PDA

View Full Version : Makkal thilgam m.g.r. Part-9



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

Russellisf
6th June 2014, 03:00 PM
தவழும் நிலவாம் தங்கரதம் ,
தாரகை பதித்த மணி மகுடம் ,
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம் !

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்,
அவளே என்றும் என் தெய்வம் !
அன்னை மனமே என் கோயில் ,
அவளே என்றும் என் தெய்வம் !



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/i_zps1b628e37.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/i_zps1b628e37.jpg.html)

siqutacelufuw
6th June 2014, 03:17 PM
" கொடை வள்ளல் " குடை இல்லாமல் ------ அணிந்திருக்கும் தொப்பி தலை நனையாமல் காத்தாலும், உடல் நனையுமே ! மக்களைப் பற்றிய கவலையும் அவர்களின் முன்னேற்றமும் தான் நம் மன்னவனின் முழு நேர சிந்தனையோ ! . .

http://i58.tinypic.com/s2tlyg.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
6th June 2014, 03:19 PM
aayirathil oruvan today eve.show status in sathyam complex only 8 tickets balance

siqutacelufuw
6th June 2014, 03:22 PM
இம்மாத (ஜூன் 2014) இதயக்கனி இதழில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரை
http://i57.tinypic.com/x39toi.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
6th June 2014, 03:22 PM
nilavum thotru pogum engalin mannavan mugathin alaguku munnal




http://i60.tinypic.com/67o5jc.png

ainefal
6th June 2014, 03:23 PM
எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய
திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப்
போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா? "

Yukesh Babu Sir,

எம்.ஜி.ஆர் திருப்புகழை எவராலும் அழிக்க முடியாது. Many use his name to gain importance "புகழ் அடைய இதுவும் ஒரு வழி"

http://www.youtube.com/watch?v=izsAQ7RKyt8

ainefal
6th June 2014, 03:31 PM
This month URIMAIKURAL edition.

http://i59.tinypic.com/2gtum2f.jpg
http://i58.tinypic.com/2lryfk.jpg

Russellisf
6th June 2014, 05:56 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpse6a19ff1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpse6a19ff1.jpg.html)

Russellisf
6th June 2014, 05:58 PM
https://www.youtube.com/watch?v=UYJlHdQeJ0I

Russellisf
6th June 2014, 05:59 PM
https://www.youtube.com/watch?v=DWcHKfApSVg

Russellisf
6th June 2014, 06:04 PM
https://www.youtube.com/watch?v=NVZS60fWX34

Russellisf
6th June 2014, 07:36 PM
Gone are the days ' the best double
Acting performed by DR MGR !'


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/yb_zpscdd6fb91.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/yb_zpscdd6fb91.jpg.html)

Russellisf
6th June 2014, 07:36 PM
நேற்று, விண்டேஜ் ஜெரிடேஜ் என்ற அமைப்பு, மயிலை பி எஸ் உயர் நிலை பள்ளியில்............டி எம் சவுந்தர்ராஜன் நினைவு தினம் கொண்டாடியது
அதில் பல அரிய டி எம் எஸ் பாடிய பாடல்கள் இடம் பெற்றன
எம்ஜியார், சிவாஜி பட பாட்டுக்கள் தான் அதிகம் (நியாம்தானே)
அதில் ஜி ராமனாதன் சொந்தம் திரு விஸ்வனாதன் கலந்து கொண்டார் தன் அனுபவத்தை சொன்னார்
அவர் ஜி ராமனாதன் இசை குழுவில் மோர்சிங்க் வாசிப்பவர்
அவர் சிறுவனாக முதன் முதலில் மோர்சிங்க் வாசித்த படம், மதுரை வீரன் - நடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியலே
பாடல் ரிகார்டிங்க் முடிந்து, எம்ஜியாருக்கு போட்டு காண்பித்தவுடன், எம்ஜியார், இந்த பாட்டில் மோர்சிங்க் வாசித்தவர் எங்கே கூப்பிடு என்றாராம்
இவர் சிறுவன், பயத்துடன் வந்து இருக்கிறார் எம்ஜியாரிடம்...
அவர், நீ விஸ்வனாதன் இல்லை இந்த விஸ்வத்துக்கே நாதன் என கட்டி அணைத்து கொண்டு, நூறு ரூபாய் பரிசாக கொடுத்தாராம்.............
அரங்கில் அலை மோதிய கூட்டம் கைதட்டல் ஓய சில நிமிடங்கள் ஆனது...................
எம்ஜியார் எம்ஜியார்தான்



courtesy - net

Russellisf
6th June 2014, 07:58 PM
MY FAVPURITE SCENE IN PATINATHIL BOOTHAM


http://www.youtube.com/watch?v=bEm9XsT8YG8

Russellisf
6th June 2014, 08:06 PM
WATCH THE CLIP FROM 7.20 ONWARDS

http://www.youtube.com/watch?v=tWKBg7CTdzg

Russellisf
6th June 2014, 08:08 PM
WATCH THE VIDOE FROM 0.00 HRS TO 0.25 HRS


http://www.youtube.com/watch?v=xb5dEwi16wk

Russellisf
6th June 2014, 08:09 PM
http://www.youtube.com/watch?v=fFC2Ao_M7v8

Russellisf
6th June 2014, 08:10 PM
http://www.youtube.com/watch?v=C0R-A44s7LU

Russellisf
6th June 2014, 08:13 PM
http://www.youtube.com/watch?v=ftU5AYZTLQs

Russellisf
6th June 2014, 08:14 PM
http://www.youtube.com/watch?v=JwwkFb82f48

oygateedat
6th June 2014, 08:27 PM
http://i57.tinypic.com/710buo.jpg

ainefal
6th June 2014, 08:36 PM
MY FAVOURITE SCENE IN PATINATHIL BOOTHAM


http://www.youtube.com/watch?v=vWgWLvFlZso

BUT WHAT NAGESH SAYS IS NOT APPLICABLE TO THILAGAM MOVIES.

oygateedat
6th June 2014, 09:04 PM
http://i59.tinypic.com/219dpvd.jpg

oygateedat
6th June 2014, 09:15 PM
http://i61.tinypic.com/2vdsi93.jpg

ainefal
6th June 2014, 09:34 PM
http://i57.tinypic.com/64qe7m.jpg

Russellisf
6th June 2014, 09:47 PM
thanks roop sir and sailesh sir for uploaidng today eve.show full display



http://i57.tinypic.com/64qe7m.jpg

Russellisf
7th June 2014, 12:54 AM
முதல் மரியாதை'' படத்தில் நடித்த பிறகு, தனது அடுத்த படமான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் என்னை கதாநாயகனாக்கி விட்டார் பாரதிராஜா.

ஆனால் அதற்கும் இடைப்பட்ட நேரத்தில் "சாவி'' என்ற படம் மூலம் நான் ஹீரோவாகி விட்டேன். இது `ஆன்டிஹீரோ' கதை. அதாவது, கதாநாயகனே வில்லத்தனம் செய்வான்!

பிரபல டைரக்டர் டி.ஆர்.ரகுநாத்தின் மகன் கார்த்திக் ரகுநாத் இந்தப் படத்தை இயக்கினார். இது லண்டனில் வருஷக் கணக்கில் மேடை நாடகமாக நடந்த "டயல் `எம்' பார் மர்டர்'' என்ற கதை. ஆனால் இதை முதலில் இந்தியில்தான் எடுத்தார்கள். ராஜ்கபூர் - டிம்பிள் கபாடியா நடித்திருந்தார்கள்.

இதுகூட முதலில் எனக்குத் தெரியாது. கமல் சாரின் சொந்தப்படமான `விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தபோது, கடைசி ஷெட்ïலில் படத்தில் நடித்த டிம்பிள் கபாடியாவிடம் "வில்லனாக நடிக்கும் கடைசி படம் இது. இனி ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று "சாவி'' படம் பற்றி கூறினேன். உடனே அவர் என்னை வாழ்த்துவதற்குப்பதில், "அய்யய்யோ! அது நான் இந்தியில் நடிச்சு சரியா ஓடாத படமாச்சே'' என்றார். எனக்கு அப்போதே `திக்' என்றாகிவிட்டது. அவர் சொன்ன ரிசல்ட்தான் `சாவி' படத்துக்கு கிடைத்தது. படம் சரியாகப் போகவில்லை.

இதையடுத்து நான் ஹீரோவாக நடித்து வந்த "ரசிகன் ஒரு ரசிகை'', "தர்மம்'' ஆகிய படங்களும் ஓடவில்லை.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நான் ஹீரோவாக நடித்த படம் சரியாகப் போகவில்லையே தவிர, வில்லனாக நடித்த படங்கள் நன்றாக ஓடின. குங்குமப்பொட்டு கவுண்டராக நடித்த "முதல் வசந்தம்'' படம் 25 வாரம் ஓடியது.

இந்த நேரத்தில், "முதல் மரியாதை'' படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு "கடலோரக் கவிதைகள்'' என்ற படத்தை எடுக்க இருந்தார்.

இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், "இரவுப்பூக்கள்'' என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப்படம்தான், நான் ஹீரோ ஆகியபின் "டூயட்'' பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு "டூயட்'' கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு `டான்ஸ் தெரியாதே' என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.

படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம்ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், "பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா?'' என்று கேட்டேன். அவர் `நடனம்' தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, "மைசூர் போனால் `டான்ஸ் காட்சி' எடுக்காமல் விட்டு விடலாமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.

இந்தப்படத்தில் நண்பர் `நிழல்கள்' ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர். மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், "எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன?'' என்று கேட்டார்கள்.

அப்போது எம்.ஜி.ஆர். சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் `எம்.ஜி.ஆர். ஸ்டைலில்' நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல்காட்சிக்கு ரசிகர்கள் `ஒன்ஸ்மோர்' கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Richardsof
7th June 2014, 05:52 AM
மக்கள் திலகத்தின் இந்த வார படங்கள் -6.6.2014


ஆயிரத்தில் ஒருவன் - சென்னை - சத்யம் - ஆல்பர்ட்


தாய் சொல்லை தட்டாதே - பைலட்


ஒரு தாய் மக்கள் - கோவை - டிலைட்


எங்க வீட்டு பிள்ளை - மதுரை - ராம்

தேடி வந்த மாப்பிள்ளை - திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி

Richardsof
7th June 2014, 06:02 AM
ஒரு தாய் மக்கள் - கடந்த ஆண்டில் கோவை நகரில் 10 நாட்கள் ஓடியது .ஒரு வருட இடைவெளியில் மீண்டும் ஒரு தாய் மக்கள் திரையிடப்பட்டு இரண்டாவது வாரமாக ஓடுகிறது .முதல் வெளியீட்டில் சுமாராக ஓடிய படம் மறு வெளியீடுகளில் 1971 முதல் இன்று வரை 43 ஆண்டுகளில் இந்த படம் பல முறை திரைக்கு வந்து ஓடியுள்ளது மூலம் ஒரு தாய் மக்கள் ஒரு வெற்றி படமாக கருதப்படுகிறது .

அரசகட்டளை

தாலி பாக்கியம்

காதல் வாகனம்

தலைவன்

தாழம்பூ

ஆசை முகம்

தாயின் மடியில்

தாய்க்கு தலைமகன்

அன்னமிட்டகை

தேர்த்திருவிழா

கணவன்

புதியபூமி

விவசாயி

மேற்கண்ட மக்கள் திலகத்தின் படங்கள் மறு வெளியீடுகளில் பல வருடங்களில் பல முறை ஓடி

விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Richardsof
7th June 2014, 06:18 AM
எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

வினாக்களுக்கான விடைகள்!

கண்டறியப்பட வேண்டும்!

கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

courtesy - net

Richardsof
7th June 2014, 06:20 AM
MGR SONG ANALYSIS IN THE NET. எம்.ஜி.ஆர். சட்டசபையில் கேட்ட கேள்விகள்தான் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின.

கேள்வி கேட்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவர் பாடிய ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’ பாடல் என் அபிமானப் பாடல்களில் ஒன்று. அதிலும் அந்த பாடலில் வருகிற ‘முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’ என்கிற வரிகள் சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.

ஏன் என்று சொல்கிறேன்.
http://youtu.be/2wX5E6qlqdI
பொறியியல் துறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய போது பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்வோம். அவற்றில் ஒன்று 5 Why and 1 How Analysis.

ஏன் ஏன் என்று கேட்டுக் கேட்டு ஒவ்வொரு ஏனின் பதில் மீதும் மறுபடி ஏன் கேட்க வேண்டும்.

நூடில்சில் முடிச்சுப் போட்ட மாதிரியான நிரடலான பிரச்சினைகள் கூட ஐந்து ஏன்களைத் தாங்காது. மாத்திரை சாப்பிட்ட குழந்தை மாதிரி காரணத்தைக் கக்கி விடும். அதற்கப்புறம் ஒரு ஹவ் – எப்படி சரி செய்வது என்பதற்கு.

ஐ.எஸ்.ஒ., டிஎஸ் 16949 போன்ற தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் தகுதிக்கு முன் வைக்கிற விஷயம் continual improvement. அதாவது தொடர்ச்சியான மேம்பாடுகள்.

அதை எப்படிச் செய்வது என்று மண்டையை உடைத்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே என்று ரத்தினச் சுருக்கமாக சொன்னவர், சின்னவர்தானே?

அதுவும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!

fidowag
7th June 2014, 08:06 AM
06/06/14 முதல் சென்னை பைலட்டில் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.முதல் முறையாக துப்பறியும் அதிகாரியாக நடித்து மெகாஹிட் வெற்றி பெற்ற
தேவரின் "தாய் சொல்லை தட்டாதே " தினசரி 2 காட்சிகள் (பகல் 1 மணி,
மாலை 4 மணி ) வெற்றி நடை போடுகிறது.

1961-ல் தீபாவளி வெளியீடாக வந்து வசூல் சாதனை செய்த படம்.
http://i60.tinypic.com/izaykl.jpg

fidowag
7th June 2014, 08:08 AM
http://i59.tinypic.com/sb3gn9.jpg

fidowag
7th June 2014, 08:08 AM
http://i61.tinypic.com/2jbb41.jpg

Richardsof
7th June 2014, 08:51 AM
சன் லைப் - இன்று இரவு 7 மணிக்கு - எங்க வீட்டு பிள்ளை .

விரைவில் கூண்டுக்கிளி - சன் லைப் தொலைக்காட்சியில் .....

மக்கள் திலத்தின் படங்கள் வெள்ளி திரையிலும் .... ஊடகங்களிலும் ...வலம் வருகிறது .

siqutacelufuw
7th June 2014, 10:44 AM
பொன்மனச்செம்மல் போப் ஆண்டவருக்கு மாலை அணிவிக்கிறார்.http://i58.tinypic.com/24vmvpz.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellisf
7th June 2014, 11:15 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/t_zpsa820fb5a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/t_zpsa820fb5a.jpg.html)

Russellisf
7th June 2014, 11:18 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/o_zps39634160.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/o_zps39634160.jpg.html)

Russellisf
7th June 2014, 11:21 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zps9a6a79fe.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zps9a6a79fe.jpg.html)

Russellisf
7th June 2014, 11:24 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps26d64dd9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps26d64dd9.jpg.html)

Richardsof
7th June 2014, 01:42 PM
1971 - 1972 பொம்மை இதழில் வந்த கேள்வி பதில் பகுதியினை இங்கு பதிவிடுகிறேன் . சுவாரசியமான பதில்கள் .எல்லா தரப்பு செய்திகளும் பதிலில் இருப்பது குறிப்பிடத்தக்கது .

http://i60.tinypic.com/qpoxg6.jpg

Richardsof
7th June 2014, 01:43 PM
http://i58.tinypic.com/2z8c7l0.jpg

Richardsof
7th June 2014, 01:45 PM
http://i59.tinypic.com/208jh42.jpg

Richardsof
7th June 2014, 01:46 PM
http://i58.tinypic.com/bgr3ft.jpg

Richardsof
7th June 2014, 01:47 PM
http://i62.tinypic.com/153m9w6.jpg

Richardsof
7th June 2014, 01:50 PM
http://i57.tinypic.com/357pkqg.jpg

Russellisf
7th June 2014, 02:29 PM
நான் எம்.ஜி.ஆா் பள்ளி மாணவன்.. அந்தப்பள்ளியில் மாணவனான புன்னியத்தில் தலைவரை 5 - 6 முறை நோில் பாா்த்து இருக்கிறேன்.. விஷயம் என்ன வென்றால் யாராவது ஒருவரை பிடிக்கவேண்டும் என்றால் அவா்கள் எதாவது ஒரு விதத்தில் நம்மை கவா்ந்திருக்க வேண்டும்.. தலைவா் என்னை எப்படி கவா்ந்தாா்... ”மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலைநிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா ?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை.. இப்படித்தான்

courtesy net

Richardsof
7th June 2014, 02:43 PM
http://i57.tinypic.com/2lnhmr6.jpg

ainefal
7th June 2014, 02:47 PM
முதல் மரியாதை'' படத்தில் நடித்த பிறகு, தனது அடுத்த படமான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் என்னை கதாநாயகனாக்கி விட்டார் பாரதிராஜா.

ஆனால் அதற்கும் இடைப்பட்ட நேரத்தில் "சாவி'' என்ற படம் மூலம் நான் ஹீரோவாகி விட்டேன். இது `ஆன்டிஹீரோ' கதை. அதாவது, கதாநாயகனே வில்லத்தனம் செய்வான்!

பிரபல டைரக்டர் டி.ஆர்.ரகுநாத்தின் மகன் கார்த்திக் ரகுநாத் இந்தப் படத்தை இயக்கினார். இது லண்டனில் வருஷக் கணக்கில் மேடை நாடகமாக நடந்த "டயல் `எம்' பார் மர்டர்'' என்ற கதை. ஆனால் இதை முதலில் இந்தியில்தான் எடுத்தார்கள். ராஜ்கபூர் - டிம்பிள் கபாடியா நடித்திருந்தார்கள்.

இதுகூட முதலில் எனக்குத் தெரியாது. கமல் சாரின் சொந்தப்படமான `விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தபோது, கடைசி ஷெட்ïலில் படத்தில் நடித்த டிம்பிள் கபாடியாவிடம் "வில்லனாக நடிக்கும் கடைசி படம் இது. இனி ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று "சாவி'' படம் பற்றி கூறினேன். உடனே அவர் என்னை வாழ்த்துவதற்குப்பதில், "அய்யய்யோ! அது நான் இந்தியில் நடிச்சு சரியா ஓடாத படமாச்சே'' என்றார். எனக்கு அப்போதே `திக்' என்றாகிவிட்டது. அவர் சொன்ன ரிசல்ட்தான் `சாவி' படத்துக்கு கிடைத்தது. படம் சரியாகப் போகவில்லை.

இதையடுத்து நான் ஹீரோவாக நடித்து வந்த "ரசிகன் ஒரு ரசிகை'', "தர்மம்'' ஆகிய படங்களும் ஓடவில்லை.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நான் ஹீரோவாக நடித்த படம் சரியாகப் போகவில்லையே தவிர, வில்லனாக நடித்த படங்கள் நன்றாக ஓடின. குங்குமப்பொட்டு கவுண்டராக நடித்த "முதல் வசந்தம்'' படம் 25 வாரம் ஓடியது.

இந்த நேரத்தில், "முதல் மரியாதை'' படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு "கடலோரக் கவிதைகள்'' என்ற படத்தை எடுக்க இருந்தார்.

இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், "இரவுப்பூக்கள்'' என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப்படம்தான், நான் ஹீரோ ஆகியபின் "டூயட்'' பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு "டூயட்'' கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு `டான்ஸ் தெரியாதே' என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.

படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம்ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், "பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா?'' என்று கேட்டேன். அவர் `நடனம்' தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, "மைசூர் போனால் `டான்ஸ் காட்சி' எடுக்காமல் விட்டு விடலாமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.

இந்தப்படத்தில் நண்பர் `நிழல்கள்' ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர். மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், "எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன?'' என்று கேட்டார்கள்.

அப்போது எம்.ஜி.ஆர். சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் `எம்.ஜி.ஆர். ஸ்டைலில்' நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல்காட்சிக்கு ரசிகர்கள் `ஒன்ஸ்மோர்' கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.


Malli Malli Sendu Malli Aalai asathudhadi - I remember seeing this movie -Abirami Noon Show [sathyaraj & jeevitha?duet song]. By the way Sathyaraj's uncle [Chitappa, not able to recall correctly] and NT were very close friends , I have read that very long time ago.

Richardsof
7th June 2014, 03:25 PM
http://i59.tinypic.com/312ty03.jpg

Richardsof
7th June 2014, 03:26 PM
http://i57.tinypic.com/jkjc3k.jpg

Richardsof
7th June 2014, 03:28 PM
http://i57.tinypic.com/11kee4y.jpg

Richardsof
7th June 2014, 03:32 PM
http://i61.tinypic.com/wk309j.jpg

Richardsof
7th June 2014, 03:50 PM
நான் ஏன் பிறந்தேன்

எம்.ஜி.ஆர். என்ற காந்தப் பெயருக்கு இப்போதும் அப்படி ஓர் ஈர்ப்பு. எம்.ஜி.ஆர். தன் சுய வரலாற்றை "நான் ஏன் பிறந்தேன்?' (ரூ.960; கண்ணதாசன் பதிப்பகம்) என்ற அவருடைய படத் தலைப்பின் பெயரிலேயே எழுதியுள்ளார். திமுகவில் இருந்து விலகி, அதிமுக தொடங்கியது வரையிலான எம்.ஜி.ஆரின் முழு வரலாற்றை இந்நூலில் அறிந்துகொள்ளலாம்.

புத்தக உரிமை தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு காரணமாக பல ஆண்டுகளாக இந்நூல் மறுபதிப்பு செய்யப்படாமல் இருந்தது. தற்போது கண்ணதாசன் பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்துள்ளனர். புத்தகம் வந்த முதல் நாளிலேயே அமோக விற்பனை.
சினிமா தொடர்பான புத்தகங்கள் சிலருக்குச் சாதாரணமாகத் தோன்றலாம். அதுதான் பலருக்கு கனவுப் புத்தகங்கள்.

Richardsof
7th June 2014, 03:53 PM
நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனந்த விகடன் இதழில் தனது சுயசரிதையை எழுதி வந்தார். இதே பெயரில் ஜி.என்.வேலுமணி, எம்ஜிஆரைக் கதாநாயகனாக வைத்து வண்ணப்படம் ஒன்றைத் தயாரித்தார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், மேற்படிப்பு முடித்து ஊருக்குத் திரும்புகிறான். படிப்புக்கு வாங்கிய கடனால் குடும்பம் மோசமான நிலையில் உள்ளதைக் காண்கிறான்.
.
மனைவி, குழந்தை, சிற்றன்னை, அவளது குழந்தைகள், தங்கையின் குடும்பம் என மிகப் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த இளைஞனின் தலையில் விழுகிறது. ஏதாவதொரு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில், ஒரு எஸ்டேட்டில் மேனேஜர் வேலைக்கு தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்குச் சேருகிறான். எஸ்டேட் முதலாளியின் மகளுக்கு கால்கள் திடீரென விளங்காமல் போய்விட அவளுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவளது கால்கள் மீண்டும் செயல்பட வைக்கிறான்.

அந்தப் பெண்ணோ இளைஞனை விரும்புகிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை எப்படி தீர்க்கிறான் அந்த இளைஞன் என்பதே கதை. நல்ல குணங்களைக் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் நடித் திருந்தார். அவரது ஜோடியாக கே.ஆர்.விஜயா, எஸ்டேட் முதலாளியின் பெண்ணாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.

மேலும் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், நம்பியார், வீரராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் பாத்திரத்தில் எம்ஜிஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தார். தனக்கு குடும்பம் இருப்பதை வெளியே சொல்ல முடியாமலும், பணக்கார பெண் தன்னை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவர் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார். காஞ்சனாவும் சிறப்பாக நடித்தார்.

படத்தின் சிறப்பம்சம் மிகச் சிறந்த பாடல்கள் ஆகும். வாலி, புலமைப்பித்தன் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இனிமையான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் வழங்கி இருந்தனர். எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அவர்கள் இசையமைத்தனர்.

கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவர்கள் இசையமைத்த கருத்தாழம் மிக்க பாடல்கள் வருமாறு:
"நான் ஏன் பிறந்தேன்;
நாட்டுக்கு நலமென புரிந்தேன் என்று நாளும்,
பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா,
நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா'

"தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
தினமும் நான் சொல்லும் கதை பாட்டு'

"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்'

"உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது'

"என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடி அல்லவோ'

"தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருந்தேன்'

இந்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசையை கொண்டவை என்றால் அது மிகையாகாது. இந்தப் பாடல்களை டி.எம்.சௌந்தர் ராஜன், சுசீலா ஆகியோர் அனுபவித்து பாடி அசத்தியிருப்பார்கள்.
இந்த பாடல்களுடன் பாரதிதாசனின்,

"சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே இங்கு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே ' என்ற பாடலையும் டி.எம்.சௌந்தர் ராஜனின் குரலில் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
எம்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் படமாக்கப் பட்டிருந்தது.

இந்த படத்தை பார்த்த தாய்மார்கள் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியுடன் சென்றதை திரையரங்குகளில் காண முடிந்தது.

Richardsof
7th June 2014, 04:00 PM
http://i61.tinypic.com/5z17uv.jpg

Richardsof
7th June 2014, 04:10 PM
http://i61.tinypic.com/2ez435v.jpg

ujeetotei
7th June 2014, 05:36 PM
Thanks Vinod sir for uploading Old Bommai magazine articles. And the photo of MGR, Manjula and VKR seems to be Netru Indru Naalai correct sir.

Richardsof
7th June 2014, 06:24 PM
YOU ARE CORRECT SIR
http://i60.tinypic.com/241ktck.jpg

Richardsof
7th June 2014, 06:30 PM
TO DAY MALAI MALAR - ADVT
http://i57.tinypic.com/27ys40z.jpg

Richardsof
7th June 2014, 06:39 PM
http://i60.tinypic.com/2rmsav4.jpg

Russellail
7th June 2014, 06:57 PM
வெற்றி-திருப்புகழ்,பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


https://www.youtube.com/watch?v=c2YIigFCYHU&feature=youtu.be

oygateedat
7th June 2014, 10:55 PM
http://i58.tinypic.com/2vvnnur.jpg
http://s28.postimg.org/kn4af08yl/image.jpg (http://postimage.org/)

oygateedat
7th June 2014, 11:09 PM
http://s15.postimg.org/qldxj6ptn/VFF.jpg (http://postimage.org/)

oygateedat
7th June 2014, 11:20 PM
http://s18.postimg.org/fzo4uuce1/vfdd.jpg (http://postimage.org/)

Richardsof
8th June 2014, 05:33 AM
மக்கள் திலகத்தின் ''நான் ஏன் பிறந்தேன் '' இன்று 42 ஆண்டுகள் நிறைவு தினம் .

9.6.1972 அன்று திரைக்கு வந்த படம் .

1972ல் சங்கே முழங்கு - நல்ல நேரம் - ராமன் தேய சீதை என்று மூன்று வித்தியாசமான படங்களை தந்து

ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார் நம் மக்கள் திலகம் .

முதல் முறையாக குடும்ப தலைவராக மக்கள் திலகம் தோன்றி படம் முழுவதும் மாறு பட்ட வேடத்தில் நடித்து

தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

நான் ஏன் பிறந்தேன் ...பாடல் மூலம் குடி , சூதாட்டம் , தாயின் பெருமை , இயற்கையின் வளம் , தேசபற்று

என்று மக்கள் திலகத்தின் அறிவுரைகள் என்று நாட்டு மக்களுக்கு எடுத்து கூறிய அருமையான பாடல் .

தம்பிக்கு ஒரு பாட்டு ....தத்துவ வரிகள் . இளைய சமுதாயத்திற்கு படிப்பினை தந்த பாடல் .

நான் பாடும் பாடல் ..... வாழ்வில் எல்லோருக்கும் நம்பிக்கையினை மன வலிமையை தந்த பாடல் .

சித்திர சோலைகளே .... தொழிலாளர்களின் மேன்மையை எடுத்துரைத்த பாடல் .

உனது விழியில் எனது பார்வை - ஒரு கணவன் - மனைவி பாசப்பிணைப்பினை உணர்த்திய பாடல் .

என்னம்மா சின்ன பொண்ணு - மக்கள் திலகத்தின் இளமை ததும்பிய காதல் பாடல் .

சமுதாயத்திற்கு நல்ல படிப்பினை மக்கள் திலகத்தின் படங்கள் தந்தது என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை

என்று உணர்த்திய படம் ''நான் ஏன் பிறந்தேன் ''

Richardsof
8th June 2014, 05:36 AM
http://i57.tinypic.com/33kauep.png

Richardsof
8th June 2014, 05:40 AM
http://youtu.be/4kpxYK-dxNo

Richardsof
8th June 2014, 05:42 AM
http://i61.tinypic.com/2znyffa.png

Richardsof
8th June 2014, 05:46 AM
http://i58.tinypic.com/118oax4.jpg

Richardsof
8th June 2014, 05:57 AM
OLD MEMORIES - MUST WATCH
http://www.youtube.com/watch?v=ppNBXeC_uF8&feature=share&list=PL40960F05A124FBBB

Richardsof
8th June 2014, 06:12 AM
MAKKAL THILAGAM MGR'S HAND WRITING

http://i62.tinypic.com/dgkz8i.jpg

Richardsof
8th June 2014, 06:15 AM
MAKKAL THILAGAM MGR NARRATES ABOUT 1957 ELECTION........

1957-ம் ஆண்டின்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கழகத்துக்கு என்று உதவி செய்ய, பிரபல பத்திரிகைகளோ, புகழ் பெற்ற பெரியவர்களோ இல்லை. கழகத்தின் கையில் பணமும் இல்லை. பதவிகளும் கிடையா. வியாபாரிகளோ, மில் உரிமையாளர்கள், மிராசுதாரர்கள், மடாதிபதிகள் போன்றவர்களோ, கான்ட்ராக்டர் போன்றவர்களோ பணம் கொடுக்கத் தயாராக இல்லை.

எனவே, ஆடம்பரமாகச் செலவு செய்யப் பணமும் இல்லை. கழகத்தின் கொள்கையை விளம்பரப்படுத்த நாளேடுகள் போன்றவற்றின் உதவியும் இல்லை. அப்படிப்பட்ட நெருக்கடி நிலையில், இன்றைய தமிழக அமைச்சர்களில் ஒருவரான மாண்புமிகு திரு. ப.உ.சண்முகம் அவர்கள், தனது தொகுதியில் தேர்தலுக்கு நின்றார்.
http://i62.tinypic.com/hvuxjq.jpg

அண்ணாவின் தம்பிக்குரிய நல்ல தன்மைகள் அனைத்தையும் ஒருங்கே பெற்று, கழகக் கோட்பாடுகளில் மிகமிக நெருக்க உணர்வுகொண்டு இருந்தார். இந்த நண்பர் எப்படியும் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் அமர வேண்டும் என்று பெரிதும் ஆசைகொண்டேன். நான் அன்று அவருக்குப் பணம் கொடுக்கும் வசதியில் இருக்க வில்லை. அவருக்காக வாக்குகள் கேட்டு மக்களை ஈர்க்க முயலும் ஒரே ஒரு சக்திதான், அந்தத் தொண்டைச் செய்யும் வசதி மட்டும்தான் என்னிடம் இருந்தது. அவர்களுக்காக தொண்டாற்ற வேண்டும் என்ற பேராவலில் அவரிடம் நானே வலியச் சென்று கேட்டேன்.

அவர் எப்போதும் போல் சிரித்தவாறே சொன்னார், ''இந்தத் தேர்தல் நமது கழகத்துக்கு முதல் தேர்தல் அனுபவமாகும்! இதில் நாம் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது கழகத்துக்கு என்று தனிச் சின்னமே தரப்படவில்லை. அந்தத் தகுதி இப்போது நமக்கு இல்லை.

முதலில் அந்தத் தகுதியை நாம் இந்தத் தேர்தலில் பெற்றாக வேண்டும். எனது தொகுதியில் சிக்கல்கள், இடைஞ்சல்கள் அதிகம்தான். எனினும், நான் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவேன். வெற்றி பெறப் பெரிதும் போராடினாலும் வெற்றி கிட்டாது போலும் என்றிருக்கும் தொகுதிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட தொகுதிகளுக்கு நீங்கள் சென்று பிரசாரம் செய்வீர்களானால், அந்த நண்பர்களுக்கும் கழகத்துக்கும் நல்லதோர் உதவி செய்தவர்கள் ஆவீர்கள்!'' என்று சொன்னார். அவருடைய பேச்சு எந்த அளவுக்குப் பக்குவம் நிறைந்து இருந்ததோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக இருந்தது.

தேர்தல் முடிந்தது. கழகத் தோழர்கள் பலர் நல்ல பண்பு இருந்தும் மக்களுக்கு உழைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இருந்தும் தோற்றுவிட்டார்கள். தப்பியவர்களில் திரு. ப.உ.ச. அவர்களும் ஒருவர் என்ற சேதி கிடைத்தது. ஏனோ, மகிழ்ந்தேன். இந்த 15 பேர்களாவது வெற்றி பெற்றார்களே என்பதுதான்!
அடுத்த தேர்தலும் வந்தது. மதிப்புக்குரிய காமராசர் அவர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள், '1962-ம் ஆண்டு தேர்தலின் முடிவில் இந்த 15 பேர்களும் தோற்றுவிட்டார்கள் என்ற சேதி வெளியிடப்படும்!’ என்று.
அவருடைய வழக்கம்போல் மக்களைச் சந்தித்தும் தேர்தலில் வெற்றி பெற அவர் செய்ய வேண்டிய தொண்டுகள் அனைத்தையும் புயல்போல் நிறை வேற்றினார். தமிழகத்தின் இன்றைய முதல்வர் கலைஞர் ஒருவரைத் தவிர, மற்ற 14 பேரும் தோற்றுப் போனார்கள்.

தோல்வியிலும் வெற்றியைக் காணும் அமரர் அண்ணாவின் கொள்கை, இதிலும் தோல்வியில் வெற்றியே கண்டது. 14 பேர்களைத் தோற்கடித்தார்கள். ஆனால், அதே சட்டமன்றத்தில் முன்பிருந்த 15 பேர்களுக்குப் பதிலாக 50 பேர்கள் கழகப் பிரதி நிதிகளாக அமர்ந்தார்கள்.

அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த திரு. ப.உ.ச. அவர்கள் சென்னைக்கு வந்தபோது நாங்கள் சந்தித் தோம். அவரைப் பார்ப்பதற்கே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தோளில் பலமாகத் தட்டிய வாறு என்னை இழுத்து அணைத்துக்கொண்டு, அதே சிரிப்போடு உரத்த குரலில் கலகலவென்று வலுவோடு வார்த்தைகள் வெளியே வரும்படி பேசினார்...
''விஷயம் தெரியுமா? நான் தோத்துட்டேன். என்னை எதிர்த்தவர் நல்ல புத்திசாலி. மக்கள்கிட்ட எதெச் சொல்லி, எப்படி நெருங்கினா, ஓட்டு வாங்கலாங்கிறதெ, என்னைக் காட்டிலும் நல்லாத் தெரிஞ்சுவெச்சிருக்கார். அந்தத் தந்திரத்தை சரியாப் பயன்படுத்தி, அருமையா என்னைத் தோற்கடிச்சுட்டார்'' என்றார். நான் அவரையே பார்த்தேன். அது மட்டுமல்ல... 'திருவண்ணாமலையில் ஒரு பொதுக் கூட்டம் போடப் போகிறேன். அதில் வந்து பேச வேண்டும்’ என்றார்.

நான் விரக்தி மன நிலையில் கேட்டேன், ''எதுக்காகக் கூட்டம்? தோற்கடித்தார்களே அந்த மக்களுக்கு நன்றி சொல்லவா?'' என்று.
''தோற்றது உண்மைதான். ஆனால், ஜாமீன் பணத்தைத் திரும்பப் பெறும் அளவுக்கு ஓட்டுக்கள் போட்டிருக்கிறார்களே, அந்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?'' - இது சிரிப்போடும், தன்னம்பிக்கையோடும், ஏமாற்றமற்ற வகையிலும் உளமார என்னைத் திருப்பிக் கேட்ட கேள்வி.

அது மட்டுமல்ல, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு சில வாக்குகள் குறைந்ததால்தானே தோற்றேன். அந்த வாக்குகளும் கிடைத்திருக்குமானால், இப்போது எனக்கு அளித்திருக்கும் வாக்காளர்களையும் சேர்த்துப் போற்றிப் புகழ்ந்து நன்றி கூறியிருப்போம் அல்லவா? அப்போது நாம் காட்டும் நன்றியை இப்போதும் காட்டுவதற்கு நமக்கும் கடமை இருக்கிறது. அதைப் பெற அவர்களுக்கும் உரிமை இருக்கிறது!'' இதையும் அவருக்கே உரித்தான சிரிப்போடுதான் சொன்னார்!

ujeetotei
8th June 2014, 07:20 AM
MAKKAL THILAGAM MGR NARRATES ABOUT 1957 ELECTION........

1957-ம் ஆண்டின்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கழகத்துக்கு என்று உதவி செய்ய, பிரபல பத்திரிகைகளோ, புகழ் பெற்ற பெரியவர்களோ இல்லை. கழகத்தின் கையில் பணமும் இல்லை. பதவிகளும் கிடையா. வியாபாரிகளோ, மில் உரிமையாளர்கள், மிராசுதாரர்கள், மடாதிபதிகள் போன்றவர்களோ, கான்ட்ராக்டர் போன்றவர்களோ பணம் கொடுக்கத் தயாராக இல்லை.

எனவே, ஆடம்பரமாகச் செலவு செய்யப் பணமும் இல்லை. கழகத்தின் கொள்கையை விளம்பரப்படுத்த நாளேடுகள் போன்றவற்றின் உதவியும் இல்லை. அப்படிப்பட்ட நெருக்கடி நிலையில், இன்றைய தமிழக அமைச்சர்களில் ஒருவரான மாண்புமிகு திரு. ப.உ.சண்முகம் அவர்கள், தனது தொகுதியில் தேர்தலுக்கு நின்றார்.
http://i62.tinypic.com/hvuxjq.jpg

அண்ணாவின் தம்பிக்குரிய நல்ல தன்மைகள் அனைத்தையும் ஒருங்கே பெற்று, கழகக் கோட்பாடுகளில் மிகமிக நெருக்க உணர்வுகொண்டு இருந்தார். இந்த நண்பர் எப்படியும் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் அமர வேண்டும் என்று பெரிதும் ஆசைகொண்டேன். நான் அன்று அவருக்குப் பணம் கொடுக்கும் வசதியில் இருக்க வில்லை. அவருக்காக வாக்குகள் கேட்டு மக்களை ஈர்க்க முயலும் ஒரே ஒரு சக்திதான், அந்தத் தொண்டைச் செய்யும் வசதி மட்டும்தான் என்னிடம் இருந்தது. அவர்களுக்காக தொண்டாற்ற வேண்டும் என்ற பேராவலில் அவரிடம் நானே வலியச் சென்று கேட்டேன்.

அவர் எப்போதும் போல் சிரித்தவாறே சொன்னார், ''இந்தத் தேர்தல் நமது கழகத்துக்கு முதல் தேர்தல் அனுபவமாகும்! இதில் நாம் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது கழகத்துக்கு என்று தனிச் சின்னமே தரப்படவில்லை. அந்தத் தகுதி இப்போது நமக்கு இல்லை.

முதலில் அந்தத் தகுதியை நாம் இந்தத் தேர்தலில் பெற்றாக வேண்டும். எனது தொகுதியில் சிக்கல்கள், இடைஞ்சல்கள் அதிகம்தான். எனினும், நான் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவேன். வெற்றி பெறப் பெரிதும் போராடினாலும் வெற்றி கிட்டாது போலும் என்றிருக்கும் தொகுதிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட தொகுதிகளுக்கு நீங்கள் சென்று பிரசாரம் செய்வீர்களானால், அந்த நண்பர்களுக்கும் கழகத்துக்கும் நல்லதோர் உதவி செய்தவர்கள் ஆவீர்கள்!'' என்று சொன்னார். அவருடைய பேச்சு எந்த அளவுக்குப் பக்குவம் நிறைந்து இருந்ததோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக இருந்தது.

தேர்தல் முடிந்தது. கழகத் தோழர்கள் பலர் நல்ல பண்பு இருந்தும் மக்களுக்கு உழைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இருந்தும் தோற்றுவிட்டார்கள். தப்பியவர்களில் திரு. ப.உ.ச. அவர்களும் ஒருவர் என்ற சேதி கிடைத்தது. ஏனோ, மகிழ்ந்தேன். இந்த 15 பேர்களாவது வெற்றி பெற்றார்களே என்பதுதான்!
அடுத்த தேர்தலும் வந்தது. மதிப்புக்குரிய காமராசர் அவர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள், '1962-ம் ஆண்டு தேர்தலின் முடிவில் இந்த 15 பேர்களும் தோற்றுவிட்டார்கள் என்ற சேதி வெளியிடப்படும்!’ என்று.
அவருடைய வழக்கம்போல் மக்களைச் சந்தித்தும் தேர்தலில் வெற்றி பெற அவர் செய்ய வேண்டிய தொண்டுகள் அனைத்தையும் புயல்போல் நிறை வேற்றினார். தமிழகத்தின் இன்றைய முதல்வர் கலைஞர் ஒருவரைத் தவிர, மற்ற 14 பேரும் தோற்றுப் போனார்கள்.

தோல்வியிலும் வெற்றியைக் காணும் அமரர் அண்ணாவின் கொள்கை, இதிலும் தோல்வியில் வெற்றியே கண்டது. 14 பேர்களைத் தோற்கடித்தார்கள். ஆனால், அதே சட்டமன்றத்தில் முன்பிருந்த 15 பேர்களுக்குப் பதிலாக 50 பேர்கள் கழகப் பிரதி நிதிகளாக அமர்ந்தார்கள்.

அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த திரு. ப.உ.ச. அவர்கள் சென்னைக்கு வந்தபோது நாங்கள் சந்தித் தோம். அவரைப் பார்ப்பதற்கே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தோளில் பலமாகத் தட்டிய வாறு என்னை இழுத்து அணைத்துக்கொண்டு, அதே சிரிப்போடு உரத்த குரலில் கலகலவென்று வலுவோடு வார்த்தைகள் வெளியே வரும்படி பேசினார்...
''விஷயம் தெரியுமா? நான் தோத்துட்டேன். என்னை எதிர்த்தவர் நல்ல புத்திசாலி. மக்கள்கிட்ட எதெச் சொல்லி, எப்படி நெருங்கினா, ஓட்டு வாங்கலாங்கிறதெ, என்னைக் காட்டிலும் நல்லாத் தெரிஞ்சுவெச்சிருக்கார். அந்தத் தந்திரத்தை சரியாப் பயன்படுத்தி, அருமையா என்னைத் தோற்கடிச்சுட்டார்'' என்றார். நான் அவரையே பார்த்தேன். அது மட்டுமல்ல... 'திருவண்ணாமலையில் ஒரு பொதுக் கூட்டம் போடப் போகிறேன். அதில் வந்து பேச வேண்டும்’ என்றார்.

நான் விரக்தி மன நிலையில் கேட்டேன், ''எதுக்காகக் கூட்டம்? தோற்கடித்தார்களே அந்த மக்களுக்கு நன்றி சொல்லவா?'' என்று.
''தோற்றது உண்மைதான். ஆனால், ஜாமீன் பணத்தைத் திரும்பப் பெறும் அளவுக்கு ஓட்டுக்கள் போட்டிருக்கிறார்களே, அந்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?'' - இது சிரிப்போடும், தன்னம்பிக்கையோடும், ஏமாற்றமற்ற வகையிலும் உளமார என்னைத் திருப்பிக் கேட்ட கேள்வி.

அது மட்டுமல்ல, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு சில வாக்குகள் குறைந்ததால்தானே தோற்றேன். அந்த வாக்குகளும் கிடைத்திருக்குமானால், இப்போது எனக்கு அளித்திருக்கும் வாக்காளர்களையும் சேர்த்துப் போற்றிப் புகழ்ந்து நன்றி கூறியிருப்போம் அல்லவா? அப்போது நாம் காட்டும் நன்றியை இப்போதும் காட்டுவதற்கு நமக்கும் கடமை இருக்கிறது. அதைப் பெற அவர்களுக்கும் உரிமை இருக்கிறது!'' இதையும் அவருக்கே உரித்தான சிரிப்போடுதான் சொன்னார்!

Super Vinod Sir. Thank you for uploading this article.

fidowag
8th June 2014, 09:14 AM
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம் இனைந்து ஏற்பாடு செய்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் " ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் 90வது நாள் சுவரொட்டி சென்னை நகரில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது . அதன் புகைப்படம் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

http://i57.tinypic.com/167m7w2.jpg

Russelllkf
8th June 2014, 12:19 PM
http://youtu.be/tg-V4PcCJK4

fidowag
8th June 2014, 12:47 PM
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பாக , கடந்த ஞாயிறு அன்று (1/6/14) சென்னை பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகில் அதன் கிளை மன்றம் தொடங்கப்பட்டது . விழாவில் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு உறுப்பினர்களும் அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழா தொடங்கும் முன்பு காலை 7 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படபாடல்கள் ஒலி
பரப்பப்பட்டன .
காலை 10 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஆரத்தி எடுக்கப்பட்டது .
இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ்.ராஜ்குமார் தலைமை தாங்கி விழாவை இனிதே சிறப்பாக நடத்தினார்.

பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாகனங்களில் சென்றவர்களுக்கும் மோர் வழங்கப்பட்டது.

அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

http://i61.tinypic.com/4iza6f.jpg

orodizli
8th June 2014, 10:01 PM
All matters, photos of MAKKAL THILAGAM simply superb... hubbers kindly go ahead... thank you all.....

Richardsof
9th June 2014, 04:47 AM
9.6.1980

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த தினம் இன்று .

1980 ஜனவரி மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அரசு தமிழக அரசை 17.2.1980 அன்று

அரசியல் காரணமாக மக்கள் திலகத்தின் ஆட்சியை கலைத்தது .

தன்னுடைய ஆட்சியை டிஸ்மிஸ் செய்த மத்திய அரசின் செயலுக்கு மக்கள் திலகம் மக்கள் மன்றத்தில் நியாயம்

கேட்டார் .

சட்ட மன்ற தேர்தலில் மக்கள் மத்திய அரசிற்கும் அதற்கு துணை போனவர்களுக்கும் ,துள்ளி வருகுது வேல் என்று

துள்ளியவர்களுக்கும் சரியான பதிலை தந்து மக்கள் திலகத்தை வெற்றி பெற செய்தார்கள் .

மக்களின் பேராதரவுடன் இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக பல லட்சம் மக்கள் முன் பதவி ஏற்ற தினம்

இன்று .

Richardsof
9th June 2014, 04:54 AM
தமிழக முதல்-அமைச்சராக 2-ம் முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்
http://i62.tinypic.com/2hrlvrn.jpg

17 மந்திரிகள் கொண்ட மந்திரிசபையில் தமிழக முதல்-அமைச்சராக இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980 ஜுன் 9-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

மேடை மீது காந்தி, ராஜாஜி, காமராஜர், அம்பேத்கார், 'காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப், முத்துராமலிங்க தேவர் ஆகியோருடைய பெரிய படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நடுவில் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். ஆசி பெறுவது போலவும், ஈ.வெ.ரா.பெரியார் வாழ்த்துவது போலவும் பெரிய படம் இருந்தது.

மண்டபத்துக்குள் 12.23 மணிக்கு கவர்னரும், எம்.ஜி.ஆரும் உள்ளே நுழைந்தார்கள். உடனே கூடியிருந்த பொதுமக்கள் 'எம்.ஜி.ஆர். வாழ்க' என்று குரல் எழுப்பினார்கள். பதவி ஏற்பு 'நீராரும் கடல் உடுத்த' என்ற தமிழ் வணக்க பாடலுடன் விழா தொடங்கியது.

முதல்-அமைச்சராக பதவியேற்க வரும்படி எம்.ஜி.ஆரை தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அழைத்தார். எம்.ஜி.ஆர். எழுந்து, மேடையில் கவர்னர் பட்வாரி அருகில் போய் நின்றார். உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரி ஆங்கிலத்தில் வாசிக்க எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பிச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பதவி ஏற்றதும், எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

1. நெடுஞ்செழியன் (நிதி) 2. பண்ருட்டி ராமச்சந்திரன் (மின்சாரம்) 3. கே.ஏ.கிருஷ்ணசாமி (கிராமத்தொழில்) 4. எஸ்.டி.சோமசுந்தரம் (வருவாய்த்துறை) 5. ஆர்.எம்.வீரப்பன் (தகவல்) 6. அரங்கநாயகம் (கல்வி) 7. காளிமுத்து (விவசாயம்) 8. பொன்னையன் (சட்டம்) 9. குழந்தைவேலு (ஊராட்சி) 10. ராகவானந்தம் (தொழிலாளர் நலம்) 11. டாக்டர் ஹண்டே (சுகாதாரம்) 12. ராஜா முகமது (கூட்டுறவு) 13. எஸ்.முத்துசாமி (போக்குவரத்து) 14. திருநாவுக்கரசு (பெருந்தொழில்கள்) 15. எஸ்.என்.ராஜேந்திரன் (கைத்தறி) 16. விஜயசாரதி (அரிஜன நலம்) 17. கோமதி (சமூக நலம்)

ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர். அமைச்சர் குழந்தைவேலு, முத்துசாமி, கோமதி ஆகியோர் எம்.ஜி.ஆர். காலை தொட்டு வணங்கினார்கள். தேசிய கீதத்துடன் விழா பகல் 1.32 மணிக்கு முடிந்தது.

உடனே எம்.ஜி.ஆர். மேடையில் இருந்து இறங்கி முன் வரிசையில் இருந்த தலைமை நீதிபதி இஸ்மாயில், முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஆகியோரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். அண்ணனின் ஆசி பிறகு, தன்னுடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் காலைத்தொட்டு கும்பிட்டு எம்.ஜி.ஆர். ஆசி பெற்றார்.

விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், மேல்-சபைத் தலைவர் ம.பொ.சி. மற்றும் நீதிபதிகள், அனைத்துக்கட்சி தலைவர்கள் வந்து இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் மற்ற அமைச்சர்களும் அண்ணா சாலைக்குச் சென்று பெரியார் சிலைக்கும் பின்னர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர்.

அண்ணா சிலை அருகே லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். மேடையில் ஏறி எம்.ஜி.ஆர். உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது:-

அமரர் அண்ணா சொன்னதுபோல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில் உங்கள் முன்னால் தொண்டர்களாகிய நானும் என் நண்பர்களும் உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம். அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் அமைந்த தமிழக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள் மக்கள் மன்றத்தின் முன்னால் நின்று கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அளிக்கின்றோம்.

1) தேர்தலின்போது அ.தி.மு.க.வின் சார்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவோம். 2) வறுமை கோட்டின் கீழே உள்ள மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர முன்னுரிமை கொடுத்து பாடுபடுவோம். 3) தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களை காப்பாற்றி அவர்களை மேம்படுத்த பாடுபடுவோம். 4) சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளும், நலன்களும் எல்லா வகையிலும் காப்பாற்றப்படும். 5) விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கம் ஆகியோரின் உரிமைகளும், நலன்களும் பேணப்படும்.

அண்ணாவின் கொள்கைகள் அறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையான தமிழ் மொழி ஆக்கம், தமிழர் உணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு, மாநில உரிமைகள், ஏழை-எளிய மக்களின் ஏற்றம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை, சாதி மத வேறுபாடற்ற முறையில் அனைவருக்கும் வாழ்வளிக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதிமொழி அளிக்கிறோம்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் விருப்பு வெறுப்பின்றி நல்லுணர்வோடு அரவணைத்து அன்புடன் பாதுகாப்பு கொடுப்போம். எங்களை வாழவைக்கும் தெய்வங்களாகிய நீங்கள் என்றும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

Richardsof
9th June 2014, 05:03 AM
http://i58.tinypic.com/30v0tnk.jpg

Richardsof
9th June 2014, 05:12 AM
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பெருமையும்
இனிய நினைவுகள் நிறைந்த நாள் என்றால் அது
30.6.1977 அன்று நமது இதய தெய்வம் மக்கள் திலகம்
முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற அந்த பொன்னான நாள் .

1936ல் ஒரு சிறிய நடிகராக அறிமுகமாகி

1947 வரை கடுமையான போராட்டத்துக்கு பின் கதாநாயகனாக

உயர்ந்து 1950ல் புகழ் பெற்ற நடிகராக காங்கிரஸ் இயக்கத்தில் அங்கத்தினாராக இருந்து பின்னர் 1953ல் திமுகவில் இணைந்து
1954ல் நாடறிந்த நாயகனாக வளம் வந்து பட்டி தொட்டி எங்கும் திமுக கட்சியின் கொள்கைகளை மேடைதோறும் முழங்கியும்
தன்னுடைய படங்களில் திமுகவின் கொள்கைகளையும் ,சின்னத்தையும் இடம் பெற செய்து 1957- 1962 தேர்தல்களில் தமிழக சட்டசபைக்கு முதல் முறையாக உறுப்பினர்களை வெற்றி பெற உழைத்தவர் நடிகர் எம்ஜியார் .

1958ல் வந்த மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன்'' படம்
தமிழ் திரை உலகில் ஒரு மாபெரும் புரட்சி செய்தது .

மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கும் , திரைப்பட புகழும்
1960ல் மேலும் உச்சத்திற்கு சென்ற நிலையில் 1967ல் துப்பாக்கி மூலம் உயிருக்கு உலை வைத்த நேரத்தில் அவரின் தர்மம் தலை காத்தது .குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும்
கோடிக்கணக்கான மக்கள் இதயங்களிலும் , ரசிகர்களின் உள்ளங்களிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை . மாறாக அவருடைய புகழும் -இளமையும் நாளுக்கு நாள் மெருகேறியது


1972ல் மக்கள் திலகத்திற்கு சத்திய சோதனை ஏற்பட்டது .
சோதனையில் மக்களின் - ரசிகர்களின் ஆதரவை பெற்று
அண்ணாதிமுக நிறுவனாராக ஒருபக்கம் திரை உலக சக்ரவர்த்தியாக மறுபக்கம் என்று இரட்டை குதிரை சவாரியில்
பிரமாண்ட வெற்றி கண்ட ஒரே உலக புகழ் நடிகர் எம்ஜியார் .

நடிகர் கட்சி

100 நாள் கட்சி

என்றெல்லாம் தரமற்ற முறையில் மிகவும் கேவலமாகவும்
மேடையிலும் , பத்திரிகைகளிலும் எம்ஜியாரை பற்றி
விமர்சித்தனர் .

உண்மையான மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களும்
உலகமெங்கும் வாழ்ந்து வந்த மக்கள் திலகத்தின் ரசிகர்களின்
அமோக ஆதரவும் . கடுமையான உழைப்பும் , மக்களின் பேராதரவும் 30.6.1977 அன்று தமிழக முதல்வராக அமர்த்தி அழகு பார்த்த இனிய நன்னாள் மறக்க முடியுமா ?


எம்ஜியார் ரசிகர்களின் கனவு

எம்ஜியார் ரசிகர்களின் உழைப்பு

நனவான நாள் - வெற்றி திரு நாள்

எங்கும் வெற்றி ... எதிலும் வெற்றி

வெற்றி மேல் வெற்றி

மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும்

எண்ணி மகிழும் திரு நாள் .

1972ல் அதிமுக கட்சியினை துவங்கி 1977ல் அதிமுகஆட்சி அரியணை ஏறியது உலக வரலாற்று சாதனை .

ஒரு தனி மனிதரின் அயராத உழைப்பு - மக்களுக்கு சேவை

பொன்மனம் - ஏழைகளுக்கு அருளிய கொடைகள்

நல்ல எண்ணம் -இவை எல்லாம்தான் நம் மக்கள் திலகத்திற்கு
மக்கள் தந்த பரிசு - 1977 தமிழக முதல்வர் எம்ஜியார் .

Richardsof
9th June 2014, 05:15 AM
மக்கள் திலகம் அவர்கள் தேர்தல் முடிவு வெளியான நேரத்தில் மீனவநண்பன் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
படங்களில் நடித்து முடித்து வந்தார் .
மக்கள் திலகத்தின் ''இன்றுபோல் என்றும் வாழக '' திரைப்படம்
தமிழகமெங்கும் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .

வரலாற்று உலக சாதனை நாயகனின்

ஒரு புதிய வரலாறு துவக்க நாள்

30.6.1977



மக்கள் வெள்ளத்தில் அண்ணாசாலை மட்டுமல்ல ....

தமிழகமே சென்னை நகருக்கு படை எடுத்தது போல்

எல்லா சாலைகளிலும் மக்கள் வெள்ளம்

தென்கோடி கன்னியாகுமரி ... நெல்லை .. மதுரை

ராமநாதபுரம் --

திருச்சி - தஞ்சை -நாகை

வட -தென் ஆற்காடு

கோவை - சேலம் - தர்மபுரி


செங்கை -சென்னை பகுதியினை சேர்ந்த மக்கள் -தொண்டர்கள் - ரசிகர்கள்

ஆந்திரம் - கர்நாடகம் - மகாராஷ்டிரா - டெல்லி -அந்தமான்
புதுவை -கேரளா போன்ற மாநிலங்களிலி ருந்தும்

இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
சென்னை வந்திருந்து மக்கள் திலகத்தின் பதவி ஏற்பு நிகழ்ச்சியினை கண்டு களித்த திருநாள் .


''உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு நடிகரின் அரசியல் மக்கள் செல்வாக்கு எந்த அளவிற்கு இருந்தது என்று அன்றையதினம் சென்னை நகரில் திரண்ட
லட்சக்கணக்கான மக்களே சாட்சி '' என்று வெளிநாட்டு பத்திரிகைகளும் - இந்திய பத்திரிகைகளையும் பாராட்டினார்கள் .

இந்திய திரைப்பட உலக நடிக - நடிகைகள் - எல்லோரும்
மக்கள் திலகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்கள் .

Richardsof
9th June 2014, 05:21 AM
MGR with Prime Minister Indira Gandhi after the Emergency was lifted in 1977
Once he became Chief Minister of Tamil Nadu, he placed great emphasis on social development, especially education.

One of his most successful policies was the introduction of the "Mid-day Meal Scheme" introduced by the popular Congress Chief Minister and Kingmaker K Kamaraj to a nutritious Mid-day Meal Scheme in the Government-run and aided schools in Tamil Nadu, which encouraged underprivileged children to attend schools. This scheme was at a cost of Rs.100 crore and was imposed in 1982.

He also introduced Women's Special buses. He introduced Liquor ban in the state and Preservation of old temples and historical monuments, ultimately increasing the state's tourist income. He set up a free school for the Cinema Technicians children in Kodambakkam called MGR Primary & Higher Secondary School which provided Free Mid-Day meals in the 1950s.

He led the ADMK to victory in the 1984 assembly elections despite not taking part in the campaigning. At that time he was undergoing medical treatment in America and his images were broadcast in Tamil Nadu through cinema halls. This was an effective campaign tactic and ADMK won the elections, indicating the depth of his popular support.

He won the election in a double landslide victory in 1984.He still holds the record of being the chief minister with the highest consistent longevity of more than a decade .

Richardsof
9th June 2014, 05:29 AM
http://i57.tinypic.com/1gspdt.jpg

Richardsof
9th June 2014, 05:34 AM
Courtesy - net
சமீபத்தில் "நாடாளுமன்றத்தில் வைகோ"என்ற நூலைப் படித்தபோது,
முதலமைச்சராக இருந்தபடி எம்.ஜி.ஆர்.எடுத்த ஒரு முக்கிய நிலைப்பாட்டை நூலாசிரியர் திரு.மு.செந்திலதிபன் மிக செறிவாகப்
பதிவு செய்திருப்பதைப் பார்த்தேன்.


இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு ஆயிரம் இளைஞர்களுடன் படகில்
செல்லப்போவதாய் திரு.பழ.நெடுமாறன் அறிவித்தார். அவர் புறப்படும்
இடத்தில் கைதாவார் என்றும் இராமேஸ்வரத்தில் கைதாவார் என்றும்
வதந்திகள் உலவின. இராமேஸ்வரம் கடற்கரைக்கு நெடுமாறன் குழுவினர்
சென்று நின்றபோது கரையில் ஒரு படகைக்கூட காணோம். போராட்டக்
குழுவினர் திரும்ப நேர்ந்தது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது எம்.ஜி.ஆர் தந்த
பதில் இது: " அன்னை இந்திராகாந்திக்கு ஓர் ஆபத்து நேர்ந்தபோது,
அவர் உயிரைக் காத்தவர் மாவீரர் நெடுமாறன்.ஆனால் கடலில் போகும்
வேளையில் அவர் உயிருக்குப் பாதுகாப்பு உண்டா?எதிரிகள் வந்து சுட்டால் அவரால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா? ஒரு நெடுமாறனை இழந்தால் இன்னொரு நெடுமாறனை உருவாக்க முடியுமா?
அதனால்தான் படகுகளை அப்புறப்படுத்தச் சொன்னேன்.

ஆனால் மக்கள் நடுவே இனவுணர்வை மேம்படுத்த அவர் செய்து வரும்
பிரச்சாரம் விலைமதிப்பில்லாதது.ஒரு முதலமைச்சராக இருப்பதால் நான்
செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார். எனவே அவரைக் கைது
செய்ய வேண்டாமென்று சொன்னேன்"என்றாராம் எம்.ஜி.ஆர்.

படகோட்டிகளை அப்புறப்படுத்தியதிலும் அந்தப் படகோட்டி
வித்தியாசமாகத்தான் சிந்தித்திருக்கிறார்.

Richardsof
9th June 2014, 05:58 AM
தெய்வமாக்கிய பாடல்

எம்.ஜி.ஆரின் வேறு பல திரைப்பாடல்களில் உள்ளதைப் போன்ற நேரடியான அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கட்டமைத்த பிம்பம்தான் அவரை மற்றவர்களோடு ஒப்பிடப்பட முடியாதவராக மாற்றியது. 1984இல் எம்.ஜி.ஆர்., உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த பாடல் அது. கடவுள் நம்பிக்கையற்ற, பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமான நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆரை தெய்வமாக்கியது.
http://i62.tinypic.com/14n1hs8.jpg
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு

படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் நேர்த்தியற்ற முறையில் உருவாக்கப்பட்ட முருகனின் உருவ பொம்மை ஒன்றின் முன்னால் நின்று உள்ளம் உருகும் குரலில் சௌகார் ஜானகி பாடுவதை இப்போது கேட்டாலும் கண்கள் சுரக்கும். சௌகாரின் குளமான கண்களில் நிழலாடும் சோகத்தையும் எம்.ஜி.ஆரின் மார்பின் மீது முகம் புதைத்து அவர் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அது தமிழக மக்களின் சோகம், அவர்களது பரிதவிப்பு. அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் மற்ற சில வரிகளைக் கவனியுங்கள். அவர் தெய்வமாக்கப்பட்டிருப்பது தெரியும்.
Courtesy
the hindu

Richardsof
9th June 2014, 06:05 AM
http://youtu.be/P-B0EqpAs3E

Stynagt
9th June 2014, 10:57 AM
http://i60.tinypic.com/ehay48.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
9th June 2014, 11:57 AM
மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் முதல் காட்சி பார்த்த அனுபவம் .

9.6.1972

அண்ணா சாலையில் இருந்த குளோப் திரை அரங்கில் முதல் நாள் மேட்னி காட்சி பார்க்கும் வாய்ப்பு
கிடைத்தது .ரசிகர்கள் வெள்ளத்தில் ஆரவாரங்களுடன் படம் துவங்கிய முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை ரசித்து பார்த்தேன் .

அறிமுக காட்சியில் தாய்குலத்திற்கு பெருமை சேர்த்த விதம்
நான் ஏன் பிறந்தேன் பாடலில் சமூக சீர்திருத்த கருத்துக்கள்
தன்னுடைய தாய் - மனைவி - உடன் பிறந்தோர் செய்யும் கடின வேலைகளை பார்த்து மக்கள் திலகம் கண் கலங்கும் காட்சிகள்
அனைவரையும் அழைத்து உரிமையுடன் பேசுமிடம்
வீட்டை விற்கும் காட்சியில் காட்டும் நேர்மை .தம்பி தங்கைகளுக்கு அறிவுரை பாடல் .
வேலை தேடி சென்னையில் அடையும் ஏமாற்றங்கள் . நண்பர் கோபால் மூலம் மேஜரை சந்திக்குமிடம் .
அழுபவர்களை சிரிக்க வைக்க வேண்டும் . சிரிப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்று
மக்கள் திலகம் கூறுமிடத்தில் பலத்த கைதட்டல்கள் .
காஞ்சனா சந்திப்பில் இடம் பெற்றமக்கள் திலகத்தின் நான் படும் பாடல் ....வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . அத்தனை அற்புதம் .
என்னம்மா சின்ன பொண்ணு - பாடலில் மக்கள் திலகத்தின் நடன அசைவுகள் - நடிப்பு பிரமாதம் .
தன்னுடைய தம்பி தங்கைகள் சோகத்துடன் பாடும் பாடலை கேட்டு சந்தர்ப்ப சூழ் நிலையால் உடனே அவர்களை சந்திக்க முடியாத நிலையில் அவர் காட்டும் முக பாவங்கள் அருமை .

கே .ஆர் .விஜயாவுடன் படும் உனது விழியில் எனது பார்வை ......காவிய பாடல் .
படம் மக்கள் திலகத்தின் கச்சிதமான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து .இரண்டு சண்டை காட்சிகள் அளவோடு இருந்தது .
மக்கள் திலகத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது இந்த படத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் .
மிகபெரிய வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம் .ரசிகர்களால் சுமாராக ஓடிய வெற்றி படம் .
42 ஆண்டுகள் கடந்தாலும் நான் ஏன் பிறந்தேன் படம் - இன்று பார்த்தாலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்குகிறது என்றால் அது மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு - இனிமையான பாடல்கள்
என்றால் அது மிகை அல்ல .குடும்ப கதை கொண்ட படங்களிலும் மக்கள் திலகம் ஜொலித்தார் .

siqutacelufuw
9th June 2014, 12:03 PM
09-06-1972 அன்று வெளியான நம் கலைச்சுடரின் "நான் ஏன் பிறந்தேன் " காவியத்தை பற்றிய ஒரு சிறு நினைவு கூறும் தொகுப்பு


http://i59.tinypic.com/2l9gu4m.png

மக்கள் திலகத்தின் எல்லா காவியங்களும் ரசிக்கக் கூடியதே !. இருப்பினும் அதில் தனித்துவமும் மகத்துவமும் பெற்று விளங்குவது "நான் ஏன் பிறந்தேன்" காவியம். புரட்சித் தலைவருக்கு மிகவும் பிடித்தமான தலைப்பு. சிறந்த கதையமைப்பு கொண்ட குடும்பப்பாங்கான இக்காவியத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் செவிக்கினியது.

இலங்கை மண்ணில் .100 நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்திட்டது. யாழ் நகர் ராணி அரங்கில் வெற்றிக்கொடி நாட்டிய திரைக்காவியம்.

குறிப்பாக "உனது விழியில் எனது பார்வை" என்ற அருமையான காதல் பாடல் காண்போரை மெய் மறக்க செய்யும். எத்தனை முறை கேட்டாலும், சலிப்பு ஏற்படாத பாடல்களில் இதுவும் ஒன்று. . சங்கர்-கணேஷ் இசையமைப்பில் வெளிவந்த மற்றுமோர் மக்கள் திலகத்தின் காவியம்.

வடசென்னை ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில், எங்கள் திருவொற்றியூரை சார்ந்த மக்கள் திலகத்தின் அன்பர்கள் பலரும், முதல் நாள் மாலைக் காட்சிக்கு சென்று கண்டு களித்தோம். திரையரங்கில், வடசென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்கள் பல, பல்வேறு வடிவங்களில்,சிறியதும், பெரியதுமாக star கள் கட்டி தொங்க விட்டது. எங்கள் திருவொற்றியூர் பகுதி அன்பர்கள் (நான் உட்பட) எங்கள் பங்கிற்கு, மூங்கில் கொம்புகளால் ஆன ஒரு சிறு அழகிய star ஒன்றினை உருவாக்கி அதில் நம் கலை வேந்தனின் கண்கவர் புகைப்படங்கள் ஒட்டி அரங்க வாயிலில் கட்டி மகிழ்ந்தோம். தி.மு.க. கொடிகளும், தோரணங்களும் கிருஷ்ணா அரங்கின் முன் அலங்கரித்தன.

கையால் வரையப்பட்ட பேனர்களுக்கு பல மன்ற அமைப்புக்களின் சார்பில், ஏராளமான மாலைகள் அணிவிக்கப்பட்டன. எல்லா எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்களும் ஒரு புரிந்துணர்வோடு, ஒற்றுமையோடு செயல் பட்டன. மாநில அளவில் ஒருங்கிணைப்பாளர் இருந்தபடியால் இது எளிதாகவும் சாத்தியமாகவும் இருந்தது.

ஸ்ரீ கிருஷ்ணா திரை அரங்கம், தங்கசாலை பேருந்து நிலையம் எதிரில் அமையப்பெற்றதால், எழில்வேந்தன் எம். ஜி. .ஆர். காவியங்கள் இங்கு எப்பொழுது திரையிடப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். காவல் துறையினர், கட்டுக்கடங்கா கூட்டத்தை சமாளிக்கவும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும் ஈடுபடுத்தப்படுவர்.

திரையில், பொன்மனசெம்மல் முதன் முதலில் தோன்றும் காட்சியில் வழக்கம் போல் மகிழ்ச்சி ஆரவாரம், பலத்த கை தட்டல், உற்சாகம். வசனங்கள் காதில் தெளிவாக கேட்க வில்லையாயினும் அந்த முதல் நாள் காணும் அனுபவம் ஒரு தனி சுகம் தான். சில உருக்கமான காட்சிகள் கண்ணீர் வரவழைத்தன என்று கூறினால் அது மிகையாகாது.

படம் முடிந்து அரங்கின் வெளியே வந்த பொது மக்களின் கருத்துக்கள் :

1. மிக மிக அருமையான படம்.

2. குடும்பத்துடன் வந்து காண வேண்டிய படம்

3. மக்கள் திலகம் ஆரம்பித்திலேய குடும்பஸ்தனாக காண்பிக்கப்படுவதால் ஒரு வித்தியாசமான திரைப்படம்

4. கருத்து செறிவுள்ள பாடல்கள் ரசிக்கும் படி அமைந்துள்ளது.

5. மாறுபட்ட கதாபாத்திரத்தில் பொன்மனச்செம்மல் தோன்றி அசத்தியுள்ளார்.

6. நிறைவான ஒரு படம்

மொத்தத்தில், எல்லா தரப்பு மக்களிடையேயும் ஏகோபித்த வரவேற்பை பெற்ற காவியம்தான் "நான் ஏன் பிறந்தேன் ? "

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Richardsof
9th June 2014, 12:17 PM
MGR AND HIS DIRECTOR'S- VIEW BY CGHANDRAN - NET

M.G R. was hardly a director's actor.When I say this I do not mean that this mass hero would not have cooperated with his directors.What on the other hand, I mean to say, is that it would have been very difficult to direct someone, whose image was always at its peak, on account of his own set theories of film making and his much cherished concept of what really a hero is and how he should be presented on screen.The three lettered hero was so charismatic that those who directed him came to be known as MGR directors and not as the directors of that hero.

One who had watched most of the movies of MGR,directed by three or four popular directors, could easily conclude that the films were of a set pattern with a prioritization of theme,story line, characterization lyrics and music composition that would not deviate from the MGR dictionary of film making.Every MGR fan knew pretty well, that any new release of their favorite hero would have speed,considerable action segment, mother sentiment,at least one solo song with socially enlightening messages, not less than three duet songs of which one would form a dream sequence, inspired by the imagination of the heroine.All these constituted the MGR package, but it was the level of energy transmitted by MGR to the audience that mattered.
The leading MGR directors were P.Neelakandan,M.A.Thirumugam,T.R.Ramanna T.R.Sundaram, Chanakya, and K.Shankar. Of these committed personalities,Neelakandan has directed a little less than twenty films of MGR followed by M.A.Thirumugam around fifteen movies. T.R.Ramanna has done seven movies followed by the other three taking a share of approximately three to five films each.But each of them created records in drawing crowds to the theatres and making hits of one hundred days and silver jubilees.Besides these men, the veteran duo Krishnan Panju, P.Madhavan, M.Krishnan,Prakash Rao, B.R.Pantulu C.V.Sridhar and A.P.Nagarajan have also worked with MGR as his directors for one or two movies each.

T.Ramanna takes the credit for bringing MGR and Sivaji Ganesan together for their one and only joint show in 'Koondukkili' in which Sivaji played a negative role. From the MGR collections of this great maker,p.Neelakantan great hits like 'Chakravarthithirumagal' 'Kaavalkaaran' 'Kannan En Kadalan''Maatukkaara Velan','En Annan','Ninaithathai Mudipavan' 'Neethikku Thalaivanagu' and 'Netru Inru Naalai'.MGR has also played dual roles in some of these.While 'Kavalkaaran' was reputed for its suspense value,MGR's boxing style and the much valued romantic element besides the usual MGR thrust for rich music,'Kannan En Kadalan' was noted for its significant story value.All the other films in the list were fast moving entertainers.
M.A.Thirumugam,the standard Devar Films'director who made easy entertainers with in short schedules of production period, impressed us by his movies like 'Thaikkuppin Thaaram' 'Thai Sollai Thattadhe','Thayai Katha Thanayan' 'Vettaikkaran' 'Dharmam Thalaikakkum' Thanippiravi and 'Nalla Neram' .In all the Devar films, there would be an animal participant say,a dog or bull or elephant.Most of the films from the Devar films exhibited the spirit of adventure and unrelenting bravery that MGR was capable of essaying, in his inimitable style.The stunt scenes in Devar films were their trade marks too.
Starting from 'Gulebagavali',T.R.Ramanna was a variety provider and a great action maker. Almost all his films like 'Pudhumai Pithan','Perya Idathu Pen','Parakkum Paavai' and 'Panam Padaithavan' proved his variety throw in terms of different story line,scenic sequence and the final impact.There was an element of adventure coupled with shrewdness in display of heroism in the first two movies. 'Periya Idathu Pen' had a strong story line and was emotion packed.' Parakkum paavai' was a great thriller with a thread of suspense running through out, making the audience get seriously involved in the process. 'Panam Padaithavan' established the supremacy of traditional values, over money and the craze for modernity.His other film 'Paasam' presented MGR for the first time in a different character, facing love disappointment and a tragic end on seeing his mother being killed.All these films were successful at the box office and their musical component is an eternal treat.
Modern Theatres T.R.Sundaram has made four films ['Mandhirikumari' 'Sarvathikaari' ,Alibabavum Naarpathu Thirudargalum' and Bagdad Perazhagi] and all were grand shows, known for speed in narration, sustenance of tempo and substance full of entertainment.All these films effectively handled the action formula and Alibabavun Naarpathu Thirudargalum in particular, captured the imagination of everybody in a beautifully adventurous mode. Mandhirikumari could be called a trend setter in several respects, such as dialogues,delineation of characters,catchy out door shootings and captivating music.MGR's films with the Modern Studios on the whole, never failed to create an exotic feel through exquisite presentation of scenic sequences.
K.Shankar made block busters like 'Kdiyirundha Koil' 'Adimaipen' and 'Pallaandu Vazhga' though his other films like 'Panathottam',and 'Chandhrodhayam' were only moderately successful. Chanakya's 'Enga Veettu Pillai' was more than a silver Jubilee hit.It ran almost for a year.His other victory march was for Gemini Studio's 'OliVilakku' that was released soon after the first DMK government was formed However his later film 'Pudhiya Boomi' did not do well at the box office. P.Madhavan came out with his single MGR film 'Deivathai' produced by Sathya Movies and it proved his name as a seasoned director,renowned for high quality film making. Incidentally, this was the only movie of MGR, for which K.Balachander wrote the script.
Prakash Rao's 'Padahotti' made history as a mass entertainer with all songs making waves as sweet melodies .Jambulingam's 'Namnaadu' was appreciated by most people for its plot, characterization, music and the magnificent show of M.G.R. Maniyan's 'Idhyaya Veenai' and his other Udhayam productions' release 'Sirithu Vaazhavendum' [a remake of Hindi 'Zanjeer']were both great in theme and over all content. B.R.Pantulu's 'Ayirathil Oruvan' was a block buster of epic grandeur; but his other three films [Ragasia Police115, Naadodi and Thedivandha Mappillai] did well.
C.V.Sridhar and A.P.Nagarajan who had never directed MGR movies during their hey days, ultimately got a chance to be his directors .Sridhar's 'Urimaikkural' was a tremendous success.His next film 'Meenava Nanban' yielded moderate results. A.P.Nagarajan's 'Navarathinam' was a dampener.MGR's 'Petralthan Pillaiya' was another creditable movie directed by Krishnan Panju and for the first time MGR appeared in a different character reflecting the plight of a man longing for a child.The story value of the film was a special attraction, in addition to MGR drawing the sympathy of the audience, because, he was always seen as an optimist and a source of positive energy.The other MGR movie directed by Krishnan Panju was 'Engal Thangam' which was also received well, for its story value and it was the only film that MGR acted with AVM Rajan and the last one he worked under the Mekala Pictures with Kalaignar M.Karunanidhi as the script writer.
The other two box office hits were, Sathya Movies''Idhyakkani' directed by A.Jaganathan and 'Richshakkaaran' filmed by Krishnan Nair.Among the old movies 'Malaikkallan' of Pakshiraja Sudios,directed by Sri Ramulu Naidu and Jupiter Pictures' Mahadevi' made by Sundarao Nadkarni were crowd pullers on account of their clean and high quality narration. To add to the long list of MGR directors,this mighty hero himself directed two of his successful films 'Nadodi Mannan' and 'Ulagam Sutrum Vaaliban'.Film personalities who knew MGR closely,used to say that he was a precise editor of films. But he had also proved that he could direct films with conviction.Perhaps it was his dynamism and versatility in film making, that made his directors look upon him for encouragement and support.So in a way, they can be rightly called,the MGR directors.
===============0=================

siqutacelufuw
9th June 2014, 12:18 PM
நான் ஏன் பிறந்தேன் ? தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :

http://i57.tinypic.com/2hrco6t.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
9th June 2014, 12:20 PM
நான் ஏன் பிறந்தேன் ? தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :

http://i58.tinypic.com/t0kj5t.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
9th June 2014, 12:23 PM
http://i59.tinypic.com/2lkcyvt.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
9th June 2014, 12:31 PM
http://i61.tinypic.com/2jfg7dk.jpg

siqutacelufuw
9th June 2014, 12:34 PM
http://i61.tinypic.com/2yl1wmw.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
9th June 2014, 12:35 PM
விழாகுழுவினர் அமைத்த பேனர்

http://i58.tinypic.com/20to2ky.jpg

siqutacelufuw
9th June 2014, 12:37 PM
http://i60.tinypic.com/2chkr42.png

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
9th June 2014, 12:39 PM
http://i57.tinypic.com/2z9l64k.jpg


ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
9th June 2014, 12:42 PM
http://i58.tinypic.com/2n87qiq.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! ! அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
9th June 2014, 12:45 PM
விழாவில் கலந்து கொண்டவர்கள் திருவாளர்கள் ரகு,எஸ்.ராஜ்குமார்,ஆர்.லோகநாதன்,மற்றும் பலர்.

http://i59.tinypic.com/30mrasw.jpg

fidowag
9th June 2014, 01:41 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.எஸ்.ராஜ்குமார் ஆரத்தி.

http://i59.tinypic.com/a087i9.jpg

fidowag
9th June 2014, 01:47 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.பாண்டியராஜன் ஆரத்தி அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்.

http://i59.tinypic.com/atu6nk.jpg

fidowag
9th June 2014, 02:02 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.ரகு(தொழிலதிபர்) ஆரத்தி அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்.

http://i62.tinypic.com/akbwhu.jpg

fidowag
9th June 2014, 02:04 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.ஆர்.லோகநாதன் ஆரத்தி அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்.

http://i62.tinypic.com/20a58q1.jpg

fidowag
9th June 2014, 02:06 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.பிரபு ஆரத்தி அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்.

http://i61.tinypic.com/wsglf.jpg

fidowag
9th June 2014, 02:09 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு திரு.சச்சிதானந்தம் ஆரத்தி அருகில் திரு.எஸ்.ராஜ்குமார்.

http://i61.tinypic.com/2ro6qur.jpg

fidowag
9th June 2014, 02:14 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு ஆரத்தி,மன்ற பெயர் பலகை திறந்த பின்,அனைவருக்கும் மோர் வழங்க தயாரானபோது எடுத்த படம்.

http://i62.tinypic.com/ay3uwx.jpg

fidowag
9th June 2014, 02:15 PM
விழாவை தலைமை தாங்கி சிறப்பாக நடத்திவைத்த திரு.எஸ்.ராஜ்குமார் அவர்களுக்கு மன்ற பொறுப்பாளர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார்

http://i61.tinypic.com/1zqydrm.jpg

Richardsof
9th June 2014, 02:35 PM
http://i57.tinypic.com/33eschw.jpg

fidowag
9th June 2014, 05:47 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் ,"நான் ஏன் பிறந்தேன் "- சிறப்பு பார்வை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

1. குடும்ப பாங்கான கதைஅமைப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன இயல்பான, அருமையான நடிப்பு திறமைகளை நவரசத்தோடு வழங்கிய முதன்மையான காவியம்.

2. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில் ,தாய்மை, மதுவின் சீர்கேடு நாட்டுப்பற்று, கணவன் மனைவி உறவுகள், குழந்தைகளுடன் பரிவு,
தங்கை பாசம், அடுத்தவருக்கு உதவும் பண்பு, படித்து வேலைக்காக
திண்டாடுவது , வேலை கிடைத்தபின் தொழிலில் நேர்மை , கடனாளி -
களிடம் நேர்மையுடன் வாதாடுவது ,துரோகம் செய்த சகோதரியை
மன்னிற்று ஏற்று கொள்வது , குடும்பத்தினர் படும் அவஸ்தைகளை
கண்டு மனம் உருகுவது , காஞ்சனாவின் நோயை தீர்க்க முற்படுவது ,
காஞ்சனாவை வில்லனிடம் இருந்து காப்பாற்றுவது ,குடும்பத்திற்கும் போதிய நேரம் செலவிட முடியாமல் தவிப்பது - காதலி வீட்டிற்கு
வரும்போது மனைவி ,பெற்ற தாய்க்கு தெரியாமல் தப்புவது
-இப்படி பல கோணங்களில் , பல பரிமாணங்களில் , தன் முகத்தில்
பல பாவங்களை காட்டி ரசிகர்களை பரவசபடுத்தினார் நமது மக்கள்
திலகம்.

3. இசை அமைப்பாளர் திரு. சங்கர் கணேஷ் தன் இசை திறமையால்
அனைத்து பாடல்களையும் இனிய கீதங்களாக வடிவமைத்தார்.

4. டைட்டில் இசை கேட்பதற்கு இனிமையாகவும் , வித்தியாசமாகவும்
இருந்தது.

5. நகைச்சுவை மன்னர்கள், நாகேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன் ,
இருவரும் வயிறு குலுங்க சிரிக்கவும் சில சமயங்களில் சிந்திக்கவும்
வைத்தார்கள். நகைச்சுவை நடிகர் ஐசரிவேலன் சற்று வித்தியாசம்
குணசித்திர வேடம்.

6. மேஜர் சுந்தரராஜன் அப்பா வேடத்தில் அருமையாக நடித்தார்.

7. மேஜரிடம் நடிகர் கோபாலகிருஷ்ணன் நமது மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களை அறிமுகம் செய்யும்போது , மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். பேசும் வசங்களின் போது அரங்கமே அதிரும்.
அவை.: அழுபவர்களை சிரிக்க வைக்க வேண்டும், சிரிப்பவர்களை
சிந்திக்க வைக்க வேண்டும் என்பது.

8. நடிகர் கோபாலகிருஷ்ணன் மேஜரிடம் அறிமுகம் செய்யும் போது
புரட்சி தலைவரை "நல்லவர்க்கு நல்லவர், கெட்டவர்க்கு கெட்டவர் "
என கூறும்போதும் அரங்கம் அதிரும் காட்சிகள்.

9. முதல் சண்டை காட்சியில் வில்லன் நம்பியார் , சக ஸ்டன்ட்
நடிகர்களிடம் , "அவன் ஒத்து ஆளே பத்தாளை அடிப்பான் "
ஜாக்கிரதை என்று சொல்லும் காட்சியில் கூட அரங்கம் அதிரும்.

10. முதல் பாடல் - நான் ஏன் பிறந்தேன் - பாடலில் சமுதாய சீர்கேடுகள்,
நாட்டுப்பற்று, தனி மனிதன் நாட்டுக்கு செய்ய வேண்டியது ,
குழந்தைகள் பள்ளிபருவத்தில் பெற்றோருக்கு பெருமை தேடி
தருவது , பெற்றோரூம் குழந்தைகளை பரிவுடன் அனுசரிப்பது ,
போன்றவற்றை உணர்த்தும் காட்சிகள்.

11. தம்பிக்கு ஒரு பாட்டு - கதை சொல்லும் அழகோடு , பல தத்துவ
வரிகள் மனதுக்கு இதமாக இருக்கும்.

13. உனது விழியில் எனது பார்வை - கணவன் மனைவி பாச உறவுகள்
வெளிப்படுத்தும் அருமையான காதல் பாடல்.

14. நான் பாடும் பாடல் ​ - உடலுக்கு மன வலிமையை கொடுக்கும்
உணர்சிகரமான பாடல். -டி.எம்.எஸ். ராக பாவத்தோடு , ஏற்ற
இறக்கத்தோடு பாடிய , அடிக்கடி கேட்க தூண்டும் பாடல்.

15. என்னம்மா சின்ன பொண்ணு - புரட்சி தலைவர் தனது நடன
அசைவுகளை சற்று கவர்ச்சியாகவும், இளமை துள்ளலுடன்
அளித்துள்ள பாடல்.

16. மீண்டும் தம்பிக்கு ஒரு பாட்டு - குழந்தைகள் பாடும் தத்துவ பாடல்
இதை கேட்கும்போது புரட்சி தலைவரின் கண்களில் நீர் சுரக்கும்.
கேட்பவர்க்கும், பார்ப்பவர்க்கும் கூட.

17. தலைவாழை இலை போட்டு - ஜிக்கி .சுசீலா பாடிய மாங்கல்ய
வலிமையை பற்றிய ருசிகரமான பாடல்.

18. நான் ஏன் பிறந்தேன் 09/06/1972 அன்று வெளியாகியது.
இன்று 43 வது ஆண்டு துவக்க தினம்.

19. குளோப், ஸ்ரீகிருஷ்ணா , சரவணா, பழனியப்பா அரங்குகளில் 50நாள்
வெற்றிகரமாக கடந்த படம்.

20. ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் ஏற்கனவே "ராமன் தேடிய சீதை " ஓடி
கொண்டிருந்ததால் சில நாட்களுக்கு காலை 7 மணி , 10 மணி
காட்சிகள் நடைபெற்றன.

21. முதல் நாள் காலை 10 மணி காட்சி பார்த்து ரசித்தேன். சில நாட்கள்
கழித்து தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது.

22. முதல் நாள் பார்த்து விட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் அருமையான குடும்ப பாங்கான பாத்திரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடிப்பு மனதுக்கு இதமாகவும், நிறைவை தருவதாகவும்
பேசி கொண்டனர்.

23. புரட்சி தலைவர் நடித்த படங்களில் எனக்கு பிடித்தமான ஒன்று,
சில இடங்களில் சங்கர் கணேஷ் பின்னணி இசை பிரமாதம்.
சமீபத்தில் உட்லண்ட்ஸ் சிம்பொனியில் பார்த்து ரசித்தேன்.

24. திரை அரங்குகளில் எப்போது திரையிட்டாலும் பார்க்க தவறுவதில்லை.

25.பொன்மன செம்மலின் நடிப்பு பரிமானங்களுக்காகவும் , பாடல்களுக்காகவும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய படம்.


ஆர். லோகநாதன்.

fidowag
9th June 2014, 06:10 PM
http://i62.tinypic.com/2wqqrd4.jpg

http://i59.tinypic.com/1235vh3.jpg

Russellbpw
9th June 2014, 06:16 PM
http://i58.tinypic.com/2vvnnur.jpg
http://s28.postimg.org/kn4af08yl/image.jpg (http://postimage.org/)

Nalla Kadhai Nalla Vasanam Adhudhaanae Thiru. Aroordhas avargalin adayaalam !

Richardsof
9th June 2014, 08:14 PM
Courtesy - face book - director sankar

பிம்பமும் நிஜ வாழ்வும்
http://i58.tinypic.com/8w0h3t.jpg
அவர் தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சிக்கலான, சவாலான காரியம் இது. அதை நிறைவேற்றுவதற்கு அவர் படாதபாடுபட வேண்டியிருந்தது.

தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான். தமிழ் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்ட அந்த பிம்பத்தை முதலமைச்சராக அவர் பெற்ற தோல்விகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பிலிருந்த பத்தாண்டுகளில் அவர் அசாதாரணமாக எதையாவது செய்ய முயன்றாரா? ஒரு அரசியல்வாதியாக அவர் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த பங்களிப்புக்கள் எவை? இந்தக் கேள்விகள் தனியே பரிசீலிக்கப்பட வேண்டியவை. ஆனால் திரைப்படங்களின் வழி நிலைபெற்றுவிட்ட அவரது பிம்பங்கள் அவரது தோல்விகளுக்கப்பாலுங்கூட முக்கியமானவை.
நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.

பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது
காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ
என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,
நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை
என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.

இதையெல்லாம் விட முக்கியமான பாடல் ஒன்று உண்டு. 1968இல் திரைக்கு வந்த அவரது ஒளிவிளக்கு திரைப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டினேன் எனத் தொடங்கும் பாடல். படத்தில் திருடனாக வேடமேற்ற எம்.ஜி.ஆர்., தீ விபத்தில் சிக்கிய ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அப்போது அவரைக் காப்பாற்றும்படி முருகனிடம் மனமுருக வேண்டி படத்தின் முக்கியப் பாத்திரங்களில் ஒன்றான சௌகார் ஜானகி பாடுவதாக அமைக்கப்பட்டது.

தெய்வமாக்கிய பாடல்
எம்.ஜி.ஆரின் வேறு பல திரைப்பாடல்களில் உள்ளதைப் போன்ற நேரடியான அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கட்டமைத்த பிம்பம்தான் அவரை மற்றவர்களோடு ஒப்பிடப்பட முடியாதவராக மாற்றியது. 1984இல் எம்.ஜி.ஆர்., உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த பாடல் அது. கடவுள் நம்பிக்கையற்ற, பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமான நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆரை தெய்வமாக்கியது.

உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு

படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் நேர்த்தியற்ற முறையில் உருவாக்கப்பட்ட முருகனின் உருவ பொம்மை ஒன்றின் முன்னால் நின்று உள்ளம் உருகும் குரலில் சௌகார் ஜானகி பாடுவதை இப்போது கேட்டாலும் கண்கள் சுரக்கும். சௌகாரின் குளமான கண்களில் நிழலாடும் சோகத்தையும் எம்.ஜி.ஆரின் மார்பின் மீது முகம் புதைத்து அவர் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அது தமிழக மக்களின் சோகம், அவர்களது பரிதவிப்பு. அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் மற்ற சில வரிகளைக் கவனியுங்கள். அவர் தெய்வமாக்கப்பட்டிருப்பது தெரியும்.

சாகாவரம் பெற்ற பாடல்

அந்த தெய்வம்தான் 1968 தேர்தலில் போட்டியிட்டது; திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தது; 1972இல் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கியது. மக்கள் எம்.ஜி.ஆர்., என்ற அந்த தெய்வத்தை தரிசிக்க முண்டியடித்தார்கள்; அதற்கு வாக்களித்தார்கள்; அதிகாரத்தைக் கொடுத்து முதலமைச்சராக்கினார்கள். 1984இல் அந்த தெய்வத்துக்கு உடல் நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்போது மக்கள் இந்தப் பாடலை அவர் குணமடைந்து மீண்டு வருவதற்கான பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தினார்கள். அவர் மீண்டு வந்தார். 1987இல் மறையும்வரை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். மறைந்த பிறகும் மக்கள் அவரைத் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் மக்களுக்கு அவர் தெய்வமாகவேதான் தென்படுகிறார். அவர் அவர்களுடைய இதய தெய்வம். கேட்கும் சத்தம் இன்னும் அடங்கியிராத அவரது இதயத்தின் துடிப்பு. அவர்களைப் பார்க்கும்போது இன்னும் பல வருடங்களுக்கு அது தன் துடிப்பை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று தோன்றும்.

oygateedat
9th June 2014, 09:13 PM
http://i59.tinypic.com/2u8zfkk.jpg

oygateedat
9th June 2014, 09:15 PM
http://i61.tinypic.com/2i09p95.jpg

oygateedat
9th June 2014, 09:19 PM
http://s22.postimg.org/uzq9s1nw1/scan0006.jpg (http://postimage.org/)

Richardsof
10th June 2014, 06:21 AM
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கட்டுரையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் பங்கேற்ற அத்தனை பட குழுவினரும் எந்த அளவிற்கு கடினமாக உழைத்து ,ஒத்துழைப்பு தந்துள்ளார்கள் என்பதை மக்கள் திலகம் விரிவாக விளக்கியுள்ளது அருமையான தகவல்கள் .
இனிய அன்பர்கள் செல்வகுமார் , திரு லோகநாதன் இருவரின் நான் ஏன் பிறந்தேன் படம் பார்த்த அனுபவ பதிவுகள்
நன்றாக இருந்தது .புதுவை நகரில் தொழிலாளி படம் பற்றிய தகவல் தந்த இனிய நபர் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி .

Richardsof
10th June 2014, 06:37 AM
நான் ஏன் பிறந்தேன் ஓடிகொண்டிருந்த நேரத்தில் மக்கள் திலகத்திற்கு பாரத் பட்டம் விழாக்கள் சிறப்பாக நடை பெற்று கொண்டு வந்த நேரத்தில் தினத்தந்தியில் மக்கள் திலகத்தின் செய்திகள் இருட்டடிப்பு நிகழ்வுகள் துவங்கியது .

மக்கள் திலகத்தின் திரைப்பட செய்திகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டது .

நவமணி - சுதேசமித்திரன் - தினமணி போன்ற தினசரி பத்திரிகைகள் மூலம் மக்கள் திலகத்தின் பட செய்திகள் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது .

Richardsof
10th June 2014, 10:18 AM
MGR
http://i62.tinypic.com/11c4hdx.jpg
This shot was taken during my photo walk on the beach . This is the memorial for magnetic three words named MGR which is relevant and popular even 26 yrs after his death which is easily visible by the sheer number of people who throng this place and the number of cut outs and photos of that man



This Man is excellent example of rags to riches from being a person who was fanning to kings in movies to becoming super star to the power of infinity and went on to become CM. Here is a person charisma which sways people including myself
Thanks Balaji

Stynagt
10th June 2014, 10:51 AM
இன்றும், என்றும் திரையுலகை ஆளும் எங்கள் சந்திரன்
http://i60.tinypic.com/2ceiwjk.jpg
இன்றும் திரையுலகில் புரட்சித்தலைவரின் தாக்கம் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு மக்கள் திலகம் இடம்பெறும் காட்சிகளும், அவரைப்பற்றிய வசனங்களும், அவருடைய திரைப்படங்களின் சுவரொட்டிகளும் இடம்பெறாத திரைப்படங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. அந்த அளவிற்கு இன்றும் அவர் திரையுலகை ஆக்கிரமித்துள்ளார்.

நடிகர் ராஜ்கிரண் எம்ஜிஆர் ரசிகராக நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சப்பை சுவரொட்டியில் உலகமெங்கும் நல்ல நேரம் எம்ஜிஆர் சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில், இதற்கு ஒரு படிக்கு மேலே, திரைக்கு வரவிருக்கும் ஒரு படத்தில் இளம் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி எம்ஜிஆர் ரசிகராக நடித்துகொண்டிருக்கிறார்.
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'உன் சமையலறையில்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் சிநேகாவிடம்:

பிரகாஷ்ராஜ் போனில் : இப்போது ஒரு கேசட் போடுகிறேன் யார் வாய்ஸ் என்று சொல்லுங்கள்.
சினேஹா: சோனியா காந்தி.

பிரகாஷ்ராஜ்: இல்லை. அவங்க மாமியார்..இந்திரா காந்தி. அடுத்த கேசட்டை போடறேன் யார் வாய்ஸ் சொல்லுங்கள்.

சினேஹா: இது எம்ஜிஆர்...நம்ம தலைவர்

பிரகாஷ்ராஜ்: இதை எப்படி உடனே கண்டுபிடிச்சே.

சினேஹா: என்னங்க. எம்ஜிஆரை தெரியாதவர் யார் இருக்க முடியும். அதுவும் நான் அவருடைய தீவிர ரசிகை"
என்று சொல்லி 'அதோ அந்த பறவைப் போல' பாடலைப்பாடி ஆக்ஷன் செய்வார். இந்த காட்சியில் ரசிகர்கள் பெருமளவில் ஆரவாரம் செய்தனர்.

இதிலிருந்து திரையுலகம் இருக்கும் வரை மக்கள் திலகத்தின் புகழும், தமிழன் இருக்கும் வரை புரட்சித்தலைவரின் புகழும் நீடித்திருக்கும் என்பது தெளிவாகிறது. திரையுலகில் பல நட்சத்திரங்கள் மின்னி மறைந்தாலும், என்றும் ஒளிவீசி மறையாது நிலைத்து நிற்கும் ஒரே சந்திரன் - எங்கள் (ராமச்) சந்திரன்தான் என்பதில் ஏது ஐயம்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

gkrishna
10th June 2014, 12:49 PM
நான் ஏன் பிறந்தேன் ஓடிகொண்டிருந்த நேரத்தில் மக்கள் திலகத்திற்கு பாரத் பட்டம் விழாக்கள் சிறப்பாக நடை பெற்று கொண்டு வந்த நேரத்தில் தினத்தந்தியில் மக்கள் திலகத்தின் செய்திகள் இருட்டடிப்பு நிகழ்வுகள் துவங்கியது .

மக்கள் திலகத்தின் திரைப்பட செய்திகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டது .

நவமணி - சுதேசமித்திரன் - தினமணி போன்ற தினசரி பத்திரிகைகள் மூலம் மக்கள் திலகத்தின் பட செய்திகள் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது .



உண்மை எஸ்வி சார்
அப்போது உள்ள தினத்தந்தி பேப்பர் எல்லாம் m .g .r அவர்களை கேலி சித்ரம் வரைந்து கிண்டல் செய்தது இன்னும் நினைவில் உள்ளது

Richardsof
10th June 2014, 03:40 PM
மக்கள் திலகம் திரிக்கு வருகைபுரிந்த திரு கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி .

1972ல் மக்கள் திலகம் சந்தித்த பல சோதனைகளில் தினத்தந்தியின் இருட்டடிப்பும் ஒன்று .

அன்றைய ஆளும் அரசின் அடக்கு முறை - திரை உலகம் -பத்திரிகைகளின் ஆதரவு இன்மை -

இந்த சூழ் நிலையில் மக்கள் திலகம் தன்னுடைய சோதனைகளை சற்றும் மனம் தளராமல்

ரசிகர்களின் ஆதாரவுடன் எல்லோரையம் வென்று சாதித்து வெற்றி கண்டார் .

eehaiupehazij
10th June 2014, 06:09 PM
dear esvee. As an actor, NT's hardcore fans like me may have a difference of opinion as regards his acting skills. But as a human being, MGR is unique as a phenomenon in political arena that is infested with communal and monetary based politics within politics.His moves were well planned and he made the right usage of his movies as the rungs to climb up the success ladder and getting into the hearts of downtrodden people as an alter ego of ''Robin Hood' of movie fanatic tamilians irrespective of caste or community or cadre after his huge hit 'Madurai Veeran' and stabilized his unicode image of do-gooder in subsequent films.As far MGR was concerned people were undivided by caste or community which culminated into the phenomenal 'MGR Vote Bank' that exists even now undeterred. Leave aside movies... we know his strengths and weaknesses.. he remained just a sheer seasonal entertainer or a show man without bothering for the emotional quotient of his films or he might have thought that when NT and GG look after that task well..why should I? MGR's legacy remains still unshaken and unstirred even as politically his image is not maintained by his party high cadres for reasons that are murky. NT and MGR seemed to have a proper understanding though professional competitions were inevitable due to the differing fan bases. Opinions are divided, but both thilagams command respect and love alike.

Richardsof
10th June 2014, 07:47 PM
இனிய நண்பர் திரு செந்தில்

மக்கள் திலகத்தை பற்றி தாங்கள் கூறியுள்ள கருத்துக்கள் உண்மையே . திரை உலகின் பொற்காலம் என்றால் அது
மக்கள் திலகம் - நடிகர் திலகம் - ஜெமினி கணேசன் மூவரும் ஆண்ட நாட்கள் மறக்க முடியாது .மூவரின் படங்கள்
ஒரு காவியங்கள் .மூன்று வித ரசிகர்கள் ..மாறுபட்ட ரசனைகள் - ஆரோக்கியமான போட்டிகள் மறக்க முடியாத
இனிய நாட்கள் மீண்டும் வருமா ?.

Richardsof
10th June 2014, 08:49 PM
புரட்சி நடிகர் எம்ஜிஆர் என்ற பட்டப்பெயரை மாற்றி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற பட்டத்தை வழங்கியவர்
திரு கே .ஏ. கிருஷ்ணசாமி அவர்கள் . 1980 ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற கே.ஏ .கே அவர்களுக்கு
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாலை அணிவிக்கும் காட்சி
http://i57.tinypic.com/n20t95.jpg
COURTESY - THIRU PRADEEP BALU

ainefal
10th June 2014, 09:45 PM
http://www.youtube.com/watch?v=a7eM6XtzvJs

ainefal
10th June 2014, 09:50 PM
http://www.youtube.com/watch?v=iw3zAZn_iss

Russellisf
10th June 2014, 09:52 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zpsabbea442.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zpsabbea442.jpg.html)

1970ம் ஆண்டு சேலம் அலங்கார் தியேட்டரில் என் அண்ணன் படம் வெளியான போது திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்ட 110 அடி பிரம்மாண்டமான கட் அவுட் இது. இதை நிறுவ மொத்தம் 70கிலோ ஆணிகள் பயன்படுத்த பட்டன.இந்த கட் அவுட் கீழே நிற்கும் மனிதர்களை பார்க்கும் போது இதன் பிரம்மாண்டம் விளங்கும் .மிக அரிதான புகைப்படம் இது.

Russellisf
10th June 2014, 09:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/y_zpse3be7599.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/y_zpse3be7599.jpg.html)

எங்கள் வீட்டுப் பிள்ளைக்கு வயது 97 "

1977 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களைக் கைப்பற்றிய புரட்சித்தலைவரின் அ.இ.அ.தி.மு. கழகம் 1980 – ஆம் ஆண்டுத் தேர்தலில் 139 இடங்களைக் கைப்பற்றியது.

எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதநேயச் செல்வருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு, எதிர் அணியினர் அதிர்ந்தனர். பத்திரிக்கை உலகமோ பிரமித்தது.

ஆனந்த விகடன் பத்திரிக்கையில், புரட்ச்சிதலைவர் மீது
மக்கள் வைத்திருந்த அன்பையும் ஆதரவையும் பிரதிபலிக்கும்
விதமாக அட்டைப்படத்தில் போடப்பட்ட அற்புதமான கார்டூன் இதுவாகும் .

விகடனின் கார்டூன் வெளியீட்ட கருத்து படத்தில் உள்ளபடி, அன்று முதல் உலகம் உள்ளவரை மக்கள் புரட்ச்சிதலைவர் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்துகொண்டே இருப்பார்கள் .

Russellisf
10th June 2014, 10:02 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/q_zps30ca903f.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/q_zps30ca903f.jpg.html)

Russellisf
10th June 2014, 10:17 PM
'என் ரத்தத்தின் ரத்தமே’ என்கிற புகழ்பெற்ற வரியை எம்.ஜி.ஆர். எதற்காகச் சொன்னார்?''

''எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு, குண்டு அடிபட்ட எம்.ஜி.ஆர். குற்றுயிராகப் படுக்கை யில் உயிருக்காகப் போராடினார். அவர்பால் அளப்பரிய பாசம்கொண்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் ரத்தம் கொடுக்கத் தங்கள் பெயரைப் பதிவுசெய்தார்கள். ஆனாலும், அவருக்குப் பொருந்திய சிலரின் ரத்தம் ஏற்கப்பட்டது. தனக்குப் புத்துயிர் தந்த தொண்டர்களை மேடைதோறும் தவறாமல் பேச்சின் துவக்கத்திலேயே அப்படி அழைப்பார். கரவொலி விண்ணைப் பிளக்கும்!''

- ஆர்.கே.சுந்தரம், வடபழனி.
நானே கேள்வி... நானே பதில்!

courtesy vikatan e-magazine

Russellisf
10th June 2014, 10:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zps6eb1adaf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zps6eb1adaf.jpg.html)

தனது சொந்த ஊரான கொடுமுடியில் , ' கொடுமுடி கோகிலம் '
என்று அழைக்கப்பட்ட திருமதி கே.பி.சுந்தராம்பாள் கட்டிய புதிய
திரையங்க திறப்பு விழாவில் , அன்றைய முதல்வர் கலைஞர் ,
மக்கள் திலகம் எம்ஜியார் , செல்வி ஜெயலலிதா .

ainefal
10th June 2014, 11:22 PM
http://www.youtube.com/watch?v=-9eJKCdNeGw

Russellisf
11th June 2014, 12:16 AM
WATCH CLIPPING FROM 1.01 ONWARDS

https://www.youtube.com/watch?v=Y3go4aezTb0&list=PLcZbTwG9qLXFHpR29DlX1q_iFEI_sIUkK

Russellisf
11th June 2014, 12:23 AM
WATCH CLIPPING FROM 4.40 TO 6.40


https://www.youtube.com/watch?v=6Sp4vatY3VA

Russellisf
11th June 2014, 12:33 AM
WATCH CLIPPING FROM 8.00 TO 8.25

https://www.youtube.com/watch?v=ezdvgqPgcAA

Russellisf
11th June 2014, 12:40 AM
WATCH KAVALKARAN BOXING FIGHT IN RASUKUTTY MOVIE


https://www.youtube.com/watch?v=S1U_PeDzkX0

Russellisf
11th June 2014, 12:48 AM
WATCH CLIPPING FROM 0.20 TO 0.35 FROM VALTER VETRIVEL THIS IS P.VASU OWN FILM HE DEDICATED THE MOVIE TO OUR THALAIVAR

https://www.youtube.com/watch?v=qDRqytBZri8

Russellisf
11th June 2014, 12:59 AM
https://www.youtube.com/watch?v=QaVIlMS891g

Richardsof
11th June 2014, 04:59 AM
இனிய நண்பர் திரு யுகேஷ்

மக்கள் திலகத்தின் படமும் , பெயரும் இடம் பெற்ற மற்ற படங்களின் வீடியோ தொகுப்புகளை மிக அழகாக பதிவிட்டு இன்றைய திரை உலக தலை முறையினரும் எந்த அளவிற்கு மக்கள் திலகத்தை நேசிக்கிறார்கள் என்பதை உணர வைத்துள்ளீர்கள் . நன்றி .

Richardsof
11th June 2014, 05:06 AM
yukesh

super document

http://i58.tinypic.com/2vbn1v9.jpg

Richardsof
11th June 2014, 05:14 AM
சஞ்சய் காந்தி அவர்கள் விமான விபத்தில் இறந்தபோது அங்கு எம்ஜிஆர் கருணாநிதி ஆகிய இருவரும் சென்றிருந்தனர். உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டபோது எல்லோரும் அவரவர் காரில் சென்றுவிட கருணாநிதி தனித்து விடப்பட்டார். அப்போது எம்.ஜி.ஆர். அவரைத் தன்னுடன் காரில் ஏற்றிச் சென்றார். இது நடந்தது ஜூன் 1980-ல்.

அதன் பிறகு வந்த சாவி இதழில் வந்த கேள்வி-பதில்:
கேள்வி: எம்ஜிஆர் கருணாநிதியை தன் காரில் அழைத்துச் சென்றதைப் பற்றி?
பதில்: அது எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையைக் குறிக்கிறது (நிஜமாகத்தான் கூறுகிறேன்)

சாவி அமெரிக்கா செல்லவிருந்தார். அப்போது கருணாநிதி சட்டசபை தேர்தலில் நின்றார் (அண்ணாநகர் தொகுதி என்று நினைவு. சாவி தனக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வார் என எதிர்ப்பார்த்திருக்கிறார். ஆகவே அவர் அமெரிக்கா செல்லும் முன்னால் கருணாநிதி வீட்டிற்கு சென்ற போது அவர் சாவியுடன் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அது சாவிக்கு சுருக்கெனப் பட்டிருக்கிறது. ஆகவே எம்ஜிஆரின் பெருந்தன்மையைப் பற்றி அந்த பதில். அதற்குப் பிறகு எம்ஜிஆரைப் பற்றியக் கட்டுரையின் தலைப்பு: "கொடுத்துச் சிவந்தக் கரங்கள்".
courtesy - net

Richardsof
11th June 2014, 05:17 AM
comments portion

வாஷிங்டனில் திருமணம் படித்திருக்கிறேன். அருமையான நகைச்சுவை எழுத்து.

எனக்குத் தனிப்பட்ட முறையில் திரு. எம்.ஜி.ஆரைப் பிடிக்கும். எந்த அறிமுகமும் இல்லாத எனக்குத் தெரிந்த நபருக்கு அவர் எழுதிய வேண்டுதல் கடிதத்திற்கு பதிலளிக்கும் வண்ணம், வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து முறையாக பல நேர்முகத் தேர்வுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இறுதியாக நில அளவைத்துறையில் "ப்பிர்க்கா சர்வேயர் வேலை கிடைத்தது.

திரு. எம்.ஜி.ஆர் தொலைநோக்குடன் 1980க்ளில் நிறைய சுயநிதி பொறியியல் கல்லூரி, polytechnic-களுக்கு அனுமதி தந்து இட ஒதுக்கீடு B.E, B.Tech, 3year Engg diplomas படிப்பது இன்றுஅனைத்து சமூக மாணவர்களுக்கு சாத்தியம் ஆகியிருக்கிறது. (தரம் வேறு விஷயம்! தரத்திற்கன காரணிகள் வேறு!)

தமிழகத்தில் திரு. காமராஜருக்குப் பிறகு கல்வித் தொலைநோக்கு இருந்த அரசியல் தலைவை எம்.ஜி.ஆர் மட்டுமே!

அம்மாதிரியே ஏழைகட்கு கொடுத்துச் சிவந்த அரசியல்வதியின் கரங்கள் எம்.ஜி.ஆருடைய கரங்களே!

அன்புடன்,

குவைத்திலிருந்து-ஹரிஹரன்

Richardsof
11th June 2014, 05:25 AM
எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்...

1984 ஆம் ஆண்டு. கிராமங்கள் தோறும், எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். சுற்றி தாய்மார்கள் சோகமாக அமர்ந்திருப்பார்கள். ஸ்பீக்கரில் “இறைவா, உன் கோவிலிலே எத்தனையோ மணி விளக்கு” பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

எம்ஜிஆர் அப்போது அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலும் வந்தது. இந்திராகாந்தியின் மரணமும், எம்ஜிஆரின் உடல் நலக்குறைவும் தேர்தலில் பிரதிபலித்தன.
பரவலாக திமுக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். 1980 தேர்தலில், 600 வாக்கு வித்தியாசத்தில் எனது தந்தையார் தோல்வி அடைந்திருந்ததால், இந்த முறை வெற்றி உறுதி என நினைத்திருந்த நேரத்தில் தோல்வி.

இப்படி எம்ஜிஆரோடு அரசியல் பகை இருந்தாலும், கொள்கை மாறுபாடு இருந்தாலும், எம்ஜிஆர் படங்களை ரசித்தவன் தான். ஆனால் பள்ளியில் நண்பர்களோடு விவாதிக்கும் போது எம்.ஜி.ஆரை தீவிரமாக விமர்சித்தவன்.

1987. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் நான். மூன்றாவது செமஸ்டர் முடிந்து விடுமுறை. நாட்டு நலப்பணித் திட்ட முகாமுக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து, ஹாஸ்டலுக்கு வந்து விட்டோம் நண்பர்கள். திடீரென ஊரே மயான அமைதி. எம்.ஜி.ஆர் மறைவுச் செய்தி.

நாடே ஸ்தம்பித்த்து. எங்கும் பயணிக்க முடியாத நிலை. உணவுப் பிரச்சினை. ரேடியோவை வைத்தால், டொய்ங், டொய்ங், சோக இசை. ஹாஸ்டலின் டீவி ரூமில் இருக்கும், டீவியை பார்த்து மரண நிகழ்வுகளை தெரிந்து கொண்டோம். தலைவர் கலைஞரின் இரங்கல் செய்தி வந்தது.
.......................................

அந்தப் பாட்டியை பார்த்தவுடன், இப்படியான எம்.ஜி.ஆர் குறித்த நினைவுகள்.

என்னோடு பயணித்த ஏழு வயது மகன் கேட்டார்,”அப்பா எம்ஜிஆர் படம் தானே ?” தொப்பி, கண்ணாடி இல்லாத ராஜா காலத்து உடையில் எம்ஜிஆர் படம். “எப்படி தெரியும்பா?” “என்னாப்பா எம்ஜிஆர தெரியாதா?”

ஆட்டோ சிறிது தூரம் சென்றது. பெரிய ஜெயல்லிதா வரவேற்பு டிஜிட்டல் பேனர். கீழே ஏழு,எட்டு நபர்கள். அதிமுக நிர்வாகிகளாக இருக்கலாம். இப்போதே லேசாக வளைந்து தயாராக இருந்தார்கள். கொடநாடு போக ஜெ கார் வரப் போகுது போல. எம்ஜிஆர் காலத்தில் இந்தக் கூன் விழவில்லை, அதிமுகவினருக்கு.

எம்ஜிஆரின் தாக்கம், பாதிப்பு எல்லா இடத்திலும்....
Posted by சிவசங்கர் எஸ்.எஸ்

Richardsof
11th June 2014, 05:38 AM
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்

இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”


“மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு

மாலைகள் விழவேண்டும்

ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்”

இவை வெறும் பாடல் வரிகள் அல்ல. சாகாவரம் பெற்ற ஒரு சகாப்தத்தைப் பற்றிய ஆழமான பதிவுகள். அந்த சகாப்தம் தான் எம்.ஜி.ஆர்.

இருபதாம் நூற்றாண்டில் எம்.ஜி.ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல், தமிழகத்தை, இந்தியாவை, ஏன் உலகின் ஒரு பகுதியை எவ்வாறு ஆட்டிப்படைத்தது. மக்களை எப்படி ஈர்த்திருந்தது என்பதை நம்மில் பலரும் அறிவோம்.

எழுபதுகளில், ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்தியாவில் மக்களின் பேரன்பைப் பெற்ற பெருமகன்களாக இருவரைச் சுட்டியது. ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு. மற்றொருவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

நாடக அரங்கிலும், திரையுலகத்திலும், அரசியல் பொதுவாழ்விலும் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக, மக்கள் மனம் கவர்ந்த முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர்.

நின்றால் பொதுக்கூட்டம். நடந்தால் ஊர்வலம். அமர்ந்தால் மாநாடு…என்பார்களே…. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆருக்கு பொருந்தும்.mgr anniv 3

எம்.ஜி.ஆர் யார்? அவர் தமிழரா? மலையாளியா? இலங்கை பிரஜையா? என்ற விவாதம் பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வந்தது.

இந்த விவாதங்களுக்கு 1985ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தவர் பிரபல கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்பொருள் ஆர்வலருமான புலவர்.செ. ராசு. இவர் வரலாற்று பூர்வ ஆதாரங்களோடும், சரியான சான்றுகளோடும் எழுதி வெளியிட்ட “செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் – ஓர் வரலாற்று ஆய்வு” எனும் நூல்தான், எம்.ஜி.ஆர் ஒரு தமிழரே என்பதை ஆணித்தரமாக நிறுவியது.

ஒருவர் எங்கு பிறந்து வளர்ந்தாலும், அவரது பூர்வீகத்தைக் கொண்டுதான் அவர் இன்னார் என அடையாளப்படுத்தப்படுவார்.

அந்த வகையில் எம்.ஜி.ஆர் பிறந்தது இலங்கையின் கண்டி நகர் என்றாலும், அவரது தாய், தந்தையர் கேரள மாநிலத்தின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களின் மூதாதையர் யார்? அவர் எந்த வழித்தோன்றல் என்பதையெல்லாம் வரலாற்று பூர்வமாக ஆய்வு செய்த புலவர் ராசு, எம்.ஜி.ஆர் தமிழர்தான் என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபித்தார்.mgr anniv 4

“எம்.ஜி.ஆரின் முன்னோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை மாவட்டம் காங்கேயம் பகுதியில் வாழ்ந்துவரும் மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் எனக் குறிப்பிடும் புலவர் ராசு, “கொங்கு வேளாளரில் தென்கரை நாட்டு சங்கராண்டாம்பாளையம் பெரிய குளத்து வேணாரு வழியிலும், வடவனூர் வேளாளர் மரபினரான தாய்வழியிலும் தோன்றி, வேளாளர் குலத்துச் செம்மலாக, வேளிர்குல வேந்தராக உள்ள எம்.ஜி.ஆர் கொங்கு நாட்டுக் குடும்பத்தில் பிறந்த தமிழரே என்பது விரிவான வரலாற்று ஆய்வு கூறும் உண்மையாகும்” என்று தமது நூலின் மூலம் புலவர் செ.ராசு தெளிவு படுத்தியுள்ளார்.

மதத்தால், இனத்தால், மொழியால் அவர் யார் என்பதை விட, மனத்தால், குணத்தால், எண்ணத்தால், செயலால் ஒரு மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

குழந்தைத் தொழிலாளராக நாடகத்துறையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆரின் அந்தப் பாலப் பருவத்திலேயே பட்ட துன்பங்களும், துயரங்களும் ஏராளம், ஏராளம்.

தமிழ்த்திரைப்படத்துறையில் கால்பதிப்பதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. 1936ம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர் சுமார் பத்தாண்டுகள் பெரும் போராட்டத்தைச் சந்தித்த பிறகே பிரபலமானார். நாற்பதுகளின் பிற்பகுதியில், ராஜகுமாரி, மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி என கதாநாயகன் பாத்திரப்படைப்பு தம்வசம் வந்தபிறகு எம்.ஜி.ஆர் அதை தம் ஆற்றல், உழைப்பு, தகுதி, திறமையின் மூலம் தக்கவைத்துக் கொண்டு, 1976ம் ஆண்டுவரை திரையுலகச் சக்கரவர்த்தியாக வலம் வந்தார்.

“உழைப்பவரே உயர்ந்தவர்” எனும் உன்னத லட்சியத்தை கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் “ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” எனும் பாடல்களுக்கு ஏற்ப வாழ்நாளெல்லாம் தாம் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வாரிக்கொடுத்து வள்ளலானார். அந்த வள்ளலின் பொன்மனத்தைப் போற்றித்தான் திருமுருக கிருபானந்த வாரியார் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கினார்.

திரையுலகிலும், அரசியல் பொதுவாழ்விலும் எம்.ஜி.ஆர் சந்திக்காத சோதனைகள் இல்லை. அத்தனையையும் முறியடித்து சாதனைகள் பல படைத்து ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தார்.

1972ஆம் ஆண்டு அண்ணாதிமுக எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய எம்.ஜி.ஆர்.,அடுத்த ஐந்தே ஆண்டுகளில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு 1977ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து 1980-84 பொதுத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று சுமார் 11 ஆண்டுகள் முதலமைச்சர் பொறுப்பேற்று தமிழ் மாநிலத்தின், தமிழக மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு உழைத்தார். சத்துணவு திட்டம் போன்ற, ஏழைகளுக்கு நலன்பயக்கும் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தினார்.

1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்க நாட்டின் புரூக்ளின் டவுன்ஸ்டேட் மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

எம்.ஜி.ஆர் இல்லாமலேயே அவரது அண்ணாதிமுக, அவர் கண்ட இரட்டை இலைச் சின்னத்தின் மூலம் மகத்தான வெற்றியைப் பெற்றது. மரணப்படுக்கையில் இருந்த எம்.ஜீ.ஆரும் ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றார்.
http://i57.tinypic.com/f2n0np.jpg
அந்தக் காலக்கட்டத்தில், திமுக தரப்பில் “எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை. அமெரிக்காவில் ஐஸ் பெட்டிக்குள் எம்.ஜி.ஆர் உடலை வைத்திருக்கிறார்கள் தேர்தல் முடிந்ததும் அதைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவார்கள். அவர் உயிருடன் இருப்பதாக இங்கு உள்ளவர்கள் சொல்வதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்” எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

உடனே அண்ணா திமுக தரப்பில், எம்ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் மருத்துவ மனையில் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை, வீடியோ காட்சிகளை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினர்.

அந்தக் காட்சியைக் கண்ட மக்கள் திமுகவை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து எம்.ஜி.ஆரின் அண்ணா திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தனர்.

திராவிட இயக்க அரசியலில் இருந்தாலும், எம்.ஜி.ஆர் தேசிய சிந்தனையும், தெய்வ நம்பிக்கையும் கொண்டவராகவே வாழ்ந்தார்.

தமிழக அரசியலில் தலைவர்கள் அனைவரும் போற்றத்தக்க, ஏழை, எளிய, நலிந்த மக்கள் பாராட்டத்தக்க நல்லதொரு மனிதராக, நாடு போற்றும் தலைவராக வாழ்ந்தார்.

மிகச்சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, எந்த பின்னணியும் இல்லாமல், ஒரு மனிதன் தன்னந்தனியாக போராடி, தான் உழைப்பால் உயர்ந்து உச்சத்தை எட்ட முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர் ஒரு எடுத்துக்காட்டு.mgr shoot

ஏழை, எளிய மக்களின் அன்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு திரையுலகில் கோலோச்சிய, தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென, தனித்துவமிக்க முத்திரையைப் பதித்த எம்.ஜி.ஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி இப்பூவுலகை விட்டு மறைந்தார்.

அவர் மறைந்து கால்நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், அவரது பெயரும், புகழும் இன்னும் நிலைத்துள்ளது. இன்றைய அரசியலிலும் எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் சக்தி ஆளமைத் தன்மையுடன் உள்ளது என்பதே யதார்த்தம்.

சாகாவரம் பெற்ற ஒர் சரித்திரம், சென்னை மெரீனா கடற்கரையின் மணல் வெளியில், சந்தனப் பேழையில் துயில் கொள்கிறது. இன்றளவும் அந்த மனிதரின் நினைவிடத்தில் மக்கள் கூட்டம் அன்றாடம் வருகை தந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் செல்வதைக் காணலாம்.

எம்.ஜி.ஆர் புகழ் என்றும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதற்கு இதுவே சான்று.

courtesy - net

Richardsof
11th June 2014, 05:48 AM
1977 தேர்தல் முடிவுகள்தான் முதன்முறையாக அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்தினாற் போலிருந்திருக்கிறது. ’ரேடியோ பெட்டி முதல் சுற்றில் பெரும்பாலான இடங்களில் எம்ஜிஆரின் அஇஅதிமுக தான் முன்னிலை’ என்றதை அவர்களால் கிஞ்சித்தும் நம்பவே முடியவில்லையாம். மறு நாள் செய்தித்தாள்களில் வெளியான முழு முடிவுகளில் அதிமுகவினர் வாங்கிய வாக்குக்களைப் பார்த்த பின்னர்தான் சலிப்போடு ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

இவ்வளவு நேரம் பாட்டி சொன்ன கதைகளுக்கிடையே, இப்ப அம்மா உள்ள வந்துட்டாங்க.

1980 ல் அதெப்படியோ ஒரே நேரத்தில் சர்க்கரையையும், வேப்பஞ்சாறும் ருசித்தார்களாம். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுகிறதாம், அதே சட்டமன்றத் தேர்தலில் தலைகீழ். இரண்டாம் முறையாக எம்ஜிஆர் வெற்றி பெற்றிருந்திருக்கிறார். 1982 ல் வரவேண்டிய சட்டமன்றத் தேர்தல் அதெப்படி 1980 லியே வந்தது ? ஆமா, அப்பல்லாம் அப்படித்தான், நடுவண் அரசு நினச்சா போதும் மாநில ஆட்சிய கலைச்சிடலாம். நல்லவேளை உச்சநீதிமன்றம் தலையிட்டதால இப்பல்லாம் அந்த அட்டூழியம் ரொம்பக் கிடையாது.

1984 ல் பால்யத்திலேயே ஓரளவு தேர்தல் களேபரங்களை என்னால் யூகிக்க முடிந்துவிட்டது. எம்ஜிஆர் கிட்னி ஃபெய்லியராகி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தும், பெரிய பலனில்லாமல் உடல் நலம் அடிக்கடி குன்றிப்போன சமயமது, எம்ஜிஆர் ஊரில் இல்லாமலயே நடந்த தேர்தல் அது.



ஒளியும் ஒலியும் பார்க்க, எதிர் வீட்டிற்கு போனால் சவுகார் ஜானகி வெள்ளைச் சேலையில் ‘இறைவா உன் மாளிகையில்.......’ என்று கதற, எதிர் வீட்டு அக்கா கண்களிலிருந்து கர கரவென கண்ணீர் வீழ்ச்சி.


எம் ஜி ஆர் களத்தில் இல்லாத சூழலில், இம்முறை திமுக வெற்றி பெற்று கருணாநிதி மீண்டும் முதல்வராவார் என எங்கள் குடும்பத்தின் பெரும்பாலோர் காத்திருக்க, ஆர். எம். வீரப்பன், பாக்யராஜை அமெரிக்க ப்ருக்ளீனுக்கு அனுப்பி, எம்ஜிஆர் ஃபோட்டோவுடன் வரச் செய்கிறார். சவுகார் ஜானகியும், பாக்யராஜூம் இணைந்து எம்ஜிஆர் மூன்றாம் முறையாகவும் முதல்வராக சிறு உதவி புரிந்திருக்கிறார்கள்
courtesy - net

Russellisf
11th June 2014, 05:50 AM
THE FOLLOWING SONSGS TELECASTED IN TV THAT TIME

https://www.youtube.com/watch?v=iwh71IiRVLQ

Russellisf
11th June 2014, 05:50 AM
https://www.youtube.com/watch?v=McuSwmnWtko

Russellisf
11th June 2014, 05:51 AM
https://www.youtube.com/watch?v=wTfFZF13LDU

Russellisf
11th June 2014, 05:52 AM
AFTER 1984 VICOTRY THE FOLLOWING SONGS TELECASTED.

https://www.youtube.com/watch?v=73Ew2YCWqR4

Russellisf
11th June 2014, 05:52 AM
https://www.youtube.com/watch?v=oUvg6SCy-EU

Russellisf
11th June 2014, 05:55 AM
THE GREAT DIRECTOR MANIRATHNAM TAKEN IRUVAR MOVIE (STORY OF THALAIVAR AND MK)


https://www.youtube.com/watch?v=YD5dddtwtKk

Russellisf
11th June 2014, 05:56 AM
https://www.youtube.com/watch?v=W_6goZ7p1bE

VAIRAMUTHU TOLD ONE OF THE INTERVIEW I AM FULLY WRITTEN THE SONGS REMEMBERING LIKE MGR LYRICS.

Russellisf
11th June 2014, 06:01 AM
https://www.youtube.com/watch?v=VDdRjeMjUBQ

Russellisf
11th June 2014, 06:02 AM
THALAIVAR RULED MALAYALAM FILM INDUSTRY

https://www.youtube.com/watch?v=6R5ltUkIP-0

Russellisf
11th June 2014, 06:03 AM
ROOP SIR PLEASE TELL WHAT SHE TOLD ABOUT OUR THALAIVAR

https://www.youtube.com/watch?v=SkJ5o4089fE

Russellisf
11th June 2014, 06:25 AM
WATCH THE CLIPPINGS FROM 8.20 TO 10.54 THIS IS RANGA MOVIE MASTER TINGU , HAJAA SHERIFF PLAY STICK FIGHT IN FRON OF TV LOOKING THALAIVAR FIGHT SEQUENCE THAYA KATHA THANAYAN . ALONGWITH KARATHA MANI

https://www.youtube.com/watch?v=ialM5uM8cH8

Russellisf
11th June 2014, 06:31 AM
https://www.youtube.com/watch?v=wPhYDPc_u7c

Russellisf
11th June 2014, 06:34 AM
https://www.youtube.com/watch?v=k0NPBRUn-jE

Russellisf
11th June 2014, 06:37 AM
https://www.youtube.com/watch?v=yK7cwnqvHOk

oygateedat
11th June 2014, 08:35 AM
http://s13.postimg.org/pdfvjblnr/cdsssss.jpg (http://postimage.org/)

Richardsof
11th June 2014, 08:49 AM
’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.

படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை.
http://youtu.be/BfJlIXfZIU0
எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.

அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார்.
Courtesy- net

Richardsof
11th June 2014, 08:54 AM
துக்ளக் சோ எம்.ஜி.ஆரைத் தன் பத்திரிகையில் எத்தனையோ கேலிச் சித்திரங்கள் போட்டு, எம்.ஜி.ஆருக்கு ஆட்சி செய்யவே தெரியாது, கோமாளி ஆட்சி என்றெல்லாம் விமர்சித்தார். எதுவுமே எடுபடவில்லை!

எம்.ஜி.ஆர். எதையுமே கண்டுகொள்ளவில்லை. கலைஞர் போல் பதிலுக்குப் பதில் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விடவில்லை; பதில் சொல்லிக்கொண்டு இருக்கவில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தார். அவர் மீது அம்பு எய்தவர்களே களைத்துப் போய் ஒரு கட்டத்தில் வில்லைக் கை நழுவ விட்டார்கள்.

யாரையும் எம்.ஜி.ஆர். எடுத்தெறிந்து பேசியதாக, யோசித்துப் பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, தொழிலில் போட்டியாக இருந்த சிவாஜி கணேசன், அரசியலில் போட்டியாக இருந்த கருணாநிதி இருவரையும் எம்.ஜி.ஆர். ஒரு நாளும் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ விமர்சித்ததில்லை. ‘என் நண்பர் கருணாநிதி அவர்கள்...’, ‘என் தம்பி கணேசன்...’ என்றுதான் பேசுவார்.

ஒருமுறை, சென்னை வானொலியில் வி.ஐ.பி. தொகுத்து வழங்கும் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. தொகுத்து வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை நானும் ரசித்துக் கேட்டேன். டி.எம்.எஸ். பாடல்கள் பட்டையைக் கிளப்பின. சிவாஜி ஒவ்வொரு குறிப்பைச் சொன்ன பிறகும் அதற்கான பாட்டு ஒலிபரப்பாகும். இப்படிப் பத்துப் பன்னிரண்டு பாடல்கள் அன்று ஒலிபரப்பாயின. பெரும்பாலும் தான் நடித்த படங்களிலிருந்தும், ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் வேறு சில படங்களிலிருந்தும் தொகுத்து வழங்கினார் சிவாஜி. நிகழ்ச்சியின் இறுதிவரையில் எம்.ஜி.ஆர். பாடல் எதையுமே சிவாஜி குறிப்பிடவில்லை; ஒலிபரப்பவில்லை. சிவாஜி ரசிகனாக இருந்தபோதிலும், எனக்கே இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.

மறுநாள், செய்தித்தாள்களில் எம்.ஜி.ஆர். தேனியிலோ அல்லது பெரியகுளத்திலோ கூட்டத்தில் பேசிய பேச்சு முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. படித்தேன். சிவாஜியைப் பற்றிக் குறிப்பிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்திருந்தார். “தம்பி கணேசனுக்கு இணையான நடிகர் உலகிலேயே இல்லை. ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர். அதனால், நமது கணேசனை ‘தென்னகத்து மார்லன் பிராண்டோ’ என்பார் அறிஞர் அண்ணா. உண்மையில், மார்லன் பிராண்டோதான் தன்னை ‘ஹாலிவுட் சிவாஜி’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஈடு, இணையற்ற நடிகர் தம்பி கணேசன்” என்று பேசியிருந்தார். சிலிர்த்துப் போனேன்.

எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்தான். அவர் இடத்தை இனியொருவர் பிடிக்க முடியாது!

Courtesy - ravi prakash

ujeetotei
11th June 2014, 12:33 PM
ROOP SIR PLEASE TELL WHAT SHE TOLD ABOUT OUR THALAIVAR

https://www.youtube.com/watch?v=SkJ5o4089fE

Regarding the Malayalam movie clip Meleparambil Aanveedu, Jayaram secretly marries Shobana ailing from Tamil Nadu, takes her to his house in Kerala and tells his family she found a servant for the house. Janardhanan in the above clip ask Shobana who is in the photo she says that this is her GOD.

ujeetotei
11th June 2014, 12:37 PM
A detailed post about this movie and the MGR photo is given below.

http://www.mgrroop.blogspot.in/2011/11/eulogy-in-malayalam-movie.html

ujeetotei
11th June 2014, 12:37 PM
Today update of srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2014/06/ayirathil-oruvan-release-16.html

ujeetotei
11th June 2014, 12:39 PM
Odum Megangale song and the dialogs.


http://www.youtube.com/watch?v=_UrWmA5egR8&feature=player_embedded#t=0

Reel and real fuses in 2.44 to 2.47. Meeting of life size MGR on the screen and real people with camphors lighted.

siqutacelufuw
11th June 2014, 02:10 PM
http://s15.postimg.org/qldxj6ptn/VFF.jpg (http://postimage.org/)

உலகின், அழகிய மிகப் பெரிய பூங்காவில், பூக்களின் நடுவே நம் புரட்சி தலைவரின் புன்னகை ததும்பும் எழில் மிகு தோற்றம் !

கடும் வெப்ப சூழ்நிலையில் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் பதிவினை வழங்கிய சகோதரர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
11th June 2014, 02:17 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரப்புவதையே பிரதான நோக்கமாக கொண்டு அவர் தொடர்பான அரிய செய்திகளை பலரும் அறியும் வண்ணம் பதிவிட்டு, குறிப்பாக மக்கள் திலகத்தின் படமும் , பெயரும் இடம் பெற்ற மற்ற படங்களின் வீடியோ தொகுப்புகளை மிக அழகாக பதிவிட்டு இத்திரியினை பார்வையிடும் எண்ணற்ற எம். ஜி. ஆர். பக்தர்களையும், ரசிகர்களையும், அபிமானிகளையும், அன்பர்களையும், மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிக்கும் அருமை சகோதரர் திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் கலந்த நன்றி !

http://i62.tinypic.com/hu0jzl.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

siqutacelufuw
11th June 2014, 02:22 PM
துக்ளக் சோ எம்.ஜி.ஆரைத் தன் பத்திரிகையில் எத்தனையோ கேலிச் சித்திரங்கள் போட்டு, எம்.ஜி.ஆருக்கு ஆட்சி செய்யவே தெரியாது, கோமாளி ஆட்சி என்றெல்லாம் விமர்சித்தார். எதுவுமே எடுபடவில்லை!

எம்.ஜி.ஆர். எதையுமே கண்டுகொள்ளவில்லை. கலைஞர் போல் பதிலுக்குப் பதில் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விடவில்லை; பதில் சொல்லிக்கொண்டு இருக்கவில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தார். அவர் மீது அம்பு எய்தவர்களே களைத்துப் போய் ஒரு கட்டத்தில் வில்லைக் கை நழுவ விட்டார்கள்.

யாரையும் எம்.ஜி.ஆர். எடுத்தெறிந்து பேசியதாக, யோசித்துப் பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, தொழிலில் போட்டியாக இருந்த சிவாஜி கணேசன், அரசியலில் போட்டியாக இருந்த கருணாநிதி இருவரையும் எம்.ஜி.ஆர். ஒரு நாளும் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ விமர்சித்ததில்லை. ‘என் நண்பர் கருணாநிதி அவர்கள்...’, ‘என் தம்பி கணேசன்...’ என்றுதான் பேசுவார்.

ஒருமுறை, சென்னை வானொலியில் வி.ஐ.பி. தொகுத்து வழங்கும் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. தொகுத்து வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை நானும் ரசித்துக் கேட்டேன். டி.எம்.எஸ். பாடல்கள் பட்டையைக் கிளப்பின. சிவாஜி ஒவ்வொரு குறிப்பைச் சொன்ன பிறகும் அதற்கான பாட்டு ஒலிபரப்பாகும். இப்படிப் பத்துப் பன்னிரண்டு பாடல்கள் அன்று ஒலிபரப்பாயின. பெரும்பாலும் தான் நடித்த படங்களிலிருந்தும், ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் வேறு சில படங்களிலிருந்தும் தொகுத்து வழங்கினார் சிவாஜி. நிகழ்ச்சியின் இறுதிவரையில் எம்.ஜி.ஆர். பாடல் எதையுமே சிவாஜி குறிப்பிடவில்லை; ஒலிபரப்பவில்லை. சிவாஜி ரசிகனாக இருந்தபோதிலும், எனக்கே இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.

மறுநாள், செய்தித்தாள்களில் எம்.ஜி.ஆர். தேனியிலோ அல்லது பெரியகுளத்திலோ கூட்டத்தில் பேசிய பேச்சு முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. படித்தேன். சிவாஜியைப் பற்றிக் குறிப்பிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்திருந்தார். “தம்பி கணேசனுக்கு இணையான நடிகர் உலகிலேயே இல்லை. ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர். அதனால், நமது கணேசனை ‘தென்னகத்து மார்லன் பிராண்டோ’ என்பார் அறிஞர் அண்ணா. உண்மையில், மார்லன் பிராண்டோதான் தன்னை ‘ஹாலிவுட் சிவாஜி’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஈடு, இணையற்ற நடிகர் தம்பி கணேசன்” என்று பேசியிருந்தார். சிலிர்த்துப் போனேன்.

எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்தான். அவர் இடத்தை இனியொருவர் பிடிக்க முடியாது!

Courtesy - ravi prakash

நம் இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள், வழங்கிய "சிறப்பு தேன்கிண்ணம்" நிகழ்ச்சியில், மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களின் படப் பாடலாகிய " சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் " ஒலிபரப்பியதாக நினைவு. ரஷிய கலைஞர்கள் தமிழகத்துக்கு விஜயம் செய்த போழ்து, அவர்களுக்கு, தான் நடித்த வெற்றிக்கவியங்கள் பல இருக்கையில், சிவாஜி கணேசன் நடித்த "தில்லானா மோகனாம்பாள்" திரைப்படத்தை தான் காண்பித்தார்.

இது ஒரு சிறு உதாரணம் தான். இது போல் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

சாதனைகளின் சிகரம் மட்டுமல்ல, பெருந்தன்மையின் சிகரமும் நம் மக்கள் திலகம் தான். அதனால்தான், மறைந்து 26 வருடங்கள் நிறைவு பெற்றும், இன்றும் மக்கள் மனதில் நீங்காத நினைவுகளுடன், அசைக்க முடியாத வாக்கு வங்கியை கொண்டு, தான் உருவாக்கிய இரட்டை இலை சின்னத்துக்கு அபரிதமான வெற்றியை குவித்து, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். இதன் மூலம் அரசியலிலும் சாதனை மன்னனாக இன்றும் கருதப்படுகிறார், தோல்வியை கண்டறியாத நம் பொன்மனச்செம்மல்.

http://i60.tinypic.com/2pqomdv.jpg

செய்தியினை பதிவிட்ட திரு வினோத் அவர்களுக்கு நன்றி. !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

ainefal
11th June 2014, 02:33 PM
WATCH THE CLIPPINGS FROM 8.20 TO 10.54 THIS IS RANGA MOVIE MASTER TINGU , HAJAA SHERIFF PLAY STICK FIGHT IN FRON OF TV LOOKING THALAIVAR FIGHT SEQUENCE THAYA KATHA THANAYAN . ALONGWITH KARATHA MANI

https://www.youtube.com/watch?v=ialM5uM8cH8

For this one scene I saw the movie on the 1st day and 2nd day @ Annai Abirami. If I am not wrong "Ranga" is is first movie to be screened @ Annai Abiramai. In the same manner "Charas" was the first movie in Abirami.

Russellbpw
11th June 2014, 04:39 PM
யாரையும் எம்.ஜி.ஆர். எடுத்தெறிந்து பேசியதாக, யோசித்துப் பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, தொழிலில் போட்டியாக இருந்த சிவாஜி கணேசன், அரசியலில் போட்டியாக இருந்த கருணாநிதி இருவரையும் எம்.ஜி.ஆர். ஒரு நாளும் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ விமர்சித்ததில்லை. ‘என் நண்பர் கருணாநிதி அவர்கள்...’, ‘என் தம்பி கணேசன்...’ என்றுதான் பேசுவார்.

ஒருமுறை, சென்னை வானொலியில் வி.ஐ.பி. தொகுத்து வழங்கும் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. தொகுத்து வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை நானும் ரசித்துக் கேட்டேன். இப்படிப் பத்துப் பன்னிரண்டு பாடல்கள் அன்று ஒலிபரப்பாயின. பெரும்பாலும் தான் நடித்த படங்களிலிருந்தும், ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் வேறு சில படங்களிலிருந்தும் தொகுத்து வழங்கினார் சிவாஜி.

நிகழ்ச்சியின் இறுதிவரையில் எம்.ஜி.ஆர். பாடல் எதையுமே சிவாஜி குறிப்பிடவில்லை; ஒலிபரப்பவில்லை. சிவாஜி ரசிகனாக இருந்தபோதிலும், எனக்கே இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.

மறுநாள், செய்தித்தாள்களில் எம்.ஜி.ஆர். தேனியிலோ அல்லது பெரியகுளத்திலோ கூட்டத்தில் பேசிய பேச்சு முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. படித்தேன். சிவாஜியைப் பற்றிக் குறிப்பிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்திருந்தார். “தம்பி கணேசனுக்கு இணையான நடிகர் உலகிலேயே இல்லை. ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர். அதனால், நமது கணேசனை ‘தென்னகத்து மார்லன் பிராண்டோ’ என்பார் அறிஞர் அண்ணா. உண்மையில், மார்லன் பிராண்டோதான் தன்னை ‘ஹாலிவுட் சிவாஜி’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஈடு, இணையற்ற நடிகர் தம்பி கணேசன்” என்று பேசியிருந்தார்.

சிலிர்த்துப் போனேன்.

எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்தான். அவர் இடத்தை இனியொருவர் பிடிக்க முடியாது!

Courtesy - ravi prakash

இனிய நண்பர் திரு எஸ்வி அவர்களுக்கு

தாங்கள் இங்கே தொகுத்துள்ள, இணையதளத்தில் ஒருவர் எழுதியுள்ள செய்தி படித்தேன்.

தவறான தகவலை கூறியிருக்கிறார் அந்த இனிய நண்பர். அதுவும் சிவாஜி ரசிகன் என்று கூறிக்கொண்டு. எழுதிய விதத்திலிருந்தே அவர் சிவாஜி ரசிகர் அல்லர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

அவர் குறிப்பிட்ட அந்த இரண்டு சிறப்பு தேன்கிண்ணம் நிகழ்சிகள் அப்போதைய நிகழ்சிகளில் பெரிதாக பேசப்பட்டது. காரணம், உண்மையான ரசிப்புத்தன்மை நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகத்திற்கு பரஸ்பரம் உண்டு என்று அனைவராலும் பேசப்பட்டது.

இனி விஷயத்திற்கு வருகிறேன் - அந்த சிறப்பு தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் அந்த நண்பர் பொய் உரைதிருப்பதை போல சிவாஜி, mgr அவர்கள் பாடலை கூறாமல் இல்லை.

திரு.mgr படங்களின் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று நடிகர் திலகம் "ஆடாத மனமும் உண்டோ" என்ற பாடலை கூறி அந்த பாடலும் தேன்கிண்ணத்தில் ஒலிபரப்பப்பட்டது.

அதுபோல திரு mgr அவர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடலை விரும்பி ஒளிபரப்பியதை நண்பர் எழுதியுள்ளார். அந்த தகவல் மட்டும்தான் உண்மை.

இந்த உண்மையை அறியவேண்டுமானால் வானொலி அண்ணா என்றழைக்கப்படும் திரு,கூத்தபிரான் அவர்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம் அல்லது அப்போதைய சவுண்ட் engineer , திரு நடராஜன் (இப்போது அவர் ஒரு consultant - air ) அவர்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

திரு. MGR புகழை பரப்ப "சிவாஜி" என்ற யுக கலைஞன் பெயர் எப்படியெல்லாம் இவரகளைபோல் உள்ளவர்களுக்கு உதவுகிறது என்பதை நினைத்துபார்க்கும்போது புளகாங்கிதம் அடைகிறது !

சிவாஜியின் பெயர்க்கே இவ்வளவு பெருந்தன்மை குணம் இருக்குபோது சிவாஜி என்கிற மாபெரும் கலைஞனுக்கு எவ்வளவு பெருந்தன்மை குணம் இருக்கும் என்பது இதிலிருந்தே விளங்கும் !

இணையதள பதிவுகளில் ரசிகர் பதிவிடும் பதிவுகள் எந்தளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்பதற்கு இது ஒரு உதாரணம் !

இப்படி சிவாஜி ரசிகன் என்ற பெயரில் சிவாஜியை சிறுமை படுத்துவதில் என்ன சந்தோஷம் அந்த நண்பர் அடைவாரோ தெரியவில்லை.

அதை எழுதியவர் சிவாஜி ரசிகர் அல்லர் என்பது தான் உண்மை. !

fidowag
11th June 2014, 05:59 PM
இன்றைய மாலை மலர் விளம்பரம்.

http://i62.tinypic.com/faa3y9.jpg

Russellisf
11th June 2014, 09:46 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zpsc9a5bf3d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zpsc9a5bf3d.jpg.html)

26 - 6 - 1966 , காஞ்சி இதழ்
அட்டைப்படம் .

Russellisf
11th June 2014, 10:03 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsb102de32.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsb102de32.jpg.html)

Russellisf
11th June 2014, 10:25 PM
http://www.youtube.com/watch?v=VU3uAoc3k5k

Russellisf
11th June 2014, 10:26 PM
http://www.youtube.com/watch?v=l0H-dnZMO5s

Russellisf
11th June 2014, 10:54 PM
ஒட்டிப்பிறக்காத இரட்டையர்கள், தமிழ்சினிமாவும் எம்ஜிஆரும் -

இன்று ஜனவரி 17, 2014., மறைந்த புரட்சித்தலைவர் மக்கள் திலகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 97ஆவது பிறந்ததினம். 1917 இல் கோபாலமேனன் – சத்யபாமா தம்பதியருக்கு ஸ்ரீலங்கா கிண்டி அருகே உள்ள கிராமத்தில் மகனாகப் பிறந்தார். பால்ய காலத்திலும் அதனைத் தொடர்ந்து அவரது இளமைப் பருவத்திலும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்த எம்.ஜி.ஆர் தனது அன்னையின் வளர்ப்பினில் நல்லவராகவே வளர்ந்தார்.
சிறுவயதில் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர் 1936 ஆம் வருடம் சதிலீலாவதி படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 1978 இல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை வசூல் சக்ரவர்த்தியாக தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கினார். அதே காலகட்டங்களில் தீவிர அரசியலிலும் ஈடுபட்டதால் தொடர்ந்து படங்களில் நடிக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.
அதனையடுத்து, அவர் நடித்த அவசர போலீஸ் 100, நல்லதே நாடு கேட்கும் ஆகிய படங்கள் முற்றுப்பெறாமலேயே நின்று விட்டன. இதில் அவசர போலீஸ் 100 இல் எம்ஜிஆர் நடித்த சில காட்சிகளை அடிப்படையாக வைத்து கே.பாக்யராஜ் இயக்கி நடித்து அதேபெயரில் முழுப்படமும் வெளிவந்து வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்களில் ஒன்றான எங்க வீட்டுப்பிள்ளை பாணியில் திரைக்கதை அமைத்திருப்பார் கே.பாக்யராஜ்.
தனது இளமைப்பருவத்தில் தான் சார்ந்த ஹிந்து மதத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும் தீவிர முருக பக்தராகவும் விளங்கினார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு திராவிட இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டபிறகு பகுத்தறிவுக்கொள்கையைக் கடைபிடித்தாலும் தீவிர நாத்திகராக என்றும் அவரை வெளிக்காட்டிக்கொண்டதில்லை. போலிமதச்சார்பின்மையைக் கடைபிடித்து மக்களை ஏமாற்றாமலேயே அனைத்து சமூகத்தினரையும் நேசித்து அவர்களின் மனதில் நீக்கமற நிறைந்த மாமனிதராக விளங்கினார்.
எம்.ஜி.ஆர், திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது , அதனைத் தொடர்ந்து அதிமுகவை ஆரம்பித்து அவரது ஆயுட்காலம் வரை யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக விளங்கியது எல்லாம் நாடு நன்கறியும்.
திரையுலகம் என்று வரும் போது. தமிழில் முதல் படமாக நடராஜ முதலியாரின் தயாரிப்பு-இயக்கத்தில் வெளீவந்த கீசக வதம் வெளியான ஆண்டு 1917. அதே ஆண்டில் பிறந்த எம்.ஜி,ஆர் தமிழ்த்திரையுலகின் ஒட்டிப்பிறக்காத இரட்டையராக விளங்கினார் என்றால் அது மிகையாகாது. ஆக, தமிழ்த்திரையுலகிற்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரே வயது. தமிழ்த்திரையுலகம் உள்ளவரை எம்.ஜி.ஆர் புகழ் நிலைத்து நிற்கும். 1936 முதல் 1978 வரையிலான 38 ஆண்டுகளில் 136 படங்களில் நடித்திருக்கிறார். ரிக்*ஷாவை ஓட்டியே பாரதவாங்கியவர் எம்.ஜி.ஆர் என்று சொன்னால் அதுமிகையாகாது. ஆம், அவர் நடிப்பில் 1972 இல் வெளிவந்த ரிக்*ஷா காரன் என்கிற படம் அவருக்கு பாரத் வாங்கிக் கொடுத்தது. சமூகக் கருத்துக்களை உள்ளடக்கிய, அதே நேரம் வணிகரீதியலான வெற்றியும் பெறக்கூடிய படங்களுக்கு அவரது படங்கள் தாம் முன்னோடி என்று சொல்லாம். அந்த அளவிற்கு இன்றளவும் அவரது பாணிபின்பற்றப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர், அவர் வாழும் காலம் வரை வள்ளலாகவேத் திகழ்ந்திருக்கிறார். தேடி வந்தவர்களின் பசியையும் வறுமையையும் போக்க அவர் தவறியதே இல்லை.
அவரைத் தேடி வந்த பலருக்கும் அவர் அள்ளித்தான் கொடுத்திருக்கிறாரேயன்றி ஒருபோதும் கிள்ளிக்கொடுத்ததில்லை. அவர்களும் நன்றாக இருந்து அவர்களை நம்பிவருவர்களும் பயன்பெற்றால் ஒட்டுமொத்த சமூகமும் பயன்பெறுமே என்கின்ற எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்தைத் தவிர அதில் வேறு எதுவும் இருக்கமுடியாது. அவரால் பயன்பெற்ற பலர் இன்று பல்கலைக்கழங்களும் கல்லூரிகளும் நடத்திக்கொண்டு எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இன்னும், எம்.ஜி.ஆருடன் பழகியிருக்கிறேன், அவர் எனது நண்பர், அவர் தோட்டத்தில் விளையாடியிருக்கிறேன், அவருடன் அமர்ந்து உணவருந்தியிருக்கிறேன் என்று சொல்பவர்கள் பலராலும் அவரைப்போல் பொது நலவாதியாக விளங்கமுடியாததும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
எம்.ஜி.ஆரைப் பின்பற்றுகிறேன் என்று சொல்பவர்கள் , அவரளவுக்கு முடியாவிட்டாலும் தங்களால் இயன்றதை இந்தச் சமுதாயத்திற்குச் செய்யவேண்டும். செய்யத்தவறுபவர்களுக்கு எங்கவீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆரின் சாட்டை மேலோகத்தில் காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
courtesy net

Russellisf
11th June 2014, 11:43 PM
today i watched ram our shyam (engaveetu pillai hindi remake ) my favourite hotel scene watch two legends performance

http://www.youtube.com/watch?v=6iEz3U0DUII

http://www.youtube.com/watch?v=mVYEC_6CXTg

Russellisf
12th June 2014, 05:48 AM
"தாய் சொல்லைத் தட்டாதே" சூப்பர் ஹிட், நூறு நாட்கள், தொடர்ந்து ஹவுஸ்புல்

"திருடாதே" வெற்றியின் மூலமாக, சமூகப் படங்களில், நவீன உடைகளில் நடிக்கலாம் என்ற நம்பிக்கை எம்.ஜி.ஆருக்கு உண்டாயிற்று. சரித்திரப் படங்களை உருவாக்க செலவு அதிகம். அதிக காலம் பிடிக்கும். ஆனால், சமூகப் படங்களை குறைந்த செலவில், குறுகிய காலத்தில் தயாரிக்கலாம். எனவே, எம்.ஜி.ஆர். படங்கள் வரிசையாக வரத்தொடங்கின.

1961_ல் "திருடாதே"க்கு பிறகு, "சபாஷ் மாப்பிளே", "நல்லவன் வாழ்வான்", "தாய் சொல்லைத் தட்டாதே" ஆகிய மூன்று படங் கள் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந் தன. இதில், "சபாஷ் மாப்பிளே" என்ற படம் நடிகை மாலினியின் சொந்தப்படம். (சபாஷ் மீனா வில் சிவாஜியுடன் கதாநாயகி யாக நடித்தவர், மாலினி) மாலினிக்கு படங்களே இல்லை. அவர் வேண்டிக் கொண்டதால், "சபாஷ் மாப் பிளே" படத்தில் நடிக்க எம்.ஜி. ஆர். சம்மதித்தார்.



எம்.,ஜி.ஆரு டன் கதாநாயகியாக மாலினி நடித்தார். படத்தை மாலினியின் கணவர் ராகவன் டைரக்ட் செய்தார். டைரக்ட் செய்தார் என்பதை விட, டைரக்ட் செய்யக் கற்றுக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும். விளைவு, இந்தப்படம் சரியாக ஓடவில்லை. அரசு பிக்சர்ஸ் தயாரித்த "நல்லவன் வாழ்வான்" படத்தில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனா வும் ஜோடியாக நடித்தனர். அண்ணா எழுதிய கதை இது. ப.நீலகண்டன் டைரக்ட் செய் தார். இது சராசரி படம். 7_11_1961_ல் வெளியான "தாய் சொல்லைத் தட்டாதே" பெரிய வெற்றிப்படம். இது சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த படம்.

1956_ல் படக்கம்பெனி தொடங்கிய சின்னப்ப தேவர், எம்.ஜி.ஆரை வைத்துத்தான் தனது முதல் படத்தை ("தாய்க் குப்பின் தாரம்") தயாரித்தார். இருவரும் நீண்ட கால நண்பர்கள். எனினும் "தாய்க்குப்பின் தாரம்" படத்தை எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெறாமல் தெலுங்கில் "டப்" செய்து வெளியிட்டதால் தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் சின்னப்பதேவர், வேறு நடிகர்களை வைத்து "நீலமலைத்திருடன்" (ரஞ்சன்), "யானைப்பாகன்" (கல்யாண்குமார்), வாழவைத்த தெய்வம் (ஜெமினிகணேசன்), கொங்கு நாட்டுத் தங்கம் (ஆனந்தன்) முதலிய படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்கும், தேவருக் கும் கருத்து வேற்றுமை ஏற்பட்ட போதிலும் ஒருவர் மீது ஒருவர் அன்பும், பாசமும் கொண்டிருந் தனர். "நல்ல நண்பர்களாக இருந்து, இப்படிப் பிரிந்து விட்டோமே" என்று இருவரும் வருந்தினர்.

1961_ம் ஆண்டின் பிற்பகுதி யில், "தாய் சொல்லைத் தட் டாதே" என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்க தேவர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இதற்கான கதை_வசனத்தை ஆரூர் தாஸ் எழுதி முடித்திருந்தார். இந்தப் படத்துக்கான பாடல் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, வேறொரு படப்பிடிப்புக்காக ஸ்டூடியோவுக்கு எம்.ஜி.ஆர். வந்தார். அவரும், தேவரும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டனர். இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். ஐந்து வருட இடைவெளிக்குப்பிறகு, இருவரும் நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.

"என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் அண்ணே!" என்று தேவர் கேட்டுக் கொண்டார். "நிச்சயமாக நடிக்கிறேன் அண்ணே" என்றார், எம்.ஜி.ஆர். (எம்.ஜி.ஆரை விட தேவர் கொஞ்சம் மூத்தவர். எனினும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார்.)

"தாய் சொல்லைத் தட்டாதே" படத்தில் ஜெமினி கணேசனை யும், சரோஜாதேவியையும் ஜோடியாக நடிக்க வைக்க தேவர் திட்டமிட்டிருந்தார். அந்தத் திட்டத்தை மாற்றி, எம்.ஜி.ஆரையும், சரோஜாதேவி யையும் நடிக்க வைத்தார். ஏற்கனவே கதை_வசனம் தயா ராக இருந்ததால், படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க எம்.ஜி.ஆர். சம்மதித்து, அதற் கேற்றபடி `கால்ஷீட்' கொடுத் தார். கதை அமைப்பிலும், வச னத்திலும், எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி ஒரு சில மாற்றங்களை மட்டும் ஆரூர்தாஸ் செய்தார். எம்.ஆர்.ராதாவும் இப்படத் தில் நடித்தார். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்தார்.

படப்பிடிப்பு வேகமாக நடந் தது. ஒரே மாதத்தில் படம் முடி வடைந்து, 7_11_61 தீபாவளித் திருநாளில் ரிலீஸ் ஆகியது. "தாய் சொல்லைத் தட்டாதே" சூப்பர் ஹிட் படமாக அமைந் தது. நூறு நாட்கள், தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி, வெற்றி விழா கொண்டாடியது. எம்.ஜி.ஆர் _ தேவர் நட்புறவு முன்பைவிட பலமாக அமைய, தொடர்ந்து தேவரின் படங்களில் எம்.ஜி.ஆர். நடிக்கலானார்


courtesy -net

Richardsof
12th June 2014, 06:32 AM
மக்கள் திலகத்தின் படங்கள் சன் லைப் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிப்பரப்பாகி வருவது மகிழ்ச்சியான தகவல் .

இன்று காலை - காவல்காரன்

இன்று இரவு - பறக்கும் பாவை

சனிக்கிழமை - கூண்டுக்கிளி

Richardsof
12th June 2014, 12:39 PM
Courtesy - Ramakrishna -net
1975ல் எம்.ஜி.ஆர். அவர்களை அதிக கும்பல் இல்லாமல் மிக அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

எங்கள் BHEL Factory க்கு வருகை தந்திருந்தார். கேண்டீன் வாசலில் இருந்த மேடையில் ஏறி நின்று 10 - 15 நிமிடங்கள் பேசினார். நான் அங்கு அவருக்கு மிக அருகில் நின்று இருந்தேன். மொத்தமாக ஒரு 1000-2000 ஊழியர்கள் மட்டுமே இருந்தோம்.

Protected Area ஆகையால் பொதுமக்கள் கூட்டமாக வர முடியாமல் இருந்தது. அந்த ஷிஃப்டில் இருந்த ஊழியர்கள் மட்டுமே.

பேசி முடித்த பிறகு அந்த சற்றே உயரமான [சுமார் 4 அடி இருக்கும்] மேடையிலிருந்து படி இறங்கி வராமல் தொப்பென்று குதித்து விட்டார். பிறகு ரெடியாக இருந்த ஜீப்பில் ஏறி ஃபேக்டரியின் பல்வேறு தொழிற்கூடங்களைப் பார்வையிட்டுவிட்டு, கிளம்பி விட்டார்.

வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, வெள்ளைத்தொப்பி, கருப்பு கூலிங் க்ளாஸ், ரோஸ் கலரில் முகம், இன்றும் நன்றால நினைவில் உள்ளது.

சுகமான நினைவலைப்பதிவுக்கு நன்றிகள், ஐயா.

Richardsof
12th June 2014, 12:45 PM
http://i62.tinypic.com/rvkfid.jpg

Richardsof
12th June 2014, 12:48 PM
V.c guganathan

‘கண்ணன் 1 காதலி 2’ திரைப்பட இசை வெளியிட்டு அவர் பேசியதாவது,

“நான் பள்ளியில் படித்த காலத்தில் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகனாக இருந்தேன். ஒரு முறை அவருடைய படங்களைப் பார்த்து அவருக்கு கடிதம் எழுதினேன். தங்களைப் பார்க்க எனக்கு அனுமதி அளித்து நேரம் தருமாறு கேட்டிருந்தேன்.

அதற்கு அவருடைய உதவியாளர் பதிலளித்தார். நீங்கள் நேரில் வரவேண்டாம், உங்கள் ஊருக்கு அவர் வரும் போது நீங்கள் சந்திக்கலாம் என்றார்.

ஆனால், அவரைச் சந்திக்கும் நாட்கள் எனக்கு உடனே கிடைத்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த போது, ஒரு விழாவிற்கு அவரை அழைத்து வர சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த விழா முடிந்ததும், அவரிடம் எனக்கு நடிக்கும் ஆசை உள்ளது, வாய்ப்பு கிடைக்குமா என கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவரை நேரில் பார்த்ததும், அவருடைய அழகுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த ஆசையையே அறவே வெறுத்தேன்.

அவர் படிப்பைத் தவிர வேறு என்ன தெரியும் என்று என்னிடம் கேட்ட போது, கதை எழுதுவேன் என்றேன். உடனே, அவருக்கு ஒரு கதை எழுதித் தருமாறு கேட்டார்.

சில நாட்கள் கழித்து, அவரிடம் போய் ஒரு கதை சொன்னேன். ஆனால், அந்த கதை பெண்களை மையப்படுத்திய கதை. எனக்காக நீ கதை எழுத வேண்டுமென்றால் இப்படியா எழுதுவாய் என்றார். நானும் சில நாட்கள் சந்தர்ப்பம் கேட்டு, நான்கு நாட்கள் கழித்து வேறு ஒரு கதையுடன் சென்றேன்.

அந்த கதைதான் ‘புதிய பூமி’ திரைப்படமாக வெளிவந்தது. என்னை முதன் முதலாக திரையுலகில் ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தியது அவர்தான்.

அதன் பின் ஒரு நாள் என்னை சந்திக்க தயாரிப்பாளர் கோவை செழியனை, எம்ஜிஆர் அவர்கள் அனுப்பி வைத்தார். அவர் நேராக வகுப்பறைக்கு வந்து பேராசிரியடம், உங்களைப் பார்க்கத்தான் நான் வந்தேன் என்றார். அவரோ என்னையா என்று கேட்டார். நீங்கள்தானே வி.சி.குகநாதன் என்றார். அவரோ, நானில்லை, குகநாதன் இந்த வகுப்பின் மாணவன் , என்று என்னை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.

கோவை செழியன் அவர்களுக்கு மிகவும் ஆச்சரியம். ஒரு கல்லூரி மாணவரைப் பார்க்க எம்ஜிஆர் நம்மை அனுப்பி இருக்கிறாரே என்று.

அவருக்கு நான் சொன்ன கதைகளில் ஒன்றுதான் பின்னர் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘குமரிக்கோட்டம்’ திரைப்படம்.

எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் அதன் பின் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கதைகளை திரைப்படங்களுக்காக எழுதியிருக்கிறேன்.

ஒருவரிடத்தில் உள்ள திறமையை, அத்துடன் நிறுத்திக் கொள்ள வைக்காமல், அவர் மேலும் வளர்வதற்கு வாய்ப்புத் தரும் ஒரே மனிதர் எம்ஜிஆர் அவர்கள்.

அவர் ஏற்றி வைத்த விளக்குதான் இன்று வரை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ” என்றார்.

Richardsof
12th June 2014, 01:22 PM
THANKS - THIRU MANISEGARAN -MGR FILM SONGS ARE ALWAYS POPULAR

MGR was certainly "prophetic" in his own ways. He knew that his acting parameters were limited. He retained same style of acting from day one. Yet he felt that his ultimate strength would be songs. As has been stated several times, MGR looked into every angle and aspect of songs in his films.

1) MGR decided the song writers

2) Sat with them and went through the lyrics word for word and line for line. ( The late Marudhakazi and Valee related to me this)

3) He sat with MDs and approved the tunes. RM Veerappan said that all the tunes in MGR songs were approved by MGR. MGR event went to the extent of buying western vinyl records for the listening of the MDs- Kunnakkudi Vaithiyanathan has said this when songs for Navarathinam were composed

4) MGR decides the singers as well.


5) MGR decided the screenplay for the song scenes (Puthaneri Subramaniam related this with me at a breakfast talk in his house. He wrote a song "Veesu Thendrale Veesu" for Nadodi Mannan, for which MGR imagined the song scene. However the song was left out and later used in Ponni Thirunaal. But MGR does contribute to the picturisation)

The man's intense and deep involvement rewarded we fans very well in that his songs were instant hits, and his song scenes were powerful and left indelible impressions upon us.

Singers who sang for him and lyricists who wrote for him received many chances from other MDs as well.

Many of his songs bagged several coveted awards.

His song scenes were too costly and yet enriching. The song scene with the biggest expenditure in those days was Azhagiya Thamizh Magal Ival- Rickshawkaran- two lakhs then. (One of the fours immortal songs where MSV used too many instruments)

His dream songs were simmply matchless!

See the song scene of "Nadagamellaam Kanden Unthan Aadum Vizhiyile" in Madurai Veeran- the staring point of major dream songs. How about "Kannnil Vanthu Minnal Pol" in Nadodi Mannan - underwater scene, that drew the attraction of the press.


All his efforts paid off. ADMK stood for elections in December 1984, in the absence of MGR. MGR was admitted in Brooklyn Hospital USA for multiple ailments. Tamilnadu felt desperate. The video clipping of MGR conversing with his doctor was screened in all theatres. But more importantly, MGR's famous songs were played over AIR over and over for two weeks. His songs carpetted the entire country and permeated the hearts and souls of his ardent fans.



And MGR won with the biggest mandate.
Cho ramasamy wrote" THis is the biggest mandate MGR has received. With this mandate MGR could do two things:
a) Use his tremeondous influence to do something good for the country; or
b) decide to be arrogant.


When MGR was in the Brooklyn Hospital one particular song became a prayer for MGR- again a prayer by all major religious groups. The song is "Aandavane Un Pathangalai Naan Kanneeril Neerattinen" - Oli Vilakku. By Vaalee.
When MGR recovered and returned to Tamilnadu V. N Janagi, MGR's consort told Valee that it was Valee Bagyam that saved MGR. Valee said it was actually VN Janagi's Taali Bagyam that rescued him!



When you listen to MGR songs, there is a special power. And that undeniable and irrepressible power is this: When you listen to his songs, the MDs who composed for his songs would be lost out. The singers will be lost out. Automatically the image of MGR and MGR alone would appear before our faces.

An example: Naan Aanayittaal Athu Nadanthuvittaaal....

Richardsof
12th June 2014, 01:25 PM
Mannadhi Mannan (Tamil, 1960) - Can you imagine! MGR pitted against the inimitable Padmini in a dance competition? MGR certainly gives his all (starting around 1:25) in trying to perform some semblance of Kathak, and the way he is edited makes it even more giggle-worthy. Padmini dances brilliantly as always! A humorous and enjoyable number. It even contains the "images made with the feet" technique mocked by the Tamil Padam song above.

http://youtu.be/tFvxoi3eEE0

Richardsof
12th June 2014, 01:28 PM
MAKKAL THILAGAM IN WESTERN STYLE DANCE

http://youtu.be/EsKcsULcPmk

Richardsof
12th June 2014, 01:30 PM
MAKKAL THILAGAM MGR - ANOTHER SUPER HIT DANCE AND SONG FROM ENKADAMAI -1964
http://youtu.be/aNaScr3eqVA

Richardsof
12th June 2014, 01:34 PM
“குரங்குவரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்!”

பாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா?

மனத்தோட்ட மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம்! பணத்தோட்டம்!! பணத்தோட்டம்!!!

இதனாலன்றோ வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என்று உறுதிபடக் கூறினார்.

இன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு?

அவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே!

“மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!”

சித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா?

மனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்! அதனால்…….

சங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.

ஆமாம்! ஆசைகளில் பொன்னாசையும் ஒன்றல்லவா!

இது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்!

இந்த ஆசைகள் போகுமா? மாறுமா? இவற்றுக்கான விடைகள்?!

பாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே!

“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”

மீதியைப் பார்த்தோம்!

ஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….!

மனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!

எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.

நம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா?

ainefal
12th June 2014, 02:19 PM
http://i58.tinypic.com/35907yr.jpg

Richardsof
12th June 2014, 04:02 PM
http://i62.tinypic.com/2v9f2vp.jpg

Richardsof
12th June 2014, 07:25 PM
மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை தற்போது சன் லைப் - தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது .

மக்கள் திலகத்துடன் சரோஜாதேவி - காஞ்சனா - மாதவி - மனோரமா -ஜி , சகுந்தாலா - ராஜ சுலோச்சனா

சந்திரபாபு - தங்கவேலு - நம்பியார் - அசோகன் - மனோகர் - ஒ.ஏ.கே. தேவர் - ராமதாஸ் - நாகையாஎன்று ஏராளமான நட்சத்திரங்களுடன் இனிமையான பாடல்கள் - அருமையான சண்டை காட்சிகள் - மக்கள் திலகத்தின் வீர சாகசங்கள் நிறைந்த படத்தை பார்க்கும்போது புத்தம் புதிய படம் பார்ப்பது போல் உணர்வு உண்டாகியது .

மெல்லிசை மன்னரின் புதுமையான ரீ ரெகார்டிங் மற்றும் சிறப்பான ஒளிப்பதிவு . மக்கள் திலகம் படம் ஆரம்பம்முதல் இளமையான தோற்றத்தில் , பல வண்ண உடைகளில் தோன்றி சிறப்பாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு விருந்து .

Richardsof
12th June 2014, 07:36 PM
http://i61.tinypic.com/5k4tc5.jpg

oygateedat
12th June 2014, 07:44 PM
http://s12.postimg.org/ac1bbwsu5/vdsss.jpg (http://postimage.org/)

Russellisf
12th June 2014, 08:37 PM
https://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw

Russellisf
12th June 2014, 08:38 PM
https://www.youtube.com/watch?v=ZWlUdydcdao

Russellisf
12th June 2014, 08:40 PM
https://www.youtube.com/watch?v=8z2NHmZsnx4

Russellisf
12th June 2014, 08:42 PM
https://www.youtube.com/watch?v=vO9tkBizhgY

Russellisf
12th June 2014, 08:43 PM
https://www.youtube.com/watch?v=UjcVb0ZFcVs

Russellisf
12th June 2014, 08:44 PM
https://www.youtube.com/watch?v=R34NE6i1G-I

Russellisf
12th June 2014, 08:57 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zpsa83fe0b7.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zpsa83fe0b7.jpg.html)

ainefal
12th June 2014, 09:12 PM
http://www.youtube.com/watch?v=xjxd9x3AObk

http://www.youtube.com/watch?v=zoJh6Yz1_lE

தமிழர் ஆட்டு மந்தைகள் அல்ல என்பதை நிருபித்த நண்பருக்கு நன்றி. தமிழர்கள் கேரளா, கர்நாடகா, மலேசியா, ஜப்பான் என்று எங்கு போனாலும் உண்மைக்கு மட்டுமே ஆதரவு தருவார்கள் [எங்கே நன்மை இருந்த போதும் ஏற்றுக் கொள்ளும் உலகம்].

Russellisf
12th June 2014, 10:10 PM
Mumbaiel ORu Photo Studiovil
Nam Thalaivar


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/p_zps101cfe55.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/p_zps101cfe55.jpg.html)

Russellisf
12th June 2014, 10:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/m_zps9482afc9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/m_zps9482afc9.jpg.html)

Russellisf
12th June 2014, 10:13 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/n_zps778f7470.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/n_zps778f7470.jpg.html)

Russellisf
12th June 2014, 10:15 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/v_zpsf4b02160.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/v_zpsf4b02160.jpg.html)

Russellisf
12th June 2014, 10:16 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/z_zpsc9e939a9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/z_zpsc9e939a9.jpg.html)

fidowag
12th June 2014, 10:51 PM
10/06/2014 முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "நேற்று இன்று நாளை " தினசரி 3 காட்சிகள்
3 நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது.

http://i59.tinypic.com/walx1y.jpg

Russellisf
12th June 2014, 10:54 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/O_zps5aea1a76.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/O_zps5aea1a76.jpg.html)

fidowag
12th June 2014, 11:03 PM
சன்லைப் தொலைகாட்சியில் நேற்றைய எனக்கு பிடித்த பாடல் நிகழ்ச்சியில் நடனக்கலை நிபுணர் கலா மாஸ்டர் அவர்கள், மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரைபடத்தின் , "அதோ அந்த பறவை "
பாடலை ஒளிபரப்பும்போது பின்வருமாறு கூறினார்.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த காலத்தில் எடுக்கப்பட்ட என்னால்
மறக்க முடியாத பாடல். அருமையான ஒளிப்பதிவு/ஒலிப்பதிவு/இசைஅமைப்பு . அந்த பாடலின் கோரியா கிராபாரை நிச்சயம் பாராட்டியே
தீர வேண்டும். பொது உடைமை கருத்துக்கள், சமுதாய சீர்திருத்த
கருத்துக்கள் நிறைந்த வைர வரிகள் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் , இன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களும் பாடலில்
ஒன்றி போனார்கள்.

நன்றி.:கலா மாஸ்டர் அவர்கள்./சன்லைப் தொலைக்காட்சி.


ஆர். லோகநாதன்.

Russellisf
12th June 2014, 11:21 PM
ENGA VEETU PILLAI SOME OF RE-RELEASED FLASH BACK

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsd6e09246.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsd6e09246.jpg.html)

Russellisf
12th June 2014, 11:23 PM
2ND MAY 2010 CHENNAI NATRAJ

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/N_zps03bdddcd.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/N_zps03bdddcd.jpg.html)

Russellisf
12th June 2014, 11:25 PM
18TH AUGUST 2012 CHENNAI MAHALAXMI

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/banner4_zpsaf17d010.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/banner4_zpsaf17d010.jpg.html)

Russellisf
12th June 2014, 11:27 PM
31ST MAY 2012 IN COIMBATORE ROYAL THEATER

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/poster_14_zps0d346451.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/poster_14_zps0d346451.jpg.html)

ainefal
12th June 2014, 11:27 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/O_zps5aea1a76.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/O_zps5aea1a76.jpg.html)

தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் அல்ல என்பதற்கு மேலும் ஒரு சாட்சி.

Russellisf
12th June 2014, 11:28 PM
FEB 22ND 2009 CENTER OPEN THREE THEATERS

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/mdsg258748_mds_all_zps8458c755.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/mdsg258748_mds_all_zps8458c755.jpg.html)

Russellisf
12th June 2014, 11:30 PM
EVERGREEN SONG OF THIS FILM

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zps24ec0d6e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zps24ec0d6e.jpg.html)

http://www.youtube.com/watch?v=x8YtKBtSnvY

Russellisf
12th June 2014, 11:34 PM
http://www.youtube.com/watch?v=mh4f1DrZUMk

ainefal
12th June 2014, 11:42 PM
http://www.youtube.com/watch?v=8TJNStucCnQ

Russellisf
12th June 2014, 11:49 PM
10.08.2012 evp screened in madurai central

29.01.2012 in madurai palani murugan

Russellisf
12th June 2014, 11:52 PM
Fans can continue the celebrations as there is news of MGR’s Enga Veetu Pillai coming up digitally enhanced. The film is considered a classic in it’s era, with MGR playing a double role. Released in 1965 it collected $719,000. The film is a remake of Telugu movie Ramudu Bheemudu that had N. T. Rama Rao in lead. It proved to be a blockbuster commercial hit and MGR’s fan base increased by leaps and bounds after the release. He plays Ramu a cowardly man and another character named Ilango - a jobless youth, for the double act. Enga Veetu Pillai will be retouched with Dolby Digital Sound for the audio and new digital imaging technology will be employed for the video. Special effort is being put in to make the print look original and maintain it’s appealing quality.

COURTESY KOLLY TALK

Russellisf
13th June 2014, 12:07 AM
THANKS SAILESH SIR FOR SHARING AAYIRATHIL ORUVAN RE-RELEASED IN DUBAI


http://www.youtube.com/watch?v=oKNtZIUd3zE


THANKS LOT SAILESH SIR

Russellisf
13th June 2014, 05:04 AM
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் மக்கள் திலகத்தின் கடைசி படமாகும் (136வது படம்)..இந்த படம் திரைக்கு வரும் முன்பே மக்கள் திலகம் தமிழ்க முதலவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்..எனினும் இப்படத்தில் சில காட்சிகள் எடுக்கப்படாமல் மீதம் இருந்தன, முதலமைச்சராக பதவி ஏற்ற பின் தான் நடிக்கப்போவதில்லை என்பதனால், அப்போதைய ஆளுனர் திரு.பிரபு தாஸ் பட்வாரி அவர்களிடம் அனுமதி பெற்று, இரவு பகலாக இப்படத்தின் மீதமுள்ள பகுதிகளை முடித்துக்கொடுத்தார் மக்கள் திலகம்..அப்படி நடித்துக்கொடுத்ததில் இப்பாடல் காட்சியும் ஒன்று, எனவே மக்கள் திலகம் முதல்வராக தேர்வு செய்யப்ப்ட்டபின் நடித்த பாடல் என்ற பெருமை மிக்கது இப்பாடல்..
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை..தன் மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்..

Russellisf
13th June 2014, 05:04 AM
அண்ணா நீ என் தெய்வம்..
மக்கள் திலகத்தால் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டது, அவர் முதலமைச்சர் ஆனதால் படம் கைவிடப்பட்டது..எடுக்கப்பட்ட காட்சிகள் பாக்ய ராஜ் அவர்களின் 'அவசர போலீஸ் 100' படத்தில் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது...
மக்கள் திலகம், லதா, நம்பியார், பண்டரி பாய், மற்றும் பலர் நடித்த( நடிக்க இருந்த) இப்படம், வெளிவந்திருந்தால் மீனவ நண்பன் படத்துக்கு அடுத்து வெளியாகி இருந்திருக்கும்..
இன்றும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாக உள்ளது..
1,பறக்கும் பைங்கிளி ..சிரிக்கும் பூங்கொடி..
2. நீ நெனச்சதும் மழையடிக்கணும்..
3.என் மாப்பிளைக்கு இந்த மணிப்பிள்ளையை தொட்டு முத்தாட ஆசை வரும்..!!!

Russellisf
13th June 2014, 05:14 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/u_zps63ce978e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/u_zps63ce978e.jpg.html)

Russellisf
13th June 2014, 05:17 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/1096686474_zps8d6dbe67.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/1096686474_zps8d6dbe67.jpg.html)

Russellisf
13th June 2014, 05:23 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/EngaVeetuPillaiMGR_zps7f92bff6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/EngaVeetuPillaiMGR_zps7f92bff6.jpg.html)

Richardsof
13th June 2014, 05:30 AM
ஆயிரத்தில் ஒருவன் - வீடியோ காட்சிகள் மிகவும்அருமை . மக்கள் திலகத்தின் பலதரப்பட்ட ரசிகர்கள் , மொழி , இனம் நாடு கடந்து அவர் மீது வைத்துள்ள அபிமானத்தை , எம்ஜிஆரின் நடிப்பை ,ரசித்த காட்சிகள் மற்றும் அவர்கள் அளித்த பேட்டியில் மக்கள் திலகத்தை பற்றி கூறிய கருத்துக்கள் கேட்கும் போது மக்கள் திலகத்தின் சக்தி , புகழ் உணர முடிகிறது .நன்றி இதயக்கனி - சைலேஷ் சார் - யுகேஷ் சார் .

Richardsof
13th June 2014, 05:37 AM
எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி -
இங்குஇயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்

பாடல் வரிகள்
சத்தியமான வரிகள்
மக்கள் திலகத்தின் புகழ் இன்றும் ஜாதி -மொழி -இனம்- கடந்து புகழ் பரவி உள்ளது .

Russellisf
13th June 2014, 05:56 AM
விண்ணும் அழுதது , மண்ணும் அழுதது
மன்னவன் மறைகையிலே - நகக்
கண்ணும் அழுதது , கவிதையும் அழுதது
காவலன் பிரிகையிலே !

இப்படி ஒருவன் பிறந்ததில்லை
இனியும் ஒருவன் பிறப்பதில்லை !

சந்திர , சூரியர் வாழ்கின்ற வரையிலும்
சந்திரன் புகழ் இருக்கும் ;
ராமச்சந்திரன் என்னும் பேருக்குள்ளே
சரித்திரம் ஒளிந்திருக்கும் !

= கவிஞர் வைரமுத்து .

Richardsof
13th June 2014, 05:56 AM
இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை

மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு அவரை தேடி வந்தது . மக்களும் மக்கள் திலகத்தை மனதார ஏற்று கொண்டு எங்கவீட்டு பிள்ளையாக கருதினார்கள் .அவர் மறைந்து 26 ஆண்டுகள் பின்னரும் எம்ஜிஆரின் புகழ் இன்னமும்ஜெக ஜோதியாக பிரகாசத்துடன் இருப்பதற்கு காரணம் எம்ஜிஆர எல்லா மொழி , இனத்தவரிடம் காட்டிய
பரிவு - பாசம் என்பது முக்கிய காரணம் .

Russellisf
13th June 2014, 05:56 AM
967 தேர்தல் முடிந்து அமைச்சரவை அமைக்கிற கட்டம் வந்தது. அண்ணா அமைச்சரவையை அவர் வீட்டிலிருந்து அமைக்காமல் நண்பர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பட்டியலைத் தயார் செய்தார். ஒரு தலைவர் 'முக்கிய' இலாகாவை விரும்பினார். அதற்காக இரு தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்தனர். அவர்க்கு 'அந்த' இலாகா தர வேண்டும் எனத் தந்திகள் குவிந்தன. தந்திகள் ஒரு மூட்டை அளவுக்கு இருந்தது. மூட்டையை அண்ணாவிடம் காண்பித்தனர். 30, 40 தந்திகளை எடுத்துப் பார்த்தார் அண்ணா. அவை ஒரே மாதிரியான வாசகங்களைக்கொண்டிருந்தன. அதைப் பார்த்துப் புன்னகைத்தார். இன்னொரு தலைவருடைய மனைவி தன் கணவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதற்காக அண்ணாவைச் சபித்தார். இப்படி எத்தனையோ காட்சிகள் நிகழ்ந்தன. அமைச்சர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதற்குப் பிறகு இரா. செழியனிடம் அதனைக் கொடுத்து அனுப்பி எம். ஆர். இராதா சுடப்பட்டதால் மருத்துவமனையில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரிடம் காண்பிக்கச் செய்தார். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது.

= தகவல் : சு.திருநாவுக்கரசு , திராவிட இயக்க ஆய்வாளர் . —

Russellisf
13th June 2014, 06:01 AM
முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

Russellisf
13th June 2014, 06:11 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/l_zps9e328bca.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/l_zps9e328bca.jpg.html)

Russellisf
13th June 2014, 06:15 AM
PATHU VARUDAM SOORIYANAI PINNUKU THALLIYA ENGAL SRI RAMA CHANDRAN



http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zpse10e62e9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zpse10e62e9.jpg.html)

Richardsof
13th June 2014, 06:18 AM
http://i59.tinypic.com/ka09aa.png

Russellisf
13th June 2014, 06:19 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/hqdefault_zps24312479.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/hqdefault_zps24312479.jpg.html)

Richardsof
13th June 2014, 06:22 AM
OLIVILAKKU -1968

http://i58.tinypic.com/1z721d3.png

Richardsof
13th June 2014, 11:04 AM
பெரிய எஸ்டேட் பங்களாவுக்குச் சொந்தக்காரரான கதாநாயகன், அங்கு வந்து, தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அந்த எஸ்டேட்டில் தங்குகிறார். ஏற்கெனவே விடுமுறையைக் கழிக்க கதாநாயகி, அந்தப் பங்களாவில் இடம்பிடித்து விடுகிறாள். காதல் நாடகம் சுவையாக நடைபெறுகிறது. இறுதியில் கதாநாயகன் யார் என்பது தெரிய வருகிறது. இந்த சிறிய ஐடியாவை வைத்துக் கொண்டு, பொழுதுபோக்கும் விதமாக நகைச்சுவை உணர்வுடன் படமாக்கப்பட்ட கதைதான் "அன்பே வா!'

எம்.ஜி.ஆர். கதாநாயகன் - சரோஜாதேவி கதாநாயகி. நகைச்சுவைக் காட்சிகளிலும் தம்மால் நடிக்க இயலும் என்பதை எம்.ஜி.ஆர் காட்டியிருந்தார். குறும்புத்தனமான காதலியாக சரோஜாதேவி சிறப்பாக செய்திருந்தார். படத்தின் டைட்டில் சாங் உள்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். புதிய வானம், புதிய பூமி, லவ் பேர்ட்ஸ், நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அன்பே வா, வெட்கம் இல்லை நாணம் இல்லை ஆகிய பாடல்கள் தலைமுறை தாண்டி இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ராஜாவின் பார்வை பாடல், சாரட்டு வண்டியில் நாயகனும் நாயகியும் உட்கார்ந்து போவது போல சாமர்த்தியமாகவும், புதுமையாகவும் படமாக்கப்பட்டிருந்தது. ஆரம்பப் பாடல், கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டியிருந்தது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பாடலும், இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் துணை புரிந்தன.

இந்தப் படத்துக்கு செய்த விளம்பர வாசகம், ஏவி.எம்மின் பொழுதுபோக்கு சித்திரம் என்பதாகும். ஏவி.எம். பேனரில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "அன்பே வா'.

நடிக, நடிகையர்

எம்.ஜி.ஆர்., அசோகன், நாகேஷ், டி.ஆர். ராமசந்திரன்,

பி. சரோஜாதேவி, முத்துலட்சுமி, ராமாராவ்,

மாதவி மற்றும் பலர்.

திரைக்குப்பின்னால்...

இசை : விஸ்வநாதன்

பாடல்கள் : வாலி

வசனம் : அரூர்தாஸ்

தயாரிப்பு : ஏவி.எம்.

இயக்கம் : ஏ.சி. திருலோகசந்தர்.

Richardsof
13th June 2014, 11:09 AM
The hindu

சாலைகளில் எம்.ஜி.ஆரின் அரசாங்கம்

இந்தச் சூழலிலும் எம்ஜிஆர் தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் நினைவுகூரப்படுகிறார். அவரது ரசிகர்களுக்கு வயதாகிவிட்டதை அவர்களது சுருங்கிய முகங்களும், காய்ப்பேறிய கைகளும் காட்டுகின்றன.

எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது. பூ விற்கும் பெண்கள் முதல் வெள்ளை வேட்டியுடன் தொழிலாளர்களைப் பார்த்து அன்று உற்சாகமாகக் கையுயர்த்தி செல்லும் சிறு முதலாளி வரை எல்லாரும் கதாபாத்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். நல்ல முதலாளி, நல்ல தொழிலாளி என்ற உலகம் அந்தப் பாடல்களின் கீழே ஒவ்வொரு வருடமும் சிருஷ்டிக்கப்பட்டு விடுகிறது. ‘உலகம் பிறந்தது எனக்காக’ பாடலும் ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ பாடலும் ஒலிக்கும்போது, தமிழகம் முழுவதும் தெருவோரங்களில் இருக்கும் பாட்டாளிகளின் கைகள் ஒரே கையாக அன்று எழும்பும். ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா?’ என்ற பாடலின்போது ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரும்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய கற்பனை அரசாங்கத்தில் நீதி தவறுவது போலத் தோன்றினாலும் கடைசியில் ஜெயிக்கவே செய்யும். நம்பிக்கை சிறகடிக்கும். ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா...கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா...’

எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் எப்போதும் ஒன்றேபோல இருக்கப்போகும் ‘நாளை ஒன்றை நம்பி’ களைப்பேயில்லாமல் கற்பனை வீதியில் அபிநயம் செய்கிறார். ‘நாளை நமதே இந்த நாளும் நமதே… அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது.’ என்கிறது ஒலிபெருக்கி. ரசிகர் பூரிக்கிறார்.

நடுவே மின்சாரம் நிற்கிறது. அப்போது அவரது முகம், உடல் எல்லாம் நிஜ உலகத்தில் நிற்பதற்கு அஞ்சி ஒடுங்குகிறது.

Richardsof
13th June 2014, 02:37 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இனிக்கும் ஓர் நற்செய்தி .

ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு மெய்ப்பட போகிறது . கண்ணுக்கும் , மனதிற்கும் , விருந்து படைக்க போகிற அதிசயம்
விரைவில் ...........................
http://i59.tinypic.com/j7eujl.jpg
இதுவரை யாருமே நினைத்து பார்க்க முடியாத ........

இதுவரை யாருமே செய்ய முன் வராத ................

இதுவரை யாருமே செய்யாததை ...........................

நம் மக்கள் திலகத்திற்கு உருவாகி வரும் சரித்திர சாதனை .....பெட்டகம்

விரிவான தகவல்கள் விரைவில் ........

கொடுத்து வைத்தவர் எம்ஜிஆர் .

அவர் மட்டுமா ....

அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களும் அல்லவா ......

Richardsof
13th June 2014, 02:55 PM
2014 ல் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் திலகத்தின் இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி
2014 ல் ஆயிரத்தில் ஒருவன் ,,,,, மறு வெளியீட்டில் சென்னையில் விரைவில் 100வது நாள் .
50 ஆண்டுகள் பின் நோக்கி செல்வோம் ...............
1964 சென்னை மாநகராட்சியினை மக்கள் திலகத்தின் பிரச்சாரத்தால் திமுக முதல் முறையாக கைப்பற்றியது .
வேட்டைக்காரன் - talk of the cinema world .
என் கடமை - musical hit .
பணக்கார குடும்பம் -family super hit movie .
தெய்வத்தாய் -emotional mega hit movie
தொழிலாளி - labour's dignity
படகோட்டி - fisher 's man story WITH MUSICAL HIT
தாயின் மடியில் - sentimental story
மக்கள் திலகத்தின் 7 காவியங்கள் . மறக்க முடியாத ஆண்டு1964.

Russellbpw
13th June 2014, 03:24 PM
கோவை ராயல் திரை அரங்கில் பள்ளி பாடப்புத்தகத்தில் ENGLISH மற்றும் தமிழ் NON DETAIL புத்தகங்களில் நாம் படித்த காலம் தொட்டு இன்றுவரை வந்துகொண்டிருக்கும் POPULAR AMONG CHILDREN STORY " அலிபாபாவும் 40 திருடர்களும் "
தினசரி 4 காட்சிகள். புதிய கோப்பி PRINT

வெற்றி பெற வாழ்த்துக்கள் !

http://www.youtube.com/watch?v=MBepNZJjK-4

eehaiupehazij
13th June 2014, 05:57 PM
Alibabavum 40 thirudargalum in geva color at that time was a movie dominated by Banumathi with her typical acting skills and singing prowess. Unlike other subsequent MGR movies this movie makes the right usage of MGR in action sequences and in only two duet scenes. The song 'Maasilla unmaik kaadhale...' for many early years I was under the impression that it was a Gemini Ganesan song with AM Raja. In this movie, true to the story line, the role of MG Chakrapani was extended and one can enjoy his acting caliber in the scene where he is caught in the cave forgetting the password to get out. Same way the comedian Thangavelu was also given more screen space with an unforgettable song 'ullaasa ulagam unakkaga...' with sona tatoo on his fore arm and another song scene with Vaheetha Rehman 'salaam babu salam babu...'Veerappa exhibits his typical villainy and thundering laugh! But during climax one of his derogatory remarks on Alibaba should have been avoided since the role is enacted by MGR! Even the climax dance and taking on the villain group was donned by Banumathi and the comedian Saarangapani and MN Rajam, while MGR silently watches. It was also rumoured that Modern Theare Sundaram, the director filmed some scenes without MGR using his body double. MGR fills the bill as the energetic hero Alibaba with his sword fights and his acting scope was much restricted as one can feel as the movie moves on. The comedian Charangapani was also given with a song 'Chinnan chiru chitte....'! Overall an evergreen entertainer irrespective of age and generation gaps.We wish a successful rerun of this movie.

Richardsof
13th June 2014, 06:23 PM
இனிய நண்பர்கள் திரு ரவிகிரண் , திரு செந்தில்

மக்கள் திலகத்தின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' படம் கோவை நகரில் மறு வெளியீடாக வந்திருக்கும் தகவலை பதிவிட்டமைக்கும் , படத்தை பற்றி உங்களின் கருத்துக்களை வழங்கியதற்கும் அன்பு நன்றி .

Richardsof
13th June 2014, 06:27 PM
courtesy - net
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.


படத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)

அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார்.


அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் *சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).

உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)


அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க. பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.

அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு *ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட, பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.

சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.

திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.

அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்*சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின *பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)

பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்*சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.


படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு.

படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும்?

‘‘த்தோ பாரு மனஸ்... நீ படுத்தின பாட்டுக்கு அடுத்த தடவை படம் பாக்கறப்ப உன்னை கிட்ட சேர்க்கப் போறதில்லை’’ என்றேன் நான். ‘‘அதுசரி... ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே... என்னையும் துரத்திட்டேன்னா, நீ படம் பாக்கவே முடியாது’’ என்று மனஸ் சிரிக்க... நான் அவ்வ்வவ்!

Richardsof
13th June 2014, 06:32 PM
ஜெயம் ரவி
"அலிபாபாவும் 40 திருடர்களும்.' சின்ன வயதில் இருந்தே மனதுக்குள் நிறைந்திருக்கும் படம். எண்ணிக்கையில் அடக்க முடியாத அளவுக்கு அந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டம், கதை சொல்லும் விதம், மாயஜாலங்கள் நிறைந்த காட்சிகள் என ஒவ்வொரு இடத்திலும் உள்ளம் கவரும் படம் அது. ""திறந்திடு சீசே...'' என்று வரும் அந்த குகை காட்சிகளின் போது சின்ன வயது மனதுக்குள் இருந்த குதூகலம், இப்போதும் இருக்கிறது. காதல், காமெடி, ஆக்ஷன் என பல விதமான சினிமாக்கள் இருந்த போதும், எனக்கு அலிபாபா மாதிரி வந்த படங்கள்தான் அதிகமாக பிடிக்கும். அந்தப் படத்தின் பிரம்மாண்டங்களை இப்போது கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருக்கிற போதும், கதையில் நிறைய மாற்றங்கள் வைக்க வேண்டிய சூழலுக்கு சினிமா மாறியிருக்கிறது. கதை அதுவாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழலுக்கு ஏற்ற திரைக்கதை அமைக்க வேண்டும். "அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தின் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்கிற எனது ஆசையை முன்பிருந்தே சொல்லி வருகிறேன். அதை ரீமேக் செய்வதற்கான வாய்ப்புகள் அமைந்தால், அந்த இயக்குநர் எனக்கு வாய்ப்புத் தரும் படி கேட்டுக் கொள்கிறேன்.

Richardsof
13th June 2014, 06:34 PM
courtesy - net
தமிழ் சினிமா உலகின் மூவேந்தர்கள் என எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணசேன் ஆகியோர் 1956 -ம் வருஷத்திலிருந்து கவனிக்கப்படலானார்கள். இந்த வருஷத்தில் வெளி வந்த எம். ஜி. ஆர். நடித்த மூன்று படங்களும் வசூலை அள்ளிக் குவித்தன. ஒன்பது படங்கள் சிவாஜிக்கு; அவற்றில் ஐந்து வெற்றிப் படங்கள். ஐந்து படங்கள் ஜெமினிக்கு; அத்தனையும் நல்ல வசூல்.

முதல் முழு நீள வண்ணப் படமான, மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ அதன் மூலமான இந்திப் படத்தைப் போலவே ஒவ்வொரு காட்சிகளும் அமைக்கப் பட்டிருந்தன. ஆடை ஆபரணங்கள், அரங்க நிர்மாணம் அத்தனையும் இந்திப் படத்தின் அடியற்றியே தயாரிக்கப்பட்டு, பாடல்களும் இந்தி மெட்டுக்களிலேயே புனையப்பட்டு வெளிவந்த தமிழ் அலிபாபா இந்தி அலிபாபாவைப் போலவே வசூலிலும் வெற்றிகண்டது.

குதிரை சவாரி, வாள் வீச்சு, சாகஸம், காதல் சல்லாபம், எல்லாவற்றிலும் வல்ல வீரநாயகனாக எம். ஜி. ஆர். நடித்தார். பி. பானுமதி தன் இனிய குரலில் பாடி, சாமர்த்தியமும் சாதுர்யமும் கொண்ட கதாநாயகியாக நடித்தார். கொள்ளையர் தலைவனாக எம். ஜி. சக்கரபாணி, நகைச்சுவைக்கு கே. ஏ. தங்கவேலு. டி. ஆர். சுந்தரம் டைரக்ட் செய்த இந்தப் படம் பொங்கலன்று திரைக்கு வந்தது.

‘சினிமா ராணி’ டி. பி. ராஜலட்சுமி 1939-ல் தயாரித்த ‘மதுரை வீரன்’ கதையை கிருஷ்ணா பிச்சர்ஸ் லேனா செட்டியார் தயாரித்து 1956 ஏப்ரலில் வெளியிட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்களிடையே பிறந்தவன் மதுரை வீரன். அவனது குலத்திலேயே பிறந்த வெள்ளையம்மாளை மணந்தான், கட்டுமஸ்தான உடல் அழகும், வீரமும் நிறைந்த அவனை அரச குடுபத்துப் பெண் பொம்மி காதலித்தாள். அந்தக் காதலை ஏற்று, எதிர்ப்புக்களைச் சமாளித்து அவளைச் சிறையெடுத்து வந்தான் மதுரை வீரன். எதிரிகளால் மூவரும் கொல்லப்பட்டார்கள்.

ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டுச் சுரண்டப் பட்டு வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வீரத் தெய்வமாக மதுரை வீரனை வழிபட்டு, அவனது சாகஸங்கள் குறித்து மேன்மேலும் இனிய கற்பனைகளைச் சேர்த்து வழி வழியாகத் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லி வருகிறார்கள்.

ஒடுக்கு முறைக்கு எதிரான தங்கள் உள்ளத்துணர்வை வெளிப்படுத்த தாழ்த்தப்பட்ட மக்கள் மதுரை வீரசாமியை வழிபடுவதன் மூலம், கால காலமாய் உணர்த்தி வருகிறார்.

அத்தகைய மதுரை வீரசாமியாக, எம். ஜி. ஆர். யாரை கண்ட கிராமத்து ஏழை மக்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள்; மேல் ஜாதிக்காரப் பெண் தங்கள் மதுரை விரனைக் காதலிப்பதைக் கண்டதும் புளகாங்கிதம் பெற்றார்கள்; காட்டுக் காவலை உடைத்து, மீறி, அவளைத் தங்களது மாவீரன் மதுரைவீரசாமி தூக்கி வந்தது கண்டு புல்லரித்துப் போனார்கள்; இரண்டு மனைவிகளோடு மதுரை வீரசாமி சொர்க்கலோகம் போவதைப் பார்த்துப் பரவசப்பட்டார்கள்.

எம். ஜி. ஆர்., பி. பானுமதி, பத்மினி, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் நடித்த இந்தப் படத்தை யோகானந்த் டைரக்ட் செய்திருந்தார். வசனம் – கண்ணதாசன். கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் அது வரையிலும் அதற்குப் பின்னாலும் காணாத லாபத்தை இப்படம் பெற்றுத் தந்தது.

அலிபாபாவுக்கும் மதுரை வீரனுக்கும் நிகரான கிராமத்து இளைஞன், தாயை தெய்வமாக வணங்குபவன், அழகன், அன்பானவன்- ‘தாய்க்குப்பின் தாரம்’ படத்தின் கதாநாயகன் இப்படிப்பட்டவன். நடித்தது – எம். ஜி. ஆர். தேவர் பிலிம்ஸ் முதல் படம்; நண்பர் சாண்டோ சின்னப்பாத் தேவரின் படம்.


கிராமத்தில் நடப்பதாகக் கதை. தண்ணீர் பாய்ச்சுவதில் தேவருக்கும் எம். ஜி. ஆருக்கும். மோதல். சிலம்பச் சண்டை தூள் பறக்க நடைபெற்றது. படத்தில் பி. கண்ணாம்பா – தாய், பி. பானுமதி – தாரம். கதை வசனம் ச. அய்யாப்பிள்ளை. தம்பி எம். ஏ. திருமுகம் டைரக்ட் செய்த இந்தப் படம் செப்டம்பரில் வெளிவந்தது.