PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 12



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

Russelldwp
17th February 2014, 09:38 PM
இந்த பாடலை கேளுங்கள் - நகைச்சுவைக்கே சிகரம் வைத்தால்போல ! எத்தனை உணர்ச்சிகள் , எவ்வளவு முக பாவங்கள் - சிலர் நடிக்கும் சமயத்தில் , அவர்கள் சிரிக்கும் போது , நமக்கு அழுகை வரும் - அவர்கள் அழும்போது ( முகத்தை கைகளால் மூடிகொள்வார்கள் என்பது வேறு விஷயம்) நமக்கு சிரிப்புதான் வரும் - உணர்சிகளை தேட வேண்டியிருக்கும் - அவர்கள் நடிக்கும் எல்லா படங்களும் நகைச்சுவைதான் - எதிரிகள் சூழும்போது தனியாக நின்று கொண்டு சிரிப்பது , அவர்கள் துப்பாக்கியில் எத்தனை குண்டுகள் இருக்கும் என்று ஹீரோவுக்கு மட்டுமே தெரியும் - எத்தனை வில்லன்கள் வந்தாலும் , அவர்களை இன்முகத்துடன் அடித்து விரட்டி, நேரம் இருந்தால் அவர்களை திருத்தி , அவர்களை காந்திய

தலைமுறைகள் தாண்டி அத்துணை இளைஞர்களையும் தன் நடிப்பாலும் முக பாவத்தாலும் மிக உயர்ந்த வாயசைப்பாலும் கவர்ந்திழுத்த சகல கலை வேந்தன் உலக தமிழ்ர்கள் வேண்டிப்பெற்ற கலை கடவுள் சிவாஜி அவர்களின் நடிப்பில் உருவான இந்தப்பாடலை you tube ல் எண்ணற்ற இந்த கால இளைஞர்கள் மனமுவந்து பாராட்டி பார்த்து ரசித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் AIRTEL SUPER SINGER ல் இந்த பாடலை பாடியதற்காக மட்டுமே திரு. திவாகர் அவர்களுக்கு முதல் பரிசு பெற்றிருக்கிறார்.

எத்தனை தலைமுறைகள் ஆனாலும் நடிகர் திலகத்தின் படங்கள் மட்டுமே பாடங்களாக இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி

இப்பாடலை பதிவு செய்து சிறப்பித்த திரு.ரவி அவர்களுக்கு நன்றி

Russelldwp
17th February 2014, 09:49 PM
Jilla - a by-product of thangapadhakkam ? - media speculates !


திரு.ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு

இது போன்ற பதிவுகள் போட்டு தேவையற்ற சர்ச்சை எற்பட வழி வகுக்க வேண்டாம். மேலும் எண்ணற்ற விஜய் ரகிகர்கள் நமது நடிகர் திலகத்தின் ரசிகர்களாகவும் பேனர் வைக்கும் அளவுக்கு தீவிரமாகவும் இருக்கிறார்கள்.

So dont put message like by product --- sub product

uvausan
17th February 2014, 09:50 PM
எனது சகோதரரை இழந்தேன் !



இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்..தங்கை சண்டைகாட்சிகள் கொண்ட படம். அந்த நேரத்தில் சிவாஜி அவர்கள் மிகசிறந்த ஒரு குணசித்திர நாயகனாக இருந்தார் . அந்த சமயத்தில் M G ராமசந்திரன் அவர்கள் தான் சண்டைகாட்சிகள் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.

சிவாஜிக்கு சண்டைகாட்சிகள் உள்ளதால் சிறிது சந்தேகமாக இருந்தது, இது தனக்குள்ள இமேஜிற்கு சரியாக வருமா என்று . மக்கள் இதை விரும்பாமல் படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் பாதிக்கபடுவார்களே என்று கருதினார்.

ஆனால் நான் விடவில்லை அவரை, அவருக்கு புதிய ஒரு இமேஜ் இதன் மூலம் நிச்சயம் உருவாகும் என்று உறுதியளித்தேன் ...இருந்தாலும் பாதி மனதுடன் தான் நான் கூறியதை ஒத்துகொண்டார். அவருக்கு, மக்கள் நிச்சயம் தன்னை ஒரு சண்டை போட தெரிந்த நாயகனாக ஒத்துகொள்ள மாட்டார்கள் என்று பலமாக நம்பினார்.

அதிர்ஷ்டவசமாக தங்கை மிக பெரிய வெற்றி பெற்றது. தங்கை வரும் வரை MGR மட்டுமே சண்டைகாட்சிகளுக்கு கைதட்டல் பெற்றார். தங்கைக்கு பிறகு சிவாஜிக்கும் சண்டைகாட்சிகளுக்கு கைதட்டல்கள் பாராட்டுக்கள் கிடைத்தன. அதற்க்கு பிறகு அவரது படங்களில் ஒரு சண்டைகாட்சியாவது இருக்கும்.


தயாரிப்பாளர் பாலாஜியின் நினைவலைகள் தொடரும்...!


அன்புள்ள ரவிகிரண் - பாலாஜியின் இந்த பேட்டி இந்த திரிக்கு புதியது அல்ல - அவரின் நட்பும் , சிவாஜியின் மீது வைத்திருந்த மரியாதையும் - உலகம் அறியும் - சில வாக்கியங்கள் அவரே சொன்னது தானா என்று சந்தேகம் வருகின்றது - உதாரணத்திற்கு அவருடைய " தங்கை" படம் மூலம் தான் சண்டை காட்சிகளில் கைத்தட்டல் வாங்கினார் என்பது மிகவும் நகைச்சுவை கலந்த கற்பனை -

NTயின் மல்யுத்த சண்டை - கார்த்தவராயன் படத்தின் மூலம் உலக பிரசித்தி பெற்றது - நமது திரியிலேயே இந்த சண்டையை பற்றி புகழாதவர்கள் யாரும் இருக்க முடியாது - அதே போல உத்தம புத்திரன் கத்திச்சண்டையை யாருமே மறுக்கவோ , மறக்கவோ முடியாது - இப்படி பல படங்களை சொல்லிகொண்டே போகலாம் - என்னவோ தெரியவில்லை யாருடைய பேட்டியும் உண்மைக்கு புறம்பாகவே இருக்கின்றது - யாரோ சிலர் பல கற்பனைகளையும் சேர்த்து விட்டு பேட்டியை கெடுத்து விடுகிண்டார்கள்

நீங்களும் உண்மையில் சில வாக்கியங்களை ( சொல்லாத ????) ரசித்து இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்

அன்புடன் ரவி

:):smokesmile:

Russellbpw
17th February 2014, 09:56 PM
Jilla - a by-product of thangapadhakkam ? - media speculates !


திரு.ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு

இது போன்ற பதிவுகள் போட்டு தேவையற்ற சர்ச்சை எற்பட வழி வகுக்க வேண்டாம். மேலும் எண்ணற்ற விஜய் ரகிகர்கள் நமது நடிகர் திலகத்தின் ரசிகர்களாகவும் பேனர் வைக்கும் அளவுக்கு தீவிரமாகவும் இருக்கிறார்கள்.

So dont put message like by product --- sub product

Dear Mr.SP

If you do not understand what I had put ...please ask...! Do not conclude by yourself and give a new direction to whatever I have put !

I know what am doing ! I had mentioned Media Speculates ! Further there is nothing wrong in sharing the news where NT is part of it.

Convey your views absolutely no issues ....BUT, don't try to command me OK !

Russellbpw
17th February 2014, 10:00 PM
அன்புள்ள ரவிகிரண் - பாலாஜியின் இந்த பேட்டி இந்த திரிக்கு புதியது அல்ல - அவரின் நட்பும் , சிவாஜியின் மீது வைத்திருந்த மரியாதையும் - உலகம் அறியும் - சில வாக்கியங்கள் அவரே சொன்னது தானா என்று சந்தேகம் வருகின்றது - உதாரணத்திற்கு அவருடைய " தங்கை" படம் மூலம் தான் சண்டை காட்சிகளில் கைத்தட்டல் வாங்கினார் என்பது மிகவும் நகைச்சுவை கலந்த கற்பனை -

NTயின் மல்யுத்த சண்டை - கார்த்தவராயன் படத்தின் மூலம் உலக பிரசித்தி பெற்றது - நமது திரியிலேயே இந்த சண்டையை பற்றி புகழாதவர்கள் யாரும் இருக்க முடியாது - அதே போல உத்தம புத்திரன் கத்திச்சண்டையை யாருமே மறுக்கவோ , மறக்கவோ முடியாது - இப்படி பல படங்களை சொல்லிகொண்டே போகலாம் - என்னவோ தெரியவில்லை யாருடைய பேட்டியும் உண்மைக்கு புறம்பாகவே இருக்கின்றது - யாரோ சிலர் பல கற்பனைகளையும் சேர்த்து விட்டு பேட்டியை கெடுத்து விடுகிண்டார்கள்

நீங்களும் உண்மையில் சில வாக்கியங்களை ( சொல்லாத ????) ரசித்து இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்

அன்புடன் ரவி

:):smokesmile:

Dear Sir,

I think what Mr.Balaji referred was something like Social themed film fights ( Dishyum...Dishyum..)

Ofcourse, the malyudham and sword fight there were many pictures...nothing to deny.

Further, whatever being mentioned here in this thread, nothing is new but old wine in new bottle only. It was published long back in English, this is a translated version which I had put for the benefit of few of our friends from salem and mannargudi.

Rgds,
RKS

uvausan
17th February 2014, 10:02 PM
மூன்று தெய்வங்கள்

:)

இந்த படம் - சிவாஜி என்ற சிங்கத்திற்கு தயிர் சாதம் கொடுத்த படங்களில் ஒன்று - ஆனாலும் தனது முத்திரையால் , படத்தை தூக்கி நிறுத்திருப்பார் - பாடல்கள் மிகவும் அருமை - இந்த படத்தை நான்கு வகைகளில் அலச ஆசைபடுகிறேன்

1. படத்தின் சிறப்புக்கள்

2. சில ஆவணங்கள் / சிறந்த பாடல்கள் - அதன் சிறப்புக்கள்

3. சில சிறந்த காட்சிகள்

4. கதை/ நடிப்பு - கண்ணோட்டம்

தொடரும்

அன்புடன் ரவி

Russellbpw
17th February 2014, 10:10 PM
My Dear Beloved N.T. Fans,

I have been out this form for more than an year. Reason is Gauravam. This is the impact what N.T can do in everyone life. Today My results were announced and i have completed my Graduation in Law. And will be an profession as Advocate Shortly. Further I'm pursuing my Master Degree in Law.

I dedicate this Professional Degree to our God Nadigar Thilgam who was an Sole Inspiration and My Beloved Fans!. I want to reciprocate my gratitude to our Legend only by completing this Degree. Hence i was waiting for this day.

Now again i'm back in this Golden Thread to contribute.

My heartfelt thanks to all our N.T. fans who wished my success.

JAIHIND
M.Gnanaguruswamy

Dear Sir,

Congratulations on your milestone !

Wishing you come with flying colors like our Barrister in Gowravam

Best Regards
RKS

Russellbpw
17th February 2014, 10:31 PM
10. 153வது --- "பாபு" - இந்த படம் சிறப்பு என்று சொல்வது சக்கரை தித்திக்கும் என்று சொல்வதுபோல - படம் கண்ட வெற்றி திரை உலகையே ஒரு திருப்பி போடா வைத்தது -" ரிக்க்ஷாகாரன் " மதிப்பை வானளாவ கொண்டு சென்ற படம்


அன்புடன் ரவி

தொடரும்

:):smokesmile:

அதுமட்டுமல்ல ரவி சார்

பாபு திரைப்படம் வரும் சமயத்தில் சில படங்கள், பல நட்சத்திர பட்டாளம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அட்டகாசமான சண்டைகாட்சிகள், ஒரு படத்தில் பல வில்லன்கள், ஈஸ்ட்மன் கலர், இப்படி பல POSITIVE அம்சங்களுடன் திரைக்கு வந்தது.

பாபு வரும் பொழுது தேவி பாரடைஸ் திரையரங்கில் நீரும் நெருப்பும், KS கோபாலகிருஷ்ணன் அவர்களின் பக்தி படம், மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் நடிப்பில் ராஜ வீடு பிள்ளை ஆகியவை ரிலீஸ் செய்யப்பட்டன.

இதில் பாபு கருப்பு வெள்ளை மற்றும் ரொம்ப சோக ரசம் பிழியும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டன. மீண்டும் ஒருமுறை 70 வயது முதியவர் கெட் அப். ஜோடி வேறு கிடையாது. நம் ரசிகர்களுக்கு ஏக வருத்தம் போங்கள் !

சாந்தியில் பாபு ...அந்தபக்கம் நீரும் நெருப்பும்..! மறுமுனையில் KSG படம் ..இப்படி சுத்தி ஒரே positive நமக்கு மட்டும் கருப்பு வெள்ளை பாபு..!

இங்கு தான் திறமை என்பது எவ்வளவு பெரிய சொத்து நமது நடிகர் திலகத்திற்கு என்பதை உணரவேண்டும். இத்துனை விஷயங்களுக்கு மத்தியில் பாபு மிக பெரிய வெற்றி பெற்றது.

படத்தை தனது நடிப்பு என்ற ஒரு விஷயத்தை வைத்து அப்படி தூக்கி நிறுத்தியிருப்பார் பாருங்கள் ! அடேயப்பா நினைத்தாலே சிலிர்க்கும் !

தமிழகம் எங்கும் பட்டி தொட்டி எங்கும் " வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்ப " மற்றும் " இதோ எந்தன் தெய்வம் முன்னாலே " ஆட்சிதான் !

தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான பட்டம் கிடைக்கவேண்டிய படம். அப்போதைய திமுக அபிமானி சௌந்தரா கைலாசம் என்கிற பெண்மணியின் அரசியல் சித்து வேலைகளால் ஒரிஜினல் ரிக்க்ஷா ஓட்டுனருக்கு கிடைக்கவில்லை. !

திரை உலகில் அனைவருமே இவருக்கு கொடுக்காதது மிக பெரிய கேவலம் என்று இன்றும் கருதுவதுண்டு.

இதன் தாக்கம் கெளரவம் படத்தில் திரு வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு காட்சியாகவே வைத்திருப்பார் "திறமைக்கு இந்த ஊர்ல மதிப்பே இல்லையா. பட்டம் பதவி எல்லாம் POLITICS WITH RECOMMENDATION உக்கு தானா ? " !

3136

Subramaniam Ramajayam
17th February 2014, 10:37 PM
Hearty welcome to mr goruswamy and also best wishes for your compeltion of LAW sudies, all the very best,
Ethirparathatu 1954 movie very well discussed un a simple manner please keep it up and go for some more 50-60 movies, I remember vert well having seen in early sixties sunday morn shows at MAHARANI north madras perhaps our kartik knows well.
Ravi sir COUWDRY SIR and as usual our kiran doing neat job regularly THREE CNEERS,CHEERS,
Any updates MR kc sir, reg pending case.

Russellbpw
17th February 2014, 11:12 PM
Nostalgia

A sample: That was the time when Kannadasan and actor Sivaji Ganesan were not on friendly terms.

Hence Kannadasan was not called upon to pen lyrics for Ganesan's films. But when a producer was keen to have the inimitable lyricist work in the Ganesan film he was making, Ganesan agreed.

Composing had begun and Sivaji Ganesan was also present. He was just staring at the poet, because they had still not made up. The friction was palpable.

M. S. Viswanathan was waiting with his harmonium for Kannadasan to spell out the words. Generally the poet would dictate and his assistants would note down the lyric.

But that day Kannadasan took the writing pad and pen in his hands, jotted down the lines and gave them to MSV. One glance at the pad and MSV got tense.

He judiciously returned it telling Kannadasan to read it out himself. The words read: `Ennai Yaar Endru Enni Nee Paarkiraai ... ' Sivaji Ganesan burst out laughing, walked up to Kannadasan, hugged him and said, "Muthaiah (Kannadasan's actual name)! You've not changed at all!"

Russellbpw
17th February 2014, 11:15 PM
Reproduced Article

A lion in his own lifetime - Ramanujam Sridhar

``SHOULD we go home?'' asked the father anxiously of his 9-year-old son who was sobbing hysterically in the darkened theatre hall. The theatre (I guess) was Chitra. The film (I am sure) was Pasa Malar and the boy in question (I am certain) was me. Sivaji Ganesan, who for the best part of four decades made eyes moist without batting an eyelid plunged millions into tears when he breathed his last.

It is perhaps not fashionable to proclaim oneself an unabashed admirer of a film maker, particularly a Tamil one at that. But then, one cannot forget the range of emotions which one experienced, first as a growing boy and then as a maturing (?) adult by watching, analysing and discussing the same films over and over again for several years.

It is difficult to pin down the precise nature of Sivaji Ganesan's influence on the post-Independence-born Tamilian. Being one of those, let me put down a few things which we experienced as children and young adults. We most certainly would have been better students had it not been for the great man's films. We bunked class more often than not. Even a theatre in Tambaram (easier to get tickets) was more interesting than the college in Nungambakkam (which, incidentally, was the best college of its time). It was easier to remember Kattabomman's interactions with Jackson, word for word, than it was to remember the theorem of Pythagoras angle to angle.

We all believed that we were elder brothers born to love, protect and sacrifice (for) their younger sisters. We all believed that families are meant to be united (hence joint) and brothers meant to be forgiven when they were in the wrong. We believed (conveniently) that education wasn't everything. We saw likeminded emotional youngsters burn their terylene shirts after being influenced by Kappalottiya Thamizhan. We assumed that Bharati looked like Sivaji Ganesan in Kai Kodutha Deivam.

Yes, we were young, impressionable perhaps gullible even. But, honestly, the actor was a great influence on our lives, perhaps more so in the life of my friend who saw Nenjirukkum Varai 27 times! I think the influence of being a good son, loving brother and a preventer of the disintegration of the joint family was very profound on us. More so in the context of the Chithis and the Vazhkais of today, where people urge their own children to kill, maim or jail their loved ones. Thankfully, we were spared these heinous influences. For however villainous M.R. Radha was, he at least made you smile.

Sivaji Ganesan was good and very often a great actor. Good actors are good because of the things they can tell us without talking. When they are talking, they are the servants of the dramatist. ``It is what they can show the audience when they are not talking that reveals the fine actor,'' said Cedric Hardwicke.

Early in his career, Villupuram Chinnaiah Ganesan came under the influence of arguably the best dramatist of that time, Karunanidhi, whose radical dialogues he brought to life. His dialogue delivery revolutionised the way films were made in the fifties. Films, which had 60 songs suddenly, gave way to films which had six minutes of dialogue delivery in one stretch.

Sivaji (one knows) had a phenomenal capacity to absorb and memorise his lines, which were invariably read out to him. He also had the distressing habit of knowing the lines of his co-actors, sometimes even better than they did, causing embarrassment. In fact, his dialogue delivery showed a whole generation of people how Tamil was to be spoken. Directors cashed in on this and realised perhaps much later that his ability extended beyond mere dialogue delivery. And yet, it is very often the voice of the lion which is at the top of mind when we recall the great man.

Perhaps it' is also important to remember the times Sivaji lived in. This was before teleprompters, slow motion replays and ready availability of DVD cassettes of the best imported films that one could watch time and time again to borrow a look or a gesture. I would see him come on Friday night to Rajakumari theatre in Pondy Bazaar to watch Marlon Brando in The Ugly American. He was a great observer, always seeking inspiration. Rumour has it that barrister Rajnikanth in Gowravam was a famous, pipe-smoking industrialist whom Sivaji had observed and subsequently portrayed, to win hearts, if not awards. In fact, that was a major disappointment for the thespian.

Lesser mortals (and actors) than him won more awards and he found to his chagrin that it was easier to get recognition at Cairo and France than at New Delhi. Such is the way of jurists and politicians. Sivaji faced equal if not greater disappointments in politics where he was marginalised. To cap it all, on the personal front, the travails of his grandson-in-law were perhaps the most difficult of blows to face.

Sivaji was an actor's actor. There was hardly anyone who wasn't influenced by his acting style, whether it was a schoolboy acting as Othello on Parents' Day, an amateur artist mourning his mother's death in a play or unabashed admirers of him such as Sivakumar and Y. G. Mahendran who took pride in aping him.

In fact, it is no exaggeration to say that all Tamil actors found Sivaji's style, mannerisms, range of emotions and dialogue delivery having an influence on them as individuals and actors. A lot of people (myself included) felt that Sivaji had a tendency to overact. Sivaji himself was aware of this criticism and he once said something very relevant. He said Tamilians in particular and Indians in general were warm, effusive, expressive of emotions, prone to laugh loudly and sob openly at funerals. Even the men. Not stiff upper lip like the British who ruled us but open, sunny, emotional, like the Italians. Perhaps the actor knew the pulse of the audience. He knew his consumer.

`I am not a poet' is a famous line from a song in a Sivaji Ganesan starrer, Padithal Mattum Podhuma. It needs a poet of Kannadasan's stature to pay tribute to the lion-hearted actor who perhaps missed out in not venturing on to the small screen. But his contribution to Tamil cinema and life is not a small one. He leaves behind a race that is devastated and only just realising the value of the great actor who had made them laugh, made them cry and made them feel. Today every Tamilian feels the void.



(Ramanujam Sridhar is CEO, brand.comm, a communications consultancy.)

Thanks

http://www.hinduonnet.com/businessli...s/183044sa.htm

Russellbpw
17th February 2014, 11:45 PM
http://www.youtube.com/watch?v=l1kYJFo-uBU

Russellbpw
17th February 2014, 11:46 PM
http://www.youtube.com/watch?v=Fm7QOXpd3jU

Russellbpw
17th February 2014, 11:48 PM
SAI VIGNESH - AIRTEL SUPER SINGER TRIES HIS HANDS ON THE SONG

http://www.youtube.com/watch?v=1Ayo5htdeg8

Russellbpw
18th February 2014, 12:00 AM
விரைவில் கோவை ராயலில் நடிக சக்ரவர்த்தியின் 142வது காவியம் "சொர்க்கம் " - ( Thanks to Ravi for correcting the number)

- பொன்மகள் வருகிறாள் ...சொல்லாதே யாரும் கேட்டால்.எல்லோரும் தாங்கமாட்டார் !

3138

3139

3140

3141

Murali Srinivas
18th February 2014, 12:39 AM
அன்பு நண்பர் ரவி,

நாட்கள் செல்ல செல்ல உங்கள் எழுத்துக்களில் மெருகேறி பழுதுகள் [தமிழ் ஸ்பெல்லிங் mistakes] நீங்கி படிப்பதற்கு சுவையாக இருக்கிறது. அது மட்டுமல்ல, உங்கள் உதாரணங்களும் சற்றே கேலி கலந்த சொற்றொடர்களுமாய் ரசிக்க வைக்கிறீர்கள். வாழ்த்துகள். தொடருங்கள்.

Hearty Congrats Mr. Guruswamy! Hope you continue to taste success in Masters also!

அன்புடன்

Murali Srinivas
18th February 2014, 12:42 AM
தினத்தந்தியில் வெளிவரும் ஆரூர்தாஸின் சினிமாவின் மறுபக்கம் தொடரை படித்து வருகிறேன். நான் தினத்தந்தி வாங்குவதில்லை என்பதால் அதை ரெகுலராக படிக்க முடிவதில்லை. அதை வாங்கும் நெருங்கிய உறவினர் வீட்டிற்கு செல்ல நேரிடும் போது விட்டுப் போனவற்றை எடுத்து வைத்து படிப்பது வழக்கம். அந்த வழக்கப்படியே அண்மையில் 5,6 வார இணைப்பை படித்தேன். இந்த தொடர் வெளிவரும் முத்துச்சரம் என்ற இணைப்பில் டெலிவிஷன் விருந்து என்று ஒரு பக்க செய்தி மலரும் இருக்கும். TV-யில் வரும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் விமர்சனங்கள் இடம் பெறும்.

3,4 வாரங்களுக்கு முந்தைய முத்துச்சரம் இணைப்பை பார்த்துக் கொண்டிருந்த போது கட்டம் கட்டி வெளியிடப்பட்டிருந்த ஒரு செய்தி கவனத்தை கவர்ந்தது. அதில் என்ன எழுதியிருந்தது என்றால் "சென்ற வாரம் சன் லைஃப் தொலைக்காட்சியில் தங்கமலை ரகசியம் திரைப்படம் ஒளிப்பரப்பாகியது. அதில் சிவாஜி பி.எஸ்.வீரப்பா கத்தி சண்டைக் காட்சியில் நடிகர் திலகத்தின் வாள் வீச்சு சண்டை ஆச்சரியப்படுத்தியது. பின்னாட்களில் குடும்பக் கதைகள் அவரை இழுத்துக் கொண்டதன் காரணமாகவோ என்னவோ அவரின் இந்த திறமையை பெரிய அளவில் நம்மால் காண முடியாமல் போனது".

இதை எழுதியவர் ஒரு neutral நபர். ஒரு வாரத்தில் எத்தனையோ படங்கள் பல் வேறு தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பபடுகிறது.99.9% படங்களைப் பற்றி விமாசனங்கள் எதுவும் வருவதில்லை. அப்படியிருக்க இதப் படத்தை பற்றியும் அதில் வரும் நடிகர் திலகம் அவர்களின் சண்டைக் காட்சியை குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்றால் அதுதான் நடிகர் திலகத்தின் படங்களுக்கு பொது மக்களுக்குகிடையே கிடைக்கும் வரவேற்பு. மேலும் அவர் அனைத்து வகைப் பயிற்சிகளையும் தெரிந்து வைத்திருந்தார் என்பதும் தெரிகிறது.

அன்புடன்

Murali Srinivas
18th February 2014, 12:45 AM
அருமை நண்பர் திவ்யா சொக்கலிங்கம் அவர்கள் பாராட்டுக்குரிய ஒரு செயலை நேற்று செய்திருக்கிறார். தன் சொந்த ஊரான தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள. பெரியாம்பட்டியில் தான் படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த பள்ளியின் 75- ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அந்த மாணவர்களை நல்வழிப்படுத்த தன் கர்ணன் திரைபடத்தை இலவசமாக் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பித்திருக்கிறார். இந்த நல்ல செயலுக்கு நன்றி சொக்கலிங்கம் சார்!

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/p261x260/1601219_675893492450016_393743950_n.jpg

அன்புடன்

uvausan
18th February 2014, 09:30 AM
Reproduced Article

A lion in his own lifetime - Ramanujam Sridhar

http://www.hinduonnet.com/businessli...s/183044sa.htm



அருமையான பதிவு - வார்த்தைகள் திரு ஸ்ரீதரிடம் விளையாடுகின்றன - நல்ல பதிவுகளை படிக்கும்போது , மனம் தான் எவ்வளவு சந்தோஷம் அடைகின்றது !! - நன்றி ரவிகிரண்

:):smokesmile:

uvausan
18th February 2014, 09:39 AM
அருமை நண்பர் திவ்யா சொக்கலிங்கம் அவர்கள் பாராட்டுக்குரிய ஒரு செயலை நேற்று செய்திருக்கிறார். தன் சொந்த ஊரான தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள. பெரியாம்பட்டியில் தான் படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த பள்ளியின் 75- ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அந்த மாணவர்களை நல்வழிப்படுத்த தன் கர்ணன் திரைபடத்தை இலவசமாக் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பித்திருக்கிறார். இந்த நல்ல செயலுக்கு நன்றி சொக்கலிங்கம் சார்!

அன்புடன்

உண்மை முரளி - சிவாஜி படங்கள் தான் நல்ல வழியை கட்ட கூடியவை - நல்ல பாடங்களை சொல்ல கூடியவை - நீதியை பார்த்து , குடிப்பதையே நான் இருந்த பேட்டையில் பலர் நிருத்திகொண்டனர் - பெண்களை எவ்வளவு கண்ணியமாக நடத்தவேண்டும் என்று அவர் படங்கள் தான் எடுத்துகாட்டாக இன்னும் உள்ளன - இதை பலர் உண்மையில் உணர்ந்து உள்ளனர் . அதில் திவ்யா சொக்கலிங்கமும் ஒருவர் .

அன்புடன் ரவி

uvausan
18th February 2014, 09:56 AM
dear sir,

i think what mr.balaji referred was something like social themed film fights ( dishyum...dishyum..)

ofcourse, the malyudham and sword fight there were many pictures...nothing to deny.

Further, whatever being mentioned here in this thread, nothing is new but old wine in new bottle only. It was published long back in english, this is a translated version which i had put for the benefit of few of our friends from salem and mannargudi.

Rgds,
rks

அன்புள்ள ரவிகிரண் - நீங்கள் என்னதான் சொன்னாலும் - பேட்டி என்ற பெயரில் சிலர் நம் தலைவரை மட்டம் தட்டும் போது மனது அந்த பேட்டியை பாராட்ட மறுக்கின்றது - முதலில் ஒருவர் சிவாஜியே தன்னை " அழு மூஞ்சி " என்று சொன்னதாக குறிப்பிட்டார் - இன்னொருவர் " தங்கை" க்கு பிறகு தான் அவருடைய டிஷ்யும் டிஷ்யும் பெருத்த பாராட்டுதல்களை பெற்றது என்று சொல்லியுள்ளார் - இவர்கள் nt யின் நெருங்கிய நண்பர்கள் வேறு !

அவர் எந்த வேடத்தையும் ஏற்க தயங்கினதில்லை - அதில் சோடை போனதும் இல்லை - அவரை சரியாக பயன் படுத்திக்கொள்ள நாமும் தவறி விட்டோம் , பல தயாரிபாளர்களும் தவறி விட்டனர் - தயிர் சாதத்தின் அளவு அதிகமாக ஆனதிற்க்கு சில தயாரிபாளர்களும் , திரை கதையுமே காரணம் -- அவர் அல்ல

அன்புடன் ரவி

uvausan
18th February 2014, 10:06 AM
கோபாலின் சுனாமிக்காக பயந்து கொண்டே மூன்று தெய்வகளை அலச ஆரம்பித்தேன் - ரவி கிரணை சற்றே மறந்து விட்டேன் - அவர் போடும் பதிவுகளின் வேகத்தை பார்க்கும் போது , " எப்பொழுது என் அலசல்களை முடிக்க போகிறேன் " என்ற பயம் வந்து விட்டது - சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன - ஆனால் மற்றவர்கள் போடும் பதிவுகளின் வேகத்திற்க்கு ஈடு கொடுக்க முடியவில்லை --- எல்லோரும் இந்த நான்கு படங்களை பற்றிய தகவல்களை , அனுபவங்களை என்னுடன் இந்த திரியில் பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்குமே !!!!

அன்புடன் ரவி

:):smokesmile:

uvausan
18th February 2014, 10:22 AM
விரைவில் கோவை ராயலில் நடிக சக்ரவர்த்தியின் 147வது காவியம் "சொர்க்கம் "

- பொன்மகள் வருகிறாள் ...சொல்லாதே யாரும் கேட்டால்.எல்லோரும் தாங்கமாட்டார் !




அன்புள்ள ரவிகிரண்

சொர்க்கம் nt யின் 142 வது படம் . அவருடைய 147வது படம் "குலமா குணமா " சுட்டி காட்டுவதற்கு மன்னிக்கவும்


அன்புடன் ரவி

KCSHEKAR
18th February 2014, 10:59 AM
மூன்று தெய்வங்களை சந்திக்கும் முன் , அந்த வருடத்தில் வந்த படங்களை பற்றி சற்றே தெரிந்து கொள்வோம் . ----
மொத்தம் 10 படங்கள் :):smokesmile:
டியர் ரவி சார்,
தாங்கள் எடுத்துக்கொண்ட 10 படங்களும் முத்தான படங்கள்தான். முதலாவதாக எடுத்துக்கொண்ட மூன்று தெய்வங்கள் - தாங்கள் குறிப்பிட்டபடி நடிகர்திலகத்திற்கு வேண்டுமானால் தயிர்சாதமாக இருக்கலாம். ஆனால் அந்த ரோலை வேறு யாரும் செய்திருந்தால், முத்துராமனையாவது விட்டுவிடுவோம், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, வி.எஸ்.ராகவன் போன்றவர்கள் முன்னாள் காணாமல் போயிருப்பார்கள். நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் எக்காலத்திலும் பார்த்து ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான திரைப்படத்தில் இதுவும் ஒன்று.

Russellbpw
18th February 2014, 11:01 AM
ஹைதராபாத் பிரியாணி மற்றும் அறுசுவை உணவு..

இரெண்டுமே உணவுவகைதான்.

அறுசுவை பிரியாணி என்று உண்பவர்கள் கூற கேள்விப்பட்டதுண்டு. ஆனால் பிரியாணி உணவு அறுசுவை என்று நாம் கேள்விப்பட்டதுண்ட என்று தெரியவில்லை.

நல்ல தரமான குடும்ப படங்கள் இரண்டு வகைப்படும்.

ஒன்று ஒரு மனிதனுடைய வாழ்கையில் நடக்கும் கஷ்டங்கள் ..அதை அந்த மனிதன் எப்படி சந்திக்கிறான் ...எப்படி அதிலிருந்து மீள்கிறான் எப்படி அவனால் அவன் குடும்பம் பலன் அடைகிறது என்பதை கொண்டு தயாரிக்கப்படும் படங்கள் - இதில் நாயகன் மற்றும் குடும்பத்தார் ஒன்று செல்வந்தர்களாக அல்லது lower middle class வகையை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

மற்றொன்று - கஷ்டமே இல்லாத குடும்பம் ..(எங்குமே நினைத்து பார்க்க முடியாத ஒரு விஷயம்) ஒரு குடும்பம் என்றால் அதில் ஏதாவது பொருளாதார மற்றும் உறவினர் வகை துன்பங்கள் அல்லது குடும்பத்தினர் நல்வாழ்வுக்கு வழி இல்லாத கஷ்டம் இப்படி இருக்கதான் செய்யும்.
ஆனால் இந்த வகை படங்களில் நாயகன் கஷ்டமே படமாட்டான். குடும்பத்திலும் பெரிதாக ஒரு சவால் விடும் கஷ்டம் முக்கால்வாசி இருக்காது. ஏதோ ஒரு சின்ன வருத்தம் இருக்கும் அவ்வளவே.

ஆனால் இது போன்ற கதைகளில் நடைமுறையில் ஒத்துவராத, நடக்கவே நடக்காத வில்லன் அவன் அடியாட்கள் என்று ஒரு கூட்டம் இருக்கும். அவர்களுடன் நாயகன் 4 அல்லது 5 முறை கைகலப்பது போன்ற காட்சிகள், மற்றும் போலீஸ் நாயகனை வானளாவ புகழ்வது என்னமோ நாயகன் காவல் துறையை விட சாதுர்யமானவன் என்ற வகையில் புகழ்ச்சி இருக்கும். இது போன்ற கதைகளங்கள் சில காட்சிகளை தவிர பெரும்பாலும் சினிமாத்தனம் நிறைந்து இருக்கும்.

வாழ்கையில் ஒரு சாதாரண மனிதன் என்னெவெல்லாம் சந்திக்க மாட்டானோ அவற்றை எல்லாம் சந்திப்பது போல எடுத்திருப்பார்கள்.

நான் குறிப்பிட்டதில் , முந்தையது ஹைதராபாத் பிரியாணி ரகம். பிந்தையது அறுசுவை.

முன்னதால் ஒரு தனிமனிதனுக்கு நிறைய பலன்கள் உண்டு. வாழ்கையில் நாம் நடைமுறையில் சந்திக்கின்ற பிரச்சனைகள் ...அவற்றை எப்படி கையாளவேண்டும்...தவறான முடிவு, கய்யாளளால் என்னென்ன விபரீத விளைவுகள் இப்படி பல விஷயங்களை அழுத்தமாக கையாண்டிருப்பார்கள்.

திரைப்படத்தை பார்பவர்களுக்கு சோகமாக இருப்பது மன உளைச்சல் சிறிது ஏற்படுவது ஆகியவை ஒரு சிறந்த நடிகனின் வெற்றியை குறிப்பதாகும், நல்ல வசனகர்த்தாவின் வெற்றியை குறிப்பதாகும் ஒரு நல்ல இயக்குனரின் வெற்றியை குறிப்பதாகும். மரக்கட்டை போன்ற மனிதன் இருப்பனாகில் எந்த சோகமும் அவனை பாதிக்காது. அல்லது எதை பற்றியும் ஏன் தன்னை பற்றியும் தன குடும்பத்தை பற்றியும் கூட சிறிதும் கவலை இல்லாத மனிதர்களுக்கு இது போன்ற படங்கள் துளி கூட பிடிக்காது...என்னப்பா இவ்வளவு அழுவை என்று கூறுவார்கள்.

ஆனால் ஒரு குடும்ப பொறுப்பு உள்ள குடும்ப தலைவர்கள் நல்ல நெறிகொண்ட மனிதர்கள் இது போன்ற படங்களை மிகவும் விரும்புவார்கள். காரணம் அவர்களுக்கு இந்த படங்களில் இருந்து நல்ல ஒரு LEARNING கிடைக்க வாய்பிருப்பதால் ! சோகம் வரும்போது நாம் சோகமாக தான் இருக்கிறோம் என்பது உண்மை. சோகம், கஷ்டம், துன்பம் சிறிதும் இல்லாமல் மனித வாழ்கை இல்லை !

பின்னது - அறுசுவை உணவு - நடைமுறைக்கு ஒத்துவராத வாழ்கையில் மிக மிக குறைவாக நாம் சந்திக்கின்ற காட்சியமைப்புகள், நீங்களே கூறுங்கள்...நாம் நம் வாழ்கையில் தினமும் வில்லனும் 10-15 அடியாளும் என்றாவது சந்தித்ததுண்ட அல்லது அவர்களுடன் நாம் தன்னந்தனியாக சண்டயிட்டதுண்டா ? ஒரு தனிமனிதன் கோர்ட்டில் போய் ஜட்ஜ் அவர்களயே தாறு மாறாக தனிஷ்டப்படி கேள்வி கேட்க முடியுமா ? அல்லது ஒரு காவல் துறை உயர் அதிகாரியை அடிக்கதான் முடியுமா ? இதெல்லாம் நடை முறைக்கு ஒத்து வராத விஷயம் மட்டுமல்ல , ஒரு சில சந்தர்பங்களில் தனிமனிதனை தவறான நினைப்பு வாழ்கையை பற்றி நினைக்கவைக்கும் வகையில், ENTERTAINMENT என்பதற்காக மட்டுமே எடுக்கப்படும் படங்கள் - இதில் யதார்த்தம் பதார்த்தம் அளவிற்கு கூட இருக்காது ! ஆனால் பார்பதற்கு அழகாக இருக்கும்...-மனதிற்கு பிடித்ததாக இருக்கும்.. இது அறுசுவை உணவு !

இதில் இரெண்டுமே அதிகம் உண்டால் ஆபத்துதான்.

ஆகையால்தான் மக்கள் இரெண்டுக்கும் சம வாய்ப்பு அளித்தாலும் பிரியாணியை அதிகம் விரும்புகின்றனர் !

உலகளவில் நாம் பார்த்தால் அறுசுவை உணவை விட, பிரியாணி விரும்பி உண்பவர்கள் அதிக அளவில் உள்ளார்கள் !

அறுசுவை உணவு தினமும் உட்கொள்ள முடியாது. திகட்டிவிடும். அதே போல தான் பிரியாணியும்...தினமும் வயிறு நிறைய பிரியாநியயே சாப்பிடமுடியாது ...

ஆனால் ஓரிரு கரண்டி வேண்டுமானால் தினமும் உண்ணலாம் ! திகட்டாது !

Russellbpw
18th February 2014, 11:03 AM
அன்புள்ள ரவிகிரண்

சொர்க்கம் nt யின் 142 வது படம் . அவருடைய 147வது படம் "குலமா குணமா " சுட்டி காட்டுவதற்கு மன்னிக்கவும்


அன்புடன் ரவி

Dear Ravi Sir,

thanks for pointing out the mistake. Corrected !

Please point out more if there are any...Shall correct myself

Thanks and Regards
RKS

ScottAlise
18th February 2014, 11:37 AM
Dear Ravi sir, Ravi kiran Surya sir,

you both are doing a great job of posting articles in a frenetic pace , especially ethirpaarathathu was too good

Moondru Deivangal is one of my favourite movie of NT reason light hearted subject, It is a perfect entry point for starters to watch NT movies

Thanks for acknowledging my article on Needhi KC sekar sir & ravi sir

One of the NT movies which I did not understand its significance reason being stupendous Raja effect
thanks for your comments , will look deeply into NT movies rather than blindly seeing it

Russellbpw
18th February 2014, 11:46 AM
Babu - மறு வெளியீடு அடிக்கடி..அடிக்கடி வரவில்லை என்றாலும் அவ்வப்போது தலைநீட்டும் திரைப்படம். அதாவது முதல் தர ஹைதராபாத் பிரியாணி ரகம் என்று வைத்துகொள்ளுங்களேன் !

தயாரிபாளருக்கும், ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து இடங்களில் உள்ள விநியோகஸ்தர்களுக்கும் மிகபெரிய லாபத்தை முதல் வெளியீடிலயே ஏற்படுத்தி கொடுத்த படம் தமிழகத்தின் பெருமையாம் நடிகர் திலகத்தின் "பாபு"

ஒரு சில நடிகர்கள் படங்கள் போல் பாபுவோ மற்றும் நடிகர் திலகத்தின் நல்ல தரமுள்ள படங்களோ அடிக்கடி அடிக்கடி வருவதில்லை என்றொரு சொற்றொடர் நிலவி வருகிறது !

தலைனீட்டும்பொது எப்போதும் பல அரங்கு நிறைவு விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கும் படம். சில வருடங்களுக்கு முன்னர் மறுவெளியீடு கண்டபோது வெள்ளி மாலை, சனிகிழமை இரவு, ஞாயிறு மேட்டுணீ மற்றும் மாலை காட்சி அரங்கு நிறைவு கண்டது !

நடிகர் திலகத்தின் படங்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப technology transformation செய்ய விநியோகஸ்தர்களால் விரும்பப்படும் முதல் முதன்மையான படங்களாகும்.

காரணம் பல ...நல்ல குடும்பகதைகள். குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்ககூடிய பல படங்கள் நடிகர் திலகத்துடயது மட்டுமே என்றால் அது மிகையாகாது ! மேலும், தமிழக கலாசாரம், பண்பு, அன்பு, பாசம், பக்தி, இப்படி பல விஷயங்கள் அவர் படங்களில் உள்ளதுதான் காரணம். தை சிறந்த முறையில் மக்களிடம் வெளிபடுத்தும் திறன் அவர் ஒருவரை தவிர மற்ற எவருக்கும் இருக்குமா என்றால் இருக்காது என்பது தான் பெரும்பான்மையானவர்கள் பதிலாக இருக்கும்.

முதல் வெளியீடிலயே பெரும்பான்மையான நடிகர் திலகத்தின் படங்கள் விநியோகஸ்தர்களையும் தயாரிபாலர்கலயும் வசூல் மழையில் நனைய செய்வதனால்...அவர் படங்கள் பல ஆட்களுக்கு கை மாற்றம் செய்யபடுகிறது. அவர்களும் ஒரு சில வெளியீடு செய்து மிகுந்த பணம் சம்பாதித்தவுடன், அதை மற்றவர்களுக்கு விற்காமல் மற்றவர்களும் பலன் அடையவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அப்படியே வைத்திருந்து கமுக்கமாக உள்ளனர்.

வாங்கியவர்கள் வெளியிடாமல் வைத்திருந்தால் அதற்க்கு நடிகர் திலகம் பொறுப்பேற்க முடியுமா ?

இவர்கள் அனைவரும் சமீப காலமாக..QUBE செய்யபோகிறேன் என்று வேறு படையெடுக்க உள்ளனர் ...இன்றைய நிலவரத்தில் நடிகர் திலகத்தின் 19 (படங்கள் கருப்பு வெள்ளை மற்றும் கலர் )QUBE முறையில் வெளியிடும் முயற்சியில் விநியோகத்தர்கள் உள்ளனர்.

என்னதான் புத்தம் புது படங்கள் தினமும் திரை அரங்கங்களை ஆக்ரமித்த வண்ணம் வந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் நடிகர் திலகம் படங்கள் என்றால் மிகுந்த உற்சாகத்துடன், உடனே தேதி குடுக்கவும் தயாராக உள்ளனர் என்பதை நாம் சமீப காலமாக பார்கின்ற ஒரு உண்மை.

குறைந்தபட்சம் 65 திரையரங்குகள் இன்றைய தேதியில் ஒரே சமயத்தில் புத்தம் புது படங்களுடன் நடிகர் திலகம் படங்களை வெளியிட திரை அரங்கு உரிமையாளர்கள் , விநியோகஸ்தர்கள் நான் நீ என்று போட்டி போடுவது மிகவும் உற்சாகமான செய்திமட்டும் அல்ல, பாக்ஸ் ஆபீஸ் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் ஆளுமைக்கு எல்லா காலத்திலும் ஒரு ஆதாரம் !

Subramaniam Ramajayam
18th February 2014, 12:24 PM
Babu - மறு வெளியீடு அடிக்கடி..அடிக்கடி வரவில்லை என்றாலும் அவ்வப்போது தலைநீட்டும் திரைப்படம்.

தலைனீட்டும்பொது எப்போதும் பல அரங்கு நிறைவு விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கும் படம். சில வருடங்களுக்கு முன்னர் மறுவெளியீடு கண்டபோது வெள்ளி மாலை, சனிகிழமை இரவு, ஞாயிறு மேட்டுணீ மற்றும் மாலை காட்சி அரங்கு நிறைவு கண்டது !

ஒரு சில நடிகர்கள் படங்கள் போல் பாபுவோ மற்றும் நடிகர் திலகத்தின் நல்ல தரமுள்ள படங்களோ அடிக்கடி அடிக்கடி வருவதில்லை என்றொரு சொற்றொடர் நிலவி வருகிறது !

நடிகர் திலகத்தின் படங்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப technology transformation செய்ய விநியோகஸ்தர்களால் விரும்பப்படும் முதல் முதன்மையான படங்களாகும்.

காரணம் பல ...நல்ல குடும்பகதைகள். குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்ககூடிய பல படங்கள் நடிகர் திலகத்துடயது மட்டுமே என்றால் அது மிகையாகாது ! மேலும், தமிழக கலாசாரம், பண்பு, அன்பு, பாசம், பக்தி, இப்படி பல விஷயங்கள் அவர் படங்களில் உள்ளதுதான் காரணம். தை சிறந்த முறையில் மக்களிடம் வெளிபடுத்தும் திறன் அவர் ஒருவரை தவிர மற்ற எவருக்கும் இருக்குமா என்றால் இருக்காது என்பது தான் பெரும்பான்மையானவர்கள் பதிலாக இருக்கும்.

நடிகர் திலகத்தின் படங்கள் பெரும்பாலும் என்றுமே முதல் ரிலீஸ் சூப்பர் ஹிட் ஆகி நல்ல ஒரு தொகையை வசூல் செய்வதால் தயாரிப்பாளர் அல்லது வெளியிடும் விநியோகஸ்தர் படங்களை கை மாற்றி பலருக்கு விற்று விடுகின்றனர் ..

வாங்கியவர்கள் வெளியிடாமல் வைத்திருந்தால் அதற்க்கு நடிகர் திலகம் பொறுப்பேற்க முடியுமா ?

BABU PADAM RERELESE VERY LESS NUMBER IF TIMES REMARK ABSILUTELY FALSE The so called mega movie never made any show not only in first run but also subsequent runs that too when compared to babu it has no show at all. every one knows very well.thanks kiran sir.

uvausan
18th February 2014, 12:56 PM
ஹைதராபாத் பிரியாணி மற்றும் அறுசுவை உணவு..

இரெண்டுமே உணவுவகைதான்.




அன்புள்ள ரவிகிரண் - உங்கள் ஹைதராபாத் பிரியாணி மற்றும் அறுசுவை உணவு --- இரண்டுமே திகட்டவில்லை - ஹைதராபாதில் இருந்தும் அதிகமாக பிரியாணியை சாப்பிட்டதில்லை - உங்கள் உவமானம் அருமை - இப்படிப்பட்ட நல்ல கருத்துள்ள தமிழ் பதிவை பார்த்து மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன - நன்றி .

:):smokesmile:

uvausan
18th February 2014, 02:06 PM
மூன்று தெய்வங்கள் - தொடருகின்றது

பகுதி 1 - படத்தை பற்றிய சிறப்புக்கள்

1. யதார்த்தமாக எடுக்கப்பட்ட படம் - பேருக்காக ஒரு ஹீரோ - ஆனால் உண்மையில் ஹீரோ நம் தலைவர் தான் - ஜோடி கிடையாது ( குறைந்தது 50 ஜோடிகள் இருந்தால் தான் நடிப்பேன் - கடைசியில் அவர்களுக்கு அண்ணனாக மாறுவேன் என்று இருந்த நடிகர்கள் நடுவில் இப்படியும் ஒருவர் !!!!)

2. ஸ்ரீதர் இந்த படத்தை பார்த்திருக்க வேண்டும் - அழு மூஞ்சி என்ற சொல்லை தன் அகராதியில் இருந்தே நீக்கியிருப்பார் .

3. படம் போகும் வேகம் ரவி கிரண் பதிவுகளை விட அதிகமா இருக்கும் . மருந்துக்கு கூட போரே அடிக்காது .

4. வசனம் - கோபு - இசை - MSV - direction - Dada Mirasi

5. இந்த படத்தில் தலைவர் , தயாரிப்பாளர் ஒரு கஷ்ட்டத்தில் இருந்ததால் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார் - அவருக்கு அதிகமான முக்கியத்தவம் நிறைந்த ரோல்யை , தயாரிப்பாளர் கெஞ்சியும் ஏற்று கொள்ளாமல் , சமமான ( முத்துராமன் , நாகேஷ் ) ரோல்யே எடுத்துக்கொண்டார் - காரணம் மூண்டு தெய்வங்களும் சமமே - இதில் ஒருவர் உயர்ந்தவராக இருந்தாலும் படம் சிறப்புடன் அமையாது என்பது அவரின் கருத்து .

6. படம் எதிர்பார்த்த லாபத்திற்கும் மேலாக ஈட்டி கொடுத்தது - தயாரிப்பாளர் மீண்டும் தலைவரை கெஞ்சவே - ஒரே ஒரு ரூபாயை மட்டும் சம்பளமாக பெற்று கொண்டார் தலைவர் .

7. பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் , தீபாவளி போதும் எங்கும் ஒலி பரப்பப்பட்டது - இன்றும் கேட்கலாம் .

8. அடுத்து அடுத்து வந்த படங்களினால் சிறிதே சோர்வு அடைந்தாலும் - தயாரிப்பாளர்களையும் , distributors களையும் மிகவும் சந்தோஷ படுத்தின படம் இது .


தொடரும்

அன்புடன் ரவி

:):smokesmile:

JamesFague
18th February 2014, 02:16 PM
Mr Ravi,

As rightly pointed out it is a memorable film for NT Lovers and there is no
makeup for him except in the song sequences. Only NT have the guts
to act without makeup in so many films.

Thanks

uvausan
18th February 2014, 03:02 PM
மூன்று தெய்வங்கள் - தொடருகின்றது

பகுதி 2


சில ஆவணங்கள் / சிறந்த பாடல்கள் - அதன் சிறப்புக்கள்

இந்த படத்தில் தலைவர் வாசு சார் சொன்னதுபோல மேக்கப் போடவில்லை - அதனால் இயற்கையான அழகு சற்று கூடுதலாகவே
இருக்கும் - இதேபோல " நெஞ்சி இருக்கும் வரை " என்ற படத்திலும் மேக்கப் கிடையாது - யாருக்கு இந்த தையிரியம் ? வரும் ??

uvausan
18th February 2014, 04:17 PM
இன்னும் சில ஆவணங்களை போடலாம் என்று நினைத்தால்

File Upload Manager says that I have fully used 976.6kb space for uploading images - written to moderator to fix this issue - the system counts earlier file sizes uploaded already as well and rejects new images as capacity constraint - is there anyone facing the problem like mine ? There is no way to delete the images already uploaded to create space for new ones .

அன்புடன் ரவி

uvausan
18th February 2014, 04:33 PM
வைதேகி காத்திருந்தாளோ -

என்ன பாடல் !! என்ன குரல்!! - தலைவரின் முக பாவங்களை பாருங்கள் - truly divine - கற்பனை வளம் வாய்ந்த பாடல் - கண்ணதாசன் ஒருவனால் தான் இப்படி எழுத முடியும் - தலைவருக்கு - மகாவிஷ்ணு வின் வேடம் எப்படி பொருந்துகின்றது - NTR கிருஷ்ணன் வேடத்திற்கு தெலுங்கில் பொருத்தம் என்றால் விஷ்ணு வேடம் தமிழில் NT க்கு தான் பொருந்தும் - இன்னும் நீங்கள் நம்ப வேண்டும் என்றால் படிக்காத மேதை - படம் பாருங்கள் - எங்கிருந்தோ வந்தான் பாடலை - உங்களுக்கு சிரமம் இல்லாமல் அந்த பாடலையும் இங்கே பதிவிடுகிறேன்

http://youtu.be/asO-IBX8h4w

uvausan
18th February 2014, 04:37 PM
[QUOTE=g94127302;1114572]வைதேகி காத்திருந்தாளோ -

என்ன பாடல் !! என்ன குரல்!! - தலைவரின் முக பாவங்களை பாருங்கள் - truly divine - கற்பனை வளம் வாய்ந்த பாடல் - கண்ணதாசன் ஒருவனால் தான் இப்படி எழுத முடியும் - தலைவருக்கு - மகாவிஷ்ணு வின் வேடம் எப்படி பொருந்துகின்றது - NTR கிருஷ்ணன் வேடத்திற்கு தெலுங்கில் பொருத்தம் என்றால் விஷ்ணு வேடம் தமிழில் NT க்கு தான் பொருந்தும் - இன்னும் நீங்கள் நம்ப வேண்டும் என்றால் படிக்காத மேதை - படம் பாருங்கள் - எங்கிருந்தோ வந்தான் பாடலை - உங்களுக்கு சிரமம் இல்லாமல் அந்த பாடலையும் இங்கே பதிவிடுகிறேன்

படிக்காத மேதை



http://youtu.be/bQ0qDswSF9s

uvausan
18th February 2014, 04:45 PM
தாயெனும் செல்வங்கள் - பாடல் கருத்துக்கள் ஒற்றுமையும் , அன்பையும் அதிகபடுத்துகின்றன - இப்படி பட்ட இனிய பாடல்கள் இனி வருமா ? எல்லோரும் வாழும் நிலை வருமா ?????


http://youtu.be/0lFpu5z0oPU

uvausan
18th February 2014, 04:54 PM
நடப்பது சுகம் -- நகைச்சுவை வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்று உணர்த்தும் பாடல் - நெஞ்சிருக்கும் வரை யின் சாயல் சிறிதே இருக்கும்

http://youtu.be/9YiNDzAL3P4

uvausan
18th February 2014, 05:00 PM
என்ன பாடல் !! - சொல்ல வார்த்தைகள் இல்லை !!!!!! எரிமலை போலே ஆசை வந்தாலும் அதை திருமலை தணிக்குமடா ------


http://youtu.be/4YAG1pRCXco

uvausan
18th February 2014, 05:04 PM
முள்ளிலா ரோஜா -- மற்றும் ஒரு அருமையான பாடல்

http://youtu.be/pKuiEkGsTVY

uvausan
18th February 2014, 08:27 PM
பகுதி 3 - மூன்று தெய்வங்கள்

இந்த படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள்


1. சிவகுமார் , சந்திரகலாவை சந்திக்க வந்த சமயத்தில் சிவாஜி , முத்துராமன் , நாகேஷ் மூவரும் சேர்த்து பண்ணும் லூட்டி நகைச்சுவைக்கு சிகரம் வைத்தது போன்று இருக்கும் .

2 . காதல் காட்சிகளில் சிவகுமாரும் , சந்திரகலாவும் ஓடுகிற ஓட்டத்தை விட ஒளிப்பதிவாளர் K .S Prasad ஓடியிருக்கும் ஓட்டம் பார்பதற்க்கு கவர்ச்சிகரமாக இருக்கும்

3. பாடல்கள் , இசை , சிவாஜியின் புதுமையான , இளமையான நடிப்புடன் , நகைச்சுவையும் சரியான விகிதத்தில் கலந்து படத்தை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர்

uvausan
18th February 2014, 08:57 PM
பகுதி - 4a - கதை ( சுருக்கமாக )

சந்தர்ப்ப வசத்தால் மூன்று வாலிபர்கள் சிறைக்கு செல்ல வேண்டி இருந்தது - மூவரும் சிறையைவிட்டு வெளியே சில காரணங்களால் தப்பித்து வெளியே வந்து விடுகிறார்கள் - அவர்கள் மூவரும் ஒரு பொட்டி கடை சொந்தக்காரரின் வீட்டில் பணம் திருடலாம் என்ற நினைப்பில் வருகின்றனர் - அந்த வீட்டு நிலைமையும் , அவர்கள் காட்டும் ஒப்பற்ற அன்பும் அவர்களை நல்லவராக மாற்றுகின்றது - கண் தெரியாத அவர்களின் மகளுக்கும் , காதலிக்கும் இன்னுமொரு பெண்ணுக்கும் ஒரு புது வாழ்கையை உண்டாக்கி தருகிண்டார்கள் - காதலித்த பெண்ணின் திருமணத்தை காண துடிக்கும் மூவரும் , கடமை உந்த போலீசில் சரணடைகிறார்கள் - அந்த குடும்பம் அவர்களை மூன்று தெய்வங்களாக வணங்கி பாராட்டுகின்றது - சுபம்

பகுதி - 4b

சிவாஜி - ஊதி விடுவார் - நடிப்பில் ஆகட்டும் , நகைச்சுவையில் ஆகட்டும் - தனக்கு முன்பும் , பின்பும் யாரும் இல்லை என்று அடித்து சொல்லும் படம்


------------ முத்துராமன் , நாகேஷ் , சிவகுமார் , சுப்பையா , vkr , இன்னும் பலர் உள்ளனர் - நாகேஷ் , சுப்பையா இவர்களின் நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்த உதவும்

குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படங்களில் இந்த படம் ஒரு முதலாய படம் - கவலைகளை மறக்கவும் , பார்க்கவேண்டிய படம் . அனுமார் மாதிரி விஸ்வரூபமும் நமது தலைவரால் எடுக்க முடியும் அதே சமயம் ஒரு அணிலாக சின்ன வேடத்தில் நடித்தும் பெருமை சேர்க்க முடியும் என்று சொன்ன படம்

தொடரும்

அன்புடன் ரவி

:smile2::smokesmile:

sivaa
18th February 2014, 09:04 PM
இன்னும் சில ஆவணங்களை போடலாம் என்று நினைத்தால்

File Upload Manager says that I have fully used 976.6kb space for uploading images - written to moderator to fix this issue - the system counts earlier file sizes uploaded already as well and rejects new images as capacity constraint - is there anyone facing the problem like mine ? There is no way to delete the images already uploaded to create space for new ones .

அன்புடன் ரவி

இதே பிரச்சினைதான் எனக்கும் தீர்வு கிடைக்கவில்லை
தங்கள்மூலம் எனக்கும் ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்

uvausan
18th February 2014, 09:11 PM
கடைசியாக எல்லோரும் பார்க்க வேண்டி , முழு நீள படத்தின் பதிவையும் இங்கு இடுகிறேன் - இதன் மூலம் ஒரு நல்ல படத்தை அலசிய திர்ப்தியும் , சந்தோஷமும் எனக்கு கிடைத்தற்காக உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் - மகிழ்ச்சி எல்லோருக்கும் கிடைக்கட்டும் - எல்லோரும் வாழும் நிலை வரட்டும் ...

நன்றி , அன்புடன் ரவி

மூன்று தெய்வங்கள் அலசல் இத்துடன் முடிவடைகின்றது. முன்னமே குறிப்பிட்டதை போல சில ஆவணகளை பதிவிட முடியவில்லை - technical snag. சரியானதும் பதிவிடுகிறேன் . :):smokesmile:

http://youtu.be/uwOJbPkFZPY

uvausan
18th February 2014, 09:21 PM
அடுத்த அலசல் அதே வருடத்தில் வந்த "ப்ராப்தம் " - அருமையான படம் , அற்புதமான நவராத்திரி கதாநாயகன் , கதாநாயகி - இனிய பாடல்கள் - எல்லாம் இருந்தும் , வசதிகள் இருந்தும் சில காரணங்களால் - no peace of mind --- oh God - please answer our prayer -----------why so????

ScottAlise
18th February 2014, 10:12 PM
பார்த்ததில் பிடித்து -11

மூன்று தெய்வங்கள் மற்றும் பாபு இரண்டும் contrasting கதைகள் , இருந்தும் இரண்டு படங்களும் ரசிக்க வைத்தார் நடிகர் திலகம்


இந்த இரண்டு பதிவுகளும் படிக்கும் நேரத்தில் , நான் பார்த்த படம் தான் இப்பொழுது எழுத போகும் படம் கருடா சௌக்கியமா . இந்த படத்தை நான் எழுத காரணம் , பாபு குணசித்திர நடிப்பு , மூன்று தெய்வங்கள் - காமெடி , குடும்ப கதை , இந்த படம் சிவாஜி என்ற மகா நடிகனை மட்டும் நம்பி எடுக்க பட்ட படம்
படம் வந்த வருடமோ 1982, புது நடிகர்கள் ரஜினி , கமல் மற்றும் பலர் கால் பதிக்க ஆரம்பித்த நேரம் (அழுத்தமாக ) நடிகர் திலகமோ 200 படத்தை தாண்டி ஓடி கொண்டு இருந்த old war horse ஆனால் gold horse .
வா கண்ணா வா என்ற குடும்ப படத்தில் தன் நடிப்பை மீண்டும் ஒரு முறை நிருபித்த பிறகு இந்த படம் மூலம் களம் இறங்கினார் நடிகர் திலகம் , படத்தின் இயக்குனர் பிரகாஷ் ராவ் , படகோட்டி , வசந்த மாளிகை படங்களின் இயக்குனர். கதை வசனம் - சுந்தரம் (vietnaam veedu )

இந்த படத்தை நான் பார்க்க காரணம் என்னை தமிழில் எழுத தூண்டிய திரு வாசுதேவன் சார் , இந்த படத்தை பற்றி அவர் எழுதி இருந்தார் .

தர்மங்கள் மீற படும் பொது , நல்லவர்களை காக்க நானே வருவேன் என்பதே கீதை வாசகம் , போகும் பாதை எப்படி இருந்தாலும் , சேர வேண்டிய இடம் தான் முக்கியம் அனைத்தையும் நான் அறிவேன் என்பதற்கு ஏற்ப வாழும் பேட்டை பிஸ்தா நம் கதாநாயகன் தீனதயாளன் , அவரின் சிஷ்யர் முத்து கிருஷ்ணன் (தியாகராஜன் ),

அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை பறை சாற்றும் விதமாக , தீனதயாளன் கண் அசைந்தால் மில் வேலை நிறுத்தம் நடக்கிறது , மீண்டும் மில் நடக்கிறது

இது அனைத்திற்கும் காரணம் திரு தீனா, சுருகம்மாக GODFATHER .

தன்னை வளர்க வாழ்கையை எழந்த மேரி (பண்டரி பாய் ) மீது மிகுந்த அன்பு , மரியாதை , பக்தி செலுத்துகிறார் தீனா , அவரை சந்திக்கும் பொது மட்டும் நல்ல பிள்ளையாக இருக்கிறார் , வெளியே அவர் ஒரு சிம்ம சொப்பணம்
இவரின் இருட்டு வாழ்கை தெரியாமல் வாழுகிறார் சுஜாதா (அவர் மனைவி மற்றும் மகள் (அம்பிகா ))
தன் நண்பரின் மகளை விரும்பிகிறார் முத்து கிருஷ்ணன் , கல்யாணம் செய்து வைக்கிறார் தீனா , மகளின் விருப்பம் படி கல்யாணம் செய்து வைக்கிறார் (மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றாலும் , மனைவியின் விருபத்துகாக)

முத்து கிருஷ்ணன் தீனாவை over take செய்ய நினைத்து , அது முடியாமல் போகவே , தீனாவின் மாப்பிள்ளை கெட்டவர்கள் உடன் சேர்ந்து ,

இப்படி முன்முனை பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு வெற்றி அடைகிறார் என்பதே கதை .

ScottAlise
18th February 2014, 10:13 PM
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் பாத்திர படைப்பு கனகட்சிதம் , ஆனால் மிச்ச பாத்திர படைப்பு முழுமையாக இல்லை
அதனால் நான் நடிப்பு கடவுளின் நடிப்பை பற்றி மட்டுமே எழுதி உள்ளேன்

முதலில் அவர் தமிழ் , நடிகர் திலகம் எப்படி பேசுவார் , அவர் மொழி புலமை எப்படி என்று நான் எழுதினேன் என்றால் என்னை போன்று ஒரு முட்டாள் இருக்க மாட்டார்கள் , ஆனால் இந்த படத்தில் அவர் தமிழ் ஒரு type of broken சென்னை கொச்சை தமிழ்.
அதை அவர் பேசும் விதம் டாப் , அதுவும் அவர் முத்து கிருஷ்ணா என்று அழைக்கும் தொனி இருகிறதே இப்பவும் என் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது , அந்த அழைக்கும் விதத்தில் தான் என்ன ஒரு அலட்சியம் , அப்பப்பா
அடுத்தது அவர் உடை - சும்மா வா வாசு சார் நடிகர் திலகத்தின் உடைகளை பற்றி தொடர் எழுதி உள்ளார் , இந்த படத்தில் அவர் பட்டு வேஷ்டி அணிந்து , பனியன் தெரிய கலர் ஜிப்பா அணிந்து நிற்கும் பொது அசல் தாதா.

கிருஷ்ணா பரமாத்மக்கு தெரியாத தர்மம் இல்லை , ஆனால் அதை அடைய , நிலை நாட்ட அவர் சில சூழ்ச்சியை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் , கிருஷ்ணா பரமாத்மா ஒரு விஷியத்தை அணுகும் முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும்
அதே முறை தான் நம் தீனா செல்லும் வழி , உதரணத்துக்கு தன் மனைவிடம் தவறாக நடக்க முயற்சித்த முறை மாமன் உடன் நட்புடன் நடந்து கொண்டு மனைவி கிட்ட வாங்கி கட்டி கொளுகிறார் , அதற்கு அவர் சொல்லும் காரணம் - பலே பாண்டியா

அம்மாவிடம் பேசும் பொது - யசோதை கண்ணன் உடன் இப்படி தான் பேசி இருப்பரோ என்று தோன்றுகிறது ,அதுவும் தீனா தன் தாயிடம் தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் என்று சொன்ன உடன் அவர் கேட்கும் பாங்கு அடக்கத்தின் உச்சம் , அதற்கு அவர் 1 ருபாய் coin யை காட்டி அதை போல் நான் என் இருட்டு பக்கத்தை காட்ட மாட்டேன் என்று உறுதி மொழி கொடுக்கும் பொது , சபாஷ் சுந்தரம் சார்

ScottAlise
18th February 2014, 10:13 PM
இந்த படத்தில் நாம் நடிகர் திலகத்தின் expressions நிறையாக பார்க்கலாம் , உதரணமாக அவர் கோதாவில் குதிக்கும் பொது cigarette உடன் கை யை சொடுக்கும் பாங்கை காண கண் கோடி வேண்டும் ,
தன்னை வளர்த்த அன்பு தெய்வம் மரணம் அடையும் நொடி அவர் முகத்தில் தான் எத்தனை பாவங்கள் , அதுவும் அவர் தாய் இறந்த உடன் கையை மேலே உயர்த்தி அவர் கொடுக்கும் reaction , டாக்டர் உடன் அவர் பேசும் வசனம் You are too late doctor , நான் நல்லது செய்தலும் , கெட்டது செய்தலும் என்னை ஆசிர்வாதம் செய்யும் கை , நீ இல்லாமல் நான் கோழை ஆகி விட்டேன் அவர் பொலம்பும் இடம் - நெஞ்சை கனக்க வைக்கிறது - நடிகர் திலகத்தால் , ஆம் எங்கள் நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்

முத்து கிருஷ்ணன் தன்னை வளர்த்த தாயின் மரணத்துக்கு இடாக பணம் வங்கி வந்து , நிற்கும் பொது , அவர் கண்டிப்பதும் , அவர் முகத்தில் தெரியும் அப்பட்டமான ஏமாற்றம் பிரதிபலிகிறது .


தன் அம்மாவின் மரணத்துக்கு காரணமான சங்கலி முருகனை அவர் கை ஆளும் விதம் " don 't angry me "

அதுவும் அவர் மனைவி இருக்கும் போதே அந்த மனிதர் யை காலி செய்யும் விதம் சபாஷ் போட வைக்கிறது (அதுவும் சகுந்தலாக்கும் இதே வயசு தான் இருக்கும் , அதை அவர் சொல்லும் assault விதமும் ரசிக்க வைக்கிறது )
தான் வளர்த்த பையன் முத்து கிருஷ்ணன் தன்னை மீறி பேசும் பொது ஆத்திரம் கொண்டு அடிக்கும் இடத்தில - ரௌத்திரம் , உண்மையில் தியாகராஜன் அடி வாங்கி இருப்பாரோ , அடித்து முடித்த உடன் பதட்டம் குறையாமல் கை நடுக்கத்துடன் cigarette யை எடுத்து பற்ற வைத்து , ஐயா பேச்சு தான் final , இங்கே ஐயா பேச்சுக்கு second opinion கிடையாது என்று சொல்லி விட்டு , அப்படியே போயிடு என்ற உடன் தியாகராஜன் crawl செய்து அந்த frame ல் இருந்து வெளி போகும் காட்சி heights of heroism - well crafted சீன். அடித்து விட்டு அவர் cigarette யை வைத்து கொண்டு அழும் காட்சி, இவன் இப்படி செய்து விட்டானே என்ற ஏமாற்றத்தினால் வந்த ஆத்திரத்தின் அப்பட்டமான பிரதிபலிப்பு
அவசரத்தில் கை நீட்டி அடித்து பின் அந்த முத்து கிருஷ்ணனின் மனைவி கிட்ட அதை விளக்கும் காட்சி , அதில் அவர் action - 1 பூங்கொத்து parcel அவர் நடிப்பு

எதிரிகள் பலம் கூட தீனா வீழ்வார் என்று எதிர்பார்த்தால் , அவர் அப்படியே இருக்கார் , இது தான் சூப்பர் twist - காரணம் நாம் எதிர் பார்க்கும் விஷயம் நடக்காமல் வேறு ஒன்று நண்ட்தால் தான் படம் பார்க்கும் நபர்களுக்கு ஒரு கிக் .
அதுவும் bullet proof அணிந்து தப்பித்த உடன் எதுவுமே ஆகவில்லை என்ற கெத்து உடன் அவர் எந்திரிக்கும் காட்சி , நேராக முத்து கிருஷ்ணன் இருக்கும் இடத்தில(முத்து கிருஷ்ணன் ஐயாவை போல் அவர் வேடம் அணிந்து கொண்டு பேசுவதை பார்த்ததும் ) அவர் கர்ஜிக்கும் காட்சியில் சிங்கம் தான்

கோர்ட் காட்சியில் பராசக்தி , கெளரவம் reference வரும் பொது ஒரு smile வருவதை மறுக்க முடியவில்லை

ScottAlise
18th February 2014, 10:14 PM
இப்படி பட்ட சிங்கத்தின் மறுபக்கம் இருபதோ ஒரு பசுவின் குணம்

மனைவி உடன் அவர் கோவில்க்கு செல்லும் பொது , தன் மனைவியின் மாமா உடன் பேசி மனைவி பார்த்த உடன் பயப்படும் காட்சி , அதற்கு அவர் சொல்லும் விளக்கம் , மகள் காதலிப்பது தெரிந்ததும் light ஆக எடுத்து கொண்டு handle செய்யும் விதம் , தன் மகளின் காதலன் சரி இல்லை என்பதை அறிந்து அதை தன் மனைவி கிட்ட சொல்லும் விதம் , அதற்கு அவர் (மனைவி ) மதிப்பு கொடுக்காமல் இருந்தது அதனால் பிரச்சனை வந்த உடன் மகளை மட்டும் தான் கண்டிக்க முடியும் என்று சொல்லும் வார்த்தை அதே மகள் , மற்றும் தாய் பிரச்சனை என்று வந்த உடன் அவர் (தீனா ) மீது பழி போடும் பொது அவர் மகள் காதலித்த விஷியத்தை ஏன் அப்படி handle செய்தார் என்ற காரணத்தை அவர் விவரிப்பதும் , மனைவி என் அப்பொழுதே சொல்ல வில்லை என்ற உடன் அவர் சொல்லும் காரணமும் , உலகத்தை எடை போட்டவரின் வாயில் இருந்து வரும் அனுபவ முத்து
கிருஷ்ணர் பற்றி சொல்லி விட்டு குசேலன் episode வரவில்லை என்றால் எப்படி , அதுவும் வருகிறது VS ராகவன் வடிவத்தில் . கடைசி காட்சியில் அவர் நடிப்பை பற்றி பேசும் வசனம் , அவர் மட்டுமே பேச கூடிய வசனம்

இது அதனையும் இருந்தும் இந்த படம் என் வரவேற்பு பெற வில்லை என்றால் என்னக்கு தெரிந்த காரணம் சிவாஜி சாரின் அபார நடிப்பில் மீது ஒரு கோட்டை எழுப்பி தூண்களை (மிச்ச நடிகர்களின் பாத்திரம் ) சரியாக செதுக்க வில்லை என்றது தான் எனக்கு தெரிந்த காரணம்

ScottAlise
18th February 2014, 10:15 PM
Dear Ravi sir,

A different perspective on moondru deivangal superb sir, continue but you could have posted ,more(technical fault what to do)

Iam asking it because , I was enjoying your moondru deivangal very much thats why

ScottAlise
18th February 2014, 10:28 PM
Dear Ravi Kiran surya sir,


Babu one my favourite movie but had a sad ending , A movie which has all ingredients , gives a clear description of hand ricksaw puller , his help towards a family which has given him food

A movie which has broken records , it was released against a movie which had so called grandeur

thanks for making me remembering it

Superb

ScottAlise
18th February 2014, 10:29 PM
Dear Gurusamy sir

Congratulations for your Law Degree

Wishing you come with flying colors in practice like Barrister Rajinikanth,

I am having a photo of NT sir in my office in Gowravam getup

I am searching for a pipe (though I don't smoke to keep it like him)

ifohadroziza
18th February 2014, 10:59 PM
Dear RAVIKIRAN sir,i saw Babu movie recently.After seeing the movie what i thought that even god himself could not act like our thalaivar.Such a great movie.

uvausan
19th February 2014, 10:15 AM
இப்படி பட்ட சிங்கத்தின் மறுபக்கம் இருபதோ ஒரு பசுவின் குணம்



அன்புள்ள ராகுல்ராம் - அருமையான பதுவு - கருடா சௌக்கியமா - வாசு சாரின் அலசல்கள் கூட இன்னும் நெஞ்சில் மிகவும் பசுமையாக உள்ளன - எனக்கு இந்த தமிழக மக்கள் மீது என்றோ நம்பிக்கை போய் விட்டது - கப்போலோட்டிய தமிழனை வரவேற்காத இந்த மக்களா - கருட சௌக்கியமா என்று கேட்க்க போகிறார்கள் - நாம் அதிகமாக படத்தின் வெற்றி தோல்வியை பற்றி கவலை பட வேண்டாம் - அவர் எப்படி நடித்தார் , அதன் மூலம் என்ன கற்று கொண்டோம் - அடுத்த தலைமுறைக்கு அவரின் சாகசங்களை எப்படி எடுத்து செல்வது என்பதை பற்றி ஆராய்வோம் - வசூல் சக்கரவர்த்தி என்று நம் இருவர் சொல்லித்தான் இந்த உலகிற்கு தெரிய போவதில்லை

ஒரு சின்ன கேள்வி - தயிர் சாத படங்களில் அவர் ஆற்றிய சாதனைகளை நான் முடிப்பதற்குள் ஏன் Pizza (கருட சௌக்கியமா ) ஆர்டர் செய்கிண்டீர்கள் - நீங்களும் சுனாமியாக மாறுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை -

அன்புடன் ரவி

:):smokesmile:

uvausan
19th February 2014, 10:34 AM
ப்ராப்தம் : தலைவர் அதிகமாக குடும்ப கட்டுபாடை லட்சியம் செய்ததில்லை என்று நினைக்கிறேன் - அவர் இதில் நம்பிக்கை இல்லாதவர் என்று படங்கள் மூலம் பல தடவை நிரூபித்துள்ளார் - ( உதாரணம் : மோட்டார் சுந்தரம் பிள்ளை ) எல்லா சுவர்களிலும் எழுதியுள்ள " ஒன்று இப்போதைக்கு போரும் - இரண்டுக்கு பின் வேண்டவே வேண்டாம் - இரண்டுக்கும் நடுவே போதிய இடைவெளி தேவை " -------அவரை கவர்ந்ததில்லை - இதில் நம்பிக்கை வைத்து இருந்தால் தன் படங்கள்ளுக்கும் போதிய இடைவெளி கொடுத்திருப்பார் - ஈசல் போல படம் வந்திருக்காது - போதிய இடைவெளி விட்டு வந்த படங்கள் எல்லாமே குறைந்தது 300 நாட்கள் ஓடி இருக்கும் .

NT யின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக சக்கரை வியாதி இருக்கும் - குறிப்பாக 1950 -60 ; 60-2000 படங்களை பார்த்தவர்களுக்கு - எல்லாமே இனிப்புதான் - எதை தின்பது , எதை பிறகு பார்ப்பது , எதை விடுவது என்ற குழப்பத்தில் இருந்திருப்பார்கள் - 1971 இல் அவர் வழங்கிய இனிப்புகளில் " ப்ராப்தம் " என்ற உயர்ந்த இனிப்பை ரசிகர்கள் சரியாக ரசிக்க தவறி விட்டார்கள் என்று தான் சொல்வேன் !!- படத்தை அலசும் முன் - தேனாக இனிக்கும் அந்த படத்தை தூக்கி நிறுத்தின ( NT யை தவிர ) பாடல்களை ரசிப்போமா ?

அன்புடன் ரவி
:):smokesmile:

uvausan
19th February 2014, 10:53 AM
பாடல்களை ரசிபதற்க்கு முன்

இந்த படத்தின் மூலம் NT யின் சிறப்பை பார்போமா ?

1. இந்த படம் சிவாஜி-சாவித்திரி சேர்ந்து நடித்த கடைசி படம்

2. Hindi யின் தமிழாக்கம்

3. முன் பிறப்பில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் படம் .

4. பாடல்கள் என்றுமே - பசுமை நிறைந்தவைகள்

5. இந்த படத்திலும் சாவித்திரிக்காக , பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார்

6. சாவித்திரியின் சொந்த தயாரிப்பில் உருவான BW படம்

7. NT யின் சில நல்ல யோசனைகளை , சில மாறுதல்களை சாவித்திரி , தயாரிப்பாளர் என்ற முறையில் ஏற்று கொள்ளவில்லை - ஏற்று கொண்டிருந்தால் , படத்தின் விதி வேறு விதமாக அமைந்திருக்கும் . இதைத்தான் " ப்ராப்தம் " என்று சொல்வோம் .

8. ரசிகர்கள் இருவரையும் பாசமலராகத்தான் நினைத்தார்களே தவிர ஜோடிகளாக அல்ல - என்று நிரூபித்த படம்

9. வசூலில் அதிகமாக ஏமாற்றவில்லை

10. NT யின் நடிப்பு புதுமை , அருமை

தொடரும்

uvausan
19th February 2014, 10:55 AM
a song which will ever last


http://youtu.be/tuz155M43uU

uvausan
19th February 2014, 10:56 AM
http://youtu.be/esuMov_qz0c

uvausan
19th February 2014, 10:58 AM
http://youtu.be/Z2yQgXgFtKU

uvausan
19th February 2014, 11:06 AM
இந்த ஒரு பாடல் போதும் - இந்த படத்தை தூக்கி நிறுத்தியது - கேட்க கேட்க - கேட்டுகொண்டே இருக்கலாம்

http://youtu.be/dbxkdDjOBN4

rsubras
19th February 2014, 12:08 PM
பகுதி 3 - மூன்று தெய்வங்கள்

இந்த படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள்


1. சிவகுமார் , சந்திரகலாவை சந்திக்க வந்த சமயத்தில் சிவாஜி , முத்துராமன் , நாகேஷ் மூவரும் சேர்த்து பண்ணும் லூட்டி நகைச்சுவைக்கு சிகரம் வைத்தது போன்று இருக்கும் .

2 . காதல் காட்சிகளில் சிவகுமாரும் , சந்திரகலாவும் ஓடுகிற ஓட்டத்தை விட ஒளிப்பதிவாளர் K .S Prasad ஓடியிருக்கும் ஓட்டம் பார்பதற்க்கு கவர்ச்சிகரமாக இருக்கும்

3. பாடல்கள் , இசை , சிவாஜியின் புதுமையான , இளமையான நடிப்புடன் , நகைச்சுவையும் சரியான விகிதத்தில் கலந்து படத்தை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர்

A very nice film... Babu padathula pizhiya pizhiya vara emotions ithula just like that vanthudum... neghizha vaiththa padam.... since the positives are all analyzed, I would like to tell few negatives

1. The color of the film kind of gave it a dull look (i think all color films of this era would have been like this... unlike the rich eastmen color that came prior to this era like pudhiya paravai, anbe vaa etc.,)

2. Nagesh role la konjam negative shades thookala irukkum..compared to the other two protoganists

parthasarathy
19th February 2014, 02:50 PM
Dear Ravi:

Your analysis of "Moondru Deivangal" and 'Praptham" were simple and eloquent.

In the company I worked earlier, I used to have an NT Fan. He is a good singer and told me that he sang "Nethup paricha Roja" from Praptham and got prize in school.

Praptham is actually a remake of a Telugu movie starring the late ANR along with Savitri and Jamuna (Jamuna repeated her role in its remake in Hindi "Milan" while Chandrakala did the role in Tamil), which was one the all time hits of ANR.

Praptham didn't click basically for two reasons - Savitri looked too old and bloated (she has been throughout of course!) for a relatively young looking NT at that time. Moogamanasulu depicted the story along the banks of Godavari river (there was a famous song "Godaari gattundhi" for which "Maargazhi maadham idhu mun panikkaalam" was in Tamil) and the hero used to be the boatman. AP has two very big rivers in Krishna and Godavari and there used to be several movies around these rivers and about boatmen while in TN, the culture of finding boatmen everywhere is somehow not there and that's why Tamil people couldn't relate to while they can to other professions like drivers, fishermen, etc.

Please continue to enthrall us.

Regards,

R. Parthasarathy

Russellbpw
19th February 2014, 04:37 PM
எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதியபோது சிவாஜிக்கும் பாடல் எழுதினார், வாலி! பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 14, 9:39 pm ist

எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது.

சிவாஜியின் அன்பைப் பெற்றவரும், அவருடைய நீண்ட கால குடும்ப நண்பருமான பெரியண்ணன், தனது சாந்தி பிலிம்ஸ் சார்பாக "அன்புக்கரங்கள்'' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். படத்தின் கதாநாயகன் சிவாஜிதான். அப்படத்துக்கு வாலி பாடல் எழுதவேண்டும் என்று பெரியண்ணன் விரும்பினார்.

வாலியை அழைத்துச்சென்று சிவாஜியிடம் அறிமுகம் செய்தார்.

அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

"கணேசு! இவருதான் வாலி. நம்ம ஊர்க்காரர். திருச்சி'' என்று, சிவாஜியிடம் பெரியண்ணன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அப்போது நான் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருப்பது சிவாஜிக்குத் தெரியும். அதன் காரணமாக, என்பால் அவருக்கு ஒரு எரிச்சல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன்.

ஆனால் என் எண்ணத்திற்கு மாறாக, சிவாஜி சிரித்த முகத்தோடு "வாங்க'' என்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை கோத்து வரவேற்றார்.

1964-ல் ஆரம்பமான இந்த அறிமுகம், பிறகு நான் 60 சிவாஜி படங்களுக்கு பாடல்கள் எழுத ஓர் ஆரம்பமாக அமைந்தது.

`பராசக்தி' காலத்திலிருந்தே சிவாஜியின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நான் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதுண்டு.

இதுகுறித்து சிவாஜிக்கு மனத்தளவில் என்பால் ஒரு கசப்புணர்வு மெல்லியதாய் பரவியிருந்தபொழுதும், அவர் படங்களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை.

தனிப்பட்ட முறையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட்டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை.

சிவாஜி நடிக்கும் `அன்புக்கரங்கள்' படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவதாக, என் பெயரைத்தாங்கிய முழுப்பக்க விளம்பரம் நாளேடுகளில் வெளியான அன்று `தாழம்பூ' படப்பிடிப்பில், நான் எம்.ஜி.ஆரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.

என்னைப் பார்த்தவுடன், "உங்க `அன்புக்கரங்கள்' எப்ப ரிலீஸ்?'' என்று எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறு என்னிடம் கேட்டார்.

"உங்க அன்புக்கரங்களில் இருந்து, என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது'' என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

பிற்காலத்தில், தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது, புயல் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நட்சத்திரங்கள் நிதி திரட்டினார்கள். 5 முக்கிய நகரங்களில் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துப் பிரபல நடிகர்களும் பங்கு பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியிருந்தன.

திருநெல்வேலியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை வகிக்கையில், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.

அமைச்சர்கள் காளிமுத்து, எட்மண்ட் முதலானோர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

"அசோக சக்ரவர்த்தியின் கலிங்கத்துப்போர்'' என்னும் ஓரங்க நாடகத்தில் -சிவாஜி அவர்கள் சாம்ராட் அசோகனாக மேடையில் தோன்றி, அற்புதமாக நடித்தார்.

இந்த ஓரங்க நாடகம், முரசொலி மாறன் "அன்னையின் ஆணை'' படத்திற்காக எழுதியது. சிவாஜி அவர்கள் தனக்கே உரித்தான வசன உச்சரிப்பாலும், வியத்தகு நடிப்பாலும், வெகுவாகப் பலரையும் கவர, நான் உடனே எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்:

"அண்ணே! சிவாஜி மாதிரி ஒரு நடிகர், இந்த சகாப்தத்திலே வேறு யாருமில்லை... என்ன நடிப்பு பார்த்தீங்களா?'' என்றேன்.

"சிவாஜிக்கு அடுத்ததாக நடிகர் முத்துராமனையும் சொல்லலாம்...'' என்றார் எம்.ஜி.ஆர்.

பிறகு, எம்.ஜி.ஆர். தலைமை வகித்துப் பேச மேடைக்குச் சென்றுவிட்டார்.

உடனே, என் பின்னே அமர்ந்திருந்த அமைச்சர் எட்மண்ட், "என்னங்க வாலி! சிவாஜி நடிப்பைப் புகழ்ந்து எம்.ஜி.ஆர்.கிட்டயே பேசிட்டீங்களே... உங்களப்பத்தி, தப்பா நினைச்சுக்கப் போறாரு...'' என்று என்னிடம் சொன்னதும்தான், நான் நாகரிகக் குறைவான முறையில் நடந்து கொண்டுவிட்டேனோ என்னும் சந்தேகம் என்னைத் தொற்றிக் கொண்டது. இருப்பினும், எம்.ஜி.ஆர். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல், என்னிடம் தொடர்ந்து அன்பு குறையாமலே பழகினார்.

எப்பொழுதுமே நான் ஒளிவு மறைவின்றிப் பேசியதாலேயே, என்னை எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.

எம்.ஜி.ஆர். அறிய, சிவாஜியைப் பாராட்டியது போல் -சிவாஜி அறிய நான் எம்.ஜி.ஆரைப் பாராட்டும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றதும், அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நடிகர் சங்கம் தீர்மானித்தது. வாழ்த்து மடல் ஒன்றை வாசித்துக் கொடுக்கவும் ஏற்பாடாயிற்று.

அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராயிருந்த சிவாஜி, சங்கத்தின் செயலாளராயிருந்த மேஜர் சுந்தர்ராஜனை என்னிடம் அனுப்பி, எம்.ஜி.ஆரைப் பாராட்டி வாசித்தளிக்கும் வாழ்த்து மடலை எழுதி வாங்கி வரச்சொன்னார்.

அந்த வாழ்த்து மடலில், எம்.ஜி.ஆரின் இனிய பண்புகளையும், இயல்பான நடிப்பையும் மிகவும் சிலாகித்து நான் எழுதியிருந்தேன். படித்துவிட்டு, சிவாஜி, புன்னகைத்தாரே தவிர பொருமினார் இல்லை.''

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

Russellbpw
19th February 2014, 04:57 PM
ஆரூர்தாசுக்கு சிவாஜி, எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட உரசல்கள்!

பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 24, 6:14 pm ist


சிவாஜி கணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஒரே சமயத்தில் அதிக படங்களுக்கு வசனம் எழுதியவர் என்ற பெருமை பெற்ற ஆரூர்தாசுக்கு, அவர்களுடன் மோதல்களும் ஏற்பட்டன! சிவாஜியிடம் ஒரு கதையை ஆரூர்தாஸ் கூறி இருந்தார்.

ஆனால், அந்த கதையை படமாக எடுப்பது பற்றிய அறிகுறியே இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், ஆரூர்தாசை எம்.ஜி.ஆர். அவசரமாக அழைத்தார். 'முத்துக்குமரன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். ஒரே வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் இப்படம் தயாராவதால், வித்தியாசமான கதையாக இருக்க வேண்டும். என்னுடன் சரோஜாதேவியும், எம்.ஆர்.ராதா அண்ணனும் நடிக்கிறார்கள்.

அதற்குத் தகுந்த கதை வேண்டும்' என்றார். முன்பு சிவாஜிக்கு சொன்ன கதையை சொன்னார், ஆரூர்தாஸ். கதை எம்.ஜி.ஆருக்குப் பிடித்துவிட்டது. உடனே படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது. 9-12-1966-ல் வெளிவந்து, சக்கை போடு போட்டது. அதுதான் 'பெற்றால்தான் பிள்ளையா.' இந்தப் படத்தினால், சிவாஜிக்கும், ஆரூர்தாசுக்கும் மோதல் ஏற்பட்டது.

அதுபற்றி ஆரூர்தாஸ் கூறியதாவது:-

'சிவாஜியிடம் நான் சொன்ன கதைக்கு அவர் பதில் எதுவும் சொல்லாததால் அதை எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற பெயரில் அது படமாக வெளிவந்து வெற்றி பெற்றது. படம் வெளிவந்த ஒரு வாரத்தில், ஒரு நாள் மாலை சிவாஜி என்னை அழைத்தார். நானும் சென்றேன். 'முன்பு என்னிடம் சொன்ன அந்த கதைதானே, இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் பெற்றால்தான் பிள்ளையா' என்று கேட்டார், சிவாஜி. நானும், 'ஆமாம்' என்றேன்.

அதற்கு சிவாஜி, 'கதை நன்றாக இருக்கிறது, சண்முகத்திடம் சொல்லி சிவாஜி பிலிம்ஸ்சில் புதிய பறவை போல ஈஸ்ட்மென் கலரில் எடுக்கலாம் என்று என் விருப்பத்தை தெரிவித்தேனே!
பிறகு எப்படி எம்.ஜி.ஆரிடம் அந்தக் கதையை சொல்லலாம்? உனக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்? எனக்குத் தெரியாமல் நீ என்ன பண்ணிவிடுவாய் என்று நம்பி பேசாமல் இருந்துவிட்டேன்.
நீ எனக்கு துரோகம் பண்ணிவிட்டாய்' என்றார்.

அதற்கு நான் 'சத்தியமா நான் அப்படி இல்லை. நான் கதை சொல்லி பல நாள் வரை நீங்கள் எதுவுமே சொல்லவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில்தான், உடனே படம் பண்ணவேண்டும் என்று எம்.ஜி.ஆர். கதை கேட்டார். சும்மா அந்த கதையைச் சொன்னேன். அதில் ஆக்டிங் பார்ட் அதிகம். ஆக்ஷன் பார்ட் குறைவு. அதனால் அவருக்கு அது பிடிக்காது என்று நினைத்தேன். நான் நினைத்தது நேர்மாறாகிவிட்டது. கதை அவருக்குப் பிடித்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள். அதைவிட நல்லதா வேறு ஒரு கதை சொல்கிறேன்' என்றேன்.

உடனே சிவாஜி 'எனக்கு தேவை இல்லை. அதையும் உன் எம்.ஜி.ஆரிடம் சொல்லி காசு வாங்கிக்கொள்.
இதோ பார்! இந்த நிமிஷம் முதல், எனக்கும் உனக்கும் பேச்சுவார்த்தை இல்லை.
இனி என் படத்திற்கு நீ எழுதக்கூடாது என்று நானாக என் வாயால் சொல்லமாட்டேன்.
அது டைரக்டர், தயாரிப்பாளர் விருப்பம்.
என்னை வைத்து நீ இல்லை, உன்னை வைத்து நான் இல்லை' என்றார், கோபத்துடன்.

அதன்பிறகு, 3 மாதம் வரை இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. திருலோகசந்தரின் எல்லாப் படங்களுக்கும் நான்தான் வசனம் எழுதி வந்தேன். அவர் சிவாஜியை வைத்து, தங்கை என்ற படத்தை எடுத்தார். அதற்கும் நான்தான் வசனம் எழுதினேன். சிவாஜியுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்ட காலகட்டம் இது.

எனவே, தங்கை படப்பிடிப்பு நடந்தபோது, சிவாஜியை சந்திப்பதை தவிர்த்தேன். தங்கை வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின், சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயா நடித்த 'இரு மலர்கள்' என்ற படத்தை திருலோகசந்தர் எடுத்தார். அப்படத்துக்கும் நான்தான் வசனம் எழுதினேன்.

ஒரு நாள் படப்பிடிப்பின்போது, நானும், சிவாஜியும எதிர் எதிரே சந்தித்துக் கொண்டோம். ஒரு கணம திகைத்து நின்றோம்.
பிறகு நான் ஒதுங்கி நடக்கத் தொடங்கியபோது, அவர் என் கையைப் பிடித்து நிறுத்தினார்.

'டேய்! அண்ணன் தம்பிகிட்ட கோபப்பட்டுக்கிட்டு பேசாமல் இருக்கலாம். ஆனால் தம்பி அண்ணனுடன் பேசாமல் இருக்கக்கூடாது' என்று கூறிவிட்டு, அவரே தொடர்ந்து 'சாரி! ஐயம் வெரி சாரி பழசையெல்லாம் மறந்துவிடு!' என்றார்.

நான் கண்ணீர் விட்டுக் கதறினேன். அவர் என்னை தழுவிக்கொண்டார். அதன்பின் அவரது சொந்தப்படமான 'தெய்வ மகன்' முதல் 'அன்புள்ள அப்பா' வரை அவர் நடித்த பல படங்களுக்கு நான் வசனம் எழுதினேன்.

ஆனால், 'பெற்றால்தான் பிள்ளையா'வுக்கு பிறகு, எம்.ஜி.ஆருக்கு நான் எந்தப் படத்துக்கும் வசனம் எழுதவில்லை என்பதுதான் ஆச்சரியம்!' இவ்வாறு ஆரூர்தாஸ் கூறினார்.

தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். விலகி, 'அ.தி.மு.க'வை தொடங்கிய பிறகு, தன் கட்சிக்காரர்கள் கட்சி சின்னத்தை கையில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்.
ஆரூர்தாசையும் பச்சை குத்திக்கொள்ளும்படி, கட்சிப் பிரமுகர் ஒருவர் கூறினார்.

அவர் மறுத்துவிட்டார். இதுபற்றி ஆரூர்தாசிடம் எம்.ஜி.ஆர். விசாரித்தார்.
'ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் போன்ற சர்வாதிகாரிகள் கூட, இப்படி கையில் பச்சை குத்திக்கொள்ளும்படி கட்டளையிடவில்லை. உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்புக்காக, என் கையை அசிங்கப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை' என்றார் ஆரூர்தாஸ்.

'என்னிடம் இருந்து நீங்கள் விலகிப்போகிறீர்கள் என்று நினைக்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

'அதுதான் விதி என்றால், அதை யாராலும் தடுக்க முடியாது' என்று கூறி, எம்.ஜி.ஆரிடம் விடை பெற்றுக்கொண்டார், ஆரூர்தாஸ்.

அதன்பிறகு, எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பை ஆரூர்தாஸ் பெறவில்லை.

rsubras
19th February 2014, 05:53 PM
nice piece of news...that we were / are in a period that some ppl considered even a genuine praise of a rival artiste as offending....tells the sorry state of affairs.....

ifohadroziza
19th February 2014, 10:50 PM
Thiru ARURDOSS avargal cinimavin marupakkam endra thodaril thiru MGR avargalai mattume mayyamaga vaithu eluthukirar.Athai mgr avargalin marupakkam endru eluthalame.

Murali Srinivas
19th February 2014, 11:41 PM
சில பல நாட்களுக்கு முன் மதுரை சென்றிருந்த போது நண்பா ஒருவர், நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் நமது திரியின் silent reader. பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது பொற்கால ஆண்டான 1964 பற்றியும் பேச்சு வந்தது. அந்த 1964-ல் சென்னை மாநகர சாதனைகளை பற்றி எழுதியிருந்தாயே நமது மதுரை பற்றி எழுதவில்லையே என்று எங்களுக்கே உரித்தான மண்பாசத்தோடு செல்லமாக கடிந்துக் கொண்டார். நான் அவரிடம் சென்ற வருடமே நடிகர் திலகத்தின் முறியடிக்க முடியாத மதுரை சாதனைகளின் பட்டியல் ஒன்றை பதிவு செய்திருந்ததை நினைவுபடுத்தினேன். அதில் 1964-ம் வருடம் வெளியான சிவாஜி படங்கள் மதுரையிலே புரிந்த சாதனைகளை மட்டும் மீண்டும் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டார். அவருக்காகவும் அப்போது படிக்க விட்டுப் போனவர்களுக்காகவும் மீண்டும் அந்த 64-ம் வருட சாதனை மட்டும் மீள் பதிவாய். அதை பதிவிடும் போது நூறு நாட்கள் படங்களைப் பற்றி மட்டும் பேசாமல் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் படங்களின் ஓடிய நாட்கள் பற்றியும் சேர்த்திருக்கிறேன். உண்மை உரைக்க நமக்கு தயக்கம் இல்லாததால் உள்ளது உள்ளபடி.

பொற்கால ஆண்டான 1964-ல் பொன் விழா காவியங்கள் சென்னையில் மட்டுமல்ல மதுரையிலும் சாதனை படைத்தது.

ஒரு Calender வருடத்தில் [ஜனவரி to டிசம்பர்] வெளியான ஒரு கதாநாயக நடிகரின் 4 படங்கள் 100 நாட்கள் ஓடுவது என்ற சாதனை நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.

1964

கர்ணன் - 14.01.1964 - தங்கம் - 108 நாட்கள்

பச்சை விளக்கு - 03.04.1964 - சிந்தாமணி - 105 நாட்கள்

கை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்ட்ரல் - 108 நாட்கள்.

நவராத்திரி - 03.11.1964 - ஸ்ரீதேவி - 108 நாட்கள்

மதுரை மாநகரின் 83 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2014] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.

ஏனைய மூன்று படங்கள்

ஆண்டவன் கட்டளை - 12.06.1964 - நியூசினிமா - 70 நாட்கள் [தமிழகத்திலே அதிக பட்ச நாட்கள் - சென்னை பாரகனுக்கு இணையாக]

புதிய பறவை - 12.09.1964 - சிந்தாமணி - 83 நாட்கள்.[தமிழகத்திலே இரண்டாவது அதிக பட்ச ஓட்ட நாட்கள். Second Highest Run].

முரடன் முத்து - 03.11.1964 - சென்ட்ரல் - 52 நாட்கள்.

ஆக சுருங்க சொன்னால் வெளியான படங்களின் quality-யில் மட்டுமல்ல படம் ஓடிய நாட்களின் வெற்றி quantity-யிலும் சக்கரவர்த்தி நானே என்பதை நடிகர் திலகம் சென்னையில் மட்டுமல்ல மதுரையிலும் நிரூபித்த வருடம் 1964.


அன்புடன்

ScottAlise
20th February 2014, 12:01 AM
Dear Murali Sir,

Thanks for establishing MAdurai record , I thought Pudhiya Paravai would have been Silver Jubilee little disappointed with it

eagerly waiting either for your analysis or write up about theatre experiences

Russellbpw
20th February 2014, 07:52 AM
பொற்கால ஆண்டான 1964-ல் பொன் விழா காவியங்கள் சென்னையில் மட்டுமல்ல மதுரையிலும் சாதனை படைத்தது.

ஒரு Calender வருடத்தில் [ஜனவரி to டிசம்பர்] வெளியான ஒரு கதாநாயக நடிகரின் 4 படங்கள் 100 நாட்கள் ஓடுவது என்ற சாதனை நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.

1964

கர்ணன் - 14.01.1964 - தங்கம் - 108 நாட்கள்

பச்சை விளக்கு - 03.04.1964 - சிந்தாமணி - 105 நாட்கள்

கை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்ட்ரல் - 108 நாட்கள்.

நவராத்திரி - 03.11.1964 - ஸ்ரீதேவி - 108 நாட்கள்

மதுரை மாநகரின் 83 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2014] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.

ஏனைய மூன்று படங்கள்

ஆண்டவன் கட்டளை - 12.06.1964 - நியூசினிமா - 70 நாட்கள் [தமிழகத்திலே அதிக பட்ச நாட்கள் - சென்னை பாரகனுக்கு இணையாக]

புதிய பறவை - 12.09.1964 - சிந்தாமணி - 83 நாட்கள்.[தமிழகத்திலே இரண்டாவது அதிக பட்ச ஓட்ட நாட்கள். Second Highest Run].

முரடன் முத்து - 03.11.1964 - சென்ட்ரல் - 52 நாட்கள்.

அன்புடன்

முரளி சார்

1964 மட்டுமா ....1953 முதல் 1986 வரை ...கீழே குறிப்பிட்ட விஷயங்கள் தான் அவருக்கு மட்டுமே உரித்தான சாதனை. அதாவது...1964இல் நீங்கள் குறிப்பிட்டிருப்பதை சற்று ஆராய்ந்தால் இது விளங்கும்...

பொங்கல் அன்று அதாவது 14த் கர்ணன் சரியாக ஒன்றரை மாத இடைவெளியில் (47 நாட்கள் இடைவெளி, 100 நாள் padam )
ஏப்ரல் 3இல் AVM வெளியிட்ட பச்சை விளக்கு(100 நாள் படம்)..பிறகு ரெண்டு மாத இடைவெளியில் (69 நாட்கள் இடைவெளி )
ஆண்டவன் கட்டளை(10 வார படம்) அதன் பின் வெறும் 35 நாட்கள் இடைவெளியில் கை கொடுத்த தெய்வம் ( 100 நாள் படம்)
கை கொடுத்த தெய்வம் 100 நாட்கள் கடந்தவுடன் (54 days interval)
சிவாஜி பிலிம்ஸ் புதியபறவை புதிய பறவை 100 நாட்கள் கடக்க விடாமல் அதற்குள் வெறும் 50 நாட்களுக்குள்
இரண்டு படங்கள் 1) நடிகர் திலகத்தின் 100வது படம்(100 நாள் ) நவராத்திரி மற்றும் 99வது படம் முரடன் முத்து..

இதன் சராசரி நாட்கள் பார்த்தோமேயானால் 52 நாட்களுக்கு ஒரு படம் கொடுத்துள்ளார்...மொத்தம் 7 படங்கள் அதில் 100 நாட்கள் படங்கள் 5.

இந்த சாதனை எனக்கு தெரிந்தவரை மட்டும் அல்ல நடு நிலையாக உள்ளவர்கள் படித்தால் மிகபெரிய சாதனையாகும் என்று தான் ஒத்துகொள்வார்கள் !

சிவாஜி என்றால் சாதனை....சாதனை என்றால் சிவாஜி ...!

Russellbpw
20th February 2014, 08:39 AM
flash back

1972 - சென்னை, மதுரை, நெல்லை, கோவை மற்றும் பல நகரங்கள் - 1972 - பட்டிகாடா பட்டணமா - 183 நாட்கள் -
அதற்க்கு முன் வெளிவந்த பல கலர் படங்கள் மற்றும் அனைத்து கருப்பு வெள்ளை படங்களில் முதன்மையான வசூல் சாதனை

1972 - வெளியான படங்கள் 7 - இதில் 100 நாட்கள் - 6 படங்கள் - அந்த 6 100 நாட்கள் படங்களில் - 2 - 175 நாட்கள் படங்கள் (வசந்த மாளிகை மற்றும் பட்டிகாடா பட்டணமா)- அந்த 2 படங்களும் - 200 நாட்களை கடந்த படங்கள்
- இலங்கையில் வசந்தமாளிகை வெளியான 3 திரை அரங்குகளில் 2 திரை அரங்கில் 200 நாட்கள் கடந்தன 1இல் 100 நாட்களுக்கும் மேல்

சென்னையில் வெளியான 3 திரை அரங்குகளிலும் அதிகபட்ச தொடர்ந்து அரங்கு நிறைவு கண்ட படம் - 816 காட்சிகள் - ஞான ஒளி வரும் வரை முரியடிக்கபடாத சாதனை.

அதே வருடம் வெளியான ஞான ஒளி சென்னை நகரில் 1000 காட்சிகள் கண்டு முறியடித்தது.

1972இர்க்கு முன் வந்த அனைத்து படங்களின் 50, 100, 175 நாட்கள் வசூல்களை ராஜா, ஞானஒளி, வசந்தமாளிகை, பட்டிகாடா பட்டணமா முறியடித்தது


மீண்டும் மிக குறிகிய இடைவெளியில் அடுத்தடுத்து படங்கள் வெளிவந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் வசூல் ஆளுமை இதிலிருந்து உணரலாம்.

1974 - தங்கபதக்கம் - சென்னை - 3 திரை அரங்குகள் மற்றும் பல நகரங்கள் - அதற்க்கு முன் வந்த அனைத்து படங்களின் வசூலை முறியடித்த படம் - தமிழ் திரை வரலாற்றில் முதன் முதலாக 1.25 கோடி மேல் வசூல் செய்து அதற்க்கு முந்தைய சாதனை 1.00 கோடி வசூல் சாதனை படம் முறியடிக்கப்பட்டது - 1979 வரை வேறு எந்த படங்களாலும் முரியடிக்கபடவில்லை

Richardsof
20th February 2014, 08:40 AM
http://i60.tinypic.com/j9o46h.jpg

Russellbpw
20th February 2014, 08:47 AM
http://i60.tinypic.com/j9o46h.jpg


ஆஹா...அருமையான பதிவு வினோத் சார்...

மிக்க நன்றி !

படு ஸ்லிம்மான ஸ்டைல் ஆன நடிகர் திலகம் !

Georgeqlj
20th February 2014, 11:43 AM
சிங்கத்தமிழன் சிவாஜிக்கு வாலி எழுதிய பாடல்கள் சூரக்கோட்டையும்
மலைக்கோட்டையும்
வாலி பதிப்பகம் வெளியீடு
விலை 150 ரூபாய்.

JamesFague
20th February 2014, 07:13 PM
Two Wife - 13 Childrens - No Duet - Super Duper Hit - Motor Sundaram Pillai

Double Action in two Movies - No Duet - Super Duper Hit - Saraswathi Sabatham & Vellai Roja

No Duet inspite of Heroine - Super Duper Hit - Thillana Mohanambal

That is the greatness of Nadigar Thilagam.

Subramaniam Ramajayam
21st February 2014, 07:26 AM
Two Wife - 13 Childrens - No Duet - Super Duper Hit - Motor Sundaram Pillai

Double Action in two Movies - No Duet - Super Duper Hit - Saraswathi Sabatham & Vellai Roja

No Duet inspite of Heroine - Super Duper Hit - Thillana Mohanambal

That is the greatness of Nadigar Thilagam.

GREAT Vasudevan sir some more known records first actor who did
tarzan role that too in fifties itself made it very big hit,Thangamalairagasiam.
first film shot abroad and madeit successful hit SIVANDAMANN.
no songs still a big hit ANDHANAL.
WE NEED A dictionary to mark his GREATNESS,

Russellbpw
21st February 2014, 08:55 AM
இன்று 20-02-1970இல் வெளிவந்து நல்லதொரு வெற்றியை பெற்ற

ஜெமினியின் நடிகர் திலகம் நாட்டிய பேரொளி நடிப்பில் வெளிவந்த "விளையாட்டு பிள்ளை" திரைப்படம் 45ஆம் ஆண்டு தொடங்குகிறது.

விளையாட்டு பிள்ளை - இளம் பிள்ளை பயம் அறியாது என்ற சொல்லுகேற்ப நம் நடிகர் திலகம் இந்த திரைப்படத்தில் பல வீர தீர காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக அவரே டூப் நடிகர் உதவி இல்லாமல் நடித்திருப்பார்.

வேறு நடிகர் யாரேனும் தத்ரூபமாக டூப் நடிகர் இல்லாமல் இந்தளவிற்கு நடித்திருக்கிறார்களா என்பது சந்தேகமே.

இந்த விளையாட்டு பிள்ளை போல நம் திரியில் உள்ள விளையாட்டு பிள்ளைகள் முடிந்தவரை டூப் பயன்படுத்தாமல் நல்ல விஷயங்களை பதிவிட்டு பல நாட்கள் ஆயின...

நமது நடிகர் திலகம் எனதருமை பிள்ளைகள் என்று அழைப்பார் !

எங்கே அவரது பிள்ளைகள் ?....விளையாட்டுபிள்ளை, வம்பு பிள்ளை, கௌரவ பிள்ளை, லொள்ளு பிள்ளை , நய்யாண்டி பிள்ளை, கோப பிள்ளை, சுட்டி பிள்ளை யாரையும் பல நாட்களாக காணுமே ....

அருமை பிள்ளைகளே ....மீண்டும் வாருங்கள் !

http://http://www.youtube.com/watch?v=uE25fCTYP7g

ScottAlise
21st February 2014, 05:41 PM
Dear Ravi Kiran Suriya,

I am out of station presently , but writing about 5 movies, rare, common movies which I felt a necessary write up , kindly excuse for delay, will post by next week end one or earlier

Russellbpw
21st February 2014, 09:41 PM
தப்பும் தவறும் இருட்டடிப்புமாக தினமலர் ஒருதலைபட்சமான செய்தியை மீண்டும் வெளியிட்டுள்ளது.

இவர்கள் ஏன் நடிகர் திலகத்தை பற்றி எழுதுகிறார்கள் என்றே தெரியவில்லை.

ஒரு நடிகரின் படங்களை பற்றி உண்மைக்கு மாறான செய்தியும் நடிகர் திலகத்தின் படங்களை பற்றிய உண்மை செய்தியை மறைத்து,
குறைத்தும் எழுதி இந்த பகல் வேஷக்காரர்கள் என்ன சாதிக்க போகிறார்கள் ? BUNCH OF JOKERS !

ஒரு நடிகரின் படங்களை பற்றி பதிவு செய்யும்போது இதுபோல பதிவு செய்யவேண்டும்.

உண்மையான செய்தியும் விவரங்களும் இதோ !


1964ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகின்றன.

சிவாஜி

1) கர்ணன் - 100 days

2) பச்சை விளக்கு - 100 days

3) ஆண்டவன் கட்டளை - 10 Weeks

4) கை கொடுத்த தெய்வம், - 100 days

5) புதிய பறவை - 100 days

6) நவராத்திரி, - 100 days

7) முரடன் முத்து - > 50 days

நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த 7 காவியங்களில் 6 திரைப்படங்கள் பிரம்மாண்ட வெற்றிகள் ! முரடன் முத்து திரைப்படம் சுமாரான வெற்றிபெற்றது !

ஒரு நடிகரின் 2 படங்கள் ஒரே தினத்தில் வெளிவந்து வெற்றியடைந்த சாதனையை மீண்டும் ஒரு முறை நடத்தினார் நடிகர் திலகம்.

அதுவரையில் 100 படங்களை கடந்த முதல் கதாநாயகன் என்ற பெருமையும் பெற்றார். அதுமட்டுமல்லாது 100வது படமான நவராத்திரி மிக பெரிய அளவில் வெற்றிபெற்றது !
ஒரு நடிகரின் 100 வது திரைப்படம் இந்தளவிற்கு வெற்றிபெறுவது அதுவே முதல் முறையாகவும் அமைந்தது !

eweaxagayx
22nd February 2014, 07:01 AM
இந்த வார துக்ளக் இதழில் சுப்பு என்பவர் எம்.ஜி.ஆரின் படங்களில் ஈ.வெ.ரா. விற்கு எதிரான பிரச்சாரம் என்ற கட்டுரையில் எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் படம் அந்தக் காலத்திலேயே 40 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாகவும், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் தவறான தகவலைப் பதிவிட்டிருந்தார். அதை மறுத்து அந்தத் தகவல் தவறானது என்று துக்ளக் இத்ழில் சுட்டிக்காட்டியிருந்த எனது பதிவு.


தவறான தகவல் அதுவும் துக்ளக்கில் ? எம்.ஜி.ஆரின் ஆதிக்காலப் படங்கள் மட்டுமல்ல மிக பெரிய வெற்றிப் படங்களான உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், ரிக்ஷாக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா உட்பட எந்தப் படங்களும் தமிழகத்தில் 40 திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாக சரித்திரம் இல்லை. அதுவும் மத்ரை வீரன் படம் ஒரு கோடி ரூபாய் வசுலித்தது என்பதுவும் தவறு.

tacinema
22nd February 2014, 08:55 AM
இந்த வார துக்ளக் இதழில் சுப்பு என்பவர் எம்.ஜி.ஆரின் படங்களில் ஈ.வெ.ரா. விற்கு எதிரான பிரச்சாரம் என்ற கட்டுரையில் எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் படம் அந்தக் காலத்திலேயே 40 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாகவும், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் தவறான தகவலைப் பதிவிட்டிருந்தார். அதை மறுத்து அந்தத் தகவல் தவறானது என்று துக்ளக் இத்ழில் சுட்டிக்காட்டியிருந்த எனது பதிவு.


தவறான தகவல் அதுவும் துக்ளக்கில் ? எம்.ஜி.ஆரின் ஆதிக்காலப் படங்கள் மட்டுமல்ல மிக பெரிய வெற்றிப் படங்களான உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், ரிக்ஷாக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா உட்பட எந்தப் படங்களும் தமிழகத்தில் 40 திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாக சரித்திரம் இல்லை. அதுவும் மத்ரை வீரன் படம் ஒரு கோடி ரூபாய் வசுலித்தது என்பதுவும் தவறு.

may be, MGR fans must be including collections of re-runs. OR, they don't know how many 0s are there after 1 in 1 crore.

Russellbpw
22nd February 2014, 11:09 AM
இந்த வார துக்ளக் இதழில் சுப்பு என்பவர் எம்.ஜி.ஆரின் படங்களில் ஈ.வெ.ரா. விற்கு எதிரான பிரச்சாரம் என்ற கட்டுரையில் எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் படம் அந்தக் காலத்திலேயே 40 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாகவும், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் தவறான தகவலைப் பதிவிட்டிருந்தார். அதை மறுத்து அந்தத் தகவல் தவறானது என்று துக்ளக் இத்ழில் சுட்டிக்காட்டியிருந்த எனது பதிவு.


தவறான தகவல் அதுவும் துக்ளக்கில் ? எம்.ஜி.ஆரின் ஆதிக்காலப் படங்கள் மட்டுமல்ல மிக பெரிய வெற்றிப் படங்களான உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், ரிக்ஷாக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா உட்பட எந்தப் படங்களும் தமிழகத்தில் 40 திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாக சரித்திரம் இல்லை. அதுவும் மத்ரை வீரன் படம் ஒரு கோடி ரூபாய் வசுலித்தது என்பதுவும் தவறு.

முதலில் ஒரு திரைப்படம் அவ்வளவு சென்டேர்சில் ரிலீஸ் ஆனதா என்பதை எண்ணி பார்க்கவேண்டும் கருத்துக்களை பத்திரிகைகளில் கூறுவோர்.

அது யாருடைய படங்கலென்றாலும் சரி. உண்மை தகவலை வெளியிட ஒரு பயலுக்கும் துப்பில்லை. பொய் வாரி வாரி இறைப்பது...தினமலர் வரிசையில் இப்போது துக்ளக் சேர்ந்துள்ளது.

INDUSTRY இல் சும்மா கதை விடுவதையே, கற்பனைவளத்தால் மிகைபடுத்தி எழுதுவதும், பேசுவதையுமே பிழைப்பாக கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். உதாரணம் மேஜர் தாசன், கே.ராஜன், அரூர்தாஸ் சத்யராஜ், போன்றோர்கள் !

THEY SIMPLY BLOUGH WITHOUT ANY LOGIC ! இவர்கள் கதைவிடுவது ஒரு காலகட்டத்தில் ஒரு சிலர் ஆவணமாக நினைத்து வாதாடுவார்கள் வேறு !

இப்படிப்பட்ட பொய்களை மூட்டை மூட்டையாக இவர்கள் என்ன தைரியத்தில் அவிழ்த்து விடுகிறார்கள் தெரியுமா ?

கீழை கொடுக்கப்பட்டுள்ள காட்சியை பாருங்கள் உங்களுக்கே விளங்கும்.

http://www.youtube.com/watch?v=sOhPHfRqu_c

ifohadroziza
22nd February 2014, 03:01 PM
அமரதீபம் படத்தயாரிப்பின் ஒரு சுவையான பின்னணி.
ஸ்ரீதர் அவர்கள் இந்தப் படத்தை சொந்தமாக தயாரிக்க விரும்பினார். நிதிப்பற்றாக்குறை காரணமாக அவர் சிவாஜி கணேசனை அணுகி, அவரிடம் இந்தப் படத்தின் கதையைக் கூறி இப்படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் உங்களது சம்பளத்தை படத்தின் வசூலில் இருந்து பெற்றுக்கொண்டால் பேருதவியாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார். சிவாஜி ஸ்ரீதரின் மேல் இருந்த பெரும் நம்பிக்கையால், சாவித்திரி பத்மினி ஆகியோரிடமும் இதை எடுத்துக் கூறி மூவரும் ஒரு பைசா கூட பெறாமல் நடித்துக் கொடுத்தனர். படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இது ஸ்ரீதர் 1992ல் கல்கியில் எழுதிய தொடரில் சிவாஜியின் பெருந்தன்மையை வியந்து எழுதியது.(thanks Mr.Rajan ponnusamy)

ifohadroziza
22nd February 2014, 03:28 PM
After seeing DEIVAMAGAN movie,ulaga maha nadigan Mr.MARLON BRANDO told that hereafter every one should call Mr.SIVAJI GANESAN AS ULAGA MAHA NADIGAN and not me.Thank u Mr BALUSAMY.( ex BSNL OFFICER ,VERY GENIUS PERSON)for your valuable information.

parthasarathy
22nd February 2014, 06:42 PM
அமரதீபம் படத்தயாரிப்பின் ஒரு சுவையான பின்னணி.
ஸ்ரீதர் அவர்கள் இந்தப் படத்தை சொந்தமாக தயாரிக்க விரும்பினார். நிதிப்பற்றாக்குறை காரணமாக அவர் சிவாஜி கணேசனை அணுகி, அவரிடம் இந்தப் படத்தின் கதையைக் கூறி இப்படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் உங்களது சம்பளத்தை படத்தின் வசூலில் இருந்து பெற்றுக்கொண்டால் பேருதவியாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார். சிவாஜி ஸ்ரீதரின் மேல் இருந்த பெரும் நம்பிக்கையால், சாவித்திரி பத்மினி ஆகியோரிடமும் இதை எடுத்துக் கூறி மூவரும் ஒரு பைசா கூட பெறாமல் நடித்துக் கொடுத்தனர். படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இது ஸ்ரீதர் 1992ல் கல்கியில் எழுதிய தொடரில் சிவாஜியின் பெருந்தன்மையை வியந்து எழுதியது.(thanks Mr.Rajan ponnusamy)

Dear Mr. Chandrasekhar,

It's really heartening to note that you have also joined this great Thread!

Congratulations and keep info and your notes flowing!!

Regards,

R. Parthasarathy

Russellbpw
22nd February 2014, 09:17 PM
யாருக்கும் கிடைக்காத பெருமை
அன்றே உலக அளவில் சிறந்த நடிகனாக அங்கிகாரம் கிடைத்து உலக நாயகன் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார் !
இதில் எந்த அரசியலும் ..சிபாரிசுகளும் கிடையாது !
தன் சொந்த திறமைக்கு கிடைத்த பரிசு !
இவருடன் சேர்ந்து மற்றவர்கள் பெருமை பெற்றுக்கொள்ளலாம் !

3148

Russellbpw
22nd February 2014, 09:25 PM
தலாய் லாமா அவர்கள் சென்னை வந்தபோது ...நமது நடிகர் திலகத்தின் திறைமை கேள்விப்பட்டு, உத்தமபுத்திரன் படபிடிப்பில் சந்தித்தார். இருவரும் நட்பு பரிமாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

நடிகர் திலகத்தின் திறமையை கண்டு அவரை மனதார பாராட்டியவர்கள், வாழ்த்தியவர்கள் சாதாரண துக்கடா அரசியல் வாதிகள் அல்ல என்பதை இளைய தலைமுறையினரும்..இன்னும் சிவாஜியை பற்றி தவறான தகவல்களை காசுக்காக கூட கும்பிடு போட்டு பொய் செய்தி பரப்பும் புண்ணியவான்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

3149

Russellbpw
22nd February 2014, 09:39 PM
நடிகர் திலகம் ஏற்ற பல கதாபாத்திரங்கள் சரித்திர சகாப்த புகழ் வாய்ந்தவை. உதாரணம் - அலெக்சாண்டர் என்ற மாவீரன். NTR அவர்கள் தயாரிப்பில் உருவான படம் சாணக்ய சந்திரகுப்தா இதில் சானக்யனாக நாகேஸ்வர ராவ் அவர்கள், சந்திர குப்தராக NTR அவர்கள் நடித்தார்கள்.

இதில் அலெக்சாண்டர் என்ற மாவீரனை பற்றிய கிளைகதையில் யாரை நடிக்க வைக்கலாம் என்பதில் யாருக்கும் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் ஏகமனதாக முன்மொழிந்த ஒரே பெயர் "சிவாஜிகாரு"

1956இல் ரிச்சர்ட் பர்டன் என்கிற வெல்ஷ் நடிகர் அலேசேண்டேராக நடித்து வெளிவந்த படம், Alexander - the Great !

வேடபொருத்தம் எப்படி உள்ளது என்பதை கண் கூடாக பாருங்கள் ...

3150

Russellbpw
22nd February 2014, 09:43 PM
சில அறிய புகைப்படங்கள் எனது இனிய நண்பர் திரு ஆனந்த் அவர்கள் கைவண்ணத்தில்....

உலக புகழ் நடிகர் மர்லான் பிராண்டோ மற்றும் உலக புகழ் நடிகர் நடிகர் திலகம் - படபிடிப்பு ஒப்பனையில் !

3151

Russellbpw
22nd February 2014, 09:47 PM
மற்ற ஊரு நடிகர்கள் நம் இதர நடிகர்களுடன் எப்படி இருந்தார்கள்...அதே மற்ற ஊரு நடிகர்கள் நடிகர் திலகத்திடம் எப்படி அன்னியோன்யமாக இருந்தார்கள் என்பதற்கு ஒரு சிறிய சான்று !

நடிகர் திலகத்தை தவிர எந்த நடிகராவது பிற ஜாம்பவான்களுடன் இப்படி நட்பு பாராட்டியது உண்டா ?

Nadigar Thilagam with the Doyens of Telugu Film Industry Mr.NTR & Mr.ANR

3152

Russellbpw
22nd February 2014, 09:52 PM
நன்றி மறந்த நயவஞ்சக தயாரிப்பாளர் இயக்குனர் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகத்திடம் மட்டுமே நட்பு பாராட்டும் திரு பீம்சிங் அவர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு.

நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியின் சாதனை என்றென்றும் உயிரோட்டம் உள்ளவை !

3153

Russellbpw
22nd February 2014, 09:59 PM
நடிகர் சுனில் தத் நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மற்றும் நடிகர் திலகத்தின் ஆராதகர் !

அவருடைய பாராட்டு மடல் !

3154

Russellbpw
22nd February 2014, 10:01 PM
நமது நடிகர் திலகத்தின் அருங்காட்சியகம் !

3155

Russellbpw
22nd February 2014, 10:06 PM
நடிகர் திலகத்துடன் புகைப்படம் எடுக்க விரும்பி நமது நடிகர் திலகத்தை அமரசெய்து அனைத்து பிரபலமான ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் அவர் அருகில் சாய்ந்தும் நின்றும் எடுத்துக்கொண்ட புகைப்படம்..

திறமயாளரான நடிகர் திலகம் அவர்களுக்கு மட்டுமே உலக அளவில் இந்த அங்கீகாரம் !

3156

Russellbpw
22nd February 2014, 10:11 PM
மற்றவர்களிடம் போல வெறும் சம்ப்ரதாய பேச்சு அல்ல நம் நேருவினுடயது !...ஆத்மார்த்தமான உரையாடல் !

திராவிட அரசியல்வாதிகளுக்கு நடிகர் திலகத்திடம் உள்ள பொறாமையின் காரணம் இது தான் ! இதனால்தான் !

3157

Russellbpw
23rd February 2014, 11:15 AM
இன்று பிறந்தநாள் காணும் அம்மு என்று மிக நெருங்கியவர்கலால் மட்டுமே அழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இவருடைய பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு தலைமை தாங்கியவர் நம்முடைய கலைமகளின் அவதாரமாம் நடிகர் திலகம் அவர்கள்.

நடனம் முடிந்து ஆசீர்வதிக்கையில் "நீ நன்றாக வருவாய்" எனது பரிபூரண ஆசிகள்" என்று மனதார வாழ்த்தியவர் நம் கலைவாணியின் அருள் பெற்ற நடிகர் திலகம்.

கதாநாயகியாக நடிக்க தொடங்கிய காலத்தில்

முதலில் 1966இல் நடிகர் திலகத்தின் மகளில் ஒருவராக மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன் தோன்றினார். - 100 நாட்கள் ஓடிய படம்.

http://www.youtube.com/watch?v=0qH0LQUgU6U

பிறகு 12-04-1968, கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக "வந்த இடம் நீ நல்ல இடம் வரவேண்டும் காதல் மகராணி" என்று வரவேற்க்கபட்டார் - படு ஸ்லிமாக ஸ்டைல்ஆக உள்ள நடிகர் திலகத்துடன் நல்ல கதாபாத்திரம் - 100 நாட்கள் ஓடிய படம்

http://www.youtube.com/watch?v=G9BPzusiYJY


6 மாத இடைவெளியில் 21-10-1968 மீண்டும் நடிகர் திலகத்துடன் "எங்க ஊர் ராஜா" - நல்ல ஒரு வெற்றி படமாக மீண்டும் அமைந்தது.

http://www.youtube.com/watch?v=YN_bt0WuODE

கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்கு பிறகு 05-09-1969, மீண்டும் நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். திரைப்படம் "தெய்வ மகன்" - நடிகர்களில் அதிக நூறு நாட்கள் படங்களை கொடுத்த நடிகர் திலகத்துடன் ஜோடி - 100 நாட்கள் படமாக ஜெயலலிதாவிற்கு அமைந்து மார்க்கெட் உயர வழி செய்தது

http://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o

14-01-1970 மூன்று மாத இடைவெளியில், நல்ல ஒரு குணசித்திர நாயகியாக "எங்க மாமா " திரைப்படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் ஜெயலலிதாவிற்கு - 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் நல்ல ஒரு வசூல் மற்றும் அனைவரும் பாராட்டிய படமாக அமைந்தது.

http://www.youtube.com/watch?v=8WNqcmi1rrQ

29-10-1970 ஒன்பது மாத இடைவெளியில் ஜெயலலிதா நல்ல ஒரு நடிப்பை வெளிபடுத்திய படம் நடிகர் திலகத்துடன் எங்கிருந்தோ வந்தாள். டூயட் பாடும் நாயகியாக மட்டுமே மற்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட ஜெயலலிதா நடிகர் திலகத்தின் படங்களில் நல்ல பாத்திரம் நல்ல நடிப்பு ஆகியவை கிடைக்க பெற்றார். - மீண்டும் 100 நாட்கள் படம்

http://www.youtube.com/watch?v=D8A9LU3d_IQ

27-11-1970 - பீம்சிங் அவர்களின் ஒரே கலர் படம் பாதுகாப்பு. மிகவும் வித்தியாசமான ஒரு பாத்திர படைப்பு. நடிகர் திலகத்தின் ஜோடி - படம் சரியான வரவேற்ப்பை பெறவில்லை ஆனால் ஜெயலலிதாவிற்கு நல்ல பெயர் பெற்ற படமாக அமைந்தது. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும் அல்லவா. நடிகர் திலகத்துடன் சேர்ந்த ஜெயலலிதாவும் மணம் பெற்றார்.

http://www.youtube.com/watch?v=LBh-R_0cFBQ

14-04-1971 - ஐந்து மாத இடைவெளியில் திரைப்பட நடிகையாகவே நடித்த சுமதி என் சுந்தரி வெளியானது - வித்தியாசமான ஒரு பாத்திரம். நடிகர் திலகத்துடன் நல்ல ஒரு நடிப்பை வெளிபடுத்தினார். வசூலிலும் முதன்மை பெற்ற படம்.

http://www.youtube.com/watch?v=lm34oyKgqCA

03-07-1971 இரெண்டரை மாத இடைவெளியில் அருமையான ஒரு சவால் விடும் பாத்திரம் நடிகர் திலகதிருக்கு எதிராக " சவாலே சமாளி " - சிட்டுகுருவிகென்ன கட்டுப்பாடு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒரு கதாபாத்திரம் - பிரமாண்ட வெற்றி பெற்ற படம் - நடிகர் திலகத்தின் 150வது படத்தின் கதாநாயகியாக நடிக்க நல்லதொரு வாய்ப்பினை பெற்று சரியாக பயன் படுத்திகொண்டார். - 100 நாட்கள் படம்.

http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE

26-01-1972 - சரியாக ஆறு மாத இடைவெளி தமிழ் திரை உலகில் இது வரை காணாத புதிய பரிமாணத்தில் நடிகர் திலகம் படு ஸ்டைலாக ஸ்டைலின் உச்சமாக தோன்றிய "ராஜா". நாயகி ஜெயலலிதா - ஜானி மேரா நாம் என்ற ஹிந்தி படத்தின் தமிழாக்கம். ஹிந்தியில் ஹேமமாலினி செய்த பாத்திரம் ஜெயலலிதா செய்தார். இதுவரை தோன்றாத ஒரு ஸ்டைலான உடைகள் ஜெயலலிதா இந்த படத்தில் உடுத்தினார். - மிக பெரிய வசூல் பிரளயம் - ராஜா - 100 நாட்கள் படமாக அமைந்தது.

http://www.youtube.com/watch?v=cqjbdAA5zNU

06-05-1972 - நாலு மாத இடைவெளியில் நடிகர் திலகத்துடன் மீண்டும் ஆனால் இந்த சமயம் கருப்பு வெள்ளை படம் - தமிழ் திரை உலகில் கருப்பு வெள்ளை படங்களில் அதிக முதன்மையான வசூல் சாதனை மற்றும் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்ற நடிகர் திலகத்தின் "பட்டிகாடா பட்டணமா" - சவாலான ஒரு வேஷம், நடிகர் திலகம் மூகய்யனாக வாழ்ந்த படம் - என்னடி ராக்கம்மா பல்லாக்கு எடுத்து என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் - நடிகர் திலகத்துடன் முதன் முதலாக குத்து பாட்டு - 200 நாட்கள் கடந்த ஒரே கருப்பு வெள்ளை படம்.

http://www.youtube.com/watch?v=nUqazZZR3ms

15-07-1972 ஒன்றரை மாத இடைவெளி - மீண்டும் நடிகர் திலகத்துடன் "தர்மம் எங்கே " - மற்றவர்களுடைய கண் பட்டதோ என்னமோ, படம் மிக மிக சராசரியே !

http://www.youtube.com/watch?v=9o6Ja9XXvuk

07-12-1972 - நான்கு மாத இடைவெளியில் நடிகர் திலகத்துடன் " நீதி " - கண் திருஷ்டி களைந்து வசூலில் சக்கை போடு போட்ட படம் - 100 நாட்கள் படமாக மீண்டும் அமைந்தது.

http://www.youtube.com/watch?v=lvUb1m0f5Bk

07-03-1974 ஒரு வருடம் ரெண்டு மாத இடைவெளி விட்டு நடிகர் திலகத்துடன் நடித்து வெளிவந்த படம் " தாய் " - சராசரி படம் - சுமாரான வெற்றி !


13-11-1974 எட்டு மாத இடைவெளிவிட்டு நடிகர் திலத்துடன் வெளிவந்துசுமாரான வெற்றி பெற்ற படம் "அன்பை தேடி". வருடங்கள் ஓட ஓட ஜெயலலிதா சற்றே இளமை சிறிது குன்றி வயது சிறிது காட்டி கொடுக்க தொடங்கிய தோற்றம்.

http://www.youtube.com/watch?v=DAf4xFxVSsU

11-04-1975 இல் மீண்டும் நடிகர் திலகத்தின் லேண்ட்மார்க் படம். 175வது படம் - அவன் தான் மனிதன். திரைப்படம் முழுதும் - என்னை வாழ வைத்த தெய்வம் , என்னை வாழ வைத்த தெய்வம் என்று கூறும் ஒரு பாத்திரம். அதில் உண்மையும் இருந்தது என்பதை அனைவரும் அறிவர் ! - மீண்டும் 100 நாட்கள் படம்

http://www.youtube.com/watch?v=TyjBHMV-yTw

06-12-1975 எட்டு மாத இடைவெளியில் "பாட்டும் பரதமும்" வெளிவந்தது. சற்றே முதிர்ச்சி மேலும் அப்போது நிலவிய அரசியல் சூழல் - படத்தின் வெற்றியை வெகுவாக பாதிக்க - சுமாரான ஓட்டம் - ரசிகர்கள் சிறிது இளமை பொலிவை இழந்த ஜெயலலிதாவை பார்க்க நேர்ந்தது.

http://www.youtube.com/watch?v=UqnNOMbt-nM

22-10-1976, சித்ரா பௌர்ணமி - ஜெயலலிதா நடிகர் திலகத்துடன் நடித்த கடைசி படம். அரசியலில் Thiru. MGR உடன் பங்கு கொள்ள செல்வதற்கு முன்னால் வந்த படம் - அனைவரும் எதிர்பார்த்தபடி ஒரு தோல்வி படம் !

http://www.youtube.com/watch?v=8Fzm8HVzge0

18 திரைப்படங்கள் நம் நடிகர் திலகத்துடன் செல்வி ஜெயலலிதா நடித்தார்.

நடிகர் திலகத்துடன் நடித்ததால் ஒரு கதாநாயகியாக 18 படங்கள் நடித்து பிற்காலத்தில் நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்ற நடிகையாக விளங்கினார்.

நடிகர் திலகமும், ஜெயலலிதாவும் இனைந்து நடித்த படங்களில் வியாபார ரீதியாக வெற்றி பெறாத படங்களாக " பாதுகாப்பும் ", "சித்ரா பௌர்ணமியும் " அமைந்தன.

ஆக, 18 படங்களில் வியாபார ரீதியாக 16 படங்கள் வெற்றி படங்களாகவும், 9 படங்கள் 100 நாட்களும் அதற்க்கு மேலும் ஓடிய படங்கள் - அதில் ஒரு படம் 200 நாட்கள் ஓடிய படமாகவும் ஜெயலலிதாவிற்கு அமைந்தது !

ifohadroziza
23rd February 2014, 02:12 PM
namathu nadigar thilagam avargal elloraiyum aakki parthavar,yaraiyum alithhu parthavar kidaiyathu.nandri thiru.RAVIKIRAN sir.

ifohadroziza
23rd February 2014, 02:37 PM
SELVI J.JEYALALITHA avargal ethanaiyo padam nadithirunthalum avarkalukku peyar vangi thantha padam engiruntho vanthal ondru mattum than.

Russellbpw
23rd February 2014, 03:38 PM
நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்து வெளிவந்து, வெள்ளிவிழா கண்ட சிவாஜி PRODUCTIONS "சந்திப்பு" சென்ற வெள்ளி முதல் சென்னை மகாலச்மியில் வெளியாகி சிறந்த வரவேற்ப்பு பெற்றுள்ளது.

தலைவன் சிவாஜி டாட் காம் என்ற இணையதளத்தின் சொந்தக்காரர் திரு இன்பா அவர்கள் ராம் பிரபு PICTURES என்ற பட வினியோகஸ்த நிறுவனம் தொடங்கி, வெளியிடும் முதல் திரைப்படம். சந்திப்பு .

அவர்கள் மேன்மேலும் வளர நமது பூரண நல்லாசிகள். !

http://www.youtube.com/watch?v=zD-alvbaDRk

rangan_08
23rd February 2014, 07:08 PM
It was nice to meet Raghavendra sir & Murali sir after a long time, near Mahalakshmi theatre. Hope fans enjoyed "Sandhippu" with the usual allapparais.

ifohadroziza
23rd February 2014, 08:47 PM
சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி சில வரிகள்...கண்ணதாசன்.

எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !

–கவியரசு கண்ணதாசன்

ifohadroziza
23rd February 2014, 09:16 PM
Dear Parthasarathy sir ,my belated thanks to you.I am not genius as you,Murali and the other experience hubbers.Itry my best and share the news as i can.Thankyou

Subramaniam Ramajayam
24th February 2014, 01:55 AM
MURALI sir can you give a brief about SANDIPPU aravaragal sunday even show at mahalakshmi and forth coming rereleses of NT at madras.

JamesFague
24th February 2014, 12:20 PM
Fans as usual assembled in good numbers for the screening of Santhippu at
Mahalakshmi Theatre and usual gala celebrations. I expect the remaining news
will be shared by Mr Murali Srinivas for the benefit of millions of our fans.

KCSHEKAR
24th February 2014, 03:13 PM
நான் சுவாசிக்கு சிவாஜி (21) - ஒய்.ஜி. மகேந்திரன்
சிவாஜி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும், கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ரஜினி, சிவாஜியின் பெரிய ரசிகர்.

சென்னை விஜயா - வாஹினி ஸ்டுடியோவில், ரஜினியின், தனிக்காட்டு ராஜா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கன்னட தயாரிப்பாளர் ஒருவர், ரஜினியை சந்தித்து, சிவாஜி நடித்த, தெய்வ மகன் படத்தை, கன்னடத்தில், ரீ-மேக் செய்ய விரும்புவதாகவும், அதில், ரஜினி நடிக்க வேண்டும் என்ற, தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.

ரஜினி என்னை அழைத்து, அந்த தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தி, 'இவர் சொல்வதை கேட்டு, பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்...' என்றார். தயாரிப்பாளரும் ரஜினியிடம் கூறியதை என்னிடமும் கூறினார். உடனே நான், 'இவர் மட்டுமல்ல, வேறு எந்த நடிகராலும், தெய்வ மகன் ரீ-மேக்கில் நடிக்க முடியாது. அவ்வாறு செய்ய முயற்சிப்பது பைத்தியக்காரத்தனம்...' என்றேன். இதைக் கேட்ட ரஜினி, 'நானும், இந்த விஷ பரிட்சை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனாலும், சிவாஜியைப் பற்றி முழுமையாக அறிந்தவர் என்ற முறையில், நீங்கள் சொன்னால், அவர் நம்புவார் என்று தான், உங்களைப் பேசச் சொன்னேன்...' என்றார். ரஜினியின் பெருந்தன்மையை கண்டு வியந்தேன்.

கடந்த, 1980களில், ரஜினியும், நானும் பல படங்களில் இணைந்து நடித்துக் கொண்டிருந்த சமயம் அது. நெற்றிக்கண் படத்தில் நடிக்க ஒப்பந்தமாயிருந்தார் ரஜினி. ஒரு நாள் இரவு, எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர், 'நெற்றிக் கண் படத்தில், நான் சமுதாயத்தில் மேல் மட்டத்தில் இருக்கும், மிகப்பெரிய பணக்காரர் வேடத்தில் நடிக்க வேண்டும்; அதற்கு உங்க டிக் ஷனரியைப் பார்த்து, மாடல் சொல்லுங்க...' என்றார். 'டிக் ஷனரியை பார்த்து நான் சொல்ல வேண்டாம். நாம் இருவரும் சேர்ந்தே டிக் ஷனரியை பார்த்துவிட்டு வரலாம், வாங்க...' என்று கூறி, சிவாஜியின், உயர்ந்த மனிதன் படம் ஓடிக் கொண்டிருந்த, சென்னை பாரகன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். படத்தில், சவுகார் ஜானகியிடம், சிவாஜி கோபமாக பேசும் காட்சி... பணக்காரருக்கு கோபம் வந்தால், அது, கட்டுப்படுத்தப்பட்ட கோபமாக இருக்கும். அதாவது, கோபம் இருக்கும். ஆனால், இரைந்து கத்தி, பேசமாட்டார். அந்த காட்சியைப் பார்த்ததும், ரஜினியிடம் அது பெரிய, பாதிப்பை ஏற்படுத்தியது. அதே போல் மற்றுமொரு காட்சியில், தன்னிடம் நீண்ட காலமாக பணிபுரிந்த வயதான ஊழியரிடம், அவருடைய விசுவாசத்தை பாராட்டி, தட்டிக் கொடுத்து, வழி அனுப்புவார். அப்போது, சிவாஜி கண்களில், இரண்டு சொட்டு கண்ணீர் வரும். இங்கும், பணக்காரரின் கட்டுப்படுத்தப்பட்ட, கம்பீரமான சோகத்தை வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி. இந்த காட்சியையும், வெகுவாக ரசித்தார் ரஜினி. உயர்ந்த மனிதன் படத்தை, ரஜினி பார்ப்பது, அது தான் முதல் முறை. நெற்றிக் கண் படத்தில், செல்வந்தர் வேடத்தில் ரஜினி, அந்த காரெக்டரை உள்வாங்கி நடித்ததற்கு, உயர்ந்த மனிதன் ராஜலிங்கம் பாத்திரம், நிச்சயம் உதவியிருக்க கூடும் என்று, நினைக்கிறேன்.

சிவாஜி மீது, தனக்கு இருக்கும் பாசத்தையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில், படையப்பா படத்தில், தன் தந்தை பாத்திரத்தில் நடிப்பதற்கு சிவாஜியை, 'புக்' செய்த போது, அவருக்கு பெரிய தொகையை அளித்து, அவரை கவுரவப்படுத்தினார் ரஜினி. படப் பிடிப்பின் போது சிவாஜிக்கு எந்த குறையும் ஏற்படாதவாறு கவனமாக பார்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்திருந்தார்.

படையப்பா பட டைட்டிலில், சிவாஜி பெயருக்கு, அடுத்தப்படி தான், ரஜினி பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சிவாஜியின் மீது ரஜினி கொண்டுள்ள மரியாதையின் வெளிப்பாடு தான் இது.
எங்கள் யு.ஏ.ஏ., நாடக குழுவின், 'லைட்ஸ் ஆன்' நாடகத்தின், நூறாவது நிகழ்ச்சி விழாவிற்கு, தலைமை வகிக்க, சிவாஜி கணேசனை அழைக்க, விஜயா - வாஹினி ஸ்டுடியோவிற்கு சென்றிருந்தேன். படையப்பா படத்தின் படப்பிடிப்பு, நடந்து கொண்டிருந்தது. மதிய உணவு நேரம். சிவாஜி சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுப்பார் என்பதால், அவருடைய மேக் - அப் அறைக்குள் போகாமல், வெளியே காத்துக் கொண்டிருந்தேன். அப்போது, சிவாஜியின் உதவியாளர் திரிகோணம், 'சார் தூங்கலை, உள்ளே போய் பாருங்க...' என்றார். உள்ளே போனேன். அடுத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிக்குரிய, வசனங்களை படித்துக் கொண்டிருந்தார் சிவாஜி. எனக்கு ஒரே ஆச்சரியம்.
நடிப்பில் இமாலய சாதனைகளை செய்து முடித்தவர், ஒரு புதுமுகம் போல நடிக்க வேண்டிய காட்சியின் வசனத்தை பார்த்துக் கொண்டிருந்தது, ஆச்சர்யமாக இருந்தது. அது குறித்து அவரிடம் கேட்ட போது, 'நான் இறக்கும் காட்சியைப் படமாக்க போறாங்க... மத்த சீன்களிலே அதிக வேலை இல்லை. இந்த காட்சியில் நான் ஸ்கோர் செய்யணும். அது தான், 'டயலாக்' பார்த்துக் கொண்டிருந்தேன்...' என்றார். தன் தொழில் மீது கொண்டிருக்கும் பக்தி புரிந்தது.

ஜெமினி அதிபர், எஸ்.எஸ்.வாசன் இயக்கி, தயாரித்த வெற்றிப்படம், மோட்டார் சுந்தரம் பிள்ளை. 1966ல் எடுக்கப்பட்ட இப்படத்தில், சிவாஜிக்கு பணக்காரர் வேடம். அப்போது, சிவாஜிக்கு வயது, 37 தான். அப்படத்தில், பதிமூன்று குழந்தைகளுக்கு, அப்பாவாக நடித்திருப்பார். 37 வயதில், பெரிய கமர்ஷியல் கதாநாயகன் என்ற அந்தஸ்து உள்ள, வேறு எந்த ஹீரோவிற்கு, 13 குழந்தைகளுக்கு, அப்பாவாக நடிக்கும் தைரியம் வரும்! மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தை பற்றி, மற்றொரு சுவையான செய்தி: இந்தப் படத்தில். முற்றிலும் மாறுபட்ட, சிவாஜியை, காண்பிக்க வேண்டும் என்பதில், எஸ்.எஸ்.வாசன் தெளிவாக இருந்தார். எனவே, சிவாஜி தவிர மற்ற நடிகர், நடிகையரை அழைத்து, அவர்கள் வசனங்கள் பேசி, நடித்து பழக ஒத்திகைகளுக்கு ஏற்பாடு செய்தார். 'நீங்கள் எல்லாரும் உங்கள் பாத்திரங்களை சரியாக செய்யுங்கள். படப்பிடிப்பின் போது, நான் உங்களை கவனிக்க முடியாது; அதற்கு நேரம் இருக்காது. ஷூட்டிங் சமயத்தில், என்னுடைய முழு கவனமும் சிவாஜியிடம் மட்டும் தான் இருக்கும். சிவாஜியிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக் கொண்டு வருவது தான், என்னுடைய முயற்சியாக இருக்கும்...' என்று விளக்கினார். அவர் கள் அனைவரும், முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டது போல, படப்பிடிப்பின் போது, சிவாஜி மீது மட்டும் அவர் கவனம் செலுத்தினார். இந்த சுவையான செய்தியை, என்னிடம் சொன்னது படத்தில் அவருடைய, சம்பந்தியாக நடித்த, மேஜர் சுந்தர்ராஜன். படம் நூறு நாட்கள் ஓடி, வசூலை வாரி குவித்தது.

ஜெமினி ஸ்டுடியோ அதிபரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.வாசன், இந்தி நடிகர் ராஜேந்திர குமாருடன், ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற, சிவாஜி நடித்த, 'வியட்நாம் வீடு' நாடகத்தை பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும், மேடைக்கு வந்த எஸ்.எஸ்.வாசன், சிவாஜியை கட்டியணைத்து அழுது விட்டார்.
நாடகத்தில், தன் தாயைப் பற்றி, சிவாஜி பேசும்போது, 'பாத்திரத்தோடு பாத்திரமா தேய்ஞ்சாளே, விறகோட விறகா வெந்தாளே...' என்று தன் தாயார் தன்னை வளர்க்க எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்று, வசனங்களில் சொல்வார் சிவாஜி. எஸ்.எஸ்.வாசன், தன் தாயாரை தெய்வமாக மதித்தவர். இந்த நாடகத்தைப் பார்க்கும் போது, தன் தாய், தன்னை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்ற நினைவுகள் வந்து, அழுது விட்டார். வியட்நாம் வீடு நாடக மேடையில், பிரஸ்டீஜ் பத்மநாப அய்யரின் தாயார் படம் மாட்டப்பட்டிருக்கும். அந்தபடம், எஸ்.எஸ்.வாசனின் தாயார் படம். வியட்நாம் வீடு திரைப்படமாக எடுக்கப்பட்டபோதும், எஸ்.எஸ்.வாசனின் தாயார் படத்தையே, படம் முழுவதும் உபயோகித்தார் சிவாஜி.

— தொடரும்.

எஸ்.ரஜத்

Murali Srinivas
25th February 2014, 12:32 AM
ராமஜெயம் சார்,

நேற்று மாலை நாங்கள் [நான் ராகவேந்தர் சார் மற்றும் சித்தூர் (இப்போது சென்னை) வாசுதேவன் மூவரும்] மகாலட்சுமி திரையரங்கிற்கு சென்றிருந்தோம். சரியான கூட்டம். நாங்கள் செல்லும் போதே அலப்பரைகள் ஆரம்பித்து விட்டன. மிகப் பெரிய ராட்சஸ மாலைகள் பானருக்கு அணிவிக்கப்பட்டிருந்தன. வழக்கம் போல் அனைத்து வித சடங்குகளும், அதாவது அபிஷேகம் செய்தல், சூடம் ஏற்றுதல், திருஷ்டி பூசணி சுற்றுதல் போன்றவை பதிவுக்கிரமாய் நடந்தேறியது.

அது என்னவோ தெரியவில்லை அரங்கத்தின் நேர் எதிரே ஒரு போலீஸ் பூத் அமைக்கப்பட்டிருப்பதனால் அங்கே ஒரு காவல் துறையை சேர்ந்த வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இது நீதி இதே அரங்கில் வெளியிடப்பட்டிருந்த போதும் இதே நிலைமைதான் இருந்தது. ஆனால் காவல் துறையினர் ரசிகர்களை எந்த கெடுபிடிகளுக்கும் ஆளாக்காமல் அமைதியாக கடமையை செய்தனர். ரசிகர்களும் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொண்டனர். அதே நேரத்தில் நாம் மேற்சொன்ன வைபவங்களும் வாழ்த்து முழக்கங்களும் ஆட்டம் பாட்டமும் ஒரு உணர்ச்சி வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வெகு வெகு நாட்களுக்கு பின் நண்பர் மோகன் {ரங்கன்] அவர்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான மோகனின் Father In Law அவர்களும் நலமாக இருக்கிறார் என்று அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

நாங்கள் அங்கே நிற்கும் போதே பால்கனி ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது. அரங்கத்தின் கீழ்த்தள டிக்கெட்டுகளும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. வழக்கம் போல் பஸ்ஸில் சென்றவர்கள், கார் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் அனைவரும் பார்த்து வியந்து கொண்டே செல்ல சிவாஜி சேனையின் சக்தி மீண்டும் ஒரு முறை ஸ்ட்ராஹான்ஸ் சாலையில் நிரூபணமானது. ஒரு தவிர்க்க முடியாத வேலை காரணமாக நானும் ராகவேந்தர் சாரும் முக்கியமான ஒருவரை சந்திக்க செல்ல வேண்டியிருந்ததால் படத்திற்கு செல்லாமல் கிளம்பி விட்டோம். நண்பர் வாசு அவர்களும் வீடு திரும்ப வேண்டிய சூழல்.

படத்திற்கு சென்றவர்கள் இரவு படம் முடிந்தவுடன் தொடர்பு கொண்டு பேசிய போது அரங்கத்தின் கீழ் தளத்திலும் சரியான கூட்டம் என்று சொன்னார்கள்.

படத்தை வெளியிட்டுருப்பவருக்கு நிச்சயமாக லாபத்தை ஈட்டி தரும் என்பதிலும் சந்தேகமில்லை என்பது அங்கே அரங்கத்தை சேர்ந்த சிலருடன் பேசிய போது தெளிவானது. படத்தை வெளியிட்ட நண்பருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

அரங்கத்திற்கு வெளியே எடுத்த சில புகைப்படங்கள். நன்றி ராகவேந்தர் சார்!

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/1962762_684758181574857_227348817_n.jpg

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/1508005_684758194908189_39362558_n.jpg

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc1/t1/1964793_684758428241499_142822415_n.jpg

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1/1932331_684758344908174_1448486042_n.jpg

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1/1970872_684758484908160_550853611_n.jpg


அன்புடன்

Murali Srinivas
25th February 2014, 12:53 AM
ராமஜெயம் சார்,

சென்னையில் அடுத்து வெளியாகப் போகும் நடிகர் திலகத்தின் படங்கள் எவை என்று பார்த்தோமென்றால் அவற்றின் பட்டியல் இவ்வாறு அமையலாம்.

தங்க சுரங்கம்.

அண்ணன் ஒரு கோவில்

அவன்தான் மனிதன்

வைர நெஞ்சம்

வெள்ளை ரோஜா

தியாகம்.

மேலும் நமக்கு மிகவும் பிடித்த சில படங்கள் இந்த பட்டியலில் இடம் பிடிக்கலாம். அவை இன்னும் பேச்சு வார்த்தையில் இருப்பதால் அந்த விவரங்களை பிறகு வெளியிடுகிறேன். கலர் படங்கள் மட்டுமல்ல சில கருப்பு வெள்ளைப் படங்களும் அதில் அடக்கம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

கோவையில் அடுத்து வெளியாகப் போகும் படம் சொர்க்கம். மார்ச் 7 முதல் [tentative date] ராயலில் வெளியாகிறது. சென்னையில் வெளியாகும் அனைத்துப் படங்களும் இனி கோவையிலும் வெளியாகும்.

அது போன்றே மதுரையில் விரைவில் வைர நெஞ்சம் படத்துடன் துவங்கப் போகிறது வெற்றி உலா. நெல்லையில் ஏற்கனவே நமது படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இது போன்ற சூழல் தமிழகமெங்கும் விரைவில் காணலாம்.

மேலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

அன்புடன்

Subramaniam Ramajayam
25th February 2014, 08:28 AM
ராமஜெயம் சார்,

சென்னையில் அடுத்து வெளியாகப் போகும் நடிகர் திலகத்தின் படங்கள் எவை என்று பார்த்தோமென்றால் அவற்றின் பட்டியல் இவ்வாறு அமையலாம்.

தங்க சுரங்கம்.

அண்ணன் ஒரு கோவில்

அவன்தான் மனிதன்

வைர நெஞ்சம்

வெள்ளை ரோஜா

தியாகம்.

மேலும் நமக்கு மிகவும் பிடித்த சில படங்கள் இந்த பட்டியலில் இடம் பிடிக்கலாம். அவை இன்னும் பேச்சு வார்த்தையில் இருப்பதால் அந்த விவரங்களை பிறகு வெளியிடுகிறேன். கலர் படங்கள் மட்டுமல்ல சில கருப்பு வெள்ளைப் படங்களும் அதில் அடக்கம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

கோவையில் அடுத்து வெளியாகப் போகும் படம் சொர்க்கம். மார்ச் 7 முதல் [tentative date] ராயலில் வெளியாகிறது. சென்னையில் வெளியாகும் அனைத்துப் படங்களும் இனி கோவையிலும் வெளியாகும்.

அது போன்றே மதுரையில் விரைவில் வைர நெஞ்சம் படத்துடன் துவங்கப் போகிறது வெற்றி உலா. நெல்லையில் ஏற்கனவே நமது படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இது போன்ற சூழல் தமிழகமெங்கும் விரைவில் காணலாம்.

மேலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

அன்புடன்

thanks Murali sir for sharing not only madras news and also forthcoming rereleases of our BOX OFFICE hero NADIGARTHILAGAM,in all centres. sandippu will dinitely make a record,
Kalangal maralam rasanaigal maralam but our NADIGARTHILAGAM
values remains at skyhigh ALWAYS,being proved every now and then.
my kind enquiries to all our SHANTI friends.

uvausan
25th February 2014, 01:06 PM
<a href="http://s818.photobucket.com/user/jravikumar/media/MoondruDeivangalwithout_zps1ebbe773.jpg.html" target="_blank"><img src="http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/MoondruDeivangalwithout_zps1ebbe773.jpg" border="0" alt=" photo MoondruDeivangalwithout_zps1ebbe773.jpg"/></a>

uvausan
25th February 2014, 01:13 PM
மூன்று தெய்வங்கள் - சில ஆவணங்கள்

என் அலசலில் - மூன்று தெய்வங்களின் ஆவணங்களை சில technical snag னால் முன்பு பதிவிட முடியவில்லை - வாசுவின் உதவி மூலம் , அந்த இடைஞ்சலை இப்பொழுது தவிர்க்க முடிந்தது - நன்றி வாசு




http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/MoondruDeivangalwithout_zps1ebbe773.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/MoondruDeivangalwithout_zps1ebbe773.jpg.html)

uvausan
25th February 2014, 01:16 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/152_zps0cd0eef7.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/152_zps0cd0eef7.jpg.html)


http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/MoondruDeivangal_zps1f244414.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/MoondruDeivangal_zps1f244414.jpg.html)

uvausan
25th February 2014, 01:17 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/3dthuqlaqreviewfw_zps89dc8f84.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/3dthuqlaqreviewfw_zps89dc8f84.jpg.html)

uvausan
25th February 2014, 01:29 PM
ப்ராப்தம் தொடர்கின்றது -------

இந்த படத்தின் சில சிறப்பு அம்சங்கள்

1. இந்த படத்திலும் nt பணம் வாங்கவில்லை - மற்ற காரணங்களால் ஏற்பட்ட நஷ்டங்களிலும் பெரும் பகுதியை nt ஏற்று கொண்டார் .

2. தான் சொன்ன சில மாறுதல்களை சாவித்திரி ஏற்று கொள்ளாவிடிலும் அதனால் மனம் தளராமல் உதவி செய்தார்

3. பாடல்கள் மூலம் படம் நஷ்டத்தை ஈடு செய்தது

4. படத்தில் அதிகமாக தெலுங்கு வாசனை இருக்கும்

5. படத்தில் nt யின் நடிப்பு புதுமையாகவும் அருமையாகவும் இருக்கும்

தொடரும்

அன்புடன் ரவி

uvausan
25th February 2014, 04:21 PM
ஒரு படத்தின் வெற்றி என்பது - 100 நாட்கள் , அதற்கும் அதிகமாக ஓடினதை வைத்து மட்டுமே கணக்கிட முடியாது - படத்தின் கதை , பாடல்கள் , இயக்கிய விதம் , ஒளிபதிவு , தேர்ந்து எடுக்கப்பட்ட நடிகர்கள் , நகைச்சுவை கதையுடன் ஒட்டி போகுதல் , கதையின் விறுவிறுப்பு - இப்படி பல - இப்படி ஒன்றுமே இல்லாத பல படங்கள் 100 நாட்களும் , அதற்கும் மேலாக ஒட்டப்பட்டுள்ளன ( ஓடவில்லை) -

அந்த படத்தை பார்த்தாலே தெரியும் - ஓடினதா அல்லது , ஓட்ட படுள்ளதா என்று - அந்த படங்களில் - மற்றவர்களுக்கு வாய்ப்பு தராமல் , கதா நாயகனே தேவை இல்லாமல் இரண்டு வேடங்களில் வருவார் - ஒருவர் அதில் கெட்டவனாக இருந்தால் , அதற்க்கும் தனி வழியில் ஒரு கதை இருக்கும் - பட முடிவில் அவரையும் மனிதரில் மாணிக்கமாக காண்பித்து விடுவார்கள் - பல நடிகைகள் அவரை ஒரு தலையாக காதலிப்பார்கள் - அவர்கள் மட்டுமே காய , மன்னிக்கவும் கனவு காண வேண்டும் - ஹீரோ வுடன் ஓடி , ஆட - ஹீரோ ஒரு ராமனாக வே இருப்பான் ( ஆண்களில் ராமன் கிடையாது என்றாலும் -----)

வில்லன் , யம லோகத்தில் இருந்து இறக்குமதி ஆனது போல் , போல பாவத்தின் மொத்த வடிவமும் அவனே - அவனுக்கு ஹீரோ வை அடிப்பதுபோல ஒரு கனவு காட்சி கூட கிடையாது - தேவையில்லாமல் சத்தம் போட்டு சிரிக்க வேண்டும் - ஆனால் ஹீரோ விடம் அடி வாங்க தயங்க கூடாது - துப்பாக்கி , வெடி குண்டு (RDX ) கையில் வைத்திருந்தாலும் , ஹீரோவை பார்த்தவுடன் , அவைகள் சக்தியை இழந்துவிடும் - ஹீரோ விற்கு கண்ணிலாத சகோதரி , கணவன் இல்லாத தாய் கண்டிப்பாக இருக்கவேண்டும் - நகைச்சுவை என்பது ஒரு மருந்துக்கும் இருக்காது - அப்படி இருந்தாலும் ஹீரோ வை புகழ மட்டுமே அவை உபயோகப்படும் - மலையின் உச்சியில் , கண்கள் இல்லாத சகோதரியை வில்லன் கீழே தள்ள முயற்சிப்பான் - ஹீரோ காதலித்துகொண்டோ , அல்லது வீட்டில் தாய் கொடுக்கும் உணவை சாப்பிட்டுகொண்டோ , அப்படியே காலால் மலையின் உச்சியில் இருக்கும் வில்லனை அடிப்பார் ( theatre இல் விசில் பறக்கும்) - வில்லன் ஓடிவந்து , காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார் - ஹீரோ இரண்டு வேடம் இருந்தால் - இருவரும் சகோதர்கள் ஆகிவிடுவார்கள் - அதற்க்கு ஒரு "பின் கதை" இருக்கும் - நம் எல்லோர் காதிலும் குறைந்தது 20 முழமாவது பூவை சுத்துவார்கள் .

இப்படி எந்த மசாலாவுமே இல்லாமல் யதார்த்தமாக வந்து வெற்றி வாகை சூடியவைகள் தான் NT யின் படங்கள் - அதனால் வெற்றி என்று வேறு எவருக்காவது யாராவது சொன்னால் அது பல நடிகைகள் ஹீரோவுடன் சேர்ந்து காணும் கனவு கட்சிகள் போல - அதில் உண்மை கடுகளவும் இருக்காது , இருக்க முடியாது

அன்புடன் ரவி
:):smokesmile:

uvausan
25th February 2014, 09:40 PM
கதை சுருக்கம்

கண்ணன் & ராதா இளம் ஜோடி , காலேஜ்இல் ஒன்றாக படித்தவர்கள் - திருமணம் நன்றாகவே நடந்தது .அவர்களை தேன் நிலவுக்கு அனுப்ப அவர்களுடைய காலேஜ் முழுவதுமே திரண்டு வந்து வாழ்த்தி வழி அனுப்பியது - கதை அருமையாக ஆரம்பித்து மெதுவாக அவர்களின் பூர்வ ஜென்ம வாழ்க்கைக்கு அழைத்து சென்றது . சொந்தங்கள் ஒரு தொடர் கதை , முடிவே இல்லாதது என்பதை எடுத்துக்காட்டவே அவர்களின் முந்தய பிறவியின் தொடர்பை நமக்கு தெளிவு படுத்துவார்கள் . கதையுடன் நாமும் சற்றே பின்னோக்கி செல்கிறோம் -----

கண்ணன் , கோபியாக படகு ஓட்டும் பணியில் இருக்கிறான் - அவனின் உள்ளம் ராதாவை விரும்பிகின்றது - தடையாக வருவது அவர்களின் ஜாதி , அந்தஸ்து ---- இதன் நடுவில் கண்ணை gowri என்னும் பெண் , கண்ணனின் ஊரை சேர்ந்தவள் ஒருதலையாக காதலிக்கின்றாள் - கண்ணன் ராதாவை தானே விரும்புவான் !!

ராதாவின் மாமா கெளரியின் அழகில் மயங்கி அவளை அடையும் முயற்சியில் , கண்ணனால் தோல்வியை தழுவிகின்றார் . ராதாவும் சந்தர்ப்ப வசத்தினால் வேறு ஒருவனை ( ஸ்ரீகாந்த்) திருமணம் செய்துகொள்கின்றாள் - ராதாவின் திருமணம் வெகு நாட்கள் தங்க வில்லை - விளைவு - ராதா ஒரு விதவையாகி விடுகின்றாள் - கண்ணன் - ராதா உன்னதமான உறவை ஊர் ஏற்றுக்கொள்ளவில்லை - முடிவு அவர்களின் முடிவுடன் ஒத்துபோகின்றது - இருவரும் இன்னும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் மீண்டும் கண்ணன் - ராதாவாகவே பிறக்க விரும்பினர் - அவர்கள் விருப்பம் நிறைவேறியது ---- சுபம்

தொடரும்

uvausan
25th February 2014, 10:04 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/11big_zps17ed6ac7.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/11big_zps17ed6ac7.jpg.html)

uvausan
25th February 2014, 10:05 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/1big_zpsa9134364.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/1big_zpsa9134364.jpg.html)

uvausan
25th February 2014, 11:55 PM
ப்ராப்தம் முழு நீள படம் கிடைக்கவில்லை - கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் - அது வரை இதன் ஹிந்தி version - Milan -1967 பார்க்கலாம் - இதன் கலர் இந்த படத்திற்கு ஒரு வெற்றியை தந்தது - இந்த NT தந்த அறிவுரையை சாவித்திரி கேட்டுருந்தால் , படத்தின் ப்ராப்தம் வேறு விதமாக அமைந்திருக்கும் ...


ப்ராப்தம் - அலசல் இத்துடன் முடிவடைகிறது - அடுத்த அலசல் - காவல் தெய்வம் - பிறகு பேசும் தெய்வம் ----- பதிவுகளை பொறுமையாக படிப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள் ---

அன்புடன் ரவி
:):smokesmile:



http://youtu.be/zYNqF3koI7M

uvausan
26th February 2014, 12:16 AM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/GEDC5734-1_zps05682b49.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/GEDC5734-1_zps05682b49.jpg.html)

JamesFague
26th February 2014, 11:49 AM
Mr Ravi

It is nice to see your reviews on Praptam and do continue
your good work.

Mr Murali Sir,

Thanks a lot for your quick response on Santhippu. It shows NT's BO Power once again
and it is a fitting reply to those who are propagating later part movies of NT will not
succeed well.

Regards

uvausan
26th February 2014, 02:54 PM
காவல் தெய்வம்

நம்மில் பெரும்பான்மையோர் கிடைக்க முடியாத வாழ்க்கைக்குத்தான் அதிகமாக அஸ்திவாரம் போடுகிறார்கள் .
கிடைத்த வாழ்க்கையை வெகு சீக்கிரமாக தொலைத்து விடுகின்றோம் - தேடி அது திரும்ப கிடைக்கும் சமயத்தில் வாழ்க்கையும் முடிந்து விடுகின்றது - இந்த இடைப்பட்ட நேரத்தில் , நாம் தான் எல்லாமே என்ற எண்ணம் வேறு !! - பல கற்பனைகள் நமக்குள்ளேயே பிறந்து மடிந்தும் விடுகின்றது -


ஒரு அருமையான பாடலுடன் ' காவல் தெய்வத்தை " அலச விழைகிறேன் ---

" பொறப்பதும் போவதும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்க்கை
பணி முடிந்தபின் ஒய்வது வாழ்க்கை "


பச்சை இலை பழுத்துவிடும் மரத்தினிலே
அந்த பழுத்த இல்லை உதிர்ந்துவிடுமோ
சில தினத்தினிலே -----
இச்சையினால் வந்த இந்த வாழ்கையிலே
என்னை என்ன என்னமோ
செய்ய வைத்தான் வேகத்திலே
( கோரஸ் --பொறப்பதும் ---)


தாய் அணிந்து மகிழ்ததுவும் ஒரு கயிறு
என்னை தாலாட்ட வந்ததுவும் ஒரு கயிறு
தென்னை மரம் ஏறிடவும் ஒரு கயிறு - இன்று
தூக்கிலிட வருவதுவும் ஒரு கயிறு

( கோரஸ்- பொறப்பதும் ---)

ஏறாத மரங்களே இல்லை ஐயா
எதிர்வரும் தூக்கு மரம் ஒரு துரும்பே ஐயா
மாறாத தீர்ப்பு அவன் தீர்ப்பேனையா
அதை மாற்ற வேறு தீர்ப்பு உண்டோ சொல்லுங்க ஐயா

(தனி குரல் -பொறப்பதும் )

guruswamy
26th February 2014, 05:11 PM
Dear Sir,

I extend my sincere thanks for your good wishes. Our N.T. God was my inspiration. Now I'm looking for our legend photo to have it my house (Big) so that everyday i look at N.T. before leaving for my work.

Again thank you very much.

JAIHIND
M. Gnanaguruswamy


Dear Gurusamy sir

Congratulations for your Law Degree

Wishing you come with flying colors in practice like Barrister Rajinikanth,

I am having a photo of NT sir in my office in Gowravam getup

I am searching for a pipe (though I don't smoke to keep it like him)

guruswamy
26th February 2014, 05:15 PM
Dear Mr. Murali Sir,

Many thanks for your good wishes, sure will continue the same way in Masters...

JAIHIND
M. Gnanaguruswamy


அன்பு நண்பர் ரவி,

நாட்கள் செல்ல செல்ல உங்கள் எழுத்துக்களில் மெருகேறி பழுதுகள் [தமிழ் ஸ்பெல்லிங் mistakes] நீங்கி படிப்பதற்கு சுவையாக இருக்கிறது. அது மட்டுமல்ல, உங்கள் உதாரணங்களும் சற்றே கேலி கலந்த சொற்றொடர்களுமாய் ரசிக்க வைக்கிறீர்கள். வாழ்த்துகள். தொடருங்கள்.

Hearty Congrats Mr. Guruswamy! Hope you continue to taste success in Masters also!

அன்புடன்

guruswamy
26th February 2014, 05:23 PM
Dear Sir,

Truly touched by your good wishes and liked the way you have put the last sentence. I must say and admit that all our N.T. fans are very intelligent and intellectual the way they present our N.T. articles and photo's are high standards and it is on par with any standards.

Thank you again for your legal wishes!!

JAIHIND
M. Gnanaguruswamy

guruswamy
26th February 2014, 05:28 PM
Dear Mr. RKS,

Many thanks for your good wishes, infact i as overwhelmed by the congratulations messages from all our beloved fans. I must say all our N.T. fans wishes are blessings for me and i feel i was blessed by the GOD N.T.

Thank you again!

JAIHIND
M. Gnanaguruswamy

Russellbpw
26th February 2014, 05:50 PM
தற்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை ஏடுக்காக நேர்காணல் செய்த வேளையில்

ஜெயலலிதா:சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?

சிவாஜி:இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை.நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு தவிர,வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை.அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது?எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே.அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.

ஜெயலலிதா:நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க நினைக்கிறீங்களா?அப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா?

சிவாஜி:அரசியல் வேறு,நடிப்பு வேறு.நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான் முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது. ஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு.சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு.உதரணமா எனக்கு இரண்டுமாசம் ஓய்வு கிடைக்குதுன்னு வச்சுக்குவோம்.ஒரு மாசம் நான் ஓய்வு எடுத்துக்கலாம்.ஒரு மாசம் கட்சிக்காக உழைக்கலாம். ஆனா கட்சி வற்புறுத்தாது.எப்பவும் வரலாம், போகலாம். அதனால கட்சி,நடிப்பு இரண்டுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. அது வேறு,இது வேறு.

ஜெயலலிதா:தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிறீங்களா?அல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?

சிவாஜி:எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு. இந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும். ஆக நாம் மேலே ஏறினாள்,இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கிழே இழுத்து விட்டுடுது.

ஜெயலலிதா:மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது?

சிவாஜி:நல்ல கேள்வி.கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே,அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம்.ஏன்னா கப்பலோட்டிய அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக் காங்க. கதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம்.ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த,அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது,அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும். அதிலே மாறுபாடு எழக்கூடாது.பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால்,பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே இருந்ததுன்னு சொல்லணும்.அப்போதான் நடிப்பு பூரணத்துவம் பெரும்.அந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம்.இதில் நான் நடிச்சதை பார்த்துட்டு,அந்தப் பெரியவர் வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்ததுபோல இருந்தது' என்று சொன்னார்.ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.

ஜெயலலிதா:சில நாவல்கள் படிக்கிறோம்,கதைகளை கேட்கிறோம்.ஆஹா! அந்த மாதிரி வேஷம் நமக்கு வரக்கூடாதா?கிடைக்காதா?என்று நினைக்கிறோம்.அந்த மாதிரி நீங்க எதிர்பார்த்து நடிச்ச வேஷம் ஏதேனும் இருக்கா?

சிவாஜி:கட்டபொம்மன் வேஷம் அப்படிப்பட்டது.கட்டபொம்மன் கதையை தெருக்கூத்தா நான் பார்த்தேன்.நான் வீட்டை விட்டு நாடகத்தில் போய்ச்சேர தூண்டுதலாக இருந்ததே இந்த கட்டபொம்மன் கதைதான்.

ஜெயலலிதா:இப்போ புதுசா ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கு.முத்தக்காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு?நீங்க என்ன சொல்றீங்க?

சிவாஜி:சே..சே..வெட்கக்கேடு.முத்தம் கொடுக்கிறதை காட்டவே கூடாது.முத்தம் கொடுக்கிறது மாதிரி நடிக்கணும்.மூடிக்காட்டுவதுதான் கலை.
பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது.அதனால் முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

ஜெயலலிதா:உங்களுக்கு எவ்வளவோ விசிறிகள் இருக்காங்க.நீங்க யாருக்காவது விசிறியாக இருந்ததுண்டா?

சிவாஜி:ஓ!இப்பவும் நான் விசிறியாக இருக்கேன். பி.ஆர்.பந்துலு மேடையில் நடிச்சு வந்தபோது,நான் அவருடைய விசிறிகளில் ஒருவன்.ஹிந்தி நடிகை நர்கீஸின் விசிறி நான்.சார்லஸ் போயர் ரசிகன் நான்.

ஜெயலலிதா:உங்களுக்கு லதாவின் பாட்டு என்றால் ரொம்பவும் பிடிக்கும் போலிருக்கே?

சிவாஜி:என் தங்கையாச்சே பிடிக்காம இருக்குமா.அது மட்டுமா?சமீபத்திலே நான் ஒரு நியூஸ் கேள்விபட்டேன்.இண்டர்நேஷனல் லெவல்லே உலகம் பூராவும் ஒலிபரப்பப்ட்டு பாடகர்களின் வரிசையில் லதாவின் பாட்டுக்கள் நாள் ஒன்றுக்கு இருபது மணிக்கும் மேலே ஒலி பரப்பாகுதுன்னு சொன்னாங்க.உலகிலேயே எந்தப் பாடகிக்கும் இல்லாத தனி கவுரவம் என் தங்கச்சிக்கு இருக்கு.

ஜெயலலிதா:நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?

சிவாஜி:அப்ப மட்டும் என்ன?இப்பவும்ந்தான். மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காத படமே ஓடாது. நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.

ஜெயலலிதா:அந்த மாதிரியான நாளிலே நீங்க ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது?

சிவாஜி:ருடால்ப் வாலண்டினோ நடித்த 'தி ஷீக்' என்ற படம்.

ஜெயலலிதா:ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்கமுடியாததாக அமைந்துவிடும்.அந்த மாதிரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா?

சிவாஜி:எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஆசிய ஆப்பிரிக்க படவிழாவின்போது நடந்தது.அன்னிக்கு விழாவுக்கு வந்த படங்களின் ரிசல்ட் சொல்றாங்க.
நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்த வங்க எல்லாம் என்னை ஏதோ டெக்னீசியனு நினைச்சிருந்தாங்க.அங்கே வந்திருந்தவங்களெல்லாம் பெரியவங்க,உயரத்திலும் ஏழடி.
அங்கே பல பெரிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க.நீதிபதிகள் எல்லோரும் வந்தாங்க.

கட்டபொம்மன் தான் சிறந்த படம்.கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க.என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க.நான் எழுந்து நின்னேன்.வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன்.நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோதுகூட அசையாமல் இருந்தவன்.

ஆனா அன்னிக்கு கெய்ரோவில் நடந்த அந்த சம்பவம் என்னை அசத்திட்டது.என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிட்டாங்க.இல்லாட்டி நான் நிச்சயம் விழுந்திருப்பேன்.நான் என்னையே மறந்து உணர்ச்சி வசப்பட்டது அந்த ஒரு நாள்தான்.

isi முத்திரை உள்ள அக்மார்க் உலக நாயகன் சிவாஜி கணேசன் அவர்கள் !

uvausan
26th February 2014, 08:57 PM
காவல் தெய்வம் - தொடருகின்றது
01-05-1969
Director : K.Vijayan

NT யின் 128வது படம் - 1969 வது வருடமும் NT யின் பல வெற்றி படங்களை தந்தது . இந்த படத்தில் NTயின் நடிப்பை பார்த்து பாராட்டதவரே இல்லை . MGR ருக்கு பிடித்த படங்களில் காவல் தெய்வமும் ஒன்று . இந்த படத்தின் சிறப்பு அம்சங்கள் :

1. SV சுப்பையா பண முடையில் இருக்கும்போது அவருக்காக பணம் வாங்காமல் NT நடித்து கொடுத்தார் - இந்த படம் சுப்பையாவிற்கு பெரும் புகழும் , நல்ல லாபத்தையும் ஈட்டி தந்து - படங்களில் மிகவும் பவ்யமாக வருபவர்கள் எல்லாம் நிஜ வாழ்கையில் அப்படி இருக்க மாட்டார்கள் , நன்றியை நினைவு வைத்துகொண்டிருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது என்பதற்கு SV சுப்பையா ஒரு நல்ல எடுத்துகாட்டு

2. படத்தின் கதாநாயகன் சிவகுமார் , அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருகின்றார் : " நான் தான் ஹீரோ - கற்பூரம் அணைத்து சத்யம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள் - வரும் சில காட்சிகளிலே சிவாஜி எல்லோரையும் சாப்பிடுவிடுவார் - இதே மாதிரி பல படங்களில் என்னை இல்லாமல் செய்து விடுவார் - அவருடன் படத்தில் இருகின்றோம் என்ற ஒரு சந்தோஷமே என்னக்கு போதும் !"

3. சிவாஜியுடன் படத்தில் இருந்த விறு விறுப்பும் படம் முடிவதற்கு முன்பே முடிந்துவிடும் .

4. ஒரு ரசிகர் இந்த படத்தை பார்த்துகொண்டிருந்தார் - சிவாஜியை தூக்கிலிடும் காட்சி - அத்துடன் பலர் அழுதவண்ணம் எழுந்து சென்று விட்டனர் - சில பேர்களே இருந்தனர் - அந்த ரசிகர் அவர்களிடம் - ஏன் கிளம்பவில்லை என்று கேட்டதிற்கு - அவர்கள் சொன்ன பதில் வியப்பானது - நாங்கள் இந்த theatre இல் வேலை செய்பவர்கள் - நீங்கள் பண்ணிய அதிர்ஷ்ட்டம் நங்கள் செய்யவில்லை என்றனர் .

5. பாடல்கள் மிகவும் அருமை , வசனம் ஜெயகாந்தனுடையது - இந்த படத்திலும் NT க்கு ஜோடி இல்லை .

6. நம்பியார் நல்லவராக நடித்த சில படங்களில் இதுவும் ஒன்று

7. சிவாஜியின் மரம் ஏறும் அழகை இன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - அவருக்கு வெறும் 5நிமிடங்கள்தான் பயிற்சி கொடுத்தார்களாம் - டூப் போட NT மறுத்துவிட்டார்

தொடரும்

Russellbpw
26th February 2014, 09:48 PM
ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதனாக சாதித்து, கன்னட மக்களின் மனதில் என்றும் நிலை கொண்டிருக்கும் திரு ராஜ்குமார் அவர்களை வீரப்பன் பிடியில் இருந்து ஒரு போன் கால் மூலம் அறிவுரைத்து விடுவித்த நம் நடிகர் திலகம்.

அதன் நன்றிகடனாக நடிகர் திலகத்தால் உயிர் பிழைத்து விடுதலை ஆன உடன் தமிழகம் வந்து, நடிகர் திலகத்தை மட்டுமே கண்டு கண்ணீர் மல்க நன்றி கூறி அடுத்த விமானத்தில் பெங்களூர் சென்ற திரு.ராஜ்குமார் அவர்கள்.

ஒரு உயிரை இரண்டு அரசாங்கம் கூட காப்பாற்ற யோசித்த ஒரு விஷயத்தை, திரு நக்கீரன் மூலம் அறிந்து தக்க தருணத்தில் வீரப்பனுக்கு இப்படி நடப்பது முறையன்று என்று நடிகர் திலகம் அறிவுரைத்து வீரப்பன் மனத்திலும் கருணை தோன்றசெய்து அதன் மூலம் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டது மனசாட்சி உள்ள மக்களும் அறிந்த ஒரு விஷயம்.

இது தான் உண்மையான சாதனை !

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்பதை மீண்டும் நிரூபித்தவர் தமிழகத்தின் பெருமையாம் நம் நடிகர் திலகம் அவர்கள்.

Russellbpw
26th February 2014, 09:49 PM
ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதனாக சாதித்து, கன்னட மக்களின் மனதில் என்றும் நிலை கொண்டிருக்கும் திரு ராஜ்குமார் அவர்களை வீரப்பன் பிடியில் இருந்து ஒரு போன் கால் மூலம் அறிவுரைத்து விடுவித்த நம் நடிகர் திலகம்.

அதன் நன்றிகடனாக நடிகர் திலகத்தால் உயிர் பிழைத்து விடுதலை ஆன உடன் தமிழகம் வந்து, நடிகர் திலகத்தை மட்டுமே கண்டு கண்ணீர் மல்க நன்றி கூறி அடுத்த விமானத்தில் பெங்களூர் சென்ற திரு.ராஜ்குமார் அவர்கள்.

ஒரு உயிரை இரண்டு அரசாங்கம் கூட காப்பாற்ற யோசித்த ஒரு விஷயத்தை, திரு நக்கீரன் மூலம் அறிந்து தக்க தருணத்தில் வீரப்பனுக்கு இப்படி நடப்பது முறையன்று என்று நடிகர் திலகம் அறிவுரைத்து வீரப்பன் மனத்திலும் கருணை தோன்றசெய்து அதன் மூலம் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டது மனசாட்சி உள்ள மக்களும் அறிந்த ஒரு விஷயம்.

இது தான் உண்மையான சாதனை !

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்பதை மீண்டும் நிரூபித்தவர் தமிழகத்தின் பெருமையாம் நம் நடிகர் திலகம் அவர்கள்.

3161

uvausan
26th February 2014, 09:50 PM
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/128_zps767f3de5.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/128_zps767f3de5.jpg.html)

ScottAlise
26th February 2014, 10:19 PM
பார்த்ததில் பிடித்து -12

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி

வேலை பளு காரணமாக எழுத முடியவில்லை மனிக்கவும்

எழுதாத இந்த 10 நாட்காளில் கிட்ட தட்ட 7 நடிகர் திலகத்தின் படங்களை பார்த்தேன் ஏற்கனவே பார்த்த படங்களையும் மீண்டும் ஒரு முறை பார்த்தேன் , இந்த 7 படங்களை பற்றி தான் அடுத்த பார்த்ததில் பிடித்ததில் எழுத உள்ளேன்

குடும்ப கதைகளில் அதுவும் 1978 முதல் 1980 க்கு பிறகு நடிகர் திலகம் கலக்கிய படங்களை பற்றி தான் அடுத்த சில பதிவிகள்


அதில் முதலில் நான் எழுத போகும் படம்
1980 ல் வந்த ரிஷிமூலம்

இந்த பார்த்ததில் பிடித்தது series ல் முதலில் நான் எழுதின முதல் படம் கவரிமான் , அந்த படம் தான் அன்றைய இளம் இயகுன்னர் SPM டைரக்ட் செய்த முதல் படம்


சிவாஜி சார் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று கவரிமான் . முதல் படம் நல்ல குடும்ப சித்திமாக அமைந்த போதும் மிக பெரிய வெற்றியை பெறவில்லை (எல்லாம் இருந்தும் , ஏன் எப்படி )
ஒரு சின்ன கேப் க்கு பிறகு SPM மற்றும் நடிகர் திலகம் இருவரும் கை கோர்த்து நம் பார்வைக்கு கொடுத்த படம் த்ஹன் இந்த ரிஷிமூலம் . இந்த கூட்டணிக்கு பக்கபலம் மகேந்திரனின் இயல்பான கதை வசனம்
இந்த படம் முதலில் சேஷாத்ரி அவர்களால் நாடகமாக நடத்து பட்டு வந்தது , இந்த படத்தின் கதை , கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள் ,15 வருடம் கழித்து மீண்டும் சந்திகிறார்கள் , பிரிந்த இருவரும் எப்படி மீண்டும் சேர்ந்தார்கள் என்பதே கதை .
EGO என்ற மூன்று எழுத்து தான் மனுஷனின் வாழ்கையை புரட்டி போடுகிறது.
மிக பெரிய போலீஸ் அதிகாரியாக நம்ம சந்தோஷ் (சிவாஜி சார்) , மிகவும் கண்டிப்பான , நேர்மையான அதிகாரி . அவரின் கடந்தகாலம் அவரை பயமுறுத்துகிறது , அதற்கான காரணம் பின்னாடி தெரிய வருகிறது
முதல் காட்சியில் அவர் அறிமுகம் ஆகும் பொது , அவர் பீலிசிவதை கண்டிக்கும் விதத்தில் என்ன ஒரு மிடுக்கு , முன்னாடி பார்த்த தங்கபதக்கத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லையே (எப்படி இவரால் மட்டும் இப்படி முடிகிறது )
SP சௌத்ரி ஒரு பரம்பரை பணக்கார் , போலீஸ் அதிகாரி , சந்தோஷ் வாழ்க்கையில் அடி பட்டு , மிதி பட்டு , போலீஸ் அதிகாரி ஆனவர் அந்த வித்தியாசத்தை தான் அவர் காட்டி இருப்பார்
அந்த காட்சியில் அவர் கத்தி முடித்ததும் , அவர் cigarette யை பத்த வைக்கும் ஸ்டைல் இருக்கே , அதுவும் ஓவர் emotional ஆன உடன் அவர் கண்கள் கலங்கி ,yellowish -red கலர் ல் தெரியும் பாருங்கள் chanceless

இப்படி பட்ட நபரின் மனைவி கோகிலா (KR விஜயா ), நடிகர் திலகத்தின் மிகவும் ராசியான ஜோடிகளில் ஒருவர் , அடியேன் வாணிஸ்ரீ மற்றும் ஜெயலலிதா ஜோடியின் ரசிகன் ,ஊட்டி வரை உறவு மட்டும் விதிவிலக்கு

கோகிலா ஒரு பணக்கார பெண் , ஒரு சின்ன தவறு நடந்தாலும் அதை சகிக்க முடியாத நபர் , இவரை பார்க்கும் பொது எனக்கு கோபம் தான் வந்தது
இவரின் தந்தை மேஜர் ,எதை பற்றியும் கவலை படாத கேரக்டர்

இந்த மூவரின் mentalities படி தான் முதல் பாதி கதை நகர்கிறது

முதல் பாதியில் நடிகர் திலகமும் , KRV காட்சிகள் , படத்தை தொய்வு இல்லாமல் நகர்த்துகிறது , மனைவி உடன் தனியாக பேசி கொண்டு இருக்கும் பொது , மகன் எழுந்து விடுவதும் , நடிகர் திலகம் பார்க்கும் பார்வை இருகிறதே , சாக்லேட் குடுத்த குழந்தையிடம் அதை பிடுங்கி விடும் பொது அது காடும் பாவத்தின் ஆச்சு அசல்
முந்தின சில படங்களில் அவர் உடை அவர் வயதுக்கு உகுந்தது போல் இல்லை என்று சொல்லுவோர் பல நபர்கள் , இந்த படத்தில் அவர் make up
மற்றும் உடைகள் டாப் , அதும் அவர் நைட் டிரஸ் simply superb , இதை போன்ற உடைகளை தேடி தேடி அலுத்து விட்டேன் , சமிபத்தில் சென்னைக்கு வந்த பொது கூட பல இடங்களில் தேடினேன் , கிடைக்கவே இல்லை
அப்போது அவர் பாடும் பாடலும் நல்ல situation சாங் , இளையராஜா , கண்ணதாசன் கூட்டணிக்கு கேட்க வேண்டுமா ஜமாய்த்து இருப்பார்கள் , இன்னும் ஒரு காலத்தால் அழியாத பாடல் பற்றி பிறகு எழுதி உள்ளேன்

ScottAlise
26th February 2014, 10:20 PM
எந்த ஒரு ரகசியமும் ஒரு நாள் வெளி வந்தே தீரும் , அப்படி தான் அந்த ரகசியமும் வெளியே வர , குடும்பத்தில் புகம்பும் (அந்த காரணம் மிகவும் சின்ன காரணம் )

பல குடும்பத்தில் மனைவி கத்த ஆரம்பித்த உடன் கணவர் silent ஆகி விடுவார் , அதற்க்கு காரணம் 100/90 % henpecked nature கிடையாது , இருவரும் கத்தினால் வீடு ரெண்டாவது உறுதி , அதை தடுக்க தான்
தன் கணவர் படிக்கிற வயதில் செய்த ஒரு சின்ன தப்பை பெருதாக ஊதி விட்டு KRV சண்டை போடும் பொது , நடிகர் திலகம் சாரி சந்தோஷ் கெஞ்சும் காட்சி , அவர் பேசும் வசனம் , இயல்பு , மிகவும் எதார்த்தம் .

எதை பற்றியும் கவலை படாத தன் மாமனார் மேஜர் தன் மருமகன் கூட பேசும் காட்சியில் , தன் மீதே அணைத்து தப்பும் என்று சொல்லும் இடமும் , தன் மனைவியை விட்டு குடுக்காமல் பேசும் போதும் , என் கண்ணில் , இதை எழுதும் பொது தெரிகிறது

தன் மனைவி கேட்ட விவகாரத்தை , அவர் தந்து விட்டு , பிள்ளையும் தானே வளர்த்து விடும் வாய்ப்பு இருந்தும் , முதலில் அதை தன் மனைவி கிட்ட கொடுப்பதும் , அவர் மறுத்த பின் , அந்த பொறுப்பை அவரே எடுத்து கொண்டு சிறப்பாக முடிப்பதும் , இடையில் ரீனா ரூபத்தில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருந்தும் அதை அவர் லாவகமாக handle செய்வதும் , simply hats off , அதுவும் அவர் மலையாளம் சம்சாரிக்கும் காட்சி பார்த்த பொது சகலகலா வல்லவனே என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது

ScottAlise
26th February 2014, 10:20 PM
பிரிந்த ஜோடிகள் மீண்டும் சந்திக்கும் பொது இருவரும் காட்டும்
முக பாவனைகள் இருகிறதே - ஜாம்பவான்கள் (இருவரும் தான் ) கலக்கி இருப்பார்கள்
டைரக்டர் SPM இருவரிடமும் நீங்கள் பேச கூடாது , reactions மட்டும் தான் என்று சொன்னால் எத்தனை நடிகர்கள் இப்படி சிறப்பாக நடிப்பார்கள்
நம்மவர்க்கு இது சர்வ சாதாரணம்
அந்த காட்சி

இவரின் (NT ) கண் close up தெரியும் பொது , KRV வின் கண் காட்ட படும் , NT வின் வாய் துடிக்கும் பொது , KRV வின் காது காட்ட படும் ,
wonderful சீன்
இந்த படத்தில் NT மகனாக வருபவர் சக்ரவர்த்தி நன்றாக நடித்து இருந்தாலும் கொஞ்சம் ஓவர் action என்றே தோன்றியது , இன்று பின்னணி குரல் கொடுப்பதில் கோடி கட்டி பறக்கிறார்
KRV வின் நடிப்பு மட்டும் என்ன , கர்வம் பிடித்த பெண் என்று சொல்லி விட அதிகமாக சான்ஸ் இருந்தும் , ஒரு சின்ன நூல் அளவு வித்தியாசம் காட்டி அதை வித்தியாச படுத்தி காட்டி இருப்பார் , குறிப்பாக அவர் மகன் தான் டென்னிஸ் பிளேயர் அமர்நாத் என்று தெரிந்து அவர் தவிக்கும் காட்சி , தன் மகனை சந்திக்க அவர் வீட்டுக்கு வரும் பொது , சிவாஜி சார் அவரை மிகவும் கூலாக deal செய்யும் காட்சியும் , கொஞ்சம் கூட கோபம் இல்லாமல் , தன் மகன் வளர்ப்பு சரி தான் என்பதை எடுத்து காட்ட செல்லமாக டீஸ் செய்யும் காட்சி , KRV வின் நிலைமை யை நினைத்து கொஞ்சம் சிரிப்பு தான் வருகிறது

அதே புருஷனின் தயவு தேவை படுகிறது கோகிலாவுக்கு , தன் மகன் தன்னை அங்கீகரிக்க , வாழ்கை என்ற வட்டம் , மேலே கிழே செல்லும் என்பதற்கு ஒரு அழகான எடுத்துகாட்டு.
அதுவும் , நடிகர் திலகம் அந்த காட்சியில் , தன் மனைவியை தன் மகன் அலட்சிய செய்து விட்டு வரும் பொது கண்டிக்கும் காட்சி , தன் மனைவியை போலே தன் மகனும் சினத்தினால் வாழ்கையை தொலைத்து விட கூடாது என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது

இதை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்

தன் மாணவிக்கு advice செய்யும் காட்சியில் நடித்த நடிகையின் பெயர் என்ன என்பதை யாரவது தெரிந்தால் சொல்லுங்கள் , அவரை பல MGR படங்களில் பார்த்து இருக்கேன் , குறிப்பாக , ரிக்க்ஷகாரன்(காலேஜ் principal ) , உழைக்கும் கரங்கள் போன்ற பங்களில் பார்த்து இருக்கேன்

கடைசியாக ஐம்பதிலும் ஆசை வரும் என்ற காலத்தினால் அழியாத பாடல்
அந்த பாடல் படபிடிப்பு நடந்த இடம் ஒரு பெரிய மலை உச்சி , இருவரையும் நடத்தியே அழைத்து சென்று படம் பிடிக்க பட்டது , சிவாஜி சார் செல்லம்மாக சலித்து கொண்டாராம்
அடுத்த நாள் SPM மற்றும் பாபு (ஒளிபதிவாளர் ) இருவரும் அடிவாரத்தில் ஒரு காட்சி , பிறகு 10 அடி உயரத்தில் ஒரு காட்சி , 20 அடி உயரத்தில் ஒரு காட்சி என்று எடுத்து , மலை உச்சிக்கு அழைத்து சென்று விட்டார்கள்
இதை அறிந்து கொண்ட நடிகர் திலகம் இருவரையும் பார்த்து திருட்டு பசங்களா , என்னை இப்படியே போக்கு காட்டி உச்சிக்கு அழைத்து வந்து ஷூட் பண்ணிடிங்க என்று செல்லமாக கோபித்து கொண்டு பின்பு location யை பார்த்து பாராட்டினார் என்று SPM , AVM தந்த SPM என்ற புஸ்தகத்தில் எழுதி உள்ளார்
இந்த இடம் கேரளாவில் இருக்கும் KRV க்கு சொந்தமாக பாக்டரி பக்கத்தில் எடுக்க பட்டது , KRV அணைத்து உதவியும் செய்தார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்

இந்த படம் பார்த்து விட்டு காபி குடித்த பின் ஐஸ் வாட்டர் குடிக்க பழகி உள்ளேன் நன்றாக உள்ளது

uvausan
26th February 2014, 10:31 PM
தென்னை மரம் ஏறி , வானத்தின் எல்லையில் தன் மகளுக்காக வீடு கட்டி , இன்னிசை பாடிகொண்டுஇருந்தான் அவன் - மகள் தான் அவனுடைய காவல் தெய்வம் - அவள் தான் அவனது வாழ்க்கை - அவள் சந்தோஷம் தான் அவன் தினமும் உண்ணும் உணவு - கவலைகளை மரம் ஏறும் போது அங்கேயே விட்டு விட்டு தினமும் மகிழ்ச்சியை மட்டும் வீட்டுக்கு கொண்டு வருவான் - உலகம் அவனுடைய மகள் மூலம் அவனை சுற்றி சுற்றி வட்டமிட்டது அவனும் தென்னை மரமும் , அவளும் தான் தான் உலகம் என்று வாழ்ந்தான்

விதி அவன் வாழ்வில் சற்றே விளையாட ஆசைப்பட்டது - அதனுடைய விலையை பாவம் அவனால் கொடுக்க முடியவில்லை - உபசரிக்கப்பட்ட நண்பர்கள் அவன் இல்லாதபோது அவனுடைய மகள் மூலம்அவனுக்கு இருந்த கனவுகளை எல்லாம் அழித்தார்கள் - மகளின் கதறலை கேட்ட அவன் - அவளது வாழ்வை சூறையாடிய இருவரில் ஒருவனை பிடித்து தேங்காயை சீவுதுபோல தலையை சீவினான் - சிறைக்கு ஒரு அடிபட்ட சிங்கமாக சென்றான் - விதி அவனக்கு சற்றே கருணை காட்டியது - அவன் மகளை மானபங்கம் செய்தவனை சிறையில் பார்க்கிறான் - இரத்தம் கொதித்தது - அவனை கொன்றால் தான் மகளுக்கு சாந்தி கிடைக்கும் என்று அந்த வாய்ப்புக்காக காத்திருகின்றான் -

சிறைக்கு அருகில் ஒரு தெரு கூத்து - ஹிரன்ய கசிபுவின் கதை - நரசிம்மமாக சிறையின் கம்பிகளை உடைத்துக்கொண்டு அந்த கயவன் இருக்கும் அறையில் நுழைகிறான் - அந்த கயவனின் கதை முடிகின்றது - மிகவும் மன நிம்மதியுடன் தூக்கு மேடையை சந்திகின்றான் - அது அவனை அவனுடைய மகளிடமும் , மனைவியிடமும் அவனை கொண்டு சேர்க்கிறது - நல்ல நடிப்பு இதனுடன் முடிவடைவதால் - மிஞ்சியுள்ள படத்தை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை

தொடரும்

uvausan
26th February 2014, 10:36 PM
நடிப்பு என்றால் இதுதான் - ஒரு கனவு சிதைத்து போது வரும் கோபம் , அருமை மகளை இழந்த சோகம் - மனித வடிவில் திரியும் மிருகங்களை கொல்ல துடிக்கும் வேகம் - அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை-------

http://youtu.be/mEy_1K15MRE

uvausan
26th February 2014, 10:45 PM
நம்பியார் நல்லா பேசினாலுமே வில்லனாக தான் காட்சி தருவார் - தூக்கில் போடபோகும் செய்தியை அவர் சிவாஜி க்கு சொல்லும் காட்சி - கல்லும் கரையும் ----------

http://youtu.be/v_PpMbGf-vs

ScottAlise
26th February 2014, 10:46 PM
Dear Ravi Sir,

Superb write ups of Praptham , Kaaval deivam( both movies, I did not watch , will watch soon ,kudos to your writings), Paper cuttings of Moondru Deivangal rare one, I appreciate your sincere work

uvausan
26th February 2014, 10:52 PM
சிங்கத்திற்கு சிங்கத்தின் தீனியை போட்ட படம் --------

http://youtu.be/Iz4sfMxKA5k


அலசல் முடிவுபெற்றது

அன்புடன் ரவி

:):smokesmile:

uvausan
26th February 2014, 10:55 PM
இனி பேசும் தெய்வம்

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/PesumDeivam_zpsecf680a0.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/PesumDeivam_zpsecf680a0.jpg.html)

guruswamy
27th February 2014, 08:14 AM
Dear RKS,

Can you kindly translate your context in English, though I'm Tamil speaking Indian very difficult to read our language as i learnt kannada here in Bangalore.

JAIHIND
M. Gnanaguruswamy

uvausan
27th February 2014, 10:03 AM
இன்று ஒரு உன்னதமான நாள் - இனிய நாள் - மஹாசிவராத்திரி - எல்லோரும் இந்த அருமையான நாளில் இறைவனை வழிபாட்டு எல்லா இன்பங்களும் பெற வேண்டும் என்று இறைவனை வணங்கிவிட்டு - nt படங்களில் இடம் பெற்ற சிவனை புகழும் சில படங்களையும் , பாடல்களையும் இங்கு உங்களுக்கு சமர்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - அவர் படங்களை விட்டால் உவமை காட்ட வேறு யார் உள்ளார்கள் ? எந்த படம் அப்படிப்பட்ட சிறப்பை அடைந்துள்ளது ?

அன்புடன் ரவி

uvausan
27th February 2014, 10:04 AM
http://youtu.be/xg_hBWlR3h0

uvausan
27th February 2014, 10:06 AM
http://youtu.be/zztzKqHb66c

uvausan
27th February 2014, 10:09 AM
http://youtu.be/_uAE2d0u3Ko

uvausan
27th February 2014, 10:10 AM
http://youtu.be/X3JsXrWjCzo

uvausan
27th February 2014, 10:11 AM
http://youtu.be/ibynDVPlkqM

uvausan
27th February 2014, 10:12 AM
http://www.youtube.com/watch?v=kpCzej-Sr04&list=PL2D5BBE90048230EF&feature=share&index=1

uvausan
27th February 2014, 10:15 AM
http://youtu.be/Jsc87z_-UGk

Russellbpw
27th February 2014, 10:23 AM
1972 ஜனவரி தமிழ் திரை உலகை திரும்பி பார்க்க வைத்த ஆண்டு.

ராஜா திரைப்பட ஜனனம் !

அதுவரை திரைஅரங்குகள் காணாத ஒரு வரவேற்ப்பு ! வெற்றி என்றால் அப்படி ஒரு வெற்றி !
வசூல் என்றால் திரைஅரங்குகள் காணாத அப்படி ஒரு மேலான வசூல் !

அதற்க்கு முந்தைய அனைத்து ரெகார்ட்களையும் முறியடித்து தேவி பாரடைஸ் திரை அரங்கில் புதிய ஒரு வசூல் சாதனை !

தொடர்ந்து 107 அரங்கு நிறைந்த காட்சிகள் - வசூல் ருபாய் 3,13,124.80 பைசா

3162

uvausan
27th February 2014, 10:24 AM
http://youtu.be/gV-7Nih8-0Y

uvausan
27th February 2014, 10:25 AM
http://youtu.be/z2klpOa4SlU

Russellbpw
27th February 2014, 10:28 AM
.....

1972 ஜனவரி தமிழ் திரை உலகை திரும்பி பார்க்க வைத்த ஆண்டு.

ராஜா திரைப்பட ஜனனம் !

அதுவரை திரைஅரங்குகள் காணாத ஒரு வரவேற்ப்பு ! வெற்றி என்றால் அப்படி ஒரு வெற்றி !
வசூல் என்றால் திரைஅரங்குகள் காணாத அப்படி ஒரு மேலான வசூல் !

அதற்க்கு முந்தைய அனைத்து ரெகார்ட்களையும் முறியடித்து தேவி பாரடைஸ் திரை அரங்கில் புதிய ஒரு வசூல் சாதனை !

தொடர்ந்து 107 அரங்கு நிறைந்த காட்சிகள் - வசூல் ருபாய் 3,13,124.80 பைசா

3162

KCSHEKAR
27th February 2014, 10:58 AM
பார்த்ததில் பிடித்து -12
எழுதாத இந்த 10 நாட்காளில் கிட்ட தட்ட 7 நடிகர் திலகத்தின் படங்களை பார்த்தேன் ஏற்கனவே பார்த்த படங்களையும் மீண்டும் ஒரு முறை பார்த்தேன் , இந்த 7 படங்களை பற்றி தான் அடுத்த பார்த்ததில் பிடித்ததில் எழுத உள்ளேன்
டியர் ராகுல்ராம்,

தாங்கள் அவ்வப்போது இடைவேளை விட்டு எழுவதே நல்லது என்று நினைக்கிறேன். அப்பதானே 10 படங்களைப் பற்றிய தங்களின் விமர்சனங்கள் கிடைக்கும்................................... !!!!!

வாழ்த்துக்கள், தொடருங்கள்.

KCSHEKAR
27th February 2014, 11:04 AM
டியர் ரவி சார்,
பேசும் தெய்வம் மற்றும் காவல் தெய்வம் பற்றிய தங்களின் பதிவு அருமை.

தாங்கள் குறிப்பிட்ட மாதிரி அது காவல் தெய்வம், கந்தன் கருணையாக இருந்தாலும் சரி, பிற்காலங்களில் வந்த தேவர் மகன், படையப்பா, ஒன்ஸ் மோர் என்று எக்காலத்திலும் நடிகர்திலகம் 5 நிமிடங்கள் படத்தில் வந்தாலும் அவர்தான் ஸ்கோர் பண்ணுவார் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

மகா சிவராத்திரிக்காக தாங்களின் ஸ்பெஷல் பதிவுகளுக்கும் நன்றி.

KCSHEKAR
27th February 2014, 11:12 AM
டியர் ரவிகிரன் சூர்யா,

ஜெயலலிதா பிறந்தாளையொட்டி நடிகர்திலகத்துடன் ஜெ இணைந்து நடித்த திரைப்பட விபரங்கள், காட்சிகள் இணைப்பு மற்றும் நடிகர்திலகத்தை பொம்மை இதழுக்காக ஜெயலலிதா எடுத்த பேட்டி என்று தங்களுடைய அசத்தலான பதிவுகளுக்கு நன்றி.

uvausan
27th February 2014, 01:33 PM
பேசும் தெய்வம் - 14-04-1967
NTயின் 112வது படம்
வசனம் : K.S . கோபாலகிருஷ்ணன்
ஜோடி : பத்மினி
இசை : K .V .மஹாதேவன்
படம் : நல்ல வசூல் ; எல்லோரராலும் பாராட்ட பட்ட படம் - திருப்பதி ஏழுமலையானை நம்புவர்கள் என்றுமே கைவிட பட மாட்டார்கள் என்பதை ஒரு குடும்ப கதை மூலம் வெகு அழகாக சொல்லியிருப்பார்கள்

http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/112_zps3d13c859.jpg (http://s818.photobucket.com/user/jravikumar/media/112_zps3d13c859.jpg.html)


:):smokesmile:

uvausan
27th February 2014, 02:02 PM
அழகு தெய்வம் மெல்ல மெல்ல --

" இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரமும் அல்ல
மழைமேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் நீர்பாயும் நீரோடை அல்ல - இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல !! "

இந்த வரிகளை பார்த்த உடன் NT , வாலியை கட்டி பிடித்துகொண்டு மனமார புகழ்ந்தாராம் - இந்த பாட்டை போல இனிமையாக பல வந்தாலும் ஒரு முன்னோடியாக இன்றும் இருப்பது இந்த பாடல் தான் - கற்பனை வளமும் , கவிதையின் அழகும் இந்த பாடலை பல முறை நம்மை கேட்க்க சொல்லும்

படத்தை பற்றி அலசும் முன் இந்த படத்தின் தேனான சில பாடல்களை கேட்போமா ?

http://youtu.be/R12D7i5PWGQ

uvausan
27th February 2014, 02:03 PM
http://youtu.be/X3jTHMsLh8U

uvausan
27th February 2014, 02:04 PM
http://youtu.be/ZqtdSAA-5Es

uvausan
27th February 2014, 02:06 PM
http://youtu.be/Kk42A-6YDLc

uvausan
27th February 2014, 02:07 PM
http://youtu.be/vlSDQeM2nTg

JamesFague
27th February 2014, 02:47 PM
Awesome pair of NT and Padmini. Wonderful Songs. Totally a Fantastic family
Entertainer.

uvausan
27th February 2014, 02:55 PM
http://youtu.be/RMelhi_N9iE

Russellbpw
27th February 2014, 04:25 PM
சமீபகாலமாக நடிகர்கள் படபிடிப்பில் பிரியாணி சமைத்து இயக்குனர் மற்றும் இதர நண்பர்களுக்கு பரிமாறுவது பெரிய செய்தியாக மீடியாக்கள் பறைசாற்றுகின்றனர்.

நல்ல விஷயம் தான் என்றாலும் இவை தான் முதல் முதலாக திரை உலகில் நடப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஓரளவு அந்த மாயை வெற்றியும் அடைகிறது இந்த கால தலைமுறையினர் பொறுத்தவரை.

நடிகர்கள் சமைத்து பரிமாறுவது ஒன்றும் இன்று நேற்று நடந்த விஷயமல்ல , இதை நம் நடிகர் திலகம் அவர் நடிக்கும் காலத்திலயே செய்திருக்கிறார்.

இயக்குனர் rv உதயகுமார் அவர்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பாருங்கள் !

இதுபற்றி உதயகுமார் கூறியதாவது:-

"கிழக்குவாசல்" படப்பிடிப்பையும், "உறுதிமொழி" படப்பிடிப்பையும், ஒரே நேரத்தில் இரவும் பகலுமாக நடத்தினேன்.

அப்போது தேக்கடிக்கு எங்களுடன் சிவாஜி சார் குடும்பத்துடன் வந்து தங்கினார்.

எங்கள் அனைவருக்கும், அவரது கையாலேயே அயிரைமீன் குழம்பு சமையல் செய்து பரிமாறினார். அதை இன்றைக்கும் மறக்கமுடியாது.

ifohadroziza
27th February 2014, 10:39 PM
Thiru Kannadasan avargal our kaval deivam poster i parthavudan sumar 15 nimidangal karai niruthivittu poster i vaitha kan vangamale parthu vittu selvaram.oru kavi arasanukke ippadi endral?

ifohadroziza
27th February 2014, 10:43 PM
Siva(ji)rathiri valthukkal to our hub members.

ScottAlise
28th February 2014, 07:14 PM
பார்த்ததில் பிடித்தது -13

நான் எழுதியதை சற்று திரும்பி பார்த்தல் , அதில் பல படங்கள் நடிகர் திலகத்தின் பிற பகுதி படங்களை மட்டுமே அதிகமாக இருந்தது . அந்த monotony யை , கொஞ்சம் உடைத்து , நடிகர் திலகத்தின் முதல் சில வருடங்களில் வந்த படத்தை பற்றி தான் இந்த 13 ம் பதிவு

தங்கமலை ரகசியம்

இந்த படத்தை ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை , ஆனால் பார்க்க சந்தர்பம் கிடைக்க வில்லை , இந்த திரியில் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் , சன் லைப் தொலைகாட்சியில் இந்த படம் ஒலிபரப்பபட்டது என்று எழுதி இருந்தார்

அது தான் turning பாயிண்ட் , இந்த முறை பார்க்க வேண்டும் என்று முயன்றேன் , வெற்றியும் பெற்றேன் , நான் ரசித்த படத்தை , உங்கள் அனைவருடனும் சேர்ந்து அசை போட வேண்டும் ஆசையில் தான் இந்த பதிவு , மிக நீள பதிவு என்பதினால் கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் என்று கேட்டு கொளுகிறேன்

படம் வந்த வருடம் 1957, 1952 ல் தமிழ் திரை உலகில் புரட்சியை ஏற்படுத்திய நடிகர் திலகம் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து உள்ள படம் தான் இது
படத்தின் நீளம் இந்த காலத்தை காட்டிலும் மிகவும் அதிகம் கிட்ட தட்ட 3 மணி நேரம் மொத்தம் 11 பாடல்கள்
படத்தை பற்றி அனைத்தயும் எழுதி உள்ளேன் , மிக பழிய படம் என்பதினால் , படத்தில் நடித்த சில நடிகர் நடிகைகளின் பெயர் தெரிய வில்லை மன்னிக்கவும்

படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் ஒரு மரத்தின் உச்சியில் 2 கிளிகள் இருக்கிறது அடுத்த காட்சியில் இரு குழந்தைகள் விளையாடி கொண்டு இருக்கிறது , அந்த இரண்டு குழந்தைகளும் அரசரின் குழந்தைகள் அந்த கிளிகள் அங்கே வந்த உடன் , அரசி (அதாவது அந்த இரு குழந்தைகளின் தாய்) , அந்த இரு குழந்தைகளிடமும் அந்த கிளிகளின் கதையை பற்றி சொல்லுகிறார்

ScottAlise
28th February 2014, 07:15 PM
கதை FLash back காட்சிகளில் செல்லுகிறது

மங்களபுரி இளவரசி நந்தினியை ( TR ராஜகுமாரி ) பெண் பார்க்க வருகிறார் சொர்ணபுரி மன்னன் ஆதித்யன் (MN நம்பியார் )
வந்த இடத்தில கடை வீதிக்கு செல்லலாம் என்று எண்ணி இளவரசி என்று எண்ணி அவரின் தோழியை(மவ் ராஜம்மா ) காதலிக்கிறார் , சுயம்வரம் நாள் அன்று , தான் காதலித்து ராணியை அல்ல தோழியை என்று அறிந்த உடன் அதிர்ச்சி அடைகிறார் , ஆனால் அந்த தோழிக்கு மாலை சூட்டி மணம் முடிக்கிறார் மன்னர் ஆதிதியன்.

மங்களபுரி இளவரசி நந்தினி மிகவும் திமிர் பிடித்த பெண் , தன் தோழி மனிப்பு கேட்டும், அதை அலட்சிய படுத்தி விடுகிறார்

ஆதிதியன். தன் மனைவி , மற்றும் சகோதரன் (TR ராமசந்திரன்) உடன் சந்தோசமாக வாழுகிறார்
இந்த நேரத்தில் ஆதிதியன் தந்தை ஆகுகிறார் , மங்களபுரி இளவரசி நந்தினியின் தந்தை காலமாகிறார் , இளவரசி யின் நிலைமையை நினைத்து வருதும் அவர் தோழி , அவரை , தன் நாட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார் , தன் தோழியை பழி வாங்க சந்தர்பத்தை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறார் , முதலில் , ஆதிதியன் யின் தம்பியை காதல் வலையில் விழ வைத்து , சதி செய்கிறார் , அது பலிக்காமல் போகவே , நந்தினி தன் நம்பிக்கைக்கு உரிய ஒரு பெண்ணை அழைத்து வந்து , இளவரசன் விக்ரமன் யை கடத்துகிறார் ,
நந்தினியின் தோழி (அங்கமுத்து / தனம் (பெயர் தெரிய வில்லை )) தன் அண்ணன் மகேந்திரன் (PSV ) 5 மாத்திரைகளை ஒரு மந்திரவாதி யிடம் இருந்து திருடி வந்து விடுகிறார் , அந்த மருந்தை சாபிட்டால் , எந்த உருவத்தை விரும்பினாலும் அதை அடையாளம் . 5 மாத்திரைகளில் ஒரு மாத்திரையை டெஸ்ட் செய்து பார்த்து விட்டு அடுத்த திட்டத்தை தீட்டுகிறார்

ScottAlise
28th February 2014, 07:15 PM
அரசன் மற்றும் அவரின் மனைவி இருவரிடமும் , நந்தினி ஒரு சாமியாரை பற்றி சொல்லி , அங்கே சென்றால் அவர்களின் மகனை பற்றி அறியலாம் என்று சொல்லி , ஒரு குகைக்கு அழைத்து செல்லுகிறார்

4 மாத்திரைகளில் , ஒரு மாத்திரையை தானே வைத்து கொண்டு , 3 மாத்திரைகளை 3 கோப்பைகளில் கலந்து விடுகிறார்
ஒரு கோப்பை மன்னர் அருந்திய உடன் அவரை முத்துமாலை ஆகும் படியும் , அவரின் தோழியை பிச்சகாரி ஆகும் படியும் செய்து விடுகிறார் , மகேந்திரன் அந்த மாத்திரையை எடுத்து கொண்டு , ஆதித்தியன் ஆகி விடுகிறார் , நந்தினி மட்டும் தான் அதே உருவத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறார் (பொய் சொல்லி விடுகிறார் )
ஊருக்கு வரும் ஆதித்தியன் (PSV ) தன் மனைவி இருந்து விட்டதாக கதை கட்டி விடுகிறார் , நந்தினி மற்றும் ஆதித்தியன் இருவரும் காந்தர்வ திருமணம் செய்து கொண்டதாக இன்னும் ஒரு பொய் சொல்லி விடுகிறார் .
ஆதித்தியன்( மகேந்திரன் )க்கு தன் முதல் மனைவி மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது , அதின் பெயர் அமுதா

தொலைந்து போன விக்ரமன் காட்டில் மிருகங்கள் உடன் வாழுகிறார் (TARZAN )
வருடங்கள் நகர நகர அமுதா இப்பொழுது ஒரு அழகிய இளவரசியாக வாழ்ந்து வருகிறார் , மகேந்திரன் மற்றும் அவர் சகோதரி இருவரும் , நந்தினியின் கொடுமையை சகித்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து தான் tarzan வளர்ந்து , பெரிய வீரராக வளம் வருகிறார் , ஒரு நாள் காட்டுக்கு வரும் அமுதாவை காப்பாத்தி அவரின் அன்புக்கு பாதிரமாகிறார்

அமுதா தன் தந்தை மற்றும் சிட்டியின் எதிர்ப்பையும் மீறி அந்த
டார்சன் யை தன் கூடவே வைத்து கொண்டு அவருக்கு நாகரிகம் , கல்வி , அறிவு அனைத்தையும் போதிக்கிறார்

இந்த தோழமை காதலாக மாறுகிறது , tarzan க்கு அமுதா கஜேந்திரன் என்று பெயர் வைக்கிறார் , இந்த காதலை ஏற்க மறுக்கிறார் அமுதாவின் தந்தை மற்றும் சித்தி. கஜேந்திரன் மீண்டும் காட்டுக்கே வந்து விடுகிறார்

அமுதா அவரை தேடி வந்து , கஜேந்திரன் யை கல்யாணம் செய்து கொள்ளுகிறார் ,

ScottAlise
28th February 2014, 07:16 PM
கஜேந்திரன் தன் தாய் மற்றும் தந்தை இருவரையும் தேட ஆரம்பிக்கிறார் ,(அமுதாவின் தந்தை அவரை அனாதை என்று சொன்னதினால் தேட ஆரம்பிக்கிறார் )

கஜேந்திரனின் தாய் , தன் கணவர் உடன் அதான் முத்துமாலை உடன் செல்லும் பொது , முத்துமாலையை பரி கொடுக்கிறார்

திருடு போன முத்துமாலையை அந்த திருடன் விற்று விடுகிறார் , அந்த நேரம் பார்த்து , அங்கே வரும் கஜேந்திரன் மற்றும் அமுதா இருவரும் அந்த மாலையை பார்த்து , அதை வாங்கி அணிந்து கொண்டு விடுகிறார்
கஜேந்திரனின் தந்தை இப்பொழுது அவர் கழுதில்
அப்போ அங்கே வரும் கஜேந்திரனின் தாய்யை பைத்தியம் என்று அனைவரும் கிண்டல் செய்ய , கஜேந்திரன் அவர் உடன் அழைத்து சென்று விடுகிறார் (யார் என்று தெரியாமல் தான் )

கஜேந்திரன் தாங்கும் அறை , விக்ரம்ஆதித்தியன் தங்கிய அறை , அவர் உறங்கும் கட்டில்க்கு பக்கத்தில் இரு பொம்மைகள் பேசி கொண்டு இருப்பதை கேட்டு விடுகிறார் கஜேந்திரன் , அந்த இரு பொம்மைகளும் தன் தாய் தான் இப்போ பிச்சகாரியாக இருப்பதும் , அவரின் தந்தை தான் இப்போ தன் கழுத்தில் இருபதையும் , இதற்கு தீர்வு கோளிமலையில் இருக்கும் தங்கமலை ரகசியம் தான் என்று சொல்லி அதை அடையும் வழிகளையும் சொல்லுகிறது
கஜேந்திரன் தன் தாய் , மற்றும் மனைவி உடன் தங்கமலை ரகசியத்தை அறிந்து கொள்ள அந்த காட்டுக்கு செல்லுகிறார்

ScottAlise
28th February 2014, 07:16 PM
முதலில் கஜேந்திரன் ஒரு ராட்சசனை சந்திக்கிறார் , அவர் உடன் சண்டை இட கூடாது என்பது விதி , அதனால் கெஞ்சுகிறார் ,அந்த ராட்சசன் அதை சட்டை செய்யாமல் நடந்து கொண்டு செல்வதால் , ரத்தகாயம் ஆகிறது , ஒரு பாடல் பாடி அவரை சமாதான படுத்துகிறார் , முடிவில் அந்த ராட்சசன் தன் சாபம் விலகி ஒரு தேவராக மாறுகிறார் , அவர் அந்த தங்கமலை ரகசியத்தை அடைய அடுத்த கட்ட யுக்தி யை கஜேந்திரன்க்கு சொல்லிவிடுகிறார்


அடுத்த சவால் கஜேந்திரன் அழகிய 2 மோகினிகளை எதிர்கொண்டு வெற்றி பெரும் சமயத்தில் , அந்த இரண்டு பெரும் , அடுத்த யுக்தி யை சொல்லும் முன்பு கஜேந்திரன் யின் இளமை , அழகு இரண்டையும் கேட்க , கஜேந்திரன் அதை ஒத்துக்கொண்டு , வயசானவராக மாறுகிறார்.

இதற்கு இடையில் , அலகபுரியில் , மகேந்திரன் மற்றும் நந்தினி இருவரையும் கண்காணிக்கிறார் அமைச்சர் சாரங்கபாணி ,அதன் மூலம் உருவம் மாறும் மாத்திரை யை மகேந்திரன் சாப்பிடும் படி செய்து விடுகிறார் , மீதி உள்ள மருந்தை , tr ராமசந்திரன் அறிந்தி பெரிய காது உடன் வளம் வருகிறார் , மாத்திரையை சாபிட்ட மகேந்திரன் மீண்டும் தன் உருவத்தை அடைந்து விடுகிறார் , இதனால் நந்தினி மற்றும் மகேந்திரன் இருவரையும் சிறை வைத்து விடுகிறார்

கஜேந்திரன் வயோதிகர் ஆனதினால் அவர் மனைவி மீதி ரகசியத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் நேரத்தில் , (ரகசியத்தை சொன்னால் சிலையாகி விடுவார்கள் ) கஜேந்திரனின் சந்தேகத்தினால் சிலையாகி விடுகிறார்

கஜேந்திரன் அந்த மலைக்கு வந்து சேரும் நாள் பௌர்ணமி (, அந்த நாளில் அவரின் தாய் , தந்தை உருவம் மாறாவிட்டால் , பிறகு எப்போதும் மாறது ) கஜேந்திரன் அங்கே ஒரு சாமியாரை சந்திக்கிறார் , அவர் தான் மகேந்திரனின் குரு , மகேந்திரன்க்கு மந்திரம் சொல்லி தரவில்லை என்ற காரணத்தினால் அவரை பாதி கலாக மாத்தி விடுகிறார் , கஜேந்திரன் க்கு அவர் அந்த மந்திர கோளை எப்பிடி அடைவது என்று சொல்லி விடுகிறார்
மகேந்திரன் சிறையில் இருந்து தப்பித்து வந்து விடுகிறார்
இருவரும் சண்டை போட்டு , முடிவில் மகேந்திரன் தோல்வி அடைகிறார்
அந்த சாமியாரின் உதைவினால் அனைவரும் (கஜேந்திரன் , அவர் மனைவி அமுதா , அவர் தந்தை ஆதித்தியன் (mn நம்பியார் ), அவர் மனைவி ராஜம்மா ) தங்கள் சொந்த உருவத்தை அடைகிறார்கள்
இத்தனை கேடுகளை செய்த நந்தினி மற்றும் மகேந்திரன் இருவரையும் கிளிகளாக மாற சபித்து விடுகிறார் அந்த சாமியார்
ஆம் , அந்த இரு குழந்தைகளும் தன் தாத்தா , பாட்டி உடன் விளையாடுகிறது


சுபம்

ScottAlise
28th February 2014, 07:17 PM
படத்தின் கதையை பற்றி பார்த்தோம் , படத்தை பற்றி , அதில் நடித்தவர்களின் நடிப்பை பற்றி , இன்னும் பிற அம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம்


இந்த படம் fantasy ,folkfore கதை தான் , இந்த படத்தின் கதை சின்ன அண்ணாமலை மற்றும் லட்சமணன் , சின்ன அண்ணாமலைக்கு அறிமுகம் தேவை இல்லை , சிவாஜி ரசிகர்களுக்கு , அவரை நன்கு பரிச்சியம் உண்டு , ரசிகர் மன்றத்தை நன்றாக ஒருகிணைத்தவர் , பிறகு ஜெனரல் சக்ரவர்த்தி , தர்மராஜா படங்களை தயாரித்தவர் , லட்சமணன் வித்வான் லட்சமணன் என்று நினைக்கிறன் சரியாக நினைவுஇல்லை

அதை போலே ஸ்டுன்ட் மாஸ்டர் பல்ராம் , அந்த காலத்தில் பெரிய fight மாஸ்டர் , ஒரே நேரத்தில் ஸ்டுன்ட் மாஸ்டராகவும் , நடன இயக்குனராகவும் இருந்தார் , துரதிஷ்டவசமாக ஒரு வெறி நாய் கடித்து இறந்து போனார் (MGR ஒரு சகப்தாம் என்ற நூலில் இருந்து )
இந்த மாதிரி படங்களில் action காட்சிகள் ஏராளம் ,சிவாஜி சார் முதல் முதலில் ஒரு taarzan படத்தில் நடிக்கிறார் , அதுவும் முதல் முதலில் தமிழில் வந்த taarzan படம், சண்டை காட்சிகள் படு பிரமாதம்
படம் ஆரம்பித்து 1 மணி நேரம் கழித்து தான் ஹீரோ introduction , 1952 ல் சினிமாவின் போக்கை தன் வசனம் பேசும் தமிழ் புலமையினால் ரசிகர்களை ஈர்த்த நபர் படம் ஆரம்பித்து 1 மணி நேரம் கழித்து தான் வருகிறார் , செம தில் தான் , இயகுனர்க்கும் , தயாரிப்பாளருக்கும் , என்ன டா இவன் சிவாஜி சாரின் பெயரை சொல்ல வில்லை என்று யோசிப்பது தெரிகிறது , நம்மவர் தான் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் தருவாரே , இல்லையென்றால் எதிர்பாராது படத்தில் வில்லன் வேடம் போடுவாரா அதுவும் மிகவும் கொடூர வில்லனாக .

ScottAlise
28th February 2014, 07:17 PM
அவர் அறிமுகம் ஆகும் காட்சி முதலில் யானை மேல் அமர்ந்து trumpet போன்ற கருவியை ஊதும் போதே அவர் தோற்றம் நல்ல வித்தியாசம் தெரிகிறது , உடை ஒரு one பீஸ் லாங் டிரஸ் , பாதி மார்பு தெரிகிறது , காலும் நன்றாக தெரிகிறது , அதனால் டுப் போட்டால் நன்றாக தெரிகிறது

ரொம்ப நாளாக இன்றும் சிவாஜி சார்க்கு நடிப்பு மட்டும் வரும் சண்டை வராது என்று சொல்லும் நபர் நிறைய , அவர்களை இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும் , ஜமுனாவை காப்பாற்ற அவர் சண்டை இடும் காட்சி எத்தனை வேகம் , இங்கே இருந்து அங்கே தாவி , பிறகு ஒரு உயரமான இடத்தில சண்டை போட்டு , அங்கே இருந்து குதித்து பாஞ்சு பாஞ்சு சண்டை போடுவார் பாருங்கள் , அதுவும் ஒரு பெரிய பாறையை தூக்கி ஜமுனாவை காப்பாற்றி சிரிப்பார் , ஒரு காட்டு மனிதரின் அசல் பிரதிபலிப்பு

ஊருக்குள் வரும் அந்த காட்டு மனிதர் சாப்பிடும் காட்சி நல்ல தமாஷ்
ஜமுனா சிவாஜி சாருக்கு தமிழ் கத்து கொடுக்கும் காட்சியில் அவர் பண்ணும் சேஷ்டைகள் டாப்
தன் காதலியின் தந்தை தன்னை அவமானம் செய்யும் பொது கத்தி யை எடுத்து விட்டு , உறையில் வைக்கும் காட்சியில் , அவர் முகத்தை காண கண் கோடி வேண்டும்

காட்டுக்கு வந்த உடன் தன் நண்பர்கள் (யானை ) உடன் பேசும் காட்சி விலங்குக்கும் பாசம் உண்டு என்பதை நிருபிகிறது
அதுவும் அவர் பெயர் வைக்கும் காட்சி அருமை , ஒரு யானைக்கு கணேசன் என்று பெயர் வைத்து விட்டு அவர் சிரிக்கும் சிரிப்பில் தான் எத்தனை அர்த்தங்கள்

வயசானவராக மாறிய உடன் அவர் குரல் , body language ல் தான் எத்தனை மாற்றங்கள்

For a change நம்பியார் நல்லவர் , அதனால் ஏக பட்ட கஷ்டங்களை அனுபவிக்கிறார் , PSV தான் நம்பியார் உருவம் மாறி அவர் சிரிக்கும் காட்சி பலே
TR ராஜகுமாரி - என்ன ஒரு வில்லத்தனம்
ஜமுனா - கடைசி சில காட்சிகளில் மட்டுமே நன்றாக நடிக்க வாய்ப்பு
மோகினியாக -சரோஜா தேவி பார்க்க நன்றாக இருக்கிறது
ஒரே ஷாட் ல் சிவாஜி சார் நடக்கும் பொது - பல யானைகள் நிற்கும் காட்சியில் - ஒளிபதிவாளர் GK ராமு வின் திறமை தெரிகிறது (இவர் நாடோடி மன்னன் படத்தில் இரண்டு MGR கை குலுக்கும் காட்சி , ஒருவர் சுற்றி வர , ஒருத்தர் உக்கார்ந்து இருக்கும் காட்சி , இன்னும் பல காட்சிகளை எடுத்து காட்டி இருப்பார் )
இது பாதி கலர் என்று கேள்வி பட்டேன் , ஆனால் நான் பார்த்த பிரிண்ட் அப்படி இல்லை , அதுவும் , படம் நன்றாக போகும் பொது TR ராமசந்திரன் காமெடி (பெரிய காது காமெடி ) மட்டுமே ஏமாற்றம்

வித்தியாசமான படத்தை எல்லோரும் ரசிக்கலாம்

ScottAlise
28th February 2014, 07:18 PM
Full movie

http://www.youtube.com/watch?v=Trr58nE1Bx4&hd=1

eweaxagayx
28th February 2014, 08:18 PM
என்னுடைய முகநூல் பக்கத்தில் நான் இன்று பகிர்ந்த ஒரு சிறு பதிவு.


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே -

உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் வரும் இப்பாடல் முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

எனக்கும் அந்த நாள் ஞாபகம் இப்பொழுது வந்தது. நடிகர் திலகம் திரை உலகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த 40 வருடங்களுக்கும் மேலான காலத்தை என்னவென்று சொல்வது?

அவரின் ஒவ்வொரு திரைப்படமும் கண்களுக்கு விருந்து மட்டுமல்ல. ஒரு குடும்பம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் - தாய், தந்தை பாசம் ( தெய்வ மகன் ), சகோதரர்களுக்கு இடையிலான உறவு, விட்டுக்கொடுக்கும் சுபாவம் ( படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம் ) , சகோதரர், சகோதரி பாசம் ( பாசமலரைத் தவிர வேறு எந்தப் படத்தைக் குறிப்பிடுவது? அத்துடன் தங்கை, ), குடும்ப உறவு ( வியட்னாம் வீடு, பாரத விலாஸ் ), தன்மானம் ( கௌரவம், சவாலே சமாளி ), தவறு செய்தால் தன் மனைவியே ஆயினும் தண்டிப்பது ( கவரிமான் ).

மேலும் வீரத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா, தேசப்பற்றுக்கு கப்பலோட்டிய தமிழன், பக்திக்கு திருவருட்செல்வர், திருமால் பெருமை, காதலுக்கு வசந்த மாளிகை, அன்பு மிக்க நேசத்துக்கு பாலும் பழமும், நகைச்சுவைக்கு சபாஷ்மீனா, கலாட்டா கல்யாணம், பலே பாண்டியா, ஊட்டி வரை உறவு, தான் செய்துவிட்ட தவறுக்காக துடிப்பதில் எதிரொலி, நீதி, புதிய பறவை , அழகான மெல்லிய நடிப்புக்கு முதல் மரியாதை, தீபம், தொழிலாளர் தோழனாக இரும்புத் திரை, உணர்ச்சி மிக்க நடிப்புக்கு அவன் தான் மனிதன், எங்கிருந்தோ வந்தாள், எங்க ஊர் ராஜா, பட்டிக்காட பட்டணமா, கீழ் வானம் சிவக்கும், நீதிபதி.

மிடுக்கான காவல் துறை அதிகாரியாக தங்கப் பதக்கம், வேடிக்கையான காவல் துறை அதிகாரியாக வெள்ளை ரோஜா, கலாய்க்கும் காவல் துறை அதிகாரியாக விடுதலை, பன்முக நடிப்புக்கு நவராத்திரி, ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் தங்கச் சுரங்கம், ராஜா.

இப்படிப் பல பல படங்களில் நம்மை மகிழ்வித்த அந்த நடிப்புலக வித்தகனைப் போல் இனி ஒருவர் வருவரோ?
அவரின் திரைப்படங்களுக்குத்தான் ஈடு இணைதான் உண்டோ?

இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர் தம் படங்கள் நம் வழி வழி சந்ததியினரையும் மகிழ்விக்கும் என்றால் அது மிகையில்லை.

uvausan
28th February 2014, 11:33 PM
இணைய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - எவ்வளவோ வேலைகளுக்கு நடுவில் கிடைத்த இடைப்பட்ட நேரத்தில் , NT யின் மீது உள்ள பாசத்தினாலும் , மரியாதையினாலும் நாம் நம் பதிவுகளை -போடுகிறோம் - பதிவுகளை பார்த்தாலே அதில் எவ்வளவு உழைப்பு இருக்கு என்பது தெரியும் - போடும் பதிவுகளை பாராட்ட வேண்டாம் - குறைந்த பட்சம் அந்த பதிவுகளை அலசலாமே - அதன் மூலம் பல கருத்துக்களை பரிமாற வாய்ப்பு கிடைக்குமே - திரியின் வேகமும் அதிகரிக்கும் - அலசல்கள் முடியும் முன் துளிக்கூட சம்பந்தமே இல்லாமல் ஏன் மற்ற பதிவுகளை போடவேண்டும் ? இதனால் எடுத்துக்கொண்ட நல்ல படங்களும் சரியாக அலசபடுவதில்லை - போடும் பதிவாளர்களுக்கும் எதற்காக இப்படி உழைத்து பதிவுகளை போட வேண்டும் - மற்றவர்களை போல சும்மா படித்துவிட்டோ அல்லது ஒன்று இரண்டு வரிகள் எழுதிவிட்டு இருந்துவிடலாமே என்ற எண்ணம் கண்டிப்பாக வரும் - இந்த செயல் இந்த திரிக்கு ஆரோக்கியம் தரக்கூடியது அல்ல - மற்ற திரிகளை பாருங்கள் - எந்த பதிவும் மற்றவர்களின் எண்ண பரிமாரணம் இல்லாமல் இருப்பதில்லை - பாராட்டுவதை விடுங்கள் - ஒருவர் எழுதுவதை மற்றவர்கள் வரவேற்கிறார்கள் , எழுதுபவரை உற்சாகப்படுத்துகிண்டார்கள் - எழுதபவரின் பதிவுகளை அலசின பின்பே , புதிய பதிவுகள் வருகின்றன - அங்கு உள்ள ஒவ்வருவருக்கும் குறைந்தது 1000 பதிவுகளாவது குறைந்த காலகட்டத்தில் போடவேண்டும் என்று கனவு உள்ளது - சரியான விஷயங்கள் இல்லாவிட்டாலும் அங்கே எப்படியாவது , எதாவது போடவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வருவருக்கும் இருகின்றது - ஆனால் - இங்கே நம்மிடம் எழுத பல நல்ல விஷயங்கள் உள்ளன ; அலச பல பதிவுகள் உள்ளன - ஆனால் நமக்குதான் எழுத மனம் வருவதில்லை , அப்படியே எழுதினாலும் முந்தைய பதிவுகளுக்கு கொஞ்சம் கூட connect இல்லாமல் பதிவுகளை போடுகிறோம் -

முக்கியமாக ஒன்றை எல்லோரும் நம்ப வேண்டும் - இங்கு , மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்று யாருமே எழுத வில்லை - அப்படி பாராட்டுக்கள் கிடைத்தால் நல்லது - இன்னும் எழுத தெம்பு வரலாம் -ஆனால் எழுதுவது ஒரு ஆத்ம திருப்திக்காக தான் - நம் தலைவருக்கு ஒரு புஷ்பாஞ்சலி - அவள்ளவு எல்லோரும் சேர்ந்து இழுக்க தேர் ஓடவேண்டும் - ஒருவர் பதிவு போடும் போது அதை முறியடிக்கும் மாதிரி நாம் நம் கருத்துக்களை திணிக்கும் போது திரி கண்டிப்பாக தொய்வை சந்திக்க வேண்டிருக்கும்

எல்லோரும் எழுதுங்கள் - தட்டி கொடுத்த வண்ணம் முன்னே செல்வோம் - யாருமே போட்ட பதிவுகளை படிப்பதில்லை என்ற எண்ணத்தை எழுதபவர்களுக்கு உண்டாக்கவேண்டாம் - மற்றவர்கள் தன கருத்துக்களை முழுவதும் சொல்லிவிட்டாரா எண்டு தெரிந்துகொண்டபின் புதிய பதிவுகளை போட்டால் இந்த திரி மிகவும் ஆரோக்கியமாக முன்னே செல்லும் - இது என் தாழ்மையான கருத்து - யாரையும் புண் படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதவில்லை ---

அன்புடன் ரவி

tfmlover
1st March 2014, 06:35 AM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/NT/Mn_zps0b01dbaa.jpg

Regards

Gopal.s
1st March 2014, 08:51 AM
நண்பர்களே,
வேலை பளுவின் காரணமாக பதிவிட இயலாவிடினும் படிக்க தவறுவதில்லை.இங்கு பதிவிடும் அனைத்து நண்பர்களின் பதிவுகளையும் ரசித்து வருபவன். நான் ஏதாவது சொன்னால் விபரீதமாகி விடுகிறது என்பதால் நகைச்சுவை,கிண்டல்,அறிவுரை,முதலியவற்றை தவிர்த்து என் பாட்டில் எழுதவே இருக்கிறேன். இதை தயவு செய்து உதாசீனம் என்று எண்ணவே தேவையில்லை. வாசு சார்,ராகவேந்திரா சார் கூடிய விரைவில் இணைவார்கள்.

Subramaniam Ramajayam
1st March 2014, 09:57 AM
RAVI sir
Your message to NT fans really a heart toching one all of us are closely following the thread and enjoying the stuff always with lot of interest and speed, perhaps due to personal reasons or lack of time acknowlegements has come down and no other reason otherwise. please continue the good wok as usual.
blessings.

Russellbpw
1st March 2014, 10:12 AM
Dear Ravi sir and Ragularam sir,

I have been wanting to respond to all your posts for quite sometime.

The posts that I have been publishing here is done either using my mobile or by using tab, most of the times during my travel in train or bus.

Today, I thought i should pen it from my system which is more flexible than the above two gadgets.

Coming back to the posts of Ragulram sir and Ravi sir....

First things first - It is certainly not a ordinary effort in sharing every enjoyment of yours here. Highly appreciable ! 3 cheers to both of you !

The way your description and analysis of the film and the performance of lead stars in equal footing is something not seen for quite sometime other than Neyveli Vasudevan Sir !

We do miss the Class writeups of Neyveli Vasudevan sir and though, i wanted to continue in the thread eagarai, I have forgotten the password of my login.

The class of writing , needless to say that it is our domain !

Ragulram sir's analysis of film and the lead stars is a "Badam Gheer" ! While Ravi sir's analysis of film and the lead stars is "Rasa Malai" ! Irendumae Thigattaadhadhu !

The "Nadai" both of you adapts is something superb and makes everyone enjoyable ! Most of the times, it makes most of us to feel that our writing is not up to the mark as both of you and may be that's
one reason of guilt that's preventing many of us from commenting even !

Both of you are spending quite a lot of time of value and contributing to the benefit of this thread and am sure, our "Appa's" blessing will always be with us.

3 cheers once again to both of you and my sincere thanks for your contribution to the glory of our APPA !

Russellbpw
1st March 2014, 10:14 AM
நண்பர்களே,
வேலை பளுவின் காரணமாக பதிவிட இயலாவிடினும் படிக்க தவறுவதில்லை.இங்கு பதிவிடும் அனைத்து நண்பர்களின் பதிவுகளையும் ரசித்து வருபவன். நான் ஏதாவது சொன்னால் விபரீதமாகி விடுகிறது என்பதால் நகைச்சுவை,கிண்டல்,அறிவுரை,முதலியவற்றை தவிர்த்து என் பாட்டில் எழுதவே இருக்கிறேன். இதை தயவு செய்து உதாசீனம் என்று எண்ணவே தேவையில்லை. வாசு சார்,ராகவேந்திரா சார் கூடிய விரைவில் இணைவார்கள்.

Gopal Sir,

Hearty Welcome once again sir !

We wish and would be glad to see your GOWRAVAMAANA PADHIVUGAL always !

We are after all fans of your writing sir !

Thanks for understanding us !

KCSHEKAR
1st March 2014, 12:18 PM
இணைய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - எவ்வளவோ வேலைகளுக்கு நடுவில் கிடைத்த இடைப்பட்ட நேரத்தில் , NT யின் மீது உள்ள பாசத்தினாலும் , மரியாதையினாலும் நாம் நம் பதிவுகளை -போடுகிறோம் - பதிவுகளை பார்த்தாலே அதில் எவ்வளவு உழைப்பு இருக்கு என்பது தெரியும் அன்புடன் ரவி
டியர் ரவி சார்,
இத்திரியின் பங்கேற்பாளர்களின் உழைப்பை என்றுமே, யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது. தங்களைப் போன்றவர்கள் திரி மற்றும் இணையதள பதிவுகள் மூலம் நடிகர்திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்ப்பதுபோல, என்னுடைய அலுவலகப் பணிக்கிடையே, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை பணியின் காரணமாக திரியின் ஆய்வுகளில் பங்கேற்க இயலவில்லை. என்னைப்போன்ற பலரும் திரைப்பட ஆய்வுகள் / அலசல்களில் பங்கேற்காவிட்டாலும், தொடர்ந்து திரியின் பார்வையாளர்களாக, ரசிகர்களாக இருக்கிறார்கள்.

புதிய(பழைய)பறவை கோபால் அவர்களின் மீள் வருகை அறிவிப்பும் நமக்கு புதுத் தெம்பூட்டியுள்ளது. இதுபோல மற்ற பதிவர்களும் வருவார்கள் என்று நம்புவோம்.

தாங்கள் ஒவ்வொரு முறையும் தெரிவிக்கும் கருத்துக்கள், ஆலோசனைகள் திரியின் நன்மை, வளர்ச்சிக்காகவே என்பதை அனைவரும் அறிவர். இருந்தாலும் சில சமயம் ஆர்வ மிகுதியில் சிலர் இத்தகைய பதிவுகளை இடுவதும் வருங்காலங்களில் தவிர்க்கப்படும் என்று நம்புவோம். நன்றி.

KCSHEKAR
1st March 2014, 12:45 PM
தன் காதலியின் தந்தை தன்னை அவமானம் செய்யும் பொது கத்தி யை எடுத்து விட்டு , உறையில் வைக்கும் காட்சியில் , அவர் முகத்தை காண கண் கோடி வேண்டும் அதுவும் அவர் பெயர் வைக்கும் காட்சி அருமை , ஒரு யானைக்கு கணேசன் என்று பெயர் வைத்து விட்டு அவர் சிரிக்கும் சிரிப்பில் தான் எத்தனை அர்த்தங்கள். வயசானவராக மாறிய உடன் அவர் குரல் , body language ல் தான் எத்தனை மாற்றங்கள். வித்தியாசமான படத்தை எல்லோரும் ரசிக்கலாம்
டியர் ராகுல் ராம்,

தங்கமலை ரகசியம் பற்றிய தங்களுடைய விமர்சனம் அருமை. தங்களுடைய ரசனை - எங்களையும் ரசிக்கவைக்கிறது. தொடருங்கள்......

ScottAlise
1st March 2014, 02:29 PM
Thanks for your comments KC Sekar sir and Ravi Kiran Surya sir

Richardsof
1st March 2014, 06:48 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/e71e79e3-bf3c-4307-b95b-15f7e3b75e22_zps40458dfb.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/e71e79e3-bf3c-4307-b95b-15f7e3b75e22_zps40458dfb.jpg.html)

uvausan
1st March 2014, 11:12 PM
அன்புள்ள ரவிகிரண் , KC Sekhar சார் , சுப்பிரமணியம் ராமஜெயம் அவர்களுக்கும் , வாசுதேவன் சார் எல்லோருக்கும் - என் பணிவான நன்றிகள் - நீங்கள் எல்லோரும் பாராட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பதிவுகளை போடுவதில்லை - என் மன சந்தோஷத்திற்காக மட்டுமே நான் இங்கு பதிவுகளை இடுகிறேன் - நான் சொல்லவந்ததே வேறு - இந்த திரி ஒரு "Relay race "ஆக இருந்தால் மிகவும் நன்றாக இருக்குமே என்ற ஒரு ஆசையில் தான் என் சொந்த கருத்துக்களை பதிவிட்டேன் - ஒருவர் ஒரு பட அலசலை முடித்தவுடன் அதை தொடர்ந்து - அந்த பட கதை , பாடல்கள் , அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் இவைகளை ஒவ்வருவராக அலசலாமே - திரியின் வேகமும் கூடும் , அந்த படமும் முழுவதும் ஆராயப்படும் - உதாரணத்திற்க்கு காவல் தெய்வத்தை எடுத்துகொள்வோம் - என் சிறிய அலசலுடன் அந்த படத்தின் அலசல் முடிந்துவிட்டதே - இதுதான் என் வருத்தம்.

அந்த படத்தில் ஆராய எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன - அந்த மாதி ஒரு side ரோல் , புகழின் உச்சியில் இருக்கும் எவராவது பணம் வாங்காமல் நடிப்பார்களா ? தன் மகள் தான் உலகம் என்று இருந்தவனை ஏன் தூக்கு கயிறு மட்டுமே வரவேற்க வேண்டும் ? எவ்வளவு அர்த்தமுள்ள வசனங்கள் , பாடல்கள் - இப்படி என்னும் அலசலை தொடர்ந்திருக்கலாமே !! ப்ராப்தம் கதையில் , வர்த்தக ரீதியில் தொய்வு கண்டு இருக்கலாம் - ஆனால் அந்த படத்தை பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன - ராகுல்ராமின் அற்புதமான பதிவுகள் - நீரோடை போன்ற அவருடைய எண்ணங்கள் - ஆனால் அவர் பாட்டு எழுதிக்கொண்டே செல்கிறார் - நாமும் எங்கோ மழைபெய்வது போல வேறு விஷயத்தில் கவனம் செலுத்துகின்றோம் - ஏன் இந்த "DISCONNECT "???? -

NT யின் படங்களில் மட்டுமே அறிந்துக்கொள்ள , ஆராய , விவாதிக்க , உற்சாகபடுத்திகொள்ள எராளமான விஷயங்கள் இருக்கும் - ஒவ்வரு பாடலும் , கதையும் , நடிப்பும் ஒரு திரிக்கு சமமானவை . வெறுமனே படித்து செல்லாமல் ஒவ்வருவரும் , நேரம் கிடைக்கும் போது சில வார்த்தைகள் இருந்தாலும் போதும் - அவரவர்களின் எண்ண ஓட்டத்தை எழுத்து மூலம் தெரிவித்தால் - இந்த திரியின் வேகத்தை யாராலும் தடுக்க முடியாது - சமபந்தமே இல்லாமல் பதிவுகள் வரும் பொழுதுதான் - இந்த திரியின் ஆரோக்கியம் பாதிக்க படுகின்றது

என்னை பொருத்தவரையில் , NT யின் வெற்றி படங்களை விட அவருடைய வெற்றி இல்லாத படங்கள் தான் அதிகம் அவருடைய நடிப்புக்கு தீனி போட்டன - படங்கள் தோல்வியை சந்திக்கலாம் என்று தெரிந்தும் அவர் தன் நடிப்பில் , ஈடுபாட்டில் துரோகம் செய்ததே இல்லை , மாறாக இன்னும் நன்றாகவே தன திறமையை வெளி படுத்திருப்பார் - யாருக்கு இந்த நல்ல மனம் வரும் ? கொடையாளிகள் என்று சொல்பவர்கள் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் - இப்படி உள்ள சில படங்களை ஏன் நாம் முழுவதும் அலசிய பின் வேறு தலைப்புக்கு செல்ல கூடாது ? இதுதான் என் ஆதங்கம் !!

அன்புடன் ரவி

uvausan
1st March 2014, 11:55 PM
திரியின் வேகத்தை எப்படி அதிகரிப்பது - ஒரு கற்பனை பதிவு - பெயர்கள் உட்பட


அசோக் : நமது 6வது திரி இந்த பதிவுடன் மிகவும் வெற்றிகரமாக முடிவடைகின்றது - அடுத்த பாகத்தை நமது நண்பர் , ராஜ ராஜ தொண்டைமான் அவர்கள் துவக்கி வைக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

முத்து : அருமையான யோசனை அசோக் அவர்களே !- தொண்டைமான் தான் சரியான நபர் - இந்த திரியில் அவர் உழைத்தது போல நம் தலைவர் கூட படத்தில் உழைத்திருக்க மாட்டார்.

கார்த்தவராயன் : அப்படி சொல்ல வேண்டாமே முத்து அவர்களே !- தொண்டைமானே தொவக்கட்டும்

ராஜு , ஸ்ரீதர் , செல்வ பாண்டியன் , கரும்தேள் கண்ணன் , முக்காடு மூவேந்தன் - ஆமாம் , ஆமாம் தொண்டைமானே தொவக்கடும் - தலைவர் புகழ் தாரணி எங்கும் பரவட்டும் - தமிழ் ஓங்கட்டும் - வருக வருக தொண்டைமான் அவர்களே !!

6வது திரி இப்படியே 350பக்கங்களை தொட்டு விட்டது

தொண்டைமான் : முத்து உங்களுக்கு தெரிந்திருக்கும் - "விட்டேனா உன்னை " என்ற படத்தில் தலைவர் தண்ணீரில் நின்று கொண்டிருப்பார் - அப்போது ஒரு பெரிய மீன் தன குட்டிக்கு , நீந்த சொல்லிகொடுக்கும் - அந்த குட்டி நீந்த முடியாமல் தவிக்கும் - நம் தலைவர் அதை கையில் எடுத்து தரையில் விடுவார் - தலைவா அப்படி செய்யாதீர்கள் என்று நாம் திரை அரங்கில் கத்தினோமே ! - பிறகு தான் தெரிய வரும் - அதுதான் அந்த சின்ன மீனுக்கு நீந்த சரியான வழி - தாய் மீன் உடனே தலைவரின் காலை தொட்டு முத்தமிடும் - அந்த காட்சியில் அழாதவர்களே கிடையாது தயாரிப்பாளர்கள் உள்பட -

முத்து : எப்படி மறக்கமுடியும் இந்த படத்தை - படம் 239.5 அரங்குகளில் 567 நாட்கள் ஓடி சுமார் 10 லட்சம் அந்த காலத்திலேயே சம்பாதித்து கொடுத்ததே - அதில் வரும் பாடல் ஒன்று உங்களுக்காக

பகலில் சந்திரன் வருவதில்லை
இரவில் சூரியனை காண்பதில்லை
ஏழையின் வீட்டிலோ உணவில்லை
மாடி விட்டிலோ அமைதி இல்லை "

அசோக் : அதே மாதிரி தலைவர் - "வரியா , வரவில்லையா " படத்தில் ஐஸ் கிரீம் சாப்பிடுவார் - சாப்பிட்டுவிட்டு அந்த கோனை ஒரு ஏழை பாட்டிக்கு தரும் போது கைத்தட்டல் வானை பிளக்கும்


தொண்டைமான் : இந்த திரி இவ்வளவு சீக்கிரமாக முடிவடையும் என்று நினைக்கவே இல்லை - இதுவரை சுமார் 45,47,78,001 பேர் இந்த பதிவை படிக்கிறார்கள் என்று நினைக்கும் போது தலைவர் தலைவரே , அவரை வெல்ல அவரால் தான் முடியும் என்று சத்தம் போட்டு சொல்ல தோன்றுகின்றது -----

அன்புடன்
ரவி

uvausan
2nd March 2014, 12:07 AM
இப்படி நாம் நம் திரியை வளர்க்கவில்லை - அப்படி ஒரு வேலை வளர்த்திருந்தால் - இந்த நேரம் திரி 120வது பாகத்தை தொட்டிருக்கும் - என்ன உழைப்பு , எவ்வளவு கருத்துக்கள் , எத்தனை எண்ண ஓட்டங்கள் , எந்த மாதிரியான ஆவணங்கள் , எத்தனை ஆணி தரமான உண்மைகள் - இதையெல்லாம் மீறி எத்தனை பக்தி , dedication , hard work ? ஆனால் முயல் போல அதிகமாக உறங்கிவிடுகின்றோம் - அலசவோ ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றது - எழுதவோ ஏகப்பட்ட உண்மைகள் உள்ளது - இரண்டு மனம் எல்லோருக்கும் இருந்தால் - ஒன்று படிப்பதற்கு , இன்னும் ஒன்று நிறைய எழுதுவதிற்கு - இந்த திரி எவ்வளவு இன்னும் பிரகாசமாக எரியும் -------

அன்புடன் ரவி

uvausan
2nd March 2014, 12:10 AM
நன்றி வினோத் சார் - உங்களை பற்றி நினைக்காத நாளே இல்லை - இங்கும் தொடருங்கள்

அன்புடன்
ரவி

Murali Srinivas
2nd March 2014, 01:12 AM
நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் தமிழகத்திலே எங்கே எப்போது திரையிடப்பட்டாலும் அவை அனைத்தும் பரவலான ரசிகர்களை சென்றடைந்து நல்ல வசூலைப் பெற்று, வெளியிட்டவருக்கும் அரங்க உரிமையாளருக்கும் லாபத்தை ஈட்டிக் கொடுப்பதை நாம் இந்த திரியில் பல முறை செய்திருக்கிறோம். அந்த சந்தர்பங்களிலெல்லாம் நாம் உண்மையான விவரங்களை மட்டுமே பதிவு செய்கிறோம். தவறான dataவோ உண்மையில் வந்ததை விட அதிகப்படுத்தப்பட்ட வசூலோ நாம் சொல்வதில்லை.

இங்கே இதை குறிப்பிட காரணம் சென்ற வாரம் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் வெளியான சந்திப்பு திரைப்படம் ஓடிய ஒரு வார காலத்தில் 3804 பார்வையாளர்களை அரங்கிற்கு வரவழைத்திருக்கிறது. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்தவர்கள் எண்ணிக்கை 3804. அந்த அரங்கில் டிக்கெட் கட்டணம் ருபாய் 20/- மற்றும் 25/- ஆகும். அப்படியென்றால் என்ன வசூல் உத்தேசமாக வந்திருக்கும் என்பதை நமது திரி வாசிப்பாளர்களே உணர்ந்துக் கொள்ளலாம். 2014-ல் அந்த அரங்கில் வெளியான எந்த படமும் இந்த வசூலை பெறவில்லை எனபதை அரங்க உரிமையாளர் சொல்கிறார்.

எல்லா புகழும் நடிகர் திலகதிற்கே!

அன்புடன்

Murali Srinivas
2nd March 2014, 01:14 AM
சென்ற 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். ராஜு என்ற மில் தொழிலாளி தன கடுமையான உழைப்பால் ராஜசேகரன் என்ற மில் முதலாளியாக மாறி தங்கைக்காகவே வாழ்ந்து மறைந்த கதை, காவியமாக திரையரங்குகளில் வலம் வர தொடங்கிய போது பல பல காரணங்களால் அந்த வலம், அந்த உலா தடைப்பட நேர்ந்தது. அதைப் பற்றிய பின்னணி தகவல்களும் காரண காரியங்கள் பற்றியும் ஒரு நீண்ட பதிவை நான் இங்கே பதிந்திருந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கும். அந்த பதிவில் நிறைவாக இந்தப் படம் சரியான முறையில் முன்னெடுத்து செல்லப்பட்டால் படம் நல்ல முறையில் வரவேற்கப்படும் என்றும் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களின் முதல் திருப்பிக் கிடைக்கும் என்றும் சொல்லியிருந்தேன்.

இப்போது படத்தை மூடியிருந்த இருள் விலகி மீண்டும் வெளிச்சக் கீற்று விழுவதற்க்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. அதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில்.

நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடு செய்யப்படுவதில்லை. அப்படி செய்தாலும் வரவேற்பு இல்லை/இருக்காது என்பது போன்ற ஒரு பொய் பிரச்சாரம் பரவலாக சில பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. நாம் அப்போதெல்லாம் அதற்கு அளித்த பதில் நடிகர் திலகத்தின் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டால் அவை நிச்சயமாக பெரிய வரவேற்ப்பை பெறும் என்று உறுதிபட கூறினோம். அதற்கேற்றாற் போல் 2010-11 ஆண்டுகளில் ஆரம்பித்து கர்ணன் மூலம் அது தமிழகமெங்கும் பரவி இன்று வெளியாகும் அனைத்து ஊர்களிலும் நடிகர் திலகத்தின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு அதை உறுதி செய்கிறது. இதன் காரணமாகவே சிவாஜி படங்களின் வெளியீட்டு உரிமையையும் பிரிண்டையும் வைத்துக் கொண்டிருக்கும் நபர்கள் இப்போது அரங்க உரிமையாளர்களை அணுகி சிவாஜி படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த பின்னணியில், வெகு நாட்களாக உரிமை வைத்திருந்த ஒருவர் மகாலட்சுமி திரையரங்கை அணுக அவருக்கு வெளியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அடுத்த வாரத்தில் மகாலட்சுமி அரங்கில் நடிகர் திலகத்தின் இரு துருவம் நண்பகல் காட்சியாக திரையிடப்படுகிறது. இதே நபர் அதே அரங்கில் எங்கிருதோ வந்தாள் படத்தை விரைவில் ரெகுலர் காட்சிகளில் திரையிடப் போகிறார்.

அது போன்று கோவை மாநகரில் மார்ச் 7-ந் தேதி முதல் நடிகர் திலகத்தின் சொர்க்கம் திரையியிடப்படப் போவதை சொல்லியிருந்தோம். அதில் ஒரு சின்ன மாற்றம். அது மார்ச் 14- ந் தேதி மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு surprise சந்தோஷம் ஒளிந்திருக்கிறது என செய்தி வந்திருக்கிறது. விவரங்கள் விரைவில்

அன்புடன்

uvausan
2nd March 2014, 06:54 PM
நன்றி முரளி - நல்ல நியூஸ் .உங்கள் உண்மையின் வெள்ளிச்சம் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவது இல்லை ,ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வது இல்லை என்ற வரிகளுக்கு உண்மையில் உயிர் ஊட்டுகின்றது !!

அன்புடன் ரவி

Murali Srinivas
3rd March 2014, 12:43 AM
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு அவரின் ஒரு சில கதாபாத்திரங்களை வெகுவாக பிடிக்கும். அவரின் ஸ்டைல், gestures, உடல் மொழி அதற்கு காரணமாக இருக்கலாம். அப்படி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட Dr.ராஜா என்ற பட்டாக்கத்தி பைரவன் இன்று முதல் நாகர்கோவில் பயனீர் முத்து அரங்கில் தினசரி 4 காட்சிகளாக உலா வருகிறார். நாஞ்சில் மக்கள் குதூகலத்துடன் வரவேற்பதாக செய்தி.

நாஞ்சில் நகர மக்கள் இன்று முதலே காண்கிறார்கள் என்றால் கொங்கு நாட்டு மக்கள் இன்னும் பத்து தினங்களில் இதே பைரவனை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை மக்களை மகிழ்விக்க எங்கள் தங்க ராஜா வரும் மார்ச் 14ந் தேதி முதல் கோவை ராயல் திரையரங்கிற்கு விஜயம் செய்கின்றார். நேற்று குறிப்பிட்ட surprise இதுதான். 14ந் தேதி முதல் வெளியாவதாக இருந்த சொர்க்கம் வேறு ஒரு தேதியில் வெளியிடப்படும் என தெரிகிறது. சரியான தேதி தெரிந்தவுடன் அது இங்கே பதிவிடப்படும்.

அன்புடன்

Murali Srinivas
3rd March 2014, 12:46 AM
ரவி,

உங்கள் விமர்சனங்களையும் படித்தேன். உங்கள் ஆதங்கத்தையும் படித்தேன். விமர்சனங்கள் சுருக்கமாக சுவையாக இருந்தது. ஆதங்கத்தை பொறுத்தவரை ஒரு சில வார்த்தைகள்.

எப்போதும் நான் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுகிறோம் என்றால் அதை முழுமையாக எழுதி முடித்து விட்டு பதிவிடுவது நல்லது. காரணம் எழுதுபவர்களுக்கும் சரி படிப்பவர்களுக்கும் சரி, அது முழுமையான ஒரு அனுபவமாக இருக்கும். அப்படி இல்லையென்றால் எழுதுபவருக்கும் படிப்பவர்களுக்கும் continuity விட்டு போகும். இப்போது கோபால் கௌரவத்தைப் பற்றி எழுதியது அப்படித்தான் ஆகி போனது. ஆகவே முழுமையாக prepare செய்வது நல்லது.

நான் இந்த காரணத்தை சொல்லவில்லை. நான் விமர்சனம் எழுதிய படத்தைப் பற்றி அனைவரும் பங்களிப்பு செய்தவுடன் அடுத்த படத்திற்கு போகலாமே என்றால் அதில் ஒரு நடை முறை சிக்கல் இருக்கிறது. அந்தப் படத்தை பற்றி எனக்கு தெரியாது என்றால் நான் எனக்கு தெரிந்த படத்தை பற்றி எழுதப் போய் விடுவேன். இது public forum. யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். நாம் தடுக்க முடியாது.

ஒவ்வொருவரும் மனதில் ஒரு எண்ணம் வைத்திருப்பார்கள். நமது ரசிகர்களை விடுங்கள். வேறு சிலர் இருக்கிறார்கள். இந்த திரியில் வரும் ஒரு சில பதிவுகளை தனியாக எடுத்து quote செய்து வேறு ஒரு கலர் கொடுக்க முயற்சிப்பார்கள். உதாரணத்திற்கு நான் சந்திப்பு படத்தின் வசூலை பதிவு செய்தேன். உடனே ஒருவர் வருவார். பாருங்கள் சந்திப்பு படத்தை glorify செய்கிறார் என்பார். குறிப்பிட்ட படத்தைப் பற்றிய செய்தியை பதிவு செய்வதற்கும் படத்தை புகழ்வதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் [ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்படிபட்டவர்களுக்கு இந்த வித்தியாசம் புரியும். ஆனால் வேண்டுமென்றே அதை திரிப்பார்கள்]. இன்னொருவர் வருவார். பெருந்தலைவர் என்ற வார்த்தை வந்திருக்கிறது. ஆகவே அரசியல் எழுதுகிறார் என்பார். ஆக இதையெல்லாம் நாம் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும்.

நானுமே உங்கள் பிராப்தம் மற்றும் மூன்று தெய்வங்கள் ஆகிய படங்களைப் பற்றிய விமர்சனங்கள் படித்தவுடன் அந்த காலங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆரம்பித்தேன். நேரம் கிடைக்காததனால் முடிக்க முடியவில்லை. அதே போன்று வேறு சில திரிகளை பற்றி குறிப்பிட்டு ஒரு ஒப்பீடு செய்திருந்தீர்கள். அதை பற்றி சில வார்த்தைகளும் நேரம் கிடைக்கும் போது கூற விரும்புகிறேன்.

சுருக்கமாக சொன்னால் உங்கள் பணியை செவ்வனே செய்யுங்கள். அதற்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஆதரவு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

ரவியின் சுருக் விமர்சனங்களை பாராட்டும் இதே நேரத்தில் சிரத்தை எடுத்து தங்க மலை ரகசியம் பற்றி விஸ்தாரமாக எழுதிய தம்பி ராகுல் ராமிற்கு வாழ்த்துகள்!

அன்புடன்

sivaa
3rd March 2014, 07:33 AM
நண்பர்களால் வெளியிடப்பட்ட மலர் ஒன்றில் இருந்து

sivaa
3rd March 2014, 07:43 AM
தற்போழுதுஎன்னால் image பதிவிடமுடிகிறது
ரவி சார் தங்கள்மூலம் என்னுடைய பிரச்சினைக்கு
முடிவு வந்துள்ளது என நினைக்கின்றேன்
உதவிய அனைவருக்கும் நன்றி

Russellisf
3rd March 2014, 03:08 PM
தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய 'பாவை விளக்கு' நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார். கதைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பத்திரிகைகள் காரசாரமாக விமர்சனங்கள் எழுதின.

புதுக்கோட்டை அருகில் உள்ள பெருங்களூர், அகிலனின் சொந்த ஊர். அங்கு 1922 ஜுன் 27-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் வைத்தியலிங்கம் பிள்ளை. தாயார் அமிர்தம்மாள். பள்ளிப்படிப்பை முடித்ததும், ரெயில்வே தபால் இலாகாவில் (ஆர்.எம்.எஸ்.) வேலை பார்த்தார்.

ஓடும் ரெயில் தபால்களைப் பிரிப்பதுதான் அவர் பணி. பள்ளியில் படிக்கும்போதே கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய எழுத்தில் பக்குவமும், வேகமும், விறுவிறுப்பும் இருந்த காரணத்தினால், அவருடைய கதைகள், யாருடைய சிபாரிசும் இன்றி 'கலைமகள்' முதலான பத்திரிகைகளில் பிரசுரமாயின. 'கலைமகள்' முதன் முதலாக நடத்திய நாவல் போட்டியில், அகிலனின் 'பெண்' என்ற நாவல் முதல் பரிசு பெற்றது. அதைத் தொடர்ந்து, இலக்கிய உலகில் அகிலன் புகழ் பெற்றார். அகிலன் தன் குடும்பத்தாருடன் திருச்சியில் வசித்து வந்தார்.

அகிலனின் எழுத்துக்களுக்கு வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பு இருந்ததால், எல்லா பத்திரிகைகளும் அகிலனிடம் கதைகளைப் பெற்று பிரசுரித்தன. 1957 மத்தியில் 'கல்கி'யில் 'பாவை விளக்கு' தொடர் கதையை அகிலன் எழுதினார். உணர்ச்சிமயமாக அமைந்த அந்தக் கதை வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பட அதிபர் எம்.ஏ.வேணுவும், அப்போது கதை - வசன ஆசிரியராக விளங்கிய ஏ.பி.நாகராஜனும், சேலத்தில் 'சம்பூர்ண ராமாயணம்' படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலகட்டம் அது.

'பாவை விளக்கு' கதை முடியாமல் இருந்தபோதே, அந்தக் கதையை சினிமா படமாகத் தயாரிக்க, ஏ.பி.நாகராஜன் விருப்பம் தெரிவித்தார். கணிசமான தொகையை முன் பணமாகக் கொடுத்தார். படம் தயாராகும்போது, உடன் இருக்குமாறு அகிலனை ஏ.பி.நாகராஜன் கேட்டுக்கொண்டார். ஆர்.எம்.எஸ். வேலையை விட்டு விலகி, முழு நேர எழுத்துப்பணியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் அகிலனுக்கு ஏற்கனவே இருந்தது.

சினிமாத் துறையிலும் தனக்கு வரவேற்பு இருந்ததால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, குடும்பத்தோடு சென்னையில் குடியேற முடிவு செய்தார். அகிலன் அரசு வேலையை விட்டு விட்டு, திருச்சியில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது, அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். ஏ.பி.நாகராஜன் யூனிட்டில் எடிட்டராக இருந்த விஜயரங்கமும், ஒளிப்பதிவாளராக இருந்த கோபண்ணாவும் இணைந்து 'விஜயகோபால் பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியை தொடங்கினர். அந்த பேனரில் 'பாவை விளக்கு' படமாகியது. கதாநாயகனாக (எழுத்தாளன் தணிகாசலமாக) சிவாஜிகணேசன் நடித்தார்.

கதாநாயகனை 4 பெண்கள் காதலிப்பது போல் அமைந்ததுதான் கதை. 1) தேவகி இளம் விதவை. இவளுடைய ஒருதலைக் காதல் ஆரம்பத்திலேயே கருகி விடுகிறது. இந்த வேடத்தில் பண்டரிபாய் நடித்தார். 2) செங்கமலம். தாசி குலத்தில் பிறந்தவள். செங்கமலமும், தணிகாசலமும் நேசித்தும், அவர்கள் காதல் நிறைவேறவில்லை.

செங்கமலம் வேடத்தில் குமாரி கமலா. 3) முறைப்பெண் கவுரி, இவள்தான் தணிகாசலத்தை மணக்கிறாள். இந்த வேடத்துக்கு சவுகார்ஜானகி. 4) உமா. படித்தவள்; பண்புள்ளவள். முதலில் தணிகாசலத்தின் எழுத்தில் உள்ளத்தை பறிகொடுப்பவள், பின்னர் அவனிடமே தன் இதயத்தை இழக்கிறாள்.

ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வாழும் தணிகாசலத்தை, மனப்போராட்டத்தில் சிக்கித்தவிக்க வைக்கும் உமாவாக எம்.என்.ராஜம் நடித்தார். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, திரைக்கதை - வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுதினார். சோமு டைரக்ட் செய்தார். அகிலனின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கும் விதத்தில், படத்தை ஏ.பி.நாகராஜன் உருவாக்கினார்.

குற்றாலம், மும்பை, டெல்லி, ஆக்ரா முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. குறிப்பாக, சிவாஜியும், எம்.என்.ராஜமும் ஷாஜஹான், மும்தாஜ் வேடங்களில் தோன்றி, 'காவியமா, நெஞ்சில் ஓவியமா?' என்று பாடும் காட்சி, தாஜ்மகாலின் பல்வேறு பகுதிகளிலும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. 'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்', 'சிதறிய சலங்கைகள்போல' முதலான பாட்டுகளும் நன்றாக இருந்தன.

குறிப்பாக, 'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி...' பாடலின் தொடக்கத்தை சிவாஜி பாட, தொடர்ந்து சிதம்பரம் ஜெயராமன் பாடியது புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 1960 தீபாவளிக்கு 'பாவை விளக்கு' வெளியாகியது. படம், பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆயினும், 'ஒருவனை 4 பெண்கள் காதலிப்பதா?' என்று பத்திரிகைகள் இரண்டு பிரிவாக பிரிந்து விவாதம் செய்தன.

படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டிய பத்திரிகைகள் கூட, மூன்று குறைகளைச் சுட்டிக்காட்டின. சிதம்பரம் ஜெயராமனின் குரல், சிவாஜிக்குப் பொருத்தமாக இல்லை. பெரும்பாலான படங்களில் வில்லியாகவே நடித்து வந்த எம்.என்.ராஜம், உமா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை.

சிவாஜிகணேசனை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம். சில இடங்களில் அவரை 'படிக்காத மேதை' ரங்கன் பாணியில் நடிக்கச் செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம். இவ்வாறு பலரும் கூறினர். நூறு நாட்களைத் தாண்டி ஓடியிருக்க வேண்டிய படம், நூறு நாட்களை நெருங்கத்தான் முடிந்தது. - courtesy malaimalar

Russellbpw
3rd March 2014, 05:30 PM
நண்பர்களால் வெளியிடப்பட்ட மலர் ஒன்றில் இருந்து

இனிய நண்பர் சிவா அவர்களுக்கு

தாங்கள் தர்மம் எங்கே திரைப்படத்தை பார்த்திருபீர்களேயானால் "சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்" என்ற பாடல் ஒன்று வரும்.

அதில் ஒரு முக்கியமான வரி ஒன்று உண்டு - அது - "ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை " என்பது. அதைப்போல நடிகர் திலகம் அவர்களுடைய புகழ் மறைக்ககூடியது அல்ல !

மேலும் நம் நடிகர் திலகம் அவர்கள் செய்த நல்ல காரியங்கள் அவருக்கு எப்போதும் புகழ் சேர்க்கும்.

அதற்காக நாம் மற்றவர்களை இகழவேண்டும் என்ற நிர்பந்த நிலைக்கு நம்மை நாமே தள்ளவும் கூடாது.

நடிகர் திலகம் அவர்கள் நன்கொடைகள் வலது கரம் செய்ய இடது கரம் அறியாத வகை. இது நடிகர் திலகத்தின் முடிவு. நாம் அந்த நற்குணத்தை பற்றி எழுதி அல்லது பதிவு செய்யலாம்.

இதில் மற்றவர்களை எதற்கு இழுக்கவேண்டும் ?

உண்மை என்றிருந்தாலும் சக்திவாய்ந்தது !

Russellbpw
3rd March 2014, 05:57 PM
மார்ச் மாதம் வெளிவர இருக்கும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல்.

ஆயினும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.

சென்னை - மார்ச் 14 - தங்கச்சுரங்கம் / வெள்ளை ரோஜா
காஞ்சிபுரம் - மார்ச் 14 - தங்கச்சுரங்கம் / நான் வாழ வைப்பேன் / நீதி
கோவை - மார்ச் 14 - எங்கள் தங்கராஜா
மதுரை - மார்ச் 14 - வைர நெஞ்சம்
நாகர்கோயில் - மார்ச் 14 - சந்திப்பு

Russellbpw
3rd March 2014, 06:04 PM
நண்பர்களே,
இங்கு பதிவிடும் அனைத்து நண்பர்களின் பதிவுகளையும் ரசித்து வருபவன். என் பாட்டில் எழுதவே இருக்கிறேன். .


http://www.youtube.com/watch?v=P1mj0ZSNcGc

Russellbpw
3rd March 2014, 07:49 PM
MARCH 14th - THANGACHURANGAM @ YOUR FAVORITE THEATER

http://www.youtube.com/watch?v=AgUzhulHAvk

uvausan
3rd March 2014, 08:36 PM
தற்போழுதுஎன்னால் image பதிவிடமுடிகிறது
ரவி சார் தங்கள்மூலம் என்னுடைய பிரச்சினைக்கு
முடிவு வந்துள்ளது என நினைக்கின்றேன்
உதவிய அனைவருக்கும் நன்றி


டியர் சிவா - நன்றி நெய்வேலி வாசுவிர்க்கே செல்லவேண்டும் - இன்னும் ஒரு short கட் உள்ளது - இந்த பதிவு மூலம் மற்ற இணைய நண்பர்களுக்கு இது உதவியாக இருந்தால் என்னை விட அதிகம் மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாது

Steps Involved

1. Visit www .photobucket.com

2. Get yourself registered

3. After registering , you can now upload the images saved on your desktop

4. Now click the image saved in your login page

5. The image will expand

6. On right hand side there is a profile of URLs – select the URL under image

7. Just paste the HTTP stings in the Mayyam page you have opened in the thread for posting

8. Before submitting go to advance view and see the picture – it is relatively bigger

9. Don’t use attachment option in Mayyam for images – you will encounter capacity constraint

You can send me a PM in case you could not succeed in this attempt

sivaa
4th March 2014, 06:38 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/004_zps7dbf98a5.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/004_zps7dbf98a5.jpg.html)

sivaa
4th March 2014, 06:45 AM
டியர் சிவா - நன்றி நெய்வேலி வாசுவிர்க்கே செல்லவேண்டும் - இன்னும் ஒரு short கட் உள்ளது - இந்த பதிவு மூலம் மற்ற இணைய நண்பர்களுக்கு இது உதவியாக இருந்தால் என்னை விட அதிகம் மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாது

Steps Involved

1. Visit www .photobucket.com

2. Get yourself registered

3. After registering , you can now upload the images saved on your desktop

4. Now click the image saved in your login page

5. The image will expand

6. On right hand side there is a profile of URLs – select the URL under image

7. Just paste the HTTP stings in the Mayyam page you have opened in the thread for posting

8. Before submitting go to advance view and see the picture – it is relatively bigger

9. Don’t use attachment option in Mayyam for images – you will encounter capacity constraint

You can send me a PM in case you could not succeed in this attempt

ரவி சார் வணக்கம்
தங்களின் வழிகாட்டலுக்கு மிகவும் நன்றி
நெய்வேலி வாசு சார் தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

sivaa
4th March 2014, 08:26 AM
இனிய நண்பர் சிவா அவர்களுக்கு
!

ரவிகிரண்சூரியா சார்
மற்றவர்களை இழுத்து இகழவேண்டும் என்று நான் நினைக்கவில்லை
இமேஜில் இருந்து அந்த வசனம் என்னுடையதல்ல
அத்துடன் அது 1982 ஆம் ஆண்டு தியாகி படத்தின் வெளியீட்டின்போது
வெளியிடப்பட்ட மலரில் இருந்து எடுக்கப்பட்டது
முன்னர் சிவாஜி எம் ஜீ ஆர் ரசிகர்கள் வெளியிட்ட மலர் நோட்டீஸ்
போன்றவற்றில் இப்படித்தான் ஒருவரை ஒருவர் இழுத்து எழுதிக்கொண்டிருந்தார்கள்
அவற்றையாவது விட்டுவடலாம் தற்போழுது வெளிவந்துகொண்டிருக்கும்
ஒலிக்கிறது உரிமைக்குரல் எம் ஜி ஆர் ரசிகர்களிடம் வாங்கி படித்து பாருங்கள்
என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள என்று தெரியும்
;
ஒரு படித்த மேதாவியாம்
எழுதுகிறார் ப்ராப்தம் பட சந்திரகலா வைர நெஞ்சம் பத்மபிரியா
பற்றி எழுதச்சொல்லி
அங்கே அவர் சொல்லும் விடயம் என்ன?
எலலாவற்றையும் விட்டுவிடுங்கள்
உங்கள் பரந்தமனபான்மைக்கு பாராட்டுக்கள்

sivaa
4th March 2014, 08:40 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/005_zpsacafa9a3.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/005_zpsacafa9a3.jpg.html)

goldstar
4th March 2014, 10:09 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/004_zps7dbf98a5.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/004_zps7dbf98a5.jpg.html)

Thank you Siva sir for detailed authentic records of our Nadigar Thilagam.

goldstar
4th March 2014, 10:11 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/005_zpsacafa9a3.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/005_zpsacafa9a3.jpg.html)

Thank you Siva sir for records of Vellai Roja... another super hit 80s movies of NT.

Russellbpw
4th March 2014, 11:21 AM
ரவிகிரண்சூரியா சார்
தற்போழுது வெளிவந்துகொண்டிருக்கும்
ஒலிக்கிறது உரிமைக்குரல் எம் ஜி ஆர் ரசிகர்களிடம் வாங்கி படித்து பாருங்கள்
என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள என்று தெரியும்
;
ஒரு படித்த மேதாவியாம்
எழுதுகிறார் ப்ராப்தம் பட சந்திரகலா வைர நெஞ்சம் பத்மபிரியா
பற்றி எழுதச்சொல்லி
அங்கே அவர் சொல்லும் விடயம் என்ன?


mgr - sivaji ரசிகர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் திட்டிக்கொண்டும் தூற்றிக்கொண்டும் தான் இறக்கும் வரை இருக்க வேண்டுமா ? -

நல்ல உள்ளம் கொண்ட பல mgr ரசிகர்களை தனது பத்திரிகை வாயிலாக தேவையில்லாமல் தூண்டிவிடும் உரிமைக்குரல் பத்திரிகை மற்றும் vcd dvd உரிமையாளர் பன்முகம் கொண்ட திரு b s ராஜு அவர்களுக்கு இரு திலகங்களின் ஒத்த கருத்துடைய பல ரசிகர்களின் சார்பாக கேள்வி. !

சமீபத்தில் வெளிவந்த உரிமைக்குரல் பதிவில் mgr ரசிகர்கள் சிவாஜி ரசிகர்களுக்கு குடைபிடிக்கிறார்கள் என்ற தொனியில் இதன் ஆசிரியர் திரு ராஜு அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

இவருக்கு அனைத்து நல்லுள்ளங்கள் சார்பாக இந்த கேள்விகள் !

1) இரு திலக ரசிகர்களும் இறக்கும் வரையில் ஒருவரை ஒருவர் இழித்துகொண்டும், பழித்துகொண்டும்தான் இருக்கவேண்டுமா ?

2) நல்ல எண்ணத்துடன் இருவரும் நட்பு பாராட்டுவதில் உமக்கு என்னையா அவ்வளவு வயிதெரிச்சல் ?

3) நீங்கள் முதலில் ஒரு ஞாயவாதியாக நடந்ததுண்டா ? வியாபாரம் என்று வரும்போது, பத்திரிகையில் சிவாஜி பற்றி தவறான தகவலுடன், இழித்தும் பழ்ழித்தும் கீழ்த்தரமாக எழுதுவது தான் பத்திரிகை தர்மமா ?

4) தங்களுடைய cd மற்றும் dvd நிறுவனமாம் uk மூவீஸ் மற்றும் uk கோல்டன் மொவீஸ் மற்றும் akshi வீடியோ ஆகிய நிறுவனங்கள் மூலம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் திரைகாவியங்களான நானே ராஜா, தாய் , எங்கள் தங்கராஜா , சத்ரபதி சிவாஜி (பக்த துகாரம் தெலுகு படம் மொழிபெயர்ப்பு ) மேலும் பல சிவாஜி படங்கள் வெளியிட்டு லக்ஷங்கள் சம்பாதித்து அந்த நன்றி விஸ்வாசம் துளி கூட இல்லாமல், இப்படி பத்திரிகையில் சிவாஜி பற்றி தூற்றுவதும், mgr - sivaji ரசிகர்களை தன்னுடைய சுய லாபத்திற்காக தூண்டிவிட்டு வேடிக்கை பார்பதை இத்துடன் தயவு செய்து நிறுத்திகொள்ளுங்கள் !

சிவாஜியை தூற்றி எழுதினால்தான், mgr sivaji ரசிகர்களை தூண்டிவிட்டு சண்டைபோட செய்தால் தான் mgr அவர்கள் புகழ் மேலும் பரவும் என்ற தவறான ஒரு துர்போதனை செய்வது ஒரு கேவலமான ஈன செயல் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். காலம் இப்படியே சென்றுவிடாது ! ஒரு நாள் நல்ல உள்ளம் கொண்ட அனைத்து mgr ரசிகர்களும் உண்மையை உணரும் போது உங்கள் நிலை எவ்வளவு பரிதாபத்திற்கு உரியதாகிவிடும் என்று இப்போதே எண்ணி பார்த்தல் நலம் !

இரண்டு ஆடுகளை மோதவிட்டு அதிலிருந்து வடியும் ரத்தம் குடிக்கும் வழக்கம் கொண்ட நரிகுணம் என்றுமே வெற்றிகொண்டதில்லை !

வாழ்க இரு திலகங்களின் புகழ் ! ஒழிக நரிகுணம் கொண்ட மனிதர்கள் !

HARISH2619
4th March 2014, 01:41 PM
நான் சுவாசிக்கும் சிவாஜி (22) - ஒய்.ஜி. மகேந்திரன்

சிவாஜியிடம் உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால், தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு, தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுப்பார். ஆனால், கடைசியில் ஏதாவது ஒரு புதுமை செய்து, பார்ப்பவர்களின் மொத்த கவனத்தையும், தன் பக்கம் இழுத்து விடுவார். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். பாசமலர் படத்தில், சிவாஜி கம்பெனி முதலாளி; அவரிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்காக சண்டை போடும் ஜெமினி கணேசன், கேள்வி மேல கேள்வி கேட்பார். பதிலுக்கு எதுவும் பேசாமல், ஒரு பென்சிலை கத்தியால் சீவிக் கொண்டே இருப்பார் சிவாஜி. ஜெமினி பேசப் பேச, சிவாஜிக்கு கோபம் அதிகமாகும். ஆனால், எதுவும் பேசாமல், பென்சிலை சீவுவதிலேயே கவனமாக இருப்பார். ஆனால், ஜெமினி கணேசன் பேசி முடித்ததும், கோபமாக அவரைப் பார்த்து, 'வெளியே போ... தொழிற்சாலையை இழுத்து மூடினாலும், ஒரு மெழுகுவர்த்தி வச்சு, இந்த ராஜூ வேலை செய்வான்...' என்று, ஒரே வரி வசனம் மட்டும் பேசுவார்; தியேட்டரே அதிரும்.
மற்றொரு காட்சியில், சிவாஜி வீட்டுக்கு வருவார். தோட்டத்திலே, அவரது தங்கை சாவித்திரியும், காதலன் ஜெமினி கணேசனும் பேசிக் கொண்டிருப்பர். பணக்காரருக்குரிய ஆணவத்தில், பீரோவிலிருந்து ரிவால்வரை எடுத்துக் கொண்டு, ஆவேசத்துடன் வேகமாக வருவார் சிவாஜி. அப்போது, ஜெமினியிடம், 'எங்க அண்ணாவை எதிர்த்து தான், வாழ்க்கை நடத்தணும்ன்னா, அந்த வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை. அவரோட முழு சம்மதத்தோடு, ஆசிர்வாதத்தோடு, நாம் சேருவதை தான், நான் ஒத்துக் கொள்வேன்...' என்று, சாவித்திரி சொல்வதை கேட்பார். பாசத்தில் கண்ணீர் வழியும்.
தான் கொண்டு வந்த ரிவால்வரை வைத்து, கண்ணீரை துடைக்கும் அந்த, ஒரு காட்சியிலேயே, தன் மன ஓட்டத்தை அழுத்தமாக காட்டியிருப்பார்.
சிவாஜியை பற்றி, குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம்... அவர் நடித்த பல படங்கள், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள். தன்னை விட கதாநாயகிக்கு தான், முக்கியத்துவம் அதிகம் என்று தெரிந்தும், முழு மனதோடு, நடிக்க ஒப்புக் கொள்வார்.
அந்த வரிசையில், கை கொடுத்த தெய்வம், படம் முழுக்க முழுக்க நடிகை சாவித்திரியின் படம். அந்த மாதிரி படங்களிலும், தன் தனித்தன்மையை காண்பித்து, ஆடியன்சை, தன் பக்கம் திருப்பி விடுவார் சிவாஜி. இப்படத்திற்கு, கதை, வசனம், எழுதி, பிரமாதமாக இயக்கியிருப்பார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
நடிகை சாவித்திரிக்கு, நானும் மிகப் பெரிய விசிறி. என் மகள் மதுவந்தியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சிவாஜியை அழைக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். 'யார்ரா அந்த அதிர்ஷ்டக்கார மாப்பிள்ளை?' என்றார்.
'நடிகை சாவித்திரியின் பேரன்...' என்றேன். சிவாஜியின் முகம் மலர்ந்து, 'ஓ, அப்படியா வெரி குட்...' என்றார். தேதியை சொன்னதும், 'என்னடா இது, இப்படி செய்துட்டே... அன்னிக்கு, நான் தஞ்சாவூரிலே இருக்கிறனேடா...' என்றார். 'அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க கண்டிப்பாக பங்ஷனுக்கு வர்றீங்க...' என்று, உரிமையுடன் சொல்லி விட்டு, கிளம்பினேன்.
நிச்சயதார்த்த விழா விற்கு, தஞ்சாவூரிலிருந்து, காரிலேயே சென்னைக்கு வந்து, தன் வீட்டிற்கு கூட போகாமல், நேராக விழாவிற்கு வந்து விட்டனர் சிவாஜியும், அவரது மனைவி கமலா அம்மாவும். விழா முடியும் வரை, அங்கேயே இருந்து மணமக்களை வாழ்த்தினர்.
கடந்த, 1964ல் ஏ.பி.நாகராஜனின் இயக்கத் தில், சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்த, நவராத்திரி திரைப்படம் வெளியானது. நடிப்பில், முகபாவத்தில், பல கேரக்டர்களை வித்தியாசப்படுத்தி காண்பித்திருப்பார் சிவாஜி. சாவித்திரியை கைது செய்து, மருத்துவமனைக்கு அழைத்து வரும் காட்சியில், சிவாஜி மனநோய் மருத்துவராக வருவார்.
இரண்டு கைகளையும் பின்புறம் கட்டி, மெதுவாக நடந்து செல்லும் சிவாஜி, கருணை சிரிப்போடு, ஒரு நிலையில் நிற்பார்; பின் திரும்பி வருவார். மேஜை மீது இருக்கும் ஸ்டெதஸ்கோப்பை லாவகமாக எடுத்து கழுத்தில் மாட்டி, திரும்பி போவார். அதாவது, வந்திருக்கும் பேஷன்ட் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல, நல்ல நிலையில் இருப்பவர் தான் என்பதை, டயலாக் எதுவும் பேசாமல், தன் நடையாலேயே வெளிப்படுத்தி, ரசிகர்களின் கைத் தட்டலை வாங்கி விடுவார்.
சிவாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் மேஜர் சுந்தர்ராஜன். அவர் மேடையில் நடித்த ஞான ஒளி, கல்தூண் போன்ற நாடகங்கள், பின் சிவாஜி நடிப்பில், வெற்றிப் படங்களாக ஆகியிருக்கின்றன. சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், ஞான ஒளி மற்றும் பாரத விலாஸ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைவராக, சிவாஜி கணேசன், பணி ஆற்றிய போது, அவருக்கு வலது கரமாக, நடிகர் சங்கத்தின் காரியதரிசியாக பணி ஆற்றியிருக்கிறார் மேஜர் சுந்தர்ராஜன். நடிகர் சங்கத்திற்கு, சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில், இடம் வாங்கி, கட்டடம் கட்டி, அதில், நாடக அரங்கு, சிறிய தியேட்டர் எல்லாம் உருவாக சிவாஜியும், மேஜரும், விகே.ராமசாமியும் முக்கிய காரணகர்த்தாக்கள். இப்போது, கட்டடங்கள் இடிக்கப்பட்டு, நடிகர் சங்க இடம் வெறிச்சோடி இருக்கிறது என்பது, எல்லா நடிகர், நடிகைகளுக்கும் வருத்தம் தரக் கூடிய விஷயம்.

— தொடரும்.

ScottAlise
4th March 2014, 07:05 PM
பார்த்ததில் பிடித்தது -14


நடிகர் திலகத்தின் ராஜா ராணி படங்கள் என்று சொன்னால் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும் படம் எது ? உத்தமபுத்திரன்
எனக்கும் அப்படி தான் , ஆனால் அந்த நினைப்பு நான் எழுத போகும் படத்தை பார்த்ததும் சற்று மாறியது , காரணம் ?
நடிகர் திலகத்தின் படங்களில் நாம் அவரிடம் இருந்து என்னை எதிர்பார்ப்போம் ? அதுவும் அவர் ராஜா ராணி கதையில் தோன்றி உள்ளார் என்று அறிந்து

பிரமாண்டமான அரங்கு அமைப்பு , நட்சத்திர பட்டாளம் , சண்டைகள் ,

இது தான் உங்கள் விருப்பம் என்றல் நீங்கள் நான் எழுதி இருக்கும்
மருதநாட்டு வீரன் படத்தை மிகவும் ரசிப்பீர்கள்

ScottAlise
4th March 2014, 07:05 PM
இனி இந்த படத்தின் கதை பற்றி விரிவாக

படத்தின் பெயர் போடும் போதே ஒரு வித ஆர்வம் தொற்றி விடுகிறது , காரணம் , இந்த படத்தின் பிரமாண்டத்தின் அளவு பின்னாடி வரும் காட்சிகளை பார்த்ததும் , எந்த அளவுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு வைக்க வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுகிறது

படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் ஒரு கணீர் குரலில் சமாதானமே தேவை என்று ஒரு எழுச்சி நாயகன் வெள்ளை குதிரையில் பாடி கொண்டு வருகிறார் (வேறு யார் நம்ம சிவாஜி சார் தான் )
அவர் காணும் காட்சியோ கொடுரம் , ஒரு வயசானவர் தண்ணி குடிக்க முயலும் பொது அரசு சிப்பிகளால் தடுக்க படுகிறார் , பின் அந்த புரட்சி நாயகன் அந்த வயசானவருக்கு உதவி செய்து விட்டு தன் வீட்டுக்கு செளுகிறார் , அங்கே அவர் அன்னை அவருக்கு சாப்பாடு போடும் பொது தான் நமக்கு புரிகிறது , அந்த புரட்சி வீரனின் வீட்டில் ஏழ்மை
குடி இருபது , அந்த புரட்சி வீரன் பட்டாளத்தில் சேர முடிவு செய்கிறார் ,கூடவே அவர் நண்பர் (கருணாநிதி )

அந்த புரட்சி வீரன் நாட்டின் தலைநகருக்கு செல்லுகிறார் , அங்கே அவர் தான் காப்பாத்திய வயசானவர்வை சந்திக்கிறார் , அந்த சமயம் பார்த்து அந்த ஊரின் இளவரசி வரும் பொது , அவர் மேல் பூவை எரிந்து கவனத்தை ஈர்க்கிறார் அவரை கைது செய்து அழைத்து வர உத்தரவு இடுகிறது அரசாங்கம்

இது நடப்பது மருத நாட்டில்

ScottAlise
4th March 2014, 07:06 PM
அடுத்த காட்சி நடப்பது சொர்ணபுரி என்ற ஊரில் ஒரு முஸ்லிம்
ராஜா வின் மாளிகையில் , அங்கே இருப்பது ராஜா அலாவுதீன் அல்ல ,அவரின் தம்பி மற்றும் அவரின் மந்திரி , இருவரும் தப்பி ஓடிய ராஜா அலாவுதீன் மற்றும் அவரின் மகளின் இருப்பிடம் பற்றி விசாரிகிரர்கள்
அவர்களின் யுகம் ராஜாவும் அவர் மகளும் மருத நாட்டுக்கு தஞ்சம் அடைந்து இருப்பார்கள் என்று நினைத்து , மருத நாட்டில் இருக்கும் அவர்களின் நண்பனும் , ராஜாவின் மைத்துனரும் வீரகேசி (psv ) . வீரகேசி மருத நாட்டின் ராஜாவாக வேண்டும் என்பதே ஆசை , அதற்கு துணையாக சொர்ணபுரி ராஜாவின் தம்பியுடன் கூட்டு சேர்ந்து சதி செய்கிறார்.
சொர்ணபுரி ராஜா அலாவுதீன் மற்றும் அவர் மகள் இருவரும் நாடோடியாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள் , அலாவுதீன் மருத நாட்டின் ராஜாவின் நெருங்கிய நண்பர் , தன் நண்பரை காணவில்லை என்ற கவலையில் அவரை தன் மைத்துனர் வீரகேசியை தேட சொல்லுகிறார் ராஜா .

இந்த நேரத்தில் தான் புரட்சி வீரன் மருத நாட்டுக்கு , அதுவும் ராஜாவின் மாளிகைக்கு வருகிறார் , வந்த இடத்தில அவரின் வீரத்தை கண்டு , ராஜா அவரை பற்றி கேட்கிறார் , ஏனென்றால் அந்த வீரனின் வாள்வீச்சு மன்னருக்கு முத்துசேர்வையை நினைவுபடுத்துகிறது அவரோ தன் தந்தை தான் முத்துசேர்வை என்றும் தன் பெயர் ஜீவகன் என்று தெரிவிக்கிறார்
ஆம் அந்த புரட்சி வீரனின் பெயர் (சிவாஜியின் பெயர் ) ஜீவகன்

ஜீவகன் வீரத்தில் கவரபடுகிறார் இளவரசி ரத்னா , ஜீவகன் தன் தாயை பார்க்க அவர் வீட்டுக்கு செல்லும் பொது இளவரசி ரத்னா அவருக்கு தெரியாமல் அவரை பின் தொடர்கிறார்

அலாவுதீன் மற்றும் அவர் மகள் ஆஷா இருவரும் ஜீவகனின் வீட்டில் தஞ்சம் அடைகிறார்கள்
ஆஷா மற்றும் ஜீவகன் இருவரும் பேசி கொண்டு இருப்பதை பார்த்து தப்பாக புரிந்து கொண்டு சென்று விடுகிறார் ரத்னா
அலாவுதீன் தன் நண்பர் மருத நாட்டின் ராஜாவுக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்புகிறார் ஜீவகன் மூலமாக

மருத நாட்டின் ராஜா ஜீவனுக்கு கோட்டை தளபதியாக பதவி உயர்வு அளிக்க முடிவு செய்கிறார் , இதற்கு ராஜாவின் இரண்டாம் மனைவி , மற்றும் வீரகேசி இருவரும் எதிர்ப்பு தெரிவிகிறார்கள் .

ScottAlise
4th March 2014, 07:10 PM
அடுத்த நாள் சபைக்கு அடிபட்டு தாமாதமாக வருகிறார் ஜீவகன் , அவரின் மேல் பொய் குற்றச்சாட்டை, ஜீவகன் ஒரு ஒற்றன் என்று தெரிவிக்கிறார் வீரகேசி (MR சந்தானம் , மற்றும் ராம்சிங் உதவி உடன் )
ஜீவகன் சிறைக்கு அனுப்ப படுகிறார்

ஜீவகன் நண்பரின் (கருணாநிதி ) உதவியால் தப்பிக்கும் பொது , வீர்கேசி தெரியாமல் உதவி விடுகிறார் , தன் திட்டம் இது தான் என்று சொல்லிவிடுகிறார்
ஜீவகன் தப்பி ஓடி அலாவுதீன் மற்றும் அவர் மகள் ஆஷா இருவரையும் காபாத்தி விடுகிறார் , இதில் ஜீவகனின் தாய் தண்ணியில் குதித்து ஒரு கிராமத்து மக்களின் உதவியினால் உயிர் பிழைக்கிறார் (இது ஜீவகன்க்கு தெரியாது)

ஜீவகன் , அலாவுதீன் , ஆஷா பவளநாடுக்கு சென்று விடுகிறார்கள் , அங்கே மாளிகையில் சமையல் வேலை செய்து வாழ்கையை நடத்துகிறார்கள் , அந்த நாட்டின் ராஜா பார்த்திபன் ஆஷாவின் நடவடிக்கையில் ஒரு ராஜகலையை கண்டு விசாரிக்கிறார் , அவரிடம் அணைத்து உண்மையும் சொல்லி விடுகிறார்கள் மூவரும்
வீரகேசி அந்த சமயம் அங்கே வந்து ரத்னாவை பார்த்திபன்க்கு கல்யாணம் செய்து வைக்க மன்னர் பூபதி (மருத நாட்டின் ராஜா) விரும்புவதாக சொல்ல , பார்த்திபன் தந்திரமாக ஜீவகனுக்கு ரத்னாவை திருமணம் செய்து வைத்து விடுகிறார் (கல்யாணத்தில் புகை அதிகமாக வர வைத்து , அதே சமயம் ஜீவகன் குருக்கள் தோற்றத்தில் வேஷம் போட்டு கொண்டு கார்யத்தை சாதிகிரர்கள் )
தன் தந்தை இறந்த செய்தி கேட்டு நாட்டுக்கு திரும்பும் பார்த்திபன் , வீரகேசி சிறைபிடித்து விடுகிறார் , ரத்னாவும் , ஜீவகன் இருவரும் கொஞ்சம் நாட்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள்
ஜீவகன் மன்னரிடம் இருந்து செய்தி வரத்தினால் அவரை தேடி செல்லும் பொது , ரத்னாவின் மேல் களங்கம் சுமத்தி அவரை நாட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் வீரகேசி (ரத்னா கர்ப்பமாக இருக்கிறார் )
ரத்னா அவர் மாமியார் உடன் வாழ்கிறார் , (தெரியாமல் )

ஜீவகன் மற்றும் அவர் நண்பர் இருவரும் பார்த்திபன் இருக்கும் சிறைக்கு சென்று அவரை பார்த்து விட்டு செல்லும் பொது , வழி தவறி ஒரு கிராமத்துக்கு சென்று விடுகிறார்கள் , அந்த கிராமத்தில் தன் தாய் , மனைவி , குழந்தை இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறார் ஜீவகன்

பூபதிக்கும் அவர் மனைவிக்கும் , வீரகேசி மேல் சந்தேகம் , அலாவுதீன் பூபதியை பார்த்து ஒரு உண்மையை சொல்லி விடுகிறார் , அதாவது பூபதியின் ஒரு குழந்தை தான் ஆஷா என்று

வீரகேசி மன்னரை கொன்று நாட்டை அடைய திட்டம் தீட்டுகிறார் , அதன்படி , மனனர் இறந்த உடன் தான் தான் ராஜா என்று மன்னர் எழுதியது போல MR சந்தானத்தை வைத்து forgery செய்து விடுகிறார்
திட்டம் நிறைவேறிய உடன் தன் மாமாவை கொன்று , அக்காவை சிறையில் அடைகிறார் , சந்தானம் தன் பிள்ளையை பற்றி கேட்டதும் அவரையும் கொன்று விடுகிறார் வீரகேசி , அடிபட்ட சந்தானம் ராணியை பார்த்து , தன் மகன் தான் இப்போலோது , ராணியின் மகனாக இருபதை சொல்லி விடுகிறார் (அதாவது ஆஷா தான் ரத்னாவின் தங்கை , அவளுக்கு தம்பி கிடையாது )
முடிவில் ஜீவகன் வீரகேசியை வீழ்த்தி நாட்டை காப்பாற்றி வெற்றி அடைந்து விடுகிறார்

முடிவில் நாட்டின் ராணியாக ரத்னாவும் , தளபதியாக ஜீவகன் இருக்க , ஜீவகன் நாட்டின் சமாதானம் தான் உலகத்தின் புதிய மொழி என்று அறிவிக்கிறார்

சுபம்

ScottAlise
4th March 2014, 07:11 PM
இனி படத்தை பற்றி

இந்த படத்தின் முதல் ஆச்சர்யம் , இந்த படத்தில் மொத்தம் நான்கு ஒளிபதிவாளர்கள் சம்பத்,ராஜாராம் , கிருஷ்ணன் , பார்த்தசாரதி , அடுத்தது settings , சீன் effects , ஓவியம் , இது அனைத்தும் ஒரே வார்த்தையில்
பிரமாண்டம்
அடுத்தது நம்மவரின் performance , எனக்கு ஆச்சர்யம் தான் , அவரின் முந்திய படங்களை பார்க்க பார்க்க தான் தெரிகிறது அவரை எந்த அளவுக்கு நாம் இன்னும் அலசவேண்டும் என்றும் , எப்படி இவரை
under estimate செய்து விட்டோம் என்று, யார் சொன்னது , பாலாஜி சாரின் படங்களில் இருந்து தான் நம்மவர் action ஹீரோ என்று (நானும் அப்படி தான் நினைத்தேன் ) காரணம் அவரின் நடிப்பு அப்படி , அதனால் அவரின் பிற சிறப்புகளை மறந்து விடுகிறோம்

இந்த படத்தில் தான் அவர் என்ன ஒரு அழகு , கம்பீரம் , அதே வருடத்தில் வந்த பாசமலரில் இருந்த செண்டிமெண்ட் நாயகனாக இவர் , நம்ப கஷ்டம் தான் , கூடு விட்ட கூடு பாய்வது என்றால் இது தானோ
முதல் காட்சியில் இருந்து என்ன ஒரு கம்பீரம் , அந்த முதியவரை காப்பதும் காட்சியில் சண்டையில் என்ன ஒரு quickness , aglieness இதை மிகை படுத்தி சொல்ல வில்லை , ஒரு நபர் ஒருத்தரை குளத்தின் படியில் நின்று கொண்டு தூகிவீசுவதும் , மரத்தின் விழுதை பிடித்து கொண்டு , குதித்து see saw போன்ற பலகையில் எதிராளிகளை தள்ளி விடுவதும் சுலபம் இல்லை

அதுக்கு அடுத்த காட்சி தன் வீட்டில் , தன் நண்பனிடம் உரையாடும் காட்சி அவர் ஒரு மொழி அழகன் என்று மீண்டும் ஒரு முறை பறைசாற்றுகிறது , அந்த காட்சியில் அவர் பேசும் வசனம் ரத்தினம் (தன் எதிராளிகள் பற்றி வருடமோ 1961 , பல விஷயங்களை நினைக்க தோண்டுகிறது முரளி சாரின் அரசியல் சூழ்நிலை கட்டுரைகளை எடுத்து படித்தால் இதை இன்னும் ரசிக்க முடியுமோ ?)

அதற்கு அடுத்த காட்சியில் அதாவது , தான் சிறை பிடித்து , அழைத்து வரும் காட்சி :
எல்லோரும் மனோகரவை நினைத்து இதை பார்த்தல் ஒரு வித ஆச்சர்யமும் , அதிர்ச்சியும் தான் மிஞ்சும் , காரணம் , அதில் அவர் எரிமலை என்றால் , இதில் தான் என்ன ஒரு அலட்சியம் , நீ என்னை கைது செய்து இருப்பது என்னை ஒன்னும் செய்து விடாது போலே ஒரு அலட்சிய பார்வை ,குறும்பு பார்வை , அலடல் நடை.
PSV அவரை வாம்புக்கு இழுத்து சண்டை போடா வைக்கும் பொது , என்ன ஒரு வேகம் , ஒரு நபர் கத்தி இல்லாமல் , கத்தி வைத்து இருப்பவர் உடன் சண்டை போட என்ன ஒரு துணிச்சல் வேண்டும் , சண்டை போட்டு விட்டு படையில் சேர்ந்ததும் அவர் அலட்டலாக ஒரு பார்வை பார்த்து நடப்பது இருக்கே ,
இனி எங்கே போவோம் இதை காண ?

என்னும் ஒரு சண்டை காட்சியில் , பகைவர்கள் அனைவரும் சுற்றி நிற்க நடிகர் திலகம் பாஞ்சு ,உருண்டு , மீண்டும் எழுந்து சண்டை போடும் லாவகம் இருகிறதே , ஆர்வமும் ,உடலில் வலுவும் இல்லாமல் ஒருவர் இப்படி செய்ய முடியாது , டுப் போட்டால் தெரிந்து விடும் , இதில் தான் 4 cameraman ஆயிற்றே , நடிகர் திலகத்தின் முகம் நன்றாக தெரிகிறது

சரி வெறும் சண்டை மட்டும் தான performance காட்சிகள் இல்லையா என்றால் அதுவும் உண்டு

ScottAlise
4th March 2014, 07:12 PM
தான் குற்றவாளியாக நிற்கும் பொது , அவர் முகத்தில் தான் என்ன ஒரு அப்பாவித்தனம் , சோகம் , அதுவும் அவர் தன் காதலி ஜமுனாவை பார்க்கும் பொது நீ கூட சொல்ல மாட்டாயா என்று கேட்பது போல் உள்ளது , இடைவேளை சமயத்தில் தன் தாயையை பிடித்து வைத்து எதிரிகள் மிரட்டும் பொது , அவரின் தேசிய பற்று தெரிகிறது

இடைவேளைக்கு பிறகு அவரின் ஒப்பனைகள் ஏராளம் , நடிப்பில் variety ஏகச்சகம்
சமையல்காரனாக பாண்டியநாட்டில் நுழையும் காட்சியில் அவர் தோற்ற்றம் , குரல் , முடி அனைத்தும் அசல் சமையல்காரன் , ஒரு நாட்டின் போர் வீரன் பணிவு மிக்க நடை நடக்க முடியுமா , எங்கள் நடிகர் திலகத்தினால் முடியும்

அடுத்ததாக சீன தேசத்து ஜோசியகாரனாக அவர் PSV உடன் பேசும் காட்சி , குரலில் மீண்டும் ஒரு மாற்றம் , அதுவும் அந்த chinese பாஷை , அதை மொழி பெயர்க்க கருணாநிதி என்று கொஞ்சம் சிரிக்க உத்தரவாதம்
பார்த்திபனின் யோசனை படி ப்ரோகிதர் வேஷத்தில் மீண்டும் தோன்றி நம்மளை அசர அடிக்கிறார்
தன் காதல் மனைவியை பார்க்க மீண்டும் ஒரு வேஷம் , அடையாளமே தெரியவில்லை
கடைசியாக பார்த்திபனை சந்திக்கும் பொது , ஒரு முஸ்லிம் get up
எழுதவே கஷ்டமாக இருக்கிறது , இவர் எப்படி தான் இப்படி செய்தார் இதை hats off to the legend
இந்த படத்தின் கதைக்கு பொருத்தமான வில்லன் PSV , ஹெரோஇனே ஜமுனா , மோசட் under rated காமெடியன் கருணாநிதி அனைவரும் கலக்கி இருக்கிறார்கள் , கதை அப்படி ,(கதாசிரியரின் பெயர் இல்லை , கட் ஆகி விட்டது ) இயக்கம் TR ரகுநாத் , இசை வெங்கட்ராமன் , பாடல்கள் , கண்ணதாசன் , மருகதாசி
படத்தின் running time கிட்ட தட்ட 2.45 நேரம்

இந்த படம் ஏன் கவனத்தை ஈர்க்கவில்லை என்று தெரியவில்லை

ScottAlise
4th March 2014, 07:38 PM
Dear Sivaa sir,

hats off to you upload of Collection records of NT, appreciate your hardwork

ScottAlise
4th March 2014, 07:40 PM
Dear Ravikiran Suriya sir,
Your reply , shot back, razor sharp answers are always needed as we need a strong person like you, congrats sir, keep going & keep on going

ScottAlise
4th March 2014, 07:41 PM
Dear Murali sir,

Really happy that you mentioned my name since Iam a great fan of your writings
Expecting to make us happy more by your writings

Russellbpw
4th March 2014, 10:05 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/4sheet-design2_zps75856727.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/4sheet-design2_zps75856727.jpg.html)

Russellbpw
4th March 2014, 10:09 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2bitposter1_zps1a527c4c.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2bitposter1_zps1a527c4c.jpg.html)

Russellbpw
4th March 2014, 10:12 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/4sheet-1_zpsd4a9a371.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/4sheet-1_zpsd4a9a371.jpg.html)

Murali Srinivas
5th March 2014, 12:38 AM
அன்பு ராகுல்ராம்,

மருத நாட்டு வீரன் படத்தை பற்றிய பதிவில் உங்கள் உழைப்பு தெரிகிறது. அவ்வளவாக யாரும் எழுதாத படங்களை தேடி [தங்கமலை ரகசியம், மறுத்த நாடு வீரன்] பிடித்து எழுதுவது அதை அனைவரும் ரசிக்க வேண்டுமே என்பதற்காக விஸ்தாரமாக எழுதுவது என்பது பாராட்டுக்குரியது. உங்கள் எழுத்து மேலும் சிறக்க ஒரு சின்ன suggestion. கதை சுருக்கம் எழுதி முடித்தவுடன் சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் படித்துப் பார்த்தால் அதில் உள்ள பழுதுகளை நீக்கி இன்னும் சற்றே கோர்வையாக சொல்ல முடியும். சற்றே முயற்சி செய்தால் அந்த லாவகம் பிடிபடும். வாழ்த்துகள்.

இந்தப் படத்தை நான் முதன் முறை பார்ப்பது 1980-ம் ஆண்டு ஜூன் மாதம். மதுரை கல்பனா திரையரங்கில் நண்பகல் 11.30 மணிக் காட்சி. அந்த நேரம் தமிழகத்திலே சட்டமன்ற தேர்தல் முடிவுற்ற நேரம். முடிவுகள் வெளி வந்து விட்ட நேரம். ரத்த பாசம் ஜூன் 14ந் தேதி வெளியாவதாக இருக்கிறது. அதற்கு முன்பாக இந்தப் படம் நண்பகல் காட்சியாக திரையிடப்படுகிறது. ஒரு விதமான சோர்வு நிலை ரசிகர்கள் மத்தியில் இருக்குமோ என்ற எண்ணம் என் மனதிலே அலையடித்துக் கொண்டிருந்த நேரம். நானும் நண்பர் ஒருவரும் செல்கிறோம்.

மதுரை தெரிந்தவர்களுக்கு கல்பனா திரையரங்கம் பற்றி தெரிந்திருக்கும். அது சிம்மக்கல் பகுதியில் வைகை ஆற்றை ஒட்டி அமைந்துள்ள ஒரு அரங்கம். மதுரை தலைமை தபால் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஆரம்பித்து யானைக்கல் வரை செல்லும் வடக்கு வெளி வீதி என்ற பெயரில் அமைந்த நீண்ட சாலை. அந்த மெயின் சாலையிலிருந்து சிம்மக்கல் பகுதியில் இடது புறம் திரும்பி சற்றே சென்றால் கல்பனா திரையரங்கை அடையலாம். வீட்டிலிருந்து மீனாட்சியம்மன் கோவில் சித்திரை வீதிகளை சுற்றி தளவாய் அக்ரஹாரம் வழியாக சொக்கநாதர் கோவிலை தாண்டி சென்று வடக்கு வெளி வீதியை அடைந்தோம் நாங்கள். முதல் ஷாக் [அல்லது pleasant surprise] அரங்கத்தின் வாசலில் நின்றிருந்த கூட்டம். சாதாரண கூட்டம் இருக்கும் என நினைத்து சென்ற எங்களுக்கு கூட்டத்தை பார்த்தவுடன் டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகமே வந்து விட்டது. ஒரு வழியாக டிக்கெட் வாங்கி உள்ளே செல்கிறோம்.

எடுத்தவுடன் படம் [noon show-வில் இது ஒரு வசதி]. டைட்டில் கார்டில் நடிகர் திலகம் பெயர் வந்தவுடன் பெரிய வரவேற்பு என்றால் முதலில் அவர் பாடல் காட்சியில் அறிமுகமாகும் போது அரங்கமே அதிர்ந்தது. ஏற்கனவே பலமுறை உணர்ந்திருந்தாலும் மீண்டும் அன்று நிரூபணமான உண்மை என்னவென்றால் வெளியில் என்னவெல்லாம் நடந்தாலும் திரையுலகில் நடிகர் திலகத்தை அடித்துக் கொள்வதற்கு ஆளே இல்லை என்பதும் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் நடிகர் திலகத்தின் படங்களை விட்டு விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் என்பதற்கான அத்தாட்சியாகவும் அமைந்தது.

பிறகு படம் எனக்கு பல surprise-களை அளித்தது. விழி அலை மேலே பாடலும் பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா போன்ற பாடல் காட்சிகளிளெல்லாம் ஒரே அலப்பரை. ராகுல் குறிப்பிட்டது போல சண்டை காட்சிகளிளெல்லாம் அரங்கில் ஒரே ஆரவாரம். அவரின் ஒவ்வொரு get up change-ற்கும் தியேட்டரில் கைதட்டல் பிறக்கிறது. சுருக்கமாக சொன்னால் எந்த எதிர்பார்புமின்றி படம் காண சென்ற எங்களுக்கு நல்ல திருப்தி.

வெளியான சமயத்தில் ஏன் பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றால் ரிலீஸ் வருடமும் சுற்றி நின்ற நமது படங்களுமே காரணமானது. 1961-ம் வருடம் மார்ச் 16 அன்று வெளியான பாவ மன்னிப்பு [மருத நாட்டு வீரன் வெளியானது 1961 ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி] மருத நாட்டு வீரன் வெளியாகும் போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. 1964 மே 27-ந் தேதி வெளியான பாசமலர் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. அதன் பிறகு வெளியான எல்லாம் உனக்காக மற்றும் ஸ்ரீவள்ளியின் போட்டி. அதுவும் தவிர வெளியான இரண்டே வாரங்களில் அதாவது செப் 9 அன்று முமூர்த்திகளில் ஒருவராய் மூன்று தமிழ்களில் ஒன்றாய் என்றும் விளங்கும் பாலும் பழமும் வெளியானது.

இப்படிப்பட்ட சூழலில் மருத நாட்டு வீரன் ஜீவகனுக்கு வரவேற்பு சற்றே குறைந்ததில் வியப்பொன்றுமில்லை. அதே நேரத்தில் நமது அண்டை மாநிலமான கேரளத்தில் படம் அமோக வெற்றி அடைந்தது. அதைதான் நடிகர் திலகமே தனது ஒரு வரி comment ல் "கேரள மக்கள் அமோக வரவேற்பளித்தனர்" என்று குறிப்பிட்டிருப்பார்.

அன்புடன்

Murali Srinivas
5th March 2014, 12:45 AM
சிவா சார்,

வசூல் நோட்டீஸ் மற்றும் சாதனை நோட்டீஸ் பதிவேற்றதிற்கு நன்றி.

RKS,

Dr.ராஜா ஒரு பக்கம் பட்டாக்கத்தி பைரவன் ஒரு பக்கம் என்று எல்லா போஸ்டர் டிசைன்களும் பின்னி பெடலெடுக்கிறது. வாழ்த்துகள்.

ரவி,

உங்கள் பதிவின் தொடர்ச்சியாக நான் எழுதுவதாக சொன்ன பதிவை விரைவில் பதிய முயற்சிக்கிறேன்.

அன்புடன்

ScottAlise
5th March 2014, 08:03 AM
Dear Murali sir,
Your experience in 1980 on watching this Marudha naatu veeran was too good , thank you sir

Regarding your suggestion , I will definitely take care to reduce the mistakes and read once again the story before I post

Gopal.s
5th March 2014, 09:55 AM
Rahul,

I am proud of your perseverance and Dedication. I want to thank specially your parent for nurturing the old values with good aesthetics to youngster like you. Keep it up. My blessings.

KCSHEKAR
5th March 2014, 11:38 AM
டியர் சிவா சார் / கோல்டு ஸ்டார் சதீஷ் சார்,

நடிகர்திலகத்தின் சாதனைப் பட்டியல் பதிவுகளுக்கு நன்றி.

KCSHEKAR
5th March 2014, 11:41 AM
Rahul, I am proud of your perseverance and Dedication. I want to thank specially your parent for nurturing the old values with good aesthetics to youngster like you. Keep it up. My blessings. Exactly Gopal sir.
டியர் ராகுல் ராம்,
முரளி சாரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.

ScottAlise
5th March 2014, 02:51 PM
From the bottom of my heart I thank Gopal sir and KC Sekar sir

Dear Ravi Kiran suriya Sir,

Thanks for posting ENgal thanga raja pictures

sivaa
6th March 2014, 07:27 AM
இந்தத்திரிக்கு என்ன நடந்ததுவிட்டது?
கண் திருஷ்ட்டியா?
சதியா?

sivaa
6th March 2014, 07:34 AM
ஜெகபதி ஆர்ட்ஸ் பட நிறுவனத்தினரது
தயாரிப்பில் நடிகர்திலகம் நடித்து
எங்கள் தங்க ராஜா

உத்தமன்

பட்டாக்கத்தி பைரவன்

ஆகிய 3 படங்கள் வெளிவந்திருந்தன
இவை 3 படங்களும் இலங்கையில் மாபெரும் சாதனை படைத்திருந்தன
எங்கள் தங்க ராஜா யாழ்நகரில் நள்ளிரவுகாட்சியுடன் ஆரம்பித்து
ஒரே நாளில் 7 காட்சிகள் நடைபெற்று சாதனை நிலை நாட்டியதுடன்
கொழும்பு யாழ்நகர் இரண்டு இடங்களிலும் 100 நாட்களை கடந்தது


உத்தமன் இலங்கையில் மாபெரும் சாதனையை ஏற்படுத்தயது
இரண்டு இடங்களில் வெள்ளிவிழா கண்டதுடன் கொழுப்பில்
200 நாட்களை கண்டது வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது


பட்டாக்கத்தி பைரவன் கொழும்பு யாழ்நகர் இரண்டு இடங்களிலும்
100 நாட்களை கண்டதடன் வசூலிலும் சாதனை படைத்தது


யாழ்நகரில்
எங்கள் தங்க ராஜா 4 லட்சத்தை தாண்டியது

உத்தமன் பட்டாக்கத்தி பைரவன்
இரண்டும் 7 லட்சத்துக்கு மேல் வசூல் பெற்றன


எங்கள் தங்க ராஜா கொழும்பு .....சென்ரல்....100..நாட்கள்
........................................யாழ்நகர்.. ......ராஜா...........126..நாட்கள்


உத்தமன்...................கொழும்பு.......சென்ரல்.. .......203..நாட்கள்
..............................ஃ.....யாழ்நகர்...... ..ராணி.............179..நாட்கள்


பட்டாக்கத்தி பைரவன்.....கொழும்பு..ஜெஸிமா..103..நாட்கள்
...............................................யாழ ்நகர்....சிறிதர்.......100..நாட்கள்

sivaa
6th March 2014, 08:04 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image2_zps5d28972f.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image2_zps5d28972f.jpg.html)




மேலே உள்ள நண்பர்கள்யாராவது
இங்கே உறுப்பினராக இருக்கிறார்களா?

sivaa
6th March 2014, 08:06 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/001_zpse16207bf.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/001_zpse16207bf.jpg.html)

sivaa
6th March 2014, 08:35 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image3_zps6aa92e25.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image3_zps6aa92e25.jpg.html)

sivaa
6th March 2014, 08:57 AM
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/001_zps2a58f607.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/001_zps2a58f607.jpg.html)

sivaa
6th March 2014, 08:58 AM
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/CCI27122012_0005_zps4b41a063.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/CCI27122012_0005_zps4b41a063.jpg.html)

sivaa
6th March 2014, 09:00 AM
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/CCI26122012_0002_zps3055328b.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/CCI26122012_0002_zps3055328b.jpg.html)

sivaa
6th March 2014, 09:02 AM
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/CCI26122012_0001_zps070c517a.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/CCI26122012_0001_zps070c517a.jpg.html)

sivaa
6th March 2014, 09:04 AM
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/CCI26122012_0000_zps4b68b5f8.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/CCI26122012_0000_zps4b68b5f8.jpg.html)

sivaa
6th March 2014, 09:08 AM
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/sivaji_zps55482928.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/sivaji_zps55482928.jpg.html)

sivaa
6th March 2014, 09:09 AM
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/CCI25122012_0001_zpse4ef759c.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/CCI25122012_0001_zpse4ef759c.jpg.html)

sivaa
6th March 2014, 09:10 AM
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/CCI27122012_0001_zps9493f561.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/CCI27122012_0001_zps9493f561.jpg.html)

goldstar
6th March 2014, 11:08 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/001_zpse16207bf.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/001_zpse16207bf.jpg.html)

Awesome Siva sir. Very much happy to see our NT unique records poster. I am seeing these posters for the first time in my life.

Russellbpw
6th March 2014, 04:05 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2bitor30x40anything_zps701f1711.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2bitor30x40anything_zps701f1711.jpg.html)

ScottAlise
6th March 2014, 05:28 PM
பார்த்ததில் பிடித்தது -15

கடந்த சென்ற 2 பதிவிகளில் ராஜா ராணி பாணி கதை சார்ந்ததாக இருந்தது , இந்த பதிவு அதில் இருந்து சற்று விலகி , அதுவும் நடிகர் திலகத்தின் படங்களில் 1980 க்கு பிறகு வந்த படமாக எழுதி உள்ளேன்

அந்த படம் தான் 1987 ல் நடிகர் திலகத்தை வைத்து அதிக படங்களை தயாரித்த பாலாஜி அவர்களின் கம்பெனி தயாரித்து , நடிகர் திலகத்தின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு வசனம் எழுதிய அரூர் தாஸ் அவர்களின் கைவணத்தில் , நடிகர் திலகத்தை வைத்து , பல genre படங்களை இயக்கிய AC திருலோக்சந்தர் இயக்கத்தில் வந்த குடும்ப சித்திரமான குடும்பம் ஒரு கோவில் என்ற திரைப்படம்

ScottAlise
6th March 2014, 05:31 PM
கதை :

சங்கர்(சிவாஜி சார் ) மற்றும் அவர் மனைவி பார்வதி (லட்சுமி) இருவரும் கணவன் மனைவியாக சந்தோசமாக வாழ்கிறார்கள் , சங்கர் அவர் தம்பி ராஜா , ரவி மற்றும் தங்கை வாழ்கையை பற்றி மட்டுமே யோசித்து , பார்த்து அவர்களின் சந்தோஷமே முக்கியம் என்று வாழ்கிறார் , தான் கண்ணாடி அணியும் செலவை கூட தள்ளி வைத்து தம்பிகளின் படிப்புக்கு செலவு செய்கிறார் . இவர் இப்படி என்றால் இவர் மனைவி பார்வதி தன் குழந்தையை abortion செய்து , தன் கணவரின் தங்கச்சி , தம்பிகள் மேல் அன்பாக இருக்கிறார் .
ராஜாவும் , ரவியும் படிப்பு முடித்து வரும் பொது , ராஜா ஒரு பெண்ணை காப்பாத்துகிறார் , அதனால் ராஜாவின் மேல் அந்த பெண்ணுக்கு காதல் , சங்கரின் தங்கை , ஒரு பையனை விரும்புகிறார்

ராஜாவை விரும்பும் ரஞ்சனியின் தாய் பணக்காரி , திமிர் பிடித்தவள் .
அவர் ராஜாவை தன் கூடவே இருக்க வற்புறுத்த , ராஜா மறுத்து விடுகிறார் , ரஞ்சனி முதலில் ராஜா உடன் தன் திருமணத்தை செய்து வைக்கும் படியும் , பிறகு தான் அந்த குடும்பத்தை பிரித்து , இங்கே வந்து விடுவதாக கூறுகிறார்

திருமணமும் நடந்து விடுகிறது , வந்த இடத்தில ரஞ்சனி பிரச்சனை செய்து பார்க்கிறார் , ஆனால் பார்வதியின் குணத்தால் பிரச்சனைகள் அமிங்கிவிடுகிறது . இந்த நிலையில் ரஞ்சனியின் பிறந்தநாள் அன்று அவர் தாய் வந்து பணம் குடுக்க ராஜா தடுக்கிறார் பிரச்சனை பெருசாக ரஞ்சனி தன் தாய் வீட்டுக்கு செல்லுகிறார் , பார்வதி சமாதானபடுத்தி அவரை அழைத்து வருகிறார்

ரஞ்சனி வீட்டுக்கு வந்த உடன் பார்வதியை மோகினி பேய் என்று சொல்லி விட , தங்கையும் அடித்து விட , ஆத்திரம் வந்து , அடித்து விடுகிறார் ரவி (ராஜா வின் தம்பி ) , இதை பார்த்த ராஜா ரவி ஒரு ஆனதை என்ற உண்மையை சொல்லி விட , மனம் ஒடிந்து வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார் ரவி .

ScottAlise
6th March 2014, 05:32 PM
தன் அளவுக்கு பணம் இல்லாததால் ரஞ்சனியின் தாய் ராஜாவை தன் வீட்டில் வந்து இருக்கும் படி சொல்ல , ராஜா யாருக்கும் சொல்லாமல் துபாய் சென்று விடுகிறார் ,
சங்கரின் தங்கை ஜானவியை காதலிக்கும் பையன் வந்து பெண் கேட்க , அவர் அப்பா வந்து 60,000 ருபாய் பணம் கேட்கிறார் , வேறு வழி இல்லாமல் வேலையை ராஜினாமா செய்து PF பணம் 75000/- Rs வைத்து திருமணம் செய்ய நினைக்கிறார்


பணத்தை , துரதிஷ்டவசமாக தன் சமந்தி VKR வீட்டில் மறந்து வைத்து விட , அவர் அந்த பணத்தை எடுத்து வைத்து விடுகிறார்

இதை அறிந்த மாப்பிள்ளை (வசந்த் ) அவர் அண்ணன் (ஜனகராஜ் ) இருவரும் சேர்ந்து , தங்கள் வீட்டில் உள்ள நகைகளை திருடி , பணத்தை சங்கரிடம் கொடுத்து விடுகிறார்கள்

கல்யாணம் நடுக்கும் பொது , உண்மை தெரிந்து , VKR போலீஸ் complaint கொடுக்க , சங்கர் கைது செய்ய படுகிறார்

அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர பார்வதி , அவர் வீட்டை விற்று விடுகிறார் , சங்கரின் தங்கை ஜானவி , தற்கொலை செய்ய போக , வீட்டை விட்டு வெளியே சென்ற ரவி (இப்போ ஒரு ஆட்டோ டிரைவர் ) அவரை காப்பாத்தி தன் கூடவே வைத்து கொளுகிறார்.

ரஞ்சனி தன் தாயின் குணம் பிடிக்காமல் வெளியே வந்து விடுகிறார் , வந்த இடத்தில ஆபத்தில் சிக்கி கொள்ளும் அவரை ரவி காப்பாற்றி தன் கூடவே வைத்து கொள்ளுகிறார்

துபாய் போன ராஜா சென்னை வந்து தன் வீட்டுக்கு போகும் பொது ஆட்டோ ஓட்டும் ரவியை பார்க்க , இருவரும் சேர்ந்து அண்ணனை தேடுகிறார்கள்

வீடும் இல்லாமல் , வேலையும் இல்லாமல் சங்கர் அவர் மனைவி , பார்வதி இருவரும் கஷ்டபடுகிறார்கள் , ஒரு சத்திரத்தில் தங்கி இருக்கும் அவர்களை , வெளியே அனுபிவிடுகிரர்கள் அந்த சத்திரத்தின் மேனேஜர் .

ScottAlise
6th March 2014, 05:32 PM
அன்னதானம் சாப்பாட்டை எடுத்து வந்து சாப்பிடும் பொது , ஒரு வீட்டின் முன்னால் அமர்ந்து சாப்பிடும் அவர்களை அந்த வீட்டின் owner துரத்த , அந்த சாப்பாடும் கொட்டி விடுகிறது

நேரத்துக்கு சாப்பிட முடியாமல் பார்வதிக்கு ulcer வந்து ,அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் வருகிறது , மருந்து செலவுக்கு தான் அணிந்து இருக்கும் கண்ணாடி , செருப்பை கூட விற்று விடுகிறார் .
ஆபரேஷன் செய்ய வேண்டிய நாள் நெருங்க , அதற்கு 1000 ருபாய் தேவை பட , பணத்துக்கு அலைகிறார் சங்கர் , பணம் கிடைத்து விட , வழியில் ஒரு குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் கத்தி குத்தி , காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்
பார்வதி , தன் கணவரின் கண்ணாடி , மற்றும் செருப்பை , தாலியை அடக்க வைத்து வங்கி வந்து விடுகிறார்
ஆஸ்பத்திரி வளாகத்தில் இருவரின் உயிரும் பிரிய , மொத்த குடும்பமும் சேர்ந்து விடுகிறது.

ScottAlise
6th March 2014, 05:33 PM
படத்தை பற்றி :

மிகவும் அழுகை வர வைக்கும் படம் , melodrama பிடிக்காத நபர்களுக்கு இந்த படம் பிடிக்காது , இருந்தாலும் நம்மவர் இந்த படத்தில் வழக்கம் போல் கலக்கி உள்ளார் , ஒரு படம் , ஓடும் அல்லது ஓடாது , ஆனால் நம் நடிகர் திலகத்தின் உழைப்பு அதில் 100 % இருக்கும் .இந்த படத்தில் நடிகர் திலகம் மிகவும் ஒல்லியாக , அழகாக இருக்கிறார் , ஒரு middle age person லுக் க்கு மிகவும் apt ஆக இருக்கிறார் , அவர் குரல் கூட இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது .

சில நபர்கள் சொல்லி பார்த்து இருக்கிறேன் , 1980 க்கு நடிகர் திலகம் வயதுக்கு தகுந்த உடை அணிந்து நடிக்கவில்லை , வயதுக்கு தகுந்த பாத்திரங்களில் நடிக்கவில்லை என்று
+
நடிகர் திலகத்தின் படங்களில் அவர் தான் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆக்கிரமித்து கொள்வர் என்று

இந்த படத்தை அந்த நபர்கள் அனைவரும் ஒரு முறை பார்த்தல் தேவலை
நாம் அனைவரும் அணிய கூடிய plain ஷர்ட் மட்டுமே அணிந்து நடித்து இருப்பார் எங்கள் நடிகர் திலகம்

அடுத்தது (குற்றச்சாட்டுக்கு பதில் )

இந்த படத்தில் பார்வதி என்ற பாத்திரத்தில் வாழ்ந்த லட்சமி தான் இந்த படத்தில் அதிக scope உள்ள பாத்திரம் , ( பல பேர் இதை இங்கே சொல்லி உள்ளார்கள் இப்போ நானும் அதை சொல்லி உள்ளேன் , இருந்தாலும் அதை ஒத்து கொள்ள மனம் இல்லை என்று தான் தெரிகிறது )

ScottAlise
6th March 2014, 05:37 PM
முதல் காட்சியில் கண்ணாடி வேண்டாம் அந்த செலவை தன் தம்பிகளின் படிப்புக்காக வைத்து கொள்ளும் போதே சங்கர் கேரக்டர் நன்றாக establish செய்து விடுகிறது . அண்ணன் என்ற சட்டை பல தடவை அணிந்து இருக்கிறார் நடிகர் திலகம் , அதிலும் தியாகம் செய்யும் பாத்திரத்தில் பல படங்கள் செய்து இருக்கிறார் , ஆனால் ஒரு தடவை கூட தான் ஏற்கனவே செய்த பாத்திரத்தின் சாயல் , மீண்டும் ஒரு முறை பிரதிபலிப்பது இல்லை (இவர் மட்டுமே தான் இப்படி )

பிறகு கண்ணாடி அணிந்த உடன் தன் மனைவியை அவர் கொஞ்சும் காட்சி இருக்கிறதே ,ஏழ்மையிலும் சந்தோசம் , இவர் இப்படி என்றல் லட்சமி ஏற்கனவே நான் சொன்னதை போல நடிகர் திலகத்தின் பாத்திரத்தை விட அழுத்தமாக sketch செய்ய பட்ட பாத்திரம் , தன் கணவரின் பொருளாதார நிலைமையை அறிந்து , தன் குழந்தையை abort செய்து விட்டு , தன் கணவரின் சொந்தங்கள் தான் தன் குழந்தைகள் என்று வாழும் பாத்திரம்.

ScottAlise
6th March 2014, 05:37 PM
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் , அதுவும் அந்த குடும்பத்தை , தன் சம்பாத்தியத்தை வைத்து நடத்தும் நபரின் மனைவி மட்டும் ஒழுங்காக இருந்தால் போதும் , ஒரு கூட்டு குடும்பம் அழகாக நடக்கும் , (அதற்கு சிறந்த உதாரணம் நம் நடிகர் திலகத்தின் அன்னை இல்லம் ) இதில் , வீட்டுக்கு புதுசாக வரும் பணக்கார பெண் தன்னுடய ஆளுமையின் கிழே அனைவரும் இருப்பதை விரும்பும் குணம் உள்ள நபர் , ஒரு குடும்பத்துக்கு வரும் பொது , சண்டை வர நிறைய வாய்ப்பு உள்ளது .அப்படி நினைப்பது அவர் தப்பும் இல்லை , அவர் வளர்ந்த விதம் அப்படி , அப்படி பட்ட குணம் உள்ளவர்கள் ,அடிப்படையில் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள் , அனைத்தையும் purchase செய்து பழக்கம் உள்ளத்தால் வரும் பிரச்சனை , விஸ்வரூபமான பிரச்சனை வரும் பொது அவர்கள் அதை அனுபவிக்கும் பொது மனம் கண்டிப்பாக மாறுவார்கள் .

அந்த மாதிரி குணம் உள்ள நபர்களை handle செய்வது ஒரு தனி கலை , அதை அழகாக செய்து இருப்பார் லட்சுமி , தன்னை மோகினி பேய் என்று பல தடவை சொல்லும் ஒரு நபரை கூட , அரவணைத்து செல்லும் அவர் குணத்துக்கும் , தன் புருஷன் கஷ்ட படும் பொது , ஆஸ்பத்திரியில் கூட சிரித்து மகிழ்வதும் , சாப்பிட கிடைக்காமல் அல்லாடும் பொது , தவிப்பதும் , தன் கணவர் கண்ணாடி இல்லாமல் தவிப்பதை அறிந்து அதற்கு அலைந்து வாங்குவதும் , பின் தன் கணவர் மடியில் உயிரை விடுவதும் என்று பார்வதி பாத்திரம் தான் இந்த படத்தின் உயிர் நாடி , அதை அழக்காக செய்த லட்சுமி மேடம்க்கு ஒரு சபாஷ்