PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17

eehaiupehazij
30th June 2014, 09:02 PM
dear sirs. kindly don't try to open any Pandora's Box in the name of thread interactions. If one doesn't like the write-up or contents from other, kindly make use of the PM mode to protest or argue or debate in a polite way. Open thread statements will only pave way for augmenting hatred and groupism among hubbers, eventually degrading the honor and respect of NT and his legacy. We are in the verge of concluding this thread and the new thread is on the anvil. Kindly throw away the differences of opinions (the useless paper arrows) and help close this thread with pride of being NT fans! we are certainly not caught in between a deep sea and a devil! We feel you two as parallel rails on which the train can move and we can commute!!

Russellbpw
30th June 2014, 09:48 PM
தமிழ் திரை உலகு மட்டும் அல்ல ..இந்திய திரை உலகமானாலும் சரி ...உலக முழுவதும் உள்ள நாடுகளில் உள்ள திரை உலகமானாலும் சரி....ஒரு நடிகர் அவருடைய ரசிகர் மன்றம் கோட்பாடு என்று வரும்போது...உலகில் எந்த நடிகனும் செய்யாத ஒரு விஷயத்தை நமது நடிகர் திலகம் அவர்களின் ரசிகர் மன்றம் செய்துள்ளது.

மன்ற உறுப்பினர்கள், மற்றும் புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு இந்த நாட்டை பற்றியும்...நாட்டிற்க்கு உழைத்த நல்லவர்கள் பற்றியும் அவர்கள் அறிந்துகொள்ள, தேசியம் வளர்க்க வகுப்புகள் போல எடுக்கப்பட்டது.

தேசியம் வளர்த்த, நாட்டுபற்றை வளர்த்த உத்தம நடிகர் நம்முடைய நடிகர் திலகம். அப்படி ஒரு நிகழ்ச்சியில் நடிகர் திலகம் பங்குகொண்டு உரையாற்றும்போது எடுக்கப்பட்டது !

வேறு எந்த நடிகன் அல்லது அவரது மன்றம் இந்த நற்காரியத்தை செய்தது ?

மக்களுக்கு நல்ல அறிவை புகட்டவேண்டும் நல்ல விஷயங்களை அவர்களுக்கு தெரியவைக்கவேண்டும் என்று பாடுபட்ட ஒரே நடிகர் நம் நடிகர் திலகம் மட்டுமே..!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/190_zps68c29acf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/190_zps68c29acf.jpg.html)

Russellbpw
30th June 2014, 10:03 PM
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தபோதும் சுதந்திரத்திற்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு துரும்பை கூட நகர்த்தவில்லை. திராவிட கழகமாக இருந்தாலும் சரி அதன் கிளை கழகங்களாக இருந்தாலும் சரி..எந்த முதல்வரும் கப்பல் ஒட்டிய தமிழன் VOC கோ அல்லது கட்டபொம்மனுக்கொ ஒரு துரும்பு கூட அதை செய்ய வேண்டிய காலங்களில் செய்யவில்லை.

காரணம் நடிகர் திலகம் அந்த வேடம் புனைந்து கட்டபொம்மனை , கப்பலோட்டிய தமிழனை உலகறிய மீண்டும் துளிர்க்க வைத்துவிட்டாரே என்ற கேவலமான காழ்புனற்சிதான் ! இவர்கள் எல்லாம் தமிழகத்தை முன்னுக்கு கொண்டு வர பாடுபட்ட முதலமைச்சர்கள் என்று மார்தட்டிகொள்கிரார்கள் !

கட்டபொம்மன் சிலை திறக்க, அந்த இடத்தை விலைக்கு வாங்கி அங்கு ஒரு நினைவகம் திறக்க கூட நடிகர் திலகம் அவர்களின் பணம் தான் தேவைப்பட்டது கயத்தாறில் கட்டபொம்மன் சிலை, பாஞ்சாலங்குரிசியில் கட்டபொம்மன் மாளிகை இவற்றை பணிய கூட நடிகர் திலகம் அவர்களுடைய சொந்த பணம் தான் !

கணக்கில் அடங்காமல் கொடுத்ததால் தான் நடிகர் திலகத்தை சாமானிய வள்ளல்களைபோல எண்ணிக்கையில் கொண்டு வரமுடியவில்லை. மற்றவர்கள் எண்ணி எண்ணி கொடுத்ததால் தான் எண்ணிக்கையில் உட்பட்ட வள்ளல்களாக மட்டுமே வலம் வரமுடிகிறது !

நாட்டிற்கு உழைத்த நல்லவர்களுக்கு கூட அவர் நினைவு அமைக்க வாரி கொடுத்த எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத தமிழகத்தின் ஒரே வள்ளல் நடிகர் திலகம் மட்டுமே !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/374492_1377991562447044_472489032_n_zpsad84ab5f.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/374492_1377991562447044_472489032_n_zpsad84ab5f.jp g.html)

Russellbpw
30th June 2014, 10:09 PM
எந்த ஊர் நடிகராக இருந்தாலும் அவர்கள் நடிகர் திலகத்திடம் எப்படி பழகுவார்கள் ...மற்ற நடிகர்களுடன் எப்படி பழகுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு !

இதிலிருந்தே தெரியலாம் மற்ற நடிகர்களை காட்டிலும் நடிகர் திலகத்தின் சிறப்பும் மரியாதையும் !

எந்த நடிகர் பழகுவதற்கு இனிமையானவர் என்று !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1475871_1427297474169043_987114474_n_zpsb7ddf785.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1475871_1427297474169043_987114474_n_zpsb7ddf785.j pg.html)

Russellbpw
30th June 2014, 10:11 PM
ஹிந்தி நடிகர் கபீர் பேடி , சஞ்சீவ் குமார், வில்லன் நடிகர் பிரேம் சோப்ர - ஒரு இனிய மாலை பொழுதில் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/226_zpsa33d883f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/226_zpsa33d883f.jpg.html)

eehaiupehazij
30th June 2014, 10:13 PM
Dear RKS. I presume that you are going to reach your pinnacle as the moderator of the ensuing 14th NT thead. I am confident that your incessant array of NT related data, information, photos, audio-visuals, photo-shop interpretations, ..... will lead to get an 'Oscar's Life Time Achievement' award posthumously under a 'foreign actor' category to be conferred on our beloved NT! Being the best 'event manager' you will succeed in all your orchestrations of our NT hubbers to bring out the best out of them.

Russellbpw
30th June 2014, 10:17 PM
தேவர் பற்றி யார் யாரோ உரிமைகொண்டாடுகிறார்கள், கொண்டாடினார்கள் தேவர் குல ஓட்டிற்கு !

ஆனால் தேவர் இனத்தை சேர்ந்த நம் நடிகர் திலகமோ தேவரிடத்தில் மிகுந்த மரியாதை கொண்டவர்.

அந்த தேவர் இனம் காழ்புணர்ச்சியால் நடிகர் திலகத்தை பல சந்தர்பங்களில் முதுகில் குத்தினாலும் கைவிட்டாலும் !

தேவர் அவர்கள் யாருடனாவது இப்படி எவருடனாவது சிரித்து பேசி பார்த்ததுண்டா?

அதுதான்ய நடிகர் திலகம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1460991_1482520838640293_152756872_n_zps78036e87.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1460991_1482520838640293_152756872_n_zps78036e87.j pg.html)

Russellbpw
30th June 2014, 10:21 PM
ஒரு நடிகருக்கு இதுபோல மக்கள் வெள்ளம் இந்த புவி கண்டதுண்டா ? முதல்வர்களுக்கு வேண்டுமானால் ஒவொரு தொகுதியிலிருந்தும் ஆட்கள் வந்திருக்கலாம் !

ஆனால் ஒரு நடிகருக்கு ?

நாட்டிற்கு உழைத்த நல்லவர்களுக்கு கூட அவர் நினைவு அமைக்க வாரி கொடுத்த எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத தமிழகத்தின் ஒரே வள்ளல் நடிகர் திலகம் மட்டுமே !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zpsbbb5685f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zpsbbb5685f.jpg.html)

eehaiupehazij
30th June 2014, 10:22 PM
[
QUOTE=RavikiranSurya;1144120]ஹிந்தி நடிகர் கிரண்பேடி , சஞ்சீவ் குமார், வில்லன் நடிகர் பிரேம் சோப்ர - ஒரு இனிய மாலை பொழுதில் !

dear RKS. it is not Kiran Bedi (woman IG / DGP?). His name is Kabir Bedi, who is now an Italian citizen of Indian origin. He has acted in few Italian movies and the limelight was thrown on him when he starred as the arch-villain for James Bond 007 in Roger Moore's Octopussy! Remember the stunt on top of a plane and the Auto-rickshaw chase with Moore?

Russellbpw
30th June 2014, 10:22 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/229_zps16a19695.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/229_zps16a19695.jpg.html)

Russellbpw
30th June 2014, 10:24 PM
திருமதி பானுமதியை அன்னை இந்திராவிடம் அறிமுகபடுத்தும் தேசிய திலகம்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/235_zps47cc8a5b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/235_zps47cc8a5b.jpg.html)

Russellbpw
30th June 2014, 10:27 PM
BILLIARDS விளையாட்டில் கைதேர்ந்த நம்முடைய தேசிய திலகம் ! இன்றும் பிரபலமாக உள்ள CHECKED DESIGN SHIRT ! படு ஸ்டைல் போஸ் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/192_zpsa92c8309.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/192_zpsa92c8309.jpg.html)

Russellbpw
30th June 2014, 10:30 PM
இது போல ஒரு போஸ் தான் நடிக்கின்ற காலத்திலோ நடித்தகாலத்திலோ கொடுத்ததுண்டா பலர் ?

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/photo59_zpsced7601d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/photo59_zpsced7601d.jpg.html)

uvausan
30th June 2014, 10:36 PM
முரளி - அலைபேசியில் குறுப்பிட்டது போல் , பல நாட்களாக போடும் பதிவுகளின் எண்ணக்கை உயருவதே இல்லை - இந்த திரியில் இதை பலர் கவனித்து இருக்க மாட்டார்கள் - தயவு செய்து இதை உடனே கவனிக்கவும்.

உ .ம் : RKS - இன்று திரியை கலக்கினவர் இவர் - பல பதிவுகள் இன்று இவர் போட்டும் posts -729 இல் தான் இன்னும் இருக்கிறது

Russellbpw
30th June 2014, 10:41 PM
ஒரு திரைப்பட நடிகருடைய பிறந்தநாள் விழாவை இரண்டு தினங்கள் கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது, அதில் அகில இந்திய அளவில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டது திரை உலக வரலாற்றில் இதுவே முதல் முறை !

தனது 42 வயது பிறந்தநாள் விழா மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் பேரணி !

மற்றவர்கள் சேர்ப்பது கூட்டம் ..!

ஆனால் நம் தேசிய திலகத்திர்க்கோ அவருடன் மனமுவந்து சேர்ந்த கூட்டம் !
இதை படிக்கும் இந்த கால இளைஞர்கள் மற்றும் நடிகர் திலகத்தை பற்றி ஆதாரமற்ற தவறான தகவல்களை மட்டுமே கேள்விபட்டவர்கள் இது போல ஆதாரங்களை மற்றவர்களிடமிருந்து இனி சிவாஜியை பற்றி தவறாக கூறுபவர்களிடம் கேட்கவோ காண்பிக்கவோ சொல்லவேண்டும் !

அதுமட்டுமல்ல ! தாம் விரும்பும் நடிகருக்காக சிவாஜியை பழிப்பவர்களை முக்கியாமாக அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு அதை உறுதிபடுத்தும் பொது, நடுநிலை நாளேடுகளின் ஆதாரங்களை காட்டசொல்லவெண்டும்.

காரணம் அவர்கள் அவர்களுடைய ரசிகர் மன்றம் வெளியிட்ட நோட்டீஸ், மற்றும் அவர்கள் ஆதரவு பத்திரிகை செய்திகளை காண்பித்து பொய்யை உண்மையாக்க முயற்சிக்ககூடும் !

ஆகவே நடுநிலை நாளேடுகளில் வந்த ஆவணம் நீங்கள் கேட்டால் நல்லது !



http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/431_zpsd617e4f3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/431_zpsd617e4f3.jpg.html)

Russellbpw
30th June 2014, 10:42 PM
இதில் முன்னாள் திரைப்பட நடிகை ஜெயலலிதா அவர்களின் உரை அனைவரயும் கவர்ந்ததாக கூறப்பட்டது ! கடைசி பத்தி பார்க்க படிக்க !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/432_zpsd82e4c8f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/432_zpsd82e4c8f.jpg.html)

Russellbpw
30th June 2014, 10:47 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/434_zpseb816e62.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/434_zpseb816e62.jpg.html)

Russellbpw
30th June 2014, 11:00 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/maanaadu2_zpsf5da7486.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/maanaadu2_zpsf5da7486.jpg.html)

Russellbpw
30th June 2014, 11:09 PM
நடிகர் திலகம் பற்றி பொத்தம் பொதுவாக தவறாக பேசுபவர்கள் கூறும் பொய்கள் - அவர் யாரையும் சந்திக்கமாட்டார். அவருக்கு நடிப்பு மட்டும் தான் தெரியும்..வேறு ஒன்றுமே அவருக்கு வராது, வெளிவிழாகளுக்கு அவரை அழைப்பது, அவர் வருவது நடக்காத காரியம், அவர் reserved மற்றும் பல..!

ஆனால் பொது நிகழ்சிகள் மட்டுமல்லாது திரையுலக விழாக்கள் பலவற்றில் அவரை அழைக்கும்போது அழைபிர்க்கு மரியாதை கொடுத்து அவர் நேரம் தவறாமல் வருவது வழக்கம்.

அப்படி ஒரு விழா - புகுந்த வீடு என்ற திரைப்படத்தின் 100வது நாள் விழா !
நடிகர் திலகம் எவ்வளவு சந்தோஷத்துடன் பரிசு வழங்குகிறார் பாருங்கள் அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு. பரிசு வாங்குபவர்கள் முகத்தில் உள்ள சந்தோஷத்தை கவனித்தால் அவர்கள் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை என்பது போல உள்ளது பாருங்கள் !

கலைத்தாயின் தலைமகன் உச்ச நட்சத்திரம், திரை உலகின் துருவ நட்சத்திரம் அல்லவா ...அவர் கையால் அல்லவா வாங்குகிறார்கள் ! சந்தோஷம் இருக்கதானே செய்யும் அதன் உச்சத்தில் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/PugunthaVeedu100NTfw_zps37d3e9ed.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/PugunthaVeedu100NTfw_zps37d3e9ed.jpg.html)

Russellbpw
30th June 2014, 11:16 PM
என்னமோ பெரியார் அவர்கள் சிவாஜி அவர்களுக்கு பட்டம் கொடுத்ததுதான் அவர் வந்த ஒரே கலை விழா என்று ஒரு சாரர் பொய் தகவல் பரப்புவதுண்டு.

அந்த பொய் தகவலை பொய்யாகும் மற்றொரு ஆவணம்.

நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த நாடகம் வேங்கையின் மைந்தன். நல்ல கருத்துக்கள் பல கொண்ட நாடகம் !

அதற்க்கும் தந்தை பெரியார் வந்து நடிகர் திலகத்தை கௌரவித்தார் பெருந்தன்மையுடன். !

கலையை வெறுத்தவர்...கலைஞர்களை கூத்தாடிகள் என்று அழைத்தவர் என்னமாய் நம் நடிகர் திலகத்தின் நடிப்பால் ஈர்க்கபட்டார் என்று பாருங்கள் !

இதுதான் உண்மையான யாரும் செய்யமுடியாத அதே சமயம் நடிகர் திலகம் சர்வ சாதாரணமாக செய்து காட்டிய "புரட்சி" !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/withPeriyar_zps8eb392c4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/withPeriyar_zps8eb392c4.jpg.html)

Russellbpw
30th June 2014, 11:22 PM
தமிழ் திரை உலக வரலாற்றில் கருப்பு வெள்ளை படங்களிலயே மிக அதிக வசூல் சாதனை செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்ற பட்டிகாட பட்டணமா படபிடிப்பு சோழவந்தானில் நடந்தபோது நடிகர் திலகம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த இசை வேந்தர் திரு TR மகாலிங்கம் அவர்களை தமது துணைவியாருடன் சென்று மரியாதை நிமித்தமாக அவர் இல்லத்தில் சந்தித்தபோது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/wTRMinPPSozhavandhan_zpsdfbaebeb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/wTRMinPPSozhavandhan_zpsdfbaebeb.jpg.html)

Russellbpw
30th June 2014, 11:28 PM
தொழிலில் நடிகர் திலகம் ஒரு THOROUGH PROFESSIONAL என்பதற்கு உதாரணம் திரு பாக்யராஜ் அவர்களின் இந்த மொழி !

இதில் கூட கவனிதொமேயானால் திரு பாக்யராஜ் அவர்களும் பேட்டி எடுப்பவரும் சிவாஜி ..சிவாஜி என்று திரு சிவாஜி அவர்களை கூறுவதை காணலாம் . இவர்கள் மடிமீது வைத்து அவருக்கு பெயர் இட்டது போல ! சிறிது கூட CULTURE இல்லாமல் !

ஆனால் திரு பாக்யராஜ் அவர்கள் உரையில் நடிகர் திலகம் பேசியதை கூறும்போது பாருங்கள்...இவரை நடிகர் திலகம் எவ்வளவு மரியாதையுடன் கூறியிருப்பதை கவனிக்கவும்.

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்று சும்மாவா சொன்னார்கள் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/357r2te_zpsd29e6a27.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/357r2te_zpsd29e6a27.jpg.html)

Russellbpw
30th June 2014, 11:36 PM
ராணி வாராந்திரி பத்திரிகையில் நடிகர் திலகம் அவர்களை பற்றிய நினைவலைகள் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/6-9_zps02f0d6f9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/6-9_zps02f0d6f9.jpg.html)

Russellbpw
30th June 2014, 11:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2-25_zps8ffc83b7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2-25_zps8ffc83b7.jpg.html)

Russellbpw
30th June 2014, 11:38 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1-25_zps2bf1b845.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1-25_zps2bf1b845.jpg.html)

Russellbpw
30th June 2014, 11:39 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/4-13_zpsa7c1c387.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/4-13_zpsa7c1c387.jpg.html)

Russellbpw
30th June 2014, 11:41 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3-15_zpsc4fa6920.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/3-15_zpsc4fa6920.jpg.html)

Russellbpw
1st July 2014, 12:00 AM
தான் நடித்த காலத்தில் தன்னை தேடி வந்து விருதுகள் கொடுத்த கண்டங்களில் ஆசிய, ஆப்ரிக்க, அமெரிக்க இருந்தாலும் , இவர் நடிப்பில் விட்டு வைத்த கண்டம் ஐரோப்பா ! அதையும் நம் தேசிய திலகம் அவர்களுக்கு அந்த ஐரோப்பாவை சேர்ந்த பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதாம் மாவீரன் நெப்போலியன் அறிமுகபடுத்திய "செவாலியே " விருதை கொடுத்து இந்திய அரசாங்கத்தை நாங்களும் கொடுத்துவிட்டோம் ..இவர் உங்கள் நாட்டு பிரஜை அரசியல் ஆதாயத்துக்காக நடிப்பு திறமை இல்லதவர்கேல்லாம் நீங்கள் விருது கொடுத்தீர்களே இவருக்கு இன்னும் கொடுக்க வில்லையா என்பது போல ஒரு கேள்வியை எழுந்தது இந்த விருது !

கேரளா மாநிலம் நடிகர் சங்கம் தான் முதன் முதலில் தமிழ் நடிகரான நடிகர் திலகதிற்கு செவாலிய விருது அறிவித்தவுடன் விழா கொண்டாடியது !

இதற்க்கு மேலும் நாம் சும்மா இருந்தால் நாம் வரலாற்று பிழையாக ஆகிவிடுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ அப்போதைய தமிழகத்தின் ஆட்சியாளர்கள் !

சுதாகரித்துக்கொண்டு இவர்கள் தலைமையில் அந்த விருது வழங்கும் விழா எடுப்பதுபோல ஒரு விழா எடுத்து வரலாற்று பிழை வராமல் பார்துகொண்டார்கள் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/8-4_zpsbcc11232.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/8-4_zpsbcc11232.jpg.html)

Russellbpw
1st July 2014, 12:00 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/7-8_zpsa0210981.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/7-8_zpsa0210981.jpg.html)

Russellbpw
1st July 2014, 12:02 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0009_zps0a17771b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0009_zps0a17771b.jpg.html)

Russellbpw
1st July 2014, 12:04 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0004_zpse7b18367.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0004_zpse7b18367.jpg.html)

Russellbpw
1st July 2014, 12:05 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/6-11_zps8351aacd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/6-11_zps8351aacd.jpg.html)

Russellbpw
1st July 2014, 12:06 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0005_zps317557d9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0005_zps317557d9.jpg.html)

Russellbpw
1st July 2014, 12:07 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_0008_zpsacc03f3a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_0008_zpsacc03f3a.jpg.html)

Murali Srinivas
1st July 2014, 12:46 AM
ரவி,

ஒரு இரண்டு மூன்று விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். PM மூலமாக சொல்வதைத்தான் நீங்கள் விரும்புவீர்கள். ஆனால் நீங்களே திரியில் பொதுவாக எழுதியிருப்பதால் இங்கே பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்.

நண்பர் சிவா உங்கள் பதிவில் ஒரு சில எழுத்து பிழைகளை சுட்டிக் காட்டினர். உங்களை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. தமிழை எப்படி பேச வேண்டும் என்பதை இந்த அகிலத்திற்கே கற்றுக் கொடுத்த தமிழன், தமிழை வைத்து வியாபாரம் செய்தவர்கள் மத்தியில் எந்த வித சுயநலமுமின்றி தமிழ் வளர்த்த தமிழ் தாயின் தலைமகன் நடிகர் திலகம். அவரின் ரசிகர்கள் தமிழை தவறாக கையாண்டுவிடக் கூடாது என்ற உணர்வின் அடிப்படையில் வந்த பதிவே அது. அதற்கு உங்கள் பதில் தேவையை விட சற்று அதிகமாகவே காரமாக இருப்பதாக எனக்குப் படுகிறது. நம்மை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் சிவா சார்.

இரண்டாவது பாயிண்ட். பதிவுகளை பாராட்டுவதில்லை. இதற்கும் நான், நான் மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவன். காரணம் நீங்கள் மட்டுமல்ல இங்கே பலருக்கும் என் மேல் இந்த குறை உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். நான் பாராட்டுவதில்லை என்று சொல்லி விட்டு, பாராட்டுவதால் உங்கள் இடம் பறி போகாது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். என் இடம் என்று நீங்கள் உத்தேசிப்பது moderator என்ற பதவியை என்றால் அதை எனக்கு தந்தவர்கள் Hub Admin. அவர்கள் நாளை நான் இந்த பதவிக்கு தகுதியற்றவன் என்று நினைத்தால் இதை என்னிடமிருந்து எடுத்து விடுவார்கள். எனவே எனக்கு அந்த நாற்காலி மோகம் இல்லை. அதல்ல, திரியில் எனக்கு இருக்கும் இடம் என்பதைதான் நீங்கள் சொல்லுகிறீகள் என்றால் அது தர வரிசையில் அமைந்தது அல்ல. எழுது பொருளும் எழுதும் முறையுமே பதிவுகளை வாசகனுக்கு பிரியமுள்ளதாக மாற்றுகிறது. இது பலருக்கும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் எழுதுவதில்லை. நான் என மனதில் என்ன உணர்கின்றேனோ அதை எழுத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன். வாசகனின் மனமும் என் எழுதும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது அது அவனுக்கு பிரியமுள்ளதாக மாறுகிறது. அப்படியில்லாத பட்சத்தில் எந்த எழுத்தும் கவனிக்கப்படாமல் போகும். இதை நன்கு உணர்ந்த நான் மற்றவர்களை போட்டியாக நினைப்பதோ அவர்கள் வந்தால், வளர்ந்தால் என் இடம் போய் விடுமோ என்று ஒருக்காலும் நினைத்தில்லை. இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்தின் பல ரசிகர்களுக்கும் இந்த திரியை அறிமுகம் செய்து வைத்து அவர்களை உள்ளே இழுத்து வந்திருக்க்றேன். இந்த திரியைப் பொறுத்தவரை நான் கடைசி தொண்டன் இந்த திரியில் என்னால் முடியும் காலம் வரை பதிவிடுவதே என் இலக்கு.

பாராட்டு என்று சொன்னால் ஒரு பதிவு என் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தினால் அதை நான் மனதார பாராட்டுவேன். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஜோ எழுதிய சில கவிதைகள், சாரதா எழுதிய சில திரைப்பட ஆய்வுகள் [ராஜா, நீதி, என்னைப் போல் ஒருவன், விஸ்வரூபம் 100வது நாள் விழா இப்படி நிறைய சொல்லலாம்], கார்த்திக்கின் கப்பலோட்டிய தமிழன், ராஜபார்ட் ரங்கதுரை, உத்தமன் பட அனுபவங்கள், வாசுவின் பாதுகாப்பு படப்பிடிப்பு நேரிடை வர்ணனை, கடலூரில் சந்திப்பு ஓபனிங் ஷோ அனுபவம், என் மண் என் மக்கள் பதிவு, சுவாமியின் பாவமன்னிப்பு - 51, புதிய பறவை காட்சிக்கு காட்சி வர்ணனை, கோபாலின் ஸ்கூல் of acting-ல் வந்த கட்டபொம்மன், தெய்வமகன், ராகவேந்தர் சாரின் சில பொக்கிஷ பதிவுகள், பார்த்தசாரதியின் பாடல் ஆய்வுகள், அவரின் அன்னை இல்லம் படத்தில் இலை போட்டு சாப்பிடும் காட்சியின் continuity பற்றிய பதிவு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் சில நாட்கள் முன்பு நீங்கள் எழுதிய கர்ணன் பற்றிய பதிவும் அது நன்றாக அமைந்திருந்ததால் பாராட்டியிருக்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில் 1000 பதிவு, 2000 பதிவு போட்டுவிட்டார். ஆகவே உடனே பாராட்ட வேண்டும் என்று சொன்னால் சாரி, அது எனக்கு உடன்பாடில்லாத விஷயம். ஆகவே இது போன்ற விஷயங்களை புறந்தள்ளி திரியின் மேன்மைக்கு பங்களிப்பு செய்யுமாறு அனைவரையும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
1st July 2014, 12:47 AM
இதுவரை என்னுடைய பழைய பதிவுகளை 2008 மற்றும் 2009 காலகட்டங்களில் வந்தவற்றை திரியின் புதிய வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீள் பதிவு செய்து வந்தேன். எனக்கு அந்த சிரமம் வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ சில நண்பர்கள் என் பதிவுகளை மீள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கு மிக்க நன்றி. ஒரே ஒரு வருத்தம். பதிவுகளில் அவர்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு சில நகாசு வேலைகள் செய்து போடுகின்றனர். முழுமையாக எடுத்து போட்டு விட்டால் எனக்கும் மீள் பதிவு போடும் வேலை மிச்சம்.

அன்புடன்

Murali Srinivas
1st July 2014, 01:05 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

இன்றைய நாட்கள் போல் அன்றைக்கு 5 days week கிடையாது. சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் வேலை செய்யும். எனவே ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் ஹவுஸ் புல் ஆவதற்கு மிகவும் கடினமான காட்சி என்றால் அது சனிக்கிழமை காலைக்காட்சிதான். அதற்கு அடுத்தது ஞாயிறு காலைக்காட்சி. புதிய படங்கள் வெளியாகும்போது குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் வெளியாகும்போது முதல் இரண்டு மூன்று வாரத்திற்கு இந்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு அந்தளவிற்கு பிரச்சனை இருக்காது. அதன் பிறகு படத்தின் ரிப்போர்ட் அனுசரித்து இந்த காட்சிக்கு கூட்டம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எனவே தொடர் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கும் படங்களுக்கு இந்த காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமையும்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

பட்டிக்காடா பட்டணமாவின் acid test-ற்கு போவதற்கு முன் மதுரையில் 1969 முதல் இருவர் படங்களும் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் என்ற விஷயத்தில் எப்படி perform செய்தன என்பதை ஒரு சின்ன பிளாஷ்பாக் ஆக பார்த்துவிடலாம்.

1969-ல் மே மாதம் 1-ந் தேதி வெளியான அடிமை பெண் மதுரை சிந்தாமணியில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது. சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை அந்த குழுவில் இருக்கக்கூடிய சில முதிர்ந்த ரசிகர்கள் 1961-லேயே இதே சிந்தாமணியில் தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்த சாதனை பாச மலர் திரைப்படத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை சொன்னார்கள். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் 1969-ல் நடந்தது பத்திரிக்கையில் விளம்பரங்கள் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 1961-ல் அவ்வாறு செய்யப்படவில்லை என்பதேயாகும்.

அதே 1969 நவம்பரில் தீபாவளிக்கு மதுரை சென்ட்ரலில் வெளியான சிவந்த மண் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய சாதனை படைத்தது. ஒன்றை ஒன்றை ஒன்று மிஞ்சும் போட்டியை அரங்கேற்றிடதானே இரு தரப்பும் விரும்பும்? சிவந்த மண் சாதனையை முறியடிக்க 1970 பொங்கலுக்கு மதுரை சிந்தாமணியில் வெளிவந்த மாட்டுக்கார வேலன் படத்தை நம்பினர் எம்ஜிஆர் ரசிகர்கள். அந்த படத்திற்கு வணிக ரீதியாக நல்ல response இருந்தும் 75 காட்சிகள் மட்டுமே தொடர் அரங்கு நிறைந்தது. சிந்தாமணி அரங்கம் அமைந்திருக்கும் கீழ வெளி வீதியில் அரங்கத்திற்கு மிக அருகிலே அமைந்திருக்கும் பிரபலமான அசைவ உணவகம் அம்சவல்லி பவன். அதன் உரிமையாளர் அன்றைய நாட்களில் திமுக ஆதரவாளர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர். சிந்தாமணியில் வெளியாகும் எம்ஜிஆர் படங்களை பெரிய அளவில் சப்போர்ட் செய்வது அவர் வழக்கம். அவர் போன்றோர் முயற்சித்தும் கூட மாட்டுக்கார வேலன் 75 காட்சிகள் மட்டுமே தொடர்ந்து அரங்கு நிறைந்தது.

1970 ஏப்ரல் 11-ந் தேதி சனிக்கிழமை மதுரை ஸ்ரீதேவியில் வெளியான நடிகர் திலகத்தின் வியட்நாம் வீடு மிகப் பெரிய வெற்றி பெற்று முதல் 32 நாட்களில் அதாவது ஏப்ரல் 11 முதல் மே 12 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற 106 காட்சிகளும் அரங்கு நிறைந்தது. 106 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் [106 Continuous House Full Shows] என்ற சாதனையை புரிந்தது. பாச மலர் இந்த சாதனையை புரிந்தபோது ஆவணப்படுத்த தவறி விட்டதால் இம்முறை எச்சரிக்கையாக இருந்து இதை ஆவணப்படுத்தினார்கள். ஒரு கருப்பு வெள்ளை படம் செய்த சாதனை மாற்று முகாம் தரப்பை மேலும் உஷ்ணப்படுதியது.

அதே 1970 மே மாதம் 21-ந் தேதி வியாழக்கிழமை மதுரை சென்ட்ரலில் என் அண்ணன் ரிலீஸ் ஆனது. மாட்டுக்கார வேலனை compare செய்தால் என் அண்ணன் படத்தின் ரிப்போர்ட் அந்தளவிற்கு இல்லை. இருப்பினும் மாற்று முகாம் ரசிகர்கள் விடவில்லை. எப்படியும் 100 தொடர் ஹவுஸ் புல் காட்சிகளை காட்டிட வேண்டுமென்று முயற்சி செய்தார்கள். ஆனால் என் அண்ணனும் மாட்டுக்கார வேலன் போல் 75 காட்சிகளோடு ஹவுஸ் புல் விட்டுப் போனது. அதன் பிறகு அதே 1970-ம் வருடத்தில் எம்ஜிஆருக்கு மேலும் 3 படங்கள் வெளியாகின. என் அண்ணனுக்கு பின் ஜூலையில் வெளியான தலைவன் படமும் சரி ஆகஸ்ட் 28 வெளியான தேடி வந்த மாப்பிளை படமும் ரிப்போர்ட் பெரிதாக இல்லாததாலும் இரண்டுமே தங்கம் தியேட்டரில் திரையிடப்பட்டதாலும் தொடர் ஹவுஸ் புல் வாய்ப்பே இல்லாமல் போனது. அதன் பிறகு 1970 அக்டோபர் 9-ந் தேதி சிந்தாமணியில் எங்கள் தங்கம் வெளியானது. ஆனால் அதுவும் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் வெற்றி பெற முடியவில்லை. ஆக மொத்தம் மதுரை மாநகரில் 1970-ம் ஆண்டில் தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற இலக்கை எந்த எம்ஜிஆர் படமும் எட்டவில்லை.

நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை வியட்நாம் வீடு 106 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த பின் அடுத்து வெளியானது எதிரொலி. அது 1970 ஜூன் 27 சனிக்கிழமை அன்று தங்கத்தில் வெளியானது. அதன் பிறகு 1970 ஆகஸ்ட் 15 சனிக்கிழமை நியூசினிமாவில் ராமன் எத்தனை ராமனடி ரிலீஸ். நல்ல ரிப்போர்ட் பிளஸ் நல்ல பப்ளிக் audience, ஆயினும் மூன்றாவது வாரம் ஹவுஸ் புல் விட்டுப் போனது. தீபாவளிக்கு ஒரே நாளில் இரண்டு படங்கள். சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள். இரண்டு படங்களின் வெற்றி பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் ஒரு படத்திற்கு மூன்றாம் வாரத்தின் தொடக்கத்திலும் மற்றொரு படம் 3 வது வாரம் நடுவிலும் வைத்து விட்டுப் போனது. போதாக்குறைக்கு நான்கே வார இடைவெளியில் பாதுகாப்பு ரிலீஸ். அதுவும் தங்கத்தில். 1969-ஐ தொடர்ந்து 1970-லும் நடிகர் திலகத்தின் படங்கள் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை கண்டது.

(தொடரும்)

அன்புடன்

Gopal.s
1st July 2014, 04:26 AM
நாட்டாமை,

தூக்கிடுவேன்னு தெரியும். என்னா ....கொஞ்சம் எல்லோரும் ரசிச்ச பிறகு தூக்கியிருக்கலாம்.(அப்போ கண்ணீர் விட்டதாக சொன்ன அத்தனை பதிவுகளையும் தூக்கியிருக்க வேண்டுமே? ஏன் என்னுடையதை மட்டும்?)

100 நாள் தொடர் காட்சிகள் suspense போல விரிகிறது.


உன் கருத்தில் நான் உடன் படுகிறேன். selective ஆக பாராட்டுவதே சிறந்தது.

ஆனால் நீயும் பராட்டினவங்க லிஸ்ட் போட்டு நன்றி சொன்ன போது ,உன் கருத்தில் நீயே மாறு பட்டு விட்டாயோ என்ற சந்தேகம் தலை தூக்காமல் இல்லை.

RAGHAVENDRA
1st July 2014, 07:30 AM
கற்றோரைக் கற்றோரே காமுறுவர்... இங்கு படிக்காத மேதையுடன் ஆவலுடன் நிழற்படம் எடுத்துக் கொள்ள விழைந்த சான்றோரைப் பாருங்கள். மணிபாலில் ... கர்நாடகத்தில் அந்தக் காலத்தில் ஒரு சிறிய டவுன். மணிபால்... அந்த ஊரின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் அக்கல்லூரி நிறுவனர் திரு டி.எம்.ஏ.பாய் மற்றும் டீன் திரு கிருஷ்ணா ராவ் அவர்களுடன் நடிகர் திலகம்.

https://scontent-b-iad.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/q79/s720x720/10455266_596947063736722_4455588099834586737_n.jpg ?oh=5e110ca56a0afe86efd7c6c01d75e8b7&oe=54330C3A

இவ்விழாவினைப் பற்றிய மேல் விவரங்களையும் மேற்காணும் நிழற்படத்தினையும் நமது அருமை நண்பர் திரு ஸ்வாமி துரைவேலு அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு என் தனிப்பட்ட முறையிலும் நம் அனைவரின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றி. இதே போல் இவ்வாய்ப்பிற்காக முகநூல் பக்கத்திற்கும் நன்றி.

https://www.facebook.com/photo.php?fbid=596947063736722&set=a.330313820400049.70867.100002643018883&type=1&theater&notif_t=like_tagged#

eehaiupehazij
1st July 2014, 07:37 AM
இந்த திரியில்தான் இப்படிப்பட்ட entertainment கிடைக்கும். ஒருபக்கம் சுகம், ஒருபக்கம் வெட்கம், ஒருபக்கம் சோதனை, இருந்தாலும் ஒருபக்கம் பெருமையா (வேதனையோடு) சொல்லிக் கொள்ளவேண்டியதுதான்.
dear Kalnayak sir.
சிலசமயங்களில் நாம் பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காக அமைந்துவிடுவது சகஜமே. சிவாசார் ஒரு யதார்த்தத்தில் ரவிசாரைப் பாராட்டிய கையோடு optimistic ஆக சில எழுத்துப் பிழைகளைசுட்டிக்காட்டப் போய் அது positive criticism ஆக எடுத்துக்கொள்ளப்படவில்லை. Grown ups still need to grow up! யாரும் யாரையும் காயப்படுத்தி சுகம்காண எண்ணுவதில்லை. தற்செயலாக அமையும் சில நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியவையே. வலிகளை மறப்போம். வழியினில் தொடர்வோம், நடிகர்திலகத்தின் புகழார்வலர்களாக! This thread should not become a see-saw game centre!

ரவிசார். சிவா உங்கள் எழுத்துக்களை மனதாரப் பாராட்டியுள்ளார். உங்கள்மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாகவே சில பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளார். Kindly take it positively and continue to contribute sir. A friend is one who indicates our mistakes at right time right before our face. If one just endorses whatever we do, he may be a friendly foe!!

Russellbpw
1st July 2014, 08:29 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உண்மை பேசும் அவரது பல ரசிகர்கள் - இவர்களை ஒரு இயக்கத்தை சார்ந்த பலர் இப்படிதான் எப்போது பார்த்தாலும் உண்மையை ஆவணங்களுடன் கூறும்போது, ஆவணம் பார்த்த பிறகும் வீம்புகேன்று அது உண்மை இல்லை என்றும் ஆதாரம் ஆவணம் இல்லாமல் என்னமோ இவர்கள் காற்றில் கூறுவது தான் உண்மை என்பது போல இன்னும் மாயையை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று நாம் சற்று சிந்தித்து பார்த்தால் உண்மை உலங்கை நெல்லிக்கனிபோல விளங்கும்.

தகவல் தொழில்நுட்ட்பம் வளர்ச்சிபெறாத காலகட்டத்திலிருந்து இவர்கள் தொடர்ந்து கூறிய பொய்கள், மாய செய்திகள், தூஷணங்கள் மக்களை சென்றடைந்து ஒருவேளை இது உண்மையோ என்று சலனப்பட்டு, குழம்பி ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வரை நம்பவும் செய்தார்கள்.

அனால் தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு முக்கியமாக hub facebook twitter போன்ற சமூக வலைத்தளங்கள் பல வந்தபிறகு நடிகர் திலகம் பற்றிய நடுநிலை நாளேடுகள், நடுநிலையாளர்கள் கூறிய பதிவிட்ட ஆவணங்களை scan செய்து அதை வெளியிடுவதால், வெளிவந்துகொண்டிருப்பதால் மக்களுக்கு உண்மை செய்திகள் உடனுக்குடன் உலகத்தில் எங்கிருந்தாலும் கண நேரத்தில் பார்க்க கிடைக்கிறது,

இதன் மூலம் உண்மைகள் அவர்களை உணர்த்தி, நடிகர் திலகம் அனைவரிலும் சிறந்தவர் என்று ஆக்கபூர்வமாக அறிவுபூர்வமாக முடிவெடுக்க வைத்துள்ளது.

காலம் காலமாக தாம் சொன்ன ஆதாரமற்ற பொய்கள், ஆதாரமற்ற பொய் தகவல்கள், இன்று இவர்கள் வெளியிடும் ஆதாரங்களால் வெளிச்சத்திற்கு வருகிறதே...எங்கே இன்னும் பல உண்மைகள் வெளியில் வந்துவிடுமோ, இன்னும் என்னென்ன ஆதாரங்கள் இவர்கள் வசம் உள்ளதோ, எதை எந்தநேரத்தில் பதிவிடுவார்களோ, அதை உலகெங்கும் உள்ள மக்கள் பார்த்து நம்முடைய நம்பகத்தன்மை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் அந்த குறிப்பிட்ட பலருக்கு வர தொடங்கியதன் விளைவு, இன்று நாம் கண்ணார காண்பது.

தாம் கூறும் கூற்றுக்கு ஒரு ஆதாரம் கூட இல்லை ! அனால் அவை உண்மை என்று மக்கள் நம்பவேண்டும் ..அதே சமயம், இங்கே ஆதாரங்களை பதிவிட்டு விளக்கம் அளிக்கும்போது அது விஷயம் தெரியாமல் பதிவிடுகிறோம்..தெரியாமல் பதிவிடிகிறோம், தவறாக பதிவிடுகிறோம் என்று மறைமுக சாடல் !

இதை படிக்கும் பொது மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டியது !

இங்கு பதிவு செய்பவை அந்த செய்திகளை ஆதாரங்களுடன் பதிவிடுபவை. இது அனைவருக்கும் விளங்கும், புரியும் .

ஆனால் ஆதாரமில்லாமல் பதிவுகள், சும்மா குறை சொல்லிகொண்டிருக்கும் வெதும்பல்கள் இவைகளுக்கு ஆதாரம் எதுவும் பதிவிடுவதில்லை என்பதுடன் பொய் தகவல்கள் யார் பதிவு செய்கிறார்கள் என்றும் புரிந்துகொள்ளவேண்டும் !

ஒரு சிறு உதாரணம் :
கல்வி கண் திறந்த காமராஜர் பசியுடன் படிக்கும் ஏழை குழந்தைகளுக்காக அப்போதைய பாரத பிரதமர் நேரு மூலம் கொண்டுவந்த திட்டம் என்ன திட்டம் ?

மதிய உணவு யார் முதலில் கொண்டுவந்தது ?
காமராஜருக்கு பின் ஒருமுறை மீண்டும் அவர் கொண்டுவந்த திட்டம் சிறிது நவீனபடுத்தி மீண்டும் கொண்டுவரப்பட்டது இல்லை என்று கூறவில்லை.

ஆனால் அந்த திட்டத்தை முதன் முதலில் அறிமுகபடுத்தி, நடைமுறை படுத்தியது காமராஜர் என்பதை உலகறியும் அப்படியிருக்க முதன் முதலாக கொண்டுவந்தது 1977உக்கு பிறகு என்பதுபோல ஒரு பதிவு !

இதிலிருந்தே எந்த செய்தி உண்மை செய்தி என்பதை இதை படிக்கும் மக்கள் உணரவேண்டும் !

Rks

sivaa
1st July 2014, 08:57 AM
மேலும் மேலும் தொடர்ந்து பதிலுக்கு பதில்
எழுதினால் வேதனைதான் மிஞ்சும்
அவற்றை மறந்துவிடுவோம்


அன்பு ரவி எனது எழுத்து தங்களை காயப்படுத்தியிருந்தால்
அதற்காக மிகவும் வருந்துகிறேன்
தயவு செய்து அதனை மறந்து
மன்னித்துவிடுங்கள்


அன்பு நண்பர் முரளி

இதன்மூலம் விவகாரம் பெரிதாகாமல் இருப்பதற்காக
எனது பதிவை நான் நீக்கிவிட்டேன்

மேலும் ரவியின் பதிவு(3736....3738)இரண்டும்

கோபாலின் பதிவையும(3745) மற்றும்

உங்களது பதிவு( 3785 )ஆகியவற்ரை

தயவு செய்து அவரவர் சம்மதத்துடன் நீக்கிவிடுங்கள்

ரவி சார்
கோபால் சார்
நான் மேலே குறிப்பிட்ட உங்கள் பதிவுகளை
நீக்கிவிட அனுமதிக்கும்படி தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன

நடிகர் திலகத்தின் திரி தொடர்ந்து மென்மேலும்
மெருகேற வேண்டும் என அண்ணன் நடிகர் திலகத்தின்
பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

நன்றி நன்றி நன்றி

RAGHAVENDRA
1st July 2014, 09:14 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/YGEEM/paritchai2014fw_zps83d02e54.jpg

Our heartiest best wishes for YGeeM for restaging the Play which was made into a classic movie by NT's sterling performance and a classic in the film history of YGeeM.

Gopal.s
1st July 2014, 10:48 AM
மேலும் மேலும் தொடர்ந்து பதிலுக்கு பதில்
எழுதினால் வேதனைதான் மிஞ்சும்
அவற்றை மறந்துவிடுவோம்


அன்பு ரவி எனது எழுத்து தங்களை காயப்படுத்தியிருந்தால்
அதற்காக மிகவும் வருந்துகிறேன்
தயவு செய்து அதனை மறந்து
மன்னித்துவிடுங்கள்


அன்பு நண்பர் முரளி

இதன்மூலம் விவகாரம் பெரிதாகாமல் இருப்பதற்காக
எனது பதிவை நான் நீக்கிவிட்டேன்

மேலும் ரவியின் பதிவு(3736....3738)இரண்டும்

கோபாலின் பதிவையும(3745) மற்றும்

உங்களது பதிவு( 3785 )ஆகியவற்ரை

தயவு செய்து அவரவர் சம்மதத்துடன் நீக்கிவிடுங்கள்

ரவி சார்
கோபால் சார்
நான் மேலே குறிப்பிட்ட உங்கள் பதிவுகளை
நீக்கிவிட அனுமதிக்கும்படி தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன

நடிகர் திலகத்தின் திரி தொடர்ந்து மென்மேலும்
மெருகேற வேண்டும் என அண்ணன் நடிகர் திலகத்தின்
பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

நன்றி நன்றி நன்றி
சிவா,



எல்லோரும் படித்து மகிழ்ந்தாயிற்று என்றால் நீக்கி விடலாம். ஆனால் ,இப்படி நீக்கி கொண்டிருந்தால், அடுத்த திரிக்கு நாள் அதிகமாகி,ரவி கிரண் சூர்யா டென்ஷன் ஆகி விடுவாரே?

eehaiupehazij
1st July 2014, 11:19 AM
எல்லோரும் படித்து மகிழ்ந்தாயிற்று என்றால் நீக்கி விடலாம். ஆனால் ,இப்படி நீக்கி கொண்டிருந்தால், அடுத்த திரிக்கு நாள் அதிகமாகி,ரவி கிரண் சூர்யா டென்ஷன் ஆகி விடுவாரே?[/QUOTE]

Gopal Sir. RKS is different. He won't get a tension for the extension of days. For every removal he will replenish with 5 postings like a cannon ball run!

eehaiupehazij
1st July 2014, 11:32 AM
மேலும் மேலும் தொடர்ந்து பதிலுக்கு பதில்
எழுதினால் வேதனைதான் மிஞ்சும்
அவற்றை மறந்துவிடுவோம்


அன்பு ரவி எனது எழுத்து தங்களை காயப்படுத்தியிருந்தால்
அதற்காக மிகவும் வருந்துகிறேன்
தயவு செய்து அதனை மறந்து
மன்னித்துவிடுங்கள்


அன்பு நண்பர் முரளி

இதன்மூலம் விவகாரம் பெரிதாகாமல் இருப்பதற்காக
எனது பதிவை நான் நீக்கிவிட்டேன்



நடிகர் திலகத்தின் திரி தொடர்ந்து மென்மேலும்
மெருகேற வேண்டும் என அண்ணன் நடிகர் திலகத்தின்
பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

நன்றி நன்றி நன்றி

dear Sivaa sir.

நடிகர்திலகத்தின் படங்களின் தாக்கத்தினால் நாமும் உணர்ச்சிக்குவியல்களாக மாறவேண்டாமே!மனப்புண்ணுக்கு மருந்து மறதி மட்டுமே! முன்பின் பார்த்துப் பழகியிராத நாம் இணைந்திருப்பது நடிகர்திலகத்தின் புகழார்வலர்கள் என்னும் பெருமையில்தானே!மறப்போம். மீண்டும் இணைவோம்

Gopal.s
1st July 2014, 01:25 PM
ரவி,

படிக்காத மேதை - நல்ல உழைத்து செய்திருக்கிறீர்கள்.

The above posting on Ravi's padikkatha methai by me yesterday.

Friends,

"என்னுடைய இந்த வார்த்தையை எந்த நண்பர்களும் புரிந்து கொள்ளவே இல்லை. நமது நண்பர்களின் பதிவை நாம் படிப்பதோ,நினைவில் நிறுத்தி கொள்வதோ இல்லை.பொத்தாம் பொதுவாக பாராட்டு மழை . எதுவாக இருந்தாலும். பழைய பதிவர்களின் பதிவை அப்படியே உருவி,துடைத்து,கழுவி போட்டாலும் ......



எனக்கு ஒவ்வொரு பதிவும் ஞாபகத்தில் உள்ளது.(எல்லா நண்பர்களுடையதும்) .உழைப்பு என்றால் என்ன புரிந்திருக்குமே?



சாரதி கூட எங்கள் எழுத்தை முழுக்க பார்த்ததில்லை என்று அவர் kcs வகை பாராட்டே அத்தாட்சி. என்ன சொல்ல....



விழலுக்கு நீர் இறைத்த நாங்கள் முட்டாள்கள்."

Russellbpw
1st July 2014, 01:34 PM
திரி நண்பர்கள் திரு செந்தில் சார் , சிவா சார் , கோபால் சார், ரவி சார் மற்றும் இதர நண்பர்களுக்கு

நடிகர் திலகம் திரி பாகம் 12 எந்த நேரத்தில் ஆரம்பித்ததோ தெரியவில்லை. இப்படி சரக்கு ரயில் போல ஊர்ந்து போய்கொண்டிருக்கிறது.

இதில் பதிவிடுபவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தை குடும்பத்துடன் கூட செலவழிக்காமல் நடிகர் திலகம் புகழ்பரப்பும் செயல் என்ற ஒத்த நோக்குடன் பதிவிடுகிறோம் என்பது நான் கூறிதான் தெரியவேண்டும் என்றில்லை.

சில மாதங்களாக பல திசை திருப்பல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது மிகவும் வருந்ததக்கது...கடந்த சில நாட்களில் இதன் கடினம் அதிகரித்து வருகிறது ....நானும் எவ்வளவோ முயற்சி எடுத்து அதை திசை திருப்பும் வகையில் பதிவுகள், நிகழ்வுகள், பதிலுக்கு பதில்கள் என்று பதிவு செய்கிறேன்..

யாரும் அதை பற்றி பொருட்படுத்தியதாக தெரியவில்லை. தொடர்ந்து தங்களுடைய ego clash இல் கவனம் செலுத்தி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது !

இந்த திரி இன்னும் 2 தினங்களில் நிறைவடைய யாரும் முன்வருவதில்லை ...ஆனால் சர்ச்சைக்கு மட்டும் மிகுந்த ஆர்வம் காட்டுவது போல இருக்கிறது.

இப்படி நடக்கும் நிகழ்வுகளால் இந்த திரியில் பதிவிட்டு என்ன பயன் ...பதிவிடாமல் இருந்தென்ன பயன் ? இரெண்டும் ஒன்று தான் என்று என்ன தோன்றுகிறது !

முதலில் உங்கள் ego வை ஒழித்து தொட்டதற்கெல்லாம் குற்றம் காணும் வழக்கத்தை நமது திரியின் முன்னேற்றத்திற்காக சிறிது தற்காலிகமாக discount செய்து வழிவிடவும் !

நமக்குள் என்ன பேதம் ? நமக்குள் எதற்கு இந்த வாக்குவாதங்கள், விதண்டாவாதம் ?

எண்ணித்துணிக கருமம் என்றுள்ளதை என்னத்த நீங்க..கருமம்...கருமம் என்று மற்றவர் நம்மை பார்த்து இகழும் நிலை வரவேண்டுமா ?

உங்கள் சண்டையெல்லாம் முடிந்தவுடன் we are through என்று பதிவிடுங்கள் அதற்க்கு பிறகு நான் திரிக்கு மீண்டும் வருகிறேன் !

இதற்குமேலும் இலக்கியத்தில் வார்த்தை எது சொல்ல ?

Rks

Gopal.s
1st July 2014, 01:39 PM
Original Posting by Murai Sir.
படிக்காத மேதை

திரைக்கதை இயக்கம்: பீம்சிங்
வசனம்: கே.எஸ்.ஜி
தயாரிப்பு: பாலா மூவிஸ்
இசை : கே.வி.மஹாதேவன்
வெளியான நாள்: 25.06.1960

மறக்க முடியாத ப வரிசை படங்களில் ஒன்று.

ஊரில் பெரிய செல்வந்தர் ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். மூத்த மகள் ராஜம்மா ஒரு விதவை. அவளின் மகன் சந்துரு. மூத்த மகன் தியாகு அவன் மனைவி கமலா. இரண்டாவது மகன் ஸ்ரீதர், அவன் மனைவி மங்களா. மூன்றாவது மகன் சேகர், கடைக்குட்டி கீதா. இவர்கள் அனைவரும் (சந்திரசேகரின் மனைவியையும் சேர்த்து) ஒன்றாக வசிக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருக்கும் இன்னொரு முக்கியமான நபர் ரங்கன். ஒரு தூரத்து உறவினர் மகன். ஆனால் சிறு வயது முதல் இங்கே வாழ்ந்து வருபவன். ரங்கன் படிக்கவில்லை. ஆனால் வீட்டில் உள்ள எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்பவன். சந்திரசேகருக்கு மணி விழா (60th Birthday) கொண்டாட்டத்துடன் படம் ஆரம்பம்.

அந்த மணி விழாவிலே சந்திரசேகரின் நண்பரான ஒரு தொழில் அதிபருக்கு கீதாவை பிடித்து போய் விடுகிறது. அவரது மகனுக்கு இந்த பெண்ணை மனமுடிக்கலாம் என்று நினைக்கிறார். சந்திரசேகரின் மூன்றாவது மகன் சேகர் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு சாதரண குடும்பத்தை சேர்த்த பெண். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் வேலை பார்க்கும் அவளை அந்த வீட்டு பெண்ணாக நினைத்துக்கொண்டு கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் தன் அக்கா வீட்டில் இருக்கிறாள். அக்காள் கணவன் ரிக்க்ஷா ஓட்டுகிறான். இதற்கிடையில் சந்திரசேகரின் மனைவி கோவிலில் வைத்து தன் பழைய Friend-ai பார்க்கிறாள். அவளின் பெண்ணையே தன் மருமகளாக்கி கொள்ள முடிவெடுக்கிறாள். ஆனால் மகன் ஒப்பு கொள்ள மறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். கொடுத்த வாக்கை காபாற்றுவதற்க்காக ரங்கன் அந்த பெண் லக்ஷ்மியை கல்யாணம் செய்துகொள்கிறான். கல்யாணத்தன்று சந்திரசேகரின் மூன்றாவது மகனுக்கு தான் காதலித்த பெண் பணக்கார வீட்டு பெண் இல்லை என்று தெரிகிறது. வீட்டுக்கு சென்று சொத்தில் பங்கு கேட்கும் மகனை சந்திரசேகர் துரத்தி விடுகிறார்.

கீதாவிற்கு கல்யாணம் நிச்சயமாகிறது. தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்திருந்த 20 லட்சம் நஷ்டமாகிறது. இதனால் கல்யாணம் நின்று போகிறது. ராஜம்மாளும் அவளது மகனும் சேர்ந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்கிறார்கள். பழி லக்ஷ்மியின் மேல் விழுகிறது. சந்திரசேகருக்கு வீட்டில் மரியாதை குறைகிறது. மகன்களும் மருமகள்களும் அவரை உதாசினப்படுத்துகின்றனர். காரை விற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இந்த சூழ்நிலையில் தன் மாமாவிற்கும் அத்தைக்கும் விசுவாசமாக இருக்கும் ரங்கனுக்கும் மகன்கள்- மருமகள்கள் இடையே சண்டை வருகிறது. ரங்கனின் மனைவி லக்ஷ்மி நாம் தனி குடித்தனம் போய்விடலாம் என்று சொல்ல ரங்கனுக்கு பயங்கர கோபம் வருகிறது.

இதையெல்லாம் பார்க்கும் சந்திரசேகர் ரங்கனை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முதலில் வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைக்கும் ரங்கனுக்கு அவர் சீரியசாக சொல்கிறார் என்று தெரிந்ததும் திகைத்து போய் சண்டை போட்டும் அவர் மனசு மாறவில்லை. மனைவியுடன் வெளியே போகும் அவனுக்கு சேகரின் சகலையின் நட்பு கிடைக்கிறது. தன் வீட்டிலேயே அவர்களை தங்க வைத்து ஒரு மில்லில் வேலையும் வாங்கி கொடுக்கிறான். சம்பளம் வாங்கின பணத்திலிருந்து மாமாவிற்கு பிடித்தமான சிகரெட்டை வாங்கி போக, அவர் சத்தம் போட்டு அவனை அனுப்பி விடுகிறார். மகன்களின் உதாசினம் மற்றும் ரங்கனின் பிரிவு அவரை அதிகமாக பாதித்து அவர் உயிரை பறித்து விடுகிறது. ஆனால் அவரின் மரணம் பற்றி ரங்கனுக்கு தகவல் தெரிவிக்காமலே எல்லாம் முடிந்து விடுகிறது.

இது தெரியாமல் வீட்டிற்க்கு வரும் ரங்கன் உடைந்து போய் விடுகிறான். தகப்பனாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பணம் செலவாகி விடும் என்று செய்யாமல் தவிர்க்கும் மகன்களை பார்க்கும் போது அவனுக்கு கோபம் வருகிறது. தன் அத்தை கல்யாணத்தின் போது போட்ட நகைகளை விற்று பொருட்கள் வாங்கி வரும் ரங்கனை " பெற்ற மகன்களுக்கே இல்லாத அக்கறை உனக்கு ஏன்" என்று சொல்லி சத்தம் போடும் அத்தையிடம் ரங்கன் வாக்கு வாதம் செய்ய, அத்தை கோவத்தில் நீ வீட்டு வாசல்படி மிதிக்க கூடாது என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். அந்த வீட்டிற்க்கு மேலும் பல கஷ்டங்கள். வெளியிலிருந்து கேள்விப்படும் ரங்கன் தன்னால் ஆன உதவிகளை செய்ய முற்படுகிறான்.

மில்லில் ஒரு பெரிய விபத்திலிருந்து முதலாளி மகனை காப்பாற்றும் ரங்கன் அவன்தான் கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்தவன் என்பது தெரிந்ததும் அவனையும் அவனது தந்தையையும் கடுமையாக பேசி விடுகிறான். ராஜம்மாளின் மகன் சந்துருவை கடன்காரார்களிடமிருந்து காப்பாற்றும் ரங்கன் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கி கொடுக்கிறான். சந்திரசேகரின் மகன் சேகர் மனைவியோடு திரும்பி வர அவனையும் வாழ வைக்கிறான்

சோதனைகளின் உச்சக்கட்டமாக சந்திரசேகரின் வீடு ஏலத்திற்கு வர, அவரது மனைவியை அது கடுமையாக பாதிக்கிறது.. மகன்கள் இருவரும் கை விரித்து விட அவள் நோய்வாய்ப்படுகிறாள்

அத்தையின் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்ததும் ஒரு ஆன்மிகவாதியிடமிருந்து ஒரு மந்திர தாயத்து வாங்கி கொண்டு வீட்டிற்க்குள் சுவரேறி குதிக்கும் ரங்கனை (அத்தை வீட்டு வாசல் படி மிதிக்க கூடாது என்று சொன்னதால்) இரு மகன்களும் தாக்க அப்போது உண்மையை சொல்கிறான்.

சந்திரசேகரின் தொழில் அதிபர் நண்பர் அந்நேரம் ஏலம் போன வீட்டை மீட்டு அதை ரங்கன் பெயருக்கே பதிவு செய்து கொண்டு வருகிறார். மேலும் கீதாவை தன் மகனுக்கு கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். ரங்கனின் பெயரில் வீடு வந்து விட்டது என்று தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் தியாகுவையும் ஸ்ரீதரையும் ரங்கன் நீங்க ரெண்டு பேரும் இல்லேன்னா நானும் இந்த வீட்டிலே இருக்கபோறதிலே என்று சத்தம் போட, அவர்களுக்கு ரங்கனின் பாசமும் பண்பும் புரிகிறது. எல்லோரும் மீண்டும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ தொடங்குகிறார்கள்.

படிக்காத மேதை - Part II

நடிகர் திலகத்தின் ஒரு சில படங்களை பற்றி விமர்சிக்கும் போது சில காட்சிகள் நம்மை வெகுவாக கவரும். அதைப்பற்றி எழத தூண்டும். வேறு சில படங்களை எடுத்துகொண்டோமானால் எதை எழுதுவது எதை விடுவது என்று திகைத்து போய் நிற்போம். அந்த இரண்டாவது ரகத்தை சேர்ந்தது படிக்காத மேதை. நண்பர் சிவன் சொன்னது போல இப்படியும் நடிக்க முடியுமா என்ற மலைப்பு பார்ப்பவர் மனதினில் அலையடிக்கும்.

NT அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து A Film from Krishnaswamy Bala Movies என்று படம் முடியும் வரையிலும் பின்னியிருப்பார். எப்போதுமே வெகுளி,அப்பாவி வேடங்கள் என்றால் வெளுத்து வாங்கும் NT இதில் முரட்டுத்தனமான விசுவாசமிக்க ரங்கன் கதாபாத்திரத்தை மெருகேற்றி ஜொலிக்க வைத்திருப்பார். சில உதாரணங்கள். மணி விழாவில் குடும்பத்தினரை எல்லாம் நண்பருக்கு அறிமுகப்படுத்தும் காட்சி. எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் NT-யை யார் என்று கேட்க, தூரத்து சொந்தக்கார பையன் என்று ரங்கராவ் சொல்ல அதற்கு " அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அருமையாக இருக்கும்.

கீதாவை பெண் பார்க்க வரும் மாப்பிளையின் கையை பிடித்து பலம் பார்த்துவிட்டு ஆள் நல்ல பலசாலிதான் என்று முகபாவத்திலேயே வெளிப்படுத்துவது, தன்னை மட்டம் தட்டும் மருமகள்களையும் மகன்களையும் அழகாக பதில் சொல்லி மடக்குவது, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"), வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் மாமாவிடம் பேசும் பேச்சு (இதை நண்பர் பிரபுராம் ஏற்கனவே எழுதிவிட்டார்), வேலை கொடுக்க லஞ்சம் (1960 லியே அன்பளிப்பு என்ற வார்த்தை வந்து விட்டது) கேட்கும் கிளார்க்கை மானேஜரிடம் மாட்டி விடுவது, முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ் ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casuala-ga சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது, மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது, அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த Road-ile நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?")

ஒரே வரியில் சொன்னால் அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை எல்லா காட்சிகளையுமே குறிப்பிட வேண்டும்.

இந்த படத்தின் மற்றொரு தூண் ரங்காராவ். அவரது மிக சிறந்த படங்களை எடுத்தால் அதில் படிக்காத மேதைக்கும் கண்டிப்பாக இடம் உண்டு. அவருக்கே உரித்தான அந்த casualness இதிலும் வெளிப்படும். எல்லாவற்றையும் easy-aga எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ( "அவன் Point of View-vile அவன் சொல்லறது கரெக்ட்,இவன் Point of View-vile இவன் சொல்றதும் கரெக்ட்."). NT-யை வெளியே போக சொல்லிவிட்டு அவர் படும் வேதனை, செலவை குறைக்க சொன்னவுடன் மருமகள்கள் தான் சிகரெட் குடிப்பதை குத்தி காட்ட, சிகரெட் பாக்ஸ்-ஐ தூக்கி எரிந்துவிட்டு,கையில் புகையும் சிகரெட்டை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தூக்கி போடுவது கிளாஸ். எங்கிருந்தோ வந்தான் பாடல் காட்சி அவரது மற்றொரு சிறப்பு.

கணவனுக்காக வாழும் மனைவியாக சௌகார் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். கண்ணாம்பா என்றாலே சோகம் என்பதற்கு இதுவும் விதி விலக்கல்ல. அசோகனும் முத்துராமனும் மகன்கள். சந்தியாவும் வசந்தாவும் மருமகள்கள். வீட்டை விட்டு ஓடி போகும் மகனாக T.R. ராமசந்திரன், TRR காதலிக்கும் பெண்ணாக ஏ.சகுந்தலா,விதவை மகளாக சுந்தரிபாய். கடைக்குட்டி கீதாவாக E.V.சரோஜா, NT-kku உதவும் தம்பதிகளாய் T.S..துரைராஜ், T.P.முத்துலக்ஷ்மி எல்லோரும் குறைவற செய்திருப்பார்கள்.

கே எஸ் ஜியின் Down to Earth வசனம் படத்திற்கு மிக பெரிய பலம். “மாமா” இசை அமைப்பில் பீம்சிங் இயக்கிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று (மற்றொன்று பாலாடை). பாடல்கள் எல்லாமே தேனிசை பாடல்கள்.

சிந்தையிலும் பெரிய - E.V.சரோஜா டான்ஸ் பாடல்

பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு - TRR, ஏ.சகுந்தலா பாடுவது

சீவி முடிச்சு சிங்காரிச்சு - E.V. சரோஜவை கிண்டல் செய்து NT பாடுவது

இன்ப மலர்கள் - இந்த பாடலை விட பாடலின் ஆரம்பத்தில் வரும் Prelude ரொம்ப பிரபலம். இலங்கை தமிழ் சேவை வானொலியில் மாலை 4 மணிக்கு தினமும் இது ஒலிபரப்பாகும்.

ஒரே ஒரு ஊரிலே - இதை பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை

உள்ளதை சொல்வேன் - NT பாடுவது.

எங்கிருந்தோ வந்தான்- சீர்காழியின் டாப் 10 பாடல்களில் ஒன்று. கிருஷ்ண பரமாத்மாவாக தோற்றமளிக்கும் NT எந்த வேஷவும் தனக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதை நிருபித்திருப்பார்.

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - சௌகார் பாடும் பாடல்.

இது தவிர குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளிக்கும் E,V.சரோஜா பாடும் ஒரு பாடலும் உண்டு.

இந்த படம் வியாபார ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்பதற்கு ஒரு சான்று, ஆசியாவிலேயே மிக பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டரில் 112 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

ஒரே வரியில் சொல்வதென்றால் நடிகர் திலகத்தின் மணி முடியில் ஒரு வைரம்.

அன்புடன்.

Gopal.s
1st July 2014, 01:44 PM
RKS,

Go ahead.We are thru. No issues. We are with you.

eehaiupehazij
1st July 2014, 03:12 PM
[Q
UOTE=RavikiranSurya;1144310][COLOR="#0000CD"][B]திரி நண்பர்கள் திரு செந்தில் சார் , சிவா சார் , கோபால் சார், ரவி சார் மற்றும் இதர நண்பர்களுக்கு

நடிகர் திலகம் திரி பாகம் 12 எந்த நேரத்தில் ஆரம்பித்ததோ தெரியவில்லை. இப்படி சரக்கு ரயில் போல ஊர்ந்து போய்கொண்டிருக்கிறது.

இதில் பதிவிடுபவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தை குடும்பத்துடன் கூட செலவழிக்காமல் நடிகர் திலகம் புகழ்பரப்பும் செயல் என்ற ஒத்த நோக்குடன் பதிவிடுகிறோம் என்பது நான் கூறிதான் தெரியவேண்டும் என்றில்லை.

சில மாதங்களாக பல திசை திருப்பல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது மிகவும் வருந்ததக்கது...கடந்த சில நாட்களில் இதன் கடினம் அதிகரித்து வருகிறது ....நானும் எவ்வளவோ முயற்சி எடுத்து அதை திசை திருப்பும் வகையில் பதிவுகள், நிகழ்வுகள், பதிலுக்கு பதில்கள் என்று பதிவு செய்கிறேன்..

யாரும் அதை பற்றி பொருட்படுத்தியதாக தெரியவில்லை. தொடர்ந்து தங்களுடைய ego clash இல் கவனம் செலுத்தி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது !

Dear RKS. I agree with what you feel and say. Let us not give way for ego clashes. This is what I too request all our fellow hubbers for the smooth sailing of our threads. I will be happy if you take over soon the responsibilities since we all believe in your dynamism and the 'event management' calibre! From my side also I take all efforts to bring back our friends to conclude this thread shortly. I have also come nearer to your mood...now let us both watch this song for its relevance with the situation!Enjoy the sub-titles too!
https://www.youtube.com/watch?v=Pkywv_mRuTI
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0CCsQuAIwAg&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DZvX xGrgqWY4&ei=O4WyU8WsMMK8uAS7y4HYBw&usg=AFQjCNH_XdSEddgUM6AB5cPOcBbZdNCEDw

http://www.youtube.com/watch?v=c3S5RtB3uTU

KCSHEKAR
1st July 2014, 03:38 PM
ரவி,
சாரதி கூட எங்கள் எழுத்தை முழுக்க பார்த்ததில்லை என்று அவர் kcs வகை பாராட்டே அத்தாட்சி. என்ன சொல்ல....
விழலுக்கு நீர் இறைத்த நாங்கள் முட்டாள்கள்."
டியர் கோபால் சார்,
நான் தங்களைப் போன்றோ அல்லது மற்ற சீனியர் பதிவர்கள் போன்றோ எல்லாம், நடிகர்திலகத்தின் திரைப்படங்களை ஆய்வு செய்து பதிவிடக்கூடியவன் இல்லை. அதேபோல தங்களைப் போன்றவர்கள் பதிவிடும் ஆய்வுகளுக்கு, அறிவார்ந்த, நீண்ட விமர்சனங்களையும், பாராட்டையும், அளிப்பவன் இல்லைதான். ஆனால், பதிவுகளை தினந்தோறும் படித்து மகிழும் பார்வையாளர்களில் ஒருவன் என்பதோடு, இந்தத் திரியின் பதிவர்கள் யாரையும் புண்படுத்தும் விதத்தில் இதுவரை எந்தப் பதிவும் போட்டதில்லை. நடிகர்திலகம் திரியைத் தவிர வேறு எந்தத் திரிக்கும் சென்றது இல்லை.

இந்தத் திரியில் நீங்கள் எல்லோரும் நடிகர்திலகத்திற்குப் பெருமை சேர்க்கும் விதத்திற்கு சற்றும் குறைவில்லாமல் ஏன் அதற்கு மேலேயும்கூட நடிகர்திலகத்திற்குப் புகழ் சேர்க்கும் செயல்களை, பணிகளை, திரிக்கு வெளியே செய்துகொண்டிருப்பவன் என்ற பெருமையே எனக்குப் போதும் என்பதை மட்டும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Gopal.s
1st July 2014, 03:46 PM
திரிக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க, ஒரு சூப்பர் பதிவு .திருவிளையாடல். அசல் ஒரிஜினல் சரக்கு.(நம்ம கடையிலே எல்லாமே நெய்யினால் செஞ்ச அசல் சரக்குதான்).கூடிய சீக்கிரம் எதிர்பாருங்கள்.

eehaiupehazij
1st July 2014, 04:02 PM
When stones are thrown at us, let us learn the art of building a resistance wall using those stones. In my humble opinion it is better to practice the art of fighting without fighting. Ego clashes in our thread .... if the outcomes are constructive...soon the clashes will disappear like a mist in sunlight. If the same are destructive,.....better the egos disappear! NT had remained the legend who went through all sorts of comments and criticisms .. but converted them as the rungs of his success ladder!

https://www.youtube.com/watch?v=6p_jFe__O-A

Gopal.s
1st July 2014, 04:08 PM
டியர் கோபால் சார்,
இந்தத் திரியில் நீங்கள் எல்லோரும் நடிகர்திலகத்திற்குப் பெருமை சேர்க்கும் விதத்திற்கு சற்றும் குறைவில்லாமல் ஏன் அதற்கு மேலேயும்கூட நடிகர்திலத்திற்குப் புகழ் சேர்க்கும் செயல்களை, பணிகளை, திரிக்கு வெளியே செய்துகொண்டிருப்பவன் என்ற பெருமையே எனக்குப் போதும் என்பதை மட்டும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
KCS Sir,

We fully agree with you. You are our pride and treasure

eehaiupehazij
1st July 2014, 07:36 PM
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/5/54/Uthama-Puthiran_1958.jpg/220px-Uthama-Puthiran_1958.jpg









UTHTHAMA PUTHTHIRAN : trivia

Production[edit]
In those days, it was technically very difficult to film movies which call for double roles. Though computer technology was non-existent those days, filming was very well executed. There was nothing much to my dance performance in Utthama Puthiran. I had already mentioned I was a good dancer, having been trained in the art of traditional Indian dance. The dance performance for Utthama Puthiran was different. The credit goes to the dance master, Heera Lal, who conceived the dance and choreographed it with fast steps and claps.

—Sivaji Ganesan in his autobiography[2]
Development[edit]
When Venus Pictures came out with an advertisement of their film Uthama Puthiran in a newspaper with Sivaji Ganesan in the leading role, the same day actor MGR announced a same-titled film in the same paper on the same day. With the help of N. S. Krishnan, Ganesan made MGR scrap his plan of making the same film. MGR persisted his with his plans to make a double action film and finally made Nadodi Mannan, and released it much after Uthama Puthiran.[1]

Filming[edit]
The film was scripted by Sridhar. Cinematography was handled by Aloysius Vincent. Bollywood dancer Helen was recruited to perform a dance sequence in the song Yaaradi Nee Mohini, which was Tamil cinema's first "rock ‘n’ roll dance".[6][7]

During the shooting of the song Unnazhagi at Brindavan, a foreigner visiting India requested permission to shoot the scenes with his camera, and permission was granted. Both the cinematographer and the foreigner simultaneously shot the song and dance sequence from the same angles. Zoom technique was unknown to Indian film technicians those days, but the foreigner's camera had it. When the crew learnt this, they requested the foreigner to provide a copy of his version to be used in the film, and he obliged.[1]

Though the foreigner had used 16mm, the crew managed to use some zoom shots taken by him in the film. Thus, Uthama Puthiran became the first Indian film to have the shots with zoom technique.[1]

Influences[edit]
Uthama Puthiran is a remake of the same-titled 1940 film that featured P. U. Chinnappa in two distinct roles, notably the first Tamil film to feature an actor in two roles.[8] It is also said to be adapted from the French novel The Man in the Iron Mask, written by Alexandre Dumas in 1850.[9] The story of identical twins was used often in Tamil cinema, and Dumas himself used it to write his famous The Corsican Brothers which was also adapted into Tamil. The Gemini Studios version Apoorva Sagotharargal with M. K. Radha playing the twins was a box office hit. M. G. Ramachandran played the twins in a rehash of the film titled Neerum Neruppum, which did not do as well.[3] Uthama Puthiran (1958) also was the inspiration behind Imsai Arasan 23m Pulikesi, a 2007 historical comedy film starring comedian Vadivelu as the twins.[10]
courtesy : wikipedia

eehaiupehazij
1st July 2014, 07:51 PM
The Man in the Iron Mask (1939 film)
From Wikipedia, the free encyclopedia
The Man in the Iron Mask is a 1939 American film very loosely adapted from the last section of the novel The Vicomte de Bragelonne by Alexandre Dumas, père, which is itself based on the French legend of the Man in the Iron Mask.

The film is notable for containing the first screen role for Peter Cushing.[2] It was also notable for being the source of several subsequent remakes. The film was directed by James Whale and stars Louis Hayward as royal twins, Joan Bennett as Princess Maria Theresa, Warren William as d'Artagnan, and Joseph Schildkraut as Nicolas Fouquet.

Plot[edit]
The 1939 adaptation alters history significantly by making Fouquet (Joseph Schildkraut) a thoroughly evil, scheming mastermind. He, Colbert (Walter Kingsford), d'Artagnan (Warren William) and the musketeers are the only ones who know of the existence of a twin brother, and Fouquet uses his influence to keep everyone silent. The main story was changed by portraying Louis XIV as selfish, cruel, and incompetent, and Philippe the kind-hearted brother who is raised by d'Artagnan and the musketeers and does not even know that he has an identical twin.

When the truth is discovered, Louis XIV has Philippe imprisoned with an iron mask placed on his head, hoping that Philippe's beard will grow inside the mask and eventually suffocate him. Philippe is rescued by the musketeers, who break into the sleeping Louis's chamber and imprison him in the mask. The guards drag off Louis and lock him in the Bastille, mistaking him for the escaped Philippe.

When Louis manages to get a message to Fouquet, he is freed, and a chase by coach ensues to stop Philippe from cementing an alliance with Spain by marrying Princess Maria Theresa (Joan Bennett), whom he loves, and taking Louis' place on the throne. The coach is waylaid by the musketeers, who all die heroically, but Fouquet and the real Louis XIV are also killed when the driverless coach plunges off a cliff. The mortally wounded d'Artagnan survives long enough to exclaim "God Save the King!" at Philippe's wedding, and then falls dead. Philippe finally assumes the throne.


wWikimedia Foundation Powered by MediaWiki

eehaiupehazij
1st July 2014, 08:00 PM
just for a diversion. enjoy the prisoner of zenda. compare the performance of NT in Uththamapuththiran. But this film was made as Naadodi Mannan with MGR


https://www.youtube.com/watch?v=QHWTcC8Imms

eehaiupehazij
1st July 2014, 09:59 PM
dear RKS. It is now in your hands to decide, as the next thread awaits your leadership. We will be with you for the smooth sailing of our NT threads. It is an acid test for you now.Stagnation of postings is an unprecedented development. If everybody disowns their commitment for NT, .... kindly do something for activation

eehaiupehazij
1st July 2014, 10:29 PM
uththaman, the blockbuster movie of NT
https://www.youtube.com/watch?v=hF98K5ToYUU

eehaiupehazij
1st July 2014, 10:32 PM
sivandhamann song

https://www.youtube.com/watch?v=zd0nJnhQMzQ

eehaiupehazij
1st July 2014, 10:33 PM
sivandhaman song

https://www.youtube.com/watch?v=bvmxghzvaoE

eehaiupehazij
1st July 2014, 10:34 PM
sivandhamann song

https://www.youtube.com/watch?v=3bIXJ3oW1YI

eehaiupehazij
1st July 2014, 10:35 PM
sivandhamann song

https://www.youtube.com/watch?v=9AIpleG_Jsg

eehaiupehazij
1st July 2014, 10:38 PM
https://www.youtube.com/watch?v=e1uFShGfygE

eehaiupehazij
1st July 2014, 10:40 PM
enga maama:honey filled songs

https://www.youtube.com/watch?v=KR_0wPPEctc

eehaiupehazij
1st July 2014, 10:41 PM
https://www.youtube.com/watch?v=KPM20P7HDLs

eehaiupehazij
1st July 2014, 10:42 PM
https://www.youtube.com/watch?v=i19LmDSp5f0

eehaiupehazij
1st July 2014, 10:43 PM
https://www.youtube.com/watch?v=YzqHAAsA9h0

eehaiupehazij
1st July 2014, 10:46 PM
just a gap filling exercise! thats all! kindly bear with me. just for a continuity of our postings. I may get brickbats but ok only from my 'family' hubbers

eehaiupehazij
1st July 2014, 11:47 PM
dear friends. I fear whether we have reached a stage of saturation or stagnation or a stalemate? When things were getting oriented towards the right direction, it is quite unfortunate that for personal whims and fancies, we have forgotten our duty of glorifying our NT. Live and let live. It is a rare opportunity for all of us to have united under a single umbrella to pay tributes to our NT. When the space and time are shared by stalwarts, exponents,thespians, literates and intellectuals that is unique for any NT thread, should it lead to an unhealthy atmosphere of so called hallucination 'ego clash'? kindly come out of such illusions and mirages so as to show our unified strength with the conducive ambiance for expressing views radiating from multi-corners with the single most objective of disseminating NT's name and fame. Remaining just silent spectators is only a way of 'escapism' I personally feel. Kindly come back pals and give life to our mission with vision.

dear RKS please show your 'event managing' calibre inasmuch as you have been pinpointed as the moderator for the next thread. Now I started feeling that really the number 13 is unfortunate and a bad omen?

Murali sir, Gopal sir, Raghavendra sir,...I don't have much touch with the other senior sculptors of this thread...but I can bow down to RKS, Ravi, Raghul, CK, sivaa, Gopu, Kalnayak sir, subramaniam ramajeyam.....kindly come back to back our thread for a smooth sailing with a 'family' feel.

https://www.youtube.com/watch?v=Xr4gvXXgCnU

Gopal.s
2nd July 2014, 03:28 AM
திருவிளையாடல்- 1965.

சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.

1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.

திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)

முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).

இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)

இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.

உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.

"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).

இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )

நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.

கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

(தொடரும்)

sivaa
2nd July 2014, 07:05 AM
கர்ணன் மறுவெளியீட்டில்

கோவையில் ஓடிய நாட்கள்

புரூக்ஃபீல்ட்ஸ்.........................70......நா ட்கள்
தர்சனா....................................50.....ந ாட்கள்
கணேஷ்..................................14...நாட்கள ்
கவிதா.....................................07...நாட ்கள்
நாஸ்.......................................07...நா ட்கள்
ஸ்ரீராம்..(வடவள்ளி...கோவை)...07..நாட்கள்

sivaa
2nd July 2014, 07:29 AM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 6

நடிகர் திலகத்தின் முழுமுதற்காவியம்

பராசக்தி [முதல் வெளியீட்டுத் தேதி : 17.10.1952]

முதல் வெளியீட்டில் வெள்ளிவிழாவையும் தாண்டி அயல்நாடான இலங்கையில் 42 வாரங்கள் [294 நாட்கள்] ஓடிய மகாமெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(திருச்சி) : 14.8.1997
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6281-1.jpg

முதல் வெளியீட்டில்,
திருச்சி : வெலிங்டன் : 245 நாட்கள்,
குடந்தை : டைமண்ட் : 50 நாட்கள்
[குடந்தையில் சற்றேறக்குறைய 45 வருட இடைவெளியில் மீண்டும் அதே திரையரங்கில்...!]

பக்தியுடன்,
பம்மலார்.
..........................................
நன்றி பம்மலர்

eehaiupehazij
2nd July 2014, 10:10 AM
Hope RKS with his multifaceted latent talents can take our threads now and in future to dizzy heights infusing paradigm shifts in order to glorify the legacy of our beloved NT. But I never expected that a versatile and balanced person like RKS also can talk in a dejected tone! We are all with you RKS. These 'ego clashes' are only passing clouds! But such trivial virtual 'clashes' now and then help wake us up from occasional 'sleeps' and keep the threads alive and active!!! All pessimistic paper arrows can be transformed into optimistic building blocks if you are shrewd with a presence of mind, which you have now!!

I know you will emerge out like a Godzilla from its gestation period and enthrall us with your incessant array of postings compensating for these few days of your prominent absence! At least... to save the fellow hubbers from my tentative gap filling 'achchachcho ennaachchu?!' postings!! (Gopal Sir smiles..... for his right prediction on my write-ups!)

parthasarathy
2nd July 2014, 12:47 PM
Dear RKS:

Am also dejected. However, I set aside those things and keep coming back - of course, not often, due to official exigencies.

Request you to continue contribute.

And, request to all the hubbers who have not been coming here now, to set aside differences and converge here - with a single motto - to glorify NT's prowess and deeds and take it to Gen Y and future.

Regards,

R. Parthasarathy

parthasarathy
2nd July 2014, 12:55 PM
Gopal Sir:

Great that you've started writing on "Thiruvilaiyadal".

In fact, as informed you over phone, I've helped a trainer to conceive and present on "transactional analysis" - Aggressiveness (Lord Siva - NT); Submissiveness (Tharumi - Nagesh) and Assertiveness (Poet Nakkeerar - APN). Glad to note that you've presented in a detailed way.

This is what is the genius of NT - one Actor who always crossed boundaries when it comes to performance - who always tried different things unmindful of success but; confident of success, and he succeeded too in a big way - who always was ahead of his times.

Great beginning...

Regards,

R. Parthasarathy

eehaiupehazij
2nd July 2014, 02:13 PM
Gopal Sir's write-up.
இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent (dos and donts )-adult(reality and practical ) -child (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன...................

..................நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.

Really this is what is happening in our thread transactions too! 'ஞானப்பழம் போட்டியில் ஒவ்வொருவராக கோபித்துக்கொண்டு மலை ஏறிக்கொண்டிருந்தால் திரி திரிந்துவிடுமே!'reminds only thiruvilayaadal! Gopal Sir may also suggest remedial measure to be incorporated in this transactional analysis so that when these 'ego clashes' that are obscuring our thread's vision disappear, the thread activities would become transparent towards the objectives of its mission: Glory of NT! Your pepper-salt approach will be a colorful one in the episodes on Thiruvilayaadal to follow,Sir, we do hope! (kindly insert color photos at appropriate places)

abkhlabhi
2nd July 2014, 03:18 PM
NT Rare video collection by Thalaivan Sivaji

http://www.youtube.com/watch?v=YCrfNSUa2pw#t=115

abkhlabhi
2nd July 2014, 03:20 PM
Actor Rajesh Interview

http://www.youtube.com/watch?v=jv2HoTnMvHM

http://www.youtube.com/watch?v=hcXDE_teYd4

abkhlabhi
2nd July 2014, 03:23 PM
http://www.youtube.com/watch?v=gncO6P2flgw

abkhlabhi
2nd July 2014, 03:25 PM
http://www.youtube.com/watch?v=o0-hXYTAc1Y

abkhlabhi
2nd July 2014, 03:29 PM
http://www.youtube.com/watch?v=SriIJv8p47Q

abkhlabhi
2nd July 2014, 03:31 PM
http://www.youtube.com/watch?v=04wIjyTV-gg

abkhlabhi
2nd July 2014, 03:35 PM
http://www.youtube.com/watch?v=Wq3Etpgao8g

abkhlabhi
2nd July 2014, 03:36 PM
http://www.youtube.com/watch?v=6vnpSZdz8nI

abkhlabhi
2nd July 2014, 03:46 PM
"கௌரவம் திரைப்படம் பற்றிய ரூசிகர தகவல். அதிசய உலகம் பாடல் உன்னிப்பாக பாருங்கள். சிவாஜி பைப் விடும் புகை கூட இசைக்கு ஏற்றார் போல் . போகிறது"

http://www.youtube.com/watch?v=Q6W6IunESQc

abkhlabhi
2nd July 2014, 03:56 PM
http://www.youtube.com/watch?v=fnrbbkPXx_I

eehaiupehazij
2nd July 2014, 06:43 PM
Thanking you for a happy come back and intensive participation with extensive video clippings on NT, Abkhlabhi sir. Hope the sag in this thread will be levelled.

eehaiupehazij
2nd July 2014, 07:15 PM
இதுவரை என்னுடைய பழைய பதிவுகளை 2008 மற்றும் 2009 காலகட்டங்களில் வந்தவற்றை திரியின் புதிய வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீள் பதிவு செய்து வந்தேன். எனக்கு அந்த சிரமம் வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ சில நண்பர்கள் என் பதிவுகளை மீள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கு மிக்க நன்றி. ஒரே ஒரு வருத்தம். பதிவுகளில் அவர்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு சில நகாசு வேலைகள் செய்து போடுகின்றனர். முழுமையாக எடுத்து போட்டு விட்டால் எனக்கும் மீள் பதிவு போடும் வேலை மிச்சம். Murali Sir's posting


சுடர் விளக்காயினும் அதன் ஒளி நிலைத்திட ஒரு திரிதூண்டுதல் தேவை. ஆரம்பிக்கும்போதே சுடரை அணைத்து ஒளி பரவா வண்ணம் தடுக்க யாரும் எண்ணுவதில்லை. ஒரு கருத்தை மையப்படுத்தி நாம் எழுதும்போது சில அடிப்படை புள்ளிவிவரங்களையும் , செய்திகளையும் ஆய்ந்து ஒரு வடிவப்படுத்தும்போது சில சமயம் பிறரது எழுத்து வீச்சு நாமறியாது வந்துவிடும். அது கருத்துக்கவரல் (Plagiarization) ஆகாது. எடுத்துக்காட்டாக , நான் ஒரு கருத்தரங்கில் ஏற்றத்தாழ்வுகளுடன் தமிழில் கருத்துக்களை வெளிப்படுத்தும்போது என் பேச்சுத்தமிழ் ஆசான் நடிகர்திலகத்தின் பாதிப்பு என்னையுமறியாது ஆட்கொண்டுவிடுகிறதே! .கருத்து வெளியீடுகளை வரிக்குவரி அதன் வரிசைக்கிரமங்களைக்கூட மாற்றாமல் நகலெடுப்பதுதான் தவறு. முரளி அவர்களின் ஆதங்கம் நியாயமானதுதான். ஆனாலும் அவர்தம் கட்டுரைகளின் எப்பகுதிகள் எந்தவகையில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பது தெளிவாகாத நிலையில் யாரும் குற்றம் சுமத்தப்படுவதாக எண்ணி மருகுவது தேவையற்றது.

Gopal.s
2nd July 2014, 07:45 PM
நிறையவே சாயல்.(நகாசு வேலை என்ற ஒப்புதல் வாக்கு மூலம் வேறு.)எல்லோருக்கும் போன் போட்டு பாராட்டு போடுங்கள் என்ற பிரத்யேக வேண்டுகோள் வேறு.(சுமார் ஆறு பேர் என்னிடம் இடி இடியென சிரித்து சொன்ன செய்தி)

செந்தில்- நான் சவால் விடுகிறேன். முரளி சாயல் துளி கூட வராமல் இதே படிக்காத மேதையை நிஜமான ஆய்வு செய்து காட்டவா? சண்டை போட தெரிந்தால் மட்டும் போதாது. சரக்கு வேண்டும். இது வெறும் கல்லூரி படிப்பினால் மட்டும் கை வருவதில்லை.பிறவியிலேயே நுட்ப அறிவு,சிறு வயது முதல் படிக்கும் வழக்கம்,இதன் மூலம் evolve ஆகும் நுண்ணறிவு,அழகுணர்ச்சி. இது எனக்கு சிறு வயதிலேயே கை வர பெற்றது. சிலர் நினைப்பது வயதானால் தானே வருவதில்லை.மேதைகள் பிறக்க வேண்டும்.பயன் படுத்துவது மட்டுமே அவர்கள் கையிலும் ,ஊர் கையிலும்.

அவர் அனாவசியமாக ஆறின புண்ணை சொறிந்து ரணமாக்கி கொண்டு ,தானும் கெட்டு மற்றவரையும் கெடுக்கிறார். விட்டு விடுங்கள் செந்தில்.சில ஜென்மங்களுக்கு தன் உயரம் தெரியாது.

eehaiupehazij
2nd July 2014, 08:32 PM
செந்தில்- நான் சவால் விடுகிறேன். முரளி சாயல் துளி கூட வராமல் இதே படிக்காத மேதையை நிஜமான ஆய்வு செய்து காட்டவா? சண்டை போட தெரிந்தால் மட்டும் போதாது. சரக்கு வேண்டும். இது வெறும் கல்லூரி படிப்பினால் மட்டும் கை வருவதில்லை.பிறவியிலேயே நுட்ப அறிவு,சிறு வயது முதல் படிக்கும் வழக்கம்,இதன் மூலம் evolve ஆகும் நுண்ணறிவு,அழகுணர்ச்சி. இது எனக்கு சிறு வயதிலேயே கை வர பெற்றது. சிலர் நினைப்பது வயதானால் தானே வருவதில்லை.மேதைகள் பிறக்க வேண்டும்.பயன் படுத்துவது மட்டுமே அவர்கள் கையிலும் ,ஊர் கையிலும்.

அவர் அனாவசியமாக ஆறின புண்ணை சொறிந்து ரணமாக்கி கொண்டு ,தானும் கெட்டு மற்றவரையும் கெடுக்கிறார். விட்டு விடுங்கள் செந்தில்.சில ஜென்மங்களுக்கு தன் உயரம் தெரியாது.

கோபால்சார். மொழியறிவு அறிவுக்கூர்மையாகிவிட முடியாது. அவ்வாறே கூர் மதி மிக்கவரும் சிறந்த மொழியறிவாளர் என்று எடுத்துக்கொள்ள இயலாது. செறிந்த மொழியறிவுடன் கூடிய கூர்மதியாளர்கள் வெகுசொற்பமே. நடிகர்திலகத்தின் மேன்மை கூறும் இத்திரியில் திரனாய்வுக்கூறு மிக்க தங்களைப்போன்ற கல்வியாளர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கி வைத்திருக்கும் பெருமைமிகு ஆவணப்பதிவுகள் எல்லோருக்கும் பயன்படும்வண்ணம் முறைப்படுத்தப்பட வேண்டும். நடிகர்திலகம் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு இப்பெட்டகங்கள் ஆதார இலக்கியங்களாக (resource material) சேமித்து வைக்கப்படவேண்டும். நிச்சயமாக உங்களால் முரளியின் படைப்பை வேறு அணுகுமுறையில் பரிமாற இயலும் என்பதில் எவருக்கும் இரண்டாம் கருத்து கிடையாது. நடிகர் திலகம் புகழ்பாடும் ஏகலைவர்கள் வளர வாழ்த்துவோமே! அவர்தம் சுண்டுவிரலை நாம் காணிக்கையாக கேட்டுப்பெற வேண்டிய அவசியமில்லையே!

Gopal.s
2nd July 2014, 08:39 PM
ஏகலைவன் துரோணர் இடம் சவால் விட்டு,அறிவுரை கூறி கொண்டிருந்தானா?

eehaiupehazij
2nd July 2014, 09:00 PM
ஏகலைவன் துரோணர் இடம் சவால் விட்டு,அறிவுரை கூறி கொண்டிருந்தானா?

கேள்வியும் கேள்விக்குப் பதிலும் நன்குணர்ந்த கேள்வியின் நாயகரிடம் இருந்து கேள்வியே பதிலாக வரும் என்று நான் கேள்விப்பட்டதில்லை .

Russellbpw
2nd July 2014, 10:37 PM
சிறிது காலத்திற்கு முன் நாம் இந்த திரியில் மருதநாயகம் படத்தின் துவக்க விழா இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்களை நடிகர் திலகத்திற்கு அறிமுகபடுதப்பட்டார் என்பதைப்போல பத்திரிகை செய்தி நாம் கண்டோம்.

இதை படித்த பலர் அந்த சமயத்தில் என்னமோ நம்ம நடிகர் திலகதிற்கு இங்கிலாந்து ராணியை தெரியாததுபோல நினைத்திருப்பார்கள்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் பற்றி ஒரு செய்தி :

நடிகர் திலகத்துடன் இருக்கும் நபர் யார் என்று தெரிகிறதா ? அதே இங்கிலாந்து நாடு இளவரசர்ஆகும்.

அருகில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி

இதிலிருந்து என்ன தெரிகிறது ?

நடிகர் திலகத்திற்கு எலிசபெத்தை யாரும் அறிமுகபடுத்த தேவையே இல்லை.

இங்கிலாந்து மகாராணியின் குடும்பத்தை நன்கு முன்னமே அறிந்தவர் நமது நடிகர் திலகம்.

இப்படிதான் ஆள் ஆளுக்கு நடிகர் திலகத்தை பற்றிய தவறான செய்திகளை வேண்டுமென்றே காழ்புணர்ச்சியுடன் பதிவிடுவது அந்தகாலத்தில் இருந்தே வழக்கமான ஒன்றாகிவிட்டது.

நல்லவேளை தகவல் தொழில்நுட்பம் வளர்ந்ததால் ஆதரங்களையும், ஆவணங்களையும் பொதுமக்கள் முன்பு வெளியிட வழிவகை செய்துள்ளது. அதுவும் தான் இப்போது மற்றவர்களுக்கு இன்னும் வயிதெரிச்சல் !

எதற்கு அந்த பத்திரிகைக்கும், பத்திரிகயாலருக்கும் இந்த வீண் பொய் செய்தி பரப்பும் புத்தி ?

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG_20140630_152146_zpsf3ad08ff.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG_20140630_152146_zpsf3ad08ff.jpg.html)

Russellbpw
2nd July 2014, 10:48 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/advani_zpsdcbfa972.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/advani_zpsdcbfa972.jpg.html)

Russellbpw
2nd July 2014, 10:50 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/bc1_zps5b484e95.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/bc1_zps5b484e95.jpg.html)

Russellbpw
2nd July 2014, 10:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sg_zps92bdc5c1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sg_zps92bdc5c1.jpg.html)

Russellbpw
2nd July 2014, 10:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/cho_zps1c6a8cbe.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/cho_zps1c6a8cbe.jpg.html)

Russellbpw
2nd July 2014, 10:52 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/image1_zps2b795bfa.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/image1_zps2b795bfa.jpg.html)

Russellbpw
2nd July 2014, 10:54 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/gowravam_zpse8f28eb0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/gowravam_zpse8f28eb0.jpg.html)

Russellbpw
2nd July 2014, 10:55 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/apn_zps994e00f9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/apn_zps994e00f9.jpg.html)

Russellbpw
2nd July 2014, 10:56 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sivaji_zps78616d12.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sivaji_zps78616d12.jpg.html)

Russellbpw
2nd July 2014, 11:09 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10458349_1508358282712185_3552161402557052482_n_zp sc548e219.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10458349_1508358282712185_3552161402557052482_n_zp sc548e219.jpg.html)

Russellbpw
2nd July 2014, 11:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1185035_597543566968676_1062600023_n_zps164fa836.j pg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1185035_597543566968676_1062600023_n_zps164fa836.j pg.html)

Russellbpw
2nd July 2014, 11:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/16404_446659212074588_791399440_n_zpsdfd7ec9a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/16404_446659212074588_791399440_n_zpsdfd7ec9a.jpg. html)

Russellbpw
2nd July 2014, 11:11 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/529707_445106598896516_2066424491_n_zps349b023b.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/529707_445106598896516_2066424491_n_zps349b023b.jp g.html)

Russellbpw
2nd July 2014, 11:12 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/529671_446435955430247_1503661189_n_zpsad94b209.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/529671_446435955430247_1503661189_n_zpsad94b209.jp g.html)

Russellbpw
2nd July 2014, 11:16 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/68961_446795048727671_2114528950_n_zpsc7dd24ee.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/68961_446795048727671_2114528950_n_zpsc7dd24ee.jpg .html)

Russellbpw
2nd July 2014, 11:17 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/163345_444605485613294_605153296_n_zpsb13c69d3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/163345_444605485613294_605153296_n_zpsb13c69d3.jpg .html)

Gopal.s
3rd July 2014, 05:47 AM
Amazing Ravikiran. Enjoyed all the exhibits. Thanks.

Subramaniam Ramajayam
3rd July 2014, 06:50 AM
Amazing Ravikiran. Enjoyed all the exhibits. Thanks.

Day by day your contributions makes the NT hub more interesting and
entertaining. keep it up mr RKS sir, valga valamudan.

Gopal.s
3rd July 2014, 07:15 AM
Since we talked about Transaction Analysis, I always apply in my life the first principle I am OK you are OK. It is well known to my Friends,Relatives and Associates. I do the critical analysis only if I find some deviation to counsel and cure .Let us adapt the Following as a healthy guide lines for our Thread and move on. Criticisms ,whatever form they are, should be taken in stride for betterment. I never ran away as so many times ,I was put on surgical knife despite my healthy contributions. Pl.let us not be over sensitive and defensive. Let us avoid unethical lobbying or mutual PRO to promote eachother. Every posting will get its due attention as per its merit and stand the test of time deservingly. Let us not get deterred.

1.I'm OK and you are OK. This is the healthiest position about life and it means that I feel good about myself and that I feel good about others and their competence.
2.I'm OK and you are not OK. In this position I feel good about myself but I see others as damaged or less than and it is usually not healthy,
3.I'm not OK and you are OK. In this position the person sees him/herself as the weak partner in relationships as the others in life are definitely better than the self. The person who holds this position will unconsciously accept abuse as OK.
4.I'm not OK and you are not OK. This is the worst position to be in as it means that I believe that I am in a terrible state and the rest of the world is as bad. Consequently there is no hope for any ultimate supports.

Philosophy
People are OK; thus each person has validity, importance, equality of respect.
Positive reinforcement increases feelings of OK.
All people have a basic lovable core and a desire for positive growth.
Everyone (with only few exceptions, such as the severely brain-damaged) has the capacity to think.
All of the many facets of an individual have a positive value for them in some way.
People decide their story and destiny, therefore these decisions can be changed.
All emotional difficulties are curable.

sivaa
3rd July 2014, 08:09 AM
உரையாடல:

சிவா...என்னிடம் இருந்த பழைய பொக்கிஷங்கள் அழிஞ்சுபோனதினால சில தகவல்களை பெறமுடியாம இருக்கு

நண்பர்....கோவையில 60ல் வெளிவந்த இரும்புத்திரை வெள்ளிவிழாகண்டது ஷிப்டிங்கில் 230 நாட்கள்வரை ஓடியது

சிவா.......அது கறுப்பு வெள்ளை படமெல்லா? ஆமா இது விடயம் அந்தப்பக்கத்து ஆட்களுக்கு ஆந்த நேரம் தெரியாமபோச்சுதாக்கும்

நண்பர்.....ஏன?...என்ன விஷயம்?

சிவா.........என்னவென்றால 1959ல் வெளிவந்த கறுப்பு வெள்ளை படமான பாகப்பிரிவினை மதுரையில 216 நாட்கள் ஓடியிருந்தது அத தாண்டீற்ரதாக காட்ட தங்கட படம் ஒன்றை முக்கி முக்கி ஓட்டி 1 நாள் கூடக்காட்டினவையெல்லோ அதுதான் அதப்போல கோவையிலும் இரும்புத்திரையின் ஓடிய நாளை முறியடிக்க முயன்றிருப்பினம்

நண்பர்......நடிகர் திலகத்தின் சாதனைகள் அவை தானாக நிகழ்பவை நிகழ்த்தப்படுபவை அல்ல

சிவா......சரியாகச்சொன்னீர்கள்


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/CCI26122012_0001_zps070c517a.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/CCI26122012_0001_zps070c517a.jpg.html)http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image22_zps672a36a6.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image22_zps672a36a6.jpg.html)<br></p>

parthasarathy
3rd July 2014, 09:42 AM
RKS:

Thank you for a great comeback and glorious postings.

Please continue to enthral us.

Regards,

R. Parthasarathy

eehaiupehazij
3rd July 2014, 10:09 AM
dear RKS. happy on your coming back with a bang of postings as usual. let this thread have a happy note on its conclusion and we hope to contribute for NT's glory with the threads that are going to follow under your guidance.

KCSHEKAR
3rd July 2014, 10:28 AM
All emotional difficulties are curable.
Dear Gopal Sir,
I agreed with your Philosophy.

Russellbpw
3rd July 2014, 01:32 PM
நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் தமிழகம் மட்டுமலாது, நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் இதுமட்டுமல்லாத, பல தருணங்களில் மும்பை போன்ற பேரு நகரங்களில் கூட பிரமாண்ட வெற்றி பெற்றதுண்டு !

இது நமது நாடுமட்டுமல்ல, நமது சகோதர நாடான இலங்கையை பொருத்தவரை நடிகர் திலகத்தின் திரைப்படம் என்றால் அதன் சாதனை வீச்சே தனி.

மற்றவர்கள் கனவிலும் நினைத்து பார்க்காத சாதனைகளை நடிகர் திலகம் படங்கள் நிகழ்த்தியதுண்டு.

அப்படி நிகழ்த்திய பல சாதனைகளில் சில துளிகள் ....ஆதார ஆவணங்களுடன் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4476a-1_zps06e2d757.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4476a-1_zps06e2d757.jpg.html)

Russellbpw
3rd July 2014, 01:33 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4477a-1_zps361a6510.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4477a-1_zps361a6510.jpg.html)

Russellbpw
3rd July 2014, 01:34 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4478a-1_zps3d1356cd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4478a-1_zps3d1356cd.jpg.html)

Russellbpw
3rd July 2014, 01:37 PM
UTHAMAN RECORD IN SRILANKA - 100 days in all 3 Theaters

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/UthamanSrilanka100Veerakesari230878_zps0321b04b.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/UthamanSrilanka100Veerakesari230878_zps0321b04b.jp g.html)

Russellbpw
3rd July 2014, 01:48 PM
இலங்கையில் நடிகர் திலகத்தின் உத்தமன் 175 நாள் வசூல் விபரங்கள் :


1) மருதானை சென்ட்ரல் திரை அரங்கம் 173 நாள் வரையிலான வசூல் : 6,14,738.85 வரி நீங்கலாக

2) யாழ் நகர் ராணி திரை அரங்கம் 173 நாள் வரையிலான வசூல் : 6,01,428.20 வரி நீங்கலாக. வரியையும் சேர்த்து 7,37,559.35



இதை படிப்பவர்கள் இதற்க்கு நம்மிடையே ஆதாரம் மற்றும் ஆவணம் இல்லை என்று நினைக்கவேண்டாம்.

இதோ நடிகர் திலகம்தான் அகில உலக வசூல் சக்ரவர்த்தி என்பதை நிரூபிக்கும் ஒரு ஆதாரம் இலங்கை வீரகேசரியில் வந்த விளம்பரம்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/UthamanSJADfw_zps21763e16.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/UthamanSJADfw_zps21763e16.jpg.html)

Russellbpw
3rd July 2014, 01:57 PM
80 கள்இல் பல இளைய தலைமுறை நடிகர்கள் சாரை சாரையாய் வந்துகொண்டிருந்தபோதும் மக்கள் ரசனை வெகுவாக மாறியபோதும் நடிகர் திலகத்தின் படங்கள் மதோன்னத சாதனை புரிய தவறவில்லை.

குறிப்பாக மசாலா கலக்காத நடிகர் திலகம் படம் கூட பயங்கர வசூல் சாதனை ஏற்படுத்தியது.
இதற்க்கு உதாரணம் : கீழ் வானம் சிவக்கும்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/039_zps959b5891.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/039_zps959b5891.jpg.html)

Russellbpw
3rd July 2014, 02:00 PM
நம் பல கோட்டையில் ஒன்றான கொங்கு மண்டலத்தில் நடிகர் திலகத்தின் கீழ்வானம் சிவக்கும் ஏற்படுத்திய வசூல் பிரளயம்


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/KeezhVaanamSivakkum071281-7thWeek_zps05e40d7d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/KeezhVaanamSivakkum071281-7thWeek_zps05e40d7d.jpg.html)

Russellbpw
3rd July 2014, 02:03 PM
நாங்கள் மட்டும் என்ன கொங்கிர்க்கு இளைத்தவர்களா ..நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று பறை சாற்றிய தொடர்ந்து அரங்கு நிறைவு சாதனை - சென்னை சாந்தி. உடனயே ஒரு சிலர் இது அவர்கள் திரைஅரங்கு என்று கூறக்கூடும். அப்படி நினைபவர்கள் அறிவது - திரை அரங்கு நம்முடையது ஆனால் ஆட்கள் எங்கள் வீடு ஆட்கள் அல்ல ! பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/040_zps9c202ece.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/040_zps9c202ece.jpg.html)

Russellbpw
3rd July 2014, 02:05 PM
மேற்கூறிய அனைத்து சாதனைகளும் செய்து 100 நாட்கள் நிறைவு செய்தது - நம் நடிகர் திலகம் அளித்த கீழ் வானம் சிவக்கும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/KeezhVaanamSivakkum2282-100_zps8c672576.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/KeezhVaanamSivakkum2282-100_zps8c672576.jpg.html)

Russellbpw
3rd July 2014, 02:12 PM
பல புரட்சிகளை நம் திரைப்பட உலகில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் விட்ட முதல் நடிகர் நமது நடிகர் திலகம் என்றால் அது மிகையல்ல !
காரணம் நடிகர் திலகத்தை "சிவாஜி" என்று பட்டம் கொடுத்து அழைத்த பெரியார் அவர்கள் தொடர்ந்து பல தருணங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு அவரை பாராட்டியுள்ளார் அதுவும் எப்படி ..."நம் நாட்டு நடிப்பு களஞ்சியம்" என்று

இதோ நம் நடிகர் திலகத்தை பாராட்டி பேசிய ஆவணம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTPeriyar2-2_zps78dd0475.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTPeriyar2-2_zps78dd0475.jpg.html)

eehaiupehazij
3rd July 2014, 02:37 PM
[QUOTE=RavikiranSurya;1144708]

During his screen emperorship NT has donned many a characterizations stemming as inspirations from real life characters he encountered. Of all these, characters such as Prestige Padmanabhan, Barister Rajanikanth, Thangapadhakkam Chowdry,...what an observation and how meticulously he had refined these characters through his films! Gowravam... is really an astonishing differentiation of all his duel roles and the stylish portrayal of the egoistic Barrister ...scene by scene...etched in our memory, particularly his stylish pose with the cigar pipe and his facial expression! His mesmerizing screen presence with an eye-catching attire during the song sequence 'adhisaya ulagam....! Who bothered to see the dancers?! And that dancer Jaikumari was his love interest in 'Engirundho Vandhaal'! What a transformation! Thanks a lot RKS for reviving the nostalgia in your rollicking style!


[url]http://www.youtube.com/watch?v=xwfNcgPmgeo ("[[/QUOTE)

Russellbpw
3rd July 2014, 02:51 PM
பல லட்ச ருபாய் செலவு செய்து வெளிநாடுகளில் இருந்து MAKE UP விற்பன்னர்களை கொண்டுவந்து தயாரிப்பாளர் purse காலியாக்காமல், தமக்கு தெரிந்த நுட்பத்தை பயன்படுத்தி நமது நடிகர் திலகம் அவர்கள் சர்வ சாதாரணமாக உலக புகழ் MAKEUP செய்யும் காட்சி.

திரு சிவாஜி கணேசன் திருஅருட்செல்வராக மாறும் காட்சி. இந்த கால இளைஞர்கள் மற்றும் எந்தகால இளைஞர்களின் பார்வைக்கும் கூட !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4185a_zps2e32d906.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4185a_zps2e32d906.jpg.html)

Russellbpw
3rd July 2014, 02:52 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4186a_zpsbad6ae00.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4186a_zpsbad6ae00.jpg.html)

eehaiupehazij
3rd July 2014, 03:17 PM
dear RKS. really a rare ensemble of the stage by stage pain and turmoil experienced by a born actor for his true to the type transformation into the character! Note how his expressions through eyes also get changed!really a sumptuous feast to the eyes!

Harrietlgy
3rd July 2014, 04:17 PM
Well done RKS superb information and photos.

Russellbpw
3rd July 2014, 11:30 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthiad2003PadmaSubcommnts.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/thanthiad2003PadmaSubcommnts.jpg.html)

Russellbpw
3rd July 2014, 11:39 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/kovaimalaimalarepaperreport.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/kovaimalaimalarepaperreport.jpg.html)

Russellbpw
3rd July 2014, 11:44 PM
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3249329.ece

Russellbpw
3rd July 2014, 11:46 PM
http://www.thehindubusinessline.com/todays-paper/tp-markets/article3156237.ece

Russellbpw
3rd July 2014, 11:46 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG-8.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/IMG-8.jpg.html)

Russellbpw
3rd July 2014, 11:48 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-81.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/1-81.jpg.html)

Russellbpw
3rd July 2014, 11:48 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-57.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/2-57.jpg.html)

Russellbpw
3rd July 2014, 11:49 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-40.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/3-40.jpg.html)

Russellbpw
3rd July 2014, 11:55 PM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5580-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5580-1.jpg.html)

Russellbpw
3rd July 2014, 11:59 PM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5644-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5644-1.jpg.html)

Russellbpw
4th July 2014, 12:00 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5647-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5647-1.jpg.html)

Russellbpw
4th July 2014, 12:01 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5648-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5648-1.jpg.html)

Russellbpw
4th July 2014, 12:02 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-41.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/3-41.jpg.html)

Russellbpw
4th July 2014, 12:03 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/KARNAN25THDAYAD.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/KARNAN25THDAYAD.jpg.html)

Russellbpw
4th July 2014, 12:04 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5649-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5649-1.jpg.html)

Russellbpw
4th July 2014, 12:04 AM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5652-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5652-1.jpg.html)

Russellbpw
4th July 2014, 12:06 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thinasudar.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/thinasudar.jpg.html)

Murali Srinivas
4th July 2014, 12:31 AM
பரங்கியரை முழு மூச்சுடன் எதிர்த்து போரிட்ட பாஞ்சலங்குறிச்சி மாவீரன்

ஜாக்சன் துரையையும் பானர்மானையும் வெலவெலக்க செய்த அடலேறு

வீரத்தின் விளைநிலம் வெற்றியின் இருப்பிடம்

வீரபாண்டிய கட்டபொம்மன் விரைவில் தமிழகமெங்கும்

வெற்றி விஜயம்!

கூடுதல் விவரங்கள் விரைவில்.

1972 - நம் அனைவரின் மனம் கவர்ந்த பொன்னான ஆண்டு! நடிகர் திலகம் நடித்து வெளிவந்த 7 படங்களில் 6 படங்கள் 100-வது நாளை கடந்து வெற்றி.நடை போட்டது. ஆனாலும் நமது ரசிகர்களின் பெரும்பாலோனோரின் உள்ளம் கவர்ந்த கள்வன் யாரோ அந்த சுதந்திர போராளி சேகர் விரைவில் சென்னை மதுரை, கோவை மற்றும் திருச்சி நகரங்களுக்கு விஜயம். தர்மம் எங்கே என்ற கேள்விக்கு அது இங்கே என்று ரசிகர்களால் சுண்டி காண்பிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் வண்ண திரை ஓவியம்.

விரைவில் விவரங்கள்

அன்புடன்


நமது அடுத்த திரியை துவங்குவதற்கு நண்பர் rks அவர்களை முன்மொழிந்துள்ளேன் ஒரு சில விளக்கங்கள் கிடைத்தவுடன் அவர் அடுத்த திரியை துவக்கி வைப்பார்.

Murali Srinivas
4th July 2014, 12:51 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

1969-ஐ தொடர்ந்து 1970-லும் நடிகர் திலகத்தின் படங்கள் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை கண்டது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

1971-ல் எம்ஜிஆரின் முதல் படம் ஜனவரி 26 சிந்தாமணியில் வெளியான குமரிகோட்டம். இதுவும் அந்த இலக்கை எட்டவில்லை. இங்கே இரு துருவம் படம் ஜனவரி 14 அன்று நியூ சினிமாவில் வெளியானது. படத்தின் ரிப்போர்ட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தொடர் ஹவுஸ் புல் பற்றி யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. பிப்ரவரி 6 அன்று தங்கைக்காக ஸ்ரீதேவியில் ரிலீஸ். பெண்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு பிரமாதமாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் இந்திய பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டசபைக்கும் முன்கூட்டியே பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு விட, நமது ரசிக மன்ற கண்மணிகள் பெருந்தலைவரும் மூதறிஞர் அவர்களும் உருவாக்கிய கூட்டணிக்காக உழைக்க களம் புகுந்து விட்டனர். அதனால் தங்கைக்காக படமும் சரி மிக சரியாக தேர்தல் நாளான 1971 மார்ச் 5 அன்று நியூ சினிமாவில் வெளியான அருணோதயம் படமும் சரி [இந்த முக்தாவை என்ன சொல்லி திட்டுவது?] படத்தின் தரத்திற்கேற்ப வெற்றியை பெற முடியாமல் போனது. அருணோதயம் வெளியாகி 3 வாரத்தில் மார்ச் 26 அன்று குலமா குணமா ஸ்ரீதேவியில் ரிலீஸ். இந்த பக்கம் அருணோதயம் ஓடிகொண்டிருக்கிறது. அந்த பக்கம் 18 நாட்களில் ஏப்ரல் 14 அன்று சுமதி என் சுந்தரி அலங்காரிலும், பிராப்தம் சென்ட்ரலிலும் வெளியாகி விட்டது. 90 நாள் இடைவெளியில் 6 படங்கள் வெளியானால் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு ஏது வாய்ப்பு?

1971 மே 29 சனிக்கிழமை மதுரை நியூசினிமாவில் ரிக்ஷாகாரன் வெளியானது. வணிக ரீதியில் வெற்றி பெற்ற இந்த படம் 100 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளை கண்டது. ஐந்து வாரத்தில் 115 காட்சிகளும் அரங்கு நிறைந்த இந்த படம் 36வது நாள் சனிக்கிழமை காலைக்காட்சியில் ஹவுஸ்புல் விட்டுப் போனது.

இப்போது ball was in our court. அதற்கு நமக்கு வந்து அமைந்தது சவாலே சமாளி. ஜூலை 3 அன்று ஸ்ரீதேவியில் வெளியாகி மிக பிரமாதமான ரிப்போர்ட். படம் சர்வ சாதாரணமாக ஹவுஸ் புல் ஆகிக் கொண்டிருந்தது. எந்தளவிற்கு என்றால் படம் வெளியான 8வது மற்றும் 9வது நாளில் அதாவது ஜூலை 10,11 தேதிகளில் திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் 150-வது படவிழா நடைபெற்றது. பெரும்பாலான ரசிகர்கள் மாநாட்டிற்கு போய் விட்ட அந்த சூழலிலும் அந்த இரண்டு நாட்களிலும் சரி அதன் பிறகு 20-வது நாளன்று வெளியான, அதாவது ஜூலை 22-ந் தேதி சிந்தாமணி டாக்கீஸில் நடிகர் திலகத்தின் அடுத்த படமான தேனும் பாலும் வெளியான் போதும் just like that என்று சொல்வார்களே அது போல் அரங்கு நிறைந்தது. அதற்கு இரண்டு நாள் கழித்து வந்த 4-வது சனிக்கிழமை காலைக்காட்சியும் புல். ஞாயிறு திங்கள் எல்லா காட்சிகளும் ஹவுஸ் புல். 24 நாட்களில் நடைபெற்ற் 80 காட்சிகளும் ஹவுஸ் புல்.

சாதாரணமாக படம் ஓடும் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூட்டம் ஒன்று நிற்கும். சவாலே சமாளி போன வேகத்தை பார்த்து விட்டு சர்வ சாதாரணமாக இது இலக்கை அடைந்து விடும் என்று நினைத்தோ என்னமோ ரசிகர் கூட்டம் குறைந்தது. 25-வது நாள் செவ்வாய்க்கிழமை பகல் காட்சி மடமடவென்று அனைத்து வகுப்பு டிக்கெட்களும் விற்று தீர்ந்து கொண்டிருந்தது. கீழே பெண்கள் 40 பைசா, பெண்கள் மற்றும் ஆண்கள் 70 பைசா, ஆண்கள் 80 பைசா, பால்கனியில் 1.15, 1.70 என்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட, 2.50 டிக்கெட் மட்டும் கடைசி நிமிடத்தில் 4 டிக்கெட்கள் நின்று போயின. யாருமே எதிர்பார்க்காத வகையில் 80 காட்சிகளோடு தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது.

இந்த எதிர்பாராத நிகழ்வினாலும் அப்போது ஓடிக் கொண்டிருந்த தேனும் பாலும் படமும் சரி ஆகஸ்ட் 14 அன்று ஸ்ரீமீனாட்சியில் வெளியான மூன்று தெய்வங்கள் படமும் சரி இந்த கான்செப்டில் வரவில்லை. படத்தின் ரிப்போர்ட் சுமார் என்பதாலும் சவாலே சமாளி இருக்கிறது என்ற காரணத்தினாலும் தேனும் பாலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றால் மூன்று தெய்வங்கள் படம் பற்றி அது வெளிவருவதற்கு முன் பரவியிருந்த தவறான கருத்து [சிவாஜி கௌரவ தோற்றமாம்] படத்தின் முதல் வாரத்தில் சற்று பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதை சமாளித்து படம் முன்னேறியபோதுதான் ஆகஸ்ட் 31 வந்தது.

மதுவிலக்கைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரோல் மாடல் மாநிலமாக தமிழகத்தை விளங்க வைத்த அன்றைய காங்கிரஸ் அரசாங்கமும் மூன்று தலைமுறை மனிதர்களை குடி என்றால் என்னவென்றே தெரியாமல் வைத்திருந்து ஆட்சி புரிந்த பெருந்தலைவரும் மூதறிஞரும் பெரியவர் பக்தவத்சலமும் கட்டிக் காத்த மதுவிலக்கு கொள்கை திராவிட தலைவர்களால் காற்றிலே பறக்க விடபப்ட்டு தமிழகமெங்கும் மதுக் கடைகள் திறக்கப்பட்ட நாள் 1971 ஆகஸ்ட் 31. தமிழக மக்களை நிரந்தரமாக "குடிமகன்களாக" ஆக்கிய அவலம் அன்றுதான் ஆரம்பித்தது. கொட்டும் மழையில் கோபாலபுரத்திற்கு ஓடோடி சென்று மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள் என்று மன்றாடிய மூதறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. "என் எதிரி கூட குடிக்க கூடாது என்று நினைக்கிறவன் நான்" என்று சினிமாவில் வசனம் பேசியவர்கள், சினிமாவில் மட்டும் வசனம் பேசி விட்டு நிஜ வாழ்க்கையில் அதிகாரம் கையில் வந்த போது 7 வருடங்களாக [1974 செப்டம்பர் 1 முதல் 1981 ஜூன் 30 வரை] மூடிக் கிடந்த மது கடைகளை எல்லாம் திறந்து விட்ட காட்சியையும் தமிழகம் வேதனையோடு வேடிக்கை பார்த்தது. ஆயிற்று, 1981 ஜூலை 1-ந் தேதி அன்று திறக்கப்பட்ட கடைகள் இந்த 2014 ஜூலை 1-ந் தேதியுடன் 33 வருடங்களை கடந்து, இன்னும் செயல்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. சமூக அக்கறை உள்ள எவரும் நாளைய சமுதாயத்தை நம்பிக்கையோடு எதிர் நோக்கும் எவரும் இன்றைய இளைஞர் நிலை கண்டு வேதனையும் வருத்தத்தையும் அடைவதுதான் மிச்சம். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. மதுபானம்தான் ஆறாக ஓடுகிறது.

மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் முன்னிரவு மற்றும் பின்னிரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர அச்சப்படும் சூழல் உருவானது. பெண்கள் திரையரங்கிற்கு இரவு காட்சிகளுக்கு வராத சூழல் ஏற்பட்டது. இது தொடர் ஹவுஸ் புல் நிகழ்வையும் படங்களின் ஓட்டத்தையும் பாதித்தது. மூன்று தெய்வங்கள் படமும் இந்த அசாதாரண சூழலால் பாதிக்கப்பட்டது.

தீபாவளிக்கு பாபு ஸ்ரீதேவியிலும், நீரும் நெருப்பும் சென்ட்ரலிலும் ரிலீஸ். நீரும் நெருப்பும் ரிப்போர்ட் சுமார். ஆகவே அந்த படம் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு முயற்சிக்கப்படவில்லை. மேலும் ரிக்ஷாகாரன் படம் 100 தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் என்ற இலக்கை எட்டி விட்டதாலும் இந்த படம் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. பாபு படத்தை பொறுத்தவரை நல்ல ரிப்போர்ட். படம் நன்றாகவே போனது. ஆனாலும் தொடர் ஹவுஸ் புல் என்ற இலக்கை அடைய முடியவில்லை. எனக்கு அன்றும் இன்றும் தோன்றுகின்ற காரணம் என்னவென்றால் இது போன்ற உணர்ச்சிப்பூர்வமான படங்களுக்கு repeat audience சற்று குறைவாக் இருக்கும். தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு repeat audience factor-ம் தேவை.

1971 டிசம்பரில் ஒரு தாய் மக்கள் நியூசினிமாவில் வெளியானது. 1966 முதல் தயாரிப்பில் இருந்த படம் என்பதனாலும் படத்தைப் பற்றிய அபிப்பிராயம் சரியான முறையில் அமையாததாலும் படம் முதல் வார சனிக்கிழமை காலைக்காட்சியே அரங்கு நிறையாமல் போனது. இப்படி 1971 முடிவிற்கு வரும்போது அதற்கு முந்தைய வருடமான 1970 இறுதியில் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளைப் பொறுத்தவரை நாம் சந்தோஷமாக இருந்தோம். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. 1971 இறுதியில் நிலைமை அப்படியே மாறியது. 1971-ல் ஹாட்ரிக் அடித்திருக்கலாமே, விட்டு விட்டோமே என்ற வருத்தம் இருந்தாலும் 1972- ஐ ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.

(தொடரும்)

அன்புடன்

sivaa
4th July 2014, 07:25 AM
கோவையில் நடிகர் திலகத்தின் மூன்றாவது
வெள்ளிவிழா சித்திரம்
முதல் மரியாதை

.........

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

முதல் மரியாதை

[15.8.1985 - 15.8.2011] : 27வது உதயதினம்

சாதனை வசந்தங்கள் தொடர்கின்றன.....

100வது நாள் : தினத்தந்தி : 22.11.1985
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4332a.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4332b-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4333.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4343a.jpg

தொடரும்.....

அன்புடன்,
பம்மலார்.
pammalar



நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 07:29 AM
கோவையில் நடிகர் திலகத்தின் மூன்றாவது
வெள்ளிவிழா சித்திரம்
முதல் மரியாதை
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

முதல் மரியாதை

[15.8.1985 - 15.8.2011] : 27வது உதயதினம்

சாதனை வசந்தங்கள் தொடர்ந்து நிறைகின்றன

வெள்ளிவிழா : தினத்தந்தி : 7.2.1986
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4342a-2-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4342b.jpg

அன்புடன்,
பம்மலார்.
pammalar

நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:08 AM
வசூல் சக்கரவர்த்தி - 2
[மதுரையம்பதி புள்ளி விவரம்]

[திரைக்காவியம் - வெளியான தேதி - திரையரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.-அணா- ந.பை.)]

1. பராசக்தி - 17.10.1952 - தங்கம் - 112 நாள் - 1,63,423-9-9

2. மனோகரா - 3.3.1954 - ஸ்ரீதேவி - 156 நாள் - 1,51,690-5-0

3. தங்கமலை ரகசியம் - 29.6.1957 - தங்கம் - 55 நாள் - 1,00,502-10-5

குறிப்பு:
1. 2593 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கம் திரையரங்கில் வெளியான முதல் திரைக்காவியமே "பராசக்தி" தான்.

2. தங்கம் திரையரங்கில் மூன்று 100 நாள் காவியங்களை கொடுத்த ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் தான்.
[பராசக்தி(1952) - 112 நாள், படிக்காத மேதை(1960) - 116 நாள், கர்ணன்(1964) - 108 நாள்]

அன்புடன்,
பம்மலார்.
pammalar

நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:17 AM
வசூல் சக்கரவர்த்தி - 4

சிங்காரச் சென்னையில், முதல் வெளியீட்டில் (31.7.1965), சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்குகளில் ,ஸ்ரீ சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்" அள்ளி அளித்த மொத்த வசூல்:

அ) 100 நாள் வசூல்

3 அரங்குகளில் மொத்தம் 300 நாட்களில் 9,86,995 ரூபாய் 83 பைசா.

[இது அன்றைய புதிய சாதனை. 14.1.1965 பொங்கலன்று காஸினோ, பிராட்வே, மேகலா ஆகிய மூன்று திரையரங்குகளில் வெளியாகி மூன்றிலும் வெள்ளிவிழா கண்ட மக்கள் திலகத்தின் "எங்க வீட்டுப் பிள்ளை" திரைப்படத்தின் 100 நாள் வசூல் - 3 அரங்குகளில் மொத்தம் 300 நாட்களில் 9,23,519 ரூபாய் 40 பைசா. சென்னை மாநகரின் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து "எங்க வீட்டுப் பிள்ளை" ஏற்படுத்திய புதிய சாதனையை "திருவிளையாடல்" முறியடித்து புதிய சாதனையை உருவாக்கியது.]

ஆ) 179 நாள் வசூல்

3 அரங்குகளில் மொத்தம் 537 நாட்களில் 13,82,002 ரூபாய் 91 பைசா.

[மக்கள் திலகத்தின் "எங்க வீட்டுப் பிள்ளை", காஸினோ(211 நாள்), பிராட்வே(176 நாள்), மேகலா(176 நாள்), ஆக மொத்தம், 3 அரங்குகளில் 563 நாட்களில் மொத்த வசூல் 13,23,689 ரூபாய் 22 பைசா.]

நடிகர் திலகமும், மக்கள் திலகமும் திரையுலகின் இரு கண்கள் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்!

அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:21 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 108

கே: நடிகர் திலகம் எந்த மாதிரி வேஷத்தில் நடிப்பதைத் தாங்கள் விரும்புகிறீர்கள்? (கே.எல்.மல்லிகா கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)

ப: எந்த வேடத்தில் அவர் நடித்தாலும், 'இப்படித்தான் நாம் விரும்பினோம்' என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தி விடுகிறார்.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)

அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:24 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 112

கே: நடிகர் திலகத்தின் நடிப்புத்துறையை எடை போட்டால், இந்தியாவுக்கு சிவாஜியாகவும், தமிழகத்துக்கு கட்டபொம்மனாகவும், ஆசியாவுக்கு செங்கிஸ்கானாகவும் விளங்குகிறார் என்கிறேன். சரி தானா? (மிஸ்.வர்னிஸ்ரீலோப்ஸ், சிங்கப்பூர்)

ப: சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசித்திருக்கிறீர்கள்.

(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1970)

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:27 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 117

கே: சென்ற நூற்றாண்டின் திரைப்படங்களில் இன்றும் உங்கள் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படம் எது? [எந்த மொழியாகவும் இருக்கலாம்!] (வை.வைகுண்டம், சென்னை-61)

ப: சேரனுடைய 'ஆட்டோகிராஃப்' ஸ்டைலில், பள்ளிப் பருவத்தில் பார்த்த திரைப்படங்கள் தான் மனதில் பசுமையாகத் தங்கும்! சிவாஜி நடித்த 'உத்தமபுத்திரன்' (ஆறு முறை!) பார்த்து விட்டு சிவாஜி ரசிகனானேன். கூர்ந்து கவனித்தால், இப்போது ரஜினி பண்ணும் ஸ்டைலை அப்போதே சிவாஜி விக்ரமன் ரோலில் செய்திருப்பார்!

(ஆதாரம் : ஆனந்த விகடன், 11.4.2004, "ஹாய் மதன்" கேள்வி-பதில் பகுதி)

[திரு.மதன் அவர்கள், இதே பதிலில், 'மதுமதி'(ஹிந்தி) படம் பற்றியும், 'வெண்ணிற ஆடை' படம் பற்றியும் குறிப்பிட்டிருப்பார்.]

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:29 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 119

கே: சிவாஜியின் நடிப்பை அவருக்குப் பிறகு வந்த எந்தத் தலைமுறையாலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் இருக்கே... என்ன காரணம்? (பி.சிவக்குமார் பிரபு, திருப்பூர் - 6)

ப: எந்தப் பாத்திரத்தை ஏற்றாலும் பொருந்தக் கூடிய உடல்வாகு, கம்பீரம்...சட்டென்று நவரசத்தின் எந்தப் பிரிவுக்கும் ஊஞ்சல் ஆடக்கூடிய கண்கள், குரல்... இந்த இறை 'கொடை'களுடன் நாடக மேடை அனுபவம், தொழில் பக்தி, பங்க்சுவாலிட்டி ஆகியவை!

(ஆதாரம் : பொம்மை, மே 1993)

அன்புடன்,
பம்மலார்.


நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:36 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 122

கே: நடிகர் திலகம் நடிக்கும் படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, மற்ற நடிகர்கள் நடிக்கும் போது ஏற்படுவதில்லையே, ஏன்? (கே.எல்.கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)

ப: அவர் நடிகர்களுக்கெல்லாம் திலகம் போன்றவர் என்பதால் தான். அவர் நடிக்கப் பிறந்தவர். மற்ற பலர் நடிக்க வந்தவர்கள்.

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)

அன்புடன்,
பம்மலார்.


நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:38 AM
வசூல் சக்கரவர்த்தி - 5

'பாலும் பழமும்' முதல் வெளியீட்டில் (9.9.1961) சென்னை சாந்தி மற்றும் மதுரை சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் பெற்ற வசூல் விவரம்:
[ஊர் - அரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.- பை.)]

1. சென்னை - சாந்தி - 127 நாள் - 3,06,167-68

2. மதுரை - சென்ட்ரல் - 127 நாள் - 2,50,528-76

இந்த இரண்டு பிரிண்டுகள் மட்டுமன்றி, 'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் ஒவ்வொரு பிரிண்டுமே வசூல் பிரளையம் தான்!

அன்புடன்,
பம்மலார்.


நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:45 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 128

கே: 'இன்ன நடிகையுடன் தான் நடிப்பேன்' என்று சிவாஜி சொல்வதில்லையே, ஏன்? (கே.எல்.சாந்தி கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)

ப: அவர் தன் திறமையில் நம்பிக்கை கொண்டவர்.

(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1971)

அன்புடன்,
பம்மலார்.


நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:47 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 129

கே: தங்கள் படங்களில் அதிகமான பஞ்ச் டயலாக்குகளை வைக்கத் தூண்டும் ஹீரோக்களின் குறிக்கோள், படத்தின் வெற்றியா? இல்லை தற்புகழ்ச்சியா? (வ.லெட்சுமணன், இராஜவல்லிபுரம்)

ப: 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் ஒரு காட்சியில், "எங்கிட்டயே சாந்தி தியேட்டர் எங்க இருக்குன்னு காட்றியா?" என்பார் நடிகர் திலகம். இத்தனை வருஷங்கள் போன பிறகும் அந்த பஞ்ச், நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. சூட்சமம் இது தான். எப்போதாவது ஒரு முறை 'நச்'சென்று வைக்கப்பட்டால் அது பஞ்ச். படம் முழுக்க 'பஞ்ச்' தோரணமே தொங்கினால் அது 'நச்சு பிச்சு'.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 நவம்பர் 2006)

அன்புடன்,
பம்மலார்.


நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:49 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 136

கே: பத்மினி பிக்சர்ஸ் இதுவரை தயாரித்துள்ள படங்களில் அதிக வசூலைத் தந்த படம் எது? (சே.நரசிம்மன், புதுடெல்லி)

ப: வீரபாண்டிய கட்டபொம்மன்.

(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1968)

அன்புடன்,
பம்மலார்.


நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:50 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 138

கே: நடிகர் திலகத்துக்கு அடுக்கடுக்காகப் படங்கள் 'புக்' ஆகியிருப்பது எதைக் காட்டுகிறது? (ஏ.தர்மபூபதி, பொள்ளாச்சி)

ப: நடிப்பாற்றல் மிக்கவருக்குத் தான் நிரந்தரப் புகழ் உண்டு என்பதை.

(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1972)

அன்புடன்,
பம்மலார்.



நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 08:53 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 140

கே: "ராஜ ராஜ சோழன்" படம் இரண்டு வாரங்களில் இருபத்தைந்து லட்ச ரூபாய் வசூல் தந்தது குறித்து தங்கள் கருத்து என்ன? (எஸ்.பாலகிருஷ்ணன், திருச்சி - 20)

ப: இப்படிப்பட்ட படங்கள் தயாரிக்க மற்றவர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டுமானால் இந்தப் படம் வசூலில் வெற்றி பெறத்தானே வேண்டும்!

(ஆதாரம் : பேசும் படம், மே - ஜூன் 1973)

அன்புடன்,
பம்மலார்.


நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 09:01 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 147

கே: சிவாஜியிடம் உங்களுக்குப் பிடித்த குணம்? (பி.சிவாஜி பிரியா, போரூர்)

ப: சமீபத்தில் சிவாஜியைச் சந்திக்க அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் வந்திருந்தார்கள். படப்பிடிப்பில் இருந்த சிவாஜி, "மாலை வீட்டுக்கு வந்து விடுங்கள். இது என் தொழில் நேரம்" என்று சொல்லி அனுப்பி விட்டார். இப்படித் தொழிலை அவர் தெய்வமாக மதிக்கும் குணம் எனக்குப் பிடித்தது.

(ஆதாரம் : பொம்மை, ஏப்ரல் 1980)

அன்புடன்,
பம்மலார்.



நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 09:02 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 148

கே: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களை இப்போது எடுத்தால் ஓடுமா? (பகதூர், சென்னை)

ப: எடுக்க ஆள் இல்லை...நடிக்கவும் ஆள் இல்லையே!

(ஆதாரம் : ராணி, 10.10.2010) [லேட்டஸ்ட் 'ராணி' இதழ்]

அன்புடன்,
பம்மலார்.


நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 09:06 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 152

கே: மார்லன் பிராண்டோ, ரெக்ஸ் ஹாரிசன், அல்பசினோ, ராபர்ட் டிநீரோ - இவர்களில் நம் சிவாஜி கணேசனுடன் போட்டி போடத் தகுதி பெற்ற நடிகர் யார்? (ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்)

ப: பிராண்டோ, ரெக்ஸ் - இந்த இருவர் தான் சிவாஜியின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருமே சிவாஜி செய்த விதவிதமான ரோல்களைச் செய்ததில்லை என்பதே உண்மை. அந்த இருவரும் உலகின் மிகச் சிறந்த டைரக்டர்களிடம் பணியாற்றியவர்கள். சிவாஜி சுயம்பு!

(ஆதாரம் : ஆனந்த விகடன், 3.11.2002, "ஹாய் மதன்" கேள்வி-பதில் பகுதி )

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 09:09 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 153

கே: இரு மலர்கள், ஊட்டி வரை உறவு இரு படங்களும் ஒரே தினத்தில் வெளியாகி நூறு நாள் ஓடியிருக்கின்றன. ஒரே கதாநாயகனின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகி நூறு நாள் ஓடியதாக திரைப்படவுலக வரலாற்றில் வேறு ஒரு சான்று உங்களால் காண்பிக்க முடியுமா? (தா.அய்யப்பன், திருவனந்தபுரம்)

ப: பூக்காட்டில் மேலும் ஒரு புது மலர்!

(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1970)

அன்புடன்,
பம்மலார்.


நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 09:13 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 157

கே: தமிழ்ப்படவுலகம் எந்த நடிகரால் முன்னேறி வருகிறது? (கே.எல்.கன்னியப்பன், மலாயா)

ப: நடிப்புத்துறையை மட்டும் கணக்கிட்டால், நடிகர் திலகத்திற்கு அது ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறது.

(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1963)

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 09:15 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 158

கே: சிவாஜி கணேசன் இன்னமும் காலூன்றி நிற்பதற்கு என்ன காரணம்? (என்.சந்திரசேகரன், தேனி)

ப: தன்னிடத்தே திறமை, தொழிலினிடத்தே நேர்மை இவையிரண்டும் தான் காரணம்.
தயாரிப்பவர்களுக்கோ, சக நடிக-நடிகைகளுக்கோ துரோகம் செய்திராதவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
செட்டுக்குள் நுழைந்தால் தவறாக ஓடுகிறதோ என்று சந்தேகப்பட்டு நாம் வாட்ச்சை திருப்பி வைத்துக் கொள்ளலாம். அவ்வளவு பங்க்சுவல். நாலு படம் கூட முடித்திராமல், 7 மணி ஷூட்டிங்கிற்கு 11 மணிக்கு மேக்கப் போட்டுக் கொள்ள ஆரம்பிக்கும் நடிகர்களையும் திரைப்படவுலகம் அன்றாடம் சந்தித்துக் கொண்டு தானே இருக்கிறது!

(ஆதாரம் : கல்கண்டு, 7.5.1981)

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
4th July 2014, 09:27 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/ntcal2011WP_zpsaa787fa1.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/ntcal2011WP_zpsaa787fa1.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:55 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.



மதுவிலக்கைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரோல் மாடல் மாநிலமாக தமிழகத்தை விளங்க வைத்த அன்றைய காங்கிரஸ் அரசாங்கமும் மூன்று தலைமுறை மனிதர்களை குடி என்றால் என்னவென்றே தெரியாமல் வைத்திருந்து ஆட்சி புரிந்த பெருந்தலைவரும் மூதறிஞரும் பெரியவர் பக்தவத்சலமும் கட்டிக் காத்த மதுவிலக்கு கொள்கை திராவிட தலைவர்களால் காற்றிலே பறக்க விடபப்ட்டு தமிழகமெங்கும் மதுக் கடைகள் திறக்கப்பட்ட நாள் 1971 ஆகஸ்ட் 31. தமிழக மக்களை நிரந்தரமாக "குடிமகன்களாக" ஆக்கிய அவலம் அன்றுதான் ஆரம்பித்தது. கொட்டும் மழையில் கோபாலபுரத்திற்கு ஓடோடி சென்று மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள் என்று மன்றாடிய மூதறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. "என் எதிரி கூட குடிக்க கூடாது என்று நினைக்கிறவன் நான்" என்று சினிமாவில் வசனம் பேசியவர்கள், சினிமாவில் மட்டும் வசனம் பேசி விட்டு நிஜ வாழ்க்கையில் அதிகாரம் கையில் வந்த போது 7 வருடங்களாக [1974 செப்டம்பர் 1 முதல் 1981 ஜூன் 30 வரை] மூடிக் கிடந்த மது கடைகளை எல்லாம் திறந்து விட்ட காட்சியையும் தமிழகம் வேதனையோடு வேடிக்கை பார்த்தது. ஆயிற்று, 1981 ஜூலை 1-ந் தேதி அன்று திறக்கப்பட்ட கடைகள் இந்த 2014 ஜூலை 1-ந் தேதியுடன் 33 வருடங்களை கடந்து, இன்னும் செயல்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. சமூக அக்கறை உள்ள எவரும் நாளைய சமுதாயத்தை நம்பிக்கையோடு எதிர் நோக்கும் எவரும் இன்றைய இளைஞர் நிலை கண்டு வேதனையும் வருத்தத்தையும் அடைவதுதான் மிச்சம். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. மதுபானம்தான் ஆறாக ஓடுகிறது.

அன்புடன்


[B]

http://www.youtube.com/watch?v=JgUOyi2TWyo

தமிழகத்தின் நிலையை நாம் கூறுகிறோம். ஒருவேளை, இதையும் அரசாங்கத்தின் சாதனையை நாம் கிண்டலும் கேலியும் செய்கிறோம் என்று யாராவது கூறக்கூடும் !

eehaiupehazij
4th July 2014, 10:23 AM
dear RKS. Kindly bear with me for my personal opinion. Can we not take our thread on NT's glory without mixing the political events? Sometimes it may open a Pandora's box for unwarranted diversions in our thread objectives. NT is beyond all these political confinements and his fans are widespread in all parties. And, this thread has 'acting prowess' of NT as its platform rather than the political connections of NT that are extraneous to this thread. This is my humble opinion.

Russellbpw
4th July 2014, 10:36 AM
வெளிநாடுகளில் இலங்கையை குறிப்பிட்டால் அங்கு நமது நடிகர் திலகத்தின் திரைப்படங்களுக்கு உள்ள மவுசு ஒரு தனி ராகம். எவரும் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை நமது நடிகர் திலகம் படங்கள் பல தடவைகள் செய்துகாட்டியதுண்டு.

உதாரணமாக 1972இல் வந்த வசந்தமாளிகை எடுத்துகொண்டால் இலங்கையில் 2 திரை அரங்குகளில் ...100ஒ ...150ஒ ...அல்லது ...175ஒ அல்ல...250 நாட்கள் 2 அரங்கிலும் ஓடிய சாதனை வேறு எந்த படமும் முறியடித்து உள்ளதா என்று தெரியவில்லை ..! முறியடிக்க வாய்ப்பில்லை. நடிகர் திலகம் படங்கள் தவிர !

2 திரை அரங்குகளில் 250 நாட்கள் ஓடிய விளம்பர ஆவணம்...!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Srilanka250Days_zps34d4a35c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Srilanka250Days_zps34d4a35c.jpg.html)

Gopal.s
4th July 2014, 06:47 PM
The tradition of success has been inherited in Genes. Vikram prabu has been emerging as one of the Bankable stars with Good skills and screen presence.Both his Kumki and ivan vera maathiri are Good movies. We wish his third movie to follow the previous two in Quality and success. Today Arima Nambi is releasing in 400 Theatres in Tamil Nadu. It has been appreciated by Censor members as a clean and Good Film and getting raving reviews from the press.

Gopal.s
4th July 2014, 07:04 PM
http://behindwoods.com/tamil-movies/arima-nambi/arima-nambi-review.html

Gopal.s
4th July 2014, 07:07 PM
http://www.sify.com/movies/arima-nambi-review-tamil-15057925.html

Gopal.s
4th July 2014, 07:09 PM
http://tamil.oneindia.in/movies/news/arima-nambi-released-400-theatres-205162.html

eehaiupehazij
4th July 2014, 07:23 PM
The tradition of success has been inherited in Genes. Vikram prabu has been emerging as one of the Bankable stars with Good skills and screen presence.Both his Kumki and ivan vera maathiri are Good movies. We wish his third movie to follow the previous two in Quality and success. Today Arima Nambi is releasing in 400 Theatres in Tamil Nadu. It has been appreciated by Censor members as a clean and Good Film and getting raving reviews from the press.

Mr. Vikram Prabhu seems to be under a careful tutelage from his father that he has to prove 'Ivan Vere Maadhiri..' without reflecting any traces of his illustrious grandpa! His determination to choose different story bases with a totally different acting attempt is really welcome! He also takes care to maintain his robust handsome physique that is his plus point. Of course, it is a detour... a very long way to reach the acting qualities of his grand pa... particularly the close-up facial expressions, voice modulations, body language and the perfect synchronization of lip movement to songs! I join in line with Gopal Sir to wish his third venture to be really an improvisation in his acting skills to get onto the tracks of his grandpa!!

joe
4th July 2014, 08:48 PM
''நடிப்பைப் பொறுத்த வரை ரஜினி-கமல் இருவரில் யார் உங்கள் சாய்ஸ்?''
''இருவரும் இல்லை. சிவாஜி கணேசன்"

- இயக்குநர் பாலா ..விகடன் கேள்வி பதிலில்

# நீ எப்பவும் நம்மாளுடா :thumbsup:

Russellbpw
4th July 2014, 08:54 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/kiar.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/kiar.jpg.html)

Russellbpw
4th July 2014, 08:57 PM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5648-1.jpg (http://s1110.photobucket.com/user/pammalaar/media/GEDC5648-1.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:01 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/KARNAN25THDAYAD.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/KARNAN25THDAYAD.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:02 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/TRICHYRAMBACELEBRATIONSMS.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/TRICHYRAMBACELEBRATIONSMS.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:06 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/april13adKarnan.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/april13adKarnan.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:09 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanTrichy/Dinathanthi010.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KarnanTrichy/Dinathanthi010.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:11 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/dinakaran210412.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/dinakaran210412.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:12 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/bnratshanti22412.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/bnratshanti22412.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:14 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanTrichy/Dinakaran.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KarnanTrichy/Dinakaran.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:15 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi270412ad.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/thanthi270412ad.jpg.html)

JamesFague
4th July 2014, 09:16 PM
Hope the new thread will start from tomorrow. All the senior hubbers please visit
and contribute with more vigour to propagate the glory of our Acting God.

Regards

Russellbpw
4th July 2014, 09:16 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi50thdayad.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/thanthi50thdayad.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:21 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi010512ad.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/thanthi010512ad.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:29 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi11052012ad.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/thanthi11052012ad.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:30 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/kar.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/kar.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:44 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi18512ad.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/thanthi18512ad.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:45 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-67.gif (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/2-67.gif.html)

Russellbpw
4th July 2014, 09:47 PM
http://i431.photobucket.com/albums/qq35/abkhlabhi/20052012238.jpg (http://s431.photobucket.com/user/abkhlabhi/media/20052012238.jpg.html)

Russellbpw
4th July 2014, 09:48 PM
http://i431.photobucket.com/albums/qq35/abkhlabhi/ntcbcr.jpg (http://s431.photobucket.com/user/abkhlabhi/media/ntcbcr.jpg.html)

Russellbpw
4th July 2014, 10:02 PM
Though there is ONE LIE in this from Mr. Prabhu....it is ok ! He came just 10 minutes before interval !

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/thanthi1612ad.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/thanthi1612ad.jpg.html)

Russellbpw
4th July 2014, 10:39 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanChennai/CinemaExpressPg1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KarnanChennai/CinemaExpressPg1.jpg.html)

Russellbpw
4th July 2014, 10:40 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanChennai/CinemaExpressPg3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KarnanChennai/CinemaExpressPg3.jpg.html)

Russellbpw
4th July 2014, 10:41 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KarnanChennai/MaraathiyaMurasu.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KarnanChennai/MaraathiyaMurasu.jpg.html)

eehaiupehazij
4th July 2014, 11:30 PM
dear RKS. We will meet in your new thread. For NT's glory.... you are our நம்பிக்கை நட்சத்திரம்!

Murali Srinivas
5th July 2014, 12:12 AM
இங்கே பலரும் விடுத்த வேண்டுகோளின்படி நமது திரியின் அடுத்த பாகத்தை அருமை நண்பர் ரவிகிரண் சூர்யா அவர்கள் துவக்கி வைப்பார்.

திரியின் அடுத்த பாகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பார்ட் 14 என்ற பெயரில் தொடங்கப்படும். நாம் இப்போது பாகம் 12-ஐ நிறைவு செய்கிறோம். முன்பு அருமை நண்பர் பம்மல் சுவாமிநாதன் அவர்களால் தொடங்கப்பட்டு 305 பக்கங்கள் வரை நீண்டு பின் நிறைவடைந்த Nadigar Thilagam: The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor என்ற திரி நமது நடிகர் திலகத்தைப் பற்றிய 13-வது திரியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு புதிதாக துவங்கும் திரி பார்ட் 14 என்று பெயரிடப்படுகிறது.

நமது வேண்டுகோளை ஏற்று அத்ன்படி செயல்பட அனுமதி அளித்த Hub Admin-ற்கு நமது மனங்கனிந்த நன்றி.

ஒரு வெளியூர் பயணத்திற்கு செல்வதால் ஏழெட்டு நாட்களுக்கு என்னால் பதிவிட முடியாது. இந்த இடைவெளியில் நடிகர் திலகத்தைப் பற்றிய நல்ல சுவையான செய்திகள், பதிவுகள் இங்கே இடப்படும் என நம்புகிறேன்.

இந்த ஏழெட்டு நாட்களில் எந்த இடர்பாடுமின்றி தேவையற்ற சர்சைகளின்றி திரியை முன்னெடுத்து செல்லுமாறு திரியின் moderator என்ற முறையிலும், பங்களிப்பாளர் என்ற முறையிலும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திக்கிறேன்.

அன்புடன்

Gopal.s
5th July 2014, 05:21 AM
Thanks Murali. Wishes to Ravi Kiran Surya. More than starting the thread ,we wish for continuing with us all along the thread as Ravi Kiran surya.

Gopal.s
5th July 2014, 05:23 AM
''நடிப்பைப் பொறுத்த வரை ரஜினி-கமல் இருவரில் யார் உங்கள் சாய்ஸ்?''
''இருவரும் இல்லை. சிவாஜி கணேசன்"

- இயக்குநர் பாலா ..விகடன் கேள்வி பதிலில்


# நீ எப்பவும் நம்மாளுடா :thumbsup:


Thanks Joe. Not seen often. Pl.Do in Part-14.

Gopal.s
5th July 2014, 05:24 AM
I will continue Thiruvilayadal in Part-14. See you later.Bye.

RAGHAVENDRA
5th July 2014, 06:55 AM
முரளி சார்
பம்மலாரின் கடும் உழைப்பின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான Box Office Threadடின் தலைப்பு மிகவும் வித்தியாசமாக நடிகர் திலகம் வசூல் சக்கரவர்த்தி என்பதை ஆணித்தரமாக தன் தலைப்பின் மூலமாக நிரூபிக்கும் வண்ணம் அமைந்தது. பாக் ஆபீஸ் எம்பரர் என்ற தலைப்பிலேயே தொடர்ந்திருந்திருக்கலாம் என்று ஒரு பக்கம் மனம் கூறினாலும் நமது மெயின் திரியின் அடுத்தொரு பாகமாக சேர்த்துக் கொள்ளப் பட்டதும் சந்தோஷமே.

Murali Srinivas
5th July 2014, 07:23 AM
Raghavendar Sir,

There is no change as for as the title of Swami's thread is concerned. The thread will sill retain the same name as Nadigar Thilagam - The Greatest Actor and the One and Only BO Emperor, which I have clearly mentioned. Taking in to consideration the sentiments expressed by certain hubbers it will be treated as part 13 and the new thread will have the nomenclature as Nadigar Thilagam Part 14. Absolutely there is no change in name for Swami's thread.

Regards

sivaa
5th July 2014, 09:11 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/4705540243_7d42eb299a_b_zps778b4bb3.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/4705540243_7d42eb299a_b_zps778b4bb3.jpg.html)

Gopal.s
5th July 2014, 09:43 AM
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.
ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா

நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே

மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே

ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.

காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து, வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....

புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.

நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.

பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.

https://www.youtube.com/watch?v=ZNQSCPPTFzc&feature=endscreen

joe
5th July 2014, 05:56 PM
எஸ்.எஸ்.ஆருக்கு சமைத்துப் போட்ட நடிகர் திலகம்

(From 20 Mins)

http://www.youtube.com/watch?v=4b1K-eFNXCk#t=1226

JamesFague
5th July 2014, 06:38 PM
Director Shankar has been chosen for this year VijayTV Chevaliye Shivaji Ganesan Award.

Regards

parthasarathy
5th July 2014, 07:07 PM
Dear RKS:

Hearty congratulations for starting the new thread.

Regards,

R. Parthasarathy

joe
5th July 2014, 07:25 PM
Director Shankar has been chosen for this year VijayTV Chevaliye Shivaji Ganesan Award.

Regards

This is too much ..When MSV , Ilayaraja and many more well deserved people around , why Shankar ?

Gopal.s
5th July 2014, 08:43 PM
Director Shankar has been chosen for this year VijayTV Chevaliye Shivaji Ganesan Award.

Regards
சிவாஜியின் அதிதீவிர ரசிகரான சங்கருக்கு இந்த அவார்ட் பொருத்தமானதே.வாழ்த்துக்கள்.

joe
5th July 2014, 08:53 PM
சிவாஜியின் அதிதீவிர ரசிகரான சங்கருக்கு இந்த அவார்ட் பொருத்தமானதே.வாழ்த்துக்கள்.

ஷங்கர் சிவாஜி ரசிகர் என்ற வகையில் பொருத்தமானவர் தான் ..சென்ற முறை விருது வாங்கிய ஷாருக்கான் நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகரா என்ன ?ஆனால் இது ரசிகருக்கு கொடுக்கும் விருதென்றால் முரளி சாருக்கல்லவா கொடுத்திருக்க வேண்டும் lol .

செவாலியே சிவாஜி விருது சினிமா சாதனையாளர்களுக்கு கொடுக்கப்படுவது என்னும் வகையில் ஷங்கரும் ஒரு வகையில் சாதனையாளர் தான் .ஆனால் அவரை விட சாதனை படைத்த பலர் அதுவும் நடிகர் திலகத்தோடு நெருங்கி பணியாற்றியவர்களுக்கு இவ்விருது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் .. இருந்தாலும் இது விஜய் டிவி கொடுக்கும் விருது ..நாம் என்ன சொல்லுவது ? அவர்கள் விருப்பம் :)

Gopal.s
5th July 2014, 09:31 PM
ஷங்கர் சிவாஜி ரசிகர் என்ற வகையில் பொருத்தமானவர் தான் ..சென்ற முறை விருது வாங்கிய ஷாருக்கான் நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகரா என்ன ?ஆனால் இது ரசிகருக்கு கொடுக்கும் விருதென்றால் முரளி சாருக்கல்லவா கொடுத்திருக்க வேண்டும் lol .

செவாலியே சிவாஜி விருது சினிமா சாதனையாளர்களுக்கு கொடுக்கப்படுவது என்னும் வகையில் ஷங்கரும் ஒரு வகையில் சாதனையாளர் தான் .ஆனால் அவரை விட சாதனை படைத்த பலர் அதுவும் நடிகர் திலகத்தோடு நெருங்கி பணியாற்றியவர்களுக்கு இவ்விருது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் .. இருந்தாலும் இது விஜய் டிவி கொடுக்கும் விருது ..நாம் என்ன சொல்லுவது ? அவர்கள் விருப்பம் :)

பொருத்தமானதே என்பது என் திட்டமான அபிப்ராயம். மியூசிக் போடுவதை விட படம் இயக்குவது கடினம்.அதிலும் பிரம்மாண்ட அதிக செலவு படங்கள் என்றால் இன்னும் challenging .ரமேஷ் சிப்பி முதல் மணி ரத்னம் வரை consitency இன்றி சறுக்கிய போது ,தன்னுடைய 12 படங்களில் 10 படங்களை வெற்றியாக்கி ,இந்தியாவிலேயே சிறந்த இயக்குனராக நிமிர்ந்து நிற்கும் ஷங்கர் ஐ விட தகுதி வாய்ந்தவர் யார்? அவர் அதி தீவிர சிவாஜி ரசிகர் என்பது உபரி தகவல்.

மற்ற படி முரளிக்கு கொடுப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை ,எனக்கு கொடுத்த பிறகு என்றால்.:-D

JamesFague
5th July 2014, 09:52 PM
In the recent edition of Rani Weekly one reader has asked the question in Alli Answer:

Nadigar Thilagam Edam Nirrappapadamal Ullathe?

The answer is : Marupadiyum Sivaji Pirakka Prathipopamaga.


Regards

joe
5th July 2014, 09:53 PM
ஷங்கர் , கே.எஸ்.ரவிக்குமார் போன்ற அதி தீவிர கமர்சியல் இயக்குநர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்களாக இருப்பதன் உளவியலை ஆராய வேண்டும் :)

sivaa
6th July 2014, 02:57 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 13

கே: காதல் பாடல் காட்சிகளில் 'ஸ்டைல்' நடிப்பில் தங்களை அசத்துபவர் யார்? (ஜி.பசுபதி, திண்டுக்கல்)

ப: என்றும் சிவாஜி.

(ஆதாரம் : பொம்மை, மார்ச் 1993)

அன்புடன்,
பம்மலார்.


நன்றி பம்மலர்

sivaa
6th July 2014, 02:58 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 15

கே: பொதுவாழ்வில்.... நடிகர் திலகத்தின் பலம் எது? பலவீனம் எது? (எஸ்.வி.கோவிந்தசாமி, நாகர்கோவில்)

ப: பலம்.....உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாமை! பலவீனமும்..... அதுதான்!!

(ஆதாரம் : பொம்மை, மார்ச் 1993)

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
6th July 2014, 03:01 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 17

கே: சிவாஜி கணேசனிடமிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பழக்கமென்ன? (ஆர்.பாலகிருஷ்ணன், மாத்தளை, இலங்கை)

ப: அவரது தன்னடக்கம், தொழிலில் அவருக்குள்ள பக்தி.

(ஆதாரம் : பொம்மை, ஜனவரி 1969)

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
6th July 2014, 03:05 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 18

கே: ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட் ஃபோர்ட் நடிப்பை தமிழ் நடிகர் யாருடன் ஒப்பிடலாம்? (எஸ்.ரவிகுமார், சென்னை - 44)

ப: உயர்ந்த ஹாலிவுட் நடிகர் யாராக இருந்தாலும் அவர் நடிப்புக் கற்றுக் கொள்ள வேண்டியது - நடிகர் திலகம் சிவாஜியிடம் தான் என்று ஒரு ஹாலிவுட் நடிகரே பேட்டியில் கூறியுள்ளது உங்களுக்குத் தெரியாதோ!

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15.1.1994)

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

Russellbpw
6th July 2014, 08:39 AM
This is too much ..When MSV , Ilayaraja and many more well deserved people around , why Shankar ?

பிரபல தயாரிப்பாளர் தாணு அவர்கள் படத்தில் நடித்தாகிவிட்டது.
தயாரிப்பாளர்களில் யார் அதிகம் செலவுசெய்து பிரமாதமாக விளம்பரம் செய்து பிரம்மாண்டமாக திரைப்படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்று பார்த்தால் தாணு தவிர யாரும் நினைவிற்கு வர மறுக்கிறார்கள். அப்படிப்பட்டவருடைய படத்தில் தனது மகன் நடித்தாகிவிட்டது.

நல்ல இயக்குனர், நல்ல தரத்துடன் இயக்கம் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்தாகிவிட்டது. அதே போல இவன் வேறு மாதிரி இயக்கிய இயக்குனர்.

இப்போது சங்கருக்கு கொடுக்கப்பட்ட விருதும் அதற்க்கு பின்னணியும் இங்கு நான் குறிப்பிடுவதில் ஒன்றாக தான் இருக்க முடியும்.

1) அடுத்து சங்கர் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க பேச்சு வார்த்தை.

அல்லது

2) சங்கர் அடுத்த படம் பற்றி யோசிக்கும் போதே விக்ரம் பிரபு அவரது மனதில் கதாநாயகனாக வலம் வர இந்த விஜய் டிவி நடிகர் திலகம் சிவாஜி விருது மிகவும் உதவியாக இருக்கும் என்ற BACK OF THE MIND BUSINESS MOTIVE .

3) சங்கரின் படத்தில் நடித்து முடித்தால் அடுத்த நட்சத்திர நாயகன் அந்தஸ்து விக்ரம் பிரபு பெற்றுவிடுவார் அல்லவா..அந்த ஒரு planning தான் !

நடிகர் பிரபு அவர்கள் திரைப்படத்தில் தான் சின்னத்தம்பி...

நிஜத்தில் அவர் சின்னவர்போல தனது மகன் விஷயத்தில் எதையும் திட்டமிட்டு செயல் படுத்தும் முறை மிகவும் பாராடுக்குரியாது !

இன்றைய நாளில் பிரபுவின் கையில் இருப்பது சிவாஜி விருது எனப்படும் பிரம்மாஸ்திரம் !

அதை எப்படி எங்கு எந்த தருணத்தில் யாருக்கு பயன்படுத்துகிறார் என்று பாருங்கள் !

சிறந்த நடிகருக்காக வழங்க வேண்டிய விருது சிவாஜி விருது..ஆனால் அவர் முடிவெடுப்பது இயக்குனர் சங்கருக்கு ..!

காசு செலவு செய்ய அஞ்சாத தயாரிப்பாளர் கிடைத்தால் நான்கூட சங்கரை விட அதிக பிரம்மாண்டத்தை இயக்கி காட்டமுடியும் !

விநியோகஸ்த்தர் பலர் மொட்டை போட காரணமாக இருக்கும் இன்றைய இயக்குனர்களில் முதலில் நிற்பது சங்கர் !

இவர் இரண்டு வருடங்கள் வரை படம் எடுத்துக்கொண்டே இருப்பார் .....subject இல் யதார்த்தம் இருக்கும் என்றுபார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது . தன்னுடைய சொந்த படம் மட்டும் இவர் மாடுகொட்டகை மற்றும் மெக்கானிக் கடை அல்லது ஒரே ஒரு செட் வைத்து முடித்துகொள்வார் கொள்ளை லாபம் பார்ப்பார்..ஆனால் அடுத்தவர் படம் என்றால் வெடிவைத்து BLAST செய்ய புத்தம் புது BMW CAR மட்டுமே பயன்படுத்தினால் RICH ஆக தெரியும்,,,அதுவே பிரம்மாண்டம் என்று கூறும் CUNNING FELLOW !

ஒரு இயக்குனருக்கு என்றால் பாலா அவர்கள் சங்கரை விட அதி திவீர சிவாஜி ரசிகர்.
தன்னுடைய ஒவொரு படத்திலும் சிவாஜியை நினைவுகொள்ள தவறியதில்லை. அவருக்கு கொடுத்திருக்கலாமே...!

சிவாஜி விருதை வைத்து வியாபாரம் முடிக்க ஒரு தந்திரமாக இதை கருதமுடியுமே தவிர தகுதி என்ற அடிப்படையை கருதமுடியாது !

RKS

eehaiupehazij
6th July 2014, 09:28 AM
dear RKS. kindly bear with. No doubt, Shankar is the top most Director at present in our country who has taken the Indian Cinema to another peak of 'Brammaaaandam' on par with any Hollywood films, as proved by the stupendous success of Endhiran though inspired by many hollywood movies! In his film Shivaji also the hero in one scene makes a punch dialogue 'Parasakthi Heroda...'with a reference to NT , while addressing his name! Perhaps, this may be the reason : Shankar opted to make a film by name 'Shivaji' ( it may refer to the Marathi warrior or the title of Sivaji to our NT or the original name of Rajini 'Shivaji Gaekwad'!) He also makes another reference 'MGR" for Rajini's different (?!?)get up in the same movie!! Perhaps expecting MGR virudhu too!! Anyway, the way awards are given to persons in TN....amazing business calculations! Now I am puzzled about the real meaning of "Sivaji" virudhu...whether to actors or directors or any film personality.. in that case MSV,Director Baalaa....or actors like Vikram, upcoming Vijay Sethupathi or Attakkaththi Dinesh, ... but , kindly avoid using the word 'cunning fellow' which may invite controversies in an open thread!

sivaa
6th July 2014, 10:12 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 27

கே: சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்கள்? (ப.பூலோகநாதன், சென்னை - 1)

ப: நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். எஸ்.வி.சுப்பையாவின் 'காவல் தெய்வத்தில்' இலவசமாகவே நடித்துக் கொடுத்தார். அவர் தன்னடக்கம் நிறைந்தவர்.

(ஆதாரம் : பொம்மை, ஜூலை 1969)

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
6th July 2014, 10:20 AM
சிங்காரச் சென்னையில் வெள்ளி விழாக் கொண்டாடிய சிங்கத்தமிழனின் திரைக்காவியங்கள்
[காவியம்(வருடம்) - அரங்கம் - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. பாவமன்னிப்பு(1961) - சாந்தி - 177 நாட்கள்

2. பாசமலர்(1961) - சித்ரா - 176 நாட்கள்

3. திருவிளையாடல்(1965) - சாந்தி - 179 நாட்கள், கிரௌன் - 179 நாட்கள், புவனேஸ்வரி - 179 நாட்கள்

4. வசந்த மாளிகை(1972) - சாந்தி - 176 நாட்கள்

5. தங்கப்பதக்கம்(1974) - சாந்தி - 181 நாட்கள், கிரௌன் - 176 நாட்கள், புவனேஸ்வரி - 176 நாட்கள்

6. திரிசூலம்(1979) - சாந்தி - 175 நாட்கள், கிரௌன் - 175 நாட்கள், புவனேஸ்வரி - 175 நாட்கள்

7. முதல் மரியாதை(1985) - சாந்தி - 177 நாட்கள்

8. படிக்காதவன்(1985) - பால அபிராமி - 175 நாட்கள்

9. தேவர் மகன்(1992) - அன்னை அபிராமி - 175 நாட்கள்

10. படையப்பா(1999) - ஆல்பர்ட் & பேபி ஆல்பர்ட் - 210 நாட்கள், அபிராமி & சக்தி அபிராமி - 210 நாட்கள், உதயம் & சந்திரன் - 181 நாட்கள், ஸ்ரீபிருந்தா - 175 நாட்கள்

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
6th July 2014, 10:30 AM
வெள்ளித்திரை சக்கரவர்த்தியின் வெள்ளிவிழாக் காவியங்கள் (திரையரங்கு வாரியாக)
[ஊர் - திரையரங்கம் : திரைக்காவியம் - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. சென்னை - சாந்தி : பாவமன்னிப்பு - 177 நாட்கள், திருவிளையாடல் - 179 நாட்கள், வசந்த மாளிகை - 176 நாட்கள், தங்கப்பதக்கம் - 181 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள், முதல் மரியாதை - 177 நாட்கள்

2. சென்னை - சித்ரா : பாசமலர் - 176 நாட்கள்

3. சென்னை - கிரௌன் : திருவிளையாடல் - 179 நாட்கள், தங்கப்பதக்கம் - 176 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்

4. சென்னை - புவனேஸ்வரி : திருவிளையாடல் - 179 நாட்கள், தங்கப்பதக்கம் - 176 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்

5. சென்னை - பால அபிராமி : படிக்காதவன் - 175 நாட்கள்

6. சென்னை - அன்னை அபிராமி : தேவர் மகன் - 175 நாட்கள்

7. சென்னை - ஆல்பர்ட் & பேபி ஆல்பர்ட் : படையப்பா - 210 நாட்கள்

8. சென்னை - அபிராமி & சக்தி அபிராமி : படையப்பா - 210 நாட்கள்

9. சென்னை - உதயம் & சந்திரன் : படையப்பா - 181 நாட்கள்

10. சென்னை - பிருந்தா : படையப்பா - 175 நாட்கள்

11. மதுரை - நியூசினிமா : வீரபாண்டிய கட்டபொம்மன் - 181 நாட்கள், வசந்த மாளிகை - 200 நாட்கள்

12. மதுரை - சிந்தாமணி : பாகப்பிரிவினை - 216 நாட்கள், தியாகம் - 175 நாட்கள், திரிசூலம் - 200 நாட்கள்

13. மதுரை - சென்ட்ரல் : பட்டிக்காடா பட்டணமா - 182 நாட்கள், படிக்காதவன் - 175 நாட்கள்

14. மதுரை - சினிப்ரியா & மினிப்ரியா : தீர்ப்பு - 177 நாட்கள், நீதிபதி - 175 நாட்கள்

15. மதுரை - சுகப்ரியா : சந்திப்பு - 175 நாட்கள்

16. மதுரை - ஸ்ரீமீனாக்ஷி & ஸ்ரீமீனாக்ஷிபாரடைஸ் : தேவர் மகன் - 180 நாட்கள்

17. மதுரை - அமிர்தம் : படையப்பா - 175 நாட்கள்

18. திருச்சி - வெலிங்டன் : பராசக்தி - 245 நாட்கள்

19. திருச்சி - பிரபாத் : தங்கப்பதக்கம் - 181 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்

20. கோவை - கீதாலயா : திரிசூலம் - 175 நாட்கள்

21. கோவை - தர்ச்சனா & அர்ச்சனா : முதல் மரியாதை - 177 நாட்கள்

22. கோவை - ராகம் & அனுபல்லவி : படையப்பா - 210 நாட்கள்

23. சேலம் - ஓரியண்டல் : திரிசூலம் - 175 நாட்கள்

24. வேலூர் - அப்ஸரா : திரிசூலம் - 175 நாட்கள்

25. தஞ்சை - கமலா : முதல் மரியாதை - 177 நாட்கள்

26. பெங்களூர் - ஸ்டேட்ஸ் : ஸ்கூல் மாஸ்டர்(கன்னடம்) - 188 நாட்கள்

27. கல்கத்தா - இம்பீரியல் : தர்த்தி(ஹிந்தி) - 266 நாட்கள்

28. பம்பாய் - மினர்வா : தர்த்தி(ஹிந்தி) - 259 நாட்கள்

29. பம்பாய் - ஆனந்த் : தர்த்தி(ஹிந்தி) - 231 நாட்கள்

30. பம்பாய் - அசோக் : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்

31. டெல்லி - நட்ராஜ் : தர்த்தி(ஹிந்தி) - 217 நாட்கள்

32. டெல்லி - அம்பா : தர்த்தி(ஹிந்தி) - 210 நாட்கள்

33. டெல்லி - மோட்டி : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்

34. டெல்லி - லிபர்ட்டி : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்

35. கொழும்பு - மைலன் : பராசக்தி - 294 நாட்கள்

36. கொழும்பு - கெப்பிடல் : வசந்த மாளிகை - 287 நாட்கள், பைலட் பிரேம்நாத் - 189 நாட்கள்

37. கொழும்பு - பிளாசா : வசந்த மாளிகை - 175 நாட்கள்

38. கொழும்பு - சென்ட்ரல் : உத்தமன் - 203 நாட்கள்

39. கொழும்பு - ராஜேஸ்வரா : பைலட் பிரேம்நாத் - 176 நாட்கள்

40. கொழும்பு - ஜெஸிமா : திரிசூலம் - 200 நாட்கள்

41. யாழ்ப்பாணம் - வெலிங்டன் : வசந்த மாளிகை - 217 நாட்கள்

42. யாழ்ப்பாணம் - ராணி : உத்தமன் - 179 நாட்கள், திரிசூலம் - 189 நாட்கள்

43. யாழ்ப்பாணம் - வின்ஸர் : பைலட் பிரேம்நாத் - 222 நாட்கள்

44. வெள்ளவெத்தை - சவோய் : பைலட் பிரேம்நாத் - 189 நாட்கள்

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
6th July 2014, 10:32 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 63

கே: நவயுக கலைக்கூடம், நவரச மணிமாடம் நடிகர் திலகம் சிவாஜியின் சிறந்த குணங்களில் நீங்கள் விரும்புவது எது? (சி.வி.சாணக்கியா, ஸ்ரீரங்கம்)

ப: கலைஞர் என்ற முறையில் அவரது குறையைச் சுட்டிக்காட்டுவோரை விரோதிகளாக மதிப்பதில்லை அவர். வளர்ந்து வருபவர்கள் தங்களைக் குறையற்றவர்களாக நினைத்து விடுகிறார்களே!

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1970)

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
6th July 2014, 10:39 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 80

கே: தமிழ் நடிகர்களில் எந்த நடிகருக்கு உலகமெங்கும் புகழ் உண்டு? (லெய்ரன் பொணிவஸ், யாழ்ப்பாணம், இலங்கை)

ப: சிவாஜி கணேசனுக்குத் தான்.

(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1970)

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
6th July 2014, 10:42 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 83

கே: சிம்மக்குரலோன் சிவாஜி மறைவு குறித்து ஒரு அஞ்சலிக் கவிதை ப்ளீஸ்...? (த.சத்தியநாராயணன், அயன்புரம்)

ப: தகுதி 'பாராமல்'
பட்டமளித்துப் பட்டமளித்தே
தாழ்ந்த தமிழகமே!

'நடிகர் திலகம்' எனும்
நியாயமான பட்டத்தையாவது
இனி
எவருக்கும் வழங்காதிரு!

அதுவொன்றே
அந்த ஆத்தும நாயகனுக்கு
அனைவரும் செலுத்தக்கூடிய
கடைசி அஞ்சலி!

(ஆதாரம் : தமிழன் எக்ஸ்பிரஸ், 1-7 ஆகஸ்ட் 2001)

அன்புடன்,
பம்மலார்.

நன்றி பம்மலர்

sivaa
6th July 2014, 10:50 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/4844798971_9ae9f5034b_b_zps59aacf47.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/4844798971_9ae9f5034b_b_zps59aacf47.jpg.html)

Russellbpw
6th July 2014, 11:00 AM
dear RKS. kindly bear with. No doubt, Shankar is the top most Director at present in our country who has taken the Indian Cinema to another peak of 'Brammaaaandam' on par with any Hollywood films, as proved by the stupendous success of Endhiran though inspired by many hollywood movies! In his film Shivaji also the hero in one scene makes a punch dialogue 'Parasakthi Heroda...'with a reference to NT , while addressing his name! Perhaps, this may be the reason : Shankar opted to make a film by name 'Shivaji' ( it may refer to the Marathi warrior or the title of Sivaji to our NT or the original name of Rajini 'Shivaji Gaekwad'!) He also makes another reference 'MGR" for Rajini's different (?!?)get up in the same movie!! Perhaps expecting MGR virudhu too!! Anyway, the way awards are given to persons in TN....amazing business calculations! Now I am puzzled about the real meaning of "Sivaji" virudhu...whether to actors or directors or any film personality.. in that case MSV,Director Baalaa....or actors like Vikram, upcoming Vijay Sethupathi or Attakkaththi Dinesh, ... but , kindly avoid using the word 'cunning fellow' which may invite controversies in an open thread!

Dear Sir,

With reference to my quote, it is only my opinion and it is based on proper justification.

With reference to controversy, i can handle it peacefully.

"Cunning " does not have a direct synonym equivalent to the meaning of "bad" .

In history, the great Chanakya who wrote the great book Arthashasthra was also referred to as " Cunning " for executing his activities....

In EPIC, the activities of Lord Krishna is also termed as "Cunning" - But we justify mentioning that , to isolate bad it is only a strategy followed by Lord Krishna.

Going by that standard, Director Shankar who is just another one in the list of top commercial directors in India is also undoubtedly "Cunning" !

I stand by my comment.


Regards
RKS

eehaiupehazij
6th July 2014, 01:47 PM
dear RKS. I am not offending you or your feelings. In my humble opinion, RKS, being the star of this thread, could have restrained from the usage of words like 'cunning'. Instead in a polish and polite way that Director could be taken as a 'diplomatic businessman' or a 'clever and shrewd' opportunist..like that! May be as a token of respect or thanks giving, since Shankar has offered a cameo for Ramkumar in his movie 'I" or with a future expectations of moulding Vikram Prabhu like the way Prashanth was upgraded, NT's family might have chosen him for this award! One way I am puzzled at your approach dear RKS. You stand out as the Star (Naayagan) of this thread in posting NT's glory related matters at an amazing dash and verve and unmatched dedication. At the same time you are not in favour of NT's blood related persons like Prabhu or Vikram Prabhu..! 'Neenga Nallavara Kettavara?!' dialogue of Naayagan film, I am reminded of! Just in a light vein RKS! Ungal position 'kaththimel Nadappadhu Pola'... you need to measure your steps, after assuming the charges!

Gopal.s
6th July 2014, 02:54 PM
Senthil,

I am equally surprised with R.K.S doing this during the Good end of this thread and impending great chapter of Another thread to be initiated by him. RKS,it is purposeless as you are welcoming son of Actors not related to this thread in this thread. I didnt expect this from you at this juncture. Anycase, sivaji Award recipient is not selected by family members.

Gopal.s
6th July 2014, 02:55 PM
Senthil,

I am equally surprised with R.K.S doing this during the Good end of this thread and impending great chapter of Another thread to be initiated by him.

RKS,

it is purposeless as you are welcoming son of Actors not related to this thread in this thread. I didnt expect this from you at this juncture. Anycase, sivaji Award recipient is not selected by family members.

eehaiupehazij
6th July 2014, 04:32 PM
Senthil,

I am equally surprised with R.K.S doing this during the Good end of this thread and impending great chapter of Another thread to be initiated by him.

RKS,

it is purposeless as you are welcoming son of Actors not related to this thread in this thread. I didnt expect this from you at this juncture. Anycase, sivaji Award recipient is not selected by family members.



GopalSir

We know that optimistic RKS will take our opinions in the right sense as we are all united under a single umbrella, NT's thread, that gives us shade from scorching heats (baseless criticisms on NT's Box Office Emperorship)and protects us from acid rains (jealousy reactions) when we all sing the glory of NT in unison! RKS, soon becoming the holder of this umbrella, sure knows his responsibilities, limits and limitations too even as he runs the show in an enviable manner. We, the 'asareeries' of this thread will pop up consistently to prompt our thread to be on the right tracks!

Russellbpw
6th July 2014, 05:10 PM
dear RKS. I am not offending you or your feelings. In my humble opinion, RKS, being the star of this thread, could have restrained from the usage of words like 'cunning'. Instead in a polish and polite way that Director could be taken as a 'diplomatic businessman' or a 'clever and shrewd' opportunist..like that! May be as a token of respect or thanks giving, since Shankar has offered a cameo for Ramkumar in his movie 'I" or with a future expectations of moulding Vikram Prabhu like the way Prashanth was upgraded, NT's family might have chosen him for this award! One way I am puzzled at your approach dear RKS. You stand out as the Star (Naayagan) of this thread in posting NT's glory related matters at an amazing dash and verve and unmatched dedication. At the same time you are not in favour of NT's blood related persons like Prabhu or Vikram Prabhu..! 'Neenga Nallavara Kettavara?!' dialogue of Naayagan film, I am reminded off! Just in a light vein RKS! Ungal position 'kaththimel Nadappadhu Pola'... you need to measure your steps, after assuming the charges!

Dear Sir,

I have never degraded any person here.

Unfortunately, am able to see things beyond what one could see for any particular happening.

I have only appreciated to the heights of appreciation, Mr.Prabhu for his execution of his current task of bringing his son to this level and taking him to the next level in a planned way.

After Nadigar Thilagam, the only hero whom i have always admired was Mr. Prabhu even though others commented about him on personal grounds. As a matter of fact, my casuals that i wear are mostly modeled from him looking at his films like Raja Kayya Vechcha, Vetri Vizha, My dear Marthandan, etc., while my official attire have always been in the shades of Uyarndha Manidhan, Sorgam, Paasa Malar, Bharatha Vilas, Sivandha Mann etc.,

Setting aside all these things, I cannot digest the fact that Sivaji Award being given to Director !

It could have been given to Late Murali's son Adharva for his excellent performance in Director Bala's film even though he is a newcomer. It would have been a good motivation ! or for Mr.Dhanush for his performance in "Mariyan". this was also not done !

What for Mr.Shankar is given this award ? For What film is he given ? Is this a lifetime achievement award? No isnt it ?

For all of us Nadigar Thilagam is 1st ...and others are the rest ....Nadigar thilagaththai manadhil vaippavargal vilaipogamaataargal..vilai pesubavargalayum paaraatta maataargal.

So, I think am still standing by my decision.

RKS

eehaiupehazij
6th July 2014, 07:28 PM
dear RKS. I admire the solid state of your mind, the courage you possess in countering our friendly foes and your tenacity to keep us enthralled with your incessant presentations on NT's glory! As the thread is shortly concluding, perhaps with this 400th page mark,

மேன்மை மிகுந்த நடிகர்திலகத்தின் பதினான்காவது திரியைத் துவக்கிவைத்திட, அதன் வெற்றிநடைக்கு உங்கள் சீர்மிகு வழிகாட்டுதலில் எங்கள் பங்கினை நாங்கள் குறைவின்றி அளித்திடுவோம் என்னும் உறுதியுடன், உங்கள் பணி சிறப்படைய திரி நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றிகள் ரவிகிரண் சூர்யா.

Gopal.s
6th July 2014, 07:37 PM
Count Down starts now .Ready 10, 9, 8, 7 ,6, 5,4, 3........

RKS-Pl.Get ready.

JamesFague
6th July 2014, 07:52 PM
Congratulation Mr RKS for Starting the Part 14 and it is my wish that all the senior
hubbers to come and contribute to take this thread to the new level. I hope Mr RKS
takes the necessary steps in this regard.

All the best.

Regards

Russellisf
6th July 2014, 09:17 PM
1970 ஜுன் 27-ந்தேதி வெளிவந்த 'எதிரொலி' தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது சிவாஜி படமாகவும் இல்லை; பாலசந்தர் படமாகவும் இல்லை.

இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முழுத்திறமையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதையில், அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை 'எதிரொலி' எனக்கு எடுத்துக் காட்டியது.

ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

joe
6th July 2014, 09:47 PM
ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பாலச்சந்தர் சொல்லியது தவறு . மாபெரும் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் மனித பலகீனத்தினால் தவறு செய்யும் இயல்பான பாத்திரங்களில் நடிகர் திலகம் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படங்கள் ஏராளம் .

Russellbpw
6th July 2014, 10:42 PM
1970 ஜுன் 27-ந்தேதி வெளிவந்த 'எதிரொலி' தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது சிவாஜி படமாகவும் இல்லை; பாலசந்தர் படமாகவும் இல்லை.

இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முழுத்திறமையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதையில், அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை 'எதிரொலி' எனக்கு எடுத்துக் காட்டியது.

ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பேட்டியில் திரு பாலச்சந்தர் அவர்கள் திரைப்படம் எடுத்து முடிந்து மற்ற ஏற்பாடுகளை செய்யும் வேளையில் நடிகர் திலகம் அவரை பார்த்து இதுவரை தன்னுடைய முத்திரை பதிக்கும் காட்சிகள் எதுவும் வரவில்லையே, சரியாக உள்ளதா, உங்களுக்கு திருப்தியா என்று கேட்டாராம். அப்போது பாலச்சந்தர் அவர்கள் எல்லாம் சரியாகவே உள்ளது, நன்றாக அமைந்துள்ளது என்ற ரீதியில் நடிகர் திலகத்திடம் கூறியுள்ளார். உங்களுக்கு திருப்தி என்றால் சரி என்று நடிகர் திலகமும் அடுத்த பட வேளையில் இறங்கிவிட்டார்.

படம் ரிலீஸ் ! அதன் விதி ..எதிர்பார்க்காத விதியாக இருந்தபோதுதான் பாலசந்தர் அவர்களுக்கு நடிகர் திலகம் இவரிடம் அன்று கேட்ட கேள்விக்கு உண்டான அர்த்தம் புரிந்ததாக confess செய்துள்ளார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது..? நடிகர் திலகத்தின் அனுபவம் எந்த அளவிற்கு சரியாக உள்ளதென்று தெரிகிறது ! படம் முடிந்தவுடனே கேட்ட கேள்வி என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் எல்லாம் சரியாக உள்ளது என்ற பதிலால் பால சந்தர் அவர்களால் ஒரு வெற்றியை தரமுடியவில்லை.

அதே சமயம் நடிகர் திலகத்தை வைத்து ஸ்ரீதர், மாதவன், act , ksg இன்னும் எவ்வளவோ இயக்குனர்கள் முதல் படம் இயக்கி பேரு வெற்றி கண்டவர்கள். தொடர்ந்து வாய்ப்பு பெற்றார்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை எடுக்கும் விதத்தில் எடுத்தார்கள் பிரம்மாண்ட வெற்றிகண்டார்கள்.

ஆனால் பாலச்சந்தர் ??????

பால சந்தர் அவர்களின் கணிப்பே தவறு..!

திரும்பிப்பார் , பெண்ணின் பெருமை, ரங்கூன் ராதா, புதிய பறவை, துளி விஷம், அந்த நாள் இப்படி பல படங்கள் நடிகர் திலகம் குற்றம் புரியும் கதாபாத்திரம் புனைந்து பெருவெற்றி கண்டுள்ளார். !

பால சந்தர் போன்றவர்கள் ஒரு type படங்கள் மட்டுமே எடுத்து பழக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு இவர்களுடைய வட்டத்தை விட்டு வெளியில் வரும் துணிச்சலும் கிடையாது ! வந்தால் அதற்குண்டான வேலையே செய்யவும் தெரியாது. இதுதான் உண்மை. !

Russellisf
6th July 2014, 10:55 PM
HEARTY CONGRATULATION RKS SIR FOR OPENING THE THREAD NO 14

:p:p:p:p:p:p:p

sivaa
6th July 2014, 10:59 PM
அன்புள்ள ரவிகிரண்சூரியா
நடிகர் திலகம் திரி பாகம் 14 தங்களின்
கை வண்ணத்தில் ஆரம்பித்து மிளிர வாழ்த்துக்கள்