PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

adiram
10th November 2014, 02:20 PM
கோபால்,

யாரும் அணுகாத கோணங்களில் நடிகர்திலகத்தின் ஆற்றலை, திறமையை, உழைப்பை தாங்கள் அணுகும் விதம் எப்போதுமே மலைப்பைத் தரக்கூடியது. இப்போது இந்த ஆரம்பமும் அப்படியே.

நடிகர்திலகத்திடம் காணப்பட்ட மிகப்பெரிய சிறப்பு என நான் கருதி வியப்பது என்னவெனில், தன் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்காவிடினும் அதனால் விரக்தி அடைந்து சோர்ந்து விடாமல், அடுத்து சிறந்தது, அதையடுத்து அதைவிட சிறந்தது என்று தந்துகொண்டே இருந்த தளரா உள்ளம்தான். அது எல்லோருக்கும் வாய்த்து விடாது

அந்த அதிசய கலைஞனைப் பற்றிய உங்கள் தொடர் நிச்சயம் அதிசயிக்கத்தக்க வகையிலேயே அமையும் என எதிர்பார்த்து வரவேற்கிறேன்.

KCSHEKAR
10th November 2014, 02:41 PM
நடிகர்திலகம்- கலை மரபின் நீட்சி -திசை மரபின் எழுச்சி.- பகுதி-1[/size]
(இங்கே உள்ள அங்கத்தினர்களிடம் நான் எதிர்பார்த்த எண்ண எழுச்சி இருக்குமா என்பது சந்தேகம்). முகம் தெரியா பல அறிவு ஜீவிகள் (pm )இருக்கும் தைரியத்தில் துவங்குகிறேன்.
டியர் கோபால் சார்,
தலைப்பே இது அறிவு ஜீவிகளுக்கானது என்று சொல்கிறது. எனக்கு அறிவுஜீவித்தனமான எழுத்துக்களோ, பேச்சுக்களோ வராது என்றாலும், கண்ணதாசன், வாலி போன்றோரின் கவிதைகளையும், பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர் போன்றோரின் எழுத்துக்களையும் ரசிப்பதற்குத் தெரியும் என்ற அளவில் என்னைப்போன்ற பலரும் தங்களின் எழுத்துக்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைமட்டும் அறியவும். நடிகர்திலகம் என்றாலே high class -ஐ முதலில் கவரக்கூடியவர் என்றால், பார்ப்பவர்கள் அத்தனைபேரும் கலையின் அத்தனை நுணுக்கங்களையும் அறிந்தவர்கள் அல்ல என்றாலும், அந்தக் கலையை அணு அணுவாக ரசிக்கத் தெரிந்தவர்கள். கலை மரபு, திசை மரபு இரண்டையும் தங்களின் எழுத்தில், ஆய்வில் ரசிக்க ஆவலாக இருக்கிறோம்.

இதனால் மொழி-சார் கலைகளில் ,அற்புதம் நிகழ்த்தும் படைப்பாளிகள்,மற்றும் படைப்புகளின் உள்வட்டம் வாழும் காலங்களில் சுருங்கியே நிற்கும்.ஆனால் பிற்காலத்தில் சிலாகிக்க பட்டு அமரத்துவம் பெறும்.
நடிகர்திலகத்தைப் பொறுத்தவரை, அவர் காலம், மதம், இனம், மொழி இவற்றிற்கு அப்பாற்பட்ட கலைஞன். அதனைப்பற்றி தங்களுடைய விரிவான ஆய்வில், தொடரில் விரிவாக அலசுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Gopal.s
10th November 2014, 07:17 PM
கலை வேந்தன்,

நாங்கள் ஒப்பு கொண்டு ஓஹோ என்று அவர்(நடிகர்திலகம்) படங்கள் ஓடி கொண்டிருந்த போது ,தாமரை மணாளன் போன்ற எதிர் அணி அல்லக்கைகளுக்கு எங்கிருந்து ஆணை வந்து எழுதினர் என்று எங்களுக்கு தெரியும்.புரியும்.

அப்படி பார்க்க போனால் உங்கள் தலைவரின் வலது கை ஆர்.எம்.வீரப்பன் ,உங்கள் தலைவருக்கு வயது தெரிய ஆரிம்பித்து,சதை போட்டு முதுமை வந்ததை குறிப்பிட்ட போது (படகோட்டி காலம் குறிப்பிட்டார்),அந்த கால கட்டத்தில் நடிப்பதை நிறுத்தவா நிறுத்தினார்? இது ஆர்.எம்.வீரப்பனே பத்திரிகையில் எழுதியுள்ள விஷயம்.

ஆர்.எம்.வீரப்பன் அவர்களே உங்கள் தலைவரை முரண் பாடுகளின் மூட்டை என்று விவரித்துள்ளார்.இதயக்கனி படத்தில் அருவருக்க தக்க காட்சிகளை தானே விரும்பி கேட்டு நடித்து விட்டு (நான் கூறவில்லை.ஆர்.எம்.வீரப்பன் கூற்று),பிறகு படம் ஓடி முடித்த பிறகு,மாணவர்கள் இதை பார்க்க கூடாது என்ற அறிவுரை.வேறு.

உங்களுக்கு எந்த இனிப்பு வேண்டுமென்றாலும் நடிகர்திலகம் ஸ்டால் இல் பெறலாம். கெட்டு போன ,அசல் நெய்யில் செய்யாத பண்டங்களை சாப்பிட்டு உடம்பை கெடுத்து கொள்ள வேண்டாம் என்று உங்கள் உடல் மேல் அக்கறையுள்ள சகோதர ஸ்தானத்தில் அறிவுரை கூறுகிறோம். .

ஒன்று தெரியுமா, முரளி எழுத்தை பார்த்துத்தான் ,நான் திரிக்கே வந்து எழுத ஆரம்பித்தேன். தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் சம புலமை கொண்ட சமநிலையாளர். அவர் பொய் தகவல் அளித்ததே இல்லை. அவரையே நீங்கள் உசுப்பி விட்டீர்கள்.

உங்களுக்கு இவ்வளவு ஞானம் உள்ளதற்கு ,ரசனை மேம்பாடு காணுவது மிக மிக அவசியம். தேவர் படங்களில் நீங்கள் உட்கார்ந்திருப்பதை என்னால் கனவிலும் நினைக்க முடியவில்லை.

Gopal.s
10th November 2014, 07:31 PM
//நான் இப்போது, நாடக திரை கலையில் பெரும் மாற்றத்தை நடிப்பு கலையில் நிகழ்த்தி காலத்தை வென்று நிற்கும் சிவாஜி என்ற அற்புத கலைஞன் ,அதனை மரபின் நீட்சியுடன்,திசைகளின் புது வரவின் எழுச்சியை இணைத்து சாதித்த அதிசயத்தை விஸ்தாரமாக எழுத உள்ளேன்.//
அன்புள்ள கோபால் சார்..

நலமா..

உங்கள் புதியதொடருக்கு எனது வரவேற்ப+கைதட்டல்+விஸில்.. நைஸ்..

என்ன ஒன்றே ஒன்று.. ரொம்பக் கடின நடைத் தமிழ்.. கொஞ்சம் உம்மென்று எழுதுவது போல் தோன்றுகிறது.. ரிலாக்ஸாக எழுதுங்கள்.. நகைச்சுவையையும் கூட்டிக் கொண்டு எழுதுங்கள்.. உங்களால் முடியும்.. ஃபார் எக்ஸாம்பிள் மேல் கண்ட வரி.. மரபின் நீட்சியுடன் புரிகிறது.. திசைகளின் புதுவரவின் எழுச்சி என்பது மூன்று தடவை படித்த பின் புரிகிற மாதிரி இருக்கிறது..ஆனால் புரியவில்லை கிட்டத் தட்ட நவீன இலக்கிய சாயல்.. அது வேண்டாமே

ந.இ என்றவுடன் உங்களின் பாடல்கள் தொகுப்பு இன் மதுரகானங்கள்.. மாலை சென்று கேட்கிறேன்..அந்தப் பாடல்கள் உங்களைக்கவர்ந்தவையா சாரு நிவேதிதாவையா.. (எனக்கு நவீன இலக்கியங்கள், நவீன இலக்கியவாதிகள், டி.வி சீரியல்கள் என்றாலே அலர்ஜி தான்..!)

மற்ற்வை அப்புறம்

அன்புடன்
சி.க.. (வாசக தோஷ ஷந்தவ்யஹ...)

சி.க,

உங்கள் பிரதிவினை பதிவுக்கு நன்றி(PM ). ஆனால் எல்லாவற்றையும் relaxed ஆக நகைச் சுவை தெளித்து எழுதினால் சொல்ல வரும் கருத்து
நீர்த்து விடும் அபாயம் உண்டு.

நவீன இலக்கிய சாயல் இல்லை. அதுவேதான்.தமிழில் பிறமொழிகளில் இருந்து வரும் பலே ,பேஷ்,சாவி என்ற சொற்களுக்கு திசை சொற்கள் என்று இலக்கியம் குறிப்பது,அந்நிய மண்ணிலிருந்து வரும் கலைகளை திசை கலைகள் என்று நான் குறிப்பிட ஏதுவாகிறது.

என் முன்னாள் கட்டுரைகளில் ஆங்கில ஆதிக்கம் அதிகம் என்ற குற்றசாட்டு தவிர்க்கவே ,நான் சிறிது தமிழில் கடின நடையை பின் பற்ற வேண்டி உள்ளது. கவலை படாதீர்கள் போக போக பழகி விடும்.

மற்ற படி நான் குறிப்பிட்ட சிலரின் feedback மிக அவசியம்.(கலை,உங்களையும் சேர்த்தே)

Harrietlgy
10th November 2014, 08:34 PM
Dear Gopal sir,
Very good start. Congratulations. I salute your Tamil writing style.

eehaiupehazij
10th November 2014, 08:50 PM
நடிகர்திலகத்தின் திரைப்பேராண்மை! : அந்த நாள் (1954)

Andha naal : The Rashomon effect?!


The Rashomon effect is contradictory interpretations of the same event by different people. The phrase derives from the movie Rashomon, where four witnesses' accounts of a rape and murder are all different.

Our infamous Tamil film, (known for a Tamil movie without any song for the first time in the history of Tamil Cinema), Andha Naal (That Day) starring Nadigar thilagam Sivaji Ganesan in the lead is believed to have been inspired by the Akiro Kurosawa film, Rashomon. However, in contrast to Rashomon, the film's climax provides a solution to the murder using an Indian proverb (கொலையும் செய்வாள் பத்தினி (தூக்கு தூக்கி ஞாபகம் வருகிறதா)) as a vital clue!


பாடல்களே இல்லாமல் வித்தியாசமான திரில்லர் வகைப் படமாக வெளிவந்து தமிழ்த் திரையுலகின் பெருமையை உயர்த்திட்ட குறிஞ்சி மலர் நடிகர்திலகத்தின் திரைப்பயணத்திலும் நடிப்புப் பரிணாம பரிமாண ங்களிலும் மாபெரும் எழுச்சியை உண்டாக்கி உலகளவில் உச்ச நடிப்பைத் தர தன்னாலும் முடியும் என்று நிரூபித்த சாதனைப் படம். வெளிநாட்டுப் படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டால் தானே பொருத்தமான அழுத்தமான நடிப்பு முத்திரையை பதிக்க வல்லவர் என்பதை மீண்டும் புதியபறவை மூலமும், ஒதெல்லோ, சாக்ரடீஸ், சீசர், அலெக்சாண்டர் பாத்திரங்களின் மூலமும் நிரூபித்தார். தேச பக்தியை மையக்கருவாக கொண்ட படத்தில் சூழல் காரணமாக விரக்தி உச்சம்கொண்ட குரூர மனநிலையை அற்புதமாக வடித்திருந்தார்! படத்தின்முதல் காட்சியிலேயே ரிஸ்க் எடுத்து குண்டடிபட்டு சுருண்டு விழுந்து மரிக்கும் அவஸ்தையை ரசிகர்கள் பதறும் வண்ணம் உயிர்கொடுத்து நடித்திட அவராலேயே இயலும்!

பின்னாளிலும் பொம்மை, நடுஇரவில் போன்ற திரில்லர் வகைப்படங்களுக்கு பெயர் பெற்ற வீணை எஸ் பாலச்சந்தர் ஏவிஎம் தயாரிப்பில் துணிச்சலுடன் பாடல்களை தவிர்த்து இயக்கிய முன்னோடி திரைக்காவியம் அந்த நாள் !

https://www.youtube.com/watch?v=cyrcIYZYmc0

https://www.youtube.com/watch?v=BiLA26AzTEs

eehaiupehazij
10th November 2014, 08:58 PM
நடிகர்திலகத்தின் திரைப்பேராண்மை! : அந்த நாள் (1954)

Some vital background and synopsis upon comparison with Rashomon:

Rashomon : Synopsis

One of legendary director Akira Kurosawa's most acclaimed films, Rashomon features an innovative narrative structure, brilliant acting, and a thoughtful exploration of reality versus perception.
This landmark film is a brilliant exploration of truth and human weakness. It opens with a priest, a woodcutter, and a peasant taking refuge from a downpour beneath a ruined gate in 12th-century Japan. The priest and the woodcutter, each looking stricken, discuss the trial of a notorious bandit for rape and murder. As the retelling of the trial unfolds, the participants in the crime -- the bandit (Toshiro Mifune), the rape victim (Machiko Kyo), and the murdered man (Masayuki Mori) -- tell their plausible though completely incompatible versions of the story. In the bandit's version, he and the man wage a spirited duel after the rape, resulting in the man's death. In the woman's testimony, she is spurned by her husband after being raped. Hysterical with grief, she kills him. In the man's version, speaking through the lips of a medium, the bandit beseeches the woman after the rape to go away with him. She insists that the bandit kill her husband first, which angers the bandit. He spurns her and leaves. The man kills himself. Seized with guilt, the woodcutter admits to the shocked priest and the commoner that he too witnessed the crime. His version is equally feasible, although his veracity is questioned when it is revealed that he stole a dagger from the crime scene. Just as all seems bleak and hopeless, a baby appears behind the gate. The commoner seizes the moment and steals the child's clothes, while the woodcutter redeems himself and humanity in the eyes of the troubled priest, by adopting the infant. ~ Jonathan Crow, Rovi (by courtesy : Rotten Tomaoes)

Andha Naal : Synopsis

Andha Naal (English: That Day) is a 1954 Indian Tamil crime mystery film produced by A. V. Meiyappan and directed bySundaram Balachander. It is the first film noir in Tamil cinema, and the first Tamil film to be made without songs, dance and stunt scenes. It was thematically inspired by Akira Kurosawa's Rashômon (1950) and adapted from Anthony Asquith's The Woman in Question (1950). The story, which is set during in the milieu of the South-East Asian theatre of World War II, is about the murder of a radio engineer Rajan (Sivaji Ganesan); the suspects are Rajan's wife Usha (Pandari Bai), the neighbour Chinnaiah Pillai (P. D. Sambandam), Rajan's brother Pattabi (T. K. Balachandran), Rajan's sister-in-law Hema (Menaka), and Rajan's mistress Ambujam (Suryakala). Each one's account of the incident points to a new suspect.
Before the casting of Ganesan, S. V. Sahasranamam and N. Viswanathan were chosen for the lead role but were later dismissed because they were unconvincing to the filmmakers. The story and dialogue were written by Javar Seetharaman, who also played a prominent role as an investigation officer in the film. Cinematography was handled by Maruti Rao and the background score was composed by AVM's own music troupe, "Saraswathy Stores Orchestra". The film's length of 12,500 feet (3,800 m) was shorter than most contemporaneous Tamil films.

Andha Naal was released on 13 April 1954. It was a critical success and was awarded the "Best Film Award" by the Madras Filmfans' Association and a Certificate of Merit for Second Best Feature Film in Tamil at the 2nd National Film Awards in 1955. Despite being a commercial average during its release, the film has acquired a cult status over the years and is regarded as a milestone in Tamil cinema. In 2013, Andha Naal was included in CNN-IBN's list of the "100 greatest Indian films of all time".

The main theme of Andha Naal is patriotism. It tells how unemployment and desolation of youngsters will lead to them becoming traitors. If a country does not appreciate talented young men for their efforts, they could turn against the nation. Rajan, a talented young man turns into a traitor as he does not get any support in any form from his country which fails to recognise his efforts. A dejected Rajan goes to Japan where his talents are well recognised. He becomes Japan's secret agent in order to betray his own nation

Reference courtesy : Rotten Tomato, You Tube, IMDb andWikipedia

RAGHAVENDRA
10th November 2014, 10:07 PM
கோபால் சார்

"முதல் என்பது தொடக்கம்...
முடிவென்பது அடக்கம்...
விடை என்பது விளக்கம்...
விதி என்பது என்ன..."

தங்களுடைய தொடக்கத்தில் மேலே உள்ள அத்தனையும் அடங்கி விட்டது... இதற்கு மேல் தாங்கள் எவ்வளவு எழுதினாலும் போனஸ் தான்...

தாங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சந்தர்ப்பங்கள் மனிதனைத் தூண்டுவது இந்த தீர்மானத்தை நோக்கிச் செல்லத்தான்...

ஆனால் அந்த சந்தர்ப்பங்களை உருவாக்குவது அந்த மனிதன் தான் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள்..

இந்த பகுத்தறிவைத் தான் பெரியார் மக்களிடம் எடுத்துச் சொன்னார்.



எந்த ஒரு கலையும் எக்காலத்திலும் முழுமை கண்டதில்லை. நாளும் வளரும், தேயும்,தேய்ந்து வளரும்,மாறும்,புதுப்பிக்கும், எல்லா திசையிலும் உள்ள அம்சங்கள் கவர்ந்து புதுமை காணும்,விஞ்ஞானத்தின் கூறுகளால் அக-புற மாறுதல்கள் எய்தும் ,மனித வாழ்க்கையின் வளர்ச்சிகளால் புற மாறுதல்கள் காணும்,இயல்பு கொண்டது.எந்த புள்ளியிலும் தொடங்கி,எங்கும் முடிவெய்துவதல்ல. அதே போல முழுதும் ஓர் இரவில் மாற்றம் காண்பதல்ல. ஒரு மனிதர்,ஒரு நிகழ்வு,என்று இதனை நிகழ்த்தி விட முடியாது. இது ஒரு பிரத்யேக குழு சார்ந்த எண்ண எழுச்சி,பொழுது போக்கு,கலாச்சாரம்,நுண்ணரசியல்,அயல் நுழைவுகளை அங்கீகரிக்கும் போக்கு இவை சார்ந்து குறுகிய வட்டத்தில் நிகழ்பவை. மொழி சாரா கலைகள் நீட்சி பெரும் கூறுகள் ,அங்கீகாரம் பெரும் சாத்தியங்கள் அதிகம்.(ஓவியம்,சிற்பங்கள் போன்றவை).மொழி சார் கலைகளோ பிரத்யேக குழுவின் அங்கீகாரம் வேண்டுபவை.


மொழி சார் கலைகளின் நீட்சி ஒரு அளவுகோலுக்குள் அடங்குவதில்லை.. ஆற்று மணல் திட்டுக்களாய் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும். இந்தத் திட்டுக்கள் அளவு குறைவானாலும் அதிகமானாலும் அளந்து பயனுமில்லை..

மொழி சாராத ஒரு கலையென்பது விதிமுறைகளைக் கடந்தது... அளவுகோலுக்கு அப்பாற்பட்டது.. இனம் மொழி என்ற எந்த பாகுபாட்டையும் உடைத்தெறிய வல்லது.. இந்த சுதந்திரம் எந்த கலைஞனின் ஆளுமைக்கு கட்டுப்படுகிறதோ.. அவன் காலத்தைக் கடந்து நிற்கிறான்...



இதில் மனிதனின் அறிவின் நீட்சியை,புதுமை வேகத்தை புது திசையில் செலுத்தும் உயர்-ரக கலை முயற்சிகள், மற்ற பொதுமை சார் கற்பனை வளமற்ற கீழ்மை கலைகளால் நசுக்க பட்டு,புரிந்து கொள்ள படாமல் அல்லது வாழும் காலத்தில் அங்கீகாரம் பெறாமல்,காலத்தை மீறி நிற்கும் தன்மை பெறும். இதனை நிகழ்த்தும் அற்புத கலைஞர்கள் மற்றும் கிரியா ஊக்கிகள் , வாழும் காலத்தில் கீழ்நிலை மனிதர்களின் நுண்ணரசியல்,கீழ்தர வியாபார தந்திரம் இவற்றால் பாதிக்க பட்டு துன்புறுதல், காலம் தோறும் நாம் காணும் நிகழ்வுகள்.

இதனால் மொழி-சார் கலைகளில் ,அற்புதம் நிகழ்த்தும் படைப்பாளிகள்,மற்றும் படைப்புகளின் உள்வட்டம் வாழும் காலங்களில் சுருங்கியே நிற்கும்.ஆனால் பிற்காலத்தில் சிலாகிக்க பட்டு அமரத்துவம் பெறும்.


இது அந்தந்த காலத்தில் அந்தந்த கலைகளின் தாக்கத்தைப் பொறுத்தது. அவற்றின் உட்பொருளைப் பொறுத்தது.. அது சொல்லப் படும் விதம், சொல்லப் படும் உள்ளடக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது..



இதனை செலுத்தி,மக்களை ஒரு படி மேற்செலுத்தி செல்லும் கலைஞர்கள்,காலத்தை மீறி நிற்பார்கள்.நினைக்க படுவார்கள்.அறிச்டோபானஸ் ,இப்சென்,லியனார்டோ டா வின்சி ,வாத்ஸ்யாயன் ,மாக்கிய வில் ,ஷேக்ஸ்பியர்,கம்பன்,சாத்தர்,விட்டோரியோ டிசிகா,பிகாசோ,மொசார்ட் ,சிவாஜி கணேசன் போன்ற மேதைகள் ,தான் வாழும் காலத்தை மீறி ,கலைகளை முன்னெடுத்து சென்ற பிறவி மேதைகள்.


Absolutely...



கலைகளின் கூறுகள் மாறி கொண்டே இருக்கும். ஓவியர்களின் நிகழ் பட வரைவு(மனிதர்,சுற்று பொருட்கள்),இயற்கை காட்சிகள், புகை பட கலையினால் தேய்வு கண்ட போது ,ஓவியன் தன்னை pointilism ,sur realism ,impressionism ,expressionism ,cubism என்று தன்னை புதுப்பித்து மாற்றம் கண்டு ஜீவித்தது.performing arts என நிகழ் கலைகளோ , கூத்து,பண் ,நாடகம்,திரைப்படம் என வெவ்வேறு வடிவெடுத்து ,அக-புற மாற்றங்கள்,சாத்திய கூறுகள் சார் வடிவ அக-புற மாற்றங்கள்,வியாபார வீச்சுக்கள் சார்ந்த பொருட்புழக்கம்,அந்தந்த கால மக்களின் அறிவு நிலை,எண்ண எழுச்சிகள்,மாற்றம் தேடும் விழைவு, அரசியல்-கலாச்சார நிகழ்வுகள்,வாழ்வு நிலை மாற்றங்கள் இவை சார்ந்து தன்னை இறுக்கி,நெகிழ்த்தி,மாற்றி,நிலையாமையே நிலையாய் கொண்டு மாற்றமே மாற்ற இயலா விழைவாய் கொண்டு , உயிர்பித்து வாழ்வதுமல்லாமல், மற்ற மாற்று கலைகளுடன் போராடி வெல்ல வேண்டிய அவசியமும்,அவசரமும் கொண்டது.

இதனை நிகழ்த்தி காட்டுவோரையே ,சமுகம்,பெருமையுடன் நினைவு கூற கடன் பட்டது. நான் இப்போது, நாடக திரை கலையில் பெரும் மாற்றத்தை நடிப்பு கலையில் நிகழ்த்தி காலத்தை வென்று நிற்கும் சிவாஜி என்ற அற்புத கலைஞன் ,அதனை மரபின் நீட்சியுடன்,திசைகளின் புது வரவின் எழுச்சியை இணைத்து சாதித்த அதிசயத்தை விஸ்தாரமாக எழுத உள்ளேன்.


காத்திருக்கிறோம்...

RAGHAVENDRA
10th November 2014, 10:09 PM
வாசுதேவன்,
தங்களுடைய மன வருத்தம் நிச்சயம் எளிதில் ஆறுதலுக்கடங்கக் கூடியதல்ல. நிழற்படங்கள் கடந்த கால வரலாற்றின் சான்றுகள். இவற்றை அந்நாட்களில் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது பின்னாட்களில் நிச்சயம் நம்மையே கடிந்து கொள்ளக் கூடியவை. அந்த அடிப்படையில் தங்களுடைய மன வருத்தம் புரிந்து கொள்ளக் கூடியதே.

RAGHAVENDRA
10th November 2014, 10:12 PM
கோபால்
நடிகர் திலகத்தை சந்தித்த அனுபவங்கள் ஒவ்வொரு ரசிகருக்கும் மிகவும் மெய்சிலிர்க்கக் கூடியவை. என்றென்றும் எண்ணி எண்ணி மனம் பூரிக்க வைப்பவை. எந்த வித கருத்துப் பரிமாற்றங்களானாலும் இது போன்ற அனுபவங்கள் நினைவிற்கு வரும் பொழுது மனதிற்குப் பட்டதை எழுதுவது தவிர்க்க இயலாது. அது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் மகிழ்வூட்டக் கூடியது. அந்த வகையில் இடையில் வரக்கூடிய மற்ற பதிவுகளையும் நாம் மனமுவந்து வரவேற்போம். ஆனால் அதே சமயம் முடிந்த வரையில் இந்த பதிவகள் ஒரு விவாதத்தின் முடிவில் கிடைக்கக் கூடிய இடைவெளியில் இடம் பெற்றால் இன்னும் நன்றாக இருக்கும். இதனை நம் நண்பர்கள் உணர்ந்தால் நம்முடைய திரியின் பங்களிப்பார்களின் எண்ணிக்கை மட்டுமின்றி ஆர்வமும் கூடும்.

RAGHAVENDRA
10th November 2014, 10:43 PM
சிவாஜி செந்தில் சார்
நடிகர் திலகத்தின் திரைப் பேராண்மை... நடிப்புத் திமிங்கிலம் ... எனத் தங்களின் எழுத்தின் ராஜ்ஜியம் விரிவடைந்தே போகிறது... பாராட்டுக்கள்...

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பு வரை அந்த நாள் படம் பாடல்கள் இல்லாத படம் என்கின்ற அளவில் மட்டுமே மக்களின் நினைவில் தங்கியிருந்தது. எஸ்.பாலச்சந்தர் என்கின்ற அந்த மாமேதைக்குக் கூட வீணையில் கிடைத்த அங்கீகாரம் திரைத்துறையில் தரப்படவில்லை என்பதே என் எண்ணம். உலகத் திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் தமிழ் சினிமாவை ஒரு புழுவிற்கு சமமாக நடத்திய கால கட்டத்தில் இந்தியாவில் ரோஷமானுக்குக் கிடைத்த அமோக வரவேற்பும் அந்தஸ்தும் அதற்கு சற்றும் குறையாத சொல்லப் போனால் அதை விட அதிகமாகவே அருமையாக அமைந்த அந்த நாள் படத்திற்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. அந்தக் காரணத்தை கோபால் சார் புதியதாக தொடங்கியுள்ள தொடரின் முதல் பகுதியில் தாங்கள் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் சினிமாவைப் பற்றிய பொதுஜன awareness ஆழமாகப் பெருகியுள்ள நிலையில் அந்தநாள் திரைப்படம் மிகப் பெரிய அளவில் அதற்குரிய அங்கீகாரம் பெற்று வருவது உள்ளபடியே மகிழ்வூட்டுகிறது. இதனையும் கோபால் சாரின் பதிவில் நாம் புரிந்து கொள்ளலாம்.

நேற்றுக்கூட முரசு தொலைக்காட்சியில் அந்தநாள் திரைப்படம் திரையிடப்பட்டது, எந்த அளவிற்கு மக்களிடம் இத்திரைப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பதைக் காட்டுவதோடு நாளுக்கு நாள் இப்படத்தின் cult classic அந்தஸ்து பெருகி வருவதை நிரூபிக்கிறது.

வரலாற்றில் சாதனைகள் மறைக்கப் படமுடியாதவை என்பதற்கான துவக்கமே அந்த நாள்.

இது இனி பல திரைப்படங்களின் வாயிலாக நடிகர் திலகத்திற்குக் கிடைக்க இருக்கும் அங்கீகாரங்களுக்கான தொடக்கம்.

தங்களுடைய இந்தத் தொடர் விரிவாக மக்களிடம் சென்று சேர வேண்டும்.. கோபால் சாரின் புதிய தொடரின் முதல் பகுதியின் கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து தங்களுடையதைத் தொடரலாம் என நான் நினைக்கிறேன்.

இதைப் பற்றிய தங்கள் கருத்தையும் கூறலாம்.

RAGHAVENDRA
10th November 2014, 11:00 PM
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்து கொண்டால்
அவன் தான் .......


பூஜ்ஜியத்திலும் ராஜ்ஜியம் நடத்தக் கூடியவன் அந்த மன்னன். அந்தப் பூஜ்ஜியத்திற்கு அருகில் அவன் அமைக்கும் இலக்கமே அவனது அரச தந்திரம்... அவனது ராஜ்ஜியத்தில் பூஜ்ஜியங்களாக நுழைபவர்கள் அந்த இலக்கங்களாக மாறி அவனை பூஜை நாயகனாக்கி பின்னர் இறைவனாகவே வழிபடுகிறவர்கள்.. அவனும் இறைவனாகவே அவர்களுக்கு அருள் பாலிக்கிறான். அவன் அருளில் அந்த இலக்கங்களான யாவருமே அறிவுக் கண்ணால் பார்க்கிறார்கள்.. பகுத்தறிவால் சிந்திக்கிறார்கள்.. அவர்களுக்கு அவன் அருள் பாலிக்கும் போது அவர்களுக்காக தன்னுடைய பாடங்களில் சில சமயம் எளிமையைப் புகுத்தி விடுகிறான். கடினமான பாடங்களையும் புரிந்து கொள்ளும் வல்லமையினை அவன் அருளால் கிடைக்கப் பெறும் அந்த இலக்கங்கள் அந்த வல்லமையை அவனிடமே காண்பிக்கிறார்கள்.. இந்த இறைவனை நம்பாத நாத்திகனாகக் கூறிக்கொள்பவனிடம் இந்த இலக்கங்கள் சென்றடைய அங்கே அவர்களிடம் இந்த இறைவனைப் பற்றிய தவறான புரிதல்கள் திணிக்கப்படுகின்றன. இந்தத் திணிப்பில் மயங்கிய இந்த இலக்கங்கள் தங்களின் மனசாட்சியை மறந்து விட்டு இந்த இறைவனையே பழிக்கின்றன.

இதைக்காணும் அந்த இறைவனை நம்பித் தொடரும் மற்ற இலக்கங்கள் விழிக்கின்றன. என்ன செய்வதென்பது தெரியாமல் திகைக்கின்றன. இறுதியில் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறிக் கொண்டு அந்த இறைவனுக்கான திருப்பணியைத் தொடர்கின்றன.

பல்வேறு திசைகளிலும் பயணிக்கும் அந்த திசைமாறிய இலக்கங்கள் காலப்போக்கில் அனுபவங்களின் துணையுடன் மீண்டும் அந்த பூஜ்ஜியத்திற்குள்ளேயே அடைக்கலமாகின்றன.

இதையெல்லாம் பார்க்கும் அந்த இறைவன்... சிரிக்கிறான்...


பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்து கொண்டால்
அவன் தான் .......


http://i.ytimg.com/vi/SEcpYzFyx_o/hqdefault.jpg

eehaiupehazij
10th November 2014, 11:33 PM
Dear Raghavendhar Sir. I accept your views and wait for my next posting after the deliberations on Mr. Gopal's write-ups. I also wish to take some time to collect relevant reference materials to justify. Thank you.

Murali Srinivas
11th November 2014, 01:06 AM
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

உங்கள் முறையான விளக்கத்திற்கு நன்றி. நாம் இருவரும் மீண்டும் மீண்டும் வாதிப்பதால் அது முடியாத ஒன்றாகவே இருக்கும். மற்றவர்களுக்கு அது ஒரு அயற்சியையும் கொடுக்கக் கூடும். நான் எழுதிய பதிவில் நீங்கள் ஒரு இரண்டு மூன்று இடங்களை குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். அப்படியில்லை என்று நான் விளக்கினாலும் மீண்டும் விவாதம் வளரவே செய்யும். என் பதிவு [அது ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது] எம்ஜிஆர் அவர்களை குறை சொல்லும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல. மணியன் ஆனந்த விகடன் என்ற பாரம்பரியமிக்க ஒரு ஊடகத்தை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியதையும் அதன் காரணமாக நடிகர் திலகம் என்ற மனிதன் அனுபவித்த வேதனைகளையும் பதிவு செய்வதே என் நோக்கமாக இருந்தது. இதயம் பேசுகிறது இதழில் தாமரை மணாளன் நக்கீரன் என்ற பெயரில் எழுதிய பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கட்டுரை என் பதிவில் ஒரு விஷயமே இல்லை. காரணம் அதற்கு நான் மதிப்பே கொடுக்கவில்லை. ஆனந்த விகடன் இதழில் ஆரம்பித்த மணியனின் சிவாஜி விரோதத்தின் தொடர்ச்சியாகவே நான் இதயம் பேசுகிறது கட்டுரையை பார்த்தேன். அப்படி சொல்வது தவறாக இருந்தாலும் தாமரை மணாளன் கூலிக்கு மாரடிக்கும் எழுத்தாளர் என்பதுதான் என் எண்ணம். காரணம் இதே நபர் பத்து வருடங்களுக்கு பிறகு வாசுகி இதழில் ஆசிரியராக பொறுப்பேற்றவுடன் சிவாஜியை எப்படி தூக்கி வைத்தார் எப்படி புரபசர் ராமு போன்றவர்களை வைத்து சிவாஜியை பற்றி தொடர் கட்டுரை எழுத வைத்தார் என்பதெல்லாம் வரலாற்று சான்றுகளாக விளங்குகின்றன.

ராஜ ராஜ சோழன் பற்றி கோபால் எழுதியதை நாங்கள் கண்டிக்கவில்லை. மாறாக அவர் பயன்படுத்தியிருந்த வார்த்தைகள், வாக்கியத்தின் தொனி இவற்றையே சுட்டிக் காட்டினோம். அதில் ஆட்சேபகரமான வார்த்தைகளை மட்டுமே நீக்க கூறினோம். ஆனால் அவர் பதிவையே நீக்கி விட்டார். இந்த ஒரு பதிவிற்கு இப்படி சொல்கிறீர்களே, கோபால் எத்தனை தடவை இதை போல் எழுதியிருப்பார்? அவற்றையெல்லாம் நீக்கினோமா என்ன?

நான் மாடரேட்டராக இருந்துக் கொண்டு உங்கள் மேல் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினேன் அதற்கு காரணம் கோபம் என்று சொல்கிறீர்கள். நிச்சயமாக இல்லை நண்பரே, நீங்கள் அந்த பதிவில் நான் குறிப்பிட்ட சில விஷயங்களை எழுதாமல் இருந்திருந்தால் [அவை அந்த குறிப்பிட்ட பதிவுகளுக்கு தொடர்பில்லாதவை என்பதுதானே விஷயம்] இந்த பதிவே என்னிடமிருந்து வந்திருக்காது. மேலும் என்னை உங்கள் பதிவு காயப்படுத்தவுமில்லை.

பதில் நீண்டுக் கொண்டே போகிறது. முன்பே சொன்னது போல் பலருக்கும் ஆயாசமாக இருக்கக் கூடும். ஒன்றை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு சிவாஜி ரசிகன் எழுதுகிறான் என்ற காரணத்தினாலேயே எம்ஜிஆரை குற்றம் சொல்லும் நோக்கத்தோடு எழுதுகிறான் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேடி இந்த வார்த்தை அந்த அர்த்தத்தில் எழுதினீர்கள், இதில் விஷம் கலந்திருக்கிறது என்றெல்லாம் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டிருந்தால் அதற்கு முடிவே இருக்காது. ஒரு நிகழ்வை அனைவரும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். மாற்றுக் கருத்தையும் அனுமதிப்பதுதான் ஜனநாயகம் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. தகவலில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். மாறாக ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லும்போது இப்படி கருத்து கூறக் கூடாது. காரணம் அது எம்ஜிஆர் அவர்களை தாக்குவது போல் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தால் அப்புறம் நான் என்ன சொல்வது? உங்கள் விருப்பம்.

அன்புடன்

Gopal.s
11th November 2014, 03:14 AM
கலை வேந்தன்,

தங்கள் ஆதங்கம் புரிகிறது. தனி பட்ட முறையில் மனிதாபிமானம் எங்கிருந்தாலும் நான் பாராட்ட தலை படுவேன். ஆனால் அது பலன் கருதா ஒன்றாக இருக்க வேண்டும். நான் ஒரு இட்லியும் கீரையும் கொடுத்து விட்டு எனக்கு தலைமை பதவி தா என்றால்?

எங்களை புரிந்து கொள்ளுங்கள்.எங்கள் வீட்டில் யார் வந்தாலும் சோறிடுவோம்.அது என்ன நேரமாக இருந்தாலும்.சுற்றியிருக்கும் பூ விற்பவர்,வீட்டு பணியாளர்,மற்றும் உதவி வேண்டுவோர் எல்லோருடைய சிறார்களின் படிப்பு,மருத்துவம் அனைத்திலும் உதவியுள்ளோம். சமீப காலங்களில் ,தெருவில் அடிபட்டுள்ள நாட்டு நாய்களுக்கு சிகிச்சை அளித்து குண படுத்தி,மறு வீடு காண உதவி கொண்டுள்ளோம்.எங்களிடம் இந்த குணம் இயல்பாகவே உள்ளது.இது நாள் வரை ,இதை பற்றி நான் பேசியதும் இல்லை.ஆனால் நான் இதை வைத்து விளம்பரம் கண்டு ,பலன் பெற எண்ணினால் ,என் நல்லியல்புக்கு ஒரு மாற்று குறைவல்லவா?(இதில் என்னை விட என் மனைவியார் மற்றும் மக்கள் காட்டும் ஈடுபாடு சொல்லி மாளாதது.)எங்கள் வருமானத்தின் ஒரு பகுதி எப்போதும் இவ்வகை நற்செயல்களுக்கு ஒதுக்க படும்.சாதி,மத,இன வேறுபாடெல்லாம் இருந்ததே இல்லை.(என் ஆசிரியை அன்னை ,வீட்டில் வரும் அத்தனை தொழிலாளிகளுக்கும்,நாங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களிலேயே அன்னமிடுவார்,தண்ணீர் தருவார்.)

உங்கள் தலைவரிடம் எனக்கு பதில்களை விட கேள்விகளே நிரம்பியுள்ளதால், எனக்கு உவப்பான நடிகராகவோ,தலைவராகவோ எண்ண முடியவில்லை.சில படங்கள் பிடிக்கும் என்ற அளவோடு மட்டுமே நிற்கிறது.
மற்றபடி ,அவர் செய்த நற்காரியங்களை நான் குறைத்து பேச விரும்பியதில்லை.

சிவாஜியின் அபார திறமைக்கு நான் அடிமை. அவர் நான் வளர வளர என் எண்ணத்தில் வளருகிறார்.உயருகிறார்.நான் காணும் தோறும் புதுமை தருகிறார்.அதனால் ஒரு நடிகராக என்னால் அவரை மட்டுமே பீடத்தில் ஏற்றி பார்க்க முடிகிறது.

தலைவர்கள் என்றால் உலகத்தில் பஞ்சமா என்ன? ஏக பட்ட தலைவர்கள்,கலீபாக்கள்,மகான்கள் என்று உண்டே?ஒரு வாசிப்பாளன் என்ற முறையில் நான் போற்ற மனிதர்களுக்கா பஞ்சம்?

Gopal.s
11th November 2014, 07:38 AM
கலை வேந்தன்,



நான் உங்கள் தலைவரை பற்றி எதுவுமே கூறவில்லை. ஆர்.எம்.வீரப்பன் எழுதியவற்றை மட்டுமே குறிப்பிட்டேன்.



ஆபாசம்,erotism என்பது கம்பி மேல் நடக்கும் வித்தை.



காதலியுடன் சல்லாபித்ததை ,நண்பனுடன் பகிரலாம்.ஆனால் மனைவியுடன் சல்லாபித்ததை சொல்லி மகிழ்வார்களா? அதே போல மனைவியுடன் தனியாகவோ,டாக்டருடன் தனியாகவோ உடை களையலாம். ஆனால் இருவரும் சேர்ந்து இருக்கும் போது சங்கடமாக உணர மாட்டோமா?



நாலு பக்கம் வேடருண்டு நான் மிக மிக ரசித்த காட்சி. ஞாபக படுத்தியதற்கு நன்றி.



இதில் நடித்தவர் சிவாஜி என்ற புதுமுக இளைஞர். ஆம். ஒவ்வொரு படத்திலும் புது முகம் காட்டி ,புத்துணர்வை தரும் சிவாஜி,இதில் அழகான கண்னாடி போட்டு புதுமுகம் காட்டி ,நடிப்பிலும் புது பரிமாணம் காட்டினார்.



தாக்கும் போக்கை தொடர்வதை ,நான் தவிர்க்கவே எண்ணுகிறேன். அவர் சொன்னார்,இவர் சொன்னார் ,அவர் எழுதினார்,இவர் எழுதினார் என்று சொல்ல என்னிடமும் ஏராள விஷயங்கள் உண்டு.என் வீடு,எல்லா பத்திரிகைகளாலும் (தமிழ்.ஆங்கிலம்)நிறைந்திருக்கும் நான் பிறந்த முதலே.



என்னை என் தொடரை நிம்மதியாக எழுத அனுமதியுங்கள்.

Gopal.s
11th November 2014, 08:49 AM
கடின நடையை தவிருங்கள் என்று நிறைய செய்திகள். தமிழின் சிறப்பும்,குறையும் அதுவே. விஷயத்தின் கனத்திற்கு தக்க மொழியும் சிக்கலாகி விடும். அதுவும் தமிழர்கள் தமிழை விட்டு தள்ளி சென்று விட்டனர். கலைஞர் டி.வீ முதலியவற்றில் கூட அறிவிப்பாளர்கள் இருக்கட்டும், தமிழ் மாணவ மணிகள் கூட ல,ள ,ழ உச்சரிப்பை பற்றி கவலை கொள்வதே இல்லை. ஆசிரியர்கள் பணி நீர்த்து போக காரணம், சலுகை,உரிமைகளின் மீது கண் வைக்கும் அளவு கடமை,பொறுப்பு இவற்றில் அக்கறை காட்டுவதில்லையோ என்று எனக்கு படுகிறது. சில சமயம் அவமானமாக கூட இருக்கிறது.



என்ன செய்வது, வேலூர் தமிழர்கள் கூட கஸ்தூரி நிவாசுக்கு குடியேறி ஆகி விட்டதே?



கடவுளில் கூட பேதம். காசை கொட்ட தமிழ் நாட்டில் கடவுள்கள் இல்லையா,ஆசிரமங்கள் இல்லையா? சபரி மலைக்கும் ,திருப்பதிக்கும் மட்டுமே தமிழர்கள் அள்ளி கொடுக்கின்றனர்.



அது போலவே சிவாஜி. கமல் போன்ற மேதை தமிழ் நடிகர்களை ,தமிழை வாழ வைக்க எண்ணுவோரை வாழ்த்தும் பண்பு கூட தமிழர்களுக்கு இல்லை.



நாமே ராஜ பக்சேயின் வேலையை சுலபமாக்கி விட்டோம்.



கடின நடையை தவிர்த்து லகு ஆக்குகிறேன். ஆனால் நகைச் சுவை போர்வையில் எல்லாவற்றிலும் அசட்டு தனம் கலக்க முடியாது. செய்யவும் கூடாது.அதற்கென்று தனி களம் உள்ளது. நான் கலையின் குறிப்புகள் இலக்கணத்தில் உள்ள படி,அதன் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள், தெரு கூத்து,நாடக கலைகளில் அதன் தாக்கம், திரை படங்களில் அதன் நீட்சி ,
அதை அங்கீகரித்து கலை மரபையும் தொடர்ந்து, மாற்றத்தையும் விளைத்து, அதில் மேலை நாட்டு பாணியை அழகாய் புகுத்தி ,சினிமா மீடியம் என்பதில் சிவாஜி நிகழ்த்திய அற்புத ரசவாதம் .இவையே என் agenda . சிறிதே நேரமெடுத்து விஷயத்தை இளக்கி கொடுக்க முயல்வேன். கொஞ்சம் பொறுங்கள்.

Richardsof
11th November 2014, 09:01 AM
என்ன செய்வது, வேலூர் தமிழர்கள் கூட கஸ்தூரி நிவாசுக்கு குடியேறி ஆகி விட்டதே?- கோபால்
ஆதங்கம் .
கோபால்

அந்த கஸ்தூரி நிவாசா படம்தான் உங்கள் அபிமான நடிகர் நடித்த அவன்தான் மனிதன் - கலை ரசனைக்கு மொழிகள் பேதமில்லை மொழியை வைத்து வீணாக பேதங்களை வளர்க்காதீர்கள் .
தமிழன் என்று சொல்லும் நீங்கள் ஏன் சென்னைக்கே வந்து தமிழனின் பெருமைகளை நிலை நாட்டுங்கள் . ஆராய்ச்சி செய்யுங்கள் - உண்மையான திராவிடத்தை புரிந்து கொள்ளாததால் இந்தஆதங்கம் .


தொடர்ந்து மொழி பேதமின்றி உங்களது புதிய இலக்கை தொடருங்கள் . வெற்றி பெற வாழ்த்துக்கள் .எந்த குறுக்கீடும் இனி வராது ..என்பது உங்களின் பதிவுகளை பொறுத்தது ..

Gopal.s
11th November 2014, 09:41 AM
யுகேஷ் பாபு,



பகுத்தறிவு வாழ்க, பெரியார் வாழ்க.



புராணம் எல்லாம் புகுந்து விளையாடுகிறது. உங்கள் திரி அனைத்து நண்பர்களின் நோக்கம் விளங்கி விட்டது. விரைவில் ,நடிப்பு தெய்வத்தின் அடி சேரும் துடிப்பு. உங்கள் ஆசை விரைவில் நிறைவேற எனது அருளாசிகள்.

Russellbpw
11th November 2014, 10:11 AM
கலைஞர் டி.வீ முதலியவற்றில் கூட அறிவிப்பாளர்கள் இருக்கட்டும், தமிழ் மாணவ மணிகள் கூட ல,ள ,ழ உச்சரிப்பை பற்றி கவலை கொள்வதே இல்லை. சில சமயம் அவமானமாக கூட இருக்கிறது.

கோபால் ....நீங்க ஒரு மகா மேத

ஒரு காலத்தில் ஹிந்தி கொள்கை எதிர்பிற்கு ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்தவர்கள்....இன்று தங்களுடைய வியாபாரம் என்று வரும்போது ..."வன்கம் நேயர்கலே..இப்போ நாமோ ஒரு கல்கல் பாட்டு பாக்லாம்" ....என்று தூய தமிழ் நடையில் தமிழ் பேசும் மாந்தரை RECRUIT செய்வது ...ஊருக்குதான் உபதேசம் என்பதை தெளிவாக்குகிறது !

கடவுளில் கூட பேதம். காசை கொட்ட தமிழ் நாட்டில் கடவுள்கள் இல்லையா,ஆசிரமங்கள் இல்லையா? சபரி மலைக்கும் ,திருப்பதிக்கும் மட்டுமே தமிழர்கள் அள்ளி கொடுக்கின்றனர்.

நீங்கள் பழனி பற்றி கேள்விப்பட்டதில்லை என்று நினைக்கிறன்..! உங்களை போலவே கேரளா வில் கூட ஒருவர் கூறுகிறார்....நம்ம ஊர் குருவாயூர் இருக்கும்போது...எதற்கு பழனியில் சென்று நம்மவர்கள் காசுகொட்டுகிரார்கள் என்று...!

கூடுதல் தகவல் !
மேலும்...ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து மதமும் அனைத்து இனமும் பெருமளவில் சென்றுவரும் இரண்டு திருத்தலங்கள்....1) சபரி மலை 2) திருப்பதிமலை என்று கேள்வி ...! ஜாதி மத நல்லிணக்கம் பற்றி நடைமுறையில் புழக்கத்தில் கொண்டுவந்த திருத்தலங்கள் இவை....அரசியல்வாதிகள் போல வெறும் வாய்பேச்சுடன் நிற்காமல் செயலளவில் உள்ள கோவில்கள்..!

அது போலவே சிவாஜி. கமல் போன்ற மேதை தமிழ் நடிகர்களை ,தமிழை வாழ வைக்க எண்ணுவோரை வாழ்த்தும் பண்பு கூட தமிழர்களுக்கு இல்லை.

சிவாஜி அவர்கள் சொல்கிறீர்கள் சரி...அதுமட்டுமே சரி !!! கமல் இதில் சேரமாட்டார் !

கமலுக்கு அனைவரும் கொடுக்கும் IMPORTANCE 5% நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்குமேயானால் ...ராஜபக்ஷே பற்றிய பேச்சே வந்திருக்காது... !





.....

Russellbpw
11th November 2014, 10:48 AM
தமிழகத்தில் காலம் காலமாக இன்று வரை நடந்துகொண்டிருப்பது !

https://www.youtube.com/watch?v=Gy3DN7wDX14

Russellbpw
11th November 2014, 11:03 AM
நாலு பக்கம் வேடருண்டு பாடல் ..... கணநேரத்தில் காதல் வயப்பட்டு நெருக்கத்தின் தனிமையை உணர்ந்து காதலர்கள் பரஸ்பரம் மனமுவந்து கிடைத்த நேரத்தில், தருணத்தில் காமம் வெளிப்படுத்தும் காட்சி....!

விரசம் உச்ச நிலை அடையாமல் இருக்க chasing காட்சி ..காதல் காட்சி மாறி மாறி படமாக்கபட்டிருக்கும் விதம் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது...

நடிகர் திலகம் கதாநாயகியை மற்ற நடிகர்களை போல, விட்டால் கிடைக்காது...ஆகையால்..இருக்கும்போதே...கடித்து குதரிடவேண்டும் என்பதுபோல உள்ள செய்கையை நடிப்பு என்ற பெயரில் வில்லன் செய்யும் வேலையே கதாநாயகனாக செய்வதை நாம் நிறைய படங்களில் பார்திரிக்கிறோம்.

காதல் பார்வையை வீசுவதற்கு பதில் காமபார்வையை வீசும் ஒரு சில நடிகர் உள்ளார்கள். இரெண்டுக்கும் காட்சிக்கேற்ப வித்தியாசம் கூட காட்ட தெரியாதவர்கள். காதலிக்கிறேன் என்ற பெயரில் இவர்கள் காட்டும் கொனஷ்டை இருக்கிறதே....OH GOD !!

நடிகர் திலகம் நாயகியை காதல் காட்சிகளில் ஒரு பூவை போல அணுகும் முறை திரை உலகிற்கு என்றும் புதுமை. அது செல்வமோ, வசந்தமாளிகயோ, ராஜபார்டோ, சிவகாமியின் செல்வனோ, நல்லதொரு குடும்பமோ எதுவாகிலும்... காட்சியை பார்த்தல் - a manly hero handling heroine like a flower என்பது போல தான் இருக்கும்...every minute is enjoyable !!!

காதல் மன்னர்கள்...இளவரசர்கள் ஆயிரம் பேர் வரலாம் ..போகலாம்...ஆனால் காதல் திரைப்படம் என்றால் "வசந்த மாளிகைக்கு அடுத்துதான் எல்லாமே என்பது உலகம் அறியாததா என்ன ?

Irene Hastings
11th November 2014, 11:17 AM
நாலு பக்கம் வேடருண்டு பாடல் ..... கணநேரத்தில் காதல் வயப்பட்டு நெருக்கத்தின் தனிமையை உணர்ந்து காதலர்கள் பரஸ்பரம் மனமுவந்து கிடைத்த நேரத்தில், தருணத்தில் காமம் வெளிப்படுத்தும் காட்சி....!

விரசம் உச்ச நிலை அடையாமல் இருக்க chasing காட்சி ..காதல் காட்சி மாறி மாறி படமாக்கபட்டிருக்கும் விதம் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது...

நடிகர் திலகம் கதாநாயகியை மற்ற நடிகர்களை போல, விட்டால் கிடைக்காது...ஆகையால்..இருக்கும்போதே...கடித்து குதரிடவேண்டும் என்பதுபோல உள்ள செய்கையை நடிப்பு என்ற பெயரில் வில்லன் செய்யும் வேலையே கதாநாயகனாக செய்வதை நாம் நிறைய படங்களில் பார்திரிக்கிறோம்.

காதல் பார்வையை வீசுவதற்கு பதில் காமபார்வையை வீசும் ஒரு சில நடிகர் உள்ளார்கள். இரெண்டுக்கும் காட்சிக்கேற்ப வித்தியாசம் கூட காட்ட தெரியாதவர்கள். காதலிக்கிறேன் என்ற பெயரில் இவர்கள் காட்டும் கொனஷ்டை இருக்கிறதே....OH GOD !!

நடிகர் திலகம் நாயகியை காதல் காட்சிகளில் ஒரு பூவை போல அணுகும் முறை திரை உலகிற்கு என்றும் புதுமை. அது செல்வமோ, வசந்தமாளிகயோ, ராஜபார்டோ, சிவகாமியின் செல்வனோ, நல்லதொரு குடும்பமோ எதுவாகிலும்... காட்சியை பார்த்தல் - a manly hero handling heroine like a flower என்பது போல தான் இருக்கும்...every minute is enjoyable !!!

காதல் மன்னர்கள்...இளவரசர்கள் ஆயிரம் பேர் வரலாம் ..போகலாம்...ஆனால் காதல் திரைப்படம் என்றால் "வசந்த மாளிகைக்கு அடுத்துதான் எல்லாமே என்பது உலகம் அறியாததா என்ன ?

What appears as terrific to few here actually appears absolutely aweful to me . Our NT was visibly looking old and that song was disgusting to say the least. Such songs and movies only were the starting phase of his downfall . Both NT and Sujatha were terrible combination. The movie itself was supposed to be a virtual Pasamalar but NT's performance was far below his own standards. There was no NT all.

eehaiupehazij
11th November 2014, 11:47 AM
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல் காட்சியமைப்பு இப்படி இருக்கலாமா?

தமிழ் திரைப்படங்களில் காதல் காட்சியமைப்புக்கள் வரையறை மீறும்போது நடிப்பது திரையுலக மூவேந்தர்களே என்றாலும் மனம் கசப்படைவது தவிர்க்க இயலாது
குடும்பத்துடன் அமர்ந்து நாம் திரைப்படங்களை ரசிக்கும்போது வியாபாரநோக்கில் காமம்கலந்த கவர்ச்சிப்பூச்சில் வெளிவந்த இந்தவகை 'காதல்' நோதலே!

மென்மையான இதமான இனிமையான காதல் காட்சியமைப்புக்களில் காதல் மன்னராக முடிசூட்டப்பட்ட ஜெமினிகணேசனும்கூட காலம்கடந்த வேளையில் குறத்திமகன் திரைப்படத்தில் ஒரு சிறிய திருஷ்டிப்பொட்டு வைத்தவர்தான்!


எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்

https://www.youtube.com/watch?v=cy58kizXUSY

https://www.youtube.com/watch?v=MBepNZJjK-4

இப்படி இருக்கலாமா?

https://www.youtube.com/watch?v=vylKWIFujkI

எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்

https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg

https://www.youtube.com/watch?v=zkTZUSTmGsw

இப்படி இருக்கலாமா?

https://www.youtube.com/watch?v=L6CwgtFCJVo

எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்

https://www.youtube.com/watch?v=Kg0CUJH9doQ

https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4

இப்படி இருக்கலாமா?

https://www.youtube.com/watch?v=UYZ4Ou8GcY0

Better not to continue such bitter matters as it may shatter the cult images of our icons, augmenting only hatred among us!

Gopal.s
11th November 2014, 12:10 PM
What appears as terrific to few here actually appears absolutely aweful to me . Our NT was visibly looking old and that song was disgusting to say the least. Such songs and movies only were the starting phase of his downfall . Both NT and Sujatha were terrible combination. The movie itself was supposed to be a virtual Pasamalar but NT's performance was far below his own standards. There was no NT all.

Irene ,



சிவாஜியை சிவாஜிக்கு bench mark வைத்தால் அவரது 50 களின் 60 களின் படங்களுக்கு முன் எல்லாமே சாதரணமாகி விடும்.



ஆனால் அண்ணன் ஒரு கோவில், விறு விருப்பான குடும்ப படம். அந்த வறட்சி காலங்களில் ,அவருடைய மார்க்கெட் தூக்கி நிறுத்த பட்டது தீபம்,அண்ணன் ஒரு கோவில் படங்களாலேயே. பின்னர் அந்தமான் காதலி முதல் திரிசூலம் வரை 8 தொடர்ந்த சூப்பர் ஹிட். அவர் ஒரு ஸ்டார் என்பதால் class VS Mass compromise தவிர்க்க முடியாதது.



நாலு பக்கம் வேடருண்டு படத்தையே தூக்கி நிறுத்தும் அளவு படமாக்கம் கண்டது. அவரது எதிர்ப்பு பத்திரிகை விகடனால் இந்த காட்சி சிலாகிக்க பட்டது.



எனக்கும் பிடித்த காட்சியே.சிவாஜி முக அமைப்பு கடைசி வரை இளமை அழகோடு இருந்தது. படையப்பா வரை.

joe
11th November 2014, 02:35 PM
கோபால்,
நீங்கள் எழுதப்போவது ஆய்வு எனும் போது அது நீங்கள் தொட்டு விட முடியும் மொழியின் உச்சத்தில் இருப்பது நலம் . நீங்கள் இங்கே எழுதப்போகும் ஆய்வு வருங்காலத்தில் புத்தகமாக வரும் என்பதை மனதில் நிறுத்தி சமரசம் இல்லாமல் எழுதுங்கள் ..My 2 cents .

ScottAlise
11th November 2014, 03:18 PM
Dear Gopal Sir,

kudos to your article sir way to go sir

ScottAlise
11th November 2014, 03:19 PM
பார்த்ததில் பிடித்தது - 48

தங்கசுரங்கம்

திரு சிவாஜி செந்தில் சார் உடன் பேசிய 2 மணி நேரத்தில் கிட்ட தட்ட 1 மணி நேரம் இந்த படத்தை பற்றி தான் பேசி மகிழ்தோம் . அவர் உடன் பேசியதில் இருந்து தங்கசுரங்கம் படத்தை பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை , ஆனால் ஏற்கனவே அந்த படத்தை பற்றி எழுதி உள்ளதால் அந்த படத்தை பற்றி எழுதுவதை சற்று தள்ளி வைத்தேன்
திரு சிவாஜி செந்தில் சார் தற்போது எழுதி வரும் தொடருக்கு ஒரு tribute மற்றும் நான் முதலில் எழுதியதை இன்னும் சொல்ல போனால் சரியாக எழுதாமல் இருந்ததால் ஒரு improvement இந்த பதிவு


போலி தங்கம் உற்பத்தி செய்யும் கும்பலை நாயகன் தடுத்து கைது செய்யும் கதை தான் ஒரு வரி கதை

என்ன டா இவன் கதை என்று முழு கதையும் எழுதி விடுவான் , இன்று ஒரு வரி உடன் நிறுத்தி விட்டன என்று நினைப்பது புரிகிறது . படத்தை பற்றி விரிவாக எழுத இருபதாலும்

இந்த படம் வந்த காலகட்டத்தில் அதாவது 1969 ல் james bond படங்கள் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டது - இங்கே தமிழ் நாட்டில் ஜெய்ஷங்கர் அவர்களும் action படங்களில் குறிப்பாக CID SHANKAR என்று தொடங்கி , பல துப்பறியும் படங்களில் நடித்து புகழ் பெற தொடங்கினார்

மக்கள் திலகம் MGR அவர்கள் ரகசிய போலீஸ் 115 என்ற படத்தை 1966 ல் தொடங்கி இருந்தாலும் , அவருக்கு எதிர்பாரா விபத்து ஏற்பட்டதால் படத்தில் பல மாறுதல்கள் , கதாநாயகியாக நடித்த சரோஜா தேவிக்கு பதில் ஜெயலலிதா நடித்தார்

தொடர்ந்து குடும்ப படத்தில் நடித்து கொண்டு இருந்த சிவாஜி சார் ஒரு சில action மற்றும் light hearted படங்களில் நடித்து தனக்கு இதுவும் வரும் என்று சொல்லாமல் நிரூபித்தார்

இந்த படத்தின் கதையாசரியர் G . பாலசுப்ரமணியம் - பல வெற்றி படங்களின் கதையாசரியர் .இயக்கம் ராமண்ணா


ராமண்ணாவின் நான் , மூன்று எழுத்து படங்கள் எனக்கு மிகுவ்ம் பிடித்த படம் . ராமண்ணாவின் படம் என்றால் இசை TK ராமமூர்த்தி தான் , பாடல்களும் , பின்னணி இசையும் நன்றாக படத்துக்கு சப்போர்ட் செய்தது என்று தான் சொல்ல வேண்டும்

ScottAlise
11th November 2014, 03:19 PM
இனி ஸ்டைல் கிங் பற்றி :

எல்லோரும் சிவாஜி அவர்களின் ராஜா , சொர்க்கம் படத்தை பற்றி குறிப்பிடும் பொது , ஸ்டைல் கிங் , ஸ்டைல் சக்ரவர்த்தி என்று சொல்லி கேட்டு இருக்கிறேன் , ஆனால் எனக்கு இந்த படத்தில் அவர் காட்டி இருக்கும் ஸ்டைல் , மிகவும் ரசிக்கும்படி உள்ளது என்றே சொல்ல தோன்றுகிறது

முதல் காட்சியில் அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போதே நாம் நிமிருந்து உக்காரலாம் - ராஜா கம்பீரம் , தொடர்ந்து தன் அலுவலகத்துக்கு வரும் போதும் , தன்னுக்கு கிழே வேலை பார்க்கும் நபர்கள் விஷ் பண்ணும் போதும் அதை acknowledge செய்யும் விதமும் டாப்

போலி தங்கம் உற்பத்தி செய்யும் கும்பலை படிக்க முதலில் டாக்டரை சந்திக்கும் பொது உங்க உடம்புக்கு என்ன என்று டாக்டர் கேட்க - அதற்கு இவர் சொல்லும் பதிலும் , தொடர்ந்து டாக்டரை இவர் எச்சரிக்கும் பொது இவர் முகத்தில் தெரியும் கடுமை கலந்த சிரிப்பும் James bond படங்களுக்கே உரித்தான heroism . தொடர்ந்து வரும் காட்சிகளில் பாரதியை விசாரிக்கும் பொது , தன் கை உரையை கழட்டும் காட்சியும் , பாரதியை விசாரிக்கும் பொது காடும் தோரணையும் , அவர் பிடி குடுக்காமல் போகவே அவரை man handle செய்வதும் , தொடர்ந்து வரும் சண்டை காட்சியும் நான் மிகவும் ரசித்த காட்சி - அது முடிந்த உடன் பாரதியிடம் பேசி கொண்டே அவர் முதுகில் தீ பட்டி உரசி ஸ்டைல் ஆக சிகரெட்டே பிடிக்கும் காட்சி ரஜினி ஸ்டைல் , சாரி முதலில் அது சிவாஜி ஸ்டைல் என்று இனி சொல்லவேண்டும்

காரில் போகும் பொது மீண்டும் அனல் பறக்கும் சண்டை , அதை தொடர்ந்து இன்ப நிலையத்தில் தங்கம் வாங்க ஒவ்வொரு நாட்டில் இருந்து வந்து இருக்கும் நபர்களை மனோகர் அறிமுகம் படுத்தும் காட்சியில் நம்மவர் சிகரெட்டை வைத்து கொண்டு தன் முகத்தை 360 டிகிரி யில் திருப்பும் பொது சிலிர்த்து போனேன் - பெரிய காட்சி ஒன்றும் கிடையாது இருந்தாலும் சின்ன சின்ன expressions கொடுத்து நம்மளை அசதி விடுவார் நடிகர் திலகம்



பணத்தை தன் முன்னால் மழைபோல் கொட்டும் பொது சலன படாமல் இருக்கும் காட்சி அபாரம் .AN ACTOR WHO CAN GIVE THOUSAND EXPRESSION CAN ALSO ACT BY NOT REACTING , அடுத்த காட்சியில் எலெக்ட்ரிக் shocker வைத்து அவருக்கு ஷாக் கொடுக்கும் காட்சியில் அவர் அலறிய அலறல் இதை எழுதும் பொது கேட்டு கொண்டே இருக்கிறது , இடைவேளைக்கு முன்னால் வரும் சண்டை காட்சியில் நம்மவரின் action நல்ல சுறுசுறுப்பு

injection போட்டு ஒருவர் மனதை கட்டுபடுத்தும் காட்சியில் again தி versatile actor scores

கிளைமாக்ஸ் காட்சியில் ஷு கத்தியால் கறியை அறுத்து விட்டு , டென்ஷன் தாங்காமல் சிறுது நேரம் உக்காரும் காட்சியில் பார்வையாளர்களுக்கு பரபரப்பு உண்டு பண்ணும் காட்சி

சரி சிபிஐ அதிகாரியாக நம்மவர் கலகியத்தை பற்றி எழுதி விட்டேன்

இனி அம்மாவுக்கு மகனாக வாழ்ந்து இருக்கும் ராஜன் அவர்களை பற்றி

முதல் முதலில் தன் அம்மாவை காணும் ஒரு மகன் எப்படி ரியாக்ட் பண்ணுவன் - தன்னை வளர்த்த நபரிடம் இந்த அம்மா தன் அம்மா தானா என்று ஊர்ஜித படுத்தி விட்டு , தான் பாசத்தை பொழிவார்கள் - அதுவும் இந்த காட்சியில் நடிகர் திலகம் தன் அம்மா காலில் விழ போக அவர் தடுத்து அவரை அணைத்து கொள்ள , பின் இரவு வரை பேச்சில் நேரம் போனதே தெரியாமல் இருக்க தூங்க சொல்லி அம்மா சொல்ல இவர் தூக்கம் வராமல் பாசத்துடன் அம்மாவை பார்த்து கொண்டு இருக்கும் காட்சி - உணர்ச்சி பிழம்பு

தன் அம்மா தான் குட்ட்ரவாளிக்கு உளவு சொன்னது என்று அறிந்து அதை வெளிபடுத்த முடியாமல் தன் உயர் அதிகாரியிடம் தவிக்கும் காட்சியும் , வீட்டுக்கு வந்த உடன் தன் அம்மா காபி கொடுக்கும் பொது , இவர் முறைத்து பார்க்க , அதை தாங்க முடியாமல் வரலக்ஷ்மி தலையை குனிய , இவர் கர்ஜிக்கும் காட்சியும் , தன் தாய் கைது செய்ய பட்டு அழைத்து செல்லும் பொது கண்ணில் கண்ணீர் , உடலில் உயிரை எடுத்து செல்லுவதை போல் நிற்பதும் , தன் தாய் தான் குற்றவாளி என்று தன் உயர் அதிகாரியிடம் தெரிவுக்கும் பொது அதை assert செய்வதும் , எங்கள் நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும் என்று பெருமையாக சொல்லலாம்

துப்பறியும் காட்சிகளும் - செண்டிமெண்ட் காட்சிகள் பற்றியும் எழுதி விட்டேன் இனி லைட் hearted scenes , காதல் காட்சிகள் பற்றி :

james bond படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கவே இருக்காது - காதல் காட்சிகளில் அழுதாம் இருக்காது , இதில் செண்டிமெண்ட் காட்சிகள் தாராளம் - படத்தை சற்றி lag செய்த காட்சிகள் இவை என்பது என் கருத்து
நான் பிறந்த நாடு பாடல் பெர்பெக்ட் லாஞ்ச pad பாடல் for சிவாஜி அதில் அவர் அணிந்து இருக்கும் WHITE pant கண்ணை உறுத்தாத மஞ்சள் t shirt , தொப்பி , ஸ்வெட்டர் , brief கேஸ் பாடல் வரிகள் , கேமரா எல்லாம் சேர்ந்து இதை immortal பாடலாக ஆகி விடும்

பாரதி , நிர்மலா இருவரும் சண்டை போடுதும் பொது , இவர் அமைதியாக சிரிப்பதும் , பிறகு சலித்து கொள்வதை பார்க்க அழகாக இருந்தது , இன்ப நிலையத்தில் ஸ்டைல் ஆக பார்ட்டி டான்ஸ் ஆடும் காட்சிய்ளும் , முக முடி அணிந்து கொண்டு டான்ஸ் ஆடும் காட்சியும் , தொடர்ந்து வரும் சண்டை காட்சியும் நன்றாக இருந்தது

பாரதியுடன் காதல் காட்சிகள் குறைவு என்றாலும் கட்டழகு பாப்பா பாடலில் நடிகர் திலகத்தின் குறும்புகளும் - tight t -shirt , matching pant மற்றும் அந்த பாடல்கான ambience நம்மளை கவரும்
சந்தன குடத்துக்குள்ளே பாடல் typical ராமண்ணா ஸ்டைல்

ScottAlise
11th November 2014, 03:20 PM
நாகேஷ்

நீ வந்த கப்பல் பெயர் என்ன - SS RASAGULLA , பர்மாவில் நீ இருந்த தெரு பெயர் என்ன? கட்டபொம்மன் தெரு - அதற்கு சிவாஜி reaction நான் ரசித்த காட்சி , தன் தங்கை நிர்மலாவை சிவாஜிக்கு தர மறுப்பதும் , பிறகு சிவாஜியின் அம்மா வேண்டாம் என்று சொன்ன உடன் கதவ சாத்துங்க நான் காலில் விழுகிறேன் என்று கெஞ்சுவதும் - செட்டியார் போல் வேடம் போட்டு கலக்குவதும் , நாய் தலையும் என் தலையும் ஒன்னு தான் என்று self depreciatory கமெண்ட் அடித்து கொல்வதும் , என்று படம் முழுவதும் தனி ராஜாங்கம் நடத்தி உள்ளார்

வரலக்ஷ்மி :

இவர் நல்ல நடிகை , இவர் நடித்த காட்சிகள் பற்றி ஏற்கனவே செண்டிமெண்ட் காட்சிகளில் எழுதி உள்ளதால் அதை விட்டு விடுகிறேன்

OAK தேவர்

pai - கனகசபை - ராமண்ணா படத்தில் வில்லன் பெயர்கள் north இந்தியன் names அதிகம் இருக்கும் நான் படத்தில் லால் , மூன்று எழுத்து படத்தில் சுகடியா , இதில் பை
கொஞ்சம் கூட இறக்கம் இல்லாத நபராக நன்றாக பொருந்தி நடித்து உள்ளார் , அவர் மீசை , முடியில் bleach செய்து இருபது புதுசு - ஐவரும் ராஜனும் சந்திக்கும் இடங்கள் அனல் தெறிக்கும் காட்சிகள்
கடைசியில் சர்ச் ல் அவர் மனம் மாறும் காட்சி நெகிழ்ச்சி என்றாலும் காட்சியை நீட்டி இருக்க வேண்டாம்

பாரதி :

அழகான திறமையான நடிகை , frock உடை மிகவும் பொருத்தமாக இருக்கிறது , காதல் காட்சிகளில் , பாடல் காட்சிகளில் மற்றும் injection போட்டு மனதை மயக்கும் காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார்

நிர்மலா

இவர் பாத்திரம் மிகவும் முக்கயத்துவம் வாய்ந்த பாத்திரம் - முதலில் அனாதை போல் ஏமாற்றுவது , பிறகு சிவாஜி மனதில் இடம் படிப்பது , பிறகு வில்லன் வேடத்தில் கலக்குவது என்று நிறைவாக செய்து இருக்கிறார் , குரல் தான் ஒத்துழைக்க மாறுகிறது

மொத்தத்தில் என் ஆல் டைம் favorite சிவாஜி படம்

eehaiupehazij
11th November 2014, 03:56 PM
dear Ragulram. You have come back in full form. continue your good works. As requested I need to wait for some more days before continuing my write-ups paving way for Mr. Gopal's uninterrupted presentation and deliberations on his chartered theme. We meet some time later to get into new angles of glorifying our icon's name and fame.

ScottAlise
11th November 2014, 05:44 PM
Thanks Senthil Sir, Me too planning to write about few rare movies so I too need some time

Gopal.s
11th November 2014, 08:09 PM
Senthil ,
i will comtinue from saturday only.you pl.go ahead.

eehaiupehazij
11th November 2014, 08:18 PM
OK. Gopal. On your marks....get set .... ready....Go...pal!

uhesliotusus
11th November 2014, 08:44 PM
What appears as terrific to few here actually appears absolutely aweful to me . Our NT was visibly looking old and that song was disgusting to say the least. Such songs and movies only were the starting phase of his downfall . Both NT and Sujatha were terrible combination. The movie itself was supposed to be a virtual Pasamalar but NT's performance was far below his own standards. There was no NT all.

Mr.Irene ,

what's wrong in that song? N.T looks like very cute and beautiful. Neenga Gopalukku mattumthane log in pannuveenga.:) Arivu jeeviyana ungalukku ennathuku ithellaam?:) Very enjoyable song. Neenga 'sila nerangalil sila manithargal' kootathai sernthavarthane!:) Am I right?

uhesliotusus
11th November 2014, 08:48 PM
Mr.Gopal,

Waiting for yr series. Ad.congrats. Go ahead.

uhesliotusus
11th November 2014, 08:54 PM
Mr.Senthil,

Kuravan kuravan paatta paadama iyarkai ennum ilaya kanni paattaiya paaduvaan? Athu oru type. Ithu oru type. ReNdume rasikka koodiyathuthane? Amaam ethukku ithanai videos? ungalukku niraya thadava Murali advice pannittare?:)

eehaiupehazij
11th November 2014, 09:19 PM
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான மீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !

PART 3 :

நடிப்புத் திமிங்கிலத்தின் அலைகடலிலிருந்து ஆகாயவெளிவரை வியாபித்திருக்கும் புகழ்வீச்சில் மயங்கி தரையிறங்கிய விண்மீன்கள் ! கவர்ச்சித் தாரகைகள்!! தமிழ்த் திரைப்படங்களிலிருந்து பிரிக்கமுடியாத பெண்மீன்கள்!!

1. குமாரி கமலா : நடிகர்திலகத்தின் முதல் காவியத்திலேயே நாம் ரசிக்கும் சீமானை கட்டிப்போட்ட கார்த்திகை நட்சத்திரம்!

https://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog

2. ஸ்ரீமதி ஹெலன் : தரணி உள்ளவரை எதிர்மறை நடிப்பிலும் எவரும் விஞ்ச முடியாத விக்கிரமனை கொஞ்சவந்த பரணி நட்சத்திரம்!

https://www.youtube.com/watch?v=a63IlNFGip8

3. திருமதி விஜயலலிதா: கனவுத் தொழிற்சாலையின் முதல்தர கனவுக்காட்சியில் நடிகர்திலகத்தை சொக்க வைத்த அலங்காரத் தங்கமீன்!

https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo

4. திருமதி ஜெய்குமாரி : எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்தில் அழகுநிறைந்த காதல் பதுமையாக நடிகப் பேரரசரின் சாம்ராஜ்ய ராணி பதவியை கோட்டைவிட்ட கவர்ச்சி நட்சத்திரம் கெளரவம் பெற்றதும் அவராலேயே!!

https://www.youtube.com/watch?v=QKkw0-tbqmk

5. திருமதி சிஐடி சகுந்தலா : பொறிகலங்க வைக்கும் நடன அசைவுகளில் நடிகர்திலகத்துடன் வசந்தமாக உறியடித்த வெள்ளிமீன் ! தவப்புதல்வன், பாரதவிலாஸ் வசந்தமாளிகை,வைரநெஞ்சம் இவர் ஆட்டத்தில் குலுங்கிய படங்கள்

https://www.youtube.com/watch?v=7f471aVOjJE

6. திருமதி ஆலம் : மன்மதலீலை திரைப்படத்தில் உயரிய குணசித்திர கதாநாயகியாக மின்னிய தாரகை ஏனோ ஒளிரமுடியாமல் கவர்ச்சிப் பதுமையாக உருமாறி என்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் கவர்ச்சியில் மிளிர்ந்தார். வசந்தமாளிகையிலும்.

https://www.youtube.com/watch?v=tRrgeh802Pk

Gopal.s
11th November 2014, 09:23 PM
ஆர்.கே.எஸ் ,

உங்களின் கமல் வெறுப்பு திரியின் பக்கம் நிறைய ரசிகர்களை
வெறுப்பு கொள்ள செய்து வர ஒட்டாமல் அடிக்கிறது.இழப்பு நமக்கே.

நம்மிலே 90% கமல் ரசிகர்களும் கூட.நானே அப்படித்தான் .அதனால் தாங்கள் அடக்கி வாசிப்பது அனைவருக்கும் நலமே பயக்கும்.

eehaiupehazij
11th November 2014, 09:29 PM
Mr.Senthil,

Kuravan kuravan paatta paadama iyarkai ennum ilaya kanni paattaiya paaduvaan? Athu oru type. Ithu oru type. ReNdume rasikka koodiyathuthane? Amaam ethukku ithanai videos? ungalukku niraya thadava Murali advice pannittare?by Mr. Pattaakkaththi

நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் சேவையில் ஒரு புகழார்வலராக நல்வரவு நண்பர் பட்டாக்கத்தி அவர்களே!
கூகுளின் டிரான்ஸ்லிடரேஷன் பயன்படுத்தி தமிழ்படுத்தி பதிவிட வேண்டுகிறேன்.

நீங்கள் சொல்ல விழைவது முழு தமிழிலோ அல்லது முழு ஆங்கிலத்திலோ இருப்பது நன்று.

தங்க்லீஷ் சிலசமயங்களில் அர்த்தம் அனர்த்தமாகி விடக்கூடியசாத்தியக்கூறுகள் உண்டு. உதாரணத்திற்கு, உங்கள் திரிப்பெயர் pattaakkathi when tamilized becomes பட்டாக்கதி என்றுதான்படிக்கமுடியு ம். pattaakkaththi என்பதே சரி

என்னுடைய ஆரம்பகால பதிவுகளில் நானும் இத்தவறைச் செய்திருக்கிறேன். சரியான சமயத்தில் நமது திரிப்பதிவாளரும் எனது நல்ல நண்பருமான ஹைதராபாத் ரவி இதை சுட்டிக்காட்டி எனக்கு வழிகாட்டினார்.

உங்கள் பதிவுகளில் நடிகர்திலகம் பற்றி ஒரு புதிய செய்தியை அல்லது அவரது பெருமை உரைக்கும் ஒரு குறுந்தகவலை முதலில் பதிவிட்டுவிட்டு அவர் புகழை முன்னிறுத்திய பிறகு சக பதிவாளர்களின் கருத்துக்களுக்கு எதிர்வினை செய்வதே நன்மை பயக்கும் நட்பையும் வளர்க்கும் ! This is my humble personal opinion.

My theme requires such videos for corroboration! Nothing wrong using videos since seeing is believing!!Mere writing gets a face lift and impinges the viewers' minds when coupled with video clippings that explain the rest of the thing.

Murali Sir is incomparable for his writing skills but sometimes I personally felt that the feelings of his write-ups can be realized and perceived with the aid of some video clippings, if available.

Russellpei
11th November 2014, 09:52 PM
ஆர்.கே.எஸ் ,

உங்களின் கமல் வெறுப்பு திரியின் பக்கம் நிறைய ரசிகர்களை
வெறுப்பு கொள்ள செய்து வர ஒட்டாமல் அடிக்கிறது.இழப்பு நமக்கே.

நம்மிலே 90% கமல் ரசிகர்களும் கூட.நானே அப்படித்தான் .அதனால் தாங்கள் அடக்கி வாசிப்பது அனைவருக்கும் நலமே பயக்கும்.

Rightly pointed out..Sir.

uhesliotusus
12th November 2014, 11:26 AM
Thank u 4 yr response Senthil sir.Tamililum type seiven.Konjam neram pidikkum.Nichayam muyarchikiren.Ungal thimingila thodar padithu varukiren. silathu o.k. Athukkaga C.i.d.Sagunthala,Halam,Jeikumari,Vijayalalitha ivarkgaliyuma Rangarav,Subbaiah,Balaiah listil serppathu? 2 much.Anyway thanks for the series.

I am not a hardcore fan of N.T.But I admire the legend.kavariman is my favorite one.What a film! I enjoyed the collector.wow! enough?:)

Russellbpw
12th November 2014, 12:24 PM
ஆர்.கே.எஸ் ,

உங்களின் கமல் வெறுப்பு திரியின் பக்கம் நிறைய ரசிகர்களை
வெறுப்பு கொள்ள செய்து வர ஒட்டாமல் அடிக்கிறது.இழப்பு நமக்கே.

நம்மிலே 90% கமல் ரசிகர்களும் கூட.நானே அப்படித்தான் .அதனால் தாங்கள் அடக்கி வாசிப்பது அனைவருக்கும் நலமே பயக்கும்.

திரு கோபால் அவர்களுக்கு


திரு கமல்" வெறுப்பு " என்று என்னை பற்றி உங்களுடைய பிராண்டிங் ஏற்புடையது அல்ல.

திரு கமலை நடிகர் திலகத்துடன் வலுக்கட்டாயமாக எல்லா நடிகர் திலகம் விஷயத்தில் திணிப்பது எனக்கு ஏற்புடையது அல்ல. அதை நீங்கள் ஏற்கவேண்டும் என்று நான் உங்களை போல எவரிடமும் எதிர்பார்ப்பது இல்லை.

திரு கமல் அவர்களை பொருத்தவரை நடிகர் திலகம் பாணியை அவர் அபூர்வ சஹோதரர்கள் படத்திலிருந்து தொடர்ந்து கடைபிடிப்பது அவருக்கு பெருமை, தொழில் ரீதியாக ஒரு தனி TRACK கிடைத்து அதனால் அவர் மிகுந்த பயனடைந்ததும் நமக்கு பெருமைதான்.

எல்லாவற்றிக்கும் சிவாஜியுடன், திரு கமலை சப்போர்டிங்காக செர்துகொள்ளமுடியாது என்று தான் கூறினேன். நடிகர் திலகத்தை விட திரு கமலை தமிழகம் மதிக்கதான் செய்கிறது. உதாரணத்திற்கு நீங்களே உள்ளீர்கள் !

ஒரு மிருதங்க சக்ரவர்த்தி, ராஜ ராஜ சோழன், ஒரு பாரதவிலாஸ் விமர்சனம் செய்யும் நீங்கள் எந்த ஒரு எதிர் விமர்சனம் திரு கமலஹாசன் திரைப்படம் மீது தொடுத்துளீர்கள் என்று இங்கு பதிவிடுங்கள் !

திராவிட கொள்கைகளை கண்மூடிதனமாக ஆதரிப்பவர்கள் பலரும் நடிகர் திலகம் மீது மட்டும் இந்த அதீத உரிமை எடுத்து, மற்றவர்கள் பற்றி வரும்போது..."உங்களை போல உண்டா " என்று நிறம் மாறுவது காலம் காலமாக நான் கேட்டும் பார்த்தும் வரும் ஒரு விஷயம்தான் !

நடிகர் திலகம் படங்கள் மீது அதீத உரிமை எடுக்கும் நீங்கள் மற்றவர் மீதும் அதே கருணையை காட்டினால் அது NEUTRAL ஆக இருக்கும் !

மேலும் நீங்கள், நீங்கள் குறிப்பிட்ட அந்த "அனைவருடைய" "mouthpiece " ஆகவும் முயற்சிக்கவேண்டாம் சார் !

Russellbpw
12th November 2014, 12:58 PM
What appears as terrific to few here actually appears absolutely aweful to me . Our NT was visibly looking old and that song was disgusting to say the least. Such songs and movies only were the starting phase of his downfall . Both NT and Sujatha were terrible combination. The movie itself was supposed to be a virtual Pasamalar but NT's performance was far below his own standards. There was no NT all.

Dear Irene,

When we see or write in haste "awesome" will always turn to "aweful". You are no exception.

We cannot shoot "naalu pakkam vedarundu " song like "mayangugiraal oru maadhu." of paasamalar.

Nadigar Thilagam's look in that song. I think, you would have removed your specs and watched the same...If song is disgusting, you have every liberty to switch it off...or change the channel simple unless and until, you are sitting in theater...even then, you can go out and come back...! :-)

Coming back to NT's starting phase of his downfall......comment of yours....

What do you mean by downfall? are you referring interms of quality or quantity?

If you are talking interms of quality, he is absolutely not at fault. Even if you go to a Saloon, you do not ask the barber to cut as per his wish isn't it? You do ask him to cut as per your specification right ?

Nadigar Thilagam is an actor by profession , he is paid for the work that he specializes, MOST IMPORTANTLY, he reports to work on time, completes his work on time UNLIKE many in-disciplined actors and those whom you have appreciated in your other postings earlier.

QUALITY is the responsibility of all the team members of respective department too..NOT JUST NT...!

If you are talking interms of quantity, here are the figures...

Between 1977 - 1987, Nadigar Thilagam's 87 films has been screened @ an average of 8.7 films per year. If your comment is based on number of films committed by external producers, then Where is the Downfall that you saw and that you are trying to project here ?

Rest of the Actors whom you would spread red carpet welcome other than Nadigar Thilagam, were also in the field and competing at that time and even now, trying to compete with the laurels of Nadigar Thilagam.

They may looked Younger, Brighter, Lighter than Nadigar Thilagam...I do not deny It's because of their AGE. For your information, the current age of such actors and the way they look in films, is DEFINITELY AWEFUL and the looks of an aged man is far far visible in them...But most of the times, Nadigar Thilagam would certainly look the age of the character that he does in the film.

PAASAMALAR performance is not required for AOK because, the story is different and did not demand, which people like you, who just for the heck of it blame NT on the air, should first understand ! NT was not required for AOK...Your expectation was WRONG !!!

See Dr.Vijay having a lovable sister in AOK and he is very much there.

Russellbpw
12th November 2014, 01:13 PM
[QUOTE=Gopal,S.;1181798]Irene ,


அந்த வறட்சி காலங்களில் ,அவருடைய மார்க்கெட் தூக்கி நிறுத்த பட்டது தீபம்,அண்ணன் ஒரு கோவில் படங்களாலேயே. /QUOTE]


Gopal Sir,

வறட்சியா ? What do you mean ?

எந்த காலத்தில் வறட்சி நடிகர் திலகத்திற்கு ? எனக்கு தெரிந்தவரை 1952 தீபாவளிக்கு முன் அவருக்கு வறட்சி இருந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு !

நீங்கள் குறிப்பிட்ட காலகட்டம் 1972 முதல் 1976 ஆக இருக்கும்பட்சத்தில் கூட , 1972 to 1976 வரை 34 படங்கள் - சராசரி 7 (6.8) படங்கள் வருடத்தில். அதில் 17 படங்கள் 100 நாட்களும் வெள்ளிவிழா படங்களும் ஐக்கியம் -

இதற்க்கு பெயர் வறட்சி ?

ஒருவேளை நீங்கள் தேர்வு செய்த "வறட்சி" என்ற வார்த்தை சரியான வார்த்தை இல்லை என்று நினைக்கிறன் கோபால் சார்...!

திராவிடருக்கு ஒரு ஆரியர், திராவிடரின் தமிழை திருத்தும் நிலையில், இன்னும் பூரணமாக தமிழகம் வரவில்லை என்று நினைக்கிறன். :)

RKS

Russellbpw
12th November 2014, 01:41 PM
அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ஒன்று.

ஒவ்வொருவருக்கும் தனி சிறப்பு உண்டு.

ஒருவர் போல இன்னொருவர் நிச்சயம் வர இயலாது.

இதை பல முறை நாம் (நாம் என்று நான் உரைப்பது மையத்தில் உள்ள எல்லா திரி பதிவாளர்களையும் சேர்த்துதான் ! )
உணர்ந்தே சில விஷயங்களை தள்ளிவைத்துவிட்டு அதில் வாக்கு சாதுர்யத்தை பயன்படுத்தி வீணே விமர்சிக்க முயற்சிக்கின்றோம் அல்லது அது என்னுடையது என்று பறை சாற்ற முயற்சிகின்றோம் என்பது தான் உண்மை.

திரை உலகில் சாதிப்பதற்கும் திறமைவேண்டும்...!

ஆனால் "சாதித்தார்" என்ற சாதாரண நிலையை கடந்து திரை உலகில் இவருக்கு இணை
என்ற கேள்வி வரும்போது ..அதை ம்..ம்..ம்..ம்...ம் என்று யோசிக்க வைத்து...யோசித்த பின்னர்....உஹூம் ..யாரும் முடியாது என்று சகலமானவர்களும் ஏகோபித்த ஒப்புதல் கொடுத்த திரை உலகின் முதல் "முழுமைபெற்ற உலக நடிகர்" நடிகர் திலகம் ஒருவரே.

adiram
12th November 2014, 02:58 PM
1966 தீபாவளி ரிலீசாக வந்த ஒரு வண்ணப்படத்தைப் பற்றி அங்கே அமர்க்களப் படுகிறதே.அதே 66 தீபாவளி ரிலீசாக வந்து அட்டகாசமாக கலக்கிய நமது கருப்பு வெள்ளை 'செல்வம்' படம் பற்றி எந்த விஷயமும் நமது திரியில் வரவில்லையே. பல இடங்களில் செல்வம், சர்க்கஸ் கலர்ப்படத்தை விட வசூலிலும் ஓட்டத்திலும் விஞ்சியதே அதைப் பற்றி நமது விற்பன்னர்கள் எழுதக் கூடாதா?.

Murali sir, we all are expecting and waiting.

eehaiupehazij
12th November 2014, 03:01 PM
Dear Pattaakkththi sir. I have not included the dancers names in the exclusive part for legends like Rangarao Subbiah.... This is a separate part exclusively for thanking the support rendered by these dancing damsels, as a part of the team work in NT's movies. The series in the offing will cover NT's contemporaries, his juniors, next generation artists ... like that in different segements in order to recognise their role contribution in making NT movies successful and establishing NT as the legend. Now I am just touching upon the introduction part of all these forgotten artistes from our nostalgia!

Russellbpw
12th November 2014, 04:20 PM
1966 தீபாவளி ரிலீசாக வந்த ஒரு வண்ணப்படத்தைப் பற்றி அங்கே அமர்க்களப் படுகிறதே.அதே 66 தீபாவளி ரிலீசாக வந்து அட்டகாசமாக கலக்கிய நமது கருப்பு வெள்ளை 'செல்வம்' படம் பற்றி எந்த விஷயமும் நமது திரியில் வரவில்லையே. பல இடங்களில் செல்வம், சர்க்கஸ் கலர்ப்படத்தை விட வசூலிலும் ஓட்டத்திலும் விஞ்சியதே அதைப் பற்றி நமது விற்பன்னர்கள் எழுதக் கூடாதா?.

Murali sir, we all are expecting and waiting.


அடிராம் அவர்களே,

இவ்வளவு மறைமுகம் எதற்கு சார் ?

மாற்று திரியில் பறக்கும் பாவை என்றே கூறுங்களேன். யார் என்ன சொல்லபோகிறார்கள் உங்களை ?

அதில் பதிவு செய்திருப்பது ஒரு சாதாரண ரசிகர் மன்ற நோட்டீஸ்.

அதற்க்கு எதற்கு நாம் பதில் பதிவு பதிவிடவேண்டும் ...வீணாக ஒரு வாக்குவாதம் உருவாகும் நிலை வர நாம் எதற்கு வித்தாக வேண்டும் சார் ? அதுவும் ஒரு மாமூல் ரசிகர் மன்ற நோட்டீஸ் போட்டதற்கு.

ரசிகர் மன்ற நோட்டீஸ் என்றால் எல்லாமே அதிகபடியாக தான் இருக்கும் ( அனைவருடைய நோட்டீஸ் சேர்த்துதான் கூறுகிறேன் )

மேலும், அவர்கள் வீட்டில் அவர்கள் சமைத்த உணைவை அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாறி ஆனந்தம் கொள்கிறார்கள் ..அது அவர்களுடைய உரிமை.

அதில் நாம் தலையிட்டு எங்கள் வீடு சமையல் உங்கள் வீட்டு சமையலை விட பிரமாதமானது என்று நாம் ஏன் அவர்கள் ஆனந்தத்தை கெடுக்கவேண்டும்?.

மாற்று திரி தரப்பில் இருந்து அந்த வீட்டுகாரர்கள் சமையலை விட அதிக ருசியானது எங்கள் சமையல் என்று அவர்கள் நம்மை குறிப்பிட்டு சொன்னால் ஒழிய நாம் பதில் பதிவு எதற்கு ?

Rks

adiram
12th November 2014, 06:11 PM
Ravikiran sir,

I am not asking to compare both the films.
But we are also having very good cooks here.
Why not we discuss about our product 'Selvam'. Thats what I told.

Until we enter into comparison, no problem will arise.

But our movie Selvam ran better in that 1966 deepavali releases.

Those who know much about that can share here, without touching 'the other side'.

adiram
12th November 2014, 06:26 PM
ரவிகிரண் சார்,

அவர்கள் வீட்டு சமையலை குறை சொல்ல சொல்லவில்லை. நம் வீட்டிலும் நல்ல சமையல்காரகள் இருக்கின்றனரே.

நமது செல்வம் நன்றாக ஓடிய விவரங்களை பதிவு செய்யலாமே.

ஒப்பீடு செய்தால்தானே பிரச்சினை வரும்?. ஒப்பீட்டை தவிர்த்து பதிவிடலாம்.

எனக்கு 'செல்வம்' பாக்ஸ் ஆபீஸ் பற்றிய விவரங்கள் அவ்வளவாக தெரியாது. தெரிந்தவர்கள் சர்ச்சைக்கிடமின்றி பதிவிட வேண்டுகிறேன்.

Russellbpw
12th November 2014, 09:50 PM
அதுதான் வேண்டாம் என்கிறேன் அதிராம்

அதே ஆண்டு படம் எதற்கு? வேறு ஆண்டு வேறு படம் பற்றி போடுவோம் ..

ஒருவேளை நானே ஆர்வக்கோளாரில் ஏதாவது உரைக்க (இந்த பதிவு வரை )...
அது எக்கு தப்பாக ஒரு வாக்குவாதம் உருவாக்க..எதற்கு....

இந்த வீண் பரீட்சணம் ?

Russellbpw
12th November 2014, 10:15 PM
https://www.youtube.com/watch?v=MNDmkEXRS7s

இப்போதுதான் பொறுமையாக இந்த வீடியோ பார்க்க முடிந்தது.

பார்த்தபிறகு சில பல இடங்களில் ஒரு மின்னல்....!

ஓவர் அக்டிங் & அக்டிங் பற்றி திரு கமல் அவர்கள் ஆராய்ந்து கொண்டு இன்னும் இருப்பதாக கூறி முடித்தது நல்ல ஒரு முடிவு. காரணம்,

நடிப்பு என்ற ஒரு விஷயத்தை specialize செய்ய முயற்சிப்பதற்கு முன், அதாவது நடிப்புக்கு, கதாபாதிரதிர்ற்கு அதன் தன்மைகேற்ப மாறும் பயிற்சி எடுப்பதற்கு முன், ஒரு மசாலா நாயகனாக நடித்த அனைத்து நடிகர்களும் OVER ACTING பற்றி வானளாவ பேசுவார்கள், பேசியிருக்கிறார்கள்

"அவ்ளோ அழவேண்டாம்...அப்டி சிரிக்கவேண்டாம்...இந்தளவு பேசவேண்டாம் இவளவு போதும்..இப்படி அப்படி என்று அதாவது, அது ஓவர் அக்டிங்...என்ற ரீதியில் அவர்கள் பேச்சு இருக்கும்.

அதே மசாலா நாயகர்கள் நடிப்பில் கதாபாத்திரத்தில் தனித்துவம் காட்ட முயற்சிக்கும்போது...overacting பற்றி கேட்டால் தங்களுடைய முந்தைய statement முழுவதையுமே மறந்து ...அதை கண்டறிவதற்கு இன்னும் ஆராய்ந்து கொண்டு தான் இருப்பதாக கூறுவார்கள்....!

அப்படி கூறதான் முடியும்...காரணம் OVER ACTING என்ற ஒரு விஷயம் நிலவயிலேயே கிடையாது என்பதும்...நடிக்க தெரியாதவர்கள்...அவர்கள் நடிப்பை பற்றி கடுமையான ஒப்பீடு மற்றும் விமர்சனம் வரும்போது அதை திசை திருப்ப அப்படி ஒரு பிம்பத்தை உருவாகினர் என்பதை இவர்கள் காலம் கடந்துதான் உணர்கின்றனர், உணர்ந்துள்ளனர் ! உணர்ந்ததாலேயே இந்த பதில் !!!!

நடிப்பு என்று வந்தவுடன்...மசாலா இவர்களுக்கு கை குடுக்காது....மசாலாவுக்கு நடிப்பு பயிற்சி தேவை இல்லை. ஆனால் கதைகேற்ற கதாபாத்திரம் புனைய நடிப்பு பயிற்சி தேவை.

அப்படி இவர்கள் நடிக்க முற்படும்போது...நடிகர்திலகத்தை அவர் நடிப்பை மிகை என்று பேசுவோர் அதே குற்றச்சாட்டை சுமக்க நேரிடுகிறது. ஆகையால்தான் இவர்கள் என்றும் OVERACTING என்ற இல்லாத ஒன்றை பொருத்தவரை என்றுமே தேடுதல் வேட்டையில் காலம் முழுக்க கழிக்கவே விரும்புவர்.

SOMETHING EQUAL TO அடுத்தவருக்கு வழிந்தால் அது தக்காளி JUICE ..தனக்கு வந்தால் அதன் பேர் ரத்தம் !

குறிப்பு :

இதில், in this video, திரு. கமல் கூறிய "அந்த பெரிய ஹால்" "மைக் கிடையாது" "அனைவரும் கேட்கவேண்டும்" "ஆகையால் உரத்த குரலில்" போன்ற விஷயங்கள் புதிதல்ல.

ஏற்கனவே நடிகர் திலகம் அவர்கள் AVM 100 நிகழ்ச்சியில் நடிகை மீனா நாடகனடிப்பு, சினிமா நடிப்பு வித்தியாசம் என்ன என்று நடிகர் திலகத்திடம் கேட்டு அதற்க்கு நடிகர் திலகம் தெளிவாக கூறிய விஷயம் தான்.

திரு.கமல் அவர்கள் நடிகர் திலகம் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியதை இப்போது பகிர்ந்துகொண்டார் அவ்வளவுதான் .

அந்த வீடியோ கூடிய சீக்கிரம் நான் இங்கு பதிவிடுகிறேன்.

eehaiupehazij
12th November 2014, 10:23 PM
அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ஒன்று.

ஒவ்வொருவருக்கும் தனி சிறப்பு உண்டு.

ஒருவர் போல இன்னொருவர் நிச்சயம் வர இயலாது.

இதை பல முறை நாம் (நாம் என்று நான் உரைப்பது மையத்தில் உள்ள எல்லா திரி பதிவாளர்களையும் சேர்த்துதான் ! )
உணர்ந்தே சில விஷயங்களை தள்ளிவைத்துவிட்டு அதில் வாக்கு சாதுர்யத்தை பயன்படுத்தி வீணே விமர்சிக்க முயற்சிக்கின்றோம் அல்லது அது என்னுடையது என்று பறை சாற்ற முயற்சிகின்றோம் என்பது தான் உண்மை.
by ravikiran

ரவிகிரண் நீங்கள் கூறுவது நிதர்சனமான உண்மையே புதினங்கள் எழுதுவதில் கல்கி அவர்களின் தனித்திறமையை சாண்டில்யன் அவர்களின் சரித்திரக்
கதைகளுடன் நாம் ஒப்பீடு செய்வது கூடாது. ஒப்பற்ற நடிகர்திலகத்தை ஒப்பீடு செய்வதும் அப்படியே. ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு தனித்தன்மையுடன் கூடிய திறமையை வழங்கியேயிருக்கிறார். எல்லாம் தெரிந்த மேதைகள் என்று நம்மை எண்ணிக்கொண்டு நமது எண்ணங்களின் வாயிலாக செயல்கள் அமைந்தால் ஏதோ ஓரிடத்தில் நாம் பேதைகளாக மாறிவிட சந்தர்ப்பங்கள் உண்டு. மனமுதிர்ச்சியின்றி குதித்து கூத்தாடும் குறைகுடங்கள் அமைதியான தளும்பாத நிறைகுடங்களை மதித்து மாற்றம் காண்பது ஜல்லிக்கட்டுக் காளை போல்பிறர் மிதித்து அடிவாங்கிய தழும்புகள் அவர்தம் தவறுகளை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தால்தான் சாத்தியம்!

ஒரு நிறைகுடமான சாதனையாளன் குறைகுடமான மனநலம் திரிந்த தேவையில்லாமல் வம்பிழுக்கும் எதிரியை 'சண்டை போடாமல் சண்டையிடும் கலை' (the art of fighting without fighting) மூலம் எப்படிப் பாடம் புகட்டி தனிமைப்படுத்துகிறார் என்பதை இதைவிட யார் தெளிவாக்க முடியும்?(ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் இதே டெக்னிக்கை (the art of fighting without fighting) சத்யராஜைப் பயன்படுத்தி சாதிப்பார் நடிகர்திலகம்!)

https://www.youtube.com/watch?v=8H-FiCIMh20

Destroy the image....when exceeds!...to break the enemy!

https://www.youtube.com/watch?v=RBnIbqW6ZhM

தற்காப்புக்கலையின் தளும்பாத நிறைகுடமான புரூஸ்லீயிடம் வாங்கிய அடியில் ஆரம்பித்து தனது திரைவாழ்க்கைப் பாதையில் பட்ட அடித்தழும்புகள் மூலம் தானும் ஒரு நிறைகுடமான கதையை தன்னடக்கம் மிக்க மதிப்புடன் சிலாகிக்கிறார் ஜாக்கிசான்!

https://www.youtube.com/watch?v=Z7U3R2YSDLg

https://www.youtube.com/watch?v=U8CtOqJy6xM

Murali Srinivas
12th November 2014, 10:41 PM
நடிப்பு சக்ரவர்த்தியின் திக்விஜயம் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் தொடர்கிறது.

http://1.bp.blogspot.com/-KWDHLfUhROo/UHUtDIt123I/AAAAAAAA75Q/pxWJDCVM3b8/s1600/movieposter.jpg

நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்குகளை அலங்கரிக்க வருகிறது. 1980-களில் பல்வேறு திரையரங்குகளில் வலம் வந்த இந்தக் காவியம் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்படுகிறது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsceaaeabe.jpg

கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படுகிறது. சென்னையிலும் திருச்சியிலும் வசூல் சாதனை புரிந்த அண்ணன் ஒரு கோவில் கோவை மாநகரிலும் வெற்றிக் கொடி நாட்டும் என்பது திண்ணம். [விரைவில் அண்ணன் ஒரு கோவில் மதுரையிலும் வெற்றி பவனி வர இருக்கிறது]

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps268089ec.jpg

வரும் வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகிறது. மதுரையிலும் திருச்சியிலும் எதிர் மறை சூழலிலும் வசூல் பிரளயம் கண்ட வெள்ளை ரோஜா நெல்லை சீமையையும் வெற்றிக் கொள்ளும் என சொல்லவும் வேண்டுமோ!

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

anm
13th November 2014, 01:07 AM
Dear Irene,

When we see or write in haste "awesome" will always turn to "aweful". You are no exception.

We cannot shoot "naalu pakkam vedarundu " song like "mayangugiraal oru maadhu." of paasamalar.

Nadigar Thilagam's look in that song. I think, you would have removed your specs and watched the same...If song is disgusting, you have every liberty to switch it off...or change the channel simple unless and until, you are sitting in theater...even then, you can go out and come back...! :-)

Coming back to NT's starting phase of his downfall......comment of yours....

What do you mean by downfall? are you referring interms of quality or quantity?

If you are talking interms of quality, he is absolutely not at fault. Even if you go to a Saloon, you do not ask the barber to cut as per his wish isn't it? You do ask him to cut as per your specification right ?

Nadigar Thilagam is an actor by profession , he is paid for the work that he specializes, MOST IMPORTANTLY, he reports to work on time, completes his work on time UNLIKE many in-disciplined actors and those whom you have appreciated in your other postings earlier.

QUALITY is the responsibility of all the team members of respective department too..NOT JUST NT...!

If you are talking interms of quantity, here are the figures...

Between 1977 - 1987, Nadigar Thilagam's 87 films has been screened @ an average of 8.7 films per year. If your comment is based on number of films committed by external producers, then Where is the Downfall that you saw and that you are trying to project here ?

Rest of the Actors whom you would spread red carpet welcome other than Nadigar Thilagam, were also in the field and competing at that time and even now, trying to compete with the laurels of Nadigar Thilagam.

They may looked Younger, Brighter, Lighter than Nadigar Thilagam...I do not deny It's because of their AGE. For your information, the current age of such actors and the way they look in films, is DEFINITELY AWEFUL and the looks of an aged man is far far visible in them...But most of the times, Nadigar Thilagam would certainly look the age of the character that he does in the film.

PAASAMALAR performance is not required for AOK because, the story is different and did not demand, which people like you, who just for the heck of it blame NT on the air, should first understand ! NT was not required for AOK...Your expectation was WRONG !!!

See Dr.Vijay having a lovable sister in AOK and he is very much there.

Dear RKS,

A very Bold and Beautiful reply for the Ignorants!!!!!!

Splendid.

Anand

RAGHAVENDRA
13th November 2014, 06:46 AM
Dear RKS
A fitting reply. Same side goal போடுபவர்கள் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் இங்கு இருந்து கொண்டு தானிருக்கும். நடிகர் திலகத்தை அவரது திரியிலே வந்து விமர்சனம் செய்வதென்பது ஏதோ பெரிய அறிவு ஜீவித்தனமாக கொண்டாடப் படுவது நிகழும் வரை இவர்களுக்கு தைரியம் வந்து கொண்டு தானிருக்கும். இந்த காரணத்தினாலேயே இங்கு நெய்வேலி வாசு அடியேன் போன்றவர்கள் பங்கு கொள்ள மிகவும் தயங்குகின்றோம். இந்த மாதிரி மாற்றுத் திரியில் ஒரு வார்த்தை எழுத முடியாது. அவர்களிடம் இருக்கும் உணர்வு இங்கு இல்லை என்ப்து மிகவும் வருத்தம் தரக் கூடிய விஷயம். ஒருமித்த குரலில் நாம் அனைவரும் இந்த மாதிரி போக்கினை முளையிலேயே கிள்ளி எறிந்து குரல் கொடுத்தோமானால் அதுவே நடிகர் திலகத்திற்கு நாம் செய்யக் கூடிய சிறந்த பங்களிப்பாக இருக்கும்.
தங்களுடைய பதிவின் தாக்கம் மேலும் பரவட்டும்.

eehaiupehazij
13th November 2014, 09:41 AM
P. சுசீலாம்மா! நடிகர்திலகத்தின் மேன்மைத் திரி சார்ந்த 80 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! நன்றிகலந்த வணக்கங்கள் !!

P. சுசீலாம்மா : சுந்தரத் தெலுங்கின் மந்திரத் தமிழிசைத் தேனருவி !

Pulapaka Susheela (born 13 November 1935), popularly known as P. Susheela, is one of the legendary Indian playback singers. A recipient of five National Awards and numerous state awards, Susheela is widely acclaimed as a singer who defined feminism in South Indian Cinema and is well known for her mellifluous vocal performances for thousands of film songs across South Indian languages. Hailed as "Lata of the South", "Melody Queen", "Nightingale of the South, "Gana Kokila", "Gana Saraswathi", she is also considered one of the rich voiced singers whose pronunciation of the syllables to be more clear and precise in any of the languages she sang. In a career spanning more than six decades, she has recorded numerous songs in various Indian languages including Telugu, Tamil, Malayalam, Kannada, Hindi, Bengali, Oriya, Sanskrit, Tulu, Badaga. She has also sung for Sinhalese films. Her mother tongue is Telugu. She can speak Tamil,Kannada, Malayalam, and Hindi languages .

தெலுங்கு தாய்மொழி எனினும் தமிழ் பாடகியரில் அவர் குரலின் தேமதுரக் குழைவும் ஏற்ற இறக்க வளைவு நெளிவுகளும் நம் நெஞ்சம் மறப்பதில்லை ! நடிகர்திலகத்தின் புகழார்வலர்களும் சுசீலாம்மாவின் குரலில் அழியாப் புகழ் பெற்ற பாடல்களையும், அவரால் உயிர்பெற்ற பாடல் காட்சிகளையும் கொண்ட NT நினைவை இழப்பதில்லை !!

My selection of top 10 songs by PS in NT movies!! My choice need not be yours!! Tastes differ!!!

Immortal songs by P. Suseela : Place 1 and 2: from NT's thriller Pudhiya Paaravai!

P. சுசீலாம்மாவின் மிகச்சிறந்த முதன்மைப் பாடலாக நான் ரசிப்பது நடிகர்திலகத்தின் பிரமிப்பான ஸ்டைலுடன் கூடிய வசியப்படுத்தும் நடிப்புப் பரிமாணத்தில் சிறகடித்த புதியபறவையின் (1964) பார்த்த ஞாபகம் இல்லையோ மற்றும் அடுத்த இடத்தில் சிட்டுக்குருவி முத்தம்கொடுத்து ....உண்மையிலேயே நம் காதுகளில் தேன்வந்து பாய்வதாகவே உணருகிறோம் !

https://www.youtube.com/watch?v=xNInBEF8E7M

https://www.youtube.com/watch?v=wIfV3DtahmE

eehaiupehazij
13th November 2014, 09:49 AM
P. சுசீலாம்மா : சுந்தரத் தெலுங்கின் மந்திரத் தமிழிசைத் தேனருவி !

Immortal songs by P. Suseela : Place 3 and Place 4 : Evergreen NT entertainer 'Ooty varai Uravu'

Obviously the third and fourth places goes to the song 'poomaalayil oor malligai..' and 'thedinaen vandhadhu ..' in Sreedhar's ooty varai uravu! Picturization and Camera angles and choreography in the brand style of Sreedhar ably anchored by NT's dominating screen presence with KR Vijaya.

https://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U

https://www.youtube.com/watch?v=9fHV2XL2gFc

eehaiupehazij
13th November 2014, 10:06 AM
P. சுசீலாம்மா : சுந்தரத் தெலுங்கின் மந்திரத் தமிழிசைத் தேனருவி !

Immortal songs by P. Suseela : Place 5: Goes to Uyandha Manithan's 'Paal Polave...' the national award winning song for her! The song sequence graced by NT's synergy!!

மனதை வருடும் மயிலிறகுகள் !

https://www.youtube.com/watch?v=XIJZuVuXelE

Place 6 goes to NT/GG starrer 'paarththaal pasi theerum's 'Kodiyasaindhadhum kaatru vandhadhaa...'

https://www.youtube.com/watch?v=qm-eiyfq4uQ

eehaiupehazij
13th November 2014, 10:14 AM
P. சுசீலாம்மா : சுந்தரத் தெலுங்கின் மந்திரத் தமிழிசைத் தேனருவி !

Immortal songs by P. Suseela : Place 7 goes to Vasantha Maaligai and Place 8 goes to Savale Savali, another award winner! இதயத்தைத் திருடும் குயிலோசைகள் !!

https://www.youtube.com/watch?v=hx8VqmStqaE

சுசீலாம்மாவுக்கு கிடைத்த இரு தேசியவிருதுகளும் நடிகர்திலகத்தின் உயர்ந்த மனிதன் மற்றும் சவாலே சமாளி வாயிலாகவே என்பது நமக்குப் பெருமை கலந்த பேருவகையே

https://www.youtube.com/watch?v=gsP6BEMOoqk

eehaiupehazij
13th November 2014, 10:21 AM
P. சுசீலாம்மா : சுந்தரத் தெலுங்கின் மந்திரத் தமிழிசைத் தேனருவி !

Immortal songs by P. Suseela : Place 9 goes to Pale Paandia's Vaazha Ninaiththaal vaazhlaam and Place 10 goes to Karnan's 'iravum nilavum...'

https://www.youtube.com/watch?v=s0brrvQD8OU

Visual beast taking a lion's share from the Audio feast!!

https://www.youtube.com/watch?v=96WAGOzyBTs

Courtesy : You Tube and Wikipedia

Russellisf
13th November 2014, 11:00 AM
NICE REPLY RKS


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsea1f568c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsea1f568c.jpg.html)





அடிராம் அவர்களே,

இவ்வளவு மறைமுகம் எதற்கு சார் ?

மாற்று திரியில் பறக்கும் பாவை என்றே கூறுங்களேன். யார் என்ன சொல்லபோகிறார்கள் உங்களை ?

அதில் பதிவு செய்திருப்பது ஒரு சாதாரண ரசிகர் மன்ற நோட்டீஸ்.

அதற்க்கு எதற்கு நாம் பதில் பதிவு பதிவிடவேண்டும் ...வீணாக ஒரு வாக்குவாதம் உருவாகும் நிலை வர நாம் எதற்கு வித்தாக வேண்டும் சார் ? அதுவும் ஒரு மாமூல் ரசிகர் மன்ற நோட்டீஸ் போட்டதற்கு.

ரசிகர் மன்ற நோட்டீஸ் என்றால் எல்லாமே அதிகபடியாக தான் இருக்கும் ( அனைவருடைய நோட்டீஸ் சேர்த்துதான் கூறுகிறேன் )

மேலும், அவர்கள் வீட்டில் அவர்கள் சமைத்த உணைவை அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாறி ஆனந்தம் கொள்கிறார்கள் ..அது அவர்களுடைய உரிமை.

அதில் நாம் தலையிட்டு எங்கள் வீடு சமையல் உங்கள் வீட்டு சமையலை விட பிரமாதமானது என்று நாம் ஏன் அவர்கள் ஆனந்தத்தை கெடுக்கவேண்டும்?.

மாற்று திரி தரப்பில் இருந்து அந்த வீட்டுகாரர்கள் சமையலை விட அதிக ருசியானது எங்கள் சமையல் என்று அவர்கள் நம்மை குறிப்பிட்டு சொன்னால் ஒழிய நாம் பதில் பதிவு எதற்கு ?

Rks

uhesliotusus
13th November 2014, 11:51 AM
ரவிகிரண் சார்,

நம் வீட்டிலும் நல்ல சமையல்காரகள் இருக்கின்றனரே.

நமது செல்வம் நன்றாக ஓடிய விவரங்களை பதிவு செய்யலாமே.

ஒப்பீடு செய்தால்தானே பிரச்சினை வரும்?. ஒப்பீட்டை தவிர்த்து பதிவிடலாம்.

எனக்கு 'செல்வம்' பாக்ஸ் ஆபீஸ் பற்றிய விவரங்கள் அவ்வளவாக தெரியாது. தெரிந்தவர்கள் சர்ச்சைக்கிடமின்றி பதிவிட வேண்டுகிறேன்.

How many cooks are there in this thread?:) Some cooks participate 6 months and then they ran away from here. (kadarau maasam naadaaru maasam kathai ) After 4 or 5 months same came back and make a war between 2 legend's threads. Again ran away. Thelivaa avunga veliaya kaattitu sandai moottiitu poiduvaanga. ithu Puriyaatha 2 tharappu rasikarkalum sandai maattikitte iruppanga.

Inga sivajiyai kondadura maathiri nadikkiravunga anga mgr ai thalaivarnu thookki vachchi ezhuthinavangathan.:idontgetit: 'Ada' 'ram'achandranuke velicham. 'kaar'kaalam:smokesmile: achchaa? 'thik thik' kunnu irukku.'kal'lile 'nayakama log in mattum aagum. En(n)a pozhappo!:banghead: kalikaalamda sami! yaaH allaah!

Selvam is much better than parakum pavai in quality and box office. N.T.Wins again as usual. :thumbsup:

uhesliotusus
13th November 2014, 12:22 PM
Ravi kiran sir,

Well said. I agree yr points 100%. Gopal wants some kamal's fans (one or two's) praises for his new series about N.T.(neetchi maatchi. (oh! my god! T.Rajendhar type vasanam). So he need them. Understand Gopal's trick? yemakathagan. Ungalukku theriyathatha?

Kamal vishayathil ungal karuthe en karuthum. Mika sariyana vaatham. Sivaji kadal endral kamal athil oru thuliye. But I like kamal's perfection.

sss
13th November 2014, 02:25 PM
https://scontent-b-nrt.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/p526x296/1622265_684585228315083_5081135406705000858_n.jpg? oh=54f15bfc39bab268fa416535070e77ed&oe=54D18848

adiram
13th November 2014, 03:05 PM
How many cooks are there in this thread?:) Some cooks participate 6 months and then they ran away from here. (kadarau maasam naadaaru maasam kathai ) After 4 or 5 months same came back and make a war between 2 legend's threads. Again ran away. Thelivaa avunga veliaya kaattitu sandai moottiitu poiduvaanga. ithu Puriyaatha 2 tharappu rasikarkalum sandai maattikitte iruppanga.

Inga sivajiyai kondadura maathiri nadikkiravunga anga mgr ai thalaivarnu thookki vachchi ezhuthinavangathan.:idontgetit: 'Ada' 'ram'achandranuke velicham. 'kaar'kaalam:smokesmile: achchaa? 'thik thik' kunnu irukku.'kal'lile 'nayakama log in mattum aagum. En(n)a pozhappo!:banghead: kalikaalamda sami! yaaH allaah!

Selvam is much better than parakum pavai in quality and box office. N.T.Wins again as usual. :thumbsup:

பட்டாக்கத்தி சார்,

உங்கள் பதிவில் கடைசி வரியில் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயத்தை தான் நானும் என் பதிவில் சொல்லியிருந்தேன். 1966 தீபாவளிக்கு வந்த பறக்கும் பாவை பற்றி எம்.ஜி.ஆர். திரியில் சிறப்பாக பதிவிடப் படுகிறதே அதே தீபாவளிக்கு வெளியாகி நன்றாக ஓடிய நமது செல்வம் படம் பற்றிய செய்தி எதுவும் நம் திரியில் தற்போது இடம்பெறவில்லையே என்ற ஆர்வத்தில்தான் கேட்டிருந்தேன். (செல்வம் படத்தின் கதை, அதில் நடிகர்திலகத்தின் நடிப்பு பற்றிய விவரம் அல்ல, அது வெற்றிகரமாக ஓடிய விவரம் பற்றி). இதுபோன்ற விவரங்கள் முரளி சார் போன்றவர்களிடமிருந்து கிடைக்கப்பெறலாமே என்ற ஆர்வமே காரணம்.

அதற்கு ரவிகிரன் சார் எனக்கு பதிலளித்து விட்டார். அதோடு விஷயம் முடிந்துவிட்டது. இப்போது நீங்கள் மீண்டும் அதற்கு பதிலளிக்கும் நோக்கில், நான் ஏதோ இரு திரியின் நண்பர்களுக்கு இடையே சண்டை மூட்டுவது போல எழுதி இருக்கிறீர்கள். இதில் சண்டை மூட்டும் செயல் எங்கே வந்தது?. (இதில் என்னோடு கூட இன்னும் இரண்டு பேர்களையும் மறைமுகமாக இணைத்துள்ளீர்கள். இது வழக்கமாக நடைபெறும் ஒன்றே. என்னை திரிக்கு வரவிடாமல் செய்யும் யுத்திகளில் ஒன்று).

சரி, நான் இந்த திரியில் பங்கேற்காத சமயத்தில் கடந்த ஒரு மாதமாக இரு திரி நண்பர்களான கலைவேந்தன், செல்வகுமார், யுகேஷ்பாபு, கோபால், ரவிகிரண், முரளி இவர்களிடையே சர்ச்சை நடந்து வருகிறதே அதற்கு நான் காரணமா?.

சிவாஜி ரசிகன் போல நடிப்பதாக யாரைப் பார்த்து சொல்கிறீர்கள்?. எம்.ஜி.ஆரை ஆதரித்து எழுதியதாக ஒரு பதிவை உங்களால் காண்பிக்க முடியுமா?. சென்ற வாரம்கூட திரு செல்வகுமார், ஜேயார் மூவீஸ் பற்றிய தவறான தகவலை சொல்லியிருந்தபோது இங்கிருக்கும் யாரும் கண்டுகொள்ளவில்லை. நான்தான் திருத்தினேன். அவரும் ஏற்றுக்கொண்டார். இப்படி தகவல் திருத்தங்களுக்காக அங்கே பதிவிட்டிருக்கிறேனே தவிர, எம்.ஜி.ஆரை புகழ்ந்து பதிவிட்டதில்லை. விருப்பமில்லை என்ற காரணத்தினாலேயே தவிர யாருக்கும் பயந்து அல்ல. (எம்ஜியாரை புகழ்ந்து பதிவிட்டால் யாரும் என் தலையை வாங்கிவிடப் போவதில்லை).

சரி, நீங்கள் என்னமோ நடிகர்த்திலகத்தைப் போற்றி, பாராட்டி 5,000 பதிவுகள் இட்டதுபோல, வெறும் ஆறு பதிவுகளை இட்டுவிட்டு என்னைக் கண்டிக்கிறீர்கள் என்பதுதான் வேடிக்கை. முதலில் நடிகர்த்திலகத்தைப் பற்றி ஆக்கபூர்வமான பதிவுகளை தாருங்கள். கண்டிக்கும் வேலையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம்.

என்னைவிட பலமடங்கு சீனியர்கள் ஏராளமானோர் இங்கிருக்கிறார்கள். கண்டிக்கும் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

Gopal.s
13th November 2014, 05:36 PM
R.K.S,

you are unnecessarily creating devide.I haven't written anything constructive on Kamal So far. I dont have anything to criticise him as I haven't taken him as subject of analysis. Wherein I have done so much on Nadigarthilagam, I have my rights to write criticism on him also.Pl.Be sensible.

Pattakathi- Thanks.Everyone here knows that I am such a smooth guy who appeases everyone to get applauded and appreciated and playing to the Gallery. I regret my decision to start something constructive. Our thread always have intrusion of pests and parasites.

Irene- Pl.Abstain some obvious overtones as many members expressed their reservations though I dont mind such things. Kindly understand.

Adiram- I am apologising on behalf of others. Sorry if you are affended.

eehaiupehazij
13th November 2014, 05:56 PM
Dear Gopal. Your contributions to this thread are exemplary till date but few deviations you could have avoided as a senior most hubber in the position of some bench mark articles on NT. Kindly concentrate on your new theme with aplomb, dash and verve instead of interventions with other thread write-ups and in our own thread not developing friction. Ur deviation certainly will affect the quality of your write-up that is much hyped with expectations. Request as a well wisher. senthil

Harrietlgy
13th November 2014, 06:22 PM
From Ananda vikatan Kamal's interview

''ஒரு இயக்குநரா 'நடிகை’ ஸ்ருதியை எப்படி மதிப்பிடுவீங்க?''
''ஓர் உதாரணத்துக்குச் சொல்லணும்னா, நடிகை ஸ்ரீதேவிக்குக் கிடைச்சதுபோல ரொம்ப அரிதான வாய்ப்புகள் ஸ்ருதிக்குக் கிடைச்சிருக்கு. அது எல்லாருக்கும் கிடைக்காது. அதாவது சினிமான்னா என்னன்னு புரியுறதுக்கு முன்னாடியே, அதை ரொம்பப் பக்கத்துல இருந்து வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு. எனக்கும் அப்படி சின்னப் பையனா சினிமாவை வேடிக்கை பார்க்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, நான் சிவாஜி சார் வீட்டுக்குப் போவேனே தவிர, அவர் ரூம் 'எப்படி இருக்கும்?’னு பார்த்தது கிடையாது. ஸ்ருதி அவர் ரூமுக்குள்ள போய்ட்டு வரும். குளிக்க டவல் எடுத்துக் கொடுக்கும்.
அப்படி ஒரு நாள் வீட்டுக் கொல்லைப்புறத்து வேப்ப மரத்தடியில், சிவாஜி சார் சேர் போட்டு உட்கார்ந்திருந்தார். அப்போ ஸ்ருதிக்கு ஆறு, ஏழு வயசு இருக்கும். அதைக் கூப்பிட்டு வம்பு இழுக்குறார். 'இங்க வாடி... உங்க அப்பன் பெரிய ஆக்டரா?’னு அவர் கேட்க, ஸ்ருதி முகத்தைச் சுண்டி, 'ஆமா’னு சொல்லியிருக்கு. 'உங்க அப்பன்கிட்ட கேட்டுப் பார்த்தியா... யாரு பெரிய நடிகன்னு?’ அவர் திரும்பக் கேட்டிருக்கார். 'அப்பாதான்’னு ஸ்ருதி சொல்லியிருக்கு. 'அதெல்லாம் இல்லை. என் பேரைச் சொல்வான்டி’னு அவர் சொல்லிட்டு, 'பந்தயம் வெச்சுக் கலாமா... உங்க அப்பனைவிட நான்தான்டி பெரிய நடிகன். உனக்கு நடிச்சுக்காட்டவா?’னு அவர் கேட்டதும் ஸ்ருதி, 'அதெல்லாம் வேணாம். இந்த மரத்துல ஏறிக்காட்டுங்க’னு சொல்லியிருக்கு. அந்தப் பதிலை அவர் எதிர்பார்க்கலை. அவருக்கு என்ன பண்றதுனு புரியலை. 'யப்பா உன் பொண்ணுவிட்ட சவாலை, என்னால தாக்குப்பிடிக்க முடியலை. மரத்துல ஏறுறதுதானடா உன் நடிப்பு?’னு சொல்லிச் சொல்லிச் சிரிச்சார். அப்போ அவர் நிஜமாவே 'என்ன சொன்னார்?’ங்கிற அர்த்தம் இப்போ ஸ்ருதிக்குப் புரிஞ்சிருக்கு.

Gopal.s
13th November 2014, 07:43 PM
Susila,

sivaji to acting, ashoka mitran to writing, adoor Gopalakrishnan to direction,Viswanathan-ramamoorthy to music, barathi to poetry, periyar to social cause, sher shah suri to leadership, bathal circar to theatre , our susila to singing.

I keep susila in the highest pedestal (more than latha) as a singer , and the only request that I made for my children was not to keep me unnecessarily on life supports when my body giving way, and to play selected 10 Songs of Susila solos during my last hours. (I mentioned them in my earlier postings)

Russellpei
13th November 2014, 08:22 PM
Ravi kiran sir,

Well said. I agree yr points 100%. Gopal wants some kamal's fans (one or two's) praises for his new series about N.T.(neetchi maatchi. (oh! my god! T.Rajendhar type vasanam). So he need them. Understand Gopal's trick? yemakathagan. Ungalukku theriyathatha?

Kamal vishayathil ungal karuthe en karuthum. Mika sariyana vaatham. Sivaji kadal endral kamal athil oru thuliye. But I like kamal's perfection.

Dear Pattaakkathi,
As you mentioned, Nadigar Thilagam is definitely 'Kadal';
At the same time, Kamal is not surely 'oru thuli' (as you said).
You're wrong...

eehaiupehazij
13th November 2014, 08:42 PM
Dear Pattaakkathi,
As you mentioned, Nadigar Thilagam is definitely 'Kadal';
At the same time, Kamal is not surely 'oru thuli' (as you said).
You're wrong...

Mr RaviRavi please don't get trapped in such filthy contradictions that are endless and disgusting many times. Kindly contribute on NT's association and performance levels of NT in Kamal Movies. Kamal being a grateful soul he never forgot NT or GG who were stepping stones (paarthaal Pasi Theerum with twin Kamal between the thespians) during his career graph. We still see these great souls for their graceful performances in Devar Magan (NT's pivotal role alongside Kamal's Heroism) Unnal Mudiyum Thambi (riveting performance by GG) and Avvai Shanmugi (again GG's Kadhal mannar image against Kamal's mixture of NT+GG traits).... you are most welcome for Kamal coated NT write-ups without hurting any fellow hubber's sentiments!

Kamalhassan with his mentors!

Kamalahassan emulated the acting lines from the thesaurus
Sivaji Ganesan formulated and the love moves dovetailed from Gemini Ganesan to start with, till he reached this stage of his originality!NT and GG always felt at home when teamed up with Kamal in their apparently retired stages!! Yet both could draw straws from their experience and Kamal sometimes watches them helplessly as nothing can be done to overshadow these thespians!!!

https://www.youtube.com/watch?v=pq9dF8jEFlU



https://www.youtube.com/watch?v=bDhdQe35uTA


https://www.youtube.com/watch?v=mALSVNvIIQc

Russellbpw
13th November 2014, 09:10 PM
Ravi kiran sir,

Mika sariyana vaatham. Sivaji kadal endral kamal athil oru thuliye.

Dear Mr. Pattaakkathi,

I am not writing anything for appreciations. I have only responded to posts here.

I did not initiate any "vaadham" as mentioned by you. I cannot agree to your views of Mr. Kamal is oru thuli only in Kadal.

Kamal's dedication to films and his quest for continuous improvement of himself and the use of technology in cinema is something that needs to be highly appreciated. He re-invests quite a huge sum of what he earns in cinema, in cinema only.

It is unfortunate that he is also falling under his own statement "Nadigar Thilagam endra singathirkku naam koduththadhu thayir saadham dhaan enbadhuve en ennam".

That's because there is no capable Directors other than few who can carve a statue of Nadigar Thilagam and Kamal Standards.

Please do not try to twist what has been published to create a rift. Not a good practice bro. I dont encourage such because am complimented by someone.

Take Care,
RKS

Gopal.s
13th November 2014, 09:11 PM
கலைவேந்தன்,

அடடா.... நடிகர்திலகம் திரி 15 ஐ தொடங்கி வைக்க உங்களைத்தான் அழைப்பதாக இருந்தேன். அதற்குள் வேறு இடத்திலிருந்து அழைப்பா? வாழ்த்துக்கள். field marshal கிடைக்க இருந்தது. அதற்குள் சுபேதார் ஆக்கி விட்டார்கள்.

joe
13th November 2014, 09:26 PM
சிவாஜியின் புகழை பெயரை இன்றைய தலைமுறையிடம் பதிய வைக்க காரணமாயிருப்பவன் தான் சிவாஜி ரசிகன் என்றால் கமல்ஹாசனை மிஞ்சிய சிவாஜி ரசிகன் இங்கே யாரும் கிடையாது .period .

Russellbpw
13th November 2014, 09:30 PM
R.K.S,

you are unnecessarily creating devide. - WHO ? ME ????

I haven't written anything constructive on Kamal So far - PLEASE DO THAT KNOW !!! .

I dont have anything to criticise him ( WE KNOW THAT RATHER I KNOW ABOUT THAT & THAT's WHY I AM ASKING YOU TO TAKE THE SAME LIBERTY YOU TAKE WITH NADIGAR THILAGAM )

as I haven't taken him as subject of analysis ( YOUR CRITICISM ABOUT NT WAS IN LIMELIGHT EVEN BEFORE YOU STARTED YOUR SERIES SCHOOL OF ACTING ) .

Wherein I have done so much on Nadigar thilagam, I have my rights to write criticism on him also. ( YOU MAY HAVE DONE 1Cr. THINGS ON NADIGAR THILAGAM..& THAT IS NOT A GRANT OF OPEN LICENSE FOR YOU TO WRITE AS PER YOUR WHIMS & FANCIES ABOUT NT )

Pl.Be sensible ( AM SENSIBLE FOR THOSE WHO ARE ONE ! & AM NOT RESPONSIBLE FOR THOSE WHO ARE NOT FEELING THAT WAY )


.......

uhesliotusus
13th November 2014, 09:32 PM
Dear Mr. Pattaakkathi,


Please do not try to twist what has been published to create a rift. Not a good practice bro. I dont encourage such because am complimented by someone.

Take Care,
RKS

No. not like that. u r mistaken. I really enjoy yr points about kamal. U believe it or not don't bother about it. Ungalai nijama ninachathakku neega vera maathiri ninachutteengale! Naan irumbu kottaiya sernthavanum illa. Nenga ninaikkira mathiri Qutar ai sernthavanumilla. Saudi Arabia kaararum illa. Athuthan unga kuzhapputhunnu nenaikkiren.

uhesliotusus
13th November 2014, 09:42 PM
Today I watch Manitharil Manickam movie in my home. N.T's performance chanceless. Particularlly i enjoy i will sing for u song. oh! what an actor! what a dancer! His dialouge delivery was amazing. 'vera oru payalukkum salyut vaikka maatten' enbaar.

joe
13th November 2014, 09:46 PM
சிவாஜியின் புகழை பரப்புவதும் அதை இன்றைய தலைமுறைக்கு கடத்துவதும் தான் நோக்கமென்றால் கமல்ஹாசனை திட்டுவதால் அது நடந்து விடாது . சிவாஜி என்றால் பிரபுவின் அப்பா , விக்ரம் பிரபுவின் தாத்தா என புரிந்து வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு .. தான் கொடுக்கும் பேட்டிகளிலெல்லாம் , தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம் சிவாஜி தான் என் வானத்து சூரியன் , சிவாஜி தான் என் குரு , சிவாஜி தான் என் தந்தை என தொடர்ந்து பதிவு செய்து வருபவர் கமல் . கமல்ஹாசன் என்ற இன்றைய தலைமுறை மேதமையை நேரடியாக தெரிந்து வைத்திருக்கின்ற இன்றைய தலைமுறையின் பலர் கமல்ஹாசன் இப்படிச் சொல்வதாலேயே சிவாஜி பால் ஆர்வம் கொண்டு அறியமுற்பட்டு சிவாஜியை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முனைவதை கண்கூடாக கண்டிருக்கிறேன் . ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால் இன்றைய தலைமுறை அறிந்த மாபெரும் நடிகர்கள் கமல் , ரஜினி இருவருமே சிவாஜி ரசிகர்களாக இருப்பது .. கமல் அளவுக்கு ரஜினி அடிக்கடி சிவாஜி பற்றி பேசவில்லையெனினும் தானும் சிவாஜியின் வழி வந்தவன் , அவர் ரசிகன் என ரஜினியும் பல முறை தெளிவாக பதிந்திருக்கிறார். எனவே கமல் , ரஜினி போன்றவர்கள் நம் சக நடிகர் திலகம் ரசிகர்கள் .. நாம் பக்கம் பக்கமாக எழுதுவதை விட அவர்களின் ஒரு வார்த்தை ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் ..அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் நடிகர்திலகத்தின் பெருமையை அறிந்து தெரிந்து கொள்ள முற்படுவோர் பலர் .. அவர்களை இன்னும் நம் பக்கம் ஈர்ப்பது தான் அழகே தவிர கமல்ஹாசனையும் , ரஜினிகாந்தையும் சிவாஜியின் பொருட்டு குறை சொல்வதால் இம்மியும் சிவாஜியின் புகழுக்கு எற்றம் வந்து விடாது என்பதை நாம் உணர்வது நலம் .

uhesliotusus
13th November 2014, 09:59 PM
வெற்றி விழா படத்துல பூங்காற்று உன் பெயர் சொல்ல அப்படின்னு ஒரு பாட்டு வரும். Kamal dance with Amala. In the middle of the song (i think in the lines anantha ellaigal kaattum) he walked like N.T. அப்பட்டமா சிவாஜி மாதிரியே நடப்பார். தப்பில்லே. யாரா இருந்தா என்னா. காப்பி பண்ணாம இருக்கவே முடியாது. That's N.T.


http://www.youtube.com/watch?v=CQ9rUMr2T5Q&feature=player_detailpage

Russellbpw
13th November 2014, 10:27 PM
naan irumbu kottaiya sernthavanum illa.
Qutar ai sernthavanumilla.
Saudi arabia kaararum illa.

என்ன குழப்பம் எனக்கு ? எனக்கு ஒரு குழப்பமும் இல்லையே ! இன்னும் சொல்லபோனால் மிக மிக தெளிவாகவே இருக்கிறேன்.

நீங்கள் பதிவிட்டிருக்கும் இரும்புகோட்டை என்றால் என்னது ? ஜார்ஜ் கோட்டையை சொல்கிறீர்களா? என்ன குறிப்பிட ஆசைபடுகிறீர்கள் ? ,

கத்தார், சவுதி அரேபியா இரண்டு நாடு என்பது புரிகிறது...அந்த நாட்டின் பெயரை பார்த்து நான் எதற்கு குழம்பவேண்டும் ?

நீங்கள் குழப்ப பார்த்தீர்கள் ஆனால் நான் குழம்பவில்லை என்பது உண்மை. மேலும், திரு கோபால் அவர்களுக்கும் எனக்கும் உரிமையுடன் சொற்போர் நடத்தும் பழக்கம் நான் இந்த திரியில் எழுத தொடங்கியதிலிரிந்து உண்டு.

அவரும் வயதில் மூத்தவன் என்ற உரிமையில் என்னை திட்டியதுண்டு...நானும் வயதில் இளையவன் என்ற செல்லத்தில் அவரை மரியாதையுடன் திட்டியதும் உண்டு.

அப்படி செய்யும்போது எங்கள் இருவருக்கு மட்டுமே பரஸ்பரம் சொல்லாமல் புரிந்துகொள்ளகூடிய ரகசியம் ஒன்றும் அதில் உள்ளது !

http://www.youtube.com/watch?v=lMl0EKoPbrs


ஆனால் நீங்கள் ஏன் இவ்வளவு குழம்பியுள்ளீர்கள் என்றுதான் புரியவில்லை. !

வாழ்த்துக்கள் ! Truth is stranger than fiction !!!

Russellpei
13th November 2014, 10:45 PM
சிவாஜியின் புகழை பரப்புவதும் அதை இன்றைய தலைமுறைக்கு கடத்துவதும் தான் நோக்கமென்றால் கமல்ஹாசனை திட்டுவதால் அது நடந்து விடாது . சிவாஜி என்றால் பிரபுவின் அப்பா , விக்ரம் பிரபுவின் தாத்தா என புரிந்து வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு .. தான் கொடுக்கும் பேட்டிகளிலெல்லாம் , தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம் சிவாஜி தான் என் வானத்து சூரியன் , சிவாஜி தான் என் குரு , சிவாஜி தான் என் தந்தை என தொடர்ந்து பதிவு செய்து வருபவர் கமல் . கமல்ஹாசன் என்ற இன்றைய தலைமுறை மேதமையை நேரடியாக தெரிந்து வைத்திருக்கின்ற இன்றைய தலைமுறையின் பலர் கமல்ஹாசன் இப்படிச் சொல்வதாலேயே சிவாஜி பால் ஆர்வம் கொண்டு அறியமுற்பட்டு சிவாஜியை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முனைவதை கண்கூடாக கண்டிருக்கிறேன் . ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால் இன்றைய தலைமுறை அறிந்த மாபெரும் நடிகர்கள் கமல் , ரஜினி இருவருமே சிவாஜி ரசிகர்களாக இருப்பது .. கமல் அளவுக்கு ரஜினி அடிக்கடி சிவாஜி பற்றி பேசவில்லையெனினும் தானும் சிவாஜியின் வழி வந்தவன் , அவர் ரசிகன் என ரஜினியும் பல முறை தெளிவாக பதிந்திருக்கிறார். எனவே கமல் , ரஜினி போன்றவர்கள் நம் சக நடிகர் திலகம் ரசிகர்கள் .. நாம் பக்கம் பக்கமாக எழுதுவதை விட அவர்களின் ஒரு வார்த்தை ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் ..அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் நடிகர்திலகத்தின் பெருமையை அறிந்து தெரிந்து கொள்ள முற்படுவோர் பலர் .. அவர்களை இன்னும் நம் பக்கம் ஈர்ப்பது தான் அழகே தவிர கமல்ஹாசனையும் , ரஜினிகாந்தையும் சிவாஜியின் பொருட்டு குறை சொல்வதால் இம்மியும் சிவாஜியின் புகழுக்கு எற்றம் வந்து விடாது என்பதை நாம் உணர்வது நலம் .

true..

RAGHAVENDRA
13th November 2014, 10:53 PM
இனிமேல் சிவாஜியைப் பற்றி நமது ரசிகர்கள் யாரும் இங்கே சிலாகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அந்த வேலையை கமலும் ரஜனியும் பார்த்துக் கொள்வார்கள். அவர்களால் தான் இனிமேல் சிவாஜியை மக்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள். இல்லையென்றால் சிவாஜியா, யாரது, ஏதோ வடநாட்டில் ஜிலேபி விற்பவர் போலிருக்கிறது என்ற நிலை வந்தாலும் வரலாம்..

இறைவா... இதற்கு மேலும் இந்தத் திரியில் பங்கேற்க வேண்டுமா ...

Harrietlgy
13th November 2014, 11:00 PM
Dear Mr. Pattaakkathi,
What you are coming to say, I am not understanding.

Russellbpw
13th November 2014, 11:03 PM
http://1.bp.blogspot.com/-KWDHLfUhROo/UHUtDIt123I/AAAAAAAA75Q/pxWJDCVM3b8/s1600/movieposter.jpg

நாளை முதல் சென்னை ஓட்டேரி மகாலட்சுமி திரை அரங்கில் தினசரி மதியம் 2-45 மணி மற்றும் மாலை 6-45 மணிக்கு நடிகர் திலகம் & நாடிய பேரொளி நடிப்பில் வெளிவந்த ஜெமினியின் விளையாட்டு பிள்ளை.
JRL நிறுவனத்தின் வெளியிடு.

நடிகர் திலகத்தின் பல மயிர்கூச்செறியும் சாகசகாட்சிகள் நிறைந்த படம்.

நடிகர் திலகத்துடன் நாட்டிய பேரொளி
அழகு நிலா காஞ்சனா
நடிகர் சிவகுமார்
மற்றும் புதிய முயற்சியாக வில்லனாக திரு சோ அவர்கள்.

நடிகர் திலகம் மற்றும் நடிகையர் திலகம் பங்குகொள்ளும் ரேக்ளா ரேஸ் தத்ரூபமானமுரையில் இருவருமே டூப் நடிகர்கள் பயன்படுத்தாமல் நடித்திருப்பார்கள்.

நடிகர் திலகம் அவர்கள் இந்த திரைப்படத்தில் இயற்கையான அழகு மன்மதனாக வலம் வருவார்...!

95% டூப் பயன் படுத்தாமல் காளையுடன் வீர விளையாட்டு ...
மேலும் மதம் கொண்ட யானையை அடக்கும் காட்சியும் 90% டூப் பயன் படுத்தாமலே நடிகர் திலகம் கையாண்டிருப்பார்..!

இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் வெளியுலக விற்பன்னர்களை ஆங்கிலத்தில் வரவேற்று சுமார் 3 நிமிடம் உரையாற்றும் காட்சி படத்தின் மற்றொரு highlight !!!

FILM NOT TO BE MISSED !!!

RKS

Russellbpw
13th November 2014, 11:28 PM
இனிமேல் சிவாஜியைப் பற்றி நமது ரசிகர்கள் யாரும் இங்கே சிலாகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அந்த வேலையை கமலும் ரஜனியும் பார்த்துக் கொள்வார்கள். அவர்களால் தான் இனிமேல் சிவாஜியை மக்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள். இல்லையென்றால் சிவாஜியா, யாரது, ஏதோ வடநாட்டில் ஜிலேபி விற்பவர் போலிருக்கிறது என்ற நிலை வந்தாலும் வரலாம்..

இறைவா... இதற்கு மேலும் இந்தத் திரியில் பங்கேற்க வேண்டுமா ...

ஆமாம்..வந்தாலும் வரலாம்..!

அவர்கள் தான் தமிழ்நாட்டின் முகவரிகள் !

அதே போல மற்றொரு சம்பவம்...!

ஒரு பழமை வாய்ந்த பட நிறுவனம் பட துறையில் பல ஆண்டுகள் நிலைத்து இருக்கும் ஸ்தாபனம் விழா நடத்தியது..! அந்த விழாவில் அனைத்து நடிகர்களும், நடிகர் திலகம் உட்பட வந்திருந்து வாழ்த்தும் ஒரு விழா.

நடிகர் திலகம் அதில் ஒரு நடிகரை (அந்த நடிகர், நடிகர் திலகத்தால் தான் தன்னுடைய வாழ்கையில் முக்கியமான ஒரு கட்டத்தில் தமிழ் திரைப்படத்தில் மறுவாழ்வு பெற்றவர் அவருடைய மறுமலர்ச்சியும் அந்த படத்திலிருந்துதான்)

ஒரு சமயம் அவர் தாடி வைத்துள்ளதை பார்த்து புன்வுருவலுடன் மிகவும் வாஞ்சையுடன் , "என்னடா...எனக்கு போட்டியா என்று கூரியிர்க்கிறார் தனது தாடியை தடவியபடி....அதற்க்கு அந்த நடிகர் சிரித்துவிட்டு..அந்த நகைச்சுவை ரசித்து சென்றுள்ளார். ஆனால் அதை மனதிலயே பூட்டிவைத்து அதற்க்கு பதில் தக்க தருணத்தில் திருப்பவேண்டும் என்று எண்ணியபடியே.

இந்த விழா நிகழ்ச்சியில் நடிகர் திலகம் மேடையில் அமர்ந்திருக்கும்போது அவருக்கு முன் பேசிய அந்த நடிகர் அந்த விழாவிற்கு துளி கூட சம்பந்தம் இல்லாமல் அந்த நிகழ்ச்சியை அனைவர் முன்னிலையிலும் நினைவு கூர்ந்து.....

" இங்கே இருக்கறவங்களுக்கு நாம சொல்றது என்னனா ...அய்யா..நாம யாருக்கும் போட்டி இல்லீங்க ,,,,நாம ஏதோ நம்ப வழிலே போயிற்றுக்கோம்...யாரு வம்புக்கும் போகாம ...ஆனா நம்பளே தான் எல்லாரும் சீண்டபாக்றாங்க ...நாமளும் பதிலுக்கு சீண்ட ஆரம்பிச்சா விஷயம் வேரே மாதிரி ஆயிடும்....அப்டீன்னு சொல்லிக்கிட்டு ..இந்த நிறுவனம் மேலும் மேலும் வளரணும்னு நான் ஆண்டவனே வேண்டிகிறேன்...!"

என்று கூறி விறு விறு என்று சென்றுவிட்டார்...!

கேமரா அந்த நடிகர் அப்படி கூறும்போது நடிகர் திலகம் முகத்தை focus செய்வதை நாம் பார்த்தோமேயானால் நடிகர் திலகம் முகம் ஒரு சில வினாடிகளில் அதிர்ச்சியும் புன்வுருவலும் கலந்த ஒரு EXPRESSION புரிவதை காணலாம் !

அந்த நடிகர் தமிழகத்தில் அன்றும் அதன் மூலமாக இன்றிருக்கும் நிலைக்கு காரணம் நமது நடிகர் திலகம் அவர்கள் ....அதை கணநேரத்தில் மறந்து...தனக்குள் வேறு ஏதோ இருக்கும் பிரச்சனையை அந்த PRESSURAI நடிகர் திலகம் வாயிலாக ரிலீஸ் செய்துகொண்டது, அனைவரும் அன்று அந்த நடிகர் தேவையில்லாமல் நடிகர் திலகத்தை அவமானபடுத்துவதாக நினைத்து தன்னை அவமானபடுத்திகொண்டார் என்று பேசியது இன்றும் மறக்க முடியாத ஒன்று !!

திராவிட கட்சிகளுக்கு, நாத்திகம் விளம்புகிரவர்களுக்கு "ஜிங்க்சக்" அடிக்கும் நடிகர்கள் முக்கால்வாசிபேர் நடிகர் திலகத்தை பின்னால் குத்தியும், நடக்கும் வழியில் குழி நொண்டியும், புகழ்வதுபோல இகழ்வதிலும் PHD எடுத்தவர்கள்தான். அந்த நடிப்பில் நடிகர் திலகத்தையே சாப்பிட்டு ஏப்பம் விட்டு செல்பவர்கள்தான் !

eehaiupehazij
14th November 2014, 02:04 AM
Ungalai nijama ninachathakku neega vera maathiri ninachutteengale! Naan irumbu kottaiya sernthavanum illa. Nenga ninaikkira mathiri Qutar ai sernthavanumilla. Saudi Arabia kaararum illa. Athuthan unga kuzhapputhunnu nenaikkiren.
by newbee Pattaakkaththi.

அன்பு நண்பர் பட்டாக்கத்தி அறிவது. நடிகர்திலகத்தின் திரி வெறும் புகழ் மட்டுமே பாடும் விஷயங்களிலிருந்து விலகி சிறிது வித்தியாசமானது. அறிவுசார்ந்த அலசல்கள் அதன்காரணமாக பதிவர்களிடையே வாதப்பிரதிவாதங்கள்....குடுமிப்பிடிசண்டைகள்... ஜாலியாக வாரிவிடுதல்...மூலவர் நடிகர்திலகத்தையே ஒவ்வாத கமர்ஷியல் விஷயங்களில் தயங்காமல் விமர்சிப்பது....ஒரு ஒருவாரம் இதுவரை வந்த அனைத்து திரிபாகங்களையும் நேரம் ஒதுக்கி படித்துப் பாருங்களேன். எப்பேர்பட்ட எழுத்துலக எம்டன்கள், ஜாம்பவான்கள், இந்திரஜித்துக்கள், மைதாஸ்கள், ஆவணத்திலகங்கள்,... இசைராவணர்கள்...... மயன்கள்...மந்திரதந்திரவாதிகள்..எப்பேற்பட்ட உழைப்பை நல்கி பதினான்கு திரி பாகங்களை....... காலத்தால் சிதையாத கல்வெட்டுக்கள் என்பதை உள்ளத்தால் உணருவீர்கள். சில ரசாபாசங்கள் நடந்திருக்கலாம். அனைத்துமே நடிகர்திலகம் என்னும் ராணித்தேனீயைமையப்படுத்தி நாமெல்லாம் சேவகத்தேனீக்களாக உருமாறி கட்டப்பட்ட தேன்கூடுகள். தேன்கூடு கலைக்கப்பட்டால் தேனீக்கள் கொட்டுவது இயல்பே.

ஏற்கனவே உங்களிடம் வேண்டிவிரும்பி கேட்டுக் கொண்டபடி தங்க்லீஷ் / தமிங்கிலம் தவிருங்கள் ! முழுத்தமிழ்/ ஆங்கிலம் கலவையில் பதிவிடுங்கள்.

சகபதிவர்களை விமரிசிக்க (இது குட்கா பழக்கம்போல் நம்மை நடிகர்திலகத்தின் புகழார்வப் பாதையிலிருந்து தடம் புரள வைத்துவிடும்) எண்ணும் முன் உங்களுக்கென்று ஒரு தனித்துவம் கொண்ட பதிவுக் கோட்டையை கட்ட ஆரம்பிப்பது நலமே. சிறிய வேண்டுகோள் அவ்வளவே!

uhesliotusus
14th November 2014, 10:17 AM
நன்றி செந்தில் அவர்களே!


உங்கள் நாகரீகமான பதிவுக்கு மிக்க நன்றி. ஒரு சீனியர் என்ற முறையில் உங்கள் கருத்துக்களின்படி நிச்சயம் நடக்க முயற்சி செய்கிறேன்.


நான் இந்த மையத்தில் உறுப்பினாக ஜனவரி ஆறாம் தேதி 2013 அனுமதி வேண்டி விண்ணப்பித்து இவ்வளவு நாட்கள் சென்று இப்போதுதான் தான் எனக்கு உறுப்பினர் உரிமம் கிடைத்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்திலும் சரி! அதற்கு முந்தின காலத்திலும் சரி இந்த திரியை விடாமல் வாசித்து வந்தவன் நான். இந்தத் திரியில் நடக்கும் அத்தனை கூத்துக்களையும் கூர்ந்து கவனித்துத்தான் வருகிறேன். ஏதோ சும்மா வந்துவிட வில்லை. இன்றோ நேற்றோ நீங்கள் நினைப்பது போல அல்லாமல் பல நாட்களாக நடிகர் திலகம் திரியை வாசிக்கிறேன்.


நீங்கள் சொல்வது போல என்னாலான நடிகர் திலகம் கருத்துக்களை நிச்சயம் பதிவிடுவேன். ஆனால் நான் மதிக்கும் நடிகர் திலகம் பல வழிகளில் இங்கு அவமானப்படுத்தப் படுவது கண்டு மனம் கொதிக்கிறேன். உங்கள் பதில் எனக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. கேவலமான சண்டைகள் இட்டு அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டிக் கொண்டு இங்கு நடந்த பல்வேறு விஷயங்களை நீங்கள் சாதரணாமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது சகோதர்கள் சண்டை என்று கூறுவது ஸ்ரிப்பைத்தான் வரவழைக்கிறது.


திருச்சி நண்பர் ராமச்சந்திரன், ஹைதராபாத் ரவி இவர்களெல்லாம் மனம் வெதும்பி போனதற்கும், திரியை விட்டு விளகியதற்கும் உங்கள் அன்பான சகோதர சண்டைகள் தான் காரணமா? பல பழைய உறுப்பினர்கள் எவரும் இங்கு பெரும்பாலும் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருப்பதற்கு உங்கள் செல்லச் சண்டைகள்தான் காரணமா?


இங்கு ஒருவர் காரணமே இல்லாமல் என்னை வீண் வம்புக்கு இழுத்தார். சிவாஜி பற்றிய பதிவுகள் இட்டுத்தான் மற்றதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் சிரிப்புதான் வருகிறது. யாருக்கும் எந்தக் கருத்தையும் நாகரீகமாகக் கூற இந்த மையத்தில் இடம் உண்டு. சிவாஜியைப் பற்றிய பதிவுகளை இட்டுவிட்டுத்தான் இங்கு பிறகே தன் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று அடம் பிடித்தால் இந்தத் திரியில் மொத்தம் ஐந்து பேர் கூட தேற மாட்டார்கள். சிவாஜியைப் பற்றிப் பதிவிடுபவர்கள் மட்டும்தான் இங்கே பதிவிடுகிரார்களா? முதலில் இந்தப் போக்கை நிறுத்துங்கள். சிவாஜி ரசிகர் அல்லாதோர் பலர் இந்தத் திரியில் வந்து சுதந்திரமாக அவர்கள் இஷ்டத்திற்கு சிவாஜியை வசவு பாடி எழுதும் போது உண்மையான சிவாஜி ரசிகனான எனக்கு எழுத சுதந்திரம் இல்லையா? என்னாப்பா இது. எங்கும் நடக்காத அக்கிரமா இருக்கே.


இங்கு நடக்கும் சக்களத்தி சண்டைகள் எந்தப் பதிவரியுமே நிம்மதியாக பதிவிட விடுவதில்லை. இதை அருமை நண்பர் கோபால் பலதடவை சொல்லியிருக்கிறார்.


சிவாஜி ஓல்ட் மேன் என்று ஒருத்தர் எழுதுவார். வேறு நடிகர்களால் மட்டுமே சிவாஜி புகழ் பரவ முடியும் என்று இன்னொரு மேதாவி எழுதுவார். இங்கிருப்பவர்கள் சிவாஜியை சிலாகித்துப் புண்ணியமில்லை என்று ஒருத்தர் எழுதுவார்.


தைரியமிருந்தால் இப்படியெல்லாம் போய் எம்ஜிஆர் திரியில் எழுதச் சொல்லுங்களேன் பார்ப்போம். எம்ஜிஆர் ஓல்டாக தெரிவார். அப்புறம் எம்ஜார் புகழ் மு.க.முத்தால்தான் பரவியது என்று அங்கு போய் எழுதட்டுமே பார்க்கலாம். சிவாஜி அடிக்கடி தன் படங்களில் ஜாலியாக ஒரு வார்த்தை சொல்லுவார். டங்குவார் அறுந்திடும் அப்படின்னு. அது போல கிழித்து விடுவார்கள் கிழித்து.


நம் நமக்குள் ஒற்றுமையில்லாமல் அடிகடி சண்டையிட்டுக் கொள்வதனால்தான் சம்பந்தமில்லாத பலர் இங்கு வந்து சிந்து பாடுகிறார்கள். எதையுமே ஒரு கண்ட்ரோலில் வைக்க வேண்டும் செந்தில் அவர்களே. சிவாஜியப் பற்றி அவதூறாய் இங்கு வந்து எழுத பயம் இருக்க வேண்டும் செந்தில். மாற்றுத் திரி அன்பர்களிடம் இந்த விஷயத்தில் நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். இங்கு சுதந்திரம் என்ற பெயரில் சிவாஜி இப்படி நடித்திருக்கக் கூடாது, சிவாஜி உடம்பு அப்படி இருந்திருக்கணும், சிவாஜி சகிக்கலை அப்படின்னு நாமலே எழுதறதனால தானே மத்தவங்க இங்க வந்து அவங்களே எழுதுறாங்க நமக்கென்ன அப்படின்னு கண்ணா பின்னான்னு எழுதுறாங்க.


இங்கு முதலில் தேவைப்படுவது ஒத்துமை.


ரெண்டாவது எந்த விஷயத்துக்கும் சிவாஜியை விட்டுக் கொடுக்கவே கூடாது. ஏன் விட்டுக் கொடுக்கனும். ஒண்ணுமே இல்லாத சில்லறைகளை எல்லாம் இந்த உலகம் தலையிலே தூக்கி வச்சி கொண்டாடும் போது நடிப்பால் நமக்கு பெருமை சேர்த்த அந்த மகா கலைஞன் இங்கே சுதந்திரம் என்ற பெயரில் நாம ஏன் குறை கூறனும். மத்தவங்களையும் அவமானப்படுத்த இடம் கொடுக்கணும். வழி வகை செய்து கொடுக்கணும்.


என்னடா புதுசா வந்தவுடன் இவன் நமக்கு அறிவுரையெல்லாம் எழுதுறான்னு தயவு செஞ்சி தப்பா நினைச்சுடாதீங்க. நடிகர் திலகம் கூட முதல் படமான பராசக்தியில் அறிமுகமானார். ஆனால் முதல் படத்திலேயே நடிப்பின் அத்தனை கலை நுணுக்கங்களையும் வெளிப்படுத்தி விட வில்லையா?


புதிய பதிவர் என்று காலேஜ் மாணவர் ரேகிங் ரேஞ்சுக்கு கேலி கிண்டல் பண்ணுவதை விட்டு விட்டு சொல்லும் கருத்தில் தவறிருந்தால் சொல்லுங்கள். மனதார ஏற்றுக் கொள்கிறேன். என் மனதிலே உள்ள கருத்தைதான் தைரியமாக சொல்கிறேன். தப்பா இருந்தா மன்னித்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக யாரயும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் இல்லை. அதனால் ஆகப் போவது என்ன.


உங்கள் அன்பான பதிவுக்கும், கருத்துகளுக்கும் நன்றிகள் செந்தில்.


ஆனால் கேவலமான சண்டைகளை சகோதர சண்டைகள் என்று சப்பை கட்டு கட்டாதீர்கள். இப்படியேதான் பல நல்ல உறுப்பினர்களை இழந்து நிற்கிறது இந்தத் திரி.


நிச்சயமாக சிவாஜி பற்றி எனக்குத் தெரிந்ததை இங்கே எழுதுவேன். ஆனால் அவர் அவமானப்பட்டால் தாங்கிக் கொள்ள மாட்டேன்.


அவமானப்படுத்த வேண்டும் என்று பதிவிடுபவர்களை ஓட ஓட விரட்டுங்கள். அப்புறம் சிவாஜியின் புகழைப் பாடலாம்.


பல நல்ல பதிவர்களை இந்தத் திரி இழந்து நிற்கிறது. இப்போது ராகவேந்திரன் அய்யாவும் ஒரு மட்டரகமான பதிவினால் மனம் புண்பட்டு விலகிவிட்டார். இப்படியே போனால் இங்கு இனி நிற்பது யார்.


ஆனால் இந்தத் திரியின் அத்தனை பேரையும் நான் கேட்டுக் கொள்வது

சிவாஜிய விட்டுக் கொடுக்காதீர்கள்.

சிவாஜிய விட்டுக் கொடுக்காதீர்கள்.

சிவாஜிய விட்டுக் கொடுக்காதீர்கள்.

சிவாஜிய விட்டுக் கொடுக்காதீர்கள்.

என்பதுதான்.


உங்கள் தொடர் பதிவுகளை தொடர்ந்து ரசித்து வருகிறேன். தொடருங்கள். கோபால் அவர் பாணிக்குரிய அருமையான தொடரத் தரட்டும். ரவிகிரன் சார் வழக்கம் போல அதிரடியில் கலக்கட்டும். முரளி சார் பல புதிய பதிவுகளை அளிக்கட்டும். பழைய பதிவர்கள் அனைவரும் திருபி வரட்டும். ஆளாளாளுக்கு ஒரு வேலையை எடுத்துக் கொள்வோம். ராகவேந்திரன் சார் வாருங்கள். இப்போதும் சொல்கிறேன். புதிய வரவான இவன் என்ன சொல்வது என்று எழுதாதீர்கள். இப்போது நமக்குத் தேவைப்படுவது ஒற்றுமை. ஒற்றுமையோடு மன வேறுபாடுகள் இல்லாமல் சிவாஜி புகழ் பாடுவோம். சிவாஜியை அவமானப்படுத்துவோர் எவராய் இருந்தாலும் ஓட ஓட விட்டுவோம்.

HARISH2619
14th November 2014, 01:34 PM
சிவாஜியின் புகழை பரப்புவதும் அதை இன்றைய தலைமுறைக்கு கடத்துவதும் தான் நோக்கமென்றால் கமல்ஹாசனை திட்டுவதால் அது நடந்து விடாது . தான் கொடுக்கும் பேட்டிகளிலெல்லாம் , தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம் சிவாஜி தான் என் வானத்து சூரியன் , சிவாஜி தான் என் குரு , சிவாஜி தான் என் தந்தை என தொடர்ந்து பதிவு செய்து வருபவர் கமல் . கமல்ஹாசன் என்ற இன்றைய தலைமுறை மேதமையை நேரடியாக தெரிந்து வைத்திருக்கின்ற இன்றைய தலைமுறையின் பலர் கமல்ஹாசன் இப்படிச் சொல்வதாலேயே சிவாஜி பால் ஆர்வம் கொண்டு அறியமுற்பட்டு சிவாஜியை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முனைவதை கண்கூடாக கண்டிருக்கிறேன் .kamalஹாசனையும் , ரஜினிகாந்தையும் சிவாஜியின் பொருட்டு குறை சொல்வதால் இம்மியும் சிவாஜியின் புகழுக்கு எற்றம் வந்து விடாது என்பதை நாம் உணர்வது நலம் .

i totally agree with u joe sir

kalnayak
14th November 2014, 01:39 PM
நடிகர்திலகத்திற்கு அரசியலில் நடிக்கத் தெரியாது-ன்னு சிலர் சொன்னதால், நொந்து போய் அவர்களிடம் ஒரு கேள்வி என்று ஆரம்பித்து ஒன்பதிற்கும் மேல் கேள்வி கேட்டவருக்கு 'ஒரு' என்றால் என்னவென்று சொல்லிக்கொடுக்காமல், அவர் கேட்ட கேள்விகளையெல்லாம் பிரசுரித்து, 'ஒரு' கேள்வி கேட்டவரை கிண்டல் செய்ததை என்னவென்று சொல்வது!!! இதை ரவிகிரண் கேட்பதுபோல் அவர்கள் நீக்கினால் 'ஒரு' கேள்வி கேட்டவரை நமக்கெப்படித் தெரியும். அதனால் பிரசுரித்தவருக்கு நன்றி சொல்வோம்!!!

Gopal.s
14th November 2014, 02:07 PM
https://www.google.com.vn/search?q=nadigarthilagam&newwindow=1&client=firefox-a&hs=ijY&rls=org.mozilla:vi:official&channel=fflb&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=qrxlVJKoL6j7igKo_IBA&ved=0CDMQsAQ&biw=1352&bih=648

Georgeqlj
14th November 2014, 06:46 PM
Kasturi Nivasa 1971: Full Kannada Movie: http://youtu.be/fx1ccAFf7jE
கஸ்தூரி நிவாஸா கன்னட படத்தின் ரீமேக் அவன் தான் மனிதன்
ராஜ்குமார் நடித்த இந்த கறுப்பு வெள்ளை படம் தற்போது இரண்டு கோடி செலவில் வண்ணத்தில உருவாகி கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதனால் தெய்வமகனையும் வண்ணத்தில் வெளியிட்டால் மகிழ்ச்சி

Sent from my GT-S7562

Russellxss
14th November 2014, 08:02 PM
நெல்லை சென்ட்ரலில் மக்கள் தலைவர் சிவாஜி நடித்த வெள்ளைரோஜா 14.11.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள்

http://i59.tinypic.com/2lvhamq_th.jpg

தீபாவளிக்கு வெளியான நீதியின் வெற்றியை தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில் மீண்டும் நடிகர்திலகத்தின் வெற்றி பவனி.

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
14th November 2014, 08:10 PM
நெல்லை சென்ட்ரலில் மக்கள் தலைவர் சிவாஜி நடித்த வெள்ளைரோஜா 14.11.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள்

http://oi59.tinypic.com/zkq3ia.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
14th November 2014, 08:31 PM
http://oi57.tinypic.com/2ah9qfr.jpg


இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
14th November 2014, 08:38 PM
சென்னை, திருச்சி, கோவை வெற்றியை தொடர்ந்து டிசம்பரில் மதுரையை கலக்க வருகிறார் டாக்டர் ரமேஷ்.

http://oi62.tinypic.com/33kepl3.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
14th November 2014, 09:11 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10425348_639214212849268_1264965010901938993_n.jpg ?oh=92d072f9e4f0d7ccafab77cdf36993c9&oe=54E20172&__gda__=1424452526_384f807b72e520688a77f4448430ea6 1

‘பராசக்தி’ படத்தில் கதாநாயகனாகப் போட கே.ஆர்.ராமசாமி உள்பட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. குழம்பிய இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சு இருவரும் அறிஞர் அண்ணாவிடம் சென்று ஆலோசனை கேட்டனர். அண்ணாவின் பலமான சிபாரிசு சிவாஜிக்குதான் இருந்தது. எனவே, ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சிவாஜி.

பின்னாளில் சிவாஜி பெரிய நடிகராகிப் புகழ்பெற்ற பின்பு, பலமுறை விழுப்புரம் வந்திருக்கிறார். நான் அங்கே பள்ளியிலும், கல்லூரியிலும் படித்துக்கொண்டு இருந்த காலங்களில் கூட வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அங்கே அவர் பேசும்போது, “நான் பிறந்த பொன்னாடான விழுப்புரம் நகரத்துப் பெருமக்களே!” என்றுதான் நெகிழ்ச்சியாகத் தன் பேச்சைத் தொடங்குவார்.

ஒருமுறை, விழுப்புரம் நகரசபையில் சிவாஜிக்குப் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். அப்போது அங்கே சிவாஜிக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள். அது ஒன்றும் விலை உயர்ந்த பரிசு அல்ல. ஆனாலும், அதை வாங்கிக் கொண்டபோது சிலிர்த்துப் போய்விட்டார் சிவாஜி. அதைப் பரிசாகக் கொடுத்த நகர சபையினருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு வார்த்தை வராமல் நெகிழ்ந்துவிட்டார்.

அப்படி என்ன பரிசு அது? வேறொன்றுமில்லை. சிவாஜி விழுப்புரத்தில் பிறந்த சமயத்தில், அது சம்பந்தமாக நகரசபை அலுவலகத்தில் எழுதப்பட்ட ஜனனக் குறிப்புதான் அது. அந்த விவரங்கள் அடங்கிய ஜனனக் குறிப்பை அப்படியே எடுத்து ஃபிரேம் செய்து கொடுத்திருந்தார்கள்

Russelldwp
14th November 2014, 09:33 PM
நெல்லை சென்ட்ரலில் மக்கள் தலைவர் சிவாஜி நடித்த வெள்ளைரோஜா 14.11.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள்

http://oi59.tinypic.com/zkq3ia.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.



MEGA REAL WINNER OF 1983 DEEWALI - ONE AND ONLY VELLAI ROJA


1983ம் ஆண்டு தீபாவளி திருநாளில் கடும் போட்டியில் வெளியாகிஎந்த வித பேனர் வெயிட் இல்லாமல் தன்னுடைய அசத்தலான நடிப்புத்திறமையால் சாதாரண தயாரிப்பு நிறுவனமான பிலிம்கோ பேனரில் தயாரிக்கப்பட்ட வெள்ளை ரோஜா தீபாவளிப்போட்டியில் முதலிடம் பெற்று அதிக 50 நாள் கண்ட ஒரே படமாகவும் 12 திரைகளில் 100 நாள் கண்ட படமாகவும் விளங்கி1983ம் ஆண்டு வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் நடிகர் திலகம்.

மேலும் திருவொற்றியூர் வெங்கடேஸ்வரா திரையரங்கில் 100 நாட்கள் ஒடிய ஒரே படம் நடிப்புச்சுரங்கத்தின் வெள்ளைரோஜா
திருச்சி ரம்பா A/C யில் 100 நாட்கள் ஓடிய முதல் படம். சென்னையில் முதன் முதலாக 6 தியேட்டர்களில் 100 நாள் கண்ட முதல் படம் வெள்ளைரோஜா


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/8967_1535957933287549_5331561046094333239_n.jpg?oh =1d8ebef02177422b968f1770e66b76be&oe=54D1C6F1&__gda__=1427925900_51f8b0e350288f3827a9f5a02b0c232 b

Russellbpw
14th November 2014, 10:00 PM
இன்று நவம்பர் 14 - சிறிது கால தாமதமானாலும் மறக்க முடியாத நாள் அல்லவா..!

குழந்தைகள் தினவிழா ...பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய பிறந்த நாள் விழா குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடபடுகிறது.

பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேஹ்ருவும் சரி, கர்ம வீரர் காமராஜரும் சரி, வருங்கால சமுதாயத்தின் பிரதிநிதிகளாக உருவாகும் குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தியவர்கள்.

ஏழை குழந்தைகள் பசியறியாமல் நல்ல சுகாதார உணவு உண்டு, படிப்பில் கவவனம் செலுத்தி நல்ல நிலையில் வரவேண்டும் என்று விரும்பியவர்கள்.

அதனால் கல்வி பயிலும் ஏழை குழந்தைகளுக்காக தான் மதிய உணவு திட்டம் என்ற ஒரு திட்டத்தை முதல் முதலில் தமிழகம் முழுதும் செயல்படுத்தினர் .

1959இல் முதன் முதலில் குழந்தைகளுக்காக கர்ம வீரர் காமராஜர் கொண்டுவந்த திட்டம் மதிய உணவு திட்டம். பிற்காலத்தில் அது சத்துணவு திட்டமாக தொடரப்பட்டு இன்றுவரை தொடர்கிறது.

தமிழகத்தை பொருத்தவரை கர்ம வீரர் காமராஜர் அவர்களுடைய தொலைநோக்கு பார்வை என்பது இன்றளவும் உலகையே வியக்க செய்யும் பார்வையாகும்.

மேலும், தமிழகத்தில் என்னவெல்லாம் பயனுள்ள திட்டங்களாக தொடங்க பட்டு இன்றுவரை உள்ளதோ அவைகளில் முக்கால் வாசிக்கும் மேல் கர்ம வீரர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும் !

பண்டித நேரு அவர்களுடைய குடும்பத்துடன் மிக நெருங்கி பழகிய வெகு சிலரில் ஒருவர் தென்னகத்தில் நம்முடைய நடிகர் திலகம் மட்டும் தான் !

தனது நடிப்பு என்ற ஒரு திறமையை வைத்து உலகளவில் பல ஜாம்பவான்களை ஆட்கொண்டிருந்தாலும், இந்தியாவில் நேஹ்ருவையும் அவர் குடும்பத்தையும் ஆட்கொண்டவர் நமது நடிகர் திலகம்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/18_zps7aeb0e2f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/18_zps7aeb0e2f.jpg.html)

1959இல் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் கொண்டுவந்தபோது, இந்திய அளவில் முதல் முதலில் ரூபாய் ஒரு லட்சம் தனது நிதியாக கொடுத்தவர், நம்முடைய, எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத வள்ளல் நடிகர் திலகம் அவர்கள்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/120459-withNehru-CSubramaniam-Kamaraj-1LakhDonationforSchoolChildrenFood_zps3da27c70.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/120459-withNehru-CSubramaniam-Kamaraj-1LakhDonationforSchoolChildrenFood_zps3da27c70.jpg .html)


பண்டித நேஹ்ருவிர்க்கு பிறகு திருமதி இந்திரா காந்தி அம்மையார், பிறகு ராஜீவ் காந்தி என்று நேஹ்ருவின் பரம்பரையில் உள்ள அனைவரும் நமது நடிகர் திலகம் மீது மற்ற எவரை காட்டிலும் மிகுந்த அன்பும், பாசமும் வைத்திருந்ததை இந்த நாடே அறியும்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/17_zps77661bad.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/17_zps77661bad.jpg.html)

பிரதமரிடம், அமைச்சரோ, மந்திரியோ, முதல்வரோ மற்றும் எவராயினும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வெளியில் ஆயிரம் பந்தா காட்டினாலும், நேரு பரம்பரை முன் கை கட்டிதான் சேவனம் செய்துள்ளனர், என்பதை அனைவரும் அறிவர்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/13_zps29c67b1b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/13_zps29c67b1b.jpg.html)


ஆனால் நம் நடிகர் திலகம் அவர்கள் எந்த அளவிற்கு திரு நேரு அவர்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர், நேரு பரம்பரையும் நடிகர் திலகத்திடம் எந்தளவிற்கு அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர் என்பதற்கு மேற்கோள்காட்டிய புகைப்படங்களே சாட்சி !

Russellbpw
14th November 2014, 10:13 PM
நவம்பர் 14 - குழந்தைகள் தினம் ! - நடிகர் திலகத்தின் பாடல்கள் இல்லாமலா ?

பருப்பில்லாத கல்யாணமா என்பது போல மனித வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விற்கும் நடிகர் திலகம் அவர்கள் பாடல்களே மிக பொருத்தமானவை என்பதை நாம் கூறதான் வேண்டுமோ ?

தங்கங்களே நாளை தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள் ......

https://www.youtube.com/watch?v=Xr4gvXXgCnU

நான் தன்னந்தநிகாட்டு ராஜா ...

https://www.youtube.com/watch?v=2BqghZZSNnQ


இது புரியாத வெள்ளாடு தெரியாமே ஓடுது......

https://www.youtube.com/watch?v=9TCbJhMx7ak

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே .....

https://www.youtube.com/watch?v=6-ZUJLjz0Z8

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ...நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே ....

https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0

கிண்கிணி கிண்கிணி என ......

https://www.youtube.com/watch?v=tIu-muoZNls

Russellbpw
14th November 2014, 11:01 PM
யாருக்கு இந்த சமூகத்தின் மீது அக்கறை ?

யாரோ யாரைபற்றியோ ஒரு சில மாதத்திற்கு முன் யார் வீட்டு விழாவிலோ கூறியதை கூட பொறுத்துக்கொள்ளமுடியாமல், "இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளன் என்ற முறையில்" என்று கூறிக்கொண்டு புலம்பி தீர்த்துள்ளார் ஒரு எழுத்தாளர் ????

இதை படித்த பிறகு நமது தரப்பில் இருந்து ஒரு விண்ணப்பம் வைத்தோம். அதாவது இரு திரிகளுக்கும் உள்ள நல்லுறவின் பொருட்டு அந்த 3 பக்கங்களை நீக்க. ஆனால் வந்த பதிலோ வேறு. இது போதாதென்று சுவற்றில் எறிந்த பந்து உதாரணம் வேறு கடல் கடந்து...

நாம் நிறுத்தினாலும், நம்மை நிருத்தவிடமாடோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வம்பிழுத்தால் என்ன செய்வது ?

அந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளர் பதிவு செய்யும்போது, நமக்கு மட்டும் சமூகத்தின் மீது அக்கறை இருக்காத என்ன?

இருப்பினும் கற்பனை வளம் அதிகம் கொண்டு எழுதியுள்ள எழுத்தாளர் அளவிற்கு வர இயலாவிட்டாலும் உண்மையை நமக்கு தெரிந்தவரை எழுதலாமே என்று முடிவெடுத்ததால் வந்த பதில் பதிவு இது....!

இந்த பதிவு திரு. Mgr அவர்களை தாக்கி எழுதும் பதிவல்ல. அந்த எழுத்தாளர் கூறிய விஷயங்களுக்கு திரியில் பதிவிடும் பதில் பதிவு மட்டுமே...!

Russellbpw
14th November 2014, 11:06 PM
நடிகர் திலகத்தை பற்றிய தவறான செய்திகளை, பொய்யான பித்தலாட்டமான தகவல்களை மட்டுமே தொடங்கிய காலத்தில் இருந்து சமீபத்திய edition வரை பதிவு செய்துவரும் சமீபத்திய மஞ்சள் நிற அட்டைகொண்ட பத்திரிகைதான் அது.

பத்திரிகை 20 முதல் 25 பக்கம் என்றால் ..அதில் ஒரு 20 முதல் 25 சதவிகிதம் நடிகர் திலகத்தை திட்டியோ, அவரை, அவர் படங்களை பற்றி குறை கூறியோ, இப்படி ஒட்டிகொண்டிருக்கும் ஒரு பத்திரிகைதான் அது.

சமூகத்தின் மீது அக்கறைகொண்ட எழுத்தாளன் என்ற போர்வை எதற்கு என்பது தான் புரியவில்லை. ஒரு வேளை கோர்வையாக இருக்கிறதென்று இந்த எழுத்தாளர் நினைத்துவிட்டாரோ என்னவோ.

Russellbpw
14th November 2014, 11:42 PM
நடிகர் திலகம் உலகில் சிறந்த நடிகர் என்று 1959இல் உலக அரங்கிலேயே பிரகடனபடுத்தி விருதும் கௌரவமும் கொடுத்தாகிவிட்டது. அதற்க்கு அடுத்தபடியாக உலக வல்லரசாக விளங்கிய, விளங்குகின்ற அமெரிக்காவும், அதற்க்கு அச்சாரமாக எங்கள் மாநிலத்தின் ஒரு நாள் மேயரும் நீங்கள் என்று சாவியும் கொடுத்தாகிவிட்டது. இன்று வரை எவருக்கும் கிட்டாத பாகியம் !

அமெரிக்க அதிபர் கென்னெடி அவர்கள் ஒரு படி மேலே சென்று நடிகர் திலகத்தை கலாசாரா தூதுவராக அறிவித்தேவிட்டார் ! அமெரிக்க hollywood நடிகர் திலகத்தை அழைத்து golden carpet welcome & dinner கொடுத்தது. இவை எல்லாம் கனவில் கூட ஏழு ஜென்மம் அல்ல எத்துனை ஜென்மை எடுத்தாலும் மற்றவர்களால் நினைத்து பார்க்க முடியாத விஷயம்...

உலக விற்பன்னர்களும், மா மேதைகளும் என்றோ ஒத்துகொண்ட விஷயத்தை பல வருடங்கள் கழித்து இன்னொருவர் வழிமொழிந்தது ஒரு பெருந்தன்மையான விஷயம் ஒன்றும் இல்லை. இந்தியாவின் உண்மையான உலக நடிகராக ஒத்துக்கொள்ளப்பட்டு அங்கீகாரமும் கொடுத்தாயிற்று. அதற்க்கு பிறகு தான் வேண்டா வெறுப்பாக நாங்களும் ஒத்துகொள்கிறோம் என்று அன்று கட்சி நடத்தியவர்கள் ஒரு சில காரியங்களை இவரை முன் நிறுத்தி செய்தார்கள்.

சமூகத்தின் மீது அக்கறை என்றால் இந்த மக்கள் விரோத அரசு பதவி ஏற்றவுடன் கொண்டுவந்த மக்கள் விரோத பால் விலை ஏற்றம், மின்சார விலை ஏற்றம், bus charge ஏற்றம்...இப்படி தொடர்ந்து சமூகத்தை நேரடியாக கடுமையாக பாதித்த விஷயத்தை எழுதியிருக்கலாம் அந்த அந்த சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட எழுத்தாளர்.

அல்லது சமீபத்தில் மீண்டும் இந்த மக்கள் விரோத அரசு, பால் விலையை ஏற்றியதே..அப்போது சமூகஅக்கறை கொண்ட எழுத்தாளராக போர்வையால் போர்த்தி எழுதியிருக்கும் எழுத்தாளர் அதை சாடியிருக்கலாம்.

அல்லது தொடர்கொலைகள், கொள்ளைகள், வழிப்பறி தமிழகம் முழுதும் தலைவிரித்து ஆடுகிறது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து...சமூகத்தின் மீது அக்கறை என்றால் அதை பற்றி எழுதி இருக்கலாம்...அந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளர்..

அல்லது சென்னையில் conjunctivitis பரவுகிறது வேகமாக. அதற்க்கு இன்னது செய்யுங்கள் precaution ஆக என்று அறிவுரைத்திருக்கலாம் இந்த சமூகத்திற்கு அந்த சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட எழுத்தாளர்.

இப்படி சமூகத்திற்கு அக்கறையோடு ஒரு விஷயமும் செய்யாமல், எழுதாமல், தனக்கு துளி கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கும் ஒரு விஷயம் அதுவும் வேறு யார் வீட்டிலோ எல்லா வருடமும் கொண்டாடப்படும் ஒரு விழாவில் அந்த வீடுசொந்தக்காறரை பற்றி இந்த உலகில் உள்ள உண்மை தமிழர்கள் மட்டுமல்ல...அவரை நன்கு அறிந்தவர்கள் கூட காலம் காலமாக உணர்ந்து, அனுபவித்து கூறிய ஒரு விஷயத்தை ஒருவர் மீண்டும் நினைவு கூர்ந்து உரைத்தார்...

அது கூட பொறுக்க முடியாமல் வெறும் வயிதெரிச்சலில், காழ்புணர்ச்சியில்..."அய்யயோ அவரை இவர்களும் மட்டும்தான் இப்படி கூறவில்லை ..இப்போது கூறிவிட்டார்களே...என்று வேதும்பலில் தங்களுடைய சொந்த பத்திரிகை மூலம் புலம்ப முடிவெடுத்து அதற்க்கு சமூகத்தின் மேல் உள்ள அக்கறையுள்ள எழுத்தாளன் என்ற ஒரு ஓட்டை போர்வையை போர்த்திக்கொண்டு ஒரு calligraphic diarrhea வை பூசி மொழுகி வைத்துள்ளார் அந்த கற்பனை எழுத்தாளர்.

இவருக்கு எந்த காலத்தில் சமூகத்தின் மீது அக்கறை இருந்தது...?

Russellbpw
15th November 2014, 12:03 AM
சமூகத்திற்காக உருப்படியாக எதுவும் செய்யாத ஆனால் சமூகத்தின் மீது அக்கறை என்று கூறிக்கொண்டு சமூகத்திற்கு துளி கூட சம்பந்தம் இலாத விஷயத்தை உன்னுடைய சொந்த விருப்பு வெறுப்பு காரணத்தால் பத்திரிகையில் புலம்புகின்றீரே...எதற்கு உமக்கு இந்த பொய் பித்தலாட்டம் ?

இனியாவது உன்னுடைய சொந்த புகழ் மட்டும் பாட பழகிகொள்ளுங்கள் எழுத்தாளரே !

ஒன்று மட்டும் உறுதி...அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ......எவருமே ஒரு முழுமையான யோகியன் அல்ல இந்த உலகத்தில் !

சுவற்றில் பந்து எரியும்போது அது கடல் கடந்து கூட திரும்ப செல்லும் என்றும் ஒரு சிலர் அறிந்துகொள்ளட்டும் !

கிரீடம் பற்றி சிந்திப்பவர்கள் என்றும் செருப்பை பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் செருப்பை பற்றி சிந்திப்பவர்கள் என்றுமே கால்களை மட்டுமே தேடிகொண்டிருப்பார்கள்.

அப்படியாவது ஆதாயம் கிடைக்குமா என்று 180 டிகிரி வளைந்து கூன் விழுந்து, தினமும் எங்கோ வருபவர்களுக்கு... இங்கிருந்தே மண்டியிட்டு வணக்கம் போட்டு ...வணக்கம் போட்டு.... ஆதாயத்திற்காக அடிமை வாழ்க்கை பழகுபவர்களுக்கு பாவம், கிரீடம் எங்கே கண்களில் தெரிய போகிறது...

செருப்பு போடும் கால்கள் மட்டுமே இவர்கள் கண்களுக்கு தெரியும் ! புரியும் !

மாணிகியத்தின் மதிப்பு மண் பானை விற்பவனுக்கா புரியும் ?

Russellisf
15th November 2014, 12:08 AM
just relax rks

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7be5ccd3.png (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7be5ccd3.png.html)

Russellisf
15th November 2014, 12:12 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsc2cabd54.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsc2cabd54.jpg.html)

Russellbpw
15th November 2014, 12:16 AM
just relax rks


Yeah...I will Yukesh !

Thanks for the concern !

RKS

anm
15th November 2014, 01:03 AM
"மேலும், தமிழகத்தில் என்னவெல்லாம் பயனுள்ள திட்டங்களாக தொடங்க பட்டு இன்றுவரை உள்ளதோ அவைகளில் முக்கால் வாசிக்கும் மேல் கர்ம வீரர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும் ! "

Great RKS. This is the Truth!!!!.

கர்மவீரரால் தொடங்கப்பட்டு எந்தவிதப் பெயரும் இல்லாமல் "மதிய உணவுத்ததிட்டம்" என்றே அறியபட்டதை தங்களுடைய பெயரை சேர்பதற்காக அதன் பெயரை மாற்றி விட்டார்கள்!!!!

இப்பொழுது அவருடைய ரசிகர்கள் அவர்தான் அதைக் கொண்டு வந்ததைப் போல் பேசுகிறார்கள்!!!!

ANM

Russellisf
15th November 2014, 06:32 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zpsa1bf1d75.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zpsa1bf1d75.jpg.html)

joe
15th November 2014, 10:16 AM
சுப்பையா ராஜசேகர் (இம்மன்றத்தில் இருக்கிறாரா தெரியவில்லை) என்னும் மதுரை நடிகர் திலகம் ரசிகர் 'நியூ சினிமா' தியேட்டர் அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.

https://www.facebook.com/photo.php?fbid=769703583067041&set=a.715873671783366.1073741826.100000822203790&type=1

Georgeqlj
15th November 2014, 12:16 PM
பொள்ளாச்சி கலைமகள் தியேட்டரின் அனுபவங்களும் சுப்பையா ராஜசேகரின் நினைவுகளையே ஏற்படுத்துகின்றது.
தியாகம் ரிலீஸ் ஆனபோது கூடிய மக்கள் கூட்டம் இப்போதும் பெரும் பிரம்மாண்டத்தையே நினைவு படுத்துகின்றது.

Georgeqlj
15th November 2014, 12:18 PM
Gauravam song different style of video: http://youtu.be/-TGNctnJb-w

Murali Srinivas
15th November 2014, 11:55 PM
நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இரண்டே தினத்தில் 4 காட்சிகளில் பெற்ற வசூல் ஒரு புதிய சாதனை. வினியோகஸ்த நண்பர் மேலதிக தகவல்களை தருவார் என எதிர்பார்ப்போம். நல்ல பிரிண்ட் என்பது ஒரு தனி சிறப்பு.

கூடுதல் சுவையாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியம் நீலவானம் படத்திலிருந்து ஓஹோஹோ ஓடும் மேகங்களே பாடல் இடைவேளையின்போது நல்ல பிரிண்டில் காண்பிக்கப்படுவது அரங்கத்தையே அலற வைக்கிறது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அதிலும் round hat with coolers போட்டு நடிகர் திலகம் காலை வளைத்து நிற்கும் காட்சியில் உச்சகட்ட அலப்பரை என்று சொன்னார்கள்.

தியேட்டருக்கு வந்திருந்த விநியோகஸ்தரை சுற்றிக் கொண்டு எப்போது இந்த படம் போடப் போகிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்களாம் ரசிகர்கள்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
16th November 2014, 12:04 AM
வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நெல்லையில் கடுமையான மழை. அந்த மழையிலும் ஒரோரு காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருந்து படத்தை கண்டு களித்திருக்கிறார்கள். வரும் நாட்களில் மேலும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் வெளியாவதாக இருந்த நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அடுத்த வெள்ளிகிழமைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Russellbpw
16th November 2014, 08:33 AM
[QUOTE=Murali Srinivas;1182933]நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இரண்டே தினத்தில் 4 காட்சிகளில் பெற்ற வசூல் ஒரு புதிய சாதனை. வினியோகஸ்த நண்பர் மேலதிக தகவல்களை தருவார் என எதிர்பார்ப்போம். நல்ல பிரிண்ட் என்பது ஒரு தனி சிறப்பு.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2sheeta1_zpscb4184c0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2sheeta1_zpscb4184c0.jpg.html)

கூடுதல் சுவையாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியம் நீலவானம் படத்திலிருந்து ஓஹோஹோ ஓடும் மேகங்களே பாடல் இடைவேளையின்போது நல்ல பிரிண்டில் காண்பிக்கப்படுவது அரங்கத்தையே அலற வைக்கிறது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அதிலும் round hat with coolers போட்டு நடிகர் திலகம் காலை வளைத்து நிற்கும் காட்சியில் உச்சகட்ட அலப்பரை என்று சொன்னார்கள்.

தியேட்டருக்கு வந்திருந்த விநியோகஸ்தரை சுற்றிக் கொண்டு எப்போது இந்த படம் போடப் போகிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்களாம் ரசிகர்கள்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

Russellbpw
16th November 2014, 10:30 AM
சுப்பையா ராஜசேகர் - மதுரை நடிகர் திலகம் ரசிகர் - 'நியூ சினிமா' தியேட்டர் அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் - re-positing

சமீபத்தில் நான் மதுரைக்குச் சென்றிருந்தேன்.

ஒரு கட்டிடத்தைப் பார்த்ததும் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன்.அந்த கட்டிடம்-'ந்யூ சினிமா' என்ற திரையரங்கம்.

1960களில் நான் மதுரை நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதும்.அதே இடத்திலிருந்த எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 70 களில் படித்தபோதும்,அதற்குப் பிறகு அஞ்சல் வழி கல்வி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.படித்தபோதும் இந்த திரை அரங்கத்தில் எவ்வளவு திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்!காலத்தின் ஓட்டத்தில் இந்த திரையரங்கத்திற்கு இப்படியொரு நிலையா உண்டாக வேண்டும்?

ஒரு காலத்தில் எத்தனையோ வெள்ளி விழா படங்களும்,வெற்றி விழா கொண்டாடிய படங்களும் ஓடி திரைப்பட ரசிகர்களுக்கு சொர்க்கத்தின் நுழை வாயிலாக விளங்கிய 'ந்யூ சினிமா'திரையரங்கம் தன்னுடைய வர்ணத்தையெல்லாம் இழந்து,பகட்டெல்லாம் இல்லாமற் போய்,சிதிலமடைந்து,செடிகள் முளைத்து,அலங்கோலமாக நின்றிருந்த காட்சியைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

காலம் கட்டிடங்களை மட்டுமல்ல,மனிதர்களையும் இப்படிப்பட்ட நிலைக்கு பந்தாடி தூக்கி விட்டெறியும் என்ற உண்மை தெரிந்தவனாக இருந்தால் கூட, திரையரங்கத்தின் இப்போதைய தோற்றத்தைப் பார்த்தபோது,மனதில் உண்டான பாரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஒருகாலத்தில் பரபரப்பான திரையரங்காகவும்,இப்போது மூடப்பட்டுக் கிடக்கும் பாழடைந்த பழைய கட்டிடமாகவும் இருக்கும் 'ந்யூ சினிமா' பூட்டப்பட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.திரையரங்கின் பங்குதாரர்களுக்கிடையே பிரச்சினைகள் இருப்பதால்,அப்படியே அது கவனிப்பாரற்ற நிலைக்கு ஆளாகி விட்டது என்று எதிரில் கடைகள் வைத்திருப்பவர்கள் கூறினார்கள்.

இன்றும் மறக்க முடியாத எத்தனையோ படங்களை நான் இந்தத் திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.இன்னும் சொல்லப் போனால்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல மிகச் சிறந்த திரைப்படங்கள் இந்தத் திரையரங்கில்தான் அந்தக் காலத்தில் திரையிடப்பட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆர்.நடித்த படங்கள் மீனாட்சி,சிந்தாமணி ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன என்றால்,சிவாஜி நடித்த படங்கள் ந்யூ சினிமா,தேவி,சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படும்.நான் நடிகர் திலகத்தின் ரசிகன்.

அவர் நடித்த திரைப்படம் வருகிறது என்றால்,படம் திரைக்கு வந்த முதல் நாள் அல்லது இரண்டாவது நாளிலேயே நான் அந்தப் படத்தைப் பார்த்து விடுவேன்.இந்த 'ந்யூ சினிமா'வில்தான் நான் சிவாஜி நடித்த 'ராமன் எத்தனை ராமனடி'படத்தைப் பார்த்தேன்.ஆரம்ப காட்சிகளில் வெகுளித்தனமான சாப்பாட்டு ராமனாகவும்,பின்னர் வரும் காட்சிகளில் திறமையால் முன்னுக்கு வந்த விஜயகுமார் என்ற திரைப்பட நடிகராகவும் சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திரையரங்கிற்குள் ஒலிக்கும் கைத்தட்டல்களையும்,நடிகர் திலகம் வரும் காட்சிகளில் திரையின் மீது வீசி எறியப்படும் பூக்களையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.'அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு' என்ற பாடல் சந்தோஷ சூழலில் பாடப்படும்போது,நடிகர் திலகத்துடன் சேர்ந்து திரையரங்கிற்குள் நாங்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து,கும்மாளமிட்டோம்.அதே பாடலை தான் மனதில் உயிருக்குயிராக நேசித்த கே.ஆர்.விஜயா தன்னை மறந்து விட்டு,முத்துராமனைத் திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிந்ததும்,சிவாஜி கணேசன் கதாபாத்திர மாகவே மாறி,முகம் முழுவதும் ோகத்தையும்,ஏமாற்றத்தையும்,கவலையையும்,இழப்பின் வேதனையையும் கொண்டு வரும்போது,அவருடன் சேர்ந்து நாங்களும் அழுதோம்...நாங்களும் காதல் தோல்வியில் துடித்தோம்..,நாங்களும் கண்ணீர் விட்டு கதறினோம்.இதுதான் உண்மை.'ந்யூ சினிமா'வின் இருக்கைகள் எங்களின் கண்ணீரால் நனைந்தன.

நடிகர் திலகத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான 'வசந்த மாளிகை'இந்த 'ந்யூ சினிமா'வில்தான் திரையிடப்பட்டது.இப்போது நான் அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன்.அப்போது நான் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன்.பெருந்தலைவர் காமராஜர் அப்போது உயிருடன் இருக்கிறார்.பழைய காங்கிரஸ் கட்சியின் மாநாடு மதுரையில் நடக்கிறது.மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. காமராஜர் மாநாட்டிற்கு வந்திருக்கிறார்.நடிகர் திலகமும் அப்போது அந்தக் கட்சியில் இருக்கிறார்.அந்தச் சமயத்தில் 'வசந்த மாளிகை' திரைக்கு வந்தது.திரையரங்கிற்கு முன்னால் எப்படிப்பட்ட கூட்டம் திரண்டு நின்றிருக்கும் என்பதை கூறவும் வேண்டுமோ?

நான் முதல் நாள் பிற்பகல் காட்சிக்கே போய் வரிசையில் நின்று விட்டேன்.அதுதான் முதல் காட்சி.தாங்க முடியாத வெயிலில் சாலையில் வரிசையில் நிற்க வேண்டும்.ஆனால்,அதெல்லாம் ஒரு பிரச்சினையாகவே தெரியாது.எப்படியாவது படத்தைப் பார்த்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கும்.அந்த காட்சியில் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.எனக்கு முன்பு சிலர் நின்றிருக்க,கவுண்டரை மூடி விட்டார்கள்.எனக்கு தாங்கிக் கொள்ள முடியாத ஏமாற்றம்.எனினும்,தாங்கிக் கொண்டேன்.அந்த இடத்தை விட்டு நான் நகரவேயில்லை.நான் மட்டுமல்ல...எனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள்,பின்னால் நின்றிருந்தவர்கள் யாருமே வரிசையை விட்டு விலகிச் செல்லவில்லை.அனைவரும் சாயங்கால காட்சிக்காக மறுபடியும் அதே இடத்தில் நின்றிருந்தோம்.

இன்றைய ரஜினி,கமல்,விஜய்,அஜீத்,சூர்யா,விக்ரம்,தனுஷ்,விஷால் ,ஆர்யா,கார்த்தி,ஜெயம் ரவி ரசிகர்கள் இதையெல்லாம் நம்புவார்களா தெரியாது.நம்பினாலும்,நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.

இவ்வளவு நேரம் வரிசையில் நின்றும்,சாயங்கால காட்சிக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.எனக்கு அழுகையே வந்து விட்டது.எனக்கு முன்னால் ஐந்து பேர் நின்றிருக்க,கவுண்டரை மூடி விட்டார்கள்.எனக்குப் பின்னால் ஒரு நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது.இறுதியில் சிவாஜி ரசிகர் மன்ற டிக்கெட் ஒன்று எனக்கு எப்படியோ கிடைத்து விட்டது.அவ்வளவுதான்...என் மனதில் உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி அமர்ந்து விட்ட சந்தோஷம் எனக்கு உண்டானது.துள்ளிக் குதித்துக் கொண்டு திரையரங்கிற்குள் ஓடினேன்.

நான் போய் அமர்ந்ததும்,படம் ஆரம்பித்தது.'ஓ மானிட ஜாதியே'என்று சிவாஜி பாடியபோது,ரசிகர்களும் அவருடன் சேர்ந்து பாடினார்கள்.

அந்தக் காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களில் 90%பேர் சிவாஜியின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.சிவாஜி தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால்,இளைஞர்களை தன் பக்கம் காந்தமென இழுத்து வைத்திருந்தார்.அதை கண்கூடாக 'ந்யூ சினிமா'வில் 'வசந்த மாளிகை' படம் பார்த்தபோது என்னால் உணர முடிந்தது.

'ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்' என்று திரையில் சிவாஜி பாடியபோது,இதுவரை பார்த்திராத சிவாஜியை ரசிகர்கள் பார்த்தார்கள்.

'மயக்கமென்ன இந்த மவுனமென்ன' என்று ஸ்லோ மோஷனில் சிவாஜி காதல் கீதம் இசைத்தபோது.தாங்களே காதலிப்பதைப்போல படம் பார்த்த ரசிகர்கள் உணர்ந்தார்கள்.'லதா.அதோ பார்...உனக்காக நான் கட்டியிருக்கும் வசந்த மாளிகை' என்று அழகு தமிழில் சிவாஜி வசனம் பேசியபோது,மொத்த திரையரங்கும் அதில் சொக்கிப் போய் உட்கார்ந்திருந்தது.

'இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்' என்று சிவாஜி இருமிக் கொண்டே பாடியபோது,அவருடன் சேர்ந்து ரசிகர்களும் அழுதார்கள்.இறுதியில் 'யாருக்காக?யாருக்காக?இந்த மாளிகை வசந்த மாளிகை...'என்று சிவாஜி காதலியின் இழப்பில் கண்ணீரில் கரைந்து நின்றபோது,திரை அரங்கமே கண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.'ந்யூ சினிமா'வில் அந்தப் படம் 175 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

Russellbpw
16th November 2014, 10:31 AM
இதே திரையரங்கில் நான் பார்த்த இன்னொரு படம் 'எங்கள் தங்கராஜா'.பட்டாக்கத்தி பைரவன் என்ற கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சிக்காகவே அந்தப் படத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தத் திரையரங்கில் நான் பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

மோட்டார் பைக்கில்,பெல் பாட்டம் பேண்ட் அணிந்து,அசால்ட்டாக சூயிங்கத்தை மென்று கொண்டே வரும் ஸ்டைலிஷான சிவாஜி....'ந்யூ சினிமா'வே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.

'கற்பாம்.,மானமாம்.,கண்ணகியாம்..சீதையாம்...' என்று சிவாஜி பாடியபோது,அவருடன் இரண்டறக் கலந்து போய் அமர்ந்திருந்தனர் ரசிகர்கள்.

மஞ்சுளாவுடன் இணைந்து இளமை தவழ 'இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?'என்று பாடி ஆடியபோதும்,'கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா? என்ற பாடலின் இறுதியில் மஞ்சுளாவை 'பொத்'தென்று புல் தரையில் சிவாஜி போட்டபோதும் ரசிகர்கள் மத்தியில் உண்டான ஆரவாரம் இருக்கிறதே!

அது இப்போது கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

காலம் மாறலாம்...கோலங்கள் மாறலாம்...மாற்றங்கள் ஆயிரம் நிகழலாம்.காலச் சக்கரத்தின் சுழற்சியில் இவையெல்லாம் நடக்கத்தான் செய்யும்...நேற்று இருந்தோர் இன்று இல்லை...இன்று இருப்போர் நாளை...?

'ந்யூ சினிமா'விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.அதற்காக....கடந்த காலத்தில், படவுலக வரலாற்றில் அது செய்த சாதனையையும்,பதித்த முத்திரையையும் மறந்து விட முடியுமா?

Russellxqa
16th November 2014, 11:13 AM
[QUOTE=RavikiranSurya;1182957][QUOTE=Murali Srinivas;1182933]நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இரண்டே தினத்தில் 4 காட்சிகளில் பெற்ற வசூல் ஒரு புதிய சாதனை. வினியோகஸ்த நண்பர் மேலதிக தகவல்களை தருவார் என எதிர்பார்ப்போம். நல்ல பிரிண்ட் என்பது ஒரு தனி சிறப்பு.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2sheeta1_zpscb4184c0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2sheeta1_zpscb4184c0.jpg.html)

கூடுதல் சுவையாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியம் நீலவானம் படத்திலிருந்து ஓஹோஹோ ஓடும் மேகங்களே பாடல் இடைவேளையின்போது நல்ல பிரிண்டில் காண்பிக்கப்படுவது அரங்கத்தையே அலற வைக்கிறது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அதிலும் round hat with coolers போட்டு நடிகர் திலகம் காலை வளைத்து நிற்கும் காட்சியில் உச்சகட்ட அலப்பரை என்று சொன்னார்கள்.

தியேட்டருக்கு வந்திருந்த விநியோகஸ்தரை சுற்றிக் கொண்டு எப்போது இந்த படம் போடப் போகிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்களாம் ரசிகர்கள்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

Thanks for posting vilayattupillai still and other details. Also one important message as follows:

Dear all Sivaji Fans-Be Alert to create new history in COLLECTION

Why I am telling this because you can see Sivaji films free of cost at any place any time in your house also. But you should try to create box office collections by seeing a Film in Theatrical Release to show your interest towards our only Nadippin Imayam. So for those who want to see a sivaji film on Sunday evening free of cost, you should make sure that at least two of your representatives attend theatrical show at Mahalakshmi Theater, Otteri without fail-This is my conscious effort to create history in collections when compared to others films. This is my sincere suggestion-YOU MAY TAKE IT OR LEAVE IT-JRL COMBINES, CHENNAI.

Georgeqlj
16th November 2014, 12:04 PM
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

uhesliotusus
16th November 2014, 01:49 PM
Matter Posted by hubber pattaakkathi deleted
----------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகர் திலகத்தின் திரியின் மூலமாக நடிகர் திலகத்தின் கீர்த்தியை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துவது பற்றி ஒருவர் கருத்து தெரிவித்தால் ஒன்று அதனோடு உடன்படலாம் அல்லது மாறுபடலாம். எதனால் மாறுபடுகிறோம் என்பதையும் தகுந்த காரணங்களோடு விளக்கலாம். ஆனால் அதே நேரத்தில் அந்த ஒருவரின் கருத்தை அடிப்படையாக வைத்து வேறொரு நடிகரின் பெயரையும் அவரின் ரசிகர்களையும் பற்றி [கருத்து சொன்ன நபர் அந்த நடிகரை குறிப்பிட்டிருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக] கிண்டல் பதிவு போடுவது என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. மேலும் சிவாஜி ரசிகர்கள் சிவாஜியை திட்டினால் பாராட்டுவார்கள் என்ற வார்த்தைகள் பலரையும் காயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டவை. அதே பதிவில் சக உறுப்பினரின் பெயரையும் தேவையில்லாமல் இழுத்திருப்பது நிச்சயம் ஏற்புடையதுதல்ல. இனி இப்படி நிகழாது என நம்புகிறேன்.

அன்புடன்

முரளி

Russellbpw
16th November 2014, 02:46 PM
I do not know who you are !!!

But, I can realize how much you have felt about the happenings if you were a long reader in the thread genuinely.

Good One !!! :shoot:

REGARDS
RKS

Russellbpw
16th November 2014, 03:01 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RareStill_zpsc9ebfad2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RareStill_zpsc9ebfad2.jpg.html)

Russellbpw
16th November 2014, 03:02 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/1_zpsab97e63a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/1_zpsab97e63a.jpg.html)

Russellbpw
16th November 2014, 03:05 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America_zps321fb01e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America_zps321fb01e.jpg.html)

Russellbpw
16th November 2014, 03:07 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America1_zpsb2b76694.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America1_zpsb2b76694.jpg.html)

Russellbpw
16th November 2014, 03:08 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/America2_zpsd332d5fc.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/America2_zpsd332d5fc.jpg.html)

Russellbpw
16th November 2014, 03:13 PM
THE ACTOR WHO TAUGHT TO WINK !!!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/thiruvilayadal_in-the-know_zps4ef812e7.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/thiruvilayadal_in-the-know_zps4ef812e7.png.html)

Russellbpw
16th November 2014, 03:26 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsd2417045.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsd2417045.jpg.html)


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps7def0b43.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps7def0b43.jpg.html)

Russellbpw
16th November 2014, 03:28 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/avm_zps778b6bf4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/avm_zps778b6bf4.jpg.html)

Russellbpw
16th November 2014, 03:37 PM
கூத்தாடி என்று கலைஞர்களை அழைத்த திராவிட கழக உரிமையாளர் EVR அவர்கள் , புதுமுக நடிகரிடம் சரண் ! -

கணேசன் இனி சிவாஜி கணேசன் என்று பட்டபெயர் சூடினார் EVR அவர்கள்

கூத்தாடி என்று அழைக்கும் முறையை முற்றிலுமாக மாற்றிய உண்மை தமிழன் சிவாஜி கணேசன் அவர்கள் !

பெரியாரை தனது உயர்ந்த நடிப்பால் ஆட்கொண்ட நடிகர் திலகம். பெரியார் தலைமை வகித்த "களம் கண்ட கவிஞன் " !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTPeriyar1-1_zpsfdb01a0e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTPeriyar1-1_zpsfdb01a0e.jpg.html)

Russellbpw
16th November 2014, 03:38 PM
நடிகர் திலகத்தின் நடிப்பு விஞ்ஞான ரீதியான நடிப்பு - EVR அவர்கள் பெருமிதம்.

அப்படிப்பட்ட EVR அவர்கள் புகழ்ந்த நடிப்பை தான், சில, இன்னும் ஏழுஜென்மம் எடுத்தாலும் நடிப்பு என்றால் என்ன என்று தெரியாதவர்கள் "OVERACTING" என்று காழ்புணர்ச்சியில் அன்றும் இன்றும் புலம்புகின்றது !

அறிவு என்ற ஒன்று இருந்தால் தானே விஞ்ஞானம், மெய்ஞானம் பற்றி அறிவதற்கு !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/NTPeriyar2-2_zpsa68c5a29.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/NTPeriyar2-2_zpsa68c5a29.jpg.html)

Russellbpw
16th November 2014, 03:58 PM
Muktha Ravi s/o Mr. Muktha Srinivasan in Facebook

படம் : தவப்புதல்வன்
பாடல் " இசை கேட்டால் புவி அசைதாண்டும் "

இந்த பாட்டு 5 நிமிடம் .. தான்சேன் பற்றிய கதை தான்சேன் என்பவர் அகபர் காலத்தில் அரசவை
கவிஞர்- இசையால் நோய் குண படுத்தகூடிய ஆற்றல் இருந்தது

அப்பா இந்த பாட்டை நடிகர் தில்கமிடம் போட்டு காண்பித்தார் 2 முறை கேட்டார். இது Expression
based song .என்பதால் விஷயத்துக்கு வரேன் :

அப்பா இந்தட்சனம் saigal தான்சேன் படம் பார்க்க சொல்லி calcutta விலிருந்து print வரவைக்க ஏற்பாடு பண்றேன் ன்னார்

நடிகர் திலகம் " ஆன் ஹான்- போ போ- மாட்டவே மாட்டேன் 'ன்னுட்டார் என் மனதில் நான் உருவக படுத்தின தான்சேன் பிரகாரம் தான் நடிப்பேன் ..

படம் ரிலீஸ் பாட்டு hit .. பாட்டில் பல இடங்களஇல் claps

2 வருடம் கழித்து டெல்லியில் தான்சேன் வறை படம் பார்த்தால் அப்படியே தாடியோட நடிகர் திலகம்
ஆச்சர்யம் இன்னும் அகலலை

நான் panvel il பொழுது போகாம தான்சேன் படம் பார்த்தேன் saigal மட்டும் follow பண்ணி இருந்தால் அதுவும்
curve மீசை பாட்டு காமெடியா போயிருக்கும்

Russellbpw
16th November 2014, 10:14 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/309754_410731265678150_2138618330_n_zpsb8e40e93.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/309754_410731265678150_2138618330_n_zpsb8e40e93.jp g.html)

JamesFague
16th November 2014, 10:54 PM
As usual good response for the screening of Navaratri at Russian Cultural Centre. NT attracts new audiences at every screening and

today function was graced by the daughter of the cameraman Mr W V Subbarao Smt Revathy Krishnamurthy. A small memento given

to her by Kavaithalaya Krishnan followed by fluent speech by Smt Revathy. A wonderful evening to be remembered forever.



Regards

JamesFague
17th November 2014, 10:01 AM
எப்படி ஒரு சாந்தமான மனிதன் சந்தற்பதிர்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு உடனே அதற்குரிய வேகமான நடவடிக்கைகளை
துவங்குகின்றான். இதற்கு விடை நேற்று பார்த்த நவராத்திரி படத்தில் நடிகர்திலகம் சாந்த சொருபியான மருத்தவர் கருணாகரன் பாத்திரத்தில்
வரும்போது சூழ்நிலைkerpa தன்னை மாற்றிகொள்கிறார் என்பதை தனது
நடிப்பின் முலம் தெரிவித்து நம்மை ஆச்சரியபடுதுகிறார். சாவித்திரி காணாமல் போன விளம்பரத்தை வாசித்து கொண்டு இருக்கும்போது அவர் அங்கிருந்து கிளம்பியது அறிந்து தனது உதவியாளரிடம் கூறும்
அந்த வேகமான நடிப்பு இன்றுவரை திரைஉலகம் பார்க்காதது. இன்றுமட்டும் அல்ல எப்போதும் பார்க்க முடியாது.

eehaiupehazij
17th November 2014, 12:42 PM
ஜெமினிகணேசனின் நினைவலைகள் !
Glimpses of and Nostalgia on Gemini Ganesan :

இன்று (நவம்பர் 17) காதல் மன்னர் ஜெமினிகணேசனின் பிறந்தநாள்

எண்ணிய வண்ணம் கண்ணியமான காதலுக்கு புண்ணியம் தேடி மின்னிக் கொண்டிருக்கும் மன்னருக்கு இதயத்தில் உதயமாகும் பிறந்தநாள் நினைவு கூறுதல் மன ஆறுதலே!

நடிகர்திலகத்துடன் இணைந்து காலத்தையும் வென்று கல்வெட்டுக்களாக நின்று நிலைத்திட்ட காவியங்களில் தனித்துவம் பெற்ற நடிப்பால் மலைக்க வைத்த காதல் வித்தகருக்கு திரி சார்ந்த நினைவஞ்சலிகள் !

நடிகர்திலகத்துடன் நீடித்த நட்பும் ஒருவகை கலைக்காதலே!

https://www.youtube.com/watch?v=GQvBncn1aq4
(நடிகர்திலகத்தின் நடிப்பு மகுடத்தில் வைரமாக ஒளிர்பவருக்கு நடிகர் திலகத்தின் திரிசார்ந்த பிறந்ததின நினைவு கூறல் )

by சிவாஜிசெந்தில்

காதலைப் பொறுத்தவரை காலையும் நீயே மாலையும் நீயே மன்னவா !

https://www.youtube.com/watch?v=Yr7De_YC5yw

ஜெமினிகணேசனின் திரைக்காதல் பொற்காலமே என்றும் வசந்த காலம்

https://www.youtube.com/watch?v=52kDVborPjQ

இயற்கையே பெண்ணுருவேடுத்து துணையாக ஏங்க வைத்த காதல் கள்வன் யாரோ? கள்வனுக்கும் என்ன பேரோ ?

https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவுகளை காதல் களத்தில் விதைத்திட்டவரே !

https://www.youtube.com/watch?v=o1vOgWuXqhM

eehaiupehazij
17th November 2014, 12:53 PM
ஜெமினிகணேசனின் நினைவலைகள் !
Glimpses of and Nostalgia on Gemini Ganesan :

இன்று (நவம்பர் 17) காதல் மன்னர் ஜெமினிகணேசனின் பிறந்தநாள்

கர்ணன் திரைக்காவியத்தில் என் டி ராமாராவ் கிருஷ்ணராக வந்து கீதை சார்ந்து உபதேசிக்கும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலுக்கு அடுத்து அதே தொனியில் திருவருட்செல்வரில் நடிகர்திலகத்திற்கு ஜெமினியின் சிவவடிவில் அதே சீர்காழியின் உருகும் குரல்வளத்தில் ஒரு மறக்கமுடியாத பாடல்

https://www.youtube.com/watch?v=pbte64aTKPA

வாழ்வியல் வெற்றி தோல்வி இரவும் பகலுமாக மாறிமாறி வரும் வையகக்கோட்பாடே ! வந்த துன்பங்களைக் கண்டு அஞ்சி ஓடிடாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வென்றிட நீங்கள் வகுத்த தத்துவ பாடல் வழிகாட்டிகள்!

https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM

https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY

https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM

Murali Srinivas
17th November 2014, 07:20 PM
RKS,
.
நமக்கு [இங்கே நமக்கு என்பது உங்களையும் என்னையும் குறிக்கும்] பல நேரங்களில் பல்வேறு தகவல்கள் கிடைத்திருக்கின்றன, இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சென்னை திரையரங்குகளில் என்ன நடக்கிறது, மதுரையில் என்ன நடக்கிறது, கோவையில் எப்படி நடக்கிறது? திருச்சியில் நடப்பது மற்றும் சேலத்தில் என்ன நடந்தது போன்ற பல்வேறு விஷயங்களை நாம் அறிவோம். அதை பற்றிய விவரங்களை நாம் ஒருபோதும் இங்கே எழுதி பகிர்ந்துக் கொண்டதில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று எவர் மனமும் புண்பட வேண்டாம் என்ற எண்ணம். இரண்டாவது நம் மீது அரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்த நண்பர்கள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை. அதை குலைக்கும் விதத்தில் நாம் நடந்துக் கொள்ளக் கூடாது என்ற சுயகட்டுப்பாடு. படங்கள் வெளியீடு, மறு வெளியீடு விஷயங்களிலே இந்தளவிற்கு கட்டுப்பாடாக இருக்கும் நாம் திரைப்பட துறையில் இருக்கும் சிலரை பற்றி அல்லது அவர்கள் தொடர்புடைய செய்திகள் பற்றி எந்தளவிற்கு கவனமாக இருக்க வேண்டும் என்பது நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

It is not for public consumption என்ற புரிதலின் அடிப்படையில் off the record -ஆக சொல்லப்படும் செய்திகள் ஒரு public discussion forum-ல் பதிவு செய்யப்படுவது சரியா? இதை விடவும் sensational ஆன செய்திகள் எனக்கு முன்பும் கிடைத்திருக்கிறது. இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதை நான் ஒருபோதும் public forum-ல் பகிர்ந்துக் கொண்டதில்லை. எனவே நான் இப்போது சொன்ன அடிப்படையில் நீங்கள் எழுதிய சில வரிகளை நீக்கியுள்ளேன். புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்

Murali Srinivas
17th November 2014, 07:22 PM
ஜோ,

கமல் ரஜினி மட்டுமல்ல நடிகர் திலகத்தின் அடுத்த தலைமுறை நடிகர்கள் இளைய தலைமுறை நடிகர்கள் உட்பட எவரையும் சிவாஜி பொருட்டு திட்டுவதோ தரம் தாழ்த்தவோ வேண்டாம் என்ற உங்கள் கருத்தில் உடன்படுகின்றேன். அதன் காரணமாக அந்த நடிகர்களின் இளைய தலைமுறை ரசிகர்கள் நடிகர் திலகத்தை தெரிந்து கொள்ள, புரிந்துக் கொள்ள, ரசிக்கக்கூடிய வாய்ப்புகள் தடைபட கூடும் என்ற உங்கள் அவதானிப்பிலும் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் இங்கே இருக்கும் சிவாஜி ரசிகர்கள் பக்கம் பக்கமாக எழுதுவதை விட அவர்கள் (கமல் ரஜினியை சொல்லுகிறீர்கள்) சொல்லும் ஒரு வார்த்தைக்கு அதிக சக்தி உண்டு என்ற வரி இங்கே பலரின் மனதை புண்படுத்தியிருக்கிறது. கமல் ரஜினி, சிவாஜியைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்வார்கள். ஆனால் அவர்கள் குறிப்பிடும் அந்த சிவாஜியின் மேன்மையை இளைய தலைமுறை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் யாரேனும் அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் அல்லவா? அதை யார் செய்வார்கள்? இங்கேயிருக்கும் நாலு பேர் தங்களுக்குள் சிலாகித்துக் கொள்வதனால் சிவாஜி புகழ் பரவாது என்ற வாதமும் சற்றே இலக்கு தவறியதோ என்று தோன்றுகிறது. காரணம் அந்த நாலு பேர் இங்கே பேசுவதைத்தானே நீங்கள் குறிப்பிடும் இளைய தலைமுறையும் சரி மற்றவர்களும் சரி படிக்கின்றனர். அப்படியென்றால் அதுதானே அடிப்படை!

உங்கள் நோக்கத்தையும் உங்கள் சிவாஜி பற்றையும் நான் அறிவேன். நான் குறிப்பிட்ட அந்த வரிகளின் tone மட்டுமே நெருடல். உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
17th November 2014, 07:23 PM
அனைத்து நண்பர்களுக்கும்,

இதைப் பற்றிய மேலும் சில எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். அதன் பிறகு எதிர் வினையாற்ற நினைப்பவர்கள் அதை செய்யலாம்.

அன்புடன்

eehaiupehazij
17th November 2014, 07:29 PM
நடிப்புத் திமிங்கிலத்தின் 'Close-up' encounters of the first kind!: Part 1 : படித்தால் மட்டும் போதுமா (1962)

அண்ணன் காட்டிய (ஆஸ்கார்) வழியம்மா ? !(நம் வாழ்நாளில்) வசப்படுமா ஆஸ்காரின் வாழ்நாள் சாதனையாளர் விருது?! (NT இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் (Empty) தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! (நாம் எடுத்துரைத்தாலொழிய) அவர் (ஆஸ்கார்) ஏதுமறியாரடி ஞானத்தங்கமே ?!

(நாம் ரசிகர்களாய்) படித்தால் மட்டும் போதுமா

நடிகர்திலகத்தின் வைர நடிப்புப் பட்டைகள் தீட்டப்பட்டு மெருகேறிக்கொண்டே வந்த காலகட்டத்தில் புதியபறவை வார்ப்பில் முன்னோடியாக அமைந்த குற்ற உணர்வு கலந்த தாழ்வுமனப்பான்மை ஆட்டிப்படைக்கும் கையாள்வதற்கு மிக சவாலான முன்கோபமும் மூர்க்கமும் கண்ணை மறைக்கும்......ஆனால் ரசிகர்கள் கண்ணிமைக்க மறுக்கும்....வேறு எந்த உலகளாவிய நடிப்புக்கலைஞனும் தேர்வு செய்யவே அஞ்சும் குணாதிசயத்தை நடிகமேதையின் close-up shots வெளிப்படுத்திய குறியீடு ....ஆஸ்கார்களே தலைவணங்கும் அற்புத நடிப்பிலக்கணக் கையேடு!

Seeing is believing the unbelievable and perceiving is relieving the apprehensions !

நடித்தால் மட்டும் போதுமா !!?.........

https://www.youtube.com/watch?v=Eeod3MiL-YQ

https://www.youtube.com/watch?v=o17JQ6TWP30

https://www.youtube.com/watch?v=7Cq8mVH9p6o

நடிப்பின் உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து நவரச நதிகளாய்ப் பாய்ந்து நடிப்புக்கடலில் சங்கமிப்பதைப் பார்த்த பின்புமா.....!

https://www.youtube.com/watch?v=sJPUF-RxJzw

மோஸசைப் பார்த்து பெருங்கடலே பிளந்து வழிவிட்டதுபோல் நடிகர்திலகத்தின் நடிப்புத் தேஜசைப் பார்த்து ஆஸ்கார் கதவுகள் திறந்து வழிவிடுமா ??


Oscar Award winning Charlton Heston as Moses parting the sea in his magnum opus 'Ten Commandments' :

https://www.youtube.com/watch?v=OqCTq3EeDcY

Russellbpw
17th November 2014, 10:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/nav_zps4cd447bd.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/nav_zps4cd447bd.jpg.html)

Russellbpw
18th November 2014, 09:16 AM
இன்று கப்பல் ஒட்டிய தமிழன் திரு வஉசி அவர்கள் நினைவு நாள்

இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பெரும் பாடுபட்டவர்களுள் திரு வ உ சி அவர்கள் மிக முக்கியமானவர். செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பாடார், சிறையில் செகிழுத்து துன்பப்பட்டவர்.

இவருடைய வாழ்கை வரலாறு படமாக்கப்பட்டபோது, நடிகர் திலகம் அவர்கள் சிதம்பரமாக திரையில் வாழ்ந்துகாட்டினார். இதை பார்த்து, சிதம்பரனாரின் மகன் என்னுடைய தந்தையை எனக்கு மீண்டும் காண ஒரு வாய்ப்பு ஏற்பட்டது என்று பாராட்டி பேசினார்.

http://www.youtube.com/watch?v=skpI1Gl5cus

Russellbpw
18th November 2014, 09:17 AM
http://www.youtube.com/watch?v=ltokhVT7rik

Russellbpw
18th November 2014, 09:18 AM
http://www.youtube.com/watch?v=fFj-OihQrm8

Russellbpw
18th November 2014, 09:18 AM
http://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg

Russellbpw
18th November 2014, 09:19 AM
http://www.youtube.com/watch?v=-Pa1M7NnQDw

Russellbpw
18th November 2014, 09:20 AM
http://www.youtube.com/watch?v=nWCVsIXvMsg

uhesliotusus
18th November 2014, 08:34 PM
நன்றி நடுவர் அவர்களே.

தங்கள் நடுநாயகமான தீர்ப்புக்கு நன்றி!

எனக்கும் குறிப்பிட்ட நடிகரை கேலி பேச வேண்டும் என்ற எண்ணம் சுத்தமாக இல்லவே இல்லை. அந்த கற்பனை சம்பாஷணை வேண்டுமென்றேதான் என்னால் எழுதப் பட்டது. ஏனென்றால் நடிகர் திலகத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பதிவு போடும் நம்முடைய திரியின் அங்கத்தினர்கள் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டனர். நடிகர் திலகத்திற்காகவே நேரம் ஒதுக்கி உழைக்கும் செந்தில் சார், ரவிகிரன் சார், நீங்கள், கோபால் மற்ற பழைய உழைப்பாளிகளின் மணிக்கணக்கான உழைப்பு கேலிக்கும், கேள்விக்கும் உரியதானது.

இரண்டாவது சிவாஜியின் தீவிர வெறியன் என்று சொல்லிக் கொண்டு இணையத்தில் வலம் வரும் ஒரு சில ஜோரான அறிவாளிகளுக்கு சிவாஜி திரி உருப்பினர்களை ஏனோ அறவே பிடிப்பதில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை. எல்லாம் க(கா)ட்சி வேறுபாடுதான். எப்போதுமே இது போன்றவர்களால் பல சந்தர்ப்பங்களில் நமது உறுப்பினர்கள் அவமானப்படுத்தவே செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சிவாஜியின் மேல் பற்றுள்ளதை நான் மறுக்கவில்லை. அதற்குத் தலை வணங்குகிறேன். ஆனால் அதையும் மீறி வேறு சிலர் மீது பற்று ஆட்கொண்டதால்தான் இங்கே உறுப்பினர்கள் காயப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் உழைப்பு அசிங்கப்படுத்தப்படுகிறது. அந்தப் பற்றுதலை வெளிக்கொணரவே நான் போட்ட ஒரு வலை பதிவு அது. (வலை பதிவு என்றால் இணயப் பதிவல்ல) அதை நீங்களும் புரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளீர்கள். நன்றி!

இப்போது குறிப்பிட்ட நடிகரை நான் கிண்டல் அடித்த பதிவைப் போட்டதும் சில மணி நேரங்களில் அந்தப் பதிவை நீங்கள் எடுத்து விட்டீர்கள். அதற்கு காரணமும் சொல்லியிருக்கிறீர்கள். சிவாஜிக்கும் கீழே உள்ள ஒரு நடிகரை நான் வேண்டுமென்று மற்றவர்கள் உணர வேண்டுமென்று கிண்டல் அடித்ததுமே தங்களுக்கு அந்தப் பதிவை நீக்கச் சொல்லி நிர்ப்பந்தங்கள் நிச்சயம் உண்டாகியிருக்கும். அப்படி அவர்களுடைய அபிமான நடிகருக்கே அவர்கள் ஆதரவாய் ஒட்டுமொத்தக் குரல் கொடுத்து அந்தப் பதிவை எடுக்கச் சொல்லும் வேகம் இருக்கு போது உலகம் புகழும் சிவாஜியும், சிவாஜி ரசிகர்களும், பதிவாளர்களும் இங்கே அவமானப்படுத்தப்பட்டால் இங்கே உள்ளோருக்கு எவ்வளவு வேகம் இருக்கக் கூடும். பிறக்கக் கூடும். நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள். அதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கற்பனை உரையாடல் பதிவை நான் போட வேண்டியதாயிற்று. மற்றபடி யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. தங்களுக்கு ஏற்படும் ரணம், வலி மற்றவ்ர்களுக்கும் அதே போலத்தானே இருக்கும் இருக்கும் என்று அவர்கள் இப்போது உணர்வார்கள் அல்லவா. அப்படி என் கணக்கு தப்பாய் இருந்தாலும் நீங்கள் அந்த நடிகர் அசிங்கப்பட வேண்டாம் என்ற நல்ல எண்ணத்திலோ அல்லது அந்த நடிகரின் ரசிகர்கள் ஓரளவிற்கு தங்களுக்கு நண்பர்களாயும்,கொஞ்சம் சிவாஜி ரசிகர்களாயும் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் வம்பு எதற்கு என்ற எண்ணத்திலோ நீங்கள் என் பதிவை எடுத்திருக்கக் கூடும். அதனால் தவறில்லை.

ஆனால் அதே போல யார் யாராலோ சிவாஜி இங்கே அசிங்கப்படுத்தப் படும்போதும், அவமானப்படுத்தப்படும் போதும் இதே சீரியஸான நடவடிக்கை எடுத்து அந்த பதிவுகளை நீங்கள் நீக்கியிருந்தால் நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன். இதை மட்டும் ஜெட் வேகத்தில் நீக்கியிருக்கிறீர்கள். ஓ.கே.ஆனால் நடிகர் திலகத்தை குறி வைத்து தாக்கிய சில பதிவுகள் அப்படியே ராஜா போல ஜம்மென்று திரியில் அரியணை வீற்று அமர்ந்திருக்கின்றன இன்றுவரை. இதற்கு என்ன பதிலோ தெரியவில்லை. மறுபடியும் சொல்கிறேன். எனக்கு அந்த நடிகரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அறவே கிடையாது. எனக்கும் கூட அந்த நடிகரைப் பிடிக்கும்.

நான் அப்படி ஒரு பதிவைப் போட்டதனால்தான் தாங்களும் அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு (தங்களுக்கு மிக நெருக்கமாக இருந்தாலும் கூட) மிக நாசூக்காக தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து நியாயத்தை தயங்கித் வழங்கி உள்ளீர்கள். இல்லையென்றால் அப்படி ஒரு பதிவே வந்திருக்காது என்று தான் நானும் நினைக்கிறேன். அதற்கு என் நன்றி.

எனக்கு சிவாஜி பிடிக்கும்... அவர் ரசிகர்களைப் பிடிக்காது.. அவரைப் பற்றி பதிவிடுபவன் பைத்தியக்காரன்... என்ற ரீதியில் இனி இங்கே பதிவுகள் வர வேண்டாம். எனக்கு பலாப் பழம் பிடிக்கும்... உள்ளே உள்ள சுளையை எவன் தின்னுவான் என்ற கதைப் போலத்தான் இது. நடிகர் திலகத்தை சிலாகித்துக் கொள்வதும் கொள்ளாததும் எங்கள் வேலை. அதற்கு யாருடைய அனுமதியும் இங்கே தேவை இல்லை. தன்னுடைய அபிமானி கேலி செய்யப்படக்கூடாது என்று நினைப்பது போலத்தான் அடுத்தவரும் இங்கு நினைப்பார்கள். இதைப் புரிந்து கொண்டால் சரி.

இன்னொன்று. இங்கு எல்லோரும் இளம் தலை முறையினருக்கு நடிகர் திலகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற பல்லவியை பாடுகிறீர்கள். அப்படின்னா என்ன? இப்போது நாம் எல்லோருமே கிட்டத்தட்ட ஒரே வயதை ஒத்த ரசிகர்கள். நம்முடைய பழைய கால சிவாஜி நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனந்தம் அடைகிறோம். நடுவர் நீங்கள் சொன்னது போல கமல், ரஜினி ரசிகர்கள் தங்கள் அபிமானங்களை மீறி சிவாஜி புகழைப் பரப்பிவிட மாட்டார்கள். அப்படியே சொன்னாலும் தங்கள் நடிகர்களுக்குக் கீழ்தான் என்று சொல்ல நிறைய வாய்ப்புண்டு. (ஒரு சிலரை விட்டு விடுவோம்) மற்ற இளம்தலைமுறை நடிகர்கள் ரசிகர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதில் எங்கே இளம் தலைமுறைக்கு சிவாஜியை எடுத்து செல்வது.

சிவாஜி செந்தில் சார் அழகாக சொன்னார். பல வரிகள் சாதிக்காததை ஒரு படக் காட்சி சாதிக்கும் என்று. அது ஒரு வகையில் உண்மையே.

என்னுடைய வீட்டின் கீழ் ஒரு பிளஸ் 2 மாணவி இருக்கிறாள். அவளிடம் நான் எப்போதும் சிவாஜி பற்றி பேசுவேன். அவள் போரடிக்காதீங்க அங்கிள் என்று ஓடுவாள். நான் விட மாட்டேன். பல சிவாஜி படங்களைப் பற்றி சொல்லி அவர் நடிப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பேன். அவள் ரொம்ப போராக காணப்படுவாள். ஒருமுறை கௌரவம் கேசட் கொடுத்து அவளைப் பார்க்க சொன்னேன் பிடிவாதமாக. முதலில் மறுத்த அவள் பின் கேசட்டை வாங்கி கொண்டாள். அன்று மாலை நான் அந்த கேசட்டை வாங்கப் போகும் போது கௌரவம் படம் ஓடும் சப்தம் கேட்டது.. அந்தப் பெண் தனது தம்பியுடன் கௌரவம் படம் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அங்கே வருவது அவளுக்குத் தெரியவில்லை. நடுவில் ஒரு திரைசீலை மறைத்துக் கொண்டிருந்தது. நான் அக்காவும் தம்பியும் படத்தைப் பற்றி என்ன கமெண்ட் பண்ணுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்டேன். எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம்தானே. படத்தின் கண்ணா நீயும் நானுமா பாடல் காட்சிகள், அதைத் தொடர்ந்து காட்சிகள் ஓடுகின்றன. சிவாஜி அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார். நானும் 5 நிமிடங்கள் நின்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனமாகக் காது கொடுத்துக் கேட்கிறேன்.

அந்தப் பெண் தன தம்பியிடம் இப்படி கொச்சையாக சொல்கிறாள்

'டேய் மெல்வின்! சிவாஜி சூப்பரா நடிக்கிறான் இல்லே. இன்னா ஸ்டைலா நடிக்கிறான் . அதான் மேல் வீட்டு அங்கிள் இப்படி பைத்தியம் புடிச்சி அலையுது'

இது ஒன்னு போதாதா அய்யா. சின்னப் புள்ளங்களையும் ஒரு தரம் பார்த்தாலே வசியப்படுத்த வச்சுடுவாரே அதுதான்யா சிவாஜி. என்னமோ சிவாஜி புகழ் பரப்பறதாம். இளைய தலைமுறைக்காம்.

ஒரு ஒரு கர்ணன் லட்சம் லட்சமா குழந்தைகளையும், இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்துப் போட்டுகிட்டன்யா. அத்தோடயா. அத்தனை போரையும் தன நடிப்பால அழ வச்சான்யா.

அதிலிருந்து நிறைய சிவாஜி படம் நல்லதா கொடுங்க அப்படின்னு கேட்டு வாங்கிப் போய் பார்ப்பாள். ஆனல் மனதார நேரில் பாராட்ட மாட்டாள். அப்புறம்தான் ரசித்து பேச ஆரம்பித்தாள். அவளுக்குப் புடிச்ச படம் தெய்வ மகன்.

நாம் நம்ம திருப்திக்கு பழைய நினைவுகளை மகிழ்ச்சியா பகிந்துக்கலாம். அதுக்குத்தான் திரி.அவர் நடிப்பை ரசிச்சு ரசிச்சி எழுதலாம். வலியப் போய் புகழ் பரப்ப சிவாஜி ஒன்னும் சொத்தை இல்ல. எல்லார் மனதுலேயும் ஈஸியாய் நுழைய அந்த சிவாஜி ஒருத்தருக்கே தெரியும். இதை விட என்னய்யா பாக்கியம் வேண்டிக் கிடக்கு. யாரை நம்பியும் சிவாஜி பொறக்கல்ல ..போங்கய்யா போங்க. அந்த ஆளு திறமை பேசும்யா. காலா காலத்துக்கும் அந்த ஆளு திறமை பேசும்.

eehaiupehazij
18th November 2014, 08:48 PM
நடிப்புத் திமிங்கிலத்தின் 'Close-up' encounters of the second kind!

Part 2 : Raman Eththanai Ramanadi ராமன் எத்தனை ராமனடி(1970)

ராமன் எத்தனை ராமனடி என்ன ஒரு பொருத்தமான அடை மொழி நம் நவரச ராமருக்கு சாப்பாட்டு ராமனாக வெகுளித்தனம்....ஆனால் கேலிப்பொருளாக
அடிபட்டு அவமானப்பட்டு தனது மனதிலும் மொட்டுவிட்ட காதல் வேகத்தில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற விதத்தில் அவர் முகத்தில் மின்னலடிக்கும்
உணர்ச்சிக்குவியல்கள் .... கலைமகள் கடாச்சத்தில் நடிகர்திலகமாக உருமாறி திரும்ப வரும்போது வெளிப்படுத்தும் கட்டுப்பாடான முகபாவங்கள்.......இப்படம் நடிப்பு கஜராஜனின் பசிக்குக் கிடைத்த கரும்புக்காடு!

உலகிலேயே ஒரு நடிகரின் நடிப்பில் தேனில் விழுந்த வண்டுபோல மந்திரித்து விட்ட கோழி போல மனம் மயங்கி அவர் சிரிக்கும்போது நாமும் சிரித்து
அவர் அழும்போது நாமும் அழுது.......நம்மை ஆட்கொண்ட நடிப்புத் திறமையை ஆஸ்கார் பெற்ற நடிகர் யாரிடமும் நம்மால் உணர்வுபூர்வமாக ஒன்ற இயலவில்லையே ! வாழ்ந்த போது மதிக்கத் தவறியதை அவர் அமரத்துவம் அடைந்த பிறகாவது அஞ்சலியாகவேனும் அளித்திருக்கலாமே !!

https://www.youtube.com/watch?v=cU9_w77CM1k

https://www.youtube.com/watch?v=y0khGzjDhNQ

https://www.youtube.com/watch?v=fnrbbkPXx_I

https://www.youtube.com/watch?v=ij1XPqCSVOA

https://www.youtube.com/watch?v=cxAqfc50y8M

RAGHAVENDRA
18th November 2014, 09:09 PM
http://www.youtube.com/watch?v=CFj4Tb9KEYw

joe
18th November 2014, 10:12 PM
முரளி சார்,
மேலும் சில எண்ணங்களை பகிர்ந்து கொள்வதாக சொன்னீர்கள் ..காத்திருக்கிறேன் .

joe
18th November 2014, 10:24 PM
முரளி சார் ,
நேருக்கு நேர் நெஞ்சுக்கு எதிரே பெயர் சொல்லி அழைத்து பேசாது கிசுகிசு பாணியில் எழுதும் பட்டாக்கத்தி போன்றவர்களுடன் பதிலுக்கு பதில் என நிற்க மாட்டேன் .நீங்கள் மேலும் சொல்ல வேண்டியதை சொன்ன பிறகு எதிர்வினை புரியுங்கள் என சொன்னதால் காத்திருக்கிறேன் .. இனிமேல் பாவ புண்ணியமெல்லாம் பார்க்கப்போவதில்லை ,, நிச்சயம் என் எதிர்வினை வரும் .

AREGU
18th November 2014, 10:25 PM
நம்பியாரிடம் பெண்கேட்டு சிவாஜி செல்லும் காட்சியில் பார்க்கும் நமக்கே அடிவயிறு `பகீர்` என்றிருக்கும்.. :) நாயகனின் அப்பாவித்தன கதாபாத்திரச் சித்தரிப்பின் வன்மை அது..

AREGU
18th November 2014, 10:42 PM
முகநூல் சக்கைபோடு போடும் இக்காலகட்டத்தில், இதுபோன்ற கருத்துக்களங்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. அது நமக்கிடையேயான புரிந்துணர்வின்மையால், பாதித்துவிடலாகாது.

இதற்கு அனைவர் ஆதரவும் தேவை.. அதற்கு ஒற்றுமை தேவை.. நாம் தேவையற்று பதியும், ஒரு புள்ளிக்குக்கூட மற்றவர் மனதை முறித்துப்போடும் வலு உண்டு என்பதை உணர்ந்து, வருங்காலத்தில் நடந்துகொள்வோமாக..

நன்றி வணக்கம்.

Murali Srinivas
19th November 2014, 01:54 AM
இனி ராகவேந்தர் சார் பதிவிட்ட விஷயத்திற்கு வருகிறேன். நடிகர் திலகம் திரியில் நடிகர் திலகம் விமர்சிக்கப்படுகிறார் என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் அதனாலேயே அவரும் நெய்வேலி வாசு அவர்களும் நடிகர் திலகம் திரியில் பங்கு பெறுவதில்லை என்றும் சொல்லியிருந்தார். சிவாஜி எதிர்ப்பு பதிவுகள் இடம் பெறுவதனால் திரியிலிருந்து விலகி நிற்க போவதாகவும் சொல்லியிருந்தார்.

ஒரு நாள் பொறுத்துப் பார்க்கிறேன். அவரின் signature மாறியிருக்கிறது. நடிகர் திலகம் திரி என்பது யார் வேண்டுமானாலும் அவரை விமர்சிக்கலாம். யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்ற வாக்கியத்தை அமைத்திருக்கிறார். நடிகர் திலகம் பற்றிய திரிகள் அடங்கிய இந்த forum- திற்கு நான் மாடரேட்டர் எனும்போது இந்த விமர்சனம் என் மீது வைக்கப்பட்டதாகவே உணர்கிறேன்.

சில விஷயங்களை யோசித்து பார்க்கிறேன்.

ராகவேந்தர் சார் மூத்த ரசிகர். சிறு வயது முதல் சிவாஜி ஈடுபாடு கொண்டு வளர்ந்தவர். சிவாஜி மன்றத்தை நடத்தியவர். சாந்தி திரையரங்க சிவாஜி ரசிகர் கூட்டத்தில் முக்கியமானவர். நடிகர் திலகத்தின் படப் பட்டியலை அந்த திரையரங்கில் நிறுவதற்கு முக்கிய பங்காற்றியவர். நடிகர் திலகம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் இயக்கம் கண்டபோது களப் பணியாற்றியவர். அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றவர். 1989 தேர்தலில் கடுமையாக உழைத்தவர். அவர் பெயரால் இணையதளம் வைத்து நடத்துபவர்.

வாசு அவர்களோ சிவாஜி பக்தர். நடிகர் திலகத்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றவர். கடலூர் பாண்டி போன்ற இடங்களுக்கு நடிகர் திலகம் வரும்போதெல்லாம் அவரோடு பயணிக்கும் வாய்ப்பு பெற்றவர். நடிகர் திலகம் மற்றும் பிரபு மன்றங்களின் பொறுப்பில் இருந்தவர்.

இவர்கள் மட்டுமல்ல

வட சென்னை வட்டார மன்ற செயல் வீரர், நடிகர் திலகம் சார்ந்திருந்த அரசியல் இயக்கத்தின் தலைவி பற்றி தவறாக பேசிய தமிழக மந்திரிக்கு எதிராக போராட்டம் நடத்தி காவல்துறையினால் கைது செய்யப்பட்டு பின் நடிகர் திலகமே நேரில் வந்து ஜாமீன் கொடுத்து மீட்ட களப்பணியாளர் கார்த்திக்

இள வயது முதல் விருகம்பாக்கம் வட்டார சிவாஜி மன்ற செயல் வீரராக களப்பணியாற்றிய, நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து உரையாடி இவரும் இவர் இளைய சகோதரரும் வேலை பார்த்த அலுவலகத்தின் விஷயங்கள் வரை பல விஷயங்களை பேசக்கூடிய பார்த்தசாரதி.

நெல்லை நகர சிவாஜி மன்ற செயல் வீரராக ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்காக 1977 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியாற்றிய ஆற்றல் படைத்த கிருஷ்ணாஜி

நடிகர் திலகத்தின் உதவியாளராக அரசியல் வாழ்க்கையை தொடங்கி இன்று அவர் பெயரால் ஒரு பெரும் சமூக நல இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் சந்திரசேகர்

நடிகர் திலகம் பெயரால் நடக்கும் அனைத்து நற்பணிகளுக்கும் யார் வந்து என்ன கேட்டாலும் உடனே அள்ளி தரும் மதுரை சந்திரசேகர் (VCS)

வயதில் குறைந்தவராக இருந்தாலும் நடிகர் திலகத்தின் புகழ் கொடியை பறக்க விடும் பொருட்டு அவர் பூவுலகில் இருந்து மறைந்த பிறகும் அவருக்காக ஒரு மாத இதழ் நடத்தியவரும் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஆவணப்படுத்தியவருமான சுவாமிநாதன்.

[இந்த மன்றத்திலே உள்ளவர்களை மட்டுமே குறித்திருக்கிறேன்]

இவர்களையெல்லாம் அளவு கோலாக வைத்துப் பார்த்தால் நான் எல்லாம் சிவாஜி ரசிகனாக கூட qualify ஆக மாட்டேன். மன்றம் வைத்ததில்லை, அதில் உறுப்பினராக கூட இருந்ததில்லை, அரசியல் களப்பணியாற்றியதில்லை. அவரை நேரில் சந்தித்து பேசவோ பழகவோ செய்ததில்லை. தமிழகத்தில் இருந்த, இருக்கின்ற லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். இந்த திரியில் பங்களிப்பு செய்ததை தவிர்த்து விட்டு பார்த்தால் நான் நடிகர் திலகத்திற்காக ஒன்றுமே செய்ததில்லை. NT FAnS அமைப்பு கூட கூட்டு முயற்சிதான்.

இது அவையடக்கமோ அல்லது சுய இரக்கமோ அல்லது அனுதாபம் தேடும் முயற்சியோ அல்ல. உண்மையிலும் உண்மை. இந்த ஹப்பில் மாடரேட்டர் பதவிகூட நான் இந்த மன்றத்தில் மூத்த உறுப்பினன் என்ற முறையில்தான் வந்தடைந்தது.

இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் இது பப்ளிக் forum. என் தனிப்பட்ட சொத்தல்ல. எவருடைய சொத்தாகவும் இதை கருத முடியாது. இங்கே சிவாஜியைப் பற்றி விமர்சனம் வருகிறது என்றால் அதை எதிர்கொண்டு, சொல்லப்பட்ட விமர்சனம் எப்படி தவறானது என்பதை விளக்க அனைத்து ரசிகர்களுக்கும் உரிமை இருக்கிறது. நான் மட்டும்தான் அதை எதிர்க்க வேண்டும் என்பதில்லை. அதிலும் தவறான விமர்சனம் வருகிறது என்று தன் ஆதங்கத்தை பதிவு செய்திருக்கும் ராகவேந்தர் சாருக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது.அதே போன்ற கருத்தை பதிவு செய்திருக்கும் எந்த நபருக்கும் அதே உரிமை இருக்கிறது.

நடிகர் திலகம் பற்றிய திரியில் அவரை அனைவரும் பாராட்டினால்தான் நானும் பதிவிடுவேன். மாறாக அவரை விமர்சித்து பதிவு வந்தால் நான் விலகி விடுவேன் என்பது சரியான நிலைப்பாடா என்பதை கொஞ்சம் யோசியுங்கள். நடிகர் திலகத்தை பற்றி எவரேனும் தவறாக எழுதும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள வேண்டிய கடமை இப்போது குறைபட்டுக் கொள்ளும் அனைவருக்கும் இல்லையா? அதிலும் நான் முன்பே குறிப்பிட்டது போல் நடிகர் திலகத்திற்காக பல்வேறு வகையில் உழைப்பை சிந்தியவர்களுக்கு இல்லையா?

பதிவர்களை அவமானப்படுத்தி விட்டனர் என்ற ஒரு குற்றசாட்டை முன் வைக்கின்றனர். யார் அப்படி செய்தது? யாரை அப்படி சொன்னார்கள்? கமல் ரஜினி பற்றி ஜோ எழுதிய பதிவுதான் காரணம் என்றால் அதை குறிப்பிடலாமே. வேறு ஏதேனும் இருந்தால் அதையும் சொல்லலாமே.

சரி நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். சிவாஜியை விமர்சனம் செய்கிறார்கள். அதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொன்னால் அந்த நிலைப்பாட்டை அனைத்து நேரங்களிலும் எடுப்பதுதானே முறை? அப்படியிருந்தால்தானே அது சரியான stand? இல்லை இந்த நிலைப்பாடு ஒரு சில உறுப்பினர்களுக்கு எதிராக மட்டும்தானா? ஏன் கேட்கிறேன் என்றால் இங்கே அப்படி பார்க்க முடியவில்லையே?

நடிகர் திலகத்தின் படம் பற்றி ஒரு விமர்சன கருத்து வந்தால் ஆவேசப்படும் நாம் நடிகர் திலகம் பற்றிய மோசமான முற்றிலும் உண்மைக்கு புறம்பான விமர்சனம் இந்த திரியில் மாற்று முகாம் ரசிகர்களால் பதிவு செய்யப்பட்டபோது யாருமே வாயையே திறக்கவிலையே சார்? நானும் கோபாலும் மட்டும்தானே அதை எதிர் கொண்டோம்! [இதில் RKS அவர்களை நான் சேர்க்கவில்லை. காரணம் நடிகர் திலகம் பற்றி எந்த பதிவு வந்தாலும் அதற்கு எதிர் வினையாற்றுபவர். அவர் பலம் பலவீனம் இரண்டுமே அதுதான்]

ராஜ ராஜ சோழன் பற்றி கோபால் தன் கருத்தை பதிந்தபோது பொங்கியெழுந்த நாம் அதே ராஜ ராஜ சோழன் பற்றிய முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலை இந்த திரியில் மாற்று முகம் நண்பர் ஒருவர் பதிந்தபோது அதை எதிர்க்க யாருமே வரவில்லையே. இன்று சிவாஜிக்காக எதையும் செய்வேன் என்று வாள் சுழற்றும் பட்டாக்கத்திகளை விடுங்கள். இதுவும் இது போன்ற நடிகர் திலகத்தை தாக்கும் பல பதிவுகள் வந்த போது ஒரு பிச்சுவா கத்தி கூட உறையை விட்டு வெளியே வரவில்லையே! அது என்ன நியாயம்? ஒரு வேளை வேறு சில நடிகர்களின் ரசிகர்கள் அல்லது எங்களுடன் அரசியல் வேறுபாடு கொண்டவர்கள் ஏதாவ்து சொன்னால்தான் நாங்கள் அதை எதிர்போம். எம்ஜிஆர் ரசிகர்கள் சிவாஜியை குறை சொன்னால் நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்பதுதான் சரியா?

பதிவுகளைப் பொறுத்தவரை இரண்டு வகை உண்டு. opinion based posting மற்றும் fact based posting. முதல் வகையில்பட்ட பதிவு என்பது ஒரு படம் அல்லது அதில் நடித்த நடிகர் பற்றிய தங்கள் கருத்தை பதிவு செய்வது. இரண்டாவது ஒரு உண்மையை அடிப்படையாக கொண்டு எழுதப்படுவது. ராஜ ராஜ சோழன் படம் பற்றிய கருத்து முதல் வகையில்படும். ராஜ ராஜ சோழன் 98 நாட்கள் ஓடியது என்பது இரண்டாம் வகையில்படும். இங்கே முதல் வகையில் படும் விமர்சனம் நேர்மையாக எழுதப்பட்டிருந்தால் அதை அனுமதிக்கலாம். அதே நேரத்தில் விஷமத்தனமான நோக்கத்துடன் எழுதபட்டிருந்தால் அதை எதிர் கொண்டு நம்முடைய பதிலை முன் வைக்கலாம். பதிவு வரம்பு மீறியதாக இருப்பின் அதை நீக்குவதற்கு முயற்சிக்கலாம். நான் மாடரேட்டர் ஆக பணியாற்றிய இந்த ஆறு மாதக் காலத்தில் இந்த பாணியைத்தான் கையாண்டேன். அதில் சிலருக்கு திருப்தியில்லை என்றால் நான் என்ன சொல்வது?

என்னை விட அனுபவத்திலும் சிவாஜி புகழ் பாடுவதிலும் முன்னோடிகளுமானவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு நான் தகுதியானவில்லை. என்னைப் பொறுத்தவரை நடிகர் திலகம் பற்றிய பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்படுவதிலும், அவரைப் பற்றிய வெளிவராத சுவையான செய்திகளை இங்கே பகிர்ந்துக் கொள்ளவும், அவரின் நடிப்பு சாம்ராஜ்ஜியத்தையும் திரையுலக பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் பதிவு செய்யவும் இந்த தளத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். நடிகர் திலகம் பற்றிய தவறான விஷமத்தனமான பதிவுகளுக்கு நான் என்றுமே துணை போனதுமில்லை. போகப் போவதுமில்லை.

என்னுடைய தனிப்பட்ட நான் வேறு. இந்த திரியில் இயங்கும் நான் வேறு. இங்கே நான் என்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. இந்த திரியைப் பொறுத்தவரை நானா? நடிகர் திலகமா? என்றால் என்றென்றும் நடிகர் திலகம்தான். நான் முன்பே ஒரு முறை சொன்னது போல் என்னை யார் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்தாமல் இங்கே பதிவிடுவேன். இயற்கை என்னை அனுமதிக்கும் வரை. அதற்காக என்னை போலவே அனைவரும் இருக்க வேண்டும் என்று நான் சொல்வது எந்த விதத்திலும் சரியாக இருக்காது.

இங்கே பதிவிடுவது என்பது ஒரு கடமைக்கு செய்வது போன்றதில்லை. இதன் மூலம் கிடைப்பது மன திருப்தி மற்றும் சந்தோசம். அந்த நிறைவிற்காகவே பதிவிடுகிறேன். இது ஒரு பயணம். அதில் என்னிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பாதையில் எப்படி பயணப்படுகிறேன் என்று பாருங்கள்.

என்னை பல வருடங்களாக தெரிந்தவர்களுக்கு இதற்கு மேல் நான் என்ன சொல்வது?

அன்புடன்

Murali Srinivas
19th November 2014, 01:57 AM
பட்டாக்கத்தி என்ற பெயரில் பதிவிடும் நண்பருக்கு,

நான் முன்பே ஒரு முறை கூறியிருக்கிறேன். இங்கே வருவதற்கு வேஷம் தேவையில்லை. ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறீர்கள். முதலில் கிருபா பிறகு ஒய்வு பெற்ற தமிழாசிரியர் ராம் தாஸ் இப்போது பட்டாக்கத்தி. யார் எப்படி இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை நடிகர் திலகம் திரியில் நான் உண்மையை நேர்மையை விரும்பவன். அதை முழுமையாக கடை பிடிக்க வேண்டும் என்று முயல்பவன். எனவேதான் உங்கள் பதிவுகளுக்கு நான் பதிலளிக்கவில்லை. [இந்த லட்சணத்தில் நீங்கள் ஆதிராம் அவர்களை கிண்டல் செய்கிறீர்கள்].

இப்போதும் உங்கள் பதிவிற்கு பதிலளிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் என் செய்கைகளுக்கு பல தவறான உள்நோக்கங்கள் கற்பித்து நீங்கள் எழுதியுள்ள பதிவிற்கு விளக்கம் சொல்லவில்லையென்றால் சிலரேனும் அதை நம்பக்கூடும் என்ற காரணத்தினால் இதை எழுதுகிறேன்.

யார் நிர்பந்தத்திற்கும் பயந்து வளைந்து கொடுப்பவன் அல்ல நான். பதிவுகளில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடும் எனக்கில்லை. நான் நெருங்கி பழகும் கோபாலின் பதிவுகளையே அது முறையற்றதாக அமையும்போது நீக்க தயங்கியதில்லை. உங்களுக்கு நண்பர் ஜோ அவர்களை பிடிக்கவில்லையென்ற காரணத்திற்காக எது வேண்டுமானாலும் எழுதுவீர்கள் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும், அப்படிதானே! மற்றொன்றையும் இங்கே கூற வேண்டும். ஜோ என் நண்பர்தான். என்னை விட பல வயது இளையவராக இருப்பினும் [நண்பர் சுவாமிநாதனைப் போலவே ஜோ அவர்களும் 1972-ம் வருட சந்ததி] நண்பரே. அதே நேரத்தில் நாங்கள் இருவரும் அரசியலில் தீவிர கருத்து வேறுபாடு கொண்டவர்கள். திராவிடமும் தேசியமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த உரையாடல்களை எல்லாம் நேரமிருந்தால் அரசியல் திரியில் போய் படித்துப் பாருங்கள். சூடு பறந்த அந்த நேரத்திலும் எங்கள் கண்ணியத்தை விட்டு விலகியதில்லை. இதை இங்கே பதிவு செய்ய காரணம் திரியின் புதிய வாசகர்கள் இங்கே நான் ஒரு ஒருதலைபட்சமாக நடந்துக் கொண்டதாக நினைத்து விடக் கூடாது என்றுதான்.

நடிகர் திலகத்தை தாக்கி எழுதப்பட்ட பதிவுகளை நான் நீக்கவில்லை என்று சொல்லி அதற்கு உதாரணமாக ராஜா என்ற ராஜாராமின் பதிவுகளை ஜாடையாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள் [இங்கேயும் நேரிடையாக இல்லாமல் ஜாடையாக]. நான் மாடரேட்டராக ஆன பிறகு நண்பர் ராஜாராம் எப்போதெல்லாம் வரம்பு மீறி எழுதியிருக்கிறாரோ அப்போதெல்லாம் அதை நான் நீக்கியிருக்கிறேன் என்பதனை திரியினில் தொடர்ந்து வருபவர்கள் அறிவார்கள்.

நண்பரே முகமூடியை கழட்டி விட்டு நடிகர் திலகத்தின் நல்ல ரசிகராக இங்கே வருகை தாருங்கள். நல்ல பதிவுகளை தாருங்கள். இல்லை இப்படிதான் இருப்பேன் என்று நீங்கள் முடிவு கட்டியிருந்தால் அப்புறம் நான் என்ன சொல்வது?

அன்புடன்

RAGHAVENDRA
19th November 2014, 07:10 AM
முரளி சார்
தங்களிடம் நான் எதிர்பார்த்த மாதிரி தான் பதிவு வந்திருக்கிறது. உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக ஒருவர் நடிகர் திலகத்தைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். அதற்கு விளக்கமே தேவையில்லை. யாரும் விளக்காமலா நண்பர்களின் மனம் புண்பட்டிருக்கிறது.

மாற்றுத்திரியினர் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு என்னுடைய நிலைப்பாட்டை நான் முன்பே கூறியிருக்கிறேன். வசூல் விவரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதை நான் பலமுறை விளக்கியிருக்கிறேன். அந்தக் காலத்து வசூல் விவரங்கள் பெரும்பாலும் ரசிகர் மன்றங்களின் நோட்டீஸ் அடிப்படையில் தான் தகவல்கள் பரிமாரிக் கொள்ளப்படும். மிக அபூர்வமாகவே விநியோகஸ்தர்கள் அல்லது படம் சம்பந்த்ப்பட்டவர்கள் வசூல் விவரங்களை விளம்பரங்களில் வெளியிட்டுள்ளார்கள். அந்நாளைய வசூல் விவரங்களை இக்காலத்தில் நிரூபிக்க முடியாது. அதற்கு சம்பந்தப்பட்ட அரசாங்க துரைகளின் ஒத்துழைப்புடன் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். இது நடைமுறையில் மிகவும் கஷ்டமான ஒன்று. இந்த அடிப்படையில் தான் நான் இந்த விஷயங்களில் தலையிடுவதில்லை. அதே போல நூறு நாட்கள் வெள்ளி விழா போன்ற சாதனைகளை யாராவது ஒருவர் சுட்டிக்காட்டினால் போதும். ஒரே விஷயத்தை பலரும் எழுத வேண்டியதில்லை.

மாற்றுத்திரியினர் தகவல் பிழை தந்தாலும் எனக்கு நினைவு தெரிந்து நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைத் தரம் தாழ்த்தி அவர்கள் ஒரு போதும் எழுதியதில்லை. இன்று வரை அங்கிருக்கும் ஒவ்வொருவருமே தகவல் அடிப்படையில் தான் விவாதங்களை வைக்கிறார்களே தவிர நடிகர் திலகத்தை கீழ்த்தரமாக விமர்சித்ததில்லை. நடிகர் திலகத்தின் புகழைக் கொச்சைப்படுத்தியதில்லை.

இதை செய்வது இங்கிருக்கும் நண்பர்கள் தான். மாற்று முகாம் நண்பர்கள் பட வசூல் சாதனை விவரங்களைப் பற்றி எழுதும் போது தங்களுக்கு ஏற்படும் நியாயமான கோப உணர்வு நம்முடைய திரியிலேயே நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு அவரையே விமர்சிக்கும் போது ஏன் வருவதில்லை என்று நான் கேட்கலாமல்லவா. தாங்கள் வரிசையாக குறிப்பிட்டுள்ள மற்றும் மற்ற நண்பர்கள் மனம் புண்பட்டதை விட ஒரு நபரின் விமர்சனம் தங்களுக்கு நியாயமாக படுகிறதா. அந்த பதிவு அப்படியே இருப்பதிலேயே தங்களுடைய நிலைப்பாட்டின் மேல் ஒரு ஐயத்தினை ஏற்படுத்தக்கூடிய வாயப்புள்ளதைத் தாங்கள் ஏற்க மறுக்கிறீர்களா.

நான் கேட்கிறேன். ஏன் சார் நடிகர் திலகத்தை விமர்சிக்க வேண்டும். அதற்கு என்ன அவசியம் இப்போது. இதனால் நண்பர்கள் அடையக்கூடிய லாபம் என்ன. தாங்களும் அதற்கு ஏன் துணை போக வேண்டும்.

உலக மகா கலைஞனை விமர்சித்து இதனால் தாங்கள் நேர்மையானவர்கள் என்று தண்டோரா போட்டு ஆஸ்கார் விருது பெறப்போகிறார்களா... ஒரு நடிகன் என்றால் அனைத்து தரப்பு பாத்திரங்களையும் ஏற்று நடிக்க வேண்டும். அதைத் தான் நடிகர் திலகம் செய்தார். இதில் அவரை விமர்சிப்பதற்கு என்ன தேவை. முடிந்தால் பாராட்டுங்கள். இல்லையேல் ஒதுங்கி நில்லுங்கள். நடிகர் திலகத்தின் திரியிலேயே வந்து அவரையே விமர்சிப்பார்களாம். அதற்கு அனைவரும் அமைதியாக இருக்க வேண்டுமாம். இது என்ன சார் நியாயம்.

நடிகர் திலகத்தை விமர்சிப்பதை நாம் எதிர்கொள்ள வேண்டுமாம். அப்படி எதிர்கொண்டு பதில் போட்டால் அந்த பதில் பதிவு அ்ப்படியே இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. எழுதுபவர்கள் எழுதிவிட்டுப்போய் விடுவார்கள். அவர்களுக்கு நாம் பதில் சொன்னால் நமக்கு தான் அறிவுரை. ஒரு பதிவிற்கு பட்டாக்கத்தி என்ற ஒரு பதிய பதிவர் பதில் போட்டார். அவர் யாரோ எவரோ.. அது உண்மையான நபரோ அல்லது போலியோ.. ஆனால் அவர் எழுதிய பதிவில் இருந்த ஒவ்வொரு வரியும் நம் ஒவ்வொரு ரசிகரின் உள்ளத்தையும் பிரதிபலிக்கிறது அல்லவா. அந்தப் பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நடிகர் திலகத்தைப் பற்றிய விமர்சனம் மட்டும் அப்படியே இருக்கிறது.

மாடரேட்டர் என்பது நடுநிலையக இருக்க வேண்டியது தான். அது கருத்துப் பரிமாற்றங்களில் கண்ணியத்தைத் தாண்டும் போது தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நடிகர் திலகத்தை விமர்சிக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்பது என் நிலைப்பாடு. அப்படி தொடர்ந்தால் அந்த விமர்சனங்களுக்கு நானும் உடந்தை என்பதாகத் தான் என் மனதிற்கு படும். இந்த நிலைப்பாட்டில் எந்தத் தவறுமில்லை.

என் மனசாட்சியைப் பொறுத்தவரையில் நடிகர் திலகத்தை நான் தெய்வமாக வழிபடுகிறேன். இங்கிருந்து தான் அதை செய்யவேண்டும் என்பதில்லை. இங்கு நேர்மை இருப்பதாக என்றைக்கு என் மனதுக்கு படுகிறதோ அப்போது நான் மீண்டும் வருகிறேன். மற்றபடி நான் நடிகர் திலகம் ஃபாரமில் நான் தொடங்கிய மற்ற திரிகளில் குறிப்பாக படப்பட்டியல் திரியில் முடிந்த வரையில் விரைவாக முடித்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் விலகி விடுகிறேன்.

யார் வேண்டுமானாலும் மனம் போன போக்கில் நடிகர் திலகத்தை விமர்சனம் செய்து கொள்ளுங்கள். பேப்பரில் விமர்சனம் வந்தால் மட்டும் ஓடிப்போய் பத்திரிகைகளுக்கு பதிலறிக்கை கொடுத்து விட்டு இங்கு அமைதியாக இருக்கும் நண்பர்கள் உள்பட பலருக்கும் இதுவரை எனக்கு ஒத்துழைப்பு தந்தமைக்காக என் உளப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய இந்தப் பதிவு கூட இங்கிருக்குமோ என்ற நம்பிக்கையில்லை. இருந்தாலும் இருக்கும் வரை படிக்கக் கூடிய ஒரு சிலராவது என் நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டால் அதுவே போதும்.

மாற்றுத் திரி நண்பர்கள் கூட செய்யாத விமர்சனங்கள் இங்கே இடம் பெறுகின்றன. இதையெல்லாம் அந்த ஆண்டவன் தான் கேட்க வேண்டும்...

நம்மைப் பொறுத்தவரையில் நடிகர் திலகமே தெய்வம்... அவர் பணியில் தொடர்ந்து சிறப்பாக ஈடுபட அவருடைய ஆசியை வேண்டிக் கொள்கிறேன்.

Murali Srinivas
19th November 2014, 10:52 AM
சிவாஜியின் புகழை பரப்புவதும் அதை இன்றைய தலைமுறைக்கு கடத்துவதும் தான் நோக்கமென்றால் கமல்ஹாசனை திட்டுவதால் அது நடந்து விடாது . சிவாஜி என்றால் பிரபுவின் அப்பா , விக்ரம் பிரபுவின் தாத்தா என புரிந்து வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு .. தான் கொடுக்கும் பேட்டிகளிலெல்லாம் , தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம் சிவாஜி தான் என் வானத்து சூரியன் , சிவாஜி தான் என் குரு , சிவாஜி தான் என் தந்தை என தொடர்ந்து பதிவு செய்து வருபவர் கமல் . கமல்ஹாசன் என்ற இன்றைய தலைமுறை மேதமையை நேரடியாக தெரிந்து வைத்திருக்கின்ற இன்றைய தலைமுறையின் பலர் கமல்ஹாசன் இப்படிச் சொல்வதாலேயே சிவாஜி பால் ஆர்வம் கொண்டு அறியமுற்பட்டு சிவாஜியை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முனைவதை கண்கூடாக கண்டிருக்கிறேன் . ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால் இன்றைய தலைமுறை அறிந்த மாபெரும் நடிகர்கள் கமல் , ரஜினி இருவருமே சிவாஜி ரசிகர்களாக இருப்பது .. கமல் அளவுக்கு ரஜினி அடிக்கடி சிவாஜி பற்றி பேசவில்லையெனினும் தானும் சிவாஜியின் வழி வந்தவன் , அவர் ரசிகன் என ரஜினியும் பல முறை தெளிவாக பதிந்திருக்கிறார். எனவே கமல் , ரஜினி போன்றவர்கள் நம் சக நடிகர் திலகம் ரசிகர்கள் .. நாம் பக்கம் பக்கமாக எழுதுவதை விட அவர்களின் ஒரு வார்த்தை ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் ..அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் நடிகர்திலகத்தின் பெருமையை அறிந்து தெரிந்து கொள்ள முற்படுவோர் பலர் .. அவர்களை இன்னும் நம் பக்கம் ஈர்ப்பது தான் அழகே தவிர கமல்ஹாசனையும் , ரஜினிகாந்தையும் சிவாஜியின் பொருட்டு குறை சொல்வதால் இம்மியும் சிவாஜியின் புகழுக்கு எற்றம் வந்து விடாது என்பதை நாம் உணர்வது நலம் .

ராகவேந்தர் சார்,

என் பதிவை நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் உங்கள் பதிவை நான் எதிர்பார்க்கவில்லை. சார், மீண்டும் மீண்டும் நடிகர் திலகத்தை விமர்சித்தார் என்ற குற்றசாட்டை சொல்லுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் ஜோ எழுதிய பதிவை மேலே தந்துள்ளேன். இதில் நடிகர் திலகம் எங்கு விமர்சிக்கப்படுகிறார் என்று நீங்கள் சுட்டிக் காட்டினால் நலம். என் சிற்றவிற்கு எட்டவில்லை. இங்கேயுள்ள உறுப்பினர்களை விமர்சனம் செய்தார் என்று சொல்லுங்கள். ஒப்புக் கொள்கிறேன். அதற்கான என் எதிர் வினையையும் ஏற்கனவே பதிந்து விட்டேன்.

மாற்றுத் திரி நண்பர்களுடன் உங்களை சண்டை போட சொல்லவில்லை. ஏன் எனக்கும் கூட அவர்கள் நண்பர்களே. ஆனால் அதற்காக அவர்கள் நடிகர் திலகத்தை தரம் தாழ்ந்து விமர்சிக்கவில்லை என்று சொன்னால் உண்மை மறைக்கப்படுகிறது என்று அர்த்தம். அதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. நிழல் அண்ணன் கைவிட்டார், பாண்டிச்சேரியில் காசு கொடுத்து செவாலியே பட்டம் வாங்கபப்ட்டது, சாதி பெயரை சொல்லி கூப்பிடுவார், தியாகம் படத்திற்கு டாஸ்மாக் கடையில் இலவசமாக டிக்கெட் கொடுத்தார்கள், நாலு பக்கம் வேடருண்டு பாடல் காட்சியில் இப்படி இப்படி செய்வார், சோகபார்ட் சொங்கிதுரை போன்றவை எல்லாம் மாற்றுதிரியினர் முன் வைத்த தரமான விமர்சனங்கள் என்று நீங்கள் சொன்னால் அதற்கு மேல் நான் உங்களிடம் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை. இவ்வளவு ஏன் நீங்கள் சாந்தி திரையரங்கில் முன்னெடுத்து நிறுவிய நடிகர் திலகத்தின் படப் பட்டியலில் நூறு நாட்கள் படங்களைப் பற்றி பொய்யான தகவல்களை தந்திருக்கிறீர்கள் என்ற விமர்சனமும் உங்களுக்கு ஏற்புடையதுதான் போலும்.

நடிகர் திலகத்தை மாற்று முகாமினர் கூட விமர்சிக்காத அளவிற்கு நம் திரியில் விமர்சிக்கப்பட்டார் என்று சொல்கிறீர்களே அவை எது என்று சொன்னால் நல்லது.

சார், நான் மீண்டும் சொல்கிறேன். இந்த திரியை பொறுத்தவரை தனிப்பட்ட நம்மை விட நடிகர் திலகத்தை முன்னிறுத்துவோம். அதுவே என வேண்டுகோள்.

அன்புடன்

Gopal.s
19th November 2014, 10:58 AM
ராகவேந்தர் சார்,



முரளி சொன்னதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் வீண் தர்க்கம் செய்வதில் அர்த்தமில்லை.


1)ஒரு நடிகராக,மற்றோருக்கு வெறி பிடித்த ரசிகர் கும்பல் இருக்கலாம். அவர்கள் சிறு வயதில் தீவிர ரசிகர்களாக உருமாற்றப்பட்டு, அந்த வெறியிலே தொடர்பவர்கள். அவர்கள் படு கீழ்த்தரமான படங்களை/கற்பனை வளமற்ற நடிப்பை கூட ஆஹா ஓஹோ என்பார்கள். இவர்களுடன் பொது மக்கள் இணைவதேயில்லை. ஆனால் சிவாஜியை பொறுத்த அளவில் அவரை ஒரு நடிகராக தமிழறிந்த அனைவரும் விரும்புகிறார்கள். வெவ்வேறு மனநிலைகளில். வெறி பிடித்தவர்கள் கம்மி. என்னையே எடுத்து கொண்டால் ,என் அன்னையால் சிவாஜி அறிமுகமாகி ,புதிய பறவை பார்த்து 6 வயதில் ரசிகனானவன். அப்போது எனக்கு பல ஆதர்சங்கள் உண்டு. ஆனால் ,நான் சிவாஜி ரசிகனாக தொடர்வது ,என் தேர்ந்தெடுப்பு .அவருடைய நடிப்பு எனக்கு தொடர்ந்து அளிக்கும் பரவசம்,புதுமை,பன்முகத்தன்மை. ஆனால் அவர் நடித்த எல்லாம் உன்னதமே என்று சொல்ல வேண்டும் ,மாற்று திரியினரை பாருங்கள், எல்லாவற்றையும் புகழ்ந்தே எழுதுகிறார்கள் என்றால், நான் பெருமையாக சொல்கிறேன். இரண்டு எழுத்தாள நண்பர்கள், மூன்று பிரசித்தி பெற்ற இயக்குனர்கள், இரண்டு பேர் பெற்ற பதிவர்கள், இதற்கு மேல் எந்த நடிகனை பற்றி எந்த காலத்திலும் எழுத பட்டதில்லை என்று சொன்னது போதும்.

நான் அவர்களுக்கு சொன்ன பதில், நான் எழுதிய கரு பொருளின் தன்மை அப்படி. வேறு எவனையும் பற்றி இப்படி எழுதும் அளவு,எவனும் சாதித்ததில்லை.இன்னும் எழுத எவ்வளவோ உண்டு என்று.

ஆனாலும் விமரிக்கும் உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன். வாசு,நீங்கள் எவ்வளவு வலியுறுத்திய போதும்.



2)ஜோவின் கருத்து எனக்கு உடன்பாடுடையதே. மற்ற நடிகர்கள், தங்கள் ஒருமுனை பட்ட ,கற்பனை வளமற்ற ,பொழுது போக்கு படங்களால் சிறுவர்களை கவர்ந்து தக்க வைக்கிறார்கள்.வாழ்நாள் முழுவதும். அவர்களை பற்றி இரு வரி கூட எழுத தகுதியிருக்காது. நடிகர்ததிலகமோ, 1952 முதல் 1957 வரை தன்னுடைய புதுமை மிகுந்த வேறு பட்ட நடிப்பினால் பண்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். 1958 முதல் 1965 வரை தாய்மார்கள்,தந்தை மார்களின் பிடித்த நாயகன். 1966 முதல் 1975 வரை நகர கிராம,சிறுவர்,இளைஞர்,முதியவர், அனைவரின் கனவு ஸ்டார். 1976 முதல் 1985 வரை தன் முற்கால ரசிகர்களாலும், போட்டியின்மையாலும் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற அளவில் கொடி நாட்டினார். இந்த 1958-1965,1976-1985 காலகட்டங்களில் சிறுவர்களை கவர்ந்து தக்க வைக்கவில்லை.படங்களின் தன்மை அப்படி.



3)ஒரே படத்தில் sampling முறையில் அவர் திறமை அளக்க பட முடியாது. அவரை தொடர வேண்டும்.அவரை பற்றி எடுத்து சொல்ல வேண்டும். அது சுலபமல்ல. வேதங்களை,பகவத்கீதையை, கம்ப ராமாயணத்தை எல்லாரும் உடனே புரிந்து கொள்ளவா முடியும்?நடிகர்திலகத்தின் நடிப்பு அத்தகைய வீச்சு கொண்டது. அவர் நடிகர்களின் நடிகன். இதை எடுத்து சொல்ல பலதர பட்ட மனிதர்கள் நமக்கு தேவை.

அதனால் எல்லா தர பட்ட மக்களிலும் (நடிகர்கள் உட்பட)நமக்கு பரப்புரையாளர்கள் அவசியம்.இது ராஜேஷ்குமார் எழுத்து போன்ற படைப்புகளுக்கு தேவையில்லை .

ஜோ சொன்னதுடன் 100 சதவிகிதம் உடன் படுகிறேன்.(சொன்ன விதம் சிறிது கசப்பானது)



4)சிவாஜியை ஆத்மார்த்தமாக பூஜிப்பவர் கமல்,ரஜினி போன்றோர். அடுத்த திரியை பாருங்கள். யார் புகழ்ந்தாலும் எடுத்து போட்டு அர்ச்சனை செய்யும் போது ,நாம் மட்டும் புகழ்வோரை இகழ்ந்து,நதி மூலம்,ரிஷிமூலம் பார்ப்பதா?அதுவும் ரவிகிரன் போன்ற நண்பர்களை விட எதிரிகளே மேல் என்ற அளவில் முதிர்ச்சியில்லாமல் எழுதி தள்ளுகிறார்.கமலை அனாவசியமாக விமர்சிப்பது அவருடைய பொழுது போக்கு.பல பிறவிகளில் ,பல பெயர்களில் இதையே தொடர்கிறார். இது மிக கண்டிக்க தக்கது.



5)பட்டா கத்தி என்ற ராமதாஸ் என்ற கிருபா, உங்கள் எழுத்து நன்றாக உள்ளது.மாற்று திரி கலைவேந்தன் போல உங்கள் பங்களிப்பை தொடருங்கள்.ஆனால் negative tone குறையுங்கள்.



எனக்கு எழுதும் ஆசையை குறைக்கிறார்கள். இங்கிருந்தால் மாற்றுதிரி நண்பர்களை போலத்தான் எழுத,பதிவளிக்க வேண்டுமென்றால் நான் தயாரில்லை. சிவாஜி வேறு பட்ட உன்னதர். அவர் ரசிகர்களும் அப்படியே. அதனால்தான் நம் படங்களும்,எழுத்துக்களும் பொது ரசிகர்களாலும் நேசிக்க படுகின்றன.



வாசு,ராகவேந்தர் - நீங்கள் உங்கள் இஷ்ட படி திரி நடந்தால்தான் பங்களிப்பு. இல்லையென்றால் வெளிநடப்பு என்று நம் ஒற்றுமையை,தனித்தன்மையை குலைக்கிறீர்கள்.இந்த திரியில் உங்களுக்குதானே உரிமை அதிகம்?எங்களை குட்டி விட்டு தொடர வேண்டியதுதானே? ஒரு சாதாரண டிராபிக் குற்றத்துக்கு,மரண தண்டனையா? யாரோ ஒருவர் ஏதோ உடன்பாடில்லாததை பேசினால் வருஷ கணக்கில் புறக்கணிப்பா?



வாசு -உங்கள் ஆடையழகர்,கதாநாயகியர் வரிசைக்காக ஏங்கியுள்ளேன். வாருங்கள்.



ராகவேந்தர்- நீங்கள் எங்களை கண்டியுங்கள்.திட்டுங்கள். குட்டுங்கள்.ஆனால் மனம் வெறுத்து வெளியேற வேண்டாம். உங்கள் பணி எங்களுக்கு தேவை.

Russellbpw
19th November 2014, 11:04 AM
Raghavender Sir,

With due respect to your services to Nadigar Thilagam - be it is direct or indirect.

Our people have never initiated any anti-slogans or anti-discussion in the other thread. We have always responded to their indirect or direct attacks that was harped on by couple of them of the other thread whose ONLY AGENDA was to do so. And, you have comfortably forgotten about that ! I do not know if it is deliberate or by oversight YET, you did that and this was not expected from you.

I agree to your point that few of our own people have criticized about NT and his few films claiming that they have the right to do so & That is 100% wrong i too agree. They do not have any right interms of NT....as MR Radha says in one of the interview...2 rooba kuduththu ticket vaanginiyaa..padam paathiyaa..poite irukkanum...adha aaraaichi pannadhe.., is absolutely right.

Infact, Can Mr. Gopal who does that quite often as his right, can he demonstrate how that scene need to be performed ? He cannot !!! So, such people should avoid criticizing NT if they are unable to prove that their version is better..! This is my opinion !

Kovilukku pona saami kumbudu....kovilukku vandhu naan saamiya kumbuduren...adhanaanala enakku saamiya vimarsikkum urimai undunnu mattum solladhe...is my contention.

RKS

Gopal.s
19th November 2014, 11:10 AM
Infact, Can Mr. Gopal who does that quite often as his right, can he demonstrate how that scene need to be performed ? He cannot !!! So, such people should avoid criticizing NT if they are unable to prove that their version is better..! This is my opinion !
RKS
I am ready to prove it Ravikiran.

Russellbpw
19th November 2014, 01:03 PM
I am ready to prove it Ravikiran.


There you are !!! ....So you have been watching us all these days and still you keep quiet to see where it lands !!!!


Please prove it Gopal Sir !

You have been writing about so many methods of acting / performance with your experience of viewing the same across the world.

Kindly act and video record by performing for the following scene in your own way ..rather as per your claim the right way of doing it and publish it here !

I will evaluate your performance Gopal sir ! :-D

Let's see if you are able to make it first, if you are able to do that, then your critic on NT film could follow !!

please take this as an open challenge from me ! Let us see who wins !

http://www.youtube.com/watch?v=grg1KgK0r8I

Regards
RKS

Gopal.s
19th November 2014, 01:16 PM
ஆதிராம்,



நீங்கள் பெட்டியை திறந்து விட்டீர்கள் என்பதாலும், வாசு-ராகவேந்தர் ,இந்த திரியின் ஒருங்கமைவுக்கு என்னுடைய சில விமரிசனங்கள் குந்தகம் விளைவிப்பதாக கருதினர்-கருதிகிறர் -கருதுவர்.



நானாக எந்த மோசமான விமரிசனமும் அவர் மீது வலுவில் வைத்ததில்லை. அவரை உலக அளவில் நிறுவ ,நாம் தேர்ந்துடுத்து செயல் பட வேண்டும் என்று சொன்னது முதல் எதிர்வினையாக ,என் பக்தியை விமர்சனத்திற்குள்ளாக்கியது. அடுத்து ஆஸ்கார் பற்றி விவாதிக்கும் போதும், நம் தேர்ந்தெடுப்பு கவனமாக இருக்க வலியுறுத்தி ,சில விவாதங்கள் நடந்தன. அடுத்து சிரஞ்சீவி, நடிப்பின் இலக்கணம் திரியில் பதிய பெற்றதால் சில வேண்டாத விவாதங்கள். இவற்றில் சரி-தவறு என்று பேசாமல் உட்புகாமல், கேட்கிறேன். சிவாஜியை பற்றி பண்புடனா மாற்று திரியினர் எழுதினார்கள்?

நாங்கள்தான் விமரிசித்து மாண்பை குலைத்து விட்டோமா?



எல்லோரும் மற்ற திரிகளின் மாண்புமிகு பெருமதிப்பு பெற்று உயரும் போது (பின்னே இப்படி நன்னடத்தை சான்றிதழ் அளித்து ?),நம் தலையெழுத்து இரண்டிலும் கெட்ட பேர்.



இந்த அழகில், எப்போதோ ஆடிக்கு ஒரு முறை,அமாவாசைக்கு ஒன்று என வரும் கமல் ரசிகர்களுக்காக கமலை புகழ்கிறேன் என்று ஒரு பிரகஸ்பதி.(கடலூர் அருகே பாண்டியிலிருந்து). நானே ஒரு கமல் ரசிகன். இது எனக்கு பெருமையே.

Russellbpw
19th November 2014, 02:08 PM
4)சிவாஜியை ஆத்மார்த்தமாக பூஜிப்பவர் கமல்,ரஜினி போன்றோர். அடுத்த திரியை பாருங்கள். யார் புகழ்ந்தாலும் எடுத்து போட்டு அர்ச்சனை செய்யும் போது ,நாம் மட்டும் புகழ்வோரை இகழ்ந்து,நதி மூலம்,ரிஷிமூலம் பார்ப்பதா?அதுவும் ரவிகிரன் போன்ற நண்பர்களை விட எதிரிகளே மேல் என்ற அளவில் முதிர்ச்சியில்லாமல் எழுதி தள்ளுகிறார்.கமலை அனாவசியமாக விமர்சிப்பது அவருடைய பொழுது போக்கு.பல பிறவிகளில் ,பல பெயர்களில் இதையே தொடர்கிறார். இது மிக கண்டிக்க தக்கது.

ராகவேந்தர்- நீங்கள் எங்களை கண்டியுங்கள்.திட்டுங்கள். குட்டுங்கள்.ஆனால் மனம் வெறுத்து வெளியேற வேண்டாம். உங்கள் பணி எங்களுக்கு தேவை.

திரு. கோபால்

உண்மைகள் உங்களுக்கு மற்றும் ஒருதலை பட்சமாக எப்போதும் நடப்பவர்களுக்கு, கசக்கும்போது, அதை எழுதுபவன் நான் முதிர்சியற்றவனாவதும், எழுத்து முதிர்ச்சியற்றதாவதும் இயற்கையே.!

நீங்கள் என்னதான் என்னை பிராண்டிங் செய்ய நினைத்தாலும், என்னுடைய எழுத்துக்களை படிப்பவர்களுக்கு அதில் உள்ள ஞாயம் நிச்சயமாக புரியும். அதே சமயத்தில் உங்கள் எழுத்தை இதுவரை படித்தவர்க்கு உங்களுடைய விளையாட்டும் புரியும் !

திரு கமல் அவர்களை தாக்கி எழுதி பொழுதை போக்கும் நிலையில் நான் இல்லை. திரு கமல் அவர்களை பற்றி நான் அறியாதவனும் அல்ல !

மேலும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதவில்லையே என்ற நிலையில் இருப்பவன் நான்.

பல நூறு ஆட்கள் வேலைசெய்யும் ஒரு நிறுவனத்தில் விற்பனை துறையின் உயரிய பொறுப்பில் இருப்பவன் நான். தங்களை போல பல நாடுகள் போகவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பல ஊர்களுக்கு வேலை நிமித்தமாக அடிக்கடி சென்று வருபவன். போக்கும் அளவிற்கு பொழுது என்னிடம் இல்லை. :-) அதுவும் பொழுதுபோகிர்க்காக திரு கமலை பற்றி குறை கூறுபவன் நான் அல்ல.

ஆகையால் கட்டபொம்மனில் நடிகர் திலகம் கூறுவதை போல "அந்த கதையை இங்கு விடாதே அப்பனே ! "

மாற்று திரியினரை பற்றி உரைத்தீர்கள். யார் புகழ்ந்தாலும் அவர்களை எடுத்துபோட்டு அர்ச்சனை செய்கிறார்கள் என்று. ....மிக மிக சரியே..! அவர்களிடம் உள்ள பல நல்ல குணங்களில் இதுவும் ஒன்று.

முதலில் அதை கூட நீங்கள் செய்தீர்களா என்று எண்ணி பாருங்கள் !

அட... அதை கவனித்த நீங்கள் எந்த தருணத்திலும் அவர்களுக்கு ஏதாவது பிடிக்காத படமோ, performance இல்லை என்றால் அதை நீங்கள் அல்லது அவ்வப்போது திரிக்கு வரும் உங்களுடைய ஒரு சில நண்பர்கள் நடிகர் திலகம் படம் அல்லது அவர் நடிப்பை விமர்சனம் என்ற போர்வையில் அவமான படுத்துவதை போல மக்கள் திலகத்தை அங்குள்ள அனைவரும் அவமானபடுத்தும் வகையில் பொதுவில் உள்ள திரியில் ஒருக்காலும் எழுதவில்லையே..! -

அதை ஏன் இங்கு பதிவுசெய்யவில்லை நீங்கள் ? அந்த நேர்மை உங்களிடம் இல்லையே !

நடிகர் திலகத்தை விமர்சனம் செய்து நேர்மையாளன் என்றும் நடுநிலையாளன் என்றும் உங்களது உரிமை என்றும் மானியம் விடும் நீங்கள், முதலில் உங்களை விமர்சனம் செய்துகொள்ளுங்கள் அல்லது நீங்கள் ஆதரவு காட்டும் மற்ற நடிகர்களையும் நடிகர் திலகத்திடம் எடுக்கும் இதே உரிமையோடு விமர்சனம் செய்யுங்கள்...!

நீங்கள் எழுதுவதை போல யாராலும் எழுதமுடியாது என்ற எண்ணம் மட்டும் வேண்டாம்.

ஒரே மாதிரி ரகங்கள் இருக்கவேண்டாம் என்பதால் வேறு ரகமாக எழுதுபவர்கள் திரியில் உண்டு.

திரு சிவாஜி செந்தில் அவர்கள் இன்னும் சொல்லப்போனால் உங்களை விட ஒரு படி வித்தியாசமாக காட்சிகோப்புகளுடன் புதிதாக வரும் பாமரன் புரிந்துகொள்ளும் விதத்தில் இங்கு பதிவேற்றுகிறார்....அதுவும் ஒரு VIEWER FRIENDLY SCHOOL OF PERFORMANCE ரகமே !

ஒவொருவருக்கும் ஒரு நடை உண்டு..! உங்களுக்கு அதை ஜீரணிக்கும் சக்தி குறைவு ! அவ்வளவே !

நான் எழுதுவதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் வீண் தர்க்கம் செய்வதில் அர்த்தமில்லை சார் !

RKS

eehaiupehazij
19th November 2014, 03:17 PM
United We stand and succeed ! Divided We Fail and Fall!! Our Thread follows the premise 'Unity in Diversity' that is the 'promise' phrase for our whole Nation!!!?
: Clash of the Titans weakens our functions

அள்ள அள்ளக் குறையாத நடிகர்திலக அட்சய பாத்திரத்தின் மேன்மை போற்றுவோமே !


நடிகர்திலகத்தின் மேன்மை போற்றும் மேதமைத் திரியின் மேதகு நண்பர்களே! ஒரு பொருட்காட்சியைக் கையில் ஒரு பெரிதாக்கப்பட்ட பஞ்சுமிட்டாயையோ அல்லது பொரிக்கப்பட்ட ஒரு பெரிய டெல்லி அப்பளத்தையோ அல்லது ஒரு பாக்கெட் பாப்கார்ன் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலையை ரசித்து மகிழ்ந்த அனுபவம் நம்மெல்லொர்க்கும் கிடைத்திருக்கும். பொருட்காட்சியை முழுக்க சுற்றிமுடிக்கும் வரை கொஞ்சம்கொஞ்சமாக நொறுக்குத்தீனியாக சுவைத்துக் கொண்டே வரும்போது நாவுடன் சேர்ந்து மனமும் இனிப்பதாக உணர்வோம்.இதே பஞ்சுமிட்டாய் அல்லது அப்பளத்தை இரண்டு கைகளாலும் அடித்து நொறுக்கிப் பொடியாக்கி விழுங்கிட ஒரு நொடி போதுமே! இந்தத்திரி பல்வேறு மாறுபட்ட கோணங்களில் உயிர்ப்புத் தன்மையுடன் வெவ்வேறு குணாதிசயங்கள் திறமைமுகங்கள் கொண்ட பகுத்தாய்ந்திடும் சிறப்புப் பதிவர்கள் நிறைந்த நடிகர்திலகத்தின் புகழார்வலர்களுக்கான பொருட்காட்சித்திரி ! நாம் அனைவருமே பழரசத்தை புதிய புதிய கோப்பைகளில் பார்வையிடுவோர்க்கு விருந்தாகப் படைத்திடாது இப்பொருட்காட்சியின் நடுநாயகமாக வீற்றிருக்கும் நடிகர்திலகம் என்னும் அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரத்தை அலட்சியப்படுத்துவது நமக்குத்தானே இழப்பு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் திரு.ராமச்சந்திரன் (SPCHOWDRYRAM!) அவர்களுடன் சிறிதுநேரம் சந்தித்து உரையாடும் மகிழ்ச்சியான தருணம் முகிழ்த்தது. நேரில் சந்தித்த ஆனந்தம் நம்மிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளை கரைத்துவிடுகிறது. திரி வலுப்பெற்றிட அவரின் ஆதங்கங்களையும் உணர முடிந்தது. பதிவர்களின் ஒரு நேர்முக சந்திப்பும் கருத்துப் பரிமாறுதல்களும் சிறந்த தீர்வாகலாம் !!

Enjoy the events of this NT exhibition, second by second, with a cotton candy or a lolly pop or a mega pappad in hand (your esteemed write-ups !), forgetting the outside noise pollution and our own mind voice contamination !!

நடிகர்திலகம் என்னும் தன்னந்தனிக் காட்டு ராஜாவின் தோட்டத்திலே நாமெல்லாம் (மணம் மிகுந்த ...ஆனாலும் சிறிது முட்களும் நிறைந்த) ரோஜாக்களே !!

https://www.youtube.com/watch?v=YzqHAAsA9h0

ஒன்னா இருக்க கத்துக்கணும் ....உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

https://www.youtube.com/watch?v=smlQQAZHKpk

அண்ணன் தம்பிகளுக்குள்... .....கவலைகள் கிடக்கட்டும்......மறந்துவிட்டு.....காரியம் நடக்கட்டுமே!

https://www.youtube.com/watch?v=hQjCTpgfaqw

இனியது இனியது (நம் NT திரி)உலகம்......இனி அது இனித்திட ஒன்று படுவோம் !

https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA

RAGHAVENDRA
19th November 2014, 08:24 PM
முரளி சார்
மிக்க நன்றி, பொதுவாக தன்னிலை விளக்கம் அளிப்பவர்கள் தான் தங்களுடைய பதிவை மேற்கோள் காட்டி எழுதுவார்கள். இங்கே ஒருவர் பொருட்டு இன்னொருவர் மேற்கோள் காட்டி எழுதுவதைப் பார்க்கிறேன். அதுவும் நடுவர் அவர்களே. வாழ்க ஜனநாயகம்.
என்னுடைய பதிவில் எழுதியது இங்கே நிலவி வரும் போக்கினை. தாங்கள் ஒன்றிரண்டை எடுத்து மேற்கோள் காட்டி எழுதுவதால் நான் கூறியது இல்லை என்று ஆகிவிடுமா. இங்கே யாரும் நடிகர் திலகத்தை விமர்சிக்கவே இல்லை என தங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். இல்லாமலா பக்கம் பக்கமாக விவாதங்கள் இடம் பெற்றன.
நம்மைவிட நடிகர் திலகத்தை முன்னிறுத்துவோம் என எழுதியிருக்கிறீர்கள். இதை யாருக்கு சொல்ல வேண்டும் என்பதை தங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.
மாற்று முகாம் நண்பர்களின் பதிவுகளைப் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். அவர்கள் பதிவிட்டது அவர்களுடைய திரியில்.
நான் குறிப்பிட்டது நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி அவர்கள் எழுதியிருக்கிறார்களா என்பதைப் பற்றி.
கழிசடை, கிழட்டு மூஞ்சி என்றெல்லாம் அவர்கள் திரியில் நடிகர் திலகத்தை ஒரு நாளும் எழுதியதில்லை. இதையெல்லாம் எழுதியது நம் திரியில் தான். இதைத் தாங்கள் மறுக்க முடியாது. பதிவுகள் இருக்கின்றனவா நீக்கப்பட்டு விட்டனவா என்பதெல்லாம் வேறு விஷயம்.

சாந்தி திரையரங்க பட்டியலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். நாங்கள் எழுதிய சுவர் பட்டியல் நாளடைவில் நம்முடைய அருமை நண்பர்களால் மிகவும் சிறப்பாக கல்வெட்டாய்ப் பொறிக்கப்பட்டு நீண்ட நாட்களாகி விட்டன. மாற்றுத் திரியில் அவர்கள் எந்தப் பட்டியலில் மேற்கோள் காட்டினார்கள் என்பது தெரியாது. எதுவாக இருந்தாலும் இவையெல்லாம் திருத்தம் செய்ய முடியாத வடிவில் அமைக்கப்பட்டவை. இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. தவறாக இருந்தாலும் சரியாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத விஷயத்திற்கு தர்க்கம் செய்வதில் அர்த்தமில்லை. இதுவே என் நிலைப்பாடு.
நான் நல்ல பேரை வாங்க வேண்டும் என்கின்ற சுயநலத்தில் எதையுமே செய்வதில்லை. அந்த மாதிரி எண்ணமும் எனக்கில்லை. உங்களையும் நான் அந்த எண்ணத்தில் நினைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் இங்கே தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த கீழ்த்தரமான அர்ச்சனைகளைப் போன்று வேறு யாருக்கும் கிடைத்ததில்லை. இதையெல்லாம் செய்தது படிக்காத பாமரரல்ல.
தாங்கள் மேற்கோள் காட்டிய பதிவில் ஒரு பகுதிக்கு சம்பிரதாயத்துக்காக அதுவும் மிகவும் மென்மையாக தாங்கள் தெரிவித்திருக்கும் எதிர்வினையை விடக் கடுமையாக எனக்கு அளித்திருக்கும் பதில் பதிவு தொனிப்பதிலிருந்தே நான் சொல்லாமல் தங்களுடைய அணுகுமுறை விளங்கும்.
தங்களுடைய நட்பு வட்டாரத்தை நான் குறை சொல்லவில்லை. தாங்கள் எனக்காக அவர்களை இழக்கவும் தேவையில்லை. ஆனால் நாலு சிவாஜி ரசிகர்கள் இங்கு சிலாகித்துக் கொள்வதால் நடிகர் திலகத்தின் புகழ் பரவாது என்கின்ற வரிகள் நீடிக்கும் வரை என் மன வேதனை நீடிக்கத் தான் செய்யும். அதை ஒரு நடுவர் என்கின்ற முறையில் தங்களால் ஆற்ற முடியாது.

eehaiupehazij
19th November 2014, 08:27 PM
உலகப்பெரும் இதிகாசம் கர்ணன் மற்றும் மறைநூல் பைபிள்.....இரண்டிலுமே ஒரு ஒற்றுமையான நிகழ்வு ....பிறந்தவுடன் பெற்றவளாலேயே கைவிடப்பட்டு ஆற்றிலே மிதக்க விடப்பட்ட சபிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் கர்ணனும் மோஸசும்! நடிகர்திலகமும் சார்ல்டன் ஹெஸ்டனும் ஏற்ற உள்ளத்தை உலுக்கியெடுத்த பாத்திரப்படைப்புகள்! The animated version too infiltrates into our heart and mind!

https://www.youtube.com/watch?v=L7A8Tyhh3uM

https://www.youtube.com/watch?v=E8pEXd4s1yU

https://www.youtube.com/watch?v=92ygYJw9CSE

joe
19th November 2014, 08:46 PM
ஐயா! மன்னியுங்கள் .. அதை பின் வருமாறு திருத்தி விடுகிறேன் .

"கோபாலும் ஜோவும் தொலைபேசி தங்களுக்குள்ளே மாறி மாறி சிவாஜியை சிலாகித்துக்கொள்வதால் ஒன்றும் ஆகி விடாது "

Gopal.s
19th November 2014, 08:52 PM
என்ன சொல்ல வருகிறீர்கள் ராகவேந்தர்? நான்,முரளி,ஜோ எல்லாம் சேர்ந்து அவர் புகழை மங்க வைக்கவா, இவ்வளவு கவனம்,நேரம்,உழைப்பை அளித்து கொண்டுள்ளோம்? உலக பட புரிதல், எதையும் ஆழ்ந்து நோக்கும் அனுபவம் புத்திசாலித்தனம் கொண்ட தாங்கள் ,,நாங்கள் மிக மதிக்கும் தங்களின் ,சுருங்கிய ஒருமுக பார்வையும்,மற்றவர்களும் உங்கள் இயல்பை ஒத்தே இயங்க வேண்டும் என்று மூர்க்கம் நிறைந்த எதிர்பார்ப்பும், அந்த மூர்க்கத்தில் பங்கேற்பாளர்களின் முக்கியத்துவத்தை புறம் தள்ளி அடம் பிடிக்கும் மனநிலை,புறக் கணிப்பு என்று திணற வைத்து விடுகிறீர்கள். நீங்கள் ராமர் போல. நாங்கள் அம்பு பட்ட தவளைகள்.மற்றவர்கள் எங்களை துன்புறுத்தினால் ,உங்களிடம் முறையிடும் ஆறுதல் தேட வேண்டிய எங்களை,நீங்களே வதைத்தால் எங்கு போய் சொல்ல?

Gopal.s
19th November 2014, 08:56 PM
ஓ இந்த வரி தான் சிவாஜியையே பழித்ததாக சொல்லப்படும் அந்த மொழியோ ? கோபால் கூட கொஞ்சம் கடுமையா இருந்ததா சொல்லியிருந்தார் (என்ன கொடுமை சார் இது ?)

ஐயா! மன்னியுங்கள் .. அதை பின் வருமாறு திருத்தி விடுகிறேன் .

"கோபாலும் ஜோவும் தொலைபேசி தங்களுக்குள்ளே மாறி மாறி சிவாஜியை சிலாகித்துக்கொள்வதால் ஒன்றும் ஆகி விடாது "

:-D:???:

joe
19th November 2014, 09:33 PM
ராகவேந்திரா சார்,

உங்களிடம் பணிவான ஒரு வேண்டுகோள் . உங்களுக்கு உவப்பில்லாத வாக்கியங்களை யாராவது பதிந்தால் இன்னார் இதை பதிந்தது எனக்கு உவப்பானது இல்லை என நேரடியாக குறித்து எழுதுங்கள் .. சுற்றி வளைத்து அனுமானங்களை உருவாக்கி ஏன் அதை தேவையின்றி வளர்க்க வேண்டும் . முரளி என்னும் மனிதர் எத்தனை பக்கத்திலிருந்து இடியை தாங்குவார் ? அவர் என்னை காறி துப்பினால் வாங்கிக்கொள்வேன் ..எனென்றால் உன்னைத் தான் துப்புகிறேன் என நேரடியாக சொல்லி விட்டு தான் துப்புவார் .. அது போல உங்களுக்கும் அந்த மரியாதை உண்டு ..எதுவென்றாலும் நேரடியாக கண்டியுங்கள் .. உங்கள் வயதுக்கும் அனுபவத்துக்கும் உங்களுக்கு அந்த தகுதி உண்டு .

ஆனால் ஒரே ஒரு கருத்தை இங்கே பதிவு செய்ய விழைகிறேன் .. நீங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை . அது அவதுறாகவோ நடிகர் திலகத்தை சிறுமைப்படுத்துவதாகவோ இல்லாத பட்சத்தில் , இந்த கருத்தை நான் ஏற்கவில்லை என நேரடியாக கண்டித்துவிட்டு நீங்கள் கடந்து போகலாம் .மாறாக நான் நினைப்பது தவிர வேறு எந்த மாற்றுக்கருத்தையும் யாரும் இங்கே சொல்லிவிட முடியாது என சொல்வது ஏற்புடைத்தன்று .

உங்களுக்கு நடிகர் திலகம் தெய்வம் ..எனக்கு நெஞ்சுக்கினிய மகா கலைஞன் . நடிகர் திலகத்தைப் பற்றிய செய்திகள் , புகழ்பாடும் கட்டுரைகள் மற்றும் செய்திகள் எந்தவித விவாதமோ , எதிர்வினையோ இன்றி அமைவதானால் அதன் பெயர் இணையத்தளம் .. அந்த புனிதப்பணியை நீங்கள் நடத்தி வருகிறீர்கள் . ஆண்டாண்டு காலமாக என் வலைத்தளத்தில் அதற்கு இணைப்பு கொடுத்தே வைத்திருக்கிறேன் ..ஆனால் இங்கே இது விவாதக்களம் .. மையம் என்னும் விவாதக்களத்தில் நடிகர்திலகத்தை பற்றி விவாதிக்க ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள் . இங்கே பலர் வருவார்கள் ..நாம் சிவாஜி ரசிகர்கள் நம் கலைஞனை சிலாகிப்போம் , போற்றுவோம் .ஆனால் இது மட்டுமே இங்கு நடைபெற வேண்டும் என நிர்பந்திக்க முடியாது .. சிலர் வரலாம் .. அப்படி என்னைய்யா உங்கள் சிவாஜியின் மகத்துவம் ..கொஞ்சம் விளக்குவீரா ? என கேட்டால் அதில் உள்நோக்கம் இல்லையென்று தெரிந்தால் விளக்குவோம் ..விளங்கினால் அவருக்கும் சிவாஜி ரசிகராக ஞானஸ்நானம் கொடுப்போம் .. இல்லை இல்லை .. அப்படி கேட்க இது இடமல்ல .. எங்கு வந்து என்ன பேசுகிறாய் ..ஓடிப்போய் விடு என்றால் .. அதனால் என்ன பயன் .. எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் என்ன தான் கொடி பிடித்தாலும் அவர்கள் மாறப்போகிறார்களா ? இல்லை நாம் தான் மாறப்போகிறோமா ? நம்மில் சேராத, எதிரியும் இல்லாத ஒருவனை வா வந்து தெரிந்து கொள் ..உன் சந்தேகமென்ன ? நீ கமல்ஹாசன் ரசிகனாமே ..இருக்கட்டும் .ஆனால் கமலஹாசனுக்கே அப்பன் எங்கள் சிவாஜி .. அதை தெரிந்து கொள்ள இதைப் பார் ..இதைப் படி என அவன் தோளில் கை போட்டு பேசினால் அவனும் கமல்ஹாசனோடு அவர் அப்பன் சிவாஜியையும் சிலாகிக்கக் தொடங்குவான் ..நோ ..நோ ..சிவாஜியின் பெருமை அறியாதவனுக்கு இங்கு என்ன வேலை ..கமல்ஹாசனெல்லாம் ஒரு நடிகனா ? ஓடிப்போய் விடு என்றால் யாருக்கு என்ன லாபம் ?

ஆய்வு என்கிறோம் .. ஆய்வு என்றால் நமக்கு நாமே படிப்பதற்கு அல்ல ..மூன்றாம் மனிதன் வந்து படித்தால் நிறையும் குறையும் சேர்ந்து ஒப்பீடாக விளங்கசெய்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் உள்ளிளுக்க வேண்டும் ..சிவாஜி மட்டுமே நடிகர் .. மற்றவரெல்லாம் நடிகரே கிடையாது என்றால் ..வந்தவன் வந்த வழி பார்த்து திரும்பி போய் கொண்டே இருப்பான் .. அதுவா நமது நோக்கம்? .. நீ கமல் ரசிகனா ? அஜீத் ரசிகனா ? இருக்கட்டும் .. ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடி சிவாஜியின் சிறப்பு உனக்கு தெரியுமா என நயமாக சொல்லி நம் பக்கம் திருப்பி வழிகாட்டினால் ..மெதுவாத் தான் ..அவன் மெதுவாத் தான் வருவான் .. பய வருவதற்கு முன்னே துரத்திவிடும் வழிகளில் நாம் (சரி ..நான் ..எதுக்கு வம்பு) நின்றால் அதனால் சிவாஜிக்கு பெருமையா ?

விட்டா சொல்லிட்டே போகலாம் . கொஞ்சம் நேரடியாக பேசுங்கள் ..வழிகாட்டுங்கள்

joe
19th November 2014, 10:04 PM
அப்புறம் ..நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வான் -ன்னு சொன்னா அது ஒரு பேச்சு வழக்கு . அதுல அந்த 'நாலு' என்பது நான் , அப்புறம் மீதி மூணு பேரு இன்னாரு இன்னாரு -ன்னு அர்த்தப்படுத்திக்கொண்டால் உலகத்தில் என்ன தான் செய்வது ?

கோபால் சொன்னது போல .. நான் நினைப்பது போல எல்லோரும் ஒரே கோணத்தில் பேசினால் தான் நான் இங்கிருப்பேன் ..இல்லையென்றால் முடியாது என்பதெல்லாம் முதிர்ந்த வகை நிலைப்பாடா ? (உடனே பார்..என்னை முதிர்ச்சி இல்லாதவன் என வசை பாடுறான் என அர்த்தம் கொள்ளாதீர்கள் .ஐயகோ) . உங்கள் இருப்பை கேவலம் ஜோ தீர்மானிப்பதா ? ஜோ சொல்வது பிடிக்கவில்லையா ? கண்டித்து விட்டு ஏறி மிதித்து போய்கொண்டேயிருங்கள் ஐயா !

Murali Srinivas
19th November 2014, 11:50 PM
ராகவேந்தர் சார்,

நீங்கள் ஒரு முடிவெடுத்து செயல்படுவது போல் தோன்றுகிறது. நான் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. விவாதங்களிருந்து விலகி நிற்கவே விரும்புகிறேன். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யுங்கள்.

நீங்கள் எழுதியவற்றில் ஒரு வரி மட்டும் ஆறவேயில்லை. மாற்றுத் திரியினில் சிவாஜி பற்றி தரக்குறைவாக எழுதினால் எனக்கு பிரச்சனையில்லை. நடிகர் திலகம் திரியில் மட்டும் யாரும் அவரை விமர்சனம் செய்யக் கூடாது என்று உங்களைப் போன்றவர்களே சொன்னால் பிறகு வேறு என்ன சொல்வது?

அன்புடன்

RAGHAVENDRA
20th November 2014, 01:44 AM
ராகவேந்தர் சார்,

நீங்கள் ஒரு முடிவெடுத்து செயல்படுவது போல் தோன்றுகிறது. நான் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. விவாதங்களிருந்து விலகி நிற்கவே விரும்புகிறேன். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யுங்கள்.

நீங்கள் எழுதியவற்றில் ஒரு வரி மட்டும் ஆறவேயில்லை. மாற்றுத் திரியினில் சிவாஜி பற்றி தரக்குறைவாக எழுதினால் எனக்கு பிரச்சனையில்லை. நடிகர் திலகம் திரியில் மட்டும் யாரும் அவரை விமர்சனம் செய்யக் கூடாது என்று உங்களைப் போன்றவர்களே சொன்னால் பிறகு வேறு என்ன சொல்வது?

அன்புடன்

முரளி சார்
நான் புதிதாக எடுக்க என்ன முடிவு இருக்கிறது. தொடககமே ஒரு முடிவு தானே... நடிகர் திலகத்தைப் பற்றிப் போற்றிப் பாடுவது மட்டுமே என் நோக்கம். நான் தான் சொல்ல வேண்டும் ஒரு முடிவெடுதது நீங்கள் செயல்படுகிறீர்கள் என்று. திரும்பத் திரும்ப மாற்றுத் திரி மட்டுமே தங்கள் கண்ணில் படுகிறது. என் கேள்விக்கான பதிலை தவிர்க்க தாங்கள் எடுக்கும் முயற்சியை நான் நிச்சயம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். நம்முடைய திரியில் நடிகர் திலகத்தை திறனாய்வு என்ற பெயரில் நான் குறிப்பிட்டுக் காட்டிய வார்த்தைகளோடு பதிவுகள் இடம் பெற்றது தங்களுக்குத் தெரியாதா... Convenient Ignorance அடிப்படையில் இதைத் தவிர்க்கிறீர்கள் என்பது தெரிகிறது. இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை. மாற்றுத்திரியில் நடிகர் திலகத்தைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக கிழட்டு மூஞ்சி போன்ற வாசகங்கள் இடம் பெற்றதா..

நான் அடுத்த தலைமுறை நடிகர்களான கமல் ரஜினி பற்றி எந்த அளவிற்கு மதிப்பு வைத்திருக்கிறேன் என்பது தங்களுக்குத் தெரியாதது அல்ல. தாங்கள் மற்றும் நண்பர்கள் எழுதும் பதிவுகளில் நான் என்னவோ அவர்களை விமர்சித்தது போன்றோ அல்லது வெறுப்பது போன்றோ தொனிக்கிறது. இது எப்படி என எனக்குத் தெரியவில்லை.

பல உலகப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல நிபுணர்களுடன் கலந்து கொண்டு நடிகர் திலகத்தைப் பற்றி சிறப்புற எடுத்துரைத்தவன் என்ற மனநிறைவு எனக்கு உள்ளது. பல வெளிநாட்டுக் கலைஞர்களிடம் அவருடைய சிறப்பை எடுத்துரைத்துள்ளேன். கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளேன். ஒரு முறை மத்திய அரசின் ஒரு விளக்கப்படத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு இந்திய சினிமாவைப் பற்றிய ஆய்வு இடம் பெற்றது. அநத ஆய்வில் சுமார் அரை மணி நேரத்திற்கு தமிழ்த்திரைப்படங்களைப் பற்றிய தொகுப்புரைகளும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அந்தத் தொகுப்பில் மௌனப்படம் தொட்டு இத்திரைப்படம் தயாரான காலம் வரையிலான தமிழ்க் கலைஞர்களைப் பற்றியும் இடம் பெற்றிருந்தன. அதில் அக்கால கட்டத்தில் தமிழ்த்திரையுலகில் பங்காற்றிய பலரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. நடிகர் திலகத்தைப் பற்றியும் இடம் பெற்றிருந்தது. மூன்று நான்கு நிமிடங்களில் அவரைப் பற்றிச் சொல்லப்பட்டது. காட்சிகளாக அவர் மேக்கப் போடுவது, ஷூட்டிங்கிற்கு கிளம்புவது போன்றவை இடம் பெற்றிருந்தன. அதில் ஒரு பகுதியாக நடிகர் திலகத்தின் பேட்டியும் இடம் பெற்றது.

ஆனால் மருந்துக்குக் கூட எம்.ஜி.ஆர் பற்றி அதில் இடம் பெறவில்லை. அப்போது அப்படத்தைத் தயாரித்த மத்திய அரசு நிறுவனத்துடன் வாக்குவாதம் செய்தவன் நான். காரணம். அதில் தமிழ்ப்படங்களைப்பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கடனுக்கு செய்தது போல் இருந்தது. நான் கேட்கும் வரை அங்கு யாரும் வாய் திறக்கவில்லை. இத்தனைக்கு அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் தமிழ்த்திரைப்படத்தில் அக்காலத்தில் பணியாற்றியவர்கள். நான் கேள்வி கேட்ட பின் ஒவ்வொருவராக உடன் குரல் கொடுத்தனர். தமிழ்ப் படங்களை எங்கு சென்றாலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே அவர்களுக்கு நான் அன்று விடுத்த வேண்டுகோள். அன்று முழுதும் எனக்குக் கிடைத்த பாராட்டு மழைக்கு அளவேயில்லை. அவர்களில் பலர் இன்றும் திரையுலகில் பணியாற்றிக் கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி அதே விழாவில் எல்லோரிடமும் சிவாஜி ரசிகன் என்றே கூறித் தான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். காரணம் அப்போது சிவாஜி ரசிகன் என்றால் இளக்காரமாக ஒரு வட்டாரம் நடத்தி வந்ததே.

இதில் ஒரு வியப்பென்ன வென்றால், என்னிடம் உரையாடிய கலைஞர்களில் வெளிநாட்டினர் அனைவருமே நம் நடிகர் திலகத்தை வெகுவாக புகழ்ந்ததே. ஆனால் நம் நாட்டினர் குறிப்பாக தமிழர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போல் ஏதோ தொடக்கூடாததை தொட்டு விட்டதைப் போல சிவாஜி என்றால் தூர ஓடினார்கள். என்னிடம் பேசிய வெளிநாட்டவர்கள் ஒரு சிலர் அவர்களிடமும் நடிகர் திலகத்தைப் பற்றிக் கேட்ட போது அவர்கள் நெளிந்தது இன்றும் மன உறுத்தலாக இருந்தது.

இதன் பிறகு அவர்கள் மெல்ல மெல்ல தங்கள் தயக்கத்தைக் களைந்து நடிகர் திலகத்தைப் பற்றிப் பேச முற்பட்டார்கள்.

இந்த அளவிற்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நடிகர் திலகத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பது தான் தொடக்கத்திலிருந்தே எடுத்துள்ள முடிவு. அந்த முடிவு உஙகளுக்கு தென்பட்டால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

உலக அளவில் ஒப்பற்ற கலைஞனை நம் திரியில் விமர்சனம் செய்ய வேண்டாம் என நான் கேட்டுக் கொண்டால் என் மீதே இங்கு விமர்சனம். மாற்றுத் திரியினர் விமர்சித்தால் மட்டுமே கோபப்பட வேண்டும் மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று ஒரு நிலைப்பாடு இருந்தால் பிறகு வேறு என்ன சொல்வது முரளி சார்.

Russellbpw
20th November 2014, 08:17 AM
மாற்றுத்திரியில் நடிகர் திலகத்தைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக கிழட்டு மூஞ்சி போன்ற வாசகங்கள் இடம் பெற்றதா..



சார்,

யார் அப்படி சொன்னார்கள் என்பது எனக்கு தெரியாது. அப்படி கூறியவன் எவனாக இருந்தாலும் இந்த திரியில் அதற்க்கு மேலும் வர தகுதியற்றவனாகிறான்.

அதற்க்கு பின்பும் அப்படி கூறியவன் இங்கு வருகிறான் என்றால், சுரணை சுத்தமாக இல்லை என்றுதான் பொருள்.

நடிகர் திலகத்தை அப்படி கூறியவன் எவனாக இருந்தாலும் அவனுடைய முகத்தை முதலில் கண்ணாடியில் பார்க்கட்டும்.

அப்படி கூறியவனின் இளமை கால முகத்தைவிட நடிகர் திலகம் அவர்களுடைய முதுமை கால முகமே மிக மிக பொலிவாக இருக்கும்.

Rks

Gopal.s
20th November 2014, 08:21 AM
ராகவேந்தர்,



ஒரு சிறிய ஆலோசனை. நிறைய வாசிப்போரை சென்றடைய, கதாநாயகனின் கதை ,மெயின் திரி 14 இலேயே பதிக்கலாமே ? இடையிடை பதிவுகளை தவிர்க்கு, அடுத்ததடுத்த பதிவுகளை புதிப்பிக்கும் போது ,பழைய தொடர் பதிவை shift செய்து, முதல் பதிவை delete பண்ணி விட்டால், வரிசை கிரகமாகவும் இருக்கும்.

adiram
20th November 2014, 10:16 AM
நடிகர்திலகத்தை யார் யார் தரக்குறைவாக இங்கு விமர்சித்தார்கள் என்பதை ராகவேந்தர் வெளிப்படையாக அவர்கள் பெயர்சொல்லியே பதிவிடுவது நல்லது. அப்படி செய்தால் தேவையற்ற யூகங்கலுக்கு இடமளிக்காது.

நமது திரியில் நடிகர்திலகத்தை விமர்சித்தால்தான் கோபப்படுவேன், வருத்தப்படுவேனே தவிர மாற்றுத்திரியில் நடிகர்திலகத்தை எப்படி தரக்குறைவாக எழுதினாலும் (உதாரணத்துக்கு முரளிசார் அவர்கள் சில விஷயங்களை சுட்டிக்காட்டியிருந்தார்) அதைப்பற்றி வருத்தப்படவோ கண்டுகொள்ளவோ மாட்டேன் என்ற ராகவேந்தர் அவர்களின் நிலைப்பாடு ஆச்சரியமும் திகைப்பும் அளிக்கிறது.

Gopal.s
20th November 2014, 10:29 AM
ராகவேந்தர்,

நடிகர்திலகத்தின் பிற்கால படங்கள் அவர் தரத்திற்கு பெருமை சேர்க்கும் அளவு இல்லை. இதே வாயால் திராவிட மன்மதன் என்று சொல்லி ,அது இங்கு சரளமாக உபயோகிக்க படுவது உங்களுக்கு தெரியவில்லையா?

அத்துடன் சமீப காலமாக உங்கள் கட்டளையை ஏற்று ,நாங்கள் ஒரு வரி கூட critical ஆக எழுதாத போது ஏன் குப்பையை கிளறி விடும் சண்டை சேவல் ஆகிறீர்கள்?

நான் எந்த திரி நண்பர்களுடன் வாக்கு வாதம் வந்தாலும் தோன்றியதை சொல்லி எழுதி எல்லோரையும் பரிச்சயம் கொண்ட கருத்தொப்பாத நண்பர்களாகவே பார்க்கிறேன்.

நாங்கள் எதையும் எதிர்பார்த்தோ, அல்லது அங்கீகாரம் வேண்டியோ அவர் பக்தர்களாக இல்லை. அது ஆத்மா சுத்தியுடன் நாங்கள் செய்யும் சத்திய பூஜை. உளமார கடவுளாக தொழும் வேள்வி. நீங்கள் அதற்கு வரம்பு விதிக்க வேண்டாம். ஒவ்வாதவை, ஓங்கி சொல்ல பட்டால், ச்சீ ,பொய்யுரைப்பதா என்று என் கடவுள் ,கர்ணன் அவதாரத்தில் கேட்டதையே கேட்க வேண்டி வரும்.

AREGU
20th November 2014, 10:55 AM
நடிகர்திலகத்தை யார் யார் தரக்குறைவாக இங்கு விமர்சித்தார்கள் என்பதை ராகவேந்தர் வெளிப்படையாக அவர்கள் பெயர்சொல்லியே பதிவிடுவது நல்லது. அப்படி செய்தால் தேவையற்ற யூகங்கலுக்கு இடமளிக்காது.

நமது திரியில் நடிகர்திலகத்தை விமர்சித்தால்தான் கோபப்படுவேன், வருத்தப்படுவேனே தவிர மாற்றுத்திரியில் நடிகர்திலகத்தை எப்படி தரக்குறைவாக எழுதினாலும் அதைப்பற்றி வருத்தப்படவோ கண்டுகொள்ளவோ மாட்டேன் என்ற ராகவேந்தர் அவர்களின் நிலைப்பாடு ஆச்சரியமும் திகைப்பும் அளிக்கிறது.

அதில் வியப்படையவோ, திகைப்புறவோ ஏதுமில்லை என்பது என் தாழ்மையான கருத்து..

நாம் வாழும் நம் வீடு தேவையற்ற குப்பைகள் சேராமல் சுத்தமாக இருக்கவேண்டும் என எண்ணுவது இயல்பே.. பிறர் மனை குறித்து அவ்வளவு அக்கறை பொதுவாக நமக்கு இருப்பதில்லை.. புறம்கூறும் தன்மைகொண்டோருக்கு அது சுபாவம்.. அதை மாற்ற எண்ணுவது வீண்வேலை. ஆனால் நம் குடும்பத்தினரே ஒருவர் இன்னொருவருக்குள் குறைகூறித் திரிந்தால் வருத்தம் கொள்வதை புரிந்துகொள்ளமுடிகிறது..

JamesFague
20th November 2014, 10:57 AM
Thanks to Mr Neyveli Vasudevan

செஞ்சோற்றுக்கடன் தீர்த்தான் 'கர்ணன்' அன்று...
செய்நன்றிக் கடன் தீர்த்தான் 'பாபு' இன்று...

'பாபு' சொல்லும்போதே நா இனிக்கிறது. ஆனால் மனம் கனக்கிறது. கைரிக்ஷாவண்டி இழுத்த எங்கள் பாபுவை மறக்க முடியுமா?..

தனக்கு ஒருவேளை சாப்பாடு போட்ட செய்நன்றிக்காக ஒரு நல்ல மனிதனின் குடும்பம் அத்தலைவனை இழந்து தவிக்கும் போது,அந்தக் குடும்பம் தழைக்க காலமெல்லாம் கைரிக்ஷா இழுத்து அவர் மகளை தன் மகளாக பாவித்து, அவளைப் படிக்க வைத்து உழைப்பாலும்,முதுமையாலும் உருக்குலைந்து தன்னை முழுவதுமாக அந்தப் பெண்ணின் வாழ்வுக்காகத் தியாகம் செய்து தன்மானத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் உயிர் நீக்கும் கவரிமானான எங்கள் பாச பாபுவை மறக்க முடியுமா?...

சுட்டெரிக்கும் வெயிலிலே கால்களில் மிதியடி கூட இல்லாமல் தார் ரோடுகளில் கைரிக்ஷாவை சிரித்த இன்முகத்தோடு இழுத்துக் கொண்டு ஓடும் எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...

ரிக்ஷாவில் காதலியை அமரவைத்து அழகு பார்த்து நகர்வலம் வரத்தெரியாமல் அவளிடம் தன் வயிற்றுப் பசியை மட்டும் தீர்த்துக் கொண்டு பின் அவளையும் பறிகொடுத்துவிட்டு அனாதையாக நின்ற பாபுவை எங்களால் மறக்க முடியுமா?...

'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' என்று பாசச் சோற்றினை எங்களுக்கெல்லாம் ஊட்டி ஊட்டி வளர்த்த எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...

பழுத்த முதுமை அடைந்த பின்னர் முதுகு வளைந்து கால்கள் அகன்று நொடித்து தள்ளாடிய ஓட்டமாய் இருமிக்கொண்டே தன்னை வருத்தி ,ஓடாய்த் தேய்ந்து, கைரிக்ஷாவண்டி இழுத்து உருத்தெரியாமல் போன பாபுவை எங்களால் மறக்க முடியுமா?...

தான் வளர்த்த பெண்ணின் திருமணத்திற்கு அவளுக்குத் தெரியாமல் சென்று சாப்பாட்டுப் பந்தியில் கூட இடம் கிடைக்காமல் பிச்சைக்காரன் போல் விரட்டியடிக்கப்பட்டு சோதனைகளின் சுமைதாங்கியாய் தன் உயிரை விடும் எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...

எல்லாவற்றுக்கும் மேல் உடல் வருத்தி, உச்சி வெயிலில் கைரிக்ஷா இழுத்து, முதுமைத் தோற்றத்தைக் கொண்டுவருவதற்கு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தாடி ஒட்டி, முகம் ரணகளமாக சுருக்கங்கள் ஏற்றி ,அந்த இளம் வயதில் கண்களை ஒளி குன்றச் செய்து ஒரு அழுக்குக் கைலியையும், கிழிந்த சட்டையும் அணிந்துகொண்டு மேக்-அப் என்ற பெயரில் தன் மேனியினை நோக வைத்து (மாஸ்க் போன்ற நவீன மேக்-அப் சாதனங்கள் இல்லாமல்)அரும்பாடுபட்டும் பட்டபாட்டிற்கு பலனே இல்லாமல்,"நீ உண்மையான ரிக்ஷாக்காரன் இல்லை...உனக்கு சிறந்த நடிகர் அவார்டும் இல்லை ...உன்னைவிட சிறந்த ரிக்ஷாவாலாக்களெல்லாம் இருக்கிறார்கள்" என்று சொந்த மண்ணில் பிறந்தவர்களாலேயே நிராகரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்ட பச்சைத் துரோகத்தைத் தான் எங்களால் மறக்க முடியுமா?...

அத்தனை துரோகங்களையும் தாண்டி, "நீதானடா நடிகன்" என்று உலக நாடுகள் அனைத்தும் (சொந்த மண்ணைத் தவிர) உச்சி முகர்ந்து எங்கள் பாபுவைப் பாராட்டி,பாராட்டி கௌரவித்து,உயரிய உரிய பட்டங்கள் அளித்து மகிழ்ந்து, உள்ளம் குளிர்ந்து ஆனந்தக் கூத்தாடுகிறதே... அந்த ஆனந்த அங்கீகாரத்தைத்தான் எங்களால் மறக்க முடியுமா?...

JamesFague
20th November 2014, 11:00 AM
Thanks to Mr Karthik


1971 அக்டோபர் 18 - 'பாபு' நினைவலைகள்.....

தீபாவளியன்று நடிகர்திலகத்தின் 'பாபு' படம் ரிலீஸாகிறதென்ற பெருமிதம் தீபாவளியை பன்மடங்கு உற்சாகமாக்கியது. கள்ளமறியா, கவலையில்லா பள்ளிப்பருவம். ரிலீஸுக்கு ஒருவாரம் முன்பு ரிசர்வேஷன் ஆரம்பிக்கும்போதே, அதற்காகவே சேர்த்து வைத்திருந்த பணத்தில் வடசென்னை 'கிரௌன்' திரையரங்கில் டிக்கட் ரிசர்வ் செய்து விட்டேன். (முதல் வகுப்பு டிக்கட் 2ரூ 90பை. அதற்கே அந்தப்பாடு).

தீபாவளிக்கு முதல் நாள் கிரௌனில் சவாலே சமாளி 107 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய, மறுநாள் 'பாபு' ரிலீஸ். அதே தீபாவளிக்கு கிரௌன் தியேட்டரை அடுத்த ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் ரிக்ஷாக்காரன் 140 நாட்களில் மாற்றப்பட்டு அங்கே 'நீரும் நெருப்பும்' ரிலீஸ் ஆகிறது. மே 29-ல் ரிக்ஷாக்காரனுக்குப்பிறகு அடுத்தபடம் அக்.18-ல்தான் வெளியாகிறது. ஆனால் இங்கே ஜூலை 3-ல் சவாலே சமாளி வெளியான பின் அக் 18-க்கு முன் இரண்டு படங்கள் (தேனும் பாலும், மூன்று தெய்வங்கள்) வந்து விட்டன. மூன்றாவதாக அக்.18-ல் பாபு)

தீபாவளிக்கு முன் டீக்கடை, பேப்பர் கடை எங்கு பார்த்தாலும் 'நீரும் நெருப்பும்' பற்றித்தான் பேச்சு. பாபு படத்தை ரசிகர்களைத்தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை. (இவ்விரு படங்களோடு மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் வண்ணப்படம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'யும், கே.எஸ்.ஜி.யின் பிரம்மாண்ட வண்ணப்படம் 'ஆதிபராசக்தி'யும் ரிலீஸ்). ஆக தீபாவளி ரேஸில் மூன்று வண்ணப்படங்களுக்கு மத்தியில் ஒரே கருப்பு வெள்ளைப்படமாக 'பாபு' மட்டுமே வந்தது. ரசிகர்களுக்கெல்லாம் ஒரே சோர்வு. நடிகர்திலகம் வேறு ஏதாவது பிரம்மாண்ட வண்ணப்படத்தை இந்த தீபாவளிக்கு வெளியிட்டிருக்கலாமே என்று ரசிகர்களுக்குள் பேச்சு. (அப்போது இரு பிரம்மாண்ட வண்ணப்படங்களாக ராஜாவும், தர்மம் எங்கேயும் தயாரிப்பில் இருந்தன).

எதிர் அணி படத்தைப்பற்றி என்னென்னவோ பேச்சுக்கள், எதிர்பார்ப்புக்கள், இன்னொரு வெள்ளி விழாப்படம் என்ற ஆரூடங்கள், இதற்கு முந்தைய சைக்கிள் ரிக்ஷாவையே ஓட்டத்திலும் வசூலிலும் முந்தும் என்ற கணிப்புக்கள், இரட்டை வேடமாம், ஈஸ்ட்மென் கலரில் உருவாகியிருக்கிறதாம், பிரம்மாண்ட செட்டுக்களாம், ஏகப்பட்ட நடிகர்களாம், ரொம்ப நாளைக்கப்புறம் கத்திச்சண்டக்காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம், நிச்சயம் பயங்கர வெற்றிதான்.... பாவம் கணேசனின் பாபு படம் இப்போட்டியில் சிக்கி நசுங்கப்போகிறது, அதுல அந்த ஆளுக்கு சரியான ஜோடிகூட இல்லையாம், மலைநாட்டு மங்கையில் நடித்த விஜயஸ்ரீதான் ஜோடியாம் என்றெல்லாம் ஏகடியங்கள், கிண்டல்கள், கேலிப்பேச்சுக்கள். நடிகர்திலகத்தின் ரசிகர் தரப்பில் வழக்கம்போல பொறுமை காக்கப்பட்டது.

ஆனால் எல்லா ஆர்ப்பாட்டமும் தீபாவளிக்கு படங்கள் ரிலீஸாகும் வரைதான். வெளியானதோ இல்லையோ நிலைமை தலைகீழாக மாறியது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் 'பாபு' வசூலில் முந்தியது. எந்தப்படம் பெரும் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ அது பின் தங்கியது. நாட்கள் ஆக ஆக, 'பாபு'வுக்கும் ஆதிபராசக்திக்கும்தான் எல்லா ஊர்களிலும் போட்டியாக இருந்தது. மூன்றாவது இடத்தை ஜெய்சங்கரின் வீட்டுக்கு ஒரு பிள்ளை பிடிக்க, ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட 'பிரம்மாண்டம்' பின் தங்கி நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஓலைக்குடிசை, கைரிக்ஷா, கருப்புவெள்ளை, வெறும் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள், கிழிந்த உடைகள், தாடி மீசை இவற்றோடு நடிகர்திலகத்தின் 'பாபு' போட்ட போடில் வண்ணங்கள் வெளுத்துப்போயின, பிரம்மாண்டங்கள் சரிந்தன. பாபுவுடன் போட்டியிட வந்த படம் பிரீஸ்டீஜுக்காக 50 நாட்கள் ஓடுவதே இழுபறியாகிப்போனது. பாபுவோ சர்வ சாதாரணமாக வசூலை வாரிக்குவித்தது.

இதில் எதிர் அணிக்கு இன்னொரு சோகம் என்னவென்றால், வழக்கமாக 'அவரது' படங்களைப்பொறுத்தவரை, ஓட்டத்தில் சுமாரான படங்களில் கூட பாடல்கள் பாப்புலராகி விடும். ஆனால் இப்போது அதுவும் பொய்த்துப்போனது. அப்படத்தின் பாடல்கள் எங்கும் பாப்புலராகவேயில்லை (இன்றுவரை). ஆனால் பாபுவின் 'வரதப்பா வரதப்பா', 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' பாடல்கள் அட்டகாசமாகப் பாப்புலராயின. வானொலிகளில் தினமும் ஒலித்தன. கேலியும் கிண்டலும் பேசிய வாய்கள் அடைத்துப்போயின. ரிலீஸுக்கு முன் சோர்வாகக்காணப்பட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்கள் தெம்பாக வலம் வந்தனர். 1972-ம் ஆண்டின் அட்டகாச பவனியை 1971 இறுதியில் 'பாபு' துவக்கி வைத்தது.

அக்டோபர் 18 மாலைக்காட்சிக்கு டிக்கட் வாங்கியிருந்தேன். (தீபாவளியன்றைக்கு மாலைக்காட்சிக்கு டிக்கட் கிடைத்தால் அது எவரெஸ்ட்டில் ஏறியது போல). டிக்கட் ரிசர்வ் செய்திருந்தாலும் கரெக்டாக காட்சி நேரத்துக்குப் போவது எனக்குப்பிடிக்காது. கியூவில் நின்று டிக்கட் வாங்குபவர்களைவிட முன்னதாகவே போய் விடுவேன். அன்று மாலை மூணரைக்கெல்லாம் கிரௌன் தியேட்டர் வாசலில் ஆஜர். வழக்கம்போல ரசிகர்க மன்றங்களால் பந்தல்கள், ஏகப்பட்ட தோரணங்கள், கொடிகள், நட்சத்திரங்கள், கட்-அவுட்களுக்கு மாலைகள் என ஏக அமர்க்களங்கள் (கிரௌன், ஸ்ரீகிருஷ்ணா இரண்டு தியேட்டர்களிலும்). அதுபோல இரண்டு தியேட்டர் முன்பும் தெருவையே அடைத்து ரசிகர் கூட்டங்கள். அவ்வப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் அந்த இடத்தையே இரண்டு பண்ணியது.

ஒரு வழியாக மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்தது. வெளியில் நின்ற ரசிகர்கள் அவர்களை மொய்த்து ரிசல்ட் கேட்கத்துவங்கினோம். தாய்மார்கள் பெரும்பாலோர் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தனர், ரசிகர்களும்தான். எங்களுக்குப்புரியத் தொடங்கியது. கிளைமாக்ஸ் கண்டிப்பாக சோகம் போலும். ஒரு ரசிகர் சொன்னார் 'பாசமலர், வியட்நாம் வீடு படங்களுக்குப்பிறகு இந்தப்படத்துலதான்யா நான் அழுதேன்' என்று.

மாலைக்காட்சிக்கு கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியது. அவ்வளவுதான் அதுவரை போலீஸார் கட்டுப்படுத்தி வைத்திருந்த கூட்டம் அனைத்தும் உடைபட்ட வெள்ளமென கவுண்ட்டரை நோக்கி முன்னேறியது. முன்பதிவு செய்திருந்த டிக்கட்டைக்காட்டி உள்ளே சென்றோம். விளம்பரப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அரங்கு நிறைந்து விட்டது. ரசிகர்களின் பொறுமையை மேலும் சோதிக்காமல் உடனே நியூஸ் ரீல் போட்டு, அது முடிந்ததும் படத்தைத் துவக்கினார்கள். படம் துவங்கியது முதல் ரசிகர்களின் அலப்பறையும், விசிலும் கைதட்டலும் படத்தை களைகட்ட வைத்தன. இடைவேளை வரை படம் படு உற்சாகமாகப்போனது. அவர் ஸ்டைலாக முகத்தில் புன்சிரிப்புடன் ரிக்ஷா இழுத்துக்கொண்டு ஓடுவது, பாலாஜியின் அன்பில் நெகிழ்வது, இலையில் இருந்த கத்தரிக்காயை ஸ்ரீ தேவி எடுத்துச்சாப்பிட்டதும் பதறுவது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பாலாஜியின் பெருந்தன்மையில் கண் கலங்குவது, அந்த சம்பவத்தை ரயில்வே ட்ராக்கில் உட்கார்ந்துகொண்டு காதலி விஜயஸ்ரீயிடம் குதூகலமாகச்சொல்வது, வரதப்பா வரதப்பா பாடலின்போது ரிக்ஷாக்கானுக்கே உரிய ஸ்டைலுடன் ஆடுவது, கீசக வதம் நாடகம், விஜயஸ்ரீயின் பரிதாப மரணம், அதைத்தொடர்ந்து நம்பிராஜனுடன் சண்டை என்று படம் படு அட்டகாசம்.

இடைவேளைக்குப்பின்னர் நம்மை அப்படியே கதையில் ஒன்றவைத்து சோகத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுவிடுவார். சௌகாரின் பாந்தமான நடிப்பு பெரும் துணையாக இருக்கும். பாபுவை உதாசீனமாகப்பேசும் தன் மகள் நிர்மலாவை கண்மண் தெரியாமல் அடிப்பதும், பின்னர் தான் பிச்சையெடுத்த ப்ளாஷ் பேக்கை நினைத்துப்பார்க்கும் நிர்மலா, மாமா என்று பாபுவைக் கட்டி அணைத்துக்கொண்டதும் தள்ளி நின்று பாசத்தில் கண் கலங்குவத்மாக சௌகாரும் தன் பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருப்பார். கடைசியில் நிர்மலாவின் திருமணத்தின்போது அவரை தனியே சந்தித்து நாய் பொம்மையை நடிகர்திலகம் நிர்மலாவுக்குப் பரிசாகக்கொடுக்கும்போது தியேட்டரே கதறி அழுதது. தன்னைச்சுற்றி அத்தனை பேரும் தன்மீது அவ்வளவு அன்பு செலுத்துவது கண்டு அவர் நெகிழ்ச்சியோடு உயிரிழப்பதோடு படம் நிறைவடைய கலங்காத கண்களும் இருக்க முடியுமா?.

எங்கள் 'பாபு'வுக்கு இன்று 40 ஆண்டுகள் நிறைந்தன. இன்னும் பலநூறு ஆண்டுகள் ரசிகர்கள் இதயங்களில் சிரஞ்சீவியாக வாழ்வார்.

Russellbpw
20th November 2014, 11:12 AM
ராகவேந்தர்,


நடிகர்திலகத்தின் பிற்கால படங்கள் அவர் தரத்திற்கு பெருமை சேர்க்கும் அளவு இல்லை. இதே வாயால் திராவிட மன்மதன் என்று சொல்லி ,அது இங்கு சரளமாக உபயோகிக்க படுவது உங்களுக்கு தெரியவில்லையா?

அத்துடன் சமீப காலமாக உங்கள் கட்டளையை ஏற்று ,நாங்கள் ஒரு வரி கூட critical ஆக எழுதாத போது ஏன் குப்பையை கிளறி விடும் சண்டை சேவல் ஆகிறீர்கள்?

நான் எந்த திரி நண்பர்களுடன் வாக்கு வாதம் வந்தாலும் தோன்றியதை சொல்லி எழுதி எல்லோரையும் பரிச்சயம் கொண்ட கருத்தொப்பாத நண்பர்களாகவே பார்க்கிறேன்.



நாங்கள் எதையும் எதிர்பார்த்தோ, அல்லது அங்கீகாரம் வேண்டியோ அவர் பக்தர்களாக இல்லை. அது ஆத்மா சுத்தியுடன் நாங்கள் செய்யும் சத்திய பூஜை. உளமார கடவுளாக தொழும் வேள்வி. நீங்கள் அதற்கு வரம்பு விதிக்க வேண்டாம். ஒவ்வாதவை, ஓங்கி சொல்ல பட்டால், ச்சீ ,பொய்யுரைப்பதா என்று என் கடவுள் ,கர்ணன் அவதாரத்தில் கேட்டதையே கேட்க வேண்டி வரும்.

Regards

RKS

Russellbpw
20th November 2014, 11:13 AM
:-d:???:

are you not ashamed gopal to put a smiley...?

Rks '

JamesFague
20th November 2014, 11:28 AM
Thanks to Saradha Madam

'விஸ்வரூபம்' 100-வது நாள் வெற்றி விழா.

நடிகர்திலகத்தின் 1980 தீபாவளி வெளியீடான விஸ்வரூபம் வெற்றிவிழாவில் கலந்து கொண்டது எதிர்பாராமல் கிடைத்த இனிய வாய்ப்பு. அந்த தீபாவளி என் பெர்சனல் வாழ்க்கையிலும் ஒரு சின்ன் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதுவரை பாவாடை தாவணியில் இருந்த நான், உடன் படித்த தோழிகளின் நச்சரிப்பு தாங்காமல், கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் ஜீன்ஸ், டி-ஷர்ட்டுக்கு மாறியது அப்போதுதான். (அதன்பின்னர் கல்லூரி நாட்களில் அதுவே பிடித்த உடையாகப்போனது வேறு விஷயம்).

விஸ்வரூபம் ஓடிக்கொண்டிரும்போதே சாந்தியில் குடும்பத்தோடு ஒரு முறையும், என் பெரியப்பாமகன் ரவியோடு ஒருமுறையுமாக இரண்டு முறை அப்படத்தைப் பார்த்துவிட்டேன். ரவி அப்போதே பைக் வைத்திருந்த கல்லூரி மாணவன். பைக் வைத்திருந்தானே தவிர வேறு தப்பு தண்டாவெல்லாம் பண்ணாத சாது. என் தந்தைக்கு அடுத்து சாந்திக்கு ரெகுலாகச்சென்று வரும் வழக்கமுள்ளவன். அப்படிப்போனபோதுதான், சாந்தியில் விஸ்வரூபம் படத்தின் 100-வது நாள் விழா நடக்க இருப்பதாகவும், அந்த விழாவில் ரசிகர்களும் கலந்துகொள்ள வசதியாக, தலைமை மன்றத்தின் சார்பில் சாந்தியில் ரசிகர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாகவும், தான் இரண்டு டோக்கன் வாங்கியதாகவும் சொல்லி என் தந்தையிடம், 'சித்தப்பா, நாளை நாம் ரெண்டு பேரும் போவோம்' என்றான். அப்போது அப்பா, 'எனக்கும் வர ஆசைதான். ஆனால் சாரதா இதற்கெல்லாம் ரொம்ப ஆசைப்படுவாள். அவளை நீ அழைச்சிக்கிட்டு போ' அப்படீன்னு அனுமதி கொடுத்து விட்டார். எனக்கோ பிடிபடாத சந்தோஷம். கொஞ்சமும் எதிர்பாராத வாய்ப்பு அல்லவா?.

அது காலை நேர விழா. ஞாயிற்றுக்கிழமை என்பதாக நினைவு. முதல்நாள் மாலைதான் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தின் 100-வது நாள் விழா நடந்திருந்தது. மறுநாள் காலை விஸ்வரூபம் 100-வது நாள் விழா, அன்று மாலை ரஜினியின் 'பொல்லாதவன்' 100-வது நாள் விழா. (தீபாவளி ராசிக்காரரான மெல்லிசை மன்னருக்கு மூன்று படங்களும் வெற்றி. அடுத்த ஆண்டும் கீழ்வானம் சிவக்கும், அந்த 7 நாட்கள், தண்ணீர் தண்ணீர் என மூன்றும் 100 நாட்கள். ராணுவ வீரன் 50 நாட்களைக்கடந்தது. இத்தனைக்கும் இசைஞானி உச்சத்தில் இருந்த நேரம்).

காலை விடிந்தது முதலே மனதில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காலையிலேயே குளித்து உணவருந்தி, ஜீன்ஸ், டி.ஷர்ட், கூலிங் கிளாஸ் சகிதம் ரவியண்ணனின் பைக்கில் தொற்றிக்கொண்டு சாந்தி போய்ச்சேர்ந்தேன். அந்தக்காலை நேரத்திலேயே சாந்தியில் கார்பார்க்கிங்கில் சரியான கூட்டம். ரவிக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் அங்கே நின்றிருக்க என்னையும் இழுத்துக்கொண்டு கூட்டத்தில் கலந்து விட்டான். அடுத்து வரவிருக்கும் 'சத்திய சுந்தரம்' படம் பற்றி பேச்சு நடந்துகொண்டிருந்தது. ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு நின்றேன். அத்துடன் அப்போது ஓடிக்கொண்டிருந்த 'மோகனப்புன்னகை' படத்தின் ரிசல்ட் அவ்வளவு திருப்தியளிக்கவில்லை என்று வருத்தத்துடன் பேசினர்.. நண்பர்களில் சிலர், 'யாருடா இது புதுசா இருக்கு?' என்று கேட்க, 'என் தங்கச்சிடா, எங்க சித்தப்பா வருவாரில்லையா?. அவர் பொண்ணு. பேரு சாரதா' என்று அறிமுகப்படுத்தினான்.

தியேட்டருக்குள் ரசிகர்களுக்காக பால்கனி முழுவதையும் ஒதுக்கி விட்டு, கீழ்த்தளம் முழுவதையும் விருந்தினர்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள். திரையுலகத்தினரும், பத்திரிகையாளர்களும் கார்களில் வந்து இறங்கிய வண்ணம் இருந்தனர். படத்தில் பங்கேற்ற கலைஞர்கள் மட்டுமல்லாது திரையுலகினர் பலரும் வந்தனர். முதலில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கிருஷ்ணா, விஜயநிர்மலா தம்பதியினர் வந்திறங்க, அவர்களை 'மாப்பிள்ளை' வேணுகோபால் வரவேற்று அழைத்துச்சென்றார். பின்னர் அவர்கள் மூவரும் பிரதான வாயிலில் நின்று, வந்த வி.ஐ.பி.க்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பா, நடிகை சுஜாதா போன்றோர் காரிலிருந்து இறங்கும்போதே நாலாபக்கமும் திரும்பி ரசிககளைப்பார்த்து கைகூப்பினர். நடிகர் பிரேம் ஆனந்த் காரிலிருந்து இறங்கி வந்து ரசிகர்களோடு ஒருவராக நின்று பேசிக்கொண்டிருந்தார். நடிகர் எஸ்.வி.ராமதாஸ், என்னைப்போலவே ஒரு நண்பரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்தார்.

இதனிடையே டோக்கன் வைத்திருந்த ரசிகர்களை பால்கனிக்கு அனுமதிக்கத்துவங்கி விட, கூட்டம் மொத்தமும் வாயிலுக்கு முன்னேறியது. 'இப்போதே போனால்தான், ஸ்டேஜ் நன்றாகத்தெரிகிற மாதிரி இடமாகப்பார்த்து உட்காரலாம், வா' என்று ரவி கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனான். டோக்கனைப்பார்த்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். முதல் வகுப்பு டிக்கட் கவுண்ட்டரைக்கடந்து மாடிப்படிக்கு திரும்பும் இடத்தில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் நின்று நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அவரை அவ்வளவு கிட்டத்தில் பார்த்தது அதுதான் முதலும் கடைசியும். மேலே போய் நல்ல இடமாகப்பார்த்து உட்கார்ந்து கொண்டோம்.

விழாத்தலைவர் கலைஞர் கருணாநிதியும், சிறப்பு விருந்தினராக வந்திருந்த சௌகார் ஜானகியும் தியேட்டருக்குள் வந்ததும், வி.ஐ.பி.க்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு நடிகர் கிருஷ்ணா மாலைகளை அணிவித்தார். விழாவைத்தொகுத்து வழங்கிய கதை வசனகர்தா ஆரூர்தாஸ் ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்தார். கலைஞரும், நடிகர்திலகமும் சேர்ந்தே மேடைக்கு வந்தபோது ஒட்டுமொத்தக் கூட்டமும் எழுந்து நின்று விண்ணதிர கைதட்டியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 'சிறந்த ஒளிப்பதிவாளர் எம்.விஸ்வநாத் ராய், சிறந்த படத்தொகுப்பாளர் பி.கந்தசாமி' என்று ஆரூர்தாஸ் அழைத்தபோது அவ்வளவு சலசலப்பில்லாத கூட்டத்தில், 'சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்' என்று அழைத்ததும் மீண்டும் பலத்த கைதட்டல் எழுந்தது. பணிவுக்குப்பேர்போன மெல்லிசை மன்னர் மேடையேறியதும் கலைஞரின் கைகளையும், நடிகர்திலகத்தின் கைகளையும் பிடித்து மரியாதை செலுத்தியவர், கூட்டத்தினரைப்பார்த்து நன்றாகப்பணிந்து கும்பிட்டு அமர்ந்தார்.

பி.சுசீலா தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, விழா துவங்கியது. முக்தா சீனிவாசன், ஏ.வி.எம்.சரவணன் ஆகியோர் பேசினார்கள். ஒரு கட்டத்தில் சரவணன், '........இதுபோலத்தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும்' என்று ஏதோ சொல்ல வந்தபோது கூட்டத்தினர் (குறிப்பாக பால்கனியில் இருந்த ரசிகர்கள்) பலத்த கூச்சலிட்டதால், சட்டென்று அதை நிறுத்திக்கொண்டு வேறு சப்ஜெக்ட்டுக்குத்தாவினார். மேடையில் நின்ற 'மாப்பிள்ளை' ரசிகர்களை நோக்கி, அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார்.

JamesFague
20th November 2014, 11:29 AM
விஸ்வரூபம்' 100-வது நாள் வெற்றி விழா (தொடர்ச்சி)

அவரையடுத்துப்பேசிய முக்தா சீனிவாசன் சிறப்பாகப்பேசினார். 'நடிகர்திலகம் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அவற்றில் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை 100க்கு மேல் இருக்கின்றன, வெள்ளிவிழாப்படங்களும் ஏராளமாக இருக்கின்றன. மேலும், நிறுத்தவே முடியாமல் ஓடிய திரிசூலம் போன்ற படங்களும் (பலத்த கைதட்டல்) அவரது பட்டியலில் உள்ளன. அத்தகைய வெற்றிப்பட வரிசையில் இந்த (விஸ்வரூபம்) படமும் இணைவது, இன்றைய சூழ்நிலையில் மகத்தான நிகழ்வு. நடிகர்திலகத்தின் படங்களைப்பார்த்தால் அவர் முக பாவத்தைப்பார்த்தே அவரது மன உணர்வுகளைச்சொல்லிவிட முடியும். இப்போது நடிப்பவர்களெல்லாம் சோகத்திலும் அதே நடிப்பு, கோபத்திலும் அதே நடிப்பு என்று ஒரே மாதிரி செய்கிறார்கள். விஸ்வநாதன் மியூஸிக் பண்றதை வச்சுத்தான் அவன் சோகமாக நடிக்கிறானா, கோபமாக நடிக்கிறானா என்பதையே கண்டுபிடிக்க முடிகிறது' என்று சொல்லி வந்தவர், 'உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான செய்தி. என்னுடைய அடுத்த படத்தில் நமது நடிகர்திலகம் கதாநாயகனாக நடிக்கிறார்' என்றதும் பலத்த கைதட்டல் எழ, 'இன்னும் பலமாக கைதட்டுங்கள்' என்று சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார். ('இமயம்' படத்துக்குப்பின் 'அவன்,அவள், அது', 'பொல்லாதவன்' போன்ற வெளிப்படங்களை இயக்கினார். விழாவில் அவர் குறிப்பிட்ட படம்தான் 'கீழ்வானம் சிவக்கும்' படமாக உருவானது).

விழாவில் கலந்துகொண்டு, அனைவருக்கும் கேடயம் வழங்க வந்திருந்த சௌகார் ஜானகி, ஆங்கிலத்தில் பேசினார். அதனால் அவர் பேச்சு முழுவதற்கும் அரங்கம் அமைதியாக இருந்தது. இறுதியாக கலைஞர் கருணாநிதி பேசியபின், நடிகர்திலகம் நன்றியுரை நிக்ழத்தினார். கலைஞர் கருணாநிதி பேசத்துவங்கியபோது...

'தம்பி ஆரூர்தாஸ் என்னைப்பேச அழைத்தபோது, சிங்கம் கர்ஜிக்கப்போகிறது என்று சொன்னார். இரண்டு சிங்கங்கள் ஒரே காட்டில் கர்ஜிப்பது (பலத்த கைதட்டல்) திரையுலக மேடையை விட அரசியல் மேடைக்கே பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்' என்று துவங்கியவர், வழக்கம்போல பராசக்தி, மனோகரா காலங்களை நினைவு கூர்ந்தார். மீண்டும் அந்தக்காலம் திரும்பி வரும் வகையில் மாடி வீட்டு ஏழை உருவாகி வருவதைக் குறிப்பிட்டார்.

கலைஞர் பேசி முடித்ததும், படத்தில் இடம்பெற்ற கலைஞர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. நடிகர்திலகத்துக்கு, கலைஞர் கருணாநிதி கேடயம் வழங்கியதும், படப்பிடிப்புக்குச் செல்வதற்காக கிருஷ்ணா, அனைவரிடமும் விடைபெற்றுப் புறப்பட்டார். ஆனால் விஜயநிர்மலா விழாவில் இருந்தார். மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் நடிகை சௌகார் ஜானகி கேடயங்களை வழங்கினார்.

நடிகர்திலகம் நன்றியுரை நிகழ்த்தினார். அவரும், தனக்கும் கலைஞருக்குமான நெடுநாளைய நட்பைப் போற்றிப்பேசினார். மற்ற கலைஞர்களையும் பாராட்டியவர், படத்தை வெற்றிப்படமாக்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

விழா முடிந்து வெளியே வருபோது பார்த்தால், போகும்போது இருந்ததைவிட நாலு மடங்கு கூட்டம் கார்பார்க்கிங் முழுவது நிறைந்து காணப்பட்டது. விழாவுக்கு அனைத்து கலைஞர்களும் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவர்கள் வெளியே போகும்போது பார்ப்பதற்காக திரளாக கூடி நின்றனர். போலீஸார் தலையிட்டு கார்கள் செல்ல வழியேற்படுத்தித் தந்தனர். சிலர், தங்கள் அபிமான கலைஞர்களின் கார்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் வண்டியேறும்போது பார்த்துவிடலாம் என்று அவர்கள் வாகனங்களின் அருகே கூட்டமாக நின்றனர். கலைஞர் கருணாநிதி வந்திருந்ததால் அவரைப்பார்க்க தி.மு.க.வினரும், நடிகர்திலகத்தைக்காண ரசிகர்களும், காங்கிரஸாரும் கூடி நிற்க, அந்த வளாகமே கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்தது. மவுண்ட் ரோட்டில் பேருந்துகளில் செல்வோர் அனைவரும் சாந்தி வளாகத்தை ஆச்சரியமாக எட்டிப்பார்த்த வண்ணம் சென்றனர்.

ரவியண்ணனின் பைக், பார்க்கிங் நடுவில் மாட்டிக்கொண்டதால் மட்டுமல்ல, கூட்டம் அனைத்தும் செல்லும் வரை பார்த்து விட்டுப்போகலாம் என்று நாங்கள் நின்றிருக்க, அதே மனநிலையில் ரசிகர்கள் பலரும் நின்றதால், கூட்டம் கலைய வெகுநேரம் ஆனது. வீட்டுக்குத்திரும்பியதும், அனைத்து விஷயங்களையும் அப்பாவிடம் ஒன்றுவிடாமல் சொன்னபோது அவர் ரொம்பவே மகிழ்ந்தார், குறிப்பாக என் குதூகலத்தைப் பார்த்து.

நினைத்துப்பார்க்க எவ்வளவு இனிமையான நாட்கள் அவை.

eehaiupehazij
20th November 2014, 11:33 AM
Humble request to end up the 'cold war' with verbal exchanges (undesirable records) that are sharper and more powerful than weapons!

Is this a thread intended to glorify the name and fame of NT by way of highlighting his acting prowess and admiringg his illustrious and enviable career that is incomparable with any other actor of this world or a thread intended to defame and disgrace our own icon by way of irrelevant critical reviews and unwarranted 'clash' of the 'titans', leading to a 'stand still' situation ? Of course, NT's image can neither be shaken nor be stirred, even as attempts are made to erode the Himalayan of acting by rodents and woodpeckers who live within or come in from outside, for their own survival!Should elite balanced gentlemen and prime movers of this thread like Raghavendra or Murali or RKS, Gopal and Joe blow up this issue when our icon's image remains intact always!!

Can we not solve this by exchange of Personal Messages rather than exposing ourselves in a public forum like this?
We pave way for small spark to become a wild forest fire, if these glowing discussions are not dowsed!

For Kamal and Rajini. NT is a fatherly figure and their fans too have this outlook only. These clippings explicitly show the inherent respect and reverence commanded by NT from Kamal and Rajini, who become spellbound in the dominating screen presence of the giant NT!!

https://www.youtube.com/watch?v=L49zpCipbak

https://www.youtube.com/watch?v=qcsxZSg5Yl4

Irene Hastings
20th November 2014, 12:49 PM
Dear All

I feel bad in a way that may be my comments on the NPVU song might have created an unpleasantness here. I wish to offer my apologies to all if it had hurt Mr.Raghavendar . However, a true fan ( who should be bold enough to criticise the negative side of his idol ) will not wish to see such scenes . It might have looked great if our idol had done such in the 60s but not during end 70s when its very apparent.
The movie might have become a major hit . Still it doesnt absolve our idol . Wish to sign off saying that our hero could have been choosy in picking characters . I agree which he tried to do in the later years. Movies, like Thunai, MM, Devar Magan etc. I immensely liked his character in Jalli kattu, Lakshmi vandhachu etc.

I have more to write . Will do it.

Irene Hastings
20th November 2014, 12:53 PM
Dear All

I feel bad in a way that may be my comments on the NPVU song might have created an unpleasantness here. I wish to offer my apologies to all if it had hurt Mr.Raghavendar . However, a true fan ( who should be bold enough to criticise the negative side of his idol ) will not wish to see such scenes . It might have looked great if our idol had done such in the 60s but not during end 70s when its very apparent.
The movie might have become a major hit . Still it doesnt absolve our idol . Wish to sign off saying that our hero could have been choosy in picking characters . I agree which he tried to do in the later years. Movies, like Thunai, MM, Devar Magan etc. I immensely liked his character in Jalli kattu, Lakshmi vandhachu etc.

I have more to write . Will do it.


Gopal Sir,

My request to you is still pending . Navarathri - Character by character analysis pls . Only YOU can do it.

Russellxqa
20th November 2014, 02:30 PM
You have made nice suggestions to all to end the cold war. I am to state that WORLD SIVAJI FANS CAN NOW BROWSE THE NEW FACEBOOK PAGE ON "Sivaji Raghu" AND CAN ALL UPLOAD ALL PHOTOS THEY MAY HAVE. IT IS A BRIDGE FOR ALL SIVAJI FANS TO INTER-REACT IN A HEALTHY MANNER-THANKS agra2014.

Russellxqa
20th November 2014, 02:32 PM
You have made nice suggestions to all to end the cold war. I am to state that WORLD SIVAJI FANS CAN NOW BROWSE THE NEW FACEBOOK PAGE ON "Sivaji Raghu" AND CAN ALL UPLOAD ALL PHOTOS THEY MAY HAVE. IT IS A BRIDGE FOR ALL SIVAJI FANS TO INTER-REACT IN A HEALTHY MANNER-THANKS agra2014.

JamesFague
20th November 2014, 07:15 PM
Thanks to Mr Neyveli Vasudevan

'பாதுகாப்பு' வெளியான நாள் : 27-11-1970



இந்தப் படத்தைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் என் மனம் ஆகாயத்தில் பறக்கும். ஏன் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்படி ஒன்றும் விசேஷமான படம் கூட இல்லையே என்றும் கூட பலர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் மறக்கமுடியாத விசேஷப் படம் அது. சரி...ரொம்பப் பீடிகை வேண்டாம்... விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.

எங்கள் ஊரான கடலூரில்தான் 'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு நடைபெற்றது என்பதுதான் அந்த விசேஷம். இப்போது சொல்லுங்கள்.. இந்தப்படம் எனக்கு, ஏன் கடலூரையும், அதன் சுற்று வட்டாரங்களைச் சார்ந்தவர்களுக்கும் மிக நெருக்கமான படம்தானே!

கடலூர் ஓல்ட் டவுன் அதாவது CUDDALORE O.T என்று குறிப்பிடுவார்கள். (கடலூர் துறைமுகம் என்றும் கூறுவார்கள்) கடல், ஆறுகள் சூழ்ந்த பகுதிகள் அதிகம். மீனவர்கள் அதிகம் வசிக்கும் இடம். மீன்பிடித் தொழிலை நம்பித்தான் இன்றளவும் பல குடும்பங்கள் வாழ்கின்றன. உப்பனாறு, கடிலம்,பெண்ணையாறு போன்ற ஆறுகள் இங்கு கடலுடன் சங்கமிக்கும் காட்சிகளைக் காணக் கண் கோடி வேண்டும். இந்த ஆற்றுப் பகுதிகளில்தான் பாதுகாப்பு ஷூட்டிங் நடைபெற்றது.

கடலூர் துறைமுக உப்பனாற்றுப் பகுதி.



'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான சீன்கள் படகில் நடப்பது போல் வருவதினால் படப்பிடிப்பு கடலூர் துறைமுகம் பகுதிகளில் நடத்தப் பட்டது. அப்போது அங்கு நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

1970-ன் ஆரம்பத்தில் ஷூட்டிங் நடந்ததாக நினைவு. என் தாயார் தினமும் ஷூட்டிங் பார்க்க என்னை அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். என் தாயார் நடிகர் திலகத்தின் தீவிர பக்தை. எனவே சந்தோஷத்திற்குக் கேட்கணுமா?...

அப்போதெல்லாம் ஷூட்டிங் பார்ப்பது என்றால் சொர்க்கத்தையே நேரில் காண்பது போல...கடல் அலைகளை விட மக்கள் தலைகள் அதிகம். அதுவும் 'நடிப்புலகச் சக்கரவர்த்தி' ஷூட்டிங் என்றால்?... சொல்லணுமா..நடிகர் திலகத்தை காணும் போதெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கடல் அலையென ஆர்ப்பரிக்கும்.

தெய்வத்தை தரிசிப்பது போல நடிகர்திலகத்தைப் பார்த்து மயங்கியது கூட்டம். நடிகர் திலகம் படு ஸ்லிம்மாக படப்பிடிப்பில் கலந்து கொண்டது என் பிஞ்சு நெஞ்சில் ஆழமான ஆணிவேராக வேரூன்றிப் பதிந்துவிட்டது. அவர்மேல் பாசமான வெறி வர என்னுள் முதல் தளம் அமைத்துக் கொடுத்தது 'பாதுகாப்பு' பட ஷூட்டிங் தான்.

நடிகர் திலகம் படகோட்டுபவராக ( படகை விட சற்றுப் பெரிதான தோணி) நடித்ததால் பெரும்பாலும் படகுகளில் ஷூட்டிங் இருக்கும். உப்பனாற்றில்தான் நிறைய ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் சமயங்களைத் தவிர பிற சமயங்களில் கைலியையே கட்டிக் கொண்டு கொஞ்சமும் பந்தா இல்லாமல் படகில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் நடிகர் திலகம். தனியாக அவருக்கென்று ஒரு படகு. ஒரு படகோட்டி...(வண்ண ஓடக்காரன் அல்ல. கார்த்திக் சாருக்கு நன்றி!)...சாதாரண ஒரு படகோட்டி. (கொடுத்து வைத்த படகோட்டி.) படகில் சரியான வசதிகள் கூடக் கிடையாது. தன்னுடைய ஷூட்டிங் நடைபெறாத சமயங்களில் நடிகர் திலகம் படகிலேயே கண்ணயர்ந்து உறங்கி ஓய்வெடுக்க, படகு ஆற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். ரசிகர்களின் அன்புத் தொல்லையை சமாளிக்க இப்படி ஒரு வழியை படகோட்டிதான் கூறினாராம். இருகரை மருகிலும் ஜனத்திரள் நடிகர் திலகத்தின் முகத்தை அருகில் பார்த்துவிடத் துடிக்கும். நடிகர் திலகமும் அவ்வப்போது படகோட்டியிடம் கரை ஓரமாக படகை ஓட்டச் சொல்லி கரை ஓரமாகவே படகில் நின்று (படகு மெதுவாக ஓடியபடியே இருக்கும்) அன்பு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் கையை அன்புடன் அவருடய ஸ்டைலில் அசைத்து சைகை செய்தபடியே வலம் வருவார்.

நடிகர் திலகம் படப்பிடிப்பில் ஒட்டுவதாக வரும் CU 221 எண் தோணி.



CU 221 எண் தோணியை செலுத்துகிறார் நடிகர் திலகம்.



தோணியின் பாய்மரத்தை ஏற்றுகின்றார் நடிகர் திலகம்.(உடன் மேஜர் மற்றும் நம்பியார்)



உடன் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், நம்பியார் அவர்கள்,மேஜர் சுந்தரராஜன் அவர்கள், இயக்குனர் பீம்சிங் அவர்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்கள். மேஜர் அவர்களின் கையில் எப்போதும் நீள் சுருட்டு ஒன்று புகைந்து கொண்டே இருக்கும்.

மீனவர்கள் அன்புடன் தரும் மீன் வகை உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிட்டார் நடிகர் திலகம். இறால் என்றால்அவருக்கு மிகவும் உயிர் என்பதால் மீனவர் தலைவர் திரு குப்புராஜ் அவர்கள் இறாலை பதமாக வறுத்து ஒரு டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்துவிடுவாராம். நடிகர் திலகம் அதை ருசித்து சுவைத்து சாபிடுவாராம். (பின்னாட்களில் 'பாதுகாப்பு' எண்ண அலைகளில் மூழ்கும் போது திரு.குப்புராஜ் அவர்கள் பாதுகாப்பு பற்றிய பழைய நினைவுகள் பலவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்).

'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்' என்ற அற்புதமான பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு பூண்டியாங்குப்பம் என்ற இயற்கை சூழல் நிறைந்த ஊரில் நடந்தது. ஒரு கைலி, மற்றும் ஒரு வெள்ளை பனியனுடன் நடிகர் திலகம் ஷாட்டுக்கு ரெடி. தன்னுடைய தோணியில் இருந்தவாறே அருகில் ஒரு சிறு படகில் புது திருமணத் தம்பதிகள் வரும்போது அவர்களைப் பார்த்து ஜெயலலிதாவை நினைத்து கனவு காணுவதாக சீன். அந்த புதுமணத் தம்பதிகளாக தன்னையும் ஜெயலலிதா அவர்களையும் கற்பனை செய்து அதே படகில் வருவதாக அந்தக் கனவுக் காட்சி. (அந்தக் குறிப்பிட்ட சீனைக் கூட நிழற்படமாகப் பதிவிட்டுள்ளேன்). இந்தக் காட்சியை ஆற்றின் அக்கரையில் எடுக்கப் படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

புதுமணத் தம்பதிகளாக நடித்த எக்ஸ்ட்ரா நடிகர்கள்.



கனவுக் காட்சியில் நடிகர்திலகமும், ஜெயலலிதாவும்.




இக்கரையில் படகில் நடிகர் திலகமும்,ஜெயலிதாவும் ஏறி அமர படகு அக்கரைக்கு செல்ல ஆரம்பித்தது. இக்கரையில் இருந்த மக்கள் ஷூட்டிங் இங்குதான் நடக்கும் என்று மனக்கோட்டை கட்டியிருக்க, திடீரென்று படகு அக்கரை செல்ல, ஏமாற்றமடைந்த இளைஞர் பலர் (நீச்சல் தெரிந்தவர் நீச்சல் தெரியாதவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை..) 'சொடேல் சொடேல்' என ஆற்றில் குதித்து அக்கரைக்கு நீந்த ஆரம்பிக்க ஒரே ஆனந்தக் களேபரம் தான்.

என்னுடைய தந்தை ஊர்க்காவல் படையில் இருந்ததனால் எனக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. ஊர்க்காவலர் படை யூனிபார்ம் அப்படியே போலீஸ் உடை போலவே இருக்கும் . போலீசுக்குக் கிடைக்கும் மரியாதை அவர்களுக்கும் உண்டு. அந்த வசதியால் என் தந்தையுடன் வெகு ஈஸியாக நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகின் அருகில் சென்று நின்று கொள்ள முடிந்தது. நான் சிறுவனானதால் சடாலென எதிர்பாராத விதமாக என்னையும் நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகில் தூக்கி ஏற்றிவிட்டு, தானும் அப்படகில் ஏறிக்கொண்டார் என் தந்தை. (போலீஸ் பந்தோபஸ்து என்ற சாக்கில்.) படகில் படப்பிடிப்புக் குழுவினர் சிலரும், ஜெயலலிதா அவர்களும், சில காவல்துறையினர் மட்டும் இருக்க நடிகர் திலகத்தின் அருகில் நான். முதன் முதலாக நடிகர் திலகத்தை மிக அருகில் பார்க்கிறேன். ஒரு நாற்காலியில் கைலியோடு படு காஷுவலாக அமர்ந்திருந்தார் நடிகர் திலகம். அவ்வளவாக அறியாத சிறு வயது எனக்கு. பின்னாளில் என் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறார் என்பது அறியாமல் அவரை விழுங்கி விடுவது போலப் பேந்தப் பேந்தப் பார்க்கிறேன் நான். நடிகர் திலகமும் என்னை உற்று நோக்கி ஒரு சிறு புன்னகை புரிகிறார்.(என்ன ஒரு கொடுப்பினை). என் தந்தை வாழ்நாட்களில் எனக்குச் செய்த பேருதவி இதுதான் என்று சொல்லுவேன்.( பின்னர் பல நாட்களில் வாரம் ஒருமுறை என 'அன்னை இல்லம்' சென்று அவரை தரிசித்து 'ஷொட்டும்' வாங்கியிருக்கிறேன். திட்டும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.(அவரிடம் திட்டு வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!) நினைத்தாலே கண்ணீர்ப் பிரவாகமெடுக்கிறது.

ஷூட்டிங் நடைபெற்ற பூண்டியாங்குப்பம் ஆற்றுப் பகுதி



அக்கரையில் சில காட்சிகள் எடுத்து முடிக்க அன்று மதியம் இரண்டு மணி ஆகி விட்டது. ஒரு மணிக்கெல்லாம் ஜெயலலிதா அவர்களின் சம்பந்தப் பட்ட காட்சிகள் முடிந்தவுடன் அவர் தனியாக ஒரு படகில் இக்கரை வந்து சேர்ந்து மதியம் லஞ்ச்சுக்காக காரில் பாண்டிச்சேரி புறப்பட்டுப் போய் விட்டார். நடிகர் திலகம் நடித்த காட்சிகள் முடிந்து அவர் தனியாக ஒரு படகில் இக்கரை திரும்புகையில் பலத்த காற்று வீச ஆரம்பித்தது. அக்கரையில் இருந்து இக்கரை வந்து சேர ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆகும். காற்று அச்சமயம் பலமாக வீச, நடிகர் திலகம் வந்த சிறு படகின் பாய்மரம் கிழிந்து விட்டது. படகோட்டி சாதுரியமாக படகை ஓட்டி வந்தார். கிழிந்து போன அந்த பாய்மரம் செப்பனிட தேவையான செலவுக்கான தொகையை நடிகர் திலகமே படகோட்டியிடம் கொடுத்து உதவியது பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.

படகில் நின்று ஷூட்டிங் பார்க்க வந்த மக்களைப் பார்த்தவாறே நடிகர் திலகம் தன் வயிற்றைத் தடவி 'பசி' என்று சைகையால் அப்பாவித்தனமாகக் காண்பிக்க ,ஒரு ரசிகர் தன் கையில் வைத்திருந்த கலர் சோடாவுடன் ஆற்றுக்குள் குதித்து நீந்திச் சென்று நடிகர் திலகத்திடம் கொடுக்க அவரும் அதை தேவாமிர்தம் போல வாங்கிக் குடிக்க, அந்த ரசிகரின் முகத்தில் தோன்றிய பெருமிதத்தைக் காண வேண்டுமே! ..... செம ஜாலியாய் இருந்தது.

நடிகர் திலகம் தனது ஆத்ம நண்பரான காங்கிரஸ் முன்னாள் கடலூர் எம்.பி. திரு.முத்துக் குமரன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அங்கிருந்து ஷூட்டிங் நடந்த பூண்டியாங்குப்பம் என்ற கிராமம் சற்றேறக்குறைய கடலூரிலிருந்து இருபது கிலோமீட்டர்களுக்கு மேல் இருக்கும். ஷூட்டிங் முடித்து மாலையில் திரும்பும் போது ரோடின் ஓரத்தில் ஒரு ஆயா மசால் வடை சுட்டுக் கொண்டு வியாபாரம் செய்தார்களாம். காரில் வரும்போது அந்த மசால் வடை வாசத்தில் மயங்கி காரை நிறுத்தச் சொல்லி காரில் அமர்ந்தபடியே மசால் வடையை வாங்கி வரச் சொல்லுவாராம் நடிகர் திலகம். வங்கியில் பணி புரிந்து ஒய்வு பெற்ற நடிகர் திலகத்தின் அன்புக்குப் பாத்திரமான கடலூர் 'பேங்க் மோகன்' என்ற இனிய நண்பர்தான் வடையை வாங்கி வந்து கொடுப்பாராம். நடிகர் திலகமும் காரிலேயே தினமும் வடையை மிகவும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டே வருவாராம். ('பேங்க்' மோகன் அடிக்கடி இன்று பார்த்தாலும் கூட "நான் நடிகர் திலகத்திற்கு மசால் வடை வாங்கிக் கொடுத்தவனாக்கும்"...என்று பெருமையுடன் ஜம்பம் அடித்துக் கொண்டு நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார்).

ஷூட்டிங்கின் கடைசி நாளன்று நடிகர்திலகமே காரை விட்டு இறங்கி நேராகவே அந்த ஆயாவிடம் சென்று மசால் வடை கட்டி கொடுக்கச் சொன்னாராம். அந்த ஆயாவும் சரியாகக் கண் தெரியாததால் தன்னிடம் வடை வாங்குவது உலகப் புகழ் பெற்ற நடிகர் என்று தெரியாமல் வடையைக் கட்டிக் கொடுத்தார்களாம். பின் நடிகர் திலகம் அந்தப் பாட்டியிடம் "பாட்டி! என்ன யாருன்னு உனக்குத் தெரியலையா?" என்று கேட்க, பாட்டி "சரியாகத் தெரியலயேயப்பா" என்று கூற, அதற்கு நம் நடிகர் திலகம் நம் கார்த்திக் அவர்கள் கூறுவது போல குறும்பாக,"பாட்டி என்ன நல்லாப் பாரு! என்ன நல்லாப் பாரு!" என்று திருவிளையாடல் பாணியிலேயே சொல்ல பாட்டி சற்று யோசித்துவிட்டு உடனே புரிந்து கொண்டு, "தம்பி! நீ சிவாசிகணேசன் தானே! என்று கூறி நடிகர் திலகத்தை அடையாளம் கண்டுபிடித்து விட்டார்களாம். பின் மசால் வடைருசியைப் பற்றி அந்தப் பாட்டியிடம் பாராட்டிவிட்டு மீதம் இருந்த அத்தனை மசால்வடைகளையும் பார்சல் செய்யச் சொல்லி வாங்கிக் கொண்டு அந்தப் பாட்டிக்கு ஒரு கணிசமான தொகையைத் தந்து மனமகிழ்ந்தாராம் நடிகர் திலகம்.

அதனால் தான் 'பாதுகாப்பு' படம் எங்களுக்கெல்லாம் மறக்க முடியாத ஒன்றாயிற்று. இன்னும் சொல்லப் போனால் கடலூரும், அதன் சுற்றுவட்டாரங்களும் அப்படத்தின் ஷூட்டிங்கால் தலைவரின் கோட்டையாயின என்று கூடச் சொல்லலாம். குறிப்பாக ஷூட்டிங் பார்க்க வந்த கிராமங்களின் மக்கள் நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்துப் பேசி மகிழ்ந்தனர்.

குறிப்பாக ராமாபுரம் என்ற ஒரு கிராமமே தலைவர் புகழ் பாடும் கிராமமாயிற்று. அந்த கிராமத்தில் தான் என் தந்தையார் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்தார்). ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நடிகர் திலகம் தான் வேட்டை ஆடி பாடம் செய்த புலியுடன் நின்று ஸ்லிம்மாக காட்சி தரும் அந்த அற்புத புகைப்படம் கண்டிப்பாக மாட்டப் பட்டிருக்கும் இன்றளவிலும் கூட.

இன்று 'பாதுகாப்பு' வெளியாகி 41 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் இப்போதுதான் அப்படத்தின் ஷூட்டிங் பார்த்தது போல அவ்வளவு பசுமையான நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. நடிகர் திலகத்தின் தீவிர பக்தனாக என்னைப் பெருமையுடன் உலா வர வைத்த பாதுகாப்பை வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்த அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. 'பாதுகாப்பு' என்னைப் பொறுத்தவரயில் மிகச் சிறந்தபடம் என்றுதான் கூறுவேன். மிகவும் வித்தியாசமான முறையில் சிறந்த கதைக் கருவோடு எடுக்கப் பட்ட அற்புதமான இந்தப் படம் வழக்கம் போல வெகுஜன ரசனைக் குறைவால் சராசரிக்கும் கீழே தள்ளப் பட்டது வேதனைக்குரியது. மேலும் எங்கள் ஊரில் எடுக்கப் பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் இடம்பெறாமல் போனாலும், ஒரு சராசரி அளவிற்குக் கூட வெற்றி அடையவில்லையே என்ற வருத்தமும் ஆதங்கமும் எப்போதும் எங்கள் ஊர் மக்களின் அடிமனதில் இருந்து வலித்துக் கொண்டே தான் இருக்கும்.


அன்புடன்,
வாசுதேவன்.

Russellbpw
20th November 2014, 09:53 PM
Dear All

I feel bad in a way that may be my comments on the NPVU song might have created an unpleasantness here. I wish to offer my apologies to all if it had hurt Mr.Raghavendar . However, a true fan ( who should be bold enough to criticise the negative side of his idol ) will not wish to see such scenes . It might have looked great if our idol had done such in the 60s but not during end 70s when its very apparent.
The movie might have become a major hit . Still it doesnt absolve our idol . Wish to sign off saying that our hero could have been choosy in picking characters . I agree which he tried to do in the later years. Movies, like Thunai, MM, Devar Magan etc. I immensely liked his character in Jalli kattu, Lakshmi vandhachu etc.

I have more to write . Will do it.

Dear Irene,

Don't think you are playing a wise game by offering your apology. Your apology is all Fake which proves in the second and third sentence.

Our idol ?????? who is your idol ??? NT ?????

We do not need your confession on agreement !

Regretful Regards for you,

RKS

__________________________________________________ __________________________________________________ __________________

RKS,

Please refrain from using certain level of language that cannot be accepted in a Forum like this.

If you are disagreeing on something with others then there are better ways of doing it instead of writing un-parliamentary usages that are not acceptable.

Hope you will be more careful in future.

Regards

Murali

Russellbpw
20th November 2014, 09:56 PM
Dear Gopal Sir,


Regards

RKS

Russellbpw
20th November 2014, 09:58 PM
You have made nice suggestions to all to end the cold war. I am to state that WORLD SIVAJI FANS CAN NOW BROWSE THE NEW FACEBOOK PAGE ON "Sivaji Raghu" AND CAN ALL UPLOAD ALL PHOTOS THEY MAY HAVE. IT IS A BRIDGE FOR ALL SIVAJI FANS TO INTER-REACT IN A HEALTHY MANNER-THANKS agra2014.

Dear Sir,

Regards

RKS
__________________________________________________ __________________________________________________ __________________

RKS,

Mr.Raghupathy had written this with regard to Senthil's post where he had talked about NT movies and efforts to stand united. But you have not noticed that and again used words which should have been avoided.

Regards

Murali

Russellbpw
20th November 2014, 10:22 PM
சந்திப்பு, மோகனபுன்னகை ஆகிய படங்களை பார்பவர்கள் தங்கள் கண்ணோட்டத்தில் உள்ள தவறுக்கு, அந்த தவறின் மூலம் தவறான புரிதலுக்கு ஆளாகும் நிலையில் அதற்க்கு யாரும் பொறுப்பல்ல.

வீட்டில் இருப்பவர்கள் "சந்திப்பு" திரைப்படத்தில் அது வெளிவந்த காலகட்டத்திலோ அதற்க்கு பிறகோ "பீம்சிங் படத்தை எதிர்பார்த்து உட்கார்ந்தால் அப்படி தான் இருக்கும்.

அல்லது மோகனபுன்னகையில் ஒரு வசந்தமாளிகை பார்க்க நினைத்தால் எந்த நினைவுடன் பார்ப்பது என்று கூட பார்க்க தெரியாமல் படம் பார்த்தது என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அந்த இடத்தில் நானாக இருந்தால் " நடிகர் திலகத்தின் இந்த படங்கள் மற்றவர்களின் அல்லது இக்கால நாயகர்களின் படங்களை விட 200 சதவிகிதம் மேல் என்று கர்வத்துடன் கூறியிருப்பேன்

இப்படி தங்கள் பார்வை கோளாறு காரணம் தவறு இழைத்துவிட்டு, நடிகர் திலகம் அவர்களின் தரத்தை விவாதிக்கும் அளவிற்கு அவரை இஷடப்படி விமர்சிக்கும் எவருக்கும் தரம் பற்றி பேசும் தகுதி கிடையாது !

eehaiupehazij
20th November 2014, 10:42 PM
Theme : நடிகர்திலகத்தின் நடிப்பியல் பேராண்மை

Concept : (Cell Division and Multiplicity) : ஒரே படத்தில் மாறுபட்ட பலவேட சித்தரிப்பு வன்மை !

PART 1 : Uththamapuththiran (1958) உத்தமபுத்திரன்

உத்தமபுத்திரன் பார்த்திபன் / உன்மத்த வில்லன் விக்கிரமன்!

நடிகர்திலகம் தனது close-up shots மற்றும் பாடல் காட்சிகளில் 100 சதவீதம் பொருந்திய உதட்டசைவுகளுட ன் கூடிய அற்புதமான முக பாவங்கள் மற்றும் பின்னணி இசைக்கேற்ப லயத்துடன் கூடிய நளினமான நடன அசைவுகள், நடையுடை பாவனைகள் என்று ரசிகர்களைக் கட்டிப்போட்ட காந்தப்புயல். ஒரேபடத்தில் நுணுக்கமான வித்தியாசம் காட்டி சிவாஜி என்பவர் ஒரே மனிதரல்ல.....உத்தமபுத்திரன்/ ரெண்டு சிவாஜி, தெய்வமகன்/ மூணு சிவாஜி...நவராத்திரி/ஒம்பது சிவாஜி....என்று நம் கண்ணை நாமே நம்ப இயலாமல் கண்கட்டு வித்தையாக பாத்திரங்களின் மாறுபட்ட குணாதிசயங்களை மனதில் ஆணி அடித்தது போல் நடிப்புப்பதிவு செய்வதில் தன்னை விஞ்சிய நடிகமேதை எவருமில்லை இவ்வுலகில் எங்குமில்லை இதுவரை இல்லை இனிமேலும் இல்லை என்பதை நிரூபித்தவர் !

உத்தமபுத்திரன் . புதியபறவை போலவே நடிகர் திலகத்தின் signature movie. இரட்டை வேட நடிப்பில் நடிகர்திலகம் முப்பரிமாணத்தையும் வெளிக்கொணர்ந்த evergreen and immortal movie. ஒரே உருவ அமைப்பில் உடல்மொழி வாயிலாகவே வேறு எந்த ஒரு உலக நடிகனும் கற்பனை கூட செய்ய முடியாத அளவு பாத்திரங்களின் குணாதிசயங்களை வேறுபடுத்துவதில் ரசிகர்களை மெய்மறந்து பிரமிப்பில் ஆழ்த்திய திரைப்பெட்டகம். கதாநாயகன் பார்த்திபனை நேசிக்க வைப்பதிலும் வில்லன் விக்ரமனை வெறுக்க வைப்பதிலும் நடிகர்திலகம் வெளிப்படுத்திய வாழ்ந்துகாட்டிய ஆற்றல் மிக்க நடிப்பினை இவ்வையகம் உள்ளவரை மறக்க இயலுமா?

இப்போது என்னால் இப்படி நடிக்க முடியுமா என்று நடிகர்திலகமே தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்ட மகோன்னதமான திரைக்காவியம்

பார்த்திபன்விக்ரமனாகநடிக்க வேண்டியதையும் விக்ரமன் பார்த்திபனாக கூடுமாறுவதையும் துல்லியமாக வேறுபடுத்தி நடிக்கும் காட்சி அமைப்புகள் NT இப்புவி சுழலும்வரை நடிப்புக்கடவுள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறுதி செய்கின்றன. ஒரு தன்னிலை உணராத குடிகார மன்னனின் முகச்சோர்வு மற்றும் நடைத்தள்ளாட்டங்களை இவ்வளவு துல்லியமாக எந்தவொரு நடிகனாலும் வெளிப்படுத்தவே இயலாது! யாரடி நீ மோகினி மற்றும் உன் அழகை கன்னியர்கள் சொன்னதினாலே பாடல் காட்சிகளை பார்க்கும் போது இதை நம்மால் ரசித்து மகிழ முடிகிறது. சாகாவரம் பெற்ற நடிப்புக்கடவுளின் ஒப்புவமையோ ஈடு இணையோ இல்லாத காவியம்.

https://www.youtube.com/watch?v=a63IlNFGip8

https://www.youtube.com/watch?v=E0tbhP9lZsg

https://www.youtube.com/watch?v=Um5z4-IrgRw

https://www.youtube.com/watch?v=cgKCnZsHfAY

(This part of write-up focuses only on the acting prowess of NT in such movies with particular reference to his inimitable skills of portraying multiple roles at ease with the finest differences in characterizations. The relative contributions of other supporting artistes, behind the screen heroes like the musician, camera man, director,..movie run...heroines...etc will be analysed separately under the title நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் ! later so that NT's acting skills will be the front line interface to such details.)

Nadigar Thilagam will be back in "Bale Paandiyaa"

Russellbpw
20th November 2014, 10:55 PM
விரைவில் !!!!

மையத்தில் இன்று வரை வந்த நடிகர் திலகத்தின் திரைப்பட வரிசை மற்றும் ஆவணங்கள் தொகுத்து சுமார் 260உக்கும் மேற்பட்ட திரைப்பட ரிலீஸ், 50, நூறு, வெள்ளிவிழா விளம்பரங்கள் மற்றும் நடிகர் திலகத்தை பற்றிய தகவல்கள், பத்திரிகையில் வந்த பேட்டிகள் இன்னும் பல விஷயங்கள் ஒரு cd அல்லது dvd வடிவில் நம்முடைய ரசிகர்களுக்கு, இந்த அறிய ஆவணங்களை பத்திரபடுத்தி வைக்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு மையம் திரியில் நடிகர் திலகம் அவர்கள் திரியில் பதிவுகளை படிக்க வரும் அனைவருக்கும் புத்தாண்டில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் ஒரு அரிய செயலாக "இலவசமாக" கொடுக்க நான் தீர்மானம் செய்துள்ளேன்.

இது தவிர என்னிடம் உள்ள நான் தனிப்பட்ட முறையில் சேகரித்துள்ள சுமார் 1000 துக்கும் அதிகமான அரிய புகைப்படங்கள் நடிகர் திலகம் அவர்களின் திரைப்பட காட்சிகள், personal போட்டோ ஆகியவையும் cd மற்றும் dvd வடிவில் நமது ரசிகர் மற்றும் அதனை பொக்கிஷமாக வைத்துகொள்ள விரும்புவோர் இளைய ரசிகர்கள் இவர்களுக்காக வழங்கவுள்ளேன்.

கூடிய விரைவில் அதற்க்கான மின் அஞ்சல் இதே மையம் திரியில் பதிவிடுகிறேன். அந்த மின் அஞ்சல் முகவரிக்கு, உங்களுடைய பெயர், விலாசம், கைபேசி எண் ஆகியவை எழுதி அனுப்பினால். Courier இல் அந்த cd அல்லது dvd அனுப்பிவைக்கப்படும்.

இந்த ஆவணங்கள் பெரும்பான்மையானவை திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாகை , கோவை மாவட்ட நடிகர் திலகம் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நண்பர்கள் முக்கால்வாசி பேர் நடிகர் திலகம் புகழ் பரப்பவேண்டும், இக்கால இளைஞர்கள் இளைய தலைமுறையினர் நடிகர் திலகம் சாதனைகள் பற்றி அறியவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக கொடுத்து உதவி, அது நமது மையம் திரியில் பதிவேற்றப்பட்டவையாகும் !

ஆகையால் இதற்க்கு கட்டணம் எதுவும் கிடையாது...!

rks

Russellbpw
20th November 2014, 10:56 PM
திரை உலகின் சிரஞ்சீவி !

நாளை முதல் நடிகர் திலகத்தின் 225வது படம் முதல் 305 வரை ஒரு அலசல். தீர்ப்பு 82 !

நடிகர் திலகத்தின் மகத்துவம் தெரியாதவர்களுக்கு, பகுத்தறிவு தெரியாத அனால் தெரிந்ததுபோல வியாக்யானம் விளம்புபவர்களுக்கு பகுத்து அறிவு புகட்ட நடிகர் திலகம் என்ற திலகத்தின் ஒரு துளியின் ஒரு துளியாக 82 பாகங்கள் அவருடைய நடிப்பாற்றலை, வெளிக்கொண்டுவரும், புதிய அத்தியாயம். ! தீர்ப்பு 82 !

இதில் இடம்பெறும் முதல் திரைப்படம் நடிக பேரரசின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த முழுக்க முழுக்க கப்பலில் எடுக்கப்பட்ட திரைப்படம் சிரஞ்சீவி !!!

http://www.youtube.com/watch?v=IYit_3Tf_Bw

Russellbpw
20th November 2014, 11:18 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps86ae11c1.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps86ae11c1.jpg.html)

Murali Srinivas
21st November 2014, 12:59 AM
கோபால்,

எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் நான் மாறவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் என்ன செய்வது? ராகவேந்தர் சார் உங்களை குறிப்பிட்டு சொல்லாத போது நீங்கள் ஏன் தேவையற்று மீண்டும் விவாதத்தில் இறங்குகிறீர்கள்? அதிலும் உடனே ஒரு சில படங்களைப் பட்டியலிட்டு? உங்களுக்கு பிடிக்கவில்லையா விட்டு விடுங்கள்.

என்னுடைய தனிப்பட்ட யோசனை என்னவென்றால் உங்களுக்கு இந்த விவாதக் களம் சரிபடாது. நீங்களே சில நாட்கள் முன்பு சொல்லியிருந்தது போல ஒரு வலைப்பூ [blog] தொடங்குங்கள். அங்கே உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

RKS,

ஏன் இவ்வளவு அதீத உணர்ச்சிவசப்படல்? தடித்த வார்த்தைகளை எப்போதும் புண்படுத்தக் கூடியவை. ஆகவே அதை தவிருங்கள். நாம் யாரை பற்றி பேசுகிறோம் என்று சற்று யோசித்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அது மட்டுமல்ல இந்த திரியில் உறுப்பினராக இல்லாத, இந்த திரி விவாதங்களைப் பற்றி எதுவுமே தெரியாத ஒருவரைப் பற்றி பேசுவது சரியல்ல. அது மட்டுமல்லாமல் பதிவை நீக்கவில்லை என்றால் போன்ற வாக்கியங்கள் எந்த தொனியில் அமைந்தவை என்பது உங்களுக்கே தெரியும். அது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது ஏற்புடையதன்று.

அன்புடன்

Gopal.s
21st November 2014, 04:38 AM
இன்று பிறந்த நாள் காணும் வாசுவிற்கு பல்லாண்டு மேலும் காண வாழ்த்துக்கள். சரக்குடன் உன்னை சந்தித்து இரு வருடங்கள் ஓடி விட்டதை நம்ப கூட முடியவில்லை. இன்று உன் ஞாபகார்த்தமாக வேறொரு நண்பருடன் சரக்கடித்து கொண்டாட இருக்கிறேன்.

நெய்வேலி திரும்ப வரும் எண்ணம் உள்ளது. முயல்கிறேன்.

நட்புடன்
கோபால்.

sivaa
21st November 2014, 06:44 AM
அன்புள்ள வாசு தேவன் சார்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.






..

eehaiupehazij
21st November 2014, 07:07 AM
குன்றிலிட்ட தீபமாக ஒளிரும் நடிகர்திலகத்தின் புகழை குடத்திலிட்ட விளக்காய் தன்னடக்கத்துடன் பறைசாற்றிய மிகச்சிறந்த பதிவுகளுடன் இத்திரியின் தூண்களில் ஒருவராக நிலைத்து நின்று தாங்கிக்கொண்டிருக்கும் திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

'திறமை உள்ளவர் எங்கிருந்தாலும் தேசமே அவரை நோக்கி ஓடும்' என்னும் வைர வரிகளை நீங்கள் ஆராதித்து மகிழ்ந்த நடிகர்திலகமே மீண்டும் உங்கள் நல்வரவு வேண்டி கூடை நிறையப் பூக்களுடன் உங்களை நோக்கிப் பாடுகிறாரோ !?

https://www.youtube.com/watch?v=lfSZQns0zgE

regards, senthil

Gopal.s
21st November 2014, 07:28 AM
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்

கொஞ்சமோ பிரிவினைகள்-ஒரு

கோடி என்றால் என்றால் அது பெரிதாமோ

ஐந்து தலை பாம்பென்பார் - அது

ஆறு தலை என்று சொல்லிவிட்டால்

நெஞ்சு பிரிந்திடுவார் நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.



என் எண்ணங்களும் பேனாவும் யாருக்காகவும் எதற்காகவும் வளையாது. பொய்யுரைக்காது.(ஆனால் எண்ணங்கள் நீக்க படலாம் நடுவரினால் . நீர்க்க வைக்க முடியாது.)



அது நான் வணங்கும் நடிகர்திலகமானாலும் அல்லது எனக்காகவேயானாலும்.

Gopal.s
21st November 2014, 07:45 AM
சந்திப்பு, மோகனபுன்னகை ஆகிய படங்களை பார்பவர்கள் தங்கள் கண்ணோட்டத்தில் உள்ள தவறுக்கு, அந்த தவறின் மூலம் தவறான புரிதலுக்கு ஆளாகும் நிலையில் அதற்க்கு யாரும் பொறுப்பல்ல.

வீட்டில் இருப்பவர்கள் "சந்திப்பு" திரைப்படத்தில் அது வெளிவந்த காலகட்டத்திலோ அதற்க்கு பிறகோ "பீம்சிங் படத்தை எதிர்பார்த்து உட்கார்ந்தால் அப்படி தான் இருக்கும்.

அல்லது மோகனபுன்னகையில் ஒரு வசந்தமாளிகை பார்க்க நினைத்தால் எந்த நினைவுடன் பார்ப்பது என்று கூட பார்க்க தெரியாமல் படம் பார்த்தது என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அந்த இடத்தில் நானாக இருந்தால் " நடிகர் திலகத்தின் இந்த படங்கள் மற்றவர்களின் அல்லது இக்கால நாயகர்களின் படங்களை விட 200 சதவிகிதம் மேல் என்று கர்வத்துடன் கூறியிருப்பேன்

இப்படி தங்கள் பார்வை கோளாறு காரணம் தவறு இழைத்துவிட்டு, நடிகர் திலகம் அவர்களின் தரத்தை விவாதிக்கும் அளவிற்கு அவரை இஷடப்படி விமர்சிக்கும் எவருக்கும் தரம் பற்றி பேசும் தகுதி கிடையாது !

ஆர்.கே.எஸ்.



உங்களின் கூற்று உங்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லையா?



பாலு மகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா,பாரதி ராஜா, பாரதி-வாசு ,போன்றோருடன் பாலசந்தர் ,ஸ்ரீதர் போன்ற பழம் பெரும் இயக்குனர்கள் இளைய தலைமுறையுடன் இணைந்து கலக்கி கொண்டிருந்த பொற்காலம். (1976- 1981) .அதில் நீங்கள் குரிப்பிட்டவைதான் உன்னத படங்களா?பொய் சொல்வதற்கும்,வக்காலத்து வாங்குவதற்கும் எல்லை உண்டு.

uhesliotusus
21st November 2014, 09:26 AM
ரவிகிரன்,

உங்கள் போராட்ட குணம் வியக்க வைக்கிறது. சினிமாக்களில் ஹீரோக்கள் 10 அடியாட்களை புரட்டி எடுப்பது பெரிதல்ல. நீங்கள் ஒற்றை ஆளாக களத்தில் நின்று சிவாஜி எதிர்ப்பு அலைகளுடன் மோதி அனயாசமாக விளையாடுகிறீர்களே. இதுதான் சார் துணிச்சல். பாராட்டுகிறேன்.

நீங்கள் தொடங்கியிருக்கும் சிவாஜி தொடர் தீர்ப்பு 82 ஒரு நல்ல புதிய கோணத்தில் 80 களுக்குப் பிந்தைய நடிகர் திலகத்தின் படங்களில் அவரது திறமையை உலகிற்கு உணர்த்தும் நல்ல முயற்சி. இன்னும் விஸ்தாரமாய் தொடருங்கள். வாழ்த்துக்கள். எனக்குப் பிடித்த தியாகி படத்தைப் பற்றி விவரமாக எழுதுங்கள். நானும் நிச்சயமாக அந்தப் படத்தைப் பற்றி எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்.

இது பற்றி நெகடிவ் கருத்துக்களை வேண்டுமென்றே பதிப்போரை நடுவர் பார்த்துக் கொள்வார். என்னுடைய இந்த பதிவிற்கு எதிர் வினை வந்தால் அப்போ இருக்கு. இந்த மாதிரிப் படங்களை எழுதக் கூடாது அந்த மாதிரிப் படங்களை எழுதக் கூடாது என்று சொல்ல இங்கு எவருக்கும் ரைட்ஸ் இல்லை. உலகக் கூரையின் கீழ் உள்ள சிவாஜியைப் பற்றி சிவாஜியின் படங்களைப் பற்றி எழுத இங்கே தடை போடுபவர் யார் என்று நடுவர் பார்த்துக் கொள்வார்.

சிவந்த மண் சுதந்திரம் பெற துணிச்சலோடு போராடியவன் பாரத் என்ற இளம் சிங்கம். சிவாஜிக்காக இந்தத் அவரது திரியிலேயே போராடுவது ரவிகிரன் சூர்யா என்ற சிங்கம்.

JamesFague
21st November 2014, 10:00 AM
Thanks to Mr Neyveli Vasudevan

அன்பு நண்பர்களே!

'கருடா சௌக்கியமா' ஆய்வுக் கட்டுரை இரண்டாம் பாகத்தில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். முதல் பாகத்திற்கு நீங்கள் அனைவரும் வழங்கிய ஆதரவுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இரண்டாம் பாகத்தை தொடர்கிறேன்.

இனி இரண்டாம் பாகம்.

நடிக வேந்தனின் நடிப்பு முத்திரைகள்.

படம் ஆரம்பித்த உடனேயே நடிகர் திலகத்தின் ஆர்ப்பரிக்க வைக்கும் நடிப்பு வித்தைகள் விளையாடத் தொடங்கி விடும்.

சிறுவன் முத்துக் கிருஷ்ணன் பள்ளிகூடத்திற்குக் கட்ட பணமில்லை என்று தீனா (N.T) விடம் பொய் சொல்லி அழ, N.T யும் அதை நம்பி அவனுக்குப் பணம் கிடைப்பதற்காக அவனை ரோட்டில் வரும் காரின் முன்பு விழச் சொல்லுவார். சிறுவன் முத்துக் கிருஷ்ணனும் விழுந்து அடிபட்டது போல நடிப்பான். கார் நின்றவுடன் காரின் சொந்தக்காரரிடம் பணம் வாங்கி சிறுவனிடம் N.T. கொடுப்பார். பையனோ .,"வாத்தியாரே! இதே போல செட்-அப்ப அடுத்த வாரம் மைலாப்பூர்ல வச்சுக்கலாமா?..கிடைக்கும் பணத்துல ஆளுக்கு 50...50...என்ன சொல்ற?.. என்று N.T.க்கு அதிர்ச்சி கொடுப்பான்.

உடன் N.T.,"நமக்கெல்லாம் 20 வயசுக்கு மேல தான் புத்தி வந்துது...இந்தக் காலத்து பசங்க பொறக்கும் போதே பிரசவம் பாக்குற நர்ஸோட மோதிரத்த புடுங்கிகிறானுங்க ... என்று இரு கைகளையும் சற்று அகல விரித்தபடியே audience- ஆன நம்மைப் பார்த்து கேலியாக நகைச்சுவை ததும்பச் சொல்ல அரங்கமே அதிரும். ஆரம்பமே அமர்க்களம் தான்.

தன்னை சிறுவயதில் வளர்த்த மேரியம்மாவின் (பண்டரிபாய்) பிறந்த நாளுக்கு அவரை வாழ்த்த வருவார் N.T. பண்டரிபாய் N.T.யிடம்,"தீனா...நீ போற போக்கே சரியில்ல..எப்படியோ போ"... என்று கோபித்துக் கொள்வார். அதற்கு N.T.

"ஆங்...அப்படியெல்லாம் நீ என்ன விட்டுக் கொடுத்திடுவியா?... மேரியம்மா...நீ சொல்லுறபடி வாழுறதா இருந்தா ஒண்ணு முற்றும் துறந்த ரமண மகரிஷியா இருக்கணும். என்னால அப்படியெல்லாம் வாழ முடியாது...என் பொறப்புக்கு நான் இப்படிதான் இருக்க முடியும்... என் பொறப்பப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே"...

என்ற வித்தியாசமான dialogue delivery-யைக் கொடுப்பார். இது வரை நடிகர் திலகத்திடம் நாம் கேட்டிராத டயலாக் டெலிவிரி அது. (இந்தப் படத்தில் அவர் வசனங்களை உச்சரிக்கும் பாணியே தனி. வசனங்களை சற்றே நீட்டி முழக்கி வார்த்தைகளை சிறிது கடித்தாற் போன்று வல்லின அழுத்தங்களை அதிகம் கலந்து கொடுத்து, அழுத்தம் திருத்தமாக அவர் உச்சரிக்கும் விதமே அலாதியாய் இருக்கும். N.T யின் வேறு எந்தப் படங்களிலும் அவர் கையாளாத புதிய முறை பாணி அது. அந்தப் புதுமை ஒன்றிற்காகவே இந்தப் படம் அவருடைய மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது).

நடிகர் திலகத்திற்கு இந்தப் படம் வெளியாகும் போது கிட்டத்தட்ட 54 வயது. அவருடைய அனுபவம் என்ன! நடிப்பின் முதிர்ச்சி என்ன!..அந்த வயதிலேயும் தன்னை,தன் பாணியை வித்தியாசப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற நடிப்பின் மேல் உள்ள அவருக்கிருந்த ஈடுபாடும், புதிதாய் வந்த நடிகரைப் போல் அவருக்கிருந்த ஆர்வமும் நம்மை மலைக்க வைக்கிறது. காலங்களை வென்ற காவிய புருஷரல்லவா அவர்!

தன்னை கடத்தல் தொழிலில் ஈடுபட வைக்க முயற்சி செய்யும் கயவர்களை N.T.பந்தாடிவிட்டு,"நீங்க எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளை உங்களுக்கே சொல்லிக் கொடுக்கிறேன்டா ..உங்களுக்கு மட்டுமில்லே... இந்த உலகத்துக்கே கத்துக் கொடுக்கிறேன்டா" ... என்று கர்ஜிப்பார். அப்போது சிறுவன் முத்துக்கிருஷ்ணன் அங்கு வருவான். N.T. அவனிடம்,"நீ பள்ளிக்கூடம் போகலையா?..என்பார். அதற்கு சிறுவன் N.T.யிடம்,"நீங்கதான் என் பள்ளிக்கூடம்..நீங்க தான் என் வாத்தியார்... நீங்கதான் நான் படிக்க வேண்டிய புத்தகமே"... என்று பதில் சொல்வான். (படத்தில் வரும் இந்த வசனம் நிஜத்தில் எவ்வளவு உண்மை! 'நடிப்பு' என்ற பள்ளிக் கூடத்திற்கு N.T.யைத் தவிர சிறந்த 'வாத்தியார்' எவர் இருக்க முடியும்?. அந்தக்கால நடிகர்கள் முதல் இந்தக் கால நடிகர்கள் ஏன் வருங்கால நடிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய 'நடிப்புப் புத்தகம்' அல்லவா அவர்!).வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு ஒரு 'ஷொட்டு'.

டைட்டிலுக்குப் பிறகு வயதான கெட்டப்பில் நடிகர் திலகம். நடு வகிடு எடுக்கப்பட்ட, முன்னால் இரண்டு புறமும் மேலருந்து கீழாக கொக்கி போல் வளைந்த அடர்த்தியான முடி..கையின் விரல்களுக்கிடையே விளையாடிக் கொண்டிருக்கும் சிகரெட்...உள்ளே தெளிவாகத் தெரியும் கட்-பனியன்... மெலிதான முழுக்கை ஜிப்பா...மடித்துக் கட்டப்பட்ட வேட்டி...இடுப்பில் அணிந்துள்ள பட்டையான பச்சை நிற பெல்ட்..ஜிப்பாவின் மேலாக கையில் கட்டப்படுள்ள வாட்ச். தீனதயாளு தாதாவாக அற்புதமான,வித்தியாசமான மேக்-அப்பில் வலம் வருவார் N.T.

ஏழைகளான டீ எஸ்டேட் தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்க மாட்டார் எஸ்டேட் முதலாளி சண்முக சுந்தரம். தொழிலாளிகள் ஸ்டிரைக் செய்வார்கள். தீன தயாளுவான N.T.யிடம் உதவி கேட்டு வருவார் சண்முக சுந்தரம். N.T.யிடம் அவர்

"திடீர்னு கை கழுவிட்டாங்க... பேச்சு வார்த்தைக்குக் கூட வரமாட்டேன்கிறாங்க ... நீங்க சொன்னாதான் ஸ்டிரைக்க வாபஸ் வாங்குவோம்னு சொல்றாங்க...நாங்க ஒன்னுமே செய்யலீங்க..
என்பார்.
அதற்கு N.T.
"நீங்க ஒன்னுமே செய்யலீயா?... எனக்குத் தெரியும்யா ..பக்கத்து எஸ்டேட்ல டீ இலைய திருடிட்டு வாங்கன்னு உங்க தொழிலாளிக்கு நீங்க பணம் கொடுத்து அனுப்பல?..
ஏழைகளுக்குத் திண்டாட்டம்...பணக்கரானுக்குக் கொண்டாட்டம்..
ஏழைகள என்னைக்குமே கோழைகளா நெனச்சுடாதீங்க..
தொழிலாளி முதுகு வளைஞ்சி வேலை செய்யணும்னா அவன் வயிறு நிமிரணும்",

என்று மடித்துக் கட்டிய வேட்டியுடன் வலது கையை இடுப்பில் ஊன்றி, சற்றே குனிந்தபடி, முதுகை முன்னால் ஒரு வளை வளைத்து பின் உடனே வயிறறுப் பகுதியை ஒரு நிமிர்த்து நிமிர்த்துவார் பாருங்கள்... அடடா..என்ன ஒரு உடல் மொழி அது!....அற்புதத்திலும் அற்புதம் இந்தக் குறிப்பிட்ட காட்சி.

அதே போல தன் வக்கீல் குமாஸ்தா தேங்காய் சீனிவாசனிடம் N.T,பேசுவதாக வரும் சில வசனங்களும், அவருடைய வசன modulation களும் மிக அருமையாக இருக்கும்.

தேங்காய்: யார் யாரை ஏமாத்தினா உங்களுக்கு என்ன? சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு... கோர்ட்டுக்கு போய்க்கிறாங்க...

N.T: மடையா! இந்த விஷயமெல்லாம் கோர்ட்டுக்கு போனா என்னாகும்?...
வாதிக்கு நஷ்டம்...
பிரதிவாதிக்குக் கஷ்டம்...
வக்கீலுக்கு அதிர்ஷ்டம்...
ஜட்ஜுக்கு அவரு இஷ்டம்...
என்று அவர் பாணியில் உச்சரிக்கும் போது தியேட்டரே அல்லோலகல்லோலப் படும்.


தொடர்ச்சியாக...

தேங்காய்: உங்களைப் பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுங்களா?

N.T: கடவுளே இருக்காரா இல்லையான்னுதான் பேசிக்கிறான்... என்னப் பத்தி பேசனா என்ன. I don't care. குற்றம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த தீனதயாளு இருப்பான்.. சட்டம் வக்கீலோட பண பலத்துக்கும், வக்கீலோட வாதத் திறமைக்கும் வளைஞ்சி கொடுத்திடும்..அப்ப பாதிக்கப் பட்டவன் என்ன செய்வான்?.. அந்த ஆண்டவன்தான்டா உன்ன கேக்கனும்னு கண்ணீர் வடிப்பான். அப்பிடி கேக்க வந்த ஆண்டவனே நான்தான்னு வச்சுக்கடா... போடா"...
என்று படு அலட்சியமான அசத்தலான 'மூவ்' களைக் கொடுப்பார் N.T.

"இப்படியெல்லாம் செஞ்சா சமுதாயம் உங்களை மதிக்கவா போகுது?" என்று தேங்காய் கேட்டவுடன், சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்துப்
புகைத்துவிட்டு,லேசாக தலையை வலதும் இடதுமாய் ஆட்டி சிரித்தபடியே நடிகர் திலகம்,

"நானு.. உன் வீட்டுக்கு வரும் போது பாண்டி பஜார் பிளாட்பாரத்துல ஒருத்தன் போட்டோவெல்லாம் போட்டு வித்துகிட்டு இருந்தான்..அவன் சொன்னான்...

காந்தி நாலணா..
நேருஜி நாலணா...
காமராஜி நாலணா..ன்னான்
அப்பேற்பட்ட மகான்களுக்கே நாலணாதாண்டா விலை. உலகம் நம்மள மதிச்சா என்ன..மிதிச்சா என்ன,"...

என்று கலாய்க்கும் போது,

கரகோஷம் காதுகளைக் கிழிக்கும்.(எப்பேர்ப்பட்ட வசனங்கள்! கால சூழ்நிலைகளுக்குத் தக்கபடி, எக்காலங்களுக்கும் ஏற்ற வசனங்கள். மகான்களும், மாபெரும் தலைவர்களும் N.T. அவர்கள் கூறுவது போல் நாலணா ஏன் காலணாவுக்குக் கூட இப்போதெல்லாம் மதிக்கப் படுவதில்லை).

அதே போல் தன்னை வளர்த்த பண்டரிபாயைப் பார்க்க வருவார் N.T. பண்டரிபாயின் கன்னங்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து கண்கள் மேலிறங்க,கீழிறங்க பாசத்துடனும்,வாஞ்சையுடனும் ,சற்று வருத்தப் பட்ட வேதனையுடனும் அவர் முகத்தைப் பார்ப்பார் பாருங்கள்...ஒரு வினாடியே ஆனாலும் அந்தக் காட்சியில் அவர் காட்டும் முக பாவம் இருக்கிறதே..தனக்காக, தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த வளர்ப்புத்தாய் வயது முதிர்ந்த கோலத்தில் இப்படி உருக்குலைந்து காட்சி தருகிறாளே.. என்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவார். உடன் பண்டரிபாயிடம்,

"அய்யோ மேரியம்மா! எனக்காக கஷ்டப்பட்டே நீ பழுத்துப் போயிட்ட.. வாழ்க்கையில அடிபட்டே நான் பழுத்துப் போயிட்டேன், "என்று வேதனையாகக் கூறுவார். உடனே பண்டரிபாய்,"நல்லா இருக்கியாப்பா ? என்று நலன் விசாரித்தவுடன்,
"நல்லா இருக்கேன்... நல்லா இருக்கேன்", என்று இரு முறை அவர் ஸ்டைலில் அசத்துவது அருமை. "இன்னைக்கு ஒண்ணாந்தேதி இல்லையா?..எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டே வந்தேன்..உனக்குக் கொடுக்குற பாக்கியத்தைத்தான் நீ எனக்குக் கொடுக்கல..அதனால உன்கிட்ட வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்", என்று சொன்னவுடன் பண்டரிபாய் "என்னப்பா?",என்று கேட்பார். அதற்கு நம்மவர் சற்று உரத்த குரலில்,
"ஆசீர்வாதந்தான்...ஆசீர்வாதந்தான்,"...என்று ஏற்ற இறக்கமுடன் கூறுவது அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று...

மற்றொரு சூப்பரான காட்சி...

நடிகர் திலகத்தின் ஏழை பால்ய நண்பனாக வரும் V.S.ராகவன் தன் மகளின் திருமணத்திற்காக உதவி கேட்டு நடிகர் திலகத்தைச் சந்திக்க அவர் வீட்டுக்கு வருவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் சந்திப்பது போன்ற காட்சி அது. V.S.ராகவன் வந்தவுடன் வீட்டில் அமர்ந்திருக்கும் N.T. அவர்கள் ,
"ஏய் படுவா...பலராமா...வாடா...வாடா,"..என்று எழுந்து வந்து கட்டித் தழுவி பின்,"ஒன்னப் பாத்து ரொம்ப நாளாச்சு...நான் ரெண்டாங் கிளாசாவது பள்ளிக்கூடத்திலே படிச்சேன்கிறதுக்கு சாட்சியே இந்த உலகத்தில நீ ஒருத்தன் தான். (நடிகர் திலகம் தான் சிறுவயதில் உண்மையிலேயே இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததை நினைவு கூர்வதைப் போல் அமைந்திருக்கும் இந்தக் காட்சி). நல்லா இருக்கியா?.. குடும்பமெல்லாம் நல்லா இருக்கா?". என்று நலம் விசாரித்து விட்டு V.S.ராகவனின் நரைத்த தலையைப் பிடித்து சற்றே கீழே அழுத்தி,"என்னடா கெழவன் மாதிரி ஆயிட்டே...என்ன சமாச்சாரம்?", என்று நட்பை வெளிப்படுத்துவது படு இயல்பு.

மனைவி சுஜாதாவுடன் கோவிலுக்குப் போகும்போது தன் மனைவியின் மாமனும், அடியாளுமான கபாலி எதிர்பாராமல் அங்கு வந்து விட, சுஜாதா கண்களை மூடிக்கொண்டு சாமி கும்பிடும் அந்த இடைவெளி நேரத்தில், தனக்கு கபாலியிடம் இருக்கும் தொடர்பு தன் மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவனை அவசர அவசரமாக பேசி அனுப்பி வைக்கும் அந்த தருணத்தில், சுஜாதா சட்டென்று அதைக் கவனித்துவிட,அதை சமாளிக்கும் விதமாக தன் உடலை 'ஜகா' வாங்குவது போல ஒரு இழுப்பு இழுத்து, பின் ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு நடையைக் கட்டுவது நம்மை பரவசப் படுத்தும் நடிப்புக் காட்சி.

பின் வீட்டில் சுஜாதா தன் கணவர் N.T.க்கு தன் மாமன் கபாலியுடன் என்ன தொடர்பு?..என்று கோபிக்க, அதற்கு N.T. வேண்டுமென்றே சுஜாதாவை வெறுப்பேற்ற மைலாப்பூர் கடவுள் கபாலீஸ்வரரைப் போற்றுவது போல, அருகில் இருக்கும் தேங்காய் சீனிவாசனிடம்,

கபாலி 'உயர்ந்த மனிதன்'

கபாலி 'கை கொடுத்த தெய்வம்'

கபாலி 'தெய்வப் பிறவி'

என்று ஜாலியாக கோஷம் போடுவது அவருக்கே கை வந்த கலை. (இந்தக் காட்சியில் நடிகர் திலகம் அவர்கள் திருவாயாலேயே அவர் நடித்த படங்களின் பெயர்கள் உச்ச்சரிகப்படுவதை நாம் கேட்கும் போது நம் காதுகளில் தேனும் பாலும் கலந்து வந்து பாய்வது போல அவ்வளவு இனிமை).

சமீப காலமாக 'சாந்தி' தியேட்டரில் நம் இதய தெய்வத்தின் காவியங்கள் வெளியீடுகளின் போது நம் ரசிகக் கண்மணிகள் பெரும்பாலும் மேலே நடிகர் திலகம் கூறிய படங்களின் பெயர்களையே அவருக்கு புகழாரமாய் சூட்டி,

'உயர்ந்த மனிதன்' சிவாஜி

'கை கொடுத்த தெய்வம்' சிவாஜி

'தெய்வப் பிறவி' சிவாஜி

என்று விண்ணை எட்டிய கோஷங்களை எழுப்பியது நினைவுக்கு வந்து கண்களைப் பனிக்கச் செய்தது.

Gopal.s
21st November 2014, 10:09 AM
பாவம் பட்டாகத்தி,



நம் ஆட்களை பற்றி தெரியாமல் வீர வசனம் பேசுகிறீர்கள். பம்மலார் ,ராகவேந்தர் பார்த்தாயிற்று. இனி பார்க்க வேண்டியது ரவிகிரன் வீரம் ஒன்று மட்டுமே.



எழுதுங்கள். பதில் வந்தால் தயாராக இருங்கள். திரி என்பது public forum .எழுத்துக்களை எதிர் கொள்ளலாமே தவிர தவிர்க்க முடியாது.

AREGU
21st November 2014, 10:09 AM
Thanks to Mr Neyveli Vasudevan

'பாதுகாப்பு' வெளியான நாள் : 27-11-1970



இந்தப் படத்தைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் என் மனம் ஆகாயத்தில் பறக்கும். ஏன் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்படி ஒன்றும் விசேஷமான படம் கூட இல்லையே என்றும் கூட பலர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் மறக்கமுடியாத விசேஷப் படம் அது. சரி...ரொம்பப் பீடிகை வேண்டாம்... விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.



அன்புடன்,
வாசுதேவன்.

45 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த (நடிகர்திலகம் தொடர்புடைய) ஒவ்வொரு சிறு நிகழ்வும் மனதில் இன்னும் பதிவாகி இனித்துக்கொண்டிருந்தால் மட்டுமே இவ்வாறான நீள்பதிவை, பிரமிப்பு கலந்த பெருமிதத்தோடு இடமுடியும். அவ்வாறாயின், இவர் மனதில் சிவாஜிக்கு எவ்வளவு பெரிய இடம் இருக்கிறது என்று எளிதில் உணரலாம்.

இப்பேர்ப்பட்ட இரசிகர்கள் ஏராளம் இருக்கிறபோது, எந்தக் கொம்பனாலும் சிம்மக்குரலோனை சிறுமைப்படுத்திவிட இயலாது..

AREGU
21st November 2014, 10:21 AM
Thanks to Mr Neyveli Vasudevan

அன்பு நண்பர்களே!

'கருடா சௌக்கியமா' ஆய்வுக் கட்டுரை இரண்டாம் பாகத்தில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தேங்காய்: உங்களைப் பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுங்களா?

N.T: கடவுளே இருக்காரா இல்லையான்னுதான் பேசிக்கிறான்... என்னப் பத்தி பேசனா என்ன. I don't care. குற்றம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த தீனதயாளு இருப்பான்.. சட்டம் வக்கீலோட பண பலத்துக்கும், வக்கீலோட வாதத் திறமைக்கும் வளைஞ்சி கொடுத்திடும்..அப்ப பாதிக்கப் பட்டவன் என்ன செய்வான்?.. அந்த ஆண்டவன்தான்டா உன்ன கேக்கனும்னு கண்ணீர் வடிப்பான். அப்பிடி கேக்க வந்த ஆண்டவனே நான்தான்னு வச்சுக்கடா... போடா"...
என்று படு அலட்சியமான அசத்தலான 'மூவ்' களைக் கொடுப்பார் N.T.

"இப்படியெல்லாம் செஞ்சா சமுதாயம் உங்களை மதிக்கவா போகுது?" என்று தேங்காய் கேட்டவுடன், சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்துப்
புகைத்துவிட்டு,லேசாக தலையை வலதும் இடதுமாய் ஆட்டி சிரித்தபடியே நடிகர் திலகம்,

"நானு.. உன் வீட்டுக்கு வரும் போது பாண்டி பஜார் பிளாட்பாரத்துல ஒருத்தன் போட்டோவெல்லாம் போட்டு வித்துகிட்டு இருந்தான்..அவன் சொன்னான்...

காந்தி நாலணா..
நேருஜி நாலணா...
காமராஜி நாலணா..ன்னான்
அப்பேற்பட்ட மகான்களுக்கே நாலணாதாண்டா விலை. உலகம் நம்மள மதிச்சா என்ன..மிதிச்சா என்ன,"...

என்று கலாய்க்கும் போது,

கரகோஷம் காதுகளைக் கிழிக்கும்.

இதைப் படிக்கும்போது, கருடா சௌக்கியமா படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும் எனும் உந்துதல் முகிழ்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை.. (யூ ட்யூப்ல இருக்குப்பா..)

இப்படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர்திலகத்துக்கு கால் முறிந்து, ஸ்டீல் ப்ளேட் போட்டுக்கொண்டதாக நினைவு..

AREGU
21st November 2014, 10:54 AM
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பெரும் பாடுபட்டவர்களுள் திரு வ உ சி அவர்கள் மிக முக்கியமானவர். செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார், சிறையில் செக்கிழுத்து துன்பப்பட்டவர்.

இவருடைய வாழ்கை வரலாறு படமாக்கப்பட்டபோது, நடிகர் திலகம் அவர்கள் சிதம்பரனாராக திரையில் வாழ்ந்துகாட்டினார். இதை பார்த்து, சிதம்பரனாரின் மகன் என்னுடைய தந்தையை எனக்கு மீண்டும் காண ஒரு வாய்ப்பு ஏற்பட்டது என்று பாராட்டி பேசினார்.



நடிகர்திலகத்தின் ஆற்றலுக்கு இதைவிடப் பெரிய விருது ஏதுமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை..

தான் ஏற்ற ஒரு வரலாற்று நாயகர் பாத்திரத்தை நடிப்பால் மிளிரச்செய்து, அப்பாத்திரத்தின் உண்மையான குணாதிசயங்களை பார்த்தறியாத இரசிகர்களிடம் பெயர்வாங்குவது சிறப்பானதுதான்..நல்ல நடிகர்கள் செய்யக்கூடியதுதான்..

ஆனால், அதே பாத்திர உருவகத்தில், ’என் தந்தையையே கண்டேன்..!’ என மைந்தரே சொல்வது, எவ்வளவு பெரிய, பிரமிக்கத்தக்க சாதனை..?!

உலக அளவில் எந்த நடிகரும் இச்சாதனையை நிகழ்த்தியிருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன்..

KCSHEKAR
21st November 2014, 10:55 AM
இன்று பிறந்தநாள் காணும் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

JamesFague
21st November 2014, 11:38 AM
Dear Mr RKS


Best wishes for the new series on NT's Fillms and wherever possible I will also share my exerience of the film.

Regards

Russellxqa
21st November 2014, 11:47 AM
It is certainly TRUE.

I am to state that WORLD SIVAJI FANS CAN NOW BROWSE THE NEW FACEBOOK PAGE ON "Sivaji Raghu" AND CAN ALL UPLOAD ALL PHOTOS THEY MAY HAVE. IT IS A BRIDGE FOR ALL SIVAJI FANS TO INTER-REACT IN A HEALTHY MANNER-THANKS agra2014.


Kindly publish this news item in an appropriate thread.

Thank You

agra2014

eehaiupehazij
21st November 2014, 12:21 PM
Theme : நடிகர்திலகத்தின் நடிப்பியல் பேராண்மை

Concept : (Cell Division and Multiplicity) : ஒரே படத்தில் மாறுபட்ட பலவேட சித்தரிப்பு வன்மை !

PART 2 Bale Paandiyaa பலே பாண்டியா (1962)

இரண்டு மாறுபட்ட வேடங்களையே பெரும் சாதனை உரைகல்லாக ரசிகர்கள் வியந்து கொண்டாடி மகிழ்ந்த காலகட்டத்தில் மூன்று வித்தியாசமான பாத்திரப் படைப்புகளில் (அப்பாவி. ...... சிலசமயம் அடப்பாவி பாண்டியன், முரட்டுத் திருட்டு...(நம் மனதைத்தான்)..மருது மற்றும் மெத்தப்படித்த....ஆனால் மனைவிக்குப் பயந்த henpecked விஞ்ஞானி சங்கர்) பொழுது போக்கு அம்சமே பிரதானமாக நடிகர்திலகம் பின்னி எடுத்த விந்தையான விசித்திரமான உணர்ச்சிக்கலவைகளை ரசிக நெஞ்சங்களில் அலையடிக்க வைத்த சாதனைக் காவியம்.

மூன்றென்ன....அதற்கு மேலும் எத்தனை பாத்திரங்கள் கொடுத்தாலும் பிசிறடிக்காமல் தெள்ளத் தெளிவான வித்தியாசங்களுடன் கலக்கி எடுக்க உலகின் ஒரே நடிக தெய்வப்பிறவி தானே என்று நவராத்திரி மூலம் பின்னாளில் பசுமரத்தாணியாக தனது நடிப்பு மூலவர் பட்டத்தை நிலைநிறுத்தினார் நம் நடிப்புத்திமிங்கிலம்.....கூடவே இருவேடங்களில் ஆர்ப்பாட்டம் பண்ணும் நடிப்பு முதலை எம் ஆர் ராதாவுடன் !

நடிக மன்னனே ! எத்தனை தலைமுறை நடிகர்கள் வந்தாலும் போனாலும் அத்துனை தலைமுறைரசிகர்களும் ஒவ்வொரு ஆண்டும் உன் பிறந்தநாளில் அத்தப்பூக் கோலமிட்டு தங்கள் மகாபலிச் சக்கரவர்த்தியாக உன் வருகை எதிர்நோக்கி உவகை முகிழ்ப்புடன் கொண்டாடி மகிழும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் !!

https://www.youtube.com/watch?v=kOs8tqUGz4w

https://www.youtube.com/watch?v=7DXZO7rHOws

:)But .... Nadigar Thilagam will be back in Navaraththiri !

AREGU
21st November 2014, 01:09 PM
theme : நடிகர்திலகத்தின் நடிப்பியல் பேராண்மை


நடிக மன்னனே ! எத்தனை தலைமுறை நடிகர்கள் வந்தாலும் போனாலும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் !!

சரியாகச் சொன்னீர்கள் செந்தில்..!

மேலும் பல திரைப்படங்களுக்கான கருத்துரைகளையும், காணொளிகளையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..

நன்றி..

sss
21st November 2014, 02:20 PM
http://cache.epapr.in/347318/c400c201-6209-4194-a8bd-3c2adf7f86d3/400x624-400x624/1x1.jpg

sss
21st November 2014, 02:21 PM
http://cache.epapr.in/347318/999d7549-4589-420c-895d-d7dc764bc054/400x624-400x624/1x1.jpg

sss
21st November 2014, 02:22 PM
http://cache.epapr.in/347318/ca2d49f8-9f67-4752-a337-d888cff43b1e/400x624-400x624/1x1.jpg

sss
21st November 2014, 02:23 PM
http://cache.epapr.in/347318/8eacb272-bafd-43e4-8ed9-5dc49f0686cd/400x624-400x624/1x1.jpg

Murali Srinivas
21st November 2014, 02:25 PM
அண்மையில் நம்முடைய நடிகர் திலகம் ரசிகர்கள் ஒரு 4, 5 பேர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருவர் சென்னைவாசிகள். மற்ற இருவர் வெளியூர்வாசிகள். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒவ்வொருவரும் ஒரு professional. ஒருவர் வழக்கறிஞர். ஒருவர் வங்கி அதிகாரி ஒருவர் பட்டய கணக்காளர் [பேசாமல் chartered accountant எழுதியிருக்கலாமோ?] ஒருவர் பத்திரிக்கையாளர். சிலர் அலைபேசி மூலமாகவும் சிலர் நேரில் சந்தித்தபோதும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நமது Forum இணைப்பு லிங்க் கொடுத்தேன். சிலர் முன்பே படித்திருக்கிறார்கள்.

நேற்றும் இன்றும் அதில் இரண்டு பேர் பேசினார்கள். திரியில் நிகழும் சில விரும்பத்தகாத விஷயங்களைப் பற்றி கூறி ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டார்கள். அதில் ஒருவர் உண்மையிலே கவலையளிக்கக் கூடிய விஷயமாக இதைப் பேசினார். நான் அவர்களிடம் நீங்கள் நினைப்பது போல் பெரிய சண்டை ஒன்றுமில்லை என்று விளக்கினேன். அதில் ஒருவர் சமாதானம் அடையவில்லை.

எதற்கு கூறுகிறேன் என்றால் சமூகத்தில் பல்வேறு உயர்நிலை பதவி வகிப்பவர்கள் நமது ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இது போன்ற விவாதக் களங்கள் நடிகர் திலகத்திற்காக இயங்கி கொண்டிருக்கின்றன என்று கேள்விப்படும் போது மிகுந்த ஆர்வத்துடன் அதை பார்வையிட முடிந்தால் பங்கு கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஷாக் இருக்கிறதே அது அவர்களை அவர்களின் ஆர்வத்தை அப்படியே நீர்த்துப் போக வைத்து விடுகிறது.

இவர்களும் இவர்களைப் போன்றவர்களும் [நமது நண்பர் சுந்தர பாண்டியன் (sss) கூட ஒரு மருத்துவ நண்பரை அழைத்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தார்) நமது திரிக்கு வருகை புரியும்போது பங்கு கொள்ளும்போது திரியின் வலிமை கூடும் என்பது நான் சொல்லாமலே அனைவருக்கும் புரியக் கூடியதுதான். இது நடிகர் திலகம் தவிர வேறு யாருக்கும் கிடைக்காத பேறு.

இதையெல்லாம் எண்ணிப் பார்த்து பதிவுகள் அமைவது அனைவரின் கைகளில்தான் இருக்கிறது.

அன்புடன்

Murali Srinivas
21st November 2014, 02:27 PM
வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகி வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்தது. நெல்லையில் கடுமையான மழை. அந்த மழையிலும் ஒரோரு காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருந்து படத்தை கண்டு களித்திருக்கிறார்கள்.

இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் நீதி 9 நாட்கள் இப்போது வெள்ளை ரோஜா 7 நாட்கள். அதாவது ஒரு மாதத்தில் (30 நாட்களில்) 16 நாட்கள் நடிகர் திலகத்தின் படங்களே அந்த சென்ட்ரல் திரையரங்கில் ஓடியிருக்கின்றன. நடிகர் திலகத்தின் படங்கள் ஓடாது என்ற கணிப்புகள், ஜோசியங்கள், செயற்கை தடைகள் அனைத்தையும் தாண்டி இது நிகழ்கிறது. அதுவும் சாதாரணமாக ஓடவில்லை. இந்த இரண்டு படங்களுமே மறு வெளியீட்டு படங்களில் அதிக வசூலும் பெற்றிருக்கிறது. இன்றைய அன்றைய படங்களை விட அதிக வசூல் என்பது ஒரு போனஸ். இரண்டு படங்களையும் வெளியிட்ட விநியோகஸ்தரிடம் தியேட்டர் அதிபர் அடுத்த மாதம் மற்றொரு சிவாஜி படத்தை எங்கள் அரங்கில் திரையிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பது எக்ஸ்ட்ரா போனஸ் செய்தி.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Russellbpw
21st November 2014, 04:10 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/IMG-20141024-WA0004_zps7456759b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/IMG-20141024-WA0004_zps7456759b.jpg.html)

JamesFague
21st November 2014, 08:45 PM
Thanks to Mr Neyveli Vasudevan

மெய் சிலிர்க்க வைத்த மெய்யான நடிகர்.

தந்தை என்பது தெரியாமல் தங்கம் கடத்தும் தொழிலின் தலைவர் ஸ்பையைப் பிடிக்கப் போராடுகிறான் சிபிஐ அதிகாரி ராஜன். ஒவ்வொரு முறையும் ஸ்பையைப் பிடிக்க முயலும் போதெல்லாம் ராஜனின் திட்டங்கள் தோல்வியுறுகின்றன. ஸ்பை சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் ராஜனிடமிருந்து தப்பித்து விடுகிறான். யாரோ ராஜனுடைய திட்டங்களை ஸ்பைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி விடுகிறார்கள். யார் அது?! குழம்புகிறான் ராஜன். அப்படி யாரும் இருப்பதாக அவன் நினைவுக்கு எட்டிய வரையில் வரவில்லை. ஆனால் அவன் தன்னுடைய தொழில் ரகசியங்களை தான் தாயிடம் மட்டுமே கூறுவான். இறுதியாக ஸ்பையை பிடிக்க இருக்கும் திட்டத்தை ராஜன் தன் தாயிடம் தெரியப்படுத்தி இருந்தான். இதிலும் ஸ்பை எஸ்கேப். இப்போது வருகிறது சந்தேகம் ராஜனுக்கு.

தாயிடம் கோபமும் வருத்தமும் கலந்த நிலையில் வருகிறான் ராஜன். அவன் முகத்தைக் கண்டே அவன் தாய் அவன் உள்ளத்தைப் புரிந்து கொண்டு விடுகிறாள். தன் கணவனான ஸ்பையைக் காப்பாற்ற ராஜனின் திட்டங்களை ஸ்பையிடம் சொல்லி ஸ்பையை தப்பிக்க வைப்பவளே அவள்தானே! மேலும் தன் கணவனைப் பற்றி ராஜனிடம் அவள் மூச்' விட்டதில்லை. அப்படி சொன்னால் ராஜன் தன் தந்தையை அரெஸ்ட் செய்து விடுவானே!

மகனின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள் தாய். போன காரியம் வெற்றியடையாமல் திரும்பி வந்ததை மகனின் முகம் காட்டுகிறது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு போன காரியம் வெற்றியடந்ததா என்று மேலுக்குக் கேட்கிறாள். ராஜன் வெற்றியடைந்து விட்டதாக ஜாடை செய்கிறான் வேண்டுமென்றே! பதறுகிறாள் தாய். தன் கணவன் தன் மகனிடம் பிடிபட்டு விட்டானோ என்று ஒருகணம் ஸ்தம்பித்துப் போகிறாள். அந்தக் கணமே தன் தாயின் முக பிரதிபலிப்புகளின் மூலம் தன் திட்டங்களுடைய தோல்விகளுக்கெல்லாம் அவள்தான் காரணம் என்று கண்டுபிடித்து விடுகிறான் ராஜன்.

எரிமலையாய் வெடிக்கிறான் ராஜன். தன் தாய் யாரோ ஒருவனைக் காப்பாற்ற தன்னை ஏன் பலிகடா ஆக்கினாள் என்று குமுறுகிறான். வார்த்தைகளால் அவளைக் கொல்கிறான். தன் தாய் இரண்டாவதொரு வாழ்க்கை வேறொருவனிடம் வாழ்கிறாள் என்று அவளிடமே கேட்டு அவளைத் துடிக்க வைக்கிறான். அப்போதுதான் அந்தத் தாய் மகன் தேடும் அந்த ஸ்பைதான் அவனின் தந்தை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறாள். அதிர்ச்சியில் சிலையாய் உறைகிறான் ராஜன். தன் தாய் குற்றமற்றவள் என உணருகிறான். அதே சமயம் ஒரு பயங்கரக் குற்றவாளியைத் தப்பிக்க வைத்த குற்றவாளியாய் தன் தாயைப் பார்க்கிறான். சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாச பந்தங்களை அறுத்து, தாயென்றும் பாராமல் அவளைக் கைது செய்கிறான். வேதனையின் விளிம்புக்கே செல்கிறான்.

தாயாக எஸ்.வரலஷ்மி. தந்தையாக O.A.K.தேவர்.

சிபிஐ அதிகாரி ராஜனாக நம் நடிகர் திலகம்.

கேட்கவும் வேண்டுமோ! அற்புதமான சில நிமிடக் காட்சிகள்.

ஸ்பையைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்று, தன் தாயின் மேல் சந்தேகப்பட்டு வீட்டுக்கு வரும் நடிகர் திலகம் எதுவுமே பேசாமல் தடுமாறும் தன் தாயைப் பார்க்கும் அந்தப் பார்வை...தன் தோல்விகளுக்கு அவள்தான் காரணமோ என்ற சந்தேகப் பார்வை... தன் தாய் குற்றவாளியா இல்லையா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ளத் துடிக்கும் அந்தக் கண்கள்... தன்னிடம் காபி கொடுக்கும் அவளின் கை நடுங்குவதைக் கவனித்து தீர்க்கமாக அவளையே ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் அழுத்தமான அமைதிப் பார்வை...

"போன காரியம் வெற்றியா முடிஞ்சுதாப்பா?" என்று கேட்கும் வரலஷ்மியிடம் மெளனமாக "முடிந்தது" என்பது போல தலையாட்டும் பாவம்..."அவுங்களைப் புடிச்சிட்டியா?" என்று தாய் கேட்க "ஆமாம்" என்பதற்கான ஆழமான தலையசைவு... "அவுங்க இப்ப ஜெயில்லதான் இருக்காங்களா" என்பவளிடம் அதற்கும் "ஆமாம்" என்று வசனமில்லாமலேயே பொய்யாக உணர்த்தும் அற்புதம்...

தன் கணவன் தன் பிள்ளையிடம் மாட்டிக் கொண்டானே என்று அவள் அழும் போது வெடிக்க ஆரம்பிப்பார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு அவள்தான் காரணம் என்று கதறுவார். "அந்த ஸ்பைக்கும் உங்களுக்கும் என்ன உறவு?" என்று கேட்டு "இரண்டாவது வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கீங்களா அம்மா?" என்று அவமானத்தால் கூனிக் குறுகிப் போவார். பின் அந்த ஸ்பைதான் ராஜனின் அப்பா என்று விளக்கியவுடன் அப்படியே சிலையாகி விடுவார். பின் அவள் தன்னுடைய பிளாஷ்பேக்கை சொல்லி தன் கணவனும் ராஜனின் தந்தையுமான ஸ்பை எப்படி தேசத்துரோகி ஆனான் என்று விளக்கும் போது சோபாவில் அண்ணாந்து சாய்ந்தபடியே வெறித்து நோக்கியபடி இருப்பார். எதையும் பேசவே மாட்டார்.

தாயைக் கைது செய்யுமுன் அவளைப் பார்க்க முடியாமல் கண்கலங்கும் காட்சி



பின் மேலதிகாரியிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்து தாயை அரெஸ்ட் செய்வார். காவல் அதிகாரிகள் தன் கண்முன்னமேயே தன் தாயை அரெஸ்ட் செய்யும் போது கண்களில் குளமாய் தண்ணீர் தேங்கி நிற்கும். கோட் தோள்களில் சுமக்கப்பட்டிருக்கும். நேராக நிற்க மாட்டார். கதவில் சாய்ந்தபடி நிற்பார். நிற்பதில் ஒரு தொய்வு தெரியும். தன் தாய் கள்ளமற்றவள் என்ற திருப்தியைத் தாண்டி தன் தாய் ஒரு தேசத் துரோகியை தப்பிக்க வைத்தவள் என்ற ஆத்திரம் மேலோங்கி இருக்கும். அவமானத்தால் அசிங்கப்பட்டு நிற்பது போல நிற்பார். அதே சமயம் தன் தாயைத் தவிர யாருமில்லாத தான் எப்படி இனித் தனியாக வாழ முடியும்? என்ற ஏக்கம் அந்த நிற்கும் பாவனையில் பிரதிபலிக்கும். தன் தாய் தன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் தாயைப் பார்க்க முடியாமல் (பிடிக்காமல்) வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்வார். காவலர்கள் தன் தாயை கைது செய்து அழைத்துச் சென்றவுடன் தன் தாயை நானே கைது செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வில் கோபமும், வேதனையும் கொப்பளிக்க, உணர்ச்சிப் பிரவாகம் வெள்ளமாய்ப் பொங்க, யாரிடமும் சொல்லித் தேறுதல் படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை கூட இல்லாமல் சோபாவில் அமர்ந்து கண்களைக் கைகளால் மூடியபடியே, கால்களைத் துடிக்க வைத்தபடியே துவள்வார். மௌனமும், ஆர்ப்பாட்டமுமாய் நெஞ்சு விம்ம அழுவார். அது அமைதியான அழுகையா... ஆர்ப்பாட்டமான அழுகையா என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது. அப்படி ஒரு அற்புதம் கலந்த அழுகைக் கலவை அது.

தாயை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியே துடிக்கும் அற்புத சீன்



மிக மிக வித்தியாசமான காட்சி. அற்புதத்திலும் அற்புதம். என் மனதை விட்டு இமைப் பொழுதும் நீங்காத காட்சி. ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் அற்புதமான அண்ணனின் அற்புத நடிப்பில் நான் மெய் மறந்த, மெய் சிலிர்த்த காட்சி. நிலை மறந்த காட்சி.

படம்: தங்கச் சுரங்கம்.

JamesFague
21st November 2014, 08:54 PM
Thanks to Mr Neyveli Vasudevan


Film: Anjal Petti 520

ஸ்ஸ்....யப்பா... வெயில் ஆரம்பிச்சுடுச்சா... தாங்க முடியல்ல... கொஞ்சம் தண்ணி குடு....

என்னடா ஒரே டயர்டா வர்ற?

இல்லப்பா...ஆபீஸ்ல ஒரே வேலை. இந்த ஜெனரல் மானேஜேர் ரொம்பத்தான் வேலை வாங்குறாரு...

பொழப்பாச்சேப்பா... பொறுத்துத்தான் ஆகணும்...

அது சரி! உனக்கென்னப்பா ... ஜாலி கேஸ். சினிமா, டிராமான்னு உம்பொழுது ஓடுது... வாத்தியார் வேலை... ஸ்கூல் விட்டா உனக்கு வேற வேலைவெட்டி இல்ல... என்னை மாதிரியா? பிரமோஷனும் கெடைக்க மாட்டேங்குது....ம்...நானும் மாஞ்சி மாஞ்சிதான் வேலை செய்யுறேன்...எப்பதான் கெடைக்குமோ?...

என்னடா!... அஞ்சல் பெட்டி 520 படத்தில சிவாஜி அலுத்துக்குற மாதிரி அலுத்துக்குற?

அதானே பார்த்தேன்... என்னடா இன்னும் எலி எட்டு முழ வேட்டி கட்டலேயேன்னு? சிவாஜியைப் பத்தி பேசலைன்னா உனக்கு தூக்கம் வராதே!

என்னடா பண்றது?...ரத்தத்தில ஊறிப் போச்சே! டெய்லி அவரு படம் பாக்கலேன்னா எனக்குத் தூக்கம் வராதே!

சரி! சரி! என்னவோ அஞ்சல் பெட்டி 520... அது இதுன்னு சொன்னியே...சிவாஜி நடிச்ச படம்தானே அது? லேசா ஞாபகம் இருக்கு...

ஆமாம்... ஆமாம்... நேத்து மறுபடியும் ஒருதடவ DVD யில போட்டுப் பார்த்தேன்...சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாப் போச்சு...

அப்படியா... வழக்கமா சிவாஜியோட படம் சோகமாத்தானே இருக்கும்?... நீ என்னவோ புதுசா சொல்ற!...

ரொம்பப் பேரு அப்படிதான் நெனச்சுகிட்டு இருக்கீங்க... அப்படியெல்லாம் இல்ல... நல்ல காமெடிப் படங்கள்லயும் அவர் நடிச்சிருக்கார்.

எனக்குத் தெரிஞ்சு ஒன்னு ரெண்டு படம் அப்படி இருந்திருக்கு... ம்... கலாட்டா கல்யாணம் மட்டும் பார்த்திருக்கேன். செம காமெடி... வேற என்னென்ன சிவாஜி படம் காமெடியா இருக்கும்?

மடையா... பலே பாண்டியாவை மறந்துட்டியே?

அட... ஆமாமில்ல...சூப்பராசே அது...அப்புறம்?

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, ராஜா ராணி, கோட்டீஸ்வரன், சபாஷ் மீனா, மூன்று தெய்வங்கள், சுமதி என் சுந்தரி, அன்பே ஆருயிரே, எமனுக்கு எமன்...இப்படி நிறைய இருக்கு.... அதுல ஒண்ணுதான் அஞ்சல் பெட்டி 520..

சரி! டிவிடி கொடு... நைட்டு வீட்டுல பார்த்துட்டு நாளைக்கு கொடுத்திடறேன்.

ஃப்ரீயாக் கொடுத்தா ஃபெனாயிலக் கூட குடிச்சிடுவியே! ஓசி கிராக்கி...

கிண்டலடிக்காதே! உங்க ஆளு படம்ப்பா...பார்த்தா உனக்குத்தானே பெருமை!

இப்படியே பேசிக் கவுத்துடு... இப்படி ஓசியிலே வாங்கிப் பார்த்தா DVD எப்படி சேல்ஸ் ஆகும்?... இன்னைக்குத் தரேன்... இனிமேலாவது காசு கொடுத்து வாங்கிப் பாரு....

(அடுத்த நாள் மாலை)

வாடா... வாடா...என்ன ஆச்சர்யமா இருக்கு!...எப்பவும் மூஞ்ச தொங்கப் போட்டுகிட்டு வருவே! இன்னைக்கு வாயெல்லாம் பல்லா இருக்கு!...

பின்ன என்னப்பா... நீ பாட்டுக்கு அஞ்சல் பெட்டி 520 DVD யைக் கொடுத்து பாக்கச் சொல்லிட்டே...

(இடைமறித்து)

எலேய்... நீ DVD ஐ வாங்கிட்டுப் போயிட்டு நான் கொடுத்தேன்னு சொல்லுற....

சரி... சரி.. விடு... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. நைட்டு போட்டுப் பார்த்தேனா...வயிறு புண்ணாப் போச்சுப்பா...சிரிப்பை இன்னும் அடக்க முடியல்ல..
ஆபீஸ்ல வேலை செய்யும் போது கூட உங்க ஆளு, நாகேஷ், தேங்காய் அடிக்கிற கூத்தை நெனச்சு நெனச்சு ...யப்பா... முடியல்ல...வயிறு நோகுது...

இப்ப என்ன சொல்ற... எங்க ஆளு காமெடியைப் பத்தி?

கேக்கணுமா! அவரு ஒரு மகா மெகா நடிகருப்பா... நீயெல்லாம் அவரு மேல ஏன் பைத்தியமா இருக்கேன்னு இப்பத்தான் புரியுது... மனுஷன் காமெடியில கலக்குறார்...

என்னைக்குமே எங்க ஆளுக்கு எங்க அத்தனை பேரு காலரையும் தூக்கி விட்டுக் கொள்ளச் செய்துதான் பழக்கம்... சரி படத்து கதை பிடிச்சிருக்கா?....

வித்தியாசமான கதைதாம்பா.. மேஜரோட கம்பெனியில பொறுப்பான பதவியிலே வேலை செய்யிறாரு உங்க ஆளு... போஸ்ட் ஆபீஸ்ல வேலை செய்யிற சரோஜாதேவியோட லவ் வேற...மேஜர் ஆபீசுல வேலை செய்யிற ஜெனெரல் மேனஜர் திடீர்னு இறந்து போயிட்றதுனாலே அந்த GM போஸ்ட்ட மேஜர் தனக்குத் தான் தருவாருன்னு அபார நம்பிக்கை வச்சிருக்கார் சிவாஜி... மேஜரும் அந்தப் பதவி சிவாஜிக்குன்னுதான் தீர்மானம் பண்ணி வைக்கிறாரு... ஹீரோயினோட அப்பா தங்கவேலு ஒரு பணப் பைத்தியம்... தன் மகள் சிவாஜியைக் காதலிப்பதை முதல்ல ஒத்துக்குற அவர் சிவாஜியை விட அதிக சம்பளம் வாங்குற தன்னுடைய மருமகனான வில்லன் நம்பியாருக்கு சரோஜாதேவியை கல்யாணம் பண்ணிக் கொடுக்க மனசு மாறிடறாரு .... ஏன்னா சிவாஜியை விட நம்பியார் அதிக சம்பளம் வாங்குறாருன்னு. சிவாஜிக்கோ பிரமோஷன் கெடைச்சா நம்பியாரை விட கூட சம்பளம் கெடைக்கும்.. சிவாஜி ஆவலா காத்திருக்க அவரு எதிர்பார்த்த GM பதவி திடீர்னு அவருக்கு கெடைக்காம போயிடுது... ஏன் கிடைக்கலேன்னு
காரணமும் தெரியல்ல அவருக்கு...

ஆனா நடந்த விஷயமே வேற... தனக்கு வர வேண்டிய ஒரு கடன் பாக்கிக்காக மேஜர் GM பதவியை தன் கம்பெனியில வேலை செய்யிற ராமாதாசுக்கு தர்றதா ஒரு பொய்யச் சொல்லி, நைஸா டிரிக் பண்ணி, ராமதாஸ் அப்பாவிடம் தனக்கு வர வேண்டிய கடனை வசூல் செஞ்சிக்கிட்டு அப்புறமா GM பதவி ராமதாசுக்கு இல்ல... சிவாஜிக்குதான்னு சொல்லி கையை விரிச்சுடராரு

இது தெரியாத சிவாஜிக்கு மேஜர் மேல செம கோபம் வந்துடுது. மேஜர் இப்படி தன்னை பழிவாங்கிட்டாரேன்னு பயங்கரமா ஃபீல் பண்றாரு சிவாஜி... அவரு கோவத்துக்கு தூபம் போட்டு அவரை மேலும் உசுப்பேத்தி விட்டுடுறாங்க அவரு சிநேகிதங்க நாகேஷும், தேங்காய் சீனிவாசனும். திடுதிப்புன்னு கோபத்துல மேஜரை நல்லா கன்னா பின்னான்னு வசவு பாடி ஒரு லெட்டரை எழுதி அதை மேஜருக்கு போஸ்ட் வேறு பண்ணித் தொலைச்சிடறாங்க.... லெட்டரப் போஸ்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தா மேஜர் சிவாஜியை GM போஸ்ட்டை ஏத்துக்கச் சொல்லி தந்தி அனுப்பிச்சிருக்காரு...

எலேய்! என்கிட்டியே கதை உடுறியா?

அட இருப்பா... இன்ட்ரெஸ்டா கதை சொல்லிக்கிட்டு இருக்கேன் குறுக்க நீ வேற?.... இம்...எங்க விட்டேன்?... சிவாஜியை GM போஸ்ட்டை ஏத்துக்கச் சொல்லி தந்தி அனுப்பிச்சிருக்காரு மேஜரு . எப்படி இருக்கும் சிவாஜிக்கு! சும்மா பேயறஞ்சா மாதிரி ஆயிடுறாரு.. அப்பத்தான் அந்த ஐடியாவை சிவாஜிக்கு கொடுக்கிறாரு நாகேஷ்.. எப்படியாவது அந்த லெட்டரை மேஜர் கையில் கிடைக்காம செஞ்சுட்டா!? ...

அப்புறமென்ன... ஜிவ்வுன்னு சும்மா ராக்கெட் மாதிரி போகுது கதை... அந்த லெட்டரை எப்படியாவது கைப்பற்றனமுன்னு சிவாஜி குரூப் பல முயற்சிகள் செய்யுது.... ஆனா எல்லாத்துலேயும் தோல்விதான் கிடைக்குது... ஆனா நம்ம வயிற்றை புண்ணாக்குறதுல இந்த டீம் முழு வெற்றி அடையுது...

கடைசியில லெட்டர் மேஜர் கையிலேயும் கிடச்சுடுது....என்ன ஆகப் போகுதோ என்று நெஞ்சு திகில் படம் பார்ப்பதைப் போல டக்கு டக்குன்னு அடிச்சிக்க...
கடைசியில பார்த்தா.. அந்த லெட்டர்ல மேஜரை திட்டி எதுவுமே இல்ல... என்னடா இதுன்னு சிவாஜி முழிக்க லெட்டரை எழுதின தேங்காய் சிவாஜி, நாகேஷுக்குத் தெரியாமல் அந்த லெட்டரை மேஜரைத் திட்டாமல் நல்லவிதமாகவே மரியாதையுடன் எழுதி இருப்பது தெரிய வருகிறது. இறுதியில் எல்லாம் சுபமங்களமாக முடிய ஹீரோயினைக் கரம் பிடிக்கிறார் உங்க ஹீரோ...

சரிடா!... சரிடா!... நீ படம் பார்த்துட்டேன்னு ஒத்துக்கிறேன். கதையில ஒரு சிலதை விட்டுட்டியே!

ஒ.... வில்லன் நம்பியார் கதையை விட்டதை சொல்றியா... அது ஒண்ணும் அவ்வளவு பிரமாதம் இல்ல .. விறுவிறுப்பு மசாலாவுக்காக நம்பியார் போலி பால் பவுடர் டின் தயாரிக்கும் வில்லனா வந்து, காதலிலும், தொழிலிலும் சிவாஜிக்குப் போட்டியா வந்து, தொல்லைகள் கொடுத்து வில்லத்தனங்கள் செய்து இறுதியில் சிவாஜியிடம் "டிஷ்யூம்... டிஷ்யூம்" வாங்கி கைதாகிறார். அவ்வளவே.

பரவாயில்லடா.. நீ கூட சுருக்கமா கதை சொல்லக் கத்துகிட்டியே!

பின்னே... நீ கூட நெட்டுல உங்க ஹப்போ திரியோ என்னவோ காட்டுவியே... அதுல வாசுதேவன்னு ஒருத்தர் சிவாஜியைப் பத்தி எழுதுவாருன்னு சொல்லுவியே அவுரு மாதிரி விலாவாரியா சொல்ல எனக்குத் தெரியாதுப்பா... ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்...

எலேய்! என்ன நக்கலா?... சரி எங்க ஆளு நடிப்பு எப்படி?

பைத்தியம்... கரும்பு இனிக்குமான்னு கேக்குற....கிளப்புறாருய்யா காமெடியில உங்க ஆளு... சும்மா மன்மதன் கணக்கா அழகுன்னா அழகு... சொந்த ஹேர் ஸ்டைலா அது?

ஆமாம்...எப்படி இருக்காரு பாத்தியா? நான் மட்டும் பொண்ணப் பொறந்திருந்தா அவரத்தான் கட்டி இருப்பேன். அழகன்டா...

சும்மா காலேஜ் படிக்கிற பையனாட்டம் சிக்குன்னு இருக்கிறார் உங்க ஆளு.... சரோஜாதேவியை ஏமாற்ற பொய் மூக்கை போட்டுக் கொண்டு கலாய்க்குறதிலேயும் சரி...மேஜர் மேல வைத்திருக்கிற மரியாதையிலேயும் சரி... GM போஸ்ட் கிடைக்கிலேன்னு சட்டுன்னு சாதா சராசரி மனுஷாளைப் போல கோபப்படுறதிலேயும் சரி... போஸ்ட் பண்ண லெட்டரை எடுக்க முடியாமல் தோல்வியடையும் போதும் சரி... மேஜர் நல்லவர் என்று தெரிந்து தான் செய்த தவறை நினைத்து வருந்தும் போதும் சரி...வில்லன் வலையில் சிக்கி இறுதியில் கோர்ட்டில் கலக்கும் போதும் சரி...கோர்ட் சீனுன்னாலே உங்க ஆளுதாம்ப்பா...ரொம்ப இயல்பா நகைச்சுவையா செஞ்சிருக்கார். ஆனா எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது அவரோட அழகும், இளமையும்...அது ஒன்னே போதும்...

உனக்கு சரோஜாதேவின்னா ரொம்பப் பிடிக்குமே.... இதில எப்படி?

நடிப்பு OK. ஆனா தோற்றத்தில கொஞ்சம் முற்றிப் போய் தெரியிறாங்க...உங்க ஆளுக்கு அக்கா மாதிரி இருக்காங்க... இருந்தாலும் பரவாயில்லை... சமாளிச்சுடறாங்க...

மத்தவங்களைப் பத்தி சொல்லேன்..

நாகேஷ், மனோரமா, தேங்காய், வி.கே.ஆர், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளி, தங்கவேலு என்று ஒரே நகைச்சுவைப் பட்டாளம்... வெடிச் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை... அதுவும் நாகேஷ் டிரெயினில் லெட்டர் பார்சலை எடுக்க முடியாமல் விட்டுவிட்டு நிற்கும் சைக்கிளில் தன்னை மறந்து நான் மதுரைக்குப் போறேன் என்று பெடல் பண்ணுவது பக்கா சிரிப்பு. நம்பியார் வழக்கம் போல முறுக்குகிறார். மேஜர் அருமை. உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன்... காலில்லாத போலீஸா ஒருத்தரு நம்ம ஊர்ல நைட்டுல சுத்துற கூர்க்கா கணக்கா வந்து துப்பறியிறாரே! அவரு யாருப்பா...

அவரா... அவரு பேரு முத்தையா... இந்தப் படத்தில்தான் அறிமுகம். இந்தப் படத்துல நடிச்சி பாப்புலர் ஆனதாலே அவருக்கு 'அஞ்சல் பெட்டி' முத்தையான்னே பேரு நெலைச்சிடுச்சி...

இதெல்லாம் விவரமா தெரிஞ்சி வச்சிருப்பியே! டைரக்டர் கூட புதுசோ?

ஆமாம்... டி என்.பாலு அப்படின்னு ஒருத்தர். டி.ஆர். ராமண்ணா தெரியுமில்லே... அவருகிட்ட அசிஸ்டென்டா இருந்தவரு...

உங்காளுக்கு ரொம்பத் துணிச்சல்தாம்பா... ஒரு புது இயக்குனர் படத்துல தைரியமா துணிஞ்சி நடிச்சிருக்காரே. அதுவும் காமெடி ரோல்ல..

ஏன் சிவாஜியே சொல்லியிருக்காரே ஒரு புது இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் கிடைச்சாருன்னு... உனக்கு ஒன்னு தெரியுமா... எங்காளுக்கு காமெடி படங்களில் நடிக்கிறது ரொம்பப் பிடிக்குமாம். அதனால்தான் கலாட்டா கல்யாணம் சுமதி என் சுந்தரி படங்களையும் தன் மகன் ராம்குமார் பெயரிலே எடுத்திருக்கார். மியூசிக் நல்லாயிருக்கில்லே?

யாரு நம்ம எம்.எஸ்.வி தானே?

நாசமாப் போச்சு... பழைய சிவாஜி படம்னா கண்ண மூடிக்கிட்டு எம்.எஸ்.வி ன்னு உளற வேண்டியது....R. கோவர்த்தனன் அப்படின்னு ஒருத்தர்தான் இப்படத்துக்கு இசையமைப்பாளர். எனக்கு டி .எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி ரெண்டு பேரும் பாடிய 'பத்துப் பதினாறு முத்தம் முத்தம்' பாட்டு ரொம்பப் பிடிக்கும். உனக்கு...

எனக்கு சுசீலா அழகாகப் பாடியிருக்கும் "திருமகள் என் வீட்டைத் தேடி வந்தாள்" பிடிச்சிருக்கு...அப்புறம் இன்னொரு மேட்டர்.

தம்பி! நீ எங்க வரேன்னு புரியுது... நீ வழியறதைப் பார்த்தாலே புரியுதே...ஆதி மனிதன் பாட்டைப் பத்திதானே சொல்ல வர?

ஹி.ஹி...ஆமாம்... இந்த விஜயலலிதா டான்ஸ் கொஞ்சம் ஓவர்தாம்பா. இருந்தாலும் ரெண்டு தடவை பார்த்துட்டேன்பா..சும்மா ஈஸ்வரி பாடிக் கலக்குது சாமியோவ்.

நீ திருந்தவே மாட்டே! மேல போ...

ஒளிப்பதிவு சில இடங்கள்லே பளிச். சில இடங்கள்லே சொதப்புது... சில இடங்கள்லே குரலும் காட்சியும் மேச் ஆகல்லே... நம்பியார் காட்சிகள் இழுவையாத் தெரியுது. எது எப்படியோ...உங்காளுக்கு இது வித்தியாசமான படமா எனக்குப் படுது.

பணம், நான் சொல்லும் ரகசியம் படங்களில பேயாய் பணத்துக்கு தங்கவேலு அலைவாரே அதே ரோலை இதில் செஞ்சிருக்கார் பல வருஷங்களுக்கு அப்புறம்... முழுக்க முழுக்க காமெடி படம்கிறதனாலே சில தப்பையெல்லாம் மன்னிச்சுடலாம். மொத்தத்தில படம் எப்படின்னு சொல்லு...

உன்கிட்ட படம் சுமார்னு சொல்லக் கூட பயமாய் இருக்கே! உங்காளு படம்கிறதனாலே எதனாச்சும் சொன்னா என் பட்டையை உரிச்சுடுவியே!

என்ன செய்றது? சிவாஜின்னா உயிரு எனக்கு. அப்படியே பழகிப் போச்சு! சரி! சரியான விமர்சனத்தை சொல்லுடா....

எனக்குப் பிடிச்சிருக்குப்பா... மனம் விட்டு சிரிக்கலாம்...ரசிக்கலாம். ஆஹாவுமில்லை...ஓஹோவுமில்லை..மோசமுமில்லை.. காமெடிதான் பிரதானம்... நாள் முச்சூடும் உழைக்கிற எனக்கு பார்க்க ஜாலியா இருக்குப்பா... வேற என்ன படம் வச்சிருக்க? ஹ...வர்ர்ட்டா..

ம்...ஓசியில படம் பார்த்தா ஜாலியாத் தான் இருக்கும். DVD யைக் கொடு. நெட்டுல எங்க ஆளுங்க எல்லாரும் பார்க்கணும்...மொவனே போயிட்டு வா...அடுத்த படத்தையாவது காசு கொடுத்து வாங்கிப் பாரு.

JamesFague
21st November 2014, 10:33 PM
Thanks to Mr Neyveli Vasudevan

பொதுவாகவே எல்லோரும் ஏன் நமது ரசிகர்களும் கூட ஏதோ இருநூறு படங்களுக்கு மேல் வந்த தலைவரின் படங்கள் சுமார் ரகம் தான். இருநூறோடு அவர் நிப்பாட்டி இருக்கலாம் என்று கூறுவார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. பழைய படங்களின் தரத்தை புதிய படங்களில் காண முடியாது என்பது வேறு விஷயம். அதற்காக பழைய படங்களின் தரத்தை அப்படியே புதிய படங்களில் எதிர்பார்க்காமல் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளலாமே! நான் குறிப்பிடுவது இப்போது வரும் புதுப் படங்களை அல்ல. இருநூறுக்கு மேல் வந்த தலைவரின் திரைப்படங்களைப் பற்றி.

திரிசூலத்திற்குப் பிறகும் பல நல்ல படங்கள், வெற்றிப்படங்கள் வந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது என்னுடைய சொந்தக் கருத்து.

திரிசூலத்திற்கு அடுத்து 201- ஆவது படமாக வந்த 'கவரிமான்' ஒரு அற்புதமான படம் என்று எல்லோராலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. தலைவர் கூட இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களிடம் "செதுக்கி செதுக்கி அழகான சிற்பமாய் இப்படத்தை வடித்திருக்கிறாய். ஜனங்கள் ரசிப்பார்களா?" என்று கேட்டாராம். அந்தப் படத்தை தரக் குறைவாக யாருமே விமர்சித்ததே இல்லை. அதற்கு முன்னால் வந்த திரிசூலத்தின் விஸ்வரூப வெற்றியினால் கவரிமான் பாதிக்கப்பட்டதே தவிர நல்ல படம் என்ற பெயரை அது இழக்கவே இழக்காது. மிகப் பெரிய வெற்றி அடையாவிட்டாலும் அது தோல்விப்படமல்ல. (பம்மலாரின் 'கவரிமான்' பதிவின் குறிப்பில் இதனை கவனித்திருப்பீர்கள்).

'நல்லதொரு குடும்பம்' அனைவரும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். நல்ல வெற்றியைப் பெற்ற படமும் கூட. எங்கள் கடலூரில் 40- நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலை அள்ளித் தந்தது அப்படம்.

'இமயம்' தோல்விப் படமென்றால் கூட இப்போது பாருங்கள். very intersting -ஆன தலைவரின் நடிப்பு முத்திரைகளைத் தன்னகத்தே கொண்ட படம்.

'நான் வாழ வைப்பேன்' நல்ல வெற்றிப்படம். ரஜினிக்கு மறுவாழ்வு தந்த படம். நம் தலைவரும் அருமையாகப் பண்ணியிருப்பார்.(முக்கியமாகத் தலைவலி வரும் காட்சிகளில்)

'ரிஷிமூலம்' அனைவராலும் பாராட்டுப் பெற்று வெற்றியடைந்த படம்.

'எமனுக்கு எமன்' ஜாலியாகப் போகும் படம். சிரிப்புக்கு 100% உத்திரவாதம்.

'சத்திய சுந்தரம்' எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றியை அளித்த கலகலப்பான குடும்பப்படம். குவியல் குவியலாக தாய்மார்கள் இப்படத்தைக் கண்டு களித்தார்கள். நல்ல குடும்பப் படமாக குறிப்பாக பெண்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.

இதே வரிசைகளில் கல்தூண், கீழ்வானம் சிவக்கும், வா கண்ணா வா, வசூலில் அட்டகாசம் செய்த சங்கிலி (பொதுவாக இரவுக்காட்சிகள் 9.30 அல்லது 10.00 மணிக்குத் துவங்கும். ஆனால் சங்கிலி கதையே வேறு. கடலூரில் இரவு பதினோரு மணிக்குள் இரவுக்காட்சி முடிந்துவிடும். இந்தப் படம் மட்டுமே அந்தப் பெயரைத் தட்டிச் சென்றது. அப்படி ஒரு கூட்டம் இப்படத்திற்கு. ஷோ கணக்கெல்லாம் கிடையாது. படம் விட்ட ஐந்தே நிமிடங்களில் அரங்கு நிறைந்து விடும். இப்படி பேயக்கூட்டத்துடன் எங்கள் ஊரிலும் ஓடி வசூலை வாரி அள்ளினார் 'சங்கிலி').

தீவிர வசூல் வேட்டியாடிய தீர்ப்பு, அற்புத நடிப்பைக் கொண்ட தியாகி, கேஷுவல் நடிப்பில் மனதை உருக்கிய துணை, மறுபடியும் பிராமணராக நடிப்புக் கொடி நாட்டிய பரிட்சைக்கு நேரமாச்சு, படித்ததின் பயனை மறந்து, காதலில் உழன்று, கடமையை மறந்து, பிறந்த கிராமத்தையே உதாசீனப்படுத்தும் தன் தம்பியை வித்தியாசமான அணுகுமுறையில் திருத்தி, கிராமத்து மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வைக்கும் கிராமத்தானாக நடித்து, நல்ல மெசேஜை சொல்லிய ஊரும் உறவும், வெள்ளி விழாக் கண்ட நீதிபதி, கேலி செய்தோரின் வாயை அடைத்து வசூலில் பின்னியெடுத்த மசாலாக் கலவை சந்திப்பு, மிருதங்க வித்வான்களே மெய் சிலிர்த்துப் பாராட்டிய மிருதங்கச் சக்கரவர்த்தி, வெள்ளை மனம் கொண்ட பாதராகவும், கர்ஜனை புரியும் போலீஸ் அதிகாரியாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் கலக்கிய வெள்ளை ரோஜா, திரும்பவும் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய திருப்பம், வசூலிலும், நடிப்பிலும் வரலாறு படைத்த வாழ்க்கை, மழலையின் மேல் பாசம் வைத்து மலைக்க வைத்த நடிப்பைப் பகிர்ந்து கொண்ட பந்தம், முக்காலமும் தலைவர் புகழ் பாடிக்கொண்டிருக்கும் முதல் மரியாதை, விசுவாமித்திரரை வியக்கும் வகையில் நடிப்பால் நமக்குக் காட்டிய ராஜரிஷி, அண்ணனின் அன்புப் பாசத்தை தம்பிகளிடம் கண்களிலேயே பிரதிபலித்த படிக்காதவன்,

இயக்குனர் வேடத்தில் இதயத்தை வருடிய சாதனை,

படுத்துக் கொண்டே நடிப்பில் ஜெயித்த மருமகள்,

ஸ்டைலிலும், நடிப்பிலும் ஜமாய்த்த ஜல்லிக் கட்டு,

தேவர்களும் மயங்கும் நடிப்பைக் கொண்ட தேவர் மகன்,

மகள் விதவையான சோகத்தை நேரிடையாகக் கண்டு அனுபவித்து சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகும் பசும்பொன்,

ஜாலியான அறுபது வயது இளைஞனாக யூத்களுடன் கும்மாளமிட்ட ஒன்ஸ்மோர்,

மோகன்லாலுடன் இணைந்து மோகன நடிப்பை வழங்கிய, மலையாளத் தமிழ் பேசிய ஒரு யாத்ராமொழி,

கடைசி வரையிலும் கரகாட்டம் ஆடி களேபரம் செய்த என் ஆச ராசாவே,

காதலர்களை இணையவைக்கும் முதியவராக இளையவர்களுக்கு ஈடு கொடுத்த பூப்பறிக்க வருகிறோம்

என்று தன் திறமை இறுதி வரை குறைந்ததல்ல என்று அவர் வாழ்நாள் முழுதும் தன் திறமையைக் காட்டினார் என்றுதான் கூற வேண்டும்.

அவருடைய முன்னாள் படங்களோடு இருநூறுக்கும் மேல் வந்த படங்களை ஒப்பிடுவதே தவறு. பின்னாட்களில் அவர் படங்கள் வேஸ்ட் என்பது தவறு என்பதும் என் தாழ்மையான கருத்து. பின்னாட்களிலும் மிகச் சிறந்த படங்களை அவர் தந்திருக்கிறார். நல்ல வித்தியாசமான நடிப்பையும் நமக்கு வழங்கி விட்டுத்தான் போய் இருக்கிறார். சில படங்கள் அவர் பெயரைக் கெடுத்திருக்கலாம். அவரும் அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் சிறப்பாகவும், வெற்றியுடனும் செய்யக் கூடியவர்கள் யாரும் இல்லை. ஏற்றத் தாழ்வுகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் உண்டு. இருநூறுக்கு முன்னாலும் அவருடைய மோசமான படங்கள் இருக்கின்றன. தோல்விப்படங்களும் இருந்திருக்கின்றன. எதையும் எதனுடனும் ஒப்பிடாமல் பார்ப்பது தான் ஒரு சரியான விமர்சனமாக இருக்க முடியும் என்பது என் கருத்து.

வெற்றி தோல்விகளை அவரும் எதிர்கொண்டே ஆக வேண்டும். நாம் எதிர்பார்த்த அளவுக்கு படங்களின் தரங்கள் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் ஒரு இடத்திலாவது அவர் எல்லோரையும் வாயைப் பிளக்க வைத்து விடுவார். மறுபடியும் சொல்கிறேன். பின்னாட்களிலும் அவர் நல்ல படங்கள் பல கொடுத்திருக்கிறார். பிற படங்களில் இல்லாத நடிப்பையும் அளித்திருக்கிறார். அதனால் தான் இத்திரியில் நான் உறுப்பினரானவுடன் தாங்கள் மனதிலுள்ள எண்ணம் எனக்கும் இருந்ததினால் என்னுடைய முதல் ஆய்வுப் படமாக பின்னாளில் வெளியான 'கருடா சௌக்கியமா' படத்தை ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டேன்.

சற்று நீண்ட பதிவாகி விட்டது. பொறுமையுடன் படித்ததற்கு மிக்க நன்றி. அவர் விண்ணில் தெய்வமாக வாழ்ந்தாலும் மண்ணில் இருந்த போது அவரும் மனிதர் தான். ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்தான், விருப்பு வெறுப்புகள் அவருக்கும் உண்டு. அவர் அப்போது கடவுள் இல்லை. எல்லாவற்றிலுமே நூறு சதவிகிதம் வெற்றியை எவரும் கொடுத்து விட முடியாது.

இப்படி ஒரு பதிவை நெடுநாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது தங்களால் இன்று நிறைவேறிற்று. அதற்காகவும் தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.

eehaiupehazij
21st November 2014, 11:34 PM
Female singers who helped glorify NT's movies and his stardom!! : பட்டத்துராணி L.R. ஈஸ்வரி!

Part 2 :L. R. Easwari : The magnetic tone that defied gravity in NT movies!

நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: திரை கானங்களின் சண்டமாருதம் L.R. ஈஸ்வரி!
பி சுசீலாவின் மலயமாருதக் குரலினிமைக்கு மாற்றுக்குறையாத சண்டமாருதம் ! பாசமலரின் வாராயோ தோழி வாராயோ, சிவந்தமண்ணில் பட்டத்துராணி, வசந்தமாளிகையில் குடிமகனே பாரதவிலாசில் மின்மினிப்பூச்சிகள் கெளரவம் அதிசய உலகம்.....நடிகர்திலகத்தின் காவியங்களில் மறுக்க முடியாத இடம் பெற்றவர். கிளப் பாடகியாக ரசிக நெஞ்சங்களின் நித்திரை கெடுத்தாலும் அம்மன் பக்திப்பாடல்களில் முத்திரை பதித்தவர். பிற படப்பாடல்களில் மனதில் நீங்கா இடம் பெற்றவை பளிங்கினால் ஒரு மாளிகை (வல்லவன் ஒருவன்), காதோடுதான் நான் பேசுவேன் (வெள்ளிவிழா)..... இலந்தப்பயம்.... (பணமா பாசமா).....

இவர் மணிக்குரலில் ரசிக்கப்பட்ட Top 10 நடிகர்திலகப் படப்பாடல் வரிசை! (என் தனிப்பட்ட ரசனைப்படி....உங்கள் ரசனை மாறுபடலாம்)

1. எல்ஆர் ஈசுவரியை பட்டத்து ராணியாக புகழின் உச்சியில் இருத்திய சாட்டையடிப் பாடல் நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிப்படமான சிவந்தமண்ணில் !
One of the major ingredients for a successful turn out of Sivandhamann is this challenging song justified by LR Easwari's high pitch bewitching modulations with aplomb and we salute her mighty contributions in our NT films as a part of team work! unforgettable song sequence in the history of Tamil Cinema honoured by the screen space graced by NT with Kaanjanaa, Nambiar ....alongside LRE's song under MSV's enchanting music throughout!

https://www.youtube.com/watch?v=zd0nJnhQMzQ

2. எல் ஆர் ஈசுவரியின் பாடல் வரிகளில் பொதிந்த இலை மறை காய்மறை( முக) அர்த்தங்களில் நாணி முகம் சிவக்கும் நடிகர்திலகம்! ஆட்டத்தைப் பார்க்காமல் பாடலையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக காரியம் பார்க்கும் காதல் மன்னர் !

https://www.youtube.com/watch?v=NQzGsG7Ru8w

3. Gowravam Sivaji's majestic body language!
ஈசுவரியின் குரல் கவர்ச்சி ஜெயகுமாரியின் நடன கவர்ச்சி......இதெல்லாம் எம் மன்னவரின் உடல்மொழிக் கவர்ச்சிக்கு முன் எம்மாத்திரம்?!

https://www.youtube.com/watch?v=QKkw0-tbqmk

4. Enga maamaa : bewitching tone of LRE ! Perfect Coat suit ஸ்டைலில் அசத்தும் Slimmo Slim நடிகர்திலகம் !

https://www.youtube.com/watch?v=7KqCOT4Qito

eehaiupehazij
22nd November 2014, 05:05 AM
தொடர்ச்சி.......

நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: திரை கானங்களின் சண்டமாருதம் L.R. ஈஸ்வரி!


5. Bharatha Vilas! மின்மினிப் பூச்சிகள் நடிகர்திலகத்தின் கண்களில் பறக்கும்... .சகுந்தலா உடலை வளைத்து ஆடுவதை யார் ரசித்தார் மன்னவனே! நீங்கள் நளினமாக தலையாட்டுவதைத்தானே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம் !!

https://www.youtube.com/watch?v=7f471aVOjJE

6. Thavappudhalvan! காதல் ..சந்நியாசிகள் ! Amazing lip synchronization to the english lines of this song by NT!!

https://www.youtube.com/watch?v=ORqLDJZ6WJk

7. வசந்த மாளிகை..... ஈசுவரியின் குரலோ பளிங்கினால் ஒரு மாளிகை !!

https://www.youtube.com/watch?v=JHbrHGd493E

8. Desi version of James Bond/Matt Helm (The Silencers) NT with Bharathi!
ஈசுவரியின் குரலே ஒரு தங்கச்சுரங்கம்தான்

https://www.youtube.com/watch?v=8CKktGVrQvU

9. சித்ரா பவுர்ணமி காலம் உண்டு நேரமுண்டு ... காலநேரமின்றி உங்களை ரசிக்கிறோம் நடிக மன்னரே

https://www.youtube.com/watch?v=fA0o1I2lflo

10.எதிரொலி : உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே ..... நடிகர்திலகமே!

https://www.youtube.com/watch?v=IG-TGZyPBEM

NT comes back to honour S. Janaki's contributions

adiram
22nd November 2014, 10:24 AM
சிவாஜி செந்தில் சார்,

நடிகர்திலகத்தின் திரைப்பாடல்களில் ஈஸ்வரியின் பங்களிப்பு செய்த பாடல்களின் தொகுப்பு மிக நன்றாக உள்ளது.

எனக்கு தோன்றிய இன்னும் சில பாடல்கள்

திருடன் படத்தில் 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' மற்றும் 'நினைத்தபடி கிடைத்ததடி'

இன்னொரு பாடல் ராஜா படத்தில் (நடிகர்திலகம் பாடல் காட்சியில் இடம்பெறாத) 'நான் உயிருக்கு தருவது விலை... கண்களை கொண்டு வா'.

Georgeqlj
22nd November 2014, 11:52 AM
ராஜ ராஜ சோழன் சினிமா பற்றிய


இந்து நாளிதழ் கட்டுரை(20.11.2014)



View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

joe
22nd November 2014, 02:37 PM
ராஜ ராஜ சோழன் சினிமா பற்றிய


இந்து நாளிதழ் கட்டுரை(20.11.2014)


View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/
நேரடியாக வாசிக்க ..
http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%A F%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%A E%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%A F%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%A E%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article6615722.ece

eehaiupehazij
22nd November 2014, 03:09 PM
சிவாஜி செந்தில் சார்,

நடிகர்திலகத்தின் திரைப்பாடல்களில் ஈஸ்வரியின் பங்களிப்பு செய்த பாடல்களின் தொகுப்பு மிக நன்றாக உள்ளது.

எனக்கு தோன்றிய இன்னும் சில பாடல்கள்

திருடன் படத்தில் 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' மற்றும் 'நினைத்தபடி கிடைத்ததடி'

இன்னொரு பாடல் ராஜா படத்தில் (நடிகர்திலகம் பாடல் காட்சியில் இடம்பெறாத) 'நான் உயிருக்கு தருவது விலை... கண்களை கொண்டு வா'.

ஆதிராம் சார்.

Thanks for the interactions. முடிந்தவரை நடிகர்திலகம் இடம்பெறும் காணொளியே தேர்வு செய்ய எண்ணினேன். சித்ரா பவுர்ணமி பாடல் தவிர்க்க முடியவில்லை. மற்றபடி திருடன், ராஜா பாடல்கள் நல்ல தேர்வே.

https://www.youtube.com/watch?v=BGH5slqQG60

ராஜா படப்பாடல் தரவேற்ற இயலவில்லை

Russellbpw
22nd November 2014, 07:40 PM
திரைப்படம் உருவாகிறது!

பிரெஞ்சு சினிமா இயக்குநரான லூயிமால், இந்தியாவைப் பற்றி ஆறு மணி நேரம் ஒடக் கூடிய விரிவான ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். 1969-ம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் தமிழகக் கலைகள் மற்றும் வாழ்க்கை முறையைப் பதிவு செய்திருக்கிறார் லூயிமால்

1968-ம் ஆண்டு தமிழ் சினிமா உலகம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள லூயிமால், ‘தில்லானா மோக னாம்பாள்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று சிவாஜி, பத்மினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவதைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒன்றுதான் தமிழ் சினிமா படப்பிடிப்புகுறித்து பதிவு செய்யப்பட்ட பழைய ஆவணம்.

படப்பிடிப்பில் சிவாஜி, பத்மினி இருவரும் நடிப்புக்குத் தயார் ஆகும் விதம், நடிப்பில் சிவாஜி காட்டும் ஈடுபாடு, இயக்குநரான ஏ.பி.நாகராஜன் தாளகதியுடன் கைதட்டிப் பாடி, நடிகர் வெளிப்படுத்த வேண்டிய பாவத்தைக் காட்டும் தனித்துவம் என்று லூயிமால் காலத்தின் அழியாத நினைவுகளை ஆவணப் படுத்தியிருக்கிறார். இன்று இக்காட்சியை யூ-டியூப்பில் நாம் காண முடிகிறது.

மதுரை ‘ரீகல்’ தியேட்டர் முன்பாக உள்ள பழைய புத்தகக் கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக அரிய நூல் ஒன்றை வாங்கினேன். அது ‘திரைப்படம் உருவாகிறது’ என்ற கலைஅன்பன் எழுதிய புத்தகம். 1973-ம் ஆண்டு வெளியாகியுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜிகணே சன் நடித்த ‘ராஜராஜசோழன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து படப்பிடிப்பு முடியும் நாள் வரை என்னவெல்லாம் நடந் தது என்பதைப் பற்றி ஒரு டாகுமென்டரி படத்தைப் பார்ப்பது போல நேரடியாக விவரிக்கிறது இப்புத்தகம்.

சுப.ராமன் என்ற பத்திரிகை யாளர் படப்பிடிப்புத் தளத்தில் கூடவே இருந்து, இதை ஆவணப்படுத்தியிருக்கிறார். இவர் ‘தமிழ்நாடு’ இதழில் பணியாற்றியவர்.

‘ராஜராஜசோழன்’ தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம். அரு. ராமநாதன் எழுதிய ‘ராஜராஜசோழன்’ நாடகத்தை டி.கே.எஸ் சகோதரர்கள் 1955-ல் திருநெல்வேலியில் அரங்கேற்றி உள்ளனர்.

அதன்பிறகு, இந்த நாடகத்தைப் படமாக்க பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்து, எதிர்பாராத காரணங்களால் நடைபெறாமல் போயுள்ளது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsdd8b525d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsdd8b525d.jpg.html)

இந்நிலையில் 1972-ம் ஆண்டு ஜி.உமாபதி அவர்கள் இதனைப் படம் எடுக்க முன் வந்துள்ளார். புராணப் படங்களை இயக்கி புகழ்பெற்றிருந்த ஏ.பி.நாகராஜன் முதன்முறையாக ஒரு சரித்திரப் படத்தை இயக்க இருக்கிறார் என்பது பரபரப்பாக அப்போது பேசப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு டபிள்யூ.ஆர். சுப்பா ராவ். ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற புகழ் பெற்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர்.

சினிமாஸ்கோப்பில் படம் எடுப்பதற்காக இவரை பம்பாய்க்கு அழைத்துப் போய், அமெரிக்க கம்பெனியில் பயிற்சி கொடுத்து அவர்களிடமிருந்த சினிமாஸ்கோப் லென்ஸ்களை வாடகைக்கு வாங்கி வந்திருக் கிறார்கள்.

சோதனை முயற்சியாக, ‘அகஸ்தியர்’ படத்தின் உச்சகட்டக் காட்சியினை 500 அடிகள் சினிமாஸ்கோப்பில் படமாக்கிப் பார்த்திருக்கிறார்கள். அது சிறப்பாக அமையவே, ‘ராஜராஜசோழன்’ முழுப் படமும் சினிமாஸ்கோப்பில் எடுக்க முடிவு செய்தார்களாம். இப்படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க, கலை இயக்குநராக கங்கா வும், எடிட்டிங் வேலையை டி.விஜயரங்கமும் கவனித்துள் ளனர்.

1972 பிப்ரவரி 2-ம் நாள் வாசு ஸ்டுடியோவில் ‘ராஜராஜ சோழன்’ படப்பிடிப்பு ஆரம்பம். ஐந்து ஏக்கர் நிலத்தில் பிரம் மாண்டமான முறையில் தஞ்சை பெரிய கோயிலை செட் போட்டுள்ளார்கள். 25 அடியில் ஒரு நந்தியை உருவாக்கியுள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் தான் நடிக்கிறோம் என்ப தையே மறந்துவிட்டு, ராஜராஜசோழனாகவே வாழ்ந்துள்ளார் நடிகர் திலகம்.

ஒருநாள் படப்பிடிப்பைக் காண்பதற்காக பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சீவ்குமார் வந்திருக்கிறார். அவர் நடிகர் திலகத்தின் நடிப்பைக் கண்டு வியந்து பாராட்டியதோடு, கோயில் போல அமைக்கபட்ட செட் அமைப்புகளைக் கண்டு பிரமித்துப் போனாராம்.

படப்பிடிப்பின்போது ஒருநாள் கடும் மழையால் படத்துக்காக போடப்பட்ட செட் சரிந்து விழுந்துள்ளது. மேட்டி தொழில்நுட்பத்துக்காக கேமரா முன்பு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைந்து போனதாம்.

அன்றைக்கு படப்பிடிப்பு நின்று போனதுடன், 2 லட்ச ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்கெல்லாம் அந்தப் படத்தின் ஜி.உமாபதி கலங்கவில்லை. படத்தைத் திட்டமிட்டபடியே இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். மீண்டும் அதே போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்புத் தொடர்ந்துள்ளது.

இப்படி ‘ராஜராஜசோழன்’ படப்பிடிப்பில் நடைபெற்ற பல சுவாரஸ்யமான விஷயங்களுடன், அன்றைய தமிழ் சினிமாவின் நிலை, ஹாலிவுட் சினிமா எப்படி இயங்குகிறது என்றெல்லாம் இந்தப் புத்தகத்தில் நுட்ப மாக எழுதியிருக்கிறார் கலை அன்பன். இந்நூலில் அரிய புகைப்படங்களும் திரைக்கதையின் மாதிரி பக்கமும் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

eehaiupehazij
22nd November 2014, 08:25 PM
Female singers who helped glorify NT's movies and his stardom!! : திருமதி எஸ் ஜானகி

Part 3 :S. Janaki: The melody queen added richness to songs in NT movies !

நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: திரை கானங்களின் Nightingale S. Janaki!!

திருமதி எஸ் ஜானகி :
திறமை நிறைந்த பன்மொழிப் பாடகி. எனினும் தமிழ் திரையுலகில் சுசீலாவின் காலத்தில் சரியாக ஒளிர இயலவில்லை. இளையராஜாவின்
வரவுக்குப்பிறகே புகழ் வெளிச்சம் ஜானகி மீது இமயமலைப் பனிபோல படர்ந்து விண்ணை எட்டியது .நடிகர்திலகத்தின் நடிகர்திலகத்தின் பொற்காலத்தில் கூட ஜானகியின் பங்களிப்பு அரிதாகவே இருந்தது.ஜெமினியின் கொஞ்சும் சலங்கை'சிங்கார வேலனே , .குங்குமம் திரைப்படம் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை 'ஜானகியின் அசாத்தியமான குரல்வளத்துடன் கூடிய பாடும் திறமையை மின்னல் கீற்றாக வெளிப்படுத்தியது ஆலயமணியிலும் விளயாட்டுப்பிள்ளையிலும் ஒரு மென்மையான மனதுக்கு இதமான பாடல் அவ்வளவே. நடிகர்திலகத்தின் படங்களுக்கு இளைராஜா இசை அமைக்கத் தொடங்கியதும் அவரது சிறப்பான பங்களிப்பு அதிகரித்தது. முதல் மரியாதை..ரிஷிமூலம் ...தியாகம் ......ஜானகி அம்மாவுக்கு நன்றிகலந்த வணக்கங்கள் !

1. Kungumam : Even today this song sequence is a bench mark scene for stage performance of carnatic music based songs! The sudden invasion of NT and his continuation of song with inimitable facial expressions and lip movements... an audio-visual feast to enjoy!!சொன்னதைச் சொல்லும் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை சாரதாவுக்குக்கூட ஊர்வசி கொடுப்பினை ! நமக்கு.....நம் மன்னவருக்கு உரிய பெருமை....உரிமை ..... நம் நெஞ்சங்களில்....தீராத வேதனை...வாசல் இருந்தும் வழியில்லையே !

https://www.youtube.com/watch?v=UtlVTv1zkMk

2. Mudhal Mariyadhai : The first respect goes to NT and the rest taken care by Janaki!! விடலைப்புள்ள நேசம்.....வேட்டிவேரின் வாசம்....முதுமையிலும் பாசம் பேசும்.....பாசத்தென்றல் வீசும் !!

https://www.youtube.com/watch?v=zouerNWiRG8


3. Vilayaattuppillai (1969): A melody that lingers! காதல் வயப்பட்டிருப்பது...சொல்லாமல் புரிய வேண்டுமே!

https://www.youtube.com/watch?v=ZYNefw7g1wI

4. Aalayamani: Instead of a bed-time story....தூக்கம் நம் கண்களைத் தழுவிடும் தாலாட்டுக் குரல்

https://www.youtube.com/watch?v=Qewj3q3UEeo

5. Thyaagam: Poignant reminiscence of love!கலைந்திடும்(சிலை , பாரதரத்னா ஆஸ்கார்..) கனவுகள்....... நடிகர் திலகம் பற்றிய கண்ணீர் சிந்தும் நினைவுகள்

https://www.youtube.com/watch?v=PuV8Hemr_l8

6. Rishimoolam : Sheer happiness rolls in our minds and hearts upon hearing this number! மழை வருவதை முன்னறியும் மயில்....ஜானகி அம்மாவின் குயில் குரல் மழையில் ...நனைவோமே !

https://www.youtube.com/watch?v=6iPPbQC-Yoc

NT comes back to thank the Sparrows and Parrots of singing P. Leela, Jamunarani and M.S. Rajeswari for their indelible contributions to add pep to the tempo of his movies!

Russellbpw
22nd November 2014, 09:40 PM
https://www.youtube.com/watch?v=uLmsuXcID7U

Russellbpw
22nd November 2014, 09:52 PM
https://www.youtube.com/watch?v=UqnNOMbt-nM

Russellbpw
22nd November 2014, 09:53 PM
https://www.youtube.com/watch?v=TyjBHMV-yTw

Russellbpw
22nd November 2014, 10:10 PM
https://www.youtube.com/watch?v=RpgUkozdBpI

Russellbpw
22nd November 2014, 10:17 PM
https://www.youtube.com/watch?v=5dB_2CkOki8

Russellbpw
22nd November 2014, 10:23 PM
https://www.youtube.com/watch?v=Wt6A8uxdZD0

Russellbpw
22nd November 2014, 10:24 PM
https://www.youtube.com/watch?v=wi-G7fvgZ7g

Russellbpw
22nd November 2014, 10:26 PM
https://www.youtube.com/watch?v=_9urgglMP08

Russellbpw
22nd November 2014, 10:27 PM
https://www.youtube.com/watch?v=fATXhdm_-2w

Russellbpw
22nd November 2014, 10:28 PM
https://www.youtube.com/watch?v=vNLRpeXzb3Y

Russellbpw
22nd November 2014, 10:32 PM
https://www.youtube.com/watch?v=FN-foH6RGOo

Russellbpw
22nd November 2014, 10:33 PM
https://www.youtube.com/watch?v=RokLZkNWsdQ

Russellbpw
22nd November 2014, 10:33 PM
https://www.youtube.com/watch?v=cOnSA3fwuWA

Russellbpw
22nd November 2014, 10:34 PM
https://www.youtube.com/watch?v=Ll-yDdgCHm0