PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

Gopal.s
18th October 2014, 11:34 AM
என்னுடைய விருப்ப படங்களில் முக்கிய ஒன்றான கெளரவம் 25/10/2014 அன்று 41 ஆண்டு நிறைவு செய்கிறது. அடுத்த வாரம் விருந்தினர்,வேலை,தீபாவளி என்று கடக்க இருப்பதால், இன்றே அந்த பணியை மேற்கொள்ளுகிறேன்.

கெளரவம்-1973

கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .

ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?

நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?

தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?

தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?

திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?

ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.

இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.

ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.

ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.

மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.

மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.

நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.

குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.

இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.

கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.

An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.

அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!

நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.

ரஜினிகாந்த என்ற கதாபாத்திரத்தை புரிந்தால்,நடிகர்திலகம் எந்த அளவு கவனம் செலுத்தி அதனை செதுக்கியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.

ரஜினி காந்த் எந்த ஒரு தொடர் வெற்றி பெற்ற திறமைசாலிகளையும் போல ,கடவுளை நம்பியாக வேண்டிய அவசியமில்லாதவர். சில நடத்தை முறைகளால் ,மேலை நாகரிகமானவர் என்று காட்டி கொண்டாலும் ,கீறி பார்த்தால் அக்ரகாரம் எட்டி பார்ப்பதை புன் முறுவலுடன் தொடரலாம்.
பல சுவாரஸ்யங்கள் பட திரைகதையிலேயே உண்டு.குடிக்க ரஷ்யன் வோட்கா தேடும் மனிதன் ,கட்டி கொள்வதோ கடமுடா பட்டி பக்தையை.
மகன் அம்மா புள்ளை என்று கேலி செய்தாலும், மகனிடம் எதிர்பார்ப்பது ,கோடு தாண்டா conservative mentality யைத்தான்.மகன் காதலிக்கும் போது அவர் அடையும் அதிர்ச்சி, அடக்கி வைக்க முற்படும் அதிகாரம்,தன் கருத்தை எதிர்க்கவே உரிமையில்லை என்று அவர் பண்ணும் ஆகத்தியம் .அதே போல தன் பெருமை பற்றி மனைவியிடம் செல்லமாக அலசும் சற்றே அக்ரகார நேர்த்தி. முதல் தோல்வி(justice post )அவர் ரத்தத்தை சூடாக்கி ,எல்லை மீறி தன் திறமையை நிலை நாட்டுவதில் முடிந்தாலும் ,தாங்க முடியாத எதிர்பார்ப்பு நிறைந்த வர போகும் தோல்வி ,திலகம் வேண்டும் அளவு sentiment ஆக்கி விடுவது,மதில் மேல் பூனையான விளிம்பு நிலை மனிதரை குறிக்கிறது.

கண்ணனிடமோ ,குழப்பமே இல்லாத confimist .ஆனால் பெரியம்மாவை
புரிந்த அளவு பெரியப்பாவை புரியாதவனோ என்ற குழப்பம் அவ்வப்போது.ஆனால் தர்மம்-அதர்ம போரில் இழு படுவது ஒரு வித moral preaching தந்த குழப்ப நிலையே.

இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது.ஒரு வக்கீலின் அதீத உடல் மொழி (கர்வம் நிறைந்த தன்னம்பிக்கை. ,தான் நினைப்பது சொல்வது மட்டுமே சரி என்று உணர்த்த அலையும் தொழில் சார்ந்த aggression )முதல்,அழுத்தி பேசி மற்றவரை ஆக்ரமிக்கும் வசன முறை.கிண்டல்,கேலி,துச்சம்,அகந்தை,என்ற எடுத்தெறிதல் என்று அவர் பண்ணும் அதகளம்,இந்த பாத்திரங்களுக்குதானே இவர் பிறந்து வந்தார் என்ற மலைப்பையே அளிக்கும்.

ரஜனி காந்த் பாத்திரத்தை விட்டு விட்டு கண்ணனை மட்டும் பார்த்தாலும்,ஒரு சாத்திர முறையில்,சட்டதிட்டங்களுடன் வளர்க்க பட்ட ஒரு ஆசார குல பிள்ளையை அவர் நடித்து காட்டும் நேர்த்தி.அப்பப்பா....

கவுரவத்தில் எதை எடுப்பது ,எதை விடுவது?

ரஜனிகாந்த் ,கண்ணனிடமும்,செல்லாவிடமும் பேசும் ஆத்திக அடாவடி காட்சியா,கண்ணன் காதல் தெரிந்து கண்டிக்கும் காட்சியா,செந்தாமரையிடம் பேசி விட்டு உன் friend மொகத்திலே ஈயாடல பாத்தொயோ காட்சியா,மைலாபுர்லே எல்லாரும் என்னடி பேசிக்கிறா என்ற வம்பு காட்சியா, மோகனதாசிடம் போடா சொல்லும் அலட்சிய காட்சியா,monotony தவிர்க்க வீட்டிலேயே அமைக்க பட்ட கோர்ட் காட்சியா,கண்ணனிடம் confront பண்ணும் காட்சியா(curt ),தன்னுடைய பழைய கோட் வாங்க வரும் கண்ணனிடம் அவர் மாடியிலிருந்து பேசும் காட்சியா,கடைசியில் நம்பிக்கை தளரும் காட்சிகளா என்று படம் முழுதும் விருந்து.

நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.

Russellbpw
18th October 2014, 12:07 PM
இன்று என் இளைய மகனின் பிறந்த நாள். தெய்வ மகன் விஜய் ஞாபகார்த்தமாக,விஜயதசமி அன்று பிறந்த குழந்தைக்கு விஜய் என்றே பெயரிட்டோம்.தெய்வ மகன் விஜய் போன்றே அழகானவன்.செல்லம்.

தங்க தட்டுடன் பிறந்த குழந்தை .இரு வேலையாட்கள்,இரு ஓட்டுனர்கள் என ,உலக பள்ளியில் ,பல நாட்டு பிள்ளைகளுடன் பயின்றாலும் ,20 வயதிற்குள் 23 நாடுகளை பார்த்து விட்டாலும்,அடிப்படை மறக்காத அற்புத குழந்தை.


அவனுக்கு எனது, பெருமை நிறைந்த வாழ்த்துக்கள்.குடியின் value based education ,humility ,true philanthrophy ,மாண்புகள்,மனிதம்,சுற்று சூழல் காப்பு,எளிமை, குடும்ப இணைப்பு அனைத்தும் உன்னால் சங்கிலி தொடர் போல ,வாழையடி வாழையாய் தொடர்ந்து ,மனிதம் தழைக்க உதவட்டும்.

அருமை நண்பர் கோபால் அவர்களே

என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் !

முதற்க்கண் தங்கள் இளைய மகனுக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் நல வாழ்த்துக்கள்.

அந்த ஒற்றுமை என்னவென்றால்.

என்னுடைய உறவினர்கள் என்னை அழைப்பது குமார் என்ற பெயரில். ஆனால் எனது தந்தையார், தாயார் மற்றும் மனைவி வீட்டார் , மற்றும் என்னுடைய நண்பர்கள் என்னை அழைக்கும் பெயர் "கண்ணன்" என்பதாகும்.

குணமும் கிட்டத்தட்ட தெய்வமகன் "கண்ணன்" போன்றதே ...inferiority complex ஒன்றை தவிர.

அந்த வகையில் தங்களுடைய இளையமகன் எனது சஹோதரனே, ரத்த சம்பந்தம் இல்லையென்றாலும் !!

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாழும் தங்களுடைய இளையமகனும் என்ன சஹோதரனும் ஆகிய விஜய் நம்முடைய தலைவர் கலை அவதாரம் நடிகர் திலகம் அவர்கள் ஆசியுடன், ஆல் போல் தழைத்து வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Rks

Russellmai
18th October 2014, 12:08 PM
டியர் இராகவேந்தர் சார்,
ஆறாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு அடியேனின் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.

Russellbpw
18th October 2014, 12:17 PM
CONGRATULATIONS RAGHAVENDRAN SIR

6,000 60,000 AAGA Vaazhthukkal !

Ungal Pani Sirandha Pani

RKS

eehaiupehazij
18th October 2014, 12:38 PM
அன்பு நண்பர் ராகவேந்தர். யாரையும் புண்படுத்தாத கண்ணோட்டமும் பண்பட்ட தன்மையும் மென்மையும் மேன்மையும் நிறைந்த 6000 பதிவுகளின் நாயக நண்பருக்கு இத்திரியின் மாதிரிப்பதிவருக்கு நடிகர்திலகத்தின் கோடானுகோடி புகழார்வலர்களில் ஒருவனாக என் வாழ்த்துக்கள்.

This song best suits most of your traits!

https://www.youtube.com/watch?v=K1I3c64ieBs

Harrietlgy
18th October 2014, 12:56 PM
Congrats Mr. Ragavendra sir for your 6000 posts.

HARISH2619
18th October 2014, 01:25 PM
Dear raghavendra sir,
congratulations for your 6000 valuable posts

parthasarathy
18th October 2014, 02:15 PM
Dear Mr. Raghavender,

Congratulations on 6000 posts!

Regards,

R. Parthasarathy

parthasarathy
18th October 2014, 02:16 PM
Dear Mr. Gopal,

Kindly convey my wishes to your son for very happy birthday.

Wishing him many more happy returns of the day,

Regards,

R. Parthasarathy

eweaxagayx
18th October 2014, 02:36 PM
Best wishes and congrats for crossing 6000 posts and pray our ALMIGHTY TO GIVEE ENOUGH STRENGTH TO ACHIEVE 60000 POSTS IN THIS THREAD. - N.V.Raghavan

Gopal.s
18th October 2014, 03:00 PM
Content Removed.

ScottAlise
18th October 2014, 03:12 PM
Dear Raghavendran sir,
congratulations for your 6000 valuable posts

Russellbpw
18th October 2014, 03:43 PM
Content Removed.

siqutacelufuw
18th October 2014, 04:20 PM
" மையம் " இணைய தளத்தின் பல்வேறு திரிகளில் அருமையான 6,000 பதிவுகள் வழங்கிட்ட, சகோதரர் திரு. ராகவேந்திரா அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி மகத்தானது.

தாங்கள் மேலும் பல அற்புதமான பதிவுகள் வழங்கிட அன்புடன் வாழ்த்துகிறேன். மக்கள் திலகம் திரியில் தங்களின் அதிகமான பங்களிப்புகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

http://i57.tinypic.com/2cr5c77.jpg

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. ;செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Gopal.s
18th October 2014, 06:43 PM
Content Removed.

Gopal.s
18th October 2014, 06:54 PM
எனக்கு ஒரு லாஜிக் புரியவில்லை. இவர்களுக்கு படம் எடுக்க நம் தயாரிப்பாளர்கள்தான் வேண்டும்.பத்திரிகை நடத்த நம் ரசிகர்கள்தான் வேண்டும்.புத்தகம் போட நம் ரசிகர்கள்தான் வேண்டும். இப்போது ,அவர்கள் திரியில் பங்களிக்க வருந்தி வருந்தி அழைப்பு வேறு ..கவலையே படாதீர்கள் .எங்கள் உண்மை ரசிகர்கள் ,இதற்கெல்லாம் வளைய மாட்டார்கள்.

எங்கள் ரசனையில் அவ்வளவு ஈடுபாடு இருந்தால்,நீங்கள் எங்களோடு வந்து இணைந்து,தமிழன் புகழ் பாடி ,விமோசனம் தேடி கொள்ளுங்கள்.

Russellbpw
18th October 2014, 08:09 PM
Content Removed.

RAGHAVENDRA
18th October 2014, 08:26 PM
கோபால் சார்
தங்களுடைய மகன் பிறந்த நாளுக்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

RAGHAVENDRA
18th October 2014, 08:32 PM
வாழ்த்துக்களை உரைத்த

நான்கு திரிகளிலும் அன்புடன் வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர் வினோத்,
அன்பு நண்பர் யுகேஷ் பாபு,
அன்பு நண்பர் கோபால்,
அன்பு நண்பர் சேகர்,
அன்பு நண்பர் கோபு என்கிற நெல்லை கோபாலகிருஷ்ணன்,
அன்பு நண்பர் ரவிகிரண் சூர்யா,
அன்பு நண்பர் சிவாஜி செந்தில்,
அன்பு நண்பர் பரணி,
அன்பு நண்பர் பெங்களூர் கார்த்திக்,
அன்பு நண்பர் பார்த்தசாரதி,
அன்பு நண்பர் என்.வி.ராகவன்,
அன்பு நண்பர் ராகுல்ராம்,
அன்பு நண்பர் செல்வகுமார்,
மற்றும் பெயர் விட்டுப் போன நண்பர்கள் இருந்தால் அவர்களும் சேர்த்து அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

eehaiupehazij
18th October 2014, 09:04 PM
En Magan (1974) : NT's very different duel role performance!

இன்று மாலை முரசுTVயில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நடிகர்திலகத்தின் என்மகன் திரைப்படம். மிகமிக மாறுபட்ட இரட்டைவேடங்கள். ஏட்டு ராமையா மற்றும் சந்தர்ப்பசூழ்நிலைத் திருடன் ராஜா! தான் தத்துபுத்திரனாக வரித்த ராஜா உத்தமபுத்திரன் அல்ல, ஒரு திருடன் என்று அறியவரும்போது, அவனைத் தானே கைது செய்ய வேண்டிய இக்கட்டான சூழல்......மெய்சிலிர்க்க வைக்கும் முகபாவங்கள்.......ஒரு ஐந்து நிமிடம் தானே நடிப்பின் உருவகம் என்பதை அதிரடியாக அறுதியிடுகிறார் நடிபபிலக்கணத்தந்தை!

Also feel his energy in the sonpapdi song with synchronizing steps of both Sivajis at a time within a frame! Marvellous!
(3:45 to 8:25)

https://www.youtube.com/watch?v=DiVGyRyetYk

Russellbpw
18th October 2014, 10:01 PM
content removed.

:-d

rks....

Russelldwp
18th October 2014, 10:39 PM
திரு.ராகவேந்திரன் அவர்களுக்கு

தங்களின் 6000 பதிவுகளுக்கு அடியேனின் மனப்பூர்வமான நன்றி கலந்த வாழ்த்துக்கள். தங்களின் மணம் வீசும் பதிவுகளை காணதுடிக்கும்

தங்களின் அன்பு தம்பி

c. Ramachandran

ifohadroziza
18th October 2014, 11:08 PM
Dear RAGAVENDRA sir,
congrats for your 6000 post in our thread

ifohadroziza
18th October 2014, 11:10 PM
Dear GOPAL sir,
My blessings to your son VIJAY on his birthday

Murali Srinivas
18th October 2014, 11:30 PM
அனைவருக்கும் வணக்கம். நமது திரியைப் பொறுத்தவரை நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்வினையும் பற்றி நாம் இங்கே விவாதிக்கலாம். அரசியல் நிகழ்வுகளுக்கும் கருத்துக்கும் கூட இங்கே இடம் உண்டு. ஆனால் அத்தகைய விவாதங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர, யாரையும் வசை பாடவோ திட்டுவதாகவோ அமைதல் கூடாது.

Rks/கோபால்,

இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் கருத்து இருக்கும், ஒரு பாதை இருக்கும். அது அவரவர் ஜனநாயக உரிமை. நடிகர் திலகத்தின் ரசிகர்களைப் பொறுத்தவரை சிந்திக்க தெரிந்தவர்கள், விஷய ஞானம் உடையவர்கள், ஆகையால் வெவ்வேறு அரசியல் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள். அப்படியிருக்க நீங்கள் இருவரும் நேரில் பார்க்காத ஒரு நிகழ்வினை வேறொரு இணையதளத்தில் வெளியான தகவலை வைத்து விமர்சிப்பது, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது, வசை பாடுவது போல் எழுதுவது ஆகியவை சரியான செயல்கள்தானா என்று எண்ணிப் பாருங்கள். தமிழகத்தின் கடந்த 50 ஆண்டுக்கால அரசியலை [தேசியம் மற்றும் திராவிடம் சார்ந்த] பற்றி பல்வேறு விமர்சனங்களை நானும் முன் வைத்திருக்கிறேன். ஆனால் அது யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவோ அல்லது வசை பாடவோ செய்யாது.

தயவு செய்து யார் மனமும் புண்படாமல் பதிவிட வேண்டும் என்பதே இந்த இருவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் என் வேண்டுகோள். இதை பலமுறை சொல்லி விட்டேன். மீண்டும் என் வேண்டுகோளாக அதையே முன் வைக்கிறேன்.

அனைவரின் ஒத்துழைப்பையும் நாடும்

அன்புடன்

sivaa
19th October 2014, 05:03 AM
திரு.ராகவேந்திரன் சார்


தங்களின் 6000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

sivaa
19th October 2014, 05:07 AM
கோபால் சார்
தங்களுடைய மகன் பிறந்த நாளுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

Gopal.s
19th October 2014, 06:54 AM
நான் ஆர்.கே.எஸ் பதிவுக்கும் பதிலளித்தேன் என்பது தவிர,என் பதிவுகள் யாரையும் தாக்கவில்லையே? பொதுவாக,நாம் விழாக்களை அணுக வேண்டிய முறை,நாகரிகம் குறித்தல்லவா?ஆனாலும் நீக்கியது பற்றி ஒன்றும் ஆட்சேபனை இல்லை.அவசியம் இல்லை என்பது என் கருத்து.

Gopal.s
19th October 2014, 06:58 AM
என் மகன் சிவாஜியை ரசிப்பவன் என்ற விதத்தில் அவனை பற்றி இங்கு உரிமையுடன் பதித்தேன்.ஆலய மணி(ntf ) பட திரையீட்டில் வந்தும் இருந்தான்.

அவனுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் மிக மிக நன்றி.(pm ,திரி இரண்டிலும்)

Gopal.s
19th October 2014, 07:01 AM
முரளி,

இனி மதுரை குறிப்பு இருந்தால் மட்டுமே ,உங்களிடமிருந்து எதிர் விளைவு இருக்குமா?

Gopal.s
19th October 2014, 07:10 AM
கிட்டத்தட்ட 1300 பேர் தினம் வரும் திரியில், ஆழ்ந்து போட படும் பதிவுகளுக்கு ,உடன்-எதிர் வினைகள் கூட இல்லையே?ராகவேந்தர் சொன்ன படி,தரமான பதிவுகள் போட தயார்.நமக்கு ஸ்டாக் தீரவில்லை.
ஆனால் ராகவேந்தர் ,முரளி போன்றவர்களே எதிர்வினை புரிவதில்லையே?

பாபு,கெளரவம் இவற்றிற்கு ஒரு வினைகளும் இல்லையென்றால் ,என்னதான் எழுதுவது என்ற ஆயாசமே மேலிடுகிறது.

sivaa
19th October 2014, 07:33 AM
எதிர்வினை பற்றி எதிர்பார்க்காமல்
பதிவுகளை தொடருங்கள் கோபால்

sivaa
19th October 2014, 07:34 AM
மாற்று அணியினரின்
தனிமனித தாக்குதல் அனாகரீகமானது
வன்மையாக கண்டிக்கத்தக்கது

RAGHAVENDRA
19th October 2014, 08:50 AM
வாழ்த்துக்களைக் கூறிய அன்பு நண்பர்கள் ராமச்சந்திரன், மதுரை சந்திரசேகர் மற்றும் சிவா தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

Gopal.s
19th October 2014, 09:03 AM
உங்களாலே முடியலன்னா விட்டுடுங்கள் பாஸ். உங்களுக்கு எழுத வராது. நீங்க வெறும் காமெடி பீஸ்.
அணைத்து சென்றவர்களின் கதி,பெற்ற லாபங்கள் உலகத்துக்கே தெரியும்.

RAGHAVENDRA
19th October 2014, 09:06 AM
......
.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.
....

இந்த அடிப்படையைத் தாங்கள் கூறியிருப்பது மிகச்சரியான அணுகுமுறை.. இந்த அடிப்படை ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ளது. குறிப்பாக தெற்காசிய நாடுகளின் கலாச்சாரங்கள் கலையை இந்த அடிப்படையைத் தான் அமைத்துக் கொண்டுள்ளன. மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கு இந்த அடிப்படை ஒவ்வாது.

இதனை சரியான முறையில் புரிந்து கொண்டால் மிகை... என்ற வார்த்தைக்கே இடமிருக்காது...

தங்களை அறிவுஜீவி எனக் கூறிக்கொள்ளும் அரைகுறை மேதாவிகள் தான் மேம்போக்காக இந்த மாதிரி மிகை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.

பாத்திரங்கள் நடிப்புக்காக உருவாக்குவது என்பதற்கு முன்னுதாரணம் நடிகர் திலகம் அவர்கள் தான். அவருடைய வருகைக்குப் பிறகு தான் கலையை வெளிப்படுத்துவதற்கான கருவியாக நடிப்பு பயன்பட்டது போக கருவியைப் பயன்படுத்துவதற்காக கலை உருவாக்கப் பட்டது ... என்கின்ற (reciprocation or vice-versa or reflection ... எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்... ) அணுகுமுறை சினிமாவில் உருவானது..

இதற்குக் காரணமும் உண்டு. நடிகர் திலகத்தைப் பொறுத்தவரையில் இந்த கான்செப்ட் மக்கள் மீது திணிக்கப்படவில்லை. மாறாக அவர்களை பிரதிபலிப்பதற்காகவே இந்த கான்செப்ட் வடிவமைக்கப்பட்டது. சராசரி மனிதர்களின் நடுவில் வாழக் கூடிய பல்வேறு குணாதிசயங்களை சித்தரிக்க படைப்பாளிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு உருவம் தேவைப்பட்டது. அந்த உருவத்தை அமைக்கக் கூடிய வாய்ப்பினை சினிமா ஏற்படுத்தியது. அந்த சினிமா அவர்களுக்கு அறிமுகப்படுத்திய கருவி தான் நடிகர் திலகத்தின் நடிப்பு என்கின்ற உன்னதமான விஷயம். இந்த விஷயத்தை வைத்து இந்த மாதிரி மனிதர்களை ஏன் சித்தரிக்கக் கூடாது, சமூகத்தில் இந்த மாதிரி பாத்திரங்கள் இருக்கின்றன, மக்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று எடுத்துரைப்பதற்கு ஒரு சரியான கருவி தேவைப்பட்டது.. அதற்கு படைப்பாளிகளின் நெஞ்சில் உடனே நடிகர் திலகம் தோன்றியதால் உருவானது தான் நடிப்பின் புதிய பரிமாணம்..

ஒரு வகையில் பார்த்தால் இதற்கு முழு முதற் காரணம் அந்த படைப்பாளிகள் தான்..

இதற்கு உதாரணமாக நடிகர் திலகத்தின் பல பாத்திரங்களைச் சொல்லலாம்..

தலையாயதாக கண் முன் நிற்பது..

சமூகப் படங்களில் அந்த நாள், திரும்பிப் பார், பாகப் பிரிவினை, முதல் மரியாதை போன்றவை..

இதே பாத்திரங்களை சற்றே மேலும் கற்பனையூட்டி ராஜா ராணி காலத்தியதாக சித்தரித்து தான் தூக்குத்தூக்கி சுந்தராங்கதன் பாத்திரம்

இன்றைய சமூகத்தில் இந்த சுந்தராங்கதன் பாத்திரம் பெருமளவில் நிலவி வருவதற்கு நாள் தோறும் நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளே சாட்சி..

கௌரவம் கோபாலின் கட்டுரை எந்த அளவிற்கு ஆழமான ஆய்விற்கு வழி வகுக்கிறது ....

நன்றி கோபால்..

Gopal.s
19th October 2014, 09:28 AM
ராகவேந்தர்,

உங்கள் மீள் பங்களிப்பு ,மகிழ்ச்சியளிக்கிறது. வாசுவும்,முரளியும் திரும்ப வந்து பங்களிக்க,பங்கேற்க ஆரம்பித்தால் ,நாம் பல அதிசயங்கள் .நிகழ்த்தலாம்.

மாற்று அணி நண்பர்களே,

வாருங்கள்.வாழ்த்துங்கள். நட்பு நாடுங்கள். மகிழ்ச்சி .வரவேற்கிறோம்.ஆனால் இங்கு வந்து, அங்கு வந்து அதை செய்யுங்கள்,இதை செய்யுங்கள் என்ற வேண்டுகோள் ..
அது நாகரிகம் அல்ல. நாம் எல்லோருமே matured adults .எதை செய்வது,எப்போது செய்வது என்பது புரிந்தவர்கள்.

எல்லா திரி நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்,

மாற்று கொள்கை அல்லது பிடிப்பு கொண்ட திரிக்குள் நுழையும் போது ,foot note நீக்கி விட்டு வரவும் அல்லது செல்லவும்.மாற்றார் வீட்டில் நுழையும் போது ,செருப்பு கழட்டி விட்டு நுழைவது போன்ற நாகரிகம்.

Richardsof
19th October 2014, 10:04 AM
உங்களாலே முடியலன்னா விட்டுடுங்கள் பாஸ். உங்களுக்கு எழுத வராது. நீங்க வெறும் காமெடி பீஸ்.
அணைத்து சென்றவர்களின் கதி,பெற்ற லாபங்கள் உலகத்துக்கே தெரியும்.

:pink::pink::lol2::lol2::victory::victory::redjump ::redjump:

RAGHAVENDRA
19th October 2014, 10:35 AM
டியர் கோபால்
அவரவர் கொள்கையை அவரவர் மாற்றிக் கொள்ள முடியாது. Signature என்பதை தங்களைப் பற்றியோ அல்லது தங்கள் கருத்துக்களைப் பற்றியோ ஒரு அடையாளமாக அமைத்துக் கொள்வது. ஒவ்வொரு பதிவிற்கும் மாற்றிக் கொள்ளக் கூடிய விஷயமல்ல என்பதும் தங்களுக்குத் தெரியும். அவர்கள் கூறுகின்ற கருத்துக்கு நாம் உடன் படவில்லை யென்றாலோ அல்லது அவர்கள் நம் கருத்துக்கு உடன் பட வில்லையென்றாலோ அதற்காக நாம் கோபித்துக் கொண்டு வராதே அல்லது நிபந்தனையுடன் வா எனச் சொல்வதற்கான இடம் இதுவல்ல.
அனைவரும் நண்பர்களே..

கருத்துப் பரிமாற்றங்களை வரவேற்போம்.. முரண்பட்ட கருத்துக்கள் வருவது இயல்பு. ஆனால் அவை பரிமாறிக்கொள்ளப்படும் விதம் தான் வித்தியாசப்படுகிறது.

மேலே கூறப்பட்ட எதுவுமே தங்களுக்குத் தெரியாத விஷயமல்ல.

இரு கரம் நீட்டி வரவேற்போம்

நடிகர் திலகத்தின் மேன்மையைப் புரிய வைப்போம்..

தமிழ்த் தாயின் ஈடற்ற தவப்புதல்வனின் அருமைகளையும் பெருமைகளையும் கொண்டு சேர்ப்பதில் நம்முடைய பங்கை அளிப்பதில் பேருவகை கொள்வோம்.

anm
19th October 2014, 12:33 PM
Dear Raghavendra Sir,

Congratulations on your 6000 post and for the untiring work.

Anand

Gopal.s
19th October 2014, 01:50 PM
ஜோ,NOV முதலிய ஜாம்பவான்கள் 24 Feb 2005 இல் (அதற்கு முன்பே ஆரம்பித்து நடத்தி வந்துள்ளனர்)ஆரம்பித்த ,இந்த மையம் திரியின் மகுடமான நடிகர்திலகம் திரிகள் மொத்தம் 3507 நாட்களை கடந்து ,3434 பக்கங்களையும் ,47,39,654 ஹிட்களை வாங்கியுள்ளது.

சராசரியாக நாளொன்றுக்கு 1351 ஹிட்களையும்,பக்கம் ஒன்றுக்கு 1380 ஹிட்களையும் குவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க பலரின் பங்களிப்பிற்கு ,எங்கள் சிரம் குவித்த நன்றி.

sss
19th October 2014, 02:23 PM
அன்புள்ள வீயார் அவர்களே

ஆராயிரம் பதிவு கண்ட உங்கள் பயணம் இன்னும் பல ஆயிரம் கடந்து நடிகர் திலகம் பாடட்டும் ... வாழ்த்துக்கள்.


சுந்தர பாண்டியன்

RAGHAVENDRA
19th October 2014, 05:07 PM
தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சுந்தரபாண்டியன் சார்

ifohadroziza
19th October 2014, 05:56 PM
நமது நடிகர்திலகத்தின் சூப்பர் திரைகாவியம் நீதி தீபாவளி முதல் நெல்லை சென்ட்ரலில்- தினசரி 4 காட்சிகள்

Harrietlgy
19th October 2014, 07:18 PM
Today's varamalar

கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (3)


நாடகக் கம்பெனியில் சேர்ந்தேன். குறைந்த சம்பளம்தான்; ஆனால், என் மனதுக்கு நிறைவான வேலை.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு லட்சியம் இருக்கும். கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் ஒரு மாணவன், எதிர்காலத்தில் ஒரு வக்கீலாகவோ, டாக்டர் ஆகவோ, இன்ஜினியராகவோ, கணக்கராகவோ இப்படித் தனக்கு ஏற்ற ஒரு உத்தியோகத்தை மனதில் வைத்து, அதற்கேற்ற பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கிறான். படித்துப் பட்டம் பெற்றதும், அந்த துறையில் பெரும் புகழ் பெற வேண்டும் என்பது அவன் லட்சியமாகி விடுகிறது.
ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்கு. அவர்களது உள்ளத்தில் ஊறிக் கொண்டிருக்கும் ஆர்வம் மற்றும் திறமை காரணமாக, வேறு ஒரு தொழிலில் ஈடுபட வேண்டிய அவசியத்தை, சூழ்நிலை உருவாக்கித் தந்து விடுகிறது.
நடிப்புத் துறையில் சிறு வயதிலேயே ஈடுபடும் பெரும்பாலோருக்கு, அவர்களது மனதின் அடித் தளத்தில் ஒரு ஆசை பூத்துக் கிடக்கும்.
அதை, ஆசை என்று சொல்வதை விட லட்சியம் என்றே சொல்லலாம்.
அது தான், கதாநாயகன் வேடம்! நடிப்புத் துறையில் பதவி உயர்வின் உச்சமே, கதாநாயகன் வேடம்தானே!
'என்றாவது ஒரு நாள், நாம் கதாநாயகன் வேடம் போடப் போகிறோம், கதாநாயகனாக மாறப் போகிறோம்' என்ற ஆசை, அவர்களது உள்ளத்தில் ஊறிக் கொண்டே இருக்கும்.
சின்னஞ் சிறுவனாக நாடகக் கம்பெனியில் நுழைந்து, அங்கு, எடுபிடி வேடம் போட்டு கதாநாயகனாக வருவதற்குள், எப்படியெல்லாம் ஒரு நடிகன் பாடுபட வேண்டியிருக்கிறது, எத்தனை வேடங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது, என்னவெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
உண்மையிலேயே நாடக மேடைதான், ஒரு நடிகனுக்கு நல்ல பயிற்சி சாலை. அவன் பலதரப்பட்ட பாடங்களை கற்றுத் தேர்ச்சி பெற உதவும் பல்கலைக் கழகம்.
வேறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கும்போதும், ஒவ்வொரு ஊர்களாக முகாம் மாறி, பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும்போதும், வெவ்வேறு சூழ்நிலைகளில் அவன் வளரும் போதும், அவன் பெறும் உலக அனுபவம் பெரிது. இதனால் தான், 'பாய்ஸ் கம்பெனி'யிலிருந்து வரும் எந்த நடிகரும், எந்தப் பாத்திரத்தையும் ஏற்று திறமையாக நடித்துக் காட்ட முடிந்தது.
நான் சிறுவனாகத்தான் நாடக மேடையில் பயிற்சி பெற நுழைந்தேன்.
முதன் முதலாக நான் மேடைக்கு சென்று, மக்கள் முன் நின்றபோது, எனக்கு எப்படி இருந்தது, நான் மேடையில் ஏற்று நடித்த முதல் வேடம் என்ன என்பதும் என் நினைவில் நிலைத்துவிட்டது.
அந்த முதல் வேடத்திலிருந்து, படிப்படியாக நான் போட்டு வந்த வேடங்கள் எத்தனை...
பெண் வேடம் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் கூட வந்ததே... அது ஏன், எப்படி என்ற விவரங்களும் என் ஞாபகத்தில் அப்படியே நிழலாடுகின்றன.
இத்தனை வேடங்களையும் ஏற்று, கடைசியாக கதாநாயகன் வேடத்தை ஏற்று, நடிக்க வந்த போது, எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்ன, நான் முதன் முதலாக கதாநாயகனாக ஏற்று நடித்த வேடம் எது, கதாநாயகனாக மாறியது எப்போது என்பதும், என் நினைவில் அப்படியே இருக்கிறது.
நான் ஆரம்பத்தில் போட்ட அந்தச் சின்னஞ்சிறிய வேடத்திலிருந்து, கதாநாயகனாக வேடம் போட்டு நடித்தது வரை, எனக்கு நாடக மேடையிலும், நடிப்புத் துறையிலும் ஏற்பட்ட அனுபவங்களைத்தான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
அது தான், 'கதாநாயகனின் கதை!'
கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்த அன்றிரவு, எனக்கு தூக்கமே வரவில்லை. இரவு நெடுநேரம் வரை அந்த நாடகத்தைப் பற்றிய சிந்தனைகள், அடுக்கடுக்காக மனதில் வந்து கொண்டிருந்தன.
'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது... உனக்கு ஏன் நான் கப்பம் கட்ட வேண்டும்...' என்று, தன்மானத்தைத் தன் குரலாக்கி, கட்டபொம்மன் இடி முழக்கம் செய்த போது, சபையிலே எழுந்த கைதட்டல்கள் என் காதில், ரீங்காரமிட்டன.
கட்டபொம்மனாக நடித்த நடிகருக்கு கிடைத்த பாராட்டுதல்களை நினைத்து, 'ஆஹா... நடிகனாகி விட்டால் எவ்வளவு கைதட்டல்களும், பாராட்டும் கிடைக்கும்...' என்று நினைத்தேன்.
என் பிஞ்சு மனதில் ஆசைகள் எழ எழ, நாடக மேடையின் பக்கமாக நெருங்கி வந்து கொண்டிருந்தேன். நடிகனாக வேண்டும் என்ற ஆவல் என்னைத் துரத்த ஆரம்பித்தது.
நான் இந்த நாடகக் கம்பெனியில் சேர்ந்த போது, காக்கா ராதாகிருஷ்ணன் கம்பெனியில் இருந்தார். கம்பெனியில் இருந்த எம்.ஆர்.ராதா அண்ணன் சினிமாவில் நடிப்பதற்காக அப்போது போயிருந்தார். ரொம்ப நாட்கள் கழித்து அவர் வந்தார்.
நாடகக் கம்பெனியில் சேர்ந்த முதல் சில நாட்கள், நான் அங்கு நடப்பவைகளை பொதுப்படையாகக் கவனித்து வந்தேன். சில நாட்களுக்குப் பின், எனக்குப் பாடம் கொடுத்து படிக்கச் சொல்லியும், சின்ன வேஷம் கொடுத்து நடிக்கவும் கூறினர்.
வாத்தியார் சொல்லிக் கொடுத்ததை, எந்த விதமான தப்பும் செய்யாமல், அவர் சொல்லிக் கொடுத்தபடியே நடித்துக் காட்டினேன். அப்போது, நான் என்னுள் இருந்து நடிக்கவில்லை; என் ஆசிரியர் தான் உள்ளிருந்து நடித்தார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.
என் மீது ஏற்பட்ட நம்பிக்கையினால், நான் கம்பெனியில் சேர்ந்த பத்தாவது நாளிலேயே, நாடகத்தில் நடிக்க எனக்கு ஒரு வேடம் கொடுத்தனர்.
என்ன வேடம் தெரியுமா? சீதை வேடம். ஆம், நான் வாழ்க்கையில் போட்ட முதல் வேடம், பெண் வேடம் தான். அதுவும், நாடகம் முழுவதும் வரும் சீதை வேடம் அல்ல, கன்னி சீதையின் வேடம். அதாவது, கன்னிகா மாடத்தில் நின்ற சீதை, ராமனைப் பார்த்து, அவர் வில்லை ஒடித்து மணக்கும் வரை உள்ள சீதை.
மூன்றே காட்சிகள் தான் வரும்.
'யாரென இந்தக் குருடனை அறியேனே... என் ஆசைக்கினிய என் முன்னே நின்றவன்...' என்று சீதை பாடுவாள்.
கம்பெனியிலே, 'மேக்-அப்' போடுவதற்கென்று தனியாக ஒப்பனைக் கலைஞர்கள் இருக்க மாட்டார்கள். நடிகர்களே தங்களுக்குப் போட்டுக் கொள்வர். நடிப்போடு, கூடவே, 'மேக்-அப்' போட்டுக் கொள்வதையும் சொல்லிக் கொடுத்து விடுவர். நடிகர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் போட்டு விடுவதும் உண்டு.
சில சமயங்களில் வாத்தியாரும் போட்டு விடுவார்.
நாடகம் நடக்கும் போது, வாத்தியார் மேடையின் பக்கவாட்டில் வந்து நின்று கொள்வார். முக்கியமான வேடமாக இருந்தால், அவர் தாளம் போட்டு தட்டிக் காண்பிப்பார். அவரைப் பார்க்கப் பார்க்க அப்படியே மனப்பாடம் செய்திருந்த வசனமும், சொல்லிக் கொடுத்த நடிப்பும் வந்துவிடும்.
நாடகத்தில் நடிக்காதவர்களும், பக்கவாட்டில் வந்து நின்று கொண்டு கவனிப்பர், கவனிக்க வேண்டும். இது தவிர, நாடகத்தில் பங்கு எடுத்துக் கொள்ளாதவர்கள், திரைக்குப் பின்னால், சீன் தள்ளுவது, காட்சிக்கான சாமான்களைப் பொருத்தமான இடத்தில் வைப்பது போன்ற வேலைகளையும் செய்வர். நீண்டநாள் அனுபவம் வாய்ந்த சில பெரியவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் உள்ளே எங்கேயாவது இருப்பர்.
சீதையாக நான் அலங்கரிக்கப்பட்டுவிட்டேன்.
மனதிற்குள்ளேயே, கடவுளை வேண்டிக் கொண்டேன். ஏதேனும் உளறிக் கொட்டி, கெட்ட பெயர் வாங்கிவிடக் கூடாதே என்ற ஒரு வகை பயம் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
நாடகம் ஆரம்பமாயிற்று, திரை தூக்கப்பட்டுவிட்டது. நான் மேடைக்குள் செல்ல வேண்டிய நேரம் வந்தது.
கடவுளையும், என் குருநாதரையும் மனதில் நினைத்தபடி மேடைக்குள் நுழைந்தேன்.
நான் போட்டிருந்த வேடம், என் பாவனை, என் வேடத்திற்கு வேண்டிய உணர்ச்சி மற்றும் நடிப்பு இவை மட்டும் தான் என் கவனத்திலும், கண் முன்னும் வந்து நின்றன.
எதிரே நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள், என் கண் முன் தெரியவில்லை. மூன்று காட்சிகள் முடிந்தன. நான் உள்ளே வந்தேன்.
'ரொம்ப நல்லா செஞ்சுட்டேடா...' என்று, என் வாத்தியார் சின்ன பொன்னுசாமி, இரண்டு முறை முதுகில் தட்டிக் கொடுத்தார்.
எனக்கு இமயத்தையே வென்று விட்ட எக்களிப்பு; நூற்றுக்கு நூறு வாங்கிவிட்ட மாணவனின் நிலை.
கம்பெனியில் சேர்ந்த பின், இரண்டாவது முறையாக அன்றிரவும் நான் தூங்கவில்லை. என் மனதில் ஆயிரம் கனவுகள்; ஆயிரம் கற்பனைகள்.
கம்பெனி திருச்சியில் தங்கியிருந்த கடைசி நாட்களில் தான் நான் போய்ச் சேர்ந்தேன். நான் சேர்ந்த சில நாட்களில், கம்பெனி திண்டுக்கல்லுக்கு முகாம் மாறியது.
திண்டுக்கல்லில் முகாமிட்டபோது தான், ஒரு நாள் வாத்தியார் என்னைக் கூப்பிட்டார்.
'உனக்கு பிரமோஷன் கொடுத்திருக்கிறேன்...' என்று கூறி, அந்தப் பிரமோஷன் என்ன என்பதை கூறினார். அதைக் கேட்டு, நான் அப்படியே திகைத்து நின்றுவிட்டேன்.
— தொடரும்.

RAGHAVENDRA
19th October 2014, 08:49 PM
முரளி சார்,
நான் சுவாசித்த சிவாஜி தொடருக்கு ஒதுக்கியது போல, தினமலரில் வெளிவரும் நடிகர் திலகத்தின் கதாநாயகனின் கதை தொடருக்கும் தனித் திரி ஒதுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். ஒரே திரியில் தொடர்ந்து படிக்க உதவியாக இருக்கும்.

இது வரை வந்த மூன்று அத்தியாயங்களுக்கான இணைப்புகள் இங்கே தரப்படுகிறது. தனித்திரி ஒதுக்கினால் அங்கே விரிவாக பகிர்ந்து கொள்ளலாம்.

KATHANAYAKANIN KATHAI – DINAMALAR LINKS

EP01 – 05.10.2014 - http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22182&ncat=2

EP02 – 12.10.2014 - http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22265&ncat=2

EP03 – 19.10.2014 - http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22365&ncat=2

Russellbpw
19th October 2014, 09:21 PM
சினி வரலாறு


சிவாஜியுடன் 30 படங்களில் நடித்தார், ஒய்.ஜி.மகேந்திரன்
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 18, 10:47 pm ist


நடிகர் சிவாஜிகணேசனுடன் "கவுரவம்'', "பரீட்சைக்கு நேரமாச்சு'' உள்பட 30 படங்களில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசனும், மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியும் நெருங்கிய நண்பர்கள். ஒய்.ஜி.பார்த்தசாரதி நடத்தி வந்த "பெற்றால்தான் பிள்ளையா'' நாடகம், 1961-ல் "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமாக்கப்பட்டபோது, அதில் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகேந்திரன் எதிர்பார்த்தார். ஆனால், அப்போது நிறைவேறாமல் போன ஆசை 1971-ல் நிறைவேறியது. "கண்ணன் வந்தான்'' என்ற நாடகம், "கவுரவம்'' என்ற பெயரில் படமாகியது. சிவாஜி அற்புதமாக நடித்த படங்களில் ஒன்று "கவுரவம்.'' அதில் நடிக்கும் வாய்ப்பு, மகேந்திரனுக்கு கிடைத்தது.

"கவுரவம்'' மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, சிவாஜியுடன் தொடர்ந்து படங்களில் நடித்தார்.

ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகங்கள் படமாகும்போது, ஒய்.ஜி.பி. நடித்த வேடத்தில் சிவாஜி நடிப்பது வழக்கம். அநேகமாக மகேந்திரனும் இடம் பெறுவார்.

மகேந்திரனின் நூறாவது படம் "உருவங்கள் மாறலாம். இதில் சிவாஜியும், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்தனர். இது வெற்றிப்படம்.

"பரீட்சைக்கு நேரமாச்சு'' என்ற மகேந்திரனின் நாடகத்தைப் பார்த்த பட அதிபரும், டைரக்டருமான முக்தா சீனிவாசன், "இதை சினிமாவாக எடுக்கலாம். சிவாஜியும் நடிக்க வேண்டும். அவரிடம் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கி விடுங்கள்'' என்றார்.

மகேந்திரனும், சிவாஜியை சந்தித்து கதையைச் சொன்னார். கதை, அதில் தான் நடிக்க வேண்டிய வேடம் அனைத்தையும் கேட்டுக்கொண்ட சிவாஜி, "நல்ல கதை. நடிக்கிறேன்'' என்று ஒப்புக்கொண்டார்.

இந்தக் கதையில் "வரதுக்குட்டி'' (வரதன்) என்ற இளைஞனின் கதாபாத்திரம் முக்கியமானது. நாடகத்தில், அப்பாத்திரத்தில் நடித்தவர் மகேந்திரன். சினிமாவிலும் அந்த வேடம் தனக்குத்தான் வரும் என்பது மகேந்திரனுக்குத் தெரியும் என்றாலும், அது சிவாஜி வாயிலிருந்து வரவேண்டும் என்று கருதினார்.

நடிப்பதாக சிவாஜி ஒப்புதல் கொடுத்த பிறகும், அங்கேயே நகராமல் நின்றார். "ஏன் இன்னும் நிற்கிறே! நீதான் வரதுக்குட்டி!'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார், சிவாஜி. மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார், மகேந்திரன்.

இந்தப் படத்தில், மகேந்திரனின் நடிப்பு வெறும் நகைச்சுவையுடன் நில்லாமல், மனதைத் தொடுவதாக அமைந்தது.

Russellbpw
19th October 2014, 09:23 PM
சிவாஜியுடன் 30 படங்களில் நடித்த அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-

"ஆரம்பத்தில் நான் எம்.ஜி.ஆர். ரசிகன். "பாசமலர்'' படத்தைப் பார்த்தபின், சிவாஜியின் பக்தன் ஆனேன்.

என் தந்தைக்கும், சிவாஜிக்கும் நெருங்கிய நட்புறவு உண்டு. எனவே, சிவாஜியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் என்னை தன்னுடைய மூத்த மகனாகவே கருதி, பாசத்தைப் பொழிந்தார்.

மலேசியாவில் நடைபெற்ற விழா ஒன்றில், சிவாஜி பேசுகையில், "நல்ல காமெடி என்றால், என் பையன் மகேந்திரனின் நடிப்பைக் கூறலாம்'' என்று குறிப்பிட்டதை, என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரிய விருதாகக் கருதுகிறேன்.

சிவாஜியின் நேரந்தவறாமைக்கும், கடமை உணர்வுக்கும் பல உதாரணங்கள் கூறலாம்.

5 மணிக்கு நானும், டைப்பிஸ்ட் கோபுவும் சிவாஜி வீட்டுக்குச் சென்றோம். சிவாஜி எங்களை வரவேற்று, காபி கொடுக்கும்படி கமலா அம்மாவிடம் கூறினார்.

பேச்சுவாக்கில், "இன்று மாலை 6-30 மணிக்கு நாடகம் இருக்கிறது'' என்று நான் கூறிவிட்டேன். சிவாஜிக்கு வந்ததே கோபம்! எங்கள் இருவருடைய சட்டையைப் பிடித்து `தரதர' என்று இழுத்து வந்து, வாசலில் தள்ளினார்.

"கமலா! டிராமாவை வைத்துக்கொண்டு, என்னைப் பார்க்க வந்திருக்கானுக! காபி கொடுக்காதே!'' என்று சத்தம் போட்டார்.

என்னைப் பார்த்து, "உங்கப்பா போனப்பறம் நாடகத்தின் மீது அக்கறை போயிடுச்சா! மேலே இருந்து அவருடைய ஆவி சபிக்கும். போங்கடா!'' என்று, கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக எங்களை விரட்டி அடித்தார்.

நாடகம் என்றால், அவருக்கு அப்படி ஒரு பக்தி.

Russellbpw
19th October 2014, 09:24 PM
சிவாஜி அதிகம் நடிக்காமல் இருந்த அவருடைய இறுதிக் காலத்தில், மாதம் ஒரு முறை அவரை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஒருமுறை அவரைப் பார்க்கப் போகவில்லை. எனக்கு சிவாஜியின் வீட்டிலிருந்து போன் வந்தது. "ஏன் வரவில்லை?'' என்று சிவாஜி கேட்பதாகச் சொன்னார்கள். அந்த அளவுக்கு சிவாஜி என்னிடம் அன்பு காட்டினார்.

என்னுடைய நாடக வாழ்க்கையின் பொன் விழா (50-ம் ஆண்டு நிறைவு) 2002-ம் ஆண்டில் நடந்தது. அப்போது பிரபு வந்து, சிவாஜியின் உருவம் பொறித்த தங்கப் பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை எனக்கு அணிவித்தார். "கமலா அம்மாள் தன் மூத்த மகனுக்கு அளித்த பரிசு'' என்று அப்போது அவர் குறிப்பிட்டார். அப்படியே நெகிழ்ந்து போய்விட்டேன்.

சிவாஜி மறைந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. என்றென்றும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வை அவர் படங்கள் ஏற்படுத்துகின்றன.''

இவ்வாறு மகேந்திரன் கூறினார்.

Russellbpw
19th October 2014, 09:31 PM
Top Right Corner - Ramarajan

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/kalthoon105days_zps9a4c8373.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/kalthoon105days_zps9a4c8373.jpg.html)

sivaa
19th October 2014, 09:33 PM
முரளி சார்,
நான் சுவாசித்த சிவாஜி தொடருக்கு ஒதுக்கியது போல, தினமலரில் வெளிவரும் நடிகர் திலகத்தின் கதாநாயகனின் கதை தொடருக்கும் தனித் திரி ஒதுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். ஒரே திரியில் தொடர்ந்து படிக்க உதவியாக இருக்கும்.

இது வரை வந்த மூன்று அத்தியாயங்களுக்கான இணைப்புகள் இங்கே தரப்படுகிறது. தனித்திரி ஒதுக்கினால் அங்கே விரிவாக பகிர்ந்து கொள்ளலாம்.

KATHANAYAKANIN KATHAI – DINAMALAR LINKS

EP01 – 05.10.2014 - http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22182&ncat=2

EP02 – 12.10.2014 - http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22265&ncat=2

EP03 – 19.10.2014 - http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22365&ncat=2

என் எண்ணத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் ராகவேந்திரா சார் நன்றி


முரளி சார் நடிகர் திலகத்தின் கதாநாயகனின் கதை தொடருக்கும் தனித் திரி
ஒதுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்

Russellbpw
19th October 2014, 09:36 PM
LION HUNTS TIGER

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/621502570_zps4b391e1e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/621502570_zps4b391e1e.jpg.html)

sivaa
19th October 2014, 09:37 PM
ஜோ,NOV முதலிய ஜாம்பவான்கள் 24 Feb 2005 இல் (அதற்கு முன்பே ஆரம்பித்து நடத்தி வந்துள்ளனர்)ஆரம்பித்த ,இந்த மையம் திரியின் மகுடமான நடிகர்திலகம் திரிகள் மொத்தம் 3507 நாட்களை கடந்து ,3434 பக்கங்களையும் ,47,39,654 ஹிட்களை வாங்கியுள்ளது.

சராசரியாக நாளொன்றுக்கு 1351 ஹிட்களையும்,பக்கம் ஒன்றுக்கு 1380 ஹிட்களையும் குவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க பலரின் பங்களிப்பிற்கு ,எங்கள் சிரம் குவித்த நன்றி.


இந்தப் பதிவின்மூலம்
என்ன சொல்ல வருகின்றீர்கள் கோபால்
எனக்கு விளங்கவில்லை

Russellbpw
19th October 2014, 09:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/a-3_zps9ba5ec2b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/a-3_zps9ba5ec2b.jpg.html)

Russellbpw
19th October 2014, 09:38 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/b-4_zps5fd83ded.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/b-4_zps5fd83ded.jpg.html)

Russellbpw
19th October 2014, 09:38 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/tamil-cinema-black-and-white-tamilcinema06_zps0e908aa8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/tamil-cinema-black-and-white-tamilcinema06_zps0e908aa8.jpg.html)

RAGHAVENDRA
19th October 2014, 10:03 PM
Top Right Corner - Ramarajan

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/kalthoon105days_zps9a4c8373.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/kalthoon105days_zps9a4c8373.jpg.html)

டியர் ஆர்கேஎஸ்
மேலே உள்ள படத்தில் நின்றிருப்பவர்களில் வலது ஓரத்தில் இருப்பவர் நம்முடைய தீவிர ரசிக நண்பர் திரு ரமணி என்பவர். சாந்தி திரையரங்கில் அந்நாள் தொட்டு இன்று வரை தொடர்ந்து சென்று வருபவர்களுக்கு இவரை நினைவிருக்கும்.
1983ம் ஆண்டு ஜூன் 16 அன்று சந்திப்பு வெளியான அன்று சாந்தி திரையரங்கில் பக்கவாட்டுச்சுவரில் நடிகர் திலகத்தின் திரைப்படப் பட்டியலை வண்ணத்தில் எழுதி திறந்து வைத்தோம். அப்போது இதற்காக உழைத்த பல அன்பு ரசிக நெஞ்சங்களில் ஒன்றுக்கு சொந்தக்காரர். அவரது வலப்புறம் நிற்பவர் திரு கொண்டல்தாசன். திரு கொண்டல்தாசனுக்கு வலப்புறம் நிற்பவர் திரு எம்.எல்.கான் அவர்கள்

Russelldwp
19th October 2014, 10:14 PM
திருச்சியில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் போது எடுத்த படம். சிறப்பு விருந்தினர்களுடன் தில்லைநகர் R.பாஸ்கர் இவ்விழாவிற்கு பெரிதும் உதவியவர். அடுத்த படத்தில் பிறந்தநாள் விழாவில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்ட போது எடுத்த படம்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p526x296/65072_1527566764126666_4382988620813395992_n.jpg?o h=3d44db1390a0ace177feef4f00bca250&oe=54AC9689&__gda__=1420797542_1fbcb1f85f229194fbecae7eda8bf3a 0

https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p526x296/1779837_1527566934126649_7293176932409013209_n.jpg ?oh=a62013761c1b1f0df01145f657b5eb06&oe=54B2DBD4

Russellbpw
19th October 2014, 10:16 PM
டியர் ஆர்கேஎஸ்
மேலே உள்ள படத்தில் நின்றிருப்பவர்களில் வலது ஓரத்தில் இருப்பவர் நம்முடைய தீவிர ரசிக நண்பர் திரு ரமணி என்பவர். சாந்தி திரையரங்கில் அந்நாள் தொட்டு இன்று வரை தொடர்ந்து சென்று வருபவர்களுக்கு இவரை நினைவிருக்கும்.
1983ம் ஆண்டு ஜூன் 16 அன்று சந்திப்பு வெளியான அன்று சாந்தி திரையரங்கில் பக்கவாட்டுச்சுவரில் நடிகர் திலகத்தின் திரைப்படப் பட்டியலை வண்ணத்தில் எழுதி திறந்து வைத்தோம். அப்போது இதற்காக உழைத்த பல அன்பு ரசிக நெஞ்சங்களில் ஒன்றுக்கு சொந்தக்காரர். அவரது வலப்புறம் நிற்பவர் திரு கொண்டல்தாசன். திரு கொண்டல்தாசனுக்கு வலப்புறம் நிற்பவர் திரு எம்.எல்.கான் அவர்கள்

Dear Sir,

Sorry about the mistaken identity. The gentleman looked like Mr. Ramarajan.

Ofcourse, i can identify Mr. Khan.

Regards
RKS

eehaiupehazij
19th October 2014, 11:23 PM
சினிமா பைத்தியம் (1975) :
நடிகர்திலகத்தின் முதன்மையான கவுரவ நடிப்பில் திரைப்படத்தின் பளபளப்புக்கும் நிஜவாழ்வில் வேறுபாட்டுக்கும் எடுத்துக்காட்டான சிறு முயற்சி. இரும்புத்துகள்களான மக்கள்கூட்டத்தை திரையரங்குகளை நோக்கி சிவாஜி காந்தம் இழுத்த பாடம்! Remake of Hindi Guddi starring Jaya Badhuri with Dharmendra in the role reprised by Jaishankar!

Enjoy the brief role of NT (click to You Tube link)

https://www.youtube.com/watch?v=hYynckRbsl8

Gopal.s
20th October 2014, 05:49 AM
Courtesy- B.G.S.Manian(Edited version from his original writings )


"படிக்காத மேதை" - நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படம்.


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் "ரங்கன்" என்ற ஒரு கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட மனிதனாக நடித்த - அல்ல - வாழ்ந்து காட்டிய படம். அவருடன் எஸ்.வி. ரங்காராவ், கண்ணாம்பா, சௌகார் ஜானகி, முத்துராமன், அசோகன், சந்தியா, ஈ.வி. சரோஜா ஆகியோரும் நடித்திருந்தனர்.


பீம்சிங்கும் கே.வி. மகாதேவனும் இணைந்த முதல் படம் இது.



கண்ணதாசன், மருதகாசி ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடலும் படத்தின் ஒரு முக்கிய திருப்புமுனைக் காட்சிக்கு பயன்படுத்தப் பட்டிருந்தது.



படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மகாதேவனின் முழுத் திறமையும் தெரிந்தது.



இந்தப் படத்தில் இடம் பெற்ற மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை பத்து.



படம் வெளிவந்த அறுபதில் டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் மற்ற பாடகர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவர்கள் இருவரையுமே பிரதானப் படுத்திக் கொண்டிருந்த நேரம் அது.



ஆனால் கே.வி, மகாதேவனோ "படிக்காத மேதை" படத்துக்காக அவர்கள் இருவரை மட்டும் அல்லாமல் எம்.எஸ். ராஜேஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி. லீலா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல். ராகவன் என்று பலரையும் பாடவைத்தார்.



கதாநாயகனின் குணாதிசயத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டும் பாடல்

"உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது.

உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது." என்ற பாடல்.



தனக்கு மற்றவர்களைப் போல கல்வி அறிவு இல்லையே என்று வருந்தும் கணவனை மனைவி தேற்றுவதாக அமைந்த பாடல் "படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு." - சௌகார் ஜானகிக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியை இந்தப் பாடலுக்கு பின்னணி பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.





கண்ணதாசனின் வரிகளும், ராஜேஸ்வரியின் மழலை பொங்கும் குரலும் பாடலுக்கு தனி அழகைத் தருகின்றன. கீரவாணி ராகத்தின் அடிப்படையில் இந்த பாடலை அருமையாக வடிவமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.



"ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா" - என்ற காதுகளை சுகமாக வருடும் பாடலை டி.எம்.எஸ். - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவரையும் பாடவைத்து தாலாட்டு வகையில் அமைந்த இந்தப் பாடலை இரவில் கேட்கவேண்டும். அதிலும் "சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை" என்று துவங்கும் கடைசி சரண வரிகளின் போது நம் கண்கள் தானாகவே சொக்கத் தொடங்கி விடும். அவ்வளவு அருமையாக இந்த சரணம் அமைந்திருக்கிறது. டி.எம். எஸ். ஸும் மிகவும் நயமாக பாடி இருக்கிறார்.



"ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்" - பி.லீலா.



"இன்ப மலர்கள் பூத்துக்குலுங்கும் சிங்காரத்தோட்டம்" - பி. சுசீலா - எல், ஆர். ஈஸ்வரியின் குரல்களில் ஒலிக்கும் பாடல்.



"பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

கண்பார்வை போடுதே துடுப்பு" - ஏ.எல். ராகவன்- ஜமுனாராணி.



"சீவி முடிச்சு சிங்காரிச்சு" - டி.எம்.சௌந்தரராஜன்.





என்று இப்படி பல பாடகள் இருந்தாலும் கே.வி. மகாதேவன் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு ரசித்து ஒவ்வொரு வரியாக அனுபவித்து அமைத்த பாடல் என்றால் அது "எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நானென்றான்" - என்ற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்தான்.



கண்ணனைத் தன் சேவகனாக வரித்து பாரதியார் அமைத்திருக்கும் பாடல் இது.



ஏற்கெனவே இந்தப் பாடலை இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் "கூலி மிகக் கேட்பார்" என்று துவங்கி அருமையாகப் பாடி தனது சொத்தாகவே மாற்றிக்கொண்டிருந்தார்.



"பெரியவரோட (ஜி. ராமநாதன்) பாட்டு இது. அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் நம்மாலே முடிஞ்ச அளவுக்கு பாட்டைக் கெடுக்காம கவனமா பண்ணனும்" என்று புகழேந்தியிடம் சொல்லிக்கொண்டே சிரத்தை எடுத்துக்கொண்டு மகாதேவன் இசை அமைத்து சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைத்தார். சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடல் இன்றளவும் உயிரோட்டத்துடன் அமைந்திருக்கிறது.



இன்று ஜி. ராமனாதனின் "கூலி மிகக் கேட்பார்" பாட்டு மறைந்துவிட்டது.



ஆனால் அவரைத் தன் குருவின் ஸ்தானத்தில் வைத்துக்கொண்டு மிகுந்த மரியாதையுடன் பக்தி சிரத்தையுடன் கே.வி. மகாதேவன் உருவாக்கிய "எங்கிருந்தோ வந்தான்" பாடல் காலத்தை வென்று அமரத்துவம் எய்திய பாடலாக காற்றலைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது.



*******************

“அகிலன்" - தமிழ் எழுத்தாளர்களில் இந்தப் பெயருக்கு ஒரு தனிச் சிறப்பும், மரியாதையும், பெருமையும் உண்டு.



புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள "பெருங்கலூர் " என்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர் அகிலன்.



அமரர் கல்கி அவர்களின் பெரும்புகழ் பெற்ற சரித்திர நாவலான "பொன்னியின் செல்வ"னின் தொடர்ச்சியாக அகிலன் எழுதிய நாவல்தான் "வேங்கையின் மைந்தன்".

ராஜேந்திர சோழனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த நாவல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிவாஜி நாடக மன்றத்தால் மேடை நாடகமாக உருமாறி பெருவெற்றி பெற்றது.



"சித்திரப்பாவை" - ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மகத்தான வெற்றிபெற்ற நாவல். "ஞான பீடம்" - என்ற மிக உயர்ந்த இலக்கியத்துக்கான விருதை தமிழுக்குப் பெற்றுத்தந்த நாவலும் இதுதான்.




இத்தனைச் சிறப்புகளுக்கெல்லாம் சொந்தக்காரரான அகிலனின் நாவலான "பாவை விளக்கு"க்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதினார் ஏ.பி. நாகராஜன்.



கே.சோமு அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் குமாரி கமலா, சௌகார் ஜானகி, எம்.என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.



படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் - ஒரே ஒரு பாரதியார் பாடலைத் தவிர - கவிஞர் மருதகாசி எழுதி இருந்தார்.



ஏ.பி.நாகராஜன் - கே.சோமு - மருதகாசி கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம். இசை அமைப்பு கே.வி. மகாதேவனைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?



அருமையான பாடல்களை அற்புதமாக எழுதித் தள்ளியிருந்தார் மருதகாசி.



அவற்றுக்கு மகாதேவன் அமைத்திருந்த மெட்டுக்களோ?



பாடல்களுக்கான மெட்டுக்களா இல்லை மெட்டுக்களுக்கான பாடல்களா என்று கேட்போர் வியக்கும் அளவுக்கு மருதகாசியின் பாடல்வரிகளும் மகாதேவனின் இசையும் போட்டி போட்டுக்கொண்டு கனகச்சிதமாக வெகு சிறப்பாக அமைந்த படம் இது.



இன்னும் சொல்லப்போனால் "பாவை விளக்கு" படத்துக்கு பலமே அதன் பாடல்கள் தான்.

பாடல்கள் தான் இந்தப் படத்தை ஓரளவுக்காவது தூக்கி நிறுத்தின.



அந்த வகையில் "பாவை விளக்கு" படத்தின் பாடல்கள் ஐம்பது வருடங்களைக் கடந்த பிறகும் உயிர்ப்புடன் காற்றலைகளில் நிலைத்து நிற்பது பிரமிக்க வைக்கும் சாதனைதான்.



படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கான அனைத்துப் பாடல்களையும் சி. எஸ். ஜெயராமனைப் பாடவைத்திருந்தார் கே.வி. மகாதேவன்.



தனது முதல் படமான "பராசக்தி"யில் தனக்குப் பாடிய சி.எஸ். ஜெயராமனின் குரலின் மீது நடிகர் திலகத்துக்கு ஒரு தனி மோகமே உண்டு. ஆரம்பத்தில் "தூக்கு தூக்கி" படத்தில் தனக்காக டி.எம். சௌந்தரராஜனைப் பாடவைக்க முடிவெடுத்தபோது அவர் "ஜெயராம பிள்ளையை எனக்காக பாடவைக்காம வேற யாரையோ பாடவைக்கனும்னு சொல்லறீங்களே" என்று குறைப்பட்டுக்கொண்டது கூட உண்டு.



அப்படிப்பட்ட சி.எஸ். ஜெயராமனின் குரலில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே பிரபலமான பாடல்களாக அமைந்துவிட்டன.



குற்றாலத்தின் அழகையும், சிறப்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமா? அதனைப் பார்த்து ரசிக்க இரண்டு கண்கள் போதாதாம். ஆயிரம் கண்கள் வேண்டுமாம். இல்லை இல்லை. ஆயிரம் கண்களும் போதாதாம்! அப்படித்தான் மருதகாசி சொல்கிறார்.



"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே

குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே"





"மாண்ட்" - ராகத்தில் கே.வி. மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமோ ஆயிரம் முறைகள் கேட்டாலும் சலிக்கவே சலிக்காத பாடல்.



இந்தப் பாடல் ஏ.பி. நாகராஜனின் மனதில் ஒரு அழுத்தமான இடத்திப் பிடித்து விட்டது.. அதனால் தானோ என்னவோ பின்னாளில் தான் இயக்கிய "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் இந்தப் பாடலை அப்படியே நாதஸ்வரத்தில் வாசிக்கவைத்து பயன்படுத்திக்கொண்டுவிட்டார் அவர்.



அடுத்து "வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்" - என்ற பாடல்..



வசன நடையில் ஆரம்பித்து ஒவ்வொரு வார்த்தைகளாக கூட்டிக்கொண்டே ஆரம்பிக்கும் பல்லவி. ஒவ்வொருக்கு அடிக்கு பிறகும் பாடலாக உருமாறுகிறது.



பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்

தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்.

வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள். - என்று என்று படிப்படியாக வார்த்தைகளைக் கூட்டிக்கொண்டே போகும்போது மகாதேவனின் கற்பனைத் திறனும் இசை ஆளுமையும் பிரமிக்கவைக்கிறது. சி.எஸ். ஜெயராமனுடன் ஹம்மிங்காக எல்.ஆர்.ஈஸ்வரி இணையும் பாடல் இது. சங்கராபரண ராகத்தை வெகு அற்புதமாக மகாதேவன் கையாண்டு பாடலை கொடுத்திருக்கிறார்.



"நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக்கண்ணே" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் குரலில் அருமையான ஒரு குழந்தையைக் கொஞ்சிச் சீராட்டும் பாடல்.





இப்படி இத்தனைப் பாடல்கள் இருந்தாலும் "பாவை விளக்கு" என்றதுமே நம் உதடுகள் தாமாகவே உச்சரிக்கும் பாடல் ஒன்று உண்டு என்றால் அது "காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா" பாடல்தான்.



காதலுக்கும் முகலாயர்களின் கட்டிடக்கலைக்கும் காலத்தால் அழிக்க முடியாத அற்புதச் சின்னமாக விளங்கும் தாஜ் மஹாலின் அழகை வருணிக்கும் பாடல்.



இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் கே.வி. மகாதேவனின் திறமை - அவரது இசை ஆளுமை எல்லாமே உலக அதிசயமான தாஜ் மகாலுக்கு நிகராக நம்மை பிரமிக்க வைக்கிறது.



பல்லவியை சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைத்தவர்.. பல்லவி முடிந்தபிறகு வரும் சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசையிலும் தொடரும் சரண வரிகளிலும் அரேபிய இசைப் பிரயோகங்களை அற்புதமாக இணைத்திருக்கிறார். அதற்கு அவருக்கு கை கொடுத்த ராகம் "சரசாங்கி".



கர்நாடக இசையில் 27வது மேளகர்த்தா ராகமான சரசாங்கி ஒரு சம்பூரணமான சுத்த மத்யம ராகம்.



முழுக்க முழுக்க இந்த மேளகர்த்தா ராகத்தை அரேபிய இசைக்கான ராகமாகப் பயன்படுத்தி மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமும், அதனை சி.எஸ். ஜெயராமனும், பி. சுசீலாவும் பாடியிருக்கும் விதமும் .. வருணிக்க வார்த்தைகளே இல்லை.



அதுவும் "முகலாய சாம்ராஜ்ய கீதமே" என்று சுசீலா ஆரம்பிக்கும் அழகும், சரணத்தின் கடைசி வரிகளில் "என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே என்னைச் சொந்தம் கொண்ட தெய்வமே" - என்றும், "கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவது உண்மைக்காதலே" என்றும் பாடும் போது அவரது குரலில் வெளிப்படும் இனிமையும் உண்மையிலேயே காதுகளில் தேன் பாய்வது என்பார்களே அது இதைத்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.



கே.வி. மகாதேவனின் இசையில் சங்கராபரணமும், சரசாங்கியும் தான் எப்படி எல்லாம் மருதகாசியின் வரிகளுக்கு ஜீவன் தருகின்றன!



உண்மையிலேயே இது ஒரு காவியப்பாடல் தான்.



1963ஆம் வருடத்தில் மொத்தம் வெளிவந்த 45 தமிழ்ப் படங்களில் கே.வி. மகாதேவனின் இசையில் மட்டுமே இருபத்து மூன்று படங்கள் வெளிவந்தன.



அவற்றில் பெரும்பாலான பாடல்கள் பெரு வெற்றி பெற்ற பாடல்கள்.



எழுத்தாளர் அகிலனின் "வாழ்வு எங்கே" என்ற புகழ் பெற்ற நாவல் ஏ.பி.நாகராஜனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் சிவாஜி கணேசன் - சரோஜாதேவி - தேவிகா நடிக்க "குலமகள் ராதை" படமாக வெளிவந்தது.



கே.வி.மகாதேவனின் இசையில் மருதகாசி, கண்ணதாசன் இருவரின் பாடல்கள் அனைத்துமே இன்றளவும் மறையாத பாடல்கள்.



"உலகம் இதிலே அடங்குது" - டி.எம்.எஸ். பாடும் இந்த விறுவிறுப்பான பாடலுடன்தான் படமே தொடங்குகிறது.



"ராதே உனக்கு கோபம் ஆகாதடி" - எம்.கே. தியாகராஜா பாகவதர் பாடிப் பிரபலமான ஒரு பாடல். அதே மெட்டில் டி.எம். சௌந்தரராஜனின் கம்பீரக்குரலில் அப்படியே வார்த்தெடுத்திருந்தார் கே.வி. மகாதேவன்.



"சந்திரனைக் காணாமல் அல்லிமுகம் மலருமா" - டி.எம்.எஸ் - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலில் முதல் சரணம் முடிந்ததும் நடைபேதம் செய்து அடுத்த சரணத்தை அமைத்து கடைசியில் மீண்டும் பல்லவிக்கேற்ற நடைக்குத் திரும்பிவந்து .. என்று நகாசு வேலை காட்டி இருக்கிறார் கே.வி.மகாதேவன்.



"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை" - படத்திலேயே டி.எம்.எஸ். குரலில் மிகவும் பிரபலமான இந்தப் பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதம் - வித்யாசமான மெட்டு மனதை வருடுகிறது.



"பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்" - பி.சுசீலாவின் குரலில் ஒரு சோகப் பாடல்.



"கள்ளமலர்ச் சிரிப்பிலே" - பி.சுசீலாவின் குரலில் செந்தேனாக இனிக்கும் பாடல்.



டி.எம்.எஸ். அவர்களுக்கு என்று பிரபலமான பாடலைக் கொடுத்த மகாதேவன் படத்தின் பெயர் சொன்னாலே நினைவில் நிற்கும் அளவுக்கு பி.சுசீலாவின் குரலில் கொடுத்த பாடல் "இரவுக்கு ஆயிரம் கண்கள்".



பாடல் வரிகளும், இணைப்பிசையும், பாடலை அமைத்த விதமும் படத்திலேயே முதல் இடம் பெற்ற பாடலாக இந்தப் பாடலை நிற்க வைத்துவிட்டது.



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொந்தமாக "சிவாஜி பிலிம்ஸ்" பானரில் தயாரித்த முதல் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி.மகாதேவனுக்கே கிடைத்தது. படம் "அன்னை இல்லம்". பி. மாதவன் இயக்கிய முதல் சிவாஜி படம் இது.



இந்தப் படத்தில் மகாதேவனின் இசையில் பாடல்கள் வெற்றிபெற்று படத்தின் வெற்றிக்கு கைகொடுத்தன.



"நடையா இது நடையா" - டி.எம்.எஸ். - குரலில் ஒரு ஈவ் டீசிங் பாடல்.



"மடிமீது தலைவைத்து" - இன்றளவும் அனைத்து தொலைக்காட்சிச் சானல்களாலும் தவறாமல் ஒளிபரப்பப் படும் பாடல். டி.எம்.எஸ். - சுசீலாவின் குரல்களில் அருமையான ஒரு மெலடி.



"எண்ணிரண்டு பதினாறு வயது" - டி.எம்.எஸ்ஸுடன் "ஹம்மிங்கில்" எல்.ஆர். ஈஸ்வரி இணையும் பாடல்.



"பாசமலர்" தயாரித்த மோகன் தனது "ராஜாமணி பிக்சர்ஸ்" பானரில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் தயாரித்த "குங்குமம்" படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.



சிவாஜிக்கு ஜோடியாக விஜயகுமாரி நடித்த முதல் படம் இது. இவர்களுடன் எஸ்.எஸ். ஆர்., சாரதா, எஸ்.வி. ரங்கராவ், எம்.வி.ராஜம்மா, நாகேஷ், மனோரமா - ஆகியோரும் நடித்திருந்தனர்.



பாடல்களில் ஒரு இசைச் சாம்ராஜ்யமே நடத்தி இருந்தார் கே.வி.மகாதேவன்.



"குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம்" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி.சுசீலா இணைந்து பாடும் இந்தப் பாடலை முழுக்க முழுக்க கர்நாடக ராகமான "ஆபேரி"யில் அற்புதமாக அமைத்திருந்தார் அவர்.



"பூந்தோட்டக் காவல்காரா" - பி.சுசீலாவில் குரலில் துள்ளலாகவும் டி.எம்.எஸ். குரலில் விருத்தமாகவும் ஒலிக்கும் பாடல் இது.

.

"இசைச் சக்ரவர்த்தி" ஜி.ராமநாதன் பிரபலப்படுத்திய ராகம் சாருகேசி.



இந்த ராகத்தில் ஒரு அருமையான ஜோடிப்பாடலை வெகு சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.



"தூங்காத கண்ணின்று ஒன்று" - டி.எம். எஸ். - சுசீலா பாடும் இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமா?



இதே போல "தர்பாரி கானடாவில்" டி.எம்.எஸ். - எஸ். ஜானகியின் குரல்களில் ஒலிக்கும் - பிரபலமான "சின்னஞ்சிறிய வண்ணப் பறவை" இசை இன்றளவும் இசை வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறதே.



நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வைப்பதற்காக தனது அடுத்த கதையை தயார் செய்தார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்.



அதுவே நடிகர் திலகத்தின் நூறாவது படமாகவும் அமைந்தது.



ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் அசத்திய "நவராத்திரி" படம் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்தது.



நடிகர் திலகத்துடன் நடிகையர் திலகம் இணைந்து நடித்த இந்தப் படத்தில் மகாதேவன் இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்தன.



"நவராத்திரி சுபராத்திரி" - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலை பீம்ப்ளாஸ் ராகத்தைப் பயன்படுத்தி இசை அமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.



இன்றுவரை ஒவ்வொரு நவராத்திரி பண்டிகைக்கும் தவறாமல் ஒளிபரப்பாகும் பாடல் இது.



"சொல்லவா கதை சொல்லவா" - பி.சுசீலா.



"இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்" - டி.எம். எஸ். பாடும் பாடல்.



மனநோய் மருத்துவமனையில் ஒரு கதம்பப் பாட்டு - பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குழுவினருடன் பாடும் பாட்டு.



"போட்டது மொளைச்சுதடி கண்ணம்மா" - டி.எம்.எஸ்.



நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகளில் சத்தியவான்-சாவித்திரி நாடகப் பாடல்களை தொகுத்து அமைத்த தெருக்கூத்துக்கான பாட்டு. டி.எம்.எஸ். - பி.சுசீலா - எஸ்.சி. கிருஷ்ணன் ஆகியோருடன் வசனப் பகுத்திக்கு நடிகர் திலகமும், நடிகையர் திலகமும். இந்தப் பாடல் முழுக்க ஹார்மோனியத்தையும் தபேலாவையும் மட்டுமே பயன்படுத்தி அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.



"நவராத்திரி" படத்தை விமர்சனம் செய்த ஆனந்த விகடன் "நடிப்பிலும், கதையிலும் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் சற்று செலுத்தி இருக்கலாம்" - என்று விமர்சனம் செய்திருந்தது.



ஆனால் "நவராத்திரி" பாடல்கள் அப்படி ஒன்று சோடை போகவில்லை என்பது இன்றளவும் உண்மை.



படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு பாடல்களும் உறுதுணையாக இருந்தாலும் ஆக்கிரமித்ததென்னவோ நடிகர் திலகத்தின் நடிப்புத்தான்.

Gopal.s
20th October 2014, 08:31 AM
புதுமை இயக்குனர் ஸ்ரீதர்.



இன்று அவரின் 6 வது நினைவு நாள்.



சிவாஜியுடன், எதிர்பாராதது,அமரதீபம்,உத்தமபுத்திரன்,புனர்ஜென்மம், சித்தூர் ராணி பத்மினி,கலாட்டா கல்யாணம் படங்களில் எழுத்தாளராகவும், விடிவெள்ளி,ஊட்டி வரை உறவு,நெஞ்சிருக்கும் வரை,சிவந்தமண் ,வைரநெஞ்சம்,மோகன புன்னகை முதலிய படங்களில் இயக்குனராகவும் ,கடைசி வரை உயரிய நண்பராகவும் தொடர்ந்தவர்.



மறைவதற்கு சில நாட்கள் முன்பு,தன்னை சந்தித்த அமீர் என்ற இயக்குனரிடம்,தனக்கு மிக பிடித்த நடிகராக நடிகர்திலகத்தை குறித்துள்ளார்.



புதுமை இயக்குனர் , தமிழ் கதைகளுக்கு புதிய தளத்தை வடிவமைத்து,இயக்குனர் என்ற பதத்திற்கே புது அர்த்தம் தந்தவர்.காமிரா வழியாக கதை சொன்னவர்.



சிவாஜிக்கு இவர் கொடுத்த அமர தீபம்,உத்தமபுத்திரன்,ஊட்டி வரை உறவு,சிவந்த மண் போன்ற காவியங்கள் என்றென்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.



இவருடைய மூன்று மிக சிறந்த படங்கள் காதலிக்க நேரமில்லை,சுமைதாங்கி,நெஞ்சில் ஊர் ஆலயம். 70 களில் மிக மோசமான படங்களால் தன் தரத்தை தாழ்த்தி கொண்டாலும் ,இளைய தலைமுறையினரிடம் இணைந்து இவரளித்த இளமை ,ஊஞ்சலாடுகிறது.அழகே உன்னை ஆராதிக்கிறேன் ஆகியவை முத்திரை.



எது எப்படி இருப்பினும் இவருக்கு அமைந்த அளவு பாடல்கள், எந்த இயக்குனருக்கும் அமைந்ததில்லை என்பது சத்தியம்.



சிவாஜியை ,இவர் ஒரு பீம்சிங்,பந்துலு,ஏ.பீ.என்,ஏ.சி.டி,மாதவன் ,பாரதிராஜா அளவு பயன் படுத்தி, காவியங்களை அளிக்காதது எனக்கு வருத்தமே. ஆனாலும் பாலசந்தர் அளவு ஏமாற்றமில்லை.

Gopal.s
20th October 2014, 08:39 AM
நண்பர்களே,



நான் விளையாட்டாக மற்றவர் பாணியில் எழுதிய அங்கதங்களை சிலர் நிஜமாகவே செய்ய தொடங்கி விஷ பரீக்ஷை ஆரம்பித்தாயிற்று.



ஜெயகாந்தன் கதைகளுக்கும்,தி.ஜானகிராமன் கதைகளுக்கும் செய்த ஆய்வுகளை காப்பியடித்து,ராஜேஷ் குமார் கதைகளுக்கு செய்ய ஆரம்பித்தால்?



புலிகளுக்கு கோடு இருப்பதுதான் அழகு. பூனைகள் அடுப்படியில் உறங்கியிருப்பதே நல்லது.

Russellxss
20th October 2014, 10:19 AM
நெல்லை சென்ட்ரலில் தீபாவளியை முன்னிட்டு 22.10.2014 முதல்
நமது தலைவர் நடிகர்திலகம் நடித்த நீதி வெளியீடு.

http://i1373.photobucket.com/albums/ag399/namburajan/fb_zps9d9aa2e6.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
20th October 2014, 10:37 AM
நெல்லை சென்ட்ரலில் தீபாவளியை முன்னிட்டு 22.10.2014 முதல்
நமது தலைவர் நடிகர்திலகம் நடித்த நீதி வெளியீடு.

http://i1373.photobucket.com/albums/ag399/namburajan/fb2_zps39deeae4.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
20th October 2014, 10:39 AM
நெல்லை சென்ட்ரலில் தீபாவளியை முன்னிட்டு 22.10.2014 முதல்
நமது தலைவர் நடிகர்திலகம் நடித்த நீதி வெளியீடு.

http://i1373.photobucket.com/albums/ag399/namburajan/fb2_zps39deeae4.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Gopal.s
20th October 2014, 10:58 AM
இன்று ஸ்ரீதர் நினைவு தினம். அவரை நினைவு கோரும் விதமாக,அவரால் உளவியல் ரீதியில் படைப்பு பெற்று ,மிக சுருக்கமான,கூர்மையான ,ஈர்ப்பான ,இயல்பான வசனங்களால், சிவாஜியின் மேதைமை மேலும் மெருகேற்றி, அமரத்துவம் பெற்று ,அனைத்து தரப்பினராலும் ,இன்றளவும் பாராட்ட பெற்று, எல்லோர் நெஞ்சிலும் நிலைக்கும்

உத்தம புத்திரன்.


உத்தம புத்திரன்-1958

எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)

முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான் ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .

இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.

முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.

இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.

நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.

கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.

கண்கள்- விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.

உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.

குரல்- நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.

இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........

விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.

ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?

KCSHEKAR
20th October 2014, 11:18 AM
இன்று ஸ்ரீதர் நினைவு தினம். அவரை நினைவு கோரும் விதமாக,அவரால் உளவியல் ரீதியில் படைப்பு பெற்று ,மிக சுருக்கமான,கூர்மையான ,ஈர்ப்பான ,இயல்பான வசனங்களால், சிவாஜியின் மேதைமை மேலும் மெருகேற்றி, அமரத்துவம் பெற்று ,அனைத்து தரப்பினராலும் ,இன்றளவும் பாராட்ட பெற்று, எல்லோர் நெஞ்சிலும் நிலைக்கும்
உத்தம புத்திரன்.
இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?
டியர் கோபால் சார்,
இயக்குனர் ஸ்ரீதர் நினைவுநாளை - உத்தமபுத்திரன் திரைப்படம் மூலம் நினைவுகூர்ந்தது மிகவும் பொருத்தம் - சிறப்பு.

உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.
மிகச் சிறப்பான வர்ணனை.
இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய படங்களில் எனக்குப் பிடித்தது நெஞ்சிருக்கும்வரை & ஊட்டிவரை உறவு.

Russellbpw
20th October 2014, 01:37 PM
நண்பர்களே,.

http://www.youtube.com/watch?v=RvzIQsSnb-c :yessir:

Russellbpw
20th October 2014, 01:39 PM
http://www.youtube.com/watch?v=Io_-zCzX81E

Russellbpw
20th October 2014, 01:40 PM
http://www.youtube.com/watch?v=GwMq6tC2nhI

Russellbpw
20th October 2014, 01:40 PM
http://www.youtube.com/watch?v=_tDhEy35P-0

Russellbpw
20th October 2014, 01:41 PM
http://www.youtube.com/watch?v=h8kfABvuJBk

Russellbpw
20th October 2014, 01:42 PM
http://www.youtube.com/watch?v=8PljHuFQ6vk

Russellbpw
20th October 2014, 01:44 PM
http://www.youtube.com/watch?v=eeJdaykdHBA

Russellbpw
20th October 2014, 01:44 PM
http://www.youtube.com/watch?v=Umeec621CbM

ScottAlise
20th October 2014, 01:45 PM
கோபால் சார் ,

தங்களின் கெளரவம் படத்தின் அலசல் பற்றி சில வரிகள் .


தங்களை போல எனக்கும் கெளரவம் மிகவும் பிடிக்கும் , ஆனால் அந்த படத்தை பற்றி எழுதலாம் என்று நினைத்தால் எனக்கு படத்தை பற்றி வழக்கம் போல் தான் எழுத வரும் தங்களை போல 3 rd dimension என்னால் கொடுக்க முடியாது , தாங்கள் எழுதிய கெளரவம் படத்தின் பதிவை படித்த பிறகு படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன் இது வரை பல தடவை பார்த்த படம் , புதிதாக இருந்தது
தாங்கள் கூறியதை போல ரஜினிகாந்த வெளி தோற்றத்தில் modern outlook கொண்ட மனிதராக தோன்றினாலும் அவர் விரும்புவது மனைவி , மகன் இருவரின் obedience தான்
இந்த கோணத்தில் நான் யோசிதததே இல்லை


NIce analysis

Russellbpw
20th October 2014, 01:45 PM
http://www.youtube.com/watch?v=ZvJIX3nOmHw

Russellbpw
20th October 2014, 01:46 PM
http://www.youtube.com/watch?v=B-e2S5Fo5xw

Russellbpw
20th October 2014, 01:51 PM
http://www.youtube.com/watch?v=KPGALWi4WeI

Russellbpw
20th October 2014, 01:52 PM
http://www.youtube.com/watch?v=Zj-fDWtxcIc

Russellbpw
20th October 2014, 01:54 PM
http://www.youtube.com/watch?v=Wq3Etpgao8g

Russellbpw
20th October 2014, 01:54 PM
http://www.youtube.com/watch?v=Qh30rvOflCU

Russellbpw
20th October 2014, 01:56 PM
http://www.youtube.com/watch?v=uHOV2JhwdtQ

Russellbpw
20th October 2014, 01:56 PM
http://www.youtube.com/watch?v=EcqXs94XVe8

Russellbpw
20th October 2014, 02:00 PM
ULAGANAAYAGANE....SONG....! SO APT FOR NT !!!!!

http://www.youtube.com/watch?v=CM1NvdUMW0Y

Russellbpw
20th October 2014, 02:04 PM
http://www.youtube.com/watch?v=Bu9tgXuYGl8

Russellbpw
20th October 2014, 02:05 PM
http://www.youtube.com/watch?v=CDEVt8gvqRA

Russellbpw
20th October 2014, 02:06 PM
http://www.youtube.com/watch?v=i3AXdlCYAXU

Russellbpw
20th October 2014, 02:07 PM
http://www.youtube.com/watch?v=k-WAz4j6IEk

Russellbpw
20th October 2014, 02:08 PM
http://www.youtube.com/watch?v=bVp19jB9ObU

Russellbpw
20th October 2014, 02:09 PM
http://www.youtube.com/watch?v=AwfYNtzNG_o

Russellbpw
20th October 2014, 02:12 PM
http://www.youtube.com/watch?v=BTNvznQYGIA

Russellbpw
20th October 2014, 02:14 PM
http://www.youtube.com/watch?v=4B3mg5GbaRY

Russellbpw
20th October 2014, 02:16 PM
http://www.youtube.com/watch?v=aQ-xZsg_EqM

Russellbpw
20th October 2014, 02:18 PM
http://www.youtube.com/watch?v=-J13WklIckI

Russellbpw
20th October 2014, 02:19 PM
http://www.youtube.com/watch?v=zKUpbXldBA4

Russellbpw
20th October 2014, 02:19 PM
http://www.youtube.com/watch?v=f7HlrvHdV6U

Russellbpw
20th October 2014, 02:20 PM
http://www.youtube.com/watch?v=ugO_FPsncWI

Russellbpw
20th October 2014, 02:22 PM
http://www.youtube.com/watch?v=9KVM1f51PK0

Russellbpw
20th October 2014, 02:25 PM
http://www.youtube.com/watch?v=VXnqq1kq5KY

Russellbpw
20th October 2014, 02:26 PM
http://www.youtube.com/watch?v=pHytm459Hw8

Russellbpw
20th October 2014, 02:27 PM
http://www.youtube.com/watch?v=GxG9EzeAXi4

Russellbpw
20th October 2014, 02:27 PM
http://www.youtube.com/watch?v=8l9h6MDKH48

Russellbpw
20th October 2014, 02:28 PM
http://www.youtube.com/watch?v=VpXH723y9-A

Russellbpw
20th October 2014, 02:29 PM
http://www.youtube.com/watch?v=YzzBOQnwaKc

Russellbpw
20th October 2014, 02:30 PM
http://www.youtube.com/watch?v=sRfLEjSRtRg

parthasarathy
20th October 2014, 02:42 PM
கோபால் சார்,

உத்தமபுத்திரன். மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் ஆய்வு.

ஒரு விஷயம். தாங்கள் கூறும் பல்வேறு வகை நடிப்புப் பள்ளி நடிப்பு முறையில் நடிப்பது - அதாவது - அவைகளைப் பற்றிய புரிதல் கொண்டு அவை மூலமாக பல்வேறுபட்ட பாத்திரங்களை அணுகி நடிப்பது. நடிகர் திலகம் அந்த வகைப் பள்ளி (chekhov) பள்ளி வகை நடிப்பை அற்புதமாகக் கொண்டு வந்த விதம் ஒன்று. அதை விட முக்கியம், அவை அத்தனையையும், பார்க்கும் ஒவ்வொருவரும் ரசித்து இன்புறும் வண்ணம் நடித்தது மற்றொன்று.

இந்த விஷயம் தான் அவரை மற்றவர்களினின்று வேறுபடுத்தி காட்டுகிறது. தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அவைகளை தனக்கேயுரிய வெவ்வேறு உடல் மொழி, ஸ்டைல் மூலம் மறக்க முடியாத நடிப்பாக மாற்றிக் காட்டுவது. ஒரே நேரத்தில் பார்க்கும் அத்தனை பேரையும் அந்தக் கதா பாத்திரத்துடன் ஒன்ற வைப்பது மட்டுமல்லாமல், தன் பிரத்தியேக நடிப்பினையும் வெளிப்படுத்தி பார்க்கும் சராசரி ரசிகர்கள் முதல் மேல்தட்டு ரசிகர்கள் வரை, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிப்பது.

பல கதாபாத்திரங்களைச் சொல்லலாம். உத்தமபுத்திரன் விக்ரமன், ஆலயமணி தியாகு, புதிய பறவை கோபால், தெய்வ மகன் விஜய், ஞான ஒளி அந்தோணி/அருண், கெளரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த், etc.

மறக்க முடியாத நடிப்பு மட்டுமல்ல, உங்களிடமிருந்து மறக்க முடியாத ஆய்வு.

Hats off!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Russellbpw
20th October 2014, 02:47 PM
சிலர் வம்புக்கு இழுப்பதை பார்த்தால் நடிகர் திலகம் நடித்த பசும்பொன் திரைப்படத்தில் வரும் இந்த காட்சிதான் ஞாபகத்திற்கு வருகிறது !

http://www.youtube.com/watch?v=mSEngp16L7I

Russellbpw
20th October 2014, 03:13 PM
Courtesy- B.G.S.Manian(Edited version from his original writings )


"படிக்காத மேதை" - நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படம்.


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் "ரங்கன்" என்ற ஒரு கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட மனிதனாக நடித்த - அல்ல - வாழ்ந்து காட்டிய படம். அவருடன் எஸ்.வி. ரங்காராவ், கண்ணாம்பா, சௌகார் ஜானகி, முத்துராமன், அசோகன், சந்தியா, ஈ.வி. சரோஜா ஆகியோரும் நடித்திருந்தனர்.


பீம்சிங்கும் கே.வி. மகாதேவனும் இணைந்த முதல் படம் இது.



கண்ணதாசன், மருதகாசி ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடலும் படத்தின் ஒரு முக்கிய திருப்புமுனைக் காட்சிக்கு பயன்படுத்தப் பட்டிருந்தது.



படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மகாதேவனின் முழுத் திறமையும் தெரிந்தது.



இந்தப் படத்தில் இடம் பெற்ற மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை பத்து.



படம் வெளிவந்த அறுபதில் டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் மற்ற பாடகர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவர்கள் இருவரையுமே பிரதானப் படுத்திக் கொண்டிருந்த நேரம் அது.



ஆனால் கே.வி, மகாதேவனோ "படிக்காத மேதை" படத்துக்காக அவர்கள் இருவரை மட்டும் அல்லாமல் எம்.எஸ். ராஜேஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி. லீலா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல். ராகவன் என்று பலரையும் பாடவைத்தார்.



கதாநாயகனின் குணாதிசயத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டும் பாடல்

"உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது.

உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது." என்ற பாடல்.



தனக்கு மற்றவர்களைப் போல கல்வி அறிவு இல்லையே என்று வருந்தும் கணவனை மனைவி தேற்றுவதாக அமைந்த பாடல் "படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு." - சௌகார் ஜானகிக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியை இந்தப் பாடலுக்கு பின்னணி பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.





கண்ணதாசனின் வரிகளும், ராஜேஸ்வரியின் மழலை பொங்கும் குரலும் பாடலுக்கு தனி அழகைத் தருகின்றன. கீரவாணி ராகத்தின் அடிப்படையில் இந்த பாடலை அருமையாக வடிவமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.



"ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா" - என்ற காதுகளை சுகமாக வருடும் பாடலை டி.எம்.எஸ். - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவரையும் பாடவைத்து தாலாட்டு வகையில் அமைந்த இந்தப் பாடலை இரவில் கேட்கவேண்டும். அதிலும் "சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை" என்று துவங்கும் கடைசி சரண வரிகளின் போது நம் கண்கள் தானாகவே சொக்கத் தொடங்கி விடும். அவ்வளவு அருமையாக இந்த சரணம் அமைந்திருக்கிறது. டி.எம். எஸ். ஸும் மிகவும் நயமாக பாடி இருக்கிறார்.



"ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்" - பி.லீலா.



"இன்ப மலர்கள் பூத்துக்குலுங்கும் சிங்காரத்தோட்டம்" - பி. சுசீலா - எல், ஆர். ஈஸ்வரியின் குரல்களில் ஒலிக்கும் பாடல்.



"பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

கண்பார்வை போடுதே துடுப்பு" - ஏ.எல். ராகவன்- ஜமுனாராணி.



"சீவி முடிச்சு சிங்காரிச்சு" - டி.எம்.சௌந்தரராஜன்.





என்று இப்படி பல பாடகள் இருந்தாலும் கே.வி. மகாதேவன் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு ரசித்து ஒவ்வொரு வரியாக அனுபவித்து அமைத்த பாடல் என்றால் அது "எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நானென்றான்" - என்ற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்தான்.



கண்ணனைத் தன் சேவகனாக வரித்து பாரதியார் அமைத்திருக்கும் பாடல் இது.



ஏற்கெனவே இந்தப் பாடலை இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் "கூலி மிகக் கேட்பார்" என்று துவங்கி அருமையாகப் பாடி தனது சொத்தாகவே மாற்றிக்கொண்டிருந்தார்.



"பெரியவரோட (ஜி. ராமநாதன்) பாட்டு இது. அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் நம்மாலே முடிஞ்ச அளவுக்கு பாட்டைக் கெடுக்காம கவனமா பண்ணனும்" என்று புகழேந்தியிடம் சொல்லிக்கொண்டே சிரத்தை எடுத்துக்கொண்டு மகாதேவன் இசை அமைத்து சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைத்தார். சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடல் இன்றளவும் உயிரோட்டத்துடன் அமைந்திருக்கிறது.



இன்று ஜி. ராமனாதனின் "கூலி மிகக் கேட்பார்" பாட்டு மறைந்துவிட்டது.



ஆனால் அவரைத் தன் குருவின் ஸ்தானத்தில் வைத்துக்கொண்டு மிகுந்த மரியாதையுடன் பக்தி சிரத்தையுடன் கே.வி. மகாதேவன் உருவாக்கிய "எங்கிருந்தோ வந்தான்" பாடல் காலத்தை வென்று அமரத்துவம் எய்திய பாடலாக காற்றலைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது.



*******************

“அகிலன்" - தமிழ் எழுத்தாளர்களில் இந்தப் பெயருக்கு ஒரு தனிச் சிறப்பும், மரியாதையும், பெருமையும் உண்டு.



புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள "பெருங்கலூர் " என்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர் அகிலன்.



அமரர் கல்கி அவர்களின் பெரும்புகழ் பெற்ற சரித்திர நாவலான "பொன்னியின் செல்வ"னின் தொடர்ச்சியாக அகிலன் எழுதிய நாவல்தான் "வேங்கையின் மைந்தன்".

ராஜேந்திர சோழனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த நாவல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிவாஜி நாடக மன்றத்தால் மேடை நாடகமாக உருமாறி பெருவெற்றி பெற்றது.



"சித்திரப்பாவை" - ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மகத்தான வெற்றிபெற்ற நாவல். "ஞான பீடம்" - என்ற மிக உயர்ந்த இலக்கியத்துக்கான விருதை தமிழுக்குப் பெற்றுத்தந்த நாவலும் இதுதான்.




இத்தனைச் சிறப்புகளுக்கெல்லாம் சொந்தக்காரரான அகிலனின் நாவலான "பாவை விளக்கு"க்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதினார் ஏ.பி. நாகராஜன்.



கே.சோமு அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் குமாரி கமலா, சௌகார் ஜானகி, எம்.என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.



படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் - ஒரே ஒரு பாரதியார் பாடலைத் தவிர - கவிஞர் மருதகாசி எழுதி இருந்தார்.



ஏ.பி.நாகராஜன் - கே.சோமு - மருதகாசி கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம். இசை அமைப்பு கே.வி. மகாதேவனைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?



அருமையான பாடல்களை அற்புதமாக எழுதித் தள்ளியிருந்தார் மருதகாசி.



அவற்றுக்கு மகாதேவன் அமைத்திருந்த மெட்டுக்களோ?



பாடல்களுக்கான மெட்டுக்களா இல்லை மெட்டுக்களுக்கான பாடல்களா என்று கேட்போர் வியக்கும் அளவுக்கு மருதகாசியின் பாடல்வரிகளும் மகாதேவனின் இசையும் போட்டி போட்டுக்கொண்டு கனகச்சிதமாக வெகு சிறப்பாக அமைந்த படம் இது.



இன்னும் சொல்லப்போனால் "பாவை விளக்கு" படத்துக்கு பலமே அதன் பாடல்கள் தான்.

பாடல்கள் தான் இந்தப் படத்தை ஓரளவுக்காவது தூக்கி நிறுத்தின.



அந்த வகையில் "பாவை விளக்கு" படத்தின் பாடல்கள் ஐம்பது வருடங்களைக் கடந்த பிறகும் உயிர்ப்புடன் காற்றலைகளில் நிலைத்து நிற்பது பிரமிக்க வைக்கும் சாதனைதான்.



படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கான அனைத்துப் பாடல்களையும் சி. எஸ். ஜெயராமனைப் பாடவைத்திருந்தார் கே.வி. மகாதேவன்.



தனது முதல் படமான "பராசக்தி"யில் தனக்குப் பாடிய சி.எஸ். ஜெயராமனின் குரலின் மீது நடிகர் திலகத்துக்கு ஒரு தனி மோகமே உண்டு. ஆரம்பத்தில் "தூக்கு தூக்கி" படத்தில் தனக்காக டி.எம். சௌந்தரராஜனைப் பாடவைக்க முடிவெடுத்தபோது அவர் "ஜெயராம பிள்ளையை எனக்காக பாடவைக்காம வேற யாரையோ பாடவைக்கனும்னு சொல்லறீங்களே" என்று குறைப்பட்டுக்கொண்டது கூட உண்டு.



அப்படிப்பட்ட சி.எஸ். ஜெயராமனின் குரலில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே பிரபலமான பாடல்களாக அமைந்துவிட்டன.



குற்றாலத்தின் அழகையும், சிறப்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமா? அதனைப் பார்த்து ரசிக்க இரண்டு கண்கள் போதாதாம். ஆயிரம் கண்கள் வேண்டுமாம். இல்லை இல்லை. ஆயிரம் கண்களும் போதாதாம்! அப்படித்தான் மருதகாசி சொல்கிறார்.



"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே

குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே"





"மாண்ட்" - ராகத்தில் கே.வி. மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமோ ஆயிரம் முறைகள் கேட்டாலும் சலிக்கவே சலிக்காத பாடல்.



இந்தப் பாடல் ஏ.பி. நாகராஜனின் மனதில் ஒரு அழுத்தமான இடத்திப் பிடித்து விட்டது.. அதனால் தானோ என்னவோ பின்னாளில் தான் இயக்கிய "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் இந்தப் பாடலை அப்படியே நாதஸ்வரத்தில் வாசிக்கவைத்து பயன்படுத்திக்கொண்டுவிட்டார் அவர்.



அடுத்து "வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்" - என்ற பாடல்..



வசன நடையில் ஆரம்பித்து ஒவ்வொரு வார்த்தைகளாக கூட்டிக்கொண்டே ஆரம்பிக்கும் பல்லவி. ஒவ்வொருக்கு அடிக்கு பிறகும் பாடலாக உருமாறுகிறது.



பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்

தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்.

வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள். - என்று என்று படிப்படியாக வார்த்தைகளைக் கூட்டிக்கொண்டே போகும்போது மகாதேவனின் கற்பனைத் திறனும் இசை ஆளுமையும் பிரமிக்கவைக்கிறது. சி.எஸ். ஜெயராமனுடன் ஹம்மிங்காக எல்.ஆர்.ஈஸ்வரி இணையும் பாடல் இது. சங்கராபரண ராகத்தை வெகு அற்புதமாக மகாதேவன் கையாண்டு பாடலை கொடுத்திருக்கிறார்.



"நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக்கண்ணே" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் குரலில் அருமையான ஒரு குழந்தையைக் கொஞ்சிச் சீராட்டும் பாடல்.





இப்படி இத்தனைப் பாடல்கள் இருந்தாலும் "பாவை விளக்கு" என்றதுமே நம் உதடுகள் தாமாகவே உச்சரிக்கும் பாடல் ஒன்று உண்டு என்றால் அது "காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா" பாடல்தான்.



காதலுக்கும் முகலாயர்களின் கட்டிடக்கலைக்கும் காலத்தால் அழிக்க முடியாத அற்புதச் சின்னமாக விளங்கும் தாஜ் மஹாலின் அழகை வருணிக்கும் பாடல்.



இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் கே.வி. மகாதேவனின் திறமை - அவரது இசை ஆளுமை எல்லாமே உலக அதிசயமான தாஜ் மகாலுக்கு நிகராக நம்மை பிரமிக்க வைக்கிறது.



பல்லவியை சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைத்தவர்.. பல்லவி முடிந்தபிறகு வரும் சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசையிலும் தொடரும் சரண வரிகளிலும் அரேபிய இசைப் பிரயோகங்களை அற்புதமாக இணைத்திருக்கிறார். அதற்கு அவருக்கு கை கொடுத்த ராகம் "சரசாங்கி".



கர்நாடக இசையில் 27வது மேளகர்த்தா ராகமான சரசாங்கி ஒரு சம்பூரணமான சுத்த மத்யம ராகம்.



முழுக்க முழுக்க இந்த மேளகர்த்தா ராகத்தை அரேபிய இசைக்கான ராகமாகப் பயன்படுத்தி மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமும், அதனை சி.எஸ். ஜெயராமனும், பி. சுசீலாவும் பாடியிருக்கும் விதமும் .. வருணிக்க வார்த்தைகளே இல்லை.



அதுவும் "முகலாய சாம்ராஜ்ய கீதமே" என்று சுசீலா ஆரம்பிக்கும் அழகும், சரணத்தின் கடைசி வரிகளில் "என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே என்னைச் சொந்தம் கொண்ட தெய்வமே" - என்றும், "கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவது உண்மைக்காதலே" என்றும் பாடும் போது அவரது குரலில் வெளிப்படும் இனிமையும் உண்மையிலேயே காதுகளில் தேன் பாய்வது என்பார்களே அது இதைத்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.



கே.வி. மகாதேவனின் இசையில் சங்கராபரணமும், சரசாங்கியும் தான் எப்படி எல்லாம் மருதகாசியின் வரிகளுக்கு ஜீவன் தருகின்றன!



உண்மையிலேயே இது ஒரு காவியப்பாடல் தான்.



1963ஆம் வருடத்தில் மொத்தம் வெளிவந்த 45 தமிழ்ப் படங்களில் கே.வி. மகாதேவனின் இசையில் மட்டுமே இருபத்து மூன்று படங்கள் வெளிவந்தன.



அவற்றில் பெரும்பாலான பாடல்கள் பெரு வெற்றி பெற்ற பாடல்கள்.



எழுத்தாளர் அகிலனின் "வாழ்வு எங்கே" என்ற புகழ் பெற்ற நாவல் ஏ.பி.நாகராஜனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் சிவாஜி கணேசன் - சரோஜாதேவி - தேவிகா நடிக்க "குலமகள் ராதை" படமாக வெளிவந்தது.



கே.வி.மகாதேவனின் இசையில் மருதகாசி, கண்ணதாசன் இருவரின் பாடல்கள் அனைத்துமே இன்றளவும் மறையாத பாடல்கள்.



"உலகம் இதிலே அடங்குது" - டி.எம்.எஸ். பாடும் இந்த விறுவிறுப்பான பாடலுடன்தான் படமே தொடங்குகிறது.



"ராதே உனக்கு கோபம் ஆகாதடி" - எம்.கே. தியாகராஜா பாகவதர் பாடிப் பிரபலமான ஒரு பாடல். அதே மெட்டில் டி.எம். சௌந்தரராஜனின் கம்பீரக்குரலில் அப்படியே வார்த்தெடுத்திருந்தார் கே.வி. மகாதேவன்.



"சந்திரனைக் காணாமல் அல்லிமுகம் மலருமா" - டி.எம்.எஸ் - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலில் முதல் சரணம் முடிந்ததும் நடைபேதம் செய்து அடுத்த சரணத்தை அமைத்து கடைசியில் மீண்டும் பல்லவிக்கேற்ற நடைக்குத் திரும்பிவந்து .. என்று நகாசு வேலை காட்டி இருக்கிறார் கே.வி.மகாதேவன்.



"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை" - படத்திலேயே டி.எம்.எஸ். குரலில் மிகவும் பிரபலமான இந்தப் பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதம் - வித்யாசமான மெட்டு மனதை வருடுகிறது.



"பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்" - பி.சுசீலாவின் குரலில் ஒரு சோகப் பாடல்.



"கள்ளமலர்ச் சிரிப்பிலே" - பி.சுசீலாவின் குரலில் செந்தேனாக இனிக்கும் பாடல்.



டி.எம்.எஸ். அவர்களுக்கு என்று பிரபலமான பாடலைக் கொடுத்த மகாதேவன் படத்தின் பெயர் சொன்னாலே நினைவில் நிற்கும் அளவுக்கு பி.சுசீலாவின் குரலில் கொடுத்த பாடல் "இரவுக்கு ஆயிரம் கண்கள்".



பாடல் வரிகளும், இணைப்பிசையும், பாடலை அமைத்த விதமும் படத்திலேயே முதல் இடம் பெற்ற பாடலாக இந்தப் பாடலை நிற்க வைத்துவிட்டது.



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொந்தமாக "சிவாஜி பிலிம்ஸ்" பானரில் தயாரித்த முதல் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி.மகாதேவனுக்கே கிடைத்தது. படம் "அன்னை இல்லம்". பி. மாதவன் இயக்கிய முதல் சிவாஜி படம் இது.



இந்தப் படத்தில் மகாதேவனின் இசையில் பாடல்கள் வெற்றிபெற்று படத்தின் வெற்றிக்கு கைகொடுத்தன.



"நடையா இது நடையா" - டி.எம்.எஸ். - குரலில் ஒரு ஈவ் டீசிங் பாடல்.



"மடிமீது தலைவைத்து" - இன்றளவும் அனைத்து தொலைக்காட்சிச் சானல்களாலும் தவறாமல் ஒளிபரப்பப் படும் பாடல். டி.எம்.எஸ். - சுசீலாவின் குரல்களில் அருமையான ஒரு மெலடி.



"எண்ணிரண்டு பதினாறு வயது" - டி.எம்.எஸ்ஸுடன் "ஹம்மிங்கில்" எல்.ஆர். ஈஸ்வரி இணையும் பாடல்.



"பாசமலர்" தயாரித்த மோகன் தனது "ராஜாமணி பிக்சர்ஸ்" பானரில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் தயாரித்த "குங்குமம்" படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.



சிவாஜிக்கு ஜோடியாக விஜயகுமாரி நடித்த முதல் படம் இது. இவர்களுடன் எஸ்.எஸ். ஆர்., சாரதா, எஸ்.வி. ரங்கராவ், எம்.வி.ராஜம்மா, நாகேஷ், மனோரமா - ஆகியோரும் நடித்திருந்தனர்.



பாடல்களில் ஒரு இசைச் சாம்ராஜ்யமே நடத்தி இருந்தார் கே.வி.மகாதேவன்.



"குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம்" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி.சுசீலா இணைந்து பாடும் இந்தப் பாடலை முழுக்க முழுக்க கர்நாடக ராகமான "ஆபேரி"யில் அற்புதமாக அமைத்திருந்தார் அவர்.



"பூந்தோட்டக் காவல்காரா" - பி.சுசீலாவில் குரலில் துள்ளலாகவும் டி.எம்.எஸ். குரலில் விருத்தமாகவும் ஒலிக்கும் பாடல் இது.

.

"இசைச் சக்ரவர்த்தி" ஜி.ராமநாதன் பிரபலப்படுத்திய ராகம் சாருகேசி.



இந்த ராகத்தில் ஒரு அருமையான ஜோடிப்பாடலை வெகு சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.



"தூங்காத கண்ணின்று ஒன்று" - டி.எம். எஸ். - சுசீலா பாடும் இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமா?



இதே போல "தர்பாரி கானடாவில்" டி.எம்.எஸ். - எஸ். ஜானகியின் குரல்களில் ஒலிக்கும் - பிரபலமான "சின்னஞ்சிறிய வண்ணப் பறவை" இசை இன்றளவும் இசை வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறதே.



நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வைப்பதற்காக தனது அடுத்த கதையை தயார் செய்தார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்.



அதுவே நடிகர் திலகத்தின் நூறாவது படமாகவும் அமைந்தது.



ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் அசத்திய "நவராத்திரி" படம் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்தது.



நடிகர் திலகத்துடன் நடிகையர் திலகம் இணைந்து நடித்த இந்தப் படத்தில் மகாதேவன் இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்தன.



"நவராத்திரி சுபராத்திரி" - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலை பீம்ப்ளாஸ் ராகத்தைப் பயன்படுத்தி இசை அமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.



இன்றுவரை ஒவ்வொரு நவராத்திரி பண்டிகைக்கும் தவறாமல் ஒளிபரப்பாகும் பாடல் இது.



"சொல்லவா கதை சொல்லவா" - பி.சுசீலா.



"இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்" - டி.எம். எஸ். பாடும் பாடல்.



மனநோய் மருத்துவமனையில் ஒரு கதம்பப் பாட்டு - பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குழுவினருடன் பாடும் பாட்டு.



"போட்டது மொளைச்சுதடி கண்ணம்மா" - டி.எம்.எஸ்.



நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகளில் சத்தியவான்-சாவித்திரி நாடகப் பாடல்களை தொகுத்து அமைத்த தெருக்கூத்துக்கான பாட்டு. டி.எம்.எஸ். - பி.சுசீலா - எஸ்.சி. கிருஷ்ணன் ஆகியோருடன் வசனப் பகுத்திக்கு நடிகர் திலகமும், நடிகையர் திலகமும். இந்தப் பாடல் முழுக்க ஹார்மோனியத்தையும் தபேலாவையும் மட்டுமே பயன்படுத்தி அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.



"நவராத்திரி" படத்தை விமர்சனம் செய்த ஆனந்த விகடன் "நடிப்பிலும், கதையிலும் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் சற்று செலுத்தி இருக்கலாம்" - என்று விமர்சனம் செய்திருந்தது.



ஆனால் "நவராத்திரி" பாடல்கள் அப்படி ஒன்று சோடை போகவில்லை என்பது இன்றளவும் உண்மை.



படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு பாடல்களும் உறுதுணையாக இருந்தாலும் ஆக்கிரமித்ததென்னவோ நடிகர் திலகத்தின் நடிப்புத்தான்.

Super Sir

RKS

Russellbpw
20th October 2014, 03:15 PM
புதுமை இயக்குனர் ஸ்ரீதர்.



இன்று அவரின் 6 வது நினைவு நாள்.



சிவாஜியுடன், எதிர்பாராதது,அமரதீபம்,உத்தமபுத்திரன்,புனர்ஜென்மம், சித்தூர் ராணி பத்மினி,கலாட்டா கல்யாணம் படங்களில் எழுத்தாளராகவும், விடிவெள்ளி,ஊட்டி வரை உறவு,நெஞ்சிருக்கும் வரை,சிவந்தமண் ,வைரநெஞ்சம்,மோகன புன்னகை முதலிய படங்களில் இயக்குனராகவும் ,கடைசி வரை உயரிய நண்பராகவும் தொடர்ந்தவர்.



மறைவதற்கு சில நாட்கள் முன்பு,தன்னை சந்தித்த அமீர் என்ற இயக்குனரிடம்,தனக்கு மிக பிடித்த நடிகராக நடிகர்திலகத்தை குறித்துள்ளார்.



புதுமை இயக்குனர் , தமிழ் கதைகளுக்கு புதிய தளத்தை வடிவமைத்து,இயக்குனர் என்ற பதத்திற்கே புது அர்த்தம் தந்தவர்.காமிரா வழியாக கதை சொன்னவர்.



சிவாஜிக்கு இவர் கொடுத்த அமர தீபம்,உத்தமபுத்திரன்,ஊட்டி வரை உறவு,சிவந்த மண் போன்ற காவியங்கள் என்றென்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.



இவருடைய மூன்று மிக சிறந்த படங்கள் காதலிக்க நேரமில்லை,சுமைதாங்கி,நெஞ்சில் ஊர் ஆலயம். 70 களில் மிக மோசமான படங்களால் தன் தரத்தை தாழ்த்தி கொண்டாலும் ,இளைய தலைமுறையினரிடம் இணைந்து இவரளித்த இளமை ,ஊஞ்சலாடுகிறது.அழகே உன்னை ஆராதிக்கிறேன் ஆகியவை முத்திரை.



எது எப்படி இருப்பினும் இவருக்கு அமைந்த அளவு பாடல்கள், எந்த இயக்குனருக்கும் அமைந்ததில்லை என்பது சத்தியம்.



சிவாஜியை ,இவர் ஒரு பீம்சிங்,பந்துலு,ஏ.பீ.என்,ஏ.சி.டி,மாதவன் ,பாரதிராஜா அளவு பயன் படுத்தி, காவியங்களை அளிக்காதது எனக்கு வருத்தமே. ஆனாலும் பாலசந்தர் அளவு ஏமாற்றமில்லை.

Great Analysis !!!

Russellbpw
20th October 2014, 03:56 PM
[quote]இன்று ஸ்ரீதர் நினைவு தினம். அவரை நினைவு கோரும் விதமாக,அவரால் உளவியல் ரீதியில் படைப்பு பெற்று ,மிக சுருக்கமான,கூர்மையான ,ஈர்ப்பான ,இயல்பான வசனங்களால், சிவாஜியின் மேதைமை மேலும் மெருகேற்றி, அமரத்துவம் பெற்று ,அனைத்து தரப்பினராலும் ,இன்றளவும் பாராட்ட பெற்று, எல்லோர் நெஞ்சிலும் நிலைக்கும்

உத்தம புத்திரன்.[/SIZE]


உத்தம புத்திரன்-1958

எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)

முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான் ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .

இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.

முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.

இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.

நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.

கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.

கண்கள்- விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.

உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.

குரல்- நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.

இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........

விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.

ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?[Quote]



உத்தமபுத்திரன்

இந்த திரைபடத்தில் வேறு யார் நடித்திருந்தாலும் இந்தளவிற்கு ஒரு ஈர்ப்பு உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே.

இரு வேடம் என்று வரும்போது, உருவ ஒற்றுமை தவிர மற்ற எல்லாமே மாற்றி நடித்தால் ஒழிய அந்த இருவேடம் மக்களிடையே சென்றடையாது.

உத்தம புத்திரன் படத்தில் மாறுபாடு காட்டுவது - உடல்மொழி மற்றும் அந்த புருவ அமைப்பு...! இவ்வளவுதான் !

OAK தேவர், MN நம்பியார் போன்ற பெயர் பெற்ற வில்லன்கள் இருந்தும்..விக்ரமன் தான் சிறந்த வில்லன் என்று பெயர் தட்டி செல்லும் அளவுக்கு ஒரு தாக்கம் !

உத்தமபுத்திரன் - அந்த குதிரை சவாரி காட்சி ஒன்று போதும்.

STOOL மீது அமர்ந்து பரிதாபமாக தலையை தலையை ஆட்டும் நாயகர்களுக்கு(என்னமோ இவர்கள் இப்படி செய்வதால் originalaaga குதிரை ஓட்டுவது போல இருக்கிறது என்ற நினைப்பில்) மத்தியில்,

பத்மினியை காப்பாற்றும் காட்சியாகட்டும், அல்லது CLIMAX காட்சி ...புயல் போல குதிரை சவாரி செய்யும் காட்சியாகட்டும்.....இனி ஒரு நாயகர் பிறக்கவேண்டும் இவரை போல DOOP இல்லாமல் தானே குதிரை சவாரி செய்ய !

கோபால் சார் கூறுவது போல கூடு விட்டு கூடு பாய்வது போல...அல்லது வீடு விட்டு வீடு பாய்வது போல அவ்வளவு லாவகம் - நடிகர் திலகம் நடிப்பில். இத்தனைக்கும் உத்தமபுத்திரன் 40 படங்களுக்குள் வந்த படம்.

ஒரு படத்தை அக்கு வேறு ஆணி வேறு என்று அலசும் பாணி கோபால் சிறை தவிர வேறு யாரும் செவ்வன செய்ய முடியவே முடியாது !

அப்படி முயற்சி செய்து எழுதினாலும் கோபால் போல எழுத முயற்சிக்கிறார் என்ற பெயரே அனைவருக்கும் நிலைக்கும் என்பது திண்ணம்.

அந்தளவிற்கு ஒரு படம், அதன் நாயக நாயகி மட்டுமல்லாது அனைவரது நடிப்பாற்றல்களையும், நடிப்பின் முறைகளையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிடும் திறம்....ஒரு தேர்ந்த எழுத்தாளர் மட்டுமல்ல...ஒரு சிறந்த CRITIC ஆககூட இருந்தால் மட்டும் அல்ல...பல விஷயங்களை படித்து உணர்ந்தவரால் மட்டுமே அது சாத்தியம் !

என்ன ...அவ்வப்போது உங்களை "உங்களை போல உண்டா" என்று ஒரு குழந்தையை கையாள்வதை போல கையாளவேண்டும். இல்லையென்றால் அனைவர் மீதும் உரிமையுடன் கோபபடுவீர்கள், கிண்டலடிப்பீர்கள், ஆதிக்கம் செலுத்துவீர்கள். அப்படிதானே கோபால் சார் ? பரவா இல்லை. சரஸ்வதி சபதம் படத்தில் விஜய கூறுவதை சற்றே மாற்றி " கற்றறிந்த புலவர். அந்த திமிர் உங்களுக்கு சற்று இருக்கதான் செய்யும் ! இதை கூட ஒரு மரியாதை நிமித்தமாக தான் பதிவிடுகிறேன்...ஒரு குற்றமாக அல்ல !

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஒரு வெள்ளை வெளேர் உடையில் ஒரு துளி சேறு தெறித்தால் என்ன நிலையோ அதுபோல ஆகிவிடுகிறது !

எனது அண்ணனிடம் பேசினேன் நேற்று...உங்களை மிகவும் விசாரித்ததாக கூறும்படி உரைத்தார் தீப ஒளி வாழ்த்துக்களை தெரிவித்தார் !

அருமையான பதிவு சார் ! உங்கள் எழுத்துக்கு என் வணக்கங்கள் !

RKS

Russellbpw
20th October 2014, 04:31 PM
தன்னை புலியாக நினைத்தவர்கள்

COCONUT SRINIVASAN

https://www.youtube.com/watch?v=puLftizdO20

MKM - can this 3 letter ever in anyway equate another 3 Letters that spinned MAGIC ? NEVER !!!!

https://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY&list=PLJpSf2WNs2R_OggnjoiLGhJFp9pUyc3DQ

eehaiupehazij
20th October 2014, 05:15 PM
இளமைஇனிமைபுதுமை இயக்குனர் ஸ்ரீதர் நினைவலைகள்: A Director with a Cloud o'9 feel on NT's association!
தேனினும் இனிய இசையுடன் கூடிய கவர்ச்சிகரமான கோணங்களில் பாடல் காட்சிகளை செதுக்கியவர்! கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் உள்ள நூலிழை இடைவெளியை நன்கு உணர்ந்து இளமைத் துள்ளல்களை ரசிக்கும் வண்ணம் தந்த தொழில்நுட்ப இயக்குனர்!! ஊட்டி வரை உறவு திரைப்படத்தில் 'தேடினேன் வந்தது.....' பாடல் காட்சி நடிகர்திலகத்தின் நடையுடைபாவனைகளை விஜயாவின் கவர்ச்சிகரமான நடன அசைவுகளை செவிக்கினிய இசையமைப்பில் என்றென்றும் ரசிக்க வைக்கும். 'பூமாலையில் ஓர் மல்லிகை' பாடல் காட்சியமைப்பும் அவ்வண்ணமே! 'சிவந்த மண்' திரைப்படத்தில் ரீங்காரமிடும் 'முத்தமிடும் நேரமிப்போ' மற்றும் 'சொல்லவோ....' பாடல்களும் பிரமாதமான காமிரா கோணங்களில் கவர்ச்சி எல்லை மீறாத ரசிப்புக்குரிய கண்களுக்கும் செவிக்கும் விருந்தான காட்சியமைப்புக்களே! 'வைர நெஞ்சம்' படத்தில் பிரமிக்கவைக்கும் புதுமையான கோணத்தில் ' நீராடும் நேரம்....' பாடல் அமைந்திருந்தது. மனமகிழ் புதுமைகளைப் புகுத்திட்ட இளமைஇனிமைபுதுமை இயக்குனருக்கு எம் போற்றுதல்கள்!

https://www.youtube.com/watch?v=9fHV2XL2gFc

https://www.youtube.com/watch?v=5GtS0q2UOGE

https://www.youtube.com/watch?v=bvmxghzvaoE


https://www.youtube.com/watch?v=GRMs-mIsrGQ

https://www.youtube.com/watch?v=uvknaw6In7Q

KCSHEKAR
20th October 2014, 05:38 PM
23-10-2014 - இரவு 7 மணிக்கு, sunlife தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்புத் திரைப்படம் - தில்லானா மோகனாம்பாள்

Gopal.s
20th October 2014, 06:48 PM
இனி அம்புலி மாமா பழைய ஆவணங்கள் தேடி ,எங்கும் போக வேண்டாம்.ஒரு திரி அம்புலிமாமா என்று பெயர்மாற்றம் செய்ய பட போகிறது என்பதை இதன் மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம். உருப்படியான முதல் பதிவு ஆரம்பித்து விட்டது.

பரோட்டா சூரி சொன்னது ,பதிவெல்லாம் அழி. இதிலிருந்தே ஆரம்பிக்கலாம். ஒண்ணு ......

https://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE

https://www.youtube.com/watch?v=TY4lL68vqio

Subramaniam Ramajayam
20th October 2014, 07:27 PM
Uttamaputiran analysis superb a class movie of all times for all generations
kudos to gopal and rks for detailed coverage.
Greetings/

Russelldwp
20th October 2014, 08:19 PM
ஆய்வுத்திலகம் கோபால் சார் தங்களின் உத்தமபுத்திரன் ஆய்வு மிகப்ரமாதம். இதை முழுவதும் படித்து விட்டு
எனது நண்பரும் தலைவரின் தீவிர ரசிகருமான தில்லை நகர் பாஸ்கர் அவர்கள் என்னிடம் தொலைபேசியில்
பாராட்டியதை சுருக்கமாக விவரிக்கிறேன்.

இரு வேடங்கள் எனக்கூறி கரி பூசி வித்யாசம் காண்பிக்கும் திரையுலகில் தன் நிகரில்லா நடிப்பாலும் உயரிய
ஸ்டைலாலும் காந்த்விழிப்பார்வையாலும் மிகப்பெரிய வித்யாசத்தை காட்டி மக்களின் மனதில் நிரந்தர முதல்வராய்
பவனி வந்து கொண்டிருக்கும் நடிப்புச்சுரங்கத்தை விக்ரமனாய் வாழ்ந்து காட்டியதை எவ்வளவு அழகாக வருணித்துள்ளிர்கள்
எனவும் தங்களின் இத்தகைய திறமைக்கு நடிகர் திலகத்தின் படத்திற்கு வசனம் எழுதியிருந்தீர்களேயானால் கண்டிப்பாக
ஒரு கௌரவம் அளவுக்கு பேசப்பட்டிருக்கும் என புகழ்ந்து தள்ளிவிட்டார்.

திறமையின் சிகரம் சிவாஜி என்றால் அவருடைய ரசிகராம் கோபால் சாரும் அவருடைய எழுத்தும் சந்தன மலர்களால்
பொன்னேட்டில் பதிக்கப்பட வேண்டியவை என்றால் அது மிகையாகாது.

நன்றி கோபால் சார்

Russellbpw
20th October 2014, 08:31 PM
ஆய்வுத்திலகம் கோபால் சார் தங்களின் உத்தமபுத்திரன் ஆய்வு மிகப்ரமாதம். இதை முழுவதும் படித்து விட்டு
எனது நண்பரும் தலைவரின் தீவிர ரசிகருமான தில்லை நகர் பாஸ்கர் அவர்கள் என்னிடம் தொலைபேசியில்
பாராட்டியதை சுருக்கமாக விவரிக்கிறேன்.

இரு வேடங்கள் எனக்கூறி கரி பூசி வித்யாசம் காண்பிக்கும் திரையுலகில் தன் நிகரில்லா நடிப்பாலும் உயரிய
ஸ்டைலாலும் காந்த்விழிப்பார்வையாலும் மிகப்பெரிய வித்யாசத்தை காட்டி மக்களின் மனதில் நிரந்தர முதல்வராய்
பவனி வந்து கொண்டிருக்கும் நடிப்புச்சுரங்கத்தை விக்ரமனாய் வாழ்ந்து காட்டியதை எவ்வளவு அழகாக வருணித்துள்ளிர்கள்
எனவும் தங்களின் இத்தகைய திறமைக்கு நடிகர் திலகத்தின் படத்திற்கு வசனம் எழுதியிருந்தீர்களேயானால் கண்டிப்பாக
ஒரு கௌரவம் அளவுக்கு பேசப்பட்டிருக்கும் என புகழ்ந்து தள்ளிவிட்டார்.

திறமையின் சிகரம் சிவாஜி என்றால் அவருடைய ரசிகராம் கோபால் சாரும் அவருடைய எழுத்தும் சந்தன மலர்களால்
பொன்னேட்டில் பதிக்கப்பட வேண்டியவை என்றால் அது மிகையாகாது.

நன்றி கோபால் சார்

சௌத்ரி தம்பி...நல்ல இருக்கீங்களா...........:smokesmile:

joe
20th October 2014, 09:11 PM
இங்கே என்ன நடக்குதுண்ணே புரியல்ல . எது உள்குத்து , எது நிஜம் , எது வஞ்சப்புகழ்ச்சி -ன்னு புரியணும்ன்னா இங்கே நடக்கும் திரை மறைவு அரசியலில் ஆர்வமும் அதன் பின்னணியும் தெரிந்திருக்கவும் வேண்டும் . அதற்கு நேரமும் ஆர்வமும் இல்லாதவர்கள் இங்கே வந்தால் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் திரும்பி நடப்பதை தவிர வேறு வழியில்லை .

தேனொழுகும் வார்த்தைகள் , அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அசாத்தியமான வன்மங்கள் ..என்ன அருமையான நடிப்பு .

என்னவோ போடா மாதவா !

Russelldwp
20th October 2014, 09:23 PM
சௌத்ரி தம்பி...நல்ல இருக்கீங்களா...........

பகலவனின் ஒளிக்கதிர்களைப் போல் பராசக்தி வேந்தன் பெருமைகளை பதிவுகள் மூலம் பறை சாற்றும்
தங்கள் அன்பால் நலமாக இருக்கிறேன் சூர்யா சார்

Gopal.s
21st October 2014, 03:12 AM
ராகுல் ராம்,

இந்த படம் என்றல்ல. நான் எழுதிய அனைத்தையுமே படித்து விட்டு பிறகு சம்பந்த பட்ட படத்தை பார்த்தால்,வித்யாசத்தை உணர்வாய்.இதை Film appreciation என்போம். மேம்போக்கான ரசனையை மீறி மேற்செல்வது.சிவாஜி போன்ற மேதைகளை மேம்போக்காக ரசிப்பதை விட,அதில் தோய வேண்டும்.

உனக்கு என் வாழ்த்துக்கள்.

சௌத்ரி,

உங்களுக்கும் பாஸ்கருக்கும் நன்றி. நான் அவருக்காக 2 script செய்து வைத்திருந்தேன்.நான் திட்டமிட்ட படி,திரை துறையில் நுழைந்திருந்தால்,
நிச்சயம்,சிவாஜிக்கு மிக மிக சிறந்த படங்கள் இரண்டாவது தந்தே இருப்பேன்.என்ன செய்ய?என் இயல்புக்கும் ,80களில் இருந்த திரைத்துறைக்கும் ஒத்து போயிருக்காது.

ரவி கிரண்,

நான் சுயவிரும்பியோ,கவனம் திருப்பியோ அல்ல. நான் வேலை பார்த்தது,வடக்கிந்திய நிறுவனங்களில்.ஒரு வார்த்தை ஹிந்தி பேசாமல்,அந்த நிறுவனங்களின் உச்ச பதவியை அடைந்தேன் என்றால்,சிறிதே சுய விற்பனை பழகியதால். என் இயல்பு முற்றிலும் வேறானது.சுற்றியிருக்கும் புள் பூண்டுகளின் மீது கூட நிஜ மதிப்பு வைத்துள்ளவன் நான். என்னுடன் வாழ்க்கையில்,நிறுவனங்களில் பயணித்த அனைவருக்கும் இது தெரியும்.

கலை வேந்தன்,

பாருங்களேன்,இது மாதிரி பட்ட பெயர் வைத்து கொள்ள கூட எனக்கு,அகந்தை போதவில்லை.சொந்த பெயரிலேயே உலவுகிறேன்.எஸ்.வீ சார்பில் ஆஜராவதற்கு வாழ்த்துக்கள்.ஆனால் எஸ்.வீ ,உங்களை விட சீனியர் பதிவாளர்.தன்னைத்தானே கவனித்து கொள்வார்.வாரிசுகளை வாழ்த்துவதற்கு,trend setter யாரென்று எஸ்.வீ யை கேட்டு கொள்ளுங்கள்.(ஒவ்வொரு முறை பள்ளி இறுதி தேர்வுகள் முடிவுகள் வரும் போது உங்கள் திரியை படிக்கவும்)

eehaiupehazij
21st October 2014, 08:05 AM
Today's Dinamalar Tea Kadai Bench :



சிவாஜிக்கு கிடைக்குமா பாரத ரத்னா?

''
''பாரதரத்னா விருது கொடுக்கணும்ன்னு, ஜனாதிபதியை சந்திச்சு கோரிக்கை வைக்க திட்டமிட்டிருக்காங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

''இப்ப யாருக்கு... இதையே வச்சு, அரசியல் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டாங்களா...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''அது என்ன விவகாரமோ தெரியலே பா... மத்தியில, ஐ.மு., கூட்டணி அரசு நடக்கும் போது, கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கணும்ன்னு, கவிஞர் வைரமுத்து கோரிக்கை வச்சாரு... அந்த அரசு செவி சாய்க்கல... ஆனா, மறைந்த முதல்வர் அண்ணாதுரைக்கு பாரத ரத்னா விருது வழங்கணும்ன்னு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் கருணாநிதி ஏற்கனவே கோரிக்கை வைச்சிருக்காரு...

''இப்ப, மறைந்த நடிகரு சிவாஜிகணேசன் சார்பா கோரிக்கை எழுந்திருக்கு... 'சிவாஜி கணேசன், 300 படங்களுல நடிச்சிருக்காரு... வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேசப்பற்று படங்கள்ல நடிச்சு, இந்தியாவின் பெருமையை உலக அளவுல கொண்டு போயிருக்காரு... அவருக்கு பாரத ரத்னா விருது தரணும்'ன்னு சிவாஜி சமூக நலப்பேரவை சார்புல, மத்திய அரசுக்கு கோரிக்கை வைச்சிருக்காங்க.... ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திச்சு வலியுறுத்த, அனுமதி கேட்டு காத்திருக்காங்க பா...'' என, விளக்கினார் அன்வர்பாய்.

''தீபாவளிக்கு மைசூர் பாகு செய்யணுமாம்... கடலை பருப்பை மாவா திரிச்சு மாமிக்கு குடுக்கணும்... நாழி ஆயிடுத்து... நான் கிளம்பறேன்...'' எனக் கூறி, குப்பண்ணா கிளம்பினார்.

மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்; பெஞ்ச் அமைதியானது!


Better late than never! Compared to any other actor of this world, NT remains the definitive Dictionary or the Thesaurus of acting for generations hitherto and yet to come. His achievements whereby he brought laurels to our nation are indisputable and his films and characterizations of roles remain national assets for aspiring actors ! The recognition of NT, the heartthrob of millions across the globe who had taken the country sky high by donning roles that are unimaginable for any global star now and then (desrving even a posthumous Life-time achievement OSCAR award in line with global screen legends like Charlie Chaplin), by way of conferring his due Bharat Ratna without any political coatings is the right way of paying tributes from the governmental side.
We join hands in appreciating KCS for his efforts taken through Sivaji Samooganala Peravai and all other persons directly or indirectly connected with this long pending genuine demand from the hearts of people!!

https://www.youtube.com/watch?v=Fm7QOXpd3jU

Gopal.s
21st October 2014, 09:10 AM
ஆர்.கே.எஸ்.



நீங்கள் quote பண்ணியதற்கும்,சௌத்ரி யை விசாரித்திதற்கும் ,என்ன சம்பந்தம்?உங்களுடைய வினோத நடத்தை ,எல்லோர் மனதிலும் குழப்பம் ஏற்படுத்துகிறது.



ஜோ, என்ன கூற வருகிறார் என்று எனக்கு புரிகிறது.



நாமே ,நம்மை பற்றிய சந்தேகத்தை தூண்ட வேண்டாமே.



நமக்குள் நல்லுறவு உள்ளது என்பது நமக்கு மட்டும் தெரிந்தால் போதாது.



நான் டிசம்பர் வரையே மையம் திரிகளில் இருப்பேன்.பிறகு என்னுடைய சொந்த ப்ளாக் ஒன்று தொடங்கி, பல விஷயங்கள் எழுத உள்ளேன்.



அதுவரையாவது,புரிகிறதோ இல்லையோ, என்னை எழுத அனுமதித்தால் சந்தோசம்.இல்லையானாலும் ,எனக்கு நஷ்டமில்லை.



ஒரு பதிவு வந்தால்,மேலே மேலே ஏதாவது போட்டு சமாதி கட்டாமல், ஒரு response கொடுத்து,உரிய முறையில் நடந்தால் மட்டுமே ,நமக்கு நல்லது.



என் போதாத காலம்,மையம் திரிகளுக்கு நான் 2012 இல் வந்தது. 2008 இல் வந்திருந்தால், அழகாக பங்களித்து விட்டு 2012 இல் ஒதுங்கி கொண்டிருக்கலாம்.



புரியவில்லை என்று சொல்லும் அளவில் நான் என்ன ஐன்ஸ்டின் கோட்பாட்டையா விவரிக்கிறேன்?நடிப்பு பள்ளி, பாகம் மூன்றில் தொடங்கி பாகம் 9 வரை ,அனைத்து வித நடிப்பு பள்ளிகள்,அது சார்ந்த அவர் படங்கள் என விவரித்து விட்டே தொடர்ந்தேன். ஒவ்வொரு பதிவுக்கும் பின் என்னுடைய பல வருட பரிச்சயம்,படிப்பு, கிட்டத்தட்ட 6 மணிநேர உழைப்பு உள்ளது.



புரியவில்லை என்று சொல்லி,உங்கள் முகங்களிலே கரி பூசி கொள்கிறீர்கள். மற்றவர்கள்,நம்மை பார்த்து வளர முற்படும் போது ,நாம் தேய்தல் அழகா?



நீங்கள் தயவு செய்து ,திரும்ப நிதானமாக படித்து (வீடியோ போட்டு பக்கம் நிரப்புவதற்கு பதில்),அது சார்ந்த பதிவுகள் இட்டு,மற்றோருக்கு வழி காட்டுங்கள். இது நீங்கள் ஆரம்பித்த திரி. ஞான ஒளி ,பாபு,கெளரவம்,உத்தம புத்திரன் போன்ற பதிவுகள்,உங்கள் திரிக்குத்தானே பெருமை? பதிவுகளை மதிக்காமல்,வீடியோ போடுவது எந்த வகை நாகரிகம்? moderator எதற்கு இருக்கிறார்கள்?வாசு போன்றவர்கள் ஏன் இங்கு வர தயங்குகிறார்கள் என்று புரிய ஆரம்பித்து விட்டது.எல்லோருக்கும் ராகவேந்தர்,வாசு,கார்த்திக்,சாரதி,முரளி,ஜோ போன்றோருடன் என் நல்லுறவு புரிந்திருக்கும் என்றே கருதுகிறேன்.அவர்கள் சுணக்கத்திற்கு நான் காரணமல்ல.ஆனாலும் வருவார்கள்.



திருவிளையாடலுக்கு பிறகு புது பதிவு போடவே மனதில்லை.இப்படியா வெறுக்க வைப்பீர்கள்?உங்கள் அரசியல் ஏன் எடுபடவில்லை என்ற காரணம் புரிகிறது.



இங்கு நான் வர போவதே இல்லையென்றாலும்(december ), நடிகர்திலகமே நான் பூசிக்கும் ஒரே மனித கடவுள்.நான் இறந்த பிறகும்,அடுத்தடுத்த பிறவிகளிலும் ,அவர் பக்தனாக மட்டுமே தொடர்வேன்.



எனக்கு வரும் PM ,பலர் சொன்ன தகவல் படி மௌன வாசகர்கள் பலர் உள்ளனர்.ஆனாலும் உரத்த வாசகர்கள் உங்கள் போல் உள்ளவர்கள் தொடர்ந்து புரியாத எழுத்தையே தருகிறேன் என்று எழுதி வந்தால்,இதை புதிதாக படிக்க நினைப்போருக்கு தயக்கம் வருமே?



நீங்கள் முழுக்க படித்ததில்லை என்று சொல்லி விட்டு,தொடர்ந்து இவ்வாறு கூறுவதன் உள்நோக்கம் புரியவில்லை.நான் தொந்தரவேன்றால்,என் தொந்தரவு,நிச்சயமாக இருக்காது.



நான் பாடு பட்டது பதிவின் தரங்களுக்காக மட்டுமே. தமிழர்களின் பெருமைக்காக மட்டுமே.



யாரையும் தாக்கி ,தனிப்பட்ட முறையில் நான் சந்தோசம் அடைந்ததில்லை. மாற்று திரி நண்பர்கள் உட்பட. நான் வெறுத்தது பொய்மைகளை,பிம்பங்களை மட்டுமே. அதை ஆராதனை செய்வோரிடம் அனுதாபமே மிஞ்சும்.அதனால் பாதிக்க பட்ட தமிழ் உன்னதங்களை நினைத்தால் உள்ளம் வெம்பும்.சில சமயம் ,கலகலப்பு கருதி,"புரியும் படி" கலாய்த்ததுண்டு (நம் திரி,மாற்றுதிரி,வேற்று திரி).எதுவுமே வஞ்சத்தினால் அல்ல. எனக்கு வஞ்சம் தெரியாது.(தன்னிலை விளக்கமாக எடுத்தாலும் சரி)



அனைத்து நண்பர்களுக்கும் ,மனம் புண் பட்டிருப்பின் மனபூர்வமான மன்னிப்பை கோருகிறேன்.



என்னுடைய blog காரம்,மணம்,நிறம்,தரம் குறையாமல்,அனைத்தையும் குதற காத்திருக்கிறது.பல்வேறு பட்ட பிரச்சினைகள்,விஷயங்களுடன்.



அனைத்து மையம் திரி நண்பர்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.அனைத்து அணி நண்பர்களுக்கும் ,இந்த தீபாவளி இனியதாக அமையட்டும்.

Gopal.s
21st October 2014, 11:02 AM
உண்மையாகவே நான் அசந்து போய் நின்றது , தாமஸ்-சிங்கமுத்து இயக்கத்தில் ஜீசஸ் ஆக எம்.ஜி.ஆர் உருவ பொருத்தத்தில். அவ்வளவு பாந்தமாக பொருந்தி போனது. இந்த படம் வராதது ஒரு நஷ்டமே. எம்.ஜி.ஆரின் பாணிக்கு இந்த வேடம் ஒத்து வந்திருக்கும்.



அதே போல பொன்னியின் செல்வன். தயாரிப்பில் உரிய கவனம் செலுத்த பட்டு ,அடிமை பெண் போல பிரம்மாண்டமாக வந்திருக்கும்.மகேந்திரன் திரைக் கதை வேறு உருவாக்கி இருந்தாராம்.



இது இரண்டும் உருவாகாதது ,நமக்கு நஷ்டமே.

KCSHEKAR
21st October 2014, 11:09 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Dinamalar21Oct2014_zps8f4f05b8.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Dinamalar21Oct2014_zps8f4f05b8.jpg.html)

JamesFague
21st October 2014, 11:17 AM
To all fellow hubbers and NT Fans in particular wish you all a Happy Diwali.



Regards

JamesFague
21st October 2014, 11:21 AM
Courtesy : Saradha Madam


தங்க சுரங்கம்

இலக்கணப்படி இப்படத்தின் தலைப்பு 'தங்கச் சுரங்கம்' என்றுதான் இருக்க வேண்டும். தமிழ்ப்படங்களை ஆட்டிவைக்கும் செண்டிமெண்ட் காரணமாக, எட்டெழுத்துக்களில் தலைப்பு அமைந்தால், அதில் வரும் ஒற்றெழுத்தை நீக்கி விட்டு, ஏழு எழுத்துக்களில் தலைப்பு வருவதுபோல செய்வார்கள் (உதாரணம்: கல்யாண பரிசு). ஆனால் இப்படத்தில் ஒற்றெழுத்தான 'ச்'சை நீக்கியபின்னர்தான் எட்டெழுத்துக்களே வருகின்றன. அப்படியிருக்க என்ன காரணத்தால் இலக்கணப்பிழை செய்தார்களென்று தெரியவில்லை.

ஒரு காலம் இருந்தது. நடிகர்திலகத்தின் சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண ஏங்கிய நேரம். ஆம் 1964 ல் ஒரு 'புதிய பறவை', 1967 ல் ஒரு 'ஊட்டி வரை உறவு' என்று அத்தி பூத்தாற்போலவே அவரது சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண முடியும். மற்றபடி நடிகர்திலகத்தின் வண்ணப்படங்கள் என்றால் அது திரு ஏ.பி.என். எடுத்த (திருவிளையாடல், சரஸ்வதிசபதம், கந்தன்கருணை, திருவருட்செல்வர், திருமால்பெருமை போன்ற) புராணப்படங்கள்தான். அந்த வகையில் இப்போதுள்ள நடிகர், நடிகையர் அதிர்ஷ்டம் செய்தவர்கள். திரைப்படங்கள் என்றாலே வண்ணம்தான் என்று முன்னேறிவிட்ட காலம் இது. அப்போதெல்லாம் அப்படியில்லை. எப்போதாவது தான் வண்ணப்படங்கள் வரும். 1964ல் அறிமுகமான ஜெய்சங்கர் கூட கிட்டத்தட்ட பதினைந்துக்குமேல் கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல் வண்ணப்படமாக 'பட்டணத்தில் பூதம்' படத்தில் நடித்தார். இந்த வகையில் ரவிச்சந்திரன் கொடுத்து வைத்தவர். முதல் படமான 'காதலிக்க நேரமில்லை'யே வண்ணத்தில் அமைந்தது. தொடர்ந்து இதயக் கமலம், நான், மூன்றெழுத்து, உத்தரவின்றி உள்ளே வா, அதே கண்கள் என்று வண்ண நடை போட்டார். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு படகோட்டி, எங்கவீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, ரகசியபோலீஸ் 115, பறக்கும் பாவை என்று வண்ணத்தில் வந்து கொண்டிருந்தபோது சிவாஜி ரசிகர்கள் வண்ணப்படங்களுக்கு ஏங்கினார்கள் என்பது உண்மை. அவர்களுக்கு தீனி போட்டது ஏ.பி.என்னின் புராணப் படங்கள் மட்டுமே. எம்ஜிஆர் அவர்களை வைத்து வண்ணத்தில் ஒளிவிளக்கு, அன்பேவா படங்களை எடுத்த ஜெமினி வாசன், மற்றும் ஏ.வி.எம் செட்டியார் ஆகியோர் கூட நடிகர்திலகத்தை வைத்து 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'உயர்ந்த மனிதன்' ஆகிய படங்களை கருப்பு வெள்ளையில் எடுத்து சிவாஜி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

மற்றபடி நடிகர் திலகத்துக்கு தன் திறமையைக்காட்ட கருப்பு வெள்ளை ஒரு தடையாக இல்லையென்பதோடு அவரது நடிப்புக்கு சவாலாகவும், திறமைக்கு உரைகல்லாகவும் அமைந்தவை யாவும் (பாவ மன்னிப்பு, பாசமலர், பழனி, நவராத்திரி, ராமன் எத்தனை ராமனடி, தெய்வமகன், வியட்நாம் வீடு உள்ளிட்ட) கருப்பு வெள்ளைப் படங்களே. இருந்தாலும் ரசிகர்களுக்கென்று ஒரு ஆசை இருக்கிறதல்லவா?

எதற்கு இத்தனை பீடிகை போடுகிறாள் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆம், நடிகர் திலகத்தின் சமூகப்படங்களில் புதியபறவை, ஊட்டிவரைஉறவு படங்களுக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வந்த வண்ணப்படம்தான் "தங்க சுரங்கம்".

செயற்கைத்தங்கம் உற்பத்தி செய்து, நல்ல தங்கத்தோடு கலந்து விட்டு, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய மோசடியையும், பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் சதிகாரக் கும்பலைப் பிடிக்கும் சி.பி.ஐ.அதிகாரி பாத்திரம் நடிகர் திலகத்துக்கு. அதற்கு ஏற்றாற்போல வாகான ஒல்லியான உடலமைப்பு இருந்தது அப்போது அவருக்கு. அதனால் ரோலுக்கு கனகச்சிதமாக பொருந்தினார். கூடவே வசீகரமான சுருள், சுருளான சொந்த தலைமுடி எல்லாம் சேர்ந்து அப்பாத்திரத்துக்கு மெருகூட்டின. (அப்போதைய படங்களில் எல்லாம் சி.ஐ.டி.என்பதுதான் புழக்கத்தில் இருந்ததே தவிர சி.பி.ஐ. என்பது ரொம்ப பேருக்கு வித்தியாசமான வார்த்தையாக இருந்தது. இப்போது, சின்னக் குழந்தைக்கு கூட தெரியும்படியாக சி.பி.ஐ.என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது).

படம் துவங்கும்போது, இரண்டாம் உலகப்போரின் பிண்ணனியோடு துவங்கும். ஆங்காங்கே பீரங்கித்தாக்குதல்கள், அதை விட மோசமாக போர் விமானங்கள் குண்டு வீசி பர்மாவின் தலைநகரான ரங்கூனை தாக்கிக்கொண்டிருக்கும்போது இந்தியர்கள் கப்பலில் தாய்நாடு திரும்பிக்கொண்டிருப்பர். அப்போது தன்னுடைய சின்னஞ்சிறு மகன் ராஜனுடன், கப்பலில் ஏறப்போகும் காமாட்சியம்மாளை (எஸ்.வரலட்சுமி), கப்பலில் இடம் நிறைந்து விட்டது என்று அதிகாரிகள் தடுக்க, தான் பர்மாவில் இருந்து அழிந்தாலும் பரவாயில்லை, தன் மகன் ராஜன் இந்தியாவில் எங்காவது போய் நலமாக இருக்கட்டும் என்று, தனக்கு முன்னர் ஏறிய டாக்டரிடம் (ஜாவர் சீதாராமன்) மகனை கண்கலங்க ஒப்படைக்கிறார். காட்சிகள் அத்துடன் கட் பண்ணப்பட்டு டைட்டில் ஓடத்துவங்குகிறது.

'தங்கச் சுரங்கம்' படத்தின் எழுத்தோட்டம் (டைட்டில்) வித்தியாசமாகவும், துடி துடிப்புடனும் செய்யப் பட்டிருந்தது. புதுமையாக செய்ய வேண்டும் என்ற ராமண்ணாவின் துடிப்பு அதில் தெரிந்தது.

டைட்டில் முடிந்ததும், படம் தற்காலத்துக்கு வந்து விடும். பள்ளிக் குழந்தைகளோடு வந்துகொண்டிருக்கும் வரலட்சுமி எதிரே வரும் பாதிரியாரைக்கண்டு திகைத்து நிற்க பாதிரியாரும் திகைத்து நிற்பார். அந்தப் பாதிரிர்யார் வேறு யாருமல்ல. ரங்கூனில் கப்பலில் ஏறும்போது வரலட்சுமி தன் மகனை ஒப்படைத்தாரே அந்த டாக்டர் ஜாவர் சீதாராமன் தான். காமாட்சியம்மாள் தன் மகனைப்பற்றி ஆவலுடன் விசாரிக்க, அவன் தற்போது குற்றப்பிரிவு இலாக்காவில் உயர்ந்த பதவியில் இருப்பதாக சொல்ல... உடனே காட்சி மாற்றம். டெல்லியிலிருந்து வரும் விமானத்தில் இருந்து டார்க் ப்ரவுன் கலர் ஃபுல் சூட், மற்றும் கறுப்புக்கண்ணாடியுடன் விமானத்திலிருந்து வெளியே வரும் நடிகர் திலகம் அறிமுகம். விமான அதிகாரியிடம் கைகுலுக்கி விட்டு தனக்கே உரிய ஸ்டைலுடன் படிகளில் இறங்கி வருவார்.

அவரது மேலதிகாரியான மேஜர் சுந்தர்ராஜன், போலித்தங்கம் செய்யும் கும்பலைப் பிடிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பார். அது பற்றி மேலும் தகவல்களைச் சேகரிக்க சிறிது நாளாகும் என்பதால் தன் ஊருக்குச் சென்று தன்னை வளர்த்த பாதிரியாரைப்பார்த்து வர விரும்புவதாகச் சொல்லி அனுமதி பெற்று ஊருக்கு வருவார். அங்கே பாதிரியார், அவருக்கு மிகப்பெரிய பரிசு தருவதாகச்சொல்லி ராஜனின் (சிவாஜி) அம்மாவை அவருக்கு அறிமுகம் செய்து வைப்பார். இன்ப அதிர்ர்ச்சியில், பாசத்தைக் கொட்ட சிவாஜிக்கும் வரலட்சுமிக்கும் அருமையான கட்டம். போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். நாள் முழுக்க பேசிக்கொண்டிருந்து விட்டு இரவில் சிவாஜியைத் தூங்கப்போகச்சொல்லும் அம்மாவிடம் சிவாஜி ஒரு அஸ்திரத்தை தூக்கி வீசுவார்.

"அம்மா நானும் காலையில் இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். மகனைப் பாத்த சந்தோஷத்தில எல்லா விஷயத்தையும் பற்றி விவரமா பேசினீங்க. ஒரு பெண்ணுக்கு மகன் எப்படி முக்கியமோ அதுபோல கணவனும் முக்கியமல்லவா? அப்பாவைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே. ஏம்மா?".

மகனின் இந்தக்கேள்வியில் அதிர்ச்சியில் உறைந்து போவார் வரலட்சுமி. எப்படி சொல்ல முடியும்?. சொல்வது போலவா நடந்து கொண்டார் அவர்?. 'ராஜன், இப்போ என்னை எதுவும் கேட்காதே, சமயம் வரும்போது நானே சொல்றேன்' என்று சமாதானப் படுத்துவார்?. ஆனால் அவர் சொன்ன 'அந்த சமயம்' எவ்வளவு தர்ம சங்கடமான, இக்கட்டான சமயமாக அமையும் என்று அவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்.

ஆம். எந்த போலித்தங்க கும்பலைப்பிடிக்க சிவாஜி அமர்த்தப்பட்டாரோ, அந்தப்போலித் தங்க கும்பலுக்கு தலைவனே ராஜனின் அப்பா 'மிஸ்டர் பை' (ஓ.ஏ.கே.தேவர்)தான் என்று அறியும்போது வரலட்சுமியே அதிர்ச்சியில் மூழ்கி விடுவார். முன்னதாக தன்னைப் பிடிக்க வந்த சி.பி.ஐ. ஆபீஸர் விட்டுச்சென்ற பர்ஸில் ராஜனின் படமும் தன் மனைவியின் படமும் இருப்பதைப் பார்த்து, அது தன் மகன்தான் என்பதை அறியும் 'பை', பாசத்தையே கேடயமாகக்கொண்டு தப்பிக்க எண்ணி, பர்ஸில் இருந்த விலாசத்தில் வரலட்சுமியை சந்தித்து, கொஞ்சம் கொஞ்சமாக செண்டிமெண்ட் வார்த்தைகள் மூலம் அவரை நிலைகுலையச்செய்து, இறுதியில் தன்னைப்பிடிக்க தன் மகன் போடும் திட்டங்களை தன் மனைவி மூலமாகவே தெரிந்துகொள்ளும் அளவுக்கு தன் மனைவியைப் பக்குவப்படுத்தியிருப்பார். இதையறியாத சி.பி.ஐ ஆபீஸர் ராஜன், மிஸ்டர் பையைப் பிடிக்கப்போகும் திட்டத்தை தன் அம்மாவிடம் சொல்லி விட்டுப்போக, போன இடத்தில் சிவாஜிக்கு தோல்வி. 'மிஸ்டர் பை' தன்னுடைய ஜீப்பில் தனக்கு பதிலாக ஒரு கழுதையை அனுப்பிவைத்து அவமானப்படுத்தியிருப்பார்.

இதைப்பற்றி ஆலோசிக்கும் மேஜரும் சிவாஜியும், 'நம் இருவரைத்தவிர யாருக்கும் தெரியாத இத்திட்டம் 'பை'க்கு தெரிந்தது எப்படி?. நீங்கள் யாரிடமும் சொன்னீர்களா?' என்று மேஜர் கேட்க இல்லையென்று மறுக்கும் சிவாஜிக்கு சட்டென்று ஒரு பொறிதட்டும். அம்மாவிடம் மட்டும் தானே இதைச்சொன்னோம். 'பை'க்கு தெரிந்தது எப்படி?. சந்தேகம் என்று வந்து விட்டால் யாரையும் சந்தேக வட்டத்தில் இருந்து நீக்க முடியாதே. சிறிது நேரத்தில் திரும்புவதாகச்செல்லும் சிவாஜி நேராக தன் அம்மாவைப் போய்ப்பார்ப்பார். அப்போது நடக்கும் உரையாடல்கள் உணர்ச்சி மயமானவை.

மகனுடைய கூரிய பார்வையின் உக்கிரத்தை நேருக்கு நேர் சந்திக்க முடியாத தாய், தலையைத் தாழ்த்திக்கொண்டு கடைக்கண்ணால் பார்க்க, மகனின் கேள்விக்கணகள்....

"அம்மா, நான் பார்க்கும் உத்யோகம் எவ்வளவு பொறுப்பானது, ஆபத்தானதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே?" அவள் ஆம் என்று தலையாட்டுவாள்.

"இன்னைக்கு 'பை'யைப் பிடிக்கப்போகும் விஷயத்தை நான் தானே வாய் தவறி உங்களிடம் சொன்னேன்?". அவள் மீண்டும் தலையாட்டல்

"அதை நீங்க யார்கிட்டேமா சொன்னீங்க?"

"ராஜன், நான் யார்கிட்டேயும் சொல்லலைப்பா"

"பொய்.... நீங்க பை கிட்டே சொல்லியிருக்கீங்க...ஏன்...ஏன்.., அதுக்கென்ன அவசியம் வந்தது?. தலைக்கு ஒசந்த மகனை வச்சுகிட்டு அந்த 'பை' கூட ரெண்டாவது வாழ்க்கை வாழறீங்களா அம்மா?"

(ஒரு மகன் தன் தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி. ஆனால் தோல்வியின் பாதிப்பு, மனத்திலிருந்து இப்படி கேள்வியாக வெடித்துக் கிளம்ப)

"அய்யோ ராஜன், அவர்தாண்டா உங்க அப்பா"

அதிர்ச்சியின் உச்சிக்குப்போவார் நடிகர் திலகம். என்னது அப்பாவா?. நான் பிடிக்கணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்த தேசத்துரோகியா என் அப்பா?.

மகனிடம் விவரத்தைச்சொல்லத் துவங்க, மீண்டும் ஃப்ளாஷ் பேக்கில் ரங்கூனில் நடந்த இரண்டாம் உலகப்போர். இடிபாடுகளில் சிக்கிய காமாட்சியும் கனகசபையும் தப்பிக்கும் சமயம், காமாட்சி மகன் ராஜனை தேடிக்கொண்டிருக்கும்போது கனகசபைக்கு ஒரு பெட்டி நிறைய பணம் கிடைக்க, மனைவியையும் மகனையும் உதாசீனப்படுத்தி விட்டு தான் மட்டும் தப்பித்துப்போய்விட, வேறு வழியிறி மகன் ராஜனுடன் இந்தியா வரும் கப்பலில் காமாட்சி ஏறப்போகும்போதுதான் மகனை டாக்டரிடம் ஒப்படைக்கிறார் (படத்தின் முதல் காட்சியில் வந்தது).

அதன்பிறகு ராஜன் தன் தாயையே கைது செய்வதும், பாதிரியார் அவரை ஜாமீனில் விடுவித்து அழைத்து வருவதும், தொடர்ந்து 'பை' யைப்பிடிக்க ராஜன் முனைந்து ராஜன் வெற்றி பெறுவதும் சுவாரஸ்யமானவை.

பாடலும் இசையும்...

இப்படத்துக்கு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன.

விடுமுறையில் கிராமத்துக்கு வரும் நடிகர் திலகம், தலையில் தொப்பியும் கையில் பெட்டியுமாக பாடிக்கொண்டு வரும் பாடல்

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
தென்னாட்டிலே தண்ணீரும் பொன்னீரும் விளையாடுது
மூன்று தமிழ் ஓங்கும் இடம் எங்கள் நாடு.... ஓய்...

பொட்டழகும் கட்டழகும்
பூவழகும் தண்டைக் காலழகும்
எங்கள் மங்கையரின் கலையல்லவா
திருமஞ்சள் முக சிலையல்லவா

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

யானைகட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்
பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்
தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்
திருக்கோயில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

மேலை நாடு பரபரப்பில் வாழ்ந்து பார்க்குது
எங்கள் கீழைநாடு தனி வழியே நடந்து பார்க்குது
விஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது
எங்கள் மெய்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

அருமையான பாடல். பாடியவர்.... வேறு யார்? கம்பீரக்குரலோன் டி.எம்.எஸ் அண்ணாதான். ராமமூர்த்தியின் அருமையான இசையில். துரை-அமிர்தத்தின் கண்ணில் ஒத்திக்கொள்ளும் ஒளிப்பதிவு. அழகான ஒல்லியான உடல்வாகுடன் வெள்ளை பேண்ட், சந்தன வண்ண சட்டை, தொப்பி, கையில் சின்ன பெட்டி மற்றும் ஒரு குச்சியுடன் வழக்கமான ஸ்டைல் நடையில் நடிகர் திலகம்... ராமண்ணா.... அற்புதம் அண்ணா...

பெங்களூரில் இருந்து காரில் வரும்போது, நள்ளிரவில் நடிகர் திலகத்திடமிருந்து தப்பிக்க எண்ணி, சேற்றில் விழுந்துவிடும் பாரதியை கிண்டல் செய்து நடிகர் திலகம் பாடும் "கட்டழகு பாப்பா கண்ணுக்கு... கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு" பாடல் ரசிக்க வைக்கும். பாடலின் துவக்கத்தில் வரும் சிரிப்பில், நடிகர்திலகம் வயிற்றை பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிப்பது அவரது முத்திரை.

ராமண்ணாவுக்கு பாடல் காட்சிகளைப் படமாக்க சுவிட்சர்லாந்து தேவையில்லை. ஆஸ்திரேலியா தேவையில்லை, நயாகரா நீர்வீழ்ச்சி தேவையில்லை. பத்தடிக்கு பத்தடியில் ஒரு இடத்தைக்கொடுத்து விட்டால் போதும். அருமையாக படமாக்கி தந்துவிடுவார்.

குமரிப்பெண்ணில் ஒரு ரயில் பெட்டிக்குள் 'வருஷத்தைப்பாரு அறுபத்தியாறு'
நான் படத்தில் சின்னஞ்சிறு ஃபியட் காருக்குள் 'போதுமோ இந்த இடம்'
மூன்றெழுத்தில் சிறிய பெட்டிக்குள் ரவி-ஜெயாவை வைத்து 'பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி' போன்ற பாடல்களை அருமையாகத் தந்த இயக்குனர் ராமண்ணா 'தங்க சுரங்க'த்திலும் தன்னுடைய சேட்டையை விடவில்லை.

ஆம். நடிகர்திலகமும் பாரதியும் பாடும் டூயட் பாடலான
"சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது"

பாடலை முழுதும் கிணற்றுக்குள்ளேயே எடுத்திருப்பார். கிணற்றுக்குள் படிக்கட்டில் நின்றுகொண்டும், கயிற்றில் தொங்கிக்கொண்டும் பாடும் அந்தப்பாடல் கண்களுக்கு விருந்து.



மயக்க ஊசி ஏற்றப்பட்டு நடிகர் திலகத்துக்கு மயக்க ஊசி போட ஏவி விடப்பட்ட்ட பாரதி, நடிகர் திலகத்தை மயக்க பாடும்..
"உன் நினைவே நதியானால்.. என் உடலே படகானால்
அந்த நதியினிலே... இந்த படகினிலே.. ஆடு... ஆட வா"

பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். ஊட்டி கார்டனில் எடுக்கப்பட்ட பாடல் இது. அதிகம் பிரபலம் ஆகாத பாடலும் கூட.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். பாரதி மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா. முதலில் நிர்மலா நல்லவராகவும் பாரதி போலித்தங்கக் கும்பலைச் சேர்ந்தவராகவும் தோன்றும். ஆனால் இடையிலேயே பாரதிதான் நல்லவர் என்றும் நிர்மலா மோசடிக்கும்பலைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வரும். போலித்தங்க கும்பலின் தலைவன் 'மிஸ்டர் பை' ஆக (சி.பி.ஐ.ஆபீஸர் ராஜைன் தந்தையாக) ஓ.ஏ.கே. தேவரும், அவரது கையாள் வேலாயுதமாக ஆர்.எஸ்.மனோகரும் நடித்திருப்பார்கள். நகைச்சுவைக்கு நாகேஷ். இவர் அதிகம் பயன்படுத்தப்படவில்லை.

நடிகர்திலகம், பாரதி, நிர்மலா, ஓ.ஏ.கே.தேவர், மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், எஸ்.வரலட்சுமி, ஜாவர் சீதாராமன், முத்தையா (போலித்தங்க விஞ்ஞானி) ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர் நடிகையர் தேர்வில் ராமண்ணா கோட்டை விட்டு விட்டாரோ என்று எண்ணத்தூண்டும் அளவுக்கு வீக்னஸ். நடிகர் திலகத்துக்கு பொருத்தமில்லாத ஜோடிகளில் பாரதிக்கு நிச்சயம் இடம் உண்டு. கொஞ்சம் கூட ஒட்டவில்லை. அது மட்டுமல்லாது மெயின் வில்லனாக ஓ.ஏ.கே.தேவரும் ரசிகர்கள் மனத்தில் நிற்கவில்லை. ‘பாரதிக்கு பதிலாக ஜெயலலிதாவும், ஓ.ஏ.கே.தேவருக்கு பதிலாக நம்பியாரும் இடம் பெற்றிருந்தால் படத்தின் ரிஸல்ட்டே வேறு’ என்பது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட விஷயம்.

இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி, சென்னை துறைமுகத்தில் படமாக்கப்பட்டிருந்தது. அன்றைய காலத்தில் சென்னைக்கும் மலேசியா, சிங்கப்பூருக்கும் இடையே 'ஸ்டேட் ஆப் மெட்ராஸ்' என்ற பயணிகள் கப்பல் சென்று வரும் ('சிதம்பரம்' கப்பலுக்கு முன்பு). இந்தக்கப்பலிலேயே சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

'தங்கச்சுரங்கம்' என்றாலே நமக்கு தவறாமல் நினைவுக்கு வருவது, கிளைமாக்ஸில் சர்ச்சில் (மாதாகோயிலில்) நடிகர்திலகத்தின் அற்புத நடிப்பு. சர்ச்சுக்குள் ஆயுதங்கள் எடுத்துப்போக பாதிரியார் தடை விதித்ததால், சர்ச்சுக்குள் ஒளிந்திருக்கும் தந்தையைப் பிடிக்க நிராயுதபாணியாக உள்ளே போகும் நடிகர்திலகத்தை, துப்பாக்கியோடு ஒளிந்திருக்கும் 'மிஸ்டர் பை' இரண்டு கைகளிலும் இரண்டு கால்களிலும் மாறி மாறி சுட, அப்படியே பெஞ்சிலும் தரையிலும் விழுந்து நடிகர் திலகம் துடிக்கும்போது நம் கண்ணில் ரத்தம் வராத குறை. அத்துடன் ஒரு சந்தேகமும் வரும். "காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்ற பேராசையில் நிஜமான துப்பாக்கியால் சுட்டுட்டாங்களோ?"

"தங்கச்சுரங்கம்" பற்றிய என் இனிய நினைவுகளைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

JamesFague
21st October 2014, 11:52 AM
Courtesy: Saradha Madam

அண்ணன் ஒரு கோயில்

தமிழ்த்திரைப்படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழக மக்களால், குறிப்பாக தாய்மார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரிய வெற்றிகளை ஈட்டியிருக்கின்றன. இவற்றுக்கு சிகரம் வைத்தாற்போன்று நடிகர்திலகமும், நடிகையர்திலகமும் அண்ணன் தங்கையாக நடித்த... (ஸாரி) வாழ்ந்த 'பாசமலர்' திரைக்காவியம் இன்றளவும் தமிழ்ப்படங்களில் அண்ணன் தங்கை பாசப்பிணைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பாசப்பிணைப்பைக் கிண்டல் செய்யும்போது கூட, 'அடேயப்பா என்னமோ பெரிய பாசமலர் அண்ணன் தங்கை மாதிரியல்லவா உருகுறீங்க?' என்ற சொற்றொடர் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று நடிகர்திலகமும், மற்றைய கதாநாயகர்களும் நடித்த, அண்ணன் தங்கை பாசத்தை அச்சாணியாகக்கொண்ட பல படங்களும் வெற்றிக்கனியை ஈட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் வந்து மாபெரும் வெற்றியடைந்த படம்தான், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான 'அண்ணன் ஒரு கோயில்' வண்ணத்திரை ஓவியம்.

இப்படத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு. இப்படம் 1977-ம் ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்தது. இதற்கு சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னர்தான் 1952 தீபாவளியன்று, தமிழ்த்திரையுலகின் புரட்சி கீதமாய், எழுச்சிப்பேரலையாய், சமுதாயக்கருத்துக்களை உள்ளடக்கிய காவியமாய் 'பராசக்தி' வெளிவந்து தமிழ்த்திரை வரலாற்றைத் திருப்பிப்போட்டதுடன், அதுவரை நாடக மேடைகளில் கலக்கி வந்த நடிப்புலகின் நாயகனை வெள்ளித்திரையில் காண வைத்தது. எனவே சரியாக 25 ஆண்டுகளை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து வெற்றிநடைபோட்ட நடிகர்திலகத்தின் வெள்ளிவிழா காணிக்கையாக வந்த படம்தான் 'அண்ணன் ஒரு கோயில்'.

படத்தின் துவக்கத்தில், பெரிய மனிதன் போலத்தோற்றம் தரும் ஒருவர், தலையில் தொப்பியும், கண்களில் கண்ணாடியும், முழங்காலுக்கும் கீழே நீண்ட முழுக்கோட்டும் அணிந்து, போலீஸுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார். யார் அவர்? ஏன் ஓடுகிறார்?. அவர் ஒளிந்திருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கட்டில்லா பயணியாக ஒரு பெண் ஸ்டேஷன் மாஸ்ட்டரிடம் ஒப்படைக்கப்படுகிறாள். ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்திக்கு உடல்நலக்குறைவு என்று செய்தி வர, அந்தப்பெண்ணையும் அழைத்துப்போகும்போது, இவரும் கூடவே செல்ல, அந்தக்குழந்தைக்கு வைத்தியம் செய்யும்போது இவர் ஒரு டாக்டரென்று தெரிகிறது. அவருடைய கையெழுத்தைப்பார்த்ததும், அந்தப்பெண்ணுக்கு இவர் யாரென்பது பற்றி சந்தேகம் எழ, சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள அவரிடமே கேட்கும்போது அவர்தான் தன்னை மணக்கவிருந்த, சூரக்கோட்டை சின்னையா மன்றாயர் மகன் டாக்டர் ரமேஷ் என்பது தெளிவாக, தான்தான் அவரை மணக்கவிருக்கும் முரளிப்பாளையம் சேதுபதியின் மகள் ஜானகி என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.. (மணக்கவிருந்தவர் என்றால் எப்படி? பெற்றோர் நிச்சயித்த திருமணமா?. அப்படியானால் இருவரும் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டது எப்படி?. காதல் திருமணம் என்றால், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதுமே தெரிந்துகொள்ளாமல் போனது எப்படி?. என்பதற்கான விவரம் இல்லை).

தான் ஏன் இப்படி போலீஸ்கண்ணில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர் விளக்க, ப்ளாஷ்பேக் விரிகிறது....

பெற்றோரின் மறைவுக்குப்பின் தன் ஒரே தங்கை லட்சுமி (சுமித்ரா)வுக்கு தாயாக, தந்தையாக, ஏன் அவளுக்கு உலகமே தானாக வாழ்ந்துவந்தவர் டாக்டர் ரமேஷ் (நடிகர்திலகம்). அவருக்கு நல்ல நண்பனாக, மற்றும் உதவியாளராக டாக்டர் ஆனந்த் (ஜெய்கணேஷ்), மற்றும் பொல்லா நண்பனாக ரவி(மோகன்பாபு) மற்றும் அவனுக்கும் ஒரு நண்பன் (பிரேம் ஆனந்த்). அமைதியாக, அழகாக சென்று கொண்டிருந்த ரமேஷ், லட்சுமி வாழ்க்கையில் நாகம் புகுந்தது போல ரவியின் கழுகுப்பார்வை லட்சுமியின்மீது விழுகிறது.

தனது பிறந்தநாளன்று, டாக்டர் ஆனந்த் தபேலா வாசிக்க, சிதார் இசைத்தவாறு பாடும் லட்சுமியை வைத்தகண் வாங்காமல் பார்க்கும் ரவி, பாரவையாலேயே அவளை விழுங்குகிறான். பின்னொருமுறை ரவி, டாக்டர் ரமேஷைச்சந்தித்து, தான் லட்சுமியை விரும்புவதாகவும் அவளைத் தனக்கு மணமுடித்து வைக்குமாறும் கேட்க, அனைத்து தீய பழக்கங்களுக்கும் புகலிடமாக இருக்கும் அவனுக்கு தன் தங்கையை மணமுடிப்பதைவிட பாழுங்கிணற்றில் அவளைத்தள்ளுவது மேல் என்று நினைக்கும் ரமேஷ், திருமணத்துக்கு மறுக்க, வாக்குவாதம் முற்றிய நிலையில், தங்கை லட்சுமியைக்குறித்து கேவலமாக பேசும் ரவியை கன்னத்தில் அறைந்து விரட்டி விடுகிறார். அடிபட்ட பாம்பாக அலையும் ரவி, ஒரே கல்லில் இரண்டுமாங்காயாக, தான் விரும்பிய லட்சுமியை தகாத முறையில் அனுபவிக்கவும், தன்னை அவமானப்படுத்திய டாக்டர் ரமேஷைப் பழிதீர்க்கவும் சமயம் பார்த்திருக்கிறான். அந்தநாளும் வந்தது...

தன் தங்கையின் திருமணம் பற்றி, தனக்கு உறுதுணையாக இருந்து வரும் அப்பத்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, யாரிடமிருந்தோ ஒரு போன் வருகிறது, டாக்டர் ரமேஷின் தங்கை லட்சுமியை, ரவி தன்னுடைய கெஸ்ட் அவுஸுக்கு கடத்திச்சென்று, சீரழிக்க முயல்கிறான் என்று. (போன் செய்தவர் யாரென்பது கிளைமாக்ஸில் தெரியவருகிறது). காரில் பறந்துசெல்லும் ரமேஷ், காரோடு ரவியின் கெஸ்ட் அவுஸ் கண்ணாடிக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அதற்குள் லட்சுமி சீரழிக்கப்பட்டுவிடுகிறாள். கோபாவேசமாக ரமேஷ் ரவியைத்தாக்க, சண்டையின் முடிவில் ரவி துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறான்.

ஆனால், தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தினால் லட்சுமியின் புத்தி பேதலித்துப்போய், அண்ணன் ரமேஷையே யார் என்று கேட்க, ரமேஷின் மனம் நொறுங்கிப்போகிறது. நடந்த விஷயங்கள் வெளியே தெரிந்தால் தன் குடும்ப மானம், தங்கையின் எதிர்காலம் எல்லாம் பாழாகிவிடுமென்று எண்ணும் ரமேஷ், தனக்கு மிக மிக நம்பிக்கையான நண்பன் டாக்டர் ஆனந்தின் பொறுப்பில் தங்கையை ஒப்படைத்துவிட்டு போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகிறார். அப்படி போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து ஓடும்போதுதான், தனக்கு மனைவியாக வரவிருந்த ஜானகியை (சுஜாதா) சந்திக்கிறார். ப்ளாஷ்பேக் முடிகிறது....

காட்டில் சுற்றியலையும்போது, ஒரு மரத்தடி சாமியின் கழுத்தில் கிடந்த மஞ்சள்கயிற்றை எடுத்து ஜானகிக்கு ரமேஷ் தாலி கட்டிய மறுநிமிடம், போலீஸ் அவர்களை சுற்றி வளைக்கிறது. ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கணவனை எப்படியும் விடுதலை செய்வது என்ற வைராக்கியத்துடன் வக்கீல் மேஜரிடம் போக, அவரோ இந்த வழக்குக்கான காரண காரியங்களை கோர்ட்டில் சொல்லி, ரமேஷ் கொலை செய்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று நிரூபித்தால் மட்டுமே ரமேஷை விடுவிக்க முடியும் என்று கூற, சம்பவத்துக்கு ஒரே சாட்சியான லட்சுமியை கோர்ட்டில் பேச வைப்பது ஒன்றே ரமேஷைக்காப்பாற்றும் வழியென்ற எண்ணத்துடன் டாக்டர் ஆனந்தை சந்தித்து, தான் ரமேஷின் மனைவி ஜானகியென்று அறிமுகப்படுத்திக் கொள்ள, 'என்னது, ரமேஷுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்று ஆனந்துக்கு அதிர்ச்சி.

ஆனால் தன் கழுத்தில் தாலியேறிய அடுத்த நிமிடமே, ரமேஷ் கையில் விலங்கேறிய சோகத்தை விவரித்த ஜானகி, தற்போது லட்சுமியைக் கொண்டு நடந்த அசம்பாவிதத்தைக் கோர்ட்டில் சொல்ல வைத்தால் மட்டுமே ரமேஷைக்காப்பாற்ற ஒரே வழியென்று சொல்ல, ஆனந்த் மறுத்துவிடுகிறார். காரணம், லட்சுமி தற்போது பழைய நினைவுகளை அறவே நினைவுக்கு கொண்டுவர முடியாத நிலையில் இருப்பதும், தன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாதென்று ரமேஷ் வாங்கிய சத்தியமும்தான். ஆனால் ஜானகியோ என்னவிலை கொடுத்தாகிலும் தன் கணவனை விடுத்லை செய்வேன் என்று ஆனந்திடம் சூளுரைத்துப்போகிறாள்.

ஜானகி போன சிறிது நேரத்தில், ‘RAPE’ என்ற பெயரில் ஒரு ஆங்கிலத் திரைப்பட விளம்பரம் ஆனந்தின் கண்ணில் பட, லட்சுமிக்கு பழைய நினைவு திரும்ப இப்படம் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் லட்சுமியை அழைத்துப்போகிறார். திரையில், தன் வாழ்க்கையில் நடந்து கொடுமையான சம்பவம் நடப்பதைப்பார்க்கும் லட்சுமியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கருப்பு சம்பவம் நினைவுக்கு வர ஒரு கட்டத்தில் கத்திக்கதறி மூர்ச்சையாகிறாள்.

மயக்கம் தெளிந்து எழுந்ததும், தன் அருகே ஆனந்த் அமர்ந்திருப்பதையும், தன் கழுத்தில் தாலி இருப்பதையும் அறிந்து திடுக்கிடுகிறாள். ஆம், அவளுக்கு பழைய நினைவு திரும்பி விட்டது. ஆனந்த் மெல்ல மெல்ல அவளுக்கு நேர்ந்த கொடுமையையும், அதைத்தொடர்ந்து நடந்த ரவியின் கொலையின் காரணமாக அவளது அண்ணன் ரமேஷ் சிறையில் இருப்பதையும், விசாரணை நடந்து வருவதையும் எடுத்துச்சொல்ல, தனக்கு எல்லாமாக இருந்த தன் அண்ணனைக் காப்பாற்ற லட்சுமி, ஆனந்துடன் கோர்ட்டுக்குக் கிளம்புகிறாள்.

குற்றவாளிக்கூன்டில் நிற்கும் ரமேஷ், லட்சுமியைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, அவளை அழைத்து வந்ததற்காக ஆனந்தைக் கடிந்துகொள்ள, அவளோ தனக்கு நேர்ந்த கொடுமைபற்றி ஆனந்தே பொருட்படுத்தாமல், தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கும்போது தனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை, அண்ணனை காப்பாற்றுவதே தன் ஒரே எண்ணம் என்று கூற, இதனிடையே ஜானகி தன் வக்கீலிடம், இதோ இந்தப்பெண்தான் ரமேஷின் தங்கை, அவரைக்காப்பாற்றக் கிடைத்த ஒரே சாட்சி என்று சொல்ல, வக்கீல் மேஜர், லட்சுமியை பிரதான சாட்சியாக கூண்டில் நிறுத்துகிறார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை கோர்ட்டில் சொல்லியழும் லட்சுமி, இந்தக்கொலை தன் அண்ணன் செய்யவில்லை என்றும் தானே செய்ததாகவும் கூறினாலும், அரசுத்தரப்பு வழக்கறிஞர், இது எதிர்த்தரப்பு வக்கீலால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று மறுக்கிறார். அப்போது கோர்ட்டுக்குள் வரும் ரவியின் நண்பன் பிரேம் ஆனந்த் (கோர்ட் காட்சியின்போது நடிகர் பிரேம் ஆனந்துக்குப் போடப்பட்டிருக்கும் மேக்-அப் மிகவும் அற்புதம். தெய்வமகன் நடிகதிலகத்தின் மேக்-அப்பை நினைவுபடுத்தும்), லட்சுமி சொல்வது முழுக்க உண்மையென்றும், லட்சுமியை தானும் ரவியும்தான் கடத்திச்சென்றதாகவும், அவளை யார் முதலில் அடைவது என்ற சர்ச்சையில், ரவி தன் தலையில் பாட்டிலால் அடித்துக்கீழே தள்ளிவிட்டு லட்சுமியின் கற்பைச்சூறையாட முயலும்போது, தானே ரமேஷுக்கு போன் செய்ததாகவும், பின்னர் ரமேஷ் வந்து ரவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, புத்தி சுவாதீனமில்லாத நிலையில் லட்சுமியே ரவியைச்சுட்டதாகவும், தங்கையின் மானத்தைக்காப்பாற்ற ரமேஷ் கொலைப்பழியை தான் ஏற்றுக்கொண்டு நிற்பதாகவும் சாட்சி சொல்ல, ரமேஷ் விடுதலை செய்யப்படுகிறார்.

தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகச்செல்லும் இப்படத்தின் துவக்கத்தில் வரும் ரயில்நிலையக்காட்சிகள் ரொம்பவே அருமையாக சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கும். இரவுநேரத்தில், டாக்டர் ரமேஷ் ஒரு அறையில் ஒளிந்துகொண்டிருக்க, ரயில் வரும்நேரம் ஒரு பெண் (ஸ்வர்ணா) பாடிக்கொண்டே, ரயில் நிலையத்தில் இங்குமங்குமாக ஓடி யாரையோ தேடும் காட்சிகள் அருமையான துவக்கமாக இருக்கும். அந்தப்பெண்ணும் ரவியாக வரும் மோகன் பாபுவால் ஏமாற்றப்பட்ட பெண். அவள் ஏமாந்ததன் விளைவாக உருவானதுதான் ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்தி.

கதையின் போக்கு ரொம்பவே சீரியஸாக அமைந்துவிட்டதால், 'காமெடி ட்ராக்' தனியாக சேர்க்கப்பட்டிருக்கும். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக (கௌரவத்தோற்றத்தில்) தேங்காய் சீனிவாசனும், கான்ஸ்டபிளாக ஏ.கருணாநிதியும், பாயிண்ட்மேனாக சுருளியும், கொள்ளைக்காரியாக மனோரமாவும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். டாக்டர் ரமேஷைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் தரப்படும் என்ற காவல்துறை விளம்பரத்தை வைத்துக்கொண்டு சுருளி அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. அதுபோல, அப்பாவிப்பெண் போல வந்து போலியான கதைசொல்லி ஏமாற்றி கொள்ளையடித்துப்போகும் மனோரமாவும், அவளை மடக்கிப்பிடிக்கும் தேங்காயும் கூட நன்றாகவே சிரிக்கவைப்பார்கள்.

இதற்கு முன் நிறைகுடம், சிவந்தமண், எங்கமாமா, சுமதி என் சுந்தரி என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடிகர்திலகத்தின் படங்களில் நடித்து வந்த தேங்காய் சீனிவாசன், சுமதி என் சுந்தரி (14.04.1971) க்குப்பிறகு, கிட்டத்தட்ட ஆறரை ஆண்டுகள் நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடிக்கவில்லை. இதுகுறித்து தேங்காய் கூட பல்வேறு பத்திரிகைப் பேட்டிகளில் குறைசொல்லி வந்தார். இவர் மாற்றுமுகாம் அபிமானி என்பதால் நடிக்கவில்லை என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் இவரைவிட மாற்றுமுகாம் அபிமானிகளான வில்லன் நடிகர் கே.கண்ணன், ராமதாஸ் போன்றவர்கள் நடிகர்திலகத்துடன் அதிகமான படங்களில் நடித்து வந்தனர்.

காரணம் என்னவாக இருந்தபோதிலும், மிக நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர்திலகத்தின் 'மறப்போம், மன்னிப்போம்' கொள்கையின் காரணமாக, நடிகர்திலகத்தின் சொந்தப்படமான இப்படத்தில் நடித்தாலும் நடித்தார், இதிலிருந்து தேங்காய் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு வரிசையாக அத்தனை படங்களிலும் இடம்பெறத் துவங்கினார். அதிலும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சொந்தப்படங்களான திரிசூலத்துக்காக காஷ்மீருக்கும், ரத்தபாசத்துக்காக ஐரோப்பிய நாடுகளுக்கும் தேங்காய் அழைத்துச்செல்லப்பட்டார். அத்துடன் பைலட் பிரேம்நாத் படத்துக்காக இலங்கைக்கும், இமயம் படத்துக்காக நேபாளத்துக்கும் சென்று வந்தார். (இவர் நடித்த "மற்றவர்கள்" படங்களில் சென்னையில் வைத்தே இவர் ரோல்களை முடித்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்).

படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்க, மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். முதல் பாடல், ரயில் நிலையத்தில், கைவிட்டுப்போன காதலனைத் தேடியலையும் ஸ்வர்ணாவுக்காக, வாணி ஜெயராம் பாடிய 'குங்குமக்கோலங்கள் கோயில் கொண்டாள கோதை நாயகன் வருவானடி' என்ற மனதை மயக்கும் பாடல். இரவுக்காட்சிக்கேற்ற திகிலூட்டும் இசையுடன் கலந்து தந்திருப்பார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்ட கதையாயிற்றே அதனால் பாசமலரில் இடம்பெற்ற 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்' பாடலைப்போல அமைந்த பாடல், 'மல்லிகை முல்லை பொன்மணி கிள்ளை, அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை' என்ற மிக அருமையான பாடல். தங்கையின் வருங்கால வாழ்க்கையைப்பற்றி அண்ணன் கனவுகாண, அவனது கனவில் அவள் மதுரை மீனாட்சியாக, கோதையாக, ஆண்டாளாக, சீதையாக வடிவெடுத்து வருகிறாள். பாடல், இசை மட்டுமல்ல, இவற்றைத்தூக்கி நிறுத்தும் ஒளிப்பதிவும் அற்புதம்.

தன்னுடைய பிறந்தநாளன்று, கையில் சிதார் மீட்டியவாறு சுமித்ரா பாடும், 'அண்ணன் ஒரு கோயிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ' இசைக்குயில் பி.சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. தங்கை அண்ணன் மீது கொண்ட பாசப்பிணைப்பை விவரிக்கும் ஒரு வரி.....
'கண்ணன் மொழி கீதையென்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ'

இதே பாடலை, சுயநினைவற்று இருக்கும் சுமித்ராவின் நினைவு திரும்புவதற்காக திரைக்குப்பின்னால் இருந்து ஜெய்கணேஷ் பாடுவார். அவருக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார்.

நடிகர்திலகமும் சுஜாதாவும் காட்டுக்குள் போலீஸுக்கு மறைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, போலீஸ் ஜீப் வந்துவிட, அவர்கள் கண்களில் படாமல் இருக்க மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட இடைவெளிக்குள் நுழைந்துகொள்ள, அங்கே இருவரும் காதல் வயப்படும்போது, பின்னணியில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் 'நாலுபக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு... காதல், இன்பக்காதல்'. எஸ்.பி.பி.யும், வாணிஜெயராமும் பாடியிருந்தனர்.

நடிகர்திலகத்தின் வீடாகக் காண்பிக்கப்படும் இடம் ஊட்டியிலுள்ள அரண்மனையின் உட்புறம். இப்படத்துக்காக அக்கட்டிடத்தின் உட்பகுதி புதுப்பிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை பழம்பெரும் ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் செய்திருக்க, நடிகர்திலகத்தின் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவரான கே.விஜயன் இயக்கியிருந்தார்.

இப்படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் 'எங்க வீட்டு தங்க லட்சுமி'. படம் உருவாகிக்கொண்டிருந்தபோது, இப்படத்தின் பெயர் 50 களில் ஏ.நாகேஸ்வரராவ் நடித்து பெரும்வெற்றிபெற்ற 'எங்கவீட்டு மகாலட்சுமி' பெயர் போல இருக்கிறது என்றும், மிகவும் பழங்கால டைட்டில் போல இருக்கிறதென்றும் பலரும் அபிப்பிராயம் சொல்ல, படத்தின் பெயரை மாற்றுவதென்று முடிவு செய்து என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் அவரை பாசத்தோடு 'அண்ணன்' என்று அழைப்பதாலும், படத்தின் கதையும் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக்கொண்டதாலும், 'அண்ணன் ஒரு கோயில்' என்று வைக்கலாம் என்று முடிவு செய்தபோது அனைவராலும் இந்த டைட்டில் வரவேற்கப்பட்டது.

1977-ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த 'அண்ணன் ஒரு கோயில்', நடிகர்திலகத்துக்கு வெள்ளிவிழா ஆண்டின் நிறைவுப்படமாகவும் அமைந்து மாபெரும் வெற்றியை அவருக்குப் பரிசாக அளித்தது. கீழ்க்கண்ட அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றிநடைபோட்டது.

சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி
மதுரை - நியூ சினிமா
கோவை - கீதாலயா
திருச்சி - பிரபாத்
சேலம் - சாந்தி
தஞ்சை -அருள்
குடந்தை - செல்வம் (நூர்மஹால்).


(Nadigar Thilagam presents the '114 th Day' Shield to the Singer Mrs. Vani Jayaram, on the Victory Day Function)

வெற்றிகரமாக 100 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்த ஆண்டின் வெள்ளிவிழாப்படமாக இப்படம் அமையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கதாநாயகன் என்றால் வில்லன் வேண்டுமல்லவா?. எனவேதான் கதாநாயகனின் சொந்தப்படத்தை தடுக்க வில்லனின் சொந்தப்படம் வந்தது. ஆம், அண்ணன் ஒரு கோயில் வெற்றிகரமாக 114 நாட்களைக்கடந்தபோது, 115 வதுநாளன்று பாலாஜியின் 'தியாகம்' படம் இதே திரையரங்குகளில் ரிலீஸாவதாக செய்தி வந்தது. (இதற்கிடையே 'அந்தமான் காதலி' வேறு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது). வெகுண்டுபோன ரசிகர்கள் பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அவரோ, தான் படத்தை விநியோகஸ்தரிடம் விற்றுவிட்டதாகவும், விநியோக விஷயத்தில் தலையிட முடியாதென்றும் கழன்றுகொண்டார்.

சாந்தி தியேட்டருக்கு வந்த சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் மேனேஜர் மோகன்தாஸை ரசிகர்கள் சுற்றிவளைத்து, சாந்தியில் மட்டுமாவது அண்ணன் ஒரு கோயில் தொடர்ந்து ஓடி வெள்ளிவிழாவைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று கேட்க, அவரும் ஏற்கெனவே புக் பண்ணியதை மாற்ற முடியாதென்றும், சாந்திக்கு பக்கத்து அரங்குகளான அண்ணா தியேட்டர் அல்லது பிளாஸாவுக்கு கண்டிப்பாக மாற்றப்படும் என்றும் சொல்லி அகன்றுபோனார். ஆனால் அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 'அண்ணன் ஒரு கோயில்' 114-ம் நாள் விழாவோடு மாற்றப்பட்டு, 'தியாகம்' திரையிடப்பட்டது.

'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிய என் கருத்துக்களைப் படித்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

JamesFague
21st October 2014, 11:53 AM
அண்ணன் ஒரு கோயில்-2
காட்சியமைப்புகளில் ஒளிப்பதிவு சிறப்பாகவும், துல்லியமாகவும் இருந்தது. ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் கருப்புவெள்ளைப் படங்களிலேயே வித்தைகள் காட்டுவார். (உதாரணம்: வானம்பாடியில் இடம்பெற்ற 'ஏட்டில் எழுதிவைத்தேன்' பாடல் காட்சி, மற்றும் லட்சுமி கல்யாணத்தில் 'பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்' பாடல் காட்சி). வண்ணப்படமான இதில் சொல்லவே வேண்டாம். பின்னியெடுத்திருப்பார். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட இரவுக்காட்சிகள். மற்றும் மல்லிகை முல்லை பாடல் காட்சி.



நடிகர்திலகத்தின் 'பெர்பார்மென்ஸ்'

** 'மல்லிகை முல்லை' பாடலின்போது அவர் தரும் கனிவான பார்வைப்பறிமாற்றங்கள், தங்கையின் கையைப்பிடித்துக்கொண்டு, பாடிக்கொண்டே ஸ்டைலாக நடந்துவரும் அழகு, கற்பனையில் தன்னைச்சுற்றி ஓடிவரும் மருமகப்பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணும்போது உண்மையான தாய்மாமனின் உணர்ச்சிப்பெருக்கு...

** தன்னைச்சுற்றிலும் போலீஸ் தேடல் இருந்தும், தான் வந்துதான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு பெற்றோருக்காக, வார்டுபாய் போல வேடமிட்டு ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்து, ஆபரேஷன் முடிந்ததும், ஸ்ட்ரெசருக்குக் கீழே ஒளிந்துகொண்டே வெளியேறும்போது காட்டும் கடமையுணர்ச்சி...

** தங்கைக்கு நேர்ந்த சோகத்தை, தன் வருங்கால மனைவியிடம் சொல்லும்போது காட்டும் உணர்ச்சிப்பிரவாகம்....

** 'அண்ணன் ஒரு கோயிலென்றால்' பாடலின்போது, தன்னைப்பற்றிப்பாடும் தங்கையின் வார்த்தைகளால் கண்கள் கலங்க, அதை தங்கை பார்த்துவிடாமல் மறைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்...

** நண்பன் ஆனந்தின் கஸ்டடியில் இருக்கும் தங்கையைக் காண வந்திருக்கும்போது, சுய நினைவின்றி கிடக்கும் தங்கையைப்பார்த்து ஆனந்திடம் அவளது கடந்தகால சூட்டிகையைப்பற்றிக்கூறும்போது ஏற்படும் ஆதங்கம். 'டாக்டர், இப்படி ஒரு இடத்துல படுத்துக்கிடவளா இவ?. என்ன ஆட்டம், என்ன ஓட்டம், என்ன பேச்சு, என்ன சிரிப்பு'.... பேசிக்கொண்டிருக்கும்போதே குரல் உடைந்து கதறும் பாசப்பெருக்கு....

** கோர்ட்டில் கூண்டில் நிற்கும்போது, எதார்த்தமாக சுற்றிலும் பார்க்கும்போது, அங்கே தன் தங்கை வந்து நிற்பதைப் பார்த்து முகத்தில் காட்டும் அதிர்ச்சி. அரசுத்தரப்பு வக்கீல் வேண்டுமென்றே தன்மீது கொலைக்குற்றம் சுமத்தி அதற்காக ஜோடிக்கப்பட்ட காரணத்தையும் கூறும்போது, மறுபேச்சுப்பேசாமல் அவற்றை ஒப்புகொள்ளும்போது ஏற்படும் பரிதாபம்....

** கொலைசெய்யப்பட்டவனின் நண்பன் கோர்ட்டில் வந்து, நடந்த சம்பவங்களை விளக்கும்போது, 'இவன்தான் தனக்கு போன் செய்தவனா?' என்று முகத்தில் காட்டும் ஆச்சரியம்....

இவரது உணர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்து நடித்ததன்மூலம் டெம்போ குறையாமல் படத்தை எடுத்துச்செல்ல பெரும் பங்காற்றிய சுமித்ரா, ஜெய்கணேஷ், சுஜாதா. அவற்றைப் பன்மடங்காகப் பெருக்க துணை நிற்கும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை... எல்லாம் இணைந்து படத்தை எங்கோ கொண்டு சென்றன.

இயக்குனர் கே.விஜயன், என்.வி.ராமசாமியின் 'புது வெள்ளம்', 'மதன மாளிகை' படங்களை இயக்கியிருந்தபோதிலும் அவர் பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது 'ரோஜாவின் ராஜா'வில் துவங்கி, 'தீபம்' படத்திலிருந்துதான். தீபம், அண்ணன் ஒரு கோயில், தியாகம், திரிசூலம் என்று வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்தவர், என்ன காரணத்தாலோ 'ரத்தபாசம்' படப்பிடிப்பின்போது திரு வி.சி.சண்முகத்துடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்தார். பிரிந்த கையோடு இதுபோன்ற சில 'அதிரடி(???)' பேட்டிகளும் கொடுத்தார். கூடவே 'தூரத்து இடி முழக்கம்' என்ற அருமையான தலைப்புடன் (நடிகர்திலகம் அல்லாத) ஒரு படத்தையும் இயக்கினார். நடிகர்திலகத்தின் எதிர்ப்பு பத்திரிகைகள் வரிந்து கட்டிக்கொண்டு, அந்தப்படத்தைப்பற்றிய செய்திகள் தந்து விளம்பரப்படுத்தின. ஆனால் பாவம், இடிமுழக்கம் வெறும் 'கேப்' சத்தம் போல ஆகிப்போனது. ஆதரவு தருவதுபோல ஏற்றிவிட்டவர்கள் எல்லாம் அவரைவிட்டு ஓடிப்போயினர்.

பாலாஜியாவது தொடர்ந்து ஆதரவு தருவார் என்று அவர் எதிர்பார்த்திருந்தபோது, யதார்த்தமாக சுஜாதா சினி ஆர்ட்ஸில் ப்ரொடக்ஷன் மேனேஜராக இருந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தியை இயக்குனராகப்போட்டு 'பில்லா' படத்தை தயாரிக்க, பில்லா பெரிய வெற்றியடைந்து கிருஷ்ணமூர்த்திக்கு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது. செண்டிமெண்ட் பிரியரான பாலாஜி தொடர்ந்து தன் படங்களை ஆர்.கே. தலையில் கட்டினார். சில ஆண்டுகள் கழித்து, ஒருநாள் ஸ்டுடியோ செட்டில் நடிகர்திலகத்தை கே.விஜயன் வலியச்சென்று சந்தித்து நலம் விசாரிக்க, பழைய நண்பனைப்பார்த்து, 'என்ன விஜயா இப்போ என்ன பண்றே?' என்று கேட்க, விஜயன் சோர்ந்த முகத்துடன் பதிலேதும் சொல்லாமல் நிற்க, நிலைமையைப்புரிந்துகொண்ட நடிகர்திலகம், 'சரி, இனிமேல் என் படங்களை நீ டைரக்ட் பண்ணு' என்று ஆசி வழங்கி, விஜயனுக்கு மறுவாழ்வளித்தார். 'பந்தம்' படம் மூலம் அவர்களின் பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை நினைவுகூர்வது போல, 'பந்தம்' படத்தில் ஒரு காட்சி அமைத்திருப்பார் விஜயன். தன்னுடைய முன்னாள் டிரைவரை சர்ச்சில் சந்திக்கும் நடிகர் திலகம், 'என்ன டேவிட் எப்படியிருக்கே?' என்று கேட்க, வறுமையில் வாடும் டிரைவர் அழத்துவங்க, சட்டென்று கோட் பாக்கெட்டிலிருந்த கார் சாவியை அவரிடம் கொடுத்து 'வண்டியை எடு' என்பார். இந்தக்காட்சியில் நடித்து முடித்த நடிகர்திலகம், 'என்ன விஜயா, இந்த சீன் நம்ம ரெண்டு பேர் சமந்தப்பட்ட விஷய்ம் மாதிரி இருக்கே' என்றாராம் - (கே.விஜயன் முன்னொருமுறை தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த நேர்காணலில் சொன்னது).

சில மாதங்களுக்கு முன், ஜெயா டிவி 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சுமித்ரா, கண்டிப்பாக 'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிக் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். அதுபோலவே, ஒருநாள் எபிசோட் முழுக்க இப்படத்துக்கு மட்டுமே ஒதுக்கி, ரொம்ப பெருமையாகப் பேசினார். நடிகர் திலகத்தை 'ஓகோ'வென்று புகழ்ந்தார். இன்னொரு ஆச்சரியம், நடிகர் திலகத்துடன் நடித்த 'ஜஸ்டிஸ் கோபிநாத்' படத்தைப்பற்றியும் (ஜோடி சூப்பர் ஸ்டார்) குறிப்பிட்டார். பாவம் இயக்குனர் பெயரை மறந்து விட்டு, சற்று யோசித்து 'யாரோ ரங்கநாத் என்பவர் இயக்கினார்' என்றார். (படத்தை இயக்கியவர் டி.யோகானந்த் என்ற பழம்பெரும் இயக்குனர்).

நடிகர் பிரேம் ஆனந்த், நடிகர்திலகத்தின் சிறந்த அபிமானியாகவும், மிகச்சிறந்த ரசிகராகவும், எந்நாளும் நடிகர்திலகத்துடன் ஒட்டியே இருந்து வந்தவர். அதனால் அன்றைய நாட்களில் நடிகர்திலகத்தின் படங்களில் அவருக்கு ஏதாவது ஒரு ரோல் கண்டிப்பாக இருக்கும். அதுவும் பைலட் பிரேம்நாத் படத்தில், கதாநாயகி ஷ்ரீதேவிக்கு ஜோடியாக, நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக பிரதான ரோல் ஒன்றில் நடித்தார்.
ஜெய்கணேஷைப்பொறுத்தவரை, எனது சிறு வயதில் அவரை நேரிலேயே சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிட்லண்ட் தியேட்டரில் 'எமனுக்கு எமன்' படத்தின் மேட்னிக்காட்சிக்கு வந்திருந்தவரை (அப்போதைய இளவயது ஜெய்கணேஷை இமேஜின் பண்ணிக்குங்க) இடைவேளையில் வராண்டாவில் நாங்கள் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். ரொம்ப அழகாக செயற்கைத்தனமில்லாமல் பேசினார். வெள்ளை ஜிப்பாவும் குர்தாவும் அணிந்திருந்தார். அப்போது சுற்றி நின்ற ரசிகர்கள், அவர்மீது கலர்ப்பொடிகளைத்தூவி கிண்டல் செய்ய, அங்கிருந்து தப்பிக்க மடமடவென்று மாடிக்குப்போய் ஆபரேட்டர் அறைக்குள் புகுந்துகொண்டவர், மீண்டும் காட்சி துவங்கியதும்தான் தியேட்டருக்குள் வந்தார்.
பிற்காலத்தில் நல்ல குணசித்திர நடிகராக, குறிப்பாக நகைச்சுவைக்காட்சிகளில் திறம்பட நடித்தவர் ஜெய்கணேஷ். பான்பராக் போடும் பழக்கம் காரணமாக கன்னத்தில் புற்றுநோயால் குழிபறிக்கப்பட்டு வெகுசீக்கிரமாகவே நம்மைவிட்டும் மறைந்து போனார்.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இதயங்களில் ஜெய்கணேஷ், பிரேம் ஆனந்த் இருவருக்கும் என்றென்றும் நிரந்தர இடம் உண்டு.



நகைச்சுவைக்காட்சிகளும், அரங்கில் சிரிப்பலையை பரவ விட்டன, சுருளியின் 'கிளி கத்துற ஊரெல்லாம் கிளியனூரா', 'எல்லோரும் பீடி மட்டும்தான்யா வாங்குவாங்க, யாரும் தீப்பெட்டி வாங்குறதில்லை. தீப்பெட்டி என்னய்யா தீப்பெட்டி. இவர் மட்டும் கிடைச்சிட்டாருன்னா ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையே வச்சிடுவேன்' போன்ற வசனங்களூம், மனோரமாவின் ஒரு மாதிரியான அழுகை மற்றும் 'எவர்சில்வர் பாத்திரத்திலேயே சமையலா? அப்போ மொத்த வியாபாரிதான்' என்று தேங்காயை கலாய்ப்பதுமான இடங்களும், காட்டில் யானை துரத்தும்போது, யானைகளைப் பிடிப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் சுருளியும் கருணாநிதியும் விழுந்து அலறுவதும், அதை மேட்டில் நின்று யானை பார்க்கும் இடமும் கலகலப்பான இடங்கள்.

ஒரு வெற்றிப்படத்துக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த இப்படம் வெற்றிபெற்றதில் வியப்பில்லை, வெற்றிவாய்ப்பை இழந்திருந்தால்தான் அது வியப்பு மற்றும் வேதனை அளித்திருக்கும். தமிழ் ரசிகர்கள் அந்த அளவுக்கு விடவில்லை.

eehaiupehazij
21st October 2014, 01:59 PM
Deepaavali as flamboyant as NT! Greetings!!

தீபாவளி என்பது நடிப்புப்பண்டிதர் நடிகர்திலகத்தைப் போலவே நவரசம் ததும்பும் பண்டிகை.. எத்தனை வகையான இனிப்புக்கள், எத்தனை விதமான புத்தாடைகள் பலரகங்களிலும் வண்ணம் தெறிக்கும் பட்டாசு வாணவேடிக்கைகள்.. எத்துணை விதமான வாழ்த்துக்கள் ..........இதயம் கனிந்த இன்பம் நிறைந்த ஒளிவீசும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அடுத்த தீபாவளி நம் எண்ணங்களின் வண்ணக்கனவுகள் நனவாகி 'பாரதரத்னா' 'உலக்த்திரைவாழ்நாள்சாதனையாளர்' சிவாஜிகணேசனின் பண்டிகையாக இருக்க இறைவனை இறைஞ்சுகிறேன் !

You are the invincible emperor in our hearts, minds and souls! You must be the Bharatharathnaa when this dream among all other rathnams, pearls, diamonds, coins, money, gold, silver ...and what not ...comes true by God's grace!!

https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo

Murali Srinivas
21st October 2014, 02:52 PM
ஒரு சில விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்ல நேர்வது மிகுந்த சங்கடத்துக்குரியது. அது சொல்பவர்களுக்கும் சரி சொல்லப்படுபவர்களுக்கும் பொருந்தும். வேறு வழியின்றி சில நேரம் அதை செய்ய வேண்டியிருக்கிறது.

செந்தில் சார்,

நான் ஏற்கனவே ஒரு முறை சொன்னதுதான். கொஞ்சம் வீடியோக்களை குறைக்கலாமே! அனைத்துப் பதிவுகளிலும் ஒரு வீடியோவை பதிப்பது தவிர்க்கலாமே! அதே போன்று ஸ்ரீதர் நினைவு நாள் என்றால் ஸ்ரீதர் நடிகர் திலகம் கூட்டணியில் வந்த படங்களின் பாடல்கள், காட்சிகள் போதுமே ஏன் ஸ்ரீதரின் பிற படங்களின் பாடல்கள்? வேண்டுமென்றால் அவற்றை பதிவிட வேறு திரிகள் உள்ளனவே! நான் சொல்ல வருவதை சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

RKS,

நான் பலமுறை சொன்னதைத்தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்ல விழைகிறேன். ஏன் எல்லாவற்றிருக்கும் பதிலளிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? நாம் இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் நம் கருத்துக்கு திருப்ப முடியாது. இந்த இணையதளத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் பதில் சொல்லுகிறீர்கள். நமக்கு தெரியாத வேறு பல இணையதளங்கள் அல்லது வலைப்பூக்கள் இருக்கலாம். அங்கேயெல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றிய விமர்சனங்கள் வைக்கப்படலாம். அது நமக்கு தெரிய வருவதில்லை. அதற்கு என்ன செய்ய முடியும். ஒவ்வொரு பதிவிற்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் அதற்குதான் நேரம் இருக்கும். நான் முன்பே சொன்னது போல் உங்கள் உடல்நலம்தான் கெடும். நீங்கள் உடனே உணர்ச்சிவசப்படுவீர்கள் என்று தெரிந்து உங்களை சீண்டுவதற்காகவே சில பதிவுகள் போடப்படுகின்றன என்றே எனக்கு தோன்றுகிறது. உங்களை சீண்டி விட்டுவிட்டு பதிவை போட்டவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். நீங்கள் தேவையற்ற டென்ஷனில் இருப்பீர்கள். முக முத்து மற்றும் தேங்காய் பாடல்கள எல்லாம் நமது திரிக்கென்றே உள்ள மாண்பை குறைக்கவில்லையா? அதே போன்று நடிகர் திலகம் பற்றி யார் என்ன சொன்னாலும் அது அவரவர்களின் கருத்தே தவிர அது பொது மறை அல்ல. யாரோ x,y,z ஏதோ சொல்வார்கள். அதற்கு ஏன் மெனக்கெட்டு நாம் பதில் சொல்ல வேண்டும்? worst cum worst சிவாஜி சிறந்த நடிகர் இல்லை என்று சொல்லுவார்களா இல்லை சிவாஜியின் எந்தப் படமும் ஓடவில்லை என்று சொல்லுவார்களா? அதனால் நடிகர் திலகம் என்ன குறைந்து விடப் போகிறார் இல்லை நாம் என்ன இழக்க போகிறோம்? நான் உங்களிடம் சொல்வதெல்லாம் உங்கள் சக்தியை தேவையின்றி வீணடிக்காதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதில் கவனம் செலுத்துங்கள். Please ignore provacative comments.

கோபால்,

நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் உங்கள் உயரத்திலிருந்து இறங்காதீர்கள் தேவையற்ற விவாதங்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு தொடர்பில்லாத பதிவுகளுக்கு கருத்து சொல்லப் போய் வீண் பழி தேடிக் கொள்கிறீர்கள். இது உங்களுக்கு தேவையற்ற ஒன்று. நான் எதை குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

அது போன்றே நடிகர் திலகத்தின் படங்கள் பற்றிய பதிவுகளுக்கு ஏன் எதிர் வினை புரியவில்லை என்று கேட்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் நான் ஏன் எழுதவில்லை என்று. மீள் பதிவுகளைப் போட்டு You are taking the easy way out. பயனில்லாத சர்ச்சைகளில் ஈடுபடும் நேரத்தில் உங்களால பாபு பற்றி புதிய பத்து பதிவுகள் எழுத முடியும். கெளரவம் பற்றி நூறு கருத்துக்கள் உத்தம புத்திரன் பற்றி ஆயிரம் எண்ணங்கள் உங்களால் எழுத முடியும். அதில் கவனம் செலுத்துங்கள் அதை படிக்கும் இளம் தலைமுறைக்கு அது ஒரு புதிய knowledge ஆக விளங்கும்.

ஜோ சொன்னது போல சிவாஜி திரியில் அவரை பற்றிய செய்திகளை விட வேறு விஷயங்கள் அதிக இடம் பெறுவது இந்த திரிக்கு புதிதாக வருபவர்களின் ஆர்வத்தை குறைத்து விடும் அபாயம் இருக்கிறது.

ஆகவே அனைவரும் தயவு கூர்ந்து நடிகர் திலகம் பற்றிய செய்திகள் தகவல்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து பதிவுகளை தொடருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Russelldwp
21st October 2014, 04:04 PM
உலகத்தமிழர்களுக்கும் திரி நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள
அடுத்த தீபாவளிக்குள் தலைவருக்கு பாரத்ரத்னா விருது கிடைத்து அவ்விருதுக்கு பெருமை சேர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்திப்போம்.


https://pbs.twimg.com/media/B0aFZ6TCAAA7OfS.jpg:large

Gopal.s
21st October 2014, 04:30 PM
முரளி,



சிறு வயது முதல் ,தலைமை பண்புகள் என்னுள் ஊறியது. ஆனால் பயன் தரும் ,நல்ல முடிவுகளை தரும் சர்வாதிகார தன்மை நிறைந்த பண்பு.(Singapore லீ போல)ஒரு பொது ஜனநாயகம் என்பது, நான் வேலை பார்த்த தனியார் நிறுவனங்களில் தேவை படவில்லை.அதனால் கருத்துக்களை ஓங்கி கூறுதல்,நினைத்தவற்றை நினைத்த படியே சாதித்தல்,வேறு வழியில் சிந்திப்போரை முறை படுத்தல்,கூர்மை படுத்தி செப்பனிடுதல்,நகைசுவை உணர்ச்சி நிறைந்த தலைவனாகவே வெற்றி கண்டு விட்டேன். மக்களுக்கு நிறைய கவனம் கொடுத்து ,மனிதாபிமானத்திலும் சிறந்ததால் ,எல்லோரும் என்னை ஏற்றனர். என் வெற்றி முழுக்க எனக்கே சொந்தம்.



நான் விரும்பி ஏற்ற பதிவர் பாத்திரத்தில்,நான் புதியவன்,இது ஜனநாயக களம் என்பதை அறிந்தே இருந்தாலும்,என் பதிவுகள் நேசிக்க பட்ட அளவு,என் வழிமுறை நேசிக்க படவில்லை என்று உணர்ந்து விட்டேன். என்னை மாற்றி கொள்வது கடினம். என் வழியை மாற்றி blog இல் நுழைகிறேன்.எவ்வளவோ சொல்ல ஆசை. என்னும் பல விஷயங்கள் புதைந்து கிடக்கிறது.அதனால் நான் தினம் ஒரு விஷயம் போடும் போது புத்தெழுச்சி கொள்ளலாம். Blog ,feedback வருமே
தவிர,interaction இல்லை.வீடியோ தடைகள் இல்லை.



எல்லோருக்குமே நன்றி.80 களுக்கு பிறகு,தமிழில் ஒரு வார்த்தை கூட எழுதாமல்(படிப்பதை நிறுத்தியதில்லை) இருந்த என்னை (type பண்ணுவது அறவே பிடிக்காது), 2012 இல் மீண்டும் தமிழை சுவைக்க வைத்த மையம் திரிக்கு நன்றி. தட்டச்சு (ஒரே விரலில் என்றாலும்)பழக்கமாகி விட்டது. இத்தனை பயிற்சிகளும் உலகத்திலேயே நான் மிக அதிகமாக நேசிக்கும் அந்த உலகத்திலேயே சிறந்த என் தமிழ் நாயகனுக்கு நான் செய்த பூஜையாகவும் ஆனது.



சமீபத்தில் எனக்கு,ஈடுபாடு குறைந்தே வந்துள்ளது திரிகளில். அதனால் சற்றே விலகி,மற்றவற்றை தொடர போகிறேன். யாராவது வருவார்கள்.முன்னெடுத்து செல்வார்கள். முதலில் ஜோ போன்றவர்கள்,பிறகு சாரதா,கார்த்திக், பிறகு முரளி,பிறகு ராகவேந்தர்,பம்மலார் ,பிறகு வாசு, பிறகு நான். என் பின் யாரோ அவருக்கு சத்ய பூஜை தொடர வர வேண்டும். அவன் என் உயரத்தினும் மேல் செல்ல வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன். உங்களிடமிருந்து மட்டுமல்ல. அனைத்து நண்பர்களிடமிருந்தும். இது நிரந்தர பிரிவல்ல. சிறிய விலகல் மட்டுமே. கோபமில்லை.வருத்தமில்லை. மாற்றம் வேண்டியுள்ளது.



என்னை ஊக்க படுத்திய அனைவருக்கும் நன்றி.(யுகேஷ்,கலை,எஸ்வி உட்பட)தீபாவளி வாழ்த்துக்கள்.

abkhlabhi
21st October 2014, 04:57 PM
No way relate to this thread. but NT set an example as VOC in this video presented by Nakheeran
https://www.youtube.com/watch?v=BRJSI1OmNwU&list=TLuyJfPhufq711JUV0CuZUEpkqlIVoHKQ5

Murali Srinivas
21st October 2014, 07:34 PM
மய்யம் நடிகர் திலகம் திரியின் பங்களிப்பார்கள், திரியின் வாசகர்கள், மற்றுமுள்ள அனைத்து திரிகளின் பங்களிப்பாளர்கள், மய்யம் உறுப்பினர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள அனைத்து நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் உளங்கனிந்த தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்!

அன்புடன் .

Subramaniam Ramajayam
21st October 2014, 08:13 PM
உலகத்தமிழர்களுக்கும் திரி நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள
அடுத்த தீபாவளிக்குள் தலைவருக்கு பாரத்ரத்னா விருது கிடைத்து அவ்விருதுக்கு பெருமை சேர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்திப்போம்.


https://pbs.twimg.com/media/B0aFZ6TCAAA7OfS.jpg:large
From the year 1964 I have been enjoying NT films first day mostly first show or evening show till annan orukoil afe that due to setbacks and constraints missed many first day enjoyments.
iam also getting aged and iam waiting for BHARAT RATNA HONOUR FOR NT very soon.
diwali greetings to all our hubbers and NT fans.

parthasarathy
21st October 2014, 08:23 PM
Dear friends,

Wish you and your family a very happy and safe Deepavali.

Regards,

R. Parthasarathy

Harrietlgy
21st October 2014, 08:32 PM
Wish you happy Deepavali to all NT fans.

RAGHAVENDRA
21st October 2014, 09:53 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/diwaligrtgs2014_zps4a973bcb.jpg

gkrishna
21st October 2014, 10:13 PM
அனைவருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்

Russellbpw
21st October 2014, 10:33 PM
ஆர்.கே.எஸ்.



நீங்கள் quote பண்ணியதற்கும்,சௌத்ரி யை விசாரித்திதற்கும் ,என்ன சம்பந்தம்?உங்களுடைய வினோத நடத்தை ,எல்லோர் மனதிலும் குழப்பம் ஏற்படுத்துகிறது.

குழம்புவதற்கு ஒன்றும் இல்லை சார் ! அவரை நலம் விசாரித்தேன் அவருடன் தொலைபேசியில் பேசி பழகிய விதத்தில். அவ்வளவுதான் ! வாழ்கையில் சந்தேகம் வருவது சகஜம். சந்தேகமே வாழ்கை சகஜமாகுமா ?

ஜோ, என்ன கூற வருகிறார் என்று எனக்கு புரிகிறது. நாமே ,நம்மை பற்றிய சந்தேகத்தை தூண்ட வேண்டாமே.

நல்ல அறிவுரை ! வீணாக என்ற ஒரு வார்த்தை சந்தேகத்தின் முன் எழுதியிருந்திருக்குமேயானால் மிகவும் பொருத்தமாக இருக்கும்


நான் டிசம்பர் வரையே மையம் திரிகளில் இருப்பேன்.பிறகு என்னுடைய சொந்த ப்ளாக் ஒன்று தொடங்கி, பல விஷயங்கள் எழுத உள்ளேன்.

நான் அங்கேயும் வந்து உரிமையுடன் பதிவிடுவேன்..! நீங்கள் ஆரம்பிப்பது எதுவானாலும் அது என்னுடைய BLOG ....!


அதுவரையாவது,புரிகிறதோ இல்லையோ, என்னை எழுத அனுமதித்தால் சந்தோசம்.இல்லையானாலும் ,எனக்கு நஷ்டமில்லை.

நன்றாக சந்தோஷபடுங்கள்...நாலாயிரம் முறை சந்தோஷபடுங்கள் ...எங்களுக்கும் உங்களுடைய சந்தோஷம் முக்கியம் சார் ! உசுவ அசோகன் பாணியில் சொல்வதென்றால்..."கோபால் நீங்க ஒரு மகா மேத" !


ஒரு பதிவு வந்தால்,மேலே மேலே ஏதாவது போட்டு சமாதி கட்டாமல், ஒரு response கொடுத்து,உரிய முறையில் நடந்தால் மட்டுமே ,நமக்கு நல்லது.

அது தற்செயலாக நடந்தது...சமாதிகட்டவேண்டும் என்றால் எல்லாவற்றிற்கும் கட்டியிருப்பேனே ? தொடர்ந்து நான் பதிவிட்ட பிறகு PAGE ரெப்ரெஷ் செய்து பார்த்தபோதுதான் சமாசாரம் புரிந்தது..வேண்டுமானால் நீக்கிவிடுகிறேன்..


என் போதாத காலம்,மையம் திரிகளுக்கு நான் 2012 இல் வந்தது. 2008 இல் வந்திருந்தால், அழகாக பங்களித்து விட்டு 2012 இல் ஒதுங்கி கொண்டிருக்கலாம்.


உங்களை நாங்க ஒதுங்க விடமாட்டோம் சார் !

புரியவில்லை என்று சொல்லும் அளவில் நான் என்ன ஐன்ஸ்டின் கோட்பாட்டையா விவரிக்கிறேன்?நடிப்பு பள்ளி, பாகம் மூன்றில் தொடங்கி பாகம் 9 வரை ,அனைத்து வித நடிப்பு பள்ளிகள்,அது சார்ந்த அவர் படங்கள் என விவரித்து விட்டே தொடர்ந்தேன். ஒவ்வொரு பதிவுக்கும் பின் என்னுடைய பல வருட பரிச்சயம்,படிப்பு, கிட்டத்தட்ட 6 மணிநேர உழைப்பு உள்ளது.

புரிந்தது ! அதாவது உங்களுடைய உழைப்பு புரிந்தது...எனக்கு புரியவில்லை என்பது நான் வெளிபடையாக கூறுவது...எல்லோரும் என்னை போல மேல் மாடி காலியாக இருக்கமாட்டார்களே சார் !

புரியவில்லை என்று சொல்லி,உங்கள் முகங்களிலே கரி பூசி கொள்கிறீர்கள். மற்றவர்கள்,நம்மை பார்த்து வளர முற்படும் போது ,நாம் தேய்தல் அழகா?

சார்..புரியவில்லை என்றால் புரியவில்லைதானே சார்...மற்றவர்கள் அடிக்கும் கார்பன் கோப்பி அடிக்கும் திறமைகூட எனக்கில்லை சார்..என்ன செய்வது..ஐந்து விரல்கள் ஒன்றாகவா உள்ளது..? ஒன்றாக இருந்தால்தான் ஒழுங்காக ஐந்தும் ஒன்றாக செயல் படைதான் முடியுமா ?


நீங்கள் தயவு செய்து ,திரும்ப நிதானமாக படித்து (வீடியோ போட்டு பக்கம் நிரப்புவதற்கு பதில்),அது சார்ந்த பதிவுகள் இட்டு,மற்றோருக்கு வழி காட்டுங்கள். இது நீங்கள் ஆரம்பித்த திரி. ஞான ஒளி ,பாபு,கெளரவம்,உத்தம புத்திரன் போன்ற பதிவுகள்,உங்கள் திரிக்குத்தானே பெருமை? பதிவுகளை மதிக்காமல்,வீடியோ போடுவது எந்த வகை நாகரிகம்? moderator எதற்கு இருக்கிறார்கள்?வாசு போன்றவர்கள் ஏன் இங்கு வர தயங்குகிறார்கள் என்று புரிய ஆரம்பித்து விட்டது.எல்லோருக்கும் ராகவேந்தர்,வாசு,கார்த்திக்,சாரதி,முரளி,ஜோ போன்றோருடன் என் நல்லுறவு புரிந்திருக்கும் என்றே கருதுகிறேன்.அவர்கள் சுணக்கத்திற்கு நான் காரணமல்ல.ஆனாலும் வருவார்கள்.

பதிவுகளை மதிக்கவில்லை என்று நீங்களே முடிவுகட்டுவது சரியல்ல சார் !


திருவிளையாடலுக்கு பிறகு புது பதிவு போடவே மனதில்லை.இப்படியா வெறுக்க வைப்பீர்கள்?உங்கள் அரசியல் ஏன் எடுபடவில்லை என்ற காரணம் புரிகிறது.

என்ன அரசியல் ? என்ன எடுபடவில்லை? நான் என்ன அரசியல் செய்கிறேன் ? விளக்குங்கள் சார் ...I WANT TO KNOW ABOUT IT !

இங்கு நான் வர போவதே இல்லையென்றாலும்(december ), நடிகர்திலகமே நான் பூசிக்கும் ஒரே மனித கடவுள்.நான் இறந்த பிறகும்,அடுத்தடுத்த பிறவிகளிலும் ,அவர் பக்தனாக மட்டுமே தொடர்வேன்.

நீங்கள் எங்கும் போககூடாது...உங்களை நாங்கள் விடமாட்டோம்

http://www.youtube.com/watch?v=Q9c9x4Af_f0

எனக்கு வரும் PM ,பலர் சொன்ன தகவல் படி மௌன வாசகர்கள் பலர் உள்ளனர்.ஆனாலும் உரத்த வாசகர்கள் உங்கள் போல் உள்ளவர்கள் தொடர்ந்து புரியாத எழுத்தையே தருகிறேன் என்று எழுதி வந்தால்,இதை புதிதாக படிக்க நினைப்போருக்கு தயக்கம் வருமே?

இனி அந்த தவறு நடக்காது...TRUST ME !


என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
http://www.youtube.com/watch?v=0lFpu5z0oPU


.....

sivaa
22nd October 2014, 01:35 AM
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Richardsof
22nd October 2014, 05:16 AM
அனைத்து நண்பர்களுக்கும் , திரியின் பார்வையாளர்களுக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .

Russellxss
22nd October 2014, 08:31 AM
நமது தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அரசமரம் பிள்ளையார் கோவிலில்
விசேஷ பூஜை நடைபெற்றது

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/img001_zps6e072141.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/img002_zpse7d2d533.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
22nd October 2014, 08:34 AM
தன் நிலை மறந்தாலும் தலைவர் சிவாஜியை மறக்காத தலைவரின் ரசிகர்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/Photo0762_zps029161fb.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
22nd October 2014, 08:39 AM
நமது தலைவரை இதயத்தில் வைத்திருக்கும் ரசிகர்கள்
தனது வாகனத்திலும் தலைவரின் படத்தை வைத்துள்ளார்கள். அதில் சில .....

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/Photo0763_zpscf6bd791.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/Photo0772_zps9719298c.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

eehaiupehazij
22nd October 2014, 08:39 AM
Deepaavali Greetings

தீபஒளியில் துன்பஇருள் நீங்கி இன்பஒளி பரவி அனைத்து அன்பு நெஞ்சங்களிலும் உவகையும் உற்சாகமும் பொங்கி வழியட்டும்! என்றும் நமக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து நம் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் உந்துதல் சக்தி நடிகர் திலகமே!

Deepavali is the auspicious day in bidding farewell to devils and demons from our minds and welcoming fresh germination, buds and young leaves for the growth and welfare of this esteemed thread on the one and only demigod of acting Nadigar Thilagam Sivaji Ganesan!

kindly watch in You Tube site, Kandhan Karunai scene!
https://www.youtube.com/watch?v=rm1XyiJdwY8

RAGHAVENDRA
22nd October 2014, 09:09 AM
டியர் சுந்தரராஜன்
காலத்தை வென்று நிற்கும் கலைக்கடவுளின் பக்தர்களின் அன்பு நடிகர் திலகத்தின் மிகப் பெரிய பலம். தன்னலம் கருதாத தொண்டர்களைக் கொண்ட ஒரே தலைவன் நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கும் வண்ணம் உள்ளது தாங்கள் இன்று பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள்.

தீபாவளிக்கு இதை விட சிறந்த பரிசு இருக்க முடியாது.

தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் தீபாவளி நல்வாழ்த்துக்களும்.

sss
22nd October 2014, 12:52 PM
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் ஒரே தீபாவளிக்கு வெளியானது நான்கு முறை...இந்த சாதனையை யாரும், என்றும் முறியடிக்க முடியாது...

நவராத்திரி மற்றும் முரடன் முத்து 1964,
ஊட்டி வரை உறவு மற்றும் இரு மலர்கள் 1967,
சொர்க்கம் மற்றும் எங்கிருந்தோ வந்தாள் 1970,
பரீட்சைக்கு நேரமாச்சு மற்றும் ஊரும் உறவும் 1982

எல்லாவருக்கும் மேலே சகாப்தம் படைத்த 1952 தீபாவளி -யை யாரும் மறக்க முடியாது...

சுந்தர பாண்டியன்

eehaiupehazij
22nd October 2014, 06:14 PM
தில்லானா மோகனாம்பாள் (1968) : திரைவானில் ஒரு தீபஒளி !நடிகர்திலகம் பாரத (தேசத்தின்) ரத்ன(ம்) ஒளி !!

ஒரு புகழ்பெற்ற நாவலைப் படமாக்கும்போது அதன் சுவை குன்றாமல் கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்து உலவவிடும் வித்தை எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.
நட்சத்திர கூட்டம் நிறைந்த திரைக்கதையமைப்பில் ஒரு சிறு துணைப்பாத்திரம்கூட சிறப்புடன் தன் பங்களிப்பை நல்கியிருக்கும் மறக்கமுடியாத காவியம்.தமிழ் திரை வரலாற்றில் இசைநடன கலாசாரத்தை நடிகர்திலகத்தின் வணக்கத்திற்குரிய முதன்மையான நடிப்புடன் நாட்டியப் பேரொளியின் உன்னதமான நடனப்பங்களிப்பில் தெளிந்த நீரோட்டமான இவ்வண்ணக்காவியம் .....கண்ணுற்ற கண்களும் செவியுற்ற காதுகளும் மகிழ்ந்திட்ட மனங்களும் நெகிழ்ந்திட்ட இதயங்களும் புண்ணியம் செய்தவையே

திரையுலகப் போட்டியாளராக இருப்பினும் வெளிநாட்டவர்க்கு தமிழிசைநடன கலாசாரத்தை மனதில் இருத்திட முன்னாள் தமிழக முதல்வர் அமரர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தன் மனதார பரிந்துரை செய்து நடிகர்திலகத்துக்கு புகழ்மகுடம் சூட்டி பெருமை கூட்டி மகிழ்ந்த ஒரே திரை ஓவியம்!

Thillana Mohanambal is a 1968 Tamil film written, directed, distributed and produced by A. P. Nagarajan. The film stars Sivaji Ganesan, Padmini and T. S. Balaiah in the lead roles, The story is about a Nadaswaram player who falls in love with a Bharatanatyam dancer, who reciprocates his feelings, but, circumstances and their egoistic nature prevents them from confessing their love to one another. How they overcome all obstacles set by themselves and those around them form the rest of the story.
The film was adapted from Kothamangalam Subbu's novel of the same name. The novel was published in the Tamil magazineAnanda Vikatan in 1956 as weekly episodes. The film was mostly shot in Thanjavur, Tiruvarur and Madurai. The film's original soundtrack was composed by K. V. Mahadevan. "Nalandhana", "Maraindhirundhu" and "Pandian Naanirukka" became evergreen songs.
Thillana Mohanambal was released on 27 July 1968 to critical acclaim for its portrayal of the socio-cultural milieu prevailing at that time in a subtle manner and the Thanjavur culture of dance and music. It also acquired cult status in Tamil cinema and became a trendsetter inspiring several later films with similar themes of music and dance.

Thillana Mohanambal won two National Film Awards and five Tamil Nadu State Film Awards. The film was dubbed and released in Telugu as Raja Narthaki on 12 July 1985.

Briefing the story line: (Courtesy:Source : Wikipedia)

'Sikkal' Shanmugasundaram (Sivaji Ganesan) is a devoted Nadaswaram Vidwan, but is a short-tempered, sensitive character. He meets Mohanambal (Padmini), a Bharatnatyam dancer and they both fall in love with each other. However Sundaram's ego prevents him to move further with his love when she challenges him to play a Thillana on his Nadaswaram while she will dance for it. Mohana's mother, Vadivambal (C. K. Saraswathi) an influential and mercenary woman, wants her daughter to marry a rich man so that she can be richly settled. But Mohana who is in love with Sundaram does not obey her mother, and this creates a rift between them both. Sundaram does not understand that Mohana loves him, and not knowing she has a great devotion and love for him and his talent, he decides to leave the country along with Karuppayi (Manorama), a folk dancer whom he considers his sister. But Mohana provokes him, saying that he is a coward and not confident about his talent, and hence he has decided to go away. But Mohana's intention is to stop him and make him drop his decision so that she can prove her love for him and as expected Sundaram accepts the challenge and stays. In a temple, Sundaram plays the Thillana and Mohana dances for it. Since both performed at their best there was neither defeat nor success for both. Sundaram crowns Mohana "Thillana Mohanambal". Sundaram is then, suddenly stabbed with a poisonous knife by an aide of Nagalingam (E. R. Sahadevan). Nagalingam was a landlord who desired to marry Mohana earlier, but she insulted him and rejected his proposal. Angry, he had sent one of his aides to kill Mohana.
Sundaram is admitted at the hospital and is cured after treatment. As the days pass, both of them meet in a program in Thamizhisai Sangam much against Mohana's mother's wishes. Vaithi (Nagesh), a cunning man befriends the Maharaja of Madhanpur (M. N. Nambiar), who is the chief guest of the program, for his personal gains and promises to make Mohana as his mistress. Vaithi traps her by saying the Maharaja has given an opportunity for Nadhaswaram and Bharatanatyam performers in his palace and that Sundaram has accepted to come to Madhanpur. Mohana immediately accepts the offer. Both groups visit Madhanpur. Vaithi ill-treats Sundaram's group badly and Sundaram decides to leave the place. He sees Mohana visiting the Maharaja's room and mistakes her. The Maharaja compels Mohana to be his mistress but Mohana does not accept it. When he threatens her of the consequences due to her refusal, his wife, the Maharani, rescues Mohana. Sundaram decides Mohana does not love him, in spite of her repeated denial. Depressed, Mohana runs away. But the Maharaja reveals the truth to him that, although he had compelled Mohana to be his mistress, she refused as she loved Sundaram. Sundaram realises his mistake and rushes to apologize to her. But he sees her attempting suicide by hanging herself from the ceiling of a locked room. He screams to her to stop and promises that he will never doubt her love again. Mohana's mother also promises her that she would wed Sundaram. Sundaram breaks open the door and saves Mohana. Sundaram and Mohana get happily married and Vaithi is arrested for his fraudulent crimes.

No heroism or songs for NT! Enjoy NT's riveting bench mark performance as the Nadhaswara vidhvaan true to life before our eyes! His style of holding the Nadhaswaram, his lip synchronisation with the music, his incomparable body language and facial expressions....NT deserved highest film honours....

Russellbpw
22nd October 2014, 10:20 PM
நடிகர் திலகம் மற்றும் நல்ல திரைப்படங்களை விரும்பும் நல உள்ளங்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி இந்த தீபாவளி நன்னாளில் -

விரைவில்......

நான் பிறந்து 6 நாட்கள் கழித்து வெளியான - திராவிட மன்மதன் (உபயம் : கோபால் சார் ) நடிகர் திலகம் ஸ்டைல் நடிப்பில் வெளிவந்து மிக சிறந்த வசூல் கொடுத்த ஜனரஞ்சக காவியம் சுமதி என் சுந்தரி - ரசிகர்களுக்கு விருந்தாக சென்னை, திருச்சி மற்றும் கோவையில் !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sesundari_zps577149bb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sesundari_zps577149bb.jpg.html)


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5714-1_zps58866753.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC5714-1_zps58866753.jpg.html)

https://www.youtube.com/watch?v=rbcV4_Fzm58


https://www.youtube.com/watch?v=NUhQoq5i3ZE

Russellxss
22nd October 2014, 10:46 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/fb_zps8639d477.jpg


இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

eehaiupehazij
23rd October 2014, 07:53 AM
நடிகர்திலகத்துடன் T.R. Ramachandran நினைவலைகள்

T.R. Ramachandran, known as Eddie Cantor ( a popular Hollywood comedian of his times) had an enduring bonding with NT in several films starting from Kalyaanam Panniyum Brammachchari through Kalvanin Kadhali, Vidivelli, Padikkaadha Medhai....to Thillana Mohanambal (as Varadhan with Padmini group).
சபாபதி , வாழ்க்கை, அடுத்தவீட்டுப்பெண் .....அவர் பிரதான பாத்திரங்களில் தனித்தன்மையுடன் அசத்திய படங்கள். நடிகர் திலகம் அவர் மீது அபார மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார். கள்வனின் காதலி திரைப்படத்தில் வரும் சதாரம் தெருக்கூத்தில் நடிகர்திலகத்தின் துள்ளல் மிக்க ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து அல்லோலகல்லோலப்படுதியிருப்பார். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் அமைதியாக அழுத்தமாக தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். (அடுத்த வீட்டுப்பெண்(1960) மற்றும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954) படங்களில் பின்புலத்தில் தங்கவேலுவும், நடிகர்திலகமும் பாடும் பாடல்களுக்கு வாயசைத்து நகைச்சுவை பாவங்களை அனாயசமாக வெளிப்படுத்தியிருப்பார்). MGR உடன் அன்பே வா திரைப்படத்திலும் படம் நெடுக வரும் நகைச்சுவை கலந்த குணசித்திர பாத்திரத்தில் தன் தனித்தன்மையை நிலைநிறுத்தியிருப்பார்.

https://www.youtube.com/watch?v=SldcGT-jSjQ

https://www.youtube.com/watch?v=7_TxyuxZwQ0

eehaiupehazij
23rd October 2014, 10:07 AM
Nadigar Thilagam in his masterpiece lady get up!

NT is well known for his female get up in his drama days. As a token of gratitude he enacted the same in his movie Kungumam even as he was an established top star at that time. See how this get up, walking style, dress fit, voice modulations, facial expressions and body language are inherent to him! enjoy!!

https://www.youtube.com/watch?v=spkV_Gbhs2w

JamesFague
23rd October 2014, 10:32 AM
Courtesy: Dina Malar

வாஜி கணேசன் :


மகாபாரத கர்ணனை நாம் கண்டதில்லை,“உள்ளத்தில்நல்ல உள்ளம்” என்று பாடி மண்ணில் சாய்ந்த சிவாஜிகணேசனே நமக்குத்தெரிந்த கர்ணன். திருவருட்செல்வரில் அப்பர் பெருமானாக, திருவிளையாடலில் சொக்கநாதக்கடவுளாக,வீரபாண்டிய கட்டபொம்மனாக, ராஜராஜசோழனாக, கப்பலோட்டிய சிதம்பரனாராக, மகாகவி பாரதியாராக நடித்து, நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த அந்தச் சாதனை மனிதர் சந்திக்காத தோல்விகளா? ஆனாலும் எல்லாவற்றையும் துணிச்சலோடு அவர் எதிர்கொண்டார். “களைப்பில்லா உழைப்பு”-இவர் வெற்றிவாசகம்.

பல்லி வாலை இழந்தாலும் தன் வாழ்வை இழப்பதில்லை. ஒரு நாள் வாழ்க்கை என்றாலும் ஈசல் தன்னை நொந்துகொள்வதில்லை. ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல். சிறு நிகழ்வுகளுக்கெல்லாம் மனதொடிந்து போகாமல் எதிர்நின்று எதிர்கொள்வதற்கு மனத்துணிவை வளர்த்துக்கொள்வோம். முடியலாம் முடியாமலும் போகலாம்; ஆனாலும் முயல்வதிலிருக்கிறது வெற்றியின் முடிவு. நமக்கான வெற்றி வாசகத்தை இன்றே உருவாக்குவோம். நம் மனதின் வலிமையால் அவ்வாசக கனவை நிஜமாக்குவோம். ஒருநாள் வானம் நமக்குவசப்படும்.
-முனைவர் சவுந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி.
mahabarathi1974@gmail.com,

eehaiupehazij
23rd October 2014, 10:49 AM
மகாபாரத கர்ணனை நாம் கண்டதில்லை,“உள்ளத்தில்நல்ல உள்ளம்” என்று பாடி மண்ணில் சாய்ந்த சிவாஜிகணேசனே நமக்குத்தெரிந்த கர்ணன். திருவருட்செல்வரில் அப்பர் பெருமானாக, திருவிளையாடலில் சொக்கநாதக்கடவுளாக,வீரபாண்டிய கட்டபொம்மனாக, ராஜராஜசோழனாக, கப்பலோட்டிய சிதம்பரனாராக, மகாகவி பாரதியாராக நடித்து, நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த அந்தச் சாதனை மனிதர் சந்திக்காத தோல்விகளா? ஆனாலும் எல்லாவற்றையும் துணிச்சலோடு அவர் எதிர்கொண்டார். “களைப்பில்லா உழைப்பு”-இவர் வெற்றிவாசகம்.

பல்லி வாலை இழந்தாலும் தன் வாழ்வை இழப்பதில்லை. ஒரு நாள் வாழ்க்கை என்றாலும் ஈசல் தன்னை நொந்துகொள்வதில்லை. ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல். சிறு நிகழ்வுகளுக்கெல்லாம் மனதொடிந்து போகாமல் எதிர்நின்று எதிர்கொள்வதற்கு மனத்துணிவை வளர்த்துக்கொள்வோம். முடியலாம் முடியாமலும் போகலாம்; ஆனாலும் முயல்வதிலிருக்கிறது வெற்றியின் முடிவு. நமக்கான வெற்றி வாசகத்தை இன்றே உருவாக்குவோம். நம் மனதின் வலிமையால் அவ்வாசக கனவை நிஜமாக்குவோம். ஒருநாள் வானம் நமக்குவசப்படும்.
-முனைவர் சவுந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி.
mahabarathi1974@gmail.com, posted by S. Vasudevan

உத்தமர் கூறும் சத்திய வாக்கு ! தமிழ்ப் பேராசிரியரின் தரமிக்க தமிழ் வார்த்தை வீச்சுக்கு நன்றிகள்! நமது திரியிலும் பங்கேற்று நடிகர்திலகத்தின் புகழ் ஓங்கிட பதிவிட வேண்டுகிறோம். சித்தூர் வாசுவின் சரியான சமயப் பதிவேற்றலுக்கு நன்றிகள்

JamesFague
23rd October 2014, 10:54 AM
Courtesy: Saradha Madam Old Post

RAJA - Movie Review

Most of us know that 1972 is the hilarious successful year in NT's career and for that, RAJA wrote the 'pillaiyaar suzhi' for that. (Eventhough the continous success started from Babu of 1971 Deepavali, but it fell in 71). Started from Babu till Bharatha Vilas (wow, both are from 'Cine Bharath' banner, what a coincidence) two Silver Jubilees (Pattikkada Pattanama, Vasandha MaaLigai) and six, more than 100 days (Babu, Raja, Gnana Oli, Dhavaputhalvan, Neethi & Bharatha Vilas) and with a dhirushti pottu 'Dharmam Enge'. (this continuous success only made Sreedhar to put title for his movie as 'Hero-72')
RAJA was produced by Balaji's 'Sujatha Cine Arts' and it was released on 26th January 1972. It was the re-make of Hindi film Johny Mera Naam starred by Dhev Anand and Hema malini. But in Tamil version it was still polished by Director C.V.Rajendran. Songs were written by Kaviyarasar Kannadasan and Music by 'Mellisai Mannar' M.S.Viswanathan. Camera handled by Masthan-Thara and art by Thotta (daddy of Thotta Tharani).

No doubt it is one of the best entertainment movies for NT, with eye catching Camera work and beautiful Eastman Colour by Gemini lab. It is a story of a detective and NT shined that role like anything. The maximum credit should go to his lean body at that time which very well suited for that role, with a beautiful hair style. He will not wear coat and tie in any scene, but fully with 'Zipped Jerkins' with scarf in his neck. Not only for NT, the costumes for all artists will be very nice.

I think this may be the first film of NT having more number of Villains, as Balaji, Manohar, Renga Rao, K.Kannan and 'Wrestler' Randhava. Everybody have done their portions very well. Even before that, 'Thanga Surangam' was a detective story for NT, but Raja is most entertaining in all aspects.

Story (in small version):

Sekhar (Shivaji) and Chandar (Balaji) are brothers and in their school age their father was killed by villains Renga Rao and 'Kavarchi Villain' K.Kannan, by appointing a killer. Both sons witnessed for their father's death. Elder son (Master Vadhiraj) takes the sword from his dad's back, and kills the man who killed his dad. After that he was hiding in a car's dicky. Actually Renagarao (Nagalingam) and K.Kannan (Jambu) are travelling in that car. They found the boy in the car-back. The camera brings close up to the boy and freezes the face and suddenly the face of Balaji appears. Yes, he became one of the gangsters of Rengarao. Madras Police Commisioner Prasath (Major Sunderrajan) tells his sobordinates to watch Manohar, another gangster of Renga Rao, who is coming from Singapore with smuggled diamonds. They followed him up to Hotel Asoka, were he stays. When he was playing tennis, police searched the whole room but nothing available there. On hearing this matter Major arranges some other ways to arrest him. He enquired Manohar by showing a photo, with whom Manohar was shaking hands. Major arrest him and put in lock-up. THERE COMES NT'S INTRODUCTION. He is predicting as another one who was arrested by Police. He makes friendship with Manohar (Viswam) and Manohar give NT (Raja) a job to steal a Tennis Racket from Ashoka Hotel tennis club, and give it to the one to whom he has to call by phone. When he gone to the hotel room, he meets the cute Radha (Jayalalitha). She is also in the same gang of Babu (Balaji). The conversation between Shivaji and Jayalalitha will be very interesting in that scene. She gives five thousand rupees for his job and tells if he comes with her to Cochin with the smuggled diamond she will give ten thousand. Raja is much happy that the routes are coming very clear to meet the gang boss.
In Cochin Airport he they were recived and taken to Balaji, who is his elder brother, but dont know each other. There they beat Raja to know the truth about him, and he tells that his real name is 'Kumaresa Othuvar' and his father is in mylapore as Palmist and his name is 'Murugesa Othuvar'. To clarify this, they phoned to their Madras guy to enquire. When that man (with orange coloured hair) visits there, constable Pattabiram (Chandra Babu) is acting as Palmist, and that man leaves that place by believing it.

As I thoought eloborating the story will occupy more space, let the story hang-up. Just we will discuss some points about Raja.

Regarding NT's action, we thought it is being a detective story and there will be no scope for his acting performance. But NT made us fools by giving his wonderful actions. The best one which everyone knew and wish to say is, HIS LAUGHING WHEN MANOHAR WAS BEATING PANDARIBAI TO GET THE TRUTH THAT 'RAJA' IS HER SON, in front of his boss Renga Rao. Nadigar thilagaththin andha srippu verum sirippu mattumalla, avar kangalil 'ayyO ammaavai kAppAtra mudiyAmal soozhnilai nammai kattip pOttu vittathE' endra thavippu avar kangaLil theriyum. Another scene his angry,when Major told him Nagalingam, which is in the photo, is the one who killed their father.

The scene, where Balaji understand Shivaji is his younger brother, will be well shown by showing the 'boxing competition in the school' (but the same as in Hindi version).

Regarding the songs, I surprised why the songs of Raja are NOT well popular outside the movie, in fact they are good ones.
"நீ வரவேன்டும் என்று எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகன் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா
காதல் கவிதை சொல்லு ராஜா"
Jayalalitha, who was followed by the police from the Railway station, acting as the lover of Shivaji, who is standing on the top of a wall. Kannadasan's lines are beautiful in charanam also
கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
கொஞ்சும்போதும் என்னை பாராட்டு
இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்
காதலை இணைப்பது ஜாதகமே
காலமும் நமக்கினி சாதகமே
உன் மனமும் குணமும் நாடகம்
உம் மடியினில் நான் ஒரு குழந்தை...குழந்தை

It will be enjoyable to watch NT's ' சேஷ்டைகள் ' with Jayalalitha in this song "nee vara vEndum ena edhir pArththEn'. In one stage, NT will touch her cheeks and JJ will push out his hands. NT, showing the policemen around them (like saying"ellorum pArkkirAnga pAr"). Then JJ will take his hand and rub with her cheek. Camera will show the jealous Inspector ('Shanthi' Kumar) in close-up.

The next song "கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனால்" Picturisation is somewhat good, in Kerala locations and in a boat. NT's steps when starting the song is nice and his action with hands in his hips for the line "nEril vandha RathiyO mathiyO". But we should accept the fact that, this song did not attain the level of original Hindi song "Nafrathkar-nE-vA-lOngE" of Johny mera nAm.

The third song, for Padhma Kanna from Mumbai, not only in dance but she acted in an important role also in 'Raja' as a pair of Randhava. This is one of the bests of L.R.Eswari, start with humming
"ரா...ர..ர..ர...ர...ர..ர.ர..ரா...."

"நான் உயிருக்கு தருவது விலை
என் உடலினி உனக்கொரு கலை
கண்களை கொண்டு வா... பெண்மையை காணவா"

(especially கண்களை கொண்டு வா with her specialized husky voice)
the orchestration will be somewhat terrific and MSV poured the instruments like anything. Very heavy instrumental experience. No dabala, no bangoes, but fully drums, with Guitars, Violins, Truphet, Saxophone... and what not. MSV stands with his viswaroopam in this composition. But the very sad thing is, this song was also kept under shadow. WHY.....?????. We don’t know.
Next song, by PS for Jayalalitha in the Krishnan temple, when looting the jewels.

Before this song, there will be a nice dialogue between Jeya and Balaji, in their hiding place.

பாலாஜி: "ராதா, ராத்திரியோடு ராத்தியா கோயில் நகைகளை களிதாஸ் (நாகையா) துந்தனாவுக்கு மாத்திடுவான். சரியா நாலு மணிக்கு கோயில் கதவு திறக்கும். கிருஷ்ணன் சிலைக்கு முன்னால் நகைகள் அடங்கிய துந்தனா இருக்கும். மீரா வேஷத்தில இருக்கிற நீ கடவுளை கும்பிட்டு விட்டு துந்தனாவை எடுத்தால் யாரும் சந்தேகப் பட மாட்டாங்க".

ஜெயலலிதா: "பாபு, இதுவரைக்கும் மனிதர்களை மட்டும்தான் ஏமாத்தினே. இப்ப கடவுளையும் ஏமாத்தனுமா"

பாலாஜி: "என்ன ராதா இப்படி சொல்லிட்டே. நம்ம எல்லார் மனசிலேயும் அவன் தானே இருக்கான். இப்ப என்னமோ என் மனசுக்குள்ள இருந்துகிட்டு 'எடுடா நகையை'ங்கிறான். நான் எடுக்கிறேன் .thats all".
(there will be a big laugh and applause from audience).

The song will start with the chorus

"கங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணன் கைகளில் நான் வர,
எண்ணி வந்த சேதி சொல்ல ...
hare hare krishna... hare
hare hare krishna... hare"

then PS starts the charanam:

"கிருஷ்ணா... கிருஷ்ணா...கிருஷ்ணா...

தீபங்கள் கோயிலிலே மின்னுவதென்ன
அவை பாவங்கள் கூடாதென்று சொல்லுவதென்ன
வைரங்கள் நெஞ்சினிலே ஆடுவதென்ன
அவை வஞ்சங்கள் வேன்டாமென்று பாடுவதென்ன"
Jayalitha will act for this song very nicely with little dance movements then and there. Balaji will be there in the make-up of a 'sAmiyAr'.

But for this song, Dir.CVRajendran and art director Thotta done a mistake that, the temple will seems in a North Indian style, thus it resembles that it is a remake movie. They should change it as a Tamil Nadu style temple.

The last song,
" இரண்டில் ஒன்று.. நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறு யாரு உன்னை தொடுவார்" by SPB.
In fact it is his second for NT, after 'பொட்டு வைத்த முகமோ' in SES. It is an interesting song mixed with comedy, when JJ closes the doors one by one, he will appear from another, and at last he will enter her bedroom. NT will be in a dark blue pant with dark blue half shirt (as usual without banian inside) and Jayalalitha will be in a dark green mini skirt. (She will wear the same type of dress in Pattikada Pattanama also).

Apart from the songs, we must definitely mention about the back ground score re-recording of the Great "Mellisai Mannar" MSV. The title music itself will give a big expectation about the movie. In the title music and in stunt scenes, he is not only using instruments but also vocal effects with special voices. (the title music also released in the form of record along with the songs).

We should also accept that, RAJA's back ground score was several times better and in high level comparing to its original Hindi version 'Johny mera nAm'.

During the fight with 'Wrestler' Randhava, he will give the sound
லா...லா...லா...லா...
ராஜா... ராஜா... ராஜா... ராஜா...
and NT's fight with K.Kannan in the mid night (the code word 'mani pannirendu') in the forest house, MSV will give heavy back ground score with instruments and also vocal as
"ரம்ம்ம்... பபம்....ரம்ம்...பபம்"

and in climax fight, he will mix all the above and also add.
"து து..து..து..ஜும்...துஜும்...துஜும்...
"து து..து..து..ஜும்...துஜும்...துஜும்...
"து து..து..து..ஜும்...துஜும்...துஜும்..."

and gradually he will increase the speed.. to the high pitch.
When we are talking about the actors of "RAJA", we should not forget to mention about the the great comedianm Chandrababu. He acted in three roles as Constable Pattabiram, Air-hostess Janakiram and Bar-man Seetharam. He rendered his acting very nicely with different style. The one Janakiram, who stands in the entrance of Cochin Airport and say 'hello' to passengers. Wow


Raja was released in three theatres at Chennai at Devi Paradise, Agasthiya and Roxy and crossed 100 days successfully in all the three theatres with big collection. It also ran more than 100 days in Madurai Central, Trichy Palace, Salem and Coimbatore also. I always prefer this movie as one of the best entertainment movies of NT.

Thanks for reading my posts about RAJA and I will come back with another entertainment movie of the great Nadigar Thilagam, soon.
Anbudan... Saroooo....

JamesFague
23rd October 2014, 03:50 PM
Courtesy : Mr Joe

நடிகர் திலகம் பற்றி பாலுமகேந்திரா

"இலங்கையில் பிறந்து வளர்ந்த நான் ,விபரம் தெரிந்த நாளிலிருந்து சிவாஜி சாரின் தீவிர ரசிகன் .சிறுவனாக இருக்கும் போதே சிவாஜி சாரின் படங்கள் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது என்பது கட்டாயம் .தப்பித்தவறி என்னால் பார்க்க முடியவில்லையென்றால் ,பார்த்து விட்டதாக நண்பர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவே அப்படத்தின் போஸ்டரை பார்த்து நானாக ஒரு கதையை கற்பனை செய்து சொல்லி விடுவேன்.

எனக்கு 14 வயது இருக்கும் போது சிவாஜி சார் கொழும்பு வருகிறார் என கேள்விப்பட்டு எப்படியாவது அவரை பார்க்க வேண்டும் என்று 250 கீமீ தூரத்தில் உள்ள கொழும்புக்கு போக தலைப் பட்டேன் .வழக்கம் போல வீட்டில் அனுமதிக்க வில்லை .ஆனால் சிவாஜி சாரை பார்க்கும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை .ஒரே வழி ,வீட்டை விட்டு ஓடுவது தான் .எனவே சிவாஜி சாரை பார்க்க வீட்டை விட்டு ஓடினேன் .பயணச்சீட்டு இல்லாமல் கொழும்பு சென்று சிவாஜி சார் பேசும் இடத்தை அடைந்த போது கூட்டம் கீ.மீ கணக்கில் இருந்தது .மேடையில் சிவாஜி சார் வரும் போது ஏதோ ஒரு சிறிய உருவம் தான் எனக்கு தெரிந்தது .ஆனால் அவர் பேச ஆரம்பித்ததும் அந்த சிம்மக்குரல் என்னை அப்படியே அவர் அருகே கொண்டு போனது .அவர் பேச தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை நான் இப்படியே நின்றிருந்தேன் (தலைக்கு மேல் கும்பிட்டவாறு) .

என்னுடைய கடைசி இந்திப்படத்தை நான் சிவாஜி சாருக்கு அர்ப்பணித்தேன் .அதில் "என்னைப் போன்ற எத்தனையோ கலைஞர்களுக்கு தூண்டுகோலாக இருந்த ,இப்போதும் இருக்கின்ற ,வருங்காலத்திலும் இருக்கப்போகின்ற சிவாஜி சாருக்கு சமர்ப்பணம்" என குறிப்பிட்டேன்.

நடிகர் திலகம் இறந்த போது நான் குறிப்பிட்டது இது தான் .."யார் சொன்னது சிவாஜி சார் இறந்து விட்டார் என்று ? அவர் இறக்கவில்லை ..அவருக்கு இறப்பு கிடையாது ..பாரதி போன்ற ,சிவாஜி சார் போன்றவர்களுக்கு இறப்பு கிடையாது "

-நடிகர் திலகம் புத்தக வெளியீட்டு விழாவில் பாலுமகேந்திரா ஆங்கிலத்தில் பேசியது.

RAGHAVENDRA
23rd October 2014, 04:19 PM
*****

well done... got FIVE STARS...

Russellbpw
23rd October 2014, 04:50 PM
*****

well done... Got five stars...

thanks for the wishes sir....! I too wish you because you are also part of this !!!!

Well done raghavendran sir !!

Russellbpw
23rd October 2014, 04:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsec764df5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsec764df5.jpg.html)

ScottAlise
23rd October 2014, 10:42 PM
பார்த்ததில் பிடித்தது -43

கீழ்வானம் சிவக்கும்

முக்த ஸ்ரீநிவாசன் மற்றும் நடிகர் திலகம் கூட்டணியில் வந்த வெற்றி படம்

1981 ஆண்டு நடிகர் திலகத்தின் சினிமா வாழ்வில் hits & flops இரண்டும் சரிசமமாக இருந்தது என்றே சொல்லலாம் , அந்த வருடத்தை இந்த வெற்றி படத்துடன் முடித்தார் என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம்


கோவையில் பெரிய கண் மருத்துவர் துவாரகநாத் , தன் மகன் , மருமகள் மஞ்சு , மற்றும் தன் மனைவியின் தம்பி , அண்ணன் மகன் உடன் வசித்து வருகிறார்
தனக்கு பெண் குழந்தை இல்லை என்பதால் தன் மருமகளை தன் மகளாக நினைத்து அன்பு செலுத்துகிறார்

செந்தில் என்ற நபர் துவாரகநாத் மருத்துவனையில் சிகிச்சைக்காக வருகிறார் , அவர் வசம் இருக்கும் ஒரு புகைப்படத்தை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைகிறார் துவாரகநாத் , படத்தை கிழித்து விடுகிறார் , அதை பார்க்கும் மஞ்சு அந்த படத்தில் இருப்பது யார் என்பதை அறிய முயற்சிக்கிறார் , CAT & mouse game ஆரம்பம் .

மஞ்சு தனக்கே தெரியாமல் lymphosarcoma என்ற கொடிய நோயால் தன் நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறார்

யாரை காப்பாற்ற துவாரகநாத் முயற்சிக்கிறார் , மஞ்சுவுக்கு என்னவாயிற்று என்பதே முடிவு

Positives:

இந்த படம் அழகான குடும்ப கதை , ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும் கொஞ்சம் கூட சலிப்பு ஏற்படாத வந்ன்னம் திரைகதை அமைக்க பட்டு இருக்கும் , இதற்க்கு காரணம் குரியகோஸ் ரங்கா , மணல் கயிறு படத்தில் சந்திக்ரிஷ்ணவின் அண்ணனாக நடித்து இருப்பார் , பிற்காலத்தில் அரட்டை அரங்கம் வெற்றி நடையில் இவர் பங்கும் இருந்தது . முக்தா ராமசாமி நல்ல தயாரிப்பாளர் படத்துக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்து இருப்பார் , இயக்குனர் ஸ்ரீநிவாசன் நடிகர் திலகத்தின் நடிப்பு திறமையை நன்றாக exploit (positive sense) செய்வதில் வல்லவர் , கடவுள் நினைத்தான் பாடல் இன்று வரை திருமண வீடுகளில் ஒலிக்கும் பாடல் ,


Portions that could have been handled better

படம் வந்த வருடத்தில் அரசியல் சூழ்நிலையை நினைத்தால் படத்தில் வரும் அரசியல் நையாண்டியை ரசிக்கலாம் , ஆனால் இந்த குடும்ப கதைக்கு சற்று அந்நியமாக இருந்தது , அடுத்து , ஜெய்ஷங்கர் அவர்களின் கதையில் வலு இல்லை , படத்தின் அடித்தலமே இது தான் , இதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் , ஆனால் இது எல்லாம் நம் நடிகர் திலகம் தன் நடிப்பினால் மறைத்து விடுகிறார்

ScottAlise
23rd October 2014, 10:43 PM
துவாரகநாத் என்ற பெயர்க்கு ஏற்ப கிருஷ்ணர் போல் அமைக்க பட்டு இருக்கிறது நடிகர் திலகத்தின் பாத்திரம்

முறுக்கு சுடுவதில் அறிமுகம் ஆகிறார் நடிகர் திலகம் , அந்த காட்சியில் அவர் முகபாவனை ஆகட்டும் , தன் மருமகள் கேட்டு முறுக்கு சுட்டு தரவில்லை என்று வேலைக்காரியை கடித்து கொள்வது ஆகட்டும் , முதல் காட்சியிலே மாமனார் மருமகள் உறவை அழகாக establish செய்து விடுகிறார் நம்மவர் , தன் மகன் மனைவியுடன் சினிமா செல்லும் பொது அதை தடுப்பதும் , மருமகள் கோவத்தில் கத்தும் பொது , flower vase எடுத்து கொடுக்கும் போதும் , பிறகு தூக்கமாத்திரை போட்டு தூங்க வைப்பதும் , ஆர்பாட்டம் இல்லாத நடிப்பு , அடுத்த நாள் ஐவரும் வீம்புக்கு மருமகளிடம் பேசாமல் செல்வதும் , ராத்திரி வந்து உண்மையை சொல்வதும் இருவரின் childish குணங்களை காட்டுகிறது

இப்படி செல்லும் இவர்களின் வாழ்வில் சந்தேக நிழல் விழுகிறது . தன் மருமகள் தன்னை சந்தேக படும் பொது இவர் துடிப்பதும் , அதை வெளிக்காட்ட முடியாமல் தவிப்பதும் , மருமகளின் உயிருக்கு ஆபத்து வராமல் பார்த்து கொள்வதும் , தனக்கு பாடம் சொல்லி கொடுத்த குருவிடம் தன் நிலைமையை சொல்லி ஆறுதல் தேடி கொள்ளுவதும் நெஞ்சை பிழிகிறது

கண் டாக்டராக தன்னிடம் வரும் செந்தில் என்ற பார்வை தெரியாத நபரை இவர் handle பண்ணும் விதம் டாப் , அதுவும் , அரிவாள் வாங்கிய காசையும் கொடுத்தால் தான் கண் கிடைக்கும் என்று சொல்லுவதும் , தன்னிடம் கொடுக்கப்பட்ட படத்தை இவர் கிழிக்கும் பொது நம்மளுக்கும் அதிர்ச்சி தான் , ஆனால் தன் patient மனதை கொஞ்சம் கொஞ்சமாக படித்து , அறிந்து , அவர் மனதில் இருக்கும் ரணங்களை தீர்த்து வைத்து , கடைசியில் அந்த புகைப்படத்தை அவரிடம் கொடுக்கும் பொது ஒன்று தான் தோன்றுகிறது , இவரை நம்பினால் யாரும் கெடுவதில்லை

இப்படி உத்தமனாக இருக்கும் நபருக்கு மகன் தான் வாழ்கை தந்த ஏமாற்றம்
அதுவும் இவர் கோயிலுக்கு போவிய என்று கேட்கும் பொது நான் எதற்கு என்று மகன் கேட்க , இவர் அதானே , அதுக்கு தான் நான் iஇருக்கிறேன் என்று குரலை வேறு மாதிரி வைத்து பேசுவதும் , தன் தந்தை தன் மனைவியின் உடல் நிலை பற்றி சொல்லவில்லை என்று மகன் கோபித்து கொண்ட உடன் இவர் பேசும் வசனம் உணர்ச்சி பிழம்பு

அந்த காலத்தில் சிவாஜி அவர்கள் matured roles தேர்ந்து எடுத்து நடிக்கவில்லை என்று பேசும் நபர்கள் இந்த படத்தை பார்க்கலாம்

படத்தில் இவர் உடை கண்ணை உறுத்தாமல் இவர் பாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது

சரித்தாக்கு இது ஒரு life time ரோல், சிவாஜி சார் வரும் அணைத்து காட்சியிலும் இவரும் இருப்பார் , சிவாஜி சாரின் நடிப்புக்கு எடு கொடுத்ததும் நடித்து இருப்பார்



இவர் கடைசியில் ஆவியாக பேசும் பொது நம் கண்ணில் வரும் கண்ணீர் இதற்கு சான்று ,

படத்தில் வேறு பாத்திரங்களில் ஜெய்சங்கர் அவர்களின் பாத்திரம் இவரின் வழக்கமான action பாத்திரங்கள் போல் இல்லாமல் , கண் தெரியாதவராக , மனதில் பழி வாங்கும் வெறியுடன் , அதே சமயம் மனதில் பாசமும் பளிச்சிட சரிதாவின் அன்புக்கு இவர் மரியாதை செலுத்தும் விதம் படத்தின் highlight

மூர்த்தி , YG மகேந்திரன் , மனோரமா , காத்தாடி ராமமூர்த்தி நகைச்சுவை காட்சிகளில் வந்து போகிறார்கள் , சரத்பாபு , மேஜர் மற்றும் பலரும் இந்த படத்தில் இருக்கிறார்கள்

சிவாஜி என்ற மாபெரும் நடிகரும் , முக்தாவுக்கும் மீண்டும் ஒரு வெற்றி படம்

Murali Srinivas
24th October 2014, 12:08 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி

டிக்கெட் கிழிக்கப்பட்டு உள்ளே நுழைந்தால் காது செவிடாகும் வண்ணம் ஒரு வெங்காய வெடி வெடிக்க அந்த சத்தத்திற்கு இணையான கைதட்டலகளுடன் ஸ்க்ரீனில் நடிகர் திலகம் முதுகில் கூடையை மாட்டிக் கொண்டு அறிமுகமாகும் காட்சி.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

தர்மம் எங்கே தியேட்டர் அனுபவம் தொடர்ச்சி

அரங்கத்தினுள்ளே நுழைந்து இடம் தேடினால் ஒரு காலி சேர் கூட கண்ணுக்கு தெரியவில்லை. பாடல் வேறு ஆரம்பித்து விட்டது. காதைப் பிளக்கும் அலப்பரை சத்தம். அந்த 90 பைசா வகுப்பின் முதல் வரிசையில் ஒரு காலி நாற்காலி தெரிய உடனே என்னை அங்கே உட்கார வைத்துவிட்டு என் கசின் பின்வரிசைக்கு போய் விட்டான். சிறிது நேரத்தில் உள்ளே வந்த மற்றொரு நபர் தம்பி கொஞ்சம் இடம் கொடுப்பா என்று சொல்லி நான் அமர்ந்திருந்த நாற்காலியில் அவரும் வந்து அமர்ந்து விட்டார்[ஆஹா இதற்கு என் கசினையே உட்கார சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது].

முதல் பாடலே நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் பாடல் வரிகளின் அர்த்தம், முத்துராமன் குமாரி பத்மினியின் காதல் காட்சி, ராஜபிரதிநிதியின் ஆட்கள் ஊருக்குள் கொள்ளையடிக்க வருதல் என்று பல சம்பவ கோர்வைகளின் சங்கமமாக அமைந்திருந்ததால் [முதல் காட்சியிலே கதை ஆரம்பித்து விடும்] இங்கே அலப்பரை அதிகமானது. அதிலும் கண்ணதாசனின் வரிகள்

மனிதனின் வாழ்க்கையில் நாணயம் இருந்தால் மனிதருள் மாணிக்கம் என்போம்

தன்னிகரிலா தலைவன் பிறப்பான் ஆயிரத்தில் ஒரு நாளே

என்ற வரிகளின் போது பெருந்தலைவரை வாழ்த்தி கோஷம் கிளம்பியது.

திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும் என்ற வரியின்போதோ

அடுத்த வரிகளை கேட்கவே முடியாமல் அப்படி ஒரு சத்தம். அந்த சத்தம் சற்றே அடங்கவும்

தோட்டம் என்பது எனக்கே சொந்தம் என்பது சுயநலக் கூட்டம் என்ற வரி திரையில் ஒலிக்கவும் மீண்டும் பயங்கர கைத்தட்டல், கோஷம்.

அடுத்த சரணத்தில்

ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறு இல்லை

என்ற வரிகளுக்கெல்லாம் தியேட்டர் உள்ளே எழுந்த கோஷம், கேட்ட கைதட்டல், ரசிகர்கள் எழுந்து ஆடியதை எல்லாம் எழுத வேறு புதிய வார்த்தைகள்தான் உருவாக்க வேண்டும்.

அதுவும் அந்த இறுதி சரணத்தை முடித்து பல்லவியைப் பாடிக் கொண்டே நடிகர் திலகம் நடந்து வரும் அந்த ஸ்டைல் [ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்] என்னை சுற்றி இருந்தவர்கள் யாரும் சீட்டில் .உட்காரவேயில்லை.

குமாரி பத்மினியிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் தளபதியை முத்துராமன் கொல்வது, ஊர் மத்தியில் ஆட்களை கூட்டி வைத்து ராமதாஸ் கேள்வி கேட்கும்போது முத்துராமன் சட்டையில் படிந்திருக்கும் ரத்தக்கறையை மறைக்க சொல்லி நடிகர் திலகம் சுட்டிக் காட்டி விட்டுப் போவது, ராஜ பிரதிநிதியை சந்திக்கப் போய்விட்டு அங்கே ராமதாசை குற்றவாளி என்று சொல்லிவிட்டு திரும்ப உன் பெயர் என்ன என்று கேட்கும் நம்பியாரிடம் அப்படியே பக்கவாட்டில் திரும்பி சேகர் ராஜசேகர் என நடிகர் திலகம் சொல்லும்போதெல்லாம் ஒரே இடியோசைதான்.

அதன் பிறகு மீண்டும் நடிகர் திலகம் நம்பியார் சந்திக்கும் காட்சி. உங்கள் ஆட்கள் நாடு மக்கள் சுதந்திரம் தியாகம் என்று பேசுவார்கள். ஆனால் நாங்களோ சூழ்ச்சி வலை விரித்து நாட்டை வசப்படுத்தி விடுவோம் என்று நம்பியார் சொல்ல அதற்கு மக்கள் முன்பு போல் இல்லை. உங்களை இனம் கண்டுகொண்டு விட்டார்கள். உங்கள் ஆட்சி முடிவக்கு வரத்தான் போகிறது என்று நடிகர் திலகம் பதில் சொல்லும்போது அன்றைய நாளின் அரசியல் சூழலுக்கு ஏற்ப எழுதப்பட்ட வசனங்களுக்கு அமோக வரவேற்பு.

அடுத்து சிறைச்சாலை சண்டைக்கு தியேட்டர் அலறியது என்றால் அங்கேயிருந்து தப்பித்து நாடோடி கும்பலால் காப்பாற்றப்பட்டு கெட்டப் மாறி வரும்போது மீண்டும் அலப்பரை. தாயை பார்க்க வந்துவிட்டு தாய் இறந்துவிட வாய் விட்டு அழக் கூட முடியாமல் விம்முவார். அதகளமானது அரங்கம். அதே காட்சியில் தாய் இறப்பதற்கு முன் தாயை விட்டு விலகி நடக்க முயற்சிப்பார். அப்போது அவரின் தாய் சேகர் என்று ஈனக்குரலில் அழைக்க முகம் திரும்பாமல் காலை வளைத்து அவர் முதுகு காட்டி நிற்கும் போஸிற்கு பயங்கர அலம்பல். இதையெல்லாம் அன்று பார்த்தபோது [எங்கே பார்க்க விட்டார்கள்?] அவ்வளவு உன்னிப்பாக கவனிக்க முடியவில்லை. மீண்டும் படம் பார்த்தபோதுதான் எந்தெந்த காட்சிக்கு ஏன் அப்படி ஒரு அலப்பரை நடந்தது என புரிந்தது.

அடுத்து நாற்சந்தியில் வைத்து முத்துராமனியும் குமாரி பத்மினியையும் தூக்கிலிட முயற்சிக்கும்போது அந்த இடத்திற்கு வெள்ளை குதிரையில் சிவப்பு நிற உடையணிந்து வரும் நடிகர் திலகதைப் பார்த்ததும் ஆரம்பித்த கைதட்டல் அவர் மக்களிடையே பேசும் வசனங்களுக்குயெல்லாம் [குறிப்பாக இரண்டு முறை அவர் வெவ்வேறு modulation-ல் சொல்லும் இதே போல் இதே போல் என்ற வார்த்தை எல்லாம் பெரிதாக வரவேற்கப்பட்டன]. உடன் வந்த தர்மம் எங்கே பாடல் காட்சி, அதன் பிறகு ஆற்றின் கரையில் நடக்கும் சண்டைக் காட்சி. அதில் இரண்டு கைகளிலும் கத்தி பிடித்து சற்றே உயரமான மணல் திட்டிலிருந்து நடிகர் திலகம் குதிக்கும் காட்சியெல்லாம் ஆஹா ஓஹோ!

பிடித்து செல்லப்பட்ட ஊர் மக்களை விடுவிக்க ஒற்றை கண் தெருப் பாடகனாக வந்து பாடும் வீரமெனும் பாவைதனை கட்டிக் கொள்ளுங்கள் பாடலுக்கும் சரி பாடல் முடிவில் கிடாரின் பின்புறத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்து சுடும் ஸ்டைல் அதன் பிறகு அதே காட்சியில் பிச்சுவா கத்தி வீசும் வேகம், கை அசைவு. தொடர்ச்சியாக வரும் காட்சிகளை பார்க்க பார்க்க நிற்காமல் வரும் அலைகளைப் போல் கைதட்டல்கள் கோஷங்கள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.

மீண்டும் ஒரு முறை ஊர் மக்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு கோட்டைக்குள் கம்பங்களோடு சேர்த்து கட்டப்பட்டு உயிரோடு எரித்து கொல்லும்படி நம்பியார் உத்தரவிட கோட்டையை கைப்பற்றும் முயற்சியில் 5 பேர் போக வேண்டும் என முடிவு செய்வது அதற்கு சிவப்பு வண்ண அட்டையை வைத்திருப்பவர்கள்தான் போக வேண்டும் என்பது, செங்குத்தான மலையின் மீது கயிறை கட்டி ஏறுவது, மேலே ஏறி செல்லும் ஒவ்வொருவரும் சிப்பாயிடம் மாட்டிக் கொள்வது, தந்திரமாக அவனை வீழ்த்தி விட்டு மாளிகைக்குள் புகுந்து பின், நடிகர் திலகம் நம்பியார் போல் உடையணிந்து [பையில் அதற்கான ஆயத்த உடைகளை கொண்டு வந்திருப்பார்] சிப்பாய்களை கட்டளையிடுவது இப்படி படம் விறுவிறுப்பின் உச்சிக்கே போக அப்போது நம்பியார் அங்கே வந்து விடுவார்.

இருவரும் மெய்க்காப்பாளனிடம் தான்தான் உண்மையான ராஜ பிரதிநிதி என்று கூற அந்த கைகலப்பில் நடிகர் திலகம் வேடம் கலைந்து விட ராஜ பிரதிநிதியின் உடைகளை முற்றிலுமாக களைந்து விட்டு white and white-ல் நடிகர் திலகம் நின்று அங்கே சுவரில் மாட்டியிருக்கும் நீண்ட உடை வாளை எடுத்து நீட்டி காலை வளைத்து நின்று ஒரு போஸ் கொடுப்பார். அப்போது ஆரம்பித்தது இடியோசை. கத்தி சண்டையின் போது ஒரு கையை இடுப்பில் வைத்து காலால் வேகமான ஸ்டெப்ஸ் போட்டு வலது கையால் கத்தியை சுழற்றி சண்டை போடும்போதெல்லாம் வானம் இடிப்பட்டது பூமி பொடிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நிலை அது.

சண்டையில் தோற்று நம்பியார் ஆற்றில் குதித்து போய்விட கொடுங்கோல் ஆட்சி ஒழிந்து மக்கள் நடிகர் திலகத்தை தோளில் ஏற்றி அரியணையேற்றும் காட்சியோடு இடைவேளை. ஒரு சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின்போது the atmosphere was electric என்று எழுதுவார்கள். அதாவது அந்த இடத்தில வீசும் காற்றை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற அர்த்தத்தில். அன்றைய தினம் மதுரை ஸ்ரீதேவி தியேட்டரில் அத்தகைய சுற்றுசூழல்தான் நிலவியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

(தொடரும்)

அன்புடன்

eehaiupehazij
24th October 2014, 08:16 AM
இருவரும் மெய்க்காப்பாளனிடம் தான்தான் உண்மையான ராஜ பிரதிநிதி என்று கூற அந்த கைகலப்பில் நடிகர் திலகம் வேடம் கலைந்து விட ராஜ பிரதிநிதியின் உடைகளை முற்றிலுமாக களைந்து விட்டு white and white-ல் நடிகர் திலகம் நின்று அங்கே சுவரில் மாட்டியிருக்கும் நீண்ட உடை வாளை எடுத்து நீட்டி காலை வளைத்து நின்று ஒரு போஸ் கொடுப்பார். அப்போது ஆரம்பித்தது இடியோசை. கத்தி சண்டையின் போது ஒரு கையை இடுப்பில் வைத்து காலால் வேகமான ஸ்டெப்ஸ் போட்டு வலது கையால் கத்தியை சுழற்றி சண்டை போடும்போதெல்லாம் வானம் இடிப்பட்டது பூமி பொடிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நிலை அது. by Murali Sreenivas

Dear Murali Sir. From your explicit view point 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ', your spontaneous description of this scene in NT's 'Dharmam Enge' is really exceptionally marvelous and deserves a standing ovation for your inherent latent talent for narrations of events. But if Murali Sir doesn't take otherwise.... It only gives an implicit feel of hearing a high class NT's 'olichithram' or a fast paced 'cricket commentary' in FM radio,(when we do not have an option of visual aids), as we only feel without seeing that scene. If Murali Sir had incorporated that visual feast of video clipping certainly we would have been taken to share your cloud o' 9 thrill and enjoyment. Sometimes extensive descriptions to the intrinsic satisfaction of a prolific writer like you may get an intensive impulse-response reaction and an impressive proliferation of the essence of your write-up into the viewer's mind if one actually sees that scene...after all hearing is only a feeling but seeing is believing and doing is perceiving! This is out and out my personal view only Sir.

joe
24th October 2014, 11:55 AM
நடிகர் திலகத்தோடு அறிமுகமாகி இலட்சிய நடிகராக வலம் வந்த நடிகர் திலகத்தோடு எண்ணற்ற படங்களில் நடித்த எஸ்.எஸ்.ஆர் மறைந்தார் .அன்னாருக்கு அஞ்சலி

KCSHEKAR
24th October 2014, 12:17 PM
நடிகர்திலகத்தின் முதல் படமான பராசக்தியில் அறிமுகமாகி, பிறகு நடிகர்திலகத்துடன் பல திரைப்படங்களில் இனைந்து குணச்சித்திர வேடங்களில் நடித்த இலட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட திரு.S .S ராஜேந்திரன் அவர்களின் மறைவுக்கு, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வோம்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SSR/SSR1002_zps87181e6f.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SSR/SSR1002_zps87181e6f.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SSR/SSR2003_zps30c062d0.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SSR/SSR2003_zps30c062d0.jpg.html)

RAGHAVENDRA
24th October 2014, 12:56 PM
மறைந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அந்நாளைய கலைஞர்களின் அனுபவங்களை தமிழ்த் தொலைக்காட்சிகள் இனியாவது பதிவு செய்து தமிழ்த் திரையுலகின் வரலாற்றுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே எஸ்.எஸ்.ஆரின் மறைவு நமக்கு உணர்த்தும் படிப்பினையாகும்.

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு பழைய படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கென ஒதுக்கி அவர்களுடைய அனுபவங்களை பேட்டிகளாகத் தொகுத்துத் தந்தால் நல்லது.

எஸ்.எஸ்.ஆருக்கு நமது உளப்பூர்வமான அஞ்சலி.

ராஜா ராணி திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன் எஸ்.எஸ்.ஆர்.

https://www.youtube.com/watch?v=kYGv_MZpYnE&list=PLWvxehVqae1caQC9d5VPyFWzukD-vRs38&index=26

RAGHAVENDRA
24th October 2014, 12:58 PM
ராகுல்
கீழ் வானம் சிவக்கும் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு சுவாரஸ்யமாக உள்ளது.
தொடர்ந்து மேலும் பல படங்களைப் பற்றிய தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

eehaiupehazij
24th October 2014, 02:16 PM
வருந்துகிறோம்
SSR had a close association with our NT both on-screen and off-screen since their debut film Parasakthi (1952). Like GG, SSR was also a favourite tandem actor for NT in many of his movies, particularly Aalayamani, Shanthi, Kungumam and Pachchai Vilakku

NT தலைமுறை நடிகர்களில் இறுதி விழுதான இலட்சிய நடிகர் ssr அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பே! அவர்தம் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறோம்.

https://www.youtube.com/watch?v=WeVngwG66OQ

https://www.youtube.com/watch?v=FlkDNOi21i8

Russellbpw
24th October 2014, 04:29 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0049_zpsa6314509.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0049_zpsa6314509.jpg.html)

Murali Srinivas
24th October 2014, 05:14 PM
இன்று காலை பேப்பரில் எஸ்எஸ்ஆர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருக்கிறார் என்ற செய்தியைப் படித்தவுடன் நேற்றைய முன்தினம் இரவு அருமை நண்பர் சுவாமியோடு உரையாடிக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. அன்று பேசும்போது ஒரு விஷயத்தை சுவாமி பகிர்ந்துக் கொண்டார். மாதம் இருமுறை வெளியாகும் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் ஒரு புதிய பகுதி செப்டம்பர் 1 இதழிலிருந்து தொடங்கியிருப்பதாகவும் அதில் இதுவரை சிவாஜி, எம்ஜிஆர் ஜெமினி மற்றும் எஸ்எஸ்ஆர் பற்றிய செய்திகள் [நான்கு இதழ்களில் நான்கு பேர்] பிரசுரமாகியிருப்பதாகவும் தெரிவித்த சுவாமி அதில் எஸ்எஸ்ஆர் பற்றிய பதிவில் அவர் மொத்தம் 80 படங்களில் நடித்திருப்பதாக வந்திருக்கிறது என்றார். அவற்றில் 52 படங்களில் நாயகனாகவும், 20 படங்களில் இரண்டாம் கதாநாயகனாகவும் 8 படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருக்கிறார் என்ற செய்தியையும் சொன்னார். இதை படித்தவுடன் நண்பர் சுவாமிக்கு அந்த 80 படங்களையும் பட்டியலிட வேண்டும் என்று ஒரு ஆசை தோன்ற அதை செயலாக்க முனைந்திருக்கிறார். படங்களின் பட்டியல் அவை வெளியான தேதியுடன் எழுத தொடங்கிய அவர் விரைவிலே 79 படங்களை பட்டியலிட்டும் விட்டார். 80-வது படம் எதுவென்று தெரியவில்லை என்ற அவர் அந்த லிஸ்டை படித்துக் காண்பித்து எனக்கு தெரியுமா என்று கேட்டார். இரட்டை மனிதனுக்கு பிறகு எனக்கு எதுவும் நினைவிற்கு வரவில்லை. விரைவில் அந்த பட்டியலை நிறைவு செய்து சினிமா எக்ஸ்பிரஸ் இதழிற்கு அனுப்ப வேண்டும் என்றார். நான் கூட ஏன் சினிமா எக்ஸ்பிரஸிற்கு அனுப்புகிறீர்கள் பேசாமல் எஸ்எஸ்ஆர் அவர்களிடமே அதை கொடுத்தால் சந்தோஷப்படுவார் என்றேன்.

இன்று காலை தினமலர் பேப்பர் பார்த்தவுடன் அது நினைவிற்கு வந்தது. அதில் எஸ்எஸ்ஆர் நடித்த கடைசி படம் தம் என்று இருந்தது. அது சுவாமி வாசித்துக் காண்பித்த பட்டியலில் இல்லை. இதை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது எஸ்எஸ்ஆர் அவர்களின் மறைவு செய்தி அந்த mood -யே மாற்றி விட்டது.

எஸ்எஸ்ஆர் செந்தமிழை சிறந்த முறையில் பேசக் கூடியவர். சாதாரண பேச்சு தமிழில் கொஞ்சம் Colloquial வாடை அடிக்கும். நடிகர் திலகத்துடன் 18 படங்களில் இணைந்து நடித்துள்ளார். அதில் மனோகரா தெலுங்கு மற்றும் ஹிந்தி பின் தாயே உனக்காக [இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் கிடையாது] ஆகியவற்றை நீக்கி விட்டால் 15 படங்கள். எஸ்எஸ்ஆரின் சிறந்த படங்கள் என்று எடுத்தோமென்றால் நிச்சயமாக அதில் நடிகர் திலகத்துடன் அவர் இணைந்த நடித்த படங்கள்தான் அதிகமாக இடம் பெறும். குறிப்பாக ஆலய மணி, பச்சை விளக்கு மற்றும் கை கொடுத்த தெய்வம். அதற்கு அடுத்த வரிசையில் தெய்வப்பிறவி, பழனி மற்றும் சாந்தி.

நடிகர் திலகம் இவரை ராஜு என்றே அழைப்பார். கட்டபொம்மனுக்கு போட்டியாக சிவகங்கை சீமை படத்தை எஸ்எஸ்ஆர் எடுத்த போதும் அவர் மீது விரோதம் பாராட்டாமல் தெய்வப்பிறவி படத்தில் எஸ்எஸ்ஆர் நடிப்பதை எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அனுமதித்தவர் நடிகர் திலகம். அரசியல் வேறுபாடுகள் வந்தபோதும் அந்த நட்பு தொடர்ந்தது. எதிரொலி படத்தில் எஸ்எஸ்ஆர் நடிப்பதற்கும் காரணமாக இருந்தவர் நடிகர் திலகம்.

எஸ்எஸ்ஆர் அவர்களுக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு தனி சிறப்பு உண்டு. அதாவது உலகத்திலேயே முதன் முதலாக ஒரு நடிகர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆன பெருமை எஸ்எஸ்ஆர் அவர்களையே சாரும். 1962 சட்டமன்ற பொது தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967-ற்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 1980-84-ல் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். சிறுசேமிப்பு திட்ட குழு தலைவராகவும் இவர் இருந்தார் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்தார்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

அன்புடன்

Russellisf
24th October 2014, 05:15 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps78cc9e95.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps78cc9e95.jpg.html)

Russellisf
24th October 2014, 05:19 PM
https://www.youtube.com/watch?v=YU-b1hNh0g0

Murali Srinivas
24th October 2014, 06:36 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வினோத் சார்!

இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

Russellbpw
24th October 2014, 09:12 PM
இதுபோன்ற பெருமக்கள் நடிகர் திலகம் தவிர அவர் காலத்தில் வேறு எவரை சந்தித்து மகிழ்ந்தார்கள் ?
திறமையை மதித்த பெருமக்கள் வாழ்க...!

நடிகர் திலகத்திற்கு GOLDEN KEY OF NAYAGARA வழங்கப்பட்டது என்று உலகமே கூறி பாராட்டும்போது..ஒரு சில ஞான சூனியங்கள் மட்டும் அதற்க்கு ஆதாரம் கேட்டனர் ஒரு காலத்தில்.

அந்த சூநியங்களுக்காக இதோ ...

மையம் திரியில் முதன் முறையாக நடிகர் திலகம் அவர்களுக்கு வழங்கப்பட்ட "GOLDEN KEY OF NAYAGARA " அதாரம் பதிவிடப்படுகிறது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0014_zps24247bfd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0014_zps24247bfd.jpg.html)

Russellbpw
24th October 2014, 09:22 PM
திரை உலக ஜோதியுடன் ஆசிய ஜோதி மகிழ்ந்து உரையாடுவதை பார்க்க கண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.....

ஒரு சிலர்க்கு வயிறு பற்றி எறிந்தாலும், உண்மை தமிழர்க்கு இது மகிழ்ச்சி மற்றும் பெருமை !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0010_zps15f0dd97.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0010_zps15f0dd97.jpg.html)

Russellbpw
24th October 2014, 09:25 PM
சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் படங்கள் யாரை வைத்து எடுத்தாலும்...நமது நடிகர் திலகம் அவர்களுடன் அவர் எந்தளவிற்கு உறவு வைத்திருந்தார், அன்யோன்யமாக இருந்தார் என்பதற்கு இந்த ஒரு புகைப்படம் ஆதாரம் போதுமே !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0009_zps1d421943.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0009_zps1d421943.jpg.html)

Russellbpw
24th October 2014, 09:34 PM
பல வருடங்கள் முன்னால் நடிகர் திலகம் அவர்கள் ராணி எலிசபெதிர்க்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் என்று ஒரு புளுகு அவிழ்த்து விடப்பட்டது. ராணி எலிசபெத் நடிகர் திலகம் அவர்களுக்கு புதியவரல்ல. ராணி எலிசபெத் அவர்களுடைய DUKE OF EDIINBARO அவர்களுடன் நடிகர் திலகத்திற்கு நல்ல ஒரு நட்பு இருந்ததை இந்த ஆவணம் மூலம் அறியலாம் !

தனது நடிப்பு திறமை ஒன்றை மட்டுமே மூலதனமாக கொண்டு உலகை ஆண்ட அரச பரம்பரையை தனது கலைக்கு அடிபணிய வைத்த உலக மகா நடிகர் நம்முடைய நடிகர் திலகம்.

திராவிட காழ்புணர்ச்சி கொண்ட பொறாமைகார அரசியல்வாதிகள் அனைவரும் இதை கண்டு இன்று வரை பொறாமையால் நடிகர் திலகத்தை கண்டு வெதும்புகின்றனர் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0007_zps9173a4bf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0007_zps9173a4bf.jpg.html)

Russellbpw
24th October 2014, 09:37 PM
கடல் கடந்தாலும் அது ஐரோபாவோ அல்லது ஆசியாவோ அனைத்து மன்னர்களும் சக்ரவர்த்திகளும் நாடால்பவர்களும் ஒரு நடிகரிடம் சரணாகதி அடைந்தது - நமது நடிப்பு சக்கரவர்த்தி நடிகர் திலகத்திடம் மட்டுமே !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0006_zps16cf1c98.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0006_zps16cf1c98.jpg.html)

Russellbpw
24th October 2014, 09:45 PM
Field Marshal Kodandera Madappa Cariappa - The first Indian Commander-in-Chief of the Indian Army and led the Indian forces on the Western Front during the Indo-Pakistan War of 1947.

He is among only two Indian Army officers to hold the highest rank of Field Marshal (the other being Field Marshal Sam Manekshaw). His distinguished military career spanned almost three decades, at the highest point of which, he was appointed as the Commander-in-Chief of the Indian Military in 1949.

ஜெனரல் கரியப்ப - தமிழ் திரையுலகில் அவர் பெருமதிப்பு கொண்ட ஒரே நடிகர் நமது நடிகர் திலகம் மட்டுமே !

இந்திய சீன போரை மையமாக கொண்ட ரத்த திலகம் படம் பார்த்து இவர் நம் நடிகர் திலகம் மீது பெரு மதிப்பு கொண்டார் !

நடிகர் திலகம் அவர்களை காண ஆவல் கொண்டு அவர் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் !!

திரை உலகில் சக்ரவர்த்தி என்றால் அது நமது நடிகர் திலகம் மட்டுமே என்பதை இனியாவது அவர் மீது காழ்புணர்ச்சி கொண்ட பலர் புரிந்துகொள்ளட்டும்



http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0001_zps6692c01d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0001_zps6692c01d.jpg.html)

Russellbpw
24th October 2014, 09:49 PM
உலகிலயே ஒரு நடிகருக்கு முதன் முதலாக 80 அடி உயர கட் அவுட் வைத்தது நமது நடிகர் திலகத்திற்கு மட்டுமே ! - நடிகர் திலகதிற்கு வணங்காமுடி படத்திற்கு வைக்கப்பட்டது.


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0013_zps54574c83.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0013_zps54574c83.jpg.html)

Russelldwp
24th October 2014, 10:52 PM
திருச்சியில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழா பற்றிய செய்திதாள்

https://pbs.twimg.com/media/B0umvzvCEAEq5z8.jpg

https://pbs.twimg.com/media/B0um7FLCcAEUcd0.jpg

Harrietlgy
24th October 2014, 11:55 PM
Mr. RKS one correction that not a "Kuravanji" that film was "Vanagamudi". Sorry don't mistake me.

Murali Srinivas
25th October 2014, 12:30 AM
<Dig>

அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

சிவகங்கை சீமை கண்ணதாசன் தயாரித்த படம் என்பது எனக்கும் தெரியும். பாடல்கள் பலவிதம் திரியை நீங்கள் படித்திருந்தால் நடிகர் திலகம் திருப்பதி சென்று திரும்பியபோது ஏற்பட்ட நிகழ்வுகள் அவற்றின் வழியாக நடிகர் திலகம் கண்ணதாசன் இருவருக்கு இடையே ஏற்பட்ட பிணக்கு பற்றியும் அது எப்படி கட்டபொம்மன் சிவகங்கை சீமை படங்களின் தயாரிப்பின்போது உச்சகட்டத்திற்கு எட்டியது பற்றியும் அதன் பிறகு எப்படி பாகப்பிரிவினை படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்தனர் என்பதையும் விரிவாகவே எழுதியுள்ளேன்.

இன்றைய பதிவில் எஸ்எஸ்ஆர் எடுத்த என்று குறிப்பிட காரணம் உண்டு. கட்டபொம்மன் நாடகம் திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டபோது வெள்ளைய தேவன் வேடத்தில் எஸ்எஸ்ஆர் நடிக்க வேண்டும் என்று நடிகர் திலகம் பெரிதும் விரும்பினார். ராஜு உனக்குத்தான் அந்த வேடம் என்று பந்துலுவிடம் சொல்லி வைத்திருக்கிறேன் என்று நடிகர் திலகம் நேரில் கூறியும் அதை ஏற்காமல் சிவகங்கை சீமை படத்தை ஒப்புக் கொண்டு எஸ்எஸ்ஆர் நடித்தார். அதனாலேயே கடைசி நிமிடத்தில் ஜெமினி அந்த வெள்ளைய தேவன் ரோலில் நடிக்க நேர்ந்தது. நடிகர் திலகம் கேட்டுக் கொண்டும் நடிக்காமல் தனது சொந்தப் படம் போலவே எஸ்எஸ்ஆர் சிவகங்கை சீமையில் கவனம் செலுத்தினார். அதை சுட்டிக் காட்டவே அப்படி எழுத நேர்ந்தது.

அந்த வார்த்தைக்கு தயாரிப்பாளர் என்ற முறையில் நீங்கள் அர்த்தம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அப்படி எழுதினது தவறுதான். இப்போது திருப்தியா நண்பரே? [அப்பா! தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற வாக்கியம் எப்படியெல்லாம் ஒரு மனிதனை படுத்துகிறது?]

அன்புடன்

மற்ற நண்பர்கள் இடையூறுக்கு மன்னிக்கவும்

<end dig>

RAGHAVENDRA
25th October 2014, 07:04 AM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/s720x720/1904019_811110022273005_960816680502703030_n.jpg?o h=c660af791653a8abcb598bf39ed01752&oe=54ED690B&__gda__=1424472804_2d87a49b1ccae7347fab7b3af253297 6

அழைப்பிதழை அனுப்பித் தந்த Dr.முருகேசன், முத்தமிழ் இலக்கிய சங்கமம், அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

இங்கிலாந்து வாழ் தமிழ்ப் பெருமக்கள் திரளான அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.

eehaiupehazij
25th October 2014, 07:34 AM
கட்டபொம்மன் நாடகம் திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டபோது வெள்ளைய தேவன் வேடத்தில் எஸ்எஸ்ஆர் நடிக்க வேண்டும் என்று நடிகர் திலகம் பெரிதும் விரும்பினார். ராஜு உனக்குத்தான் அந்த வேடம் என்று பந்துலுவிடம் சொல்லி வைத்திருக்கிறேன் என்று நடிகர் திலகம் நேரில் கூறியும் அதை ஏற்காமல் சிவகங்கை சீமை படத்தை ஒப்புக் கொண்டு எஸ்எஸ்ஆர் நடித்தார். அதனாலேயே கடைசி நிமிடத்தில் ஜெமினி அந்த வெள்ளைய தேவன் ரோலில் நடிக்க நேர்ந்தது. by Murali Srinivas

அமரர் ராஜேந்திரன் அவர்கள் நல்ல தமிழ் உச்சரிப்போடு ஓரளவு மிதமானதொரு நடிப்பையும் நல்கியவர் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனாலும் அவரால் திரையுலக மூவேந்தர் வரிசையில் இடம்பெற இயலவில்லை. குறிப்பிடத்தகுந்த அளவில் தனிக் கதாநாயகனாக வெற்றிப்படங்களையும் அவரால் தரஇயலவில்லை. அரசியல் வேறுபக்கம்! ஒருமுறை அவர் பெற்ற 'சாதனை' வெற்றியையும் அவரால் எத்தனைமுறை தக்கவைக்க முடிந்தது?
நடிகர்திலகத்தின் இனிய நண்பர்தான். ஆனாலும் சிவகங்கைசீமை மூலம் தானும் பெரிய நட்சத்திர அந்தஸ்தை அடைந்துவிட வேண்டும் எனும் (அவர் கோணத்தில் தவறில்லைதானே!) உந்துதலே வீரபாண்டியகட்டபொம்மனில் ஜெமினிகணேசன் தன் இனிமையான இதமானநடிப்பினால் நிறைவுசெய்த பாத்திரத்தை இழக்க நேரிட்டது. நடிப்பின் இமயம் என்றுமே பெருந்தன்மையின் சிகரம். இதுமாதிரி மனித உணர்வுக்கள நிகழ்வுகளை மனதில் இருத்தி சகநடிகர்களை தருணம் பார்த்து பழிவாங்கியதில்லை. பின்னரும் எதையும் பொருட்படுத்தாது எதிரொலி திரைப்படம் வரை SSR அவர்களுடன் நடித்திடவும் மறுத்ததில்லை. அமர்த்துவம் அடைந்துவிட்டவரின் எல்லோருக்கும் தெரிந்த செய்திகளை 'அரசியலாக்கும் முயற்சிகளை பொருட்படுத்தாது' அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி பெருமை சேர்ப்போமே!

SSR would have regretted for his misguided decisions after tasting the debacle with Sivaggangaiseemai against the super duper success of VPKB and for having missed the pivotal role gone to GG with Padmini as the pair in a color grandeur!!

https://www.youtube.com/watch?v=UamHWAa6xGk

Richardsof
25th October 2014, 08:24 AM
இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் சார்

உங்களின் அன்பான வாழ்த்துக்கு என் இதயபூர்வமான நன்றி .

sivaa
25th October 2014, 09:25 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/1924417_668803709893235_813114734467995725_n_zps6d 085a81.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/1924417_668803709893235_813114734467995725_n_zps6d 085a81.jpg.html)

sivaa
25th October 2014, 09:25 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/10686856_656066394500300_7691363336451888920_n_zps 55242533.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/10686856_656066394500300_7691363336451888920_n_zps 55242533.jpg.html)

Russellxss
25th October 2014, 09:50 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/img005_zps3d3b9954.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/img006_zps3de2606a.jpg

[SIZE=5]இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.[/SIZE

Russellxss
25th October 2014, 09:52 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/img008_zpsd2eb753a.jpg


இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
25th October 2014, 09:53 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/img010_zpsbae2cd52.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
25th October 2014, 09:54 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/img007_zps83f333ec.jpg


இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

Russellxss
25th October 2014, 10:18 AM
http://www.nadigarthilagamsivaji.com/Photos/Home/Kavithai1.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

Russellxss
25th October 2014, 10:19 AM
http://www.nadigarthilagamsivaji.com/Photos/Home/Kavithai2.jpg


இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

siqutacelufuw
25th October 2014, 12:12 PM
Dear Gopal,

Please convey my BELATED WISHES to your younger Son Mr. Vijay. I wish him for a healthy life for ever.

Thank you,

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

Russellbpw
25th October 2014, 12:40 PM
KANNADA EVER GREEN HERO Dr. RAJKUMAR ABOUT OUR NADIGAR THILAGAM

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0027_zpsed307c73.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0027_zpsed307c73.jpg.html)

Russellbpw
25th October 2014, 12:48 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0018_zpsda91edc3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0018_zpsda91edc3.jpg.html)

Russellbpw
25th October 2014, 12:51 PM
Nadigar Thilagam with N.T.R, Hindi Film Actor " Captain Rajkumar ( Ex Serviceman) @ the back is C.L.Anandan

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0015_zps8e722b44.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0015_zps8e722b44.jpg.html)

Russellbpw
25th October 2014, 12:54 PM
With Veteran Hindi Producer and Stalwart - Ramanand Sagar & Beauty Queen Mala Sinha during the stage play - JEHANGIR


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0012_zps92d82563.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0012_zps92d82563.jpg.html)

Russellbpw
25th October 2014, 01:05 PM
Nadigar Thilagam with yet another Giant of Bollywood - B.R. Chopra

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0011_zps85e65daf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0011_zps85e65daf.jpg.html)

Russellbpw
25th October 2014, 01:17 PM
Nightingale of India's Appreciation about Clarke Gable of India

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0023_zpsca46ecc5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0023_zpsca46ecc5.jpg.html)

Russellbpw
25th October 2014, 01:25 PM
THE ONLY ONE PM WHO DESERVED THE WORD " AMMA " & STOOD BY THE MEANING OF THAT WORD !!! .......THESE DAYS WE SEE LOT OF PUBLICITY AMMAS

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0019_zps7cd6db5f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0019_zps7cd6db5f.jpg.html)

Russellbpw
25th October 2014, 01:39 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0020_zpsf15fb230.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0020_zpsf15fb230.jpg.html)

Russellbpw
25th October 2014, 01:42 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0004_zps7456759b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0004_zps7456759b.jpg.html)

joe
25th October 2014, 05:24 PM
SSR மறைவுக்கு நான் முகநூலில் இட்ட பதிவொன்றில் ரஜினிராம்கி (முன்பு இந்த மன்றத்தில் இருந்தவர்) இடக்கு முடக்காக சொல்லப்போய் நடந்த சிறிய விவாதம்
https://www.facebook.com/cdjmilton/posts/10152788362551950

Russellbpw
25th October 2014, 06:35 PM
ssr மறைவுக்கு நான் முகநூலில் இட்ட பதிவொன்றில் ரஜினிராம்கி (முன்பு இந்த மன்றத்தில் இருந்தவர்) இடக்கு முடக்காக சொல்லப்போய் நடந்த சிறிய விவாதம்
https://www.facebook.com/cdjmilton/posts/10152788362551950

இது விவாதம் அல்ல...விதண்டா வாதம். இது போல ஆட்கள் இலக்கியவாதி என்பது இலக்கியத்துக்கே இழுக்கு. கட்டபொம்மனின் bannerman ....அதில் குறிப்பிடும் காலங்கள்...நிகழ்சிகள் இவை அனைத்தும் வரலாற்றின்படி எடுக்கப்பட்டது...

அந்த இலக்கிய வாதி மருது சஹோதரர்கள் பற்றி கண்ணதாசன் எடுத்த சிவகங்கை சீமை வரலாற்றின் படி எடுத்திருந்தார ?

..வரலாற்றுப்படி...கட்டபொம்மன் காலத்திற்கு பிறகு ஊமைத்துரை தப்பி ஓடி மருதுபாண்டியர் அடைகலமாவதிலிருந்து மருதுபாண்டியர் கதை தொடங்குகிறது...இது எப்படி கட்டபொம்மனுக்கு போட்டியாகும் ?

மேலும் கட்டபொம்மன் திரைப்படம் வந்த ஒரு மூன்று மாத காலத்திற்கு பிறகு மருது பாண்டியர் வரலாறு சிவகங்கை சீமை வந்திருந்தால் அந்த படத்தின் தலையெழுத்தே வேறு...!

கண்ணதாசன் வீண் அஹம்பாவம் கொண்டு அப்போதைய அரசியல் வாதிகளோடு கூட்டு சேர்ந்து அவர்களின் தூண்டுதலால் EGO அதிகரித்து தனது அவசர செயலால் நடிகர் திலகத்திற்கு போட்டியாக செய்வதாக நினைத்து படத்தை வெளியிட்டு மாட்டி கொண்டார்....இது உண்மை ! இது தெரியாமல் இலக்கியவாதி என்ற போர்வையில் கண்டதையும் உளறி கொட்டி இருக்கிறார் அந்த காழ்புனற்சிகாரர் !

ஒரு வேடத்தை ஏற்கும்போது வேடம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது...

அது போல ஒரு நடிகர் தமிழ் நன்றாக கணீரென்று பேசலாம்...

ஆனால் தமிழின் உயிர் நாடி எங்கிருக்கிறதென்று ஆராய்ந்து முருக்கவேண்டிய இடத்தில் முறுக்கி...தளர்த்தவேண்டிய இடத்தில் தளர்த்தி, நிமிர்த்தவேண்டிய இடத்தில் நிமிர்த்தி அந்த வசனத்திற்கு ஏற்ற அந்த வசனம் பேசும் இடம், காலம் மற்றும் நேரத்திற்கேற்ப முகபாவத்துடன் பேசினால்தான் அந்த நடிப்பு மக்களின் நாடி நரம்புகளில் சென்றடையும்....

திரு ssr அவர்கள் நன்றாக வசனம் ஒப்பிக்ககூடியவர் ...மறுப்பதற்கில்லை...அது மட்டுமே ஒரு கதாபாத்திரத்தை கையாள போதாது ...இது தான் சிவகங்கை சீமை படத்தின் தோல்வி காரணம்...

கட்டபொம்மனில் சண்டை காட்சிகள் இல்லை...ஆனால் போர்கள காட்சி உண்டு...அது படத்தின் தனித்தன்மை. நடிகர் திலகம் கதாநாயகன் என்பதனால் ஒரு 100 அல்லது 200 வீரர்களை வாளால் தாக்கி சண்டையிட்டு கொள்வது போல (larger than life ) காட்சிகள் கிடையாது. !

மேலும் நடிகர் திலகத்தின் நடிப்பை தாங்கிய படம் ! அதன் அசுர பலத்தின் முன்னால் மற்ற நடிகர்கள் என்ன வேடம் தாங்கினாலும் அது அவ்வளவு எளிதாக மக்களால் பாராட்டு பெறாது...காரணம்.....நடிகர் திலகம் என்றால் கதாபாத்திரம்...கதாபாத்திரம் என்றால் நடிகர் திலகம்.

இதை கூறும்போது திரு ssr சிறந்த நடிகர் என்பதில் மாற்றுகருத்தில்லை...!

eehaiupehazij
25th October 2014, 07:03 PM
ஒரு வேடத்தை ஏற்கும்போது வேடம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது...அது போல ஒரு நடிகர் தமிழ் நன்றாக கணீரென்று பேசலாம்...ஆனால் தமிழின் உயிர் நாடி எங்கிருக்கிறதென்று ஆராய்ந்து முருக்கவேண்டிய இடத்தில் முறுக்கி...தளர்த்தவேண்டிய இடத்தில் தளர்த்தி, நிமிர்த்தவேண்டிய இடத்தில் நிமிர்த்தி அந்த வசனத்திற்கு ஏற்ற அந்த வசனம் பேசும் இடம், காலம் மற்றும் நேரத்திற்கேற்ப முகபாவத்துடன் பேசினால்தான் அந்த நடிப்பு மக்களின் நாடி நரம்புகளில் சென்றடையும்.. quoted by RKS

Well said RKS Sir.

வீரபாண்டிய கட்டபொம்மனுடன் ஒரே கதைக்கரு கொண்ட வேறு எந்தப்படத்தையும் ஒப்பிடுவது 'கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி'க்குச் சமம். விசுவரூப நடிப்புத்தெய்வத்தின் முன்னே கொசுவைப்போல!

We do not underestimate SSR but he is in no way comparable with NT, who has made VPKB a household name by his portrayal of the larger than life character with elan! Mere dialogue delivery wont project the characterization. SGS miserably failed due to this fact. Even children prefer the modulations of dialogue delivery by NT in fancy competitions in their disguise as VPKB!! The foot print made by NT in the role of VPKB is indelible and the movie itself is of epic proportions on par with NT's magnum opus Karnan.

மழலையரும் மனதில் இருத்திட விழையும் பெருமை உலகிலேயே நடிகர்திலகத்துக்கு மட்டும்தான் !!!

https://www.youtube.com/watch?v=HKf4dzUCgjg

https://www.youtube.com/watch?v=D2EfQsJwu5w

https://www.youtube.com/watch?v=1rYON4ypHLU

KCSHEKAR
26th October 2014, 10:28 AM
The Hindu
Blast from the past: Paavai Vilakku 1960

RANDOR GUY

Sivaji Ganesan, ‘Sowcar’ Janaki, M.N. Rajam, Pandari Bai, Sandhya, Asokan, K. Sarangapani, ‘Kumari’ Kamala, Lakshmi Prabha, C.K. Saraswathi, A. Karunanidhi, T.P. Ponnusami Pillai, V.K. Ramasami, C.T. Rajakantham, Mohan, K.R. Chellam, P.S. Sivabhagyam, Sayeeram, Sethupathi, Radhabai and ‘Baby’ Vijaya.

Akilan (P.V. Akilandam, 1922-1988) was hailed as one of the greatest Tamil writers, whose fame spread across the globe. His works have been translated into many languages, including Czechoslovakian, Russian, French and Japanese. He has published 45 books on a variety of subjects, most of them rated as classics. He has won several awards for his novels, short stories and other writings. He gave up studies to join the Freedom Struggle and later the Railway Mail Service. Then he joined the All India Radio (AIR) where his creative talents began to blossom. Soon he became a top writer, producing an enormous body of work in varying genres, which won him international recognition.

Kayalvizhi was a historical novel of his, which was made into a movie titled Maduraiyai Meetta Sundarapandian, directed by MGR who also played the lead in it. Paavai Vilakku is another immortal classic of Akilan, which was produced as a movie by editor T. Vijay and Coimbatore-based cinematographer V.K. Gopanna. The novel appeared at first as a successful serial in the Tamil magazine Kalki and attracted wide attention. It was scripted by noted writer, director, and Tamil cinema icon A.P. Nagarajan. The film was directed by K. Somu, who had worked with the American Tamil filmmaker Ellis. R. Dungan.

Paavai Vilakku was produced at Film Centre and Vauhini Studios, both of which sadly do not exist today. The film has many songs, and dance numbers executed by the legendary Bharatanatyam dancer ‘Kumari’ Kamala who also plays a major role in the movie. The lyrics were by A. Marudhakasi, except one song by Subramania Bharathi. K.V. Mahadevan composed the music.

Well-known singers C.S. Jayaraman, P. Susheela, Sulamangalam Rajalakshmi, and L. R. Easwari lent their voices. Interestingly, there was also a nagaswaram interlude by Karukurichi Arunachalam and his party.

The highlight of the song ‘Vanna Thamizh penn oruthi en ethiril vandhaal....’ is that the opening line is uttered by Sivaji Ganesan, before playback singer C.S. Jayaraman takes over. This was a novel attempt in Tamil cinema then and the way Sivaji says the lines made the song a hit.

The film has a novel beginning. Sivaji sits in a park with his friends, credited in the titles as guest artistes K. Balajee, Prem Nazir, Sriram and M.R. Santhanam. Holding a copy of the novel Paavai Vilakku in his hands, Sivaji talks about its greatness to his friends, and then begins to read it.

Now the film cuts to the beginning of the story in which he plays the hero. The heroine is Sowcar Janaki, the woman he marries, and they have a child Kalyani. Kumari Kamala is a dancer to whom the hero is attracted, but for many reasons they do not marry because he already has a wife. Pandari Bai, a young widow, is also drawn to him, but she begins to treat him as her brother. M.N. Rajam is another young woman who stays with the married couple and brings up the child as her own. She too falls in love with the hero, but cannot marry him. An accident on the steps of the hero’s house ends in the death of the child. Rajam for obvious reasons is not informed of the child’s death. Later she too meets with a similar accident and when she comes to know the shocking secret about the child, she dies in the arms of her friend Janaki and the hero surrounded by all the relations…

As the story was serialised in a weekly magazine, it had many twists and turns, and the movie is also not easy to narrate in detail.

As usual, Sivaji came up with an excellent portrayal, well supported by Sowcar Janaki, Rajam, and Kumari Kamala.

Despite the popularity of the novel, brilliant writing for the screen by A.P. Nagarajan and fine performances, the film did not do well at the box office.

Remembered for: the pleasing music, songs, dance numbers by Kumari Kamala and excellent performances by veteran artistes.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/26cp_Paavai_Vilakk_2171496e_zps262ce12f.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/26cp_Paavai_Vilakk_2171496e_zps262ce12f.jpg.html)

http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-paavai-vilakku-1960/article6533208.ece

JamesFague
26th October 2014, 12:22 PM
Courtesy: Webdunia Tamil

திருடனோ, போலீசோ அந்த கதாபாத்திரம் எந்த வகையான பிம்பத்தை உருவாக்குகிறது என்பதுதான் முக்கியம். இங்கே இரண்டுவகை நடிகர்கள் இருக்கிறார்கள். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பவர்கள். சிவாஜி கணேசன் அப்படிதான் நடித்தார். திருடன் என்றால் அவர் திருடனாகதான் இருப்பார். போலீஸ் என்றால் போலீஸ்.

ஆனால் இன்னொருவகை நடிகர்கள் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். மாதிரி. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவர்களைக் குறித்த சூப்பர் ஹீரோ இமேஜைதான் அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்தும். திருடனாக இருந்தாலும், கலெக்டராக இருந்தாலும். நல்லவனாக இருக்கும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும், எதிரிகளை அழிக்கும், மக்களையும் நாட்டையும் காப்பாற்றும்.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் இந்த சூப்பர் ஹீரோ இமேiஜ தாண்டி ஏதாவது கதாபாத்திரம் செய்திருக்கிறார்களா? திருடனாக இருந்தாலும் போலீசாக இருந்தாலும்? சிவாஜி கணேசன் மாதிரியான நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும் அவரை நடிகராக மட்டுமே பார்த்தனர். கட் அவுட் கலாச்சாரத்தைத் தாண்டி அரசியலுக்கு வந்த போது அவர் தோற்றுப் போக அதுதான் முக்கிய காரணம்.

JamesFague
26th October 2014, 12:23 PM
Courtesy: Webdunia Tamil

திருடனோ, போலீசோ அந்த கதாபாத்திரம் எந்த வகையான பிம்பத்தை உருவாக்குகிறது என்பதுதான் முக்கியம். இங்கே இரண்டுவகை நடிகர்கள் இருக்கிறார்கள். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பவர்கள். சிவாஜி கணேசன் அப்படிதான் நடித்தார். திருடன் என்றால் அவர் திருடனாகதான் இருப்பார். போலீஸ் என்றால் போலீஸ்.

ஆனால் இன்னொருவகை நடிகர்கள் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். மாதிரி. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவர்களைக் குறித்த சூப்பர் ஹீரோ இமேஜைதான் அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்தும். திருடனாக இருந்தாலும், கலெக்டராக இருந்தாலும். நல்லவனாக இருக்கும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும், எதிரிகளை அழிக்கும், மக்களையும் நாட்டையும் காப்பாற்றும்.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் இந்த சூப்பர் ஹீரோ இமேiஜ தாண்டி ஏதாவது கதாபாத்திரம் செய்திருக்கிறார்களா? திருடனாக இருந்தாலும் போலீசாக இருந்தாலும்? சிவாஜி கணேசன் மாதிரியான நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும் அவரை நடிகராக மட்டுமே பார்த்தனர். கட் அவுட் கலாச்சாரத்தைத் தாண்டி அரசியலுக்கு வந்த போது அவர் தோற்றுப் போக அதுதான் முக்கிய காரணம்.

JamesFague
26th October 2014, 12:54 PM
There is a nice photograph of NT with Kaml,Rajini and Prabhu at Vellore Vishnu Theatre in one of

the refreshment stall. If anyone visits this theatre can see the photo.

JamesFague
26th October 2014, 01:02 PM
Courtesy: Dinamalar Vaara Malar

பதிவு செய்த நாள்
26அக்
2014
00:00
என்னுடைய திகைப்புக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, இவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு, ' பிரமோஷன்' கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை; இரண்டு, 'பிரமோஷன்' கிடைத்தால், அது ஆண் வேடமாகத்தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு கிடைத்ததோ பெண் வேடம்; அதுவும் கொஞ்சம் பெரிய வேடம் என்பது தான் திகைப்புக்குக் காரணம்.
பெரிய வேடம் என்றால், என்ன வேடம்?
சீதையாக இருந்த நான், சூர்ப்பனகையாக்கப் பட்டேன்!
ராமாயணத்தில் சீதையைவிட, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமல்ல சூர்ப்பனகையின் வேடம்!
ஆனால், என்னைப் பொறுத்தவரை, சீதையை விட, சூர்ப்பனகையே முக்கியமானவராகக் காட்சி தந்தார். காரணம், அதுவரை, ராமாயணத்தில் நான் போட்டது, கன்னி மாடத்து சீதை; மூன்றே காட்சிகள்தான் வரும் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் திறமையைக் காட்டவோ, பார்வையாளர்களை கவரவோ அதிக சந்தர்ப்பம் இல்லை.
ஆனால், சூர்ப்பனகையின் வேடம் அப்படி அல்ல, அழகு சுந்தரியாக அவள் வந்து, லட்சுமணனை மயக்க ஆடி, பாட வேண்டும்; அவனுடன் கொஞ்ச வேண்டும்; கடைசியில், லட்சுமணனிடம் மூக்கறுபட்டு, கோபத்துடன் செல்ல வேண்டும்; ஆடல், பாடல், காதல், கோபம் - இப்படி எல்லாம் நிறைந்த வேடம் அது!
'நல்ல வேடம் எது?' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, சீதையைவிட, சூர்ப்பனகை வேடமே பெரிது என்று தோன்றியது. அதனால் தான் சூர்ப்பனகையின் வேடத்தை எனக்கு தரப்போவதாக சொன்ன போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
சாதாரணமாக, மூக்கும் முழியுமாக சிறிது லட்சணமாக இருக்கும் நடிகர்களுக்குத்தான் சூர்ப்பனகை வேடம் தரப்படும். எனவே, கம்பெனியின் பார்வையில், நானும் ஒரு அழகனாக கருதப்பட்டிருந்ததை எண்ணியபோது எனக்குப் பெருமையாகவே இருந்தது.
நான் சூர்ப்பனகையாக நடித்த போது, லட்சுமணனாக துறையூர் நடராஜன் நடித்தார். அவருக்கு கண்கள் சற்றுப் பெரியதாக இருக்கும்; அதனால் அவரை, முண்டக்கண் நடராஜன் என்று அழைப்போம்.
லட்சுமணனை மயக்குவதற்காக, கண்ணை ஒரு வெட்டு வெட்டி, இடுப்பை ஒரு ஒடி ஒடித்து, பாட ஆரம்பித்தால் போதும்... அந்தக் கண் வெட்டுக்கும், இடுப்பு ஒடிப்புக்குமே, 'அப்ளாசு'ம், 'ஆகா'வும் கொட்டகையில் எழும்!
என் வாத்தியாருக்கு இதையெல்லாம் கண்டு ரொம்பவும் சந்தோஷம்; என் மீது கொஞ்சம் அதிகமாகவே பிரியம் வைக்க ஆரம்பித்தார்.
அந்த பிரியத்தில் தான், 'அபிமன்யு சுந்தரி, பம்பாய் மெயில் மற்றும் வேதாள உலகம்' போன்ற நாடகங்களில் கதாநாயகியின் வேடம் கொடுத்து, அவற்றிற்கான பாடங்களை படிக்க வைத்து, அந்த வேடங்களை ஏற்று நடிக்க, எனக்கு சந்தர்ப்பம் தந்தார்.
இந்தப் பாடங்களை எல்லாம் பத்து, பதினைந்து நாட்களுக்குள்ளேயே மனப்பாடம் செய்து விட்டேன்.
பொதுவாகவே, நாடகக் கம்பெனிகளில் அப்போது ஒரு பழக்கம் உண்டு; முக்கிய நடிகர்கள் என்று சொல்லப்படுவோர் அனைவரும், அந்த நாடகக் கம்பெனி நடத்தும் நாடகங்களில் வரும் எல்லா கதாபாத்திரங்களின் வசனத்தையும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். எந்த ஒரு காரணத்திலாவது, வழக்கமாக ஒரு வேடத்தைச் செய்பவர், அதைச் செய்ய இயலாமல் போய்விட்டால், நாடகம் நின்றுவிடக் கூடாதல்லவா? உடனே, யாராவது ஒருவர், அந்த வேடத்தில் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த முன்னேற்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இந்த ஏற்பாட்டின்படி, நானும் எல்லா முக்கிய வேடங்களின் பாடங்களையும் படித்து, மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.
சுருங்கச் சொல்வதானால், பெரும்பாலான நடிகர்களுக்கு, ஒவ்வொரு நாடகமும் அப்படியே மனப்பாடம் ஆகி இருக்கும்.
ஒவ்வொரு ஊராகச் சென்று முகாமிட்டதும், கம்பெனியிலுள்ள முக்கியமானவர்கள் முதல் முக்கிய நடிகர்கள் வரை, முதல் வேலையாக அந்த ஊரிலுள்ள பெரிய மனிதர்களை, பெரிய அதிகாரிகளை தெரிந்து, அவர்களது வீட்டிற்கு நேரில் போய் பார்ப்பர்.
'நாங்கள் உங்கள் ஊருக்கு நாடகம் நடத்த வந்திருக்கிறோம்; உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தந்து எங்களை ஊக்கப்படுத்தி, கலையை வளர்க்க வேண்டுகிறோம்...' என்று பெண் வீட்டார், சம்பந்திகளை அழைப்பது போல அழைப்பர். இதனால், ஒவ்வொரு ஊரிலும் முகாமிடும்போது, அவ்வூரிலுள்ள முக்கியமானவர்களுக்கும், கம்பெனிகளுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு விடும்.
ஊர்ப்பெரியவர்களும், கம்பெனியில் உள்ளவர்களைக் கவுரவப்படுத்தும் வகையில், தங்கள் வீட்டுக்கு அழைத்து, விருந்து வைத்து, பரிசுகளும் கொடுத்து அனுப்புவர்.
அந்த மாதிரி விருந்துகளுக்கு போவதென்றால், எங்களுக்குத் தனி, 'குஷி!'
திண்டுக்கல்லில் நாங்கள் முகாமிட்டிருந்த போது, இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்லின் புகழை, தமிழ்நாடெங்கும் பரப்பியவர்களில், 'அங்கு விலாஸ்' புகையிலை நிறுவனரும் ஒருவர். அதன் உரிமையாளர் முத்தையா பிள்ளை, எங்கள் கம்பெனி நாடகங்களைப் பார்த்து, பெரிதும் மனமகிழ்ந்து, மேடைக்கு முன் தொங்க விடுவதற்காக, பெரிய திரைச் சீலை ஒன்றை பரிசளித்தார். வெள்ளிச் சரிகையும், ரங்கூன் டைமண்ட் கற்களும் கொண்டு, சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, கவர்ச்சியுடன் விளங்கிய அந்தப் படுதாவின் விலை, அப்போதே பல ஆயிரம் ரூபாய் இருக்கும்.
அது மட்டுமல்ல, அவரது வீட்டுக்கு எங்கள் எல்லாரையும் அழைத்துச் சென்று, ஒரு பெரிய விருந்து அளித்தார். பின்னர் வேட்டி, பைஜாமா, ஜிப்பா என்று கம்பெனியிலிருந்த நடிகர்களுக்கு புது உடைகளையும் பரிசளித்தார்.
கம்பெனி நடிகர்களில், அவர்களது அனுபவத்திற்கும், அவசியத்திற்கும் ஏற்ப விடுமுறை தரப்படும்.
ஒரு சமயம் கம்பெனியில் இருந்த காக்கா ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு போய் வந்தார். திரும்பி வந்தபோது என்னை தனியே அழைத்து, என் அண்ணன் திருஞானசம்பந்தமூர்த்தி தவறி விட்ட சோகச் செய்தியைச் சொன்னார்.
அவர் இறப்பதற்கு முன்தினம், அவர் பக்கத்திலேயே காக்கா ராதாகிருஷ்ணன் படுத்திருந்ததாகவும், என்னைப் பற்றியும், என் கம்பெனி வாழ்க்கையைப் பற்றியும், அக்கறையுடன் அவர் விசாரித்தாக கூறினார். இதைக் கேட்டதும் நான் இடிந்து போய், கண்ணீர் விட்டேன்.
அன்று பூராவுமே, என் மனம் ஒரு நிலையிலும் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
வீட்டிலுள்ளவர்களைப் பார்க்க வேண்டும்; அதுவும் உடனடியாகப் போய் என் தாயார், அண்ணன், தம்பி, ஏன் எல்லாரையும் கண்டு பேசிவிட்டு வர வேண்டும் என்ற ஒரு ஆசை, ஏக்கம் என் நெஞ்சில் பீறிட்டு எழுந்தது.
பிரிவின் வேதனையை, என் மனம் மீண்டும் அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.
ஆனால், எப்படி, எதைச் சொல்லி விடுமுறை வாங்குவது என நினைத்த போது, கூடவே அந்த பயமும் பிடித்துக் கொண்டது.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,

JamesFague
26th October 2014, 01:04 PM
Courtesy: Dinamalar Vaara Malar

பதிவு செய்த நாள்
26அக்
2014
00:00
என்னுடைய திகைப்புக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, இவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு, ' பிரமோஷன்' கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை; இரண்டு, 'பிரமோஷன்' கிடைத்தால், அது ஆண் வேடமாகத்தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு கிடைத்ததோ பெண் வேடம்; அதுவும் கொஞ்சம் பெரிய வேடம் என்பது தான் திகைப்புக்குக் காரணம்.
பெரிய வேடம் என்றால், என்ன வேடம்?
சீதையாக இருந்த நான், சூர்ப்பனகையாக்கப் பட்டேன்!
ராமாயணத்தில் சீதையைவிட, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமல்ல சூர்ப்பனகையின் வேடம்!
ஆனால், என்னைப் பொறுத்தவரை, சீதையை விட, சூர்ப்பனகையே முக்கியமானவராகக் காட்சி தந்தார். காரணம், அதுவரை, ராமாயணத்தில் நான் போட்டது, கன்னி மாடத்து சீதை; மூன்றே காட்சிகள்தான் வரும் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் திறமையைக் காட்டவோ, பார்வையாளர்களை கவரவோ அதிக சந்தர்ப்பம் இல்லை.
ஆனால், சூர்ப்பனகையின் வேடம் அப்படி அல்ல, அழகு சுந்தரியாக அவள் வந்து, லட்சுமணனை மயக்க ஆடி, பாட வேண்டும்; அவனுடன் கொஞ்ச வேண்டும்; கடைசியில், லட்சுமணனிடம் மூக்கறுபட்டு, கோபத்துடன் செல்ல வேண்டும்; ஆடல், பாடல், காதல், கோபம் - இப்படி எல்லாம் நிறைந்த வேடம் அது!
'நல்ல வேடம் எது?' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, சீதையைவிட, சூர்ப்பனகை வேடமே பெரிது என்று தோன்றியது. அதனால் தான் சூர்ப்பனகையின் வேடத்தை எனக்கு தரப்போவதாக சொன்ன போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
சாதாரணமாக, மூக்கும் முழியுமாக சிறிது லட்சணமாக இருக்கும் நடிகர்களுக்குத்தான் சூர்ப்பனகை வேடம் தரப்படும். எனவே, கம்பெனியின் பார்வையில், நானும் ஒரு அழகனாக கருதப்பட்டிருந்ததை எண்ணியபோது எனக்குப் பெருமையாகவே இருந்தது.
நான் சூர்ப்பனகையாக நடித்த போது, லட்சுமணனாக துறையூர் நடராஜன் நடித்தார். அவருக்கு கண்கள் சற்றுப் பெரியதாக இருக்கும்; அதனால் அவரை, முண்டக்கண் நடராஜன் என்று அழைப்போம்.
லட்சுமணனை மயக்குவதற்காக, கண்ணை ஒரு வெட்டு வெட்டி, இடுப்பை ஒரு ஒடி ஒடித்து, பாட ஆரம்பித்தால் போதும்... அந்தக் கண் வெட்டுக்கும், இடுப்பு ஒடிப்புக்குமே, 'அப்ளாசு'ம், 'ஆகா'வும் கொட்டகையில் எழும்!
என் வாத்தியாருக்கு இதையெல்லாம் கண்டு ரொம்பவும் சந்தோஷம்; என் மீது கொஞ்சம் அதிகமாகவே பிரியம் வைக்க ஆரம்பித்தார்.
அந்த பிரியத்தில் தான், 'அபிமன்யு சுந்தரி, பம்பாய் மெயில் மற்றும் வேதாள உலகம்' போன்ற நாடகங்களில் கதாநாயகியின் வேடம் கொடுத்து, அவற்றிற்கான பாடங்களை படிக்க வைத்து, அந்த வேடங்களை ஏற்று நடிக்க, எனக்கு சந்தர்ப்பம் தந்தார்.
இந்தப் பாடங்களை எல்லாம் பத்து, பதினைந்து நாட்களுக்குள்ளேயே மனப்பாடம் செய்து விட்டேன்.
பொதுவாகவே, நாடகக் கம்பெனிகளில் அப்போது ஒரு பழக்கம் உண்டு; முக்கிய நடிகர்கள் என்று சொல்லப்படுவோர் அனைவரும், அந்த நாடகக் கம்பெனி நடத்தும் நாடகங்களில் வரும் எல்லா கதாபாத்திரங்களின் வசனத்தையும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். எந்த ஒரு காரணத்திலாவது, வழக்கமாக ஒரு வேடத்தைச் செய்பவர், அதைச் செய்ய இயலாமல் போய்விட்டால், நாடகம் நின்றுவிடக் கூடாதல்லவா? உடனே, யாராவது ஒருவர், அந்த வேடத்தில் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த முன்னேற்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இந்த ஏற்பாட்டின்படி, நானும் எல்லா முக்கிய வேடங்களின் பாடங்களையும் படித்து, மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.
சுருங்கச் சொல்வதானால், பெரும்பாலான நடிகர்களுக்கு, ஒவ்வொரு நாடகமும் அப்படியே மனப்பாடம் ஆகி இருக்கும்.
ஒவ்வொரு ஊராகச் சென்று முகாமிட்டதும், கம்பெனியிலுள்ள முக்கியமானவர்கள் முதல் முக்கிய நடிகர்கள் வரை, முதல் வேலையாக அந்த ஊரிலுள்ள பெரிய மனிதர்களை, பெரிய அதிகாரிகளை தெரிந்து, அவர்களது வீட்டிற்கு நேரில் போய் பார்ப்பர்.
'நாங்கள் உங்கள் ஊருக்கு நாடகம் நடத்த வந்திருக்கிறோம்; உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தந்து எங்களை ஊக்கப்படுத்தி, கலையை வளர்க்க வேண்டுகிறோம்...' என்று பெண் வீட்டார், சம்பந்திகளை அழைப்பது போல அழைப்பர். இதனால், ஒவ்வொரு ஊரிலும் முகாமிடும்போது, அவ்வூரிலுள்ள முக்கியமானவர்களுக்கும், கம்பெனிகளுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு விடும்.
ஊர்ப்பெரியவர்களும், கம்பெனியில் உள்ளவர்களைக் கவுரவப்படுத்தும் வகையில், தங்கள் வீட்டுக்கு அழைத்து, விருந்து வைத்து, பரிசுகளும் கொடுத்து அனுப்புவர்.
அந்த மாதிரி விருந்துகளுக்கு போவதென்றால், எங்களுக்குத் தனி, 'குஷி!'
திண்டுக்கல்லில் நாங்கள் முகாமிட்டிருந்த போது, இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்லின் புகழை, தமிழ்நாடெங்கும் பரப்பியவர்களில், 'அங்கு விலாஸ்' புகையிலை நிறுவனரும் ஒருவர். அதன் உரிமையாளர் முத்தையா பிள்ளை, எங்கள் கம்பெனி நாடகங்களைப் பார்த்து, பெரிதும் மனமகிழ்ந்து, மேடைக்கு முன் தொங்க விடுவதற்காக, பெரிய திரைச் சீலை ஒன்றை பரிசளித்தார். வெள்ளிச் சரிகையும், ரங்கூன் டைமண்ட் கற்களும் கொண்டு, சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, கவர்ச்சியுடன் விளங்கிய அந்தப் படுதாவின் விலை, அப்போதே பல ஆயிரம் ரூபாய் இருக்கும்.
அது மட்டுமல்ல, அவரது வீட்டுக்கு எங்கள் எல்லாரையும் அழைத்துச் சென்று, ஒரு பெரிய விருந்து அளித்தார். பின்னர் வேட்டி, பைஜாமா, ஜிப்பா என்று கம்பெனியிலிருந்த நடிகர்களுக்கு புது உடைகளையும் பரிசளித்தார்.
கம்பெனி நடிகர்களில், அவர்களது அனுபவத்திற்கும், அவசியத்திற்கும் ஏற்ப விடுமுறை தரப்படும்.
ஒரு சமயம் கம்பெனியில் இருந்த காக்கா ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு போய் வந்தார். திரும்பி வந்தபோது என்னை தனியே அழைத்து, என் அண்ணன் திருஞானசம்பந்தமூர்த்தி தவறி விட்ட சோகச் செய்தியைச் சொன்னார்.
அவர் இறப்பதற்கு முன்தினம், அவர் பக்கத்திலேயே காக்கா ராதாகிருஷ்ணன் படுத்திருந்ததாகவும், என்னைப் பற்றியும், என் கம்பெனி வாழ்க்கையைப் பற்றியும், அக்கறையுடன் அவர் விசாரித்தாக கூறினார். இதைக் கேட்டதும் நான் இடிந்து போய், கண்ணீர் விட்டேன்.
அன்று பூராவுமே, என் மனம் ஒரு நிலையிலும் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
வீட்டிலுள்ளவர்களைப் பார்க்க வேண்டும்; அதுவும் உடனடியாகப் போய் என் தாயார், அண்ணன், தம்பி, ஏன் எல்லாரையும் கண்டு பேசிவிட்டு வர வேண்டும் என்ற ஒரு ஆசை, ஏக்கம் என் நெஞ்சில் பீறிட்டு எழுந்தது.
பிரிவின் வேதனையை, என் மனம் மீண்டும் அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.
ஆனால், எப்படி, எதைச் சொல்லி விடுமுறை வாங்குவது என நினைத்த போது, கூடவே அந்த பயமும் பிடித்துக் கொண்டது.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,

Russellisf
26th October 2014, 11:47 PM
அந்த நாள்’ படத்தில் சிவாஜி நடித்ததன் பின்னணி

வாசன் ‘ஞானசவுந்தரி’ படத்தை எரித்தது போன்றதொரு சம்பவம் ஏவி.எம்.மிலும் நிகழ இருந்தது. 1954–ல் கொல்கத்தாவில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் என்பவரை கதாநாயகனாக வைத்து, பாடல், நடனம் இரண்டும் இல்லாமல் முதன் முதலாக ஏவி.எம்.மில் எஸ்.பாலசந்தர் ஒரு படத்தை இயக்கினார். பாதி வரையில் வளர்ந்த நிலையில் அதைப்பார்த்த செட்டியார் திருப்தி இல்லாமல் சிவாஜிகணேசனை வைத்து மீண்டும் ‘ரீ ஷூட்’ பண்ண வேண்டும் என்று விரும்பினார்.

டைரக்டர் மறுத்தார். உடனே செட்டியார், தயாரிப்பு நிர்வாகியான வாசுமேனனிடம் பாலச்சந்தருக்குக் கொடுக்கவேண்டிய பாக்கிச் சம்பளப்பணத்தைக் கொடுத்துக் கணக்கை முடித்துவிட்டு அதுவரையில் எடுத்திருந்த மொத்த ரீல்களையும் கொண்டு வந்து தனக்கு எதிரே வைத்துக் கொளுத்திவிடும்படிக் கூறினார்.

இதைக் கேட்ட எஸ். பாலசந்தர் வெலவெலத்துப்போய், ‘‘வேண்டாம், நான் எடுத்த படத்தை என் கண் முன்னே கொளுத்தவேண்டாம். உங்கள் விருப்பப்படியே சிவாஜிகணேசனை வைத்து கதாநாயகன் சம்பந்தப்பட்ட எல்லா காட்சிகளையும் மீண்டும் எடுக்கிறேன்’’ என்று கேட்டுக்கொண்ட£ர். இதன் பேரில் அந்த நெருப்பு நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டு மறுப்படப்பிடிப்பு நடைபெற்றது.

அந்தப்படம்தான் சிவாஜிகணேசன் நடித்து ஜாவர்சீதாராமன் வசனம் எழுதி, எஸ்.பாலசந்தர் கதை எழுதி இயக்கி 1954 தமிழ்ப்புத்தாண்டு நாளில் (13.4.1954) வெளிவந்த முற்றிலும் மாறுபட்ட ‘‘அந்த நாள்!’’

JamesFague
27th October 2014, 10:32 AM
Courtesy: Mr Raghavendra

Dance Genius V.P. Dhananjayan on Nadigar Thilagam


இரா. மகாதேவன் எழுதிய, செவாலியே சிவாஜிக்கு ஆஸ்காரும் வரும்
என்ற நூலிற்கு நாட்டிய மேதை திரு. வி.பி. தனஞ்ஜெயன் அளித்துள்ள அணிந்துரையிலிருந்து-

பாரத கலைகளுக்கெல்லாம் அடிப்படையாய்த் திகழ்வது "நாட்டிய சாஸ்திரம்".

இந்த நாட்டிய சாஸ்திரத்தின் ஒரு முக்கிய பிரிவு பரத நாட்டியக் கலை!

இந்த பரதக் கலையின் உயிர் மூச்சாய்த் திகழ்வது "அபிநயம்". பரதத்தின் அடிப்படையான, ஆதாரமான கலைநுட்பமாகத் திகழ்வது இந்த அபிநயம் தான். இதனையே பரதத்தின் உயிரோட்டம் என்றும் வர்ணிக்கலாம்.

பரதக்கலைக்குத் தங்களைப் பூரணமாய் அர்ப்பணித்துக் கொண்டுள்ள முழுநேர பரத நாட்டியக் கலைஞர்களுக்கே பரிபூரணமாய் வந்து கை கூடாத இறையருள் வித்தை இந்த அபிநயக் கலை!கதகளியில் நிகரற்றக் கலைஞராய் திகழ்ந்த கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஒருவர் மட்டுமே இந்த அபிநயக் கலையில் பூரண சித்தி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பரதக் கலைஞர்களுக்கே நிறைவாய்க் கை வராத இந்த அபிநயக் கலை, திரையுலகில் நடிகர் ஒருவரிடம் பரிபூரணமாய்க் குடி கொண்டிருக்கிறதென்றால் அது நடிகர் திலகம் சிவாஜியிடம் தான்!

உலக அளவில் இது வரை தோன்றியுள்ள நடிகர்களில் சிவாஜி ஒருவரிடம் தான் இந்த அபிநயக் கலை இத்தனை அற்புதமாய்க் கொலு வீற்றிருக்கிறது!

முகத்தில் ஆயிரம் வகையான பாவங்களைக் காட்டுவது, விழிகளாலேயே ஓராயிரம் அர்த்தங்களை உணர்த்துவது, உடல் முழுவதும் பல நூறு அபிநயங்களை அங்கங்கள் சித்தரித்துக் காட்டுவது - இவையனைத்தும் சிவாஜி என்னும் நடிப்பு சமுத்திரத்தில் இன்று வரை நாம் கண்டு வந்திருக்கிற, ரசித்து வியந்திருக்கிற நிஜங்களாகும்!

சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு ... "ஸாகரம் ... ஸாகரோபமம்" என்பார்கள். அதாவது சமுத்திரத்தை சமுத்திரத்தோடு தான் ஒப்பிட வேண்டும் என்பது இதன் பொருள்.

நடிப்புக் கலையில் சிவாஜி ஒரு சமுத்திரம். உலகம் முழுவதும் இன்று வரை வந்துள்ள நடிகர்களில் சிவாஜி ஒருவரே நடிப்பில் சமுத்திரம்! இந்தச் சமுத்திரத்தின் முன் பிற நடிகர்கள் எல்லோருமே சாதாரண நதிகள் தான்! ஆலிவுட் நடிகர்களுமே அப்படித்தான்.

நதிகளை சமுத்திரத்திற்கு இணையாகப் பேச முடியாது!

ஆலிவுட் நடிகர்களில் ரெக்ஸ் ஹேரிசன், சிவாஜியைப் போல், முகத்தில் பல்வேறு பாவங்களைக் காட்டக் கூடிய நடிகர். ஆனால் அவரும் சிவாஜி என்னும் நடிப்புச் சமுத்திரம் முன் சாதாரண நதிதான் ...

எந்த வேடமேற்றாலும் அதனை மிகமிக நுணுக்கமாக, மிகமிக ஆழமாக, எந்தவொரு சிறு குணாம்சத்தையும் விட்டுவிடாமல், நிறைவாகச் செய்ய முடிந்தவர் உலகம் முழுமையிலும் சிவாஜிதான் ... IN THIS HE STANDS OUT FROM OTHERS ... இந்தத் தனித்திறமை சிவாஜி ஒருவருக்கே சொந்தம்.

"தில்லானா மோகனாம்பாள்" படத்தில் சிவாஜி நாதஸ்வரம் இசைப்பார். வாசிக்கிற இசையின் சுரங்களுக்கு ஏற்ப அவரது கை விரல்கள், கச்சிதமாக களி நர்த்தனம் ஆடும். எந்த சுரத்துக்கு, எந்த விரல்களை இயக்க வேண்டும் என்பதை அற்புதமாகச் செய்து காட்டிய இசை ஞானம் அந்த வாசிப்பில் பளிச்சிட்டது.

சிவாஜி போல் உலக மகா கலைஞன் நடிப்பில் யாருமே இல்லை. அவர் அவர்தான். HE IS HIMSELF ... ... A VERSATILE. GENIUS...

JamesFague
27th October 2014, 10:35 AM
Courtesy: Mr Raghavendra


http://thendral.chennaionline.com/thendral/sivaji.asp[/url]

முத்தமிழ் மன்ற வலைப் பதிவில் நண்பர் ஜோ எழுதியது
(Ref.:http://www.muthamilmantram.com/viewt...646d8f28808919)
அன்புடன்
ராகவேந்திரன்

JamesFague
27th October 2014, 10:41 AM
Courtesy: Mr Joe


கேள்வி : சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே?

நாகேஷ்: அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.

ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.

மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு foot கூட - ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே வாஇகக்ணு; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.

அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ; அவர் சீன்னு வரும்போது அது யாராராயிருந்தாலும் சரி, அவர் மிதிச்சுத் தள்ளுவாரு. அதே சமயத்தில் அவரை விட நல்லா யாராவது பண்ணினாங்கன்னா அதை மதிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள், என்னைப் பொறுத்தவரைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள்தான்.

ScottAlise
27th October 2014, 01:19 PM
பார்த்ததில் பிடித்தது - 44

மருமகள் :

1986 ல் நடிகர் பாலாஜி மற்றும் சிவாஜியின் கூட்டணியில் வந்த ஒரு வித்தியாசமான படம் . படத்தின் கதை என்பது படத்தின் டிக்கெட் பின்னாடி எழுத கூடிய அளவு சின்ன கதை தான் , தாத்தா சேகர் (சிவாஜிக்கும்) , பேரன் ராஜா (சுரேஷ்) இருவருக்கும் இடையில் இருக்கும் பந்தம் தான் கதை , தாத்தா உயிருக்கு போராடும் நிலையில் இருக்க , பேரன் காதலிக்கும் பெண் வெளிநாட்டில் இருக்க , காதலியாக நடிக்க வரும் ராதா (ரேவதி) தன் நடவடிக்கையால் , நல்ல குணத்தால் தாத்தாவிடம் நல்ல பெயர் எடுக்கிறார் , ஊருக்கு போன காதலியும் வர , ராஜா யாரை திருமணம் செய்து கொள்ளுகிறார் என்பதே கதை

படம் முழுவதும் சிவாஜி சாரின் ராஜாங்கம் தான் . தான் வரும் காட்சிகளில் படுகையில் படுத்து கொண்டே நடிப்பில் முத்திரை பதிகிறார் . முதல் காட்சியில் தன் பேரனுக்கு தெரியாமல் ஸ்வீட் சாப்பிடும் பொது இவர் கண்ணில் தெரியும் குறும்பு திருஷ்டி சுத்தி போட வேண்டும் , இவர் நண்பர் ஜெய்ஷங்கர் தான் இவர் குடும்ப டாக்டர் , இவரும் , சிவாஜி சாரும் தோன்றும் காட்சிகளில் இருவரும் விட்டு கொடுத்து காட்சிகள் நன்றாக வர நடித்து இருக்கிறார்கள் என்பது நன்றாக உணர முடிகிறது , டாக்டர் இவருக்கு கட்டுப்பாடு விதிக்கும் பொது , சிவாஜி சலித்து கொள்ளுவது ஆகட்டும் , செல்லமாக இருவரும் கட்டி பிடித்து அடித்து கொள்ளுவது ஆகட்டும் , தன் பேரன் உண்மையாக காதலிக்கும் பெண் மற்றும் அவள் தாய் இருவரும் வந்து பேசும் பொது , இவர்கள் அடிக்கும் கமெண்ட் சிரிப்பை வரவழைப்பவை , அதுவும் , இவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று Y விஜயாவிடம் மாட்டிவிடும் காட்சி , தன் வருங்கால மருமகள் பிரியாணி சமயத்து தர , அதை சாப்பிடும் சமயம் ஜெய்ஷங்கர் தடுக்க , இப்போ இதை என்ன பண்ணுவது என்று சிவாஜி கோபிக்கும் பொது நான் சாப்பிடுறேன் என்று இவர் சாப்பிடுவதும் , நம்மவர் helpless லுக் கொடுப்பதும் priceless

தன் தாத்தா நடிக்க வந்த பெண்ணை தன் மருமகள் என்று எண்ணி வீட்டின் சாவியை கொடுக்கும் பொது ராஜா அதை தடுக்க ஜெய்ஷங்கர் அதை தப்பாக புரிந்து கொண்டு ரியாக்ட் செய்வது , தொடர்ந்து எனக்கு பண தேவை வந்தால் என் நண்பன் கிட்ட வந்து உரிமையாக கேட்டு வாங்கி கொள்வேன் என்று சொல்லும் இடம் மெய் சிலிர்க்க வைத்து , தன் நண்பன் தான் செத்து போய் விடுவேன் என்று புலம்பும் பொது , இவர் helpless ஆக Stop it சேகர் என்று கூறும் இடத்தில தன் subtle performance மூலம் நாம் அனைவரையும் ஆச்சிரிய படுத்தி இருப்பார்
தமிழ் சினிமா ஜெய்ஷங்கர் சாரை இன்னும் பயன் படுத்தி இருக்கலாம்

ரேவதிக்கும் , சிவாஜிக்கும் நடக்கும் பாச பந்தம் தான் படத்தின் உயிர்நாடி அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்து இருக்கலாம் என்பது என் எண்ணம்
ரேவதி நடிக்க வந்தவள் தான் என்றாலும் தன் தாதாவின் மனதில் மருமகள் என்ற ஸ்தானத்தில் இருப்பவர் இவர் தான் என்று தெரிந்து சுரேஷ் அமைதியாக இருப்பதும் , சுரேஷ் காதலிக்கும் பெண் மற்றும் அவள் அம்மா இருவரும் ரேவதியை illtreat பண்ணும் போதும் emotionally upset ஆவதும் ,ஆனால் காதலியை பிரிய முடியாமல் தவிப்பதும் - கிடைத்த காட்சிகளில் நடித்து இருக்கிறார்

மொத்தத்தில் சிவாஜி சாரின் வித்யாசமான நடிப்பில் , அதாவது வயதுக்கு தகுந்த நடிப்பில் தானும் முத்திரை பதித்து , மற்ற நடிகர்களையும் பதிக்க செய்து நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி

Russellbpw
27th October 2014, 05:54 PM
சண்டைகாட்சிகளில் அதீத மிகையும் வில்லனை அவன் எவ்வளவு பலசாலியானாலும் ஒரு சில கதா நாயகர்கள் தங்களுடைய இமேஜ் காபாற்றிகொள்ள அந்த வில்லனை வெறும் அடிவாங்கும் சதை பிண்டங்களாக மட்டுமே தங்களுடைய முக்கால்வாசி படங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.

மிஞ்சி மிஞ்சி போனால் மூன்று அடி மட்டுமே அடிக்கும் சலுகை இவர்களுக்கு உண்டு...! மேலும் ஒரே மாதிரி அமைக்கப்பட்ட சண்டை காட்சியாக மட்டுமே அது இருக்கும்...!

தமிழ் திரை உலகில் அதில் ஒரு இயற்கைதனம் கொண்டு வந்த நாயகர்களில் நடிகர் திலகம் மற்றும் மக்கள் கலைஞர் ஜெய் ஷங்கர் அவர்களுக்கு மிகுந்த பங்கு உண்டு.

அதிலும் திரு ஜெய் ஷங்கர் அவர்கள் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அவருடைய வித்தியாசமான மின்னல் வேக சண்டை காட்சிகள் அமைப்பு மக்களிடையே மற்ற எவரை காட்டிலும் மிக பெரும் வரவேற்ப்பை பெற்றது என்றால் அதில் மிகையில்லை.

ஆனால் நடிகர் திலகம் அவர்கள் அவர் காலங்களில் மற்ற எவரை காட்டிலும் குதிரை சவாரியாகட்டும், வாள் பயிற்சி முறையாகட்டும், சிலம்பம் சுழற்றுதலாகட்டும், மல்யுதம் ஆகட்டும் முறையே திரைப்படத்தின் தேவைகேற்ப ஆர்வமுடன் அதன் விற்பன்னர்களிடம் கற்றுக்கொண்டு நடித்தது திரை உலகில் உள்ள அனைவரும் அறிவர். அதிலும் குதிரை சவாரி செய்வதில் நடிகர் திலகம் பக்கம் எவருமே நெருங்கமுடியாத வண்ணம் தன்னுடைய ஆளுமையை கொண்டிருந்தார்.

பெரும்பாலும் நடிகர்கள் குதிரை சவாரி காட்சிகளில் back projection முறையில் நடித்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம். அதாவது பாட்டோ அல்லது சண்டையோ அல்லது துரத்தும் காட்சியோ ...இந்த நடிகர்கள் ஸ்டூலில் அமர்ந்துகொண்டு தலையை தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு சவாரி செய்வதை பார்த்தால் சிரிக்காதவன் கூட சிரித்திவிடுவான். காரணம் அப்படி செய்யும்போது அதை எப்படி செய்யவேண்டும் என்று கூட நடிக்க தெரியாதவர்கள் அவர்கள். அப்படி பட்டவர்கள் பலர் பிற்காலத்தில் நடிகர் திலகம் நடிப்பை விமர்சனம் செய்ததை நினைக்கும்போது...சீ..சீ...இந்த பழம் புளிக்கும் என்ற கதை தான் ஞாபகம் வரும் !

1950 களில் இருந்தே நடிகர் திலகம் அவர்களுக்கு சண்டை வாரது. அவர் நடிப்பதிலே மட்டுமே வல்லவர் என்று ஒரு பொய்யை சில சுயநல கூட்டம் பரப்பி வந்தது.

நடிகர் திலகம் அவர்களுடைய படங்கள் பெரும்பான்மை குடும்ப படங்களாக இருக்கும் அதில் சண்டை காட்சிகள் வலுக்கட்டாயமாக திநிக்கபடமாட்டாது.

காலபோக்கில் தனக்கு சண்டை காட்சி வராது என்று கூறியவர்களின் கூற்றை பொய்யாக்கி, அப்படி கூறியவர்களே வாயடைத்து போகும் அளவிற்கு தன்னுடைய வல்லமையை காட்டியுள்ளார் நமது நடிகர் திலகம். இருந்தாலும் நடிகர் திலகம் படங்கள் குடும்ப சூழலை சார்ந்தே இருந்ததனால் ஒரு ACTION HERO என்ற அங்கீகாரம் இருந்ததில்லை. மாறாக ACTING HERO என்ற அங்கீகாரமே கிடைத்தது.

ஒரு திரைப்படத்திற்கு சண்டைகாட்சி ஒரு சாப்பாட்டில் ஒரு SIDE DISH போன்றதாகும். SIDE DISH மட்டுமே அனைவரும் உணவாக உட்கொள்ள முடியாது. நடிகர் திலகம் அவர்களுடைய படங்கள் நல்ல உணவாக இருந்திருக்கிறதே தவிர வெறும் SIDE DISH ஆக இருந்ததில்லை. !

காத்தவராயன் என்ற ஒரு திரைப்படத்தில் நடிகர் திலகம் அவர்களுடைய மல்யுத்த காட்சி ஒன்று உண்டு. அதை பார்த்தால் புரியும்,. தன்னுடன் மல்யுத்தம் புரிபவரை கதாநாயகன் மட்டுமே சும்மா அடிப்பது போல அல்லாமல் மிக இயற்கையாக அமைக்கப்பட்ட ஒரு காட்சி !

எந்த ஒரு மிகையும் இல்லாமல் நல்ல உடர்கட்டுகொண்ட ஒரு ORIGINAL மல்யுத்த வீரருக்கு அவருக்கு கொடுக்கும் மரியாதை தென்படும்.
நடிகர் திலகம் அவர்கள் கதாநாயகன். இருப்பினும் மல்யுதம் அமைத்த முறை 50-50 யாக இருக்கும்.

சம பலம் கொண்ட இருவர் மோதும் இயற்கையான மல்யுத்தம்.

பொதுவாக படங்களில் இது போல காட்சிகள் அமைக்கும்போது LONG SHOT யுக்தி பயன் படுத்தப்படும். காரணம் LONG SHOT வைக்கும்போது சண்டையிடுவது நாயகனா அல்லது நாயகனின் DOOP ஆ என்பது மக்களுக்கு முக்கால்வாசி தெரியாது. உருவசம்பந்தம் இல்லையென்றால் கண்டுபிடித்து விடுவார்கள் ஆனால் பெரும்பாலும் நாயகனின் உருவ அமைப்பு உடற்கட்டு இவை MATCH ஆகும் வகையில் DOOP நடிகர் இருப்பார்.

இந்த மல்யுத்த காட்சி பார்பவர்கள் ஒரு விஷயத்தை உணரலாம். நடிகர் திலகம் ஏறக்குறைய முழு மல்யுதத்தையும் அவரே செய்திருப்பார். மேலும் மல்யுத்தத்தின் பல TECHNIQUE இந்த காட்சியில் பயன்படுத்தபட்டிருக்கும் !

வேறு எந்த படங்களில் வந்த மல்யுத்த காட்சியையும் இதையும் ஒப்பிட்டு பார்த்தால் ...மல்யுத்த காட்சிகள் சிறந்த முறையில் காத்தவராயன் திரைப்படத்தில் படமாக்கபட்டதையும், நடிகர் திலகம் அவர்களுடைய மிக இயல்பான, இயற்கையாக மல்யுத்தம் புரிந்திருப்பதை நீங்கள் உணரலாம் !

செயற்கை சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் வந்த காலகட்டம் ...அனைவராலும் இந்த மல்யுத்த காட்சி அன்று பேசப்பட்ட ஒன்றாகும் ....

நண்பர்கள் பார்வைக்கு !

https://www.youtube.com/watch?v=uOOftnJMs0Y

Russelldwp
27th October 2014, 09:52 PM
எத்தனை முறை திரையிட்டாலும் திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் தமிழ் திரைஉலகின் ஒரே வசூல் சக்ர வர்த்தி சிவாஜி அவர்களின் வசந்த மாளிகை மிக குறுகிய இடைவெளியில் திருச்சி கெயிட்டியில் விரைவில் வெளிவர இருக்கிறது.


http://g.ahan.in/tamil/Vasantha%20Maligai/Vasantha%20Maligai%20(20).jpg

Russellbpw
27th October 2014, 09:52 PM
பார்த்ததில் பிடித்தது - 44

மருமகள் :

1986 ல் நடிகர் பாலாஜி மற்றும் சிவாஜியின் கூட்டணியில் வந்த ஒரு வித்தியாசமான படம் .
மொத்தத்தில் சிவாஜி சாரின் வித்யாசமான நடிப்பில் , அதாவது வயதுக்கு தகுந்த நடிப்பில் தானும் முத்திரை பதித்து , மற்ற நடிகர்களையும் பதிக்க செய்து நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி

சாதனை மற்றும் மருமகள் இரெண்டும் ஒரு போல வெளியாகி இரெண்டும் 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் !

Hats off to the doyen of tinsel town - nadigar thilagam !

Russellbpw
27th October 2014, 09:55 PM
எத்தனை முறை திரையிட்டாலும் திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் தமிழ் திரைஉலகின் ஒரே வசூல் சக்ர வர்த்தி சிவாஜி அவர்களின் வசந்த மாளிகை மிக குறுகிய இடைவெளியில் திருச்சி கெயிட்டியில் விரைவில் வெளிவர இருக்கிறது.


http://g.ahan.in/tamil/Vasantha%20Maligai/Vasantha%20Maligai%20(20).jpg

Vasantha Maaligai when it was made to Digital and re-released, the first week collection was Rs.3,28,690.

The Highest collection in Albert for the first week till date for any old film !!!

Russellbpw
27th October 2014, 10:16 PM
வெகு சுலபத்தில் பகைவர்களாக மாறுபவர்கள் வெகு சீக்கிரம் அழிந்துபோகிறார்கள் - நடிகர் திலகம் ராஜ ராஜ சோழன் !!

தமிழகத்தின் ராஜ ராஜ சோழன் !! - இந்த கம்பீரம் எவருக்கு வரும் ? - நடிகர் திலகம் அவர்களை தவிர !

http://www.youtube.com/watch?v=hu8matpsKk8

Russellbpw
27th October 2014, 10:23 PM
எத்துனை நடிகர்கள் இருந்திருந்தாலும்...இருந்தாலும் ....இந்த ஒரு பாடலுக்கு உண்டான பாவம்...அபிநயம் முன் நிற்குமா ?

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே...அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?

இந்த ஒரு வரிக்கு கொடுக்கும் அபிநயம் ...ஒருவரின் ஆயுள் முடியும் வரை பயிற்சி செய்தாலும் வராது !

வணங்கவேண்டிய கலை தெய்வம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

http://www.youtube.com/watch?v=BAVFuEqqV-k

sivaa
27th October 2014, 10:30 PM
சாதனை மற்றும் மருமகள் இரெண்டும் ஒரு போல வெளியாகி இரெண்டும் 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் !

Hats off to the doyen of tinsel town - nadigar thilagam !


வருடம் - 1986

1. இந்த வருடம் வெளியான படங்கள் - 7

100 நாட்களை கடந்த படங்கள் - 3

சாதனை

மருமகள்

விடுதலை

50 நாட்களை கடந்த படங்கள் -2

ஆனந்தக் கண்ணீர்

தாய்க்கு ஒரு தாலாட்டு

2. திரையுலகிற்கு வந்து முப்பத்தி நான்கு வருடங்களுக்கு பிறகும் 7 படங்கள். அதுவும் ஒரே மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு படங்கள் ரீலீஸ்.

3. முதன் முதலாக ஒரு சினிமா இயக்குனராக நடிகர் திலகம் நடித்த படம் - சாதனை.

4. 10.01.1986 அன்று வெளியான சாதனை சென்னை நாகேஷ் திரையரங்கில் ஒரு சாதனை புரிந்தது.

5. அந்த அரங்கின் வரலாற்றில் அதிகமாக தொடர் ஹவுஸ் புல் ஆனது சாதனை படத்திற்கு தான்.

அந்த அரங்கில் தொடர்ந்து 133 காட்சிகள் அரங்கு நிறைந்தது

6. அந்த அரங்கில் அதிக நாட்கள் ஓடிய படமும் சாதனை தான்.

சாதனை படம் ஓடிய நாட்கள் - 112

சாதனை திரைப்படம் 100 நாட்களை கடந்த அரங்குகள்

சென்னை - தேவி பாரடைஸ்/தேவி பாலா

சென்னை - நாகேஷ்

7. சாதனை திரைப்படம் வெளியான 15 நாட்கள் இடைவெளியில் 26.01.1986 அன்று வெளியான படம் - மருமகள்.

8. படத்தின் மொத்த நேரத்தில் சுமார் 80 சதவீதம் நேரம் நடிகர் திலகம் படுக்கையில் படுத்து கொண்டே நடித்த பாத்திரம் இடம் பெற்ற படம் - மருமகள்.

ஆயினும் கூட "நடிகர் திலகம் படுத்துக் கொண்டே ஜெயித்த" படம் - மருமகள்

மருமகள் 100 நாட்களை கடந்த அரங்கு

சென்னை - தேவிகலா.

9. இதன் மூலம் மீண்டும் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்களை கடக்கும் சாதனையை புரிந்தார் நடிகர் திலகம்.

படிக்காதவன்

சாதனை

மருமகள்.

10. இந்த வெற்றியின் பின்னணியை பார்க்க வேண்டும். முதல் மரியாதை வெள்ளி விழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. படிக்காதவன் வெள்ளி விழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் ஒரே மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் வெளியான நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் 100 நாட்களை கடந்து ஓடுகின்றன அதுவும் நடிக்க வந்த 34-வது வருடத்தில் என்றால், இதை விட நடிகர் திலகத்தின் bo பவருக்கு வேறு சான்று வேண்டுமா என்ன?



(முரளி சிறினிவாசன் அவர்களின்
சிவாஜியின் சாதனை சிகரங்கள் தொகுப்பில் இருந்து)

Russellbpw
27th October 2014, 10:30 PM
விரைவில் !


http://www.youtube.com/watch?v=UZtITycERbo

sivaa
27th October 2014, 10:37 PM
Vasantha Maaligai when it was made to Digital and re-released, the first week collection was Rs.3,28,690.

The Highest collection in Albert for the first week till date for any old film !!!

வசூலில் சக்கரவர்த்தி
சாதனையில் சக்கரவர்த்தி
சிவாஜி கணேசன் ஒருவரே

sivaa
27th October 2014, 10:49 PM
எத்துனை நடிகர்கள் இருந்திருந்தாலும்...இருந்தாலும் ....இந்த ஒரு பாடலுக்கு உண்டான பாவம்...அபிநயம் முன் நிற்குமா ?

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே...அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?

இந்த ஒரு வரிக்கு கொடுக்கும் அபிநயம் ...ஒருவரின் ஆயுள் முடியும் வரை பயிற்சி செய்தாலும் வராது !

வணங்கவேண்டிய கலை தெய்வம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

http://www.youtube.com/watch?v=BAVFuEqqV-k


எத்துனை நடிகர்கள் இருந்திருந்தாலும்...இருந்தாலும் ....இந்த ஒரு பாடலுக்கு உண்டான பாவம்...அபிநயம் முன் நிற்குமா ?

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே...அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?

இந்த ஒரு வரிக்கு கொடுக்கும் அபிநயம் ...ஒருவரின் ஆயுள் முடியும் வரை பயிற்சி செய்தாலும் வராது !

வணங்கவேண்டிய கலை தெய்வம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

ScottAlise
28th October 2014, 08:41 AM
Thanks for your valuable feedback Ragavendran Sir, Sivaji senthil sir, Khalnaayak sir,Vasudevan sir, Sivaa sir , Gopu sir, SP Chowdry sir

Thanks for posting about the theatrical run of Marumagal movie RKS sir

JamesFague
28th October 2014, 10:38 AM
Courtesy: Mr Murali Srinivas

In the above mentioned function organised on 16.05.2009, one Mr.Tenkasi Ganesan had rendered a poem on NT. Here it is

இங்கிவனை யாம் பெறவே !

இந்தியாவின்
இரண்டு அதிசயங்கள்!
வடக்கே தாஜ்மகால்
தெற்கே நடிகர் திலகம்

அதிசயம் மட்டும் அல்ல
அதற்கும் அப்பாற்பட்ட அற்புதமும் நீயே
அன்னை ராசாமணி
அன்று சுமந்தது கருப்பையா - இல்லை
கலைமகளே வடிவான கலைப்பை

பராசக்தி அருளால்தான் நீ
திரைக்கு வந்தவன் என்றாலும்
திருமால் பெருமை நிரம்பவே
இருந்ததால்தான்
பெருமாளால் - பெரும் ஆள் ஆனாய்

நடிப்பில் எத்தனை வகை
நடையில் எத்தனை வகை
குரலில் எத்தனை வகை
குறும்பில் எத்தனை வகை

அழுகையில் எத்தனை வகை
ஆத்திரத்தில் எத்தனை வகை
புன்னகையில் எத்தனை வகை
புழுங்குதலில் எத்தனை வகை

மோகத்தில் எத்தனை வகை
காதல் தாகத்தில் எத்தனை வகை
கண்டிப்பில் எத்தனை வகை
கனவினில் எத்தனை வகை

அத்தனையும் அடக்கி வைத்த
அளப்பரிய கலைப்புதயல் நீ
நீ நடந்தது வந்த ராஜபாட்டைதான்
திரையுலகின் நடைப்பாதையானது

நடிப்பு கர்ணனே
அந்த நாள் திரை உலகின்
இரும்பு திரையை அகற்றி
திருப்பம் தந்த விடிவெள்ளி நீ

தாயோடு அறுசுவைபோம்
தந்தையோடு கல்விபோம்
என்பது பழைய பாட்டு

நான் கூறுவேன்

பந்துலுவோடு வரலாற்று படம்போம்
சக்தி கிருஷ்ணசாமியோடு நற்றமிழ் வசனம்போம்
ராமநாதஐயரோடு ரம்மிய சங்கீதம் போம்
எங்கள் நெஞ்சம் நிறை தலைவா

உன்னோடு -

விழியால் பேசும் கலை போம்
மொழி சிறக்கும் வசனம் போம்
வழி வியக்கும் நடைபோம்
மொத்தத்தில் நடிப்புக் கலையே போம்

காரணம் -

வெற்று படங்கள் வந்த காலத்தில்
நீ ஒருவனே வெற்றிப் படங்களை தந்தவன்

ஒரே நாளில் இரண்டு படங்கள் !
இரண்டும் வெற்றி !

ஒரே மாதத்தில் நான்கு படங்கள்
அத்தனையும் 100 நாட்கள்

ஒரே வருடத்தில் 11 படங்கள்
அனைத்தும் வெற்றி
அது மட்டுமா

அடுத்த மாநிலத்தில் 100 நாட்கள்
அந்நிய தேசத்தில் 200 நாட்கள்
என்று

உன் படங்கள் தவிர
எவர் படம் ஓடியது
என்றும் நிலைத்த புகழை தேடியது

அற்புத ஒப்பனையா
அபார கற்பனையா
அழகு விழியா - அடுக்கு மொழியா
அனாயாச நடையா - அசத்தல் பார்வையா
எது பேசப்படவில்லை

உன் அடர்ந்த சிகை நடிக்கும் -
அம்பிகாபதியும் கட்டபொம்மனும்
உதாரணங்கள்

நீ அணிந்த நகை நடிக்கும்
வணங்கமுடியும் சரஸ்வதி சபதமும்
உதாரணங்கள்

ஏன், நீ உள்வாங்கி வெளியிடும் புகையும்
நடிக்கும்
புதிய பறவையும் சாந்தியும் உதாரணங்கள்

இன்றைய விழா நாயகன்
கட்டபொம்மனை பற்றிய ஓரிரு வரிகள்

அத்தனை பள்ளிகளின்
ஆண்டு விழாக்களில்
அவசிய வேடம் கட்டபொம்மன்

அறம் செய்ய விரும்பு எனும்
ஆத்திச் சூடிக்கு முன்
அத்தனை மாணவனின் அரிச்சுவடி
கட்டபொம்மன்

தனி நபர் போட்டியின்
தவறாத பாடம் கட்டபொம்மன்.

தரணி புகழ் தமிழ் துள்ளிவர
தக்கதொரு வசனம் கட்டபொம்மன்.

எகிப்து அதிபர் நாசரை
நம்மூர் பக்கம்
எட்டிப் பார்க்க வைத்தவன் கட்டபொம்மன்

கெய்ரோ விருதால் உலகையே வியக்க
வைத்தவன் கட்டபொம்மன்

அத்தனை பெருமைகளுக்கும் அடிப்படை
நடிப்பு சித்தனே நீதான்

உன் தலைமயிர் தொட்டு
கால்நகம் வரை நடித்ததால்
கலைத்தாயின் தவப்புதல்வன் ஆனாய்

காமிரா முன் மட்டுமே நடிக்கத்
தெரிந்ததால்தான்
காலம் போற்றும் உயர்ந்த மனிதன் ஆனாய்

விளம்பரம் விரும்பாமல்
அள்ளி தந்து பலர் வாழ்வை
வளம்பட செய்ததால்
கொடை நின்ற கர்ணன் ஆனாய்

குணம் நிறை மனம் நிறைந்ததால்
நல்லதோர் குடும்பம் கண்டாய்
இல்லற ஜோதியாய் கமலா இருக்க
இரண்டு நல புதல்வர்கள் சீரோடு சிறக்க
தேன் மொழியாம் தமிழ் போல்
தெவிட்டாத சாந்தி பெற்றாய்

கௌரவமாய் வாழ்கையை
கண்டதால்தான்
அன்னை இல்லம் அது
வசந்த மாளிகை ஆனது

உன் படங்களே
பாடங்கள் ஆனதால்
பலர் நடிப்பில் பட்டம் பெற
நீயே
பல்கலைக்கழகம் ஆனாய்.

தங்கமே! தமிழ்ச்சரமே
எங்கள் அங்கம் புல்லரிக்க
அற்புத நடிப்பு தந்தாய்

நீ வாழ்ந்த காலத்தில்
வாழ்ந்ததால்
வள்ளுவன் காலத்தில்
வாழ்ந்தவன் போன்ற
பெருமை எங்களுக்கு உண்டு

ஒரு வள்ளுவன்
ஒரு ஷேக்ஸ்பியர்
ஒரு மைக்கேல் அஞ்சலோ
ஒரு பிதோவன்
ஒரு காளிதாசன்
ஒரு பாரதி
ஒரு சிவாஜி

உலக வரலாறு இப்படித்தான்
எழுதப்பட முடியும்

நிறைவாக

நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
இது உலக நீதி

ஆருயிர் அண்ணனே
உன் நினைவிருந்தால்தான்
எங்களுக்கு நெஞ்சமே இருக்கும்
இதுதான் உண்மை நீதி

அன்புடன்

JamesFague
28th October 2014, 10:48 AM
Courtesy: Mr P R old post

காத்தவராயன்

கதை
ஈசனிடம் நடனித்தில் தோல்வியுற்ற உமையாள் சினம் கொண்டதால், பூமிக்கு சென்று உணர்வடிக்கி வாழப் பணிக்கப்படுகிறாள். வீரபாகுவும் உமையின் குழந்தையாக பூமிக்குச் செல்கிறான். அங்கு வேடர் குலப்பெண்கள் உமையாளிடம் (கண்ணாம்பா) குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக பெற்றுச் செல்கிறார்கள்.

மிகச்சிறந்த வீரனாக வளரும் காத்தவராயன் தன் தாயைத் தேடிக் கண்டடைகிறான். வேண்டும் உருவம் பெற ஆசீர்வதிகப்படுகிறான். வெளி ஊர்கள் பலவற்றுக்குப் பயணப்படுகிறான். மலையாள மாந்த்ரீகர் பாலையாவை அடிமையாக்குகிறான். அவன் மனைவி MN ராஜம், அவள் தம்பி சந்திரபாபு.

பிறகு ஆரியகுல இளவரவி ஆரியமாலாவை (சாவித்ரி) சந்தித்து, புகழ்பெற்ற "வா கலாப மயிலே" பாடலைப் பாடுகிறான். அவளை சந்திக்க கிழவனாக வருகிறான். அவனைப் பிடித்து அரசவையில் ஒப்படைக்க சாக்குப்பையிலிருந்து குடுகுடுப்பைக்காரனாக உருமாரி எழுகிறான்.

சிறையிலடைப்பட்டு பிறகு பட்டத்து யானையோடு தப்பிக்கிறான். கிளியாக உருமாரி மறுபடி ஆரியமாலாவை சந்திக்கிறான். மறுபடி தப்பியோட்டம். கல்யாண நிச்சயமான ஆரியமாலாவை சந்திக்க வளையல்காரன் வேடம் இட்டு வருகிறான் (படகோட்டி !).மறுபடி தப்பியோட்டம், இம்முறைி பிடிபடுதல். பிணைத்து அவனை அரசன் கொல்ல முனையும் போது, ஆரியமாலா கத்திக்குத்து பட்டு விழுகிறாள்.

அவள் இறந்துவிட்டாள் என்று எண்ணி ஊரை துவம்சம் செய்கிறான் காத்தவராயன். கண்ணாம்பா கடிந்து கொள்ள அடங்கும் அவன் கைது செய்யப் ப்படுகிறான். பிணைத்த அவனை யானை தரையோடு இழித்துச் செல்கிறது. பின் சாட்டையடி வாங்கிக்கொண்டு ஊரார் காண தண்டனை நிறைவேற்றப்படவேண்டிய பெருவெளிக்கு செல்கிறான். அங்கு ஒரு பிரம்மாண்டமான அய்யனார் (?) சிலை. கண்ணாம்பா முறையிட அருள மறுக்கிறான் அரசன். மனோகரா பாணியில் பொங்கி எழச்சொல்லும் அன்னையின் ஆணைக்கு இணங்கி பிரம்மாண்ட சிலைய உடைத்து பேரழிவை ஏற்படுத்துகிறான். ஓடிவரும் ஆரியமாலாவும் அதில் சிக்குகிறாள்.
சிவபெருமான் அருளால் பார்வதி, காத்தவராயன், ஆரியமாலா யாவரும் வானுலகம் ஏறுகிறார்கள்.

கடைசி அரை மணி நேர அவசரகதி திருப்பம் மேல் திருப்பங்களைத் தவிற மிக சுவாரஸ்யமான திரைப்படம்.
குறிப்பாக: பல அபாரமான காட்சிகள் நிறைந்த படம் இது.

Spectacle
-> வேடர்களை அறிமுகம் செய்யும் காட்சி. கோழி உடை தரித்து (சிறுவர்கள் ?) நடனம். குழு நடன அமைப்பின் ஒற்றுமை. தக்கை செட் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதன் மீது அமர்ந்து ஒருவர் முரசு அடித்துக் கொண்டிருந்தார் !

--> படத்துவக்கமே சிவன்-பார்வதி நடனம். தொழில்முறை நடனக்காரர்கள் என்று நினைக்கிறேன்.(பயப்படாதீர்கள் கண்ணாம்பா இல்லை. பாட்டு முடிந்ததும் சிவன்/பார்வதி மாறிவிடுவர்..தொலைக்காட்சித் தொடர்களில் பாத்திரங்கள் மாறுவது போல) தமிழ் சினிமாவின் மிக உக்கிரமான பரதநாட்டியக் காட்சிகளில் ஒன்று இது. படத்தில் முதல் ஐந்து-ஆறு நிமிடம் இசையும்-நடனும் மட்டுமே !


--> சக்கரம் சுழன்று, பாடலினூடே பெரியவனாகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். சண்டையினூடே ? சிறுவன் காத்தவராயன் வாள்பயிற்சி பெறுகிறான். அவன் நிழல் காண்பிக்கப் படுகிறது. நிழல் வளர்கிறது. வாளுடன் சிவாஜி. நிழலிலிருந்து நிஜத்துக்கு வரும்போது 'கட்' மிகக் கூர்மையாக கவனித்தால் மட்டுமே தென்படும் சிறப்பான படத்தொகுப்பு

--> யானை மோதி கதவு திறக்கிறது. கூர்ந்து கவனித்தால் யானை கதவை வேகமாக நெருங்குவதைக் காண்பித்து, பிறகு எதிர்பக்கம் அதிரும் கதவைக் கண்டு மிரளும் தங்கவேலும் சிப்பாய்களும் காட்டப்படுகிறார்கள். அதாவது யானை மோதாமல் அந்த உணர்வைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருந்தார்கள். அந்த காட்சி முழுவதும் இவ்வாறே காட்டப்படுகிறது. மிக புத்திசாலித்தனமான உத்தி.

--> மிக தத்ரூபமான மல்யுத்தக் காட்சி. சிவாஜியின் எதிராளி நிஜமாகவே ஒரு மல்யுத்த வீரர் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 5-6 நிமிடங்கள் நீளும் அக்காட்சியில் சிவாஜியின் வெற்றி இயல்பான படிப்படி முன்னேற்றமாக நம்பும்படி காண்பிக்கப் படிகிறது. பல முறை சிவாஜியும் (டூப் அல்ல!) எதிராளியும் ஒருவரை ஒருவர் வீழ்த்துகிறார்கள். களத்துக்குள் இறங்கும் பொழுது சிவாஜி தோளை வளைத்துக் கொண்டு இறங்குவது, ஆயத்தத்தை போகிற போக்கில் மிக சிறப்பாக காண்பிக்கும் காட்சித்துளி. குன்னக்கோல் சிவாஜி 'பாட்டும் நானே'வின் தன் முறை வரும்பொழுது லேசாக தொண்டையை செறுமிக்கொள்வது போல.

--> மணிரத்னத்தில் அலைபாயுதே திரைப்படத்தில், காதல்-சடுகுடு பாடலில் பின்னோக்கி ஓட்டப்படும் காட்சிகள் இடம்பெற்று கவனத்தை பெற்றது. காத்தவராயனின் ஒரு சண்டைக்காட்சியில் சிவாஜி பல படைவீரர்களை எதிர்கொள்ளும்போது தரையிலிருந்து படிப்படியாக மேலே குதித்து, பல நிலைகளைத் தாண்டி கோட்டைசுவரை எட்டுவதாக இரு காட்சி வருகிறது. அது மேலிருந்து குதித்ததைப் படமாக்கி பின்னோக்கி ஓட்டி காட்டப்படுகிறது. ஒரு 5 வினாடிகள் வரும் அக்காட்சியின் துவக்கத்தில் படச்சட்டகத்துக்குள் இடத்திலிருந்து வலமாக ஒரு சில அடிகள் சிவாஜி ஓடி வரவேண்டும். அது 'ரிவெர்சில்' ஓடியது என்று பார்த்து வியக்க டிவிடி தேவைப்படுகிறது.

--> அரண்மனையிலிருந்து தப்பி ஓடும் சிவாஜி தனது குகைக்குள் விரைந்து ஓடி வருவார். அங்கு, படுத்துக்கொண்டிருக்கும் பாலையாவுக்கு ராஜம் கால் அமுக்கிக்கொண்டிருப்பார். ஓடிய வேகத்தில் உள்ளே வரும் சிவாஜி ஒரு அரை விநாடித் தயங்கி திரும்பி (அதற்குள் அவர்கள் எழுந்துகொண்டு சிவாஜியைக் கூப்பிட) மீண்டும் உள்ளே செல்வார். மிக கவனமாக காட்சி அமைப்பு/நடிப்பு

- பல ஊர்கள் பயணப்படும் ஆரம்பக்காட்சி மிக புத்திசாலித்தனமாகக் காட்டப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில், மதுரைக் கோவில், ஆலப்புழை படகுப் போட்டி என்று பல கோப்புக் காட்சிகள். அதன் மேலேயே அதை ரசிக்கும்/கண்டு வியக்கும் சிவாஜியின் முகபாவங்கள் என்று காட்சியின்-மேல்-காட்சி பதிக்கும் உத்தி. இது இதற்கு முன்னர் (1958) கையாளப்பட்டிருக்கிறதா என்று கவனிக்கவேண்டும். அது சிறப்பாக வந்ததற்கு சிவாஜியின் ஒரு முக்கிய காரணம். ஒரு நெருக்கமான படகுப்போட்டியை கண்டு களிக்கும் பாவனையை மிகச்சிறப்பாக செய்வார்.

--> குடுகுடுப்பைக்காரனாக வரும்போது பேச்சும், பாவனையும் முற்றிலும் மாறிப்போவதெல்லாம் சிவாஜியின் அன்றாட அதிசயம்.

--> பொம்மலாட்டம் போன்ற நடனம் (இது சமீபத்தில் ஓரிரு படங்களில் செய்யப்பட்டது நினைவில் இருக்கலாம்). சந்திரபாபுவும், ராஜமும் ஆடும் ஜோடி நடனம். குறிப்பாக சந்திரபாபு பொம்மையைப் போலவே குறைந்த அசைவுகளுடன் சிறப்பாக ஆடுவார்.

--> காத்தவராயன் கோபம் கொண்டு ஊரை துவம்சம் செய்யும் போது தூணைப் பிடுங்க வீடே விழும் காட்சிகள்

--> பிரமாண்ட அய்யனார் சிலை உதிர்ந்து விழும் கடைசி காட்சி

இப்படி பல சிறப்பான காட்சிகள்.


இன்ன பிற..

--> தங்கவேலுவின் நீண்ட நெடுங்கால நகைச்சுவை முயற்சிகள் எதற்கும் இதுவரை என்னால் சிரிக்க முடிந்ததில்லை. இதிலும் அனேகம் அப்படியே. ஆனால் ஓரிரு காட்சிகள் சிரித்து வியந்தேன்: ராஜம் வீட்டுக்கு வந்து விசாரிக்கும் போது மிடுக்காக "பட்டத்து யானை எங்கே" என்று கேட்டபடி மிக இயல்பாக மேசைக்கு அடியில் பார்ப்பார்

--> சந்திரபாபுவின் slapstick நன்றாக வந்திருக்கிறது.

--> கதையின் காலத்துக்கு முரணாக ஓ/சி, கோலா லம்பூர் என்கிற வார்த்தைகள் பாடல்களில் வருகின்றன. சந்திரபாபுவின் கஸ்மாலமும் !


சோகம் தோய்ந்த சமூகப் படங்களில் எனக்கு மிகையாகத் தோன்றும் காட்சிகள் மிகுந்திருக்கின்றன. அவற்றின் தேவைகளுக்குத் தோதாக சிவாஜி நடிக்கும்பொழுது என்னால் அதை அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. உதாரணமாக நான் இதற்கு முன் பார்த்த படம் புனர்-ஜென்மம். சிவாஜியும்-கண்ணாம்பாவும் போட்டிப் போட்டுக்கொண்டு உணர்ச்சியைக் கொட்டித் தீர்த்தார்கள்.

மாறாக காத்தவராயனில் கதை தான் மிகை, ஆனால் காட்சியமைப்பும், நடிப்பும் மிகச் சரளமானவை (கடைசி சில நீமிடங்கள் தவிற). இது போன்ற சிறப்பாக எடுக்கப்பட்ட கேளிக்கைசித்திரங்கள் நடிப்பு மட்டுமல்லாது, மேற்சொன்ன பல விஷயங்களினாலும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. இத்திரியின் இப்படத்தைப் பற்றி நான் அதிகம் படித்ததில்லை என்பதால் இந்த நீண்ட இடுகை.

JamesFague
28th October 2014, 10:55 AM
a recap from Saradha Madam old post

வசந்த் தொலைக்காட்சியின் 'சந்திப்போமா' நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட, நாடக, சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் கலைஞரான நித்யா வின் பேட்டி ஒளிபரப்பானது. (நித்யாதான் தற்போது 'வியட்நாம் வீடு' நாடகத்தில் ஒய்.ஜி.மகேந்திரனின் ஜோடியாக நடிக்கிறார்) பேட்டி கண்டவர் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரமான ஐஸ்வர்யா...

பேட்டியின்போது நடிகர்திலகத்தைப்பற்றி நித்யா சொன்னது....

"பாலாஜி சாருடைய 'தீர்ப்பு' படத்தில் சிவாஜி சாருடைய மகளாக நடித்திருந்தேன், சரத்பாபு, விஜயகுமார் இருவரும் என் அண்ணன்கள். படத்தில் நான் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோகும் காட்சி வரும். என் உடலை தகனம் செய்யும் காட்சி சத்யா ஸ்டுடியோவின் வெட்டவெளி பொட்டலில் நடந்தது. என்னைக் கற்பழித்தவைக் கொன்றுவிட்டு சிறையில் இருக்கும் என் தந்தை சிவாஜி சார், பரோலில் வந்து என் சிதைக்கு தீ வைப்பதாக காட்சி. விறகுகளால் சிதை அமைத்து அதில் என்னைப்படுக்க வைத்து உடல் முழுக்க வரட்டி அடுக்கி முகத்தை மட்டும் திறந்து வைத்து குளோசப் ஷாட்களை எடுத்தனர். பின்னர் முகத்தையும் வரட்டியால் முடி , சிவாஜி அப்பா தீ வைபது போல காட்சி.

அதை எடுத்து முடித்ததும், டைரக்டர் பில்லா கிருஷ்ணமூர்த்தி சார், சிவாஜி சாருடைய குளோசப் காட்சிகளை எடுத்து முடித்து அனுப்பி விடலாம் என்று மும்முரமானார். அதைக்கவனித்த சிவாஜி சார், டைரக்டரிடம் "ஏம்ப்பா, அந்தப்பொண்ணை என்ன மலர்ப்படுக்கையிலா படுக்க வச்சிருக்கீங்க?. பாவம் சிதையில் படுத்திருக்குப்பா. முதல்ல அதோட ஷாட்களை எடுத்து முடிச்சு, குழந்தையை அங்கிருந்து கிளப்புங்கப்பா. அப்புறம் என்னோட ஷாட்களை எடுத்துக்கலாம். அந்தப்பொண்ணோட சீன்கள் முடிய எவ்வளவு நேரமாகும்?" என்று கேட்டார்.'ஒரு மணி நேரமாகும்ணே' என்று இயக்குனர் சொன்னதும், "இரண்டு மணி, மூணு மணி நேரமானாலும் அப்பா நான் வெயிட் பண்றேன். முதல்ல அந்தக்குழந்தையின் சீன்களை முடிச்சு சிதையிலிருந்து எழுப்புங்க" என்று சொன்னவர், அந்த வெட்டவெளியில் ஒரு குடையை மட்டும் பிடித்துக்கொண்டு, ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

திரைப்படங்களில், இதுபோன்ற சாவுக்காட்சிகள் எடுத்தால், அது முடிந்ததும் அதில் நடித்தவருக்கு திருஷ்டி கழிப்பார்கள். என்னுடைய காட்சிகள் எடுத்து முடிந்ததும் எழுந்துவந்த சிவாஜி சார், 'குழந்தைக்கு நான் திருஷ்டி கழிக்கிறேன்' என்று திருஷ்டி கழித்தவர் "உனக்கு சாவே வரக்கூடாதுன்னு ஆசீர்வதிக்கிறேம்மா" என்று ஆசீர்வதித்தார். (இந்த இடத்தில் நித்யாவின் கண்கள் பனித்தன). அவரோடு ஒப்பிடும்போது நானெல்லாம் ஒண்ணுமேயில்லை. இருந்தாலும் தன்னுடன் நடிப்பவர்களில் சின்னவங்க, பெரியவங்க என்ற வித்தியாசமெல்லாம் பார்க்காம அவர் மதிப்பு கொடுப்பது எல்லோரும் அவர்கிட்டே கத்துக்க வேண்டிய விஷயம்".

அப்போது பேட்டி கண்ட ஐஸ்வர்யா சொன்னது "அவரோட படங்களைப் பார்க்கும்போது சிவாஜி அங்கிள் எவ்வளவு பெரிய நடிகர், எவ்வளவு பெரிய கலைஞர், எவ்வளவு பெரிய சாதனையாளர் என்றுதான் தெரிஞ்சுக்கறோம். ஆனால் அவரோடு பழகிய உங்களைப்போன்றவர்கள் சொல்லும் இதுபோன்ற சம்பவங்கள் மூலம்தான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதும் நமக்கு தெரிகிறது"

இனி வரும் தலைமுறைகளும் அவரைப்பற்றி அறிந்து வியக்கத்தான் போகின்றன...

Georgeqlj
28th October 2014, 11:20 AM
Sent from my GT-S7562

Georgeqlj
28th October 2014, 11:33 AM
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

Sent from my GT-S7562

Russellbpw
28th October 2014, 01:20 PM
http://i1055.photobucket.com/albums/s509/senthilvel45/IMG_145521775465087_zpsei6siivv.jpeg (http://s1055.photobucket.com/user/senthilvel45/media/IMG_145521775465087_zpsei6siivv.jpeg.html)

abkhlabhi
28th October 2014, 01:23 PM
Rajkumar memorial to be open on 29th of Nov. Govt. of Kar. inviting Tamil SS also for this function. But these SS earning and living in TN never raised any voice on NT Memorial. If their movie face any problems for release only they raise their voices. RK memorial come within a period of 8 years not only the support of their family but also from Kannada Film Ind., and fans of Rajkumar and more over Kar. Politicians (though he was not supported any political parties in Kar.) In case of vishu memorial, only 3 years.

But in TN, only Sivaji Pervai and some Nt fans are fighting for NT Memorial. When will our Dream comes true ? In TN, Nt statue itself not allowing, then were will Memorial ?

Russellbpw
28th October 2014, 01:27 PM
Courtesy: Mr P R old post

காத்தவராயன்



--> மிக தத்ரூபமான மல்யுத்தக் காட்சி. சிவாஜியின் எதிராளி நிஜமாகவே ஒரு மல்யுத்த வீரர் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட 5-6 நிமிடங்கள் நீளும் அக்காட்சியில் சிவாஜியின் வெற்றி இயல்பான படிப்படி முன்னேற்றமாக நம்பும்படி காண்பிக்கப் படிகிறது. பல முறை சிவாஜியும் (டூப் அல்ல!) எதிராளியும் ஒருவரை ஒருவர் வீழ்த்துகிறார்கள். களத்துக்குள் இறங்கும் பொழுது சிவாஜி தோளை வளைத்துக் கொண்டு இறங்குவது, ஆயத்தத்தை போகிற போக்கில் மிக சிறப்பாக காண்பிக்கும் காட்சித்துளி. அது சிறப்பாக வந்ததற்கு சிவாஜியின் ஒரு முக்கிய காரணம். ஒரு நெருக்கமான படகுப்போட்டியை கண்டு களிக்கும் பாவனையை மிகச்சிறப்பாக செய்வார்.

--> குடுகுடுப்பைக்காரனாக வரும்போது பேச்சும், பாவனையும் முற்றிலும் மாறிப்போவதெல்லாம் சிவாஜியின் அன்றாட அதிசயம்.

--> காத்தவராயன் கோபம் கொண்டு ஊரை துவம்சம் செய்யும் போது தூணைப் பிடுங்க வீடே விழும் காட்சிகள்

--> பிரமாண்ட அய்யனார் சிலை உதிர்ந்து விழும் கடைசி காட்சி

இப்படி பல சிறப்பான காட்சிகள்.



-------

Russellbpw
28th October 2014, 01:32 PM
Rajkumar memorial to be open on 29th of Nov. Govt. of Kar. inviting Tamil SS also for this function. But these SS earning and living in TN never raised any voice on NT Memorial. If their movie face any problems for release only they raise their voices. RK memorial come within a period of 8 years not only the support of their family but also from Kannada Film Ind., and fans of Rajkumar and more over Kar. Politicians (though he was not supported any political parties in Kar.) In case of vishu memorail, only 3 years.

But in TN, only Sivaji Pervai and some Nt fans are fighting for NT Memorial. When will our Dream comes true ?


Dear Sir,

As long as the ADMK Office bearers are holding positions in Nadigar Sangam, this will not happen. Atleast in this government it will never ever happen even if the EX-CM wants to build one as she knew his talents as a co-star !

We know the reasons ....the other guys are always Jealous to the core when it comes to the talents and achievements of Nadigar Thilagam in his DRAMA & FILM CAREER both in India and Abroad...!

Regards
RKS

JamesFague
29th October 2014, 11:40 AM
a recap from Mr Murali Srinivas Old Post

கர்ணன் படப் பாடல்களைப் பார்த்தேன் என்று சொன்னேன். அதில் தோன்றிய சில எண்ணங்கள். மெல்லிசை மன்னர்கள் இந்த படத்தின் பாடல்களை ஹிந்துஸ்தானி ராகங்களில் அமைத்திருப்பதாக பலரும் சொல்லி கேள்வி. அந்த ராகங்களைப் பற்றியும் இந்த பாடல்களைப் பற்றியும் இசை மேதைகள் நிறைய சொல்லியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். நாம் பாடல் காட்சிகளைப் பற்றி பேசலாம்.

என்னுயிர் தோழி - முதல் பாடல். முத்தான பாடல். ராகம் - ஹமீர் கல்யாணி.

எத்தனை பாடகியர் வந்தாலும் நாம் ஏன் சுசீலாவை அளவுக்கோலாக கொள்கிறோம் என்பதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதிலும் முதல் சரணத்தில் அரண்மனை அறிவான் அரியணை அறிவான் என்ற இடத்தில் நிறுத்தி ஒரு ஆலாபனை செய்வாரே, அது ஒன்று போதும். இனி காட்சிக்கு வருவோம்.

இந்த பாடல் படமாக்கப்பட்டபோது சாவித்திரிக்கு இரண்டு அசௌகரியங்கள். ஒன்று உடல் எடை கூடி விட்டது. இரண்டு அவர் அப்போது அவரது மகனை வயிற்றில் சுமந்திருந்தார். ஆதலால் அவரை அவ்வளவாக ஆட, ஓட விடாமல் படமாக்கியிருப்பார்கள். பாடலின் இடையில் நடிகர் திலகமும் அசோகனும் உள்ளே நுழைய முயற்சித்து ஆடலைப் பார்த்து விட்டு மறைந்துக் கொள்வதாக காட்சி. நடிகர் திலகத்தின் அந்த இரண்டு க்ளோஸ் அப் காட்சிகளாகட்டும் இல்லை லாங் ஷாட் ஆகட்டும் [இத்தனைக்கும் காம்பிநேஷன் இல்லை, சஜ்ஜெஷன் ஷாட்தான்] அந்த முகத்தில்தான் எத்தனை உணர்வுகள் மின்னி மறையும்? இசைக் கருவிகளை வாசிக்கும் தோழியர், பாடும் சேடிப் பெண்கள், ஆடும் நடன மங்கையர் என்று எல்லாமே அழகான லயத்தில் அமைந்திருக்கும்.

கண்கள் எங்கே - ராகம் - சுத்த தன்யாசி.

சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. இந்த பாடலை மட்டுமே ஒரு காஸட்டின் ஒரு பகுதி முழுக்க பதிந்து வைத்திருந்த ஒரு நண்பர் இருந்தார். அவ்வளவு இனிமை. இந்த பாடல் காட்சியில் நடிகர் திலகம் வரமாட்டார். ஆனால் அந்த குறையை தேவிகா போக்கி விடுவார். சரணங்களின் இடையில் தேவிகாவின் ஒரு சில நடன ஸ்டெப்ஸ் நளினமாக இருக்கும். அந்த ஏக்கத்தையும் விரகத்தையும் குறிப்பாக குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன் என்ற வரிகளின் போது ரசனையோடு வெளிப்படுத்தியிருப்பார்.

இரவும் நிலவும் வளரட்டுமே - ராகம் - சுத்த சாரங்கி

பெரும்பாலோருக்கு பிடித்த பாடல் காட்சி. கர்நாடகாவில் உள்ள பேலூர் - ஹளபேடு கோவிலில் படமாக்கப்பட்ட காட்சி. சுசீலா ஆலாபனை ஆரம்பிக்கும் போதே தியேட்டர் களை கட்டி விடும். நடிகர் திலகத்தின் ராஜ நடை, காலை வளைத்து நிற்கும் போஸ், நாயக நாயகியரை மட்டும் போஃக்கஸ் செய்யாமல் அரண்மனையின் சிற்ப அழகையும், பிரமாண்டத்தையும் பார்வையாளன் உணரும் வண்ணம் அமைக்கப்பட்ட காமிரா கோணங்கள், நடிகர் திலகம் - தேவிகா இடையிலான கெமிஸ்ட்ரி இவை அனைத்தும் வெளிப்படும் ஒரு சிறந்த பாடல்.

கண்ணுக்கு குலம் ஏது - ராகம் - பஹடி

முதலிரவு பாடல். ஆனால் சோகத்தில் ஆரம்பித்து மகிழ்ச்சியில் முடியும். தன் குலத்தையும் பிறப்பையும் கேவலப்படுத்தி விட்ட கோவம் கர்ணனுக்கு. அது மட்டுமல்ல, மனைவியே தன்னை உதாசினப்படுத்திவிட்டாள் என்ற எண்ணம். மனைவி தவறு செய்யவில்லை என்றவுடன் சிறிது மகிழ்ச்சி அடைந்து பிறகு மனைவியின் பாடல் வரிகள் எப்படி மனதுக்கு சாந்தி அளிக்கின்றன என்பதை வெறும் முகபாவங்களிலேயே காட்டியிருக்கும் நேர்த்தி. குலத்தை விட குணமே சிறந்தது என்பதற்கு கண்ணதாசனின் வரிகள் மிக அழகாக விளக்கம் கொடுக்கும். இதில் குறிப்பிட தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால் உள்ளே ஒரு மனப்போராட்டம் நடக்கும் போது வெளியே சேடிப் பெண்கள் ஆடிக் கொண்டிருப்பர். அதாவது உள்ளே நடப்பது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் உள்ளே ஒரு முதலிரவு கொண்டாட்டம் நடக்கிறது என்று நினைத்திருப்பர். இது ஒரு லாஜிக்கலான காட்சியமைப்பு.

மேலும் பேசுவோம்.

JamesFague
29th October 2014, 11:41 AM
மழை கொடுக்கும் கொடையும் - ராகம் ஹிந்தோளம்

கர்ணனின் அரசவையில் புலவர்கள் பாடும் பாடல் தொகுப்பில் இடம் பெறும் முதல் பாடல். சீர்காழியின் கம்பீர குரலில் ஒலிக்கும். நடிகர் திலகம் நடந்து வந்து அந்த சிம்மாசனத்தில் அமரும் காட்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

நாணி சிவந்தன மாதரார் கண்கள்

திருச்சி லோகநாதனின் குரலில் பாடல் ஒலிக்க பெண்களையும் புலவர்களையும் ரிஷிகளையும் வரிகளுக்கேற்ப காட்டி விட்டு தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே என்ற வரிகளின் போது நடிகர் திலகத்தின் கரங்களை க்ளோஸ் அப்பில் காட்ட செவ்வரி ஓடியிருக்கும்.

இந்த காட்சி முடிந்தவுடன் மாஸ்டர் ஸ்ரீதர் ஓடி வந்து பாடசாலையில் சேர்க்க மறுக்கிறார்கள் எனும் காட்சி. [உங்கள் ஆட்சியில் இப்படி நடக்கலாமா என்ற வசனத்தின் போது கைதட்டல் பறக்கும்].

ஆயிரம் கரங்கள் நீட்டி

தன் தந்தையான சூரியனை வழிப்பாடு செய்து கர்ணனும் குழுவினரும் பாடும் பாடல். சம்ஸ்கிருத மந்திரங்களை சொல்லும் வேத விற்பனர்களை தாங்கள் தங்கியிருந்த பெங்களூர் உட்லாண்ட்ஸ் ஹோட்டலுக்கு வரவழைத்து அவர்கள் பாடும் அதே ராகத்தில் கண்ணதாசன் வரிகள் எழுதி மெல்லிசை மன்னர்களால் இசை அமைக்கப்பட்டது என்று சொல்லுவார்கள். டி.எம்.எஸ் மற்றும் குழுவினர் பாடும் இந்த பாடலில் தனியாக "அழைக்கும் ஓர் உயிர்களுகெல்லாம்" என்ற வரியின் போது டி.எம்.எஸ் உச்சஸ்தாயில் பாட நடிகர் திலகத்தின் வாயைசைப்பு ஆஹா! [இத்தனைக்கும் லாங் ஷாட் அதுவும் பக்கவாட்டில் காமிரா மூவ்மென்ட்].

என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் - ராகம் ஹம்சநந்தி

தன் மகனான அர்சுனனுக்காக இந்திரன் வந்து கவச குண்டலங்களை யாசகம் கேட்கும் காட்சி. பி.பி.எஸ். உருக்கியிருப்பார். வந்திருப்பது யார் என்பதை சொல்லி எந்த காரணத்திற்காக வந்திருக்கிறான் என்பதையும் குறிப்பிட்டு சூரிய பகவான் எச்சரிக்க அதையும் மீறி கர்ணன் உடலோடு ஓட்டிப் பிறந்த கவச குண்டலங்களை தானம் கொடுக்கும் காட்சி. இதில் கூட மனித வடிவிலே வந்திருக்கும் இந்திரனிடம் அவரது நோக்கத்தை குத்திக் காட்டும் கர்ணன்.[தள்ளாடும் தேகம் ஆனால் தள்ளாடாத நோக்கம்] வேடம் கலைந்த இந்திரன் தன் சுயரூபத்தில் காட்சி தர நொடி நேரத்தில் கை கூப்பி கால் மடக்கி தேவேந்திரா என வணங்கும் பணிவு. அவன்தான் நடிகன்.

போய் வா மகளே - ராகம் ஆனந்த பைரவி.

தாய் வீட்டிற்கு செல்லும் சுபாங்கியை துரியோதனன் மனைவி பானுமதி வழியனுப்பி வைப்பதாக வரும் பாடல். ஒரு மாறுதலுக்கு சூலமங்கலம் பாடியிருப்பார். மனைவி செல்வதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடியாமல் புழுங்கும் கர்ணன் - அந்த பாவங்கள் பாடலின் ஆரம்ப வரிகளில் அவர் முகத்தில் வெளிப்படும். பாடல் செல்ல செல்ல மனம் சிறுது சிறுதாய் மாறுவதை காண்பித்து பாடலின் இறுதியில் மாளிகையின் வாசலில் மனைவி தேர் ஏறும் காட்சியில் மலர்ந்த முகத்தோடு வழியனுப்பி வைப்பதை இவ்வளவு convincing ஆக வெளிப்படுத்த நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.

மஞ்சள் முகம் நிறம் மாறி - ராகம் பீலு

தந்தையால் அவமானப்படுத்தப்படும் சுபாங்கியின் வளைக்காப்பு நிகழ்ச்சியை கர்ணனின் அரண்மனையில் கொண்டாடும் பாடல். நடுவில் வரும் சரணம் மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி என்பது மட்டும் ஆரபியில் வரும். இதிலும் உப்பரிக்கையில் நின்று பார்க்கும் நடிகர் திலகம். அதிலும் குறிப்பாக கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார்மேகம் அல்லவா எதிர்காலத்தில் இந்த தேசத்தில் கருணை செய்வான் அல்லவா என்ற வரிகளின் போது அந்த முகம்! வாய்ப்பே கிடையாது. மகனை போர்களத்திலே பலி கொடுத்து உயிரற்ற அவனது அந்த உடலை சுமந்து கொண்டு வந்து தன் மாளிகையில் கிடத்தும் போது இதே வரிகள் பின்னணியில் ஒலிக்க அப்போது அதே முகம் எப்படி மாறும்!

மேலும் பேசுவோம்.

JamesFague
29th October 2014, 11:41 AM
இனி படத்தின் உயிர்நாடியான பாடல்கள்.

மரணத்தை எண்ணி - ராகம் நாட்டை.

குருஷேத்ர யுத்த பூமியில் தன் சுற்றத்தார் அனைவரும் தன் எதிரணியில் நிற்பதை பார்த்து மனம் தளரும் அர்ஜுனன், அவர்களை எப்படி எதிர்த்து போராடுவது, அவர்களை எப்படி கொல்வது என்று மனம் பேதலித்து காண்டீபத்தை நழுவ விட, கிருஷ்ணா பரமாத்மா கீதோபதேசம் செய்யும் காட்சி. கீதை என்ற மாபெரும் தத்துவக் கடலை கண்ணதாசன் தனக்கே உரிய எளிய பாணியில் அழகாக விளக்கிட மெல்லிசை மன்னர்கள் இந்த வசன பாடலுக்கு பொருத்தமான இசையை கோர்த்திருக்க சீர்காழி கன கம்பீரமாய் முழங்கிய பாடல். புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பதை கவியரசு

மானிடர் ஆத்மா மரணம் இல்லாதது
மறுபடி பிறந்திருக்கும்
மேனியை கொல்வாய் மேனியை கொல்வாய்

என்று வெகு எளிமையாக புரிய வைத்திருப்பார்.

ஆசாபாசங்களை கடந்த பெரியவர்களும் ஞானிகளும் சொல்லும் வார்த்தை சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து. அதாவது அனைத்தும் பகவான் கிருஷ்ணனையே சேரும். இதை அனைவரும் புரிந்துக் கொள்ளத்தக்க வண்ணம் கண்ணதாசன்

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே.
கண்ணனே காட்டினான்
கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்

என சொல்லும் போது அதை உள்வாங்கும் மனிதர்கள் தியேட்டரில் முழங்கும் கைதட்டல் ஒலியை நேரில் கேட்க வேண்டும். இதை சரியான வாய் அசைப்போடு என்.டி.ஆர் செய்து விட்டு பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதும் போது மொத்த பார்வையாளர்களும் யுத்தத்திற்கு தயாராகி விடுவார்கள். அற்புதமான பாடல்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் - ராகம் அஹிர் பைரவ்.

படத்தின் உச்சகட்ட பாடல் மட்டுமல்ல படத்திலேயே உச்சமான பாடல் என்று பெரும்பாலோர் கருதும் பாடல். தேரோட்டி சல்லியன் கோபித்துக் கொண்டு இறங்கி போய் விட, சூழ்ச்சி வலையில் சிக்கிய கர்ணன் மண்ணில் புதைந்த ரதத்தின் சக்கரங்களை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் போது அர்ஜுனன் அம்புகளை தொடுத்து அவனை வீழ்த்துகிறான். ஆயினும் தர்ம தேவதை அரணாக நின்று அந்த அம்புகளை மலர் மாலைகளாக்க, மீண்டும் ஒரு சூழ்ச்சி செய்யப் புறப்படுகிறான் கண்ணன். அப்போது ஒலிக்கும் இந்த பாடல்.

இந்த பாடலை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு வரியையும் சொல்ல வேண்டும். சிகரம் வைத்தார் போன்ற சில வரிகள் மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா; நானும்
உன் பழி கொண்டேனடா

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் விழுந்தாயாடா கர்ணா;
வஞ்சகன் கண்ணனடா.

பாடல் முழுக்க மரணாவஸ்தையில் கிடக்கும் கர்ணன். உண்மையிலே நடிகர் திலகமும் அதை அனுபவித்தார். பாடல் படமாக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் பாலைவனம். அந்த கொதிக்கும் சூட்டிலே அனைத்து ஆடை, ஆபரணங்கள், போர் கவசங்கள் முதலியவற்றை அணிந்துக் கொண்டு கிழே கிடந்தார். கர்ணன் மரண தருவாயில் தண்ணீர் தாகத்திற்கு தவிப்பதை போல் நடிகர் திலகம் அந்த பாலைவன வெயிலில் தாகத்தினால் தவித்தார். அது மட்டுமல்ல அம்பு துளைத்து வரும் ரத்தத்திற்காக சாஸ்-ஐ அவர் மேல் ஊற்றி விட்டார்களாம். அந்த இனிப்பான சாஸ்-ற்காக ஈக்கள் அவர் உடலை மொய்க்க ஆரம்பித்து விட்டனவாம். சுட்டெரிக்கும் வெயில், உடலை மொய்க்கும் ஈக்கள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அந்த பாடல் படமாக்கப்பட்டு முடிக்கும் வரை அப்படியே இருந்தாராம். என்ன ஒரு மனிதன்! என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு! அதனால்தான் கிட்டத்தட்ட 46 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அந்த காட்சி நம் கண்ணில் நீரை வரவழைக்கின்றது. என்.டி.ஆரையும் சும்மா சொல்லக் கூடாது. அருமையாக பண்ணியிருப்பார். அந்த விஸ்வரூப தரிசனம்! தியேட்டரில் பார்க்கும் போதே நிறைய பேர் உணர்ச்சி வசப்படுவார்கள். கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, சீர்காழி, பந்துலு, என்.டி.ஆர்., எல்லோருக்கும் மேலாக நடிகர் திலகம்.

மெகா தொலைக்காட்சியின் அமுத கானம் நிகழ்ச்சியின் போது ஒரு முறை ஆதவன் அவர்கள் இதற்கு இணையான ஒரு பாடல் இனி தமிழ் படங்களில் வராது என்றார். பலரும் அதை ஒப்புக் கொள்வார்கள்.

மீண்டும் பேசுவோம்.

JamesFague
29th October 2014, 11:42 AM
படத்தில் இடம் பெற்ற ஆனால் எழுத விட்டு போன பாடல்.

மன்னவர் பொருள்களை கைக் கொண்டு நீட்டுவார்.

அரசவையில் ஒலிக்கும் பாடல்களில் ஒன்று. கர்ணனின் வள்ளல் தன்மையை விளக்கும் பாடல். வழக்கம் போல் டி.எம்.எஸ். மெருகு படுத்தியிருப்பார். உச்சஸ்தாயில் ஒலிக்கும் பாடல்.

படத்தில் இடம் பெறாமல் ஆனால் மக்கள் மனதில் இடம் பெற்ற பாடல்.

மகாராஜன் உலகை ஆளலாம் - ராகம் கரகரப்ரியா

படத்தில் இடம் பெறாமல் போனாலும் ஏராளமான மக்கள் மனதில் நிரந்தரமாக தங்கியுள்ள பாடல். இந்த பாடலை எப்படி விட்டார்கள் என்பது புரியாத புதிர். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இந்த பாடல் காட்சியாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பேன். அதிலும் நடிகர் திலகம் - தேவிகா ஜோடி எனும் போது பாடல் காட்சி மிக பிரமாதமாக வந்திருக்கும். நடிகர் திலகத்தின் ஸ்டைல்-க்கு இந்த பாடல் மிக பொருத்தமாக அமைந்திருக்கும். அதிலும் சில வரிகள்

பாதத்தில் முகம் இருக்கும்
பார்வை இறங்கி வரும்
வேகத்தில் லயித்திருக்கும்
வீரம் களைத்திருக்கும்

வரும் போது நடிகர் திலகம் எப்படி ரியாக்ட் செய்திருப்பார் என்று யோசிக்க வைக்கும்.

ஒரு சில படங்களில் பதிவு செய்யப்பட்ட நல்ல பாடல்கள் இடம் பெறாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம். உதாரணத்திற்கு இரத்த திலகம் படத்தில் தாழம்பூவே தங்க நிலாவே, வசந்த மாளிகையில் அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன போன்றவற்றை குறிப்பிடலாம். கலாட்டா கல்யாணம் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட ஒரு தரம் ஒரே தரம் பாடலாவது சுமதி என் சுந்தரியில் இடம் பெற்றது. மேற் சொன்ன பாடல்கள் வரவே இல்லை. அந்த வரிசையில் மகாராஜன் உலகை ஆளலாம் முதலிடத்தில் இருக்கிறது.

ஒரு முறை எம்.எஸ்.வி அவர்களை பற்றி இளையராஜா சொல்லும் போது மகாராஜன் உலகை ஆளலாம் பாடல் ஒன்று போதும். தமிழ் திரை இசை இருக்கும் வரை அவர் பெயர் நிலைத்திருக்கும் என்றார். அதுதான் இந்த பாடலின் வெற்றி.

அன்புடன்

HARISH2619
29th October 2014, 01:52 PM
நடிகர்திலகம் மணிமண்டபம் தொடர்பான கோரிக்கை கடந்த 13 ஆண்டுகளாக செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது .இந்த கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இருக்கும்வரை தமிழகத்தில் அது சாதியப்படாது என்றே தோன்றுகிறது .நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர் திரு ரங்கசாமி அவர்கள் ஆளும் புதுச்சேரியில் அந்த மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தால் நிச்சயமாக அவர் நிறைவேற்றுவார் என நான் நம்புகிறேன் .இது தொடர்பான தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு நமது திரி நண்பர்களை கேட்டுகொள்கிறேன்

JamesFague
29th October 2014, 02:13 PM
Mr Senthil,


Certainly a good idea but TN is the apt place for a memorial to NT. But if the rulers are not operating then Pondy is the ideal place.


Regards

Russelldwp
29th October 2014, 05:27 PM
நடிகர்திலகம் மணிமண்டபம் தொடர்பான கோரிக்கை கடந்த 13 ஆண்டுகளாக செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது .இந்த கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இருக்கும்வரை தமிழகத்தில் அது சாதியப்படாது என்றே தோன்றுகிறது .நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர் திரு ரங்கசாமி அவர்கள் ஆளும் புதுச்சேரியில் அந்த மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தால் நிச்சயமாக அவர் நிறைவேற்றுவார் என நான் நம்புகிறேன் .இது தொடர்பான தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு நமது திரி நண்பர்களை கேட்டுகொள்கிறேன்

Dear Harish

You are 100% correct since Mr.Rangasamy is the person can do this in his period No doubt

C. Ramachandran.

KCSHEKAR
29th October 2014, 06:17 PM
-------------------------------------------------------------------------------------------
இன்று (அக்டோபர் 29) கவிஞர் வாலி அவர்களின் பிறந்தநாள். நடிகர்திலகத்திற்காக திரைப்படங்களில் பல சிறப்பான பாடல்களைத் தந்த கவிஞர் வாலி, நடிகர்திலகத்தின் மறைவிற்குப் பின் எழுதிய கவிதை.
---------------------------------------------------------------------------------------
பள்ளியில் - அதிகம் பயிலாது போனான்
பின்னாளில் - அந்தப் பெருமகன் -
கால்முளைத்த
கல்லூரி ஆனான்!
அகில உலகத்தில்
அதிக மொழிகள் - அறிந்தவை
அவனது விழிகள்!
கேமரா லென்சில் - கசியும் ஈரம் - அவன்
அவலக் காட்சியில் நடிக்கையீல்:
அநேக ஆண்டுகளாக....
குடல் கழுவப் பெறாமல் - ஒருவகை
மலச் சிக்கலலில்
மாட்டிக்கொண்டு முழித்தது ....
தமிழ் சினிமா; அவன்தான் -
தந்தான் அதற்கு இனிமா;
கட்டபொம்மனை;
கப்பலோட்டிய தமிழனை;
கர்ணனை; முண்டாசுக்
கவிஞனை;
சோழனை;
சேக்கிழாரை;
பரதனை;
பசும்பொன் தேவரை;
என,
எத்துணையோ பேர்களை....
உயிர் கொடுத்து
உலவச் செய்தவன்;
கல்லறையிலிருந்து - எழுப்பிக்
காட்டிய பெருமகன்;
எவராலும்
எழுப்ப முடியாத படி -
உறங்கிப் போனதால் -
உலகு அழுதது; தன்னை
ஒழுங்காய் உச்சரிக்க -
ஒருவரும் இல்லையே என -
ஒண்டமிழ் அழுதது!
ஆயினும் -
அவன் -
நாமும் -
நாடும் -
அழுவதற்காகப் பிறந்தவனல்ல;
தொழுவதற்காகப் பிறந்தவன்.
---------------------------------------------------------------------------------------------
- காவியக் கவிஞர் வாலி
(நன்றி: சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு நூல்)
-------------------------------------------------------------------------------------------
நடிகர்திலகத்திற்காக வாலி எழுதிய ஒரு SUPER HIT தேசபக்திப் பாடல்
http://www.youtube.com/watch?v=kG2Get7rZuU

gkrishna
29th October 2014, 07:49 PM
இனி படத்தின் உயிர்நாடியான பாடல்கள்.


உள்ளத்தில் நல்ல உள்ளம் - ராகம் அஹிர் பைரவ்.

படத்தின் உச்சகட்ட பாடல் மட்டுமல்ல படத்திலேயே உச்சமான பாடல் என்று பெரும்பாலோர் கருதும் பாடல். தேரோட்டி சல்லியன் கோபித்துக் கொண்டு இறங்கி போய் விட, சூழ்ச்சி வலையில் சிக்கிய கர்ணன் மண்ணில் புதைந்த ரதத்தின் சக்கரங்களை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் போது அர்ஜுனன் அம்புகளை தொடுத்து அவனை வீழ்த்துகிறான். ஆயினும் தர்ம தேவதை அரணாக நின்று அந்த அம்புகளை மலர் மாலைகளாக்க, மீண்டும் ஒரு சூழ்ச்சி செய்யப் புறப்படுகிறான் கண்ணன். அப்போது ஒலிக்கும் இந்த பாடல்.

இந்த பாடலை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு வரியையும் சொல்ல வேண்டும். சிகரம் வைத்தார் போன்ற சில வரிகள் மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா; நானும்
உன் பழி கொண்டேனடா

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் விழுந்தாயாடா கர்ணா;
வஞ்சகன் கண்ணனடா.

பாடல் முழுக்க மரணாவஸ்தையில் கிடக்கும் கர்ணன். உண்மையிலே நடிகர் திலகமும் அதை அனுபவித்தார். பாடல் படமாக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் பாலைவனம். அந்த கொதிக்கும் சூட்டிலே அனைத்து ஆடை, ஆபரணங்கள், போர் கவசங்கள் முதலியவற்றை அணிந்துக் கொண்டு கிழே கிடந்தார். கர்ணன் மரண தருவாயில் தண்ணீர் தாகத்திற்கு தவிப்பதை போல் நடிகர் திலகம் அந்த பாலைவன வெயிலில் தாகத்தினால் தவித்தார். அது மட்டுமல்ல அம்பு துளைத்து வரும் ரத்தத்திற்காக சாஸ்-ஐ அவர் மேல் ஊற்றி விட்டார்களாம். அந்த இனிப்பான சாஸ்-ற்காக ஈக்கள் அவர் உடலை மொய்க்க ஆரம்பித்து விட்டனவாம். சுட்டெரிக்கும் வெயில், உடலை மொய்க்கும் ஈக்கள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அந்த பாடல் படமாக்கப்பட்டு முடிக்கும் வரை அப்படியே இருந்தாராம். என்ன ஒரு மனிதன்! என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு! அதனால்தான் கிட்டத்தட்ட 46 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அந்த காட்சி நம் கண்ணில் நீரை வரவழைக்கின்றது. என்.டி.ஆரையும் சும்மா சொல்லக் கூடாது. அருமையாக பண்ணியிருப்பார். அந்த விஸ்வரூப தரிசனம்! தியேட்டரில் பார்க்கும் போதே நிறைய பேர் உணர்ச்சி வசப்படுவார்கள். கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, சீர்காழி, பந்துலு, என்.டி.ஆர்., எல்லோருக்கும் மேலாக நடிகர் திலகம்.

மெகா தொலைக்காட்சியின் அமுத கானம் நிகழ்ச்சியின் போது ஒரு முறை ஆதவன் அவர்கள் இதற்கு இணையான ஒரு பாடல் இனி தமிழ் படங்களில் வராது என்றார். பலரும் அதை ஒப்புக் கொள்வார்கள்.

மீண்டும் பேசுவோம்.

இந்த அஹிர் பைரவ் ராகத்திற்கு இணையான ராகம் தமிழ் இல் சக்ரவாகம் .பாட்டும் பரதமும் திரைபடத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான நவரச நடிப்பில் வெளி வந்த 'கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டு விட்டேன் ' இந்த சக்ரவாகத்தை அடிப்படையாக கொண்ட பாடல் .டி எம் எஸ் வெளுத்து கட்டி இருப்பார் பாடலை. பாடகர்களில் மாற்று (replacement ) கிடைக்காத சில பாடகர்களில் டி எம் எஸ் ஒருவர் .அதிலும் அந்த பாடலின் இறுதியில் ஸ்வர சங்கதிகளை மூச்சு விடாமல் பாடும் டி எம் எஸ் அவர்களையும் அதற்கு நம்மவரின் வாய் அசைப்பும் மறக்க முடியாத ஜுகல் பந்தி .

சகோதரி சாரதா அவர்கள் இந்த பாட்டும் பரதமும் படத்தை பற்றியும் அதன் பாடல்கள் சிறப்பை பற்றியும் விலாவாரியாக புட்டு புட்டு வைத்து இருப்பார்கள் (ஏனோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டுகொள்ளாமலே விடப்பட்டது)

இந்த அஹிர் பைரவ் என்ற சக்ரவாகம் பக்தி ,அனுதாபம் மேலும் இரக்கம் போன்ற உணர்வுகளை மனதில் ஏற்படுத்த கூடிய ராகம் . சம்பூர்ண ராகம். 7 ஸ்வரங்களும் இடம் பெற்று இருக்கும் ராகம் .

கர்ணனுக்கு அந்தத் தெய்வம் இழைத்த கொடுமை பிறப்பிலிருந்தே தொடங்குகிறது. கன்னிப்பெண்ணுக்கு அந்த மகவைப் பிறக்க வைத்து, அவள் கையாலேயே ஆற்றில் மிதக்க வைத்து. தேரோட்டி மகனாக வளர வைத்து, தம்பியரையே இகழ வைத்து, அவனுக்கு இயற்கை தந்த காப்பை இந்திரனைக் கொண்டு தானம் பெற வைத்து, பெற்ற தாயே அவனது மரணத்தை உறுதி செய்ய வைத்து, அந்த ஆதிமூலம் இழைத்த தவறு ஒன்றல்ல இரண்டல்ல. பார்தனிட்ட கணை கர்ணன் உயிரைத் தொடவில்லை. அவன் புண்ணியம் காத்தது. அந்தப் புண்ணியத்தையும் தானே பெற்று அவன் வேதனை மிக்க வாழ்வுக்கெல்லாம் காரணமாய் இருந்த அந்தத் தெய்வத்தின் மனச் சான்று பேசும் பாடலாக இது.

"தாய்க்கு நீ மகனில்லை... தம்பிக்கு அண்ணனில்லை..
ஊர்பழி ஏற்றாயடா.. நானும் உன் பழி கொண்டேனடா.."

இந்த வரிகள் மிக முக்கியமானவை. தாய் என்பவள் உலகில் எத்தனை தவறினும் ஏற்கக் கூடியவள். தன் மகவுக்காகப் பேசக் கூடியவள். அவளே இவனை வஞ்சித்தாள். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று ராமாயணத்தில் அந்த இன்னொரு கர்ணன்-கும்பகர்ணன் உரைப்பானே - அந்தச் சிறப்பு பெற்ற தம்பியும் இவனை வஞ்சித்தான். அமைச்சர் ஆக இருந்து அரசனால் குதிரை வாங்க பணிக்கப்பட்டு ஆனால் அந்த பணியை பிணி என ஈசனால் திருபெருந்துறையில் குருந்த மரத்தின் நிழலில் ஞானத்தை பெற்ற மாணிக்க வாசகரின் மிக அறிய வரிகளாம் தாயினும் சாலப் பரியும் அந்தத் தெய்வமும் இவனை வஞ்சிக்கிறது. அதனை ஒப்புக்கொண்டு

"செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.. வஞ்சகன் கண்ணனடா"

என்று அந்தப் பரம்பொருளே பேசக் கூடியவன் இந்தக் கர்ணன் என்று கவிப்பேரரசு நம்மக்கு உணர்த்துகிறார். இது வரலாற்றுச் சோகப் பதிவை . இந்தப் படைப்பின் வலுவை, கெளதம் என்ற சிறுவன் பாடும் போது, கர்நாடக இசை மேதைகளே உருகியதை விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கவனித்து இருக்கலாம் .

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அசகாய நடிப்பாலும், என்.டி.ஆர். கடவுளாக நடித்து, இல்லை இல்லை கடவுளாகவே மாறியும், கவியரசு கண்ணதாசனின் காலத்தால் அழிக்க முடியாத வரிகளாலும், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கல குரலாலும், மெல்லிசை மன்னர்களின் மனதை கொள்ளையடிக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்ட பாடல் அக்காலம் அல்ல, இக்காலம் அல்ல, எக்காலத்திலும் அழியாப்புகழோடும் தழைத்தோங்கும் பாடல்,

நண்பர் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களின் எழுத்து தோற்றுவித்த தாக்கத்தின் பதிவே இது

மீள் பதிவு செய்த நண்பர் திரு சித்தூர் வாசு சார் அவர்களுக்கும் நன்றி