன்,புதிய பறவை,வசந்த மாளிகை போன்ற காவியங்களை தவிர்க்க இயலாது. தாங்கள் "போதும் இதெல்லாம்" என்ற பாணியில் பதிவு போட்டு ,மற்றதை கெடுத்ததில் எனக்கு வருத்தமே.
நான் இனி எதிலும் தலையிட போவதில்லை. தெய்வமாகி விட்ட அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அனைவரும் செயல் பட்டால் எனக்கு மகிழ்ச்சியே.
தங்களோடு நிறைய முரண் பட்ட போதிலும்,நடிகர்திலகம் ஒருவருக்காகவே உடல்,பொருள்,ஆவியை கொண்டிருக்கும் உங்களை போன்ற வழிகாட்டி எங்களுக்கு மிக அவசியம்.தடங்கலுக்கு வருந்துகிறேன்.
தொடரலாம்.

Dear Mr.Ragavendran / Mr.Gopal

Both of you are Experts in Presenting and Analysing our Great Sivaji's acting and each and every moment of him and person like me enjoying like anything while wtching this. So dont get angry each one of you and plot your views without any gap. These kind of unwanted converstions affect the good journey of this thread.
Always expecting your views and analysis about NT'S films and not your fight

C.Ramachandran

anasiuvawoeh
19th September 2013, 07:48 PM
Dear Sirs,though I am new to this thread ,i would like to have a suggestion.Since we all are ardent fans of NT,we all enjoy his acting irrespective of the outcome of a movie.Since,NT also dont know the outcome,irrespective of the story he would have given more than 100percent.But still to extent this to other people ,instead of discussing his films from the chronological order,let us start from the number of days the movie ran successfully.For eg the most number is 200days,then we start from it.By the time it comes to the poor movies (as per collection,not by acting)who knows something may happen that even we dont get a chance to discuss the bad ones.Thanks/regards
எல்லாப் படங்களும் ஆய்வுக்குரியது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். தாங்கள் ஆய்வு செய்ய விரும்பவில்லை என்றால் விட்டு விடுங்கள். மற்றவர்களை உத்தரவிட தாங்கள் யார். நான் ஏற்கெனவே கூறியது போல் இங்கு ஒரு குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மை நிலவுவது போல் உள்ளது. மாடரேட்டர் கூறட்டும் இந்தப் படங்களைப் பற்றி எழுதக் கூடாது என்று அல்லது குறிப்பிட்ட சிலர் எழுதக் கூடாது என்று. அதை விட்டு தாங்கள் கூறும் படங்கள் மட்டும் தான் இங்கு விவாதிக்கப் பட வேண்டும் என்றால் this seem like domination.

நான் என் கருத்தை யார் மீதும் இது வரை திணித்ததில்லை. என்னுடைய அபிப்ராயத்தை ஏற்பதும் ஏற்காததும் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை. 200க்கு மேல் படங்களைப் பற்றிப் பேசமாட்டேன் என்பது எப்படி தங்களுக்குள்ள உரிமை அதே போல் அனைத்துப் படங்களைப் பற்றியும் அதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றியும் விவாதிப்போம் என்பதற்கும் உரிமை உள்ளது. இதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே பாணியை ஒன்றுக்கு மேற்பட்டோர் எழுதலாம். அது உலகம் முழுதும் பொதுவானது. ஆனால் மற்றவர்களின் கருத்தைத் தன் கருத்தாக வெளியிடுவது தான் தவறு. இதை தாராளமாக சுட்டிக் காட்டலாம். ஒவ்வொருவர் தங்களைப் போல் எழுத்தில் மேதாவியாக இருப்பார்கள். ஒவ்வொருவர் மற்றவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு தாமும் அதே போல் எழுதினால் என்ன என விரும்புவார்கள். இது உலகில் உள்ளது தான்.

We can find fault in copying but not following a style.

புதியவர்கள் இளையவர்கள் அவர்கள் விரும்பிய படங்களை அல்லது அதில் நடிகர் திலகத்தின் நடிப்பை எழுத ஆர்வத்துடன் வரும் போது அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்பது மரபு சார்ந்த ஒன்று.

அவர்கள் எழுத்தில் தவறிருந்தால் சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ளச் செய்வது தான் மனிதாபிமானம்.

மீண்டும் மீண்டும் தங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதும் விவாதம் செய்வதும் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தங்களுடைய சிறந்த அறிவாற்றல், அற்புதமான எழுத்து நடை, நடிகர் திலகத்தின் நடிப்பில் தாங்கள் செய்யும் ஆய்வு முறை, அதனை வெளிப்படுத்தும் நேர்த்தி, இது யாருக்கும் இல்லாத சிறந்த விஷயமாகும். இதனைத் தங்களுடைய கோபமான பதிவுகள் மறைக்கின்றன என்பது வருத்தம் தருகிறது.

Gopal.s
19th September 2013, 08:01 PM
சுஹா ராம் ரொம்ப அள்ளி விட்டு கொண்டிருக்கிறார். இங்கே வந்து நடுநிலை பேசி விட்டு ஜோதியோடு கலந்தாயிற்று. இருக்கட்டும். பொன்னியின் செல்வன் சாண்டில்யன் எழுதிய கதையாம்!!!???(அது கல்கி கதை என்று ஒரு வயசு குழந்தை கூட சொல்லும்). சாண்டில்யனோடு பழகிய வரை ,அவர் பயங்கர சிவாஜி ரசிகர்.தன்னுடைய கதைகள் சிவாஜியின் நடிப்பில் படமாவதை விரும்பியவர். சிவாஜி நடித்த துளி விஷம்,பாதியில் படமாக்க பட்ட விட பட்ட
ஜீவ பூமி இவற்றின் கதாசிரியர்.

RAGHAVENDRA
19th September 2013, 09:39 PM
வாசு சார்
தங்கைக்காக திரைப்பட சண்டைக் காட்சி சரியான தேர்வு. சென்னை சாந்தியில் இப்படம் ஓடிய போது. ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் திலகம் தரும் ஒவ்வொரு அடி அல்லது குத்துக்கும் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். அந்த ஆரவாரம் வெள்ளிக்கிழமை பாடலின் போதே துவங்கி விடும். அதில் சாய்பாபா குரலுக்கு பர்மீஸ் மொழியைப் போன்ற பாடல் வரிகளை நடிகர் திலகம் வாயசைப்பில் மிகவும் அற்புதமான முகபாவம் காட்டுவார். பாடல் முழுதும் லுங்கி சட்டையில் அமர்க்களமான ஸ்டைல். அப் பாடல் முடிந்தவுடன் ஓரிரு நிமிடங்களிலேயே இச்சண்டைக்காட்சி தொடரும். அதனைத் தாங்கள் மிகவும் அணு அணுவாக பார்த்துப் பார்த்து அருமையாக அளித்துள்ளீர்கள். ஒரு முரடனை அடித்து விட்டு அதே வேகத்திலேயே யூ டர்ண் அடித்து மற்றொரு முரடனை அடிக்கும் வேகமும் லாவகமும் நடிகர் திலகம் திரைத்துறையில் எதிலுமே சளைத்தவரில்லை என்பதை நிரூபித்துத விடுகின்றன. அதே போல் அந்த மொட்டைத் தலையனை சுவற்றில் மோத வைக்கும் காட்சியும். இதுவும் சாந்தியில் பலத்த கரகோஷம் பெற்றது.

ஒவ்வொரு ரசிகனும் எதை ரசிப்பானோ அதை மிகவும் அருமையாக தேர்ந்தெடுத்து இங்கு வழங்கி இத்திரியில் தங்கள் பங்களிப்பின் மகத்துவத்தை நிரூபித்து விட்டீர்கள். இன்னும் பல பதிவுகள் இது போன்று தாங்கள் வழங்க வேண்டும்.

rsubras
19th September 2013, 09:52 PM
kuppai endru sollappadum sila padangalil sivaji sir'in nadippil kurai ondrum irunthathillai.. vayathil siriyavan kooruvathaaga ninaikka vendaam.. ther r number of 'young sivaji fans cum silent readers' r reading all ur posts.. :)

I second this........ enakku pidikkatha characters such as Deivamagan younger son, namma Gopal sir ku antha padathulaye romba pidicha character ah irunthathu......... so it just depends...athe pola I dont like Sivaji's roles in films such as Sivantha Mann , inga niraya pesapatta Raja et al... which i believe is more of a stereotype (imho of course)... I love his characters such as Babu, Gnana Oli, navarathiri (esp the forest officer [or is it police officer?]) and so on and on .... So there are so many unexplored areas of Sivaji sir's filmography which certain section of readers would be interested in nu ninaikaren

other than that, dont want to comment on the tussle happening here, as it is more like arguments between two professors, while most of us here are students just overlooking these and going on :)

venkkiram
19th September 2013, 10:34 PM
கோபால் சொல்லமுயல்வதை நான் புரிந்து கொள்கிறேன். அதை நான் வழிமொழிகிறேன். எந்த ஒரு கலையும் உச்சம் தொட முயலும்போது அது ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள் கணக்கிட முடியாதவாறு காலச் சக்கரத்தில் சிக்கிச் சிதறாது தொடர்ந்து நம்மை பல தளங்களில் திருப்தி படுத்திக் கொண்டே இருக்கும். ஒரு செவ்வியல் தன்மையை அடைந்துவிடும் அதுபோன்ற சிவாஜி படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அதை தானும் பகுப்பாய்வு செய்து, மற்றவர்களையும் பகுப்பாய்வு செய்யத் தூண்டும் ஒரு மெழுகு வர்த்தியாகவே கோபாலைப் பார்க்கிறேன். ரசனைத் தளத்தில் மேலெழும்பிக் கொண்டே இருக்க முயல்கிறார், நம்மையும் அங்கிருந்து தூக்கிவிட முயன்று கொண்டே இருக்கிறார். அதற்கு சரியான தீனி கிடைக்காத பட்சத்தில் சினம் கொள்கிறார். அச்சினத்தை நாம் பொருட்படுத்தாது ஆரோக்யமாக விமர்சனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாமும் முன்வர வேண்டும்.

iufegolarev
19th September 2013, 10:46 PM
இன்று வழக்கம் போல வேலைக்கு சென்று வரும்போது ரோட்டில் 100வது வருட இந்திய சினிமா cutout பார்க்க நேர்ந்தது. அதில் வழக்கம் போல நம் நடிகர் திலகத்தின் படம் இருட்டடிப்பு. சிரிப்புதான் வந்தது அதை பார்க்கும்போது.

இப்படி ஒரு பயந்தாங்கொள்ளிகள், நடிகர் திலகத்தின் படத்தை போட்டால் எங்கே மவுசு இன்னும் கூடிவிடுமோ என்ற குளிர்ஜுரத்தில் நடிகர் திலகத்தின் படத்தை போடாமல் அதே நேரத்தில் புதுமை இயக்குனர்கள் என்று திரையுலகை ஆக்ரமித்தவர்களின் தரமில்லாத படங்களின் ஹோர்டிங் (HOARDING) என்னமோ சாதனை படங்கள் போல போட்டிருக்கிறார்கள் மூடர்கள். என்னமோ இந்திய திரைவானின் மைல்கல் படங்கள் போல ஒரு பாவ்லா, ஒரு போலி சித்தரிப்பு..! அய்யோபாவம் ! இவ்வளவு தரம் தாழ்ந்திருக்கவேண்டாம் !

இவர்களுக்கென்ன தெரியும் ? பொய், பித்தலாட்டம், உண்மையை இருட்டடிப்பு இதுதானே ? Such a mean minded fellows ! அவருடைய பெயரை, புகழை மறைத்ததாக இவர்கள் நினைகிறார்கள். இதில் இவர்கள் பெயர் தான் மேலும் கெட்டு போகிறதென்று இந்த மடையர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் நடுநிலையாக இந்திய சினிமாவின் 100ஆம் ஆண்டு விழா என்றால் அதற்க்கு தகுந்தாற்போல எல்லா நடிகர்களின் படங்களையும் போட்டிருக்கவேண்டும். மேலும் நல்லதிரைப்படங்களான கல்யாண பரிசு, சிவகங்கை சீமை, சம்பூர்ண ராமாயணம், பட்டணத்தில் பூதம், நெஞ்சில் ஓர் ஆலயம், தேன் நிலவு மற்றும் பல படங்களின் HOARDING இவர்களுக்கு வைக்க தெரியவில்லை. நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை கலாட்டா கல்யாணம் திரைப்படத்தை சம்பந்தமே இல்லாமல் எதற்கு போட்டார்கள் என்று புரியவில்லை. 1952இல் வந்த பராசக்தி, அல்லது அதற்க்கு பின்னர் வந்த மனோஹரா அல்லது இரட்டை வேட புதுமை படைப்பு உத்தம புத்திரன் அல்லது அந்த நாள் இப்படி திரைப்படங்களை போட்டிருக்கலாம்.

என்னமோ ஏனோ தானோ என்று கேட்பதற்கு ஆள் இல்லை என்றால் எப்படியும் நடந்துகொள்ளலாம் என்ற எண்ணம். ஏற்கனவே நிறைய பேர் பேச தொடங்கிவிட்டார்கள். என்னப்பா கர்ணன் தவிர கட்டபொம்மன், திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற கலர் படங்களை போடவில்லை ...இவனுங்க வேணும்னே பண்றாங்கப்பா என்று..!

கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்துதான் தீரும். உண்மை என்றிருந்தாலும் திரும்ப ஒரு அடி அடிக்கும் அப்போது தெரியும் உண்மையின் வலிமையை.

iufegolarev
19th September 2013, 10:48 PM
பகுப்பாய்வு செய்யத் தூண்டும் ஒரு மெழுகு வர்த்தியாகவே கோபாலைப் பார்க்கிறேன்.

http://www.youtube.com/watch?v=zYxAxlb_M9g

iufegolarev
19th September 2013, 10:58 PM
இனிய நண்பர் நெய்வேலியார் அவர்கள் கைவண்ணத்தில் உயிர் பெற்ற நான் வாழ வைப்பேன் திரை ஒலி ஒளி கண்ணோட்டம் YOUTUBE இல் 2437 இதுவரை கண்டுகளித்துள்ளார்கள் என்பதை பெருமையுடன் கூற கர்வபடுகிறேன். !

நன்றி நெய்வேலி வாசுதேவன் சார் !

http://www.youtube.com/watch?v=BCl0pss-9zY#t=55

Gopal.s
20th September 2013, 06:38 AM
நம் வாசுவின் தேர்வு அலாதி. அபாரம். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நிறைய shot சிவாஜி நடித்து கொண்டிருந்த நேரம்.அப்படியே ஒன்றிரண்டு ஷாட் duel வந்தாலும் ,அவரோடு அடுத்த ஷாட் merge ஆகி உறுத்தல் வராமல் நடிகர்திலகம் நடிக்கும் பாங்கு. நாலு பேரை சுறன்று தாக்கும் லாவகம்,கம்பியில் தொங்கும் ஷாட் ,பயில்வானை தூக்கி தூணில் மொத்தும் ஷாட், என்ன ஒரு இளமை சுறுசுறுப்பு.
இன்றைய டெக்னாலஜி ,கேமரா இவைகள் சண்டை காட்சிகளை மனித முயற்சிக்கு மீறியதாக கம்ப்யூட்டர் கேம்ஸ் போல ஆக்கி விட்டன.

Gopal.s
20th September 2013, 06:49 AM
வாசு ,
நான் வாழ வைப்பேன் ஒரு neat professional presentation . மிக அழகாக தொகுத்து, வெட்டி,சுவாரஸ்யம் கூட்டி உள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
சுப்பு,
நான் வாழ வைப்பேன் வெற்றி பெற்று வீடு நிறைய பொருள் குவிந்து,அடுத்த முறை ஊருக்கு வரும் போதாவது ட்ரீட் கொடு.(நான் என்ன பெரிசா கேக்க போறேன் ராகவேந்தர் சார் பேட்டையில் ரத்னா கபே போண்டா,இட்லி,காபி.)

vasudevan31355
20th September 2013, 07:02 AM
இன்று வழக்கம் போல வேலைக்கு சென்று வரும்போது ரோட்டில் 100வது வருட இந்திய சினிமா cutout பார்க்க நேர்ந்தது. அதில் வழக்கம் போல நம் நடிகர் திலகத்தின் படம் இருட்டடிப்பு. சிரிப்புதான் வந்தது அதை பார்க்கும்போது.

இப்படி ஒரு பயந்தாங்கொள்ளிகள், நடிகர் திலகத்தின் படத்தை போட்டால் எங்கே மவுசு இன்னும் கூடிவிடுமோ என்ற குளிர்ஜுரத்தில் நடிகர் திலகத்தின் படத்தை போடாமல் அதே நேரத்தில் சில இத்துப்போன படங்களை என்னமோ சாதனை படங்கள் போல போட்டிருக்கிறார்கள் மூடர்கள். என்னமோ இந்திய திரைவானின் மைல்கல் படங்கள் போல ஒரு பாவ்லா, ஒரு போலி சித்தரிப்பு..! அய்யோபாவம் ! இவ்வளவு தரம் தாழ்ந்திருக்கவேண்டாம் !

இவர்களுக்கென்ன தெரியும் ? பொய், பித்தலாட்டம், உண்மையை இருட்டடிப்பு இதுதானே ? Such a mean minded fellows ! அவருடைய பெயரை, புகழை மறைத்ததாக இவர்கள் நினைகிறார்கள். இதில் இவர்கள் பெயர் தான் மேலும் கெட்டு போகிறதென்று இந்த மடையர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஏற்கனவே நிறைய பேர் பேச தொடங்கிவிட்டார்கள். என்னப்பா கர்ணன் தவிர கட்டபொம்மன், திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற கலர் படங்களை போடவில்லை ...இவனுங்க வேணும்னே பண்றாங்கப்பா என்று..!

கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்துதான் தீரும். உண்மை என்றிருந்தாலும் திரும்ப ஒரு அடி அடிக்கும் அப்போது தெரியும் உண்மையின் வலிமையை.

சவுரி சார்,

மூடர் கூட்டம்?!

Gopal.s
20th September 2013, 07:02 AM
வெங்கி ராம்,
தங்கள் பதிவுகளை படித்ததும், எனக்கு சிறிதே கண்கள் கலங்கி விட்டன. என்ன ஒரு மாயம்?? என் ரசனை மனத்தை பிரதிபலித்த கண்ணாடி. நான் என் சிறிய வயது முதலே புரிந்து கொள்ள படாத மனிதனாகவே இருந்து வந்துள்ளேன். வயதுக்கு மீறிய பக்குவமும்,ரசனைகளும்,பல முடிச்சு சிக்கல்கள் கொண்ட கட்டுடைக்கும் மன நிலையும்,எனக்கு தொடர்ந்த மன உளைச்சலை மட்டுமே கொடுத்துள்ளது. உங்களுக்கு என் பிரத்யேக நன்றி.நண்பர்கள் இதை எப்படி புரிந்து கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சியே.

vasudevan31355
20th September 2013, 07:04 AM
இனிய நண்பர் நெய்வேலியார் அவர்கள் கைவண்ணத்தில் உயிர் பெற்ற நான் வாழ வைப்பேன் திரை ஒலி ஒளி கண்ணோட்டம் YOUTUBE இல் 2437 இதுவரை கண்டுகளித்துள்ளார்கள் என்பதை பெருமையுடன் கூற கர்வபடுகிறேன். !

நன்றி நெய்வேலி வாசுதேவன் சார் !


நன்றி சவுரி சார். நான்தான் தங்களுக்கு நன்றி கூற வேண்டும் இப்படிப்பட்ட நல்ல வாய்ப்பை வழங்கியமைக்கு.

vasudevan31355
20th September 2013, 07:04 AM
நன்றி வினோத் சார் அருமையான "எதையும் தாங்குவேன்", "பூப்போல் மனதை முள்ளால் கீறி" பாடல்களை இங்கே பதித்தமைக்கு.

நன்றி கோ... நன்றி ராகவேந்திரன் சார். ஒவ்வொரு சண்டைக்காட்சிகளிலும் நடிகர் திலகத்தின் பங்களிப்பு அபாரமானது. மிக ஈடுபாட்டுடன் செய்வார். இன்னும் என்னென்ன வரவிருக்கிறது பாருங்கள். சண்டைக்காட்சிகளிலும் வழக்கம் போல தன் தனி முத்திரையைப் பதித்தவர் அவர்.

Gopal.s
20th September 2013, 07:17 AM
subra சார்,
நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. நான் கூட சிறந்தவை லிஸ்ட் யாராவது போடும் பொது அதன் subjective authenticity check பண்ண எனக்கு பிடித்தவை எவ்வளவு விடுபட்டுள்ளன, எனக்கு பிடிக்காதவை எவ்வளவு சேர்க்க பட்டுள்ளன என்று பார்ப்பேன். 70% fit (பிடித்தவை,பிடிக்காதவை இரண்டிலும்)வந்தால் மட்டுமே அந்த லிஸ்ட் என் பரிசீலனையில் இருக்கும்.அதை போல லிஸ்ட் பாருங்கள். உடன்பாட்டையும் ,முரண்பாட்டையும் நீங்களே தீர்மானித்து,எங்களுக்கும் தெரிவிக்கலாம்.
இப்போது பிரச்சினை அது இல்லை. தொடர்ந்து நீயே உனக்கு பிடித்தவைகளாகவே பிடித்த பாணியில் எழுதுகிறாயே?மற்றவர்கள் எழுதட்டும் என்று அதட்டலாக ஒருவர் என்னை பார்த்து கை நீட்டியதுதான் என்னை கொதிக்க வைத்துள்ளது.
நான் சம்பளம் வாங்கும் (கொழுத்த) கம்பெனியில் கூட என்னை இப்படி கேட்கும் துணிவு எந்த முதலாளிக்கும் வந்ததில்லை.
நான் என்றுமே தரமான பதிவுகளுக்காக ஏங்கி படிக்க மட்டுமே விழையும் ஒரு வாசகன். எழுதியது நானே எதிர்பாராத விபத்து. type அடிப்பது நான் வெறுக்கும் செயல்.
நானே ஒதுங்க நினைத்தேன். நண்பர்கள் ஒதுக்கினால் இரட்டிப்பு மகிழ்ச்சியே. ஆனால் வலிக்காமல் செய்யுங்கள்.

vidyasakaran
20th September 2013, 08:45 AM
இப்போது பிரச்சினை அது இல்லை. தொடர்ந்து நீயே உனக்கு பிடித்தவைகளாகவே பிடித்த பாணியில் எழுதுகிறாயே?மற்றவர்கள் எழுதட்டும் என்று அதட்டலாக ஒருவர் என்னை பார்த்து கை நீட்டியதுதான் என்னை கொதிக்க வைத்துள்ளது.
நான் சம்பளம் வாங்கும் (கொழுத்த) கம்பெனியில் கூட என்னை இப்படி கேட்கும் துணிவு எந்த முதலாளிக்கும் வந்ததில்லை. நான் என்றுமே தரமான பதிவுகளுக்காக ஏங்கி படிக்க மட்டுமே விழையும் ஒரு வாசகன். எழுதியது நானே எதிர்பாராத விபத்து. type அடிப்பது நான் வெறுக்கும் செயல்.
நானே ஒதுங்க நினைத்தேன். நண்பர்கள் ஒதுக்கினால் இரட்டிப்பு மகிழ்ச்சியே. ஆனால் வலிக்காமல் செய்யுங்கள்.

முதலில் வெங்கிராம் அவர்களுக்கு நன்றி, என் மனதிலும் எண்ணியிருந்ததை அழகாகக் கூறியமைக்கு. கோபால் ஐயா, யாரும், அவரவர்க்குப் பிடித்தவற்றை , அவரவர் விரும்பும் வகையில், உண்மை பிசகாமல் எழுதலாம் என்பது மட்டுமே ஒரே விதியாகக் கொண்டு விடலாம். இந்தத் திரியின் பதிவுகளை நாள்தோறும் எதிர்பார்த்து வாசிக்கும் என்னைப்போல் பலர், பெரியவர்கள் அனைவரது பதிவுகளாலும் எவ்வளவோ கற்றுக்கொண்டும், அறிந்துகொண்டும் வருகிறோம். அவற்றில், உங்களது பதிவுகள் இன்னும் மாறுபட்ட வகையில் எங்கள் அறிவு, ரசனைப் பசியை ஆற்றுகின்றன, ஆற்றி வளர்க்கின்றன என்பது உண்மை. (இது வேறு யாரையும் குறைத்துச் சொல்வதாக யாரும் எண்ணிவிட வேண்டாம்)
அதே நேரம், இங்கு எழுதுபவர்கள், வாசிப்பவர்கள் அனைவரது ஈடுபாடும் இல்லாமல் இத்திரி முழுமை பெறாது.
என் வேண்டுகோள், தொடர்ந்து எழுதுங்கள். மாற்றுக் கருத்துகளை சற்றே மென்மையாகக் கையாளுங்கள். யாரும் யாரையும் ஒதுக்க வேண்டாம், இயலாது, கூடாது.

Rangarajan nambi
20th September 2013, 09:24 AM
நம் வாசுவின் தேர்வு அலாதி. அபாரம். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நிறைய shot சிவாஜி நடித்து கொண்டிருந்த நேரம்.அப்படியே ஒன்றிரண்டு ஷாட் duel வந்தாலும் ,அவரோடு அடுத்த ஷாட் merge ஆகி உறுத்தல் வராமல் நடிகர்திலகம் நடிக்கும் பாங்கு. நாலு பேரை சுறன்று தாக்கும் லாவகம்,கம்பியில் தொங்கும் ஷாட் ,பயில்வானை தூக்கி தூணில் மொத்தும் ஷாட், என்ன ஒரு இளமை சுறுசுறுப்பு.
இன்றைய டெக்னாலஜி ,கேமரா இவைகள் சண்டை காட்சிகளை மனித முயற்சிக்கு மீறியதாக கம்ப்யூட்டர் கேம்ஸ் போல ஆக்கி விட்டன.

Sivaji and fighting scenes, these are poles apart. Mr.Gopal, you possess some high sense of humour

Gopal.s
20th September 2013, 09:35 AM
Sivaji and fighting scenes, these are poles apart. Mr.Gopal, you possess some high sense of humour
Not exactly Nambi Sir. It is true that Sivaji despised fighting scenes in movies openly in interviews. But in late 60s and early 70s ,he did some amazing scenes in this genre also. I am serious and you know me unless I am convinced ,I wont talk it out. I recommend some scenes. Sivantha Man Jail break fight Scene, Raja's Randha Singh fight Scene. The beauty is that he was able to bring out the spirit,energy, humanness(showed reactions&Anxieties),inviting challenge gesture,Figher's rhythm and Grace. It is true that they are few in numbers but they stand apart. Sivaji can not be labelled and he proved his mettle in all areas(Never got caught in image trap and tried his hands everywhere with great success) . Thats why even today, we are all mesmerised.

iufegolarev
20th September 2013, 09:45 AM
Sivaji and fighting scenes, these are poles apart. Mr.Gopal, you possess some high sense of humour

Let it be Mr.Rangarajan Nambi. Everybody has their own belief. Like how you believe your favorite (whoever it may be) actor is better in any of the department !

Gopal.s
20th September 2013, 09:52 AM
Let it be Mr.Rangarajan Nambi. Everybody has their own belief. Like how you believe your favorite (whoever it may be) actor is better in any of the department !
சுப்பு,
கேள்விகளை,கேலிகளை மென்மையாக அணுகுவது சிறந்தது. நானும் நீயும் சிறிதே காந்தியவாதிகளாய் மாறுவது திரிக்கு நன்மையானது. நீ சுற்றி சுற்றி எங்கு வருகிறாய் என்று புரிகிறது. அடக்கியே வாசிப்பது நல்லது. உன் மேல் கொண்ட அக்கறை காரணமாக சொல்கிறேன். திடீர் திடீர் என்று சிலிர்த்து கொண்டு பாயாதே.

venkkiram
20th September 2013, 09:55 AM
அவ்வளவு தூரம் போவானேன்! ஒரு கருப்பு வெள்ளை படத்தில் மல்யுத்த வீரனாக போட்டியில் களமிறங்குவாரே அந்த ஒன்றை மட்டுமே எடுத்துப் போடுங்கள் சார். சண்டைக் காட்சியில் சிவாஜி எந்த ஜித்தனையும் எதிர்கொள்ள தயார். சின்னபுள்ளைகளா! தூரப் போய் வெளையாடுங்க என சிவாஜி அன்றைக்கே சவால் விட்டிருக்கிறார் எதிர்கால சந்ததிகளை!

Gopal.s
20th September 2013, 09:58 AM
அவ்வளவு தூரம் போவானேன்! ஒரு கருப்பு வெள்ளை படத்தில் மல்யுத்த வீரனாக போட்டியில் களமிறங்குவாரே அந்த ஒன்றை மட்டுமே எடுத்துப் போடுங்கள் சார். சண்டைக் காட்சியில் சிவாஜி எந்த ஜித்தனையும் எதிர்கொள்ள தயார். சின்னபுள்ளைகளா! தூரப் போய் வெளையாடுங்க என சிவாஜி அன்றைக்கே சவால் விட்டிருக்கிறார் எதிர்கால சந்ததிகளை!
Kathavarayan. Vasu has posted this as his favourite.

iufegolarev
20th September 2013, 10:02 AM
சுப்பு,
கேள்விகளை,கேலிகளை மென்மையாக அணுகுவது சிறந்தது. நானும் நீயும் சிறிதே காந்தியவாதிகளாய் மாறுவது திரிக்கு நன்மையானது. நீ சுற்றி சுற்றி எங்கு வருகிறாய் என்று புரிகிறது. அடக்கியே வாசிப்பது நல்லது. உன் மேல் கொண்ட அக்கறை காரணமாக சொல்கிறேன். திடீர் திடீர் என்று சிலிர்த்து கொண்டு பாயாதே.

எனது பதிலில் சிலிர்ப்பு எங்கு உள்ளது கோபால் சார் ?

மிக சாதாரண முறையில்தான் நான் கூறினேன். அவர் அவர்களுக்கு அவர்களுடைய அவர் விரும்பும் நாயகன் உசத்திதான் என்று...இதில் பாயவும் இல்லை, சிலிர்ப்பும் இல்லை கோபால் சார்..!

நீங்கள் எதற்கு வரிந்துகட்டி வந்தீர்கள் என்று எனக்கும் தெரியும் சார்.

கட்டிடத்தின் அஸ்திவாரம், ஆணிவேர் இதன் மீது தான் அதிக பற்று கொண்டவன் நான். கட்டிடத்தின் மீது அல்ல...! ஆனால் எல்லோரும் அப்படி இருக்கவேண்டும் என்பதில்லையே..

குற்றமுள்ளவர்கள் மட்டுமே என்னுடைய பதிவை படிக்கும்போது பாய்வது போலவும் சிலிர்ப்பது போலவும் தெரியுமோ என்னமோ !

It is only a simple comment and NO HIDDEN agenda, whatsoever..!

Rangarajan nambi
20th September 2013, 10:05 AM
Not exactly Nambi Sir. It is true that Sivaji despised fighting scenes in movies openly in interviews. But in late 60s and early 70s ,he did some amazing scenes in this genre also. I am serious and you know me unless I am convinced ,I wont talk it out. I recommend some scenes. Sivantha Man Jail break fight Scene, Raja's Randha Singh fight Scene. The beauty is that he was able to bring out the spirit,energy, humanness(showed reactions&Anxieties),inviting challenge gesture,Figher's rhythm and Grace. It is true that they are few in numbers but they stand apart. Sivaji can not be labelled and he proved his mettle in all areas(Never got caught in image trap and tried his hands everywhere with great success) . Thats why even today, we are all mesmerised.

Thats why I am really surprised. Knowing your calibre , I thought you are one of the best judges of deciphering Sivaji's skills and attributes. Disappointing that you are vouching for his fighting , stunt skills ! You also know that he tried as a Karate exponent in Dharmaraja at an age well beyond his reach and you know the outcome . Definitely, Sivaji doeesnt have any fighting capabilities, especially stunts or the briskness that needs to be displayed . It will be more of comic scene only .

iufegolarev
20th September 2013, 10:11 AM
Thats why I am really surprised. Knowing your calibre , I thought you are one of the best judges of deciphering Sivaji's skills and attributes. Disappointing that you are vouching for his fighting , stunt skills ! You also know that he tried as a Karate exponent in Dharmaraja at an age well beyond his reach and you know the outcome . Definitely, Sivaji doeesnt have any fighting capabilities, especially stunts or the briskness that needs to be displayed . It will be more of comic scene only .

Dear Mr.RN

We are very glad that you are enjoying the comedy, time and again like how we enjoy the comedy of your favourite actor (whoever it may be) !
That's what every actor is supposed to do. Make a viewer to watch be it is for appreciation or depreciation. In that way, both the actors (your favourite and our favourite) has succeeded.

Just enjoy the comedy buddy.. :-)

Gopal.s
20th September 2013, 10:22 AM
Thats why I am really surprised. Knowing your calibre , I thought you are one of the best judges of deciphering Sivaji's skills and attributes. Disappointing that you are vouching for his fighting , stunt skills ! You also know that he tried as a Karate exponent in Dharmaraja at an age well beyond his reach and you know the outcome . Definitely, Sivaji doeesnt have any fighting capabilities, especially stunts or the briskness that needs to be displayed . It will be more of comic scene only .
You are repeatedly judgemental and quoting Dharma Raja. All I am requesting is that have a look at Kathavarayan Malyudhdham, sivantha Man Jail break scene, Fight with Randha in Raja. You will get your feel on Sivaji.He had all that you mentioned and exhibited it . Before Dharma raja ,he fractured his limbs during the shooting of Thatcholi Ambu(Malayalam) and hence this outcome. I agree that he was a miscast in Dharma Raja.I definitely saw sivaji's Agility,Energy,Style and skill in some Fight Scenes in late 60s and early 70s. But Sivaji despised those scenes and felt that he is not required to do such scenes.

iufegolarev
20th September 2013, 10:30 AM
You are repeatedly judgemental and quoting Dharma Raja. All I am requesting is that have a look at Kathavarayan Malyudhdham, sivantha Man Jail break scene, Fight with Randha in Raja. You will get your feel on Sivaji.He had all that you mentioned and exhibited it . Before Dharma raja ,he fractured his limbs during the shooting of Thatcholi Ambu(Malayalam) and hence this outcome. I agree that he was a miscast in Dharma Raja.I definitely saw sivaji's Agility,Energy,Style and skill in some Fight Scenes in late 60s and early 70s. But Sivaji despised those scenes and felt that he is not required to do such scenes.

Dear Gopal Sir,

A simple request..!

Please stop pleading !

You know those are desperate measures time and again carried out by few gentlemen. Everybody has their own views. Like how he has his view, we have ours. The way he enjoys the fights sequence of NT as comedy, I am also enjoying all the sequences of his favourite actor (whoever it may be) as comedy. there is nothing wrong in it as long as NT entertains him in some form or the other.

You always, go behind and repeatedly plead...ayya ...paarungayya..dhayaseidhu paarungayya type...!

Gopal.s
20th September 2013, 10:51 AM
Dear Gopal Sir,

A simple request..!

Please stop pleading !

You know those are desperate measures time and again carried out by few gentlemen. Everybody has their own views. Like how he has his view, we have ours. The way he enjoys the fights sequence of NT as comedy, I am also enjoying all the sequences of his favourite actor (whoever it may be) as comedy. there is nothing wrong in it as long as NT entertains him in some form or the other.

You always, go behind and repeatedly plead...ayya ...paarungayya..dhayaseidhu paarungayya type...!
Subbu,
This is where you and I differ. I saw almost all movies in Tamil and other languages and know relative merits and de-merits. When someone is opinionated ,I cant leave it unanswered. To justify my stance and I gave him a worthwhile examples.It is his duty to have a look (he has easy access also) and come back with his comments. Nambi and I have no problem. We will settle out. We beg or threaten ,the crux of the argument is same. Eye for Eye is not good to justify your point.Pointing your fingures on others is not an answer for his point. Let me handle it as it is addressed to me in my own way ,leave it to me and Nambi.

iufegolarev
20th September 2013, 10:54 AM
Subbu,
This is where you and I differ. I saw almost all movies in Tamil and other languages and know relative merits and de-merits. When someone is opinionated ,I cant leave it unanswered. To justify my stance and I gave him a worthwhile examples.It is his duty to have a look (he has easy access also) and come back with his comments. Nambi and I have no problem. We will settle out. We beg or threaten ,the crux of the argument is same. Eye for Eye is not good to justify your point.Pointing your fingures on others is not an answer for his point. Let me handle it as it is addressed to me in my own way ,leave it to me and Nambi.

Oh Please.....handle it ..not an issue at all....

நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து திரைப்படங்களையும் பார்த்திருக்கலாம். அதை பற்றி எனக்கு கவலை இல்லை, கேள்வியும் இல்லை, ஐயமும் இல்லை, அக்கரையும் இல்லை, அதை தெரிந்துகொண்டு எந்த பயனும் இல்லை.

இது போல பதிவுகள் வரும்போது...அதற்க்கு நீங்கள் புரியவைகிரேன் பேர்வழி என்று எழுதும்போது அதற்க்கு அந்த பதிவுக்கு உரியவர் மேலும் நடிகர் திலகத்தை மட்டம் தட்டும்போது, அதற்க்கும் தாங்கள் பதில் பதிவு இடும்போது மட்டும் இந்த திரியின் ஓட்டம் உங்களாலோ அல்லது பதிவை இடுபவராலோ பாதிக்கப்படவில்லை. பாதிக்கபடுவதாக உங்களுக்கு தோன்றவில்லை..! இல்லையா ?

ஆனால் நான் ஒரு பதிவு செய்தால் அதற்க்கு இந்த திரியின் ஓட்டம் தடைபடுகிறது, திரியின் பரபரப்பு குறைகிறது, விறுவிறுப்பு மறைகிறது என்று அய்யஹோ உய்யஹோ என்று குதித்துக்கொண்டு பதிவிடுகிறீர்கள்..!

ஏன்...இந்த ஓரவஞ்சனை உங்களுக்கு ! ஊருக்குதான் உபதேசம் !

mr_karthik
20th September 2013, 11:04 AM
Thats why I am really surprised. Knowing your calibre , I thought you are one of the best judges of deciphering Sivaji's skills and attributes. Disappointing that you are vouching for his fighting , stunt skills ! You also know that he tried as a Karate exponent in Dharmaraja at an age well beyond his reach and you know the outcome . Definitely, Sivaji doeesnt have any fighting capabilities, especially stunts or the briskness that needs to be displayed . It will be more of comic scene only .

Dear Nambi sir,

Mr. Gopal has posted his view and appreciation about the fighting scene of 'Thangaikkaga', which is posted here by Vasudevan sir to view by everybody. It is an open evidence to watch the fighting skill of NT in that scene. Without talking about that fighting scene of Thangaikkaga, why you purposely dragging Dharmaraja here?.

If he faled in Dharmaraja means, we should not appreciate his skill in Thangaikkaga also. Is it...?.

vasudevan31355
20th September 2013, 11:22 AM
தலைவர் புகழ் பாடும் நம் ஒய்.ஜி.மகேந்திரன்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 16,ஆகஸ்ட் 2013)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/001.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/001.jpg.html)


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/002.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/002.jpg.html)


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/003.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/003.jpg.html)


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/004.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/004.jpg.html)

Gopal.s
20th September 2013, 11:25 AM
Oh Please.....handle it ..not an issue at all....

நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து திரைப்படங்களையும் பார்த்திருக்கலாம். அதை பற்றி எனக்கு கவலை இல்லை, கேள்வியும் இல்லை, ஐயமும் இல்லை, அக்கரையும் இல்லை, அதை தெரிந்துகொண்டு எந்த பயனும் இல்லை.

இது போல பதிவுகள் வரும்போது...அதற்க்கு நீங்கள் புரியவைகிரேன் பேர்வழி என்று எழுதும்போது அதற்க்கு அந்த பதிவுக்கு உரியவர் மேலும் நடிகர் திலகத்தை மட்டம் தட்டும்போது, அதற்க்கும் தாங்கள் பதில் பதிவு இடும்போது மட்டும் இந்த திரியின் ஓட்டம் உங்களாலோ அல்லது பதிவை இடுபவராலோ பாதிக்கப்படவில்லை. பாதிக்கபடுவதாக உங்களுக்கு தோன்றவில்லை..! இல்லையா ?

ஆனால் நான் ஒரு பதிவு செய்தால் அதற்க்கு இந்த திரியின் ஓட்டம் தடைபடுகிறது, திரியின் பரபரப்பு குறைகிறது, விறுவிறுப்பு மறைகிறது என்று அய்யஹோ உய்யஹோ என்று குதித்துக்கொண்டு பதிவிடுகிறீர்கள்..!

ஏன்...இந்த ஓரவஞ்சனை உங்களுக்கு ! ஊருக்குதான் உபதேசம் !
அட பாவி,
சத்திரியன் பட பன்னீர் செல்வம் போல நான் சமர்த்தாக uniform கழட்டி விட்டு ,எல்லோருடனும் அமைதியுடன் வாழ எண்ணினாலும், திலகன் போல என்னை uniform போட வைத்துதான் நீ ஓய்வாய் போல. ஏன் இந்த கொலை வெறி உனக்கு?

Gopal.s
20th September 2013, 11:26 AM
Vasu,
A good timely posting. Thanks.

iufegolarev
20th September 2013, 11:35 AM
அட பாவி,
சத்திரியன் பட பன்னீர் செல்வம் போல நான் சமர்த்தாக uniform கழட்டி விட்டு ,எல்லோருடனும் அமைதியுடன் வாழ எண்ணினாலும், திலகன் போல என்னை uniform போட வைத்துதான் நீ ஓய்வாய் போல. ஏன் இந்த கொலை வெறி உனக்கு?

பன்னீர்செல்வம்...நீ வரணம்...இந்த பன்னீர்செல்வம் இல்ல...இந்த பன்னீர்செல்வம் எனக்கு வேண்ட...

உங்களுக்காக காதுற்றுப்பேன் ACP சார்..!

https://www.youtube.com/watch?v=emel8Sr5RAM

vasudevan31355
20th September 2013, 11:51 AM
மீள் பதிவு

மதியிழந்த மனிதர்களின் மூக்குடைக்கும் 'காத்தவராயன்'

'காத்தவராயன்' மல்யுத்தக் காட்சி ஒரு ஆய்வுக் கட்டுரை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001942112.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_002126228.jpg

'காத்தவராயன்' திரைப்படத்தில் வரும் நடிகர் திலகம் அவர்கள் செய்வதாக வரும் மல்யுத்தக் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு அற்புதக் காட்சியாகும். அக்காலத்தில் அனைவராலும் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட ஒரு அரிய அற்புதமான மல்யுத்த சீன். ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் ஒரிஜினலாக மல்யுத்தக் காட்சியில் அசத்தியிருப்பார் N.T. ஒரு ஒரிஜினல் மல்யுத்த வீரனின் மல்யுத்த அசைவுகளை இம்மி அளவு கூட பிசகாமல் ஏன் அதற்கு ஒருபடி மேலாகவே தந்து கலக்கியிருப்பார் நடிகர் திலகம். மல்யுத்த வீரனுக்குரிய உடல்வாகும்,தோற்றமும் அப்படியே அவருக்குப் பொருந்தி இருப்பது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

மல்யுத்தக் காட்சியின் தொடக்கத்தில் N.T. முதலில் களத்தில் இறங்கும்போது வலது கையால் வலது தொடையைத் தட்டி, மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, வலது காலை மட்டும் சற்றுத் தூக்கி, காலை உள்வாங்கி மடித்தபடி ஓடி வந்து ,சற்று உடலைத் தளர்வாக தொய்யவிட்டு யுத்தத்திற்கு ரெடி ஆகும் போதே மிகுந்த எதிர்பார்ப்புகள் நமக்கு ஏற்படத் துவங்கிவிடும். பின் போட்டியாள வீரருடன் அவர் மோதத் துவங்கும் போது அந்த வீரர் இருமுறை நடிகர் திலகத்தை கழுத்தையும், உடம்பையும் ஒருசேரப் பிடித்து இடதுபக்கவாட்டில் தூக்கி வீசுவார். தூக்கி வீசப்பட்ட மறு கணமே புள்ளிமான் போலத் துள்ளி எழுந்து நிற்பார் நடிகர் திலகம். பின் மறுமுறை எதிர்வீரர் N.T. யை வலதுபக்கமாக தன் தோள்பட்டை வழியாக தூக்கி வீசும்போதும் அதே சுறுசுறுப்புடன் எழுந்து கொள்வார் N.T. மூன்றாம் முறை எதிர்வீரர் N.T.யின் இரு தொடைப்பகுதிகளையும் இடுப்போடு பிடித்து தூக்க முயற்சி செய்யும் போது, N.T. அந்த வீரரின் கால்களைப் பிடித்து அவரை தலை கீழாக தூக்கிப் போட்டுவிட்டு கைகளைத் தரையில் ஊன்றி நொடிப் பொழுதில் எழுந்து கைகளை நீட்டி யுத்தத்திற்கு மீண்டும் தயாராவது அருமை. பின் அந்த எதிரியின் இரு கைகளோடு தன் இரு கைகளையும் கோர்த்தவாறு பலப்பரீட்சை செய்வதும், பின் எதிராளியின் இடதுகையை தன் தலைக்குமேலாகக் பின்பக்கக் கழுத்து வழியே கொண்டுவந்து,அவர் கீழ் ஆடையைப் பற்றி அவரைத் தூக்க முயற்சிக்கும் போதே அந்த எதிராளி கொஞ்சமும் எதிர்பாராத வகையில் N.T. யின் முதுகைப் பிடித்து திருப்பி முறுக்கியவாறு பக்கவாட்டில் N.T. யைத் தூக்கிக் கிடாசும் போதும் நம் இதயமே சில்லிட்டுப் போகும். அப்படியே மனிதர் நேச்சுராக தரையில் விழுந்து எழுந்திருப்பார் பாருங்கள்! அடடா! தன் தொழிலின் மீது தான் எத்துனை ஈடுபாடு! எழுந்தவுடன் சற்று ரிலாக்ஸ் செய்வதற்காக அந்தப் போட்டிக் களத்தில் கொட்டிக் கிடக்கும் மணலின் மேல் N.T. ரவுண்டடித்து ஓடிவரும் அழகு இருக்கிறதே! காணக் கண் கோடி வேண்டும். (இடையிடையே கீழே விழுந்து எழுந்தவுடன் மறக்காமல் இரு கைகளிலும் ஒட்டியிருக்கும் மண்ணைத் தன் இரு தொடைப்பகுதிகளின் பக்கவாட்டில் தட்டித் துடைத்துக் கொள்வார்.)

பின் போட்டியாளரின் பின்புறம் நின்று அவர் உடம்பை உடும்புப் பிடியாகப் பிடித்து அவரை மூன்று முறை தூக்கித் தூக்கி நிறுத்தி நிலை குனிய வைப்பதும், அவரை இரண்டு முறை தலை கீழாகத் தூக்கி வீசுவதும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள். அடுத்து N.T. எதிரியின் கழுத்தைப் பிடித்து வளைத்து சர்வ சாதரணமாக மண்ணைக் கவ்வ வைப்பது மிரள வைக்கும் தத்ரூபக் காட்சி. எதிரி தன் முதுகின் மேலே படர்ந்து படுத்தவாறு இம்சை தர ,அப்படியே படுத்தவாக்கில் அவரை தலைகீழாக மாற்றிப் புரட்டிப் போட்டுப் படுக்கவைத்து, தான் அவர் முதுகின் மீது அமர்ந்து கொண்டு அவரது கைகளைப் பிடித்துப் பிடிபோட்டு அவரை தலை கீழாக நிறுத்தி (சிரசாசன பொசிஷனில்) அவரது இரு தூண் போன்ற தொடைகளுக்கிடையே தன் கழுத்தும்,முகமும் பதிந்திருக்க எதிரி அப்படியே தனது தொடைகளால் N.T. யின்கழுத்தை இறுக்கி அப்படியே புரட்டிப் போட, தூரமாகப் போய் டூப்பே இல்லாமல் N.T. விழுவது நம்மை திடுக்கிட வைக்கிறது. பின் எதிரி கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தை இழக்க ஆரம்பிக்க, N.T. யின் கை ஓங்க, தான் வெற்றி பெறப் போவது உறுதி என்று நிச்சயமாகத் தெரிந்து விட்ட நிலையில், வெற்றி பெறப் போகும் களிப்பை முகத்தில் காட்டி, எதிரியை சர்வ அலட்சியமாக பலமுறை தூக்கிப் போட்டு பந்தாட வைத்து மண்ணைக் கவ்வச் செய்வதும், எதிரி சோர்ந்து போய் ஒவ்வொருமுறையும் தட்டுத் தடுமாறி எழுந்திருக்கையில், இடைப்பட்ட அந்த நேரத்தில் அந்த இடத்தை வெகு அழகாக,அலட்சியமாய் ஓடியவாறு சுற்றி வருவதும்,தோள்பட்டைகளை சற்று துவளவிட்டு, உடலை சற்று தளர விட்டு,வலது தொடையைத் தட்டி வெற்றிக்கான அறிகுறியை முகத்தில் காட்டத் தொடங்குவதும், இறுதியில் அப்படியே அலாக்காக எதிரியை தூக்கி மனிதர் என்னமாய் தூக்கிச் சுழற்றுகிறார்!) தோள்பட்டையில் வைத்துக் கொண்டு மூன்று முறை சுற்றி கீழே தூக்கிப் போட்டு வெற்றி வாகை சூடுவதும் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத அபாரமான அரிய காட்சிகள். அதே போல எதிரி தன்னை இம்சிக்கும் நேரங்களில் வலியின் வேதனையைக் காட்டியவாறும், காட்டாதவாறும் அவர் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்ச்சிகள் உன்னதமானவை. குறிப்பாக ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் அவர் மிகுந்த சிரத்தை எடுத்து செய்த சண்டைக் காட்சி (மல்யுத்தக் காட்சி) இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

அந்த அற்புத, மனதை உறைய வைக்கும் மல்யுத்தக் காட்சி உங்களுக்காக.


https://www.youtube.com/watch?v=uOOftnJMs0Y&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th September 2013, 11:58 AM
இப்படி ஒரு மல்யுத்தத்தை வேறு எவரையாவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? அவர் தொட்டு வணங்கும் கால் தூசு மண்ணுக்குத்தான் சமமாக முடியுமா? அடப் போங்கய்யா! உங்க காமெடிக்குத்தான் அளவில்லாம போச்சு! காமெடியிலேயே வளர்ந்தவங்களுக்கு அதை விட்டா என்ன தெரியும்?

iufegolarev
20th September 2013, 12:29 PM
இப்படி ஒரு மல்யுத்தத்தை வேறு எவரையாவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? அவர் தொட்டு வணங்கும் கால் தூசு மண்ணுக்குத்தான் சமமாக முடியுமா? அடப் போங்கய்யா! உங்க காமெடிக்குத்தான் அளவில்லாம போச்சு! காமெடியிலேயே வளர்ந்தவங்களுக்கு அதை விட்டா என்ன தெரியும்?

வாசுதேவன் சார்,

மக்கள் கலைஞர் திரு ஜெய்ஷங்கர் அவர்கள் பாடல் இந்த தருணத்தில் நினைவுக்கு வருகிறது. நடிகர் திலகத்தை பற்றி வீம்புகேன்று பேசுபவர்களுக்கு சவுக்கடியாக இந்த பாடல் !

காய்த்த மரம் தான் கல்லடிபடும் என கண்கூடாக பார்த்ததுண்டு. ...புத்தன் ஏசு காந்தியை கூட குற்றம் சொல்லி கேட்டதுண்டு.....

https://www.youtube.com/watch?v=AywiUifGFJ4

Gopal.s
20th September 2013, 12:56 PM
நாளை எல்லோருக்கும் நீதி கூற போகிறேன். அனைவரும் வருக.

KCSHEKAR
20th September 2013, 01:00 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் காத்தவராயன் மல்யுத்தக் காட்சி மற்றும் அதைப்பற்றிய உங்களின் ஆய்வு பிரமாதம்.

Y .Gee .மகேந்திரா அவர்களின் சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரை அருமை.
இத்தருணத்தில் திரு.Y .Gee .M - E -Mail தகவல் நமது திரி நண்பர்களுக்காக.

An imp and happy information for ALL.... Sep 29th issue of VARA MALAR of DINA MALAR will have Sivaji sir's foto as wrapper. This was suggested to them by Me and Mr Ragavendar. And they accepted. ALSO FROM SEP 29TH EVERY WEEK THE VARA MALAR WILL CARRY AN ARTICLE WRITTEN BY ME ABOUT Nadigar Thilagam. A series called "NAAN SWASITHA SIVAJI"...... PL SPREAD THIS INFO ALL OVER THE GLOBE. IT CAN ALSO BE READ ON THE DINAMALAR VARAMALAR NET SITE.
Thank u
YGEE MAHENDRA

KCSHEKAR
20th September 2013, 01:03 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/SivajiPeravai_1_zps34820f88.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/SivajiPeravai_1_zps34820f88.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/SivajiPeravai_22_zpsc9259dab.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/SivajiPeravai_22_zpsc9259dab.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/SivajiPeravai_3_zps590eef3b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/SivajiPeravai_3_zps590eef3b.jpg.html)

iufegolarev
20th September 2013, 01:05 PM
எங்கே எப்போது எத்தனை மணிக்கு ?

vasudevan31355
20th September 2013, 01:08 PM
நன்றி சந்திரசேகரன் சார். 'தினமலர்' வாரமலருக்கும், ரசிக வேந்தருக்கும், திரு.ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களுக்கும், இந்த செய்தியை இங்கே பதிப்பித்த தங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த இனிய நன்றிகள். வாழ்த்துக்கள். இனி வரும் நாட்களில் 'தினமலர்' வாரமலர் நம் அனைவர் கையிலும் தவழும். நம் தவப்புதல்வனின் புகழ் அகிலமெல்லாம் மேலும் கூடும்.

vasudevan31355
20th September 2013, 01:12 PM
டியர் சந்திரசேகரன் சார்,

நடிகர் திலகம் சமூக நலப் பேரவை சார்பாக 2-10-2013 அன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற இருக்கும் முப்பெரும் விழா சீரும் சிறப்புமாக நடைபெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

iufegolarev
20th September 2013, 01:23 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Trichy/SivajiPeravai_1_zps34820f88.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Trichy/SivajiPeravai_1_zps34820f88.jpg.html)

[

Dear Chandrasekhar Sir,

Congratulations and Wishing you all the very best for the Mupperum Vizha !

Your love and affection towards Nadigar Thilagam is something that needs a warm appreciation and applause..

All the best for all your endeavors !

Regards
Subbu

vasudevan31355
20th September 2013, 01:28 PM
டியர் சந்திரசேகரன் சார்,

எனது கிராமமான ராமாபுரத்தில் இருக்கும் என் இனிய நண்பரும், நடிகர் திலகத்தையே தெய்வமாக தன் வீட்டு பூஜை அறையிலும், தன் மனதிலும் வைத்து பூஜித்து வணங்கும் திரு தனசேகரன் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ் சிறப்பாக அச்சிடப் பட்டுள்ளது. இப்போது அது தங்கள் பார்வைக்கு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4-4.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/ima4_0001-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/ima4_0001-2.jpg.html)

iufegolarev
20th September 2013, 01:29 PM
நாளை எல்லோருக்கும் நீதி கூற போகிறேன். அனைவரும் வருக.

https://www.youtube.com/watch?v=AUrPhFHHHEU

Whoever it is.....! I live for Justice !!!

https://www.youtube.com/watch?v=UeE5cEyDHdU

I am in the hands of law.....am not responsible if there is Flaw !!

Gopal.s
20th September 2013, 02:02 PM
சந்திர சேகர் சார்,
உங்கள் நற்பணிகளுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் உண்மையில் செயல் வீரர்.

KCSHEKAR
20th September 2013, 02:05 PM
டியர் வாசுதேவன் சார்,

திருச்சி விழாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி.

கடலூர் ஒன்றிய சிவாஜி சமூகநலப்பேரவை தலைவராக இருக்கும் திரு.தனசேகரன் அவர்கள் தங்களுடைய நண்பர் என்பதும் திருமண விழா நடைபெறும் ராமாபுரம் தங்களுடைய ஊர் என்பதும் அறிந்து மிக்க மகிழ்ச்சி. பதிவிற்கு நன்றி

KCSHEKAR
20th September 2013, 02:06 PM
Dear Chandrasekhar Sir,

Congratulations and Wishing you all the very best for the Mupperum Vizha !

Your love and affection towards Nadigar Thilagam is something that needs a warm appreciation and applause..

All the best for all your endeavors !

Regards
Subbu

Dear Subbu Sir,

Thanks for your wishes & appreciation.

KCSHEKAR
20th September 2013, 02:10 PM
சந்திர சேகர் சார்,
உங்கள் நற்பணிகளுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் உண்மையில் செயல் வீரர்.
டியர் கோபால் சார்,

திருச்சி விழாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

Gopal.s
20th September 2013, 02:17 PM
கண்ணதாசன் 1964 முதல் 1977 வரைதான் உண்மை பேசியதாக தன்னுடைய சுயசரிதை ஒன்றில் எழுதிய ஞாபகம்.

iufegolarev
20th September 2013, 02:41 PM
A SCENE FROM THE FILM SORGAM - THE SAME SCENE WAS TAKEN LATER IN RAJNIKANTH's PRIYA TOO....

http://www.youtube.com/watch?v=-zyxs-tVB_Q&feature=share

http://www.youtube.com/watch?v=B2X3kRDnOwM

mr_karthik
20th September 2013, 02:41 PM
நடிகர்திலகத்தின் படங்களில் ‘ஐட்டம் நடிகையர்’ (2)

இதயத்தில் நிறைந்த "ஜெய்குமாரி”

நடிகர்திலகத்தின் திரியில் இப்படி ஒரு தொடர் தேவையா என்று தோன்றக் கூடும். நண்பர் வாசுதேவன் அவர்கள் ‘ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன்’ தொடரையும், ‘நடிகர்திலகத்தின் திரை நாயகியர்’ தொடரையும், நடிகர்திலகத்தின் படங்களில் இடம்பெற்ற ‘சிறந்த சண்டைக்காட்சிகள்’ தொடரையும் சிறப்பாக தொடர்ந்து பதிப்பித்து வரும் வேளையில், நாமும் நம் பங்குக்கு இப்படி ஒரு தொடரை துவங்குவோமே என்ற ஆர்வத்தினாலும், நண்பர் கோபால், வாசுதேவன் போன்றவர்களின் உந்துதலினாலும் ஏற்பட்ட தாக்கம்தான் இந்த தொடர். ஏற்கெனவே ராஜா படத்தில் 'தாரா' வேடத்தில் நடித்த பத்மா கன்னா வைப்பற்றிய பதிவை முதல் பதிவாக்கி ஜெய்குமாரி பற்றிய இப்பதிவை இரண்டாவதாகப் பதிக்கிறேன்.

“பாசத்துக்குரிய கவிதா” (எங்கிருந்தோ வந்தாள்)

இப்படத்தில் இவரை ஐட்டம் கேர்ள் என்று கூற முடியாது. உண்மையில் ‘ஐட்டம் கேர்ள்’ கதாநாயகி ஜெயலலிதாதான் (சான்று 'வந்தவர்கள் வாழ்க' பாடலும் அதற்கான நடனக்காட்சியும்).. இப்படத்தில் ஜெய்குமாரி நடிகர்திலகத்தின் ஜோடியாக சேலை ஜாக்கெட்டுடன், சோகமே உருவாக நடித்திருந்தார். ஒரே பாடல் காட்சியிலேயே நம் மனதில் தங்கி விட்டார் (பாடலும் கூட 'ஒரே பாடல் உன்னை அழைக்கும்' என்றே துவங்கும்). தன காதலன் கண்ணெதிரிலேயே வேறொருவன் மனைவியாகப் போகும் அவலத்தை எண்ணி கண்ணீர் வடித்தவராக காட்சியளிப்பார். காதலனின் சோக கீதத்தை மனதுக்குள் வாங்கி அதை அப்படியே முகத்தில் பிரதிபலிப்பார். இதற்கு முன் படங்களிலெல்லாம் கர்சிப்பையே உடையாக அணிந்து கவர்ச்சி நடனம் ஆடிய ஜெய்குமாரியா இவர் என்று திரையுலகத்தினரும், ரசிகர்களும் அதிசயித்தனர். இந்த ரோலை ஏற்று நடிக்க கோலிவுட்டில் லட்சுமி போன்ற எத்தனையோ நடிகையர் இருக்க, இந்த ரோலுக்கு துணிந்து ஜெய்குமாரியை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் திருலோக்சந்தர், இந்த செலக்ஷனை ஏற்றுக்கொண்ட நடிகர்திலகம் ஆகியோரை பாராட்டியே ஆக வேண்டும்.

பெயர்தான் ஐட்டம் நடிகையே தவிர இப்படத்தில் அவர் செய்தது ஐட்டம் ரோல் அல்ல, கேரக்டர் ரோல். கேமரா அவர் முகத்தை குளோசப்பில் காண்பிக்கும் போதெல்லாம் முகத்தில் சோகம் பொங்கி வழியும். காதலனை பிரிந்து இன்னொருவனை மணக்க நேரிடும் சூழலில், அங்கு பழைய காதலனே வந்து பாடும் நிலையில் ஒரு பெண்ணின் மனம் எவ்வளவு பாடுபடும் என்பதை மிக அருமையாக முகபாவத்தில் காட்டியிருப்பார் ஜெய்குமாரி. "உன்னை நினைத்தே உலகில் இருந்தேன், உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்" என்ற வரிகளின்போது, இவ்வளவு அன்பான, அருமையான காதலனை கைவிட்டு ஒரு கயவனை மணப்பதை விட, மரணத்தை மணப்பதே மேல் என்று முடிவெடுக்கிறாள்.

கையில் மத்தாப்புடன் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியுடன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடக்கையில் முகத்தில் அதுவரை இருந்த சோகம் கொஞ்சம் கொஞ்சமாக வைராக்கியமாக மாற (ஐயோ, எக்ஸ்பிரஷனில் அசத்திட்டாள் குழந்தை) தரையில் கிடக்கும் பட்டாசுக்குவியலில் கையிலிருந்த மத்தாபைப் போட, அது வெடித்துச்சிதறும் நெருப்புக்குளியளோடு மாடியிலிருந்து கீழே குதித்து......... இறந்து விட்டாளா?. இல்லையில்லை நம் நெஞ்சங்களில் உறைந்து விட்டாள், நிறைந்து விட்டாள் கவிதா.

(பதறிப்போய் ஓடிவந்து எட்டிப்பார்க்கும் பழைய காதலனின் முகத்தில் பல்வேறுபட்ட எக்ஸ்பிரஷன்கள். எட்டிப்பார்த்தவர் என்ன சாதாரண மனுஷனா என்ன, எக்ஸ்பிரஷன்ல கொன்னுடுவாரே....... கொன்னுட்டார்).

“பரிதாபத்துக்குரிய கல்பனா” (கௌரவம்)

தவப்புதல்வன், வசந்தமாளிகை, நீதி, ராஜராஜசோழன், பாரதவிலாஸ், பொன்னூஞ்சல், எங்கள்தங்கராஜா என தொடர்ந்து ஏழு படங்களிலும் ஒரே ஐட்டம் நடிகையைப் பார்த்து (இத்தனைக்கும் ஏழு படங்களிலும் ஆறு வெவ்வேறு கதாநாயகிகள், ஐட்டம் நடிகை மட்டும் ஒருவர்) ரசிகர்கள் மனம் சோர்ந்து, மாற்றத்தை எதிர்பார்த்த வேளையில் ‘கௌரவம்’ படத்தில் தென்றலாய் வந்து வருடினார் ஜெய்குமாரி. இவர் ஏற்றிருந்த கல்பனா என்ற கதாபாத்திரம் வெறும் ஐட்டம் டான்ஸ் ஆடுபவராக மட்டும் இல்லாமல் கதையின் முக்கிய திருப்பத்துக்கும் காரணமாக அமைந்திருக்கும்.

தன்னுடைய கேஸை ஜெயித்துக் கொடுத்ததற்காக பாரிஸ்டருக்கு மோகன்தாஸ் கொடுக்கும் பார்ட்டியில், பாரிஸ்டர் உள்ளே நுழைய்ம்போதே மெல்லிசை மன்னரும் அதைவிட அதிரடியாக பாடலுக்குள் நுழைந்து விடுவார். அட்டகாசமான முன்னிசையுடன் துவங்கும் பாடலில் வெளிர்நீலநிற உடையணிந்த நடனமங்கையர் நால்வர் முதலில் அறிமுகமாக, அழகான அக்கார்டியன் இசையுடன், சிவப்பும் ஆரஞ்சும் இணைந்த நிறத்தில் தகதகவென்று ஜொலிக்கும் உடையில் அதிரடியாக அறிமுகமாவாள் கல்பனா (ஜெய்குமாரி). 'அதிசய உலகம் ரகசிய இதயம்' என்ற முதல் வரிக்கு குளோசப்பில் எழிலான புன்னகையுடன் மார்பை சற்று ஏற்றி இறக்கும் காட்சியிலேயே ஆடியன்ஸ் எல்லாம் பிளாட்.

பாரிஸ்டருக்கு ட்ரிங்க்ஸ் கொண்டுவந்து கொடுக்கும்போதும் காட்டும் நளின நடன அசைவுகள் என்ன, 'பெண்ணுலகு நான் உன்னை அழைப்பேன்' என்ற வரிகளுக்கு தவில் இசையுடன் இரண்டு கால்களையும் ஸ்டேஜில் படபடவென்று அடிக்கும் வேகம் என்ன, உடலை ரப்பராக வளைத்து செய்யும் சாகசம் என்ன, பாரிஸ்டர் அருகில் வந்து 'பழக்கம் இல்லைஎன்று விளக்கம் சொல்லச்சொன்னால்' என்ற வரிக்கு ஏற்ப இரண்டு புறங்கைகளையும் மணிக்கட்டில் தட்டி, சட்டென்று உதட்டில் விரலை வைத்து காட்டும் அபிநயம் என்ன, இவையனைத்திலும் கொஞ்சம் கூட மாறாத மயக்கும் மந்தகாசப்புன்னகை என்ன (வாவ், கொன்னுட்டேடி). பாரிஸ்டரே இவர் நடனத்தில் மயங்கி, சேரில் இருந்தவாரே ஸ்டைலாக அபிநயம் பிடிப்பாரே. (பாவம், தான் அகால மரணமடையப் போகிறோம் என்பதோ, தன் மரணம்தான் பாரிஸ்டர் உயிருக்கும் உலைவைக்கப் போகிறது என்பதோ இந்தக்குழந்தைக்கு தெரியுமா?. அல்லது முதல் முறை பார்க்கும்போது நமக்குத்தான் தெரியுமா?) .

இவர் தோன்றும் இரண்டாவது காட்சி. தன் வீட்டில் கருநீல நிற சுடிதாருடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் கல்பனாவிடம், தலைப்பக்கம் வந்து சில்மிஷம் செய்யும் மோகன்தாஸிடம், "இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்" என்று கொஞ்சு மொழியில் சொல்லிக் கொண்டிருக்கும்போது, எல்.ஐ.சி.ஏஜென்ட் கல்யாணமே வந்து விடுகிறான் (பாரிஸ்டரின் எமன்). கல்பனாவைப் பார்த்து, 'இவங்களை கிளப்பில் பார்த்திருக்கிறேனே' என்று சொல்லும் எமனைப்பார்த்து கல்பனாவின் ஒரு முறைப்பு. அந்த முறைப்பில் கூட வெறுப்பு தெரியாது. அழகும் அப்பாவித்தனமும்தான் தெரியும். மோகன் தாஸை தனியே அழைத்துச்சென்று பாலிசி எடுத்துக்கொள்ளும்படி கெஞ்சும் கல்யாணத்திடம் தன் பெயரில் வேண்டாமென்றும், கல்பனா பெயரில் பாலிசி எடுக்கும்படியும் சொல்ல, மீன்தொட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் கல்பனாவிடம் கையெழுத்து வாங்கிப் போக.....

மூன்றாவது மற்றும் இறுதிக்காட்சியில் கல்பனா...... இந்தக்காட்சியை முதல்முறை பார்க்கும்போது சாதாரணமாக பார்த்தோம், ஆனால் அடுத்தடுத்த தடவைகளில் பார்க்கும்போது கல்பனாவின் முடிவுக்காட்சி என்பது மனதில் சோக அலைகளைத் தோற்றுவிக்கும். அன்று அவளுக்கும் மோகன்தாசுக்கும் ரிஜிஸ்தர் ஆபிசில் திருமணம். அவன் தயாராகி வர அவள் இன்னும் ரெடியாகவில்லை.

கிரீம் கலர் புடவை ஜாக்கெட்டுடன் படுக்கையில் ஒருகையில் டீயும் மறுகையில் மெகஸினுமாக கல்பனா படுத்திருக்க, (இந்தக்காட்சி சற்று செக்ஸியான ஆங்கிளில் எடுக்கப்பட்டிருந்தாலும் யதார்த்தமாகத் தோன்றுமே தவிர வலிந்து திணிக்கப்பட்ட காட்சியாக தோன்றாது). 'இன்னுமா ரெடியாகலை?' என்று அன்போடு அதட்டும் மோகனிடம், இதோ இப்போ வந்துடுறேன் என்று குளியலறை சென்று கதவை சாத்தும்போது மோகனைப்பார்த்து, அதாவது கேமராவைப்பார்த்து, அதாவது நம்மைப்பார்த்து ஒரு கண்ணடிப்புடன் கூடிய அவரது ட்ரேட்மார்க் கள்ளமில்லா சிரிப்பு. உள்ளே ஆடைமாற்றும் காட்சி முழங்காலுக்கும் கீழே மட்டும் காட்டப்பட்டு மற்றவை ரசிகர்களின் கற்பனைக்கு விடப்படும். இறுதியாக தான் கட்டியிருந்த டவலை எடுத்து தன்னைப்படம் பிடிக்கும் கேமரா மீது போர்த்திவிட்டு, பாத்டப்பில் இறங்கி, ஒரு பாடலை லேசாக ஹம செய்தபடி ஹேன்ட் ஷவரைக்கொண்டு முகத்தில் தண்ணீர் தெரிக்கவைத்துக் குளிக்கத்துவங்க............ ஐயோ, அந்த பாழாய்ப்போன வலிப்பு வந்துவிட, பற்களைக்கிட்டியபடி துடிக்கும் கல்பனாவைப் பார்க்கும்போது நம் இதயமே வெடித்து விடும். நாம் பதறிக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கி........... இறந்து விட்டாளா?. இல்லையில்லை நாம் நெஞ்சங்களில் உறைந்து விட்டாள், நிறைந்து விட்டாள் கல்பனா.

அதென்னவோ தெரியவில்லை. நடிகர்திலகத்துடன் எத்தனையோ படங்களில் இணைந்து நடித்த சில ஐட்டம் நடிகைகளுக்கு கிடைக்காத உயிர்த்தியாகம் செய்யும் 'நடிகர்திலக செண்டிமெண்ட்' ஜெய்குமாரிக்கு மட்டும் சாத்தியமாயிருக்கிறது, இல்லை சத்தியமாயிருக்கிறது.

நெருப்பில் மூழ்கி கரைந்தாள் கவிதா....... நீரில் மூழ்கி மறைந்தாள் கல்பனா......

அழியாத பாத்திரங்களாக திரையில் வாழ்ந்து, இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் (நான்கு பெண்குழந்தைகளுக்குத் தாயான) இந்தக் "குழந்தை" பல்லாண்டு வாழ்க.....

Gopal.s
20th September 2013, 03:08 PM
ஐயோ தலைவா,

வைத்த கண் வாங்காமல், annual ரிப்போர்ட் (எங்களுக்கு Oct -Sept ) எழுதுவதை பாதியில் நிறுத்தி வரி விடாமல் நான்கு முறை படித்து மனப்பாடமே செய்து விட்டேன். வேணும்னா multiple சாய்ஸ் question ஒன்று அனுப்புங்கள் நூற்றுக்கு நூறுதான்.

ஒரு கதாநாயகிக்கு உள்ள அழகு, அருமையான மெலிந்த உடலழகு கொண்டவர் ஜெயகுமாரி.
எனக்கு ஒரு குறை நார்மல் சிவாஜிக்கும் ,ஜெயகுமாரி க்கும் ஒரு டூயட் கொடுத்து சிறிது நகைச்சுவை கலந்து காதல் காட்சியை நகர்த்தி வில்லன், ஒரே பாடலில் முடித்து ஒரு 20 நிமிடங்கள் பிரமாத படுத்தி இருக்கலாம்.(பாலாஜி விட மாட்டார்.ஈயடிச்சான் காபி கேட்பார்)

கௌரவத்தில் சிவாஜியுடன் விண்ணப்பம் வைத்த ஜெயகுமாரிக்கு ,சகுந்தலாவிற்கு நிறைய படம் குடுத்தாயிற்று ,இந்த பொண்ணிற்கு சான்ஸ் கொடுக்கலாம் என்று சொன்னதாக கேள்வி.

ஆலம்,விஜயஸ்ரீ,ஜெயகுமாரி இவர்கள் சிவாஜிக்கு கச்சிதமாக பொருந்திய item girls .ஆனால் நம்பர் ஒன்று ஹெலன்தான்.

விஜயலலிதா,சகுந்தலா ....ஊஹூம்.நோ.

பின் குறிப்பு.-- பாலைய்யா பாணியில் படிக்கவும்.
அது சரி நாலு பொண்ணுங்கன்னு எதோ சொன்னியே.....

Richardsof
20th September 2013, 03:33 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/a76222c2-feb0-4df5-a2b1-9e2eb840a894_zps6566f116.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/a76222c2-feb0-4df5-a2b1-9e2eb840a894_zps6566f116.jpg.html)

Gopal.s
20th September 2013, 04:00 PM
எங்கள் பம்மலாருக்கு இரண்டாவது வாழ்த்து கூறிய வினோத் சாருக்கு நன்றி. முதல் வாழ்த்து போன வாரமே கூறி விட்டோம்.

KCSHEKAR
20th September 2013, 04:09 PM
டியர் கார்த்திக் சார்,

ஐட்டம் நடிகையர்’ - தொடரில் பாசத்துக்குரிய கவிதாவாக எங்கிருந்தோ வந்தாள் -லிலும், பரிதாபத்துக்குரிய கல்பனாவாக கௌரவத்திலும் தோன்றிய ஜெய்குமாரியைப் பற்றிய தங்களுடைய பதிவு அருமை.

அதிலும் தங்களுடைய வர்ணனை - "நெருப்பில் மூழ்கி கரைந்தாள் கவிதா....... நீரில் மூழ்கி மறைந்தாள் கல்பனா...... " -- சூப்பர்.

அடுத்த ஐட்டத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Rangarajan nambi
20th September 2013, 04:21 PM
Dear Nambi sir,

Mr. Gopal has posted his view and appreciation about the fighting scene of 'Thangaikkaga', which is posted here by Vasudevan sir to view by everybody. It is an open evidence to watch the fighting skill of NT in that scene. Without talking about that fighting scene of Thangaikkaga, why you purposely dragging Dharmaraja here?.

If he faled in Dharmaraja means, we should not appreciate his skill in Thangaikkaga also. Is it...?.



Dear Nambi sir,

Mr. Gopal has posted his view and appreciation about the fighting scene of 'Thangaikkaga', which is posted here by Vasudevan sir to view by everybody. It is an open evidence to watch the fighting skill of NT in that scene. Without talking about that fighting scene of Thangaikkaga, why you purposely dragging Dharmaraja here?.

If he failed in Dharmaraja means, we should not appreciate his skill in Thangaikkaga also. Is it...?.

For obvious reasons. I have also mentioned there. A role beyond his age then and a total mismatch . He should have avoided such ridiculous characters. Should have chosen more meaningful roles . Thunai was one character I enjoyed . Another one was Anbulla Appa. You will see a Fatherly affection bondage between Nadiya and Sivaji , especially when he gives her a send off after marriage.

We really didnt utilise Sivaji well from the mid 70s.

Gopal.s
20th September 2013, 04:33 PM
Nambi Sir,
Thanks and I appreciate your point that all the people who are old enough(Above 55) should take the matured roles only instead of doing kissing scenes and bedroom scenes.i vouch your point. Let us celebrate Kathik's good posts and Pammalar's BirthDay. Pl.do not rake controversies now. My humble request.

mr_karthik
20th September 2013, 05:12 PM
எனக்கு ஒரு குறை நார்மல் சிவாஜிக்கும் ,ஜெயகுமாரி க்கும் ஒரு டூயட் கொடுத்து சிறிது நகைச்சுவை கலந்து காதல் காட்சியை நகர்த்தி வில்லன், ஒரே பாடலில் முடித்து ஒரு 20 நிமிடங்கள் பிரமாத படுத்தி இருக்கலாம்.(பாலாஜி விட மாட்டார்.ஈயடிச்சான் காபி கேட்பார்)

பின் குறிப்பு.-- பாலைய்யா பாணியில் படிக்கவும்.
அது சரி நாலு பொண்ணுங்கன்னு எதோ சொன்னியே.....

டியர் கோபால் சார்,

தங்கள் சிறந்த, மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி.

தங்கள் முதல் பாராவுக்கு பதில்...... உண்மைதான். பாலாஜி ஈயடிச்சான் காப்பிதான் எப்போதும் (ஹிந்திப்படத்தில் சிவப்புக்கலர் டெலிபோன் இருந்தால் தன் படத்திலும் சிவப்புக்கலர் டெலிபோனே வைக்கவேண்டும் என்று அடம்பிடிக்கும் அளவுக்கு).

பாலையாவுக்கு பதில்:

ஜெய்குமாரி தற்போது நான்கு பெண்குழந்தைகளின் தாய். கணவர் இறந்து விட்டார். ஆண்மக்கள் இல்லாததால் கஷ்ட ஜீவனம். இப்போதுதான் முதல் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார். ஜெய்குமாரி தற்போது ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவருகிறார். (நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெய்குமாரியே சொன்ன தகவல்கள் இவை) நலிந்த கலைஞர்களை காப்பாற்ற உருவாக்கப்பட்ட நடிகர் சங்கத்தினர் தங்களை வளப்படுத்திக்கொள்வதை விட இதுபோன்ற வறுமையில் வாடும் கலைஞர்களை வளப்படுத்த வேண்டும். (எங்கே செய்யப்போறாங்க)...

Russellpei
20th September 2013, 05:43 PM
Nambi Sir,
Thanks and I appreciate your point that all the people who are old enough(Above 55) should take the matured roles only instead of doing kissing scenes and bedroom scenes.i vouch your point. Let us celebrate Kathik's good posts and Pammalar's BirthDay. Pl.do not rake controversies now. My humble request.
Gopal Sir,

நடிகர் திலகம் 70 பிற்பகுதிகளுக்குப் பிறகு தானே இயக்கி அல்லது இன்னும் தேர்வு செய்து பண்ணியிருந்தால் இன்னும் நிறைய முத்துக்கள் கிடைத்திருக்கும் இல்லையா?

KCSHEKAR
20th September 2013, 05:54 PM
ஜெய்குமாரி தற்போது நான்கு பெண்குழந்தைகளின் தாய். கணவர் இறந்து விட்டார். ஆண்மக்கள் இல்லாததால் கஷ்ட ஜீவனம். இப்போதுதான் முதல் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார். ஜெய்குமாரி தற்போது ஸ்பென்சர் பிளாசா கட்டிடத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவருகிறார். (நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெய்குமாரியே சொன்ன தகவல்கள் இவை) நலிந்த கலைஞர்களை காப்பாற்ற உருவாக்கப்பட்ட நடிகர் சங்கத்தினர் தங்களை வளப்படுத்திக்கொள்வதை விட இதுபோன்ற வறுமையில் வாடும் கலைஞர்களை வளப்படுத்த வேண்டும். (எங்கே செய்யப்போறாங்க)...

டியர் கார்த்திக் சார்,

உன்மையிலேயே மனதை நெருடும் செய்தி.

இன்று நடிகர் சங்கம் ஒரு கட்டை பஞ்சாயத்து செய்யும் ஒரு இடமாக, பொறுப்பிலுள்ளவர்கள் தங்கள் சுயநலத்திற்கு, தங்களையும், தங்களுக்கு வேண்டியவர்களையும் வளப்படுத்திக் கொள்வதற்கே பயன்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

நடிப்பிற்கு இலக்கணமாக, இன்னும் எத்தனை தலைமுறை போனாலும் அவருடைய நடிப்பின் பாதிப்பில்லாமல் நடிக்கமுடியாது என்ற அளவில் அந்த எச்சத்தில் மட்டுமே வாழ்ந்தாகவேண்டும் என்ற அளவில் இருக்கும் நிலையில், அந்த நடிப்புலக மேதையின் நினைவு நாள், பிறந்த நாளில் கூட அவருடைய நினைவைப் போற்றக்கூட கையாலாகாத நடிகர் சங்கத்தைப் பற்றி என்ன சொல்ல?

Gopal.s
20th September 2013, 06:13 PM
Gopal Sir,

நடிகர் திலகம் 70 பிற்பகுதிகளுக்குப் பிறகு தானே இயக்கி அல்லது இன்னும் தேர்வு செய்து பண்ணியிருந்தால் இன்னும் நிறைய முத்துக்கள் கிடைத்திருக்கும் இல்லையா?
No comments.