PDA

View Full Version : Makkal thilagam mgr part 7



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

Stynagt
31st January 2014, 01:37 PM
ரவி கிரண் சார்.

தாங்கள் கர்ணன் வெளியீட்டின் வசூலை அறிவித்துள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி. கர்ணன் சிறந்த படம் என்பதில் மாற்று கருத்தில்லை. எந்த நிலையில் கர்ணன் ஓடியது. எதனால் ஓடியது என்று உங்களுக்கும் தெரியும். நடிகர் திலகத்தின் நடிப்பு மட்டுமல்லாது அது தலை சிறந்த மகாபாரதக் கதை என்பதும் மிகப்பெரிய காரணம்.

அதேபோல் நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றியை இந்த உலகமே அறியும். வெளியான நாள் முதல் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் நாடோடி மன்னனின் பதிவுகளைப் பாருங்கள். கொங்கு மண்டலத்தில் இன்றும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தை நீங்கள் காணலாம். வரும் வாரத்தில் கோவை ராயலில் திரையிடப்போகிறார்கள். கொங்குமண்டலத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் பவனி வந்த தலைவரின் காவியங்களில் முதன்மையான காவியம் நாடோடி மன்னன்.

மேலும்.நாங்கள் அந்த ஒரு படத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கவில்லை. புரட்சித்தலைவரின் 75 சதவீத படங்கள் இன்றைக்கும் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் சக்ரவர்த்தி என்ற பெருமையை இன்றுவரை எங்கள் தெய்வம் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். திரையிட்ட நாள்முதல் நாடோடி மன்னன் ஓடிக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது அனைத்து ஊர்களிலும் சாதனை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. உதாரணமாக கோவை (தொடர்ந்து 32 நாட்கள்) சேலம் அலங்கார் (29 நாட்கள்)... அதனால் மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பதியும் பதிவில் தங்கள் குறைகளை சொல்வதை விட நடிகர்திலகம் திரியில் தங்களின் ஆக்கபூர்வமான உழைப்பைக் கொடுத்தால் நலம் என்றே எண்ணுகிறேன். இத்தோடு தாங்கள் முரணான பதிவுகளை இங்கே பதிவிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். இதுவரை நாங்கள் நடிகர் திலகத்தின் திரியில் எந்த சர்ச்சையையும் கிளப்பியது இல்லை. எங்களக்கு அதில் விருப்பமும் இல்லை. நாகரீகம் கருதி இதோடு நிறுத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம். இல்லையென்றால், தங்களின் எந்த பதிவிற்கும் பதில் சொல்லவோ, விளக்கம் சொல்லவோ, மக்கள் திலகத்தின் ரசிகர்கள் முனைய மாட்டார்கள் என்றும் சொல்லிக்கொள்கிறேன் தங்களின் பதிவுகள் எங்களின் ஆக்கபூர்வ பதிவை தடுக்கிறது என்பது மட்டும் உறுதி. இதற்கு மேல் தங்கள் விருப்பம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
31st January 2014, 01:44 PM
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்

உங்களின் பிறந்த நாளுக்கு இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள் .

Stynagt
31st January 2014, 01:56 PM
http://i58.tinypic.com/2r55cpl.jpg

தங்களின் பதிவிற்கு மிகவும் நன்றி திரு. ரவிச்சந்திரன் சார்.

சார். தமிழர்களின் தலையாய பிரச்சினையான காவிரி பிரச்சினை மட்டுமல்லாது..அதைவிட தமிழர்களின் தலைபோகிற பிரச்சினையான ஈழப்பிரச்சினையே தீர்வு பெற்றிருக்கும் இந்நேரம் நம் இதய தெய்வம் இருந்திருந்தால். அந்த தலைவன் இல்லாததால்தான் அந்த தறுதலை ராஜபக்சே நம் தொப்புள்கொடி உறவுகளை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று குவித்தான். அதற்கும் நம் இந்தியா துணைபோனதுதான் கொடுமையிலும் கொடுமை. அதற்கும் இங்குள்ள தமிழர்கள் வக்காலத்து வாங்குவதுதான் அதைவிட கொடுமை. தமிழினத்தில் மட்டுமே இத்தகைய கொடுமை நடக்கும்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellbpw
31st January 2014, 02:28 PM
ரவி கிரண் சார்.

தாங்கள் கர்ணன் வெளியீட்டின் வசூலை அறிவித்துள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி. கர்ணன் சிறந்த படம் என்பதில் மாற்று கருத்தில்லை. எந்த நிலையில் கர்ணன் ஓடியது. எதனால் ஓடியது என்று உங்களுக்கும் தெரியும். நடிகர் திலகத்தின் நடிப்பு மட்டுமல்லாது அது தலை சிறந்த மகாபாரதக் கதை என்பதும் மிகப்பெரிய காரணம்.

அதேபோல் நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றியை இந்த உலகமே அறியும். வெளியான நாள் முதல் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் நாடோடி மன்னனின் பதிவுகளைப் பாருங்கள். கொங்கு மண்டலத்தில் இன்றும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தை நீங்கள் காணலாம். வரும் வாரத்தில் கோவை ராயலில் திரையிடப்போகிறார்கள். கொங்குமண்டலத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் பவனி வந்த தலைவரின் காவியங்களில் முதன்மையான காவியம் நாடோடி மன்னன்.

மேலும்.நாங்கள் அந்த ஒரு படத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கவில்லை. புரட்சித்தலைவரின் 75 சதவீத படங்கள் இன்றைக்கும் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் சக்ரவர்த்தி என்ற பெருமையை இன்றுவரை எங்கள் தெய்வம் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். திரையிட்ட நாள்முதல் நாடோடி மன்னன் ஓடிக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது அனைத்து ஊர்களிலும் சாதனை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. உதாரணமாக கோவை (தொடர்ந்து 32 நாட்கள்) சேலம் அலங்கார் (29 நாட்கள்)... அதனால் மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பதியும் பதிவில் தங்கள் குறைகளை சொல்வதை விட நடிகர்திலகம் திரியில் தங்களின் ஆக்கபூர்வமான உழைப்பைக் கொடுத்தால் நலம் என்றே எண்ணுகிறேன். இத்தோடு தாங்கள் முரணான பதிவுகளை இங்கே பதிவிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். இதுவரை நாங்கள் நடிகர் திலகத்தின் திரியில் எந்த சர்ச்சையையும் கிளப்பியது இல்லை. எங்களக்கு அதில் விருப்பமும் இல்லை. நாகரீகம் கருதி இதோடு நிறுத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம். இல்லையென்றால், தங்களின் எந்த பதிவிற்கும் பதில் சொல்லவோ, விளக்கம் சொல்லவோ, மக்கள் திலகத்தின் ரசிகர்கள் முனைய மாட்டார்கள் என்றும் சொல்லிக்கொள்கிறேன் தங்களின் பதிவுகள் எங்களின் ஆக்கபூர்வ பதிவை தடுக்கிறது என்பது மட்டும் உறுதி. இதற்கு மேல் தங்கள் விருப்பம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Sir,

உங்களுடைய வாதத்திற்கு என்னிடம் மருந்துண்டு...ஆனால் விதண்டவாதத்திற்கு...நிச்சயம் என்னிடம் இல்லை !

உங்களுடைய அர்த்தமற்ற பதிவிற்கு என்னால் பதில் பதிவிடமுடியும் ...நொடிபொழுதில்...ஆனால் ...என்ன சொன்னாலும் நீங்கள் திரும்பவும் ஏதாவது நொட்டை சொல்லி வம்பிழுப்பீர்கள்...

ஆகையால், உங்களுக்கு பதில் சொல்லி உங்களுடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.

நீங்கள் கூறும் காரணங்களை நடுநிலையாளர்கள் படித்தால் அவர்களுக்கு புரியும்...யார் சரி என்று...! ஆக்கபூர்வம் எது என்பதை நடுநிலையாளர்கள் அறிவார்கள்.....வீம்புக்கு வம்பிழுக்கும் பழக்கம் எனக்கில்லை. எனக்கு எங்கு எதற்கு பதில் பதிவு பதிக்கவேண்டும் என்பது நன்றாக தெரியும்....அதற்க்கு மட்டுமே பதில் பதிவு, பதிவுசெய்வேன்.

என் பதிவுகளை நீங்கள் ஒருமுறைக்கு இரண்டு முறை படித்து பாருங்கள்..நான் எங்காவது திரு.MGR அவர்களின் திரைப்படங்கள் மறு வெளியீடு பற்றி வாய் திறந்திருக்கிரேனா என்று...! MGR அவர்களின் மறு வெளியீடு படங்கள் பற்றி நான் எப்போதும் பேசலை..அது எனக்கு தேவையும் இல்லை என்று கூறிய பிறகும் எதற்கு என்னை வம்புக்கிழுக்கவேண்டும் ? அது உங்களுக்கு, என் நேரத்தை உங்கள் நண்பர் வீனடித்ததாக தெரியவில்லை...?

உங்களுக்கு ஒரு சட்டம் ...மற்றவர்களுக்கு ஒரு சட்டமா நண்பரே ! உங்களுடைய நண்பர் பதிவு செய்தது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை..ஆனால் நான் பதில் பதிவு செய்தது உங்களுடைய கண்ணை உறுத்துகிறது.

காரணம் நீங்கள் கூறும் அனைத்தையும் ...அது சரியோ தவறோ... எல்லாரும் வாய்மூடி உண்மை என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு.


கர்ணன் ஓடினால் அது மகாபாரதம்....
கட்டபொம்மன் ஓடினால் அது சுதந்திரபோரட்ட வரலாறு....
வசந்த மாளிகை ஓடினால் அது பாடலால் ஓடியது....
பட்டிக்காடா பட்டணமா ஓடினால் அது கதைக்காக ஓடியது....
தங்கபதக்கம் ஓடினால் அது directionukkaaga ஓடியது .....
திருவிளையாடல் ஓடினால் அது சாமிகதை .......

இன்னும் எத்தனை காலத்திற்குதான் இந்த காரணங்களை சொல்லிகொண்டிருக்க போகிறீர்கள் ?

முதலில் திறமையாளர்களை மதிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும்...!

நம்மை சார்ந்தவர் என்றால் ஒரு மாதிரி பேசவேண்டியது ...நம்மை சார்ந்தவர் அல்ல என்றால் வேறு விதமாக தூற்றவெண்டியது....

எங்கோ இருக்கும் ..எவன் செய்தது சரி என்று கூட தெரியாமல்...ஈழத்திர்ற்கு நாம் SUPPORT செய்வோம்...!

ஆனால் வீட்டிலே இருக்கும் தமிழனை தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தனை நிந்தனை செய்வோம்...அப்படிதானே ? ஆகையால் தான் தமிழகம் உருப்படாமல் போய்கொண்டிருக்கிறது...!

மன்னிக்கவும்...நடிகர் திலகத்தை நேரிடையாகவோ மறைமுகமாகவோ சம்பந்தபடுத்தும் பதிவாக இருந்தால் என்னுடைய பதில் பதிவு நிச்சயம் இருக்கும்...!

என் பதில் பதிவு இங்குள்ள அனைவராலும் ஏற்றுகொண்டாலும் சரி...தூற்றப்பட்டாலும் சரி...!...I WILL DEFINITELY CONVEY THE RESPONSE THAT ARE VERIFIABLE FACTS ..!

Russellisf
31st January 2014, 03:29 PM
பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-15): தமிழக முதல்வராக பதவி ஏற்றார்!

உலகம் சுற்றும் வாலிபனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்து 10-8-1973-ல் வெளிவந்த படம் "பட்டிக்காட்டுப் பொன்னையா." இதன்பின், 1974-ல் "நேற்று இன்று நாளை", "உரிமைக்குரல்", "சிரித்து வாழவேண்டும்" ஆகிய படங்கள் வெளிவந்தன.

ஸ்ரீதர் டைரக்*ஷனில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் "உரிமைக்குரல்." இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி லதா. மற்றும் எம்.என்.நம்பியார், நாகேஷ், சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, அஞ்சலிதேவி, சச்சு, புஷ்பலதா ஆகியோரும் நடித்தனர்.

வழக்கமாக சமூகக் கதைகளையே இயக்கி வந்த ஸ்ரீதர், கிராமப் பின்னணியில் எழுதிய கதை இது.

எம்.ஜி.ஆர். வித்தியாசமான "கெட்டப்"பில், வேட்டியை புதுவிதமாக அணிந்து நடித்தார். லதாவும் ஈடுகொடுத்து நடித்தார். பாடல்கள், படத்தின் வெற்றிக்கு துணைபுரிந்தன.

கண்ணதாசன் எழுதிய "விழியே கதை எழுது" என்ற பாடல் எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடல் காட்சி வெகு சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தது. பல வெற்றிப் படங்களை ஸ்ரீதர் கொடுத்திருந்தாலும், வசூலில் சாதனை படைத்த படம் "உரிமைக்குரல்."

மதுரையில் இப்படம் 200 நாட்கள் ஓடியது. நெல்லையில் வெள்ளி விழா கொண்டாடியது. 12 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் தயாரித்த படம் "சிரித்து வாழவேண்டும்". வசனத்தை ஆர்.கே.சண்முகம் எழுத, எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைத்தார். எஸ்.எஸ்.பாலன் டைரக்ட் செய்தார். இதில் எம்.ஜி.ஆருடன் லதா இணைந்து நடித்தார்.

1975-ல் நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டு வாழ்க ஆகிய படங்கள் வெளிவந்தன.

இதில் "இதயக்கனி" மெகா ஹிட் படம். இது சத்யா மூவிஸ் தயாரிப்பு. எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர் இந்தி நடிகை ராதா சலுஜா. மற்றும் மனோகர், கோபாலகிருஷ்ணன், கே.கண்ணன், ராஜசுலோசனா, பண்டரிபாய், நிர்மலா ஆகியோரும் நடித்தனர்.

பத்திரிகையாளராக இருந்து சினிமா டைரக்டரான ஏ.ஜெகந்நாதன் இப்படத்தை இயக்கினார். ஜெகதீசன் வசனம் எழுதினார்.

புலமைப்பித்தன் எழுதிய "இதயக்கனி", "நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற", "இன்பமே உந்தன் பேர் பெண்மையோ" ஆகிய பாடல்களும், வாலி எழுதிய "இதழே இதழே தேன் வேண்டும்", "புன்னகையில் கோடி" ஆகிய பாடல்கள் `ஹிட்' ஆயின.

"ராண்டார் கை" எழுதிய ஆங்கிலப்பாடல் ஒன்றும் இப்படத்தில் இடம் பெற்றது. உஷா உதூப் பாடிய அப்பாடல் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலைப் பெற்றது.

சென்னையில் 3 தியேட்டர்களில் நூறு நாள் கொண்டாடிய இப்படம், மதுரையில் 146 நாட்களும், திருச்சி, கோவை, சேலம் உள்பட பல ஊர்களில் நூறு நாட்களும் ஓடியது. இலங்கையின் கொழும்பு நகரில் 158 நாட்களும், யாழ்ப்பாணத்தில் 132 நாட்களும் ஓடின.

பிரபல இந்தி டைரக்டர் வி.சாந்தாராம் தயாரித்த "தோ ஆங்கேன் பாராஹாத்" என்ற சிறந்த படத்தை, "பல்லாண்டு வாழ்க" என்ற பெயரில் உதயம் புரொடக்*ஷன்ஸ் தயாரித்தது. ஆர்.கே.சண்முகம் வசனம் எழுத கே.சங்கர் டைரக்ட் செய்தார்.

இந்தியில் சாந்தாராம் நடித்த வேடத்தில் (திருடர்களைத் திருத்தும் போலீஸ் அதிகாரியாக) எம்.ஜி.ஆர். நடித்தார். அவருடன் லதா இணைந்து நடித்தார். சிறந்த கதை அம்சம் கொண்ட இப்படம், முக்கிய ஊர்களில் நூறு நாள் ஓடியது.

சிவாஜிகணேசனை வைத்து "திருவிளையாடல்", "சரஸ்வதி சபதம்", "தில்லானா மோகனாம்பாள்" போன்ற வெற்றிப்படங்களை எடுத்து வந்த ஏ.பி.நாகராஜன், எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்பினார். அதற்கு எம்.ஜி.ஆரும் சம்மதித்தார்.

"நவரத்தினம்" என்ற கதையை உருவாக்கினார், ஏ.பி.நாகராஜன். 9 பெண்களை எம்.ஜி.ஆர். சந்திப்பது போன்ற கதை. எம்.ஜி.ஆருடன் லதா கதாநாயகியாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்தார்.

எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி இருக்கவேண்டும் என்று, ஏ.பி.நாகராஜன் மிக சிரமப்பட்டு கதையை உருவாக்கினார் என்றாலும், அது எம்.ஜி.ஆர். ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. எனவே, எதிர்பார்த்த அளவுக்கு படம் பெரிய அளவில் ஓடவில்லை.

"இன்று போல் என்றும் வாழ்க", "மீனவ நண்பன்" ஆகிய படங்களும் 1977-ல் வெளிவந்தன.

அகிலன் எழுதிய "கயல்விழி" என்ற வரலாற்று நாவலை பிரமாண்டமான படமாக "சோளீஸ்வரர் கம்பைன்ஸ்" நிறுவனம் தயாரித்தது. இதில் எம்.ஜி.ஆருடன் லதா, பத்மபிரியா ஆகியோர் நடித்தனர். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்து விட்டது. சில காட்சிகள் மட்டும்தான் பாக்கி.

இந்நிலையில், 1977 ஜுன் மாதத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆரை கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர்.

"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" படத்தில் மீதியிருந்த காட்சிகளை இரவு- பகலாக நடித்துக் கொடுத்துவிட்டு, 30-6-1977-ல் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார், எம்.ஜி.ஆர்.

அவர் முதல்-அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், 1978 பொங்கல் தினத்தன்று "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" வெளிவந்தது. இது நூறு நாள் படமாக அமைந்தது.

"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்"தான், எம்.ஜி.ஆர். நடித்த கடைசி படம். முதல்-அமைச்சரான பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை.

எம்.ஜி.ஆரின் முதல் படமான "சதிலீலாவதி" 28-3-1936-ல் வெளிவந்தது. கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 14-1-1978-ல் வெளிவந்தது. இந்த 42 வருட காலத்தில் அவர் நடித்த மொத்த படங்கள் 136.

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் இணைந்து நடித்தவர் ஜெயலலிதா. அவர் 28 படங்களில் நடித்தார்.

அவருடன் அதிகப் படங்களில் அவருடன் நடித்த மற்ற நடிகைகள்: சரோஜாதேவி-26; லதா-13; பானுமதி-10; பத்மினி-8; கே.ஆர்.விஜயா-8; டி.ஆர்.ராஜகுமாரி-8; அஞ்சலிதேவி-5; மஞ்சுளா-5.

அதிக படங்களை டைரக்ட் செய்தவர்கள்:-

ப.நீலகண்டன் 17; எம்.ஏ.திருமுகம் 16; டி.ஆர்.ராமண்ணா 8; கே.சங்கர் 8. கிருஷ்ணன் பஞ்சு, ஏ.காசிலிங்கம், டி.ஆர்.ரகுநாத், பி.ஆர்.பந்துலு, சாணக்யா, எம்.கிருஷ்ணன் தலா 4 படங்களை டைரக்ட் செய்தனர்.

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகர்கள், வில்லன்கள்:- எம்.என்.நம்பியார் 63; அசோகன் 57; பி.எஸ்.வீரப்பா 23; ஆர்.எஸ்.மனோகர் 23; எம்.ஆர். ராதா 20;

நகைச்சுவை நடிகர்கள்:- நாகேஷ் 42; தேங்காய் சீனிவாசன் 26.

அதிக படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர்கள்:- சொர்ணம் 16; ஆர்.கே.சண்முகம் 15; ஆரூர்தாஸ் 14; மு.கருணாநிதி 10; கண்ணதாசன் 7; சக்தி கிருஷ்ணசாமி 6; ஸ்ரீதர் 3.

தமிழ் திரையுலகில் தனியொரு சகாப்தமாகவும், சரித்திரமாகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆரின் திரையுலக நெடும்பயணத்தின் சிறு பகுதியை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டதில் 'மாலை மலர்.டாட் காம் பெரு மகிழ்ச்சி அடைகின்றது.


Thanks for Malaimalar team for thalaivar cine journey details uploading in their website

Russellisf
31st January 2014, 04:57 PM
திரு கலிய பெருமாள் சார் உங்களின் பதிவை நானும் ஆமோதிக்கிறன் .


ஒரு நடிகனின் திறமை என்னவென்றால் பலதரப்பட்ட ரசிகர்களையும் மீண்டும் மீண்டும் திரையரங்குக்கு வரவழைத்து மகிழ்ச்சி ஏற்படுத்துபவனே உண்மையான நடிகன். அதை தான் எங்கள் தெய்வம் நடித்தார் அன்னாளில் . இதற்க்கு அரசாங்க விருதுகள் தேவையே இல்லை . அந்த விதத்தில் எங்கள் தலைவர் தான் no 1 natural நடிகர் in the world .












ரவி கிரண் சார்.

தாங்கள் கர்ணன் வெளியீட்டின் வசூலை அறிவித்துள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி. கர்ணன் சிறந்த படம் என்பதில் மாற்று கருத்தில்லை. எந்த நிலையில் கர்ணன் ஓடியது. எதனால் ஓடியது என்று உங்களுக்கும் தெரியும். நடிகர் திலகத்தின் நடிப்பு மட்டுமல்லாது அது தலை சிறந்த மகாபாரதக் கதை என்பதும் மிகப்பெரிய காரணம்.

அதேபோல் நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றியை இந்த உலகமே அறியும். வெளியான நாள் முதல் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் நாடோடி மன்னனின் பதிவுகளைப் பாருங்கள். கொங்கு மண்டலத்தில் இன்றும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தை நீங்கள் காணலாம். வரும் வாரத்தில் கோவை ராயலில் திரையிடப்போகிறார்கள். கொங்குமண்டலத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் பவனி வந்த தலைவரின் காவியங்களில் முதன்மையான காவியம் நாடோடி மன்னன்.

மேலும்.நாங்கள் அந்த ஒரு படத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கவில்லை. புரட்சித்தலைவரின் 75 சதவீத படங்கள் இன்றைக்கும் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் சக்ரவர்த்தி என்ற பெருமையை இன்றுவரை எங்கள் தெய்வம் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். திரையிட்ட நாள்முதல் நாடோடி மன்னன் ஓடிக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது அனைத்து ஊர்களிலும் சாதனை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. உதாரணமாக கோவை (தொடர்ந்து 32 நாட்கள்) சேலம் அலங்கார் (29 நாட்கள்)... அதனால் மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பதியும் பதிவில் தங்கள் குறைகளை சொல்வதை விட நடிகர்திலகம் திரியில் தங்களின் ஆக்கபூர்வமான உழைப்பைக் கொடுத்தால் நலம் என்றே எண்ணுகிறேன். இத்தோடு தாங்கள் முரணான பதிவுகளை இங்கே பதிவிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். இதுவரை நாங்கள் நடிகர் திலகத்தின் திரியில் எந்த சர்ச்சையையும் கிளப்பியது இல்லை. எங்களக்கு அதில் விருப்பமும் இல்லை. நாகரீகம் கருதி இதோடு நிறுத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம். இல்லையென்றால், தங்களின் எந்த பதிவிற்கும் பதில் சொல்லவோ, விளக்கம் சொல்லவோ, மக்கள் திலகத்தின் ரசிகர்கள் முனைய மாட்டார்கள் என்றும் சொல்லிக்கொள்கிறேன் தங்களின் பதிவுகள் எங்களின் ஆக்கபூர்வ பதிவை தடுக்கிறது என்பது மட்டும் உறுதி. இதற்கு மேல் தங்கள் விருப்பம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
31st January 2014, 05:47 PM
Adimaipenn ad in srilankan paper



3058

Russellisf
31st January 2014, 05:48 PM
Adimaipenn ad in news paper

3059

Russellisf
31st January 2014, 05:50 PM
adimaipenn 50 days ad

3060

Russellisf
31st January 2014, 05:53 PM
adimaipenn 100 days ad

30613062

Russellbpw
31st January 2014, 06:33 PM
திரு கலிய பெருமாள் சார் உங்களின் பதிவை நானும் ஆமோதிக்கிறன் .


ஒரு நடிகனின் திறமை என்னவென்றால் பலதரப்பட்ட ரசிகர்களையும் மீண்டும் மீண்டும் திரையரங்குக்கு வரவழைத்து மகிழ்ச்சி ஏற்படுத்துபவனே உண்மையான நடிகன். அதை தான் எங்கள் தெய்வம் நடித்தார் அன்னாளில் . இதற்க்கு அரசாங்க விருதுகள் தேவையே இல்லை . அந்த விதத்தில் எங்கள் தலைவர் தான் no 1 natural நடிகர் in the world .



யுகேஷ் சார்,

தயவு செய்து பதிவை திசை திருப்ப வேண்டாம் !

தேவையில்லாத argument ஐ துவக்குகிறீர்கள் !

Acting itself is defined as unnatural ...then where is the question of natural in acting ?

Stynagt
31st January 2014, 06:35 PM
http://i62.tinypic.com/f5bi9.jpg

கடல் கடந்திருந்தாலும் காட்டும்
கருணையில் வள்ளலாய் வாழ்கின்றீர்!
கண்ணியம் மிக்க நம் இறைவன் போல்
கஷ்டப்படும் நண்பர்க்கு உதவி நம்
கடவுளின் பெயரைக் காக்கின்றீர்! வாழ்க! வாழ்க!!

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
31st January 2014, 07:35 PM
http://i58.tinypic.com/34y1yxf.jpg

THANKS TO MR.R.SARAVANAN, MADURAI

Richardsof
31st January 2014, 08:04 PM
இனிய நண்பர்களே

மக்கள் திலகம் திரியில் தவிர்க்க முடியாத விவாதங்கள் தொடர்வது திரியின் தரத்தை
உயர்த்த உதவாது .மக்கள் திலகத்தின் எல்லா பெருமைகளும் அழியா புகழ் பெற்றவை .
மக்கள் மன்றத்தில் எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் மக்கள் திலகம் - நடிகர் திலகம்
என்று நிரந்தர இடம் பிடித்து ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்தார்கள் - வாழ்கிறார்கள்
வாழ்வார்கள் .

மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றிய பதிவுகளில் சில தகவல்கள் மிகைப்படுத்தியும்
தவறான தகவல்களும் இடம் பெற்றதன் விளைவு பதிலுக்கு பதில் ...தேவை இல்லாத
வாதங்கள் .[ மாலை மலர் +சில சினிமா இதழ்கள் ].

பேராசிரியரின் சிறப்பு பதிவுகள் - திருப்பூர் ரவி அவர்களின் அபூர்வ தகவல்கள் .
திரு சைலேஷ் அவர்களின் வீடியோ மற்றும் படங்கள் - திரு கலிய பெருமாள் அவர்களின் சிறப்பு பதிவுகள் -ரூப் சாரின் பதிவுகள் -அபூர்வ படங்கள் வழங்கும் திரு பிரதீப்பாலு -மற்றும் திரு ஜெய்சங்கர் - ராமமூர்த்தி -சுஹராம் -தெனாலிராஜன் -யுகேஷ் பாபு மற்றும் நண்பர்கள் இனிமேல் தொடர்ந்து மக்கள் திலகத்தின் புகழ் மட்டும்
பதிவிட்டு , தொடர்ந்து பயணிப்போம் .

மக்கள் திலகத்தின் படங்களில் அவருடைய நடிப்பு -பாடல் - சண்டை காட்சிகள்
அரசியல் சாதனைகள் - என்று சிறப்புடன் பதிவிட வேண்டுகிறேன் .

oygateedat
31st January 2014, 08:07 PM
http://s29.postimg.org/41gcpg65z/image.jpg (http://postimage.org/)

Richardsof
31st January 2014, 08:21 PM
மக்கள் திலகம் - நம்பியார் - வீரப்பா மோதும் கத்தி சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் ஸ்டைல் - விறுவிறுப்பு -கண்களுக்கு விருந்து .
படம் -ராஜராஜன் - 1957



http://youtu.be/ErVTXV1h2u8

oygateedat
31st January 2014, 08:28 PM
http://i62.tinypic.com/b6o5jm.jpg

Russellisf
31st January 2014, 08:30 PM
Thanks for uploading thalaivar sword fight





மக்கள் திலகம் - நம்பியார் - வீரப்பா மோதும் கத்தி சண்டை காட்சியில் மக்கள் திலகத்தின் ஸ்டைல் - விறுவிறுப்பு -கண்களுக்கு விருந்து .
படம் -ராஜராஜன் - 1957



http://youtu.be/ErVTXV1h2u8

Richardsof
31st January 2014, 08:37 PM
http://youtu.be/63a-nLXGxR0

Russellisf
31st January 2014, 08:41 PM
திரு வினோத் சார் நம் திரி தலைவரின் புகழ் பரப்பும் திரி இதில் அவர்கள் தான் உள்ளே வந்து குழப்பம் விளைவிக்கிறார்கள் . நாம் எப்பொழுதாவது அவர்கள் திரியில் சென்று ஏதாவது குழப்பம் விளைவிக்கிறோம இல்லையே பின் எதற்காக அவர்கள் நுழைகிறார்கள் ? உண்மைகளை இந்த நாடும் , மக்களும் அறிவதில் அவர்களுக்கு என்ன பிரச்சன்னை ? சரி இனி நாங்கள் தலைவரின் புகழ் மட்டும் பாடுவோம்




இனிய நண்பர்களே

மக்கள் திலகம் திரியில் தவிர்க்க முடியாத விவாதங்கள் தொடர்வது திரியின் தரத்தை
உயர்த்த உதவாது .மக்கள் திலகத்தின் எல்லா பெருமைகளும் அழியா புகழ் பெற்றவை .
மக்கள் மன்றத்தில் எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் மக்கள் திலகம் - நடிகர் திலகம்
என்று நிரந்தர இடம் பிடித்து ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்தார்கள் - வாழ்கிறார்கள்
வாழ்வார்கள் .

மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றிய பதிவுகளில் சில தகவல்கள் மிகைப்படுத்தியும்
தவறான தகவல்களும் இடம் பெற்றதன் விளைவு பதிலுக்கு பதில் ...தேவை இல்லாத
வாதங்கள் .[ மாலை மலர் +சில சினிமா இதழ்கள் ].

பேராசிரியரின் சிறப்பு பதிவுகள் - திருப்பூர் ரவி அவர்களின் அபூர்வ தகவல்கள் .
திரு சைலேஷ் அவர்களின் வீடியோ மற்றும் படங்கள் - திரு கலிய பெருமாள் அவர்களின் சிறப்பு பதிவுகள் -ரூப் சாரின் பதிவுகள் -அபூர்வ படங்கள் வழங்கும் திரு பிரதீப்பாலு -மற்றும் திரு ஜெய்சங்கர் - ராமமூர்த்தி -சுஹராம் -தெனாலிராஜன் -யுகேஷ் பாபு மற்றும் நண்பர்கள் இனிமேல் தொடர்ந்து மக்கள் திலகத்தின் புகழ் மட்டும்
பதிவிட்டு , தொடர்ந்து பயணிப்போம் .

மக்கள் திலகத்தின் படங்களில் அவருடைய நடிப்பு -பாடல் - சண்டை காட்சிகள்
அரசியல் சாதனைகள் - என்று சிறப்புடன் பதிவிட வேண்டுகிறேன் .

ainefal
31st January 2014, 08:55 PM
http://i61.tinypic.com/2hgh3wy.jpg

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.


Sailesh

Russellbpw
31st January 2014, 09:09 PM
இனிய நண்பர்களே

மக்கள் திலகம் திரியில் தவிர்க்க முடியாத விவாதங்கள் தொடர்வது திரியின் தரத்தை
உயர்த்த உதவாது .மக்கள் திலகத்தின் எல்லா பெருமைகளும் அழியா புகழ் பெற்றவை .
மக்கள் மன்றத்தில் எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் மக்கள் திலகம் - நடிகர் திலகம்
என்று நிரந்தர இடம் பிடித்து ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்தார்கள் - வாழ்கிறார்கள்
வாழ்வார்கள் .

மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றிய பதிவுகளில் சில தகவல்கள் மிகைப்படுத்தியும்
தவறான தகவல்களும் இடம் பெற்றதன் விளைவு பதிலுக்கு பதில் ...தேவை இல்லாத
வாதங்கள் .[ மாலை மலர் +சில சினிமா இதழ்கள் ].

பேராசிரியரின் சிறப்பு பதிவுகள் - திருப்பூர் ரவி அவர்களின் அபூர்வ தகவல்கள் .
திரு சைலேஷ் அவர்களின் வீடியோ மற்றும் படங்கள் - திரு கலிய பெருமாள் அவர்களின் சிறப்பு பதிவுகள் -ரூப் சாரின் பதிவுகள் -அபூர்வ படங்கள் வழங்கும் திரு பிரதீப்பாலு -மற்றும் திரு ஜெய்சங்கர் - ராமமூர்த்தி -சுஹராம் -தெனாலிராஜன் -யுகேஷ் பாபு மற்றும் நண்பர்கள் இனிமேல் தொடர்ந்து மக்கள் திலகத்தின் புகழ் மட்டும்
பதிவிட்டு , தொடர்ந்து பயணிப்போம் .

மக்கள் திலகத்தின் படங்களில் அவருடைய நடிப்பு -பாடல் - சண்டை காட்சிகள்
அரசியல் சாதனைகள் - என்று சிறப்புடன் பதிவிட வேண்டுகிறேன் .

திரு எஸ்வி சார்

தகவல்களை பதிவிடும்போது அது சர்ச்சையை கிளப்பும் வகையில் இருகிறதா என்பதை பார்க்காமல் பதிவிட்டதால் வந்த விளைவு.

தகவல்கள் உண்மையானவையாக இருக்கும் பட்சத்தில் யாருக்குமே பிரச்சனை இல்லை. அதை விடுத்து பொய் தகவல்கள் மற்றவர்களை பாதிக்கும் வகையில் மறு பதிவீடு செய்தால் என்ன செய்வது..?

ஆதாரமற்ற பொய் தகவல்கள் பொது இடத்தில் பதிவுசெய்யப்படும்போது, அல்லது மறுபதிவு செய்யும்போது அதில் வேறு ஒருவர் விஷயம் தவறாக அல்லது பொய்யாக சித்தரிக்கும் பட்சத்தில் அவை பொய் தகவல்கள் என்பதை மக்களுக்கு LOGICALLY புரிய வைப்பது எனது கடமை.

அதை எங்கு அந்த பதிவு செய்யப்பட்டதோ அங்கு மறுப்பு சொல்லி LOGICALLY மக்களுக்கு புரியவைப்பது தவறில்லை. எந்த திரியில் அது நடந்ததோ அங்கு பதிவிடாமல் எங்கோ சென்று எப்படி பதிவிடமுடியும் ?

மேலும், சொல்லாத விஷயத்திற்கு இங்கே நண்பர்கள் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள்..உதாரணம்...mgr அவர்களின் மறுவெளியீடு பதிவுகள்...நான் மறுவெளியீடு என்ற விஷயத்தை பேசவே இல்லை. என்னை தொடர்ந்து வம்பிழுத்து வாங்கிகட்டிக்கொண்டு இருக்கின்றேன். பிறகு நான் குழப்பம் விளைவிக்கிறேன் என்று என்னை கூறுகிறார்கள்..இந்த அநியாயம் எங்காவது நடக்குமா ? இது அடுக்குமா ?

இனியாவது நண்பர்கள் தங்கள் அறிவுரைப்படி நடப்பார்கள் என்று நம்புகிறேன் !

Russellisf
31st January 2014, 09:15 PM
என்னை தொடர்ந்து வம்பிழுத்து வாங்கிகட்டிக்கொண்டு பிறகு நான் குழப்பம் விளைவிக்கிறேன் என்று என்னை கூறுகிறார்கள்.. யார் வாங்கி கட்டிகொண்டது என்னோட பதிவுகளுக்கு பதில் இல்லை . வார்த்தை நாகரிகம் வேண்டும் . நீங்கள் என்ன எங்களுக்கு நிதிபதியா ? எங்களை கட்டுபடுத்த நீங்கள் யார்? நெஞ்சில் உரம் இருந்ந்தால் நேரில் சந்தித்து விவாதிக்க தயாரா ?




திரு எஸ்வி சார்

தகவல்களை பதிவிடும்போது அது சர்ச்சையை கிளப்பும் வகையில் இருகிறதா என்பதை பார்க்காமல் பதிவிட்டதால் வந்த விளைவு.

தகவல்கள் உண்மையானவையாக இருக்கும் பட்சத்தில் யாருக்குமே பிரச்சனை இல்லை. அதை விடுத்து பொய் தகவல்கள் மற்றவர்களை பாதிக்கும் வகையில் மறு பதிவீடு செய்தால் என்ன செய்வது..?

மேலும், சொல்லாத விஷயத்திற்கு இங்கே நண்பர்கள் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள்..உதாரணம்...mgr அவர்களின் மறுவெளியீடு பதிவுகள்...நான் மறுவெளியீடு என்ற விஷயத்தை பேசவே இல்லை. என்னை தொடர்ந்து வம்பிழுத்து வாங்கிகட்டிக்கொண்டு பிறகு நான் குழப்பம் விளைவிக்கிறேன் என்று என்னை கூறுகிறார்கள்..இந்த அநியாயம் எங்காவது நடக்குமா ? இது அடுக்குமா ?

இனியாவது நண்பர்கள் தங்கள் அறிவுரைப்படி நடப்பார்கள் என்று நம்புகிறேன் !

Russellbpw
31st January 2014, 09:27 PM
என்னை தொடர்ந்து வம்பிழுத்து வாங்கிகட்டிக்கொண்டு பிறகு நான் குழப்பம் விளைவிக்கிறேன் என்று என்னை கூறுகிறார்கள்.. யார் வாங்கி கட்டிகொண்டது என்னோட பதிவுகளுக்கு பதில் இல்லை . வார்த்தை நாகரிகம் வேண்டும் . நீங்கள் என்ன எங்களுக்கு நிதிபதியா ? எங்களை கட்டுபடுத்த நீங்கள் யார்? நெஞ்சில் உரம் இருந்ந்தால் நேரில் சந்தித்து விவாதிக்க தயாரா ?



சார் ,

என்ன ...? என்ன நினைத்து இப்படி பேசுகிறீர்கள்?

ஏன் சார்...மக்கள் திலகம் அவர்களுடைய படங்களின் மறு வெளியீடு பற்றி நான் ஏதாவது பேசினேனா ? சொல்லுங்க சார்

இல்ல ...அவர் திரைப்படத்தின் வசூல் தன்மையை பற்றி ஏதாவது பேசினேனா ?

You triggered an unwanted argument inspite of me repeatedly mentioning " am not interested or bothered about re-release films.."


உங்களை யார் சார் கட்டுபடுத்தியது ? என்ன கட்டுபடுத்தினாங்கனு நீங்க இப்படி தேவையில்லாம பேசறீங்க..

நெஞ்சுல உரம் இருந்தான்னு என்ன பேச்சு இது ? இது தான் உங்க பாஷையில நாகரீகமா ? சாரி சார்...எனக்கு உங்க நாகரீகம் தெரியாது !

சும்மா நீங்க என்ன வம்புக்கு இழுத்து இப்போ என்னமோ PLATE மாத்தரீன்களே?

விடுங்க சார்...இத்தோட விடுங்க...! என்ன வம்புக்கு இழுக்காதீங்க ..AM NOT READY !

ainefal
31st January 2014, 09:28 PM
http://i61.tinypic.com/2l8bzo0.jpg
http://i60.tinypic.com/9rqhcn.jpg

LOGIC IS THE WORST ENEMY OF TRUTH, ONE CANNOT SEE THEIR OWN ERRORS [APPLICABLE TO ANYONE AND EVERYONE]!

Russellbpw
31st January 2014, 09:31 PM
http://i61.tinypic.com/2l8bzo0.jpg

LOGIC IS THE WORST ENEMY OF TRUTH, ONE CANNOT SEE THEIR OWN ERRORS [APPLICABLE TO ANYONE AND EVERYONE]!

Thankyou sir

you are absolutely right....As you mentioned, It is applicable to Anyone and Everyone !

ainefal
31st January 2014, 10:39 PM
http://i60.tinypic.com/fxb2uv.jpg

One unwarranted / inadvertent [in my opninon] new paper article evokes so many postings! All our common sense, all our logic, all our practical sense is dashed to the ground! Useless! It has no force any more, no reality any more; it no longer corresponds to what is. It is truly a new world. Better we concentrate on postings which does not try to diminish the position of anyone in anyway whatsoever. Both Thilagams have attained their status through sheer hardwork, afterall.

fidowag
31st January 2014, 10:43 PM
நண்பர் செல்வகுமார் அவர்களே ,

நடிகர் சாமிகண்ணுவின் மகள் திருமணத்திற்கு,புரட்சி தலைவர் மறைந்தும் உதவி செய்ய வழி வகுத்த செய்தி மனதிற்கு நிறைவாக
இருந்தது.

கொடுத்த வாக்கையே காப்பாற்ற முடியாத அளவில் பலர் வாழ்கின்ற
இக்கலியுகத்தில்,தனது உதவியாளரிடம் திருமண நாளை குறிக்க செய்து ,தான் மறைந்த பின்னரும் ,தர்மம் செய்ய வைத்து ,தன்னுடன் நடித்த சக நடிகருடைய மகள் வாழ்விற்கு உயிர் கொடுத்த உத்தமர்,என்றும்
நமது இதய தெய்வத்தின் புகழ் கொடி விண்ணுலகில் பறக்கும் இது போன்ற நற்செய்கைகளால் என்பதில் இனியும் ஐயமுண்டோ !

இச்செய்தியை பதிவு செய்ததற்கு நன்றி.

ஆர். லோகநாதன்.

fidowag
31st January 2014, 10:46 PM
http://i59.tinypic.com/2wndcg6.jpg





பிறந்த நாள் காணும் திரு.சைலேஷ் பாபு அவர்களுக்கு அனைத்துலக
பொதுநல எம்.ஜி.ஆர். சங்கம் சார்பாக நல்வாழ்த்துக்கள்.புரட்சி தலைவரின் புகழ் போல தங்களின் பதிவுகள் புகழ் பெறட்டும்.


ஆர். லோகநாதன்.

ainefal
31st January 2014, 10:46 PM
நண்பர் செல்வகுமார் அவர்களே ,

நடிகர் சாமிகண்ணுவின் மகள் திருமணத்திற்கு,புரட்சி தலைவர் மறைந்தும் உதவி செய்ய வழி வகுத்த செய்தி மனதிற்கு நிறைவாக
இருந்தது.

கொடுத்த வாக்கையே காப்பாற்ற முடியாத அளவில் பலர் வாழ்கின்ற
இக்கலியுகத்தில்,தனது உதவியாளரிடம் திருமண நாளை குறிக்க செய்து ,தான் மறைந்த பின்னரும் ,தர்மம் செய்ய வைத்து ,தன்னுடன் நடித்த சக நடிகருடைய மகள் வாழ்விற்கு உயிர் கொடுத்த உத்தமர்,என்றும்
நமது இதய தெய்வத்தின் புகழ் கொடி விண்ணுலகில் பறக்கும் இது போன்ற நற்செய்கைகளால் என்பதில் இனியும் ஐயமுண்டோ !

இச்செய்தியை பதிவு செய்ததற்கு நன்றி.

ஆர். லோகநாதன்.


அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி அந்தக் கோமகன் திருமுகம் வாழி

ainefal
31st January 2014, 10:48 PM
http://i59.tinypic.com/2wndcg6.jpg





பிறந்த நாள் காணும் திரு.சைலேஷ் பாபு அவர்களுக்கு அனைத்துலக
பொதுநல எம்.ஜி.ஆர். சங்கம் சார்பாக நல்வாழ்த்துக்கள்.புரட்சி தலைவரின் புகழ் போல தங்களின் பதிவுகள் புகழ் பெறட்டும்.


ஆர். லோகநாதன்.

Thank very much Loganathan Sir

ainefal
31st January 2014, 10:58 PM
https://www.youtube.com/watch?v=6qlzDd5HIbs#t=114

ainefal
31st January 2014, 11:37 PM
http://www.youtube.com/watch?v=ySyxfkaR4K8

ainefal
31st January 2014, 11:39 PM
http://www.youtube.com/watch?v=5QG8zr23tWw

ainefal
31st January 2014, 11:42 PM
http://www.youtube.com/watch?v=lL03o4TvxZs

ainefal
31st January 2014, 11:47 PM
http://www.youtube.com/watch?v=Ybor-m_PdQw

orodizli
31st January 2014, 11:48 PM
மக்கள் திலகம் அவர்களின் பெருமையை பொறுமையாக பறை சாற்றும் இந்த திரியில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் பேர் வழிகளுக்கு எவ்வளவு சொன்னாலும் திருந்திர மாதிரி தெரிய வில்லை...அவர் வந்த வழி அப்படி! எனதான் நினைக்க தோன்றுகிறது...இன்னமும் மக்கள் திலகம் - திரைப்படங்களுக்கும், மற்ற நடிகர், நடிகையரின் படங்களுக்கும் உள்ள வித்தியாசமே தெரிய வில்லை- புரியவில்லை எனும்பொழுது வேறு எதை கூறி தெளிய வைப்பது? அதாவது புரட்சி நடிகர் படங்கள் 100 நாட்கள் ஓடியது வெற்றியா? அல்லது 100 நாட்கள் ஓடாமலே வெற்றியா? மக்கள் திலகம் படங்கள் வெறும் 25 நாட்களில் பெரும் வசூல் மற்ற நடிகர்கள் நடித்த படங்கள் 100 நாட்கள் - வெள்ளி விழா கண்ட படங்களை விட அதிக வசூல் அடைந்த வரலாற்று நிகழ்வுகளை அறிந்தும், அறியாத மாதிரி உள்ளனரா? இல்லை, உண்மையிலேயே தெரியவில்லையா? - அப்படி இருந்தால் உண்மையை அறிந்து கொள்வதிலே தவறில்லை...

orodizli
31st January 2014, 11:51 PM
happy birthday greetings to mr. sailesh basu sir... hats off to mr. vinoth sir for his valuable answers to somebodyelse...

ainefal
31st January 2014, 11:51 PM
http://www.youtube.com/watch?v=x929gU0MF4o

ainefal
31st January 2014, 11:55 PM
http://www.youtube.com/watch?v=6ceI-RKq44I

ainefal
31st January 2014, 11:59 PM
happy birthday greetings to mr. sailesh basu sir... hats off to mr. vinoth sir for his valuable answers to somebodyelse...

Thank you very much Suharaam Sir for your wishes.

Richardsof
1st February 2014, 05:58 AM
''மர்மயோகி '' இன்றுடன் 63 வயது நிறைவு .

மக்கள் மர்மயோகி 2.2.1951 அன்று வெளியானது ..

தமிழ் படத்தில் முதல் முதல் '' வயதுக்கு வந்தவர்கள் மட்டும் '' என்று தணிக்கை சான்றிதழ் படம் .

அனல் பறக்கும் வசனம் - மக்கள் திலகத்தின் அற்புதமான வாள் வீச்சு -ஆங்கில படம் போல் பிரமாண்ட காட்சிகள் .

1951ல் மிகப்பெரிய வெற்றி படம் .
http://i59.tinypic.com/1zx84sw.jpg

Richardsof
1st February 2014, 06:01 AM
THE HINDU -REVIEW

Perhaps the most historically significant film of 1951 was K. Ramnoth’s Marmayogi, a Jupiter Pictures’ production made at Central Studios in Coimbatore. This film, a folkloric tale of kings, royal mistresses and rebellious princes was written by A. S. A. Sami who had planned it specially for M. G. Ramachandran.
http://i57.tinypic.com/10oibg0.jpg
MGR who made his debut as hero in Sami’s Rajakumari was aware that the success of that film was due to reasons other than himself. It had action, trick scenes, entertainment, sexy dances and the hero was only an auxiliary cause and nothing more. So MGR persuaded Sami to write a script built around him to boost his image as a social rebel, do-gooder, and a fearless fighter for the underprivileged. MGR was an ardent filmgoer and a fan of Hollywood action heroes such as Douglas Fairbanks and Errol Flynn. Fairbanks fascinated him more and he modelled himself after this famous American idol of the Silent Era. Sami worked on a script, a mix of literary and classical elements, for MGR. Inspiration was drawn from the novel “Vengeance” by Marie Correlli and the legend of Robin Hood! MGR was cast as the younger prince who rebels against a woman who usurps his father’s kingdom and lets loose a reign of terror. The king pushed off a boat by his mistress, and presumed to have drowned, escapes and lives in disguise as a mysterious saint (hence the title Marmayogi) and also parades as a ‘ghost’ at nights. The hero turns into a Robin Hood and leads the masses to victory. The name of the hero — Karikalan –— was deliberately chosen to impress and exploit the new feeling of ‘Tamilness’ among the people.

In films of this genre, names of heroes are mostly Sanskrit derivatives such as Veerasimhan and Pratapan. But Sami went for a typical Tamil name, after the name of the famousTamil king, Karikala Chozhan.

Initially the title of this film was Karikalan. Later it was changed so that people don’t mistake it for a historical film. Ramnoth revealed his talents with his technically slick direction. Sama as the king, Anjali Devi as the power-crazy mistress and Sahasranamam as the elder prince performed their roles well. But the movie belonged to MGR. Every word of his dialogue was planned and written to build a special image for him and the lines had multi-layered meanings. One of the lines summed up MGR’s ambitions, personal, and political … “Naan kuri vaithaal thavara maatten! Thavarumey aanaal kuri vaikka maatten!” This dialogue became popular and was greeted with gleeful screams in cinema houses. Strangely the Censors gave Marmayogi an ‘Adults Only’ certificate. Why? The film had a ‘ghost’ and hence the ‘A’ certificate!

Marmayogi’ received a warm welcome from the masses, especially the rapidly increasing rank and file of the MK party. With this film MGR’s image brightened and his career as a political figure was established. Soon he acquired a prefix to his name “Puratchi Nadigar”!

Remembered for The film that established MGR’s image of a rebel and do-gooder.

RANDOR GUY

Richardsof
1st February 2014, 06:10 AM
http://youtu.be/AwwzGYVXlWM

Richardsof
1st February 2014, 06:28 AM
"மர்மயோகி" ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி நடித்தார்.
http://i57.tinypic.com/2mcu0qb.jpg
"ராபிஹுட்" ஆங்கில படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். பிரமாதமாக நடித்தார். "கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான்; தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்" என்று வசனம் பேசி, பல வீர தீரச் செயல்களைச் செய்தார்.

ஒரு கட்டத்தில், நாற்காலியை காலால் உதைத்து, அது தன்னிடமே வருமாறு செய்து, அதில் உட்கார்ந்து அஞ்சலிதேவியை சந்திப்பார். அக்கட்டம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றது. சுருக்கமாகக் கூறினால், இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் புகழ், மேலும் ஒரு படி உயர்ந்தது.

செருகளத்தூர் சாமா, மர்மயோகியாகத் தோன்றி, ரசிகர்களை பயமுறுத்தினார். அதனால் இப்படத்துக்கு "ஏ" சர்டிபிகேட் ("வயது வந்தோருக்கு மட்டும்") கொடுக்கப்பட்டது. தமிழில் "ஏ" சர்டிபிகேட் பெற்ற முதல் படம் இதுதான்.

Richardsof
1st February 2014, 06:35 AM
உலக தமிழர்களின் உள்ளத்தில் இன்றும் என்றும் ஒரு சிறந்த நடிகனாக , ஒரு நல்ல அரசியல் தலைவராக இருக்கும் இன்னும் சொல்ல போனால் தமிழ் நாட்டு ஏழை மக்கள் மனதில் தெய்வமாக இருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தன் வாழ்க்கை பயணத்தில் நடந்த ஒரு நிதர்சனமான உண்மை சம்பவத்தை சொல்கிறார் .

http://i58.tinypic.com/2w5ufsz.jpg


என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும்,

என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர்,

அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்'

என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப்

புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக

மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர்

அவர். அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண

அன்றுசென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை

அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி,

கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச்

சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து,

கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம்

உட்கார்ந்திருக்கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று.

படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள்

புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள்


மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது.


நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை

விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு


என்னை யார் என்றே தெரியாது.


இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப்,

(முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும்

ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த,

"மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன.

இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள்,

எழுந்துகூச்சல் போட்டனர்.


எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார்

என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து

வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என்

பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்'

என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல்

அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக்

காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும்


கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.


நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக

நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும்

குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை


அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பது தான் உண்மை.


மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என

கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட

ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே

கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம்,

அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.

என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன்,

நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள்

அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே

அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி


பெற்றுக் கொள்வது... நம்புவது?


கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால்

தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து

விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு

முதலியவற்றை தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது.

கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது.


சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும்

முடிவு!

ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின்


தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத்

தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த

உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன்

தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல்


உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்.


கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்., "சமநீதி' இதழில் எழுதியது ..


courtesy -நாஞ்சிலன்

ainefal
1st February 2014, 08:47 AM
http://www.youtube.com/watch?v=gR8jMerE-98

ainefal
1st February 2014, 08:47 AM
http://www.youtube.com/watch?v=4Voc2RDF4l8

ainefal
1st February 2014, 08:48 AM
http://www.youtube.com/watch?v=OzytpGQwmKQ

fidowag
1st February 2014, 08:54 AM
http://i60.tinypic.com/2uhqqsk.jpg
http://i59.tinypic.com/2qlz8e0.jpg
http://i57.tinypic.com/32zhzk3.jpg

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியை பிடித்தது முதலே
எம்.ஜி.ஆர். அரசு கலைக்கப்படும் என்ற செய்தி பரவிக் கொண்டிருந்தது.
முந்தைய ஜனதா ஆட்சியில் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. அதே பாணியில் 1980-ல் பாராளுமன்ற தேர்தலில்
அ .தி.மு.க. 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், இந்திரா காந்தி
அவர்கள் எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைத்தார். அந்த சமயம் ஆளுநரிடம் புகார் பட்டியல் ஒன்றை கொடுத்தார் கருணாநிதி . புகார் கொடுத்த மூன்றாம் நாள் அரசு கலைக்கப்பட்டது.

"சவாலை சந்திக்க தயார்" என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். 1980ல் மே மாதம் 28 முதல் 31 வரை தேர்தல் என அறிவிக்கப்பட்டது.சட்டமன்ற
தேர்தலை சந்திக்க ,விரிவான, வலுவான கூட்டணியை உருவாக்கினார்.
ஜனதா 60க்கு மேற்பட்ட தொகுதிகள கேட்டதால் அதை நிராகரித்து
இடதுசார் கட்சிகளுக்கு தலா 16 தொகுதிகள், குமரி ஆனந்தனுக்கு 12 தொகுதிகள் (கா .கா .தே. க.) பழ நெடுமாறனுக்கு 7 தொகுதிகள் அளித்து
168 தொகுதிகளில் அ தி.மு.க . போட்டியிடும் என அறிவித்தார்.மேலும் சில உதிரி கட்சிகள் இரட்டை இல்லை சின்னத்திலேயே போட்டியிட்டன.
தொகுதி பங்கீட்டில் அதிகம் சிக்கல்கள் இல்லை.

எம்.ஜி.ஆரின் சூறாவளி பிரசாரத்திற்கு பதில் கொடுக்க கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் சிவாஜி கணேசன் உதவியாக இருந்தார். நாடாளுவதற்கு கலைஞர், நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். என கூட்டங்களில்
சிவாஜி கணேசன் பேசினார். பதிலுக்கு தி.மு.க.- இ .காங்கிரஸ் அணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று எம்.ஜி.ஆர்.விமர்சித்து பிரசாரம் செய்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்ட இட ஒதுக்கீடு விஷயத்தில் சில மாற்றங்களை செய்தார். முக்கியமாக பிற்படுத்தப்பட்டோர் சலுகைக்கான 9000 ருபாய் வருமான வரம்பு வாபஸ் பெறப்பட்டது.தவிர, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கேடு 31 சதவிகிதத்தில் இருந்து 50 ஆகா உயர்த்த பட்டிருந்தது.
அதனால் திராவிடர் கழகத்தின் ஆதரவும் ஆ.தி.மு.க வுக்கு கிடைத்தது.

கூட்டங்களில் மக்கள் மத்தியில் நியாயம் கேட்டார் எம்.ஜி.ஆர். "நாங்கள் என்ன தவறு செய்தோம் " என்ற தலைப்பில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு மேடைக்கு மேடை எழுப்பினார்.

ஆட்சியில் லஞ்சம் இருக்க கூடாது என்று ஆசைபட்டேனே .அது தவறா ? ,ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொன்னேனே ,அது தவறா .சட்டத்துக்கு முன், நீதிக்கு முன் கட்சி கண்ணோட்டம் இருக்க கூடாது என்றேனே , அது தவறா? கோட்டை வராண்டாவில் அரசியல்வாதிகள் நடமாடக்கூடாது என்றேனே, அது தவறா? ,தவறு செய்பவர்கள் என் கட்சிகாரர்கள் என்றாலும் தயங்காமல் நடவடிக்கை எடுங்கள் என காவல்துறைக்கு சுதந்திரம் அளித்தேனே , அது தவறா? ,புயல் , வெள்ளம், தீ விபத்து போன்றவற்றில் மக்கள் பாதிக்கபட்டபோது ஓடோடி சென்று உதவி செய்தேனே , அது தவறா?, எது தவறு என்று சொல்லுங்கள், அன்ன காரணத்திற்காக ஆட்சியை கலைத்தார்கள் ?

எம்.ஜி.ஆர். எழுப்பிய கேள்விகள் வாக்காளர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தின. தமிழ் மக்களே, நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தந்த தீர்ப்பு தவறு என்று நினைத்தால் ,அதை இப்போது திருத்தி எழுதுங்கள் .அ .தி.மு.க வுக்கு வாக்களியுங்கள். என்று எம்.ஜி.ஆரின் வேண்டுகோள் தேர்தல் களத்தில் திரும்ப திரும்ப
எதிரொலித்தன.

தேர்தல் முடிவுகள் வந்த பொது எம்.ஜி.ஆர். அபார வெற்றி பெற்றிருந்தார். அ. தி.மு.க. 129 இடங்களை கைப்பற்றியது.சட்டமன்ற தேர்தலில் இமாலய வெற்றி அளித்து ,முதல்வர் நாற்காலியை மீண்டும் எம்.ஜி.ஆர். வசமே மக்கள் ஒப்படைத்தனர்.

அ.தி. மு. க. அணியில் இடம் பெற்ற சி.பி. எம்.முக்கு 11, சி.பி.ஐ க்கு 10, கா.கா.தே .கா. வுக்கு 6, தொகுதிகளில் வெற்றி பெற்றன.

தி.மு.க. 38 இடங்களையும், இ. காங்கிரஸ் 30 இடங்களையும் பெற்றன.

1980ல் ஜூன் மாதம் 9ம் தேதி தமிழக முதல்வராக 2-ம் முறை பதவி ஏற்றார்.


நன்றி: குமுதம் ரிப்போர்டர்.

ஆர். லோகநாதன்.

Richardsof
1st February 2014, 09:56 AM
ஜனவரி மாதம் பிறந்து, டிசம்பர் மாதம் இறந்தது வரை எம்ஜிஆரிடம் எதிலுமே ஒரு ஒழுங்கு மற்றும் ரிதம் இருந்தது. பின்னாளில் எந்த பிரபலத்திடமும் காணமுடியாத அற்புதமான அதிசயம் அது.எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய தாக்கத்தின் அதீத விளைவால் அவர் இறந்துவிட்டார் என்ற எண்ணமே இல்லாமல், அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்ற உணர்விலேயே காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கும் அவரது தீவிர ரசிகர்கள்….இல்லைஇல்லை தீவிர பக்தர்கள் இன்னும்கூட இருக்கிறார்கள் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்தெய்வத்துள் வைக்கப் படும்”என்ற வள்ளுவரின் குறளுக்கு அவர்தான்பொருத்தமானவர் என்றால் அது மிகையல்ல.

courtesy
maramyogi

Stynagt
1st February 2014, 12:48 PM
1984ம் ஆண்டு தீபாவளி - எம்ஜிஆர் தீபாவளியாக அமைந்தது -
புதுச்சேரியில் தலைவரின் 3 படங்கள் மறு வெளியீடானது

கந்தன் - ஒளிவிளக்கு - 24.1.84 முதல் 3.2.84 வரை (11 நாட்கள்)
அம்பிகா - என் அண்ணன் - 27.1.84 முதல் 31.1.84 வரை
நவீனா - விவசாயி - 26.1.84 முதல் 31.1.84 வரை
நவீனா - குலேபகாவலி - 10.2.84 முதல் 16.2.84 வரை
நவீனா - ஒரு தாய் மக்கள் - 17.2.84 முதல் 21.2.84 வரை
அம்பிகா - அலிபாபாவும் 40 திருடர்களும் - 17.2.84 முதல் 23.2.84 வரை
ராஜா - தெய்வத்தாய் - 24.2.84 முதல் 1.3.84 வரை
ரேணுகா - நேற்று இன்று நாளை - 2.3.84 முதல்5.3.84 வரை
வீனஸ் - எங்க வீட்டுப்பிள்ளை - 9.3.84 முதல் 16.3.84 வரை
ஜெயராம் - உழைக்கும் கரங்கள் - 17.3.84 முதல் 23.3.84 வரை
கந்தன் - அன்பே வா - 30.3.84 முதல் 12.4.84 வரை (2 வாரம்)
அம்பிகா - ரகசிய போலீஸ் 115 - 31.3.84 முதல் 5.4.84 வரை
அண்ணா - சிரித்து வாழவேண்டும் - 31.3.84 முதல் 5.4.84 வரை
வீனஸ் - விக்கிரமாதித்தன் - 31.3.84 முதல் 5.4.84 வரை
நியூடோன் - ரிக்ஷாக்காரன் -8.4..84 முதல் 13.4.84 வரை
ராஜா - ஜெனோவா (12.00 ஷோ) - 13.4.84 முதல் 23.4.84 வரை (11 நாட்கள்)
அம்பிகா - புதுமைப்பித்தன் - 12.4.84 முதல் 16.4.84 வரை
ராஜா - குடியிருந்த கோயில் - 20.4.84 முதல் 26.4.84 வரை
நவீனா - மதுரை வீரன் - 20.4.84 முதல் 26.4.84 வரை
ரேணுகா - ராமன் தேடிய சீதை - 25.4.84 முதல் 29.4.84 வரை
வீனஸ் - குடியிருந்த கோயில் - 27.4.84 முதல் 8.5.84 வரை (12 நாட்கள்)
ராமன் - மீனவ நண்பன் - 27.4.84 முதல் 4.5.84 வரை
நவீனா - ஆயிரத்தில் ஒருவன் - 4.5.84 முதல் 10.5.84 வரை
நியூடோன் - கலை அரசி - 4.5.84 முதல் 10.5.84 வரை
நியூடோன் - புதிய பூமி - 14.5.84 முதல் 17.5.84 வரை
நவீனா - என் அண்ணன் - 18.5.84 முதல் 22.5.84 வரை
ராஜா - இதயக்கனி - 27.5.84 முதல் 1.6.84 வரை
கந்தன் - தாயைக் காத்த தனயன் - 1.6.84 முதல் 7.6.84 வரை
நவீனா - வேட்டைக்காரன் - 30.6.84 முதல் 6.7.84 வரை
நியூடோன் - மந்திரிகுமாரி - 7.7.84 முதல் 12.7.84 வரை
அண்ணா - புதுமைப்பித்தன் - 15.7.84 முதல் 19.7.84 வரை
அம்பிகா - தாய் மகளுக்கு கட்டிய தாலி - 24.7.84 முதல் 28.7.84 வரை
அம்பிகா - விவசாயி - 29.7.84 முதல் 1.8.84 வரை
நவீனா - மகாதேவி - 26.7.84 முதல் 3.8.84 வரை
கந்தன் - பெற்றால்தான் பிள்ளையா - 22.8.84 முதல் 28.8.84 வரை
நவீனா - காவல்காரன் - 25.8.84 முதல் 27.8.84 வரை
அம்பிகா - வேட்டைக்காரன் - 25.8.84 முதல் 28.8.84 வரை
ராஜா - ஆனந்த ஜோதி - 7.9.84 முதல் 14.9.84 வரை
ரேணுகா - நீதிக்குத் தலை வணங்கு - 20.9.84 முதல் 26.9.84 வரை
நவீனா - கலை அரசி - 24.9.84 முதல் 26.9.84 வரை
கந்தன் - இன்றுபோல் என்றும் வாழ்க - 10.10.84 முதல் 16.10.84 வரை
ரேணுகா - சிரித்து வாழவேண்டும் - 10.10.84 முதல் 16.10.84 வரை
வீனஸ் - ஆனந்த ஜோதி - 11.10.84 முதல் 15.10.84 வரை
பாரதி - அன்பே வா - 17.10.84 முதல் 22.10.84 வரை
ஜெயராம் - நவரத்தினம் - 17.10.84 முதல் 22.10.84 வரை
அஜந்தா - எங்க வீட்டுப் பிள்ளை (தீபாவளி) 23.10.84 முதல் 29.10.84 வரை
கந்தன் - அரசகட்டளை (தீபாவளி) - 23.10.84 முதல் 30.10.84 வரை
நவீனா - பணம் படைத்தவன் (தீபாவளி) - 23.10.84 முதல் 29.10.84 வரை
அம்பிகா - தர்மம் தலைகாக்கும் - 29.10.84 முதல் 5.11.84 வரை
அஜந்தா - அடிமைப்பெண் - 30.10.84 முதல் 9.11.84 வரை (11 நாட்கள்)
அம்பிகா - கண்ணன் என் காதலன் - 6.11.84 முதல் 8.11.84 வரை
அம்பிகா - அன்பே வா - 15.11.84 முதல் 22.11.84 வரை
நவீனா - திருடாதே - 16.11.84 முதல் 22.11.84 வரை
அண்ணா - குலேபகாவலி - 20.11.84 முதல் 24.11.84 வரை
ரேணுகா - ஊருக்கு உழைப்பவன் - 23.11.84 முதல் 30.11.84 வரை
அம்பிகா - சக்கரவர்த்தி திருமகள் - 30.11.84 முதல் 6.12.84 வரை
வீனஸ் - ஒருதாய் மக்கள் - 4.12.84 முதல் 6.12.84 வரை
அண்ணா - இதய வீணை - 30.11.84 முதல் 6.12.84 வரை
கந்தன் - ஆயிரத்தில் ஒருவன் - 11.12.84 முதல் 18.12.84 வரை
வீனஸ் - மர்மயோகி - 15.12.84 முதல் 19.12.84 வரை
அம்பிகா - மதுரை வீரன் - 20.12.84 முதல் 24.12.84 வரை
அஜந்தா - நான் ஆணையிட்டால் - 20.12.84 முதல் 29.12.84 வரை (10 நாட்கள்)
நவீனா - பறக்கும்பாவை - 21.12.84 முதல் 27.12.84 வரை
பாக்தாத் திருடன் - 28.12.84 முதல் 3.1.85 வரை

புதுச்சேரியில் மக்கள் திலகத்தின் படங்கள் இடைவெளி இல்லாமலும், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தியேட்டர்களிலும் நடைபெற்றதைக் காணுங்கள்

ainefal
1st February 2014, 02:46 PM
1984ம் ஆண்டு தீபாவளி - எம்ஜிஆர் தீபாவளியாக அமைந்தது -
புதுச்சேரியில் தலைவரின் 3 படங்கள் மறு வெளியீடானது

கந்தன் - ஒளிவிளக்கு - 24.1.84 முதல் 3.2.84 வரை (11 நாட்கள்)
அம்பிகா - என் அண்ணன் - 27.1.84 முதல் 31.1.84 வரை
நவீனா - விவசாயி - 26.1.84 முதல் 31.1.84 வரை
நவீனா - குலேபகாவலி - 10.2.84 முதல் 16.2.84 வரை
நவீனா - ஒரு தாய் மக்கள் - 17.2.84 முதல் 21.2.84 வரை
அம்பிகா - அலிபாபாவும் 40 திருடர்களும் - 17.2.84 முதல் 23.2.84 வரை
ராஜா - தெய்வத்தாய் - 24.2.84 முதல் 1.3.84 வரை
ரேணுகா - நேற்று இன்று நாளை - 2.3.84 முதல்5.3.84 வரை
வீனஸ் - எங்க வீட்டுப்பிள்ளை - 9.3.84 முதல் 16.3.84 வரை
ஜெயராம் - உழைக்கும் கரங்கள் - 17.3.84 முதல் 23.3.84 வரை
கந்தன் - அன்பே வா - 30.3.84 முதல் 12.4.84 வரை (2 வாரம்)
அம்பிகா - ரகசிய போலீஸ் 115 - 31.3.84 முதல் 5.4.84 வரை
அண்ணா - சிரித்து வாழவேண்டும் - 31.3.84 முதல் 5.4.84 வரை
வீனஸ் - விக்கிரமாதித்தன் - 31.3.84 முதல் 5.4.84 வரை
நியூடோன் - ரிக்ஷாக்காரன் -8.4..84 முதல் 13.4.84 வரை
ராஜா - ஜெனோவா (12.00 ஷோ) - 13.4.84 முதல் 23.4.84 வரை (11 நாட்கள்)
அம்பிகா - புதுமைப்பித்தன் - 12.4.84 முதல் 16.4.84 வரை
ராஜா - குடியிருந்த கோயில் - 20.4.84 முதல் 26.4.84 வரை
நவீனா - மதுரை வீரன் - 20.4.84 முதல் 26.4.84 வரை
ரேணுகா - ராமன் தேடிய சீதை - 25.4.84 முதல் 29.4.84 வரை
வீனஸ் - குடியிருந்த கோயில் - 27.4.84 முதல் 8.5.84 வரை (12 நாட்கள்)
ராமன் - மீனவ நண்பன் - 27.4.84 முதல் 4.5.84 வரை
நவீனா - ஆயிரத்தில் ஒருவன் - 4.5.84 முதல் 10.5.84 வரை
நியூடோன் - கலை அரசி - 4.5.84 முதல் 10.5.84 வரை
நியூடோன் - புதிய பூமி - 14.5.84 முதல் 17.5.84 வரை
நவீனா - என் அண்ணன் - 18.5.84 முதல் 22.5.84 வரை
ராஜா - இதயக்கனி - 27.5.84 முதல் 1.6.84 வரை
கந்தன் - தாயைக் காத்த தனயன் - 1.6.84 முதல் 7.6.84 வரை
நவீனா - வேட்டைக்காரன் - 30.6.84 முதல் 6.7.84 வரை
நியூடோன் - மந்திரிகுமாரி - 7.7.84 முதல் 12.7.84 வரை
அண்ணா - புதுமைப்பித்தன் - 15.7.84 முதல் 19.7.84 வரை
அம்பிகா - தாய் மகளுக்கு கட்டிய தாலி - 24.7.84 முதல் 28.7.84 வரை
அம்பிகா - விவசாயி - 29.7.84 முதல் 1.8.84 வரை
நவீனா - மகாதேவி - 26.7.84 முதல் 3.8.84 வரை
கந்தன் - பெற்றால்தான் பிள்ளையா - 22.8.84 முதல் 28.8.84 வரை
நவீனா - காவல்காரன் - 25.8.84 முதல் 27.8.84 வரை
அம்பிகா - வேட்டைக்காரன் - 25.8.84 முதல் 28.8.84 வரை
ராஜா - ஆனந்த ஜோதி - 7.9.84 முதல் 14.9.84 வரை
ரேணுகா - நீதிக்குத் தலை வணங்கு - 20.9.84 முதல் 26.9.84 வரை
நவீனா - கலை அரசி - 24.9.84 முதல் 26.9.84 வரை
கந்தன் - இன்றுபோல் என்றும் வாழ்க - 10.10.84 முதல் 16.10.84 வரை
ரேணுகா - சிரித்து வாழவேண்டும் - 10.10.84 முதல் 16.10.84 வரை
வீனஸ் - ஆனந்த ஜோதி - 11.10.84 முதல் 15.10.84 வரை
பாரதி - அன்பே வா - 17.10.84 முதல் 22.10.84 வரை
ஜெயராம் - நவரத்தினம் - 17.10.84 முதல் 22.10.84 வரை
அஜந்தா - எங்க வீட்டுப் பிள்ளை (தீபாவளி) 23.10.84 முதல் 29.10.84 வரை
கந்தன் - அரசகட்டளை (தீபாவளி) - 23.10.84 முதல் 30.10.84 வரை
நவீனா - பணம் படைத்தவன் (தீபாவளி) - 23.10.84 முதல் 29.10.84 வரை
அம்பிகா - தர்மம் தலைகாக்கும் - 29.10.84 முதல் 5.11.84 வரை
அஜந்தா - அடிமைப்பெண் - 30.10.84 முதல் 9.11.84 வரை (11 நாட்கள்)
அம்பிகா - கண்ணன் என் காதலன் - 6.11.84 முதல் 8.11.84 வரை
அம்பிகா - அன்பே வா - 15.11.84 முதல் 22.11.84 வரை
நவீனா - திருடாதே - 16.11.84 முதல் 22.11.84 வரை
அண்ணா - குலேபகாவலி - 20.11.84 முதல் 24.11.84 வரை
ரேணுகா - ஊருக்கு உழைப்பவன் - 23.11.84 முதல் 30.11.84 வரை
அம்பிகா - சக்கரவர்த்தி திருமகள் - 30.11.84 முதல் 6.12.84 வரை
வீனஸ் - ஒருதாய் மக்கள் - 4.12.84 முதல் 6.12.84 வரை
அண்ணா - இதய வீணை - 30.11.84 முதல் 6.12.84 வரை
கந்தன் - ஆயிரத்தில் ஒருவன் - 11.12.84 முதல் 18.12.84 வரை
வீனஸ் - மர்மயோகி - 15.12.84 முதல் 19.12.84 வரை
அம்பிகா - மதுரை வீரன் - 20.12.84 முதல் 24.12.84 வரை
அஜந்தா - நான் ஆணையிட்டால் - 20.12.84 முதல் 29.12.84 வரை (10 நாட்கள்)
நவீனா - பறக்கும்பாவை - 21.12.84 முதல் 27.12.84 வரை
பாக்தாத் திருடன் - 28.12.84 முதல் 3.1.85 வரை

புதுச்சேரியில் மக்கள் திலகத்தின் படங்கள் இடைவெளி இல்லாமலும், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தியேட்டர்களிலும் நடைபெற்றதைக் காணுங்கள்

There is only one Vathiyar -the Super cosmic power, and he manifests through everything.

He was above the usual intellectual level and had knowledge that he himself must always progress if he wants his followers / fans to progress, must not remain satisfied either with what he is or with what he knows.

Our Vathiyar is more an advisor and source of information than an instructor.

New followers / fans will come, years will run but Vathiyar shall always remain in his place! This is the one of the reason that I could see for repeat audience.

Russellisf
1st February 2014, 03:23 PM
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் - ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாய் வாழுதடா !
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போகப் மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது !
பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்த்து
திருடனென்றே உதைக்குது !
காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்பிடிச்சி ஆட்டுது - வாழ்வின்
கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது !
புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை - பச்சை
புளுகை விற்றுக் சலுகை பெற்ற மந்தை - இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் - நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் - நாம்
உளறி என்ன,கதறி என்ன?
ஒன்றும் நடக்கவில்லை தோழா - ரொம்ப நாளா !

Russellisf
1st February 2014, 03:28 PM
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ,
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் ?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் !

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா ?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ?

Russellisf
1st February 2014, 03:29 PM
எம்.ஜி.ஆரை வைத்து எத்தனையோ இயக்குநர்கள் படங்களை இயக்கியிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. 1977-ல் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராகப் பதவியேற்கும் சூழல் உருவானபோது அப்போது உருவாக்கத்தில் இருந்த “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” படத்தின் சில காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது.

கிடைத்த 10 நாட்கள் இடைவெளியில் எம்.ஜி.ஆர். மீதமிருந்த தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் பதவியேற்றார். அப்போது அந்தப் படத்தினை இயக்கிக் கொண்டிருந்தது ஸ்ரீதர்தான். பதவியேற்பு விழாவுக்கு முதல் நாள்தான் அவருடைய ஷூட்டிங் முடிந்தது. அந்தக் காட்சியை முடித்து வைத்தவர் ஸ்ரீதர் என்பது அவருக்குப் பெருமை சேர்க்கின்ற விஷயம்தான்.

Russellisf
1st February 2014, 03:30 PM
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை !

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!

உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன?
உடல் மட்டுமே கருப்பு அவர்
உதிரம் என்றும் சிவப்பு !
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவராவா

கோழியைப் பாரு காலையில் விழிக்கும்
குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும் !

Russellisf
1st February 2014, 03:31 PM
நாட்டைக் கட்டி ஆண்டவர்கள் நாம் , ஆகவேதான் இன்றும் நம்மை நாமே ஆளவேண்டும் என்கிறோம்!

கடலிலே பெரும் மரக்கலங்கள் செலுத்தியவர்கள் நாம், ஆகவேதான், இன்று, நமக்குக் கப்பல்கள் தேவை என்கிறோம்.

படைகள் பல நடத்திச் சென்றவர்கள் நாம், எனவேதான், நம்நாடு நமக்கு ஆகப் படை திரட்டுகிறோம்!

மொழியை வளர்த்தவர்கள் நாம், ஆகையால்தான், இன்று நம் மொழிக்கு ஊறு ஏற்படும்போதெல்லாம் போர்க்களம் புகுகின்றோம்!

வாழ்ந்து கெட்டவர்கள் நாம், ஆகவேதான், இன்று நாம் வாழ விரும்புகிறோம். "

= அறிஞர் அண்ணா , 11 - 8 - 1954 , திராவிடநாடு இதழில் .

Russellisf
1st February 2014, 03:33 PM
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை...

தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன் !
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் !!

Russellisf
1st February 2014, 03:33 PM
தம்பி! 'நான்' - என்பதிலிருந்து 'நாம்' என்ற கட்டம் பயணமாவதற்கு, ஒவ்வோர் நாடுகளிலே, கொட்டப்பட்ட வியர்வையும் இரத்தமும், காணிக்கையும் கொஞ்சமல்ல!

இவ்வளவு 'பலி' வாங்கிய பிறகும்கூட, இன்றும் 'நாம்' என்பதை 'நான்' என்பது, சமயம் கிடைக்கும் போதெல்லாம் உலுக்கிப் பார்த்திடக் காண்கிறோம்; நாடுகளிலேயுஞ் சரி, கட்சிகளுக்கு உள்ளேயுஞ் சரி, வீடுகளிலும் கூடத்தான்!!

= அறிஞர் அண்ணா , 15 - 4 - 1956 , திராவிடநாடு இதழில் .

Russellisf
1st February 2014, 03:37 PM
விஜயா - வாகினி நிறுவனம் எம்ஜியாரை வைத்து தயாரித்த முதல்படம் ' எங்க வீட்டுப் பிள்ளை ' .சென்னையில் காசினோ, பிராட்வே, மேகலா ஆகிய 3 தியேட்டர்களிலும், மதுரை சென்ட்ரல், திருச்சி ஜுபிடர், கோவை ராயல், தஞ்சை யாகப்பா ஆகிய தியேட்டர்களிலும் இப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.

திருச்சி ஜுபிடரில் 236 நாட்களும், சென்னை காசினோவில் 211 நாட்களும் ஓடி, சாதனை படைத்தது.

"எங்க வீட்டுப்பிள்ளை"யின் சென்னை நகர விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வாங்கி இருந்தது. படம் வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியதால், விநியோகஸ்தர்களுக்கு நிறைய லாபம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அதிபரான எம்.ஜி.ஆர், தனக்கு அதிக லாபம் வந்ததால், ரூ.1 லட்சத்தை பட அதிபர்களுக்கு வழங்க முடிவு செய்தார். விஜயா கம்பைன்ஸ் அதிபர்களான நாகிரெட்டி- சக்ரபாணி பெயரில் ரூ.1 லட்சத்துக்கு "செக்" அனுப்பி வைத்தார். அத்துடன், "நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஒரு லட்சம் ரூபாயை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.

ஆனால் அந்தப் பணத்தை பட அதிபர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்கள். "உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறோம். எனினும், இந்தப் பணத்தை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணத்தை, உங்கள் விருப்பப்படி தர்மகாரியத்திற்கு பயன்படுத்துங்கள்" என்று கடிதம் அனுப்பினார்கள்.- courtesy facebook

Russellisf
1st February 2014, 03:37 PM
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் ;
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது !

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் !

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை !

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே !
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே !
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் !

Russellisf
1st February 2014, 03:39 PM
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா !

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா !

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா !

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்

சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா !

Russellisf
1st February 2014, 03:40 PM
என்னிடமிருந்து இந்த மக்களையோ ,
இந்த மக்களிடமிருந்து என்னையோ பிரிக்க
எந்த சக்தியாலும் முடியாது ! " - thalaivar

Russellisf
1st February 2014, 03:42 PM
கலங்கரை விளக்கம்’ பட ரிலீஸ்… பரபரப்பில் இருந்தபோதிலும் வேலுமணி, ஓர் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் செல்கிறார்

வேலுமணியைப் பார்த்தவுடன், “என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?” என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

அதற்கு வேலுமணி, “அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்….” என்கிறார்.

“சொல்லுங்க!”

“பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.”

“அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”

“இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழையாம்! அது மட்டும்மல்லாம: பொண்ணு, அம்மா-அப்பா இல்லாத அநாதையாம்! இப்பக்கூட அவுங்க அத்தை வீட்ல தங்கித்தான் படிக்குதாம். அதான்…நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்..” என்று வேலுமணி தயங்கித் தயங்கிச் சொல்லி முடிக்கிறார்.

எல்லாவற்றையும் பொறுமையாக்க்கேட்டுக் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் “என்ன முதலாளி பெரிய ஸ்டேட்டா இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்த்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்…”
என்று கொஞ்சம் மிரட்டும் தோரணையில் சொல்லி அனுப்புகிறார்.

மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். போன வேகத்தில், 7.3.1966ஆம் தேதியில் சென்னை ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தன்மகனுக்கு அந்த ஏழைப் பெண்ணுக்கும் திருமணம் என்றுநாள் குறித்து, முதல்பத்திரிக்கையை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கிறார்.
திருமண வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த வேளையில் மூன்றாம் தேதி அன்று கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்துவிடுகிறார்.

“ஏழாம் தேதி திருமணம். மூன்றாம்தேதி இப்படியா?’ என்று எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, வரப்போகிற பெண்ணின் ராசியால்தான் நடந்திருக்கிறது என்றும்; திருமணத்திற்கு முன்பே இப்படியென்றால், திருமணத்திற்குப் பிறகு இந்தப் பெண்ணின் ராசி என்ன பாடுபடுத்துமோ என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள். தன் குடம்பத்தினர் எடுத்த இந்த் தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க தங்களின்குடும்பத்தலைவரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ராமாவரம் வீட்டில் சந்தித்து, விஷயத்தைச் சொல்கிறார் வேலுமணி.

கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், “இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி; உங்க மகளுக்கே இந்த மாதிரி நிலைமை வந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க…. எதுக்கும் உங்க விட்டுல திரும்பவும் எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க…’ என்று சொல்லி அனுப்பிவிட்டுக்காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, “இதோ பாருங்க முதலாளி… ஒருவேளை நாங்க எல்லோமு சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறத்தணும்னு முடிவெடுத் திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா த்த்து எடுத்துக்கிறேன்…” என்ற பொன்மனச்செம்மலின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.

“கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாடத்துணிந்தோமே! முகம் தெரியாத -முகவரி அறியாத யார் பெத்த பிள்ளைக்காகவோ பரிஞ்சு பேசி, மகளாகத் த்த்தெடுக்க முன்றவந்திருக்கிறாரே இந்த மகான்! ஆனா நம்ம பெத்த பிள்ளை காதலிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சும் கூட கைவிட நினைச்சோமே..’ என்றுமனம் உருகி, பிதற்றி, பேதிலித்து அப்படியே ஓடோடிப் போய்க் கண்ணீர் மல்க-மக்கள் திலகத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள்.. அதே தேதியில் தான் திருமணம்.. இதில் எந்த மாற்றும் இல்லை!” என்று சொல்லிவிட்டு வேலுமணி விடைபெறுகிறார்.

மார்ச் மாதம் ஏழாம் தேதி,ஏ.வி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபம் நிறைந்து வழிந்தது. த்ந்தை பெரியார், அண்ணா, கலைஞர், வீரமணி என்று அரசியல் தலைவர்கள் ஒருபக்கமும் , சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்.ஆர்.ராதா, அசோகன் நம்பியார், நாகேஷ், சரோஜாதேவி என்று திரைப்பட நட்சத்திரங்கள் ஒருபுறமும் திரளாக மின்ன சிறப்பாக நடைபெற்றது திருமணம் . - courtesy facebook

Russellisf
1st February 2014, 03:44 PM
கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. கலைவாணரே எம்.ஜி.ஆருக்கு ‘தம்பி ‘நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன். அதனால் என்னை வந்து பார்த்துவிட்டுப் போ’ என்று கடிதம் எழுதினார்.

கலைவாணரைப் பார்க்க எம்.ஜி.ஆர். வரும்போதெல்லாம் நிறையப் பணக் கட்டை அவர் படுக்கைக்குக் கீழ் வைத்துவிட்டுச் செல்வார். ஏனெனில் பலருக்குக் கொடுத்துச் சிவந்த கரங்கள் தனது ஏழ்மைக்காகப் பிறரிடம் கைநீட்டக் கூடாது என்ற உயரிய நோகத்துடனே எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்த மக்கள் திலகம் இவ்வாறு செய்தார்.

இதனைப் பார்த்த கலைவாணர், எம்.ஜி.ஆரைப் பார்த்து, “தம்பி ராமச்சந்திரா, நீ எனக்குப் பணமாத் தராம காசா மாத்திக் கொடு. இங்கே இருக்க ஏழைகள் எல்லாருக்கும் அப்ப தான் அதை நான் தர முடியும்” என்று கூறினார். இதனைக் கேட்ட மக்கள் திலகம் நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டார். தன்னைப் பார்க்க வருவோர் வாங்கி வரும் பழங்கள், ஹார்லிக்ஸ் இவற்றையும் கூட மற்ற ஏழைகளுக்குக் கொடுத்து விடுவாராம் என்.எஸ்.கே.

‘தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!’ என்று அடிக்கடி தம்மைப் பார்க்க வரும் எம்.ஜி.ஆரிடம் கலைவாணர் கூறுவாராம் .courtesy facebook

Russellisf
1st February 2014, 03:44 PM
ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''

மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்: ‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

தகவல்: சு. திருநாவுக்கரசர் ( முன்னாள் அமைச்சர் )
நன்றி: புதிய தலைமுறை

Russellisf
1st February 2014, 03:47 PM
ஒரு சமயம், அறிஞர் அண்ணா சேலத்தில் உள்ள நண்பர் வீட்டில் பகல் உணவு அருந்தச் சென்றிருந்தார். இலை போட்டவுடன் முதலில் அப்பளமும் முட்டையும் வைத்தார்கள். சிறிது காற்றடிக்கவே அப்பளம் இலையிலிருந்து பறந்துவிட்டது. உடனே அண்ணா...

" முட்டையின் விலை என்ன? " என்றார். " நாலணா " என்றார் நண்பர். " அப்பளத்தின் விலை என்ன? " - என்றார். " காலணா " என்றார் நண்பர்.

உடனே அண்ணா, " பார்த்தீர்களா? காலணா தலைவிரித்து ஆடுகிறது. நாலணா அமைதியோடு இருக்கிறது " என்று சொன்னதும் சாப்பாட்டு மேஜை கலகலப்பு மேஜையானது

Russellisf
1st February 2014, 04:49 PM
Q & A with MGR

In those days, some magazines were publishing a ‘Question & Answer’ column.

They received queries from the readers and got the replies from MGR.

I’ll recall some of those very interesting questions and MGR’s very thoughtful replies that would make anyone to think over.

Among the questions and answers were:

Q: Can students enter politics or not?
A: When a situation arises where the sovereignty of a country or the democratic life of its citizens or the mother tongue is threatened, students can surely get involved.

Q: Which married life can be considered as having ‘fullness’?
A: If there’s mutual love and duty-consciousness, the marriage can be considered the best.

Q: What is it that is not destroyed and that is destroyed by time?
A: Truth can never be destroyed. You can understand what is destroyable.

Q: Where can we see the God?
A: In your good deeds.
KM Matrimony
Q: When does the man become an animal? When does he become a real man? When does he become the God?
A: The man becomes an animal when he is frenzied; he becomes a real man when he receives love; when he sacrifices himself for the sake of a noble aim, he becomes God.

Q: What do you like, what do you hate?
A: I wish that everyone should live working hard till he breathes his last; now you can as well understand what I hate.

Q: I want to be your heir, I want your approval!
A: There’s no need for anyone who wants to become my heir to get my approval. All those who follow my principles are my heirs.

Q: Who is your role model in the film world?
A: In some of the things, I follow Kalaivanar.

Q: Please name the leaders who were responsible for your entry into politics …
A: Subhash Chandra Bose.

Q: When did you get the desire to don the role of Christ?
A: The wish blossomed when I watched the movie ‘King of kings’ of Cecil Be Demille.

Q: What provokes you, what pleases you?
A: When people keep repeating lies, I am angered. When a person admits frankly his true self, I feel happy.

Q: Do you believe that there’s a power beyond the power and rationale of man?
A: I am alive even after 12 January, 1967 (the day when actor M R. Radha shot MGR)! This itself is an instance to substantiate that there surely is a power above us. — courtesy net

Russellbpw
1st February 2014, 05:35 PM
Late Sri.Akkineni Nageswara Rao on Mr. MGR

How did you connect with Tamil Nadu’s favorite actor and politician MGR and your colleague NTR?
NTR is junior to me and he entered the industry as a married man. We did around 14 pictures together, so people and media thought it to be rivalry because two talents clashed on screen. Also, when we do movies separately, the distributors arranged for same day release so that they can make money. You see it even today with Rajinikanth and Kamal Hassan. You see it in Malayalam with Mammooty and Mohan Lal and also to an extent in Telugu now with younger heroes. This is all an agenda to make money. In movies, I was senior to NTR. Off screen, age wise he was 15 months older to me. But we came from the same district, same taluk– Gudivada. We had mutual respect for each other.

MGR was known to me. I was not very close to him but I had high regard for him as an actor and as a politician. No other actor sacrificed all his wealth for politics. MGR did that. I have deep respect for him.

Courtesy : http://www.miindia.com/articles/anr-interview.aspx

Russellisf
1st February 2014, 06:17 PM
Gayathri Panicker
tabla!
Friday, Jan 03, 2014
SINGAPORE- Every Dec 24 for the past 26 years, a group of Dr M.G. Ramachandran's fans in Singapore dedicate an obituary to him.

Dr Ramachandran, popularly known by his initials MGR, a former Indian film actor, director, producer, and chief minister of Tamil Nadu for three terms, died on that day in 1987.

And that's not all.

Every year since then, in order to honour his legacy, this group of fans, who are mainly close friends and relatives, come together to do volunteer work and donate provisions to the needy on Dec 24.

They also organise special prayers for MGR at the Sri Sivan Temple in Geylang.

The late star was dearly loved by the people of India, especially Tamil Nadu, for his principles on life and also his acting skills.

The group of fans in Singapore, led by Mr M.G. Selvam, are no different. They are all ardent fans, who follow MGR's principles in life, which is to help the needy in whatever way they can.

Mr Selvam, 52, a shredder and safe box technician, says they volunteer at old age homes, children's homes, as well as homes for the disabled.

"We do not show religious or cultural partiality when volunteering at these homes, because we are all humans and we should not let our beliefs or ideologies hold us back from helping people in need," he said.

What motivated him to come up with this idea? He replied: "When we do something in remembrance of a person, we should make it meaningful in such a way that a goodwill message can be spread to the public. By doing this, we are spreading MGR's messages on humanity and helping people in need, thus enabling his memories and life principles to live on through us."

During the initial years after MGR's demise,Mr Selvam's wife used to prepare special dishes to distribute to the homes where they were volunteering.

After a few years, they decided that it would be better for the residents at these homes if the food were prepared by their resident cooks, who were more familiar with the diet requirements and restrictions.

Since then, the group of fans would buy provisions like dry goods and donate them to the home they volunteered at every year. This year, they volunteered at the Sree Narayana Mission in Yishun.

For the past three years they have also been screening movies, starring MGR, for free at various locations around Singapore.

This year they decided to add entertainment programmes such as karaoke of MGR melodies and video snippets from his hit movies.

Mr Selvam, who boasts a large collection of books, articles, photographs and movies of MGR, added: "I request those who earn money from imitating MGR on stage to come forward to donate and participate in this good cause. There is no harm in mimicking MGR's style and speech, but one must also have a goal in life to help the needy in whatever way they can. MGR set many examples for this."

One such performer, Mr Soundarajan Sadayan, a 55-year-old driver who is a part of this group, said: "I joined Mr Selvam for this good cause because it gives me happiness when helping the needy."

He added: "In the 24 years that I have been a part of this, the fact that we are helping everyone and not just one group of people, regardless of race or language, has given me the most satisfaction."

Another volunteer, Mr Alakiri Samy, 53, an admin assistant, said the prospect of donating food to the needy was what inspired him to join Mr Selvam's group six years ago.

"If all MGR fans would come together for this one day, we can help more people. Right now our group has limitations because we are mostly using our own money," he added.

His views were supported by Mr Thevan Somasanma, 62, a security officer.

"If more people joined in to help us, we would be able to help more people in need, and it will make Singapore a better nation," he said.

Mr Thevan has been actively participating in the group since 1997.

"We receive donations from all around the world from other MGR fans that we use for our visits to the homes, but mostly we fork out the money for our programmes from our own pockets.

"We spend a lot of money on many things. Why not donate just a bit once a year for the needy?" said Mr Selvam, who is also planning to organise a charity event on MGR's date of birth - Jan 17.

Courtesy Asiaone - Magazine

Russellisf
1st February 2014, 06:53 PM
எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மக்கள் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்தவைகள் பற்றி ஜூனியர்விகடனில் அண்ணன் செளபா எழுதிய நேர்முக வர்ணனை இது :

முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது.

தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.

ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார்.

சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார்.

சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வையிடக் கிளம்பியது.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.

முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார்.

திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது.

வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்!

கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்!

ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார்.

இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர்.

முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்...

டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.

சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார்.

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது.

தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க!

ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன.

பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள்.

டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது.

உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்!
Courtesy - Facebook

Russellisf
1st February 2014, 07:57 PM
10.10.1972 TO 21.10.1972 DINAMANI PUBLISHED THALAIVAR NEWS ABOUT DMK DISMISSED OUR THALAIVAR FROM THEIR PARTY

http://www.dinamani.com/specials/arasiyal_arangam/2013/10/21/1972%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%A E%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%A E%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%A F%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/article1847301.ece

Russellisf
1st February 2014, 08:00 PM
Fisrt day postal cover for thalaivar- courtesy net3078

ujeetotei
1st February 2014, 08:02 PM
http://i60.tinypic.com/2uhqqsk.jpg
http://i59.tinypic.com/2qlz8e0.jpg
http://i57.tinypic.com/32zhzk3.jpg

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியை பிடித்தது முதலே
எம்.ஜி.ஆர். அரசு கலைக்கப்படும் என்ற செய்தி பரவிக் கொண்டிருந்தது.
முந்தைய ஜனதா ஆட்சியில் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. அதே பாணியில் 1980-ல் பாராளுமன்ற தேர்தலில்
அ .தி.மு.க. 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், இந்திரா காந்தி
அவர்கள் எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைத்தார். அந்த சமயம் ஆளுநரிடம் புகார் பட்டியல் ஒன்றை கொடுத்தார் கருணாநிதி . புகார் கொடுத்த மூன்றாம் நாள் அரசு கலைக்கப்பட்டது.

"சவாலை சந்திக்க தயார்" என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். 1980ல் மே மாதம் 28 முதல் 31 வரை தேர்தல் என அறிவிக்கப்பட்டது.சட்டமன்ற
தேர்தலை சந்திக்க ,விரிவான, வலுவான கூட்டணியை உருவாக்கினார்.
ஜனதா 60க்கு மேற்பட்ட தொகுதிகள கேட்டதால் அதை நிராகரித்து
இடதுசார் கட்சிகளுக்கு தலா 16 தொகுதிகள், குமரி ஆனந்தனுக்கு 12 தொகுதிகள் (கா .கா .தே. க.) பழ நெடுமாறனுக்கு 7 தொகுதிகள் அளித்து
168 தொகுதிகளில் அ தி.மு.க . போட்டியிடும் என அறிவித்தார்.மேலும் சில உதிரி கட்சிகள் இரட்டை இல்லை சின்னத்திலேயே போட்டியிட்டன.
தொகுதி பங்கீட்டில் அதிகம் சிக்கல்கள் இல்லை.

எம்.ஜி.ஆரின் சூறாவளி பிரசாரத்திற்கு பதில் கொடுக்க கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் சிவாஜி கணேசன் உதவியாக இருந்தார். நாடாளுவதற்கு கலைஞர், நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். என கூட்டங்களில்
சிவாஜி கணேசன் பேசினார். பதிலுக்கு தி.மு.க.- இ .காங்கிரஸ் அணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று எம்.ஜி.ஆர்.விமர்சித்து பிரசாரம் செய்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்ட இட ஒதுக்கீடு விஷயத்தில் சில மாற்றங்களை செய்தார். முக்கியமாக பிற்படுத்தப்பட்டோர் சலுகைக்கான 9000 ருபாய் வருமான வரம்பு வாபஸ் பெறப்பட்டது.தவிர, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கேடு 31 சதவிகிதத்தில் இருந்து 50 ஆகா உயர்த்த பட்டிருந்தது.
அதனால் திராவிடர் கழகத்தின் ஆதரவும் ஆ.தி.மு.க வுக்கு கிடைத்தது.

கூட்டங்களில் மக்கள் மத்தியில் நியாயம் கேட்டார் எம்.ஜி.ஆர். "நாங்கள் என்ன தவறு செய்தோம் " என்ற தலைப்பில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு மேடைக்கு மேடை எழுப்பினார்.

ஆட்சியில் லஞ்சம் இருக்க கூடாது என்று ஆசைபட்டேனே .அது தவறா ? ,ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொன்னேனே ,அது தவறா .சட்டத்துக்கு முன், நீதிக்கு முன் கட்சி கண்ணோட்டம் இருக்க கூடாது என்றேனே , அது தவறா? கோட்டை வராண்டாவில் அரசியல்வாதிகள் நடமாடக்கூடாது என்றேனே, அது தவறா? ,தவறு செய்பவர்கள் என் கட்சிகாரர்கள் என்றாலும் தயங்காமல் நடவடிக்கை எடுங்கள் என காவல்துறைக்கு சுதந்திரம் அளித்தேனே , அது தவறா? ,புயல் , வெள்ளம், தீ விபத்து போன்றவற்றில் மக்கள் பாதிக்கபட்டபோது ஓடோடி சென்று உதவி செய்தேனே , அது தவறா?, எது தவறு என்று சொல்லுங்கள், அன்ன காரணத்திற்காக ஆட்சியை கலைத்தார்கள் ?

எம்.ஜி.ஆர். எழுப்பிய கேள்விகள் வாக்காளர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தின. தமிழ் மக்களே, நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தந்த தீர்ப்பு தவறு என்று நினைத்தால் ,அதை இப்போது திருத்தி எழுதுங்கள் .அ .தி.மு.க வுக்கு வாக்களியுங்கள். என்று எம்.ஜி.ஆரின் வேண்டுகோள் தேர்தல் களத்தில் திரும்ப திரும்ப
எதிரொலித்தன.

தேர்தல் முடிவுகள் வந்த பொது எம்.ஜி.ஆர். அபார வெற்றி பெற்றிருந்தார். அ. தி.மு.க. 129 இடங்களை கைப்பற்றியது.சட்டமன்ற தேர்தலில் இமாலய வெற்றி அளித்து ,முதல்வர் நாற்காலியை மீண்டும் எம்.ஜி.ஆர். வசமே மக்கள் ஒப்படைத்தனர்.

அ.தி. மு. க. அணியில் இடம் பெற்ற சி.பி. எம்.முக்கு 11, சி.பி.ஐ க்கு 10, கா.கா.தே .கா. வுக்கு 6, தொகுதிகளில் வெற்றி பெற்றன.

தி.மு.க. 38 இடங்களையும், இ. காங்கிரஸ் 30 இடங்களையும் பெற்றன.

1980ல் ஜூன் மாதம் 9ம் தேதி தமிழக முதல்வராக 2-ம் முறை பதவி ஏற்றார்.


நன்றி: குமுதம் ரிப்போர்டர்.

ஆர். லோகநாதன்.

Thank you Loganathan Sir.

Below is the Audio of MGR speech in Bhavani during the 1980 election campaign


http://www.youtube.com/watch?v=uRqJ5ZDdKxs&list=PL5092BE9AC4A8C2A7

ujeetotei
1st February 2014, 08:05 PM
Congrats Yukesh Babu for completing 200 posts in our thread.

ujeetotei
1st February 2014, 08:05 PM
This month srimgr.com header image.

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Blog%20Header%20Images/2_14_zpsba815cd9.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Blog%20Header%20Images/2_14_zpsba815cd9.jpg.html)

oygateedat
1st February 2014, 08:09 PM
http://i62.tinypic.com/ea35f6.jpg

FROM 'THE HINDU' - TAMIL DAILY

Russellisf
1st February 2014, 08:16 PM
Thanks sir

oygateedat
1st February 2014, 08:42 PM
http://i58.tinypic.com/2ylr2nr.jpg

ainefal
1st February 2014, 08:52 PM
http://i59.tinypic.com/fk8jz8.jpg

Congrats Yukesh Babu Sir for crossing your immediate milestone [200].

Russellisf
1st February 2014, 08:54 PM
Thanks Sir




http://i59.tinypic.com/fk8jz8.jpg

Congrats Yukesh Babu Sir for crossing your immediate milestone [200].

fidowag
1st February 2014, 09:12 PM
http://i61.tinypic.com/mtr0qp.jpg

நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களே, வணக்கம்.
தங்களின் பதிவுகள் அற்புதம். 201 பதிவுகள் முடித்ததற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக அன்பான வாழ்த்துதல்கள்.
யாருடைய குறுக்கீட்டையும், எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ,
அதே சமயத்தில் திரியின் கண்ணியத்தை குறைக்காமல் தங்களின்
பதிவுகள்/கருத்துக்கள் தொடரட்டும். நன்றி.

ஆர். லோகநாதன்.

oygateedat
1st February 2014, 09:19 PM
http://i58.tinypic.com/2s0yd8x.jpg

ainefal
1st February 2014, 09:22 PM
1984ம் ஆண்டு தீபாவளி - எம்ஜிஆர் தீபாவளியாக அமைந்தது -
புதுச்சேரியில் தலைவரின் 3 படங்கள் மறு வெளியீடானது

கந்தன் - ஒளிவிளக்கு - 24.1.84 முதல் 3.2.84 வரை (11 நாட்கள்)
அம்பிகா - என் அண்ணன் - 27.1.84 முதல் 31.1.84 வரை
நவீனா - விவசாயி - 26.1.84 முதல் 31.1.84 வரை
நவீனா - குலேபகாவலி - 10.2.84 முதல் 16.2.84 வரை
நவீனா - ஒரு தாய் மக்கள் - 17.2.84 முதல் 21.2.84 வரை
அம்பிகா - அலிபாபாவும் 40 திருடர்களும் - 17.2.84 முதல் 23.2.84 வரை
ராஜா - தெய்வத்தாய் - 24.2.84 முதல் 1.3.84 வரை
ரேணுகா - நேற்று இன்று நாளை - 2.3.84 முதல்5.3.84 வரை
வீனஸ் - எங்க வீட்டுப்பிள்ளை - 9.3.84 முதல் 16.3.84 வரை
ஜெயராம் - உழைக்கும் கரங்கள் - 17.3.84 முதல் 23.3.84 வரை
கந்தன் - அன்பே வா - 30.3.84 முதல் 12.4.84 வரை (2 வாரம்)
அம்பிகா - ரகசிய போலீஸ் 115 - 31.3.84 முதல் 5.4.84 வரை
அண்ணா - சிரித்து வாழவேண்டும் - 31.3.84 முதல் 5.4.84 வரை
வீனஸ் - விக்கிரமாதித்தன் - 31.3.84 முதல் 5.4.84 வரை
நியூடோன் - ரிக்ஷாக்காரன் -8.4..84 முதல் 13.4.84 வரை
ராஜா - ஜெனோவா (12.00 ஷோ) - 13.4.84 முதல் 23.4.84 வரை (11 நாட்கள்)
அம்பிகா - புதுமைப்பித்தன் - 12.4.84 முதல் 16.4.84 வரை
ராஜா - குடியிருந்த கோயில் - 20.4.84 முதல் 26.4.84 வரை
நவீனா - மதுரை வீரன் - 20.4.84 முதல் 26.4.84 வரை
ரேணுகா - ராமன் தேடிய சீதை - 25.4.84 முதல் 29.4.84 வரை
வீனஸ் - குடியிருந்த கோயில் - 27.4.84 முதல் 8.5.84 வரை (12 நாட்கள்)
ராமன் - மீனவ நண்பன் - 27.4.84 முதல் 4.5.84 வரை
நவீனா - ஆயிரத்தில் ஒருவன் - 4.5.84 முதல் 10.5.84 வரை
நியூடோன் - கலை அரசி - 4.5.84 முதல் 10.5.84 வரை
நியூடோன் - புதிய பூமி - 14.5.84 முதல் 17.5.84 வரை
நவீனா - என் அண்ணன் - 18.5.84 முதல் 22.5.84 வரை
ராஜா - இதயக்கனி - 27.5.84 முதல் 1.6.84 வரை
கந்தன் - தாயைக் காத்த தனயன் - 1.6.84 முதல் 7.6.84 வரை
நவீனா - வேட்டைக்காரன் - 30.6.84 முதல் 6.7.84 வரை
நியூடோன் - மந்திரிகுமாரி - 7.7.84 முதல் 12.7.84 வரை
அண்ணா - புதுமைப்பித்தன் - 15.7.84 முதல் 19.7.84 வரை
அம்பிகா - தாய் மகளுக்கு கட்டிய தாலி - 24.7.84 முதல் 28.7.84 வரை
அம்பிகா - விவசாயி - 29.7.84 முதல் 1.8.84 வரை
நவீனா - மகாதேவி - 26.7.84 முதல் 3.8.84 வரை
கந்தன் - பெற்றால்தான் பிள்ளையா - 22.8.84 முதல் 28.8.84 வரை
நவீனா - காவல்காரன் - 25.8.84 முதல் 27.8.84 வரை
அம்பிகா - வேட்டைக்காரன் - 25.8.84 முதல் 28.8.84 வரை
ராஜா - ஆனந்த ஜோதி - 7.9.84 முதல் 14.9.84 வரை
ரேணுகா - நீதிக்குத் தலை வணங்கு - 20.9.84 முதல் 26.9.84 வரை
நவீனா - கலை அரசி - 24.9.84 முதல் 26.9.84 வரை
கந்தன் - இன்றுபோல் என்றும் வாழ்க - 10.10.84 முதல் 16.10.84 வரை
ரேணுகா - சிரித்து வாழவேண்டும் - 10.10.84 முதல் 16.10.84 வரை
வீனஸ் - ஆனந்த ஜோதி - 11.10.84 முதல் 15.10.84 வரை
பாரதி - அன்பே வா - 17.10.84 முதல் 22.10.84 வரை
ஜெயராம் - நவரத்தினம் - 17.10.84 முதல் 22.10.84 வரை
அஜந்தா - எங்க வீட்டுப் பிள்ளை (தீபாவளி) 23.10.84 முதல் 29.10.84 வரை
கந்தன் - அரசகட்டளை (தீபாவளி) - 23.10.84 முதல் 30.10.84 வரை
நவீனா - பணம் படைத்தவன் (தீபாவளி) - 23.10.84 முதல் 29.10.84 வரை
அம்பிகா - தர்மம் தலைகாக்கும் - 29.10.84 முதல் 5.11.84 வரை
அஜந்தா - அடிமைப்பெண் - 30.10.84 முதல் 9.11.84 வரை (11 நாட்கள்)
அம்பிகா - கண்ணன் என் காதலன் - 6.11.84 முதல் 8.11.84 வரை
அம்பிகா - அன்பே வா - 15.11.84 முதல் 22.11.84 வரை
நவீனா - திருடாதே - 16.11.84 முதல் 22.11.84 வரை
அண்ணா - குலேபகாவலி - 20.11.84 முதல் 24.11.84 வரை
ரேணுகா - ஊருக்கு உழைப்பவன் - 23.11.84 முதல் 30.11.84 வரை
அம்பிகா - சக்கரவர்த்தி திருமகள் - 30.11.84 முதல் 6.12.84 வரை
வீனஸ் - ஒருதாய் மக்கள் - 4.12.84 முதல் 6.12.84 வரை
அண்ணா - இதய வீணை - 30.11.84 முதல் 6.12.84 வரை
கந்தன் - ஆயிரத்தில் ஒருவன் - 11.12.84 முதல் 18.12.84 வரை
வீனஸ் - மர்மயோகி - 15.12.84 முதல் 19.12.84 வரை
அம்பிகா - மதுரை வீரன் - 20.12.84 முதல் 24.12.84 வரை
அஜந்தா - நான் ஆணையிட்டால் - 20.12.84 முதல் 29.12.84 வரை (10 நாட்கள்)
நவீனா - பறக்கும்பாவை - 21.12.84 முதல் 27.12.84 வரை
பாக்தாத் திருடன் - 28.12.84 முதல் 3.1.85 வரை

புதுச்சேரியில் மக்கள் திலகத்தின் படங்கள் இடைவெளி இல்லாமலும், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தியேட்டர்களிலும் நடைபெற்றதைக் காணுங்கள்

Kaliyaperumal Sir,

All the above would be more interesting if you could provide more facts like how many days 4 shows / 3 shows or noon show only

For info. during the early 80’s Ezavathu Manithan was screed in Saffire had a long run as noon show. Even now many films run only for one or 2 shows show per day or per week! I am confident the movies of Super Cosmic Power will mostly be 3 shows every day but better to have complete details Sir.

fidowag
1st February 2014, 09:22 PM
http://i61.tinypic.com/2cyob5s.jpghttp://i60.tinypic.com/2zi5194.jpg

நமது திரியின் நண்பர்கள் கவனத்திற்கு
------------------------------------------------------------------

மக்கள் திலகம் "ஆயிரத்தில் ஒருவன் " ட்ரைலர் வெளியீட்டு விழா
பற்றிய தொகுப்பு நாளை பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது .

ஆயிரத்தில் ஒருவன் பட விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் நேரங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------

தினசரி இரவு 8.30 க்கு ஜெயா மூவிஸில்

தினசரி காலை 5 மணிக்கு ஜெயா டிவியில்

சனிக்கிழமை தோறும் இரவு 10.30 மணிக்கு செய்திகளுக்கு முன்
ஜெயா டிவியில்.

தகவல் அளித்தவர்.:திரு.சொக்கலிங்கம் ,உரிமையாளர். திவ்யா பிலிம்ஸ்.

ஆர். லோகநாதன்.

fidowag
1st February 2014, 09:37 PM
http://i60.tinypic.com/28ls5ro.jpg

புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழா
------------------------------------------------------------------------------
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மாநில தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள் நடத்தும் புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழா (02/02/2014)நாளை பிற்பகல் 12 மணிக்கு மேல் தொடங்கி இரவு 9 மணி வரை அச்சரபாக்கத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் விமரிசையாக
நடைபெற உள்ளது.

இது தொடர்பாக கலை நிகழ்சிகள்/நடனம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சி பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள்/பக்தர்கள் திரளான அளவில் கலந்து கொள்கிறார்கள்.
அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா முடிந்த பின்னர், நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள், விவரங்கள்
வெளியிடப்படும்.

சென்னையில் இருந்து அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க நிர்வாகிகள் /உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.


ஆர். லோகநாதன்.

oygateedat
1st February 2014, 09:44 PM
http://i57.tinypic.com/2euk09z.jpg

fidowag
1st February 2014, 09:49 PM
http://i58.tinypic.com/2i1cp4l.jpghttp://i60.tinypic.com/b86cf5.jpg






இன்று சன்லைப் டிவியில் மக்கள் திலகத்தின் "இதயக்கனி இரவு

7 மணி முதல் ஒளிபரப்பாகியது.

முரசு டிவியில் புரட்சி நடிகரின் அலிபாபாவும் 40 திருடர்களும் ஒளிபரப்பாகியது

ஆர். லோகநாதன்.

ainefal
1st February 2014, 09:49 PM
http://i61.tinypic.com/2cyob5s.jpghttp://i60.tinypic.com/2zi5194.jpg

நமது திரியின் நண்பர்கள் கவனத்திற்கு
------------------------------------------------------------------

மக்கள் திலகம் "ஆயிரத்தில் ஒருவன் " ட்ரைலர் வெளியீட்டு விழா
பற்றிய தொகுப்பு நாளை பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது .

ஆயிரத்தில் ஒருவன் பட விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் நேரங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------

தினசரி இரவு 8.30 க்கு ஜெயா மூவிஸில்

தினசரி காலை 5 மணிக்கு ஜெயா டிவியில்

சனிக்கிழமை தோறும் இரவு 10.30 மணிக்கு செய்திகளுக்கு முன்
ஜெயா டிவியில்.

தகவல் அளித்தவர்.:திரு.சொக்கலிங்கம் ,உரிமையாளர். திவ்யா பிலிம்ஸ்.

ஆர். லோகநாதன்.

Thanks for the info. Loganathan Sir.

Some of the current generation may be jealous because the Super Cosmic Power of Cinema is still in the race as always: the centre of action, the centre of perception, the centre of sensation.

oygateedat
1st February 2014, 09:49 PM
http://i60.tinypic.com/28ls5ro.jpg

புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழா
------------------------------------------------------------------------------
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மாநில தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள் நடத்தும் புரட்சி தலைவரின் பிறந்த நாள் விழா (02/02/2014)நாளை பிற்பகல் 12 மணிக்கு மேல் தொடங்கி இரவு 9 மணி வரை அச்சரபாக்கத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் விமரிசையாக
நடைபெற உள்ளது.

இது தொடர்பாக கலை நிகழ்சிகள்/நடனம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சி பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள்/பக்தர்கள் திரளான அளவில் கலந்து கொள்கிறார்கள்.
அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா முடிந்த பின்னர், நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள், விவரங்கள்
வெளியிடப்படும்.

சென்னையில் இருந்து அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க நிர்வாகிகள் /உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.


ஆர். லோகநாதன்.


Mr.LOGANATHAN,

Thank u for your information and convey my wishes on behalf of Makkal Thilagam MGR manithaneya mamandram, Tirupur, to Mr.Rajkumar and his team members.

Regds,

S.RAVICHANDRAN

orodizli
1st February 2014, 10:31 PM
hearty congratulations to mr. yukesh babu for his meaningful 201 registers cross in this so valuable thread...

orodizli
1st February 2014, 10:41 PM
இன்று மாலை ஒளிபரப்பான மக்கள் திலகம் வாழ்ந்து காட்டியிருக்கும் தென்- இந்தியாவின் முதன்- முதல் வண்ண திரைப்பட தயாரிப்பு - " அலிபாபாவும் நாற்பது திருடர்களும் " - திரைபடத்தில் ஒரு சிறப்பான காட்சியான மக்கள்திலகம் செல்வந்தராக மாறிய பின்னரும் தனது கொடைத்தன்மையை நிறைவேற்றும் பொழுது எல்லோருக்கும் உதவிகள் செய்கிறார், அவர் ஏழையாய் இருந்து வந்ததால் பிறருடைய கஷ்டம் அறிந்தவர் என்ற பொருளில் பொதுமக்கள் சிலர் பேசும் காட்சி - என்றும் முக்காலமும் உணர்ந்த தீர்க்க தரிசன மகான் - திரு எம்.ஜி.ஆர்., என உள்ளங்கள் கூத்தாடுகிறது!!!

orodizli
1st February 2014, 10:52 PM
திரு யுகேஷ் பாபு அவர்கள் ந்தால் சரி? ! வேறு எந்த நடிகருக்காவது இந்த மாதிரி போதனையும், கருத்தும் பொதிந்த பாடல்கள் அமையுமா?! அது தான் பொன்மன செம்மல் mgr எனும் விஸ்வரூப விருட்சம்...மேற்கோள் காட்டிய சக்கரவர்த்தி திருமகள் - பட பாடல், மகாதேவி -பட பாடல் எல்லாம் எவ்வளவு பொருத்தமாகவும், பாந்தமாகவும் பொருந்தி உள்ளது ... புரிய வேண்டிய சிலருக்கு புரிந்து, தெளி

ainefal
1st February 2014, 11:32 PM
திரு யுகேஷ் பாபு அவர்கள் ந்தால் சரி? ! வேறு எந்த நடிகருக்காவது இந்த மாதிரி போதனையும், கருத்தும் பொதிந்த பாடல்கள் அமையுமா?! அது தான் பொன்மன செம்மல் mgr எனும் விஸ்வரூப விருட்சம்...மேற்கோள் காட்டிய சக்கரவர்த்தி திருமகள் - பட பாடல், மகாதேவி -பட பாடல் எல்லாம் எவ்வளவு பொருத்தமாகவும், பாந்தமாகவும் பொருந்தி உள்ளது ... புரிய வேண்டிய சிலருக்கு புரிந்து, தெளி

Very correct Suharaam Sir, I would like to make one point very clear Sir. As for as Super Cosmic Power is concerned nothing was preplanned [nothing was done with the sole intention that he wanted to be the CM of Tamil Nadu]. I am not giving any false declaration. With constant practice and goodwill, it became possible.

I am sorry to have to explain in advance, in order to be understood.

ainefal
1st February 2014, 11:40 PM
இன்று மாலை ஒளிபரப்பான மக்கள் திலகம் வாழ்ந்து காட்டியிருக்கும் தென்- இந்தியாவின் முதன்- முதல் வண்ண திரைப்பட தயாரிப்பு - " அலிபாபாவும் நாற்பது திருடர்களும் " - திரைபடத்தில் ஒரு சிறப்பான காட்சியான மக்கள்திலகம் செல்வந்தராக மாறிய பின்னரும் தனது கொடைத்தன்மையை நிறைவேற்றும் பொழுது எல்லோருக்கும் உதவிகள் செய்கிறார், அவர் ஏழையாய் இருந்து வந்ததால் பிறருடைய கஷ்டம் அறிந்தவர் என்ற பொருளில் பொதுமக்கள் சிலர் பேசும் காட்சி - என்றும் முக்காலமும் உணர்ந்த தீர்க்க தரிசன மகான் - திரு எம்.ஜி.ஆர்., என உள்ளங்கள் கூத்தாடுகிறது!!!

Superb Posting Sir.

Through this scene we can learn the following: Our aim should be high and wide, generous and disinterested;this will make our life precious to self and to others.

orodizli
1st February 2014, 11:41 PM
ஆயிரத்தில் ஒருவன் - டிரைலர் வெளியிட்டு விழாவில் ஆனந்தா pictures திரு சுரேஷ் அவர்களின் நிறுவனத்திற்கு அதுவரை அதிகம் பரிச்சயம் இல்லாத ஏரியா - திருச்சி, தஞ்சை பகுதிகள் என்ற விவரத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் திரு அதிராம், ரவிகிரன் சூரியா போன்றோர் சினம் கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்கள்... அதுமட்டுமல்லாமல் திருச்சி தஞ்சை பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஏராளமான லாபத்தை owner சுதனையும் பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறோம்...ரேஷ் & co அடைந்ததால் தான் இப்போதைய விழாவில் பகிரங்கமாக கூறியுள்ளாரே தவிர, இப்பொழுது பொய் தகவலை சொல்லி பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் அவர் இல்லை என்பதை தாங்களும் அறியாதது அல்ல என்றே கருதுகிறோம்... அதே சமயம் நாங்கள் யாரும் உண்மைக்கு மாறான தகவலை அளித்து பிழைப்பு நடத்தவும் அவசியம் இல்லை என்ப

orodizli
1st February 2014, 11:46 PM
so many thanks to sri. saileshbasu sir for his valuable appreciation...

oygateedat
2nd February 2014, 09:09 AM
DAILY THANTHI NEWSPAPER
http://i59.tinypic.com/2u5b0q1.jpg

fidowag
2nd February 2014, 11:28 AM
ஆயிரத்தில் ஒருவன் - டிரைலர் வெளியிட்டு விழாவில் ஆனந்தா pictures திரு சுரேஷ் அவர்களின் நிறுவனத்திற்கு அதுவரை அதிகம் பரிச்சயம் இல்லாத ஏரியா - திருச்சி, தஞ்சை பகுதிகள் என்ற விவரத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் திரு அதிராம், ரவிகிரன் சூரியா போன்றோர் சினம் கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்கள்... அதுமட்டுமல்லாமல் திருச்சி தஞ்சை பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஏராளமான லாபத்தை owner சுதனையும் பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறோம்...ரேஷ் & co அடைந்ததால் தான் இப்போதைய விழாவில் பகிரங்கமாக கூறியுள்ளாரே தவிர, இப்பொழுது பொய் தகவலை சொல்லி பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் அவர் இல்லை என்பதை தாங்களும் அறியாதது அல்ல என்றே கருதுகிறோம்... அதே சமயம் நாங்கள் யாரும் உண்மைக்கு மாறான தகவலை அளித்து பிழைப்பு நடத்தவும் அவசியம் இல்லை என்ப
நண்பர் சுகாராம் அவர்களே,

தங்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். ஆயிரத்தில் ஒருவன், திருச்சி தஞ்சை பகுதிகளில் 100 நாட்களை எட்டாவிட்டாலும்,மகத்தான வசூலை குவித்தது உண்மை. ஆ .ஒருவன் வெளியாகி 50 வது நாளில்
28/08/1965-ல் கலங்கரை விளக்கம் ,பின்னர் 63 வது நாளில் கன்னித்தாய் படமும் வெளியானதால் அதன் தொடர் வெற்றி பாதிக்கப்பட்டு 100நாட்கள் ஓடும் வெற்றி வாய்ப்பை பல ஊர்களில் இழந்தது. அதன் பின்னர் 23/10/1965ல் தாழம்பூ ,10/12/1965ல் ஆசைமுகம் படங்கள் வெளியாயின. ஆனாலும் முதல் வெளியீட்டில் மட்டுமின்றி மறு வெளியீடுகளில் அதிக முறை வெளியாகி வெற்றிபெற்ற புரட்சி தலைவர் படங்களில் மட்டுமல்ல அனைத்து தமிழ் படங்களிலும்
முதன்மையானது என்ற பெருமையை பெற்றது.

பி.ஆர். பந்துலு தயாரித்த படங்களில் மருவெளியீடுகளில் அதிகமுறை
திரையிடப்பட்ட படமும் இதுவே. 1970,1980 1990களில் பிரபாத், சரஸ்வதி அரங்குகளில் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்டு வசூலை குவித்தது.
அந்த காலங்களில் மட்டும் 25 வாரங்கள் மேல் ஓடியுள்ளது.அந்த வசூலை கணக்கிட்டால் இப்போதைய நிலையில் ரூ.1 கோடி மேல் இருக்கும்.


ஆர். லோகநாதன்.

ainefal
2nd February 2014, 02:13 PM
http://www.youtube.com/watch?v=iMrTgx9RV4w

ainefal
2nd February 2014, 02:21 PM
https://www.youtube.com/watch?v=GsVIV477k9k

Russellisf
2nd February 2014, 03:01 PM
Tomorrow our thalaivarin thalaivar ninaivu naal 03.02.2014

அண்ணனே! எங்கள் ஆருயிர் தலைவனே! மணி மாளிகைகளும் அவை தரும் சுகபோகங்களும் உங்களுக்கு கால்தூசு. ஆர்பாட்டம் ஆடம்பரம் அவை உங்களை அண்ட நடுங்கும். அதிகாரம் கோடிக்கணக்கானவர் இதங்களில் கோலோச்சும். எனக்கேன் வன்முறை தரும் ஆயுதம் என்பதையெல்லாம் சொல்லாமல் சொல்லிக் கொண்டுள்ளவனே! சோர்வில்லாதவனே!

புகழ் உங்களுக்கு என்றும் போதையைத் தந்ததில்லை. இழிமொழிகள், ஏளனம், பழிச்சொல், நயவஞ்சகர் நாசக்காரச் செயல்கள் அத்தனையையும் தாங்கினீர்கள். சமப்படுத்தினீர் பொது வாழ்வுக் காரனுக்கு பொன்னான உதாரணமான பொறுமையின் பூஷணமே! எதையும் தாங்கும்இதயங்கொண்டவரல்லவோ தாங்கள்! உங்களைப் போன்றதோர் தலைவரை இது நாள்வரை தமிழர் சமுதாயம் கண்டதில்லை. இனி காணப்போவதுமில்லை. உங்கள் தலைமுறையில் தமிழகத்தில் பிறந்ததை விடப் பெறற்கரிய பேறு திராவிட இளைஞருக்கு வேறு என்ன இருக்கிறது?

அந்தப் பேற்றினைவிடப் பெரியதாக, உங்கள் காலடியில் என்றும் சேவகனாக, பணியாளாக தோழனாக, அன்புத் தம்பியாக வாழும் வாய்ப்புப் பெற்றேன். அதைவிட வேறு சிறப்பு நமது தலைமுறை திராவிட வாலிபனுக்கு வேறு எது உண்டு! ஆருயிர் அண்ணனே! அன்பு நிறைந்தவனே! ஒரே ஒரு சிறப்பு உங்களைவிட எனக்கு உண்டு. என்னால் உரிமை பாராட்டும் அண்ணனை விடச் சிறந்த அண்ணனைக் காட்டி என் அண்ணன் என்று உங்களால் கூற முடியாது.

அந்த பெருஞ்சிறப்பு, உங்களுக்கு கிடைக்காத, கிடைக்க முடியாத, எனக்கு மட்டுமே கிடைத்த பெரும் பாக்கியம். அந்த கர்வ வாடை என்னைச்சுற்றிக் கமழ்கிறது! வாழ்த்தும் வயதுடையவனல்ல, முறையும் அல்ல! உங்கள் வழி நடக்கக் காத்திருக்கிறேன். பசி, பட்டினி, சிறை, வறுமை, பொடுமை, இழிவு, மரணம் எதுவும் என்னை ஒன்றும் செய்ய இயலாது என்று இலட்சக்கணக்கான திராவிட வாலிபர்போல் நானும் உறுதி கூறுகிறேன்!

தங்கள் தம்பி,
கே.ஏ.மதியழகன்
(18.09.1959 - தென்னகம்)

Russellisf
2nd February 2014, 03:09 PM
அறிஞர் அண்ணா அவர்கள் தம் நண்பர்களோடு ஒரு நாள் நண்பகலில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, உணவு அருந்திக்கொண்டிருந்தவர்களிடையே மரக்கறியுணவு, மாமிசவுணவு பற்றி விளக்கங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மரக்கறியுணவு - மாமிசவுணவு பற்றி விவாதம் எழுவதற்குக் காரணம் திராவிடநாடு அலுவலகத்தில் ஓவியராக இருந்துவரும் தோழர் பழனி அவர்கள் தமக்கு மாமிசவுணவு பிடிக்காது என்றும் மரக்கறியுணவே வேண்டும் என்றும் சொல்லி அதனை வாங்கிக்கொண்டு தனியே உட்கார்ந்து சாப்பிட்டார்; மற்ற நண்பர்களெல்லாம் மாமிசவுணவைச் சாப்பிட்டார்கள். மாமிச உணவைச் சாப்பிட்டவர்களெல்லாம் தோழர் பழனி அவர்களை வற்புறுத்திச் சிறிதளவு மாமிசத்தைச் சாப்பிட்டுப் பார்க்கும்படி கூறினார்கள்; தொழர் பழனி அவர்கள் தனக்குப் பழக்கமில்லை என்று சொல்லி இறுதிவரையில் மறுத்தே வந்தார். அதன் பேரில் மரக்கறியுணவு மாமிசவுணவு பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டன. நண்பர்கள் பலரும் தத்தம் விளக்கங்களைத் தந்தனர்.

மரக்கறியுணவு சாப்பிடும் விலங்குள் எப்படியிருக்கின்றன, மாமிசம் சாப்பிடும் விலங்குகள் எப்படியிருக்கின்றன. முதல் வகையைச் சார்ந்த விலங்குகள் எப்படி மக்களால் பழக்கப்படுத்தி உதவிக்கு வைத்துக்கொள்ளக் கூடியனவாக இருக்கின்றன. இரண்டாம் வகையைச் சார்ந்தவைகள் எப்படிப் பெரும்பாலும் கொடூரம் வாய்ந்தனவாகவும், காட்டில் வாழ்வனவாகவும் இருக்கின்றன என்பன போன்ற விளக்கங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மனிதனுடைய உறுப்பு அமைப்பு எல்லாம் அவன் மரக்கறியுணவு சாப்பிடும் வகையைச் சேர்ந்தவன் என்பதைத்தான் காட்டுகின்றன; மேலும் குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான் என்ற சொல்லப்படுவதாலும், குரங்கு மரக்கறியுணவு சாப்பிடும் வகையைச் சேர்ந்ததாக இருப்பதாலும், மனிதன் இயற்கை நியதிப்படி முதல் வகையைச் சேர்ந்தனவாகத்தான் கருதப்படவேண்டும் என்று ஒரு நண்பர் கூறினார்.

உடனே தோழர் பழனி அவர்கள் தமது கட்சிக்கு வலிவு ஏற்பட்டுள்ளதாகக் கருதிக்கொண்டு அப்படிச் சொல்லுங்கள்! என்று கூறி மகிழ்ச்சி கொண்டாடினார்.

மனிதன் நாளுக்குநாள் அறிவு ஆற்றல் பெற்று வளர்ந்த பிறகுதான் மாமிசத்தைப் பக்குவப்படுத்தித் தின்னக் கற்றுக்கொண்டிருக்கிறான்; இது செயற்கை முறையில் அவனுக்குப் பிடித்தப் பண்பு என்று முதலில் கூறிய நண்பர் மேலும் விளக்கம் தந்தார்.

அது கேட்ட தோழர் பழனி நான் இயற்கைப் பண்பினைக் கடைப்பிடிப்பவன். எனவேதான் மரக்கறி சாப்புடுகிறேன். நீங்களெல்லாம் செயற்கைப் பண்பினைக் கடைப்பிடிப்பவர்கள். எனவேதான் மாமிசம் சாப்பிடுகிறீர்கள்! என்று ஏளனக் குரலில் குறிப்பிட்டார்.

அது கேட்டுக்கொண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் அப்படியானால் நீ மாமிசம் தின்னக் கற்றுக்கொள்ளாத குரங்கு நிலையிலேயே இருக்கிறாய்; நாங்கள் மாமிசம் தின்னக் கற்றுக்கொண்ட அறிவாற்றல் மிகுந்த நாகரிக நிலையில் இருக்கிறோம் என்று பொருள்கொள்ளவேண்டும் என்று கூறவே எல்லோரும் கொல்லென்று சிரித்துத் தொழர் பழனி அவர்களைக் கேலி செய்தார்கள். பழனி பரிதாபத்துக்குறியவரானார்.

பிறகு தோழர் பழனி அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து அறிஞர் அண்ணா அவர்களின் நயம் நிறைந்த உரையை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்ந்தார்.

(மன்றம், நாள்: 01.11.1956)

Russellisf
2nd February 2014, 03:10 PM
காஞ்சிபுரம் மாநாடு சென்றேன், திருவிதாங்கூர் தமிழர் பிரச்சனை குறித்து நெடுஞ்செழியன் பேசினார். கேட்டேன், எனக்கு அந்தப் பிரசங்கத்திலே இருந்த சில சந்தேகங்கள் போய்விட்டன. இன்னின்ன பொருள் பற்றிப் பேசினார்கள் இப்படிப்பட்ட விளக்கம் கிடைத்தது, இத்தகைய ஆதாரம் கிடைத்தது‘ என்று எடுத்துரைக்க வேண்டும்.

மாநாடுகள் நடைபெறுவது இதற்காகத்தான், திருவிழாக் கூட்டமல்ல, தெளிவு பெறும் இடம், மாநாடு, கூட்டு உணர்ச்சியும் கொள்கை எழுச்சியும் பெற வேண்டிய இடம்! இந்த முறையில் மாநாட்டுக்கு வந்திருக்கும் தோழர்கள் இதனைப் பயனுள்ள தாக்கிக் கொள்ள வேண்டும்.

ஜோதிடர் வீட்டுக்குப் போய்விட்டு வருபவனுக்கும் , டாக்டர் வீட்டுக்குப் போய்விட்டு வருபவனுக்கும் வித்தியாசம் உண்டல்லவா ? ஜோதிடர் வீட்டுக்குப் போய்த் திரும்புபவன் சிறிது மகிழ்ச்சிகூடப் பெறக்கூடும். அவர் கூறியிருப்பார் – ஆடி போய் ஆவணி வந்துவிட்டது இனி உனக்கு கஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கும் என்று. அதனாலே அவனுக்கு ஆனந்தம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

ஆனால், டாக்டர் வீடு சென்றால், அவர் கூறியிருப்பார் – உனக்கு இரத்தச் சோகையும், நரம்புத் தளர்ச்சியும் இருப்பதாகத் தெரிகிறது, இன்ன வகையான மருந்து சாப்பிட வேண்டும் என்று! அதைக் கேட்டு நமக்கு இரத்தச் சோகை இருக்கிறதாமே, என்று எண்ணிச் சோர்வும், கவலையும் கூட அவன் கொள்ளக்கூடும்.

ஆனால், ஜோதிடர் உட்பட யாரும், டாக்டரை நாடத்தான் வேண்டும், நலிவு இருக்கும்போது நலிவு எத்தகையது, அதைப் போக்கிக்கொள்ள உட்கொள்ள வேண்டிய மருந்துகள் யாவை – என்று டாக்டர் கூறக்கேட்டுச் சோர்வு அடையலாகாது, நலிவு போக்கிக் கொள்ள வழி கிடைத்தது என்று மகிழ வேண்டும்.

மாநாடுகளுக்குப் போவது டாக்டர் வீட்டுக்குப் போய் வருவது போன்றது! "

= அறிஞர் அண்ணா , 25 - 8 - 1954 , நம்நாடு இதழில் .

Russellisf
2nd February 2014, 03:17 PM
ANNAVIN NINAVUGAL

1967 தேர்தல் முடிந்து அமைச்சரவை அமைக்கிற கட்டம் வந்தது. அண்ணா அமைச்சரவையை அவர் வீட்டிலிருந்து அமைக்காமல் நண்பர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பட்டியலைத் தயார் செய்தார். ஒரு தலைவர் 'முக்கிய' இலாகாவை விரும்பினார். அதற்காக இரு தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்தனர். அவர்க்கு 'அந்த' இலாகா தர வேண்டும் எனத் தந்திகள் குவிந்தன. தந்திகள் ஒரு மூட்டை அளவுக்கு இருந்தது. மூட்டையை அண்ணாவிடம் காண்பித்தனர். 30, 40 தந்திகளை எடுத்துப் பார்த்தார் அண்ணா. அவை ஒரே மாதிரியான வாசகங்களைக்கொண்டிருந்தன. அதைப் பார்த்துப் புன்னகைத்தார். இன்னொரு தலைவருடைய மனைவி தன் கணவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதற்காக அண்ணாவைச் சபித்தார். இப்படி எத்தனையோ காட்சிகள் நிகழ்ந்தன. அமைச்சர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதற்குப் பிறகு இரா. செழியனிடம் அதனைக் கொடுத்து அனுப்பி எம். ஆர். இராதா சுடப்பட்டதால் மருத்துவமனையில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரிடம் காண்பிக்கச் செய்தார். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது.

= தகவல் : சு.திருநாவுக்கரசு , திராவிட இயக்க ஆய்வாளர் . — with Suppiah Pancharatnam.

Russellisf
2nd February 2014, 03:19 PM
Annavin ninaivugal

அந்தக் காலத்துல அண்ணாவைப் பரவலாக தெரியாது. அவரை நிறைய பேர் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் அவர் எழுத்தைப் படித்தவங்கதான் அதிகம். அதில் நானும் ஒருவன். அண்ணாவின் எழுத்தைப் படித்துப் படித்து அவரைப் பார்த்துடணும்னு ஆசையா இருந்தேன்.

டி.கே.எஸ். நாடகக் கம்பெனியில இருந்தப்ப ஈரோடு சென்ட்ரல் தியேட்டர்ல ராமாயணம் நாடகம் நடந்தது. இரவு ஏழு மணிக்கு ராமாயணம் நாடகம் தொடங்கினா மறுநாள் சூரியன் உதயமாகிறவரைக்கும் நடக்கும். நாடகம் முடிஞ்சு மறுநாள் விடுமுறை விட்டுடுவாங்க.

அந்த நாள்ல சிலர் நாடகம் போடுவாங்க. அப்படித்தான் திராவிடநாடு பத்திரிகைக்கு நிதி திரட்ட அறிஞர் அண்ணா சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜியம் என்கிற நாடகத்தை நடத்தினார். இதைக் கேள்விப்பட்ட எனக்குத் தூக்கம் வரலை. எப்படியும் அண்ணாவைப் பார்த்துடணும்னு ஆசையா இருந்தேன்.

அண்ணாவின் நாடகக் குழுவுக்கு மேக் அப் போட ஆள் இல்லை. அதனால டி.கே. சண்முகம் எங்களையெல்லாம் மேக்அப் போடச் சொன்னார். என்கிட்ட மேக்அப் போட வந்த ஒருவருக்கு மேக்அப் போட்டு தாடி ஒட்டணும். ஆனா எனக்கு அண்ணாவைப் பார்க்கணும்னு எண்ணம் இருந்ததுனால என்கிட்ட மேக்அப் போட்டுக்க வந்தவரை சரியா கவனிக்காம அங்க திரும்பு, இங்க திரும்புன்னு அதட்டிக்கிட்டே வேறு பக்கமா பார்த்துக்கிட்டிருந்தேன்.

அங்க ஒருவர் என் கண்ணுக்குப் பட்டார். அவர் அண்ணவா இருக்குமோன்னு நெனச்சி என்கிட்ட மேக்அப் போட்டுக்க வந்தவரிடம் அதோ இருக்காரே அவர்தான் அண்ணாவான்னு கேட்டேன். அவர், “இல்லை. அண்ணா நான்தான்”ன்னு சொன்னார். எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை.

இப்ப இருக்கிற மூத்த கலைஞர்களிலேயே நான்தான் அண்ணாவை முதல்ல பார்த்தவன் .

= இலட்சிய நடிகர்

Russellisf
2nd February 2014, 03:22 PM
" பரணி ஸ்டூடியொவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டோடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி."அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு" என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். "அண்ணே வாங்க வாங எங்க இவ்வளவு தூரம்?"என்றேன். தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி "இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?" என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , "என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க" என்றார்.

சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா? "

= இயக்குனர் ஸ்ரீதரின் , ' திரும்பிப் பார்க்கிறேன் '
நூலிலிருந்து .

Russellisf
2nd February 2014, 03:23 PM
" நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.

நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.

எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.

அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான் .

அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.
தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.

தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார். அதேபோல மகாகவி பாரதி நூற்றாண்டு விழாவையும் செம்மையாக நடத்தினார். பெரியார், பாரதி நூற்றாண்டு விழா கவியரங்கங்கள் எங்கெங்கு நடந்தனவோ அங்கெல்லாம் தலைமை வகித்தேன். "

= புலவர் புலமைப்பித்தன் , ' நக்கீரன் ' இதழுக்கு அளித்த பேட்டியிருந்து .

Russellisf
2nd February 2014, 03:24 PM
ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

= தகவல் : சு.திருநாவுக்கரசர் , முன்னாள் அமைச்சர் .

Russellisf
2nd February 2014, 03:26 PM
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ....
(காலத்தை)


நடந்தால் அதிரும் ராஜ நடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்க்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்
(காலத்தை)


அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ.

Russellisf
2nd February 2014, 04:09 PM
அறிஞர் அண்ணாவின் படைப்புகள்
03-05-2011 அன்று புதுப்பிக்கப்பட்டது

கனியும் மலரும் நீயே! - அறிஞர் அண்ணாவின் கடிதம் - 5-11-67

தவறு செய்தபோது திருத்துங்கள் - 07.03.1967 அன்று சென்னையில் வானொலி நிலையச் செய்தியாளருக்கு அளித்த பேட்டி

பிரச்சினைகள் பல - 06.04.1967 -ல் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம்

தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன் - அறிஞர் அண்ணாவின் கடிதம் -3-12-61

முடியும், முயன்றால்! - அறிஞர் அண்ணாவின் கடிதம் - 4-12-66

NSK பற்றி CNA - 'கதவு திறந்தது' என்ற நூலிலிருந்து - 15.06.1947

அறிஞர் அண்ணாவின் முன்னுரை - 'கதவு திறந்தது' என்ற நூலிலிருந்து - 15.06.1947

இந்தி எதிர்ப்பு!! - அறிஞர் அண்ணா

பொங்கல் வாழ்த்து - அறிஞர் அண்ணா

தமிழர் திருநாள் - அறிஞர் அண்ணா

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4 - அறிஞர் அண்ணாவின் தம்பிக்குக் கடிதம்

இந்தியும் திராவிடநாடும் - பேரறிஞர் அண்ணாவின் பேட்டி - 1950

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3 - அறிஞர் அண்ணாவின் தம்பிக்குக் கடிதம்

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2 - அறிஞர் அண்ணாவின் தம்பிக்குக் கடிதம்

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1 - அறிஞர் அண்ணாவின் தம்பிக்குக் கடிதம்

காங்கிரஸ் ஐந்தாம் தர டீ போன்றது - பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு

ஒரே ஒரு பிரச்சினை... ! - தம்பிக்கு அண்ணாவின் கடிதம்

காட்டாச்சி... - தம்பிக்கு அண்ணாவின் கடிதம்

ஆங்கிலமே இந்தியாவின் ஆட்சி மொழி! - பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு

எனது சட்டசபை அனுபவங்கள் - ஆனந்த விகடன் பத்திரிகையில் இடம்பெற்ற 'பொக்கிஷம்' பகுதி

ஆளும் பொறுப்புக் கிடைத்தால் - பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு

கொல்லிமலைச் சாரலிலே - தம்பிக்கு அண்ணாவின் கடிதம்

தமிழர் திருநாள் - தம்பிக்கு அண்ணாவின் கடைசிக் கடிதம்

புதுமை இன்பம் - அறிஞர் அண்ணா

ஆளுக்கொரு துப்பாக்கி! - அறிஞர் அண்ணா

அமெரியின் அக்பர் பூஜை! - அறிஞர் அண்ணா

கேய்ரோவில் கழுகு! - அறிஞர் அண்ணா

செக்கோஸ்லோவேகியா - அறிஞர் அண்ணா

1942 உலக வீரன் - அறிஞர் அண்ணா

நானிலம் போற்றிடும் நவம்பர் 7 எனும் நன்னாள் இன்று! - அறிஞர் அண்ணா

ஜனநாயக சர்வாதிகாரி - அறிஞர் அண்ணா

வெற்றிவீரர் ஜூகோவின் வரலாறு - அறிஞர் அண்ணா

பிராங்கலின் டிலானோ ரூஸ்வெல்டின் வீரவாழ்வு - அறிஞர் அண்ணா

வால்டேர் வீசிய வெடிகுண்டு - அறிஞர் அண்ணா

அந்த அன்னக்காவடி - அறிஞர் அண்ணா

பொருத்தம் – 1 - அறிஞர் அண்ணா

உரிமைக்குப் போராடிய வீரன் எடியன் டோலட்! - அறிஞர் அண்ணா

மழை - அறிஞர் அண்ணா

ஈழத்தமிழர்கள் - அறிஞர் அண்ணா

திருவள்ளுவர் - அறிஞர் அண்ணா

இளங்கோ அடிகள் - அறிஞர் அண்ணா

டி.கே.எஸ்-ன் குமஸ்தாவின் மகள் நாடக விமர்சனம் - பேரறிஞர் அண்ணா

மறைமலையடிகள் - அறிஞர் அண்ணா

தோழர் அழகிரிசாமி! - அறிஞர் அண்ணா

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - அறிஞர் அண்ணா

திரு.வி.கலியாணசுந்தரனார் - அறிஞர் அண்ணா

MOSCOW Mob Parade - அறிஞர் அண்ணாவின் முதல் ஆங்கிலக் கட்டுரை

“Carry on! But Remember. . .!!” - Anna’s Rajya Sabha Speech

அம்பேத்கார் அறிவுரைகள்- பேரறிஞர் அண்ணா

கல்வி நீரோடை - (இட ஒதுக்கீடு பற்றி அண்ணா 30.06.1946-ல் திராவிடநாடு இதழில் எழுதியது)

இந்துமதமும் தமிழரும்! - அறிஞர் அண்ணா

எரியிட்டார் என்செய்தீர்? - அறிஞர் அண்ணா

எண்ணிப்பார் . . . . கோபியாமல்! - அறிஞர் அண்ணா

Annamalai Convocation Address - Arignar Anna at Annamalai University

தீ . . . வாளி! - அறிஞர் அண்ணா

நானிலம் போற்றிடும் நவம்பர் 7 எனும் நன்னாள் இன்று! - அறிஞர் அண்ணா

என்.எஸ்.கே. - அறிஞர் அண்ணா

வரப்போகுதய்யே . . . ! - அறிஞர் அண்ணா

PEOPLE'S POET - Arignar Anna's first English Speech in All India Radio

பெரியார் எப்படிப்பட்டவர் . . . . ? - அறிஞர் அண்ணா

தமிழன் கால்வாய் - அறிஞர் அண்ணா

வரட்டுமே வள்ளலார்! - அறிஞர் அண்ணா

பொங்குக புதுமை! - அறிஞர் அண்ணா

திராவிடரும் - கடவுளரும் - அறிஞர் அண்ணா

மதக் கல்வியும் மாணவர்களும் - அறிஞர் அண்ணா

ஆஸ்திகமும், நாஸ்திகமும் - அறிஞர் அண்ணா

இந்தியா ஒரு நாடல்ல! - அறிஞர் அண்ணா

சர்க்கார் விடுமுறை நாட்கள - அறிஞர் அண்ணா

நமது செல்வம் - அறிஞர் அண்ணா

தேன்சுரக்கப் பேசி. . . ! - அறிஞர் அண்ணா

அவசரமாகத் தேவை! - அறிஞர் அண்ணா

பட்டியின் பகற்கனவு! - அறிஞர் அண்ணா

அந்த ஆட்சி வேண்டாம்! - அறிஞர் அண்ணா

செவிச்சுவை! - அறிஞர் அண்ணா

அந்தத் தராசு - அறிஞர் அண்ணா

உலகப் பெரியார் காந்தி - அறிஞர் அண்ணா

பொதுவாழ்வு ஒரு பொன்னேடு - அறிஞர் அண்ணா

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்- அறிஞர் அண்ணா

காந்திஜி காண விரும்பிய நாடு - அறிஞர் அண்ணா

நடமாடும் அபாய அறிவிப்பு - அறிஞர் அண்ணா

புராண இதிகாச மனுதரும ஒழிப்பு - அறிஞர் அண்ணா

தோழர் சோமசுந்தர பாரதியாரும்
ராவ்சாகிப் வெ.ப.சுப்பிரமணிய முதலியாரும் - அறிஞர் அண்ணா

சிறைச்சாலை என்ன செய்யும்?- அறிஞர் அண்ணா

Russellisf
2nd February 2014, 04:09 PM
பேரறிஞர் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள்


புதினங்கள்
5
குறும் புதினங்கள் 24
சிறுகதைகள் 108
மடல்கள் 24
தம்பிக்குக் கடிதங்கள் 289
பெரு நாடகங்கள் 13
சிறு நாடகங்கள் 70
ஊரார் உரையாடல் 26
அந்திக் கலம்பகம் 31
கவிதைகள் 80
கட்டுரைகள் 1500 க்கும் மேல்

Russellisf
2nd February 2014, 04:15 PM
அண்ணா நாற்பது
கவியரசு கண்ணதாசன்

உண்ணத்தால் பொய்த உயர்வுநிலை ஒன்று
ஊர்வாழத் தான்தேயும் உணர்ச்சியதி ரண்டு
வெள்ளத்தோ டுறவாடும் அன்புமன் மூன்று
வெறும்வார்த்தை இல்லாத சொற்செட்டு நான்கு
கள்ளத்தாற் றளர்வோர்க்கு அறிவூட்டல் ஐந்து
கலைக்கூடம் எழில்கான வளந்தேக்கல் ஆறு
அள்ளத்தான் குறையாத கருத்தோட்டம் ஏழு
அறிழரகோர் வழின்னும் மெய்வாழ்விம் எட்டு

ஒழுக்கத்தால் பிறர்போற்றம் உயர்வாழ்வே ஒன்பது
உள்ளன்பிற் குலஞ்சேர்க்கும் நற்பண்பு பத்து
பழக்கத்திற் கினதான தன்மைபதி னொன்று
பணிவுக்கோர் நாணலெனும் நிலைமைபனி ரெண்டு
கலக்கச்சோர் வறியாத ஆண்மைபதின் மூன்று
கண்மறைந்த பின்பேசாப் பெருந்தன்மை யோடு
விக்கத்தால் பலர்நெஞ்சை வெற்றிபெறு செம்மல்
வீரத்தின் இடமென்று கூட்டுபதி னாறு

அங்கத்தின் அசைவுக்குள் அரசியலின் தேக்கம்
அணுவிக்குள் அணுத்தேடும் ஆராய்ச்சிப் பார்ககும்
சிங்கத்தைக் கொல்லாமை நோன்புபெறச் செய்து
திருநாட்டின் வாழ்வுக்குப் புதுப்பாடம் கண்டு
தங்கத்தில் வைரத்தின் நீரோட்டம் பார்க்கும்
தன்மைத்தாய் தமிழ்கற்ற பேராளன் எங்கள் அங்கத்தால் தலையான அண்ணாவின் பெருமை
அறிவுக்கோர் வீடாக இருபத்தி னான்கு

வைவாரின் முன்தோன்றி வாழ்த்துக்கள் பெற்றும்
வாலாட்டும் பலபேரைத் தலையாட்ட வைத்தும்
வைவாரின் வறுமைக்கும் நமனாக நின்றும்
நடிப்பாரை உலகோடு சமமாகச் செய்தும்
மைவாங்கும் விழியாரை மாதாவென் றழைக்கும்
மாண்புக்கு வழிகோலிப் பண்பாடு காத்தும்
தைவார்க்கும் பொங்கற்குத் தனித்தன்மை தந்தும்
தமிழ்காக்கும் செயலோடு முப்பத்தி ரண்டு

முகம்பார்த்தே அகங்காணும் மூடாத விழிகள் முதலாளி கண்டஞ்சும் நிறங்கொண்ட இதழ்கள்
செகங்கண்டு சிலிப்பெறும் சீரான கைகள்
தென்னாட்டின் அன்பெல்லாம் துயில்கொள்ளும் நெற்றி
அகம்பற்றி உரைத்தற்கோர் அழகான வார்த்தை
அய்யய்யோ உலகத்தில் இனும்தோன்ற வில்லை!
யுகம்தேய்ந்து போனாலும் பெயர்நிற்கு மென்றால்
ஒருவர்க்கே அண்ணாவென் றுரைநாற்ப தன்ப!

(தென்றல் வார ஏட்டில் வெளியானது - 1956)

Russellisf
2nd February 2014, 04:17 PM
அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை குறிப்புகள்
டாக்டர் அண்ணா பரிமளம்

15-09-1909-ல் பிறப்பு காஞ்சிபுரம், தந்தை: நடராசன், தாய்: பங்காரு அம்மாள்.
வளர்ப்பு: இராசாமணி அம்மையார் (சிற்றன்னை) - தொத்தா

1914: பச்சையப்பன் தொடக்கப்பள்ளியில் கல்வி.

1927: காஞ்சி நகராட்சியில் எழுத்தர் பணி.

1928: சென்னை பச்சையப்பன் கல்லூரிக் கல்வி

1930: இராணி அம்மையாரை மணந்துகொள்தல்

1931: மாணவர் செயலராதல், போட்டிகளில் பரிசு பெறல்.

19.03.1931: பெண்கள் சமத்துவம் எனும் முதல் கட்டுரை. தமிழரசு இதழில்

1932: முதல் ஆங்கிலக் கட்டுரை 1933: காங்கேயம் - செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதல் பொழிவு

11.02.1934: முதல் சிறுகதை `கொக்கரக்கோ` ஆனந்த விகடனில் வெளியாதல்

1934: முதுகலைப்ப பட்டப் படிப்பில் தேர்ச்சி

1936: `பாலபாரதி` ஆசிரியர் பொறுப்பு

1934: திருப்பூர் - செங்குந்தர் இளைஞர் மாநாடு பொழிவு. பெரியாருடன் முதல் சந்திப்பு

1935: கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் ஆசிரியர் பணி.

1936: சென்னை நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடல். (பெத்துநாயக்கன் பேட்டையில்)

1936: பெரியாருடன் வடாற்காடு மாவட்டச் சுற்றுப்பயணம்

04.04.1937: `நீதிக்கட்சி` செயற்குழு உறுப்பினராதல்

1937: செட்டிநாட்டு அரசர், தம் தனிச் செயலாளராகப் பணியாற்ற வேண்டல்.

09.12.37: முதற்கவிதை `காங்கிரசு ஊழல்` விடுதலையில் வெளிவரல்

1937: `நவயுகம்`, `விடுதலை`, `குடியரசு` இதழ்களின் துணை ஆசிரியர் பொறுப்பு

02.09.38: முதல் மடல் பரதன் பகிரங்கக் கடிதம் விடுதலையில் வெளிவரல்

26.09.38: இந்தியை எதிர்க்க மக்களைத் தூண்டியதாக நான்கு மாத வெறும் காவல் தண்டணை: ராணியம்மை வாழ்த்துச் செய்தி (குடியரசு, விடுதலை)

13.01.39: இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்த தாளமுத்து நடராசன் இரங்கல் கூட்டத்தில் உரை

18.01.39: தமிழர் திருநாள் விழாவில் டாக்டர் சி.நடேசனார் படத் திறப்பு (சென்னை)

10.02.39: சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்பு உரை

07.1939: முதல் குறும் புதினம் `கோமளத்தின் கோபம்` (குடி அரசு)

12.11.39: `கபோதிபுரக் காதல்` தொடக்கம்

10.12.39: நீதிக்கட்சியின் செயலாளர் ஆதல்

06.01.40: பம்பாயில் பெரியார்-அம்பேத்கர் உரையாடல் மொழி பெயர்த்தமை

23.03.40: முதல் புதினம் `வீங்கிய உதடு` தொடக்கம் (குடி அரசு)

02.06.40: காஞ்சியில் திராவிட நாடு பிரிவினைத் தீர்மானத்தைக் கொனரல்

08.11.40: தி.க.சண்முகம் நடித்த `குமஸ்தாவின் பெண்` நாடகத் திறனாய்வு (குடியரசு)

08.03.42: திராவிடநாடு மதழ் தொடக்கம் தலையங்கம் கொந்தளிப்பில் கவிஞர் பாரதிதாசனின் `தமிழுக்கு அமுதென்று பேர்` எனும் பாடல் முகப்பில்.

1942: சென்னையில் அண்ணா தலைமையில் நீதிக்கட்சி மாநாடு

07.02.43: சென்னைச் சட்டக் கல்லூயில் ரா.பி.சேதுப்பிள்ளையுடன் - சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்

05.06.43: திருவத்திபுரம் லட்சுமி விலாஸ் அரங்கில் `சந்திரோதயம்` எனும் தம் முதல் நாடகத்தில் துரைராஜாவாக நடித்தல்

1944: சேலம் மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக்கும் தீர்மானத்தை முன்மொழிதல்

05.12.45: சென்னையில் சிவாஜி கண்ட இந்துராஜ்யத்தில் காகபட்டராக நடித்தல்

13.01.46: `பணத்தோட்டம்` கட்டுரை வெளிவரல்

மே 46: இந்தி எதிர்ப்பு போரில் அண்ணாவின் தலைமையில் பலர் சிறை ஏகல்

மே 46: மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டை மாநாட்டில் உரை 11.10.46: ஓர் இரவு பற்றி பெர்னாட்சா என்று கல்கி பாராட்டு

29.07.46: நாவலர் பாரதியார் தலைமையில் கவிஞர் பாரதிதாசனுக்கு ரூ.25000 பணமுடிப்பு வழங்கல்

25.04.47: அண்ணாவின் `வேலைக்காரி` படம் திரையிடல்

01.06.47: `நீதி தேவன் மயக்கம்` நாடகம் அரங்கேறல்

10.08.47: ஆகஸ்டு 15 துக்க நாள் என்ற பெரியாரை மறுத்து அது திருநாளே எனத் திராவிட நாடு ஏட்டில் வெளியிடல்

17.08.47: தஞ்சையில் நடைபெற்ற வேலைக்காரி நாடகத்திற்கு தலைமையேற்ற திரு.வ.ரா.வையும், என்.எஸ்.கே. வையும் பாராட்டல்

23.09.47: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், நிலையும் நினைப்பும் என்ற தலைப்பில் உரை

14.12.47: திராவிட நாடு அலுவலகம் காஞ்சியில் 95, திருக்கச்சி நம்பித் தெருவில் அமைத்தல்.

14.01.48: அண்ணாவின் `நல்லதம்பி` படம் திரையிடல்

17.07.48: இந்தி எதிர்ப்பு மாநாட்டில் உரை

02.08.48: இந்தி எதிர்ப்பு மறியலுக்கு தலைமையேற்றல் பின் சிறையேகல்

23,24,10.48: ஈரோடு திராவிடர் கழகத் தனி மாநாடு தலைமையேற்று நடத்தல். காலை ஊர்வரத்தில் அண்ணாவை அமர வைத்து ஊர்வரத்தின் முன் பெரியார் நடந்து வந்தமை, `பெட்டிச் சாவியைத்தருகிறேன்` என்று பெரியார் மொழிந்தமை.

1948 அரசு அறிவித்த கருஞ்சட்டை எதிர்ப்புக்கு எதிராகக் கூட்டப் பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளல்.

25.06.48: திராவிட நாடு ஏட்டில் 04.04.48, 18.04.48 ஆகிய நாட்களில் எழுதிய கட்டுரைகள் வகுப்புக் கலவரத்தைத் துண்டுகின்றன எனக் குற்றம் சாட்டி ரூ.3000 பொறுப்புத் தொகை கட்ட அரசு ஆணை பிறப்பித்தது.

18.03.49: அழகிரி மரணத்தால் தவித்த குடும்பத்திற்கு நாடகம் நடத்தி ரூ.5000 வழங்கல்

18.06.49: பெரியார் - மணியம்மை திருமண அறிவிப்பு

03.07.49: பெரியாரின் திருமணத்தைக் கண்டித்தல் கண்டன அறிவிப்புக்கு வேண்டுகோள் விடுத்தல்

17.07.49: `கண்ணீர்த்துளிகள்` தலைப்பில் எதிர்ப்பாளர் பட்டியல் வெளியிடல்

10.08.49: `மாலை மணி` நாளிதழ் ஆசிரியராதல்

21.08.49: `மாஜிகடவுள்` கட்டுரைத்தொடர் தொடக்கம்

17.09.49: சென்னைப் பவளக்காரத் தெரு 7 ஆம் எண் இல்லத்தில் (காலை 7 மணிக்கு) குடந்தை கே.கே.நீலமேகம் தலைமையில் திராவிடர் கழகத் தோழர்களின் எதிர் காலப்பணி குறித்து உரையாற்றல்

17.09.49: மாலை இராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தொடக்க விழா உரை

18.09.49: கழகப் பொதுச் செயலாளரானார்

18.09.49: திராவிட நாடு ஏட்டில் எழுதிய கட்டுரைகளுக்காக (04,18.04.48) நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல், எதிர்ப்புக்கண்டு பத்தாம் நாள் விடுதலை செய்யப்படல்

25.09.49: `வெள்ளி முளைத்தது` தி.மு.க.தொடக்கம் குறித்த தலையங்கம்.

04.11.49: வழக்கு விசாரணையில் ஈட்டுத் தொகை கட்ட பணிக்கப்பட்ட அரசு ஆணையைநீதிமன்றம் தள்ளுபடி செய்தல்.

13.11.49: ஈட்டுத் தொகைக்கு கழக ஆதரவாளர் அனுப்பிய நன்கொடைகளைத் திருப்புதல்

12.01.50: எங்கும் பொங்கல் விழா எடுக்க அறிக்கை விடல்

12.01.50: திருச்சி சிறையில் இலட்சிய வரலாறு எழுதுதல்

06.08.50: சமநீதி பார்ப்பதாகச் சட்டமன்றத்தில் அறிவித்த அரசின் முடிவுக்கு அறிக்கை

18.09.50: ஆரியமாயை நூல் எழுதியமைக்காக ரூ700 தண்டமும் கட்டத் தவறினால் ஆறு திங்கள் சிறை வாழும் என அறிவிக்கப் பெற்றமை.

24.10.50: அமைச்சர் இராசகோபாலாச்சாரியாருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு

1950 இந்தி நல்லெண்ணக்குழுவுடன் சந்திப்பு

20.01.51: திருச்சி உழவர் கிராம ஒன்றிய மாநாட்டில் உரை

01.03.51: ஆரிய மாயை நூலை எங்கும் தடையை மீறிப் பலர் படித்தல்

01.03.51: தடை மீறி ஆரியமாயை 159 இடங்களில் படிக்கப்படல்

15.03.51: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நிதிக்காக நாடகம் நடத்தியமை 15.03.51: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நிதிக்காக நாடகம் நடத்தி ரூ.21000 வழங்கியமை

06.04.51: இராசேந்திர பிரசாத்துக்குக் கறுப்புக் கொடி

29.04.51: சிதம்பரம் திலையரங்கில் சந்திரமோகன் நாடகம் நடத்தியமை

13.08.51: சர் தியாராயர் கல்லூரி உதவி நிதிக்காகத் தம் குழுவினருடன் நீதிதேவன் மயக்கம் நாடகம் நடத்தியமை

02.11.51: அறிவகம், கட்டிடத் திறப்பில் தலைமையேற்றல்

14.12.51: சென்னையில் தி.மு.கழக முதல் மாநில மாநாடு. அண்ணா மாநாட்டு தலைமையேற்றல்

12.03.52: வடநாட்டு ஆளுநர் நியமனக் கண்டனக் கூட்டத்தில் ஆளுநரை மக்கள் தேர்ந்தெடுத்தல் வேண்டும் என்று கோரியமை.

06.04.52: கழக இளைஞர் மஜீத் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரல்

01.08.52: இந்தி எதிர்ப்பு அறப்போர்

28.08.52: ராயல்சீமா பஞ்சநிலைக்கு அண்ணா நன்கொடை அனுப்பியமை

1953: கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க திருச்சியில் துணி விற்றல்.

25.04.53: திருச்சி மாநாட்டில் காதல் ஜோதி அரங்கேற்றல்

28.04.53: புயல் நிவாரண நிதியாக ரூ 27000 வழங்கல்.

06.06.53: கழக இளைஞர் குடும்பத்துக்கு நிலம் அளித்தல்

15.06.53: நம்நாடு ஏட்டின் ஆசிரியர் பொறுப்பு

08.07.53: குலக்கல்வி கண்டன ஊர்வலத்தில் (காஞ்சிபுரம்) தலைமை

13.07.53: குலக்கல்வி, ரயில் நிறுத்தல், கல்லக்குடி இம் மூன்றையும் உள்ளடக்கிய மும்முனைப் போராட்டத்தைத் தூண்டியதாகக் கைதாதல். மூன்று மாதம் சிறை செல்லல்.

01.09.53: மும்முனைப் போராட்டத்திற்கு ரூ.5000 அபராதத் தொகை (அண்ணா மற்றும் சிலருக்கு) எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதி மன்றம் கலையும் வரை காப்பு.

03.05.54: மொழிவழி மாநிலம் அமைய ஆணையிடம் அறிக்கை அளித்தல்

14.01.55: அண்ணாவின் சொர்க்கவாசல் திரையிடப்படல்

20.03.55: ஐந்தாண்டுத் திட்டம் கண்டன நாள் என அறிவித்தல்.

31.05.55: திருச்சி, இராமநாதபுரம் பகுதில் புயலால் பாதிக்கப் பெற்றவருக்கு நிதி வழங்கியமை

20.02.56: தேவிகுளம் பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்துடனும், செங்கோட்டை வட்டததின் ஒரு பகுதியைக் கேரளத்துடனும் இணைக்க வேண்த் தெரிவிக்கப்பட்ட கண்டனக் கூட்டததில் பொது வேலை நிறுத்தம் பற்றி விளக்கல்.

17,18,19. 05: 1956: திருச்சி இரண்டாவது மாறில மாநாடு.

20.05.56: தேர்தலில் போட்டியிட முடிவு, அண்ணாவின் கருத்துரைமூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு விருது

11.03.57: தேர்தல் முடிவு அறிவிப்பு, அண்ணா வெற்றி பெறல்

09.06.57: ஆங்கில வார இதழ் தொடங்கல் ழடீஆநு டுஹசூனு 07.07.57: எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அண்ணா உரையாற்றல்

03.01.58: நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு. தடையை மீறிப பேசச்செல்லுகையில் கைது செய்யப்படல்.

02.03.58: தி.மு.க. மாநிலக் கட்சியாகவும், உதயசூரியன் அதன் சின்னமாகவும் இந்திய அரசு ஏற்றல்

22.06.58: இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள் கொண்டாடல்.

06.11.58: பூதவராயன் பேட்டையில் எதிரிகளால் கொலை செய்யப்பட்ட கழகத் தொண்டர் ஆறுமுகம் என்பவர் குடும்பத்துக்கு 1 ஏக்கர் நிலம் வழங்கல்

24.04.59: சென்னை மாநகராட்சிப் பொறுப்பைத் தி.மு.க. ஏற்றல்

20,21.06.59: திருச்சி மாவட்ட தி.மு.க 3வது மாநில மாநாட்டில் உரை

15.05.60: சந்திரமோகன் நாடகம் வழி திரு.பி.பாலசுப்பிரமணியன் நிதிக்கு ரூ.10000 வழங்கல்

01.08.60: சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை ஏற்றல்

25.09.60: சென்னையில் கூடிய பொதுக் குழுவில் அண்ணா பொதுச் செயலாளா ஆதல்.

1960: திராவிட நாடு விடுதலை வார விழாப் பளியில் மாண்ட திரு. கணேசனின் (திருப்பூர்) மனைவியிடம் ரூ.5000 மதிப்புள்ள வீட்டை வழங்கல்.

1962: சம்பத் விலகல் குறித்து அண்ணா வருந்தி அறிக்கை வரைதல்

26.02.62: சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுறல்

26.02.62: சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, பாராளுமன்ற மேலவை உறுப்பினராதல்

04.03.62: செயின்ட்மேரி மண்டபத்தில் அண்ணாவின் தலைமையில் தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற 48 எம.எல்.ஏ. 8 எம்.பி. களுக்குப் பாராட்டு

20.04.62: டில்லி மாநிலங்களவை உறுப்பினராதல்

01.05.62: டில்லி மாநிலங்களவைறில் முதல் சொற்பொழிவு

10.06.62: நெசவாளர் மீது விதித்த வரிக்கொடுமைக் கண்டன ஊர்வலம் நடத்தியமை. அண்ணா கைதாதல்.

19.07.62: வேலூரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடந்த மறியலில் கைதாதல்.

02.08.62: அண்ணா தம்மீது தொடரப்பட்ட வழக்கில் தாமே வாதாடல்

03.08.62: விலைவாசி உயர்வுப்போர் - வேலூர் சிறையில் பத்து வாரம்.

02.12.62: சென்னையில் போர் நிதி திரட்டல்.

09.12.62: இந்திய-சீனப்போர் பற்றிய வானொலி உரை

1962: ழடிஅந சுரடந இதழ் தொடக்கம் 07.01.63: சீனர்களின் ஆதிக்கசெறி குறித்துச் சென்னை வானொலியில் ஆங்கில்ப் பேருரை

25.01.63: மாநிலங்கள் அவையில் பிரிவினைத் தடை மசோதா மீது உரை

01.09.63: மகன்கள் பரிமளம், இளங்கோவன் திருமணம்

03.11.63: கட்டாய இந்தியை எதிர்த்ததால் அமைந்த கரையில் கைதாதல்

17.11.63: கட்டாய இந்தி 17 வது மொழிப் பிரிவு சட்டம் எரித்ததல் அன்றே கைதாகி, ஆறு மாதம் சிறைத் தண்டனை ஏற்றல்.

02.12.63: இந்தியைப் புகுத்தும் சட்டப் பிரிவை எரித்தல்

10.12.63: ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை பெறல்

08.01.65: குடியரசு நாளை இந்தி எதிர்ப்பு நாளாகக் கூறல்.

17.01.65: இந்தி எதிப்ப்பு மாநாடு

26.01.65: துக்க நாளாகக் கொண்டாடியமைக்காக கைது.

29.01.65: விடுதலை ஆதல்

09.02.65: இந்தி எதிர்ப்பில் மாணவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தக் கூறல்.

09.02.65: சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் சென்று திரும்பிய அண்ணாவிற்கு வரவேற்பு

26.01.66: இந்தித் திணிப்பிற்காகக் குடியரசு நாளைத் துக்க நாள் எனல். அதனால் கைது ஆதல்.

31.12.66, 01.01.67: சென்னை மாவட்ட மாநாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் அமர வைத்தல்

27.02.67: பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறல்

06.03.67: தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் தம்யியருடன் 138 பேர் அமர்ந்திட, அண்ணா தமிழக முதல்வர் பொறுப்பேற்றல். அன்றே அரசு ஊழியரிடையே உரையாற்றல்

09.03.67: சென்னை மாநகராட்சி வரவேற்பில் உரை

14.03.67: முதலமைச்சராக வானொலியில் உரை

15.03.67: சட்ட மன்ற வளாகத்தில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றல்.

16,03.67: இந்தி எதிர்ப்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல்.

11.04.67: தலைமை அமைச்சர் இந்திராவை சந்தித்தல்

14.04.67: சென்னை அரசு தமிழ்நாடு அரசு எனப் பெயரிடப்பட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு தலைமைச் செயலகம் என மாற்றிப் செயர்ப் பலகை அமைத்தல்,

22.04.67: சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படல்

26.04.67: மேலவை உறுப்பினராகப் பதவியேற்றல்

09.05.67: அண்ணாவின் அரசால் ஆகாஷ்வாணி வானொலி என வழங்கப்படல்

15.05.67: ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கல்.

17.06.67: புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து, பேருந்துகள் அரசுடைமை ஆதல், ஏழைகளுக்கு இலவசக் கல்வி, கலப்புமணப் பரிசு, குடிசைவாசிகளுக்குத் தீப்பிடிக்காத வீடு, காவிரித் திட்டம். 08.07.67: ஒரு கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்க செலவிட முடிவு.

23.10.67: சீரணியின் நோக்கத்தைப் புலப்படுத்தல்.

1967: அண்ணாமலைப் பேருரை

02.01.68: தமிழ் அறிஞர்களுக்குச் சிலை எடுத்தல்

04.01.68: இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு செயற்குழுத் தலைமை

10.01.68: இரண்டாவது இலகத்தமிழ் மாநாடு எடுத்து உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் நிற்றல்

23.01.68: இருமொழித் திட்டம் கொணரல்

15.04.68: உலகப் பயணம் மேற்கொள்ளல், யேல் பல்கலைக் கழக அழைப்பு

22.04.68: அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உரை, சப்பெலோஷிப் எனும் சிறப்பு விருதினைப் பெறல்

12.05.68: அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளைக் கண்டு திரும்பல்.

21.08.68: பள்ளிகளில் என்.சி.சி.அணியில் இந்தி ஆணைச் சொற்கள் நீக்கல்.

08.09.68: அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேரறிஞர் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெறுமை பெறல்.

09.10.68: புற்று நோயால் பாதிக்கப் பெற்று அமெரிக்கா செல்லல்.

06.11.68: அமெரிக்க மெமோரியல் மருத்துவமனையில் டாக்டர் மில்லரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தமிழகம் திரும்பல்.

01.12.68: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தமைக்கு விழா கொண்டாடல்

14.01.69: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு.

02.02.69: இரவு 12.22 மணிக்கு உடல் இயக்கம் நின்றது.

03.02.69: தமிழ் மக்கள் பேரறிஞர் அண்ணாவை இழந்து துன்பக்கடலில் மூழ்கல்

04.02.69: முற்பகல் 11.40-க்கு முப்படையினர் மரியாதையுடன் அண்ணாவின் உடல் புதைக்கப்பட்டது,

03.02.70: அண்ணா அஞ்சல்தலை - மைய அரசு வெளியிடல்.

Russellisf
2nd February 2014, 04:17 PM
Articles About ANNA

ANNA’S GOLDEN HEART –A.P.Janarthanam

ANNA ERA – Professor C.D.Rajeswaran

ANNA SIMPLE AND SPLENDOUR – C.Ramachandran

ANNA AN EPITOME OF POLITICAL WISDOM
–G.R.Damodaran, Ex-Principal. PSG College of Technology

ANNA'S SCHOOL OF ORATORY -T.Chengalvarayan

ANNA - A GENTLEMAN CM -T.R.Ramanujam,Dy. Commissioner of Police(Retd)

ANNA, THE CREATIVE GENIUS
– Dr.V.C.Kulandaiswamy, Ex-Vice-Chancellor, Anna University.

C.N. ANNADURAI'S MISSION INCOMPLETE - R. Kannan

ANNA THE MAN - V.N.Swami

ECONOMIC IDEAS OF ARIGNAR ANNA
- Dr. Vedagiri Shanmugasundaram,
M.A.(Eco.), M.A.(Pol.Sc.), M.Litt., Ph.D., D.Phil(Oxon.).

ANNA – A KANSAS MEMORY - Albert B. FRANKLIN

THE SON WHO NAMED HIS MOTHER - R.Nallarasu

ANNA MY ELDER BROTHER - A.P.Janardhanam. M.A.

PREFACE - A.S.VENU, B.A.

THE IMPACT OF ANNA ON TAMIL NADU POLITICS - S.Vijayan

ANNA - THE WALKING ENCYCLOPAEDIA - Lion B.Appuraj, District Chairman

ANNA - M.S.Venkatachalam, M.A.,B.L., - Translator (Part I)

ANNA - M.S.Venkatachalam, M.A.,B.L., - Translator (Part II)

THE VERSATILITY OF ANNA – Dr.R.E.ASHER, University of Edinburgh, Scotland

S.G.MANAVALA RAMANUJAM - Former V.C., Annamalai University

C.N.A. BREATHES WISDOM AND STATESMANSHIP - From E.K.Ramaswami

HOW ENGLISH SURVIVED IN INDIA-Swaminomics/Swaminathan S Anklesaria Aiyar

Beginning of a New Epoch - By a Special Correspondent, THE HINDU

Russellisf
2nd February 2014, 04:19 PM
அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகளின் தலைப்புகள் (சில)
(டாக்டர் அண்ணா பரிமளம்)

1

செங்குந்த இளைஞர் மாநாடு

26.05.1933 (முதல் பேச்சு)

2

தன்மான இயக்க மாநாடு துறையூர்

25.08.1939

3

தாலமுத்து நடராசன் - இரங்கல்

13.04.1939

4

தமிழிசை



5

ஆற்றோரம்



6

The World Old and New



7

The Fire and The Fury



8

தீ பரவட்டும்

09.02.1943

9

தீ பரவட்டும்

14.03.1943

10

கலையின் நிலைமை

18.02.1944

11

மலரும் மாணவர்

05.03.1944

12

நாடும் ஏடும்

01.09.1944

13

மறுமலர்ச்சி - சிதம்பரம்

01.07.1945

14

திராவிடர்நிலை - குடந்தை

04.07.1945

15

ஏ. தாழ்ந்த தமிழகமே! - அண்ணாமலை

20.09.1945

16

நல்ல தீர்ப்பு - தாம்பரம் - கிருத்துவக் கல்லூரி

02.09.1945

17

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

24.02.1946

18

மேதினம்

01.05.1946

19

நிலையும் நினைப்பும் - அண்ணாமலை பல்கலைக்கழகம்

23.09.1947

20

இந்தி எதிர்ப்பு

17.07.1948

21

பொருள் - கிருத்துவக் கல்லூரி

19.02.1948

22

சமதர்மம் - வானொலி

1948

23

நாடகத்தில் மறுமலர்ச்சி

1948

24

சுதந்திர இந்தியாவில் வாலிபர் தேவை

1948

25

தீண்டாமை

1948

26

என்னைக் கவர்ந்த புத்தகங்கள்

1948

27

வீட்டிற்கோர் புத்தகச் சாலை

1948

28

மேடைப் பேச்சு

1948

29

ஓய்வு நேரம்

1948

30

ஸ்தாபன ஐக்யம்

1948

31

விதிக்கு அடிமைத்தளம்

1948

32

சொல்வதெல்லாம் செய்தல் சுதந்திரம்

1948

33

People’s Poet



34

அடிநிலையங்கள்

24.03.1949

35

ஒட்டுமாஞ்செடி

17.09.1949

36

நாம்

1950

37

நூல்நிலையங்கள்

23.01.1950

38

முத்தமிழ்

27.05.1950

39

தியாகராயர்

30.06.1950

40

சமூகநீதி

09.08.1950

41

சாதிபேதம் சாகும்வரை

29.09.1950

42

பேச்சுரிமை போர்முரசு ஒலித்தது

08.10.1950

43

கோபுரத்தில் குப்பை மேடுகள்

13.10.1950

44

மாணவர் மாநாடு

31.12.1950

45

சிலம்புதந்த நாடு திருவோடு ஏந்துவதா?

07.01.1951

46

நாங்கள் கட்டிடமில்லாத கல்லூரிகள்

08.04.1951

47

சொல்லும் பயனும்

04.08.1951

48

கண்ணீர்த் துளிகளே

30.12.1951

49

மறப்போம் மன்னிப்போம்

14.12.1952

50

காந்தியார்

03.01.1954

51

அச்சம்

07.11.1954

52

தேர்தலில் நாம்

16.12.1956

53

ஜனநாயகம் நிலைக்க

05.02.1957

54

ஆளும் பொறுப்பு கிடைத்தால்

09.02.1957

55

1957 - 1967

11.08.1957

56

இந்தி எதிர்ப்பு ஏன்?

21.12.1957

57

தமிழர் திருநாள்

13.01.1959

58

திருவள்ளுவர்

28.02.1960

59

இலங்கைத் தமிழர்

14.03.1961

60

தலைப்பு இல்லை

02.10.1961

61

சிங்களத்தில் சீரழிகின்றனர் தமிழர்

17.11.1961

62

இராச்சிய சபையில் அண்ணா

30.01.1962

63

ஆட்சிப்பொறுப்புக்கு ஆளாகும் நேரமிது

26.02.1967

64

A Call to the People

15.03.1967

65

தமிழ்நாடு பெயர்சூட்டு விழா

19.06.1967

66

விடுதலைத் திருநாளில்

15.08.1967

67

பட்டமளிப்பு விழா - மதுரை

07.09.1967

68

The Role of U.N.

23.10.1967

69

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

18.11.1967

70

உலகத் தமிழர் மாநாடு

10.01.1968

71

யேல் - பேட்டி

22.04.1968

72

தமிழரசு கட்சி மாநாடு

20.07.1968

73

Human Rights day

10.12.1968

74

கலைவாணர் சிலை திறப்பு

14.01.1969

Russellisf
2nd February 2014, 04:21 PM
அண்ணாவின் சாதனைகள்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.

2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.

3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.

4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.

5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.

7. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.

8. பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

9. ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.

10. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.

11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.

12. சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.

13. 1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.

14. சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.

15. 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினைர்.

16. கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.
(திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஜி.யு.போப், பாரதியார், பாரதிதாசன், ஔவையார், கண்ணகி, கால்டுவேல், உ.வே.ச.)

17. பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

18. அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

19. முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள் பணியைச் செய்யலாம் என சுற்றரிக்கை அனுப்பினார்.

20. சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.

21. விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.

Russellisf
2nd February 2014, 06:19 PM
அண்ணாவின் முதல் படைப்புகள்
( டாக்டர் அண்ணா பரிமளம் )

படைப்பு
தலைப்பு
இதழ்
நாள்
முதல் கட்டுரை - தமிழில் மகளிர் கோட்டம் தமிழரசு 19.03.1931
முதல் கட்டுரை - ஆங்கிலத்தில் Moscow Mob Parade 1932
முதல் சிறுகதை கொக்கரக்கோ ஆனந்த விகடன் 11.02.1934
முதல் கவிதை காங்கிரஸ் ஊழல் விடுதலை 09.12.1937
முதல் கடிதம் பரதன்
பகீரங்கக் கடிதம் விடுதலை 02.09.1938
முதல் குறும் புதினம் கோமளத்தின் கோபம் குடியரசு் 07.1939
முதல் புதினம் வீங்கிய உதடு குடியரசு் 23.03.1940
முதல் நாடகம் சந்திரோதயம் 05.06.1943

Russellisf
2nd February 2014, 06:30 PM
MANIPAYAL SONG WATCH THALAIVAR IN 4.29 AND 5.29

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&ved=0CDAQtwIwAQ&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DLC7 EWPuaYNM&ei=0kDuUqStGcOOrQeQuYDoAw&usg=AFQjCNGgD4NA7jC45LgHPIityX7IPfnu5w

Russellisf
2nd February 2014, 07:07 PM
Important contributions by MGR for the welfare of people

mgr-middaymealGave importance to social development especially in the field of education.

Mid-day meal scheme to attract poor children to attend government schools.

Special buses for women passengers.

Ban on liquor throughout Tamilnadu state.

Restoration and renovation of historical monuments and temples.

Opening of free school MGR Primary and Higher Secondary School for the children's of cinema technicians.

Political achievements of MGR

1953 - Joined Dravida Munnetra Kazhagam (DMK)

1967 - Member of Legislative Assembly from St. Thomas Mount under DMK party

1969 - Treasurer of DMK

1971 - Member of Legislative Assembly from St. Thomas Mount under DMK party

1972 - Founded the Anna Dravida Munnerta Kazhagam (ADMK)

mgr-anna1977 - Member of Legislative Assembly from Aruppukottai under ADMK party

1980 - Member of Legislative Assembly from Madurai west under ADMK party

1984 - Member of Legislative Assembly from Andipatti under ADMK party

1977 - 1980 - Chief Minister of Tamilnadu

1980 - 1984 - Chief Minister of Tamilnadu

1984 - 1987 - Chief Minister of Tamilnadu

Awards received by MGR in his Film and political Career

Received Filmfare Best Actor Award for the film Enga Veettu Pillai
Received Filmfare Best Film Award for the film Adimai Penn

Received National Film Award for Best Actor for the Tamil film Rickshakaran in 1972

Received Honorary doctorate awards from University of Madras and The World University (Arizona).

Got the Bharat Ratna award (posthumously) in 1988 for his contribution to Tamilnadu
Eudcational Institutions run under the name of MGR

Dr MGR Janaki College of Arts & Science(for Women)

JRK Matriculation Higher Secondary School,Kattangulathur

JRK Matriculation Higher Secondary School,Vadapalani

Janaki Ramachandran Matriculation School,Vadapalani

Thai Sathya Matriculation School,West K.K Nagar

Dr MGR Janaki Matriculation School,Saligramam

Dr MGR Janaki Nursery and Primary School,Manapakkam

Dr MGR School for the speech and hearingimpaid,Ramapuram

Dr MGR Higher Secondary School,Kodambakkam

Dr MGR Primary School,Kodambakkam

Russellisf
2nd February 2014, 07:10 PM
In thalaivar songs about anna


என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்

Russellisf
2nd February 2014, 07:10 PM
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

Russellisf
2nd February 2014, 07:11 PM
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

Russellisf
2nd February 2014, 07:11 PM
நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

Russellisf
2nd February 2014, 07:12 PM
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
(ஒரு தாய் )

சோலை மலர்க் கூட்டம் சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுதே
மாலை பனி மூட்டம் மலர்கள் இலை தோறும்
சிரித்து விளையாடுதே
இங்கு நான் அங்கு நீ, என்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
(ஒரு தாய் )


உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்

Russellisf
2nd February 2014, 07:13 PM
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு ...
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா

Russellisf
2nd February 2014, 07:14 PM
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் , பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்


கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது
ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது
செல்வம் இன்று வந்து நாளை போவது
செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது
செல்வம் இன்று வந்து நாளை போவது
செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது


ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா
யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

Russellisf
2nd February 2014, 07:15 PM
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ

Russellisf
2nd February 2014, 07:18 PM
வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா -
என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!

Russellisf
2nd February 2014, 07:20 PM
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

Russellisf
2nd February 2014, 07:21 PM
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-

நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்

Russellisf
2nd February 2014, 07:22 PM
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான் ஹேய்..
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்

காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
மனித குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை அழைப்பான்
இரண்டு வரி கொண்டு மூன்று நெறி கண்ட
குறளின் பொருள் தேடிச் செல்வான்
நாளை வருகின்ற வாழ்வு நமக்கென்று
ஏழை முகம் பார்த்து சொல்வான்
ஏழை முகம் பார்த்து சொல்வான்
கல்லைக் கனியாக்க கனவை நனவாக்க
கையில் ஏர் கொண்டு வருவான்
சாந்தி வழி என்று காந்தி வழி சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான்
உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு துடிப்பான்
சுற்றிப் பகை வந்து சூழும் திரு நாளில்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்

Russellisf
2nd February 2014, 07:23 PM
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

Russellisf
2nd February 2014, 07:32 PM
M G Ramachandran: The first film actor to become Chief Minister in india - super slide show



https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=85&cad=rja&ved=0CD0QFjAEOFA&url=http%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fpolitics%2F national%2Fm-g-ramachandran-the-first-film-actor-to-become-chief-minister--13043.html%3Fpage%3D16&ei=Qk_uUsm2M8GSrgfU5ID4Ag&usg=AFQjCNHBLGor0TJDof0BWM6wLhykUo8Q5Q

Russellisf
2nd February 2014, 07:36 PM
திரி நண்பர்களுக்கு இனிமையான மாலை வண்ணக்கம் .

நாளை நமது தலைவரின் ஆசான் முன்னாள் முதல்வர் திரு அண்ணா துரை அவர்களின் நினைவுநாள்

அவர் சம்பந்தப்பட்ட நினைவுகளை இங்கே நான் பதிவிட்டுள்ளேன் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்க

வேண்டுகிறேன்.

Russellisf
2nd February 2014, 07:38 PM
தலைவரின் மறுவெளிஇடு பதிவுகள் நாளை முதல் தொடரும் .,

Russellisf
2nd February 2014, 07:49 PM
பட்டங்களை கேட்டு கேட்டு வாங்கும் மனிதர்கள் நடுவிலே பட்டங்களால் பெருமைப்பட்ட உலகின் ஒரே மனிதர் எங்கள் தலைவர் மட்டும் தான் .

1.புரட்சி நடிகர்
2.மக்கள்திலகம்
3.நிருத்திய சக்ரவர்த்தி
4.இதயக்கனி
5.பொன்மனச்செம்மல்
6.கொடுத்து சிவந்த கரம்
7.கலைவேந்தன்
8.நடிக பேரரசர்
9.கலைஞர் திலகம்
10.புரட்சிதலைவர்
11.கொடுத்து சிவந்த கரம்
12.கலியுக கடவுள்
13.இதயதெய்வம்
14.பாரத் ரத்னா
15.எட்டாவது வள்ளல்
16.வசூல் சக்ரவர்த்தி
17.ஏழை பங்காளன்
18.குலதெய்வம்
19.வாத்தியார்
20. கலியுக ராமன்
21.முப்பிறவி கண்ட முதலவன்
22.நினைத்ததை முடித்தவன்
23.ஆயிரத்தில் ஒருவன்

ujeetotei
2nd February 2014, 08:06 PM
பட்டங்களை கேட்டு கேட்டு வாங்கும் மனிதர்கள் நடுவிலே பட்டங்களால் பெருமைப்பட்ட உலகின் ஒரே மனிதர் எங்கள் தலைவர் மட்டும் தான் .

1.புரட்சி நடிகர்
2.மக்கள்திலகம்
3.நிருத்திய சக்ரவர்த்தி
4.இதயக்கனி
5.பொன்மனச்செம்மல்
6.கொடுத்து சிவந்த கரம்
7.கலைவேந்தன்
8.நடிக பேரரசர்
9.கலைஞர் திலகம்
10.புரட்சிதலைவர்
11.கொடுத்து சிவந்த கரம்
12.கலியுக கடவுள்
13.இதயதெய்வம்
14.பாரத் ரத்னா
15.எட்டாவது வள்ளல்
16.வசூல் சக்ரவர்த்தி
17.ஏழை பங்காளன்
18.குலதெய்வம்
19.வாத்தியார்
20. கலியுக ராமன்
21.முப்பிறவி கண்ட முதலவன்
22.நினைத்ததை முடித்தவன்
23.ஆயிரத்தில் ஒருவன்

Great work Yukesh Babu and congrats for post Number 250.

I was waiting in the non striker end for the past 2 hours.

ujeetotei
2nd February 2014, 08:26 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/mug_zps7d37edc6.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/mug_zps7d37edc6.jpg.html)

ujeetotei
2nd February 2014, 08:27 PM
http://www.mgrroop.blogspot.in/2014/01/sri-mgrcom-memorabilia.html

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/cap_zps46ddca59.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/cap_zps46ddca59.jpg.html)

Russellbpw
2nd February 2014, 08:37 PM
ஆயிரத்தில் ஒருவன் - டிரைலர் வெளியிட்டு விழாவில் ஆனந்தா pictures திரு சுரேஷ் அவர்களின் நிறுவனத்திற்கு அதுவரை அதிகம் பரிச்சயம் இல்லாத ஏரியா - திருச்சி, தஞ்சை பகுதிகள் என்ற விவரத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் திரு அதிராம், ரவிகிரன் சூரியா போன்றோர் சினம் கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்கள்... அதுமட்டுமல்லாமல் திருச்சி தஞ்சை பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஏராளமான லாபத்தை owner சுதனையும் பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறோம்...ரேஷ் & co அடைந்ததால் தான் இப்போதைய விழாவில் பகிரங்கமாக கூறியுள்ளாரே தவிர, இப்பொழுது பொய் தகவலை சொல்லி பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் அவர் இல்லை என்பதை தாங்களும் அறியாதது அல்ல என்றே கருதுகிறோம்... அதே சமயம் நாங்கள் யாரும் உண்மைக்கு மாறான தகவலை அளித்து பிழைப்பு நடத்தவும் அவசியம் இல்லை என்ப

எஸ்வி சார் மற்றும் கலியபெருமாள் சார்

நண்பர் சுகாரம் அவர்களுடைய இந்த பதிவிற்கு நான் பதில் பதிவு பதிவு செய்யவேண்டுமா?

நண்பர் பதிவிட்டிருக்கும் சமாசாரம் முடிந்த ஒன்று என்று நினைத்தேன்...ஆனால்.....?

சிறிது இடைவெளி விட்டு வந்துள்ள சுகாரம் அவர்களே ...

தாங்கள் அனைத்து
பதிவுகளையும் மிக பொறுமையாக படித்து அதன் பிறகு பதில் பதிவு பதிவு செய்ய வேண்டுமா.. வேண்டாமா என்பதை முடிவெடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

Rks

ainefal
2nd February 2014, 09:14 PM
http://www.youtube.com/watch?v=vjI5h2JVFrA

ainefal
2nd February 2014, 09:36 PM
http://i62.tinypic.com/10poa5c.jpg

CNA holds dear a man who acts rightly, possesses intuition, who is righteous and knows the Truth, who fulfils his duty.

ainefal
2nd February 2014, 09:46 PM
http://i58.tinypic.com/2crx92s.jpg

We shall not betray the cause which we have sworn in our heart of hearts to serve to the last breath. I am aware that there is something better to do and that our methods are not the best ones, we were wasting our finest energies in arguments!

ainefal
2nd February 2014, 09:49 PM
http://www.youtube.com/watch?v=mhp9RhxpX8g

ainefal
2nd February 2014, 09:52 PM
http://www.youtube.com/watch?v=kmlrBhswQ7I

ainefal
2nd February 2014, 09:53 PM
http://www.youtube.com/watch?v=XEdKocD47k8

ainefal
2nd February 2014, 09:54 PM
http://www.youtube.com/watch?v=Q94wK51KPng

ainefal
2nd February 2014, 09:55 PM
http://www.youtube.com/watch?v=bXCXOHMxOJg

ainefal
2nd February 2014, 09:57 PM
http://www.youtube.com/watch?v=pIvC8CKwMUU

oygateedat
2nd February 2014, 10:36 PM
DIAMOND THEATRE, TIRUPUR
http://i60.tinypic.com/2l9phyd.jpg

oygateedat
2nd February 2014, 10:38 PM
http://i57.tinypic.com/t7h73n.jpg

oygateedat
2nd February 2014, 10:41 PM
http://i57.tinypic.com/oad4r6.jpg

http://i58.tinypic.com/4qq71t.jpg

oygateedat
2nd February 2014, 10:43 PM
http://i60.tinypic.com/2usv8ed.jpg

oygateedat
2nd February 2014, 10:44 PM
http://i59.tinypic.com/34hcoqw.jpg

oygateedat
2nd February 2014, 11:04 PM
இன்று கோவை டிலைட் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம் ரிக்ஷாக்காரன் திரைப்படத்தின் மாலைக்காட்சிக்கு குவிந்தனர் ரசிகர்கள். நிறைந்தது அரங்கு.

திரை அரங்கில் இருந்து அலைபேசித் தகவல் - திரு ஹரிதாஸ், கோயமுத்தூர்.

orodizli
2nd February 2014, 11:09 PM
இங்கு 1001 பெருமைமிகு பதிவுகளை அளித்த திரு லோகநாதன் அவர்களுக்கும், 251 பதிவுகளை வழங்கிய திரு யுகேஷபாபு அவர்களுக்கும் பாராட்டுக்கள் பல... வெற்றியின் எல்லையை பற்பல முறை தன வசமாக்கிய வேங்கமலை சிங்கம் திருப்பூர் விஜயம்- குறித்து தகவல் தந்த திரு ரவிச்சந்திரன் அவர்கள் பாராட்டுக்குரியவர்!!! மக்கள் திலகம் அவர்களின் புகழ் என்றென்றும் வளர்ந்து கொண்டே இருக்க புனித பணியாற்றுவோம்...

orodizli
2nd February 2014, 11:15 PM
கோவையில் ரிக்சாகாரன் அரங்கு நிறைந்தது மற்றும் திருப்பூரில் அடிமைப்பெண் வெற்றிநடை குறித்த விவரங்கள் நல்கிய ரவி சார் அவர்களுக்கு நன்றி... எப்பொழுதும் எம்.ஜி.ஆர்., அவர்கள் எங்கும் வியாபித்துள்ளார் - என்பது நமக்கு மனநிறைவை அளித்திடும்...

orodizli
2nd February 2014, 11:19 PM
mr. saileshbasu sir's clippings, songs of evergreen MGR., -are so sweet & cute... welldone sir...

ainefal
2nd February 2014, 11:29 PM
இன்று கோவை டிலைட் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம் ரிக்ஷாக்காரன் திரைப்படத்தின் மாலைக்காட்சிக்கு குவிந்தனர் ரசிகர்கள். நிறைந்தது அரங்கு.

திரை அரங்கில் இருந்து அலைபேசித் தகவல் - திரு ஹரிதாஸ், கோயமுத்தூர்.

The desire for gain was never the motive of the Super Cosmic Power, he always enjoys the praise of his devotees / fans without any false modesty. Thanks for the info. Ravichandran Sir.

Richardsof
3rd February 2014, 05:45 AM
இன்று அண்ணா அவர்களின் நினைவு தினம் .

வரலாற்று நாயகர் . திராவிட இயக்கத்தின் சிற்பி .

நினைவு நாளை முன்னிட்டு அவருடைய பெருமைகள் பற்றிய பதிவுகள் வழங்கிய நண்பர்களுக்கு நன்றி .
http://i58.tinypic.com/awet7a.jpg

Richardsof
3rd February 2014, 06:04 AM
http://youtu.be/HNKYJlrpXrc

Richardsof
3rd February 2014, 08:22 AM
comments portion - the hindu - nadodi mannan article.
Kulasekar Erk Former Indian Bank Branch Manager. at IndianBankfrom Sunnyvale

எம்.ஜி.ஆர் கூர்ந்த மதிநுட்பம் படைத்தவர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், நல்ல ரசிகர், நல்ல நடிகர், மிகச் சிறந்த தலைவர் இத்தனைக்கும் மேலாக ஒரு உயர்ந்த மனிதர். சத்துணவுத் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தியபோது மு க போன்ற எதிர்க்கட்சியினரின் கிண்டல் கேலிகளைப் பொருட்படுத்தாமல் அத்திட்டத்தை செவ்வனே நிறைவேற்றினார். இத்திட்டத்தின் பயனாக நமது மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் படித்தோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது கண்கூடு. 1980ல் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு உதவும் நல்ல திட்டத்தை கைவிட்டு மற்ற சாதாரண முதல்வர்கள் போல் புதிய வாக்குறுதிகளுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்து இறக்கும் வரை ஆட்சி செய்தார். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை இவையெல்லாம் கொண்டவர இங்கே எந்தத் தலைவருக்கும் தைரியம் இல்லை என்பது மட்டமான, குறுகிய கண்ணோட்டத்தையே காட்டுகிறது. உயர்ஜாதியில் பிறந்து வறுமையில் வாடும் குழந்தைகள் இன்று வரை நமது மட்டமான பழங்கால சட்ட நெறிமுறைகளால் பாதிக்கப்படுவதற்கு அவர்களின் உயர்ஜாதி பிறப்புதான் காரணம் என்பதற்கு யாரிடம் பதில் உள்ளதோ!
karthi from Namakkal

. "உழைப்பே உயர்வு தரும்" என்று தேர்தல் பணி புரிந்த எங்களுக்கு தன் கைப்படஎழுதிக் கொடுத்த அவரின் புகைப்படக்கடிதம் உள்ளது.உழைத்தார். உழைப்பவர்களை மதித்தார். அவர் உழைப்பிற்கு மக்கள் வழங்கிய பரிசு நாடோடிமன்னன் பெற்ற இன்று வரை ஒப்பிடமுடியாத வெற்றி.
subbu from Thornhill

ஆயிரம் தான் சொல்லுங்கள் மக்கள் திலகத்திற்கு ஈடு இணையாக நாம் காணவில்லை ஜனங்களை ஈர்க்கும் சக்கவர்த்தி பகைவரையும் அன்பினால் கட்டிப் போட்ட சக்கவர்த்தி அதனால் தான் இன்னும் அவர் கட்சிக்கு ஓட்டு..மொத்தத்தில் வசூல் சக்கவர்த்தி அது பணமாகட்டும் அன்பாகட்டும் ஜனத்திரள் ஆகட்டும்.. வாழ்க

saheed from Thornhill

இவரைப் பற்றி அறிய அறிய மலைப்பாகத்தான் இருக்கிறது

siqutacelufuw
3rd February 2014, 10:05 AM
நம் தெய்வத்தின் தெய்வத்துக்கு இன்று 44வது நினைவு நாள் !


தான் ஆரம்பித்த கட்சிக் கொடியில் காஞ்சி கரிபால்டி அண்ணா வின் திருவுருவம்.

கட்சியின் பெயரிலும் தென்னாட்டு காந்தி அண்ணா

கட்சிக் கொள்கைக்கு " அண்ணாயிசம்" .

தான் நிறுவிய கட்சியின் அதிகாரபூர்வ நாளேட்டின் பெயருக்கும் "அண்ணா"

தனது உரையின் முடிவில் "வாழ்க அண்ணா நாமம்"

இப்படி எல்லாவற்றிக்கும் பிரதானமாக பேரறிஞர் அண்ணா .அவர்களை முன்னிலைப்படுத்திய நம் புரட்சித் தலைவரின் புகழையும், பெருந்தன்மையின் சிகரமாம் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழையும் இப்புவியில் பரப்பும் புனிதப் பணியில் தொய்வில்லாமல் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று இந்த நாளில் உறுதியேற்போம். http://i59.tinypic.com/3359rgo.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd February 2014, 10:08 AM
http://i58.tinypic.com/kmdc3.jpg





ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd February 2014, 10:10 AM
http://i58.tinypic.com/25pu4yb.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd February 2014, 10:12 AM
http://i60.tinypic.com/2dihggi.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd February 2014, 10:13 AM
http://i59.tinypic.com/23qxpbk.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd February 2014, 10:48 AM
உலகின் அதிசயம் நம் ஒப்பற்ற தெய்வம் புரட்சித் தலைவரின்

புனிதப் பாசறையில் அணி வகுத்து அவரின் புகழ் பாடும் அன்பு சகோதரர் திரு. யூகேஷ் பாபு அவர்கள் அறிவது

இப்புவியில் எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ கதா பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர். ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள, நம்

தமிழக மக்கள், புரணாப் படங்கள், பக்திப்படங்கள் முதலானவற்றில், பெருமாளாகவும், சிவனாகவும், விஷ்ணுவாகவும், முருகராகவும், வினாயகராகவும், பிரம்மனாகவும், ஏசுவாகவும் நடித்த பல நடிகர்களை, வெறும் நடிகர்களாக மட்டுமே பார்த்தனர். ஆனால், திரைக்காவியங்களில் மட்டுமல்லாது, நிஜ வாழ்க்கையிலும் நம் மக்கள் திலகத்தை மட்டுமே , இருண்டு கிடக்கும் தங்களின் வாழ்க்கையின் ஒளிவிளக்காக, நம்பிக்கை நட்சத்திரமாக, பாதுகாவலாராக, குறை தீர்க்கும் இரட்சகனாக, கருதினர்.

உடனே, மாற்றுத் திரி அன்பர், ஆந்திர மாநிலத்தில் N.T.R. இருந்திருக்கிறாரே என்று ஒரு சப்பைக் கட்டு கட்டுவார். காங்கிரஸ் இயக்கத்துக்கு ஒரு மாற்று கட்சி இல்லையே என்ற ஏக்கத்தில் மக்கள் இருந்த காலத்தில் அவர் கட்சி ஆரபித்து, துவக்கத்தில் வெற்றி கண்டதென்னவோ உண்மை.

ஆனால் தொடர்ந்து நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், அவர் வெற்றி பெற முடியாமல் போன வரலாறு அந்த நண்பருக்கு தெரியுமோ தெரியாதோ ? அது அவருக்கே வெளிச்சம்.

அடுத்து அமெரிக்காவின் "ரொனால்ட் ரீகன்" ஐ உதாரணம் காட்டக் கூடும் . அவரின் கதையே வேறு !. அவர் முதன் முதலில் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக, குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தேடுக்கப்பட்டு, பின்னர் ஒரு கட்சி சார்பில்தான் அதிபர் ஆக முடிந்தது.

நமது வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்கள் கட்சியை ஆரம்பித்த போது, மாநிலத்தில் தி. மு. க. ஆட்சி ! மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ! இவ்விரு ஆட்சியாளர்களின் எதிர்ப்புக்களையும், அதிகார வர்க்கங்களினின் அடக்கு முறைகளையும் சமாளித்து சமாளித்து, தோல்விகளை எதிரிகளுக்கு பரிசளித்து தொடர்ந்து நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல்களில், ஒவ்வொரு முறையும் முன்னைக் காட்டிலும், அதிக சதவிகித வாக்குகள் பெற்று, எழுச்சி நாயகனாக வலுப்பெற்று ஒரு புதிய புரட்சியை தோற்றுவித்த பெருமை நம் பொன்மனசெம்மலுக்கு மட்டுமே உண்டு.

மறு வெளியீடுகளில், நம் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர்.அவர்களின் 100க்கும் மேலான காவியங்கள் சாதனை புரிந்து வருவதை ஜீரணிக்க முடியாத சிலர் விதண்டாவாதம் புரிவது, நன்கு புலப்படுகிறது.

சுமார் 11 வருட கால இடைவெளியில், நட்சத்திரப் பட்டாளம் கொண்ட, "டிஜிட்டல் முறையில்" வெளியிடப்பட்ட புராணப்படம், ஒரு காட்சி மட்டுமே அரங்குகளில் ஓடிய வரலாறு நமக்கும் தெரியும். இதையெல்லாம், மாற்றுத் திரியில், கண்ணியம் கருதி, நான் பதிவிடவில்லை என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

விரைவில், நம் கலை வேந்தன் காவியங்கள் சில, மறுவெளியீடுகளில் 400 காட்சிகள் மேல் தொடர்ந்து சென்னை மாநகரில் வெற்றிகரமாக ஓடியுள்ள விவரங்களை . பதிவிட உள்ளேன். இத்தனைக்கும் அந்த காவியங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் இடைவெளியில்லாமல் திரையிடப்பட்டுள்ளதையும் தாங்கள் அறிவீர்கள்.

எனவே, எவர் எப்படி வாதிட்டாலும், சாதனை சாதனை என்று கொக்கரித்தாலும், அது பற்றி கவலை கொள்ளாமால், தக்க பதிலடி அளித்து, என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற ரீதியில், குறுகிய காலத்தில் 250 பதிவுகளை கடந்துள்ளீர்கள் !

தங்களுக்கு, எனது உளங்ககனிந்த பாராட்டுக்கள் !


http://i59.tinypic.com/t6ytll.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
3rd February 2014, 12:58 PM
இன்று பெங்களுர் கன் ட்ரூப் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டு
மரியாதை செலுத்தினார்கள் .

நினைவுகள் .....38 ஆண்டுகள் முன்பு

1976 பிப் -3
மக்கள் திலகம் அவர்கள் அண்ணா நினைவு நாளில் பெங்களுர் - சிவில்
பகுதியில் உள்ள மைதானத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார் .

Richardsof
3rd February 2014, 01:42 PM
மாலை மலர் - சினி வரலாறு பகுதியில் மக்கள் திலகத்தின் சாதனைகள் பகுதியில் சில
தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளது .உதாரணம் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 100
நாட்கள் படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் . அதே போல இணய தளத்தில் மக்கள் திலகத்தை
பற்றிய சில பதிவுகளில் மிகைப்படுத்தியும் , சில தவறான தகவல்களும் இடம் பெற்றுள்ளன .

இலங்கையில் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு - காவல்காரன் இரண்டு படங்களும் மிகப்பெரிய
வெற்றி பெற்ற படங்கள் . ஒளிவிளக்கு 5 அரங்குகள் 100 நாட்கள் ஓடிய விளம்பரம் கிடைத்தவுடன்
இங்கு பதிவிடப்படும் .

தமிழத்தில் 100 நாட்கள் ஓடாத

ராமன் தேடிய சீதை

நாளை நமதே

படங்கள் இலங்கையில் 100 நாட்கள் மேல் ஓடி யுள்ளது.

Stynagt
3rd February 2014, 01:47 PM
மாலை மலர் - சினி வரலாறு பகுதியில் மக்கள் திலகத்தின் சாதனைகள் பகுதியில் சில
தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளது .உதாரணம் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 100
நாட்கள் படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் . அதே போல இணய தளத்தில் மக்கள் திலகத்தை
பற்றிய சில பதிவுகளில் மிகைப்படுத்தியும் , சில தவறான தகவல்களும் இடம் பெற்றுள்ளன .

இலங்கையில் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு - காவல்காரன் இரண்டு படங்களும் மிகப்பெரிய
வெற்றி பெற்ற படங்கள் . ஒளிவிளக்கு 5 அரங்குகள் 100 நாட்கள் ஓடிய விளம்பரம் கிடைத்தவுடன்
இங்கு பதிவிடப்படும் .

தமிழத்தில் 100 நாட்கள் ஓடாத

ராமன் தேடிய சீதை

நாளை நமதே

படங்கள் இலங்கையில் 100 நாட்கள் மேல் ஓடி யுள்ளது.

திரு. வினோத் சார். இலங்கையில் ஒளிவிளக்கு மறு வெளியீட்டிலும் நூறு நாள் ஓடி யாராலும் தகர்க்க முடியாத சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
3rd February 2014, 01:54 PM
http://i57.tinypic.com/154k6f9.jpg

மக்கள் திலகத்தின் ''நான் ஆண்யிட்டால் '' இன்று 48 ஆண்டுகள் நிறைவு நாள் .

4.2.1966 அன்று வெளிவந்த இனிய சித்திரம் .

மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு ..இனிய பாடல்கள் .

விறுவிறுப்பான காட்சிகள் - நேர்த்தியான திரைக்கதை -இயக்கம் .



http://youtu.be/xDy7Tgn0Hss

Stynagt
3rd February 2014, 01:54 PM
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் - நீதான் என் அரசியல் வாரிசு - அண்ணா

http://i60.tinypic.com/28837g4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
3rd February 2014, 02:35 PM
மக்கள் திலகத்தின் '' சங்கே முழங்கு '' 4.2.1972

இன்று 42 ஆண்டுகள் நிறைவு தினம் .

http://i61.tinypic.com/70if09.jpg

Richardsof
3rd February 2014, 02:38 PM
the super scenes and songs from sange muzhangu
http://youtu.be/pt2-8n47umQ

http://youtu.be/GUL62HGORog

Richardsof
3rd February 2014, 02:44 PM
most popular song- makkal thilagam in superb action . see and enjoy.- sange muzhangu
http://youtu.be/CJ-4MsxGPwY

ainefal
3rd February 2014, 02:54 PM
http://i61.tinypic.com/2u4k5c2.gif

http://i60.tinypic.com/28837g4.jpg

ainefal
3rd February 2014, 02:56 PM
http://i61.tinypic.com/20f7v2u.gif

http://i62.tinypic.com/3447dyx.jpg

Richardsof
3rd February 2014, 04:01 PM
http://i62.tinypic.com/sb58bs.png

Stynagt
3rd February 2014, 04:51 PM
http://i59.tinypic.com/rl040g.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
3rd February 2014, 04:53 PM
அருமைமிகு அண்ணன்கள்
http://i57.tinypic.com/2yood1e.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
3rd February 2014, 04:56 PM
பேரறிஞர் அண்ணாவின் உவமைத்திறன் ::

1964ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சட்ட எரிப்பு போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்று சென்னை சிறையில் இருந்தார். அப்போது, நம் மக்கள் திலகம் அவர்கள் சட்ட மேலவை உறுப்பினர் (M.L.C.) பதவியை துறந்தார்.

இது குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

" பட்டுப் புடவை" யின் வெளிப்புறத்திலே போடப்படும் சரிகையைனால் பட்டுப் புடவையின் மதிப்பு உயர்கிறதே, அதைப்போல் அவர் மதிப்பானவர். அவரால் கட்சிக்கு மதிப்பு உருவாகும் நிலையோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தனக்கே உரிய பாணியில், கூறினார்.


http://i62.tinypic.com/12574uo.png

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd February 2014, 05:06 PM
வைதவரையும் வாழ்த்திய பண்பு :

காஞ்சிபுரம் சட்டப்பேரவை தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் போட்டியிட்டபோது, மாற்றுக் கட்சியினர் அண்ணா அவர்களை இழித்தும், பழித்தும் சுவரில் எழுதி வைத்திருந்தனர். அதனை, தி.மு. க. வினர் அழிக்க முனைந்தனர். அப்போது, "அதை அழிக்காதீர்கள், அந்தச் சுவரெழுத்துக்கு அருகில் ஒரு "பெட்ரோமாக்ஸ்" விளக்கை வைத்து, "விளக்கு உபயம் ... அண்ணாதுரை " என்று எழுதி வையுங்கள் என்றார் அண்ணா அவர்கள். அவர் கூறியபடி கழகத்தவர்களும் செய்தனர். இதைக்கண்ட பிறகு சுவரில் எழுதியவர்களே வெட்கித் தலை குனிந்தனர்.


http://i59.tinypic.com/106fpxh.png

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Stynagt
3rd February 2014, 05:32 PM
ஆண்டுதோறும் உற்சவம் காணும் ஆண்டவன் -
- 02.02.2014 - 97th Birthday at Achchirupakkam
http://i58.tinypic.com/sfv3ts.jpg

நேற்று (02.02.2013) அச்சிறுப்பாக்கமே அசந்து போகும் வண்ணம் நம் ஆண்டவன் பிறந்த நாளை அட்டகாசமாய் கொண்டாடிய அருமை நண்பர் திரு. ராஜ்குமார் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அடியார்க்கு அடியார் என்பது போல் பக்தர்களுக்கெல்லாம் பக்தரான, இன்னும் சொல்லப்போனால் முரட்டு பக்தராக விளங்கும் திரு. ராஜ்குமார் அவர்கள் தலைவர் மேல் கொண்டுள்ள விசுவாசத்தையும், பக்தியையும் கண்டு அவ்விழாவிற்கு வந்தவர்கள் என்ன..அச்சிறுப்பாக்கமே வியந்தது உண்மை. அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த அந்த மெய்யன்பர் அளித்த அன்னதானத்தையும், நலத்திட்ட உதவிகளையும் இன்னும் அந்த கிராமம் மறந்திருக்க வாய்ப்பில்லை.
இத்தகைய அடியாரைக் கொண்ட நம் ஆண்டவனின் மகிமையை என்னென்று சொல்வது. உலகிலேயே வருடம்தோறும் பிறந்த நாள் கொண்டாடும் ஒரே தலைவர்.நம் புரட்சித்தலைவர் என்பதுதான் அதன் தனிச்சிறப்பு. வருகின்ற 09.02.2014 அன்று சர். பி.டி. தியாகராஜர் அரங்கில் எம்ஜிஆர் விழா...அதை அடுத்து திரு. ராஜ்குமார் அவர்கள் சென்னையில் மார்ச் மாதம் நடத்தப் போகும் திருவிழாவினைக் காண இன்றே தயாராகுங்கள். இத்திருவிழாவில் எம்ஜிஆர் பொதுநல சங்கத்திலிருந்து பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. லோகநாதன், திரு. ஹையாத், திரு. நாகராஜன், திரு. நசீர் ஆகியோர் பங்குகொண்டு சிறப்பித்தனர். அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்ற நம் ஆண்டவன் திருவிழா புகைப்படங்களை நம் ஆருயிர் நண்பர். திரு. லோகநாதன் அவர்கள் பதிவு செய்வார்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
3rd February 2014, 06:41 PM
Aayirathil Oruvan Trailer watched by ..8149..........till now within a very short time.


https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&ved=0CC0QtwIwAQ&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D87k 12cq5Pv8&ei=0pTvUseAK8P7rAea14CgBg&usg=AFQjCNElsfShFHfMcZJ9-Wmk-oyQNqCMwQ&bvm=bv.60444564,d.bmk

Russellisf
3rd February 2014, 07:16 PM
An interview with Latha, former MGR heroine-turned- politicia


https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=13&cad=rja&ved=0CGMQFjAM&url=http%3A%2F%2Fwww.rediff.com%2Fnews%2Fjul%2F15l atha.htm&ei=LJvvUq2YDMP3rQfbjYDAAQ&usg=AFQjCNG69oCq2YHiN8N0CV9Jb20W_eHWOQ

Russellisf
3rd February 2014, 07:20 PM
LOS ANGELS PAPER PUBLISH THALAIVAR DEATH MESSAGE


The World
December 24, 1987
Email
Share

India's M.G.R. Ramachandran, a former film star and the nation's best-known politician after Prime Minister Rajiv Gandhi, has died, the government said. He was 70. Doctors said that Ramachandran, chief minister of the southern Tamil Nadu state, died of a heart attack at his home in the southern city of Madras. Thousands of mourners gathered outside the home as news of his death spread. Ramachandran, known throughout India simply as "M.G.R.," had been leader of his party since rising to power in Tamil Nadu 10 years ago.


https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=20&cad=rja&ved=0CFsQFjAJOAo&url=http%3A%2F%2Farticles.latimes.com%2Fkeyword%2F m-g-r-ramachandran&ei=353vUoP_JYrTrQe4yoDAAw&usg=AFQjCNHHG2TnZ4prZTwrUUtLQ-mKAcYNOA

Richardsof
3rd February 2014, 07:55 PM
4.2.1985

மறுபிறவி கண்ட மக்கள் திலகம் தாயகம் திரும்பிய திருநாள் .

1984 அக்டோபரில் மக்கள் திலகம் உடல் பாதிக்கப்பட்ட நேரத்தில் தக்க நேரத்தில்
அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் செய்த மருத்துவ வசதிகள்
அயல்நாடு செல்ல தனி விமான உதவி மற்றும் மருத்துவர்களின் அபார சிகிச்சைகள்
கோடிக்கணக்கான மக்களின் பிராத்தனைகள் மூலம் மக்கள் திலகம் எமனை வென்று
புத்தம் புது பொலிவோடு மக்கள் திலகம் சென்னை திரும்பிய நாள் இன்று .

முதல் நாள் இரவே லட்ச்சக்கணக்கான மக்கள் பரங்கி மலை திடலில் கூடி கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விழித்திருந்து மக்கள் திலகத்தின் வருகைக்காக உறங்காமல் காத்திருந்தார்கள் .


ஒரு தலைவரை வரவேற்க இப்படி ஒரு மக்கள் வெள்ளம் கூடியது வரலாற்று சாதனை.

முதல்வராக அமெரிக்கா சென்றார் . முதல்வராக சென்னை திரும்பினார் . தலைவர்
இல்லாமல் தேர்தலில் வெற்றி கண்ட உலக அதிசயம் .

மறக்க முடியாத நாள் இன்று .
http://i62.tinypic.com/22dk61.jpg

Russellisf
3rd February 2014, 07:56 PM
தம்பி , எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் நாம் யாரும் அழைத்து நமது கழகத்தில் வந்து சேர்ந்தவர் அல்ல. அவர் மக்களின் அன்பைப் பெறுவதற்கு என்ன வழி என்று பல நாள் சிந்தித்து, மக்களுக்குப் பாடுபடும் கட்சி எது என்று ஆராய்ந்து கடைசி யில் நமது கழகத்தில் வந்து சேர்ந்தார். "

= அறிஞர் அண்ணா .

Russellisf
3rd February 2014, 07:58 PM
நமது இலட்சியம் அரசியல் வேட்டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதாதையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப்பது, அதுதான் நம்முடைய நோக்கம் ! "

## நம் உள்ளந்தோரும் வாழும்
அண்ணனின் நினைவு நாள் !

Russellisf
3rd February 2014, 08:17 PM
A INTERESTED ARTILE IN THE HINDU PAPER ABOUT OUR THALAIVAR

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=68&cad=rja&ved=0CE8QFjAHODw&url=http%3A%2F%2Fwww.hindu.com%2F2011%2F05%2F30%2F stories%2F2011053061850400.htm&ei=VKvvUrWkNcG5rgePlICwDg&usg=AFQjCNEpScmFv1fiDDMqbdr5ceZACS7qSw

oygateedat
3rd February 2014, 08:37 PM
http://i57.tinypic.com/iokoe9.jpg

http://i57.tinypic.com/9jm45f.jpg

http://i59.tinypic.com/72b0n4.jpg

Russellisf
3rd February 2014, 09:13 PM
1989 தலைவர் மறுவெளியிடு செய்த படங்களின் பட்டியல் ( மவுண்ட் ஏரியா மட்டும் )

06.01.89 பிள சா மர்மயோகி 3 காட்சிகள்
06.01.89 பைலட் எங்க வீடு பிள்ளை 3 காட்சிகள்
06.01.89 பாரகன் படகொட்டி 3 காட்சிகள்
06.01.89 பாரகன் என் கடமை noon show
13.01.89 சித்ரா பாசம் 3 காட்சிகள்
13.01.89 சித்ரா நான் ஆணையிட்டால் 3 காட்சிகள்
20.01.89 சித்ரா நம் நாடு 3 காட்சிகள்
27.01.89 சித்ரா தாயின் மடியில் பகல் காட்சி
27.01.89 பாரகன் மாட்டுகார வேலன் 3 காட்சிகள்

17.02.89 பாரகன் ரிக்க்ஷா காரன் 3 காட்சிகள்
03.03.89 பாரகன் ஒரு தாய் மக்கள் 3 காட்சிகள்
10.03.89 பாரகன் தனிப்பிறவி 3 காட்சிகள்
10.03.89 பைலட் காலத்தை வென்றவன் 4 காட்சிகள்
17.03.89 பிள சா குமரிகோட்டம் 3 காட்சிகள்
24.03.89 பிள சா பணம் தோட்டம் 3 காட்சிகள்
14.04.89 பாரகன் சிரித்து வாழ வேண்டும் 3 காட்சிகள்
21.04.89 பாரகன் இதய வீணை 3 காட்சிகள்
05.05.89 பாரகன் தாயை காத்த தனயன் 3 காட்சிகள்
12.05.89 பிள சா இதய கனி 3 காட்சிகள்
19.05.89 ஸ்டார் அன்பே வா பகல் காட்சி
நாளை தொடரும் .,,

Russellbpw
3rd February 2014, 09:21 PM
[COLOR="#FF0000"]1989 தலைவர் மறுவெளியிடு செய்த படங்களின் பட்டியல் ( மவுண்ட் ஏரியா மட்டும் )


13.01.89 சித்ரா பாசம் 3 காட்சிகள்
13.01.89 சித்ரா நான் ஆணையிட்டால் 3 காட்சிகள்



/COLOR]

How the above is possible? copy paste error?

oygateedat
3rd February 2014, 09:36 PM
http://i62.tinypic.com/2wcnzwn.jpg

oygateedat
3rd February 2014, 09:37 PM
http://i57.tinypic.com/2hdnzhs.jpg

oygateedat
3rd February 2014, 09:39 PM
http://i58.tinypic.com/ixcy38.jpg
http://i58.tinypic.com/2z4lj4z.jpg
http://i58.tinypic.com/1hr18p.jpg

ainefal
3rd February 2014, 09:49 PM
1989 தலைவர் மறுவெளியிடு செய்த படங்களின் பட்டியல் ( மவுண்ட் ஏரியா மட்டும் )

06.01.89 பிள சா மர்மயோகி 3 காட்சிகள்
06.01.89 பைலட் எங்க வீடு பிள்ளை 3 காட்சிகள்
06.01.89 பாரகன் படகொட்டி 3 காட்சிகள்
06.01.89 பாரகன் என் கடமை noon show
13.01.89 சித்ரா பாசம் 3 காட்சிகள்
13.01.89 சித்ரா நான் ஆணையிட்டால் 3 காட்சிகள்
20.01.89 சித்ரா நம் நாடு 3 காட்சிகள்
27.01.89 சித்ரா தாயின் மடியில் பகல் காட்சி
27.01.89 பாரகன் மாட்டுகார வேலன் 3 காட்சிகள்

17.02.89 பாரகன் ரிக்க்ஷா காரன் 3 காட்சிகள்
03.03.89 பாரகன் ஒரு தாய் மக்கள் 3 காட்சிகள்
10.03.89 பாரகன் தனிப்பிறவி 3 காட்சிகள்
10.03.89 பைலட் காலத்தை வென்றவன் 4 காட்சிகள்
17.03.89 பிள சா குமரிகோட்டம் 3 காட்சிகள்
24.03.89 பிள சா பணம் தோட்டம் 3 காட்சிகள்
14.04.89 பாரகன் சிரித்து வாழ வேண்டும் 3 காட்சிகள்
21.04.89 பாரகன் இதய வீணை 3 காட்சிகள்
05.05.89 பாரகன் தாயை காத்த தனயன் 3 காட்சிகள்
12.05.89 பிள சா இதய கனி 3 காட்சிகள்
19.05.89 ஸ்டார் அன்பே வா பகல் காட்சி
நாளை தொடரும் .,,

Thanks Yukesh Babu Sir,

Though I did not find enough time to go through your postings in detail, I assure you that it is instructive.

oygateedat
3rd February 2014, 10:12 PM
http://i61.tinypic.com/rh1v2c.jpg

ujeetotei
3rd February 2014, 10:16 PM
Today MGR's Mentor Death Anniversary and an article about the remembrance by MGR Devotee Sathya.

http://mgrroop.blogspot.in/2014/02/mentors-remembrance.html

orodizli
3rd February 2014, 10:22 PM
இன்று மறைந்த அறிந்ஞர் அண்ணாதுரை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு நமது திரியில் திரு ரவிச்சந்திரன் மக்கள் திலகம் அவர்கள் அரசியல் உலகில் உச்சத்தை காணும் முன்னரே அண்ணா பேசிய தொகுப்பில் இருக்கும் ஆணித்தரமான உண்மைகள் நடந்த, நடந்து கொண்டிருக்கும் நடப்புகளை எவ்வளவுஇருந்திருந்தால் எப்படியெல்லாம் பாராட்டி இருப்பார்?! அழகாக கூறியுள்ளார் பாருங்கள்!!!!!! அதற்கும் பின்னர் புரட்சி நடிகர், புரட்சி தலைவராக உயர்ந்த விஷயத்தை அண்ணா இருந்திருந்தால் ...

siqutacelufuw
3rd February 2014, 10:27 PM
பேரறிஞர் அண்ணா அவர்களின் 44வது நினைவு நாளினையொட்டி, " இறைவன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் குழு " வுடன் இணைந்து " அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல நல சங்கம், அச்சடித்த சுவரொட்டி :

http://i58.tinypic.com/25rcxp0.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
3rd February 2014, 10:30 PM
தமிழர் மானம் காத்த தங்கத் தலைவர் :

1967ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் நாள், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சுமரியாதை திருமண முறையைச் செல்லத்தக்கதாக ஆக்க சட்டமன்றத்தில் சட்ட முன் வரைவு கொண்டு வந்து சட்டம்மாக்கினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். இதற்கு முன்பு நடைபெற்ற எல்லா சீர்திருத்த திருமணங்களையும் செல்லத்தக்கதாக ஆக்கினார். இது மிகப்பெரிய பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும். ஏனெனில், இழிவு படுத்தப்படக்கூடிய முறையில் உள்ள வைதீக சடங்குத் திருமணத்தை தவிர்த்து முற்போக்காக தமிழ் மரபுத் திருமணம் செய்து கொண்டவர் பலர். சொத்து முதலான வழக்குகளிலும் பிற சிக்கல்களிலும் இத்தகைய திருமணங்கள் செல்லுபடி ஆகாதவை என்பதன் அடிப்படையில் மிகுந்த தொல்லைக்கு ஆளாயினர். இதற்காகப் பலர் சீர்திருத்த திருமணங்கள் செய்து கொள்வதில் தயக்கம் காட்டினர். அண்ணா அவர்களின், இந்த அருஞ்செயலால் தமிழர் மானம் காக்கப்பட்டது.

http://i62.tinypic.com/dtcua.png

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
3rd February 2014, 10:32 PM
http://i57.tinypic.com/iokoe9.jpg

http://i57.tinypic.com/9jm45f.jpg

http://i59.tinypic.com/72b0n4.jpg

Thanks very much for the images Ravichandran Sir.

ainefal
3rd February 2014, 10:36 PM
http://i61.tinypic.com/i52fq8.gif


http://www.youtube.com/watch?v=-HusYGrbnDY

ainefal
3rd February 2014, 10:50 PM
http://i58.tinypic.com/dcg6ly.gif

https://www.youtube.com/watch?v=f8q_48a4U0M

fidowag
3rd February 2014, 10:59 PM
4.2.1985

மறுபிறவி கண்ட மக்கள் திலகம் தாயகம் திரும்பிய திருநாள் .

1984 அக்டோபரில் மக்கள் திலகம் உடல் பாதிக்கப்பட்ட நேரத்தில் தக்க நேரத்தில்
அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் செய்த மருத்துவ வசதிகள்
அயல்நாடு செல்ல தனி விமான உதவி மற்றும் மருத்துவர்களின் அபார சிகிச்சைகள்
கோடிக்கணக்கான மக்களின் பிராத்தனைகள் மூலம் மக்கள் திலகம் எமனை வென்று
புத்தம் புது பொலிவோடு மக்கள் திலகம் சென்னை திரும்பிய நாள் இன்று .

முதல் நாள் இரவே லட்ச்சக்கணக்கான மக்கள் பரங்கி மலை திடலில் கூடி கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விழித்திருந்து மக்கள் திலகத்தின் வருகைக்காக உறங்காமல் காத்திருந்தார்கள் .


ஒரு தலைவரை வரவேற்க இப்படி ஒரு மக்கள் வெள்ளம் கூடியது வரலாற்று சாதனை.

முதல்வராக அமெரிக்கா சென்றார் . முதல்வராக சென்னை திரும்பினார் . தலைவர்
இல்லாமல் தேர்தலில் வெற்றி கண்ட உலக அதிசயம் .

மறக்க முடியாத நாள் இன்று .
http://i62.tinypic.com/22dk61.jpg
நண்பர் வினோத் அவர்களே,
இந்த செய்தி/புகைப்படத்தினை பதிவு செய்ததற்கு நன்றி. ஏனெனில் ,
03/02/85 அன்று இரவே நானும்,திரு.பெருமாள் (யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ) மற்றும் பலர் பரங்கிமலை மைதானத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அடுத்த நாள் தலைவரின் வருகைக்காக காத்திருந்தோம். அன்று இரவு அடிமைப்பெண்,உலகம் சுற்றும் வாலிபன் ,பெரிய இடது பெண் மற்றும் 2 படங்கள் மைதானத்திலேயே மொத்தம் 5 ஸ்க்ரீன்கள் அமைக்கப்பட்டு திரையிடப்பட்டன. லட்சகணக்கான மக்கள் கூடியிருந்தனர். கண்கொள்ளா காட்சி. பசுமையான நினைவலைகள்.

ஆர். லோகநாதன்.

fidowag
3rd February 2014, 11:04 PM
http://i58.tinypic.com/ajs1w1.jpg

திரு.மணவை பொன்.மாணிக்கம் அவர்கள் எழுதிய புரட்சி தலைவர்
எட்டாவது வள்ளல் நூல் பற்றிய விமர்சனம் , இந்த வார சினிமா
எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்துள்ளது. இது நமது திரி நண்பர்களுக்காக.

ஆர். லோகநாதன்.

fidowag
3rd February 2014, 11:09 PM
மறைந்த நடிகை அஞ்சலிதேவி அவர்களுக்கு அஞ்சலி செய்தி ,இந்த வார சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியானது .அவர் தென்னிந்திய
நடிகர் சங்க தலைவராக இருந்தபோது ,புரட்சி தலைவரின் ஆலோசனையின் பேரில் நடிகர் சங்க லோகோவை அமைத்தார்.
அது பற்றிய செய்தி விளக்கம் கீழே காண்க

ஆர். லோகநாதன்.

http://i59.tinypic.com/2zrg7k8.jpg

Richardsof
4th February 2014, 05:29 AM
மக்கள் திலகத்தின் வெற்றி படிக்கட்டுகள் '

1944 - தமிழ் திரை உலகில் அறிமுகமான நாடக நடிகர் .

1954- தமிழ் திரை உலகில் மலைக்கள்ளன் மூலம் புகழ் பெற்ற இந்திய நடிகர் .

1964- தமிழ் திரை உலகில் புரட்சி நடிகர் - வசூல் மன்னன் .

1974- தமிழ் திரை உலகில் ''பாரத் '' எம்ஜிஆர் . அரசியல் உலகில் புரட்சித்தலைவர் .

1984- முப்பிறவி கண்ட எம்ஜிஆர் . மும்முறை முதல்வர் எம்ஜிஆர் .

1994- தமிழகத்தை ஆண்ட மக்கள் திலகத்தின் இயக்கம் .

2004- தமிழகத்தை ஆண்ட மக்கள் திலகத்தின் இயக்கம் .

2014- தமிழகத்தை ஆண்டு வரும் மக்கள் திலகத்தின் இயக்கம் .

ஒரு தனி மனிதரின் அபார வளர்ச்சி அவரது மறைவிற்கு பின்னரும் தொடர்வது

உலக வரலாற்றில் மக்கள் திலகம் ஒருவரின் சாதனை -உலகமே வியக்கிறது .

1944-2014
http://i57.tinypic.com/2e2f9qq.jpg
70 ஆண்டுகள் திரை உலகிலும் - அரசியல் உலகிலும் - மக்கள் மனங்களிலும் மக்கள்

திலகம் எம்ஜிஆர் இன்னும் வாழ்ந்து கொண்டு வருகிறார் என்றால் அவருடைய

மனித நேயம்

திரை உலகில் அவர் உண்டாக்கிய சாதனைகள்

அரசியலில் புரட்சிகள்

அரசியல் வெற்றிகள் என்று பிரமிக்க வைத்த எம்ஜிஆரின் முன்னேற்றம் .

உண்மையிலே ''அவர் ஒரு சரித்திரம் ''

Richardsof
4th February 2014, 05:51 AM
1947-1958.
எம்ஜிஆரின் கலை உலக பயணம் .

ராஜகுமாரி
மருத நாட்டு இளவரசி
மந்திரிகுமாரி
மர்மயோகி
சர்வதிகாரி
மலைக்கள்ளன்
குலேபகாவலி
மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்
புதுமைபித்தன்
மகாதேவி
ராஜராஜன்
நாடோடி மன்னன்
அலிபாபாவும் 40 திருடர்களும் .
என்தங்கை
தாய்க்கு பின் தாரம் .
http://i59.tinypic.com/k3b2o8.jpg
மேற்கண்ட படங்களில் மக்கள் திலகத்தின் எழில் மிகு நடிப்பு - வாள் வீச்சு -
பாடல்கள் - புரட்சி கருத்துக்கள் - சமுதாய முன்னேற்ற அறிவுரைகள் - என்று
மக்களின் முன்னேற்ற வழி கூறிய படங்கள் .

எம்ஜிஆர் ரசிக பட்டாளங்கள் உருவாக காராணமாக இருந்த படங்கள் . அன்று தொடங்கிய அவருடைய மன்ற ரசிகர்களின் எண்ணிக்கை ஆயிரமாக தோன்றி
லட்சமாக வளர்ந்து இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளார்கள் என்றால் அதற்கு அடிப்படை காரணம் மேற்கண்ட படங்கள் என்பது புரிகிறது .

fidowag
4th February 2014, 07:30 AM
http://i60.tinypic.com/1552yap.jpg
http://i58.tinypic.com/2uo6osl.jpg
http://i57.tinypic.com/24zzjtt.jpg
http://i58.tinypic.com/1o2m1l.jpg

fidowag
4th February 2014, 07:36 AM
http://i59.tinypic.com/5qvpv.jpg

இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார் அவர்கள், அச்சிறுபாக்கம், அருகே உள்ள குக்கிராமத்தில் ,சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் , சொல்லொன்னா பல சிரமங்களுக்கு இடையில் மிக மிக மிக சிறப்பாக,புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாளை ஞாயிறு அன்று (02/02/2014)கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு முன்பாகவே சுமார் 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் திலகத்தின் பேனர்கள் நெடுஞ்சாலையை அலங்கரித்தன.கட்சி கொடிகள் கட்டபட்டிருந்தன.மேடைக்கு அருகே
புரட்சி நடிகர் ,பொன்மனச்செம்மல்,கலை வேந்தன், நடிக மன்னனின் பேனர்கள் மலை போல் நிறுத்தப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன.

குக்கிராமத்தின் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான தாய்மார்கள்,
கழக தொண்டர்கள் ,ரசிகர்கள்/பக்தர்களால் நிகழ்ச்சி களை கட்டியது .

நிகழ்ச்சி நடைபெற்ற இடம்.:தேன்பாக்கம் , அண்ணா நகர்,அச்சிறுபாக்கம்.

சிறப்பு அழைப்பாளர்கள்: திரு.தமிழ் மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்),திரு.சிட்லபாக்கம் ராஜேந்திரன் (எம்.பி ).
திரு. டி.கே.எம். சின்னையா,(கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் ) , திரு.வி .எஸ்.ராஜு, (செய்யூர், எம்.எல்.ஏ ) , விழுப்புரம் திரு.செல்வராஜ் (ஜெயா டிவி புகழ்)

மாவட்ட கழக நிர்வாகிகள்,சித்தாமூர் ஒன்றிய பொறுப்பாளர்கள்,
சித்தாமூர் ஒன்றிய அனிசெயலாலர்கள் .ஒன்றிய குழு உறுப்பினர்கள்,
ஊராட்சி மன்ற தலைவர்கள், சித்தாமூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற
நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், பேரூராட்சி நிர்வாகிகள்,
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி , மகளிர் அணி, மாணவர் அணி, விவசாய பிரிவு, சிறுபான்மை பிரிவு ,மீனவர் பிரிவு போன்றவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் திருவாளர்கள் பாண்டியன், ரவிகுமார், சச்சிதானந்தம், திருமதி வசந்தா மற்றும் பலரும்
அனைத்துலக பொது நல சங்கத்தை சார்ந்த திரு.செல்வகுமார் (செயலாளர்) திரு ஹயாத் (மன்ற காப்பாளர்) திரு.லோகநாதன் (இணை செயலாளார் ), உறுப்பினர்கள் திருவாளர்கள் நாகராஜன் (எம்.டி.சி.)
பி.ஜி.சேகர், நசீர் , புதுவை திரு.கலியபெருமாள் ஆகியோர் முக்கிய
பங்கேற்று சிறப்பித்தனர்.

மாலை 6 மணி அளவில் பட்டி மன்றத்தை விழுப்புரம் திரு.செல்வராஜ் அவர்கள் தொடங்கி சுமார் 3 மணி நேரம் வரை, புரட்சி தலைவரின் அருமை/பெருமைகள்/பாடல்கள்,தி.மு.க. மற்றும் தே தி. மு க. பற்றி
அவ்வப்போது நையாண்டித்தனம் என்று பொழுது போவது தெரியாத
அளவிற்கு செவிக்கு விருந்தளித்தார்.

நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவருக்கும், தேனீர் அளிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் வரும் போதெல்லாம், பட்டாசுகள் வெடிக்கப்பட்டு ,ஆரத்தி எடுக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது சிறப்பு விருந்தினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் முக்கிய பிரமுகர்கள், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க நிர்வாகிகள்/உறுப்பினர்கள் புதுவை திரு.கலிய பெருமாள் ஆகியோருக்கு புரட்சி தலைவர் உருவம் பொருந்திய புகைப்படங்கள் லேமினேட் செய்யப்பட்டு பரிசாக் வழங்கப்பட்டது.

100க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு இலவச சேலைகளும் ,அசைவ பிரியாணி பாகெட்களும் வழங்கப்பட்டன. வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி பொட்டலங்கள் கொடுக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களுக்கும் விழா முடிந்ததும் இரவு விருந்தளிக்கபட்டது. நெடுஞ்சாலை முழுதும், பொது மக்கள் வேடிக்கை பார்க்கும் வண்ணம் பெருங்கூட்டம் கூடி இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு சிறப்பான நிகழ்ச்சியை (புரட்சி தலைவரின் பிறந்த நாளை) ஏற்பாடு செய்த திரு.எஸ். ராஜ்குமார் அவர்களின் கடின உழைப்பு ,அதுவும் தனி ஒரு மனிதனாக பல இன்னல்களுக்கு இடையில் ,அந்த குக்கிராமத்தில் நடந்தது என்றால் ,புரட்சி தலைவருக்காக தன் உடல், பொருள், திறமை,குடும்பம் அனைத்தையும் பணயம் வைத்து செய்து காட்டியது மிகவும் பாராட்டத்தக்கது. அசாத்தியமான துணிச்சலகாரர்.
இறுதியாக திரு.ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினரும் ,எதையும் பொருட்படுத்தாமல்,அவருக்கு தோளோடுதோள் நின்று நடுநிசி வரை
அவருக்கு உதவி செய்து விழா இனிதே வெற்றி பெற அரும்பாடுபட்டனர்.
புரட்சி தலைவரின் புகழை வளர்த்திட , கடும் உழைப்பை சிந்திய
திரு.எஸ். ராஜ்குமார அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து சிறக்க வேண்டும்
என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அன்னாருக்கு நன்றிகள் கோடி.

ஆர். லோகநாதன்.

fidowag
4th February 2014, 07:49 AM
http://i61.tinypic.com/1y8hvb.jpg

fidowag
4th February 2014, 07:53 AM
http://i61.tinypic.com/25atcop.jpg

fidowag
4th February 2014, 08:00 AM
http://i62.tinypic.com/1z5q71e.jpg

fidowag
4th February 2014, 08:05 AM
http://i58.tinypic.com/2h4kfm1.jpg

fidowag
4th February 2014, 08:09 AM
http://i60.tinypic.com/2ntk6s3.jpg

fidowag
4th February 2014, 08:13 AM
http://i62.tinypic.com/301it0l.jpg

fidowag
4th February 2014, 08:17 AM
http://i58.tinypic.com/116hlwl.jpg

இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க இணை செயலாளர் திரு.லோகநாதன்,செயலாளர் திரு.செல்வகுமார் ,உறுப்பினர் திரு..பி.ஜி.சேகர், திரு.நாகராஜன் ,திரு.நசீர் மற்றும் எம்.ஜி.ஆர். பக்தர்.
ஆகியோர்.

fidowag
4th February 2014, 08:21 AM
http://i59.tinypic.com/2z6xkr6.jpg

fidowag
4th February 2014, 08:25 AM
http://i58.tinypic.com/1zmmh3d.jpg

fidowag
4th February 2014, 08:29 AM
http://i58.tinypic.com/24y1b9s.jpg

fidowag
4th February 2014, 08:35 AM
http://i58.tinypic.com/2elvx4l.jpg

திரு.ராஜ்குமாரின் உறவினர்கள் ,ஜெயா டிவி புகழ் விழுப்புரம் திரு.செல்வராஜ் ,திரு.ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு தலைவர்) ,திரு. லோகநாதன், பேராசிரியர்திரு .செல்வகுமார்,திரு.பி.ஜி.சேகர் ,திரு.கலியபெருமாள் (புதுவை ),திரு. நாகராஜன், திரு. நசீர். ஆகியோர்.

Richardsof
4th February 2014, 12:22 PM
1950- 1958 கால கட்டத்தில் வெளியான

மக்கள் திலகத்தின் படங்களையும் , அவருடைய நடிப்பையும் , ரசிகர்களையும் மிகவும் தரம் தாழ்த்தி
விமர்சனம் செய்த பத்திரிகைகள் ஏராளம் . எம்ஜிஆர் ரசிகர்கள் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்கள் -என்றும் உயர் தர ரசிகர்கள் இல்லை என்றும் வாதிட்டார்கள் .

நாடோடி மன்னன் படத்திற்கு கிடைத்த இமாலய வெற்றிக்கு பிறகு பலரின் கண்கள் திறந்தது .
பலரும் எம்ஜிஆரை சிறந்த நடிகர் - சிறந்த தயாரிப்பாளர் - சிறந்த இயக்குனர் - சிறந்த பண்பாளர்
என்று ஏற்று கொண்டார்கள் .

ஒரு சிலர் எம்ஜிஆரை விரும்பாதவர்கள் , அவருடைய வெற்றி - புகழை ஏற்காதவர்கள் பல்வேறு
எதிர்ப்பை தெரிவித்த நிலையில் மக்கள் திலகத்தின் கால் ஒடிந்த சம்பவம் அவர்களுக்கு இனிப்பாக
இருந்தது . முடிந்தது எம்ஜிஆர் கதை என்று மகிழ்ந்தார்கள் .

எம்ஜிஆரின் விஸ்வரூபம்
*********************************************

1960 துவக்கத்தில் எம்ஜிஆர் தான் ஒரு சமூக படங்களிலும் ஜொலிக்க முடியும் என்று நிருபித்து காட்டி முந்தய சமூக படங்களில் கிடைத்த வரவேற்புகளுக்கு மத்தியில் தன்னாலும் வெற்றி படங்களை கொடுக்க முடியும் என்று சிறப்பாக நடித்து வெற்றி கொடி நாட்டியவர் எம்ஜிஆர் .

பாமர மக்களின் நடிகர் என்று அந்தஸ்தை பெற்றாலும் தன்னுடைய தொடர் வெற்றி படைப்புகள்
மூலம் எல்லா தரப்பு ரசிகர்களின் ஆதரவை பெற்றார் .

மன்னாதி மன்னன் -1960
************************************************** ***

திருடாதே - 1961
*************************************************

தாயை காத்த தனயன் - 1962
**************************************************

பெரிய இடத்து பெண் -1963
************************************************** ********

பணக்கார குடும்பம் -1964
************************************************** **************

எங்க வீட்டு பிள்ளை - 1965
************************************************** ********************************************
அன்பே வா- 1966
************************************************** ******
காவல்காரன் -1967
************************************************** ****************
குடியிருந்த கோயில் -1968
************************************************** *************************
அடிமைப்பெண் -1969
************************************************** ********************************
மாட்டுக்கார வேலன் -1970
************************************************** *********************************
ரிக்ஷாக்காரன் -1971
************************************************** ******************************************

நல்ல நேரம் -1972
**********************************************

உலகம் சுற்றும் வாலிபன் -1973
************************************************** ********************************************

உரிமைக்குரல் -1974
************************************************** ********************************************

இதயக்கனி -1975
************************************************** ********************************************


. எம்ஜிஆர் படங்கள் உருவாக்கிய பல சாதனைகள் எண்ணிலடங்கா . மக்கள் திலகத்தின் ரசிகர்கள் உலகம் முழுவதும் எல்லா தரப்பு மொழி பேசும் ரசிகர்களாக , இன்றும் அவர் நினைவாக அவரை போற்றி
வருவது ''நாளைய உலக சரித்திரத்தில் '' நிச்சயம் இடம் பெற்று வரலாறு ஆகும் அளவிற்கு பெருமை பெற்றவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் என்பதை மக்கள் அறிவார்கள் .

Richardsof
4th February 2014, 03:40 PM
http://i57.tinypic.com/a4wv94.jpg

Richardsof
4th February 2014, 03:41 PM
MAKKAL THILAGAM WITH MRS SUBBULAKSHMI

http://i61.tinypic.com/33azaj7.jpg

Richardsof
4th February 2014, 03:42 PM
RARE STILL
http://i57.tinypic.com/nlrebk.jpg

Stynagt
4th February 2014, 04:54 PM
பச்சப்புள்ளைக்கு கூட அவர்போல மனசு இருக்காதுடா - நாகேஷ்

http://i59.tinypic.com/2lc7ij8.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
4th February 2014, 05:41 PM
[QUOTE=ravichandrran;1111200]http://i57.tinypic.com/iokoe9.jpg

http://i57.tinypic.com/9jm45f.jpg

அன்பு சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது

மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மனித நேய மன்ற கோவை மாவட்ட செயலாளர் திரு. வி. பி. ஹரிதாஸ் அவர்களின் அன்பு மகள் செல்வி தீபிகா திருமணத்தில், என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது துரதிருஷ்டவசமானது.

சென்னையில் அன்றைய தினம் எனது அருமை சகோதரன் ஓட்டேரி சத்யா ஏற்பாடு செய்திருந்த நம் புரட்சித் தலைவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்த காரணத்தால் நேரில் வந்து வாழ்த்துக்கள் கூற முடிய வில்லை.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ, ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.அவர்களின் ஆசியுடன் வாழ்த்துகிறேன்.
மணமக்களுக்கு அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும் !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
4th February 2014, 05:43 PM
இன்று 35வது மணநாள் காணும் எங்கள் இனிய சகோதரரும், மக்கள் திலகத்தின் மூத்த அன்பரும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் ஆலோசகருமான பெங்களூர் .திரு. சி. எஸ். குமார் அவர்களுக்கு இத்திரி அன்பர்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

http://i60.tinypic.com/28hzi4m.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
4th February 2014, 05:51 PM
இத்திரியினை மின்னல் வேகத்தில் கொண்டு செல்லும் .......

ஒவ்வொரு வருடமும் வரும் குறிப்பிட்ட நாட்களை நினைவு கூர்ந்து, அது தொடர்பான, நம் பொன்மனசெம்மலின் பட செய்திகளையும், இதர தகவல்களையும் அளித்து வரும் சகோதரர் திரு. வினோத்,

கோவை மாவட்டத்தில் மட்டுமல்லாது, சுற்றியுள்ள மாவட்டங்களிலும் சாதனை புரிந்து வரும் நம் மக்கள் திலகத்தின் காவியங்கள பற்றிய
பல்வேறு தகவல்களையும், வசூல் விவரங்களையும், மற்ற செய்திகளையும், பதிவிட்டு வரும் சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன்,

வாதம் புரிவோரை வார்த்தைகளால் வாட்டி எடுத்து, தக்க ஆதாரத்துடன் புரட்சித்தலைவர் பற்றிய சில புதுபுது செய்திகளை பதிவிட்டு,வரும் சகோதரர் திரு. புதுவை கலியபெருமாள்,

அதிக நிழற்படங்களையும், ஊடக செய்திகளையும், இத்திரியினில் பிரசுரித்து பிரமிப்பை ஏற்படுத்தி வரும் என் அன்பு சகோதரரும், அனைத்துலக எம்.ஜி. ஆர். .பொது நல சங்கப் பணிகளில் என்னுடன் இணைந்து சேவை புரிந்து வரும் சங்கத்தின் இணை செயலாளர் திரு. லோகநாதன்,

அடிக்கடி பதிவுகளை வழங்காவிட்டாலும், அவ்வப்போது முத்தான பதிவுகளை வழங்கி தனிக்கவனத்தை ஈர்த்து வரும் சகோதரர் திரு. சேலம் ஜெயசங்கர்,

குறுகிய காலத்தில் வேகமான பதிவுகளை வழங்கி சிறப்பு சேர்த்து வரும் யூகேஷ்பாபு,

மற்றும் திருவாளர்கள் ரூப்குமார், சுகராம், வேலூர் ராமமூர்த்தி சைலேஷ் பாசு, பிரதீப் பாலு உள்ளிட்ட இத்திரியின் அனைத்து பதிவாளர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றி !



http://i62.tinypic.com/2d6lao5.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ.செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
4th February 2014, 07:20 PM
http://i62.tinypic.com/24wwoqw.jpg

இன்று 35 வது திருமண நாள் காணும் திரு.சி.எஸ்.குமார் -திருமதி பிரேமா தம்பதியர் இன்று போல் என்றும் வாழ்க, உடல் நலமும்,வளமும் பெற்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நல்லாசியுடன்
பல்லாண்டு வாழ்க என அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்
சார்பாக அன்பான வாழ்த்துதல்கள்.

ஆர். லோகநாதன்.

fidowag
4th February 2014, 07:31 PM
http://i59.tinypic.com/2nhgjr7.jpgஅச்சிறுபாக்கம்- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா தொடர்ச்சி.
--------------------------------------------------------------------------------------------------------------

விழா மேடை அருகே , அனைவரையும் வரவேற்கும் வகையில்
இரட்டை இலை கோலம் போடப்பட்டுள்ளது.

fidowag
4th February 2014, 07:38 PM
http://i59.tinypic.com/2a0ls1k.jpg

fidowag
4th February 2014, 07:44 PM
http://i59.tinypic.com/2h33s6r.jpg

fidowag
4th February 2014, 07:50 PM
http://i57.tinypic.com/35lybtt.jpg

fidowag
4th February 2014, 07:55 PM
http://i61.tinypic.com/2euo56r.jpg

fidowag
4th February 2014, 08:06 PM
http://i60.tinypic.com/2wp6red.jpg

fidowag
4th February 2014, 08:07 PM
http://i62.tinypic.com/2dmjvl.jpg

fidowag
4th February 2014, 08:20 PM
http://i59.tinypic.com/wtubkn.jpg

fidowag
4th February 2014, 08:22 PM
http://i60.tinypic.com/2meyikw.jpg

fidowag
4th February 2014, 08:26 PM
http://i58.tinypic.com/99q3q1.jpg






இன்று மக்கள் திலகத்தின் " சங்கே முழங்கு " வெளியான 42 வது ஆண்டு தினம்.
இந்த படத்தின் முதல் நாளன்று ஸ்ரீகிருஷ்ணாவில் பார்க்க முயன்று
டிக்கெட் கிடைக்காததால் ,மூன்றாம் நாள் முயற்சி செய்தும் கிட்டாததால் ,ஆறாவது நாள் முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியது.
அப்போது பள்ளியில் படித்து வந்ததால் அவ்வப்போது சினிமா பார்க்க வாய்ப்பு கிடைக்காது.

பின்னர் ,புரட்சி நடிகரின் "நல்ல நேரம் " மகாராணியில் முதல் வாரத்தில் டிக்கட் கிடைக்காமல் ,மேகலாவில் 2 வது வாரம் முயன்று
கிடைக்காததால் அருகிலுள்ள சரவணாவில் 6வது வாரம்தான்
"சங்கே முழங்கு " படம் பார்த்தேன் .
பொன்மனச்செம்மல் பல வண்ண உடைகளில் கண்ணை கவரும் வகையில் ஜொலித்தார்.
பஞ்சாபி சிங் வேடம் கனகச்சிதமாக பொருந்தியது.
அருமையான பாடல்கள் : முதல் பாடல்:பொம்பளை சிரிச்சா போச்சு
மக்கள் திலகத்தின் அபிநயம்,நடனம் புதுமை/அருமை.
இரண்டு கண்கள் பாடலில் மிகவும் இளமை. பாடல் முடிவில் வரும் காட்சிகள் /ஒப்பனைகள்/உடைகள் உலகம் சுற்றும் வாலிபன் திரைபடத்தை நினைவுபடுத்தும் .அதை உன்னிப்பாக கவனித்தால் இன்றும் காணலாம்.
நான் சொல்லி தர என்ன உள்ளதோ -ஹெலன் நடனமும்,மெல்லிசை மன்னரின் இசையும் பிரமாதம்.

சிலர் குடிப்பது போலே -பாடலில் மக்கள் திலகம் நடிப்பும்,நடனமும்
படுசுருசுருப்பும் இளமை துள்ளலுடன் அமைந்திருக்கும்.

தமிழில் அது ஒரு இனிய கலை -காதல் பாடல் கண்களுக்கு விருந்து.

உள்ளத்தில் இருப்பதெல்லாம் -உணர்ச்சிகரமான பாடல்

கிளைமாக்ஸ் (நீதிமன்ற )காட்சிகளில் படத்தொகுப்பும்,மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பும் நெஞ்சை தொடும் வகையில் இருந்தது.
எனவே ஸ்ரீகிருஷ்ணாவில் 50வது நாளில் 2 வது தடவை பார்த்து மகிழ்ந்தேன். ஸ்ரீகிருஷ்ணாவில் 10 வாரங்கள் ஓடியது.
தொடர்ந்து 10/03/1972 -ல் நல்ல நேரமும், 14/04/1972ல் ராமன் தேடிய சீதை வெளியானதை தொடர்ந்து இதன் வெற்றி வெகுவாக பாதிகபட்டது.

ஆர். லோகநாதன்.

fidowag
4th February 2014, 08:32 PM
http://i59.tinypic.com/15md7x2.jpg

fidowag
4th February 2014, 08:36 PM
http://i57.tinypic.com/2dv1ue1.jpg

fidowag
4th February 2014, 08:39 PM
http://i60.tinypic.com/15fouq8.jpg

fidowag
4th February 2014, 08:43 PM
http://i60.tinypic.com/2j5kzr6.jpg

fidowag
4th February 2014, 08:49 PM
http://i57.tinypic.com/jac3us.jpg

விழுப்புரம் திரு.செல்வராஜ் (ஜெயா டிவி புகழ் ,திருவாளர்கள்:எஸ்.ராஜ்குமார், ஆர். லோகநாதன் ,பேராசிரியர் செல்வகுமார் ,பி.ஜி.சேகர் ஆகியோர்.