PDA

View Full Version : Maestro Ilayaraja News and Tidbits 2014



Pages : [1] 2 3

RR
13th April 2014, 08:48 PM
(Continued from here (http://www.mayyam.com/talk/showthread.php?8722-Maestro-ilaiyaraaja-news-amp-titbits))

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Madhanraj
14th April 2014, 11:46 AM
http://cinema.dinamalar.com//cinema-news/18181/special-report/Music-didnt-have-any-trend---Ilayaraja-Special-Interview.htm

rajsekar
18th April 2014, 04:03 AM
National Film Awards – Misses and Wins

http://www.thehindu.com/news/cities/chennai/balu-mahendra-memories-loom-over-national-awards/article5919756.ece

It’s very heartening to hear that Balu Mahendra’s last film won the award for Best Film for National Integration. It was predicted that Balu’s movie would bag few awards. Tamil films bagged five awards including Best Lyrics for Na. Muthukumar. At the same time, I am disappointed that Maestro wasn’t awarded the Best Background Score for Onnayum A. Shantanu Moitra bagged the Best Background score for the Telugu film “Na Bangaaru Talli”. Shantanu’s earlier soundtrack for Hindi films like Parineeta and Eklavya were good. I haven’t watched the Bangla or Telugu film to comment on the music score. Shantanu did a good job of background score for Madras Café but Raaja’s OA score was superb. If anyone has watched these movies, please post your comments on the music score.

The Bangla film “Jaatishwar” bagged the music awards. Veteran singer and composer Kabir Suman, also very popular among the Bangladeshis, bagged the award for Best Music Direction for Jaatishwar. The film also won the awards for Best Playback Singer Male (Rupankar), Best Costume and Best Makeup. The Best Female Playback singer was bagged by Bela Shende for a Marathi film. Bela has sung many Tamil songs.

http://ibnlive.in.com/news/61st-national-film-awards-has-the-jury-selected-the-deserving-films/465724-8-66.html

Once again, the Film Awards committee doesn’t publish the full results. We want to know which films were nominated and the scoring results for each category. Someone should file a RTI to publish the full set of results. As you all know, the biggest irony was “Sree Rama Rajyam” missing the award for best musical score two years ago because the preview theater had a bad audio system.

sivasub
21st April 2014, 09:31 AM
http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Shruti-records-a-song-for-Ilaiyaraajas-Hindi-film-with-Balki/articleshow/33785827.cms

sivasub
22nd April 2014, 11:52 AM
Any body heard about this? I neither understand this nor I understand the relevance 23 years later.

http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/did-you-know-/Ilayaraja-was-upset-with-debut-director/articleshow/34043802.cms

rajsekar
22nd April 2014, 10:59 PM
Siva - Nothing surprising here but the news item has no relevance now. Lot of water has flowed under the bridge since 1992. What if Raaja didn't have a fallout with Balachander and Ratnam in 1992? KB has nicely patched with Maestro since both of them have realized that waging a war is self-destructive. Bharathiraja can vouch for it after twenty years. Balachander was one of the prime motivators to go out and look for a new MD in 1992.

Madhanraj
23rd April 2014, 10:55 AM
Any News which is carrying IR name will get prominent and highlighed at any time...
No Time Boundry...Name says it all...

krish244
7th May 2014, 09:20 AM
Interesting to note Gulzar mentioning IR in his dadasaheb phalke award acceptance speech although he has worked with IR only in a couple (exactly 2? (SADMA & SRK)) of movies. Such was the admiration/impact, I guess.

http://indianexpress.com/article/india/india-others/from-phalke-peak-gulzar-looks-back-at-journey/

Wish Balki had thought about Gulzar for lyrics for his new movie with IR.

thanks,

Krishnan

rajsekar
7th May 2014, 07:44 PM
"He mentioned R D Burman, Madan Mohan and Illayaraja as some of his contemporaries who influenced his work.". Well said, Krish. It was indeed quite grateful for Gulzar to say that. We have quite a few ungrateful people in Tamil film who consider Ilayaraaja as being irrelevant. They have to just look back at their own career and see how Raaja's music influence played a big role in boosting the collections of hundreds of mediocre and lousy movies. Music listeners still croon the tunes not knowing the movie name. We have many rare musical gems from movies which have flopped commercially even though they had star directors and cast. The producers were able to recoup some of their investment from Raaja's music rights because the soundtrack was a platinum hit. In fact, artists in other languages respect and value Maestro's skills more than our own.

sudhakarg
8th May 2014, 10:40 AM
"He mentioned R D Burman, Madan Mohan and Illayaraja as some of his contemporaries who influenced his work."

What puts me off is that in the same vein, he also praises contemporaries such as "A.R.Rahman"!

rajaramsgi
10th May 2014, 01:15 PM
கழுகார் பதில்கள்! ஜூனியர் விகடன் / 14 May, 2014

ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து, மத்திய, மாநில விருதுகள் பெற்றும் இளையராஜாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது இன்னும் கிடைக்கவில்லையே... ஏன்?

http://www.vikatan.com/jv/2014/05/zmziyt/images/p8.jpgபால்கே விருது மட்டுமல்ல... உண்மையில் வரவேண்டிய எத்தனையோ விருதுகள் ராஜாவுக்கு பாக்கி இருக்கிறது. ஆனாலும் இளையராஜா இந்த விருதுகள் வந்தால் மட்டுமா பெருமை அடையப்போகிறார்? திண்ணையில் பாடிக்கொண்டு இருந்த பண்ணைபுரத்து பைந்தமிழ்க் குயில் இப்போது நாடுகள் கடந்து தமிழர் உள்ளங்களில் எல்லாம் கூடுகட்டி வாழ்ந்துகொண்டு இருக்கிறது. வயது கடந்தவர்களின் வானத்தில் இன்னும் இளமை ஜொலிக்கவைக்கும் வானவில்தான் இளையராஜா. நித்திரை வராமல் புரண்டு படுப்பவர்களுக்கு தூக்க மாத்திரை. காலை நேரத்துக் கவலையைக் கரைக்கும் கானக டானிக். 'செவி உள்ளவர்கள் கேட்கக் கடவது’ என்பதே ராஜா விதைத்து வைத்துவிட்ட வேதம். அப்புறம் எதற்கு விருதுகளை வேண்டி நிற்கும் வேதனை? விடுங்கள்!

Madhanraj
11th May 2014, 02:43 PM
Athe kelvi????
Therintha bathil...

Madhanraj
13th May 2014, 11:23 AM
http://www.dinamalar.com/news_detail.asp?id=971297

Russellhaj
15th May 2014, 06:41 PM
இந்த நாள்... இனிய நாள் !!


3309

Russellhaj
16th May 2014, 09:12 AM
வரலாறு, பொக்கிஷம் என்கிறார்கள் நீயல்லவா அன்றும், இன்றும், என்றும் வரலாறு போற்றும் பொக்கிஷம் !!!

எவ்வளவு அழகான, அருமையான தமிழ் உச்சரிப்பு !!!

He is gasping for air when he talks. He never gasped before even when he sings. I hope, wish and pray this is just an anxiety nothing more then that. Almighty God, Please bless him with good health and a long life.



https://www.youtube.com/watch?v=N-5YNbR0MWI&feature=youtu.be

Russellhaj
16th May 2014, 10:47 PM
https://scontent-a-iad.xx.fbcdn.net/hphotos-ash3/t1.0-9/10246274_10152530498601802_1698822593228372221_n.j pg

Russellhaj
16th May 2014, 11:12 PM
நோட்டா பட்டன அமுக்குனா ராஜா மீசிக் வருதுனு சும்மாச்சுக்கும் ஒரு ஸ்டேடஸ் போட்டேன். எங்க தொகுதிக்காரனுக 15000க்கும் மேல அத அமுக்கிருக்கானுக !!!! :):):)


By XYZ

RR
18th May 2014, 02:50 PM
இசைஞானி அவர்கள் எழுதிய திருப்பாவை பாடல்கள் புத்தகமாக தயாராகிக்கொண்டுள்ளது. குமுதம் பதிப்பகம் பெருமையுடன் வெளியிடும் இந்த நூல் தலைவர் பிறந்த நாளான ஜீன் 2ம் தேதி வெளியிடப்படும் அதோடு குமுதத்தில் வெளிவந்த இசைஞானியின் கேள்வி-பதில் புத்தகமும் வெளிவருகிறது.

Madhanraj
18th May 2014, 03:18 PM
I remember I have been to ANNAKKILI in my native Place (Central Cinema), Just to see this 'SLIDE'....Thanks POEM for making me to remember ..."The Green & Great Memroies of IR"...

Russellhaj
19th May 2014, 06:45 PM
போர்க்களத்தில் ஒரு பூ, பாடல் குறுந்தகடு

3319

Russellhaj
19th May 2014, 06:49 PM
Iliyaraaja's new book on thirupaavai to be released on June 2nd, 2014.



3320

rajaramsgi
24th May 2014, 04:58 AM
“இளையராஜா கொடுத்த தர்ம அடி!”
விகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்

சுஜாதா, ஸ்ரீவில்லிபுத்தூர்.
''பாரதிராஜா உங்கள் ஆத்ம நண்பர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்... அப்படியா?''
''அப்படியேதான்! எனக்கு முதல்ல அறிமுகமாகி நண்பன் ஆனது பாரதிராஜாதான். அவரோட நாடகங்கள்ல பாடல்கள் பாடுவேன்; பேத்தாஸ்ல ஹம்மிங் பண்ணுவேன்; ஃப்ளூட் வாசிப்பேன். எனக்கு, பாவலர் சகோதரர்கள் அறிமுகமானதே அவர் மூலமாத்தான். குறும்புப் பசங்க நாங்க. அப்ப பாரதிராஜா டைரக்டர் ஆகலை; இளையராஜாவும் இசையமைப்பாளர் ஆகலை.
சிதம்பரத்துல ஒரு கல்லூரியில் புரோகிராம். சாயங்காலம்தான் நிகழ்ச்சிங்கிறதால, சும்மா உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருந்தோம். அப்ப பாரதிராஜா, 'இப்ப எல்லாரையும் அரட்டுற மாதிரி ஒண்ணு பண்ணுவோம். ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போடுற மாதிரி நடிப்போம். எல்லாரும் பயந்துடுவாங்கள்ல?’னு கேட்டார். சரினு சண்டை போட ஆரம்பிச்சோம்.
'பெரிய சிங்கராடா நீ? நான் ஆகப்போறேன் பார்... பெரிய டைரக்டர்!’னு ஆரம்பிச்சு ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிட்டு கீழே விழுந்து புரள்றோம். இளையராஜா, பாஸ்கர், அமர்சிங்னு எல்லாரும் ஓடி வந்துட்டாங்க. 'யோவ் விடுங்கய்யா... ஃப்ரெண்ட்ஸா இருந்துட்டு இப்படியா அடிச்சிப்பீங்க? காலேஜ் பசங்கள்லாம் பார்க்கிறாங்க... விடுங்க’னு விலக்கினாங்க.
10 நிமிஷத்துக்குப் பிறகு, 'என்னடா பாரதி... நான் நல்லா நடிச்சேனா?’ - கேட்டப்பதான் அது விளையாட்டுனு தெரிஞ்சது அவங்களுக்கு.
கோபம் வந்து, 'நடிச்சீங்களா..?’னு கேட்டு அடிச்சாங்க பாருங்க அடி. அதுதான் ரியல் தர்ம அடி. இப்படி... அப்போ நிறைய வால்தனம் பண்ணியிருக்கோம்!''

krish244
24th May 2014, 09:55 AM
Complaint against Agilan of AGI music for misusing IR's name:

http://tamil.oneindia.in/movies/news/ilayaraaja-s-fans-lodged-complaint-on-agi-music-owner-201808.html

thanks,

Krishnan

rajsekar
28th May 2014, 11:15 PM
Such things are expected from an unknown music label company. Why can't Raaja associate with big world brands like Sony, Tharangini (Yesudas), Saregama, T-Series, Magnasound? The music world is a big social engineering platform where artists from every corner of the globe are trying to compete. We have such magnificient collection of Platinum hits from Ilayaraaja which is being abused by an unknown music label. This is not the first time that we have heard of fights with music companies. Raaja himself went through litigation with Inreco, Echo, AVM Audio and others. Rahman had issues with few companies regarding music royalty. I would expect Karthik Raaja to resolve these litigations and hand over Maestro's music album distribution to big label firms. You have to think big and global in order to take Maestro's music to all parts of the globe. Ilayaraaja's music certainly cannot be limited to just Indian cinema because he is a global phenomenon. A truly global music company can spread his music/ songs to billions of listeners world wide. Every time I listen to a music soundtrack or album, I am more than convinced that our Maestro is truly a Legend. The so called hyped mega productions sound tracks are a failure. Raaja's sound track has indeed salvaged many super star's career.

The following article is from NY Times in 2010. Why can't Raaja's albums be distributed via Universal Music/ Deshits?
http://www.nytimes.com/2010/07/19/arts/music/19desi.html?_r=0

Russellhaj
29th May 2014, 06:17 PM
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று... ஆமாம் நீங்கள் நடப்போகும் மரங்கள் வீசும் பூங்காற்று உங்கள் பேர் சொல்லும் ...நண்பர்களே ..

வரும் இரண்டாம் தேதி இசைஞானி பிறந்தநாள் விழாவாக IFCG யின் 71001 மரங்கள் நடுவிழா உலகம் முழுவதும் நடக்கபோகிறது , இந்த விழாவில் பங்கேற்க இயலாதவர்கள் தங்கள் வீட்டில் கூட ஒரு மரம் நட்டு கொண்டாடலாம், மரக்கன்றுகள் வேண்டுபவர்கள் கோவை, காந்திபுரத்தில், ராம் நகர் , செந்தில் குமரன் திரையரங்கு எதிரில் உள்ள என் அலுவலகத்தில் கூட பெற்றுகொள்ளலாம் ,

முப்பத்து ஒன்றாம் தேதி முதலாக உங்களுக்காக வழங்கலாம் என்று இருக்கிறேன் , வேண்டுபவர்கள் முன்பே எனக்கு தகவல் தந்தீர்களானால் உங்களுக்காக வழங்க காத்திருக்கிறேன் .. இசைஞானி இசையால் நம்மை தூய்மையாக காத்தது போல நாமும் இவ்வுலகை தூய்மையாக காப்போம் .. நாம் நடும் கன்றுகள் மரமாகும்போது நாம் இல்லாமல் போனாலும் அவை என்றும் இருக்கும் . பலன் பெறுவது யாராய் இருந்தாலும் நடுவது நாமாய் இருப்போமே .. என் அலைபேசி எண் : 80151







00477http://https://lh5.ggpht.com/HNXpWmI_aucfNTZajxiig5hJb98QlfR6c6TL08c2s3r6qsx5Vp 2Lo1zWseOLZAZDD1nG1A=s85

Russellhaj
1st June 2014, 10:57 PM
இசை மேதை மொசார்ட்டும் ( Wolfgang Amadeus Mozart ) இசைஞானி இளையராஜாவும் சந்திக்கும் ஒரே புள்ளி .!!!

I Pay no attention whatever to anybody's praise or blame.
I simply follow my own feelings
( W.A.Mozart )


நேற்றின் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றின் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள்
ராஜ்ஜியம் எனக்கே தான்

வாழ்த்த வயசு எதுக்கு? நல்ல மனம் தானே வேண்டும்!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் !!!

அவரின் விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின்
நாட்டியங்களை இன்னும் இன்னும் அமைத்துக் கொண்டே இருக்க வேண்டும


http://www.youtube.com/watch?v=adef3uDP7bw

Madhanraj
2nd June 2014, 10:58 AM
ISAI alias ILAYARAJAVUKKU PIRANTHA NAAL VAAZTHUKKAL. May GOD Bless HIM with Good Health , Peace & MORE DIVINE MUSIC...
Enrum Anbudan
Madhanraj M

Russellhaj
2nd June 2014, 02:59 PM
இசையாலணையும் பெயர்..


தாலாட்டில் துவங்கி ஒப்பாரியில் நிறைவுறும் ஒவ்வொரு மனித வாழ்விலும் இசையென்பது உடன் வரும் நிழலைப்போல தொடர்ந்து வந்துகொண்டே தானிருக்கிறது இன்றும்.. ஆதியில் விலங்குகளை விரட்டவும்,பயங்களைத் துரத்தவும் ஒலியெழுப்பி சப்தத்தை மௌனத்திடமிருந்து மொழி பெயர்த்தார்கள், நாகரீகம் வளர,வளர சப்தம் சங்கீதமானது. இன்றைய காலத்தின் கணக்குப்படி பார்த்தால் ஒரு தலைமுறையென்பது 50 முதல் 60 வயதிற்குள்ளேயே முடிந்துவிடும் அபாய கட்டத்தில் அறுந்து விழாமல் தொக்கி நிற்கிறது, இந்தத் தலைமுறையின் இசைத் தட்டினை 30 வருடங்கள் பின்னோக்கி பின்னோக்கிச் சுழற்றினால் இசையின் சகல பரிவாரங்களையும் ஒற்றை மனிதனாக சுமந்து நிற்கிறார் இளையராஜா என்ற பண்ணைபுர பாட்டுக்கார ராசய்யா.. இந்திப்பட பாடல்களின் ஆக்கிரமிப்பு தமிழ்த்திரைப்பட பாடல் ரசிகர்களின் காதைத் திருகிக் கொண்டிருந்த தருணங்களில் தமிழ்ப்பாரம்பரிய நாட்டார் வழக்கு இசையை உயிர்ப்புடனும்,துடிப்புடனும் பாடல்களில் மெருகேற்றி நம் செவிக்கு உணவாக்கிய உன்னத கலைஞன் இளைய ராஜா!! இசைத்தட்டிலிருந்து தொழில்நுட்பம் ஆடியோ கேசட்டிற்குள் குடியமர்ந்த காலத்தில்,எங்கள் வீட்டில் வானொலிப்பெட்டி இருந்ததே ஆடம்பரமென நினைத்த பொற்காலம் அது, இலங்கை வானொலியில் மாலை 4.00 முதல் 4.30 வரை"இசைக்களஞ்சியம்" என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.ஆண்குரலில் தனித்து ஒரு பாடல்,பெண் குரலில் தனித்து ஒருபாடல்,ஜோடிக்குரலில் ஒருபாடல்,பலகுரல் கலந்து ஒருபாடல், நகைச்சுவை உணர்வேந்திய ஒரு பாடலென 5 பாடல்கள் வரும். அடுத்து ஒலிக்க இருப்பது,ராகதேவன் இளையராஜாவின் இசையில் வைரமுத்துவின் வைர வரிகளில் ,எஸ்பிபியின் மயக்கும் குரலில் பொன் மாலைப்பொழுது பாடல்,நிழல்கள் படத்திலிருந்து.. காற்றலைகளில் தவழ்ந்த படி என இராஜேஸ்வரி சண்முகம் அம்மாவின் தேமதுரக்குரல் அறிமுகப்படுத்தியது இளையராஜாவை எனக்கு 6வயதில். அன்றிலிருந்து இன்று வரை அவரது இசை மீது தீராக்காதல். இசை என்பது செவிகளையும் தாண்டி மனதின் ஜீவ நாடிகளுக்குள் பசையற்று கிடக்கும் உயிரணுக்களை ஒன்றாகத்திரட்டி மயிலிறகால் வருடுவதைப் போலிருக்க வேண்டும்.அதைச் செவ்வெனச் செய்வது இளையராஜாவின் இசை மட்டுமே . இது என் மனது தீர்மானித்து விடாப்பிடியாக சொல்வது.!! பால்யம் தீர்ந்ததும், பருவத் தினவுகளை பருக ஆயத்தமாகி விடுகிறது காலம்,அப்பருவத்தினவுகள் நுரைத்து அடங்கி நீர்த்து ஏகத்திற்கும் ஏங்கி நிற்கிற தனிமை சூழ் வெறுமை என் மனதை பிசைகிற போதெல்லாம்," தனியானா என்ன? துணையாக நான் பாடும் பாட்டுண்டு" எனஆறத்தழுவி ஆறுதல் கரம் நீட்டுவதும் இளையராஜா இசைதான்.. உண்பதைப்போல,நீர்பருகுவதைப்போல,சுவாசிப்பதைப்போல,அன் றாட தேவைகளாகவும்,அத்யாவசியமானதாகவும் இளையராஜாவின் இசையேந்திய பாடல்களுடன் பயணித்து வரும் என்னைப் போன்று ஏராளம் ரசிகர்கள் இருக்கிறார்கள் ,வேலை,சூழ்நிலை காரணமாக குடும்பங்களை பிரிந்து வாழும் நகரத்து மனிதர்களின் தனிமை குடியிருக்கும் இரவின் கதவை தட்டினால் அங்கே துணைக்கு இளையராஜாவின் இசை மெலிதாக கசிந்தபடிதான் இருக்கிறது இன்றளவிலும்.!! "தாய்மடி+தகப்பன் தோள்கள்= இளையராஜா இசை"என ஒருமுறை நான் எழுதிய போது,"காதலியின்முத்தம்+ நண்பனின் தோள்கள் = ரஹ்மான் இசை" என எதிர்ப்பதமாக என் தலைமுறைக்கு முந்தைய தாய் ஒருவர் எழுதியிருந்தார்கள், இதை எதிர்ப்பதம் என்று சொல்வதை விட முந்தைய தலைமுறைகளின் ரசனைகள் ஊசியிலை மரங்களைப்போல் உயர்ந்தும்,ஆல,அரச மரக்கிளைகள் போல அகன்றும்,அடர்ந்தும் பரவி நிறபது ஆரோக்யமான விஷயமே!! இன்றைய சூழலில் அனிருத் வரையிலான இசையமைப்பாளர்களின் பாடல்களை ரசிக்கிற அளவு ரசிப்புத்தன்மை விரிந்திருந்தாலும்,கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் குழந்தையிடம் வீட்டிலுள்ள உறவுகளில் யாரைப் பிடிக்கும் எனக் கேட்டால் தயக்கத்தோடும்,குழப்பத்தோடும் யோசித்து அம்மாவைக் கை காட்டுவதைப்போல,என் மனதும் பிடித்த இசையமைப்பாளர் என்று இளையராஜாவைக் கை காட்டுகிறது!! ஜூன் 2 ல் பிறந்தநாள் காணும் இசைஞானியை வாழ்த்த வயதில்லை,வணங்க மனதும் வயதும் இருக்கிறது, அவர் நீடூழி வாழ எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன்!! _ பாலா!

venkkiram
3rd June 2014, 12:45 AM
மக்களின் இசைக்கு வயது 71 - மக்களே பேசும் வீடியோ!

https://www.youtube.com/watch?v=4cUWNirMWMk&feature=youtu.be

mappi
3rd June 2014, 02:38 AM
மக்களின் இசைக்கு வயது 71 - மக்களே பேசும் வீடியோ!

Hats-off to Suga & Karthick, nicely choosen pieces and a subtle naration of IR indisputable run. Great video by the whole team.

IR Music : Athai Kaetkum Nenjamae, Sugam Kodi Kaanattum

http://www.youtube.com/watch?v=Go6ZDn-CfoA

Sunil_M88
3rd June 2014, 03:50 AM
Happy Birthday Dearest Isaignani Ilaiyaraaja Ji

http://www.youtube.com/watch?v=TeERcZt1LMw

:bow:

rajsekar
3rd June 2014, 08:21 AM
Chief Minister J Jayalalitha's last film which had great songs by Maestro. This particular song is quite unique and not many people remember seeing this song sequence or played in a concert/ competition. The song was recently uploaded to the net. Maestro has used western and Carnatic musical instruments and the tune is so melodious. Can anyone realize that this song was composed 34 years ago? That's the mesmerizing musical power of Ilayaraaja. Wishing Him many more years of good health, prosperity and never ending fountain of musical creations!!!
http://www.youtube.com/watch?v=k8iyDV3Tk1M

Russellhaj
3rd June 2014, 08:38 AM
Folks, Please watch from 37.53.. *Goosebumps*



http://www.dailymotion.com/video/k22E9bjJlAudOd7XYNd

rajaramsgi
4th June 2014, 02:06 AM
do you know anything about these 2 photos? who, when, what, where?

http://cdnw.vikatan.com/gallery/album/2014/06/02/16911.jpg

http://cdnw.vikatan.com/gallery/album/2014/06/02/16947.jpg

Russellhaj
4th June 2014, 04:57 AM
இரண்டாவது படத்தில் இருப்பவர்கள் பாடகி இந்திரா ( தேவன் திருச்சபை மலர்களே பாடியவர்) அந்த சிறுமி பாடகி பூரணி ( வட்டத்துக்குள் சதுரம் படத்தில், இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் பாடியவர்).

krish244
4th June 2014, 10:06 AM
Rajaramsgi, great find. And poem, I am surprised anyone would know that. You knew it. Great! I had no clue :)

thanks,

Krishnan

krish244
4th June 2014, 10:09 AM
It seems IR's birthday actually falls on June 3rd, but he celebrates it on June 2nd so that it does not take the limelight away from Karunanidhi's birthday celebrations (which falls on June 3rd).

http://tamil.oneindia.in/movies/news/why-ilayaraaja-preponed-his-birthday-202634.html

thanks,

Krishnan

krish244
5th June 2014, 10:50 AM
IR's interview in TOI:

http://timesofindia.indiatimes.com/Entertainment/Tamil/Music/No-director-has-risen-to-my-level-Ilaiyaraaja/articleshow/36087887.cms

thanks,

Krishnan

Madhanraj
5th June 2014, 11:34 AM
Really Very Sharp and HE means a Lot.Whoever reads (so called Super-Hit Directors) will understand better than us (Fans).
INDHA (ISAI) YAANAIKKU THEENI PODA YAARUME ILLAIYA??? KADAVULE...
Hmmm...
Rgds - Madhan

rajsekar
5th June 2014, 08:52 PM
"For instance, why do you think a director feels shy to approach me? It is because the director wants to decide the music for his film. And he believes that I won't let him do that" - quote from the interview. Madhanraj - I would encourage you to read the book by Bharadwaj Rangan (The Hindu's film critic and big fan of Raaja) titled "Conversations with Mani Ratnam". There is a chapter on Ilayaraaja and his association. Mani really opens up his feelings on how he worked with Maestro and also Rahman. Though Balachandar was the main mischief maker in rejecting Raaja, Mani went with the producer's advise. Now Balachandar clearly wanted an upper hand while dealing with Raaja and their last association in "Pudhu Pudhu Arthangal" did cause lot of grief. Of course, Balanchandar never got any hit songs after that movie. He finally came around to Maestro.

Madhanraj
6th June 2014, 12:16 PM
Thanks & I will try definitely to go thru' that Book.
Regarding Directors whoever has distanced or disconnected from IR have been giving Flops only. (Many can be listed down here...). Very rare has survived. In fact, most of them have vanished from the Film Industry itself.(NO TRACE).
Anyways, VAAZHGA VALAMUDAN ILAYARAJA.
Rgds - Madhan

K
6th June 2014, 07:35 PM
http://www.kovaiaavee.com/2014/06/usa.html

படம் நெடுக வியாபித்திருப்பது மேஸ்ட்ரோ தான். காட்சியின் பின்னணி இசையும் பாடல்களும் பின்னிப் பிணைந்து வருவதால் ரசிகர்கள் காட்சியோடு ஒன்றிப் போக முடிகிறது. கிளைமாக்ஸ் கார் காட்சியில் வரும் துள்ளல் இசை நம் மனசுக்குள்ளும் ஒரு குஷியை உண்டு பண்ணுகிறது.

rajsekar
18th June 2014, 03:33 AM
I wish that I had filed a RTI two years ago when the National Award wasn't given to Maestro for Sree Rama Rajyam. The Telugu MPs and Telugu Associations worldwide never raised this anomaly in Parliament. In fact, no Telugu film was chosen for an award in 2012. The award process should be completely changed and problems like this should be highlighted. On what basis was Bharathiraja chosen to be a Kerala State Award jury member? The RTI brought out the truth in the award selection process. I hope that the National Award process is changed.

http://www.thehindu.com/news/national/kerala/rti-reply-puts-kerala-film-awards-jury-chief-in-a-spot/article6124128.ece?homepage=true

K
20th June 2014, 02:50 PM
http://tamil.oneindia.in/movies/news/ilayaraaja-music-therapy-ashok-kumar-203919.html
அசோக்குமாருக்கு பழைய ஞாபகங்களைக் கொண்டு வருவதற்காக, தினமும் அவரது செவிகளில் ஹெட்போன் வைத்து இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க வைக்கிறார்களாம்.

krish244
3rd July 2014, 06:23 PM
Orragane seems to be a hit:

http://www.thehindu.com/features/cinema/raining-remakes/article6173761.ece

"While the Kannada crowd is flocking the theatres to watch Oggarane, they have not taken to Drishya, which is a well-made film..."

"...‘Oggarane’ the Kannada version starring Prakash Raj is a sleeper hit even though the Tamil and Telugu versions are what in filmi parlance called ‘washout’, commercially..."

"...The success of the film also dispels the absolutely banal theory that Ilayaraja’s music doesn’t work in Kannada. How can you blame the garnishing when the food is bad? Listen to the maestro’s magical score when a delectable cake is being baked......"

"...‘Drishya’ is not as big a hit as ‘Oggarne’ but is doing steady business..."

thanks,

Krishnan

rajaramsgi
4th July 2014, 11:51 AM
what is a Trill?



The trill (or shake, as it was known from the 16th until the 19th century) is a musical ornament consisting of a rapid alternation between two adjacent notes, usually a semitone or tone apart, which can be identified with the context of the trill.

See this video of how Raja sir uses trill in some of his songs.. (thanks to the good heart who posted this in youtube)

http://www.youtube.com/watch?v=a0h9kli65eQ

dochu
4th July 2014, 09:06 PM
@rajaramsgi
That was very educative. Thanks.

IR seems to have used trill (technique?) with various instruments. Am I right?

suivipa
5th July 2014, 02:37 AM
This is another aspect of this master craftsmen.
we all will agree that his orchestration and use of Instruments and even chorus singer is at the highest level.
He is constantly finding newer sounds and experimenting with Kaala pramanam.
classic example is the "Three Note" he did for the Italian concert. He let SPB sing with limited breath (breathless) with mannil intha kaathal (one of my all time favorites) from Keladi kanmani.
The maya bazaar 1995 song with just chorus as progressive chords is un-imaginable from a layman's perspective.

The kannada song from geetha (kelade nimageega follows very tough and drastic interchanging musical notes) and this man does all of this in one song and effortlessly with the chorus yet again.

One primary reason we are all glued to his orchestration and find others work very plain and un-adorable is the fact that he embeds all of this ornamentation as a sound designer while writing his notation. He has been blessed with wonderful brain that imagines each and every aspect of the various sounding Instruments.

when it comes to pathos or melancholic songs he creates a lot of variations in his choice of Instruments and the way they are being played each time.

Guna, 1992 had very different sound designing that went hand in hand with his BGM and score
vetri Vizha , 1989 also has a very unique pattern that he uses to relate the Amnesia suffering of the protagonist and central character in the film.

HTNI- How to name it album is a classic example with several such sound designing of kaala pramanam between each notes being played by the violin and cellos.

In all we are a blessed lot of music listeners and let us enjoy this unlimited treasure from living genius.








@rajaramsgi
That was very educative. Thanks.

IR seems to have used trill (technique?) with various instruments. Am I right?

mappi
5th July 2014, 02:35 PM
What are the songs :

@1:30
@2:44
@4:08

please ?

rajaramsgi
5th July 2014, 08:25 PM
What are the songs :

please ?

maapi, here we go with links...

@1:30 -- Time, Niram Pirithu paarthen (http://tamiltunes.com/time.html)
@2:44 -- Deepam, Poovili Vaasalil yaaradi vandhadhu (http://www.palanikumar.com/filmsongdetails.phtml?filmid=212&songid=842)
@4:08 -- Thambi Pondaati, Un Ennam Enge inge (http://www.inbaminge.com/t/t/Thambi%20Pondadhy/Un%20Ennam%20Enge.eng.html)

rajsekar
9th July 2014, 08:17 PM
I just watched the quirky comedy hit film "Mundasupatti" which I am sure many of you would have enjoyed. It's been the biggest hit film in Tamil in 2014 and Fox Star studios had a dream run at the box office collection. The movie pales in comparison to mega budget production like Kochadaiyaan. The movie is set in 1982 period and all the background songs are naturally hits of Ilayaraaja. The Director has tried to play the right Raaja's song bits during important sequences. But the background score and songs was a let down. The MD, Sean Roldan has attempted to introduce new singers to render village based folk songs but the tunes are below average. If Ilayaraaja's song bits are played throughout the movie, why not just lift some of his best village songs and play it. Director Sasikumar brilliantly used the song sequence "Siru Ponmani" in "Subramaniapuram movie. I doubt if James Vasanthan could not have composed a better song than "Siru Ponmani" or any other MD. Those IR songs are etched in stone that no one can ever come closer to that melody. Now Director Ram and Fox Star have announced Mundasupatti-II with a new story line. I request Ram & Sean to just use Ilayaraaja's rural tunes for background score and perhaps some original IR album songs for his sequel film. This can spare Sean Roldan much effort to compose new songs which is anyway going to be mediocre. Why try to copy a legend's work when the legend himself is churning out hits? Mundasupatti-II can use some of the best songs from Bharathiraaja's films which were beautifully choreographed. Let's wait and watch.

Russellhaj
11th July 2014, 11:24 PM
சில வாரங்களுக்கு முன்னர், நண்பர் ஒருவர் என்னைச் சந்தித்தபோது, ராஜா சார் உங்களைப் பற்றி விசாரித்தார் என்று சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு மாமேதையின் நினைவில் நாம் இருக்கிறோமே என்ற பெருமிதம் அது.

சென்ற வாரம் மீண்டும் அதே நண்பர், கல்லூரியில் நிறைய விழாக்கள் நடத்துவது குறித்து ராஜா சார் உங்களைப் பாராட்டினார் என்று சொன்னார். இதெல்லாம் அவருக்கு எப்படி தெரிகிறது என்று வியந்து போனேன்.

மீண்டும் நேற்று அவரே என்னை ஒரு திருமண விழாவில் சந்தித்தபோது, இப்போதுதான் ராஜா சாரைப் பார்த்து விட்டு வருகிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று உங்களையும், உங்கள் அண்ணனையும் மிகவும் விசாரித்தார் என்றார்.

இதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை. (இசை) கடவுள் அழைக்கிறார். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று என் மீதே எனக்குக் கோபம் வந்தது. உடனே, ராஜா சாரிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன். மறுநாள்(இன்று) காலை பத்து மணிக்கு மேல் ரமணாஸ்ரமத்திற்கு வரச் சொன்னார்.

இன்று காலை, எங்கள் பிரியத்துக்குரிய சந்துரு தோழர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு, அங்கிருந்த படியே, ராஜா சாரைப் பார்க்கப் புறப்பட்டேன். என்னுடன் மண விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடனிடமும், ஜெயமோகனிடமும் விஷயத்தைச் சொல்லி, வருகிறீர்களா? எனக் கேட்டேன். மிகுந்த மகிழ்வுடன் அவர்களும் உடன் வர, சரியாக காலை பத்து மணிக்கு ஆஸ்ரமத்திற்குச் சென்றேன். வழக்கமாக, ராஜா சார் தங்கும் அதே எளிமையான ஒரு மாடி அறை.

என்னை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, உடன் நாஞ்சிலையும், ஜெயமோகனையும் பார்த்ததில் அளவில்லாத மகிழ்ச்சி. வாய் நிறையச் சிரிப்புடன், வாங்க கருணா! ரொம்ப நாளாச்சு சந்தித்து எனது கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றார். அப்போது சிலிர்த்துப் போன எனது உடலும், நெகிழ்ந்து போன எனது மனமும், சந்திப்பு முடிந்து வீட்டுக்கு வரும் வரையில் அப்படியே இருந்தது.

தனிமையையும், அமைதியையும் நாடி, பகவான் தரிசனத்திற்காக எங்கள் ஊருக்கு வருபவர் அவர். அவரே அழைக்கும் வரை, அவர் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ளக் கூடாது என எப்போதும் எட்டியே இருப்பேன். எப்போதேனும், எதிரில் தென்படும் அவரது காரைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுக் கொள்வதோடு சரி!

இசை, பாடல்கள், சினிமா, அரசியல் தவிர்த்து பல,பல விஷயங்களைத் தொட்டு அலசினார். உடன் ஜெயமோகன் வேறு. கேட்கவா வேண்டும்? ஒரு மணி நேரம் காதுக்கும், அறிவுக்கும் திகட்டாத தெள்ளமுது.

ஒரு மாமேதை, எனது பிள்ளைப் பிராயத்தையும், வாலிபப் பருவத்தையும் உடனிருந்து வளர்த்தெடுத்த இசை ஞானி, தமிழனின் ஒவ்வொரு வாழ்க்கைச் சூழலுக்கும் இசை வடிவம் வார்த்துத் தந்தவர், உலகின் மாபெரும் இசை மேதைகளில் ஒருவர், என்னுடன் ஒரு நண்பனைப் போல அத்தனை இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தார். கல்லூரியைச் சிறப்பாக வழிநடத்துவது குறித்து மனதாரப் பாராட்டினார். மேலும், என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளைச் சொன்னார்.

மூச்சுக்கு, மூச்சு 'கருணா' என எனது பெயர் சொல்லி அந்த மேதை அழைத்து உரையாடிய போது எனக்குத் தோன்றியது இதுதான்.

'என்ன தவம் செய்தனை?'



Sorry, Due to some reason, I cannot download the Beautiful picture of our one and only "Raja, Skp Karuna who wrote the post along with Mr. Jayamohan and Mr. Nanjil Naadan.


http://https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t31.0-8/p960x960/10534825_647185848698178_334359389598294764_o.jpg

Russellhaj
12th July 2014, 02:23 AM
இசைஞானியின் 1001வது திரை இசை படைப்பு.

இசைஞானியின் இந்தியத் திரைப்பட இசை வரலாற்றில் சரித்திரம் படைக்கும் 1001வது திரைப்படமாக நடிகர் அரவிந்த் ஸ்வாமி மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்க மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில், ஹர்ஷ் தவே தயாரிப்பில், வி.மணிகண்டன் ஒளிப்பதிவில் வித்யாசமான கதையமைப்பில் உருவாகிறது. ஒரே நேரத்தில் ஹிந்தி மற்றும் தமிழில் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தின் டீசர் முதன் முதலாக இசைஞானி ரசிகர்கள் உங்கள் பார்வைக்கு இதோ.

https://www.facebook.com/photo.php?v=1502586436626310&set=vb.1470573279827626&type=2&theater … …

SVN
12th July 2014, 10:18 AM
It's a remake of the Marathi blockbuster 'Kakasparsh'. Tisca Chopra of Taare Zamen Par plays the second female lead.

krish244
15th July 2014, 12:13 PM
IR records a song for Yuvan for the movie "Vai Raja Vai".

http://www.galatta.com/tamil/news/yuvan-records-with-his-dad/79801/

thanks,

Krishnan

Russellhaj
17th July 2014, 09:29 AM
காலையில் குடிக்கும் முதல் காபியே இளையராஜா இசை போல் இனிப்பது கொடுமை.
சர்க்கரையைக் குறைத்துப் போட்டால் இவள் அப்பன் சொத்தா குறைந்துவிடும்?

xyz...............:):)

Russellhaj
17th July 2014, 09:32 AM
"ஆஹாஹா ஆஹாஹா அரசன் சோப்பு..."
இரண்டாவது "ஆஹாஹா"வுக்கு ஆபோகியில் தளை தட்டுகிறது. ராஜாசார் கடவுள் என்று எவன் சொன்னான்?

xyz....................:):)

rajaramsgi
17th July 2014, 05:22 PM
சி

மூச்சுக்கு, மூச்சு 'கருணா' என எனது பெயர் சொல்லி அந்த மேதை அழைத்து உரையாடிய போது எனக்குத் தோன்றியது இதுதான்.


படிக்கிற நமக்கே புல்லரிக்குதே.. அப்போ ராஜா சாரை பார்க்க போனவங்களுக்கு?

அதுசரி, கருணா யார்? (நெசமாலும் தெரியாததால் கேட்கிறேன்)

Russellhaj
18th July 2014, 06:49 AM
]அதுசரி, கருணா யார்? (நெசமாலும் தெரியாததால் கேட்கிறேன்)[/FONT][/QUOTE]


I don't know him personally either. ( In that case, I don't know any one personally :) )
But, he is an Entrepreneur and Founder Chairman of SKP Engineering College & SKP Institute of Technology at Thiruvannamalai. I know that he is very active at various levels and participant in creative thinking and a Reader.

K
18th July 2014, 12:23 PM
https://www.youtube.com/watch?v=v9ZuUgob9GY

https://www.youtube.com/watch?v=JwvijH7HJvw

https://www.youtube.com/watch?v=_oYQsQ8IPFQ

Sashidharan BASS Guitarist in Raja sir's Team speaks

K
21st July 2014, 04:16 PM
http://tamil.oneindia.in/movies/news/ilayaraaja-ready-release-new-albums-but-206504.html

Raja Sir is ready to release new Musical albums.

rajaramsgi
23rd July 2014, 12:41 AM
http://tamil.oneindia.in/movies/news/ilayaraaja-ready-release-new-albums-but-206504.html

raja sir is ready to release new musical albums.

அது சரி, எங்க சார் cd கிடைக்குது? ஆடியோ ரிலீஸ் ஆகி சில சமயம் பல வாரங்கள், மாதங்கள் ஆகியும் cd கிடைப்பதில்லை. 20, 30 வருடங்களுக்கு முன்னர் ராஜா சார் கேசட் ரிலீஸ் என்று பேப்பரில் விளம்பரம் வந்த அன்றே கடைகளில் கிடைக்கும். இப்போது அப்படி இல்லை.

உலகெங்கும் உள்ள ரசிகர்களை ஒரு குடையின் கீழ் நீங்க கொண்டு வருவது இருக்கட்டும், நல்ல விஷயம் தான். அதை விட உலகெங்கும் உள்ள உங்கள் ரசிகர்களுக்கு உங்கள் படைப்புகளை உடனுக்குடன் சேர்பதற்கான வியாபார யுத்திகள் தான் இப்போது தேவை.




எங்கள் ஆசையெல்லாம்
உங்கள் படைப்புகள்...
எளிதில் கிடைக்க வேண்டும்
மலிவாய் கிடைக்க வேண்டும்.
விரைவாய் கிடைக்க வேண்டும்


அப்படி கிடைத்த பிறகு பிறகு நான் ஏன் பதிவிறக்கம் செய்ய போகிறேன்? காசு எனக்கு பிரச்சனை இல்லை. நீங்கள் இசை அமைத்துள்ளீர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக உப்பு சப்பில்லாத படங்களை எல்லாம் லீவ் போட்டு பார்த்தவன் நான்...

Russellhaj
23rd July 2014, 08:36 PM
என்கிட்ட கதை ஒண்ணு இருக்கு அதுக்கு ஒரு மெட்டுப்போடு பார்க்கலாம் என்று பஞ்சு அருணச்சலம் அந்த இளைஞனிடம் கூறியதுதான் தாமதம். மெட்டோடு சில வார்த்தைகளையும் சேர்த்து அவன் பாடவே தொடங்கி இருந்தான். தன்னத் தனனா... தனானானே......தன்னனானேனனனா... அன்னக்கிளி உன்னைதேடுதே......என்று அவன் உச்சரித்த பின்புதான் நாம் இன்று கட்டுண்டு கிடக்கும் இசைபெருவெளி மெல்ல விரியத்தொடங்கியது. அவன் உச்சரித்த வார்த்தையே அந்தப் படத்தின் பெயரும் ஆனது.


எவ்வளவு தேடல் நிறைந்தது தனது பயணம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளுமொரு வாய்ப்பாய் ராஜா சாருக்கு அமைந்து போனது அந்தப் பாடல்.

ஏக்கம் என்பது ஒரு உணர்வு அதை எப்படி இவ்வளவு சரியாய் ஒரு இசைக்குள் பதியம் போட முடியும் என்ற பிரமிப்பிலிருந்து அந்தப்பாடலைக் கேட்கும் யாராலும் மீள முடியாது. ஒரு மாதிரியான சந்தோசமான பாடல்தான் அது என்றாலும் அதற்குள் நிறைந்து கிடக்குமொரு வெறுமையும், நிலையாமையும் அலாதியானது. " நீ யாரென்று எனக்குத் தெரியாது, நீ எவ்வடிவமாய் இருப்பதையும் நானறியேன், ஆனால் நீதான் எனக்கு வேண்டும்"...


என்ற இலக்கற்ற ஆசையை ஒரு பெண் வெளிப்படுத்துகிறாள். அந்த நளினத்தை ஏந்திக் கொண்டு தத்தித் தத்திப் பயணிக்கிறது ராஜாவின் பேரிசை இந்தப் பாடலுக்குள். பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வெறுமனே அதைக் கடந்து சென்று விடாமல் சில இடங்களில் பலமாய் நம் மனதை பாடலோடு முடிச்சுப் போட்டுவிடுகிறார் ராஜா சார்....”மழைபெய்ஞ்சா.....” என்று ஜானகி அம்மாவின் குரல் நம்மை வாரி அணைத்து இழுத்து வைத்து உச்சிமுகர்ந்து கட்டியணைத்துக் கொண்டிருக்கும் போதே அதற்குப் பின்னால் உருளும் தபேலா மீண்டும் அழுத்தமின்றி நம்மைப் பாட்டுக்குள் கொண்டும் வந்து விடுகிறது. பாடலின் மூன்று சரணங்களிலும் அவர் இப்படியான மூன்று முடிச்சைப் போட்டு வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்...?

எப்படி யோசித்திருப்பான் இந்தக் கலைஞன்? ஒரு சூழலைச் சொன்னவுடன் எங்கிருந்து ஊற்றெடுக்கிறது அந்த மெட்டு என்பதெல்லாம் நம் கற்பனைகளுக்குள் எளிதாய் சிக்கிவிடாது. அழகு எப்போதும் ரசிக்கப்படவேண்டியது ஆராயப்படவேண்டியதல்ல அது போலத்தான் ராஜா சாரின் இசையும் அந்த முழுமையை உணரும் போது உள்ளுக்குள் பூ பூக்கத் தொடங்குகிறது. என் மண்ணிற்கு என்று ஒரு உணர்விருக்கிறது, ஒரு கலாச்சாரம் இருக்கிறது, ஆசைகள், அபிலாஷைகள், கோபங்கள், என்று எல்லாவற்றையும் இசையாய் சொல்ல வேண்டுமெனில் அவன் எல்லா உணர்வுகளுக்குள்ளும் தன்னை கரைத்துக் கொள்ளக் கூடியவனாய் இருக்கவேண்டும். ராஜா சார் வெறுமனே பாடலுக்கு மெட்டுப் போடும் கார்ப்பரேட் ரெடிமேட் மியூசிக் டைரக்டர் கிடையாது.....




அவர் ஒரு கதையைக் கேட்கும் பொழுதே அந்தக் கதைக்குள் வாழத் தொடங்கிவிடுகிறார். ஒவ்வொரு சூழலிலும் அந்த கதாபாத்திரத்தின் மனோநிலை என்ன? காட்சிச்சூழல் என்ன? இதற்கு எங்கிருந்து தொடங்கவேண்டும்? இப்படி கதைக்காய், சூழலுக்காய் நான் அமைக்கும் இசை என் பாடலைக் கேட்க வரும் ரசிகனுக்குள் எப்படி இருந்தால் சரியாய் போய் உட்கார்ந்து கொள்ளும்....என்றெல்லாம் அவர் ஆராய்கிறார்....பின் அந்த சிந்தனையில் ஊறி ஊறி மெளனிக்க அந்த மெளனம் அந்த பெரும் சூன்யமாய் மாறிப்போக அவருக்குள் மெட்டுக்கள் மெல்ல பூக்கத்தொடங்குகின்றன.




எந்த இசைக் கருவியைத் தட்டினால் மனித உடலில் என்ன மாற்றம் நிகழும் என்பதெல்லாம் ராஜா சாருக்கு அத்துப்படி. உங்களுக்கு எல்லாம் ஒன்று தெரியுமா தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் இன்றைக்கு மறைமுகமாய் ஆளுமை செய்து கொண்டிருப்பது ராஜா சாரின் இசை தான்! 1970 களுக்குப் பிறந்த பிள்ளைகள் அத்தனை பேரும் பாக்கியவான்கள்....அவர்களை எல்லாம் ராஜா சாரின் இசைதான் வளர்த்தெடுத்தது... உண்ணவும், உறங்கவும் அவரது பாடல்களே பெருமளவில் உதவின....!




இன்னும் சொல்லப்போனால் தமிழர் வாழ்வின் மனச் சிக்கல்களை அவரின் இசை சுமூகமாய்த் தீர்த்தும் வைத்திருக்கிறது. காதலைச் சொல்லவும் அவர் உதவி இருக்கிறார், திருமணம் செய்த பின்பு வாழ்க்கையை ரசித்து நகரவும் அவரது இசை உதவி இருக்கிறது, வெற்றியின் போதும் தோல்வியின் போதும் துரோகங்களின் போதும்...ராஜா சாரின் இசையே நமக்குத் துணை. ராஜா சாரின் மெட்டுக்கள் நிறைய கவிஞர்களை உருவாக்கியது, வளர்த்தெடுத்தது.. கவிஞர் வைரமுத்துவின் முற்பாதி சினிமா வாழ்கையில் வந்த பாடல்களை எல்லாம் எடுத்துப் பாருங்கள்...அத்தனையும் வைரமாய் ஜொலிக்கும். ராஜா சாரின் மெட்டுக்கள் கொடுத்த ரசனையில் விரிந்த தாமரைகள் அவை....




” ஓ... கொத்து மலரே...

அமுதம் கொட்டும் மலரே

இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று....” என்றெல்லாம் வைரமுத்து மெட்டுகளுக்காய் எழுதிய வார்த்தைகளின் வசீகர ஆளுமையும், ராஜா சாரின் இசையும் தோளோடு தோள் நின்று பாடலுக்கு வலுவூட்ட நமக்கு ஏற்பட்டதுதான் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்னும் பரவச அனுபவம்

வைரமுத்துவின் பிற்பாதி அதாவது ராஜா சாரை விட்டு அவர் நகர்ந்த பின்பு அவருக்கு வேண்டுமானால் தேசிய விருதுகள் கிடைத்திருக்கலாம்...ஆனால்....அவரது கவிதை வரிகள் அவ்வளவு ஆழமாய் தமிழர்களின் மனதில் விழுந்து விருட்சமாகாமல் மேற்கத்திய சப்தங்களுக்குள்ளும், பேரிறைச்சலுக்குள்லும் தன்னை முடக்கிக் கொண்டு வெற்று முனகலாய்த்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிறரின் இசை வைரமுத்துவின் கவிதை வரிகளைத் தின்று செரித்து ஏப்பம் விட்டு விட்டு வெறும் வாத்தியக் கூச்சலாய்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது...ஆனால் ராஜா சாரின் இசை அப்படியானது அல்ல அது தாயன்பு மிக்கது.




மண்டையைப் பிளக்கும் ஒரு உச்சி வெயிலில் காதில் ஹெட்போனோடு சென்னை அண்ணா சாலையின் ஒரு போக்குவரத்து நெரிசலுக்குள் நீங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வியர்வை சட்டையை நனைக்க இங்கும் அங்கும் நகரமுடியாத அளவு வாகனங்களும், வாகனங்களின் புகையும் உங்களை எரிச்சல் படுத்த வெகு கடுப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் ...




அந்த சூழலில்....உங்கள் ஸ்மார்ட் போனிலோ அல்லது எம்.பி3 ப்ளேயரிலோ ஹேராமின் இந்தப் பாடலை தட்டி விடுங்கள், பிறகு பாருங்கள் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று....




பாடல் ஆரம்பிக்கும் போதே ஒரு போதை கிறு கிறுவென்று உங்கள் தலைக்கேறும்...., அதிரடியான இசை உங்களைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டுபோய் ஒரு குளு குளு அறையில் கிடத்தி அந்த மயக்கும் பாடலை அஜய் சக்கரவர்த்தி பாடத் தொடங்குகையில் நீங்கள் பகுதி விழிப்பு நிலைக்குள் சென்றே விடுவீர்கள்...! உங்களின் எரிச்சலூட்டும் புறசூழல் ஒடுங்கிக் கொள்ள ஒரு ராட்சசனாய் ராஜா சாரின் இசை உங்களை ஆளும் அற்புதத் தருணம் அது. கிறக்கம் என்பது வேறு ஏக்கம் என்பது வேறு போன ’அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’ என்று ஒரு பெண்ணின் ஏக்கம் நிறைந்த உணர்வுகளைப் பரிமாறிய இசை.....




இப்போது இந்தப்பாடலில் மூலம் கிறக்கம் நிறைந்த ஒரு மனிதனின் காதலை, காமத்தை, மதுவின் போதையை, குளுமையான அந்த இரவின் வாளிப்பை நமக்குக் கொடுத்து ஒரு கதகதப்பையும் உருவாக்கி விடுகிறது. இப்போது சொல்லுங்கள்...




நம்மை ஆட்டிவிக்கும் ராஜாசாரின் இசை எத்தகையது....? ராஜா சார் யார் என்று....? வடஇந்தியச் சாயலைப் பிழிந்தெடுத்து அந்த சாயத்தில் ராஜா சார் நிகழ்த்தி இருக்கும் அந்த அதிசயத்தை நீங்கள் இப்போது வேண்டுமானலும் கேட்டுப்பாருங்களேன்....


மேலே நான் சொன்ன எல்லாம் உங்களுக்குள் நடக்கும்....




உயிர்களே...

உயிர்களே உயிர்களே உலகிலே

இன்பத்தை தேடி தேடி

கிரஹத்துக்கு வந்ததே......


தேவா சுப்பையா........

dochu
24th July 2014, 11:44 AM
http://tamil.oneindia.in/movies/news/ilayaraaja-ready-release-new-albums-but-206504.html

Once again, it shows IR is quite disconnected with realities. People surrounding him should stop feeding these absurd things. Several years ago, bunch of IR enthusiasts formed a website for IR and promoted his video speech against audio piracy. It looked ridiculous when most other musicians were silent and went about their way.

Piracy in audio, movies, softwares and all other things is something that has developed and co-existed along with development in technology.

It is really hard to get this to a complete stop. Even in remote streets of Caribbean islands, I have observed tons of DVD's of latest movies being sold illegally.

All we can do is minimize the piracy by offering very high quality music (5.1 etc) when the file size of each song goes about 60 MB. This will prevent casual pirates to abuse because it will eat up their bandwith. And if somebody really likes the music and wish to listen to higher quality will buy the original.

On top of all this, audio piracy is something the audio companies need to worry about because the musicians already sells the copyright to them to their profit. It is unnecessary to argue on behalf of them.

Rather than focusing on these issues, IR can help his fans by creating more and more indestructible music that will stand even beyond his time. He has accrued enough money and profit shouldn't be a goal at this point in his life.

rajaramsgi
26th July 2014, 12:28 PM
ஜூனியர் விகடன் (http://www.vikatan.com/new/magazine.php?mid=2)
/
30 Jul, 2014 (http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97192#)



துருவங்கள் இணைகின்றன!
கடந்த 27 வருடங்கள் கழித்து, இளையராஜா இனிய குரலால் வைரமுத்துவின் வைர வரிகளைப் பாடப்போகிறார். இந்த சந்தோஷ சம்பவம் 'இடம் பொருள் ஏவல்’ படத்துக்காக. யுவன்சங்கர் ராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடப்போகிறார். இந்தப் புண்ணியத்தை வாங்கிக் கட்டிக்கொண்டவர்கள், இயக்குநர் சீனு.ராமசாமி ப்ளஸ் தயாரிப்பாளர் லிங்குசாமி.

krish244
26th July 2014, 04:12 PM
Rajaramsgi, looks like the news is untrue. IR is singing a song in the movie, but not the one written by VM. He is singing the song written by actor Dhanush.

http://tamil.oneindia.in/movies/news/maestro-ilaiyaraaja-denies-rendering-vairamuthu-lyrics-207009.html

thanks,

Krishnan

Russellhaj
26th July 2014, 08:06 PM
இசைஞானியின் அன்பான ரசிகர்களே இன்று ஒரு வார பத்திரிகையில் இசைஞானி அவர்கள் சீனு ராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை யுவன் இசையில் பாடப்போவதாக செய்தி வந்திருக்கிறது இது முற்றிலும் தவறான தகவல் எந்த காலத்திலும் வைரமுத்து எழுதிய பாடலை பாடப்போவது கிடையாது. இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி தன் படத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்
இயக்குனர் சீனு ராமசாமி.

அதோடு கடந்த சில மாதங்களாக வைரமுத்து அவர்கள் எப்படியாவது இசைஞானியுடன் இணைந்து விட வேண்டும் என்று பல வழிகளிலும் முயற்சி செய்து வந்தார். பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் ”ராஜாவை எப்படியாவது சமாதானப்படுத்துங்கள் நானே பாடல்களை எழுதுகிறேன்.” என்று சொல்லி அனுப்ப . பாலாவும் இதை இசைஞானியிடம் தெரிவித்து அனுமதி கேட்க, ”தாராளமாக அவரை வைத்து பாட்டு எழுதிக்கோ நான் இசையமைக்க மாட்டேன்.” என்று கடுமையாக மறுத்து விட்டார்.

. இந்நிலையில்தான் யுவன் இசையில் வைரமுத்து எழுதிய பாடலை பாடபோவதாக ஒரு செய்தியை பரவவிட்டிருக்கிறார்கள் நேரடியாக கேட்டு ராஜா சார் மறுத்து விட்டதால் இப்படி கொல்லைப்புறத்தின் வழியாக நுழைய முற்சிக்கிறார் வைரமுத்து என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்துகிறேன். வெளியில் மேடைகளில் ’நான்தான் ராஜாவை ஒதுக்கி வைத்திருக்கிறேன்’ என்பதுபோல் காட்டிக்கொண்டு, உள்ளுக்குள் அவரோடு எப்படியாவது இணைந்து விடவேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறார் வைரமுத்து

அதே படத்தில் தனுஷ் எழுதிய ஒரு [பாடலை பாட வைப்பதற்காக தன் அப்பாவிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்துப்போயிருகிறார் இரண்டு மூன்று முறை யுவன் .”டாடி ஒரு விஷயம் கேட்கணும்” என்று கூறி அதை கேட்காமலே விட்டிருக்கிறார். காரணம் ராஜா சார் “என்ன யுவன்” என்று கேட் டாலே யுவனுக்கு வாயடத்துப்போய்விடும். அப்படியிருக்கும் போது வைரமுத்து எழுதிய பாடலை பாடுங்கள் என்று சொல்ல யுவனுக்கு எப்படி தைரியம் வரும்.

வாழ்க்கை கொடுத்தவருக்கு எதிராகவே பல ஆண்டுகாலம் நடந்துகொண்டிருக்கும் வைரமுத்து பாடலை ரஜா சார் பாடினார் என்று சொன்னால் நம்புவதற்கு இசைஞானி ரசிகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல

https://www.facebook.com/photo.php?fbid=836692399688283&set=gm.257162027807 056&type=1

Theni Kannan‎Isaignani Fans Club ( Official Group )

rajaramsgi
26th July 2014, 09:10 PM
இப்படி தான் சொல்லிக்கிட்டு திரியிறாய்ங்களா? ஏமாந்துட்டேனே, ஜூனியர் விகடனாச்சே, நெருப்பில்லாம புகையும்மான்னு நெனசுப்டேன்.. சாரி பார் த கண்பியுஷன்.

தெளிவுபடுத்திய உங்க ரெண்டு பேருக்கும் நன்றி பா..

Russellhaj
26th July 2014, 09:37 PM
ராஜா ஒரு " Hot cake " என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ராஜா என்ற ஒரு வார்த்தையே பல லக்ஷம் பெறும். அந்த ஒரு வார்த்தயே பல பேரை இழுக்க கூடியது. எதாவது ஒன்றை பற்றி எழுதிவிட்டு தலைப்பில் அவர் பேரை போட்டால் கூட போதும். எல்லோரும் வந்து படிப்பார்கள். இது தான் இன்று social media விலும் மற்ற இடங்களிலும் நடப்பது. அவருக்கு பணம் என்றுமே பெரிதாக இருந்தது இல்லை. மிகவும் மோசமான வியாபாரியும் , மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் குணமும் கொண்ட அவரின் பெயரால் நடக்கும் விசயங்கள் அவருக்கு தெரியுமா என்பதே கேள்விக்குறிதான் !!!!

தான் போட்ட இசைக்கு ராஜா சரியான படி பணம் வாங்கி இருந்தால் இன்று தமிழ் நாட்டையே வாங்கி இருப்பார் .....இதை சொன்னது A.R . ரஹ்மான்

Russellhaj
27th July 2014, 07:33 PM
"நாப்பது வருஷம்.. நான் இல்லேன்னு வச்சிக்கங்க.. எப்படி இருந்திருக்கும்?" என்ற செய்திக்கு வந்த ஒரு கமெண்ட்!


ஏ ஆர் ஏ. ஆர். ரகுமான்
ஏ ஆர் Reihana
achu ராஜாமணி
அனிருத் Ravichandar
Aruldev
பரத்வாஜ்
பென் Surenderan
சந்திரபோஸ் (இசையமைப்பாளர்)
கலோனியல் கசின்ஸ்
சி ஆர் Subburaman
டி இமான்
தேவா
தேவன் ஏகாம்பரம்
தேவி ஸ்ரீ பிரசாத்
தினா
Dharan
ஜி தேவராஜன்
ஜி ராமநாதன்
ஜி வி பிரகாஷ் குமார்
கங்கை Amaren
எம் Ghibran
ஹாரிஸ் ஜெயராஜ
ஜேம்ஸ் வசந்தன்
Jassie பரிசு
ஜோஸ்வா ஸ்ரீதர்
கார்த்திக் ராஜா
கே வி மஹாதேவன்
எம் எஸ் விஸ்வநாதன்
மகேஷ் Panjanathan
மணிசர்மா
Maragathamani
நிவாஸ் கே பிரசன்னா
பிரவின் மணி
பிரேம்ஜி லாஜிக்கையும் [1]
ரமணா Gogula
ஆர் பி பட்நாயக்
S.P.Balasubramanyam
S.A.Rajkumar
Sabesh முரளி
சங்கர் கணேஷ்
சந்தோஷ் நாராயணன் சி ஆர்
சத்ய
ஷங்கர், பாலை லோய்
சைமன்
Sharreth
Selvaganesh
எஸ்.கே. பாலசந்திரன்
ஸ்ரீகாந் தேவா
சுந்தர் சி பாபு
சுரேஷ் பீட்டர்ஸ்
டி கே ராமமூர்த்தி
டி ஆர் அப்பா
தமனின்
தாமஸ் ரத்னம் [2]
T.G.Lingappa
T.Olichandran
T.Rajendar
T.S.Muralidharan
Terika Terika மாமா
Thamodharan
Uthiriyan [3]
வித்யாசாகர்
விஜய் ஆண்டனி
V. குமார்
யுவன் ஷங்கர் ராஜா
Y.S.Julius சீசர்

இளையராஜா முன் வந்தவர் பின் வந்தவர் என்று பிரித்தால்

முன்வந்தவர் எல்லோரும் வயதானவர்கள்.

இளையராஜாவின் பின் வந்தவர்களில் எத்தனை பேர் இன்றுவரைக்கும் இந்த துறையில் தாக்கு பிடிக்க முடிந்தது

பலபேர் எங்குள்ளார்கள் என்றே தெரியவில்லை .

Raja ராஜா தான்
எத்தனை நயவஞ்சகம்
எத்தனை குழிதோண்டல்

அத்தனையும் உடைத்து மிளிர்கிறார் ராஜா
வாழ்க நீடுழி

- sanjai

krish244
28th July 2014, 11:43 AM
TOI says IR is indeed singing VM's lyrics and not Dhanush's lyrics. Not sure which news to believe!!

"...Talking about the development, the film's director Seenuramasamy says, "After 28 years, Raaja sir has agreed to sing the lyrics of Kaviperarasu. The last song which Ilaiyaraaja had sung with Vairamuthu's lyrics was apparently Adi Aathaadi from the 1986 film Kadalora Kavithaigal. When I requested Raaja sir, he agreed mainly because I'm also a devotee of Ramana Maharishi, whom he follows. I should also thank Yuvan for making this possible."

Some sections of the media had wrongly reported that Ilaiyaraaja will be singing a song written by Dhanush but the director clarifies that it will be Vairamuthu's lyrics that the Isaignani will be singing. "It will be an 'amma' song and Vairamuthu sir is still finalizing the lines. We will be recording the song soon," he adds...."

http://timesofindia.indiatimes.com/Entertainment/Tamil/Music/After-28-years-Ilaiyaraaja-to-sing-Vairamuthus-lyrics/articleshow/39124850.cms

"...ஆனால் இதனை இசைஞானி இளையராஜா கடுமையாக மறுத்துள்ளார். இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் என்ற அதிகாரப்பூர்வ இணைய தளப் பக்கத்தில் இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் இசையில் இடம் பொருள் ஏவல் படத்தில் இளையராஜா ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். அந்தப் பாடலை எழுதியிருப்பவர் நடிகர் தனுஷ். வேறு யார் எழுதிய வரிகளையும் அவர் பாடவில்லை. ரசிகர்கள் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்."

http://tamil.oneindia.in/movies/news/maestro-ilaiyaraaja-denies-rendering-vairamuthu-lyrics-207009.html

thanks,

Krishnan

krish244
28th July 2014, 07:56 PM
The below seems to be the latest on the yes / no situation:

"Over the last 3 days, there have been news reporting, Ilayaraja has said no/yes to croon a song for Vairamuthu's lyrics. We at Indiaglitz wants to clear the air and personally contacted director, Seenu Ramasamy to know the exact situation. The 'Thenmerku Paruvakaatru' director said that, Vairamuthu has penned 5 songs for the film and one of them is about mother's love. He expressed his wish to Yuvan by saying, this song would become more powerful if, Ilayaraja agrees to croon it....Yuvan is yet to compose tunes for all the 5 songs have taken the request from the director and passed the same to his dad. This is the recent news from the director itself. So, the snippets regarding the reunion of legendary composer and lyricist has got a comma as of now. The entire industry and music lovers will be happy if these two brilliant people come together once again. The ball is on Ilayaraja's court now..."

http://www.indiaglitz.com/ilayaraja-yet-to-decide-on-variamuthus-lyrics-tamil-news-111023

Mudiyala....

thanks,

Krishnan

njv
29th July 2014, 05:35 AM
Raja sir is surrounded by wrong people and motivating Raja sir to not join hands with VM again. The wordings from IFCG is an example for that. Even if Raja sir want to, people around him wont let this happen, so lets enjoy the 80s classics of Raja-VM for the rest of our lives.

venkkiram
29th July 2014, 08:02 AM
NJV,

I also felt the same until some years back. But later point of time, I see Raja personally tries to avoid VM as much as possible. VM on the other side, trying to take advantage of Raja's continuous silence and non-media friendly approach. Over the years, market also becoming dull for VM as ARR not involving much Tamil projects or ARR associating with other lyricists. So, VM needs a break badly to reassure his place. VM's close circles are ( KB, MR, BR etc) also not into active movie making. So, everything matters. You have to look at the other side of the coin. If Raja associates with VM, then VM will hold the mike everywhere and trying to exploit the media by projecting he is the savior of Raja's legacy back. And Raja does not want such. Raja-VM association is not something that brewing in recent years. The attempts by other common friends of them went in vain and that proves again and again Raja never ever wants to collaborate anymore with VM.

rajaramsgi
29th July 2014, 03:58 PM
கண்ணதாசனை போல் வைரமுத்து பெரிய கொம்பன் இல்லை.

ஆனால், வார்த்தைகளை சரியாய் பயன்படுத்துபவர். கெட்டிகாரர். கிடைத்தை தோணியில், எப்படியாவது கரை ஏறுபவர். அவர் எழுதிய புத்தகங்களை நான் படித்தது இல்லை. ஆனால் எழுதிய பாடல்களை கூர்ந்து கேட்டிருக்கின்றேன். அவை ஒவ்வொன்றும் முத்தானவை தான்.


ராஜா சாரின் இசை அமைத்த பாடல்களில் சோப்பு, சீப்பு, வழுக்கை தலை, மண்ணெண்ணெய் டப்பா என்றெல்லாம் வார்த்தைகள் வந்திருந்த நிலையில், அதே ராஜா சார் இசையில் வார்த்தை ஜாலங்களை அள்ளி தெளித்து பல நூறு பாடல்களை இன்னும் நம் மனதில் விதைத்த வைரமுத்து எந்த விதத்தில் தீண்டத்தகாதவராய் ஆகிவிட்டார்?


வைரமுத்துக்கு வாய் பெரிது. ஆனால் அது யாருக்கு தான் இல்லை? கங்கை அமரனுக்கு இல்லையா? வாலியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் அவருடைய பேச்சு சுவராசியமாய் இருந்தாலும், ராஜா சாரை பற்றி பேசும் பொது முகம் சுளிக்க வைத்ததே? உடன்பிறப்பே உளறும்போது, யார் பேசினால் என்ன?


ராஜ சார் இனிமேல் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. தனிமை தவத்தை கலைத்து, சகஜமாய் அறிவு தீனியூட்டும் நண்பர்கள் அமைத்து, தன் ரஜகததுதிபாடிகளை விலக்கிவைத்துவிட்டு, திறமைசாலிகளையும், புது வரவுகளையும், வெளி மாநிலத்து, வெளி நாட்டு இசை வல்லுனர்களுடனும் சேர்ந்து இசை விருந்து படைக்க வேண்டும் என்பதே என் ஆவல், அவருக்கான அறிவுரை அல்ல.

venkkiram
29th July 2014, 07:50 PM
பாடல் எழுதுவதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட வைரமுத்துவின் சொற்கட்டுமானங்கள் ராஜா அங்கிகரிக்கும் பாணியைவிட வேறுபட்டது. ஒத்துப் போவது கடினமான செயல்.

"ராஜா சார் இனிமேல் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை!" - இதை 20, 25ஆண்டுகளுக்கு முன்பு சொன்னாலும் பொருந்தும்.

Russellhaj
29th July 2014, 08:14 PM
இருவருமே சேரவில்லைதான் என்றாலும் என்ன இப்ப ???? ( எல்லோரும் மாத்தி யோசிக்கும் பொழுது நாம் கொஞ்சம் நேராக யோசிப்போமே) காலங்களும் மாறி காட்சிகளும் மாறிவிட்ட இந்த சூழ்நிலையில் இருவரும் இணைந்தாலும் பழைய "Spark" வருமா என்பது சந்தேகம்தான். இருவருமே அவரவர் fieldல் உச்சம் தொட்ட பின் இது ஒரு வேண்டாத வேலைதான். யாருக்கும் எதயும் நீருபிக்க வேண்டிய கட்டயாத்தில் இருவருமே இல்லை. அவர்கள் இருவருற்குள்ளும் நடந்தது இருவர் மட்டுமே அறிந்தது. வை மு இதை பற்றி வெளியில் பேசுவதும், ராஜா இதை முற்றிலும் தவிர்ப்பதும் ......ராஜா எவ்வளவு தூரம் மனதில் காயம் பட்டுள்ளார் என்பதை சொல்லும். ஒருவன், அடுத்தவன் மண்டையை உடைத்து அசிங்கம்மான மனதை புண் படுத்த கூடிய வார்த்தையும் சொல்லிவிட்டு, காலபோக்கில் உறவாட வந்தால் ....வெளியில் பட்ட காயம் ஆறி இருக்கலாம்...நாவினால் சுட்ட வடு. இருவரும் சேராமல் இருப்பதே ராஜாவுக்கு நல்லது. அது ஒரு அரசியல் தெரியாத மக்கு.

Russellhaj
29th July 2014, 10:06 PM
வை மூ, ராஜாவை விட நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர் என்று சொல்பவர்களுக்கு .ஆம், அது உண்மைதான். இல்லை என்றால் 6 முறை தேசிய விருது, எதாவது ஒரு இடத்தில் வந்து பேச வேண்டும் என்றால் " கள்ளிகாட்டு இதிகாசம்" 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனை .....

முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சக்கரை அள்ளி கொடுத்த
பொன் மாடம் எங்கே
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

இதை எழுதிய வாலிக்கு எத்தனை தேசிய விருது கிடைத்தது ???????

K
29th July 2014, 10:17 PM
வை மூ, ராஜாவை விட நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர் என்று சொல்பவர்களுக்கு .ஆம், அது உண்மைதான். இல்லை என்றால் 6 முறை தேசிய விருது, தினமும் கருணாநிதியுடன் காலை 5 மணிக்கு பேச்சு, எதாவது ஒரு இடத்தில் வந்து பேச வேண்டும் என்றால் " கள்ளிகாட்டு இதிகாசம்" 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனை .....

முன்னம் என் உள்ளத்தில்
முக்கனி சக்கரை அள்ளி கொடுத்த
பொன் மாடம் எங்கே
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

இதை எழுதிய வாலிக்கு எத்தனை தேசிய விருது கிடைத்தது ???????

that song was by Panju Arunachalam Sir.

Russellhaj
29th July 2014, 10:42 PM
1

Enna Uravo

T. M. Soundararajan

Vaali

04:57



2

Ennai Maranththen

P. Susheela

Kannadasan

03:16



3

Kattru Vaanga

T. M. Soundararajan

Vaali

04:19



4

Pallavan Pallavi

T. M. Soundararajan

03:48



5
TMS and P.susheela

Ponnezhil Pootadu

vaali

Seerkazhi Govindarajan, P. Susheela

06:14
paavalar paarathi daasan


This is one I Got it from wikki.......If it is not by Vaali .I am sorry

any way how about this ??


மழை துளி விழ விழ முத்து விளையும்
பனித் துளி விழ விழ மொட்டு மலரும்
தேன் துளி விழ விழ இதழ் திறக்கும்
உண்ண உண்ண என்னனவோ இன்பம் பிறக்கும் !!!!!

மது கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புது புது கதைகளில் துயில் மறக்கும்.........என்ன ஒரு அழகான பாடல் !

Russellhaj
30th July 2014, 04:48 AM
திரு. சீனு ராமசாமி,
.
நட்பு பாராட்டுவதும், பகைமை பேணுவதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. நண்பர்களாக இருந்த இருவர், திடீரென்று பிரிந்து போனால், அவர்களில் யாராவது ஒருவர் கேட்டுக் கொண்டால் ஒழிய, அவர்களுக்கு இடையே பஞ்சாயத்து செய்ய மூக்கை நுழைப்பது அநாகரிகம்.
.
தன்னுடைய நண்பர் யார், பகைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டு. என்ன பிரச்சனை என்ன பிரச்சனை என்று தோண்டித் துருவி, அந்த privacy க்கு உள்ளே நுழைய முற்படுவது ஒரு விதமான வன்முறை.
.
இதே திரையுலகில், தம்பதி சமேதராக இருந்து, பிறகு பிரிந்து, பின்னர் தனித்தனியாக ஜொலித்தவர்கள் இருக்கிறார்கள். திரையுலகின் நன்மைக்காக என்று கருதி, அவர்களின் அந்தரங்கத்துக்கு இடையே புகுந்து அவர்களைச் சேர்த்து வைக்க முயற்சி செய்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் நீங்கள் செய்து கொண்டிருப்பது.
.
தனக்குப் பிடித்தமில்லாதவர்களின் அண்மை வேண்டாம் என்று எல்லாவற்றிலுமிருந்து ஒதுங்கி இருப்பவரை, மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்து, எரிச்சலூட்டி, அவரிடம் இருந்து கோபமான பதில்களை வரவழைப்பதன் மூலம்,. (அவரைச் சுற்றியிருக்கும்) அனைவரும் தமிழ்நாட்டு மக்களின் அமைதிக்காகப் பாடுபடுபவர்கள் போலவும், அவர் மட்டும் சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துவராத கொடுங்கோலர் போலவும் கட்டமைக்கிற கேவலம் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
.

இவர்கள் இருவரும் இணைவதென்பது இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை அல்ல. அந்தப் பிரச்சனை தீராவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் அடுத்த வேளை சோறு சாப்பிடமாட்டார்கள் என்பதுமில்லை. அதற்கான தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது என்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள்.
.
இந்த நட்பு பாலம் கட்டுகிற வேலைக்கும், உங்கள் படத்தின் வணிகத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா என்ற கேள்விகளுக்குள் நான் போக விரும்பவில்லை. அதற்கான தரவுகளும் என்னிடம் கிடையாது. அவர் தனக்குக் கிடைக்கிற சின்னச் சின்ன வாய்ப்புகள் மூலம் தன் ரசிகர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார். அதிலே கோடிக்கணக்கிலான வருமானச் சாத்தியங்கள் எல்லாம் இல்லை. அந்தப் படங்கள் எல்லாம் பல நேரங்களில் ரிலீஸ் ஆவது கூட இல்லை. மிகச் சிறிய வட்டம் இது. Do not disturb, please.
.
ஒருவேளை, நீங்கள் இதே போல, ஏஆர்.ரகுமானைப் பாட அழைத்து & 'தல' வில்லன் ரோலில் நடிக்கக் கூப்பிட்டு, அவர்கள் இருவரும் அதை ( நியாயமான காரணங்களுக்காகப்) பணிவுடன் மறுத்து, அதற்காக நீங்கள் கோபம் கொண்டு பாரதி வரிகளை எல்லாம் மேற்கோள் காட்டி பப்ளிக்காகக் கொந்தளிக்க, இதன் காரணமாக ஏ.ஆர்.ஆர். ரகுமான் / 'தல' ரசிகர்கள் உங்கள் மீது கோபப் பட்டால், என்னாகும் என்ற கவலையுடன்
.

ஒரு இளையராஜா ரசிகன்.

krish244
31st July 2014, 12:17 PM
IR is singing a song written by Dhanush for the movie Vai Raja Vai with music by Yuvan. Rest of the songs for the movie will be written by Madhan Karky !!

http://www.indiaglitz.com/move-your-body-sings-ilayaraja-writes-dhanush-tamil-news-111152

thanks,

Krishnan

rajaramsgi
2nd August 2014, 01:27 PM
இதய சாக்கடை சுத்தமாக படியுங்கள் - புத்தக திருவிழாவில் இளையராஜா பேச்சு!
http://cinema.dinamalar.com/tamil-news/20647/cinema/Kollywood/To-clean-the-dirty-heart-please-read-books-says-Ilayaraja.htm

rajaramsgi
2nd August 2014, 02:38 PM
பைபிளையும், திருக்குறளையும் இன்னும் எத்தனை ஆண்டுகள் பேசினாலும் புது புது அர்த்தங்கள் தோன்றுகிறதோ, அது போல் இன்னும் எத்தனை ஆயிரம் மனிதர்கள் ராஜா சாரை பற்றி சிலாகித்தும், அவர் இசை குறிப்புகளை பற்றி ஆராய்ந்தும் விளக்க உரை கொடுக்க போகிறார்களோ?


நான் இசை தெரிந்தவன் அல்ல, ஒரு ரசிகன் மட்டுமே. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பதிவில், அதை உருவாக்கிய நண்பர் சொல்வது போல் call & response என்கிற கான்செப்ட் இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் அதை அவர் சொன்ன விதம் அழகு.

https://www.youtube.com/watch?v=XHWZ2MwZE08

Russellhaj
6th August 2014, 09:08 AM
https://www.youtube.com/watch?v=9OMaOER6X30



என்ன ஒரு அருமையான பேச்சு !! ராஜாவின் பேச்சுக்கு முன்னால் சில நிமிடங்கள் ரெகார்ட் ஆகவில்லை. Please bare with this !!

rajaramsgi
6th August 2014, 10:31 PM
என்ன ஒரு அருமையான பேச்சு !! ராஜாவின் பேச்சுக்கு முன்னால் சில நிமிடங்கள் ரெகார்ட் ஆகவில்லை. Please bare with this !!

நன்றி போயம்.


ராஜா சார் இது போன்ற நிகழ்சிகளில் கலந்து கொள்வது நல்ல விஷயம். இதெல்லாம் நமக்கு பொழுது போக்காக இருந்தாலும், அவருக்கு அறிவு தீனி ஊட்டுபவை. இது நாள் வரையில், தனக்கு தானே போட்டு கொண்ட வேலியில் அவருக்கான ஸ்ட்ரெஸ் ரெலீவிங் இசையை தவிர வேறொன்றும் இல்லை, அதனால் அப்படி பேசுவதும், மற்றவர் பேசுவதை கேட்பதும் அவருக்கு நல்லது தான். கமல் கூட தன அருகில் இது போன்ற ஒரு அறிவு ஜீவிகளை வைத்திருப்பார். (கு.ஞானசம்பந்தன், மறைந்த சுஜாதா, மதன் போன்றோர்) செலிப்ரிட்யாய் இருப்பதால், மண்டை சூட்டை தணிக்க அது எவ்வளவு முக்கியம் என்பது அவருக்கு தான் தெரியும்.


மலேசிய நச்சத்திர விழா மேடையில், ஒரு முறை ரஜினியை ஒரு ஸ்டைல் பண்ணி காட்டுங்க என்று ஒரு ரசிகர் சொல்ல, மிகவும் நொந்து போய், வேற ஏதாவது கேளுங்க, அது சினிமா இது வேற என்று கடுகடுத்தார். இதற்க்கு எதிர் மாறாய், ராஜா சாரை இந்த புத்தக விழாவில் பாடுங்கள் என்று சொன்ன போது ரெண்டு மூன்று பாடல்களை பாடியது பெரிய விஷயம். (இருந்தாலும் ரசிகர்கள் இதை தவிர்த்திருக்கலாம்)

Russellhaj
8th August 2014, 01:40 AM
ராஜா&குழு கச்சேரி 4 ஸ்ரீரங்க கோபுரதிருப்பணி



https://pbs.twimg.com/media/BuGMQ9rCAAAsISS.jpg:large

Russellhaj
8th August 2014, 01:43 AM
// ராஜா சாரை இந்த புத்தக விழாவில் பாடுங்கள் என்று சொன்ன போது ரெண்டு மூன்று பாடல்களை பாடியது பெரிய விஷயம். (இருந்தாலும் ரசிகர்கள் இதை தவிர்த்திருக்கலாம்)//

Yes, I totally agree with you, We have a long way to go..............................:D:D

rajaramsgi
8th August 2014, 04:42 PM
ராஜா&குழு கச்சேரி 4 ஸ்ரீரங்க கோபுரதிருப்பணி
https://pbs.twimg.com/media/BuGMQ9rCAAAsISS.jpg:large

ஆஹா... மலரும் நினைவுகள். 1983ல் நடந்த நிதி திரட்டு விழா நினைவில் இல்லை என்றாலும்,
1987ல் , +1 படிக்கும் போது ஸ்ரீ ரங்கம் கும்பாபிஷேகம் நடந்தது. பழைய கரூர் ரோட்டில் ஒரு தனியார் விடுதியில் தங்கி கொண்டு, நான் தெப்பகுளம் பிஷப் ஹீபரில் படித்துகொண்டிருந்தேன்.

விழாவை முன்னிட்டு ராஜா சார் கச்சேரி என்று விளம்பர படுத்தி இருந்ததால், மதத்தின் பால் அவ்வளவு நம்பிக்கை இல்லை என்றாலும், ராஜா சார் மீதிருந்த பற்றுதலால் அவரை பார்க்க இரவு கச்சேரிக்கு நானும் சில நண்பர்களும் காவேரி பாலத்தின் வழியாய் நடந்தே சென்று விட்டோம். கங்கை அமரன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், கடைசி வரை மேடையில் ராஜா சாரை பார்க்க முடிய வில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினாலும், மறுநாள் காலைஎப்படியும் அவரை பார்த்து விடலாம் என்று நினைத்து ஸ்ரீரங்கம் சென்ற நாங்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரை பார்த்தோம், கோபுர கலச நீர் துளி என் தலையிலும் விழுந்தது. இந்த புண்ணியம் ராஜா சாரையே சேரும், அவர் இல்லை என்றால் நிச்சயம் நான் ஸ்ரீரங்கம் போயிருக்கமாட்டேன். என்னை போல் எத்தனை ஆயிரம் பேர் அவருக்காக ஸ்ரீரங்கம் வந்தார்களோ..

ஸ்ரீரங்கம் விழா முடிந்த சில மாதங்களிலேயே , மறுபடியும் திருச்சி கண்டோன்மெண்டில் ஒரு கச்சேரி நடந்தது. சினி மியுசசியன்ஸ் அசோசியஷன் கட்டிட நிதிக்காக எல்லா இசை அமைப்பாளர்களும் பாடகர்களும் வந்திருந்த கச்சேரி அது (யேசுதாஸ் மட்டும் வரவில்லை). நிகழ்ச்சிக்கு என் தம்பி மற்றும் நண்பர் ஒருவருடன் சென்ற போது தான் எனக்கு முதன் முதலில் ராஜா சார் தரிசனம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியையும் கங்கை அமரன் தான் தொகுத்து வழங்கினார்.


நிகழ்சியில் ராஜா சார் அதிகம் பாடவோ பேசவோ இல்லை. இப்போது போல் அப்போதும் வெள்ளை உடையில், தோளின் இருபுறமும் சால்வை மடித்து போட்டிருந்தார். TMS உடன் அதிகம் பேசி கொண்டிருந்தார். தென் பாண்டி சீமையிலே பாடலும், இறுதியில் எல்லோரும் சேர்ந்து பாடிய மெட்லி பாடல்களில் துப்பாக்கி கையிலெடுத்து பாடலை பாடியதும் , MSV யின் எங்கே நிம்மதி பாடலில் வரும் ஆண்கள் கோரஸில் ராஜா சாரும் சேர்ந்து பாடியது எல்லாம் இப்போது நினைத்தாலும் கண் கலங்கும்.

10th, 11th 12th படித்த அந்த காலகட்டங்களில்(1985 - 1988) ராஜா சார் இசை அமைத்து வெளிவந்த அத்தனை படங்களையும் மாரிஸ், சோனா மீனா, ரம்பா ஊர்வசி, ஸ்டார், கலையரங்கம், காவேரி திரை அரங்குகளில் பார்த்த சுகம் இன்று வரை வேறெங்கும் கிடைத்ததில்லை. அப்போது பார்த்த படங்களையும், கேட்ட பாடல்களையும் பட்டியலிட்டால், படிக்க யாருக்கும் நேரமிருக்காது.

ராஜா சாரை என் ஆழ் மனதில் பதித்த இலங்கை மற்றும் விவித்பாரதி ரேடியோவும், பக்கத்துக்கு அறையில் தங்கி இருந்த ஒரு ஆசிரியரின் டேப் ரிக்கார்டரும், டி கடையில் ஓசியில் படித்த தினதந்தியில் ராஜா சார் வேலை செய்த திரைபட விளம்பரங்கள், செய்திகள் மற்றும் தேவி வார இதழில் ராஜா சார் பற்றிய வாழ்கை கதை - எதுவும் மறக்கவில்லை.

அன்று போல் இன்றும் ராஜா சார் பற்றிய பக்தியும் அவர் மீது கொண்டுள்ள பற்றும் குறையவில்லை. அவரை யாரேனும் குறை சொன்னால் எதிரியாய் தெரிகிறார்கள். நான் வளர்ந்தும் பக்குவ படாததால், மல்லுக்கு நிற்க தோன்றுகிறது.

ஒரு 30 வயது குறைந்து போய் மறுபடியும் டீன் பருவத்தில் காலடி வைத்து திருச்சி வீதிகளில் அலைந்து திரிந்து ராஜா சாரின் படங்களை இரண்டாவது ஆட்டம் பார்த்து விட்டு, இருட்டு கடைகளில் பரோட்டா சால்னா சாப்பிட ஆசையாய் இருக்கிறது..

Russellhaj
9th August 2014, 08:13 AM
Very emotional write up and a heart touching one too !!

//அன்று போல் இன்றும் ராஜா சார் பற்றிய பக்தியும் அவர் மீது கொண்டுள்ள பற்றும் குறையவில்லை. அவரை யாரேனும் குறை சொன்னால் எதிரியாய் தெரிகிறார்கள்// :):) I have been there always to defend him just like you !! I am just a fan like any one else.:):)

Russellhaj
9th August 2014, 08:14 AM
இசைஞானி அவரின் குலதெய்வ கோயிலில் - இரு நாட்கள் முன் !



https://pbs.twimg.com/media/BtOE3-xCAAA76jw.jpg

jmahesh
9th August 2014, 09:28 AM
ஆஹா... மலரும் நினைவுகள். 1983ல் நடந்த நிதி திரட்டு விழா நினைவில் இல்லை என்றாலும்,
1987ல் , +1 படிக்கும் போது ஸ்ரீ ரங்கம் கும்பாபிஷேகம் நடந்தது. பழைய கரூர் ரோட்டில் ஒரு தனியார் விடுதியில் தங்கி கொண்டு, நான் தெப்பகுளம் பிஷப் ஹீபரில் படித்துகொண்டிருந்தேன்.

விழாவை முன்னிட்டு ராஜா சார் கச்சேரி என்று விளம்பர படுத்தி இருந்ததால், மதத்தின் பால் அவ்வளவு நம்பிக்கை இல்லை என்றாலும், ராஜா சார் மீதிருந்த பற்றுதலால் அவரை பார்க்க இரவு கச்சேரிக்கு நானும் சில நண்பர்களும் காவேரி பாலத்தின் வழியாய் நடந்தே சென்று விட்டோம். கங்கை அமரன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், கடைசி வரை மேடையில் ராஜா சாரை பார்க்க முடிய வில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினாலும், மறுநாள் காலைஎப்படியும் அவரை பார்த்து விடலாம் என்று நினைத்து ஸ்ரீரங்கம் சென்ற நாங்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரை பார்த்தோம், கோபுர கலச நீர் துளி என் தலையிலும் விழுந்தது. இந்த புண்ணியம் ராஜா சாரையே சேரும், அவர் இல்லை என்றால் நிச்சயம் நான் ஸ்ரீரங்கம் போயிருக்கமாட்டேன். என்னை போல் எத்தனை ஆயிரம் பேர் அவருக்காக ஸ்ரீரங்கம் வந்தார்களோ..

ஸ்ரீரங்கம் விழா முடிந்த சில மாதங்களிலேயே , மறுபடியும் திருச்சி கண்டோன்மெண்டில் ஒரு கச்சேரி நடந்தது. சினி மியுசசியன்ஸ் அசோசியஷன் கட்டிட நிதிக்காக எல்லா இசை அமைப்பாளர்களும் பாடகர்களும் வந்திருந்த கச்சேரி அது (யேசுதாஸ் மட்டும் வரவில்லை). நிகழ்ச்சிக்கு என் தம்பி மற்றும் நண்பர் ஒருவருடன் சென்ற போது தான் எனக்கு முதன் முதலில் ராஜா சார் தரிசனம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியையும் கங்கை அமரன் தான் தொகுத்து வழங்கினார்.


நிகழ்சியில் ராஜா சார் அதிகம் பாடவோ பேசவோ இல்லை. இப்போது போல் அப்போதும் வெள்ளை உடையில், தோளின் இருபுறமும் சால்வை மடித்து போட்டிருந்தார். TMS உடன் அதிகம் பேசி கொண்டிருந்தார். தென் பாண்டி சீமையிலே பாடலும், இறுதியில் எல்லோரும் சேர்ந்து பாடிய மெட்லி பாடல்களில் துப்பாக்கி கையிலெடுத்து பாடலை பாடியதும் , MSV யின் எங்கே நிம்மதி பாடலில் வரும் ஆண்கள் கோரஸில் ராஜா சாரும் சேர்ந்து பாடியது எல்லாம் இப்போது நினைத்தாலும் கண் கலங்கும்.

10th, 11th 12th படித்த அந்த காலகட்டங்களில்(1985 - 1988) ராஜா சார் இசை அமைத்து வெளிவந்த அத்தனை படங்களையும் மாரிஸ், சோனா மீனா, ரம்பா ஊர்வசி, ஸ்டார், கலையரங்கம், காவேரி திரை அரங்குகளில் பார்த்த சுகம் இன்று வரை வேறெங்கும் கிடைத்ததில்லை. அப்போது பார்த்த படங்களையும், கேட்ட பாடல்களையும் பட்டியலிட்டால், படிக்க யாருக்கும் நேரமிருக்காது.

ராஜா சாரை என் ஆழ் மனதில் பதித்த இலங்கை மற்றும் விவித்பாரதி ரேடியோவும், பக்கத்துக்கு அறையில் தங்கி இருந்த ஒரு ஆசிரியரின் டேப் ரிக்கார்டரும், டி கடையில் ஓசியில் படித்த தினதந்தியில் ராஜா சார் வேலை செய்த திரைபட விளம்பரங்கள், செய்திகள் மற்றும் தேவி வார இதழில் ராஜா சார் பற்றிய வாழ்கை கதை - எதுவும் மறக்கவில்லை.

அன்று போல் இன்றும் ராஜா சார் பற்றிய பக்தியும் அவர் மீது கொண்டுள்ள பற்றும் குறையவில்லை. அவரை யாரேனும் குறை சொன்னால் எதிரியாய் தெரிகிறார்கள். நான் வளர்ந்தும் பக்குவ படாததால், மல்லுக்கு நிற்க தோன்றுகிறது.

ஒரு 30 வயது குறைந்து போய் மறுபடியும் டீன் பருவத்தில் காலடி வைத்து திருச்சி வீதிகளில் அலைந்து திரிந்து ராஜா சாரின் படங்களை இரண்டாவது ஆட்டம் பார்த்து விட்டு, இருட்டு கடைகளில் பரோட்டா சால்னா சாப்பிட ஆசையாய் இருக்கிறது..
rajaramsgi, Cant agree with you more. I studied in Campion,Trichy and was in the hostel from 6th to + 2 , from 1980 to 1988. My parents used to come once a month to see us and during each of this visits we would go to at least 3 movies during a weekend and more than 90% of these movies had IRs music. I had a sanyo pocket radio and used to listen to his songs with earphone keeping it under the pillow ( as the school was very strict).My memory of these movies some of them completely forgotten now is mainly due to his music.I even remember in which of these theatres i saw each movie , e.g. Mina - poove poochoodava , sona - payanangal mudivathillai etc. Ungal list il kohinoor , sippy vittuteengalae. Sippyil mostly english movies played but movies like my dear kuttichaathaan , manithanin marupakkam also released. We used to be so disappointed if we did not get tickets for a movie we wanted to watch. I also remember very well how we used to go around burma bazaar for audio cassettes( they used to have 3- 4 movies songs in a single cassette for 20 Rs) surprisingly the audio quality was good.Sometimes when I feel low i really wish , i could go back to those kavalai illaadha days, watch movies and eat in Guru , kanchana or kavitha ( around trichy bus stand)I was also in London until last year , moved to chennai now.

rajaramsgi
9th August 2014, 01:53 PM
மகேஷ்,

கோஹிநூரையும், சிப்பியையும், சில பல சம்பவங்களையும் நினைவு படுத்தி என்னை பாடாக படுத்தி விட்டீர்கள்.

மை டியர் மார்த்தாண்டன் தஞ்சை ராணி பாரடைசில்.. (அப்போது தஞ்சை புனித அந்தோனியாரில் பள்ளி படிப்பு.)

கோஹிநூரில் ஏதோ கொலை நடந்து விட்டது என்று யாரோ ஊத்தி போட அந்த பக்கமே போவதில்லை நான் :-) அங்கு ரிலீசான ராஜா சார் படங்களை எல்லாம் அப்போதே திருட்டு vcrல் நல்ல பிரிண்டில் பார்ப்பது வழக்கம் :-)

சிப்பியில் உங்களை போன்றே நானும் மனிதனின் மறுப்பக்கம் பார்த்தேன். ஜப்பானில் கல்யாணராமன் கூட அங்கு தான். மெயின் கார்ட் கேட் போய், அங்கிருந்து சிப்பி அரங்குக்கு மாரிஸ் பெரிய பாலம் மற்றும் தில்லை நகர் ரோடு வழியாக செல்லாமல் குறுக்கே ரயில்வே ட்ராக் தாண்டி போவது வழக்கம். சிப்பில் மட்டும் தான் அப்போது ஒழுங்காக படம் முடியும் வரை a/c போடுவார்கள்.

கால் நடையாகவே சிந்தாமணியிலிருந்து மார்கட் வழியாய் சோனா மீனா நடந்து சென்று பூவே பூச்சூடவா பார்த்ததை மட்டுமில்லாமல் உடன் வந்த நண்பர்களையும் நினைக்க வைத்துவிட்டீர்கள். முதல் மரியாதை மாரிஸ் திரை அரங்கில் முதல் நாள் முதல் ஆட்டமும், அதே நாள் மதியம் உயந்த உள்ளம் காவேரியில் பார்த்து விட்டு வந்து ஹாஸ்டல் வார்டனிடம் வாங்கி கட்டி கொண்டேனே..

காசட் வாங்கியது.. ஐயோ. தினத்தந்தியில் காசட் ரிலீஸ் என்று போட்டதும் அன்றே சிங்காரதோப்பு சென்று காசட் வாங்கிய நாட்களை என்ன சொல்ல? தேவை இல்லாமல் என் எண்ண அலைகளை தூண்டி விட்டு விட்டீர்கள். எங்கெங்கு சென்றாலும் ஏதோவது ஒரு மூலையிலிருந்து அப்போதெல்லாம் ராஜா சாரின் பாடல்கள் ஒழித்து கொண்டே இருக்கும். சிந்தாமணி பஸ் ஸ்டாண்டில், கிளாஸ் கட் அடித்து விட்டு மெல்ல திறந்தது கதவு பாடல்களை கேட்டு கொண்டே முதல் முறை அடித்த திருட்டு தம், ஆஹா....

ஹவ் டு நேம் இட், நத்திங் பட் வின்ட் எல்லாம் இந்த கால கட்டத்தில் தான் வந்தது. இன்று வெளியீடு என்று வந்த பேப்பர் விளம்பரங்கள் எல்லாம் ஊரில் பத்திரமாக வைத்திருக்கிறேன்

வேதம் புதிது அப்போது ரிலீஸ் டயம் . எம்.ஜி.ஆர் இறந்து விட்டதால் ரெண்டு மூன்று நாட்கள் தள்ளி மாரிசில் ரிலீஸ் செய்தார்கள். படத்தை பற்றி ஏக பில்ட் அப் . வைரமுத்துவால் பிரச்சனை ஏற்பட்டு பாரதிராஜாவும் ராஜா சாரும் பிரிந்து எல்லா தினசரி வார இதழ்களிலும் அசிங்க படுத்தி கொண்டார்கள். ராஜா சார் இசை இல்லை என்பதால் படம் பார்க்க விருப்பமே இல்லை.. ஆனால், எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலம் பற்றி தமிழ் நாடு அரசு செய்தி சுருள் வழியாய் வெளியிட்டிருந்தார்கள். வைரமுத்து எழுதி, பாரதிராஜா படம் பண்ணி ராஜா சார் இசை அமைத்து பாடி வெளியிடப்பட்ட அந்த செய்தி சுருள் வேதம் புதிதுக்கு முன்னர் காட்ட பட்டதால் தினந்தோறும் சென்றேன் பார்க்க. நான் பார்க்க கூடாது என்று நினைத்த வேதம் புதிது இதனால் பலமுறை பார்க்க நேரிட்டது.

என் சொந்த கதைகளை உங்களிடம் அளந்து விட்டதால். மன்னிக்கவும் . இப்போதெல்லாம் என் மனைவியிடம் ராஜா சார் பற்றி பேசினாலே டார்ச்சர் பண்ணாதீர்கள் என்று காதை மூடி கொள்கிறார். அதான் கொஞ்சம் எல்லை மீறி விட்டேன். எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டால் ராஜா சார், ராஜா சார் என்று சட்டை பியித்து கொண்டு அலைவேணாம், மனைவி சொல்கிறார்.

jmahesh
10th August 2014, 09:39 PM
மகேஷ்,

கோஹிநூரையும், சிப்பியையும், சில பல சம்பவங்களையும் நினைவு படுத்தி என்னை பாடாக படுத்தி விட்டீர்கள்.

மை டியர் மார்த்தாண்டன் தஞ்சை ராணி பாரடைசில்.. (அப்போது தஞ்சை புனித அந்தோனியாரில் பள்ளி படிப்பு.)

கோஹிநூரில் ஏதோ கொலை நடந்து விட்டது என்று யாரோ ஊத்தி போட அந்த பக்கமே போவதில்லை நான் :-) அங்கு ரிலீசான ராஜா சார் படங்களை எல்லாம் அப்போதே திருட்டு vcrல் நல்ல பிரிண்டில் பார்ப்பது வழக்கம் :-)

சிப்பியில் உங்களை போன்றே நானும் மனிதனின் மறுப்பக்கம் பார்த்தேன். ஜப்பானில் கல்யாணராமன் கூட அங்கு தான். மெயின் கார்ட் கேட் போய், அங்கிருந்து சிப்பி அரங்குக்கு மாரிஸ் பெரிய பாலம் மற்றும் தில்லை நகர் ரோடு வழியாக செல்லாமல் குறுக்கே ரயில்வே ட்ராக் தாண்டி போவது வழக்கம். சிப்பில் மட்டும் தான் அப்போது ஒழுங்காக படம் முடியும் வரை a/c போடுவார்கள்.

கால் நடையாகவே சிந்தாமணியிலிருந்து மார்கட் வழியாய் சோனா மீனா நடந்து சென்று பூவே பூச்சூடவா பார்த்ததை மட்டுமில்லாமல் உடன் வந்த நண்பர்களையும் நினைக்க வைத்துவிட்டீர்கள். முதல் மரியாதை மாரிஸ் திரை அரங்கில் முதல் நாள் முதல் ஆட்டமும், அதே நாள் மதியம் உயந்த உள்ளம் காவேரியில் பார்த்து விட்டு வந்து ஹாஸ்டல் வார்டனிடம் வாங்கி கட்டி கொண்டேனே..

காசட் வாங்கியது.. ஐயோ. தினத்தந்தியில் காசட் ரிலீஸ் என்று போட்டதும் அன்றே சிங்காரதோப்பு சென்று காசட் வாங்கிய நாட்களை என்ன சொல்ல? தேவை இல்லாமல் என் எண்ண அலைகளை தூண்டி விட்டு விட்டீர்கள். எங்கெங்கு சென்றாலும் ஏதோவது ஒரு மூலையிலிருந்து அப்போதெல்லாம் ராஜா சாரின் பாடல்கள் ஒழித்து கொண்டே இருக்கும். சிந்தாமணி பஸ் ஸ்டாண்டில், கிளாஸ் கட் அடித்து விட்டு மெல்ல திறந்தது கதவு பாடல்களை கேட்டு கொண்டே முதல் முறை அடித்த திருட்டு தம், ஆஹா....

ஹவ் டு நேம் இட், நத்திங் பட் வின்ட் எல்லாம் இந்த கால கட்டத்தில் தான் வந்தது. இன்று வெளியீடு என்று வந்த பேப்பர் விளம்பரங்கள் எல்லாம் ஊரில் பத்திரமாக வைத்திருக்கிறேன்

வேதம் புதிது அப்போது ரிலீஸ் டயம் . எம்.ஜி.ஆர் இறந்து விட்டதால் ரெண்டு மூன்று நாட்கள் தள்ளி மாரிசில் ரிலீஸ் செய்தார்கள். படத்தை பற்றி ஏக பில்ட் அப் . வைரமுத்துவால் பிரச்சனை ஏற்பட்டு பாரதிராஜாவும் ராஜா சாரும் பிரிந்து எல்லா தினசரி வார இதழ்களிலும் அசிங்க படுத்தி கொண்டார்கள். ராஜா சார் இசை இல்லை என்பதால் படம் பார்க்க விருப்பமே இல்லை.. ஆனால், எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலம் பற்றி தமிழ் நாடு அரசு செய்தி சுருள் வழியாய் வெளியிட்டிருந்தார்கள். வைரமுத்து எழுதி, பாரதிராஜா படம் பண்ணி ராஜா சார் இசை அமைத்து பாடி வெளியிடப்பட்ட அந்த செய்தி சுருள் வேதம் புதிதுக்கு முன்னர் காட்ட பட்டதால் தினந்தோறும் சென்றேன் பார்க்க. நான் பார்க்க கூடாது என்று நினைத்த வேதம் புதிது இதனால் பலமுறை பார்க்க நேரிட்டது.

என் சொந்த கதைகளை உங்களிடம் அளந்து விட்டதால். மன்னிக்கவும் . இப்போதெல்லாம் என் மனைவியிடம் ராஜா சார் பற்றி பேசினாலே டார்ச்சர் பண்ணாதீர்கள் என்று காதை மூடி கொள்கிறார். அதான் கொஞ்சம் எல்லை மீறி விட்டேன். எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டால் ராஜா சார், ராஜா சார் என்று சட்டை பியித்து கொண்டு அலைவேணாம், மனைவி சொல்கிறார்.

rajaramsgi, I enjoyed reading this post . engal veetilum ennai ilayaraja paithiyam endruthaan solluvaarhal. Since I was in the hostel ungalipol veliyil nadakkum programmesukku pogamudiyaathu. Aanal yaarukkum theriyamal nanabargaludan cinemavukku pona anubavangal niraya. andha vayasil adhu oru bayam kalandha thrill . Maatikondal dharma adi thaan . Idhe timela vandha oru non film album , was it geethanjali?

Russellhaj
11th August 2014, 02:50 AM
"அன்னக்கிளியின்" #கிளி

என்ன அசத்தலான ஆரம்பம்..!!




https://www.youtube.com/watch?v=-6o5oLUIRz4&feature=youtu.be

Russellhaj
12th August 2014, 08:53 AM
மனம் ஒரு கோழி முட்டை

2013 ஆம் ஆண்டில் ஒரு நாள் லண்டனில் இளையராஜாவின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. ராஜா மேடைக்கு வருகிறார். எனது நண்பர் ஒருவருக்குப் பக்கத்தில் இருந்த சக நண்பர் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்கிறார் இப்படி,
"மச்சான்! உந்த மனுஷன் மட்டும் இல்லையென்றால் நான் சந்தித்த கஷ்ட நஷ்டங்களை நினைச்சு எப்பவோ எனக்கு விசர் பிடித்திருக்கும்"
வியாபாரத்தில் நொடித்துப் போன அந்த நண்பரின் மனதை ஆற்ற இங்கே இசை தான் துணை நின்றிருக்கிறது.

புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்கிறர்கள் என்ற பிரமை எப்போதும் தாயகத்தில் உள்ளோருக்கு இருக்கும் ஒரு பார்வை. இன்னொரு பக்கத்தை யாரும் அறியவே தெரியவோ விரும்புவதில்லை. எனது நாளாந்த வேலைக்கான ரயில் பயணத்தில் மாதத்தில் ஒரு தடவையேனும் விநோதமான மனிதர்களைச் சந்திப்பது வழமை. நன்றாக உடை உடுத்தியவர்கள், இன்னும் சிலர் பார்ப்பதற்கு உயர் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தனக்குத் தானே பேசிச் சிரிப்பதும், திடீரென வீதியில் நின்று உரக்கக் குரல் எழுப்புவதுமாகக் கண்டிருக்கிறேன். அதில் ஒரு சிலர் இலங்கையில் இருந்து பயணப்பட்டவர்கள் என்பதை வெள்ளிடை மலையாக உணர முடிந்தது.

ஒருமுறை சிட்னியில் தமிழர் அதிகம் வாழும் பகுதியில் மதிய வேளை ஒரு சந்துக்குள்ளால் நடந்து வந்தேன். தன்னைச் சுற்றி நான்கைந்து பியர் போத்தல்களை அடுக்கிவிட்டு, தனக்குத் தானே உரக்கப் பேசிச் சிரிப்பதும் பின்னர் குடிப்பதுமாக இருந்தான் ஒரு தமிழ் இளைஞன். சமீபத்தில் இருந்து தான் இந்த நாட்டுக்கு வந்திருக்கிறான் என்பதை அவன் பேசிய பேச்சில் வந்து விழுந்த உரையாடல் பகுதி மூலம் உணர்ந்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் அவனைப் பற்றி விசாரித்தேன் யாருக்கும் தெரியவில்லை. அவனை நானும் மீண்டும் சந்திக்க வாய்ப்பு வரவில்லை.

புலம்பெயர்ந்து பத்து, இருபது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருபவர்களுக்கு வேறு விதமான சிக்கல் என்றால், சமீப ஆண்டுகளில் வந்தோர் தம்முடைய வாழ்க்கைத் தரத்தை 20 ஆண்டுகளாக வாழ்பவருடன் ஒப்பிட்டு வாழ முற்படும் போது தேவைகளும், நெருக்கடிகளும், மன அழுத்தங்களும் அதிகமாகின்றது. ஒரு சில சந்தர்ப்பங்களில் வானொலி நிகழ்ச்சியை முடித்த பின்னர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர் நோக்கும் சிக்கலோடு வருபவர்கள் என்னுடைய ஆலோசனையைக் கேட்டு வந்ததும் உண்டு. என்னாலான ஒத்தடத்தை நான் கொடுத்துவிடுவேன். ஆனால் தம்முடைய மன ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வாக கவுன்சிலிங் எனப்படும் உள வள நிலையங்களின் ஆலோசனையைத் தேடிப் பெறும் போக்கு நம்மவரிடையே பெரும் தயக்கமான ஒன்றாகவே இருக்கிறது.
அங்கே போனால் எனக்கு விசர் பிடித்துவிட்டது என்று நினைப்பினம் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் வெளி நாடுகளில் இவற்றின் பங்கு வெகு அவசியமானது என்பதை நம்மவர் உணர்வதில்லை. ஒருவர் தன் பிரச்சனையை மற்றவரிடம் சொல்லும் போது பிரச்சனை கண், காது, மூக்கு வளர்த்து எல்லா இடமும் பரவிவிடுவதும் நம் சமூகத்தின் ஒரு கேடு அதனாலேயே பலர் பிரச்சனைகளைத் தமக்குள் பூட்டி வைக்கிறார்கள். அது வெடித்துக் கிளம்பும் போது தம் வசமிழந்து விடுகிறார்கள்.

யாருக்குத் தான் பிரச்சனையில்லை? ஆனால் அந்தப் பிரச்சனைகளோடு வாழ்வதற்குப் பதில் நம் மனதை வேறு திசைக்கு அனுப்ப வேண்டும். நல்ல இசையைக் கேட்க வேண்டும், மனதுக்கு உகந்த எழுத்துகளைப் படிக்க வேண்டும். மனம் ஒரு கோழி முட்டை போன்றது. அது உடைந்தால் உடைந்தது தான்.

இன்று காலை ஹாலிவூட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இன் அகால மரணச் செய்தியைக் கேட்ட போதுதான் இந்த வாரம் முழுதும் என்னுள் சுற்றிய மனவுணர்வின் வெளிப்பாடே மேற்கண்ட பத்தி.


-Kana Praba

Russellhaj
12th August 2014, 08:55 AM
"பக்தி மணம் கமழும் இசைஞானியின் படைப்புகள்" சிறப்புக் கருத்தரங்கு ஆகஸ்ட் 16, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் !!!


3482

rajaramsgi
13th August 2014, 02:34 PM
"பக்தி மணம் கமழும் இசைஞானியின் படைப்புகள்" சிறப்புக் கருத்தரங்கு ஆகஸ்ட் 16, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் !!!




ராஜா சாரை பாராட்டி பேசி எல்லோரையும் படுத்தி எடுக்காமல், இந்த நான்கு கவிஞர்களும், அவருடைய படைப்புகளை பற்றியும் சில பல சுவராசியமான தகவல்களையும் அள்ளி தந்தால் .சிறப்பாக இருக்கும். இல்லையேல் இது வெறும் நிகழ்ச்சியாக போய் விடும்.

krish244
13th August 2014, 05:17 PM
Yuvan's interview. He talks about IR as well. Mostly frank answers!

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Why-Yuvan-converted-to-Islam/articleshow/40121011.cms

thanks,

Krishnan

Russellhaj
14th August 2014, 05:17 AM
ராஜா சாரை பாராட்டி பேசி எல்லோரையும் படுத்தி எடுக்காமல், இந்த நான்கு கவிஞர்களும், அவருடைய படைப்புகளை பற்றியும் சில பல சுவராசியமான தகவல்களையும் அள்ளி தந்தால் .சிறப்பாக இருக்கும். இல்லையேல் இது வெறும் நிகழ்ச்சியாக போய் விடும்.



You are very right on that !! Most of the time Raaja is not the problem, but the people who surrounded him...........mmm.sigh

Russellhaj
14th August 2014, 05:31 AM
Yuvan's interview. He talks about IR as well. Mostly frank answers!

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Why-Yuvan-converted-to-Islam/articleshow/40121011.cms

thanks,

Krishnan

A very nice interview by Yuvan. I really really sorry for him and for an unexpected demise of his beloved MOM. May God bless him with best of both mental and physical health and the peace he is looking for..........My best wishes and prayers are for you too Yuvan.


வாழ்கை என்ற கடலில் பிரச்னை என்ற புயல் அடிக்கும் பொழுது நாம் ஒதுங்கும் அல்லது இளைப்பாறும் துறைமுகம்தான் சமயம் (Religion ) . ஆனால் அது இப்பொழுது என்ன செய்து கொண்டு இருக்குது என்பதை மோடியும், இஸ்ரேலும், ஈராக்ம் .......

venkkiram
14th August 2014, 08:46 AM
Poem.. இந்த இரண்டு பதிவுகளையும் பாடலுக்கான திரியில் இட்டால் கோர்வையாக இருக்கும்.

Russellhaj
14th August 2014, 08:51 AM
Poem.. இந்த இரண்டு பதிவுகளையும் பாடலுக்கான திரியில் இட்டால் கோர்வையாக இருக்கும்.


No Problem, I will move it right away :-D

krish244
14th August 2014, 10:31 AM
It seems IR did not like the movie "Mudhal Mariyadhai". He was part of Megha press meet:

"...Ilayaraja shared few interesting moments from the past and lauded the debut director, Karthik Rishi. He called the director to stage and asked him to share exactly what he said after watching the film after the re-recording. Karthik said, I was confident that I made a good movie, but after watching the movie with Raja sir's music, I couldn’t believe that the movie was done by me. Ilayaraja intervened immediately and said, this is what I hear from every director.

He rolled back some years to quote an incident from 'Mudhal Mariyadhai'. I did not like the movie due to some reasons, but I gave my best regards songs/BGM to that flick. When, Bharathiraja saw the movie after my work, he questioned how am I able to deliver such a wonderful music, even for a film which I did not like, well, all I have to say is; I can't be unfaithful to music.

The word Genius is definitely an understatement for Ilayaraja."

http://www.indiaglitz.com/i-didnt-like-mudhal-mariyadhai-ilayaraja-tamil-news-111956

thanks,

Krishnan

krish244
14th August 2014, 10:38 AM
About the songs in the tamil/hindi remake of Marathi movie "Kaksparsh".

"...The film's music is by Ilaiyaraaja, and Manjrekar says he requested the maestro not to give any commercial songs. "He has given soulful music that suits the situations in the film," explains Manjrekar."

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Kaksparsh-plot-is-relevant-in-Tamil/articleshow/40191515.cms

thanks,

Krishnan

venkkiram
15th August 2014, 08:12 PM
It seems IR did not like the movie "Mudhal Mariyadhai". He was part of Megha press meet:

"...Ilayaraja shared few interesting moments from the past and lauded the debut director, Karthik Rishi. He called the director to stage and asked him to share exactly what he said after watching the film after the re-recording. Karthik said, I was confident that I made a good movie, but after watching the movie with Raja sir's music, I couldn’t believe that the movie was done by me. Ilayaraja intervened immediately and said, this is what I hear from every director.

He rolled back some years to quote an incident from 'Mudhal Mariyadhai'. I did not like the movie due to some reasons, but I gave my best regards songs/BGM to that flick. When, Bharathiraja saw the movie after my work, he questioned how am I able to deliver such a wonderful music, even for a film which I did not like, well, all I have to say is; I can't be unfaithful to music.

The word Genius is definitely an understatement for Ilayaraja."

http://www.indiaglitz.com/i-didnt-like-mudhal-mariyadhai-ilayaraja-tamil-news-111956

thanks,

Krishnan

வழக்கம் போல ராஜா பேசுவது (வெகுஜன மக்களால்) முழுக்க முழுக்க தவறாகவே அர்த்தம்கொள்ளப்பட்டு இருக்கிறது. அப்புறம் என்ன! மாண்பான உயரிய குணங்களை(!!) கட்டிக் காக்க வற்புறுத்தி வசை மாறிப் பொழிய வேண்டியதுதான். இதெல்லாம் நமக்கு பழகிவிட்டதல்லவா..

http://www.mayyam.com/talk/showthread.php?11121-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE&p=1156524&viewfull=1#post1156524

http://www.mayyam.com/talk/showthread.php?11121-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE&p=1156530&viewfull=1#post1156530

http://www.mayyam.com/talk/showthread.php?11121-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE&p=1156568&viewfull=1#post1156568

venkkiram
15th August 2014, 08:33 PM
எவர் ஒருவர் எப்போது தனது இசை ரசனையின் வழி ஏனைய மற்ற இசையமைப்பாளர்களொடு இசை ஞானியையும் ஒரே தளத்தில் வைக்கிறாரோ அப்போதே அவரது ரசனை கேள்விக்குரியதாகி விடுகிறது. ராஜா என்ற மனிதரின் ஆளுமை, மகத்துவம் ஒரே நாளில் சொல்லிப் புரியவைக்கக் கூடிய செயலே அல்ல. அது ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து உணர்வு பூர்வமாக உள்வாங்கி வளர்த்த ஒரு உயரிய மதிப்பீடு.

rajaramsgi
16th August 2014, 02:49 PM
http://www.mayyam.com/talk/showthread.php?11121-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE&p=1156524&viewfull=1#post1156524

http://www.mayyam.com/talk/showthread.php?11121-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE&p=1156530&viewfull=1#post1156530

http://www.mayyam.com/talk/showthread.php?11121-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A E%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE&p=1156568&viewfull=1#post1156568

அந்த திரியில் நிறைய இசை ரசிகர்களின் பங்களிப்பு அதிகம். எல்லோரும் எழுதுகிறார்கள். நிறைய சுவராஸ்யமான பாடல்களின் நினைவூட்டல், நல்ல விஷயம் தான்.

ஆனால் அங்கு எழுதுவோரில் சிலர் மிகவும் தலை கணத்துடன், மதுர கானங்களை பற்றி மட்டும் சிலாகிக்காமல், ராஜா சாரை காய்ச்சி எடுக்கிறார்கள்.


அவன் இவன் நீ என்று ஏக வசனத்தில் அவரை ஏளனமாய் பேசி முகம் சுளிக்க வைத்து.. இதில் கொடுமை என்னவென்றால், சொல்லி வைத்தது போல் இவர்கள் எல்லோரும் அவருடைய ரசிகர்களாம். பைபோளார் டிசார்டர் கொண்டோரின் இயல்பில் சிலர் எழுத்தை அங்கு காண முடியும். பாவம், இவர்களிடம் மாட்டிகொண்டு இவர்களின் சுற்றத்தார் என்ன பாடு படுகிறார்களோ?

Gopal.s
16th August 2014, 03:00 PM
பைபோளார் டிசார்டர் கொண்டோரின் இயல்பில் சிலர் எழுத்தை அங்கு காண முடியும். பாவம், இவர்களிடம் மாட்டிகொண்டு இவர்களின் சுற்றத்தார் என்ன பாடு படுகிறார்களோ?

உங்கள் அரைகுறை "3" படத்தை பார்த்து தெரிந்து கொண்டதை எல்லாம் பிரயோக படுத்த வேண்டாம். கீழ்த்தரமான செய்கைகளை பேச்சை கண்டிப்பது அகந்தை என்றால், அது அகந்தையாகவே இருக்கட்டும்.கோழை போல ஒளிந்து பர்சனல் abuse செய்தல் என்ன வியாதியில் சேரும்?காற்றிலடித்த காகிதம் போல எந்த ஊருக்கு சென்றாலும் குறுகிய புத்தி சிலருக்கு விடுவதில்லை.

உங்கள் குடும்பத்தை பற்றி பேச வேண்டுமானால் சௌகரியமாய் பேசலாம்.அங்கு வந்து விடுகிறீர்களா?

Gopal.s
16th August 2014, 03:06 PM
வழக்கம் போல ராஜா பேசுவது (வெகுஜன மக்களால்) முழுக்க முழுக்க தவறாகவே அர்த்தம்கொள்ளப்பட்டு இருக்கிறது. அப்புறம் என்ன! மாண்பான உயரிய குணங்களை(!!) கட்டிக் காக்க வற்புறுத்தி வசை மாறிப் பொழிய வேண்டியதுதான். இதெல்லாம் நமக்கு பழகிவிட்டதல்லவா..



ஓஹோ... இளைய ராஜா செய்வதையெல்லாம் ஒப்பு கொண்டால் மேற்குடி மக்கள். இல்லையென்றால் வெகு சனமா? பேஷ்,பலே,புதிய தீண்டாமை உருவாகி வருகிறதே?

இந்த மாதிரி ,சொன்ன கருத்தை நோக்காமல்,சொன்னவனை நோக்கி ,அம்பு எய்வதெல்லாம் ,பழைய கதைகள் சார்.

rajaramsgi
16th August 2014, 03:12 PM
உங்கள் அரைகுறை "3" படத்தை பார்த்து தெரிந்து கொண்டதை எல்லாம் பிரயோக படுத்த வேண்டாம். கீழ்த்தரமான செய்கைகளை பேச்சை கண்டிப்பது அகந்தை என்றால், அது அகந்தையாகவே இருக்கட்டும்.கோழை போல ஒளிந்து பர்சனல் abuse செய்தல் என்ன வியாதியில் சேரும்?காற்றிலடித்த காகிதம் போல எந்த ஊருக்கு சென்றாலும் குறுகிய புத்தி சிலருக்கு விடுவதில்லை.

உங்கள் குடும்பத்தை பற்றி பேச வேண்டுமானால் சௌகரியமாய் பேசலாம்.அங்கு வந்து விடுகிறீர்களா?

ஹா.. வேண்டாங்க... நீங்கள் வெட்டெரன் ஹப்பர். சீனியர். நீங்கள் வென்றதாகவே வைத்துகொள்வோம்... உங்கள் எழுத்தால் நல்ல விஷயங்களை நான் தெரிந்து கொண்டால் மட்டும் போதும். carry on.

by the way, 3 படம் நான் பார்க்கவில்லை. நான் கோழையும் இல்லை. மேலும் மேலும் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டாமே..

Russellhaj
16th August 2014, 07:30 PM
https://m.facebook.com/story.php?story_fbid=665134773569952&id=100002203075390 … pic.twitter.com/K9Rul61nGB


இன்று எனது வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான மூன்று நிகழ்வுகள் நடந்தது.

ஒன்று : இன்று இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளவிருக்கும் அருணகிரிநாதர் திருவிழாவிற்கு ராஜா சார், என்னை அவசியம் வரச் சொன்னதாக நண்பரொருவர் தொலைபேசியில் சொன்னார். கண்டிப்பாக வந்து விடுகிறேன் என சொல்லிவிடுங்கள் என்றேன்.

இரண்டு : விழா மேடையின் அருகே அவரை வரவேற்ற என்னை அழைத்து, மேடையில் அவரருகில் அமரச் சொல்லி, விழாக் குழுவினரை அழைத்து, கருணாவை பேசுவதற்கு அழையுங்கள் என்றார். அதன்படி என்னிடம் மைக் கொடுக்கப் பட, திடீரென பேச அழைக்கப் பட்டதால், முன் தயாரிப்பின்றி பேசிய சுருக்கமான பேச்சு இது.

"இசைஞானி இளையராஜா அவர்களை இங்கே அழைத்து, அவரை மன சிம்மாசனத்தில் வைத்திருக்கும் வெகு ஜனங்களின் மத்தியிலே அமரவைத்து இந்த விழாவினை நடத்தும் விழாக்குழுவினருக்கு எனது நன்றியும், பாராட்டுதல்களும்.

சில மாதங்களுக்கு முன் நான் துபாய் சென்றிருந்த போது, அங்கே எனக்கு கார் ஓட்டிய ஓட்டுநர் ஒரு தமிழர். அவரிடம், நீங்கள் எப்போது கடைசியாக தமிழகம் சென்றீர்கள் நாக் கேட்டதற்கு, ஏழு ஆண்டுகள் என்று பதிலளித்தார். அவருக்கு மகன் பிறந்த அன்று இரவு புறப்பட்டு துபாய் வந்தவர் இன்னமும் திரும்பிச் செல்ல முடியவில்லையாம். நான் அதிர்ந்து விட்டேன். எப்படி உங்களால், ஏழு ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து இருக்க முடிகிறது? எனக் கேட்டதற்கு, அவரது காரின் டேஷ்போர்டைச் சுட்டிக் காட்டினார். அங்கே இசைஞானி இளையராஜாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது.
நான் மனம் நெகிழ்ந்து போன அந்த வேளையில், உரத்த குரலெடுத்து 'தென்பாண்டிச் சீமையிலே! தேரோடும் வீதியிலே!' பாடலைப் பாடினார். இந்தப் பாடல்தான் சார், எனக்கு ஏழு வருடமாக மகன் என்றார்.

இப்படி, புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும், தாயகம் வாழ் தமிழர்களுக்கும், பெற்றத் தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக, மனைவியாக, காதலியாக, உற்றத் தோழனாக வாழ்ந்து வரும் எங்கள் இசைஞானியை பாதம் தொட்டு வணங்கி வரவேற்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் அவர் உடல்நலமில்லாமல் இருந்த சமயத்தில், எமன் அவரை அழைத்துச் செல்ல வந்திருந்தான். ஒருவேளை இசைஞானியும் கூட, அவனுடன் செல்ல தயாராக இருந்திருக்கலாம். ஆனால், அவரது உயிர் கயிறு நேராக எங்கள் அண்ணாமலையாருடன் பிணைக்கப் பட்டிருந்ததைக் கண்ட எமன் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டான்.

அண்ணாமலையார் விரும்பும் வரையிலும், இசைஞானி,ராகதேவன் எங்கள் இளையராஜா எங்களுடனே இருந்து, மேலும் மேலும் காலத்தினால் அழியாப் பாடல்களை தர வேணுமாய் எங்கள் திருவண்ணாமலை மக்கள் சார்பில் கேட்டு அமர்கிறேன்."

( இதை எழுதும்போது தெளிவாக எழுதியிருந்தாலும், மேடையில் ராஜாவின் முன்னே பேசும்போது லேசாக நா தழுதழுத்து கண்கள் கலங்கி விட்டேன்.)

எதிரில் அமர்ந்திருந்த சில ஆயிரம் பேர்களிடம், எனது பேச்சுக்கு நல்ல கைத்தட்டல்களும், ஒரு சில கண்ணீர் துளிகளும் கிடைத்ததைக் கண்டேன். பேசி முடித்து இடம் திரும்பிய என்னை அழைத்து, 'ஒரு வார்த்தை கூட குறைவாக இல்லாமல், கச்சிதமா இருந்தது உன் பேச்சு! சமீபத்தில் நான் ரொம்ப ரசித்த பேச்சு இதுதான் என்று பாராட்டினார் இசைஞானி!'

ஆக, ஒரு பேச்சாளனாகவும் நான் பாஸாகி விட்டேன்.

அந்த மூன்றாவது விஷயம் என்ன எனக் கேட்கிறீர்களா?

வேறென்ன? இசைஞானியுடன் நான் எடுத்துக் கொண்ட 'செல்ஃபிதான்'!

இனி யாராவது என்னிடத்தில், உலகத்திலேயே உயரமான இடத்தில், உலகத்தின் ஆழமான இடத்தில், உலகத்தின் அழகான இடத்தில், என்று கேப்ஷன் போட்டு செஃல்பி எடுத்துப் போடட்டும்!

அவனிடம் சொல்வேன்! அட முட்டாள்! நான் அத்தனையும் சேர்ந்த மூளை கொண்ட ஒரு மேதையுடனேயே, செல்ஃபி எடுத்து விட்டேன் என்று.

-எஸ்கேபி. கருணா.

Gopal.s
16th August 2014, 07:31 PM
After A very long thinking, I am posting this comment !!

யாரோ எழுதி யாரோ இசை அமைத்து யாரோ பாடி யாரோ நடித்த பாடல்களுக்கு இத்தனை அக்கப்போர். எல்லாம் தெரிந்தது போல், எல்லோரையும் தரம் தாழ்ந்த விமர்சனம் , அடுத்த நொடியே போலியான அரவணைப்பு புகழ் மாலை ரசிகர் என்ற அடை மொழி வேறு !!! சிவாஜியே தோற்றுவிடுவார்.

Thanks.

Gopal.s
16th August 2014, 07:32 PM
ஹா.. வேண்டாங்க... நீங்கள் வெட்டெரன் ஹப்பர். சீனியர். நீங்கள் வென்றதாகவே வைத்துகொள்வோம்... உங்கள் எழுத்தால் நல்ல விஷயங்களை நான் தெரிந்து கொண்டால் மட்டும் போதும். carry on.

by the way, 3 படம் நான் பார்க்கவில்லை. நான் கோழையும் இல்லை. மேலும் மேலும் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டாமே..

Bye Bye.

rajaramsgi
16th August 2014, 09:37 PM
https://www.youtube.com/watch?v=WLBLjCJbv5g

ராஜா சார் பேச்சில் குறை ஒன்றும் இருப்பதாய் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.


முதல் மரியாதை படம் பார்த்து விட்டு, படத்தை இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் மாற்றம் செய்ய அறிவுறுத்தியதாகவும், பாரதிராஜா கதையில் பிடிவாதமாக இருந்து எதையும் தனக்காக மாற்றவில்லை என்று ஏற்கனவே ராஜா சார் சொல்லி இருக்கிறார். படம் ஓடாது என்று தனக்கு தோன்றியதால் சம்பளமே வாங்கவில்லை என்றும் கூறி இருக்கிறார்.

மேலும், பாடல்களும் பின்னணி இசையும் பிரமாதமாய் வந்து படமும் நன்றாக ஓடி லாபத்தை ஈட்டி விட்ட பிறகு பாரதிராஜா பிரசாத் ஸ்டுடியோ வந்து தான் எதிர் பார்க்காத வேளையில் ஒரு பெரிய தொகையை கையில் கொடுத்ததாகவும் 2007 ஏப்ரல் மாதம் தினத்தந்தியில் பல நாட்கள் வெளிவந்த வரலாற்று சுவடுகளில் பதிவு செய்திருக்கிறார்.


முன்பே ஒருவர் கூறியுள்ளது போல், ராஜா சார் "அன்றைய மன நிலையில்" தனக்கு படம் பிடிக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு? தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் படத்தில் வேலை செய்ய ஒப்பு கொண்ட பிறகு தன் வேலையை சரியாக செய்வது என்பது இது முதல் முறை அல்ல. அவர் வேலை செய்த படங்களில் முக்கால் வாசி அவருக்கு மட்டும் இல்லை, நமக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும் பாடல்கள் நம் மனதில் இன்றும் நிலைத்திருப்பது எதனால்?


அவர் சிறந்த பேச்சாளர் அல்ல, மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறார், அதனால் விமர்சனத்துக்கும் ஆளாகிறார். உண்மையில் சொல்ல போனால் பாரதிராஜாவின் படங்களில் காதல் ஓவியம், மண்வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் எல்லாம் காவியங்கள். எல்லா அம்சங்களும் அழகாய் பொருந்திய படங்கள். 1991 வரை வந்த அவருடைய மற்ற படங்களும் ஏற குறைய அப்படி தான். ராஜா சாரும் நண்பர் என்கிற தகுதிக்காக அல்ல, அனுபவித்தே அந்த படங்களுக்கு அள்ளி கொடுத்திருக்கிறார், கிள்ளி கொடுக்கவில்லை.

Russellhaj
16th August 2014, 11:32 PM
https://www.youtube.com/watch?v=xykyBqOpm8k

Gopal.s
17th August 2014, 04:47 AM
ராஜா சார் பேச்சில் குறை ஒன்றும் இருப்பதாய் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.


முதல் மரியாதை படம் பார்த்து விட்டு, படத்தை இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் மாற்றம் செய்ய அறிவுறுத்தியதாகவும், பாரதிராஜா கதையில் பிடிவாதமாக இருந்து எதையும் தனக்காக மாற்றவில்லை என்று ஏற்கனவே ராஜா சார் சொல்லி இருக்கிறார். படம் ஓடாது என்று தனக்கு தோன்றியதால் சம்பளமே வாங்கவில்லை என்றும் கூறி இருக்கிறார்.


முன்பே ஒருவர் கூறியுள்ளது போல், ராஜா சார் "அன்றைய மன நிலையில்" தனக்கு படம் பிடிக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு? தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் படத்தில் வேலை செய்ய ஒப்பு கொண்ட பிறகு தன் வேலையை சரியாக செய்வது என்பது இது முதல் முறை அல்ல. அவர் வேலை செய்த படங்களில் முக்கால் வாசி அவருக்கு மட்டும் இல்லை, நமக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும் பாடல்கள் நம் மனதில் இன்றும் நிலைத்திருப்பது எதனால்?


அவர் சிறந்த பேச்சாளர் அல்ல, மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறார், அதனால் விமர்சனத்துக்கும் ஆளாகிறார். உண்மையில் சொல்ல போனால் பாரதிராஜாவின் படங்களில் காதல் ஓவியம், மண்வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் எல்லாம் காவியங்கள். எல்லா அம்சங்களும் அழகாய் பொருந்திய படங்கள். 1991 வரை வந்த அவருடைய மற்ற படங்களும் ஏற குறைய அப்படி தான். ராஜா சாரும் நண்பர் என்கிற தகுதிக்காக அல்ல, அனுபவித்தே அந்த படங்களுக்கு அள்ளி கொடுத்திருக்கிறார், கிள்ளி கொடுக்கவில்லை.


இளைய ராஜா என்னதான் மகேந்திரன்,பாரதிராஜா,பாலுமகேந்திரா படங்களுக்கு தன் அபார பின்னணி இசையால் உயிர்ப்பூட்டி இருந்தாலும் ,ரசனையளவில் கப்பங் கிழங்கை தாண்டி வராதவர் என்பது ,திரையுலக நண்பர்களுடன் பழகி நான் அறிந்தது.இவர் சொந்தமாக தயாரித்த அலைகள் ஓய்வதில்லை,கோழி கூவுது ,ராஜாதி ராஜா ,சிங்காரவேலன் போன்றவை ,இதற்கு கட்டியம் கூறும்.நல்ல விஷயங்களை ,உன்னத விஷயங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும்,அறியாமையை கட்டியம் கூறி,விளம்பர படுத்தி,தரம் தாழ்த்தி கொள்ளும் போக்கையே நான் எதிர்க்கிறேன்.

இவருக்கு பிடிக்கும் வகையில்,மலைச்சாமி ,கட்டை வண்டி பாடி குயிலை கலாய்க்க முடியுமா? அல்லது குயில்தான் பொட்டை பிள்ளை எல்லாருக்கும் என்று குத்து டான்ஸ் ஆட முடியுமா?இதுதான் இளைஞர்களுக்கு தேவை என்பது ராஜாவின் பரந்த அறிவு திறன்.

venkkiram
17th August 2014, 05:41 AM
ஓஹோ... இளைய ராஜா செய்வதையெல்லாம் ஒப்பு கொண்டால் மேற்குடி மக்கள். இல்லையென்றால் வெகு சனமா? பேஷ்,பலே,புதிய தீண்டாமை உருவாகி வருகிறதே?

இந்த மாதிரி ,சொன்ன கருத்தை நோக்காமல்,சொன்னவனை நோக்கி ,அம்பு எய்வதெல்லாம் ,பழைய கதைகள் சார்.

அய்யா வந்துட்டிங்களா மறுபடியும் சண்டை கட்ட? நான் மறுபடியும் மறுபடியும் சொல்வேன். இளையராஜா சொன்னதை தவறாகவே அர்த்தம் கொண்டிருக்கிறீர்கள். முன்பாவது ஒரளவு இசை சம்பந்தப் பட்ட விஷயத்தில் ( ராஜா ஒரு தன்னிகறறவர் என ஏன் நான் நினைக்கிறென் - திரியில் ) முரண்டு பிடித்தீர்கள்.. அப்போது இசை பற்றிய கருத்துக்களை/அபிப்ராயங்களை எடுத்து வைத்தும் எங்கும் உரையாட முன்வரவில்லை.. எனக்கு எல்லாமே தெரியும், ராஜா ரசிகர்களை விட என்ற ஒற்றைப் பரிமாணத்திலேயே உங்களது பதிவுகள் இருந்தது. இப்போது ராஜா அடுத்தவர்களை விமர்சித்து பேசியது என்பது உங்களுக்கு ஒரு தோதான கருத்துக்களம். ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட ராஜா மீதான உங்களது அபிப்ராயங்களுக்கு தீனி போடும்வகையில் / அல்லது எரியிற தீயில் எண்ணையை ஊற்றும் வகையில் வந்துள்ளது. வசமா சிக்கிட்டான்யா என வசைமாறி பொழியவேண்டியதுதான்!

Gopal.s
17th August 2014, 06:33 AM
அய்யா வந்துட்டிங்களா மறுபடியும் சண்டை கட்ட? எரியிற தீயில் எண்ணையை ஊற்றும் வகையில் வந்துள்ளது. வசமா சிக்கிட்டான்யா என வசைமாறி பொழியவேண்டியதுதான்!

வெங்கி ராம்,

அப்படியெல்லாம் இல்லை. சிலையை உடை ,காற்று வரட்டும் ,இடம் சுத்தமாகட்டும் வகை நான்.

அன்று பல வைரங்களை ,அன்றைய இசையமைப்பாளர்கள்,பழைய தினத்தந்தி பேப்பர் ஓரம் கிழித்து கட்டி கொடுப்பது போல packaging செய்து வந்த போது ,வைரங்களை அதற்கேற்ற பேழைகளில் இட்டு முழுமை செய்த பெருமைக்குரியவர் இளையராஜா.

பாடல்களும் B .G .M , Recording Quality ,எல்லாவற்றிலும் அற்புதமான மாறுதல்கள்.1976 முதல் அதை ரசித்து ருசித்தவன்.

ஆனால் மார்க்ஸ் ,பெரியார் வழி வந்தவன் என்பதால் துதி பாடலில் பரிச்சயம் அற்று ,issue based critic ஆக விளங்குகிறேன்.(இன்று பெரியாருக்கே சிலைகள் வைத்து,துதி பாட ஆரம்பித்தாயிற்று என்பது வேறு விஷயம்.)

படைப்பு திறன் உள்ள, அறிவு நமைச்சல் கொண்ட அனைவருக்கும் Bi Polar Disorder இருக்க வாய்ப்புள்ளதோ?எனக்கு மௌனி மாதிரி அடிக்கடி தோன்றும் பிரமை. "எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்".:-D

venkkiram
17th August 2014, 06:45 AM
இளைய ராஜா என்னதான் மகேந்திரன்,பாரதிராஜா,பாலுமகேந்திரா படங்களுக்கு தன் அபார பின்னணி இசையால் உயிர்ப்பூட்டி இருந்தாலும் , ரசனையளவில் கப்பங் கிழங்கை தாண்டி வராதவர் என்பது , திரையுலக நண்பர்களுடன் பழகி நான் அறிந்தது. இவர் சொந்தமாக தயாரித்த அலைகள் ஓய்வதில்லை,கோழி கூவுது ,ராஜாதி ராஜா ,சிங்காரவேலன் போன்றவை ,இதற்கு கட்டியம் கூறும்.நல்ல விஷயங்களை ,உன்னத விஷயங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும்,அறியாமையை கட்டியம் கூறி,விளம்பர படுத்தி,தரம் தாழ்த்தி கொள்ளும் போக்கையே நான் எதிர்க்கிறேன்.

இவருக்கு பிடிக்கும் வகையில்,மலைச்சாமி ,கட்டை வண்டி பாடி குயிலை கலாய்க்க முடியுமா? அல்லது குயில்தான் பொட்டை பிள்ளை எல்லாருக்கும் என்று குத்து டான்ஸ் ஆட முடியுமா?இதுதான் இளைஞர்களுக்கு தேவை என்பது ராஜாவின் பரந்த அறிவு திறன்.

பேஷ் பேஷ்! ! "அன்றைய மனநிலையில் முதல் மரியாதை கதைபிடிக்கல" - என வெளிப்படையாக சொன்னதற்கு "ரசனையளவில் கப்பங் கிழங்கை தாண்டி வராதவர் " என்றெல்லாம் சான்றிதழ் அறிக்கை வேறு கொடுத்தாகிவிட்டதா? அதுவரை சமகால நட்சத்திர அந்தஸ்து கொண்ட/ அல்லது முற்றிலும் புதிய இளைஞர் பட்டாளங்களுடன் திரைப்படங்களை கொடுத்த ஒரு நெருங்கிய நண்பன் சிவாஜியை வைத்து அதுவும் முதிய வயதுள்ள பிரதான கதாபாத்திரத்தில் ஒரு படைப்பில் இறங்கியிருக்கானே இது மக்களிடத்தில் செல்லுபடியாகுமா? வியாபார ரீதியில் வெல்லுமா? என்ற சந்தேகம் வந்திருக்கலாம். இதையே பாரதிராஜாவே ஒரு சபையில் பகிர்ந்திருக்கிறார். "அன்றைய மனநிலையில்" எனச் சொல்லியும் வரிந்து கட்டிக்கொண்டு கப்பங்கிழங்கு, சேனைக் கிழங்கு வரையெல்லாம் செல்வதேன்? மாபெரும் ஆளுமையை இப்படியெல்லாம் வீழ்த்தி தனது நடுநிலையை(!) பாரெங்கும் தெரியப்படுத்தணும் என்ற மனநிலையா?

யாரும் இங்கே அறியாமையை கட்டியம் கூறவில்லை. மாறாக தனக்குப் பிடிக்காத கதைக் களத்திலும் ஆகச் சிறந்த வரிசையில் இன்னொன்றாக பாடல்கள், பின்னணி இசையினை வழங்கிய ஞானத்தை/ ஆற்றலைத் தான் வியந்து பார்க்கிறோம். இதை வசதியாக புறக்கணித்து "பாருய்யா! இவனுக்கு முதல்மரியாதை பிடிக்கவில்லையாம், எவ்வளவு கீழ்த்தரமான ரசனை கொண்டவன்" என பதிவதின் நோக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

Gopal.s
17th August 2014, 07:36 AM
வெங்கி ராம்,

நகரவே விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்.

நண்பர்களிடம்(சகோதரர் உட்பட) இவர் கொண்ட "அக்கறை" உலகறிந்த ஒன்று.விட்டு விடுவோம்.(நீங்கள் எல்லாவற்றையும் Glorify செய்கிறீர்கள்)

தேவேந்திரன்,அம்சலேகா,வித்யாசாகர் என்று அல்லாடி விட்டு ,ரகுமானுடன் பாரதிராஜா கை கோர்த்த இரு கிராமிய படங்கள் கிழக்கு சீமையிலே,கருத்தம்மா .

ரகுமானுக்கு( ஏழ்மையை அனுபவித்தவர் ஆயினும் ,பத்மா சேஷாத்ரி மாணவர்.city based) இளையராஜா போல கிராமிய பின்னணி,கலாச்சாரம் ,கம்யூனிசம்,ஊர் ஊராக ETC அற்றவர்.பாரதி ராஜாவிடம், இளையராஜாவிற்கு இருந்த comfort level ,Wave length ,vibe ,sync ,Background similarity ,Generation Sync எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் பாடல்கள் தரம்,nativity ,authenticity எதுவும் குறையாமல் ,B G M உம நன்றாகவே மாற்று அழகியல் நவீன இசை தந்தாரே?

இதுதான் Professionalism . என்ன மிஸ்ஸிங் என்பது புரிந்ததா நண்பரே?

venkkiram
17th August 2014, 07:50 AM
இதுதான் Professionalism . என்ன மிஸ்ஸிங் என்பது புரிந்ததா நண்பரே?

எளிதாக படம் வரைந்து பாகம் குறிப்பது போல விளக்கி உங்களின் ஒப்பீட்டில் உள்ள பக்குவமின்மையை உடைக்கலாம். ஆனால் அப்படி செய்யப் போவதில்லை. உங்களது கலகத்தனம் ( மற்ற இசையமைப்பாளர்களை வைத்து ராஜாவின் திரையிசை பங்களிப்பை ஒப்பிடுவது) மீண்டும் மீண்டும் நிருபணமாகிக் கொண்டேதான் இருக்கிறது. இருந்தாலும் இரு கட்டுரைகளை (அதுவும் இசையிலக்கணம் தெரியாத, உணர்வு தளத்தில் இலக்கியம் படைக்கும் தேர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது..) தருகிறேன். வாசிக்கவும். முன்பேயே வாசித்திருந்தால் மீள்வாசிப்பு செய்யவும். அப்போதாவது ராஜாவின் மகத்துவம் தெரியும், அவர் மீதிருக்கும் அபிப்ராய பேதங்கள் தெளிய வாய்ப்பிருக்கிறது.

http://www.jeyamohan.in/?p=31098

http://www.jeyamohan.in/?p=6473

Gopal.s
17th August 2014, 08:08 AM
உணர்வுகள் என் மனம் சம்பத்த பட்டவை. அதற்கு ஜெயமோகன் மாதிரி அரசியல்வாதி எழுத்தர்களிடம்(unethical careerism ) இரவல் வாங்கும் எண்ணம் எனக்கில்லை.ஜெயமோகனை என் பரீக்ஷா நண்பன் மாமல்லன் (Madras Dada )வெளுப்பதை படித்ததில்லையா நண்பரே?ஷாஜி,ஜெயமோகன் எல்லாம் பம்மாத்துக்கள்.

ஏழாவது உலகம் தவிர்த்த அவரது எந்த படைப்புமே என்னை கவர்ந்ததில்லை.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்ற போலிகள் இலக்கிய உலகம் புகுந்தது ,நம்மை மாதிரி ஆட்கள் சம்பாதிக்க போனதால் நேர்ந்த விபத்து.

அழகுணர்ச்சி என்று மட்டும் ஆராய்ந்தால் சாருவே என் சாய்ஸ் .

(BY the Way,I already read this long back.Thanks.)

venkkiram
17th August 2014, 08:30 AM
உணர்வுகள் என் மனம் சம்பத்த பட்டவை. அதற்கு ஜெயமோகன் மாதிரி அரசியல்வாதி எழுத்தர்களிடம்(unethical careerism ) இரவல் வாங்கும் எண்ணம் எனக்கில்லை.ஜெயமோகனை என் பரீக்ஷா நண்பன் மாமல்லன் (Madras Dada )வெளுப்பதை படித்ததில்லையா நண்பரே?ஷாஜி,ஜெயமோகன் எல்லாம் பம்மாத்துக்கள்.

ஏழாவது உலகம் தவிர்த்த அவரது எந்த படைப்புமே என்னை கவர்ந்ததில்லை.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்ற போலிகள் இலக்கிய உலகம் புகுந்தது ,நம்மை மாதிரி ஆட்கள் சம்பாதிக்க போனதால் நேர்ந்த விபத்து.

அழகுணர்ச்சி என்று மட்டும் ஆராய்ந்தால் சாருவே என் சாய்ஸ் .

(BY the Way,I already read this long back.Thanks.)

ஆக.. எப்படியும் அக்கரையிலிருந்து இக்கரை வரை நீந்திவர விருப்பமேயில்லை என்பதைத்தான் உங்களது இந்த மற்றுமொரு கலகப் பதிவும் சொல்லாமல் சொல்கிறது. வாழ்த்துகள். கலகத்தால் எந்தவொரு படைப்பாக்கத்தையும் உயிர்ப்புடன் அணுகவே முடியாது. இது நானே உணர்ந்து தெரிந்த/தெளிந்த ஒன்று. மற்றபடி "இந்த மாதிரி ,சொன்ன கருத்தை நோக்காமல்,சொன்னவனை நோக்கி ,அம்பு எய்வதெல்லாம் ,பழைய கதைகள் சார்."ன்னு மொட்டைமாடியில் நீங்கள் காயவைத்த வத்தல் இன்னும் காயவேயில்லை. அதுக்குள்ளேயே மழைவந்து விட்டதுபோல. ஜெயமோகனின் இரு தேர்ந்த கட்டுரைகளை வைத்தால் அதன் கருத்துக்களை நோக்காமல் உடனே உங்களிடமிருந்து முழு நிராகரிப்பு. இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

Gopal.s
17th August 2014, 09:16 AM
ஆக.. எப்படியும் அக்கரையிலிருந்து இக்கரை வரை நீந்திவர விருப்பமேயில்லை என்பதைத்தான் உங்களது இந்த மற்றுமொரு கலகப் பதிவும் சொல்லாமல் சொல்கிறது. வாழ்த்துகள்.

வெங்கி ராம்,

நீங்கள் ஏன் இன்னொரு தேர்ந்த இளையராஜா ரசிகனிடம் பேசி கொண்டிருப்பதை உணர மறுத்து (இளையராஜாவையும் ரசிப்பவன்)மதமாற்றம் லெவல் போகிறீர்கள்?

நான் அனைத்து மதங்கள்,அனைத்து இலக்கியங்கள்,அனைத்து சினிமாக்கள்,அனைத்து புத்தகங்களின் முதல் ரசிகன்.ஆனாலும் எதையும் சாராதவன்.(ஆனால் தேர்ந்தெடுப்பு மிகுந்தவன்).என்னுடையது issue based .not personality based . இளையராஜா இசையமைப்பிலிருந்து குதித்து வெளியே வந்து ,உதிர்த்த முத்துகளையே ,நான் விமரிசித்தேன்.

மற்ற படி கலைஞர்களின் moods ,Constructive arrogance இவற்றை புரிந்து கொள்பவனே.

ஜெயமோகன் விஷயத்தில் நான் சொல்ல வந்தது,எனக்கு இரவல் அழகுணர்ச்சி தேவையில்லை என்றுதான். கருத்தை பகிர்பவர் நீங்கள்.உங்களை நோக்கி எந்த அம்பையும் தொடுக்கவில்லையே?உங்கள் நண்பர்கள்தான் மெடிக்கல் dictionary புரட்டி என்னை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் உங்களோடு வெட்டி-ஒட்டி உரையாடுவது சுவாரஸ்ய சுகானுபவமே.

venkkiram
17th August 2014, 11:49 AM
ஜெயமோகன் விஷயத்தில் நான் சொல்ல வந்தது,எனக்கு இரவல் அழகுணர்ச்சி தேவையில்லை என்றுதான். இப்படித்தான் செறிவான கருத்துக்களை உள்ளடக்கிய இரு தேர்ந்த கட்டுரைகளை அழகுணர்ச்சி என்றளவில் பேசி வசதியாக புறக்கணிப்பதா? எப்படி மெனக்கெட்டாலும் கழுவுற மீனுல நழுவுற மீன் போல துள்ளிக் குதித்து போய்க்கொண்டே இருக்கிறீர்கள். உங்களிடம் நூல் பிடித்தாற்போல ஒரு உரையாடல் நிகழ்த்துவதும் காளை மாட்டில் பால் கறப்பதும் ஒன்றுதான் போல. எல்லாமே குறைப்பிரசவமாக போய்விடுகிறது. ஆனாலும் தடங்களில் பதிந்து போவது உங்களைப் போன்றோர் உதிர்க்கும் நாவினால் சுட்ட வடுக்கள்தான். மொழி வசமிருக்கிறது என்ற ஒரே ஆயுதத்தைக் கொண்டு இணையத்தில் விமர்சகர்கள் என்ற பாணியில் புற்றீசல் போல நித்தம் பலர் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். குடிசைக்கும் கட்டிடத்திற்கும் மாளிகைக்கும் உள்ள வித்தியாசத்தை இனங்காணத் தெரியாமல்.. அப்படியே தெரிந்தாலும் மாளிகையை இடிக்கும் வேலைக்கு துணைபுரியும் அளவுக்கு எழுப்ப/அல்லது எழுப்பிய மாளிகையின் புகழ் பேச வாய் வராது. நான் முன்னேயே சொன்னதுபோல, இவை எல்லாம் பழகிப் போன திரைக்கதை முடிச்சுகள். வற்றாத ஜீவனுள்ள ராஜாவின் இசை அதையெல்லாம் தன்னுள் உள்வாங்கி சுத்தப்படுத்தி பயணித்துக் கொண்டெ இருக்கும்.

krish244
17th August 2014, 12:01 PM
"Vai Raja Vai" (music: Yuvan) song by IR.

http://www.youtube.com/watch?v=ZfDaEIQOLUE

thanks,

Krishnan

Gopal.s
17th August 2014, 01:13 PM
இப்படித்தான் செறிவான கருத்துக்களை உள்ளடக்கிய இரு தேர்ந்த கட்டுரைகளை அழகுணர்ச்சி என்றளவில் பேசி வசதியாக புறக்கணிப்பதா?

நான் படித்து விட்டேன் என்று சொன்ன பிறகும் ஏனிந்த படுத்தல்?நான் வந்த போதே முழுதும் படித்து விட்டேன். அது மட்டுமல்ல ஜரதுஷ்டிரா,லாட்சு,பௌத்தம்,பைபில் ,குர்ரான்,ஜூடாயிசம்,எல்லாமே படித்துள்ளேன். ஒவ்வொரு முறையில் மதம் மாறி கொண்டிருக்க வேண்டுமா?

சரி.இவ்வளவு சொல்வதால்,இறுதியாக ஒன்றே ஒன்று. மொழியை மட்டும் நம்பி எதையும் எழுதுபவன் நானில்லை. முன்னேறிய அல்லது நடுத்தர புரிதல் ஆவது எனக்கு உள்ள subject மட்டுமே தொடுவேன்.அதுவும் யானை பார்த்த குருடர் கும்பல் போலல்ல.
இசையில் என்னை யாரும் மாற்ற முடியாது .மாற்றவும் கூடாது.

அது சரி,ஜெயமோகன் ,இந்தியாவில் இது வரை வெளிவந்ததில் சிறந்ததாக தன்னுடைய "விஷ்ணுபுரம்" நாவலை தேர்ந்தெடுத்துள்ளார்.என்னிடமும் படிக்க சொன்னார். அதை விட சொதப்பலான ,புரிதல் ,மோசமான நடையை நான் உலகத்திலேயே கண்டதில்லை.(Journey to Ixtlan ,Casteneda முழுதும் படித்தவன்)இதை, நல்ல மனநிலையில் இருக்கும் எவனாவது படித்து certificate கொடுத்தால்,நான் அக்கறைக்கு வந்து விடுகிறேன். ஒரே சான்ஸ் உங்களுக்கு. ஆனால் நடக்க வாய்ப்பு.....

appushiva
17th August 2014, 04:49 PM
Same thing happening for me too, Here my wife and kids are totally going wild for being craze on IR Sir.

kr
17th August 2014, 09:20 PM
இப்படித்தான் செறிவான கருத்துக்களை உள்ளடக்கிய இரு தேர்ந்த கட்டுரைகளை அழகுணர்ச்சி என்றளவில் பேசி வசதியாக புறக்கணிப்பதா? எப்படி மெனக்கெட்டாலும் கழுவுற மீனுல நழுவுற மீன் போல துள்ளிக் குதித்து போய்க்கொண்டே இருக்கிறீர்கள். உங்களிடம் நூல் பிடித்தாற்போல ஒரு உரையாடல் நிகழ்த்துவதும் காளை மாட்டில் பால் கறப்பதும் ஒன்றுதான் போல. எல்லாமே குறைப்பிரசவமாக போய்விடுகிறது. ஆனாலும் தடங்களில் பதிந்து போவது உங்களைப் போன்றோர் உதிர்க்கும் நாவினால் சுட்ட வடுக்கள்தான். மொழி வசமிருக்கிறது என்ற ஒரே ஆயுதத்தைக் கொண்டு இணையத்தில் விமர்சகர்கள் என்ற பாணியில் புற்றீசல் போல நித்தம் பலர் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். குடிசைக்கும் கட்டிடத்திற்கும் மாளிகைக்கும் உள்ள வித்தியாசத்தை இனங்காணத் தெரியாமல்.. அப்படியே தெரிந்தாலும் மாளிகையை இடிக்கும் வேலைக்கு துணைபுரியும் அளவுக்கு எழுப்ப/அல்லது எழுப்பிய மாளிகையின் புகழ் பேச வாய் வராது. நான் முன்னேயே சொன்னதுபோல, இவை எல்லாம் பழகிப் போன திரைக்கதை முடிச்சுகள். வற்றாத ஜீவனுள்ள ராஜாவின் இசை அதையெல்லாம் தன்னுள் உள்வாங்கி சுத்தப்படுத்தி பயணித்துக் கொண்டெ இருக்கும்.

Guys: why waste time with this guy? He thinks Rehman makes good music and is comparable and better than Ilaiyaraja. We dont think so. I have never seen the same brilliance that I see in IR's compositions in others. These are subjective opinions. There is no point arguing with these types - I have seen many of them. Similarly, even in temrs of personalities, I so admire Ilaiyaraja. I see rehman as a fake - contrived personality - he has his cronies doing the nasty things. his humility act is a fake. But some people are naive and will fall for that. OK with that. People's tastes, opinions, likes and dislikes are heterogeneous. There is nothing right or wrong about these opinions. I come to this forum just to the IR threads so that we can discuss things we like about IR and his music. I hate when guys like this come and spoiling with this vitriol driven by whatever the agenda.

I request that we all dont respond to him for a few days so that he goes away. I hope the guy atleast respects that people come to this forum under IR sections not to have these types of discussions. If he wants to spit his hatred of IR, my only request is that he opens a seperate thread and spits all this vitriol and all those types can go there. That way they can leave us alone

Gopal.s
17th August 2014, 11:11 PM
Hi KR,
This is for your kind information.I never came to this thread on my own but got dragged by three of your friends. But I am surprised the way people with differing views are treated here . Anyway ,Thanks to Rajaram,Venki&Poem . Bye.

venkkiram
18th August 2014, 06:37 AM
Hi KR,
This is for your kind information.I never came to this thread on my own but got dragged by three of your friends. But I am surprised the way people with differing views are treated here . Anyway ,Thanks to Rajaram,Venki&Poem . Bye.
ஒரு ஆளுமையின் குணாதியங்களை விமர்சனம் செய்வதாகட்டும், அவரது பங்களிப்பை மற்றவர்களோடு ஒப்பிட்டு தரம் பிரிப்பதலாகட்டும் .. இருமுனை கத்திபோன்றது. நான் முன்பே சொன்னதுதான். உங்களின் பதிவில் கலகத்தனமே மேலோங்கியுள்ளது. அதனால் எதிர்வரும் விளைவுகளுக்கு நீங்களும் சமபாதியில் பொறுப்பேற்க வேண்டியதுதான். ஜெயமோகன் விஷயத்தில் கூட, அக்கட்டுரைகளின் சாராம்சத்தைக் கூட நீங்கள் தொடவில்லை. ஆனால் ஏழாம் மனிதர்கள், விஷ்ணுபுரம் என உரையாடலின் எல்லைகளை விட்டு தாண்டிச் சென்று அடம்பிடிக்கிறீர்கள். என்ன செய்வது? நான் முன்பே சொன்னதுபோல ஒரு நூல் பிடித்தாற்போல உங்களால் ராஜா விஷயத்தில் உரையாடல் நிகழ்த்த முடிவதில்லை என மீண்டும் மீண்டும் சபையில் நிரூபணம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ராஜா என வரும்போது ஒரு சாதாரண வெகுஜனப் பார்வைகளில் ஒன்றான "ராஜா வந்தார்-வென்றார்-சென்றார்" பாணியிலேயே ஒரு புரிதலை வைத்துக்கொண்டு அதையொட்டியே உங்களின் அபிப்ராயங்களை வளர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த நிலையில் இருந்துகொண்டு இங்குள்ள ராஜா ரசிகர்களோடு உங்களால் ஒரு அடி கூட உரையாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பது என் பார்வை.

Gopal.s
18th August 2014, 07:30 AM
Venkki,

I am not averse to arguments. You people want me to start with worship but the same is not possible. But the way ,your guys are mud-slinging the fellow hubbers like attributing illness,family,disrespectful expressions (it can be with public figures not with fellow hubbers in personal way). But I have no problem with you and Poem.But that "Guy" from U.S ,K.R sounds funny and weird.Anycase,I am going to write objectively on Ilayaraja avoiding technical descriptions but as you stated on Emotional-based ,cultural-linked enlisting his achievements and weak points. You are most welcome to voice your views.

Gopal.s
18th August 2014, 07:55 AM
ஒரு ஆளுமையின் குணாதியங்களை விமர்சனம் செய்வதாகட்டும், அவரது பங்களிப்பை மற்றவர்களோடு ஒப்பிட்டு தரம் பிரிப்பதலாகட்டும் .. இருமுனை கத்திபோன்றது. நான் முன்பே சொன்னதுதான். உங்களின் பதிவில் கலகத்தனமே மேலோங்கியுள்ளது. அதனால் எதிர்வரும் விளைவுகளுக்கு நீங்களும் சமபாதியில் பொறுப்பேற்க வேண்டியதுதான். ஜெயமோகன் விஷயத்தில் கூட, அக்கட்டுரைகளின் சாராம்சத்தைக் கூட நீங்கள் தொடவில்லை. ஆனால் ஏழாம் மனிதர்கள், விஷ்ணுபுரம் என உரையாடலின் எல்லைகளை விட்டு தாண்டிச் சென்று அடம்பிடிக்கிறீர்கள். என்ன செய்வது? நான் முன்பே சொன்னதுபோல ஒரு நூல் பிடித்தாற்போல உங்களால் ராஜா விஷயத்தில் உரையாடல் நிகழ்த்த முடிவதில்லை என மீண்டும் மீண்டும் சபையில் நிரூபணம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ராஜா என வரும்போது ஒரு சாதாரண வெகுஜனப் பார்வைகளில் ஒன்றான "ராஜா வந்தார்-வென்றார்-சென்றார்" பாணியிலேயே ஒரு புரிதலை வைத்துக்கொண்டு அதையொட்டியே உங்களின் அபிப்ராயங்களை வளர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த நிலையில் இருந்துகொண்டு இங்குள்ள ராஜா ரசிகர்களோடு உங்களால் ஒரு அடி கூட உரையாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பது என் பார்வை.

இசை அல்லது கலை என்பது மரபு,பாரம்பரியம் மற்றும் பிரத்யேக இன ,குண ,மனம் கொண்ட முன்னோர்களின் பங்களிப்பின் சங்கிலி கண்ணி நீட்சி. பழையதை ஒப்பிடாமல் ,இன்றைய பங்களிப்பை மட்டும் கொண்டாட முடியாது. நடுவில் மாட்டியவர்க்கோ பழையது,புதியது இரண்டும் அளவு கோலாய் நிற்பதை தவிர்க்க இயலாது.

ஒரு எழுத்தாளனையோ அல்லது இசை கலைஞனையோ ,அவன் படைப்புகளை அவன் தனிப்பட்ட வாழ்க்கையின் கூறுகளை கொண்டு(பிரத்யேக வெற்றி-தோல்விகள்,வியாபாரம் இவைகளும் சேர்ந்த) அளப்பதை தவிர்ப்பவன் நான்.

ஆனால் தமிழனாக,தமிழ் சூழலில்,இந்த ஆளுமைகள் பொதுவில் உதிர்க்கும் தத்துவ முத்துக்களை பொருக்க ,ஒரு பெரும் கூட்டமே அலையும் போது ,இவற்றை விமரிசிப்பதும் நம் சமூக கடமையாகி விட்டது.திருக்குறளும் ,சங்கங்களும் தோன்றிய அறிவு பூமியில், திருடாதே,பொய் சொல்லாதே,தூங்காதே என்று சொல்வதற்கே ,ஒரு நாயகர் தேவை பட்ட புண்ணிய பூமியில் அவதரித்த அதிர்ஷ்டம் செய்தவர்கள் நாம்.


இந்த சூழலில் ,திடீர் நாயகர்களை உருவாக்கி,பழைய சாதனைகள் புறம் தள்ள படும் போது ,அதுவும் 80களின் ஒரே agenda கொண்ட கும்பல் ஒன்று, nostalgia ,பரிச்சயம், limited exposure கொண்டு ஆளுமைகளை ,வலை தளத்தில் உருவாக்குவது தவிர்க்க முடியாதது. ஆனால் கலையின் தன்மையையே ஒரு ஆளுமைக்குள் அடக்கி சுரங்களை முதலில் கண்டவர்,மனங்களோடு இணைப்பை ஏற்படுத்தி கொண்ட முதல் படைப்பாளி என்று கலையையும் ,ஆளுமையையும் வைத்து அவியல் பண்ணும் போது ,என்னை மாதிரி கி.மு முதல் நேற்று வரை கலை,இலக்கிய தொடர்ச் சியோடு ஓரளவு பரிச்சயம் கொண்டவர்களின் ஒப்பீட்டால் நன்மை விளையுமே அன்றி,எக்காலமும் கலகம் உண்டாகாது.

புதிதாக வெட்ட பட்டதானாலும் கிணற்றிலேயே நீந்தி களிக்காமல் ,மிக பழமையான,புது புனல்களும் சங்கமமாகும் கடலில் நீந்துவதே எனக்கு உவப்பானது.



வலையை வைத்து கலையை கண்டறிய முடியாது. கலகத்தை வைத்து ஓரளவு கண்டறிய தலை படலாம்.

rajaramsgi
18th August 2014, 09:04 PM
guys: Why waste time with this guy? He thinks rehman makes good music and is comparable and better than ilaiyaraja. We dont think so. I have never seen the same brilliance that i see in ir's compositions in others.

kr,


கோபாலுக்கு ராஜா சாரின் இசையை தவிர வேறொன்றும் அவரிடம் பிடிக்கவில்லை.அவ்வளவு தான். அவர் ரஹ்மானை உயர்த்தி ராஜாவை மட்டம் தட்டி பேசவில்லை. - அப்படி பேசினாலும் தவறில்லை. இருவருமே தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அவர்கள் சரியாக பயணிக்கிறார்கள். ஒப்பிட்டு பேசுவதால் அவர்கள் இருவரும் குறைந்து விட போகிறார்களா என்ன?

கோபாலின் பதிவுகளை படிக்கும் போது அவருடைய தன்னம்பிக்கை தெரியும். நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. என்னுடைய கோபம் எல்லாம் ராஜா சாரை கோபாலும் இன்னொருவரும் மதுரகீதங்கள் திரியில் (நிறைய ஓல்ட் கிளாசிக் பாடல்கள் அங்கு கிடைக்கும் ) சற்று மரியாதை குறைவாகவும் ஏளனமாகவும் பேசிவிட்டார்கள் என்பது தான். ஒரு முறை இரு முறை அல்ல.. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம். - அது நிச்சயம் தவறு, இதை சொன்னால் மறுபடியும் கோபால் ஏதாவது எழுதுவார். சொல்லி விட்டு போகட்டும்.


ஒரு மாறுதலுக்காக, யாரவது ராஜா சாரை பற்றிய துணுக்கு செய்தி இருந்தால் எழுதுங்களேன்... ஒரு ரேர் போட்டோ இருந்தாலும் ஓகே தான்.


போயம், வெங்கிராம்: நன்றி.

venkkiram
18th August 2014, 09:28 PM
கிராமஃபோன்: இளையராஜாவின் பாடல் பெற்ற ஸ்தலங்கள்!

http://tamil.thehindu.com/opinion/columns/article6325467.ece

rajaramsgi
19th August 2014, 01:46 AM
"பக்தி மணம் கமழும் இசைஞானியின் படைப்புகள்" சிறப்புக் கருத்தரங்கு ஆகஸ்ட் 16, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் !!!


3482


No coverage found on recent the function yet.. but a photo and his comments about girivala pathai encroachments on the link http://tamilcinema.com/ilayarajas-visit-to-tiruvannamalai/

rajaramsgi
20th August 2014, 01:26 AM
அப்போது நான் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பொறியியல் இரெண்டாவது ஆண்டு படித்த நேரம். என் தாத்தாவிடம் கெஞ்சி கூத்தாடி அவருடைய காரில் இருந்த ஓஷன் கேசட் ப்ளேயரை கழட்டி வாங்கி வந்து ரூமில் செட் பண்ணி வைத்திருந்தேன். அம்ப்லிபயர் வழியாய் , பானையில் ஸ்பீக்கர் கட்டி ஹாஸ்டல் ரூமில் எந்த நேரமும் ராஜா சாரின் பாடல்கள் தூள் பறப்பது வழக்கம். .

வேதம் புதிது மற்றும் கொடி பறக்குது ஆகிய இரண்டு படங்களிலும் அடி வாங்கிவிட்டு, கல்கியில் என் உயிர் தோழன் தொடரை பாரதிராஜா எழுதி வந்தார். ராஜா சாரை மனதில் வைத்து தான் இதை எழுதி இருக்கிறார் என்று நினைத்து நானும் விடாமல் கல்கி படித்தேன். முடிவுரை எழுதாமல், திடீரென தொடரை நிறுத்தி விட்டார். பிறகு அதையே படமாக்கி வெளியிட இருந்தார்.


ராஜா சாரும் பாரதிராஜாவும் இனைந்து மீண்டும் வேலை செய்ய போவதாய் விளம்பரம் வந்தது. இவர்கள் சேர்ந்து விட்டார்கள் என்று தெரிந்த எங்களுக்கு படம் மற்றும் பாடல் வெளியீட்டுக்காக காத்திருந்த நாட்கள் நரக வேதனையான நாட்கள்.


ஒரு வழியாய் படம் வெளியீடு என்று விளம்பரம் வந்தது, ஆனால் சிதம்பரத்தில் படம் ரிலீஸாகவில்லை. எங்கெங்கு ரிலீஸ் என்று தெரியாமல், நண்பர்கள் ரமேஷ் மற்றும் பாலாவோடு கடலூர் சென்றேன். அங்கும் ரிலீஸ் இல்லை. மிகுந்த ஏமாற்றத்தோடு அரங்கேற்ற வேலை படம் பார்த்துவிட்டு வந்தோம். ஆனால் என் உயிர் தோழன் ஏக்கம் போகவில்லை.


மற்றொரு நாள் கும்பகோணத்தில் படம் வெளியீடு என்று தெரிந்து ஏக குதுகூலம். (பாண்டியன் திரை அரங்கம் என்று நினைவு) ஆனால் கையில் காசு இல்லை. அதே ரமேஷ், பாலாவோடு ரயிலில் டிக்கட் எடுக்காமல் கும்பகோணம் சென்று என் உயிர் தோழன், டிக்கட் எடுத்து, பார்த்தோம். கடலோர கவிதைகளுக்கு பிறகு மூன்றாண்டு காலம் காத்திருந்து, குயிலு குப்பம் மூலமாய் பம்பர் பரிசு அடித்தது. பாடல் கேட்ட முதல் முறையே சொக்கி போய் இன்று வரை என்னுடைய ஆல் டயம் க்லாசிக்ஸில் இடம் பெற்றிருக்கிறது. மிகவும் தாமதாய் சிதம்பரம் லேனாவில் வெளியிட்டார்கள். பாரதிராஜா கிட்டார் வாசிக்க, ராஜா சார் அருகில் இருப்பது போல் விளம்பரம் வந்தது, . இப்போது நினைத்தாலும் சுகமாய் இருக்கும்.


பொறியியல் மூன்றாம் ஆண்டில் புது நெல்லு புது நாத்து வந்தது . இதிலும் ஒரு பம்பர் பரிசு. இந்த படத்தில்2. பூ பூ பூ பூ பூத்த சோலை.. சிட்டான் சிட்டான் குருவி, இந்த ஹம்மிங் நினைவிருக்கிறதா? முதலாவது இடை இசையில் ஹே ஹே, ஹெ ஹ ஹே ஹே, ஆஹ ஆஹா அஹா ஹா ஹா..... இதே ஹம்மிங் சரணத்தின் வரிகளின் நடுவில் ஹா ஹா என்று..... கொஞ்சுவார் ராஜா சார். எனக்காக இந்த பாடலின் ஹம்மிங்கை கூர்ந்து கேளுங்கள். . புது நெல்லு புது நாத்து வந்த நேரம் காலேஜ் கல்சுரல்ஸ்..பாண்டிச்சேரி சென்று சரக்கு வங்கி வந்து குடித்து விட்டு விடாமல் தினமும் பார்த்த படம் இது. படம் பார்த்து விட்டு வந்து மறுபடியும் சரக்கு பிறகு கல்சுரல்ஸ்.. நல்ல நேரம் அதெல்லாம் :-)


கடைசி வருடம் படிக்கும் போது நாடோடி தென்றல்..மறுபடியும் பம்பர் பரிசு: மணியே மணி குயிலே. படம் ஆரம்பித்த 25 வது நிமிடத்தில், ரஞ்சிதாவுக்கு கார்த்திக் மூக்கு குத்தி விடும் காட்சி: ஒரு 2 நிமிடம் வரும் கட்சிகளும் பின்னணி இசையை எதோடு ஒப்பிடுவது? எதிர் நீச்சலிடும் வாத்து, நீர்வீழ்ச்சி, கிரேன் காட்சி, மயில் இறகால் ரஞ்சிதாவின் மூக்கை வருடும் கார்த்திக்.. - குடுத்து சிவந்த கரமல்லவா ராஜா சாருக்கு, இந்த 2 நிமிடம் வரும் இசைக்கு மயங்காதவன் முற்றும் துறந்த ஞானி தான், சந்தேகமே இல்லை. இந்த படத்தை கல்லூரியின் கடைசி நாளில் எங்கள் வகுப்பிலிருந்து அனைவரும் சென்று வடுகனாதனில் பார்த்தோம். இதுவும் மறக்க முடியாத படம்.


மறுபடியும் இந்த இருவரும் இனைந்து திரைப்படத்தில் வேலை செய்யாவிட்டாலும், தெற்கத்தி பொண்ணு சீரியலுக்கு டைட்டில் பாடல் போட்டு குடுத்திருக்கிறார். இவர்கள் மீண்டும் இனைந்து ஒன்னும் புதியதாய் கிழிக்க போவதில்லை. ஆனால் சேர்ந்திருந்த காலங்களில் வந்த முத்துகளின் விலை கொஞ்ச நஞ்சம் இல்லை.

rajaramsgi
20th August 2014, 01:39 AM
இதை இப்போது இங்கு எழுத காரணம்? என் உயிர் தோழன் முழு படத்தையும் நேற்று யாரோ ஒரு புண்ணியவான் யூடியூபில் ஏற்றி இருக்கிறார். அதை முழுவதும் பார்த்து விட்டு தான் தூங்கினேன்.மனம் முழுவதும் நான் கல்லூரி படித்த காலகட்டத்தில் வந்த பாரதிராஜா - ராஜா சார் படங்கள் நினைவில் வந்து வாட்டி எடுத்து விட்டது. அதனால் இங்கு கிறுக்க வேண்டியதாகி விட்டது.

https://www.youtube.com/watch?v=UxNLfxx0zY4

https://www.youtube.com/watch?v=yUrIBNQu-84 (https://www.youtube.com/watch?v=yUrIBNQu-84)

https://www.youtube.com/watch?v=ZqCcGTVVlTU (https://www.youtube.com/watch?v=ZqCcGTVVlTU)

venkkiram
20th August 2014, 08:55 AM
வசிகரிக்கும் நடை ராஜாராம்! தொடர்ந்து எழுதுங்க ..

நாடோடித் தென்றல் படத்தை நானும் எனது பள்ளி நண்பன் ஒருவனும் மயிலாடுதுறை கோமதி தியேட்டரில் கண்டு களித்தோம். பனிரெண்டாம் வகுப்பு முடிந்து நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்களுக்காக மயிலாடுதுறைக்கு வந்து சென்று கொண்டிருந்த காலக் கட்டம். இளையராஜா- பாரதிராஜா அதுவும் ஒரு பீரியட் படம். படைப்பாளிகளுக்காகவே திரைப்படம் பார்க்கும் பழக்கம் அரும்பிக் கொண்டிருந்த பருவம் அது.

பாடல்கள் முன்னரே வெளியாகி எங்கு சென்றாலும் மணியே மணிக்குயிலே, யாரும் விளையாடும் தோட்டம், சந்தன மார்பிலே பாடல்கள் காற்றில் கரைந்து கொண்டே இருந்தன. வைரமுத்து இல்லாத இடத்தை ராஜாவே ஆக்ரமித்து பாடல்கள் முழுவதையும் எழுதியிருந்தார். தியேட்டரில் பத்து பதினைந்து நபர்கள்தான் இருப்பார்கள் மொத்தமாகவே எங்களையும் சேர்த்து. பால்கனியில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தோம். முதல் இருபது நிமிடங்களுக்கு எங்களால் படத்தோடு ஒன்றமுடியவில்லை. காரணம் திரைக்கு மிக அருகே அமர்ந்திருந்த ஒருவர் படத்தை ஒன்றுக்கு மேற்பட்ட படத்தை பார்த்திருப்பார் போல. ஒவ்வொரு வசனத்தையும் திரையில் வருவதற்கு முன்னரே மிகவும் சத்தமாக எழுப்பிக் கொண்டிருந்தார். பால்கனியிலிருந்து ஒருவர் பொறுமையிழந்து கீழே இறங்கி திட்டிவிட்டு வந்தபிறகே எல்லோராலும் பின்னணி இசை, வசனங்களோடு ஒன்ற முடிந்தது.

நீங்கள் குறிப்பிட்டிருந்த மூக்கு குத்தும் காட்சியின் பின்னணி இசை காவியமான ஒன்று. பாடல்கள் மட்டுமே படத்தின் தூணாக இருந்ததை உணர்ந்த போதுதான் பாரதிராஜாவும் கமலைப் போலவே (விக்ரம்) சுஜாதாவின் கதையை படமாக்கி மோசம் போய்விட்டாரே, இவருக்கு செல்வராஜ் போன்றவர்கள்தான் லாயக்கு என நினைத்தேன்.

இன்றைக்கும் இப்படத்தை இப்படி சிலாகித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் இசைஞானியின் பாடல்களும், பின்னணி இசையும் மட்டுமே. கார்த்திக்கும் நடிப்பில் சொதப்பியிருப்பார். நடிப்பு என்றால் என்ன விலை எனக் கேட்டும் ரஞ்சிதா ஒரு புதுமுகம். ஜனகராஜ் பாண்டியன் யாருக்குமே சொல்லிக் கொள்வதுபோல அழுத்தமான காட்சிகள் இல்லை.

படத்தோடு பார்க்கும்போது 'ஏலமலை காட்டுக்குள்ள' பாடல் எங்கேயோ கொண்டு சென்றது. மலேசியா வாசுதேவன் குரல் விஸ்வரூபம் எடுத்த பாடல் அது. ஏக்கமான அதே நேரத்தில் இயலாமை, சோகம் என பலவித உணர்ச்சிகளை கொட்டி செதுக்கியிருப்பார். ஒரு கணம் ஒரு யுகமாக - பாடலில் ராஜா தனது டூயட் பாடல்களின் புகழ்பெற்ற இணை குரலான ஜானகியோடு சேர்ந்திருப்பார். மணியே மணிக்குயிலே - ராஜா ஆரம்பித்துக் கொடுக்க மனோவும், ஜானகியும் சிறப்பாக பாடி முடித்திருப்பார்கள். பள்ளி முடிந்து கல்லூரி சென்றபிறகும் அடிக்கடி எல்லோராலும் கேட்டு ரசிக்கப் பட்ட பாடல். (அதுவும் விடுதியில் இரவு நேரங்களில்) "சந்தன மார்பிலே" - மனோ-ஜானகி குரல்களில்.. ஜானகிக்கு கிடைத்த மூன்று பாடலுமே ஒன்றுக்கொன்று வேறுபடும் உணர்வு பாடல்கள். பன்முகத் திறமைக்கே பிறந்த பாடகி அல்லவா அவர்.. எல்லாவற்றிலும் முத்திரை பதித்திருப்பார். மால்குடி சுபா - அப்போதைய நேரத்தில் நவீன, வசிகரிக்கும் குரல். மேற்கத்திய வகைப் பாடலான (படத்தில் மேற்கத்திய பெண் பாடுவது) ஆல் த டைம் மூலம் ராஜா சிறப்பானதொரு அறிமுகத்தைக் கொடுத்திருப்பார்.

அடைமொழி என்னவோ இயக்குனர் இமயம். ஆனால் இமயத்தின் படைப்பை இந்த நொடிவரை தாங்கிப் பிடிப்பதே ராஜாதான்.

Gopal.s
20th August 2014, 09:33 AM
உண்மை. நாடோடி தென்றல் ஒரு அரைவேக்காட்டு படம். இளைய ராஜாவின் அற்புதமான பாடல்கள் ,படத்தை ஓரளவுதான் தாங்கி பிடிக்க முடிந்தது. சுஜாதா- பாரதிராஜாவின் மெகா சொதப்பல்.கார்த்திக் பெரிய mis -cast . ராமராஜனே பொருந்தியிருப்பார்.



அத்தனை பாடல்களும் அருமை.

krish244
20th August 2014, 11:34 AM
IR ready to compose for 10-min short film directed by students of LV Prasad film and TV academy:

"...Ilayaraaja said, "I am ready to compose music for a 10-minutes silent movie the students will make as part of their diploma project." The announcement was welcomed by a huge applause from a large gathering of students who attended the convocation of the academy.

He also said this 10-minute music note would be composed before the public. Ilayaraaja said LV Prasad was a man who made movies with values and social messages. "Students who come out of this film academy should not only make good movies, but they should also carry forward his legacy," he said. ..."

http://timesofindia.indiatimes.com/city/chennai/Ilayaraaja-to-compose-music-for-students-10-min-silent-film/articleshow/40438441.cms

thanks,

Krishnan

rajaramsgi
20th August 2014, 04:55 PM
நான் சொன்ன மூன்று படங்களிலும் நல்ல கதை, பாடல்கள் இருந்தும், படம் பண்ணிய விதத்தில் சுவாராசியம் கம்மியானதால், குப்பைக்கு சென்றுவிட்டன.


இப்போதும் கூட அவருடைய மண்வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள் பார்த்தால் எனக்கு சிலிர்க்கும். மண்வாசனை ஒச்சாயி கிழவி பற்றி என்னுடைய தமிழாசிரியர், தஞ்சை ஆழி ஐயா, நாள் கணக்கில் பாடம் எடுத்ததை இப்போது நினைவு கூறுகிறேன்.


எப்படியோ கதை சொல்லி, நல்ல பாடல்களை ராஜா சாரிடம் வாங்கி இருக்கிறார். உருப்படாத வாலிபமே வா வா படத்தில் கூட அழகே உன்னை கொஞ்சம் கண்கள் எழுத வா வா.. சுசீலாவும், வாசுதேவனும் பிரமாத படுத்தி இருப்பார்கள். உயர்ந்த இசையில், புலமைபித்தனின் எளிமையான வார்த்தைகள்,


வானில் இன்று மேக ஊர்வலம்
யாரை தேடி போகுமோ?
ஏழு வண்ண வானவில்லிலே
மாலையாக சூட்டுமோ?
மலையில் அங்கும் இங்கும் பச்சை மரகதம்
இயற்க்கை அன்னை தந்த அன்பின் தரிசனம்
அழகை விழியில் அளப்போம் வா வா வா...

https://www.youtube.com/watch?v=wb_qyFZKxzU

Russellhaj
23rd August 2014, 08:05 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/p600x600/10516835_927843463898326_5828911773065445262_n.jpg

Russellhaj
23rd August 2014, 08:09 PM
திருவண்ணாமலைக்குப் போன கதை . . .




’சுகா! நான் ஃபேமிலியோட கெளம்பி திருவண்ணாமலைக்குப் போயிக்கிட்டிருக்கேன். நீங்க எப்ப வரீங்க?’

‘கிழக்குச்சீமையிலே’ எழுதிய பேராசிரியர் ரத்னகுமார் ஃபோனில் கேட்டார்.

‘ஸார்! நானும் டாக்டரும் நைட்டு கெளம்பி வந்துடறோம்’ என்றேன்.

‘டாக்டர் வீடியோகேம் கார் ஓட்டுவாரேய்யா! பாத்து பத்திரமா வந்து சேருங்க.



டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ், சென்னையின் குறிப்பிடத்தக்க குழந்தைநல மருத்துவர். வெளிவர இருக்கும் ‘மேகா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர். அறிமுகமான மிகக்குறுகிய காலத்தில் அத்தனை நெருக்கமானவர். அதற்கான எக்ஸ்டிரா காரணம், டாக்டருக்கு சொந்த ஊர் திருநவேலி. டாக்டரின் டிரைவிங் பற்றி பேராசிரியர் சொன்னது உண்மைதான். கடந்த மாதத்தின் ஓர் இரவில் சென்னையிலிருந்து டாக்டரின் இன்னோவா காரில் பேராசிரியர், நான், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலாஜி, சீத்தாராமன் போன்றோர் பண்ணைப்புரத்துக்குப் பயணமானோம். டாக்டர் ஆல்பர்ட்தான் கார் ஓட்டினார். அவரது இருக்கைக்கு அருகில் நான். கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வரும் லாரியை நோக்கி உதடு குவித்து, நொடிப்பொழுதில் ஏமாற்றி, ஸ்டியரிங்கை வளைத்து ’ழ’ என்று ரோட்டில் கார் டயர்களினால் எழுதிக் காண்பித்து, காரில் இருந்த அனைவரின் மலச்சிக்கலையும் மருந்து கொடுக்காமல் குணமாக்கினார், டாக்டர். இடையிடையே வரும் ஃபோன் கால்களையும் அட்டெண்ட் செய்து பேசினார்.

‘சொல்லுங்கம்மா. . .

கொளந்தைக்கு என்ன வயசாகுது? . . .

சரிசரி . . . ஒண்ணும் பயப்பட வேண்டாம் . . . ப்ரிஸ்க்ரிப்ஷன்ல ரெண்டாவதா எளுதியிருக்கிற மருந்துல அஞ்சு எம்.எல் குடுங்க . .

முன் அனுபவம் காரணமாகவே பேராசிரியர் தனியாகக் கிளம்பி திருவண்ணாமலைக்குச் சென்றார்.

திருவண்ணாமலையில் இளையராஜா அவர்களின் நூல்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே நாங்கள் சென்று கொண்டிருந்தோம். இந்தமுறையும் டாக்டருடன் நான் முன் இருக்கையில் அமர்ந்துகொள்ள, பின் சீட்டில் பெல்ட்டை உடம்பு முழுக்க இறுக்கிப் போட்டு, அண்ணாமலையாரை வேண்டியபடி, அமர்ந்திருந்த பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணனின் உதடுகள் அரைகுறையாக கந்தரலங்காரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தன. காதில் விழுந்த வார்த்தைகளை கவனித்துக்கேட்டபோது, அது தேனி கண்ணனே எழுதியவை என்பது புரிய வந்தது. டாக்டருடன் பயணிக்கும் போது இளையராஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை பென்டிரைவில் நான் கொண்டு செல்வதால், ரோட்டை கவனிக்காமல் இசைக்குள் சென்று விடுவேன்.

நள்ளிரவில் நாங்கள் திருவண்ணாமலைக்குள் நுழைந்த போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. காலையில் ரமணாசிரமத்துக்குச் சென்று இளையராஜா ஸாரைப் பார்த்துவிட்டு, நிகழ்ச்சிக்கு செல்வதாகத் திட்டம். ஏதேதோ பேசிவிட்டுத் தூங்கும்போது விடிந்திருந்தது.

‘இன்னும் ரெடியாகலயாய்யா?’

இளையராஜா ஸார் ஃபோனில் சத்தம் போடவும், அவசர அவசரமாக எழுந்து, பல் தேய்த்து, குளித்து ரமணாசிரமத்துக்குக் கிளம்பிச் சென்றோம்.

‘ம்ம்ம். ஆசிரமத்தை சுத்திட்டு, கோயிலுக்குப் போங்க. 11 மணிக்கு நிகழ்ச்சி. நான் வந்துடறேன்’.

கோயிலுக்குள் நுழைந்து நிகழ்ச்சி நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம் அருகே சென்றபோது, நெளிந்த குரலில் யாரோ ’சொல்லடி அபிராமி’ என்று பாடிக் கொண்டிருந்தார். அவர் பாடி முடிக்கவும், அவர்தான் டி.எம்.சௌந்தர்ராஜனின் பேரன் என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பேராசிரியர் ரத்னகுமார் குடும்பத்தினருடன், நானும், டாக்டர் ஆல்பர்ட்டும் பார்வையாளர்களுடன் சென்று அமர்ந்து கொள்ள, சில நிமிடங்களில் இளையராஜா அவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். உடன் கவிஞர்கள் முத்துலிங்கம், மு.மேத்தா, சொற்கோ, இளையகம்பன், கோ.சாரங்கபாணி மற்றும் தோழர் ஸ்டாலின் குணசேகரன் போன்றோரும் மேடையேறினர். அதற்கு முன்னால் ஸ்டாலின் குணசேகரனிடம் தேனி கண்ணன் என்னை, ‘இவர்தான் சுகா’ என்று அறிமுகப்படுத்தவும், ‘பேர் மட்டும் சொன்னா போதும். மத்தபடி இவரப் பத்தி எல்லாம் தெரியும்’ என்றபடி மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார், தோழர் ஸ்டாலின் குணசேகரன்.

இளையராஜா அவர்கள் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவர் பேசுவதாக நிகழ்ச்சியின் அழைப்பிதழ் சொல்லியது. விழா துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி மற்றும் அவரது சகோதரரும், கல்வியாளரும், ரசனையான எழுத்தாளருமான எஸ்.கே.பி.கருணாவும் இளையராஜா அவர்களுக்கு மாலையணிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்றனர். நண்பர் எஸ்.கே.பி.கருணா உணர்ச்சிமயமாக, அதேசமயம் உண்மையாகப் பேசினார். சுருக்கமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பேசி முடித்ததும் இளையராஜா அவர்களுடன் தற்போதைய ஃபேஷனான ‘செல்ஃபி ஃபோட்டோ’ ஒன்றை எடுத்துக் கொண்டார்.



எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல், முழுக்க முழுக்க ராஜா ஸார் அழைத்தாரே என்கிற ஒரே காரணத்துக்காக அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த எனக்கு கவிஞர் முத்துலிங்கத்தின் துவக்கவுரை அத்தனை சுவாரஸ்யமாக அமைந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அத்தனை எளிமையான தமிழில் சுவையாக அமைந்தது கவிஞரின் பேச்சு. அடுத்து வந்த இளையகம்பன், இளையராஜா அவர்களை வர்ணித்து கவியரங்கத்தில் வாசிக்கப்படும் கவிதைகளைப் பாடி அமர்ந்தார். அடுத்து வடநாட்டு உடையில் பளபளப்பாக வந்த சொற்கோ உரத்த குரலில் இளையராஜா அவர்களின் வெண்பா குறித்து பேசிக் கொண்டிருந்தபோது மேடையேறினார் தமிழக அமைச்சர் மாண்புமிகு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். உடன் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா மற்றும் கழகத்தைச் சார்ந்த அணுக்கத் தொண்டர்கள். நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ உட்கார வைக்கப்பட்டார். அமைச்சர் பெருமகனார் கையில் டைப் செய்யப்பட்ட சில காகிதங்களுடன் பேச வந்தார். தமிழ் இலக்கியம் என்றால் என்ன? திருவள்ளுவர் என்பவர் யார்? தமிழ் மொழியின் மகத்துவம் என்ன? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வண்ணம் சுவைபட, டைப் செய்யப்பட்ட அந்தப் பக்கங்களை வாசித்தார். ஐந்தாறு பக்கங்களை அவர் வாசித்து முடிக்கும்போது, மேலும் சில டைப் பக்கங்களை அவரது உதவியாளர் கொண்டு வந்து அமைச்சர் கைகளில் கொடுத்தார். ஏற்கனவே பசியிலும், தூக்கத்திலும் இருந்த நான், அருகில் அமர்ந்திருந்த பேராசிரியரின் தோள்களில் சாய்ந்தேன். தாயுள்ளத்துடன் என் தலையைத் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார் பேராசிரியர். அமைச்சருக்கு அடுத்து பேச வந்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா, ’அன்பான வாக்காளப் பெருமக்களே’ என்று தொடங்கி சுவைபடப் பேசினார். பின் இளையராஜா அவர்களை வணங்கிவிட்டு, எல்லோரும் மேடையைவிட்டு இறங்கிச் சென்றனர்.


மீண்டும் நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ வெண்பாவைப் பற்றிப் பேச வந்தபோது, மணி மதியம் இரண்டை நெருங்கியிருந்தது. இப்போது மேடையிலும், கீழேயும் அமர்ந்திருந்த அனைவரின் உடைகளும் நனைந்திருந்தன. அத்தனை பசியிலும், களைப்பிலும் கவிஞர் சொற்கோ உறுமினார். அறைக்குச் சென்று நிச்சயம் இருமியிருப்பார். சொற்கோவின் உடல்நலனில் அக்கறை கொண்ட கவிஞர் முத்துலிங்கம் அவரை அமரச் செய்து, அடுத்து மு.மேத்தாவைப் பேச அழைத்தார். இளையராஜா அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களைப் பற்றிப் பேசிவிட்டு கவிஞர் மு.மேத்தா அமர்ந்தபோது, களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. அடுத்து புலவர் கோ.சாரங்கபாணி வந்து பாடினார். தன்னை தினமும் காலையில் இளையராஜா அவர்களின் பாடலொன்றுதான் தூக்கத்திலிருந்து எழுப்பி விடுகிறது என்று சொல்லி, முழுப்பாடலையும் பாடினார். அவர் பாடிய அந்தப் பாடல், புதுவை அரவிந்தர் அன்னையைப் பற்றி கங்கை அமரன் அவர்கள் இயற்றி, இசைத்து, பாடிய பாடல். இப்படியாக அவர் ஒரே பாடலின் மூலம் இளையராஜா அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.



மதிய உணவு நேரம் எப்போதோ கடந்து விட்டிருந்தது. ஆனாலும் கூடியிருந்த மக்கள் அனைவரும் இளையராஜா அவர்களின் ஏற்புரைக்காக பொறுமையாக அமர்ந்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேச வந்தார். வருடந்தோறும் ஈரோட்டில் சிறப்பான முறையில் புத்தகக் கண்காட்சி நடத்துகிற செயல்வீரர், அவர். மக்களோடு மக்களாக தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிற தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேசத் துவங்கிய ஐந்து நிமிடங்களிலேயே கூட்டத்தை தன்வசப்படுத்தினார். இன்னும் சிறிதுநேரம் பேசமாட்டாரா என்று எதிர்பார்க்க வைத்த பேச்சு. ஏற்புரையை இளையராஜா அவர்கள் மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ள, கொளுத்தும் வெயிலில் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், கொதிக்கும் கல்தரையில் ஓட்டமும், நடையுமாக அவரைப் பின் தொடர்ந்து ரமணாசிரமம் சென்றோம். மதிய உணவு, சாயங்கால பூஜை, எனது அடுத்த படம் பற்றிய அலோசனைகள் போன்றவற்றை முடித்துவிட்டு ரமணாசிரமத்தை விட்டுக் கிளம்பும் போது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.



‘என்னைச் சந்திக்காமல் போகக் கூடாது’ என்று அன்புக்கட்டளை இட்டிருந்த நண்பர் எஸ்.கே.பி.கருணாவை அவரது கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த விருந்தினர் மாளிகையில் சந்திக்கச் சென்றோம். வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து இரண்டு முறை தேநீர் வழங்கி, சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார், கருணா. கருணாவின் கலாரசனையை ஏற்கனவே அவரது எழுத்து மூலம் நானறிவேன். உடன் வந்த டாக்டர் ஆல்பர்ட்டும், தேனி கண்ணனும் அந்த முதல் சந்திப்பிலேயே கருணாவின் ரசிகர்களானார்கள். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தனது விருந்தினர் மாளிகையைச் சுற்றிக் காண்பித்த நண்பர் கருணா, ‘இனிமேல் திருவண்ணாமலைக்கு நீங்க வர்றதா இருந்தா, எனக்கொரு ஃபோன் பண்ணிட்டு நேரே இங்கே வந்திரணும். வேற எங்கேயும் தங்கக் கூடாது’ என்றார். மழை நின்றபாடில்லை. ‘ஒண்ணும் பிரச்சனையில்ல. டின்னர் ரெடி பண்ணச் சொல்றேன். சாப்பிட்டுட்டு, நைட் தங்கிட்டு காலைல கூட நீங்க போகலாம்’ என்றார், கருணா. டாக்டரைப் பார்த்தேன். ‘பரவாயில்லண்ணே. கெளம்பிடலாம். போற வழில சாப்டுக்குவோம்’ என்றார் டாக்டர் ஆல்பர்ட். கருணாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.


மீண்டும் வீடியோ கேம் கார். ’இனிமேல் ராஜாஸார இந்த மாதிரி நிகழ்ச்சிலல்லாம் கலந்துக்கக்கூடாது, ஆல்பர்ட்’ என்றேன். ‘கரெக்டுண்ணே. நீங்கதான் அவர்கிட்ட சொல்லணும்’ என்றபடி ஸ்டியரிங்கை ஒரு சுற்று சுற்றி, இந்தமுறை கார் டயர்களினால் ரோட்டில் ‘ஞ’ எழுதிக் காண்பித்தார். பின்னணியில் கேட்டுக் கொண்டிருந்த ’அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்’ என்கிற ‘ஜப்பானில் கல்யாணராமன்’ பாடலையும் மீறி ஒலித்தது, இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த சீட்பெல்டுக்குள் இருந்த தேனி கண்ணனின் கந்தரலங்காரம்.

rajaramsgi
24th August 2014, 12:03 AM
நினைத்தேன் ஏதாவது காமெடி நடக்குமென்று..

விழா நேரமே தப்பு.. 11 மணிக்கு ஆரம்பித்து அத்தனை புத்தங்களை பற்றி நீட்டி முழக்கி, கரை வெட்டிகளின் இடையூறுகளை தாண்டி எப்படி மதிய உணவு நேரத்துக்குள் முடிக்க முடியும்?


விழா ஏற்ப்பாட்டாளர்கள் எப்படியோ செய்ய நினைத்து இப்படி சொதப்பிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.



மாண்புமிகு மற்று அன்பான வாக்கால பெருமக்களை நிகழ்ச்சிக்கு அழைத்தது தவறு...
இரும்படிக்கும் இடத்தில் இவர்களுக்கு என்ன வேலை?
உண்மையில் ராஜா சாருக்காக வந்தவர்கள், நேரத்துக்கு வந்து அவர் போகும் வரை இருப்பதல்லவா மரியாதை?


பொற்கோவின் தமிழ் காலத்துக்கும் நிற்கும், ஆனால் மாண்புமிகு என்கிற மரியாதை? அண்ணாமலையார் அல்ல, அம்மா நினைத்தால் நொடியில் மறைந்து போகும்.


இனிமேல் ராஜா சார் இந்த மாதிரி நிகழ்ச்சிலல்லாம் கலந்துக்கக்கூடாது.. நாங்களும் அதான் சொல்றோம் சுகா சார்.. செறிவூட்டும் இலக்கிய இசை விழாக்களில் பார்வையாளராக மட்டும் ராஜா சார் கலந்து கொள்ளட்டுமே. ரஜினியும் இப்போதெல்லாம் அப்படி போகிறாராம்.

rajsekar
24th August 2014, 08:31 PM
Thanks, Poem, for posting Maestro's photo at Guruvayoor. It's indeed great to see two great legends together. As many of you know, our Maestro is standing before the life statue of Sree Guruvayoor Kesavan who is considered to be one of the most ardent devotees of Lord Krishna. "Gajarajan Kesavan" as he was fondly called, always carried Krishna's statue around the temple during the evening rituals. Kesavan died on Ekadashi day in 1976 while fasting. When Kesavan was dying, he came and stood before the main sanctum by stretching his trunk pointing to Lord Krishna as Namaskaram and took his last breath. The Devasvom board and devotees decided to erect Kesavan's statue in East Nada, perhaps the only life statue dedicated to an animal. May Lord Krishna and Kesavan bless our Raaja with good health and spirit to enable him to rise further with his mesmerizing music and presence. It's been a year since I attended "Raaja The Raaja" London O2 concert - it was indeed a musical rain in London. I haven't seen the recording of the concert being posted anywhere. Maestro rendered 42 songs without any interruptions, except for Kamal's arrival.

venkkiram
24th August 2014, 09:12 PM
தன்னை தினமும் காலையில் இளையராஜா அவர்களின் பாடலொன்றுதான் தூக்கத்திலிருந்து எழுப்பி விடுகிறது என்று சொல்லி, முழுப்பாடலையும் பாடினார். அவர் பாடிய அந்தப் பாடல், புதுவை அரவிந்தர் அன்னையைப் பற்றி கங்கை அமரன் அவர்கள் இயற்றி, இசைத்து, பாடிய பாடல். இப்படியாக அவர் ஒரே பாடலின் மூலம் இளையராஜா அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.


வெடித்துச் சிரித்தேன்!!

rajaramsgi
25th August 2014, 03:11 AM
It's been a year since I attended "Raaja The Raaja" London O2 concert - it was indeed a musical rain in London. I haven't seen the recording of the concert being posted anywhere. Maestro rendered 42 songs without any interruptions, except for Kamal's arrival.

இன்று காலை கிழக்கு லண்டனில் ரெட்ப்ரிட்ஜ் என்கிற ஊருக்கு ஒரு தேவைக்காக மனைவி மற்றும் மகனுடன் செல்ல நேர்ந்தது. வேலை முடிந்து மதியம் ரெட்டிங் கிளம்பலாம் என்று நினைத்த நேரத்தில், வெயில் உடம்பில் படவும், லண்டன் சென்று சுற்றி விட்டு மாலை ஊருக்கு போகலாம் என்று முடிவு செய்தோம்.

ரெட்டிங் என்கிற ஊரில் நான் குடியிருந்தாலும் லண்டனிலிருந்து வெகு தூரம் இல்லை. நெரிசல், ஒரு வழி சாலைகள், ஸ்பீட் கேமரா என்று எனக்கு பிடிக்காதவை அங்கு அதிகம். அதனால், அந்த நகரம் அழகாய் இருந்தாலும், லண்டனுக்கு போவதை நான் அதிகம் விரும்புவதில்லை.

கிழக்கு லண்டனில் இருந்து கிளம்பிய நாங்கள் எதையுமே திட்டமிடாமல் நேராக O2 அரங்கத்தில் காரை நிறுத்திவிட்டு, பையனுக்கு பொழுது போகட்டுமே என்று புதியதாய் நிறுவப்பட்டிருக்கும் எமிரேட்ஸ் கேபிள்-காரில் ஒரு சுற்று போய் வரலாம் என்று அதிலும் போய் விட்டு O2 அரங்கத்துக்கு வந்தோம். இந்த நாட்டுக்கு வந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டாலும் O2 அரங்கத்துக்கு வருவது இது இரண்டாம் முறை. சென்ற ஆண்டு அவருடைய நிகழ்ச்சிக்கு முதல் முறை.. மீண்டும் இன்று.

ராஜா சாரின் ராஜா ராஜா தான் நிகழ்ச்சியை பற்றி நான் பேசி கொண்டே வர.. விட்டால் போதும் என்று உடன் வந்த என் மனைவி போட்டோ எடுக்கும் சாக்கில் பையனை அழைத்து கொண்டு அங்கும் இங்கும் போய் கொண்டிருந்தார். நான் தனியே அமர்ந்து, ராஜா சார் இங்கு வந்த இடம், அவர் கால் பட்ட இடம், அவர் பேசியது பாடியது என்று எதை எதையோ நினைத்து உம்மென்றிருக்க, அருகே வந்த மனைவி, சம்மந்தமே இல்லாமல் ஹே, இன்னிக்கு என்ன தேதி என்றார்..

ஆகஸ்ட் 24 என்றேன்... இந்த தேதி பற்றி மண்டையில் ஏதோ பொறி தட்ட,

ராஜா ராஜா தான் நிகழ்ச்சி நடந்த அதே நாள் தான் இன்று. ஆகஸ்ட் 24.. அது நடந்து சரியாக ஓராண்டாகி விட்டது. என்னையும் அறியாமல் அதே தேதியில் இன்று நாங்கள் மீண்டும் O2 அரங்கத்தில்.. ராஜா சார் வந்து சென்ற ஒரு இடத்துக்கு, அதே தேதியில் மீண்டும் நான் ...

உங்களுக்கு இது என்னுடைய அறிவு கேட்ட மூடத்தனமாக தெரியும்.. ஆனால் எனக்கு புல்லரித்தது. பிறகு அதிகம் பேசி என் மனைவியை வெருபேற்றவில்லை. என் நினைவெல்லாம் அவர் தான் ஆக்கிரமித்திருந்தார்.

மறந்தால் தானே நினைக்க வேண்டும்?
நினைவே அவரென்றால்?

வீட்டுக்கு வந்ததும் இதுவரை கேட்டிராத ஏதாவது ஒரு ராஜா சார் பாடலை கேட்கலாம் என்று தேடியதில் ஒரு முத்து கிடைத்தது.. ஒ ப்ரேமி ஜெச

http://www.saavn.com/p/song/hindi/Akhiri-Intaqam/O-Premi-Jaise-Radha-Thi-Diwani/Jl0bdSx7Y1w

rajaramsgi
25th August 2014, 01:08 PM
இந்த கூத்தை கேட்டீங்களா? move your body.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZfDaEIQOLUE

Gopal.s
26th August 2014, 04:37 AM
Quotable Quote from VenkkiRam.

" யாரிடம் நாம் அதிக அளவு பாசம், அளவு கடந்த மதிப்பு வைத்திருக்கிறோமோ, அவர்களிடத்தில்தான் விமர்சனங்களை வைப்போம். இதுவும் ஒருவகையில் உலகநியதிதான். "

sivasub
26th August 2014, 07:22 AM
an interesting remix

https://www.youtube.com/watch?v=mI4LlEzH8ck

venkkiram
26th August 2014, 08:07 AM
Quotable Quote from VenkkiRam.

" யாரிடம் நாம் அதிக அளவு பாசம், அளவு கடந்த மதிப்பு வைத்திருக்கிறோமோ, அவர்களிடத்தில்தான் விமர்சனங்களை வைப்போம். இதுவும் ஒருவகையில் உலகநியதிதான். "

திரு கோபாலுக்கு நாற்பது ஆண்டுகளாக (வரும் 2016-ல்) நிலையாக நிற்கும் ராஜாவின் விஸ்வரூப ஆளுமை ரொம்பவும் படுத்துது என நினைக்கிறென். நீங்கள் நான் பதிவிட்டதை மீள்பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் ராஜாவின் இசை மகத்துவத்தை புரிந்து தெளிய தெளிய அதுபோன்ற விமர்சனங்கள் கூட பகலவன் பட்ட பனித்துளி போல காணாமல் போய்விடும். முழுவதும் சரணாகதி ஆகவேண்டியதுதான். வேற வழியேயில்லை. சூரியன் போல. நெருங்க நெருங்க உங்கள் மீது விழும் இசைஈர்ப்பு விசை அதிகமாகிக் கொண்டே செல்லும். கடைசியில் ஜோதியில் ஐக்கியமாகும் வரை. விமர்சனம் வைத்தாலும் அவரது இசை - வெறுப்பை வளர்க்கும் நெருப்பல்ல. ஒருநிலைப்படுத்தும் சக்தி. ஏனென்றால் அவருக்கு மாற்றாக இன்னும் யாருமே வரவில்லை. அவ்வளவு சீக்கிரம் வரப்போவதும் இல்லை. அது முழுக்க முழுக்க இசை சம்பந்தப்பட்ட ஞானம் மட்டுமே அல்ல. பாடும் நிலா பாலு சொல்வது போல , ராஜா போன்றவர்கள் ஐநூறு, ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே மண்ணில் தோன்றலாம். ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள். 'ராஜா ஒரு தன்னிகரற்றவர்' என்ற திரியில் பதியப்படும் பதிவுகளுக்கு மாற்று கருத்து இருந்தால் பதியவும். அது கலகப்பதிவாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து உரையாடுகிறேன்.

Gopal.s
26th August 2014, 08:47 AM
திரு கோபாலுக்கு நாற்பது ஆண்டுகளாக (வரும் 2016-ல்) நிலையாக நிற்கும் ராஜாவின் விஸ்வரூப ஆளுமை ரொம்பவும் படுத்துது என நினைக்கிறென். நீங்கள் நான் பதிவிட்டதை மீள்பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி. தொடர்ந்து உரையாடுகிறேன்.


தலைவரே ,



இதெல்லாம் ஓவர். creativity peak (சந்தை நிலவரம் விட்டு விடுகிறேன். எனக்கு அதை பற்றி லட்சியமேயில்லை) என்று பார்த்தால் 1980 முதல் 1991 வரை 12 வருடங்களே. அதற்கு பிறகு அவரின் பலவீன நிழல் மட்டுமே அவ்வப்போது தோன்றி மறைந்தது. 1977- 1979 ஆர்வமான முன்னேற்றம் ,ரசிக்கத்தக்க மாறுதல்.



இது சிவாஜி,கண்ணதாசன், ஜெயகாந்தன்,அசோக மித்திரன்,பாலசந்தர்,பாலு மகேந்திரா,மகேந்திரன்,பாரதிராஜா ,ஸ்ரீதர் ,கமல் ,விஸ்வநாதன்,மகாதேவன் ,ரகுமான் அனைவருக்கும் பொருந்தும்.(அகால மரணம் தழுவியவர்,காலத்தின் கோலத்தால் ஒதுக்க பட்ட மேதைகள் விதிவிலக்கு அல்லது one time wonder மௌனி,கரிச்சான் குஞ்சு,பா.சிங்காரம் தொடர்ந்து கொடுக்காததால் ஒன்றும் சொல்ல இயலாது)

venkkiram
26th August 2014, 09:07 AM
தலைவரே ,

இதெல்லாம் ஓவர். creativity peak (சந்தை நிலவரம் விட்டு விடுகிறேன். எனக்கு அதை பற்றி லட்சியமேயில்லை) என்று பார்த்தால் 1980 முதல் 1991 வரை 12 வருடங்களே. அதற்கு பிறகு அவரின் பலவீன நிழல் மட்டுமே அவ்வப்போது தோன்றி மறைந்தது. 1977- 1979 ஆர்வமான முன்னேற்றம் ,ரசிக்கத்தக்க மாறுதல்.

இது சிவாஜி,கண்ணதாசன், ஜெயகாந்தன்,அசோக மித்திரன்,பாலசந்தர்,பாலு மகேந்திரா,மகேந்திரன்,பாரதிராஜா ,ஸ்ரீதர் ,கமல் ,விஸ்வநாதன்,மகாதேவன் ,ரகுமான் அனைவருக்கும் பொருந்தும்.(அகால மரணம் தழுவியவர்,காலத்தின் கோலத்தால் ஒதுக்க பட்ட மேதைகள் விதிவிலக்கு அல்லது one time wonder மௌனி,கரிச்சான் குஞ்சு,பா.சிங்காரம் தொடர்ந்து கொடுக்காததால் ஒன்றும் சொல்ல இயலாது)

உங்களின் இதுவரையிலான பதிவுகள் மூலம் இதைத்தான் நான் முன்னரே புரிந்துகொண்டேன் . மேற்சொன்ன எல்லா ஆளுமைகளிடமிருந்தும் வேறுபட்டு ராஜா சாதித்தது என்ன என்ற தளத்திலேயே நீங்கள் பல கோணங்களில் வேறுபடுகிறீர்கள். இரண்டு விதமான அணுகலாம். இசை ரீதியாக, உணர்வு ரீதியாக.. இரண்டிலுமே நீங்கள் கருத்தான பல பதிவர்களிடம் தொடர்ந்து உரையாட வேண்டும்.

நீங்கள் இந்த ஒப்பீடு விஷயத்தில் முக்கிய காரணியாக கருதும் பாடல் ஆக்கங்களே ராஜாவின் படைப்புத்திறனில் இருபத்தைந்து சதவீதம்தான் ஆக்கிரமித்திருக்கிறது. மீதிமுழுதும் படக்காட்சிகளுக்கான பின்னணி இசை. இந்த நூறு சதவிதத்தையும் அலசி பகுப்பாய்வு செய்தால்கூட அதையும் தாண்டி இளையராஜா என்ற பின்னணி பாடகர் இருக்கிறார், பாடலாசிரியர் இருக்கிறார்.. விஸ்வரூபத்தின் ஒரு பகுதியை மட்டுமே நீங்கள் கணக்கில் கொண்டு அட்டைகத்தியை நினைக்கும் விதத்தில் காற்றில் சுழட்டுவதால் பயனில்லை.

சமீபத்தில் வந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - பின்னணி இசை , நீதானே என் பொன்வசந்தம் படப் பாடல்கள் படைப்பாக்கத்தில் இன்னும் அணையாத எரிமலையாக கனன்று கொண்டிருக்கிறார் என்பதையே பறைசாற்றுகிறது. "1980 முதல் 1991 வரை 12 வருடங்களே. அதற்கு பிறகு அவரின் பலவீன நிழல் மட்டுமே அவ்வப்போது தோன்றி மறைந்தது. " - நீங்கள் வசதியாக ஒரே வரியில் இப்படி சொல்லிவிட்டு போய்விட்டீர்கள். இது ராஜா மீதான விமர்சனமாக படவில்லை. தனது விமர்சனம் மூலமாவது ராஜாவின் ஆளுமையை கூடிய மட்டும் சிறுமைபடுத்திப் பார்க்கலாமே என்ற பிரயத்தனமே மேலோங்கி நிற்கிறது.

rajaramsgi
26th August 2014, 04:16 PM
இப்போதிருக்கும் தலை முறை இன்னும் சில ஆண்டுகளில் ஹாரிஸ், யுவன், இமான் போன்றோரை புறந்தள்ளிவிட்டு புதியவர்களை ஏற்று கொள்வார்கள். இப்போதே வித்யாசாகரை காணவில்லையே.

நமக்கு தான் ரசனை மாறி கொண்டே வருகிறதே தவிர, அவரென்னவொ சரியாக தன இருக்கிறார்.இன்னும் 10 ஆண்டுகள் கழித்தும் கூட ராஜா சார் எதிர் நீச்சல் போட்டு புதியவர்களோடு போட்டியில் இருப்பார். இதற்க்கு காரணம் காசு சம்பாதிப்பதற்காக இல்லை, அந்த நேரத்திலும் ஏதாவது கற்றுக்கொண்டு, இசை எழுதி கொண்டிருப்பார். தொழில் செய்யும் திரைப்பட எண்ணிக்கையை வைத்து மட்டுமே ஒருவரின் கிரியேட்டிவிட்டியை கணக்கிட முடியாது. அப்படி என்றால் சந்திரபோஸ், ஷங்கர் கணேஷ், தேவா, யுவன், ஸ்ரீ காந்த் தேவா, விஜய் ஆண்டனி இவர்கள் எல்லாருமே ஒவ்வொரு காலகட்டத்தில் நிறைய படம் பண்ணியவர்கள் தான். ஆனால் தரம்? ஆண்டுக்கு 30 கொடுத்த போதும் 3 கொடுத்த போதும் ராஜா சாரின் கிராப் கோடு எப்படி இருந்தது? நமக்கு அந்த இசை மண்டையில் ஏறாமல் போகலாம், அதற்கு காரணம் அவரா? இல்லை பதட்டமான இந்த உலகத்தில், நமக்கு அடிக்கடி மாற்றம் தேவை படுகிறதா? அதுவும் இந்தியாவில், மீடியாக்கள் எல்லோரையுமே, எல்லா நேரத்திலுமே பதட்டத்தில் வைத்திருக்கிறார்கள். ஏன் என்று தான் தெரியவில்லை.

தஞ்சை பெரிய கோவிலை எப்படி கட்டினார்கள் என்று 1000 ஆண்டுகளாக புரியாத ஒரு புதிரை பேசுவது போல் காலாகாலத்துக்கும் ராஜா சார், விஞ்ஞானி ஸ்டெபன் போன்றோர் அவரவர் துறைக்கு அளித்த பங்களிப்பு ஆராய்ச்சி செய்யப்படும்

krish244
26th August 2014, 04:23 PM
Sivasub, nice catch. Interesting indeed. I could recognize "Panivizhum" song (mouna raagam), the intense music of "Nee thoongum nerathil". The third part (from 1:30) is so familiar...but could not catch it, probably because it is slightly tweaked here and there to suit the mood of the whole theme. Appears to me that most of it is sampled from original sound and tweaked a little.

thanks,

Krishnan

Gopal.s
26th August 2014, 04:46 PM
இளைய ராஜா பின்னணி இசை, பாடல்கள் இதை தாண்டி எதை அலசினாலும் மிக பெரிய பின்னடைவே. பாடகர்,பாடலாசிரியர், போகிற போக்கை பார்த்தால் இன்னும் என்னென்ன வருமோ.



நீங்கள் என்னை விவாதத்துக்குள் ஈர்க்க பார்க்கிறீர்களா அல்லது நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் இளைய ராஜாவிடம் பொறி இருப்பதை காட்டுவதாக நிஜமாகவே நம்புகிறீர்களா?(எனக்கு இதில் பீடியின் முனையளவு கங்கு கூட படவில்லை)மூளை சலவை செய்ய பட்ட நாஜி படை வீரர்களுடன் உரையாடும் உணர்வே ஏற்படுகிறது. நான் தொடர் எழுதுவதாக இருக்கிறேன். தொடருங்கள்.

venkkiram
26th August 2014, 08:33 PM
//நீங்கள் என்னை விவாதத்துக்குள் ஈர்க்க பார்க்கிறீர்களா அல்லது நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் இளைய ராஜாவிடம் பொறி இருப்பதை காட்டுவதாக நிஜமாகவே நம்புகிறீர்களா?(எனக்கு இதில் பீடியின் முனையளவு கங்கு கூட படவில்லை)மூளை சலவை செய்ய பட்ட நாஜி படை வீரர்களுடன் உரையாடும் உணர்வே ஏற்படுகிறது.//

திரு கோபால்,

உரையாடிப் பயனில்லை. ஒண்ணு மட்டும் கடைசியாக சொல்லி முடிச்சிக்கிறேன். இந்த இடம் ( ராஜா பற்றிய திரிகளின் தொகுப்பு) பிரசித்தி பெற்றது. இசைமீதான மேன்மையான ரசனை கொண்ட, அனுபவமுள்ள பல இசை விமர்சகர்கள், ரசிகர்களின் கருத்துக்கள் பதித்த இடம் இது. அதையெல்லாம் ஒப்பிடுகையில் உங்களது ராஜா மீதான இதுவரையிலான பார்வைகள் மிகவும் மேலோட்டமாகவும், மலிவான முறையிலும் இருக்கின்றது. உண்மையில் இதுபோன்றவர்களே நாஜிப்படை. இணையத்தில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் ஒவ்வொருமுறையும் வாய்ப்பு அளிக்கப்பட்டும், நீங்கள் இங்கே சுழட்டுவது வெறும் அட்டைகத்திதான். நன்றி.

rajaramsgi
28th August 2014, 12:13 AM
இன்று தீபம் தொலைகாட்சியில் மௌன ராகம் பார்த்தேன்.. எல்லா அம்சங்களும் சரிவர பொருந்திய படம். கம்பீரமான பாடல்களும், இசையும் புத்துணர்ச்சி ஊட்டுபவையாக, ராஜா சார் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

மணிரத்னம் படங்களில் உயிரே படம் தான் நான் கடைசியாக பார்த்தது. இப்போதெல்லாம் அவர் எடுக்கும் படங்கள் என்னை இம்ப்ரெஸ் செய்வதில்லை. பழைய முகலாயர் கால கட்டிடங்களை தவிர, மௌன ராகம் படத்தில் காண்பிப்பது போல் நிஜத்தில் அந்த ஊர் அவ்வளவு அழகில்லை. நான் அங்கு தங்கி ஒரு வருடம் வேலை பார்த்திருக்கிறேன். இப்போது டெல்லி மாறி இருக்கிறதா, மணிரத்னம் நல்ல படங்கள் எடுக்கிறாரா? ரெண்டும் தெரியவில்லை.

rajaramsgi
29th August 2014, 11:43 PM
Usual Raja sir talk @ Rich India whatever that is.. (hope RI is not a sadhuranga vettai thingy)
Should Raja sir stop saying that he don't attend functions anymore.. This month itself he attend 3 or 4 functions that I know of. :-)

https://www.youtube.com/watch?v=kplopWz--_c

Russellhaj
30th August 2014, 10:33 AM
இசையின் அமானுஷ்ய பிரம்மாண்டத்தின் முன்னால் திகைத்து நிற்கும் போது நீ மனுஷந்தாண்டா என்று தரைக்கு கொண்டு வருவது பாடல்கள் படமாக்கும் விதத்தில்தான் #மேகா



-ac

Russellhaj
30th August 2014, 10:42 AM
இளையராஜா, மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் !!



https://pbs.twimg.com/media/BwIM0SJCYAEmaxy.jpg

Russellhaj
30th August 2014, 10:53 AM
மிகவும் அருமையான படம். நடு வகிடு எடுத்து தலை சீவாத பெண்கள், பெரும்பாலும் இடது பக்கம் வகிடு எடுத்து சீவுவார்கள். மிகவும் அரிதாகவே வலது புறம் எடுத்து , திருமதி. ஜீவா இளையராஜா, கனி மொழி போல. இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். :) இருவருமே ரொம்ப அழகானவர்கள்.


https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/t1.0-9/1521613_593353517441594_5682058614334928221_n.jpg

Russellhaj
30th August 2014, 11:43 AM
[QUOTE=rajaramsgi;1160516]Usual Raja sir talk @ Rich India whatever that is.. (hope RI is not a sadhuranga vettai thingy)
Should Raja sir stop saying that he don't attend functions anymore.. This month itself he attend 3 or 4 functions that I know of. :-)


ராஜ், நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது. ஆனால், தன்னை பல வேலைகளில் ஈடுபடுத்தி கொள்வது என்பது பல நேரங்களில் நன்மை செய்ய கூடியதே. .அவர் உடல் நலன் குறித்த அக்கறை அவரை விட அவர் ரசிகர்களுக்கே அதிகம் என்பது கண்கூடு. Already he had 2 attacks, அதற்காகவேனும் அவர் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்.


சில மாதங்கள் முன் அவர் , பிரியா படத்தில் வரும் " டார்லிங் டார்லிங்" பாடலை முதன் முறையாக இசை அமைக்க 4 மணி நேரங்களே எடுத்துக் கொண்டது, ஆனால் இசை கச்சேரிக்காக நாங்க practice பண்ணும் பொழுது 2 நாட்கள் எடுத்து கொண்டது. அவ்வளவுதான் சொன்னார். மீடியாவில் அதை முழுவதும் மாற்றி, யாராலும் நான்கு மணி நேரத்தில் இசை அமைக்க முடியாது" உலக இசை அமை பாலர்களுக்கு இளைய ராஜா சவால் " என்று வந்தது.

Russellhaj
30th August 2014, 05:50 PM
இனியெல்லா..ம் சுகமே -
" இந்த வார்த்தைகளைப் பாடும் போது, கேட்பவர்களுக்கு சுகமாக இருக்க வேண்டும்" கூறியவர் - The Legend called Yesudas

அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் இசைமேதை ஜேசுதாஸ் அவர்களின் சிட்னி இசை நிகழ்ச்சி இன்று இரவு 6.40 மணியளவில் தொடங்கி சரியாக 10 மணிக்கு முடிவுற்றது. இந்த நிகழ்ச்சியை வெறுமனே தமிழ் நிகழ்ச்சியென்று கூற முடியாது சரிக்குச் சரியாக மலையாளப்பாடல்களும் அத்துடன் ஹிந்திப்பாடல்களும் பாடப்பட்டன.

ஜேசுதாஸ் அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களுள் அவர் மெட்லியாகப் பாடிய பாடல்கள்தான் என்னை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக உறவுகள் தொடர்கதை என்ற பாடலை அவர் பாடி நேரடியாகக் கேட்டபோது அந்தக் குரல் என்னை எங்கோ கொண்டு சென்றிருந்தது. இந்தப் பாடலை நேரடியாகப் பார்த்தபடி கேட்டபோது அந்தப் பாடலினுள் ராஜாவால் பின்னப்பட்டுள்ள பேஸ் கிட்டாரினதும் புல்லாங்குழலினதும் வேலைப்பாடுகள் புல்லரிக்க வைத்தன. உண்மையில் இந்த இரண்டு இசைக்கருவிகளும் எவ்வாறு இசைஞானியால் அந்தப்பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையோ அல்லது பாடலுக்கு அவை கொடுத்துள்ள முழுமையையோ ஒறிஜினல் பாடலில் இன்றுவரை இந்தளவுக்கு நான் கேட்டு ரசித்திருக்கவில்லை. அதற்காக இன்றைய கலைஞர்கள் வித்தியாசமாக சங்கதிகள் புகுத்தி வாசித்தார்கள் என்பது அர்த்தமல்ல. ராஜாவின் ஒறிஜினல் நோட்சைத்தான் வாசித்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ஆனால் சரியான நேரங்களில் சரியான முக்கியத்துவம் அந்த வாத்தியங்களுக்கு இன்றைய அரங்கின் Sound Engineer ஆல் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அந்த இரு இசைக்கருவிகளையும் மிகத் துல்லியமாக பாடலின் ஜீவனுடன் சேர்ந்து ஒன்றித்து ரசிக்க முடிந்தது. அந்தப் பாடல் வெளிவந்த காலத்தில் இருந்த ஒலித் துல்லியமின்மை அல்லது ஒலித் தொழினுட்ப வறட்சி காரணமாக இந்த வாத்தியங்களின் முக்கியத்துவம் அப்போது முழுமையாக வெளிப்படவில்லை அல்லது உணரப்படவில்லை என நினைக்கிறேன்.

( பாடலைக் கேட்க https://www.youtube.com/watch?v=T71jHjIvEAI )

அந்தப் பாடலின் பல்லவியையும் சரணம் ஒன்றையும் மட்டுமே பாடிய ஜேசுதாஸ் அவர்கள், அதை மெட்லியாகப் பாடியதால் இடையிசைக்கு அவகாசம் கொடுக்கவில்லை. இது என்னமோ போலிருந்தது. ஆனால் அந்தப் பாடலை முடிக்கும் போது இனியெல்லாம் சுகமே என்பதை மிக மென்மையாக அவர் பாடிய விதம் அந்த சுகமே என்ற வார்த்தையை சுக...மே.... என்று மெது மெது வாகவும் மெது மெதுப்பாகவும் அவர் முடித்த விதம் அலாதியானது. அப்படி முடித்து இசைகள் எல்லாம் நிறுத்தியபின் அவர் கூறினார்.

"இந்தப் பாடலின் ஹைலைட்டே இனியெல்லாம் சுகமே என்ற வார்த்தைகள்தான்... எனவே அந்த வார்த்தைகளைப் பாடும் போது கேட்பவர்களுக்கு சுகமாக இருக்க வேண்டும். அங்கே இசைகளின் ஆதிக்கம் இருக்கவே கூடாது .. வார்த்தைகள் சுகமாக காதில் விழ வேண்டும். "

The Legend called Yesudas - கூறியது எங்களுக்குப் புரிகின்றது ஆனால் தமிழிசையின் புதிய இசையமைப்பாளர்களுக்குப் புரியவேண்டுமே ... புரியுமா ???



https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/s640x640/10606182_10204918323182345_5539036658952137913_n.j pg



-kra

Russellhaj
30th August 2014, 05:53 PM
உங்களுக்குத் தெரியுமா ?

இங்கே நான் பதிந்துள்ள பாடல் அபூர்வ சகோதரர்கள் படத்துக்காக கமல் நடித்துப்படமாக்கப்படது. ஆனால் படத்தின் கதையை மாற்றிய கமல் இந்தப்பாட்டை படத்தில் பாவிக்காமல் இதற்குப் பதிலாக ராஜா கைய வச்சா.. என்ற பாட்டை மீண்டும் படமாக்கி பயன்படுத்தினாராம்..

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் https://www.youtube.com/watch?v=eB1tBFm5nqg#t=19

இந்தப் பாடலை இதற்கு முன்னர் எவராவது கேட்டுள்ளீர்களா ???



https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.9/s640x640/10563091_10204856729122532_8070709027486119049_n.j pg


-kra

Russellhaj
30th August 2014, 05:55 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/s640x640/10574259_10204822190179080_4912853260309116031_n.j pg

Russellhaj
30th August 2014, 05:59 PM
"வாழ்க்க்கையில் ஏதோ விதமாக சிலர் நுழைவார்கள்.. தங்களின் கால்தடங்களை இதயத்தில் பதிப்பார்கள்.. அதன் பின் வாழ்க்கையை நாம் பார்க்கும் கோணமே மாறியிருக்கும்.. இதைக்கூறியவர் உலகின் தலைசிறந்த கொம்போசர்களில் ஒருவரான Franz Schubert என்பவர்..
ஆம் எனக்கு..

" இளையராஜா"..

ராஜாவின் இசையை கேட்கத்தொடங்கியபின் நான் பார்க்கும் உலகம் இன்னும் அழகாகியது..

https://www.youtube.com/watch?v=i0_rMvHkYws



https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/s640x640/10455435_10204689678106361_2291672766945928623_n.j pg




-kra

Russellhaj
30th August 2014, 06:03 PM
கவிஞர்களும் வார்த்தை வணிகர்களும் - இரு படம், ஒரே காட்சி முற்றிலும் முரண்பாடான பாடல்கள்..

தமிழ்த் தொலைக்காட்சியொன்றில் இடைக்காலப் பாடல்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அடுத்து ஒளிபரப்பானது எஜமான் படப் பாடலொன்று.

எஜமான் காலடி மண்ணெடுத்து . நெற்றியிலை பொட்டு வைச்சோம்..
எஜமான் அவர் சொல்லுக்குத்தான் நாங்க தினம் கட்டுப் பட்டோம்..
உங்களைத்தான் நம்புதிந்த பூமி.. இனி எங்களுக்கு நல்ல வழி காமி.

என்று காசுக்காக ரஜினியைப் பாடிக் கும்பிட்டுக் கொண்டிருந்தது மனிதக் கூட்டமொன்று. நான் ரஜினியின் ர்தீவிர ரசிகன் ஆனால் இந்த பாட்டையும் அதிலுள்ள அக்கிரமத்தையும் ரசிக்க முடியவில்லை.
மிகவும் பிற்போக்குத்தனமாக எழுதப்பட்டுள்ள அந்தப்பாடலின் வரிகளும் ,மனிதர்களை கைகட்டி வாய்பொத்தி நிற்கவைத்து அடிமைகளைப் போல படமாக்கப்பட்டிருந்த விதத்தையும் ஒரு மனிதனாக என்னால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதுவும் தனிமனித சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாக்கும் மேற்கு நடொன்றில் இருந்து அந்தப் பாட்டைப் பார்க்கும் போது, சமூக அக்கறையற்று வணிக நோக்கம் ஒன்றுக்காக மனிதர்களில் வர்க்க வேறுபாட்டை உருவாக்கும் பிற்போக்கான இயக்குனரின் ஆதிக்க மனநிலை இன்னும் பூதாகரமாகவே தெரிந்தது. ,

ஆனால் இந்தப் பாட்டைப் பார்த்து வெறுத்துப்போன மனது இன்னொரு பாடலை நினைக்கவும் செய்தது. பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படமொன்றில் கிட்டத்தட்ட இதே மாதிரியான கதாநாயகனின் அறிமுகக் காட்சியொன்றுக்கு பாடல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பாடலில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் சமூக அக்கறையும் , மனித சமத்துவமும் , சுதந்திரமும் தொக்கிக் காணப்படுகின்றது. மனித நேயத்தை விதந்துரைக்கின்றது.. மத நல்லிணக்கத்தின் அவசியத்தை உரத்துச் சொல்கின்றது.

அந்தப் பாடலின் சரணத்தில்

உழைக்கும் தோழர்களே ஒன்றுகூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்..
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப்பாருங்கள்.. என்றும்..

காற்றும் , நதியும், வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது ..
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது..
பிரித்து வைத்துப்பார்ப்பதெல்லாம் மனித இதயமே - உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே.. அமைதி நிலவுமே,,

https://www.youtube.com/watch?v=McuSwmnWtko

என்றும் சமூக அக்கறையுடனும் , பொறுப்புணர்வுடனும் அழகாக எழுதப்பட்டுள்ளது.
.. அங்கே எஜமான் காலடி மண்ணெடுத்து பொட்டு வைக்கச் சொல்கிறார் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார். ஆனால் ஐயா புலமைப்பித்தனோ மேடு பள்ளம் இல்லாத சமுதாயத்தை உன்னுடைய ஒற்றுமையால் உருவாக்கு.. என்று எம்ஜிஆர் என்ற பெரும் சக்தியுடன் சேர்ந்து உரத்துப்பாடுகிறார்.. ஆஹா என்னவொரு அருமையான உற்சாகமூட்டும் வார்த்தைகள் இவை..

அதுசரி கிட்டத்தட்ட ஒரே காட்சி, ஒரே மாதிரியான சூழ்நிலையிலேயே இரு பாடல்களும் எழுதப்பட்டும் எதனால் அவற்றின் கருத்தில் முற்றிலும் முரணான பாரிய வித்தியாசம். காணப்படுகின்றது???? .
இங்கேதான் ஒரு கவிஞன் அல்லது தமிழ்ப் புலவனும் வார்த்தை வணிகர்களும் வித்தியாசப்படுகின்றார்கள்.

பழையபாடலானது மனித நேயத்தையும் , சமூக மேம்பாட்டையும் நினைத்து வாழ்ந்து மறைந்த மாபெரும் மனிதன் எம்ஜிஆருக்காக எழுதப்பட்டது.. எழுதியவர் தமிழின் மேலும் தமிழர்களின் மேலும் உண்மையான பற்றும் பாசமும் கொண்ட ஐயா புலவர் புலமைப்பித்தன். ஆனால் எஜமான் பாடல் மெட்டுக்காக எழுதப்பட்டது. எழுதியவர் படத்தின் இயக்குனர் அவர் சமூக அக்கறையுள்ள கவிஞனாக இருக்க வேண்டிய அவசியமில்லை .. அவரைப் பொறுத்தவரை மெட்டுக்குப் பாட்டெழுதி. ... அவரது நாயகனை குளிர்ச்சிப் படுத்தினால் போதுமானது.. முக்கியமாக வணிக ரீதியில் வெற்றிபெறவேண்டும்.

ஆனால் எம்ஜிஆர் அப்படியல்ல. தனது ஒவ்வொரு பாடல்களுக்கும் மணிக்கணக்கில் செலவழித்திருக்கிறார்.. ஒவ்வொரு வார்த்தைகளின் அர்த்தத்தையும் கூர்ந்து கவனித்திருக்கிறார்.. பாடல்களின் தரத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் செய்யாமலிருந்துள்ளார். அதற்காக
கவிஞர்களைத் தேடித் தேடி தகுதியானவர்களைக் கண்டுபிடித்து புதிதாக அறிமுகப்படுத்தி பயன்படுத்தியுள்ளார்
. அவரின் அந்த சமூகப் பார்வையால்தான் இன்றும் வாழ்கிறார். சோர்ந்தவர்களை தனது பெயர்மூலம் உற்சாகப்படுத்துகிறார்.
ஆரம்பகாலத்தில் M.G.R உடன் புலவர் புலமைப்பித்தன்ஆரம்பகாலத்தில் M.G.R உடன் புலவர் புலமைப்பித்தன்
நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்..
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்..
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்..
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்..

புலவர் புலமைப்பித்தன்.நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்.. கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்.. வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்.. வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்.. புலவர் புலமைப்பித்தன்.





Thanks to KRA

Russellhaj
30th August 2014, 07:26 PM
இளையராஜா உண்மைக்குத் திரை ஏது? நூலில் தூய மலர் என்ற ஓர் அபாரமான சிறுகதையை வசன கவிதை வடிவில் எழுதி இருக்கிறார். philosophical!

உண்மைக்குத் திரை ஏது? நூலில் இளையராஜா எழுதி இருக்கும் ஒரு நீள்கட்டுரை - ஈஸ்வர ஸர்வ பூதானாம். அதில் அவர் சொல்லி இருக்கும் விஷயங்கள்

நவீன வானியல் சாஸ்திரத்தை மிகத் துல்லியமாக எடுத்தியம்புகிறது. மிகப் பெரும்பாலும் அவரது புரிதலில் பிசகே இல்லை. இது எனக்கு ஆச்சரியம்!

-csk

krish244
30th August 2014, 08:32 PM
New Malayalam music director and his name is Ilayaraja Indeevaram!

thanks,

Krishnan

rajaramsgi
30th August 2014, 09:48 PM
மிகவும் அருமையான படம். நடு வகிடு எடுத்து தலை சீவாத பெண்கள், பெரும்பாலும் இடது பக்கம் வகிடு எடுத்து (என்னையும் சேர்த்து) சீவுவார்கள். மிகவும் அரிதாகவே வலது புறம் எடுத்து , திருமதி. ஜீவா இளையராஜா, கனி மொழி போல. இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். :) இருவருமே ரொம்ப அழகானவர்கள்.



ஏதோ கோபத்திலோ அல்லது தலை வலியிலோ சாபிடாமல் இருக்கும் ஜீவாவிடம், சாப்பாட்டில் எல்லாம் கோவத்தை காட்ட படாது என்று ராஜா சார் சிரித்து கொண்டே சொல்கிறார்.
கொஞ்சூண்டாச்சும் சாப்பிடும்மா என்று சொல்லும் பவதாரிணியின் கைகள்.
நமக்கு இன்னும் கொஞ்சம் பாயாசம் கிடைகாதானு கேட்கும் சபரியின் கண்கள்.
மாட்டேன்னு நெளியும் ஜீவா..

பல்கலைகழகமான குடும்பத்தில், ஜீவா மறைந்த பிறகு, யுவன் மதம் மாறும் அளவுக்கு கலகம். யார் கண்ணு பட்டதோ.

ஏதோ ஒரு ஆன்மீக தலம் என்று தெரிகிறது. ரமணாசிரமம்? குருவாயூர்? கோயில் அன்ன தானம் போல, கவுரவம் பார்க்காமல் பக்தர்களோடு பக்தர்களாக சாப்பிடுகிறார். இந்த இடத்தின் ஆன்மீக சிறப்புக்காக இல்லாவிட்டாலும், ராஜா சார் சென்ற இடம் என்பதற்காக ஒரு முறை போய் வர வேண்டும் (சாப்பிடவும் தான்)

பெண்களின் கூந்தல் பற்றிய சர்ச்சைகளும், பாடல்களும் பாண்டியர் காலத்திலிருந்து வந்து கொண்டே இருக்கிறது. அவ்வழியே வந்த நீங்களும், வகிடெடுத்து சீவும் விதத்தை கவிதையாய் சொல்லி இருக்கிறீர்கள். அழகு. ராஜா சார் பங்குக்கு அவரும் பாடி இருக்கிறார்.

தென்றலிடை தோரணங்கள் (http://tamilthiraipaadal.com/index.php?action=song&id=2353)
தோளினிலே கூந்தல் அலை
தாள லயம் நெஞ்சினிலே தாளவில்லை, தாங்கவில்லை

வான முகில் வாகனத்தில்
நான் அவளை ஏற்றி வைத்து
வானுலகில் தேவதைகள் நாணும்வரை போய்வரவா?

படம்: ஈரவிழி காவியங்கள்.

rajaramsgi
1st September 2014, 08:14 PM
Yuvan's birthday yesterday. thanks Poem.
https://pbs.twimg.com/media/BwYbWb4CMAA0zsK.jpg

rajsekar
1st September 2014, 10:07 PM
The legendary Telugu movie director "Bapu" passed away on August 31 in Chennai. We all know that his last film was the great runaway success "Sri Rama Rajyam" which had the songs and background score by Maestro. The AP government is planning to erect a memorial for Bapuji at the banks of Godavari river. Anyway it's a great step forward by the present Andhra politicians. I still have my grouse that Sri Rama Rajyam was snubbed by the National Film awards committee which failed to bag zero award. The movie Director, Bapu and Ilayaraaja should have bagged the national awards for this classic movie. The awards screening committee screwed up the movie presentation to the jury members by having substandard audio quality at the preview theater. What a gross injustice to the musical score and songs from the movie!!!. The AP politicians (MLAs and MPs) didn't raise this issue in the assembly and parliament. In fact, the entire Telugu film industry did not win a single national award that year. This is in spite of having two Telugu movie stars in the parliament - Jayapradha and Vijayashanti. I had written to both of them regarding this anomaly. May Bapujis sould rest in peace.

http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/versatile-bapu-no-more/article6367207.ece?ref=relatedNews

rajaramsgi
2nd September 2014, 09:33 PM
You must have read this already.. found this one which I saved in my archives years ago and thought of sharing with you. Enjoy reading.


இளையராஜா பற்றி ரா.கி.ரங்கராஜன்…

இளையராஜாவின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் என் நெருங்கிய நண்பரும், குடும்ப டாக்டருமான ஆர். ரவிச்சந்திரன். ஐந்து நிமிடம் பிரஷர் பார்த்து விட்டு, ஐம்பது நிமிடம் இளையராஜாவைப் பற்றிப் பேசுவார். அவருடைய எந்தெந்தப் பாட்டு எந்தெந்த விதத்தில் தனித் தன்மையுடன் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, நோட்டு நோட்டாக எழுதி வைத்திருக்கிறார்.

டாக்டர் ரவிச்சந்திரனுக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம் இசைஞானியை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான். அதற்கு ஏற்பாடு செய்யும்படி என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தார். சினிமா நிருபர் செல்லப்பா மூலமாக, இளையராஜாவின் செக்ரட்டரி கல்யாணத்துக்குத் தெரிவித்து, ஒரு ஞாயிறன்று பிற்பகல் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டேன்.

டாக்டர் ரவிச்சந்திரனுடன் அவருடைய சிநேகிதர் டாக்டர் கௌரிசங்கரும் வந்திருந்தார். நானும் சேர்ந்து கொண்டேன்.
வடபழனியில் ஏவிஎம் ஸ்டுடியோவைக் கடந்து, சாலிக்ராமம் சாலையில், பிரசாத் ஸ்டுடியோவுக்குள் அமைந்திருக்கிறது இளையராஜாவின் ரெகார்டிங் தியேட்டர். “வாங்க வாங்க!” என்று வாய் நிறைய வரவேற்றார். (என்னை அவருக்கு நன்கு தெரியும்.) தரையில் விரித்திருந்த மெத்தையில் அமர்ந்திருந்த இசைஞானி. எதிரே ஆர்மோனியத்தை வைத்திருந்தார். ஏதோ ஒரு ட்யூனைப் பிடிக்க முயன்று கொண்டிருந்த நேரத்தில் குறுக்கிட்டு விட்டோமோ என்று எனக்குத் தோன்றியது. வழக்கமான ஒரு வாரத்துத் தாடியுடன், கொஞ்சம் இளைத்த மாதிரித் தெரிந்தார். உடம்பை ஒட்டினாற்போல வெள்ளை ஜிப்பா, வெள்ளை நாலு முழ வேட்டி. சுவரில் ரமணர், ஷிர்டி சாய் பாபா, கோடி ஸ்வாமிகள் படங்கள்.

பற்பல வருடங்களாகத் தன் மனசுக்குள் பூஜித்து வந்திருக்கும் லட்சிய ஹீரோவை நேரில் காணும்போது எந்த ரசிகருக்கும் பேச்சு வராது. ஆனால் டாக்டர் ரவிச்சந்திரன் சற்று ‘ஹோம் வொர்க்’ செய்து கொண்டு வந்திருந்ததால் பணிவோடு தன் எண்ணங்களைத் தெரிவித்தார்.
எது கேட்டாலும் முதலில் ‘அது சரி’ என்று சொல்கிறார் இளையராஜா. நல்ல மேனரிசம் இது. ‘அது சரி’ என்று முதலில் கூறி விட்டுப் பிறகு தன் கருத்தைச் சொல்கிறார். அது நம்மைப் பணிவுடன் கேட்க வைக்கிறது.
“ஓரோர் சமயம் உங்கள் பாட்டைக் கேட்கும்போது அதே ட்யூனை முன்பே வேறொரு பாட்டில் கேட்ட மாதிரி இருக்கிறதே ?” என்று கேட்டார் ரவிச்சந்திரன்.

“அது சரி. மொத்தம் இருப்பது ஏழு ஸ்வரங்கள் தான். எப்படி ட்யூன் போட்டாலும் ஏதாவது ஓர் இடத்தில் ஏதாவது ஒரு சாயல் வருவது சகஜம்தான்” என்றவர், “வீடு வரை உறவு” என்ற அடிகளைப் பாடிக் காட்டி, அதே போல் வரும் வேறு சில பாடல்களையும் பாடினார். (ரவை புரளும் சன்னமான சாரீரம் அவருக்கு இருக்கிறது.)

“உங்கள் பாடல்களைப் பல முறை கேட்டு வருகிறேன். மெட்டையும் சாகித்தியத்தையும் தவிர இன்னும் ஏதோ ஒன்று பாட்டுக்குள் இருப்பதாகத் தோன்றுகிறது. அது என்ன ?” என்று டாக்டர் கேட்டார்.

இதே கேள்வியை பம்பாயிலிருந்து வந்த ஒரு பெண் என்னிடம் கேட்டாள். அது என்னவென்று என்னால் எப்படி விளக்க முடியும் ? ஆரம்ப காலத்தில், நான் கற்றுக் கொண்ட, தெரிந்து கொண்ட, நாட்டுப்புற ட்யூன்கள் மொத்தத்தையும் கொட்டிவிட்டேன். ஐயோ, இனிமேல் என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்திருந்த போது, தானாகவே பாட்டு வர ஆரம்பித்தது. சிவாஜி காலமான சமயம் அவருடைய மனைவி என்னிடம் அழுதார். ‘அவருக்கு பாத்ரூம் சுத்தமாக இருக்க வேண்டும். அன்று என்ன படம் இருக்கிறது, என்ன நடிக்கப் போகிறோம் என்ற திட்டங்களை பாத்ரூமில் தான் யோசித்து வைத்துக் கொள்கிறேன் என்பார். வீட்டில் எந்த இடம் சுத்தமாயில்லாவிட்டாலும் பாத்ரூம் மட்டும் சுத்தமாக இருக்கும்படி நான் பார்த்துக் கொள்வேன்’ என்று சொல்லி கண்ணீர் வடித்தார். எனக்கு அந்த மாதிரி இல்லை. ஆர்மோனியத்தின் முன்னே உட்கார்ந்ததும் இசை வருகிறது. பறவை ஒருத்தர் சொல்லியா பறக்கிறது ? ‘It happens. Music happens “ என்றார் ராஜா.

“உங்களுடைய ஆயிரக்கணக்கான பாடல்களில் உங்கள் உள்ளம் கவர்ந்த பாட்டு எது ?” என்று நான் கேட்டேன். உடனே “ஜனனி ஜனனி“ என்றார். ‘கொஞ்சம் பாடிக் காட்டுங்கள்’ என்று நான் கேட்டுக் கொண்டேன். ‘சௌந்தர்ய லஹரி‘ ஸ்லோகத்தை முதலில் சொல்லி விட்டு, ஆர்மோனியத்தின் துணையுடன் பாடினார். அப்பப்பா! அந்த பாட்டு என்ன சுகம், என்ன சுகம்!
டாக்டர் கௌரிசங்கர், “நீங்கள் ரொம்பப் பிரமாதமான படங்களுக்கும் பாட்டுப் போடுகிறீர்கள். சில சமயம் ரொம்ப சாதாரணமான படங்களுக்கும் பாட்டுப் போடுகிறீர்கள். அது எதனால் ?” என்று கேட்டார்.

ராஜா சிரித்தார். “இன்னாருக்குப் பாட்டுப் போடுவேன், இன்னாருக்குப் போட மாட்டேன் என்று நான் சொல்வதில்லை. ‘நீங்கள் மியூசிக் போடுகிறீர்கள் என்று சொன்னால் உடனே விநியோகஸ்தர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். அதனால் ஒப்புக் கொள்ள வேண்டும்’ என்று கேட்கிறார்கள். ஒப்புக் கொள்கிறேன். படம் நன்றாக அமைவதோ, மோசமாக அமைவதோ அவரவர் கொடுப்பினை. சிக்னலில் கார் நிற்கிறது. ஏழையொருவன் வந்து கை நீட்டுகிறான். பையில் கையைவிட்டுக் காசை எடுப்பதற்குள் சிக்னல் கிடைத்து, கார் நகர்ந்து விடுகிறது. இன்னொரு சிக்னலில், வேறொரு ஏழை கை நீட்டுகிறான். ஒரு ரூபாய் போடலாம் என்று எடுத்தால் பத்து ரூபாய் நோட்டாக வருகிறது. போடுகிறோம். அதை என்னவென்று சொல்வது ?”

உன்னிகிருஷ்ணன் ரெக்கார்டிங்குக்கு வந்திருப்பதாக இன்டர்காமில் தெரிவித்தார்கள். ராஜா எழுந்து கொண்டு எங்களிடம் கை குலுக்கினார். “கொஞ்ச நேரம் உங்கள் ரெகார்டிங்கையும் பார்க்க வேண்டும்” என்று டாக்டர் ரவிச்சந்திரன் கேட்கவே, “தாராளமாக வாருங்கள்” என்று அழைத்துப் போனார்.

உன்னிகிருஷ்ணன் ஜீன்ஸில் கட்டம் போட்ட முழுக்கை ஷர்ட்டை ‘இன்’ செய்து கொண்டு கல்லூரி மாணவன் போல் இருந்தார். பந்தா எதுவும் இல்லை. பிளாஸ்கிலிருந்து வெந்நீர் எடுத்து சிறிது சிறிதாக உறிஞ்சினார். ஸ்டாண்டின் மீது நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, நின்றபடியே அடி அடியாகப் பாடினார். மறுபுறம் கம்ப்யூட்டர் பதிவைப் பார்த்தபடி ராஜா இருந்தார்.

உன்னிகிருஷ்ணன் பாடுவது சரியாக இருப்பதாகத்தான் எங்களுக்குத் தோன்றியது. ஆனால் ஒவ்வொரு வரியிலும் ஒரு சுளிவை, ஒரு நெளிவை, ஒரு கூட்டலை, ஒரு குறைதலை சொல்லித் திருத்தம் வழங்கிக் கொண்டேயிருந்தார்ராஜா. கூடக்கூட ஸ்வரங்களை சொல்லிப் பாடியும் காட்டினார். ஐந்து நிமிடப் பாட்டுக்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.
இப்படிக் கடுகத்தனை ‘சங்கதி’ க்காக இவர் மலையத்தனை சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று நினைத்தேன். ஆனால் அப்படியொரு perfectionist ஆக இருப்பதால்தான் இளையராஜா மகாராஜாவாக இருக்கிறார்.
–நாலு மூலை - ரா.கி.ரங்கராஜன் (கிழக்கு பதிப்பகம்)
http://www.udumalai.com/prd_images/Naalu_Moolai_b_copy.jpg
ஆசிரியர்: ரா.கி. ரங்கராஜன்
http://balhanuman.files.wordpress.com/2010/05/rakira.gif?w=144&h=124 (http://balhanuman.files.wordpress.com/2010/05/rakira.gif)
தமிழ் வாசிக்கத் தெரிந்த யாரும் ஒரு முறையாவது ரா.கி. ரங்கராஜனின் எழுத்துகளை வாசிக்காமல் நகர்ந்து போயிருக்க முடியாது. நாற்பத்திரண்டு ஆண்டு காலம் குமுதம் வார இதழில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், நாவல்கள், மொழி பெயர்ப்புகள், கட்டுரைகள், நகைச்சுவை நாடகங்கள் என எழுத்தின் அத்தனை சாத்தியங்களிலும் முத்திரை பதித்தவர்.
ரங்கராஜனின் எழுத்தின் பிரத்தியேக பலம், அவரது உள்ளோடும் நகைச்சுவை உணர்வு. நடையில் மிளிரும் கம்பீரமான எளிமை. மேலான சத்தியம். வெகுஜன எழுத்துத்துறையில், ஒரு பெரிய தலைமுறையையே அவரது படைப்புகள் பாதித்திருக்கின்றன.
கல்கியையும் எஸ்.ஏ.பி.அண்ணாமலையையும் தமது ஆதர்சங்களாகச் சொல்லும் ரா.கி. ரங்கராஜன், கும்பகோணத்துக்காரர். (அடியேனும் கும்பகோணம் தான்)
எழுபத்தெட்டு வயதில், உற்சாகம் குறை யாமல் அண்ணாநகர் டைம்ஸ் இதழில் அவர் எழுதும் நாலுமூலை கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்

K
2nd September 2014, 11:54 PM
http://meedpu.blogspot.in/2014/08/raaja-vision.html
Must read For a Fan.

venkkiram
3rd September 2014, 05:15 AM
Thanks K for sharing this article. Valid points. But no clue how the fan club association do these things in a planned way. Raja any day is a treasure box for internet music stealers. His BGM score and tunes are heavily being ripped off from emerging youngsters from movie and tv industries. We everyone want Raja's original scores alive forever without any modifications in future days. His scores need to be channelized in proper and planned way.

venkkiram
3rd September 2014, 05:23 AM
Good narration from Samas.

http://tamil.thehindu.com/opinion/columns/பாக்-நீரிணைக்கும்-மன்னார்-வளைகுடாவுக்கும்-நடுவே/article6368605.ece

krish244
4th September 2014, 11:55 PM
Couple of news article which has references to IR:

Viji Manuel interview. It seems he is back into the music scene:

http://www.thehindu.com/features/friday-review/music/back-with-a-bang/article6379597.ece

Interview with Alleppey Ranganath. He is supposed have made both IR and MSV sing in one album:

http://www.thehindu.com/features/friday-review/music/rewind-to-a-versatile-music-maker/article6379956.ece

Interview series with Kamal. His association with IR:

http://www.thehindu.com/features/friday-review/and-more-on-the-ilaiyaraaja-connection/article6379569.ece

thanks,

Krishnan

rajaramsgi
5th September 2014, 11:44 AM
Thanks krish. Welcome back Viji Manuel. Hope Viji will get to work with Raja sir too, which he did not mention in the interview.

Raja sir should work with people who will inspire him like Kamal used to.
(All the younger generation directors may be great too, but they may not be in a comfortable level to be in front of him to extract what they want, due to fear? respect? I think, very few like Gowtham Menon broke the ice with him and got close, but there is no way he will come back to Raja sir, unless a miracle happens)

rajaramsgi
6th September 2014, 05:30 PM
மேகாவில் புத்தம் புது காலை பாடலை எப்படி படமாக்க போகிறார்கள் என்ற குறுகுறுப்பு ஒரு வருடமாகவே இருந்தது.

நாயகியின் சகோதரனனுக்கு திருமணம். அங்கே புகை படம் எடுக்கும் ஆளாய் நாயகன். திருமண வரவேற்ப்பு விழாவில் இந்த பாடலை ஒரு வாத்திய குழுவினர் பாட, சந்தோஷமாய் உறவினர்கள் உலாவும் பின்புலத்தின் மத்தியில், நாயகியும் அவர் தோழிகளும் அழகாய் நடனமிடுகிறார்கள். இடை இடையில் நாயகனும் நாயகியும் நோக்கி கொள்ள, திருமண அரங்கின் ஜொலிஜொலிப்பு சூழ்நிலைக்கு அழகூட்ட , பாடலின் முடிவில் நாயகன் நடனமாதுகளுக்கு மருதானியிடுகிறார், பாடலும் முடிகிறது.

கொசுறாக, இந்த பாடலின் முடிவில் மருதானியிட்டுகொண்ட நாயகி அதை கழுவிக்கொண்டு, தண்ணீர் நிறைந்த ஒரு வெண்கல பாத்திரத்தில் கை விரிக்க ராஜா சார் கோரஸ் குயில்களை கொண்டு 15 நொடிகள் சொக்க வைப்பதாக படம் பார்த்த நண்பன் கைபேசியில் வெறுப்பேற்றியது வேறு விஷயம்.

ஒரு வழியாய் படம் வெளிவந்து இப்போது பாடல்கள் அனைத்தும் யூடியூபில் ஒலியும் ஒளியுமாய் ஏற்றி இருக்கிறார்கள்..படம் எப்படி என்று தெரியவில்லை, ஆனால் பாடல்களை நல்லவிதமாய் எடுத்திருக்கிறார்கள். முகிலோ மேகமோ பாடல் டைட்டில் கார்ட் போடும் போது வருகிறதாம். அதிசயமாய் யுவன் இந்த பாடலை நன்றாய் பாடி இருந்தும், மியுசிக் சேனல்களில் பார்ப்பது கஷ்டம் தான்.

https://www.youtube.com/watch?v=mRWj5knSvC0

sivasub
6th September 2014, 06:52 PM
Not sure if this will ever happen... but the thought itself is noble...

http://www.galatta.com/tamil/news/ilaiyaraajas-helping-hand/80582/

rajaramsgi
6th September 2014, 09:49 PM
http://meedpu.blogspot.in/2014/08/raaja-vision.html
Must read For a Fan.

அகிலன் சொன்ன கருத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும், சில விஷயங்கள் புரிபடவில்லை. இவர் மீது ராஜா சார் தரப்பு ஏன் காவல் துறையில் புகார் செய்தது? எக்கோ போன்று இவரும் தவறேதும் செய்து விட்டாரா?

இசைஞானியின் பாடல்கள் அனைத்தும் தனது மேற்பார்வையிலும் தனது சிந்தனையிலும்தான் உருவானது. அதை இளையராஜா மெருகேற்றினார். அதனால்தான் இன்றளவும் அவைகள் பிரபலம் என்று சொன்ன அந்த மேதா விலாசி யார்? அப்படி சொன்னவரை நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் அகிலன்? சட்டப்படி அவருக்கு சாட்டை அடி குடுத்திருக்க வேண்டாமா? சட்டையை பிடித்து இழுத்து முகத்தில் காரி உமிழ்ந்திருக்க வேண்டாமா?

அகிலனுக்கும் ராஜா சாருக்கும் எப்படி தொடர்பு ஏற்ப்பட்டது, பின்னர் அகிலன் பொருளாதார ரீதியாக சறுக்கிய போதெல்லாம், ராஜா சார் எப்படி அவருக்கு உதவி செய்து இந்த தொழிலை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார் என்று வெகு நாட்களுக்கு முன்னரே அகிலன்ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை வைத்து தான் நானும் ஆப் ஸ்டோரில் அகி பேனர் மூலமாய் வெளிவந்த ராஜா சாரின் பாடல்களை பல நூறு பவுண்டுகள் கொடுத்து பதிவிறக்கம் செய்தேன். என்னை போன்று இன்னும் எத்தனை பேரோ?

ராஜா சார் இல்லை என்றால், தான் இன்று ஒன்றுமே இல்லை என்கிற ரீதியில் இருந்த அந்த கட்டுரைக்கும் இப்போது அவர் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசங்கள். அந்த ப்ளாக் கட்டுரையை என்னால் இப்போது கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், இசை இன்பம் பகுதியில் நானும் இசைஞானியும் என்று அவர் எழுதி உள்ள 3 பாகங்களை படிக்க, அகிலன் மீது எனக்கு மரியாதை குறைந்து விட்டது. கால்புர்ணர்ச்சி ஓங்கி வருகிறதோ இவருக்கு என்று என்ன தோன்றுகிறது.

Russellhaj
6th September 2014, 10:49 PM
See their comfort space..



https://pbs.twimg.com/media/BwxSmXFCIAAi_Vc.jpg:large

Russellhaj
6th September 2014, 10:52 PM
இளையராஜாவும் ஆண்டாளும்....

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்...

ஆண்டாள் அருளால் இசை சித்தர், இசைஞானி இளையராஜா அவர்களுடன் இன்று (05-09-2014) சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை வடபழனி Prasad Studio – வில் வைத்து 1½ மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து உரையாடினேன்.

இளையராஜாவை பற்றி ஒரு வார்த்தை பேசுவதற்கு கூட என்னை போன்ற சாமானியனுக்கு தகுதி இல்லை என்பது மட்டும் நிஜம் என புரிந்தது அவரை சந்தித்த பிறகு....

இளையராஜாவுடன் என்ன பேசினேன்; எதற்காக சந்தித்தேன்; இசைஞானி என்ன சொன்னார் என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சொல்வேன் – வெகு விரைவில்...

எல்லா புகழும் ஆண்டாளுக்கே....
எல்லாம் ஆண்டாள் சித்தப்படி....

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

http://https://m.facebook.com/andalpchockalingam/photos/pcb.389201534565757/389200421232535/?type=1&source=48&refid=52&__tn__=E

mappi
7th September 2014, 12:53 AM
கொசுறாக, இந்த பாடலின் முடிவில் மருதானியிட்டுகொண்ட நாயகி அதை கழுவிக்கொண்டு, தண்ணீர் நிறைந்த ஒரு வெண்கல பாத்திரத்தில் கை விரிக்க ராஜா சார் கோரஸ் குயில்களை கொண்டு 15 நொடிகள் சொக்க வைப்பதாக படம் பார்த்த நண்பன் கைபேசியில் வெறுப்பேற்றியது வேறு விஷயம்.
LoL
Putham Puthu Kalai - For years I had been 'mentally' pictorising this amazing song, that played in Loop in Winamp during my night shifts. Can't say much about what all I had imagined, but I can say that this is an OUTDOOR song, for sure. An early morning under the clouds that can be touched beside a waterfall, the flowers on the green grass wispering to the heroine Putham Puthu Kalai to which she gives her voice ...
... Athu oru Kanna Kalam.


முகிலோ மேகமோ பாடல் டைட்டில் கார்ட் போடும் போது வருகிறதாம். அதிசயமாய் யுவன் இந்த பாடலை நன்றாய் பாடி இருந்தும், மியுசிக் சேனல்களில் பார்ப்பது கஷ்டம் தான்.

So its not the IR version ?
Have not seen the movie yet, waiting for the DVD to get the full profit from IR music.

K
7th September 2014, 06:40 AM
அகிலன் சொன்ன கருத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும், சில விஷயங்கள் புரிபடவில்லை. இவர் மீது ராஜா சார் தரப்பு ஏன் காவல் துறையில் புகார் செய்தது? எக்கோ போன்று இவரும் தவறேதும் செய்து விட்டாரா?

இசைஞானியின் பாடல்கள் அனைத்தும் தனது மேற்பார்வையிலும் தனது சிந்தனையிலும்தான் உருவானது. அதை இளையராஜா மெருகேற்றினார். அதனால்தான் இன்றளவும் அவைகள் பிரபலம் என்று சொன்ன அந்த மேதா விலாசி யார்? அப்படி சொன்னவரை நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் அகிலன்? சட்டப்படி அவருக்கு சாட்டை அடி குடுத்திருக்க வேண்டாமா? சட்டையை பிடித்து இழுத்து முகத்தில் காரி உமிழ்ந்திருக்க வேண்டாமா?

அகிலனுக்கும் ராஜா சாருக்கும் எப்படி தொடர்பு ஏற்ப்பட்டது, பின்னர் அகிலன் பொருளாதார ரீதியாக சறுக்கிய போதெல்லாம், ராஜா சார் எப்படி அவருக்கு உதவி செய்து இந்த தொழிலை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார் என்று வெகு நாட்களுக்கு முன்னரே அகிலன்ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை வைத்து தான் நானும் ஆப் ஸ்டோரில் அகி பேனர் மூலமாய் வெளிவந்த ராஜா சாரின் பாடல்களை பல நூறு பவுண்டுகள் கொடுத்து பதிவிறக்கம் செய்தேன். என்னை போன்று இன்னும் எத்தனை பேரோ?

ராஜா சார் இல்லை என்றால், தான் இன்று ஒன்றுமே இல்லை என்கிற ரீதியில் இருந்த அந்த கட்டுரைக்கும் இப்போது அவர் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசங்கள். அந்த ப்ளாக் கட்டுரையை என்னால் இப்போது கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், இசை இன்பம் பகுதியில் நானும் இசைஞானியும் என்று அவர் எழுதி உள்ள 3 பாகங்களை படிக்க, அகிலன் மீது எனக்கு மரியாதை குறைந்து விட்டது. கால்புர்ணர்ச்சி ஓங்கி வருகிறதோ இவருக்கு என்று என்ன தோன்றுகிறது.


http://meedpu.blogspot.in/2010/02/blog-post_03.html

I think this is the one you say.

ராஜா நம்பும் நபர்கள் எல்லாம் அவரை ஏதோ ஒரு நாள் ஏமாற்றித்தான் இருக்கிறார்கள். நாம் நல்லதை எடுத்துக்கொண்டு மற்றவை விடுப்போம்.

rajaramsgi
7th September 2014, 12:43 PM
http://meedpu.blogspot.in/2010/02/blog-post_03.html

I think this is the one you say.

ராஜா நம்பும் நபர்கள் எல்லாம் அவரை ஏதோ ஒரு நாள் ஏமாற்றித்தான் இருக்கிறார்கள். நாம் நல்லதை எடுத்துக்கொண்டு மற்றவை விடுப்போம்.


Thanks for finding this K. Yes, this is the original blog I was talking about.

Russellhaj
8th September 2014, 03:05 AM
டைரக்டர் மகேந்திரன் தமிழ்த்திரையுலகில் (1978-90)ஒரு முக்கியமான ஆளுமை.சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியவர்களுள் ஒருவர்.

முக்கியமாக சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை காட்சிகளினூடே பார்வையாளனை பயணிக்க வைத்துக் கதைச் சொல்பவர்.காட்சிகளே கதாபாத்திரமாக,ஓவியமாக திரையில் தீட்டப்பட்டு உணர்ச்சிகள் பார்வையாளனைத் தீண்டும்.அவன் கதாபாத்திரங்களுடன் உலாவுவான்.

மிக முக்கியமாக காட்சிகளில் விரவிக்கிடக்கும் மெளனம் அர்த்தபுஷ்டியானது.



http://4.bp.blogspot.com/-QvVfp3A1rAI/TwEuuA4yzJI/AAAAAAAABdA/CcsJwxVvfD0/s200/mahendran.jpg


இப்படிப்பட்ட படைப்பைப் படைப்பவன்தான் உண்மையான படைப்பாளி. சிருஷ்டி கர்த்தா.டைரக்டர் மகேந்திரன் ஒரு சிருஷ்டி கர்த்தா.பார்த்துப் பார்த்துச் செதுக்கும் ஓவியர்.இப்படி இவருடன் இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் கைக்கோர்த்து ஒரு கவிதையை ஓவியமாக தீட்டி இருக்கிறார்கள் அல்லது ஒரு ஓவியத்தைக் கவிதையாக எழுதி இருக்கிறார்கள்.

அந்தக் கவிதை ஜானி திரைப்படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்ற பாடல் காட்சி.இவருடன் இணைந்த மற்ற இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் இசைஞானி இளையராஜா ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.


http://4.bp.blogspot.com/-ZdT7kIRRdNA/TwE2IRQGTbI/AAAAAAAABdM/dGv1kkEHo7A/s1600/ashok+kumar-1_thumb.jpg


இந்தப் பாடலின் காட்சி உள்ளும் புறமுமாக விரிக்கப்படுவதில் அசோக்குமாரும் ராஜாவும் தங்கள் கற்பனைத் திறனை அள்ளித்
தெளித்திருக்கிறார்கள்.பாடலை எழுதிய கங்கை அமரனும் பாராட்டுக்குரியவர்.நேரடியாக எதையும் சுட்டாமல் கவித்துமாக உள்ளது.

காட்சி நேர்த்தியாக romanticize செய்யப்பட்டு இருக்கிறது.



http://1.bp.blogspot.com/-EX_-3kqbgJA/UTrNQah1zHI/AAAAAAAACCo/zbsPVRkiYic/s320/raja+handsup.jpg


இந்தக் கவிதைக்கு யதார்த்தமான பின்னணி உண்டு.

குற்றப் பின்னணி உள்ள கதாநாயகன் ஜானி ஒரு இசை ரசிகன்.பிரபல பாடகி அர்ச்சனாவின் ரசிகன்.அன்று கேட்ட”ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்” பாடல் இவனுக்காகவே பாடப்பட்டதுபோல் உணர்கிறான்.மனம் குதூகலிக்கிறது.இசை நிகழ்ச்சி முடிவில் அவளைப் பாராட்டி பூங்கொத்து கொடுக்க முடியாமல் கூட்டம் இவனை தடுத்து விடுகிறது.

மறு நாள் அவள் வீட்டிற்கு தொட்டி தொட்டியாக வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டமே அனுப்பி வைக்கிறான்.மற்றொரு நாள் இருவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.கடற்கரையில் அர்ச்சனா உலா போகையில் தான் பாடிய “ஒரு இனிய மனது” பாடல் காற்றில் அலைந்து வருகிறது.அதை நோக்கி போகையில் ஒரு படகில் ஜானி மெய் மறந்துப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறான்.பரஸ்பர அறிமுகத்தில் இவன்தான் பூக்கள் அனுப்பியவன் என்று தெரிகிறது.தானும் அர்ச்சனாவைப் போல தனி இருவருக்கும் தங்களைத் தவிர யாரும்இல்லை என்பதில் இருவருக்குள்ளும் மெலிதான பிணைப்பு ஏற்பட்டு ஒரத்தில் ஒரு மொட்டு அவிழ்கிறது.

”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை... எனக்கு மட்டும் எனக்காக மட்டும்.. தனியாக நீங்க பாடனும்.தனியா கேட்கனும்.எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப் படனும்” ஜானி ஆர்வத்துடன் கேட்கிறான்.

”நிறைவேறுவது கஷ்டம்தான்...மாட்டேன்னா என்ன செய்வீங்க....” செல்லமாக சீண்டிவிட்டு ...”நாளைக்கு வீட்டுக்கு வாங்க" புன்னகையுடன் சம்மதிக்கிறாள்.ஜானியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

(ஒரு பாமர ரசிகனின் வெகுளித்தனமான ஆசையை நிறைவேற்றுவதில் அர்ச்சானவுக்கு ஒரு fatal attraction இருக்கிறது)


மறுநாள்: ஜானி சட்டைக்குள்ளே “MUSIC THE LIFE GIVER" என்ற வாசகம் எழுதிய மஞ்சள் பனியன் (பாமரத்தனமாக??) அணிந்து அவளை சந்திக்கச் செல்கிறான்.

வீட்டில் நுழைந்ததும் ஒருஅழகான பியானவும் அதைச் சற்றி அவன் கொடுத்த வண்ணப் பூக்களும் பார்வையில்பட்டு ”பியூட்டி புல்... பியூட்டி புல்...” நெகிழ்ந்துப்போய்விடுகிறான்.


http://1.bp.blogspot.com/-oNTI9u6keZI/TwE3ME0a28I/AAAAAAAABdY/j1afVMDnwk4/s400/Johnnn.jpg


பியானோ வாசிக்க முயற்சிக்கச் சொல்லி அவனும் மொன்னையாக மெட்டுவாசிக்க முயற்சிக்க ” no.. no... just listen..!" என்று பியானவில் அவள் விரல்கள் மீட்ட நாதங்கள் மீன்களாய் துள்ளி கவிதையாக எழ ஆரம்பிக்கிறது.

பாடல் முழுவதும் அவன் உடல்மொழி இயல்பாக இருக்கிறது.

காட்சி......


https://www.youtube.com/watch?v=27WmXqtvtV0


கேமரா ஊர்ந்து தூரிகையால் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்க உயிர் துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது காட்சி.இசை மென்மையான வெஸ்டர்ன் கிளாசிகலில் காட்சியை நகர்த்துகிறது.அர்ச்சனாவின் வானில் வெண்ணிலாவும் காதல் மேகங்களும் கவிதை தாரகைகளும் ஊர்வலம் போக ஆரம்பிக்கிறார்கள்.

அர்ச்சனாவின் உடை ஒரு தனி மொழியே பேசுகிறது.காட்சியின் பின்னணி ஒரு பாத்திரமாக பரவசப்படுத்துகிறது.காட்சிகள் உள்ளேயும் வெளியேயுமாக வழுக்கிக்கொண்டு பயணித்தப்படி போகிறது.ஜானி ” எல்லாம் எனக்குத்தான் எனக்குத்தான் ... எனக்குத்தான்...”கற்பனைச் சிறகடித்துப் பறக்கிறான்.

அர்ச்சனாவின் குரலில்(ஜென்சி) இருக்கும் மழலைத்தனத்தில் காதல் இருக்கிறது.காட்சியை ஆழப்படுத்துகிறது.


முதல் இடை இசையில் ரஜினி மனம் குதூகலித்தப்படி மேகத்தில் பறக்கிறது. உச்சக்கட்டமாக 1.22 ல் சொர்க்கத்திலிருந்து ஆசிர்வதிக்கப்படுகிறான்.Absolutely bliss..!

முதல் சரணத்தில் ”நீரோடை போலவே’ 1.30 -1.56 ஆரம்பித்து முடியும் வரை ரஜினி,ஸ்ரீதேவி,பிரேமி மூவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக 1.46-1.47ல் கேமரா திரும்ப, படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தபடி பிரேமி ஸ்ரீதேவியைப் பார்க்கும் (பெருமிதம்?) பார்வை யதார்த்தம்.

அடுத்து 1.56ல் ”நீராட வந்ததே என் மென்மை” என்று ஸ்ரீதேவி தன் குண்டு விழிகளில் எதையோ தேக்கி (காதல்?காமம்?)புன்சிரிப்போடு காட்டிவிட்டு தலைகுனிவது அருமை.

3.26ல் வாசித்துக்கொண்டே பிரேமியை எட்டிப்பார்க்கும் இடம் ரொம்ப சுட்டி.


http://1.bp.blogspot.com/-nQDGUb4-P9w/TwE9BGHd6rI/AAAAAAAABdk/gdyCzlW2o3E/s320/premi.bmp


இளையராஜாவின் வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்/பியானோ இழைகள் காட்சி முழுவதும் சில்லென்று வீசிக்கொண்டே இருக்கிறது.

பாட்டை அதன் பரிமாணத்தில் உள்வாங்கி மகேந்திரனும் அசோக்குமாரும் கவிதையாக செதுக்கி இருக்கிறார்கள்.

காவியக் காதல்களில்இரவு, நிலவு,பூஞ்சோலை, அருவி,அன்னம், புறா,மயில்,உப்பரிகை என்று காதலர்கள் உலா வருவார்கள்.

தமிழ் திரையுலகில் இப்படி உணர்வுபூர்வமாக மென்மையாக மிகைப்படுத்தாமல் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை பின்னணியுடன் பின்னி பினைந்து இசை வழியாக சொல்லி காட்சியை ஆழப்படுத்தியது அபூர்வமான ஒன்று.

-AR

Russellhaj
8th September 2014, 05:55 AM
இளையராஜா- King of Vibrating Veenai



இப்பதிவில் இளையராஜாவின் சினிமா பாடல்களில் இசைக்கப்படும் வீணை நாதங்களை பார்க்கப்போகிறோம்.



http://2.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/TTA7KLoq2TI/AAAAAAAAA-s/wx7ONnNdvJA/s200/veena.jpg

வீணை இசைக் கருவிகளின் ராணி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.இதன் முன்னோடி யாழ் என்ற இசைக்கருவி.திருவள்ளுவர் “குழல் இனிது யாழ் இனிது” என்று ஒரு குறளில் சொல்லி இருக்கிறார்.”மாசில் வீணையும்”அப்பர் பாடி இருக்கிறார்.



கல்வி கடவுள் சரஸ்வதியும் கையில் வீணையுடன்.நாரதர் கையிலும் வீணை உண்டு.ராவணன் வீணை சாம கானப்ரியன்.அகஸ்தியரும் வீணை வாசிப்பார்.





சில எண்ணங்கள்:



பொது வழக்கில் கருவிகள் "வாசிக்கப்பட்டாலும்" வீணையின் நாதம் ஸ்பெஷலாக “மீட்டெடுக்கப்படுகிறது”

இதயத்தின் அருகே வைத்து மீட்டுவதால் ஆத்மார்த்தமாகவும் ஆழமாகவும் நாதம் வருகிறதோ?
பழைய படங்களில் பொதுவாக இது பரத நாட்டியத்திறகும், பக்திக்கும் நிறைய வாசிக்கப்பட்டிருக்கிறது.அடுத்துதான் டூயட் வருகிறது.


இளையராஜாவிற்கு முன்பு எல்லாம் 90%நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கும். fusion கம்மி.
பொது வழக்கில் பெண்ணுக்கு வீணையும் ஆணுக்கு புல்லாங்குழலும் தொடர்புப்படத்தப்படுகிறது
இதிலும் சோகம்,மகழ்ச்சி,தியானம்,புல்லரிப்பு,கனிவு இத்யாதி உணர்ச்சிகள் மீட்டெடுக்கப்படுகிறது
நேரடியாக,சந்தில் சிந்து,மின்னல்,நீண்ட,துளி எல்லா அளவுகளிலும் வீணை நாதம் ராஜா இசையில் கோர்க்கப்படுகிறது.
வயலினை exploit செய்தார் போல் இதை செய்யமுடியாது என்று என் கணிப்பு.முடிந்தவரை exploit செய்திருக்கிறார்
இளையராஜாவின் வீணை நாதம்............


பேசுதல்/நெகிழ்தல்/உருகுதல்/சிரித்தல்/வெட்கப்படுதல்/புலம்புதல்/சிலிர்த்தல்/அழுதல்/விரகதாபம் எல்லாம் இசைக்கிறது.

எல்லாவற்றிலும் “ஆத்மா” இருக்கிறது.



http://4.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/TTA--wxcGlI/AAAAAAAAA-4/Rf2S8hcu4-8/s320/Veenahand_detail.jpg
வீணையில் வாசிக்கப்படும் கர்நாடக இசையைக் கேட்பது ஒரு தனி சுகம்.அது ஒரு கடல்.கேட்பது எனக்கு சுலபம். எழுதுவதற்கு பண்டித ஞானம் இல்லை.





போவதற்கு முன்......

Veenai Ennule.mp3


துணை இருப்பாள் மீனாட்சி(1977)-சுகமோ ஆயிரம்
Veenai Sugamoaayiram.mp3

ஆறிலிருந்து அறுபதுவரை (1979)-கண்மணியே காதல்
VeenaiKanmaniye.mp3

தீபம்(1977) -அந்தப்புரத்தில் ஒரு மகாராணி
சாமந்திப் பூக்கள் மலர்கிறது.இரு சந்தன தேர்கள் அசைகிறது வீணையின் மீட்டலில்.0.21-0.24 வீணை வயலின் நாதப் பின்னல்கள் அருமை.இதுதான் மேஸ்ட்ரோவின் கற்பனை வளம்.
Veenai Anthapurathill.mp3

கண்ணே கலைமானே(1988)-நீர்விழ்ச்சி தீ மூட்டுதே
வித்தியாசமான மீட்டல்,தாளம்.அளவெடுத்து வீணையும் தாளமும் இசைக்கப்படுகிறது.
VeenaiNeervizhchi-KanneKalai.mp3

இசைஞானிக்குப் பிடித்த பழைய பாடல்.பாக்கியலஷ்மி(1961)
மாலைப்பொழுதில் மயக்கத்திலே.இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

இதில் 0.07-.10 அண்ட் 0.11-0.14 மீட்டல்களை கவனியுங்கள்.இதில் இன்ஸ்பயர் ஆகிறார் மேஸ்ட்ரோ.
VeenaiMalaipozhuthin.mp3

பிறகு தன் இசையில் கற்பனை கலந்து fusion ஆகி வருகிறது.
அது பகவதிபுரம் ரயில்வேகேட்(1983)- காலை நேரக்காற்றே
இதில் 0.02-0.04 அண்ட் 0.07-0.08 கவனியுங்கள்.மற்றொரு கருவி என்ன பெயர்? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
Veenai Kalainera katre.mp3



நீங்கள் கேட்டவை(1984)-ஓ வசந்த ரோஜா
இசைப் பூச்சரத்தில் மூன்று இடங்களில் அழகாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
Veenai-O Vasantha Raja.mp3

சிந்துபைரவி(1985)-பூமாலை வாங்கி வந்தேன்
VeenaiPoomaalai-Sindhu.mp3

புதிய வார்ப்புகள்(1978)-தம்தனனம் தனனம்
வீணையும் வயலின்களும் உரையாடுகிறது. வித்தியாசமான துளிகள். வயலின் இசை உணர்ச்சிக்களுக்கு தோதாக வீணையின் நாதமும்.
Veenai thamthananam.mp3

கன்னிராசி(1985)-சுக ராகமே சுக போகமே
VeenaiSugaRagame.mp3

அலைகள் ஓய்வதில்லை(1981)-காதல் ஓவியம்
அட்டகாசமான Fusion.இசையின் போக்கு வெஸ்டர்ன் கிளாசிகலாக போகிறது.ஆனால் இடையே நம்ம ஊர் வீணை நாதம் இணைக்கப்பட்டு மீண்டும் வெஸ்டர்ன் கிளாசிலாக போகிறது.வேறோரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் இசை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.
Veenai NathiyiladumKathal Oviyam.mp3

இரண்டாவது ஆடியோ(இதில் துண்டாகிவிட்டது)
Veenai Kathal Oviyam.mp3

பழசிராஜா(2009)-குன்னத்தே
நாதத்தில் எத்தனைக் கனிவு.வயலினும் கனிவுக்கு பணிகிறது.அபாரம்.
VeenaiPazhazi-Kundrathu.mp3

இளமைகோலம்(1980)-ஸ்ரீதேவி என் வாழ்வில்
VeenaiSridevienvazhvil.mp3

மீண்டும் கோகிலா(1981)-சின்னஞ்சிறு வயதில்
0.06-0.09 மீட்டல் ஏதோ சொல்கிறது.
VeenaiChinnachiru-Vaya.mp3

எத்தனை கோணம் எத்தனைப் பார்வை(1983)-அலைப்பாயுதே கண்ணா
Veenai- Alaipayuthe Kanna.mp3

நிழல்கள்(1980)தூரத்தில் நான் கண்ட
Veenai Dhooraathil.mp3

வைதேகி காத்திருந்தாள்(1984)-இன்றைக்கு ஏனிந்த
நாட்டியத்திற்கு ஏற்ப வீணை இசை. 0.19-0.31 வரும் ஒரு நாதம் (வீணை அல்ல) உருக்குகிறது.வயோலா என்று யூகம்.

Veenai Indraikkuenintha.mp3


ராஜபார்வை(1981)-அழகே அழகே
VeenaiAzhake azhake.mp3

வியட்நாம் காலனி(1994) - கைவிணையை ஏந்தும் கலை
சிதார் மாதிரி இருக்கிறது. வீணை?
VeenaiVietnam Colony.mp3

மோகமுள்(1995) சொல்லாயோ வாய் திறந்து
எனக்குப்பிடித்த ஒன்று.Full of emotions.0.18ல் சொட்டும் வீணை நாதம் stunning
Veenai-Sollaayo-Moga.mp3

பயணங்கள் முடிவதில்லை(1982)-தோகை இள மயில் ஆடி
"அன்னமே இவளிடம் நடைபழகும்..இவள் நடை அசைவில் சங்கீதம் உண்டாகும்...”இசையில் காட்டுகிறார்.

VeenaiThogaiIlamayil.mp3

நான் பாடும் பாடல்(1984)-பாடும் வானம்பாடி
VeenaiPaadumVanam.mp3

உனக்காவே வாழ்கிறேன்(1986)-இளம்சோலை பூத்ததோ
தமிழ்ப்படங்களில் காதலியை பரத நாட்டியம் ஆட விட்டு கதாநாயகன் ஜிப்பா சால்வையோடு (ரொமப் அனுபவித்து)பாடுவது ஆயிரம் காலத்துப் பயிர் ஆகிவிட்டது.மாத்துங்கப்பா..!

VeenaiThogaiIlamayil.mp3

பத்ரகாளி(1977) - கண்ணன் ஒரு கைக்குழந்தை
Veenai-KannanOru.mp3

தீர்த்தக்கரையினிலே(1987)-விழியில் ஒரு கவிதைப் படித்தேன்
சின்னத் துளிகள் அருமை.
Veenai- Vizhiyil Oru.mp3

கோயில்புறா(1981) வேதம் நீ
Veenai Vedham nee.mp3

நாயகன்(1987)-நீ ஒரு காதல் சங்கீதம்
Veenai Neeorukathal.mp3

காதல் ஓவியம்(1981)நதியில் ஆடும் பூவனம்
Veenai NathiyiladumKathal Oviyam.mp3


எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையில் “வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு”படம்: வாழ்வு என் பக்கம்(1976).ரசிப்பது இதன் மெலடி/பாட்டின் கவித்துவம்/ஒரு ஹம்மிங்.
Veena(MSV) Veenai Pesum.mp3


டெயில் பீஸ்


பைனாகுலர் வைத்துப்பார்க்கிறேன் கடந்த 12 வருடத்தில் எவ்வளவு பாட்டுக்களில்(ராஜாவையும் சேர்த்து)வீணை நாதம் வந்திருக்கிறது என்று.சினிமா கதையெல்லாம் மாறிப் போய்விட்டது.நல்லதோர் வீணை செய்தேன்.அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..சொல்லடி சிவசக்தி?

Thanks to RA

Russellhaj
8th September 2014, 06:08 AM
இளையராஜா King of Mellifluous Flute



புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் இளையராஜாவின் புகழ் பாடுங்களேன் என்று பாடத்தான் வேண்டும்.பிரபஞ்சத்தில் புல்லாங்குழலுக்கு இந்த அளவிற்கு திரை இசையில் அணி(அழகு) சேர்த்தவர் மேஸ்ட்ரோ ஒருவராகத்தான் இருக்க முடியும்.


http://4.bp.blogspot.com/-KPSPtUwEIuw/TaUJVkcF3xI/AAAAAAAABHU/u97H4_u1pY4/s320/RajaPianoHouse.bmp


பிரமிக்கத்தக்க அளவில் புல்லாங்குழலுடன் விதவிதமாக லீலைப்புரிந்திருக்கிறார்.அதே பிரபஞ்சத்தில் முதலில் தோன்றிய இசைக்கருவி புல்லாங்குழலாகத்தான் இருக்கும் என்பது என் யூகம்.

குழல் பேசும் மொழிகள் பல.ஓவ்வொன்றும் வேறுபட்டவை.சில
ரகசியமானது.சில புரியாதவை.ரசிக்கக்கூடியவை.வேற்று பிரபஞ்ச மொழிகளும் இதில் அடக்கம்.



இந்த நாதங்கள் மனதில் ஊடுருவி கிளர்த்தும் காட்சிகள்/தீட்டும் ஓவியங்கள் விவரிக்க முடியாதவை.

He is a dictionary for cinema light music flute.Magic Flute magician.

ஒரு இசைக்கலைஞனின் உன்னதம் அவன் இசைக்கும் இசையில் மட்டுமில்லாது தன் வசப்படுத்திய(mastering instruments) இசைக்கருவிகளின் மேன்மைகளும் வெளிப்படவேண்டும் அவன் இசையில்.

அந்த வகையில் All the musical instruments are at Ilaiyaraja"s delight.

இவரின் இசை மனதின் அடியில் வண்டல் போல் படிவதற்குக் காரணம் emotions....emotions ... emotions ... full of emotions!போதை அடிமை போல் ஆகிவிடுகிறோம்.ஒரு நவீன தொனியில் ஆத்மா கலையாமல் கொடுக்கப்படுகிறது.

உயர்தர சைவ உணவகம் மாதிரி உயர்தர இசை.You name it. I music it.

போவதற்கு முன் இசைஞானியின் விதவிதமான வேணுகாணத்தில் நனைந்தபடி போவோம்.


http://1.bp.blogspot.com/-fdoLryf1thQ/TZ2RCm60AiI/AAAAAAAABGs/WQOvKUThFuk/s200/Superkrishna.jpg




Flute-Ooranjaaram-Kakkaisirakinile.mp3

Flute-Sollividu Vellinilave-Amaithi Padai.mp3

Flute-Orampo Orampo.mp3

Flute-Aur Ek Prem Kahani - Naina.mp3

Flute-Gnan Gnan Paada-Poonthalir.mp3

Flute-Shri Eadukondalaswami.mp3

Flute-Unnaivazhathi Paadukiren-OhoKaalaiKuyilgale.mp3

Flute-Madhuramari.mp3

Flute-Sharadendupaadi-Kaliyoonjalu.mp3

Flute-Pularkindrapozhuthu-Uliyin Oosai.mp3

Flute-84-Oh Vasantha Raja-Neengal Kettavai.mp3

Flute-Chinnakannan Azhaikiran-Kavikkuyil.mp3

தன் புல்லாங்குழல் இசைப் பயணத்தை அன்னக்(குயில்)கிளியுடன்தான் ஆரம்பித்திருக்கிறார்.முன்னால் இசை மேதைகளிடமிருந்து வாங்கி அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

முதல் கட்டம்:

நதியைத் தேடிவந்த கடல்-1980- எங்கேயோ ஏதோ
ராஜாவிற்கு முன் இசையில் புல்லாங்குழல் இந்தப் பாடலில் (இதுவும் ராஜாதான்)வருகிற மாதிரிதான் சம்பிரதாயமாக இருக்கும். சில விதிவிலக்குகளும் இருக்கிறது.

ஜெயலலிதாவும் “படாபட்” ஜெயலட்சுமியும்

Flute-NathiyaiThediVandhaKadal-Engeyo.mp3

அடுத்தக் கட்டங்கள்:(முதலில் நாம் நனைந்ததும் அடுத்தக் கட்டம்தான்)

இந்த மனதை வருடும் உணர்ச்சிகள் நவீன தொனியுடன் இசைக்கப்பட்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது.

புல்லாங்குழல் -1
அன்னக்கிளி-1976-அன்னக்கிளி உன்ன தேடுதே
0.12-0.18க்குள் இரண்டு தடவை குழல் நாதம் வருகிறது.வருவதற்கு முன் இரண்டுக்கும் எப்படி ஒரு இசை பில்ட் அப் கொடுக்கிறார் பாருங்கள்!

“தேடுதே” (0.24)என்று முடிக்கும் இடத்தில் மெலிதாக குழல் வருடிக்கொடுக்கிறது.
Flute-Annakkili Unna Theduthu1.mp3

புல்லாங்குழல்-2


http://3.bp.blogspot.com/-XboN-q_9Beo/TZ2Vdn5VodI/AAAAAAAABG4/jfWZhgkLxrA/s320/KatrilFlute.bmp


ஜானி-1980 -காற்றில் எந்தன் கீதம்
Flute-KaatrilEnthan.mp3

புல்லாங்குழல் -3
ஹே ராம் - 2000-நீ பார்த்த பார்வை
பின்னணியில் புல்லாங்குழல் சிறு சிறு விரகதாப அலையாக எழுவது அதீத கற்பனை.Out of the world flute interlude!
Flute-Neepaartha-Hey Ram.mp3

புல்லாங்குழல்-4
சாதனை-1986 -ஓ வானம்பாடி
இசைத்துளியை கவனமாக கேளுங்கள்.0.03 இருந்து இசைக்கப்படும் ஷெனாய் நாதத்தில் 0.08-0.09லும் மற்றும் 0.11-0.12லும் பு.குழல் இசைத் துளிகள் தொடுக்கப்படுகிறது.இது என் யூகம்.

முக்கால் ஷெனாய்யும் கால் புல்லாங்குழலும் (இசை)கூட்டணி.
Flute-Saadhanai-OhVaanampaadi.mp3

புல்லாங்குழல்-5
கடவுள்- 1997 -ஆதிசிவன் தோளில்
குழலின் நாதத்தில் ஜீவகளை சொட்டுகிறது.
Flute-Kadavul-AadhiSivan.mp3

புல்லாங்குழல்-6
மண்வாசனை -1983- பொத்திவச்ச மல்லிகமொட்டு
பட்டாம்பூச்சிகள் படபடத்தபடி பூவில் தேனை உறிஞ்சுவது போல் ஒரு நாதம்.ஆச்சரியப்படுத்துகிறார்.பாரதிராஜா இந்த மாதிரி இசைத்துளிகளுக்கு காட்சி அமைக்கத் தடுமாறுவாராம்.

வித்தியாசமான சின்னச் சின்ன அசட்டுத்தனம் இல்லாத hifi ஊதல்கள்.
Flute-PothiVechcha.mp3

புல்லாங்குழல்-7
இது நம்ம பூமி -1992 - ஆறடி சுவருதான்
0.17/0.21/0.25/0.29ல் நாதம் உச்சஸ்தாயில் போய் நம்மிடம் பேசுகிறது. ஆனால் உச்சஸ்தாயில் வேறு ஒரு இசைக்கருவியும் கலவையாக வாசிக்கப்படுகிறது என்பது என் யூகம்.உச்சஸ்தாயில் அதன் ஜீவனே மாறுகிறது.
Flute-AaradiChuvarthan.mp3

புல்லாங்குழல்-8
நிழல்கள் - 1980-பூங்கதவே தாழ்திறவாய்
0.11 பிறகு மென்மையான புல்லாங்குழல் படபடக்கப்போகிறது என்பதை யூகிப்பது கஷ்டம்.
Flute-PoongathaveThazh.mp3

புல்லாங்குழல்-9
ருசிகண்ட பூனை-1980 - என் நெஞ்சம் உன்னோடு
Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3



புல்லாங்குழல்-10
தம்பி பொண்டாட்டி -1992 - என் எண்ணம்
Mind blowing romantic musical Flute! எவ்வளவு வர்ணங்கள் காட்டுகிறார் ராஜா.
Flute-Un Ennam-Thampi Ponndatti.mp3

புல்லாங்குழல்-11
தீர்த்தக்கரையினிலே -1987- விழியில் ஒரு கவிதை படித்தேன்.
அடுத்தக் கட்டம் என்பதற்கு பல பல உதாரணங்களில் ஒன்று. கதம்ப இசையில் குழல் சிறிதாக ஒத்தப்பட்டு அலங்காரப்படுத்தப்படுகிறது.

0.03-0.10 பிரமிக்க வைக்கிறார்.real stunner!தேஷ் ராக சுரங்களும் தெறிக்கிறது.
Flute-Vizhiyil Oru Kavithai-Theerthakkaraiyinile.mp3


கிட்டத்தட்ட முதல் 15 வருட மேஸ்ட்ரோவின் முக்கால்வாசிப் பாடல்களில் வயலினுக்கு அடுத்து புல்லாங்குழல் நாதத்தில் தடுக்கி விழுவீர்கள்.இதில்நிறைய கிராமம் சார்ந்தப் படங்கள்.

மேஸ்ட்ரோவின் இசையின் எப்பவுமே ஆச்சரியப்படுவது :-
ஒரு இசையிழையும் அதனுடன் துரிதகதியில் இன்னொரு இசையிழை சேரும்போது அசட்டுத்தனம் இல்லாமல் இணைவது... இசைவது...
அபஸ்வரம் தட்டாமல் இணைவது
”ஆத்மா”(soul) கலந்து இந்த இணைவதும் இசைவதும்

வெஸ்டர்ன் கிளாசிகல் பின்னணியில் ஒரு பு.குழல் நாதம்:
அஜந்தா-2007 -தூரிகை இன்றி.
Flute-Thoorigaiindri-Ajantha.mp3

முதல் மரியாதை-1985:
மேஸ்ட்ரோ புல்லாங்குழலை இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டுள்ளார்.அத்தனை புல்லாங்குழல் நாதங்கள். தமிழ்நாடு மறக்கவே முடியாது இந்தப் புல்லாங்குழல் நாதங்களை.

http://1.bp.blogspot.com/-MYu1HNHriK4/TaBiFviUifI/AAAAAAAABG8/QReKX3aVyS4/s320/mudhal+mari-Radha.bmp


ராசாவே வருத்தமா! கூ கூ!

நவீனப்படுத்தப்பட்ட கிராமிய சாயல் கொடுக்கப்பட்டுள்ளது.குழலின் துளைகளினிடையே கசியும் உணர்ச்சிகள் விவரிக்க முடியாதவை.

Flute-Antha Nilavathan-Mudhal Mariyathai.mp3

Flute-Vettiveru Vaasam-Mudhal Mariyathai.mp3

Flute-Mudhal Mariyathai-PoongatruThirumbuma.mp3

பிரமிக்கத்தக்க விஷயம்:

63 வகையான புல்லாங்குழல் இடையிசைகள்(interludes) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.ஒன்றின் சாயல் மற்றதில் இல்லை.back to back xeroxம் இல்லை. It is a amazing achievement!

காரணம்:
பல வித கலவைகளில் (combinations) இசை கோர்க்கப்படுகிறது.

எப்படி சாத்தியமாகிறது இந்த கலவைகள்?

இசைக்கருவிகளைப் பற்றிய நுண்ணிய அறிவு
நோட்ஸ் எழுதும் வேகம்/திறமை
வெஸ்டர்ன் கிளாசிகல்/கர்நாடக இசை/கிராமியம்,இந்துஸ்தானி.. எல்லாம் விரல் நுனியில்
மாற்றிப்போடும் தாளங்கள்/இசைக்கருவிகள்
permutation & combination
மாத்தி யோசி கான்செப்ட்
காட்சியமைப்பு
சில வித்தியாசமான இயக்குனர்கள்
அனுபவம்
டூயட்டில் புல்லாங்குழல்:
சின்னத்தாயி-1992- நா ஏரிக்கரைமேலிருந்து.
மனதுக்கு நெருக்கமான பாட்டு.
Flute-Naan Eraikkaraimel-Chinnathayee.mp3

கோபுர வாசலிலே-1991- காதல் கவிதைகள்
அமர்க்களமான அரேஞ்மெண்ட்.0.46-0.47 ல் கலக்கல்.054-1.18 பரந்த வானில் ஏகாந்தமாக கூவிக்கொண்டுச் செல்லும் ஒற்றைப்பறவையின் மொழி.
Flute-Kadhalkavithaigal-Gopura Vaasalile.mp3

ஆராதனை-1981 - ஒரு குங்கும செங்கமலம்
காட்டில் இந்த இசையை இசைத்தால் பதிலுக்கு சத்தியமாக கூவத்தான் செய்யும் பெயர் தெரியாத பறவைகள்.
Flute-Oru Kunguma-Aaradhnai.mp3

கனிவு உணர்ச்சி:
உதிரிப்பூக்கள்-1979-அழகிய கண்ணே
Flute-UthiriPookal-AzhagiyaKanne.mp3

கண்ணே கலைமானே-1988-நீர் விழ்ச்சி தீமூட்டுதே
Flute-Neervizhchi-Kanne Kalaimane.mp3

வித்தியாசமான உணர்ச்சிகள் வித்தியாசமான நாதங்களில்:

மோகமுள்-1995-கமலம் பாத கமலம்
Flute-KamalamPaadha-Mogamull.mp3

பாக்யாதேவதா - 2009-அல்லிப்பூவே மல்லிப்பூவே
Flute-Allipoove-Bhagayadevatha.mp3

மணிப்பூர் மாமியார்-1982 -ஆனந்த தேன்காற்று
Flute-Aanandhathenkaatru-ManipurMamiyar.mp3

வருஷம்-16 -பூ பூக்கும் மாசம்
ராஜாவின் மாஸ்டர் பீஸ்.வீணையும் புல்லாங்குழலும் தனியாக உரையாடிபடியே கடைசியில் இணைவது அருமை.Awesome maestro! He is music magician.இந்த மாதிரி இசைக்கோர்ப்புகள் அனாசியமாகப் போடுகிறார்.
Flute-Varusham-16-PooPookkum.mp3

முரட்டுக்காளை-1980- மாமன் மச்சான்
தாளம் புல்லாங்குழலை தோற்கடிக்கிறது.
Flute-MamanMachan-Murattu Kalai.mp3

அரண்மனைக்கிளி-1993-ராசாவே உன்னை விட


”அன்னக்கிளி உன்ன தேடுதே”வின் 1993 வெர்ஷன். ரெண்டுமே ஜானகிதான்.0.35-0.54 அட்டகாசம்.இந்தப் பாட்டின் மெட்டை மிகவும் ரசிப்பவன்.
Flute-Raasave Unnai-Aranmanaikili.mp3

சிங்காரவேலன் - 1992 -தூது செல்வதாரடி.
புல்லாங்குழலோடு தபலாவும் தட்டப்படும் இடம் 0.10 அருமை ரம்யம்.
Flute-ThoodhuSelvadharadi-Singaravelan.mp3

என்றும் அன்புடன் - 1992 - நிலவு நிலவு வந்தது

Flute-Nilavuvandhadhu-Endrum Anbudan.mp3

மெல்லத் திறந்தது கதவு -1986 - குழலூதும் கண்ணனுக்கு
Flute-KuzhaloothumKannanukku.mp3

மோகமுள்-1995-சொல்லாயோ
Flute-Sollayoo-Mogamull.mp3



Flute-Sevanthipoomudicha-16Vayathinile.mp3

Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3

Flute-SalangaiOli-VaanPole.mp3

Flute-Bharathi-EthilumIngu.mp3

Flute-ThendraNeePesu-Kadavul Amaitha Medai.mp3

Flute-SandhyavukkuVirinja-Manjum Kulirumi.mp3

ரோசாப்பூ ரவிக்கைக்காரி-1979-என்னுள்ளில் எங்கோ
இந்தப்பாட்டின் ஒரு துளியும் அதன் உணர்ச்சிகளும் மனதைக் பிசையக் கூடியது.b>0.36-0.55 இரு புல்லாங்குழல் பேசும் மொழி ரகசியமானவை.அதன் அந்தரங்கம் புனிதமானவை.

இளையராஜாவின் முதல் ஐந்து பாடல்களில் இது கட்டாயம் இடம் பிடிக்கும்.


Flute-Ennullilengo-Rosappu Ravikaikari.mp3

மெட்டி-1982-சந்தக்கவிகள் பாடிடும்
புல்லாங்குழலுக்கு இணையாக கோரஸ் வயலின்கள் டால்பின் மீன்கள் போல துள்ளி விளையாடுகின்றன.
Flute-Sandhakavigal-Metti.mp3

Flute-KalaKalakkum-Eramana Rojave.mp3

கிளாசிகல் ரொம்ப ஸ்டைலாக(மல்லுவேட்டி).
Flute-MalluvettiMinor-Kathiruntha Malli.mp3

செந்தாழம் பூவில் வந்தாடும் புல்லாங்குழல் நாதங்கள்.
Flute-Senthazham Poovil-Mullum Malarum.mp3

வித்தியாசமான சின்னச் சின்ன நாதங்கள்:-

லேடிஸ் டெய்லர்-1986(தெலுங்கு)-பொரப்பட்டித்திதி
Flute-Ladies Tailor-Porapaatidhi.mp3

ஆ ராத்திரி -1983-நீலிமதன்(மலையாளம்)
Flute-Aa Rarathri(movie)-Ee Neelimathan.mp3

மகளிர் மட்டும்-1994 கறவ மாடு மூணு
Flute-KaravaiMaadu-Magalirmattum.mp3


மரகதவீணை-1986 -மரகதவீணை இசைக்கும்
Flute-MaragathaVeenai.mp3

உள்ளம் கவர்ந்த கள்வன் - 1988
Flute-Ullam Kavarntha Kalvan-Naadirukkum Nilamai.mp3

குணா-1991 - உன்னை நானறிவேன்
Flute-Unnainanariven-Guna.mp3

குருசிஷ்யன் -1988 - உத்தமபுத்திரி நானு
Flute-Uthama Puthiri-GuruShishyan.mp3

உதிரிப்பூக்கள்-1979-ஹேய் இந்த பூங்காற்று
Flute-UthiriPookkal-HeyIndhaPoonkaatru.mp3

கோடை மழை-1986 -துப்பாக்கி கையிலெடுத்து
Flute-KodaiMazhai-ThupakiKayil.mp3

என் அருகில் நீ இருந்தால் - 1991
Flute-Udhayam Neeye-En Arugil Nee.mp3


டெயில் பீஸ்:
(30-03-11)ஆ.விகடன் கேள்வி:“ மத்த இசையமைப்பாளர்களை ரசிப்பீர்களா?”


http://2.bp.blogspot.com/-Z8NGOia_WIg/TagJVJpqSuI/AAAAAAAABHg/NVA5yJMsXcc/s200/Vijay-Antony.jpg



இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பதில்: “ ஒரே ஒரு இசையமைப்பாளரை ரசிப்பேன். அவர் இளையராஜா. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவருக்கு “மாஸ்ட்ரோ”னு சின்ன பட்டத்தைக் கொடுத்திருக்காங்க. அந்த யானை சாப்பிட்டுப் போட்ட மிச்சத்தை வெச்சுத்தான் நாங்க விளையாடறோம்!’


Thanks to RA

Russellhaj
8th September 2014, 06:28 AM
இளையராஜா- King of Heavenly Hummings"




சினிமாவில் ஹம்மிங் பற்றி இந்தப் பதிவில் சினிமா ஹம்மிங தேவதைகள் பார்த்தோம்.அதில் இளையாராஜாவுக்கு முன்/பின்/சமகாலத்திய இசை ஜாம்பவான்களின் பாடலில் ஹம்மிங் பயன்படுத்தலைப் பற்றி பார்த்தோம்.

இளையராஜா புதுமை ஸ்பெஷலிஸ்ட் என்பதால் ஸ்பெஷலாக அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு.மேஸ்ட்ரோ எதையுமே வித்தியாசமாகக் கொடுப்பவர்.ஹம்மிங்கை விட்டுவைப்பாரா?

இது தேவதைகளின் மொழி.பாடலை உணர்ச்சிகளால் ஒப்பனைச் செய்பவை.அதிலும் புதுமை புகுத்தி இருக்கிறார்.ஹம்மிங்கை ஒரு இசைக்கருவியாக உபயோகிக்கி்றார்.

உணர்ச்சிகள் கலையாமல். எந்த வித gimmicks இல்லாமல் அழகாக ஹம்மிங்கை spray paint செய்திருப்பார்.


ஜென்சி ஹம்மிங்கில் முன்னணி. பின்னுகிறார்.பிறகு ஜானகி/வாணி/சசிரேகா/ஷைலஜா/உமா/சித்ரா/சுஜாதா/ராதிகா/பூரணி/சுசிலா.

HUmm_AnnaiUnnaThed.mp3


”அன்னக்கிளி உன்னத்தேடுதே”-1976-அன்னக்கிளி
முதல் படம்.முன் இருந்த ஜாம்பவான்களின் சாயல் இல்லாதலட்சணமான ஹம்மிங்.இவர் யார் என்று தெரியாமலேயே மனதில் படிந்தது.

HUmm_RasaveUnnaNambi.mp3

”ராசாவே உன்னை”-1985-முதல் மரியாதை
ஜானகியின்ஆரம்ப கிராமத்து வெகுளி ஹம்மிங்.மனதில் “பச்சக்” என்று ஒட்டிக்கொள்ளும். வித்தியாசம் அன்ட் அட்டகாசம்.

”மஞ்சள் நிலாவுக்கு”-1979 -முதல் இரவு
Humm_manjalnilavukku.mp3

“ஊஊ......................” என்று ரயிலை கட்டி இழுத்துச்செல்வது மாதிரி ஹார்ன் பெண் ஹம்மிங் சூப்பர்.

”என் இனிய பொன்”-1980-"மூடுபனி”
Humm-EnIniya Pon.mp3

கிடாரைத் தொடர்ந்து தேவதைகள் அடுத்து புல்லாங்குழலைத் தொடர்ந்து தேவதைகள் வேறுவிதமாக. சூப்பர்.ஸ்டைல் ஹம்மிங்.

”ராத்திரியில் பூத்திருக்கும்"”--1983-தங்கமகன்
Humm-Rathiriyil Poo.mp3

இந்த ஹம்மிங் வருவதற்கு முன்/பின்/சேர்ந்து இசையை வாரி இறைக்கிறார்.stunning! அடுத்ததும் அசத்தல்.

"பூவில் வந்து”-1982-காதல் ஓவியம்
Humm_Poovilvandu.mp3

பாலுவின் ஆரம்ப மோகனராக ஹம்மிங் அருமை.ஹம்மிங் முடிந்தவுடன் வரும் இசையில் நம்மை வேறு உலகத்தில் மிதக்க விடுகிறார்.சின்னசாமி என்றால் ராசய்யா ஸ்பெஷல் உழைப்பு?



http://2.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/TAtmgIdYQ7I/AAAAAAAAAwU/x6Ag_ql03VY/s400/rajapiano+medi-super.jpg




கிழ் வரும் ஹேம் ராம் பாட்டின் ஹம்மிங்கை கேட்காமல் போகாதீர்கள். மிகவும் வித்தியாசமானது.பிரமிக்க வைக்கும் இசைக்கோர்ப்பு. Mindblowing composition by Isai Jnani Ilayaraja!

Humm - Neepaartha.mp3

”நீ பார்த்த பார்வை” -2000-ஹே ராம்
முன்னணியில் ராணி முகர்ஜி மனதை அள்ளும் குரலில் ஏதோ பெங்காலியில் பேசுகிறார்.பின்னணியில் மெலிதான பியானோ இசை. இரண்டும் இனிமையாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு தேவதை குரல் வருடிவிட்டுப் போகிறது. பிரமிப்பு.

பின் வரும் ஹம்மிங்கை கவனி்யுங்கள். இரண்டு விதமாக வருகிறது.அடுத்த பிரமிப்பு.

"செந்தாழம் பூவில்”-முள்ளும் மலரும்-1978

Humm_SenthaPoovil.mp3

யேசுதாசின் வித்தியாசமான hill station driving humming?. ஞானி சார் அட்டகாசம்!.என் பாட்டி(இப்போது உயிரோடு இல்லை) ஹம்மிங்கை ரசித்துக் கேட்பார்.பெண்களால் அதிக அளவில் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாட்டு.

( மென்மையானஹம்மிங்கும், இதன் காட்சியும், பாடல் இனிமையும்,இசைக்கோர்ப்பும், ஹோம்லி ஷோபா/சிவப்பு கலர் புடவைப் பெண்/சரத்பாபுவின் ஆளுமைகள் மனஇயல்ரீதியாக பெண்களை ஒன்ற வைத்தன என்று சிலோன் ரேடியோவில் சொல்லக்கேட்டிருக்கிறேன்)

"காளிதாசன் கண்ணதாசன்”-1983-சூரக்கோட்டை சிங்கக்குட்டி
Humm-KalidasanKanna.mp3
ஆரம்பம் ஹம்மிங்.அட்டகாசம்.மேஸ்ட்ரோவின் குரலும் இழைகிறது.

”மெட்டி...மெட்டி”-1982-மெட்டி

Humm-Mettimetti.mp3
அற்புதமானஆண் ஹிந்துஸ்தானி டைப் ஹம்மிங் . இதே படத்தில்”மெட்டி ஓலி” பாட்டின் ஆரம்பத்தில் “கவுண்டர் பாயிண்ட்”ஹம்மிங் ராஜா ஒரு மெட்டிலும் ஜானகி வேறொரு மெட்டிலும் வித்தியாசமான ஹம்மிங்

"ஆனந்த தேன் காற்று”-1982-”மணிப்பூர் மாமியார்”
எஸ்.பி.ஷைலஜாவின் இந்துஸ்தானி ஹம்மிங் இனிமையோ இனிமை.
24Humm_anandthen.mp3


"என்னுள்ளே”-1993-வள்ளி Heavenly humming
Humm-ennulle ennule.mp3

"ஒரு ராகம்”-1982-ஆனந்தராகம்
Humm_OruRagam1.mp3

வித்தியாசமானக் கற்பனை. இதன் ஆரம்ப ஹம்மிங்கில் இதனுடன் பின்னி வரும் ”கும் கும்”தாளக்கட்டு இந்தப் பாடலுக்கு ஒரு சோக/ஏக்க effect கொடுக்கிறது.வேண்டிய இடங்களில் ஹம்மிங்கை அழகாக spray paint செய்திருக்கிறார் மேஸ்ட்ரோ.

"தெய்வீக ராகம்”-1980-உல்லாசப்பறவைகள்

(ஒலிப்பதிவு சரியில்லை) இதுவரைக் கேட்காத புதுமையான மனதை வருடும் தேவதை ஹம்மிங். It is absolutely out of the world humming!.எனன ஒரு அதீத கற்பனை!ஜென்சி சூப்பர்.

0.05-0.16 ஒரு வகையும் 0.45-1.04ல் வேறு வகையும்(ஹம்மிங் மற்றும் அதன் எதிரொலி)1.05 -1.10(ரிபீட்). “நீராட்டவா”2.20-2.23ல்கொஞ்சமாக 2.30-2.35 மீண்டும் பழைய ஹம்மிங்கிற்கு திரும்பும் தேவதைகள்.3.11 -3.20 ”தந்தானான”.

”தெய்வீக ராகம்” (0.51)என்ற வரியை ஜென்சி உச்சரிக்கும்போது பின்னணியைக் கவனியுங்கள்.”தெய்வீக....” என்ற எதிரொலி வரும்.ஆனால் 2.36ல் மீண்டும் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது எதிரொலி வராது.ஆனால் மறுபடியும் 4.04ல் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது வரும்.

ரூம் போட்டு உண்மையாக இசை(யோசி)க்கிறார் ராஜா.

3.45-3.54 ல் 2.20-2.23 ஹம்மிங் ரிபீட் ஆகும் என்று நினைப்போம்.ஆனால் அதேதான் ஆனால் கால அளவு மாறுபட்டு வித்தியாசமாக வரும்.அதான் மேஸ்ட்ரோ! பாடல் முடியும் போது மீண்டும் பழைய ஹம்மிங்.வளையம் முற்றுப்பெறுகிறது.

ஆடியோ சரி இல்லாததால்.பாட்டின் வீடியோவைப் பார்க்கவும்.



”ஆயிரம் மலர்களே”-1979-நிறம் மாறாத பூக்கள்
ஜென்சியின் மனதை உருக்கும் ஹம்மிங்.நேரடியாக கேட்காமல் எங்காவது காற்றில் மிதந்து வரும்போது கேட்டால் அள்ளிக்கொண்டு போகும்.
I love you Jency!
Humm-AayiramMalargale.mp3

”நான் ஒரு பொன்னோவியம்”--1980-கண்ணில் தெரியும் கதைகள்
Humm-Nan oru pon.mp3

இதில் குரூப் ஹம்மிங் இரண்டு அடுக்குகளாக வரும்.ஒரு நீண்ட அருமையான கிளாசிகல் ஹம்மிங்கும் உண்டு.

”ABC நீ வாசி”-1984-ஒரு கைதியின் டைரி
”வரைமுறை என உண்டு வாய் பொத்தி கேளு ”ஆரம்பிக்கும் முதல் சரணத்தில் வாணி/யேசுதாஸ மாறி மாறி பாடும்போது ”ஆஆஆஆஆ” பின்னணி ஹம்மிங்கும்,அடுத்து வரும் வரிகளில் இவர்கள் மாறி மாறி ஹம் செய்வார்கள்.

ஆரம்ப இசையை கவனியுங்கள் இசையோடு இசையாக ஹம்மிங்கும் ஒரு இசைக் கருவியாக பின்னிக்கொண்டுவரும்.

”கேளடி கண்மணி”-1989-புது புது அர்த்தங்கள்
Humm_KeladiKancom.mp3

எவ்வளவு வித்தியாசமான ஹம்மிங். அட்டகாசம்.எப்படியெல்லாம் ஹம்மிங்கு யோசிக்கிறார்.

இன்னும் பல அவற்றில் சில
1.தம் தம் தன்னம்
2.உறவெனும் -நெஞ்சத்தைக்கிள்ளாதே
3.பொன்வானம் பன்னீர்
4.எனதுவிழியில்
5.காற்றில் எந்தன் கீதம்


Thanks to RA

Russellhaj
8th September 2014, 06:42 AM
இளையராஜாவின் -நாத உரையாடல்கள்



மேஸ்ட்ரோவின் பாடல்கள் ஆரம்பம் முதல் முடியும் வரை மெலடியான வர்ணஜாலம்தான்.மிக முக்கியமானது இசைக்கருவிகளுக்குள் நடக்கும் இனிமையான நாத உரையாடல்கள். “கலகல” வென்று இவைகளின் இடையில் நடக்கும் பல வித ரசங்கள் படர்ந்த உரையாடல்கள் மனதை வருடும். Full of emotions and soul stirring!

சின்ன சின்ன நாதங்கள் ஆச்சரியமாக சந்தில் சிந்து பாடி கண்ணாமூச்சி ஆடும்.எலக்ட்ரானிக்சில் எழுப்பப்பட்ட செயற்கையான நாதம் கிடையாது.ஆதமார்த்தமாக பார்த்துப்பார்த்து இயற்கை இசைக்கருவிகளில் மீட்டெடுத்தது.உரையாடல்களில் மியூசிகல் சேர் இசை போல் அமெச்சூர் நெடி அடிக்காது.

இசைக்கோர்ப்புகள் இணையும் இடங்களில் அசட்டுத்தனம் இருக்காது.

எண்பதில் வந்த பாடல்களின் உரையாடல்கள் முக்கியமானவை.ஏன்? எல்லாம் நேரலை ஒலிப்பதிவுகள்.தப்பு செய்தால் மீண்டும் இசைக்க வேண்டும்.அடுத்து சிங்கிள் மைக்(?).

சில உரையாடல்கள் eternal bliss!

புதுப்பட்டி பொன்னுத்தாயி
ஊர் அடங்கும் சாமத்திலே (உமாரமணன்-ஸ்வர்ணலதா)

இதமான தாளக்கட்டு..”யாரு அது யாரு யாரு” ஸ்வர்ணா கேட்க பதிலாக உமாவின் ஹம்மிங் அருமை.1.05 - 1.16 வரை ஹிந்தோள சாயலில் புல்லாங்குழலும் வயலினும்(செல்லோ?)நடத்தும் பேச்சுவார்த்தை பிரமிக்க வைக்கிறது.
அமானுஷ்யமாக வரும் வயலினின் மேற்கத்திய நாதம் வித்தியாசம்.

தாளத்தின் ரிதத்திலேயே ”நீ தந்த பட்டுச் சேலை” என்று உமா முதல் சரண வரிகளை எடுப்பது அருமை.

கிழே படத்தில் இருக்கும் காயத்ரி ஆரம்பகாலத்தில் ராஜாவுக்கு வீணை வாசித்தவர். ..!ராஜா off the trackல் வாசிக்கச் சொல்லுவாரமே!)


http://2.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/S2kkZ-6-V6I/AAAAAAAAAkE/9JjfHj9u6ZM/s200/gayathri.jpg




படம்:பூந்தளிர்
பாடல்-ஞான் ஞான் பாடனும் ( ஜென்சி)

பாடல் 1979.இன்னும் கமகமவென இப்போது பறித்த கறிவேப்பிலை மணம்.இது ஒரு வித்தியாசமான கலர்புல் கம்போசிங்.ஜென்சியின் இளசான ரம்மியமான குரல்.

மலையாளமும் தமிழும் கலந்து வருவது ஒரு வசீகரம்.இந்த பாட்டில்இசை நாதங்கள் பூத்துக்குலுங்கியபடிதொங்கிக்கொண்டிருக்கும்.

ஆரம்பமே ரொமாண்டிக் தபலா.. 00.00-0.23 முதல் 0.10ல் வயலினில் அழகு படுத்தி 0.23ல் பாடகி பல்லவி வரும் என்று நினைப்போம் ஆனால் 0.24ல் வேறு ஒரு நாதத்தில் (synth)ஒரு பைனல் டச் கொடுத்துவிட்டுதான் பல்லவியில் சேச்சி பாட்டு படிக்கும் .அடுத்து 1.10 -1.39 வர்ணஜால உரையாடலைக் கவனியுங்கள்.அதுவும் 1.31 -1.36 புல்லாங்குழல் - வயலின் உரையாடல் சுகந்தம்.அடுத்த பேச்சு வார்த்தை 2.31 -3.07

http://3.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/S3Aq_rhbCCI/AAAAAAAAAk0/Wshsy3IFPH0/s1600/raja-jency.jpg






படம்:புதிய வார்ப்புகள்
பாடல்-தம்தனனம் (ஜென்சி/வசந்தா)


http://2.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/S2vnD-me-iI/AAAAAAAAAkQ/mN7hCta5oIo/s200/vasantha.jpg




பாடகி வசந்தா(”மணமாலை வரும்..! சுப வேளை வரும்..!மண நாள் திருநாள்)





சின்ன சின்ன சந்தங்களில் ஒரு இனிமை கம்போசிங்.

முதலில் வீணையில் மீட்டெடுத்த ராகம் ஷண்முகப்ரியாவின் நாதங்கள் அலையாக அலையாக வரும்.இதில் குரல் உரையாடல்கள் ஒன்றை ஒன்று இனிமையாக பின்னியபடி வரும்.இதில் ஜென்சியின் மூக்கிசை சூப்பர்அடுத்து முதல் 1.08 -1.44 வரை ”ஒரு ரூம் போட்டு” நாதங்களின் வயலின்,வீணை,புல்லாங்குழல்,synth,பெலஸ்,ஹம்மிங்கலந்த ுரையாடலைகவனியுங்கள்.ஆச்சரியமாக மேற்கத்திய talkக்கும் வரும்.

தெலுங்கச்சி(வசந்தா) vs மலையாளச்சி (ஜென்சி)உச்சரிப்பையும் கவனியுங்கள்.

படம் -மோகமுள்பாடல் :சொல்லாயோ வாய் திறந்து -ஜானகி

”தம்தனனம்” மெட்டும் இந்தப் பாட்டின் மெட்டும் ஒரே சாயல் அடிக்கும்.காரணம் ரெண்டுமே ஷண்முகப்பிரியா ராகத்தில் கம்போஸ் செய்யப்பட்டது.”தம்தனன”பாட்டின் எமோஷன் ஒரு விதம்.

இது ஒருசோகஎமோஷன்.எப்படி?.அதான் மேஸ்ட்ரோ.

இந்த ராகம் பல உணர்ச்சிகளைப் பிரதிபலிக்ககூடியது.பிரித்து மேயலாம்?1.08 -1.34 சோக உரையாடலில் வீணை(சிதார்?)யின் நாதத்திற்கு எக்கோவாக வயலின் நடுவே புல்லாங்குழலின் சந்தில் சிந்து. உருக்கும் பாடல் வரிகள்.

படம் வந்த போது தி.ஜானகிராமன் உயிரோடில்லை.


பாடம்: நீங்கள் கேட்டவை(ஜானகி/எஸ்பிபி)
ஒ.. வசந்த ராஜா!

ஆரம்பமே ராஜா கம்பீர ட்ரம்சில் குமுறல்.1.03 - 1.35 இந்திய இசையில்மிருதங்கம்,சிந்தசை,புல்லாங்குழல்,வயலின ்,
வீணை (மிருதங்கம் -புல்லாங்குழல் ஸ்டைல் உரையாடல் அட்டகாசம்)உரையாடல்.

2.39 -3.14 மேற்கத்திய இசையில் உரையாடல்.ஒரு இடத்தில் நின்னு பேசுவார்.ஓ ... ராஜா சூப்பர்!


படம்: தம்பிக்கு எந்த ஊரு
பாடல்:என் வாழ்விலே வரும் அன்பே

0.00 -0.44 பிறகு 1.08 -1.28 தபலா vs கிடார் 1.28 -1.55 வயலின் -சிந்தசை-கிடார் வயலின் -வீணை-புல்லாங்குழல்-ட்ரம்ஸ் அடுத்து 3.33 -3.55ஊட்டி டிரெயினுக்கு உரையாடலில் ஒரு பிஜிஎம்.அசத்தல்!

படம்:தீர்த்தக்கரையினிலே
பாட்டு::விழியில் ஒரு கவிதை மனோ-சிதரா


ஆரம்பமே ஷெனாயின் நாதக் கிளர்ச்சியில் வயலினின் உரையாடல் பிறகு கிடார்....1.20 -1-29 என்ன ஒரு மங்களகரமான இசை சங்கமம்? stunning! தேஷ் ராகத்தின் ஸ்வர சாயல்கள் (?) தெறித்தப்படி .........

அடுத்த இசை அதிர்ச்சி அண்ட் கவுண்டர் பாயிண்ட்ஸ் 2.40 - 3.03 .

தபலா அசத்தல்.சித்ரா குரல் இனிமையோ இனிமை.! அட்டகாசம்.

நெருடல் “இத”ளி”ல் ஒரு அமுதம் குடித்தேன் - மனோ

சோகத்திற்கு ஷெனாய். ஆனால் இதில் மகிழ்ச்சிக்கு வாசிக்கப்பட்டிருக்கும். தல! லொள்ளு ஜாஸ்தி!இது மாதிரி நிறைய லொள்ளு பண்ணுவார்.

ஹெட்போனில் கேட்டால் வேறு சில கருவிகளின் நாதங்களும் கேட்கலாம்.



http://4.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/S2-xdnCZOLI/AAAAAAAAAkg/TYqLxFEZDL0/s1600/Arunmozhi.png






இவர்தான் அருண்மொழி பாடுவார்.ராஜாவுக்கு புல்லாங்குழல் வாசிப்பார்


காதல் ஓவியம்

பூவில் வண்டு - SPB

முதலில் ரம்மியமான ஹம்மிங்கைத் தொடர்ந்து மோகன சாயலில் 0.27.....................0.56 ?.அடுத்து 2.56 ...3.10 ?

venkkiram
8th September 2014, 09:18 AM
Poem அவர்களே! உங்களது பதிவுகள் ( நேற்றிலிருந்து இன்றுவரையிலான) அனைத்தையும் "நிகரற்றவர் ராஜா" திரியில் பதியச் செய்தால் எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும். ராஜாவின் இசை சிரப்பம்சங்க்களுக்கான திரி அது. அதில் ஏற்றுங்கள் உங்களில் அகல் விளக்குகளை. அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். பதிவுகள் அனைத்தும் சிறப்பு!

Russellhaj
8th September 2014, 06:27 PM
Venkkiram, I will do it. but, Please give me some time.

rajaramsgi
8th September 2014, 08:52 PM
போயம், மகேந்திரன் பற்றிய தங்கள் தகவலை தான்டி வெளியில் வர இயலாத படி செய்து விட்டீர்கள்.மீன்டும் மின்டும் படித்து கொன்டிருக்கிறேன். இன்னும் யாழ், வீனை, குழ்ல் எல்லாம் இருக்கிறது, இந்த வாரம் இதிலே ஒடி விடும். நன்றி, நன்றி.


அசோக் குமார் தான் பாவம், உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார், ராஜா சார் இசையை அவர் விரும்பி கேட்பதாக அவர் மகன் சொல்லி இருந்தார்...எனக்கும் அது வேன்டும், மரன படுக்கையிலும் அவர் இசையை மறக்காத வரம் வேன்டும்.

Russellhaj
9th September 2014, 08:41 AM
https://pbs.twimg.com/media/Bs4kbdwCcAAuFdu.jpg

Russellhaj
9th September 2014, 08:47 AM
Gangai amarans marriage - rare pic




https://pbs.twimg.com/media/BpYRyVVIIAAewZX.jpg

Russellhaj
9th September 2014, 08:52 AM
Sitting in the crowd.



https://pbs.twimg.com/media/BpR0pnNCAAM-xud.jpg

Russellhaj
9th September 2014, 05:41 PM
என்னோடு உன்னோடு இளையராசா – முருகன் மந்திரம்


என் இசை அறிவின் வட்டத்திற்குள் புதிதாக வருகிற ராசாவின் பாடலை…. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் தினமும் கேட்கிறேன்… வெறி கொண்டலைபவன் போல மீண்டும் மீண்டும்… காதுக்குள் அந்த பாடலை அலையவிடுகிறேன்.

இதுவரை என் செவிகள் ருசித்துக்கொண்டிருக்கிற மெட்டுக்களை விட, எனக்கு இன்னும் அறிமுகமாகாத ராசாவின் பாடல்களைப் பற்றிய தேடல் பேராவலாய் எழுந்து நிற்கிறது.

உதவி இயக்குநராக சேரவேண்டும்… யாரிடம் சேரலாம். இரண்டே இரண்டு பெயர்களை மட்டுமே உச்சரித்தது, என் விருப்பத்தின் குரல். என் விருப்பத்தின் குரல் உச்சரித்த, அந்த இரண்டு பெயர்களுமே இயக்கத்தின் உச்சத்தில் இருந்த நேரம்…

அந்த பெயர்களின் சொந்தக்காரர்களை நேராகப் பார்க்க வாய்ப்புகளை வழங்காத சந்தர்ப்பங்களோடு சண்டை செய்வதில் உடன்பாடில்லை. எனவே, கடிதத்தை உதவிக்கு அழைத்தேன். என் சார்பாக சென்று வாய்ப்பு கேட்டு வர என் கடிதங்கள் புறப்பட்டன. ஆனால் அந்த கடிதங்களை அவர்களிடம் அழைத்துச் செல்வது யார்?

அதில் முதல் பெயர்க்காரருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் பற்றிய பாட்டுக்கதை தான் இது… அந்த முதல் பெயர்க்காரர் இயக்குநர் பாலா.

உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைபவர்கள் யாவருமே.. அநாதையின் நிலையில் தான் இருப்பார்கள். நானும் அப்படியே… எந்த இழிநிலையிலும்.. நிலை பிறழாமல்…. கூடவே வரும் ராசாவின் பாடல்கள்.

இதயத்தில் இருள்குவிந்து இடிந்து கிடக்கும் இயலாமைப்பொழுதுகளில்.. தாய்போல மடியில் கிடத்தி, தன் இசையின் விரல்களால் தடவிக்கொடுக்கிறார் ராசா.

நீட்டுவதும் நிறுத்துவதுமாக,
போற்றுவதும் போதிப்பதுமாக,
உணர்தலும் உணர்த்துதலுமாக
ராசாவின் பாடல்கள், கேட்டல் என்ற நிலையை கடந்த ஒன்று. காதுகளோடு நின்று விடக்கூடிய ஒலிகள் அல்ல… ராசாவின் இசைக்கோர்வைகள். உயிரோடு பேசக்கூடிய மொழிகள்…

கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

காலப்பெருவெள்ளத்தின் கண்கள் வழியாக கண்ணதாசன் கண்ட வாழ்வின் தத்துவத்தை… இசைஞானியின் ராகம்… தன் தோளில் சுமந்து வரும்பொழுது…

திசைகளை தொலைத்துவிட்டதொரு நிலப்பரப்பின் நடுவில்… தனியொருவனாய் வீசி எறியப்பட்டதைப்போல… ஒரு அமானுஷ்யத்திற்குள்… நிற்கிறோம் நாம்… அதை இன்னும் அதிகப்படுத்துகிறது… ராசாவின் இசையோடு இறுகிக் கசிகிற ஜென்சி, ஷைலஜா, மலேசியா வாசுதேவனின்

குரல்.

விதியின் கைகள் போல, ராசாவின் இசையின் கைகள், நம்மை தன்போக்கில் இழுத்துச் செல்கிற வல்லமை படைத்ததாய் இருக்கிறது.

வடபழனியில், விசாலமான வாகனம் நிறுத்தும் வசதி கொண்ட அந்த நட்சத்திர விடுதியில் பாலா, தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இருப்பதாய்…. என்னை ரசிக்கிற, என்னை நேசிக்கிற, ஒரு தம்பி ராஜேஷ்குமார் எனக்கு அறிவித்தான். கூடவே எனக்கு மட்டும் தபால்காரனாகி உதவுகிறேன் என்று தன்னம்பிக்கை தந்தான். சில காகிதங்கள் என் கடிதமாக உருமாறியது. அந்தக் கடிதம் கை மாறியது. என் பிரத்யேக தபால்காரனால் பாலாவின் கைகளில் சேர்க்கப்பட்டது. என் எதிர்காலத்தை சுமந்துகொண்டிருப்பதாய் நான் நினைத்த என் கடிதம், ஒரு பாடலின் சில வரிகளையும் தனக்குள் கொண்டிருந்தது…

ராசாவின் மெட்டு, ராசாவின் வார்த்தை…. என்ற சிறப்புத்தகுதி கொண்ட பாடல்களில் அந்த பாடலும் ஒன்று. கூடுதலாக மதுபாலகிருஷ்ணனின் மாயக்குரலை தன்னோடு சேர்த்துக்கொண்டது அப்பாடல்…

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற…

அந்த பாடலில் இருந்து இந்த வரிகளை மட்டும் வெட்டி எடுத்து என் கடிதத்திற்குள் கொட்டி இருந்தேன்.

இந்தப்பாடல் வரிகள், நான் உன்னிடம் தான் உதவி இயக்குநராக சேரவேண்டும் என்று இன்னுமொரு முறை எனக்குச்சொன்னது. வார்த்தைகளின் கண்ணாடியில் வாழ்க்கையின் பிம்பத்தைக்காட்டுகிறாய். எப்படி உனக்கு மட்டும் இப்படி வாய்க்கிறது… என்று… வியப்பின் உச்சியில் நின்று பாலாவிடம் உரைத்துவிட்டு… அடுத்தவரியில் உண்மையையும் உளறி இருந்தேன்.

இந்த வரிகளை உன் அனுமதியோடு என் வரிகளாய் மாற்றிக்கொள்கிறேன். மன்னிக்கவும்… எனக்கான வரிகளாய், என் நிலையின் வரிகளாய் மாற்றிக்கொள்கிறேன். என் நிலை உனக்கு உரைக்க இந்த வரிகள் போதும்… எனக்கு வாய்ப்பு தருவது பற்றிய உன் நிலை பற்றி தெரியும் வரை, நிலை கொள்ளாமல் நான் திரிவேன் என்பதை மட்டும் உன்னிடம் சொல்லிக்கொள்கிறேன், என்று வேண்டுகோள் வைத்திருந்தேன்.

அவர் பாடலையே அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். வாசித்துவிட்டு பாலா என்ன நினைத்திருப்பாரோ என்று நினைத்தேன். இன்று வரை விடை தெரியாமல் அந்த நட்சத்திர விடுதியிலேயே என் கேள்வி சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது என்பது உபகதை.

ஆனால் இன்றும் அந்தப்பாடல்.., நான் சோர்வுறும் போதெல்லாம் என் அருகிலேயே நிற்பதாய் உணர்வேன். “பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்…” என்று முதல் வரியிலேயே ராசா… நான் என்பது ஒன்றுமில்லை என, இறைவனின் காலடியில் சரணாகதி அடைந்திருப்பார்.

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே.

இடைவெளியற்ற தனிமையின் சர்வாதிகாரம், நம் தோல்விகளின் கண்ணீரை ருசித்துச் சிரிக்கிற பொழுதுகளிலும்…

நிகழ்காலம் என்ற ஒன்று எதிர்காலத்திற்குள் எட்டிப்பார்க்குமா… என்ற கேள்விக்குறியோடு… தற்காலிகமாய் மூளைச்சாவு நடந்தேறும் நிமிடங்களிலும்…

தேடல்களோடு திரிகிற நம்மை… திருப்பி அனுப்பியே தீருவதென்று துடிக்கிற தினசரி வாழ்வின் இரக்கமற்ற தேவைகளின் முன் மண்டியிடுகிற போதும்..

நம் அசாத்திய நம்பிக்கையின் முடிவில்லாப் பெருவெளியை… முட்டுச்சந்துகளாக மட்டுமே முடிவு செய்து நகைப்பவர்களின் முகங்களை…
முகம் சுழிக்காமல் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயங்களிலும்…

ராசாவின் பாடல்கள் தான்… காலாட்படையாக, குதிரைப்படையாக, யானைப்படையாக… வந்து நின்று நம் எதிரிகளை விரட்டி அடிக்கிறது.

ராசாவே மெட்டமைத்து, ராசாவே எழுதிய இந்த பாடல், எல்லா நிலையிலும் ஒரே நிலையில் இருப்பதாய், ஒரே நிலையை உரைப்பதாய் உணர்கிறேன். ஆதலினால் அடிக்கடி கேட்க விழைகிறேன்.

வாழ்தலுக்கான செல்வத்தைத் தாண்டிய, அத்தனை செல்வங்களும் என்னிடம் இருப்பதாய் உணர வைக்கிறது இந்த பிச்சைப்பாத்திரம். மிக மிக சொற்ப அளவில் கல்வியாக, கலையாக, என்னோடு இருக்கும் செல்வத்தை விட பெருஞ்செல்வம் ஏதுமில்லை, என்றுபிச்சைப்பாத்திரம் வழியாக உணர்த்திச் செல்கிறார் ராசா.



- முருகன் மந்திரம்

buggle
11th September 2014, 05:00 PM
Looks like Kamal signed up with Jibran for his next 3 ventures - Vishwaroopam 2, Uthamavillan and Papanasam(source Ananda Vikatan)....Is he really done with Raja???

rajaramsgi
12th September 2014, 07:00 PM
Looks like Kamal signed up with Jibran for his next 3 ventures - Vishwaroopam 2, Uthamavillan and Papanasam(source Ananda Vikatan)....Is he really done with Raja???

புதியவர்களுடன் இணைவதால் அவர்கள் இருவருக்குமே நல்லது.
இருவரும் இனைந்தால் நமக்கு நல்லது.

வேலூரில் தங்கத்தால் கோயில் கட்டியிருக்கிறார்களாம்.
பளிங்கு கற்களில் கூட கோயில் பல வந்து விட்டது.
அதனால் என்ன?
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய் அசராமல் நிற்கும்
இராஜராஜேஸ்வரம் கருத்து விடுமா? குறைந்து போகுமா?
கட்டியவன் போய் விட்டான்.
கட்டியது காலத்துக்கும் இங்கே இருக்கும்.

கருப்பு உருவம்
கட்டையான தேகம்
அருவியாய் கொட்டும் இசை.
இன்னொரு இருபது ஆண்டுகளில் அவர் போய்விடலாம்,
எங்கள் மா மன்னனின் இசை
காலத்துக்கும் ஆராய்ச்சி பொருளாய், ஆச்சரிய படுத்தும்.

rajaramsgi
14th September 2014, 02:08 PM
இன்று காலை சன் மியூசிக் சேனலில் மை ப்ளேலிஸ்ட் பகுதியில், மிஸ்கின் தொகுத்து வழங்கிய பாடல்கள். அனைத்தும் அன்றாடம் நாம் கேட்கும் பாடல்கள் தான், ஏன் பிடித்தது என்று அவர் சொல்ல கேட்டது சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு மாறுதலுக்காக, இந்த படங்களை எங்கே பார்த்தோம், இந்த பாடல்கள் உங்களுக்கு ஏன் பிடித்தது, யாரோடு பார்த்தோம் என்று நேரமிருந்தால் யோசித்து கொள்ளுங்களேன்.

பிதாமகன் - இளங்காத்து வீசுதே
அவதாரம் - தென்றல் வந்து
முரட்டுகாளை - மாமன் மச்சான்
சேது - வார்த்தை தவறி விட்டாய்
தேவர் மகன் - போற்றி பாடடி பொன்னே
வைதேகி காத்திருந்தாள் - ராசாத்தி உன்ன, (ஜெயச்சந்திரன் வெர்சன்)


(இந்த லிஸ்டில் முரட்டு காலை வந்தது ஆச்சர்யம், அந்த படத்தில் என் நண்பர்களுக்கு எல்லாம் மற்ற பாடல்கள் பிடித்து போக எனக்கு மட்டும் மாமன் மச்சான் பாடல் சிறு வயதிலேயே பிடித்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் கேட்டேன், நீங்களும் ஒரு முறை கேட்டு பாருங்களேன்)

sivasub
14th September 2014, 05:06 PM
********* wrong updates *******

rajaramsgi
21st September 2014, 03:09 AM
RIP Mandolin Srinivas. He is gone due liver failure, sad.

Have you heard Ilayaraja Classics (purely carnatic) by Mandolin Srinivas that was released 20 years ago? I have the mp3 versions of all 4 songs from that album, if anyone is interested. (I should not say this, it will be hard to find this from stores)

dochu
21st September 2014, 06:35 AM
RIP Mandolin Srinivas. He is gone due liver failure, sad.

Have you heard Ilayaraja Classics (purely carnatic) by Mandolin Srinivas that was released 20 years ago? I have the mp3 versions of all 4 songs from that album, if anyone is interested. (I should not say this, it will be hard to find this from stores)

For a long time, I have been trying to get it. Will you help me please? Thanks so much.

ajaybaskar
21st September 2014, 10:24 AM
rajaramsgi,

Can u upload and share the link?

rajaramsgi
21st September 2014, 11:35 AM
Friends, Here we go. Just to respect the copyright laws I will remove the dropbox share in a day or 2. Grab the tracks as soon as you can and Enjoy.

https://www.dropbox.com/sh/bvjp4xi3z4k35zs/AABHwrKHQAZDkbswAXVqpqTda?dl=0

Album: Ilaiyaraja Classics, composed by Raja Sir and performed by Mandolin U Srinivas & Party. No one ever talks about this album, not sure why, it is really a great one.

dochu
21st September 2014, 03:55 PM
@rajaramsgi
Thank you so much. God bless.
I shall continue trying to get the original for uncompressed quality.

K
23rd September 2014, 08:59 AM
Ilaiyaraaja's Response to SPB's Questions . Year 1996. Thalaivar Nethu Oru Pechu Inaiku oru Pechu Kidaiyaathu.
Watch and Enjoy.

Thanks to Venkateswaran Ganesan(Uploder of the Video).

https://www.youtube.com/watch?v=UsEyAvsoJeI

dochu
23rd September 2014, 03:39 PM
Ilaiyaraaja's Response to SPB's Questions . Year 1996. Thalaivar Nethu Oru Pechu Inaiku oru Pechu Kidaiyaathu.
Watch and Enjoy.

Thanks to Venkateswaran Ganesan(Uploder of the Video).

https://www.youtube.com/watch?v=UsEyAvsoJeI

God bless. Thanks so much.

rajaramsgi
26th September 2014, 04:09 PM
Thalaivar Nethu Oru Pechu Inaiku oru Pechu Kidaiyaathu.

20 வருடத்துக்கு முன்னர் வந்த பேட்டி. K சொல்வது போல் அன்றைக்கு பேசியது தான் இன்றும். ஒரு நாக்கு ஒரு சொல். K, வெல்கம் பேக். சகலகலா வல்லவர் எங்கே?

பேட்டி வந்த நேரத்தில் 50 வயது இருந்திருக்கலாம். ஆனால் வயது தெரியாத அளவுக்கு என்ன ஒரு வசீகரமான முகம், லேசான தாடி, மீசை, வாரி சீவிய தலை, கூர்மையான பார்வை. இந்த தேஜஸ் எல்லாம் தியானத்தின் வெளிப்பாடு. லதாங்கியை பற்றி சொல்லிவிட்டு யார் தூரிகை பாடும்போது, தலையை ஒரு சிலுப்பு சிலுப்பினாரே கவனித்தீர்களா? ஐயோ கொன்னுட்டார்..(note video: 11:43 mins)

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், தினமலர் வாரமலரில், தினமும் பேருந்தில் பயணம் செய்து நொந்து நூலான பெண்மணி ஒருவர் இப்படி ஒரு கவிதை எழுதி இருந்தார். அதில் எவ்வளவு பொருள் பாருங்கள்.

இடிக்க வருகிறார்கள்
கட்ட மறுக்கிறார்கள்!

இங்கு வருவோர் படிப்பதோடு நிறுத்திவிடாமல், எழுதவும் செய்தால் தான் , இந்த திரியை எரிபொருள் குறையாமல் கொண்டு செல்ல முடியும். நிறைய சமூக வலைத்தளங்கள் வந்து விட்டதால், எனக்கு தெரிந்து 17 ஆண்டுகளுக்கு மேலாக ஓடி கொண்டிருக்கும் tfmpage மவுசு குறையாமல் பார்த்து கொள்ளவேண்டியது நம் கடமை.

ஆகவே எல்லோரும் அவரை பற்றி தோன்றுவதை எழுதுங்கள் நண்பர்களே. உங்களோடு ராஜா சாரின் இசையை, செய்திகளை பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறோம்.

Madhanraj
26th September 2014, 05:04 PM
Being observing IR for long time, one thing is certain...
Any topic or issue or question is thrown to him, he repeats almost the SAME WORDS & also in the same order...
Seems like his answers are READY MADE and fixed in his Brain Permanently...
It's just like retrieving from ARCHIVE...
No mixing...Result is the Same...
May GOD Bless Him...
Long Live IR...

Rgds Madhan

venkkiram
26th September 2014, 07:24 PM
Being observing IR for long time, one thing is certain...
Any topic or issue or question is thrown to him, he repeats almost the SAME WORDS & also in the same order...
Seems like his answers are READY MADE and fixed in his Brain Permanently...
It's just like retrieving from ARCHIVE...
No mixing...Result is the Same...
May GOD Bless Him...
Long Live IR...

Rgds Madhan

தான் செய்வது/நினைப்பது தவறாக இருந்தால் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் சபையோர் முன்னிலையில் தன்னை தாழ்த்திக் கொள்வது - ராஜாவிடத்தில் நான் கண்டு வியக்கும் குணம். அதுவும் அப்பேற்பட்ட ஆளுமையிடமிருந்து அப்படியொரு நிலைப்பாடு. இந்த நேர்காணலில் ராஜ்கிரணை ஆரம்பத்தில் புறக்கணித்து பின்பு அதற்கு வருந்தியதாகவும், சென்ற வருடங்களில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்போது பாக்யராஜ் மீதான தன்னுடைய ஆரம்பகால தவறான அபிப்ராயங்களையும், பின்பு அது தவறான ஒன்று என திருத்திக் கொண்டதாகவும் பேசியிருந்தார். ஒரு கலைஞன் தன் துறையில்/தொழிலில் ஈடுபாட்டோடு இருந்தால் அதை ராஜா முழுமனதாக அங்கீகரிக்கிறார். இசைத் துறை மட்டுமில்லாமல் சினிமா சம்பந்தமான / தொடர்புடைய மற்ற துறைகளின் கலைஞர்களிடத்தும் அவருக்கு பற்று/ஈர்ப்பு வந்துவிடுகிறது.. அவர்கள் தங்களது துறைகளில் தங்களை நிரூபிக்கும்போது. கண்ணதாசனை, வாலியை அவர் புகழாத இடம் கிடையாது. முத்துலிங்கம், மேத்தா, பஞ்சு என ஒவ்வொருவரையும் அவரவர்களுக்கு இருக்கும் முக்கியத் துவத்தை சொல்லி புகழ்ந்துவிடுவார். ஆண் குரல்களில் ஆண்மையான ஒரே குரல் என டிஎம்எஸ்க்கு புகழாரம். சிலாகிப்பு. லதா, ஆஷா, சுசிலா, ஜானகி, பாலு, யேசுதாஸ், சித்ரா என எல்லோரையும். இசையமைப்பாளர்கள் என்றால் வடக்கு, தெற்கு பேதமில்லாமல் முன்னோர்கள் எல்லோரையும் ஒன்றுவிடாமல் சொல்லி புகழ்ந்து சாஸ்டாங்கமாக காலில் விழுந்துவிடுவார்/வணங்குவார். இயக்குனர் ஸ்ரீதர் தன்னை அணுகியபோது, நீங்கள் எம்.எஸ்.வியோடு இணைந்த எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் என்றிருக்க, என்னை ஏன் தேடி வந்தீர்கள்? அவரிடமே போய்விடுங்கள் என்றே முறையிட்டதாகவும் குறிப்பிடுகிறார் அவர் எழுதிய நூலொன்றில். ராஜாவிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். இந்த பாலு-ராஜா நேர்காணலில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் 'அடிவயத்தை கலக்கிடிச்சி.. கருவே கலைஞ்ச மாதிரி.." என்ற இடம்தான். எப்பேர்பட்ட மேதையாக/ஆளுமையாக இருந்தாலும் இசைக்கு முன்னாடி முழுதும் சரணாகதியாக நிற்கும் குணம் எல்லோருக்கும் வராது.

K
27th September 2014, 11:29 PM
Thanks to Mr.Venkateswaran Ganesan
https://www.youtube.com/watch?v=8UZka8ontm8

The King Speaks.

rajaramsgi
28th September 2014, 03:08 AM
Thanks to Mr.Venkateswaran Ganesan
The King Speaks.

Excellent recollection of Heyram promo interview. I remember seeing this in sun tv @ my parents place, thank you for taking my memory back to Pongal celeberations, year 2000.

rajsekar
28th September 2014, 09:59 PM
http://chennaionline.com/movies/cine-buzz/20143527123543/Todays-directors-dont-deserve-Maestros-music--Bala.col

Has anyone seen this event recording?

mappi
30th September 2014, 05:04 PM
https://www.dropbox.com/sh/bvjp4xi3z4k35zs/AABHwrKHQAZDkbswAXVqpqTda?dl=0

Album: Ilaiyaraja Classics, composed by Raja Sir and performed by Mandolin U Srinivas & Party. No one ever talks about this album, not sure why, it is really a great one.

Rajaramsgi,

Eventhough I used the Thanks button, I would like to thank you once again for this fabulous share.

Track 4 - Manam Kanindhu is a master-piece. With a runtime of 30 minutes, its pure bliss. The conversation with mandolin and violin was amazing, where violin seems to be quite mischevious while mandolin takes an advisory stand, calm and sutle. At a point of time I could see the violin gigling at mandolin (17m30s), but around 23m20s, mandolin takes a full swing. What a class ! The fusion which starts around 26m30s between the percussion instruments was awesome.

I have some questions here :

1/ 'Manam Kanindhu', is it a kind of a famous classical song or freshly composed by IR ?
2/ Could you please tell me who are the musicians on Gatam, Mridhangam & Kangira and ofcoarse the one on the violin ?
3/ Is it possible to buy this album on a retail CD ?
4/ (optional) If you find some time, could you talk more about this song / instrumental piece or the album in general, please ?

rajaramsgi
30th September 2014, 06:29 PM
Mappi,

Released in 1994, this is the original cassette cover. Sankara Hall, alwarpet may stock the CDs this during december season. I leave it to the experts to provide reviews on the songs.

Mandolin: U. Srinivas
Violin: S.D. Sridar
Mruthangam: Guruvayur Durai
Ganjira: Madurai Srinivasan
Ghatam: E.M. Subramaniam
Thampoora: Sathyaveni Varalakshmi

http://i38.servimg.com/u/f38/18/30/48/65/mandol10.jpg

அட்டைபடம் எல்லாம் கொடுத்து அசத்தி இருக்கிறேன், அதனால் விதியே என்று இதையும் படித்து வையுங்கள்.

என்னுடைய தாத்தா ஒரு இசை புரவலர். திருவையாறு தியாகப்ரம்ம சபை கமிட்டி ஆயுள் உறுப்பினர். பழைய காங்கிரசாருக்கும், பழைய சங்கீத வித்வான்களுக்கும் நெருங்கிய பழக்கமுடையவர். அவர் இருக்கும் வரை, இவர்களில் யாரேனும் எங்கள் ஊரு பக்கம் வந்தால் அனைவரும் எங்கள் வீட்டுக்கு வந்து தாத்தாவிடம் அளவளாவி விட்டே செல்வர். எனக்கு தெரிந்து மதுரை சோமு, MPN சேதுராமன் பொன்னுசாமி, குன்னக்குடி, வலயபட்டி, ஹரித்வாரமங்கலம், சீர்காழி, வடுவூர் ராமையா பிள்ளை (பாடகர் மாணிக்க விநாயகத்தின் தந்தை) மற்றும் தஞ்சை பக்கம் உள்ள நாதஸ்வர மேள வித்வான்கள் என்று தாத்தாவின் நட்பு வட்டாரம் பெரிது. தலை கிராப்பு, துன்நூற்று பட்டை, குங்குமம், கதர் வேஷ்டி, கதர் சட்டை ஜிப்பா, பட்டு துண்டு, தங்கப்பல், வெள்ளியில் வெத்தலை, சீவல் டப்பா (அதிலும் கும்பகோணம் கொழுந்து வெத்தலை, ஏஆர்ஆர் சீவல், ராஜாஜி பன்னீர் புகையிலை). ஜனவரியானால் திருவையாறு, டிசம்பர் மாதமானால் சென்னை என்று அந்த வட்டத்தில் ஒரு மைனர் குஞ்சு என்று வைத்து கொள்ளுங்களேன்...

அவர் கர்நாடக சங்கீதம் தவிர வேறெந்த இசையும் கேட்பதில்லை. சினிமா காரர்களில் தேவர் நெருங்கிய நண்பர், என்பதால் தாத்தாவுக்கும் சினிமாவுக்கும் உள்ள ஒரே கனெக்ஷன் சின்னப்பா தேவர் மட்டும் தான். நேருவும், இந்திராவும் இந்தியாவை ரட்ச்சிக்க பிறந்தவர்கள் என்று தீர்மானமாய் நம்பியவர். ...

கர்நாடக சங்கீத கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது மட்டும் அவருடைய குறிகோளாக இருந்ததால், கொடுக்கும் ஸ்தானத்தில் நாம் இருக்க வேண்டும், நாம் கலைஞர்களாக இருந்து அவர்களுக்கு போட்டியாக இருக்ககூடாது என்று அவரே ஒரு தத்துவத்தை வைத்திருந்தார்.

எனிவேஸ், மேட்டர் என்னவென்றால்......

தாத்தாவிடம் ராஜா சார் பெருமை பீத்த, 1994ல் மாண்டலின் ஸ்ரீனிவாசின் இளையராஜா கிளாசிக்ஸ் காசட் வாங்கி வந்து குடுத்தேன். வாங்கி பார்த்தவர் அதை போட்டு கேட்கவில்லை. யாரோ ஒரு சினிமாகாரன் போட்டு கொடுத்ததை ஸ்ரீநிவாஸ வாசித்திருக்கிறான், நான் ஏன் அதை கேட்க வேண்டும் என்று அலச்சியம். மட்டேனுன்னுடார். நானும் விட வில்லை. அவரும் அந்த காசட்டை போட்டு கேட்பது போல் தெரியவில்லை. ஒரு நாள் மாலை நேரம், வீட்டுக்கு வெளியில் ஏதோ வேலை நடக்க, நான் அந்த கேசட்டை , சத்தமாய் அவர் காதில் விழும் படியாக ப்ளே போட்டு விட்டேன். முதலில் சற்று முரண்டு பிடித்தாலும் நேரம் போக போக, டேப் ரெகார்டர் அருகில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து விட்டார். பிறகு அடிக்கடி கேட்கிறார் என்று தெரிந்து உள்ளுக்குள் நான் மகிழ்தாலும் அவரிடம் அதை பற்றி பேசவில்லை.

கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாய், பின்னொரு நாளில், வீட்டுக்கு வந்த ஒருவரிடம் ஸ்ரீநிவாஸ் பற்றி ஏதோ பேசி விட்டு இந்த கேசட்டை பற்றி புகழ்ந்து கொண்டிருந்தார்.

மறந்தும் இளையராஜா சார் பற்றி தாத்தா வாய் திறக்கவில்லை.

irir123
30th September 2014, 10:21 PM
rajaramsgi - there are several old-timers who actually hate the fact that IR is a genius!

one of them I know personally - does not want to accept / believe that Salangai Oli and Sindhu Bhairavi were composed by IR !!

cognitive dissonance + arrogance (upper caste).

most of these ppl never fail to point out - how IR is so good at 'dappanguthu' (tacitly referring that as his only repertoire)

venkkiram
30th September 2014, 11:54 PM
Well said irir123.

சமீபத்தில் பூவிழி வாசலிலே படத்தின் பின்னணி இசையை soundcloud-ல் கேட்டு ரசித்துவிட்டு நம்ம சகல(விஜய்)யிடம் இப்படித்தான் உரையாடினேன்.

https://soundcloud.com/navinmozart/illayaraja-poovizhi-vasalilae-1987-soundtrack-original-complete-score

ஒவ்வொரு படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புக்களும் ஒருஒரு கச்சேரிபோல.. Music Concerts. சினிமா என்றாலே மெல்லிசை என தரம்தாழ்த்தும் இசைரசிகர்களுக்கு இதன் பிரமாண்டம் புரியாது. ராஜாவால் மட்டுமே சாத்தியப்படுகிறது.

கர்நாடக இசை கற்றறிந்த மற்றும் ரசனையுள்ள ஜீவன்கள் என மார்தட்டிக் கொள்ளும் கூட்டம் ராஜாவின் இசையை பெரும்பாலான நேரங்களில் மட்டம் தட்டியே வந்துள்ளனர். நீங்க சொல்வது போல டப்பாங்குத்து பாடல்களுக்குத் தான் லாயக்கு என்ற முத்திரையை ரொம்ப சுலபத்தில் குத்திவிட்டிருந்தார்கள். திரைப்பட விமர்சனத்தில் கூட பத்திரிக்கைகள் ராஜாவின் பாடல்கள் பற்றி ஓரிரு வரிக்கு மேல எழுதிப் பார்க்க முடியாது. அப்படியும் பாடல்கள் பற்றித்தான் அந்த ஓரிரு வரிகளும் இருக்கும். ஆனால் இன்றைக்கும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களை அவர் பாடல்களினால், பின்னணி இசையினால் மட்டுமே நான் தொடர்பு படுத்தி பார்க்க முடிகிறது/ பேச முடிகிறது/ சிலாகிக்க முடிகிறது.

ராஜாவின் திரையிசை ஒவ்வொன்றும் இசைக் கச்சேரி போல.. அதற்கென்றே தனியாக இசைக் கட்டுரைகள் வந்திருக்கவேண்டும். எப்படி டிசம்பர் / திருவையாறு இசைக் கச்சேரிகளுக்கு நாளிதழும் வார இதழும் பத்தியை ஒதுக்கி 'கண்ணை மூடிக்கொண்டு கைலாசம் சென்றேன், சொர்க்கவாசலில் கண்ணனைக் கண்டேன்' எனச் சிலாகிப்பது போல இசை இலக்கண ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ராஜாவின் ஒவ்வொரு திரைப்பட பின்னணி இசைகளையும் விமர்சனம் செய்திருக்கவேண்டும். பல்வேறு விதமான உணர்வுகளை மக்களிடம் காட்சிகள் வழியே கொண்டு செல்லும் திரைப்பட பின்னணி இசை.. ஒரு பெரிய கலை.. மக்களிடம் இன்னும் ஆழமாக ஊன்றியிருக்க வேண்டும்.. ராஜாவின் இசையில் வாசித்த/வாசித்துக் கொண்டிருக்கும் பல்வேறு இசைக்கலைஞர்களை அது போன்ற கட்டுரைகள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கும். ஊடகங்களிளினால் / இசை விமர்சனங்களினால் போதிய திறனில்லாமல் / வசதியாக அது புறக்கணிக்கப் பட்டுவிட்டது. அந்த வகையில் ராஜா இசைக்கான விமர்சனத் தளம் நம் நாட்டில் இல்லை என்பதே உண்மை.

irir123
1st October 2014, 12:19 AM
venkkiram - SUPER !

I had no idea until I was 14 that IR is a composer and that he is the one who had conceived all the music I had so thoroughly immersed myself in since the age of 5!

see thats where my unbiased love for IR's music lies - adhey isaiyai veru oruvar illai veru palar amaithhirundhaal kooda naan rasithhiruppaen! it so happens that it all came from IR!

furthermore, IR honed (pakkuvappaduthhudhal) my aesthetic sense to such an extent that, I could easily appreciate the music of MSV, Madan Mohan, Salilda, SDB, Roshan, Ravindra Jain, RDB etc.

pona oru vaaramaaga, 'eera vizhi kaaviyangal' matrum 'azhagarsamiyin kuthirai' original pinnani isai korpugalil irundhu meelamudiyaamal sikki thavikkiraen!

venkkiram
1st October 2014, 12:39 AM
venkkiram - SUPER !

I had no idea until I was 14 that IR is a composer and that he is the one who had conceived all the music I had so thoroughly immersed myself in since the age of 5!

see thats where my unbiased love for IR's music lies - adhey isaiyai veru oruvar illai veru palar amaithhirundhaal kooda naan rasithhiruppaen! it so happens that it all came from IR!

furthermore, IR honed (pakkuvappaduthhudhal) my aesthetic sense to such an extent that, I could easily appreciate the music of MSV, Madan Mohan, Salilda, SDB, Roshan, Ravindra Jain, RDB etc.

pona oru vaaramaaga, 'eera vizhi kaaviyangal' matrum 'azhagarsamiyin kuthirai' original pinnani isai korpugalil irundhu meelamudiyaamal sikki thavikkiraen!

Once again.. well said..

I used to say to my friends that IR music has three different unique features. It would act in us as an Optical Prism / as a Kaleidoscope/ as a Binocular. For 3 different purposes.

irir123
1st October 2014, 05:55 AM
https://www.youtube.com/watch?v=Ypeu_a9HcqU

the cult classic "om om hari om" BGM piece from Poovizhi Vasaliley from 11:39 to 11:56 and the theme that follows it is goosebumps - from 12:25 onwards, it is freakout percussion + guitar stuff - from 13:39 the strings take over to sync with the scene of the dumb child trying to wake up Satyaraj!

There was noone before him or looks like there will be one like him henceforth - IR the man!

raagadevan
1st October 2014, 10:16 AM
Fazil's movie has been made in many languages...

From the original (poovinu puthiya poonthennal)... composed my kaNNoor raajan:

http://www.youtube.com/watch?v=XnVJNNyHaYU

From the Tamil remake (poovizhi vaasalilE); composed by iLaiyaraaja...

http://www.youtube.com/watch?v=rWNlOVzIvW4

From the Hindi remake (hatya); composed by bappi lahiri...

http://www.youtube.com/watch?v=9XhVFqQR550

By the way, the background music for the Hindi version (hatya) was by iLaiyaraaja.

Russellmtp
3rd October 2014, 06:36 AM
rajaramsgi - there are several old-timers who actually hate the fact that IR is a genius!

one of them I know personally - does not want to accept / believe that Salangai Oli and Sindhu Bhairavi were composed by IR !!

cognitive dissonance + arrogance (upper caste).

most of these ppl never fail to point out - how IR is so good at 'dappanguthu' (tacitly referring that as his only repertoire)

உண்மைதான். ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாகவும் பலர் இருந்தனர். 1990களில் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் என்ற சிறிய கிராமத்தில் சிவன் கோவில் திருவிழா. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் சொந்த ஊர். அவர்கள் குடும்பத்தினர் திருவிழாவிற்காக அப்போதைய ஒரு சிறந்த மெல்லிசை குழுவை ஏற்பாடு செய்திருந்தனர். எனது தாத்தாவுடன் நானும் சென்றிருந்தேன். மெல்லிசை மன்னர் மற்றும் இசைஞானி பாடல்கள்தான். இரவு ஒரு பத்து மணி இருக்கும். நான் வீடு திரும்ப வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தேன். குழுவினர் "இதயம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "பொட்டு வைத்த" பாடலை இசைத்து பாடிக் கொண்டிருந்தனர். இரசித்துக் கொண்டிருந்த எனது தாத்தா "பாட்டு நல்லா இருக்குடா. இது முடிந்தவுடன் கிளம்பலாம்" என்றார். தொடர்ந்து இசைஞானியின் பிரபலமான* பாடல்கள் ஒலிக்க அவர் என்னையும் இறுதி வரை அமர வைத்துவிட்டார். அவர் மட்டுமல்ல, கூட்டத்தில் உள்ள பல பெரிசுகளும் இசையை இரசித்து கேட்டுக் கொண்டிருந்தனர். எனது தாத்தா 80, 90களில் வெளியான திரைப்படங்களை பார்க்க மாட்டார், ஆனால் பாட்டு கேட்பார். இசைஞானியின் இசைக்கு அனைத்து தரப்பிலும் இரசிகர்கள் இருந்தனர், இருக்கின்றனர். நீங்கள் கூறுவது போல் உள்ளவர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவே என்பது எனது தாழ்மையான கருத்து.

krish244
4th October 2014, 01:45 PM
http://tamil.filmibeat.com/news/ilaiyaraaja-is-now-seychelles-tourism-ambassador-031165.html

"The Islands of Seychelles has appointed Maestro Ilaiyaraaja as their tourism ambassador."

thanks,

Krishnan

Russellhaj
6th October 2014, 06:51 AM
சீஷெல்ஸில் ராஜா



https://pbs.twimg.com/media/BzK8_YqCEAAwyKh.jpg:large

Russellhaj
6th October 2014, 07:01 AM
Ha Ha Ha......அது, confirmed i phone dan - thanks raja ”



https://pbs.twimg.com/media/BzKEEfHCUAIVLc3.jpg:large

Russellhaj
6th October 2014, 07:06 AM
ராமானுஜர். பாரதி. இளையராஜா. Finished.!!



writer para

rajaramsgi
10th October 2014, 01:52 AM
ஆனந்த விகடன் (http://www.vikatan.com/new/magazine.php?mid=1)

15 Oct, 2014 (http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99611#)

இனிய இசைஞர்கள்!
ஆர்.சரண், ம.கா.செந்தில்குமார், ஓவியங்கள்: ரவி

இளையராஜா

சிச்சுவேஷன் சொன்னதுமே, 'மாங்குயிலே... பூங்குயிலே...’ பாடலுக்கான நோட்ஸை 15 நிமிடங்களில் எழுதி முடித்து, 'கம்போஸிங் போகலாம்’ என எழுந்தவர் இளையராஜா. 1,000 படங்களுக்கு இசையமைத்தவரின் இசைப் பயணத்தில் பாடகர்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் என எத்தனையோ பேர் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது வரை ஒலிப்பதிவுக்கூடத்தை அவர் மாற்றவே இல்லை. பிரசாத் லேப் ஸ்டுடியோவின் ஒட்டுமொத்த வளாகமே மாறிவிட்டாலும், ராஜாவின் ஆடியோ ஸ்டுடியோ மட்டும் பழைமை மாறாமல் பராமரிக்கப்படுகிறது.

நினைத்த மாத்திரத்தில் கிளம்பி திருவண்ணாமலைக்குச் சென்றுவிடுவார். அந்த ஊரின் மலையடிவாரத்தில் யாரையோ பார்த்து, 'என்ன இது... இளையராஜா மாதிரி தெரியுதே’ என உங்களுக்குத் தோன்றினால், சந்தேகமே வேண்டாம்... அது ராஜாவேதான்.

அதிகாலையில் ஸ்டுடியோவுக்கு வருபவர், நாள் முழுவதும் இசையிலேயே இருப்பார். மாலை வீட்டுக்குச் சென்று தியானம், பூஜை, பேரப் பிள்ளைகளுடன் விளையாட்டு என இளைப்பாறுவார். எப்போது படிக்கிறார் எனத் தெரியாது. ஆனால், தமிழின் சமீப நூல்களை வாசித்து முடித்திருப்பார். எப்போதும் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.
தன் அண்ணன் பாவலர் வரதராஜனின் நினைவு நாள் அன்று அசைவத்தைத் துறந்தவர், கடந்த 30 ஆண்டுகளாக சுத்த சைவம். உணவில் எப்போதும் வேண்டும்... ரசம்.

தான் இசையமைத்த பாடல்களை ரிலாக்ஸ் மூடில் முணுமுணுப்பது, அதைப் பற்றி பேசுவது என்பதெல்லாம் அபூர்வம்.

ஊர் உலகத்தில் உள்ள இசையமைப்பாளர் களுக்கு எல்லாம் ஆதர்சம், இளையராஜா. ஆனால், இவரின் ஆதர்ச இசையமைப்பாளர் யார்? என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த 'மணமகள்’ படத்தின் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமன். பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கு இசையமைத்தவர் சுப்பாராமன்!

http://cdnw.vikatan.com/av/2014/10/zjexod/images/p74d.jpg

Russellmtp
10th October 2014, 04:42 AM
திரு.இராஜாராம், நல்ல பதிவு. இசைஞானி ஒரு காலத்தில் அசைவம் உண்பார் என்பதை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அவரது தம்பி அவர் முன்பு குடிப்பார் என்று கூட கூறியிருக்கிறார். அவரது இன்றைய வாழ்க்கையை பற்றி கேட்கும்போது அந்த செய்தி எல்லாம் நம்பும்படியாக இல்லை. அது உண்மையாக இருந்தாலும் அவற்றை துறந்து இப்போது ஒரு யோகி போல வாழ்கிறார் என்றால அதற்கு இறையருள் அவருக்கு பரிபூரணமாக இருப்பதே காரணம்.

அப்படியே நேரம் கிடைக்கும்போது இரஹ்மான் பற்றிய செய்தியையும் இரஹ்மான் திரியில் பதிவிடுங்களேன்.

rajaramsgi
10th October 2014, 02:37 PM
Thanks Thozhar,

someone already posted Rahman's part in his thread already.

Though we are all familiar with most bits, This is what I liked about vikatan's portion on Raja sir.

இப்போது வரை ஒலிப்பதிவுக்கூடத்தை அவர் மாற்றவே இல்லை. பிரசாத் லேப் ஸ்டுடியோவின் ஒட்டுமொத்த வளாகமே மாறிவிட்டாலும், ராஜாவின் ஆடியோ ஸ்டுடியோ மட்டும் பழைமை மாறாமல் பராமரிக்கப்படுகிறது.

தான் இசையமைத்த பாடல்களை ரிலாக்ஸ் மூடில் முணுமுணுப்பது, அதைப் பற்றி பேசுவது என்பதெல்லாம் அபூர்வம்.

25 years from now, I would like to see Prasad Studio, at least the recording theatre used by Raja sir, be converted into a Museum, where everything used by Raja sir since he came to Chennai in the 1960s be meticulously preserved and displayed for the public, something simillar or even better than MGR museum in T.Nagar.

Russellmtp
11th October 2014, 01:14 AM
Thank you rajaramsgi. littlemaster1982 has posted it already.

sivasub
12th October 2014, 12:47 AM
Ilayaraja at Seychelles...

http://www.youtube.com/watch?v=wh_fhQdzbL0

Russellhaj
14th October 2014, 01:00 AM
மஞ்சூரில் பாடல்களை ரெக்கார்ட் செய்து தருவதற்கு இரண்டு கடைகள் இருந்தன. ஒன்று ”அருண் ரெக்கார்டிங் செண்டர்”, மற்றொன்று ”காஜா ரெக்கார்டிங் செண்டர்”. நாங்கள் காஜா ரெகார்டிங் செண்டர் போவதே இல்லை. இத்தனைக்கும் காஜா ரெக்கார்டிங் செண்டர் சாலை ஓரமாக எளிதில் அடையக்கூடிய இடமாக இருக்கும் பரப்பளவிலும் சற்று பெரியது. ஆனால் அருண் ரெகார்டிங் செண்டர் மஞ்சூர் பஜாரின் ஒரு மூலையில் , குறுகலான மாடிப்படிகள் ஏறி முதல் தளத்தை அடைந்து, சற்றே அகலம் குறைந்த சிறிய அறையில் நின்றுகொண்டுதான் பாடல்களைத் தேர்வு செய்யவேண்டும். இத்தனையும் தாண்டி நாங்கள் அருண் ரெக்கார்டிங் செல்வதற்கு காரணம்

‘சேவியர்’ அண்ணா.

அண்ணா கோயம்புத்தூர் ஸ்டேஷன்ல நேத்து காலைல ஒரு பாட்டு போட்டாண்ணா. நேத்தைக்கு வரைக்கும் ஞாபகம் வச்சுருந்தேன்….ஆனா இப்போ மறந்து போய்ட்டேன்”. என்றான் மோசஸ் ஒருநாள்.
”தனிப்பாட்டா, ஜோடிப்பாட்டா?”.
”ஜோடிப்பாட்டுதாண்ணா”
“பூஜைக்கேத்த பூவிதுதானே”
”இல்லண்ணா, அது இளையராஜா பாடுறது – எனக்கு புடிக்காது, இது வேற”
”டேய் அது அவரோட தம்பி பாடினது, அந்த பாட்டு இல்லேன்னா அது ’சின்னத்தம்பி பெரியதம்பி’ பாட்டாதான் இருக்கும்”, என்று அடுத்த கணத்தில் ”ஒரு காதல் என்பது’ பாடலை ஒலிபரப்பினார்.

இதைக் கேட்டபோது நாங்கள் ஏழாவதுதான்
படித்துக்கொண்டிருந்தோம். பாடல் ரெக்கார்டிங் செய்யக்கூட செல்லவில்லை. இவ்வளவு நேரம் செலவு செய்து எங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் ஏதும் அவருக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் அதுதான் சேவியர் அண்ணா, யார் போய் திரைப்பாடல் குறித்து என்ன கேட்டாலும் இதே அளவு பொறுமையுடன் பதில் சொல்வார். எல்லார்க்கும் எளியனாய், இன்சொலனாய் இருந்தார் அவர். சில நாட்களில் வெறும் ஹம்மிங் மட்டும் செய்து காட்டினாலே போதும் அது என்ன பாடலென்று கண்டுபிடித்துத் தருவார் என்பதை பார்த்திருக்கிறேன்
மிக அழகாக லெட்ஜர் செய்யப்பட்ட ஃபைல் ஒன்று அவரிடம் இருந்தது. படத்தின் பெயர் பச்சை மையில் எழுதியிருக்கும். கீழே வரிசையாக நீல நிறத்தில் பாடல்களின் பெயரும்– அதன் நேரெதிரே பாடகர்களின் பெயரும் – சிவப்பு மையில் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு கோட் நம்பர் எழுதி வைத்திருப்பார். இதனால் எந்த ஒலிநாடாவையும் அவரால் எளிதில் கண்டடைய முடிந்தது.
இது தவிர கடையெங்கும் புதிய திரைப்படங்களில் போஸ்டர்களை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார். அப்போது மஞ்சூருக்கு கோகுல் தியேட்டர் வந்திருக்கவில்லை. ஊட்டி அலங்காரும், லிபர்டியும் தான் எங்களுக்கு கதி. அதனால் போஸ்டர்களுக்கும் மஞ்சூர்களுக்கு வரும் வேலை இருக்காது. இந்த அண்ணா ஒருவர்தான் எங்களை காஜா ரெகார்டிங் செண்டர் போகவிடாமல் செய்யும் அந்த ரகசியச்சாவியைக் கைக்கொண்டிருந்தார்.

நான் கண்ட முதல் முற்றிலுமான திரைப்படத் தகவல் களஞ்சியம் அவர்தான். எப்போது அங்கே போனாலும் சென்ற வேலையை முடித்துவிட்டு உடனே வரமாட்டேன். சேவியர் அண்ணா அவர் நண்பர்களோடு நட்த்தும் திரைப்படங்கள் பற்றிய உரையாடல்களை கேட்டுவிட்டுதான் வருவேன். அந்த நாளில் இன்று போல திரைச்செய்திகளைத் தர இணையதளங்கள் இல்லை, வானொலிகள் இல்லை, சாட்டிலைட் சானல்கள் இல்லை. ஆனால் சேவியர் அண்ணா இருந்தார். அவருக்குத் தெரியாமல் திரையுலகில் ஒன்றும் நடந்துவிடாது என்பதை அவர் நம்பினாரோ இல்லையோ, என்னைப்போன்ற சேவியர் அண்ணாவின் ரசிகர்கள் நம்பினோம்.

”GM குமாருக்கும், பல்லவிக்கும் கல்யாணம். பிரியதர்ஷன் – விக்ரம் ’ப்ரீதி’ யை லவ் பண்றாரு – மணிரத்னத்துக்கும், சாமிக்கும் பாம்பேல பெரிய சண்டையாகி ரஜினி படம் நிக்கப்போகுது – கார்த்திக் ஒரு படுகா பொண்ணை கல்யாணம் பண்ணப்போறாரு – பிரபு குஷ்பு காதல்” என பல பெரிய கிசுகிசுக்கள் அவர் மூலம்தான் எனக்குத்தெரிய வந்தன.

இவை எல்லாவற்றையும் தாண்டி சேவியர் அண்ணா ஒரு இளையராஜா பக்தர். சரியாகத்தான் எழுதியிருக்கிறேன். ரசிகன் அல்ல பக்தர். ’சாமி’ என்றுதான் அழைப்பார் ராஜாவை. சாமியோட 3 படம் வருது மக்கா இந்தவாரம். கீதாலயாலயும், ராகம் காம்ப்ளக்ஸ்லயும் டிக்கெட் போட சொல்லிருக்கேன் என்பார். (இன்டஸ்ட்ரியில் எல்லாரும் அப்படிதான் கூப்பிடுவார்கள் என்று ஒரு முறை சொன்னார்)

பாட்டு நிறைய கேட்பேனே தவிர வெகுகாலம் வரையில் சினிமா பாட்டு என்பது குரலும், வரிகளும் மட்டும்தான் எனக்கு. அதைத்தாண்டி இசைக்கருவிகளையும், தாளங்களையும் ரசிக்க கற்றுக்கொடுத்தது சேவியர் அண்ணாதான். ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் வரும் ‘மதுரை மரிக்கொழுந்து வாசம்’ பாடலை எண்ணற்ற முறைகள் ரசித்திருக்கிறோம் இல்லையா. அந்தப்பாடல் வந்து நான்கு வருடம் ஆகியிருந்தது அப்போது.
யாரோ ஒரு நண்பருக்காக இந்த பாட்டை ஒலிக்கவிட்டு கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு நாள். “மக்கா, நீ பரீச்சை எழுதும்போது என்ன பண்ணுவ, எல்லாத்தையும் நீலப்பேனால எழுதிட்டு, முக்கியமான வரிக்கு மட்டும் சிகப்பு கோடு போடுவேல்ல… அந்த மாதிரியே சாமியும், இந்த பாட்டுக்கு நடுவுல ரெண்டு இடத்துல சிகப்பு கோடு போடுவாரு கவனி…” என்றார். எனக்குப்புரியவில்லை. அந்தப் பாட்டை பல தடவை கேட்டிருக்கிறேன். இந்த விஷயம் புதிதாக இருந்தது. இது நம் சிற்றறிவைத் தாண்டிய சூத்திரம் ஏதோ போல என்று நினைத்துக்கொண்டேன்.
தபேலாக்களால் இறுக்கமாக கட்டப்பட்டு இனிய தாளக்கட்டுகளைக் கொண்டு வரும் முதல் சரணத்தைக் கேட்டோம். முதலில் மனோ ‘பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு வெட்டிகிட்டு…..” என்று ஆரம்பித்து நான்கு வரிகளை பாடிமுடித்து…”…… வெட்டும் இரு கண்ணை வச்சு என்னைக்கட்டிப்போட்டுப்புட்ட….” என்று சுருதியை கீழே இறக்கி முடிப்பாரில்லையா….அதே சுருதியை சித்ரா மீண்டும் ஏற்றி “கட்டு அது உனக்கு மட்டும்தானா, இந்த சிட்டுங்கூட சிக்கியது ஏனாம்..” என்று ஆரம்பிக்கும்போது கைகளை உயர்த்தி ’கவனி’ என்பது போல சுட்டு விரலால் பிளேயரைக்காட்டினார் அண்ணா. அதற்கு பின்னணியில் மெல்லியதாய் வயலின் கீற்று ஒன்று அடுத்த இரு வரிகளுக்கு வரும்…. இரண்டே வரிகள்..பின்னர் காணாமற்போய் பின் மீண்டும் பல்லவியில் இன்னும் அதிக எனர்ஜியோடு இணைந்து கொள்ளும். அதே அடிக்கோடிடும் விளையாட்டு இரண்டாம் சரணத்திலும் தொடரும்.

பளீரென ஒரு சந்தோஷ மின்னல் வந்தது எனக்குள். அதுதான் தொடக்கம். பின்னர் ஒவ்வொரு பாடலிலும் ராஜா எந்தெந்தெ லேயர்களில் எந்தெந்த இசைக்கருவிகளால் தோரணம் கட்டுகிறார் (interlude க்கு சேவியர் அண்ணா வைத்திருந்த பெயர் தோரணம்), எந்தக்கருவியால் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே கமா போடுகிறார், புள்ளி வைக்கிறார், ஒரு வாக்கியம் முடித்தவுடன் ஒரு சிறிய செர்ரி பீஸை வெனிலா கேக்கின் மேல் வைத்து அலங்காரம் செய்வது போல ஒரு வயலின் கீற்றையோ, புல்லாங்குழல் நறுக்கையோ போகிற போக்கில் செருகி வைத்துப்போகிறார் என்று அனுபவித்து அனுபவித்து கேட்க ஆரம்பித்தேன்.

நாடோடித் தென்றல் கேசட் வந்த அன்று அண்ணாவிற்கு உற்சாகம் கரைபுரண்டோடியது. நான் சண்முகம் அண்ணாவோடு அன்று கடைக்குப்போயிருந்தேன். ஏற்கனவே இந்த படத்திற்கு பாடல்கள் முழுவதும் இளையராஜாதான் எழுதுகிறார் என்ற தகவலை சேவியர் அண்ணா சொல்லி, அதை சண்முகம் அண்ணா மறுத்திருக்கிறார் போல. “வா, மக்கா, வா உன்னைதான் பார்த்துட்ருந்தேன். நல்லா கவரைப் படி ,கதை, பாடல்கள் – சாமின்னு போட்ருக்கா’ என்று சொல்லி சிரித்தார். சண்முகம் அண்ணா அதை கவனிக்காதவாறே, ’உட்றா ஸ்பெல்லிங் மிஸ்டேக்காட்ருக்குது ‘ என்றார் சிரித்தவாறே.

”சாமி நல்லா முயூசிக் போடுவார்ன்றதெல்லாம் நியூசே இல்லை சம்மு. எழுதிருக்காரு பாரு பாட்டு. ‘பூமரப் பாவை நீயடி’ ன்னு ஒரு லைனு. என்ன அர்த்தம்னு நினைக்கிற. முத வரில ‘தொட்ட இடம் பூமணக்கும், துளிர்க்கரம் தொட இனிக்கும்’ அதுனால ”நீ ஒரு பூமரம் மாதிரியான பொண்ணு” அப்படின்னு ஒரு அர்த்தம். அப்புறம் ’பூமரத்துல செஞ்ச பொம்மை (பாவை) மாதிரி நீ – என் கையில் விளையாட” அப்படின்னு ஒரு அர்த்தம் , பூமரத்திலயே விளைஞ்ச பொண்ணு நீ –அதுனால அதோட features உங்கிட்ட இருக்குன்னு ஒரு அர்த்தம்….சே கொன்னுட்டாருடா…இனிமே எந்த திமிர் பிடிச்ச கவிஞனும் சாமிக்கு தேவையில்லை அவரே போட்டுப்பாரு எல்லா பாட்டையும் என்றார் சேவியர் அண்ணா. சண்முகம் அண்ணா, “டேய் அவரே இவ்ளோ யோசிச்சிருக்கமாட்டாரு, லூஸ்ல விடு” என்றார்

அவர் சொன்ன பல விஷயங்கள் ஆச்சயர்யமாக பின்னாளில் உண்மையான Facts உடன் ஒத்துப்போனதைப் பார்த்திருக்கிறேன். உதாரணமாக அவர் சொல்லியிருந்த ஒரு ஸ்டேட்மெண்ட் “சாமியோட காலைல ஆறு மணிக்கு முதல் சிட்டிங் உக்கார்ரவங்களுக்குதான் ஜாக்பாட்டு. அப்போதான் அவரோட எல்லா நல்ல பாட்டுங்களும் கம்போஸ் ஆகிருக்கு”. பின்னாளில் முன்னணி இயக்குனர்களின் சில பேட்டிகளில் இதே விஷயத்தினை உறுதிப்படுத்தியிருந்தார்கள்.
இதுபோன்று பல தருணங்கள், பல நிகழ்வுகள், பல பாடல்கள், பல செய்திகள் என மொத்தமாக சேவியர்அண்ணாவிடம் சக சினிமா பைத்தியமான என்னை வெகுவாக வசீகரித்திருந்தது. கிட்ட்த்தட்ட 1989 – 95 வரையிலும் பெரும்பாலான பாடல்களை அருண் ரெக்கார்டிங்கில்தான் பதிவு செய்திருந்தேன். பெரும்பாலான புதிய பாடல்கள் வரும்போதெல்லாம் அங்கேதான் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு குறிப்பிட்ட பாட்டு மட்டும் கேட்கும் எந்தக் கணத்திலும் சேவியர் அண்ணாவை நினைவூட்ட அவருடன் எனக்கு ஏற்பட்ட ஒரு சிறிய பிணக்குதான் காரணமாகிவிட்டது.

அந்த குறிப்பிட்ட சமயத்தில் என்னிடம் இருந்தவை எல்லாமே 60 கேசட்டுகள்தான். 5+5 பாட்டுகள் கொள்ளும் சில சமயங்களில் அதிசயமாக ஆறாவது பாட்டுக்கு இடம்கொடுக்கும் அவ்வளவுதான். 90 கேசட்டுகளின் விலை சற்று அதிகம் என்பதால் அதை வாங்கியதே இல்லை. திருப்பூர் மாமா ஒருநாள் ஏதோ எஸ்விசேகர் நாடகம் ஒன்றைக்கொண்டு வந்திருந்தார். செம அறுவை. ஒருதடவையோ இரண்டு தடவையோதான் கேட்டிருப்பேன். வீட்டில் பிறரும் அதன்மேல் எந்த ஆர்வமும் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. ஒரு நல்ல காலைப்பொழுதில்தான் அந்த நாடகத்தை அழித்து அதில் பாடல்களை பதிவுசெய்துகொள்ளலாம் என்ற யோசனை வந்தது.

இளையராஜாவின் 20 கிளாசிக் டூயட் பாடல்களை அதில் பதிவு செய்வது என்ற முடிவுடன் என் நினைவுகளுக்குள் தேட ஆரம்பித்தேன். பாடப்புத்தகம் தாண்டி நான் முதன்முதலில் செய்த இளம்வயது ரிசர்ச் அதுதான். காலையில் கோயம்புத்தூர் ஸ்டேஷனில் பாட்டுகள், பள்ளிக்கு வருவதற்கு முன்னும், பின்னும் அருண் ரெக்கார்டிங் செண்டரில் பாடல்கள், சிலோன் ரேடியொ ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுதான் டியூன் செய்து எடுக்க வைக்கவேண்டும் – தெளிவாகவும் எடுக்காது – எனினும் தினமும் கஷ்டப்பட்டு கேட்டேன். என்னளவில் திறம்பட தொகுக்கப்பட்ட இளையராஜாவின் கிளாசிக் 20 டூயட் பாடல்களை அடுத்த 2 வாரத்தில் சேர்த்தேன்.
ஒரு வெற்றிக்களிப்போடு சேவியர் அண்ணாவைச் சரணடைந்தேன். “அமர்க்களமான கலெக்ஷன் மக்கா, எந்த பொண்ணுக்கு கொடுக்கப்போற” என்றார் கண்சிமிட்டலுடன். “இல்லண்ணா இது எனக்குதான். இதை அழிச்சு ரெக்கார்ட் பண்ணாம கடைசி வரைக்கும் வச்சுக்கணும். அதுக்காகதான் தேடித் தேடி 20 பாட்டு செலக்ட் பண்ணேன்” என்றேன். சிரிப்புடன் வாங்கிக்கொண்டார்.
அன்று மாலையே கையில் கிடைத்தது நான் எதிர்பார்த்திருந்த பொக்கிஷம். மிகுந்த மனமகிழ்வோடு அந்த பாடல்கள் கேட்டேன். முதல் பகுதியில் “பொத்தி வச்ச மல்லிகைமொட்டு”, “முத்துமணிமாலை”, “ஒருநாளும் உனை மறவாத”.. என்ற வரிசையில் பத்து பாடல்கள். முடிந்தன. இனி என்ன அடுத்த பக்கம் திருப்பி அடுத்த பத்து பாடல்களை கேட்க வேண்டியதுதான் என எண்ணி எழுந்த அடுத்த நிமிடத்தில் ஒலிக்க ஆரம்பித்தது அந்த பதினோராவது பாட்டு. இளையராஜாவின் குரலில் ஆரம்பித்தது.

அப்போது நான் என்னதான் இளையராஜா ரசிகன், அவர் பாடல்களை திரும்ப திரும்பக் கேட்டு , அலசி அவர் புதிய பாடல்கள் என்னென்ன வரப்போகின்ற என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு காத்திருந்து ரசிப்பவன் என்றாலும், அவர் குரல் மீது எனக்கு ஒரு சிறிய அசூயை இருந்தது. என்ன இருந்தாலும் எஸ்.பி.பி., மனோ, அருண்மொழி, ஜேசுதாஸ் குரல்கள் போல அது ஒரு இள வயது குரல் அல்ல அல்லது அது ஒரு ஓல்ட் ஸ்கூல் குரல் அல்லது அது இயல்பாக ஒரு ஹீரோவின் குரலுக்கு ஒத்துப்போவதில்லை அல்லது அந்தவயதில் அந்தக்குரல் பிடிக்காமற்போனதற்கான சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு புரியாத காரணத்தினால் இளையராஜா ‘பாடிய’ எல்லா பாடல்களையுமே ஒரு ‘skip’ மோடில்தான் வைத்திருந்தேன்.

என்னுடைய கிளாசிக் லிஸ்ட்டில் அவரது குரலில் ஒரு பாட்டா? நெவர். என்னதான் சேவியர் அண்ணா சிறந்த ரசிகராக இருந்துவிட்டுப்போகட்டுமே? என்னுடைய ரசனையில் கைவைக்க அவருக்கு என்ன உரிமை? கடுமையான் கோபம், அன்றிரவு அடுத்த பத்து பாடல்களைக்கூட கேட்கவில்லை.

மறுநாள் காலையில் அவர் கடைக்குச்சென்றேன். அந்த குறிப்பிட்ட பாடலை மாற்ற வேண்டும் என்று சொன்னேன். அவர் அதை சட்டை கூட செய்யவில்லை. பிரமாதமான பாட்டு மக்கா. நீ கேளு, கேக்க கேக்க அது உனக்கு புடிச்சுப்போகும் என்றாரே தவிர என்னுடைய கோரிக்கையை அவர் காது கொடுத்துக்கூட கேட்கவில்லை.
எளியனாக, இன்சிரிப்புடன் அத்தனை நாள் இருந்த சேவியர் அண்ணாவை அந்த நிமிடம் தொலைந்துபோயிருந்தார். நான் அவரிடம் இன்னும் சற்று அழுத்திக்கேட்டிருந்தால் கண்டிப்பாக அவர் அந்த பாட்டை அழித்துக்கொடுத்திருக்க் கூடும். ஆனால் எனக்கு சண்டை போடவராது. டிமாண்டிங் என்பது என் கேரக்டரிலேயே இன்றைய தேதி வரை கிடையாது. அப்போது இன்னும் 20 வயது குறைவு. இன்னும் பாந்தமாகத்தான் பேசுவேன். என்னுடைய ஏமாற்றம், என்னுடைய ரசனையில் சேவியர் அண்ணா கைவைத்தது. அத்தனை நாள் எனக்கு அழுகைதான் வந்தது. ஆனால் புறக்கணிப்பு என்பது என் ரத்த்தில் ஊறியது. எனக்கு எது ஒவ்வாத்தோ என்னை எது ஏமாற்றியதோ என்னை எது கடும் மன அழுத்த்தில் தள்ளியதோ அதனை கடுமையாக புறக்கணிப்பேன்.

அது எவ்வளவு சின்ன விஷயம் என்று இப்போது தோன்றுகிறது.. ஆனால் அந்த சின்ன விஷயத்துக்காக நான் அருண் ரெக்கார்டிங் செண்டரை புறக்கணித்தேன்.. அடுத்து குந்தாவில் நான் இருந்த 8 மாதங்களும் நான் பாடல் பதியவே இல்லை. அந்த காம்ப்ளக்ஸ் படி கூட ஏறவில்லை. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்ற கணக்காய் காஜா ரெகார்டிங் செண்டருக்கும் செல்லவில்லை. சேவியர் அண்ணாவை பார்க்கமலேயே எனது குந்தா வாழ்வு முடிவுக்கு வந்தது.
ஆனால் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணாமான அந்த பாடல் எனது எவர்கிரீன் ஃபேவரைட் ஆனது. அடுத்த 5 வருடங்களிலோ என்னவோ, இளையராஜா குரல் மீது பித்துப்பிடிக்காத குறையாக அவர் பெயரிலேயே இரண்டு மூன்று ப்ளே லிஸ்டுகளைப் போட்டுக்கேட்டுக்கொண்டிருந்த காலமெல்லாம் இருந்தது. இன்று அவர் குரல்மட்டுமே ஒலிக்கும் ஒரு ஸ்பெஷல் 100 பாடல் தொகுப்பை தனி சிடியாக்கி எப்போதும் வைத்துக்கொண்டிருக்கிறேன்.


இனி எப்போது மஞ்சூர் செல்வேன் எனத்தெரியாது. ஆனால் எப்போது சென்றாலும் சேவியர் அண்ணாவை சந்திக்கவேண்டும். கண்டிப்பாக என்னை மறந்திருப்பார். ஞாபகப்படுதிக்கொள்ள சொல்ல வேண்டும். அதே மஞ்சூர் பஜாரில் எங்கேனும் ஒரு கடையில் வைத்து இந்த சிறிய கதையைச் சொல்லி சிரித்து, எப்போது கேட்டாலும் நினைவிற்கு வரும் “நில்லாத வெண்ணிலா” என்று இளையராஜாவும் ஸ்வர்ணலதாவும் பாடும் இந்த பிரமாதமான பாடலை அவரோடு கேட்க வேண்டும்.


Nillatha Vennilla - Aanazhagan.wmv
not much heard song from the movie Aanazhagan


http://www.youtube.com/watch?v=H3Yxy_6zUHM
YOUTUBE.COM


.
ராஜாவின் குரலை வேண்டி விரும்பி கேட்பவர்களில் நானும் ஒன்று.

rajaramsgi
15th October 2014, 05:28 PM
மஞ்சூரில் பாடல்களை ரெக்கார்ட் செய்து தருவதற்கு இரண்டு கடைகள் இருந்தன. ஒன்று ”அருண் ரெக்கார்டிங் செண்டர்”, மற்றொன்று ”காஜா ரெக்கார்டிங் செண்டர்”

சுகாவும் இப்படி தான் எழுதுவார். பிரமாதமான பாணியில் தன்னுடைய அனுபவத்தை எழுதிய நண்பர் எல்லா ராஜா சார் ரசிகர்களின் மினி மீ.

அருண் & காஜா ரெகார்டிங் சென்டர்ஸ் , சேவியர் அண்ணா, நம்மிடம் இதை பகிர்ந்து கொண்ட போயம் எல்லோருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்.

"மிக அழகாக லெட்ஜர் செய்யப்பட்ட ஃபைல்" -- அப்போதெல்லாம் எல்லா ரெக்கார்டிங் கடைகளிலும் வைத்திருப்பார்கள். மறந்து போன ஒன்று. இந்த கடைகளில் பெரிய பெரிய ஸ்பீக்கர் வைத்திருப்பார்கள், சத்தம் துல்லியமாய் கேட்கும். பாடல்களை ரெகார்ட் செய்யும் செய்யும் போது ஒரிஜினல் சத்தத்தை விட வேறு ஒரு எக்கோ/ஸ்டிரியோ எபக்டோடு சில சமயம் பதிவு செய்து கொடுப்பார்கள். கேட்க அவ்வளவு இனிமையாய் இருக்கும்.

என்னுடைய தீண்டத்தகாத பாடல்கள் வரிசையில் இப்போது நில்லாத வெண்ணிலா இல்லை. கேட்க கேட்க நன்றாய் இருக்கிறது.

Russellhaj
15th October 2014, 06:16 PM
கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் கோலோச்சி வரும் இளையராஜா, முதல் முறையாக தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார். இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார்.




http://tamil.filmibeat.com/img/2014/10/15-ilayaraaja-10-2-600.jpg




போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குநர், பாடியவர்கள், தயாரிப்பாளரகள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த முழு விவரங்களையும் யார் சரியாக திரட்டித் தருகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. ரசிகர் திரட்டித் தரும் தகவல்களை, இளையராஜாவிடம் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருந்தால் பரிசு தரப்படும். சரியான தகவல்களைத் திரட்டித் தரும் ரசிகரை, இளையராஜாவே நேரில் அழைத்து பரிசுகளை வழங்கவிருக்கிறார். என்ன பரிசு, எந்தத் தேதியில் போட்டி என்பதையெல்லாம் இளையராஜாவே விரைவில் அறிவிக்கிறார்.
Read more at: http://tamil.filmibeat.com/news/ilaiyaraaja-conduct-contest-fans-031317.html

Russellhaj
15th October 2014, 06:21 PM
This @Raaga_Suresh has prepared five wonderful playlists with 100 Raja songs (each). Thank you saar




https://t.co/OX0TO7ol2t

Russellhaj
15th October 2014, 08:47 PM
//அருண் & காஜா ரெகார்டிங் சென்டர்ஸ் , சேவியர் அண்ணா, நம்மிடம் இதை பகிர்ந்து கொண்ட போயம் எல்லோருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்.//


சும்மா சும்மா வெறும் வாயால் நன்றி சொல்லாமல் லண்டன்லில் ஒரு வீடு வாங்கி கொடுத்தால் இந்த சகோதரி வேண்டாம் என்றா சொல்ல போகிறேன் :-d :)

Russellhaj
16th October 2014, 09:29 AM
புகழ் பெற்ற ’வானுயர்ந்த சோலையிலே’ பாடலுக்கு இப்படியொரு மெட்டு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? :)



https://www.youtube.com/watch?v=7B1u4fIS5-o

Russellhaj
16th October 2014, 09:39 AM
Lovely.........:)



https://www.youtube.com/watch?v=-HM6fKdWA34

Russellhaj
16th October 2014, 10:16 AM
இளையராஜாவின் இயற்பியல் :



ஒரு பாடல் நம்மை எங்கெல்லாம் அழைத்துச் செல்லும்? அல்லது ஒரு பாடலால் என்னதான் செய்ய முடியும்? நிச்சயமாக, ஒரு வாழ்க்கைக்கு தேவையான, ஒரு வாழ்க்கை முழுவதும் நினைத்து நினைத்து பார்க்கக் கூடிய அனுபவங்களைத் ஒரு பாடலால் தர இயலும்.. காலத்தின் பாதைகளுக்குள் அது நம்மை கூட்டிப் போகும். அது எப்பொழுது எங்கு நிகழும் என்று நம்மால் சொல்ல முடியாது.

பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், பெரியார் பேருந்து நிலையம் அருகே "வானுயர்ந்த சோலையிலே" வந்து கொண்டிருந்தது. "இதய கோயில்" வெளியாகி ஒன்றிரண்டு வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். எனவே "வானுயர்ந்த சோலையிலே" என்றால் இதய கோயில் என்று தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் அறிந்திருந்த நேரம். ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால், அந்த மாலை வேளையில் இந்தப் பாடலை SPBக்கு பதிலாக ஜெயச்சந்திரன் பாடிக்கொண்டிருந்தார். மெட்டும் வேறு.

பல்லவி மட்டுமே ஜெயச்சந்திரன் பாடியதிலும் SPB பாடியதிலும் ஒரே வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கும். சரணங்களின் வரிகள் வெவ்வேறு.
சட்டென்று மனதில் பதிந்து போனது ஜெயச்சந்திரன் பாடல். சில வாரங்கள் கழித்து, எனது அடுத்த cassette record செய்வதற்காக "shopping complex"ல் உள்ள* தேவி மியூசிக்கல்ஸ் சென்றிருந்தேன். அங்கிருந்தவரிடம் இதய கோயில் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய "வானுயர்ந்த சோலையிலே" இருக்கிறதா என்று கேட்டேன். அவரோ, "அது SPB பாடியது" என்றார். நான், "இல்லை. ஜெயச்சந்திரனும் வானுயர்ந்த சோலையிலே பாடியிருக்கிறார்" என்று அந்த மெட்டில் பாடிக் காட்ட, என்னை "ஒரு மாதிரியாக" பார்த்து, "இப்படியொரு பாட்டே கிடையாது" என்றார்.

இடையில் ஓடிய சில வருடங்களில் ஜெயச்சந்திரன் பாடிய வானுயர்ந்த சோலையிலே கேட்கும் வாய்ப்பு மறுபடி கிட்டவேயில்லை. இருப்பினும், கடற்கரையில் நடக்கையில் விரல்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட மணல் துகள் வீட்டுக்கு வந்த பின்னும் எங்கேயோ ஒட்டியிருப்பதைப் போல, இந்தப் பாடலும் என்னுடன் வந்து கொண்டேயிருந்தது.

அன்றெல்லாம் பாட்டு கேசட் ரெகார்டு செய்யும் கடைகளில் பெரும்பாலானவை நம்மிடம் list வாங்கி வைத்துக் கொண்டு அவற்றை மொத்தமாக "record room" அனுப்பி record செய்து வாங்கி நம்மிடம் தரும். இந்த வகை கடைகளில், அரிதான பாடல்கள் பலவற்றை "இல்லை" என்று சொல்லி விடுவார்கள். கடைகளில் "collections" என்ற பெயரில் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யும் வகை கேசட்கள் எனக்கு சுத்தமாக ஒத்து வராது. ரசனையில் நெய்யப்பட்டு நினைவில் சேமிக்கப்பட வேண்டிய* இசையின் உணர்வுகளை பல சமயம் அது அறுத்தெரியும். உதாரணமாக, "சின்ன புறா ஒன்று" என்று உருகும் SPB உடனே "ஆத்தா ஆத்தோரமா வாரியா" என்று கேட்பார். அல்லது "திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே" என்று நாராயணனிடம் நற்கதி தேடும் யேசுதாஸ் அந்தர் பல்டி அடித்து அடுத்த பாடலிலேயே "வச்ச பார்வை தீராதடி" என்பார். எனவே நான் இத்தகைய, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விற்கப்படும் கேசட்டுகளை ஒதுக்கியே வந்தேன்.

அரிதான பாடல்களை பதிய முடியாமல், பல கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்த எனக்கு 1991ல் அந்த அதிர்ஷ்டம் கிட்டியது. இன்று போத்தீஸ் இருக்கும் தெருவில், அதற்கு எதிரே குறுகிய சந்துக்குள் ஒரு "recording room" இருப்பதை கண்டுபிடிக்க நேர்ந்தது. அங்கு நான் முதன்முதலாக ஒரு ஜெயச்சந்திரன் list வைத்துக் கொண்டுதான் சென்றேன். "தங்க ரங்கன்", "நெஞ்சிலாடும் பூ ஒன்று", "முடிவில்லா ஆரம்பம்", "வட்டத்துக்குள் சதுரம்", "மலர்களே மலருங்கள்", "நல்லதொரு குடும்பம்" என்று நிறைய கடைகள் இல்லையென்று கைவிரித்த விசித்திரமான பெயர்கள் கொண்ட படங்களில் இடம்பெற்ற ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் கொண்ட list அது.

கடையினுள் வெள்ளை வேட்டி சட்டையுடன் ஒரு முதியவர் இருந்தார். சிவகவி படத்திலிருந்து MKT பாட்டு ஒன்று சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. தனது கெட்டியான நீள்சதுர வடிவ கறுப்பு நிறக் கண்ணாடியை சரிசெய்தபடி எனது லிஸ்டை பார்த்தார். எனது ஜெயச்சந்திரன் பாட்டுப் பட்டியலில் "பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே; ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே..." (அலைகள், MSV, 1973) பாடலின் வரியை மட்டும் எழுதியிருந்தேன். என்ன படம் என்று தெரியவில்லை. வரிசையாக வாசித்து வந்த அவர், இந்தப் பாடல் வரி வந்தவுடன், சட்டென்று "அலைகள்" என்று சொல்லிக் கொண்டே எழுதினார். இதுதான் ஜெயச்சந்திரனின் முதல் தமிழ் பாடல் என்றும் சொல்லி வியக்க வைத்தார்.

இவரிடம் ஜெயச்சந்திரன் பாடிய "வானுயர்ந்த சோலையிலே" பற்றி கேட்கலாம் என்று தோன்றியதால் கேட்டேன். சிறிதும் தாமதமின்றி அது "நூலறுந்த பட்டம்" (1979) என்ற படம் என்றார். மேலும், அதற்கு இசை இளையராஜா இல்லை. ஸ்டாலின் வரதராஜன் என்பவர் இசையமைத்த பாட்டு. பிறகு "இதய கோயில்" படத்தில் இளையராஜாவால் இன்னும் மெருகேற்றப்பட்டது என்றார். நான் அவரை ஒருவித பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அவருக்கும் பதினைந்து வருட கால* தொடர்பை அந்தப் பாடல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...

Russellhaj
16th October 2014, 10:23 AM
அந்த இரவு...

அந்த இரவு குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று சில நண்பர்களும் நன்றாக இருக்காது என்று வேறு சில நண்பர்களும் வெவ்வேறு எண்ணங்களில் இருந்தனர். கல்லூரியில் புதிதாய் சேர்ந்திருந்த* நாட்கள் அவை...

அந்த நாளும் வந்தது. மாலையில் நண்பர்கள் குழுவுடன் காந்தி மியூசியத்திற்குள் நுழைந்து மைதான சிமிண்ட் படிகளில் அமர்வதற்கும் வானில் நட்சத்திரங்கள் மின்னுவதற்கும் சரியாக இருந்தது. நல்ல கூட்டம். மேடையில் இசைக்குழு சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. இளையராஜாவுக்கு மட்டுமே இணங்க, இழைய, குழைய பழக்கப்பட்டிருந்த மனதை TMS சுசீலாவின் பழைய பாடல்கள் கச்சேரிக்கு அழைத்து வந்து அமர்த்தியிருந்தேன்....

ஒரு சில அர்த்தமுள்ள வரிகள், நல்ல பாடல்கள், இடையே அவர்கள் இருவரும் ஓய்வெடுக்கும் வேளையில் ஏதேதோ பாடல்கள் என மணி பதினொன்றை தாண்டியிருந்தது. ஆடிக்காற்று காந்தி மீயூசிய மரங்களில் இருந்து இலைகளை மைதானம் எங்கும் வீசியபடி உலா வந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான், அதன்பின் வருடக்கணக்கில் இரவுகளில் திடீரென்று காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும் அந்த ஏகாந்த நொடிக்கரைசலின் ஒலிப்பிம்பத்தின் மூலமான* "தேவன் வந்தாண்டி..." [உத்தமன் / 1976 / KV Mahadevan / TMS - சுசீலா] என்றொரு மயக்கமூட்டும் குரல் மேலெழும்பி காற்றில் நகரும் இலைகள் போல மைதானம் எங்கும் பரவியது. சிறுசிறு பேச்சொலிகள் அடங்க, "தீபம் கொண்டாடி" என்று ஒலியின் மீதொரு ஒளி ஏறியது... மயிலிறகின் நுனிகளில் தென்றலை ஏந்தி நம் மீது தொட்டு தொட்டு வைத்துப் போவது போன்ற குரல். துவக்கத்திலேயே, இந்த இரண்டு வரிகளும் புடலை கொடியிலேறி படர்வது போல நம் மனதில் வளைந்து வளைந்து சுற்றி ஏறும்... அது மட்டுமல்ல. கண்ணதாசன் "டி"யை வைத்தே நம்மை ராட்டினம் ஏற்றப் போகிறார் என்பதும் தெரிந்து விடும்.

இந்த பாடலில் மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் இசை சற்றே இரைச்சலாக* இருப்பது போலக் கூடத் தோன்றும். "தேவன் வந்தாண்டி தீபம் கொண்டாடி" என்ற ஒற்றை வரியில் சுசீலா நம்மை எத்தனை நெளிவு சுளிவுகளுக்குள் தோய்த்து எடுக்கிறார் என்பதே இந்த பாடலின் அற்புதம். அதுவும் இரண்டாம் ஸ்டான்ஸா முடிந்த பின் திரும்ப வரும் பல்லவியில் அவர் தீபத்தில் உள்ள "தீ"யை இழுத்து சுருக்கி "கொண்டாடி"யை நீட்டும் லயம் ஒரு மந்திரவாதி புதிதாக ஒரு ஸ்வரத்தை உண்டாக்கி நம் காதுகளில் ஊற்றும் அற்புத அனுபவம். ஐந்தே நொடிகளில் அவர் நிகழ்த்திக் காட்டும் அந்த சாகசம்...கேட்கும் பொழுதெல்லாம் பரவசம்...

பாடல் முடிந்தது. அனைவரும் அடுத்த பாடலுக்கு தயாராயினர். முன் வரிசைகளில் சலசலப்பு. சுசீலா புன்னகையுடன் வயலின் குழவை நோக்கி கையசைத்தார். அனைத்து வாசிப்பு கருவிகளும் சைலண்ட் ஆக வயலின் வாசிப்பவர்கள் மட்டும் தயார் நிலைக்கு வந்தனர். "தேவன் வந்தாண்டி" என்று பல்லவியை மீண்டும் பாடத்துவங்கினார். வயலின் மட்டும் மலரின் மீது வழியும் பனியின் துளி போல அவரின் குரலை பின் தொடர்ந்தது.
அந்த நிசப்தமான இரவில் சொர்க்கத்தின் முகவரியை காட்டி விட்டு அமர்ந்தார் சுசீலா. நினைப்பேதுமின்றி இசையின் அணைப்பே முனைப்பாக இருத்தல் மனதுக்கு சொர்க்கம் தானே?

நள்ளிரவு கடந்த பின் தமுக்கம் ரோட்டில் நடந்து கொண்டிருந்தோம். "தேவன் வந்தாண்டி"யின் மகிழ்ச்சியில் எத்தனை தொலைவும் நடக்கலாம் போலிருந்தது...காந்தி மியூசியத்திலிருந்து வைகை மேம்பாலம் வருவதற்குள் எத்தனை முறை ஏற்ற இறக்கங்களுடன் அந்த "தீபம் கொண்டாடி"யை பாடிப் பார்த்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது...அந்த வரியின் லாவகம் ஒரு ஒப்பற்ற குரல் தந்த சங்கதியின் உயிர்ப்பின் ரகசியம் போலத் தோன்றியது. வாகனங்கள் ஏதுமற்ற வைகை பாலத்தின் மீது நடக்கத் துவங்கினோம்...ஆற்றின் வாசனையை அள்ளி வந்து முகத்தில் அடித்தது காற்று...வைகையில் நீரோடிய வருடம் அது. பாலத்தின் சுவரில் சாய்ந்து கீழே ஓடிய நீரில் மின்னும் ஒளித்திவலைகளை பார்த்தபடி நின்றிருந்தோம்...எங்கிருந்தோ "தீபம் கொண்டாடி" என்று கேட்பது போல இருந்தது. ஒரு முறை வெளியேறிய உணர்வின் அலை எப்போதும் கால வெளியில் நீந்திக் கொண்டுதானே இருக்க வேண்டும்? அந்த இரவின் நொடிகளை, நிசப்தத்தை, வைகையில் ஜொலித்த நீர் இழைகளை, ஒன்றுக்குள் ஒன்றாய் கோர்த்து மனதின் ஓரமாய் நினைவின் வாசம் வீசும் மலரின் ஆரமாய் தோன்றிய பொழுதெல்லாம் பூத்தபடி இருக்கிறது "தேவன் வந்தாண்டி".

Russellhaj
16th October 2014, 10:25 AM
இளையராஜாவின் இயற்பியல்:

எதிர்பாராத இடத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்கையில் அது எத்தகையதாகினும் அதற்குரிய உணர்வு அதற்கான இயல்பை விட* பல்மடங்கு பெருகியே நம்மிடம் சேரும். அதன் காரணமாகவே அது ஆழமாக பதிந்து விடவும் கூடும். இப்படியாகத்தான் ஒரு மாலை வேளையும் ஒரு சைக்கிள் கடை சிறுவனும் சேர்ந்து ஒரு பாட்டைக் காட்டி விட்டுப் போய் இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

பத்தாம் வகுப்பு பாஸ் செய்ததன் பொருட்டு மீனாட்சி கோயில் அருகில் உள்ள ஜான்சி ராணி பூங்காவின் எதிரில் இருந்த "கமலா சைக்கிள் மார்ட்" கடையில் வாங்கிய எனது சிறகுகள் வீட்டில் வந்திறங்கிய தினம், அதன் மேல் படிந்திருந்த சிறு சிறு தூசியை கூட துடைப்பதுமாகவும், டயர் அழுக்காகாமல் ரோட்டில் ஓட்டுவது எப்படி என்ற கவலையுடன் இரவு முழுவதும் கழிந்தது.

சைக்கிளை பயன்படுத்திட என்ன சாக்கு கிடைக்கும் என்ற தவிப்புகளுக்கிடையில் காற்றடிப்பது கூட களிப்பான வேலையாகத் தோன்ற, அதற்கென்றே வீட்டிலிருந்து "கமலா சைக்கிள் மார்ட்" வரை போய் காற்றடிக்கும் பழக்கம் தொற்றியது. சைக்கிள் கடையின் எதிரில் ஒரு ஸ்பீக்கர் கடை இருந்தது. விதவிதமாக வெவ்வேறு சைஸ்களில் ஸ்பீக்கர்களை அடுக்கி வைத்திருப்பார்கள். பூக்கடைக்கு மணம் போல, ஸ்பீக்கர் கடையென்றால் பாட்டு வாசம் வீச வேண்டுமே...எப்போதும் அந்தக் கடையில் ஏதேனும் பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சைக்கிள் கடையில் முதலாளி தவிர மூன்று நான்கு பேர் உண்டு. அதில், எடுபிடி வேலைக்கு என்னை விட வயதில் குறைந்த ஒரு சிறுவனும் இருந்தான். அங்கு வரும் சைக்கிள்களில் சிறு சிறு ரிப்பேர் மற்றும் பஞ்சர் பார்ப்பதும் அவன் வேலைகளில் அடக்கம். அழுக்கைடந்த ஒரு முண்டா பணியனும் காக்கி டிராயருமாகத் திரியும் அவன் கையில் எப்பொழுதும் ஒரு ஸ்பானர் இருக்கும். எதிர்கடையிலிருந்து வரும் பாட்டுக்கு எசப்பாட்டு போல விசில் அடித்துக் கொண்டே வேலை செய்வது அவன் ஸ்டைலாக இருந்தது.

சில மாதங்களில், பல முறை சென்று வந்ததன் பயனாக, ஒரு புதிய விஷயம் அந்த சிறுவனை நெருக்கமாக பார்த்ததில் புரிந்தது. அவன் எப்பொழுதும், எந்தப் பாட்டை விசிலடிக்கத் துவங்கினாலும் சற்று நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டுக்குத் தாவி அதை விசிலடிப்பது அவனது வழக்கமாக இருந்தது. எந்த நேரத்தில் அந்தப் பாட்டுக்குத் தாவுவான் என்பது மிக இயல்பாக நெருடல் ஏதுமின்றி நிகழும் மாற்றமாக இருந்தது...

அதுவரை நான் அந்தப் பாடலை கேட்டிருக்கவில்லை. பிரபலமான பாடலாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையிலே, ஒரு நாள் பள்ளி முடிந்து காற்றடிக்கச் சென்றிருந்தேன். எதிர்கடையிலிருந்து "வா வெளியே இளம் பூங்குயிலே" [பாடு நிலாவே* - 1987] என்னும் ஒரு பாட்டு ஒலிக்கத் துவங்கியது. சிறுவனுக்கு குஷி தாளவில்லை. அவன் எல்லா பாடல்களுடன் இணைக்கும் விசில் இந்தப் பாடலே என்று விளங்கியது. இத்தனைக்கும் அது ஒரு மிகச் சாதாரணமான பாடலாகவே தோன்றியது.

இந்தப் பாடலின் துவக்கம், குழந்தைகள் விளையாடும் கீபோர்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பீட்களில் ஒன்று போலத்தான் இருக்கும். இந்தப் பாட்டில் என்ன இருந்து விடப் போகிறது என்று கவனச் சிதைவு ஏற்படுத்தும் துவக்கம் அது.

நம்மூர் பாடல்களுக்கு இரண்டு ஸ்டான்ஸா என்று உருவாக்கப்பட்டதே இளையராஜாவின் interlude களுக்காகத்தானோ? அப்படித்தானே அவர் தனது வயலின் கொண்டும் குழல் கொண்டும் ஏராளமான இரண்டாம் சரணங்களுக்குள் நம்மை மூழ்க வைத்திருக்கிறார்...இந்தப் பாட்டில் அதற்காக* காத்திருக்கும் பொழுதில் பேங்கோஸ் மீது சற்று இளைப்பாறலாம். பிறகு அந்த வயலினும் புல்லாங்குழலும் நிகழ்கிறது. காத்திருந்த பயன் கிடைக்கிறது. முப்பதே நொடிகள். ஒருவிதமான துன்பியலின் படிகளில் நம்மை அமர்த்தி விட்டு மீண்டும் சாதாரணத்தில் சறுக்கிக் கொண்டு போய் விடும் பாட்டு.

நம் சிறுவன் இந்தக் முப்பது நொடிக் கோர்வையை சற்றே நீட்டி இழுத்து வாசிக்கும் பொழுது அதில் ஒரு சோகத்தின் இழையை இழுப்பது போல இருக்கும். பிறகு சட்டென்று பாட்டின் முடிவில் வரும் சஞ்சாரங்களுக்குப் போய், தனக்குத் தோன்றிய ஸ்வரங்களை சேர்த்து வாசிப்பான். எண்ணம் என்பதே ஸ்வரம் தானே?

இரண்டு மூன்று வருடங்கள் கடந்திருக்கும். புதியதின் மீதிருக்கும் ஆர்வம் தரும் மகிழ்ச்சியின் சுழற்சிகள் பழக்கமான பின் அவற்றை மெல்ல வடிந்து போகச் செய்வது தானே காலத்தின் கோட்பாடு? சைக்கிள் அன்றாட வாழ்வின் அங்கமானது. போகும் வழியில் இருக்கும் எந்த கடையிலும் காற்றடிக்கும் "பக்குவம்" வந்து விட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின் கமலா சைக்கிள் மார்ட் செல்ல நேர்ந்த பொழுது சிறுவன் அங்கு இல்லை. முதலாளியிடம் "பையன் இல்லையா?" என்றேன். "சாப்பாடெல்லாம் போட்டு பாத்துகிட்டேன்...சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டான்" என்றார். அதில் கோபத்தை விட வலி அதிகம் இருப்பது போல இருந்தது. சொல்லலாம் என்று நினைத்தும் சொல்ல முடியாத நிலையில் நம்மை வைக்கும் கோடிக்கணக்கான நொடிகளை உருவாக்கும் காலத்தில் இதுவும் அத்தகைய இன்னொரு நொடியாக இருந்திருக்கக் கூடுமோ? யாருக்குத் தெரியும் யார் எதை சொல்ல நினைத்தார்கள் சொல்லாமல் போனார்கள் என்று?

rajaramsgi
16th October 2014, 03:47 PM
சும்மா சும்மா வெறும் வாயால் நன்றி சொல்லாமல் லண்டன்லில் ஒரு வீடு வாங்கி கொடுத்தால் இந்த சகோதரி வேண்டாம் என்றா சொல்ல போகிறேன்

ஐபோன்
டொயோட்டா கார்
வெள்ளை ஜிப்பா வேஷ்டி.
மேட்ச்சிங் கட் ஷூ

பழமையான பிரசாத் ஸ்டுடியோ - ஆனால்
அதிநவீன ஒலிப்பதிவு சாதனங்கள்.
பட்டங்கள் பதினாயிரம்
நலம் விரும்பிகள் கோடி.

ராஜா சாருக்கு இதெல்லாம் தகும் என்றால்
அவர் கொடுப்பதை விரும்பும் நமக்கு?

அவருக்காக -
மலபார் கோல்ட் ரெண்டு முறை வாங்கியாகி விட்டது.
ஐபோன் 6 வாங்க போகிறேன்.
செய்செல்ஸ் போகவும் ஆசை.

அவரை பற்றி உருகி உருகி எழுதும் அக்கா,
உங்களுக்கு ஒரு அரண்மனையே கட்டி தரலாம் !

entertainment
17th October 2014, 07:53 AM
http://cinema.vikatan.com/articles/news/28/6810

கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் பல சாதனைகளைப் புரிந்து வரும் இளையராஜா, தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார்.

இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார்.

போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குநர், பாடியவர்கள், தயாரிப்பாளர்கள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.




இந்த முழு விவரங்களையும் யார் சரியாக திரட்டித் தருகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. ரசிகர் திரட்டித் தரும் தகவல்களை, இளையராஜாவிடம் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருந்தால் பரிசு தரப்படும்.

சரியான தகவல்களைத் திரட்டித் தரும் ரசிகரை, இளையராஜாவே நேரில் அழைத்து பரிசுகளை வழங்கவிருக்கிறாராம். என்ன பரிசு, எந்தத் தேதியில் போட்டி என்பதையெல்லாம் இளையராஜாவே விரைவில் அறிவிக்க உள்ளார்.

Russellhaj
18th October 2014, 06:11 AM
''இளையராஜா கொடுத்து வச்சவன்..!''


''அமெரிக்கா போவ தற்குச் சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் இசையமைப்பில் நான்கு பாடல்கள் எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டிருந்தார் கவிஞர். பிரசாத் ஸ்டூடியோ வில் அவர் மூன்று பாடல் கள் எழுதி முடித்த பிறகு கிளம்பிவிட்டார். காரில் திரும்பிக்கொண்டிருந்த அவர், 'இளையராஜா கொடுத்து வச்சவன். ஏன்னா, அமெரிக்கா போய்த் திரும்பினப்புறம் நான் பாட்டு எழுதமாட் டேன்' என்று கூறினார். கவிஞர் அமெரிக்காவிலி ருந்து திரும்பி வரவும் இல்லை; கவிதை எழுதித் தரவும் இல்லை!''
- கவிஞர் கண்ணதாசனுக்கு நடைபெற்ற அஞ்சலியில் அவரது செயலாளர் இராம.கண்ணப்பன்






https://scontent-b-iad.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/1016897_624045857705693_6573543886414244518_n.jpg? oh=500f490b6cdcb8aab91a4aee82eb0eb2&oe=54F15961

sudhakarg
21st October 2014, 10:43 PM
புகழ் பெற்ற ’வானுயர்ந்த சோலையிலே’ பாடலுக்கு இப்படியொரு மெட்டு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? :)


Very interesting!!