PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Georgeqlj
19th November 2013, 12:26 PM
Deivamaganin Devermagan release time at Bangalore2730

ScottAlise
19th November 2013, 01:32 PM
ராகுலு

பதிவ ஒருதபாக்கு நாலுதபா பாத்து போடு.இல்லயினா இங்க ஒருத்தரு நெத்திக்கண்ண நைசா தொறந்து படம் காமிச்சிருவாரு.

Dear Kiruba sir,

I know , I make spelling mistakes Writing in tamil is hard in computer

Pl adjust sir

HARISH2619
19th November 2013, 01:54 PM
Dear parthasarathy sir,
congratulations for successfully opening the 12th thread of our nadigarthilagam

Russelluvd
19th November 2013, 02:02 PM
adiram sir,

some of the hubbers did the very hard work in part 11. but avunga uzhaippelaam vizhalukku izhaiththa neer. evvlavo pathivukalai naam alatchiyap paduththittoam. sathaa sarva kaalamum sandai. oru palanum ethirpaaraama uzhaikkira oru moonu naalu peraiyum nammaala thakka vachchukka mudiyalla. naamalum ethaiyum podurathilla. poduravangalaiyum urchaagap paduththurathu illa. avunga ennaa kaasu panamaa kettaanga. uzhaippa mathikka theriyalanna intha kathithaan.

Georgeqlj
19th November 2013, 02:28 PM
2733Nadigartilagathin pukal padum nanbarkal anaivarukkum valthukkal....

Georgeqlj
19th November 2013, 02:34 PM
Nadigartilagathin pukal padum nanbarkal anaivarukkum valthukkal....

adiram
19th November 2013, 02:37 PM
Writing in tamil is hard in computer.

Really.

unmaiyil Thamizhil padhivu ezhudhubavarkalai paaraatta vendum. Naanum thamizhil try panni paarththen. naalu vari type pannuvadharkul 40 mistake varudhu.

I appreciate the hubbers who are typing long, long posts in Tamil without any mistakes. In this line I appreciate Murali Srinivas, Pammalar, Raghavendar, S.Gopal, Joe, Neyveli Vasudevan, Mr_Karthik, Praburam, Venkiram, Sarasvathi Lakshmi, Vinodh, Chinnakkannan, Ravi, Ganpat, Raghulram, Chandrasekar, Kiruba (that too in chennai tamil) and other hubbers who are presenting their posts in Tamil. Amazing. (romba porumai venum, but ennidam porumai illai. ivargalaip paarththu poraamaithaan irukku).

Puthiya sabatham, indha 13-vadhu partlayaavadhu naan thamizhil ezhuthanum.

chinnakkannan
19th November 2013, 03:21 PM
Really.


Puthiya sabatham, indha 13-vadhu partlayaavadhu naan thamizhil ezhuthanum.

ஆதிராம் - தமிழ் எழுதுவது சுலபம் தான்.. இந்த ப் பன்னிரண்டிலேயே முயலுங்கள் - ராகுல் ஏற்கெனவே துவங்கி விட்டார்..எழுத எழுத தானே வந்து விடும்..

Gopal.s
19th November 2013, 04:25 PM
இன்று பிறந்த நாள் காணும் கண்பட் சாருக்கும் ,21/11/2013 அன்று பிறந்த நாள் காண போகும் வாசு சாருக்கும் என் மனபூர்வமான வாழ்த்துக்கள்.

Gopal.s
19th November 2013, 04:36 PM
பெருந்தலைவர் மறைவுக்கு பிறகு ,நடிகர்திலகம் ஒப்பு கொண்ட தலைமை ஸ்தானத்தை அலங்கரித்து,பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானாலும் ,நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இந்திரா அம்மையாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வதில் நடிகர்திலகம் திரி பெருமை அடைகிறது.

ScottAlise
19th November 2013, 06:08 PM
Happy birhtday Ganpat Sir

chinnakkannan
19th November 2013, 06:27 PM
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்பத் சார்.. :)

Georgeqlj
19th November 2013, 08:19 PM
Darmam Enge ?baratha ratna...sarithana?

uvausan
19th November 2013, 08:20 PM
கண்பத் சார்.. Like NT's fame - long live with good health and prosperity

Ravi
:):smokesmile:

uvausan
19th November 2013, 08:21 PM
Dear Vasu sir - awaiting your return to thread 12 - many more happy returns in advance with good health and peace

Ravi

:):smokesmile:

uvausan
19th November 2013, 08:55 PM
ஒரு பெரிய சோதனையில் , என்னுடைய பேராசையினால் உந்தப்பட்டு மாட்டிகொண்டுள்ளேன் . என்ன பெரிய சோதனை - இந்த பாண்டிய நாட்டுக்கு

வராத சோதனை ?? - ஆமாம் - ஞான ஒளி யை அலசலாம் என்று ! அதில் அலச என்ன பாக்கி உள்ளது - முரளி சாரும் , வாசு சாரும் , கோபால் சாரும்

அணு அணுவாக அலசியபின் , என்னத்தை நான் புதியதாக சொல்லபோகிறேன் ?? இருந்தாலும் ஒரு முயற்சி - அது சரி , அது என்ன பேராசை ??? -

ஆமாம் பேராசைதான் - எதாவது புதியதாக சொல்ல வாய்ப்பு உண்டா , புதிய கோணத்தில், புதிய அணுகு முறையில் ??? இந்த பதிவு ஒரு வேலை நன்றாக

அமைந்து விட்டால் , வாசு சார் பாராட்ட வரும் பொது , கபெக்கென்று பிடித்துவிட்டு 4000th பதிவை கேட்டு விடலாம் - முரளி சாரின் தமிழை படிக்க

மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் - கோபால் சாரின் கலாய்ப்பு இல்லாத பதிவை படிக்கலாம் - ராகவேந்திர சாரின் ஆவணகள் போடும் வேகத்தை

பார்க்கலாம் - கார்த்திக் சாரின் சபாஷ்யை வாங்கிகொள்ளலாம் - சின்ன கண்ணன் சாரின் அர்த்தம் புதைந்த குரும்பை ரசிக்கலாம் - கிருபா சாரிடம்

இருந்து அன்புடன் சில திட்டுக்களை வாங்கலாம் - இந்த திரியின் சாரதியிடம் இருந்து " பலே பாண்டியா " என்று பாராட்டுகளை பெறலாம் ---------KC

சேகர் சாரின் பாராட்டுகள் எப்பவும் கிடைத்துக்கொண்டே இருப்பதால் - என் பேராசை list இல் அவர் பெயரை சேர்க்கவில்லை .

தொடரும் ------

Ravi

:smile2::smokesmile:

J.Radhakrishnan
19th November 2013, 09:28 PM
இன்று பிறந்தநாள் காணும் கணபதி சாரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

uvausan
19th November 2013, 09:31 PM
எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது

கர்த்தரே நான் தெரிந்து செய்ய போகும் ஒரு சின்ன அலசல் என்ற கொலையை மன்னியுங்கள் !!!

Foreword :

என்னுடைய நண்பருடிய தந்தை 85 வருடங்கள் - நோய் நொடிகளக்கு டாட்டா காட்டியவர் - கண்களில் என்றுமே ஒரு torch இருக்கும் - பற்கள் புன்னகை அரசியை நினைவு படுத்தும் . காதுகள் - விக்ரமாதித்தன் உயிரை போல - பல மலை தாண்டியும் கேட்க்கும் - எல்லா உறுப்புகளும் அவர் சொல் படி கேட்க்கும் - அவர் ஆணையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் - அவர் பல தோல்விகளையும் , ஏமாற்றகளையும் கண்டவர் - காதலித்தார் - காதலிக்கு வேறு நல்ல இடம் கிடைத்தது - பிறகு ஒரு திருமணம் செய்துகொண்டார் - அதன் மூலம் பல கனவுகளை கண்டார் - ஒரு கனவும் பலிக்கவில்லை - ஆனால் என்றுமே தன்னம்பிக்கையை கைவிட்டது இல்லை - அவரின் கடைசி கனவு தன் மகளை ஓர் விஞ்சானி யாக்க வேண்டும் என்பது - கனவு பலித்தது ஒரு நாள் - மறு நாள் - அவருடைய மகள் உயிருடன் இல்லை - அவள் கனவுகளையும் தாங்கி கொண்டு வாழ்ந்தார் - சேர்த்த பணத்தை அவர் மகளின் பெயரில் science institution அமைத்தார் - மன நிம்மதியில் மகளின் மகிழ்ச்சியை மான சீகமாக கண்டு பெருமை கொள்கிறார் - இவரை எண்னும்போது ஒரு Antony , அருணையும் தான் பார்கிறேன் - இந்த ஒரு அலசல் இப்படி முகம் தெரியாத பல அண்டோநிகளுக்கும் , அருண்களுக்கும் சமர்ப்பணம்

தொடரும்

uvausan
19th November 2013, 09:52 PM
எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது

Antony : முரடன் , பாதிரியாரை தெய்வமாக மதிப்பவன் - கோபம் வந்தால் அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கே தெரியாது - எல்லோருக்கும் வரும் காதல் , அந்த இன்பம் அவனுக்கும் வந்தது - அவன் காதலித்த பெண்ணையே பாதிரியார் முலம் திருமணம் புரிந்துகொள்கிறான் - பாவம், ஆலய மணியோசையில் , அன்று விதி சிரித்ததை அவனால் கேட்க முடியவில்லை - கொஞ்ச நாட்களே வாழபோகும் மனைவியை கொஞ்சுவதில் மும்மரம் ஆனான் - விதியின் கொடுமை - அவனை ஒரு பெண் கொழந்தைக்கு தந்தையாகி விட்டு , அவன் மனைவி கர்த்தரிடம் சரண் அடைந்தாள் - அந்த கொழந்தை அவனுக்கு ஒரு உலகமாகியது - அந்த உலகம் அவனை சுற்ற வில்லை - அவன் அந்த உலகத்தை சுற்றி வளம் வந்தான் - மகள் தான் தனக்கு இனி எல்லாம் என்று வாழ ஆரம்பித்தான் - சூரியனை அவள் முகத்தில் கண்டான் - சந்திரனை அவள் கண்களில் கண்டான் - வெளி உலகத்தை அவன் கண்டுகொள்ளவே இல்லை - மகள் தன் கனவுகளை நிறைவேற்றுவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை - தன் தந்தையினால் பட்ட அவமானங்கள் தன் மகளினால் துடைக்கப்படும் என்று நம்பினான் - அவன் நம்பிக்கை என்னவானது ??

தொடரும்

uvausan
19th November 2013, 10:23 PM
[QUOTE=g94127302;1091228]எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது

மேரி அவன் உலகம் - வேகமாக வளர்கிறாள் - வயதுக்கு வரும் ஆசைகள் அவளையும் விட்டு வைக்கவில்லை - அந்த ஆசைகளில் எரிந்த நெருப்பு அந்தோணியின் கனவுகளை பொசுக்கிவிடுகிறது - அந்த எறிந்த சாம்பலில் அவனுடைய மிஞ்சிய வாழ்க்கை தொடுருகின்றது - புதிய அவதாரத்தை அவனுக்கு அந்த ஏமாற்றங்கள் அன்பளிப்பாக கொடுக்கிறது - பாதிரியாரின் கனவுகளுக்கு அருண் வடிவில் உயிர் கொடுக்கிறான் - தன் மகள் உயிருடுன் இருக்கும் உண்மை கண்டு மீண்டும் ஒரு கொழந்தையாக ஆகுகிறான் - பாசம் அவன் கண்களில் - சட்டம் அவன் நண்பனின் உருவத்தில் - தடுமாற்றம் - கர்த்தரிடம் நிம்மதியை கேட்கிறான் - தன் மகளை வாழ விடும் படி கர்த்தரிடம் கெஞ்சுகிறான் -

மகள் தான் செய்த தவறுக்கு சாட்சியாக ஒரு மகளை பெற்று வளர்க்கிறாள் - அவளும் காதலில் உந்தப்பட்டு தன் தாத்தாவின் எதிரியை மாமனாராக ஆக்க அசை படுகிறாள் - மகளின் மகளை தன் முன்னிலையில் மனம் முடிக்க அந்தோனி ஆசைபடுகிறான் - முடிவு - மீண்டும் அவமானபடுகிறான் - தன் மகளை ஊராரின் முன் நிலையில் ஒழுக்கம் கெட்டவள் என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் ஈட்டியாக பாய்கிறது - முடிவில் தன்னை மீறிய கோபத்தால் தன் சுய ரூபம் வெளிப்பட சிறை கம்பிகளை மீண்டும் சந்திக்க தயார் ஆகிறான் - மகள் நன்றாக இருப்பாள் என்ற நம்பிக்கை , தான் தெய்வமாக மதிக்கும் பாதிரியாரின் கனவுகள் பூர்த்தி அடைந்த சந்தோஷம் , பேத்தியின் மன வாழ்க்கை நன்ற நடந்த மன நிறைவு - இனி என்ன வாழ்க்கையில் மீதம் என்ற அமைதி - இவைகளுடன் சிறைக்கு செல்ல , நம் கண்கள் குளத்தில் குளிக்க அந்தோனியிடம் இருந்து விடை பெறுகிறோம்

தொடரும்

RAGHAVENDRA
19th November 2013, 10:31 PM
கண்பத் சார்
தங்களுக்கு உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
[ இணையத் தொடர்பு சரியாக இயங்காத காரணத்தினால் தாமதமான வாழ்த்து ]

Murali Srinivas
19th November 2013, 11:54 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கணேஷ்ஜி!

இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

Murali Srinivas
19th November 2013, 11:55 PM
கிருபா,

உன்னை நான் அறிவேன்

என்னை நீ அறிவாய்

நம்மை நாம் அறிவோம்

வேறு யார் அறிவார்!

ரசிக்கின்றேன்! தொடருங்கள்!

அன்புடன்

Gopal.s
20th November 2013, 07:07 AM
கிருபா,

உன்னை நான் அறிவேன்

என்னை நீ அறிவாய்

நம்மை நாம் அறிவோம்

வேறு யார் அறிவார்!

ரசிக்கின்றேன்! தொடருங்கள்!

அன்புடன்
நான் தற்போது எழுதி வரும் நான் அவனில்லை படம் மாதிரி, லக்ஷ்மன் ஷர்மா,சத்ருகன மேனன்,சித்தப்பா சகாதேவ சாஸ்த்ரிகள் சேர்ந்து வரவே முடியாது. ஜானி வாக்கர் போன்ற நண்பர்களாக நாம் தொடர்வோம். நானும் மிக ரசிக்கிறேன்.

SejkoRau
20th November 2013, 07:41 AM
Universal Song on Unity

http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

Russelluvd
20th November 2013, 08:04 AM
கண்பத் அப்படிங்கிற கணேஷ் சாரு

பொறந்த நாள நல்லா கொண்டாடிக்கினீங்களா நொம்ப சந்தோஷம் அய்யாசாரு.வாழ்த்திகினேன்.பெரியவரு நீங்க.என்னைய ஆசீர்வாதம் வுடு சாரு

IliFiSRurdy
20th November 2013, 08:07 AM
தலைவரே கண்ணன்..மய்யமே பிருந்தாவனம் இங்கு பக்தர்களாகிய நாம் அனைவரும் கோபிகைகளே.என்று உணரும்படி இயங்கிகொண்டிருக்கும்
இந்த குழாமில் சுமார் ஒரு வருடமாக சேர்ந்து உங்கள் அனைவரின் அன்பையும் பெற்று வருகிறேன்.அதற்கு முதலில் தலைவருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் இட்டு கௌரவித்த நண்பர்கள்/சகோதரர்கள்/திருவாளர்கள்
கோபால்,ரகுராம்,சின்னக்கண்ணன்,ரவி,ராதாகிருஷ்ணன்,ராக வேந்தர்,முரளி ,கிருபா
ஆகிய அனைவர்க்கும் என் அன்பு கலந்த நன்றிகள்.
இந்த திரியின் புகழ் பன்மடங்கு அதிகரிக்க என் பிரார்த்தனைகள்
வணக்கம்.

Russelluvd
20th November 2013, 08:55 AM
முரளி சாரு

என்னை யாரென்று எண்ணி என்ணி நீ பாக்குறாய்
இது யார் எழுதும் எழுத்தென்று அவர் கேக்குறார்

மன்னரும் நானே
மக்களும் நானே
நக்கலும் நானே
மரம் செடி கொடியும் நானே

சரஸ்வதியும் நானே
சுப்புலஷ்மியும் நானே
ஆதியும் நானே
அந்தமும் நானே

கல்லும் நானே
நாயகனும் நானே
காரும்(மழ)நானே
திக்கும் நானே

கோபாலனும் நானே
கோபியரும் நானே
முரளீதரனும் நானே
கண்ணும் நானே
கணேஷும் நானே
பத்து அவதாரமும் நானே


சாரதாவும் நானே
சாரதியும் நானே
வசுதேவரும் நானே
வேந்தரும் நானே

சுவாமியும் நானே
நாதனும் நானே
டிகிரியும் நானே
டிகிரி காப்பியும் நானே

வினோதனும் நானே(யெஸ்)
சித்தூர் தேவனும் நானே
சின்னக் கண்ணனும் நானே
ஜோசியரும் நானே

சங்கரனும் நானே
பாலனும் நானே
ரவியும் நானே
ராதாவும் நானே
ராதாகிருஷ்ணனும் நானே

கோல்டும் நானே
ஸ்டாரும் நானே
சந்திரனும் நானே
சேகரனும் நானே
கில்லாடியும் நானே
கிருபனும் நானே

சொன்னவன் கிருபா
சொல்பவன் கிருபா

துணிந்துநில் திரி வாழ

கிருபாவே காட்டினான்
கிருபாவே தாக்கினான்

ஆனால்

கோபாலனே கொலை செய்கின்றான்

காண்டீபம் எழுமே
கிருபா கைவன்மை எழுமே
இத்திரிஎல்லாம் சிவக்க

பரித்ராணாய ஸாதூனாம்

விநாஷாய ச துஷ்க்ரு(பா)தாம்

தர்மஸம்ஸத்தாபனார்த்தாய

ஸம்பவாமி யுகே யுகே

பொருள்: நல்லோரைக் காப்பதற்கும் தீயோரை அழிப்பதற்கும் தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் (கிருபா) உதிக்கிறேன்.

அய்சா.நான்கூட ஒரு டக்கரு பதிவு போட்டுகினேன்பா ஆரும் பாராட்ட மாட்டாங்கப்பா.அதான் நானே பாராட்டிகினேன்.

ஹைய்யா.மோதிரக்கையால குட்டு வாங்க்கினேன்.முரளி சாரு யெனக்கு பதில் போட்டுட்டாரு பதில் போட்டுட்டாரு பதில் போட்டுட்டாரு போட்டுட்டாரு ட்டுட்டாரு டாரு ரு...... echo

நான்தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு. ஓவ்...

கிருபா கண்ணா... நீயே ராசா நீயே மந்த்ரி நீயே அல்லாமும் பூந்து வெள்ளாடு ஓய் உன் சிக்நேச்சரு சொல்றா மாதிரியே

Richardsof
20th November 2013, 10:25 AM
19.11.2013 அன்று பிறந்த நாள் கொண்டாடிய திரு கண்பத் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் .

[தாமதமாக ]


நடிகர் திலகம் திரியில் புதிய வரவாக வந்துள்ள திரு கிருபா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

அதிரடி சென்னை பாஷையில் கலக்கும் உங்கள் பதிவு

கவிதையில் அசத்தும் புலமை

திரியில் பங்கு பெரும் எல்லோரின் பெயர்களையும் நினைவில் வைத்து [என்னையும் சேர்த்து ]

குறிப்பிட்டதற்கு நன்றி .

கிருபா சார் . நீங்கள் எந்த ஊர் ?

இளம் வயது ரசிகரா ? எங்களை போன்ற மூத்த ரசிகரா ?

அதிரடி பதிவுகள் மூலம் நீங்கள் ''சிங்கம் '' என்று தெரிகிறது .

KCSHEKAR
20th November 2013, 11:15 AM
Ganpat Sir,

My belated birthday wishes to you.

KCSHEKAR
20th November 2013, 11:31 AM
டியர் ரவி சார்,

எல்லோரும் ஞான ஒளியை அக்குவேறு, ஆணி வேறாக அலசி ஆராய்ந்தபிறகும், பிடிவாதமாக தாங்கள் அதனை மீண்டும் தொடருவதன் காரணம் புரிகிறது. கண்டிப்பாக வாசுதேவன் சாரின் 4000-வது பதிவு விரைவில் வரும். தொடருங்கள்.

Russelluvd
20th November 2013, 11:31 AM
யாரு மாத்து முகாமு வினோத்து சாரா.

யப்பா நீயாச்சும் வெல்கம் குடுத்திகினியே.இன்னாபா கேட்டுகின எனக்கு வயசு இன்னான்னா.65 அ மூனால பெருக்கிகினு அத்த நாளால வகுத்துக்குனு அத்தோட பன்னெண்ட கூட்டிக்கோ.அப்பால அத்தோட இன்னும் நுப்பத சேத்துக்கோ.அதுல தொன்னூறக் கழிச்சுடு கழிச்சிகினியா.அய்ய கணக்குல இன்னா இவ்வளவு வீக்கா கெடக்குற. கூட்டிகழிச்சியாந்தா வருது பாரு ஆன்சரு.அதான்பா நம்ப வயசு. அப்புறம் இன்னா கேப்ப.சைசயா. ஊரு இன்னான்னு கேட்ட இல்ல.ஊரு கோவேரு.

ஒத்த ஆளாப் போராடிக்குனு நைசா எம்சியாரு திரிய ஆறுக்குக் கொண்டாந்தது வுட்டுபுட்டியே. நெசமாவே ஒழைப்பாளிதான் கண்ணு நீயி.விடிகாத்தால காப்பி குடிக்கிறியோ இல்லியோ மறக்காம போஸ்ட்டு போட்டுடுற பாத்தியா.அதான் கண்ணு இன்வால்வ்மேன்ட்டு.இங்க இருக்கவங்க நெறையா உன்கிட்ட கத்துக்கணும் கண்ணு.அய்ய என்னையயும் சேத்துத்தான் சொல்லிக்கினேன்.அக்காங்.

KCSHEKAR
20th November 2013, 11:32 AM
என்னை யாரென்று எண்ணி என்ணி நீ பாக்குறாய்
இது யார் எழுதும் எழுத்தென்று அவர் கேக்குறார்
நெசமாலுமே டக்கராதாம்பா இருக்கு.

Russelluvd
20th November 2013, 11:41 AM
எங்க ஊர்ல ஒரு தபா காங்கிரஸ் கொடிஏத்த சிவாஜி வந்தாரு.ஒரே கூட்டம்.நானும் என்னோட பிரண்டும் பாக்க போயி இருந்தோம்.சிவாஜி சொம்மா லட்டுகணக்கா ஷோக்கா சந்தனக்க்கலரு ஜிப்பா போட்டுகினு சம்முன்னு இருந்தாரு என் பிரண்டு செம வெறிப்பய.சிவாஜின்னா உசுர விட்ருவான்.சிவாஜி கொடிய ஏத்திபுட்டு அல்லாரையும் பாத்து கைஆட்டினாரு.அப்புறம் அவுரு கையிலே ஆப்பிள் குடுத்தாங்க.அவுரு ஒவ்வொன்னா ஜனங்களப் பாத்து தூக்கிப் போட்டாரு.அத்தப் புடிக்க நீனான்னு போட்டி.என் பிரண்டு கொரங்கு மாறிதாவி எப்பிடியோ ஒரு ஆப்பிள லபக்குன்னு புடிச்சிட்டன்.அவன் மூஞ்சியில அப்பிடிஒரு சந்தோசம்.கொஞ்சநாலு அந்த ஆப்பிள பாத்துபாத்து வச்சிருந்தான்.அந்த ஆப்பிள்அப்புறம் கெட்டுபோச்சு.அன்னைக்கு முச்சூடும் கொழந்தமாறி அழுதான் பாருக.எனக்கே ரொம்ப கஸ்டமாபோச்சு.தேத்தறதுக்குள்ள போறும் போறும்நு ஆயிடுச்சுபா.

uvausan
20th November 2013, 12:32 PM
Kiruba sir -

கிருபா சார் - உங்கள் அவதாரம் " எல்லாமும் நானாக இருப்பது" - டக்கர் - என்னத்த எழுதுவதென்றே புரியலே சார் - குந்திக்கொண்டு எழுதினாலும் , நடந்துகொண்டே எழுதினாலும் , மெய்யாலுமே உங்களை மிஞ்ச முடியாது - இங்கே மற்றவர்கள் பாராட்டுகளுக்காக பதிவுகளை போடுவதை விட , நம் மன நிம்மதிக்காக போடுவதே நல்லது - நடு நடுவே சிலர் பாராட்டினால் சரி , இல்லையென்றாலும் , நம் பனி தொடரட்டும் - உங்கள் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் - போட்டுகிட்டே போ கண்ணா - பேஜாரு பண்ணாமல் - .அக்காங்.

Ravi
:smile2::smokesmile:

uvausan
20th November 2013, 12:59 PM
எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது

யாரும் இதுவரை திட்டாததால் , என் பதிவு ஓர் அளவுக்கு சுமாராக உள்ளது என்ற அற்ப சந்தோஷத்தில் பதிவை தொடர்கிறேன் - இதன் நடுவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் , பகவத் கீதையின் குரல் ... இதன் நடுவே யும் அந்தோணி அடிக்கும் மாதா கோயிலின் மணியும் சத்தமாக கேகட்டுமே !!

Nadippu :

நடிப்பை முன்று விதமாக பிரிக்கலாம் - 1. இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று ஒரு வகை , 2. இப்படியும் நடிக்கலாம் என்று ஒரு வகை 3. எப்படியும் நடிக்கலாம் என்று ஒரு வகை. இரண்டாவது , முன்றாவது பிரிவை சார்தவர்களை உலகம் என்றோ மறந்து விட்டது , மறந்தும் விடுகின்றது . இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நடத்தி காண்பித ஒருவனை உலகம் இன்றும் , என்றும் பாராட்டுமே அதுதான் இந்த படத்தில் நாம் பார்ப்பது - பல நூறு ஆண்டுகள் ஆனாலும் , இந்த படம் பேசப்படும் , வாசு , முரளி சாரை போன்றவர்கள் வருவர் - அவர் மேன்மையை மேலும் நிலை நாட்டுவர் .

காதலனாக ஒரு கலக்கு கலுக்குவார் - இன்னும் காதலிக்க மாட்டாரா என்று இருக்கும் - அப்பா பொறுப்பு ஏற்றபின் , ஒரு கடமை உணர்ச்சி தென்படும் - மகளின் மீது வைத்த பாசம் , படம் பார்க்கும் எல்லோரையும் கட்டி போட்டுவிடும் - தாத்தாவாக நடிக்கும்போது - ஒரு மனிதனின் பலவீனம் , கோபம் , இயலாமை வெளிப்படும் - ஒரே படம் , ஒரே மனிதன் , பல பல கூடுகளில் --- முள்ளை முள்ளால் எடுக்கும் பாண்பு - நண்பனை விரோதியாக எடுத்துகொள்ளவேண்டிய நிர்பந்தம் --- இறைவனையே திட்ட வேண்டிய நிலை - "கேட்கிறேன் பலமுறை தரவில்லை " ---- சான்ஸ் ஏ இல்லை

தொடரும்

uvausan
20th November 2013, 01:30 PM
எல்லாத்துக்கும் ஆசைபடு - Part 1 ஞான ஒளி -
ஒரு சின்ன அலசல் - தொடர்கின்றது

ஒரு மதத்தை சான்றிய கதை : இருந்தாலும் , யார் மனதையும் நோக வைக்காமல் வெற்றி கண்ட கதை - முருகனும் உண்டு , ஏசுவும் உண்டு , மாரியும் உண்டு , மேரியும் உண்டு - எல்லா நாடகங்களும் படம் ஆனபின் வெற்றி கண்டதில்லை - ஆனால் இந்த படம் கண்ட வெற்றி இனிமேலும் ஒரு படம் பெருமா என்றால் கண்டிப்பாக முடியாது என்று தான் சொல்லவேண்டும்

There is a saying : " One good thing about STONES ! : They come in our way as hurdles ; once we pass them , they automatically become our MILESTONES !!

பல படங்கள் போட்டி இட்ட நேரம் - எல்லா கற்களையும் கடந்து வெற்றி கண்ட படம்

Padalgal :

எல்லா பாடல்களும் தேனிலும் இனியவை - தமிழை போல தித்திப்பவை - நான் மிகவும் விரும்பி கேட்பவைகள் : " அம்மா கண்ணு " ; "தேவனே"

Selection of Co Stars - brilliant -

மாதவன் சாரை எவளவு புகழ்தாலும் தகும் - எலந்த பலம் , எலந்த பலம் - ஆங் --- , சந்திபோமா , சந்திபோமா என்று பாடிய நடிகையை -" அம்மா கண்ணு" வில் பட வைத்து நடிக்கவும் வைத்து , இந்த ஜோடி என்னும் பல படத்தில் நடிக்க மாட்டார்களா என்று ஏங்க வைத்து விட்டார் எல்லாம் இன்ப மயம் என்று சொல்ல வைத்த படம் - சொல்லிகொண்டே போகலாம் -

ஆனால் வாசு சார் வரும் நேரம் ஆகி விட்டதால் , நான் சற்றே ஒதுங்கி கொள்கிறேன் - பதிவை படித்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி - நன்றாக அலசின ஒரு படத்தை மீண்டும் அலசுவது என்பது சுலபமான காரியம் அல்ல - ஒரு சிறு முயற்சி - இந்த பதிவு மூலம் பிரிந்தவர்கள் எல்லோரும் மீண்டும் வருகை தந்து இந்த திரியை ஒரு MILESTONE ஆக்குவார்கள் என்ற திடமான நம்பிக்கை

முற்றும்

அன்புடன் என்றும் உங்கள்

:):smokesmile:

ரவி

KCSHEKAR
20th November 2013, 01:33 PM
நினைவுகள் அழிவதில்லை Article in Tamil - Hindu

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%A F%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%A E%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article5360574.ece

chinnakkannan
20th November 2013, 02:11 PM
//எல்லா பாடல்களும் தேனிலும் இனியவை - தமிழை போல தித்திப்பவை - நான் மிகவும் விரும்பி கேட்பவைகள் : " அம்மா கண்ணு " ; "தேவனே" // இன்னும் ஒரே ஒரு பாட்டு தானே இருக்கு ரவி..அதை விட்டுப்புட்டீரே..ம்ம் நீர் யூத் இல்லை போல..(சாரதா பாட்டு)
*
ஞான ஒளி- நாடகமாக வந்து திரையில் மலர்ந்த படங்களில் ஒன்று..அதன் நாடகக் கதை வசனம் கல்கியில் வந்து யாரிடமிருந்தோ பைண்ட் பண்ணப்பட்ட புத்தகமாகப் படித்திருக்கிறேன்.. நாடகத்தில் அந்தோணியாக மேஜர் சுந்தர்ராஜன்..! ப்ளாக் அண்ட் ஒய்ட் புகைப்படங்களில் பார்த்தால் அசப்பில் ந.தி போலவே இருக்கும்..
*
ஸ்வாட் அனலிஸிஸ்னுல்லாம் எழுதிட்டு டபக்குன்னு ஞான ஒளிக்குப் போய்விட்டீர்..எழுதுங்க எழுதுங்க..:)

சந்திப்போமா பாடினது விஜய நிர்மலா இல்லை..எல்.விஜயலட்சுமி என நினைவு..:) நடத்துங்க..
*
பாவம் வாசு சாருக்கு என்ன ப்ரச்னையோ..

கலக்கும் புயலால் கலங்கிய மேகம்
வழக்கமாய் வானில் கலங்கி- பலமுடன்
பெய்தே நனைப்பதுபோல் போடுவார் வாசுவும்
நெய்த பதிவினைத் தான்

uvausan
20th November 2013, 02:40 PM
[QUOTE=chinnakkannan;1091358]//எல்லா பாடல்களும் தேனிலும் இனியவை - தமிழை போல தித்திப்பவை - நான் மிகவும் விரும்பி கேட்பவைகள் : " அம்மா கண்ணு " ; "தேவனே" // இன்னும் ஒரே ஒரு பாட்டு தானே இருக்கு ரவி..அதை விட்டுப்புட்டீரே..ம்ம் நீர் யூத் இல்லை போல..(சாரதா பாட்டு)
*
- Saar
*
ஸ்வாட் அனலிஸிஸ்னுல்லாம் எழுதிட்டு டபக்குன்னு ஞான ஒளிக்குப் போய்விட்டீர்..எழுதுங்க எழுதுங்க..:)

சந்திப்போமா பாடினது விஜய நிர்மலா இல்லை..எல்.விஜயலட்சுமி என நினைவு..:) நடத்துங்க..
*
====
சார்
- அம்மா கண்ணுவிடம் இல்லாத காதல் ரசமா அந்த நீங்கள் சொன்ன இன்னமொரு பாட்டில் இருக்கும் ?? இதை வைத்து நீங்கள் இப்படி முடிவு எடுக்கலாம் நான் யூத் இல்லை என்று ? - உங்கள் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள்

SWOT க்கு response இல்லாததினால் தான் இந்த திரியில் ஞான ஒளி வரவேண்டும் என்று இப்படத்தை தேர்தெடுத்தேன் - எப்பதான் சார் நானும் உங்களை போல , கிருபா சாரை போல நன்றாக எழுதுவது ? அந்த வாயிப்பை நானேதான் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் ..

சந்திப்போமா பாடினது -எல் ஆர் ஈஸ்வரி - நடித்து விஜய்நிர்மலாவேதான் - 100 % Sure

Ravi

:smile2::smokesmile:

chinnakkannan
20th November 2013, 03:02 PM
//அம்மா கண்ணுவிடம் இல்லாத காதல் ரசமா அந்த நீங்கள் சொன்ன இன்னமொரு பாட்டில் இருக்கும் ?? இதை வைத்து நீங்கள் இப்படி முடிவு எடுக்கலாம் நான் யூத் இல்லை என்று ? - உங்கள் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள் // நான் எங்கே காதல் ரசத்தைப் பத்திச் சொன்னேன்.. பாட்டு விட்டுட்டீங்கன்னு தானே சொன்னேன் :) சரி சரி நீர் யூத் தான்

ஸாரி ஓய்.. விஜய நிர்மலாவை எல்.வின்னு சொல்லிட்டேன்..தப்பு தேன்.. :)

//நானும் உங்களை போல , கிருபா சாரை போல // ஒங்களுக்குக் குறும்பு ஜாஸ்தி :) நான் சாதாரணக் குட்டியானை.. :)

SejkoRau
20th November 2013, 03:12 PM
ரவி சார்

தங்களுடைய பதிவு மிகவும் அருமை !

இந்த காட்சியை எழுதினீர்கள ? "இன்ஸ்பெக்டர் ! மத்தவங்க செஞ்ச அதுக்கு பேர் திருட்டு ! அதையே ஒரு போலீஸ் செஞ்ச ?
இன்ஸ்பெக்டர் : வாட் டூ யு மீன் ?

அந்தோனி : ஐ மீன் த சில்வர் டம்ளர் !

இன்ஸ்பெக்டர் : ஹ..ஹ.ஹ..

அந்தோனி : ஹ......ஹ......ஹ.....(கை உறையை கழட்டியபடி)

இன்ஸ்பெக்டர் : ஹ..ஹ..ஹ..ஹ...

அந்தோனி : ஹ....ஹ.....ஹ....ஹ...!

SejkoRau
20th November 2013, 03:26 PM
வாசுதேவனே !

எம்மை பாருங்கள் ....எம் பாவங்கள் தம்மை தாங்கிகொள்ளுங்கள் ! ஆயிரம் லொள்ளு தொல்லைகள் நாங்கள் செய்கின்றோம் ...!

நீங்கள் அறிவீர் ! மனித்தருள்வீர் !

ஓஹ் வாசு சார் !

பாலுடன் நீர் !

நமது மையத்திரியிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன ! இரெண்டும் பதிவிட்டபோது...நமக்கு தீனியிலயே !

தந்தையின் திரியிலே மழலைகள் ஊமையோ ! திரியின் அழகிலே கருமையே படர்ந்ததோ....! நோய் மனதில எழுத்தில தேவனே ! நாம் அழுவாத சிரிப்பத தேவரே ! ஒ...ஒ...ஒ...!

மையம் நண்பர்கள் இங்கே சொல்லவே .....எந்த மேகமும் விலகி செல்லுமே ...

காலமே பதில் சொல்லுமே ...இந்த வாசுவும் மௌனம் காப்பதென்பதேன் ?

https://www.youtube.com/watch?v=2VyResf6y0o

uvausan
20th November 2013, 03:32 PM
வாசுதேவனே !

எம்மை பாருங்கள் ....எம் பாவங்கள் தம்மை தாங்கிகொள்ளுங்கள் ! ஆயிரம் லொள்ளு தொல்லைகள் நாங்கள் செய்கின்றோம் ...!

நீங்கள் அறிவீர் ! மனித்தருள்வீர் !

ஓஹ் வாசு சார் !

பாலுடன் நீர் !

நமது மையத்திரியிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன ! இரெண்டும் பதிவிட்டபோது...நமக்கு தீனியிலயே !

தந்தையின் திரியிலே மழலைகள் ஊமையோ ! திரியின் அழகிலே கருமையே படர்ந்ததோ....! நோய் மனதில எழுத்தில தேவனே ! நாம் அழுவாத சிரிப்பத தேவரே ! ஒ...ஒ...ஒ...!

மையம் நண்பர்கள் இங்கே சொல்லவே .....எந்த மேகமும் விலகி செல்லுமே ...

காலமே பதில் சொல்லுமே ...இந்த வாசுவும் மௌனம் காப்பதென்பதேன் ?

https://www.youtube.com/watch?v=2VyResf6y0o

அருமை சார் - வாசு சாரை பற்றிய பாடல் - இந்த பதிவுக்கு பின்பும் வரவில்லைஎன்றால் நாம் எல்லோரும் நெய்வேலியை முத்திகை இடுவதை தவிர வேறு வழியே இல்லை -

Ravi :):smokesmile:

SejkoRau
20th November 2013, 03:38 PM
தேடினேன்...தேவ ...தேவ.....! தாமரை பாதமே ...!

https://www.youtube.com/watch?v=8bS54svzkzs

SejkoRau
20th November 2013, 03:42 PM
கோபாலனை எப்படி அழைக்கவேண்டுமோ அப்படி அழைத்தால்தான் வருவான் ! இதிகாசத்திலும் சரி புவிகாசத்திலும் சரி !

https://www.youtube.com/watch?v=W0jMfUCgWY4

kalnayak
20th November 2013, 04:58 PM
Belated birthday wishes to Ganpat !!!

ScottAlise
20th November 2013, 07:02 PM
பார்த்ததில் பிடித்தது
அத்தியாயம் -3

கடந்த பதிவில் பிரம்மாண்ட படத்தை பற்றி அசை போட்டதால் இந்த தடவை கொஞ்சம் கதை அம்சம் அதிகம் உள்ள படம் எடுத்து கொண்டு உள்ளேன் , அதுவும் இது வரை அதிகம் விவாதத்துக்கு எடுத்து கொல்லாத படம் பற்றி எண்ணிய பொழுது கிடைத்தது தான் இந்த

குரு தட்சணை

சென்ற பதிவில் குறிப்பிட்டதை போலே 1969 ல் நடிகர் திலகம் வித விதமான கதாபாத்திரத்தில் நடித்து கல்கி கொண்டு இருந்தார்

தங்கசுரங்கம் என்ற அதிரடி படத்தை அடுத்து காவல் தெய்வம் படத்தில் குருவ வேடத்தில் நடித்தார் , அதை தொடர்ந்து வந்தது தான் இந்த குரு தட்சணை

தங்கசுரங்கம் படத்தை பற்றி எழுதும் பொது நடு நடுவே படத்தில் சிவாஜி அணிந்த உடையை பற்றி குறிப்பிட்டேன் , இதில் அந்த தேவை இல்லை , வெறும் வேஷ்டி , பனியன் தான் அவர் உடை
ஒரு படத்தில் வித விதமான உடையில் வந்து சண்டை , காதல் , ஸ்டைல் என்று நடித்து விட்டு அதின் சாயல் துளி கூட இல்லாமல் அடுத்த படத்தில் நடிக்க நம்மவர்க்கு கை வந்த கலை

தில்லானா மோகனாம்பாள் என்ற மாபெரும் காவியத்துக்கு பிறகு அதே டீம் உடன் நடிகர் திலகம் பணியாற்றிய படம்
இதில் ஜெயலலலிதா, மேஜர் புது வரவு (தில்லானா மோகனாம்பாள் கூட்டணியில் )
இந்த படத்தின் பெயர் போடும் பொது நடிகர்களின் பெயர் போடாமல் அவர்களின் புகை படத்தை காட்டுவார்கள் . இதுவே புதுசு . படத்தின் கதையை எழுதியவர் திரு பழனியப்பன் , இசை புகழ்மணி , இசை மேற்பார்வை : KV மகாதேவன்
இயக்கம் : APN

Video courtesy: I have uploaded the videos for first time

ScottAlise
20th November 2013, 07:03 PM
கதை, மிகவும் இயல்பான துளி கூட சினிமா என்ற வணிகத்துக்காக சமரசம் செய்து கொல்லாத கதை , தங்கசுரங்கம் (நடிகர் திலகத்தின் முந்திய படம் , காவல் தெய்வம் guest appearance என்றதினால் விட்டு விட்டேன்) தில்லானா மோகனாம்பாள் என்ற மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கூட்டணியில் இருந்து வந்த படமா இது என்று என்னை ஆச்சர்யப்பட வைத்தது

சிவாஜி ஓவர் அக்டிங் செய்வார் என்று சொல்லும் நபர்கள் , இந்த படத்தை பார்த்து விட்டு தங்கள் கருத்தை சொல்லலாம்

சரி நாம் படத்துக்கு வருவோம்

படத்தின் opening ஷட்டில் ஒரே கூடம் , அங்கே ஒருவர் bioscope காட்டி கொண்டு இருக்கிறார் (தங்கவேலு ) முஸ்லிம் அன்பராக என்னமா பிச்சு உதறிருகார் மனிதர் அந்த bioscope பாடல் இன்றும் பிரபலம்
அங்கே bioscope பார்த்து விட்டு ஜோசியம் பார்க்கும் ஜெயலலிதாவை வம்புக்கு இழுக்கும் குண்டு மணியை அடிக்கும் காட்சியில் அறிமுகம் நாம் நாயகர் நடிகர் திலகம்
முதலில் அவனிடம் உதை வங்கி மீண்டும் எழுந்து அடிக்கும் நடிகர் திலகம் அவன் கையை முறுக்கி முறுக்கி அடிக்கிறார் , என்ன த இது சும்மா எமதுற சண்டை என்று என்னும் பொது , நல்ல எடை உள்ள குண்டு மணியை தூக்கி போடுகிறார் தொடர்ந்து அவர் நடிகர்திலகத்தின் கையை திருப்பி முறுகுகிறார் , அங்கே இருக்கும் மாட்டுவண்டியில் கால் பதித்து குண்டு மணி பின்னாடி வந்து உதைப்பார் பாருங்கள் , அதிர்ச்சியடைந்து விட்டேன் . அதே சமயம் இந்த சண்டை , அதுவும் நடிகர் திலகத்துக்கு சண்டை போட வராது என்று எப்படி பேச்சு வந்தது என்பது இன்று வரை புரியாத புதிர்


http://www.youtube.com/watch?v=XxkngwNWHDs

ScottAlise
20th November 2013, 07:04 PM
கண்ணனின் நண்பர்கள் என்று பார்த்தல் குறி சொல்லும் பெண் (மனோரமா), டீ கடை நாயர் , சைக்கிள் கடை ஜேம்ஸ் மற்றும் ஒரு அய்யர் குடும்பம் (பாலையா அவர் மனைவி), இவர்கள் தான் கண்ணனின் மேல் அன்பும் , மரியாதையும் வைத்து இருபவர்கள் . அந்த கிராமமே அவனை முரடன் என்று ஒதுக்குகிறது .

தன்னை ரவுடியிடம் இருந்து காப்பாற்றிய கண்ணனை காதலிக்கிறார் கன்னி ,

கண்ணன் வீட்டுக்கு அடிகடி போகும் கன்னியை கண்டிக்கிறார் அவர் தந்தை , கன்னி தன மானத்தை காப்பாற்றிய கண்ணனின் வீட்டுக்கு செல்வது தப்பு இல்லை என்று வாதாடுகிறார் , தன் அப்பாவிடம் நான் வெளி போறேன் நீ தான் கஷ்ட படுவ என்று சொல்லிவிட்டு கண்ணனின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் . கண்ணன் முதலில் கன்னியை அனுமதிக்க மறுக்கிறார் , பிறகு இறக்கம் கொண்டு கன்னியை அனுமதிக்கிறார்

அந்த காட்சியில் சிவாஜியின் முகத்தில் கோபம் ,ஆத்திரம் , கருணை , இயலாமை , அப்பாவித்தனம் என்று சகலமும் பிரதிபலிக்க காட்சி முடிகிறது

அந்த காட்சி இதோ

http://www.youtube.com/watch?v=GPMMynkzcyI

அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளிகூடத்துக்கு ஒரே ஒரு டீச்சர் மல்லிகா (ரமாப்ரபா) கொஞ்சம் பொறமை, அகம்பாவம் பிடித்த பெண் ,
இப்படி பட்ட பள்ளிக்கு வருகிறார் முதல்வர் தேவகி (பத்மினி ) மற்றும் அவர் தந்தை மேஜர் (கண் தெரியாதவர் )

பத்மினி தான் பள்ளியின் முதல்வர் என்று அறிந்து கொண்டு சிவாஜி அவரிடத்தில் காடும் மரியாதையை என்ன என்று சொல்லுவது

தன் நண்பர்களின் பாதுகாப்பில் அவர்களை விட்டு விட்டு வண்டி கொண்டு வருவது , வீட்டை சுத்த படுத்துவது , அளவுகடந்த மரியாதை செலுத்துவது என்று அசல் கிராமதன்னகவே காட்சியளிக்கிறார்



http://www.youtube.com/watch?v=lHH2eGWF458

ScottAlise
20th November 2013, 07:04 PM
தேவகியின் அணுகுமுறையால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது , அதனால் அவரை விரோதியாக பாவிக்கிறார் மல்லிகா

ஒரு நாள் தன் வகுப்பு அறைக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாக எண்ணுகிறார் மல்லிகா

கண்ணன் தான் ராத்திரியில் பாடம் படிக்கச் வந்ததை கண்டுபிடிக்கும் தேவகி அவருக்கு ஆசாரியராக இருந்தது பாடம் சொல்லி தருகிறார்

அந்த காட்சியில் நடிகர் திலகம் முதல் முதலில் பள்ளிகூடத்துக்கு பாடம் படிக்க செல்லும் மாணவனை போலே செல்லுவதும் ,
பத்மினி யிடம் கையை கட்டி பாடம் படிப்பதும் , அ முதல் அக்கு வரை சொல்லுவதும் என்று கலக்கி இருப்பார்
எந்த நடிகர் ஒரு கதாநாயகி காலில் விழுவார் எங்கள் நடிகர் திலகத்தை தவிர , இமேஜ் என்ற வட்டத்தில் சிக்காமல் கதை நாயகனாகவே வாழ்ந்து இருக்கார் , இந்த காட்சியை பார்த்த பொழுது , இப்படி ஒரு நடிகரா என்று ஆச்சர்யம் அடைந்தேன்


http://www.youtube.com/watch?v=I7PXprEyCKw

ScottAlise
20th November 2013, 07:06 PM
அடுத்த காட்சியில் பாலாஜி தன் குரு மேஜர் யை சந்திக்க வருகிறார் வந்த இடத்தில தன் கல்யாண செய்தியை சொல்லுகிறார்

அப்போது தான் தெரியவருகிறது பத்மினியும் பாலாஜியும் காதலர்கள் என்று , மஜோர்யின் கண்கள் போனதால் கல்யாணம் தள்ளி போய் விட்டது

அந்த கல்யாண செய்தியை மேஜர் சிவாஜியிடம் ஒரு கதை போல் சொல்லுவதும் சிவாஜி அதை ஒரு குழந்தை போலே தலையை ஆட்டி கேட்பதும் என்று நல்ல உயிரோட்டமான காட்சி

அதை தொடர்ந்து வரும் பாடலில் தான் எப்படி தன் குருவுக்கு கல்யாணம் செய்து வைக்க போகிறேன் என்று அழகாக , நாகரிகமாக விவரிக்கிறார் நடிகர் திலகம்

http://www.youtube.com/watch?v=vLXz0ocDAVw




இந்நிலையில் கல்வி உயரதிகாரிக்கு தேவகியை பற்றி தவறாக கடிதம் வந்து விடுகிறது , விஷயம் தேவகியின் நடத்தை பற்றி எழுதியதோ மல்லிகாவும் அவர் கணவர் (M N நம்பியார்)
கல்வி உயரதிகாரியோ தேவகியின் வருங்கால மாமனார் இதனால் தேவகியின் திருமணத்துக்கு சிக்கல் வருகிறது . தேவகி கண்ணன் தன் வீட்டுக்கு படிக்க மட்டுமே வருவதாக உண்மையை எவ்வளவு எடுத்து சொல்லியும் ஊர் நம்ப மறுகிறது
தேவகியின் ஆணைக்கு இணங்க கண்ணன் கன்னியை திருமணம் செய்து வைக்கிறார் . கண்ணனை தேவகி திருமணத்துக்கு வர்புறதும் காட்சி தான் குரு தட்சணை படத்தின் pre கிளைமாக்ஸ் .

http://www.youtube.com/watch?v=QttcBN87SwI

ScottAlise
20th November 2013, 07:06 PM
ஒரு படிக்காத பாமரன் , மற்றும் அவரை காதலிக்கும் பெண் தங்கள் நடத்தையை அதுவும் தான் குருவாக மதிக்கும் ஒரு நபர் உடன் தன்னை இணைத்து பேசிய நபர்களை பழி வாங்க நினைப்பார் , அதில் சிவாஜியின் நடிப்பில் அனல், அதே மாதிரி ஜெயலலிதாவும் அதை ஆதரிப்பது விந்தை ஒரு மாறுபட்ட characterisation ,

(இது மட்டுமா ஜெயலலிதா படம் முழுவதும் sleeveless blouse அணிந்து , கையில் tatoo குத்தி கொண்டு தோற்றத்தில் கிராமத்து பெண்ணாக தோன்றுகிறார்

பொதுவாக ஒரு பெண்ணை தகப்பன் வெளியே போக சொன்னால் அந்த பெண் மன்னிப்பு கோரி வீட்டில் இருப்பார் , இதில் தன் தந்தையை எடுத்து எரிந்து பேசி தன் முடிவில் உறுதியாக இருக்கிறார்

கதையே சிவாஜிக்கும் ,பத்மினிக்கும் இடையில் இருக்கும் ஆன் பெண் பேதம் இல்லாத குரு சிஷ்யன் உறவு தான் இதில் கண்ணனின் வாழ்க்கையில் (சிவாஜி) காதல் என்பது துளி கூட கிடையாது , இந்த மாதிரி ஒரு கதையில் ஜெயலலிதா தன் பாத்திரத்துக்கு உட்பட்டு நன்றாக நடித்து இருக்கிறார் )

முதலில் தேவகியின் வீட்டுக்கு செல்லும் கண்ணனும் கண்ணியம் கோபத்தில் அனைவரையும் பழி வாங்க போவதாக சொல்லுகிறார்கள் , தேவகி மற்றும் அவர் தந்தையின் பேச்சை கேட்டு கன்னியை திருமணம் செய்து கொளுகிறார் கண்ணன்

இந்த கண்ணனுக்கு காதல் இரண்டாம் பட்சம் தான் குரு பக்தி தான் முதலில்

தனக்கு ஒரு வாழ்கையை ஏற்படுத்தி கொடுத்த குருவுக்கு , தன்னை எழுத படிக்க வைத்த குருவின் வாழ்கையை சீர் படுத்த எண்ணி முதல் முறையாக ஒரு கடிதம் எழுதுகிறார் கண்ணன் , யாருக்கு மாப்பிளையின் தந்தைக்கு
அதில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் , தன் மரண வாக்குமூலமாக தேவகின் நல்ல உள்ளதை பற்றி எழுதி , அதில் தான் தேவகியின் மேல் வைத்து இருக்கும் குரு பக்தியை வெளி படுத்தி , தேவகியை தன் மகனுக்கு (பாலாஜி) திருமணம் செய்து வைக்க கோருகிறார்

சாக போகும் கண்ணனை காப்பற்றி தன்னுடன் அழைத்து வருகிறார் பாலாஜி
முடிவில் பத்மினி பாலாஜியின் கல்யாணத்துடன்

சுபம்

http://www.youtube.com/watch?v=U79tJRr_xkg


இந்த படத்தில் நடித்த , என்னக்கு பிடித்த மற்றும் ஒரு கதாப்பாத்திரம் பாலாஜி

அந்த காலத்தில் என் இந்தகாலத்திலும் தன் கல்யாணம் செய்து கொள்ளபோகும் பெண் ஒரு ஆன் உடன் சககமாக பேசி கொண்டு இருப்பதை யாரும் சாதரணமாக எடுத்து கொள்ள மாட்டார்கள் , பாலாஜி தான் கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்ணின் மேல் இப்படி பட்ட character assassination செய்ய பட்டும் கூட துளி கூட அன்பு மாறாமல் இருபது , சந்தேக படாமல் இருபது

hats off டு story writer and டைரக்டர்

பாலயாவை இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் உபயோக படுத்தி கொண்டு இருக்கலாம்

பத்மினி : சிவாஜியின் ultimate pair என்று சொல்லபடும் நடிகைகளில் ஒருவர் ,
இந்த படத்தில் சிவாஜியுடன் ஜோடி கிடையாது என்றாலும் சிவாஜி - பத்மினி combination காட்சிகள் ஏராளம் .ஒரு டீச்சர் எப்படி கணியதுடன் இருக்க வேண்டும் , எப்படி கண்ணை உறுத்தாமல் உடை அணிய வேண்டும் , எப்படி பேச வேண்டும் , மனிதர்களை அணுகும் முறை

இந்த ஏக பட்ட எப்படிகள் க்கு இப்படி தான் என்று தன் பாத்திரத்தின் முலம் விடை அளிக்கிறார் பத்மினி


மொத்தத்தில் நடிகர் திலகத்தின் under rated படத்தில் இதுவும் ஒரு படம்

Richardsof
20th November 2013, 07:41 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/538c8da0-9f7a-40f6-9806-84aeb4da3306_zps5c6175fa.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/538c8da0-9f7a-40f6-9806-84aeb4da3306_zps5c6175fa.jpg.html)

ScottAlise
20th November 2013, 08:26 PM
Wish you many more Happy returns of the day Neyveli Vasudevan Sir

Seeking your guidance & blessings

Awaiting your 4000th post and many more

ScottAlise
20th November 2013, 08:33 PM
முரளி சாரின் தமிழை படிக்க

மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் - கோபால் சாரின் கலாய்ப்பு இல்லாத பதிவை படிக்கலாம் - ராகவேந்திர சாரின் ஆவணகள் போடும் வேகத்தை

பார்க்கலாம் - கார்த்திக் சாரின் சபாஷ்யை வாங்கிகொள்ளலாம் - சின்ன கண்ணன் சாரின் அர்த்தம் புதைந்த குரும்பை ரசிக்கலாம் - கிருபா சாரிடம்

இருந்து அன்புடன் சில திட்டுக்களை வாங்கலாம்

Ravi sir,

Hope your dreams come true soon

Gopal.s
20th November 2013, 08:36 PM
Many Many Happy Returns of the Day Vasu.

chinnakkannan
20th November 2013, 08:40 PM
ராகுல் ராம்..வெகு சின்ன வயதில் பார்த்த படம் குரு தட்சணை..மதுரை தேவி தியேட்டரில்.. அதன் பிறகு பார்த்ததில்லை.. ஒன்றே ஒன்று உலகம் ஒன்று பாடலும் பசுபதி எஸ்டீச்சர் என பையன் பதிலிறுப்பதாக வருவதும் மட்டும் நினைவில்..
*
அழகாக எழுதியிருக்கிறீர்கள்..ம்ம் படக் காட்சிகளை சற்று நேரம் கழித்துப் பார்ப்பேன்..
*
தொடர்ந்து எழுதுங்கள்...

chinnakkannan
20th November 2013, 08:45 PM
//சின்ன கண்ணன் சாரின் அர்த்தம் புதைந்த குரும்பை ரசிக்கலாம் // நன்றி ராகுல்ராம் :) அப்புறம் அது குறும்பு :) (குரும்பு என்பது ஒரு பயிர் வகை என நினைக்கிறேன்)

எல்லாரும் நல்லா எழுதிக் கலக்கறச்சே நான் எந்தப் படத்தை எழுதறது?!

நெய்வேலி வாசுதேவனார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..:)

uvausan
20th November 2013, 09:06 PM
வாசு சார் - வினோத் சாரின் அழகிய வாழ்த்து பதிவு மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்த தூண்டுகிறது - ஆனால் வாழ்த்த வயது இல்லை அதனால் வணங்குகிறேன் ----

Ravi
:):smokesmile:

uvausan
20th November 2013, 09:13 PM
[QUOTE=chinnakkannan;1091462]//சின்ன கண்ணன் சாரின் அர்த்தம் புதைந்த குரும்பை ரசிக்கலாம் // நன்றி ராகுல்ராம் :) அப்புறம் அது குறும்பு :) (குரும்பு என்பது ஒரு பயிர் வகை என நினைக்கிறேன்)

சின்ன கண்ணன் சார் - திருத்திகொள்ள வேண்டிய தவறுதான் - ஆனால் தமிழில் எழுதுவது என்பது மிகவும் கடினமான ஒன்று - அதிலும் உங்களை போல் அழகாக எழுதவது மிகவும் கடினம் - அர்த்தம் கிடைத்தால் அதனுடன் விட்டுவிடுவோமே சார் - ஏன் அதை திருத்தி ஒரு பதிவு இடவேண்டும் - பயிற்சியில் சரியாகிவிடும் காலபோக்கில் -- அன்புடன் ரவி :):smokesmile:

uvausan
20th November 2013, 09:25 PM
டியர் ராகுல்ராம் - நீங்கள் பிறக்கும் முன் வந்த படம் இது - பத்மினியின் காலில் நம் தலைவர் விழுவதை அந்த சமயத்தில் இருந்த ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை , படத்தையும் சேர்த்துதான் .. படம் சுமாரான வெற்றியை அடைந்தாலும் , நல்ல படிப்பினையை சொன்ன படம் - ஒரு மாணவன் தன குருவிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இன்றும் எடுத்துரைக்கும் படம் . உங்கள் எழுத்தினால் இந்த படம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது - நல் வாழ்த்துக்கள்

Ravi
:):smokesmile:

RAGHAVENDRA
20th November 2013, 09:31 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VasuBirthDayGrtg_zps6b2b694e.jpg

RAGHAVENDRA
20th November 2013, 09:35 PM
ரவி
ஞான ஒளி திரைப்படத்தின் தங்கள் பார்வை.. வித்தியாசமான தங்களுக்கென உள்ள தனி பாணியில் மிகவும் புதுமையாக உள்ளது. பாராட்டுக்கள். பாத்திரப் படைப்பு, கதையமைப்பு, இசையமைப்பு, கலைஞர் தேர்வு என எதையும் விட்டு வைக்காமல் அலசியுள்ளீர்கள். தொடருங்கள். இது போல் மேலும் பல படங்களில் தங்களுடைய பார்வை பரவட்டும்.

RAGHAVENDRA
20th November 2013, 09:37 PM
கிருபா
தங்களுடைய நடை மிகவும் சிரமமாக அவ்வளவு எளிதில் யாராலும் கடைப்பிடிக்க முடியாத நடை. சற்றே பிசகினாலும் தூய தமிழ் வந்து விடும். அந்த அளவிற்கு பேச்சு வழக்கினை மிக அழகாக எழுத்து வடிவில் கொண்டு வந்து தங்களுடைய உள்ளத்தை பளிச்சென சொல்லி வருகிறீர்கள்.
தங்களுடைய எழுத்திற்கென தனி ரசிகர் உலகமே உருவாகிக் கொண்டிருக்கிறது, அதில் அடியேனும் அடக்கம்.
பாராட்டுக்கள்.
தொடருங்கள்.

RAGHAVENDRA
20th November 2013, 09:39 PM
ராகுல் ராம்,
தங்களுடைய பதிவுகளனைத்துமே வித்தியாசமான கோணங்களில் வருவது மட்டுமின்றி, இந்தத் தலைமுறையை நடிகர் திலகம் எந்த அளவிற்கு ஆட்கொண்டுள்ளார், அதை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், அவருடைய நடிப்பை அவர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
பாராட்டுக்கள்.
தொடருங்கள்.

RAGHAVENDRA
20th November 2013, 09:40 PM
உத்தம புத்திரன்
எடுத்த எடுப்பிலேயே திரியின் பயணத்தை அதி வேகமாக துவக்கி வைத்துள்ளீர்கள்.
நடிகர் திலகத்தின் பல படங்களைத் தங்கள் பார்வையில் அலசுங்கள்.
பாராட்டுக்கள்.
தொடருங்கள்.

SejkoRau
20th November 2013, 10:08 PM
Vasudevan sir !

I wish you many more happy returns of the day !

Idhai paarthaal pasi theerum ?

2736

SejkoRau
20th November 2013, 10:13 PM
Oh...Saathi Rae.....There bhi naabi kya Jeenah....! There bhi naabi kya Jeenah...!

Selvamae...........Ore Mugam Paarkiraen eppodhum...! Ore Kural kaetkiraen eppodhum...!

http://www.youtube.com/watch?v=BYBP71Hpccg

SejkoRau
20th November 2013, 10:15 PM
Namakedhu Periyadhu..Nam kalachara perumai...Valiyuruththum paadal....CID RAJAN ...coming soon !

http://www.youtube.com/watch?v=tdzOv-qOQkI

SejkoRau
20th November 2013, 10:19 PM
Watch Thalaivar's Costume !
Varudangal aera..aera...Vayadhu Kuraindhadhu ILAMAI ADHIGARITHTHADHU UNGAL ORUVARUKKU MATTUMDHAAN !!

ENNA ORU ORIGINAL HAIRSTYLE ENNA PERFECT FITTING SHIRT AND PANT..

WOW UNGAL VAYADHIL ENDHA NADIGAR IVVALAVU MANLYAAGA IRUNDHAAR JAISHANKARAI THAVIRA ?

http://www.youtube.com/watch?v=I9MlyteWg08

SejkoRau
20th November 2013, 10:20 PM
KATTAZHAGU PAAPPA KANNUKKU !

http://www.youtube.com/watch?v=MXryA5pYAF0

SejkoRau
20th November 2013, 10:25 PM
INDHA VAYADHIL...NETRI...KANNAM.... KANGAL....ORU THULI SURUKKAM KOODA KIDAYAADHU ! PERFECT SHAPE !

IF SOMEONE WOULD HAVE WORN THIS SPECTS IT WOULD HAVE RESEMBLED BUS KANNAADI ! BUT IN OUR THALAIVAR's FACE, IT FITS LIKE T.

SEDHUKKI VAITHTHA SIRPAM POLA ULLA ANDHA AZHAGU MUGAM ! ANNALAE ! SUPER !!


COMING SOON ! ANNAN ORU KOIL @ YOUR NEAREST THEATER

http://www.youtube.com/watch?v=TpvdjRJxqLk

Russelldwp
20th November 2013, 10:28 PM
வாசுதேவன் சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நேற்றும் இன்றும் நான் கண்ட சுவையான நிகழ்ச்சி.

நேற்று என் வீட்டில் tution படிக்கும் ஒரு மாணவன் சென்ற வருடம் அவன் அப்பா விருப்பத்திற்கிண்ங்க கர்ணன் படம் பார்த்ததையும் அந்த படத்தின் பல காட்சிகளை
வர்ணித்ததையும் என் மனைவியிடம் விவரித்திருக்கிறான். கேட்பதற்கே மிக மகிழ்ச்சியாக உள்ளது.

இன்று காலை கோவையில் என் சொந்தக்காரரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். மாங்கல்ய தாரணம் முடிந்ததும் நாயனத்தில் நம் தலைவரின் பூமுடித்தாள் பாடலை
வாசித்தது என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.

தலைமுறைகள் கடந்து அனைவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நமது நடிகர் திலகம்

Ramachandran.C

SejkoRau
20th November 2013, 10:31 PM
ENDHA ANGLE LA PADAM EDUTHTHAALUM ELLA ANGLELAYUM SMARTA, MANLYA THERIYARA ORE ACTOR NAMMA NADIGAR THILAGAM ! THIS SONG IS ONE EXAMPLE !

SUIT IVARUKKU SUITAAGARAA MAADHIRI YAARUKKUM SUITAANADHU ILLAI

COMING SOON ! ANNAN ORU KOIL @ YOUR NEAREST THEATER

http://www.youtube.com/watch?v=VLMjv8LzMHY

uvausan
20th November 2013, 10:31 PM
"எல்லாம் நானே " கிருபா சார் - உங்கள் வயது புதிரை இன்று கணித மேதை ராமானுஜம் இருந்தாலும் விடை கிடைத்திருக்காது - சிரித்து சிரித்து எனக்கு இரண்டு வயது குறைந்துவிட்டது - இப்படியும் புதிர் போடலாமே --

(x-a)(x-b)(x-c) ------- (x-z) - what is the product sum total ? and that is your age -- ( ans : zero -- becauz there is (x-x) in the series )

இந்த புதிரை நாங்கள் "Team work"க்காக பயன் படுத்துவோம் - ஒரு Team ல் ஒரு நெகடிவ் இருந்தாலும் அந்த Team வெற்றி அடையமுடியாது - இரண்டு கைகள் சேர்த்தால்தான் சத்தம் வரும் - This thread is also like that - One person will suffice to negate everyone's timeless efforts -

In a T-E-A-M - there is no "I" , so எல்லோருடைய positive contributions ம் இல்லாமல் நாம் வெற்றி காண முடியாது. ஒன்று படுவோம் - வெற்றிக்கு வித்தாக இந்த திரி திகழட்டும் !!

அன்புடன் ரவி

:):smokesmile:

SejkoRau
20th November 2013, 10:39 PM
INDHA MAADHIRI BRITISH COLOR SHIRT / PANT YAARUKKU AMAYUM ? NADIGAR THILAGAM & DRESSING - NONE CAN TOUCH !

http://www.youtube.com/watch?v=ppy75ti0WtA

SejkoRau
20th November 2013, 10:43 PM
In a T-E-A-M - there is no "I[/U]" , so எல்லோருடைய positive contributions ம் இல்லாமல் நாம் வெற்றி காண முடியாது. ஒன்று படுவோம் - வெற்றிக்கு வித்தாக இந்த திரி திகழட்டும் !!

அன்புடன் ரவி

:):smokesmile:

A SONG DEDICATED FOR YOUR WISH RAVI SIR !

http://www.youtube.com/watch?v=Km6vI2wIqx4

SejkoRau
20th November 2013, 10:45 PM
YAAR YAARAI NINAITHU IPPADI PAADUVAARGAL ENDRU GANIKKAMUDIYAVILLAI...AANAAL..NICHAYAM INDHA PAADAL NINAIVIRKKU VARUM NAM THIRIYIN IPPODHAYA NIGAZHVUGALIL. ANBU ADHIGAMAANAALUM VAMBUDHAAN !

http://www.youtube.com/watch?v=buZTFc9WTzY

uvausan
20th November 2013, 10:47 PM
பார்த்தசாரதி சார் - திரியை வெற்றிகரமாக துவக்கிவிட்டு LTA எடுப்பது முறையா? , அடுக்குமா ?, தருமமா ? வரும் போது இரண்டு வாசு சார்களையும் , முரளி சாரையும் , நான் அவனில்லை கோபால் சாரையும் ,கார்த்திக் சாரையும் அழைத்து வாருங்கள்

அன்புடன் ரவி

:):smokesmile:

SejkoRau
20th November 2013, 10:51 PM
DEDICATING THIS EXCELLENT LYRIC FOR VASU SIR, GOPAL SIR, RAGHAVENDER SIR !!

FORGET ABOUT THE CASTING & PICTURISATION. VAALI SIR ! YOU ARE A PERFECT BUSINESS MAN !

http://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY

SejkoRau
20th November 2013, 10:53 PM
90 degree Angle - Watch the Samudriga Latchanam of Nadigar Thilagam !

Silaikku sedhukkiadhu pola ulla oru perfect nose !

Vincent's Camera - Amazing - adds fuel to the fire !


http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE

SejkoRau
20th November 2013, 10:56 PM
LET NADIGAR THILAGAM's LULLABY PUT THOSE WHOSE EYE LIDS LONGING FOR SLEEP ! LETS WATCH NT IN SMART TSHIRT OUTFIT !!

http://www.youtube.com/watch?v=KR_0wPPEctc

J.Radhakrishnan
20th November 2013, 11:10 PM
டியர் வாசு சார்,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தங்கள் பங்களிப்பால் நம் திரி மென்மேலும் பிரகாசிக்கட்டும்.

Murali Srinivas
21st November 2013, 12:52 AM
மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாசு!

இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

Murali Srinivas
21st November 2013, 12:53 AM
ரவி,

சீனி அல்லது சக்கரை என்று சொல்லப்படும் பொருள் எதனுடன் சேர்ந்தாலும் தித்திப்பது போல ஞான ஒளி பற்றி யார் எழுதினாலும் அது படிக்க நிச்சயம் சுவையாகத்தான் இருக்கும். அப்படிதான் இருந்தது உங்கள் தொடரும்.

உங்களுக்கு ஒரு யோசனை. ஏற்கனவே பலர் எழுதிய படத்தை பற்றி எழுதப் போகிறீர்கள் என்றால் கதையை திரைக்கதையை விட்டு விடுங்கள். உங்களுக்கு பிடித்த இரண்டு மூன்று காட்சிகளைப் பற்றிய வர்ணனையாக பதிவிடுங்கள். நிச்சயம் சிறப்பாக இருக்கும்.

ராகுல்,

நான் ஏற்கனவே சொன்னது போல் உங்கள் எழுத்தில் மெருகேறி வருகிறது. குருதட்சணையில் உங்கள் தமிழ் குரு "வாசுவின்" கைவண்ணம் இருக்கிறதா என்று தெரியவில்ல. என்றாலும் நன்றாக வந்திருக்கிறது. over hype செய்யாமல் neat பதிவு. வாழ்த்துகள்.

அன்புடன்

Murali Srinivas
21st November 2013, 12:58 AM
உண்மை உணரும் நேரம் - 1

சில நேரங்களில் இல்லை பல நேரங்களில் நமது மீடியாக்களில் தமிழ் சினிமா வரலாறும் தமிழக அரசியல் வரலாறும் தவறாகவே சித்தரிக்கப்படுகின்றன என்பது நம் அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக நமது நடிகர் திலகம் பற்றிய செய்திகள் என்றால் நிச்சயம் அடித்து சொல்லலாம் அது தவறாகவே இருக்கும். இன்றைக்கு வெளியான குமுதம் இதழில் வெளி வந்திருக்கும் செய்தியும் அந்த ரகத்தை செர்ந்ததுதான் பேசும் படம் என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் வெளிவந்திருக்கிறது. அதில் இடம் பெற்றவர்கள் பெருந்தலைவர், நடிகர் திலகம், எம்.எஸ்.வி. சந்திரபாபு மற்றும் எம்.ஜி.ஆர். அவர்கள். எழுதப்பட்டிருக்கும் செய்தி என்னவென்ற்றால் இந்தப் புகைப்படத்தை ஏ எல் எஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரிடம் காண்பித்தார்களாம். அவர் உடனே சொன்னாராம்.

இது சாந்தி திரைப்படம் வெளியாவதாக இருந்த நேரத்தில் அந்த படத்திற்கு தணிக்கை குழு அனுமதி தர மறுத்தார்களாம். காரணம் கதையின் போக்கு அப்படி இருந்ததாம். உடனே நடிகர் திலகமும் தயாரிப்பாளர் ஏ எல் எஸ் அவர்களும் தணிக்கை குழுவை சந்தித்து விளக்கமளித்தும் பலன் இல்லையாம். உடனே பெருந்தலைவரை அணுகினார்களாம். அவர் படத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னாராம். அவருக்காக சிறப்பு காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதாம். இதற்கிடையில் இந்த படத்திற்கு இப்படி ஒரு சிக்கல என்று கேள்விப்பட்டவுடன் எம்.ஜி.ஆர் அவர்களும் விரைந்து வந்தாராம். சிறப்பு காட்சியை அவரும் பார்த்தாராம். படத்தை பார்த்துவிட்டு பெருந்தலைவர் இதில் தடை செய்வதற்கு ஒன்றுமில்லையே என்று தணிக்கை குழுவினரிடம் சொல்லி படத்தை வெளியிட அனுமதி வாங்கி தந்தாராம். எம்.ஜி.ஆர் அவர்களும் பெருந்தலைவரின் இந்த முயற்சிக்கு உந்து சக்தியாக இருந்தாராம். இப்படி எழுதியிருக்கிறார்கள். எழுதியவர் மேஜர்தாசன்.

மேஜர்தாசன் பற்றியும் அவரின் விஸ்வாசம் எந்தப் பக்கம் என்பதும் அனைவருக்கும் தெரியும். அப்படி இருப்பதனால் அவருக்கு லாபம் கிடைக்கிறது என்றால் இருந்துவிட்டு போகட்டும். அதைப் பற்றி நமக்கு அக்கறையும் இல்லை. ஆனால் விஸ்வாசத்தை காட்டுகிறேன் பேர்வழி என்று தவறான தகவலை அதுவும் நடிகர் திலகத்தையும் உள்படுத்தி எழுதியிருப்பதுதான் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சாந்தி படத்திற்கு தணிக்கையில் சிக்கல் என்பதே இப்போது அவிழ்த்து விடப்படும் புது சரடு. சரி ஒரு வாதத்திற்காக அப்படி ஒரு சிக்கல் இருந்தது என்று வைத்துக் கொள்வோம். செய்தியோடு பிரசுரிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பார்ப்போம். எம்ஜிஆர் அவர்கள் மேக்கப்புடன் இருக்கிறார். காவல்துறை இன்ஸ்பெக்டர் யூனிபார்ம் அணிந்திருக்கிறார்.

இப்போது சாந்தி வெளியான காலகட்டம் எது என்று பார்ப்போம். 1965-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி. படம் வெளியாவதில் சிக்கல் என்றால் எப்போது இருந்திருக்க வேண்டும்? 1965 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இருந்திருக்கவேண்டும். அந்த நேரத்தில் எம்ஜிஆர் அவர்கள் காவல்துறை அதிகாரியாக ஏதாவது படத்தில் நடித்துக் கொண்டிருந்தாரா என்று பார்த்தோமென்றால் என் சிற்றறிவுக்கு எட்டியவரை இல்லை. அந்த காலக்கட்டத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்த என் கடமை 1964 மார்ச் மாதமே வெளியாகி விட்டது. அதன் பிறகு அவர் அப்படி ஒரு வேடத்தை ஏற்றது முகராசி படத்தில்தான். அது வெளியானது 1966 பிப்ரவரி 18 என்று நினைவு. அது மட்டுமல்ல முகராசி படத்தைப் பொறுத்தவரை அந்தப் படம் 11 அல்லது 12 நாட்களில் எடுக்கப்பட்டதாக சொல்வார்கள். அந்த செய்தி பல இதழ்களிலும் வந்திருக்கிறது. அப்படியானால் உண்மை என்ன?

இந்தப் புகைப்படத்தில் தோற்றமளிக்கும் எம்ஜிஆர், முகராசி படப்பிடிப்பிலிருந்து வந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிதான். ஆனால் அது சாந்தி பட சிறப்புக் காட்சி அல்ல. 1966 ஜனவரி 26 அன்று நடிகர் திலகம் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதற்காக நடத்தப்பட்ட பாராட்டு விழா விருந்தில்தான் எம்ஜிஆர் முகராசி படப்பிடிப்பிலிருந்து வந்து கலந்துக் கொண்டிருந்தார். சரியான காலக்கட்டம் சொல்ல வேண்டுமென்றால் ஜனவரி 27 முதல் பிப்ரவரி முதல் வாரம் வரை உள்ள காலக்கட்டம்.

உண்மை இவ்வாறிருக்க சம்பந்தமேயில்லாமல் சாந்தி படத்தை இழுத்திருப்பதும், சிவாஜி படம் வெளிவர எம்ஜிஆர் உதவி செய்தார் என்று ஒரு புனித பிம்பத்தை உருவாக்குவதன் மூலமாக மேஜர்தாசன் அடையப் போகும் லாபம் என்ன? இதில் 77 வயதான ஒருவர் இதை சொல்வது போல் வடிவமைத்து அந்த பொய்யை அந்த பெரியவர் தலையில் கட்டுவது எதில் சேர்த்தி?

இதில் நடக்கும் மற்றுமொரு மக்களை முட்டாளாக்கும் விஷயத்தையும் சொல்ல வேண்டும். மேஜர்தாசன் எழுதுவது போல் இவர்கள் இது போன்ற புகைப்படத்தை தேடி கண்டுபிடிப்பதில்லை. சினிமாத்துறையில் உள்ளவர்களிடம் சென்று இது போன்ற புகைப்படங்கள் இருக்கிறதா என்று விசாரித்து அதை அவர்களிடம் இருந்து வாங்கி அதன் பின்னணியையும் கேட்டுக் கொண்டு இவர் அந்தப் புகைப்படத்தை கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடித்தது போல் எழுதி விடுவார். இதற்கு அத்தாட்சி நடிகரும் நமது ஹப்பருமான மோகன்ராம் அவர்களின் தந்தையார் வி.பி.ராமன் அவர்கள் பிரபலங்களுடன் இருக்கும் படத்தை போட்டுவிட்டு மோகன்ராம் அவர்கள் அந்தப் படத்தை பற்றிய பின்னணியை சொல்வது போல் சில காலம் முன்பு வெளியாகியிருந்தது. ஆனால் உண்மையில் மோகன்ராம் சாரிடமே இந்த புகைப்படத்தை வாங்கி அதன் பின்னணியையும் எழுதிவிட்டு தான் என்னமோ அந்தப் புகைப்படத்தை எங்கிருந்தோ தேடி பிடித்த மாதிரி இந்த மேஜர்தாசன் எழுதினார் என்பதை மோகன்ராம் அவர்களே தன Facebook wall-ல் எழுதியிருந்தார்.

புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி படிக்கும் லட்சக்கணக்கான மக்களை இப்படி தவறான தகவல் கொடுத்து ஏமாற்றுவதில் இவருக்கு என்ன லாபமோ?

உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை என்பதை இப்படிப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு!

அன்புடன்

இதை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு மேலதிக தகவல். இதே புகைப்படம் சென்ற அக்டோபர் மாதம் சினிமா ஸ்பெஷல் இதழில் வெளியாகியிருக்கிறது. அதில் சரியான தகவலை விஜயன் அளித்துள்ளார்.


அன்புடன்

chinnakkannan
21st November 2013, 02:00 AM
//உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை என்பதை இப்படிப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு! //
வாருங்கள் முரளி சார்..

தவறான செய்திகளைப் பரப்புபவர்களை நினைத்தால்..கஷ்டமாகத் தான் இருக்கிறது..ஏன் இப்படி..

Subramaniam Ramajayam
21st November 2013, 02:32 AM
murali sir welcome You have given very correct reply to majordasan about SHANTHI FILM contraversy of kumudam issue which is puerly an imaginary news to get cheap publicjty for VERY WELL KNOWN REASONS.
HAPPY BIRTHDAY WISHES AND BLESSINGS TO VASU AND GANPAT SIRS.
REGARDING The ongoing 12th edition things are goingvery well indeed but in a slow speed.
ravi and rahul anaysyses are interesing to read.

Gopal.s
21st November 2013, 04:33 AM
முரளி,

அப்படி போடு அரிவாளை. இங்கே ஹிஸ்டோரியன் என்று சொல்லி அலைபவன் எல்லாம் வெத்து வேட்டு.மேஜர் தாசன் பயங்கர fraud .ஆர்.பீ.ராஜநாயகம் கூட இவரை பற்றி வருத்த பட்டு எழுதியிருந்தார்.

வாசு சார்,
உங்கள் பிறந்த இந்நன்னாளில் நீங்கள் இங்கு உங்கள் 4000 ஆவது லேண்ட்மார்க் பதிவை இட வேண்டும்.

ராகுல்,
உன் குரு தட்சிணை ,வெரி interesting .உன் பதிவுகள் மெருகேறி உள்ளன.வாழ்த்துக்கள்.

உத்தம புத்திரன்,
தனி ஆளாக திரியை தூக்கி பிடிக்கிறீர்கள் .நன்றி.

ரவி சார்,
நான் கலந்து கொண்டுதானே உள்ளேன்?

Subramaniam Ramajayam
21st November 2013, 05:12 AM
டியர் ராகுல்ராம் - நீங்கள் பிறக்கும் முன் வந்த படம் இது - பத்மினியின் காலில் நம் தலைவர் விழுவதை அந்த சமயத்தில் இருந்த ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை , படத்தையும் சேர்த்துதான் .. படம் சுமாரான வெற்றியை அடைந்தாலும் , நல்ல படிப்பினையை சொன்ன படம் - ஒரு மாணவன் தன குருவிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இன்றும் எடுத்துரைக்கும் படம் . உங்கள் எழுத்தினால் இந்த படம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது - நல் வாழ்த்துக்கள்

Ravi
:):smokesmile:

Padmini yin kalil thalaivar vizundhu namaskaram seivathai 200 percent digest panna mudiya villai, i understand the above scene was removed from second week of release. raghavender murali pl confirm,
as i have not seen after that. otherwise good movie logically,

Russelluvd
21st November 2013, 07:47 AM
உத்தம புத்திரன்,
தனி ஆளாக திரியை தூக்கி பிடிக்கிறீர்கள் .நன்றி.


யப்பா கலகம்

இதானே வோனாங்குறது. அபப நானு.செமினி திரிய தூக்கி புடிக்கறத விடவா.

ScottAlise
21st November 2013, 07:52 AM
என் பதிவை பாராட்டிய அன்பர்கள்
திரு ராகவேந்திரன் சார் , திரு சின்னகண்ணன் சார் , ரவி சார் , முரளி ஸ்ரீநிவாஸ் சார் , கோபால் சார் , சுப்ரமணியம் ராமஜயம் சார்

அனைவர்க்கும் நன்றி

முரளி சார் ,

கவரிமான் பதிவில் மட்டும் வாசு சாரின் திருத்தல்கள் இருந்தது
மீதி இரண்டு பதிவில் குறைகளுக்கு , பிழைக்கு நானே பொறுப்பு

அதில் உள்ள நிறைகளுக்கு நீங்கள், வாசு சார் , ராகவேந்திரன் சார் ,கோபால் சார் , சாரதா மேடம் , மற்றும் முதல் பாகத்தில் இருந்து பாங்கு கொண்ட அனைவரையும் சாரும் (உங்கள் எழுதுகளால் கவரப்பட்டு பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன் )

Russelluvd
21st November 2013, 07:57 AM
வாசுதேவ அண்ணாத்தே

நீயெல்லாம் பெரிய ஆளு.மொத தபா ஒனக்கு கடுதாசி எழுதுறேன்.அல்லாரும் ஒன்னப் பத்தி எளுதுகினாங்க இன்னைக்குதான் புறந்துக்குனியா.ஹாப்பிபா.நானு சின்னப் புள்ள.இருந்தாலும் வாழ்த்திகினேன்பா.என் சார்பா கேக்கு வாங்கிக்குன்னு துன்னுக்கோ.அப்பால பில்லு செட்டில்மெண்ட்டு பண்ணிப் பூட்றேன்.மக்கா கூவிக்குனு கெடக்குதே ஏதோ நாலாயிரம் அன்ஜாயிரம்ம்னு.ஏதாவது போடேன் கண்ணு

ScottAlise
21st November 2013, 07:57 AM
முரளி சார்

நேட்ட்று குமுதத்தில் படித்தேன் சார் , திரியில் போடலாம் என்று இருந்தேன் நல்ல வேலை உண்மை போட்டு உடைத்து எங்களை தெளிவு அடைய செய்ததுக்கு நன்றி

ScottAlise
21st November 2013, 07:59 AM
Expecting vasu sir to come back

http://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8

Russelluvd
21st November 2013, 08:22 AM
ராகுலு கண்ணா

குருதட்சன படத்தப் பத்தி நல்லா சொல்லிகின செல்லம்.படம்லாம் நல்லா காட்டிபுட்டியே.திரியோட அட்த்த சூப்பர்ஸ்டாரு நீதாம்பா.நல்லா ஒழை ராசா

Russelluvd
21st November 2013, 08:39 AM
ரவி சாரு

ஞானா ஒளி படத்தப் பத்தி கொஞ்சங்கொஞ்சமா எளுதிஇருந்தியே ரொம்ப டக்கரு சாரு.அதவுட வுடாம சிண்ட பிச்சுக்காம அல்லாரும் ஒத்துமையா கெடக்கனும்னு கூவிக்கினு இம்ச பட்டுக்கினு கெடக்குறியே.அநியாயத்துக்கு அப்பிராணி கணக்கா இருக்கியே.சொக்கத் தங்கம் கண்ணு நீயி

KCSHEKAR
21st November 2013, 10:20 AM
டியர் வாசுதேவன் சார்,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

KCSHEKAR
21st November 2013, 10:35 AM
பார்த்ததில் பிடித்தது
அத்தியாயம் -3 -குரு தட்சணை
தில்லானா மோகனாம்பாள் என்ற மாபெரும் காவியத்துக்கு பிறகு அதே டீம் உடன் நடிகர் திலகம் பணியாற்றிய படம்
இதில் ஜெயலலலிதா, மேஜர் புது வரவு (தில்லானா மோகனாம்பாள் கூட்டணியில்)
டியர் ராகுல்ராம்
குருதட்சணை பற்றி சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள். முரளி சார் சொன்னமாதிரி ரொம்ப Hype இல்லாமல் யதார்த்தமான விமர்சனமாக அதே சமயத்தில் சரியான கோணத்தில் பதிவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

vasudevan31355
21st November 2013, 10:35 AM
4000 ஆவது சிறப்புப் பதிவு

ஹிட்லர் உமாநாத் (26.01.1982) ஒரு முழுமை அலசல் (5 பாகங்கள்)

பாகம் 1

http://i1.ytimg.com/vi/OkdMaHIL1Y8/hqdefault.jpg

1982-ஆம் வருடம் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று வெளி வந்த படம்.!? அதற்கு முந்தைய வருடம்

மோகன புன்னகை
சத்திய சுந்தரம்
அமர காவியம்
கல் தூண்
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
மாடி வீட்டு ஏழை
கீழ் வானம் சிவக்கும்

என்று 7 படங்களைத் தந்திருந்தார் நடிகர் திலகம். இதில் டாக்டர் பாலகிருஷ்ணா தயாரித்த 'சத்திய சுந்தரம்', மேஜர் முதலில் இயக்கிய 'கல்தூண்', முக்தாவின் 'கீழ்வானம் சிவக்கும்' மூன்றும் மிகப் பெரிய ஹிட். விஸ்வநாதன் கம்பைன்ஸ் கோபியின் 'அமரகாவியம்', கலைஞரின் 'மாடிவீட்டு ஏழை' இரண்டும் சுமாராகப் போன நிலையில் ஸ்ரீதரின் 'மோகனப் புன்னகை' நம்மை அவ்வளவாக புன்னகைக்க விட வில்லை. புஷ்பாராஜன் (அதான் சார்... நடிகை புஷ்பலதாவும், அவர் கணவர் நடிகர் ஏ.வி.எம்.ராஜனும்) தயாரித்த 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' பி,சி சென்டர்களில் வசூலை வாரிக் குவித்தது.

ஆக நடிகர் திலகத்தின் வெற்றிக்கொடி 1952 இலும் சரி... 1981-இலும் சரி... அதற்குப் பிறகும் சரி... தமிழ்த்திரையுலக வானில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டே இருந்தது. அவரின் வெற்றியோட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. (அது என்றைக்கு நின்றது?)

இந்த நிலையில் 'ஹிட்லர் உமாநாத்' வெளிவந்தது. 1981 தீபாவளி வெளியீடாக வந்து வசூல் பிரளயம் நடத்திய டாக்டர் துவாரகநாத்தைத் தொடர்ந்து ('கீழ்வானம் சிவக்கும்' 26.10.1981) கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து ஹிட்லர் வந்தார்.

ஹிட்லர் என்றாலே விசேஷம்தானே! 1976 க்குப் பிறகு, அதாவது 'சித்ரா பவுர்ணமி' இயக்கிய பிறகு 5 வருட இடைவெளிக்குப் மேல் இயக்குனர் மாதவன் இயக்கத்தில் வெளிவந்த விசேஷம், அடுத்தது நமது தலைவர் இதுவரை வைக்காத ஹிட்லர் மீசை வைத்து வித்தியாசமான கெட்-அப்பில் நடித்த விஷேசம், மகேந்திரனின் கதைக்கு மௌலி திரைக்கதை அமைத்து வசனம் எழுதிய விசேஷம், PVT புரடக்ஷன்ஸ் ('துணிவே துணை' புகழ்) தயாரிப்பில் நடிகர் திலகம் நடித்த படம் என்று விசேஷம், சுருளிராஜனின் தலைவர் புகழ் பாடும் வில்லுப்பாட்டு என்று சில விசேஷங்கள்.

சரி! நம் ஹிட்லர் உமாநாத்தின் கதை என்னவென்று பார்க்கலாம்.

ஊட்டியில் வசிக்கும் உமாநாத் (நடிகர் திலகம்) தன் முறைப்பெண் லட்சுமியை (கே.ஆர்.விஜயா) மணந்து வாழ்க்கையை நடத்த கஷ்டப்பட்டு பல வித கூலி வேலைகள் செய்கிறார். உமாநாத் ஒரு அப்பாவி, அதிக படிப்பறிவில்லாதவர் என்று பலரும் அவரை ஏய்க்கிறார்கள். முட்டாள், கோழை என்று கேலி பேசுகிறார்கள். ஆனால் உமாநாத்திற்கு அதைப் பற்றி கவலைப்படக் கூடத் தெரியாது. உமாநாத்தின் சொத்து அவரது அருமை மனைவியும், அவர் மகளும், (பேபி சாரதாப்ரீதா. பின்னாட்களில் சில படங்களில் கதாநாயகியாகத் தலைகாட்டி பின் காணாமல் போனவர்) அவர் ஹிட்லர் மீசையும் மட்டுமே.

லட்சுமி ஓரளவிற்குப் படித்த அறிவாளி. சுய கௌரவம் கொண்ட துணிச்சல்காரியும்கூட. கணவனை கேலி பேசும் கூட்டத்தை அலட்சியப்படுத்தி கணவன் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைக்கிறாள். தன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையிடம் சென்று கணவனுக்காக உதவி கேட்கிறாள். 'முட்டாளை என்னை மீறி மணந்து கொண்டாயே' என்று அவள் தந்தை உதவி செய்ய மறுக்கிறார். தன் கணவனை பெரிய ஆளாக்கித் தீருவேன் என்று லட்சுமி சபதமெடுத்து தன்னுடைய பள்ளி வாத்தியார் (வி.எஸ்.ராகவன்) செய்த உதவி மூலம் கணவனை சென்னைக்கு அழைத்து செல்கிறாள். வாத்தியார் சென்னையில் தன் நண்பன் மானேஜராக வேலை செய்யும் கம்பெனி ஒன்றில் உமாநாத்தை சேர்க்க ஒரு சிபாரிசுக் கடிதத்தையும் லட்சுமியிடம் கொடுத்தனுப்புகிறார்.

கம்பெனியின் சேர்மன் ஜாபரி (என்.எஸ். ராம்ஜி) ஒரு ஜென்டில்மேன். வேலை தேடி வரும் உமாநாத்தை காக்க வைத்து, அவர் பொறுமையை டெஸ்ட் செய்து, உமாநாத் அதில் வெற்றி பெற்ற பின் அவரை தினக்கூலியாக பணியில் அமர்த்திக் கொள்கிறார். உமாநாத்தும் தன் வேலைகளைப் பொறுப்பாகப் பார்க்கிறார். தன்னுடைய படிப்பறிவின் மூலமும், திறமை மூலமும் கணவன் செய்யும் வேலைகளுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறாள் லட்சுமி. தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கணவனுக்கு ஊட்டி அவர் நிலையைப் படிப்படியாக உயர வைக்கிறாள் அவள். கம்பெனி பற்றிய விஷயங்களை அக்கறையோடு ஆர்வத்துடன் கற்றுத் தெளிகிறார் உமாநாத்.

லட்சுமியின் துணையோடு தன் நியாயமான உழைப்பையும் கொடுத்து தினக்கூலியில் இருந்து ஆபீஸ் பியூனாக இருந்த உமாநாத் இப்போது ஹெட் பியூனாகிறார். தன் உண்மையான உழைப்பால் சேர்மன் ஜாபாரியின் அன்புக்குப் பாத்திரமாகிறார் உமாநாத். பின் மற்றவர்கள் பொறாமைப்பட அசிஸ்டன்ட் மானேஜராகவும் பிரமோட் செய்யப்படுகிறார். ஒரு கட்டத்தில் தொழிலாளர் சிலரின் பொறுப்பற்ற தன்மையினால் பேக்டரி இழுத்து மூடப்படும் நிலைக்கு நஷ்டத்தில் தள்ளப்பட, லட்சுமியின் சொல்படி கம்பனியை நஷ்டத்திலிருந்து தான் காப்பாற்றுவதாக சேர்மன் ஜாபரியிடம் கூறுகிறார் உமாநாத். கம்பெனியின் நஷ்டத்திற்கு காரணமானவர்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறார். சொன்னபடி ராப்பகலாக உழைத்து, மற்றவர்களையும் உழைக்க வைத்து கம்பெனியை நஷ்டத்திலிருந்து காப்பாற்றியும் விடுகிறார். இதனால் அவருக்கு ஒர்க் மானேஜராக பதவி உயர்வு கிட்டுகிறது.

சுயநலப் பேய்களான தொழிற்சங்க தலைவர்களின் முகமூடியை தொழிலாளர்களிடம் தோலுரித்துக் காட்டுகிறார் உமாநாத். அது மட்டுமல்லாமல் தொழிலார்களின் குறையை அவர்களுடன் நேரிடையாகவே கலந்து பேசி அவர்களுக்குத் தேவையான போனஸ், மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தந்து அவர்களின் நன்மதிப்பையும் பெறுகிறார். இப்போது அவர் மேனஜிங் டைரக்டர்.

நடப்பு சேர்மன் ஜாபரி ரிடைர்ட் ஆகும் தருணம் வருகிறது. போர்டு ஆப் டைரக்டர்ஸ் முடிவின் படியும், ஜாபாரியின் ஆதரவுடனும் கம்பெனிக்கு சேர்மனாகவே ஆகி விடுகிறார் உமாநாத்.

இப்போது கம்பெனிதான் உமாநாத். உமாநாத்தான் கம்பெனி. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் கம்பெனி, பிசினஸ் என்று அதிலேயே மூழ்கி விடுகிறார் உமாநாத். இப்படியே காலங்கள் உருண்டோட மகள் சியாமளா (புதுமுகம் சரோஜா) வளர்ந்து பெரியவளாகிறாள். குடும்பத்தைக் கூட கவனிக்க நேரமில்லாமல் பிசினஸ், பிசினஸ் என்று ஓடிக்கொண்டே இருப்பதால் மகளை கவனிக்க முடியாமல் மகளின் வெறுப்புக்கு ஆளாகிறார். லட்சுமிக்கும் தன் கணவர் முன்னை மாதிரி இல்லையே என்ற பெரிய மனக்குறை.

ஒய்வு பெற்ற பழைய சேர்மன் ஜாபரி உமாநாத்தைப் பார்க்க ஒருநாள் ஆபீஸ் வருகிறார். தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் குதிரை ரேஸில் விட்டு விட்டு ஒரு வேளை சாப்பாட்டுக்கு திண்டாடுவதாகக் கூறும் அவர் உமாநாத்திடம் கம்பெனியில் தன் மகன் மதுவிற்கு ('கல்தூண்' சதீஷ்) ஒரு வேலை போட்டுத் தருமாறு கேட்கிறார். பொறுப்பற்றுத் திரியும் அவனை நல்வழிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறார்.

உமாநாத் அவர் மேல் உள்ள மரியாதையின் காரணமாகவும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது ஜாபாரிதான் என்ற நன்றி உணர்ச்சியின் காரணமாகவும் அவர் மகனுக்கு கடைநிலை ஊழியராக வேலை போட்டுத் தருகிறார். (ஏனென்றால் அவன் பொறுப்பானவனாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக) ஆனால் மதுவோ திமிர் பிடித்தவன். தன் தந்தையால் முன்னுக்கு வந்த உமாநாத்தின் வளர்ச்சி பொறுக்காமல் உமாநாத்தின் பழைய எதிரிகளுடன் (சத்யராஜ்) கைகோர்த்து யூனியன் லீடராகி, அவருக்கு பிரச்சனைகள் தர ஆரம்பிக்கிறான். அதுமட்டுமல்ல. மது உமாநாத்தின் மகள் சியாமளாவை காதலிக்க அவளும் மதுவை விரும்புகிறாள்.

குடும்பத்தை கவனிக்க நேரமில்லாத உமாநாத் ஒருமுறை மகள் சியாமளா காலேஜ் முடிந்து லேட்டாக தன்னுடைய தோழியின் அண்ணனுடன் வீட்டுக்கு காரில் வந்து இறங்குவதைப் பார்த்து கண்டிக்கிறார். அவரை எடுத்தெறிந்து பேசும் மகள் தூக்க மாத்திரைகளை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறாள். அதைத் தடுக்கும் உமாநாத் மகளின் செய்கை கண்டு நிலை குலைந்து போகிறார்.

ஆபீஸ் வேலைகள் ஒருபுறம், கணவனின் அன்புக்காக ஏங்கும் மனைவி லட்சுமி ஒருபுறம், அடங்காத மகளின் திமிர்த்தனம் ஒருபுறம், ஆபீஸ் எதிரிகள் ஒருபுறம், தனக்குத் தொல்லை கொடுக்கும் மது ஒருபுறம், சாஞ்சா சாயுற பக்கமே சாயுற செம்மறி ஆட்டுக் கூட்ட, கேட்பார் பேச்சை கேட்கும் தொழிலாளிகள் ஒருபுறம் என்று பல சிக்கல்களுக்கிடையே மாட்டி நிம்மதி இழந்து தவிக்கிறார் உமாநாத். ஆனால் நம்பிக்கையையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் மட்டும் அவர் விடவே இல்லை.

இறுதியில் உச்சக்கட்டமான அதிர்ச்சி உமாநாத்துக்கு. மகள் சியாமளா உமாநாத்துக்குத் தெரியாமலேயே மதுவை கோவிலில் வைத்து மணந்து கொள்கிறாள். தாய் லட்சுமியும் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்கிறாள். உமாநாத்துக்கு எல்லை மீறப் போன இந்த விஷயத்தை தெரியப்படுத்த லட்சுமி எவ்வளவோ போராடுகிறாள். ஆனால் சதா ஆபீஸ் வேலையில் மூழ்கியிருக்கும் உமாநாத் இந்த விஷயத்தைக் கேள்விப்பட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார் வேலைப்பளுவின் காரணமாக.

பின்னர் உமாநாத்துக்கு விஷயம் தெரியவர, கல்யாணத்தை தன்னிச்சையாக முன்னின்று நடத்திய தன் மனைவி லட்சுமியை கடுமையாகக் கோபிக்கிறார். விஷயம் விபரீதமாகப் போனது உமாநாத்திற்கு மட்டுமே தெரியும்.(ஒருமுறை மது தன்னை அவமானப் படுத்தும்போது அவனை அடித்துவிடும் உமாநாத் அவனை ஹாஸ்பிட்டலில் கொண்டு சேர்க்க அவன் வயிற்றில் கட்டி வளர்வது அப்போது டாக்டர்கள் மூலமாக அவருக்குத் தெரிய வரும்) ஆமாம். மது வயிற்றில் ஒரு கட்டி வளர்கிறது. அவன் ஒரு கேன்சர் பேஷன்ட். தன் மகள் கூடிய விரைவில் விதவையாகப் போகும் அவலத்தை நினைத்து மனைவியிடம் கூறிக் கதறுகிறார் உமாநாத். அதனால்தான் அந்த திருமணத்திற்கு தான் சம்மதம் தரவில்லையென்றும் எடுத்துரைக்கிறார் அவர்.

லட்சுமி இதைக் கேட்டு துடித்துப் போகிறாள். உமாநாத் எல்லாவற்றையும் மறந்து விட்டு, ஆபீஸ் வேலைகளையும் துறந்து விட்டு, மதுவை ஹாஸ்பிட்டலில் சேர்த்து, வெளிநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களை வரவழைத்து, இரவு,பகல் அவன் கூடவே இருந்து, மதுவை கவனித்து, அவன் உயிரை காப்பாற்றி, தன் மகளுக்கு மாங்கல்ய பலத்தைத் தருகிறார். மதுவும் தன்னை உயிர் பிழைக்க வைத்த உமாநாத்தின் அன்பால் திருந்துகிறான். மகளும் அப்பாவை புரிந்து கொண்டு அன்பு செலுத்துகிறாள்.

இப்போது இன்னொரு அதிர்ச்சி செய்தி வருகிறது. உமாநாத் கம்பெனிக்காக வாங்கிய புது சரக்குக் கப்பல் சிங்கப்பூரிலிருந்து வரும் போது மூழ்கி விட்டது என்பதுதான் அது.

இப்போதுதான் பெருத்த அடியிலிருந்து மீண்ட உமாநாத்திற்கு அதற்குள் மேலும் ஒரு அடி. உமாநாத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொள்கிறார். அதைப் பார்த்து மனைவி லட்சுமி பதறுகிறாள். உள்ளே துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் கதவு திறக்க உமாநாத் ஹிட்லர் போல இறுதி முடிவெடுக்க தான் ஒன்றும் கோழையில்லை என்று சொல்வதைப் போல ஹிட்லரின் புகைப்படத்தை சுட்டுத் தள்ளி விட்டு வெளியே வருகிறார்.

கப்பல் மூழ்கியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கம்பெனியை இழுத்து மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்று தொழிலாலர்களிடையே செய்தி பரவுகிறது. உமாநாத்துக்கு ஏற்பட்ட இந்தப் பேரிடியை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களைத் தூண்டி விடுகின்றனர் உமாநாத்தின் பழைய விரோதிகள். தொழிலாளிகள் உமாநாத்தை தாக்க வீட்டுக்குக் கிளம்ப, உமாநாத் தான் தொழிலாளிகளுக்காக தன் குடும்பத்தையே மறந்து உழைத்ததை அவர்களுக்கு நினைவு படுத்துகிறார். கம்பெனியின் வளர்ச்சிக்காக தான் பட்ட துன்பங்களைக் கூறுகிறார்.

கவிழ்ந்து போன கப்பலை தான் வாங்கவில்லை என்றும், கப்பலை வெள்ளோட்டம் பார்த்த பின்தான் அதை வாங்க ஒப்பந்தம் செய்ய இருந்ததாகவும், அதற்குள் கப்பல் மூழ்கி விட்டதால் ஒரு நஷ்டமும் கம்பெனிக்கு இல்லை என்றும் தொழிலாளிகள் வயிற்றில் பால் வார்க்கிறார். உமாநாத்தின் சாதுர்யமான புத்திசாலித்தனத்தைக் கண்டு அனைவரும் வியக்கின்றனர். தொழிலாளர் கூட்டம் மீண்டும் உமாநாத் புகழ் பாடுகிறது. தொழிலாள விரோதிகளை விரட்டுகிறது.

உமாநாத் ஹிட்லர் போல தைரியமாக தனக்கு வந்த அத்தனை பிரச்சனைகளையும் தன் மனோதிடத்தால் நேர் கொண்டு போராடி அத்தனைகளிலும் வெற்றி வாகை சூடுகிறார். அடால்ப் ஹிட்லர் போல இறுதியில் நம் உமாநாத்திற்குத் தோல்வி இல்லை. ஹிட்லர் போல கொடுங்கோலனும் இல்லை. ஹிட்லர் மீசையை மட்டுமே வைத்த உமாநாத் ஹிட்லரின் குணங்களைக் கொண்டிருக்கவில்லை. ஹிட்லரின் கண்டிப்பு மட்டுமே உமாநாத்திடம் இருந்தது. ஆனால் நல்லது நடக்க மாத்திரமே அது பயன்பட்டது. அதனால் நம் உமாநாத் ஹிட்லரையே வென்றவராகிறார்.

குடும்பத்தை சரிவர கவனிக்காத மன உறுத்தல் இருந்த உமாநாத் இறுதியாக தன் வாழ்நாளை தன் குடும்பத்தினருடன் கழிக்க முடிவெடுத்து கம்பெனியிலிருந்து ஒய்வு பெறுகிறார். இப்போது பழைய ஊட்டி உமாநாத்தாக அவரைப் பார்க்க முடிகிறது. பாசமுள்ள உமாநாத்தாக அவரை பார்க்க முடிகிறது. நிம்மதியான உமாநாத்தாக அவரை பார்க்க முடிகிறது. சந்தோஷமான உமாநாத்தாக திரும்பவும் தன் மனைவியுடன் ஊட்டிக்கே கலகலப்புடன் திரும்புகிறார் அவர்.

முடிவு சுபமே!

இந்த ஹிட்லர் உமாநாத் முன்னேற்றத்திற்கான ஒரு பாடம்.

vasudevan31355
21st November 2013, 10:36 AM
பாகம் 2

இனி ஹிட்லர் உமாநாத்தாய் கொடி நாட்டியவர் பற்றி

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/hitlerumanathfullmp4_006929840_zpsc9475623.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/hitlerumanathfullmp4_006929840_zpsc9475623.jpg.htm l)

அப்பாவி உமாநாத்தாய் ஹிட்லர் மீசை, கழுத்தில் தொங்கும் மப்ளர், கையில் குடை, ஊட்டி கோட் சகிதம் நடிகர் திலகம் ஓஹோ! வெகு வித்தியாசமான பாத்திரம். உருவ அமைப்பும் கூட. படத் தொடக்கத்திலிருந்து இறுதிக் காட்சி வரை நடிப்பில் செய்யும் சாகசங்கள் வழக்கம் போல ஏன் வழக்கத்தை விடவும் அதிகமாக நம்மை ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கின்றன.

ஏழை அப்பாவியாய் ஒன்றும் தெரியாமல் அனைவரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகும் போதும் சரி... மனைவியின் அறிவுரைகளை அடக்கத்துடன் கேட்டு அதன்படி நடக்கும் போதும் சரி... படிப்படியாய் ஆபீஸில் பதவி உயர்வு நிலைகளை சாதுர்யமான புத்திசாலித்தனத்தால் அடையும் போதும் சரி... தன்னை வாழ வைத்த தன் முதலாளியிடம் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதையிலும் சரி... பிரச்னைகளை அழகாக சந்தித்து எதிர் கொள்ளும் போதும் சரி... மகளிடம், மனைவியிடம் கண்டிப்பும், பாசமும் காட்டும் போதும் சரி... தொழிலாளர்களிடையே சுமூகமாக அதே சமயம் கண்டிப்பாக நடந்து கொள்ளும் விதத்திலும் சரி!

அத்தனை பரிமாணங்களிலும் ஒவ்வொரு காட்சியிலும் வைடூரியம் போல் ஜொலிக்கிறார் நடிகர் திலகம்.

ஊட்டியில் அவர் வயிற்றுப் பிழைப்புக்காக கூலி வேலைகள் செய்வதும், அதில் கூட சரியாகக் கூலி கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டு அவர் புலம்புவதும் பரிதாபம்.

வேலை கேட்டு செல்லும் போது ஆபீஸில் முதலாளி இவரை வேண்டுமென்றே பொறுமைசாலிதானா என்று சோதிக்க வெளியே அமரச் செய்து நாள் முழுக்க காக்க வைக்க, கல்லுளி மங்கன் மாதிரி விடாப்பிடியாக அடுத்தநாள் கூட சேரில் அமர்ந்திருந்து வேலையைப் பெறுவது இந்த ஆள் சாதாரண மனிதர் அல்ல... இவர் உறுதியான தன்னம்பிக்கையால் எதையும் சாதிக்கவல்ல ஹிட்லர் என்பதை ஆரம்பத்திலேயே அழுத்தமாக நமக்கு புரிய வைத்து விடுகிறது.

தினக்கூலியாக, பியூனாக, ஹெட் பியூனாக, அசிஸ்டன்ட் மேனஜராக, ஒர்க் மேனஜராக, மேனஜிங் டைரக்டராக, கம்பெனியின் சேர்மேனாக ஹிட்லர் படிப்படியாக உழைப்பாலும், அறிவாலும், திறமையாலும் முன்னேறுவது நடிகர் திலகத்தின் அனுபவ முத்திரைகள் மூலம் கன்டின்யூட்டி கெடாமல் கலக்கலாக காட்டப்பட்டு இருக்கிறது.

http://i1.ytimg.com/vi/37KlpNUujzA/hqdefault.jpg

தன் மனைவியை சில காலிப்பயல்கள் வம்புக்கிழுத்து கையைப் பிடித்து இழுக்க, அப்பாவி ஹிட்லராக எதுவும் செய்ய இயலாதவராய் 'வேண்டாண்ணா விட்டுடுங்கண்ணா'... என்று கெஞ்சும் போதும், ரோட்டில் போகும் யாரோ ஒரு நல்லவர் இவர் மனைவியைக் காலிப் பயல்களிடமிருந்து காப்பாற்றி 'மனைவியைக் காப்பாற்ற முடியாத நீயெல்லாம் ஒரு மனுஷனா?' என்று மானத்தை வாங்க, கைகளைப் பிசைந்தபடி ஒன்றும் பேச முடியாதவராய் வெட்கித் தலை குனிவதும், பின் இவருடைய கையாலாகாத தனத்தை எண்ணி வீட்டில் மனம் குமுறி மனைவி கொட்டித் தீர்த்தவுடன் தாங்க மாட்டாமல் தன் இயலாமையை நினைத்து, மண்ணெண்ணையை தன் மேலே ஊற்றி கொள்ளிக் கட்டையால் தன்னை எரித்துக் கொள்ள முற்படும்போதும் பரிதாப அலைகளில் நம்மை மூழ்கடித்து விடுகிறார் இந்த நடிப்புக் கடல்.

அதே சமயம் மனைவியின் அறிவுரையினால் வெகுண்டெழுந்து, அதே காலிகளை மொத்தோ மொத்தென்று மொத்தி துவம்சம் செய்து, மனைவியையும் விளக்குமாறால் விட்டு அவர்களை சாத்தச் சொல்வது வீரமான விவேகம்.

முதலாளியின் மனதை தன் அறிவால் கொஞ்சம் கொஞ்சமாக கவர் செய்து அவர் மனதில் மட்டுமல்ல நம் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுவார். முதலாளியின் உதவியாளர் முதலாளிக்குத் தெரியாமல் வெளியே போய்விட, உள்ளே போர்டு மீட்டிங் நடக்கும் போது சேர்மன் சில பைல்களை மேனேஜரை எடுத்து வரச் சொல்ல, மேனேஜர் இல்லாததால் இவர் மனைவி சொல்லித்தந்தபடி பைல்களை நம்பர் போட்டு மனப்பாடம் செய்து அதன்படி கொண்டு சென்று கொடுப்பது அருமை! பின் மீட்டிங் முடிந்து வரும் முதலாளி மானேஜருக்குப் பதிலாக ஹிட்லர்தான் பைலைக் கொண்டு வந்தார் என்று கண்டு பிடித்துவிட "எல்லாமே என் சம்சாரம் லட்சுமிதாங்க சொல்லிக் கொடுத்துச்சி" என்று முதலாளி திட்டுவாரோ என்னவோ என்று பயந்து அழுகையின் நுனிக்கு வருவது இன்னும் அருமை.

டைம் கிடைக்கும் போதெல்லாம் மனைவி விஜயாவிடம் "நான் free" என்று அசடு வழியச் சொல்லி விட்டு படுக்கையறைக்குள் நுழைவது "இதுவா அப்பாவி.... காரிய அப்பாவி" என்று நம்மை நினைக்க வைக்கும்.

ஹெட் பியூனாக இருந்தவர் திடீரென்று ஒரு நாள் அசிஸ்டன்ட் மேனேஜர் சத்யராஜின் சீட்டில் அமர்ந்து கொள்ள, ஆபீஸ் ஊழியர்கள் அனைவரும் இவரை லூஸ் என்று திட்டி எழுந்திருக்க சொல்ல, ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் அமர்ந்திருக்கும் பிடிவாதத்தனம் அமர்க்களம். பின் முதலாளி வந்து 'இனி உமாநாத்தான் அசிஸ்டன்ட் மேனேஜர்' என்று அனைவரிடமும் ஊர்ஜிதப்படுத்தி சென்றவுடன் முதலாளி இவருக்கு தரும் சலுகைகளை பொறுக்கமாட்டாமல் ஆபீஸ் சிப்பந்திகள் 'முதலாளி ஒழிக' என்று கோஷம் போட, அதுவரை பொறுமையாய் இருந்தவர் அவர்களிடம் சீறுவாறே பார்க்கலாம் ஒரு சீறு.

("மரியாதையா எல்லாரும் போய் உங்க சீட்ல உக்காருங்க... சலசலப்பு கேட்டுச்சு அறுத்துருவேன் எல்லாரையும். இது அசிஸ்டன்ட் மேனேஜர் உமாநாத் உத்தரவு. கோ டு யுவர் சீட்")

தன்னை என்னென்னவோ சொல்லி சீண்டும் அந்தக் கூட்டத்தின் மீது அதுவரை கோபப்படாமல் பொறுமையாக இருந்தவர் 'முதலாளி ஒழிக' கோஷம் கேட்டவுடன் சண்டமாருதமாய் பொங்கி எழுவது அவருடைய முதலாளி பக்தியை அழகாக வெளிப்படுத்தும். அதே சமயம் தான் ஒரு அதிகாரி. தனக்குக் கீழ் உள்ளவர்கள் தன் சொல்லுக்குக் கட்டுப்படவேண்டும் என்ற அதிகாரமும் கொடிகட்டும்.

ஒரு சமயம் பைல்களை இவர் அசிஸ்டன்ட் மேனஜராகப் பார்க்கும் போது 'நம்மோடு வேலை செய்த பியூன்தானே' என்று சுருளிராஜன் அலட்சியமாய் பைலை மேசையில் திமிராகப் போட, ஒன்றும் பேசாமல் கைகளை சொடுக்கி, பார்வையாலேயே சுருளியை மிரட்டி, மீண்டும் பைலை எடுக்க வைத்து மரியாதையாக தரச் செய்வது கம்பீரமான மௌன அதிகாரம்.

பின் வயதானவுடன் இன்னும் கம்பீரம் மெருகேறியிருக்கும். சேர்மன் அல்லவா! உடைகள் பிரமாதப் படுத்தும்.

மகளை, மனைவியைக் கவனியாமல் கம்பெனி, ஆபீஸ், வெளிநாடு, மீட்டிங் என்று ஓடிக் கொண்டே இருப்பவர் ஒரு முறை ஜாகிங் செய்தபடி ஓடிக் கொண்டே இருக்க, அவருடைய அசிஸ்டன்ட் அன்றைய புரோக்ராம்களை ஓடியபடியே இவரிடம் சொல்லிக் கொண்டு பின்னாலேயே ஓடி வர, கணவனைக் காண்பதற்குக் கூட பெர்மிஷன் கேட்டு காத்திருக்கும் மனைவி விஜயா தற்செயலாக அங்கு வந்து விட மனைவியிடம், "லட்சுமி! ஓடி ஓடி சம்பாதிக்கணும்னு சொல்லுவியே! இப்ப நான் சம்பாதிச்சிகிட்டே ஓடறேன்." என்று நின்றபடி ஜாகிங்கிலேயே லேசான புன்னகையுடன் சொல்வது கொள்ளை அழகு!

படம் முழுவதும் ஹிட்லராக நடிகர் திலகம் புகுந்து விளையாடி இருந்தாலும்,படத்தின் உயிர்நாடியான, மிக முக்கியமான முத்தாய்ப்பான, மூன்று காட்சிகளில் நம் நாடி நரம்புகளை அவர் தன் துடிப்பான நடிப்பால் துடிக்க வைக்கும் அதிசயங்களைப் பற்றி கூறப் போகிறேன்.

முதலாவது (மகளை கண்டிக்கும் காட்சி)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/hitlerumanathfullmp4_004921560_zpsbdab0e99.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/hitlerumanathfullmp4_004921560_zpsbdab0e99.jpg.htm l)

குடும்பத்தைக் கவனிக்க நேரமில்லாமல் முழுநேர ஆபீஸ் வேலைகளிலேயே மூழ்கியிருப்பவர் ஒரு சமயம் விமானம் மூன்று மணி நேரம் லேட் என்று வீட்டுக்கு வந்து விடுவார். (அதுவரை மனைவியான கே.ஆர்.விஜயா இவர் குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை என்று பல தடவை இவரிடம் மனக்குறை பட்டுக் கொண்டிருப்பார்.) இரவு நேரம் ஆகியிருக்கும். மகள் யாரோ ஒருவருடன் காலேஜில் இருந்து லேட்டாக காரில் வந்து இறங்குவதை கவனித்து விடுவார். 'இதையெல்லாம் கண்டிக்கிறதில்லையா?' (அவ்வளவு அழகாக இந்த வார்த்தையை உச்சரிப்பார்) என்று மனைவியைக் கடிந்து கொள்வார். பெண் மாடிக்கு வந்ததும் 'ஏன் லேட்? என்று கண்டிப்புடன் கேட்க, அதற்கு மகள் அலட்சியமாய் பதில் சொல்லி இவரை அவமானப்படுத்திவிட, மகளை கோபத்தில் ஒரு அறை அறைந்தும் விடுவார். அப்பா அடித்ததைத் தாங்க மாட்டாமல் மகள் ரூமிற்கு சென்று தூக்க மாத்திரைகளை விழுங்க முயற்சிக்க, விஜயா ஓடோடி சென்று அதைத் தடுத்து இவருக்குக் குரல் கொடுத்து அலற, அப்படியே நிலை குலைந்து ஒடிந்து போவார் நடிகர் திலகம். படுக்கையில் விழுந்தபடி மகள் அழுது கொண்டிருக்க, அதே படுக்கையில் மண்டியிட்டபடியே மகளிடம் வந்து,"பாப்பா! அப்பா மேலே உனக்கு அவ்வளவு ஆத்திரமா?" என்று வெதும்பியபடியே கேட்பார். உடனே கே.ஆர்.விஜயா 'எனக்குன்னு ஒட்டிகிட்டு இருக்கிறது இது ஒண்ணுதான்... உங்க கோபம் கண்டிப்பு இதையெல்லாம் உங்க பேக்டிரியோட நிறுத்திக்கோங்க... என் மகளைக் கொன்னுடாதீங்க'... என்று கத்துவார்.

உடனே விஜயா அருகில் வந்து அதிர்ந்து "லட்சுமி! நீயுமா? (என்னைப் புரிஞ்சுக்கல?!) என்று மட்டும் உதடுகள் மனசு இரண்டும் துடிக்க கைகளால் நெஞ்சைத் தொட்டு பரிதாபமாகக் கேட்பார். அப்படியே மீண்டும் மகளிடம் வருவார். "பாப்பா! தூக்க மாத்திரையை சாப்பிட்டு அப்பாவை பழி வாங்கப் பார்க்குறியா? நான் என்ன பாப்பா கேட்டுட்டேன்?... பெத்த அப்பன் இல்லையா? ( குரல் அதிகமாக உடைய ஆரம்பிக்கும்) ஒரு வார்த்தை கண்டிக்கக் கூடாதா? ஒரு அடி அடிக்கக் கூடாதா உன்னை" என்று அழுகையும், ஆத்திரமுமாய் பொங்க ஆரம்பிப்பார்.

"நான் என்னவோ நினச்சுகிட்டு ஓடிக்கிட்டே இருக்கேன்...ஓடிக்கிட்டே இருக்கேன்....(இரண்டு முறை சொல்லுவார்) எங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறது நீ ஒருத்திதானே பாப்பா! நீயும்...( 'போயிட்டீனா' என்பதை சொல்லாமல் கைகளால் அம்சமாகக் காண்பிப்பார். "நான் எதுக்கு இருக்கணும்?"... இதையும் சொல்லாமல் கைகள் மட்டுமே முத்திரைகள் பதிக்கும்.) பாதிப் பாதி வார்த்தைகள் மட்டுமே உச்சரித்து மீதியை சொல்லாமல் கைகளை சைகைகளாலேயே சரித்திரம் படைக்க வைப்பார்.) உடம்பெல்லாம் மகள் எடுத்த தற்கொலை முடிவைக் கண்டு பதறிய நிலையிலேயே இருக்கும்.

மகளிடம் 'இது போல செய்ய மாட்டேன்' என்று சத்தியம் செய்து தருமாறு அழுதபடியே கேட்பார். "பாப்பா! அப்பா பாப்பா! அப்பாடா!"என்று அவர் தன் தந்தை ஸ்தானத்தை, உரிமையை மகளுக்கு அன்பால் உணர்த்தி (அப்பா பாவமில்லையா?) கெஞ்சி அழுவதைப் பார்க்கும் போது நெஞ்சு விம்மி கண்ணீர் விடாதவர்களே இருக்க முடியாது. ரெண்டு படுத்தி விடுவார் இந்தக் காட்சியில். (மகளாக நடிக்கும் சாதனாவும் 'அப்பா வேதனைப்படுகிறார்... தப்பு செய்து விட்டோமே' என்று தவறை உணர்ந்து கவிழ்ந்து படுத்தபடியே நடிகர் திலகத்திடம் சத்தியம் செய்து கொடுத்து பின் 'அப்பா' என்று அழுதபடியே அணைத்துக் கொள்வது நம் நெஞ்சை என்னவோ செய்யும் காட்சி).

ஒரு தந்தையின் கண்டிப்பு, கோபம், மகள் சாகத் துணிந்தவுடன் அப்படியே அந்தக் கோபம் மாறி ஏற்படும் பயம், படபடப்பு, தந்தை என்ற உரிமை கூட தனக்கு இல்லையே என்ற தவிப்பு , 'இனி கண்டிப்பதால் புண்ணியமில்லை... இனி உன்னை ஒன்றும் கேட்க மாட்டேன்... கேட்பதற்கு நான் யார்?' என்ற விரக்தி, வேதனை, இனி தற்கொலைக்கு முயலக் கூடாது என்று மகளிடம் கெஞ்சல், பதற்றம், நான் உனக்கு அப்பா இல்லையா என்ற பந்ததத்தை உணர்த்தும் உரிமை, இருக்கிற ஒரு மகளும் போய் விட்டால் என்ன செய்வது? என்ற பெரும் அச்சம், மனைவி கூட புரிந்து கொள்ளாமல் பேசுகிறாளே என்ற வருத்தம் அத்தனையையும் ஒரே நிமிடத்தில் நம் மனதில் ஆழமாகப் புதைத்து அழ வைக்க இந்த மனிதரை விட்டால் வேறு யாராவது பிறந்திருக்கிறார்களா காட்டி விடுங்கள் பார்ப்போம்.

இரண்டாவது (மகளின் திருமணத்தை எண்ணி மனைவியிடம் குமுறும் காட்சி)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/hitlerumanathfullmp4_006250840_zps307c1014.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/hitlerumanathfullmp4_006250840_zps307c1014.jpg.htm l)

மகள் கோவிலில் தன் இஷ்டத்திற்கு திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்க, அதைத் தெரிவிக்க விஜயா இவரிடம் பலமுறை முயல, மனைவி செய்யும் போனுக்குக் கூட பதில் சொல்ல முடியாத பிஸியில் கப்பல் வாங்கும் வேலையில் மும்முரமாக இருக்க, இவர் இல்லாத சூழ்நிலையில் கே.ஆர்.விஜயா மகளின் கல்யாணத்தை முடித்து விட, கடைசியாக செய்தி கேள்விப்பட்டு நடிகர் திலகம் கோவிலுக்கு ஓட, அங்கு எல்லாம் முடிந்து போய் யாருமில்லாமல் இருக்க, இடிந்து போய் வீடு வந்து உட்கார்ந்திருப்பார். கே.ஆர்.விஜயா மகளின் கல்யாணம் முடித்து விட்டு வருவார். அப்போது விஜயாவிடம் தன் மனக்குமுறலைக் கொட்டுமிடம் இருக்கிறதே....

நடிகர் திலகம் அமைதியாக ஆரம்பிப்பார். (கல்யாணமெல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?)

விஜயா நடுங்கிக் கொண்டே "நீங்க இல்லைங்கிற குறைதான்"...

அதற்கு இவர் "குறையா!? பெருமையா இல்ல! (மகளின் திருமண விஷயத்தில் மகளுடன் சேர்ந்து மனைவி கூடதன்னை ஏமாற்றி விட்டாளே என்ற ஆதங்கம், குறை, அவமானம் அவ்வளவும் முகத்தில் பிடுங்கித் தின்னும்)

"கல்யாணத்துக்கு வந்தவங்களெல்லாம் கேட்டிருப்பாங்களே! இந்தப் பொண்ணோட அப்பன் எங்கேன்னு? நீ என்ன சொன்னே? பொண்ணப் பெத்த அப்பன் செத்துப் போயிட்டான்னு சொன்னியா? இல்ல வீட்டை விட்டே ஓடிட்டான்னு சொன்னியா?" (குரல் கம்மிக்கொண்டே வரும்)

அடுத்த நிமிடமே குரல் அப்படியே கர்ஜனையாய் மாறும்.

"நான் ஏண்டி ஓடறேன்!"?

மறுபடி குரல் பல பாகங்களாக உடைந்து சிதறும்.

"என் பொண்டாட்டி நல்லா இருக்கணும்கிறதுக்காக... என் பொண்ணு நல்லா இருக்கணும்கிறதுக்காக நான் பட்ட கஷ்டம் என் குடும்பம் படக் கூடாதுங்கிறதுக்காக ராத்திரி பகலா ஓட்றேன்... நாய் மாதிரி... நாய் மாதிரி... ராத்திரி பகலா ஓட்றேன்... உனக்கே... உனக்கே தெரியும்''.

(உடலில் எந்த அசைவையும் காட்ட மாட்டார். அழுகை கொப்பளிக்கும். முகத்தில் மட்டுமே வசனங்களுக்கேற்ற பாவங்கள் பாவமாய் பரவும். இதுவரை பட்ட வேதனைகளை நினைவு கூர்ந்து இவர் அழுது கதறும் போது கல் மனங்களெல்லாம் கரையத் துவங்கும். பரிதாபங்களை அப்படியே அள்ளிக் கொள்வார்.)

தொடர்வதைப் பாருங்கள்....

"அது இருக்கட்டும்....பெத்த அப்பன் வர்றதுக்குள்ள அவ கழுத்துல தாலி கட்ட வச்சியே! அவ்வளவு என்னடி அவசரம் உனக்கு? (கொஞ்சம் நிறுத்தி திரும்ப சொல்லுவார்) அவ்வளவு என்னடியம்மா அவசரம்னு கேக்குறேன்?"

அடடா! திலகமே! அந்த கேட்கும் தொனி இருக்கிறதே! இரண்டாவது முறை "அவ்வளவு என்னடியம்மா அவசரம்னு கேக்குறேன்?" என்னும் போது லேசாக வார்த்தைகளை இழுத்தபடி, கை விரல்களை மூடி முன்பின் ஆட்டியவாறு கேள்வி கேட்கும் பாணி, அந்தத் தொனி இருக்கிறதே! விண்ணை எல்லாம் பிளந்த அதிசயம். எவராலும் ஈடு செய்ய முடியாத அதிசயம்.

அழுத ரகளை முடிந்த பின் பாய்வார் பாருங்கள் மனைவி மீது. அழுகை ஆத்திரமாகவும்,கோபமாகவும் சட்டென்று மாறிப் போகும்.

"என்னைவிட நீ பெரிய அறிவாளி! என்னை விட மேதை! (முடிந்தவுடன் 'ஆங்' என்று அற்புதமாக ஒரு நக்கல் ராகம் போடுவார். கை விரல்கள் அப்படியே நர்த்தனம் புரியும்.)

ஆள்காட்டி விரலை நீட்டி ஆட்டியபடி மனைவியிடம் கூறுவார்.

"உனக்கு superiority complex டி...(இவரை விட மனைவி அதிகம் படித்தவளல்லவா!) அதனால்தான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னை கேவலப்படுத்தினே! (ஆணித்தரமாக திரும்பவும் கூறுவார்). சமயம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சயமா நிச்சயமா நீ என்னை கேவலப்படுத்தியிருக்கே!"

(குரல் மாடுலேஷனில் ஜெகஜால ஜாலங்கள் அற்புதமாக நடக்கும். குரல் உள்ளே போய் போய் உடைந்து உடைந்து திரும்ப வெளியே வரும். உணர்ச்சிகள் பொங்க உதடுகள் துடிக்கும். கேவலப்பட்டதாக உள்ளம் குமுறும். தெய்வ மகனில் தகப்பனும் மகனும் கையை நீட்டி டாக்டரிடம் ஆட்காட்டி விரலால் மூன்று முறை உதறுவார்களே! அதைப் போல அல்லாமல் வேறு மாதிரி பாணியில் 'நிச்சயமா நிச்சயமா' என்ற வார்த்தைகளின் போது ஆட்காட்டி விரல் அசைவுகளை அற்புதமாகக் காண்பித்து அக்கிரமம் புரிவார்)

"எம் பொண்ணு இன்னும் கொஞ்ச நாள்ல விதவையா வந்து நிக்கப் போறாடி.... அந்தப் பய வயித்துல கட்டிடி" என்று தலையில் இரு கைகளையும் மாறி மாறி வைத்துக் கொண்டும், பின்பு அடித்துக் கொண்டும் அழும் அழுகை வெகு வித்தியாசம்.

மூன்றாவது (தொழிலாளர்களிடம் உரையாடும் இறுதிக் காட்சி)

http://i1.ytimg.com/vi/Kobg78ZB1mI/hqdefault.jpg

கிளைமாக்ஸில் தொழிலாளிகள் நடிகர் திலகத்தின் வீட்டை முற்றுகையிட்டு கப்பல் வாங்கி மூழ்கிப் போனதால் கம்பெனி மூடப் போவதாக நம்பி அவரைத் தாக்க வரும் போது அவர்களிடம் உரையாடும் கட்டம்.

இதில் என்ன விசேஷம் என்றால் ஒரிஜினல் ஹிட்லரின் மானரிசங்கள் சிலவற்றை அற்புதமாகப் பிரதிபலிப்பார். நீள் கோட்டுடன் கையை கோட்டின் உள்ளே மார்புப் பகுதியில் விட்டிருப்பது, கையை நீட்டியபடி பேசும் அற்புத ஹிட்லரின் போஸ், (பி.என். சுந்தரம் அனுபவித்து தூள் பரத்தியிருப்பார்) "யாரைக் கேட்டு கப்பல் வாங்கினே?" என்ற ஒரு தொழிலாளியின் கேள்விக்கு "யாரைக் கேட்டு கப்பல் வாங்கணும்?" என்று குதித்து குதித்து நடக்கும் ஹிட்லரின் ஸ்டைல், சமயத்தில் பின் பக்கம் கட்டியபடி கைகளை ஆட்டும் அற்புதம், இரு கைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்தபடி வயிற்றுப் பகுதியில் சேர்த்து வைத்திருக்கும் போஸ் என்று ஏக ரகளைகளை படு கம்பீரமாக செய்வார்.

இன்னும் எவ்வளவோ!

இந்தக் கேரக்டரை நடிகர் திலகம் கையாண்டிருக்கும் பாங்கு வியப்புக்குரியது. பொதுவாகவே ஹிட்லர் மீசை என்பது நகைச்சுவைக்காகத்தான் தமிழ் சினிமாவிலும், ஏன் மற்ற மொழிப் படங்களிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாகேஷ், ஏ.வீரப்பன், தேங்காய் சீனிவாசன், விகே.ஆர் போன்ற காமெடி நடிகர்கள் ஹிட்லர் போல மேசை வைத்துக் கொண்டு நகைச்சுவைக் காட்சிகளை செய்வார்கள். பார்த்தவுடன் சிரிப்பைத்தான் வரவழைக்கும் ஹிட்லர் மீசை.

ஆனால் நடிக தெய்வத்திற்கு மட்டும் அந்த மீசை படு கம்பீரமாக அமர்ந்து பொருந்துகிறதே! கொஞ்சம் ஏமாந்தாலும் கேலிக் கூத்தாகிவிடும் மேக்-அப். கொஞ்சம் கூட பயமில்லாமல் உன்னத நடிக மேதை என்ற மமதைகள் சிறிதும் இல்லாமல் அதுவும் ஆரம்பக் காட்சிகளில் அனைவராலும் கேவலமாக இழிவு படுத்தப்படும் பாத்திரமாக இருந்தும் அந்தப் பாத்திரத்தின் தன்மை புரிந்து அதை தன் அற்புதமான பங்களிப்பால் மெருகேற்றி நகைச்சுவை வருவதற்குப் பதிலாக அந்த கேரக்டரின் மேல் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி, பின் ஒரு நன்மதிப்பையும் ஏற்படுத்தி, தகரத் தகட்டை தங்கமாக்கிக் காட்ட உலகிலே இவர் ஒருவர் தானே! ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த கேரக்டரை அதன் தன்மை சிறிதும் குறையாமல், படிப்படியாக காட்சித் தொடர்பு கொஞ்சமும் கெடாமல் அவ்வளவு அற்புதமாக கையாண்டிருப்பார்.

அடால்ப் ஹிட்லருக்கும் இந்த உமாநாத்துக்கும் கொஞ்சமும் குணத்தில் சம்பந்தமில்லை. அந்த ஹிட்லர் யூதர்களை இரக்கமில்லாமல் கொன்று குவித்தவன். நம் ஹிட்லரோ நாதியற்ற தொழிலாளிகளுக்கு வாழ்வு கொடுப்பவர். அந்த ஹிட்லர் அசகாய வீரனாக உருவெடுத்து கோழையாக தற்கொலை புரிந்து மாண்டான். நம் ஹிட்லரோ கோழையாக வாழ்வைத் துவங்கி வீரனாகவே இறுதி வரை கம்பீரமாக வாழ்ந்தவர். அந்த ஹிட்லர் தோல்வியால் துவண்டு தற்கொலை முடிவை எடுத்த ஒரு கோழை என்று நம் ஹிட்லர் அந்தக் கோழையின் புகைப்படத்தை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிட்டு வரும்போதே அவனைவிட உமாநாத் எல்லா வகையிலும் உயர்ந்த, பிரச்னைகளை face செய்யக் கூடிய தைரியசாலி என்று புரிந்து விடும்.

இந்த அற்புதமான ரோலில் வேறு எந்த ஒரு பயலையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

அது நம் நடிப்பின் இறைவனால் மட்டுமே முடிந்த ஒன்று.

vasudevan31355
21st November 2013, 10:38 AM
பாகம் 3

படத்தின் இதர பங்களிப்பாளர்கள்

http://i1.ytimg.com/vi/xqQoQ9t88AY/hqdefault.jpg

மனைவியாக கே.ஆர்.விஜயா வழக்கம் போல பொருத்தமாகவே செய்திருக்கிறார். காலிப் பயல்கள் தன் கையைப் பிடித்து இழுத்து கலாட்டா செய்தும் தன் கணவன் தன்னைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லையே என்ற காட்சியில் ஜொலிக்கிறார். கணவன் ஆபீஸ், கம்பெனி என்றே அலையும் போது கணவனின் அன்புக்காக ஏங்குவது யதார்த்தம். உறுத்தாத அளவான நடிப்பு.

மகளாக சரோஜா என்ற புதுமுகம் அறிமுகம். பின்னால் இவர் (சாதனா என்று தன் பெயர் மாற்றிக் கொண்டார்) சிங்கத்துடன் சேர்ந்த சிறு முயல் இவர். தற்கொலைக் காட்சியில் திலகத்திடம் சத்தியம் செய்து கொடுக்கும் காட்சியில் அருமையாக செய்திருப்பார். மருமகன் மற்றும் ஜாபரியின் மகனாக 'கல்தூண் 'சதீஷ். நாடக பாணி மாறவில்லை. சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின்னாளில் கொடி நாட்டிய சத்யராஜ் ஆரம்ப காலங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்த போது வந்த படம். அசிஸ்டன்ட் மேனேஜர் என்ற உப்பு சப்பில்லாத வில்லன் பாத்திரம் இவருக்கு. டப்பிங் வாய்ஸ் வேறு. சோபிக்கவில்லை. பார்க்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது.

சேர்மேன் ஜாபாரியாக வரும் என்.எஸ். ராம்ஜி அருமையாகப் பண்ணியிருக்கிறார். பாந்தமான பாத்திரம். (இவ்வளவு நல்ல நடிகரை வேறு எங்கும் அதிகமாகப் பார்த்ததில்லையே! 'கீழ்வானம் சிவக்கும்' படத்தில் ஒரு காட்சியில் வருவார். இவருக்கெல்லாம் நல்ல சான்ஸ் கொடுத்திருக்கலாமே!) மற்றும் எஸ்.ராமாராவ்,பீலி சிவம், கௌரவ வேடத்தில் டாக்டராக மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன், 'காத்தாடி' ராமமூர்த்தி ஆகியோரும் உண்டு. (மாதவன் படத்தில் காத்தாடி இல்லாமலா! நண்பேன்டா!)

இசை எம்.எஸ்.விஸ்வநாதன். பார்மிலிருந்து நழுவுக் கொண்டிருக்கும் வேளையில் வந்த படம். சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. சுசீலாவின் 'நம்பிக்கையே மனிதனது சாதனம் மட்டுமே சற்று நம்பிக்கை. வாணி ஜெயராம் குரலில் ஒலிக்கும் 'சிலை வண்ணம் யாரோ!' சுமார் ராகமே! 'பாரத விலாஸி'ல் வருவது போல மனசாட்சியுடன் நடிகர் திலகம் பாடும் பாடல் (சார்! உங்களைத்தான் சார்!) ஒன்று உண்டு. அது சக்கை போடு போட்ட பாடல். இது?!!!....

ஒளிப்பதிவு மாதவனின் மனம் கவர்ந்த பி.என்.சுந்தரம். அருமை. ஹிட்லராக சில புதிய கோணங்களில் நடிகர் திலகத்தைக் காட்டியிருப்பார்.

கதை 'தங்கப்பதக்கம்'மகேந்திரன். அப்பாவி ஒருவன் தன் கடினமான உழைப்பால் உயர்ந்து வாழ்க்கையில் சாதித்துக் காட்டிய கதை. மௌலி நல்ல வசனங்களைத் தந்து திரைக்கதை அமைத்திருப்பார். ("ஒரு பூனையை பத்தடி துரத்தினா அது திருப்பிகிட்டு துரத்தினவன் மேலே பாயும். கேவலம் ஒரு சிட்டுக் குருவி கூட மனுஷன் கையிலே
பிடி பட்டுட்டா அவன் கையைப் கொத்திட்டு அது பறக்கப் பார்க்கும்") மௌலியின் பங்கு மகத்தானது.

தயாரிப்பு பி.வி.தொளசிராமன். (PVT Productions) சேலத்தை சேர்ந்தவர்.

இயக்கம் என் மனம் கவர்ந்த மாதவன்.நேர்த்தியான இயக்கம். இருந்தாலும் இவருடைய அனுபவத்திற்கு இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம். நடிகர் திலகத்தின் பிரமாதமான ஒத்துழைப்பு இருந்தும் சில காட்சிகளில் போதிய அழுத்தம் இல்லை. நடிகர் திலகத்தின் பங்களிப்பு மட்டுமே போதும் என்பது போல அலட்சியம் சில காட்சிகளில் தெரிகிறது. மாதவன் டயர்ட் ஆனதும் தெரிகிறது. ரிடையர்ட் ஆகப் போகும் நிலைமையும் புரிகிறது. ஆனால் குறை சொல்வதற்கு இல்லை. (அனுபவமும் பேசுகிறது) வழக்கம் போல நடிகர் திலகத்தை வாட்டி வதைத்திருப்பார். இன்னும் கொஞ்சம் மனது வைத்திருந்தால் மிக மிக ஆழமாக ஹிட்லரை இவர் நம் நெஞ்சில் புதைத்திருக்க முடியும்.

இன்னொன்று. 80க்கு மேல் வந்த பல நடிகர் திலகத்தின் படங்களில் சிக்கனமே கையாளப்பட்டது. (பாலாஜி போன்ற ஒரு சிலர் தவிர. அவர் கூட செலவை வெகுவாக சுருக்கிக் கொண்டார்). நடிகர் திலகத்துடன் பல இளம்தலைமுறை நடிகர்கள் சேர்ந்து பங்கு பெற்றனர். சந்தோஷமான விஷயம்தான். ஆனால் பாலையா, எம்.ஆர்.ராதா, சுப்பையா, ரங்காராவ், சாவித்திரி, பானுமதி போன்ற ஜாம்பாவன்களுடன் நடிகர் திலகம் போட்டியிட்டு நடித்ததால் பல படங்கள் வெற்றியடைந்தன. நடிகர் திலகத்தின் மாபெரும் திறமையையும் அகிலம் உணர்ந்தது. ஆனால் பின்னாட்களில் அப்படிப்பட்ட ஜாம்பவான்கள் நடிகர் திலகத்துடன் இல்லாதது ஒரு பெரியகுறையே! அதிகம் பரிச்சயம் இல்லாத பெயரே தெரியாத அனுபவம் இல்லாத இளம் நடிக நடிகைகள், முன் மாதிரி மனதில் பதியாத இசை, சிக்கன செலவு, எல்லாவற்றுக்கும் மேல் நடிகர் திலகத்தின் புற்றீசல் போன்ற புதிய படங்களின் வெளியீடுகளால் நம் படங்களே நமக்குப் போட்டியான சோதனை என்று பல வேதனைகள் வாட்டியெடுத்த நிலையில் இது போன்ற நல்ல படங்கள் அடிபட்டுப் போனது துரதிருஷ்டமே!

ரஜினி நடித்து நல்ல வெற்றி பெற்ற 'நல்லவனுக்கு நல்லவன்' (22 October 1984) படம் நமது ஹிட்லர் உமாநாத்தை அப்படியே தழுவி இருக்கும். அதுவும் இடைவேளைக்கு பிறகு அப்படியே அட்டை காப்பி. நல்ல செலவு செய்து, மசாலாவை வெகுவாக தடவி, ஏவி எம் நிறுவனம் இளையராஜாவின் இசையில் (பாடல்கள் சூப்பர் ஹிட்) இப்படத்தைத் தயாரித்து விளம்பரங்களை விவரமாக அளித்து 1984 தீபாவளிக்கு வெளியிட்டு நல்ல காசு பார்த்தது.

vasudevan31355
21st November 2013, 10:39 AM
பாகம் 4

புகழ் பெற்ற சுருளிராஜன் வில்லுப்பாட்டு

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/c_zpsd4ef9e19.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/c_zpsd4ef9e19.jpg.html)

காமெடிக்கு சுருளிராஜன். ('மறைந்த கலைஞர்' என்று டைட்டில் போடுவார்கள்). படம் வரும் போது அவர் உயிருடன் இல்லை. படத்தில் இவர் பாடும் வில்லுப்பாட்டு மிக பிரசித்தம். இன்றளவில் கூட அந்த நடிகர் திலகம் புகழ் பாடும் வில்லுப்பாட்டை பலர் ரசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். (வில்லுப்பாட்டு எழுதி அமைத்தவர் திரு.சுப்பு ஆறுமுகம் அவர்கள்). மேலும் இலங்கை வானொலியில் அந்த நாட்களில் இந்த வில்லுப்பாட்டை ஒருநாள்கூட ஒளிபரப்பாமல் இருக்கவே மாட்டார்கள். கோவில் விசேஷங்களிலும், கல்யாண வைபவங்கள், இதர விசேஷங்களிலும் நான் இந்த வில்லுப் பாட்டை பலமுறை கேட்டதுண்டு.

வில்லுப்பாட்டு பற்றி சில வரிகள்.

தன் முதலாளி உமாநாத்தைக் காக்கா பிடிக்க சுருளிராஜன் உமாநாத்தின் புகழை வில்லடித்துப் பாடுவது போல காட்சி அமைப்பு. ஆனால் உண்மை அர்த்தம் என்ன தெரியுமா? நடிகர் திலகத்தின் புகழ்தான் இந்த வில்லுப் பாட்டில் பாடப்படும் ஹிட்லர் உமாநாத்தின் பெயரை சாக்காக வைத்துக் கொண்டு.

நம் ரசிகர்கள்கொண்டாடி மகிழும் வில்லுப்பாட்டு இது. நடிகர் திலகம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்ததை ஹிட்லர் உமாநாத் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்ததோடு ஒப்பிட்டு இப்பாடலை வடிவமைத்திருப்பார்கள் சுருளியின் இடையிடை காமெடி பஞ்ச்களோடு (அண்ணே! புல்லரிக்குதுண்ணே!... போர்வையிருந்தா போர்த்திக்கோடா... கன்னுக் குட்டி மேஞ்சிடப் போகுது!) சேர்த்து. இதில் சில வரிகளை தருகிறேன். கவனியுங்கள்.

சுருளி கடவுளை வேண்டி துவக்கி வில்லடித்துக் கொண்டே பாடும் ஆரம்ப வரிகள்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=AG0oQSU5M9E

பூப்பறிச்சு மாலை கட்டி... (ஆமடி தங்கம்)
பூசை பண்ணி வந்திருக்கேன்... (ஆமாஞ் சொல்லு)
காப்பாற்ற வரணுமய்யா... (ஆமடி தங்கம்)
கணேசனே சரணமய்யா... (ஆமாஞ் சொல்லு)

இந்த இடத்தில் கணேசன் யாரென்று தெரிகிறதா?

ஒரு டீயை இரண்டாக்கி
உறிஞ்சி நாங்க குடிச்சதிலே
ஒருத்தன் மட்டும் ஒசந்தானே!
இன்னொருத்தன் அசந்தானே!

(இதில் மூன்றாவது வரியையும் நான்காவது வரியையும் நன்றாகப் படித்து புரியும் சக்தி உடையவர்கள் புரிந்து கொள்ளுங்கள்)

ஹிட்லர் மீசையுடன் பிறந்தார் எங்க ஹீரோ
இங்கிலிஷும் பேசிடுவார் ஆரீராரோ
(நடிகர் திலகம் பைல்களைப் பார்த்தவாறு வில்லுப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பார்)
வாய் தொறந்தா வசனமல்லோ எங்க ஹீரோ
அந்த வசனமே கவிதையல்லோ ஆரீராரோ

என்னைக்கும் வாடாத பாசமலரு
பெத்த அன்னைக்கு உத்தம புத்திரன் இவரு
இந்த ஊரில் இதுதான் ஒசந்த மாளிகை ஆமா(ம்)
ஹிட்லர் மீசை குடியிருக்கும் வசந்த மாளிகை

பட்டிக்காடா பட்டணமா எங்க நாட்டிலே
ஆமா(ம்) சத்தியமா இவருதானே தர்மராஜா
பத்தே அவதாரம் பகவானுக்கு ஆமா(ம்)
பத்துக்கு மேல் அவதாரம் நம்மாளுக்கு (சபாஷ்!)
வேஷம் நம்மாளுக்கு

(அமர்க்களமாக இல்லை!)

பறப்பதுலே பைலட்டு பிரேம்நாத்து
நீதியை நிறுப்பதில ஜஸ்டிஸ் கோபிநாத்து
மேதையிலே இவரு ஒரு சாக்ரடீசு
ஆமா(ம்) மீசையிலே ஹிட்லரு உமாநாத்து

இப்படியாக இப்பாடல் நடிகர் திலகத்தின் புகழ் பாடியே வளரும். பிரபல ராகங்களின் பெயர்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு வில்லுப்பாட்டின் மூலம் பெருமைப் படுத்தப்படும்.

அழுதிடுவார் அது ஆரபி ராகம்...
கர்ஜனை செய்வார் இது கல்யாணி ராகம்...
சிரிச்சிடுவார் அது செஞ்சுருட்டி
சிணுங்கிடுவார் இது சிந்து பைரவி...
சீட்டியடிப்பார் அது நாட்டைக்குறிஞ்சி
சத்தமிடுவார் அது சங்கராபரணம்

நடையழகு இது ரூபக தாளம்
நாடித்துடிப்பினிலே ஆதிதாளம்
அப்படியே படம் பிடிக்க கேமரா இல்ல
அம்புட்டையும் சொல்ல நானு கம்பனுமில்ல

மகராசன் கோட்டையிலே கோயில் வாசலு (நடிகர் திலகத்தின் 'அன்னை இல்ல' வாசலின் முன் உள்ள விநாயகர் கோயில்!?)

நமக்குப் பெருமை பிடிபடாது.

(இந்த வில்லுப்பாட்டில் திரு.சுப்பு ஆறுமுகம் அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவினரும் சுருளிராஜனுடன் இணைந்து நடித்திருப்பார்கள். மலேஷியா வாசுதேவன் சுருளிராஜனின் குரலில் அருமையாக சுருளிராஜனுக்குப் பின்னணி பாடியிருப்பார்).

ஆனால் ஒரு குறை. இன்னும் முழுமையாக கவனம் செலுத்தி இப்பாடலைத் தந்திருந்தால் அற்புதமான தலைவரைப் பற்றிய முழுமையான சாதனை வில்லுப் பாட்டாக இது அமைந்திருக்கும். இடையில் சில சொதப்பல் வரிகள், காமெடி வசனங்கள் என்று இடையிடையே அடிக்கடி ட்ராக் மாறுவதால் நமக்கு இந்த வில்லுப் பாட்டு முழு திருப்தி இல்லாததால் கொஞ்சம் ஏமாற்றமே!

என்றாலும் மறக்க முடியாத ஜனரஞ்சகமான சூப்பர் ஹிட் வில்லுப்பாட்டு. அனைவராலும் விரும்பப்பட்ட ஒன்று.

vasudevan31355
21st November 2013, 10:40 AM
பாகம் 5

http://i1.ytimg.com/vi/lct6o9vTwqs/hqdefault.jpg

படத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

இந்தப்படம் 1982 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அதாவது ஜனவரி 26 அன்று வெளியீடு என்று விளம்பரம் வந்தது. ஆனால் City, NSC ஏரியாக்களில் சொன்னபடி ஏனோ ரிலீஸ் ஆகவில்லை. ஆரம்பமே குழப்பம். பதினேழு நாட்கள் கழித்து பிப்ரவரி 12 ஆம் தேதிதான் இப்படம் சென்னையிலும், மற்ற இடங்களிலும் ரிலீஸ் ஆனது. (தகவலுக்கு நன்றி பம்மலார் சார்) குறிப்பிட்ட தேதிக்கு ரிலீஸ் ஆக முடியாமல் போனதால் அதற்கு முன்னாலேயே

ஊருக்கு ஒரு பிள்ளை (5.02.1982)
வா கண்ணா வா (6.02.1982)

என்று இரு படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகி வேறு ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஹிட்லர் உமாநாத்திற்கு நல்ல ரிசல்ட் இருந்தும் மேற்கூறிய படங்கள் ரன்னிங்கில் இருக்கும் போது எப்படி வெற்றி ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியும்?

ஆனால் ஒரு அதிசயம் பாருங்கள். ஹிட்லர் சொன்னபடி திடீரென்று எங்கள் ஊர் கடலூரில் நியூசினிமாவில் 26.01.1982 அன்றே வருகை புரிந்து விட்டார். ஆக ஹிட்லரை முதலில் தரிசித்தது தென் ஆற்காடைப் பொறுத்தவரை கடலூர்காரர்களே! எவ்வளவு பெருமை தெரியுமா எங்களுக்கு! முதல் காட்சி சும்மா அதம் பறந்தது. ரிலீஸ் ஆன 10 நாட்களுக்குள் பிப்ரவரி 5-ஆம் தேதி கமலம் தியேட்டரில் 'ஊருக்கு ஒரு பிள்ளை' ரிலீஸ் ஆகிறது. அடுத்த நாள் 6 ஆம் தேதி வேறு கமர் தியேட்டரில் 'வா கண்ணா வா' ரிலீஸ் ஆகிறது. இந்த இரண்டு படங்கள் உடனே அடுத்தடுத்து ரிலீஸ் ஆன நிலையில் 'ஹிட்லர் உமாநாத்' நல்ல படம் என்று பெயரெடுத்தும் நம் படங்களின் அணிவகுப்புகளின் போட்டிகளால் சரியான வெற்றியைப் பெறத் தவறியது. (ஒரே ஊரில் ஓரே நேரத்தில் மூன்று நடிகர் திலகத்தின் படங்கள். அதுவும் புத்தம் புது ரிலீஸ் படங்கள். எங்கு போய் முட்டிக் கொள்வது? கார்த்திக் சார்! வாங்க!) கடலூரில் பதினைந்து நாட்களே ஓட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது 'ஹிட்லர் உமாநாத்'

(இந்த லட்சணத்தில் இதே பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி என் அற்புதப் படமான 'கருடா சௌக்கியமா' (25.02.1982) வேறு 'வா கண்ணா வா' (6.02.1982) விற்குப் பின் வெளியானது. (சரியாகப் பத்தொன்பது நாள் கழித்து).... ஆக கணக்குப் படி பார்த்தால் ஒரே மாதத்தில் 4 புதுப் படங்கள். அட ராமா! இதையும் சாதனை லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.)

பின் சென்னையில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடியது ஹிட்லர் உமாநாத்.

அலசல் முடிவுரை

http://i1.ytimg.com/vi/wbj7NbHUVyM/hqdefault.jpg

படம் சுமாராகப் போனால் என்ன? (எவ்வளவோ நல்ல படங்கள் சுமாராகப் போனதுண்டு). இந்த 'ஹிட்லர் உமாநாத்' அருமையான நல்ல படம். நடிகர் திலகத்திடம் அதுவரை காணாத பல புதிய பரிணாமங்களை 'ஹிட்லர் உமாநாத்'என்ற வித்தியாசமான வேடத்தின் மூலம் நாம் காண முடிந்தது. மீண்டும் நடிகர் திலகத்தை வியக்க முடிந்தது. நன்கு ரசிக்க முடிந்தது.

பொத்தம் பொதுவாக நடிகர் திலகத்தின் 200 படங்களுக்கு மேல் எதுவுமே சரியில்லை...நான் பார்ப்பதில்லை...விரும்புவதில்லை என்ற குருட்டுக் கருத்துக்கள் கண்மூடித்தனமாக சில, பலரிடம் பரவிக்கிடக்கின்றன. அவர் பழைய படங்களில் பங்களித்ததைப் போல புது படங்களில் பங்களிக்கவில்லை... பரிமளிக்கவில்லை என்று கூறுவோர் அதை தயவு செய்து தவிர்க்க வேண்டுகிறேன். எனக்கும் சில படங்கள் அறவே பிடிக்காதுதான். ஆனால் எல்லா படங்களும் அப்படி இல்லை. இரண்டாவது ஒரு காரணம் இப்படி சொல்பவர்கள் இந்த மாதிரிப் படங்களை மேற்கூறிய காரணங்களை மனதில் வைத்து இரண்டாவது முறை பார்க்காமலேயே தாங்களாகவே ஒரு முடிவு கட்டி விடுகிறார்கள். எல்லாப் படங்களிலுமே தெய்வ மகன், உயர்ந்த மனிதன், தேவர் மகன், தில்லானா மோகனாம்பாள், முதல் மரியாதை போன்ற விஷயங்களை எதிர்பார்க்க முடியாது. அதில் கூட இல்லாத சில புது விஷயங்களை, தனது 200 ஆவது படங்களுக்கு மேலுள்ள படங்களில் காட்டி, பல சாதனைகளை நடிப்பில் நமக்கு செய்து காட்டி விட்டுத்தான் சென்றிருக்கிறார். அதை வெளிக்கொணரத்தான் கருடா சௌக்கியமா, துணை, தாம்பத்யம், இப்போது ஹிட்லர் உமாநாத் என்று மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறேன்.

பாருங்கள். படியுங்கள். தங்கள் மேலான அபிப்பிராயத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஹிட்லரின் ஐ மீன் உமாநாத்தின் கம்பீரமான நினைவுகளோடு தற்சமயம் விடை பெறுகிறேன்.

நன்றி!

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

RAGHAVENDRA
21st November 2013, 10:42 AM
https://britishliteraturehorrorproject.files.wordpress.com/2012/05/suspense1.jpeg

chinnakkannan
21st November 2013, 10:46 AM
நகம்லாம் கடிச்சு கடிச்சு தீர்ந்து போய்டுச்சு..என்ன வரப் போகுதோ..எங்க மெட்ராஸ் க்ருபா

Russellpei
21st November 2013, 10:57 AM
Vasudevan Sir
Congrats on your 4000th post & Birthday wishes too.

KCSHEKAR
21st November 2013, 10:57 AM
உண்மை உணரும் நேரம் - 1
அதிலும் குறிப்பாக நமது நடிகர் திலகம் பற்றிய செய்திகள் என்றால் நிச்சயம் அடித்து சொல்லலாம் அது தவறாகவே இருக்கும்.
முரளி சார்,

சரியான தகவலை தேதி விபரங்களோடு குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி.

தாங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல, பெரும்பான்மையான பத்திரிகைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், நடிகர்திலகத்தைப் பற்றி தவறான தகவல்களைச் சொல்வது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி. முதலில் இதுமாதிரி எழுதினாலோ, பேசினாலோ யாரும் கேட்பதில்லை என்ற தைரியமும் அவர்களுக்கு உள்ளது.

இதுமாதிரி எழுதும்போது நம்மில் சிலர் அந்தப் பத்திரிகைக்கோ அல்லது தவறாகப் பேசுபவர்களுக்கோ நம்முடைய மறுப்பை, எதிர்ப்பைத் தெரிவித்து கடிதமாக எழுதினால் அதன்பிறகு கொஞ்சம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கும் - குறைந்தபட்சம் எதிர்ப்பு வரும் என்ற சிறிது பயமாவது இருக்கும் என்பது எனது தாழ்மையான விருப்பம், வேண்டுகோள்.

இதுமாதிரி பல நிகழ்வுகளில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையால் எதிர்ப்பு, மறுப்பு தெரிவித்து கடிதங்கள் எழுதி அது வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகத்தான் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு பொது நிகழ்ச்சியில் வைரமுத்து நடிகர்திலகத்தைப்ப்ற்றி ஒரு தவறான தகவலைக் குறிப்பிட்டார். அநிகழ்ச்சிக்கு சென்றிருந்த தென்சென்னை மாவட்ட சிவாஜி சமூகநலப்பேரவைத் தலைவர் சீனிவாசன் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியவுடன், வைரமுத்துவே வருத்தம் தெரிவித்து கடித்தம் எழுதினார். இதுபோல பல நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

நம்மிடம் பதிலடி கொடுப்பதற்கு, தாங்கள், வாசு சார், பம்மலார், ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், கோபால் சார் என்று ஏராளமான தகவல் களஞ்சியங்கள் இருக்கும்போது என்ன கவலை?

தங்களுடைய தகவலின் அடிப்படையில் குமுதத்திற்கு உடனே நானும் கடிதம் எழுதுகிறேன்.

என்னுடைய மனதில் பட்டதை எழுதியுள்ளேன். உடன்பாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளுங்கள். நன்றி.

SejkoRau
21st November 2013, 11:15 AM
Dear Murali sir,

As you rightly pointed out, when it comes to Nadigar Thilagam, there are people who will blindly go the extent of saying even veerapandiya kattabomman is a failure those days like how they said about Karnan AT THE SAME TIME, they will compare one lousiest film of any other actor and will say it bombarded the box office. But when we check the records, the film that they pointed out would have had only a normal run. This is how these vested interest guys fuming with the heights of inferiority complex pass comment. We are used to it and TRUTH WILL EMERGE OUT like KARNAN one day.

This Major Dasan every Tom,Dick& Harry knows where he belongs to what his interests and intention are ! WHEN IT COMES TO COMMENT ABOUT NADIGAR THILAGAM, MOST OF THE TIME HE CHOOSES & PREFERS TO BE A NEGATIVE BLUFFER, A NEGATIVE LIER but when it comes to other actors HE CHOOSES & PREFERS TO BE A POSITIVE BLUFFER & POSITIVE LIER.

MAJOR DASAN ...A NAME TO BE IGNORED..! HE DOESNT STAND TO OUR STATUS !

KCSHEKAR
21st November 2013, 11:15 AM
ஹிட்லர் உமாநாத்.
படம் சுமாராகப் போனால் என்ன? (எவ்வளவோ நல்ல படங்கள் சுமாராகப் போனதுண்டு). இந்த 'ஹிட்லர் உமாநாத்' அருமையான நல்ல படம். நடிகர் திலகத்திடம் அதுவரை காணாத பல புதிய பரிணாமங்களை 'ஹிட்லர் உமாநாத்'என்ற வித்தியாசமான வேடத்தின் மூலம் நாம் காண முடிந்தது.
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய 4000 வது பதிவாக ஹிட்லர் உமாநாத் அலசல் பதிவை அளித்து அசத்தியுள்ளீர்கள். தாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல படத்தில் உமாநாத்தின் சிங்கநிகர் நடிப்பு, சுருளிராஜன் வில்லுப்பாட்டு (சுப்பு ஆறுமுகம் உதவியுடன்), என்று பல அம்சங்கள் இருந்தும் கால சூழ்நிலையால் படம் சரியாகப் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தங்களுடைய பிறந்தநாளில், 4000 வது பதிவை அளித்த தாங்கள், பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, நடிகர்திலகத்தின் அனைத்து பரிமாணங்களையும் வெளிக்கொணரும் விதத்தில், இன்னும் பல ஆயிரம் பதிவுகளை அளிக்கவேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை வாழ்த்துக்களாக தெரிவித்துக் கொள்கிறேன்.

vasudevan31355
21st November 2013, 11:26 AM
டியர் பார்த்தசாரதி சார்,

நடிகர் திலகம் திரியின் பாகம் 12-ஐ துவக்கி வைத்த தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரியின் பாகம் 12 க்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

vasudevan31355
21st November 2013, 11:29 AM
'ஹிட்லர் உமாநாத்' பதிவை முழுதும் பொறுமையாக படித்து விட்டு பின் தங்கள் பின்னூட்டத்தை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

chinnakkannan
21st November 2013, 01:26 PM
வாசு தேவன் சார்..வருக வருக..

வந்தவுடன் இனிமையாக ஒரு நீஈஈள சுவையான உழைப்புமிக்க பதிவு- ஹிட்லர் உமா நாத்..

நாங்கள் எல்லாம் வெகு சாதாரண ரசிகர்கள்..படம் மொத்தமா நல்லா இருக்கா பார்ப்போம்..சிவாஜி ஆக்டிங்க் நல்லா இருக்கும்..அதுக்காக மத்தவங்க சரியா செய்யலைன்னா எப்படிப் பார்க்கறது..என்ற மன நிலையில் இருப்பவர்கள்/இருந்தவர்கள்..

சில சமயங்களில் சிவாஜியின் நடிப்புக்காகவே சில படங்கள் திருப்பித் திருப்பி ப் பார்த்ததுண்டு/பார்ப்பதுமுண்டு.

நீங்கள் இட்டிருக்கும் ஹிட்லர் உமா நாத்தின் பதிவில் நடிகர் திலகத்தின் மீதான உங்களது பக்தி மிக அழகாக வெளிப்படுகின்றது..

இந்தப் படம் நான்பார்க்காத ஒன்று..

//அடுத்தது நமது தலைவர் இதுவரை வைக்காத ஹிட்லர் மீசை வைத்து வித்தியாசமான கெட்-அப்பில் நடித்த விஷேசம், மகேந்திரனின் கதைக்கு மௌலி திரைக்கதை அமைத்து வசனம் எழுதிய விசேஷம்,//

மகேந்திரன் கதை மெளலி வசனம் என்பது நான் அறியாத ஒன்று.. ந.தி யின் ஸ்டில் பார்த்த போது வித்தியாசமான் கெட் அப் என்று தெரிந்ததே தவிர..வெளிப்படையாகச் சொன்னால் - அது என் மனத்துக்கு விருப்பமானதாக இல்லை என்று சொல்லுகையிலேயே சிலர் மெட்ராஸ் பாஷையிலும் சிலர் ஆங்கில கொட்டேஷன்களை வைத்தும் திட்ட வருவது போல் தோன்றுகிறது..:)

//அப்பாவி உமாநாத்தாய் ஹிட்லர் மீசை, கழுத்தில் தொங்கும் மப்ளர், கையில் குடை, ஊட்டி கோட் சகிதம் நடிகர் திலகம் ஓஹோ!

ஆனால் நடிக தெய்வத்திற்கு மட்டும் அந்த மீசை படு கம்பீரமாக அமர்ந்து பொருந்துகிறதே! //

படத்தைப் பார்த்து விட்டு நீங்கள் சொன்ன காட்சிகளை அசை போட்டு விட்டுச் சொல்கிறேன்..

பட் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய விஷயம்..உங்கள் அசாத்திய பக்தி- நடிகர் திலகத்திடம், அவர் புகழ் பரப்புவதற்கான உழைப்பு என்பது அளவிடற்கரிய ஒன்று.. தொடருங்கள் உங்கள் தொண்டினை..

வாசக தோஷ ஷந்தவ்யஹ..

HARISH2619
21st November 2013, 01:42 PM
என் ஆருயிர் அண்ணன் வாசு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஹிட்லர் உமாநாத் அலசல் என்ற பாதுகாக்க வேண்டிய பொக்கிஷத்தை எங்களுக்கு பிறந்தநாள் விருந்தாக கொடுத்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய அண்ணன் வாசுவுக்கு நன்றி பலகோடி .

திரு முரளி சார்,
தங்கள் ஆதங்கம் நம் எல்லோரின் எண்ணத்தையும் பிரதிபலிக்கிறது .கண்டிப்பாக நம் கண்டனத்தை அந்த பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும்.

Marionapk
21st November 2013, 01:52 PM
nadigarthilagam avargalukku bharatha rathna viruthu thara vendum

uvausan
21st November 2013, 04:12 PM
வாசு சார் - சந்தோஷம் கரைபுரண்டு ஓடுகின்றது இரண்டு காரணங்களால் - ஒன்று - எங்கள் எல்லோருடிய கோரிக்கையும் ஏற்று விரைவில் திரிக்கு வந்ததற்காக ---- இரண்டாவது - உங்கள் பிறந்த நாள் பரிசாக " ஹிட்லர் உமாநாத்" யை பற்றி பதிவிட்டது - 5 பாகங்களில் - எவ்வளவு உழைப்பு - எவ்வளவு நாள் இந்த அருமையான பதிவுக்காக உறக்கம் இல்லாமல் , சரியாக உணவு உண்ணாமல் , உடம்பை அலட்சியம் படித்திருப்பீர்கள் - 5 பாகம் படிப்பதற்கு எவ்வளவு நாங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் - உங்கள் 5 பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன் - திருப்தி ஏற்படவில்லை - மீண்டும் படித்துகொண்டு இருக்கிறேன் - என் பேராசை லிஸ்டில் எழுதினவை எல்லாம் நிறைவேறிவிட்டது - நீங்கள் பதிவை போட்ட பின் - 3 நாட்களக்காவது திரியில் எல்லோரும் உங்கள் பதிவை மட்டும் படிக்க வேண்டும் பிறகு தங்கள் பதிவுகளை தொடரல்லாம் - இப்படி சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை - ஆனால் :ty::ty: ஒன்று நிச்சயம் - 3 நாட்களுக்கு மேல் படிக்க பல விஷயங்கள் உள்ளது உங்கள் பதிவில் - நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இந்த மாதிரி பதிவுகளை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று , பூண்டி ஆலய கர்த்தரையும் , நம் இறைவனையும் வேண்டி கேட்டுகொள்கிறோம் - என் கருத்துக்கள் தொடர்கின்றன

அன்புடன் ரவி

:clap::2thumbsup::grin::smokesmile:

uvausan
21st November 2013, 04:28 PM
அப்பாவி உமாநாத்தாய் ஹிட்லர் மீசை, கழுத்தில் தொங்கும் மப்ளர், கையில் குடை, ஊட்டி கோட் சகிதம் நடிகர் திலகம் ஓஹோ! வெகு வித்தியாசமான பாத்திரம். உருவ அமைப்பும் கூட. படத் தொடக்கத்திலிருந்து இறுதிக் காட்சி வரை நடிப்பில் செய்யும் சாகசங்கள் வழக்கம் போல ஏன் வழக்கத்தை விடவும் அதிகமாக நம்மை ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கின்றன.

ஏழை அப்பாவியாய் ஒன்றும் தெரியாமல் அனைவரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகும் போதும் சரி... மனைவியின் அறிவுரைகளை அடக்கத்துடன் கேட்டு அதன்படி நடக்கும் போதும் சரி... படிப்படியாய் ஆபீஸில் பதவி உயர்வு நிலைகளை சாதுர்யமான புத்திசாலித்தனத்தால் அடையும் போதும் சரி... தன்னை வாழ வைத்த தன் முதலாளியிடம் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதையிலும் சரி... பிரச்னைகளை அழகாக சந்தித்து எதிர் கொள்ளும் போதும் சரி... மகளிடம், மனைவியிடம் கண்டிப்பும், பாசமும் காட்டும் போதும் சரி... தொழிலாளர்களிடையே சுமூகமாக அதே சமயம் கண்டிப்பாக நடந்து கொள்ளும் விதத்திலும் சரி!

அத்தனை பரிமாணங்களிலும் ஒவ்வொரு காட்சியிலும் வைடூரியம் போல் ஜொலிக்கிறார் நடிகர் திலகம்.

-----
உண்மை - நவரத்தினமாக திகழ்தவர் நம் தலைவர் ஒருவரே - தன்னால் முடியாது என்று எந்த Roleயும் விட்டு விடவில்லை - அந்த அந்த Roleக்கு உரிய மரியாதையை அவர் ஒருவர் தான் கொடுத்திருக்கிறார் - படத்தின் வெற்றி தோல்விகள் , நடிப்பின் வெற்றியை தொடாமல் போயிருக்கலாம் ஆனால் அதுவே அவர் நடிப்புக்கு தந்த மரியாதையை குறைத்துவிடாது

தொடரும்

uvausan
21st November 2013, 04:42 PM
ஒரு தந்தையின் கண்டிப்பு, கோபம், மகள் சாகத் துணிந்தவுடன் அப்படியே அந்தக் கோபம் மாறி ஏற்படும் பயம், படபடப்பு, தந்தை என்ற உரிமை கூட தனக்கு இல்லையே என்ற தவிப்பு , 'இனி கண்டிப்பதால் புண்ணியமில்லை... இனி உன்னை ஒன்றும் கேட்க மாட்டேன்... கேட்பதற்கு நான் யார்?' என்ற விரக்தி, வேதனை, இனி தற்கொலைக்கு முயலக் கூடாது என்று மகளிடம் கெஞ்சல், பதற்றம், நான் உனக்கு அப்பா இல்லையா என்ற பந்ததத்தை உணர்த்தும் உரிமை, இருக்கிற ஒரு மகளும் போய் விட்டால் என்ன செய்வது? என்ற பெரும் அச்சம், மனைவி கூட புரிந்து கொள்ளாமல் பேசுகிறாளே என்ற வருத்தம் அத்தனையையும் ஒரே நிமிடத்தில் நம் மனதில் ஆழமாகப் புதைத்து அழ வைக்க இந்த மனிதரை விட்டால் வேறு யாராவது பிறந்திருக்கிறார்களா காட்டி விடுங்கள் பார்ப்போம்.

======

படிக்கும்போதே கண்கள் குளம் ஆகிவிட்டன வாசு சார் - எப்படியிருந்திருக்கும் படத்தில் என்று யூகிக்க முடிகிறது - துரதிஷ்டமாக , இந்த படம் வெற்றி பெறாவிட்டாலும் , இதிலும் ஒரு சாதனை புரிந்திருக்கும் ntயை என்ன சொல்வது - அதை அருமையான நடையில் எங்களுக்கு எடுத்துசொன்ன உங்களை எப்படி புகழ்வது - கிருபா சார் மொழியில் சொன்னால் - படா ஷோக்கா எலுதரே கண்ணா - என் வீட்டு பக்கம் வரியா நயினா - அப்பால பார்ட்டி யே தரேன் - ஆங் -----

தொடரும்

uvausan
21st November 2013, 04:59 PM
அடால்ப் ஹிட்லருக்கும் இந்த உமாநாத்துக்கும் கொஞ்சமும் குணத்தில் சம்பந்தமில்லை. அந்த ஹிட்லர் யூதர்களை இரக்கமில்லாமல் கொன்று குவித்தவன். நம் ஹிட்லரோ நாதியற்ற தொழிலாளிகளுக்கு வாழ்வு கொடுப்பவர். அந்த ஹிட்லர் அசகாய வீரனாக உருவெடுத்து கோழையாக தற்கொலை புரிந்து மாண்டான். நம் ஹிட்லரோ கோழையாக வாழ்வைத் துவங்கி வீரனாகவே இறுதி வரை கம்பீரமாக வாழ்ந்தவர். அந்த ஹிட்லர் தோல்வியால் துவண்டு தற்கொலை முடிவை எடுத்த ஒரு கோழை என்று நம் ஹிட்லர் அந்தக் கோழையின் புகைப்படத்தை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிட்டு வரும்போதே அவனைவிட உமாநாத் எல்லா வகையிலும் உயர்ந்த, பிரச்னைகளை face செய்யக் கூடிய தைரியசாலி என்று புரிந்து விடும்.

இந்த அற்புதமான ரோலில் வேறு எந்த ஒரு பயலையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

அது நம் நடிப்பின் இறைவனால் மட்டுமே முடிந்த ஒன்று.

==============================================

முற்றிலும் உண்மை - உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை - பாத்திரங்களை பேச வைத்தார் - அது ஒரு கோழையோ , வீரனோ , முட்டாளோ , மூடனோ - அவர் கவலைப்பட்டதே இல்லை - கவலை படுவதெல்லாம் நாம் தான் - ஏன் அவர் அந்த பாத்திரத்தில் நடித்தார் - ஏன் அந்த கதாநாயகியுடன் நடித்தார் என்று - இப்படி நடித்து இருந்தால் படம் வெள்ளி விழா கண்டிருக்கும் , அப்படி நடித்ததினால் , படம் நினைவில் நிக்க வில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம் - உண்மையில் எல்லோரும் ஒரே மனதாக ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் - அவர் இல்லாமல் இருந்திருந்தால் - நடிப்பு என்ற வார்த்தை ஒரு NRI யாகவே இருந்திருக்கும் - சும்மாவா சொன்னார் கோபால் சார் - சிவாஜி ஒரு மாமனிதர் என்று --------

அன்புடன் ரவி

:):smokesmile:

goldstar
21st November 2013, 05:03 PM
Thank you and welcome back Vasu sir.

You have given complete picture of Hitler Umanath. My duty to give visual treats to our friends


http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_1_zps9a908609.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_2_zps72776e81.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_3_zps0eb12f6d.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_4_zps2f6e3e10.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_5_zps3d9eda66.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_6_zps7ffd2cac.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_7_zpsec4b5dec.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_8_zps5705fc59.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_9_zps54322249.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_10_zps576617e5.png

goldstar
21st November 2013, 05:07 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_11_zps130d40ac.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_12_zps506979e9.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_13_zpse243c5eb.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_15_zps65288793.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_16_zpse7113488.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_17_zps46d8bc4a.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_18_zpsd3d37655.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_19_zpsa0c14228.png

goldstar
21st November 2013, 05:07 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_20_zpsc294afbe.png


http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_21_zps25c0cfe2.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_22_zpsf0f6fde6.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_23_zps64037fa0.png


http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_24_zps3ce80318.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_25_zps4c35812f.png

goldstar
21st November 2013, 05:08 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_26_zps9ca859d0.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_27_zps295c8baa.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_28_zps38e1775e.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_29_zpsdd0d5760.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/NT_2013_11_21_30_zps3e8cf51c.png

uvausan
21st November 2013, 05:08 PM
முரளி சார் - உங்கள் வருகை இந்த திரியில் மீண்டும் ஒரு நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது - இனி இந்த திரி உடைய கூடாது , உடைய விடகூடாது ( சாரி கிருபா சார் - சும்மா இதையே கூவிகினே இருப்பதிற்கு மன்னிக்கவும் - முரளி அவர்கள் வந்த தெம்பில் எழுதிகிறேன்)

uvausan
21st November 2013, 05:22 PM
புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி படிக்கும் லட்சக்கணக்கான மக்களை இப்படி தவறான தகவல் கொடுத்து ஏமாற்றுவதில் இவருக்கு என்ன லாபமோ?

உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை என்பதை இப்படிப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு!

அன்புடன்


=====

Murali Sir - எவள்ளவோ பேர் இன்னும் NT யின் சாதனைகளை புரிந்தும் புரியாமல் , தெரிந்தும் தெரியாமல் , அறிந்தும் அறியாமல் உளறிகொன்டுதான்
இருக்கிறார்கள்- பொய் பித்தலாட்டம் , cheap publicity , என்று ஒரு கூட்டமே கங்கணம் கட்டிக்கொண்டு செயல் படும் போது , உங்கள் பதிவுகள் - அவர்கள் முக திரியை கிழித்து NTயின் புகழை மேலும் அழகு படுத்துகின்றது - great Revelation and Posting ---

:):smokesmile:

uvausan
21st November 2013, 05:46 PM
ரவி,

சீனி அல்லது சக்கரை என்று சொல்லப்படும் பொருள் எதனுடன் சேர்ந்தாலும் தித்திப்பது போல ஞான ஒளி பற்றி யார் எழுதினாலும் அது படிக்க நிச்சயம் சுவையாகத்தான் இருக்கும். அப்படிதான் இருந்தது உங்கள் தொடரும்.

உங்களுக்கு ஒரு யோசனை. ஏற்கனவே பலர் எழுதிய படத்தை பற்றி எழுதப் போகிறீர்கள் என்றால் கதையை திரைக்கதையை விட்டு விடுங்கள். உங்களுக்கு பிடித்த இரண்டு மூன்று காட்சிகளைப் பற்றிய வர்ணனையாக பதிவிடுங்கள். நிச்சயம் சிறப்பாக இருக்கும்.


அன்புடன்

Murali Sir - taken note of - many thanks . ஒரு சின்ன Clarification - நீங்கள் , வாசு சார் , கோபால் சார், ராகவேந்திர சார் , கார்த்திக் சார் அலசின பிறகு எந்த சீனும் பாக்கியே இல்லை சார் மற்றவங்களுக்கு - பிடித்த சீன்கள் எல்லாமே , நீங்கள் அலசின பதிப்புக்குள் அடக்கம் . ஹிட்லர் உமா நாத்தில் இனி எதாவது பாக்கி உண்டா ? ஆனாலும் கதையையே வேறு விதத்தில் சொல்லலாமே ( முதலில் எனக்கு பிடித்த வைகளில் கதை தான் ப்ரதானம் ) என்று தான் ஒரு சிறு முயற்சி எடுத்துக்கொண்டேன் அதற்காகதான் "எல்லாத்துக்கும் ஆசைபடு " என்ற Titleயை வைத்தேன் - But I will definitely do consider your advice .

அன்புடன் ரவி
:):smokesmile:

chinnakkannan
21st November 2013, 05:47 PM
//நடிப்பு என்ற வார்த்தை ஒரு nri யாகவே இருந்திருக்கும் - // ரவிசார்..புரியவில்லை..

RAGHAVENDRA
21st November 2013, 06:11 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/congratsVasu4000_zps7ddc6872.jpg

வாசு சார்.... நடிகர் திலகம் தங்களுக்கு அளிக்கும் மலர்ச் செண்டை பரிசாக வாங்கிக் கொள்ளுங்கள். அது வெறும் பரிசல்ல, நடிகர் திலகத்தின் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் அன்பு மலர்கள், வாழ்த்து மலர்கள்..

Russelldwp
21st November 2013, 07:51 PM
4000 ஆவது சிறப்புப் பதிவு

ஹிட்லர் உமாநாத் (26.01.1982) ஒரு முழுமை அலசல் (5 பாகங்கள்)

1982-ஆம் வருடம் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று வெளி வந்த படம்.!? அதற்கு முந்தைய வருடம்


இந்த ஹிட்லர் உமாநாத் முன்னேற்றத்திற்கான ஒரு பாடம்.

டியர் வாசுதேவன் சார்

தங்களுடைய 4000 வது பதிவான ஹிட்லர் உமாநாத் பதிவு மிக அருமை. தங்களுடைய பதிவு முழு படத்தையும் திரையில் பார்த்தது போல் உள்ளது.
மிகவும் ரசித்து படித்தேன். கதையம்சம் நன்றாகத்தான் உள்ளது பிறகு ஏன் சரியாக போகவில்லை என தெரியவில்லை.ஒரு முக்கிய் செய்தி என்னவென்றால் இந்தப் படம் இன்று வரை திருச்சியில் ரிலிஸ் ஆகவே இல்லை. ஆதலால் த்ருச்சி ரசிகர்கள் நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள்.
எனவே இந்த பத்வு திருச்சி ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாத்ம்

c. Ramachandran

uvausan
21st November 2013, 08:00 PM
//நடிப்பு என்ற வார்த்தை ஒரு nri யாகவே இருந்திருக்கும் - // ரவிசார்..புரியவில்லை..

சின்ன கண்ணன் சார் - உண்மையில் புரியவில்லையா ? இல்லை புரியாத மாதிரி -------- உங்களுக்கு Clarify பண்ண கடமை பட்டுள்ளேன் ---

நடிப்பு என்ற வார்த்தை ஒரு NRI யாகவே இருந்திருக்கும் --------- அதாவது - NRI என்பதை வெறும் நான் Non Resident Indian என்று எடுத்துகொள்ள கூடாது - நமக்கு புரியாத subject யை கூட NRI என்று சொல்லலாம் - NT மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் , நடிப்பு என்ற ஒரு வார்த்தை நமக்கெல்லாம் புரியாத வார்த்தையாகவே இருந்திருக்கும் - சுருக்கமாக ஒரு NRI யாக இருந்திருக்கும் என்று சொன்னேன் ......

அன்புடன் ரவி
:):smokesmile:

SejkoRau
21st November 2013, 08:11 PM
Mr. Murali Srnivas sir,

As we are expected (feared) the wrong information of Major Dasan had been posted in MGR thread, and appreciation was given to him. Idhaithaane edhir paarthaai Major Dasaa?.

இன்னும் கொஞ்சம் விட்டால் இந்த மேஜர் தாசன் இந்தியாவை சீன ராணுவம் தாக்க தயாராக இருந்தபோது, நடிகர் திலகம் அவர்களை இந்திய அரசாங்கம் தொடர்புகொண்டபோது அவர் ஷூட்டிங்கில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டபடியால், இதனால் ஒரு குறிப்பிட்ட செல்வாக்குள்ள நடிகரை தொடர்புகொண்டது.

விஷயத்தின் விபரீதத்தை நன்கு உணர்ந்த அவர் நாட்டுபற்றை மற்iற எந்த விஷயத்தை காட்டிலும் முக்கியமாக கருதிய அவர் ஒரு நிமிடம் கூட தாமதியாமல் அடுத்த விமானத்தில் சென்று பிரதமரை சந்தித்து அதன் பிறகு அந்த நேரத்தில் உள்ள வெளியுறவு துறை அமைச்சருடன் சென்று இரண்டு அரசாங்கத்திடம் பேசி பெரும் போரை தவிர்பதர்க்கு மிகவும் உந்துசக்தியாக இருந்தார் என்று கூட எழுதுவார் ! இதற்க்கு ஆதாரமாக நினைத்து அவர் ஜப்பான் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு, இதை ABC productions நிறுவனத்தை சேர்ந்த திரு. அய்யாகண்ணு (வயது 82 ) நினைவுகூர்ந்தார் என்பதை போல வெளியிடுவார் !

அதையும் சிலர் இங்கு, நடிகர் திலகத்தை, அவர் புகழை இறக்கும் ஒரு சந்தர்பமாக நினைத்து ...இது ஜப்பான் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று மட்டும் எழுதி, செய்தியை பற்றி எழுதும்போது இரண்டு அரசாங்கமும் செய்யாத இந்த செயலை தனி மனிதராக செய்து முடித்த நம் இறைவன் அவர்களின் இந்த வீர தீர செயலை நினைத்து நினைத்து பெருமைபடுகிறேன் என்று கூறுவார் !

காரணம் இந்த சிலரை பொருத்தவரை, தமக்கு வடிந்தால் மட்டும் அது ரத்தம் ...மற்றவர்களுக்கு வடிந்தால் அது தக்காளி சட்னி போலும் !

SejkoRau
21st November 2013, 08:15 PM
சின்ன கண்ணன் சார் - உண்மையில் புரியவில்லையா ? இல்லை புரியாத மாதிரி -------- உங்களுக்கு clarify பண்ண கடமை பட்டுள்ளேன் ---

நடிப்பு என்ற வார்த்தை ஒரு nri யாகவே இருந்திருக்கும் --------- அதாவது - nri என்பதை வெறும் நான் non resident indian என்று எடுத்துகொள்ள கூடாது - நமக்கு புரியாத subject யை கூட nri என்று சொல்லலாம் - nt மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் , நடிப்பு என்ற ஒரு வார்த்தை நமக்கெல்லாம் புரியாத வார்த்தையாகவே இருந்திருக்கும் - சுருக்கமாக ஒரு nri யாக இருந்திருக்கும் என்று சொன்னேன் ......

அன்புடன் ரவி
:):smokesmile:

நடிப்பை பற்றி நடிப்பின் ஆழம் பற்றி abcd தெரியாதவர்களை கூட சிவாஜி ஓவராக்ட் செய்கிறார் என்று நடிப்பை அளவுகோல் வைத்து அளக்கும் அனுபவஸ்தர்கள் போல பேச செய்தது ஒன்றே போதும் நடிகர் திலகத்தின் சாதனையை பறை சாற்ற !

Gopal.s
21st November 2013, 08:30 PM
ஹிட்லர் உமாநாத்-தங்க பதக்கத்தை அடுத்து நடிகர்த்திலகத்துக்காக மகேந்திரன் எழுதிய நாடகம்.சில பல வேறுபாடுகள் மௌலியை உள்ளே கொண்டு வந்தது. ஹிட்லர் get up பல்வேறு ஊகங்களை கொடுத்தாலும் வழக்கமான எண்பதுகளின் டிராமாதான். ஆனால் நடிகர்திலகத்தின் அபார நடிப்பு,படத்தின் கச்சா முச்சா ஓட்டத்தை மறைத்து நம்மை கட்டி விடும். நாம் உரையாடியுள்ளோம்,. நீங்கள் குறிப்பிட்ட படி மனைவியின் superiority காம்ப்ளெக்ஸ் குறித்து நடிகர்திலகம் வெடிக்கும் இடம் , என்ன சொல்வது?பார்த்து உணர வேண்டிய அதிசயம்.மாதவன் இணைவில் கடைசி படம்.உங்கள் 4000 ஆவது பதிவு,hats off .

uvausan
21st November 2013, 08:35 PM
இங்க போட்டோ வீடியோ எப்படி அட்டாச் பண்றதுன்னு தெரியாம கேட்டு இருந்தேன்.ஒரு ஆளு கூட எப்பிடி போடறதுன்னு சொல்லித்தரல.இதான் இங்க இருக்குறவங்க ஹெல்ப் பண்ற முறையா.ஏன் இப்பிடி இருக்கீங்க.சிவாஜி ரசிகன்னு சொல்லிக்கவே என்னமோ போல இருக்கு.இதுலவேற அல்லாரும் ஒத்துமையா செயல்படுவோம்முன்னு வேற எழுதிறீங்க..

சாரி கிருபா சார் - உங்கள் இந்த பதிவை இப்பொழுதுதான் படித்தேன் - வருத்த படுகிறேன் தாமதமாக உதவி செய்வதற்கு - நீங்கள் வீடியோ பதிவு செய்ய வேண்டுமென்றால் , அந்த URL யை copy செய்து அதை உங்கள் பதிவில் paste செய்துவிடுங்கள் - ஆடியோ பாடல்களும் அதே மாத்ரி URL யை Copy செய்து paste செய்யுங்கள் . இமேஜ் பதிப்பதும் சுலபமே - உங்கள் பதிவின் கீழ் , options உள்ளது - அதை folloபண்ணினாலே போதும் - திரிக்கு ஒற்றுமை தேவை சார் - அதை திட்டாதீர்கள் - எல்லோரும் பதிவுகளை போடும் மும்மரத்தில் , உங்கள் பதிவை கவனிக்க தவறி இருப்பார்கள் (நான் உட்பட ) - மன்னிக்கவும் - அன்புடன் ரவி

:smile2::smokesmile:

uvausan
21st November 2013, 08:46 PM
முரளி சாரின் பழைய விமரிசன ஆய்வுகளின் லிங்க் இங்கே கொடுக்க படுகிறது.படித்து பார்த்து இன்புறவும்.

http://www.mayyam.com/talk/showthrea...Part-3)/page53 Iru Malargal

http://www.mayyam.com/talk/showthrea...687#post253687 Nenjirukkum Varai

http://www.mayyam.com/talk/showthrea...Part-3)/page69 Amara Deepam

http://www.mayyam.com/talk/showthrea...Part-3)/page82 Mohanlal on NT

[Read the Tamil translation of the above post done by Joe in the next page after this.

http://www.mayyam.com/talk/showthrea...Part-3)/page91 Uthama Puthiran

http://www.mayyam.com/talk/showthrea...art-3)/page102 Koondu Kili

http://www.mayyam.com/talk/showthrea...art-3)/page106 Bale Pandiya

http://www.mayyam.com/talk/showthrea...378#post265378 Padikkadha Medhai

http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page24 Andavan Kattalai

http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page27 Kulamagal Radhai

http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page33 Ratha Thilagam

http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page44 Chittor Rani PAdmini.


http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page46 Neela Vanam

http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page50 Pesum Deivam

http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page60 Mahakavi Kalidas

http://www.mayyam.com/talk/showthrea...807#post423807 Kai Kodutha Deivam

http://www.mayyam.com/talk/showthrea...-Part-5/page88 Thangai

http://www.mayyam.com/talk/showthrea...Part-5/page139 En Thambi

http://www.mayyam.com/talk/showthrea...Part-5/page146 Thirudan

http://www.mayyam.com/talk/showthrea...Part-6/page118 Vilayaattu Pillai

http://www.mayyam.com/talk/showthrea...-Part-7/page74 Annaiyin Aanai

http://www.mayyam.com/talk/showthrea...-Part-7/page91 Selvam

http://www.mayyam.com/talk/showthrea...Part-7/page101 Lakshmi Kalyanam

http://www.mayyam.com/talk/showthrea...-Part-8/page18 Enga Oor Raja

http://www.mayyam.com/talk/showthrea...-Part-8/page89 Pennin Perumai

Gopal sir - pages are not opening in any of the link provided above - were they removed since ?- these are all treasures to be preserved and protected including all yours , Vasu sir's and ragavendra sir's and karthik sir's and many such good souls as hubbers in NT's threads - hope it is not a Sabotage done

Russelldwp
21st November 2013, 09:22 PM
[QUOTE=Uthamaputhiran;1091759]இன்னும் கொஞ்சம் விட்டால் இந்த மேஜர் தாசன் இந்தியாவை சீன ராணுவம் தாக்க தயாராக இருந்தபோது, நடிகர் திலகம் அவர்களை இந்திய அரசாங்கம் தொடர்புகொண்டபோது அவர் ஷூட்டிங்கில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டபடியால், இதனால் ஒரு குறிப்பிட்ட செல்வாக்குள்ள நடிகரை தொடர்புகொண்டது.

சூப்பர் சார்

இதை பார்த்தாவது பொய்யான செய்திகளை போட்டு மற்றவர்க்கு புகழ் தேடும் நபர்களுக்கு சிவாஜி ரசிகர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
மேலும் இது போன்று நடக்காத் செய்திகளை தவறான ஆதார்ங்களோடு தரும் சிலரின் செய்திகளை போட்டு குமுதம் தன் தரத்தை இழக்க வேண்டாம் என
தெரியப்படுத்துவோம்.

chinnakkannan
21st November 2013, 09:27 PM
//Gopal sir - pages are not opening in any of the link provided above - were they removed since ?- these are all treasures to be preserved and protected including all yours , Vasu sir's and ragavendra sir's and karthik sir's and many such good souls as hubbers in NT's threads - hope it is not a Sabotage done // Ravi Tamil-classics group lபோய் அந்தத் தேவையான இழைக்குள்போய் அந்தப்பக்கத்தை எடுத்துத் தான் படிக்கவேண்டும்.. நான் அப்படித் தான் சில படித்தேன்.. இன்னும் படிக்க வேண்டும்..but dont miss it..

chinnakkannan
21st November 2013, 09:33 PM
//சின்ன கண்ணன் சார் - உண்மையில் புரியவில்லையா ? இல்லை புரியாத மாதிரி -------- உங்களுக்கு Clarify பண்ண கடமை பட்டுள்ளேன் ---// nijamaakavE non resident indiannuthaan ninaichchen.. Thanks for the explanation ravi..

RAGHAVENDRA
21st November 2013, 09:55 PM
ஓவர் ஆக்டிங் விமர்சனங்கள் பற்றி நடிகர் திலகத்தின் கருத்து என்ன...

இயக்குநர் மகேந்திரன் கூறுகிறார்..

http://i2.wp.com/www.kollytalk.com/wp-content/uploads/2013/03/Director-Mahendran.jpg?resize=432%2C270


“ சிவாஜி சாரை ஓவர் ஆக்டிங்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. எங்கோ அரிதா ஒரு பத்திரிகையில் அதைப் பற்றிப் பேசியிருந்தார் சிவாஜி. ‘ ‘என்கிட்டே ஒரு பென்சில் கொடுத்து கையெழுத்துப் போடச்சொன்னால் ஒரு மாதிரி போடுவேன். அதுவே ஒரு பால்பாயிண்ட் கொடுத்து போடச் சொன்னால் வேற மாதிரியிருக்கும். அதையே பிரஷ் கொடுத்து எழுதுங்கன்னா வடிவம் வேறயா இருக்கும். அதையே கோயிலுக்கு வெள்ளை அடிக்கிற மட்டையை கொடுத்து எழுதச் சொன்னால் அதுக்கேத்த மாதிரிதான் இருக்கும். என்னை டைரக்டர்கள் எப்படிப் பார்க்க விரும்புகிறாங்களோ அப்படித்தான் இருப்பேன். என்னைச் சொல்லி குத்தம் இல்லைங்கண்ணே’ என்றார்.”


- தினகரன் தீபாவளி மலர் 2013 புத்தகத்திலிருந்து..

ScottAlise
21st November 2013, 10:31 PM
Vasu sir,

Apt post for your mile stone 4000 post enjoyed it as usual you rocked

ScottAlise
21st November 2013, 10:33 PM
Dear kiruba sir,

To upload Videos you can just copy the link of video

To upload photo you must add it by choosing it as an attachment

But I don't know how to post larger image size

Thanks for your appreciation for Gurudakshanai

J.Radhakrishnan
21st November 2013, 11:06 PM
டியர் வாசு சார்,

தங்களின் 4000வது பதிவு ஹிட்லர் உமாநாத் ஒரே மூச்சில் படித்து முடித்தேன், இந்த படம் பார்க்காத என்னை போன்றவர்களுக்கு இது ஒரு வரபிரசாதம்.

HonestRaj
21st November 2013, 11:39 PM
Dear kiruba sir,

To upload Videos you can just copy the link of video

To upload photo you must add it by choosing it as an attachment

But I don't know how to post larger image size

Thanks for your appreciation for Gurudakshanai

for youtube video embedding
{video}video link{/video}
replace { } to [ ]

for larger/ actual images
image .jpg link

i believe this works for any browser type

parthasarathy
22nd November 2013, 02:10 PM
Dear Mr. Ganesh / Mr. Vasudevan (Neyveli),

Many happy returns of the day (belated - as I am able to check website only today).

Regards,

R. Parthasarathy

parthasarathy
22nd November 2013, 02:11 PM
I profusely thank all friends who have wished me on starting this thread-12. In fact, it's Mr. Murali's order, which I have obeyed.

Regards,

R. Parthasarathy

parthasarathy
22nd November 2013, 02:12 PM
Dear Mr. Vasudevan,

Heartiest congratulations on the 4000th post.

Your analysis on "Hitler Umanath" is examplary and outstanding, covering minutest detail, as usual, with very simple words.

Awaiting more,

Regards,

R. Parthasarathy

SejkoRau
22nd November 2013, 02:30 PM
வாசுதேவன் சார்

உங்களுடைய ஸ்பெஷல் பதிவு அருமையிலும் அருமை.

உமாநாத்தை பற்றி நல்ல ஒரு அறிமுகமும் உருவகமும் அனைவருக்கும் கொடுத்துள்ளீர்கள் .

எந்த நாயகனும்...வீம்புக்காகவாவது, ஒரு பெண்ணை 100 காலிபயல்கள் தொந்தரவு செய்யும்போது ஒத்தயாளாக அடித்து நொறுக்கி சாகசம் காட்டும்படி எழுத வர்புருத்தியிருப்பான். ஆனால் நம் நடிகர் திலகம் அவர்கள் மட்டுமே கதைக்கு தேவைபடுபடியான விதத்தில் காட்சி அமையும்போது அதை ஒத்துக்கொண்டு அதற்கேற்றார்போல நடித்து கொடுப்பார்.

உழைப்பாளி முதல் முதலாளிவரயிலான பரிமாணம் அவ்வளவு அச்சு அசலாக நீங்கள் எழுதியிருக்கும் விதம் உண்மையிலயே அவருக்கு செலுத்திய புனிதமான அஞ்சலி. அவருடைய ஆன்மாவின் ஆசி வாழ்த்து நிச்சயம் உங்களுக்கு உண்டு என்பதை தவிர நான் வேறு என்ன பெரிதாக சொல்லமுடியும்.

உங்கள் உழைப்பு என்பது சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு நிகரானது ! வாழ்க உங்கள் தொண்டுள்ளம் ! வளர்க உங்கள் நற்பணி !

திரியை உங்கள் எழுத்தால் புனிதபடுத்திவரும் செயல் எங்கள் எல்லாவற்கும் பெருமை சேர்க்கும்விதமாக இருப்பது நாங்கள் செய்த பாகியம் சார் !

parthasarathy
22nd November 2013, 02:53 PM
Dear Mr. Uthamaputhiran (your name please),

Even though I have started this part-12, you only have given it the momentum it required.

Excellent and thank you.

Regards,

R. Parthasarathy

SejkoRau
22nd November 2013, 03:37 PM
Dear Mr. Uthamaputhiran (your name please),

Even though I have started this part-12, you only have given it the momentum it required.

Excellent and thank you.

Regards,

R. Parthasarathy

Thanks for your compliments Sir. You can call me Kannan !

Regards
s.k

Russelluvd
22nd November 2013, 03:50 PM
ரவி சாரு,

படம் போடுறது எப்பிடின்னு சொல்லிக்க் குட்துகினதுக்கு தாங்க்ஸ்பா திரி ஒத்துமைய ஆரு கண்ணு திட்டினா.ஒத்த ஒதவி கேட்டுகினேன்.ஆரும் கண்டுக்கிலி யேன்னு கேட்டேன்.அதான் இப்ப நீ கண்டுக்கினியே.என்னாண்ட குத்தம் சொல்லாத.
அப்பிடியே ஆஸ்ட்டு ராசு அண்ணாத்தைக்கும் தாங்க்ஸ் சொல்லிகினன்பா

Russelluvd
22nd November 2013, 03:51 PM
வாசுதேவ அண்ணாச்சி
நான் ஒருத்தன் கேட்டுகினேன்னு வந்து பதிவு போட்டுபிட்டியே.
நீ போட்ட இட்லரு உமாநாத்து இப்பதான் படிச்சு முடிச்சுகினேன்.தமிழுல வேற நாம் ரொம்ப வீக்கா.அதான் நாழி வளத்திடிச்சி.அல்லாரும் சொல்றாமாறி படா ஷோக்கா எளுதிக்கின ப்பா.நான் கூட அத்தப் பார்த்துருக்கேன் ஆனா நெனவே இல்ல.இப்ப உன்னால பாக்கனும்னு ஆச வந்திடிச்சி.

Russelluvd
22nd November 2013, 04:11 PM
மொரளிசாரு இந்த மேசரு தாசன் பண்ண கூத்தப் பத்தி படா ஷோக்கா எழுதி புட்டுபுட்டு வச்சிபுட்டாரு.கெடக்குரானுவ புத்தி கெட்டப் பயலுவ.ஆரு வந்து ஆருக்கு சிவாருசு பண்றது.காமராசுக்கு படம் பாத்து பஞ்சாயத்து பண்றத்தான் சோலியா.மொரளி சாரு இத்தன ஆதாரத்தையும் வச்சதுக்கு அப்பால மொவன் இனிமே எந்தப் போட்டாவையும் கரீட்டா விசாரிக்காம போட்டுக்க கூடாது.குமுதம்காரனுக்கு அல்லாரும் மொத்தமா எழுதி போட்னம்பா.இன்னா நினச்சுகினு கிடக்குறாங்க.சிவாஜின்னா அவ்ளோ இளப்பமா

Russelluvd
22nd November 2013, 04:27 PM
உத்தம புத்ரா

தப்ப தைரியமா எங்க வேண்ணாலும் போயி ஒத்த ஆளாத் தட்டி கேட்டுகினு கெடக்கிறியே மெய்யாலுமே ஒடம்பு சிலித்திகுதுபா.உன் துணிச்சலுக்கும்,தெகிரியத்துக்கும் சலாம் போட்டுகினேன் கண்ணு.

நீ பட்ட கெளப்பு ராசா.

uvausan
22nd November 2013, 06:24 PM
*
ஸ்வாட் அனலிஸிஸ்னுல்லாம் எழுதிட்டு டபக்குன்னு ஞான ஒளிக்குப் போய்விட்டீர்..எழுதுங்க எழுதுங்க..:)


சின்ன கண்ணன் - SWOT மூலம் நம் weakness யை திருத்திக்கொண்டால் , கிடைப்பது ஞான ஒளி தானே சார் !!

அன்புடன் ரவி

:smile2::smokesmile:

uvausan
22nd November 2013, 06:29 PM
திரி 10 & 11 யை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் - அருமையாக எழுதிகொண்டிருந்த நபர் காவேரி கண்ணன் - கவிதையாக NT யை பற்றி பொழிவார் - அவரும் இந்த திரிக்கு வந்தால் , இன்னும் பல மடங்குகள் இந்த திரி களை கட்டும் .

Ravi
:):smokesmile:

JamesFague
22nd November 2013, 06:37 PM
Mr Vasu Sir,

Welcome back with a bang with a nice post on Hitler Umanath. As rightly written by
you Our NT's movies after 80's are golden one. You have given a fitting reply to those
who have offended our NT through your post. Hereafter those guys will be careful
in writing on NT.

Job well done.

JamesFague
22nd November 2013, 06:39 PM
Mr Murali Sir,

Truth always triumph in the end. By publishing a false information without verifying
facts that Magazine will lose its credibility in the Press Media.

Harrietlgy
22nd November 2013, 07:42 PM
திரி லிங்க் கிடைக்க உதவிய திரு. சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி . திரியை நான் தவறவிட்ட நான்கு நாளில் 42 பக்கம் சென்று இருப்பது மிகவும் சந்தோசம். அசராத உத்தமபுத்திரன் பதிவுகள் அற்புதம். வாசு சார், முரளி சார், ராகவேந்திர சார் பதிவுகள் மகிழ்ச்சி , பம்மாலரும் வர வேண்டும். ஒரே மூச்சில் 42 பக்கம் படித்து விட்டேன் .

vasudevan31355
22nd November 2013, 09:55 PM
நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

http://www.eelamview.com/wp-content/uploads/2012/11/thanks.jpg

உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை திரியிலும் அலை பேசியிலும் அளித்த கோபால் சார், வினோத் சார், அன்புச் சகோதரர் பம்மலார், தம்பி ராகுல்ராம், சின்னக் கண்ணன் சார், ரவி சார், ராகவேந்திரன் சார், (அருமையான பழைய டிசைன் நடிகர் திலகம் படத்திற்கு நன்றி) உத்தம புத்திரன் சார், ராமச்சந்திரன் சார், ராதா கிருஷ்ணன் சார், முரளி சார், கிருபா சார், சந்திர சேகரன் சார், ரவிரவி சார், கோல்ட் ஸ்டார் சதீஷ், தம்பி (ஹரீஷ்) செந்தில், சித்தூர் வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார், சுப்பிரமணியம் ராமஜெயம் சார், பரணி சார் மற்றும் பெயர் விட்டுப் போன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்



மற்றும் காரணமே இன்னவென்று நான் அறிய முடியாமல் என்னைத் தவிர்த்த அன்பு ஆதிராம் சார் அவர்களுக்கும், கண்பத் சார் அவர்களுக்கும் (தங்களுக்கு மீண்டும் என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். முதல் வாழ்த்து ப்ரைவேட் மெசேஜில்)



என் இருகரம் கூப்பிய என் நெஞ்சார்ந்த நன்றிகளை மனதார, உளமார தெரிவித்துக் கொள்கிறேன்.


விமானத்தில் பறக்கப் போகுமுன் எனக்கு முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்தளித்த என் உயிர் நண்பர் கோபால் அவர்களுக்கு என் உயிரான நன்றி.

(கோ, போன தடவை நீ என்னுடன் வந்து தங்கி என் பிறந்த நாளை சிறப்பித்தே சென்றாய். அதை என்னால் மறக்கவே முடிய வில்லை, அதனால் அன்று கொஞ்சம் மூட் அப்செட்தான். ஜெமினி திரியில் உன்னுடைய 'நான் அவனில்லை' படத்தின் யாருமே ஈடு செய்ய முடியாத, தர இயலாத ஆய்வைக் கண்டு வாயடைத்துப் போய் நிற்கிறேன். உன்னால் மட்டுமே இந்த அற்புதங்களை அளிக்க இயலும். என்ன பதிவய்யா அது! அற்புதம் நிகழ்த்தியிருக்கிறாய். உன் பதிவில் உன்னை விட எனக்குத்தான் பெருமை. வாழ்த்துக்கள். கோல்ட் பிரேம் போட்டு மாட்ட வேண்டிய பதிவு. நாம் இருவரும் அந்தப் படத்தை ஒன்றாகப் பார்க்க வேண்டுமே. நிறைவேறுமா எண்ணம் நிறைவேறுமா?)


இதே போல் என்னுடைய 4000-ஆவது பதிவான 'ஹிட்லர் உமாநாத்' பதிவை மனதாரப் பாராட்டிய அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக நான் பதிவிட்டே ஆக வேண்டும் என்று அலைபேசி மூலம் எனக்கு அன்பு ஆணைகள் பிறப்பித்த கோபால் சார், ராகவேந்திரன் சார், மிக மிக முக்கியமாக ரவி சார், சித்தூர் வாசுதேவன் சார், உத்தம புத்திரன் சார்

இவர்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது இடைவிடாத அலுவல்களுக்கு மத்தியிலும் எனக்கு போன் செய்து ஹிட்லரைப் பற்றி ஆர்வமுடன் விசாரித்து பிறந்த நாள் வாழ்த்ததும் அளித்த நம்

அன்பு முரளி சாருக்கு

என்னுடைய விசேஷமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (தங்களுடைய 'உண்மை உணரும் நேரம்' பதிவு அனைவருக்கும் நடந்த உண்மையை அற்புதமாக விளக்கியிருக்கிறது. கள்ளம், கபடம், சூது, வாது, பொறாமை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களின் நய வஞ்சகம், வஞ்சப் புகழ்ச்சி அனைத்திற்கும் சரியான சவுக்கு அடி கொடுத்திருக்கிறது தங்கள் பதிவு. குமுதம் போன்ற மிகப் பெரிய பத்திரிக்கைகளுக்கு தாசன் போன்ற சில கறைகளால் களங்கம்.)



வெளிநாட்டில் இருந்தாலும் அலை பேசியின் வழியாகத் தொடர்பு கொண்டு வாழ்த்திய 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

சதீஷ் சார்,

'ஹிட்லர் உமாநாத்' பதிவிற்கு அருமையான சப்போர்ட்டாக நடிகர் திலகத்தின் ஹிட்லர் ஸ்டில்களை பதிவு செய்தது பதிவை அற்புதமாக மெருகேற்றியதற்கு மிக்க நன்றி.

ஒரு தடவையல்ல... மூன்று முறைகள் கை பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த அன்பு பம்மலார் அவர்களுக்கு என் சந்தோஷமான நன்றிகள்.

Murali Srinivas
23rd November 2013, 01:04 AM
வாசு,

ஹிட்லர் பற்றிய பதிவிற்கு பாராட்டுகள் என்று சொல்லுவது formality. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் விஷயத்தில் நீங்கள் காட்டும் சிரத்தை. அலசல் அல்லது ஆய்வு என்று எடுத்துக் கொண்டால் அதை ஒரு ஆத்மார்த்தமான தவமாக செய்யும் உங்கள் dedication எப்போதும் என்னை வியக்க வைக்கும். இந்தப் படம் 1982-க்கு பிறகு பார்க்கவில்லை. ஒரு மங்கலான நினைவாகவே இருக்கிறது. எனவே படம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. படம் மீண்டும் பார்க்க நேர்ந்தால் உங்கள் ஆய்வு உதவி புரியும் என நம்புகிறேன்.

அன்புடன்

Murali Srinivas
23rd November 2013, 01:08 AM
குமுதத்தில் வந்த தவறான தகவலைப் பற்றிய என் பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. உண்மை வெளிப்பட்ட பிறகும் புகைப்படம் தவறுதான். ஆனால் செய்தி உண்மை என்பது போல் மீண்டும் ஒரு மாயை தோற்றம் உருவாக்க முயற்சி நடந்து அதுவும் எடுபடாமல் போய் விட்டது. சிலர் ஒன்றை மறந்து விட்டனர். குமுதத்தில் வாராவாரம் வெளியாகும் இந்த பகுதியே அபூர்வமான ஒரு புகைப்படத்தை அந்த புகைப்படத்தோடு சம்மந்தப்பட்டவர்களிடம் காண்பித்து அதன் பின்னணியை அவர்களிடம் கேட்டு அதை வெளியிடுவது என்பதாகும். அப்படித்தான் இந்தப் புகைப்படத்தை காண்பித்து இந்த "செய்தியை" வெளியிட்டோம் என்கிறார்கள். அந்த புகைப்படமே சாந்தி படத்தோடு சம்மந்தம் இல்லாத ஒன்று என சொல்லும்போது அதில் எழுதப்பட்டிருப்பது அனைத்தும் கற்பனையே என்பது எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடியதே. மேலும் தணிக்கை குழுவினரிடம் influence செலுத்தக்கூடிய அளவிற்கு செல்வாக்கு படைத்தவர் என்ற வாதமே தவறு என்பதை பல உதாரணங்களோடு என்னால் சொல்ல முடியும். ஆனால் தேவையின்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஒரு சிலர் நடிகர் திலகத்தைப் பற்றி கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் என்பதற்காக பதிலுக்கு நாமும் அதை செய்ய வேண்டாம்.

சந்திரசேகர் அவர்களே,

நீங்கள் குமுதம் இதழுக்கு கடிதம் எழுதுவதை வரவேற்கிறேன். அதை செய்ய வேண்டும். அதே நேரத்தில் உலகெங்கும் உள்ள பல்லாயிரகணக்கானோர் படிக்கும் நமது திரி போன்ற இணையதளங்களில் நாம் இந்த உண்மைகளை உரக்க சொல்ல வேண்டும். காரணம் குமுதம் அல்லது எந்த பருவ இதழாக இருந்தாலும் நாம் அனுப்பும் மறுப்பு கடிதத்தை பிரசுரிப்பார்கள் என்று நம்ப முடியாது. எதிர்பார்க்கவும் முடியாது. இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். சில வருடங்களுக்கு முன்னால் ஆனந்த விகடன் வார இதழில் ஒரு பகுதி வெளியாகி கொண்டிருந்தது. ஒவ்வொரு பிரபலங்களைப் பற்றிய 25 தகவல்கள். அதில் பாக்கியராஜ் 25 என்ற தலைப்பில் வந்த செய்தியில் மதுரை தங்கம் திரையரங்கில் தூறல் நின்னு போச்சு படம் 100 நாட்கள் ஓடியது பற்றி குறிப்பிட்டு விட்டு எம்ஜிஆர் அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பின் தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய படம் இதுதான் என்று குறிப்பிட்டிருந்தார்கள். பெரும்பாலோருக்கு தெரியும் அந்தப் படம் மதுரையில் மீனாட்சி திரையரங்கில் வெளியானது என்று. தங்கம் திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய மொத்தம் 7 படங்களில் 3 நமது நடிகர் திலகம் நடித்தது [பராசக்தி, படிக்காத மேதை, கர்ணன்]. வழக்கம் போல் அதை மறைத்து விட்டார்கள். சரி அங்கே 100 நாள் ஓடிய எம்ஜிஆர் அவர்கள் நடித்த ஒரே படத்தையாவது [நாடோடி மன்னன்] சரியாக குறிப்பிட்டார்களா என்றால் அதுவும் இல்லை. அங்கே வெளியாகாத படத்தை அங்கே வெளியானது போல் எழுதுகிறார்கள்.

இந்த தவறை சுட்டிக் காட்டி ஒரு சிலர் மின்னஞ்சல் அனுப்பினோம். ஒரு சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த கருத்தை பதிவு செய்தார்கள். இவை எதுவும் கண்டுக் கொள்ளப்படவில்லை. நமது நண்பர் S.K விஜயன் விகடன் அலுவலகத்திற்கே நேரில் சென்று ஒரு கடிதத்தை கொடுத்தார். அவர் சென்ற நேரம் அதை எழுதிய முதன்மை ஆசிரியர் [நா.கதிர்வேலன் என்று நினைவு] அலுவலகத்தில் இல்லை. கடிதத்தில் தன அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு வந்திருந்த விஜயனுக்கு சில மணி நேரத்தில் ஒரு அழைப்பு. விகடன் அலுவலகத்திலிருந்து. பேசியவர் அந்த கட்டுரையை எழுதிய முதன்மை ஆசிரியர். ஏன் இவருக்கு மட்டும் response என்று தோன்றுகிறதல்லவா? அதற்கு காரணம் விஜயன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு வரி. அப்படி என்ன எழுதியிருந்தார்? தமிழ் சினிமா வரலாறு தெரியாதவர்களை எல்லாம் சினிமா செய்திகளின் முதன்மை ஆசிரியராக ஏன் நியமனம் செய்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். அது அந்த முதன்மை ஆசிரியருக்கு கோவத்தை வரவழைத்து விட்டது. என்னை வரலாறு தெரியாதவன் என்று எப்படி சொல்லலாம் என்று அலைபேசியில் வாதம் செய்தார். எனக்கு தகவல் சொன்னவர்கள் தவறான தகவலை தந்து விட்டனர். அதற்காக வரலாறு தெரியாதவன் என்று எப்படி சொல்லலாம் என்று கேட்டார். அதற்கு நம் விஜயன் அவர்கள், ஒரு தகவலை சரி பார்த்து பிரசுரிக்க தெரியாதவரை, லட்சம் பேர் படிக்கும் பத்திரிக்கையில் வரும் செய்தியின் உண்மை தன்மையை சரி பார்க்காமல் வேறு ஆட்கள் மீது பழி போடுபவரை வரலாறு தெரியாதவர் என்று சொல்வதில் தவறேயில்லை என்று கூறி அலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

அடுத்த வாரமும் சரி அதற்கு அடுத்து வந்த வாரங்களிலும் சரி மறுப்பை பிரசுரம் செய்யவில்லை என்பது மட்டுமல்ல வெளியிட்ட செய்தி தவறானது என்று வருத்தம் தெரிவிக்கும் அடிப்படை மாண்பை கூட அவர்கள் கடைபிடிக்கவில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் குமுதமும் இப்போது அது போன்ற நிலைப்பாட்டை எடுக்கலாம். ஆகவேதான் இது போன்ற இணையதளங்களிலும் இவை பதிவு செய்யப்பட வேண்டும் என சொல்கிறேன்.

நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்கள் வரும்போது [முன்னரே நமது ஹப்பில் ஒரு சில வந்திருக்கின்றன] அவற்றை தெளிவுபடுத்தும் வண்ணம் உண்மைகள் உணரும் நேரம் தொடரும்.

அன்புடன்

chinnakkannan
23rd November 2013, 01:29 AM
ஒரு சின்ன வேதனைக் குறிப்பு:

முழுவதும் அறிமுகப் படுத்திக் கொள்ளாமல் இந்த இழைக்குள் புகுந்தேன்..இந்த் இழையின் மெளன ரசிகனாக நான் ஆகி பலகாலம் கழிந்திருந்தும் கூட..

காரணம் பாட்டுக்குப் பாட்டு இழையில் அறிமுகமான கோபால் சார், வாசுதேவன் சார், கவிதைக்குக் கவிதை இழையில் அறிமுகமான ராகவேந்தர் சார்..எனில் தைரியமாக ப் புகுந்து இரண்டு பதிவு செய்தேன்..அஃப்கோர்ஸ் கொஞ்சம் பிடித்த பாடலோ என்னவோ என இழை 11 ல்.. ஆனால் யாரும் வரவேற்கவில்லை..

பின் மறுபடி முறைப்படி ஒருபதிவு எழுதி ஒருமுறைக்கு மும்முறை வாசித்து சுவாரஸ்யமாக இருக்கிறதா என்பதை விட இங்கிருக்கும் பெரியவர்கள் மனம் நோகாமல் இருக்கிறதா என மறுபடி மறுபடி படித்து பதிவிட்டேன்..கோபால், ராகவேந்தர், வாசு கேசி சேகர், கல் நாயக் கார்த்திக் முரளி கண்பத் மற்றும் பல நண்பர்கள் வரவேற்றனர்..

இங்கு எழுதுகையில் கொஞ்சம் மற்றவர்கள் சாயல் வரகூடாது என நினைத்து எழுதினேன்.

இப்போது 11 ஆம் இழையில் நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவின் போதோ வேறு சமயமோ தெரியாது ராகவேந்தர் (என நினைக்கிறேன்) சரஸ்வதி லஷ்மி என்பவரைப் பார்த்தேன் என்று சொன்னார். அவரும் நடிகர் திலகம் நடித்த படங்களை - அதன் காணொளியைப் பதிவிட்டார்..

பின் ப்க்கத்து இழைக்குச் சென்று சண்டையிட்டார். பின் சரஸ்வதி லஷ்மி என்பதை சருஷ்வதி லஷ்மி என் எழுதி ஒரு பதிவு. பின் கோபால் தன் கருத்தைச் சொன்னவுடன் சம்பந்தமே இல்லாமல் அவருடன் சண்டை.. சிகப்பு ப் பெரிய எழுத்துக்களில் மாடரேட்டர்ஸ் என்று ஒரு பதிவு வேறு. அவை எல்லாம் நீக்கப் பட்டவுடன்.

முழுக்க முழுக்க தப்பும் தவறுமாக கிருபா என்பவரின் பதிவு. கெட்ட வார்த்தையில் திட்டவில்லையே தவிர இட் ஹர்ட்ஸ். படிக்கும் எவரையும்.பின் நிஜம்மாகவே ந.தியின் மீது அன்பு கொண்டவரைப் போல காட்டிக் கொண்ட அவர் எழுதியது என்ன.தப்பும் தவறுமான சங்கிலி பதிவு.யாருமே பேசவில்லை என்றவுடன் தியாகம் பதிவு. இங்கே இருப்பவர்கள் நண்பர்களா என்ன கல்லீஜ் என்று பேசிய வார்த்தைகள்.அதற்கு அவரே எதிர்பார்த்திராத அனைவரின் பாராட்டுதல்கள். நானும் பாராட்டினேன் - சில நகைச்சுவைத் தன்மைக்காக- வேறு வழியில்லாமல்.(அவரால் ஒழுங்கான தமிழில் எழுத முடியும் எனக் காட்டிக் கொண்டவுடன் அவருடைய நடிப்பை நினைத்து வருத்தமடைந்தேன்)

இழை 12ஆர்பி சாரதி துவங்கி வைத்தவுடன் எங்கிருந்தோ வந்தார் உத்தம புத்திரன். போடுங்கள் வீடியோ பதிவு. சும்மா இல்லை பல பக்கங்கள். இதில் ஒரு நண்பர் காணொளிகளை வேறு இடங்களில் போடுங்கள் என்றவுடன் கிண்டல் வேறு.

வாசு சார் உத்தம புத்திரன் பேசினார் எனச் சொன்னார். அவ்ரைப்பற்றிச் சொல்லவில்லை..

.ஏற்கெனவே தெரிந்த ந்பரா அல்லவா எனச் சொல்லவில்லை.

உத்தம புத்திரன் ஏற்கெனவே தெரிந்த நபர் எனில் ஏன் ஒளிவு மறைவு. யூ கேன் இண்ட்ரொட்யூஸ் யுவர் செல்ஃப். நாட் ஃபுல்லி.பட் இது என் ஒரிஜினல் பெயர் என.பார்த்த சாரதி சார் கேட்ட பின் கண்ணன் எனப் பதில்.

இப்போது நடிகனின் குரல் எனக் காணொளிகள்.

இந்த இழை உயிர் பெற வேண்டும் என உழைத்து எழுதும் ரவி, ராகுல் ராம், தமிழில் தப்பில்லாமல் எழுதிப் பாருங்க்ள் எனச் சொன்ன வுடன் நண்பரிடம் கொடுத்து எழுதிய ஆதிராம் என உயிர்ப்பான இளைஞர்கள். இளைஞரா அல்லவா நானறியேன்.ஆனால் தே ஆர் சின்ஸீயர்.

ஆனால் இது ஒரு வலை. முழுவதும் உண்மையைச் சொல்ல இயலாது.ஆனால் கொஞ்சம் அறிமுகப் படுத்திக் கொண்டுஎழுதலாமே.

தயை கூர்ந்து முறைப்படி அறிமுகமில்லாமல் வ்ரும் புதிய பதிவரை பாராட்டவோ திட்டவோ வேண்டாம்.என வேண்டிக் கொள்கிறேன்.

chinnakkannan
23rd November 2013, 02:00 AM
வேதனைக் குறிப்பின் தொடர்ச்சி..ஒரு சின்ன விளக்கம்: இங்கு ஏற்கெனவே பதிவிட்டு நடிகர் திலகத்தின் பெருமையை புகழை உரத்துச் சொல்லும் ஜாம்பவான்களின் ( ஆர்பிசாரதி, ராக்வேந்தர்,கோபால், முரளி ஸ்ரீனிவாஸ், கேசி சேகர் கண்ப்த் நெய்வேலி வாசு, எஸ் வாசுதேவன், ராதாகிருஷ்ணன் பரணி கல் நாயக் கார்த்திக் மற்றும் விடுபட்ட பலர்) சின்ஸியரிட்டியை நான் குறைத்துச் சொல்லவில்லை என்னை ப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்..

எழுத்து என்பது தவம். நடிப்பும் அப்படித் தான்..அதில் வெற்றி கண்ட ந.தியின் புகழ் பாடுவது இந்தத் திரி. இது இன்னும் பல பாகங்கள் காணவேண்டுமென்ற என் ஆசையின் வெளிப்பாடே இந்தப் பதிவு.

KCSHEKAR
23rd November 2013, 10:28 AM
சந்திரசேகர் அவர்களே,
நீங்கள் குமுதம் இதழுக்கு கடிதம் எழுதுவதை வரவேற்கிறேன். அதை செய்ய வேண்டும். அதே நேரத்தில் உலகெங்கும் உள்ள பல்லாயிரகணக்கானோர் படிக்கும் நமது திரி போன்ற இணையதளங்களில் நாம் இந்த உண்மைகளை உரக்க சொல்ல வேண்டும். காரணம் குமுதம் அல்லது எந்த பருவ இதழாக இருந்தாலும் நாம் அனுப்பும் மறுப்பு கடிதத்தை பிரசுரிப்பார்கள் என்று நம்ப முடியாது. எதிர்பார்க்கவும் முடியாது.
நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்கள் வரும்போது [முன்னரே நமது ஹப்பில் ஒரு சில வந்திருக்கின்றன] அவற்றை தெளிவுபடுத்தும் வண்ணம் உண்மைகள் உணரும் நேரம் தொடரும்.
டியர் முரளி சார்,
தங்களின் பணி பாராட்டத்தக்கது. கண்டிப்பாக இதுமாதிரி இணையதளங்களின்மூலம், உண்மைகளை, தவறான தகவல்களை வெளிப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். பத்திரிகைகள் பிரசுரிக்கவில்லை என்றாலும், நாம் அதற்கு மறுப்பு எழுதுவது, குறைந்தபட்சம் கருத்தை அவர்கள் தெரிந்துகொள்ளவாவது உதவியாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து.

தாங்கள் தெரிவித்ததன் அடிப்படையிலேயே நானும் கடிதம் எழுதமுடிந்தது. தங்களின் மேலான பணியைத் தொடருங்கள். நன்றி.

uvausan
23rd November 2013, 03:34 PM
Adiram Sir

புரிந்துகொண்டால் தான் பிரச்சனையே - புரியாத வரை நல்லது - "Speed Breakers" என்று சொல்லும் பதிவுகள் - அப்படியே விட்டு விடுவோம்

அன்புடன் ரவி

HonestRaj
23rd November 2013, 04:16 PM
சரி... நானும் ஒரு பதிவு இடுகிறேன்...

இங்கு தமிழ் பிலிம் செக்சனில் வாழ்க்கையில் அதிக அனுபவம் வாய்ந்த பலர் பங்குபெறும் திரியும் இதுதான்..
மிகவும் குழந்தைத்தனமான பதிவுகள் அதிகம் கொண்ட திரியும் இதுதான்...
என் பதிவை நீ பாராட்டவில்லை.. இவ்வளவு சிரமம் எடுத்து பதிவிடுகிறேன் யாரும் கண்டுகொள்ளவில்லை.. போன்ற பதிவுகளும்...
குழாயடி சண்டைகள் போன்ற பதிவுகளும் சமீபகாலத்தில் அதிகமாகிவிட்டன...
முன்பெல்லாம் எதிர் நடிகரின் ரசிகர்களுடன் தான் சண்டைகள் நடக்கும்.. இப்பொழுதெல்லாம் உண்மையில் காங்கிரஷ் கட்சி கூட்டம்போல் தான் கலந்துரையாடல் நடக்கிறது... online என்பதால் சட்டை கிழிய வாய்ப்பில்லை

உடனே இந்த பதிவுக்கும் யாரும் கோவிச்சுக்காதீங்க

venkkiram
23rd November 2013, 04:26 PM
Second HonestRaj's views. Peer pressure, attention seeking, domination are something I witness here since months. I also condemn the way CK been treated by harsh words.

Gopal.s
23rd November 2013, 07:28 PM
நான் சுவாசிக்கும் சிவாஜி! (7) - ஒய்.ஜி. மகேந்திரா


தமிழகத்தை சேர்ந்த, சுதந்திர தியாகிகளில், வ.உ.சிதம்பரனார் மிகவும் முக்கியமானவர். அவர் வாழ்க்கை போராட்டம் தான், சிவாஜி நடித்த, கப்பலோட்டிய தமிழன் படம். என்னை மாதிரி ஆங்கில பள்ளிகளில் படித்தவர்களுக்கு, வ.உ.சி., பற்றி அதிகம் தெரியாது.
என் தந்தை, அப்போது, பம்பாயில், மத்திய அரசு பணியில் இருந்தார். கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக, கப்பல்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்க, சிவாஜியும், இயக்குனர் பி.ஆர்.பந்துலுவும், அவரது குழுவினரும், அப்போது, பம்பாய் வந்திருந்தனர்.
அப்படக்குழுவினருக்கு, பம்பாய் துறைமுகத்தில் படப்பிடிப்பு நடத்த, அரசு அனுமதி பெற, உதவினார் என் தந்தை.
ஒய்.ஜி.பி., பம்பாயில் இருந்த போது, நாடகத் துறையில் உள்ள தமிழர் களை ஒன்று திரட்டி, நாடக குழு ஆரம்பித்து, அங்கு, தமிழ் நாடகங்களை மேடையேற்றினார். ஒருமுறை ஷூட்டிங்குங் காக, பம்பாய் வந்திருந்த சிவாஜியிடம், அன்றைய நாடகத்திற்கு தலைமை வகிக்க ஏற்பாடு செய்திருந்தார். சாதா ரணமாக நூறு, இருநுாறு பேர் தான் பார்வையாளர்களாக வருவர். ஆனால், சிவாஜி வருகிறார் என்றவுடன், அன்று, ஆயிரக்கணக்கான பேர் திரண்டு வந்திருந்தனர். சிவாஜி அன்று வர ஒப்புக் கொண்டதே நாடக கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணம். பொதுவாக அந்த கால கட்டத்தில், எல்லா பெரிய நடிகர்களுமே, நாடக கலைஞர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பர்.
அன்று மாலை, நாடகத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்து ரசித்த சிவாஜி, நாடகத்தின் முடிவில் பேசிய போது, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் விளக்கி, அதில் நடித்திருந்த கலைஞர்களையும் பாராட்டினார். கதாநாயகியாக ஒரு ஆண் நடிகர் நடித்திருந்ததை குறிப்பிட்டு, 'என் கடந்த கால நினைவுகள் எல்லாம், அலை மோதுகின்றன. நானும், நாடகத்தில் போட்ட முதல் வேடம் பெண் வேடம் தான்யா...' என்று அவர் பேசிய போது, பயங்கர ஆரவாரம், கை தட்டல் எழுந்தது.
மருத நாட்டு வீரன் படத்தின் படப்பிடிப் பிற்காக, புனே வந்திருந்த சிவாஜி, அங்கிருந்து, கப்பலோட்டிய தமிழன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள, பம்பாய் வந்திருந்தார்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பற்றி, பலருக்கு தெரியாது என்பது, வருத்தமான உண்மை. கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி மட்டும் நடிக்கவில்லை என்றால், பி.ஆர்.பந்துலு இதை படமாக தயாரிக்கவில்லை என்றால், லட்சக்கணக்கானவர்களுக்கும், ஒரு தலைமுறையினருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,யைப் பற்றி தெரிந்திருக்காது.
கப்பலோட்டிய தமிழன் படத்தில், வீர வசனங்கள், போர், சண்டை காட்சிகள் கிடையாது. நடிப்பில் சாதனை புரிய பெரிய வாய்ப்பும் இல்லை. இருந்தும் தேச பக்தி மற்றும் தன் நடிப்புத் திறமை மீது அவருக்கு இருந்த தன்னம்பிக்கை காரணமாக தான், சிவாஜி அப்படத்தில் நடித்தார். சிதம்பரனார் குடும்பத்தினர், இந்தப்படத்தை பார்த்து, கதறி அழுதனராம். 1972ல், சிவாஜி ரசிகர்களின் மாநாட்டில், வ.உ.சிதம்பரனார் மகன் பேசும் போது, 'சுதந்திரப் போராட்டத்தில், எங்க அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை, சிவாஜியின் நடிப்பை பார்த்து, தெரிந்து கொண்டோம்...' என்று, மனம் உருகி குறிப்பிட்டார். சிவாஜியின் சிறந்த நடிப்புக்கு, இந்த பாராட்டு, ஒரு அங்கீகாரம்.
ஒரே மேடை நிகழ்ச்சியில், சிவாஜி, ஒரு லட்சம் ரசிகர்களை தன் நடிப்பால், மெய் மறக்க வைத்த சுவையான நிகழ்ச்சியை பற்றி, இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நவம்பர் மாதம், 1977ல், தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக, அப்போதைய, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சினிமா நடிகர்கள், கலைஞர்களின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். 'அண்ணன் கேட்கிறாரு. நாம் அனைவரும் அதிகமாக வசூல் செய்து, வெள்ள நிவாரண நிதிக்கு தரணும். அது நம் கடமை...' என்ற சிவாஜி, நட்சத்திரங்கள், இசை கலைஞர்கள் அனைவரையும், ஒருங்கிணைக்கும் பணியை, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் வி.கே.ராமசாமியிடம் கொடுத்தார். நடிகர் சங்கத்திற்கு, அப்போது, சிவாஜி தலைவராகவும், மேஜர் சுந்தர்ராஜன் காரியதரிசியாகவும் இருந்தனர். வெள்ள நிவாரண நிதிக்காக, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை நகரங்களிலும், மாபெரும் நட்சத்திர கலைவிழா நடத்துவ தென்று முடிவு செய்தனர்.
யாரெல்லாம் முதல் வகுப்பு, 'ஏசி' இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் செல்லலாம் என்று, பட்டியல் தயார் செய்தார் மேஜர்.
மேஜர் கொண்டு வந்த பட்டியலை பார்த்த சிவாஜி, 'முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, 'ஏசி' எல்லாம் வேண்டாம். வெள்ள நிவாரண நிதிக்காக வசூலிக்க செல்கிறோம். செலவு குறைவாக தான் இருக்கணும். நாம் எல்லாரும், நான்கு நாட்களுக்கு, நம்முடைய சவுகர்யம், பழக்கம் எல்லாவற்றையும் மறந்து, மரக்கட்டை கம்பார்ட்மென்ட்டில், மூன்றாம் வகுப்பில், குறைந்த செலவில் தான் பயணம் செய்யப் போகிறோம். சில இடங்களில், நாம் தங்குவதற்கு, ஓட்டல்காரர்கள், இலவசமாக, அறைகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஆண்களுக்கு தனி ஓட்டல், பெண்களுக்கு தனி ஓட்டல்; சாப்பாடு செலவு மட்டும் தான், நாம் அரசிடமிருந்து வாங்க வேண்டும். அதற்கு மேல், இத்யாதி செலவு அனைத்தும், அவரவரே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் அரசு பொறுப்பு இல்லை. நான்கு நாட்கள், முழுமையாக மக்களை மகிழ்வித்து, அதற்கு அவர்கள் தருகிற பணத்தை வசூல் செய்து, அரசுக்கு தர வேண்டும்...' என்றார்.
சிவாஜி மற்றும் முத்துராமன், மேஜர், மனோரமா, சுமித்ரா, விஜயகுமாரி, லதா, மஞ்சுளா, நாகேஷ், வி.கே.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.வி., மற்றும் இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் மற்றும் பலர் வந்திருந்தனர். நானும், இக்குழுவில் இடம் பெற்றிருந்தேன்.
முத்துராமன், தேங்காய் சீனிவாசன், சுமித்ரா மற்றும் நானும் சேர்ந்து ஒரு காமெடி நாடகத்தில் நடித்தோம். சிவாஜி, அன்னையின் ஆணை படத்தில் வரும், சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகத்தில் நடித்தார். மாலை, 7:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, ஆடல், பாடல், நாடகம் என, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். சிவாஜி நடிக்க வேண்டிய ஓரங்க நாடகம், இரவு 10:00 மணிக்கு வரும். இரவு 8:00 மணிக்கே முழு, 'மேக் -- அப்' போட்டு, கவசம், கத்தி, கிரீடம் அணிந்து, மேடையில் தயாராக இருந்தார் சிவாஜி. சரியாக இரவு, 10:00 மணிக்கு, மேடையில் நுழைந்து, 'எங்கே கலிங்கம்?' என்று, சிவாஜி கர்ஜித்த காட்சியில், அந்த திறந்த வெளி அரங்கில் உட்கார்ந்திருந்த, ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்ட அனைவரும், ஒரே நொடியில் அமைதியாகி விட்டனர். எங்கும் நிசப்தம். அடுத்த முறை, 'எங்கே கலிங்கம்?' என்பதை, ரகசிய குரலில் சொல்வார். நடிகர், நடிகைகள், நாங்கள் என அனைவரும், மேடையின் பக்கவாட்டிலிருந்து, அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். பதினைந்து நிமிடங்கள், அப்படியே, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப் பட்டவர்கள் போல, மெய் மறந்து உட்கார்ந் திருந்தனர் ரசிகர்கள்.
நாகேஷ் என்னிடம்,'டே, சலசலன்னு பேசிக் கொண்டிருக்கும் இவ்வளவு பெரிய ஆடியன்சை, 'டக்'கென்று அடக்குவதற்காக, 'எங்கே கலிங்கம்?' என்று இரைந்து, கர்ஜனை செய்து, ஆடியன்ஸ் அமைதியாகி, அடுத்த முறை, மெதுவான குரலில், அவர் சொன்னாலும், அவர்களுக்கு கேட்கும். சிவாஜி ஒரு மந்திரக்காரன்...' என்று ரசித்து, அனுபவித்தவாறே கூறினார்.
கடந்த, 1975ம் ஆண்டு, சென்னை ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் பிரத்யேக, 'செட்' போட்டு, சிவாஜியின், ஓரங்க நாடகமான, 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தை, 45 நிமிடங்களில் சிவாஜி நடித்து, படமாக்கினர். 45 நிமிடங்களும் சிவாஜி, 'மோனோ ஆக்டிங்' செய்திருப்பார். நடிப்புக் கலையிலே, 'மோனோ ஆக்டிங்' மிகவும் கஷ்டமான வடிவம். ஒரே நடிகர் எல்லா வசனங்களும் பேசி, இல்லாத பல பாத்திரங்களை இருப்பதாக பாவித்து, நடிக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒளிபரப்பான, இந்த ஓரங்க நாடகத்தை, தூர்தர்ஷனுக்கு பணமே வாங்காமல், இலவசமாக நடித்துக் கொடுத்தார். இந்தியாவே, சிவாஜியின் நடிப்பை கண்டு, வியந்து பாராட்டியது.
- தொடரும்.

Gopal.s
23rd November 2013, 07:34 PM
பம்மலாரின் புத்தகத்தை பதிவு செய்து முன்பணம் அனுப்பியாயிற்றா?
முக்கியமாக மூன்றேழுத்துகளில் பதிவுகள் போட்டு விட்டு ,அவர் புகழை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறோம் என்று தையா தக்கா என்று குதித்து கொண்டிருக்கும் சித்தூர் வாசுதேவன் போன்றவர்கள்?(மன்னிப்பு கேட்ட பிறகும் விடாமல் பொறுமுகிறார் மனுஷர்!!!)

ScottAlise
23rd November 2013, 08:58 PM
1970 ல் வந்த தீபாவளி மறக்க முடியுமா குறிப்பாக நடிகர் திலகத்தின் ரசிகர்களால் ஒரு பக்கம் சொர்க்கம் இன்னொரு பக்கம் எங்கிருந்தோ வந்தாள் ,இரண்டும் மாபெரும் வெற்றி

இந்த இரண்டு படங்களில் முதலில் பதிவிட போவது ஸ்டைல் சக்கரவர்த்தி அசத்தும் சொர்க்கம்.

சொர்க்கம்

மனிதர்கள் மரணம் அடைந்த உடன் தான் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகத்துக்கு செல்வான் என்று நம்ப படுகிறது

அனால் பூமியில் இருக்கும் போதே தான் வாழ்கையை எப்படி amaithu கொண்டால் வாழும் போதே சொர்கத்தை காணலாம் என்ற வாழ்க்கைக்கு தேவையான கருத்தை எப்படி சுவையாக சொல்ல முடியுமோ அப்படி சொல்லி பார்வையாளர்களுக்கு படிப்பினை சொல்லுகிறது இந்த படம்

கல்லூரியில் படிக்கும் முன்று நண்பர்கள் சங்கர் ,சம்பத் , மற்றும் கஜினி (சிவாஜி , baalaji , நாகேஷ் ) இவர்களின் வாழ்கை படித்து முடித்த பின் எப்படி அமைகிறது , இவர்கள் ஒவ்வொருவரும் எப்படி சந்தித்து kolugirarkal , என்பதே சொர்க்கம்

காசு பணம் துடு money money இன்றைய ஹிட் பாடல்களில் ஒன்று

பணம் தான் வாழ்கை உலகம் எல்லாம் யாருக்கு பணம் வேண்டாம்
ஒரு மனிதன் என்னக்கு பணம் வேண்டாம் என்று சொன்னால் அது பொய்யாக இருக்கும் அல்லது அவர் முற்றும் துறந்த மனிதராக இருக்க வேண்டும்

பொதுவாக கதாநாயகர்கள் பணத்தின் மேல் பட்டரு அல்லாதவர்களாக இருப்பார்கள் , பணத்தின் மேல் ஆசை இருந்தால் அவன் வில்லன் (தமிழ் சினிமா அகராதி படி)

பணக்காரனாக வேண்டும் என்று அசைபடுபவன் தான் சங்கர் (சிவாஜி) அதுவும் டாடா ப்ரிலா போலே ஆக ஆசைபடுகிறார் சங்கர்

சம்பத் எப்படி வேணாலும் வாழலாம் என்று எண்ணம் கொண்டவன் , கஜினி(கஜேந்திரன்) தலைஎழ்லுது படி தான் வாழ்வு அமையும் என்று எண்ணம் கொண்டவன்


http://www.youtube.com/watch?v=Fo1ztbptOmI



இந்த மூன்று பேரின் வாழ்கை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் பொது யார் உண்மையில் வெற்றி அடைந்தார்கள் (பணத்திலும் , மன நிம்மதியிலும்) என்பதே சொர்க்கம்
இந்த படத்தின் முழக்கத்தை திரு நானு

ScottAlise
23rd November 2013, 08:59 PM
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் உடை அலங்காரம் அபாரம் . தங்கசுரன்கத்தில் அவர் அணிந்தது முக்கால்வாசி designer wear , இந்த படத்தில் நடிகர் திலகம் அணியும் உடை நாம் அனைவரும் அணிய குடியதே

படத்தின் titles முடிந்த உடன் நடிகர் திலகம் பெரிய factory முதலலையை சந்தித்து தன் புதிய பிசினஸ் பற்றி குரிகிறார் , அவரோ முழுவதும் எந்திரத்தை பயன் படுத்தும் படி கூறிவிடவே ஷங்கர் சென்றுவிடுகிறார்

(அந்த காட்சியில் அந்த வெள்ளை முழு கை சட்டை , Grey pant - executive லுக் . தன் பிசினஸ் ஐடியா வை சொல்லும் பொது கண்ணில் , சாதிக்கவேண்டும் என்று ஒரு நெருப்பு, தன் ஐடியா வை நிராகரிக்கும் பொது thank யூ என்று உதட்டளவில் ஒரு வார்த்தை சொல்லி வெளியே செல்லுகிறார்

typical expression of a disappointed man



http://www.youtube.com/watch?v=kfvhilKnQag




அடுத்த காட்சி கஜேந்திரன் (நாகேஷ்) இப்பொழுது அவர் ஒரு ஜோதிடர் , ஒரு மனிதர்க்கு ஜோதிடம் சொல்லுகிறார் (இடை சொருகல் )

விரக்தியாக பார்க்கில் உறங்கி கொண்டு இருக்கும் ஷங்கர் angey வரும் பணக்காரர்கள் பேச்சை கேட்டு அசந்து போகிறார்

அந்த காட்சியில் பணக்காரன் எப்படி பணத்தை துச்சமாக மதிக்கிறார் என்றும் ஒரு அறிவு உள்ள ஏழை எப்படி என்கிறார் என்றதுக்கு ஒரு எடுத்துக்காட்டு

இப்படி சதா பண்ணதை பற்றி எண்ணி கொண்டு இருக்கும் ஷங்கர் க்கு கனவு , கனவில் என்ன வரும் பணம் தான் , கனவில் பணக்காரனாக வருகிறார்

காலத்தால் அழியாத பாடல்



http://www.youtube.com/watch?v=4eMmgxr5KbE



முடிவில் அவர் கண் விழிப்பது விமலாவின் முகத்தில் , விமலா (KR விஜயா ) ஒரு டீச்சர் , அவரிடம் தன் வருங்கள திட்டத்தை சொல்லுகிறார்

அடுத்த அடுத்த சந்திப்பில் விமலா உடன் தோழமை அதிகரிக்க


விமலாவின் ஆலோசனை படி வேலைக்கு சேருகிறார் ஷங்கர் , அவர் உயரதிகாரி திரு மாத்ருபூதம் (MRR வாசு)

அடுத்த காட்சி பம்பையின் நைட் கிளப்பில் விரிகிறது , அங்கே வரும் சம்பத் அஞ்சனவை (ராஜஸ்ரீ) பார்த்த உடன் காதலிக்க தொடங்கிவிடுகிறான், அவரை அங்கே பார்க்கும் அருண் (மனோகர்) அஞ்சனவை கடத்த சம்பத்தை ப்ரைன்வாஷ் செய்கிறார் , சம்பத் தருமலிங்கத்தை சந்தித்து நடந்ததை விவரிக்கிறார் , சம்பத அருணை போலீஸ் ல் சிக்கவைத்து தர்மலிங்கத்தின் மனதில் நல்ல இடத்தை பிடிக்கிறார்

ScottAlise
23rd November 2013, 08:59 PM
ஷங்கர் தன் தங்கையின் வீட்டுக்கு தீபாவளி பரிசை குடுக்க செல்லும் பொது தன் தங்கையும் , அவள் வீட்டுகாரரும் சந்தோஷமாக இருப்பதாய் பார்த்து வியந்து போகிறார் , எப்படி ஏழ்மையில் இப்படி இருக்கிறார்கள் என்று (அந்த காட்சியில் தான் அவர் பேச்சில் என்ன ஒரு விரக்தி அப்பப்பா , தங்கைக்கு எதுவும் செய்ய முடியவில்லை , இவர்கள் எப்படி சந்தோசமாக இருக்கிறார்கள் என்ற கேள்வி , இவர்களின் வாழ்கை யை ninaithu கவலை , வாழ்கையை அனுகும்முரையில் kuttram கண்டுபிடிப்பது என்று சகலத்தையும் பிரதிபலிக்கும் அவர் பேச்சு தோணி அபாரம்

http://www.youtube.com/watch?v=66AHI80VhmY

விமலா தன் காதலை ஷங்கர்யிடம் வெளிபடுத்துகிறார் ஷங்கர் நிறையக பணம் சம்பாதித்து விட்டு தான் கல்யாணம் என்பதில் உறுதியாக இருக்கிறார் .
http://www.youtube.com/watch?v=uMhuqBsM-YA
அவர் தன் கல்யாணத்தை எப்படி இருக்க வேண்டும் என்று விவரிக்கும் காட்சி

http://www.youtube.com/watch?v=TYfDCnuR5JM
ஷங்கரின் தங்கை ,அவள் கணவர் இவர்களின் வற்புறுத்தலுக்காக கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார்
http://www.youtube.com/watch?v=iPpmmYg9Alc

ScottAlise
23rd November 2013, 09:00 PM
கஜேந்திரன் ஒரு நபருக்கு ஜோசியம் சொல்ல போக அது எக்கு தப்பாக பலித்து விடுகிறது , அதுக்கு அப்புறம் கஜேந்திரன் அடிக்கும் லூட்டி சுப்பு மத்தாப்பு தான்


http://www.youtube.com/watch?v=xb5psfI6lE8



கஜேந்திரனின் ஜோசிய புலமையால் கவரப்பட்டு மாத்ருபூதம் தன வீட்டுக்கு அழைக்கிறார்

அங்கே ககேந்திரன் மாத்ருபூதத்தின் பெண்ணை பார்த்த உடன் காதலிக்கிறார்



http://www.youtube.com/watch?v=Fz2RBIqLBVI


விமலா தான் கர்பமாக இருப்பதாய் தெரிவிக்கிறார் , முதலில் சந்தோஷ பட்டாலும் பிறகு தன் தங்கையை பலித்த மாதிரி தனக்கும் நேர்ந்து விட்டதே என்று நினைத்து வருந்திகிறார்

குழந்தை பிறகும் நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கஜேந்திரன் யை சந்திக்கிறார்

நண்பர்கள் இணைகிறார்கள்



http://www.youtube.com/watch?v=IhuXxq8-5vg



அடுத்த காட்சியில்

சம்பத் பம்பையில் இருந்து முதலாளியின் partner என்ற ஸ்தானத்தில் ஷங்கர் யின் அலுவலகத்துக்கு வருகிறார்

அங்கே ஷங்கரை கண்ட உடன் பாலாஜி எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் இருக்கிறார் , ஷங்கர் தன் நண்பனை பார்த்த சந்தோசத்தில் அனந்த அதிர்ச்சியில் திகைக்கிறார்

ஷங்கரை தனியாக குப்பிட்டு நலம் விசாரிக்கிறார் ( அதுவும் முதலில் பாலாஜி உக்கார சொன்ன உடன் மறுப்பதும் , illai நான் நிக்கறேன் என்று ஒரு வித பதட்டமான நிலையில் பதில் சொல்லுவதும் , பாலாஜி தன்னை யு பூல் என்று சொன்ன உடன் நட்பை புதுபித்து கொள்ளுவதும் உணர்ச்சி வாச பட்டு கண்ணீர் சிந்தி கையை அழுதி குலுக்கும் பொது நம்மளை அசர அடிக்கிறார்)

http://www.youtube.com/watch?v=H8pyytNXnAc



பின் தன்னுடைய லட்சியம் நிறைவேறவில்லை என்று கூறுகிறார்
சம்பத் ஷங்கரின் வீட்டுக்கு சாப்பிட வருகியர்

ஷங்கர் தன் ஏழ்மையை சம்பத் தெரிந்து கொள்ள கூடாதே என்று பிரம்மம பிரயத்தனம் செய்கிறார்

தன் மனைவி விமலாவிடம் டேபிள் க்கு எங்கே போவேன் என்று அலுத்து கொள்வதும் , தன் நண்பனிடம் நன்றாக சமாளிக்கும் இடம்
சிரிப்பை வரவழைத்தாலும் ஷங்கரின் நிலைமையை நினைத்து பரிதாபம் வருகிறது


தன் நண்பர் எதோ ஒன்று சொல்ல போக ஷங்கரின் சுயமரியாதை சூடு படுகிறது ,ஆத்திரத்தில் அவர் பணக்காரனாக வழி என்னக்கு தெரிய வில்லை உன்னக்கு அது தெரிந்து இருக்கிறது என்று சொல்ல , சம்பத் கோபமாக சென்று விடுகிறார்

http://www.youtube.com/watch?v=C9jzO-2xW_c

ScottAlise
23rd November 2013, 09:02 PM
அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்ற உடன் தன் இருக்கையில் வேறு ஒரு நபர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் ஷங்கர்

சம்பத் இடம் பொய் தன வேலைக்காக கெஞ்சுகிறார் , மாத்ருபூதம் எள்ளி நகைக்கிறார்

சம்பத் ஷங்கரை வெளியே அழைத்து வந்து அவர் தான் மேனேஜர் என்று சொன்ன உடன்

அந்த reaction யை இங்கே பாருங்கள்



http://www.youtube.com/watch?v=CXK-fEUyERY



ஷங்கரின் வாழ்கை தரம் உயருகிறது . ஷங்கரின் மனம் மட்டும் அப்படியே உள்ளது அதாவது பழசை மறக்காத உள்ளம் , தன் வளமான வாழ்வில் தன் தங்கையும் இருக்க வேண்டும் என்று அவர் எண்ணி , தன் தங்கையை தன் கூடவே இருக்கும் படி கேட்கிறார் , தங்கையின் கணவர் மறுத்து விடவே ஷங்கர் வேண்டாவெறுப்பாக செல்லுகிறார்

(அந்த காட்சியில் முதலில் பாசத்துடன் கலந்த பணகார தன்மையை நன்றாக காமிக்கிறார் , அவர் பேச்சு மறுக்க பட்ட உடன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து விட்டு இது தான் உங்க முடிவ , கிழே இருக்க போறிங்களா என்று கேட்டு விட்டு , காபி அருந்த சொன்ன உடன் சாரி தேங்க்ஸ் என்று சொல்லி விட்டு (பணகார ஜம்பம் ) நீ இருந்து அவர்கள் வருவதாக இருந்தால் கூடி கொண்டு வா என்று சொல்லிவிட்டு ஸ்டைல் ஆக சொல்லி விட்டு செல்லுவர் நம் ஸ்டைல் சக்ரவர்த்தி



http://www.youtube.com/watch?v=GU6lmxMZBBE



தன் ப்ராஜெக்ட் ஓகே ஆன உடன் ஷங்கர் முதல் முதலாக குடிக்கிறார்

முதல் முதலில் ஒருவன் குடிப்பது அவன் காசில் இல்லை , மற்றவர்களின் வற்புறுத்தல் அல்லது தூண்டுதலின் அடிப்படையில்


http://www.youtube.com/watch?v=3xdcb767Sws



குடித்து விட்டு தன் ஆழ் மனது அசை நிறைவேறியது என்ற சந்தோசம் ஒரு பக்கம் , குடித்து விட்டு வந்து விட்டோமே என்ற துக்கம் ஒரு பக்கம் அதனால் வரும் அழுகை என்று ஒரே காட்சியில் இரண்டு extreme emotions காட்டி இருப்பார்


http://www.youtube.com/watch?v=TjxVIWY6u_c


குடித்து விட்டு அவர் படும் பாடல் நல்ல தத்துவம்


http://www.youtube.com/watch?v=4x5_qTtscNQ


ஷங்கரின் வாழ்கை அடியோட மாறுகிறது , தினமும் குடிக்க நேருகிறது , இதனால் அவர் மகன் முத்து வின் கேரக்டர் influence ஆகிறது


http://www.youtube.com/watch?v=e8UnQFUzNC8

ScottAlise
23rd November 2013, 09:02 PM
சம்பத் அஞ்சனவை பெண் கேட்கிறார் , அதற்கு தர்மலிங்கம் ஒத்து கொள்ளாததால் அருண் உடன் சேர்ந்து தருமலிங்கத்தை கடத்தி அந்த இடத்தில அருண் யை கொண்டு வந்து விடுகிறார்


தன் கணவர் குடிக்க கூடாது என்று விமலா தன் கணவர் உடன் விருந்துக்கு செல்லுகிறார்

அங்கே அவர் படம் பாடல் ஆழ்ந்த கருத்து


http://www.youtube.com/watch?v=opDuNZJX_3Y


ஷங்கர் வேலை காரமாக விமலா சொல்லும் விஷியத்தை கூட காது கொடுத்து கேட்காமல் செல்லுகிறார்
தன் மகனின் எதிர்காலத்தை மனதில் கொண்டு விமலா ஒரு கடிதாசி எழுதி விட்டு மகனுடன் சென்று விடுகிறார்
http://www.youtube.com/watch?v=JQ0f2uicIjw

ScottAlise
23rd November 2013, 09:03 PM
ஷங்கர் வீட்டுக்கு வந்து என்ன செய்வது என்று கூட தெரியாமல் தவிக்கிறார் , வழக்கம் போலே மது வர அருந்து விட்டு வந்ததனால் குழம்புகிறார். உதவிக்கு தன் தங்கை வீட்டுக்கு செல்லுகிறார், அவர்களோ நீங்கள் கொஞ்சம் வீட்டுக்கு நேரம் செலவு செஞ்சு இருக்கலாம் என்று சொன்ன உடன் அங்கே தன் மாப்பிளையிடம் தான் இப்படி குடிக்கும் காரணத்தை விவரிக்கிறார் ஷங்கரின் தான் என்ற குணம் கூடவே தான் , தன் மனைவிக்கும் , மகனுக்கும் தானே இப்படி உழைக்கிறேன் என்று சொல்லி விட்டு , அவர்களின் உதவி வேண்டாம் என்று அங்கே இருந்து
வெளியே சென்றுவிடுகிறார்

http://www.youtube.com/watch?v=iWu98a2mGys
தன் மனைவி எழுதிய கடிதத்தை படிக்கும் பொது என்ன என்ன உணர்ச்சி அவர் முகத்தில் , அன்பு , அதித அன்பு தன் மனைவி யின் மேல் ,அதை வெளிபடுத்த முடியாமல் தன் வேலை பளு , அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி என்று சகலமும் பிரதிபலிகிறது , அதை படித்து முடித்து சுக்கு நூறாக கிழித்து எறிந்து கதறும் பொது நம்மளையும் கரையவைக்கிறார்
http://www.youtube.com/watch?v=y-zHLMOfbQY

ScottAlise
23rd November 2013, 09:04 PM
தன் மனைவி பிரிந்து சென்ற உடன் குடிப்பதை நிறுத்தும் ஷங்கர் தர்மலிங்கம்தின் போக்கில் மாற்றம் உள்ளதை கவனித்து அஞ்சனவை பத்திரமாக இருக்க சொல்லுகிறார்


ஒரு காசோலையை கையெழுத்து போட கொடுக்கும் பொது தர்மலிங்கம் அருண் என்று கையெழுத்து இடவே அவர் அருண் தான் என்பதை உர்கித படுத்தி கொளுகிறார் ஷங்கர்


தன் மனைவி இருப்பது கொடைக்கானலில் என்று அறிந்து அவரை பார்க்க ரயில் ல் செல்கிறார்


http://www.youtube.com/watch?v=Zp3Lku6GZgs


அருண் ஷங்கரை கொல்ல ஆட்களை அனுப்புகிறார் , அதில் இருந்து தப்பிக்கிறார் ஷங்கர்
http://www.youtube.com/watch?v=g74zRNWwfkY
(thanks: Vasu sir)

ScottAlise
23rd November 2013, 09:07 PM
அருண் மாதுருபூததை கையில் போட்டு கொண்டு , ஷங்கர் கம்பெனி பணம் 10 லட்சத்தை திருடியதாக போலீஸ் ல் புகார் குடுக்கிறார்


http://www.youtube.com/watch?v=TiUtywg99D8

ScottAlise
23rd November 2013, 09:08 PM
ஷங்கர் தர்மலிங்கத்தின் இடத்தில் இருப்பது அருண் என்றும் அதற்கு சாட்சி என்று அஞ்சனவை விசாரிக்கிறார்

அஞ்சனா அருனின் வற்புறுத்தலுக்கு பயந்து பொய் சொல்லி விடுகிறார்
ஷங்கருக்கு 3 வருட தண்டனை குடுக்க படுகிறது


http://www.youtube.com/watch?v=lSQetIlxeXY

ScottAlise
23rd November 2013, 09:10 PM
இதில் இருந்து வெளியே வர கஜினி மாத்ருபூதத்தின் பிள்ளைகள் கிட்ட உண்மையை சொல்லி விடுகிறார் , அவர்கள் மாற்றுபூததை திருத்த அவர் சாட்சியளிக்க ஷங்கர் விடுதலை அகுகிறார்


http://www.youtube.com/watch?v=gz7M7nJBAaU


http://www.youtube.com/watch?v=fyOR9uypcfI

ScottAlise
23rd November 2013, 09:11 PM
வெளியே வந்த உடன் தன் மகனிடம் அவர் பாவமணிப்பு கேப்பது போலே பேசும் காட்சி நெஞ்சை கரைய வைக்கிறது
http://www.youtube.com/watch?v=nb9qIfiPVVs

சம்பத் பம்பையில் இருந்து வந்து , என் ஷங்கரை இந்த வம்பில் மாட்டி விட்டிர்கள் என்று கடித்து கொளுகிறார் . அருண் தான் மாட்டி கொள்ளாமல் இருபதற்கு இது தான் வழி , மற்றும் அஞ்சனவை திருமணம் செய்ய இது தான் வழி என்று சொன்ன உடன் சம்பத் மனம் மாறுகிறார் , அந்த நேரத்தில் மாத்ரபூதம் , ஷங்கர் ,கஜினி , அஞ்சனா அங்க வர சம்பத் வில்லனாக மாறுகிறார் , ஷங்கர் காலேஜ் ல் நடித்த நாடகத்தை நினைவு படுத்துகிறார் (அந்த காட்சியை ஒரு முழு நீள படமாக எடுத்து இருக்காலம் , என்ன கம்பீரம் )


http://www.youtube.com/watch?v=rUAgVlfwpbk



http://www.youtube.com/watch?v=-zyxs-tVB_Q




கடைசியில் சம்பத மனம் மாற , அஞ்சனா சம்பத யை திருமணம் செய்ய

சுபம்

uvausan
23rd November 2013, 10:02 PM
டியர் ராகுல் ராம் - அருமையான பதிவுகள் - இந்த திரியில் திடீரென்று ஏற்பட்ட புயலில் , அழகாக திசை திருப்பி சொர்கத்தை பதித்து உள்ளீர்கள் - மிகவும் விறு விறுப்பான படம் - தலைவர் மிகவும் அழகாக இருப்பார் - ஒரு குழப்பம் இல்லாமல் செல்லும் கதை . பாடல்கள் ஒவ்வன்றும் தேனிலும் மேலாக இனிப்பவை - இந்த படத்தை பற்றி பழைய பதிவுகள் இருந்தால் அதையும் இணைத்து போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் - மனம் குளிர்த வாழ்த்துக்கள்

Ravi
:):smokesmile:

uvausan
23rd November 2013, 10:26 PM
சரி... நானும் ஒரு பதிவு இடுகிறேன்...

இங்கு தமிழ் பிலிம் செக்சனில் வாழ்க்கையில் அதிக அனுபவம் வாய்ந்த பலர் பங்குபெறும் திரியும் இதுதான்..
மிகவும் குழந்தைத்தனமான பதிவுகள் அதிகம் கொண்ட திரியும் இதுதான்...
என் பதிவை நீ பாராட்டவில்லை.. இவ்வளவு சிரமம் எடுத்து பதிவிடுகிறேன் யாரும் கண்டுகொள்ளவில்லை.. போன்ற பதிவுகளும்...
குழாயடி சண்டைகள் போன்ற பதிவுகளும் சமீபகாலத்தில் அதிகமாகிவிட்டன...
முன்பெல்லாம் எதிர் நடிகரின் ரசிகர்களுடன் தான் சண்டைகள் நடக்கும்.. இப்பொழுதெல்லாம் உண்மையில் காங்கிரஷ் கட்சி கூட்டம்போல் தான் கலந்துரையாடல் நடக்கிறது... online என்பதால் சட்டை கிழிய வாய்ப்பில்லை

உடனே இந்த பதிவுக்கும் யாரும் கோவிச்சுக்காதீங்க

நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மை என்றாலும் - என்னை பொறுத்த வரை எண்ணங்கள் சற்றே வேறுபட்டவை - இந்த திரியில் பதிவிடம் ஒவ்வருவரும் NT யின் மீது பக்தியையும் , அன்பையும் கொண்டவர்கள் - இதில் பலர் அவரை தெய்வமாக வணங்குபவர்கள் - ஹிட்லர் உமா நாத் பதிவை படித்திருப்பீர்கள் - எவ்வளவு உழைப்பு அதில் - எவ்வளவு Research செய்திருந்தால் அவளவு அழகாக எழுதிருக்கமுடியும் ? இப்படிப்பட்ட உழைப்பை , இப்படி உழைத்தவர்கள் ஏன் பாராட்டை எதிர்பார்க்க கூடாது ? அவர்கள் அப்படி எதிர்பார்க்காவிட்டாலும் , நாம் எல்லோரும் ஏன் முன் வந்து பாராட்ட கூடாது ? ஒவ்வருவரை பாராட்டிகொள்வது நம் பண்பட்ட பண்டைய வழக்கம் தானே - மட்டற்ற திரிகளை நீங்கள் பார்த்தால் 1:1 என்ற விகிதத்தில் பாராட்டிக்கொள்வார்கள் - இந்த திரியில் அப்படி இல்லையே ! இதை எப்படி நாம் குழந்தை தனம் என்று சொல்லமுடியும் ? ஒன்றை ஒப்புகொள்ளத்தான் வேண்டும் - அவரின் மீது இருக்கும் தீவிரமான பக்தியில் வார்த்தைகள் சற்றே தடம் புரண்டு ஓடும் படி அமைந்து விடுகிறது - எல்லாம் சரியாகிவிடும் சார் - நம்பிக்கையுடன் செயல் படுவோம்

அன்புடன் ரவி

:):smokesmile:

uvausan
23rd November 2013, 10:43 PM
டியர் கிருபா சார் - உங்கள் பதில் பதிவை படித்து விட்டு மிகவும் சங்கடப்பட்டேன் - எந்த கோணத்திலும் அந்த பதிவு வேதனை தருவதாகவே உள்ளது - ck அப்படி யார் மனதையும் புண் படுத்துபவர் அல்ல - நான் எடுத்துக்காட்டிய சின்ன சின்ன தவுறுகளுக்கு கூட உடனே மன்னிப்பு கேட்கும் மனம் உடையவர் - என்னாலும் புரிந்து கொள்ள முடியவில்லை , ஏன் மற்றவர் மனதை வேதனை படும் படி எழுதினார் என்று - நீங்கள் வந்த பிறகு உண்மையில் திரியில் ஒரு இனம் புரியாத உற்சாகம் பிறந்தது - தவறுகள் இருந்தால் அதை தனிபட்ட முறையில் தெரிவிக்கலாம் - இந்த திரியில் பலர் படிக்க , ஒருவர் மனம் வேதனை பட எழுதகூடாது என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன் - ஏதோ போறாத நேரம் - விட்டுவிடுங்கள் - நாம் நம் மன திர்ப்திக்காக எழுதுகிறோம் - அவ்வளவே !

:(:(:(:(:(:(

Gopal.s
24th November 2013, 05:40 AM
இவ்வாறு சாரதா கூறினார்.

இந்த நிலையில் "திருப்பதி" என்ற தெலுங்கு நாடகத்தில் நடிகை சாரதா நடித்து வந்தார். ஒரு நாள் அந்த நாடகத்திற்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.

நாடகத்தில் சாரதாவின் நடிப்பு அற்புதமாக இருந்ததை, சிவாஜி கவனித்தார். நாடகத்தில் மிகவும் சிறப்பாக நடித்த சாரதாவை, தமிழ்ப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சிவாஜி முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து, 1963-ம் ஆண்டு சிவாஜிகணேசன் நடித்த "குங்குமம்" என்ற படத்தில் சாரதா இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை விஜயகுமாரியும் நடித்தார்.

கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்தனர். அதனைத்தொடர்ந்து, "துளசிமாடம்", "வாழ்க்கை வாழ்வதற்கே" போன்ற படங்களில் சாரதா நடித்தார். 1972-ம் ஆண்டில் மாதவன் இயக்கத்தில் "ஞானஒளி" படத்திலும், 1978-ம் ஆண்டு ராமண்ணா டைரக்ஷனில் "என்னைப்போல் ஒருவன்" படத்திலும், சிவாஜியுடன் சாரதா மிகவும் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார்.

சிவாஜியுடன் நடித்தது பற்றி சாரதா கூறியதாவது:-

"திருப்பதி நாடகத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த நாடகத்திற்கு சிவாஜி தலைமை தாங்க வந்தார். நாடகத்தில் எனது நடிப்பை பார்த்து "குங்குமம்" படத்திற்கு தயாரிப்பாளரிடம் கூறி, எனக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்தார்.

அப்போது எனக்கு "கேரக்டர்"நடிப்பை சொல்லிக் கொடுத்தார். எப்படி, எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜியிடம் கற்றேன். "குங்குமம்" படத்தில் அவருடன் முதன் முதலில் நடிக்க செல்வதற்கு முன்பு ரொம்பவும் பயந்தேன்.

அதற்கு சிவாஜி, "நான் என்ன புலியா, சிங்கமா? நானும் மனிதன்தானே! எதற்காக பயப்படுகிறாய்!" என்றார். அதன் பிறகுதான், எனக்கு பயம் போய் தைரியம் வந்தது. நடிப்பில் ஆர்வம், இருப்பவர்களுக்கு சிவாஜி நடிப்புச் சொல்லி தருவார்.

ஆர்வம் இல்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்! நடிப்பதற்கு முன்பு `இந்த கேமரா கோணத்தில் இப்படி நடித்தால் நன்றாக இருக்கும்' என்று சொல்லித் தருவார்."

இவ்வாறு நடிகை சாரதா கூறினார்.

Gopal.s
24th November 2013, 05:42 AM
Rahul Ram,

Your Sorgam postings are enjoyable. Keep it up.

Gopal.s
24th November 2013, 07:47 AM
நடிகர்திலகத்தின் பெருந்தன்மை,தொழில் நேர்த்தி.

உலகறிந்த ஒன்று.

அவ்வை ஷண்முகி படத்திற்காக அவரின் இரு நாடறிந்த ரசிகர்கள் கமல்,கே.எஸ்.ரவிகுமார் அவரை தொடர்ந்து வேண்டி கொண்டிருந்தனர்.உடல்நிலை காரணமாக யோசித்த சிவாஜி, கமலிடம்,என்னை ஏண்டா தொந்தரவு பண்றே?மாப்பிளையிடம் போ.அவன் நிஜமாகவே பின்னி விடுவான்.அவனுக்கு பொருத்தமாகவும் இருக்கும் என்று ஜெமினியிடம் அனுப்பித்தாராம்.

படத்தின் வெற்றிக்கு ஜெமினி ரோல் துணை புரிந்ததை சொல்லியா தெரிய வேண்டும்?

Russellrco
24th November 2013, 12:07 PM
http://www.newtamilcinema.com/2013/11/2135/

sankara1970
24th November 2013, 03:35 PM
நான் சுவாசிக்கும் சிவாஜி! (7) - ஒய்.ஜி. மகேந்திரா

கடந்த, 1975ம் ஆண்டு, சென்னை ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் பிரத்யேக, 'செட்' போட்டு, சிவாஜியின், ஓரங்க நாடகமான, 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தை, 45 நிமிடங்களில் சிவாஜி நடித்து, படமாக்கினர். 45 நிமிடங்களும் சிவாஜி, 'மோனோ ஆக்டிங்' செய்திருப்பார். நடிப்புக் கலையிலே, 'மோனோ ஆக்டிங்' மிகவும் கஷ்டமான வடிவம். ஒரே நடிகர் எல்லா வசனங்களும் பேசி, இல்லாத பல பாத்திரங்களை இருப்பதாக பாவித்து, நடிக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒளிபரப்பான, இந்த ஓரங்க நாடகத்தை, தூர்தர்ஷனுக்கு பணமே வாங்காமல், இலவசமாக நடித்துக் கொடுத்தார். இந்தியாவே, சிவாஜியின் நடிப்பை கண்டு, வியந்து பாராட்டியது.
- தொடரும்.

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் --ஒளி நாடா கிடைக்குமா

KCSHEKAR
24th November 2013, 05:40 PM
டியர் ராகுல்றாம்,
சொர்க்கம் திரைப்படத்தைப் பார்காதவர்களுக்கு, காட்சிக்கு காட்சியாக விவரித்து, காட்சிகள் இணைப்புடன் ஒரு முழுத் திரைப்படத்தையும் அளித்துவிட்டீர்கள். பாராட்டுக்கள். நன்றி.

KCSHEKAR
24th November 2013, 05:51 PM
நான் சுவாசிக்கும் சிவாஜி (8) - ஒய்.ஜி.மகேந்திரா

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18096&ncat=2

ScottAlise
24th November 2013, 06:01 PM
Gopal sir,

Thanks for your comments

KC Sekar sir,

Iam thanking you for 2 reasons one for reading my article and commenting
second for taking steps in retaining NT statue in same place
Yes I read ur comments in Junior Vikatan today hats off sir

KCSHEKAR
24th November 2013, 06:16 PM
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் --ஒளி நாடா கிடைக்குமா
ஏற்கனவே நமது திரியில் திரு.வாசுதேவன் அவர்கள் இந்த நாடகத்தின் பிரத்தியேகத் தகவல்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். அப்போதைய விவாதத்தின்போது இந்த ஒளிநாடா காணாமல் போய்விட்டதான தகவலும் தெரிவிக்கப்பட்டு, அதற்காக பலரும் தங்களின் கவலையைப் பகிர்ந்துகொண்டிருந்தனர்.

KCSHEKAR
24th November 2013, 06:51 PM
திரி லிங்க் கிடைக்க உதவிய திரு. சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி . திரியை நான் தவறவிட்ட நான்கு நாளில் 42 பக்கம் சென்று இருப்பது மிகவும் சந்தோசம்.
திரியின் மூத்த நண்பர்களுக்கு,
முன்பெல்லாம் Google Search இல் நடிகர்திலகம் திரியின் Part எண் குறிப்பிட்டு தேடினால் அந்த பாகத்திற்கு செல்ல முடிந்தது. தற்போது அதுமாதிரி சென்றால், பாகம் -11 வரைதான் வருகிறது. காரணம் தெரியவில்லை. திரியில் வருகைக் குறைவுக்கு, பலருக்கு திரியின் இணைப்பு கிடைக்காமல் இருப்பதுகூட காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. 11-ஆம் பாகத்தின் இறுதியில் 12 ஆம் பாகத்தின் இணைப்பைக் கொடுத்து உதவியிருந்தால் நன்றாக இருக்கும்.

JamesFague
24th November 2013, 07:30 PM
Mr Gopa,

I have already mentioned in the previous thread that I do not have a system and
posting the same from office. I am also interested in to give analysis on NT's
various movies but due to prior comittment the same has not been materialised.

I am not an expert like you but one day the same will be done in my own style.
Till such time pardone me for my three line posting.

Regards

JamesFague
24th November 2013, 07:30 PM
Mr Vasu Sir,

Do visit and start your postings.

KCSHEKAR
24th November 2013, 09:08 PM
JUNIOR VIKATAN - Current Issue

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/JuniorVikatanPg1_zps1692ac38.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/JuniorVikatanPg1_zps1692ac38.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/JuniorVikatanPg2_zpsa70e74b6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/JuniorVikatanPg2_zpsa70e74b6.jpg.html)

J.Radhakrishnan
24th November 2013, 11:05 PM
Dear KC sir,

Thanks for your effort in thalaivar statue

Subramaniam Ramajayam
24th November 2013, 11:30 PM
Dear KC sir,

Thanks for your effort in thalaivar statue

SIVAJI PERAVAI and k.c. sir always giving loud voices to protect NT'S name and fame. we sicerely hope and pray the verdict will come in our favour.
thanga surangam write-up by rahulram very lively,
keep it up.
uthamautran always giving good feast for eyes next to vasu sir.

Murali Srinivas
25th November 2013, 01:25 AM
இப்போதுதான் ஒரு சலசலப்பு நடந்து முடிந்தது என்று நினைத்தால் மீண்டும் சில வேதனையான காட்சிகள் நமது திரியில் அரேங்கேற்றம். நண்பர் சின்னக் கண்ணன் அவர்கள் தன் மனதில் தோன்றிய ஒரு சில எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டார். அவரை பொறுத்தவரை பாட்டுக்கு பாட்டு திரியிலும் கவிதைக்கு கவிதை திரியிலும் அவருடன் சேர்ந்து பங்களிப்பு செய்யும் ஆட்களை அவர் நன்கு அறிவார். அவர்களுடன் ஒரு நல்ல rapport-வும் அவருக்கு உண்டு, அதே போன்ற சூழலை அவர் இங்கே எதிர்பார்த்தார் என தோன்றுகிறது. இங்கே நிலவும் சூழல், புதிய ID-க்களின் வரவு, பயன்படுத்தப்பட்ட மொழி ஆகியவை அவரை disturb செய்து விட்டது என தோன்றுகிறது. அதை அவர் தன பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்கு ஒரு சில நண்பர்கள் எதிர்வினையாற்றிய முறை சரியான தரத்தில் அமையவில்லை என்று கேள்விப்படுகிறேன். அதை நான் படிக்கவில்லை. ஆனால் நமது திரியின் மாண்பிற்கு சற்றும் பொருந்தாத வகையில் வார்த்தை பிரயோகங்கள் அமைந்திருந்ததாக கேள்விப்பட்டேன்.

சின்ன கண்ணன் அவர்கள் பதிவு செய்திருந்தது அவரது மனதின் எண்ணங்களை. அவற்றில் கருத்து வேறுபாடு இருப்பின் அல்லது அவர் சொன்னவற்றை மறுக்க நினைத்தாலோ அதை கண்ணியமான வழியில் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி சொல்லியிருக்கலாமே. அதை விடுத்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது, இந்த திரியை விட்டு போ என்றெல்லாம் சொல்லுவது நமது நடிகர் திலகத்தின் திரிக்கு அதன் பெருமைக்கு களங்கம் விளைவிப்பதாகவே அமையும். மாற்று கருத்துக்களை சொல்பவர்கள் யாரும் திரிக்கு வரக் கூடாது என்பது சரியான நிலைப்பாடு கிடையாது. நடிகர் திலகத்திடமே கருத்து வேறுபாடு கொண்ட ரசிகர்கள் அதாவது அவர் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை பற்றியே மாற்று கருத்து கொண்டு அதை அவரிடமே நேரில் சொன்ன தீரா மறவர் கூட்டம் நமது ரசிகர் கூட்டம். ஆகவே மாற்று கருத்தை எதிர்க்க வேண்டாம். அதே நேரத்தில் வேண்டுமென்றே விஷமத்தனமான கருத்துகளை இங்கே யாராவது எழுதினால் அதற்கு நாம் தக்க பதில் அளிக்கலாம். அதுவும் கூட நாகரீகமாக.

இந்த exchanges காரணமாக இனி மய்யம் இணையதளத்திற்கு வரமாட்டேன் என்று சின்ன கண்ணன் எழுதியிருந்ததாக அறிகிறேன். அவர் அந்த முடிவை கைவிட்டு மீண்டும் திரும்ப வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கார்த்தி (Honest Raj),

இந்த திரி பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். அது உங்கள் உரிமை. அதே நேரத்தில் பாராட்டை கேட்டு வாங்குபவர்கள் என்ற தொனியில் நீங்கள் எழுதியிருப்பது வருத்தத்துக்குரியது. ஒருவரின் பதிவை பாராட்டுவது எனபது ஒவ்வொருவரின் விருப்பம். அதை குறையாக சுட்டிக் காட்டியதை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.


அன்புடன்

RAGHAVENDRA
25th November 2013, 07:54 AM
சின்னக் கண்ணன் சார்
நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவில் ஏராளமான ரசிகர்களை சந்தித்து உரையாடியது உண்மை. அதில் சரஸ்வதி லக்ஷ்மி என்ற பெயரில் யாரையும் நான் சந்திக்கவில்லை. பிறகு சுப்பு என்கிற சுப்ரமணியம் அவர்கள் தன் பதிவுகளில் தான் பல்வேறு ஐ.டி.களில் வருவதாக சொன்னதன் மூலமும் அவரே சரஸ்வதி லக்ஷ்மி என்று எழுதியதைப் படித்த பிறகே நான் இவரை அடையாளம் தெரிந்து கொண்டேன். அவரை நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவில் சந்தித்தது சாதாரண விஷயம். அதுவும் சரஸ்வதி லக்ஷ்மி தான் என்னை சந்தித்தாக எழுதினாரே தவிர நான் அவரை சந்தித்ததாக என் பதிவில் எழுதவில்லை. இதைத் தெளிவு படுத்தவே இந்த பதிவு.

மாடரேட்டர் அவர்களே,
சின்னக் கண்ணன் கூறிய ஒரு கூற்றில் தகவலைத் திருத்தம் செய்யத் தான் இதை எழுதியிருக்கிறேன். உடனே இதையும் எடுத்து விடாதீர்கள். இந்தப் பதிவில் எந்தத் தவறான கருத்தும் இல்லை என எண்ணுகிறேன்.

RAGHAVENDRA
25th November 2013, 08:03 AM
சுப்பு அவர்களே,
ஒரு ரசிகராய் தாங்கள் கூறும் கருத்துக்களில் மற்ற தீவிர ரசிகர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தங்களுடைய வார்த்தைப் பிரயோகங்கள் நாகரீகம் என்கிற எல்லையைப் பல முறை தாண்டியிருக்கின்றன. இதனால் தங்கள் கருத்து மற்றவர்களுக்கு சென்று சேரும் வாய்ப்புத் தடுக்கப் படுகிறது என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் எழுத்துக்களையும் தேவையில்லாமல் பெரிய அளவில் இடுவதை விட்டு விடுங்கள். அவரவர்க்கு அவரவருடைய தலைவர் அல்லது நடிகர் தான் முக்கியம். எனவே மாற்றுத் திரியில் சென்று வேகமான முறையில் பதிவுகளை இடுவதை இனிமேல் முற்றிலும் தவிர்க்கவும். தற்போது தாங்கள் எந்த பயனாளர் பெயரில் பதிவுகளை இடுகிறீர்களோ அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும். கருத்துக்களில் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம்.

RAGHAVENDRA
25th November 2013, 08:06 AM
நண்பர்களே,
நமது நடிகர் திலகத்தின் காணொளிகளையும் நிழற்படங்களையும் நாம் லட்சக் கணக்கான பக்கங்களுக்கு வர்ணனையும் ஆய்வுரைகளையும் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரே பக்கத்தில் பல வீடியோக்களைப் பதிவிடும் போது அவை பக்கங்களின் தரவிறக்க வேகத்தை முற்றிலும் குறைத்து விடுகின்றன. இதன் காரணமாக இந்தப் பக்கங்களைப் பலர் பார்க்காமலே தவிர்த்து விடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பக்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வீடியோக்கள் அளவிற்கு மேல் பதிவிடாமல் தவிர்த்தால் பக்கங்களின் தரவிறக்க வேகம் கூடுவதோடு அல்லாமல் தாங்கள் சொல்ல வந்த கருத்தும் தவறாமல் சென்றடையும்.

நிழற்படங்களைப் பொறுத்த வரையில் அதிக பட்சம் 100 கேபி அளவிற்கு மேல் செல்லாத வாறு அளவினைக் கணக்கில் கொண்டு பதிவிட்டால் பக்கங்களின் வேகத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

RAGHAVENDRA
25th November 2013, 08:18 AM
முரளி சார்,

இணைய இணைப்புக் கிடைக்காமல் சில நாட்களாக இந்தத் திரியினை நான் பார்வை இடக் கூட முடியவில்லை. இப்போது கூட இரவல் வாங்கித் தான் இணைய இணைப்புப் பெற்று இதை எழுதுகிறேன்.

நம்முடைய ரசிகர்கள் பாராட்டை எதிர் பார்த்து எந்தப் பதிவினையும் இடுவதில்லை என்பது தங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு பதிவிற்கும் வாசு சாராகட்டும், பம்மலாராகட்டும் கோபாலாகட்டும், எவ்வளவு உழைப்பை தருகிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாதது அல்ல. ஆனால் இதையெல்லாம் கொச்சைப் படுத்தும் வகையில் நண்பர் ஹானஸ்ட் ராஜ் அவர்கள் எழுதியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமாக இருக்கிறது. அதை மற்றோர் நண்பர் வழிமொழிந்திருக்கிறார்.

நண்பர் ஹைதராபாத் ரவி சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். இந்த மாதிரி கமெண்டுகளுக்கெல்லாம் தாங்கள் சற்று வருத்தத்தை ஆழமாகத் தெரிவித்தால் நல்லது. ஏனென்றால் இந்தத் திரியிலேயே தாங்கள் தான் மூத்த உறுப்பினர். அனைவரும் தாங்கள் என்ன சொன்னாலும் கேட்கக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையில் தான் வேண்டுகோள் வைக்கிறேன்.

நடிகர் திலகத்தை நேரடியாக கருத்துக்களைச் சொன்னதைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இல்லை என்று சொல்ல வில்லை. அங்கே நம்முடைய வீரத்தைக் காட்டிலும் அவருடைய பெருந்தன்மைதான் தெரிகிறது. வேறு யாரையாவது இது போல் பார்த்துப் பேச முடியுமா. நடிகர் திலகம் அனுமதித்ததால் தான் நம்மால் கருத்துக்களைக் கூற முடிந்தது. அவர் சொல்ல அனுமதித்ததால் அவர் செய்தது எல்லாம் தவறு, நாம் சொன்னது தான் சரி என்று ஆகி விடுமா. மனதில் சரி என்று பட்டதைத் தான் அவர் வாழ்வில் செய்திருக்கிறார். நாம் கருத்து சொல்வதால் மட்டுமே அவர் செய்தது தவறு என்றாகி விடாது.

நான் முன்னரே கூறியது போல், முன்பு அளவிற்கு இந்தத் திரியில் இனி நான் அதிகம் தொடரப் போவதில்லை. இருந்தாலும் தங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நண்பர்களுக்கும் ஒரு விஷயம் மட்டும் கூற விரும்புகிறேன்.

தயவு செய்து எந்தக் காரணத்தை முன்னிட்டும், சினிமாவானாலும் அரசியலானாலும் நடிகர் திலகத்தை பொதுவில் விட்டுக் கொடுக்காதீர்கள். அது அவரை நாம் இழிவு செய்வதற்கு ஒப்பாகும். நம்முடைய மேதாவித் தனத்தை முன் நிறுத்தி அவரைப் பற்றி மற்றவர்கள் செய்யும் விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

இங்கு நான் உரிமையுடன் ஒவ்வொரு சிவாஜி ரசிகரிடமும் வைக்கும் வேண்டுகோள் இது மட்டும் தான்.

venkkiram
25th November 2013, 09:05 AM
அதை மற்றோர் நண்பர் வழிமொழிந்திருக்கிறார். திரு ராகவேந்திரா, என்னைத் தான் குறிப்பிடுகிறீர் என்பதால்.. "ஒருவர் சொல்வதை இன்னொருவர் வழிமொழிகிறார் என்றால் வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி அப்படியே என அர்த்தம் கொள்ளத் தேவையில்லையே! சரி.. அவர் சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை நீங்களே சொல்லலாமே! - யாருமே இங்கே நடக்கும் தவறுகளை குத்திக் காட்ட மட்டுமே பதிவு செய்யவில்லை. சிறப்பாக சென்றுகொண்டிருந்த ஒரு திரிக்கு இப்படிப்பட்ட களங்கம் வந்துவிடுகிறதே என்ற அக்கறையினால்தான்!"

venkkiram
25th November 2013, 09:11 AM
நண்பர்களே,
நமது நடிகர் திலகத்தின் காணொளிகளையும் நிழற்படங்களையும் நாம் லட்சக் கணக்கான பக்கங்களுக்கு வர்ணனையும் ஆய்வுரைகளையும் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரே பக்கத்தில் பல வீடியோக்களைப் பதிவிடும் போது அவை பக்கங்களின் தரவிறக்க வேகத்தை முற்றிலும் குறைத்து விடுகின்றன. இதன் காரணமாக இந்தப் பக்கங்களைப் பலர் பார்க்காமலே தவிர்த்து விடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பக்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வீடியோக்கள் அளவிற்கு மேல் பதிவிடாமல் தவிர்த்தால் பக்கங்களின் தரவிறக்க வேகம் கூடுவதோடு அல்லாமல் தாங்கள் சொல்ல வந்த கருத்தும் தவறாமல் சென்றடையும்.

நிழற்படங்களைப் பொறுத்த வரையில் அதிக பட்சம் 100 கேபி அளவிற்கு மேல் செல்லாத வாறு அளவினைக் கணக்கில் கொண்டு பதிவிட்டால் பக்கங்களின் வேகத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

எந்தெந்த காட்சிகள் எனப் பெயரிட்டு, அதற்கான யூட்யூப் லிங்க்களுக்கான முகவரிகளை மட்டுமே கொடுத்து விடுவது நன்று.

kalnayak
25th November 2013, 02:14 PM
சரி... நானும் ஒரு பதிவு இடுகிறேன்...

இங்கு தமிழ் பிலிம் செக்சனில் வாழ்க்கையில் அதிக அனுபவம் வாய்ந்த பலர் பங்குபெறும் திரியும் இதுதான்..
மிகவும் குழந்தைத்தனமான பதிவுகள் அதிகம் கொண்ட திரியும் இதுதான்...
என் பதிவை நீ பாராட்டவில்லை.. இவ்வளவு சிரமம் எடுத்து பதிவிடுகிறேன் யாரும் கண்டுகொள்ளவில்லை.. போன்ற பதிவுகளும்...
குழாயடி சண்டைகள் போன்ற பதிவுகளும் சமீபகாலத்தில் அதிகமாகிவிட்டன...
முன்பெல்லாம் எதிர் நடிகரின் ரசிகர்களுடன் தான் சண்டைகள் நடக்கும்.. இப்பொழுதெல்லாம் உண்மையில் காங்கிரஷ் கட்சி கூட்டம்போல் தான் கலந்துரையாடல் நடக்கிறது... online என்பதால் சட்டை கிழிய வாய்ப்பில்லை

உடனே இந்த பதிவுக்கும் யாரும் கோவிச்சுக்காதீங்க

கோச்சுக்கலை. கேட்டதோ, கேட்காததோ பிடிங்க பாராட்டை. அப்புறம் நீங்களும் கோச்சுக்கிட்டா?

kalnayak
25th November 2013, 02:36 PM
சின்னக்கண்ணன் திரும்ப வரவேண்டும். பிரச்சினைகளை பெரிதாய் எடுத்துக்கொண்டோமானால் இந்த திரியில் குப்பை கொட்ட முடியாது. குப்பையென்று பொதுவாய் சொன்னேன் - அதற்கும் கோபம் வேண்டாம். "பரவாயில்லை, என் கருத்துகளுக்கும் மற்றவர்களுக்கு உள்ளதைப் போலவே எதிர்ப்பாளர்கள் உண்டு. நான் மட்டும் தனியாக இல்லை. அப்பாடா." என்று நிம்மதியாக இருங்கள். உங்கள் நடை தொடரை தொடருங்கள். புதிதாகவும் எழுதுங்கள். படிப்போர் படிக்கட்டும். படியாதோர் விடட்டும். போகட்டும் நடிகர் திலகம் திரிக்கேவென்று.

Russelldwp
25th November 2013, 07:40 PM
தொடர்ந்து சிவாஜி சிலைக்காக பாடுபடும் திரு.சந்திரசேகர் அவர்களுக்கு உலக சிவாஜி பக்தர்கள் சார்பாக எனது நன்றி யையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Ramachandran.C

chinnakkannan
25th November 2013, 09:48 PM
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..என்ன சொல்வதென்று தெரியவில்லை....

இந்த இழையைக் கொஞ்சம் மெதுவாக மாற்றியமைக்கு நானும் ஒரு காரணம் என்பதால் வருந்துகிறேன்..

*

சந்திர சேகர் சார், உங்கள் முயற்சிகள் வெகுவாகப் பாராட்டத் தக்க ஒன்று..தொடருங்கள் உங்கள் நற்பணியை..மிக்க நன்றி..
*
ராகவேந்திரர் சார்..மன்னிக்க.. நீங்கள் சொன்னது என நினைத்தது என் தவறு தான்..

*

ஒரு இனிய பதிவுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்..

Murali Srinivas
26th November 2013, 12:37 AM
கீழ்கண்ட பதிவை நேற்றே பதியும் நேரம், மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது. ராகவேந்தர் சார் இந்த விஷயத்தை அழகாய் குறிப்பிட்டிருக்கிறார். இருந்தாலும் திரியை open செய்ய முடியாமல் பல முறை அவதிப்பட்டவன் என்ற முறையில் என் கருத்தையும் பதிவு செய்கிறேன்.

ராகுல்,

சொர்க்கம் பற்றிய விவரணை ok. அதே நேரத்தில் அந்தப் பதிவில் இத்துணை video-கள் தேவையா? காரணம் இத்துணை வீடியோக்கள் பதிவிடும் போது பல நேரங்களில் திரியை open செய்வதே ஒரு சவாலாக இருக்கிறது. Broad Band உபயோகிக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால் dial up connection இருக்கிறவர்களை நினைத்து பாருங்கள். பலர் இதனாலேயே திரிக்குள் வராமல் சென்று விடுகிறார்கள். ராகுல் என்றல்ல வீடியோக்கள் பதிவிடும் அனைவருக்கும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். வீடியோவே வேண்டாம் என்று சொல்லவில்லை. அளவோடு தேவையான இடங்களில் மட்டும் பதிவிடலாம். இந்த திரிக்கு வரும் 99% மனிதர்களும் படிக்க தான் வருகிறார்கள். இது போன்ற வாசகர்கள் வேறு எந்த திரிக்கும் கிடையாது. ஆகவே குறைந்த அளவு வீடியோ, நிறைந்த செய்திகள் என்று தொடருவோம். அனைவரும் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பீர்கள் என நம்பிக்கையுடன்

அன்புடன்

Murali Srinivas
26th November 2013, 12:47 AM
ராகவேந்தர் சார்,

நீங்கள் திரியில் நேரிடையாக வந்து பல விளக்கங்களை அளித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. காரணம் நான் உங்களிடம் அலைபேசியில் உரையாடியபோது சொன்னது போல் சில தவறான impressions-ஐ அகற்ற அது பயன்படும். அதே போல் நண்பர் சின்ன கண்ணன் அதை புரிந்துக் கொண்டிருக்கிறார். இனி நீங்கள் சொன்ன சில points-கு வருகிறேன்.

ஒவ்வொருவரின் பதிவுகளுக்கு பின்னல் இருக்கும் உழைப்பை அறியாதவன் அல்ல நான். குறிப்பாக வாசுவிடமே நான் அதை கூறியிருக்கிறேன். ஹிட்லர் ஆய்வைப் பற்றிய பதிவை பற்றிய என் கருத்தை கூட நீங்கள் படித்திருக்கலாம். நண்பர் கார்த்தி (HR) எழுதியது சரியல்ல என்றுதானே குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் கடுமையாக சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்வது எப்படி என்று புரியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் (அது உங்களுக்கே கூட தெரியும்) என்னால் யாரையும் கடுமையாக பேச முடியாது. அது எனக்கு வராது. என்னை நேரிடையாக தாக்கி எழுதியவர்களை கூட நான் அப்படி பேசியதில்லை. ஆழமாக வருத்தத்தை பதிவு செய்யவில்லை என்பதாலே நண்பர் HR சொன்ன கருத்தை நான் ஒப்புக் கொள்கிறேன் என்றோ எதிர்க்கவில்லை என்றோ அர்த்தம் ஆகி விடாது. இது நண்பர்களுக்கு புரியும் என நம்புகிறேன்.

இரண்டாவது point. மாற்று கருத்தை பற்றி சொல்லியிருந்ததை வைத்து நடிகர் திலகம் செய்தது தவறு என்று ஆகி விடாது என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர் செய்தது தவறு என்று நான் எங்கே சொல்லியிருக்கிறேன்? மீண்டும் படித்துப் பாருங்கள் "அவர் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை பற்றியே மாற்று கருத்து கொண்டு அதை அவரிடமே நேரில் சொன்ன தீரா மறவர் கூட்டம் நமது ரசிகர் கூட்டம்" என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.சரி, தவறு என்ற விவாதமே அங்கே வரவில்லை. மாற்றுக் கருத்தையும் வரவேற்போம் என்றுதான் சொன்னேன்.

இன்னும் சற்று விளக்கமாக சொன்னால் பெருந்தலைவர் மறைவிற்கு பின் நடிகர் திலகம் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பவர் நீங்கள். அதில் மாற்றுக் கருதது கொண்டவன் நான். நாம் இருவரும் இந்த கருத்தில் மாறுபடுகிறோம் என்பது நம் இருவருக்கும் தெரியும் இந்த திரியை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கும் தெரியும். அதனால் நம் நட்பில் விரிசல் விழுந்து விட்டதா இல்லையே! இல்லை நமது திரியை பாதித்து விட்டதா,இல்லையே!

இதே போல் அருமை நண்பர் ஜோ திராவிட இயக்கங்களையும் குறிப்பாக திமுகவையும் அதன் தலைவரையும் ஆதரிப்பவர். நான் திராவிட இயக்கங்களுக்கு எதிரானவன். Current Topics பகுதியில் நானும் அவரும் பல முறை இது பற்றி விவாதங்கள் நடத்தியிருக்கிறோம் என்பதும் உங்களுக்கு தெரியும். ஆனால் எங்கள் நட்பில் விரிசல் இல்லை. நமது திரியை பாதித்து விட்டதா,இல்லையே! இவ்வளவு ஏன் நண்பர் கார்த்திக் கூட திமுக ஆதரவாளர்தான். அவருடனும் arguments நடந்திருக்கிறது. ஆனால் அது நடிகர் திலகத்தின் திரியை பாதித்ததில்லை. சுருக்கமாக சொன்னால் சுயமாக சிந்திக்க தெரிந்தவன் சிவாஜி ரசிகன். இதை எந்த இடத்திலும் பெருமையாக சொல்லுவேன்.

மூன்றாவது point. நடிகர் திலகத்தை விட்டுக் கொடுப்பது. இதை எந்த காலத்திலும் செய்ததுமில்லை இனி செய்ய போவதுமில்லை. இந்த திரியிலும் பல முறை பதிவு செய்திருக்கிறேன். பலரிடமும் நேரில் சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். இந்த திரி எனக்கு அறிமுகமானபோது நான் எழுத ஆரம்பித்த போது எனக்குள் இரண்டு இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டேன். ஒன்று நடிகர் திலகம் என்றாலே முதல் மரியாதை & தேவர் மகன் என்ற குறுகிய வட்டத்துக்குள் ஒரு பிம்பமாக அவரை நினைத்துக் கொண்டிருந்த இளைய தலைமுறை மற்றும் நடுத்தர வயதை எட்டிப் பிடிக்கும் தலைமுறையிடமும் நடிகர் திலகம் என்பவர் இது போன்ற சட்டமிட்ட பிரேமில் வரையப்பட்டவர் அல்ல. எதனுள்ளிலும் அடக்க முடியாதவரும் எதனாலும் அளக்க முடியாதவரும் கூட என்பதை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது. இரண்டாம் இலக்கு பல வருடங்களாக மறைத்து வைக்கப்பட்ட அவரது பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை வெளியுலகதிற்கு உரக்க சொல்லுவது என்பதுதான். ஆண்டவன் அருளாலும் நீங்கள், சுவாமி, வாசு மற்றும் கோபால் போன்றவர்களின் பங்களிப்பாலும் இந்த இரண்டு இலக்குகளையும் முழுமையாக அடைந்து விட்டோம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிசமான தூரத்தை வெற்றிகரமாக கடந்திருக்கிறோம் என்பதை பெருமையாக் சொல்லிக் கொள்ளலாம்.

இப்போதும் அந்த மன நிலையில் மாற்றமில்லை என்பதனால்தான் நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்கள் வரும்போது அதை சுட்டிக் காட்டி உண்மைகளை உரக்க சொல்லும் உண்மை உணரும் நேரம் போன்றவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். இனியும் அது தொடரும்.

கசப்புணர்வுகளை மறந்து திரிக்கு மீண்டும் பங்களிப்பு செய்யுமாறு உங்களையும் வாசுவையும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
26th November 2013, 12:50 AM
மதுரை ஜெய்ஹிந்தபுரம் அரவிந்த் திரையரங்கிற்கு விஜயம் செய்திருக்கிறார் பாரிஸ்டர் ரஜினிகாந்த். பாரிஸ்டர் வந்தாலே பரபரப்பிற்கு பஞ்சம் வராதே! சனி ஞாயிறு இரண்டு தினங்களும் திரையரங்கும் சரி அரங்க வளாகம் மற்றும் அரங்கம் அமைந்திருக்கும் தெருவும் சரி இரண்டுபட்டு விட்டது என்று நேரில் கணடவர்கள் சொன்னார்களாம். ஞாயிறு மாலை அரங்க வாசலில் வைத்திருந்த போஸ்டர் ஒட்டிய தட்டியே கீழே விழுந்து விடுமோ என்று நினைக்கும் அளவிற்கு மலர் மாலைகள் குவிந்து விட்டனவாம். உள்ளே வெளியே நடந்த அலப்பரையையும் கூட்டத்தையும் பார்த்துவிட்டு அண்மைக் காலத்தில் இப்படி ஒரு சந்தோஷ கொண்டாட்டத்தையும் கூட்டத்தையும் பார்த்ததில்லை என்று தியேட்டர் நிர்வாகத்தினர் வியந்து சொன்னதாக தகவல்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்ட திரு குப்புசாமி அவர்களுக்கும் நண்பர் ராமஜெயம் அவர்களுக்கும் நன்றி.

அன்புடன்

Gopal.s
26th November 2013, 07:04 AM
முரளி,
நீங்கள் சொன்னது மிக சரியான நிலை பாடு.நான் நடந்ததை மறந்து பாரிஸ்டர் விஜயத்தை கொண்டாட என் பார்வையில் பாரிஸ்டர் ஐ கொண்டாட முடிவு செய்துள்ளேன். 1973 இல் பாரிஸ்டர் உம ,பைரவனும் என் விரிவான பார்வையில் விரைவில் உலா வருவார்கள்.

joe
26th November 2013, 08:20 AM
முரளி சார்,
என்னைப் பொறுத்தவரை மாற்றுக்கருத்து உள்ளவர்களிடையே தான் உள்ளார்ந்த மரியாதையும் நட்புணர்வும் நிலவும் .அரசியல் ரீதியாக நாம் வேறுபட்டு நிற்பதல்ல முக்கியம் அதன் உள்ளார்ந்த நியாயங்களையும் அவ்வாறு வேறுபட்டு நிற்பதற்கான உரிமையை மதிப்பதும் தான் முக்கியம் .அத்தகைய மனநிலை இருந்து விட்டால் இங்கே நடைபெறும் குழப்பங்களுக்கு இடமில்லை .


சிலர் சில இயக்கத்தை கொள்கையை ஏற்றுக்கொண்டதால் அந்த இயக்கத்தை சார்ந்த கலைஞருக்கு ரசிகராக இருக்கலாம் .சிலர் ஒரு கலைஞருக்கு ரசிகராக இருப்பதால் அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தை கொள்கையை ஆதரிக்கலாம் .சிலர் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கலாம் ,அதனால் வேறு வேறாக அமையலாம் .சிலருக்கு இரண்டுமே ஒத்ததாய் இயல்பாய் அமைந்து விடலாம் .இதில் நான் மூன்றாம் ரகம் .நீங்கள் நான்காம் ரகம் என நினைக்கிறேன் . இதில் எந்த ரகமாய் இருந்தாலும் அதில் தவறில்லை , இல்லை என் ரகம் தான் சரி என்று மல்லுக்கட்டாதவரை .

uvausan
26th November 2013, 08:22 AM
டியர் CK - உங்கள் வருகை மிகவும் சந்தோஷத்தை தருகின்றது - முரளி சாரின் பதிவையும் , ராகவேந்திர சாரின் பதிவையும் படித்த பிறகு , யாருக்கும்மே மன்னிக்கும் தன்மையும் , மன்னிப்பு கேட்கும் தன்மையும் , மற்றவர்கள் பதிப்புகளில் இருக்கும் தவறுகளை மறக்கும் தன்மையும் , பிறர் மனதை புன்படுத்தகூடாத பெருந்தன்மையும் வந்துவிடும் .

என்னை பொறுத்தவரை , தவறுகளை எடுத்து சொல்வதில் பிரச்சனையே இல்லை ஆணால் அதுவே மற்றவர்களை புண்படுத்தும்படி இருக்ககூடாது - புண்படுத்தும்படி இருக்குமானால் அவர்கள் தவறுகளை திருத்திகொள்ளும் வாய்ப்பை தவற விடுகிறார்கள் .

உங்கள் ரசிகன் என்ற உரிமையில் உங்களுக்கு ஒரு பதிவு இட்டிருந்தேன் - நீங்கள் பதில் போடாததினால் , என்மீதும் கோபம் கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன் - அப்படி இருக்காது என்றால் தயவு செய்து , கிருபா சாரையும் திரிக்கு மீண்டும் வர வையுங்கள் - நீங்கள் கூப்பிட்டால் கண்டிப்பாக வருவார் - அவர் பதிவுகளில் சின்ன சின்ன தவறுகள் இருக்கலாம் நான் பதிவிடுவதைபோல - ஆனால் அவர் வந்த பிறகு , இந்த திரியில் , நகைச்சுவை உணர்ச்சி அதிகமானது - திரியும் வேகமாக செல்ல ஆரம்பித்தது - மீண்டும் உங்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் - இங்கு நாம் தமிழில் பட்டம் பெற வரவில்லை - நம் மனதை கவர்ந்த NTயை புகழ வந்திருக்கிறோம் - அவரவர்கள் தன் தனிப்பட்ட திறமையின் மூலம் பக்தியை காட்டுகிறார்கள் - பிடித்திருந்தால் படிப்போம் - பாராட்டுவோம் - பிடிக்காவிட்டால் விட்டுவிடுவோம் அவர்கள் மனம் புண்படாமல் - அடுத்த உங்கள் பதிவையும் , கிருபா சாரின் பதிவையும் ஆவலுடன் எதிபார்க்கும்

அன்புடன் ரவி
:):smokesmile:

goldstar
26th November 2013, 08:33 AM
மதுரை ஜெய்ஹிந்தபுரம் அரவிந்த் திரையரங்கிற்கு விஜயம் செய்திருக்கிறார் பாரிஸ்டர் ரஜினிகாந்த். பாரிஸ்டர் வந்தாலே பரபரப்பிற்கு பஞ்சம் வராதே! சனி ஞாயிறு இரண்டு தினங்களும் திரையரங்கும் சரி அரங்க வளாகம் மற்றும் அரங்கம் அமைந்திருக்கும் தெருவும் சரி இரண்டுபட்டு விட்டது என்று நேரில் கணடவர்கள் சொன்னார்களாம். ஞாயிறு மாலை அரங்க வாசலில் வைத்திருந்த போஸ்டர் ஒட்டிய தட்டியே கீழே விழுந்து விடுமோ என்று நினைக்கும் அளவிற்கு மலர் மாலைகள் குவிந்து விட்டனவாம். உள்ளே வெளியே நடந்த அலப்பரையையும் கூட்டத்தையும் பார்த்துவிட்டு அண்மைக் காலத்தில் இப்படி ஒரு சந்தோஷ கொண்டாட்டத்தையும் கூட்டத்தையும் பார்த்ததில்லை என்று தியேட்டர் நிர்வாகத்தினர் வியந்து சொன்னதாக தகவல்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்ட திரு குப்புசாமி அவர்களுக்கும் நண்பர் ராமஜெயம் அவர்களுக்கும் நன்றி.

அன்புடன்


http://ts3.mm.bing.net/th?id=H.4620698834700602&pid=1.7

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/f/f9/Gauravam.jpg/220px-Gauravam.jpg

http://moviegalleri.net/wp-content/gallery/gauravam-movie-re-release/gauravam_movie_240.jpg


Thank you Murali sir and also thanks to Mr. Kuppusamy and Ramajeyam.

Is it possible to get snaps of Sunday galas?

Cheers,
Sathish

ScottAlise
26th November 2013, 12:28 PM
Dear Murali Sir,

I got your point, I knew it was too much on my part to include many videos but considering the very good print I was overjoyed and hence I did it, sorry sir, I will make sure that I restrict videos to minimal max 4-5 in case or nil

thanks for pointing out

J.Radhakrishnan
26th November 2013, 12:50 PM
சற்று முன் வந்த தகவல்.... (தினமணி இணையதள செய்தி)

"மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தமிழக அரசு பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில், காமராஜர் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் போது, மற்ற மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை இந்த சிலை மறைப்பதால், இந்த பகுதியில் அதிக விபத்துகள் நேர்ந்துள்ளன என்றும், இதனால் அநதச் சிலையை அகற்றலாம் என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது."



இந்த அரசுக்கு நம் நடிகர்திலகத்தின் மீது என்ன பகை? யார் யார் சிலைகளோ இங்கு வீற்றிருக்க நம் தலைவர் சிலை மீது கை வைக்கிறார்கள் என்றால் ஏதோ உள்நோக்கம் உள்ளதோ என சந்தேகிக்க வேண்டி உள்ளது.

joe
26th November 2013, 01:15 PM
இந்த அரசுக்கு நம் நடிகர்திலகத்தின் மீது என்ன பகை? யார் யார் சிலைகளோ இங்கு வீற்றிருக்க நம் தலைவர் சிலை மீது கை வைக்கிறார்கள் என்றால் ஏதோ உள்நோக்கம் உள்ளதோ என சந்தேகிக்க வேண்டி உள்ளது.

சே.. சே ..அந்த அம்மாவுக்கு நடிகர் திலகம் மீது ரொம்ப மரியாதை .இந்த கருணாநிதிக்கு தான் நடிகர் திலகம்-னாலே ஆரம்பத்திலிருந்து சுத்தமா பிடிக்காது .அவரை அவமானப்படுத்தவே உள்நோக்கத்தோடு சிவாஜிக்கு சிலை வைத்தார் . இந்தாளு சிலை வக்காம இருந்தா தாயுள்ளம் கொண்ட அம்மா அதை அகற்ற வேண்டி வந்திருக்குமா ? இதுக்கெல்லாம் காரணம் அந்த கருணாநிதி தான் .

adiram
26th November 2013, 01:30 PM
ராகுல்,

சொர்க்கம் பற்றிய விவரணை ok. அதே நேரத்தில் அந்தப் பதிவில் இத்துணை video-கள் தேவையா? காரணம் இத்துணை வீடியோக்கள் பதிவிடும் போது பல நேரங்களில் திரியை open செய்வதே ஒரு சவாலாக இருக்கிறது. Broad Band உபயோகிக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால் dial up connection இருக்கிறவர்களை நினைத்து பாருங்கள். பலர் இதனாலேயே திரிக்குள் வராமல் சென்று விடுகிறார்கள். ராகுல் என்றல்ல வீடியோக்கள் பதிவிடும் அனைவருக்கும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். வீடியோவே வேண்டாம் என்று சொல்லவில்லை. அளவோடு தேவையான இடங்களில் மட்டும் பதிவிடலாம். இந்த திரிக்கு வரும் 99% மனிதர்களும் படிக்க தான் வருகிறார்கள். இது போன்ற வாசகர்கள் வேறு எந்த திரிக்கும் கிடையாது. ஆகவே குறைந்த அளவு வீடியோ, நிறைந்த செய்திகள் என்று தொடருவோம். அனைவரும் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பீர்கள் என நம்பிக்கையுடன்

அன்புடன்
அன்புள்ள தம்பி ராகுல்ராம்,

சொர்க்கம் படத்தின் தொடர் பதிவுகளும் இணைக்கப்பட்ட விடியோக்களும் நன்றாக இருந்தன. எனினும் திரு முரளி சார் அவர்களின் ஆலோசனையை நீங்கள் கவனிக்கவில்லைஎன்று நினைக்கிறேன். நீங்கள் எழுதியிருப்பது ஆய்வுக்கட்டுரையோ அல்லது விமர்சனமோ அல்ல. பாட்டுப்புத்தகங்களில் காணப்படும் கதைச்சுருக்கம் போன்றது. சொர்க்கம் படத்தின் கதை நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரைப்படம் பார்க்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் அத்துப்படியானது.

இத்தகைய பாட்டுப் புத்தக கதைச்சுருக்கத்தை பதிவிட நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டியதில்லை. வீடியோக்களையும் இப்படி பிய்த்துப் பிய்த்து போட்டிருக்க வேண்டியதில்லை. 'சொர்க்கம் முழுப்படத்தையும் பார்க்க' என்று தலைப்பிட்டு ஒரே பதிவில் ஒரே வீடியோவில் முடித்திருக்கலாம். ஏனென்றால் படத்தை பற்றியோ, அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் பற்றியோ எந்த கூடுதல் குறிப்பும் தங்கள் பதிவில் இடம்பெறவில்லை. ஒவ்வொரு காட்சியாகப் பார்த்து அதைப்பற்றி இரண்டிரண்டு வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள். அதுதான் காட்சியிலேயே இருக்கிறதே.

இங்கு பதிவிடுபவர்கள் மட்டுமல்ல, பதிவைப் படிக்க மட்டுமே செய்பவர்கள் கூட சொர்க்கம் படத்தின் கதையை தலைகீழாக சொல்லும் திறமை கொண்டவர்கள். எனவே ஆய்வுக்கட்டுரை அல்லது விமர்சனக் கட்டுரை என்ற பெயரில் பாட்டி வடை சுட்ட கதை பாணியில் ஆரம்பிக்க வேண்டாம்.

முரளி அவர்கள் ஏற்கெனவே சொன்னது போல இதுபோன்ற பிரபலமான படங்களைப் பற்றி எழுதும்போது கதைச்சுருக்கத்தை தவிர்த்து மற்ற சிறப்பம்சங்கள் பற்றி எழுதச் சொல்லியிருந்தார். இதற்கு முந்தைய உங்கள் ஆய்வுகளில் உங்களின் சொந்த கருத்துக்கள், காட்சி மற்றும் நடிப்பு பற்றிய ஆய்வுகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இந்த சொர்க்கம் பதிவில் கதைச்சுருக்கம் தவிர வேறெதுவும் இல்லை. அதனால் சுவாரஸ்யம் இல்லை

நீங்கள் இதே பாணியில் மேலும் மேலும் உங்கள் பொன்னான நேரத்தை செலவழிக்கக் கூடாது என்பதற்காகவே இப்பதிவு. பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லையா, 'இவன் யாரு நமக்கு சொல்வதற்கு' என்று தள்ளிவிட்டு போய்க்கொண்டேயிருங்கள்.

(Thanks to Mr. Hari for typing this message for me)

ScottAlise
26th November 2013, 03:24 PM
Dear Adiram sir,

Sure , I will rectify, it, point noted from Murali sir & your advice, will focus more on my writing instead of giving description for videos,

I got carried away when I started watching sorgam

joe
26th November 2013, 03:43 PM
நாஞ்சில் சம்பத் : வைகோ நடிப்பதில் வல்லவர் . நடிகர் திலகம் சிவாஜி மறையவில்லை .வைகோ வடிவில் வாழ்கிறார்.

ஜெயலலிதா : அப்புறம் எதுக்கு சிவாஜி சிலை ? தூக்கிருங்க !

Russelluzy
26th November 2013, 04:14 PM
எல்லாருக்கும் வணக்கம்

இந்த ஹப்புல கலந்துக்க சந்தோஷம். ரொம்ப நாள் இந்த ஹப்புல நீங்க பெரியவங்க எல்லாரும் எழுதறீங்க. ரொம்ப நல்ல இருக்கு நானும் ஆசபட்டதால இங்க எழுதறேன். என் பேரு சந்துரு. சென்னைல இருக்கேன். ரெண்டு நாள் முன்னாடி சிவாஜி சார் நடிச்ச அன்பை தேடி படம் பாத்தேன். சன் லைப் ல.

ரொம்ப நல்லா இருந்துச்சி. இன்னிக்கி அரசு சார்புல போட்ட போடு எனக்கு ஜெயலலிதா மேல கோவமே வந்திடிச்சு.
சிவாஜி சார இப்புடி அவமானபடுதறாங்க, நம்ம ஊர்ல எல்லாரும் சொரணையே இல்லாம இருக்காங்க . ரொம்ப வருத்தமாயிடுச்சி.

ஏதோ என்னால முடிஞ்சத இங்க எழுதறேன்..உங்க லெவல் வராது. தப்பு இருந்த என்ன திட்டாதீங்க ப்ளீஸ் ! திருத்துங்க ! எனக்கு சந்தோஷம் அது !

Russelluzy
26th November 2013, 04:26 PM
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=69382

IliFiSRurdy
26th November 2013, 04:35 PM
இந்த திரியின் ஒரு தனித்தன்மை என்னவென்றால் ஒரு idயில் 3000 பதிவுகள் போடுபவர்களும் உள்ளனர்..3000 id யில் ஒவ்வொரு பதிவு போடுபவர்களும் உள்ளனர்.:-D

Russelldwp
26th November 2013, 07:03 PM
நடிகர் சிவாஜி சிலையை அகற்ற ராமதாஸ் எதிர்ப்பு!
Posted Date : 15:35 (26/11/2013)Last updated : 15:41 (26/11/2013)
சென்னை: சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றக்கூடாது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''சென்னை கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உருவச் சிலையை அங்கிருந்து அகற்றலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அரசின் இந்த புதிய நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகின் அடையாளமாக திகழ்ந்தவர். சத்ரபதி சிவாஜி வேடத்தில் சிறப்பாக நடித்ததால் சிவாஜி என்ற பட்டத்தை தந்தைப் பெரியாரிடமிருந்து பெற்றவர். வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தலைவர்களை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர். பிரான்ஸ் அரசின் செவாலியே விருதையும், இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தவர்.

சிறப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்பவர். தமது சிறப்பான நடிப்பால் என்னைப் போன்ற ஏராளமான ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர். இத்தனை பெருமைகளைக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு செய்யும் வகையில்தான் கடந்த 2006 ஆம் ஆண்டில் அவரது நினைவு நாளான ஜூலை 21 ஆம் தேதி கடற்கரைச் சாலையில் அவரது உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

அப்போதே சிவாஜி சிலையை திறப்பதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தடை விதிக்க மறுத்து விட்டனர். அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் 23 ஆம் தேதி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற தலைமை வழக்கறிஞர், கடற்கரை சாலையில் சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், இதனால் சிலையை அகற்றத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
அடுத்த ஒரு மாதத்திற்குள் சிவாஜி சிலையால் கடற்கரை சாலையில் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதனால் அச்சிலையை அங்கிருந்து அகற்றலாம் என்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.


கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த 7 ஆண்டுகளில் அப்பகுதியில் சொல்லிக்கொள்ளும்படி விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில் சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருப்பதைப் பார்க்கும்போது இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் உள்ளதோ என்று தான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன். ஆனால், சிவாஜி சிலையால் கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் அதை அகற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது.

சிவாஜி கணேசனை சிறப்பிக்கும் வகையில் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட சிலையை அகற்றுவது தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகவே அமையும். எனவே, சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்'' என வலியுறுத்தி உள்ளார்.

நன்றீ ஜுனியர் விகடன்

adiram
26th November 2013, 08:00 PM
முரளி,
நீங்கள் சொன்னது மிக சரியான நிலை பாடு.நான் நடந்ததை மறந்து பாரிஸ்டர் விஜயத்தை கொண்டாட என் பார்வையில் பாரிஸ்டர் ஐ கொண்டாட முடிவு செய்துள்ளேன். 1973 இல் பாரிஸ்டர் உம ,பைரவனும் என் விரிவான பார்வையில் விரைவில் உலா வருவார்கள்.

பாரிஸ்டர், டாக்டர் என்று மேல்தட்டில் மட்டுமே கவனம் வைக்காமல் எங்கள் ஏழை நடிகன் ரங்கதுரை பக்கமும் தங்கள் கருணை பார்வையை திருப்புங்கள்.

Gopal.s
27th November 2013, 06:47 AM
பரம ஏழை நாஞ்சில் நம்பி,விவசாயி சுந்தரம் இவர்களை இன்னொரு திரியில் கவனிப்பதால் ,இங்கு பணக்காரர்களை மட்டுமே கவனித்து விட்டேன் போல. சரி. உங்களுக்காக முதலில் ரங்கதுரை.

Gopal.s
27th November 2013, 07:08 AM
இனி தமிழ் நாடு என்ற பெயரை உச்சரிக்கவோ,தமிழ் என்று சொல்லவோ நாம் ஒவ்வொருவரும் வெட்கி தலை குனிய வேண்டும். என்னதான் நடக்கிறது தமிழ் நாட்டில்?தமிழனாக பிறப்பதே குற்றமா?

Gopal.s
27th November 2013, 10:15 AM
http://tamil.oneindia.in/news/tamilnadu/vaiko-condemn-tn-govt-removal-shivaji-ganesan-statue-188263.html

sankara1970
27th November 2013, 10:55 AM
நேற்று புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில், மோகன்ராம் --சிவாஜி சிலையை அகற்ற கூடாது என்று கூறினார்

சென்னையில் பல இடங்களில் நெருக்கடியான இடங்களில், சிலைகள் ஆகிரமித்து இருக்கின்றன. அங்கெல்லாம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்

68% மக்கள் சிலையை அகற்ற அரசு கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல என்று facebook, twitter மூலம் கருது தெரிவித்து இருந்தனர்

ScottAlise
27th November 2013, 11:18 AM
How not to treat an actor - A standing example nadigar thilagam, he did not get his due when he was alive and still it happens, really very sad

KCSHEKAR
27th November 2013, 11:59 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/TimesOfIndia_zps042dd10a.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/TimesOfIndia_zps042dd10a.jpg.html)

KCSHEKAR
27th November 2013, 12:00 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiStatueJudgement/Dinamalar_zpsbf1b302f.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiStatueJudgement/Dinamalar_zpsbf1b302f.jpg.html)

adiram
27th November 2013, 12:59 PM
நேற்று புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில், மோகன்ராம் --சிவாஜி சிலையை அகற்ற கூடாது என்று கூறினார்

சென்னையில் பல இடங்களில் நெருக்கடியான இடங்களில், சிலைகள் ஆகிரமித்து இருக்கின்றன. அங்கெல்லாம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்

Mohanram also argued, if the police decide to remove Sivaji statue, they should also remove all statues, which are erected in the middle of roads.

"ellarum thappu panniyadhaal en thappai vittudunnu ketkalai. ennidaiya thappai thandikkumpodhu ellarudaiya thappukkum thandanai kodu".

HARISH2619
27th November 2013, 01:26 PM
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கொந்தளித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தினர் இந்த விஷயத்தில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.சிலையை அகற்றக்கூடாது என்று ஒரு அறிக்கை வெளியிடக்கூட நேரம் இல்லையா ?ஒரு சீமானுக்கும்.விக்கிரமனுக்கும் ,அமீருக்கும் ,ராமதாசுக்கும் இருக்கும் அக்கறை கூட அவரின் குடும்பத்தினருக்கு இல்லாமல் இருப்பது வேதனை.நேற்று கோர்ட்டுக்கு கூட நமது சந்திரசேகர் சார்தான் சென்றிருக்கிறாரே தவிர நடிகர்திலகத்தின் குடும்பத்தினர் ஒருவரும் செல்லாதது வெட்கக்கேடானது

adiram
27th November 2013, 03:24 PM
நேற்று புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில்,

Did you notice what that AIADMK representative Avadi Kumar was telling?. 'Sivaji statue should be removed from their and should be erected in his ninaivu mandapam'.

What is the inner meaning you know?. They dont want to show the statue to the public for life long, because the ninaivu mandapam will never come.

ScottAlise
27th November 2013, 03:48 PM
பார்த்ததில் பிடித்தது

அத்தியாயம் -5



இந்த பதிவில் 1976 வருடம் வந்த நடிகர் திலகத்தின் உன்னகாக நான் என்ற படத்தை பற்றி தான் , இந்த படம் வந்த காலகட்டத்தை பற்றி திரு முரளி சார் மிக சரியாக விவரிதிரிகிறார் சென்ற பாகத்தில்

சரி படத்துக்கு வருவோம் இந்த படம் நடிகர் திலகத்தின் சொந்த banner போன்ற அவர் நண்பர் திரு பாலாஜி அவர்களின் தயாரிப்பில் ஆஸ்தான இயக்குனர் திரு CV ராஜேந்திரன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான படம்

படம் ஆரம்பித்த உடன் ராஜா (சிவாஜி ) சிரைசலையீல் இருந்து வெளியே வருகிறார் , அவரின் நடைளிருந்து தெரிகிறது அவர் அதிக வருடம் சிறை தண்டனை பெற்றவர் என்று தெரிகிறது

வீட்டுக்கு வந்த உடன் அவரை காண ஏராளமான மக்கள் கூடி இருக்கிறார்கள் , அந்த மக்கள் அவரை தெய்வம் என்று புகழ்கின்றார்கள்


ராஜா தன அறைக்கு செல்லுகிறார் , அங்கே இருக்கும் பொருட்களை பார்த்து கொண்டு இருக்கும் பொது அவர் பார்வை ஒரு படத்தின் மேல் வழிகிறது

அங்கே இருந்து கதை பின்னோக்கி செல்லுகிறது

ராஜா அன்றாடம் ராமுவின் வீட்டுக்கு செல்லுகிறார் , ராமு (ஜெமினி ) ராஜா இணைபிரியாத நண்பர்கள் , ராமுவின் குடும்பத்துக்கு ராஜாதான் பொருளாதார உதவிகளை செய்கிறார்

இப்படி ஆனந்தமாக இருக்கும் ராஜாவிற்கு ஒரு போன் வருகிறது , அதில் தன் தந்தை உடல் நலம் சரி இல்லாமல் இருப்பது அறிந்து ஊருக்கு விரைகிறார்

அங்கே அவர் தந்தை யின் உடல் நலம் சரி இல்லாத காரணத்தினால் ஆபீஸ் க்கு ராஜாவை செல்லும் படி பணிகிறார்

முதல் நாளே ஒன்னும் தெரியாமல் ஆபீசில் முழிப்பார் , sv சுப்பையா வந்து ஒரு தொழிலாளிக்கு கை ஒடிந்து விட்டது என்று சொன்ன உடன் , நானா கையை குடுக்க சொன்னேன் , எந்த கையும் என்னை வாழ வைக்கவில்லை என்று சொல்லிவிடுவார் , அது strike வரை சென்ற உடன் வேறு வழி இல்லாமல் மன்னிப்பு கேட்டு விடுவார்

பிறகு தன் நண்பரை கொண்டு வந்து தொழிலர்கல்யின் ஒற்றுமையை குலைத்து சுப்பையா வின் ஆதிக்கத்தை குறைக்க எண்ணுகிறார் , அதில் அவர் வெற்றியையும் அடைகிறார்

ஆனால் அந்த வெற்றி , ராமுவின் மனசில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து விடுகிறது , அதனால் நட்பில் ஒரு சிறு விரிசல் , ராமு உண்மையில் தொழிலாளிகளுக்கு உதவுகிறார்
மேஜர் தன் ஆளை அனுப்பி , ராமுவை கொள்ள சதி செய்து , அதில் வெற்றி அடைகிறார் , ராஜா தன் தந்தை செய்த குற்றத்தை தான் செய்ததாக ஏற்று கொண்டு தண்டனை அனுபவிக்கிறார்

ScottAlise
27th November 2013, 03:50 PM
உனக்காக நான் ராஜா

ராஜா பேருக்கு எற்ற போல் ராஜவாழ்க்கை வாழுகிறார், வயசு ஏறினாலும் போதிய அனுபவம் வாழ்க்கையில் ஏற்படமால் இருபதனால் மனதளவில் அவர் ஒரு குழந்தை , தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு கொண்டு , வாழ்க்கையில் ஒரு கருப்பு கண்ணாடியை போட்டு கொண்டு அணுகுவதால் மனதளவில் ஒரு குழந்தை , குழந்தைகளுக்கு உண்டான ஈகோ

சரி பிளாஷ் back காட்சிகள் இருந்து படத்தை அலசுவோம் ராஜாவின் கேரக்டர் யை பற்றி

முதல் காட்சியில் சிவாஜி சார் அந்த வீட்டில் செலுத்தும் உரிமையும் , அந்த வீட்டில் உள்ள ராமுவின் தாயார் அன்புடன் அழைபதையும் , தங்கை காலேஜ் பீஸ் உரிமையுடன் கேட்பதும் , எப்படி ஒரு நட்பா என்று வியக்க வைக்கிறது
.
அவர் தன் மாமூல் என்று 15 லட்டு கேட்பதும், கடிகாரம் கொடுத்த உடன் ஒரு பஞ்ச் டயலாக் பேசிய உடன் , ஜெமினி யார பார்த்து காபி அடிச்சே என்று கேட்பதும் , சிவாஜி மிகவும் ஸ்டைல் அக நான் எந்த பய்யளையும் காபி அடிக்க மாட்டேன் என்று சொல்லும் காட்சி superb

தான் தொழில் பழகும் வக்கீல் இடத்தில நோட்ஸ் எடுக்காமல் , விளையாட்டாக் வரைவதும் , ஆடுவதும் , படுவதும் என்று எதை பற்றியும் கவலை இல்லாமல் வாழுகிறார்
அவர் உலகத்தின் அங்கத்தினர்கள் அவர் ,அவர் தோழர் ராமு , ராமுவின் தங்கை , ராமுவின் தாயார் மற்றும் ராஜா வின் தந்தை அவ்வளவு தான்


http://www.youtube.com/watch?v=dK0TikMtH-k&feature=youtu.be

ScottAlise
27th November 2013, 03:55 PM
எல்லா மனிதர்கள்யின் வாழ்கையும் ஒரு நாள் மாறும் , இது தான் இயற்கை யின் நீதி , குழந்தை உள்ளம் கொண்ட ராஜாவின் வாழ்வும் மாறுகிறது , அவர் வாழ்கையை மாற்றுவது , ராஜாவின் தந்தையிடம் இருந்து வரும் ஒரு தொலைபேசி

ராதாவை சந்திக்கும் வாய்ப்பும் கிடைகிறது , ராதா ராஜாவை கரம் பிடிக்க காதிருக்கும் பெண்

ராஜா ராதாவை சந்திக்கும் முதல் சந்திப்பில் ராதாவை தன் தந்தை அறிமுகம் படுத்தும் பொது முதலில் ஒரு சின்ன ஜெர்க் குடுத்து , தன் uneasiness யை வெளி படுத்துவார் , அவர் உடது எதோ சொல்ல என்னும் , தந்தை இருப்பதை அறிந்து கொண்டு பரஸ்பரம் அறிமுகம் ஆகும் நபர்களை போலே பேசி கொள்வார்கள் , ராதாவும் ஒரே வரியில் பதில் சொல்லுவர்
பேச்சு காபிடலிசம், சோசியலிசம் பற்றி செல்லும் பொது சிவாஜி இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி பேசுவார், ஒரு விழியத்தை பற்றியும் தெளிவான ஒரு கண்ணோட்டம் இல்லாதவர் ராஜா , மற்றும் கொஞ்சம் பேசினால் அவரை influence செய்து விடலாம் என்பதுக்கு இந்த காட்சி ஒரு சான்று

தன் தந்தையின் வாதத்தையும் ஏற்று கொளுகிறார் , ராதாவின் வாதத்தையும் ஏற்று கொளுகிறார் , சுருக்கமா சொன்னால் அவர் மனது , மற்றும் மூளை ஒரு clean slate அதில் நஞ்சு விதிக்கிறார் ராஜாவின் தந்தை


http://www.youtube.com/watch?v=xoxp_RwFlBo&feature=youtu.be

ScottAlise
27th November 2013, 03:56 PM
முதல் அனுபவம் வெளி உலகத்துடன் ராஜாவிற்கு நிகழ்வது அவர் ஆபீசில் அதுவும் முதலலியாக , ஒரு கையெழுத்து போட சொன்னதற்கு அவர் தந்தையை consult செய்வதும் , ஒரு தொழிலாளிக்கு கை போன உடன் அதற்கு பொறுப்பு இல்லாமல் பதில் அளிப்பதும் அவரின் பிறவி குணம்
தான் மனிப்பு கேட்டல் தான் வேலை தடை இன்றி நடக்கும் என்பதை அறிந்து , வேறு வழி இல்லாத காரணத்தினால் ராஜா மனிப்பு கேட்கும் காட்சியில் அவர் சுற்றி முற்றி பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டு I am sorry என்று சொல்லும் இடம் அந்த மனவலியை பார்வையாளர்களும் உணரும் படி நடித்து இருக்கார் நம்மவர் ,

தன் தான் என்ற அகங்காரம் சூடு பட்ட உடன் , சுடு பட்ட பூனையாக துடிப்பதும் , தன் நண்பரிடம் புலம்புவதும் என்று ராஜா வின் கேரக்டர் travel ஆகிறது , ஒரு குடும்பத்தில் ஒரே பையனாக பிரபவர்கள் பொதுவாக ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள் இல்லை மோசமானர்களாக இருப்பார்கள் (ஒரு ஆய்வுவின் படி)
அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட நபர் மீது அதித dependent அக இருப்பார்கள் அதே குணாதிசயம் கொண்டவர் தான் ராஜா

தன்னை அவமானம் செய்ததாக வருத்த பட ராமுவிடம் செல்லுகிறார் , ராமு கொஞ்சம் தமாஷ் செய்ததும் வெடிக்கிறார்
அந்த dependence கொண்ட மனிதர் மீது ரொம்ப பாசம் வைத்து இருப்பார்கள் , ராஜா ராமு தன் கம்பெனி க்கு வருவதாக சம்மதிப்பதை அடுத்து GM போஸ்ட் குடுக்கிறார் , ராமு அதை மறுத்து தொழிலாளியாக வருகிறார் ராஜாவின் கம்பெனியில்
ராஜா ராமு வின் ஒபந்தம் தினமும் சந்திக்க வேண்டும் என்பது , அதை ராமு மீறும் பொது செல்லமாக தன் அறைக்கு கூபிட்டு கடிப்பதும் ராமு ஒரு பெண்ணை விரும்புவது தெரிந்து ,அதை ராமுவின் வாயாலேயே வரவைக்கும் தந்திரம் , வார்த்தை ஜாலம் , இடையில் வரும் நந்தி மேனேஜர் முன்னால் ராமு வை கண்டிப்பதை போல் நடிப்பதும் என்று நடிகர் திலகம் மற்றும் ஜெமினி இருவரும் கலக்கி இருப்பார்கள் அதுவும் அந்த காட்சி முடியும் பொது , டெய்லி progress report குடுக்கணும் என்று கண் அடிக்கும் பொது சுபெர்ப் legends என்று சொல்ல வேண்டும்

இந்த காலத்தில் சொல்லுவதை போலே chemistry இருவரும் இடையில் perfect


http://www.youtube.com/watch?v=ur5wYGGUajA&feature=youtu.be

ScottAlise
27th November 2013, 03:57 PM
ராமுவிற்கு காதல் வையபட்டுவிட்டார் , ராஜா ?

அந்த காட்சியை எழுதும் பொது சிலிர்ப்பு , மயக்கம் , நடிகர் திலகத்தை நினைத்து பெருமை அப்படி என்ன இருக்கிறது

இதோ

ராமுவும் ராஜாவும் பேசி கொண்டு இருக்கும் பொது , ராதா வரும் நேரம் அறிந்து ராமு ஜகாவாங்குகிறார்
Radha: May I come in?
Raja: where there is a wine , there must be a women
ராஜா மது அறிந்து கொண்டு இருப்பதை பார்த்து ராதா கேட்கிறார் ; ஏன் ரெண்டு கிளாஸ் ,

ராஜா : நான் என் நண்பருடன் குடிக்கிறேன் , அவர் பெங்களூர் ல் இருக்கிறார் , அவரின் பங்கையும் சேர்த்து நான் குடிக்கிறேன்

ராதா : கடவுளுக்கு படையல் வைத்து நாம் உண்ணுவதை போலே?
ராஜா : என் நண்பர் அழைக்காமலே வருவார்
என்னக்கு இது வரைக்கும் நண்பர் தான் கிடைத்தார்
ராதா : என்னக்கு என்ன இடம் உங்கள் மனதில் ?
சொத்தை பங்கு போடுவதில் நான் சோசியலிஸ்ட்
மனதை பங்கு போடுவதில் நான் காபிடளிஸ்ட்
அந்த காட்சி


இதை விட ஒரு பெண் நயமாக தான் மனதை திறந்து பேச முடியாது , ஒரு மனிதர் குடித்தும் கண்ணியமாக பேச முடியும் என்பதை பறைசாற்றும் காட்சி

http://www.youtube.com/watch?v=5yb4vb7LcuE&feature=youtu.be

ScottAlise
27th November 2013, 03:59 PM
தன் தந்தை செய்த சூழ்ச்சியால் தன் நண்பன் தாக்க பட்ட செய்தி கேட்ட உடன் துடி துடித்து சென்று அங்கே இருந்து ராமுவை அழைத்து போக வருகிறார் ராஜா , ராமு வர மறுக்கும் காட்சி

இருந்த ஒரே ஒரு நண்பன் தன் பேச்சை கேடக் மறுத்ததும் , சிவாஜி யின் கோபம் இருந்த ஒரே ஒரு நண்பரும் சென்று விட்டாரே என்று , அந்த வளர்ந்த குழந்தை முதல் முதலில் தன் அப்பாவின் இரட்டை வேடத்தை அறிகிறது , சாப்பிட மறுகிறது, நாட்கள் செல்ல செல்ல , ராஜா சாப்பிடாமல் , மது அருந்தி விட்டு உண்மையை பேசுகிறார் , எல்லா மனிதர்களுக்கும் எதோ ஒரு vice இருக்கனும், relaxation செய்வதற்கு

ராஜா மது அருந்தி விட்டு தன் தந்தையிடம் வாகு வாதம் செய்கிறார்
தன் தந்தை யை எதுர்கிறார் , எதிர்ப்பு செல்லுபடி ஆகாததால் கெஞ்சுகிறார்
அந்த காட்சியில் வசனம் எல்லாம் கத்தியின் கூர்மை


தன் நண்பர் மீண்டும் தன்னை சந்திக்க வந்த உடன் ராஜா மீதும் வில் இருந்து புறப்பட்ட அம்பு போலே உற்சாகத்துடன் வரவேற்கிறார்

தன் நண்பரின் அம்மாவின் லட்டுகளை பார்த்த உடன் அவர் தோணி மாறும் பாருங்கள்
அம்மாவுக்கு ஒரே பையன் நான் இருக்கேன் , நான் அம்மாவை பார்த்துகிறேன் அவர்களை நான் இங்கே வைத்து கொளுகிறேன் என்று அன்பு செலுத்துவதில் கூட ஒரு அதிகாரம் , ஒரு right யை எடுத்து கொள்ளுகிறார்

ஒரே பிள்ளையாக வளருபவர் ஒரு துணை இல்லாமல் இருக்க முடியாது ,அது ராஜாவிற்கு வைக்காத பொது ராஜா வின் சினம் ராமுவின் மேல் திரும்புகிறது
கிளைமாக்ஸ் காட்சியில் தன் நண்பரின் சாவுக்கு தான் பொறுப்பு எத்து , தன் தகப்பனார்யிடம் பேசும் வார்த்தைகள் , சாட்டை வார்த்தைகள்

அதை விவரிக்க வார்த்தை கிடைக்காததால் காட்சி இங்கே


http://www.youtube.com/watch?v=SursFFlZ39M&feature=youtu.be

ScottAlise
27th November 2013, 04:00 PM
அழுது கொண்டே தன் தந்தை உடன் வாக்குவாதம் செய்து , தன் தந்தையின் குற்றதை தான் செய்வதாக ஏற்று கொண்டு தான் அக்னி பரீட்சை ஏற்று கொண்டு , தூய்மையான தங்கமாக வெளி வருகிறார்

சிறையில் இருந்து வரும் ராஜாவின் முகத்தில் கருணை , செயலில் நிதானம் , குரலில் ஒரு தெய்விக தன்மை அந்த காட்சியில் நாம் வழக்கம் போல் இருக்கும் சிவாஜியை காண முடியவில்லை , மாறாக காலம் கற்று தந்த பாடத்தினால் , அனுபவும் உள்ள ஒரு மனிதரை பார்க்கின்றோம்

இப்படி படம் முழுவதும் வியாபித்து இருக்கும் ராஜாவாக சிவாஜி சார் கலக்கி இருப்பார்

அவரின் கேரக்டர் பல படிகளை கடந்து பரிணாம வளர்ச்சியை அடைந்து புனிதர் என்ற அந்தஸ்தை அடைகிறார்

http://www.youtube.com/watch?v=XLoZ34L9SWE&feature=youtu.be

ScottAlise
27th November 2013, 04:01 PM
ஜெமினி


ராமு / ஷங்கர் , ராமுவாக ராஜவிருக்கு உற்ற தோழனாக இருந்து , முதலில் ஆடல் ,பாடல் என்று சந்தோசமாக வாழுகிறார் , தன் நண்பர் வேலையை விட்ட உடன் தானும் வேலையை விடுகிறார்

தன் நண்பருக்கு அவமானம் வந்த உடன் , அதை சரி செய்ய தானே உள்ளே சென்று தன் நண்பர்க்கு உதவிகிறார் , முதலில் சரியாக போகும் திட்டம் , ராமு தொழிலாளிகளுக்கு ஆதரவாக பேசும் பொது தன் நட்பை காவு வாங்குகிறது , ராமு வின் மனமாற்றத்துக்கு காரணம் மற்றும் தர்மலிங்கத்தின் பெரிய மனது
பொதுவாக வீட்டுக்கு ஒரே பிள்ளைக இருபருக்கு கொஞ்சம் ஈகோ இருக்கும் அந்த மாதிரி நபர்களுக்கு நண்பராக இருப்பது கொஞ்சம் சிரமம் , அதாவது விட்டு கொடுத்து போவது அவசியம் , அதுவும் எதிர் பார்ட்டி தான் விட்டு தர வேண்டும் அவர்கள் விட்டு தர மாட்டார்கள்,
ராஜா அம்மா வை நான் பார்த்து கொளுகிறேன் என்று சொல்லும் பொது ராமு பெரிய மனது கொண்டு அம்மாவுக்கு நீ இருக்கே அது போதும் என்று சொல்லுவதும் , பின் வாக்குவாதம் முற்றி ராஜா வெளியே போக சொன்ன பொது , ராதாவை பார்த்து ராஜாவை கவனித்து கொள்ளுங்கள் , அவரால் தனியாக இருக்க முடியாது என்று சொல்லும் இடம் நெஞ்சை நெகிழ செய்தது
ராஜாவின் தந்தை செய்யும் சூழ்ச்சியில் அடி வாங்கும் பொது , தர்மலிங்கம் ராமுவிற்கு ஆதரவாக பேசும் இடத்தில ராமு கூனி குறகி நிற்பதும் , தன் தவறை சொல்லி தர்மலிங்கம் அவர்களிடம் மணிப்பு கேட்பதும் , நீ முதலாளியின் ஆள் என்பது எனக்கு தெரியும் என்று அவர் சொன்ன உடன் , இனி என்ன செய்ய என்று இருப்பது , நட்புக்கும் , கடமைக்கும் , தொழிலளிகளுகும் torn apart அக இருந்து சங்கட படுவதும் என்று நல்ல scope உள்ள பாத்திரத்தில் நன்றாக செய்து இருக்கார் மனிதர்

ScottAlise
27th November 2013, 04:01 PM
SV சுப்பையா

இந்த அற்புத நடிகரை சினிமா சரியாக அங்கீகரிக்கவில்லை என்பது என்று என் கருத்து , விதியும் அவரை சீக்கிரம் கொண்டு சென்று விட்டது

ஒரு matured union leader sans cinematic liberties அவர் பாத்திரம் , முதலில் அமைதிக்க தன் விருப்பதை சொல்லுவது , அது பலிக்காமல் போனால் அதிரடி முடிவை எடுப்பது , புதுசாக வரும் ஷங்கரின் அணுகுமுறையால் தன் position தளர்ந்து போகும் போதும் அதை பெருசாக எடுத்து கொள்ளாமல் , ராமு மனம் மரியாதையை அறிந்து , அவருக்கு ,உதவும் காட்சி , அவர் நல்ல உள்ளத்துக்கு சான்று


நாகேஷ்

குடிக்கும் ஏழை கதாபாத்திரத்தில் கௌரவ தோற்றம்
சதா குடித்து குடித்து லென்னின் கருத்தகளை எளிமையாக பேசுகிறார் , cancer என்ற கொடிய நோயால் வாடுகிறார் ,வறுமயின் காரணத்தினால் குடும்பத்தினர் அனைவரும் மாண்டு போக , அவர் குடியில் முழுகி இருக்கார் , குடிசை பெண் சாராயம் விற்பதை , விலைமாதுவாக மாறுவதை , அதை அவர் கவிதை மூலம் விலகும் காட்சி புரட்சி தீ அவர் சாகும் காட்சி கண்ணீரை வர வைக்கும் . வழக்கத்துக்கு மாறாக கேரக்டர் ரோல்

மேஜர்

பெரிய பணக்காரனாக வாழுகிறார் , அவரை பொறுத்த வரைக்கும் அவர் செய்வது சரி , தன் கொள்கையில் அவர் உறுதியாக இருப்பது மட்டும் இல்லாமல் தன் மகனையும் அதை போலவே செதுக்கிறார் , தன் மகன் உலகத்தை அறிந்து கொள்ள ஆபீஸ் க்கு அனுப்புகிறார் ,அவர் உலகத்தை அறிந்து matured ஆகும் பொது , ராமுவினால் மாறும் பொது , அதை போருக்க முடியமால் , நட்பின் சிறகை வெட்டுகிறார் , முதலில் அவர் ஆபீஸ்க்கு மீண்டும் சென்று முதல் காயை வெட்டுகிறார் , பிறகு , ஷங்கர் தான் ராமு என்று சொல்லி அடுத்த காயை வெட்டுகிறார் , கடைசியாக ராமுவின் கதையை முடிக்கும் அவர் , அதில் தன் மகன் மாட்டி கொள்ளும் பொது , தன் மகனிடம் கெஞ்சும் காட்சி , இவருக்கு என்னும் வேண்டும் என்று என்ன வைக்கிறது , ஆனால் அவர் அது செய்தது தன் மகன் சாபிடாமல் இருப்பது ,மற்றும் புலம்புவதும் தான்

லக்ஷ்மி
ராஜா வை காதலிக்கும் பெண் , வாழ்கை இனிமையாக இருக்கும் என்று என்னும் பொது , அது அப்படி அமையாமல் போனதும் , ராஜாவிற்கு ஒரு moral support குடுக்கும் நபர் , அடிப்படையில் காபிடளிஸ்ட், மனதளவில் சோசியலிசம் , முதல் காட்சியில் அதை பறைசாற்றுகிறார்

ராஜா விடம் தன் காதலை நயமாக எடுத்து உரைக்கும் காட்சி , தன் fiancee யின் குறைகளை அவருக்கு வலிக்காமல் எடுத்து சொல்லும் காட்சி , கடைசி வரை அவருக்காக காத்து இருப்பது என்று சின்ன கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்து இருப்பார்

பாடல்கள் :
ராமு I love யு என்ற பாடல் , மற்றும் , no , know என்ற பாடல் தாளம் போட வைக்கிறது

இறைவன் உலகத்தை படைத்தானா என்ற பாடல் புரட்சி


மொத்தத்தில் ஒரு நல்ல படத்தை அசை போட்ட மகிழ்ச்சி உடன் விடை பெறுகிறேன்

sankara1970
27th November 2013, 05:11 PM
ஒருவர் பேசும்போது, 2003இல் கோர்ட் ஆர்டர் நெடுஞ்சாலையில் இடியூஒரு வரும்படி சிலைகள் அமைக்க கூடாது என்று ஆணை இட்டதால், சிவாஜி சிலை அதற்கு உட்பட்டது என்ற அர்த்தத்தில் பேசியது ஏற்புடையத இல்லை.
மோகன்ராம் நல்ல பதிலடி கொடுத்தார்.

KCSHEKAR
27th November 2013, 05:37 PM
முகநூல் இணைப்பு உள்ள நண்பர்கள் கீழேயுள்ள இணைப்பிற்கு சென்று, நடிகர்திலகம் சிலை சம்பந்தமான தங்களின் கருத்துக்களைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

https://www.facebook.com/sivaji.peravai/posts/391511864313625?comment_id=1831241&offset=0&total_comments=8&notif_t=feed_comment