PDA

View Full Version : மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை



Pages : [1] 2 3

RAGHAVENDRA
20th March 2014, 06:55 AM
மறு வெளியீ்டிலும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் படைக்கும் சாதனைகள் சொல்லி மாளாது. சமனும் கிடையாது. கர்ணன் திரைப்படம் படைத்துள்ள சாதனை முறியடிக்க முடியாததாக விளங்குகிறது. மறு வெளியீட்டில் - அது நவீன மயமாக்கலானாலும் சரி, அல்லது பழைய வடிவமானாலும் சரி, திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கோலம் காணும் வகையில் நடிகர் திலகத்தின் படங்கள் விநியோகஸ்தர்களுக்கு லாபம் ஈட்டித் தரும் வகையில் வெற்றி நடைபோடுகின்றன. இதை நமது மெயின் திரியில் போடும் போது மற்ற விவாதங்களுக்கிடையில் இடம் பெற்று விடுவதால் படிக்கும் போது சற்று தேட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

இதைத் தவிர்க்கும் வகையிலும் எளிதில் மறு வெளியீட்டுத் தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவும் வகையிலும் இத்திரியை நாம் பயன் படுத்திக் கொள்ளலாமே என்கிற எண்ணத்தின் உந்துதலே இத்தலைப்பு.

நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் மறு வெளியீட்டுத் தகவல்கள், நிழற்படங்கள், கருத்துக்கள் யாவையும் இங்கே பகிர்ந்து கொள்வோம்.

மதுரை அலங்கார் திரையரங்கில் கடந்த 16.03.2014 ஞாயிறு மாலைக் காட்சியில் வைர நெஞ்சம் காண வந்த பொது மக்கள் ரசிகர்களின் அளப்பரையில் வியந்திருப்பர் என்பது திண்ணம். அப்போது எடுக்கப் பட்ட நிழற்படங்கள். உபயம் நண்பர் சுந்தரராஜன் முகநூல் பக்கத்திலிருந்து

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/10013975_601149233303018_1733241865_n.jpg

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/1911866_601149316636343_1885867738_n.jpg

https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-prn2/l/t1.0-9/1978616_601149363303005_721647235_n.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/1509856_601149443302997_631152728_n.jpg

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/1376492_601149493302992_1449983628_n.jpg

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/48085_601149526636322_68365356_n.jpg

தியாகம் திரைப்படத்தைப் பொறுத்த வரையில் மகாலக்ஷ்மி திரையரங்கில் இது வரை இல்லாத அளவிற்கு பெரும் அளவில் வரவேற்பைப் பெற்று வெற்றி நடை போடுவதாகத் தகவல் வந்துள்ளது. விவரங்கள் விரைவில்.

Murali Srinivas
21st March 2014, 12:24 AM
கோவை ராயல் திரையரங்கில் வசூலில் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார் பைரவன். இன்று மாலைக் காட்சி வரை பார்த்து மகிழ்ந்த மக்களின் எண்ணிக்கை 2915. கூடுதல் விவரங்கள் நாளை.

கொங்கு நாட்டை கலக்கிய பைரவன் நாளை 21-ந் வெள்ளி முதல் மலைக்கோட்டை நகருக்கு விஜயம் செய்கிறார். சென்ற் வாரம் சில தொழில் நுட்ப காரணங்களால் வெளியீடு தள்ளி போன எங்கள் தங்க ராஜா திரைப்படம் திருச்சி கெயிட்டி திரையரங்கில் நாளை முதல் வெளியாகிறது. சீரிய வரவேற்பு கொடுக்க திருச்சி மாநகர மக்களும் ரசிகர்களும் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

அன்புடன்

Subramaniam Ramajayam
21st March 2014, 03:27 AM
கோவை ராயல் திரையரங்கில் வசூலில் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார் பைரவன். இன்று மாலைக் காட்சி வரை பார்த்து மகிழ்ந்த மக்களின் எண்ணிக்கை 2915. கூடுதல் விவரங்கள் நாளை.

கொங்கு நாட்டை கலக்கிய பைரவன் நாளை 21-ந் வெள்ளி முதல் மலைக்கோட்டை நகருக்கு விஜயம் செய்கிறார். சென்ற் வாரம் சில தொழில் நுட்ப காரணங்களால் வெளியீடு தள்ளி போன எங்கள் தங்க ராஜா திரைப்படம் திருச்சி கெயிட்டி திரையரங்கில் நாளை முதல் வெளியாகிறது. சீரிய வரவேற்பு கொடுக்க திருச்சி மாநகர மக்களும் ரசிகர்களும் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

அன்புடன்

The new thread of NADIGARTHILAGAM for rereleses very grand. kindly upload some snaffs of THYAGAM openings at madras and other centres and sunday melas regularly for absenties enjoyment.

Murali Srinivas
22nd March 2014, 12:51 AM
கோவை நகரில் சென்றவாரம் 2966 பேர் நமது திரை உலக சக்ரவர்த்தியை இவர் எங்கள் தங்க ராஜா என்று சூழ்ந்துகொண்டு தரிசித்தனர் !

கோவை ராயலில் சென்றவாரம் சக்கைபோடு போட்ட நடிக பேரரசரின் எங்கள் தங்கராஜா திரைக்காவியம் இன்றுமுதல் திருச்சி GAIETY திரை அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது !

திருச்சி நகர மக்கள் நமது தங்கராஜாவை இனி நீங்கள்தான் "எங்கள் தங்க ராஜா" என்று உரிமையுடன் கொண்டாட துவங்கிவிட்டார்கள் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/11_zps77988014.jpg

மலைக்கோட்டை மாநகர் மக்கள் எங்கள் தங்க ராஜாவிற்கு இன்று அமோக வரவேற்பு நல்கியுள்ளனர். திருச்சி கெயிட்டி திரையரங்கில் இன்றைய முதல் நாள் மட்டும் 474 டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த திரையரங்கை பொறுத்தவரை கடந்த ஒரு சில வருடங்களில் வெளியான முதல் நாளன்று அதிகமான மக்கள் கண்டு களித்தது இந்தப் படத்தைத்தான் என்று தியேட்டர் உரிமையாளரே இன்று சொன்னாராம். எந்த ஊர் ஆனால் என்ன/ எத்தனை பேர் வந்தால் என்ன? நடிகர் திலகத்தை வெல்ல நடிகர் திலகமேதான் வர வேண்டும். வரும் நாட்களில் இந்த வரவேற்பு கூடும். ஞாயிறு மாலை விண்ணை முட்டும்

அன்புடன்

Murali Srinivas
22nd March 2014, 12:54 AM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/21_03_21_92_zpsd8b73f49.jpg

கோவையில் ராயல் திரையரங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் பைரவன். எங்கள் தங்க ராஜாவின் ஒரு வார வசூல் முன் வெளியான படங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற வைத்திருக்கிறது. தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் புரிகின்ற சாதனைகளை பார்த்து விட்டு திரையரங்க உரிமையாளர்கள் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ராயல் திரையரங்க உரிமையாளர் அடுத்த நடிகர் திலகத்தின் படத்திற்கும் தேதி கொடுத்து விட்டார். ஆம் வரும் வெள்ளி மார்ச் 28 முதல் நடிகர் திலகத்தின் சொர்க்கம் அங்கே திரையிடப்பட இருக்கிறது. இந்த கோவை மட்டுமல்ல, சென்னை, மதுரை திருச்சி போன்ற ஊர்களிலும் இது தொடரும்.

அன்புடன்

Russellbpw
22nd March 2014, 10:34 AM
2012 மார்ச் மாதம் இதே வாரத்தில் திவ்யா நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் முதல் முதலாக வெளியிட்ட நடிகர் திலகம் கர்ணனாக வாழ்ந்த, பல புதிய படங்கள் ரிலீஸ் செய்தும், 2012இல் தமிழகத்தில் அதிகபட்சமாக 152 நாட்கள் சத்யம் வளாகத்திலும், 115 நாட்கள் எஸ்கேப் திரை வளாகத்திலும் ஓடிய ஒரே காவியமான "கர்ணன்" கிண்டலும் கேலியும் செய்த கயவர்களின் முகத்தில் கரியை பூசி வெற்றி நிலை நாட்டிய 2வது வார விளம்பரம், அனைவர் பார்வைக்கும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Karnan2ndweekthanthiad_zps267185ee.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Karnan2ndweekthanthiad_zps267185ee.jpg.html)

Murali Srinivas
23rd March 2014, 11:46 PM
பழைய திரைப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளில் தற்போதைய சூழலில் வெளியாகும் படங்களுக்கு வெள்ளியன்று நல்ல response இருக்கும். மறுநாள் சனியன்று சற்றே drop ஆகி ஞாயிறு மீண்டும் சூடு பிடிக்கும். தமிழகத்தின் பெரிய நகரங்களில் எல்லாம் இப்படியான சூழலே நிலவுகிறது. அந்த trend-ஐயும் முறியடிக்கும் வண்ணம் திருச்சி மாநகர மக்கள் Dr.ராஜாவையும் பைரவனையும் உற்சாகமாக வரவேற்றிருக்கிறார்கள். வெள்ளியன்று கிடைத்த வசூலை விட சனியன்று கூடுதல் கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு நாட்களையும் தாண்டி இன்று வசூல் சாதனை படைத்திருக்கிறது எங்கள் தங்க ராஜா. இன்று மாலைக்காட்சி வரை கிட்டத்தட்ட 1400 நபர்கள் பார்த்திருக்கின்றனர். சில குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

இன்று மாலைக்காட்சியில் அரங்கத்திற்கு வெளியே ரசிகர்களின் கொண்டாட்டாம் பெரிய அளவில் இருந்ததாம். அண்மைக் காலங்களில் கெயிட்டி திரையரங்கில் இது போன்ற பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லையாம்.

கெயிட்டி திரையரங்கிற்கு அண்மைக் காலமாக class audience வருவதில்லை என்ற நிலை மாறி இந்த மூன்று நாட்களிலும் குறிப்பாக இன்று மாலைக் காட்சிக்கு ஏராளமான class audience வந்திருக்கிறார்கள். அரங்க நிர்வாகத்தை சேர்ந்தவர்களே இதை ஆச்சரியத்துடன் சொன்னார்களாம்.

முதலில் விற்று தீர்ந்தது high class tickets அதன் பிறகு வந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் high class full ஆகி விட்டது என்று தெரிந்தவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிகழ்வும் நடந்திருக்கிறது.

படம் வெளிவருவதற்கு முன் ஒரு வித apprehension mood-ஐ பிரதிபலித்த அரங்க உரிமையாளாரும் மேலாளாரும் இன்று மாலை மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார்கள. மட்டுமல்ல மேலும் இது போன்ற நடிகர் திலகத்தின் திரைப் படங்களை வெளியிடுமாறு படத்தை திரையிட்டவரிடம் கேட்டுக் கொண்டனர்.

நமது ரசிகர்களும் நடிகர் திலகத்தின் படங்களை திருச்சி மாநகரத்தில் தொடர்ந்து வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அது நிறைவேறும் என வெளியிட்டாளர் உறுதி கூறினார்.

செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி.

அன்புடன்

Russellbpw
24th March 2014, 09:29 PM
திருச்சியில் நமது நடிக பேரரசர் ஸ்டைலின் உச்சம் மறுபடியும் தொட்ட பிளாக் பஸ்ட்டர் காவியம் எங்கள் தங்கராஜா கோலாகலமாக கொண்டாடபடுகிறது !

படம் வெளியிட்ட நாள் முதலே ரசிகர்களும், பொதுமக்களும் சிறந்த வரவேற்ப்பு கொடுத்து நமது நடிகர் திலகத்தை வரவேற்றுள்ளனர்.

ரசிக பொதுமக்கள் கொண்டாட்டங்கள் புகைப்படம் உங்கள் பார்வைக்கு !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0861_zpsefa81094.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0861_zpsefa81094.jpg.html)

PICTURE No. 2 - அரங்கு நிறைந்த உயர் வகுப்பு :

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0887_zpsf9af3933.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0887_zpsf9af3933.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0892_zps5b7972f1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0892_zps5b7972f1.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0908_zpsaf71cbf6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0908_zpsaf71cbf6.jpg.html)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0877_zpsd60ad36d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0877_zpsd60ad36d.jpg.html)

Russellbpw
27th March 2014, 08:12 PM
எங்கிருந்தோ வந்தாள் ரிலீஸ் செய்யப்பட்ட 100 நாட்கள் கண்ட அதே கோவை ராயல் திரை அரங்கில் நாளை முதல் நடிக பேரரசர் கலக்கும் சொர்க்கம் !


1970 - இரெட்டை தீபாவளி நமக்கு ! -

ஆம் நமது நடிக பேரரசர் நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யும் தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது -

1) எங்கிருந்தோ வந்தாள் - நடிகர் திலகம், பாலாஜி, தேவிகா மற்றும் ஜெயலலிதா

2) சொர்க்கம் - நடிகர் திலகம், முத்துராமன், பாலாஜி மற்றும் KR விஜயா

முதல் படம் கிளாஸ் வகையை சார்ந்தது
இரெண்டாவது ஜனரஞ்சகம் வகையை சார்ந்த கிளாஸ் மற்றும் மாஸ் சரியான விகிதத்தில் கலந்த ராமண்ணா இயக்கத்தில்.

தமிழ் திரை உலகம் இதற்கும் முன்பும் பல முறை நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் ஒரே நாள் வெளியீடு கண்டிருந்தாலும், இந்த சமயம் ஒரு மாறுதல். இரெண்டுமே கலர் படங்கள் !

மற்ற நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஒரு தைரியமான செயல். வேறு எந்த நடிகரும் இதை செய்ய துணியாத ஒரு செயல்.

பொதுமக்களும் ரசிகர்களுடன் மிகுந்த வரவேற்ப்பு இரண்டு திரைப்படங்களுக்கும் கொடுத்து இரெண்டுமே சூப்பர் ஹிட் !

எங்கிருந்தோ வந்தாள் 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடிய அரங்குகள்.

1) சென்னை - சாந்தி கிரௌன் புவனேஸ்வரி
2) மதுரை - தேவி
3) திருச்சி - பாலஸ்
4) கோவை - ராயல்
5) சேலம் - சாந்தி

சொர்க்கம் 100 நாட்களும் அதற்க்கு மேலும் ஓடிய திரை அரங்குகள்

1) சென்னை - தேவி பாரடைஸ் (அரங்கில் பக்கத்திலயே சாந்தி திரையில் எங்கிருந்தோ வந்தாள் திரையிட்ட நிலையிலும், தேவி பாரடை புதிய வசூல் சாதனை படைத்தது )
2) மதுரை - சென்ட்ரல்
3) சேலம் - ஜெயா
4) திருச்சி - பிரபாத்
5) நெல்லை - பாபுலர்

கோவையில் சொர்க்கம் ஒரு வருடம் முன்பு திரையிடப்பட்டு வழக்கம்போல நல்ல ஒரு வரவேற்ப்பு பெற்றது.

நடிகர் திலகம் படங்கள் திரையிட முடியாதபடி நடந்த பல சதிகளை முறியடித்து இப்போது ராயல் திரையரங்கில் நடிகர் திலகம் படங்கள் மீண்டும் வளம் பெற்று வலம் வரத்தொடங்கிய காரணத்தால் சொர்க்கம் திரைப்படம் வரும் வெள்ளி முதல் மீண்டும் திரையிடப்பட உள்ளது.

சூடுபிடித்துள்ள தேர்தல் பிரச்சாரங்கள், ஸ்டேட் போர்டு மாணவ மாணவிகளின் தேர்வு , Labour கூட்டங்கள் என்று பல விஷயங்களுக்கு மத்தியில் சொர்க்கம் கோவையில் நாளை முதல் அதாவது 28 மார்ச் முதல் வலம் வருகின்றது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Sorgamkovai_zps64f09b54.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Sorgamkovai_zps64f09b54.jpg.html)

Murali Srinivas
28th March 2014, 01:03 AM
வெகு நாட்களாக தூத்துக்குடி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோடீஸ்வரன் நாளை முதல் வெற்றி விஜயம். தூத்துக்குடி ksps திரையரங்கில் நாளை முதல் ஸ்டைல் சக்கரவர்த்தி அழகு மன்மதன் நடிகர் திலகம் தூள் பரத்திய எங்க மாமா ரெகுலர் காட்சிகளில் வெற்றி பவனி வருகிறது.நன்றி திரு ராமஜெயம்.

அன்புடன்

Murali Srinivas
31st March 2014, 12:43 AM
மறு வெளியீடுகளில் மன்னவரின் சாதனைகள் தொடர்கின்றன. குறுகிய இடைவெளி நீண்ட இடைவெளி என்றெல்லாம் சொற்சிலம்பம் ஆடாமல் எப்போது நடிகர் திலகம் படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் மக்கள் ஆதரவு என்றும் தொடர்கிறது உண்மை நிலை. தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களாக கோவை ராயல் திரையரங்கில் வெளியான போதும், இப்போது ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கம் பொது மக்களை திரையரங்கிற்கு வரவழைப்பதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

இன்று நண்பகல் 12 மணி முதல் 3.30 வரை தமிழகமே நடிகர் திலகத்தின் தில்லானா வாசிப்புக்கு மயங்கி கட்டுண்டு கிடந்த அந்த வேளையிலும் கூட இன்று மாலை வரை 500 பேருக்கு மேல் திரையரங்கிற்கு டிக்கெட் எடுத்து படம் பார்த்திருக்கின்றனர். இது உண்மையிலே ஆச்சரியமான விஷயம. சொர்கத்தின் வெற்றி பவனி தொடர்கிறது.

திருச்சி கெயிட்டி திரையரங்கில் கடந்த வர்ரம் வெளியான எங்கள் தங்க ராஜா சிறப்பான வசூலைப் பெற்று அந்த திரையரங்கில் அண்மையில் வெளியான அனைத்துப் படங்களின் வசூலை முறியடித்திருக்கிறது.

தூத்துக்குடி ksps திரையரங்கில் எங்க மாமாவின் வெற்றி நடை தொடர்கிறது.

மதுரை மாநகரை கலக்கிய சி.ஐ.டி ஆனந்த் வரும் செவ்வாய் முதல் அருப்புகோட்டையில் வெற்றி பவனி துவக்குகிறார். அங்கே அருப்புக்கோட்டையில் ஓடிய பின் வைர நெஞ்சம், திருப்பரங்குன்றம் லட்சுமியில் வெளியாகிறது.

அன்புடன்

Murali Srinivas
31st March 2014, 12:48 AM
ஏப்ரல் 4 முதல் சென்னை பைலட் இல் மாலை 4 PM மற்றும் 7 PM காட்சிகள் ...

மற்றும் காஞ்சிபுரம் பாலசுப்ரமணிய திரை அரங்கில் தினசரி 4 காட்சிகள் - CID RAJAN கண்டுபிடிக்கும் தங்க சுரங்கம் !!

இணையதளத்தில் முன்பதிவு ஏப்ரல் 2 முதல் www.ticketgreen.com (or) www.bookmyshow.com

ADVANCE BOOKING from APRIL 2nd @ www.ticketgreen.com (or) www.bookmyshow.com

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/3032014_MDSN427749-MDS-M_zpsa50e660b.jpg

அன்புடன்

HARISH2619
4th April 2014, 01:20 PM
Sorgam gala in covai

HARISH2619
4th April 2014, 01:21 PM
Covai sorgam gala

Murali Srinivas
5th April 2014, 12:04 AM
நன்றி செந்தில்.

http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=3232&stc=1&thumb=1&d=1396597729

http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=3233&stc=1&thumb=1&d=1396597761


அன்புடன்

Murali Srinivas
5th April 2014, 01:31 AM
இன்று முதல் பைலட் திரையரங்கில் காட்சியளிக்க விஜயம் செய்த ஸ்டைல் சக்கரவர்த்தி சிபிஐ ஆபிஸர் ராஜனுக்கு பெரிய வரவேற்பு நல்கி வரவேற்றார்கள் ரசிகர்களும் பொது மக்களும் என்ற செய்தி வந்திருக்கிறது. மேலதிக தகவல்கள் விரைவில் இங்கே பதிவிடப்படும்.

முகநூலில் திரு யுவகிருஷ்ணாவின் பதிவு. [Mr.Yuva Krishna In Face book]. Thank You Sir!

ஜேம்ஸ்பாண்ட் பாணியில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா மாஸ் நடிகர்களுக்குமே உண்டு. சிவாஜியும் நடித்தார். ‘தங்க சுரங்கம்’
“நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது”, "கட்டழகு பாப்பா” என்று பாடல்கள் சூப்பர்ஹிட். ஒரு பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் பாணியில் காஷ்மீர் தொப்பி அணிந்து வருவார் சிவாஜி.

சிபிஐ அதிகாரியாக அவர் நடித்த இந்த படத்தில்தான் தமிழ்ச்சூழலில் முதன்முதலாக சிகரெட் குடிக்கும் பழக்கம் ஒரு ஹீரோயிஸ பண்பாக முன்வைக்கப்பட்டது. ஒரு ஃபிகரின் தோளில் தீக்குச்சியை உரசி சிகரெட் பற்றவைப்பார். படம் வந்த காலத்தில் இந்த காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்குமாம். பின்னாளில் ரஜினி இந்த ஸ்டைலை அப்படியே தனதாக்கிக் கொண்டார்.

எம்.ஜி.ஆர் பட பார்முலா சிவாஜிக்கு செட் ஆகாது என்பார்கள். அதெல்லாம் சும்மா என்று அசால்டாக சிவாஜி நிரூபித்த திரைப்படம் இது. வண்ணத்தில் பிரும்மாண்டமாக நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ஆக்*ஷன் கரம் மசாலா சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ’தங்கசுரங்கம்’ மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இன்று முதல் சென்னை பைலட் தியேட்டரில் தினமும் இரவு 7 மணி காட்சி. டோண்ட் மிஸ் இட்!

அன்புடன்

Murali Srinivas
6th April 2014, 11:55 PM
இன்று மாலைக் காட்சி பைலட் திரையரங்கில் தங்க சுரங்கம் படம் பார்த்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. சரியான கூட்டம். மிகப் பெரிய அலப்பரை. இது போல ரசிகர்களின் ஆரவாரத்துடன் படம் பார்த்து நாளாயிற்று. மிகவும் ரசித்துப் பார்த்தோம். நேரம் கிடைக்கும் பொது மேலும் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்

JamesFague
7th April 2014, 11:19 AM
Tremendous reponse for Mr Rajan at Pilot and we really miss Mr Raghvendra Sir
we heard that he his not in good health.

Mr Raghavendra Sir,

Get well soon and contribute as usual.

Regards

Murali Srinivas
12th April 2014, 12:53 AM
சாதனை சாதனை என்று பலர் பேசினாலும் அதை எப்போதும் செயல்படுத்துபவர் நடிகர் திலகம் மட்டுமே. நடிகர் திலகத்தின் திரைப்படங்களை இன்றைய காலகட்டத்தில் வெளியிடுவதற்குதான் எத்தனை சோதனைகளையும் இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது? நடிகர் திலகத்தின் படங்களை வைத்திருக்கும் விநியோகஸ்தர்களும் சரி படத்தை வெளியிட முன் வரும் திரையரங்க உரிமையாளர்களும் சரி பிரச்சனைகளை சந்திக்க நேர்கிறது. சிவாஜி படத்தை ஏன் திரையிடுகிறீர்கள் என்று கேட்பது முதல் சிவாஜி படங்களை திரையிடாதீர்கள் என சொல்வது வரை, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் படங்களை கூட தங்களின் influence-ஐ பயன்படுத்தி தியேட்டரிலிருந்து மாற்றும் அளவிற்கு ஒரு சிலர் செயல்படுவதையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இது போதாதென்று ஒரு சில தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்கள் வேறு குறுக்கீடு செய்கிறார்கள்.

சொல்ல வரும் விஷயம் தங்க சுரங்கம் பற்றியது. ஆல்பட் வளாகத்தில் திரையிடப்படுவதாக இருந்த தங்க சுரங்கம் படத்தை, ஆல்பட் தியேட்டர் பெயரோடு கூடிய விளம்பரம் வந்த பிறகும் கடைசி நிமிடத்தில் தங்க சுரங்கம் விநியோகஸ்தர் அழைக்கப்பட்டு அங்கே திரையிட முடியாது என்று அவரிடம் சொல்லப்படுகிறது. உடனே அவர் பைலட் திரை அரங்க நிர்வாகத்தை அணுகி கேட்க அவர்கள் 2 காட்சிகள் தருவதாக ஒப்புக் கொண்டு அந்த செய்தியை, அந்த விளம்பரத்தை நாளேடுகளில் அவர் கொடுக்க இருக்கும் நேரம், படம் வெளியாவதற்கு முதல் நாள் விநியோகஸ்தர் அழைக்கப்பட்டு ஒரு காட்சிதான் கொடுக்க முடியும் என சொல்லப்படுகிறது. காரணம் Captain America படத்தை திரையிடும் UTV நிறுவனம் தங்கள் படத்திற்கு மூன்று காட்சிகள் வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க பழைய படம்தானே ஒரு காட்சியை குறையுங்கள் என தியேட்டர் உரிமையாளருக்கு பிரஷர் கொடுக்கப்பட, அவர்களை விரோதித்துக் கொண்டால் நாளை அவர்கள் தொடர்ந்து படம் தர மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாக தங்க சுரங்கம் விநியோகஸ்தர் ஒரு காட்சியை விட்டுக் கொடுக்கும்படி வற்புறுத்தப்பட ஏற்கனவே இரண்டு திரையரங்குகளின் பெயர் போட்டு விளம்பரம் செய்து விட்டோம். இப்போது இதையும் மாற்றினால் நமது நம்பகத்தன்மை போய் விடும் என்பதனால் ஒரு காட்சிக்கு விநியோகஸ்தர் ஒத்துக் கொள்கிறார்.இந்த விவரங்கள் எதுவும் தெரியாத சராசரி ரசிகன் திட்டுவதையும் விநியோகஸ்தர் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டிய சூழல்.

ஆனால் பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல் ஒரு காட்சியானாலும் என்ன நமது முத்திரை அதிலும் பதிக்கப்படும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. மற்றவர் படங்கள் எல்லாம் வாரத்தில் 7 நாட்களில் தினசரி மூன்று காட்சிகளில் வசூல் செய்வதை ஒரே காட்சியில் செய்திருக்கிறார் நடிகர் திலகம். 7 நாட்களில் நடைபெற்ற 7 காட்சிகளில் ரூபாய் 68,000/- [அறுபத்தி எட்டு ஆயிரத்திற்கும்] அதிகமாக வசூலித்திருக்கிறது தங்க சுரங்கம். அரங்க உரிமையாளருக்கு மிகுந்த சந்தோஷம் என்பதோடு அடுத்த முறை அங்கே நடிகர் திலகத்தின் படத்திற்கு சரியான முறையில் காட்சிகள் ஒதுக்கி தருவதாகவும் வாக்களித்திருக்கிறார்.

அன்புடன்

Murali Srinivas
12th April 2014, 12:57 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/11_zps77988014.jpg


இன்று சென்னை மகாலட்சுமி திரையரங்கிற்கு வருகை தந்த பைரவருக்கு உற்சாக வரவேற்பு. இன்றைய தினம் மட்டும் 683 டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. மொத்த வசூல் சற்றேறேக்குறைய ருபாய் 14,000/- வந்திருக்கிறது. வரும் நாட்களில் மகாலட்சுமியில் திருவிழாதான்,

அன்புடன்

Murali Srinivas
15th April 2014, 11:39 PM
மகாலட்சுமியில் மன்னவரின் சாதனைகள் தொடர்வதை இங்கே பதிவிட்ட நண்பர் RKS அவர்களுக்கு நன்றி. ஞாயிறு மாலைக் காட்சிக்கு வந்த கூட்டம் சரியான கூட்டம். உள்ளே அமர நாற்காலி இல்லாமல் நின்று கொண்டு படம் பார்த்த பலரையும் பார்க்க முடிந்தது. தங்க சுரங்கத்திற்கு எந்தளவிற்கு அலப்பரை இருந்ததோ அதே அளவிற்கு இங்கேயும் நடந்தது. அருமை நண்பர் சாரதியும் நானும் சென்றிருந்தோம். இருவருக்கும் வெவேறு வேலைகள் இருந்தன. இருவரின் எண்ணமும் படம் சிறிது நேரம் பார்த்து விட்டு கிளம்பி விடலாம் என்று நினைத்துதான் உள்ளே சென்றோம். ஆனால் எப்போதும் நாம் நினைப்பது போல் நம்மை கிளம்ப அனுமதிக்க மாட்டார் நடிகர் திலகம். நம்மை அப்படியே கட்டி போட்டு விடுவார். அன்றும் அதுதான் நடந்தது. இந்த காட்சி முடிந்தவுடன் போகலாம், இந்தப் பாடல் முடிந்தவுடம் போகலாம் என்று நினைத்து நினைத்து இருக்க இதற்கு நடுவில் சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்த நண்பரிடமிருந்து அலைபேசி அழைப்புகள் வேறு வருகிறாயா இல்லையா என்று. அதனை சமாளித்து முடிப்பதற்குள் இடைவேளை வந்து விட்டது. இடைவேளை முடிந்து கிளம்பலாம் என நினைத்திருக்கும் போது நமக்கு மிகவும் அறிமுகமான பாடலின் prelude music [பாடலின் ஆரம்ப இசை]. என்னவென்று எட்டிப் பார்த்தால் தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே பாடல் காட்சி ஓட ஆரம்பித்தது. நான் சில நாட்கள் முன்பு நமது திரியில் குறிப்பிட்டிருந்தது போல மகாலட்சுமி திரையரங்கில் விரைவில் இரு துருவம் வெளியாக போகிறது. அதற்கு முன்னோடியாகத்தான் அந்தப் படத்தின் பாடல் ஒளிபரப்பட்டது. அந்த ஒரு பாடல் காட்சிக்கே ரசிகர்களின் பலத்த ஆரவாரம் அமர்க்களம்.

பிறகு மீண்டும் இடைவேளைக்கு பிறகு வரும் படத்தின் சில காட்சிகள் வரை இருந்துவிட்டு கிளம்ப மனம் இல்லாமல் கிளம்பினோம். நண்பர் சாரதிக்கு இரவுக்கும் பகலுக்கும் பாட்டு பார்த்து விட்டு போகலாம் என்ற ஆசை. ஆனால் நான் கிளம்பியதால் அவரும் கிளம்ப வேண்டிய நிலை. ஆனால் இருவருக்குமே முழுமையாக பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்ற்றம்தான் மனதில்.

படத்திற்கு வந்த கூட்டத்தை பார்த்தவுடன் ஒன்று புரிந்தது. இந்தப் படமும் மகாலட்சுமியில் வசூல் சாதனை புரியும் என்று. சந்திப்பு தியாகம் போன்றே இதுவும் தியேட்டர் வாடகையை எல்லாம் வெகு எளிதாக கடந்து விட்டது. ஒரு வார இறுதியில் கணிசமான லாபத்தை வெளியிட்டாளருக்கு ஈட்டி தரும் என்பதும் இன்றைய 5-ம் நாளில் நிதர்சனமாக கண்ணுக்கு தெரிகிறது.

அன்புடன்

Murali Srinivas
23rd April 2014, 11:32 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Pasamalar-May2nd_zps7f57f433.jpg

தமிழகத்தின் உண்மையான மண்ணின் மைந்தன், மறத்தமிழன், திரை உலகின் சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திரை உலகம் மற்றும் அன்னை இல்லத்தின் பாச விளக்கு கமலா அம்மையார் திருமண நாளை முன்னிட்டு மீண்டும் வாசம் வீச....நல்ல அன்பிற்கும்...நல்ல பண்பிற்கும்...நல்ல குடும்பபாசத்திற்க்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய நடிகர் திலகத்தின் "பாசமலர்" கோடையில் ஒரு பாசமழையாய் குளிர்விக்க வருகிறது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture2_zpsf15fd2cc.jpg

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture3_zpsc3a5c7ce.jpg

மே 9 முதல் சென்னை ப்ரோட்வே திரை அரங்கில் தினசரி 3 காட்சிகளாக வெற்றி வலம் வர இருக்கிறது, 1972 இல் வெளிவந்த 7 திரை காவியங்களில் 6 நூறு நாட்கள் காவியத்தில் ஒன்றான சுஜாதா சினி ஆர்ட்ஸ் " நீதி " !

பாசமலர் படம் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியலை அதன் விளம்பரத்தோடு அதனை வெளியிடுபவரிடமிருந்து பெற்று இங்கே பதிவிட்ட நண்பர் RKS அவர்களுக்கு நன்றி. மேலும் வைர நெஞ்சம் மே 2 அன்றும் நீதி மே 9 அன்றும் முறையே மகாலட்சுமி மற்றும் பிராட்வே திரையரங்குகளில் வெளியாகும் விவரங்களை பதிவிட்டதற்கும் நன்றி.

மே மாதம் மேலும் ஒரு நடிகர் திலகத்தின் திரைப்படம் மகாலட்சுமியில் வெளியாகும் என்று தெரிகிறது. If all goes well மே 23 அன்று வெள்ளை ரோஜா வெளியாகும். அதே போன்று ஜூன் மாதம் சென்னையில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில், இரு துருவம் ஆகியவை வெளியாக இருக்கிறது. அதன் பின் எங்கிருந்தோ வந்தாள் ரிலீஸ் ஆகும். மீண்டும் Sp சௌத்திரி விஜயம் செய்ய இருக்கிறார்.

ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் ஏன் பொது மக்களுக்கும் கூட பிடித்த 70-களின் முற்பாதியில் வந்த சில படங்கள் திரையை அலங்கரிக்க இருக்கின்றன. கலர் மட்டுமல்ல 60-களின் கருப்பு வெள்ளை காவியங்களும் திரைக்கு வரும் என்ற இனிப்பான செய்தி வந்திருக்கிறது.

சென்னை மட்டுமல்ல கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற அனைத்து ஊர்களிலும் இந்த திரை விருந்து ரசிகர்களுக்கு பரிமாறப்படும். Once everything gets finalised, விவரங்கள் இங்கே பகிர்ந்துக் கொள்ளப்படும்.

அன்புடன்

RAGHAVENDRA
4th May 2014, 11:41 PM
மதுரை ஜெய்ஹிந்த் புரம் அரவிந்த் திரையரங்கில் நேற்று முதல் தினசரி 3 காட்சிகளாக பட்டாக்கத்தி பைரவனின் ஆர்ப்பாட்டமான விஜயம் நடைபெற்றிருக்கிறது.

இன்று மாலைக்காட்சியில் குணசேகரனைக் காண மிகத் திரளாக மக்கள் வருகை புரிந்துள்ளனர். நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் 400க்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்துள்ளனர்.

தகவல் உபயம் ராமஜெயம். நன்றி ராமஜெயம் சார்.

RAGHAVENDRA
4th May 2014, 11:50 PM
இன்று 04.05.2014 மாலைக் காட்சியில் மகாலட்சுமி திரையரங்கில் வழக்கம் போல் கிட்டத் தட்ட அரங்கு நிறைந்த காட்சியாக துப்பறியும் அதிகாரி ஆனந்த்துக்கு பலத்த வரவேற்பு கிட்டியுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பின், கிட்டத்தட்ட முதல் வெளியீட்டுப் பின் தற்போது எனலாம், ஓடியன் தியேட்டரில் ரிலீஸில் பார்தததற்குப் பின்னர், இன்று மகாலட்சுமி திரையரங்கில் வைர நெஞ்சம் பார்க்கும் வாய்ப்பு அமைத்துக் கொண்டது மிகவும் நல்லதாகப் போயிற்று. ஒவ்வொரு பிரேமிலும் ஸ்டைல் பிய்த்துக் கொண்டு போகிறது. அன்று ரசித்ததை விட இன்றைய ரசிப்புத் தன்மை இன்னும் சிறப்பாக இருந்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பலத்த கைதட்டலும் அளப்பரையும் இன்றளவும் ரசிகர்களின் நெஞ்சில் தெய்வமாய்க் கொலுவிருக்கும் மன்னவனின் ஆளுமையை அழுத்தமாகப் பறை சாற்றியது.

குறிப்பாக நீராடும் நேரம் நல்ல நேரம் பாடல் அளப்பரையில் முதலிடம் பெற்றது. ஸ்டைலாக திரும்பும் ஒவ்வொரு நொடியும், ஸ்டைலாக சிகரெட் புகைவிடும் ஒவ்வொரு நொடியும், புதிய பறவை, சாந்தி பட சிகரெட் ஸ்டைலுக்கு ஈடாக வரவேற்பைப் பெற்றது ரசிகர்களின் ரசிப்புத் தன்மையின் சிறப்பை எடுத்துரைத்தது.

சற்று தாமதமாக சென்றதால் அரங்கிற்கு வெளியே நடைபெற்ற கோலாகலங்களைக் காண முடியவில்லை. இருந்தாலும் உள்ளே நாம் கண்ட காட்சிகள் தங்களுடைய பார்வைக்கு.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/ML451403_zps4d877dd6.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/ML451401_zps005eafd4.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/ML451402_zps704ac6c2.jpg

அறிமுகக் காட்சியில்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/ML451404_zps4da2d4e4.jpg

செந்தமிழ் பாடும் பாடல் காட்சியில்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/ML451406_zpsd256d596.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/ML451407_zpsd5d1f91f.jpg

சூப்பரான போஸ்.... கேட்கணுமா அளப்பரையை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/ML451405_zps2d4e6095.jpg

RAGHAVENDRA
4th May 2014, 11:54 PM
தொடர்ச்சி...

ஐஸ்க்ரீம் வெண்டிங் மிஷின் இருக்கும் இடத்திற்கு மேலே ஸ்டில்ஸ் வைக்கும் இடத்தில்..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/ML451408_zps057a1fda.jpg

நீராட நேரம் நல்ல நேரம் பாடலின் போது

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/ML451409_zps10b781ff.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/ML451410_zpsd8ba743b.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/ML451411_zps868a8979.jpg

Murali Srinivas
17th July 2014, 12:47 AM
நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி அவர் நடித்த சில திரைப்படங்கள் வெளியாகியும் மற்றும் சில வரும் வெள்ளியன்று வெளியாகவும் போகின்றன.

கோபி நகரில் வீராஸ் திரையரங்கில் கடந்த ஞாயிறு (ஜூலை 13) முதல் வசந்த மாளிகை தினசரி 4 காட்சிகள் வீதம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

வரும் வெள்ளி ஜூலை 18 முதல் சென்னை பிராட்வே திரையரங்கில் தினசரி நண்பகல் காட்சியாக வைர நெஞ்சம் திரையிடப்படுகிறது.

மதுரை சென்ட்ரலில் வரும் வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள் வீதம் நடிகர் திலகத்தின் சந்திப்பு வெளியாகிறது. மதுரை சென்ட்ரல் திரையரங்க வளாகமே இப்போதே விழாக் கோலம் பூண்டிருக்கிறது என்ற செய்தியை மதுரையிலிருந்து நண்பர் சந்திரசேகர் பகிர்ந்துக் கொண்டார்.

அன்புடன்

Murali Srinivas
17th July 2014, 12:48 AM
நடிகர் திலகத்தின் மறு வெளியீடுகளின் வெற்றி செய்திகளை பகிர்ந்து கொண்டிருந்த இந்த திரியில் நடுவில் சிறிது இடைவெளி விழுந்து விட்டது. விட்டுப் போன செய்திகளின் சுருக்கம் இதோ.

சென்னை மகாலட்சுமியில் மே முதல் வாரம் திரையிடப்பட்ட வைர நெஞ்சம் பலரின் எதிர்பார்ப்பையும் தாண்டிய ஒரு வெற்றியை அடைந்தது. படம் வெளிவருவதற்கு முன் படம் வெளியான காலத்தில் சரியாக போகாதை சுட்டிக் காட்டி அது போலவே இப்போதும் நடக்கும் என்று ஆரூடம் கூறியவர்களின் வாக்கை பொய்யாக்கி இந்த 2014-ம் ஆண்டு மகாலட்சுமியில் வெளியான பல படங்களையும் பின்னுக்கு தள்ளி அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 70,000/- ஐ தாண்டிய வசூலைப் பெற்றது.

மே இரண்டாம் வாரம் பிராட்வேயில் வெளியான நீதி, அந்த திரையரங்கில் கடந்த 3,4 மாதங்களாக திரையிடப்படும் எந்த படமும் வாடகையை கூட கவர் பண்ணுவதில்லை என்ற நிலையை மாற்றி வாடகையை தாண்டிய வசூலை பெற்று லாபத்தை ஈட்டியது.

ஜூன் முதல் வாரத்தில் மகாலட்சுமியில் வெளியான தங்கச் சுரங்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பைலட்டில் வசூலித்ததை விட அதிகமாக மகாலட்சுமியில் வசூல் செய்தது. அதே நாட்களில் [ஜூன் 6 முதல் 12 வரை] பைலட்டில் நடிகர் திலகத்தின் மற்றொரு மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெளியிடப்பட்ட சூழலிலும் பொதுமக்களின் பேராதரவைப் பெற்று அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 78,000/- அளவிற்கு வசூலித்தது.

அதே நாட்களில் சென்னை பைலட்டில் இரண்டு காட்சிகளாக வெளியான எங்கள் தங்க ராஜா [அதற்கு ஒன்றரை மாதம் முன்புதான் மகாலட்சுமியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியிருந்தது] அந்த குறிகிய கால இடைவெளியையும் தங்கச்சுரங்கதின் போட்டியையும் சமாளித்து கணிசமான வசூலையும் பெற்றது.

மதுரையில் அதே நேரத்தில் சென்ட்ரலில் திரையிடப்பட்ட சங்கிலி திரைப்படம் எப்படி சந்திப்பு சென்னையில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி சாதனை புரிந்ததோ அதே போன்றே சாதனையை புரிந்தது. நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் குறிப்பாக 1980-களில் வந்த படங்கள் ஓடாது என்று கொண்டிருந்ததையெல்லாம் முறியடித்து ஒரு வார வசூலில் ரூபாய் 80,000/- ஐ தொட்டு கணிசமான லாபத்தை வினியோகஸ்தருக்கு பெற்று தந்தது சங்கிலி.

இதே போல் நெல்லையில் எடுத்துக் கொண்டால் நெல்லை சென்ட்ரலில் பராசக்தி ஒரு வார காலம் கலக்கியதை தொடர்ந்து ஸ்டைல் சக்கரவர்த்தியின் ராஜா அதே திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டது. அண்மைக் காலமாக எந்த பழைய படத்திற்கும் கிடைக்காத வரவேற்பை பெற்று ஒரு வார விநியோகஸ்தர் பங்காக சுமார் பதினாலயிரம் [Rs 14,000/-] பெற்று தந்திருக்கிறது.

அதே நெல்லை சென்ட்ரலில் ஜூனில் வெளியான எங்கள் தங்க ராஜாவும் சரி தன பங்குகிற்கு விநியோகஸ்தர் பங்கு தொகையாக சுமார் 11,000/- ரூபாய் பெற்று தந்திருக்கிறது. இதை பார்த்து உள்ளம் பூரிப்படைந்த அரங்க உரிமையாளர் என்னவெல்லாம் நடிகர் திலகத்தின் படங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் கொண்டு வாருங்கள் திரையிட்டு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்பவர் நடிகர் திலகம் என்பதற்கு மற்றும் சில சான்றுகளும் தருகிறோம்.

மதுரையில் ஜெய்ஹிந்தபுரம் ஏரியாவில் அமைந்திருக்க கூடிய B கிளாஸ் தியேட்டர் அரவிந்த். பொதுவாக கிளாஸ் ஆடியன்ஸ் எனப்படுபவர்கள் அந்த திரையரங்கிற்கு வருவதை தவிர்ப்பார்கள். அந்த திரையரங்கில் மே மாதம் மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெற்றிகரமாக ஓடி வாடகைக்கு எடுத்து போட்டவருக்கு லாபம் கொடுத்தது கூட பெரிய விஷயமில்லை. கிளாஸ் படமான உயர்ந்த மனிதன் இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த திரையரங்கில் வெளியிடப்பட்டு அதுவும் வெளியிட்டவர்க்கு ஷேர் பெற்று கொடுத்திருக்கிறது.

இது போன்றே கோவை மாநகரில் அமைந்திருக்கும் டிலைட் திரையரங்கம். கிளாஸ் ஆடியன்ஸ் மற்றும் பெண்கள் தவிர்க்கும் திரையரங்கம். காரணம் அதன் அருகே அமைந்திருக்க கூடிய டாஸ்மாக் பார். இதன் காரணமாகவே அங்கே இரவுக் காட்சி கிடையாது. இப்படிப்பட்ட எதிர்மறையான சூழலிலும் அண்மையில் அங்கு வெளியான தங்கபதக்கம் வெளியிட்டவருக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது.

ஆக எந்த ஊரிலும் எந்த சூழலிலும் எந்த அதிகார அரசியல் பின்பலமும் இல்லாமல் சாதனை புரிபவர் நடிகர் திலகம் என்பது நாம் சொல்லாமலே அனைவருக்கும் புரியும்.அது வரும் காலங்களிலும் தொடரும். அந்த மகிழ்ச்சியான செய்திகளை நாம் இங்கே பகிர்ந்து கொள்வோம்.

அன்புடன்

Murali Srinivas
18th July 2014, 11:52 PM
இன்று மதியம்தான் மதுரை மாநகரில் ஹீரோ 72-ன் சாதனைகளைப் பற்றி பேசினோம். 72-ல் மட்டுமல்ல 2014-லும் தன்னை வெல்ல யாரும் இல்லை என்பதை மீண்டும் இன்று நிரூபிக்கிறார் நடிகர் திலகம். 1980-களுக்கு பிறகு வந்த நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடுகளில் ஓடாது என்ற மாயை தோற்றம் மீண்டும் பொய் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது இன்று சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட சந்திப்பு புதிய சாதனை படைக்கிறது. இன்று நான்கு காட்சிகளில் மட்டும் படத்தை கண்டு களித்தவர்கள் 716 பேர். இதில் பெரிதும் குறிப்பிட வேண்டிய விஷயம் இன்றைக்கு மட்டும் கண்டு களித்தவர்கள் எண்ணிக்கையில் பெண்கள் மட்டுமே 100 பேர். இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? தொலைக்காட்சி பெட்டியை விட்டு வெளியே வராத பெண்கள் அதுவும் இன்று முதலாம் ஆடி வெள்ளி, அந்த நாளில் காலைக் காட்சி [பல வருடங்களுக்கு பிறகு பெண்கள் வந்திருக்கின்றனர்] பகல் காட்சி மற்றும் மாலைக் காட்சி [இதற்கு மட்டும் 50 பேர்] என்று அனைத்துக் காட்சிகளுக்கும் பெண்கள் [நான் குறிப்பிடுவது பெண்கள் தனியாக திரையரங்கிற்கு வருவது] வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதுதான் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரீச். தொடரும் நாட்களின் விவரங்கள் இங்கே பகிர்ந்து கொள்வோம்.

அன்புடன்

Murali Srinivas
20th July 2014, 12:10 AM
சந்திப்பு -இரண்டாம் நாள்

இன்றைய கால கட்டத்தில் பழைய திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்குகளில் படம் பார்க்க வரும் pattern என்று ஒன்றை குறிப்பிடுகிறார்கள். படம் வெள்ளியன்று வெளியாகிறது. அன்று வசூல் நல்ல முறையில் இருக்கிறது. ஆனால் இரண்டாம் நாள் சனிக்கிழமை அன்று வசூல் டிராப் ஆகிறது. மீண்டும் ஞாயிறன்று பெரிய அளவில் சென்று திங்கள் செவ்வாய் என்று படிப்படியாக முடிகிறது. சென்னை மதுரை கோவை திருச்சி என்று அனைத்து நகரங்களிலும் இதே patternதான். முன்காலங்களில் வெள்ளியன்று ஆரம்பித்து சனி ஞாயிறு தினங்களில் peak-ற்கு சென்று திங்கள் அன்று sustain ஆகி பின் டிராப் ஆகும்.

நாம் சொல்ல வந்தது இப்படி இரண்டாம் நாள் சனிக்கிழமையான இன்று சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட சந்திப்பு மற்ற படங்களை விட அதிக வசூல் பெற்று முன்னணியில் நிற்கிறது. நேற்று 716 நபர்கள் பார்த்தார்கள் என்று சொன்னால் இன்று 600-க்கும் அதிகமான நபர்கள் பார்த்திருக்கின்றனர். இரண்டு நாட்களிலும் சேர்த்து 1300-க்கும் அதிகமாக பார்வையாளர்கள் வந்திருக்கின்றனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த மொத்த எண்ணிகையில் ரசிகர்கள் 20 பேர் கூட இல்லை எனபதுதான். பொது மக்கள் மட்டுமே வந்து சிறப்பித்திருக்கின்றனர்.

அரங்க நிர்வாகத்தினர் பல விஷயங்களில் அசந்து போய் பாராட்டியிருக்கின்றனர். "என்னங்க இது மார்னிங் ஷோவிற்கு லேடீஸ் வராங்க, ஆடி வெள்ளி அன்னிக்கு ஈவினிங் ஷோவிற்கு 50 லேடீஸ் வராங்க, சனிக்கிழமை நைட் ஷோவிற்கு பால்கனி டிக்கெட் 50 போகுது, அதிலும் family audience வந்திருக்காங்க, சிவாஜி படத்துக்கு மட்டும்தாங்க இப்படியெல்லாம் பாக்க முடியும்" என்று வியந்து பாராட்டியிருக்கின்றனர்.

உண்மைதானே! நமது நடிகர் திலகத்தால் மட்டும்தானே இதையெல்லாம் சாதிக்க முடியும்!

அன்புடன்

Murali Srinivas
20th July 2014, 11:57 PM
சந்திப்பு - மூன்றாம் நாள்.

இன்றும் சென்ட்ரல் திரையரங்கம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. காலை மதியம் மாலைக் காட்சிகளுக்கு மக்கள் திரண்டு வந்து அமோக வரவேற்பளித்துள்ளனர். மாலைக் காட்சிக்கு பெரும் திரளான மக்கள் வந்திருக்கிறார்கள். முதல் இரண்டு தினங்களில் குறிப்பிட்டது போல் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தனர் என செய்தி. டவுன் ஹால் ரோடு இன்று மாலை ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்தை கண்டு வியந்திருக்கிறது. முதல் மூன்று நாட்களில் மொத்த வசூல் 2014-ல் சென்ட்ரலில் புதிய ரிகார்ட் ஏற்படுத்தியிருக்கிறது.

சந்தோஷ செய்திகள் தொடரும்.

அன்புடன்

Murali Srinivas
22nd July 2014, 04:43 PM
சந்திப்பு - நான்காம் நாள் - மதுரை

நான்காம் நாளான நேற்று மீண்டும் மக்கள் ஆதரவோடு சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட பழைய படங்களின் வசூலில் முன்னணி பெற்றிருக்கிறது. நான்கே நாட்களில் சுமார் ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய்க்கும் அதிகமாகப் வசூலித்து நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவரை மீண்டும் பறை சாற்றியிருக்கிறது சந்திப்பு.

பிற ஊர் செய்திகள்

கோவையில் டிலைட் திரையரங்கில் தங்கப்பதக்கம் பெற்ற வெற்றியை தொடர்ந்து சென்ற வெள்ளிக்கிழமை முதல் புதிய பறவை திரையிடப்பட்டு பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது, ஞாயிறு மாலை படத்திற்கு வந்த கூட்டத்தையும் வசூலையும் பார்த்த அரங்க நிர்வாகத்தினர் அடுத்தடுத்து நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி விரைவில் டிலைட் திரையரங்கில் எங்க மாமா ஹரிசந்திரா போன்ற படங்கள் திரையிடப்பட்ட உள்ளன.

நெல்லை சென்ட்ரலில் பராசக்தி ராஜா மற்றும் எங்கள் தங்க ராஜாவை தொடர்ந்து சென்ற வெள்ளி முதல் தியாகம் திரையிடப்பட்டு வெற்றி கொடி நாட்டி வருகிறது. முந்தைய படங்களைப் போலவே இதுவும் வெளியிட்டவருக்கு கணிசமான தொகையை பெற்று தரும் என நெல்லை தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

அன்புடன்

gkrishna
22nd July 2014, 05:11 PM
Great and good news murali sir

Murali Srinivas
25th July 2014, 12:39 AM
சந்திப்பு

மதுரை சென்ட்ரலில் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்த சந்திப்பு இன்று இரவு காட்சியோடு சிறப்பான வசூலைப் பெற்று ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. ஒரே வாரத்தில் ரூபாய் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சென்ற மாதம் இதே போல் வெற்றிக் கொடி நாட்டிய சங்கிலி வசூலையும் தாண்டியிருக்கிறது. முன்பே குறிப்பிட்டது போல் அரங்க நிர்வாகத்தினரும், வெளியிட்டாளரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் இது போன்ற சிறப்பான வரவேற்பை பெறுவதால் இனி வரும் மாதங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் அதிகமாக வெள்ளித்திரைகளை அலங்கரிக்கும். செய்திகளை துல்லியமான புள்ளி விவரங்களோடு பகிர்ந்து கொண்ட நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி.

நெல்லை சென்ட்ரலில் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போட்ட தியாகம் இன்றோடு ஒரு வாரத்தை நிறைவு செய்கிறது. தகவலளித்த நண்பர் ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.

கோவையில் புதிய பறவை வெற்றி சிறகடித்து பறந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.

சந்தோஷ செய்திகள் தொடரும்.

அன்புடன்

RAGHAVENDRA
26th July 2014, 09:21 PM
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/t31.0-8/q71/s720x720/10582898_663134363771171_8070728045639920704_o.jpg

மதுரை சென்ட்ரலில் சந்திப்பு திரைப்படத்திற்காக வைக்கப் பட்டிருந்த பேனர் ... நிழற்படம் உபயம் முகநூல் நண்பர் சுந்தரராஜன்

Murali Srinivas
3rd August 2014, 10:13 PM
சூரியன் காலையில் உதித்தது மாலையில் மறைந்தது என்று சொன்னால் என்ன தோன்றும்? அது போன்றுதான் வசந்த மாளிகை படத்திற்கு மாபெரும் வரவேற்பு, பிரமாதமான வசூல் என்று சொல்வதும். இன்றல்ல நேற்றல்ல என்றென்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இதுதான் நிலைமை. அதற்கு மீண்டும் கோவை மாநகரம் சாட்சியாக மாறியிருக்கிறது.

சென்ற வருடம் கோவையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகி பெரு வெற்றி பெற்று வசூல் சாதனை கண்ட அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் 1-ந் தேதி வெள்ளி முதல் கோவை ராயலில் தன் ஆட்சியை மீண்டும் ஆரம்பித்தார். ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு மற்றும் தென் மேற்கு பருவகாலம் காரணமாக கேரளத்தில் கொட்டும் பேய் மழை அதன் எல்லைகளை விரித்து அண்டையில் அமைந்துள்ள கோவை மாநகரையும் வெகுவாக நனைத்துக் கொண்டிருக்க அத்தனையும் தாண்டி முதல் இரண்டு நாட்களில் ரூபாய் இருப்பத்தையாயிரத்திற்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது[above Rs 25,000/-].

இன்றும் சரியான கூட்டம். மாலைக்காட்சிக்கு பெரிய வரவேற்பு. மொத்த டிக்கெட்டுகளில் 40 டிக்கெட்டுகள் மட்டுமே நின்று போயினவாம். அரங்கினுள்ளே அமர்க்களமாக இருந்தது என்று செய்தி. அரங்க வாசலிலே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.

தகவல்களை பகிர்ந்து கொண்ட கோவை நண்பர் சக்திவேல், வடிவேல் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய நண்பர் Dr. ரமேஷ் ஆகியோருக்கு நன்றி.

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1479c3fcb2aeed82&attid=0.3&disp=inline&safe=1&attbid=ANGjdJ-8Vzxrv74ezOhSlFSGvUOnIBT9vLiSz3xVMvUkgU4o027wThEcf KIbspepBLSkfLDZcNuSIqr_Ltm-Kl59Sd3ZbgJCEqUWmfpOcfGwh4aez5tbNWTSrEWnr4o&ats=1407081568112&rm=1479c3fcb2aeed82&zw&sz=w997-h544

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1479c3fcb2aeed82&attid=0.2&disp=inline&safe=1&attbid=ANGjdJ_-b6DRLy8N-dcZ4hXF90Nadstg9ThkJtnO2rQ_wtRKWkyMpoVVKpI5BZ5UPMG n1GQs98eDvDnXOLCb55BMSuNG-j48Ir2nCbHaI_g1QiGMpUJWEWysTqeeaos&ats=1407081568112&rm=1479c3fcb2aeed82&zw&sz=w997-h544

அன்புடன்

Murali Srinivas
5th August 2014, 12:58 AM
கோவை ராயலில் அழகாபுரி சின்ன துரை ஆனந்த் அவர்களின் வெற்றி உலா தொடர்கிறது. இன்று வரை மொத்த வசூல் ரூபாய் 53 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களின் வெற்றி அணிவகுப்பு தொடர்கிறது.

வரும் ஆகஸ்ட் 15 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரலில் சிபிஐ ஆபிசர் ராஜன் வெற்றி பவனியை துவக்குகிறார். தங்க சுரங்கம் சென்ட்ரலில் ஆகஸ்ட் 15 முதல் வெளியாகிறது.

அதே ஆகஸ்ட் 15 சென்னை மகாலட்சுமியில் Dr ரமேஷ் வெற்றி விஜயம். ஆம், அண்ணன் ஒரு கோவில் வெளியாகிறது.

அதே ஆகஸ்ட் 15 அன்று கோவை டிலைடில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் நடிக்கும் சந்திப்பு ரிலீஸ்.

அதே ஆகஸ்ட் 15 அன்று நெல்லை சென்ட்ரலில் நடிகர் திலகம் வேடங்களில் ஜொலித்த வெள்ளை ரோஜா வெளியாகும் என தெரிகிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
6th August 2014, 11:42 PM
மற்றொரு மறு வெளியீட்டு செய்தி

வரும் ஆகஸ்ட் 15 முதல் திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் தூள் பரத்திய வெள்ளை ரோஜா வெளியாகிறது.

கோவை ராயலில் இன்று மாலைக் காட்சியோடு மொத்த வசூல் ரூபாய் எழுபதாயிரத்தையும் தாண்டி வெற்றி நடை போடுகிறது காலத்தை வென்ற காதல் காவியம் வசந்த மாளிகை.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
15th August 2014, 12:46 AM
கோவை ராயலை கலக்கிய அழகாபுரி சின்ன ஜாமீன் ஆனந்த் ஒரு வாரத்தில் nett மட்டும் Rs 80 ஆயிரத்தை தாண்டியும் மொத்த nett வசூலையும் விட gross வசூல் அதற்கும் சில ஆயிரங்கள் தாண்டி ஒரு சாதனை புரிந்துள்ளார்.

அதே போன்று நாம் முன்னரே இங்கே பகிர்ந்து கொண்ட செய்தியான நெல்லை சென்ட்ரலில் தியாகம் ஒரு வாரம் ஓடிய போது வெளியீட்டாளர் பங்கு மட்டும் ரூபாய் 12 ஆயிரத்திற்கும் அதிகமாக (Above Rs 12,000/-) பெற்று தந்திருக்கிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
16th August 2014, 01:06 AM
மறு வெளியீடுகளில் நடிகர் திலகம் தமிழகமெங்கும் மீண்டும் ஒரு கலக்கு கலக்குகிறார் என்பதை அனைத்து செய்திகளும் உறுதிப்படுத்துக்கின்றன.

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10616227_10201376767420892_1871154651454233504_n.j pg?oh=9d8a41277551d29defc668900a38c48a&oe=54792D91&__gda__=1415307246_0a81598f21c314fa3d10f20d87df38e f

திருச்சி செய்திகளை நண்பர் ராமச்சந்திரன் பதிவிட்டிருக்கிறார். அவர் இன்று திரையிடப்பட்டிருக்கும் வெள்ளை ரோஜா படத்திற்கு காலை, மதியம் மற்றும் மாலைக் காட்சிகளின் விவரங்களை பதிவிட்டிருந்தார். இரவுக் காட்சிக்கு 186 டிக்கெட்டுகள் போயிருக்கிறது. இன்று மொத்தத்தில் பார்த்த மக்களின் எண்ணிக்கை 697. கெயிட்டி திரையரங்கில் முதல் நாள் 700 பேர்கள் படம் பார்த்தது 7 வருடங்களுக்கு பிறகு இதுதான் முதல் முறை.

மதுரை சென்ட்ரலில் தங்க சுரங்கம் செய்திகளை நண்பர் CS பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதை வசூல் விவரங்களாக பார்த்தோமென்றால் மாலைக் காட்சியோடு ருபாய் 13 ஆயிரத்தை தாண்டிய படம் இரவுக் காட்சியோடு ரூபாய் 17 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. மழை நாளில் வந்த இந்த கூட்டம் (கிட்டத்தட்ட ஞாயிறுக்கிழமை போல) பெரிய சாதனை. பெண்கள் எண்ணிக்கையை பற்றி குறிப்பிட்டார். இன்று கடைசி ஆடி வெள்ளி. அப்படியிருந்தும் இப்படி பெண்கள் கூட்டம், அதுவும் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு நாளில் இத்தனை கூட்டம்.

சென்னையில் மகாலட்சுமி அரங்கில் இன்று முதல் Dr. ரமேஷ் விஜயம். மகாலட்சுமி அரங்கில் இப்போது மெயின் படம் மூன்று காட்சிகளுக்கு பதிலாக இரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகிறது. இரவுக் காட்சியில் வேறு படம். எத்தனை காட்சி இருந்தால் என்ன, நடிகர் திலகம் அதிலும் சாதனை படைப்பவர்தானே. இன்று அண்ணன் ஒரு கோவில் திரைப்படத்தை இரண்டு காட்சிகளும் சேர்த்து கண்டு களித்த மக்களின் எண்ணிக்கை 646.மொத்த வசூல் ரூபாய் 13 ஆயிரத்திற்கும் அதிகம் [more than Rs 13,000/-]. இது சாதனை என்று சொல்லவும் வேண்டுமோ!

அரங்க உரிமையாளர் சற்று குழப்பம் அடையாமல் இருந்திருந்தால் கோவையிலும் நமது படம் கொடி நாட்டியிருக்கும். இந்த வாரம் போனால் என்ன? if all goes well, அடுத்த வெள்ளி ஆகஸ்ட் 22 முதல் கோவை ராயலில் சந்திப்பு திரையிடப்படும் என தகவல்.

நாளை முதல் அருப்புக்கோட்டையில் சந்திப்பு திரையிடப்படுகிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

Murali Srinivas
18th August 2014, 05:37 PM
சென்னை மகாலட்சுமி

அண்ணன் ஒரு கோவில் மூன்று நாட்களில் வெறும் 6 காட்சிகளில் மொத்த வசூல் ரூபாய் 33,500/- ஐ தாண்டியிருக்கிறது [Above Rs 33,500/-]. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களையும் மீறி நேற்று நல்ல கூட்டம். பெரம்பூர் பகுதியில் குறைந்த அளவில் ஒட்டப்பட்டிருந்த விளமபர போஸ்டர்களை கூட மறைத்து அரசியல் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர் சில நல்ல மனம் படைத்தோர். அப்படியும் வந்த பொதுமக்கள்.

மதுரை சென்ட்ரல்

தங்கச்சுரங்கம் - படத்தை வெளியிட்டவருக்கு உண்மையிலே தங்க சுரங்கம் கிடைத்தது போல் வசூல். வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களிலும் மதுரையில் பலத்த மழை. அதையும் முறியடித்து மூன்றே நாட்களில் மொத்த வசூல் ரூபாய் 48,000/- வந்திருக்கிறது. மிகப் பெரிய வசூல் சாதனை.இது. மழை மட்டும் இடையூறு செய்யாமலிருந்திருந்தால் வசூல் ரூபாய் 50 ஆயிரத்தை தாண்டியிருக்கும் என்று தெரிகிறது. காரணம் மாலை நேர மழை குறிப்பாக நேற்று ஞாயிறு மாலை 5.55 க்கு ஆரம்பித்த மழை இரவு 7.15 மணி வரை பெய்திருக்கிறது. வெளியிட்டாளரைப் பொறுத்தவரை அவரின் விநியோக உரிமம இந்த மாத இறுதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அது நிறைவு பெறும் முன் ஒரு முறை வெளியிட்டு விடலாம் என்று பிளான் செய்து வெளியிட்ட அவருக்கு ஜாக்பாட்.

திருச்சி கெயிட்டி

வெள்ளை ரோஜா தன் பிடியை விடாமல் ஸ்டடியாக ஓடிக் கொண்டிருகிறது. கெயிட்டி திரையரங்கை சுற்றி 3 அரங்குகள் அமைந்திருக்கின்றன. அந்த அரங்குகளில் (ராமகிருஷ்ணா, ஸ்டார்) எல்லாம் சனிக்கிழமை முதல் ஷிப்டிங் படங்கள் வெளியாகி ஒரு opposition -ஐ உருவாக்கியும் கூட வெள்ளை ரோஜாவிற்கு மக்கள் சிறப்பாகவே வரவேற்பு அளித்துள்ளனர். மூன்று நாட்களில் ரூபாய் 22 ஆயிரத்தை தாண்டிய வசூல். கெயிட்டி திரையரங்கை பொறுத்தவரை இது நல்ல வசூல் என்று கூறப்படுகிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
23rd August 2014, 12:39 AM
சென்னை மகாலட்சுமி

அண்ணன் ஒரு கோவில் ஒரு வாரத்தில் 14 காட்சிகளில் மொத்த வசூல் ரூபாய் 60 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. இரவு காட்சி இல்லாமல் மதியம் மற்றும் மாலை காட்சிகளில் மட்டும் வந்த இந்த வசூல் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.

திருச்சி கெயிட்டி

வெற்றிக் கொடி நாட்டி மணம் வீசிய வெள்ளை ரோஜா விநியோகஸ்தர் பங்கு தொகையாக அளித்தது கிட்டத்தட்ட ரூபாய் 10 ஆயிரம். கெயிட்டியில் வந்த பெரிய ஷேர் இது.

மதுரை சென்ட்ரல்

முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்து புதிய சரித்திரம் எழுதியிருக்கிறது தங்கசுரங்கம். சங்கிலி வசூல் ஒரு சாதனை என்றால் அதை தாண்டியது சந்திப்பு படத்தின் வசூல். அதையும் முறியடித்திருக்கிறது தங்கசுரங்கம். ஒரு வாரத்தில் மதுரை சென்ட்ரலில் தங்கசுரங்கம் பெற்ற வசூல் ரூபாய் 85 ஆயிரத்திற்கும் அதிகம் [Above Rs 85,000/-]. நான் இரண்டு ஆட்களுக்கு முன் குறிப்பிட்டது போல படத்தின் 5 வருட விநியோக உரிமை முடியும் இந்த நேரத்தில் படத்தை வெளியிட்ட கலைமதி கம்பைன்ஸ் என்ற விநியோகஸ்தருக்கு அடித்தது ஜாக்பாட்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

Murali Srinivas
4th September 2014, 11:58 PM
சென்னை மற்றும் மதுரை வெற்றியை தொடர்ந்து கோவையை கலக்க வருகிறார் டான். வரும் வெள்ளி 5.09.2014 முதல் கோவை ராயல் தியேட்டரில் வசூல் மழை பொழிய வருகிறது சந்திப்பு.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10592952_682809908470283_7098251770083413751_n.jpg ?oh=d2d5f1106bcbdb0741c499142388f380&oe=546D2CF5&__gda__=1415880131_a2085be14d40207a9ff8247b5096a69 8

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

Murali Srinivas
5th September 2014, 12:17 AM
திருச்சி கெயிட்டியில் நாளை வெள்ளி முதல் [செப்டம்பர் 5 முதல்] நடிகர் திலகம் தூள் பரத்திய தங்கப் பதக்கம் தினசரி 4 காட்சிகளாக வெளியிடப்படுகிறது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-10_zps85d198cf.jpg

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

Murali Srinivas
8th September 2014, 12:07 AM
சென்னை மற்றும் மதுரை வெற்றியை தொடர்ந்து கோவையை கலக்க வருகிறார் டான். வரும் வெள்ளி 5.09.2014 முதல் கோவை ராயல் தியேட்டரில் வசூல் மழை பொழிய வருகிறது சந்திப்பு.

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10592952_682809908470283_7098251770083413751_n.jpg ?oh=d2d5f1106bcbdb0741c499142388f380&oe=546D2CF5&__gda__=1415880131_a2085be14d40207a9ff8247b5096a69 8

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

Kovai Royal Entrance - Sandhippu

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=148507ebb9d38092&attid=0.1&disp=inline&safe=1&attbid=ANGjdJ9GYC3oF9OPDisARoZBfIn15iCVHRSo61jYDsN M42GTeP24NVNZhq_XOch4CfH7vGYgGR-I_tMVbZLCAwp4xW22iH3H_iJulWUS2K2BkMkVNfN0luiBCCJTG 0M&ats=1410113719200&rm=148507ebb9d38092&zw&sz=w996-h544

அன்புடன்

Murali Srinivas
8th September 2014, 12:12 AM
SP CHOWTHRY'S RECORD AT TRICHY GAIETY THEATRE

ON 06-SEP-14 - SATURDAY 4 SHOWS - TOTAL AUDIANCE - 458

ON 07-SEP-14 - SUNDAY 4 SHOWS - TOTAL AUDIANCE -554
TODAY EVENING SHOW FIRST CLASS FULL AT 6 PM AND HEAVY ALAPPARAI IN EACH AND EVERY ACTION OF CHOWTHRY

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p235x350/10615603_1508704542679555_6686473293924202320_n.jp g?oh=da01ca77cd40aea4f2b7c5bff049cc24&oe=548E00C2&__gda__=1418421097_fb848a7eacc0416dd5972309bae29fb d

Information Courtesy - Mr.Ramachandran, Trichy.

அன்புடன்

Russelldwp
9th September 2014, 11:11 PM
Trichy Maris Group Sivaji Fans Designed 50 Feet Mega Size Flex Banner for Vikram Prabu's Sigaram Thodu at Trichy Ramba A/c

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=1485b330ec9a3b6f&attid=0.1&disp=inline&realattid=f_hzvfw9l80&safe=1&attbid=ANGjdJ9xpE5JQOGjAVm9WXYBKSvINpJ04BaYCsZBAte g0r3YwDLFYAuJYrEBXqFqYTCNOcc6nWw9ISucr424-ndZb4wFYDCxDyHMweBUOwGhN8IXjDgaaIAJJTWnlu8&ats=1410282497952&rm=1485b330ec9a3b6f&zw&sz=w1337-h450

Murali Srinivas
15th September 2014, 11:56 PM
12-09-2014 வெள்ளிகிழமை முதல் கோவை ராயல் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக

"ஆண்டவன் கட்டளை" !

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1487484b84cad54a&attid=0.2&disp=inline&safe=1&attbid=ANGjdJ8jDrorgLdDtJ4fCh16CRQCKdiRNWXk2K0IY5L gn5AWjb2keBJLeog1A8hMVutSLkG75VyeocuD3b96KXzf-L02StOkw93D2UCkiuVGy0GDP-UUAE_MJXO6IcY&ats=1410800021324&rm=1487484b84cad54a&zw&sz=w996-h544

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1487484b84cad54a&attid=0.1&disp=inline&safe=1&attbid=ANGjdJ8U35mTsGrJAK3UyS9gQYXLAfJz1EHD0f5ZvPv tFCHYC6QbZC1ZlkS6XmIOMBwby0lN_Xc_Cv8MKjmK9FTGzimTV WQepn94RCQ7swvtJULFsTl5WLNZyNS4YeM&ats=1410800021324&rm=1487484b84cad54a&zw&sz=w996-h544

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=1487484b84cad54a&attid=0.3&disp=inline&safe=1&attbid=ANGjdJ9tk0HiVB8j8t995Yn5GhpBi4ecM2y50CjGfqV Oc5I2m4-Zio7ENd7ezij4b12IyY4Au7QyP2baTsNyjP7JPe0DiQPtmT-3rQgVdJemH3j6EIiZI5nykoFOe6o&ats=1410800021324&rm=1487484b84cad54a&zw&sz=w996-h544

நன்றி Dr.ரமேஷ் பாபு

அன்புடன்

Murali Srinivas
16th September 2014, 07:06 PM
கோவை மாநகர் ராயல் திரையரங்கில் இதுவரை இல்லாத புதுமையாக back to back என்ற முறையில் தொடர்ந்து இரண்டு வாரங்கள் நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டன. செப்டம்பர் 5 அன்று சந்திப்பு வெளியானது..செப் 12 முதல் ஆண்டவன் கட்டளை திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருகிறது.

சந்திப்பு திரைப்படத்தைப் பொறுத்தவரை முதலில் டிலைட் தியேட்டரில் வெளியாவதாக இருந்து பிறகு தவிர்க்க இயலாத சில காரணங்களால் ராயல் அரங்கிற்கு மாற்றப்பட்டது. அந்த திரையரங்கிலும் முதலில் ஒரு தேதி confirm செய்துவிட்டு பிறகு அதற்கு முந்தைய வாரம் 29 ஆகஸ்ட் அன்று திரையிட்டப்பட்ட படம் தொடரும் என்பது போன்ற செய்திகளை சொல்லி வந்தார்கள். முந்தைய வார படத்தின் 7வது நாளான வியாழன் அன்று மதியத்திற்கு மேல் மறுநாள் சந்திப்பு திரையிடப் போவதை confirm செய்தார்கள். படம் செப் 5-ந் தேதி வெளியாகிறது என்ற செய்தி பரவலான மக்களிடையே சென்று சேர்வதற்கான போதுமான விளம்பரங்களோ போஸ்டர்களோ திரையரங்கு தரப்பிலிருந்து செய்யப்படவில்லை. [படத்தை வெளியிட்டவர் மதுரையை இருப்பிடமாக கொண்டு செயல்படும் விநியோகஸ்தர் என்பதால் படப்பெட்டியும் படத்தின் போஸ்டர்களும் ராயல் திரை அரங்க உரிமையாளரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டது]. டிலைட் ராயல் என்று திரையிடப்படும் அரங்குகள் மாறி மாறி வந்த நிலை, பல முறை வெளியிடப்படும் தேதிகள் மாற்றப்பட்ட சம்பவங்கள், படம் வெளியான அன்று ரிலீஸ் ஆன புதுப் படங்கள், இத்தகைய சூழல்களிலும் சரியான விளம்பரமின்மையையும் தாண்டி சந்திப்பு திரைப்படம் பரவலான மக்களால் பார்க்கப்பட்டு ஒரு வார அரங்க வாடகையையும் கவர் செய்து அதற்கு மேலும் வசூலித்து விநியோகஸ்தர் மற்றும் அரங்க உரிமையாளர் ஆகிய இருவரையும் திருப்திப்படுத்தியிருக்கிறது

சந்திப்பு ஒரு வாரத்தை நிறைவு செய்த மறுநாளே அதே ராயலில் ஆண்டவன் கட்டளை வெளியிடப்பட்டது. கோவை மாநகரில் நடிகர் திலகத்தின் படங்கள் பரவலாக வெளியிடப்பட தொடங்கியவுடன் முதன் முதலாக ஒரு கருப்பு வெள்ளைப் படம் [பாச மலர் படத்தை இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை]. வெளியாகிறது. அதற்கு முந்தைய வாரம்தான் ஒரு நடிகர் திலகத்தின் படம் வெளியாகி ஓடியிருக்கிறது. ஆண்டவன் கட்டளை வெளியான அதே நாளில் ஐந்து புதுப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் 3 நடிகர் திலகத்தின் படங்கள் ஒளிப்பரபப்ட்டன. ஆண்டவன் கட்டளை பட பிரிண்டும் சுமார் ரகம்தான். இவற்றையெல்லாம் எதிர் கொண்டு ஆண்டவன் கட்டளை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.. நான்கு நாட்களில் 40 ஆயிரத்தையும் தாண்டிய வசூல்.என்பது நல்ல அறிகுறி என்பதோடு மேலும் இது போன்ற கருப்பு வெள்ளைப் படங்களை கையில் வைத்திருப்போரும் தைரியமாக படங்களை வெளியிட இது ஒரு நல்ல முன்னோடி.

அன்புடன்

gkrishna
16th September 2014, 07:15 PM
நல்ல தகவல் முரளி சார்

Murali Srinivas
18th September 2014, 12:15 AM
15.09.2014 முதல் பழனி சந்தானகிருஷ்ணாவில் தினசரி 4 காட்சிகளாக உயர்ந்த மனிதன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருகிறது. தகவல் உதவி திரு. ராமஜெயம். நன்றி சார்.

அன்புடன்

RAGHAVENDRA
18th September 2014, 07:06 AM
விரைவில்

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10703540_1463888683886829_7417858015295701631_n.jp g?oh=b8a7073d15632e226dde131b2fcd2032&oe=54C90513&__gda__=1422554435_1fc99b55a41bba531eed50385d9de75 8

JamesFague
18th September 2014, 10:32 AM
Any function is there for Trailer/Audio release. Pls clarify Mr Raghavendra Sir.

Also inform us the tentative date of release of the movie.


Regards

Murali Srinivas
18th September 2014, 02:41 PM
சென்னை மகாலட்சுமியில் செப்டம்பர் 26 முதல் நடிகர் திலகத்தின் சங்கிலி வெளியாகிறது. நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நேரத்தில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெளியிடப்படும் படங்களின் லிஸ்ட்

சென்னை மகாலட்சுமி - சங்கிலி - 26.09.2014 முதல்

மதுரை - சென்ட்ரல் - வெள்ளை ரோஜா - 26.09.2014 முதல்

திருச்சி - கெயிட்டி - அண்ணன் ஒரு கோவில் - 27.09.2014 முதல்

கோவை - டிலைட் - அவன்தான் மனிதன் - 28.09.2014 முதல்

இதை தவிர நெல்லை மற்றும் சில ஊர்களில் நடிகர் திலகத்தின் படங்களை திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

Murali Srinivas
20th September 2014, 10:49 PM
நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு படங்களின் பட்டியல் மற்றும் வெளியிடப்படும் தேதி பற்றிய latest தகவல்கள்

சென்னை மகாலட்சுமி - சங்கிலி - 26.09.2014 முதல்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsf9fb09cf.jpg

மதுரை - சென்ட்ரல் - வெள்ளை ரோஜா - 26.09.2014 முதல்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps268089ec.jpg

திருச்சி - கெயிட்டி - அண்ணன் ஒரு கோவில் - 01.10.2014 முதல்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsceaaeabe.jpg

கோவை - டிலைட் - எங்க மாமா - 28.09.2014 முதல்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps1eefd4ea.jpg

நெல்லை -சென்ட்ரல் - சந்திப்பு - 26.09.2014 முதல்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpse515c024.jpg

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

Murali Srinivas
27th September 2014, 12:12 AM
மாநகர் மதுரையில் நடிகர் திலகத்தின் வெள்ளை ரோஜா இன்று முதல் சென்ட்ரல் திரையரங்கில் வெளியிடப்பட்டு எப்போதும் போல் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்றைய தினத்தில் 4 காட்சிகளில் ஏறத்தாழ 700 பேர்கள் கண்டு களித்திருக்கின்றனர். சற்றேறேக்குறைய 15,000/- ரூபாயை மொத்த வசூலாக பெற்றிருக்கிறது. முதல் நாளைப் பொறுத்தவரை அண்மையில் வெளியான தங்க சுரங்கம் படத்திற்கு அடுத்தபடியான வசூல் இது. சென்ட்ரல் திரையரங்க வளாகமே முழுமையாக அலங்கரிக்கப்பட்டு அரங்கிற்கு வெளியேயும் மிகப் பெரிய பானர்கள் கட்டப்பட்டு ஒரு புதுப் பட ரிலீஸ் தோரணையில் டவுன் ஹால் ரோட்டில் போவோர் வருவோர் கவனத்தையெல்லாம் கவர்ந்து கொண்டிருக்கிறது என்று நண்பர் சந்திரசேகர் தகவல் தெரிவித்தார். குறிப்பாக நண்பர் சுந்தர்ராஜன் அவர்கள் பதிவிட்ட ரசிகர்கள் அமைத்துள்ள நடிகர் திலகத்தின் பல படங்களின் போஸ்கள் ஸ்டாண்டிஸ் கட் அவுட் ஆக அமைக்கப்பட்டு ஸ்டார் attraction ஆக திகழ்கிறது என்பதையும் சொன்னார்.

சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கும் [முன்னரே குறிப்பிட்டது போல் இப்போது மகாலட்சுமியில் இரண்டு காட்சிகள் மட்டுமே ஒரு படம் திரையிடப்படுகிறது] நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. மேலதிக விவரங்கள் கிடைத்தவுடன் அதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
28th September 2014, 11:32 PM
மாநகர் மதுரையில் நடிகர் திலகத்தின் வெள்ளை ரோஜா சென்ட்ரல் திரையரங்கில் வெளியிடப்பட்டு முதல் நாள் சிறப்பான வரவேற்பை பெற்றதை பகிர்ந்து கொண்டிருந்தேன். நேற்றைய தினம் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக மாலை மற்றும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நேற்று காலை முதல் பதற்றமான சூழல் இருந்தும் காலை மற்றும் மதிய காட்சிகளுக்கு 200-க்கும் அதிகமான மக்கள் வந்திருக்கிறார்கள். இன்று சற்று இயல்பு நிலை திரும்பியவுடன் பொது மக்கள் குறிப்பாக தாய்மார்கள் திரையரங்கிற்கு கணிசமான அளவில் வந்திருக்கின்றனர். இன்று நண்பகல் முதலே மதுரையில் சரியான மழை. விட்டு விட்டு பெய்த மழை மாலை நேரத்தில் வலுவாகவே பெய்திருக்கிறது. ஒரு பக்கம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுமோ என்ற பயம், பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாமல் குறைந்த அளவிலே ஓடும் சூழல், இவை போதாதென்று தொடர்ந்து பெய்த மழை இப்படி எதிர்மறை சூழல்களிலும் இன்று மாலைக் காட்சிக்கு வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 450. ஞாயிறு மாலைக் காட்சியைப் பொறுத்தவரை தங்கசுரங்கதையும் தாண்டிய வசூல். இன்றைய தினம் இரவுக் காட்சியோடு மொதத் வசூல் ரூபாய் 40,000/--ஐ கடந்திருக்கிறது. நேற்றைய தினத்தில் மட்டும் அந்த இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால் மூன்று நாள் மொத்த வசூலில் புதிய சாதனை படைத்திருக்கும்.

சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். தமிழகமெங்கும் நேற்று மாலைக் காட்சி நடைபெறவில்லை என்பதனால் நேற்று மதியக் காட்சி ஓடிய சங்கிலி திரைப்படமும் நேற்று மாலைக் காட்சி ரத்து செய்யப்பட்டது. இன்றைய தினம் பகல் மற்றும் மாலைக் காட்சிக்கு மக்கள் திரளாக வந்திருந்து ரசித்தனர்.மூன்று நாட்களில் நடைபெற்ற 5 காட்சிகளில் மொத்த வசூல் சுமார் ரூபாய் 30, 000/-.

கோவையில் அசாதாரண சூழ்நிலை சற்று தீவிரமாகவே இருந்தது. பதற்றம் முற்றிலும் தணிந்து விடாத நிலைமை. கோவை நகரை பொறுத்தவரை தனியார் பேருந்துகள்தான் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து. இன்றும் பெரும்பான்மையான தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலைமை. டிலைட் அரங்கை அடைவதற்கே பஸ் இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து வரவேண்டிய நிலை. சென்னை போன்று ஷேர் ஆட்டோக்கள் இல்லாத இடம். நேற்று முதல் டிலைட் அரங்கில் தினசரி 2 காட்சிகளாக திரையிடப்பட்ட எங்க மாமா திரைப்படத்தை இரண்டு தினங்களில் நடைபெற்ற 3 காட்சிகளில் [டிலைட்டில் பகல் மற்றும் மாலைக்காட்சி என்று இரண்டே காட்சிகள்தான், அதிலும் நேற்று மாலைக்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது] இந்த அசாதாரண சூழலிலும் டிலைட் போன்ற அரங்கில் திரையிடப்பட்டும் கூட 460-க்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர். இன்றைய பதற்றமான சூழலில் கோவையில் புதுப் படங்களுக்கு கூட பெரிய அளவில் ஆட்கள் வரவில்லையெனும் போது இது ஒரு மெச்சத் தகுந்த நிகழ்வு.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
30th September 2014, 01:00 AM
மதுரை மாகரம் குறிப்பாக திரையரங்குகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடும் என்று எண்ணி இருந்த நேரத்தில் இன்றும் சில பிரச்சனைகளை எதிர்க் கொண்டிருக்கிறது வெள்ளை ரோஜா திரைப்படம். இன்றைய தினம் வினியோகஸ்த சங்க தலைவர் அன்புச்செழியன் உண்ணாவிரதம் இருப்பதை காரணம் காட்டி மதுரை மாநகரிலே நண்பகல் காட்சியையும் பகல் காட்சியையும் ரத்து செய்ய சொல்லி தாக்கீது வரவே இரண்டு காட்சிகள் ரத்து என்று சென்ட்ரல் திரையரங்கில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு காலைக் காட்சிக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பகல் காட்சியும் இல்லை என்று இருந்த நேரத்தில் மதியம் இரண்டு மணி அளவில் நாளை தமிழகம் தழுவிய அளவில் நண்பகல் மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறவிப்பு வரவே அவசர அவசரமாக இன்றைய பகல் காட்சி நடைபெறும் என்று சொல்லி திரையிட்டு இருக்கிறார்கள். காலைக் காட்சிக்கு வந்து காட்சியில்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற கணிசமான மக்கள் சரியான தகவல் சொல்லியிருந்தால் பகல் காட்சிக்காவது வந்திருப்பார்கள். சரியான முறையில் இந்த விஷயத்தை கையாளாமல் இப்படி சொதப்புவதின் மூலம் பாதிக்கப்படுவது படத்தை வெளியிட்டவர்தான். இனி நாளையும் இரண்டு காட்சிகள் இல்லை என்று சொன்னால் அது சரியான ஒரு முறைதானா என்ற சந்தேகம் எழுகிறது! ஒழுங்காக அனைத்தும் நடந்திருந்தால் மிகப் பெரிய வசூலை ஈட்டியிருக்க வேண்டிய படம் இப்படிப்பட்ட செய்கைகளினால் பாதிக்கப்படுகிறது.

கோவை சென்னை ஆகிய ஊர்களிலும் இது போன்ற பிரச்சனைகளே!

எப்போதும் போல அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டுதான் நடிகர் திலகம் வெற்றி வாகை சூடுகிறார்!

அன்புடன்

Murali Srinivas
1st October 2014, 12:18 AM
இன்றைய தினமும் மதுரையில் கடையடைப்பு, பேருந்துகள் இயக்கப்படாமை, பதற்றம் நிறைந்த சூழல் இவற்றோடு இன்றும் பலத்த மழை பெய்திருக்கிறது. இப்படி இருந்தும் வேலை நாளாக இருந்தும் மாலைக் காட்சிக்கு கணிசமான மக்கள் கூட்டம். இன்று இரவோடு மொத்த வசூல் சுமார் ரூபாய் 60,000/- ஐ எட்டியிருக்கிறது. 5 காட்சிகள் ரத்து செய்யபட்டும் 5 நாட்களில் இந்த வசூல். அதுவும் 1980-களில் வெளியான படத்திற்கு. இந்தப் படங்கள் எல்லாம் சரியாகப் போகாது என்று சொன்னவர்களையெல்லாம் திகைக்க வைத்து வசூல் செய்து வருகிறது சென்ட்ரல் சினிமாவில் வெள்ளை ரோஜா.

எப்போதும் போல் வெற்றி நடிகர் திலகத்திற்குதானே!

அன்புடன்

Murali Srinivas
2nd October 2014, 12:52 AM
இன்று முதல் திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதாக திருச்சி தகவல் கூறுகின்றன. இன்றைய தமிழக சூழ்நிலையிலும் வேலை நாளிலும் ஆயுத பூஜைக்கு முன்னேற்பாடுகள் நடக்கும் நிலையிலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் பிறந்த நாள் விழாவில் மும்முரமாக இருந்த நேரத்திலும் இன்றைய தினம் 450 பேர் கண்டு களித்திருக்கின்றனர். இதில் வியப்பூட்டும் விஷயம் வந்தவர்களில் 100 பேர் பெண்கள் என்பதாகும். படத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பு மற்றும் வசூல் பற்றி மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
6th October 2014, 12:36 AM
தற்போது நடைபெறும் அரசியல் சூழலால் எப்போது பேருந்து ஓடும் எப்போது ஓடாது என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில்
எந்த திரைஅரங்கிலும் புதுப்படங்களுக்கே கூட்டம் இல்லாத நிலையிலும் தலைவரின் அண்ணன் ஒரு கோவில் துளி கூட தடுமாறாமல்
நான்காவது நாளாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இன்று ஞாயிறு மதியம் காட்சி வரை வினியோகஸ்தர் பங்கு ரூ. 7500 தாண்டிவிட்டது.கண்டிப்பாக நாளைக்குள் ரூ.10000 ஐ தொட்டுவிடும் என்பதில் தயக்கமில்லை.


இந்த வருடத்தில் வெளியான எங்கள் தங்க ராஜா, உயர்ந்த மனிதன், வெள்ளை ரோஜா, தங்கப்பதக்கம், அண்ணன் ஒரு கோவில் அனைத்துமே வினியோகஸ்தருக்கும் தியேட்டர் நிர்வாகத்திற்கும் சிறந்த லாபத்தை தந்துள்ளது என்பது மகிழ்ச்சியான் செய்தி.


மேலும் சிவாஜி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து தியேட்டர் நிர்வாகமே தெய்வமகன், இருவர் உள்ளம் படங்களை தேடி அலைகிறார்கள்


https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s851x315/10420148_1521650111384998_1202469573684791226_n.jp g?oh=c6bf6ec4a255ca9d7423fdfd1e3f36ac&oe=54CC037C&__gda__=1421272279_f5d0d6c7b39c0c649361287087573ec e

திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக சொல்லியிருந்தேன். அதை உறுதிப்படுத்தும் வண்ணம் சரியான தகவலை வெளியிட்ட ராமச்சந்திரன் சாருக்கு நன்றி. பட வெளியிட்டாளர் பங்கை ராமச்சந்திரன் சார் சொல்லியிருக்கிறார். படம் பார்த்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை எடுத்தோமென்றால் இந்த 5 நாட்களில் 2100 பேர் பார்த்திருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 400க்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள் என்று சொன்னால் படம் எந்தளவிற்கு steady-ஆக போயிருக்கிறது என்பது புரியும். கெயிட்டி தியேட்டர் அமைந்திருக்கும் ஏரியாவில் திரையரங்கிற்கு முன்னால் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடைபெற்று அதன் காரணமாக அங்கே பந்தல் சேர்கள் போன்றவை போடப்பட்டதால் அரங்க முகப்பே மறைக்கப்பட்டு படம் பார்க்க வந்த பலர் இதன் காரணமாக திரும்பி செல்ல நேர்ந்திருக்கிறது.

நடிகர் திலகத்தின் படங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடுவதை தடுக்கத்தான் எத்துனை முயற்சிகள்? இங்கேயெல்லாம் நடக்கும் நுண்ணரசியல் 99% மக்களுக்கு தெரிவதில்லை. சிவாஜி படங்கள் வராமல் தடுக்க முயற்சி எடுத்த பலரும் அது முடியாமல் புறமுதுகிட்டனர். இப்போது ஒரு சிலர் திருச்சியில் கையிலெடுத்திருக்கும் ஆயுதம் மண்ணின் மைந்தர் concept. என்னவென்றால் இப்போது திருச்சியில் அண்ணன் ஒரு கோவில் படத்தை வெளியிட்டிருப்பவர் மதுரையை சேர்ந்தவர். சிவாஜி படங்கள் வருவதை விரும்பாத ஒரு சில மனிதர்கள் [இவர்கள் எண்ணிக்கையில் குறைவான நபர்களே. ஆனாலும் சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்] அதை காரணம் காட்டி வெளியூர்காரர்கள் இங்கே வந்து படம் எப்படி போடலாம் என்ற கேள்வியை அரங்க உரிமையாளரிடம் எழுப்பி மறைமுகமாக ஒரு மிரட்டல் தொனியில் பேசி நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட விடாமல் முட்டுக்கட்டை போடுவது அதையும் மீறி படம் வெளியிடப்பட்டால் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்ற படங்களை கழுத்தை நெரித்து அதன் காரணமாக படங்களை குறைந்த நாட்களில் மாற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிவாஜி படங்கள் நன்றாக வசூலிப்பதால் அவற்றை திரையிட அரங்க உரிமையாளர் ஆவல் காட்டுகிறார், முயற்சி எடுக்கிறார் என்றபோதினும் இது போன்ற சூழ்ச்சிகளையும் நாம் சமாளிக்க வேண்டியுள்ளது.

எத்துனை இடர்பாடுகள் வந்தாலும் எப்போதும் போல் வெற்றி நடிகர் திலகத்திற்குதானே!

சென்னை மகாலட்சுமியில் சென்ற வாரம் வெள்ளி முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். சென்ற வாரம் [ இப்போதும் கூட] நிலவிய அரசியல் சூழல், பல இடங்களிலும் தெருவெங்கும் நடந்த போராட்டங்கள், சில பல சங்கங்கள் நடத்திய பந்த்கள் அதன் காரணமாக நிறுத்தப்பட்ட காட்சிகள் என்று பலவகையான குழப்பத்திலும், மொத்தம் திரையிடப்படுவதாக இருந்த 14 காட்சிகளில் 3 காட்சிகள் ரத்து செய்யப்பட்டு 11 காட்சிகளே நடைபெற்ற நிலையிலும் சங்கிலி திரைப்படம் அந்த 11 காட்சிகளில் ரூபாய் 55,000/- வசூல் செய்திருக்கிறது. இரண்டு காட்சிகள் என்ற concept அறிமுகப்படுத்தப்பட்டபின் எந்த படமும் 11 காட்சிகளில் இந்தளவிற்கு வசூலிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது அமைதியும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் வந்திருக்கும் இந்த அருமையான வசூல், அனைத்துக் காட்சிகளும் ஓடியிருந்தால் இன்னும் மிகப் பெரிய அளவில் இருந்திருக்கும் என்பது நாம் சொல்லாமலே அனைவருக்கும் புரியும்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
31st October 2014, 11:38 PM
http://i1373.photobucket.com/albums/ag399/namburajan/fb_zps9d9aa2e6.jpg

நெல்லை மாநகரில் சென்ட்ரல் திரையரங்கில் தீபாவளியன்று வெளியான நடிகர் திலகத்தின் நீதி திரைப்படம் ஒரு வாரத்தையும் தாண்டி 9 நாட்கள் ஓடியிருக்கிறது. வெகு நாட்களுக்கு பின் அந்த திரையரங்கில் ஒரு படம் ஒரு வாரத்தை தாண்டி ஓடியிருப்பதாக அந்த ஊர் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நீதி திரைப்படத்தின் விநியோக உரிமையை அண்மையில்தான் அந்த விநியோகஸ்தர் வாங்கினார். வாங்கிய உடனே படம் வெளியிட வாய்ப்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அது நல்ல முறையில் ஓடியிருப்பது தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர் இருவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் அந்த அரங்கில் விரைவில் வெள்ளை ரோஜா, சந்திப்பு வைர நெஞ்சம் ஊட்டி வரை உறவு மற்றும் அண்ணன் ஒரு கோவில் ஆகியவை வெளியாக இருக்கிறது. அங்கு மட்டுமல்ல நெல்லை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மேற்சொன்ன படங்களெல்லாம் வலம் வர இருக்கின்றன என்ற இனிப்பான செய்தியையும் நெல்லை வாழ் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

அதே போன்று சென்னை வாழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. சென்னை மினர்வா திரையரங்கில் நடிகர் திலகத்தின் சொர்க்கம் திரைப்படம் இன்று முதல் 3 காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் கண்டு களிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம்.

அன்புடன்

Murali Srinivas
7th November 2014, 10:54 PM
Vilayattupillai to Storm Theatres Again

NEWS

Remember Vilayattupillai [/B]The evergreen hit of thespian SIvaji Ganesan. Released in 1970, the film featured Sivaji Ganean, Padmini, Kanchana, Sivakumar, T.S.Baliah, Cho, and others. Directed by A.P.Nagarajan, the movie had music by K V Mahadevan.

The movie was a huge hit and was received well run all across tamilnadu. Close on the heels of Karnan’s (re-released after digital restoration), plans are now on by J.R.L. Combines, who created a record collection at Mekala by screening Neelavanam to re-release Vilayattupillai, especially to woo younger generation audience, who are below 40.

The movie to be released in Mahalakshmi Talkies, Otteri, Chennai-12 on 14th November (Friday) 2014 daily TWO shows only at 2:30 p.m. and 6:15 p.m. for one week ending on 29th November 2014. It is nearly after a gap of 40 years this movie is being re-released courtesy J.R.L. Combines, Chennai.
Vilayattupillai has a famous hit song “Eru perusa Intha Ooru prusa” by T M Soundararajan.

Call: JRL Combines 9940342150

Regards

Russellbpw
8th November 2014, 12:12 AM
நீலவானம் திரைப்படம் மேகலா திரை அரங்கு வரலாற்றிலே 21 அரங்கு நிறைந்த காட்சி கண்டு - திருமதி தேவிகா அவர்களுக்கு ஷீல்ட் கொடுக்கப்பட்டது மேகலாவில் கடைசியாக அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்த படம் நீலவானம் என்பது சிறப்பு செய்தி !

Murali Srinivas
12th November 2014, 10:44 PM
நடிப்பு சக்ரவர்த்தியின் திக்விஜயம் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் தொடர்கிறது.

http://1.bp.blogspot.com/-KWDHLfUhROo/UHUtDIt123I/AAAAAAAA75Q/pxWJDCVM3b8/s1600/movieposter.jpg

நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்குகளை அலங்கரிக்க வருகிறது. 1980-களில் பல்வேறு திரையரங்குகளில் வலம் வந்த இந்தக் காவியம் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்படுகிறது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsceaaeabe.jpg

கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படுகிறது. சென்னையிலும் திருச்சியிலும் வசூல் சாதனை புரிந்த அண்ணன் ஒரு கோவில் கோவை மாநகரிலும் வெற்றிக் கொடி நாட்டும் என்பது திண்ணம். [விரைவில் அண்ணன் ஒரு கோவில் மதுரையிலும் வெற்றி பவனி வர இருக்கிறது]

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps268089ec.jpg

வரும் வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகிறது. மதுரையிலும் திருச்சியிலும் எதிர் மறை சூழலிலும் வசூல் பிரளயம் கண்ட வெள்ளை ரோஜா நெல்லை சீமையையும் வெற்றிக் கொள்ளும் என சொல்லவும் வேண்டுமோ!

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Russellxqa
13th November 2014, 01:00 PM
Saadhanaikku vazhthukkal. Vilayattupillai to Storm Theatres Again
Remember Vilayattupillai The evergreen hit of thespian SIvaji Ganesan. Released in 1970, the film featured Sivaji Ganean, Padmini, Kanchana, Sivakumar, T.S.Baliah, Cho, and others. Directed by A.P.Nagarajan, the movie had music by K V Mahadevan.
The movie was a huge hit and was received well run all across tamilnadu. Close on the heels of Karnan’s (re-released after digital restoration), plans are now on by J.R.L. Combines, who created a record collection at Mekala by screening Neelavanam to re-release Vilayattupillai, especially to woo younger generation audience, who are below 40.
The movie to be released in Mahalakshmi Talkies, Otteri, Chennai-12 on 14th November (Friday) 2014 daily TWO shows only at 2:30 p.m. and 6:15 p.m. for one week ending on 20th November 2014. It is nearly after a gap of 40 years this movie is being re-released courtesy J.R.L. Combines, Chennai.
Vilayattupillai has a famous hit song “Eru perusa Intha Ooru prusa” by T M Soundararajan. Call 9940342150.

Russellxqa
13th November 2014, 01:04 PM
Thats true, because i am distributor for this film-Now we are screening Vilayattupillai in Mahalakshmi Theater in Otteri, Chennai-12 JRL Combines Cell 9940342150-Thanks

Russellbpw
13th November 2014, 10:51 PM
thats true, because i am distributor for this film-now we are screening vilayattupillai in mahalakshmi theater in otteri, chennai-12 jrl combines cell 9940342150-thanks

திரு ரகுபதி சார்

வணக்கம் !

தங்களை பற்றி நான் நிறைய கேள்வி பட்டுள்ளேன்.

மேகலா திரை அரங்கில் நடிகர் திலகத்தின் நீலவானம் திரைப்படம் திரையிட்டது தாங்கள்தான் என்றொரு பேச்சுண்டு. அது உண்மை என்று நினைக்கிறன். உண்மையா இல்லையா என்று நீங்கள் தான் கூறவேண்டும்.

நீலவானம் படைத்திட்ட வசூல் பிரளயம் பற்றி பலரும் கூறியுள்ளார்கள்.

இருந்தாலும் அந்த படத்தை நீங்கள் மேகலாவில் வெளியிட்டு அதன் வசூல் சாதனை பற்றிய தகவல் நீங்கள் பதித்தால் நன்றாக இருக்கும். அதனை எங்களுக்காக பகிர்ந்து கொள்ள முடியுமா ?

மேலும், மேகலாவில் அதுபோல வசூல் செய்த படம் அதற்க்கு பிறகு எதுவும் இல்லை என்றும் ஒரு தகவல் உள்ளது. அது பற்றி உங்கள் கருத்து ?

Rks

Russellxqa
14th November 2014, 09:21 AM
Neengal kuriyathu atthanaiyum Unmai Matravai adutha bathilil kurugiren.Raghupathy JRL Combines, Chennai

Vilayattupillai to Storm Theatres Again From Today


NEWS
Remember Vilayattupillai The evergreen hit of thespian SIvaji Ganesan. Released in 1970, the film featured Sivaji Ganean, Padmini, Kanchana, Sivakumar, T.S.Baliah, Cho, and others. Directed by A.P.Nagarajan, the movie had music by K V Mahadevan.
The movie was a huge hit and was received well run all across tamilnadu. Close on the heels of Karnan’s (re-released after digital restoration), plans are now on by J.R.L. Combines, who created a record collection at Mekala by screening Neelavanam to re-release Vilayattupillai, especially to woo younger generation audience, who are below 40.
The movie to be released in Mahalakshmi Talkies, Otteri, Chennai-12 on 14th November (Friday) 2014 daily TWO shows only at 2:30 p.m. and 6:15 p.m. for one week ending on 20th November 2014. It is nearly after a gap of 40 years this movie is being re-released courtesy J.R.L. Combines, Chennai.
Vilayattupillai has a famous hit song “Eru perusa Intha Ooru prusa” by T M Soundararajan. Call 9940342150.

Murali Srinivas
15th November 2014, 01:45 PM
Dear all Sivaji Fans-Be Alert to create new history in COLLECTION

Why I am telling this because you can see Sivaji films free of cost at any place any time in your house also. But you should try to create box office collections by seeing a Film in Theatrical Release to show your interest towards our only Nadippin Imayam. So for those who want to see a sivaji film on Sunday evening free of cost, you should make sure that at least two of your representatives attend theatrical show at Mahalakshmi Theater, Otteri without fail-This is my conscious effort to create history in collections when compared to others films. This is my sincere suggestion-YOU MAY TAKE IT OR LEAVE IT-JRL COMBINES, CHENNAI.

Posting it in the appropriate thread.

Russellxqa
15th November 2014, 08:32 PM
Thanks for Posting it in the appropriate thread.JRL

Murali Srinivas
15th November 2014, 11:55 PM
நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இரண்டே தினத்தில் 4 காட்சிகளில் பெற்ற வசூல் ஒரு புதிய சாதனை. வினியோகஸ்த நண்பர் மேலதிக தகவல்களை தருவார் என எதிர்பார்ப்போம். நல்ல பிரிண்ட் என்பது ஒரு தனி சிறப்பு.

கூடுதல் சுவையாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியம் நீலவானம் படத்திலிருந்து ஓஹோஹோ ஓடும் மேகங்களே பாடல் இடைவேளையின்போது நல்ல பிரிண்டில் காண்பிக்கப்படுவது அரங்கத்தையே அலற வைக்கிறது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அதிலும் round hat with coolers போட்டு நடிகர் திலகம் காலை வளைத்து நிற்கும் காட்சியில் உச்சகட்ட அலப்பரை என்று சொன்னார்கள்.

தியேட்டருக்கு வந்திருந்த விநியோகஸ்தரை சுற்றிக் கொண்டு எப்போது இந்த படம் போடப் போகிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்களாம் ரசிகர்கள்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
16th November 2014, 12:04 AM
வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நெல்லையில் கடுமையான மழை. அந்த மழையிலும் ஒரோரு காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருந்து படத்தை கண்டு களித்திருக்கிறார்கள். வரும் நாட்களில் மேலும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் வெளியாவதாக இருந்த நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அடுத்த வெள்ளிகிழமைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Russellxqa
20th November 2014, 03:24 PM
Thanks for ur news item. Sir, Today i have opened a New Page in Facebook on Nadigarthilagam Sivaji ganesan namely"Sivaji Raghu". All the world sivaji fans can contribute in it by sending rare photos, news items, their addresses, E Mail ID, and landline and Cell Phone numbers, so that everyone can share their views with an open heart. I hope you will appreciate this and will publish this tag in appropriate thread-agra2014

Murali Srinivas
21st November 2014, 02:28 PM
வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகி வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்தது. நெல்லையில் கடுமையான மழை. அந்த மழையிலும் ஒரோரு காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருந்து படத்தை கண்டு களித்திருக்கிறார்கள்.

இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் நீதி 9 நாட்கள் இப்போது வெள்ளை ரோஜா 7 நாட்கள். அதாவது ஒரு மாதத்தில் (30 நாட்களில்) 16 நாட்கள் நடிகர் திலகத்தின் படங்களே அந்த சென்ட்ரல் திரையரங்கில் ஓடியிருக்கின்றன. நடிகர் திலகத்தின் படங்கள் ஓடாது என்ற கணிப்புகள், ஜோசியங்கள், செயற்கை தடைகள் அனைத்தையும் தாண்டி இது நிகழ்கிறது. அதுவும் சாதாரணமாக ஓடவில்லை. இந்த இரண்டு படங்களுமே மறு வெளியீட்டு படங்களில் அதிக வசூலும் பெற்றிருக்கிறது. இன்றைய அன்றைய படங்களை விட அதிக வசூல் என்பது ஒரு போனஸ். இரண்டு படங்களையும் வெளியிட்ட விநியோகஸ்தரிடம் தியேட்டர் அதிபர் அடுத்த மாதம் மற்றொரு சிவாஜி படத்தை எங்கள் அரங்கில் திரையிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பது எக்ஸ்ட்ரா போனஸ் செய்தி.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
23rd November 2014, 01:03 AM
கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்ட நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு வாரத்தை நிறைவு செய்த படம் வினியோகஸ்த நண்பருக்கு மகிழ்ச்சிக்குரிய லாபத்தை பெற்று தந்திருக்கிறது. விஷயத்தை கேள்விப்பட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாசா மற்றும் கிருஷ்ணவேணி அரங்குகள் இந்தப் படத்தை அவர்களது அரங்கில் திரையிடுவதற்கு ஆர்வம் காண்பித்திருக்கின்றன. இந்த படமெல்லாம் எங்கே ஓடப் போகிறது என்று வழக்கம் போல் மீரான் சாஹிப் தெருவில் கிண்டலடித்தவர்கள் இப்போது வாய் மூடி மௌனம் காக்கிறார்கள். சென்னையில் விளையாட்டுப் பிள்ளையின் வசூலைப் பார்த்த மற்ற மாவட்ட விநியோகஸ்தர்கள் அவர்கள் ஏரியாக்களில் படத்தை வெளியிட முனைப்பு காட்டுகின்றனர்.

விளையாட்டுப் பிள்ளை படத்தை சென்னையில் திரையிட்ட JRL combines அடுத்தபடியாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியமான இரு மலர்கள் படத்தை திரையிடுகின்றனர். அதன் பிறகு நீலவானம் வெளியாகும் என தெரிகிறது.

கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வெள்ளிக்கிழமை நவம்பர் 21 முதல் வெளியாகி இருக்கும் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. முதல் இரண்டு நாட்களில் படம் வந்த ஆட்களைப் பார்த்து விட்டு அரங்க உரிமையாளர் ஆச்சரியப்பட்டு போனாராம். படத்திற்கு வந்த High class audience அவரின் ஆச்சரியத்திற்கு ஒரு காரணம் என்றால் தியேட்டருக்கு வந்த கணிசமான பெண்கள் கூட்டம் மற்றொரு காரணம். அதிலும் ஒரு நான்கு பேர் 15 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஊரிலிருந்து இந்த படம் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். மொத்தம் விற்பனையான டிக்கெட்களில் 25 சதவீதம் பெண்கள் என்பது தனிச் சிறப்பு.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
23rd November 2014, 10:57 PM
கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் இன்று அண்ணனுக்கு அமோக வரவேற்பு.

இன்று மாலைக் காட்சி எப்படி களை கட்டப்போகிறது என்பதன் அறிகுறி மதியக் காட்சியிலே தெரிந்து விட்டதாம். மதியக் காட்சிக்கு நல்ல கூட்டம் என்றால் மாலைக் காட்சி அமர்களப்படுத்தி விட்டதாம். பால்கனி ஹவுஸ் புல். இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் புஃல். முதல் வகுப்பு கிட்டத்தட்ட நிறைந்து விட்டனவாம். டிலைட் அரங்கில் வெகு நாட்களுக்கு பிறகு ஹை கிளாஸ் பால்கனி டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகி இருக்கிறது. ஒரே காட்சிக்கு பால்கனியும் இரண்டாம் வகுப்பும் நிறைவது வெகு நாட்களுக்கு பிறகு நடக்கிறதாம். இன்றைய மாலைக் காட்சிக்கு மட்டும் 30 சதவீதம் பெண்கள் வந்திருக்கின்றனர். அதில் முக்கால்வாசிப் பேர் family audience. முதல் இரண்டு நாட்களில் மொத்தம் எத்தனை பேர் பார்த்தார்களோ அதையும் தாண்டிய எண்ணிக்கையில் இன்றைய தினம் audience வந்திருக்கிறார்கள்.

மிகவும் சந்தோஷம் அடைந்துள்ள அரங்கத்தை லீசிற்கு எடுத்து நடத்துபவர் இப்போது அனைத்து அரங்க உரிமையாளர்களும் சொல்லும் அதே வார்த்தையான அடுத்த மாதம் இன்னொரு சிவாஜி படத்தை திரையிடுங்கள் என்று படத்தை வெளியிட்டவரிடம் சொல்லியிருக்கிறார்.

சென்னை திருச்சியை தொடர்ந்து இப்போது கோவையிலும் சாதனை படைத்திருக்கிறார் Dr. ரமேஷ். அவரின் திக்விஜயம் மேலும் தொடரும்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

இன்று கிடைத்த தகவல்படி வரும் டிசம்பர் 5 வெள்ளி முதல் நெல்லைக்கு சிபிஐ ஆபீசர் ராஜன் விஜயம் செய்கிறார். ஆம், நெல்லை சென்ட்ரலில் தங்கசுரங்கம் வெளியாகிறது.

sivaa
26th November 2014, 11:14 PM
வருடம் - 1959

கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது

1. முதன் முதலாக கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - கட்டபொம்மன்.

ஊர் - திருவனந்தபுரம்

2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்

சென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.

3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.

4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.

[ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].

5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.

6. ஷிப்டிங்கில் மதுரை மட்டும் சுற்று வட்டாரங்களில் ஓடிய நாட்கள் -143


முரளியின் முன்னைய பதிவிலிருந்து

sivaa
26th November 2014, 11:16 PM
வருடம் - 1963

1. கதையாக வெளி வந்து அதன் பின் திரைப்படமாக்கப்பட்ட படம் இருவர் உள்ளம். வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் திலகம் - கலைஞர் பங்களிப்பில் வந்த படம் இருவர் உள்ளம்.

100 நாட்கள் ஓடிய படம் - இருவர் உள்ளம்.

2. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இருவர் உள்ளம் திரையிடப்பட்ட போது செய்த சாதனைகள்.

சென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100

திருச்சியில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 75

மதுரை பரமேஸ்வரியில் - 4 வாரம்


முரளியின் முன்னைய பதிவிலிருந்து

sivaa
26th November 2014, 11:20 PM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by Murali Srinivas 2. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இருவர் உள்ளம் திரையிடப்பட்ட போது செய்த சாதனைகள்.

திருச்சியில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 75
இதற்குப் பின்னர் நான் திருச்சியில் இருந்த போது (1991 அல்லது 1992) இருவர் உள்ளம் ஸ்டார் திரையரங்கில் (A/C) வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்று 4 வாரங்கள் ஓடியது .

joe வின் முன்னைய பதிவிலிருந்து

sivaa
26th November 2014, 11:22 PM
6. 1965 வருடம் ஜூலை 31 அன்று வெளியான இந்த படம் 1966 ஜனவரி 13 வரை 167 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. முன்கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பொங்கலுக்கு புதிய படம் வெளியிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது.

ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 200

7. பல ஆண்டுகளுக்கு பிறகு அதே மதுரை - ஸ்ரீதேவியில் வெளியானபோது செய்த சாதனைகள்

வெளியான நாள் - 20.02.1985

ஓடிய நாட்கள் - 28

மொத்த வசூல் - Rs 2,57,600.80 p

மதுரையில் ஒரு மறு வெளியீட்டின் போது நான்கே வாரத்தில் மிக அதிகமான வசூல் புரிந்த சாதனையும் செய்தது நடிகர் திலகத்தின் திருவிளையாடல் மட்டுமே.

முரளியின் முன்னைய பதிவிலிருந்து

sivaa
26th November 2014, 11:26 PM
சாதனை பட்டியல்

இங்கே ஆண்டு வாரியாக நடிகர் திலகத்தின் சாதனைகள் பட்டியலிடப்படுவதை பார்த்து நமது ஹப்-ல் ஒரு உறுப்பினரும் பெங்களூரை சேர்ந்தவரும் நடிகர் திலகத்தின் பாரம்பரிய ரசிக குடும்பத்தை சேர்ந்தவருமான திரு.செந்தில் குமார் (அவரது தந்தையார் நடிகர் திலகத்தின் மிகப் பெரிய ரசிகராவார்), நடிகர் திலகத்தின் சில படங்கள் பெங்களூரில் மறு வெளியீட்டின் போது ஓடிய நாட்களை இங்கே நமக்காக அனுப்பியிருக்கிறார்.

மனோகரா

மறு வெளியீடு - 1988

அரங்கம் - ஸ்ரீ டாக்கீஸ்

நாட்கள் - இரண்டு வாரம்

புதிய பறவை

மறு வெளியீடு - 1989

அரங்கம் - ஸ்ரீ டாக்கீஸ்

நாட்கள் - மூன்று வாரம்

இதில் முதல் வாரம் நடை பெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாக புதிய பறவை ஓடியது.

பெங்களூரில் ஒரு தமிழ் படம் மறு மறு --- வெளியீட்டின் போது இப்ப்படி ஓடுவது என்பது ஒரு சாதனை என்கிறார் செந்தில்.

நன்றி செந்தில். நீங்கள் குறிப்பிட்டுள்ள பிற படங்களை பற்றிய சாதனைகள் இங்கே பட்டியலிடப்படும் போது அவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

அன்புடன்


முரளியின் முன்னைய பதிவிலிருந்து

sivaa
26th November 2014, 11:29 PM
16. பல மறு வெளியிட்டிற்கு பின் மதுரையில் 22. 07. 1977 அன்று சிந்தாமணி திரையரங்கில் திரையிடப்பட்ட சிவந்த மண் ஓடிய நாட்கள் - 23.

17. இரண்டு வருடங்களுக்கு பின் 08.06.1979 அன்று மீண்டும் மதுரை ஸ்ரீ தேவியில் திரையிடப்பட்டு 14 நாட்கள் ஓடியது.

18. நீண்ட இடைவேளைக்கு பின் 15.08.1985 அன்று மதுரை சிந்தாமணியில் திரையிடப்பட்ட தங்கசுரங்கம் ஓடிய நாட்கள் - 21

முன்னைய பதிவிலிருந்து

19. 1990-ம் ஆண்டு பெங்களுர் நகரில் சங்கீத் திரையரங்கில் திரையிடப்பட்ட தெய்வமகன் ஓடிய நாட்கள் - 21 (நன்றி செந்தில்)

முன்னைய பதிவிலிருந்து

sivaa
26th November 2014, 11:34 PM
மறு வெளியீடிற்கு என்றே பிறவி எடுத்த படம் - வசந்த மாளிகை. அனேகமாக எல்லா வருடமும் மதுரையில் மற்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் வெளியான போது மக்கள் மீண்டும் மீண்டும் பெரிய வரவேற்பு நல்கி ஆதரித்தார்கள்.

பெங்களூரில் - 1984 ம் வருடம் மறு வெளியீட்டின் போது அருணா திரையரங்கில் ஓடிய நாட்கள் - 14 [ நன்றி செந்தில்].


முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 08:33 PM
மதுரையின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றான சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 6.11.2009 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக , இரட்டை வேட நடிப்புக்கு இலக்கணமாகத் திகழும் , காலத்தை வென்ற காவியமாம் , நமது நடிகர் திலகத்தின் உத்தமபுத்திரன் திரைப்படம் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகின்றது. முதல் நாளான 6.11.2009 வெள்ளியன்றே , கன மழையையும் பெரு வெள்ளத்தையும் பொருட்படுததாமல், பெருங்கூட்டம் அலை மோதியுள்ளது. 6.11.2009 , முதல் நாள் மொத்த வசூல் மட்டும் ரூ. 9890 /- (ஒன்பதாயிரத்து எண்ணூற்றி தொண்ணூறு). பழைய படங்களின் , முதல் நாள் வசூலில் , இது அசுர சாதனை.

இன்று 8.11.2009 ஞாயிறு மாலைக் காட்சிக்கு , மழையையும் மீறி , பெரும் ஜனத்திரள் வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விக்ரமனையும் , பார்த்திபனையும் , வெள்ளித்திரையில் என்றென்றும் தரிசித்தே தீர வேண்டும் , என மக்கள் நினைக்கும் போது மழையாவது , வெயிலாவது !!!


முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 08:41 PM
ராஜபாளையத்தில் உள்ள மீனாட்சி திரையரங்கில் , 12.11.2009 (வியாழன்) முதல் 5 நாட்களுக்கு , தினசரி 4 காட்சிகளாக , நமது நடிகர் திலகத்தின் நீதி திரைப்படம் திரையிடப்பட்டு , வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக , கணிசமான மக்கள் கண்டு களித்து வருகின்றனர். இத்தகவலை எமக்கு அளித்த மதுரை ரசிக நல்லிதயம் திரு. தி. அய்யம் பெருமாள் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி !

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 08:42 PM
நாகர்கோவில் பயோனீர்முத்து திரையரங்கில் , 30.9.2009 முதல் 2.10.2009 வரை 3 நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் கெளரவம் திரையிடப்பட்டு , வெற்றிகரமாக ஓடியுள்ளது. பட வெளியீட்டாளருக்கு ரூ. 3000 /- (ரூபாய் மூவாயிரம்) லாபம் கிடைத்துள்ளது.

மீண்டும் இதே, நாகர்கோவில் பயோனீர்முத்து திரையரங்கில் , 7.10.2009 முதல் 10.10.2009 வரை 4 நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக , நமது நடிகர் திலகத்தின் ராஜா திரையிடப்பட்டு , அத்திரைப்படமும் வெற்றி வாகை சூடியுள்ளது. படத்தை வெளியிட்டவருக்கு ரூ. 3000 /- த்திற்கும் மேல் (ரூபாய் மூவாயிரத்திற்கும் மேல்) லாபம் கிடைத்துள்ளது.

இத்தகவலை , எமக்கு அளித்த ரசிக நல்லிதயம் , திரு. எஸ். ராமஜெயம் அவர்களுக்கு நன்றி !

sivaa
28th November 2014, 08:43 PM
நாகர்கோவில் ராஜாஸ் திரையரங்கில் , கடந்த 13.11.2009 (வெள்ளி) முதல் 16.11.2009 (திங்கள்) வரை , 4 நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக , உலக மகா நாயகரின் உயர்ந்த மனிதன் திரைப்படம் திரையிடப்பட்டு , நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தகவலை அளித்த ராமஜெயம் அவர்களுக்கு எமது நன்றி !

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 08:55 PM
அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையம்பதியில், சென்ட்ரல் சினிமா திரையரங்கில், இன்று (25.12.2009) முதல் தினசரி 4 காட்சிகளாக, கலையுலக சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல் புராண காவியம் திரையிடப்பட்டுள்ளது. இறையனாரின் திருவிளையாடல் திரைக்காவியத்தை தரிசித்து இறையருள் பெறுவோம் !

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 08:59 PM
மதுரை சென்ட்ரல் அரங்கிற்கு, பக்த கோடிகள் அலைகடலெனத் திரண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். கலையுலக சொக்கநாதரின் திருவிளையாடலை தரிசிக்கத் தானே இந்தக் கண்கள். வெள்ளிக்கிழமை (25.12.2009), முதல் நாள் மட்டும் , மொத்த வசூல் ரூ. 10600 /- (ரூபாய் பத்தாயிரத்து அறுனூறு). பழைய படங்களின், முதல் நாள் வசூலில், இது சிகர சாதனை.

முரளி சாரின் யூகம் சரியே. நாளை திங்கட்கிழமை (28.12.2009) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்ட்ரலில், திருவிளையாடல், நடுநிசிக் காட்சியாக நள்ளிரவு 1:30 மணிக்கு திரையிடப்படுகிறது.

தகவல்களை வழங்கிய மதுரை ரசிக நல்லிதயங்களுக்கு பசுமையான நன்றிகள் !!!


முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 09:03 PM
மதுரை சென்ட்ரலில், சிவாஜி பெருமானின் திருவிளையாடல், வரலாறு படைத்துளளது. முதல் 5 நாட்களில் (வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்), அதாவது 25.12.2009 முதல் 29.12.2009 வரை, மொத்த வசூலாக ரூ. 40000 /- (ரூபாய் நாற்பதாயிரம்) அளித்துள்ளது. பழைய படங்களைப் பொறுத்த வரை இது இமாலய சாதனை.

வைகுண்ட ஏகாதசி (28.12.2009) அன்று, நடுநிசிக் காட்சியை தரிசித்தவர்கள் 192 பக்தர்கள். அந்த ஒரு காட்சிக்கு மட்டும் மொத்த வசூல் ரூ. 2200 /- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு). இதுவும், பழைய படங்களுக்கு ஒரு சிறப்பான சாதனையே.
( 5 நாள் மொத்த வசூல் தொகையில், நடுநிசிக் காட்சி வசூலும் அடங்கியுள்ளது.)

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 09:09 PM
மதுரையம்பதியில், சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 25.12.2009(வெள்ளி) முதல் 31.12.2009(வியாழன்) வரை ஒரு வாரம் தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடை போட்ட கலையுலக சுந்தரேஸ்வரரின் "திருவிளையாடல்", அள்ளித் தந்த மொத்த வசூல் ரூ.47,000/- (ரூபாய் நாற்பத்து ஏழாயிரம்). பழைய படங்களைப் பொறுத்தவரை இது சிகர சாதனை. இத்திரைக்காவியத்தைத் திரையிட்டவருக்கு, இந்த ஒரு வாரத்தில், ரூ.14,000/- (ரூபாய் பதினான்காயிரம்) லாபம் கிடைத்துள்ளது.

கலைக்கடவுளை நம்பினோர் கைவிடப்படார் !!!


முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 09:12 PM
தண்டாயுதபாணி அருள்பாலிக்கும் பழனி மாநகரின் ஓம் ஷண்முகா திரையரங்கில், கலையுலகின் சிகர சிகாமணி நமது நடிகர் திலகத்தின் "சுமதி என் சுந்தரி" திரைக்காவியம், 3.2.2010 புதன்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு, மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. உள்ளூர் மக்களுடன், மதுரை மாநகர, மாவட்ட மக்களும் மற்றும் திருச்சியிலிருந்தும் மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து இத்திரைக்காவியத்தைக் கண்டு களித்து வருகின்றனர்.

இத்தகவலை எமக்களித்த எமது நெருங்கிய நண்பரும், சிவாஜி மன்ற பேச்சாளருமான மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கும் மற்றும் பழனி நகர சிவாஜி மன்றத் தலைவர் திரு.முத்து விஜயன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!


முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:07 PM
நாகர்கோவில் பயோனீர்முத்து திரையரங்கில், 25.12.2009(வெள்ளி) முதல் 27.12.2009(ஞாயிறு) வரை 3 நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாக, பாரத ஜோதியின் "பச்சை விளக்கு" திரைக்காவியம் திரையிடப்பட்டு, நல்லதொரு வெற்றியைப் பெற்றுள்ளது. இத்தகவலை எமக்களித்த எமது நெருங்கிய நண்பர் ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நன்றி!

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:08 PM
திருப்பூர் வெற்றி அரங்கில் 9.2.2010(செவ்வாய்) முதல் 11.2.2010(வியாழன்) வரை 3 நாட்கள், தினசரி 4 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "கெளரவம்" வெற்றி நடை போட்டுள்ளது. நகரெங்கும் நிறைய போஸ்டர்களும் காணப்பட்டதாம். போஸ்டர் வாசகம் : "கண்ணா நீயும் நானுமா - சிவாஜி மிரட்டும் கெளரவம்". இச்செய்தியைத் தெரிவித்த கடலைக்காட்டுப்புதூர் திரு.சங்கர் அவர்களுக்கும், திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:09 PM
திரைவானிலே என்றென்றும் புதிய பறவையாக சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் புதிய பறவை திரைக்காவியம், மதுரை மாநகரின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, மீண்டும் வெற்றிக் கொடி நாட்டி, பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. 12.2.2010(வெள்ளி) முதல் 14.2.2010(ஞாயிறு) வரையிலான 3 நாட்களில், புதிய பறவை அள்ளித் தந்த மொத்த வசூல் ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்).

புதிய பறவை = பண மழை.

எந்தவொரு நடிகரின் எந்தவொரு புதிய படமும், சென்ட்ரல் தியேட்டர் மற்றும் இது போன்ற தியேட்டர்களில், ஷிஃப்டிங் முறையில் திரையிடப்படும் போது, ஒரு வாரத்தில் ரூ.35,000/- க்கும்(ரூபாய் முப்பத்து ஐந்தாயிரத்துக்கும்) குறைவாகவே மொத்த வசூல் கொடுக்கிறதாம்.

nadigar thilagam, the king of acting is always the king at box-office.

இத்தகவல்களை எமக்களித்த மதுரை ரசிக நல்லிதயம், எமது நெருங்கிய நண்பர், அரசமரம் செவாலியே சிவாஜி குரூப்ஸ் மன்றத்தைச் சேர்ந்த திரு.குப்புசாமி அவர்களுக்கு அன்பான நன்றிகள்!

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:11 PM
The Emperor of World Cinema, rules supreme in the Manchester of South India. Yes!

கோவை மாநகரின், பழம்பெரும் திரையரங்கமான டிலைட் திரையரங்கில், கலையுலகின் முழுமுதற்கடவுளான சிவாஜி கணேசரின், முழுமுதற் திரைக்காவியமான பார் போற்றும் பராசக்தி, 12.2.2010(வெள்ளி) முதல் 14.2.2010(ஞாயிறு) வரை 3 நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாகத் திரையிடப்பட்டு, அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. பிப்ரவரி 14, ஞாயிறு மாலைக் காட்சியில் கோவை ரசிகர்கள் நிகழ்த்திய ஆரவார ஆர்ப்பாட்டங்களில் அரங்கமே குலுங்கியிருக்கிறது.

இத்தகவலை எமக்கு வழங்கிய ரசிக நல்லிதயம் சிவாஜி வெள்ளியங்கிரி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:12 PM
மதுரையில் புதிய பறவையின் வெற்றி பவனி குறித்து நண்பர் சுவாமியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு தகவலை சொன்னார். அதாவது கடந்த நான்கு வருடங்களாக எல்லா வருடமும் இதே சென்ட்ரல் திரையரங்கில் புதிய பறவை வெளியாகியிருக்கிறது. இடைவெளி என்பதே இல்லாமல் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதை தவிர டி.வியில் இந்த நான்கு வருடங்களில் அதிகமாக ஒளிபரப்பட்ட படங்களில் புதிய பறவையும் ஒன்று. இதை தவிர இப்போது வெளியாகியிருக்கும் பிரிண்டில் சில பல இடங்களில் கட்கள் வேறு இருக்கின்றனவாம். இத்தனை எதிர்மறையான விஷயங்கள் இருந்த போதிலும் இந்த படம் பெற்ற வசூல் ஒரு பிரமிப்பான சாதனை. இந்த படத்தின் இடத்தில், அண்மைக் காலத்தில் மதுரையில் அதிகம் வெளியாகாத சிவந்த மண், எங்கள் தங்க ராஜா, சொர்க்கம் போன்றவை வெளியாகியிருந்தால் அந்த சென்ட்ரல் சினிமாவே தாங்கியிருக்காது.

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:14 PM
திரைவானில் என்றென்றும் அழகிய பறவையாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் "புதிய பறவை" திரைக்காவியம், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, 12.2.2010 வெள்ளி முதல் 18.2.2010 வியாழன் வரை, அமோக வரவேற்புடன் ஒடியுள்ள ஒரு வார கால கட்டத்தில், அள்ளித் தந்துள்ள மொத்த வசூல் ரூ.45,000 /- (ரூபாய் நாற்பத்து ஐந்தாயிரம்). பழைய படங்களைப் பொறுத்த வரை, இது மிகப் பெரிய, அரியதொரு சாதனை.

விரைவில், சென்ட்ரல் சினிமாவில், அவன் தான் நடிகனின் "அவன் தான் மனிதன்".

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:16 PM
தாராசுரத்திற்கு தங்கப்பதக்கம் செளத்ரி அதிரடி விஜயம்!

கும்பகோணத்திற்கு அருகாமையில், தாராசுரம் என்னும் ஊரில் உள்ள சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், தினசரி 2 காட்சிகளாக(மாலை மற்றும் இரவு), 25.2.2010(வியாழன்) முதல் 27.2.2010(சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு, வெள்ளி விழாக் கண்ட தங்கப்பதக்கம் திரைக்காவியத்தின் மூலம் மாட்சிமை பொருந்திய மேதகு எஸ்.பி. செளத்ரி அவர்கள் தரிசனம் தருகிறார். இந்த தரிசனத்திற்காக காத்திருந்த ரசிக, பக்த, ஜன கோடிகள் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றனர். அலைகடலெனத் திரண்டு, தங்கப்பதக்கம் வென்ற கடமை வீரரை கண்டு களித்து தரிசித்து வருகின்றனர். நேற்று 25.2.2010 மாலைக் காட்சியை 200 நபர்களுக்கும் மேல் கண்டு களித்துள்ளனர். ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய். ஒரே காட்சியில், அதுவும் டூரிங் டாக்கீஸில், ரூ.2000 /- த்துக்கும் மேல்(ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல்) வசூல் கிடைத்துள்ளது. இது ஒரு இமாலய சாதனை.

இந்த சாக்லெட் செய்திகளை எமக்கு வழங்கிய ரசிக நல்லிதயம் குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!


முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:19 PM
http://www.youtube.com/watch?v=ovAV9sl5p5w&feature=player_embedded

இரண்டு வாரங்களுக்கு முன் மதுரை சென்ட்ரலில் புதிய பறவை வெளியாகிறது என்ற செய்தியை சொன்ன நண்பனிடம் தியேட்டர் முகப்பை ஒரு சில புகைப்படங்கள் எடுத்து தருமாறு சொல்லியிருந்தேன்.

படம் வெளியான வெள்ளியன்று காலையே இது எடுக்கப்பட்டு விட்டது. கைபேசியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை அவன் அனுப்புவதற்கு ஏற்பட்ட தாமதம் ஒரு பக்கம் என்றால் என் கணினியில் ஏற்பட்ட ஒரு தொழில் நுட்பக் கோளாறும் இதை மேலும் தாமதப்படுத்தி விட்டது.

இனி, இது எடுக்கப்பட்ட நாள் படம் வெளியான வெள்ளி [12.02.2010] காலை 7 மணி. அப்போதே போஸ்டர் போர்டு- க்கு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதை காணலாம். புதிய படங்களுக்கு கூட இவ்வளவு அதிகாலையில் ரசிகர்கள் இதையெல்லாம் செய்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான முறை வெளியான படத்திற்கு கூட இப்போதும் இது போல் அலங்கரிக்கப்படுகிறது என்று சொன்னால் மதுரை எப்படிப்பட்ட நடிகர் திலகம் கோட்டை என்பதை சொல்லவும் வேண்டுமோ?.

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:21 PM
கும்பகோணத்திற்கு அருகே திருவிடைமருதூரில் உள்ள பஷீர் திரையரங்கில், 25.2.2010 (வியாழன்) முதல் 1.3.2010 (திங்கள்) வரை, ஐந்து நாட்களுக்கு தினசரி 3 காட்சிகளாக, புதுமை வேந்தரின் "புதிய பறவை" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியுள்ளது.

திரையுலகச் சக்கரவர்த்தியின் திரைக்காவியங்கள், தமிழகமெங்கும் மறுவெளியீடுகளாக வெற்றி பவனி வருவது, நம் எல்லோருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும் செய்தி தானே!

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:23 PM
சிங்காரச் சென்னையின் ஸ்டார் திரையரங்கில், இன்று (5.3.2010) வெள்ளி முதல், தினசரி பகல் காட்சியாக, சிங்கத்தமிழனின் "தங்கப்பதக்கம்" திரைக்காவியம் திரையிடப்பட்டுள்ளது.

இத்தகவலை அளித்த ரசிக நல்லிதயம் திரு.ஆர்.குமார் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:25 PM
சிங்காரச் சென்னையின் பெரம்பூர் பகுதியில் உள்ள மஹாலட்சுமி திரையரங்கில், வருகின்ற மார்ச் 26, வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 1, வியாழக்கிழமை வரை, ஒரு வாரத்திற்கு, தினசரி 3 காட்சிகளாக, சிவாஜி வாரம் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனைச் சென்னையைச் சேர்ந்த சிவாஜி ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர். ஒரு நாளுக்கு ஒரு படம் என்கின்ற விகிதத்தில், 7 நாட்களுக்கு 7 படங்கள் திரையிடப்படும். 7 படங்களில் 5 படங்கள் இது வரை முடிவாகி உள்ளன. அவையாவன:

1. திருவருட்செல்வர்

2. பாரத விலாஸ்

3. எங்கள் தங்க ராஜா

4. கெளரவம்

5. மன்னவன் வந்தானடி

நமது நடிகர் திலகத்தின் ரசிக நல்லிதயங்களின் முயற்சிகள் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!

இத்தகவல் ஒரு முன்னோட்டமே. விவரங்கள் ஊர்ஜிதமான பின், அவசியம் பதிவு செய்கிறேன்.

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:25 PM
சென்னை ஸ்டாரில் பகல் காட்சியாக வெளியாகியுள்ள தங்கப்பதக்கத்தின் வசூல் விவரம்: (சற்றேக்குறைய)

5.3.2010 (வெள்ளி) = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

6.3.2010 (சனி) = ரூ. 2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)

7.3.2010 (ஞாயிறு) = ரூ. 3,800/- (ரூபாய் மூவாயிரத்து எண்ணூறு)

இந்த விவரங்களை அளித்த எமது நெருங்கிய நண்பரும், நடிகர் திலகத்தின் ரசிக நல்லிதயமுமான திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்!

(திரு.ராமஜெயமும், திரு.எஸ்.பி.செளத்ரி அவர்களை இன்று 7.3.2010 ஸ்டாரில் தரிசித்திருக்கிறார்)


முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:27 PM
சென்னை ஸ்டாரில் பகல் காட்சியாக தங்கப்பதக்கம் - வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

8.3.2010 (திங்கள்) = ரூ. 1,200/- (ரூபாய் ஓராயிரத்து இருநூறு)

9.3.2010 (செவ்வாய்) = ரூ. 1,500/- (ரூபாய் ஓராயிரத்து ஐநூறு)

10.3.2010 (புதன்) = ரூ. 1,400/- (ரூபாய் ஓராயிரத்து நானூறு)

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:28 PM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா

சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில் செவாலியே சிவாஜி வாரம்:
(7 நாட்கள் - 7 திரைக்காவியங்கள் - தினசரி 3 காட்சிகள்)

அட்டவணை இதோ உங்கள் பார்வைக்கு:

26.3.2010 (வெள்ளி) - மன்னவன் வந்தானடி

27.3.2010 (சனி) - கெளரவம்

28.3.2010 (ஞாயிறு) - எங்கள் தங்க ராஜா

29.3.2010 (திங்கள்) - திருவருட்செல்வர் (பங்குனி உத்திரத்தை முன்னிட்டு)

30.3.2010 (செவ்வாய்) - பாரத விலாஸ்

31.3.2010 (புதன்) - ராஜபார்ட் ரங்கதுரை

1.4.2010 (வியாழன்) - சொர்க்கம்

6 நாள் காவியங்களையும் கண்டு களித்த பிறகு, 7-ம் நாள் பூலோகத்தில் சொர்க்கம்!

பெரம்பூர் மஹாலட்சுமிக்கு வருகை புரிந்து, கலையுலக மகானை தரிசித்து, அருளாசி மலர்களைப் பெற்று, வாழ்வில் வளங்களைக் கூட்டுங்கள்!!

சிவாஜி வாரம் திரையிடும் ரசிக, பக்த நல்லிதயங்களின் முயற்சிகள் இமாலய வெற்றி அடைய வளமான வாழ்த்துக்கள்!!!

முன்னைய பதிவிலிருந்து

sivaa
28th November 2014, 11:29 PM
சென்னை ஸ்டாரில் பகல் காட்சியாக தங்கப்பதக்கம், 7வது நாளான வியாழனன்று (11.3.2010), சற்றேறக்குறைய ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்) வசூல் அளித்துள்ளது.

ஆக, பகல் காட்சியிலேயே, தங்கப்பதக்கம், ஒரு வார காலகட்டத்தில் (5.3.2010 முதல் 11.3.2010 வரை), சற்றேறக்குறைய ரூ. 14,600/- (ரூபாய் பதினான்காயிரத்து அறுநூறு) வசூல் கொடுத்துள்ளது. இது ஒரு சிகர சாதனை.

இத்திரைக்காவியத்தைத் திரையிட்டவருக்கு, எல்லாப் பிடிப்புகளும், செலவுகளும் போக, ரூ.3000/-த்துக்கும் மேல் (ரூபாய் மூவாயிரத்துக்கும் மேல்) லாபம் கிடைத்துள்ளது.

தங்கப்பதக்கம் என்றுமே சொக்கத்தங்கம்!!!

முன்னைய பதிவிலிருந்து

Murali Srinivas
30th November 2014, 12:35 AM
நடிப்பு சக்ரவர்த்தியின் திக்விஜயம் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் தொடர்கிறது.

நேற்று வெள்ளி முதல் [28.11.2014] சென்னை ஓட்டேரி சரவணாவில் நடிகர் திலகத்தின் வெற்றிக் காவியம் பார்த்தால் பசி தீரும் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

sivaa
30th November 2014, 04:53 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம்

26.3.2010 - வெள்ளி - மன்னவன் வந்தானடி - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ.3,800/- (ரூபாய் மூவாயிரத்து எண்ணூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு)

முன்னைய பதிவிலிருந்து

sivaa
30th November 2014, 04:54 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம்

26.3.2010 - வெள்ளி - மன்னவன் வந்தானடி - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)

27.3.2010 - சனி - கௌரவம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 3,100/- (ரூபாய் மூவாயிரத்து ஒரு நூறு)

# நடிகர் திலகத்தின் பக்தர், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் கௌரவம் திரைக்காவியத்தை மேட்னி ஷோவில் கண்டு களித்தார்.

முன்னைய பதிவிலிருந்து

sivaa
30th November 2014, 04:56 AM
1973 திரும்பியது...
இதைத்தான் மனது சொல்ல நினைக்கிறது

28.03.2010 மாலை சென்னை பட்டாளம் மஹாலக்ஷ்மி திரையரங்கில் எங்கள் தங்க ராஜா படத்துக்கு வருகை புரிந்த என்னைப் போன்ற பழைய ரசிகர்கள் மனதில் ஒரு மனதாக உருவாகிய கருத்து இதுவாகத்தான் இருக்க முடியும்.

ஒரு பத்து நிமிடம் முன்னதாக சென்றிருந்தால் தளபதி ராம்குமார் அவர்கள் பேச்சைக் கேட்டிருக்க முடியும். தாமதமாகி விட்டது. அது ஒரு குறை.

மற்றபடி சுமார் 5.30 மணியளவில் அரங்கிற்குச் சென்றபோது அங்கே கூடியிருந்த ரசிகர்களைக் கண்டவுடன் உள்ளத்தில் பொங்கிய உவகைக்கு அளவேது.

வெடிச்சத்தம் ஒரு பக்கம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஒலிபெருக்கியில் கேட்டுக்கோடி, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், மயக்கமெனன என்று தலைவர் பாடல்கள் ....

மற்றொரு பக்கம் தலையை நிமிர்த்தினால்...

ஆஹா ...
கண் கொள்ளாக் காட்சி ...
தலைவரின் கட் அவுட்டுகள் ...
ஆளுயரத்திற்கும் அதிக நீளத்தில் மலர் மாலைகள் ...
ரசிகர்களின் பாலாபிஷேகம்....
வேறு சில ரசிகர்கள் சூடம் காட்ட...
இங்கே இன்னொரு பக்கம் ஆட்டம் பாட்டம்...
இன்னொரு பக்கம் தொலைக்காட்சியினரின் படப்பிடிப்பு
இவையனைத்தையும் பார்த்தவாறு பழைய நினைவுகளில் மூழ்கிய பழைய ரசிகர்கள்..
குழந்தைகுட்டிகளுடனும், தாய்மார்களுடனும், குடும்பத்துடனும் படத்தைப் பார்க்க அரங்கினுள் நுழையும் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்...
வேறொரு பக்கம் பார்த்தால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் நின்று நிதானித்து பார்வையிட்டுப் பின் கடந்து செல்லும் காட்சி...
பேருந்துகளில் செல்பவர்கள் வைத்த் கண் வாங்காது பார்த்த காட்சி...
இவ்வளோ வருஷமானாலும் சிவாசிக்கு கூட்டம் பார்த்தியா ... இது ஒரு மூதாட்டி இன்னொரு மூதாட்டியிடம் பகிர்ந்து கொள்ளும் நெகிழ்ச்சி...
...
இத்தருணத்தில் வசந்தகுமார் எம்.எல்.ஏ.அவர்கள் வருகிறார்..
தன்னுடைய வழக்கமான நினைவுகளினூடே அவர் சொன்ன இரு கருத்துக்ககள் பெருத்த கரவொலி...
தலைவரிடம் எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றிய தொண்டன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ...
அவரிடம் எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றும் தொண்டர்க்ள் சிவாஜி ரசிகர்கள்...
இந்த வரிகள் பலத்த் கரகோஷத்தைப் பெற்றன எனச் சொல்ல்வும் வேண்டுமோ..
இவையனைத்தும் அரங்கிற்கு வெளியே ...

இனி உள்ளே...

பெரும்பாலானோர் தாமதமாக உள்ளே வந்தாலும் ... ஒன்றும் நஷ்டமில்லை...
அனைவரும் நடிகர் திலகத்தின் முதல் தோற்றத்தைக் காண ஆவலோடு காத்திருந்தனர்...
அவர் வந்தார்...
கரகோஷம்...
மீண்டும் மற்றொரு முறை..
இம்முறை பட்டாக்கத்தி பைரவன் வருகை...
அரங்கம் அதிர்ந்து குலுங்கியது...
இவை யெல்லாம் சாதாரண வர்ணனைகள்...
ஆனால் இன்றைய அளப்பறையோ...
வர்ணிப்பில் அடங்காது...

1973 ஜூலை 14 அன்று சாநதி திரையரங்கில் கண்ட காட்சிகள் மீண்டும் கண்ணெதிரே மலரும் என
நாங்கள் ஆசைப்பட்டது நடந்தேறியது...

இப்படிக் கூட்டம் வரும் போது எதற்கு புதிய படங்களைப் போட்டு ரிஸ்க் எடுக்க்ணும்...
இது தான் திரையரங்கு உரிமையாளர்க்ளின் மனதில் தோன்றியிருக்கக் கூடிய எண்ணம்...

மொத்தத்தில்...
1973 திரும்பியது...


ராகவேந்திரன்

முன்னைய பதிவிலிருந்து

sivaa
30th November 2014, 04:58 AM
இங்கே சங்கரா தற்செயலாக சொன்னாரா இல்லை சுவாமி இங்கே கொண்டு வந்து குவித்திருக்கும் புகைப் படங்களைப் பார்த்து விட்டு சொன்னாரா என்று தெரியவில்லை, 1973 ஜூலை 14 சனிக்கிழமை காலை 10.30 மணி மதுரை நியூசினிமாவில் நடந்த ஓபனிங் ஷோ மீண்டும் ஒரு முறை கால இயந்திரத்தின் மூலமாக 2010 ஆண்டில் மகாலட்சுமி திரையரங்கில் மீண்டு வந்ததோ என்று வலுவான ஒரு எண்ணம்.

அண்மைக் காலத்தில் அந்த அரங்கிற்கு வெளியே இவ்வளவு கோலாகல கொண்டாட்டங்கள் நடந்திருக்காது என்பது உறுதி. இங்கே சுவாமி அவர்கள் எடுத்த புகைப்படத்தில் அவன்தான் மனிதன் அதன் அருகில் திருவிளையாடல் படங்களின் ஸ்டில்-கள் அடங்கிய நீண்ட வடிவிலான போஸ்டர்களை அனைவரும் பார்த்திருக்க கூடும். இன்று அந்த போஸ்டர்களே தெரியாத அளவிற்கு ஏராளமான மாலைகள். எத்தனை விதங்கள் உண்டோ அத்தனை மாலைகளும் அங்கே அணிவிக்கப்பட்டன. பூசணிக்காய் சூட, தீப ஆராதனைகள் நடக்க மலர் மாரி பொழிய வாழ்த்தொலிகள் விண்ணை பிளக்க அந்த சாலையில் பேருந்துகள், வான்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் தியேட்டர் வாசலில் நின்று வியப்போடும்
ஆச்சர்யத்துடனும் நகர்ந்தன. எதிர்வரிசையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் [முன்பு அங்குதான் சரஸ்வதி திரையரங்கம் அமைந்திருந்ததாக சொன்னார்கள்] இருப்பவர்கள் இப்படிப்பட்ட காட்சியை இதற்கு முன் இங்கே பார்த்ததில்லையே என்ற நினைப்போடு பார்க்க, பட்டாசுகள் முழங்கின. இன்னும் சொல்லப் போனால் இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னணி நடிகர்கள் கூட இந்த காட்களை கண்டிருந்தால் இது போன்ற ஒரு ரசிகர் கூட்டம் நமக்கு இல்லையே என்று நிச்சயமாக ஏங்கியிருப்பார். அந்த இடத்தில் வந்த ஒரு கமண்ட் " ஆஃக்ஷன் ஹீரோக்களுக்கு மாஸ் இருப்பது ஆச்சர்யமில்லை. ஆனால் ஒரு ஆக்டருக்கு இவ்வளவு பெரிய மாஸ் இருப்பது உலகில் இவரை விட்டால் யாருக்கும் இல்லை".

வசந்தகுமார் அவர்கள் வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு. அவர் பேசும் போது நடிகர் திலகத்தின் பல்வேறு பாத்திரப் படைப்புக்களை குறிப்பிட்டார். நடிகர் திலகம், பெருந்தலைவர், காங்கிரஸ் பேரியக்கம் தொடர்புகளை சுட்டிக் காட்டி பேசி விட்டு விரைவில் நடிகர் திலகத்திற்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றார். அந்த மணி மண்டப திறப்பு விழா நாளன்று சென்னையே சிவாஜி ரசிகர்களால் நிறைய வேண்டும், நிறையும் என்று சொன்ன வசந்தகுமார் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உழைத்தவர் நடிகர் திலகம் அதே போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நடிகர் திலகத்தின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவே இன்றும் இருப்பவர் உழைப்பவர் அவரது ரசிகர்கள் என்ற போது ரசிகர்களின் பெரும் ஆரவாரம். பேசி முடித்து விட்டு அவர் கிளம்பினார்.

தியேட்டருக்கு வெளியே நண்பர் மோகனரங்கனை சந்தித்தோம். அவர் மாலையில் ஒரு வேலை இருந்ததால் மதியக் காட்சியே பார்த்து விட்டு வெளியே நின்றிருந்தார். நண்பர் சுவாமி மற்றும் ராகவேந்தர் சாரையும் சந்தித்தோம். படம் போட்டு விட்டார்கள் என்ற செய்தி அறிவிக்கப்பட உள்ளே நுழைந்தோம்.

தியேட்டர் நிகழ்வுகள் நாளை. அதற்கு முன் தியேட்டர் உள்ளே வெளியே நடந்த கொண்டாட்டங்களின் புகைப்பட குவியலோடு சுவாமி இங்கே போஸ்ட் செய்வார். அவர் சொல்வது போல் Happy Viewing.

அன்புடன்

தியேட்டருக்கு வெளியே நடந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் வசந்த் தொலைக்காட்சி நிறுவனத்தினரால் படமாக்கப்பட்டன. எனவே வசந்த் டி.வியில் இது ஒளிப்பரப்பாகும் என தோன்றுகிறது.

முன்னைய பதிவிலிருந்து

sivaa
30th November 2014, 05:30 AM
2010ல் சென்னை மஹாலக்ஷ்மி திரையரங்கில் எங்கள் தங்க ராஜா

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/mediashoot_zpsd1737dca.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/mediashoot_zpsd1737dca.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/garlandcutout4_zpsa4405d28.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/garlandcutout4_zpsa4405d28.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/garlandcutout3_zps8e0ad2d0.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/garlandcutout3_zps8e0ad2d0.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/garlandcutout2_zps2527d2f6.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/garlandcutout2_zps2527d2f6.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/crackr3_zps2b8d9b9d.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/crackr3_zps2b8d9b9d.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/crackr2_zps803711ae.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/crackr2_zps803711ae.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/crackr_zps3eed2b70.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/crackr_zps3eed2b70.jpg.html)

sivaa
30th November 2014, 05:34 AM
எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள்

நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்து மாடிக்கு சென்று இடம் தேடி இடம் கிடைத்து உட்காரும் போது கிட்டத்தட்ட நடிகர் திலகத்தின் intro வந்து விட்டது. எங்களின் பின் வரிசையில் அமர்ந்திருந்தவரை ராகவேந்தர் சார் அறிமுகப்படுத்தினார். நமது நண்பர் மோகனரங்கனின் பாதர் -இன்-லா என்று. அவரிடம் ஒரு ஹலோ சொல்லி விட்டு திரும்பினால் மேஜர், சிறுவன் ராஜாவிற்கு முயல் சிங்கத்தை ஜெயித்த கதையை சொல்லும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் வெளியே ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து மக்கள் கூட்டம் உள்ளே சாரி சாரியாக வந்து கொண்டிருந்தது. மேஜர் அடுப்பில் வைத்த கல்லில் சின்ன சப்பாத்தியை பெரிய சப்பாத்தியாக மாற்ற ஒயிட் அண்ட் ஒயிட்டில் கூப்பிய கரங்களுடன் தெய்வதை வணங்கும் நடிகர் திலகம். பேப்பர் பறக்க காதை அடைக்கும் கைதட்டல்கள். கிழே திரைக்கு அருகில் மீண்டும் சூடம் ஏற்றப்பட அரங்கு உரிமையாளர்களுக்கு ஒரே கிலி. மன்ற நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி உணர்ச்சி வசப்பட்டவர்களை அமைதிப்படுத்தினர்.

இட்லி சுட்டு விற்கும் ஆயா நடிகர் திலகத்திடம் " உன் ராசியான கையாலே போனி பண்ணிடேலே வியாபாரம் அமோகமாக நடக்கும்" என்று சொல்லும் போது எழுந்தது வாழ்த்தொலி. மஞ்சுளா அண்ட் கோ கிண்டல் காட்சிகள், சாதாரண ஆளாக இருந்த மனோகர் பெரிய தொழிலதிபர் ஆக இருப்பதைக் காட்டுவது என சில காட்சிகள் போனது. பிறகு வந்தது "சாமியிலும் சாமியிது" பாடல். அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி என்ற வரிகளுக்கு பலமான வரவேற்பு.

பிரின்சிபால் ராஜாவை கூப்பிடுகிறார் [நாகேஷ் - பிரின்சிபாலுக்கு பாடத்திலே ஏதோ சந்தேகமாம்,அதான் ராஜாவை கூப்பிடுறார்] ராஜாவிற்கு ஸ்காலர்ஷிப் இனிமேல் இல்லை என்று சொல்லி விட அடுத்த காட்சியில் நடிகர்திலகம் வேதனையோடு மேஜரிடம் சொல்லுவார் குல்லா வைக்கப் பிறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக் கூடாது. உடனே மேஜர் நீ கிரீடத்திற்கே பிறந்தவன் ராஜா என்ற போது மறுமுறையும் அதிர்ந்தது தியேட்டர்.

குப்பத்து மக்கள் எல்லோரும் சேர்ந்து பரிட்சைக்கு பணம் கட்ட பரீட்சை நடக்கிறது என்று காட்சிகள் வெகு வேகமாக நகர்ந்தன.[பின்னால் இருப்பவன் நாகேஷிடம் என்ன எழுதறே அதற்கு நாகேஷ் ஸ்ரீராமஜெயம் எழுதறேன். உடனே நண்பன் அதைக் கூட ஸ்ரீராமானுஜன்-னு தப்பா எழுதறே].

அடுத்து நடிகர் திலகம் நடந்து வர காரிலிருந்து இறங்கும் மஞ்சுளா. தியேட்டரில் ஆரவாரம் அதிகமாகி மீண்டும் சிலர் திரை இருக்கும் மேடை நோக்கி போக, மஞ்சுளாவிடம் என்னை மறந்து விடு என்று சொல்லி நடிகர் திலகம் ஒரு நடை நடப்பார் - கிழே, மேலே திரைக்கு அருகே என எல்லா இடங்களிலும் கைதட்டல் ஒலி காதை கிழிக்க அமர்க்களமாக இருந்தது.

அதன்பின் நடிகர் திலகம் ஆஸ்பத்திரி ஆரம்பித்து நடத்தும் காட்சிகள். மஞ்சுளா அங்கே வலிய வந்து பணி செய்வது என காட்சிகள் விரைந்தன. நாகேஷ் நடிகர் திலகத்தை வந்து பார்த்து, டா போட்டு பேசி விட ஆப்பக் கடை ஆயா நாகேஷை திட்டி விட "என்னப்பா உன் பேட்டையிலே உன்னைப் பற்றி பேசினா பென்டை கழட்டிடுவாங்க போலிருக்கு" என்று சொல்ல பேசித்தான் பாரேன் என்று நடிகர் திலகம் சொல்ல பேட்டையை வளைக்கிறியா என்று நாகேஷ் கேட்க முதலிலே பேட்டையை வளைப்போம் அப்புறம் என்று நடிகர் திலகம் இடைவெளி விட்டு நிறுத்த பின்னால் பெருந்தலைவர் படம் இருக்க எழுந்த ஆரவாரம் மீண்டும் 1973 -ஐ நினைவுக்கு கொண்டு வந்தது.

அடுத்து மஞ்சுளா மனோகரின் மகள் என்பதை நடிகர் திலகம் தெரிந்துக் கொள்ளும் காட்சி. வசனங்கள் இல்லாமல் கண் சிவக்க உதடு துடிக்க நடிகர் திலகம் வெளிப்படுத்தும் காட்சி தன்னை அவமானப்படுத்தும் மனோகரிடம் ஒன்றும் சொல்லாமல் உங்க அப்பா நல்லவர்-னு சொன்னியே என்று மட்டும் சொல்லி விட்டு வெளியேறும் நடிகர் திலகம் - பெரும் ஆரவாரம். அது அந்த காட்சிக்கு மட்டுமல்ல அடுத்து வரும் காட்சிக்கும் சேர்த்துதான் என்பது புரிந்தது. மஞ்சுளாவிற்கு போன். சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் மஞ்சுளா. அங்கே அதை விட அதிக சந்தோஷத்தில் ரசிகர்கள். இப்போது மேடையில் கிட்டத்தட்ட 20 நபர்கள். அதில் நாலைந்து நபர்களின் கையில் தீபம். அது போதாதென்று உள்ளே மேளத்தை கொண்டு வந்து சிலர் அடித்து ஆட ஆரம்பிக்க அட்டகாசம் ஆரம்பமானது.

நடிகர் திலகம் இந்த பாடலில் சில ஸ்டைல் சில நடை நடப்பார். கர்சீப்பை கையில் வைத்துக் கொண்டு ஒரு கால் மாற்றி ஒரு கால் வைத்து ஆடி வருவார், சரணத்தின் போது நேர் போஸிலும் சைடு போஸிலும் ராஜ நடை நடப்பார். காது கிழியும் டெசிபல் லெவல். கிழே தீபம் என்றால் மேலே பால்கனி கைப்பிடியில் சூடம் ஏற்றப்பட்டு அது அணையாமல் எரிந்துக் கொண்டிருப்பதற்காக சூடங்கள் நெருப்பில் சேர்த்துக் கொண்டே சிலர் நிற்க பார்வையாளர்கள் எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.

ஒரு சில காட்சிகளுக்கு பின் தியேட்டரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த காட்சி. மோட்டார் பைக் காட்டப்பட்டு பட்டாக்கத்தி பைரவன் வாயில் சூயிங்கத்தை மென்றுக் கொண்டே திரையில் தோன்ற உள்ளேயே வெடித்தது பட்டாஸ். கிட்டத்தட்ட அனைவரும் எழுந்து நின்று பார்க்க வேண்டிய நிலைமை. காரணம் முன்னால் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று விட்டனர்.

பைரவ அமர்க்களம் நாளை.

அன்புடன்

முன்னைய பதிவிலிருந்து

sivaa
30th November 2014, 05:43 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் (சற்றேறக்குறைய)

27.3.2010 - சனி - கௌரவம்

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

28.3.2010 - ஞாயிறு - எங்கள் தங்க ராஜா

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 6,000/- (ரூபாய் ஆறாயிரம்)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 13,000/- (ரூபாய் பதிமூன்றாயிரம்) (ஹவுஸ்ஃபுல்)

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ.3,000/- (ரூபாய் மூவாயிரம்)

முன்னைய பதிவிலிருந்து

sivaa
30th November 2014, 05:43 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் (சற்றேறக்குறைய)

29.3.2010 - திங்கள் (பங்குனி உத்திரத் திருநாள்) - திருவருட்செல்வர்

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 5,100/- (ரூபாய் ஐந்தாயிரத்து ஒருநூறு)

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,100/- (ரூபாய் இரண்டாயிரத்து ஒருநூறு)


முன்னைய பதிவிலிருந்து

sivaa
30th November 2014, 05:46 AM
டியர் முரளியண்ணா....

மகாலட்சுமி திரையரங்கில் ஞாயிறு மாலை நடந்தவற்றை அப்படியே (எழுத்துக்களால் நீங்களும், புகைப்படத்தொகுப்பால் பம்மலாரும்) கண்முன் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள். படிக்கும் அத்தனை பேரும் அன்றைய மகாலட்சுமி நிகழ்வுகளை அப்படியே கண்முன்னே காண்பார்கள் என்பது நிச்சயம். முத்தங்கள் நூறு பாடலின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ('மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள்... எங்கள் மன்னவர்க்கோ தினமும் திருநாள்'). தாஸாமக்கான் 'மகாலட்சுமி'யில் துவங்கிய இந்த திருவிழா சென்னை முழுதும் தொடர வேண்டும். தொடரும்.

டியர் பம்மலார்...
தினமும் ஒரு வி.ஐ.பி.வருகையால் மகாலட்சுமி அரங்கம் களைகட்டுகிறது. ராஜபார்ட் ரங்கதுரையில் டி.எம்.எஸ்.அண்ணாவின் பங்களிப்பு கொஞ்சமா?. அதை மீண்டும் மக்களோடு அமர்ந்து ரசிக்கப்போகிறார் என்பதே தித்திக்கும் செய்தி அல்லவா. 'சிவாஜி வாரம்' வசூல் விவரங்கள் அருமை. கலைப்புலி சேகரன் சொன்ன உண்மை மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.

சகோதரி சாரதாவின்
முன்னைய பதிவிலிருந்து

sivaa
30th November 2014, 05:49 AM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by RAGHAVENDRA இன்றைய 31.03.2010 சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியை வசந்த் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் இனிய இன்ப அதிர்ச்சிக்கு நிச்சயம் உள்ளாகியிருப்பர். கடந்த ஞாயிறன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு ஒளிபரப்பானது. அன்று அங்கு நேரில் பார்க்க முடியவில்லையே என ஏங்கியோர், குறிப்பாக சகோதரி சாரதா அவர்கள், நிச்சயம் உள்ளம் குளிர்ந்திருப்பர். அரை மணி நேரம் நிகழ்ச்சியில் விளம்பரம் போக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒளிபரப்பினார்கள். வசந்த் டிவிக்கு நமது உளமார்ந்த நன்றி.
ராகவேந்திரன்
டியர் ராகவேந்தர் அண்ணா...

நீங்கள் சொலவ்து முற்றிலும் உண்மை. நான் சற்றும் எதிர்பார்க்கவில்ல்லை. நேற்றைய சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சி துவங்கும் முன்பு 'இன்று யார் வி.ஐ.பி.யாக வந்து தன் அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளப்போகிறாரோ' என்று எண்ணத்தில் இருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக, நிகழ்ச்சி துவங்கியதும், நாதஸ்வர ஒலியுடன் காட்சிகள் காண்பிக்கப்பட மகிழ்ச்சியின் எல்லைக்குப்போனேன். இந்நிகழ்ச்சியை வசந்த தொலைக்காட்சியினர் படம்பிடித்தனர் என்று நீங்களும், முரளியண்ணாவும் சொன்னீர்கள். என்றைக்காவது சாவகாசமாகக் காட்டுவார்கள் என்று நினைத்திருந்தபோது, சூட்டோடு சூடாக இரண்டே நாட்களில் ஒளிபரப்பி திகைக்க வைத்தனர்.

பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி, பட்டாசு வெடிக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் அருமையாகக் காண்பிக்கப்பட்டன. ச்கோதரர் ராம்குமார் அவர்களின் பேச்சு சுருக்கமாக இருந்தபோதிலும், ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார் என்பது அவர் முகத்தில் தெரிந்தது. சிறுவர்களுக்கு அவர் பரிசுப்பொருட்கள் வழங்குவதும் காண்பிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திரு வசந்தகுமார் அவர்களின் பேச்சு ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் மனதையும் அப்படியே பிரதிபலிப்பதாய் அமைந்திருந்தது. அதனால்தான் அவருடைய ஒவ்வொரு வரிக்கும் கைதட்டலும் ஆரவாரமும் எழுந்தது. சால்வையணிவித்து வரவேற்கப்பட்ட அவருக்கு இறுதியில் நினைவுக்கேடயமும் வழங்கப்பட்டது.

டியர் முரளியண்ணா....

ஞாயிறன்று நிகழ்வுகளை பகுதி பகுதியாக, வரி வரியாக விவரித்து எங்களை அப்படியே மகாலட்சுமி திரையரங்கின் நடு இருக்கையில் கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டீர்கள். வர்ணிப்புகள் அருமையிலும் அருமை. அவ்வளவு ஆர்ப்பாட்டத்துக்கிடையிலும், பாடல் வரிகளின்போது என் நினைவு வந்தது என்று நீங்கள் சொல்லியிருப்பது, நம் அனைவரின் இதயங்களும் நடிகதில்கத்தைப்பற்றி ஒரே அலைவரிசையில் துடித்துக் கொண்டிருப்பதற்கு எடுத்துக்காட்டு. உங்கள் அனைவரின் விவரிப்புகளும், பம்மலார் அளித்த புகைப்படத் தொகுப்புகளும் எனது 'யு.எஸ்.பி.ஃப்ளாஷ் மெமோரி'யில் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்டன. விழா பற்றிய உங்களின் வர்ணணைகளை கணிணியில் காண்பித்து என் கணவரிடம் 'பார்த்தீங்களா? நீங்களும்தான் போயிட்டு வந்தீங்க. இப்படி விவரமாகச்சொல்ல உங்களுக்கு தெரிந்ததா?' என்று கேட்க, அவர் ஒரே வரியில் சொன்ன பதில் 'எல்லோரும் முரளி சார் ஆகிவிட முடியுமா?'. (அவர் சொன்னது உண்மைதானே).

டியர் மோகன் (ரங்கன்)....

நீங்களும் உங்கள் பங்குக்கு, ஞாயிறு படவிழாவை அருமையாக விவரித்துள்ளீர்கள். நன்றி. குறிப்பாக சகோதரி கிரிஜா அவர்களின் பங்களிப்பைப் பற்றி.

டியர் பம்மலார்....

உங்களது புகைப்படத்தொகுப்பு அபாரம். சொர்க்கம் படத்தின் 100-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தை ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் புகைப்படத்தொகுப்பில் கிடைக்கப்பெற்றேன். பாரதவிலாஸ், ராஜபார்ட் ரங்கதுரைக்கான தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படியிருந்ததாம்?.

மொத்தத்தில் இந்த வாரம், நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமி திரையரங்க நிர்வாகத்தினருக்கும் மறக்க முடியாத வாரமாக அமைந்துவிட்டது என்பதில் ஐயமில்லை.

சகோதரி சாரதாவின்
முன்னைய பதிவிலிருந்து

sivaa
30th November 2014, 05:50 AM
இன்றைய மாலைக் காட்சி சொர்க்கம் குறிப்பிடத் தக்க அளவிற்கு மக்கள் நிறைந்த காட்சியாக அமைந்தது. சுமார் 220 லிருந்து 250 வரை இருக்கலாம். இதய வேந்தன் மன்றத்தினர் இடைவேளையில் அரங்க ஊழியர்களை சேலை வேட்டி பரிசு கொடுத்து கௌரவித்தனர். கூடிய விரைவில் இதே மஹாலக்ஷ்மியில் பாசமலர் வெளியிடும் செய்தி கிடைத்தது. தர்மம் தலைகாக்கும் படத்தை வெளியிட்டவர்களே பாச மலரையும் திரையிட உள்ளதாகவும் தகவல். உள்ளே வந்திருந்த அனைவரும் பொன்மகள் வந்தாள் பாடல் காட்சியிலும் சொல்லாதே யாரும் கேட்டால் பாடலிலும் பலத்த ஆரவாரம். அன்று தேவி பேரடைஸில் அன்றைய ரசிகர் கூட்டம் எந்தெந்த காட்சியிலெல்லாம் ஆர்ப்பரித்தனரோ, அதே போன்று இன்றும் அந்தந்த காட்சியிலெல்லாம் அதே வகையான ஆர்ப்பரிப்பு... நமக்கெல்லாம் வயது கூடியது என்பதைத் தவிர வேறெந்த வித்தியாசமும் ரசிகர்களிடமும் மக்களிடமும் காணப்படவில்லை. காரணம் இன்றைய காட்சியிலும் இளைஞர்களைக் காண முடிந்தது. இன்ப அதிர்ச்சியாக நமது புதிய ஹப்பர் ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. உள்ளம் மகிழ்வுற்றது.
இனி பாசமலர் நம்மைக் கட்டிப்போடக் காத்திருக்கிறது.
காத்திருப்போம்.

ராகவேந்திரன்

sivaa
30th November 2014, 05:51 AM
Sivajiganesan reg
நன்றி திரு ராகவேந்தர் சார்,
இன்று சொர்க்கம் படம் காண வந்த போது ரசிகர்களின் உற்சாகத்தை பார்க்கும் போது Sunday நிகழ்ச்சிகளை miss செய்து விட்டேனே என்று வருந்துகிறேன். Ms கிரிஜா சண்டே அன்று நடந்த அலப்பறை பற்றி பேசிக்கொண்டே இருந்தார். மேலும் உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

sivaa
30th November 2014, 05:55 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

30.3.2010 - செவ்வாய் - பாரத விலாஸ்

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 2,400/- (ரூபாய் இரண்டாயிரத்து நானூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 2,600/- (ரூபாய் இரண்டாயிரத்து அறுநூறு)

முன்னைய பதிவிலிருந்து

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,100/- (ரூபாய் இரண்டாயிரத்து ஒருநூறு)

sivaa
30th November 2014, 05:57 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

31.3.2010 - புதன் - ராஜபார்ட் ரங்கதுரை

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 5,600/- (ரூபாய் ஐந்தாயிரத்து அறுநூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 4,200/- (ரூபாய் நான்காயிரத்து இருநூறு)

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 05:58 AM
டியர் பம்மலார்,
தங்களின் பதிவுகள் மூலம் நடிகர் திலகத்தின் படங்கள் புரியும் சாதனைகளை அனைவருக்கும் தெரியும் படி புள்ளி விவரங்கள் மூலம் அளித்து வருவது பாராட்டுக்குரியது. தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.

நேற்றுடன் முடிவடைந்த சிவாஜி வாரத்தில் ஒரு தனித்துவம் இருக்கிறது. ஆமாம், சென்னை சாந்தியில் 02.08.1975ல் மன்னவன் வந்தானடி வெளியான போது முதல் நாள் வரைக்கும் அதாவது 01.08.1975 வரைக்கும் சிவாஜி வாரம் இரு வாரங்கள் கொண்டாடப் பட்டு நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப் பட்டன. தற்போது 26.03.10 அன்று சிவாஜி வாரத்தை அதே மன்னவன் வந்தானடி படம் தொடங்கி வைத்துள்ளது. இது நிச்சயம் வியக்கத்தக்கதாகும். எதேச்சையாக அமைந்தாலும் சரித்திரம் திரும்புவதன் அறிகுறியாகக் கூட காட்சியளிக்கலாம் அல்லவா. அது மட்டுமல்ல, அப்போது மன்னவன் வந்தானடி படம் 100 நாட்கள் ஓடி முடிவடைந்தவுடன் வேறொரு படம் சில நாட்கள் திரையிடப்பட்டு அதனைத் தொடர்ந்து மீண்டும் சிவாஜி வாரமாக நாளுக்கொரு படமாக சாந்தியில் திரையிடப்பட்டன.

இதை என்னென்பது

ராகவேந்திரன்

sivaa
30th November 2014, 05:58 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

1.4.2010 - வியாழன் - சொர்க்கம்

பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 3,700/- (ரூபாய் மூவாயிரத்து எழுநூறு)

மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு)

இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:00 AM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - ஒரு வார மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

26.3.2010 - வெள்ளி - மன்னவன் வந்தானடி = ரூ. 9,800/- (ரூபாய் ஒன்பதாயிரத்து எண்ணூறு)

27.3.2010 - சனி - கௌரவம் = ரூ. 7,800/- (ரூபாய் ஏழாயிரத்து எண்ணூறு)

28.3.2010 - ஞாயிறு - எங்கள் தங்க ராஜா = ரூ. 22,000/- (ரூபாய் இருபத்து இரண்டாயிரம்)

29.3.2010 - திங்கள் - திருவருட்செல்வர் = ரூ. 11,700/- (ரூபாய் பதினொன்றாயிரத்து எழுநூறு)

30.3.2010 - செவ்வாய் - பாரத விலாஸ் = ரூ. 7,100/- (ரூபாய் ஏழாயிரத்து ஒருநூறு)

31.3.2010 - புதன் - ராஜபார்ட் ரங்கதுரை = ரூ.12,000/- (ரூபாய் பன்னிரெண்டாயிரம்)

1.4.2010 - வியாழன் - சொர்க்கம் = ரூ.10,400/- (ரூபாய் பத்தாயிரத்து நானூறு)

ஆக மொத்தத்தில், ஒரு வாரத்தின் மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ. 80,800/- (ரூபாய் எண்பதாயிரத்து எண்ணூறு). இன்றைய காலகட்டத்தில், இத்தகைய கலெக்ஷன், சாதனைகளின் உச்சம்.

தியேட்டர் வாடகை, திரைப்பட பிரிண்ட் வாடகை, பப்ளிசிடி மற்றும் இதர செலவுகள் எல்லாம் போக, திரையிட்டவருக்கு குறைந்த பட்சமாக ரூபாய் பத்தாயிரத்துக்கும் மேல் லாபம் கிடைத்துள்ளது.

சிவாஜி கணேச கடாட்சத்தால் பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில் திரையிடப்பட்ட சிவாஜி வாரம், அபாரமான லட்சுமி கடாட்சத்தை அளித்துள்ளது.

செவாலியே சிவாஜி வாரம் ஒரு ஹிமாலயன் ஹிட்.

நமது நடிகர் திலகம் என்றுமே வசூல் சக்கரவர்த்தி தான்.

முன்னைய பதிவிலிருந்து

sivaa
30th November 2014, 06:03 AM
ஏப்ரல் 9, வெள்ளி முதல் சென்னை பெரம்பூர் மஹாலட்சுமியில் பாசமலர். இதற்கான விளம்பரம் இன்று (3.4.2010) ஞாயிற்றுக்கிழமை தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வெளியாகியுள்ளது. அதனைக் கண்டு களிக்க கீழ்க்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://paasamalar69.webs.com/apps/ph...lbumid=8638909 (http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8638909)

அன்புடன்,
பம்மலார்.


முன்னைய பதிவிலிருந்து

sivaa
30th November 2014, 06:05 AM
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது ஆன்றோர் வாக்கு. தமது முழுமுதற் காவியமான பராசக்தியின் மூலம் திரையுலகுக்கே திருப்பத்தை, திருப்புமுனையை ஏற்படுத்தியவர், நம் பெருமான் நடிகர் திலகம். தற்பொழுது தமது வாரப் படங்களின் மூலம், குறிப்பாக சிங்காரச் சென்னை மாநகரில், பெரும் திருப்புமுனையை உருவாக்கியுள்ளார். சென்னை பெரம்பூர் மஹாலட்சுமியில் செவாலியே சிவாஜி வாரம் பெற்ற மாபெரும் வெற்றியினால், சீர் மேவும் சென்னை மாநகரம் கண்டு வரும் நல்ல திருப்பங்கள்:

1. பெரம்பூர் மஹாலட்சுமியில் சிவாஜி வாரம் வெற்றிகரமாக முடிந்து ஒரு வார இடைவெளியில், அதே அரங்கில் 9.4.2010 வெள்ளி முதல் நமது நடிகர் திலகத்தின் பாசமலர் திரைக்காவியத்தை ஜி.எம்.பிக்சர்ஸ் என்கின்ற திரைப்பட விநியோகஸ்தர் திரையிட உள்ளார்.

2. திவ்யா பிலிம்ஸ் திரு.ஜி.சொக்கலிங்கம் அவர்கள், காலனையும், காலத்தையும் வென்ற கலைக்கடவுளின் கர்ணன் காவியத்தை, கலை தெய்வத்தின் அவதார நிறைவு நாளை முன்னிட்டோ அல்லது அவதாரத் திருநாளை முன்னிட்டோ, மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏ.சி. திரையரங்குகளில் திரையிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், வேறு ஏதேனும் ஒரு கலைக்குரிசிலின் காவியத்தை அவர் எங்கேனும் திரையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3. பல விநியோகஸ்தர்களுக்கு சிவாஜி படங்களைத் திரையிட வேண்டும் என்கின்ற எண்ணம் எழுந்துள்ளது.

sivaa
30th November 2014, 06:10 AM
சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை புத்தகத்திலிருந்து (கிழக்குப் பதிப்பகம் வெளியீடு) சில தகவல்கள்..

* தமிழில் ஒரு படத்தின் வசனங்கள் இசைத்தட்டாக வெளிவந்த முதல் படம் பராசக்தி

* வெளிநாட்டில் வெள்ளிவிழா ஓடிய முதல் படம் பராசக்தி

* பராசக்தி வெளியாகி 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1968-ல் உயர்ந்த மனிதன் வெளியான போது வட சென்னையில் உள்ள மஹாராஜா திரையரங்கில் (இப்போதைய பாண்டியன் தியேட்டர்) பராசக்தி வெளியாகி 118 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.

joe

sivaa
30th November 2014, 06:13 AM
இன்று (8.4.2010) மாலை பெரம்பூர் மஹாலட்சுமி அரங்கிற்கு சென்றிருந்தேன். நமது நல்லிதயங்கள் கிட்டத்தட்ட 50 பேர் அரங்கிற்கு வெளியே குழுமியிருந்தனர். அரங்கின் பிரதான வாயிலில், சிவாஜி வாரத்திற்கு பந்தல் போட்டது போல், பந்தல் போட்டுக் கொண்டிருந்தனர். பந்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மிகப் பெரிய பேனர்கள் (பதாகைகள்) வைப்பதற்கும் ஏற்பாடுகள் திவீரமாக செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. பெரம்பூர் ஏரியாவே பாசமலர் போஸ்டர்களால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு மேல் பப்ளிசிடியைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?! பெரம்பூர் பகுதி மட்டுமல்லாது, சென்னை மாநகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பாசமலர் போஸ்டர்கள் விதவிதமான டிசைன்களில் ஒட்டப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மொத்தத்தில், பாசத்திலகத்தின் பாசமலர் மறுவெளியீட்டால், சென்னையே களை கட்டியுள்ளது.

போனஸ் நியூஸ்:
இதே பெரம்பூர் மஹாலட்சுமியில், பாசமலருக்குப் பின் ஓரிரு வாரங்கள் கழித்து, நல்லிதயங்களின் இதயங்களை மீண்டும் திருட "திருடன்" வரப் போவதாகவும் தகவல் வந்துள்ளது.

நமது நடிகர் திலகத்தின் திரைப்படக் கொண்டாட்டம் பல விதம், நாமும் அதிலே பல விதம்!!!

sivaa
30th November 2014, 06:14 AM
பம்மலார்,
எங்கள் நாஞ்சில் நகர் எப்போதும் நடிகர் திலகத்தின் நகராகவே விளங்கி வருகிறது என்பது அந்த பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும் நன்கு தெரியும்.

80-களில் வசந்தமாளிகை திரைப்படம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் வெளியாகும் .குறிப்பாக ராஜேஷ் திரையரங்கில் .இன்னும் குறிப்பாக டிசம்பர் 3-ம் தேதி நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை , திரிசூலம் போன்ற படங்கள் நள்ளிரவு சிறப்புக்காட்சிகளோடு திரையிடப்பட்டு ,அப்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் புதிய படங்களை விட வசூல் குவித்து சாதனை படைக்கும் ..அந்த தகவல்களையும் தொகுக்க வேண்டும்.

joe

sivaa
30th November 2014, 06:18 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/pasamalarrrr_zpsf150ca37.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/pasamalarrrr_zpsf150ca37.jpg.html)

joe

sivaa
30th November 2014, 06:18 AM
சிவாஜி நியூஸ் : சென்னை

1. இன்று (9.4.2010) வெள்ளி முதல், பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில், தினசரி 3 காட்சிகளாக, காலத்தை வென்ற வெள்ளிவிழாக் காவியம், பாசத்தலைவரின் "பாசமலர்". (காட்சி நேரம்:பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45)

2. இன்று (9.4.2010) வெள்ளி முதல், பிராட்வே மண்ணடி பகுதியில் உள்ள மினர்வா திரையரங்கில் (தற்பொழுது மினர்வா, பாட்சா எனப் பெயர் மாறியுள்ளது), தினசரி பகல் காட்சியாக, இதயதெய்வத்தின் "இரு துருவம்". (காட்சி நேரம்:முற்பகல் 11:15)

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:20 AM
Sivajiganesan reg
போனஸ் நியூஸ்:
இதே பெரம்பூர் மஹாலட்சுமியில், பாசமலருக்குப் பின் ஓரிரு வாரங்கள் கழித்து, நல்லிதயங்களின் இதயங்களை மீண்டும் திருட "திருடன்" வரப் போவதாகவும் தகவல் வந்துள்ளது.

பம்மலார் சார் தகவலுக்கு நன்றி. இந்த படத்திற்காக ரொம்ப நாளாக காத்திருந்தேன்.
r.radhakrishnan

sivaa
30th November 2014, 06:21 AM
மஹாலட்சுமியில் பாசமலர் இன்று பிற்பகல் காட்சியில் நல்ல வரவேற்பு. கிட்டத்தட்ட 300க்கு சற்றுக் குறைவான எண்ணிக்கையில் மக்கள் ரசித்துள்ளனர். அதில் மகளிர் மட்டும் 50க்கும் மேல். படத்தின் பிரதி நன்றாக உள்ளதால் மேலும் மேலும் கூட்டம் வரக்கூடும். வாசலில் பந்தல் கட்அவுட்கள் மிகவும் ரம்மியமாக உள்ளன. மொத்தத்தில் இந்த வாரம் பாசமலர் வாரமாகவே மாறிவிடும் சாத்தியக் கூறுகள் அமோகமாக உள்ளன.
(img)
மற்றொரு அற்புதமான, உள்ளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போகக்கூடிய, செய்திக்கு எதிர்பாருங்கள். சென்னையைக் கலக்க வருகிறார் நடிகர் திலகம்.

அந்தப் படம் ....

சொன்னால் துள்ளியடித்துக் கொண்டு சிட்டென சென்னைப் பறந்து வரமாட்டீர்களா என்ன

அந்த செய்திக்கு காத்திருப்போமே.

ராகவேந்திரன் [/img]

sivaa
30th November 2014, 06:22 AM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by RAGHAVENDRA வாசலில் பந்தல் கட்அவுட்கள் மிகவும் ரம்மியமாக உள்ளன. மொத்தத்தில் இந்த வாரம் பாசமலர் வாரமாகவே மாறிவிடும் சாத்தியக் கூறுகள் அமோகமாக உள்ளன.
[html:ad1c3f9aca]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/pasamalar4.jpg[/html:ad1c3f9aca]
[html:ad1c3f9aca]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/pasamalar3.jpg[/html:ad1c3f9aca]
[html:ad1c3f9aca]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/pasamalar2.jpg[/html:ad1c3f9aca]
[html:ad1c3f9aca]
http://i18.photobucket.com/albums/b126/cdjm/pasamalar1.jpg[/html:ad1c3f9aca]

joe

sivaa
30th November 2014, 06:24 AM
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி : பாசமலர் : தினசரி 3 காட்சிகள் : மொத்த வசூல்(சற்றேறக்குறைய)

9.4.2010 - வெள்ளி

பிற்பகல் 2:30 = ரூ.4,400/- (ரூபாய் நான்காயிரத்து நானூறு)

மாலை 6:15 = ரூ.4,000/- (ரூபாய் நான்காயிரம்)

இரவு 9:45 = ரூ.2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:24 AM
நாளை (11.4.2010) ஞாயிற்றுக்கிழமை, சிங்காரச் சென்னையில் நடைபெறுகின்ற சிங்கத்தமிழனின் சிறப்பு நிகழ்ச்சிகள்:

1. பிராட்வே மண்ணடி பாட்சா (மினர்வா) - இரு துருவம் - முற்பகல் 11:15

2. பெரம்பூர் மஹாலட்சுமி - பாசமலர் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45

3. மெரீனா கடற்கரை (காந்தி, சிவாஜி சிலைகளுக்கு அருகே) - நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் ஐந்தாம் ஆண்டு விழா - மாலை 4:00

4. பெரம்பூர் மஹாலட்சுமி - பாசமலருக்கு சிறப்பு ஆராதனைகள் - மாலை 5:00

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:26 AM
Paasamalar Ad in Today's (11.4.2010) Daily Thanthi Chennai Edition:

http://paasamalar69.webs.com/apps/ph...otoid=77748108 (http://paasamalar69.webs.com/apps/photos/photo?photoid=77748108)

Happy Viewing,
Pammalar.

sivaa
30th November 2014, 06:27 AM
Paasamalar at Chennai Mahalakshmi - More Pictures :

http://paasamalar69.webs.com/apps/ph...lbumid=8638909 (http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8638909)

Happy Viewing,
Pammalar.

sivaa
30th November 2014, 06:28 AM
அன்பு நண்பர் ஐன்ஸ்டீன் அவர்களே வருக, வருக.
நல்வாழ்த்து நான் சொல்வேன், நல்லபடி வருகவென்று கல்யாண திரியினிலே தலைவன் அவர் தெய்வமம்மா...

தங்களுடைய முதல் பதிவே முத்திரைப் பதிவாக அமைந்துள்ளது. மேலும் மேலும் தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.

இன்று 11.04.2010 பட்டாளம் ஸ்டிரஹான்ஸ் சாலை மஹாலட்சுமி திரையரங்கிலும் அதன் வாயிலிலும் கண்கொள்ளாக் காட்சி.. எங்கள் தங்க ராஜாவை மிஞ்சிவிட்டது இன்றைய அளப்பரை. தியேட்டரில் பேசாமல் ஒலியை நிறுத்தி விடலாம். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பிலும் ஆரவாரத்திலும் வசனமே காதில் விழவில்லை (அது சரி யார் படம் பார்க்க வந்தார்கள், அனைவருமே ஆர்ப்பரிக்க அல்லவா வந்தோம்).
சென்னை மதுரையை மிஞ்சும் போலிருக்கிறது.. முரளி சார் தான் சொல்ல வேண்டும்.

காட்சிக்குக் காட்சி கரகோஷம், ஆரத்தி, கடைகளில் சூடம் டிமாண்ட் ஆகிவிடும் போல் அவ்வளவு. ஆரத்தி.. அது சரி இந்த வெய்யிலில் அவ்வளவு சூடம் கை வெந்து போகாதா ... நமக்கு திக் திக் என இருக்கிறது. ஆனால் அவர்கள் யாருமே அதைப் பற்றி சிந்திப்பதில்லை. இருக்கையில் கொஞ்சம் திரையினில் மிச்சம் என்கின்ற அளவிற்கு திரைக்கு முன் ரசிகர்களின் உற்சாகத் துள்ளல் ... ஆபத்தில்லாதவரையில் நடந்து கொண்டால் சரி என்பதும் உண்மை...

அரங்கு நிறைந்த காட்சி... அட்டகாசமான அளப்பரை .. நடிகர் திலகம் நின்றால் .. நடந்தால் ... பார்த்தால் ...

அதுவும் மிகவும் நுணுக்கமாக ரசிக்கக் கூடிய காட்சிகளிலும் கூட அவ்வளவு ஆரவாரத்திலும் ரசித்து ஆர்ப்பரிக்கும் காட்சி இருக்கிறதே ...

உலகத்தில் எந்த நடிகனுக்கும் இப்படிப்பட்ட ரசிகர் கூட்டமும் ரசிப்புத்தன்மாயும் கிடையாதய்யா என்று உறுதி படக் கூறலாம். அதுவும் நாம் அமைதியாய் டிவிடியில் பார்த்து அந்த துப்பாக்கியைக் கண்களில் வரும் கண்ணீரைத் துடைக்கப் பயன் படுத்துவாரே .. அந்தக் காட்சிக்கு தியேட்டரில் அளப்பரை என்றால் ....

ஆஹா இவனல்லவோ நடிகன்

ஆஹா இவர்களல்லவோ ரசிகர்கள்....

வேறென்ன சொல்ல ...

ராகவேந்திரன்

sivaa
30th November 2014, 06:29 AM
Paasath Thilagaththin Paasamalar : 11.4.2010 Sunday Gala : Chennai Mahalakshmi : Flash Update

http://paasamalar69.webs.com/apps/ph...lbumid=8703689 (http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8703689)

A Very, Very Happy Viewing,
Pammalar.

sivaa
30th November 2014, 06:30 AM
நமது அருமை நண்பர்கள் எல்லோரும் நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்லி விட்ட பின் தனியாக என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன்.

சுவாமி அவர்கள் குறிப்பிட்டது போல நமது ரசிகர்களுக்கும் காவல் துறையினருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அது நேற்றும் தொடர்ந்தது. மாலைக் காட்சிக்கு முன்னரே வந்து விட்ட ரசிக உள்ளங்கள் வழக்கம் போல் போஸ்டருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சூடம் காண்பித்து ஒரு பட்டாஸ் வெடித்தவுடன் போலீஸ் வந்து விட்டது. தியேட்டருக்கு அருகாமையில் அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் திரு நிதின் கட்காரி அவர்கள் கொடியேற்ற வந்திருக்கிறார். ஆகவே பாதுகாப்பு காரணம் கருதி இங்கே பட்டாஸ் வெடிக்கக் கூடாது என்று தடுக்க ரசிகர்கள் கொந்தளிப்பானார்கள். சற்று நேரத்தில் பா.ஜ. கட்சியினர் அங்கே வெடி வெடிக்க இங்கே சூடு ஏறியது. உடனே கட்காரி கிளம்பி விட்டார். அவர் கார் அதை தொடர்ந்து பல வாகனங்கள் வந்தன. ரசிகர்கள் இருபுறமும் திரண்டு நிற்க அவர் கடக்கும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நடிகர் திலகம் வாழ்க! சிங்கத் தமிழன் வாழ்க! எங்களின் ஒரே தலைவன் சிவாஜி வாழ்க! என்று பலத்த கோஷம் எழுப்ப கட்காரியோ தன்னை வாழ்த்தித்தான் கோஷம் போடுகிறார்கள் என நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கை அசைத்தவாறே சென்றார். நமது கூட்டத்தின் காரணமாக நின்று நின்று சென்றன வாகனங்கள். பஸ்சிலிருந்த ஒருவர் இது பழைய படம்தானே என்று கேட்க ரசிகர் ஒருவர் எங்களுக்கு என்னிக்கும் இது புது படம்தான் என்று சொன்னார். அதுவரை பொறுமையாக இருந்தவர்கள் ஒரு 10000 வாலா சரத்தை கொளுத்த, அந்த ஏரியாவே சத்தத்தில் சின்னாபின்னமானது. எதிர் அடுக்கு மாடி குடியிருப்புகளின் வசிப்போர் அனைவரும் பால்கனியில் குவிந்து விட்டனர். பட்டாஸ் முடிந்தவுடன் சரமாரியாக கணேசருக்கு தேங்காய் உடைக்கப்பட்டன. குறைந்தது ஒரு 50 காய் உடைத்திருப்பார்கள். தெரு முழுக்க சில்லு தேங்காய். வெளியே ஆரவாரம் தொடர உள்ளே படம் தொடங்க நாங்கள் அரங்கில் நுழைந்தோம். வெளியே எந்த அளவிற்கு அலப்பறை என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். என்னுடைய நண்பர் ஒருவர் [நமது சுவாமி, ஜோ வயதையொத்தவர்] சிவாஜி ரசிகர், தன்னை விட இளையவர்கள் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியில் நடந்த மாலை சார்த்துதல், சூட ஆராதனை, வாண வேடிக்கை போலீஸ் காவல் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு மிரண்டு விட்டார்கள். படம் பார்க்க வந்தவர்கள் பயந்து போய் திரும்பி போய்விட்டார்கள்.அவர்களால் நண்பரும் பார்க்கும் வாய்ப்பை
துறந்தார்.

நடிகர் திலகம் அறிமுக காட்சி. ஒரே ஆரவாரம். தங்கைக்கு அடிப்பட்டு விட்டது என்று தெரிந்து மேஸ்திரியிடம் போய்யா என்று சொல்வது, பிறகு கையெழுத்து போட மறைந்து மறைந்து வருவது, முதலாளியிடம் போய் பேசும் போது ஜெமினி சொல்வதை அபப்டியே பார்ப்பது இவை எல்லாவற்றிற்கும் கைதட்டல் இருந்துக் கொண்டே இருந்தது. ராகவேந்தர் சார் சொன்னது போல் சும்மா கத்தும் கூட்டம் இல்லை ரசனையுள்ள கூட்டம் என்பதற்கு சாட்சி உடனே கிடைத்தது. வெளியே வரும்போது நடிகர் திலகம் தலையை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஆட்டிக் கொண்டே வருவார். அதற்க்கெல்லாம் அப்படி ஒரு கைதட்டல். நீ முதலாளி கிட்டே பேசினது இது இல்லை ஆனா என் தங்கச்சியை காப்பாத்தினேன் சொன்ன பாரு அதுதான் இது என்ற வசனத்திற்கு எல்லாம் பெரிய ஆரவாரம்.

அடுத்து ஜெமினி வீடு தேடி வரும் சீன். ஆனந்தா அது சிரிச்சா நான் சிரிப்பேன். அது அழுதா ஐயையோ என்னாலே தாங்கவே முடியாது என்ற வசனத்திற்கும், இந்த உலகம் என்னை பத்தி கவலைப்படுதோ என்ற வசனத்திற்கும் சுயநலத்திலிருந்துதான் பொது நலமே பிறக்குது என்ற வசனத்திற்கு எல்லாம் ஒரே கைதட்டல்.

வந்தது மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் பாடல். அதிர ஆரம்பித்தது அரங்கு. ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட, திரையின் முன்னால் ரசிகர்கள் கூட, ஆரவாரம் ஆரம்பமானது.எவ்வளவு ரசனையான ரசிகர்கள் என்பதற்கு மீண்டும் ஒரு குறிப்பு. முதல் சரணத்தில் மாவிலை தோரணம் ஆடிட கண்டாள் என்ற வரிகளுக்கு வலது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவார், அதிர்ந்தது அரங்கு. அது போல் இரண்டாவது சரணத்தில் தங்கைக்கு கற்பனை கல்யாணம் முடிந்தவுடன் காலில் விழும் தங்கையை தூக்கி ஒரு கையால் அணிந்திருக்கும் கண்ணாடியை சற்றே மேலே தூக்கி கண்ணீர் துடைப்பார். இங்கே எழுந்தது கூட்டம். அது போல் மருமகள் கண்ணில் அன்பு மாமன் தெய்வம் கண்டான் என்ற போதும் கைதட்டல் பறந்தது.

பிறகு ஸ்ட்ரைக் காட்சி. வந்து தங்கையிடம் புலம்புவார். தங்கை இவர் கலந்து கொள்ளாவிட்டாலும் வேலை போயிருக்கும் என்பதை விளக்கியவுடன் வரும் முகபாவம், ஆயிரம் ரூபாய் என்று கேட்டவுடன் வரும் அதிர்ச்சி + ஆனந்தம் இவை எல்லாம் அடுத்து வரும் திருவிழாவிற்கு கட்டியம் கூறுவது போல் அமைந்திருந்தது.

சுவாமி சொன்னது போல் எங்களுக்கும் காலம் வரும் ஆரம்பமே அமர்க்களம். சின்னதாய் ஒரு சுற்று சுற்றி பாட தொடங்குவார். அப்போது ஆரம்பித்த ரகளை கூடி கூடி போனது. மேடையில் ஏறவிடாமல் தடுப்பதற்கே இரண்டு மூன்று பேர் வேண்டியிருந்தது. இதற்கிடையில் தீபம் வேறு. மேலே பால்கனியில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவர் சூடத்தை கொளுத்தி [கையில்?] சுத்த, அவர் கையைப் பற்றியும், எரியும் சூடம் கிழே விழுந்தால் என்ன ஆவது என்ற பயமும் வந்தன. ஆனால் அவர் லாவகமாக அதை சுற்றி கிழே கைப்பிடி சுவரில் வைத்து அணைத்தார். பாடல் ஓட ஓட அதிகமாகி போன டெசிபல் லெவல் சுவாமி சொன்னது போல் நெஞ்சில் ஒரு களங்கமில்லை வரியில் ஆரம்பித்து வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை என்ற உச்சக்கட்ட வரிகளுக்கு டி.எம்.எஸ்-ன் குரலையும் தாண்டிய அலப்பறை- தெருவிற்கே கேட்டிருக்கும். எங்கள் தங்க ராஜாவை விட ஆர்ப்பாட்டம் அதிகம் என்று புரிந்தவுடன் போலீஸ் உள்ளே நுழைய,ரசிகர்கள் மேலும் ஆவேசமானார்கள். மன்றத்தினரும் மற்ற சிலரும் சேர்ந்து சமாதானப்படுத்த சிறிது அமைதி திரும்பியது.

அன்புடன்

(தொடரும்)

tac,

நீங்கள் எழுதியது சென்னை ரசிகர்களை உசுப்பி விட்டது என்று நினைக்கிறேன். தியேட்டரை ரெண்டு பண்ணி விட்டார்கள்.

அரங்கிற்கு வெளியில் கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவாஜி மன்றத்திலிருந்து பாசமலர் சாதனைகளை பற்றியும் 1961-ல் நடிகர் திலகத்தின் ஏனைய படங்களை பற்றியும் ஒரு நோட்டீஸ் [சாதனை தகவல் உபயம் நமது சுவாமி] கொடுத்தார்கள். சுவாரசியமானதாக இருந்த அதை பலரும் விரும்பி கேட்டு வாங்கி சென்றார்கள்

sivaa
30th November 2014, 06:32 AM
சிவாஜி வாரம் மற்றும் பாசமலர் அரங்கு நிறைந்த காட்சிகள் பற்றிய செய்திகள் பரவலாக அறியப்பெற்று மீண்டும் நடிகர் திலகத்தின் படங்கள் முதல் தர திரையரங்களிலும் வெளியிடப்பட்டு அனைத்து தரப்பினரும் சென்று பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

சென்னையில் இருந்த போது 90களின் இறுதியில் சங்கம் திரையரங்கில் ‘தெய்வமகன்’ வெளியாகி அரங்கம் நிறைந்த மக்களோடு பார்த்த நினைவுகள் பசுமையாக இருக்கிறது :cool:

joe

sivaa
30th November 2014, 06:33 AM
திருச்சி முருகன் திரையரங்கில், 9.4.2010 வெள்ளி முதல், தினசரி 3 காட்சிகளாக, நடிப்புலக ஆண்டவரின் "ஆண்டவன் கட்டளை" திரைக்காவியம் திரையிடப்பட்டு சக்கை போடு போட்டு வருகிறது.

திருநெல்வேலியில் உள்ள அருணகிரி (இளைய திலகத்தின் சின்ன தம்பி வெள்ளி விழா ஓடிய அரங்கு) திரையரங்கில், நேற்று (12.4.2010) திங்கள் முதல், தினசரி 4 காட்சிகளாக, சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

இத்தகவல்களை அளித்த ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:35 AM
நாளை (16.4.2010) வெள்ளி முதல், வெற்றிகரமான இணைந்த 2வது வாரமாக, பாசத் தலைவரின் "பாசமலர்" காவியம், சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசா திரையரங்கில், தினசரி 3 காட்சிகளாகத் தொடர்கிறது.

நாளை (16.4.2010) வெள்ளி முதல், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி" திரைக்காவியம், வெற்றி நடை போட வருகிறது.

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:36 AM
Paasath Thalaivarin Paasamalar : Successful Second Week at Chennai Srinivasa : Photo Feature

http://paasamalar69.webs.com/apps/ph...lbumid=8752709 (http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8752709)

Happy Viewing,
Pammalar.

sivaa
30th November 2014, 06:38 AM
Paasath Thilagaththin Paasamalar : Successful 2nd Week at Chennai Srinivasa : 18.4.2010 Sunday Special : For Your Eyes Only

http://paasamalar69.webs.com/apps/ph...lbumid=8779269 (http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=8779269)

A Very Happy Viewing,
Pammalar.

sivaa
30th November 2014, 06:39 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில், கடந்த 16.4.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, வெற்றிக் கொடி நாட்டி வரும் கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி", முதல் மூன்று நாட்களில் [16.4.2010 வெள்ளி முதல் 18.4.2010 ஞாயிறு வரை]அள்ளித் தந்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்).

இத்தகவலை எமக்களித்த பழம்பெரும் மதுரை ரசிக நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:39 AM
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி : பாசமலர் : தினசரி 3 காட்சிகள் : மொத்த வசூல்(சற்றேறக்குறைய)

10.4.2010 - சனி

பிற்பகல் 2:30 = ரூ.3,200/- (ரூபாய் மூவாயிரத்து இருநூறு)

மாலை 6:15 = ரூ.3,200/- (ரூபாய் மூவாயிரத்து இருநூறு)

இரவு 9:45 = ரூ.2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

11.4.2010 - ஞாயிறு

பிற்பகல் 2:30 = ரூ.4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு)

மாலை 6:15 = ரூ.11,000/- (ரூபாய் பதினோராயிரம்) [கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல் ரேஞ்ச்]

இரவு 9:45 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)

12.4.2010 - திங்கள்

பிற்பகல் 2:30 = ரூ.3,000/- (ரூபாய் மூவாயிரம்)

மாலை 6:15 = ரூ.2,800/- (ரூபாய் இரண்டாயிரத்து எண்ணூறு)

இரவு 9:45 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:41 AM
கும்பகோணத்திற்கு அருகாமையில், தாராசுரம் என்னும் ஊரில் உள்ள சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், நேற்று (23.4.2010) வெள்ளி முதல், தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], நமது சத்திய சீலரின் "ஹரிச்சந்திரா" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. முதல் நாள், முதல் காட்சியான நேற்றைய மாலைக் காட்சியை மட்டும், 200 நபர்களுக்கும் மேல் கண்டு களித்துள்ளனர். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.10/-. ஒரே காட்சியில், ரூ.2,000/-த்துக்கும் மேல் (ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல்) வசூல் கிடைத்துள்ளது. டூரிங் டாக்கீஸைப் பொறுத்தவரை, இது இமாலய சாதனை.

இத்தகவல்களை எமக்களித்த ரசிக நல்லிதயம் குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:43 AM
கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி" திரைக்காவியம், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, வெற்றிகரமாக நடைபெற்றுள்ள ஒரு வார காலகட்டத்தில் [16.4.2010 வெள்ளி முதல் 22.4.2010 வியாழன் வரை], அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.40,000/- (ரூபாய் நாற்பதாயிரம்).

இக்காவியத்தை வெளியிட்டவருக்கு, இந்த ஒரு வாரத்தில் மட்டும், சற்றேறக்குறைய ரூ.10,000/-த்துக்கும் மேல் (ரூபாய் பத்தாயிரத்துக்கும் மேல்) லாபம் கிடைத்துள்ளது.

இத்தகவலை அளித்த ரசிக நல்லிதயம் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:43 AM
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி : பாசமலர் : தினசரி 3 காட்சிகள் : மொத்த வசூல்(சற்றேறக்குறைய)

13.4.2010 - செவ்வாய்

பிற்பகல் 2:30 = ரூ.2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

மாலை 6:15 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)

இரவு 9:45 = ரூ.1,500/- (ரூபாய் ஓராயிரத்து ஐநூறு)

14.4.2010 - புதன்

பிற்பகல் 2:30 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)

மாலை 6:15 = ரூ.2,300/- (ரூபாய் இரண்டாயிரத்து முந்நூறு)

இரவு 9:45 = ரூ.1,400/- (ரூபாய் ஓராயிரத்து நானூறு)

15.4.2010 - வியாழன்

பிற்பகல் 2:30 = ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்)

மாலை 6:15 = ரூ.1,800/- (ரூபாய் ஓராயிரத்து எண்ணூறு)

இரவு 9:45 = ரூ.1,300/- (ரூபாய் ஓராயிரத்து முந்நூறு)

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:45 AM
தாராசுரத்தில் ஹரிச்சந்திரா அசுர சாதனை

கும்பகோணத்திற்கு அருகாமையில், தாராசுரம் என்னும் ஊரில் உள்ள சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், நமது சத்திய சீலரின் "ஹரிச்சந்திரா" சிகர சாதனை புரிந்துள்ளது. 23.4.2010 வெள்ளி முதல், இங்கே தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], இக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிநடை போட்டு வருவதையும், வெள்ளியன்று மாலைக் காட்சி மட்டும் ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல் வசூல் அளித்ததையும், யாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

மேலும், "ஹரிச்சந்திரா" திரைக்காவியத்தை, வெள்ளி (23.4.2010) இரவுக்காட்சி, சனி (24.4.2010) மாலை மற்றும் இரவுக்காட்சிகள் ஆகிய 3 காட்சிகளில் மொத்தம் 400 நபர்களுக்கும் மேல் கண்டு களித்துள்ளனர். இந்த 3 காட்சிகளிலும் மொத்தம் ரூ.4,000/-த்துக்கும் மேல் (ரூபாய் நான்காயிரத்துக்கும் மேல்) வசூல் கிடைத்துள்ளது.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், நேற்று (25.4.2010) ஞாயிறன்று மாலைக் காட்சியை மட்டும், 300 மக்களுக்கும் மேல் கண்டு களித்து ரசித்துள்ளனர். இந்த ஒரு காட்சி மட்டும் ரூ.3,000/-த்துக்கும் மேல் (ரூபாய் மூவாயிரத்துக்கும் மேல்) வசூல் அளித்துள்ளது. ஆக, ஞாயிறு (25.4.2010) மாலைக் காட்சி வரை, நமது சத்தியசுந்தரத்தின் "ஹரிச்சந்திரா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.9,000/-த்துக்கும் மேல் (ரூபாய் ஒன்பதாயிரத்துக்கும் மேல்).

"வெள்ளி,சனி,ஞாயிறு - மூன்று நாட்களுக்கு மட்டும்" என்ற அறிவிப்புடன் வெளியான இக்காவியம் உருவாக்கிய வசூல் பிரளையத்தால், இன்று 26.4.2010 திங்களன்று நான்காவது நாளாக வெற்றி பவனி வருகிறது. ஏ, பி, சி சென்டர்கள் மட்டுமல்லாது, ரிமோட் சி சென்ட்ர்களான டூரிங் டாக்கீஸுகளிலும் , பராசக்தி காலம் தொடங்கி இன்று வரை ஈடு, இணையற்ற சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவை நமது நடிகர் திலகத்தின் காவியங்களே என்பதற்கு இதை விட வேறென்ன கட்டியம் கூற வேண்டும். சினிமா சாதனைகளின் நிரந்தர சக்கரவர்த்தி நமது நடிகர் திலகமே.

போனஸ் நியூஸ்:
தமிழ்த் திரைப்பட வரலாற்றைப் பொறுத்தவரை ஒரு டூரிங் டாக்கீஸில், 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய, முதல் திரைப்படமும், ஒரே திரைப்படமும், பார் போற்றும் பாரத ஜோதியின் "பாவமன்னிப்பு" திரைக்காவியமே. இராமநாதபுரத்தில் உள்ள சிவாஜி டூரிங் டாக்கீஸில், "பாவமன்னிப்பு" 16.3.1961 வியாழன் முதல் 23.6.1961 வெள்ளி வரை, 100 நாட்கள் ஓடி, விண்ணை முட்டும் வெற்றியைப் பெற்றது.

"ஹரிச்சந்திரா" தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு குதூகலமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:47 AM
திருச்சி முருகன் திரையரங்கில், சென்ற வெள்ளி (23.4.2010) முதல், தினசரி 4 காட்சிகளாக, சாதனைச் சக்கரவர்த்தியின் "ராஜ ராஜ சோழன்" திரைக்காவியம் வெளியாகி வெற்றி முழக்கமிட்டு வருகிறது. சோழ சக்கரவர்த்தியை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு காட்சியிலும் கணிசமான மக்கள் கண்டு தரிசித்து வருகின்றனர்.

இத்தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:58 AM
நாளை (14.5.2010) வெள்ளி முதல், சென்னை பிராட்வே திரையரங்கில் (இப்பொழுது இதன் பெயர் நியூபிராட்வே திரையரங்கம்), தினசரி 3 காட்சிகளாக, பாசத்திலகத்தின் "பாசமலர்" திரைக்காவியம் வெற்றிகரமாக திரையிடப்படுகிறது.

அன்புடன்,
பம்மலார்.

sivaa
30th November 2014, 06:59 AM
#798 (http://www.mayyam.com/talk/showthread.php?8234-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-6&p=506346&viewfull=1#post506346) RAGHAVENDRA (http://www.mayyam.com/talk/member.php?40430-RAGHAVENDRA)

View Profile (http://www.mayyam.com/talk/member.php?40430-RAGHAVENDRA)
View Forum Posts (http://www.mayyam.com/talk/search.php?do=finduser&userid=40430&contenttype=vBForum_Post&showposts=1)
Private Message (http://www.mayyam.com/talk/private.php?do=newpm&u=40430)
Add as Contact (http://www.mayyam.com/talk/profile.php?do=addlist&userlist=buddy&u=40430)


http://www.mayyam.com/talk/images/statusicon/user-offline.png
Senior Member Diamond Hubberhttp://www.mayyam.com/talk/image.php?u=40430&dateline=1416765497 (http://www.mayyam.com/talk/member.php?40430-RAGHAVENDRA) Join DateJan 2008Posts6,250Post Thanks / Like http://www.mayyam.com/talk/images/buttons/collapse_40b.png (http://www.mayyam.com/talk/showthread.php?8234-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-6/page80#top)Thanks (Given)36Thanks (Received)232Likes (Given)86Likes (Received)605


டியர் பம்மலார்
தங்களின் கேள்வி பதில் தொகுப்புகள் தகவல்களை அள்ளி அள்ளி தருகின்றன. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

சென்னையில் தற்போது நியூ பிராட்வேயில் பாசமலர் திரையிடப்பட்டுள்ளது. அங்கு கண்ட சில காட்சிகள் படங்களாக.
http://paasamalar.blogspot.com/ (http://paasamalar.blogspot.com/)


ராகவேந்திரன்

sivaa
30th November 2014, 07:05 AM
தண்டாயுதபாணி அருள்பாலிக்கும் பழனியின் சந்தானகிருஷ்ணா திரையரங்கில், 16.5.2010 ஞாயிறு முதல், தினசரி 4 காட்சிகளாக, திரையுலக நீதியரசரின் "நீதி" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

மதுரையம்பதியின் நியூடீலக்ஸ் திரையரங்கில், 17.5.2010 திங்கள் முதல், தினசரி 3 காட்சிகளாக, கலையுலக சுந்தரேஸ்வரரின் "சுமதி என் சுந்தரி" திரையிடப்பட்டு சக்கை போடு போடுகிறது.

இந்த இரு இனிப்புகளை வழங்கிய எமது நெருங்கிய நண்பர், சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
2nd December 2014, 12:23 AM
இன்று முதல் புரசைவாக்கம் சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் 125-வது திரைக்காவியமான உயர்ந்த மனிதன் தினசரி மூன்று காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை அனுப்பி வைத்த நண்பர் மோகன்[ரங்கன்] அவர்களுக்கு நன்றி.
(29 may 2010)

அன்புடன்
முரளியின் முன்னைய பதிவிலிருந்து

sivaa
2nd December 2014, 12:24 AM
தியேட்டரில் கிடைத்த செய்திகள்.

சென்னை அமிஞ்சிக்கரையில் அமைந்துள்ள முரளிகிருஷ்ணா அரங்கம் மூடப்படுகிறது. ஆகையால் இந்த வாரம் தினசரி ஒரு நாள் ஒரு படம் திரையிடப்படுகின்றது. அந்த வகையில் வரும் வியாழன் அன்று நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் திரையிடப்படுகின்றது.

அடுத்த வாரம் இதே சரவணா அல்லது அருகில் இருக்கும் பாலாஜி திரையரங்கில் ராஜபார்ட் ரங்கதுரை வெளியாகலாம் என தெரிகிறது.

வரும் ஜூன் மாதம் 2-வது அல்லது 3-வது வாரம் மகாலட்சுமி திரையரங்கில் நடிகர் திலகத்தின் என்னைப் போல் ஒருவன் வெளியாகிறது

ஜூலை மாதம் அநேகமாக புதிய பறவை பைலட் திரையரங்கில் வெளியாகலாம் என தெரிகிறது..

இது தவிர கர்ணன் மற்றும் சவாலே சமாளி படங்களும் திரையிட தயாராக இருக்கின்றன.

அன்புடன்

முரளியின் முன்னைய பதிவிலிருந்து

sivaa
2nd December 2014, 12:40 AM
http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TAM9GAF_Y2I/AAAAAAAAAG4/q3foqcOCPlY/s400/ums1.jpg (http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TAM9GAF_Y2I/AAAAAAAAAG4/q3foqcOCPlY/s1600/ums1.jpg)முரளி சார் சொன்னது போல் நம் மக்களின் அளப்பரை இங்கும் தொடர்ந்தது. தகவல் நகரின் பிற பகுதிகளில் அதிகமாகத் தெரியாத காரணத்தால் கூட்டம் ஓஹோ என்று இல்லை. இருந்தாலும் அதையும் மீறி கணிசமான மக்கள் படத்தைக் கண்டு களித்து வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை 30.05.2010 அன்று மாலைக் காட்சியில் கண்டகாட்சிகள் உங்கள் முன் ஒளிப்படமாக இந்த இணைப்பில் தரப்பட்டுள்ளது
http://ntfans.blogspot.com/ (http://ntfans.blogspot.com/)

இந்த முறை நல்லபடியாக யாரும் திரைக்கு அருகில் சென்று சூடம் தீபம் காட்டாமல் தொலைவிலேயே காட்டினர். ரசிகர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். காரணம் நம் மக்கள் உணர்ச்சியின் வேகத்திற்கு கடிவாளம் போடத் தெரியாதவர்கள். பாசமும் நேசமும் அந்த அளவி்ற்கு அவர்களுக்குள் வியாபித்துள்ளன. அவர்களுக்கு நம் உளமார்ந்த பாராட்டுக்கள்.

சரவணா திரையரங்கு என்றுமே எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களின் கோட்டை என அழைக்கப்படும் அரங்காகும். நமது ரசிகர்கள் அங்கே அதிகம் சென்றதில்லை. நிறைய பேருக்கு அந்த அரங்கம் எங்கே உள்ளது எனவும் தெரியாது. நமக்கு தெரிந்த நமது நடிகர் திலகத்தின் முதல் வெளியீ்ட்டுத் திரைப்படம் என்றால் அது நீதி மட்டும் தான். என்னைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னர் காலைக் காட்சியில் அதாவது 10.30 மணி, நடிகர் திலகத்தின் அபூர்வமான படங்கள் திரையிடப் படும். அப்போது பார்த்த பாக்கியவதி படம் தான் நான் அந்த திரையரங்கிற்கு கடைசியாக சென்றது. அதன் பின்னர் நேற்று தான் சென்றேன். அந்த நாளைய நினைவுகள் வந்து போயின. நல்ல வீடு, பாக்கியவதி, போன்ற அபூர்வமான படங்கள் அப்படி காலைக் காட்சியில் பார்த்தது தான்.

திரையரங்கில் ஒரு விநியோகஸ்தரைச் சந்தித்தோம். விடைபெறும்போது அவர் ஆவலோடு சொன்னது மணியான வார்த்தைகள் -
1960-1970 ஆண்டுகளின் எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலகட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடுவோம்.

இடைவேளையின் போது பாடற் காட்சிகள் குறிப்பாக வெள்ளிக் கிண்ணம் தான் மற்றும் அந்த நாள் ஞாபகம் பாடற் காட்சிகள் தனியாக ஒளிபரப்பப் பட்டது குறிப்பிடத் தக்கது.

சரவணா திரையரங்கிற்கு நமது நன்றிகள்.

ராகவேந்திரன்

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/ums2_zps90a89f1e.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/ums2_zps90a89f1e.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/ums3_zps97eff37c.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/ums3_zps97eff37c.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/umsposter2_zpsdbf339eb.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/umsposter2_zpsdbf339eb.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/umsscreen5_zps487a3475.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/umsscreen5_zps487a3475.jpg.html)

sivaa
2nd December 2014, 08:42 PM
நாளை (3.6.2010) வியாழக்கிழமை (ஒரு நாள் மட்டும்), சென்னை அமைந்தகரையில் உள்ள முரளிகிருஷ்ணா திரையரங்கில், மூன்று காட்சிகளாக, கலைமகளின் அருள்வடிவமாகத் திகழும் நமது கலைக்குரிசிலின் "சரஸ்வதி சபதம்" திரைக்காவியம் திரையிடப்படுகிறது.

பிரம்ம புத்திரர் நாரதரையும், தெய்வப் புலவர் வித்யாபதியையும் தரிசிக்க பக்த கோடிகளே, திரண்டு வருக!

அன்புடன்,
பம்மலார்.

AREGU
2nd December 2014, 11:51 PM
மிகமுக்கியமான, அரிய தகவல்களை மறுபதிப்பு செய்வது வரவேற்கத்தக்கது..

Murali Srinivas
3rd December 2014, 12:17 AM
மதுரையில் வரும் வெள்ளி முதல் [டிசம்பர் 5,2014] சென்ட்ரல் திரையரங்கில் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படும் விவரத்தை இங்கே பதிவு செய்திருந்தோம். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் பானர் மற்றும் வரவேற்பு வளைவு [Welcome Arch]

பானர்

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=14a0a06f805b4fd4&attid=0.1&disp=inline&safe=1&attbid=ANGjdJ8pgCcEtUvShz5VImEjMTUmctsV7JdsthRmqF_ vXuNO8xfxXfUspQXAUAIwU065TfJKTyw6aOZFxm2wpBhhbHeW6 E7Ac9gRH_CWoFqIjeGGZK8BR-PTio2RN_U&ats=1417544746339&rm=14a0a06f805b4fd4&zw&sz=w996-h544

வரவேற்பு வளைவு

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=14a0b6b3173f43e6&attid=0.1&disp=inline&safe=1&attbid=ANGjdJ8vcb9-AglSgP4vNDyv8AHlWV11FboVocjxWcHekMuQoWgft29m8UmqFx UMdwi9F2XMQnKcKswLX0qJAgde1yJHmdsRSBjrO2PQwNgkaPzs CKYmn3QH-K_bPBw&ats=1417544741528&rm=14a0b6b3173f43e6&zw&sz=w996-h544

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

sivaa
3rd December 2014, 12:21 AM
மிகமுக்கியமான, அரிய தகவல்களை மறுபதிப்பு செய்வது வரவேற்கத்தக்கதே..
....





மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை திரியில்
முன்னர் பல உறவுகளால் ஏனைய திரிகளில் பதியப்பட்ட
அனைத்து மறுவெளியீடுபற்றிய பதிவுகளையும்
ஒரே திரியில் கொண்டுவரும் நோக்கத்துடனேயே
மறுபதிவு செய்துவருகிறேன்

sivaa
3rd December 2014, 12:32 AM
நண்பர் aregu (http://www.mayyam.com/talk/private.php?do=showpm&pmid=100979)
எனது தனிமடல் பார்க்கவும்

sivaa
3rd December 2014, 12:34 AM
மதுரையில் வரும் வெள்ளி முதல் [டிசம்பர் 5,2014] சென்ட்ரல் திரையரங்கில் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படும் விவரத்தை இங்கே பதிவு செய்திருந்தோம். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் பானர் மற்றும் வரவேற்பு வளைவு [Welcome Arch]

பானர்

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=14a0a06f805b4fd4&attid=0.1&disp=inline&safe=1&attbid=ANGjdJ8pgCcEtUvShz5VImEjMTUmctsV7JdsthRmqF_ vXuNO8xfxXfUspQXAUAIwU065TfJKTyw6aOZFxm2wpBhhbHeW6 E7Ac9gRH_CWoFqIjeGGZK8BR-PTio2RN_U&ats=1417544746339&rm=14a0a06f805b4fd4&zw&sz=w996-h544

வரவேற்பு வளைவு




https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=14a0b6b3173f43e6&attid=0.1&disp=inline&safe=1&attbid=ANGjdJ8vcb9-AglSgP4vNDyv8AHlWV11FboVocjxWcHekMuQoWgft29m8UmqFx UMdwi9F2XMQnKcKswLX0qJAgde1yJHmdsRSBjrO2PQwNgkaPzs CKYmn3QH-K_bPBw&ats=1417544741528&rm=14a0b6b3173f43e6&zw&sz=w996-h544

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

முரளி சார் படங்கள் பார்க்கமுடியவில்லை

RAGHAVENDRA
3rd December 2014, 07:45 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/AOKbnrMaduraiFW_zps03daca30.jpg

One of the banners Murali Sir mentioned

RAGHAVENDRA
3rd December 2014, 07:52 AM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t31.0-8/p240x240/10700151_725897057494901_5939416245238710415_o.jpg

RAGHAVENDRA
3rd December 2014, 07:53 AM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t31.0-8/p240x240/10818369_725900680827872_7129319745585393845_o.jpg

https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/t31.0-8/p240x240/1403082_725903014160972_3669130600863321910_o.jpg

sivaa
3rd December 2014, 11:07 PM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by rangan_08 From today onwards, " RAJAPART RANGADURAI ", 3 shows @ Saravana.


இன்று 11.6.2010 வெள்ளி முதல், தினசரி 3 காட்சிகளாக, சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள பாலாஜி திரையரங்கில் [சரவணாவிற்கு அருகாமையிலேயே உள்ள திரையரங்கு], கலையுலக ராஜபார்ட் அவர்களின் "ராஜபார்ட் ரங்கதுரை" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றி நடை போடுகிறது.

கலையை நேசிக்கும் அன்புள்ளங்கள் அனைவரும் அலைகடலெனத் திரண்டு வருக!

கலையுலக மகானின் அருளாசி மலர்களைப் பெற்றுத் திரும்புக!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:08 PM
சிங்காரச் சென்னையில் சிங்கத்தமிழனின் காவியங்கள்

1. 25.6.2010 வெள்ளி முதல், ஓட்டேரி பாலாஜி அரங்கில், "உத்தமபுத்திரன்" திரையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

2. இந்த ஜூன் மாதத்தில், பெரம்பூர் மஹாலட்சுமி அரங்கில், "என்னைப் போல் ஒருவன்" வெளியாகும் என்று தெரிகிறது.

3. ஜூலையில், நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி, ராயப்பேட்டையிலுள்ள பைலட் (அல்லது) உட்லண்ட்ஸ் திரையரங்கில் புதுமை வேந்தரின் "புதிய பறவை".

கொண்டாட்டம் பல விதம்!

நாமும் அதிலே பல விதம்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:09 PM
காணக் கண் கோடி வேண்டும்...
சென்னை சரவணா திரையரங்க வளாகத்தினுள் அமைந்துள்ள பாலாஜி திரையரங்கில் ராஜபார்ட் ரங்கதுரை ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்களின் அளப்பரையைக் காணக் கண் கோடி வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வருகை தரும் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அரங்கு நிறைவினை எட்டவில்லை என்றாலும் கணிசமான எண்ணிக்கையில் பொதுமக்களும் ரசிகர்களும் நிறைந்திருந்தனர். சாலையின் இரு மருங்கிலும் மக்கள் வேடிக்கை பார்க்க கட்அவுட்டிற்கு மாலை, ஆரத்தி, பாலாபிஷேகம், வாண வேடிக்கை என அசத்தல் தான். இன்னும் விளம்பரம் அதிகமாக செய்திருந்து பரவலாக தகவல் பரவியிருந்தால் அளப்பரை அதிகமாகியிருக்கும். விவரமாக பின்னர் அலசலாம். தற்போதைக்கு அங்கே கண்ட காட்சிகள் உங்கள் பார்வைக்கு.

http://sivajimoviesinchennai2010.blogspot.com/ (http://sivajimoviesinchennai2010.blogspot.com/)

ராகவேந்திரன்

sivaa
3rd December 2014, 11:11 PM
Chennai Rendezvous : TRIPLE TREAT

Sunday (13.6.2010) Mela at Balaji : Rajapart Rangadurai

http://pammalar.webs.com/apps/photos...lbumid=9262966 (http://pammalar.webs.com/apps/photos/album?albumid=9262966)

Sunday (30.5.2010) Gala at Saravana : Uyarndha Manithan

http://pammalar.webs.com/apps/photos...lbumid=9262625 (http://pammalar.webs.com/apps/photos/album?albumid=9262625)

Sunday (16.5.2010) Extravaganza at New Broadway : Paasamalar

http://paasamalar69.webs.com/apps/ph...lbumid=9263635 (http://paasamalar69.webs.com/apps/photos/album?albumid=9263635)

A Very, Very Happy Viewing,
Pammalar.

sivaa
3rd December 2014, 11:12 PM
லேட்டஸ்ட் தகவல்

சரவணா திரையரங்க வளாகத்தில் வரும் வாரம் திரையிடப் படுவதாக இருந்த பச்சை விளக்கு திரைப்படம் தள்ளிப் போவதாகத் தெரிகிறது.

புதிய பறவை அநேகமாக ஜூலை 16அன்று சென்னை பைலட் திரையரங்கில் வெளியிடப் படக் கூடும்.

என்னைப் போல் ஒருவன் 25 ஜூன் முதல் மகாலக்ஷ்மி திரையரங்கில் வெளியாகலாம்.

பாசமலர் 18.06.2010 முதல் லிபர்டியில் தினசரி 3 காட்சிகள்

ராகவேந்திரன்

sivaa
3rd December 2014, 11:15 PM
ராஜபார்ட் ரங்கதுரையை 37 வருடங்களுக்கு முன்பே வரவேற்றிருந்த போதிலும் மீண்டும் அதே ஆரவாரத்துடன் காண நேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த முறை ஞாயிறு மாலை அரங்கிற்கு செல்ல நேரம் ஆகிவிட்டதால் வாசலில் நடந்த கோலாகலங்களை பார்க்க முடியவில்லை.

உள்ளே நுழையும் போது காயாத கானகத்தே டி.எம்.எஸ் குரலில் ஒலிக்க ஆரம்பித்தது. உயர்ந்த மனிதனுக்கு வந்ததை விட மிக அதிக கூட்டம் என்பதும் அது போல் அலப்பறையும் அதை விட அதிகம் என்பதும் பார்த்தவுடன் புரிந்து போனது. மேயாத மான் என்ற வரிகளுடன் நடிகர் திலகம் முகம் திரையில் தோன்ற இங்கே ஆவேசம் அணை உடைந்தது. யாரும் பாட்டை கேட்கவோ காட்சியை பார்த்திருக்கவோ முடியாது. அப்படி ஒரு கொண்டாட்டம். அந்நேரம் மேலும் மேலும் ஆட்கள் உள்ளே வர கொண்டாட்டத்தின் அளவு கூடியது. இந்த காட்சியை பார்க்கும் போதே நான் சந்தேகப்பட்டது போல படம் நிறுத்தப்பட்டு போலீசார் உள்ளே நுழைந்தனர். போலீசார் ஒருவர் ரசிகர் ஒருவரை வெளியே கூட்டி செல்ல இன்னொரு போலீஸ் திரைக்கு அருகில் வரை சென்று அங்கே இருந்தவர்களை விரட்டினார். படம் மீண்டும் தொடங்கப்பட்டது. சிறிது நேரம் உள்ளே இருந்தனர் காவல் துறையினர். ஆனால் யார் இருந்தால் என்ன மீண்டும் படம் ஆரம்பித்து நாளை நான் போகாமல் இருப்பேனோ என்று நடிகர் திலகம் நந்தனாராக மாறிப் பாடிய போது மீண்டும் அதிர ஆரம்பித்தது அரங்கம். இந்த காட்சியில் க்ளோஸ்-அப்பில் நடிகர் திலகம் வாயசைக்கும் காட்சி சுமார் இரண்டு நிமிடம் வரும், ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார்கள். கண்ணில் நீர் கட்டி நிற்க அது கன்னத்தில் வழியாமல் அவர் "பாடும்" திறன் இருக்கிறதே அதற்கு விழுந்தது தொடர்ச்சியான அப்ளாஸ்.

தங்கையின் திருமண நிச்சயம், தம்பிக்கு உஷா நந்தினியை பேசி முடிப்பது, ஸ்ரீகாந்த் வந்து கல்யாணம் என்று தெரிந்தவுடன் ஊரை விட்டு ஓடுவது, தங்கை ஜெயா கல்யாணம் என்று காட்சிகள் வேகமாக சென்றன.

அடுத்த மிகப்பெரிய ஆரவாரம் ஒரு வசனக் காட்சிக்கு எழுந்தது. தங்கையின் கல்யாணத்திற்கு வாங்கின பணத்திற்காக நம்பியார் முன் தலை குனிந்து நின்று விட்டு கூடிய சீக்கிரம் தந்து விடுகிறேன் என வெளியேறும் சிவாஜியிடம் பணம் கொடுக்கலைன்னா கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்று சொல்லும் நம்பியாரிடம் எங்க குடும்பமே கம்பி எண்ணியிருக்கு. ஆனா அது இந்த தேசத்துக்காக என்று நடிகர் திலகம் சொல்லும் இடத்தில் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டர் கூரையில் எதிரொலித்தது.

மதன மாளிகையில் பாடல் - சொல்லவும் வேண்டுமா? ஹம்மிங் ஆரம்பித்த உடன் எழுந்து விட்டனர் பிள்ளைகள். சுசீலா பல்லவி முடிக்க டி.எம்.எஸ் பல்லவி எடுக்கும் காட்சி. க்ளோஸ்-அப்பில் நடிகர் திலகம் புருவத்தை ஏற்றி கண்களை ஒரு சுழட்டு சுழற்றி பாட ஆரம்பிப்பார். காதை அடைக்கும் கைதட்டல். ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு போஸிற்கும் அதிலும் குறிப்பாக உஷா நந்தினி பாடிக் கொண்டிருக்க சற்றும் அசையாமல் ஆலிவ் கிரீன் சூட்-ல் சிலை போல் நிற்கும் நடிகர் திலகம், அப்படியே ஒரு ஸ்டைல் நடை நடந்து வந்து பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி என்று பாடும் போதெல்லாம் இங்கே உற்சாகம் பெருக்கெடுத்து ஓடியது. பாடல் முடியும் போது ஒரு பெருங்கூட்டமே திரைக்கு முன்னால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என குழுமி விட்டது. திரைக்கு முன்னால் பூமாரி பொழிந்தனர்.

நாடகக் கொட்டகை தீ வைத்து எரிக்கப்பட மீண்டும் அதே இடத்தில் நடத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடும் சிவாஜி வி.கே.ஆரிடம் மீண்டும் கொட்டகையை கட்டச் சொல்லுவர். அப்போது வி.கே.ஆர் நம்ம பட்டளாங்கள்ட்ட சொன்னா கொட்டகையை என்ன கோட்டையையே கட்டிடுவாங்க என சொல்லும் போதும் ஆரவாரம். [ஆனால் இதே வசனத்திற்கு 1973-ல் கிடைத்த வரவேற்பே தனி].

நாடக லைசன்ஸ் ரத்து, ரங்கதுரை கலக்டரிடம் அனுமதி வாங்குவது என்று காட்சிகள் போனது. தங்கை அண்ணன் வீட்டிற்கே திரும்பி வர ரங்கதுரையின் நண்பர் மகளுக்கே தங்கை கணவன் மணமகனாக போவது, அந்த திருமணத்திற்கு சிவாஜி செல்லும் காட்சி.

நடிகர் திலகம் இந்தக் காட்சியில் பேசவே மாட்டார். சேரில் அமர்ந்து சசிகுமாரையே பார்த்துக் கொண்டிருப்பார். அந்த பார்வையின் தீட்சண்யம் திரையில் பார்பவர்களுக்கே மனதை துளைக்கும் என்றால் நேருக்கு நேர் அந்த கண்ணை பார்த்த சசிகுமார் எப்படி தவித்திருப்பார் என புரிந்துக் கொள்ளலாம். இதற்கும் பயங்கரமான வரவேற்பு.

காத்திருந்து காத்திருந்த காட்சியும் வந்தது. சின்ன அண்ணனை பார்க்க வேண்டும் என்கிற தங்கை, அதற்காக தம்பியை தேடி வரும் அண்ணன், இவரை யாரென்றே தெரியாது என்று சொல்லும் தம்பி, சூழ்நிலை புரியாமல் அவரை பாட்டு பாடச் சொல்லும் தம்பியின் மாமனார், உள்ளம் தீப்பற்றி எரிய அதை மறைத்துக் கொண்டு டேபிள் டென்னிஸ் bat -ஐயே தாளக்கருவியாக்கி பாடும் ரங்கதுரை. கவியரசருக்கும், மெல்லிசை மன்னருக்கும், டி.எம்.எஸ்சிற்கும் இது அல்வா சாப்பிடுவது போல. நடிகர் திலகம் மட்டும் விட்டுக் கொடுப்பாரா என்ன? பல்லவியில் சோகத்தின் சாறு எடுப்பவர் சரணத்திற்கு நடுவில் வரும் தொகையறாவில் அதை கலப்பார்.

கையில் வைத்து காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும்
நன்றிமிக்க நாய்கள் உள்ள நாடு

அந்நேரம் அந்த முகபாவம், அதில் தெரியும் சோகம் எப்படி சொல்வது? பார்வையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிவசப்பட தொடங்குவர்.

சரணம் சட்டென்று வேகம் பிடிக்கும்.

ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
இங்கே உணர்ச்சி வேகம் பலமடங்காகியது.

இரண்டாவது தொகையறா

தங்கை என்னும் இளைய கன்று தாய் வீடு வந்ததென்று
இப்போது ரசிகர்கள் எல்லாம் மறந்து திரையில் ஒன்றி போய் ஆரவாரிக்கிறார்கள். சரணம் ஆரம்பிக்கிறது.

கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் தெரிகிறது.

இந்த வரிகளின் போது ஸ்ரீகாந்த் மாடியில் நிற்க, மாடிப்படிகளில் குமாரி பத்மினி நிற்க அவருக்கு எதிராக நடிகர் திலகம். இடது பக்க முகம் மட்டும் தெரியும்படியான profile இங்கேயும் ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார்கள். ரசிகர்கள் தன்னை மறந்து ஆராவரிக்கிறார்கள்.

அது பாசமன்றோ
இது வேஷமன்றோ

என்று பாடி விட்டு

மாடியில் நிற்கும் ஸ்ரீகாந்தை காண்பிக்க

அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ

என்ற வரிகளுக்கு பிறகு காமிரா கீழே இறங்கி வந்து நடிகர் திலகம் முகத்தில் வந்து நிற்க

இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழையல்லவா என்று உச்சரிக்கும் போது அந்த முகத்தில் மின்னி மறையும் சோகமும் வருத்தமும் இயலாமையும் எல்லாவற்றையும் மீறி வரும் அழுகையையும் துண்டை வாயில் வைத்து அடக்கிக் கொண்டு மேற்கொண்டு பாட முடியாமல்

தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்

என்று bat -ஐ வைத்து விட்டு அவர் ஓட்டமும் நடையுமாக செல்ல உணர்ச்சிக் கொந்தளிப்பு என்று சொல்வார்களே அதை அன்று நேரில் பார்த்தோம். அனுபவித்தோம். ஒரு சில நிமிடங்களுக்கு அரங்கம் ஆவேசத்தின் பிடியிலேயே இருந்தது.

ஊருக்கு வந்து தங்கையிடம் பொய் சொல்லி விட்டு ஆனால் மனைவியிடம் உண்மையை மறைக்க முடியாமல் அவன் என்னை அவமானப்படுத்தியிருந்தாக் கூட பரவாயில்லை அலமேல்! ஆனால் யாருனே தெரியாதுன்னு சொல்லிட்டான் என்று குலுங்கும் ரங்கதுரை. உன்னதமான நடிப்பின் உச்சக்கட்டத்தை பார்த்த நிறைந்த மனதுடன் நாங்கள் அரங்கை விட்டு வெளியே வந்தோம்.

ஹாம்லெட்யும் பகத்சிங்கையும் திருப்பூர் குமரனையும் பார்க்க வேண்டும் என்று மனது ஆசைப்பட்டாலும் சூழ்நிலை காரணமாக வந்து விட்டோம். மீண்டும் ஒரு மறக்க முடியாத அனுபவம்.

அன்புடன்

நண்பர் முரளியின் பதிவு

sivaa
3rd December 2014, 11:16 PM
திருப்பூருக்கு அருகே உள்ள வெள்ளக்கோவில் என்கின்ற ஊரில் இருக்கும் வீரகுமார் திரையரங்கில், நேற்று 16.6.2010 புதன்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக, காலத்தை வென்ற காதல் காவியமான வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை" வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்த இனிய தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.வி.நாகராஜன் அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:16 PM
"ஹரிச்சந்திரா" அசுர சாதனை படைத்த தாராசுரம் சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், இன்று 2.7.2010 வெள்ளி முதல், தினசரி 2 காட்சிகளாக, தங்கத்தமிழ்ப் பெருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகிறது.

தித்திக்கும் இச்செய்தியை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு கற்கண்டு நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:22 PM
ஹரிச்சந்திராவை மிஞ்சி தங்கப்பதுமை தன்னிகரற்ற சாதனை

தாராசுரத்தில் உள்ள சூரியகாந்தி டூரிங்கில், தங்கத்தமிழ்ப் பெருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம், "ஹரிச்சந்திரா"வின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கப்பதுமை திரைக்காவியத்தை 2.7.2010 வெள்ளியன்று, மாலை மற்றும் இரவு காட்சிகளில் சற்றேறக்குறைய 250 பேர் கண்டு களித்தனர். 3.7.2010 சனிக்கிழமையன்றும், இந்த இரண்டு காட்சிகளில் இதே போல் சற்றேறக்குறைய 250 நபர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். இந்த இரு நாட்களிலும் தங்கப்பதுமை அள்ளித் தந்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம்).
[ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய்]

4.7.2010 ஞாயிறு மாலைக் காட்சி சாதனையின் உச்சம். அந்த ஒரு காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய 500 பேர் இக்காவியத்தைக் கண்டு களித்துள்ளனர். அந்த ஒரு காட்சி மட்டும் அள்ளி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம்). அன்று இரவுக் காட்சியையும் சற்றேறக்குறைய் 100 நபர்கள் கண்டு களித்துள்ளனர். இரவுக் காட்சி மொத்த வசூல் சற்றேறக்குறைய ஓராயிரம் ரூபாய்.

வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் வெளியான தங்கப்பதுமை, பெயரில் மட்டுமன்றி வசூலிலும் தங்கப்பதுமையே எனக் கட்டியம் கூறியதால், நேற்று 5.7.2010 திங்களன்றும் நான்காவது நாளாக இமாலய சாதனை படைத்தது. மாலைக் காட்சியை சற்றேறக்குறைய 400 பேர் கண்டு களித்தனர். இரவுக் காட்சிக்கும் சற்றேறக்குறைய 100 பேர் இருந்திருக்கின்றனர்.

நான்கு நாட்களில், தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், தங்கப்பதுமை அள்ளித் தந்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ. 16,000/- (ரூபாய் பதினாறாயிரம்).

ஐந்தாவது நாளாக, இன்று 6.7.2010 செவ்வாய்க்கிழமையும் தங்கப்பதுமை வெற்றி நடை போட்டு விண்ணை முட்டுகின்ற சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

இச்சாதனைத் தகவல்களை அளித்த ரசிக நல்லிதயம் திரு.குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!

பெருமிதத்துடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:23 PM
தங்கப்பதுமையின் தொடர் வெற்றி பவனி

தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், "தங்கப்பதுமை" திரைக்காவியம், 2.7.2010 வெள்ளி முதல் 5.7.2010 திங்கள் வரை, 4 நாட்களில், தினசரி 2 காட்சிகளாக, ரூ.21,000/- (ரூபாய் இருபத்து ஒன்றாயிரம்) மொத்த வசூல் செய்து இமாலய வெற்றி அடைந்ததையும், 6.7.2010 செவ்வாயன்று 5வது நாளாக தொடர்ந்து வெற்றி நடை போட்டு விண்ணை முட்டும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்ததையும் யாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

ஐந்தாவது நாளான 6.7.2010 செவ்வாயன்று 300 நபர்களும், ஆறாவது கடைசி நாளான 7.7.2010 புதனன்று 200 நபர்களும் தங்கப்பதுமையை தரிசித்துள்ளனர். ஆக மொத்தம் 6 நாட்களில், தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், தங்கப்பதுமை, மொத்தம் ரூ.26,000/- (ரூபாய் இருபத்து ஆறாயிரம்) கலெக்ஷன் செய்து, தங்க மழை போல் வசூல் மழை பொழிந்துள்ளது. இந்நிகழ்வு விண்ணைத் தொடும் சாதனை.

இதன் பின்னர், இதே தங்கப்பதுமை திரைக்காவியம், 8.7.2010 வியாழன் முதல் அருகிலுள்ள மயிலாடுதுறை (மாயவரம்) சுந்தரம் திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு, 14.7.2010 புதன் வரை ஒரு வாரம் ஓஹோவென்று ஓடி வெற்றி வாகை சூடியுள்ளது. [மயிலாடுதுறை சுந்தரம் அரங்கில் டிக்கெட் விலை ரூ.15/- மற்றும் ரூ.20/-]

விரைவில், தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், தங்கத்தமிழ்ப்பெருமகனின் "என் மகன்".

இத்தகவல்களை அள்ளி வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள்!

பெருமிதத்துடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:23 PM
பொன் விழாக் காணும் சென்னை சாந்தி திரையரங்கில் வரும் 23.7.2010 வெள்ளி முதல், புதுமை வேந்தரின் "புதிய பறவை".

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:24 PM
தன்னிகரற்ற சாதனை, சாந்தியில் புதிய பறவை வெற்றி முழக்கம்.
இன்று மாலை 25.07.2010 சென்னை சாந்தியில் அரங்கு நிறைவு house full .

காணக் கண்கோடி வேண்டும் என்ற மொழிக்கு இன்றைய சாந்தி திரையரங்கின் நிகழ்வுகளே சரியான சான்று.

பெங்களூரு ரசிகர்கள் அசத்தி விட்டார்கள். மாலை என்றால் அப்படி யொரு மாலை. விரைவில் காட்சிப் படங்கள் பதிவேற்றப்படும் போது காணுங்கள்.

நாடி நரம்பெல்லாம் புகுந்து ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார் நடிகர் திலகம். உணர்ச்சி மயமாகாத ரசிகர்கள் இல்லை எனலாம். பகல் காட்சியில் கிட்டத் தட்ட 500 இருக்கைகளும் மாலைக் காட்சியில் அனைத்து இருக்கைகளும் நிறையும் அளவுக்கு ரசிகர்கள் திரண்டது மட்டுமல்ல. மேள தாளத்துடன் ஊர்வலமாய் மாலையை எடுத்துச் சென்று அண்ணாசாலையே குலுங்கும் அளவிற்கு ஆர்ப்பரிப்பு செய்து விட்டனர். காவல் துறையினர் வந்து குவியும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம், பேருந்து உட்பட அனைத்து வாகனங்களில் பயணித்தோர், சாலையில் சென்றோர் அனைவரும் வியந்து சொன்ன வார்த்தை - "சிவாஜி படத்துக்கு கூட்டம் பாரேன், அதுவும் பழைய படத்துக்கு" என்பதே அனைவரின் உதடுகளும் உள்ளமும் உச்சரித்த வார்த்தைகள்.

சாந்தியில் உள்ளே வைக்கப் பட்டிருந்த கட்அவுட்டுக்கு செலுத்தப் பட்ட மாலைகளின் எண்ணிக்கை கிடடத்தட்ட 15க்கும் மேல். பிரம்மாண்டமான பெரிய மாலையை மேலே ஏற்ற தேவைப்பட்ட கரங்களின் எண்ணிக்கை மட்டுமே 100க்கும் மேல் இருக்கும். பாண்டு வாத்தியம் முழங்க பெங்களூரு, புதுவை, கடலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து திரண்ட ரசிகர்களின் ஆரவாரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கண்களில் நிழலாடும். உள்ளேயோ கேட்கவே வேண்டாம். அதுவும் எங்கே நிம்மதி பாடலுக்கு எழுப்பப் பட்ட உணர்ச்சி மயமான கரவொலிகளும் கோஷங்களும் படம் இன்று தான் புதியதாக வெளியானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தியது.

தொடரும் பதிவுகளில் விரிவாக நம் அனுபவங்கள்...

அன்புடன்

ராகவேந்திரன்

sivaa
3rd December 2014, 11:25 PM
PUDHIYA PARAVAI @ SHANTHI

Nadigar Thilagam Dr. Chevalier Sivaji Ganesan reversed the needles of the clock in his inimitable style and took each and every one of us who were present there @ Shanthi theatre last Sunday evening, back to 1964. :thumbsup:

In the recent past, I have gone to see the re-releases of Thangappadakkam, Engal Thanga Raja and Pasa Malar and I’ve enjoyed it immensely, as I’ve said here already. But this event was an entirely amazing experience for me. It was non-stop excitement, fun and emotional outburst all the way. It was very much heart-warming and touching to see the hard core, die-hard elderly fans, most of them in their late 50’s and early 60’s, dancing, jumping, hugging each other, getting emotional now and then and shouting slogans. :clap: a BIG SALUTE to all of them :notworthy:

Group of fans, in fairly large numbers, came down all the way from Bangalore and Pondicherry in vans, exclusively for this great occasion. Pammalar introduced a person who has come from Cuddalore only to take part in this historic event.

The theatre wore a festive look with lots and lots of posters, banners & cut-outs of NT all over the place. In the main entrance there was a huge cut-out which was beautifully decorated with garlands ( thanks to Pammalar sir & Raghavendra sir for the clippings and links ).

On Sunday, I went to the theatre at about 4.30 p.m. and it was at that time the Bangalore fan group was bringing in the huge garland in a sort of procession style, accompanied by a local band group. The garland is said to weigh around 300 kgs and the length would approximately be 35-45 feet. While the fans enthusiastically began to tie the huge garland around the big cut-out, the band was playing NT’s hit songs (mostly Ennadi Rakamma) while another fan group was bursting 10,000 wallah’s.

Around 6 pm, “ SHANTHI HOUSE FULL “ board was kept near the main entrance. The fans felt very proud and you can see a very contended smile of their face.

(to be continued )

rangan-08

sivaa
3rd December 2014, 11:29 PM
UDHIYA PARAVAI contd...


Inside the theatre, the fun, excitement and “ alapparai’s “ were 100 times more. From the first frame till the last one, the audience reaction was amazing and it was a life-time experience for me.

When Goal appeared on the deck for the first time, whistles and applause brought the roof down. Fans began to throw flower petals on the screen and most of them climbed on top of the stage and went near the screen and danced and cheered.

When, “ Unnai ondru kaetpen…” started, they were un-controllable. As usual, policemen came inside but their efforts to control the fans turned futile. Fans were just ecstatic upon seeing their GOD on screen and they touched HIS feet and paid their respects to HIM.

Every song was a riot :clap: . NT's close up face (side feature) appears on screen. He picks up a cigar and lights it up and blows out blue smoke - all with impeccable style and grace. I've seen it many a number of times but to see it on big screen with fantastic audience was just amazing. Youv'e got to be there to feel it. :2thumbsup:

Seconds later, Suseela amma rockingly starts her “ Aaha……” for “ Partha gnyabagam illayo…”. Viswanathan – Ramamurthy ayya’s soulful & extra-ordinary contribution to this 60’s noir-ish, musical thriller is beyond any praises. Ever-green hit songs and rocking BGM :notworthy: :clap:

And then came the ULTIMATE. Even before NT geared up for the phenomenal “ Engey nimmadhi…..”, almost 50% of the audience were near the screen. What a way to celebrate the master-piece with soodam & arathi !! :notworthy: They even used a bell for chiming !!! :eek:

Apart from showering flower petals, the fans began to throw 1 rupee, 2 rupee & 5 rupee coins !!! Audience who were sitting in the first few rows, literally had “ Sornabhishekam “ :cool2: :grin:

This extra-ordinary, un-conditional love & affection showered by the fans clearly proves that how this IMMORTAL LEGEND has gone deep down into the hearts of the fans, fixed a throne for him there and sitting on top of it majestically, forever.

My F-I-L couldn’t have asked for more, he was more than contended. As for me, it was a memorable evening and a mesmerizing and awesome experience. :thumbsup:

ஆண்மையே நீவிர் வாழ்க !

அன்புள்ளமே உமக்கு என் நன்றி !!



rangan-08

sivaa
3rd December 2014, 11:30 PM
http://farm5.static.flickr.com/4129/4840331520_f3d563d2f2_b.jpg

nov

sivaa
3rd December 2014, 11:31 PM
எங்கும் "புதிய பறவை" மயம்

சென்ற 23.7.2010 வெள்ளி முதல், திருச்சி முருகன் திரையரங்கிலும், தினசரி 4 காட்சிகளாக, "புதிய பறவை" திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியுள்ளது.

இத்தகவலை அளித்த ரசிக நல்லிதயம் திரு.பி.கணேசன் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:32 PM
https://www.youtube.com/watch?v=kBwYwkXfOp4&feature=player_embedded

sivaa
3rd December 2014, 11:33 PM
தமிழகத் தலைநகரில் தலைவரின் திரைக்காவியங்கள்
(6.8.2010 வெள்ளி முதல்)

1. புதிய பறவை : பாரத் : தினசரி 2 காட்சிகள் (பிற்பகல், மாலை)

2. உத்தமபுத்திரன் : லிபர்ட்டி : முற்பகல் 11:30 மணிக் காட்சி மட்டும்

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:34 PM
//சென்னை தண்டையார்பேட்டையிலுள்ள பாரத் திரையரங்கில் நாளை 6.8.2010 வெள்ளி முதல் "புதிய பறவை" திரையிடப்படுகிறது.

திரைப்பட வரலாற்றில், பாரத் திரையரங்கிற்கு, வேறு எந்த திரையரங்கத்திற்கும் இல்லாத ஒரு மாபெரும் சிறப்பு உண்டு. நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமான "பராசக்தி" யும் முதல் வெளியீட்டில் (25.10.1952) 'பாரத்'தில் தான் வெளியானது. நடிகர் திலகத்தின் 288வது இறுதித் திரைப்படமான "பூப்பறிக்க வருகிறோம்" திரைப்படமும் முதல் வெளியீட்டில் (17.9.1999) 'பாரத்'தில் தான் வெளியானது. கலைப்பெருஞ்ஜோதியின் ஆதியையும், அந்தத்தையும் வெளியிட்ட 'பாரத்' அரங்கிற்கு இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்!//

சிறப்புத்தகவலுக்கு மிக்க நன்றி பம்மலார்...

சென்னை வண்ணாரப்பேட்டை 'பாரத்' திரையரங்கிற்கு இப்படி ஒரு சிறப்பு இருப்பதையும், எந்த திரையரங்கிற்கும் இல்லாத வகையில் நடிகர்திலகத்தின் திரைப்பட வரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

'பாரத்' திரையரங்கம் தற்போது புதுப்பிக்கப்பட்டு குளிர்சாதன வசதியும், DTS ஒலி அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. வட சென்னை ரசிகர்களுக்கு அதில் 'புதிய பறவை' பார்ப்பது நிச்சயம் இனிய அனுபவமாக இருக்கும்.

saradhaa-na

sivaa
3rd December 2014, 11:35 PM
மதுரையம்பதியின் நியூடீலக்ஸ் திரையரங்கில், 10.8.2010 செவ்வாய் முதல் 12.8.2010 வியாழன் வரை, மூன்று நாட்களுக்கு மட்டும், தினசரி 3 காட்சிகளாக, நடிப்புலக மகானின் " கௌரவம்" திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:36 PM
தாராசுரத்தில் "புதிய பறவை"

தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், 10.8.2010 செவ்வாய் முதல் 14.8.2010 சனி வரை, ஐந்து நாட்களுக்கு, தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], புதுமை சக்கரவர்த்தியின் "புதிய பறவை" திரையிடப்பட்டு, வெற்றிச் சிறகை விரித்துள்ளது.

இந்த இனிக்கும் செய்தியை எமக்கு வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:36 PM
சென்னை ஓட்டேரி சரவணா திரையரங்கில், 3.9.2010 வெள்ளிக்கிழமை முதல், தினசரி 3 காட்சிகளாக, இரட்டை வேட நடிப்புக்கு இலக்கணமாகத் திகழும் உன்னத காவியமான "உத்தமபுத்திரன்" திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகின்றது.

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:37 PM
கோவை டிலைட் திரையரங்கில், 4.9.2010 சனிக்கிழமை முதல், தினசரி 3 காட்சிகளாக, வாழ்வியல் திலகத்தின் காலத்தை வென்ற காவியமான "வசந்த மாளிகை" வெளியாகி வெற்றி வாகை சூடி வருகின்றது. அரங்கில், கலையுலக சக்கரவர்த்திக்கு பேனர்கள் வைக்கப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று 5.9.2010 ஞாயிறு மாலைக் காட்சிக்கு, நமது நல்லிதயங்களின் ஆரவாரங்களினால், அந்தப் பகுதியே களை கட்ட உள்ளது.

இதே டிலைட் திரையரங்கில், இதயதெய்வத்தின் 83வது ஜெயந்தியை முன்னிட்டு, வருகின்ற 1.10.2010 வெள்ளி முதல், புதுமை வேந்தரின் "புதிய பறவை" வெளியாக உள்ளது.

இந்த இனிக்கும் தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.வெள்ளியங்கிரி அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:37 PM
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள லக்ஷ்மி திரையரங்கில், வரும் 17.9.2010 வெள்ளி முதல், தினசரி 3 காட்சிகளாக, புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை".

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:38 PM
மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கில், நாளை 24.9.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, கலையுலக சொக்கநாதரின் "சொர்க்கம்".

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:39 PM
#63 (http://www.mayyam.com/talk/showthread.php?8491-Current-Screenings-of-Nadigar-Thilagam-Films&p=558897&viewfull=1#post558897) pammalar (http://www.mayyam.com/talk/member.php?108306-pammalar)

View Profile (http://www.mayyam.com/talk/member.php?108306-pammalar)
View Forum Posts (http://www.mayyam.com/talk/search.php?do=finduser&userid=108306&contenttype=vBForum_Post&showposts=1)
Private Message (http://www.mayyam.com/talk/private.php?do=newpm&u=108306)
Add as Contact (http://www.mayyam.com/talk/profile.php?do=addlist&userlist=buddy&u=108306)


http://www.mayyam.com/talk/images/statusicon/user-offline.png
Senior Member Veteran Hubber Join DateSep 2009LocationChennaiPosts3,294Post Thanks / Like http://www.mayyam.com/talk/images/buttons/collapse_40b.png (http://www.mayyam.com/talk/showthread.php?8491-Current-Screenings-of-Nadigar-Thilagam-Films/page7#top)Thanks (Given)0Thanks (Received)2Likes (Given)0Likes (Received)6


மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 24.9.2010 வெள்ளி முதல் 30.9.2010 வியாழன் வரை ஒரு வார காலத்திற்கு, தினசரி 4 காட்சிகளாக, 'நசநச' என்று பெய்த மழையையும் மீறி, சக்கை போடு போட்டுள்ள ஸ்டைல் சக்கரவர்த்தியின் "சொர்க்கம்" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்). பழைய பட மறுவெளியீடுகளில் இது மலைக்க வைக்கும் சாதனை.

"சொர்க்க"த்தை திரையிட்டவருக்கு பூலோகத்தில் 'சொர்க்கம்' என்பதனைச் சொல்லவும் வேண்டுமோ!

பெருமிதத்துடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:40 PM
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில், இன்று 19.11.2010 வெள்ளி முதல் தினசரி 3 காட்சிகளாக, சாதனைத் திலகத்தின் "புதிய பறவை".

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:44 PM
மதுரை ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில், 26.11.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, தேசிய திலகத்தின் "தியாகம்" திரையிடப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகின்றது.

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:44 PM
திருப்பரங்குன்றம் லக்ஷ்மி திரையரங்கில், நேற்று 30.11.2010 செவ்வாய் முதல், மூன்று நாட்களுக்கு மட்டும், தினசரி 3 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "இருவர் உள்ளம்" திரையிடப்பட்டு அமோக வரவேற்பு பெற்று வருகின்றது.

இத்தகவலை எமக்களித்த சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:45 PM
"அடாது மழை பெய்தாலும் விடாது வித்யாபதியை வரவேற்போம்"

தற்பொழுது திண்டுக்கல் நகரின் என்.வி.ஜி.பி. திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, கலைமகளின் மானுட வடிவமான நமது நடிகர் திலகத்தின் "சரஸ்வதி சபதம்" திரையிடப்பட்டு, கடும் மழையிலும் வசூல் மழை பொழிந்து, பெரும் வெள்ளத்திலும் மக்கள் வெள்ளத்தை பெற்று ஜெயக்கொடி நாட்டி வருகிறது.

பெருமிதத்துடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:45 PM
பழனி தாலுகாவில் உள்ள புதுஆயக்குடி என்கின்ற சிற்றூரில் இருக்கும் கோமதி டூரிங் டாக்கீஸில், நேற்று 13.12.2010 திங்கள் முதல், தினசரி 2 காட்சிகளாக, கலையுலக மன்னர்மன்னனின் 286வது திரைக்காவியமான "மன்னவரு சின்னவரு" திரையிடப்பட்டு மகத்தான வரவேற்பைப் பெற்று வருகிறது. பப்ளிசிடிக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில், அர்ஜுனும், சௌந்தர்யாவும் வட்டங்களுக்குள் சிறிதாக இருக்கிறார்கள். அதே சமயம் அந்த போஸ்டர்களில் நமது நடிகர் திலகம் Full Standingல் பெரிதாக, பிரதானமாக காட்சியளிக்கிறார்.

இனிக்கும் இத்தகவலை எமக்கு வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:46 PM
சென்னை திருவல்லிக்கேணி 'ஸ்டார்' திரையரங்கில், இன்று 17.12.2010 வெள்ளி முதல், தினசரி பகல் 11:30 மணிக் காட்சியாக, கலையுலக மகானின் "சரஸ்வதி சபதம்" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது.

இத்தகவலை எமக்களித்த ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:47 PM
கோவை 'டிலைட்' திரையரங்கில், கடந்த வெள்ளி (17.12.2010) முதல் திங்கள் (20.12.2010) வரை,
ஸ்ரீ சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்", தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு, நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.வெள்ளியங்கிரி அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:47 PM
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உள்ள 'லட்சுமி' திரையரங்கில், 17.12.2010 வெள்ளி வைகுண்ட ஏகாதசி முதல் நேற்று 22.12.2010 புதன் வரை ஆறு நாட்களுக்கு, கலையுலக சொக்கநாதரின் "திருவிளையாடல்" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு நள்ளிரவுக் காட்சியும் நடைபெற்றுள்ளது.

நாளை 24.12.2010 வெள்ளி முதல், சென்னை மண்ணடி 'பாட்சா' திரையரங்கில் (பழைய 'மினர்வா'), தினசரி பகல் 11:30 மணிக் காட்சியாக, வாழ்வியல் திலகத்தின் "எங்க மாமா" திரைக்காவியம் திரையிடப்படுகிறது.

இனிக்கும் இந்த இரு தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நன்றிகள் பற்பல!

அன்புடன்,

sivaa
3rd December 2014, 11:48 PM
சேலம் 'ஸ்ரீசரஸ்வதி' திரையரங்கில், 25.12.2010 சனிக்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக, கலைக்கடவுளின் "ஆலயமணி" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகின்றது. இன்று 27.12.2010 திங்கட்கிழமையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது.

இத்தகவலை எமக்கு வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்

sivaa
3rd December 2014, 11:48 PM
மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள 'நியூடீலக்ஸ்' திரையரங்கில், சனி(25.12.2010), ஞாயிறு(26.12.2010) இரண்டு நாட்கள் மட்டும், தினசரி 3 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின்
"இருவர் உள்ளம்" திரைக்காவியம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:49 PM
தற்பொழுது, திண்டுக்கல் 'என்விஜிபி' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "இருவர் உள்ளம்" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இத்தகவலை எமக்கு வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:50 PM
மதுரை ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில், நமது இதயதெய்வத்தின் "அவன் தான் மனிதன்", இன்று 7.1.2011 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகின்றது.

தித்திக்கும் இத்தகவலை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு நன்றிகள் பற்பல !

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:50 PM
மதுரை கீரைத்துறை 'நியூடீலக்ஸ்' திரையரங்கில், கடந்த புதன்(12.1.2011) மற்றும் வியாழன்(13.1.2011) ஆகிய இரு தினங்கள் மட்டும், வாழ்வியல் திலகத்தின் "விளையாட்டுப் பிள்ளை" திரைக்காவியம் தினசரி 3 காட்சிகளாக வெளியாகி நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

திரையரங்கில் இக்காவியத்தைக் கண்டு களித்து முடித்து விட்டு வெளியே வந்த ஒருவர், "இப்பெல்லாம் நூறு ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் பாத்தாக் கூட இந்த மாதிரி நல்ல படங்கள பாக்க முடியலையே" என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இத்தகவல்களை அளித்த மதுரை அன்புள்ளம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:51 PM
Murali Srinivas wrote:
ராஜா படத்தைப் பற்றி இங்கே பலமுறை பேசும் போது, அந்த படம் 1972 ஜனவரி 26 அன்று வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். மதுரையில் சென்ட்ரலில் வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். 39 வருடங்களுக்கு பிறகு அதே ஜனவரி 26, அதே சென்ட்ரலில் விழா கொண்டாட நடிகர் திலகம் வருகை புரிகிறார். ஆம், நாளை முதல் மதுரை சென்ட்ரலில் ராஜா வெளியிடப்படுகிறது. அரங்கம் மீண்டும் விழாக்கோலம் காண விழைவோம்.

அன்புடன்


இன்று 21.1.2011 வெள்ளி முதல், மதுரை சென்ட்ரல் சினிமாவில் தினசரி 4 காட்சிகளாக, ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா".

அன்புடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:51 PM
HOT FLASH : "ராஜா ராஜா தான்"

"ராஜா"வின் ரசிக ரோஜாக்கள் இன்று 23.1.2011 ஞாயிறு மாலைக் காட்சியில் கோயில் மாநகரின் சென்ட்ரல் சினிமாவில் திருவிழாக் கொண்டாடி தூள் கிளப்பி விட்டார்கள். படம் தொடங்குவதற்கு முன்பு அரங்க வாயில் முகப்பில் உள்ள போஸ்டர் கட்-அவுட்டுக்கு மாலை அலங்காரங்களும், கற்பூர ஆராதனைகளும் விமரிசையாக நடந்தேறின. பின்னர் படம் தொடங்கியதும், திலகத்தின் ஒவ்வொரு அசைவுக்கும், ஸ்டைலுக்கும், பாட்டுக்கும், Fightக்கும் அரங்கம் அதிர்ந்திருக்கிறது.

"வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள வாத்தியாரம்மா... நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால் வேறு யாரம்மா" பாடல் வரிகள் லேசாகத் தான் காதில் விழுந்ததாம். அந்த அளவுக்கு விசில் ஒலிகள் அந்த வரிகளுக்கு விண்ணைப் பிளந்திருக்கிறது.

"கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா" பாடல் அளப்பரையின் உச்சம். அரங்கத்தின் கூரைக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால்
"தப்பித்தேன்...பிழைத்தேன்..." என்று கூறுமாம்.

மொத்தத்தில், மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, சென்ட்ரல் சினிமா அரங்கத்தையே ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள் நம்மவர்கள்.

Gross Collection Report (approx.)

முதல் நாள் வெள்ளிக்கிழமை(21.1.2011) : ரூ.11,600/- [ரூபாய் பதினொன்றாயிரத்து அறுநூறு]

இரண்டாம் நாள் சனிக்கிழமை(22.1.2011) : ரூ.10,900/- [ரூபாய் பத்தாயிரத்து தொள்ளாயிரம்]

இன்று மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை(23.1.2011) : ரூ.11,500/- [ரூபாய் பதினொன்றாயிரத்து ஐநூறு] (மாலைக் காட்சி வரை)

ஞாயிறு மாலைக் காட்சி வரை, மூன்று நாள் மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.34,000/- என்பது விண்ணை அளக்கும் சாதனை.

நமது நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, ஸ்டைல் சக்கரவர்த்தி, சாதனைச் சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி !!!

சுவையான இத்தகவல்களை சுடச்சுட வழங்கிய அன்புள்ளம், மதுரை அரசமரம் செவாலியே டாக்டர் சிவாஜி குரூப்ஸ் நிர்வாகி திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள் !

பெருமிதத்துடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:52 PM
HAPPY 40th BIRTHDAY TO THE RAJA OF BOX-OFFICE Mr. RAJA : [26.1.1972 - 26.1.2011]

MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY !!!

[26.1.1972 : புதன்கிழமை, இன்று 26.1.2011 : புதன்கிழமை, என்னே ஒரு மகத்தான கிழமை ஒற்றுமை !]

இன்று 26.1.2011 குடியரசுத் திருநாளன்று, தனது 40வது பிறந்த நாளை மதுரை சென்ட்ரல் சினிமாவில் ரசிக ரோஜாக்கள் புடைசூழ மங்களகரமாகக் கொண்டாடினார் ராஜா ! இன்றைய வசூல் விவரங்கள் சில தினங்களில் !

ஞாயிறு (23.1.2011) மாலைக்காட்சி வரை மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.34,000/-. ஞாயிறு இரவுக்காட்சி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ,2,000/-. ஆக, ஞாயிறு (23.1.2011) வரை "ராஜா" ஈட்டிய மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.36,000/-.

நேற்று(25.1.2011) மற்றும் முந்தைய நாள்(24.1.2011) மொத்த வசூல் விவரங்கள்: (சற்றேறக்குறைய)

24.1.2011 : திங்கள் : ரூ.7,200/- [ரூபாய் ஏழாயிரத்து இருநூறு]

25.1.2011 : செவ்வாய் : ரூ.7,000/- [ரூபாய் ஏழாயிரம்]

ஆக மொத்தம், முதல் ஐந்து நாட்களில் மட்டும் "ராஜா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.50,200/-.

பழைய பட வசூல் வரலாற்றில், இது ஒரு அசுர சாதனை.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

விவரங்களை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு வளமான நன்றிகள் !

பெருமிதத்துடன்,
பம்மலார்.

sivaa
3rd December 2014, 11:53 PM
புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை" திரைக்காவியம், கடந்த வெள்ளி(21.1.2011), சனி(22.1.2011), ஞாயிறு(23.1.2011) ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் சேலம் மாநகரின் 'அலங்கார்' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இத்தகவலை அளித்த ரசிக அன்பு நெஞ்சம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நயமிகு நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

AREGU
4th December 2014, 01:44 PM
நண்பர் aregu (http://www.mayyam.com/talk/private.php?do=showpm&pmid=100979)
எனது தனிமடல் பார்க்கவும்

பதில் அனுப்ப முயன்றேன். இயலவில்லை.

sivaa
5th December 2014, 08:27 PM
பதில் அனுப்ப முயன்றேன். இயலவில்லை.

தனிமடல் கிடைத்தது நன்றி

எனது தனிமடல் பார்க்கவும்

sivaa
5th December 2014, 08:41 PM
Real Vasool "RAJA"

ஆரவாரம் ! மகிழ்ச்சி !! சந்தோஷம் !!! ஆம்,

மதுரை சென்ட்ரல் சினிமாவில், 21.1.2011 வெள்ளி முதல் 27.1.2011 வியாழன் வரையிலான ஒரு வார காலகட்டத்தில், தினசரி 4 காட்சிகளில், வசூல் சக்கரவர்த்தியின் "ராஜா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.64,200/- [ரூபாய் அறுபத்து நான்காயிரத்து இருநூறு].

பழைய பட வரலாற்றில், பண்டிகை-விடுமுறை வாரம் என சிறப்பான காரணம் எதுவும் இல்லாமல், ஒரு சாதாரண வாரத்தில், இத்தனை வசூல் என்பது விண்ணை முட்டும் சாதனை. இக்காவியத்தை வெளியிட்டவர் ரூ.50,000/- வந்தாலே பரம திருப்தி என்றாராம். இப்பொழுது அவருக்கு பரிபூரண திருப்தி.

புதன்(26.1.2011) மற்றும் வியாழன்(27.1.2011) வசூல் விவரங்கள்: (சற்றேறக்குறைய)

26.1.2011 : புதன் : ரூ.7,500/- (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு)

27.1.2011 : வியாழன் : ரூ.6,500/- (ரூபாய் ஆறாயிரத்து ஐநூறு)

ஒரு வார (21.1.2011 - 27.1.2011) மொத்த வசூல் (சற்றேறக்குறைய) : ரூ.64,200/- [ரூபாய் அறுபத்து நான்காயிரத்து இருநூறு]

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

வசூல் விவரங்களை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு கனிவான நன்றிகள் !

பெருமிதத்துடன்,
பம்மலார்.

sivaa
5th December 2014, 08:41 PM
கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரில் உள்ள 'கமலா' டூரிங்கில், தங்கத்தமிழ்த்திருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம் 2.2.2011 புதன் முதல் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இத்தகவலை வழங்கிய குடந்தை அன்புள்ளம் திரு.ராமலிங்கம் அவர்களுக்கு குதூகலமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

sivaa
5th December 2014, 08:42 PM
தாராசுரத்தில் "ராஜா"

கும்பகோணத்துக்கு அருகாமையில் தாராசுரத்தில் உள்ள 'சூரியகாந்தி' டூரிங்கில், 18.2.2011 வெள்ளி முதல் இன்று 20.2.2011 ஞாயிறு வரை, தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா" திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது.
இன்றைய[20.2.2011] மாலைக் காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய 200 பேர் இக்காவியத்தைக் கண்டு களித்திருக்கின்றனர். ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய். மாலைக் காட்சி வசூல் மட்டும் சற்றேறக்குறைய ரூ.2,000/-. இன்றைய காலகட்டத்தில், டூரிங் டாக்கீஸுகளை பொறுத்தமட்டில், இது சிகர சாதனை.

தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய குடந்தை அன்புள்ளம் திரு. ராமலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

sivaa
5th December 2014, 08:42 PM
பழனியில் உள்ள 'சந்தானகிருஷ்ணா' திரையரங்கில், கடந்த 28.1.2011 வெள்ளி முதல் 31.1.2011 திங்கள் வரை நான்கு நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாக, தங்கத்திருமகனின் தன்னிரகற்ற திரைக்காவியமான "திரிசூலம்" திரையிடப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இச்செய்தியை வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
5th December 2014, 08:44 PM
நாஞ்சில் நகரின் 'பயோனீர்முத்து' திரையரங்கில், கடந்த 7.3.2011 திங்கள் முதல் 10.3.2011 வியாழன் வரை - நான்கு நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக - புரட்சித்திலகத்தின் முழுமுதற்காவியமான "பராசக்தி" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது.

நமது மாடரேட்டர் திரு.நௌ அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் வந்திருந்த போது ஸ்ரீவில்லிபுத்தூரில் "பராசக்தி" ஓடுவதை பார்த்து வியந்து அத்தகவலை 'பராசக்தி போஸ்டர்' புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். [பதிவிட்ட தேதி : 10.11.2010]. அந்த சுவரொட்டியில் 'எழுத்தின் சூப்பர் ஸ்டாரும் நடிப்பின் சூப்பர் ஸ்டாரும் இணைந்து படைத்த' போன்ற அருமையான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வாசகங்களைக் கொண்ட அதே டிசைன் போஸ்டர்கள் தற்பொழுது நாகர்கோவிலின் பிரதான இடங்கள் எங்கும் காணப்படுகிறது.

இனிக்கும் இத்தகைய மிட்டாய் தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு ஸ்வீட் தேங்க்ஸ் !

அன்புடன்,
பம்மலார்.

sivaa
5th December 2014, 08:44 PM
சென்னை பெரம்பூரில் உள்ள 'மஹாலக்ஷ்மி' திரையரங்கில், கடந்த 18.3.2011 வெள்ளி முதல், முற்பகல் 11:30 மணிக் காட்சியாக, கலையுலக ஆண்டவரின் "ஆண்டவன் கட்டளை" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகின்றது.

இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

sivaa
5th December 2014, 08:45 PM
மதுரையம்பதியின் 'சென்ட்ரல் சினிமா' திரையரங்கில், நாளை 1.4.2011 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்".

சாக்லெட் தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், மதுரை நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கும் ஸ்வீட் நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

sivaa
5th December 2014, 08:46 PM
சென்ற வெள்ளி [25.3.2011] முதல் வியாழன் [31.3.2011] வரையிலான ஒரு வார காலகட்டத்தில், சென்னை பிராட்வே பகுதியிலுள்ள 'நியூபிராட்வே' திரையரங்கில், முற்பகல் 11:30 மணிக் காட்சியாக சாதனைச் சக்கரவர்த்தியின் "உயர்ந்த மனிதன்" வெளியாகி கணிசமான வரவேற்பைப் பெற்றது.

முத்தான தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு மணியான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

sivaa
5th December 2014, 08:46 PM
எத்தனை வசூலை அள்ளிக் குவிக்குது

மதுரை 'சென்ட்ரல் சினிமா' [தினசரி 4 காட்சிகள்]

சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்"

கலெக்ஷன் ரிப்போர்ட்

1.4.2011 : வெள்ளி : ரூ.10,082/-

2.4.2011 : சனி : ரூ.7,192/-

3.4.2011 : ஞாயிறு : ரூ.10,961/- [மாலைக் காட்சி வரை]

1.4.2011 முதல் இன்றைய [3.4.2011] மாலைக் காட்சி வரை "சிவகாமியின் செல்வன்" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் ரூ.28,235/-.

படத்தில் எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது; படமோ எத்தனை வசூலை வாரிக் குவிக்குது.

2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் இது போன்ற கலெக்ஷன் எல்லாம் சாதனைகளின் சிகரம்!

அதனால் தானே கூறுகிறோம்,

"சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே" என்று.

பெருமிதத்துடன்,
பம்மலார்.

sivaa
5th December 2014, 08:47 PM
கர வருட தமிழ்ப் புத்தாண்டு தினம் மற்றும் சித்திரைத் திருநாளான 14.4.2011 வியாழன் முதல், சென்னை 'சாந்தி' காம்ப்ளெக்ஸில், கலையுலக மகானின் "திருவருட்செல்வர்" திரைக்காவியம் திரையிடப்பட உள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இவ்வார இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த அருமையான செய்தியை அளித்த அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
6th December 2014, 12:26 AM
மதுரையில் இன்று முதல் [டிசம்பர் 5,2014 வெள்ளி] சென்ட்ரல் திரையரங்கில் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படும் விவரத்தை இங்கே பதிவு செய்திருந்தோம்.

கார்த்திகை மாதமடி கல்யாண சீசனடி என்பது வழிமுறை நிகழ்வு.

கார்த்திகை மாதம் மணிகண்ட சுவாமியின் மாதம் என்பதும் நடைமுறை நிகழ்வு.

கார்த்திகை தீபம் என்றால் வீட்டிலே தீபம், ஆலயத்திலே தீபம் என்பதும் நிகழ்முறையே!

இருந்தால் என்ன நடிகர் திலகத்தை காண வேண்டும் என்று நினைத்து விட்டால் இயல்பாகவே மக்கள் வந்து விடமாட்டார்களா என்ன?

கார்த்திகை தீபத்தன்று அண்ணன் தங்கை(களு)க்கு கார்த்திகை சீர் (பணம்) கொடுப்பது வழக்கம்!

மதுரை சென்ட்ரலிலோ தங்கைகள் அண்ணனை காண சீர் கொடுத்திருக்கின்றனர்!

ஆம்! கணிசமான மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் இன்று சென்ட்ரல் திரையரங்கிற்கு வந்து Dr. ரமேஷ் அவர்களை கண்டு மகிழ்ந்திருக்கின்றனர்!

இது போன்ற பண்டிகை நாட்களில் கூட பொது மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று சொன்னால் அது நம் நடிகர் திலகத்திற்கு மட்டும்தானே!

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் பானர் மற்றும் வரவேற்பு போஸ்டர்கள்.

http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/01/DSC00041.jpg

http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/01/DSC00050.jpg

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
6th December 2014, 12:46 AM
அண்ணன் ஒரு கோவில் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் மேலும் சில பானர் மற்றும் வரவேற்பு போஸ்டர்கள்.

http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/01/DSC00044.jpg

http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/01/DSC00039.jpg

http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/01/DSC00035.jpg

அன்புடன்

Murali Srinivas
7th December 2014, 12:47 AM
மதுரை சென்ட்ரலில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் Dr. ரமேஷ் அவர்களை காண இன்றும் கணிசமான மக்கள் வந்திருந்து சிறப்பு செய்திருக்கின்றனர். class actor மற்றும் மாஸ் ஹீரோ என்ற இரு வேறு கூறுகளையும் ஒரே நேரத்தில் திறம்பட கையாளும் தகுதி படைத்த ஒரே நடிகன் நடிகர் திலகம், அண்ணன் ஒரு கோவில் படம் வெளிவந்து 37 ஆண்டுகள் கழித்தும் அதை செவ்வனே நிரூபித்திருக்கிறார். வரவேற்பு கூடி கூடி வருகிறது என்ற சந்தோஷ செய்தியை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார் படத்தை வெளியிட்டவர்.

இந்த இனிமையான தொடக்கம் அவர் முயற்சி செய்யும் நடிகர் திலகத்தின் பல்வேறு திரைப்படங்களுக்கும் இதே போல் தொடர்ந்து வரட்டும் என்று வாழ்த்தினோம்

அன்புடன்

sivaa
7th December 2014, 06:29 AM
சென்னை சாந்தி சினிமாஸ் : சிவாஜி பிலிம்ஸ் "புதிய பறவை"
[முதல் நாள் 23.7.2010 வெள்ளிக்கிழமையின் மொத்த வசூல் (சற்றேறக்குறைய)]

பிற்பகல் 3:00 மணிக் காட்சி : ரூ.16,100/- (ரூபாய் பதினாறாயிரத்து ஒருநாறு)

மாலை 6:30 மணிக் காட்சி : ரூ. 13,000/- (ரூபாய் பதிமூன்றாயிரம்)

இரவு 10:00 மணிக் காட்சி : ரூ.7,200/- (ரூபாய் ஏழாயிரத்து இருநூறு)

மொத்தம் : ரூ.36,300/- (ரூபாய் முப்பத்து ஆறாயிரத்து முந்நூறு)

அன்புடன்,
பம்மலார்.

sivaa
7th December 2014, 06:32 AM
http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179505723&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179506347&size=thumb 0
0
http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179505545&size=thumb 0

sivaa
7th December 2014, 06:33 AM
http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179505831&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179506040&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179506487&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179507561&size=thumb 0
0
0
0

sivaa
7th December 2014, 06:34 AM
http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179507906&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179507639&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179508122&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179508241&size=thumb 0
0
0
0

sivaa
7th December 2014, 06:36 AM
http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179508837&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179508801&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179508466&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179512439&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179512952&size=thumb 0
0
0
0
0

sivaa
7th December 2014, 06:37 AM
http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179513564&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179513157&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179513085&size=thumb 0
0
0

sivaa
7th December 2014, 06:39 AM
http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179513610&size=thumb

http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179514720&size=thumb (http://chennaishanthitheatre.webs.com/apps/photos/photo?photoid=92218116)0



http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179515003&size=thumb http://thumbs.webs.com/Members/viewThumb.jsp?siteId=53391428&fileID=179515351&size=thumb 0
0





0

sivaa
7th December 2014, 06:51 AM
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjR8ywuUI/AAAAAAAAAQA/LVnIScMDTIk/s400/nbposter07theatrelook.jpg (http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjR8ywuUI/AAAAAAAAAQA/LVnIScMDTIk/s1600/nbposter07theatrelook.jpg)

sivaa
7th December 2014, 06:55 AM
http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjRCHMQjI/AAAAAAAAAPw/PODiHJn2b1g/s400/nbposter06.jpg (http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjRCHMQjI/AAAAAAAAAPw/PODiHJn2b1g/s1600/nbposter06.jpg)



http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjDBdxMPI/AAAAAAAAAPI/pdPBFwPNXFA/s400/nbposter01.jpg (http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjDBdxMPI/AAAAAAAAAPI/pdPBFwPNXFA/s1600/nbposter01.jpg)http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjDjZNVkI/AAAAAAAAAPQ/n7zu1D76iXA/s400/nbposter02.jpg (http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjDjZNVkI/AAAAAAAAAPQ/n7zu1D76iXA/s1600/nbposter02.jpg)http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjEF481fI/AAAAAAAAAPY/1jpYM_NPwag/s400/nbposter03.jpg (http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjEF481fI/AAAAAAAAAPY/1jpYM_NPwag/s1600/nbposter03.jpg)http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjEkA8iXI/AAAAAAAAAPg/qyb-m5FhHD8/s400/nbposter04.jpg (http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjEkA8iXI/AAAAAAAAAPg/qyb-m5FhHD8/s1600/nbposter04.jpg)http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjFKY2yoI/AAAAAAAAAPo/gp13UYC4inc/s400/nbposter05.jpg (http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEnjFKY2yoI/AAAAAAAAAPo/gp13UYC4inc/s1600/nbposter05.jpg)

sivaa
7th December 2014, 06:57 AM
http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6jp59BBI/AAAAAAAAAKc/DaO4UaTBEVU/s400/NBPoster03.png (http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6jp59BBI/AAAAAAAAAKc/DaO4UaTBEVU/s1600/NBPoster03.png)http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6jZuK7EI/AAAAAAAAAKU/rCMQmK9v0Ak/s400/NBPoster02.png (http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6jZuK7EI/AAAAAAAAAKU/rCMQmK9v0Ak/s1600/NBPoster02.png)http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6i-WZUrI/AAAAAAAAAKM/muoYCm4B9Ds/s400/NBPoster01.png (http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6i-WZUrI/AAAAAAAAAKM/muoYCm4B9Ds/s1600/NBPoster01.png)சென்னை சாந்தியில் புதிய பறவை (http://sivajimoviesinchennai2010.blogspot.ca/2010/07/blog-post.html)

அனைத்து சிவாஜி ரசிகர்களின் உள்ளம் குளிரும் வண்ணம் வந்துள்ள செய்தி, சென்னையில் சாந்தி திரையரங்கில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான புதிய பறவை 23.07.2010 அன்று வெளியிடப் படுகிறது. இப்படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளின் படங்கள் உங்கள் பார்வைக்குhttp://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6kBeRkPI/AAAAAAAAAKk/ShGJ1Fd44x4/s400/NBPoster04.png


(http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TEc6kBeRkPI/AAAAAAAAAKk/ShGJ1Fd44x4/s1600/NBPoster04.png)

sivaa
7th December 2014, 07:02 AM
சென்னை பாரத் திரையரங்கில் புதிய பறவை (http://sivajimoviesinchennai2010.blogspot.ca/2010/08/blog-post.html)

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள புதுப்பிக்கப் பட்ட பாரத் திரையரங்கில் 06.08.2010 முதல் புதிய பறவை திரையிடப் பட்டது. நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் இத் திரையரங்கிற்கு தனி சிறப்புள்ளது. ஆம், நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமான பராசக்தி முதல் வெளியீட்டில் இங்கு திரையிடப்பட்டது. அதே போல் அவரது கடைசி படமான பூப்பறிக்க வருகிறோம் திரைப்படமும் முதல் வெளியீட்டில் இத்திரையரங்கில் திரையிடப் பட்டது. இது இத்திரையரங்கிற்குக் கிடைத்த தனிச் சிறப்பாகும். 08.08.2010 ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதன் சில காட்சிகள் இங்கே புகைப்படமாக உங்கள் முன்.
http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHFoRHrjHI/AAAAAAAAAS4/-qj-P1rpj_E/s400/arathi1.jpg (http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHFoRHrjHI/AAAAAAAAAS4/-qj-P1rpj_E/s1600/arathi1.jpg)http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHFhLRIB2I/AAAAAAAAASw/bHDiPeKQNpk/s400/arathi2.jpg (http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHFhLRIB2I/AAAAAAAAASw/bHDiPeKQNpk/s1600/arathi2.jpg)http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHFXsc_uQI/AAAAAAAAASo/6HHZl_aCVDg/s400/arathi3.jpg (http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHFXsc_uQI/AAAAAAAAASo/6HHZl_aCVDg/s1600/arathi3.jpg)http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHFLjW5uzI/AAAAAAAAASg/IxBsBfJXdJE/s400/crowdwaiting.jpg (http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHFLjW5uzI/AAAAAAAAASg/IxBsBfJXdJE/s1600/crowdwaiting.jpg)http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHE8kWMBWI/AAAAAAAAASY/_-fxhQJYqzo/s400/cutoutandwaiting.jpg (http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHE8kWMBWI/AAAAAAAAASY/_-fxhQJYqzo/s1600/cutoutandwaiting.jpg)http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHExXOXn1I/AAAAAAAAASQ/ln_Wfm7UHpc/s400/cutoutgarland1.jpg (http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHExXOXn1I/AAAAAAAAASQ/ln_Wfm7UHpc/s1600/cutoutgarland1.jpg)http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHEjWz7uMI/AAAAAAAAASI/aPnlPf3dLaE/s400/cutoutgarlandcloseup.jpg (http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHEjWz7uMI/AAAAAAAAASI/aPnlPf3dLaE/s1600/cutoutgarlandcloseup.jpg)http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHEVrKDWvI/AAAAAAAAASA/CxMjsP0LBhg/s400/dance1.jpg (http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHEVrKDWvI/AAAAAAAAASA/CxMjsP0LBhg/s1600/dance1.jpg)http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHD6CK980I/AAAAAAAAARw/m-pPC-UUCa8/s400/theatrelook.jpg (http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHD6CK980I/AAAAAAAAARw/m-pPC-UUCa8/s1600/theatrelook.jpg)
புதுப்பிக்கப் பட்ட பாரத் திரையரங்கின் பொலிவான தோற்றம்
http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHEGON9dzI/AAAAAAAAAR4/d1LIwZJPu7k/s400/managerhonored.jpg (http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TGHEGON9dzI/AAAAAAAAAR4/d1LIwZJPu7k/s1600/managerhonored.jpg)
திரையரங்க நிர்வாகி ரசிகர் மன்ற நிர்வாகிகளால் கௌரவிக்கப் படுகிறார்

sivaa
7th December 2014, 07:13 AM
சென்னை நடராஜ் திரையரங்கில் ஆண்டவன் கட்டளை (http://sivajimoviesinchennai2010.blogspot.ca/2010/10/blog-post.html)


சென்னை நடராஜ் திரையரங்கில் அனுசரிக்கப் பட்ட நட்சத்திர வாரத்தில் 03.10.2010 அன்று நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரையிடப்பட்டது. அதை மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு.
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3Zh5n46NI/AAAAAAAAAVg/Ph6pFECChww/s400/akn05.jpg (http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3Zh5n46NI/AAAAAAAAAVg/Ph6pFECChww/s1600/akn05.jpg)
ரசிகர்களை வரவேற்கும் பேனர்களில் ஒன்று
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3ZYroRWEI/AAAAAAAAAVY/7A7dgQEY51o/s400/akn02.jpg (http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3ZYroRWEI/AAAAAAAAAVY/7A7dgQEY51o/s1600/akn02.jpg)
அரங்கின் வாயிலில் கூடியிருந்த ரசிகர்களில் ஒரு பகுதி
http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3ZGeDobnI/AAAAAAAAAVQ/m7iac02ghaw/s400/akn03.jpg (http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3ZGeDobnI/AAAAAAAAAVQ/m7iac02ghaw/s1600/akn03.jpg)
ஒரு ரசிகர் போஸ்டரில் நடிகர் திலகத்திற்கு மரியாதை செலுத்தும் காட்சி




http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3XbqNKGaI/AAAAAAAAAU4/zDh7D4JRNDw/s400/akn07.jpg
அரங்கின் நுழைவாயிலில் வைக்கப் பட்டிருந்த போஸ்டர்கள்

http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3XM8Ww4hI/AAAAAAAAAUw/5wupehaZb_0/s400/akn11.jpg
http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3W2eLJd_I/AAAAAAAAAUo/i24D_UaPKBQ/s400/akn14.jpg




http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3WBgUHRZI/AAAAAAAAAUY/r1YVGVqLHZ0/s400/akn18.jpg


http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3VwLqLJqI/AAAAAAAAAUQ/hD_oY9uGZr8/s400/akn19.jpg


http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3VbF_cp-I/AAAAAAAAAUI/FjDiDAvDd8o/s400/akn20.jpg


நடராஜ் திரையரங்கில் வைக்கப் பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் படம்


http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3Yj0C3vzI/AAAAAAAAAVI/xL03Ndrants/s400/akn04.jpg (http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TK3Yj0C3vzI/AAAAAAAAAVI/xL03Ndrants/s1600/akn04.jpg)


கொண்டாட்டத்தின் ஒரு பகுதி

sivaa
7th December 2014, 07:15 AM
சென்னை ஸ்டார் திரையரங்கில் ஆண்டவன் கட்டளை (http://sivajimoviesinchennai2010.blogspot.ca/2010/09/blog-post_06.html)

சென்னை ஸ்டார் திரையரங்கில் 07.09.2010 முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் மூன்று காட்சிகள் வீதம் நடிகர் திலகத்தின் உனனதத் திரைக்காவியம் ஆண்டவன் கட்டளை திரையிடப்படுகிறது.


http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TIUfPR4FsNI/AAAAAAAAAUA/peqsmIAgKoo/s400/startheatreposter-1.jpg (http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TIUfPR4FsNI/AAAAAAAAAUA/peqsmIAgKoo/s1600/startheatreposter-1.jpg)

sivaa
7th December 2014, 07:16 AM
சென்னை சரவணா திரையரங்கில் உத்தம புத்திரன் (http://sivajimoviesinchennai2010.blogspot.ca/2010/09/blog-post.html)

பழைய படங்களை ஆர்வத்துடனும் கடமையுணர்வுடனும் திரையிட்டு வரும் சென்னை சரவணா திரையரங்க நிர்வாகிகளுக்கு முதலி்ல் நமது பாராட்டுக்கள். குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்கக்கூடிய படங்கள் குறைந்து வரும் கால கட்டத்தில் பழைய படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவதில் வியப்பில்லை. அந்த வரிசையில் கடந்த 03.09.2010 முதல் சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் உன்னத திரைக்காவியமான உத்தம புத்திரன் திரையிடப் பட்டு வெற்றி நடைபோட்டு வருகிறது. அதனையொட்டி திரையரங்கில் 05.09.2010 ஞாயிறு மாலைக் காட்சிக் கொண்டாட்டங்கள் உங்கள் பார்வைக்கு. இதனைப் பற்றிய விவரங்களை இந்த இணைப்பில் (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=14569&start=210&sid=2d9ed484820e4dbebcffd82cad5f44e3)படிக்கலாம்




http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TISB__imhuI/AAAAAAAAAT4/2Z-e2tFXMfY/s400/poster01.jpg (http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TISB__imhuI/AAAAAAAAAT4/2Z-e2tFXMfY/s1600/poster01.jpg)
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TISBaF7saoI/AAAAAAAAATo/0M15HihD8RM/s400/arathi01.jpg (http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TISBaF7saoI/AAAAAAAAATo/0M15HihD8RM/s1600/arathi01.jpg)
http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TISBU49ePdI/AAAAAAAAATg/9nTLpXeb15g/s400/fireworks.jpg (http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TISBU49ePdI/AAAAAAAAATg/9nTLpXeb15g/s1600/fireworks.jpg)

sivaa
7th December 2014, 07:22 AM
ராஜபார்ட் ரங்கதுரை பாலாஜி திரையரங்கம் (http://sivajimoviesinchennai2010.blogspot.ca/2010/06/blog-post.html)

சென்னை ஓட்டேரி செங்கல் சூளை சாலையில் உள்ள சரவணா திரையரங்க வளாகத்தினுள் அமைந்துள்ள, புதுப்பிக்கப்ட்ட திரையரங்கமான பாலாஜியில், 11.06.2010 முதல் நடிகர் திலகத்தின் உன்னத திரைக்காவியமான ராஜபார்ட் ரங்கதுரை திரையிடப்பட்டது. 13.06.2010 ஞாயிறு அன்று மாலைக் காட்சியில் ரசிகர்களின் உற்சாகமான ஆரவாரத்துடன் அமைந்தது.
அன்று அரங்கு நிறைவு எட்டப்படவில்லை எனினும் மிக கணிசமான அளவில் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் கண்டு களித்தனர். நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பு அமைநத காட்சிகளில் ரசிகர்கள் பெருத்த ஆரவாரம் செய்து மகிழ்ந்தது எந்த அளவிற்கு நடிகர் திலகம் அவர்களின் உள்ளத்தில் குடியிருக்கிறார் என்பதைக் காட்டியது. குறிப்பாக அம்மம்மா தம்பி என்று நம்பி பாடல் காட்சியில் அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டி ரசித்தது, சோகக் காட்சியில் இப்படிப்பட்ட வரவேற்பைப் பெறக் கூடியவர் நடிகர் திலகம் மட்டும் தான் என்று கூறுவது போல் அமைந்திருந்தது.

இனி அங்கே கண்ட காட்சிகள் உங்கள் பார்வைக்கு.

தங்களின் எண்ணங்களைப் பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUiQbO8peI/AAAAAAAAAKE/kLoj3gGuHlI/s400/RRDB1.jpg (http://1.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUiQbO8peI/AAAAAAAAAKE/kLoj3gGuHlI/s1600/RRDB1.jpg)
http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUiLEY80QI/AAAAAAAAAJ8/kQHgPR4v5Fg/s400/RRDB2.jpg (http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUiLEY80QI/AAAAAAAAAJ8/kQHgPR4v5Fg/s1600/RRDB2.jpg)

http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUh-4q8TXI/AAAAAAAAAJs/wP7mW-IwmQY/s400/RRDB4.jpg (http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUh-4q8TXI/AAAAAAAAAJs/wP7mW-IwmQY/s1600/RRDB4.jpg)
http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUh5SlH1ZI/AAAAAAAAAJk/QIsmGDa0qs8/s400/RRDB5.jpg (http://4.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUh5SlH1ZI/AAAAAAAAAJk/QIsmGDa0qs8/s1600/RRDB5.jpg)

http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUhgdoZI3I/AAAAAAAAAJU/kVQW2yO-asA/s400/RRDB8.jpg (http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUhgdoZI3I/AAAAAAAAAJU/kVQW2yO-asA/s1600/RRDB8.jpg)
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUhbJcj81I/AAAAAAAAAJM/Tc-F-ezG9Cg/s400/RRDB9.jpg (http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUhbJcj81I/AAAAAAAAAJM/Tc-F-ezG9Cg/s1600/RRDB9.jpg)
http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUhUaeRHlI/AAAAAAAAAJE/-W_ctUODMII/s400/RRDB10.jpg (http://2.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUhUaeRHlI/AAAAAAAAAJE/-W_ctUODMII/s1600/RRDB10.jpg)




http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUgkqrhU1I/AAAAAAAAAIc/FNT6yzFwxxU/s400/RRDB15.jpg (http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUgkqrhU1I/AAAAAAAAAIc/FNT6yzFwxxU/s1600/RRDB15.jpg)

http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUgWRIylTI/AAAAAAAAAIM/1criWhuBFzE/s400/RRDB17.jpg (http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUgWRIylTI/AAAAAAAAAIM/1criWhuBFzE/s1600/RRDB17.jpg)
http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUgQNkvQFI/AAAAAAAAAIE/XiSjxgzSTQs/s400/RRDB18.jpg (http://3.bp.blogspot.com/_F0A8FGQxSpU/TBUgQNkvQFI/AAAAAAAAAIE/XiSjxgzSTQs/s1600/RRDB18.jpg)

sivaa
7th December 2014, 07:24 AM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 1
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

சாந்தி தியேட்டரின் நுழைவாயிலை நோக்கி எனது கால்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சரியாக மாலை நாலேகால் மணி. எதிரே மகானின் பக்தர்கள் - பெற்ற குழந்தையை சிரத்தையுடன் சுமந்து வரும் அன்னை போல் - தாங்கள் பெற்ற தந்தைக்கு அணிவிப்பதற்காக ராட்சத மலர் மாலையை தங்களது கைகளிலும், தோள்களிலும் இருபுறமும் சுமந்து கொண்டு, "சிவாஜி புகழ் வாழ்க!', "எங்கள் தெய்வத்தின் புகழ் வாழ்க!" என்கின்ற கோஷங்களுடன் அமைதியான முறையில் ஊர்வலமாக அரங்க நுழைவாயிலை நெருங்கினர். ராட்சத மலர் மாலைக்கான முழு பங்களிப்பும் பெங்களூர் பக்தர்களைச் சேர்ந்தது. அவர்கள் இந்த மாலையை ஒரு கன்டைனர் லாரியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு எடுத்து வந்தனர். ஊர்வலத்தில் சென்னை மற்றும் பெங்களூர் பக்தர்களுடன், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் புதுச்சேரியிலிருந்தும் வருகை புரிந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நுழைவாயிலில் ஊர்வலம் சில மணித்துளிகள் நின்றது. "அடி என்னடி ராக்கம்மா", "கேட்டுக்கோடி உருமி மேளம்", "வரதப்பா" பாடல்கள் பேண்ட் வாத்தியத்தில் முழங்க, ட்ரம்ஸ் ஒலிக்க, பக்தர்கள் பக்திப் பரவசத்தில் திளைக்க ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்!

தியேட்டரினுள்ளே 5000 வாலா(சரம்) சப்தம் ரீங்காரமிட, மாபெரும் மலர் மாலா(மாலை), கோமகன் சிவாஜி அளித்த கோயில் யானை போல், பக்தர்கள் புடை சூழ மிக அழகாக, நேர்த்தியாக, கம்பீரத்தோடு அரங்கிற்குள் நுழைந்தது. மிக உயரமான அந்த மலர் மாலையை 60 அடி உயர ராட்சத பதாகைக்கு(கட்-அவுட்) கீழே, அருகே வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்தனர். பின்னர் அதனை தூக்கி, ஏற்றி அண்ணலின் அன்பு சொட்டும் முகத்துக்கு சூட்டினர். கரவொலிகளும், குரலொலிகளும் விண்ணைப் பிளந்தன. வாலாக்கள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருந்தன. ஊர்வலம், டான்ஸ், வாணவேடிக்கைகள், மாலை சாற்றுதல், பாலாபிஷேகம் முதலிய சுபகாரியங்கள் கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரம் நீடித்தது. சரியாக மாலை 5:45 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட இறைவனுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இந்த சமயத்தில் மேட்னி ஷோ முடிந்து கூட்டம் உள்ளிருந்து வெளியே வர, கற்பூர ஆரத்தியைக் கண்டு அனைவருக்கும் மெய் சிலிர்த்தது. இதயதெய்வத்தின் புகழ் பாடும் கோஷங்கள் அரங்கத்தில் குழுமியிருந்த ஒவ்வொரு நல்லிதயத்திலிருந்தும் அவர்களது இரத்தநாளங்களிலிருந்தும் உணர்வுபூர்வமாகக் கிளம்பி விண்ணைப் பிளந்தன. மணவிழாவில் கூடும் உறவினர் போல், திருவிழாவில் கூடும் தோழர்கள் போல், இத்திரைவிழாவில் பக்தர்கள் ஆங்காங்கே ஒன்று கூடி நலம் விசாரித்துக் கொண்டதையும், தங்கள் இறைவனின் நடிப்பைப் பற்றியும், சாதனைகள் குறித்தும் அளவளாவிக் கொண்டதையும் காணக் கண்கோடி வேண்டும். எங்கு பார்த்தாலும் பக்தர் வெள்ளம். சரியாக ஆறு மணிக்கு "shanti housefull" என்கின்ற போர்டு மாட்டப்பட விசில் சத்தம் விண்ணை வீழ்த்தின. சென்னை பக்தர்கள் 10000 வாலா சரவெடியை கொளுத்திப் போட, ஆடியிலே தீபாவளி. காலதேவன் 6:30 நோக்கி நெருங்க, கலைத்தேவனைக் காண அடியவர் கூட்டம் அரங்கினுள் ஆர்ப்பரித்தது. மன்னவனுக்கு சூட்டப்பட்ட மாபெரும் மாலை கண்டு, பொழுதான மாலை வெட்கி, நாணி, மங்கி இரவுக்குள் புகுந்தது.

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

sivaa
7th December 2014, 07:26 AM
பம்மலார் அவர்களின் வர்ணனை எந்த அளவிற்கு துல்லியமாக உள்ளது என்பதை இதோ இந்த காட்சியில் காணுங்கள். நன்றி யூட்யூப் மற்றும் நமது ஹப் நண்பர்களுக்கு.


ராகவேந்திரன்


https://www.youtube.com/watch?v=2uJNuEdLWvo&feature=player_embedded

sivaa
7th December 2014, 07:31 AM
From Dinamalar website


மீண்டும் சிவாஜிகணேசனின் புதிய பறவை!
--------------------------------------------------------------------------------

நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா நடிப்பில் 1964ம் ஆண்டு திரைக்கு வந்து சக்கை போடு போட்ட படம் புதிய பறவை. 46 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படத்தை சிவாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில், தாதா மிராஸ் இயக்கியிருந்தார். தற்போது சிவாஜி கணேசனின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சாந்தி தியேட்டரில் புத்தம் புது டிஜிட்டல் காப்பியாக திரையிடப்பட்டுள்ளது. புதிய படங்களுக்க இணையாக தியேட்டரை சுற்றிலும் சிவாஜி ரசிகர்கள் கட்-அவுட்களை *வைத்துள்ளனர். ரசிகர்கள் பலர் சிவாஜி கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

புதிய பறவை படம் 1964ம் ஆண்டு பாரகன் தியேட்டரில் திரையிடப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே நல்ல வசூலை வாரி குவித்த இந்த படம் இப்போதும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறதாம்.

http://cinema.dinamalar.com/tamil-ne...ning-again.htm (http://cinema.dinamalar.com/tamil-news/2414/cinema/Kollywood/Sivaji-Ganeshan%60s-Puthiya-paravai-screening-again.htm)

sivaa
7th December 2014, 07:33 AM
மிக்க நன்றி மகேஷ் அவர்களே, அன்றைய மாலைக் காட்சியில் முரளி சார் அவர்களால் பங்கேற்க முடியாமல் போனது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தம் தான். இருந்தாலும் முடிந்த வரையில் நம்மால் இயன்ற வரையில் அன்றைய நிகழ்ச்சிகளை இங்கு பதிந்து கொள்வோம். தங்களுடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் அறிய மிகுந்த ஆவலாய் இருக்கிறோம்.

அன்று மாலை கட்அவுட்டுக்கு சாற்றுவதற்காக பெங்களூரு ரசிகர்கள் கொண்டு வந்திருந்த பிரம்மாண்ட மாலையை ஊர்வலமாய் எடுத்துச் சென்றதைக் கண்டோம். இதோ அம்மாலை மேலே தூக்கி ஏற்றப் படும் காட்சி.

https://www.youtube.com/watch?v=sNGCaYhob8I&feature=player_embedded

அன்புடன்

ராகவேந்திரன்

sivaa
7th December 2014, 07:35 AM
http://www.behindwoods.com/index_images/page-banner-500-2.jpg (http://www.behindwoods.com/features/News/News23/index.html)










SIVAJI STILL DRAWS HOUSEFUL AUDIENCE






July 27, 2010






Home (http://www.behindwoods.com/index.html) > More news (http://www.behindwoods.com/features/News/News23/index.html)






http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-10-05/images/sivaj-ganesan-pudhiya-paravai-27-07-10.jpg






The name Sivaji always makes news in Tamil Nadu. What with the Rajinikanth starrer Sivaji breaking all box office records 3 years back, it is time now for the actual name bearer to make news. We all know that the Sivaji Ganesan and Saroja Devi starrer "Pudhiya Paravai" was a milestone in Tamil cinema. This thriller which was released in 1964 also had Nagesh and MR Radha in important roles.

So what if it has been 46 years since it was first released, this movie is still drawing record audience in movie halls. Relased with a brand new copy by Sivaji films, Pudhiya Paravai, now showing in Shanthi theatre complex is running to houseful shows. So chennai folks, if you want to relive the memories of your favourite Sivaji in action, book a ticket today and enjoy the thriller !!!






Tags : Sivaji Ganesan (http://www.behindwoods.com/testing/search.html?cx=partner-pub-2298245133082339%3A7wgj3qiy9uf&cof=FORID%3A9&ie=ISO-8859-1&q=Sivaji%2BGanesan&sa=Search&siteurl=www.behindwoods.com%252F#942), Saroja Devi (http://www.behindwoods.com/testing/search.html?cx=partner-pub-2298245133082339%3A7wgj3qiy9uf&cof=FORID%3A9&ie=ISO-8859-1&q=Saroja%2BDevi&sa=Search&siteurl=www.behindwoods.com%252F#906), Pudhiya Paravai (http://www.behindwoods.com/testing/search.html?cx=partner-pub-2298245133082339%3A7wgj3qiy9uf&cof=FORID%3A9&ie=ISO-8859-1&q=Pudhiya%2BParavai&sa=Search&siteurl=www.behindwoods.com%252F#381)









Dear friends,
After print media, now it's the turn of e-media to cover the reception for Pudhiya Paravai. See what behindwoods would like to say:

http://www.behindwoods.com/tamil-mov...-27-07-10.html (http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-10-05/sivaj-ganesan-pudhiya-paravai-27-07-10.html)

Raghavendran

sivaa
7th December 2014, 07:38 AM
RELATED KEYWORDS: Shanthi-theatre (http://timesofindia.indiatimes.com/topic/Shanthi-theatre)|Pudhiya-Paravai (http://timesofindia.indiatimes.com/topic/Pudhiya-Paravai)|movie (http://timesofindia.indiatimes.com/topic/movie)|Anna-Salai (http://timesofindia.indiatimes.com/topic/Anna-Salai)
Blast from the past as Sivaji movie runs housefull


The author has posted comments on this articleTNN | Jul 27, 2010, 11.03PM IST





CHENNAI: For the last three days, movie buffs have been thronging Shanthi theatre on Anna Salai. It's not a new release which has set off such fan frenzy, but the re-release of Sivaji Ganesan-starrer Pudhiya paravai.' The movie has been running to full houses since Friday and fans are now asking for a Sivaji' year of movies.

"We screened Pudhiya paravai' because of demands form fans to mark his 9th death anniversary on Friday, but now the request for a Sivaji' film mela has come up," said actor Prabhu, son of Sivaji Ganesan (http://timesofindia.indiatimes.com/topic/Sivaji-Ganesan). "The state of the prints of all his films need to be examined," he added.

The negatives of Pudhiya paravai' were cleaned up' at a lab, much to the delight of Sivaji's die-hard fans. Made in 1964, the film, has Sivaji playing the role of a man tortured by guilt over his past. "It came as a shock when people called me up for tickets," said Prabhu, in whose family-held theatre, Shanthi, the film could not be released in 1964. "Bollywood film Sangam' was running in the theatre and we had to release it at Paragon theatre, which does not exist anymore," he recollected.

Dear Pammalar,
Thank you for your kind words of appreciation. It was possible only because of friends and fans like you. There are many more assignments we have to complete.

Times of India has covered the Pudhiya Paravai success:
http://timesofindia.indiatimes.com/c...ow/6224856.cms (http://timesofindia.indiatimes.com/city/chennai/Blast-from-the-past-as-Sivaji-movie-runs-housefull-/articleshow/6224856.cms)

Raghavendran

Murali Srinivas
8th December 2014, 12:44 AM
இன்றைய தினம் [07.12.2014] மதுரை மாநகரில் நடிகர் திலகம் சரித்திரம் படைத்தார். ஞாயிறு மாலைக்காட்சிக்கு ரசிகர்களும் பொது மக்களும் அமோக ஆதரவளிக்க ஞாயிறு மாலைக்காட்சி பழைய படங்களின் வசூலில் மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமையை அண்ணன் ஒரு கோவில் பெற்றது. பால்கனி டிக்கெட்டுகள் புல் ஆகி விட கீழேயும் சரியான கூட்டம் வந்திருக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.

இது தீபாவளி அல்லது பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் வெளியாகவில்லை. அது போன்ற விடுமுறை நாட்கள் படத்திற்கு பலம் சேர்க்கும். அப்படியில்லாமல் சாதாரண நாட்களில் வெளியாகி வசூல் சாதனை புரிவது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை எந்த நேரத்தில் வெளியிட்டாலும் வசூலிக்கும் என்பதுதானே உண்மை!

இரண்டாவது விஷயம் இந்த படத்தை திரையிடலாம் என்று பேசிக் கொண்டிருக்கும்போது இந்த படமா இது கிளாஸ் படம். மக்கள் வர மாட்டார்கள் வசூலாகாது என்றெல்லாம் அரங்க நிர்வாகத்தினரிடம் சில "நல்ல உள்ளம்" படைத்தோர் சென்று அவர்கள் மனதை குழப்ப, படத்தின் வெளியிட்டாளார் அரங்க நிர்வாகத்தினரிடம் சென்று நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை கிளாஸ் அல்லது மாஸ் என்ற வித்தியாசமே கிடையாது. தமிழ் சினிமாவின் 83 வருட சரித்திரத்திலேயே Class Actor அதே நேரத்தில் Mass Hero என்ற இரு வேறுபட்ட நிலைகளிலும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக பொருந்தக் கூடியவர் நடிகர் திலகம் ஒருவரே என்ற உண்மையை விளக்கியிருக்கிறார். இந்த மூன்று தினங்களில் படத்திற்கு வருகை தந்த audience-ஐயும் படத்திற்கு வசூலான தொகையையும் பார்த்து விட்டு அரங்க நிர்வாகம் தாங்களாகவே முன் வந்து படத்தின் வெளியிட்டாளரிடம் நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று சொல்லியிருக்கிறார்கள்.

மாலையில் டவுன் ஹால் ரோட்டில் ஒரே அலப்பரை என்றால் அரங்கதினுள்ளிலும் ரசிகர்கள் ஆரவாரமாக ரசித்திருக்கின்றனர். ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க இடைவேளையில் மல்லிகை முல்லை பாடல் காட்சி மீண்டும் போடப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரே ஆரவார வரவேற்பு என்றால் அதற்கு பின்னால் ஆண்டவன் கட்டளையின் ட்ரைலர் காண்பிக்கப்பட ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினர் என்று செய்திகள்.

இன்றைய மாலைக்காட்சி முடிவடைந்தவுடன் தியேட்டர் வாசலில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு நன்றி சுந்தர்!

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
9th December 2014, 01:00 AM
மதுரையில் இன்றும் [08.12.2014] Dr.ரமேஷ் அண்ணனுக்கு வரவேற்பு குறையாமல் தொடர்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை மதுரை நண்பர்கள் பகிர்ந்துக் கொண்டனர். வேலை நாளான போதிலும் மக்கள் இன்றும் சென்ட்ரல் திரையரங்கிற்கு கணிசமான அளவில் வந்திருந்தனர் என்று சொன்னார்கள். இந்த வரவேற்பு இனி வரும் நாட்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை செய்தியையும் அவர்களிடமிருந்து கிடைத்தது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்