PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

eehaiupehazij
29th April 2014, 12:50 PM
dear ravikiran. ?!

Gopal.s
29th April 2014, 01:00 PM
மிக்க நன்றி சதீஷ்.

Russellawz
29th April 2014, 01:33 PM
அனைத்து நடிகர் திலக ரசிகர்களுக்கும் எனது வந்தனம். என் பெயர் ராமதாஸ். ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். எனது சொந்த ஊர் தஞ்சாவூர். தற்சமயம் கல்கத்தாவில் உறவினர்களுடன் வசித்து வருகிறேன். நான் பல ஆண்டுகளாக நடிகர் திலகம் திரியை வாசித்து மகிழ்வுற்று வருகிறேன். என்னுடைய தமிழறிவிற்கு உரம் போட்டு வித்திட்டவர் நமது அய்யா நடிகர் திலகம் அவர்கள். நான் சிவாஜி அவர்களின் நிரந்தர ரசிகன். நடிகர் திலகம் திரியின் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பையும் பல ஆண்டு காலங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக ஜோ, முரளி, ராகவேந்திரன், பம்மல் சுவாமி, கார்த்திக், சாரதா, கோபால், பார்த்தசாரதி, வாசுதேவன், ராகுல்ராம் இவர்களின் எழுத்துக்கள் என்னை இங்கே ஈர்த்து இழுத்து வந்து விட்டது. இங்கிருப்பவர்கள் போல எனக்கு நிறைய விவரங்கள் தெரியாது. ஆனால் பெரும்பான்மையான நடிகர் திலகத்தின் படங்களை இன்றுவரை பார்த்து பார்த்து மகிழ்கிறேன். ஒய்வு கிடைக்கையில் நிச்சயம் நடிகர் திலகத்தின் அருமையான திறமைகளை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன்.

அனைவருக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

Subramaniam Ramajayam
29th April 2014, 02:12 PM
warm welcome mr ramadoss to NADIGARTHILAGAM thiri on my behalf and other stalwarts kindly share your thoughts and past eperiences every now and then and let us make this thiri a memorable one. may day greetings.

Gopal.s
29th April 2014, 02:18 PM
புதிய வரவான நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகனும் ,தமிழாசானும் ஆகிய, ராமதாசு அவர்களுக்கு திரியின் வந்தனம்.வருக.

parthasarathy
29th April 2014, 03:07 PM
Dear Shri. Ramadoss,

Hearty welcome to the glorious world of NT. Please share your thoughts on NT and enthrall all of us.

Regards,

R. Parthasarathy

Russellawz
29th April 2014, 09:36 PM
நல்வரவு நல்கிய கோபால், ராமஜெயம் அய்யா, பார்த்தசாரதி அவர்களுக்கு என் உவகை கலந்த நன்றிகள்.

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் படம் அம்பிகாபதி. நம் நாயகரின் நயமிகு நற்றமிழுக்காகவே இப்படத்தை எண்ணிலடங்கா தடவைகள் நோக்கியுள்ளேன். எனக்கு என்னமோ எல்லா படங்களையும் விட சிவாஜி அவர்கள் இந்த படத்தில் அற்புத வனப்புடன் காணப்படுவார். அதிலும் குறிப்பாக இறுதிக் கட்ட காட்சியான சிந்தனை செய் மனமே பாடலில் அவர் அழகு கொப்பளிக்கும் தேஜஸுடன் அமர்ந்து ஓரக்கண்ணால் பானுமதியை கண்டவாறே பாடல் பாடும் அழகே தனிதான்.

அதிலும்

தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிபாடருணைக்கிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த

வரிகளுக்கு அவர் இடைவிடாமல் மூச்சுப் பிடித்து வாயசைக்கும் தருணத்தில் மயங்காத மனமும் உண்டா? இந்தக் காட்சியின் போது அரங்குகளில் பொது மக்களால் நடிகர் திலகத்தின் திறமைக்குக் கிடைத்த கைக்கொட்டல்கள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இப்பாடலில் நடிகர் திலகத்தின் பேரழகை நோக்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகி விடுவது என்னால் தவிர்க்க இயலாததாகிறது.

'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த அம்பிகாபதியைப் பெற நாம் என்ன தவம்தான் செய்தோமோ!

தவறுகள் ஏதாவது இருப்பின் அன்பர்கள் பொறுத்தருள்வீர்.

Russelldwp
29th April 2014, 09:40 PM
Dear ram dos sir

warm welcome to this great nadigar thilagam thread

c. Ramachandran, trichy

Russelldwp
29th April 2014, 09:44 PM
[QUOTE=Gopal,S.;1129821]மிக மிக விரும்பி சுவைத்த சிவாஜி பட காதல் பாடல் காட்சிகள் .

மயக்கம் என்ன - வசந்த மாளிகை
ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
DEAR GOPAL SIR

SIMPLY SUPERB COLLECTION OF NT'S LOVE SONGS GREAT

C. RAMACHANDRAN.

JamesFague
29th April 2014, 09:56 PM
There is a difference between spontaneous Hit and Paid Hit. There were pressure not to run the
Karnan movie upto 175 days inspite of house full shows till 150 days. It is not the case with otherone.

Murali Srinivas
30th April 2014, 01:09 AM
Sivaji Season - Song No 5 posted in Paadalgal Palavitham thread. Reproduced here for people who had not seen the other thread.


SIVAJI SEASON - SONG 5

தாழையாம் பூ முடிச்சு

BAAGHA PIRIVINAI

ACKNOWLEDGEMENT

1. Mr. Lenin – Editor cum Director and s/o of Bheemsingh who was kind enough to throw light on the backdrop, the creation, execution and celebration of the film Baagha Pirivinai.

2. Mr. Mohanram - again without whom the contact and conversation with Mr. Lenin would not have been so easy.

3. EN SUYA SARITHAI – NADIGAR THILAGAM – Book published by Sivaji Prabhu Trust.

4. Various film magazines of yesteryears – in particular script writer Aroordas’s interview

DEDICATION

காவிய தாயின் இளைய மகனுக்கு,

தமிழ் அன்னைக்கு தன் கவிதைகள் மூலமாக

தங்க கீரிடம் அணிவித்த கவியரசுக்கு

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

என்று சாகாவரம் பெற்ற அந்த கண்ணதாசனுக்கு

INTRODUCTION

A movie that proved to the world (if at all any proof was required) about the calibre of NT. A film, through which the people were able to understand how the title Nadigar Thilagam conferred on him suited him to the core. A film that witnessed a new combination and which also saw the joining together of two great actors for the first time. In our series so far all the songs have been solo and for a change we will take up a duet song.

Yes, we are again going back to the great combination of NT- Bheemsingh- Kannadasan- VR.

A song that touched the hearts of many and which still continues to rule the hearts of millions.

START UP OF THE MOVIE

The movie was the second of Paa series. Bheemsingh had launched Buddha Pictures and did Pathi Bakthi. G.N. Velumani, the famed producer of yesteryears, was one of the partners in Budhha Pictures. He came out of the company and floated a new production company called Saravana Pictures. He wanted to make a film with NT- Bheemsingh combo and he was trying to get both of them for his next film. He used to regularly visit the sets of Pathi Bakthi. The year was 1958. During one such visit, he was there in the set watching the shooting. People who have seen Pathi Bakthi would be aware that NT enacted the role of an Army person who would have come back to his native village. He would be carrying a gun.

It is a known fact that NT was very much interested in hunting and often used to go for hunting in the forest. He had a penchant for guns and during the shooting he was using an actual gun. During this particular incident, he was checking the gun when accidentally it went off. Velumani who was sitting nearby and in the trajectory of the bullet was hit but he had a miraculous escape. The bullet injured his thigh. The entire crowd was stunned. Nobody could realize what was happening. It took some time for everyone to regain their senses. NT was terribly upset. He had never injured a man with a gun and this accident shook him. He profusely apologized to Velumani. Velumani was taken to a hospital and his injury was treated. Though a bit shaken Velumani regained his normal self. To make amends, NT confirmed the call sheet then and there. Not only that, he decided to do the film free of salary. Scriptwriter Aroor das who was present on the occasion vividly remembers the same.

NT & CHARITY

That takes us to another topic. There is a talk in cinema circles that NT normally is a kanjoos and doesn’t give away much. Without publicity, he had carried out so many charity works and had helped many people. He never blew his own trumpet. Not only that, he had helped many producers with this type of help. When he felt that Banthulu was not getting quick returns for Karnan, he decided to do Muradan Muthu free of cost. Another example that comes to mind is Kaaval Deivam, where he did a cameo. S.V.Subbiah was the producer of this movie and NT was to play the role of Chamundi, the character that climbs up the tree for tapping toddy. This was a guest role and NT had almost finished his work. Only few days work remained but NT was very busy. SVS and AVM Saravanan were thick friends and SVS approached Saravanan for getting the call sheet of NT. At that time NT was acting in Uyarndha Manidhan and when Saravanan told about Kaaval Deivam, NT told him that his call sheet is full. Saravanan told him that he would swap 3 days shooting dates with Kaaval Deivam. NT though initially reluctant later agreed. Thus NT took “off” from Uyarndha Manidhan and acted in Kaaval Deivam. After this one day SVS bought Tiffin in a tiffin box for NT. When NT opened the tiffin box, there was tiffin alright but the last box contained Rs 15000/- meant for NT. He became livid and shouted at SVS. The money was kept by SVS as salary. On hearing this NT’s anger knew no bounds and he simply bombarded SVS. He told SVS if he [NT] had wanted money, then SVS need to give him Rs 1.50 Lakhs because that was the salary he was paid by AVM for UM. NT didn’t accept the money and did the film free of cost. This shows how he cared for the producers. Now let us come back to the film.

STORY & SCREENPLAY

Bheemsingh always looked for a story and when a suitable thread came up, he used to build on that with the help of his writers team. But in the case of Baagha Pirivinai, writer M.S. Solaimalai had come up with a good story. It had a village backdrop for most part of the story that shifts to the city later culminating in an absorbing climax. Unlike the present day films when the protagonist alone is given importance, the stories of that period gave importance to all characters and Baagha Pirivinai was no exception. With a joint family and its members occupying the main plot, there were multiple characters with each one having an importance of its own.

When Solaimalai narrated the story, what attracted Bheemsingh and NT was the fact that the hero was a handicapped person. It was 1959 and till that time NT had not done a handicapped role in its true meaning, if you could count out Thangapadhumai and Koondu Kili [characters lose their eyesight midway through and at the climax respectively]. This “handicap” of Baagha Pirivinai had a twist to it in the sense it was an induced one. That made it more interesting to handle. Though it is highly debatable whether electricity can impair or repair a limp, logic took a back seat purely due to the emotional quotient the film offered, which the audience simply lapped up.

BREAK UP

This was a movie that saw NT and Kannadasan reuniting after a self induced gap. There was a tiff off between them due to the political leanings, which led to their separation at the first place. Readers and public in general think that NT started his political career in DMK. The fact is he was never a member of either DK or DMK in the first place. He was close to the two parties due to the loyalty factor. EVR had given the title of Sivaji to him. While Annadurai gave him the required break on Stage by making him play the role of “Sivaji”, MuKa penned the dialogues for his debut film Parasakthi and the fact that MuKa and NT were close friends also played a part in people identifying NT with DMK. In fact NT’s marriage with Kamala Ammal took place in presence of MuKa on 1st May, 1952 at Swamimalai. The subsequent period after Parasakthi saw many films getting released with the NT-MuKa combo such as Thirumbi Paar, Manohara, and Raja Rani to name a few. Though NT was moving with the leaders of the Dravidian party, his soul was not there. Having born to a father who took part in the freedom struggle, it was difficult for him to think otherwise. Moreover, the non-belief in God was something that he could not bring himself to endorse. It was an uncomfortable living for him. Things began to happen in both political and cine fields, which were, intertwined right from the beginning as for as Tamilnadu was concerned.

MGR who had started as a Congressman had moved away from it and he was slowly getting dragged into DMK. MuKa here also played an important role and he was able to convince MGR. By this time MGR was establishing himself as a hero who can carry a film on his own. With Malaikallan providing the required impetus, he was moving into the top bracket. Come 1956, he had Madurai Veeran, which pushed him to the stardom. NT having tasted success with his very first film was already there and by this time the greatest rivalry ever witnessed in the Tamil film Industry started taking root. That was the period when a new phenomenon called Rasigar Mandram started taking shape and soon they were mushrooming all over TN. Now a group in DMK wanted to take advantage of this as they felt that MGR would serve their interests more in the party than NT and so a move was orchestrated to oust NT from the scheme of things. Talks in private and public targeted him and it was slowly paying dividends and causing frustration to NT. One such incident took place in 1955-56. There was a cyclone that hit Tamilnadu and the damage was immense. Annadurai had asked his party men and film fraternity to collect and contribute funds and essential items for the affected public. NT who was in Virudhunagar did a tour in an open vehicle. On seeing their hero in flesh and blood, the public contributed handsomely. NT gave the collected materials to a trusted person along with his share also and asked him to handover it to DMK headquarters. Having done his part, he went for his shooting. He heard that there is going to be a public meeting where the contributors would be facilitated. But he never received any invitation and when he checked up with his home, they had not also received anything. Not losing heart, he came to Chennai on the day of function but nobody bothered to call him. To rub salt into the wound, NT came to know that the man who is going to be felicitated is MGR. The irony was NT had done the maximum collections but MGR who was not even in the scheme of things found himself in the center stage. This upset NT. Annadurai had enquired “கணேசன் வரலியா?” The group which had worked overtime for ousting NT told Anna that “அவர் வரலேனு சொல்லி அனுப்பிச்சிட்டார்.”.

On seeing NT and his plight, it was Bheemsingh who told him not to worry and asked NT to accompany him to Tirupathi. NT feeling let down by the group (on whom he had placed his faith) decided and went to Tirupathi. There were heavy rains but still he and Bheemsingh had the darshan of Lord Venkateswara. It was a early morning seva called Viswarooba dharisanam. Dinathanthi the paper that had a knack of breaking news as for as cine stars were concerned smelt this and the next day the headlines screamed நாத்திகரான சிவாஜி கணேசன் ஆத்திகரானர். திருப்பதியில் சாமி கும்பிட்டார்.

For the group, which was waiting for an opportunity to oust him, it was “God” sent. Suddenly the group became vociferous and calls were made in public to remove him from the party because he had violated the party discipline (Thirupathi Ganesa! Thirumbi Paar), without even realizing that he was not even a party member. This made NT to severe ties with the leaders of DMK and its partymen. (It is another matter that the same DMK men came and asked for his call sheet for their movies. NT, the gentleman he is, heeded their request and acted in Puthaiyal and Kuravanji.)

Unfortunately the group’s tactics saw Kannadasan falling prey to their designs and he staunchly opposed NT. The fact that Kannadasan was supposed to contest the 1957 Assembly elections on the DMK ticket must have also played a part in his decision. [He contested from Thirukoshtiyur (the constituency was removed subsequently), but lost]. He was running a magazine called Thendral. At that point of time, he used a still photograph of NT from the film Tenali Raman. In that film there would be a scene where the king would order the execution of Tenali Raman by burying him neck deep in the sand and putting the elephant to dismember his head. Kannadasan published this still photograph (NT buried skin deep with the elephant standing nearby with its feet up) and captioned it as Sivaji’s Ethirkaalam with a question mark. It indirectly implied that he had no future. This evoked a strong reaction in NT camp and NT himself was pricked. So when they happened to meet at a studio within a few days of this still coming out, it led to serious arguments between them and at one stage it seemed that things would go out of hand. But nothing untoward happened. But one thing that emerged thereafter was Kannadasan would not be writing songs for NT films. While others did the job for NT films, Kannadasan started writing more for MGR. He also went to the extent of writing dialogues for MGR films with Madurai Veeran and Nadodi Mannan were the significant ones. Following years saw the rivalry between NT and MGR deepening and when two advertisements for the film “Utthama Puthiran” came out on the same day announced separately by two different companies with one starring NT while the other had MGR in the lead, it led to a flash point. Since that is out of our preview, we will talk about Kannadasan’s rift.

By this time Banthalu had started producing the epic Veerapandiya Kattabomman. Kannadasan probably irked by this started his own movie based on the same subject. While Banthalu’s movie talked about the brave palayakaran of Panchalankurichy who refused to be cowed down by the British Empire, Kannadasan took up the story of Marudhu brothers of old Ramanathapuram district and named the film as Sivagangai Seemai with SSR in the title role. NT’s camp didn’t take this lightly and it further eroded the chances of reconciliation. The cine field and the entire Tamilnadu watched this tussle taking shape. But when the products were brought out for public scrutiny, Kattabomman went on to become a roaring success whereas SS failed miserably. Even Kannadasan’s flowery language failed to rescue the film. Now Kannadasan understood the folly of opposing NT, the born genius and NT on his part realized what he was missing out by not allowing Kannadasan to write for his films. Both were waiting for the opportune moment, which Baagha Pirivinai provided.

PATCH UP & SONGS

Bheemsingh was a person who always took a liberty with NT and he on his turn always had a soft corner for his Bheem Bhai. So Bheem Bhai could put it across and with the music duo of VR fully backing it, NT decided to accede to their wishes. But before this happened, Marutha Kasi and Pattukottai Kalyanasundaram had been contracted to write the songs. Pattukottai had written all the songs for Pathi Bakthi. So Kannadasan when contacted, told Bheemsingh to proceed with Pattukottaiyaar, as he was a good poet. But Bheemsingh stood his ground and Kannadasan agreed to write. Marutha Kasi wrote one song and Pattukottaiyaar wrote 2 songs. Nevertheless with Kannadasan coming in, most of the songs went to Kannadasan and all were gems.

One of the song situation was about a man who is physically handicapped throwing questions at the maid servant of his home about love and affection and she replying to the same assuring him that women loved men even with their defects. The second situation was a Thalaatu song and contrary to normal practice, here was a man who was singing a lullaby to make his son sleep. Not a normal sweet lullaby but a one heavily coated with sadness and pessimism. Kannadasan came up trumps on both occasions.

CONTROVERSY

There were two more songs. One was the thiruvizha song “Therodum Enga Seeranan Maduraiyile”, where again the oyilaatam feel and melody went hand in hand. Then there was the first night song and it again brought bouquets and brickbats equally for Kannadasan. Bouquets for the simple and effective lyrics and brickbats for the same lyrics. The song’s pallavi “Thangathile oru kurai irundhaalum adhu tharathinil kuraivadhundo” was the reason for Kannadasan getting the flak. People rather pundits questioned the line asking how Kuraiyulla Thangam can be called as Tharamana Thangam. Kannadasan later admitted that though logically what he had written was wrong, he wrote it for emphasizing the character of the hero. He cited the charanam lines “Singathin Kaalgal Pazhuthupattaalum Seetram Kuraivadhundo” in support of his argument. Lata Mangeshkar sang the same song in Hindi. Tuned by a Music director called Ravi, this song “ Thum Hi Meri Mandir” won the Filmfare’s best female singer award for Lata. Let us go to the background of the song sequence in the story that goes like this.

SONG BACKDROP

The story is set in Alanganallur, a suburban village in the outskirts of Madurai. (Bheemsingh seems to have had a special place for Madurai and especially his Paa series movies such as Baagha Pirivinai, Paava Mannippu, Paar Magale Paar had a backdrop of Madurai and even Paalum Pazhamum has a part that takes place in Madurai). The Joint family consists of two brothers. While the elder brother and his wife are at loggerheads always, the younger brother and his wife are a perfect couple. While the elder doesn’t have a child, the younger is blessed with two male children. The elder of the two children Kannaiah during childhood climbs up a lamppost to remove the kite from the electric lines, where it got struck up and he accidentally touches the live wire and fells down. This results in his left limps becoming paralysed and leads to a bend in his left hand and a limp in his left leg while walking. This prevents him from studying further and he stays at the house and confines himself to agricultural work but he happens to be the pet of all except his Periamma, who always finds fault with him. Kannaiah’s younger brother Mani is doing his college at Chennai. The Elder brother’s wife Akilandam has a nephew and a niece at Singapore. She receives a message that they are coming to visit her and her joy knows no bounds but her husband is skeptical and is not favourably inclined towards their arrival. Kanniah’s mother who regularly visits the market happens to meet a girl called Ponni, an orphan and she brings her home. Kannaiah takes a liking to her and she is attracted by his innocence. While he is in the agricultural field, Ponni comes from the Sandhai and the song comes up.

STAR CAST

Before proceeding with the song, let us look at some interesting information about the star cast. There were two great artists in this film who joined hands with NT for the first time. Abinaya Saraswathy or Kannadathu Paingili (as she was affectionately called) B.Saroja Devi acted as the jodi for the first time with NT. Sarojadevi made her debut in Kannada movie Mahakavi Kalidasa opposite Honnappa Baghavathar in 1955. Banthalu who had a knack of identifying the real talent saw in her immense potential and he took her for his film School Master. Though a small role, she was noticed. Meanwhile MGR looking for a good heroine material for his Thirudaathe happened to see her and booked her. He also contracted her for his own movie Nadodi Mannan. There started one of the longest duration of the same pair in Tamil Cinema and Sarojadevi went on to do 27 films with MGR, which was later broken by JJ, who did 28 films with him. Banthalu gave Saroja Devi a dancer role in a song sequence in “Thangamalai Rahasiyam” and later cast her opposite Chandra Babu in his Sabaash Meena and that was a role that appeared throughout the movie. By this time Nadodi Mannan was released (Aug –1958) and she had become a hot property. The next year (1959) saw the release of “Kalyana Parisu” and with that she had reached the Super stardom. In this background, she was approached for the film Baagha Pirivinai. When she was told that she had to act opposite NT, she was more than happy. She was the only person who was able to easily switch over from MGR films to NT films and vice versa. Just as we discussed in the previous songs, an actor was branded as an X camp men or Y camp men depending upon the roles he/she played in NT/MGR films regularly. But Sarojadevi was the only heroine who acted in both NT and MGR films simultaneously and she fitted both the Thilagams to the proverbial Tee. Again she had done a good role in Baagha Pirivinai as the Orphan girl, Ponni. This jodi continued to be the main attraction and they proved that in many films. The chemistry between the two was still intact and it was proved when NT and SD did Once More in 1997.

MR Radha- he was also called Nadiga Vel. Basically from the stage this man introduced a new method of acting. He had a unique voice that can range from the shrill on the one side to the louder tone on the other. He was elder to NT and he too played a part in NT joining the stage troupe. Though he shared stage space with NT, it would be a surprise to many that this film was the first where they jointly worked together. NT was 7 years old in the industry and this union happened only at that time. MRR by now had created a place for himself in the Tamil film world. His stage play Raktha Kanneer, a successful one at that, was made into a film in 1954 and it catapulted him to stardom. As most of the readers are aware, he was a rationalist and he used to always induct his thoughts into the dialogue with a coat of sarcasm and wit. This was received well by the audience. Starting with Baagha Pirivinai, the combination of NT- Bheemsingh- MRR continued throughout the Paa series of movies except for a few movies say Paasa Malar etc. This movie saw MRR play an important role, which is pivotal to the story. People especially women could be seen cursing him in the theatre. His villainy was through dialogues and not by any physical activity, except in the climax when he would abduct the child of NT for circus show. He would be called as Singapooran (indicating he is Singapore returned) and this word got etched in the mind of the audience. Here in this movie too, his sarcastic dialogue on Kuzhai Puttu is a popular one till this day. பாரின்-லே அவனவன் நீராவியிலே கப்பல் விடுறான் ரயில் விடுறான் நீ என்னடானா புட்டு செஞ்சு உள்ளே விடுறே

Just as we discussed earlier, during those days all characters in the story had equal importance and especially Bheemsingh movies specialized in this. Balaiah as the head of the family, SV Subbiah as his brother and father of NT and Nambiar, MV Rajamma as his wife, CK Saraswathy as the scheming Akilandam (wife of Balaiah), Nambiar as the younger brother of NT, (who falls prey to the machinations of MRR and his sister enacted by Gemini Chandra), everyone had a meaty role and everybody played their part to perfection. Balaiah would be his usual self நாளைக்கு மாட்டு பொங்கல். மாட்டுக்கு பொங்கல். உனகில்லெ , which he tells to tease his wife.

NT AND CHARACTER ESSAY

When it comes to acting do we need to say anything about NT? For an artist like him, you need to only write such a character and he would do full justice to his role. Kanniah gave him ample scope to exhibit his talents and he came out with flying colours. The bend arm and leg was a challenge to him. He relishes such things and worked on it. Critics and detractors alike tried their level best to pinpoint the faults in his walk and gestures but they ended up without success. Not for him the different gaits and gestures. From the introduction scene when he falls into the water tank while trying to tie the buffalo in the shed, till the climax fight when he regains the normal limps by another accident, it was limpness personified (if it could be put like that). There were many scenes where he would have done it so casually but so effectively that you would simply love this man. The way he asks Balaiah about the dhoti (இவ்வளவு சின்ன கரையா இருக்கு. இன்னம் கொஞ்சம் பெரிய கரையா வாங்கிருக்கலாமிலே ), his repeated peeping when he is not allowed to go near his brother when he comes back, his complaint about MRR to Nambiar, his fears that his brother is slowly moving away from his family, his affection and expectation from his brother .ஏன்டா தம்பி எனக்கு நீ பட்டணத்திலிருந்து எதாவது வாங்கிட்டு வருவே-ன்னு நினைச்சேன். என்னை மறந்திடியா; பரவாயிலே

His immediate replies to his aunt and MRR when they make fun of him, you would not find a better actor. Not only that, this film also emphasized the fact that physical handicap need not be a deterrent and the person can be positive in his outlook. In that way the NT character was etched in a positive manner that was evident throughout the movie. When the village girls make fun of him, he replies back in the same coin. Ditto when his aunt and MRR make fun of him. There is a scene where MRR tries to threaten NT with the dog, his replies would be tit for tat. MRR says அமெரிக்காலே பொறந்து லண்டன்லே வளந்து
for which NT replies இப்போ அலங்காநல்லூருக்கு பொறுக்க வந்திருக்கு

Even certain scenes (the earlier one to establish his role – falling down on trying to climb the ladder, his inability to pick up the water glass while eating), would have been done to establish the fact how the affection Ponni has for Kanniah turns into love.

SONG COMPOSITION

Now coming back to the song, Kannadasan when told about the situation understood the same and came out with sandhangal. He was told about the character names and he made use of it in the song (during those days, most of the character names would get reflected in the song. It shows the involvement the artists and technicians had in the making of the film). Kannadasan’s wife’s name was Ponnamma and so Ponni became Ponnamma to rhyme with Kanniah. The character is a villager with no educational background and he is innocent to the core. So his doubts are basic and simple. Though he is positive, he has an inferiority complex when it comes to women, because of his physical defect. The girl though she is also not educationally qualified, nevertheless has a worldly knowledge that is reflected in her answers. If his questions have an expectancy tone underneath, her replies underline the affection and love she has for him.

The poet in him came out with comparisons (uvamaigal) that were simple, yet thought provoking. His personal life happenings had often got reflected in the songs he wrote. He had a feeling that his wife (not from a rich family) may have felt bad, as she had not brought any great seer varisai from her home. This is because Kannadasan’s brother AL.Srinivasan had got married from a rich family and he had received the seer varisai traditionally associated with Chettinadu families. He puts his question

தாயாரின் சீதனமும்

தம்பிமார் பெரும்பொருளும்

மாமியார் வீடு வந்தால் போதுமா; அது

மானாபிமானங்களை காக்குமா

She consoles him by replying to the adhangam. See how Kannadasan had given an answer. Simple lines, which highlights the life style of Tamil women, belonging to the lower strata.

மானமே ஆடைகளாம்

மரியாதை பொன்னகையாம்

நாணமாம் துணையிருந்தால் போதுமே; எங்கள்

நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே

நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே

Having talked about the status factor, the hero now explores the mind of women in general and this girl Ponni in particular about the mindset of women with regard to handicapped persons. He is aware that she is affectionate and caring towards him but he wants to find out whether the sympathy transcends to love. He asks her whether women would ever think of marrying specially abled persons.

அங்கம் குறைந்தவனை

அங்கம் குறைந்தவனை

அங்கம் குறைந்தவனை

அழகில்லா ஆண்மகனை

மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா; வீட்டில்

மணம் பேசி முடிப்பதுண்டோ பொன்னம்மா

மணம் பேசி முடிப்பதுண்டோ பொன்னம்மா

Hurt by the notion that women normally do not marry such men, she replies him explaining the rationale behind women’s feelings. She affirms him that women don’t go by external or physical attributes but they look only for affection from the men. For this Kannadasan the genius, makes use of a simple uvamai but how effectively conveys

மண் பார்த்து விளைவதில்லை

மரம் பார்த்து படர்வதில்லை

கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா;

கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா

கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா

SINGERS

As readers must be aware, the song was by TMS and P.Leela. It should come as a surprise to at least to few of the readers. The reason being instead of PS, it was PL. There was no specific reason for the change. PS had rendered songs for the same film. MSV always tried to use some good voices in his films. PS was the undisputed queen of TFM and there was no question of MSV replacing her. PL was one of the leading playback singers in TFM earlier and she continued to be the no 1 in Malayalam cine field till 70’s. So MSV used her for this song and she proved that she is adept in singing rural based folk songs also. What we can say about TMS? The way he rendered the song is a treat to hear, never mind even if you are listening to it for the 1000th time. Even without the visual, if we hear the song, you will get lost in its beauty. The intermittent humming by TMS in between the charanams takes the cake.

The tune of the song was simple but what lifted the song was the same simplicity and the background humming (reflecting that of the farmers engaged in the field) that had a haunting melody to it. Not only that, in between the charanams, a shepherd crosses them with his flock of goats. The lullaby he uses to goad his flock is so lilting and haunting and it is so especially when he finishes, the volume comes down to a feeble note before resuming. With the use of minimum instruments, Mellisai Mannargal had created a song that was received with great enthusiasm. When the movie got released, all the songs became Super hits. This was the first movie that had its songs released in the vinyl record. It sold like hot cakes. It is almost 55 years old but still the songs even if heard today is refreshingly fresh. For the benefit of readers the songs are

1. பிள்ளையார் கோவிலுக்கு வந்திருக்கும்

2. தேரோடும் எங்க சீரான மதுரையிலே

3. தாழையாம் பூ முடிச்சு

4. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

5. ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே

6. ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

7. ஆட்டம் ஆட்டம்

Normally in Tamil movies, handicapped characters were/are used to evoke some cheap comedy, which is to say the least, is disgusting. But Baagha Pirivinai changed it and such specially abled persons felt that they have been projected fairly. In fact on a personal experience, I have met a person who had a problem with his hand, waxing eloquent about this song. It seems that he was averse to marriage but when he saw the movie, he changed his mind and got married, he told me.

PICTURISATION

The song can be watched for the sheer genius of NT. When the song starts, he listening to the lullaby puts up a dance like jumps but he never falters in his step. Same way when the song finishes, if you check he would encounter an uneven piece of land, which would climb up and then come down. See how he manages those steps. After coming down, he crosses a small stream of water and he walks on stones placed to cross and at the end uses his leg to splash water on Saroja Devi. Watch it to relish it.

Another thing (though it would sound like cliché) is how he as an actor never thought about his image. During the song, he sits on top of a buffalo and sings. Imagine a top Hero, acting as a handicapped person, with a typical village hairstyle riding on the back of a buffalo. He was Kanniah in the movie and if Kanniah had to ride on a buffalo, so b it. That’s why we still cherish this great man.

The movie was released on Oct 31st of 1959. It was Deepavali and as it always happened most of the time, another NT film “Aval Yaar” got released on the previous day (30.10.1959) but Baagha Pirivinai was a hit from Day 1, Opening show. It was a stupendous success. In Madurai, it was released in Chintamani Talkies and it ran for 216 Days. If we leave out MKT’s Haridas, this film held the record of having run for the highest no days in regular shows for so many years and even now (after 55 years), this movie still holds the record for any Black & White movie as for as the no of days are concerned.

This success was a very sweet one for Bheemsingh. He had started his career as an assistant and is rumoured that he directed the movie “Panam” (2nd movie of NT –1952) but N.S.Krishnan put his name in the director’s slot. So his official first film was Ammaiyappan. Adopted from an English story, the screenplay and dialogues were written by MuKa. At the same time, Modern Theatres was producing “Sugam Enge” and it was also adopted from the same English story and Kannadasan wrote dialogues. While Sugam Enge became a hit, Ammaiyappan failed. His next film was Raja Rani and again MuKa wrote it. It also failed to make a dent in the Box office when it was first released . But Bheemsingh was not unduly perturbed and he had confidence in his craft. Then Pathi Bakthi happened in 1958, which was a 100-day movie and Baagha Pirivinai celebrated Silver Jubilee. It seems that Bheemsingh always used to say that such sentiments (If the initial two films flop, then the director’s luck is bad) should not be given importance.

But in spite of film evoking positive response on this front, the same thing was a deterrent for many heroes (read Hindi heroes). Seeing the success of the movie, Bheemsingh wanted to remake the movie in Hindi. But top heroes were hesitant to do the movie. One they had to act as a handicapped person throughout the movie and second, the role was de-glamourous. But one hero realizing the potential of the story and the character said yes when approached and he is none other than Sunil Dutt. Nutan was paired opposite him. Though they had acted together earlier, this movie gave the biggest break for them as for as their pairing was concerned. Named “Khandaan”, Bheemsingh himself directed the movie. It was a Super duper hit.

While talking about the Hindi film, one more interesting info is there. G.N.Velumani, the man who had produced the Tamil movie had initially come forward to produce the film in Hindi also. But when Hindi heroes were backing out, Velumani also had second thoughts about the Hindi production and he went for a jungle-based story. So producer Vasu Menon, who was expressing a desire of producing the movie willingly took over and the movie made huge profits for him. The profit margins were so good that Vasu Menon built Vasu studio in Chennai out of it. Velumani who had opted out of the Hindi project went ahead with his movie “Rajkumar” but it was a big flop and Velumani did suffer a huge loss out of it. A sad irony - Velumani disowned his own baby in pursuit of greener pastures, and he ended up as the loser.

The movie was brought back to limelight in 1977 when 16 Vayadhinile was released. Naturally people started comparing Sappani with Kanniah. Everybody was talking about the inspiration factor. But most of the people are not aware that the inspiration for Kamal came by not watching the movie Baagha Pirivinai but enacting the movie. Yes, Bheemsingh did the remake of Baagha Pirivinai in Malayalam after 18 years. Titled Nirakudam (meaning Niraikudam in Tamil), Kamal and Sridevi did the lead roles. The movie got released in 1977 before 16 Vayadhinile. So having done the remake in the same year, it was smooth sailing for Kamal in 16 Vayadhinile.

Before signing off, let me add my personal note. Since it was released in 1959 (I was not even born), I saw it much later in 1971, when it was released in Madurai- Vellaikannu. Later saw it in Ganesha, when I could relate it to more. i saw it many times after that. As said earlier, it was a Silver Jubilee hit and crossed 100 days in many centers. The Cast and the crew visited most of the cities in Tamilnadu, where the victory celebrations took place. It seems Bheemsingh had remarked that his showcase had started overflowing with trophies. Overflow it did when the subsequent Paa series movies Paava Mannippu, Paasa Malar, Paalum Pazhamum and Paarthhal Pasi Theerum all went on to celebrate jubilees one after another.

Here is the lyric part

[B]ஆண்:

தாழையாம் பூ முடிச்சு

தடம் பார்த்து நடை நடந்து

வாழையிலை போல வந்த பொன்னம்மா;

பெண்:

பொன்னம்மா

ஆண்:

என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா

என்னம்மா

பெண்:

பாளை போல் சிரிப்பிருக்கு

பக்குவமாய் குணமிருக்கு

ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணையா

ஆண்:

கண்ணையா

பெண்:

இந்த ஏழைகளுக்கு என்ன வேணும் சொல்லையா

ஆண்:

சொல்லையா

(பாளை ---)

ஆண்:

தன்னானே தனனே ----

தாயாரின் சீதனமும்

தம்பிமார் பெரும்பொருளும்

மாமியார் வீடு வந்தால் போதுமா; அது

மானாபிமானங்களை காக்குமா ; அது

மானாபிமானங்களை காக்குமா

(தாழையாம் பூ முடிச்சு)

தன்ன----

பெண்:

மானமே ஆடைகளாம்

மரியாதை பொன்னகையாம்

நாணமாம் துணையிருந்தால் போதுமே; எங்கள்

நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே

நாட்டு மக்கள் குலபெருமை தோன்றுமே

(பாளை போல் ---)

ஆண்:

அங்கம் குறைந்தவனை

அங்கம் குறைந்தவனை

அங்கம் குறைந்தவனை

அழகில்லா ஆண்மகனை

மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா; வீட்டில்

மணம் பேசி முடிப்பதுண்டோ பொன்னம்மா

மணம் பேசி முடிப்பதுண்டோ பொன்னம்மா

பெண்:

மண் பார்த்து விளைவதில்லை

மரம் பார்த்து படர்வதில்லை

கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா;

கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா

கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா

(பாளை போல் ---)

( தாழையாம் பூ முடிச்சு)

அன்புடன்

RAGHAVENDRA
30th April 2014, 07:29 AM
தமிழே தமிழைப் பாடும் சிறப்பு நடிகர் திலகத்திற்கு மட்டுமே சாத்தியமானதொன்று. அத் தமிழை போதிக்கும் ஆசான் நடிகர் திலகத்தின் ரசிகராயிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இருவருமே மக்களிடம் தமிழை சென்று சேர்ப்பதில் ஈடுபட்டுள்ளனரே.

ராமதாஸ் அவர்களே தங்கள் வரவு நல்வரவாகட்டும். தங்களுடைய அம்பிகாபதி பதிவின் மூலம் கம்பனின் மகனை தாங்கள் எவ்வாறு ரசித்துள்ளீர்கள் என அருமையாக விவரித்துள்ளீர்கள். தங்களுடைய எழுத்தில் பிழை காண எனக்கு அறிவும் ஆற்றலும் தகுதியும் போதாது.

தங்களுடைய பங்களிப்பின் மூலம் இத்திரி மற்றுமொரு புலமையை பெறுகிறது. பாராட்டுக்கள். தொடருங்கள்.

J.Radhakrishnan
30th April 2014, 08:49 AM
பழைய காவியங்கள் நவீனமயம் ஆகி இன்றைய தலைமுறையினருக்கும் சேரும் வண்ணம் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கி நடிகர் திலகத்தின் கர்ணன் மூலம் மதோன்னத வெற்றி பெற்ற திவ்ய நிறுவனம் திரு சொக்கலிங்கம் அவர்களின் அடுத்த முயற்சியான மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியம் இந்த வாரம் 50வது நாளை எட்டிபிடிக்கிறது.

திரை உலகத்தை பொருத்தவரை என்றுமே இருகண்களாக, இரு தூண்களாக என்றும் விளங்குபவர்கள் நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் என்றால் அது சத்திய வாக்கு !

இன்றும் இவர்கள் திரைப்படங்கள் தமிழகத்தின் பல அரங்குகளில் புதிய படங்களை விட அதிகம் பார்வையாளர்களை, மகசூலை பெறுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

சாதனை....சஹாப்தம் என்ற இரு சொல்லிற்கும் இரு வல்லவர்கள், நல்லவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும் ! அவர்கள் நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மற்றும் மக்கள் திலகம் திரு mg ராமசந்திரன் அவர்கள்.

வளர்க அவர்களது புகழ் !

2012இல் வெளிவந்து 152 நாட்கள் ஓடிய கர்ணன் திரைப்படத்தின் 50வது நாள் மற்றும் 2014இல் மார்ச் மாதம் வெளிவந்து வெற்றிகரமாக இந்த வாரம் 50வது நாளை தொடும் ஆயிரத்தில் ஒருவன் விளம்பரம் ஒரே அச்சாக அனைவரின் பார்வைக்கும் சமர்பிக்கிறேன் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/capture_zps8350192c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/capture_zps8350192c.jpg.html)



கர்ணன் 50வது நாளில் சுமார் 100 தியேட்டர்களில் ஓடியபோது அதே 50வது நாளில் ao எத்தனை தியேட்டர்களில் ஓடுகிறது என்பதை பார்க்கும் போது புரிவது ஒன்றே ஒன்று அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் ராஜ்யமே

J.Radhakrishnan
30th April 2014, 08:51 AM
தமிழே தமிழைப் பாடும் சிறப்பு நடிகர் திலகத்திற்கு மட்டுமே சாத்தியமானதொன்று. அத் தமிழை போதிக்கும் ஆசான் நடிகர் திலகத்தின் ரசிகராயிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இருவருமே மக்களிடம் தமிழை சென்று சேர்ப்பதில் ஈடுபட்டுள்ளனரே.

ராமதாஸ் அவர்களே தங்கள் வரவு நல்வரவாகட்டும். தங்களுடைய அம்பிகாபதி பதிவின் மூலம் கம்பனின் மகனை தாங்கள் எவ்வாறு ரசித்துள்ளீர்கள் என அருமையாக விவரித்துள்ளீர்கள். தங்களுடைய எழுத்தில் பிழை காண எனக்கு அறிவும் ஆற்றலும் தகுதியும் போதாது.

தங்களுடைய பங்களிப்பின் மூலம் இத்திரி மற்றுமொரு புலமையை பெறுகிறது. பாராட்டுக்கள். தொடருங்கள்.



welcome Ramadoss sir

Gopal.s
30th April 2014, 09:15 AM
Thanks to Pammalar for his meticulous compilation.


சிவாஜி 83

1. சிவாஜி என்கிற வி.சி.கணேசன் பிறந்த தேதி : 1.10.1928, திங்கட்கிழமை. இந்த தேதியில் விழுப்புரத்தில் மாலை 4:30 மணியளவில் ராஜாமணி அம்மாள் - சின்னையா மன்றாயர் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.

2. தன்னுடைய ஏழாவது அகவையில், திருச்சி சங்கிலியாண்டபுரத்தில், தனது வீட்டுக்கு அருகாமையில் நடைபெற்ற "கம்பளத்தார் கூத்து" நாடகத்தில், ஒரு நாள் வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடித்ததற்காக, சுதந்திரப் போராட்ட வீரரான தனது தந்தையின் கடுங்கோபத்திற்கு ஆளாகி கன்னத்தில் அறையும் வாங்கினார்.

3. இவர் சேர்ந்த முதல் நாடகக் கம்பெனி, யதார்த்தம் பொன்னுசாமியின் 'மதுரை ஸ்ரீ பால கான சபா'. இவரது முதல் நாடக வேடம், 1935-ல், திண்டுக்கல்லில் "இராமாயண" நாடகத்தில் பாலஸ்திரீபார்ட்டாக, 'இளம்பருவ கன்னிமாட சீதை' வேடம்.

4. நாடகமேடையில், இவர் ஏற்று நடித்த முதல் ராஜபார்ட் ரோல் "மனோகரா" நாடகத்தின் 'மனோகரன்'. கொல்லங்கோட்டில் நடைபெற்ற இந்நாடகத்தில், விசிகணேசனின் 'மனோகரன்' நடிப்பைக் கண்டு மயங்கிய கொல்லங்கோடு மஹாராஜா, இவருக்கு 'வெள்ளித் தட்டு' ஒன்றை பரிசாக அளித்தார். சில தினங்களுக்குப் பின், அந்த வெள்ளித் தட்டை விற்றுப் பணமாக்கி, 4 நாட்களுக்கு, தன் பசி மட்டுமல்லாது தனது சக நாடக நடிகர்களின் பசியையும் போக்கினார் விசிஜி.

5. 1945-ன் இறுதியில், தந்தை பெரியாரின் தலைமையில், சென்னையில் நடைபெற்ற ஏழாவது சுயமரியாதை மாநாட்டில், அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" நாடகம் மேடையேற்றப்பட்டது. மாவீரன் சத்ரபதி சிவாஜியாகவே, கணேசன் உருமாறி, வீரமுழக்கம் செய்தார். நாடகம் முடிந்ததும் பெரியார், கணேசனின் நடிப்பை வியந்து பாராட்டி, "இன்று முதல் நீ வெறும் கணேசனல்ல, சிவாஜி கணேசன்" என்று பட்டம் சூட்டினார். இந்த நாடகத்தை, பார்வையாளர்களில் ஒருவராக, எம்.ஜி.ஆரும் பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. 1946 முதல் சற்றேறக்குறைய 4 வருடங்களுக்கு, சக்தி கிருஷ்ணசாமியின் 'சக்தி நாடக சபா'வில், பல நாடகங்களில் பல தரப்பட்ட வேடங்களில் வெளுத்து வாங்கினார் சிவாஜி. அவற்றில் அவருக்கு தலையாய புகழ் கொடுத்த வேடம், 'நூர்ஜஹான்' நாடகத்தில், அவர் ஏற்று நடித்த அழகுக்கிளி 'நூர்ஜஹான்' வேடம். அந்த நாடகத்தையும், அதில் அவரது அந்த ஸ்திரீபார்ட் வேட நடிப்பையும் பார்த்து பாராட்டாத பிரபலங்களே இல்லை.

7. சிவாஜி, சக்தி நாடக சபாவில் இருந்த போது, ஏ.பி.நாகராஜனும் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரே நாடகத்தில், ஏபிஎன்
ராஜபார்ட்டாகவும், அவரது ஜோடி ஸ்திரீபார்ட்டாக சிவாஜியும் நடித்திருக்கிறார்கள்.

8. "பராசக்தி" படத்தில் நடிக்கும் போது சிவாஜிக்கு மாத சம்பளம் தான். சற்றேறக்குறைய இரண்டு வருடங்கள் தயாரிக்கப்பட்ட அப்படத்தின் கதாநாயகனான சிவாஜிக்கு மாதந்தோறும் 250 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.

9. "பராசக்தி" படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, "பணம்", "பூஙகோதை" படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்தார். "பராசக்தி" வெளியான மறுதினமே "திரும்பிப் பார்" திரைப்படத்திலும், "மனோகரா"விலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

10. 1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்
மேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார். அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள். இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.

11. 1953 பொங்கல் திருநாளிலிருந்த்து, தான் அமரராவதற்கு முன் வந்த 2001 பொங்கல் திருநாள் வரை, ஒவ்வொரு பொங்கலன்றும், வேலூருக்குச் சென்று, தன்னை வாழ வைத்த தெய்வம் பெருமாள் அவர்களுக்கு மரியாதை செய்து, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் புத்தாடைகள் வழங்குவதை ஒரு வழக்கமாகக் (கடமையாகக்) கொண்டிருந்தார். பெருமாள் தம்பதியரை வணங்கி ஆசி பெறுவார். 1979-ல் பெருமாள் அமரரான பின்னரும் கூட, ஒவ்வொரு பொஙகலன்றும் வேலூருக்கு சென்று, அவரது மனைவியை வணங்கி ஆசி பெற்று புத்தாடைகளை அளித்து வந்தார். சிவாஜியின் மறைவுக்குப் பின்னரும், அவரது குடும்பத்தினர், ஒவ்வொரு பொங்கலுக்கும் வேலூர் சென்று, பெருமாள் அவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செய்து புத்தாடைகளை வழங்கி வருகின்றனர்.

12. சென்னை மாநகரில், முதன்முதலில் 5 திரையரங்குகளில் [சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா, உமா, ராஜகுமாரி, லட்சுமி] வெளியான படம் "மனோகரா(1954)". அதே போன்று சிங்காரச் சென்னையில், 6 திரையரங்குகளில் [அசோக், சன், ஸ்ரீமுருகன், நூர்ஜஹான், கபாலி, பிரைட்டன்] வெளியான முதல் படம் "நானே ராஜா(1956)".

13. 1955-ன் தொடக்கத்தில் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து அவர் அருளால் சிறந்ததொரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொண்ட சிவாஜி தீவிர பிள்ளையார், ஐயப்ப பக்தர். பல ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று பயபக்தியுடன் ஹரிஹரஸுதனை தரிசித்து வணங்கியிருக்கிறார். மாரியம்மனிடமும் சிவாஜிக்கு அளவற்ற பக்தி உண்டு.

14. 1957 முதல் 1961 வரை, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை இந்தியாவெங்கும், சற்றேறக்குறைய 112 முறை நடத்தி, அதன் மூலம் வசூலான தொகையில், நாடகச் செலவு, தனது சிவாஜி நாடக மன்ற உறுப்பினர் சம்பளம் போக, கிட்டத்தட்ட ரூ.32,00,000/-த்தை (ரூபாய் முப்பத்து இரண்டு லட்சங்களை), பல்வேறு ஆக்கப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கினார். குறிப்பாக, தென்னகமெங்கும், பல பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் இந்நாடகம் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடைகளால் தான் உருவானது.

15. "ராணி லலிதாங்கி" திரைப்படம் வெளிவந்த சமயம், படத்தைப் பார்த்து விட்ட கழகத் தோழர் ஒருவர், அதில் சிவாஜியின் நடிப்பையும், நாட்டியத்தையும் கழகத் தலைவர் அண்ணாவிடம் வானளாவப் புகழ, அன்று இரவுக்காட்சியே யாரும் அறியாவண்ணம், மாறுவேடம் பூண்டு, முண்டாசு எல்லாம் கட்டிக் கொண்டு படத்தை பார்த்து விட்டு வந்தார் அண்ணா.

16. "சம்பூர்ண ராமாயணம்" திரைப்படத்தை கண்டு களித்த மூதறிஞர் ராஜாஜி "சிவாஜியின் நடிப்பில் பரதனைக் கண்டேன்" என்று வியந்து பாராட்டினார். "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படத்தை பார்த்து ரசித்த வ.உ.சி.யின் புதல்வர் சுப்ரமண்யம் "நடிகர் திலகத்தின் ரூபத்தில் எனது தந்தையாரை தரிசித்தேன்" என உருக்கத்துடன் புகழ்ந்துரைத்தார். இந்த இரு பாராட்டுக்களைத் தான், தனக்கு நெருக்கமானவர்களிடம் பெருமையோடு கூறி, இன்புறுவார் சிவாஜி.

17. மத்திய அரசு கொண்டு வந்த, பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்கு, 1959-ம் ஆண்டு, தமிழக முதல்வர் காமராஜர் முன்னிலையில், பாரதப் பிரதமர் நேருவிடம் ரூ.1,00,000 /- தொகையை வாரி வழங்கிய முதல் இந்திய நடிகர் வள்ளல் சிவாஜி.

18. நடிகர் திலகத்தின் முதல் கறுப்பு-வெள்ளைப் படமும் (பராசக்தி) வெள்ளிவிழாக் கண்டுள்ளது. அவரது முதல் வண்ணப்படமும் (வீரபாண்டிய கட்டபொம்மன்) வெள்ளிவிழாக் கொண்டாடியுள்ளது. உலக சினிமா சரித்திரத்திலேயே - ஒரு கதாநாயக நடிகருக்கு - இது ஒரு அபூர்வமான சாதனை.

19. இந்தியத் திரையுலகக் கலைஞர்களில், அதிக அளவில் உலக விருதுகளை வென்ற மாபெரும் சாதனையாளர். 1960-ல் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் என கௌரவிக்கப்பட்டு வெள்ளிப்பருந்து சிலையையும் பரிசாகப் பெற்றார். 1995-ல், பிரான்ஸ் நாடு இவருக்கு தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான செவாலியே விருது வழங்கி கௌரவித்தது.

20. 1960-ல் தமிழகம் கடும்புயல், பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, முதல்வர் காமராஜர் அவர்களின் மேற்பார்வையில், சிவாஜி அவர்கள் தனி மனிதனாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.

21. 1961-ல் தனது 'அன்னை இல்ல'த்தில், ஒரு பிள்ளையார் கோவிலை உருவாக்கினார் இந்த கலைப்பிள்ளையார். 2010-ல் பொன்விழா தொடக்கத்தைக் காணும் இப்பிள்ளையார் கோவிலின் கும்பாபிஷேகம் சில மாதங்களுக்கு முன்னர் அவரது அருந்தவப்புதல்வர்களால் மங்களகரமாக நடத்தப்பட்டது. 50 ஆண்டுகளாக இந்த வழியாக போவோர், வருவோர் எல்லாம் இந்த விநாயகரை வழிபட்டு வாழ்வில் மேன்மை பெற்றுள்ளனர்.

22. சிங்காரச் சென்னையில், முதன்முதலாக, ரூபாய் பத்து லட்சத்திற்கும் மேல் மொத்த வசூலை அளித்த திரைப்படம் "பாவமன்னிப்பு". தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு ஏசி டீலக்ஸ் திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட முதல் திரைப்படம் "பாவமன்னிப்பு". [திரையரங்கம் : சென்னை - சாந்தி]

23. 1962-ல், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் கலைத்தூதுவராக, அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகளுக்கும் விஜயம் செய்து பற்பல பாராட்டுக்களையும், கௌரவங்களையும் பெற்றார். அமெரிக்க பயணத்தின் போது, நியூயார்க் மாநிலத்தில் உள்ள எழில் கொஞ்சும் நகரமான நயாகரா நகரின், ஒரு நாள் கௌரவ மேயராக, தங்கச்சாவி கொடுத்து கௌரவிக்கப்பட்டார். பிரதமர் நேருவிற்குப் பிறகு, இந்த கௌரவத்தை பெற்ற ஒரே இந்தியர் சிவாஜி.

24. 1962-ல் சீனப் படையெடுப்பின் போது ரூ.40,000/-, 1965-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது ரூ.1,15,000/- மற்றும் 600 பவுன் தங்கம், 1999-ல் கார்கில் போரின் போது ரூ.1,00,000/-, யுத்த நிதியாக தாய்நாட்டிற்கு வழங்கியுள்ளார்.

25. 1964-ல் பம்பாயில் சத்ரபதி சிவாஜி சிலை, 1968-ல் சென்னையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை, 1972-ல் ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை ஆகியவற்றை தன் சொந்த செலவில் நிறுவினார்.

26. 1965-ல், இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது, போரில் காயமுற்ற நமது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சிவாஜி அவர்கள், தமிழகத்தின் பல முன்னணிக் கலைஞர்களை போர்முனைக்கே அழைத்துச் சென்று, பல கலைநிகழ்ச்சிகள் நடத்தி, வீரர்களை மகிழ்வித்தார்.

27. 1965-ன் இறுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுப்பினரானார். அதிலிருந்து 1988 ஜனவரி வரை, கிட்டத்தட்ட 23 வருடங்கள், காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தனது உடல், பொருள், ஆவி ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்.

28. 1966-ல் பத்மஸ்ரீ, 1982-ல் ராஜ்யசபை எம்.பி., 1984-ல் பத்மபூஷன், 1997-ல் தாதா சாகேப் பால்கே விருது என தாய்த்திருநாடும் தன் தலைமகனை கௌரவித்திருக்கிறது.

29. 1971ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில், 47 சென்ட் நிலம் வாங்கி, அதில் கட்டபொம்மன் சிலையை நிறுவினார். தமிழகமெங்கும் பல ஊர்களில், பெருந்தலைவர் காமராஜர் சிலைகளை, தன் சொந்த செலவில் நிறுவியிருக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைத்தார். பல இடங்களில் அம்பேத்கர் சிலைகள் அமைய தாராளமாக நிதியுதவி செய்தார்.

30. சிவாஜியின் தாத்தா சின்னசாமி காளிங்கராயர் (அம்மாவின் அப்பா), அக்காலத்திலேயே, குழந்தைகளுக்கு தமிழ்ப்பற்றும், இறையுணர்வும் வரவேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தில் தனது சொந்த செலவில் விழுப்புரத்தில் தேவாரப் பாடசாலை நடத்தி வந்தார். அந்தத் தேவாரப் பள்ளியில் மாணவராகப் பயின்றவர் தான், பிற்காலத்தில் தமிழிசைக்கு அருந்தொண்டு புரிந்த தமிழிசை மாமேதை இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர்.

31. விருந்தோம்பலில் சிறந்தது அன்னை இல்லம். அன்னை இல்லத்தில் சாப்பிடாதவர்களே இல்லை. சாதாரண ரசிகர்கள் முதல் உலகப் பிரபலங்கள் வரை அனைவரும் கமலா அம்மாள் கையால் உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அதே போன்று, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு, சிவாஜிக்கு வரும் மதிய உணவும் அங்குள்ள அனைவரும் (குறைந்த பட்சம் 10 பேராவது) சாப்பிடும் அளவுக்கு ருசியாக நிறைய செய்து அனுப்பி வைப்பார் கமலா அம்மாள்.

32. "உத்தமபுத்திரன்" திரைப்படத்தில் 'யாரடி நீ மோகினி' பாடல் காட்சியில் நடிக்கும் போது 102 டிகிரி ஜுரத்துடன் நடித்தார். "பாலும் பழமும்" படத்தில் கண்பார்வை இழந்தவராக படுக்கையில் படுத்துக் கொண்டு அவர் நடித்த காட்சிகளின் போதும் அவருக்கு High Fever. அதே போன்று "கலாட்டா கல்யாணம்" திரைப்படத்தில் வரும் 'அப்பப்பா நான் அப்பனல்லடா' பாடல் காட்சி படமாக்கப்பட்ட போதும் காய்ச்சலுடன் நடித்தார். "இரு துருவம்" படத்தின் வெளிப்புறக் காட்சிகள் ஷூட்டிங்கின் போதும் கூட கடும் காய்ச்சலுடன் நடித்துக் கொடுத்தார். தன்னால் படத்திற்கு,
படப்பிடிப்பிற்கு எந்தவிதத்திலும் பங்கம் வந்துவிடக் கூடாது என்கின்ற உயர்ந்த கொள்கை கொண்டவர்.

33. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக "உத்தமபுத்திரன்" திரைப்படத்தில் தான் படமாக்கத்தில் Zoom Lens
உபயோகப்படுத்தப்பட்டது. 'உன்னழகை கன்னியர்கள்' பாடலுக்கு இந்த யுக்தி கையாளப்பட்டது. "உனக்காக நான்" திரைப்படத்தில், நடிகர் திலகம் தனது கண்களுக்கு சிறப்பு லென்ஸ் அணிந்து கொண்டு நடித்தார்.

34. "திருவருட்செல்வர்" திரைப்படத்தில் அவர் வாழ்ந்து காட்டிய "அப்பர்" வேடத்திற்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration), காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

35. இயக்குநர் ஸ்ரீதருக்கு கை விரல் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உண்டு. அவரது அந்த மேனரிஸத்தை, நடிகர் திலகம், தான் நடித்த "தெய்வமகன்" விஜய் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அவரது மிக நெருங்கிய நண்பர் தொழிலதிபர் டிவிஎஸ் கிருஷ்ணாவின் மேனரிஸங்களை "கௌரவ"த்தின் பாரிஸ்டர் ரோலில் பார்க்கலாம். இன்னொரு நெருங்கிய நண்பரான இண்டியா சிமெண்ட்ஸ் நாராயணசுவாமியின் மேனரிஸங்கள் பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் [வியட்நாம் வீடு] பாத்திரத்தில் இருக்கும்.

36. உலகப் பெரும் சினிமா நிறுவனமான 20th Century Fox நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளக்க உரையுடன் வியாபார ரீதியாக வெளியிட உரிமை பெற்ற முதல் தமிழ்ப் படம் "தில்லானா மோகனாம்பாள்".

37. சிங்கப்பூர் நாடு கண்டுபிடிக்கப்பட்ட 150வது ஆண்டு விழாவில் திரையிடுவதற்காக, சிங்கப்பூர் அரசால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுககப்பட்டு, சிங்கப்பூர் வெளி விவகார மந்திரி முன்னிலையில், சிறப்புக் காட்சியாக காட்டப்பட்ட திரைப்படம் "தங்கச்சுரங்கம்".

38. ஹிந்தி நடிகர் ராஜேந்திரகுமார், சிவாஜியைப் பார்க்கும் போதெல்லாம், "நீங்கள் ஒரு ஹிந்திப் படத்திலாவது அவசியம் நடிக்க வேண்டும். உங்களது தமிழ்ப் படங்களைப் பார்த்தே உங்களுக்கு இந்தியாவெங்கும் எவ்வளவு ரசிகர்கள் தெரியுமா! உங்கள் ஹிந்திப் படம் வெளியாகும் நாளில் பம்பாயில் பூகம்பமே ஏற்படும்." என்றார். சில வருடங்கள் கழித்து, தர்த்தி திரைப்படத்தில், சிவாஜி நடித்தார். தர்த்தி வெளியான தினத்தன்று [6.2.1970], பம்பாயில் நிஜமாகவே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

39. முதல் வெளியீட்டில், வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை" திரைப்படத்தினுடைய முடிவு, தமிழகத்தில் சுபமாகவும், கேரளத்தில் சோகமாகவும் காண்பிக்கப்பட்டு, இரு மாநிலங்களிலுமே பெரும் வெற்றி. "பராசக்தி"க்குப் பிறகு, தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இந்தியாவிலும், இலங்கையிலும் என இரு நாடுகளில் வெள்ளி விழா கொண்டாடிய படம் "வசந்த மாளிகை". [இந்தியா - 200 நாள், இலங்கை - 287 நாள்]

40. இந்திய அரசினால், நெகடிவ் உரிமை வாங்கப்பட்டு, இந்திய முக்கிய மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம், தேசிய திலகத்தின் "பாரத விலாஸ்".

41. "கௌரவம்" திரைப்படத்தை ஹிந்தியில் தயாரிப்பதற்காக, ராஜேஷ் கன்னாவிடம் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த பின் ராஜேஷ் கன்னாவின் வாக்குமூலம்: "கண்ணன் ரோலை வேண்டுமானால் நான் முயன்று பார்க்கலாம். ஆனால் அந்த பாரிஸ்டர் ரோலை நான் மட்டுமல்ல, பாலிவுட்டிலே கூட யாரும் நடிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், ஹாலிவுட்டிலே கூட சிவாஜி போல் நடிக்க அங்குள்ள எவராலும் முடியாது. இந்தப் படத்தை தயவு செய்து எந்த மொழியிலும் ரீமேக் செய்ய வேண்டாம். அப்படிச் செய்தால் விஷப்பரீட்சையாகி விடும்."

42. தமிழ் சினிமா சரித்திரத்தில், எண்ணிலடங்கா சாதனைகளின் கருவூலம் "திரிசூலம்". தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, முதன்முதலில், பத்து திரையரங்குகளில் [தமிழகத்தில் 8 திரையரங்குகள், இலங்கையில் 2 திரையரங்குகள்] வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் படம் "திரிசூலம்".

43. பாரதியாரின் கவிதைகள் என்றால் இவருக்கு உயிர். பாரதி பாடல்களில் 'பாரத சமுதாயம் வாழ்கவே', 'நெஞ்சு பொறுக்குதில்லையே' All time favourites. கண்ணதாசனின் 'மலர்ந்தும் மலராத', வாலியின் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல' ஆகிய பாடல்களையும் அடிக்கடி முணுமுணுப்பார். வைரமுத்துவின் பாடல்களும் பிடிக்கும்.

44. பாரதிதாசனார் ஒரு சிவாஜி வெறியர். தனது குயில் பத்திரிகையில் நடிகர் திலகத்தைப் பற்றி பல தருணங்களில் வானளாவ புகழ்ந்து கவிதைகளும், செய்தி கட்டுரைகளும் வரைந்திருக்கிறார்.1962-ல் அவரது படைப்பான 'பாண்டியன் பரிசை', அதே பெயரில் நடிகர் திலகத்தை கதாநாயகனாகக் கொண்டு படமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. படத் தொடக்க விழாவும் நடைபெற்றது. ஆனால், அதற்குப் பிறகு, பற்பல காரணங்களினால், படப்பிடிப்பு நடைபெறாததால், படம் வளரவில்லை.

45. கர்மவீரர் காமராஜர், கலைக்குரிசிலின் சில திரைப்படங்களை, பிரத்யேக சிறப்புக் காட்சியாக கண்டு களித்து, நடிகர் திலகத்தை பாராட்டியுள்ளார். அப்படி அவர் பார்த்து பாராட்டிய திரைப்படங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், நவராத்திரி, ராஜபார்ட் ரங்கதுரை, சினிமா பைத்தியம் [வீர வாஞ்சிநாதனாக சிவாஜி நடித்த காட்சிகள் மட்டும்].

46. சிவாஜி ஆங்கிலப் படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பார். சென்னை காஸினோ திரையரங்கில் இரவுக்காட்சியாக ஆங்கிலப்படம் கண்டு களிப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஹிந்திப் படங்களில் அவரை மிகவும் கவர்ந்தவை, "ஜனக் ஜனக் பாயில் பாஜே" மற்றும் "ஷோலே". எம்.ஜி.ஆர் படங்களில் "ஆயிரத்தில் ஒருவன்", "நாடோடி மன்னன்", "அடிமைப் பெண்" ஆகிய படங்கள் ரொம்பப் பிடிக்கும்.

47. சில தமிழக விஐபிக்களுக்கு மிகவும் பிடித்த சிவாஜி படங்கள்:
எம்.ஜி.ஆருக்கு பிடித்த சிவாஜி படம் "ஆலயமணி"; கலைஞருக்கு பிடித்த தனது நண்பரின் படம் "தில்லானா மோகனாம்பாள்"; மூப்பனாருக்கு பிடித்த நடிகர் திலகத்தின் திரைப்படம் "முதல் மரியாதை"; மு.க.அழகிரியின் மனதைக் கவர்ந்த திரைப்படம் "இருவர் உள்ளம்"; பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கு பிடித்த படம் "பாசமலர்".

48. பாலிவுட் பிரபலம் அமிதாப்பச்சனுக்கு மிகவும் பிடித்த நடிகர் நமது நடிகர் திலகம். சிவாஜியை எங்கு எப்பொழுது பார்த்தாலும் அவரது காலில் விழுந்து வணங்குவார் அமிதாப். இன்னொரு பாலிவுட் பிரபலமான அமீர்கான் நடிகர் திலகத்தின் "கர்ணன்" திரைக்காவியத்தைப் பார்த்து விட்டு அப்படியே ஆடி அசந்து மிரண்டு போய் விட்டாராம்.

49. தங்களது தந்தையார் நடித்த திரைப்படக் கதாபாத்திரங்களில், மூத்த மகன் தளபதி ராம்குமாருக்கு பிடித்த ரோல் 'பாரிஸ்டர் ரஜினிகாந்த்' [கௌரவம்]. இளைய மகன் இளைய திலகம் பிரபுவுக்கு பிடித்த வேடம் 'அப்பர்' [திருவருட்செல்வர்].

50. 1990களில், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் உடல் நலம் குன்றியிருந்த சமயம், அவரைக் காண, மனைவி கமலாவுடன் சிவாஜி, எம்.எஸ். அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். எம்.எஸ்., அவரது கணவர் சதாசிவம் ஆகியோரைக் கண்டு உடல் நலம் விசாரித்தார் சிவாஜி. கிளம்புவதற்கு முன், சிவாஜி சதாசிவத்தை நோக்கி, "எம்.எஸ். அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர் பூரண உடல் நலம் பெற வேண்டும். அவரது குரல் இந்த தேசத்திற்கே சொந்தம்" என்றார். அதற்கு சதாசிவம் சிவாஜியிடம்,"உங்களுக்கும் உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். எங்களால் வந்து உங்களை பார்க்க முடியவில்லை. தவறாக எண்ண வேண்டாம். எம்.எஸ்.ஸின் குரல் மட்டும் தான் இந்த தேசத்திற்கு சொந்தம். ஆனால், உங்கள் உடம்பே இந்த நாட்டிற்கு சொந்தம். ஆகையால், உங்கள் உடம்பையும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே!


51. நடிகர் திலகம், காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையை விரும்பிக் கேட்பார். 1962-ல், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று உலகப்பயணம் செய்த போது, காருக்குறிச்சியாரின் இசைத்தட்டுகளை மறக்காமல் எடுத்துச் சென்றார்.

52. ஹாலிவுட் படங்களின் இசையமைப்பு, BGM, Sound Effects இவையெல்லாம் நடிகர் திலகத்துக்கு நிரம்பப் பிடிக்கும். "மியூசிக்கிலேயே மிரட்டுறாங்க பாரு" என்று புகழ்ந்துரைப்பார். ஹிந்தியில், லதா மங்கேஷ்கரின் குரலுக்கு அதி திவீர ரசிகர். சிவாஜியின் மனைவி கமலா, ஆஷா போன்ஸ்லேவின் விசிறி. [லதா, ஆஷா இருவருமே சிவாஜி பக்தைகள்!]. தென்னகத்தில் சுசீலா, ஜானகி, ஈஸ்வரி, வாணி ஜெயராம் எல்லோர் குரலும் பிடிக்கும். கே.பி.சுந்தராம்பாளின் கணீர்க்குரல் இவர் மனம் கவர்ந்த ஒன்று. 'திருவிளையாடல்' திரைப்படத்தில் வரும் 'ஞானப்பழத்தைப் பிழிந்து' பாடலின் பரம விசிறி. இப்பாடலை 'சர்பத் பாட்டு' என்று தான் செல்லமாக அழைப்பாராம்.

53. ஜி.ராமநாதன் அவர்களின் இசையமைப்பைப் பற்றி புகழ்ந்து கூறுவார். "உங்கள் இசை எப்பொழுதுமே நன்றாகத் தானிருக்கும்" என்று அவரிடமே பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது இசையையும் சிலாகித்துக் கூறுவார். "என் படங்களை விட அண்ணன் (எம்.ஜி.ஆர்.) படங்களுக்குத் தான் நீ தூக்கலாக இசையமைத்துக் கொடுக்கிறாய்! உன்னை கவனித்துக் கொள்கிறேன்' என செல்லமாக, உரிமையுடன் எம்.எஸ்.வியிடம் கடிந்து கொள்வதும் உண்டு. இளையராஜா இசையமைத்த பாடல்களில் சிவாஜிக்கு மிகவும் பிடித்தவை "செந்தூரப்பூவே" [பதினாறு வயதினிலே] மற்றும் "மாஞ்சோலைக்கிளிதானோ" [கிழக்கே போகும் ரயில்].

54. "தூக்கு தூக்கி"யில் டி.எம்.எஸ். பாடி பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்டு, அவர் தனக்குப் பாடுவதற்கு பச்சைக் கொடி காட்டினார் சிவாஜி. "பெரிய பாகவதர் போல பாடியிருக்கிறீர்கள். உங்களுடைய அருமையான, வளமான குரல் எனக்கு பொருத்தமாக இருக்கும். தொடர்ந்து நீங்களே எனக்கு பின்னணி பாடுங்கள்" எனக் கூறிப் பாராட்டினார். பின்னொரு சமயத்தில், "உங்கள் குரலும் என் குரலும் ஒன்று போலத் தான் இருக்கிறது. நான் நடிப்பில் கொடுக்கும் பாவத்தை நீங்கள் பாட்டில் கொடுக்கிறீர்கள். ஆகையால் பாடலின் போது வரும் வசனங்களை அந்தந்த பாவங்களைக் கொடுத்து நீங்களே பேசுங்கள்." என்றார். டி.எம்.எஸ் இதைப் பலரிடம் சொல்லி பெருமைப்படுவாராம்.

55. "பொட்டு வைத்த முகமோ" பாடலை முதன்முதலாக எஸ்.பி.பி. தனக்கு பின்னணி பாடிய போது, 'நீ உன் குரலிலேயே பாடு, நான் அட்ஜெஸ்ட் பண்ணி நடித்துக் கொள்கிறேன்' எனப் பெருந்தன்மையோடு கூறினார் சிவாஜி. எஸ்.பி.பி., ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாடல்கள் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம், காலை வேளைகளில், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பக்திப் பாடல் ஆல்பங்களை கேட்டு பரவசப்படுவார். தனக்கு முதன்முதலில் பின்னணி பாடிய சிதம்பரம் ஜெயராமனின் குரல் ரொம்பப் பிடிக்கும்.

56. வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வரும் நேயர் விருப்ப திரைப்படப் பாடல்கள் நிகழ்ச்சியில், அன்று முதல் இன்று வரை, அதிக நேயர்கள் விரும்பிக் கேட்ட / கேட்கின்ற பாடலாக இருப்பது "பாசமலர்" திரைக்காவியத்தின் 'மலர்ந்தும் மலராத' பாடல்.

57. சிவாஜி அவர்கள், எம்.ஜி.ஆரை 'அண்ணன்' என்றும். எஸ்,எஸ்.ஆரை 'ராஜூ' என்றும், ஜெமினியை 'மாப்ளே' என்றும், ஸ்ரீகாந்தை 'வெங்கடா' என்றும், பீம்சிங்கை 'பீம்பாய்' என்றும், பந்துலுவை 'பிஆர்பி(BRB)' என்றும், முக்தா சீனிவாசனை 'சீனு' என்றும், பத்மினியை 'பப்பி' என்றும், சாவித்திரியை 'தங்கச்சி / சிஸ்டர்' என்றும், சௌகார் ஜானகியை 'பார்ட்னர்' என்றும், சரோஜாதேவியை 'சரோ' என்றும், அஞ்சலிதேவியை 'பாஸ்(Boss)' என்றும், ஜெயலலிதாவை 'அம்மு' என்றும், வெண்ணிற ஆடை நிர்மலாவை 'ஸ்வீட் கேர்ள்(Sweet Girl)' என்றும் அன்பாகவும், செல்லமாகவும் அழைப்பார்.

58. கலைஞர் கருணாநிதி எழுதும் திரைப்பட வசனங்கள் மிகவும் சிறப்பானவை என மனதாரப் பாராட்டும் சிவாஜி, தனக்கு அவர் எழுதிய திரைப்பட வசனங்களில் தனக்கு மிகவும் பிடித்தது "திரும்பிப் பார்" படத்தின் வசனங்கள் என்றும் கூறியிருக்கிறார். கலைஞரை சிவாஜி "மூனாகனா" என்று தான் அழைப்பார். அவர் இவரை "கணேசு" என்பார்.

59. எந்த மேக்கப்மேன் சிவாஜிக்கு மேக்கப் போட்டு விட்டாலும், புருவத்தை மட்டும் தானே தான் எழுதிக் கொள்வார். "திருவருட்செல்வர்" அப்பர், "தெய்வமகன்" கண்ணன், சங்கர், "நவராத்திரி" குஷ்டரோகி இன்னும் இது போன்ற பல கதாபாத்திரங்களின் மேக்கப்பிற்காக, பல மணி நேரங்கள் உடலை வருத்திக் கொண்டதுண்டு.

60. படப்பிடிப்பின் போது, எந்தவொரு காஸ்ட்யூமை தான் அணிந்து கொண்டு நடித்தாலும், அந்த உடை கசங்காமல், அழுக்காகாமல் இருப்பதற்கு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்.

61. தன்னுடன் நடிக்கும் நடிக, நடிகையர் நன்றாக நடிக்கும் போது மனம் திறந்து பாராட்டுவார். பல சமயங்களில் கூட நடிப்பவர்களுக்கு, காட்சிக்கு ஏற்றாற் போல், நடிப்பு சொல்லிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி நடிக்கச் செய்வார். பானுமதி, சாவித்திரி, சௌகார் ஜானகி, மனோரமா ஆகியோருடன் நடிப்பது பற்றி இப்படிக் கூறுவார். "இவங்க கூட நடிக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா, கவனமா இருக்கணும். நாம கொஞ்சம் அசந்தா போதும், இவங்க performanceஸால நம்மளையே தூக்கி சாப்பிட்டுடுவாங்க."

62. ஷுட்டிங் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு எத்தனை மணிக்கு வந்து படுத்தாலும் காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவார். காலை ஆறு மணிக்கு மேல் அவர் உறங்கியதாக சரித்திரமே இல்லை. 1990களில் தாடி வைப்பதற்கு முன் வரை, தினமும் ஷேவ் செய்வார். சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் போதும், சூரக்கோட்டைக்கு விடுமுறையாகச் செல்லும் போதும் மட்டும் தான் ஷேவ் செய்யாத சிவாஜியைப் பார்க்க முடியும். தினமும் இரு வேளை குளிப்பார். எந்த சீசனாக இருந்தாலும் குளியல் பச்சைத் தண்ணீரில் தான்.

63. குளிர்ந்த மோர், காபி, அதிலும் பிளாக் காபி (Black Coffee) ஆகியவை இவர் விரும்பி அருந்துகின்ற பானங்கள். வேர்க்கடலை உருண்டைகளை விரும்பிச் சாப்பிடுவார். காலைச் சிற்றுண்டியாக விரும்பிச் சாப்பிடும் பலகாராங்கள் - இட்லி, பொங்கல், உப்புமா (ஏதேனும் ஒன்று). மதிய உணவில் கண்டிப்பாக அசைவம் இருக்க வேண்டும். டின்னரில் சில சமயங்களில் அசைவம் இடம்பெறும். மூன்று வேளைகளிலுமே அளவோடு தான் சாப்பிடுவார்.

64. ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555 - இவர் புகைக்கும் சிகரெட். தம்பி ஷண்முகத்தின் மறைவுக்குப் பிறகு, மனைவி கமலாவின் அன்பு வேண்டுகோளை ஏற்று, கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக தன்னிடம் இருந்த புகை பிடிக்கும் பழக்கத்தை, ஒரே நாளில் கைவிட்டார். அதற்குப்பின், ஒரு நாள், ஒரு வேளை, ஒரு தடவை கூட சிகரெட் பிடித்ததில்லை. What a Will Power!

65. தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் செய்தித்தாள்களை வாசிப்பார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செய்திகளுக்கே முதலிடம் கொடுப்பார்.

66. சிவாஜி விமானப் பயணத்தின் போது மட்டும் அதிகம் பேச மாட்டார். பல சமயங்களில், விமானத்தில் ஏறி அமர்ந்த உடனேயே, கண்களை மூடிக் கொண்டு உறங்கி விடுவார்.

67. காரில் பயணம் செய்யும் போது சினிமா, அரசியல், பொதுவான விஷயங்கள் என நிறைய பேசுவார். மிக நீண்ட தூர கார் பயணத்தின் போது, நிறைய பாடல்கள் கேட்பார். அதில் "கப்பலோட்டிய தமிழன்" படப் பாடல்கள் நிச்சயம் இருக்கும்.

68. சிவாஜிக்கு தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சரளமாகப் பேசத் தெரியும். அந்தந்த மொழிக்காரர்களிடம் அவரவர்களது மொழியிலேயே பேசி அசத்துவார்.

69. சிவாஜி எந்த இடத்திற்கு சென்றாலும் சுற்றுப்புறத்தை கூர்மையாக கவனிப்பார். வீட்டிலோ, வெளியிலோ எந்த இடத்திலும் அமர்வதற்கு முன் தான் உட்காரப் போகும் இருக்கை, தலை மேல் சுழலும் மின்விசிறி என ஒரு பார்வை பார்த்து விட்டுத் தான் உட்காருவார்.

70. ரஷ்யா தவிர, கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறார். ஒவ்வொரு நாட்டின் மக்கள் அணியும் விதவிதமான தொப்பிகளை சேகரித்து 'அன்னை இல்ல'த்தில் பத்திரமாக பொக்கிஷம் போல் வைத்திருந்தார்.

71. எந்த ஊர், எந்த மாநிலம், எந்த நாடு சென்றாலும் அந்தப் பகுதியினுடைய சிறப்பம்சங்கள், அங்குள்ள மக்கள், அவர்கள் செய்யும் தொழில், அந்தப் பிரதேசத்தினுடைய சிறப்பு உணவு வகைகள் என்கின்ற தகவல்களை அளித்து உடன் வருவோரை அசத்துவார். புவியியல் அறிவில் புலி இவர்.

72. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும், தஞ்சைப் பெரிய கோயிலுக்கும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், திருப்பதி கோயிலுக்கும், சிவாஜி அவர்கள், யானையை காணிக்கையாகத் தந்துள்ளார். நாகை மாவட்டம் அன்னை வேளாங்கன்னி ஆலயத்திற்கு, ஆலயமணியை தன் சொந்த செலவில் அமைத்துக் கொடுத்தார்.

73. 1982-ல், தமிழக அரசு கொண்டு வந்த சத்துணவு திட்டத்திற்கு, இளைய திலகம் பிரபு, தன் சார்பில் ரூ.25,000/-மும், நடிகர் திலகத்தின் சார்பில் ரூ.1,00,000/-மும், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் வழங்கினார்.

74. 1986-ல் பெல்ஜியம் பல்கலைக்கழகமும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் அவரது கலைச்சேவைக்காக, 'டாக்டர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது.

75. தமிழ்த் திரையுலகில், எம்.கே.டி. பாகவதருக்குப் பின், கறுப்பு-வெள்ளையில், ஐந்து வெள்ளிவிழாப் படங்களை [பராசக்தி, பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாசமலர், பட்டிக்காடா பட்டணமா] கொடுத்த ஒரே நடிகர் சிவாஜி. ஒரே காலண்டர் வருடத்தில்(1961), கறுப்பு-வெள்ளையில், இரு வெள்ளிவிழாப் படங்களை [பாவமன்னிப்பு, பாசமலர்] கொடுத்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, கறுப்பு-வெள்ளைப் படங்களில், முதல் வெளியீட்டிலேயே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மொத்த வசூல் அளித்த ஒரே படம் "பட்டிக்காடா பட்டணமா".

76. 2593 இருக்கைகளைக் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் திரையரங்கில், 'மூன்று' 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும், 'ஒன்பது' 50 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும் கொடுத்துள்ள ஒரே உலக நடிகர் நடிகர் திலகம். [ஆக மொத்தம், மதுரை தங்கத்தில் 'பன்னிரண்டு' 50 நாட்களைக் கடந்த படங்கள்]

77. நமது இந்தியத் திருநாட்டின் மகத்தான தினங்களான சுதந்திர தினத்தன்று 7 சிவாஜி படங்களும், குடியரசு தினத்தன்று 13 சிவாஜி படங்களும் வெளியாகியுள்ளன.

78. 'பண்டிகை தின ஹீரோ' என்றாலும் அது சிவாஜி தான். பொங்கல் வெளியீடுகளாக 23 திரைப்படங்களும், தமிழ்ப் புத்தாண்டு வெளியீடுகளாக 26 திரைப்படங்களும், தீபாவளி வெளியீடுகளாக 42 திரைப்படங்களும் கொடுத்துள்ளார்.

79. கிரிக்கெட், கால்பந்து இரண்டு விளையாட்டுக்களும் மிகவும் பிடித்தமானவை. கிரிக்கெட்டில் கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த் ஆகியோரின் தீவிர ரசிகர். சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சமயங்களில் நேரில் சென்று கண்டு, களித்து, ரசித்து மகிழ்வார். Indoor விளையாட்டுக்களில் மிகவும் பிடித்தது கேரம். டென்னிஸ் மேதை ராமநாதன் கிருஷ்ணனுக்கு, அவரது டென்னிஸ் ஆர்வத்தை கண்டு வியந்து, ஊக்கத் தொகை அளித்து உயர்த்தியுள்ளார்.

80. சென்னை தியாகராய நகரில் உள்ள நல்லியில் தான் தனது வீட்டிற்கு, வீட்டு விசேஷங்களுக்கு தேவையான பெரும்பாலான ஜவுளிகளை வாங்குவார். "நான் சம்பாதிப்பதில் ஒரு பெரிய பகுதியை உன் கடைக்குத் தான் கொடுக்கிறேன்" என நல்லி குப்புசாமியிடம் ஜோக்காகவும் கூறுவார்.

81. நடிகர் திலகம் தனது ரசிகர்களை "பிள்ளைகள்" என்று தான் கூறுவார். ரசிகர், ரசிகர் மன்ற கடிதங்களையெல்லாம் தம்பி ஷண்முகம் தான் கவனித்துக் கொள்வார். சில சுவாரஸ்யமான, வித்தியாசமான, முக்கியமான கடிதங்களை மட்டும் அண்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்வார்.

82. ஒரு நடிகருக்கு, இரு அரசுகள், சிலை அமைத்த பெருமை, நடிகர் திலகத்துக்கே. புதுவை அரசு சார்பில், முதல்வர் ரங்கசாமி, 11.2.2006 அன்று புதுச்சேரியில், சிவாஜிக்கு சிலை அமைத்தார். தமிழக அரசு சார்பில், முதல்வர் கலைஞர், 21.7.2006 அன்று சென்னையில், தன் ஆருயிர் நண்பனுக்கு சிலை அமைத்தார்.

83. நடிகர் திலகத்தின் மறைவுக்குப் பிறகு, ஆண்டுதோறும் அவரது நினைவு மற்றும் பிறந்த தினங்களில், சிவாஜி - பிரபு சாரிட்டீஸ் ட்ரஸ்ட் சார்பில், நடைபெறும் சிவாஜி நிகழ்ச்சிகள், விழாக்களில், திரையுலக முன்னோடிகளுக்கும், திரையுலக சாதனையாளர்களுக்கும் சிவாஜி விருதுகள் வழங்கப்படுகின்றன. அமரத்துவம் அடைந்த முன்னோடிகள், சாதனையாளர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்படுகின்றன.

Gopal.s
30th April 2014, 09:16 AM
Tomorrow being a Labour Day,Review of three Films of NT where in he handled Rural agrarian, urban rikshaw puller and Industrial worker.

Russellbpw
30th April 2014, 10:29 AM
There is a difference between spontaneous Hit and Paid Hit. There were pressure not to run the
Karnan movie upto 175 days inspite of house full shows till 150 days. It is not the case with otherone.

Dear Sir,

I don't think we should comment about the quality of run unless and until it is proved with proof.
This is applicable for everybody. - This is my opinion.

RKS

Russellbpw
30th April 2014, 10:30 AM
dear ravikiran. ?!

Yes Sir...

? = ?

RKS

Russellbpw
30th April 2014, 10:36 AM
அனைத்து நடிகர் திலக ரசிகர்களுக்கும் எனது வந்தனம். என் பெயர் ராமதாஸ். ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். எனது சொந்த ஊர் தஞ்சாவூர். தற்சமயம் கல்கத்தாவில் உறவினர்களுடன் வசித்து வருகிறேன். நான் பல ஆண்டுகளாக நடிகர் திலகம் திரியை வாசித்து மகிழ்வுற்று வருகிறேன். என்னுடைய தமிழறிவிற்கு உரம் போட்டு வித்திட்டவர் நமது அய்யா நடிகர் திலகம் அவர்கள். நான் சிவாஜி அவர்களின் நிரந்தர ரசிகன். நடிகர் திலகம் திரியின் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பையும் பல ஆண்டு காலங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக ஜோ, முரளி, ராகவேந்திரன், பம்மல் சுவாமி, கார்த்திக், சாரதா, கோபால், பார்த்தசாரதி, வாசுதேவன், ராகுல்ராம் இவர்களின் எழுத்துக்கள் என்னை இங்கே ஈர்த்து இழுத்து வந்து விட்டது. இங்கிருப்பவர்கள் போல எனக்கு நிறைய விவரங்கள் தெரியாது. ஆனால் பெரும்பான்மையான நடிகர் திலகத்தின் படங்களை இன்றுவரை பார்த்து பார்த்து மகிழ்கிறேன். ஒய்வு கிடைக்கையில் நிச்சயம் நடிகர் திலகத்தின் அருமையான திறமைகளை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன்.

அனைவருக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

வருக வருக திரு ராமதாஸ் அவர்களே

நல வரவாகுக...வளர்க உங்கள் நற்பணி !

தங்களுடைய எழுத்தை படிக்கும்போது ஏனோ தெரியவில்லை, இந்த திரியின் நண்பர்கள் திரு.கார்த்திக், திரு.அதிராம், திரு. கல் நாயக் ஆகியோர் நினைவிற்கு வருகிறார்கள்.
ஒருவேளை உங்களுடைய நடை அவர்களை நினைவுபடுத்துகிறதோ என்னவோ.

எது எப்படியோ, நண்பர்கள் நினைவுபடுத்தபடுவது நன்றே !

உங்கள் பாணியில் நீங்கள் நடிகர் திலகம் படங்கள் ஆய்வு செய்து பதிவிட வாழ்த்துகிறேன்.

இந்த இனிய நேரத்தில் நண்பர்கள் திரு.ஆதிரம், கார்த்திக், கல்நாயக் ஆகியோர் இன்னும் ......பல நண்பர்கள் நடிகர் திலகம் புகழ் பரப்பினால் மிக நன்றாக இருக்கும் !

Russelldwp
30th April 2014, 11:10 AM
after engal thanga raja release all distributors are ready to release more and more nadigarthilagam's films in trichy
THANKS TO MR.RAVIKIRAN SURYA

avm is going to release uyarntha manithan on 09-may-14 at trichy gaiety theatre

also as per mr.easwaran from avm told that raja part rangadurai is going to be digitalized by avm balasubramanian before jun-14

Russellbpw
30th April 2014, 12:03 PM
after engal thanga raja release all distributors are ready to release more and more nadigarthilagam's films in trichy
THANKS TO MR.RAVIKIRAN SURYA

avm is going to release uyarntha manithan on 09-may-14 at trichy gaiety theatre

also as per mr.easwaran from avm told that raja part rangadurai is going to be digitalized by avm balasubramanian before jun-14

Dear SP Sir,

What have I done to release the film sir ...nothing...!

am just putting up the advertisement / paper ad about our NT films getting re-screened.

Actually, your thanks should go to the distributor who re-screens the film sir...

am just putting up the ad matter and writing that's all ...yedho ennala mudinjadhu..!

RKS

uvausan
30th April 2014, 12:38 PM
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் படம் அம்பிகாபதி. நம் நாயகரின் நயமிகு நற்றமிழுக்காகவே இப்படத்தை எண்ணிலடங்கா தடவைகள் நோக்கியுள்ளேன். எனக்கு என்னமோ எல்லா படங்களையும் விட சிவாஜி அவர்கள் இந்த படத்தில் அற்புத வனப்புடன் காணப்படுவார். அதிலும் குறிப்பாக இறுதிக் கட்ட காட்சியான சிந்தனை செய் மனமே பாடலில் அவர் அழகு கொப்பளிக்கும் தேஜஸுடன் அமர்ந்து ஓரக்கண்ணால் பானுமதியை கண்டவாறே பாடல் பாடும் அழகே தனிதான்.

அதிலும்

தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிபாடருணைக்கிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த

வரிகளுக்கு அவர் இடைவிடாமல் மூச்சுப் பிடித்து வாயசைக்கும் தருணத்தில் மயங்காத மனமும் உண்டா? இந்தக் காட்சியின் போது அரங்குகளில் பொது மக்களால் நடிகர் திலகத்தின் திறமைக்குக் கிடைத்த கைக்கொட்டல்கள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இப்பாடலில் நடிகர் திலகத்தின் பேரழகை நோக்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகி விடுவது என்னால் தவிர்க்க இயலாததாகிறது.

'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த அம்பிகாபதியைப் பெற நாம் என்ன தவம்தான் செய்தோமோ!

தவறுகள் ஏதாவது இருப்பின் அன்பர்கள் பொறுத்தருள்வீர்.

அருமை திரு ராமதாஸ் . உங்கள் வருகை இந்த திரிக்கு இன்னும் அதிகமான புத்துணர்வையும் , உற்சாகத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - இந்த பாடல் TMS க்கும் மிகவும் புகழை தேடித்தந்தது - இந்த படத்தில் கதாநாயகி தேர்வு மட்டும் சற்றே சரியாக அமைந்து இருந்தால் இன்னும் இந்த படம் அதிகமான வெற்றியை அடைந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து - இந்த பாடலை நமது நண்பர் நெய்வேலி வாசுதேவனும் NT - filmography இல் அருமையாக அலசி இருப்பார்

அன்புடன் ரவி

uvausan
30th April 2014, 12:40 PM
There is a difference between spontaneous Hit and Paid Hit. There were pressure not to run the
Karnan movie upto 175 days inspite of house full shows till 150 days. It is not the case with otherone.

Well Said Vasu Sir

KCSHEKAR
30th April 2014, 01:13 PM
அனைத்து நடிகர்திலக ரசிகர்களுக்கும் எனது வந்தனம். என் பெயர் ராமதாஸ். ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். எனது சொந்த ஊர் தஞ்சாவூர். .
தஞ்சை மண்ணின் மைந்தனாக, தமிழாசிரியராக இத்திரியின் புதுவரவாக வந்திருக்கும் திரு.ராமதாஸ் அவர்களை வரவேற்கிறேன்.
'
தங்களுடைய அம்பிகாபதி திரைப்படப் பதிவைப் பார்க்கும்போதே தங்களுடைய தமிழ்ப் புலமை, தமிழார்வம் எங்களுக்குப் புரிகிறது. திரையில் ஒலித்த நடிகர்திலகத்தின் தமிழை தங்கள் பதிவுகளில் வரும் காலங்களில் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.

uvausan
30th April 2014, 01:27 PM
கோபால் அருமையான தொகுப்பு - உங்களுக்கும் , பம்மலார் அவர்களுக்கும் மிகவும் நன்றி - ஒவ்வொரு நடிகர் திலகத்தின் பிள்ளைகளும் பாது காத்து படிக்கவேண்டிய பொக்கிஷம் இது என்று சொன்னால் அது மிகை ஆகாது

uvausan
30th April 2014, 01:34 PM
Murali - wonderful - no words to praise , your way of narrating - Your write up is always a combo of passion , perseverance , patience and a good connect with past - it never gives us a feel that it is lengthy but certainly we end up with a feel that w/up should have continued some more . Hats Off .

eehaiupehazij
30th April 2014, 02:49 PM
dear Murali. really an amazing compilation and a good write-up of data and information on Baaga Pirivinai. You, Gopal Sir, Ragul,Ravikiran Surya ...... really fantastic contributors to NT's name and fame.Hats off!

eehaiupehazij
30th April 2014, 02:52 PM
Well Said Vasu Sir

Ravikiran's timely display of the 50th day posters of Karnan and the satire on the other movie is really an eye opener to the tamil cinema fans as to establish who is the real crowd puller and bankable icon! We are partly indebted to Chokkalingam sir too! Marketless Guaranteeless Revenueless rerun movies need not be compared with an evergreen immortal epic like Karnan!!

eehaiupehazij
30th April 2014, 03:01 PM
Dear Rama Doss Sir. Absorbing write-up on NT's Ambikapathy. Iyal, Isai, Nadagam...muththamizhilum viththagar NT but NT is the greatest teacher of how a tamil word should be pronounced with appropriate modulations. Any one who practices speech Tamil, NT's mode is inevitable. Also, there is no one in this universe to match his lip movement synchronization in song sequences!!Welcome Sir.

ScottAlise
30th April 2014, 04:25 PM
பார்த்ததில் பிடித்தது 29

1954 ல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் நம் நடிகர் திலகத்தின் 11 வது படமான இல்லற ஜோதி படத்தை பற்றி தான் இந்த பதிவு . நடிகர் திலகத்துடன் பத்மினி ,ஸ்ரீரஞ்சனி, தங்கவேலு, அசோகன் என்று பலரும் நடித்த படம் தான் இந்த இல்லற ஜோதி .

கதை :

மனோகர் (சிவாஜி) என்ற இளைஞன் கலை ஆர்வம் மிக்கவன் , இதனால் வேலைக்கு செல்லாமல் , நாடகத்துக்கு கதை மற்றும் கவிதை எழுதி நாட்களை கடத்துகிறார் , சரியான வாய்ப்பு அமையாமல் தவிக்கிறார் . அதே ஊரில் புரொபஸர் ஒருவர் இருக்கிறார் அவர் மகள் சித்ரலேகா (பத்மினி ) , அவருக்கும் கலையில் அதித ஈடுபாடு . நெட்டிலிங்கம் (தங்கவேலு , மனோகரின் தந்தை ) தன் மகனுக்கு கல்யாணம் செய்துவைக்க எண்ணுகிறார் , மாப்பிள்ளை வேலை இல்லாமல் இருப்பதால் ஒருவரும் பெண் கொடுக்க முன்வராததால் , தன் மகனுக்கு வேலை வாங்கி கொடுக்கிறார் , ஆர்வம் இல்லாமல் வேலை பார்க்கிறார் மனோகர் , இது தான் சமயம் என்று மனோகருக்கு காவேரி (ஸ்ரீ ரஞ்சனி ) என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைகிறார்கள் . தன் மகன் மீண்டும் கவிதை எழுதி நேரத்தை வீணாக செலவு செய்ய கூடாது என்று எண்ணி மனோகர் எழுதிய கவிதைகளை பழைய பேப்பர் கடைக்காரனிடம் கொடுத்து விடுகிறார் . அந்த கவிதைகள் சித்ரலேகாவிடம் வருகிறது , அதை அறிந்து மனோகர் அங்கு வர மனோகரின் கவிதைகளை ரசிக்கும் சித்ரலேகா அவரை நாடகம் எழுதி தர சொல்ல , மனோகர் சலீம் அனார்கலி நாடகம் எழுதி , இருவரும் நடிக்க , நாடகம் பெரிய ஹிட் ஆகி விடுகிறது .

ஏற்கனவே வேலை பிடிக்காமல் இருக்கும் மனோகர் முழு நேர கலை பித்தனாகிறார் . சித்ரலேகா , மனோகர் இருவரும் அடிகடி சந்தித்து கொளுகிரர்கள் , இருவருக்கும் இடையில் வெறும் நட்பு தான் என்றாலும் மனோகரின் மனைவி , மற்றும் சித்ரலேகாவின் வருங்கால கணவன் என்று நினைத்து கொண்டு இருக்கும் மோகன் (அசோகன் ) இருவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது . இருவரும் நட்பாக தான் இருக்கிறார்கள் என்றாலும் ஆழ்மனதில் இருவரும் காதலிக்கிறார்கள் .

மனோகருக்கு குழந்தை பிறக்கிறது . தன் மனைவியின் தூய்மையான அன்பு புரிகிறது , தன் தவறை உணர்கிறார் .சித்ரலேகா வீட்டுக்கு சென்று தன் தவறுக்கு மனிப்பு கேட்கிறார் . முடிவில் மோகனை திருமணம் செய்து கொளுகிறார் சித்ரலேகா

படத்தை பற்றி :

மிகவும் sensitive கதை , கவனமாக கையாளாவிட்டால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளக நேரிடும் , அப்படி எதுவும் இல்லாமல் , கத்தி மேல் நடந்து அதை வெற்றிகரமாகவும் நடந்து சாதனை படைத்தது இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் , இதற்கு பட குழுவினர்களுக்கு ஒரு சபாஷ் . எனக்கு இந்த படத்தில் ஒரு குறை என்றால் அது இந்த படத்தின் நெடுந்தகடு quality தான் , ப்ரதி மிகவும் சுமார் . இந்த படத்தில் என்னை கவர்ந்த அம்சம் அனர்கலி நாடகம் கிட்ட தட்ட 15 நிமிடம் ஓட கூடிய அந்த நாடகம் மிகவும் அற்புதம் . அதில் சிவாஜி மிகவும் அற்புதமாக நடித்து அசதி இருப்பார் , அதுவும் கல்லறை முன் நின்று அவர் உருகும் இடம் , பிச்சு உதறி இருப்பார் மனிதர் . கல் நெஞ்சையும் உருக வைக்கும் . முதல் சில நிமிடங்களில் அவர் பேசுவது புரிந்து கொல்வது சற்று சிரமமாக இருந்தது காரணம் அவர் தூய தமிழில் பேச அவரின் தந்தையாக வரும் தங்கவேலு சாதரணமாக பேச அந்த ஒரு காட்சி மட்டும் பிரிண்ட் சுமாராக இருந்ததால் சுத்தமாக புரியவில்லை , ஆனால் இந்த படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பை விட , நான் ரசித்தது அவர் முகத்தின் வசீகரத்தை தான் , என்ன அழகாக இருக்கார் மனிதர் .தங்கவேலுவின் நகைச்சுவை வழக்கம் போலே அபாராம் அதுவும் திருப்திசாமி என்ன சாபற்றிங்க ?
ஒன்னும் இல்லைய ?
பத்மினியின் நடிப்பு , நடனம் , அழகு அனைத்தும் உச்சம் .அதுவும் அனார்கலி நாடகத்தில் அவர் காட்டும் ஏமாற்றம் , சாகும் பொது கண்களில் தெரியும் ஏக்கம் , சொல்ல வார்த்தைகள் இல்லை.

பாடல்கள் G ராமநாதன் இசையில் நன்றாக இருக்கிறது

மொத்தத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம் இந்த படம்

ScottAlise
30th April 2014, 04:30 PM
Welcome ramadoss sir

வருக வருக திரு ராமதாஸ் அவர்களே உங்கள் தமிழ் புலமையில் பதிவுகளை எதிர்பார்கிறேன்

ScottAlise
30th April 2014, 04:31 PM
Dear gopal sir,

wonderful compilation of pammalar sir"swork

kalnayak
30th April 2014, 04:59 PM
அனைத்து நடிகர் திலக ரசிகர்களுக்கும் எனது வந்தனம். என் பெயர் ராமதாஸ். ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். எனது சொந்த ஊர் தஞ்சாவூர். தற்சமயம் கல்கத்தாவில் உறவினர்களுடன் வசித்து வருகிறேன். நான் பல ஆண்டுகளாக நடிகர் திலகம் திரியை வாசித்து மகிழ்வுற்று வருகிறேன். என்னுடைய தமிழறிவிற்கு உரம் போட்டு வித்திட்டவர் நமது அய்யா நடிகர் திலகம் அவர்கள். நான் சிவாஜி அவர்களின் நிரந்தர ரசிகன். நடிகர் திலகம் திரியின் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பையும் பல ஆண்டு காலங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக ஜோ, முரளி, ராகவேந்திரன், பம்மல் சுவாமி, கார்த்திக், சாரதா, கோபால், பார்த்தசாரதி, வாசுதேவன், ராகுல்ராம் இவர்களின் எழுத்துக்கள் என்னை இங்கே ஈர்த்து இழுத்து வந்து விட்டது. இங்கிருப்பவர்கள் போல எனக்கு நிறைய விவரங்கள் தெரியாது. ஆனால் பெரும்பான்மையான நடிகர் திலகத்தின் படங்களை இன்றுவரை பார்த்து பார்த்து மகிழ்கிறேன். ஒய்வு கிடைக்கையில் நிச்சயம் நடிகர் திலகத்தின் அருமையான திறமைகளை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன்.

அனைவருக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

நடிகர்திலகம் திரியில் புதிதாக பதியத்துவங்கியிருக்கும் தமிழாசிரியர் ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கங்கள். தமிழாசிரியர்கள் என்றால் நான் மிக்க மரியாதை செலுத்துவேன். இங்கு பலரும் சொல்வது போல் நடிகர் திலகமும் எனக்கு தமிழாசிரியர்தான்.
உங்கள் முதல் பாராட்டு பதிவில் அம்பிகாபதி படப்பாடலை நன்றாக எடுத்தெழுதி வரும் பதிவுகளுக்கு முன்னுரை தந்து விட்டீர்கள். எதிர்பார்க்கிறோம் உங்கள் அடுத்தடுத்த பதிவுகளை.

kalnayak
30th April 2014, 05:24 PM
வருக வருக திரு ராமதாஸ் அவர்களே

நல வரவாகுக...வளர்க உங்கள் நற்பணி !

தங்களுடைய எழுத்தை படிக்கும்போது ஏனோ தெரியவில்லை, இந்த திரியின் நண்பர்கள் திரு.கார்த்திக், திரு.அதிராம், திரு. கல் நாயக் ஆகியோர் நினைவிற்கு வருகிறார்கள்.
ஒருவேளை உங்களுடைய நடை அவர்களை நினைவுபடுத்துகிறதோ என்னவோ.

எது எப்படியோ, நண்பர்கள் நினைவுபடுத்தபடுவது நன்றே !

உங்கள் பாணியில் நீங்கள் நடிகர் திலகம் படங்கள் ஆய்வு செய்து பதிவிட வாழ்த்துகிறேன்.

இந்த இனிய நேரத்தில் நண்பர்கள் திரு.ஆதிரம், கார்த்திக், கல்நாயக் ஆகியோர் இன்னும் ......பல நண்பர்கள் நடிகர் திலகம் புகழ் பரப்பினால் மிக நன்றாக இருக்கும் !


நண்பர் ரவிகிரண் சூர்யா அவர்களே, திரியில் புதிதாக யார் வந்தாலும் தாங்கள் என்னை நினைத்துப்பார்ப்பது அழகோ அழகு. என்ன செய்வது (திரியில் நான் அழைக்கும்) எங்கள் அண்ணன் காட்டிய வழியினால் வந்த வினையிது. பரவாயில்லை. நீங்கள்தான் என்னை இங்கிருக்கும் பலரது பெயரில் சந்தித்து விட்டீர்கள். நீங்கள் சந்திக்காத சிலரை நானென்று நம்பும் உங்களை நான் சந்தித்து உங்கள் நம்பிக்கையை பொய்யாக்க விரும்பவில்லை. போக்கிரி வடிவேலு போல இதை வேண்டுமென்றால் உங்கள் திருப்திக்கு சொல்லிக்கொள்ளுங்கள்-"எந்த பெயரில் எழுதினாலும் இந்த ரவிகிரண் சூர்யா எப்படித்தான் என்னை கண்டுபிடிக்கிறாரோ!!!"

ராமதாஸ் சார் அவர்கள் வேண்டுமென்றால் அவர் நானில்லையென்பதற்கு ஆதாரமாக தங்களை நேரில் சந்தித்து தங்கள் சாபத்திலிருந்து விலக்கு பெற்றுக்கொள்வாராக.

uvausan
30th April 2014, 05:37 PM
dear Murali. really an amazing compilation and a good write-up of data and information on Baaga Pirivinai. You, Gopal Sir, Ragul,Ravikiran Surya ...... really fantastic contributors to NT's name and fame.Hats off!

Dear Sivajisenthil, I think you have left out inadvertently following great personalities from your fantastic & great contributors to NT's name and fame . In my opinion , this thread is greatly strengthened by their contributions and timely appreciation of others who post their views . The names you have chosen are true and very correct . Apart from them

1. Ragavendra Sir ( no words to praise his contributions )

2. CK ( though not frequently posting but his way of narrating is different and admirable)

3. CS Sekhar ( he never hesitate in appreciating articles of others instantly)

4. Sivaji Senthil

5. JR )
Great admirers of NT like all of us
6. Partha sarathy )

7. Vasudevan ( great admirer of NT )

8. Ramajayam Sir ( well seasoned personality )

9. Pammalar ( see his compilation thro Gopal )

10. Neiveli Vasudevan ( though he is not visiting here , his analytic skills are awesome

11. Kalnayak ( his sense of humour is excellent)

Thanks , I like your spontaneous reaction whenever we compare the movie Karnan with others. Idea is not to discount your posting but to highlight the missing names who are equally doing great here .

kalnayak
30th April 2014, 05:53 PM
அன்புள்ள ஆதிராம், நீண்ட நாட்களுக்குப்பின் இங்கு. உங்களுக்கு என்ன பிரச்சினை? நீங்கள் நானல்லவென்று நண்பர் ரவிகிரண்சூர்யா அவர்களிடம் நிரூபிக்க வேண்டும் - அவ்வளவுதானே. அவரிடம் தங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளச்சொல்லுஙகள். அது போதாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நேரடியாக சந்தியுங்கள். அவர் விட்ட சாபத்திலிருந்து விலக்கு கோருங்கள். இல்லாவிட்டால்... மறுபடி நானே என்னுடன் பேசிக்கொள்வதாய் ... முதலிலிருந்து மறுபடி தொடரும். உங்களுக்குத் தேவையா இவையெல்லாம்?

இதென்ன கலாட்டா நான் பதிலுரைப்பதற்குள் ஆதிராமின் பதிவே பறிபோனதெங்கே. இரவிகிரண் சூர்யா அவர்களே இதற்கும் நானே காரணமாகிப் போகிறேன் என்று தாராளமாக சொல்லுங்கள் (?!!!!)

Russellawz
30th April 2014, 06:09 PM
திரியில் என்னை வரவேற்ற நண்பர்கள் ராகவேந்திரன் அய்யா, சௌத்ரி அய்யா, ராதாகிருஷ்ணன் மற்றும் ரவிகிரண் சூர்யா, சின்னக் கண்ணன், ரவி ஆகிய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி!

ரவி அவர்களே!
தங்களின் தனித்துவமான பதிவுகள் சர்க்கரை பொங்கலாய் இனிக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தங்களின் பாடல் அலசல்கள் அச்சு வெல்ல சுவை.
முரளி அவர்களே!
தங்களின் தாழையாம் பூ முடிச்சு பாடல் அலசல் மிக நன்று. நீங்கள் மிக விரிவாகவும், அழகுறவும் இப்பாடலை அலசி எங்களை மகிழ்வுறச் செய்துள்ளீர்கள்.

kalnayak
30th April 2014, 06:24 PM
Dear Sivajisenthil, I think you have left out inadvertently following great personalities from your fantastic & great contributors to NT's name and fame . In my opinion , this thread is greatly strengthened by their contributions and timely appreciation of others who post their views . The names you have chosen are true and very correct . Apart from them

1. Ragavendra Sir ( no words to praise his contributions )

2. CK ( though not frequently posting but his way of narrating is different and admirable)

3. CS Sekhar ( he never hesitate in appreciating articles of others instantly)

4. Sivaji Senthil

5. JR )
Great admirers of NT like all of us
6. Partha sarathy )

7. Vasudevan ( great admirer of NT )

8. Ramajayam Sir ( well seasoned personality )

9. Pammalar ( see his compilation thro Gopal )

10. Neiveli Vasudevan ( though he is not visiting here , his analytic skills are awesome

11. Kalnayak ( his sense of humour is excellent)

Thanks , I like your spontaneous reaction whenever we compare the movie Karnan with others. Idea is not to discount your posting but to highlight the missing names who are equally doing great here .

இரவி சார் உங்களுக்கு மிக்க தன்னடக்கம். சமீப காலத்தில் மிக அதிகமாக பங்கெடுத்து அற்புதமாக மட்டுமல்ல உண்மையான நடிகர் திலகத்தின் பெருமையையும் பறை சாற்றுபவர் நீங்களே. தங்கள் பெயரை கட்டாயம் அவர் சொல்லியிருக்கவேண்டும்.

Gopal.s
30th April 2014, 09:50 PM
நல்ல விஷயங்கள் எந்த மொழியில், உலகின் எந்த பகுதியில் இருப்பினும்,அதை தமிழுக்கு கொண்டு வந்து ,தமிழுக்கு வளம் சேர்க்க சொன்னவர் பாரதி.பாரதியாரின் ஆணையை சிரமேற்கொண்டு பல நல்ல வெளிநாட்டு திரைப்பட காவியங்களை, பல நல்ல பிற மொழி கதைகளை,படங்களை,பல நல்ல இந்திய நாடகங்களை,நமது மரபாம் தெரு கூத்து, மற்றும் காவியங்களை தமிழ் திரைப்படங்களுக்கு கொண்டு வந்து, புதிய சிந்தனைகள்,பரிசோதனை முயற்சிகள் ,புதிய வித்தியாச கதை களம், தமிழில் கொண்டு வர தளம் அமைத்த முன்னோடி நமது முழு முதல் நடிப்பு கடவுளாம் நடிகர் திலகமே. அது மட்டுமன்றி தமிழில் வெளி வந்த சிறந்த நாவல்கள்,கதைகள் திரைப்படங்களாக காரணமாய் இருந்த முன்னோடி.
நடிகர் திலகம் நடித்து படமான சில சிறந்த தமிழ் கதைகள்-
கள்வனின் காதலி- அமரர் கல்கி-
ரங்கோன் ராதா- அமரர் அண்ணா.
புதையல்- கருணாநிதி
மரகதம்- வழுவூர் துரைசாமி
பாவை விளக்கு- அகிலன்
பெற்ற மனம்- மு.வரதராசனார்.
குலமகள் ராதை- அகிலன்
இருவர் உள்ளம் - லட்சுமி
தில்லானா மோகனாம்பாள்- கொத்தமங்கலம் சுப்பு.
காவல் தெய்வம் - ஜெயகாந்தன்
விளையாட்டு பிள்ளை-கொத்தமங்கலம் சுப்பு.

Gopal.s
30th April 2014, 10:05 PM
நான் மிக ரசித்த எழுபத்தி ஆருக்கு பிறகு வந்த நடிப்பு கடவுள் காட்சிகள்-

---தீபம் படத்தில் சுஜாதா ,தன் தங்கையுடன் வீட்டுக்கு வரும் காட்சியில் அவரை கவர பேச்சு கொடுக்கும் காட்சி. அதே படத்தில் சத்யப்ரியாவை பீஸ் பீஸ் ஆக்கும் காட்சி.

---ஹிட்லர் உமாநாத்தில் தன் மனையிடம் அவள் superiority காம்ப்ளெக்ஸ் கொண்டிருப்பதை சுட்டி காட்டி பொருமும் காட்சி.

---நான் வாழ வைப்பேன் படத்தில் ,டிராவல் ஏஜென்சிக்கு விசாரணைக்கு வந்து போலீஸ் கேட்கும் கேள்விகளின் போது,மறந்த விஷயங்களை நினைவு படுத்தி கொள்ள முயல்வது.

----வாழ்க்கை படத்தில் தனிமையில் இருக்கும் உச்ச காட்சி ,அம்பிகாவுடன் விரக்தியில் பேசும் காட்சி.

---ராஜரிஷியில் திரிசங்குவிடம் வசிட்டரை தாக்கி குத்தலாக பேசும் காட்சி.

---ஜல்லி கட்டு படத்தில் சத்யா ராஜ் இடம் சதாய்க்கும் இடங்களும் ,பிறகு தன் மனதை திறப்பதும்.

---ரிஷி மூலத்தில் மனைவியுடன் தன் பழைய வாழ்க்கையை குறிப்பிட்டு மன்னிக்க மன்றாடும் காட்சி.

---அண்ணன் ஒரு கோவிலில் தங்கையின் நிலை குறித்து புலம்பும் காட்சி.

---தியாகம் குடித்து விட்டு அறிமுகம் ஆகும் காட்சி,ஜஸ்டின் சண்டை.

---வெற்றிக்கு ஒருவன் ஆடல் பாடலில் காட்சி.

---என்னை போல் ஒருவனில் நண்பன் சுற்றத்தாரை பற்றி அறியாமல் நண்பனை போல் நடிக்கும் நயமான நகைச்சுவை காட்சி.

uvausan
30th April 2014, 10:15 PM
கல்நாயக் சார் ,

சிவாஜி செந்தில் , யாரையும் புண் படுத்தவேண்டும் என்று பதிவை போடவில்லை - it was unintentional . என்னுடைய பதில் பதிவிலேயும் நான் திரிக்கு கடுமையாக உழைக்கும் மற்றும் பல பெயர்களை விட்டிருக்கலாம் - பாருங்கள் , சிவாவையும் , goldstar சதீஸ் யையும் குறுப்பிட மறந்துவிட்டேன் - அவர்கள் உழைப்பும் எந்த வகைகளிலும் குறைந்தது அல்ல - சதீஸ் NT யின் தெலுங்கு பட விளம்பரங்கள் 150க்கும் மேலாக ஒரே மூச்சில் பதிவு செய்தார் - சிவா சார் இல்லையென்றால் , ஸ்ரீலங்காவில் புதைக்க பட்ட பல உண்மைகள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை .... இந்த திரியில் எல்லோரும் வர வேண்டும் , பதிவுகளை போட வேண்டும் - திரியின் வேகம் intellectual ஆக இருக்கவேண்டும் , வெறும் videos மூலமோ , பொய் , பித்தலாட்டங்கள் மூலமோ திரியை ரொப்ப கூடாது என்பதுதான் இங்கு இருக்கும் பலருக்கும் ஒருமித்த கருத்தாக இருக்கமுடியும்

பதிவு போடுபவர்கள் மட்டுமே இந்த திரியில் இருந்தால் , அவைகளை படிப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் - படிப்பவர்கள் வேண்டும் , பதிவுகளை போடுபவர்களும் வேண்டும் - திரி அப்பொழுதுதான் balance ஆக முன்னேறும் . எல்லோருக்கும் எல்லோருடைய பதிவுகளும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது - சிவாஜி செந்தில் போன்ற சிலருக்கு என் பதிவுகள் பிடிக்காமல் இருக்கலாம் - அந்த குறைகளை நிவர்த்தி செய்யத்தான் நான் இன்னும் பாடு படனுமே தவிர அவர் பதிவை தவறாக எடுத்துகொள்வது எந்த விதத்தில் நியாயம் ??

அவர் சில சிறந்த பெயர்களை மட்டும் குறுப்பிட்டு சொல்லிவிட்டு , நிறுத்தி விட்டதால் , கடுமையாக உழைத்து இந்த திரிக்கு மேலும் பெருமை சேர்க்கும் மற்றும் சிலரின் பெயர்களை அவருக்கு நினைவு படுத்தினேன் - அவ்வளவே - இதை வளர்க்க எனக்கு சற்றும் விருப்பம் இல்லை

eehaiupehazij
30th April 2014, 10:58 PM
Ravi g.I enjoy every one's contribution in this thread.As an ardent NT fan all NT fans are equal for me. Please do not mistake. I have not made much contributions but I admire all of you for your writings in this thread. I am awaiting to see all the stalwarts of this thread in a common forum as an ordinary hubber with NT in heart and mind.

eehaiupehazij
30th April 2014, 11:21 PM
Dear Ravi/ Kalnayak sir. I really felt sorry. I didnot omit anyone but I just indicated ...... as an endless list of contributors. At times I went emotional when derogatory remarks or criticisms are made on our NT, not with an intention to hurt but to retaliate and to show our strength against them. But, I always enjoyed the writings of everyone in this thread. Kindly bear with me if I have hurt your feelings.

Murali Srinivas
1st May 2014, 12:49 AM
பாகப் பிரிவினை பாடல் பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

திரியின் அனைத்து பங்களிப்பாளர்கள், வாசகர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

ராஜபார்ட் ரங்கதுரை என்ற காவியத்தின் டிஜிட்டல் பதிப்பு வரப் போகும் தேனினும் இனிய செய்தியை பகிர்ந்துக் கொண்ட திருச்சி ராமச்சந்திரன் சாருக்கு நன்றிகள் பல.

ராமச்சந்திரன் சர் சொன்னது போல மலைக்கோட்டை மாநகரில் நடிகர் திலகத்தின் படங்களுக்கு பெரிய மவுசு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் திருச்சி மாநகரில் வலம் வரப் போகின்றன.

மே 2 முதல் திருச்சி முருகன் மற்றும் ஸ்ரீரங்கம் ரெங்கராஜா அரங்குகளில் பாசமலர். மே 9 முதல் திருச்சி கெயிட்டியில் உயர்ந்த மனிதன். If all goes well, மே 16 முதல் திருச்சி அருணாவில் எங்கள் தங்க ராஜா வெளியாக இருக்கிறது.

திருச்சி நண்பர்களே enjoy!

அன்புடன்

Murali Srinivas
1st May 2014, 12:51 AM
ஒரு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது நமது திரியைப் பற்றி பேச்சு வந்தது. அவர்கள் நமது திரியின் silent readers. அவர்களில் சிலர் நமது மெயின் திரியை மட்டும் படிப்பவர்களாகவே இருப்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிய வந்தது. Book Mark போல ஒன்றை வைத்துக் கொண்டு மெயின் திரிக்கு மட்டுமே வந்து செல்கிறார்கள். அவர்களிடம் ஏனைய திரிகளைப் பற்றி சொல்லும்போது அதைப் பற்றிய awareness இல்லை என்பது புரிந்தது. அவர்களிடம் மற்ற திரிகளைப் பற்றி சொல்லி விட்டு எப்படி அதை பார்ப்பது என்பது பற்றியும் விளக்கினேன். இனி அதன்படி செய்கிறேன் என்று சொன்னவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார்கள். நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக தொடராக வந்துக் கொண்டிருக்கும் அந்த நாள் ஞாபகம் [பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற தலைப்பிலுள்ள திரியில் பதிவு செய்யப்படுவது] தொடரில் இதுவரை பதிவு செய்தவற்றையும் இனி மேல் செய்யப் போவதையும் மெயின் திரியிலும் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டனர். சிறிது காலத்திற்கு மட்டும் இப்படி செய்யும்படியும் பிறகு தனி தனி திரிகளில் பதிவிடுமாறும் கேட்டுக் கொண்டனர். ஒரே பதிவை பல திரிகளில் பதிவிடுவதை நான் விரும்பவில்லை எனும் போதிலும் நண்பர்களின் அன்புக் கட்டளைக்கேற்ப அங்கே எழுதியவற்றை மீள் பதிவு செய்திருக்கிறேன். அதே தலைப்பில் நடிகர் திலகத்தின் படங்களின் முதல் வெளியீட்டு அனுபவ தொடரில் இன்று புதிதாக எழுதிய ஒரு பதிவும் இங்கே பதிவு செய்திருக்கிறேன். ஒரே பதிவு இரண்டு திரிகளில் இடம் பெற்றதற்கு வாசகர்கள் மன்னிக்கவும்.

அன்புடன்

Murali Srinivas
1st May 2014, 12:52 AM
2009-ல் எழுதியது.

அந்த நாள் ஞாபகம்

இன்றைக்கு சரியாக 37 வருடங்களுக்கு முன் [1972] இதே நாளில் ராஜா திரைப்படம் வெளியானது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அந்த நாளில் ஜனவரி 26 அன்று [26.01.1972] நான் இந்த படம் மதுரை சென்ட்ரலில் ஓபனிங் ஷோ பார்த்துக் கொண்டிருந்தேன். இதை பற்றி சிந்திக்கும் போது நண்பர் tacinema அவர்கள் நினைவு வந்தது

நண்பர் tacinema என்னிடம் பல முறை அந்த நாட்களில் நான் பார்த்த நடிகர் திலகத்தின் படங்களின் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளை எழுதுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் இதோ இதோ என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இப்போது எழுதலாம் என்று ஒரு எண்ணம். எந்தளவுக்கு நினைவுக்கு கொண்டு வர முடியும் என்று தெரியவில்லை. அந்த ஞாபக நதிக் கரையோரமாக நடந்து பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது.

அதற்கு முன்பு, இதன் முன்னோட்டமாக ஒரு சில விஷயங்கள். என்னிடம் அநேகம் பேர் (குறிப்பாக நமது ஹப்பர்கள்) கேட்ட கேள்வி "நீங்கள் ஆரம்பத்திலிருந்தே சிவாஜி ரசிகரா? இல்லை கன்வர்ட்டா". நான் சொல்லும் பதில் " நான் மதம் மாறியவன் இல்லை". அவர்கள் கேட்ட கேள்வியின் பின்னணியை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதாவது சிறு வயதில் அனேகமாக எல்லா பாய்ஸும் சண்டை, காமெடி என்ற விஷயங்களில் தான் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். அப்படியிருக்க நீங்கள் எப்படி மாறுபட்டு போனீர்கள் என்ற அர்த்தத்தில் கேட்டார்கள். இதைப் பற்றி யோசித்த போது இரண்டு காரணங்கள் புலப்பட்டன. External and Internal influences. அக மற்றும் புற காரணங்கள் என்று சொல்லலாம். புற காரணம், சிறு வயதில் நான் பார்த்த அல்லது நான் பார்க்க அழைத்து செல்லப்பட்ட படங்கள் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. வாழ்க்கையில் முதலில் பார்த்த படம் தெய்வப்பிறவி (அம்மா சொல்லி தெரிந்துக்கொண்டது). பின்னர் நினைவு இடுக்குகளின் சேகரத்தில் முதலில் ஞாபகம் இருப்பது அன்னை இல்லம் பார்த்தது. [நடையா இது நடையா பாடல் ஞாபகம் இருக்கிறது], பிறகு மதுரை தங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் அம்மா கையை பிடித்துக்கொண்டு கர்ணன் பார்க்க போனது, முரடன் முத்து பார்த்தது [சிவாஜி கோபித்து கொள்ளும் ஒரு காட்சி மட்டும் நினைவில் நிற்கிறது], அடுத்தது எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த மாஜிஸ்ட்ரேட் செல்வாக்கால் ஸ்ரீதேவி தியேட்டரில் மணிக்கணக்காய் வரிசையில் நின்றிருந்த மக்கள் வெள்ளம் எங்களை பொறாமையுடன் முறைக்க போலீஸ் எஸ்கார்ட் சகிதம் நாங்கள் திருவிளையாடல் பார்க்க போனது, கல்பனா திரையரங்கில் மோட்டார் சுந்தரம் பிள்ளை பார்த்தது, பிறகு சரஸ்வதி சபதம், செல்வம், கந்தன் கருணை, நெஞ்சிருக்கும் வரை, திருவருட்செல்வர் என்று பார்த்ததில் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. இந்த காலக்கட்டத்தில் நான் பார்த்த ஒரே எம்.ஜி.ஆர் படம் எங்க வீட்டு பிள்ளை. அக காரணம் என்று நான் குறிப்பிட்டது என்னை சுற்றி இருந்த சுற்றத்தார். அது தந்தை வழியாக இருந்தாலும் சரி, தாய்வழி சுற்றமானாலும் சரி, பெரும்பான்மையோர் நடிகர் திலகத்தின் ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்கள் நடிகர் திலகத்தின் பழைய படங்களை பற்றி, அதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப்பற்றி, அவரின் ஸ்டைல் பற்றி நிறைய சொல்லுவார்கள். அதை கேட்டு கேட்டு மனதில் அவரின் ஆளுமை பதிந்து போனது. ஆக, இது போன்ற அகம் மற்றும் புற காரணங்களால் நடிகர் திலகம் ரசிகனாகி விட்டேன். இந்த விஷயங்களுக்கும் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். அதற்கு வருகிறேன்.

இந்த காலக்கட்டத்திலேதான் ஓரளவிற்கு விவரம் புரிய ஆரம்பித்த நேரம் என்று சொல்ல வேண்டும். அந்த வருடம் தீபாவளி திருநாள் வருகிறது. வீட்டிலிருந்து மாலை காட்சிக்கு அனைவரும் சென்ட்ரல் சினிமாவிற்கு ஊட்டி வரை உறவு பார்க்க போகிறோம். அதற்கு முன் கூட்டம் பார்த்திருந்தாலும் கூட அது போல ஒரு கூட்டத்தை அன்று தான் பார்த்தேன். எவ்வளவு முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. பக்கத்தில் நியூ சினிமாவில் இரு மலர்கள் அங்கே போகலாம் என்று ஒருவர் சொல்ல அங்கே செல்கிறோம். அங்கே ஏற்கனவே ஹவுஸ் புல். கடைசியில் கல்பனா தியேட்டருக்கு போய் "நான்" திரைப்படம் பார்த்தோம். ஊட்டி வரை உறவு மற்றும் இரு மலர்கள் படத்திற்கு வந்த கூட்டம் என் மனதில் முதல் நாள் முதல் ஷோ ஆசையை விதைத்து விட்டது. ஆனால் அதை அப்போது நான் உணரவில்லை.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
1st May 2014, 12:54 AM
மீள் பதிவு தொடர்

அந்த நாள் ஞாபகம்

அதற்கு பிறகு வரிசையாக நடிகர் திலகம் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். திருமால் பெருமை, கலாட்டா கல்யாணம் போன்றவைக்கு பிறகு பார்த்த என் தம்பி அந்த அடி மனதில் இருந்த ஆசையை வெளிக்கொண்டு வந்தது. காரணம் அதில் இடம் பெற்ற தெருக்கூத்து பாடல். அதில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் திலகம் பாடுவதாக அமையும்

தெற்கத்தி கள்ளனடா

தென் மதுரை பாண்டியனடா

தென்னாட்டு சிங்கம்டா

சிவாஜி கணேசனடா !

நான் பார்த்தது மூன்றாவது நாள். அப்போதே தியேட்டரில் எழுந்த ஆரவாரம் அளவிட முடியாதது. அப்படியென்றால் ஓபனிங் ஷோ எப்படியிருந்திருக்கும்? என்ற எண்ணம் தோன்றியவுடன், அப்படிப்பட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று மனது ஆசைப்பட ஆரம்பித்தது. அடுத்தது தில்லானா முதல் நாள் கூட்டம் அந்த ஆசையை அதிகரித்தது. அடுத்து வந்த எங்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம் மற்றும் உயர்ந்த மனிதன் இவை எல்லாமே முதல் வாரத்தில் பார்த்தேன் என்றாலும் ஓபனிங் ஷோ ஆசை நடக்கவில்லை. இவ்வளவு ஏன் ஓபனிங் டே கூட பார்க்க முடியவில்லை. காரணம் சிறு வயது + கூட்டம் அதிகமாக இருக்கும்.அதனால் வேண்டாம் என்ற வீட்டார் முடிவு.

அடுத்த காலண்டர் வருடம் [1969] ஆரம்பம். ஜனவரி 1 அன்றே அன்பளிப்பு ரிலீஸ். ஆனால் வழக்கம் போல் மூன்றாவது நாள் தான் பார்த்தேன். அடுத்தது தங்க சுரங்கம் மார்ச் மாதம். Annual எக்ஸாம் டைம். எனவே பார்க்க முடியவில்லை. தொடர்ந்து காவல் தெய்வம், குருதட்சணை, அஞ்சல் பெட்டி 520, நிறை குடம் எல்லாம் முதல் வாரம் ஆனால் முதல் நாள் கிடையாது. அடுத்து தெய்வ மகன் ரிலீஸ் செப் 5 அன்று. வழக்கம் போல் மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. [இந்த மூன்றாம் நாளின் காரணம் என்னவென்றால், நாங்கள் ஆரப்பாளையத்தில் குடியிருந்தோம். சனிக்கிழமை மதியம் [ஹாப் டே ஸ்கூல்] டவுனில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போவேன். ஞாயிறு மாலை வரை அங்கே வாசம். பிறகு திரும்பி ஆரப்பாளையம். எனவே படங்கள் சனிக்கிழமை மாலை,இரவு அல்லது ஞாயிறு காலை, மதியம் இதில் ஏதாவது ஒரு காட்சி என்னை என் கஸின் கூட்டிக்கொண்டு போவான்]. அடுத்த ஒரு மாதத்தில் திருடன் ரிலீஸ். அதுவும் அப்படியே.

இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள்.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.

நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். தீபாவளியன்று மாலை தாத்தா வீட்டிற்கு வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம். மாலை வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்].இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
1st May 2014, 12:55 AM
அந்த நாள் ஞாபகம்

இப்படியாக 1969 முடிந்து 1970 ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த ஆசையும் அதிகரித்தது. பொங்கலன்று (ஜனவரி 14 ) எங்க மாமா ரிலீஸ். இந்த படத்தையாவது முதல் நாள் பார்க்க வேண்டும் என்று நானும் என் கஸினும் முடிவு செய்தோம். எங்களுக்கு வசதியாக எங்க மாமா தங்கம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆசியாவின் மிகப பெரிய அரங்கமானதால் டிக்கெட் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. வீட்டில் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லி, சொல்லி ஒரு சின்ன வாக்குறுதி வாங்கினோம். முதல் நாள் இரவு மறுபடியும் தடை. "பொங்கலன்னிக்கு சினிமா தியேட்டருக்கு போய் உட்காருவாங்களா? வேண்டாம்". மறுபடியும் பேசி, பேசி ஒரு வழியாக நைட் ஷோ போகலாம் என்று முடிவானது. பொங்கலை விட டைம் எப்போது நைட் ஆகும் என்பதிலேயே இருந்தது. ஒரு வழியாக போய் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் வரை நம்பிக்கை இல்லை.

தியேட்டருக்குள் நுழைந்து காலை உள்ளே வைத்தால் ஏதோ குவியலுக்குள் கால் வைப்பது போல தோன்றியது. குனிந்து பார்த்தால் காகித குவியல். ஒரு வழியாக உள்ளே போய் உட்கார்ந்தோம். படம் ஆரம்பித்த போது பயங்கர த்ரில் மனதில். பொதுவாக முதலில் படத்தில் டைட்டில் வரும். பிறகு நடிகர் திலகத்தை காட்டுவார்கள். ஆனால் எங்க மாமா படத்தில் முதலில் நடிகர் திலகம் வருவார். அதன் பிறகே டைட்டில் ஓட ஆரம்பிக்கும் அவர் முகத்தை திரையில் காண்பித்தவுடன் திரையே தெரியாத அளவுக்கு பேப்பர்மாரி பொழிந்தது. கைதட்டல் காதை கிழித்தது. ஒரு விதமான பிரமிப்புடன் இதை பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தன்னந்தனி காட்டு ராஜா. சொர்க்கம் பக்கத்தில் பாடல்களில் வரும் ஸ்டைல்களுக்கு ஆரவாரம் என்றால், செல்லக்கிளிகளாம் பள்ளியிலே பாடலில் அந்த இந்த இளமையான க்ளோஸ் அப் காட்சிக்கு செம அப்ளாஸ்.

என்னங்க சொல்லுங்க பாட்டுக்கு மறுபடியும் அலப்பறை. ஆனால் மொத்த தியேட்டரும் ஆர்ப்பரித்தது எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் பாடலில் நடிகர் திலகம் கண்களில் கண்ணீரை அடக்கி கொண்டு பாடும் அந்த நடிப்புக்கே. இது தவிர அன்றைய சூழலை ஒட்டி எழுதப்பட்ட சில வசனங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. சண்டைக் காட்சிகளுக்கும் அது போல ஆரவாரம். மொத்தத்தில் படம் முடிந்து வரும் போது எதோ பெரிதாக சாதித்து விட்டது போல ஒரு பீலிங்.

அடுத்து விளையாட்டு பிள்ளை பிப் 6 வெள்ளிக்கிழமை ரிலீஸ். எனவே மறு நாள் நைட் ஷோ தான் பார்க்க முடிந்தது. வியட்நாம் வீடு ஏப்ரல் 11 அன்று ரிலீஸ். எக்ஸாம் நேரம். முதல் வாரம் தான் பார்த்தேன். அடுத்த படம் எதிரொலி ஜூன் 27 சனிக்கிழமை ரிலீஸ், அதே தங்கத்தில். அதற்கு நைசாக பேசி பெர்மிஷன் வாங்கி முதல் நாள் ஈவினிங் ஷோ பார்த்தோம். ஆனால் படமே சீரியஸ் கதை என்பதால் பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாட முடியவில்லை. உங்க நல்ல மனதுக்கு ஒரு குறையுமில்லே பாடலுக்கு மட்டுமே ஆரவாரமான கைதட்டல்.

அடுத்த படம் ராமன் எத்தனை ராமனடி ஆகஸ்ட் 15 நியூசினிமாவில் வெளியானது. ஆனால் முதல் நாள் பார்க்க முடியவில்லை. மூன்றாவது நாள் திங்களன்று [என் நினைவு சரியாக இருக்குமானால் அன்று கோகுலாஷ்டமி அதனால் ஸ்கூல் லீவ்] பார்த்தேன். மூன்றாவது நாள் பார்க்கும் போதே முதல் நாள் போல தியேட்டர் சூழ்நிலை நிலவியது. சாப்பாட்டு ராமன் விஜயகுமாராக மாறும் சீன் தொட்டு அரங்கமே அதிர ஆரம்பித்தது. சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் வசனம் பேசும் போது உச்சக்கட்ட அலப்பறை. அதிலும் "நான் அரசியல் தெரியாதவனா? அரசு வித்தைகள் புரியாதவனா?" என்ற வரிகளை பேசும் போது தியேட்டரில் எழுந்த உணர்ச்சிமயமான வாழ்க கோஷங்களும் (வேறு சில கோஷங்களும் எழுந்தன) இன்றும் நினைவில் நிற்கிறது.

இந்த நேரத்தில் முதன் முறையாக அந்த வருடம் அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாளை மிக பெரிய அளவில் கொண்டாடுவது என்று அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் முடிவு செய்து, இரண்டு நாள் மாநாடாக அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் சென்னையில் நடை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டு செய்திகள் எல்லா ரசிகர்களுக்கும் மிக பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இதன் பின்னால் தீபாவளி திருநாள் அக்டோபர் 29 அன்று. ரசிகர்களுக்கு மேலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க இரண்டு படங்கள் எங்கிருந்தோ வந்தாள் மற்றும் சொர்க்கம் ரிலீஸ்.

இந்த சமயத்தில் முதன் முறையாக மதுரையில் மன்றம் மூலமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிக்கெட்கள் முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கும் வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வேஷன் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்த அன்றைய காலக்கட்டத்தில் டிக்கெட் விலையை விட ஒரு ரூபாய் மட்டுமே அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கும் இந்த டிக்கெட் வழங்கப்படும் என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காரணம் நாங்கள் மன்ற உறுப்பினர்கள் இல்லை. இப்படி டிக்கெட் கிடைக்கும் என்பதால் ஓபனிங் ஷோ பார்க்கும் வாய்ப்பும் ஆசையும் அதிகரித்தது. ஆனால் தீபாவளியன்று காலையில் சினிமா போக அனுமதி கிடைக்காது. மாலைக் காட்சி மட்டுமே சாத்தியம். வெளியாகும் இரண்டு படங்களில் எதை பார்ப்பது என்ற Dilemna. கடைசியில் சொர்க்கம் போவது என்று முடிவானது. சென்ட்ரல் சினிமாவில் மாலை காட்சி டிக்கெட்டும் வாங்கியாகி விட்டது. என் கஸின் ஸ்ரீதேவியில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோவிற்கும் டிக்கெட் வாங்கி விட்டான். காலையில் ஆரப்பாளையத்தில் எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாடும் போதும் மனதில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோ பற்றிய நினைவே. மாலை தாத்தா வீடு வந்து அவனை பார்த்து படம் எப்படியிருக்கிறது என்று தான் முதலில் கேட்டேன். இரண்டு படமும் டாப் [அந்த காலக்கட்டத்தில் சூப்பர் என்ற தூய தமிழ் வார்த்தை அகராதியில் இடம் பெற்றிருக்கவில்லை] என்ற மகிழ்ச்சியான செய்தியை அவன் எனக்கு சொன்னான்

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
1st May 2014, 12:55 AM
அந்த நாள் ஞாபகம் iv

மாலை தியேட்டருக்கு போகிறோம். சென்ட்ரல் சினிமா வாசலில் திருவிழா கூட்டம். மன்ற டோக்கன் வைத்திருப்பவர்கள் பின் பக்க வாசல் வழியாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அங்கே சென்றால் அதை விட கூட்டம். பெண்கள் செல்லும் வழி வேறு. அந்த சின்ன சந்தில் குவிந்த ரசிகர்களை உள்ளே அனுமதிக்க ஒரு சரியான ஏற்பாடு செய்யப்படாததால், ஒரு குழப்பமான சூழ்நிலை. நேரம் ஆக ஆக கூட்டம் பொறுமையை இழக்க, போலீஸ் ரசிகர்களை கட்டுப்படுத்த லாட்டி வீச, ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்தார்கள். அதற்கு காரணம் இருந்தது. சேலம் மாநாடு வெற்றிகரமாய் நடந்து முடிந்த பிறகு, சென்னையில் சாந்தி தியேட்டரின் மீது தாக்குதல் நடந்தது. அந்த நேரத்தில் போலீஸ் அதை கண்டும் காணாமல் நடந்து கொண்டது.[இதை பற்றி ஏற்கனவே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தில் எழுதியிருக்கிறேன்]. கொந்தளித்த ரசிகர்களை நடிகர் திலகம் அமைதிப்படுத்தியிருந்தார். எனவே போலீஸ் லாட்டி வீச ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் ஒன்று திரண்டு போலீசை சுற்றி வளைத்து "உங்களுக்கு கணேசன் ரசிகர்கள்னா இளிச்சவாயங்களா தெரியுதா?" என்று தகராறு செய்ய ஆரம்பிக்க நிலைமை ரசாபாசம் ஆவதற்குள் உள்ளே அனுமதித்து விட்டார்கள்.

படம் ஆரம்பிக்கும் முன் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பற்றிய செய்திகளை [அங்கே வந்திருந்த பெரும்பாலோர் பார்த்து விட்டவர்கள். காரணம் ஷோக்கள் நடந்த விதம் அப்படி. சொர்க்கம் 4 காட்சிகள். எங்கிருந்தோ வந்தாள் 5 காட்சிகள்.காலை 9 மணி அல்லது பகல் 12 மணி காட்சி ev பார்த்து விட்டு மாலை இங்கே வந்து விட்டார்கள்] அவர்கள் சொல்ல சொல்ல எதிர்பார்ப்பு எகிறியது. இங்கே படம் ஆரம்பிக்க டைட்டிலுக்கு முன்பே முதல் காட்சி. அதில் நடிகர் திலகம் தோன்ற தியேட்டரில் ரணகளம். பொன்மகள் வந்தாள் பாட்டு ஸினெல்லாம் பார்க்கவே முடியவில்லை. சீட் மேல் ஏறிக்கொண்டு டான்ஸ். ஒவ்வொரு ஸ்டைலுக்கும் அலப்பறை. ஒரு முத்தாரத்தில் பாடலில் வரும் நடைக்கும், "நீலவானம் மெல்ல மெல்ல சிவந்து போனதேன்" வரிகளில் கண்கள் சிவந்த நடிகர் திலகத்தின் க்ளோஸ் அப் ஷாட்க்கும் செம கிளாப்ஸ். நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்ற மிக சிறந்த சண்டை காட்சிகளில் ஒன்று சொர்க்கம் படத்தில் வந்த ஓடும் ரயிலில் நடக்கும் சண்டை. அந்த நேரத்தில் தியேட்டரே இரண்டு பட்டது. [சில பல உணர்ச்சிவசமான முழக்கங்கள்]. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். படம் முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக வெளியே வந்தோம்.

அடுத்த மூன்று நாட்களில் ஞாயிறன்று மாட்னி எங்கிருந்தோ வந்தாள் பார்த்தேன். இந்த படங்கள் வெளிவந்து ஒரு மாதத்திற்குள்ளாக நவம்பர் 27 வெள்ளி அன்று பாதுகாப்பு தங்கம் தியேட்டரில் வெளியானது. அதை வழக்கம் போல் மூன்றாவது நாள் பார்த்தேன்.

1970-ல் முதல் நாள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. ஆகவே அடுத்த வருஷம் ஓபனிங் ஷோ பார்த்து விடலாம் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் விதி சதி செய்தது.1971 -ல் முதல் படம் இரு துருவம். பொங்கலன்று நியூசினிமாவில் வெளியானது. பொங்கல் என்பதால் போக முடியவில்லை. மூன்றாவது நாள் தியேட்டர் விஜயம். அடுத்த படம் தங்கைக்காக. பிப் 6 அன்று ஸ்ரீதேவியில் ரிலீஸ். உடல் நிலை சரியில்லாததால் போக முடியவில்லை. மூன்று வாரங்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. அந்த வருடத்தின் மூன்றாவது படம் அருணோதயம். மார்ச் 5 வெள்ளியன்று நியூசினிமாவில் வெளியானது. அன்று தமிழக சட்டசபைக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கும் பொதுத் தேர்தல். எனவே போகவில்லை. ஞாயிறன்று சென்றேன். அந்த மாதத்திலே 26ந் தேதி ஸ்ரீதேவியில் குலமா குணமா ரிலீஸ். ஆனால் பரீட்சை. பதினைந்து நாட்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. லீவ் விட்டவுடன் ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 14 அன்று இரண்டு படங்கள் வெளியாகியும் எதுவுமே பார்க்க முடியவில்லை. சுமதி என் சுந்தரி அலங்கார் தியேட்டரிலும், பிராப்தம் (சென்ட்ரல் சினிமா) இரண்டு படங்களையும் முதல் வாரத்தில் பார்த்தேன்.

இப்படியிருக்க நடிகர் திலகத்தின் 150-வது படம் சவாலே சமாளி ஸ்ரீதேவியில் ஜூலை 3 சனிக்கிழமை வெளியாகிறது. ஓபனிங் ஷோ பார்க்கவேண்டும் என்று மிகுந்த முயற்சி எடுத்தும் ஸ்கூல் இருந்ததால் போக முடியவில்லை. முதல் வாரம் பார்த்தேன். அடுத்த படம் தேனும் பாலும் அதே மாதம் (ஜூலை) 22 அன்று சிந்தாமணியில் வெளியானது. இந்த படம் வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்ததால் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் ரிலீஸ் தியேட்டரில் படம் பார்க்கவில்லை. ஷிப்டிங் தியேட்டரில் தான் பார்த்தேன். அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 சனியன்று மூன்று தெய்வங்கள் ஸ்ரீமீனாட்சியில் ரிலீஸ். இரண்டாவது நாள் பார்த்தோம். அந்த வருடத்தின் கடைசி படம் பாபு அக்டோபர் 18 தீபாவளியன்று ஸ்ரீதேவியில் வெளியானது. இந்த முயற்சியும் தோல்வி அடைய சில நாட்கள் சென்ற பிறகே பாபு பார்க்க முடிந்தது. மொத்தத்தில் 1971-ல் ஓபனிங் டே அன்று கூட பார்க்க முடியவில்லை என்கிறபோது ஓபனிங் ஷோ எங்கே பார்ப்பது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
1st May 2014, 12:56 AM
அந்த நாள் ஞாபகம் - V

மருத்துவர்கள் (Physiatrist), obsessive compulsive disorder என்று ஒரு நிலைமையை குறிப்பிடுவார்கள் அதாவது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பதை இப்படி குறிப்பிடுவார்கள். எனக்கு அதற்கு நேர்மாறான நிலை. ஒன்றை செய்ய வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாத நிலைமை. கிட்டத்தட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று ஒரு obsession மனதுக்குள் உருக் கொண்டு விட்டது. 1972 பிறக்கிறது. பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து ராஜா படம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அது ஜானி மேரா நாம் என்ற இந்தி படத்தின் ரீமேக். அந்த படம் மதுரையில் வெளியானது. தேவ் ஆனந்த், ஹேமமாலினி நடித்த அந்த படத்தை பார்த்தேன். ரசிக்கும்படியாக இருந்தது. ராஜா 1971 வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் காட்சி நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ரூமுக்கு வந்து ஜெஜெ-வை சந்திக்கும் காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டுடன் ஸ்டைலாக நிற்கும் போஸ் பத்திரிகைகளில் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு பற்றி பல செய்திகள். இது எல்லாம் படத்தை பற்றிய எதிர்பார்புகளை தூண்டி விட்டு கொண்டிருந்தன. படம் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன் படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியானது.

அந்த நேரத்தில் மதுரையில் டவுன் ஹால் ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஜுக் பாக்ஸ் வைக்கப்பட்டது. இது பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் சேகரித்து வைத்திருக்க கூடிய பாடல்களில் நமக்கு தேவையான பாடலை பணம் கொடுத்து கேட்கலாம். அன்றைய காலத்தில் இருபத்தஞ்சு காசுகள் கொடுத்தால் போதும். அதை சாதாரணமாக ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் பயன் படுத்துவார்கள்.

ஆனால் ராஜா பட பாடல்கள் அதில் இருக்கிறது என்று தெரிந்தவுடன் ரசிகர் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் இவர்கள் சாப்பிட செல்லாமல் பாட்டை மட்டும் கேட்க செல்ல ஆரம்பித்தனர். முதலில் வருமானம் என்று நினைத்து அனுமதித்த ஹோட்டல் நிர்வாகம், குவிய ஆரம்பித்த கூட்டத்தையும் பார்த்து விட்டு, அவர்கள் திரும்ப திரும்ப இந்த ஒரு பட பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததால் ஜுக் பாக்ஸ் ரிப்பேர் என்று போர்டு எழுதி மாட்டி விட்டார்கள்.

சென்ட்ரல் சினிமாவில் ராஜா வெளியாவதாக இருந்தது. அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தின் இடைவேளையில் ராஜா படத்தின் பாடல்களும் சில வசனங்களும் ஒலிப்பரப்பட, அதை கேட்பதற்காக சென்ட்ரல் சினிமா அருகில் இருக்கும் சின்ன சந்தில் இடைவேளை நேரத்தில் ஏகப்பட்ட கூட்டம். என் கஸினின் நண்பன் வீடு தியேட்டர் அருகில் இருந்தது. நாங்கள் அங்கே சென்று கேட்டோம். ஆனால் தெளிவாக காதில் விழவில்லை. ஆனால் அதுவே மேலும் ஆவலை கிளப்பி விட்டது. படம் எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். வீட்டில் ஒரு வழியாக அனுமதி வாங்கினோம். நாள் நெருங்க நெருங்க டென்ஷன். இந்த நேரத்தில் மதுரை ஸ்ரீதேவியில் 89 நாட்கள் ஓடிய பாபு பொங்கலன்று வெளியான அகத்தியருக்காக மாற்றப்பட்டபோது ரசிகர்கள் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைந்தார்கள். சென்னையில் ஜனவரி 25 அன்று பாபு 100 நாட்களை கடக்கிறது. ரசிகர்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.

ராஜா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விட்டன. ஒரே கலரில் பாண்ட் ஷர்ட் அணிந்து கழுத்தில் ஸ்கார்ப் கட்டிய நடிகர் திலகம். வாவ்! ஜனவரி 26 புதன்கிழமை. ஸ்கூலில் நெருங்கிய நண்பர்களிடம் ஓபனிங் ஷோ போவது பற்றி பெருமையுடன் சொல்லியாகி விட்டது.[எங்க மாமா ஓபனிங் டே பார்த்ததையே ஒரு இமாலய சாதனையாக சொல்லியாகி விட்டது. முதல் நாள் சிவாஜி, எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இருந்த அந்த காலக்கட்டத்தில், நான் ஒரு ஹீரோ போல் பார்க்கப்பட்டேன்].

முதல் நாள் இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை. காலையில் வெகு சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். குளித்து ரெடியாகி கிளம்பி விட்டோம். காலை 8 மணிக்கெல்லாம் தியேட்டர் பக்கம் போயாகி விட்டது. கஸினின் Friend வீட்டுக்கு போய் விட்டோம். காலை 9 மணிக்கு தியேட்டருக்கு கிளம்பி விட்டோம். மெயின் கேட்டில் பயங்கர கூட்டம் என்பதால் பின் பக்க கேட் வழியாக போகலாம் என்று அங்கே போய் விட்டோம். சொர்க்கம் போல் அவ்வளவு பிரச்சனைகள் இல்லை. உள்ளே சென்று டிக்கெட்டை வாங்கி கொண்டு அரங்கத்தில் நுழைந்த போது அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, விவரிக்க முடியாத சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று.

10.30 மணிக்கு பெல் அடிக்கிறது. விளம்பரங்களோ, இந்தியன் நியூஸ் ரிவியு குறிப்பாக தமிழக அரசின் செய்தி துறை செய்திகள் எதுவும் இல்லாமல் எடுத்தவுடன் படம். சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளம் அப்படியே முன்பக்கமாக திரும்ப பின்னணியில் பல்வேறு கலர்கள் பளிச்சிட[ஏற்கனவே எங்கிருந்தோ வந்தாளிலேயே இது வந்திருந்தாலும்] அதகளம் ஆரம்பமானது. இது ஒரு மூவி மேக்கர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்ட் முதலில் வந்தது.[இந்த அமைப்பு பாலாஜி, ஸ்ரீதர், திருலோக்சந்தர், மாதவன், முக்தா ஸ்ரீநிவாசன் போன்றவர் சேர்ந்து உருவாக்கியது].

அது வரை தமிழ் படங்களில் பார்க்காத டைட்டில். எழுத்துகளின் பின்னணியில் வித விதமான டிசைன்கள், கலர்கள். [அது நாள் வரை டைட்டில்களை சாதாரணமாக பார்த்த ரசிகர் கூட்டம் இந்த படத்தின் டைட்டில்களுக்காகவே மீண்டும் மீண்டும் பார்த்தனர்]. நடிகர் திலகத்தின் பெயர் காண்பித்த போது திரையே தெரியாத அளவிற்கு பேப்பர்மாரி. என் தலையில் ஒரு கூடை பேப்பர். சில டிசைன்கள் மிக பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மெல்லிசை மன்னரின் பெயர் வரும் போது ஒரு வளையம் மற்றொரு வளையத்திலிருந்து வெளியேறுவது போல அமைக்கப்பட்டிருந்தது அதில் ஒன்று. டைட்டில் முடிய படம் ஆரம்பிக்கிறது

முதலில் சிறுவர்களாக இருக்கும் சகோதரர்கள் போட்டியில் பங்கு பெறுவது இடம் பெறும் அதைப் பற்றி விலாவாரியாக எழுத தேவையில்லை. காரணம் அனைவருக்கும் கதை தெரியும் மேலும் இந்த படத்தை பற்றி மிக விளக்கமாக சாரதா இந்த திரியிலே எழுதியிருக்கிறார். நான் சொல்ல வந்தது என்னவென்றல் இந்தி படம் பார்த்த எங்களை போன்றவர்களுக்கு நடிகர் திலகம் திரையில் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும் என்று தெரியும். ஆனால் அது தெரியாத ரசிகர்கள் எப்படி ரீயாக்ட் பண்ணுவார்கள் என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் சி.வி.ஆர் அந்த எண்ணமே தோன்ற விடாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்வார். மூத்த மகன் பெரியவனாகி பாலாஜியாவது, விஸ்வம் சிங்கப்பூரிலிருந்து வைரங்களோடு கிளம்பியிருப்பான் என்று சொல்வது, மனோகர் வருவது, காரில் ஏறப்போகும் அவரிடம் சிவப்பு விக் அணிந்த கையாள் உதடே அசையாமல் போலீஸ் அந்த காரிலே உன்னை பாலோ பண்ணுது என்று சொல்லிவிட்டு போவது, மனோகர் டென்னிஸ் ராக்கெட்டை கிளப்-ல் மாற்றுவது, மது விலக்கு சட்டதின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு மேஜர் அவரை மடக்குவது என்று படு சுவராஸ்யமாக படம் போக, செல்லில் அடைக்கப்படும் மனோகர் சிகரெட்டை பற்ற வைக்க லைட்டரை தேட, கோட் அணிந்த ஒரு கை லைட்டரோடு நீள, தியேட்டரில் இடி மின்னல் பிரளயம். சேரில் உட்கார்ந்திருந்த மொத்த மக்களும் இப்போது அதன் மேல் ஏறி நிற்க, அடுத்த சில நிமிடங்களுக்கு யாருமே படத்தில் என்ன நடந்தது என்று பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை. நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதற்கு முன்பு அவ்வளவு அமர்க்களமாக அமைந்ததில்லை. அந்த காட்சியின் தொடர்ச்சியாக இரண்டு மூன்று ஜெயில் காட்சிகள் வரும். அடுத்து சின்ன சண்டை காட்சி. மறுபடியும் இங்கே அதகளம்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
1st May 2014, 12:57 AM
அந்த நாள் ஞாபகம்

அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. ஒவ்வொரு ஸ்டைல் போஸிற்கும் ஆரவாரம். ஹோட்டல் ரூமில் டென்னிஸ் ராக்கெட்-ஐ கொடுக்க செல்லும் போது வரும் கிண்டல், நீ வர வேண்டும் பாடலில் வரும் விளையாட்டுகள், ஏர்போர்ட்-ல் போலீஸ் அழைத்து செல்ல அங்கே வைத்து தான் சிவாஜி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது தெரிய வரும் அழகான ட்விஸ்ட் இவை எல்லாமே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. மேஜர் கொடுக்கும் சிகரெட் லைட்டர் கேமரா, மைக்ரோபோன் போன்றவை அன்று ஒரு புதுமையாக இருந்தது.

விமானத்தில் கொச்சி செல்லும் போது வருவார் இரண்டாவது சந்திரபாபு. அவர் பேசும் ஒரு வசனத்திற்கு மட்டும் பலத்த எதிர்ப்பு கூக்குரல்கள் எழுந்தன [நீரும் நெருப்பும்]. கொச்சி ஏர்போர்டில் போலீஸ், டைரியை சோதனையிட அதில் இருக்கும் நீளமான சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே நடிகர் திலகம் போலீசிற்கு ஆஃபர் செய்யும் இடம் செம கிளாப்ஸ்.

நான் முன்பே சொன்னது போல படம் விறு விறு. ஆகவே சிவாஜியை கட்டி வைத்து பாலாஜி கேள்வி கேட்கும் இடம், மயிலாப்பூரில் சென்று செக் பண்ணுவது என்று படம் படு ஸ்பீட். இந்த நேரத்தில் பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். அதுவரை தமிழ் சினிமாவில் வராத முறையில் கார்கள் செல்லும் போது இசை+ பின்னணி குரல் ஒலித்த விதம் ரசிகர்ளை வெகுவாகவே கவர்ந்தது. மெல்லிசை மன்னர் பிரமாதப்படுத்தியிருந்தார்

ஆனால் தியேட்டரே எழுந்து ஆடியது ரந்தாவா சண்டைக்காட்சியின் போதுதான். அதிலும் நடிகர் திலகம் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சிகரெட்டை கடைசி பப் எடுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கி விட்டு "நான் எப்பவும் கடன் வச்சுகிறதிலே" என்று ஆரம்பிக்கும் போது சேரில் எழுந்து நிற்க ஆரம்பித்த மக்கள் சண்டை முடிந்து தான் கீழே இறங்கினார்கள்.

அதன் பிறகு சிவாஜி ரங்கராவ் சந்திப்பு பிறகு பத்மா கண்ணாவின் கண்களை கொண்டு வா டான்ஸ் எல்லாம் கொஞ்சம் அமைதி. மறுபடியும் கவர்ச்சி வில்லன் கண்ணனோடு சண்டை காட்சி வர சூடு பிடித்தது. அதிலும் கண்ணன் மாற்று முகாமை சேர்ந்தவர் என்பதால் சூடு + கோஷங்கள் அதிகமாகவே ஒலித்தது. அது முடிந்து கல்யாண பொண்ணு பாடல். மறுபடியும் ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச். பெரியவர்களுக்கே மறைக்கும். எனக்கு சுத்தம். நான் என் கஸினிடம் "என்ன இது ஆ ஊ -ன்னா சேர் மேல ஏறிறாங்க" என்று கேட்க அவன் ரொம்ப சிம்பிளா "ஓபனிங் ஷோ-ன்னா அப்படிதான் இருக்கும்" என்றான். பாட்டோடு இன்டெர்வல். வெளியில் வருகிறோம். அடுத்த ஷோவிற்கு அப்போதே வரிசை நிற்கிறது. படம் ஓஹோ என்று இங்கிருந்து சொல்ல வெளியே சர வெடிகள் தெருவையே ஒரு வழி ஆக்கியது.

இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்தது. நடிகர் திலகத்தை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஜெஜெ சொல்வதற்கு ஏற்ப பாலாஜி செயல்படுவார். பிறகு அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் திட்டத்தை பாலாஜி போடுவார். சிறிது நேரத்திற்கு சிவாஜி இல்லாமலே காட்சிகள் ஓடும். கங்கையிலே ஒடமில்லையோ பாடல் காட்சியில் எல்லாம் தியேட்டர் அமைதியாகவே இருந்தது. அந்த காட்சியின் முடிவில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிகர் திலகம் தோன்றிய போது மறுபடியும் தியேட்டரில் பயங்கர ஆரவாரம்.

இதன் பிறகு தான் கதையின் முக்கிய திருப்பமாக மனோகர் வந்து பாலாஜியை சந்திக்கும் காட்சி. உண்மைகளை ஒவ்வொன்றாக மனோகர் உடைத்து கடைசியாக "பாபு, இந்திய மாப்-லே தெற்கு கூர்மையா இருக்கு. தெற்கே இருக்கும் போலிஸாருக்கும் அறிவு கூர்மை" என்று சொல்லும் காட்சியில் பலத்த கைதட்டல். சிவாஜி - பாலாஜி சண்டை, பிறகு பாலாஜியை மேஜரிடம் கூட்டிக் கொண்டு போய் நம்ம சந்தர் என்று அறிமுகப்படுத்துவது, ரங்கராவ் போட்டோவை பார்த்து விட்டு ராஜா இவன்கிட்டே தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு" என்று மேஜர் சொன்னவுடன் நடிகர் திலகம் போட்டோவை குத்தும் காட்சிக்கும் ஒரே அப்ளாஸ்.

இதற்கு பிறகு படம் பயங்கர ஸ்பீட். இரண்டில் ஒன்று பாட்டில் ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் நடிகர் திலகம் உள்ளே நுழைய பார்க்க அது ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அடுத்து கிளைமாக்ஸ். தமிழ் பட வரலாற்றிலே ராஜாவில் வந்தது போல அவ்வளவு நீண்ட கிளைமாக்ஸ் (கிட்டத்தட்ட 20- 25 நிமிடங்கள்) இடம் பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் (இன்று பார்த்தால் கூட) இருக்கும். பணடரிபாயை மனோகர் சாட்டையால் அடிக்க நடிகர் திலகம் கர்சிஃபை பல்லில் கடித்தபடி தொடர்ந்து சிரிப்பார். கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும். அதை அடக்கி கொண்டு அவர் சிரிக்க சிரிக்க இங்கே தியேட்டரில் ரசிகர்களின் உணர்ச்சி அணை உடைத்து பாய்ந்தது.

படம் முடிய ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஒரே சுரத்தில் அனைவரும் படம் பிடித்திருப்பதாக சொல்ல, வெளியே வருகிறோம். பின் பக்க கேட் வழியாக வர வேண்டும். அந்த இடத்தில் சர வெடிகளை தொடர்ந்து கொளுத்த, நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷங்கள், கைதட்டல், டான்ஸ், ஆரவாரம் என்று கூட்டம் மேலமாசி வீதி முழுக்க ஆடிப்பாடிக்கொண்டே போனது. ஒரு பகுதியினர் முன்பக்க கேட் பக்கம் வந்து அதே போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மூன்று மணி நேர நினைவுகளை அசை போட்டுக்கொண்டே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

என்னைப் பொருத்த வரை நான் முதலில் சொன்னது போல என்றென்றும் மனதில் சேகரித்து வைத்திருக்கும் சில சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று இந்த அனுபவம். நண்பர் tacinema மூலமாக அதை மீண்டும் இங்கே நினைவு கூற ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது போல மனதில் உள்ள வேறு சில அனுபவங்களை சந்தர்ப்பம் வரும் போது பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
1st May 2014, 12:58 AM
அந்த நாள் ஞாபகம் - தொடர்ச்சி.

நடிகர் திலகம் படங்களின் ஓபனிங் ஷோ அனுபவங்களை எழுதுங்கள் என்று சொன்னபோது, அதை பற்றி மட்டும் எழுதாமல் தொடர்ச்சியாக வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் அந்த படங்கள் வெளியான காலக் கட்டத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளையும் எழுதியிருந்தேன். அது ராஜா வரை வந்து நின்றது. அதன் பின் வெளியான படங்களை பற்றியும் தொடர்ச்சியாக எழுதுங்கள் என்று நமது நண்பர்கள் சொன்னார்கள். அதை ஒரு சில பாகங்களாக (அதாவது நேரம் கிடைக்கும் போது) எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இந்த நேரத்தில் ஒரு சின்ன குறிப்பு. அந்த காலக் கட்டத்தைப் பற்றி எழுதும் போது ஒரு சில நிகழ்வுகளை குறிப்பிட வேண்டிய சூழல் வரும். அது நடந்த சம்பவங்களின் தொகுப்பாக இருக்குமே தவிர, உயர்த்துதல், தாழ்த்துதல் என்ற அளவிற்கு போகாது. இனி விட்ட இடத்திற்கு, அதாவது 1972 -ம் ஆண்டுக்கு செல்வோம்.

ராஜா ஒரு மிகப் பெரிய வெற்றியை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தது. அது வரை பாலாஜி எடுத்த படங்களிலே மிக பெரிய வெற்றி. தனிப்பட்ட முறையில் முதல் தடவையாக படம் வெளியான ஐந்து வாரங்களில் நான் ஐந்து முறை பார்த்த படம். சிவாஜி ரசிகர்கள் சந்தோஷமாக இருந்த நேரம். காரணம் போட்டியில் தொடர்ந்து இரண்டு படங்கள் ஜெயித்த சந்தோஷம். 1971-ம் வருட தீபாவளியன்று பாபுவும், நீரும் நெருப்பும் வெளியானது. அதில் பாபு வெற்றி. 1972 -ல் ஜனவரி 26 அன்று ராஜா ரிலீஸ். ஒரு வாரம் கழித்து பிப் 4 அன்று சங்கே முழங்கு வெளியானது. ராஜா மிகப் பெரிய வெற்றி. அந்த நேரத்தில் அடுத்த படமும் போட்டியில் தான் வெளியாகப் போகிறது என்றவுடன் த்ரில் + எதிர்பார்ப்பு. ஆம், ஞான ஒளியும் நல்ல நேரமும் போட்டி போடப் போகின்றன என்ற சேதி வருகிறது.

இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். 1971 அக்டோபர் 18 தீபாவளியன்று ரிலீஸான பாபுவும், நீரும் நெருப்பும் தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் கடைசியாக ஒரே நாளில் வெளியான படங்கள். அதற்கு பிறகு இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகவில்லை. மிக கிட்டத்தில் வெளியானது என்று சொன்னால் அது ஞான ஒளி மற்றும் நல்ல நேரம் படங்கள் தான்.

1972 -ம் வருடம் மார்ச் 10ந் தேதி வெள்ளிக்கிழமை நல்ல நேரம் ரிலீஸ். மறு நாள் 11ந் தேதி சனிக்கிழமை ஞான ஒளி ரிலீஸ். இதற்கு பிறகு நெருங்கிய இடைவெளி என்றால் 1975 -ம் வருடம் அக்டோபர் 31 வெள்ளியன்று பல்லாண்டு வாழ்க வந்தது, இரண்டு தினங்கள் கழித்து நவம்பர் 2 தீபாவளியன்று Dr.சிவா மற்றும் வைர நெஞ்சம் வெளியானது. அது போல் 1974 -ம் வருடம் நவம்பர் மாதம் 7ந் தேதி உரிமை குரல் வெளியானது. 6 நாட்களுக்கு பிறகு 13ந் தேதி தீபாவளியன்று அன்பை தேடி ரிலீஸ் ஆனது. மற்ற நேரங்களில் இருவர் படங்களுக்கும் இடைவெளி இருந்தது.

மீண்டும் 1972-க்கு வருவோம். சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்ததை குறிப்பிட்டேன். மதுரை சிவாஜி ரசிகர்களின் சந்தோஷத்தை அதிகப்படுத்துவது போல சில நிகழ்வுகள் நடந்தன. சங்கே முழங்கு பிப் 4 அன்று மதுரை சிந்தாமணியில் வெளியானது. அந்த நேரத்திலே நல்ல நேரம் விளம்பரம் வருகிறது. மார்ச் 10 முதல் என்று. அதுவும் மதுரை சிந்தாமணியில் என்று. எங்களுக்கு சந்தோஷம் அதிகமானது. அந்த நேரத்தில் ராமன் தேடிய சீதை ஏப்ரல் 14 முதல் ரிலீஸ் என்று விளம்பரம். அதுவும் மதுரை சிந்தாமணி. இது அனைத்தும் அறிவித்தபடி ரிலீசானால் சங்கே முழங்கு 35 நாட்களில் மாற்றப்படும், நல்ல நேரம் அதே 35 நாட்களில் தூக்கப்படும்.

இதைப் பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அப்செட் ஆகி இதை மாற்ற முயற்சி எடுத்தார்கள். ஆனால் சூழ்நிலை அவர்களுக்கு உதவவில்லை. சங்கே முழங்கு வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்த படம். ஆகவே ரிலீஸ் மாற்ற முடியாது. நல்ல நேரம் தேவர் படம். அவரிடம் சென்று தேதியை மாற்றுவது என்பது impossible. ராமன் தேடிய சீதையோ 1970 -ம் வருடம் மாட்டுக்கார வேலன் வெளி வந்த உடனே அதே தயாரிப்பாளரான ஜெயந்தி பிலிம்ஸ் ஆரம்பித்த படம். 1971 பொங்கலன்று வெளி வருவதாக விளம்பரம் செய்ப்பட்ட படம். ஆனால் டிலே ஆகி கடைசியாக 1972 -ம் வருடம் ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் முடிவு செய்யப்பட்டது. தவிரவும் மாட்டுக்கார வேலன் சிந்தாமணியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற காரணத்தால் சென்டிமென்டாக அவர்கள் சிந்தாமணியில் தான் திரையிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆகவே அவர்களும் மாற்ற தயாரில்லை. தவிரவும் இந்த பிரச்சனை மதுரையில் மட்டுமே இருந்தது. ஒரு ஊரில் ஏற்படும் சிக்கலுக்காக மொத்த ரிலீசையும் தள்ளி போட முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

பிறகு நல்ல நேரத்தின் மதுரை விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ் அந்த படத்தை சிந்தாமணியில் இருந்து மாற்றி வேறு தியேட்டர் தேட ஆரம்பித்தார்கள். மெயின் தியேட்டர்கள் எல்லாம் ஏற்கனவே புக்ட் [booked]. சென்ட்ரலில் ராஜா ஓடிக் கொண்டிருக்கிறது. தேவியில் அகத்தியர் ஓடிக் கொண்டிருக்கிறது. நியூசினிமாவில் ஞான ஒளி வெளியாக போகிறது. சிந்தாமணிதான் பிரச்சனை. கடைசியில் அலங்கார் தியேட்டர் புக் செய்யப்பட்டது. ரசிகர்கள் அவ்வளவாக திருப்தி படவில்லை என்பதால் மூவிலாண்ட் [பின்னாளில் ஜெயராஜ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது] அரங்கமும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
1st May 2014, 12:59 AM
அந்த நாள் ஞாபகம்- தொடர்ச்சி

அடுத்த கட்டமாக இரண்டு படங்களின் சாதக பாதகங்களை பற்றிய விவாதம் ஆரம்பித்தது. தேவர் சில வருடங்களுக்கு முன் தமிழில் தயாரித்த {வெற்றிப் பெறாத) தெய்வச் செயல் படத்தை ஒரு சில மாற்றங்களோடு இந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற பெயரில் ராஜேஷ் கன்னாவை வைத்து எடுக்க, அது ஒரு பிரமாண்ட வெற்றி பெற்றது. அதையே தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து நல்ல நேரம் என்று எடுத்தார்

ஏற்கனவே வேற்று மொழியில் வெற்றி பெற்ற படம். அதுவும் தவிர எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்கள் தயாரித்த தேவர் முதன் முறையாக கலர் படம் எடுக்கிறார். [ஆனால் அவர் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த கடைசி கலர் படமும் இதுதான். இதற்கு பிறகு தேவர் எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்கவில்லை].

இந்த பக்கத்தில் ஞான ஒளி மேஜர் நாடக குழுவால் நாடகமாக நடத்தப்பட்டு பிரபலமானது. நாடகத்தை பார்த்தவர்கள் கதை அம்சத்தை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் வியட்நாம் வீடு படத்திற்கு பிறகு நடிகர் திலகத்திற்காக சுந்தரம் கதை வசனம் எழுதிய படம். பி.மாதவன் இயக்கம். ஆனால் கருப்பு வெள்ளை படம். மதுரையில் நியூசினிமாவில் ரிலீஸ். ராஜாவிற்கும் இந்த படத்திற்கும் 45 நாட்கள் தான் இடைவெளி.

நான் தெய்வ செயல், ஹாத்தி மேரா சாத்தி இரண்டுமே பார்த்தேன். ஆனால் ஞான ஒளி நாடகம் பார்க்கவில்லை.

இப்போது என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன். படம் வெளியானது மார்ச் 11 சனிக்கிழமை. மார்ச் 13 திங்கள்கிழமை முதல், ஆண்டு தேர்வுகள் [annual exams]ஆரம்பம். அதற்கு முன்னோடியாக சனிக்கிழமை அன்று டிராயிங் [drawing] தேர்வு. ஆக ஓபனிங் ஷோ மட்டுமல்ல, படமே எக்ஸாம்ஸ் முடியும் வரை பார்க்க முடியாது. என் கசினுக்கு பிரச்சனையில்லை. அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் எளிதாக செல்ல முடியும். அந்த காலக் கட்டங்களில் எப்போதுமே ஒரு படம் வெளியாகும் நேரம் நெருங்க நெருங்க படத்தை பற்றி வெளி வரக் கூடிய செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்புடனும் ஆர்வத்துடனும் பேசப்படும். இது போன்ற செய்திகளை என் கஸின் எனக்கு சொல்லுவான். அப்படிப்பட்டச் செய்திகளில் ஒன்று தான் சென்னையில் ஞான ஒளி ஐந்து அரங்குகளில் திரையிடப்படும் செய்தி. நாங்கள் முதன் முறையாக இப்படிப்பட்ட சாதனை நிகழ்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். பிறகு தான் தெரிந்தது இந்த சாதனையை நடிகர் திலகமே 1954-ம் ஆண்டில் எதிர்பாராதது படம் மூலமாக செய்திருக்கிறார் என்று.

நல்ல நேரம் வெளியானது. படத்திற்கு Divided Opinion. அதாவது யானைகள் வரும் காட்சிகள், அவை செய்யும் சில சாகசங்கள் என்று அமைக்கப்பட்டிருந்த சில காட்சிகள் நாயகனின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டன என்று தீவிர ரசிகர்கள் குறைப்பட்டார்கள். பொதுவாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று கருத்து வந்தது.

மறு நாள் ஞான ஒளி வெளியானது. நான் தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டிற்கு வந்து விட்டேன். எங்கள் வீடு சென்ட்ரல் மற்றும் நியூ சினிமா இடையில் அமைந்திருக்கும். திடீரென்று சரவெடி பட்டாசு சத்தம். ஓடி சென்று பார்த்தால் ஓபனிங் ஷோ காலைக் காட்சி முடிந்து மக்கள் வெளியே வருகிறார்கள். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அணை உடைந்து பாயும் மகிழ்ச்சி ரசிகர்கள் மத்தியில். விசில், வாழ்க கோஷம் முதலியன உச்ச ஸ்தாயில் ஒலிக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த என் கஸின் சொன்னது நடிப்பு + ஸ்டைல் - பிச்சு ஒதறிட்டார். அவன் முக்கியமாக சொன்ன மற்றொரு விஷயம் வசனம். அதாவது ஆண்டனி மற்றும் லாரன்ஸ் இடையே நடக்கும் One upmanship போட்டியில் பேசப்படும் வசனங்கள். ஏற்கனவே பார்க்க முடியவில்லையே என்று இருந்த என்னை மேலும் ஏங்க வைத்தன அவனது வார்த்தைகள்.

மாலையில் சுமார் 5 மணி அளவில் வேறொரு வேலையாக டவுன் ஹால் ரோடு சென்ற நாங்கள் இருவரும் அவனது நண்பர் ஒருவரை (சொல்லாமலே தெரிந்திருக்கும் சந்தித்தவர் சிவாஜி ரசிகரென்று) பார்த்தோம். அவரும் படத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். என் கசினிடம் படத்தைப் பற்றி கேட்டார். நைட் ஷோ போகப் போவதாகவும் மாலை சுமார் 7 மணிக்கு போய் வரிசையில் நின்றால் டிக்கெட் கிடைக்காது? என்று அவர் கேட்க, ட்ரை பண்ணுங்க என்றான் என் கஸின். இந்த நிகழ்வெல்லாம் என் ஏக்கத்தை அதிகரித்தது.

நான் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்து பதினாறாம் நாள் மார்ச் 26 அன்று ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்தேன். அப்போதும் படத்திற்கு பெரிய ஆரவாரம். குறிப்பாக பிரசவத்தின் போது மனைவி இறந்து போன செய்தி வரும்போது எந்த வசனமும் இல்லாமல் அந்த முகத்தின் தசைகள் மட்டுமே துடிக்கும் காட்சி, யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப் போவதை எண்ணி குமுறும் சீன், அதன் பிறகு தேவனே என்னை பாருங்கள் பாடல் காட்சி. குறிப்பாக நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே என்ற வரிக்கு முன்னால் வரும் நடைக்கும் அந்த போஸிற்க்கும் தியேட்டர் அலறியது. அந்தோனி, அருணாக மாறிய பின் வரும் ஒவ்வொரு ஸ்டைல்- கும் பெரிய ஆரவாரம். படத்தில் ஒரு சில அரசியல் பொடிகள் வரும். இறந்து போன பாதிரியார் சிலையை வைக்க வேண்டும் என்று சொல்லும் போது அருணாக வரும் நடிகர் திலகம் சொல்லுவார். "மறைந்து போன தலைவர்கள் சொன்ன நல்ல கொள்கைகளை கடைப்பிடிப்பது தான் நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை. சிலை வைப்பது அல்ல". இது அன்று தமிழகத்தில் நிலவிய சிலை வைக்கும் obsession-ஐ குறித்ததால் தியேட்டரில் பயங்கர அப்ளாஸ்.

இப்படியாக படம் பார்த்தேன். படம் ஓடி முடிப்பதற்குள் மொத்தம் மூன்று முறை பார்த்தேன்.

அன்புடன்

Murali Srinivas
1st May 2014, 01:00 AM
அந்த நாள் ஞாபகம்

ஞான ஒளி படம் தமிழகம் எங்கும் மிகப் பெரிய வெற்றி. சென்னையில் ஐந்து அரங்குகளில் திரையிடப்பட்டும் மக்கள் வெள்ளம் அலை மோதுவதாக வந்த செய்தி மேலும் ரசிகர்களை மகிழ்ச்சிகுள்ளாக்கியது. நாடகமாக நடத்தப்பட்டு படமானதால் அதை பார்ப்பதற்கு சபாக்கள் சார்பில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னையில் மட்டும் 55 சிறப்பு காட்சிகள் நடைபெற்றது. அது மட்டுமல்ல அவை அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது மற்றொரு சாதனையாகும்.

நல்ல நேரம் திரைப்படமும் நன்றாகவே ஓடியது.

அடுத்த படம் பட்டிக்காடா பட்டணமா. இயக்குனர் பி.மாதவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவிஸ், எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி படங்களுக்கு பிறகு தயாரித்த படம். கிராமத்து பின்னணியில் அமைந்த கதை என்பது தெரியும். ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. நடிகர் திலகத்தின் இரண்டு வித கெட் அப்கள் [குடுமி வைத்த கெட் அப் மற்றும் ஹிப்பி ஸ்டைல் தலை முடி வைத்த கெட் அப்] ஆவலை தூண்டியிருந்தாலும் ஆவேசம் இல்லை. அதற்கு ஒரு காரணம் அப்போது படப்பிடிப்பில் இருந்த நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆவலை தூண்டியிருந்த படங்கள் தர்மம் எங்கே, வசந்த மாளிகை, என்னைப் போல் ஒருவன், ராஜ ராஜ சோழன், பாலாஜியின் புதிய படம் [நீதி என்று பெயர் வைக்கப்படவில்லை], என்.வி.ராமசாமி தயாரிக்கும் படம் [ரோஜாவின் ராஜா] என்பவை. மேற் சொன்னவை எல்லாமே கலர் படங்கள் என்பது கூட பட்டிக்காடா பட்டணமா என்ற கருப்பு வெள்ளை படத்திற்கு எதிர்பார்ப்பை குறைப்பதற்கு ஒரு காரணமானது.

இதற்கிடையே ராஜா, ஞான ஒளி விடுத்த சவாலையும் சமாளித்து மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நூறு நாட்களை கடந்தது. ஞான ஒளி 50 நாட்களை கடந்தது. பட்டிக்காடா பட்டணமாவின் மதுரை விநியோகஸ்தரான பாரத் மூவிஸ் கார்பரஷேன், சென்ட்ரலில் படத்தை ஒப்பந்தம் செய்து விட்டு மூன்று வார டெர்ம்ஸ் போட்டுக் கொண்டார்கள். இது என்னவென்றால் அன்றைய சூழலில் நிலவி வந்த பங்கு விகிதாசார முறை. அதாவது முதல் மூன்று வாரங்களுக்கு விநியோகஸ்தருக்கு வசூலின் பங்கில் அதிகம் வழங்க வேண்டும். அதற்கு பிறகு வசூலாவதில் சரி பாதியாக பகிர்ந்து கொள்வது என்று அமையும். பெரிய எதிர்பார்ப்பு இல்லையென்பதால் மூன்று வாரம் மட்டுமே போடப்பட்டது.

1972 -ம் வருடம் மே 6 அன்று ரிலீஸ் என்று விளம்பரம் வந்தது. இதை எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
1st May 2014, 01:07 AM
அந்த நாள் ஞாபகம்

சம்மர் லீவ் என்பதால் படம் பார்க்க போவது பெரிய விஷயமில்லை. போகலாம் என்று முடிவு எடுத்தவுடன் டிக்கெட் வாங்க முயற்சி எடுத்தோம்.மன்ற டிக்கெட்கள் கிடைக்கவில்லை. படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லையென்றாலும் கூட அவரின் மாபெரும் ரசிகர் கூட்டம் படத்தை வரவேற்க தயாராகி விட்டது என்பது புரிந்தது. சரி எப்படியும் வாங்கி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. முதல் நாள் இரவு வரை முயற்சி எடுத்தோம். ஆனால் பலன் இல்லை. சரி எப்படியும் மறு நாள் காலை தியேட்டர் பக்கம் போய் ட்ரை பண்ணலாம் என்று முடிவானது.

6ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கே சென்ட்ரல் சினிமா வாசலில் ஆஜர். ஆனால் அங்கேயும் ஏமாற்றம். படம் பார்க்க வந்திருந்த எங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் கேட்டுப் பார்த்து விட்டோம். பலன் பூஜ்யம். டைம் போய்க் கொண்டிருக்கிறது. Q -வில் நின்று டிக்கெட் வாங்குவதெல்லாம் நடக்காத விஷயம். காரணம் சரியான கூட்டம். ஹவுஸ் புல் போர்டு மாட்டி விட்டார்கள். தியேட்டரின் பின் பக்க வாசல் பக்கம் போய் பார்க்கலாம் என்று அங்கே போனோம். அப்போதுதான் மன்ற டிக்கெட்கள் வைத்திருந்தவர்களை உள்ளே விட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நம்பிக்கையில் நாங்களும் உள்ளே நுழைந்து விட்டோம். உள்ளே போனாலும் டிக்கெட் இல்லை. ஆபிஸ் ரூம், கவுன்ட்டர் என்று எங்கே கேட்டாலும் டிக்கெட் இல்லை என்ற ஒரே பதில். மட்டுமல்ல, டிக்கெட் இல்லாதவங்களை எல்லாம் வெளியே அனுப்புங்க என்ற சத்தமும் கேட்கிறது. நாங்கள் அப்படி இப்படி என்று சுத்திக் கொண்டிருக்கிறோம். சனிக்கிழமை என்பதால் ராகு கால நேரம் முடிந்தவுடன் [9 -10.30 ] படம் ஆரம்பிக்கப் போகிறார்கள். கடைசியாக உள்ளே இருக்கும் கூல் ட்ரிங்க்ஸ் ஸ்டால் அருகில் போனோம். அங்கே என் கசினுக்கு தெரிந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடமும் விஷயத்தை சொல்லி புலம்ப, எத்தனை டிக்கெட் வேணும் என்று அவர் கேட்டாரே பார்க்கலாம். எங்களுக்கு நம்பவே முடியவில்லை. இரண்டு என்று சொன்னவுடன் உடனே இரண்டு டிக்கெட் எடுத்துக் கொடுத்தார். எங்களுக்கு புதையல் கிடைத்த சந்தோஷம். [குறிப்பிட வேண்டிய விஷயம் அவர் எம்.ஜி.ஆர். ரசிகர்].

அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு balance கூட வாங்கவில்லை. ஆனால் counterfoil கிழிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் வந்து விட்டது. உடனே என் கஸின் முதலில் என்னை மட்டும் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போக சொன்னான். சிக்கல் எதுவும் இல்லாமல் நான் உள்ளே செல்வதை பார்த்து விட்டு அவனும் உள்ளே வர, இடம் பிடித்து போய் உட்கார்ந்தோம். ஒரு பெரிய சாதனையை செய்தது போல பெருமிதம். ஆனால் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் அதிலும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்காமல் இவ்வளவு கஷ்டம் வேறு எந்த படத்திற்கும் பட்டதில்லை.

(தொடரும்)

அன்புடன்

Gopal.s
1st May 2014, 04:58 AM
ஒரு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது நமது திரியைப் பற்றி பேச்சு வந்தது. அவர்கள் நமது திரியின் silent readers. அவர்களில் சிலர் நமது மெயின் திரியை மட்டும் படிப்பவர்களாகவே இருப்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிய வந்தது. Book Mark போல ஒன்றை வைத்துக் கொண்டு மெயின் திரிக்கு மட்டுமே வந்து செல்கிறார்கள். அவர்களிடம் ஏனைய திரிகளைப் பற்றி சொல்லும்போது அதைப் பற்றிய awareness இல்லை என்பது புரிந்தது. வாசகர்கள் மன்னிக்கவும்.

அன்புடன்
பாவி மக்கா நாட்டாமை ,

இதைத்தான் நான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன்?கேட்டியா?இப்போ புரியுதா?பெரியவரோடு சேர்ந்து சேம் சைடு கோல் போட்டியே?இப்ப மாட்டிக்கினு வழிக்கு வந்தியா?

Gopal.s
1st May 2014, 07:50 AM
தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 1960 பொங்கலுக்கு வந்து வெள்ளிவிழா கொண்டாடி வெற்றி வாகை சூடிய காவியம் இரும்பு திரை படத்தின் விமரிசனம் மீள்பதிவு செய்ய படுகிறது..
தொழிலாளர் பிரச்சினையை தீவிரமாய் பேசிய படம்.

இரும்புத்திரை (iron curtain )- 1960

எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம்.

நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.

மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார்.

அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.

தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.

இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.

நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில்(Stanislavsky Method Acting) நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை.

ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??

ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.

இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.

சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)

தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)

இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?

இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.

கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.

இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )

பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).

ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)

வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.

sivaa
1st May 2014, 07:51 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/GEDC3823a_zpsfcafd662.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/GEDC3823a_zpsfcafd662.jpg.html)

இந்த விளம்பரத்தில் கீழ் பக்கத்தில் மேற்கண்ட படத்தின்

விநியோகிஸ்த்தர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
இலங்கை விநியோகஸ்தரின் விபரமும் உண்டு
கவனித்து பாருங்கள் விபரம் பின்னர்

இது படத்தைபற்றிய தகவல் அல்ல
பட வினியோகஸ்தர்கள் பற்றியது
விளக்கமாக எழுதாததற்கு மன்னிக்கவும்

ஆரம்பகாலங்களில் இலங்கையில்

சினிமாஸ் விமிட்டட்

சிலோன் தியேட்டர்ஸ்

சிலோன் எண்டற்ரைமன்ஸ்

ஆகிய தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து படங்களை தருவித்து
திரையிட்டு வந்தன.

1965ஆம் ஆண்டளவில் என நினைக்கின்றேன்
எஸ் ரீ ஆர் பிலிம்ஸ் நிறுவனமும் புதிதாக ஆரம்பித்து

படங்கள் தருவித்து திரையிட்டு வந்ததுகாலப்போக்கில் 70 வதுகளின் ஆரம்பத்தலிருந்து
தனியார் துறையிடம் இருந்து படங்கள் தருவிக்கும் உரிமையை
அரசு தனதாக்கிக்கொண்டது

அரச திரைப்பட கூட்டுத்தாபனம் என்ற பெயரில் படங்களை இறக்குமதி செய்து
மேற்படி தனியார் துறையினருக்கு திரையிட கொடுத்து வருகின்றது

இந்த எஸ் ரீ ஆர் பிலிம்ஸ் அதிபர் மிக தீவிர எம் ஜீ ஆர் ரசிகர்

எஸ் ரீ ஆர் பிலிம்ஸ் தருவித்த முக்கியமான படங்கள்
தங்கை காவல்காரன் ஒளிவிளக்கு முதலியன

யாழ்நகர் ராஜா தியேட்டர் உரிமையாளர் எஸ் ரீ ஆர் பிலிம்ஸ் அதிபர்
மேலும் பல தியேட்டர்களுக்கு அவர் உரிமையாளர்

அட காவல்காரன் ஒளிவிளக்கு படங்களை
இவரா தருவித்து திரையிட்டாh அதுதான்.....?

நீங்கள் நினைப்பது புரிகிறது நீங்கள் நினைப்பது சரிதான்
ஆமாம் அதேதான் அதுவேதான்
நீங்கள் நினைப்பது 100 க்கு 100 வீதம் சரி

Gopal.s
1st May 2014, 07:52 AM
((தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 03/07/1971 இல் நடிகர்திலகத்தின் 150 வது காவியமாய் வந்து பெரு வெற்றி பெற்ற அற்புத காவியத்தின் மீள்பதிவு .)

சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.

1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.

மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.

விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.

இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.

வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.

சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.

வீ.எஸ்.ராகவன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.

பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.

நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.

சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.

வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )

இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.

ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.

நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)

எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.

sivaa
1st May 2014, 08:05 AM
இலங்கை சாதனையில் ஒரு துளி

ராமன் எத்தனை ராமனடி.................கொழும்பு...............சென் ட்ரல்..............106...நாட்கள்
ராமன் எத்தனை ராமனடி.................யாழ்நகர்................ராண ி.......................85...நாட்கள்
...
அடிமைபெண்......................................கொழ ும்பு................சென்ட்ரல்...............105.. நாட்கள்
அடிமைபெண்......................................யாழ ்நகர்................ராணி......................... 77..நாட்கள்

HARISH2619
1st May 2014, 01:21 PM
From thalaivansivaji.com

chinnakkannan
1st May 2014, 01:46 PM
//அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார்..// ஆக்சுவலா வயற்காட்டினிடை மாடு ஓட்டிய படியோ அல்லது நின்று கொண்டோ+ பின்னணியில் நீலவானம் கொண்ட வண்ணப் படம் பேசும் படத்திலோ பொம்மையிலோ பார்த்த நினைவு..வெகு ஜோரான ஸ்டில்..பார்த்ததும் படம் பார்க்க வேண்டும் என்றும் நினத்தேன்..ஆனால் அந்தக் கால கட்டத்தில் நான் வெகு சின்னப் பையன் ஆனதால் படம் எனக்குப் புரியவில்லை..தொடாதேன்னு சொன்னவுடனே சோகமா ஏன் பாட்டுப் பாடணும்(படம் முடிச்சதும் மறு நாளோ என்னவோ பாட்டுப் புத்தகம் கிடைத்தது- அண்ணா வாங்கினார்னு நினைக்கறேன்.. அதை வைத்து வரிகள் மனப்பாட்ம செய்து பாடியும் பார்த்திருக்கிறேன் - புரியாமலேயே)

பிற்காலத்தில் அதே தேவி தியேட்டரில்( ரீரன் வந்தது என நினைக்கிறேன்._ அல்லது மீனாட்சியில் 11 மணி ஷோவோ நினைவில்லை..பார்த்த போது இன்னும் ந.தியைப் பிடித்திருந்தது..ஆனால்..கதையில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வினைத் தவிர்த்திருக்கலாம்..அதுவும் முத்துராமன், விஜயகுமாரி - பாத்திரப் படைப்பில் அவலம் என ஒரு கட்டுரையே எழுதலாம்..

மல்லியம் ராஜகோபால் கடைசியில் வி.எஸ் ராகவன் கையில் ந.தி அடிவாங்கும் காட்சியைத் தவிர்த்திருக்கலாம்.. கல்யாணம் பண்ணிக் கொண்ட பிறகு ஹீரோயின் புடவையில் கொழுக் மொழுக் கென சாப்பிடாமலேயே வருவதைத் தவிர்த்திருக்கலாம்..சின்னப் பண்ணை நாகேஷிற்கு இன்னும் நிறைய நகைச்சுவை சீன்கள், அவர் ஏன் ந,திக்கு சப்போர்ட் பண்ணுகிறார் என்பதை இன்னும் தெளிவாக்கியிருக்கலாம்..இன்னும் நிறைய க்கலாம்கள் ..

முதல் முதல் பார்த்த போது சரி ஹீரோ ஹீரோயின் படம் முடிந்த பிறகும் கூட இவ்வளவு நேரம் ஏன் கட்டிப் பிடிச்சுக்கறாங்க்ம்மா எனக் கேட்க..சும்மா வாடா வீட்டுக்குப் போலாம் என பதில் வந்ததாய் நினைவு :)

Gopal.s
1st May 2014, 02:26 PM
உழைப்பாளர்களை மகான்களாய் பெருமை படுத்திய உயர்ந்த காவியம் பாபு.உழைப்பாளர் தினத்தில் நினைவு கூர்வதை பெருமையாய் நினைத்து உங்களுக்கு சமர்பிக்கிறேன்.

பாபு- 1971.

சிவாஜி ரசிகர்களுக்கு நினைக்கும் போதே கண்களை குளமாக்கி இதயத்தை கசிய வைக்கும் படங்களில் முதல் சில இடங்களில் இருப்பவற்றில் முக்கியமான படம் பாபு.அதுவரை உழைப்பவரை அலட்சியம் செய்யா விட்டாலும் ,அவர்களை தேவை படும் மனிதர்களாய் மட்டும் எண்ணி கொண்டிருந்த மனப்பாங்கை, திருப்பி போட்ட படம்.இந்த படம் கண்ட பிறகு,ஒவ்வொரு முறையும் ரிக்ஷா இழுப்பவரையோ அல்லது கூலி தொழிலாளர்களையோ பார்க்கும் போது ,இவர்கள் ஏதோ பிற குடும்பத்தையோ அல்லது தன குடும்பத்தையோ காப்பாற்றவோ அல்லது யாரையாவது படிப்பிக்கவோ,தன சுக துக்கம் கருதாது ,தன்னை வருத்தி பிறரை வாழ வைக்கும் உன்னதர்களாய் பார்க்கும் பார்வையை எனக்கு அளித்த உயர்ந்த படம்.எண்ணத்தில்,செயலில்,வாக்கில்,உருவாக்கத்தி ல் எல்லாவற்றிலும்.மனிதம் வாழ்வதே ,ஜீவித்திருப்பதே ,பாபு போன்ற படங்களின் பங்களிப்பால்தான் சாத்தியமான ஒன்று.

உருக்கமான கதையமைப்பை கொண்டிருந்தாலும், சிவாஜியின் உழைப்பால் மட்டுமே உயரத்தை அடைந்த படம் பாபு.கேசவ தேவ் 50களில் எழுதிய பிரபலமான ஓடையில் நின்னு (சாக்கடை அல்லது குட்டை)என்ற கதையை அதே பெயரில் மலையாளத்தில் சத்யன் கதாநாயகனாய் 1965 இல் சேது மாதவன் இயக்கத்தில் வந்து வெற்றி கண்ட படம். தமிழில் ஒரு நட்சத்திர நடிகர் நடிப்பதால்,இன்னும் உயரங்களை தொட சாத்யகூருள்ள இந்த மொழிமாற்று படத்திற்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இன்னும் அர்த்தத்தை,சுவாரஸ்யத்தை கூட்டினார் திருலோகசந்தர். தமிழில் இடை வேளைக்கு முன்பு ஏராள மாற்றங்கள், இடைவேளைக்கு பிறகு சிறிதே மாற்றங்கள்.கதாநாயகன் குண விசேஷங்கள்,காதல்,அந்த சிறு பெண்ணின் மேல் விளையும் அன்பு இவற்றில் சிறிதே அர்த்தமுள்ள தமிழுக்கேற்ற மாற்றங்கள் கண்டது.பல வண்ணங்களை மண்ணை கவ்வ வைத்து பிரம்மாண்ட வெற்றி கண்டு ,சாதனை புரிந்தது.

சுருங்க சொன்னால் நூறு நூறாய் கொட்டி கொடுத்தும் கடவுள் கைவிட்ட குடும்பத்தை, ஒரு வேளை சோறு போட்ட மனித கடவுள் தனியொருவனாய் போராடி வென்று தன்னையே தேய்த்து கொள்ளும் துன்பியல் மனிதம். பாபு ஒரு தன்மானம் நிறைந்த சிறுமை கண்டு பொங்கும்,உழைத்தே உண்ண விரும்பும் அநாதை மனிதன்.பல வேலைகள் பார்த்தும் நிலைக்க முடியாமல்,தற்செயலாய் ஒருவனுக்க உதவ கை ரிக்ஷா இழுக்க ,அதுவே அவன் ஜன்ம பிழைப்பாக மாறுகிறது.ரிக்ஷா நிறுத்தத்தில் சோறு கொண்டு வரும் கண்ணம்மாவுடன் காதல்.ஒரு நாள் ஒரு வேளை ஒரு அதிசய மனிதர் மற்றும் அவர் குடும்பத்தை தற்செயலாய் சந்திக்கும் பாபு ,அவர்களின் மனித தன்மையால் ஈர்க்க படுகிறான்.பிறகு காதலியை கற்பழித்த கொன்றவனை தற்செயலாய் கொலை செய்து ,இரண்டு வருட தண்டனை பெற்று திரும்ப,நண்பர் பிள்ளை அவன் முற்கால சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு சொந்த கைரிக்ஷா வாங்கி தர,தான் சந்தித்த குடும்பத்தின் சிறுமி மற்றும் அவள் அன்னையை வறுமையில் சந்திக்கும் பாபு(குடும்ப தலைவரின் அகால மரணத்தால்),அந்த குடும்பத்திற்கு உதவ ஆரம்பிக்கிறான்.ஒரு சந்தர்பத்தில் ரௌடிகளால் சிறுமியின் அன்னைக்கு தொல்லை விளைய ,அந்த குடிசை வீட்டின் திண்ணையில் குடியேறும் பாபு,அந்த சிறுமியை நன்கு படிக்க வைத்து அந்த குடும்பத்தை முன்னேற்ற மெய்வருத்தம் பாராது,பசி நோக்காது,கண் துஞ்சாது தன்னையே வருத்தி ,ஒரே நோக்கில் உழைத்து, வயதுக்கு மீறி முதுமை கண்டு ,சயரோகம் பிடியில் அவதியுற்று(மருத்துவம் காணாமல்), சிறுமியை பட்டதாரியாக்கி ,அவள் உயர்ந்த இடத்தில் வாழும் நிலையில் ,அவள் திருமண தினத்தன்று மரிக்கிறான்.

பாபுவின் சிறப்பு அம்சங்களில் மிக முக்கியமானது நடிகர்திலகத்தின் அபார நடிப்பு. ஒரு சுயமரியாதையுள்ள உழைப்பாளி ,சிறுமை கண்டு பொங்கும் போராளி, அன்பு கண்டு நெகிழ்ந்து நெக்குருகும் அநாதை,வெளிப்படையான நேர்மனிதன்,மற்றோர் அலட்சியங்களை உதாசிக்கும் ஞானி,பின்னாட்களின் ஒரே நோக்கம் கொண்ட வயதுக்கு மீறி உழைப்பாலும்,தன் உடலை பேணா மடந்தையாலும் ,தளர்ந்த வியாதி காரனாய்,லட்சியத்தில் தளரா ,உயர் நோக்கு கொண்ட மேன்மையடைந்த(மென்மையும் ) மனிதனாய் என்று அற்புதமான பாத்திரம்.

பாபுவின் லட்சிய பிடிப்பு அவனை எந்த தொழிலிலும் நிலைக்க விடாத தருணங்களிலும்,காதல் சிறிதே இளக்கும் தருணம் விபத்தில் தன் ஒரே பிடிப்பையும் இழக்க, இந்த அநாதை தேர்ந்தெடுப்பதோ(வாழ்க்கையை அர்த்த படுத்தி கொள்ள) தன்னை ஒரு நாள் சமமாக நேசித்த வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் நலம் என்று ஒரே நோக்கு.தன் தகுதிக்கும் மேலாய் வளர்க்க படும் வளர்ப்பு மகளின் உதாசீனம்,போலி கௌரவ மனப்பான்மை, விடலை வயதுக்கேற்ற விலகல் மனப்பான்மை எல்லாவற்றையும் ஒரு துறவு மனத்தோடு அணுகும் மேன்மை.எதுவுமே ,அந்த குடும்ப மனிதர்களின் நேசத்தையும் சிதைக்காமல்,பாபுவையும் வதைக்காமல் உடனுக்குடன் தீரும் அற்புத அணுகல். பாபுவின் கடைசி நிமிட விலகல் (தன் வளர்ப்பு மகளால் கடந்து வந்த தாழ்வு மனப்பான்மை தந்ததாய் இருக்கலாம்) என்று இந்த படத்தில் ,ஒரு சமகால தமிழ் படங்களில் அன்று காண கிடைக்காத அதிசய முத்துக்கள் ஏராளம்.

நடிகர்திலகத்தின் ஒப்பனை,சிகை அலங்காரம் எல்லாமே புதுசாய் .... வழித்து முன் தள்ளி வாரிய தலை முடியுடன் ஒல்லி உடம்புடன் ,அவ்வளவு cute திராவிட மன்மதன் முற்பாதியில்.பின் பாதியில் ரோகம் கண்டு ,வயதுக்கு மீறிய தளர்ச்சி கண்டு சிக்கான தாடி மீசையுடன் என்று முற்றிலும் புதிசு. இடை வேளை வரை யதார்த்த நடிப்பு. இடைவேளைக்கு பின் எப்படி விவரிக்க? இந்த மாதிரி படங்களுக்குத்தான் நடிகர்திலகம் போன்ற மேதையே தேவை படுகிறார்.நோக்கம்,செயல், எல்லாவற்றிலும் அசாதாரமான மனிதனான பாபு,தன்னை வருத்தி அழித்து கொள்வதிலும் அசாதாரணம் தான். மிகை யதார்த்தமாய் மாறும் பாத்திரத்தில் (சாதாரண குப்பன் சுப்பன் முனியன் போன்றதல்ல )இந்த உணர்வை, மாறு நிலையை ஒரு mystic கலந்த ,நோக்கம் தளரா,உடல் தளர்ந்த,உதாசீனம் மட்டுமே கண்டு ஒடுங்கிய மனிதனை ,சிவாஜி சித்திரிக்கும் நடிப்பு ஒரு மந்திர செயல்.

பாபு என்ற இந்தியா ஜெயிக்க ,சிவாஜி என்ற கவாஸ்கர் நடிப்பில் போட்டிருக்கும் செஞ்சுரியே காரணம் (அன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றிருந்தது புதுமுக கவாச்கரால்)என்று விமரிசித்த துக்ளக் வாயில் சர்க்கரை போடலாம்.(உதிரி பூக்கள் புகழ் மகேந்திரன் விமரிசகர்).முக்கியமாக, ரிக்ஷா இழுத்து உழைக்கும் காட்சிகள், குடும்பத்திடம் ஈடு படும் காட்சிகள், பள்ளிக்கு சென்று வகுப்பறையில் தான் கஷ்டப்பட்டு பீஸ் கட்ட சேர்த்த பணத்தை அம்முவிடம் கொடுக்க ,அம்முவின் சங்கடம் அறியாது நகைக்கும் குழந்தைகளை வாழ்த்தி செல்வது,அம்முவின் drift புரிந்தாலும் அதீத ஈடுபாட்டால் அவளையே சாரும் கட்டங்கள்,அவள் நலனுக்காக என்று போராடும் கட்டங்கள்,லட்சியத்தை நிறைவேற்றி காணும் திருப்தி,நேரடியாக பங்கேற்காமல் தன் வளர்ப்பு மகளின் திருமணத்தில் மறைமுக பங்கேற்ப்பு,சிகிச்சை இல்லாமல் நோயுடன் போராடி உழைக்க முயன்று தோற்கும் இடங்கள் என்று அப்படியே மனதை பிசைந்து புண்ணாக்கி விடுவார். கதற வைத்து ,மனிதம் வளர்ப்பார் இந்த பிறவி மேதை.

தன்னை இவர் வருத்தி கொண்டது சொல்லி மாளாது. ரிக்ஷா இழுக்கும் கட்டத்தில் ,(கோடம்பாக்கம் பாலம் அருகே)மார் வலியால் அவதியுற்று ரத்தம் கக்கி நடிப்பாராம். ரிக்ஷாவை காலால் தூக்கும் சத்யன் ஸ்டைல் வர ஒரு மாதம் ஒத்திகை பார்த்தாராம்.(எம்.எஸ்.வீ உபயம் ,மெகா டீவீ)

சிவாஜி-திருலோக் கூட்டணியில் தெய்வ மகனுக்கு அடுத்த அற்புதம் இந்த காவியம்.

Russellbpw
1st May 2014, 04:46 PM
அன்புள்ள ஆதிராம், நீண்ட நாட்களுக்குப்பின் இங்கு. உங்களுக்கு என்ன பிரச்சினை? நீங்கள் நானல்லவென்று நண்பர் ரவிகிரண்சூர்யா அவர்களிடம் நிரூபிக்க வேண்டும் - அவ்வளவுதானே. அவரிடம் தங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளச்சொல்லுஙகள். அது போதாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நேரடியாக சந்தியுங்கள். அவர் விட்ட சாபத்திலிருந்து விலக்கு கோருங்கள். இல்லாவிட்டால்... மறுபடி நானே என்னுடன் பேசிக்கொள்வதாய் ... முதலிலிருந்து மறுபடி தொடரும். உங்களுக்குத் தேவையா இவையெல்லாம்?

இதென்ன கலாட்டா நான் பதிலுரைப்பதற்குள் ஆதிராமின் பதிவே பறிபோனதெங்கே. இரவிகிரண் சூர்யா அவர்களே இதற்கும் நானே காரணமாகிப் போகிறேன் என்று தாராளமாக சொல்லுங்கள் (?!!!!)

https://www.youtube.com/watch?v=FE8OGZZkxmk

uvausan
1st May 2014, 05:09 PM
*ராகுலின் சுனாமி பதிவுகளுக்கு இடையிலும் , முரளியின் "அந்த நாள் ஞாபகம்" எழுப்பும் சத்தத்திற்கு சற்றே வெளியேயும் , கோபாலின் மே 1 - சுவையான விருந்துக்கு நடுவேயும் மனம் தளராது என்னுடைய இந்த சுவையான அலசலை பதிவிடுவதில் பெருமை படுகிறேன் . -

அலச போகும் படம் *" பந்த பாசம் " - அருமையான கருத்துக்கள் , அழகான கதை , பாடல்கள் , நடிப்பு , கதையுடன் சேர்ந்த நகைச்சுவை , எதிர்பாராத**திருப்பங்கள் , அற்புதமான போதனைகள், சரியாக , ஒத்துழைக்கும் சக நடிகர்கள் , நடிகைகள் , விரசம் இல்லாத பகுதிகள் , இரட்டை அர்த்தம் இல்லாத வசனங்கள், கண்களுக்கு அதிக சுவையூட்டும் ஜோடிகள்***இவை அனைத்தும் நிறைந்த ஒரு படத்தை குடும்பத்துடன் பார்க்க ஆசை படுகிண்டீர்களா ? அதுவும் black & white இல் - *நீங்கள் பார்க்க வேண்டிய படம் - பந்த பாசம் - *

நீங்கள் அன்னை தந்தையிடம் மிகுந்த பாசத்தையும், மரியாதையையும் வைத்து இருப்பவரா ? உங்கள் குழந்தைகள் *உங்கள்*மாதிரியே , பாசத்தையும் , பண்பையும் உங்களிடம்*காட்ட வேண்டுமா - அழைத்து செல்லுங்கள் இந்த படத்திற்கு - அண்ணன் தம்பி உறவையும் , அவர்களின் அன்னை தந்தைக்காக அவர்கள் செய்யும் தியாகத்தையும் , குடும்ப கௌரவத்தை காப்பாத்த அவர்கள் ஏற்றுகொள்ளும் பழிகளும் உங்களை குறைந்தது மூண்டு மணி நேரம் கட்டி போட**வைக்கும் . இனி படத்தை பற்றி ஆராயும்**முன் கீழ்கண்ட sub title லில் *படத்தை*அலச விரும்புகிறேன்*

Part 1 : *படத்தின் release யை பற்றியவைகள்*

Part 2 : *படத்தின் கதை சுருக்கம்*

Part 3 : படத்தின் சிறப்புக்கள்*

Part 4 : படத்தின் சில குறைகள்*

Part 5 : *நடிப்பும் , நடிகர்களும் - ஒரு சிறப்பு கண்ணோட்டம்*

Part 6 *:படத்தின் பாடல்கள் - ஒரு சிறப்பு பார்வை*

Part 7 : படத்தின் *சில ஆவணங்கள்*

Part 8 : *படத்தை பற்றி இந்த திரியின் சில ஜாம்பவான்களின் கருத்துக்கள்*

uvausan
1st May 2014, 05:11 PM
இனி ஓவ்வொரு part யையும் பார்க்கலாம்*

Part 1 :*படத்தின்*release*யை*பற்றியவைகள்*

இந்த படம் NT யின் 82வது படம் - 1962இல் வெளிவந்தது - அந்த ஆண்டில் வெளிவந்து வெற்றிகண்ட படங்கள் மொத்தம் 9.*

பார்த்தால் பசி தீரும் - இந்த படத்தில் தொடர்ந்த வெற்றி , வெற்றிக்கு ஒரு நிச்சய தாம்பூலம் செய்துவிட்டு , வளர்பிறையாகி , படித்தால் மட்டும் போதுமா என்று கேள்வியை எல்லோர் மனதிலும் எழுப்பி , பலே பாண்டியா என்று எல்லோராலும் பாராட்டு பெற்று , நிச்சயதார்த்தம் செய்த அந்த கைகளுடன் வடிவுக்கு வளைகாப்பும் செய்துவிட்டு , செந்தாமரையாக புன்னகைத்து , பந்த பாசத்தை பேணி காத்து ஆலய மணியாக வெற்றியின் சத்தத்தை உலகெங்கும் NT கேக்கவைத்த ஆண்டு 1962.- இந்த ஆண்டுக்கு இன்னும் ஒரு பெருமை உண்டு –*

இந்த வருடத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் திலகம் அமெரிக்க நாட்டிற்கு விஜயம் செய்தார். அந்த நாட்டின் நயாகரா நகரம் அவரை ஒரு நாள் மேயராக பதவியளித்து கௌரவித்தது. இந்த கெளரவம் அளிக்கப்பட்ட முதல் இந்திய கலைஞன் நடிகர் திலகம் மட்டுமே.*



Date of Release : 27-10-1962
Banner : Shanti films
Heroines for NT : Devika , Chandrakantha ( for a brief)
நடிகநடிகையர் :
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்கா ராவ், ஜே.பி.சந்திரபாபு, சாவித்திரி கணேஷ், தேவிகா, எம்.வி.ராஜம்மா, சந்திரகாந்தா, லட்சுமி பிரபா, சுகுமாரி, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.சந்தானம், கொட்டாப்புளி ஜெயராமன், கே.எம்.நம்பிராஜன், எஸ்.ஏ.கண்ணன் மற்றும் சிவாஜி நாடக மன்றத்தினர்.
Music : V&R
Dialogue : Valamburi Somanathan
Director : A Bhimsingh

uvausan
1st May 2014, 05:13 PM
Part 2 : *படத்தின் கதை சுருக்கம்*

பார்த்திபன் - NT ;*
சரவணன் : GG *;*
தந்தை : S .V ரங்காராவ்
தாய் : எம்.வி.ராஜம்மா
மனோன்மணி : தேவிகா (அண்ணன் - NT யின் ஜோடி)
பூங்குடி - சாவித்திரி (தம்பி -GG யின் ஜோடி)

பார்த்திபனும் , சரவணனும் அண்ணன் தம்பி - பெண்ணின் பெருமை , பாவமன்னிப்பு இந்த படங்களில் GG தம்பியாக நடித்தவர் , இதில் அண்ணனாக வருகிறார் - அதற்க்கு ஏத்த பாச உணர்ச்சி , கடமை , எதிலுமே குறைவைக்கவில்லை . இருவரும் ஒரு தொழிலதிபரின் செல்வந்த பிள்ளைகள் - இருவருமே மேல்படிப்புக்காக , வெளிஊரில் உள்ள காலேஜில் கடைசிவருட படிப்பில் கவனம் செலுத்துகிண்டார்கள் - தம்பியின் படிப்பின் கவனத்தில் காதலும் சேர்ந்து விடுகின்றது - அண்ணன் படிப்பதுடன் கதை கட்டுரை எழுதுவதிலும் பல பரிசுகள் பெறுவதிலும் தன்னை ஈடுபடுத்திகொள்கிறான் - ஒரு தெளிந்த நீரோடை போல படம் ஓடிகொண்டுருக்கும் - இப்படியே சென்று கொண்டிருந்தால் நமக்கும் சுவை குறைந்து விடும் என்பதால் படத்தில் சில திருப்பங்களை உருவாகின்றன .

இவர்களின் தந்தை முதலீடு செய்திருந்த பேங்க் தீடீரென்று திவாலாகி விடுகின்றது - வாழ்க்கையே சூனியமாகி விடுவதுபோல ஒரு வலி - ஒரு , கார் ,பங்களா - வசதியான பணக்கார வாழ்க்கை பறிபோகும் அபலம் - அடுத்த பக்கம் , படிக்கும் பிள்ளைகள் - இவர்களின் வாழ்க்கைக்கும் ஒரு பெரிய கேள்விகுறி - வந்த வலி அவரை ஒரு பக்கம் செயல் இழந்து விட செய்கின்றது - கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்கவே , பிள்ளைகளுக்கு தெரியாமல் எல்லாவற்றையும் வித்து விடுகின்றார் - படிக்கும் பிள்ளைகளுக்கும் உடனே வரவும் என்று சொல்ல தயக்கம் - எல்லாவற்றையும் வித்தும் ஒரு கடன்காரருக்கு மட்டும் பணம் திருப்பி கொடுக்க முடியவில்லை - Rs 50000/- கடனுடன் ஒரு promissory note எழுதி கொடுத்துவிடுவார் .

தாய், தந்தைக்கு தெரியாமல் பிள்ளைகளை உடனே வரும்படி letter போடுகிறார் - trunk call லில் மட்டுமே பேசும் தந்தை , முதல் முறையாக வரும்படி letter இல் தெரிவித்தது இரண்டு பிள்ளைகளுக்கும் ஆச்சிரியத்தையும் , கேள்விக்குறியும் எழுப்புகின்றது - அவர்களுக்குள் படித்து முடித்தபின் , பெற்றோர்களை எப்படி பார்த்துக்கொள்ளவேண்டும் , எப்படியெல்லாம் உட்காரவைத்து சேவை செய்ய வேண்டும் என்று ஆரோக்கியமாக விவாதித்து கொள்கின்றனர் - சென்னை வந்து சேர்ந்தவுடன் அவர்கள் கண்டகாட்சி - சொந்த வீடு பரி போகிவிட்டது , வாடகை வீடு , உட்கார வைத்து அழகு பார்த்து மரியாதையை செய்யவேண்டும் அப்பாவிற்கு என்று சொன்னவர்கள் உண்மையில் ஈசி chairஇடம் அடைக்கலம் ஆன தந்தையின் இயலாமையை கண்டு கதறுகிறார்கள் - இருவரும் வேளை செய்து இருக்கும் கடனை அடைக்க முயலும் வேளையில் பல சோதனைகளை சந்திக்க நேருகின்றது -

தாய், தந்தைக்கு தெரியாமல் பிள்ளைகளை உடனே வரும்படி letter போடுகிறார் - trunk call லில் மட்டுமே பேசும் தந்தை , முதல் முறையாக வரும்படி letter இல் தெரிவித்தது இரண்டு பிள்ளைகளுக்கும் ஆச்சிரியத்தையும் , கேள்விக்குறியும் எழுப்புகின்றது - அவர்களுக்குள் படித்து முடித்தபின் , பெற்றோர்களை எப்படி பார்த்துக்கொள்ளவேண்டும் , எப்படியெல்லாம் உட்காரவைத்து சேவை செய்ய வேண்டும் என்று ஆரோக்கியமாக விவாதித்து கொள்கின்றனர் - சென்னை வந்து சேர்ந்தவுடன் அவர்கள் கண்டகாட்சி - சொந்த வீடு பறி போகிவிட்டது , வாடகை வீடு , உட்கார வைத்து அழகு பார்த்து மரியாதையை செய்யவேண்டும் அப்பாவிற்கு என்று சொன்னவர்கள் உண்மையில் ஈசி chairஇடம் அடைக்கலம் ஆன தந்தையின் இயலாமையை கண்டு கதறுகிறார்கள் - இருவரும் வேலை செய்து, இருக்கும் கடனை அடைக்க முயலும் வேளையில் பல சோதனைகளை சந்திக்க நேருகின்றது -

கடன் கொடுத்த ஈட்டி காரன் கொடுத்த சூடான வார்த்தைகளால் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்புகிறான் தந்தை - தாயும் சேர்ந்து மடிய விரும்பிகிறாள் - இவர்களின் முடிவை மாற்ற , அண்ணன் தான் விரும்பும் ஏழை காதலியை மறந்து , ஊனம் உற்ற ஒரு பெண்ணை , அவள் பணக்காரியாக இருப்பதால் மணக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறான் - திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து அவன் மனதார விரும்பிய ஏழை காதலிதான் - ஆனாலும் திருமணம் முடிந்தபின் பழைய காதலையும் , காதலியையும் மறக்க முயல்கிறான் - அதில் அவனுக்கு சிறிது வெற்றியும் கிடைக்கிறது - அவன் காதலியினால் அவனை மாதிரி உறுதியாக இருக்க முடியவில்லை - தன் மனைவியிடம் தன நிலைமையை கூறி ரஸ் 25000/- பணம் பெற்று அவன் தந்தை பட்ட கடனில் பாதியாவது அடைக்க விரும்பிகிறான் - அவன் செய்துகொண்ட திருமணம் அவன் தம்பிக்கும் , பெற்றவர்களுக்கும் தெரியாது - அவன் சொல்லவும் விரும்பவில்லை

இதன் நடுவில் தம்பி வேளை செய்யும் chitra &co யில் Rs 25000/- அவன் பொறுப்பில் வைத்திருந்த பணம் திருடு போய் விடுகின்றது - எதேச்சையாக அங்கு வரும் அண்ணன் தம்பியின் கவன குறைவை கண்டு புத்திமதி செய்கிறான் - இருவரும் வட்டி கொடுத்தவனிடம் சென்று Rs 25000/- த்தை கொடுத்து , அப்பா கையெழுத்து போட்ட PN யை திரும்பி வாங்கி , புதியதாக தங்கள் இருவர் பெயரிலும் பாக்கி உள்ள கடனுக்கு புதிய கடன் பத்திரத்தில் கையெழுத்தை போடுவார்கள் - இந்த இடத்தில் இருந்து தம்பிக்கு அண்ணன் செயலில் சந்தேகம் வர ஆரம்பிக்கும் - அண்ணனிடம் ஏது பணம் என்ற கேள்விக்கும் சரியான பதில் வராது .
மீதி கடனை தன மனைவியிடம் மீண்டும் பெற விருப்பம் இல்லாமல் கட்டுரை பரிசு போட்டியில் கலந்து கொள்கிறான் அண்ணன் .

தாலி கட்டிய மனைவிக்கு தன் கணவன் காதலை தியாகம் செய்து தன்னை மணந்த உண்மை தெரிகின்றது - அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து தன் வாழ்வை முடித்து கொள்கிறாள்

தம்பி பணத்தை குறுப்பிட தவனைக்குள் செலுத்தாததால் , குற்றம் சாத்தப்பட்டு - ஜெயில் செல்ல வேண்டியதாகி விடுகின்றது - பத்திரிக்கையில் வரும் அவனை பற்றிய செய்தியினால் , பெற்றவர்களும் , அவனின் காதலியும் அவனை அறவே வெறுக்கிண்டார்கள் - இத்தனைக்கும் அண்ணன் தான் காரணம் என்று அண்ணனை வெறுகின்றான் தம்பி -

தம்பியின் காதலியின் அப்பா தன் பெண்ணை பார்த்திபனுக்கு மணம் செய்ய விரும்பிகிறார் - அண்ணனின் வாத திறமையினால் விடுதலை ஆகும் தம்பி தான் விரும்பிய காதலியையும் அண்ணன் எடுத்துகொள்ள போகிறான் என்பதை அறிந்து அண்ணனிடம் சண்டை போடுகிறான் - அவன்தான் உண்மையான திருடன் என்று தன் பெற்றோர்களையும் நம்ப வைக்கிறான்

அண்ணன் எல்லா உண்மைகளையும் கூறுகிறான் - தான் ஒரு நிரபராதி என்பதை எடுத்து காட்டுகிறான் - உண்மையான திருடன் சித்ரா &கோ வில் வேலை செய்யும் ஒருவன் ( சந்திர பாபு ), அதுவும் அவன் தன் காதலியை ( சுகுமாரி ) மணக்கவே திருடினான் என்பதும் தெரிய வருகிறது - அந்த காதலி வேறு யாரும் இல்லை , சித்ரா &கோ வின் முதலாளி யின் சிறு வயதில் திருவிழாவில் தொலைந்த பெண் - கையில் இருக்கும் மச்சம் பிரச்சனயை தீர்கின்றது

தந்தை இழந்த பணம் திரும்பவும் வட்டியுடன் கிடைகின்றது , அண்ணன் கட்டுரை போட்டியில் வென்ற பணமும் மீதி உள்ள கடனை அடைக்கின்றது - சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்கள் மீண்டும் ஒன்று சேர்கின்றன

சுபம்

uvausan
1st May 2014, 05:14 PM
Part 3 : படத்தின் சிறப்புக்கள்*

1. அருமையான கரு , அற்புதமான நடிப்பு , அழகான கதை - வில்லன் இல்லை , முகத்தை சுளிக்கும் காட்சிகள் இல்லை , தேனிலும் இனிய பாடல்கள் .

2. எல்லோருக்கும் சமமான வேடங்கள் - தேர்வு செய்த அனைவரும் தங்கள் தங்கள் பங்குகளை அழகாக தந்து உள்ளனர்.

3. பொறுப்புள்ள பிள்ளைகளை படத்திலும் கதையிலும் பார்த்தால் தான் இனி உண்டு - இந்த படம் அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கண்டிப்பாக தரும் .

4. படம் சோகத்தை பிழியவில்லை - தேவைக்கு ஏற்ப நகைச்சுவையும் நிறைந்து உள்ள படம் .

5. சபாஷ் மீனா , செந்தாமரை யில் பார்த்த சந்திரபாபுவை இந்த படத்தில் மீண்டும் சந்திக்கலாம் - சுகுமாரி ஜோடி - ஆச்சிரியம் ஆனால் ரசிக்க முடிகின்றது.

6. சாவித்திரிக்கு அதிக வேலை இல்லை - இருந்தாலும் ஜோடி பொருத்தம் நன்றாகவே உள்ளது .

7. GG முதல் முறையாக NT க்கு தம்பியாக நடித்த படம்.

8. மடிமீது தலை வைத்து விடியும் வரை உறங்கும் ஜோடியை மீண்டும் இந்த படத்தில் சந்திக்கலாம் - என்ன ஜோடி பொருத்தம் - அருமைக்கு தமிழில் வேறு வார்த்தை கிடைக்க வில்லை.

9. வசூலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தின படம் - செந்தாமரை வெற்றி கரமாக ஓடிகொண்டிருக்கும் போது , வரவிருக்கும் ஆலயமணியின் ஓசையில் சற்றே ஓட்டத்தில் நிதானத்தை இழந்தது - மற்ற படி வெற்றி வாகை சூட தவற வில்லை

uvausan
1st May 2014, 05:15 PM
Part 4 : படத்தின் சில குறைகள்

1. பெற்றவர்கள் - எடுப்பார் கை பிள்ளை போல , பத்திரிக்கை யில் வரும் செய்திகளை வைத்து கொண்டு தன் பிள்ளைகளை எடைபோடுவது அவ்வளவு நன்றாக இல்லை - தன் குழந்தகைள் எந்த சமயத்திலும் தவறான வழிக்கு செல்லமாட்டார்கள் , தாங்கள் அப்படி வளர்க்கவில்லை என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் .

2. தன் தம்பி தன் மீதே சந்தேக படுகிறான் என்பதை ஏன் அண்ணன் புரிந்துகொள்ளவில்லை என்பது மர்மமாக உள்ளது .

3. சாவித்திரி - GG காதலில் ஒரு அழுத்தம் இல்லை - வேறு வழியே இல்லை என்பது போல காதலிகிண்டார்கள் - மறக்கவும் செய்கிண்டார்கள்

uvausan
1st May 2014, 05:17 PM
Part 5 : நடிப்பும் , நடிகர்களும் - ஒரு சிறப்பு கண்ணோட்டம்


NT - அமைதியான அதே சமயத்தில் ஆழமான நடிப்பு - அண்ணனாக , தன்னை விட 10 வயதாவது அதிகமாக இருக்கும் மூத்தவனை தம்பியாக பாவித்து நடிக்கவேண்டும் . ஒரு அன்னணனின் கட்டுப்பாடு , கடமை உணர்ச்சி , பாசம் , பரிவு எதிலும் குறை வைக்க வில்லை - பெற்றோர் இல்லையென்றால் நாம் அடையும் எந்த வெற்றிக்கும் அர்த்தம் இல்லை - அவர்களை எந்த நிலைமையிலும் நாம் கைவிடக்கூடாது என்பதை எப்படி புரிய வைக்கிறார் - தேவிகாவிடம் interview செய்வதாகட்டும் , தன் உடல் ஊனமுற்ற மனைவியிடம் காட்டும் பரிவாகட்டும் , தன் ஒரே தம்பி தன்னை திருடன் என்று நினைத்து விட்டானே என்று புலம்புவதிலாகட்டும் , கோர்ட்டில் தம்பிக்காக வாதாடுவதில்லாகட்டும் நடிப்பு சிங்கம் செய்யும் கர்ஜனை வானத்தை இரண்டாக பிளக்கும் -------

GG : அருமையான , கட்டுபாடான நடிப்பு - சாவித்திரியிடம் கொஞ்சுவதிலாகட்டும் , அண்ணனை திருடன் என்று கருதுவதிலாகட்டும் , பின்னி விடுகிறார்

S .V ரங்க ராவ் - தந்தை வேடம் இவருக்கு பொருந்தினா மாதிரி யாருக்குமே பொருந்திருக்காது - அன்னையின் ஆணையில் வில்லன் தந்தை , விடிவெள்ளியில் வில்லன் தந்தை ; இரும்பு திரையில் வில்லன் தந்தை - இந்த படத்தில் வில்லன் இல்லை - தன் குழந்தைகள் கஷ்ட்ட படகூடாது என்பதில் இவர் காட்டும் அக்கரை அற்புதம்

M .V ராஜம்மா - கர்ணனில் தெரிந்தே மகனை தொலைத்த குந்தியாக , பாவ மன்னிப்பில் மகனை தெரியாமல் தொலைத்த தாயாக , அன்னைஇல்லத்தில் மகனை பற்றி தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அன்னையாக நடித்தவர் இந்த படத்தில் மகனை தொலைக்காமல் நடிக்கிறார் - இருவரையும் station லில் முதல் முறை சந்திக்கும் பொழுது சூரியனையும் சந்திரனையும் ஒரே திசையில் உதிப்பது போல உள்ளது என்று சொல்லும் போது , திரை அரங்குகளில் காதுகள் செவிடாகும் வரை கரகோஷம் கேட்க்குமாம் ..

தேவிகா ( பலருக்கும் அண்ணி ) - அழும் போது அழுகை , சிரிக்கும் போது அளவான சிரிப்பு - இரண்டும் ஒரே சமயத்தில் காட்ட வேண்டிய சந்தர்பத்தில் கேட்காத வெட்கம் - சாட்சி கையெழுத்து தன் காதலனின் registered marriage க்கு போடும் வேலையில் எல்லோரையும் உருக்கி விடுகிறார் .

சாவித்திரி : அதிகமான , அழுத்தமான வேடம் இல்லை - பாடுகிறார் , ஆடுகிறார் , கோபிக்கிறார் , சோகமாக இருக்கிறார் , மீண்டும் சிரிக்கிறார் - அவ்வளவே !!

சந்திரபாபு : படத்தை தூக்கி நிருத்துபவர்களில் இவரும் ஒருவர் - அருமையான காமெடி - சுகுமாரி ஜோடி - வாழபழத்தை வாங்குவதிலாகட்டும் , பேப்பர் இரவல் வாங்குவதிலாகட்டும் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை .

VKR : எப்பொழுதும் போல அருமையான நடிப்பு

uvausan
1st May 2014, 05:20 PM
படத்தின் பாடல்கள் - ஒரு சிறப்பு பார்வை

1.இதழ் மொட்டு விரிந்திட – மாயவநாதன் – பி.பி.ஸ்ரீநிவாஸ், சுசீலா

ஜெமினி கணேசன், சாவித்திரி- அருமையான பாடல் - பல முறை ஸ்ரீலங்கா வானொலியில் கேட்கப்படும் பாடல்

2. பந்தல் இருந்தால் கொடி படரும் – கவி. ராஜகோபால் – டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி

NT & தேவிகா

பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...

பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...

கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...

நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..
நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..
நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...
காலம் வந்தால் காய் பழுக்கும்...
காத்திருந்தால் கனி கிடைக்கும்...

பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...

கடல் நடுவே நீர் மீன் பிடிக்கும்..
இரு கண்களும் இமையிடம் எதை கேட்கும்...
கன்னியின் உள்ளம் ஏன் மயங்கும்...
அவள் கண்ணம் இரண்டும் ஏன் சிவக்கும்...

காதல் நெருப்பில் குளித்திருக்கும்...
அன்பு கண்ணிரெண்டும் அதில் படிந்திருக்கும்...
கோமள மாம்பழ கண்ணத்திலே இதழ்
குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...
குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...

பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...

இடைத் தழுவும் கைகள் மாலைகளோ...
உங்கள் இதய தளம் வண்ண மலரணையோ...
மடைத் திறக்கும் அன்பு வார்த்தைகளோ...
சிந்தும் வார்த்தையெல்லாம் அங்கு காவல்களோ...
கண்ணிரண்டும் ஒளி விளக்குகளோ...
இரு கனியிதழ் ரத்தின கதவுகளோ...
கண்ணங்களும் தங்க பாலங்களோ...
என் காதலுக்கே தந்த பரிசுகளோ...
காதலுக்கே தந்த பரிசுகளோ...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ...
அருமையான பாடல் - ஆழ்ந்த கருத்துக்கள் - பல முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க்க தோன்றும் .

3. நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ – மாயவநாதன் – சீர்காழி கோவிந்தராஜன்

என்னை இளம்வயதுமுதல் கவர்ந்த பாடல்களுள் இதுவும் ஒன்று. திரைக்கதைக்கு ஏற்ப அமையப்பெற்ற அருமையான பாடல் வரிகள். கவியரசின் கைவண்ணமென்றே எண்ணியிருந்தேன்.மாயவநாதனின் பாடல் என்பது பிறகே தெரிய வந்தது.

4. கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு – மாயவநாதன் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ்

இந்த பாடலை" கேட்டவைகளில் பிடித்து " என்ற பதிவில் அலசி விட்டேன் .

The part where Gemini sings " anannil ayiram per undu" with vengenance but also meant like praising to sivaji , is simply superb.

5. என் கதை தான் உன் கதையும் – கவி.ராஜகோபால் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
இந்தப்பாடலைப் பலர் கேட்டதேயில்லை. ஆனால் மிகவும் அர்த்தமுள்ள பாடல்.

6. எப்போ வச்சுக்கலாம் – மாயவநாதன் – ஜே.பி.சந்திரபாபு
ஜனரஞ்சகமான பாடல்

uvausan
1st May 2014, 05:23 PM
Part 7 : படத்தின் *சில ஆவணங்கள்*

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/GEDC4866-1_zps78e988be.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/GEDC4866-1_zps78e988be.jpg.html)

uvausan
1st May 2014, 05:24 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/BandhapasamAdfw_zps11be3be0.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/BandhapasamAdfw_zps11be3be0.jpg.html)

uvausan
1st May 2014, 05:24 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam000398_zps90efba51.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam000398_zps90efba51.jpg.html)

uvausan
1st May 2014, 05:25 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam001197_zpsb4ccc0cc.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam001197_zpsb4ccc0cc.jpg.html)

uvausan
1st May 2014, 05:25 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam000956_zps7c48a4d2.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam000956_zps7c48a4d2.jpg.html)

uvausan
1st May 2014, 05:26 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam004985_zpsc01c55a0.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam004985_zpsc01c55a0.jpg.html)

uvausan
1st May 2014, 05:26 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam009111_zps8001a714.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam009111_zps8001a714.jpg.html)

uvausan
1st May 2014, 05:27 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam008177_zpsbe793027.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam008177_zpsbe793027.jpg.html)

uvausan
1st May 2014, 05:28 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam013084_zps96bc0f2c.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam013084_zps96bc0f2c.jpg.html)

uvausan
1st May 2014, 05:29 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam013003_zpsdc1c5115.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam013003_zpsdc1c5115.jpg.html)

uvausan
1st May 2014, 05:30 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam008960_zpsfa87ecda.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam008960_zpsfa87ecda.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam026404_zps4e45b119.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam026404_zps4e45b119.jpg.html)

uvausan
1st May 2014, 05:31 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam06_zpsec13d5d2.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam06_zpsec13d5d2.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam112576_zps989f30b3.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam112576_zps989f30b3.jpg.html)

uvausan
1st May 2014, 05:32 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam126242_zps93a1a138.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam126242_zps93a1a138.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam222488_zps70073ca6.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam222488_zps70073ca6.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam201864_zpsea9dba1f.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam201864_zpsea9dba1f.jpg.html)

uvausan
1st May 2014, 05:34 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam023307_zps81198209.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam023307_zps81198209.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam07_zps674cedab.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam07_zps674cedab.jpg.html)

uvausan
1st May 2014, 05:35 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam160662_zps028407be.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam160662_zps028407be.jpg.html)

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PandaPaasam161243_zps5f65dde1.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PandaPaasam161243_zps5f65dde1.jpg.html)

uvausan
1st May 2014, 05:35 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/28big_zps54850133.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/28big_zps54850133.jpg.html)

uvausan
1st May 2014, 05:37 PM
Part 8 : *படத்தை பற்றி இந்த திரியின் சில ஜாம்பவான்களின் கருத்துக்கள்*

Mr.Rangavendra

எல்லா வகையான நடிப்புக்கும் இலக்கணம் வகுத்த நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த திரைப்படங்களில் பந்த பாசம் முக்கியமான இடம் பெறுவதாகும். தேவிகாவைக் காதலித்தாலும் சந்தர்ப்பத்தாலும் நெருக்கடியாலும் உடல் ஊனமுற்ற சந்திரகாந்தாவை மணப்பதாக திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் நடிகர் திலகத்தின் Subtlity in acting இவ்வகை நடிப்பிற்கும் முதல் பாடமாய் விளங்குகிறது.

குறிப்பாக கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு பாடல் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வகையில் நடிகர் திலகத்தின் மென்மையான உடல் மொழியுடன் கூடிய நடிப்பு நம்மைக் கட்டிப் போட்டு விடும்.

பல காட்சிகளில் உணர்ச்சி பூர்வமாக நடிக்க சந்தர்ப்பங்கள் இருந்தாலும் பாத்திரத்தின் தன்மைக்கேற்றவாறு மிகவும் மென்மையாக கையாண்டிருப்பார்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய காட்சி திருமணக் காட்சி. சந்திரகாந்தாவை திருமணம் செய்ய கையெழுத்திடும் காட்சியில் சாட்சிக் கையெழுத்தை காதலியே இடுவதாக வரும் காட்சியில் தேவிகாவின் நடிப்பு மெய் சிலிர்க்க வைக்கும். பார்வையாலேயே இக்காட்சியைத் தூக்கி நிறுத்தி விடுவார் நடிகர் திலகம்.

இயல்பு நடிப்பு என்றால் என்ன என்பதற்கு இலக்கணம் பந்த பாசம் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு அமைந்திருக்கும்.

ஒவ்வொரு ரசிகனும் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய திரைக்காவியம் பந்தபாசம்

Thiru. Subramaniam Ramajayam

MY ninaivugal of the movie I have devloped the liking of watching NT movies on the release days when i was 13 yrs old being diwali release i was afraid of leaving the house that day on the net day along with my close friend went to BROADWAY and all the tickets were full and the return crowds because of not getting tickets very huge.so we stated returnin home just opp to the theatre where erstwhile muugan theatre was there some ladies unknown to us called and gave tickets volountarily. we were very vert happy and allaparais great.

Mr.Gopal

ஒரு நல்ல படம்.என்னை கவர்ந்தவை-நித்தம் நித்தம் பாடல்- அப்படியே மனசை கீறி கசிய வைக்கும்.சீர்காழியின் குரல் ஜாலம்,உணர்ச்சி பிழம்பான ஏற்ற இறக்க கசிவுகள்.மாயவநாதன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் மேஜிக்.
கவலைகள் கிடக்கட்டும்- ராகவேந்தர் குறிப்பிட்ட படி,சிவாஜியின் உடல் மொழி,பாவங்கள்,இயல்பான பாடலின் தாளகதிக்கேற்ப ,மனநிலைக்கேற்ப ...
என்ன சொல்வது?
பந்தல் இருந்தால்- ஆஹா ...வாணிக்கு அடுத்த அண்ணியின் இணைவில் ....
ஒரு அற்புதமான இடம்- காதலியை சந்திக்கும் போது,கதாநாயகன் மனநிலை சரியிருக்காது.ஒரு வார்த்தை கூட பேசாமல் வெடுவெடுவென்று இருந்து சென்று விடுவார்.இந்த மாதிரி ஒரு காட்சியமைப்பை வைத்த பீம்சிங்கிற்கு சிரம் தாழ்த்திய 2014 இன் வணக்கம்.
====

uvausan
1st May 2014, 05:38 PM
ஒரு அற்புதமான படத்தை இந்த இனிய உழவர் திரு நாளில் அலசிய திருப்தியுடன் என் பதிவை முடித்துகொள்கிறேன்

வணக்கம்
அன்புடன்
ரவி

ScottAlise
1st May 2014, 07:56 PM
முரளி சார்,

நீங்கள் நடிகர் திலகத்தின் படங்களை பார்த்த விதத்தை விவர்க்கும் விதம் நடிகர் திலகத்தின் படங்களை மீண்டும் ஒரு முறை அந்த காலகட்டத்தில் போய் பார்ப்பது போல் உள்ளது . தொடர்ந்து எழுதுங்கள்

ScottAlise
1st May 2014, 07:58 PM
கோபால் சார்
மிகவும் எளிமையாக அதே சமயம் இனிமையாக இரும்புத்திரை, பாபு , சவாலே சமாளி என்று triple action படங்களை காட்டி என்னை கவர்ந்து விட்டது உங்கள் படைப்பு

ScottAlise
1st May 2014, 08:00 PM
ரவி சார்

நீங்கள் தான் உண்மையான சுனாமியாக பந்த பாசம் படத்தை அலசி பிச்சு உதறி விட்டிர்கள் . இந்த மாதிரி என்னால் எழுத , அலச முடியாது . உங்கள் பதிவின் standard யை பார்க்கும் பொது தான் தெரிகிறது நான் இன்னும் உழைக்க வேண்டும் என்று .
இனி அந்த படத்தை பற்றி எழுத சில மாதங்கள் என் வருடங்கள் கூட தேவை படும் காரணம் உங்கள் எழுத்தின் வீச்சு . நீங்கள் எழுதி உள்ளதை பார்த்து நான் இடும் பதிவை பாரட்ட வார்த்தை இல்லை .படத்தின் photos ஸ்பெஷல் தேங்க்ஸ்

SUPERB, FABULOUS

ScottAlise
1st May 2014, 08:00 PM
ரவி சார்

நீங்கள் தான் உண்மையான சுனாமியாக பந்த பாசம் படத்தை அலசி பிச்சு உதறி விட்டிர்கள் . இந்த மாதிரி என்னால் எழுத , அலச முடியாது . உங்கள் பதிவின் standard யை பார்க்கும் பொது தான் தெரிகிறது நான் இன்னும் உழைக்க வேண்டும் என்று .
இனி அந்த படத்தை பற்றி எழுத சில மாதங்கள் என் வருடங்கள் கூட தேவை படும் காரணம் உங்கள் எழுத்தின் வீச்சு . நீங்கள் எழுதி உள்ளதை பார்த்து நான் இடும் பதிவை பாரட்ட வார்த்தை இல்லை .படத்தின் photos ஸ்பெஷல் தேங்க்ஸ்

SUPERB, FABULOUS

Russellawz
1st May 2014, 08:21 PM
ரவி,
பந்தபாசம் அலசல் மிக நன்று. கட்டுரை சார்ந்த நிழலோவியங்களும் கண்களை ஈர்க்கின்றன. ஒரு சிறு திருத்தம். இன்று உழவர் திருநாள் இல்லை. இன்று தொழிலாளர் தினம். அது சரி உழவர்களும் தொழிலாளர்கள்தானே என்கிறீர்களா.
கோபால்,
பாபு படத்தைப் பற்றிய தங்களது கண்ணோட்டம் களிப்பை உண்டாக்குகிறது.
ரவிகிரண்சூர்யா,
எனக்காக ஒரு அருமையான பாடல் தந்துளீர்கள். நன்றி நவில்கிறேன்.
முரளி அவர்களே!
தாங்கள் என்னை தவிர்த்து வரவேற்காவிடினும் தங்கள் எழுத்துக்களை என் நெஞ்சம் என்றுமே வரவேற்கும். தங்களின் அந்த நாள் ஞாபகங்களுக்கு என் அனந்தகோடி வந்தனங்கள்.
நல்ல பங்களிப்பாளர்கள். அனைவர்க்கும் அன்பு பாராட்டுக்கள்.

uvausan
1st May 2014, 09:01 PM
ரவி,
பந்தபாசம் அலசல் மிக நன்று. கட்டுரை சார்ந்த நிழலோவியங்களும் கண்களை ஈர்க்கின்றன. ஒரு சிறு திருத்தம். இன்று உழவர் திருநாள் இல்லை. இன்று தொழிலாளர் தினம். அது சரி உழவர்களும் தொழிலாளர்கள்தானே என்கிறீர்களா.
கோபால்,
பாபு படத்தைப் பற்றிய தங்களது கண்ணோட்டம் களிப்பை உண்டாக்குகிறது.
ரவிகிரண்சூர்யா,
எனக்காக ஒரு அருமையான பாடல் தந்துளீர்கள். நன்றி நவில்கிறேன்.
முரளி அவர்களே!
தாங்கள் என்னை தவிர்த்து வரவேற்காவிடினும் தங்கள் எழுத்துக்களை என் நெஞ்சம் என்றுமே வரவேற்கும். தங்களின் அந்த நாள் ஞாபகங்களுக்கு என் அனந்தகோடி வந்தனங்கள்.
நல்ல பங்களிப்பாளர்கள். அனைவர்க்கும் அன்பு பாராட்டுக்கள்.

சார் , திருத்த வருவதற்குள் என் பதிவுகளை படித்துவிட்டீர்கள் - உழைப்பாளர் தினம் என்று எழுத நினைத்து உழவர் தினம் என்று சொல்லிவிட்டேன் - என் பதிவுகளை படித்ததற்கும் , தவறை திருத்த உதவியதற்கும் என் மனமார்ந்த நன்றி

uvausan
1st May 2014, 09:50 PM
ரவி சார்

நீங்கள் தான் உண்மையான சுனாமியாக பந்த பாசம் படத்தை அலசி பிச்சு உதறி விட்டிர்கள் . இந்த மாதிரி என்னால் எழுத , அலச முடியாது . உங்கள் பதிவின் standard யை பார்க்கும் பொது தான் தெரிகிறது நான் இன்னும் உழைக்க வேண்டும் என்று .
இனி அந்த படத்தை பற்றி எழுத சில மாதங்கள் என் வருடங்கள் கூட தேவை படும் காரணம் உங்கள் எழுத்தின் வீச்சு . நீங்கள் எழுதி உள்ளதை பார்த்து நான் இடும் பதிவை பாரட்ட வார்த்தை இல்லை .படத்தின் photos ஸ்பெஷல் தேங்க்ஸ்

SUPERB, FABULOUS

தமிழில் எழுதும்போது இன்னும் பல தவறுகள் , பிழைகள் வருகின்றன - தவிர்க்க முடியவில்லை - உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி ராகுல் . இந்த படத்தை பாருங்கள் - உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்

uvausan
1st May 2014, 09:53 PM
இலங்கை சாதனையில் ஒரு துளி

ராமன் எத்தனை ராமனடி.................கொழும்பு...............சென் ட்ரல்..............106...நாட்கள்
ராமன் எத்தனை ராமனடி.................யாழ்நகர்................ராண ி.......................85...நாட்கள்
...
அடிமைபெண்......................................கொழ ும்பு................சென்ட்ரல்...............105.. நாட்கள்
அடிமைபெண்......................................யாழ ்நகர்................ராணி......................... 77..நாட்கள்

மிகவும் நன்றி சிவா சார் - உங்கள் பதிவுகள் பலரை ஊமையாக்கும் , வியக்க வைக்கும் , பொறாமையில் கரிய வைக்கும் - தொடருங்கள்

Murali Srinivas
2nd May 2014, 12:25 AM
கோபால்,

என்னுடன் பேசிய நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் எந்த காரணத்தினால் அவர்களால் ஒரு திரிக்கு மேல் போக முடியவில்லை என்பதையும் விளக்கினார்கள். அதை அப்படியே திரியில் பதிவு செய்வது அவர்களையும் அவர்கள் போன்ற பலரையும் தர்மசங்கடப்படுத்தும் என்ற காரணத்தினால் நான் அதை எழுதுவது உசிதமாக படவில்லை. நான் முதலில் சொன்ன கருத்தில் அதாவது சில விஷயங்களுக்கு தனிப்பட்ட திரி தேவைப்படுகிறது என்பதில் இப்போதும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. பாடல்கள் பலவிதம் தலைப்பில் எழுதப்படும் பாடல்களின் பின்னணி தகவல்கள் அனைத்தும் எல்லாக் காலத்திலும் பலருக்கும் பயன்படும். அதை மெயின் திரியில் தேடாமல் உடனே எடுத்துக் கொள்ளும் வசதிக்குத்தான் தனி திரி.

இரும்பு திரை, சவாலே சமாளி, பாபு என்ற முக்கனிகளும் சுவை. அதிலும் சவாலே சமாளி மற்றும் பாபு அனைவருக்கும் பிடிக்கும். காரணம் இங்கே பங்களிப்பாளர்கள் அனைவரும் அந்தப் படங்கள் வெளியான கால கட்டத்தில் சிறு வயது ரசிகர்களாக இருந்து படத்தை ரசித்தவர்கள்.

அன்புடன்

Murali Srinivas
2nd May 2014, 12:31 AM
ரவி, ஒரு புதிய format ல் பந்தா பாசத்தை அலசியிருக்கிறீர்கள். முழுமையாக படித்து விட்டு சொல்கிறேன்.

சிவா சார்,

இலங்கை விநியோகஸ்தர் யார், அவர் எந்தெந்த திரையரங்குகளை சொந்தமாக வைத்திருந்தார், என்னென்ன படங்களை விநியோகித்தார் என்பதையெல்லாம் தெள்ள தெளிவாக விளக்கியதன் மூலம் பல நாள் மனதில் நெருடிக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. அதே போல் நான் முன்னரே குறிப்பிட்டேன். நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளைப் படங்கள் கூட மற்றவர்களின் கலர் படங்களை சர்வ சாதாரணமாக முறியடித்து முன்னேறியிருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக படிக்கும் போது மிக மிக சந்தோசம். தொடருங்கள்!

ராமதாஸ் அவர்களே,

நீங்கள் புதிய வரவாக உள்ளே நுழைந்ததையும் தமிழால் நடிகர் திலகத்திற்கு புகழ் மாலை சூட்டியதையும் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன். தனிப்பட்ட முறையில் உங்களை பெயர் சொல்லி வரவேற்கவில்லை என்பதற்கு காரணம் கடந்த மூன்று நாட்களாக தனிப்பட்ட பதிவுகள் எதையும் போடவில்லை. முதல் நாள் பாடல்கள் பலவிதம் பகுதியில் தாழையாம் பூ முடிச்சு பாடலை மீண்டும் தேடி எடுத்து align செய்து இரண்டு திரிகளிலும் பதிவு செய்யும் வேலையே பெரிய வேலையாக இருந்தது. நேற்று அந்த நாள் ஞாபகம் பகுதியில் பதிவிட்டிருந்ததை மீண்டும் மெயின் திரியில் பதிவு செய்யும் வேலை மற்றும் புதிய பதிவு ஒன்றை இடும் வேலையும் நேரத்தை எடுத்துக் கொண்டது. நீங்கள் பார்த்தீர்களென்றால் மேலே குறிப்பிட்ட பதிவுகள் அனைத்தும் இரவு 1 மணி சமயத்தில்தான் பதிவு செய்திருப்பேன். இதை எழுதும் இந்த நேரம் கூட நடு நிசியை தாண்டிய சமயம்தான். ஆகவே காரணம் வேறொன்றுமில்லை. உங்களை தவிர்க்கும் எண்ணமும் எனக்கில்லை. இன்னும் சொல்லப் போனால் புதிய ஆட்கள் வருவதை பெரிதும் விரும்புபவன் நான். ஆகவே உங்கள் வருகையும் உங்கள் சிவாஜி சேவையும் தொடரட்டும்.

அன்புடன்

RAGHAVENDRA
2nd May 2014, 09:16 AM
Director K S Ravikumar with Nadigar Thilagam and Rajnikanth

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc1/t1.0-9/q74/s720x720/10014691_565712513543356_627126460536320801_n.jpg

Ravikumar directing NT
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/q71/s720x720/10007488_563267247121216_1916766239224941761_n.jpg

At the Avvai Shanmugi Shoot spot



UNFORGETTABLE MOMENTS !!
With Superstar Chevelier Sivaji Ganesan & Padma Bhusan Kamal Haasan

A picture during the shooting of Avvai Shanmugi (Bhamane Satyabhamane)

Not many know that the character of 'Vishwanathan Iyer' was initially scripted for Sivaji Ganeshan keeping in mind his style. But unfortunately due to heath issues Sivaji Sir couldn't essay this role. Hence Gemini Ganeshan Sir was roped in.
Gemini Ganeshan Sir did great justice to the role.
After his treatment Sivaji Sir came to visit us on this sets. What encouragement for the great icon! — with Sivaji Ganesan and Kamal Haasan.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/q77/s720x720/1496607_555680871213187_29025517_n.jpg

Courtesy: KS Ravikumar's facebook page: https://www.facebook.com/iamksravikumar?fref=photo

chinnakkannan
2nd May 2014, 11:01 AM
சிரிப்பு பாதி அழுகை பாதி…

(திடீர் தொடர் கட்டுரை..- திடீர் என்று நின்றாலும் நிற்கும்!)

அத்தியாயம் ஒன்று..

*
நடிகர் திலகமும், டைரக்டர் ஸ்ரீதரும் அந்த அறையில் அமர்ந்திருந்தனர்..

சீனப் போருக்கான நிதிக்காக ஸ்டார் நைட் ஏற்பாடு பண்ண கவர்ன்மெண்ட் நம்மளைக் கேட்டிருக்கு சார்.. என்ன செய்யலாம்..

ஸ்ரீதர் ந.தி யைக் கேட்க நடிகர் திலகம்..”ஒங்கூட ஒரு பையன் இருப்பானே..சிவப்பா ஒல்லியா வெடவெடன்னு..”

“கோபுவா”

“ஆமாம் அவனைக் கூப்பிடு”

கோபு வந்தான்.. சிவாஜியையும் பார்த்தவுடன் கொஞ்சம் படபடப்பு கூடியது அவனிடம்..

சிவாஜிக்கு சலாம் வைத்து ஸ்ரீதரிடம் “சொல்லுங்க்ணா”

ஸ்ரீதர் சிவாஜியைப் பார்க்க, ந.தி..

“இந்தாப்பா கோபு.. ஸ்டார் நைட் நடத்தப் போறோம்.. நிறைய நட்சத்திரங்கள் கலந்துக்குவாங்க..ச்சும்மா இண்ட்ரோ பண்ணினால்லாம் நல்லா இருக்காது.. நீ என்ன பண்றே.. ஒரு ஒண்ணவர் டிராமாவா எழுதிக்கிட்டு வா.. எல்லாருக்கும் ஸ்கோப் இருக்கறா மாதிரி”

” தல..இப்படிச் சொல்றீங்களே.. நானா.. ஒண்ணவர் டிராமா வித் நிறைய கேரக்டர்ஸா.. என்னால முடியுமா”

”இந்த பாரு..ஒன்னால முடியும்..ஒன் திறமை உனக்குத் தெரியாது.. நீ ஆஞ்சநேயர் மாதிரி… நீ என்ன பண்ற.. நேர ஒன்னோட திருவல்லிக் கேணி வீட்டுக்குப் போ..மொட்டை மாடியில லைட் போட்டு டேபிள்ளாம் இருக்கோன்னோ.. அங்க ஒக்காந்து மேல இருக்கற ஸ்டார்ஸ் பார்த்து எழுது..சரியா… ஸ்ரீ… ஒருமணி நேரம் ப்ரோக்ராம் ரெடி. அப்புறம் மிச்ச டயத்துக்கு பத்மினி டான்ஸ், எம்.எஸ்.வி கச்சேரி..அப்புறம் ஜெமினி சாவித்ரிக்கு ஒரு சின்ன ட்ராமா..கோபு.. அந்த ஒன்னவர் டிராமா எழுதி முடிச்சதும் இந்த சின்ன ட்ராமாவையும் நீயே எழுதிடு..” என்று ந.தி சொல்ல கோபு பே என முழிக்க ஆரம்பித்தான்..

ஸ்ரீதரும் சிவாஜியும் கவலையே இல்லாமல் வேறு சங்கதிகள் பேச ஆரம்பிக்க கோபு தன் வீட்டு மொட்டை மாடிக்கு வந்து லைட் போட்டு நாற்காலியில் அமர்ந்து யோசித்து பேனாவை எடுத்து உதறினால் கற்பனை வரவில்லை..இங்க் தான் வந்தது..

சிவாஜி என்ன சொன்னார்..எல்லாரும் நடிக்கணும்..அப்படித் தானே..என்ன செய்யலாம்.. ஒரு அப்பா அம்மா ஒரு ஹீரோ ஹீரோயின்..ம்ம் நாலு பேர் தான் தேறுது… இப்படிச் செஞ்சா என்ன

ஒரு அப்பா அம்மா அவங்களுக்கு நாலு பொண்ணு.. நாலு மாப்பிள்ளைகள்..ஆஹா பத்து பேரு தேறிட்டாங்களே..எப்படி இவங்களை இணைக்கறது..

யெஸ்.. அந்த அப்பாவுக்கு ஒரு ஆசை ஒரே நாள்ல நாலு பொண்ணுக்கும் ஒரே மேடையில கல்யாணம் செஞ்சு வெக்கணும்..ஹை.. நல்லா இருக்கே..

கற்பனைப் பஞ்சு மெல்ல மெல்ல நூலாகி.. பல நூற்களாகி அழகான நகைச்சுவை நாடகமாக வடிவெடுக்கும் போது அதிகாலை நான்கு மணி..

கொஞ்சூண்டு தூங்கி எட்டுமணிக்கு ந.தி ஸ்ரீதரை பார்த்து கதையின் சினாப்சிஸையும் நாடக வசன பேப்பர்களையும் கொடுத்தால்.. இருவர் முகத்திலும் மகிழ்ச்சி.. பாத்தியா சொன்னேன்ல என சிவாஜி பெருமிதத்துடன் பார்க்க கோபுவின் மனத்தில் மகிழ்ச்சி அருவி..

சிவாஜி நாடகத்தை ரசித்து, அவரது நாடக அனுபவம் அதிகம் என்பதால் சக நடிக நடிகைகளை நன்கு வேலை வாங்கி ஒத்திகையில் நடிக்க வைத்தார்…

பின் அந்த நாடகம் நட்சத்திர இரவில் அரங்கேற்றப் பட.. பார்த்தவர்கள் எல்லாம் கைதட்டிப் பாராட்டினார்கள்..அதே நாடகத்தை கடலூர் திருச்சி சேலம் எனப் போட எங்கும் பாராட்டு மழை தான்..

ஒரு சுபயோக சுபதினத்தில் கோபுவிடம் சிவாஜி .” ஏண்டாப்பா..இந்த டிராமாவ நம்ம புரொடக்*ஷனே எடுக்கட்டும்.. வேற யாருக்கும் கொடுத்துடாதே..”

“பெரியவா பேச்சுக்கு மறு பேச்சு சொல்ல முடியமா சார்..”

”சரி.. அப்ப என்னபண்ணலாம் நம்ம மாதவனை டைரக்ட் பண்ணச் சொல்லலாம்..என்னாங்கற..

“சார்..ஒரு சின்ன ஸஜெஷன்..”

“என்னப்பா”

“சி.வி ராஜேந்திரனும் நானும் ரெண்டு படம் செஞ்சுருக்கோம்.. ஸோ..இதையும் அவனே டைரக்ட் பண்ணா நல்லா இருக்கும்னு என் அபிப்ராயம்..திரைக்கதை நானே எழுதறேன்..கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..

“ஹெல்ப்பா.. நானும் அவர் படம் பார்த்திருக்கேன்..அதுக்கென்ன..அவரே பண்ணட்டும்” என சிவாஜி சொல்லிவிட கோபுவுக்கு மட் மட்..மட்டற்ற மகிழ்ச்சி..

அப்படி எடுக்கப் பட்ட படம் தான் என்றென்றும் பசுமையான நகைச்சுவை கொண்ட “கலாட்டா கல்யாணம்..”சிவாஜி ஃபிலிம்ஸ் கண்காணிப்பில் ராம்குமார் ஃபிலிம்ஸ் தயாரித்தார்கள்

(மேற்கண்ட விஷயம் சித்ராலயா கோபு எழுதியிருந்த ஞாபகம் வருதே புத்தகத்தில் வருகிறது..தன்மை ஒருமையில் அவர் எழுதியிருந்ததை காப்பிரைட் ப்ராப்ளம் வரக்கூடாது என்று படர்க்கையில் நான் கொஞ்சம் இட்டுக் கட்டி எழுதியிருக்கிறேன் (ராகுலும் ரவியும் பே என முழிக்கப் போகிறார்கள்!))
*
கலாட்டா கல்யாணத்தில் ந.தி வெகு இளமையாய் இயல்பான நகைச்சுவை பாடிலேங்க்வேஜ் ரொமான்ஸ் எனப் பின்னியிருப்பார்..அதுவும் அப்பப்பா நான் அப்பனல்லடா விற்கு முகபாவங்கள்,

”எவனோ எக்ஸ் அண்ட் கோ மேனஜராம் ஏதோஃப்ராட் பண்ணிட்டானாம் பொறுக்கிப் பய..இடியட் அவனப் போய் நான் பாக்கணுமாம்..ஆமா நீங்க யாரு சார்..” “ நீங்க சொன்னீங்களே அந்த எக்ஸ் அண்ட்கோ மேனேஜர் அது நான் தான்” கேட்டதும் ந.தியின் திரு திரு முழி.. நன்றாக இருக்கும்..

முரளிசாரின் காப்பிரைட் பாடலான நல்ல இடம் நீவந்த இடம் பாடலில் ரொமான்ஸ் நன்று.. மேலும் இந்தப் படத்தைப் பற்றி நிறைய இங்கு சொல்லியிருப்பார்கள் எனில் நான் அதிகம் சொல்லவில்லை..

சிவாஜியின் நகைச்சுவைக்கு அடுத்தபடி என்றால் சோ (நீங்க சென்ஸஸா..இன்கம்டாக்ஸ் இல்லயா..இல்ல அவங்க வேற டிபார்ட்மெண்ட்.. அப்ப நீங்க போய் அவங்கள அனுப்புங்க!), நாகேஷ் எனப் போகும்.. ம்ம் உதட்டினில் ஃபிப்டி பாட்டு ஹண்ட்ரட் பெர்சண்ட் காதுகளில் ஒலிக்கும்..

எனக்கு மிகமிகப் பிடித்த ந.தியின் நகைச்சுவைப் படங்களில் இது ஒன்று..

*
அப்பப்பா நான் அப்பனல்லடா வைப் போலவே இன்னொரு ஸோலோ பாட்டு..இன்னொருபடம் அதிலும் ந.தி தான்..
அது…..

லெட் அஸ் வெய்ட் அண்ட் ஸீ:)

(தொடரும்)

RAGHAVENDRA
2nd May 2014, 11:13 AM
அப்பப்பா நான் அப்பனல்லடா வைப் போலவே இன்னொரு ஸோலோ பாட்டு..இன்னொருபடம் அதிலும் ந.தி தான்..
அது…..


ச.சு....?

chinnakkannan
2nd May 2014, 12:14 PM
yes :)

chinnakkannan
2nd May 2014, 01:55 PM
சிரிப்பு பாதி அழுகை பாதி…
*
(திடீர் தொடர் கட்டுரை..-)
*
அத்தியாயம் இரண்டு..
*
புன்னகை அரசி என்று அந்தக் காலத்தில் அழைக்கப் பட்ட- தனது பதினைந்து வயதில் கற்பகத்தில் அறிமுகமான கே.ஆர்.விஜயா நமது ந.தியுடன் பல படங்களில் உடன் நடித்திருக்கிறார்.

.எத்தனை என்று கோபாலைக் கேட்டால் சொல்லிவிடுவார்..
*
பல படங்களில் ஒரு போட்டியே இருக்கும்..எப்படியும் ந.தியை மிஞ்சி விடுவது என்று நடித்துப் பார்த்திருப்பார்.. அவர் ந.தியைப் பற்றி எப்படி இருக்கீங்க என்ற சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரையில் என்ன சொல்கிறார் என்றால்….

*
சிவாஜியுடன் சேர்ந்து நடிக்கும்போது நடிப்பைப்பற்றி மட்டுமல்ல வாழ்க்கைக்குத் தேவையான வேறு பல விஷயங்களையும் நாம் கற்றுக்கொள்ளலாம். சிவாஜி படப்பிடிக்குத் தாமதாக வரமாட்டார்-குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னதாக வருவதுதான் அவர் வழக்கம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
*
ஆனால் படப்பிடிப்பு என்றில்லை. எங்கேயுமே தாமதமாகப் போகும் வழக்கம் அவருக்கு இல்லை. திருமணம் என்றாலும் சரி, பொது நிகழ்ச்சி என்றாலும் சரி குறிப்பிட்ட நேரத்திற்குள் தாமதமின்றி செல்ல வேண்டும் என்பதை நான் அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.”
*
நாம் ந.தியிடம் கற்றுக்கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கிறது\..ம்ம்
*
அது சரி..எதற்காக கே.ஆர்.வி என்றால்..
*
மனவாசலில் முப்பத்திரண்டு புள்ளி வைத்து அழகாய்க் கோலம் போட்டுக்கொண்டே பின்னால் சென்றால்…….
*
வழக்கம் போல அழகான கல்லூரி மாணவ சின்னக் கண்ணன் (ம்க்கும்)..
*
ஒரு சனிக்கிழமை நாளில் கல்லூரிக்கு கனகாரியமாக வெட்டி விட்டு(கட்டடிப்பதற்குத் தமிழ்) சென் ட்ரல் சினிமா காலைக் காட்சி சில நண்பர்களுடன் தயங்கியவாறே சென்றால்…. வெய்ட் ஏன் தயங்கியபடியே..
*
காரணம் இருக்கிறது.. படம் புதுசு..சிவாஜி படம் வேறு..அதிக விளம்பரம் பார்த்த நினைவு இல்லை.. கிடைக்குமா..
*
கிடைத்தது 145 டிக்கட் (மாடி).. போனால் கொஞ்சம் பயம் தான்..கூட்டம் இருந்தது..இருந்தாலும் மனசுக்குள் ஒரு சின்னப் பிறாண்டல்..
*
எல்லாம் படம் ஆரம்பிக்கும் வரை தான்..

**
ஊருக்கு நல்லதொரு உபதேசம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம் எனப் பாடிக்கொண்டே ந.தி கே.ஆர்வி நடுத்தர வயது கெட்டப்பில்..கொஞ்சம் வித்தியாசமாய் கலகலப்பாய் நடித்திருந்தார்கள்..
*
கதை- அவ்வளவாய் நினைவிலில்லை..கொஞ்சம்பழைய கதை தான்..இரண்டு குடும்பங்களுக்கு இந்தத்தம்பதி உதவி செய்வதாய் நினைவு..மாதவி ஜெய்கணேஷ் என நினைவு..
*
மாதவி மேலை நாட்டு நாகரீகம் என தாய்ப்பால் கொடுக்க மறுத்து விட.. உற்சாகமாய்க் குழந்தையை எடுத்து..”அட ஒங்கப்பன் மவனே மம்மி உனக்கு டம்மி தானப்பா – எனப் பாடி ஆடுவது பிடித்திருந்தது..(அப்பப்பா நான் அப்பனல்லடா இளமை வயது..இதுகொஞ்சம் நடுத்தர வயது டான்ஸ்)
*
கொஞ்சம் சுவாரஸ்யமாய்த் தான் இருந்த நினைவு..இரண்டுகுடும்பங்களும் சிவாஜி கேஆர்விக்கு தாங்க்ஸ் சொல்லி எண்ட் கார்ட் போட்டிருந்தால் இன்னொரு முறை பார்த்திருப்பேன்.. கதையைப் பற்றியும் விலாவாரியாக இவ்வளவு வருடங்களுக்கு ப் பிறகு சொல்லியிருக்க முடியும்.. ஆனால் டைரக்டர் விடவில்லை..
*
அந்தக் காலப் படங்களின் செண்டிமெண்ட் படி ந.தியின் அழுகை நடிப்பும் வேண்டும் என நினைத்தாரோ என்னவோ..
*
எல்லாம் முடிந்த பின் ந.தி யும் கே.ஆர்.வி யும் ஏன் தாங்கள் இப்படிச் செய்தார்கள் என்பதற்கு ஒரு சோ ஓஓகமான ஃப்ளாஷ் பேக்..மகள் இறந்துவிடுவதாகவோ என்னவோ..
*
ந.தியின் நடிப்பு பிரமிப்பாகத் தான் இருந்தது..பட் படம் முடிந்து வெளியே மதுரை வெயிலில் சைக்கிள் எடுக்கும் போது மனம் முழுக்க கனத்து கொஞ்சம் வெறுப்பாகத் தான் இருந்தது..டைரக்டரின் மேல் திரைக்கதையாளரின் மேல்,..ஓ சொல்ல மறந்து விட்டேன் படத்தின் பெயர் சத்திய சுந்தரம்.

*
இன்று வரை இந்தப்படத்தைமறுபடி பார்க்கச் சந்தர்ப்பம் வரவில்லை.. ஹிட் படம் என்பது வாசு சார் தனது ஹிட்லர் உமா நாத் ரிவ்யூவில் எழுதியிருந்தார்..
*
சுருளி ராஜன் இறந்த பிறகு வெளிவந்த படமாம் இது..சுருளி ரோல் சுத்தமாக நினைவிலில்லை..
*
ம்ம்..அழுகை பற்றி எழுதியாகிவிட்டது…இனி அடுத்த ரவுண்டிற்குப் போகலாமா..
*
எல்லாருமே ரசித்துப் பார்த்த படம் தான் இது..முழு நீள நகைச்சுவைப் படமும் அல்ல.. கொஞ்சம் சீரியஸ் தான்..ஆனால் ந.தி..இளமையில் இருக்கும் போது எடுத்த படம்..ஜோடியாக என்னுடைய ஃபேவரிட் நடிகை என்று சொல்ல முடியாது..(ஆக்சுவல் ஜோடி bangalore bird ! )
*
ஆனால் அவரும் இருக்கிறார்..அவருடன் என்.டி யின் பாடி லேங்க்வேஜ் இருக்கிறதே..குறும்பு தான்.. எ ந எ ந அ எ மு யா அ..
*
எனில் பை சொல்லிக்கட்டா..

(தொடரும்..).

*
(ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்க..)

Murali Srinivas
3rd May 2014, 12:17 AM
ஒரு சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பது நடக்காமல் இருக்கும். எதிர்பாராதது நடக்கும். அன்றும் இன்றும் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட எத்தனை சிக்கல்களை ஏற்படுத்த முடியுமோ அவற்றையெல்லாம் சிலர் செய்துக் கொண்டேயிருக்கின்றனர். லோக்கல் விநியோகஸ்தர்கள் அவர்களின் தயவில் காலத்தை ஓட்டும் சில திரையரங்க உரிமையாளர்கள், சில மீடியேட்டர்கள் என்ற ஒரு குழு இன்றைக்கு சில ஊர்களில் பாசமலர் படத்தின் ரிலீசை தள்ளிப் போட வைத்திருக்கிறார்கள். எத்தனை நாட்களுக்கு இப்படி செய்வார்கள்? நிலைமை விரைவில் மாறும்.

ஆனால் இங்கே எதிர்பார்த்த ஒன்று நிகழாமல் போனாலும் எதிர்பாராமல் ஒரு நிகழ்வு. தூங்கி கொண்டிருந்த தமிழ் சினிமாவை தட்டி எழுப்பிய குணசேகரன் இன்று முதல் நெல்லை சென்ட்ரலுக்கு விஜயம் செய்திருக்கிறார். தினசரி 4 காட்சிகளாக இன்று முதல் நெல்லை சென்ட்ரலில் பராசக்தி வெளியாகியிருக்கிறது.

அன்புடன்

கண்ணா கலக்குங்க!

Murali Srinivas
3rd May 2014, 12:43 AM
நமது திரியில் புதிதாக இணைந்துள்ள நண்பர்கள் அதிலும் குறிப்பாக கோவை நண்பர் Dr.ரமேஷ் பாபு போன்றவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க முன் திரிகளில் இடம் பெற்ற நடிகர் திலகம் படத்தின் விமர்சனங்கள், கட்டுரைகளின் URL கீழே!

http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7/page91 Selvam - செல்வம்

http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7/page101 Lakshmi Kalyanam - லட்சுமி கல்யாணம்

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page60 Mahakavi Kalidas - மகாகவி காளிதாஸ்


http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page50 Pesum Deivam - பேசும் தெய்வம்

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page146 Thirudan -திருடன்

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page24 Andavan Kattalai - ஆண்டவன் கட்டளை

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page27 Kulamagal Radhai - குலமகள் ராதை

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page33 Ratha Thilagam - ரத்த திலகம்

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page44 Chittor Rani PAdmini.- சித்தூர் ராணி பத்மினி


http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page46 Neela Vanam - நீல வானம்

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page88 Thangai - தங்கை

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page139 En Thambi - என் தம்பி

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=265378#post265378 Padikkadha Medhai - படிக்காத மேதை

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=423807#post423807 Kai Kodutha Deivam - கை கொடுத்த தெய்வம்

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=253687#post253687 Nenjirukkum Varai - நெஞ்சிருக்கும் வரை

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page69 Amara Deepam - அமர தீபம்

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page82 Mohanlal on NT -நடிகர் திலகத்தைப் பற்றி மோகன்லால்

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page91 Uthama Puthiran - உத்தம புத்திரன்

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page18 Enga Oor Raja - எங்க ஊர் ராஜா

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page187 1970 – NT – AV - நடிகர் திலகம் - ஆனந்த விகடன் - 1970கள்

http://www.mayyam.com/talk/showthread.php?8234-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-6/page118 Vilayaattu Pillai - விளையாட்டுப் பிள்ளை

http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7/page74 Annaiyin Aanai - அன்னையின் ஆணை

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page89 Pennin Perumai - பெண்ணின் பெருமை

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page53 Iru Malargal.- இரு மலர்கள்

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page102 Koondu Kili - கூண்டுக்கிளி

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page106 Bale Pandiya - பலே பாண்டியா

அன்புடன்

Russellawz
3rd May 2014, 07:57 AM
தங்கள் விளக்கத்திற்கு நன்றி முரளி அவர்களே! நான்தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். பொறுத்தருள்க. தங்களின் கைவண்ணத்தில் உருவான நடிகர் திலகம் படங்கள் பற்றிய விமர்சனங்கள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு பசுமரத்தில் பாய்வது போல அப்படி மனதுக்குள்ளே பாய்ந்து ஆழமாக பதிந்து விட்டதே! என்னே ஒரு நினைவாற்றல்! என்னே ஒரு கையாளும் திறன்! என்னே ஒரு அபார எழுத்தாற்றல்! பெருமூச்சு விடுவதைத் தவிர வேறென்ன நான் செய்ய? இறைவன் தங்களுக்கு அருளாசி புரியட்டும்.

Russellawz
3rd May 2014, 08:03 AM
சின்னக் கண்ணனே! நான் தந்தையென நீயும் பிள்ளையென ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது ந.தியைப் பற்றிய தங்கள் கட்டுரைகளை அழகு தமிழில் சுவைத்துப் பார்த்து. (தங்கள் கட்டுரையின் இறுதி பகுதிகள் மட்டும் சற்று குழப்பமடைய வைத்தன)

chinnakkannan
3rd May 2014, 09:10 AM
முரளி சார், ராம்தாஸ் ஐயா நன்றி..

ராமதாஸ் ஐயா, தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.. எனக்குத் தமிழாசிரியர்கள் என்றால் கொஞ்சம் உதறல் தான்..எனக்குத்தெரிந்த தமிழ் வெகு சொற்பமே.. தாங்கள் தான் அவ்வப்போது வழிகாட்ட வேண்டும்..(இருந்தாலும் அம்பிகாபதியில் கடைசி ப் பாட்டைப் பற்றி நீங்கள் சொல்லாதது எனக்கு வருத்தம் தான்! :) )..

கடைசியில் - கொஞ்சம் சஸ்பென்ஸ் வைப்பதற்காக அப்படி எழுதியிருந்தேன்.. என்னுடைய ஃபேவரிட் ஹீரோயின் - தேவிகா என்று இவ்விழையில் அனைவரும் அறிவார்கள்..அவர் பாடிய ஒரு பாடலின் ஒரு வரியைச் சுருக்கி எழுதியிருந்தேன்..அதைச் சொன்னால் என்ன படம் எனத் தெரிந்து விடும்.ம்ம்..சரி..சொல்கிறேன்..எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யார் அறிவார்..அச்சோ..சொல்லிட்டேனே..எழுதிவிட்டு இடுகிறேன்:)

Russellawz
3rd May 2014, 09:40 AM
நடிகர் திலகம் என்று உச்சரிக்கும் போதே அறுசுவையும் நாவில் நர்த்தனமாடுகிறதே! எத்தனை எத்தனை வேடங்கள்! அதில் எத்தனை எத்தனை எத்தனை பாடங்கள்! முத்தமிழை கற்பித்த நடிப்பின் வித்தகருக்கு எப்படி புகழ்மாலை நான் சூட? அகர முதல எழுத்தை அறிய வைத்த தேவி, ஆதிபகவன் முதலென்று உணர வைத்த தேவி நடிப்பை இந்நாயகன் மூலம் இந்நானிலத்திற்கு உணர வைத்தாளே!

வேத நாயகர்களின் வேடங்கள் தரித்த

இந்த நடிப்புப் பாட நாயகனின்

பராக்கிரமங்களை எப்படிப் பாட!

பஞ்சையாய், பராரியாய், பணக்காரனாய், பாசமிகு கணவனாய், பொறுப்புள்ள தந்தையாய், மிடுக்கான கனவானாய், மில் தொழிலாளியாய், கைரிக்ஷா இழுத்தவனாய், சரித்திய புருஷர்களாய், வரலாற்று நாயகர்களாய், காவல் அதிகாரியாய், காட்டு வேட்டைக்காரனாய், படித்த அறிவாளியாய், படிக்காத மேதையாய், உளவுத்துறை நிபுணனாய், கட்டிளங் காளையாய், ராணுவ வீரனாய், நாடக நடிகனாய், சினிமா நடிகனாய், சாப்பாட்டு ராமனாய், நகைச்சுவை பாண்டியனாய், நவரச நாயகனாய், முரடன் முத்துவாய், கிறித்துவப் பாதிரியாய், எல்லோரும் கொண்டாடும் ரஹீம் பாயாய், பாரிஸ்டராய், வக்கீலாய், நீதிபதியாய், நிறை குடமாய், விமான ஓட்டியாய், கழைக் கூத்தாடியாய், நாதஸ்வரச் சக்கரவர்த்தியாய், பாப் இசைப் பாடகனாய், புத்தனாய், திருவிளையாடல் புரிந்த சிவனாய், திருமாலாய், முருகனாய், வீரபாகுவாய், காத்தவராயனாய், டார்ஜானாய், இசை மேதையாய், மிருதங்க சக்கரவர்த்தியாய், மிட்டா மிராசுவாய், தேவராய், தேவராட்டக் கலைஞராய், எழுத்தாளனாய், ஏகபோகச் சக்கரவர்த்தியாய், திருமங்கை மன்னனாய், கட்டபொம்மனாய், கப்பலோட்டிய தமிழனாய், நக்கீரனாய், நாரதரனாய், சுந்தரனாய், சுந்தர புருஷனாய், நகைச்சுவை இளவலாய், நாகரீக இளைஞனாய், பரதனாய், பரத நாட்டியக் கலைஞனாய், காஞ்சிப் பெரியவராய், கொடுங்கோல் மன்னனாய், கொடிய மிருகமாய், சிற்றின்பப் பிரியனாய், பேரின்ப ஊற்றாய், பாசமான அண்ணனாய், பாரதியாய், மலையாளியாய், திருடனாய், தீர்க்கதரிசியாய், ஞானியாய், தொண்டுக்கிழமாய், மராட்டிய சிங்கமாய், வில்லனாய், விஜயனாய், வீரனாய், கர்ணனாய், காமுகனாய், சண்டியாய், சன்மார்க்க நெறியனாய், ஹரிச்சந்திரனாய், பனை ஏறியாய், பகட்டாளனாய், மருத்துவனாய், மன்னனாய், வீரனாய், தீரனாய், சூரனாய், விவேகியாய், விவேகானந்தனாய், வேலவனாய், குருவாய், சிஷ்யனாய், தமிழ் ஆசானாய், ஆத்திரக்காரனாய், சிறுவனாய், சூதாடியாய், சூத்திரதாரியாய், பிரஸ்டீஜ் பத்மனாபனாய், பைத்தியக்காரனாய், பட்டாளத்தானாய், குடிகேடியாய், குறும்புக்காரனாய், மகனாய், பேரனாய், தாத்தாவாய், கிறுக்கு மன்னனாய், கிறுக்கு மருத்துவனாய், நங்கையாய், பெண்மணியாய், நூர்ஜஹானாய், சீதையாய், மச்சினனாய், மாமனாய், பரதேசியாய், மனோகரனாய், நண்பனாய், பகைவனாய், ஆவியாய், பெரியாராய், சாக்ரடீஸாய், சீசராய், சேரன் செங்குட்டவனாய், கழைக் கூத்தாடியாய், கள்வனாய், மேஸ்திராய், மேனாட்டுக் குடிமகனாய், தாழ்மை உணர்வு கொண்டவனாய், விறகு வெட்டியாய், விவசாயியாய், வியாபாரியாய், வணங்காமுடியாய், விஞ்ஞானியாய், அம்பிகாபதியாய், விளையாட்டுப் பிள்ளையாய், வெற்றி வீரனாய், கலெக்டராய், சாம்ராட்டாய், கல்லூரி மாணவனாய், கல்லூரி பேராசிரியராய், கட்டழகு மன்மதனாய், சர்க்கஸ்காரனாய், எங்க மாமாவாய், ஸ்டேஷன் மாஸ்டராய், அலுவலக பணியாளனாய், பியூனாய், அதிகாரியாய், உயர்ந்த மனிதனாய், பட்டதாரியாய், பட்டிக்காட்டானாய், பைரவனாய், குரூபியாய், குருடனாய், செவிடனாய், குரூரனாய், ஏழையாய், பிச்சைக்காரனாய், சிற்பியாய், சிவந்தமண் காத்த போராளியாய், மலை வீரனாய், மனநலம் பாதித்தவனாய், மல்யுத்தக் காரனாய், ஏட்டுவாய், கான்ஸ்டபிளாய், பைலட்டாய், ஜஸ்டிஸாய், தனவந்தனாய், தரித்திரனாய், எமனாய், எமனுக்கு எமனாய், சத்திய சுந்தரனாய், ஹிட்லராய், தாதாவாய், தாத்தாவாய், பிதாவாய், குருவாய், துப்புரவுத் தொழிலாளியாய், பண்ணையாராய், பஞ்சாயத்துத் தலைவனாய், ஆத்திகனாய், நாத்திகனாய், ஐயராய், ஐயங்காராய், அய்யனாய், மெய்யனாய், பொய்யனாய், (மூச்சு முட்டுகிறது)

எங்கள் மனதைப் பூப்பறிக்க வந்தவனாய்

இன்னும் இன்னும் ஏராளாமாய், தாராளமாய்,

வேடங்கள் புனைந்து

அவற்றுக்கு உயிர் தந்தவனே! உரமிட்டவனே!

நீ புனைந்த வேடங்களை அளவிட்டு விடத்தான் முடியுமா? அதற்கு பதில் விண்ணில் மின்னும் நட்சத்திரங்களை எண்ணி விடலாமே.

எழுதியது கையளவு
எழுதாதது கடலளவு

எழுதவும் முடியாது. இயலாது எவராலும். ஏனென்றால்

நீ ஆதிஅந்தம் இல்லாத அடிமுடி காண முடியாத பிரம்மாண்ட நடிப்புக் கடவுள் அல்லவா!

தவறு கண்டிருந்தால் பொறுத்தருள்வீர்.

ராமனுக்கு தாசன் என் பெயர் (பெற்றோர் இட்டது)
சிவாஜிக்கு தாசன் (அனைவரும் அழைப்பது)

chinnakkannan
3rd May 2014, 11:56 AM
சிரிப்பு பாதி அழுகை பாதி…

*

அத்தியாயம் மூன்று

*
..”இவர் நாவல் ஒண்ணைத் தான் ஏற்கெனவே பண்ணிட்டோமே..இதையும் பண்ணலாங்கிறீரா” கேட்டது ந.தி. கேட்கப்பட்டவர் ஏ.பி.என்..

*

“அண்ணா..இதைப் படிச்சுப்பாரும் நல்ல ரொமான்ஸ் ஸ்டோரி..சுருக்கம் கொடுத்தேனே..”

*
“படிச்சேன்.. நல்லாத் தான் இருக்கு..ஆனா அப்படியே தலைப்பை வச்சா.மக்கள் சோகம்னு ஒதுக்கிடுவாங்கய்யா.”

*

”இல்லை தலைப்பை மாத்திவேணும்னா விட்டுடலாம்…ஒரு காதலன் ஒரு காதலி.. எப்படி..”

*

“ஓய் இதெல்லாம் வரணும்னா இன்னும் பலவருஷம் போகணும்யா..நாம இருக்கறது அறுபதுகள்ள..குடும்பத்தோட தியேட்டருக்கு பசங்க பெண்ணைக் கூட்டி வரதுக்கு அப்பாம்மா பயப்படுவாங்க..”

*

.”இது ஓகேயா ராதா சந்திரன் அல்லது சந்திரன்ராதா – ஹீரோ ஹீரோயினோட பேர்..என்னங்கறீங்க..”

*

“எம்.ஆர்.ராதாமாதிரி இருக்குங்காணும்..” ந.தி சிரிக்க தயாரிப்பாளர் உட்பட மற்றவர்களும் சிரிக்க “சரி.. ஹீரோயின் பெயர் மட்டும் வெச்சுடலாம்..ராதை..ம்ம் ரெண்டெழுத்து.. முன்னால இப்படிச் சேர்த்துக்கலாம்..குலமகள் ராதை..சரியா இருக்கா..காதலனை நினைத்தே உருகுகின்ற பெண், காதலன் தன்னைத் தவறாக நினைத்துவிட்டானே என மருகுகின்ற பெண்..அவளைச் சுற்றி நடக்கும் கதை..” ஏ.பி.என் சொன்னார்..

*

“குட்..ராதை ஹீரோயின் பெயரா..அவ கோச்சுக்கறப்ப பாட்டுன்னு போட்டிருக்கீரே..என்ன பாட்டு..”

*

“பாட்டுல்லாம் நம்ம கவிஞர் தான்.. ஆனா இந்தப் பாட்டு சிந்தாமணில எம்.கேடி பாடினாரே அதை நம்ம டி.எம்.எஸ் பாடவெச்சு கொஞ்சூண்டு கவிஞரை மாற்றம் சொல்லச் செய்யலாம்னு நினைக்கேன்..”

*

“பேஷா செய்யுமேன்.. ம்ம் அந்தப் பாட்டு…ராதே உனக்குக் கோபம் ஆகாதடி..சரியா” என ந.தி பாட சுற்றிலும் உள்ளவர்கள் வியந்தார்கள்..

*

(மேற்கண்ட உரையாடல் என் கற்பனையூரில் நடந்தது..!)

*

வாழ்வு எங்கே என்ற அகிலனின் கதை குலமகள் ராதை என்ற அழகான படமாக மலர்ந்தது..

*

ஏற்ற ந் தந்தவள் நீயே – எனை
..இறக்கி விட்டதும் ஏனோ
தூற்ற ஊரெல்லாம் கூட்டி – எனைத்
..துயரிலே தள்ள லாமோ
காற்றில் அலையும் தாளாய் – நான்
கலங்கியே நிற்கி றேனே
சூறா வளியென வந்தாய் – இன்று
..துயின்றே இருப்பதும் ஏனோ


ம்ம் மேற்கண்ட வரிகள் காதலனுடையவை..ஆசையுடன் காதலியை அழைத்துச் சென்றுகடிமணம் புரியலாம் என நினைத்தால் அவளோ.. அசைவின்றி உறங்குகிறாள்.. படத்தில் அவன் பாடுகின்ற பாடல் ..உன்னைச் சொல்லிக் குற்றமில்ல.. ந.தியின் உணர்ச்சிமிகைப் பாடல்..வெகு அழகாக இருக்கும்..ஆனால் சொல்லவந்தது இதையல்ல..
*
அதில் இருந்த இன்னொரு பாட்டு ராதே உனக்குக் கோபம் ஆகாதடி.. காதலியின் ஊடலைக் கண்டு அவளைக் குளிர்விக்க க் காதலன் பாடுவது..இப்போது பார்த்தாலும் அந்த சிரிப்பு முகம் கடைசிவரை வைத்திருப்பார் சிவாஜி..கூடுதலாகக் கண்களும் சிரிக்கும்..
*
கன்னட தேசத்துப் பைங்கிளி என அழைக்கப் பட்ட அழகி சரோஜாதேவியும் பொங்குகின்ற இளமையில் மெல்லிய சீலையில் கொஞ்சமான மேக்கப்பில் வெகு அழகாக இருப்பார்..அனாவசியமாகவெல்லாம் பக் பக் என்றுசிரிக்காமல் அடக்கி நடித்திருப்பார்..
*
கதையோட்டத்தில் சரோஜாதேவியைச் சந்தேகித்து சென்னை பயணிக்கும் ந.தி காரில் தேவிகாவிடம் பேசிக்கொள்ளும் காட்சிகள் வெகு அழகு..
*
கொழுக் மொழுக்கென்ற உடலில் உடை மாற்றும் போது தேவிகா வந்து விட கொஞ்சம் சட்டை போட்டப்டியோ என்னவோ..குறும்பாய் அவரிடம் பேசும்போது உடல் மொழி மிகப் பிரமாதமாக இருக்கும்..
*
மெல்ல மெல்ல அவர் தன்னைக் காதலிப்பதை உணர்ந்தாலும் சர்ரோவின் மேல் கொண்ட காதலால் கொஞ்சமாய் விலகி நடித்திருப்பது நன்றாக இருக்கும்..
*
தே…வி…கா..ம்ம்
*
அங்கும் இங்கும் அலை போலே நடமாடிடும் மானிடர் வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்..”
*
எனக்கு உயிரான வரிகள் இவை..இதை பேஸ்பண்ணி ஒரு ரொமாண்டிக் பேய்(?) க் கதை முன்பு எழுதியிருக்கிறேன்

*

இரவுக்கு ஆயிரம் கண்கள் பாட்டில் வலையில் தேவிகாவும் ஏறிக் குதிக்க பார்ப்பவர்/பார்த்தவர் மனமும்குதித்திருக்கும்..

*

படம் முழுக்க முழுக்க – சீரியஸ்கட்டங்களை விட்டு- குறும்புக் காரனாக இளமை கொப்பளிக்க சிவாஜி நடித்திருப்பார்..என்னைக் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று..

*

சரி..அடுத்த அத்தியாய அழுகைக்கு.. என்ன படமாம்..

*
இந்தப் படத்தில் அழுகை இருக்கவும் இருக்கிறது இல்லையென்றும் சொல்லலாம்.. ந.திக்கு ஜோடியில்லை.வயதான ரோல்.. ஹீரோயின் என்றுபார்த்தால் எவருமே இல்லை..இருந்தாலும் ஒரு நடிகை போட்டி போட்டு நடித்திருப்பார்.. படத்தில் இளமைப் பஞ்சம் என்றும் சொல்லலாம்…சில காட்சிகளே வரும் ஒரு இளமை நடிகை ரொம்ப ஷார்ட்..அவரைப் பார்க்க வேண்டுமென்றால் தரையைப் பார்க்க வேண்டும்!
*

அந்தப் படம் என்னவென்றால்….

அடுத்த போஸ்டில் சொல்கிறேனே :)

(தொடரும்)

uvausan
3rd May 2014, 02:04 PM
Ck - அற்புதம் - கற்பனை வளமும் , செந்தமிழ் நடையும் உங்களிடம் விளையாடுகின்றன - ஒரு பக்கம் கோபால் , முரளி , ராகுல் தில்லானா வாசிக்க நீங்களும் , திரு ராமதாஸ் அவர்களும் மோகனாம்பாளாகி இந்த திரியில் நாதத்தையும் , பரதத்தையும் ( தமிழ் உங்கள் பதிவில் நடனமாடுவதைத்தான் பரதம் என்று சொன்னேன் -இது உங்களை "பே " என்று முழிக்காமல் இருக்க உதவி செய்யும் ) சேர்ந்து எங்களுக்கு அளிப்பது மிகவும் பெருமை பட வேண்டிய விஷயம் - தொடருங்கள்

uvausan
3rd May 2014, 02:11 PM
நடிகர் திலகம் என்று உச்சரிக்கும் போதே அறுசுவையும் நாவில் நர்த்தனமாடுகிறதே! எத்தனை எத்தனை வேடங்கள்! அதில் எத்தனை எத்தனை எத்தனை பாடங்கள்! முத்தமிழை கற்பித்த நடிப்பின் வித்தகருக்கு எப்படி புகழ்மாலை நான் சூட? அகர முதல எழுத்தை அறிய வைத்த தேவி, ஆதிபகவன் முதலென்று உணர வைத்த தேவி நடிப்பை இந்நாயகன் மூலம் இந்நானிலத்திற்கு உணர வைத்தாளே!



திரு ராமதாஸ் - அற்புதமான பதிவு உங்களுடையது - சுத்தமான அக்மார் நெயில் பண்ணிய தின்பண்டங்கள் போல ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கின்றன - இந்த திரி இப்பொழுது தான் "designed speed "இல் செல்ல ஆரம்பித்துள்ளது - உங்கள் பதிவுகளின் வீச்சை பார்த்தால் விரைவில் நாங்கள் எல்லோரும் உங்களுக்கு தாசனாகி விடுவோம் - அந்த நாளும் வெகு தூரத்தில் இல்லை என்று தெரிகின்றது

அன்புடன்
ரவி

ScottAlise
3rd May 2014, 04:20 PM
சின்ன கண்ணன் சார்

சிரிப்பு பாதி அழுகை பாதி… திரு கோபுவின் வார்த்தைகளில் நான் மிகவும் ரசித்த பதிவு

நீங்கள் சொன்ன மாதிரி பே என முழித்தேன்

ScottAlise
3rd May 2014, 04:22 PM
திரு ராமதாஸ் சார்

உங்கள் அம்பிகாபதி பதிவை ரசித்தேன் தொடரட்டும் தமிழ் மழை

kalnayak
3rd May 2014, 08:41 PM
சின்னக்கண்ணன், அபாரம். இதை. இதைத்தான் எதிர்பார்க்கிறேன் - நான் எதிர்பாராததை. கலாட்டா கல்யாணம் கதை உருவான உரையாடல் அற்புதமென்றால், உங்கள் கற்பனையூரில் நடந்த குலமகள் ராதை உரையாடல் அற்புதத்திலும் அற்புதம். சத்திய சுந்தரம் இன்னும் பார்க்கவில்லை. நீங்கள் சொன்ன கதையை படித்ததும் யாரோ இந்த படத்தின் கதையை எனக்கு சொன்னதாக ஞாபகம் வருகிறது. மற்றபடி ஒரு படத்தினை அலசிவிட்டு அடுத்த படத்தை புதிராக்குவது நன்றாக உள்ளது. தொடருங்கள். வாழ்த்துகள்

JamesFague
3rd May 2014, 09:26 PM
Nice article Mr Ramadoss sir.

Mr Ravi, No words to explain your review of Bandha Pasam.

Mr CK, with your usual stuff you are rocking.

Regards

Harrietlgy
3rd May 2014, 10:50 PM
Chinnakannan Adhu Bandam?

kalnayak
4th May 2014, 10:31 AM
இராமதாஸ் சார், நடிகர்திலகத்தின் வேடங்களை ஒரே மூச்சில் சொல்ல வந்தது நல்ல முயற்சி. நீங்கள் சொன்னது போல், அதுபல வேடங்களை விட்டுத்தான் இருக்கும். இருப்பினும் நீங்கள் பெரும்புகழ் வேடங்கள் யாவும் குறிப்பிட்டீர் வித்தியாசமாக நல்ல தமிழ் கொண்டு.

chinnakkannan
4th May 2014, 10:46 AM
ரவி, ராகுல், கல் நாயக் சார், எஸ்.வாசுதேவன்சார் நன்றி..

பரணி - அது பந்தம் இல்லை :)

ScottAlise
4th May 2014, 01:34 PM
பார்த்ததில் பிடித்தது -30

பொதுவாக நடிகர் திலகத்தின் அபிமானிகள் பல பேர் mid 80's க்கு பிறகு நடிகர் திலகத்தின் படங்களை பற்றி எழுதும் பொது அவர்கள் தவறாமல் குறிப்பிடும் படங்கள் , முதல் மரியாதை , தேவர் மகன் , இன்னும் கொஞ்சம் பேர் படிக்காதவன் , படையப்பா என்று சொல்லுவார்கள்

ஆனால் தேவர் மகன் படம் வந்த அதே 1992 வருடம் வந்த முழு நீள குடும்ப சித்திரத்தை பற்றி தான் இந்த பதிவு .

1992 வருடம் வந்த சின்ன மருமகள் என்ற படம் தான் இந்த பதிவில் நான் அலசி உள்ள படம்

நடிகர்கள் :

நடிகர் திலகம் சிவாஜி , வடிவுக்கரசி , ரேணுகா (சீரியல் நடிகை ), மோகினி , சிவா , குமரேசன் , தியாகு மற்றும் பலர்

கதை :பத்மாலயா கதை இலக்கா , தெலுகு நடிகர் கிருஷ்ணாவின் நிறுவனம் , நடிகர் திலகத்தை வைத்து விஸ்வரூபம் என்று படத்தை எடுத்தவர் .
திரைகதை , வசனம் - பிரசன்னா குமார் , நடிகர் விவேக் நடித்த பல படங்களுக்கு காமெடி track எழுதியவர் ,
இயக்கம் ;பிரசாந்த் குமார்
தயாரிப்பு - கேயார் , ஈராமான ரோஜாவே , வனஜா கிரிஜா , மாயாபஜார் 1995 , எனக்கொரு மகன் பிறப்பான் என்று பல படங்களை இயக்கியவர் .

ScottAlise
4th May 2014, 01:35 PM
கதை :

சிவாஜி சார் ஒரு பெரிய குடும்பத்தின் தலைவர் தன் மனைவி இறந்த உடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளுகிறார் , வந்த மகராசியின் பெயர் ராஜேஸ்வரி (வடிவுக்கரசி ), சிவாஜி மற்றும் அவர் மூத்த மகன் சேகர் இருவரையும் மட்டம் தட்டுகிறார் . வருடங்கள் உருண்டு ஒடிகிறது - ராஜேஸ்வரிக்கு இப்போ இரண்டு மகன்கள் , ஒரு மகள் ,

சேகரின் மனைவி சாந்தி (ரேணுகா ) ஒரு சின்ன பையன் என்று அளவான குடும்பம் , வருமானம் சொற்பம் , அதனால் எப்போதும் ராஜேஸ்வரி அவர்களை திட்டுகிறார் , சாந்தியை வேலைகாரி மாதிரி நடத்துகிறார் . சிவாஜி சார் இப்போ பென்ஷன் வாங்கும் 60 வயது முதியவர் . . பாவம் பார்வை இல்லாதவர் . இளைய மகன் வசந்த் நன்றாக சம்பாதிக்கிறார் , அதனால் அவர் மனைவிக்கு அதிக மரியாதை காட்டுகிறார் ராஜேஸ்வரி , வசந்த் மற்றும் அவர் மனைவி இருவரும் சாந்தி , அவர் கணவர் சேகர் இருவரிடமும் மரியாதை இல்லாமல் பேசி மனதை புண் படுத்துகிறார்கள் , ராஜேஸ்வரியின் மகள் தன் மாமியாரை கொடுமை படுத்துகிறார் , இதை சகித்து கொண்டு வாழுகிறார் குமரேசன். தன் அம்மா வீட்டுக்கு வரும் பொது சாந்தி மீது தன் அதிகாரத்தை காட்டுகிறார் , இப்படி எல்லா திசையிலும் சாந்தி வதைக்க படுகிறார் . மாமனார் சிவாஜி மட்டும் அவர் மேல் பிரியமாக இருக்கிறார் . அவருக்கு எல்லாம் தெரியும் , ஆனால் எதுவும் செய்ய முடியமால் இருக்கிறார்
சேகர் , சாந்தி இருவரும் ராஜேஸ்வரி மீது உண்மையான அன்பு , மரியாதை வைத்து இருக்கிறார்கள் , ஆனால் மற்றவர்கள் ராஜேஸ்வரி மீது வைத்து இருப்பது போலி அன்பு , மரியாதை

ScottAlise
4th May 2014, 01:35 PM
காலேஜ் படிக்கும் சிவா தன் கூட படிக்கும் கீதாவை (மோகினி ) வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ளுகிறார் , தன் தாய் தந்தை இருவருக்கும் அதை தெரிய படுத்துகிறார் , சிவாஜி அதை பெருசாக எடுத்து கொள்ளாமல் ஆசிர்வதிக்கிறார் , ராஜேஸ்வரி , கீதா ஆனதை என்றும் , பணம் இல்லாத ஏழை என்றும் ஏசுகிறார் . தன் மனைவியை விட்டு வெளி ஊருக்கு வேலை தேடி செல்லுகிறார் சிவா , வேலையும் கிடைத்து விடுகிறது .

கீதா இங்கே தன் மாமியாருடன் தினமும் சண்டை போடுகிறார் , பாதி நேரம் சாந்திக்காக , ராஜேஸ்வரி போடும் அணைத்து திட்டமும் கீதா முறியடிக்கிறார் . தன் மாமனாரின் பரி பூரண ஆசிர்வாதம் கிடைகிறது .

இந்த நேரத்தில் ராஜேஸ்வரிக்கு வாதம் வர , சில நாட்களில் அறுவை சிகிச்சை செய்ய வில்லை என்றால் கால்களை எடுக்க வேண்டிய நிலைமையில் இளைய மகன் வசந்த் வீட்டை விட்டு போகிறார் , மாப்பிளை குமரேசன் பணத்தை தர அவர் மனைவி அதை தடுக்கிறார் , (ஒரு நாள் தன் மாமியாரை அடிக்க , குமரேசன் கோபம் வந்து அவரை கொளுத்த போக அவர் அம்மா அவரை தடுக்க , தன் மாமியாரின் அருமையை தெரிந்து கொள்ளுகிறார் ராஜேஸ்வரியின் மகள் )
சேகர் தன் வேலையை விட்டு pf பணத்தை கொண்டு அறுவை சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்கிறார் . தன் சின்ன மருமகள் வந்த காரணத்தால் தான் தனக்கு உடம்பு சரி இல்லாமல் போனது என்று கூறி அவரை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல , தன் நகைகளை கொடுத்து தான் கீதா அந்த அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுத்தார் என்றும் , சேகர் வெளியை விடவேண்டாம் என்று கீதா செய்த தியாகம் என்று சிவாஜி சொல்ல , இரண்டாவது மகன் வசந்த் மனிப்பு கேட்க , மகளும் மனிப்பு கேட்க குடும்பம் ஒன்று சேருகிறது

ScottAlise
4th May 2014, 01:36 PM
படத்தை பற்றி :

படத்தின் மிக பெரிய பலம் - பக்கத்து வீட்டில் நடக்கும் விஷியங்கள் போன்ற கதை அம்சம் .

CASTING - சரியான நடிகர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருந்தால் அதிலே பாதி வெற்றி உறுதி செய்ய படுகிறது என்பதே thumb rule . இதில் ரேணுகா , மோகினி , வடிவுக்கரசி , மற்றும் சிவாஜி சார் அனைவரின் பாத்திர படைப்பும் அருமை .

பெரிய deviations இல்லாத திரைகதை


கதை ஒரு வீட்டை சுற்றியே நகர்கிறது. வெளிப்புற காட்சிகள் என்றால் காலேஜ் காட்சிகள் மட்டுமே . வடிவுகரசிக்கு நோய் வந்த உடன் சேகர் , கீதா ,சாந்தி மட்டுமே பார்த்து கொள்வதும் வடிவுகரசியின் மகள் கூட கார் வாங்க பணத்தை செலவழிப்பதும் பயங்கர சினிமாத்தனம் . படத்தின் close to reality feel பறிபோகிறது , காமெடி என்ற பெயரில் தியாகு பேசும் வசனம் , குமரேசன் செய்யும் மிமிக்க்ரி , காலேஜ் காட்சிகள் சொதபல்

ScottAlise
4th May 2014, 01:36 PM
நடிகர்களை பற்றி :

நடிகர் திலகம் :

உகார்ந்த இடத்தில ஜெயிக்க முடியுமா
எங்கள் நடிகர் திலகத்துக்கு அது முடியும்

நடிக்க தெரியாத நபர்கள் நடிப்பை பற்றி பேசுவதும் , நடிகர் திலகத்தின் நடிப்பை சத்தம் போட்டு நடிப்பவர் என்றும் , கத்தி பேசி நடிப்பவர் என்றும் , over action என்று சொல்லும் நபர்களும் , இந்த படத்தை பார்க்கலாம் , பார்த்து விட்டு அதை மாற்றி கொளுவார்கள் , இல்லை என்றால் அதை prove பண்ண வேண்டிய அவசியம் இல்லை

இந்த படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு எதார்த்தத்தின் உச்சம் . திரு கோபால் சாரின் எழுத்தில் சொல்ல வேண்டும் என்றால் Stanislavsky Method Acting . இதை பார்த்திங்களா என்று அவர் மனைவி கேட்க , எனக்கு கண் தெரியாது என்று self depreciate பண்ணி கொல்வது ஆகட்டும் , தான் கதை சொல்லும் பொது தன் மகள் அதை உதாசீன படுத்தி விட்டு போவது தெரியாமல் மருமகள் வந்து கேட்கும் பொது , இவள் கல்யானதுக்குகாக என் அறுவை சிகிச்சையை தள்ளி வைத்தேன் , அதனால் கண் பார்வை போய் விட்டது , அதை கூட நான் நினைக்க வில்லை , ஒரு கண் பார்வை தெரியாத நபரை ஏமாத்தி விட்டு , ஒரு உறுத்தல் இல்லாமல் போகிறாளே என்று வெம்பும் காட்சி ஆகட்டும்

ScottAlise
4th May 2014, 01:37 PM
தன் இரு மருமகள் சாந்தி , கீதா இருவருக்கும் , அவர்கள் பசியை தீர்க்க , அவர்களை bless பண்ண தன் biscuit டின் யை திறந்து பிஸ்கட் தருவது ஆகட்டும் , தன் பேரன் பிறந்தநாள் வருவதனால் புது துணி கேட்கும் பொது அவரால் அதை afford செய்ய முடியாமல் தவிக்கும் காட்சி ஆகட்டும் . தன் மருமகள் கீதா தன் மாமியாரின் வாயை மூட 800 ருபாய் சம்பாதிக்கும் நபரின் மனைவி இப்படி தான் சாப்பிட வேண்டும் என்றால் 300 ருபாய் பென்ஷன் வாங்கும் நபரின் மனைவி சாப்பிடவே கூடாது என்று தன் பொருளாதார நிலைமையை தன் மருமகள் குத்தி காடும் பொது அதை புன்முறுவல் உடன் RIGHT SPIRIT ல் எடுத்து கொண்டு , அவள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்பதை தன் முகத்தில் பிரதிபலிக்கிறார் நம்மவர்.

தன் இளைய மகன் இகட்டான சூழ்நிலையில் தன்னை விட்டு போகும் பொது அதை handle செய்யும் விதம் எதார்த்தம் - NO MELODRAMA . தன் மனைவி கடைசியில் தன் சின்ன மருமகளால் தான் இதனையும் என்று சொன்ன உடன் உண்மையை சொல்லி நீ இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை , வேறு வீட்டுக்கு போகும் அவர்களை வாழ்த்தி அனுப்ப வேண்டும் என்று தான் சொன்னேன் என்றும் , தன் மனைவி தன் இளைய மகனை பார்த்து கடைசியில் திட்டும் பொது மீண்டும் ஒரு மருமகளை திட்டாதே என்று அறிவுரை குறும் இடம் நன்று. தனக்கு 60 வது திருமணம் செய்ய நினைக்கும் பொது தன் மகன்கள் தங்கள் ரூம்களில் அடைந்து இருக்கும் பொது , அப்பா எங்கே பணம் கேட்டு விடுவாரோ என்று நினைக்காதிங்க என்று பொதுவாக வெளியே வந்து உரக்க சொல்லும் இடம் PRESTIGE பத்மநாதன் தான் நினைவுக்கு வருகிறார் .

ScottAlise
4th May 2014, 01:37 PM
தியாகு வசனம் பேசும் பொது தமிழை கொலை செய்வதும் அதற்கு நடிகர் திலகம் தமிழ் பேச தெரியாமல் முடியை வளர்த்து இங்கே வரீங்க என்று சொல்லும் இடம் - (யாரை சொல்லுகிறாரோ )
நாடகத்தை பற்றி பேச்சு வரும் பொது , நான் அந்த கலைக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று சொல்லும் இடமும் , சிவாஜி நாடகத்தை மீண்டும் வசனம் பேசுவதும் - சிவாஜி இப்படியா பேசி இருப்பார் என்று கேட்டு விட்டு பேசுவது , இப்படி தான் கற்பனை செய்து நடித்து இருப்பாரோ இந்த பிறவி கலைஞன் என்று நினைக்க தோன்றுகிறது

ScottAlise
4th May 2014, 01:38 PM
வடிவுக்கரசி :

ஒரே வார்த்தை VETERAN performer . கொடுமைக்கார பாட்டியாக அருணாசலத்தில் , கொடுமைக்கார மாமியார பிறந்த வீடா ,புகந்த வீடா என்று பல படங்களில் இதே மாதிரி பாத்திரங்களில் பார்த்தது - ரேணுகாவை அவர் கொடுமை படுத்துவது எட்டி உதைப்பது, கரிச்சு கொட்டுவது , தன் கணவரை மதிக்காமல் பேசுவது என்று தன் கதாபாத்திரத்தை கட்சிதமாக செய்து இருக்கிறார் .

கடைசியில் தான் கொடுமை படுத்திய மருமகள்கள் இருவரும் தன்னை கவனித்து கொள்ளுவதை அறிந்து தவிக்கும் இடம் அவர் காட்டும் reactions அவர் ஒரு veteran என்பதை காட்டுகிறது

மோகினி :
அறிமுகம் ஆகி சில வருடங்களில் சிவாஜி ,வடிவுக்கரசி என்று பெரிய நடிகர்களுடன் screen space ஷேர் செய்து கொண்டு நன்றாக நடித்து இருக்கிறார் , தன் மாமியார் போடும் சத்தத்தை tackle செய்யும் விதமும் , தன் மாமியார் தன் மாமா கொண்டு வரும் மோதிரத்தை எறிந்த உடன் அவரிடம் கண்ணீர் உடன் கெஞ்சும் இடம் நடிப்பு பிரமாதம்

ரேணுகா :
dark horse performer 1992 வருடம் தேவர் மகன் படத்திலும் நடிகர் திலகத்தின் மூத்த மருமகள் . இந்த பத்தியும் அதே பாத்திரம் , தியாகத்தின் உருவம் , தன் தம்பி வந்த உடன் ரேணுகாவின் சாப்பாட்டை வடிவுக்கரசி பறித்து தன் தம்பிக்கு கொடுக்கும் இஅடதில் நிஜமாகவே ரேணுகா மீது பரிவும் , வடிவுக்கரசி மீது வெறுப்பும் வருகிறது . சாப்பாடு போடும் பொது , வடிவுக்கரசி தள்ளி விட , சாம்பார் கொட்டி விட , வடிவுக்கரசி திட்டும் இடமும் ரேணுகா மீது வருகிறது ,

தன் அறையை மோகினிக்கு கொடுத்து விட்டு வெளியில் படுத்து கொல்வது , 60 வது கல்யாணத்துக்கு தன் வளையல்களை கொடுப்பது என்று படம் முழுவதும் இவர் நடிப்பின் முத்திரை ஏராளம்

ScottAlise
4th May 2014, 01:39 PM
என் பார்வை :
இந்த படம் நான் முதலில் பார்த்த சிவாஜி படங்களில் ஒன்று -6 வயதில் பார்த்த நினைவு . இந்த படத்தில் சிவாஜி சார் கையில் இருக்கும் பிஸ்கட் டின் வேண்டும் என்று கேட்டு அதை வாங்கி சாபிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது
சிறு சிறு குறைகள் இருந்தாலும் இந்த படம் தரம் மிகவும் அதிகம்

Russellmai
4th May 2014, 02:55 PM
நெல்லை சென்டிரல் திரையரங்கில் 2-5-2014 வெள்ளிக்கிழமை
முதல் பராசக்தி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது

chinnakkannan
4th May 2014, 05:22 PM
சிரிப்பு பாதி..அழுகை பாதி

*

அத்தியாயம் நான்கு

*

என் இனிய ந.தி ரசிகர்களே..!

*

இதுவரை நேரடியாக உங்களைப் போரடித்த சி.க இப்பொழுது காலயந்திரத்தில் ஏற்றி பலவருடங்கள் முன்னால் கொண்டு செல்லப் போகிறான்..ஆம் ஏறிவிட்டீர்களா..

*

சரி.இறங்கிக் கொள்ளுங்கள்..நாம் செல்ல வேண்டிய இடம் வந்து விட்ட்து..(ம்ம்.. பளாஷ் பேக் சொல்றதுக்கு என்னல்லாம் பண்ண வேண்டியிருக்கு!)

*

இது இது..மதுரைதான்..

*

மதுரை தல்லாகுளத்தில் இருக்கும் லஷ்மி சுந்தரம் ஹால்..

*

வழக்கம் போல தலை கீழ் ப மீசை, காதுகளில் கொஞ்சம் பெரிய சைட் பர்ன் அதாவது கிருதா -மீசை மேல் கோவித்துக் கொண்டு சற்றே தள்ளியிருக்க,அழகாய்ப் பேண்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு இருந்த அந்த இளைஞனின் கண்களில் காந்தம் இருந்தது

*

(போதும்டாப்பா ஒன்னை நீயே வர்ணிச்சுக்கறது..

ஷ்ஷ் மனசாட்சி இங்க எதுக்கு வந்த?!)

*

அங்கு சென்றது நாடக்ம் பார்க்கத்தான்..பிற்காலத்தில் பெருமை பெற்ற டைரக்டர் அந்த நாடகத்தை இயக்கியிருக்க – அவர் நடிக்காமல் அவரது அண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்..

*

சுவாரஸ்யமாய்த் தான் இருந்த்து நாடகம்..அதில் வரும் குருட்டுக் கதாபாத்திரம் பேசிய வசனம் கொஞ்சம் சப்பக் என்று ஸ்டாம்ப் ஒட்டினாற்போல் பதிந்திருக்கிறது இன்னும்..

*

“வழக்கமா நான் வெளியில் இருந்து வர்ற்ச்சே என் தங்கை தரையில் படுத்துத் தூங்கிட்டிருப்பா.. அவள் கால் மேல என் கால் லேசா படும்..ஒடனே பதறி எழுந்துடுவா.. அன்னிக்கும் வழக்கம் போல வீட்டுக்குள்ள திறந்து போனேன்..அப்ப அவ கால் என் தல மேல பட்டுது!”

*

புரிகின்ற வசனம் தான்..இருந்தாலும் தெளிவாக்க வேண்டி “ யெஸ்..என் தங்கை விக் விக் அவ தூக்குல தொங்கிட்டிருந்தா” என்று பேச வைத்திருப்பார்கள்..

*

நல்ல நாடக்ம் தான். வெளியில் வந்து லூனாவை உதைத்துக் கிளம்பி மேல் பாலத்தில் வண்டி ஏறும்போதெல்லாம் ஒரே சிந்தனை.. ந.தி இதில் நடித்தால் நல்லா இருக்குமே..அதுவும் மெயின் டாக்டர் கதாபாத்திரம்..அப்புறம் அந்த போட்டி போடும் பெண்பாத்திரத்திற்கு..ம்ம் யாராவது புதுமுகத்தைப் போட்டுக்கலாமே..

*

வீட்டிற்கு வந்து உறங்கி, பின் வந்த சில நாட்களில் தினமணியில் பார்த்தால் ஒரு சர்ப்ரைஸ்.. அந்த ரோலில் ந.தி நடிப்பதாக.. ப்ளஸ் மருமகள் ரோலில் சரிதா.. யெஸ்..படம் கீழ் வானம் சிவக்கும்..

*

விசுவின் அண்ணன் எம் ஆர் ராஜாமணி தான் டாக்டர்..பட்த்தில் ஒரு சிறுவேஷம் ஏற்றிருந்தார்.. அவரிடம் ந.தி சில காட்சிகளின் போது நடித்து விட்டு “சரியா இருக்கிறதா” எனக் கேட்டாராம்..என்னிடம் எதற்குக் கேட்கிறீர்கள் என்றதற்கு “சரியா ப் போச்சே.. நாடகத்தில நீங்க நடிச்ச ரோல் தானே..சரியா இருக்கா..இன்னும் டெவலப் பண்ணனுமா” என்றாராம் ந.தி.. அவருடைய பெருந்தன்மை எம்.ஆர்.ஆர் கண்ணில் நீரை வரவழைத்து விட்ட்தாக அவரே ஒரு பேட்டியில் எழுதியிருந்தார்..

*

மதுரையில் ரிலீஸ் ஆன தியேட்டர் நியூ சினிமா –என நினைவு.

*

பிரபல ஆஃப்தால்மாலஜிஸ்ட் டாக்டர் துவாரகா நாத் ஆக நடிகர் திலகம்..சரி சரி..பிரபல கண் மருத்துவராக ந.தி. மகனாக சரத்பாபு மருமகள் ஆக சரிதா..சரத்பாபு துரோகமிழைக்கும் பெண்ணாக மேனகா..

*

வித்யாசமான நோய் கொண்டு சீக்கிரமே இறக்கப் போகிற மருமகள், ஒரு பெண்ணுக்குத் துரோகமிழைத்த தனது மகன், அவனைக் கொலைசெய்வேன் என்று அலைபாய்ந்திடும் ஒரு குருடன்(அவனதுமூன்றாவது கையாய் ஒரு அரிவாள் –பட்த்தில் இந்த ரோல் ஜெய்சங்கர்)- அவனுக்கு ஆப்ப்ரேஷன்செய்து கண்ணொளி கொடுக்கவேண்டிய கட்டாயம்

– அதே சமயம் ஒழுங்காய் ஆபரேஷன் செய்ய மாட்டார் என மருமகள் சந்தேகித்துப் புரியும் செயல்கள் அதை சமாளிக்கும் விதம்- மருமகளுக்கு அந்த குருடனின் தங்கையைக் கைவிட்டவன் தன் மகன் தான் எனத் தெரியாமல் வைக்க அவர் தவிக்கும் தவிப்பு என வெகு அழகாக நடித்திருப்பார் ந.தி.

*

ஒரு கட்ட்த்தில் – இறுதிக் கட்ட்த்தில் – மருமகள் கைக்கு தனது மெடிக்கல் ஃபைல் சென்றுவிடுவதை அறிந்த்தும் தவிக்கும் தவிப்பு..அவளை நேரில் சென்று பார்க்கும் போது அந்த தவிப்பில், துடிப்பில், அழுகையில் உறைந்து நிற்கின்ற விழிகள் என அசத்தியிருப்பார்..

*

மருமகள் சரிதாவும் முகத்தில் எல்லாமும் நடிக்க கண்களில் ஒரு பாலாறையே அணைகட்டி நிறுத்தி பின் பொத்தென ந.தியிடம் விழுந்து நமஸ்கரிப்பார்..அத்துடன் காட்சி முடியும்..

*

இன்னும் இன்னும் இன்னும் நன்றாக எடுத்திருக்கப்பட்டிருக்க வேண்டிய படம் இது..என்ன அவசரமோ.. ந.தி.யின் விக், பட்டைக் கண்ணாடி நன்றாகத்தான் இருந்தாலும் இன்னும் நல்ல கெட்டப் கொடுத்திருக்கலாம்..

*

பொன்னிறமாக வறுக்கையில் சற்றே கை அசர லேசாகக் கறுக்கி எடுத்து ஜீராவில் ஊறிய கொழுக் மொழுக் குலோப்ஜாமூனைப் போல சரிதா – மாமனாரைப் புரிந்த, வெகு மரியாதை வைத்திருக்கும் மருமகள், பின் சந்தேகப்பட்டு மாமனாரை வார்த்தைகளால் வறுப்பதிலும் சரி, புரிந்த பிறகு அழுகையுடன் ஆசீர் வாதம் கேட்பதிலும் சரி நன்கு நடித்திருப்பார்..அவரது குரல் ஒரு வரப்பிரசாதம்..அந்த ஜீராவைப்போலவே இனிமை..

*

சரத்பாபுவின் அல்பாயுசுக் காதலியாக மேனகா..வெரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்!

*

குமுதமோ விகடனோ ஏதோ ஒரு விமர்சனத்தில் முக்கியமான பாத்திரங்களுக்கு சிவாஜி சரிதா போட்டாச்சு..அப்புறம் டைரக்டர் ஈஸி சேரில் தூங்கி விட்டார் என்று எழுதியிருந்தார்கள்

*

நல்ல படம் தான்..என்னைக் கவர்ந்த்து தான்..ஆனால் ஓரிரு முறைதான்பார்த்திருக்கிறேன்..

*

அடுத்து சிரிப்பிற்காக வரப் போகும் பட்த்தில்..பெயரிலேயே ஒரு ஆணின் அல்லது பெண்ணின் பெயர் பகுதியாக இருக்கும் என்றால் சுலபமாகத் தான் இருக்கும்..ஆனா..சாய்ஸ் இருக்கே..:)

*

(தொடரும்)

KCSHEKAR
4th May 2014, 09:21 PM
சிரிப்பு பாதி..அழுகை பாதி
டியர் சின்னக்கண்ணன் சார்,

தங்களின் சிரிப்பு பாதி ..அழுகை பாதி - ஒவ்வொரு அத்தியாயமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. பாராட்டுக்கள்...... தொடருங்கள்..........

KCSHEKAR
4th May 2014, 09:25 PM
டியர் முரளி சார்,

முன் திரிகளில் இடம் பெற்ற நடிகர் திலகம் படத்தின் விமர்சனங்கள், கட்டுரைகளின் url இணைப்புகளை அளித்தமைக்கு நன்றி. ஒவ்வொரு பாகம் முடிந்தபின்னும் இதுமாதிரி இணைப்புகளை அளித்தால், recap செய்வதற்கு எளிதாக இருக்கும்.

chinnakkannan
4th May 2014, 09:47 PM
அன்பின் சந்திர சேகர் சார் மிக்க நன்றி..

sivaa
5th May 2014, 07:10 AM
சாதனை! சாதனை!! சாதனை!!! இதுதான் சாதனை

பைலட் பிரேம்நாத்...........யாழ்நகர்.............வின்சர். .......222...நாட்கள் வசூல்

8 70 164.20


எட்டு லட்சத்து எழுபதாயிரத்து நூற்று அறுபத்து நாலு ருபா இருபது சதம்

இதன் வசூலை வேறு எந்த நடிகரின் படங்களும் எட்டிப்பாhக்கக்கூட முடியவில்லை

கட்டவுட் காட்டலாம் படம் காட்டலாம்
ஆனால் மக்கள் வரவேண்டும் வகூல் ஆகவேண்டும்

அது இயற்கையான நடிப்பு சக்கரவர்த்தி
குணத்தில் குன்று
கொடையில் வள்ளல்
அகில உலக வசூல் சக்கரவர்த்தி
நடிப்பலக மாமேதை நடிகர்திலகத்தின்
படங்களால் மட்டுமே இயலும்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image_zps5f8cbe42.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image_zps5f8cbe42.jpg.html)

sivaa
5th May 2014, 07:11 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image38_zps0728dbca.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image38_zps0728dbca.jpg.html)

sivaa
5th May 2014, 07:11 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image40_zps0ab2ed2e.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image40_zps0ab2ed2e.jpg.html)

uvausan
5th May 2014, 08:04 AM
அற்புதம் சிவா சார் - nt தான் வசூலில் ஒரு கலக்கு கலக்கினார் என்றால் - நீங்கள் அவரையும் மீறி இந்த திரியில் அவருடைய சாதனை பட்டியல்களை போட்டு கலக்கிண்டீர்கள் . இந்தியாவிற்கு ஒரு ரவிகிரண் - ஸ்ரீலங்காவிற்கு ஒரு சிவா (ஜி) - தொடருங்கள்

Subramaniam Ramajayam
5th May 2014, 09:20 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image38_zps0728dbca.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image38_zps0728dbca.jpg.html)

Thank you siva sir for the proof of the GREAT RECORD OF THE GREAT ACTOR a true milestone achieved in seventies itself. thanks again.

uvausan
5th May 2014, 10:04 AM
திரு ராமதாஸ் - நீங்கள் NT யின் பல உணர்ச்சிமயமான நவரச நடிப்புக்களை அழகா தொகுத்து பதிவு செய்தீர்கள் - இந்த கார்ட்டூன் தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது - சிலர் நடிப்பு என்ற பெயரில் முகத்தை மூடிகொண்டோ , சண்டை என்ற பெயரில் நகைச்சுவையை தருவதில்லோ , தங்கை என்று பல heroin களுக்கு காரியங்கள் முடித்தபின் பெயர் தானம் செய்வதிலோ, முகத்தை ஒரே மாதிரி எல்லா வேடத்திலும் வைத்து கொள்வதிலோ கைதேர்தவர்கள் - நமது PM position க்கு பொருத்தமானவர்கள்.

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images1_zpsff754721.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/images1_zpsff754721.jpg.html)

ScottAlise
5th May 2014, 01:12 PM
Dear SIVAA sir,

You are fabulous when collecting true records

uvausan
5th May 2014, 02:22 PM
அன்புள்ள ராகுல் - நீங்கள் 1000 பதிவுகளை தாண்டி விட்டீர்கள் என்பதை இப்பொழுதுதான் பார்த்தேன் - NT பண்ணிய சாதனைகள் போல உள்ளது உங்களுடைய இந்த முயற்சி , முன்னேற்றம் .

இவ்வளவு சீக்கிரம் , அதுவும் தரமான பதிவுகள் போடுவது என்பது நினைக்க முடியாத காரியம் - யாருடைய பாராட்டுக்களுக்கும் காத்திருக்காமல் தொடர்ந்து பதிவுகள் போடுவது என்பதிற்கு மிகவும் ஆர்வம் , உற்சாகம் , தன்னம்பிக்கை வேண்டும் - அது உங்களிடத்தில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது - உங்கள் எல்லா முயற்சிகளும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் , இந்த திரியினிலும் வெற்றி பெற இறைவனை மனமார வேண்டுகிறேன்

தாமதமாக Notice பண்ணியதற்கு மன்னிக்கவும் - hearty congratulations !

Russellawz
5th May 2014, 03:29 PM
நடிகர் திலகத்தின் பல்வேறு வேடங்கள் பற்றி நான் பதித்திருந்த பதிவிற்கு பாராட்டுதல்கள் தெரிவித்த அருமை உள்ளங்கள் கல்நாயக், ராகுல்ராம், ரவி, சந்திரசேகரன் மற்றும் அனைவருக்கும் என் பேருவகை கலந்த நன்றி!

மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள்,மாணவிகள் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய காலம் இப்போது. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. எந்தெந்தப் படிப்பை நாம் தேர்ந்தெடுக்கலாம் என்று மாணாக்கர்கள் சிந்தனை முழுதும் தத்தம் எதிர்காலத்தைப் பற்றியே சுழன்று கொண்டிருக்கும்.

ஆமாம்... அதற்கு நம் நடிகர் திலகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? உண்டு... சம்பந்தம் உண்டு.

பாரிவேந்தர் என்றழைக்கப்படும் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் திரு டி.ஆர்.பச்சைமுத்து அவர்கள் பச்சைத் தமிழர் சிவாஜி அவர்களின் பரம ரசிகர் என்பது நாம் அறிந்த ஒன்று. அவர் நம் நடிகர் திலகம் பெயரில் சென்னை வடபழனியில் எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிட்யூட் நடத்தி வருகிறார். பல மாணாக்கர்கள் திரைப்படத் துறை சம்பந்தமான இயக்குனர், எடிட்டிங், சவுண்ட் எஞ்சினீரிங், அனிமேஷன், ஒளிப்பதிவு முக்கியமாக நடிப்பு போன்ற துறைகள் சார்ந்த பல்வேறு பட்டப் படிப்புகளை இங்கு பயின்று பலன் அடைந்து வருகிறார்கள். நடிப்பின் நாயகனாக விளங்கும் நம் நாயகரின் பெயரில் இயங்கும் இத்திரைப்படக் கல்லூரி கலைத்துறையில் முன்னேற விரும்பும் பல மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டி.

இப்போது சொல்லுங்கள். இப்பதிவு நடிகர் திலகத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறதா இல்லையா என்று.

நம் நடிகர் திலகம் அன்றும் ஆசான். இன்றும் ஆசான். என்றுமே ஆசான்.

http://i1.ytimg.com/vi/cPGMlU9EMa0/maxresdefault.jpg

இனி மேலும் அதிகமான தகவல்களை இந்த ஒளிக்காட்சி இங்கே உங்களுக்கு அளிக்கும். ஒரு ஆசிரியராக இதை இங்கே பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cPGMlU9EMa0

chinnakkannan
5th May 2014, 06:06 PM
ராமதாஸ் ஐயா.. ஒரு ஆசானைப் பற்றி இன்னொருஆசான்(தாங்கள்) எழுதியிருப்பது மகிழ்வாக இருக்கிற்து..நன்றி..

RAGHAVENDRA
5th May 2014, 09:19 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/Ragul1000grtgs_zpsb113b08d.jpg

chinnakkannan
5th May 2014, 10:51 PM
சிரிப்பு பாதி அழுகை பாதி…

*

அத்தியாயம் ஐந்து

*
“ஒரு நடிகனோட ஸ்டேஜஸ் மூன்று பிரிவா இருக்கு தெரியுமோ” கேட்டவர் ந.தி. கேள்வி எனக்கு என்பதால் கை கால் உடல் உள்ளம் எல்லாம் பதறின…இடம் : கற்பனையூர்

*
“…………”


*”என்னடா படவா பேசமாட்டேங்கற”

*

“பேசணும்னு ஆசையாகத் தான் இருக்கு.. ஆனா பேச்சு வரமாட்டேங்குது..கற்பனையூர்ல பாக்கறச்சே இப்படித்தான்னா நேர்ல பார்த்திருந்தா கொஞ்சம் ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்”

*

“அப்படில்லாம் பேசாதே.. நீ என்னதான் தம்மாத்தூண்டு ரசிகனா இருந்தாலும் என்னோட ரசிகன்..உன்னை ப் பிடிக்கும்..அது சரி கேட்ட கேள்விக்கு பதில்..”

*

*”நீங்களே சொல்லுங்க குருஜி”

*

“என்னடா பேர்லாம் கொடுக்கற எனக்கு” கடகடவென சிரிப்பு.. சரி சொல்றேன்..*

*

ஒரு நடிகனோட நடிப்புல மூணு ஸ்டேஜஸ்…செக்*ஷன்னு வெச்சுக்கயேன்.. தன்னிலை, உள் நிலை, எதிர் நிலை..

*

தன்னிலைன்னா என்ன தெரியுமா.. தன்னோட நிலை..அதாவது உனக்கு என்னதெரியும்..ஒன்னோட ப்ளஸ் பாய்ண்ட்ஸ் மைனஸ் பாய்ண்ட்ஸ் என்ன…..நடிப்புன்னு எடுத்துக்கிட்டீன்னா உன்னோட திறமை என்னன்னு புரிந்து கொள்வது..

*
சரி..பட்டுன்னு ஒரு ஆளுக்குத்திறமை வந்துடுமா என்ன. முடியாது..கடின உழைப்பு வேண்டும்.. நமக்கான வழியைத் தேர்ந்தெடுத்துக்க வேண்டும்..

*

இப்ப என்னய எடுத்துக்கோ கண்ணா.. நான் வந்தது நாடக வழி.. என்னோட ஸ்கூல் நு கேட்டா ட்ராமா ஸ்டேஜ் தான்.. என்னோட தாட் ப்ராஸஸ் என்னன்னு கேட்டா நாடக மேடை தான் யூகேன் ப்ராக்டிஸ் ஆக்டிங்..

*

இப்பத் தான் நிறைய ஃபெஸிலிட்டீஸ் வந்துடுத்தேப்பா கவர்ன்மெண்ட் காலேஜ்ஸ், ப்ரைவேட் காலேஜெல்லம் இருக்கே ஆக்டிங்க் ப்ராக்டிஸ் பண்றதுக்கு..

*
அப்படிப் போய் நீ பயிற்சி பண்றேன்னு வச்சுக்க..உனக்கு ஆக்டிங்க்வந்துடுமா… ஏன் ஒண்ணுமே பேசாம ஆன்னு பாத்துக்கிட்டு இருக்க..

*

”குருஜி..ஒங்களோட ஃப்ளோ பிரமிக்க வைக்குது.. நான் உங்க பேச்சுலருந்து கத்துக்கிட்டு இருக்கேன் அதான்”

*

“சொல்லு.. நீ போய் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல போய் ஆக்டிங்க் ப்ராக்டிஸ் எடுத்துக்கறன்னு வை.. நீ ஸ்டேஜ்ல ஏறினா என்னாகும்..

*

வெண்டைக்காய் தக்காளி வேறுபல காய்களையும்
சிண்டில் எறிவார் சிலர்..

குருஜி.. நமக்கெல்லாம் நடிப்புசுட்டு போட்டா கூட வராது.. திருவிளையாடல் நாகேஷ் ஒங்க கிட்ட சொன்ன மாதிரி உங்க கிட்ட நான் சொல்றேன்..எனக்கு ரசிக்கத் தான் வரும்.. நடிக்க வராது”

*

ஏன் வராது.. வரும்..ஆனா கட்டுக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த வார்த்தையும் கூட வரும்னு ஒரு சொலவடை உண்டு..ஆனா நடிப்புல பத்தாது..

*

த லெஸன்ஸ் யூ லேர்ண்ட் வில் ஹெல்ப் யூ டு நோ அபெளட் யுவர் ஸ்கில்ஸ்.. நீ படிச்ச பாடங்கள் உன்னுடைய திறமையை உனக்கு அறிமுகம் தான் படுத்தும்.. அப்ப அத டெவலப் பண்ணனும்னா மத்தவங்களைப் பார்க்கணும்..மத்தவங்களோட நடிப்பைப் பார்க்கணும்.. நீ சொல்ற வசனத்துக்கு அந்தாளோ அந்தம்மாவோ எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பார்க்கணும் அதுக்கேத்த மாதிரி நீயும் பண்ணனும்..அப்பத் தான் நீ மத்தவங்களுக்குச் சமமாக, அவர்களை விட கூடுதலாக ஆற்றலக் காட்டமுடியும்.. நானும் அப்படித்தான் வந்தேன்.. ஆமா இத எதுக்குச் சொல்றேன்..

*

இத எதுக்குச் சொல்றேன்னா. தன் நிலையிலருந்து ஒருத்தன் முன்னேறி முழுமை நிலைய அடைய முடியும் புரிஞ்சுதா..

*
டேய்.. முழிச்சுண்டு தானே இருக்க.. ஓ.கே..உள் நிலைங்கறது ஒரு நடிகனோட ரெண்டாவது ஸ்டேஜ்..

*

டெவலப் பண்றது.ன்னு சுருக்கமா சொல்லலாம்.. அதாவது உனக்கு இந்த கதாபாத்திரமா அதை எப்படி டெவலப் பண்ணலாம்..னு புத்திய செலுத்திக்கிட்டு இருக்கணும்..கதாசிரியர் ஒன்ன வீரன்னு சொல்றார்னு வெச்சுக்கோ.. அதையே டைரக்டர் கொஞ்சம் படபடப்புள்ள வீரன்னு சொல்றார்னு வெச்சுக்கோ நான் தான் மன்னன்னு வெச்சுக்கோ..*

*

“நீங்க தான் எந்தக் காலத்திலயும் மன்னனாச்சே”

*

“படவா..ஐஸ் வைக்காதே ..சொல்றதைக் கேள்.. எங்கிட்ட வந்து சொல்லணும்.. மன்னா எதிரி நாட்டு படைகள் ஆற்றைக் கடந்து விட்டார்கள்..”

*

*”மன் மன்னா.. எதிரி நாட்டு படைகள் ஆற்றைக் கடந்து விட்டார்கள்..”

*

“என்ன தூங்கி எழுந்துட்டு அரசவைக்கு வந்தியா..”

*

“ஏன் குருஜி..”

*

“ நீ சொல்ல வந்த விஷயமென்ன.. எனிமீஸ் வந்துட்டாங்கன்னு சொல்லணும்.. அவங்கள என்ன வாக் போறமாதிரி பார்த்திருப்பியா என்ன.. ஒளிஞ்சிருந்து பாத்துட்டு அவங்களுக்குத் தெரியாம என்கிட்டவிஷயத்தச் சொல்றதுக்காக ஓடி வர்றே.. வர்றச்சே என்னாகியிருக்கும்.. ஓடிவரச்சே ஏதாவது தடுக்கி விட்டிருக்கும் ஸோ ஒன்னோட டிரஸ் கலைஞ்சிருக்கும்..குறிப்பா வேகமா வந்ததுனால மூச் மூச்சு வாங்கும்..ஹ ஹ ஹனு இரைச்சு மன்னா…ன்னு ஆரம்பிச்சு சொல்லணும்..புரிஞ்சுதாடா..”

*

“மன்னா என்னை மன்னிச்சுடுங்க..ஏதோ ஒரு அல்ப வீரன் நான்னு விட்டுடுங்க.. ஒரு குட்டி வேஷத்துல இவ்வளவு விஷயம் இருக்கா குருஜி..”

*

”யெஸ்.. அதத் தவிர டெக்னிகலா நிறைய இருக்கு ஆங்கிள், உன்னோட ட்ரஸ்கோட்…இதெல்லாம் நீயே டிசைட் பண்ணி இம்ப்ரூப் பண்ணப் பார்க்கணும்.. இதுக்குத் தான் கற்பனை ப்ளஸ் மனோ தர்மம் வேணும்கறது.. இதான் உள் நிலைங்கற ரெண்டாவது ஸ்டேஜ்..”

*

அப்புறம் மூணாவது ஸ்டேஜ் என்ன தெரியுமா..எதிர் நிலை..

*” நான் சொல்றேன் குருஜி… எதிர் நிலை..எதிரிகளோட நிலை..வில்லன் ஆக்டர் என்ன செய்யறாங்கன்னு பாத்துட்டு கத்தி படாம டபக்குன்னு தாவிடணும் அதானே..”

*”

“குறுக்க பேசின கிள்ளிடுவேன்.. எதிர் நிலைன்னா எதிரி நிலையில்லை..எதிர் நிலை..எதிரில் இருப்பவர்கள்.. ஒரு நடிகனுக்கு எதிரில் இருப்பவர்கள் யார்.. ரசிகர்கள்… ஒன்னோட வசனத்துல- நடிப்புல - வீரம் வந்துச்சுன்னா கைதட்டல் வந்துச்சுன்னா கண்ணீர் வந்துச்சுன்னா – அதான் போனஸ் நடிகனுக்கு… அது ஒண்ணு போதும் அந்த மாதிரி பார்க்கற ரசிகர்கள் பிரமிக்க வைக்கறா மாதிரி நம்பளப் பத்தி வீட்டுக்குப் போனப் புறமும் யோசிக்க வச்சா அது அந்த நடிகனின் வெற்றி.. இதான் மூணாவது ஸ்டேஜ்.. இந்த மூணையும் கொண்டிருந்தா தான் பூரண நடிகன்னு சொல்லலாம்..என்னாங்கற..”

*

“நான் என்ன சொல்றது குருஜி.. நீங்க பேசுங்க.. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்..”

*

“அட போடா..என்னமோ சிரிப்பு பத்தி எழுதறேன்னு சொல்லிட்ட்டு…பேசிக்கிட்டே இருக்கேங்கற.. சரி நான் அப்புறமா வர்றேன்..”*

*

“தாங்க்ஸ் குருஜி”

*

(மேற்கண்டது கற்பனையூரில் எனக்கும் ந.திக்கும் நிகழ்ந்த உரையாடல் எனப் புரிந்திருக்கும்..ஆனால் ந.தி.. சொன்னது – மூன்று நிலைகள் பற்றி – அது அவரே சொன்னது..- நான் பேச நினைப்பதெல்லாம் என்று அவர் எழுதிய நூலின் இரண்டாம் பாகத்தில்.. சுவாரஸ்யமாக(?) இருக்கவேண்டும் என்பதற்காக உரையாடல் போல் எழுதிப் பார்த்தேன். ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்க..

*

இந்தப் பதிவே சற்று நீளமாகி விட்ட படியால் என்னைக் கவர்ந்த சிரிப்பைப் பற்றிச் அடுத்த போஸ்டில் சொல்கிறேனே என்று சொல்வதற்கு முன்…

*

“ஓ இந்தப் பாத்திரம் என்கூட ஃபுல் படமும் வருதா..அப்ப இந்தாளப் போட்டுக்கோ.. நல்லா வரும்” என ந.தி சொல்ல ப்ரொட்யூஸரும் ந.தி சொன்ன நபரைப் பார்க்க அவர் “ ந. தியே ரெகமண்ட் பண்ணாரா..சரி.. நடிக்கிறேன்.. ஆனால் அவரை விட எனக்கு ஒரு ரூபா கூட வேணும் சரியா” எனக் கேட்க ப்ரொட்யூஸர் அதிர்ந்தாராம்..(உண்மையா எனத் தெரியாது..இதுவும் ஒரு புத்தகத்தில் படித்தது தான்).. அது…அந்தப் படம்…ம்ம்ம்

*

அகெய்ன்..ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்க..

(தொடரும்)

eehaiupehazij
5th May 2014, 11:34 PM
Hearty congratulations ragul for having crossed the 1K mark

chinnakkannan
6th May 2014, 12:20 AM
கங்க்ராட்ஸ் ராகுல் ராம் முனைப்பாய் எழுதுவதற்கு..ஆயிரம் என்பது கணக்கே அல்ல.. நிறைய நிறைய எழுதுங்கள்..

Murali Srinivas
6th May 2014, 12:33 AM
உண்மை உணரும் நேரம்

நாம் இந்த தலைப்பில் எதுவும் எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் கூட நண்பர் வினோத் போன்றவர்கள் நம்மை விடுவதாக இல்லை.

நேற்றைய தினம் நண்பர் RKS அவர்கள் எங்க வீட்டு பிள்ளை வசூலையும் திருவிளையாடல் வசூலையும் பற்றி ஒரு பதிவு செய்திருந்தார். அவர் சொன்னது மொத்த வசூலைப் பற்றியா அல்லது சென்னை மாநகரத்தின் மொத்த வசூலை குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை. காரணம் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை எங்க வீட்டு பிள்ளை மூன்று திரையரங்குகளிலும் சேர்த்து 573 நாட்களில் பெற்ற வசூல் Rs 13,23,000 சொச்சம். அதே நேரத்தில் அதே 1965-ம் ஆண்டில் வெளியான திருவிளையாடல் சென்னை நகரில் அதே போல் மூன்று அரங்குகளில் ஓடிய 537 நாட்களில் [அதாவது எங்க வீட்டு பிள்ளையை விட 26 நாட்கள் குறைவு] பெற்ற வசூல் Rs 13,82,002.91 p. அதாவது சுமார் 60,000/- அதிகம். அதே போல் மதுரை சென்ட்ரலில் 100 நாட்களில் எங்க வீட்டு பிள்ளை பெற்ற வசூல் Rs 2,78,000/- சொச்சம். மதுரை ஸ்ரீதேவியில் திருவிளையாடல் 100 நாட்களில் பெற்ற வசூல் Rs 2,84,000/- சொச்சம். ஒரு வேளை இதைத்தான் RKS குறிப்பிட்டாரா என்று தெரியவில்லை.

நிற்க. நான் இங்கே சொல்ல வந்தது இதைப் பற்றியல்ல. RKS இப்படி பதிவு இட்டவுடன் நண்பர் வினோத் அவர்கள் கோபமாக வந்து பதில் பதிவிடுகிறார். அதன் மூலமாக இரண்டு செய்திகளை வலியுறுத்துகிறார். அதில் முதல் செய்தி அல்லது முதல் பாயிண்ட் என்னவென்றால்

எங்க வீட்டு பிள்ளை வசூலை அடிமைப் பெண் படம்தான் முறியடித்தது என்பதாகும். அதற்கு ஆதாரம் இதோ என்று சேலம் மாவட்ட எம்ஜிஆர் ரசிகர் மன்றம் வெளியிட்ட நோட்டிஸை பதிவிடுகிறார். ரசிகர் மன்றம் அடித்த நோட்டிஸ். சரி அது 100% சரியானது என்றே ஒப்புக் கொண்டு விடுவோம். இங்கே என்ன சந்தேகம் என்றால் எங்க வீட்டு பிள்ளை வசூலை அடிமை பெண் முறியடித்து விட்டது என்று சொன்னால் எங்க வீட்டு பிள்ளையின் வசூல் விவரங்களை கொடுத்து விட்டு அதை இது தாண்டி விட்டது என்று சொல்ல வேண்டும். அப்படி எதுவும் அந்த நோட்டீஸில் என் கண்ணுக்கு தென்படவில்லை. அப்படியிருக்க அதை இது முந்தி விட்டது என்பது எந்த அடிப்படையில்?

நண்பர் வினோத் அடித்து சொல்லிய இரண்டாவது செய்தி அல்லது பாயிண்ட் என்னவென்றால் 1956 முதல் 1977 வரை எம்ஜிஆர் அவர்களின் 10 படங்கள் மொத்த வசூலில் ருபாய் ஒரு கோடியை தாண்டியது என்றும் இதை பல பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன என்றும் சொல்கிறார். [பத்திரிக்கையில் செய்தியாக வெளியாவது எந்த வகை ஆதாரத்தை சேர்ந்தது என்பது என் சிற்றவிற்கு தெரியவில்லை]. சரி இந்த கூற்றில் எத்தனை சதவிதம் உண்மை என்று பார்ப்போம்.

இவர்கள் சொல்லும் 10 படங்களில் நிச்சயம் எங்க வீட்டு பிள்ளையும் அடிமைப் பெண்ணும் அடங்கும். சரி, அடிமை பெண்ணின் வசூல் விவரங்களை மாவட்ட வாரியாக இவர்கள் தொகுத்தளித்திருக்கும் இந்த நோட்டிஸின்படி தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களும் கர்நாடக மாநிலமும் சேர்த்தால் வரும் மொத்த வசூல் Rs 66,27,563.71 p. கேரளத்தின் விநியோகஸ்தர் பங்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் உத்தேசமாக மொத்த வசூலுக்கு மாற்றி அமைத்தால் 70 அல்லது 71 லட்சம் வரும். தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் Rs 58,67,348/- வருகிறது.

அதற்கு பின் ஓடக் கூடிய ஊர்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட அவை அனைத்தையும் சேர்த்தாலும் கூட [கர்நாடகம் + கேரளம் சேர்த்தாலும்] மொத்த வசூல் ஒரு கோடியை தாண்டுமா என்பது பெரிய கேள்விக்குறி. காரணம் மெயின் சென்டர்களில் சுமார் 60 லட்சத்திற்கும் கீழே வசூல் செய்த படம் B & C சென்டர்களில் 30 லட்சம் வசூலிப்பது அதுவும் 69-70 காலகட்டங்களில் மிக மிக கடினமான விஷயம்.என்பது விநியோகத் துறையில் பல வருடங்களாக ஈடுபட்டிருக்கும் நண்பர்களுடன் நெருங்கி பழகியவன் என்ற முறையில் நன்றாக தெரியும்.

அது மட்டுமல்ல இதன் மூலம் தெரிய வரும் மற்றொரு உண்மை என்ன? எங்க வீட்டு பிள்ளையை வசூலில் முந்தி விட்டது என்று இவர்கள் சொல்லும் [இவர்கள் என்ன? எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனமே அடிமை பெண் 100 வது நாள் விளம்பரத்தில் இது எங்க வீட்டு பிள்ளையின் 25 வார வசூலை முறியடித்து விட்டது என்று சொல்லியிருந்தனர்] அடிமை பெண்ணே ஓடி முடிய ஒரு கோடியை எட்ட முடியவில்லை எனும் போது எங்க வீட்டு பிள்ளை எப்படி ஒரு கோடி வசூல் செய்திருக்கும்?

இவர்கள் அடிக்கடி சொல்வது மதுரை வீரன் ஒரு கோடி வசூல் செய்தது. அதை நாடோடி மன்னன் முறியடித்தது, நாடோடி மன்னனை எங்க வீட்டு பிள்ளை தாண்டியது, எங்க வீட்டு பிள்ளையை அடிமை பெண் தாண்டியது என்பார்கள். இப்போது இவர்களே கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி தெரிய வருவது என்னவென்றால் இதில் எந்தப் படமும் ஒரு கோடியை தொடவில்லை என்பதுதான். 1969-ல் இந்த வசூல் என்றால் 1958, 1956-ல் அன்றைய டிக்கெட் விலையை அனுசரித்து எந்தளவிற்கு வசூல் வந்திருக்கும் என்பதும் நம்மால் யூகிக்க முடிந்ததே.

நீங்களே ஒப்புக் கொள்ளும் உண்மை நிலை இவ்வாறிருக்க நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மீது சீறி பாய்வது சரிதானா என்பதை அந்த நண்பர்களிடமே விட்டு விடுகிறேன்.

அன்புடன்

Subramaniam Ramajayam
6th May 2014, 03:53 AM
CONGRATS RAGHUL for the landmark achieved. wish you many more. blessings.
RAMAJAYAM

Gopal.s
6th May 2014, 07:51 AM
ராகுல் ராம் ,

உன்னுடைய ஆய் (வு) கள் எப்படியோ! பாராட்டுகளில் ரொம்பவே maturity தெரிகிறது. keep it up .உனக்கும் ,ரவி சாருக்கும் நல்ல chemistry .


ராம தாசு சார்,


உங்கள் பதிவுகளின் தொடக்கம் அருமை.


சின்ன கண்ணா,


சிரிப்பு மட்டுமே எங்கள் ரசிகர்களிடம். உன் பதிவை பார்த்து அழுகை வருமா என்ன?


முரளி ,


உண்மை உணரும் நேரம்.நாங்கள் உணர்ந்த உண்மை முரளியை விட சிறப்பான பதிவர் இல்லவே இல்லை என்பதை.


ரவி,


ரசிக்க கூடிய பதிவுகள். தொடருங்கள்.


ரவிகிரண் சூர்யா,


உங்களை பற்றி நான் சொல்லியா தெரிய வேண்டும்?தூள் பரத்துங்கள்.


நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்கள்.

ScottAlise
6th May 2014, 07:54 AM
1000 பதிவிகளை கடந்ததற்கு வாழ்த்து தெரிவித்த ராகவேந்திரன் சார் , ராமஜெயம் சார் , ரவி சார் , சின்ன கண்ணன் சார் , சிவாஜி செந்தில் சார் அனைவருக்கும் நன்றி

THANKS , SUPER , WELCOME இந்த வார்த்தைகள் தான் நான் அதிகம் பயன்படுத்தியது முதல் 25-30 பதிவிகளில் , அப்புறம் விகிபெடியாவில் இறக்கும் விஷியத்தை எடுத்து பதிவு போடுவது என்று அடுத்த 20 பதிவு


நெய்வேலி வாசு சாரின் encouragement தமிழில் எழுத , தப்ப்பும் , தவறுமாக எழுதுவதை பெரிதாக எடுத்து கொண்டு discourage செய்யமால் encourage செய்த KC SEKAR சார் , ராகவேந்திரன் சார் , கோபால் சார் , நாயக் சார் , சிவாஜி செந்தில் சார் (இவரை நேரில் சந்தித்தது ஒரு இனிய அனுபவம்), சிவா சார் , சின்ன கண்ணன் சார் , நான் போடும் பதிவிகளுக்கு complementary ஆக எழுதும் ரவி சார்
திரி வேகம் குறைந்து இருந்த சமயத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்த ரவி கிரண் சூர்யா சார் அனைவருக்கும் நன்றி

Russellawz
6th May 2014, 08:40 AM
ராகுல்,

வாழ்த்துக்கள்.

Russellawz
6th May 2014, 08:46 AM
கோபால் அவர்களே!

நன்றிகள் பல. தங்கள் எழுத்துக்களை அணுஅணுவாகப் படித்து ரசித்து வருகிறேன். தங்கள் பதிவுகள் திரியோடு முடிந்து போகாமல் திக்கெட்டும் புகழ் பரவியதாய் இருக்க வேண்டும். கண்டிப்பாக புத்தகமாக வெளியிடப் படவேண்டும். உள்ளதை உள்ளபடி உரைக்கும் தங்கள் துணிச்சல் மெச்சத் தகுந்தது.

eehaiupehazij
6th May 2014, 11:16 AM
Dear Murali Srinivas. Thanks for the statistics you have furnished regarding the collections of NT films over the other actor's films. Times have changed. Now the other actor's fans are in a confused stage due to the super duper disappointment fiasco of their much tomtommed AO in its rerelease. Time and again NT proves that he is the real crowd puller and ever green bankable icon, as proved by the rerun collections of his timeless classics. It is really amazing that AO was lifted in all theatres within a week except two theatres in Chennai where with lot of hardship and pressure the movie is being shown in an artificial urge to prove their icon's market value! Even this rerun of AO is just a follow up of NT's footsteps after the thunderous victory of Karnan. Now it is time they realized that their icons movies are becoming outdated and unable to pull crowds to theatres.

eehaiupehazij
6th May 2014, 11:20 AM
dear ragul. it was really a nice experience when we met together. Within a short time of our meet, we could exchange our thoughts and almost we were of the same wavelength. Hope in future too we will have frequent meets, amidst our tight schedules. We may try to meet other kovai senthilvel and ramesh babu too. Day by day your writings show the level of your refinement and maturity in dealing with presentations. keep up ragul!

ScottAlise
6th May 2014, 02:56 PM
பார்த்ததில் பிடித்தது 31

இந்த series ஆரம்பித்ததில் இருந்து பெரிதாக விவாதிக்கத படங்களை தான் அதிகம் தேர்ந்து எடுத்து எழுதி உள்ளேன் , சில சமயம் அனைவருக்கும் தெரிந்த , ரசித்த படங்களை பற்றியும் எழுதி உள்ளேன் , தொடரும் சில பதிவுகள் நாம் எல்லோரும் ரசித்த என் தம்பி , திருடன் , அன்பளிப்பு படங்களை பற்றி தான்

முதலில் நான் எழுதி உள்ள படம்

என் தம்பி

1968 வருடம் நடிகர் திலகம் back to back ஹிட்ஸ் கொடுத்த வருடங்களில் ஒன்று , கலாட்டா கல்யாணம் , தில்லான மோகனாம்பாள் , என் தம்பி என்று படங்கள் அனைத்தும் வித்யாசமான கதைகள் கொண்ட படங்கள்

கதை :

முருகபூபதி. (மேஜர் ) ஒரு ஜமிந்தார் .அவரின் மனைவி இறந்து விடவே இரண்டாம் திருமணம் செய்து கொள்ளுகிறார் . மூத்த மனைவியின் மகன் கண்ணன் (சிவாஜி ) நல்ல குணம் ,அறிவு , ஏழைகளிடம் கனிவு என்று ஜாமீனில் எல்லோராலும் மதிக்க படுகிறார் ஜமீன் விவகாரங்களையும் நிர்வாகம் செய்கிறார் . குதிரையேற்றம், வாள் பயிற்சி போன்றவற்றில் எல்லாம் தேர்ச்சி பெற்ற கண்ணன் நீச்சல் பயிற்சி பெறாததன் காரணம் அவனுக்கு நீரில் ஒரு கண்டம் இருப்பதாக ஜோசியர் சொன்னதை நம்பி அவனது தந்தை நீச்சல் சொல்லி தரவில்லை. இரண்டாவது மனைவியின் மகன் விஸ்வம் (பாலாஜி ) ஊதாரியாக சுற்றிக் கொண்டிருக்கிறான் , கண்ணனுக்கு விஸ்வம் மீது அளவு கடந்த பிரியம் .முருகபூபதி விதவை தங்கையும் (பண்டரி பாய் ) அவரது மகன் சபாபதி (நாகேஷ்) மற்றும் மகள் ராதா (சரோஜா தேவி ) , இவர்களை தவிர தங்கச்சி உமா (ரோஜா ரமணி )

ScottAlise
6th May 2014, 02:57 PM
கண்ணனுக்கு எல்லாம் இருக்கிறது , பணம் , செல்வாக்கு அந்தஸ்து , அவரை விரும்பும் ராதா , தாய் ஸ்தானத்தில் அத்தை , சபாபதி , கண்ணனிடம் அன்பை பொழியும் சிறுமி உமா . கண்ணனுக்கு ஒரே குறை தம்பி விஸ்வத்தின் அன்பு மட்டும் தான் கண்ணனுக்கு கிடைக்கவில்லை , காரணம் விஸ்வம் கண்ணனை தன் எதிரியாக நினைக்கிறார் , சொத்து மீது கண் வைத்து காய் நகர்த்துகிறார் .தம்பியின் மீது மிகுந்த பாசம் கொண்ட கண்ணன் அவனை திருத்த பல முயற்சிகள் மேற்கொண்டும் பலன் ஒன்றுமில்லை. தினமும் குடிக்க பணம் வாங்கி செல்லுகிறார் விஸ்வம் .

இதை பார்த்து ஜமீந்தார் விஸ்வத்தின் செயல்களை முடக்க்குகிறார் . இதனால் ஆத்திரம் அடையும் விஸ்வம் தன் அப்பாவை சுட துப்பாக்கி எடுக்க , அதிர்ச்சியில் நெஞ்சுவலியால் படுகையில் விழுகிறார்

சொத்தை தன் மூத்த மகன் கண்ணனும் தங்கை அவர் தங்கை பண்டரி பாய் நிர்வகிக்கும் பொறுப்பை எழுதிவைக்கிறார்
தன் மூத்தமகன் கண்ணனுக்கு விஸ்வதினால் ஆபத்து வரும் என்று யூகித்து யாருக்கும் தெரியாத தன் குடும்ப ரகசியம் ஒன்றை கண்ணனிடம் சொல்லி தனக்கு பிரச்சனை வரும் பொது இதை சொல்லி தன்னை தற்காத்து கொள்ள சொல்லுகிறார்

ScottAlise
6th May 2014, 02:57 PM
முருகபூபதி இறந்து போக , சொத்து தன்னுக்கு இல்லை என்று அறிந்து விஸ்வம் முதலில் ஆத்திர பட்டாலும் பிறகு தந்திரமாக நல்லவன் போல் நாடகம் ஆடுகிறார் , எஸ்டேட் பங்களாவில் வேலைக்கார பெண்ணிடம் பழகுவது பற்றி புகார்கள் வர, கண்ணன் அதைப் பற்றி விசாரிக்கிறான். அதற்கு முதலில் சரியாக பதில் சொல்லாமல் பிறகு நாடகம் ஆடுகிறார் . கண்ணனுக்கு தன் தம்பி கிடைத்த திருப்தி
விஸ்வம் ஒரு நாள் தங்கள் தந்தைக்கு ஒரு நினைவிடம் அமைப்பதற்கு பக்கத்திலுள்ள தீவில் இடம் பார்த்திருப்பதாகவும் அதை பார்க்க வர வேண்டும் என்று சொல்லி கண்ணனை அழைத்துப் போகிறான். படகில் செல்லும் பொது கண்ணனை தவிக்க விட்டு தான் மட்டும் குதித்து தப்பித்து கொள்ளுகிறார் . வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க விஸ்வமும் அவர்களுடன் சேர்ந்து சோகமாக இருப்பது போல் நடிக்கிறான்


இந்த நேரத்தில் எஸ்டேட் வேலைக்காரன் ஒருவன் சபாபதியிடம் வந்து பக்கத்து கிராமத்தில் ஒரு நாடக குழு முகாமிட்டிருப்பதாகவும் அதில் கள்ளபார்ட் போடும் நடிகன் கண்ணனைப் போலவே இருப்பதாக சொல்கிறான். நாடகத்தை பார்க்க செல்லும் சபாபதி நாடக நடிகன் கந்தப்பாவை பார்த்து பிரமித்துப் போகிறான். காரணம் அச்சு அசல் அவன் கண்ணனைப் போலவே இருப்பதால். சபாபதி கந்தப்பாவை கண்ணாக மாற பயிற்சி கொடுக்கிறார் . அதில் வெற்றி பெறுகிறார் , கந்தப்பா, கண்ணனாக உள்ளே நுழைய அனைவருக்கும் மகிழ்ச்சி , விஸ்வத்துக்கு அதிர்ச்சி

ScottAlise
6th May 2014, 02:58 PM
வந்திருப்பவர் தன் அண்ணன் இல்லை என்பதை பல முறை நிரூபிக்க முயற்சி செய்கிறார் , கத்தி சண்டை , சாட்டையால் பூவை எடுப்பது என்று வைக்கும் அத்தனை பரீட்சைகளிலும் வெற்றி பெறுகிறார் கந்தப்பா. இவரை ஜெயிக்க முடியாது என்று பணம் தருவாதாக ஆசை காட்டும் விஸ்வதிடம் பேசும் பொது கேட்டு விடும் பண்டரி பாய் அவனை தவறாக புரிந்துக் கொண்டு விடுகிறாள். சபாபதியும் உண்மையை சொல்ல, தான் கந்தப்பா அல்ல கண்ணன்தான் என்ற உண்மையை கண்ணன் சொல்ல யாரும் நம்ப மறுக்கிறார்கள். தான் தான் கண்ணன் என்றும் ஆற்றில் விழிந்த உடன் , நாடக குழு காப்பாற்றியதாகவும், அதன் மூலமாகதான் தான் உயிர் பிழைத்து வந்ததாகவும், குடும்பத்தில் உள்ள குழப்பங்களை தீர்க்கவே வேறு வேடத்தில் வந்ததாகவும் கண்ணன் சொல்வது எடுபடாமல் போகிறது.

தன் தந்தை தன்னிடம் சொன்ன ரகசியம் நினைவுக்கு வர , (தன் குடும்ப நகை பற்றிய ரகசியம் ) இந்த ரகசியத்தை சொல்ல அதை அடைய விஸ்வமும் துடிக்கிறார் , அதில் விஸ்வத்துக்கு ஆபத்து வர , கண்ணன் விஸ்வதை காப்பாற்ற , விஸ்வம் திருந்த

சுபம்

ScottAlise
6th May 2014, 02:59 PM
இனி படத்தை பற்றி :

இந்த படத்தை பற்றி எதை எழுதுவது , எதை விடுவது , எங்கே ஆரம்பிபது என்று நினைக்கும் பொது , ரொம்ப நேரம் எழுதும் புரியவில்லை , காரணம் சிவாஜி சாரின் emotional படங்களை விட அவரின் commercial entertainers என் personal சாய்ஸ் . சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம் ,ஒரு full length commercial entertainer மட்டும் தான் இந்த நிறுவனம் எப்போதும் தரும் . அப்படி பட்ட commercial entertainer தான் என் தம்பி . கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் படத்தை அழகாக எடுத்து சென்று இருப்பார் நடிகர் திலகத்தின் ஆஸ்தான இயக்குனர்களின் ஒருவரான AC திருலோகச்சந்தர் . ஆச்திலு, பாசத்திலு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இது , ஒரு படத்தை ரீமேக் செய்யும் பொது வெற்றியின் விதம் அதிகம் , அதே போல் தோல்வி பெறுவதற்கும் வாய்ப்பு அதிகம் . ஆனால் ACT தன் முத்திரையை பதித்து இருப்பர் படம் முழுவதும் .

படத்தின் பலமாக நான் கருதுவது :

கதை : commercial படமாக இருந்தாலும் நம்ப தகுந்த சம்பவங்களுடன் நகரும் திரைகதை .
கத்தி சண்டை, தெற்கத்தி கள்ளனடா பாடல் (ஊரை கலக்கி கொண்டு இருந்தது என்று என் அப்பா , பெரியப்பா சொல்லி கேட்டு இருக்கேன் ) - ரசிகர்களை திருப்தி படுத்த

ScottAlise
6th May 2014, 02:59 PM
நடிகர்களை பற்றி :

நடிகர் திலகம் :

பா series படத்தில் சற்று குண்டாக இருந்தவர் பின்பு typhoid ஜுரம் வந்து உடல் மெலிந்து அழகாக action படத்துக்கு பொருத்தமாக இருந்தார் , அந்த நேரம் பார்த்து அவர் நடித்த படங்களிலும் action , காமெடி என்று கொஞ்சம் அதிகமாக சேர்த்து கொள்ளப்பட்டது . ஒரு குடும்ப படத்தில் சண்டை இருக்குமா ? இருந்தாலும் ரசிகர்கள் விரும்பும் படி இருக்குமா , இருக்கும் , கதையை கெடுக்காமல் இதை செய்ய முடியும் என்று நிருபித்து உள்ளார் திரு அக்ட

இந்த படத்தில் நடிகர் திலகம் dual ரோல் என்று நினைக்கும் படி கொண்டு சென்று இருப்பர்கள் , ஆனால் படத்தில் அவர் ஒரே வேடம் தான் . but அதில் பல variations

முதலில் கண்ணனை பற்றி :

கண்ணன் ஒரு aristocrat . கம்பீரமாக அதே சமயம் கனிவாக அனைவரையும் handle செய்ய வேண்டும் தன்னிடம் உதவி கேட்டு வரும் வேலைகாரனிடம் பேசும் விதம் ஆகட்டும் , உடை உடுத்தும் விதம் ஆகட்டும் , தன் காதலி உடன் பேசும் விதம் , பழகும் விதம் ஆகட்டும் அங்கே சிவாஜி இல்லை , கண்ணன் என்ற aristocrat தான் .
அதுவும் அவர் வெள்ளை உடை , வெள்ளை ஷு அணிந்து கொண்டு ஆபீஸ் ரூமில் உக்கார்ந்து வேலை பார்ப்பதும் , பிறகு வீட்டில் ராக்கிங் chair ல் உக்கார்ந்து புத்தகம் படிக்கும் snap இப்போதும் hot favourite ஒரு செல்வந்தர் அதுவும் படித்தவர் எப்படி அனைத்தையும் கையாள்வார் , ஒரு dignity , class உடன் , அதை பார்க்க வேண்டுமா , படத்தின் முதல் பாதியை பாருங்கள்


சாமி கும்பிட போகும் போதும் ஒரு வித அமைதி , சந்தம் . இவர் கிளாஸ் என்றால் கந்தப்பா மாஸ் B & C ரசிகர்களுக்கு இவர் ஹாட் favourite . அதுவும் தெற்கத்தி கள்ளனடா பாடலில் அவர் அறிமுகம் ஆகும் பொது இப்பவே விசில் அடிக்கணும் போல் இருக்கிறது , அப்போ இருக்கும் சூழ்நிலை எப்படி இருந்து இருக்கும் நகைச்சுவையில் நாகேஷுக்கு சரியான போட்டி இந்த காட்சிகள் , அவர் கழுத்தை ஆட்டுவதும், நாகேஷ் சொல்லும் BUT PUT என்ற வார்த்தைகளை அவர் சொல்லும் விதம் , pant shirt போட்டு கொண்டு வரும் பொது சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது , மேலும் அவர் ஆற்றில் குதிக்கும் காட்சிகளும் , முடியை வெட்டும் காட்சிகளும் in short கந்தப்பா transformation காட்சிகள் சிரிப்பை வர வைத்து , வயிறை பதம் பார்க்கும்

ScottAlise
6th May 2014, 03:00 PM
அடுத்த variation

கந்தப்பா தான் கண்ணன் என்று தன்னை தானே நிரூபிக்க செய்யும் , தன் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க வேஷம் போடும் சூழ்நிலையில் நடிகர் திலகத்தின் நடிப்பு , இது தான் திரைகதை என்று ஒரு ஒரு நொடியும் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் உக்தி , பிறந்த நாள் கொண்டததில் அறிமுகம் ஆகும் கந்தப்பா தான் கண்ணன் என்று சொல்லும் போதும் , அவர் ஒரு ஒரு அடியாக எடுத்து வைத்து நடக்கும் போதும் MSV யின் RR சூப்பர் . தனக்கும் சண்டை காட்சிகள் நன்றாக வரும் என்பதை ஏற்கனவே தங்கை படத்தின் மூலம் நிருபித்த நடிகர் திலகம் , இந்த படத்தில் கத்தி சண்டையில் , அதுவும் விஷம் தோய்ந்த கத்தியில் சண்டை போட்டு மனதை கொள்ளை அடிக்கிறார் , இந்த சண்டையும் , சாட்டையால் பூவை எடுக்கும் காட்சிகள் அனைத்திலும் அவர் நடித்து இருக்கும் விதம் அபாரம் , இது தான் தமிழில் முதல் இரட்டை வேட படம் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன் (உத்தமபுத்திரன் தான் சிவாஜி சாரின் முதல் இரண்டு வேடத்தில் நடித்த படம் இது தான் உத்தமபுத்திரன் என்று நினைத்து இருந்தேன் கத்தியை ஊன்றி அவர் நிற்கும் அழகை பார்த்து நான் இப்படி நினைத்து கொண்டு இருந்தேன். சிவாஜி தான் முதலில் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பவர் தமிழ் திரை உலகில் என்று தவறாக நினைத்து கொண்டு இருந்தேன்)
பாலாஜியை சமாளிக்கும் காட்சிகள் டாப்

ScottAlise
6th May 2014, 03:00 PM
அடுத்த பரிணாமம் : செண்டிமெண்ட்

நடிகர் திலகத்தின் படங்களில் செண்டிமெண்ட் இல்லை என்றால் எப்படி , இதில் siblings செண்டிமெண்ட் அதிகம் , அதுவும் தங்கச்சி செண்டிமெண்ட் சற்று தூக்கல் , but melodrama கிடையாது , காரணம் இதன் வசனம் எனக்கு மிகவும் பிடித்த ஆரூர் தாஸ் கிடையாது பாலாஜியின் ஆஸ்தான AL நாராயணன் , முக்கால்வாசி ரீமேக் படங்களுக்கு வசனம் இவர் தான் . தங்கையை சாப்பிட வைக்கும் அவர் கையாளும் யுக்தி , அவருக்காக பாடும் முத்து நகையே பாடலில் நடிகர் திலகத்தின் உருக்கம் நெஞ்சை பிழிகிறது .

தான் தான் உண்மையான கண்ணன் என்று இவர் சொல்லும் பொது யாரும் நம்பாமல் இவரை சந்தேக பட , இவரோ ஒரு ஒரு விஷியமாக நினைவு படுத்த , இவர் காட்டும் தவிப்பு , பரபரப்பு அனைத்துக்கும் ஒரு ராயல் salute

ScottAlise
6th May 2014, 03:01 PM
பாலாஜி :

இவர் நன்றாக நடித்து இருக்கிறார் , பசு தோல் போர்த்திய புலியாக இவர் நடிப்பு மெச்சும் படி இருக்கிறது , நல்ல நடிகர் என்பதை விட நல்ல producer

நாகேஷ் :

இவர் படத்தில் running role . படம் முழுவதும் வருகிறார் , நகைச்சுவை செய்கிறார் , உருக வைக்கிறார் , திருப்புமுனைக்கு காரணமாக இருக்கிறார் மொத்தத்தில் ALL ROUNDER

சரோஜா தேவி :

புதிய பறவை போல் இவருக்கு முக்கியத்துவம் இல்லை , பாடல்கள் , மற்றும் சில காட்சிகளில் மட்டும் இவர் பங்கு

பண்டரி பாய்

ஸ்டார் mother பல ஹீரோக்களுக்கு இவர் தாயாக நடித்து இருக்கார் , இந்த படத்திலும் இவர் கணிசமான பங்கு வகிக்கிறார் .

பாடல்களில் என் favourite

தட்டட்டும் கை தழுவட்டும் - பாடலின் சுழல்

அய்யையா மெல்ல தட்டு - WESTERN BEATS

தெற்கத்தி கள்ளனடா - MASS

முத்து நகையே - SENTIMENT

மொத்தத்தில் SUPER


நடிகர் திலகம் இந்த படத்தை பற்றி :

பல ஆண்டுகளுக்கு பிறகு கத்தி வீச்சை பழகி கொண்டேன்

ScottAlise
6th May 2014, 03:12 PM
DEAR Sivaji Senthil sir , Gopal sir, Ramadass Sir,

Thanks for your kind words

chinnakkannan
6th May 2014, 04:35 PM
ரா..கு..ல்.. வேறு ஏதாகிலும் ஒரு படத்தை எடுத்து எழுதியிருந்தீர்களானால் கொஞ்சம் கமெண்டியிருப்பேன்..(ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை. :) .)..எ. த என்பதால் பிழைத்தீர்கள்..

ஓ.. எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று..டைஃபாய்டில் இருந்து தேறி நடித்த படம் என்பது எனக்குத் தெரியாது..பட் பிஸிகலி ஃபிட் ஆக ஸ்மார்ட் ஆகத் தோன்றும் படங்களில் இதுவும் ஒன்று புட் பட் ஜோக்கிற்கு நானும் சிரித்திருக்கிறேன்..

அய்யய்யா மெல்லத் தட்டுவில் சற்றே பூசிய உடற்கட்டோடு இருக்கும் சரோஜாதேவி தட்டட்டுமில் லாங்க் ஷாட் உபயத்தாலோ அல்லது சுடிதாரின் உபயத்தாலோ சற்றே ஒல்லியாய் இருப்பது போல இருப்பார்..இரண்டு பாட்டும் எனக்குப் பிடித்த பாட்டு தான் என்றாலும்..

முத்து நகையே உன்னை நானறிவேன்.. பாடலில் ..பொன்னெதற்கு, கண்ணழகு பார்த்தால் பூவெதற்கு என்று சொல்லிக் கொண்டே வருகையில்..
காலழகு பார்த்தால் ..காலழகு பார்த்தால் தெய்வத்திற்கு கருணை என்றொரு பேரெதற்கு”

எனச் சொல்லி உணர்ச்சிவசப்படும் போதில் டிஎம் எஸ் குரலும் ந.தியும் பிரமாதப் படுத்தியிருப்பார்கள்..ம்ம் எழுதுங்கள்..எழுதுங்கள்

eweaxagayx
6th May 2014, 04:36 PM
ராகுல்ராம் சார்

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் படங்களில் " என் தம்பி " படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நடிகர் திலகத்தின் நடிப்பில் பல பரிமாணங்களைக் கொண்ட படங்களில் இப்படமும் ஒன்று.

படத்தைப் போலவே தங்களின் எழுத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

kalnayak
6th May 2014, 04:56 PM
பஞ்சாயத்து கூட்டம் போல் கூடியிருக்கிறார்கள். தலைவர் யாருமில்லை. பிராது கொடுத்திருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாட பலரிருக்கறார்கள். நீதி சொல்வதற்கு போன்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களும் வாதிடத்தான் வந்திருக்கிறார்கள். நீதிபதி இல்லாததால் நீதிமன்றம் இல்லை. இரண்டு அணிகளாக இருக்கிறார்கள் பட்டி மன்றம் இல்லை. ஏனெனில் நடுவர் யாரும் இல்லை.
எங்கே என்று தெரிகிறதா? இந்த போரத்தி்ல்தான்.
நதியின் பக்தர்களும் மதியின் பக்தர்களும் தான் இரு அணிகள். குற்றம் சுமத்துபவர்கள் மதியின் பக்தர்கள். குற்றம் சாட்டப்பட்டவர் நமது நண்பரும், நதியை குறைவாக சொல்லி தவறான தகவல்கள் தருவதை கண்டால் பாய்ந்து சென்று தகவல்கள் தவறென உறுதிப்படுத்தி வருவதை கடமையாகக் கொண்டிருக்கும் இரவிகிரண் சூர்யாவேதான்.
சாட்டப்பட்டிருக்கும் குற்றம் - இரவிகிரண் சூர்யா தேவையில்லாமல் மதி திரியில் நுழைந்து வாதங்கள் வைப்பது, பின்பு பின் வாங்குவது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
நதியின் பக்தர்கள் நண்பர் இரவிகிரண் சூர்யா எத்தனை முறை வாதங்கள் வைத்து பின்வாங்கியிருக்கிறாரென்று தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறார்கள்.
கல்நாயக் இரவிகிரண் சூர்யா வைத்த வாதங்களை எடுத்துரைக்கிறார்.:
கடைசியாக வைத்த வாதம் - எங்கள் வீட்டுப்பிள்ளையின் வசூலை உடனடியாக திருவிளையாடல் முறியடித்தது. மதியினர் சொல்லியது - இரவிகிரண் சூர்யா ஆதாரம் தரவில்லை. மதியினர் தந்த ஆதாரம் அடிமைப்பெண் வசூல் விபரம் அச்சடிக்கப்பட்ட ரசிகர் மன்ற நோட்டீஸ். செய்யாதது - இந்த இடத்தில் இரண்டு அணியினரும் முறையே எங்கள் வீட்டுப்பிள்ளை மற்றும் திருவிளையாடல் வசூல் விபரம் தராதது. தெரியாதது - இரவிகிரண் சூர்யா வாதம் வைத்து எங்கே பின்வாங்கியிருக்கிறார் என்பது. செய்திருப்பது - அவ்வாறு இரவிகிரண் சூர்யா வாதம் வைத்து பின்வாங்கியிருப்பது செய்ததாக குற்றம் சாட்டியது.
இதற்கு திரு. முரளி சீனிவாஸ் சொன்ன பதிலுக்கு திரு. வினோத் என்ன பதில் தருவாரென்று பலர் காத்திருக்கிறார்கள். இல்லை இதையும் வழக்கம் போல் பின்வாங்கல் என்றே சொல்வார்களா தெரியவில்லை.
அதற்கு முந்தைய வாதம் - கர்ணன் ஐம்பதாவது நாள் விளம்பரத்தில் தவறாக பாண்டி ருக்மணியை குறிப்பிட்டதாக சொன்ன தகவலுக்கு, இதே போன்ற தவறு ஆயிரத்தில் ஒருவன் விளம்பரத்திலும் நடந்தள்ளதை சுட்டிகாட்டி வாதம் வைத்தார். அதற்கு பதிலுமில்லை. அந்த பதிலுக்கு கைத்தட்டல் பாராட்டு பதிவுகளுமில்லை!!! இங்கே ஏது பின்வாங்கல்?
அதற்கும் முன்பாக முக்தா சீனிவாசன் சொன்னதாக வந்த செய்தி - மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு மதியின் ஒரு படம் சமமென்று சொல்லி சென்னையைத்தவிர மற்ற இடங்களி்ல் 100-நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி என்று சொல்லியிருந்தார். அதில் என்ன தவறு என்று இரவிகிரண் சூர்யா சொல்லியிருந்தார்.
அதற்குவந்த மறுப்பறிக்கை – “மக்கள் திலகம் நடித்த படத்தின் வெற்றிவிழாவிற்கு அவரை வைத்து படம் எடுக்காத திரு முக்தா ஸ்ரீனிவாசன் , இயக்குனர் பாலச்சந்தர் அவருடன் நடிக்காத திரு என் .டி .ராமாராவ் ,அந்த படத்தில் நடிக்காத திருமதி சௌகார் ஜானகி - மற்றும் பல திரை உலக பிரமுகர்கள் இதயக்கனி வெற்றி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது திரை உலக வரலாற்றில் இதுவே முதல் முறை(!!!) (எதுவாயிருந்தாலும் இந்த உலக வரலாற்றை வம்பிழுப்பதே பலரும் கடமையாகக் கொணடுள்ளனர்)

அந்த விழாவில் பேசிய திரு முக்தா ஸ்ரீனிவாசனின் புள்ளி விவர பேச்சு - எம்ஜிஆரின் படங்களின் வசூலின் தாக்கம் -பற்றிய உரையின் பதிவு திரை உலகம் ஏட்டில் வந்ததை இங்கு பதிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்ட படங்களை பற்றி திரு முக்தா ஸ்ரீனிவாசன் சொல்லாமல் விட்டது அவருடைய தவறு .இதே போல் 1976ல் ஒருமுறை முக்தா ஸ்ரீனிவாசன் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் பேசிய நேரத்தில்மற்ற நடிகர்கள் வெள்ளிவிழா படங்களின் வசூலை எம்ஜிஆர் படங்கள் 100 நாளிலே வசூலாகிவிடும் .மற்ற நடிகர்கள் 100 நாட்கள் வசூலை 10 வாரங்களில் எம்ஜிஆர் படங்கள் பெற்று விடும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது .
திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசியதற்கு திரை உலகம் இதழ் பொறுப்பாகாது.”
அதற்கு பதிலளித்த இரவிகிரண் சூர்யா - "அதேபோல அப்படி பொறுப்பேற்க முடியாத விஷயம் உண்மை என்றும் ஏற்றுகொள்ள முடியாது !" என்றிருந்தார்.
நிற்க - நானாயிருந்தால் இப்படி சொல்லியிருப்பேன்: மதியி்ன் ரசிகர்கள் முன்பு நதியின் படங்களையோ அவைகளின் வசூல் நிலவரம் பற்றியோ பேச அவரொன்றும் முட்டாளில்லை. மற்றபடி முன்னாளிருக்கும் மதியி்ன் ரசிகர்களை குஷிப்படுத்த ஒன்றிற்கு இரண்டாக அவருக்கு பேசத்தெரியாத என்ன? இதைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர்களைப்பற்றி ... (?)
நான் சொல்லவேண்டாம். இதோ அவர்களே சொல்கிறார்கள் - " அவர் எவருடனும் ஒப்பிட முடியாத கலியுக கடவுள். அவரது திரைப்பட சாதனைகளை எவராலும் மிஞ்ச முடியாது. அரசியல் சாதனைகளும் அவ்வாறே ! அதனால் வீண் விவாதங்களுக்கு இடம் தர வேண்டாம்.”- அத்துடன் நாங்களும் இந்த கிணற்றை விட்டு வெளியே வரமாட்டோம் - அவர்கள் சொல்லாமல் சொல்வது.
இவ்வாறாக நடந்த விவாதங்களில் இரவிகிரண் சூர்யா எப்போது பின்வாங்கினார் என்பதை அவரோ, குற்றம் சாட்டுபவர்களோ சொன்னால் தேவலை. இல்லை எனக்குதான் பின்வாங்குவதென்றால் என்னவென்று தெரியவில்லையா?
அதுவும் இல்லைஎன்றால் ஆடை கிழிந்த யாருக்கேனும் உதவுவதற்காக 'பின்' வாங்கினாரோ என்னவோ? யாரேனும் தெளிவு படுத்துங்களேன்.
விவாதம் தொடரும்.

uvausan
6th May 2014, 05:28 PM
முரளி - உங்கள் பதிவுகள் அருமை என்று திரும்ப திரும்ப சொல்லியும் , எழுதியும் வாயும் , கைகளும் வெகுவாக வலிக்கின்றன - நேராக என்னுடைய View Point க்கு வருகிறேன்

1. அந்த திரியை ஒரு நகைச்சுவை திரியாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர , ரவி கிரண் serious ஆக எடுத்து கொண்டது போல எல்லோரும் எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை . நமது திரியில் நகைச்சுவை கிடைக்காத போதெல்லாம் அந்த திரி பதிவுகளை பார்த்து நகைச்சுவையை பெற்று கொள்வது வழக்கம் - கல்நாயக் அவர்கள் நகைச்சுவைடன் எழுதுவது வழக்கம் - ஆனால் அவருடைய பதிவுகளும் குறைவாகவே வருகின்றன .

2. பொய் சொல்வது என்பது ஒருவிதமான addiction - அந்த addiction லிருந்து விடுதலை பெறுவது அவளவு சுலபம் இல்லை - நமக்கு உண்மை மட்டும் பேசுவது ஒரு addiction ஆக இருப்பது போல் ! - அவர்களிடம் இருந்து உண்மை வரும் என்று சொல்வது அல்லது எதிபார்ப்பது சூரியன் மேற்க்கே உதிக்கும் நாள் ஒன்றில் ஏற்படலாம்

3. யாராவது ஒருவரை நாம் Mr .Perfect என்று குறிப்பிட்டால் அதைவிட ஒரு சிறந்த நகைச்சுவை இருக்க முடியாது - ஏனெனில் யாருமே perfect கிடையாது - it is a myth . ஒரு மாய ஜால வார்த்தை - புத்தன் , காந்தி , ஏசு , ராம் மனிதராக வந்த பின் பல குறைகளுடன் தான் வாழ்ந்தார்கள் - நாமும் NT யை perfect என்று சொல்லவில்லையே - பல படங்களை அவர் தவிர்த்திருக்கலாம் என்று தானே எழுதுகிறோம் , விமர்சிக்கிறோம் --- அந்த திரியில் அவருடைய தவறுகளை யாருக்காவது சுட்டி காட்டி எழுதும் தயிரியம் இருக்கிறதா ? இல்லை அந்த திரியில் அப்படி எழுதிவிட்டு அடி படாமல் வாழ்ந்து விட முடியுமா ? ஓடாத படங்கள் ஓடியதாகவும் , ஓடிய படங்கள் ஒரு கோடியை தாண்டியதாகவும் எழுதும் மாயா ஜால வார்த்தைகளுக்கு நாம் ஏன் மதிப்பு கொடுத்து நம் நேரத்தையும் பதிவுகளையும் வீணடிக்க வேண்டும் ??

4. 50 நாட்களை , constipation மாதிரி தள்ளி விட்டார்கள் - இன்னும் 6 மாதம் போகட்டும் - டிஜிட்டல் யுகத்தில் தலைவர் செய்த சாதனை - மறு வெளியீட்டின் மொத்த வசூல் 100 கோடியே 50 இலட்சத்து 45 பைசா என்று ஒரு மா மேதை பதிவு போடுவார் - அதை - நன்றாக சொன்னீர்கள் என்று பலர் சொல்லை அந்த திரியை ரொப்பி விடுவார்கள் ...

5. உங்கள் உண்மைகள் அவர்களை மாற்ற போவதில்லை - அவர்கள் கொடுக்கும் நகைச்சுவையும் குறைய போவதில்லை - நாமும் அவர்கள் போல பொய் சொல்லும் கலையை பின் பற்ற போவதில்லை - ஏன் நமது energy யை வீணடித்து கொள்ள வேண்டும்?

6. நீங்கள் நமது திரியின் நண்பர்களுக்கு வேண்டுமானால் மன அமைதி கிடைக்க வேண்டி உங்கள் உண்மை பதிவுகளை வெளியிடலாம் - ஆனால் அந்த பக்கம் நிறைந்துள்ள மூணு கால் முயல்களை ஒன்றுமே செய்ய முடியாது

எங்களுக்கு மன அமைதி தேவை - தொடுருங்கள் உங்கள் உண்மைகளை !!

uvausan
6th May 2014, 05:35 PM
"ஆடை கிழிந்த யாருக்கேனும் உதவுவதற்காக 'பின்' வாங்கினாரோ என்னவோ? ----- "

கல்நாயக் சார் - இந்த நகைச்சுவையைத்தான் தொலைத்து விட்டு தேடி கொண்டுருக்கிறோம் - அருமையான பதிவு:):-d

Russellisf
6th May 2014, 06:41 PM
:cool2::cool2::cool2::cool2::cool2::cool2:


முரளி - உங்கள் பதிவுகள் அருமை என்று திரும்ப திரும்ப சொல்லியும் , எழுதியும் வாயும் , கைகளும் வெகுவாக வலிக்கின்றன - நேராக என்னுடைய View Point க்கு வருகிறேன்

1. அந்த திரியை ஒரு நகைச்சுவை திரியாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர , ரவி கிரண் serious ஆக எடுத்து கொண்டது போல எல்லோரும் எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை . நமது திரியில் நகைச்சுவை கிடைக்காத போதெல்லாம் அந்த திரி பதிவுகளை பார்த்து நகைச்சுவையை பெற்று கொள்வது வழக்கம் - கல்நாயக் அவர்கள் நகைச்சுவைடன் எழுதுவது வழக்கம் - ஆனால் அவருடைய பதிவுகளும் குறைவாகவே வருகின்றன .

2. பொய் சொல்வது என்பது ஒருவிதமான addiction - அந்த addiction லிருந்து விடுதலை பெறுவது அவளவு சுலபம் இல்லை - நமக்கு உண்மை மட்டும் பேசுவது ஒரு addiction ஆக இருப்பது போல் ! - அவர்களிடம் இருந்து உண்மை வரும் என்று சொல்வது அல்லது எதிபார்ப்பது சூரியன் மேற்க்கே உதிக்கும் நாள் ஒன்றில் ஏற்படலாம்

3. யாராவது ஒருவரை நாம் Mr .Perfect என்று குறிப்பிட்டால் அதைவிட ஒரு சிறந்த நகைச்சுவை இருக்க முடியாது - ஏனெனில் யாருமே perfect கிடையாது - it is a myth . ஒரு மாய ஜால வார்த்தை - புத்தன் , காந்தி , ஏசு , ராம் மனிதராக வந்த பின் பல குறைகளுடன் தான் வாழ்ந்தார்கள் - நாமும் NT யை perfect என்று சொல்லவில்லையே - பல படங்களை அவர் தவிர்த்திருக்கலாம் என்று தானே எழுதுகிறோம் , விமர்சிக்கிறோம் --- அந்த திரியில் அவருடைய தவறுகளை யாருக்காவது சுட்டி காட்டி எழுதும் தயிரியம் இருக்கிறதா ? இல்லை அந்த திரியில் அப்படி எழுதிவிட்டு அடி படாமல் வாழ்ந்து விட முடியுமா ? ஓடாத படங்கள் ஓடியதாகவும் , ஓடிய படங்கள் ஒரு கோடியை தாண்டியதாகவும் எழுதும் மாயா ஜால வார்த்தைகளுக்கு நாம் ஏன் மதிப்பு கொடுத்து நம் நேரத்தையும் பதிவுகளையும் வீணடிக்க வேண்டும் ??

4. 50 நாட்களை , constipation மாதிரி தள்ளி விட்டார்கள் - இன்னும் 6 மாதம் போகட்டும் - டிஜிட்டல் யுகத்தில் தலைவர் செய்த சாதனை - மறு வெளியீட்டின் மொத்த வசூல் 100 கோடியே 50 இலட்சத்து 45 பைசா என்று ஒரு மா மேதை பதிவு போடுவார் - அதை - நன்றாக சொன்னீர்கள் என்று பலர் சொல்லை அந்த திரியை ரொப்பி விடுவார்கள் ...

5. உங்கள் உண்மைகள் அவர்களை மாற்ற போவதில்லை - அவர்கள் கொடுக்கும் நகைச்சுவையும் குறைய போவதில்லை - நாமும் அவர்கள் போல பொய் சொல்லும் கலையை பின் பற்ற போவதில்லை - ஏன் நமது energy யை வீணடித்து கொள்ள வேண்டும்?

6. நீங்கள் நமது திரியின் நண்பர்களுக்கு வேண்டுமானால் மன அமைதி கிடைக்க வேண்டி உங்கள் உண்மை பதிவுகளை வெளியிடலாம் - ஆனால் அந்த பக்கம் நிறைந்துள்ள மூணு கால் முயல்களை ஒன்றுமே செய்ய முடியாது

எங்களுக்கு மன அமைதி தேவை - தொடுருங்கள் உங்கள் உண்மைகளை !!

Russellisf
6th May 2014, 06:43 PM
:banghead::banghead::banghead:



பஞ்சாயத்து கூட்டம் போல் கூடியிருக்கிறார்கள். தலைவர் யாருமில்லை. பிராது கொடுத்திருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாட பலரிருக்கறார்கள். நீதி சொல்வதற்கு போன்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களும் வாதிடத்தான் வந்திருக்கிறார்கள். நீதிபதி இல்லாததால் நீதிமன்றம் இல்லை. இரண்டு அணிகளாக இருக்கிறார்கள் பட்டி மன்றம் இல்லை. ஏனெனில் நடுவர் யாரும் இல்லை.
எங்கே என்று தெரிகிறதா? இந்த போரத்தி்ல்தான்.
நதியின் பக்தர்களும் மதியின் பக்தர்களும் தான் இரு அணிகள். குற்றம் சுமத்துபவர்கள் மதியின் பக்தர்கள். குற்றம் சாட்டப்பட்டவர் நமது நண்பரும், நதியை குறைவாக சொல்லி தவறான தகவல்கள் தருவதை கண்டால் பாய்ந்து சென்று தகவல்கள் தவறென உறுதிப்படுத்தி வருவதை கடமையாகக் கொண்டிருக்கும் இரவிகிரண் சூர்யாவேதான்.
சாட்டப்பட்டிருக்கும் குற்றம் - இரவிகிரண் சூர்யா தேவையில்லாமல் மதி திரியில் நுழைந்து வாதங்கள் வைப்பது, பின்பு பின் வாங்குவது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
நதியின் பக்தர்கள் நண்பர் இரவிகிரண் சூர்யா எத்தனை முறை வாதங்கள் வைத்து பின்வாங்கியிருக்கிறாரென்று தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறார்கள்.
கல்நாயக் இரவிகிரண் சூர்யா வைத்த வாதங்களை எடுத்துரைக்கிறார்.:
கடைசியாக வைத்த வாதம் - எங்கள் வீட்டுப்பிள்ளையின் வசூலை உடனடியாக திருவிளையாடல் முறியடித்தது. மதியினர் சொல்லியது - இரவிகிரண் சூர்யா ஆதாரம் தரவில்லை. மதியினர் தந்த ஆதாரம் அடிமைப்பெண் வசூல் விபரம் அச்சடிக்கப்பட்ட ரசிகர் மன்ற நோட்டீஸ். செய்யாதது - இந்த இடத்தில் இரண்டு அணியினரும் முறையே எங்கள் வீட்டுப்பிள்ளை மற்றும் திருவிளையாடல் வசூல் விபரம் தராதது. தெரியாதது - இரவிகிரண் சூர்யா வாதம் வைத்து எங்கே பின்வாங்கியிருக்கிறார் என்பது. செய்திருப்பது - அவ்வாறு இரவிகிரண் சூர்யா வாதம் வைத்து பின்வாங்கியிருப்பது செய்ததாக குற்றம் சாட்டியது.
இதற்கு திரு. முரளி சீனிவாஸ் சொன்ன பதிலுக்கு திரு. வினோத் என்ன பதில் தருவாரென்று பலர் காத்திருக்கிறார்கள். இல்லை இதையும் வழக்கம் போல் பின்வாங்கல் என்றே சொல்வார்களா தெரியவில்லை.
அதற்கு முந்தைய வாதம் - கர்ணன் ஐம்பதாவது நாள் விளம்பரத்தில் தவறாக பாண்டி ருக்மணியை குறிப்பிட்டதாக சொன்ன தகவலுக்கு, இதே போன்ற தவறு ஆயிரத்தில் ஒருவன் விளம்பரத்திலும் நடந்தள்ளதை சுட்டிகாட்டி வாதம் வைத்தார். அதற்கு பதிலுமில்லை. அந்த பதிலுக்கு கைத்தட்டல் பாராட்டு பதிவுகளுமில்லை!!! இங்கே ஏது பின்வாங்கல்?
அதற்கும் முன்பாக முக்தா சீனிவாசன் சொன்னதாக வந்த செய்தி - மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு மதியின் ஒரு படம் சமமென்று சொல்லி சென்னையைத்தவிர மற்ற இடங்களி்ல் 100-நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி என்று சொல்லியிருந்தார். அதில் என்ன தவறு என்று இரவிகிரண் சூர்யா சொல்லியிருந்தார்.
அதற்குவந்த மறுப்பறிக்கை – “மக்கள் திலகம் நடித்த படத்தின் வெற்றிவிழாவிற்கு அவரை வைத்து படம் எடுக்காத திரு முக்தா ஸ்ரீனிவாசன் , இயக்குனர் பாலச்சந்தர் அவருடன் நடிக்காத திரு என் .டி .ராமாராவ் ,அந்த படத்தில் நடிக்காத திருமதி சௌகார் ஜானகி - மற்றும் பல திரை உலக பிரமுகர்கள் இதயக்கனி வெற்றி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது திரை உலக வரலாற்றில் இதுவே முதல் முறை(!!!) (எதுவாயிருந்தாலும் இந்த உலக வரலாற்றை வம்பிழுப்பதே பலரும் கடமையாகக் கொணடுள்ளனர்)

அந்த விழாவில் பேசிய திரு முக்தா ஸ்ரீனிவாசனின் புள்ளி விவர பேச்சு - எம்ஜிஆரின் படங்களின் வசூலின் தாக்கம் -பற்றிய உரையின் பதிவு திரை உலகம் ஏட்டில் வந்ததை இங்கு பதிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்ட படங்களை பற்றி திரு முக்தா ஸ்ரீனிவாசன் சொல்லாமல் விட்டது அவருடைய தவறு .இதே போல் 1976ல் ஒருமுறை முக்தா ஸ்ரீனிவாசன் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் பேசிய நேரத்தில்மற்ற நடிகர்கள் வெள்ளிவிழா படங்களின் வசூலை எம்ஜிஆர் படங்கள் 100 நாளிலே வசூலாகிவிடும் .மற்ற நடிகர்கள் 100 நாட்கள் வசூலை 10 வாரங்களில் எம்ஜிஆர் படங்கள் பெற்று விடும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது .
திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசியதற்கு திரை உலகம் இதழ் பொறுப்பாகாது.”
அதற்கு பதிலளித்த இரவிகிரண் சூர்யா - "அதேபோல அப்படி பொறுப்பேற்க முடியாத விஷயம் உண்மை என்றும் ஏற்றுகொள்ள முடியாது !" என்றிருந்தார்.
நிற்க - நானாயிருந்தால் இப்படி சொல்லியிருப்பேன்: மதியி்ன் ரசிகர்கள் முன்பு நதியின் படங்களையோ அவைகளின் வசூல் நிலவரம் பற்றியோ பேச அவரொன்றும் முட்டாளில்லை. மற்றபடி முன்னாளிருக்கும் மதியி்ன் ரசிகர்களை குஷிப்படுத்த ஒன்றிற்கு இரண்டாக அவருக்கு பேசத்தெரியாத என்ன? இதைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர்களைப்பற்றி ... (?)
நான் சொல்லவேண்டாம். இதோ அவர்களே சொல்கிறார்கள் - " அவர் எவருடனும் ஒப்பிட முடியாத கலியுக கடவுள். அவரது திரைப்பட சாதனைகளை எவராலும் மிஞ்ச முடியாது. அரசியல் சாதனைகளும் அவ்வாறே ! அதனால் வீண் விவாதங்களுக்கு இடம் தர வேண்டாம்.”- அத்துடன் நாங்களும் இந்த கிணற்றை விட்டு வெளியே வரமாட்டோம் - அவர்கள் சொல்லாமல் சொல்வது.
இவ்வாறாக நடந்த விவாதங்களில் இரவிகிரண் சூர்யா எப்போது பின்வாங்கினார் என்பதை அவரோ, குற்றம் சாட்டுபவர்களோ சொன்னால் தேவலை. இல்லை எனக்குதான் பின்வாங்குவதென்றால் என்னவென்று தெரியவில்லையா?
அதுவும் இல்லைஎன்றால் ஆடை கிழிந்த யாருக்கேனும் உதவுவதற்காக 'பின்' வாங்கினாரோ என்னவோ? யாரேனும் தெளிவு படுத்துங்களேன்.
விவாதம் தொடரும்.

Russellisf
6th May 2014, 06:46 PM
:argue::argue::argue::argue::argue::argue::argue:: argue:

we are not open the issues your people only do that. we always write our god fame only. we never critised your thread

JamesFague
6th May 2014, 09:55 PM
Everyone who is the Real Box Office King after the seeing the stupendous success of Karnan. The film
about to touch Silver Jubliee but due to the rulers of the state the run comes to an end after 150 days.


Mr Rahul,

Belated wishes for touching the 1000 posts and do continue to enthrall us with the
same tempo.

Regards

kalnayak
6th May 2014, 11:43 PM
:argue::argue::argue::argue::argue::argue::argue:: argue:

we are not open the issues your people only do that. we always write our god fame only. we never critised your thread
What do you mean? Do you say that our people only said that Mr. RaviKiran Surya started above discussions and after your people replies, he withdrawn. Good!!! The examples given above indicate clearly who startedwhat discussions, what were Mr. Ravikiran Surya's replies and everybody knows how your people behaved. Without criticising by some of you, how could I give the above discussions of Ravikiran Surya? உங்கள் கொக்கரிப்பு எப்படி என்பதை பார்த்துதான் அது கேட்கப்பட்டது. சரி நீங்களே சொல்லுங்கள் இரவிகிரண் சூர்யா அந்த விவாதங்களில் எப்போது பின்வாங்கினார் என்பதை. எனக்கு தெரிந்த Dictionary-ல் உள்ள பின் வாங்கலை நான் கடைப்பிடிக்கிறேன். மொட்டைத்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சிட்டு எதையோ பதில் என்று சொல்லித்தப்பித்து வழக்கம் போல் வெற்றி முழக்கமிடாதீர். ஊரார் சிரிப்பார்கள்.

Murali Srinivas
6th May 2014, 11:53 PM
Sivaji Season - Song No 6 posted in Paadalgal Palavitham thread. Reproduced here for people who had not seen the other thread.

SIVAJI SEASON - SONG 6

தெய்வமே தெய்வமே

Deiva Magan

ACKNOWLEDGEMENT

1. Mr.A.C.Tirulokachander – Director of this movie who was kind enough to share his experiences about this film.

2. Mellisai Mannar M.S.Viswanathan – who talked about the background of this song.

3. Mr.Aroordas – His interviews in TV & Magazines.

4. Mr.Mohanram

5. Various Magazines of yesteryears.

6. The NT thread in our own forum, which had given rise to so many thoughts about this movie.

DEDICATION

To our Hub Moderator NOV (a) Velan. [In fact he wanted another song from this movie but still this is for him].

INTRODUCTION

A song that showcased the uncontrolled emotions of a son. A song that touched the viewers’ hearts. A song that is remembered and celebrated till date. A song that stood out for picturisation in the sense, it seamlessly jelled with the emotional quotient of the song. Let us talk about it.

NT & RELATED PRODUCTION HOUSES

We know about Sivaji films and Sivaji Productions.Relatives and friends of the family later started production houses and they were named after the family members of NT. There was Mohan Arts Company and Mohan of the company along with M.R.Santhanam started Rajamani Pictures, named after NT’s mother. They produced Paasa Malar and Kungumam. Mr.Santhanam came out of the company and started on his own. Named Kamala Pictures (after NT’s wife), he produced Annai Illam and Paaladai. There was Ramkumar Films [though this belonged to the auditors of Sivaji Productions and the son of the audiitor was also Ramkumar thus justifying the name], which produced Galatta Kalyanam and Sumathi En Sundari. Another film was also produced under the same banner but without NT. That was Thikku Theriyaatha Kaatil starring Muthuraman and JJ. They had launched one more movie with NT and JJ and two days shooting was carried out. It was Minnal Mazhai Mohini, a novel written by Javer Seetharaman. But the movie did not proceed further. Prabhu movies was started under which Ele My friend was done (It was directed by Mr. Murali Shanmugam aka Dharan Mandrayar. He directed another movie called White Rainbow, a story dealing with the young widows of Varanasi that went on to win critical acclaim). In the same way Periannan, a close relative of NT started Shanthi Films. They did Bandha Paasam, a Bheemsingh movie and later did Anbu Karangal, which was directed by K.Sankar. Bandha Paasam was released in 1962 and Anbu Karangal was in 1965. After this there was a lull. Both the films were good in content but both ended up as average success movies, with Bandha Paasam reaching 75 days. So they wanted a big hit for their next film. They decided to wait for a good story.

It must be noted here that NT though he started his own company did not go for production continuously After Puthiya Paravai (1964), it took them almost 6 years to come out with Vietnam Veedu (1970). There was a 4-year gap between Vietnam Veedu and Thangapathakkam (1974), which in turn led to a three year gap till Annan Oru Kovil came out in 1977. Same manner, the other production houses belonging to his family and friends also had a long gap in between their productions. Basically NT wanted to help so many producers and that was precisely the reason he gave a long gap between the films produced under his own banner.

NT & FRIENDSHIP

Time just flew. If NT the actor by his sheer talent made lakhs and lakhs of people as his fans, NT the man made many his friends by his behaviour. His Fans transcended the barriers of caste, creed, language and state. He had many friends in all languages and this helped him to know about many vital things. Especially when it came to good movies released in other languages, there were people to tell him about that and that helped him to bring good stories to Tamil. Dilip Kumar, Sunil Dutt and Sanjeev Kumar were his good friends in Hindi, not to forget Lata Mangeshkar. ANR was very close to him in Telugu and NTR was also a great family friend. Later stages, Krishna was very close to NT. Rama Naidu and VB Rajendra Prasad were the two producers who had a very good relationship with NT. In Kannada, Rajkumar was a very close friend and it should be remembered that after the abduction drama by Veerappan got over, he came to Chennai and went to Annai Illam. He did not even go to the CM’s home. When NT passed away, Rajkumar came in person to pay homage. Reciprocating the gesture, Prabhu went to Bangalore to pay the last respect when Rajkumar passed away. Vishnu Vardhan was and still close to the NT family. Recently when there was a problem during the shooting of his Kannada film at Ooty, it was Prabhu who helped him out by personally taking up the issue with the Tamilnadu CM and getting it solved. In Malayalam, Thikkurisi Sukumaran Nair and Prem Nazir were very close, not to forget so many producer/directors and the present Super Stars Mammootty and Mohan Lal. This helped NT to identify the good films getting released in other languages. The persons from other language industry were very keen to see NT do such roles.

STORY SEARCH

Now coming back to the search for good stories, there was make up man called Haribabu. He had a son named Nannu Chandra. He was a Bengali by birth. We know that it is Bengali and Malayalam movies that depict life on a realistic background. Though this trend is waning, still the quality of their films is much better. Nannu aware of what is happening at his backyard used to look out for stories/plays/movies that could challenge the actor in NT. It was he who identified the Bengali movie for Puthiya Paravai. Some years later he fumbled upon a movie, which he found interesting. Though it was not a success, the story and its emotional quotient attracted him. He thought that if it is made in Tamil with NT in the lead, it would come out well. He informed the message to VCS. NT, VCS and other friends saw the movie. They liked it.

Once the story caught the attention, they decided to rework it to suit Tamil audience taste and they decided to produce it under Shanthi Films banner. Then the question of selecting he person who would wield the megaphone came up. At that point of time young guns or shall we say the second generation directors had started doing NT movies. P.Madhavan, A.C.Tirulokachander and C.V.Rajendran were the main directors. Out of these persons, the dice fell for ACT. They fixed up ACT for directing the movie.

ACT – THE STARTING POINT

If one goes through the profile of persons associated with cinema, let them be artists or technicians, we can find that majority of them have not had the opportunity to study in colleges either by default or choice. Such was the passion they developed in their hearts for stage/cinema, they had dropped out of their school. This trend continued till 80’s when most of the cine people were academic dropouts. Contrary to this general trend, ACT is a person who came to the cine field with a post graduation degree in his hand. The irony was he was in no way associated with the cine field and his entry was just accidental.

ACT had wanted to do IAS and this ambition was growing in him day by day. He was a voracious reader and he was very brainy during his school/college days. The fact that he got double promotions during his school days and as the rules were not very strict regarding age during that period helped him to complete his education at an early age. He had finished his MA, when he had just completed 19. Up to College it was ok but for IAS, there was a minimum age factor that needs to be fulfilled and so he was forced to wait. He was preparing for his exams and the two places he used to frequent were Connemara Library and his friend’s house. His friend’s father was a producer.

ACT who read a lot, always had the knack of telling stories in an interesting manner. The stories were quite popular among his friends circle. In fact AVM Saravanan recalls that even during the shooting, ACT used to sit and read one book or the other. At first, it was a shock for the producers/actors and AVM was no exception to that. Later when they found out that reading books during shooting didn’t affect the shooting, they allowed it. AVM Saravanan adds that during the shooting of Enga Mama (where AVM was a co-producer), they could see ACT and the heroine JJ always engaged in reading books.

Now coming back to where we left, his friend once introduced ACT to his father, saying that he has good stories with him. His father asked ACT to narrate some story and the way ACT did impressed the friend’s father very much. ACT was asked to attend story discussions. Since he was waiting for his IAS admission and the fact that he had enough spare time made him to accept the offer. He actively participated in the discussions and soon he was noticed. He even took up the learning of direction from the directors employed by the company. The more he got involved with these things, his mind started drifting away from IAS. At this juncture, one incident occurred that changed his life forever. ACT being the inquisitive person always wanted to learn things and he regularly used to interact with cameramen and editors for learning the job. But cinema field unlike today was not open and it was working in a closed mode. So any new comer was not immediately taught about the tricks of the trade and the rest, primarily due to the complex in their minds, looked down at people who had studied in College and the general belief that highly qualified people would not be fit for cinema were also responsible for this mindset. ACT found out this the hard way. He always used to inquire about the camera, lens used, film role being loaded etc. At times he used to get correct replies but most of the time there will be no response. During this particular incident, the cameraman not only refused to answer his question but also made fun of him saying that he (ACT) can never understand.

This made ACT more determined and he straightaway went to Connemara Library. He started listing out all the books related to cinema that were available there and he started reading with utmost interest. His aim was to learn about camera and editing but once he started reading various books on cinema, he read them all and this made ACT to decide to stick on to cinema as he had built up a huge passion for films and dropped his IAS dream. With the plethora of books to support, he had become more knowledgeable and planned his stories along with screenplay.

ACT – STORY WRITER & DIRECTOR

While working in his friend’s company, he picked up a friendship with actor Asokan. Asokan had a keen eye and he found that ACT is a director material. He asked ACT to get two or three stories ready and he took ACT to his dearest friend, AVM Saravanan. The meeting took place at AVM Saravanan’s room and after the initial introductions, Saravanan asked ACT to narrate the story and he started sharpening a pencil. ACT had started his story and at one point of time it seemed that nobody was listening to him. He stopped the story there. Realising that he had stopped telling story, Saravanan looked up and asked him to proceed. With ACT being a bit hesitant, Saravanan recalled the story in full to make him realize that he in fact had been listening to the story. Asokan who was deeply engrossed in some thoughts suddenly asked ACT “ andha sword fight kadhai sollunga“. Because ACT had narrated a historical story to Asokan and he was very much impressed. But only after half way through the story, he realized ACT was telling some other story. This had social background. When Asokan talked about the historical one, Saravanan was interested to hear that also. He realized that the stories narrated have a good potential to become successful cinemas. He asked ACT to put both the stories as separate files and took it to his father. AVM Chettiar was impressed and decided to film both the stories. At this juncture AVM had committed to a joint production and Chettiar decided to film the social story. But Saravanan who had very much wanted to take the film on their banner, argued with his father and it was decided that it would come under AVM banner. But while acceding to this request, Chettiar had ruled that Bheemsingh would direct the movie, as it was planned to be a multi star cast movie and he didn’t want to risk it with a new director. So ACT’s story got filmed as Paarthaal Pasi Theerum. But honestly speaking, ACT never had any idea or inclination to direct the movie and so when it was informed that the movie would be directed by Bheemsingh, he was happy that his story is getting filmed with NT in the lead and Bheemsingh in director’s chair. The beauty is during the entire shooting, ACT never visited the set even once. He did not meet any actors.

Saravanan had a feeling of guilt that he could not put ACT into the director’s slot for Paarthaal but nevertheless, he succeeded in getting ACT to direct the historical movie. Titled Veera Thirumagan, it had Anandan and Sachu in the lead. (Readers may recall that Mr.Manisegaran discussed about this film in this same thread). After the success of Veera Thirumagan, ACT never had to turn back. He became the Asthana director of AVM. Naanum Oru Pen was a big hit and when he directed Anbe Vaa, he became one of the most sought after director.

TEAMING UP OF NT & ACT

Actor Balajee by this time was slowly feeling slackness in his acting assignments as more and more new heroes were entering the field. So Balajee decided to take up production and he launched his own production company Sujatha Cine Arts and the first movie Annavin Aasai came out n 1966. It had Gemini Ganesan as the hero and it didn’t yield the desired result at the BO. Balajee went to NT and he agreed to do a film for him. He asked Balajee to find a suitable story and director. Balajee was searching for a good director and when he spoke about this with Saravanan, he asked Balajee to speak to ACT and fix him up. ACT agreed to do Balajee’s movie. Now Balajee who was in a bad shape financially wanted a sure shot success and the option that opened in front of him was remaking successful other language films. He saw a Telugu film and bought its rights. ACT till that time was not in favour of remakes but he had to finally give in as Balajee’s position was weak. Then cropped up another issue. The original movie was action oriented though the under current was brother – sister affection and sentiment. The Hero’s role was completely opposite to the type of characters NT was playing till that time. How to convince him and make him accept to do this movie? The job of convincing NT fell on ACT’s head and he and Balajee went and met NT at Annai Illam.

Having directed a MGR movie, Balajee had a doubt whether ACT would be acceptable to NT. But NT never even thought about this because NT had known him as the storywriter of Paarthaal Pasi Theerum and so he was ok with his choice. When ACT came to Annai Illam, he was well received and he narrated the story of the film. NT was puffing away a chain of cigarettes and listening to what ACT was narrating. After some time ACT took permission and went out. He came back after 10 minutes. When enquired, he replied he had gone out for a smoke. Balajee was shocked and NT on hearing this felt sorry. He told him that had he known this earlier, he would have offered him cigarette. Later Balajee told ACT that nobody had dared to talk about cigarette in front of NT, leave alone smoke in front of him. ACT feels probably the frankness exhibited by him might have clinched the issue for him. Balajee had assigned Aroordas to write the dialogues for the movie. But again NT and Aroordas were not even in talking terms. We have to go back in history for the same.

NT & AROORDAS – THE BREAK UP AND PATCH UP

Aroordas got associated with more NT films after he wrote dialogues for Bheemsingh movies and especially after Paasa Malar. He was also a good storywriter and so he continued to get opportunities to write, so much so that he was assigned to write for Puthiya Paravai, Sivaji films first movie. He often used to discuss plots with NT and whichever gets the nod used to be filmed later. One day and this was in 1966 when NT was bedridden due to typhoid attack. He was recouping and he used that period to listen to various stories. Aroordas told an outline about a tramp character, which gets hold of an abandoned child and brings him up only to be drawn to the court of Law later. NT was impressed but since he had to complete the already committed projects, no decision was taken on this. After a month or so, Aroordas happened to meet MGR and he asked him whether he has any stories on hand as he (MGR) had given dates for a producer, who had planned a quick picture. Aroordas told one or two stories suiting MGR’s image but he was not interested. He was asking for something different and when Aroordas narrated the story of the tramp (now fully developed), MGR immediately confirmed the project and when he asked Aroordas about the name of the story, pat came the reply “Petraalthaan Pillaiyaa”. MGR was very happy and instructed the producer to register the name and start production. Krishnan Panchu were in charge of direction and they quickly wrapped up the film and the movie hit the screen in December 1966. Of course this movie got into the annals of Tamilnadu history (though for different issues) for the simple reason that resultant action brought by this movie simply changed the political history of Tamilnadu. Since that is not in our purview, let us come back to the release time.

A week or so after the release of PP, Aroordas got a call from NT asking Aroor to come and meet him. NT was not his usual self when Aroordas met him. He straightaway asked Aroordas that is it not the same story Aroordas had told him some months earlier and Aroordas replied yes. NT was incensed and asked Aroordas then why did he sell the story to MGR. Aroordas replied that no decision was taken about the filming of the story and moreover he casually narrated the story to MGR and he never thought that MGR would want to do this subject as it was a emotional and sentimental stuff. So when MGR decided to go ahead, he was surprised and could not say No to it. NT was not satisfied and blamed Aroor that he believed in him and that was the reason he did not even give an advance and if he had known that he would sell the story to someone else, he would have paid the money. Aroordas tried to pacify him by saying that he has a very good story for NT. But NT was in no mood to listen and told him to sell that story also to MGR and get money and with that he got up and walked away. Though Aroordas could understand that his anger was more due to the fact that he had missed out an opportunity to play a character that had ample scope for acting. Aroordas came back with a feeling that he would not get any more chance to work for a NT film.

Readers may be wondering why these incidents are discussed here. The reason behind this was NT never objected to any artist or technician working in his film though he may have personal reasons against such persons. We can give so many examples for this and no wonder when Balajee wanted to fix up Aroordas, he said yes. Aroordas a little hesitant initially later agreed to write but he informed ACT that he would not come to the set. “Thangai” was progressing well and one day ACT called Aroordas to come to the set, as there was an important thing to be discussed. Aroordas went to the set and while NT was in the makeup room, he quickly went and met ACT. But while coming back he bumped on NT and it was an emotional reunion for them. The ice was broken and Aroordas continued to write for more NT movies. The irony was ACT and Aroordas, who were promised by MGR that he would like to associate with them in future also, ended up their careers of not having done any more MGR movie after Anbe Vaa and Petraalthaan Pillaiyaa respectively. On the other hand both ACT and Aroordas continued to do NT movies more. And this pair tasted success when Thangai and Iru Malargal went on to become hits. So it was decided that ACT- Aroordas team would take care of the new movie.

STORY – SCREENPLAY- MAKEUP

Though the Bengali movie had good story content, it was not a great commercial success. So the writer director duo had a tough task in their hands and started working on this. Nannu, as mentioned earlier actively associated himself with the project. It was decided that it would be a triple role where the father and the first son would have a scarred face and the second son would be cute and handsome. It was easier said than done. How to make them appear ugly? What would be required to make a scar in the face? It was decided that the left cheek of both the characters would have a scar and even here, this would be more prominent for the son. This was essentially required because the scar in his face would be responsible for people to stay away from him thus by causing hurt and agony which in turn manifests into an inferiority complex. This leads to a situation where he becomes rough and tough and also gets him into lot of trouble.

Having decided on the characterization, they sat down and began to write the screenplay for the movie. Since they had a basic skeleton, they were able to build up on the screenplay. It unfolded in the following manner. The film opens up with a rich man Shankar’s wife getting admitted for delivery. The father – to –be is very excited about the new arrival but when the boy is born, all his dreams are shattered. Reason- the new born also has a scar in his left cheek just like the father. He is unable to digest the fact and asks the Doctor to kill the baby. Doctor refuses but the rich man forces him to accept what he says. But doctor doesn’t do the heinous act and instead he hands over the child to an orphanage run by an octogenarian called Baaba. Shankar informs his wife that the baby was still born. After some time a second child is born to them and he is so cute.

Years roll by. The sons grew up. While the first son grows up as a tough nut to crack, second son Vijay is feminine in nature. He falls in love with a college girl who happens to be the daughter of Doctor Raju, his father’s old friend. One of his friends who is also a business partner in his hotel business exploit him by using the hotel as a cover for all his nefarious activities. Vijay innocent to the core is unaware of all these things. Shankar is worried about the boy but he is the favourite of his mother, who helps him to get all the favours from his father.

The elder son growing up in the orphanage grows up as a tough guy and he is very much short tempered. Nobody can control him except Baaba. Years roll by and Baaba, the orphanage caretaker has now become old and sick and is on a deathbed and he informs Kannan (elder son) that his parents are alive and he needs to get in touch with a Doctor by name Raju to find out the whereabouts of his parents. Kannan who till now was thinking himself to be a orphan, is excited to the core when he hears this and immediately leaves in search of Dr.Raju and finds him.

Dr.Raju is able to immediately identify him but pleads ignorance. Kannan the rough and tough guy even tries to physically assault him to get the information about his parents. Doctor on hearing that Baaba is dead, decides to accommodate Kannan and puts him in his own house but he is very careful not to reveal the truth to his own daughter.

Kannan on hearing about his parents couldn’t control himself and he tries to visit them. He goes to “his” house one night. He first goes to his mother’s room, where she is sleeping. He looks at her and offers flowers at her feet. He then goes to see his brother. But he mistakes him as a thief and raises an alarm. This brings the father and mother out and in fact the father also under the mistaken identity tries to shoot him but he escapes unhurt. He comes and outpours his emotions to Doctor. He understands and consoles him that one day his wishes would be fulfilled. Kannan when alone plays sitar and this arouses the curiosity of Nirmala, the daughter of Dr.Raju. She goes up and strikes a friendship with Kannan. He initially misunderstood it for love only to realize that she is indeed in love with his younger brother.

Kannan wants to see his mother again and one day he having seen her going to the temple follows her and watches her from a distance by hiding himself behind the pillars. But the mother by instinct is able to feel it and she tries to identify him. He had covered himself with a shawl but his eyes! That express a thousand emotions and that touches a chord deep in her heart. Something happens to her and she confides the same to her husband. Shankar who harbours a suspicion in his heart decides to find out the truth and goes and meets Dr.Raju after 25 years. The emotional meet brings out the truth and Shankar issues a blank cheque for his son. He also promises his wife that he is going to present her a very costly present soon, without disclosing what it is.

Now Kannan takes the cheque and goes and meets his father. Their meeting becomes an emotional conflict and Kannan returns the cheque. Vijay, who is in a financial mess because of the misdeeds of his friend cum partner, happens to walk in and picks up the cheque. But he runs into deeper trouble when he comes to know of the clandestine activities being carried out and he is kept as a prisoner and ransom is demanded from his father. Kannan comes to know of this and instead of his father, he goes to rescue his brother. The happenings there constitute a poignant climax.

As the script had shaped up in this manner, there were certain things that ACT wanted to highlight. The wife character should be shown as good looking. This was necessary because the story demands that the second son should look cute and handsome and since the father character has a scarred face (which is inherited by the first son), the mother should be good looking. So special care was taken regarding Pandaribai’s make up. Pandaribai after her heroine days got a special make up treatment for this film. The second son character (as mentioned earlier) should have a feminine touch in quite contrast to the tough guy image of the elder son.

Then they sat upon and discussed about the ways to make the heroes’ faces scarred and make it look ugly. They decided to apply a makeup that would comprise of contents of egg, minutely powdered glass pieces, maida and a paste that would bind all things. Today by the click of a mouse, you can find out about the latest make up techniques within no time and you can get both the items and makeup men here to carry out the same. But these things were not available during those days and so they had to use whatever that was available with the help of local make up men. The father character and son character were slightly differentiated as for as make up was concerned and for which hairstyle also played a part.

The casting was quite apt. Pandaribai was the wife and JJ was Nirmala, the jodi for Vijay. Nambiar was the friend cum villain with Vijayashree coming in as his girl. Major had a meaty role as Dr.Raju and Naagesh acted as the friend of Vijay. With Naagaiah filling the bill as Baaba, the casting was complete. The shooting was started but they ran into one problem.

The makeup to make NT look ugly was a painful exercise. It took time for applying and while it was removed after the day’s shooting, NT began to experience so many problems. It was not only painful but it was also making NT to suffer. At times, blood was oozing out from where it was getting peeled off. This had to be tackled, as the second son’s face should look gorgeous. Not only that, NT at that point of time was acting in so many movies and this should not spoil the story there. It was a tough task for the crew and the actor but the actor was determined and though he was doing 3 or 4 films that were at various stages on floors, he still took this risk and came out with flying colours.

Screenplay writing and character etching were done easily but when it came to picturisation, it was real difficult. The make up became very tough on NT. He would literally shout with ire due to the pain. Whoever goes into the makeup room other than the make up man would get a round of “compliment” from him. So even ACT used to avoid going to the make up room while NT was there. But though he would show his anger, when it came to executing the performances, he spelt magic. Of course knowing him and his ability it was child’s play for him.

ACT – HIS SPECIAL SCENES

There were certain scenes that were special. The hospital scene between the father and the Doctor and again the hospital scene between the elder son and the doctor. Both had its moments where the lead characters go through the gamut of emotions. While the father character that is full of hope and joy about the new arrival suddenly undergoes a sea change when his expectations are turned upside down, the son has a single point agenda. Father’s despair, his pleading to the doctor to do away the child, his hurt of being misunderstood by his dearest friend were all shown with a touch of grace and majesty as the character was from a high society background. Compared to this, the son’s character is raw and has lots of pent up anger against his parents, against the society and what not. So he comes out as brash in his behaviour. He even tries to use force to make things happen his way whereas his father had tried to use money as the force for getting things done. But both characters are angered easily. The right hand finger gesticulation and the pat pat sound of the legs with the shoe along with a loud let out shout of Doctor done by both characters still remain etched in viewers mind. ACT recalls both the time he enjoyed the scene as a fan rather than a director.

Connected with the song that we are discussing, there is a scene. Having seen a glimpse of the “thief”, father comes to his old friend’s house. He enters the house and is greeted by “Yaaru”. The friend stands at the balcony and looks down. It was planned that way. The father though out of desperation and feeling that his son should not encounter the difficulties he faced, had asked the Doctor to away with the child. So he is guilty and stands beneath. The Doctor on the other hand had not done the crime he was asked to do and so by the high moral ground stands at the top. There starts a tug of war and the doctor makes full use of the situation and tries to embarrass his one time friend. The friend who is at the receiving end bears all these because he is desperate to know about his son. Finally the good old friend relents and accepts the blank cheque for the son. After this the father turns and walks back only to stop, turn slightly and on hearing a musical note emanating from a sitar tries to identify the direction, wants to find out whether it is his son but hesitates with guilt and self pity blocking his mouth. When his friend fully knowing what he is looking for still asks innocently “Enna Shankar?” and Shankar fumbles for an answer and walks away. A class scene and again one must note that Major as Doctor had a meaty share of the scene. Major was very happy and he thanked ACT for giving him a scene of substance. ACT had told him that the screenplay required such a scene and there he had to take the lead. ACT had done it for betterment of the movie and he had also added that no hero other than NT would have allowed such a scene for his co-artist.

The next scene is the most famous one of the movie. All the three characters coming in a single frame. Here the entire unit was geared up for the picturisation. NT came to the studio and was doing the make up. As usual ACT avoided him and Aroordas had gone in to brief about the scene and the dialogue. Normally the dialogue writer used to read the dialogues and NT would listen with his eyes closed. Once it is completed he would ask the dialogue writer to do it again. He would then get ready and the dialogues would simply flow in the sets. He normally doesn’t interfere in dialogues and would always suggest something if only it is required. Here there was one dialogue which the son character speaks accusing the father. Initially NT was hesitant to speak this and asked Aroordas to change it. But Aroordas told him that it is the character of Shankar, which speaks, and gets this revert and not Sivaji Ganesan. NT agreed and went ahead.

ACT’S OWN ASTONISHMENT

The father and son argue about an incident happened 25 years ago with the father in defensive mood. At that time the younger son walks in and walks away with the blank cheque. Not expecting a bounty like this he happily blows a kiss towards his father for which the elder son reacts by banging the almirah silently. These were filmed using masking (i.e.) divide the film into 3 parts and shoot them separately. So the film was divided, one part open and two parts closed, younger son blew the kiss, cut. Second part opened and the other two shut, NT changes his make up and comes as father and looks helplessly, cut. Now the last part is open, NT changes to elder son and bangs the almirah. ACT recalls they were confident that NT had done it with a fine timing and synchronization. But only when they washed and developed, they saw how well it has synced. It had come so naturally without resorting to any editing. ACT took just a day and a half for shooting this scene. People who are aware of how difficult it was to shoot a triple act in the masking method were awe struck when they learnt it was done in 11/2 days. But the assistant directors of ACT felt that it had become a bit lengthy and the scene may not be appreciated in the theatre. Though ACT was sure about the scene, he told the assistants to keep the edited portion ready and he would come and see. ACT saw the scene at 4.30 am in the morning. He timed the scene. It was coming to 7 minutes. He asked them to play the scene second time and he was deeply engrossed. After viewing it he remarked “ஏம்பா, மூணு பேரும் நல்லாதானே பண்ணியிருக்காங்க! இதிலே யாரை கட் பண்ணறது?” After telling this he realized with shock that he had uttered a blunder. Where is the question of three artists when all the three are one and the same. ACT decided that if he the director, who had filmed the scene for 1 1/2 days, can react like this by just watching the raw edited portion, then the public would feel they are all three different people and the scene is going to be the “The Scene “ of the movie. How well he was proved right.

Now coming to the songs, they decided upon 6 sequences and gave it to MSV- Kannadasan duo. There would be 4 songs involving the younger son and 2 for the elder son. The two songs for the elder son were sandwiched between the first and second half of the movie. The composition took place.

SONGS COMPOSITION

The younger son who has gone on a vacation meets a girl and tries to woo her by all means. He chances upon the girl who along with her friends had come for a picnic. He slowly woos every girl by enacting as if he is in love with her. Kannadasan came up with காதல் மலர் கூட்டமொன்று and the same was picturised in Sathhanur dam. NT’s walk with the roll of his hips and Kannadasan’s word play (வக்கிலாத்து வசந்தா , ஜப்பான் ரிடர்ன் ஜெயந்தி ) made this song a great hit.

A song that is initially sung by the orphanage head and later repeated by the elder son. A song till this day is a super hit. After Naanum Oru Penn that featured Kanna Karumai Nira Kanna, ACT, as a sentiment used to have a Krishnan song wherever it is possible or at least show Krishna’s deity. Here he got a great opportunity and when the lyrist happens to be Kannadasan, the song simply flowed. MSV came up with a tune and Kannadasan simply filled it up with Krishnas. Yes, கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா reverberated in the auditorium. One must add that when the movie released, the fans viewing the Opening show were shocked when they saw Nagaiah starting to sing the song and immediately என் கேள்விக்கென்ன பதில் came to their minds. But within minutes it transpired that it was used for showing that the boy had grown up as a man. In fact there were so many discussions on the song that some fans even came up with the statistics that the word Krishna is being uttered 33 times in the song. (I have not counted).

Then there was the inauguration of Hotel by the younger son and he sings welcoming the guests. அன்புள்ள நண்பரே! அழகு பெண்களே was recorded and NT by his sheer style made the sequence enjoyable.

Again a hotel song when the heroine in order to get his man or to bring out the possessiveness in him does a dappankuthhu song. கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ served the purpose and it was a pleasant surprise to hear Susheela doing it and coming out with flying colours (it is a LR Eswari domain)

Then the only love duet of the movie. Of course it was included for the sole purpose of having a duet and since the emotional quotient was more in the second half, this duet காதலிக்க கற்று கொள்ளுங்கள் was more for relaxing.

Earlier we were talking about the temple scene where the son goes to meet the mother. People would remember a background song by Seerkazhi. Actually when the shooting took place there was no song. They never thought of a song and if you check, it would consist of 7 to 8 shots with a mix of close ups and mid long shots. ACT used the powerful eyes of NT to the hilt. He had come to the temple covering his head and face (mainly to hide his cheek) with a shawl and only his eyes are visible. It shows a myriad of emotions. தாய் பாசம் என்னவென்றால் என்னவென்றே தெரியாத ஆனால் அந்த பாசத்திற்காக அன்பிற்காக ஏங்கும், அம்மாவென்று தெரிந்தும் அம்மா என்று அழைக்க முடியாமல் தவிக்கும், என்னை தெரிந்து கொள்ளம்மா, என் மேல் அன்பு காட்டம்மா என்று கெஞ்சும் அந்த விழிகள், அது அந்த தாயின் மனதை தாண்டி அவள் அடிவயிற்றில் சென்று என்னோவோ செய்ய அதை தாங்க முடியாமல் அந்த தாய் தவிக்க, என்ன கவிதையான காட்சி! [It is pertinent to add here that Mani Rathinam who had this scene etched in mind used the same format with slight differences in his Dalapathi with Rajini and Srividya]. Following this the scene shifts to the house where the mother expresses her feelings to her husband. Here the dialogue writer and director brought out the mother in her by a simple dialogue. Normally such persons invoke a fear in your hearts. Therefore when the husband asks ஏதாவது பயந்திட்டியா for which she shoots back நான் ஏன் அவனை பாத்து பயப்படப்போறேன்? Here the mother who had him in his womb for 10 months speaks out. Will any mother be afraid of her son?

Watching both the scenes together at the time of final editing, ACT felt that a short song would be very much appropriate for the scene. So Kannadasan and MSV were shown the filmed sequence and told that a song is needed for the same. Thus was written, tuned, recorded and included. Since it was done at the last minute, the name of Seerkazhi could not be included in the title cards (you can check this).

SONG & RECORDING

Now let us come to our song. ACT very clearly told Kannadasan and MSV that this song should convey the mood of the character. He who thought that he is an orphan had found out that he has mother, father and brother. He goes and meets them all. His joy is boundless and he doesn’t know how to express his feelings. He simply pours his heart out. When MSV heard about this, he decided it should be lyrics first and then tune next because, trying to bring up the emotions within the frame of the tune would take away the life of the song. He told Kannadasan to write. Kannadasan did not bother to think and started telling the Pallavi. Son wanted to see his mother first and so

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே

தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை .

Since lyrics were written first which was tuned later, the song was set in the pattern of vasana nadai and song. This skillfully adjusted any line that did not fit into the tune as vasana outburst and an example for this is

மஞ்சள் குங்குமம் மகாலக்ஷ்மி என் தாய் and அட ராஜா என் தம்பி வாடா.

Then Kannadasan wrote charanams for the brother and then the father. MSV tuned it to perfection and all were happy. It was decided to go for recording and TMS was fixed. Unlike earlier films, there was no debate on who should speak the vasana nadai because now it was clear that TMS would be the best choice and TMS spoke the dialogue type lines.

Here special mention should be made regarding TMS. Take this song. You can feel the joy and unbridled happiness of the character. Think about the scenario. There was no one who could be substituted for TMS, if the hero was NT. (This was in 1969). So by default, TMS was singing all the songs for NT. But that did not make him complacent and he after understanding the protagonist’s emotion in each and every film sang according to the needs. Even here the lines சந்தித்தேன் நேரிலே! சந்தித்தேன் நேரிலே!, see how much difference he brings in between the two uttering. Though both are same, the tone completely changes conveying the right mood to the audience. By all accounts, TMS simply breathed life into the song.

PICTURISATION

Now came the picturisation part. This was planned in the set erected as Doctor’s home. But NT was acting in many films and his call sheet had more than 2, 3 schedules per day. He had given some days in between other shooting. So to honour the commitment given earlier, this shooting took a break and so the set was dismantled. After 6 months, the same set was re erected. By this time most of the shooting was completed. Only the song and some patchwork were required to be completed. It was decided to go for the shooting.

NT came to the set and discussed with the director. ACT was of the view that the sequence should exhibit the roller coaster drive the character undergoes. It was decided to use the chandeliers that would show NT swinging in them by holding on to the handles and his somersault from a height attracted many audience. Though such things were used in stunt scenes, using the same in song sequence was a novel one and this song provided the basis for it.

Kannan the character talks about the beauty of his mother and at the same time expresses his antipathy towards his own face. So for that line அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்? ஆ, NT asked ACT to suggest a gesture, which would convey the exact impression. ACT suggested that NT spit on the mirror and this went down very well with the audience. The character would climb up and down the staircase in one moment in ecstasy and the next moment
his concern about the family would come out when the final line தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே is sung. You must see NT raising his both hands upwards and gesticulating, with the camera catching him from the low angle.

As said earlier, the song was recorded earlier but the shooting took place much later. This movie was released in Sep 1969 and by this time Annadurai had passed away and MuKa had become the CM. So when the song was picturised, NT who had a special affection for Anna (we had discussed the Nalamthaana song and Uyarndha Manidhan function) did a shot. He would kneel down on a round bed and with arms raised upwards would shout “Anna!” thrice. The camera would have captured him from the top angle. That this was done as an after thought would be evident when NT himself in his own voice say Anna thrice, which should make it clear that it was not recorded earlier. Even in the film Enga Mama released subsequently (1970) after this, he would name one of the children as Anna and would speak proudly of him. But in the records (songs) this Anna would not be there.

RELEASE

This movie was completed and hit the screens in 1969. That was the year when NT had almost one release every month totaling 9 for the year. So when Deiva Magan was readied for release on September 5th, even the fans were little bit worried about it. Because NT’s “Niraikudam” had hit the screen on 8th August and Sep 5 was just 4 weeks away. Not only that, NT’s “Thirudan” was scheduled for Oct 10th. Irony was ACT himself was the director of Thirudan, produced by Balajee. To top it all “Sivandha Man(n)” had been planned for a Deepavali release (Nov 9th, 1969). But all these things could unfaze neither ACT nor NT. Even otherwise ACT was never bothered about competition and in fact he had always done that even with other NT films releasing on the same day. He released his Iru Malargal, a family story against a rollicking entertainer Ooty Varai Uravu (both released on Deepavali day of 1967) and both films tasted success. Same way for 1970 Deepavali, ACT’s Engirundho Vandhal came along with Sorgam and again both ran for 100 days. He had even the courage to release his Bharatha Vilas, one week ahead of Raja Raja Chozhan and still cornered success.

So having decided to release it on Sep 5th, they went ahead and released. They placed belief on the audience and were rewarded. In spite of all tough competitions, Deiva Magan became a big hit and celebrated 100 days.

SIGN OFF

Before signing off, here is my take. My cousin and I went to see the movie on Sep 7th, Sunday at Madurai – New Cinema for the morning show. There was a sea of humanity in front of the theatre and we couldn’t get the tickets. We somehow managed to squeeze ourselves into the theatre and straight away went to the office room. We saw the manager of the theatre and used our grand father’s name (He was with Indian Express) and the manager probably amused by two school students seeking tickets was kind enough to issue tickets. We came out of the room as if we have conquered something and saw the movie. Even at that age the film simply bowled us over. When we came out after the movie, I thought to myself that I would revisit the movie again. I was right and the no of times I had revisited this classic in various places during all these years is countless.


Here is the lyric

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே

தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை

கண்டு கொண்டேன் அன்னையை

மஞ்சள் குங்குமம் மகாலக்ஷ்மி என் தாய்

சந்தித்தேன் நேரிலே! சந்தித்தேன் நேரிலே!

பாசத்தின் தேரிலே

(தெய்வமே --)

அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்? ஆ

முத்து போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்

ஓடினேன்! ஓடினேன்!

அட ராஜா என் தம்பி வாடா

அண்ணா! அண்ணா1 அண்ணா!

அண்ணா என சொல்வான்னென

அண்ணா என சொல்வான்னென

பக்கம் பக்கம் சென்றேன்

அண்ணா என சொல்வான்னென

பக்கம் பக்கம் சென்றேன்

குழந்தை என கையை கடித்து விட்டது.

போடா போ

அன்னையை பார்த்த பின்

என்ன வேண்டும் தெய்வமே


இன்று பார்த்த முகம்

என்றும் பார்க்க வேண்டும் தெய்வமே

கண்ணிரினில் உண்டானதே பாசம் என்னும் தோட்டம்

கண்ணிரினில் உண்டானதே பாசம் என்னும் தோட்டம்

விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது.

போடா போ

தந்தையை பார்த்த பின் என்ன வேண்டும் தெய்வமே

தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே

வேரில்லாமல் மரமா

மரமில்லாமல் கிளையா

கிளையில்லாமல் கனியா

எல்லாம் ஒன்று.

(தெய்வமே --)

அன்புடன்

eehaiupehazij
7th May 2014, 05:57 AM
Simply superb and Marvelous Murali! Your writings of Deiva Magan are as moving as the movie itself. Particularly your narration of the scene of the movie.... we also used to describe at that time as 'moonu sivaji' three sivajis spontaneously forgetting the fact that all the three were just a trinity of one God... Sivaji Ganesan! Thanks for enthralling us with this nostalgia!

parthasarathy
7th May 2014, 10:06 AM
Murali:

Two things are engrossing and timeless - One is NT and especially his "Deiva Magan" (which is closest to my heart and you and most of his fans too!) and the other one is your writing. Don't know where from you get this flow and of course the stat! What a man you are! Hats off!

Regards,

R. Parthasarathy

Russellbpw
7th May 2014, 11:09 AM
உண்மை உணரும் நேரம்

நாம் இந்த தலைப்பில் எதுவும் எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் கூட நண்பர் வினோத் போன்றவர்கள் நம்மை விடுவதாக இல்லை.

சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை எங்க வீட்டு பிள்ளை மூன்று திரையரங்குகளிலும் சேர்த்து 573 நாட்களில் பெற்ற வசூல் Rs 13,23,000 சொச்சம்.
அதே நேரத்தில் அதே 1965-ம் ஆண்டில் வெளியான திருவிளையாடல் சென்னை நகரில் அதே போல் மூன்று அரங்குகளில் ஓடிய 537 நாட்களில் [அதாவது எங்க வீட்டு பிள்ளையை விட 26 நாட்கள் குறைவு] பெற்ற வசூல் Rs 13,82,002.91 p. அதாவது சுமார் 60,000/- அதிகம்.
அதே போல் மதுரை சென்ட்ரலில் 100 நாட்களில் எங்க வீட்டு பிள்ளை பெற்ற வசூல் Rs 2,78,000/- சொச்சம்.
மதுரை ஸ்ரீதேவியில் திருவிளையாடல் 100 நாட்களில் பெற்ற வசூல் Rs 2,84,000/- சொச்சம். ஒரு வேளை இதைத்தான் RKS குறிப்பிட்டாரா என்று தெரியவில்லை.

RKS இப்படி பதிவு இட்டவுடன் நண்பர் வினோத் அவர்கள் கோபமாக வந்து பதில் பதிவிடுகிறார். அதன் மூலமாக இரண்டு செய்திகளை வலியுறுத்துகிறார். அதில் முதல் செய்தி அல்லது முதல் பாயிண்ட் என்னவென்றால்

எங்க வீட்டு பிள்ளை வசூலை அடிமைப் பெண் படம்தான் முறியடித்தது என்பதாகும். அதற்கு ஆதாரம் இதோ என்று சேலம் மாவட்ட எம்ஜிஆர் ரசிகர் மன்றம் வெளியிட்ட நோட்டிஸை பதிவிடுகிறார். ரசிகர் மன்றம் அடித்த நோட்டிஸ். சரி அது 100% சரியானது என்றே ஒப்புக் கொண்டு விடுவோம். இங்கே என்ன சந்தேகம் என்றால் எங்க வீட்டு பிள்ளை வசூலை அடிமை பெண் முறியடித்து விட்டது என்று சொன்னால் எங்க வீட்டு பிள்ளையின் வசூல் விவரங்களை கொடுத்து விட்டு அதை இது தாண்டி விட்டது என்று சொல்ல வேண்டும். அப்படி எதுவும் அந்த நோட்டீஸில் என் கண்ணுக்கு தென்படவில்லை. அப்படியிருக்க அதை இது முந்தி விட்டது என்பது எந்த அடிப்படையில்?

நண்பர் வினோத் அடித்து சொல்லிய இரண்டாவது செய்தி அல்லது பாயிண்ட் என்னவென்றால் 1956 முதல் 1977 வரை எம்ஜிஆர் அவர்களின் 10 படங்கள் மொத்த வசூலில் ருபாய் ஒரு கோடியை தாண்டியது என்றும் இதை பல பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன என்றும் சொல்கிறார். [பத்திரிக்கையில் செய்தியாக வெளியாவது எந்த வகை ஆதாரத்தை சேர்ந்தது என்பது என் சிற்றவிற்கு தெரியவில்லை]. சரி இந்த கூற்றில் எத்தனை சதவிதம் உண்மை என்று பார்ப்போம்.

இவர்கள் சொல்லும் 10 படங்களில் நிச்சயம் எங்க வீட்டு பிள்ளையும் அடிமைப் பெண்ணும் அடங்கும். சரி, அடிமை பெண்ணின் வசூல் விவரங்களை மாவட்ட வாரியாக இவர்கள் தொகுத்தளித்திருக்கும்

இந்த நோட்டிஸின்படி தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களும் கர்நாடக மாநிலமும் சேர்த்தால் வரும் மொத்த வசூல் Rs 66,27,563.71 p. கேரளத்தின் விநியோகஸ்தர் பங்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் உத்தேசமாக மொத்த வசூலுக்கு மாற்றி அமைத்தால் 70 அல்லது 71 லட்சம் வரும். தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் Rs 58,67,348/- வருகிறது.



அதற்கு பின் ஓடக் கூடிய ஊர்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட அவை அனைத்தையும் சேர்த்தாலும் கூட [கர்நாடகம் + கேரளம் சேர்த்தாலும்] மொத்த வசூல் ஒரு கோடியை தாண்டுமா என்பது பெரிய கேள்விக்குறி. காரணம் மெயின் சென்டர்களில் சுமார் 60 லட்சத்திற்கும் கீழே வசூல் செய்த படம் B & C சென்டர்களில் 30 லட்சம் வசூலிப்பது அதுவும் 69-70 காலகட்டங்களில் மிக மிக கடினமான விஷயம்.என்பது விநியோகத் துறையில் பல வருடங்களாக ஈடுபட்டிருக்கும் நண்பர்களுடன் நெருங்கி பழகியவன் என்ற முறையில் நன்றாக தெரியும்.

[இவர்கள் என்ன? எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனமே அடிமை பெண் 100 வது நாள் விளம்பரத்தில் இது எங்க வீட்டு பிள்ளையின் 25 வார வசூலை முறியடித்து விட்டது என்று சொல்லியிருந்தனர்] அடிமை பெண்ணே ஓடி முடிய ஒரு கோடியை எட்ட முடியவில்லை எனும் போது எங்க வீட்டு பிள்ளை எப்படி ஒரு கோடி வசூல் செய்திருக்கும்?

இவர்கள் அடிக்கடி சொல்வது மதுரை வீரன் ஒரு கோடி வசூல் செய்தது.
அதை நாடோடி மன்னன் முறியடித்தது,
நாடோடி மன்னனை எங்க வீட்டு பிள்ளை தாண்டியது,
எங்க வீட்டு பிள்ளையை அடிமை பெண் தாண்டியது என்பார்கள்.

இப்போது இவர்களே கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி தெரிய வருவது என்னவென்றால் இதில் எந்தப் படமும் ஒரு கோடியை தொடவில்லை என்பதுதான். 1969-ல் இந்த வசூல் என்றால் 1958, 1956-ல் அன்றைய டிக்கெட் விலையை அனுசரித்து எந்தளவிற்கு வசூல் வந்திருக்கும் என்பதும் நம்மால் யூகிக்க முடிந்ததே.

நீங்களே ஒப்புக் கொள்ளும் உண்மை நிலை இவ்வாறிருக்க நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மீது சீறி பாய்வது சரிதானா என்பதை அந்த நண்பர்களிடமே விட்டு விடுகிறேன்.

அன்புடன்

Dear Sir,

This is an excellent statistical information based on the collection data published in the RASIGAR MANDRAM NOTICE.
Every time, when such collection information is published here...or written in the thread, We do not have any objection whatsoever, if they mention only "Our God's Collection Record" .

It has become customary habit of them whenever they write something, they mention "NO OTHER ACTOR" !
as if there was NO ACTOR in TAMILNADU..! WE DO NOT HAVE ANYTHING AGAINST THEM PRAISING THEIR GOD...BUT PHRASES LIKE "NO OTHER ACTOR" etc., etc., they cannot blindly say without any proper published authentic Record.

When i say proper published record, i mean the one that is published in UNBIASED...NEUTRAL...dailys...and NOT MAGAZINE LIKE THIRAI ULAGAM & in our CASE MADHIOLI.

We cannot also publish any record of Madhioli because it favours our Nadigar Thilagam...So, we ourselves dont consider the information are valid.

Otherwise, I do not have anything against anybody. Am giving my views only for biased statements till now & Neutral people who reads what am writing will VOUCH for me & am sure about it !

RKS

uvausan
7th May 2014, 11:17 AM
நகைச்சுவையின் உச்சகட்டம் :lol2::lol2:

பொம்மையில் 1971இல் வந்ததாக "வாசகர் கண்ட நட்சத்திரம்" என்ற தலைப்பில் ஒரு பேட்டி அந்த திரியில் இடம் பெற்றுள்ளது . அந்த பேட்டியை பற்றி நான் அதிகமாக கூற விரும்பவில்லை - நகைச்சுவைக்கு சிறிது கூட பஞ்சம் இல்லை இந்த பேட்டியில் - இதில் mt , nt யை பற்றி கூறும் இடத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன் - இது அவர் உண்மையிலேயே கூறியிருப்பரா என்பது சந்தேகமே !!

சின்ன அண்ணாமலையும் , ராமண்ணாவும் mt யை சந்தித்து அவரவர்கள் இயக்கம் "சிவாஜியின் வரலாறு" என்ற படங்களில் mt - "சிவாஜி " யாக நடிக்க வேண்டும் என்று மண்டாடினார்களாம் ! Mt மறுத்து விட்டாராம் - அண்ணாவிடம் mt யே முந்திக்கொண்டு தான் மறுத்த விஷயத்தை எடுத்து சொன்னாராம் - உடனே அண்ணாவும் " "நீங்கள் எடுத்த முடிவு சரியே , ஏற்கனவே சிவாஜி என்கின்ற பட்டத்தை தம்பி கணேசனுக்கு கொடுத்துவிட்டது நமது கட்சி - அந்த பட்டம் அவருக்கு நிலைச்சு இருந்தால் தான் நாம் கொடுத்த பட்டத்திற்கு கெளரவம் இருக்கும் " என்று சொன்னாராம் - இதைவிட சுவையான கற்பனையும் நகைச்சுவையும் இருக்க முடியுமா ?

Mt யை பற்றி எல்லோருக்கும் தெரியும் - அவருக்கு ஓவ்வாத பாத்திரங்களில் நடிக்கவே மாட்டார் - சிவாஜி யாக நடப்பது , பேசுவது , கர்ஜிப்பது , பல பக்கங்களின் வாசனைகளை மனப்பாடம் செய்வது - அவருக்கு ஒரு விஷ பரிச்சை என்பதை அவரே உணர்ந்து உள்ளார் - சங்கர் mt யை வைத்து ஒரு படம் எடுக்கும் போது சில காட்சிகளில் நடிப்பு சரியாக வரவில்லையாம் - சங்கர் முகத்தில் ஆழ்ந்த சோகம் - அதை உணர்ந்து கொண்ட mt , சங்கரிடம் " நீங்கள் யாரை மனதில் வைத்து கொண்டு வருத்தபடுகிறீர்கள் என்று எனக்கு தெரியும் - ராமச்சந்திரன் இடம் என்ன கிடைக்குமோ அதை மட்டும் எதிர் பாருங்கள் " என்று சொன்னவரா சிவாஜி வேடத்தில் நடிக்க ஒப்பு கொள்வார் ?? - அண்ணா யாரை சிவாஜியாக போடலாம் என்று வருத்தப்படும் வேளையில் , சிவாஜியே நேராக வந்திருந்தாலும் அப்படி நடித்திருக்க முடியாது என்பதை உலகத்திற்கு எடுத்து சொன்னவரல்லவா நம் தலைவர்

தன் இயலாமையை மற்றவர்களை மட்டம் தட்டுவதற்காக mt உபயோகித்திருக்க மாட்டார் என்பது தான் என் கருத்து - அதனால் இப்படி ஒரு பேட்டி எடுத்ததாக சொல்வதே உண்மைக்கு புறம்பாடாக உள்ளது - அதே சமயம் மனம் விட்டு சிரிக்கவும் இந்த பேட்டி உதவியாக இருந்தது.

Russellbpw
7th May 2014, 11:19 AM
பதிவிடும்போது "எங்கள் தெய்வத்தின் வசூல் சாதனை" என்று மட்டும் பதிவிட்டால் எந்த பதில் பதிவும் வரபோவதில்லை.
அதை விடுத்து, எந்த நடிகரும்...எந்த நடிகரின் படமும் ...தென் இந்தியாவிலயே, உலகத்திலயே ...என்ற ரீதியில் பதிவிட்டால்...எப்படி பதில் பதிவு பதிக்காமல் இருக்கமுடியும்?

ரசிகர் மன்ற நோட்டீஸ் நாம் பதிவு செய்தால் ரசிகர் மன்ற நோட்டீஸ் எந்தளவுக்கு நம்பகத்தன்மை வாயின்தது என்று அவர்கள் எழுதுகிறார்கள்.
அனால் அதே நோட்டீஸ் அவர்கள் பதிவிட்டு நாம் இதை திரும்ப கேட்டால் நாம் குழப்பம் விளைவிக்கிறோம் என்றும் கூறுகிறார்கள். இது என்ன ஞாயம் ?

நம் ஞாயமான கேள்விகள் எப்போதுமே இவர்களுக்கு நகைசுவயாம், இவர்கள் பதில்கள், கேள்விகள் நாம் நகைச்சுவையாக எடுத்தால் குற்றமாம் ...என்னவென்று சொல்வது !

uvausan
7th May 2014, 11:20 AM
Murali

"People may FORGET what you SAY. People may even FORGET what you DO. But they will NEVER Forget HOW you made them FEEL."

You made all of us feel proud of you
thanks

Russellbpw
7th May 2014, 11:29 AM
:lol2::lol2:

உடனே அண்ணாவும் " ஏற்கனவே சிவாஜி என்கின்ற பட்டத்தை தம்பி கணேசனுக்கு கொடுத்துவிட்டது நமது கட்சி -



அறிஞர் அண்ணா கூறியதாக வெளியிட்டிருக்கும் "சிவாஜி பட்டம் நம் கட்சி கொடுத்தது" அதுவே ஒரு மிக தவறான ஒரு விஷயம்.

"சிவாஜி" என்ற பட்டம் எந்த கட்சியும் நடிகர் திலகத்திற்கு கொடுக்கவில்லை. தந்தை பெரியார் அவர்கள் அவர்கள் வாயால் கொடுத்த பட்டம். ஒரு தனி பெரும் மனிதர் கொடுத்த பட்டம்....அன்று முதல் தான் ஒரு நடிகர்களை கூத்தாடி என்று அழைக்கும் பழக்கமும் அடியோடு கைவிடப்பட்டது. கலை துறையை சேர்ந்தவர்களுக்கு சமூகத்தில் இதன் மூலம் ஒரு நல்ல மரியாதை கிடைக்க வழி வகை செய்தவர் முதன் முதலில் நம் நடிகர் திலகம்தான் !

காரணம் "கூத்தாடி" என்று அழைப்பதை வாடிக்கையாக கொண்ட தந்தை பெரியாரே ஒரு நடிகருக்கு சிவாஜி என்ற பட்டம் கொடுத்தார் என்பது தான் அன்றைய நாளில் மிக பெரும் பேச்சு எங்குபார்த்தாலும். மேலும் அதற்க்கு பிறகு தந்தை பெரியார் பொது மேடைகளில் கலைதுரயினரை "கூத்தாடிகள்" என்று அழைபதையும் கைவிட்டார் !

சாதனை என்றால் இது தான் உண்மையான உலக கௌரவ சாதனை. - நிகழ்த்தியவர் ஒரே ஒருவர் - அவர் நம் நடிகர் திலகம் !

அதை பத்திரிகையில் செய்தி வெளியிட்டவர்கள் இவர்கள் கட்சியை பற்றி தம்பட்டம் அடித்து கொள்வதற்காக வெளியிடிருக்கிரர்கள் என்பதே சரி !

uvausan
7th May 2014, 11:37 AM
பதிவிடும்போது "எங்கள் தெய்வத்தின் வசூல் சாதனை" என்று மட்டும் பதிவிட்டால் எந்த பதில் பதிவும் வரபோவதில்லை.
அதை விடுத்து, எந்த நடிகரும்...எந்த நடிகரின் படமும் ...தென் இந்தியாவிலயே, உலகத்திலயே ...என்ற ரீதியில் பதிவிட்டால்...எப்படி பதில் பதிவு பதிக்காமல் இருக்கமுடியும்?

ரசிகர் மன்ற நோட்டீஸ் நாம் பதிவு செய்தால் ரசிகர் மன்ற நோட்டீஸ் எந்தளவுக்கு நம்பகத்தன்மை வாயின்தது என்று அவர்கள் எழுதுகிறார்கள்.
அனால் அதே நோட்டீஸ் அவர்கள் பதிவிட்டு நாம் இதை திரும்ப கேட்டால் நாம் குழப்பம் விளைவிக்கிறோம் என்றும் கூறுகிறார்கள். இது என்ன ஞாயம் ?

நம் ஞாயமான கேள்விகள் எப்போதுமே இவர்களுக்கு நகைசுவயாம், இவர்கள் பதில்கள், கேள்விகள் நாம் நகைச்சுவையாக எடுத்தால் குற்றமாம் ...என்னவென்று சொல்வது !

அன்புள்ள ரவிகிரண் - உங்கள் ஆதங்கம் சரியே - இருந்தாலும் ஒரு நகைச்சுவை திரியை நீங்கள் ஏன் இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்து கொள்கிறீர்கள் என்று புரிய வில்லை - ஒரு நகைச்சுவையை ஆராய கூடாது - நமக்கு sense of humour குறைந்து விட்டது என்றுதான் அர்த்தம் - நீங்கள் மறுப்பு பதிவுகள் போட போட , அவர்களுக்கு உற்ச்சாகம் அதிக மாகிறது - நம் பதிவுகளுக்கும் ஒரு மரியாதை கிடைகின்றதே என்ற அற்ப சந்தோஷத்தில் மீண்டும் மீண்டும் பொய் சொல்வதற்கும் , கற்பனை குதிரையை தட்டி விடுவதிலும் தன்னை தயார் படுத்தி கொள்கிறார்கள் - சொல்லிவிட்டு போகட்டுமே!! , நம் தலைவரின் புகழில் .0000000001% கூட அவர்களால் குறைக்க முடியாது - பூனைக்கு புலி வேடம் போட்டு அது உறும்பும் , கர்ஜிக்கும் , மானை வேட்டையாடும் என்று சொல்பவர்களின் வார்த்தைகளில் உண்மை புதைந்து இருக்குமா என்று அலசாதீர்கள் - உங்கள் energy இந்த திரிக்கு மிகவும் தேவை

abkhlabhi
7th May 2014, 12:20 PM
SS screen IDOL See 10th page :
http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-10-things-you-probably-didnt-know-about-rajinikanth/20140507.htm#10

Russellbpw
7th May 2014, 12:36 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps816f9173.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps816f9173.jpg.html)


ஜெயா டிவி ஒளிபரப்பிய , திரு ரஜினிகாந்த் அவர்களை நகைச்சுவை நடிகர் திரு விவேக் பேட்டிகண்டபோது விவேக் ரஜினியிடம் கேட்ட கேள்வி

கேள்வி - திரை உலகில் நீங்கள் ஸ்டைல் மன்னன் என்று கூறுகிறார்களே .

அதற்க்கு திரு ரஜினியிடம் இருந்து வந்த உடனடி பதில் -

பதில் - இல்லை !
திரை உலகில் ஸ்டைலை முதன் முதலில் கொண்டுவந்தது சிவாஜி சார் தான் !

இதை திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஆணித்தரமாக அடித்து கூறியது இந்த உலகமே பார்த்த ஒன்று..!

மற்றவருடைய திறமைகளை, சாதனைகளை தனதாக்கி கொண்ட, கொள்ளும் நடிகர்கள் மத்தியில் ரஜினியின் இந்த, உண்மையை தயக்கமின்றி ஒத்துகொண்ட பண்பு பாராட்டத்தக்கது !

Russellbpw
7th May 2014, 12:51 PM
1952 தீபாவளி முதல்தான் இந்த திரை உலகம்

"நடிப்பு" என்ற ஒன்றை கற்றுக்கொள்ள தொடங்கியது !

"ஸ்டைல்" என்ற ஒன்றை உணர தொடங்கியது !

டிரெஸ்ஸிங் சென்ஸ் என்ற ஒன்றை புரிந்துகொள்ள தொடங்கியது !

"தமிழ்" என்ற ஒரு மொழியை எப்படி பேசவேண்டும் என்று கற்றுக்கொள்ள தொடங்கியது !

"நல்ல குடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்களை பார்க்க தொடங்கியது !

தம்மை போல ஒவ்வொரு கதாபாத்திரங்களை திரையில் அடையாளம் கண்டது !

திரை உலகில் பல முன்னணி கதாநாயகர்கள் ஒன்றாக ஒரே படத்தில் நடிக்க முடியும் என்று ஊர்ஜிதபடுத்த தொடங்கியது !

பல புதிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை உருவாக்க தொடங்கியது !

பல நல்ல நடிகர்களின், இயக்குனர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர காரணமாக விளங்கியது !

இவை அனைத்தும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற ஒருவரின் தனிப்பட்ட சாதனை !

திரை உலகை, திறமையாளர்களை "நான் வாழவைப்பேன்" என்று வாழவைத்த, திரை உலகிற்கு கஷ்டம் வரும்போது கை கொடுத்த தெய்வம் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !

தமிழகத்தின் பெருமை இந்த மண்ணின் மண்ணின் மைந்தன் - இந்த நன்றிகெட்ட மண் அதை மறைத்தாலும் மறந்தாலும் !

Richardsof
7th May 2014, 12:53 PM
இனிய நண்பர்கள் திரு ரவிகுமார் - திரு ரவிகிரண் சூர்யா

1971 பொம்மை இதழில் மக்கள் திலகம் அவர்கள் பொம்மை வாசகி எடுத்த பேட்டி - பதிவினை
நான் மக்கள் திலகம் திரியில் பதிவிட்டேன் .எம்ஜிஆர் அவர்களின் பேட்டியே நடக்காத ஒன்று என்றும் கற்பனை என்றும் உங்களின் தனிப்பட்ட தாக்குதலை தொடுத்து உள்ளீர்கள் . நடந்த உண்மையான பேட்டியை நீங்கள் நம்பவில்லை என்றால் என்ன செய்ய முடியும் .உங்களிடமிருந்து இப்படி பட்ட ஒரு பதிவை எதிர்பார்க்கவே இல்லை .

இப்படி விமர்சனம் செய்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால .... தொடருங்கள் .

அன்புடன்
வினோத்

Russellbpw
7th May 2014, 01:00 PM
இனிய நண்பர்கள் திரு ரவிகுமார் - திரு ரவிகிரண் சூர்யா

1971 பொம்மை இதழில் மக்கள் திலகம் அவர்கள் பொம்மை வாசகி எடுத்த பேட்டி - பதிவினை நான்
மக்கள் திலகம் திரியில் பதிவிட்டேன் .எம்ஜிஆர் அவர்களின் பேட்டியே நடக்காத ஒன்று என்றும் கற்பனை என்றும் உங்களின் தனிப்பட்ட தாக்குதலை தொடுத்து உள்ளீர்கள் . நடந்த உண்மையான பேட்டியை நீங்கள் நம்பவில்லை என்றால் என்ன செய்ய முடியும் .உங்களிடமிருந்து இப்படி பட்ட ஒரு பதிவை எதிர்பார்க்கவே இல்லை .

இப்படி விமர்சனம் செய்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால .... தொடருங்கள் .

அன்புடன்
வினோத்

எஸ்வி சார்

முதற்க்கண் பேட்டியை நான் விமர்சனம் எதுவும் செய்யவில்லை.

நான் எனது பதில் கருத்தை ஒரே ஒரு வரிக்குதான் எழுதினேன். அதாவது சிவாஜி பட்டம் நம் கட்சி வழங்கியது என்ற வரி

பேட்டியை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

தயவு செய்து நான் எழுதிய கடைசி வரி படிக்கவும். அதில் அந்த பேட்டியை வெளியிட்டவர்கள் (அதாவது அதை தொகுத்தவர் மற்றும் புப்ளிஷேர் நிறுவனம் ) அப்போதைய கட்சி தம்பட்டதிர்க்கு வெளியிட்டிருக்கலாம் என்றுதான் எழுதியிருக்கிறேன்.

மற்றபடி இப்படி ஒரு பேட்டி நடைபெறவில்லை என்று நான் ஒருபோதும் எழுதவில்லை.

தவறாக என்னை சம்பந்தபடுத்தவேண்டாம் என்று request செய்கிறேன் !

Gopal.s
7th May 2014, 01:03 PM
வினோத் சார்,

இந்த மாதிரி வெடிகுண்டு சமாசார பேட்டிகள் ஏராளம் உள்ளது.கண்ணதாசனுடையதே நிறைய.

ஆனால் எங்களுக்கு நடிகர்திலகத்தை பற்றி எழுதவே ஏராளம் உள்ளதால்,பொருட்படுத்த தக்கதாகவே இல்லாத விஷயங்களை தொடுவதேயில்லை.

ஆனால் உங்கள் நாகரிகமான அணுகல், எங்கே போச்சு என்று தேடும் வகையில் பதிவுகள் இருப்பதாக நண்பர்கள் கூறுகின்றனர்.மாற்றி கொள்ளவும்.(நான் பார்ப்பதே இல்லை)

Richardsof
7th May 2014, 01:18 PM
இனிய நண்பர் திரு கோபால் சார்

என்னுடைய பதிவுகள் என்றுமே நாகரீகமாக இருக்கும் நண்பரே . உங்களின் தனிப்பட்ட குரோதம்
ஆத்திரம் உங்களின் கண்ணை மறைக்கிறது .தனிமையில் சற்று நிதானமாக யோசித்து பார்க்கவும் .
உங்களின் கவிதையால் ஒரு நட்பு வட்டமே கிடைத்தது .வார்த்தைகள் அள்ளி விடுவது சுலபம் .
யோசிக்கவும் .

uvausan
7th May 2014, 01:19 PM
[quote


ஜெயா டிவி ஒளிபரப்பிய , திரு ரஜினிகாந்த் அவர்களை நகைச்சுவை நடிகர் திரு விவேக் பேட்டிகண்டபோது விவேக் ரஜினியிடம் கேட்ட கேள்வி

கேள்வி - திரை உலகில் நீங்கள் ஸ்டைல் மன்னன் என்று கூறுகிறார்களே .

அதற்க்கு திரு ரஜினியிடம் இருந்து வந்த உடனடி பதில் -

பதில் - இல்லை !
திரை உலகில் ஸ்டைலை முதன் முதலில் கொண்டுவந்தது சிவாஜி சார் தான் !

இதை திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஆணித்தரமாக அடித்து கூறியது இந்த உலகமே பார்த்த ஒன்று..!

மற்றவருடைய திறமைகளை, சாதனைகளை தனதாக்கி கொண்ட, கொள்ளும் நடிகர்கள் மத்தியில் ரஜினியின் இந்த, உண்மையை தயக்கமின்றி ஒத்துகொண்ட பண்பு பாராட்டத்தக்கது ![/quote]

உண்மை - ஆனால் இந்த பண்பில் 0.00000001% கூட விவேக்கிடம் இல்லை - விவேகம் இல்லாதவருடைய பெயர் விவேக் - கண்ணிலாதவன் பெயர் "கண்ணாயிரம்" என்பதுபோல் !!

ScottAlise
7th May 2014, 01:53 PM
பார்த்ததில் பிடித்தது -32

சென்ற பதிவில் 1968 ல் வந்த என் தம்பியை பற்றி எழுதி இருந்தேன் , இந்த பதிவு அதற்கு அடுத்த வருடம் அதாவது 1969 ல் நடிகர் திலகத்தின் முதல் படமான அதுவும் Multi Starrer படமான அன்பளிப்பு படத்தை பற்றி தான் எழுதி உள்ளேன்

கதை :
காட்டூர் என்ற அழகிய கிரமத்தில் வேலு (சிவாஜி ) ராஜா (ஜெய்ஷங்கர் ) இருவரும் நண்பர்கள் , ராஜா பணக்காரன் , வேலு ஏழை விவசாயி , வேலுவுக்கு ஒரு தங்கை , அந்த தங்கையை விரும்புகிறார் ராஜா , வேலு தன் நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்குகிறார் VKR யிடம் இருந்து , VKR க்கு இரண்டு வாரிசுகள் , நாகேஷ் , சரோஜா தேவி . ராஜாவின் அம்மா பண்டரி பாயை தன் தாயாக நினைத்து பாசம் காட்டுகிறார் வேலு , அவரும் அபப்டியே

ராஜா அமெரிக்காவில் படித்து வீடு ஊர் திரும்புகிறார் , அவரின் லட்சியம் தன் கிராமத்தில் அணைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதே , முக்கியமாக ஒரு ஆலை அமைப்பது அவர் லட்சியம் , பெரிய பணக்காரனாக இருபதினால் அவருக்கு தன் இலட்சியத்தை அடைவதில் சிக்கல் எதுவும் இல்லை , ஆனால் ஆலையை கட்ட இடம் இல்லாமல் தவிக்கிறார் , பெரிய விட்டு பிள்ளை கேட்பதினால் அனைவரும் தங்கள் விவசாய நிலங்களை தந்தது விடுகிறார்கள் , வேலு விவசாயம் தான் முக்கியம் என்று இடத்தை தர மறுக்கிறார் , இந்த இடம் ராஜாவின் தந்தை வேலுவின் தந்தைக்கு தர பட்டது .

ScottAlise
7th May 2014, 01:53 PM
இதனால் நட்பில் சிறு விரிசல் , இது தான் சரியான நேரம் என்று பணம் கொடுத்த VKR , மற்றும் ராஜாவின் financial advisor நம்பியார் இருவரும் , அந்த விரிசலை அதிக படுத்தி விடுகிறார்கள் . 2 நாட்களில் பணம் கட்ட விட்டால் நிலத்தை எடுத்து கொள்ள போவதாக மிரட்டுகிறார் VKR (தன் பெண்ணை காதலிக்கிறார் என்பதை அறிந்தும் ) இந்த நேரத்தில் ராஜாவின் தாய் வேலுவுக்கு பணம் தர அதை வைத்து கடனை அடைத்து விடுகிறார் , VKR வீட்டுக்கு வரும் நம்பியார் வேலு பணம் கொடுத்ததை அறிந்து , VKR அசந்த நேரமாக பார்த்து ஆபீஸ் ல் திருடிய பணத்தை மாற்றி VKR யிடம் கொடுக்கிறார் (இரண்டும் , (வேலு கொடுக்க வேண்டிய பணமும் , நம்பியார் திருடிய பணமும் ) 3000/- ரூபாய்கள் )
ஆபீஸ் ல் பணத்தை காணவில்லை என்று ராஜா தேட , நம்பியார் போலிசிடம் தகவல் கொடுக்க , அந்த நேரம் வேலு கடனை அடைத்த செய்தி ராஜாவுக்கு கிடைக்க , வேலு வீட்டில் போலீஸ் தேடுகிறது , வேலு தான் குற்ற்றவாளி என்று நினைத்து ,அவரை அவமான படுத்த வேண்டாம் என்று கொடுத்த புகாரை வாபுஸ் வாங்குகிறார் ராஜா , நொந்து போகும் வேலு நிலத்தை ராஜா பெயரில் எழுதி வைத்து ஊரை விட்டு போக முடிவு செய்கிறார் , ராஜா ஆலையை தீ வைத்து கொளுத்த முயற்சி செய்யும் நம்பியார் , வேலுவையும் அந்த ஆலைக்குள் வைத்து பூட்டுகிறார் (ஒரு மில் அதிபரிடம் ராஜா உங்க மில்லை விட பெரிய மில்லாக என் மில்லை கொண்டு வருகிறேன் என்று சொல்ல , அந்த மில் அதிபர் வைர மோதிரத்தை லஞ்சமாக கொடுத்து நம்பியாரை தன் வசபடுதி கொள்ளுகிறார் )

முடிவில் ஆலை எரிந்து போகும் பொது வேலு ராஜாவை காப்பாற்ற , நண்பர்கள் சேர்ந்து சூழ்ச்சியை முறியடித்து , ராஜா வேலு வின் தங்கையை திருமணம் செய்து கொள்ள , வேலு சரோஜா தேவியை திருமணம் செய்து கொள்ள , ஒன்றாக சேர்ந்து பொங்கல் கொண்டாட நாம் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவோம்

ScottAlise
7th May 2014, 01:54 PM
படத்தை பற்றி :

இந்த படம் பார்க்கும் போதும் , எழுதும் போதும் , பல படங்களுக்கு இந்த படம் inspiration என்று புரிகிறது , இரு நண்பர்கள் , அவர்களில் ஒருவர் ஏழை , மற்றுஒருவர் பணக்காரர் என்பது beaten to death என்று சொல்லும் அளவுக்கு சினிமாவில் சொல்ல பட்ட கதைகளில் ஒன்று . ஆனால் இந்த type கதையின் வெற்றி 100 % சதவிதம் ஒழுங்காக handle செய்யப்படும் பட்சத்தில் . படம் வந்தது 1969 ல் அதே சாயல் உள்ள படம் தலைவர் ரஜினி நடித்த அண்ணாமலை (இதிலும் நில பிரச்சனை தான் மையம் ) அண்ணாமலை படமே Khudgarz, ஹிந்தி படத்தின் ரீமேக் தான் .
இந்த மாதிரி இரண்டு பிரபல நாயகர்களை வைத்து இயக்கம் பொது , இவருவருக்கும் சம பங்கு கொடுக்கும் படி திரை கதை அமைக்க பட வேண்டும் அப்போது தான் இரு தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்த முடியும் , அதே போல் இரு ஹீரோக்கள் ஈகோ இல்லாமல் நடிக்க வேண்டும் கொஞ்சம் விட்டு கொடுத்து அப்போது தான் அதன் தாகம் திரையில் தெரியும் , இந்த காலத்தின் பாஷையில் சொல்லுவது என்றால் CHEMISTRY நன்றாக இருக்கும் .

இந்த படத்தில் நடித்து இருபதோ இரண்டு gentleman , ஒருவர் நடிகர் திலகம் , அடுத்தவர் ஜெய் ஷங்கர் , என்னக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் . இந்த பெருமை எல்லாம் இருவரயும் சமமாக balance செய்த இயக்குனர் ACT மற்றும் இரு தரப்பு ரசிகர்களின் மனநிலையை புரிந்து provoke பண்ணாத படி வசனம் எழுதிய அரூர் தாஸ் இருவரை சாரும்

முக்கியமாக screen space யை ஷேர் செய்ய ஒத்து கொண்ட நடிகர் திலகம் , மற்றும் மக்கள் கலைஞர் இருவருக்கும் ஒரு hats off .

ScottAlise
7th May 2014, 01:55 PM
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றி என்ன சொல்ல , பல பதிவுகள் எழுதியும் , அவர் நடிப்பை பற்றி எழுத bore அடிக்க வில்லை .

நடிகர் திலகம் கெளரவம் , ஞான ஒலி போன்ற பல படங்களில் அவர் ஆங்கிலம் பேசும் ஸ்டைல் அதுவும் ஒரு வித accent உடன் பேசும் அழகையும் பார்த்து இருக்கேன் , இந்த படத்தில் வருவதை போல் தப்பும் தவறுமாக அங்கிலம் பேசுவதை பார்க்கும் பொது , எப்படி இந்த பிறவி கலைஞன் மட்டும் இப்படி நடிக்கிறார் , என் என்றால் ஒரு நபர் சரியாக அங்கிலம் பேசுகிறார் என்றால் அவரால் தவறாக பேச இயலாது , அபப்டியே பேசினாலும் அது cliched அல்லது திணித்து போல் இருக்கும் ,இந்த மாதிரி இயல்பாக இருக்காது . இது எங்க சிவாஜி சாருக்கு மட்டுமே சாத்தியம்

ScottAlise
7th May 2014, 01:55 PM
தன் நண்பர் ஊருக்கு வரும் பொது அவருக்கே தெரியாமல் ஒளிந்து இருந்து பார்ப்பது , தலையில் தூண்டு போட்டு அவர் அனந்த கண்ணீர் உடன் பார்க்கும் காட்சி , நடிப்பு எதார்த்தம் . தன் நண்பன் நல்லபடியாக வந்து சேர்ந்ததுக்கு சந்தோசம் படும் காட்சியும் , தன் நண்பனை பற்றி பேசும் பொது , அவர் வந்து டேய் வேலு என்று குப்பிடும் பொது வேலவேளுது போவதும் , சின்ன முதலாளி என்று சொன்னதும் ஜெய் கோபம் அடைந்து டேய் என்று கூப்பிட சொல்ல , நம்மவர் ரொம்பவும் கஷ்ட பட்டு , பல்லை கடித்து கொண்டு டேய் என்று குபிடுவதும் , அதை தொடர்ந்து சகஜமாக பேசுவதும் , தன் நண்பன் கொண்டு வந்த கொடுத்த pant shirt யை போட்டு கொண்டு அவர் வீட்டில் போய் குதிப்பதும் சாரி ஆடுவதும் , ஜெய் மேலே இருந்து சிரித்து விட்டு , பின் தானும் சேர்ந்து கொண்டு ஆடுவதும் , அந்த பண்ட போட்டு கொண்டு நம்மவர் ட்விஸ்ட் டான்ஸ் ஆடுவதும் , பின் ராமர் லக்ஷ்மணர் என்ற வரி வரும் பொது ஜெய் சாரை தூக்குவதும் நடப்புக்கு எடுத்துகாட்டு


தன் உயிர் நண்பன் கேட்டும் நிலத்தை கொடுக்காமல் இருப்பதும் , தன் தரப்பு வாதத்தை பாமரதனமாக எடுத்து வைப்பதும் , எதோ இடத்தை கேட்டான் நான் கொடுக்கவில்லை அதற்காக சண்டை என்று ஆகிவிடுமா ? என்று அப்பாவித்தனமாக கேட்பதும் , தன் நண்பன் தன்னை திருடன் என்று நினைத்து ஒரு வித ஏளன பார்வை பார்த்த உடன் , மனம் வெறுத்து தன் காதலி , மற்றும் தங்கை இருவரிடமும் வெறுத்து போய் பேசுவதும் , என்னக்கு தங்கை இருக்குதே என்று பார்கிறேன் இல்லையென்றால் தூக்கில் தொங்கி இருப்பேன் என்று துண்டை கழுத்தில் வைத்து சொல்லும் காட்சி , brand நடிகர் திலகம். கிருஷ்ணர் நடனத்தில் நடிகர் திலகம் கிருஷ்ணராகவும் , நாகேஷ் பெண் வேடம் போட்டு ஆடுவதும் - superb , நாகேஷ் சாரின் நளினம் பெண் வேடத்தில் அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் அவர் காட்டும் dedication - veteran என்பதை நிருபிகிறது . சரோஜா தேவிக்கு படத்தில் பெரிய வேலை இல்லை .
நம்பியார் வழக்கம் போல்

ScottAlise
7th May 2014, 01:56 PM
நடிகர் திலகம் மற்றும் மக்கள் கலைஞர் combination காட்சிகள் :

மக்கள் கலைஞர் சண்டை காட்சிகளில் முத்திரை பதித்தவர் என்று நம் அனைவருக்கும் தெரியும் ,இந்த படத்தில் அவர் சிலம்பம் சுத்தும் காட்சி டாப் , அது முடியும் தருவாயில் நடிகர் திலகம் தன் சிலமப்தை வைத்து ஜெய் ஷங்கரை தடுக்கும் பொது , முதலில் இவர் மறுத்து , பின்பு ஒரு friendly மேட்ச் ஆடுவதும் , அதில் இருவரின் action பலே .
அதே போல் வழுக்கு மரம் ஏறுவதும் , போலீஸ் தன் நண்பனை கைது செய்து விடும் என்பதை அறிந்து ஜெய் சிவாஜி ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்து இது என் குடும்ப விஷயம் என்று சொல்லும் காட்சி , கிளைமாக்ஸ் காட்சி , இவர்களின் combination ல் பிரமாதமாக வந்து உள்ள காட்சிகள் . ஒரு படித்த நபர் விவசாய நிலத்தை அழித்து factory அமைக்க நினைப்பது இப்போ சர்வசாதரணமாக நடக்கும் விஷயம் - gobalilsation அப்போது அரிது

படத்தின் மினுஸ் காமெடி track , சரோஜா தேவி , சிவாஜி காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லாதது

கலப்படம் இல்லாத - முழு entertainment + கிராமத்து மனம் வீசும் படம்

ScottAlise
7th May 2014, 01:58 PM
Dear Murali sir,

Hats off for your article about Deiva Magan. Your eye for details astonishes me every time.

Also pl write about your theatre viewing experience

ScottAlise
7th May 2014, 02:01 PM
Thanks for your comments Dear Ragavan sir & chinna Kannan sir


Dear S. Vasudevan sir,

Thanks for your wishes

kalnayak
7th May 2014, 05:30 PM
விவாதக்காட்சி தொடர்கிறது (சுருக்கமாக)
பின்வாங்கிக் கொண்டதாக குற்றம் சுமத்தியவர்கள் இரவிகிரண் சூர்யா எப்போது பின்வாங்கினார் என்பதை தங்களது வழக்கமான தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தனர். திரு முரளி சீனிவாஸ் கேட்டதற்கு பதிலாக ஒருவர் மதுரைவீரன் எப்படி ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வசூலாக பெற்றதை வழக்கமான தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தார். மற்றொருவர், மக்கள் திலகம் அணியில் புகுந்து குழப்பம் விளைவிப்பவர்களை கண்டித்து தனது அணியினர் நடிகர்திலகத்தை, அவரது ரசிகர்களை சீண்டுவதில்லையென உறுதிப்படுத்தினார். இன்னொருவர் எழுந்தார் ... மதியைப்பற்றி தவறாக பல சொன்னார். சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு நதி அணியினர் அதையெல்லாம் சொல்லக்கூடுமென்று சொல்லி அவர்களைப்பார்த்து பரிதாபப்பட்டார். இதன் மூலம் மதியின் படங்கள் செய்த சாதனைகளை நிரூபித்தார். இனிமேலாவது உங்களின் தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுரைத்தார். மனமிருந்தால் பாராட்டுங்கள். குற்றத்தையே கண்டுகொண்டிருந்தால்... என்று சொல்லி, தான் மதியின் திரைப்படங்களைப்பற்றி சொல்லிய யாவும் சரியே என்று வலியுறுத்தினார். இரவிகிரண் சூர்யா 'மறப்போம். மன்னிப்போம்' என சொல்லாமல் சொல்லி மதி அணியின் நண்பரொருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறாக விவாதம் இப்போதைக்கு முற்றுப்பெற்றது.

Russellbpw
7th May 2014, 06:21 PM
நமது திரைப்படம் கெளரவம் நவீனமயமாக்கபடுவதர்க்கு முன்பே அரபு நாடுகளில் ஒன்றான குவைத் இல் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நமது நடிக பேரரசரின் படம் தான் !

இது வெறும் ரசிகர் மன்ற நோட்டீஸ் அல்ல !
நடுநிலை ஏடு ராணி யில் 1975இல் வெளிவந்த ஆவணம் !

நடிகர் திலகம் படங்கள் நவீனம் இல்லையென்றாலும் உலகெங்கும் வெல்லும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GowravaminKuwaitRani1975_zps7cde8f46.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GowravaminKuwaitRani1975_zps7cde8f46.jpg.html)

Russellbpw
7th May 2014, 06:27 PM
மதுரையில் 1972உக்கு முன் வந்த அனைத்து படங்களின் வசூலை சர்வ சாதாரணமாக ஊதி தள்ளிய எங்கள் மூக்கையா தேவர் !

நடுநிலை நாளேடு தினமணியின் விளம்பரம்......இது வெறும் ரசிகர் மன்ற நோட்டீஸ் அல்ல !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5759-1_zpsc4c2496e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5759-1_zpsc4c2496e.jpg.html)

Russellbpw
7th May 2014, 06:30 PM
50 நாட்கள் ஒரு கருப்பு வெள்ளை படத்தின் அசுர சாதனை !

ரசிகர் மன்ற நோட்டீஸ் தவிர மற்ற நடுநிலை பத்திரிகை வசூலுடன் ஒப்பிட்டு பார்த்துகொள்ளலாம் !

150 SHOWS ALL CENTERS - ALL SHOWS CONTINUOUS HOUSEFUL !!!! JUST 6 WEEKS COLLECTION is MORE THAN 30 LAKHS !!!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5758-1_zpsf6f672fc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5758-1_zpsf6f672fc.jpg.html)

kalnayak
7th May 2014, 07:08 PM
நமது திரைப்படம் கெளரவம் நவீனமயமாக்கபடுவதர்க்கு முன்பே அரபு நாடுகளில் ஒன்றான குவைத் இல் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நமது நடிக பேரரசரின் படம் தான் !

இது வெறும் ரசிகர் மன்ற நோட்டீஸ் அல்ல !
நடுநிலை ஏடு ராணி யில் 1975இல் வெளிவந்த ஆவணம் !

நடிகர் திலகம் படங்கள் நவீனம் இல்லையென்றாலும் உலகெங்கும் வெல்லும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GowravaminKuwaitRani1975_zps7cde8f46.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GowravaminKuwaitRani1975_zps7cde8f46.jpg.html)

நண்பர் இரவிகிரண் சூர்யாவே, என்ன மாற்றம் உங்களிடம். நீங்கள் கொடுக்கும் இந்த ஆதாரம் அங்கே 77-ஆம் பக்கத்தில் கொடுத்துள்ள கடைசி பதிவு ஆதாரத்திற்கு முன் செல்லுபடியாகாது என்பதை உணர்ந்ததாலா? பாருங்கள் அங்கே ஏதேனும் மாற்றமிருக்கிறதாவென்று.

uvausan
7th May 2014, 08:22 PM
இன்று அதிகமான நகைச்சுவை தேவைப்பட்டது - அதனால் அந்த சில பகுதிகளை இங்கே போடுவதில் தவறில்லை என்று நினைக்கிறன் - கோபால் சொன்னது போல நம் தலைவரை பற்றி பேசவே நேரம் நிறைய வேண்டும் - எதற்கு அங்கு தலையிட வேண்டும் ? இருந்தாலும் அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவிக்கும் போது நாம் நம் support யை அவர்களுக்கு கொடுக்கா விட்டால் , நாம் மனித தன்மை இல்லதாவர்களாகி விடுவோம்

சில பதிவுகளை பார்ப்போம்

சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.

எப்படி அழகாக சலிக்கிறார்கள் பாருங்கள் --- இப்படிப்பட்ட கற்பனை திறன் நமக்கு யாருக்காவது உண்டா - open challenge !!

தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முதலாக 33 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் மக்கள் திலகம் நடித்த மதுரை வீரன் திரைப்படம்.முதல் வெளியீட்டில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வசூலாக பெற்ற முதல் திரைப்படம் இது.இந்த படம் வெளியான 1956ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை 90 ரூபாய்.தியேட்டரில் டிக்கெட்டின் அதிகபட்ச விலை 12 அணாக்கள்.90ரூபாய்க்கு பவுன் விற்ற காலத்தில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் வசூல் என்றால் இன்றைய காலகட்டத்தில் அது ரூபாய் 210 கோடியை தாண்டுகிறது.வசூல் சக்கரவர்த்தி என்றால் அது என்றுமே எம்ஜிஆர் தான். -

ஏன் இன்னும் 137 தியேட்டர்களை விட்டு விட்டார்கள் என்று புரியவில்லை ? - If this was true then there was no need for India to have gone in for IMF loan .

திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது மகாதேவி படத்திற்கு தான்.பெங்களூர் லக்ஷ்மி திரையரங்கில் மிக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது .அந்த காலத்தில் எந்த மொழி படத்திற்கும் இத்தனை பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

இது வணங்காமுடியை கண்டு பொறுக்காமல் எழுந்த பகுதி

1958 இல் வெளியான நாடோடி மன்னன் இலங்கையில் 7 திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிய ஒரே படம்.இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.சிங்கள படம் கூட இந்த சாதனையை செய்யவில்லை என்பது வரலாற்று சிறப்பு.மதுரை வீரன் செய்த வசூல் சாதனையான ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் சாதனையை நாடோடி மன்னன் முறியடித்து ஒரு கோடியே பத்து லட்சம் வசூல் செய்தது.கர்நாடகாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.ஆந்திராவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.கேரளாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.லண்டன் தமிழ் சங்க வளர்ச்சிக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் நாடோடி மன்னன்.லண்டனில் 1958இல் 8 வாரங்கள் நாடோடி மன்னன் ஓடியது.தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், கோலாலம்பூர்,பினாங்,தைபிங்,எகிப்த்,ஜெர்மனி,பர் மா,வி யட்நாம்,குவைத்,ஈரான்,பாரிஸ் போன்ற இடங்களில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நாடோடி மன்னன் -


இன்னும் பல நாடுகள் விட்டு போய் விட்டன - pakistan , uganda , s .africa , japan etc.,

1968இல் வெளியான மக்கள் திலகத்தின் 100வது படமான ஒளிவிளக்கு இலங்கையில் 5 தியேட்டர்களில் 100நாட்களும் 2தியேட்டர்களில் 175 நாட்களும் ஓடியது.அதன் பிறகு 1974, 1979, 1984, 1993 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் திரையிடப்பட்டு ஒவ்வொரு முறையும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

அவர்களுடைய திரி - அவர்கள் என்ன வேண்டுமானாலும் , எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் - அங்கு ஒரே சட்டம் - தலைவரை புகழ்ந்து தான் எழுதவேண்டும் , எந்த படமும் தோல்வியையே சந்தித்ததில்லை - இதை தலைவரே வந்து சொன்னாலும் அங்கு ஒப்புகொள்ள யாரும் இல்லை .

இந்த மனோபாவத்தை , மனோதத்துவத்தின் மூலம் ஆராயிந்தால் அதன் முடிவின் பெயர் "extreme state of desperation " இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துகொள்ளும் நிலைமை - இது முதல் symptom - பிறகு அடுத்த நிலைமை - தன் தலைவர் இப்படியெல்லாம் சாதித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் நிலைமை - இது இரண்டாவது symptom - இப்படி இரண்டு symptoms உள்ளவர்களை கூட காப்பாத்திவிடலாம் - ஆனால் மூன்றாவது symptom மிகவும் மோசமானது - அதுதான் - கற்பனைகளை உண்மைகள் என்று சொல்லி , அதற்க்கு ஆதாரம் தர முடியாமல் மனதிற்குள் தவித்து ஒரு வெறியுடன் பதிவிடுவது - யாராவது ஒருவர் நம் கற்பனைகளை நம்ப மாட்டார்களா என்று ஏங்குவது ---

அவர்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கூட்டு ப்ராத்தனை செய்வோம் - அந்த திரியினில் நமக்கு இனிய நண்பர்கள் பலர் உள்ளனர் - NT யின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் அவர்கள் !!அவர்களின் நலம் கருதியாவது நாம் கூட்டு ப்ராத்தனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ...

Russellbpw
7th May 2014, 09:30 PM
இலங்கையில் இப்படி ஓடியது..அப்படி ஓடியது என்று கதையை இங்கு நாம் எழுதபோவதில்லை. மேலும் இது ரசிகர் மன்றம் விடும் நோட்டீஸ் அல்ல...பத்திரிகையில் இலங்கை பத்திரிகையில் வெளிவந்த விளம்பரம்....இந்தியா இலங்கை மற்றும் எந்தனாடானாலும் நடிகர் திலகம் தான் வசூல் சக்ரவர்த்தி என்று பட்டவர்த்தனமாக கூறும் ஆவணம்....! இதுபோல உண்மையான ஆவணங்கள் இருந்தால் அனைவரும் பதிவிடலாம்....

உத்தமன் படத்திற்கு முன் வந்த அனைத்து படங்களின் சாதனையை தவிடு பொடியாகி ஊதி தள்ளிய வசூல் புயல் நம் நடிகர் திலகத்தின் உத்தமன்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/UthamanSrilanka100Veerakesari230878_zpsf23bbcba.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/UthamanSrilanka100Veerakesari230878_zpsf23bbcba.jp g.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/UthamanSJADfw_zpsa5bb66e3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/UthamanSJADfw_zpsa5bb66e3.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Srilanka250Days_zps4eaacf77.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Srilanka250Days_zps4eaacf77.jpg.html)

chinnakkannan
7th May 2014, 09:42 PM
சிரிப்பு பாதி அழுகை பாதி…
*
அத்தியாயம் ஆறு
*
“சரி.. கதை நல்லா இருக்கு.. முழு நீள காமெடியா வரும்..என் கூடவே வருதே ஒரு ஃப்ரண்ட் ரோல்..யாரப் போடலாம்னு நினைக்கறே” ந.தி..கேட்க நீலகண்டன் “டி.ஆர். ராமச்சந்திரனை போடலாமா இல்ல வேற யாரையாவதான்னு ஒரு டிஸ்கஷன்.. நீங்க என்ன சொல்றீங்க..”
*
“அதான் ஒல்லியா வெடவெடன்னு இருப்பானே.. அந்தப் பையனப் போடு சூட் ஆகும்..போய் க் கேளு.. அந்த இன்னொரு வேஷம் இருக்கே ஆள் மாறாட்ட வேஷம் அதையும் இவனையே கொடு.. சரியா வரும்..” ந.தி சொல்ல பந்துலுவும் நீலகண்டனும் போய் சந்தித்தவர் யாரென்றால்…
*
சந்திர பாபு.. அவரை அவர் வீட்டில் சந்தித்து ” இந்த மாதிரி ந.தி யோட படம்.. அவரே உங்களைக் கேட்கச் சொன்னார்..நீங்க கால்ஷீட் கொடுத்தீங்கன்னா”
*
“ஓ.. மிஸ்டர் சிவாஜி (சந்திரபாபு எல்லோரையும் மிஸ்டர் போட்டுத்தான் பேசுவாராம்) சொன்னாரா..அப்ப சரியாத் தான் இருக்கும்.. நீங்க என்ன பண்றீங்க.. மிஸ்டர் சிவாஜிக்கு எவ்வளவு கொடுக்கறீங்களோ எனக்கு அத விட ஒரு ரூபா கூடக் கொடுங்க..”
*
கொஞ்ச நேரம் மூச்சு மறந்து போய் உணர்வுகள் கொந்தளிக்க பந்துலுவும் நீலகண்டனும் ஒன்றும் பேசாமல் ந.தியிடம் திரும்பி விஷயத்தைச் சொன்னார்கள்..
*
ந.தி, “ நீலா, பந்துலு,, என்ன இது.. அவன் இப்படித் தான் லூஸீத் தனமா சில சமயங்கள்ல பேசிடுவான்..விடுங்க.. அவனையே போடுங்க..அவன் கிட்ட ஃஸ்டஃப் இருக்கு.. சரியா வரும்” என்று சமாதானப் படுத்திய பிறகு தான் அந்தப் படத்திற்கு சந்திரபாபுவையும் புக் செய்தனர்..
*
அந்தப் படம் சபாஷ் மீனா..(முகில் என்பவ்ர் எழுதிய சந்திர பாபு பற்றிய புத்தகத்தில் இருந்து)

*

ந.தி வெகுஇளமை..அவருடன் நாடக நண்பனாக சந்திரபாபு.. ஆசைக்கிளியே கோபமா என் அருகில் வரவும் நாணமா – என அழகாக ந.தி பாட சந்திரபாபு அபினயிக்க.. ஆசையிருந்தா போதுமா ஒங்க அப்பா மனசு மாறுமா என்கையில் ந.தியின் அப்பா வந்து விட ( டி.பாலசுப்ரமணியன் என்ற நடிகர்) ந.தியின் துடிப்பு, சந்திரபாபு – எனப் பார்க்கையில் பீறிட்டு வந்த சிரிப்பை மறக்க முடியாது..

*

யா.. முதன் முதல் இந்தப் படத்தை தேவி தியேட்டர் ரீ ரன்னில் பார்த்தேன்.. நைட் ஷோ என நினைவு.. சாதாரண நாள்..ஆனால் ஹவுஸ் ஃபுல்..

*

பின் எஸ்.வி.ரங்காராவிடமும் அப்பாவிடமும் சேர்ந்தாற்போல் இருவர் மாட்டுவதும், பின் நடுவில் ஒரு நாடகத்திலேயே கோமாளிகள் என்ற டிராமா என நினைவு… பெற்றவனே வந்தாலும்…என்று பாடுகையில் பெற்றவரே வந்து விட ஓடி விடுவதும்..ம்ம் ஒரே சிரிப்பு தான்..
*

மாலினி ந.திக்கு ஜோடி.. ஓ.கே அழகு தான்.. சர்ரோஜாதேவி இள்ள்ளமையாக இருப்பவரை சந்திரபாபுவுக்கு ஜோடியாகப் போட்டிருப்பார்கள் ( நற நற)

*
க்ளைமாக்ஸில் ரிக்*ஷாக்கார சந்திர பாபு – நார்மல் சந்திரபாபு ந.தியும் சேர்ந்துகுழம்புவது எனக் கூத்தாக இருக்கும்..

*
டி.ஜி லிங்கப்பாவை ச் சொல்லாமல் விட முடியாது.. ஆசைக்கிளியே கோபமாவில் சந்திரபாபுவிற்கு சீர்காழி குரல் போட்டவர்.. .. சிவாஜி இவரிடம்..”ஒரு சூப்பர் டூப்பர் மெலடி கொடுங்க பாக்கலாம்..ஆனா டிஃபரண்ட்டா இருக்கணும்”
*

*”என்னண்ணா ஒங்களுக்கு இல்லாததா.. நாளைக்கு வெள்ளன எழுந்திருச்சு மெட்டோட வந்துடட்டுமா..அப்புறம் பாட்டையும் எழுதச்சொன்னா போச்சு.. நம்ம பாலு தான்(கு.மா.பாலசுப்பிரமணியம்) தமிழ்ல பொளந்துகட்டுவார்..ஆனா நான் சொல்ற ஆள் தான் போடணும்.. குரல் வித்யாசமா இருக்கும் சரியா..”*

*

*”நீ யார வேணும்னாலும் போட்டுக்க எனக்குத் தேவை வித்யாசமான பாட்டு.. சரி சரி.காலைல டிஃபனுக்கு வந்துடுங்க..”

*

இரவிலேயே யோசித்து மெட்டுப் போட்டு கு.மா பாலசுப்பிரமணியத்தைப் பாட்டெழுத வைத்து அதிஅதிகாலையில் எழுந்து குளித்து ந.தி வீட்டிற்கு விடு ஜூட்..

*
“வாங்க லிங்கப்பா..வாங்க கவிஞரே.. கொண்டாந்தீங்களா”
*
ஆர்மோனிய பெட்டியில் விரல்கள் தாண்டவமாட… கூட வந்த மியூஸிக் ஆசாமிகளில் குரல் வளம் உள்ள ஒருவர் பாட-
அது தான் காணா இன்பம் கனிந்ததேனோ..’
*

நல்லா இருக்குய்யா.. நம்ம செளந்தர் தானே.பாடப் போறான்.

*

இல்லீங்க்னா.. மோடின்னு ஒரு ஆள்..”


*

“யாரு..”

*

“இதோ இப்பப் பாடினாரே இவர் தான்.. ப்ளஸ் பி.சுசீலா..”

*

*”ஓ.கே.ஓ.கே.. லிங்கப்பா.. இந்த ராகம் பாகஸ்ரீ தானே”

*
“அண்ணா.. ரொம்ப சரின்னா..பிரமிப்பா இருக்குண்ணா..”

*சரி போய் அழகா ஃபுல் பாட்டையும் போட்டுக் கொண்டுவா கேக்கலாம்..”

*

பாட்டு ஃபேமஸ் ஆனாலும் மோடியின் குரல் மக்கள் மனதில் எடுபடவில்லை என நினைக்கிறேன்.. அதே படத்தில் லிங்கப்பாவின் இன்னொரு பாட்டு..

*

மிஸ்ர் பெஹாக் என்ற ராகத்தில் அமைந்த சித்திரம் பேசுதடி.. முதலில் ந.தி பாடுவது போலவும், பின்னால் அந்த மாலினி பாடுவது போலவும் வரும்..

*

ந.தியின் அருமையான நகைச்சுவை நடிப்பில் மிளிர்ந்த படங்களில் இதுவும் ஒன்று..

*

அடுத்த அத்தியாயத்திற்காக என்ன பண்ணலாம்..

*

யெஸ்..இதிலும் வெகு வெகு யூத்தான ந.தி.. ஜாலியாகத் தான்போகும் படத்தில் அழுகை துடிப்பு இனிமையான பாடல்கள் என எல்லாம் உண்டு…இருப்பினும் என்னனாக்க..

*

ஒரு காமெடி நடிகர் தான் படத்துல வில்லன்.. ஒரு வில்லன் நடிகர் தான் படத்துல சப்போர்ட்டிவ் ரோல்..அப்புறம்னு சொன்னா கண்டு புடிச்சுடுவீங்க தானே..

*

எனில் அடுத்த போஸ்டில் வரட்டா

*
(தொடரும்)

Russellbpw
7th May 2014, 09:45 PM
முதலமைச்சர்களை பார்க்க, அரசியல்வாதிகளை பார்க்க எவ்வளவு பேர் வேண்டுமானாலும் வரலாம்..வந்திருக்கிறார்கள்..
இவர்கள் காசுகொடுத்து வண்டியில் கொண்டுவந்த அரசியல் கும்பல் அல்ல ! தானாக அன்பால் வந்த கூட்டம். !

ஒரு நடிகனை பார்க்க ...அது நமது நடிகர் திலகத்தை பார்ப்பதற்குதான் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/PesumPadamAugust1971_zpsac4e2b28.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/PesumPadamAugust1971_zpsac4e2b28.jpg.html)

Russellbpw
7th May 2014, 09:57 PM
தேவி பாரடைஸ் திரையரங்கில் 1971இல் வெளிவந்த திரைபடத்தின் 51 நாள் வசூலை நம் நடிக பேரரசின் ராஜா திரைப்படம் 50 நாளில் சுமார் 21,000 அதிகம் பெற்று ராஜ நடை போட்டது ! ஆவணங்களை எடுத்து சொன்ன தகவல் சரியாய் இருக்கிறதா என்று பார்த்துகொள்ளலாம் சந்தேகம் இருந்தால் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Raja-Dinathanthi190372-Collection50days_zps49b22d3b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Raja-Dinathanthi190372-Collection50days_zps49b22d3b.jpg.html)

Russellbpw
7th May 2014, 10:06 PM
சென்னை பிளாசா திரை அரங்கில் 25 வருட சாதனைகள் அனைத்தையும் முறியடித்த நம் நடிக பேரரசர் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GnanaOliReservationChart3672_zps4654d8be.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GnanaOliReservationChart3672_zps4654d8be.jpg.html)


இது சாதாரண சாதனை அல்ல...எவரும் கனவிலும் நினைக்கமுடியாத என்றும் நிகழ்த்தாத சாதனை ! அதுவும் நடிகர் திலகத்தின் 20உக்கும் மேற்பட்ட படங்கள் ஓடிகொண்டிருந்தபோது நிகழ்ந்த சாதனை !

சும்மா சாதனை..சாதனை ..என்று சொல்வதெல்லாம் சாதனையாகாது இதுதான் உண்மையான உலக சாதனை !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GnanaOli_zpsd945215d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GnanaOli_zpsd945215d.jpg.html)

Gopal.s
8th May 2014, 07:41 AM
நடிகர்திலகம்
மொத்தம் 49 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன்-95,கே.வீ.மகாதேவன்-38,விஸ்வநாதன்-ராமமூர்த்தி-24,இளையராஜா-23,ஜி.ராமநாதன்-18,சங்கர் கணேஷ்-9,டி.ஜி.லிங்கப்பா-6,எஸ்.வீ.வெங்கட்ராமன்-5,கங்கை அமரன்-5,எஸ்.எம்.சுப்பையா நாயுடு-4,டி.ஆர்.பாப்பா-4,சுதர்சன்-3,சந்திர போஸ்-3,சக்கரவர்த்தி-3,சி.என்.பாண்டுரங்கன்-2,எஸ்.தக்ஷிண மூர்த்தி-2,டி.சலபதிராவ்-2,எஸ்.ராஜேஸ்வர் ராவ்-2,குன்னக்குடி -2,மனோஜ் கியான்-2,வித்யா சாகர்-2,தேவா-2,ஆதிநாராயண ராவ்-1,எம்.ஜி.நாய்டு-1,தண்டாயுத பாணி-1,என்.எஸ்.பாலகிருஷ்ணன்-1,கண்டசாலா-1,கிருஷ்ண மூர்த்தி-1,ராம்நாத்-1,பீ.என்.ஆர்-1,கோவிந்த ராஜுலு-1,ஏ.எம்.ராஜா-1,டி.கே.ராமமூர்த்தி-1,ஜி.தேவராஜன்-1,புகழேந்தி-1,கோவர்தனம்-1,வீ.குமார்-1,சங்கர்-ஜெய்கிஷன்-1,கே.ராகவன்-1,எம்.ஏ.ரவீந்தர்-1,தேவேந்திரன்-1,எம்.ரங்கா ராவ்-1,டி.ராஜேந்தர்-1,ஜே.வீ.ராகவலு-1,
அம்சலேகா-1,ஸ்ரீராஜா-1,கீதப்ரியன்-1, ஏ.ஆர்.ரகுமான்-1.


நடிகர்திலகம் 96 இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார்.((கௌரவ வேடங்கள் நீங்கலாக)
ஏ.சி.திருலோகச்சந்தர்-20,ஏ.பீம்சிங்-18,பீ.மாதவன்-15,சி.வீ.ராஜேந்திரன்-14,கே.விஜயன்-14,டீ.யோகானந்த்-13,ஏ.பீ.நாகராஜன்-12,வீ.ஸ்ரீனிவாசன்-8,பீ.ஆர்.பந்துலு-7,கிருஷ்ணன்-பஞ்சு-7,ஸ்ரீதர்-7,கே.சங்கர்-7,ஆர்.கிருஷ்ணமூர்த்தி-7,எல்.வீ.பிரசாத்-6,ராமண்ணா-6,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்-5,கே.எஸ்.பிரகாஷ் ராவ்-5,கே.சோமு -5,தாதாமிராசி-3,ப.நீலகண்டன்-3,சி.எச்.நாராயண மூர்த்தி-3,வீ.பீ.ராஜேந்திர பிரசாத்-3,ஏ.காசிலிங்கம்-3,எஸ்.பீ.முத்துராமன்-3,கார்த்திக் ரகுநாத்-3,மேஜர் -3,ஏ.எஸ்.ஏ.சாமி-2,வேம்பு-2,ஆர்.எம்.கிருஷ்ண சாமி-2,வீ.எஸ்.ராகவன்-2,பீ.எஸ்.ரங்கா-2,பீ.புல்லையா-2,டி.பிரகாஷ் ராவ்-2,டி.ஆர்.ரகுநாத்-2,எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாய்டு-2,வீ.சுந்தரம்-2,அமிர்தம்-2,ஏ.ஜகந்நாதன்-2,பாரதி ராஜா-2,ராஜசேகர்-2,,என்.எஸ்.கே-1,டி.ஆர்.சுந்தரம்-1,எம்.நடேசன்-1,எஸ்.டீ.சுந்தரம்-1,ஜி.ஆர்.ராவ்-1,எஸ்.பாலச்சந்தர்-1,எஸ்.ஏ.முருகேஷ்-1,சுந்தர் ராவ் நட்கர்னி-1,ஜே.சிங்கா-1,ஏ.சுப்பா ராவ்-1,ராமகிருஷ்ணா-1,பீ.ஸ்ரீதர் ராவ்-1,கே.ஜே.மகாதேவன்-1,எஸ்.எஸ்.வாசன்-1,எஸ்.எஸ்.பாலன்-1,ஆர்.எஸ்.மணி-1,ஏ.சுப்பா ராவ்-1,ஏ.டி.கிருஷ்ணசாமி-1,பீ.ஆர்.சந்திரன்-1,ஜி.ஆர்.நாதன்-1,டி.என்.பாலு-1,கே.பாலச்சந்தர்-1,எஸ்.ராமநாதன்-1,சாவித்திரி-1,மல்லியம் ராஜகோபால்-1,சாணக்கியா-1,எஸ்.ஏ.கண்ணன்-1,ஏ.வின்சென்ட்-1,அப்பச்சன்-1,எம்.ஏ.திருமுகம்-1,கே.பாப்பையா-1,துரை-1,விஜய நிர்மலா-1,ராஜகணபதி-1,எஸ்.எஸ்.கே-1,கிருஷ்ணா-1,கே.பாக்யராஜ்-1,பாரதி வாசு-1,ஏ.எஸ்.பிரகாசம்-1,பாலச்சந்திர மேனன்-1,மனோஜ் குமார்-1,தாசரி நாராயண ராவ்-1,கே.ராகவேந்திர ராவ்-1,மணிவண்ணன்-1,சந்தான பாரதி-1,சி.குக நாதன்-1,பரதன்-1,மனோபாலா-1,பிரதாப் போதன்-1,எஸ்.ஏ.சந்திர சேகர்-1,ஆர்.வீ.உதயகுமார்-1,ஹாசன்-1,பிரசாந்த் குமார்-1,கே.எஸ்.ரவிக்குமார்-1,ஏ.வெங்கடேஷ்-1.ராம்சந்தர்-1.கஸ்தூரி ராஜா-1.

tacinema
8th May 2014, 08:34 AM
தேவி பாரடைஸ் திரையரங்கில் 1971இல் வெளிவந்த திரைபடத்தின் 51 நாள் வசூலை நம் நடிக பேரரசின் ராஜா திரைப்படம் 50 நாளில் சுமார் 21,000 அதிகம் பெற்று ராஜ நடை போட்டது ! ஆவணங்களை எடுத்து சொன்ன தகவல் சரியாய் இருக்கிறதா என்று பார்த்துகொள்ளலாம் சந்தேகம் இருந்தால் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Raja-Dinathanthi190372-Collection50days_zps49b22d3b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Raja-Dinathanthi190372-Collection50days_zps49b22d3b.jpg.html)

wonderful image of NT. Thanks Ravikiran.

Gopal.s
8th May 2014, 09:09 AM
6/5/2014 இல் நாற்பத்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் பட்டிக்காடா பட்டணமா- மீள்பதிவு .

பட்டிக்காடா பட்டணமா-1972

கீழ்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளிப்போருக்கு சிவாஜி பல்கலை கழகத்தின் சார்பில்,B .Sivaji arts பட்டம் வழங்க படும்.(விடைகளை கடைசியில் சரி பார்த்து கொள்ளலாம்.)

1)அம்பிகையே ஈஸ்வரியே பாடலில் பந்தாவோடு மூக்கையானாக அறிமுகம் ஆகும் சிவாஜியை பார்த்து ரசிகர்கள் துள்ளி குதிக்கும் உயரம்
அ)ஆறடி ஆ) பத்தடி இ) தியேட்டர் கூரை வரை.

2)மூக்கையன் சிகை அலங்காரம்,ஒப்பனை,உடை,get up நடிகர்திலகத்துக்கு
அ)பொருத்தம் ஆ)படு பொருத்தம் இ)கிராமிய ஆணழகோடு படு படு அட்டகாசமான பொருத்தம்.

3)ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை திரைக்கதை அமைப்பு
அ)சுவாரஸ்யம். ஆ)படு சுவாரஸ்யம் இ)ஜெட் வேகத்தில் தொய்வே இல்லாத படு சுவாரஸ்யம்.

4)வசனங்களும், அதற்கு உயிர் கொடுக்கும் சிவாஜியின் அட்டகாசமான நடிப்பும்
அ)இயல்பு ஆ)படு இயல்பு இ)ஈர்ப்பு கலந்த கிராமத்து இயல்பான அழகியல் கலந்தது.

5)இந்த படத்தில் முக்கிய அம்சமாக ரசிகர்களை கவர்ந்தது
அ)குடும்ப கதை அமைப்பு ஆ)பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பிய கதையமைப்பு இ)குடும்பம்,பொழுது போக்கு என்று அத்தனை அம்சங்களும் கொண்ட ஜாலி கலவை.

6)நடிகர்திலகம் அட்டகாசமான ஸ்டைல் உடன் போடும் விறு விருப்பான சிலம்ப சண்டை
அ)ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆ)அனைவரும் விரும்பிய ஒன்று இ)ரங்கராஜன் நம்பிக்கும் பிடிக்கும்.

7)எம்.எஸ்.வீ அவர்களின் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை
அ) சிறந்தவை ஆ)அட்டகாசம் இ)காலத்தை வென்று நிற்கும் தனி சிறப்பு மிக்கவை

8)பாடல் காட்சிகளில் நடிகர்திலகத்தின் சுறுசுறுப்பு ,கடின ஸ்டெப்ஸ்,கிராமிய grace ,coordination
அ)வழக்கம் போல தூள் ஆ)வழக்கத்தை விடவே ஸ்பெஷல் இ)perfect example of excellent choreography and graceful performance by an artist .

9)அவர் நடன step களில் சிறந்தது என்று தேர்வு செய்வது
அ)அம்பிகையே பாடலில் தீச்சட்டியுடன் பர பர ஒட்டமான நடை ஸ்டெப் ஆ)கேட்டுக்கோடி பாடலில் உட்கார்ந்த முட்டி மடக்கிய ஸ்டெப் இ)இந்த இரண்டு மட்டுமா இன்னும் ஒரு பத்தாவது பிரமாதமாயிற்றே .

10)தன்னுடைய மாமன் மகள் தன்னிடம் இருந்தும் அவளை கல்யாணத்துக்கு வற்புறுத்தாத மூக்கையனின் கண்ணியம்
அ)தரமானது ஆ)மண்ணின் மாண்பு இ)பெருந்தன்மை கலந்த கிராமிய பண்பாடு.

11)மனைவியின் சிறு சிறு ஆசைகளை மதித்து அவளை மனம் கோணாமல் நடத்துவது
அ)ரசிக்க வேண்டியது ஆ)அனுபவிக்க வேண்டியது இ)இன்றைய தலைமுறைக்கு பாடம்.

12)அளவுக்கு மீறி மனைவி நடக்கும் போது மூக்கையனின் ஆத்திரம் (பிறந்த நாள்)
அ)சரியானதே ஆ)போதவே போதாது இ)நாம் செய்ய நினைத்ததை சரியாக செய்வார்.

13)வக்கீல் நோட்டிசை கிழித்தெறிந்து மாமியாரிடம் சவால் விடும் கட்டம்
அ)அடுத்து என்ன என்னும் கேள்வி ஆ)இப்போ போய் ஏன் இடைவேளை என்னும் கோபம் இ)இதை விட சுவாரஸ்யம் இருக்கு டோய் என்னும் ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு

14)மூக்கையன் ,முகேஷ் ஆக ஹிப்பி ஸ்டைல் உடன் தோன்றும் காட்சியில் ரசிகர்களின் மனநிலை
அ)ஆனந்தம் ஆ)பேரானந்தம் இ)போதை கலந்த வெறியான ஆனந்தம்.

15)மனைவியின் படுக்கையறையில் முகேஷ் ஆக மூக்கையனின் அதகளம்(தொடரும் வீ.கே.ஆரின் மாப்பிள்ளை வந்தார்)
அ)சுவாரஸ்யம். ஆ)கிளுகிளுப்பு இ)கிளுகிளுப்பு ,கிண்டல் ,நகைச்சுவை கலந்த கதையை ஒட்டிய சுவாரஸ்யம்.

16)தன்னை கடத்தி தாக்கும் கும்பலிடம் சாந்தி தியேட்டரை எனக்கே காட்டுறியா என அவர் மோதும் காட்சி
அ)எதிர்பார்ப்புக்கு தீனி ஆ)எதிர்பாராத குஷியான கலாட்டா இ)எல்லாவற்றையும் நொறுக்கி போட்டு தியேட்டரை அதிர வைக்கும்.

17)அதெப்படி புருஷன் ரெண்டு வருஷமா லண்டனில் ,இவங்க கர்ப்பம் காட்சி
அ)கதையோடு ஒட்டியது ஆ)கலகலப்பு இ)கதையோடு ஒட்டிய சுவையான கலகலப்பு

18)பஞ்சாயத்து காட்சியில் நடிகர்திலகத்தின் தன்னிரக்கம் கலந்த அவமானம்
அ)மனதை தொடும் ஆ)நாமே உணர்வோம் இ)பின்னாளில் வந்த அத்தனை கனம் மிகுந்த பஞ்சாயத்து காட்சிகளுக்கும் சிறப்பான முன்னோடி.

19)குழந்தை செண்டிமெண்ட்,மூக்கையன் கல்யாண suspense கொண்ட பரபரப்பான இறுதி காட்சி
அ)அருமை ஆ)எதிர்பாராதது இ)படத்தின் கதை போக்கு கெடாமல் வந்த சுவாரஸ்ய திருப்பம்.

20)கலைச்செல்வி,வீ.கே .ஆர்,சுகுமாரி,சுபா (அறிமுகம்),வாசு,மனோரமா, பங்களிப்பு
அ)சரியானது ஆ)திருப்தியானது இ)படத்தை தூக்கி நிறுத்தும் பங்களிப்பு .

21)இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள்
அ)ரசிக்கும் படி ஆ)ஜாலியான ஒன்று இ)படத்தின் ஓட்டத்தை தடுக்காத ஜாலி.

22)இசை ,நடனம்,சண்டை காட்சி,உடைகள்,படபிடிப்பு,படத்தொகுப்பு,இயக்கம் அனைத்திற்கும் மதிப்பெண்
அ)60க்கு மேல் ஆ)75 க்கு மேல் இ)தொண்ணூறுக்கும் மேல்

23)தமிழில் வெளி வந்து வெள்ளி விழா கண்ட கருப்பு வெள்ளை படங்களில் கோடிக்கும் மேல் வசூலித்த முதல் தமிழ் படம் என்று இந்த திரியில் ஆதாரத்துடன் பதிவு செய்தவர்
அ)ராகவேந்தர் ஆ)வாசு தேவன் இ)பம்மலார்

24)இந்த படத்தினை examiner முதலில் ரிலீஸ் தேதியன்றே கண்டு ரசித்த ஊர்
அ)நெய்வேலி ஆ)கும்பகோணம் இ)மதுரை

25)படத்தை இன்று பார்த்தாலும் ரசிகர்கள் அடைவது
அ)நிறைவு ஆ)மகிழ்ச்சி இ)கொண்டாட்டம் கலந்த போதை

விடைகள்- சந்தேகம் வேறா.? எல்லா கேள்விகளுக்குமே விடை (இ)தான்.

இதை முழுமையாய் படித்த அனைவரும் சரியான விடை அளித்திருப்பது சர்வ நிச்சயம்.அதனால் படித்து முடித்த அனைவருக்குமே B .sivaji Arts பட்டம் வழங்கி சிறப்பிக்கிறோம்.

kalnayak
8th May 2014, 10:26 AM
இன்று அதிகமான நகைச்சுவை தேவைப்பட்டது - அதனால் அந்த சில பகுதிகளை இங்கே போடுவதில் தவறில்லை என்று நினைக்கிறன் - கோபால் சொன்னது போல நம் தலைவரை பற்றி பேசவே நேரம் நிறைய வேண்டும் - எதற்கு அங்கு தலையிட வேண்டும் ? இருந்தாலும் அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவிக்கும் போது நாம் நம் support யை அவர்களுக்கு கொடுக்கா விட்டால் , நாம் மனித தன்மை இல்லதாவர்களாகி விடுவோம்

சில பதிவுகளை பார்ப்போம்

சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.

எப்படி அழகாக சலிக்கிறார்கள் பாருங்கள் --- இப்படிப்பட்ட கற்பனை திறன் நமக்கு யாருக்காவது உண்டா - open challenge !!

தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முதலாக 33 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் மக்கள் திலகம் நடித்த மதுரை வீரன் திரைப்படம்.முதல் வெளியீட்டில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வசூலாக பெற்ற முதல் திரைப்படம் இது.இந்த படம் வெளியான 1956ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை 90 ரூபாய்.தியேட்டரில் டிக்கெட்டின் அதிகபட்ச விலை 12 அணாக்கள்.90ரூபாய்க்கு பவுன் விற்ற காலத்தில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் வசூல் என்றால் இன்றைய காலகட்டத்தில் அது ரூபாய் 210 கோடியை தாண்டுகிறது.வசூல் சக்கரவர்த்தி என்றால் அது என்றுமே எம்ஜிஆர் தான். -

ஏன் இன்னும் 137 தியேட்டர்களை விட்டு விட்டார்கள் என்று புரியவில்லை ? - If this was true then there was no need for India to have gone in for IMF loan .

திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது மகாதேவி படத்திற்கு தான்.பெங்களூர் லக்ஷ்மி திரையரங்கில் மிக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது .அந்த காலத்தில் எந்த மொழி படத்திற்கும் இத்தனை பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

இது வணங்காமுடியை கண்டு பொறுக்காமல் எழுந்த பகுதி

1958 இல் வெளியான நாடோடி மன்னன் இலங்கையில் 7 திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிய ஒரே படம்.இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.சிங்கள படம் கூட இந்த சாதனையை செய்யவில்லை என்பது வரலாற்று சிறப்பு.மதுரை வீரன் செய்த வசூல் சாதனையான ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் சாதனையை நாடோடி மன்னன் முறியடித்து ஒரு கோடியே பத்து லட்சம் வசூல் செய்தது.கர்நாடகாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.ஆந்திராவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.கேரளாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.லண்டன் தமிழ் சங்க வளர்ச்சிக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் நாடோடி மன்னன்.லண்டனில் 1958இல் 8 வாரங்கள் நாடோடி மன்னன் ஓடியது.தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், கோலாலம்பூர்,பினாங்,தைபிங்,எகிப்த்,ஜெர்மனி,பர் மா,வி யட்நாம்,குவைத்,ஈரான்,பாரிஸ் போன்ற இடங்களில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நாடோடி மன்னன் -


இன்னும் பல நாடுகள் விட்டு போய் விட்டன - pakistan , uganda , s .africa , japan etc.,

1968இல் வெளியான மக்கள் திலகத்தின் 100வது படமான ஒளிவிளக்கு இலங்கையில் 5 தியேட்டர்களில் 100நாட்களும் 2தியேட்டர்களில் 175 நாட்களும் ஓடியது.அதன் பிறகு 1974, 1979, 1984, 1993 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் திரையிடப்பட்டு ஒவ்வொரு முறையும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

அவர்களுடைய திரி - அவர்கள் என்ன வேண்டுமானாலும் , எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் - அங்கு ஒரே சட்டம் - தலைவரை புகழ்ந்து தான் எழுதவேண்டும் , எந்த படமும் தோல்வியையே சந்தித்ததில்லை - இதை தலைவரே வந்து சொன்னாலும் அங்கு ஒப்புகொள்ள யாரும் இல்லை .

இந்த மனோபாவத்தை , மனோதத்துவத்தின் மூலம் ஆராயிந்தால் அதன் முடிவின் பெயர் "extreme state of desperation " இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துகொள்ளும் நிலைமை - இது முதல் symptom - பிறகு அடுத்த நிலைமை - தன் தலைவர் இப்படியெல்லாம் சாதித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் நிலைமை - இது இரண்டாவது symptom - இப்படி இரண்டு symptoms உள்ளவர்களை கூட காப்பாத்திவிடலாம் - ஆனால் மூன்றாவது symptom மிகவும் மோசமானது - அதுதான் - கற்பனைகளை உண்மைகள் என்று சொல்லி , அதற்க்கு ஆதாரம் தர முடியாமல் மனதிற்குள் தவித்து ஒரு வெறியுடன் பதிவிடுவது - யாராவது ஒருவர் நம் கற்பனைகளை நம்ப மாட்டார்களா என்று ஏங்குவது ---

அவர்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கூட்டு ப்ராத்தனை செய்வோம் - அந்த திரியினில் நமக்கு இனிய நண்பர்கள் பலர் உள்ளனர் - NT யின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் அவர்கள் !!அவர்களின் நலம் கருதியாவது நாம் கூட்டு ப்ராத்தனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ...

ரவி சார், நீங்கள் எடுத்துக்காட்டிய நகைச்சுவை பதிவுகள் அபாரம். வணங்காமுடி கட்-அவுட்டையே மறைக்குமளவிற்கு பொய்யை புரட்டுபவர்களிடம் மற்றதெல்லாம் எம்மாத்திரம். நீங்கள் எடுத்து கொடுத்த நாடுகளுக்கு வேறு ஒரு படம் விரைவில் வருமென்று கேள்வி. நீங்களோ நண்பர்கள் பலர் உள்ளனர் என்கிறீர்கள் - அவர்களாவது சொல்லலாமே - பொய்யில் திரி வளர்க்க வேண்டுமாவென்று. மக்கள் திலகம் பெருமையை சொல்வதாக சொல்லி பொய்களை புகுத்தி அவரின் மாண்பை குறைக்கிறார்கள்.

eehaiupehazij
8th May 2014, 11:14 AM
Dear RKS, Kalnayak, Ravi sir. There are differences between our thread and the other actor's one, in the way we run and interact our thread. Since NTs movies have proved to be the evergreen classics and his acting prowess has been unmatched hitherto, there are lot of informations and data on his box office records too, we furnish and enjoy. On the other hand, the other actor's thread is devoid of such peer reviews of their films and the 'acting capacity' of their icon. Sattiyil irundhalthane agappayil varum! Since their movies lack content and slowly becoming outdated and approaching extinction, they are unable to discuss such healthy reviews in their thread, except tomtomming their "kizhavi manjal Kuliththa kathaigal" as their nostalgia! Since their much expected rerun of AO by default proved to be a fiasco and a miserable flop to our records in its rerun attempt, they are unable to digest the bitterness of truth. To find a quantum of solace, they resort to mudslinging NT and trying to mask his achievements. Times have changed!! Only NT movies can redo the magic of crowd pulling even in the years to come as they are immortal classics. AO is 'oru paanai sotrukku oru soru padham"! Since the other actor's movies lack lustre and are becoming Marketless, Guranteeless, Revenueless junks, let them say anything as they wish..... the present world will laugh at them!!

Russellbpw
8th May 2014, 12:02 PM
நம் நடிகர் திலகம் அவர்களின் திரைப்படம் மக்களை புற்றீசல் போல ஈர்ப்பது ஒன்றும் புதிதல்ல. முதல் படத்திலிருந்தே அது நடந்தாலும்...முதல் இரட்டை வேட blockbuster உத்தமபுத்திரன் வெளிவந்த சமயம் ஊரெங்கும் விக்ரமன் கதாபாத்திரத்தை பற்றிதான் பேச்சு...! இத்துனைக்கும் உத்தமபுத்திரன் அவருடைய 38 அல்லது 39வது படம்தான் !

மக்கள் வெள்ளம் திரைஅரங்கு முன் திரண்ட காட்சி !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/UPAD02_zps8edcd2f0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/UPAD02_zps8edcd2f0.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/UPAD01_zpsf4bf02a8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/UPAD01_zpsf4bf02a8.jpg.html)

HARISH2619
8th May 2014, 02:10 PM
இன்று அதிகமான நகைச்சுவை தேவைப்பட்டது - அதனால் அந்த சில பகுதிகளை இங்கே போடுவதில் தவறில்லை என்று நினைக்கிறன் - கோபால் சொன்னது போல நம் தலைவரை பற்றி பேசவே நேரம் நிறைய வேண்டும் - எதற்கு அங்கு தலையிட வேண்டும் ? இருந்தாலும் அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவிக்கும் போது நாம் நம் support யை அவர்களுக்கு கொடுக்கா விட்டால் , நாம் மனித தன்மை இல்லதாவர்களாகி விடுவோம்

சில பதிவுகளை பார்ப்போம்

சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.

எப்படி அழகாக சலிக்கிறார்கள் பாருங்கள் --- இப்படிப்பட்ட கற்பனை திறன் நமக்கு யாருக்காவது உண்டா - open challenge !!

தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முதலாக 33 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் மக்கள் திலகம் நடித்த மதுரை வீரன் திரைப்படம்.முதல் வெளியீட்டில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வசூலாக பெற்ற முதல் திரைப்படம் இது.இந்த படம் வெளியான 1956ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை 90 ரூபாய்.தியேட்டரில் டிக்கெட்டின் அதிகபட்ச விலை 12 அணாக்கள்.90ரூபாய்க்கு பவுன் விற்ற காலத்தில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் வசூல் என்றால் இன்றைய காலகட்டத்தில் அது ரூபாய் 210 கோடியை தாண்டுகிறது.வசூல் சக்கரவர்த்தி என்றால் அது என்றுமே எம்ஜிஆர் தான். -

ஏன் இன்னும் 137 தியேட்டர்களை விட்டு விட்டார்கள் என்று புரியவில்லை ? - If this was true then there was no need for India to have gone in for IMF loan .

திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது மகாதேவி படத்திற்கு தான்.பெங்களூர் லக்ஷ்மி திரையரங்கில் மிக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது .அந்த காலத்தில் எந்த மொழி படத்திற்கும் இத்தனை பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

இது வணங்காமுடியை கண்டு பொறுக்காமல் எழுந்த பகுதி

1958 இல் வெளியான நாடோடி மன்னன் இலங்கையில் 7 திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிய ஒரே படம்.இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.சிங்கள படம் கூட இந்த சாதனையை செய்யவில்லை என்பது வரலாற்று சிறப்பு.மதுரை வீரன் செய்த வசூல் சாதனையான ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் சாதனையை நாடோடி மன்னன் முறியடித்து ஒரு கோடியே பத்து லட்சம் வசூல் செய்தது.கர்நாடகாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.ஆந்திராவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.கேரளாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.லண்டன் தமிழ் சங்க வளர்ச்சிக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் நாடோடி மன்னன்.லண்டனில் 1958இல் 8 வாரங்கள் நாடோடி மன்னன் ஓடியது.தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், கோலாலம்பூர்,பினாங்,தைபிங்,எகிப்த்,ஜெர்மனி,பர் மா,வி யட்நாம்,குவைத்,ஈரான்,பாரிஸ் போன்ற இடங்களில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நாடோடி மன்னன் -


இன்னும் பல நாடுகள் விட்டு போய் விட்டன - pakistan , uganda , s .africa , japan etc.,

1968இல் வெளியான மக்கள் திலகத்தின் 100வது படமான ஒளிவிளக்கு இலங்கையில் 5 தியேட்டர்களில் 100நாட்களும் 2தியேட்டர்களில் 175 நாட்களும் ஓடியது.அதன் பிறகு 1974, 1979, 1984, 1993 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் திரையிடப்பட்டு ஒவ்வொரு முறையும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

அவர்களுடைய திரி - அவர்கள் என்ன வேண்டுமானாலும் , எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் - அங்கு ஒரே சட்டம் - தலைவரை புகழ்ந்து தான் எழுதவேண்டும் , எந்த படமும் தோல்வியையே சந்தித்ததில்லை - இதை தலைவரே வந்து சொன்னாலும் அங்கு ஒப்புகொள்ள யாரும் இல்லை .

இந்த மனோபாவத்தை , மனோதத்துவத்தின் மூலம் ஆராயிந்தால் அதன் முடிவின் பெயர் "extreme state of desperation " இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துகொள்ளும் நிலைமை - இது முதல் symptom - பிறகு அடுத்த நிலைமை - தன் தலைவர் இப்படியெல்லாம் சாதித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் நிலைமை - இது இரண்டாவது symptom - இப்படி இரண்டு symptoms உள்ளவர்களை கூட காப்பாத்திவிடலாம் - ஆனால் மூன்றாவது symptom மிகவும் மோசமானது - அதுதான் - கற்பனைகளை உண்மைகள் என்று சொல்லி , அதற்க்கு ஆதாரம் தர முடியாமல் மனதிற்குள் தவித்து ஒரு வெறியுடன் பதிவிடுவது - யாராவது ஒருவர் நம் கற்பனைகளை நம்ப மாட்டார்களா என்று ஏங்குவது ---

அவர்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று கூட்டு ப்ராத்தனை செய்வோம் - அந்த திரியினில் நமக்கு இனிய நண்பர்கள் பலர் உள்ளனர் - NT யின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் அவர்கள் !!அவர்களின் நலம் கருதியாவது நாம் கூட்டு ப்ராத்தனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ...

இதை படிக்கும் மக்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்

Russellisf
8th May 2014, 02:31 PM
இதை படிக்கும் மக்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்


மக்கள் என்றால் நீங்கள் நாலுபேரா ? நாங்கள் எழுத ஆரம்பித்தால் நாறிடும்

eehaiupehazij
8th May 2014, 02:36 PM
Mmmm. Ingeyum chudachchuda dharalamaga kidaikkum. Grow up gentleman! Neengal endrume naarugira madhiridhane ezhudhuveergal! aachcharyappada ondrumillai!!!

uvausan
8th May 2014, 02:42 PM
அந்த திரியினில் வரும் பதிவுகளை இங்கு பதித்து தேவையில்லாமல் இரண்டு திரிகளுக்கும் நடுவில் வருத்தத்தை உண்டாக்கவேண்டும் என்பது எனது குறிக்கோள் இல்லை - "சிரித்தால் தானே கவலை மறைய " என்பதற்கு இணங்க சில கற்பனையில் , நகைச்சுவையில் doctorate வாங்கிய பதிவுகளை மட்டும் இங்கு போடுவதில் தவிறில்லை என்று நினைக்கிறன் - நமது திரியில் நகைச்சுவை திறமை முழுதும் வளர்ந்தபின் அங்கு கிடைக்கும் நல்ல நகைச்சுவை பதிவுகள் இங்கு telecast ஆவது நின்று விடும் - அதுவரையிலும் கொஞ்சம் சிரிங்க boss !!

அங்கு வெளியான ஒரு பதிவு இது

தேவி பாரடைசில் 101 காட்சிகளும், அகஸ்தியாவில் 83 காட்சிகளும்
தொடர்ந்து அரங்கு நிறைந்தன.

மதுரை மீனாட்சியில் 112 நாட்கள் ஓடியது.படம் வெளிவந்த முதல் நாளே மதுரை மீனாட்சியில் 100 நாட்களுக்கு எந்தவித இலவச பாஸ் அனுமதியும் கிடையாது என்கிற விளம்பரம் செய்தி தாளில் வந்தது.

சென்னையில் 10 வது வார முடிவில் எல்.ஐ .சி. கட்டிடத்தில் தீவிபத்து
ஏற்பட்டு, அதன் விளைவாக , அண்ணா சாலையில் போக்குவரத்து ஒருவழி பாதையாக ஆனபின் , மக்கள் நடமாட்டம்
குறைந்ததால், 12வது வாரத்தோடு தேவி பாரடைசில் எடுக்கப்பட்டது. அகஸ்தியாவிலும் 84 நாட்கள் ஓடியது.


சென்னையில் 100 நாட்கள் நிறைவு செய்யாவிட்டாலும் , பலமுறை
அரங்குகளில் மறுவெளியீடு செய்யும்போது, மக்கள் திலகத்தின் மெகாஹிட் படங்களுக்கு இணையான வசூலை பெற தவறுவதில்லை.

LIC கட்டிடத்தில் தீ விபத்து -------- அதனால் கூட்டம் வரவில்லை -------

நாம் இதையே எப்படி போடுவோம் - நல்ல கதையோட்டம் உள்ள படம் - இருந்தாலும் ஏனோ தெரியவில்லை 100 நாட்களை தொட முடியவில்லை - இந்த படம் ஓடும்போது - NT யின் நான்கு படங்கள் 50 நாட்களை தாண்டி ஓடிகொண்டிருந்தது - அதற்குள் புதிய இரண்டு படங்கள் பொங்கலில் வருவதாக அறிவிப்பு - நம் படங்கள் தான் நமக்கு போட்டி - என்ன செய்வது ? என்று வருத்தபட்டு எழுதியிருப்போம்.

LIC தீ விபத்தை பற்றியோ அதனால் தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை என்பதை பற்றியோ யாருமே ஒரு விஷயமாக கருதி , படம் இதனால் தான் ஓடவில்லை என்று சால் ஜாப்பு சொல்லிருக்க மாட்டோம் - முடிந்து இருந்தால் , Fire Engine யை கூப்பிட்டு தீயை அனைத்திருப்போம்

இவர்களுக்கு உண்மை என்பது ஒரு unknown planet - அந்த கிரகம் எப்படி இயங்கும் என்றே தெரியாது !! - கற்பனையில் வீடு கட்டி - கற்பனையில் கிரக பிரவேசம் பண்ணி , கற்பனையில் உணவும் பரி மாறுவார்கள் - அங்கு இருக்கும் எல்லோரும் - "போதும் பசி தீர்ந்து விட்டது , உணவு , பதார்த்தங்கள் அருமை என்று சொல்லியே ஆக வேண்டும் - எவனாவது அங்கே தப்பி தவறி எங்கே போட்டீர்கள் உணவு என்று கேட்டுவிட்டால் அவன் அன்றே photo வாக மாறி , மாலையுடன் ஊதுபத்தியின் வாசனையை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்

நகைச்சுவை பதிவுகள் தொடரும் ----------:-D:)

Russellisf
8th May 2014, 02:42 PM
are u indicate any badwords posted in my post in our thread about your favourite actor?

Russellisf
8th May 2014, 03:00 PM
Dear RKS, Kalnayak, Ravi sir. There are differences between our thread and the other actor's one, in the way we run and interact our thread. Since NTs movies have proved to be the evergreen classics and his acting prowess has been unmatched hitherto, there are lot of informations and data on his box office records too, we furnish and enjoy. On the other hand, the other actor's thread is devoid of such peer reviews of their films and the 'acting capacity' of their icon. Sattiyil irundhalthane agappayil varum! Since their movies lack content and slowly becoming outdated and approaching extinction, they are unable to discuss such healthy reviews in their thread, except tomtomming their "kizhavi
manjal Kuliththa kathaigal" as their nostalgia! Since their much expected rerun of AO by default proved to be a fiasco and a miserable flop to our records in its rerun attempt, they are unable to digest the bitterness of truth. To find a quantum of solace, they resort to mudslinging NT and trying to mask his achievements. Times have changed!! Only NT movies can redo the magic of crowd pulling even in the years to come as they are immortal classics. AO is 'oru paanai sotrukku oru soru padham"! Since the other actor's movies lack lustre and are becoming Marketless, Guranteeless, Revenueless junks, let them say anything as they wish..... the present world will laugh at them!!

நண்பர்களே

நடிகர் திலகம் புகழ் பரப்புவதை மறந்து என் நேரமும் எம்ஜிஆரின் திரியில் தேவை இல்லாமல் பதிவுகளை போட்டும் , உங்கள் - தரமற்ற கேவலமான வார்த்தைகளால் தாக்கியும்
பெருமை பட்டு கொள்ளும் திரு ஹரிஷ் - திரு செந்தில் - திரு ரவி - திரு ரவிகிரண் அதிமேதாவி
கோபால் - மையம் திரியில் பலரையும் ஏமாற்றி கொண்டிருக்கும் கல்நாயக் - ஆதிராம் - சாரதா
கார்த்திக் - பரணி - வனஜா - லேட்டஸ்ட் ராமதாஸ் என்று பன்முகம் கொண்ட ஒருவரும் நீங்கள்
எல்லாம் எப்போது உண்மையை உணர்வீர்கள் ?

சிவாஜி புகழ் பாடுங்கள் . வரவேற்கிறோம் . உங்கள் ஒற்றுமையை அதில் காட்டுங்கள் . அதை
விடுத்து எம்ஜிஆரின் சாதனைகள் பற்றிய நினைப்புடனே வருத்தமுடன் காலத்தை கடத்தாதீர்கள்
நீங்கள் மட்டுமென்ன உண்மையான தகவல்களை தருகிறீர்கள் . [ 100 நாள் ஓடாத நீதி - ராஜ ராஜ சோழன் இன்னும் பல ] முதலில் உங்கள் பிழைகளை திருத்தி கொள்ளுங்கள் .

நாங்கள் இதுவரை உங்கள் திரியில் வந்து ஒரு போதும் சிவாஜியின் நடிப்பை பற்றியோ , அவருடைய புகழை பற்றியோ பதிவிடாத போது உங்கள் ரசிகர்கள் ஆத்திரத்துடன் வந்து குறைகள் கூறியும் உங்கள் திரியில் கேவலமாகவும் போட்டு மகிழ்வது ஏனோ ?

இந்த வேகம் - ஒற்றுமை உங்கள் எல்லோரிடம் இருந்திருந்தால் திருவையாறு - ஒரு மறக்க முடியாத சரித்திரம் ஆகி இருக்கும் . இனியாவது மனம் திருந்தி உங்கள அபிமான நடிகர் திலகத்திற்கு சேவை செய்யவும் .

நல்லதே நடக்கும் என்று நம்புவோம் .

உண்மையை உணரும் நேரமிது ..

eehaiupehazij
8th May 2014, 03:28 PM
are u indicate any badwords posted in my post in our thread about your favourite actor?

dear thiru. Yukesh Babu. I know you are an ardent fan of your abhimana nadigar MGRamachandran. We have not posted any bad words abour your favourite actor, We also need not indicate about your postings whether you used bad words or not!
When our icon's movies are unnecessarily criticized or wrong information about his collections are posted naturally we rise up and relaliate. We dont hurt individual's feeling. What I posted was only a real time situation. Understand properly and kindly avoid provoking words .... we are not used to such abusing words! Can u indicate the bad words used by me?

kalnayak
8th May 2014, 06:09 PM
நன்றி நண்பரே. நான் நிறுத்திக்கொள்ளலாம் என்றிருந்தேன். உங்கள் காமெடி பதிவுகளை கண்டதும் நண்பர்கள் இங்கே பகிர்ந்து கொண்டார்கள். நீங்களும் நேரடியாக இங்கே வந்து காமெடி செய்வது மிக நன்றாகவே இருக்கிறது. பாவம் உங்கள் பொய்யும் புரட்டும் அம்பலமானதில், மானமிழந்து நிற்கிறீர். தைரியமிருந்தால் திரு முரளி சீனிவாஸ் கூறியதற்கும், நான் உங்களிடம் போன பதிவில் கேட்ட கேள்விக்கும் பதிலளித்துவிட்டு மானம் காப்பாற்றி உங்கள் அடுத்த பதிவையிடுங்கள். பின்னர் உங்களுக்கு நான் பதில் தருகிறேன் மேற்கொண்டு. சம்பந்தமில்லாதவர்களை நீங்கள் வம்பிழுப்பது உங்கள் நிதானமில்லாத நிலையையே காட்டுகிறது.


நண்பர்களே

நடிகர் திலகம் புகழ் பரப்புவதை மறந்து என் நேரமும் எம்ஜிஆரின் திரியில் தேவை இல்லாமல் பதிவுகளை போட்டும் , உங்கள் - தரமற்ற கேவலமான வார்த்தைகளால் தாக்கியும்
பெருமை பட்டு கொள்ளும் திரு ஹரிஷ் - திரு செந்தில் - திரு ரவி - திரு ரவிகிரண் அதிமேதாவி
கோபால் - மையம் திரியில் பலரையும் ஏமாற்றி கொண்டிருக்கும் கல்நாயக் - ஆதிராம் - சாரதா
கார்த்திக் - பரணி - வனஜா - லேட்டஸ்ட் ராமதாஸ் என்று பன்முகம் கொண்ட ஒருவரும் நீங்கள்
எல்லாம் எப்போது உண்மையை உணர்வீர்கள் ?

சிவாஜி புகழ் பாடுங்கள் . வரவேற்கிறோம் . உங்கள் ஒற்றுமையை அதில் காட்டுங்கள் . அதை
விடுத்து எம்ஜிஆரின் சாதனைகள் பற்றிய நினைப்புடனே வருத்தமுடன் காலத்தை கடத்தாதீர்கள்
நீங்கள் மட்டுமென்ன உண்மையான தகவல்களை தருகிறீர்கள் . [ 100 நாள் ஓடாத நீதி - ராஜ ராஜ சோழன் இன்னும் பல ] முதலில் உங்கள் பிழைகளை திருத்தி கொள்ளுங்கள் .

நாங்கள் இதுவரை உங்கள் திரியில் வந்து ஒரு போதும் சிவாஜியின் நடிப்பை பற்றியோ , அவருடைய புகழை பற்றியோ பதிவிடாத போது உங்கள் ரசிகர்கள் ஆத்திரத்துடன் வந்து குறைகள் கூறியும் உங்கள் திரியில் கேவலமாகவும் போட்டு மகிழ்வது ஏனோ ?

இந்த வேகம் - ஒற்றுமை உங்கள் எல்லோரிடம் இருந்திருந்தால் திருவையாறு - ஒரு மறக்க முடியாத சரித்திரம் ஆகி இருக்கும் . இனியாவது மனம் திருந்தி உங்கள அபிமான நடிகர் திலகத்திற்கு சேவை செய்யவும் .

நல்லதே நடக்கும் என்று நம்புவோம் .

உண்மையை உணரும் நேரமிது ..

Harrietlgy
8th May 2014, 10:30 PM
நான் இதுவரை mgr திரிக்கு வந்ததே இல்லை. திரு. யுகேஷ் பாபு, வரவும் மாட்டேன்.

Murali Srinivas
9th May 2014, 12:33 AM
அன்பு நண்பர் யுகேஷ் பாபு அவர்களே,

நடிகர் திலகத்தின் திரியில் வந்து ஒரு சில கேள்விகளை எழுப்பி ஒரு சில குற்றசாட்டுகளையும் கூறியிருக்கிறீர்கள். இந்த விவாதத்தை வளர்க்க நான் விரும்பவில்லை. ஒரு சில விஷயங்களை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு தெரிந்த வரை நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல் இந்த திரியிலும் சரி எம்ஜிஆர் திரியிலும் சரி எம்ஜிஆர் அவர்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டதேயில்லை. விவாதம் என்று வந்திருந்தால் அது முறையே சிவாஜி மற்றும் எம்ஜிஆர் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைகளைப் பற்றிதான் இருந்திருக்குமே தவிர வேறு வகையான விமர்சனங்கள் சிவாஜி திரியில் வந்ததில்லை. அது கூட சிவாஜி படங்களின் வசூல் பற்றி யாரவது எழுதினால் உடனே அதை குறை காணுவது, விமர்சிப்பது போன்ற செய்கைகளினால்தான் இங்கே பதில் வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சிவாஜி படங்களை பற்றி தேவையில்லாமல் நண்பர் ராஜாராம் சிவாஜி திரியில் விமர்சித்தபோது அதற்கு உணர்சசிவசப்பட்டு சில சிவாஜி ரசிகர்கள் பதில் கொடுத்த போது அதில் இடம் பெற்றிருந்த சில வார்த்தைகள தரமற்றவையாக இருந்த காரணத்தினால் சிவாஜி ரசிகர்களின் பதிவுகளையும் நீக்கியவன் நான்.

ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் திரியில் தேவையில்லாமல் பல முறை சிவாஜி விமர்சிக்கப்பட்டிருக்கிறார். அவற்றையெல்லாம் நான் மீண்டும் குத்திக் கிளற விரும்பவில்லை, நீங்கள் பதிவிட்ட ஒரு பதிவை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அண்மையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி திரையரங்கில் தியாகம் திரையிடப்பட்டபோது ஞாயிறு மாலை காட்சியைப் பற்றி நீங்கள் அவதூறு கூறினீர்கள். அன்று மகாலட்சுமி திரையரங்கிற்கு அல்லது அந்த சாலை வழியாக சென்றவர்களுக்கு தெரியும் எவ்வளவு பெரிய கூட்டம் அன்று படத்திற்கு வந்திருந்தது என்று. ஆனால் நீங்கள் அனைத்து டிக்கெட்டுகளையும் ஒருவரே வாங்கி அருகாமையிலிருந்த டாஸ்மாக் கடைக்கு வந்தவர்களுக்கு இலவசமாக கொடுத்தார்கள் என நாகூசாமல் பழி சுமத்தினீர்கள். அன்றைய மாலைக்காட்சிக்கு சென்றிருந்தவர்களில் நானும் ஒருவன். என்னுடைய வாழ்நாளில் இன்றுவரை ஒரு துளி மதுபானம் கூட அருந்தாத நான் உங்கள் வார்த்தைகளால் மிகவும் புண்பட்டுப் போனேன். உங்களின் அந்த பதிவிற்கு அதே தொனியில் பதிலளிக்க வேண்டும் என்று இந்த திரியில் சில நண்பர்கள் எழுதிய போது நான் அதை மறுத்து நண்பர் யுகேஷ் பாபு நம்மை விட வயதில் இளையவர். அவருக்கு நேரிடையான அனுபவம் கிடையாது. ஏதோ கோவத்தில் யாரோ சொல்லிக் கொடுத்ததை எழுதியிருக்கிறார். ஆகவே அதை பெரிதுபடுத்தாமல் விட்டு விடுவோம் என்று நான் எழுதியிருந்தது உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை. எதற்கு இதை குறிப்பிடுகிறேன் என்றால் இப்படி தனிப்பட்ட முறையில் நீங்கள் எழுதியும் கூட, ஏன் இன்று கூட நடிகர் திலகத்தின் ரசிகர்கள் கோபால், செந்தில், ஹரிஷ், ரவி, மற்றும் ரவிகிரண் போன்றவர்களையும் தனிப்பட்ட முறையில் நீங்கள் தாக்கியதையும் கூட சிந்தித்து பாருங்கள் நண்பரே, இது போன்ற செய்கைகள் எங்கள் தரப்பிலிருந்து வந்திருக்கிறதா என்று? அது போல் திருவையாறு அரசியல் எல்லாம் தேவையா நண்பரே? பதிலுக்கு அதே தேர்தல் பற்றி நாங்களும் உரைத்தால்? சற்றே சிந்தித்து பாருங்கள்.

மீண்டும் கூறுகிறேன். தனிப்பட்ட முறையில் எம்ஜிஆர் அவர்களை பற்றியும் சரி எம்ஜிஆர் திரி நண்பர்கள் பற்றியும் எந்த விதமான தனிப்பட்ட விமர்சனங்களும் நடிகர் திலகம் திரியில் வராது. நடிகர் திலகத்தைப் பற்றிய உண்மையில்லாத செய்திகளை நீங்கள் தவிர்த்தாலே எந்த சச்சரவும் வராது.

புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்

அன்புடன்

Murali Srinivas
9th May 2014, 12:34 AM
நமது திரி நண்பர்களுக்கு,

நான் முன்பே பலமுறை கூறியதைத்தான் மீண்டும் சொல்ல விழைகிறேன். எம்ஜிஆர் திரியில் ஏதோ எழுதி விட்டார்கள் என்பதற்காக நாமும் அதே போன்று இங்கே பதிவிட தேவையில்லை. நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான செய்தியோ அல்லது சிவாஜி படங்களின் வெற்றிகளைப் பற்றி தவறாக குறிப்பிட்டால் மட்டுமே நாம் உண்மை நிலையை விளக்க பதிவிட வேண்டுமே தவிர மற்றபடி பதிவிற்கு பதிவு என்று நாமும் ஆரம்பித்தால் அது நமது நேரத்தையும் சக்தியையும் வீணாக்குவதுடன் தேவையற்ற விவாதங்களையும் வளர்க்கும். அதை தயவு செய்து தவிர்ப்போம்.

மற்றொரு முக்கியமான விஷயம், நமது திரியில் புதிதாக யாரேனும் நுழைந்தாலோ அல்லது ஏற்கனவே பல ஆண்டுகளாக பதிவிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களை அவரா இவர் அல்லது இவரா அவர் என்றெல்லாம் திரியில் தேவையற்ற கேள்விகளை எழுப்பி தேவையற்ற குழப்பங்களை உருவாக்க வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்கள் யார் என்ற கேள்வி மிக அதிகமாக கேட்கப்பட்ட நபரான நண்பர் கல்நாயக் அவர்கள் வேறு எந்த உறுப்பினரின் பினாமியும் அல்ல என்பதை இந்த திரியின் Moderator என்ற முறையில் அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் தன profile-ல் குறிப்பிட்டிருப்பது போல் சென்னையில்தான் வசிக்கிறார். ஆகவே இனிமேல் இது போன்ற விவாதத்தை அறவே தவிர்த்து நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

tacinema
9th May 2014, 01:35 AM
நமது திரி நண்பர்களுக்கு,

நான் முன்பே பலமுறை கூறியதைத்தான் மீண்டும் சொல்ல விழைகிறேன். எம்ஜிஆர் திரியில் ஏதோ எழுதி விட்டார்கள் என்பதற்காக நாமும் அதே போன்று இங்கே பதிவிட தேவையில்லை. நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான செய்தியோ அல்லது சிவாஜி படங்களின் வெற்றிகளைப் பற்றி தவறாக குறிப்பிட்டால் மட்டுமே நாம் உண்மை நிலையை விளக்க பதிவிட வேண்டுமே தவிர மற்றபடி பதிவிற்கு பதிவு என்று நாமும் ஆரம்பித்தால் அது நமது நேரத்தையும் சக்தியையும் வீணாக்குவதுடன் தேவையற்ற விவாதங்களையும் வளர்க்கும். அதை தயவு செய்து தவிர்ப்போம்.

மற்றொரு முக்கியமான விஷயம், நமது திரியில் புதிதாக யாரேனும் நுழைந்தாலோ அல்லது ஏற்கனவே பல ஆண்டுகளாக பதிவிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களை அவரா இவர் அல்லது இவரா அவர் என்றெல்லாம் திரியில் தேவையற்ற கேள்விகளை எழுப்பி தேவையற்ற குழப்பங்களை உருவாக்க வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்கள் யார் என்ற கேள்வி மிக அதிகமாக கேட்கப்பட்ட நபரான நண்பர் கல்நாயக் அவர்கள் வேறு எந்த உறுப்பினரின் பினாமியும் அல்ல என்பதை இந்த திரியின் Moderator என்ற முறையில் அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் தன profile-ல் குறிப்பிட்டிருப்பது போல் சென்னையில்தான் வசிக்கிறார். ஆகவே இனிமேல் இது போன்ற விவாதத்தை அறவே தவிர்த்து நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Dear Murali,

With due respect, i differ with your statement in 1st paragraph. MGR fans are not going to stop abusing NT's fame; that's there in their blood. They have done it successfully for the last few generations with the help of politics, media etc. Now, their false propaganda of their idol BO power has been completely exposed with miserable debacle of re-released AO (never cross with our Karnan).

With enough proof in our hand on NT's BO power, we must expose their lies and propaganda. In fact, we should publish NT's records very aggressively and prove that NT is the only BO king in tamil film world ever.

I would strongly support RavikiranSurya, Gopal, Kalnayak, Sivaa and others bringing out more and more on NT BO potential. If MT fans abuse our star in their thread for no reason, we should go and indulge there too.

You have seen Yukesh's bad and pathetic comment on NT's Thiruvaiyaru that he made today. That shows, he is completely running out of steam to prove his star's cinema talent (it is a different matter if MT had any acting talent) and BO power as claimed. Instead of talking more on MT's cinematic achievements, he brought out NT's political journey by conveniently forgetting it is a movie related thread, not politics forum. If they are participating in mud-slinging, i would favor our part on the same path. For us, NT has been great. For them, MT has been great and they should remember that they should not indulge in NT bashing. Instead, they should focus on bringing out good movies of MT and write about them.

They should remember ultimately, truth will triumph and it is happening now.

Regards

Gopal.s
9th May 2014, 07:36 AM
நான் இதுவரை mgr திரிக்கு வந்ததே இல்லை. திரு. யுகேஷ் பாபு, வரவும் மாட்டேன்.
அதே அதே சபாபதே.

Gopal.s
9th May 2014, 07:42 AM
நண்பர்களே

அதிமேதாவி கோபால் -

நீங்கள் எல்லாம் எப்போது உண்மையை உணர்வீர்கள் ?
புகழ் பாடுங்கள் . வரவேற்கிறோம் .

உண்மையை உணரும் நேரமிது ..

அதே அதே சபாபதே.

Gopal.s
9th May 2014, 07:45 AM
அன்பு நண்பர் யுகேஷ் பாபு அவர்களே,

நடிகர் திலகத்தைப் பற்றிய உண்மையில்லாத செய்திகளை நீங்கள் தவிர்த்தாலே எந்த சச்சரவும் வராது.

புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்

அன்புடன்
அதே அதே சபாபதே.

uvausan
9th May 2014, 08:01 AM
அன்புள்ள முரளி - உங்களிடம் இன்னும் கற்று கொள்ளவேண்டியவைகள் பல . இந்த அடக்கம் , புத்தரின் கோட்பாடு , கண்ணியம் தவறாத வார்த்தைகள் , காந்தியின் அஹிம்சா வழி - இன்னும் எவள்ளவோ ! இவைகளை ஏற்றுகொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் இருந்தால் உங்கள் வார்த்தைகள் பொன்னாக மதிக்கப்படும் - இல்லாவிட்டால் எல்லாமே விழலுக்கு இரைத்த நீர் தான் --- நமக்கு மட்டும் இந்த பண்புகள் இருந்தால் போதாது - அடுத்த தலைமுறை வேண்டுமானாலும் நம் பண்புகளை வியந்து பாராட்டலாம் , எழுதலாம் .. இந்த தலைமுறை இன்னும் நம்மை பழைய பஞ்சாங்கம் என்றுதான் தூற்றும் - கொஞ்சம் கூட தயிரியம் இல்லாதவர்கள் - உண்மைகளை கூட புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்ல தெரியாதவர்கள் என்று தான் ஏசும் --- உங்களுக்கு ஒரு பழ மொழியை நினைவு படுத்த விரும்பிகிறேன் - பாம்புக்கு பால் வார்த்தாலும் அது --------- . உங்களின் அடக்கமான வார்தைகளால் அவர்கள் ஏதாவது இதுவரை கற்று கொண்டார்களா ? - மாறாக இன்னும் பொய்களை தங்களின் பிறவி சொத்தாகத்தான் வைத்து கொண்டிருக்கிண்டார்கள் - NT yin படம் ஓடவில்லை என்பதை அந்த திரியில் யாராவது சொல்லும் வரை நாம் காத்திருப்பதில்லை - நம்மில் ஒருவரே இந்த படம் பார்க்க தேவை இல்லை என்று எழுதிவிடுவார் - அங்கே பாருங்கள் - LIC மாடியில் தீ , சென்ட்ரல் station இல் train வரவில்லை , மாடியில் இருந்த புறா ஒன்று இறந்துவிட்டது - அதனால் கூட்டம் குறைந்து விட்டது - ஆனாலும் theater இல் வேலை செய்யும் முனியம்மாவும் அவரின் குடும்பமும் அந்த படத்தை தினமும் பார்த்து வெற்றி அடைய செய்து விட்டார்கள் என்று எழுதுவார்கள் - இவர்களா நம்முடைய உண்மைகளை தெரிந்து கொண்டு ஒத்து கொள்ள போகிறார்கள் ? ஆனாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகம் . முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் - அவர்களுடைய பொய் கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் - இது நமக்காக மட்டும் அல்ல - அடுத்த தலைமுறைக்காகவும் கூட

ஒரு பாம்பு ஒரு சாது சொன்னார் என்பதற்காக தன்னுடைய சீறும் இயல்பையும் குறைத்து கொண்டு உயிருக்கு ஊசலாடிய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் - நாம் சீற வேண்டும் தேவைப்பட்டால் - ஆனால் அவர்களைப்போல அநாகரிகமாக அல்ல - நம்முடைய எழுத்துக்கள் அவர்களை புண் படுத்த வேண்டாம் - ஆனால் அத்தனையும் உண்மை என்று அவர்கள் உணரும்படி இருக்க வேண்டும் - நம்முடன் விளையாடுவது ஒரு நெருப்புடன் , சிங்கத்துடன் விளையாடுவதைப்போல - ஆனால் நாம் நண்பர்களுக்கு நண்பர்கள் - கண்ணியம் தவற மாட்டோம் - அதே சமயத்தில் பதுங்கி கிடந்தது உபதேசம் செய்யும் துறவிகள் அல்ல நாம் - இதை அவர்கள் எவ்வளவு சீக்கிரம் உணர்வாகளோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் நம்முடைய இனிய நண்பர்களாகி விடுவார்கள்

Russellbpw
9th May 2014, 08:24 AM
என்னது...சம்பந்தமே இல்லாமல் நீதி மற்றும் ராஜ ராஜ சோழன் திரைப்படம் இழுக்கபடுகிறதே என்று பார்த்தால். விஷயம் இதுதான் !

இவர்களுடைய திரைப்படங்கள்தான் சில திரை அரங்கு எப்போதும் திரையிடும் என்ற மாய நிலை மாறி அனைவருமே இப்போது நடிகர் திலகம் படங்களை சில மாயாவிகளின் மாய வேலைகளால் திரையிடாமல் இருந்துவிட்டோமே என்பதை இப்போது உணர்ந்தது போல,

நடிகர் திலகம் திரைப்படம் "நீதி" இன்று முதல் நியூ பிராட்வே திரை அரங்கில் 3 காட்சிகளாக வலம் வருகிறது.

இதை ஜீரணம் செய்யமுடியாமல் அடடா...இங்கயும் சிவாஜி படம் போட ஆரம்பிசுடாங்க்ளா...ச்சே...என்ன பண்ணாலும் பினிக்ஸ் மாதிரி வந்துட்ரான்பா இந்தாளு என்றுதான் எண்ணங்கள் ஓடுகின்றன என்பதை புரிந்துகொள்ளும்போது உண்மைகள் எவ்வளவு நாள் தான் மறைக்க முடியும் என்று எண்ணுவதை தவிர வேறு என்ன செய்வது !



http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/needhi_zpsa8deeb8d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/needhi_zpsa8deeb8d.jpg.html)

Russellbpw
9th May 2014, 08:54 AM
நண்பர்களே

அதை விடுத்து எம்ஜிஆரின் சாதனைகள் பற்றிய நினைப்புடனே வருத்தமுடன் காலத்தை கடத்தாதீர்கள்
நீங்கள் மட்டுமென்ன உண்மையான தகவல்களை தருகிறீர்கள் . [ 100 நாள் ஓடாத நீதி - ராஜ ராஜ சோழன் இன்னும் பல ] முதலில் உங்கள் பிழைகளை திருத்தி கொள்ளுங்கள் .


இந்த வேகம் - ஒற்றுமை உங்கள் எல்லோரிடம் இருந்திருந்தால் திருவையாறு - ஒரு மறக்க முடியாத சரித்திரம் ஆகி இருக்கும் . இனியாவது மனம் திருந்தி உங்கள அபிமான நடிகர் திலகத்திற்கு சேவை செய்யவும் .

நல்லதே நடக்கும் என்று நம்புவோம் .

உண்மையை உணரும் நேரமிது ..

Dear Yukesh Sir,

2 points from my end.

1. I have never come and initiated any controversy. BUT I have replied to controversy statements. I have never disrespected anybody by words or thoughts. I agree that I have argued in MT Thread but only when someone from your end writes wrong information that too directly or indirectly when it affects NT.

2. Thiruvayaaru ! I think NT fans need not feel ashamed about this because NT valued and respected his association with MT and that is why he chose to join hands with Mr.Janaki wife of your god Mr.MGR despite many warnings given by many top leaders about this association. This shows the greatness of our NT . But on the other hand, what did the real MGR sir fans do in return? Did they worked towards the success of their God's Wife ? NO....A BIG NO ...! So, NOW MGR sir's FANS DOESNOT HAVE ANY RIGHT OR FACE INFACT NOBODY HAS THE FACE TO SPEAK ABOUT NT's THIRUVAYAARU HISTORY IT IS NOT THE DEFEAT OF SIVAJI....IT IS THE ACTUALLY THE DEFEAT FOR YOUR GOD BECAUSE IT IS HIS WIFE WHO LOST !!

THERE IS A SAYING IN KURAL - ENNANDRI KONDAARKUM UYIVUNDAAM..UYIVILLAI SEINANDRI KONDRA MAGARKKU !!!

kalnayak
9th May 2014, 11:28 AM
நன்றி முரளி சார், உங்களுடைய பொருத்தமான நிதானமான பதில்கள் அவர்களை நிதானத்திற்கு கொண்டு வரட்டும்.

என்ன சார் இப்படி என்னைப்பற்றிய உண்மையை பட்டென்று வெளியே சொல்லி விட்டீர்களே. இனி என்னை என்ன சொல்லி குறை கூறுவார்கள்? இருந்தாலும் நன்மைக்கே. என்னை அவரின் பினாமி இவரின் பினாமி என்று கூறப்பட்டதால் குற்றம் சுமத்தப்பட்டு வெறுத்து திரியை விட்டு விலகியிருப்பவர்கள் இதனால் திரும்பிவர வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பங்கெடுக்க முடியாததற்கு நான் காரணமில்லை என்றாலும் என் பெயர் காரணமாயிருந்தால் மன்னிக்க வேணடுகிறேன்.

மேலும் வேறு சில காரணங்களுக்காக விலகியிருப்பவர்கள் திரியில் பங்குகொள்ள பணிவன்போடு வேண்டுகிறேன்.

HARISH2619
9th May 2014, 01:34 PM
நமது திரி நண்பர்களுக்கு,

மற்றொரு முக்கியமான விஷயம், நமது திரியில் புதிதாக யாரேனும் நுழைந்தாலோ அல்லது ஏற்கனவே பல ஆண்டுகளாக பதிவிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களை அவரா இவர் அல்லது இவரா அவர் என்றெல்லாம் திரியில் தேவையற்ற கேள்விகளை எழுப்பி தேவையற்ற குழப்பங்களை உருவாக்க வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

exactly murali sir,this is my opinion also.we should never bother about who comes with which id

HARISH2619
9th May 2014, 01:38 PM
dear yukesh sir,

2 points from my end.

1. I have never come and initiated any controversy. But i have replied to controversy statements. I have never disrespected anybody by words or thoughts. I agree that i have argued in mt thread but only when someone from your end writes wrong information that too directly or indirectly when it affects nt.

2. Thiruvayaaru ! I think nt fans need not feel ashamed about this because nt valued and respected his association with mt and that is why he chose to join hands with mr.janaki wife of your god mr.mgr despite many warnings given by many top leaders about this association. This shows the greatness of our nt . But on the other hand, what did the real mgr sir fans do in return? Did they worked towards the success of their god's wife ? No....a big no ...! So, now mgr sir's fans doesnot have any right or face infact nobody has the face to speak about nt's thiruvayaaru history it is not the defeat of sivaji....it is the actually the defeat for your god because it is his wife who lost !!

There is a saying in kural - ennandri kondaarkum uyivundaam..uyivillai seinandri kondra magarkku !!!

very true ravi sir

kalnayak
9th May 2014, 01:52 PM
அதே அதே சபாபதே.
திரு கோபால், யார் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நீங்கள் எங்களுக்கு அதிமேதாவிதான். நீங்கள் அதை அவர்கள் சொல்லி, உங்கள் பாணியில் ஏற்றுக்கொண்டது நன்று.

kalnayak
9th May 2014, 02:08 PM
அன்புள்ள முரளி - உங்களிடம் இன்னும் கற்று கொள்ளவேண்டியவைகள் பல . இந்த அடக்கம் , புத்தரின் கோட்பாடு , கண்ணியம் தவறாத வார்த்தைகள் , காந்தியின் அஹிம்சா வழி - இன்னும் எவள்ளவோ ! இவைகளை ஏற்றுகொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் இருந்தால் உங்கள் வார்த்தைகள் பொன்னாக மதிக்கப்படும் - இல்லாவிட்டால் எல்லாமே விழலுக்கு இரைத்த நீர் தான் --- நமக்கு மட்டும் இந்த பண்புகள் இருந்தால் போதாது - அடுத்த தலைமுறை வேண்டுமானாலும் நம் பண்புகளை வியந்து பாராட்டலாம் , எழுதலாம் .. இந்த தலைமுறை இன்னும் நம்மை பழைய பஞ்சாங்கம் என்றுதான் தூற்றும் - கொஞ்சம் கூட தயிரியம் இல்லாதவர்கள் - உண்மைகளை கூட புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்ல தெரியாதவர்கள் என்று தான் ஏசும் --- உங்களுக்கு ஒரு பழ மொழியை நினைவு படுத்த விரும்பிகிறேன் - பாம்புக்கு பால் வார்த்தாலும் அது --------- . உங்களின் அடக்கமான வார்தைகளால் அவர்கள் ஏதாவது இதுவரை கற்று கொண்டார்களா ? - மாறாக இன்னும் பொய்களை தங்களின் பிறவி சொத்தாகத்தான் வைத்து கொண்டிருக்கிண்டார்கள் - NT yin படம் ஓடவில்லை என்பதை அந்த திரியில் யாராவது சொல்லும் வரை நாம் காத்திருப்பதில்லை - நம்மில் ஒருவரே இந்த படம் பார்க்க தேவை இல்லை என்று எழுதிவிடுவார் - அங்கே பாருங்கள் - LIC மாடியில் தீ , சென்ட்ரல் station இல் train வரவில்லை , மாடியில் இருந்த புறா ஒன்று இறந்துவிட்டது - அதனால் கூட்டம் குறைந்து விட்டது - ஆனாலும் theater இல் வேலை செய்யும் முனியம்மாவும் அவரின் குடும்பமும் அந்த படத்தை தினமும் பார்த்து வெற்றி அடைய செய்து விட்டார்கள் என்று எழுதுவார்கள் - இவர்களா நம்முடைய உண்மைகளை தெரிந்து கொண்டு ஒத்து கொள்ள போகிறார்கள் ? ஆனாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகம் . முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் - அவர்களுடைய பொய் கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் - இது நமக்காக மட்டும் அல்ல - அடுத்த தலைமுறைக்காகவும் கூட

ஒரு பாம்பு ஒரு சாது சொன்னார் என்பதற்காக தன்னுடைய சீறும் இயல்பையும் குறைத்து கொண்டு உயிருக்கு ஊசலாடிய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் - நாம் சீற வேண்டும் தேவைப்பட்டால் - ஆனால் அவர்களைப்போல அநாகரிகமாக அல்ல - நம்முடைய எழுத்துக்கள் அவர்களை புண் படுத்த வேண்டாம் - ஆனால் அத்தனையும் உண்மை என்று அவர்கள் உணரும்படி இருக்க வேண்டும் - நம்முடன் விளையாடுவது ஒரு நெருப்புடன் , சிங்கத்துடன் விளையாடுவதைப்போல - ஆனால் நாம் நண்பர்களுக்கு நண்பர்கள் - கண்ணியம் தவற மாட்டோம் - அதே சமயத்தில் பதுங்கி கிடந்தது உபதேசம் செய்யும் துறவிகள் அல்ல நாம் - இதை அவர்கள் எவ்வளவு சீக்கிரம் உணர்வாகளோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் நம்முடைய இனிய நண்பர்களாகி விடுவார்கள்

திரு. ரவி உங்கள் கூற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். நண்பர் இரவிகிரண் சூர்யாவும், மற்றவர்களும் தங்கள் பதில்களை இங்கே மட்டும் வைக்காமல் அங்கேயும் வைக்கவேண்டும். அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா - பதிவை அழிக்காமல் விடுவார்களா? பழிச்சொல் சொல்லாமல் இருப்பார்களா? நடக்காததை நடந்தது, நடந்ததை நடக்காதது என மறுக்காமல் இருப்பார்களா? மீண்டும் பார்க்கலாம். எதையும் உணர நினைத்தால் உணரலாம். உயர நினைத்தால் உயரலாம். வாழ நினைத்தால் வாழலாம்.

adiram
9th May 2014, 05:30 PM
//சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம். //

color + Kashmir 'Raman Thediya Seethai', Color 'Naan Yen Pirandhen' padangalai Black & White 'Pattikkada patanama' padam Oda Oda virattiyapinnum....

Color Brammandam 'Neerum Neruppum' padaththai Black & White 'Babu' Oda Oda virattiya pinnum ippadiyellaam ezhudha eppadiththaan manam thunigiradho theriyavillai.

adiram
9th May 2014, 05:40 PM
'Ninaiththadhai Mudippavan' padam ange 100 naal odiyadhu, inge 100 naal odiyadhu endru pulukikkondirundha aasaamigalukku naduvil, andhappadam Maduraiyil mattume 100 naal odiyadhu endra unmaiyai pottu udaiththa nanbar Vinodh (esvee) avargalukku nandri.

LIC buildingil neruppu pidiththadhaal Devi Paradaisil odavillai, sari. Agasthiyavilum odavillaiye ange endha building patri erindhadhu?.

Reason kandu pidikkiraanga paarungappaa, adeyappaa.

adiram
9th May 2014, 05:59 PM
நமது திரி நண்பர்களுக்கு,

நீங்கள் யார் என்ற கேள்வி மிக அதிகமாக கேட்கப்பட்ட நபரான நண்பர் கல்நாயக் அவர்கள் வேறு எந்த உறுப்பினரின் பினாமியும் அல்ல என்பதை இந்த திரியின் Moderator என்ற முறையில் அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் தன profile-ல் குறிப்பிட்டிருப்பது போல் சென்னையில்தான் வசிக்கிறார். ஆகவே இனிமேல் இது போன்ற விவாதத்தை அறவே தவிர்த்து நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Thanks a lot Murali sir for your explanation. (puriya vendiyavargalukku purindhaal sari)

adiram
9th May 2014, 06:43 PM
When mentioning about Thiruvaiyaru, Mr.Yukesh Babu should not forget what result MGR faced in 1980 PARLIMENT ELECTION. ('thOlviye kaanaadhavar' endrellaam sollappattavarukku kidaiththa seats 2 out of 40)

ottumoththa tamilnade MGR kai kaattubavarukkuthaan vottu podum endra maaya thirai vilagiyadhu andha electionilthaan.

JamesFague
9th May 2014, 06:48 PM
Very Apt reply Mr Murali Sir but at the same time we should not keep quite when they
write false info about Our NT.

Here I am totally agree with Mr Ravi.

Regards

adiram
9th May 2014, 06:54 PM
Very Apt reply Mr Murali Sir but at the same time we should not keep quite when they
write false info about Our NT.

Here I am totally agree with Mr Ravi.

Yes,

avargal verum kaiyaal muzham podumbodhu, we are having plenty of Murali sir's Statistical informations and Pammalar's newspaper evidences.

why should we keep quit?. let public know who is the real Emperor of Box Office. It is none other than our NT.

ifohadroziza
9th May 2014, 10:02 PM
Thiruvaiyaru matter -nitharsanamana unmai.Thank u RAVI KIRAN sir for your points regarding Thiruvaiyaru matter.

ifohadroziza
9th May 2014, 10:19 PM
In 1980- CONGRESS main proboganda is Our leader Sivaji who alone canvassed for congress and DMK .We won 38 seats out of 40 seats in parliment..
In 1984-when mr .MGR was hospitalised in USA ,our leader sivaji alone canvassed for AIADMK and CONGRESS .Because of his tour in 234 seats AIADMK- CONGRESS alliance captured more than 3/4 of seats.Not only that, that time only our fans association was given 5 MP seats and 6 MLA seats.We won all the seats i.e 100 percent victory.

Murali Srinivas
9th May 2014, 11:05 PM
நண்பர் கார்த்திக் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு ரவுண்டு வந்ததால் அவரின் சுவையான எழுத்துக்களை மீண்டும் படிக்கவும் மற்றவர்களும் இடையூறு இல்லாமல் அதை தொடர்ந்து வாசிக்கவும் சற்று இடைவெளி விட்டிருந்தேன். இப்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து

விட்ட இடம் 1972-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி மதுரை சென்ட்ரல் திரையரங்கம். பட்டிக்காடா பட்டணமா ஓபனிங் ஷோ. அதை பற்றிய சென்ற பதிவின் இறுதி பாரா.

அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு balance கூட வாங்கவில்லை. ஆனால் counterfoil கிழிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் வந்து விட்டது. உடனே என் கஸின் முதலில் என்னை மட்டும் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போக சொன்னான். சிக்கல் எதுவும் இல்லாமல் நான் உள்ளே செல்வதை பார்த்து விட்டு அவனும் உள்ளே வர, இடம் பிடித்து போய் உட்கார்ந்தோம். ஒரு பெரிய சாதனையை செய்தது போல பெருமிதம். ஆனால் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் அதிலும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்காமல் இவ்வளவு கஷ்டம் வேறு எந்த படத்திற்கும் பட்டதில்லை.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

படம் ஆரம்பித்தது. முதலில் மதுரையை காண்பித்தவுடனே தியேட்டர் களை கட்டி விட்டது. மதுரை விமான நிலையத்தில் முதல் காட்சி. அப்போது வி.கே.ஆர் ஒரு வசனம் சொல்லுவார். மதுரையை சுத்தின கழுதை கூட மதுரையை விட்டு போகாது. ஆரவாரம் அதிகமானது. அடுத்த காட்சி. படம் சட்டென்று நெகடிவ்-ல் மாறியது. தீசட்டி ஏந்திய ஒரு கை மட்டும் திரையில் தெரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும் என்ற வார்த்தைகள் மின்ன, காதடைக்கும் கைதட்டல் ஒலி, பேப்பர் மாரி பொழிய ஆட்டம் தொடங்கியது. முதலில் ஒரு கை பிறகு கால், சைடு போஸ் என்று கொஞ்ச கொஞ்சமாக காட்டிக் கொண்டே வந்து இறுதியில் டைரகஷன் பி.மாதவன் என்று போடும்போது நடிகர் திலகத்தின் முகம் தெரிய அரங்கத்தில் மீண்டும் ஒரு அணைக் கடந்த ஆரவாரம்.

உடனே அம்பிகையே ஈஸ்வரியே பாடல் ஆரம்பிக்க தியேட்டர் இரண்டுப்பட்டது.

இரண்டாவது சரணம் வந்தது

ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி; நாங்க

ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி

வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி; இனி

வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி

1971 தேர்தலில் ஏமாந்த/ஏமாற்றப்பட்ட மக்கள் உண்மை நிலையை புரிந்துக் கொண்டு பெருந்தலைவரின் காங்கிரஸ் இயக்கத்திற்கு பெருவாரியாக ஆதரவாக மாறிக் கொண்டிருந்த அன்றைய சூழலில் இந்த வரிகளை கேட்டவுடன் ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர் அது அப்படியென்றால் அடுத்து வந்த மூன்றாவது சரணம்

சிவகாமி உமையவளே முத்துமாரி; உன்

செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி

மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி;இந்த

மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி,

ரசிகர்களை அலப்பரையின் உச்சத்திற்கே அழைத்து சென்று விட்டது. அடுத்த சில நிமிடங்கள் வரை பெருந்தலைவரையும் நடிகர் திலகத்தையும் வாழ்த்தி கோஷங்கள் தியேட்டரில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்த ரசிகர்களுக்கு இந்த பாடலும், வரிகளும் பயங்கர சந்தோஷத்தை கொடுக்கவே ரசிகர்கள் படத்தில் ஐக்கியமானார்கள். படத்தின் திரைக்கதையமைப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அடுத்து சோழவந்தான் வீதியில் நடக்கும் சண்டை. அந்த சண்டை தொடங்குவதற்கு முன்னால் நடிகர் திலகம் ஒரு வசனம் பேசுவார். "ஏண்டா! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! கத்தி எடுத்தவன் எல்லாம் வீரனா?" தியேட்டரில் அதிகபட்ச அலப்பறை இந்த வசனத்திற்கு தான். அடுத்து கல்யாணம். முதலிரவு காட்சி. அதில் கேட்டுக்கோடி உருமி மேளம் பாடல். அந்த வரிகள், அந்த ட்யுன், மெதுவாக வரும் பீட்ஸ் சட்டென்று டப்பாங்குத்துக்கு மாறுவது, கேட்க வேண்டுமா? ரசிகர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பாடல் காட்சியை அடுத்த தடவை பார்க்கும் போது தான் சரியாக பார்க்க முடிந்தது. இது முடிந்து சிறிது நேரத்தில் அதையும் தூக்கி சாப்பிடும் விதமாக என்னடி ராக்கம்மா பாடல். திகட்ட திகட்ட சந்தோஷம் என்பார்களே அதை அங்கே சிவாஜி ரசிகர்கள் நேரிடையாக அனுபவித்தார்கள். தன்னை மறந்த நிலை என்பார்களே அந்த ரேஞ்சுக்கு போய் விட்டார்கள். இதற்கு நடுவில் அத்தை சுகுமாரிக்கும் நடிகர் திலகத்திற்கும் நடுவில் வரும் சின்ன சண்டைகள், அந்த பதிலுக்கு பதில் வசனங்கள் வேறு ரசிகர்களை குஷிப்படுத்தியது. இடைவேளை. வெளியே வரும் ரசிகன் துள்ளிக் குதிக்கிறான். இது எதிர்பாராமல் கிடைத்த ஜாக்பாட். அதே சமயம் செகண்ட் ஹாப் இதே போல் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமே என்ற சின்ன பயமும் இருந்தது.

அன்புடன்