PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

Georgeqlj
26th September 2014, 11:29 AM
2015 ஆம் வருட காலண்டர் டிசைன்
URL=http://s1055.photobucket.com/user/senthilvel45/media/Mobile%20Uploads/IMG_16213665942485_zpseb17kb8e.jpeg.html][IMG]http://i1055.photobucket.com/albums/s509/senthilvel45/Mobile%20Uploads/IMG_16213665942485_zpseb17kb8e.jpeg

JamesFague
26th September 2014, 11:33 AM
Review by Mr Murali - a Recap


பேசும் தெய்வம் Part I

தயாரிப்பு : ரவி புரொடக்ஷன்ஸ்

கதை வசனம் இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

வெளியான நாள்: 14.04.1967

சென்னையில் பெரிய செல்வந்தர் ரங்காராவ். மனைவி சுந்தரி பாய். ஒரு மகள் திருமணமாகி மதுரையில் வசிக்கிறாள். கணவர் கலெக்டர். ஒரே மகன் சந்துரு சட்டக் கல்லூரியில் படிக்கிறான். நாகர்கோவிலை சொந்த ஊராக கொண்ட அந்த பெற்றோர்கள் மகனுக்கு வேண்டியே சென்னையில் தங்கியிருக்கிறார்கள். தந்தையைப் பொறுத்த வரை திருப்பதி ஏழுமலையான் தான் எல்லாம். அவனிடம் உரிமையோடு எனக்கு இது இது வேண்டும் என்று லிஸ்ட் போட்டு கோரிக்கை வைப்பவர். தாயோ மகனுக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லும் சந்துரு ஒரு நாள் ஒரு பெண்ணை பார்க்கிறான். அவள் அழகில் கவரப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அவளும் அவனை விரும்பவுதை உணர்கிறான். அவள் பெயர் லட்சுமி, அவள் யாருமற்ற அனாதை என்பதை தெரிந்து கொள்ளும் சந்துரு தன பெற்றோர்களை சம்மதிக்க வைக்க தன் அக்கா கணவரின் உதவியை நாடுகிறான். அவர் உதவியால் கல்யாணம் நடக்கிறது.

சில வருடங்கள் உருண்டோடுகின்றன. ஆனால் சந்துரு லட்சுமி தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் மனது வருத்தப்படுவதை நினைத்து சந்துருவும் லட்சுமியும் அப்செட் ஆகிறார்கள். வீட்டு வேலைக்காரி வேலம்மாள் மளிகை சாமான்களை தெரியாமல் எடுத்து செல்வதை பார்த்து விடும் லட்சுமி அவளை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க அவள் தன் குடும்ப கஷ்டத்தை கூறுகிறாள். அவளுக்கு ஏற்கனவே ஆறு குழந்தைகள். இப்போது ஏழாவது குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள். கணவன் சரியில்லை. குழந்தை இல்லை என்று கவலைப்படும் நீங்கள் என் குழந்தைகளில் ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று அவள் சொல்ல இருப்பது வேண்டாம் பிறப்பதை எடுத்துக் கொள்ளலாம் என்று சந்துருவின் தந்தை சொல்ல அதன்படி செய்கிறார்கள். குழந்தை பிறந்ததும் அதை சீராட்டி வளர்க்கிறார்கள். ஆனால் டிப்திரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தையை சரியான நேரத்தில் டாக்டரிடம் காண்பிக்காததால் (வேலைக்காரியின் பேச்சை கேட்டுக் கொண்டு) குழந்தை இறந்து விடுகிறது. அதே நேரத்தில் மயங்கி விழும் லட்சுமி கர்ப்பம் தரித்திருப்பதாக டாக்டர் கூற மீண்டும் மகிழ்ச்சி பொங்குகிறது. ஒரு ஆண் குழந்தை பிறந்து வளர்கிறது. அதற்கும் டிப்திரியா தாக்க ஆனால் இந்த தடவை தக்க சமயத்தில் சிகிச்சை கொடுக்கப்பட குழந்தை பிழைத்துக் கொள்கிறது.

ஒன்றிரண்டு வருடங்களுக்கு பிறகு இப்போது சந்துரு சென்னையில் ஒரு மூத்த வழக்கறிஜரிடம் பணியாற்றுகிறான். அவனது பெற்றோர்கள் இப்போது நாகர்கோவிலில் வசிக்கிறார்கள். குழந்தை பாபுவை அல்லும் பகலும் கவனித்துக் கொண்டு அவனைப் பற்றியே கவலைப்படுவதால் லட்சுமியின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. பலவீனமான இதயமாக இருப்பதால் அதிர்ச்சி தரும் செய்திகளை அவளிடம் சொல்ல வேண்டாம் என்று டாக்டர் அறிவுறுத்துகிறார். இந்நிலையில் சந்துருவின் அக்கா மகளுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு கோட்டயம் நகரில் வைத்து நடக்கிறது. லட்சுமி உடல் நிலை காரணமாக போகாமல் இருக்க பாபுவை கூட்டிக் கொண்டு சந்துரு கல்யாணத்திற்கு போகிறான். அங்கே பழைய நண்பர்கள் கூட்டத்தை சந்திக்க அனைவரும் சீட்டு கச்சேரியில் மூழ்குகிறார்கள். குழந்தை பாபு அழ சந்துருவின் அம்மா சந்துருவிடம் விட்டு செல்கிறாள். குழந்தை வேறு சில குழந்தைகளை பார்த்து விட்டு அவர்களுடன் விளையாடப் போகிறான். ஆனால் ஆட்டத்தில் ஆழ்ந்திருக்கும் சந்துரு இதை கவனிக்கவில்லை. ஒரு பொம்மைக்கு சண்டை போடும் குழந்தை வீட்டின் முன் உள்ள ஏரிக்கரையில் நிறுத்தி வைத்துள்ள படகில் ஏறி பொம்மையை எடுக்க முயற்சிக்க கயிற்றால் கட்டாமல் நிறுத்தி வைத்துள்ள படகு நகர்ந்து ஏரியில் தானே செல்லுகிறது.

குழந்தையை காணாமல் அனைவரும் தேட ஏரிக்கரையில் குழந்தையின் ஒரு செருப்பு கிடக்கிறது. குழந்தை என்னவாயிற்று என்று தெரியாமல் சந்துரு தவிக்கும் போது லட்சுமி போன் செய்கிறாள். நிலைமையை சமாளிக்க குழந்தை தூங்குவதாக பொய் சொல்லுகிறான். அக்காள் கணவர் கலெக்டர் என்பதால் தன் செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் துறையை வைத்து தேட செய்கிறார். ஆனால் தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. அவரே சந்துருவிடம் சென்னைக்கு செல்லுமாறும் குழந்தையை தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு வந்திருப்பதாகவும் லட்சுமியிடம் சொல்ல சொல்லுகிறார். சந்துருவும் அப்படியே செய்கிறான். ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கும் லட்சுமியிடம் குழந்தையை பிரிந்த ஏக்கம் என்று சொல்கிறான். ஆனால் அடுத்தடுத்து நடக்கும் சில சம்பவங்களினால் லட்சுமிக்கு சந்தேகம் வருகிறது.

இந்த நேரத்தில் பர்மாவிலிருந்து யுவான்சென் என்ற செல்வந்தர் தன் மனைவியுடன் இந்தியாவிற்கு வருகிறார். எல்லா வசதிகளும் இருந்தும் அவர்களுக்கு குழந்தை செல்வம் இல்லை. எனவே இந்திய குழந்தை ஒன்றை தத்தெடுக்க இந்தியாவிற்கு வந்திருப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார்கள். அவர்கள் பல அனாதை இல்லங்களுக்கு விஜயம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் மனதுக்கு பிடித்த குழந்தை கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கேரள மாநிலத்திற்கு செல்லும் அவர்கள் கடற்கரையில் அழகான குழந்தையை பார்க்கிறார்கள். மீனவ குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பாபு அவர்களை பார்த்தும் ஒட்டிக் கொள்கிறான். ஏரியில் தானே பயணித்த படகை ஒரு மீனவன் பார்த்து அதிலிருக்கும் பாபுவை எடுத்து தன் குடும்பத்தோடு தங்க வைத்திருப்பதை தெரிந்து கொள்ளும் அவர்கள் அவனுக்கு பணம் கொடுத்து பாபுவை கூட்டி செல்கிறார்கள்.

இங்கே லட்சுமிக்கு சந்தேகம் வளர்ந்து குழந்தையை உடனே பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க சந்துரு அவளை மதுரைக்கு கூட்டி செல்கிறான். அங்கே அக்காள் கணவர் குழந்தையை கொடைக்கானல் கான்வென்ட்- ல் சேர்த்திருப்பதாகவும் யாரும் பார்க்க முடியாது என்றும் சொல்ல லட்சுமியோ பாபுவை தூரத்திலிருந்தேனும் பார்க்க வேண்டும் என்று கெஞ்ச கான்வென்ட் சுவருக்கு வெளியே மலை சரிவில் நின்று வரிசையாக செல்லும் குழந்தைகளில் ஒன்றை காண்பித்து அதுதான் பாபு என்று சொல்ல, என் பாபுவை எனக்கு தெரியும். நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று கதறும் லட்சுமி மயங்கி விழ டாக்டர்கள் குழந்தை வந்தால் தான் அவள் நிலைமை சீராகும் என்று சொல்லி விடுகிறார்கள். எப்போதும் உங்கள் திருப்பதியானை பற்றி சொல்லுவீர்களே இப்போது அவன் எங்கே என்று மகனே கேள்வி கேட்க மனம் கலங்கி மன்றாடும் தந்தையின் கையில் நண்பர் கொடுத்து விட்ட திருப்பதி பிரசாதத்தை வேலைக்காரன் கொண்டு தருகிறான். பிரசாதம் சுற்றி வந்திருக்கும் பேப்பரில் தங்களுக்கு வேண்டிய குழந்தை கிடைத்து விட்டதாகவும் தாங்கள் பர்மா திரும்புவதாகவும் யுவான்சென் தம்பதிகளின் பேட்டியும் குழந்தை பாபுவுடன் நிற்கும் புகைப்படமும் வெளியாகியிருப்பதை பார்க்கிறார். அவர்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து பர்மா செல்வதையும் அறிந்து கொள்ளும் சந்துரு & லட்சுமி மதுரையிலிருந்து விமானத்தில் திருச்சி சென்று விமான நிலையத்தில் அந்த தம்பதிகளை சந்தித்து உண்மையை சொல்லி குழந்தையை வாங்கி கொள்கிறார்கள். ஆனால் யுவான்சென்னின் மனைவியோ குழந்தையை பிரிய மனமில்லாமல் தான் பர்மா வரவில்லை என்று கதறி அழ, அவளது நிலை கண்டு பொறுக்காமல் லட்சுமியே அவளிடம் குழந்தையை கொடுத்து விடுகிறாள். அவர்கள் விமானத்தில் சென்று விடுகின்றனர்.

சென்னை திரும்பும் சந்துரு லட்சுமி தம்பதியினர் குழந்தையை மறக்க முடியாமல் தவிக்க அப்போது யுவான்சென் தம்பதியினர் குழந்தை பாபுவுடன் வீட்டிற்கு வருகிறார்கள். மீண்டும் ஒரு மகிழ்ச்சியான திருப்பத்துடன் படம் நிறைவு பெறுகிறது.

(தொடரும்)

JamesFague
26th September 2014, 11:34 AM
பேசும் தெய்வம் Part II

தமிழகத்தில் திராவிட இயக்கம் தன் கொள்கைகளை திரைப்படம் என்ற வலிமையான ஊடகம் மூலமாக பரப்பி வந்த காலத்தில் அதற்கு மாற்றாக அதே ஊடகத்தை பயன்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் எதிர்த்து அதற்கு மாற்றாக இறை நம்பிக்கையை ஊட்டும் கதைகளை திரைப்படம் வாயிலாக மக்களுக்கு சொன்னவர் ஏ.பி.என். என்றால் அதே பாதையில் பயணம் செய்தவர் கே.எஸ்.ஜி. அப்படி, அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையும் உலகத்திலே மிகவும் உயர்ந்த செல்வமாக கருதப்படும் மழலை பாக்கியமும் சேர்ந்த ஒரு கதை கிடைத்த போது பேசும் தெய்வம் பிறந்தது. ரசிகர்களையும் மகிழ்ச்சிப் படுத்தக்கூடிய டைட்டில் என்ற வகையில் டபுள் ஓகே.

அறுபதுகளில் வந்த நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்களை எடுத்துக் கொண்டால் அந்த கதாபாத்திரங்களை எல்லாம் நடிகர் திலகம் அனாயசமாக ஊதி தள்ளியிருப்பார். அந்த லிஸ்ட்-ல் பேசும் தெய்வம் சந்துருவிற்கும் இடம் உண்டு.

இந்த படத்தில் வெகு இளமையாக சிக்கென்று இருப்பார். முதல் பகுதியின் பாதி வரை ரொம்ப ஜாலியாக ரொமன்ஸ் பண்ணுவார். பத்மினியை பார்த்த பிறகு அந்த உணர்வை ஒரு தவிப்போடு நாகேஷிடம் சொல்லுவது, பத்மினியை அருகில் பார்த்தவுடன் சொல்ல நினைத்தது வார்த்தையாக வராமல் தடுமாறுவது, அத்தான் உதவியோடு கல்யாணத்தை முடிப்பது வரை அந்த மூட் நிலை கொள்ளும். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்கவில்லையே என்று மூட் மாறும் போது ஒரு டல்னஸை பிரதிபலிப்பது, பிறக்கப் போகும் குழந்தையை தருகிறேன் என்றதும் வேலைக்காரிக்கு விழுந்து விழுந்து பணிவிடை செய்வது, குழந்தை இறந்து போனவுடன் மனம் கலங்கி பேசுவது, தனக்கே குழந்தை பிறந்தவுடன் வரும் அந்த சந்தோஷம், குழந்தையை கல்யாணத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொன்னவுடன் பத்மினி குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவரின் முக பாவம், சட்டென்று வரும் கோபம், உடனே மனைவியின் மன நிலயை புரிந்துக் கொண்டு இயல்பான பேச்சுக்கு திரும்புவது, கல்யாணத்தில் சீட்டு கச்சேரியில் மூழ்கியவர்கள் எப்படி இருப்பார்களோ அதை அப்படியே வெளிப்படுத்துவது, குழந்தையை காணோம் என்றதும் சாதாரணமாக இருக்கும் அந்த முகம், அந்த பேச்சு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது, ஊருக்கு வந்த பிறகு பத்மினியிடம் உண்மையையும் சொல்ல முடியாமல் பொய்யும் சொல்ல முடியாமல் தவிப்பது கொடைக்கானலில் பள்ளிகூடத்திற்கு வெளியிலிருந்து குழந்தையை பார்த்து விட்டு பத்மினி அது என் பாபு இல்லை என்று சொன்னவுடன் சும்மா சொல்லாதே என்று சத்தம் போட்டு விட்டு பத்மினியின் நேரடி பார்வையை தாங்க முடியாமல் மெல்லிய குரலில் நல்லாப் பாரு என்று திரும்பிக் கொள்வது - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

பத்மினியை பொருத்த வரை முதலில் மாணவி என்பது சிறிது நெருடலாக இருந்தாலும், சிவாஜியை சந்திக்கும் முன்பும் அதற்கு பின்பும் அவர் காட்டும் அந்த பருவ ஏக்கங்கள் சிறிது ஓவராக இருந்தாலும் திருமணத்திற்கு பின் அந்த பாத்திரத்தின் முதிர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். குழந்தையை ஊருக்கு அனுப்பும் அந்த காட்சி அவர் நடிப்புக்கு ஒரு உரைகல். கணவனின் நடவடிக்கைகள் இயல்புக்கு மாறாக இருப்பதை எண்ணி குழந்தைக்கு என்னவோ என்று பதறுவதை நன்றாக செய்திருப்பார்.

படத்தில் ஸ்கோர் செய்பவர்கள் என்று இருவரை சொல்லலாம். முதலில் ரங்காராவ். அவரது காஷுவல் நடிப்பு பிரச்சிதி பெற்றது என்றாலும் இந்த படத்தில் அதை எடுத்து சொல்ல வேண்டும். ஏழுமலையானிடம் அவர் ஒன் டு ஒன் பேசுவதே அழகு. அதீத உரிமையோடு அவர் கோரிக்கைககளை வைப்பது, மனைவியிடமும், மகனிடமும், மருமகன் மற்றும் மருமகளிடமும் அவர் தன் தரப்பை எடுத்து சொல்வது எல்லாம் ரஸகரம்.

இன்னொருவர் சகஸ்ரநாமம். எந்த சூழ்நிலையிலும் அலட்டிக் கொள்ளாத அந்த காரக்டர், பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், உணர்ச்சிவசப்படும் எல்லோரையும் அவர் சமாதானப்படுத்துவது, சூழ்நிலையை சமாளிக்க அவர் தரும் லாஜிக் ஐடியாக்கள், இப்படி ஒருவர் நம் பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பார்வையாளர்களுக்கு ஒரு எண்ணம் வரும்.

அம்மா வேடத்தில் சுந்தரி பாய் வழக்கம் போல். நாகேஷ் முதல் அரை மணி நேரத்தோடு சரி. படத்தின் இறுதிக் கட்டத்தில் சௌகார் மற்றும் சத்யன் என்ட்ரி. சத்யனின் திறமையை வெளிப்படுத்தக் கூடிய அளவுக்கு அந்த வேடம் இல்லையென்றால் கூட அந்த திருவனந்தபுரம் - நாகர்கோவில் வட்டார தமிழ் இனிமையாக இருக்கும். குழந்தையை பத்மினி எடுத்துக் கொண்டு விட ஏர்போர்ட்-ல் வைத்து கதறும் அந்த ஒரே சீன் மட்டுமே சௌகாருக்கு வாய்ப்பு என்றாலும் அதில் ஸ்கோர் செய்திருப்பார்.

முதலில் படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த கே.எஸ்.ஜி பிறகு படங்களை இயக்க ஆரம்பித்தார். அந்த படங்கள் வெற்றி பெற்றவுடன் நடிகர் திலகத்தின் படத்தை இயக்கினார். முதலில் கை கொடுத்த தெய்வம். 1964-ல் வந்த அந்த படத்திற்கு பிறகு 1966-ல் நடிகர் திலகம் நடித்த வி.கே.ஆரின் சொந்த படமான செல்வம் படத்தை டைரக்ட் செய்தார். பிறகு தானே நடிகர் திலகத்தை வைத்து பேசும் தெய்வம் ஆரம்பித்தார். 1961-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்ற பத்மினியை மீண்டும் தமிழ் திரையுலகிற்கு சித்தி மூலமாக கொண்டு வந்த கே.எஸ்.ஜி இதில் மீண்டும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜோடியான நடிகர் திலகத்தையும் நாட்டியப் பேரொளியையும் இணைத்தார். 1961-ல் வெளி வந்த ஸ்ரீவள்ளிக்கு பிறகு அவர்கள் இணைந்தது இந்த படத்தில் தான் [1962 -ல் வெளி வந்த செந்தாமரை படத்தில் இந்த ஜோடி இருந்தது. ஆனால் அது வெகு நாட்களாக படப்பிடிப்பில் இருந்த படம். பிறகு 1966-ம் ஆண்டு வெளியான சரஸ்வதி சபதம் படத்தில் சேர்ந்து நடித்தாலும் ஜோடியாக நடிக்கவில்லை. அதே வருடத்தில் வெளியான தாயே உனக்காக படத்தில் இருவருமே கௌரவ வேடத்தில் தோன்றியிருந்தனர்].

படத்தின் துவக்கத்தில் கே.எஸ்.ஜியின் குரல் ஒலிக்கும் போது ஒரு டாகுமெண்டரி பீல் வந்தாலும் கூட அதை மேற்கொண்டு கதை சொன்ன விதத்தில் சரி செய்திருப்பார். பெண்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்திருந்த கே.எஸ்.ஜி அதற்கேற்றார் போல் காட்சிகள் அமைப்பார். திருப்பதி கோவிலில் துலாபாரம் கொடுக்கும் போது எல்லா நகையும் வைத்தும் தராசு முள் கீழ் நோக்கியே இருக்க பத்மினி தாலியை கழட்டி தராசில் வைக்கும் காட்சி அந்த வகையை சார்ந்தது.[அந்த காலக் கட்டங்களில் தியேட்டரில் பெண்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தை இந்த காட்சி அள்ளிக் கொள்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்]. பெண்களை நம்பி எடுத்த இந்த படமும் அவரை ஏமாற்றவில்லை.

நாம் இதுவரை பதிவு செய்த படங்களிலிருந்து பேசும் தெய்வம் வித்தியாசப்படுவது இசையமைப்பில். ஆம், இந்த படத்திற்கு இசை - திரை இசை திலகம் மாமா மகாதேவன். பாடல்கள் வாலி. இந்த படத்தில் இந்த கூட்டணி மிக பெரிய வெற்றி பெற்றது. இதற்கு முன் வாலி முதன் முறையாக நடிகர் திலகத்தின் அன்புக் கரங்கள் படத்திற்கு எழுதினார். பிறகு பேசும் தெய்வத்திற்கு முன் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு என்ற ஒரே பாடலை எழுதினார். ஆனால் அவருக்கு இந்த பட பாடல்கள் தான் பெரும் புகழ் தேடி தந்தது.

1.நான் அனுப்புவது கடிதம் அல்ல- டி.எம்.எஸ்.

வாலி எதுகை மோனைகளுக்கு பெயர் பெற்றவர். அது இந்த பாடலில் சிறப்பாக இருக்கும்.

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

இந்த பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தோற்றமும் வாயசைப்பும் அருமையாக இருக்கும்.

2. அழகு தெய்வம் மெல்ல மெல்ல- டி.எம்.எஸ்

இதில் ராஜ உடையில் வரும் நடிகர் திலகம் முதல் சரணத்தில்
"இளநீரை சுமந்து நிற்கும் தென்னை மரம் அல்ல" என்ற வரியின் போது ஒரு சின்ன நடை நடப்பார். நான் முதன் முதலில் இந்த படத்தை பார்த்தது ஒரு மறு வெளியீட்டின் முதல் நாள் (வெள்ளிகிழமை) மதியக் காட்சி. அதிகமாக பொது மக்களே வந்திருந்த அந்த காட்சிக்கே தியேட்டர் அதிர்ந்தது என்றால் ரசிகர்கள் அதிகமாக இருக்கும் காட்சிகளில் சொல்லவே வேண்டாம்.

3. இதய ஊஞ்சல் ஆடவா- டி.எம்.எஸ், சுசீலா.

இந்த டூயட் பாடல் முதலில் மெலடியாகவும் பிறகு கள்ளபார்ட் நடராஜன் அன் கோஷ்டி ஆடும் போது ஷோக்கா ஜொலிக்குதப்பா என்று குத்து ஸ்டைல்-க்கு மாறும். தியேட்டரில் ஆட்டம் கூடும்.

4. பத்து மாதம் சுமக்கவில்லை செல்லையா- டி.எம்.எஸ்,சுசீலா.

முந்தைய பாடல் போலவே இதுவும் ஸ்லோ பிறகு பாஸ்ட் என்று பீட்ஸ் மாறி மாறி வர ரசிகர்கள் ஆட்டம் அணை மீறும்.

5. நூறாண்டு காலம் வாழ்க- ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி, சரளா.

குழந்தையை தொட்டிலிட்டு பாடும் பாடல்.

6. பிள்ளை செல்வமே பேசும் தெய்வமே- சுசீலா

குழந்தையை வைத்து கொண்டு சௌகார்,சத்யன் பாடும் பாடல்.

இந்த படத்தை பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் வெளியான முதல் நடிகர் திலகம் படம். ஆனால் அரசியலில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் தன் படங்களை அது எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை நடிகர் திலகம் நிரூபித்தார். படம் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் கூட அனைவருக்கும் லாபம் ஈட்டி தந்த படமாக அமைந்தது. படம் வெளியாகி 35 நாட்களுக்குள் (வழக்கம் போல்) அடுத்த படமான தங்கை வெளியானது. அடுத்த நான்கு வாரத்தில் கிட்டத்தட்ட இதே போன்ற கதையம்சம் கொண்ட பாலாடை வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

படம் வெளியான போது சென்னை கெயிட்டி தியேட்டரில் திருப்பதி கோவில் போலவே அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது என்பது சிறப்பு செய்தி.

மொத்தத்தில் பார்க்கலாம், ரசிக்கலாம்.

JamesFague
26th September 2014, 11:35 AM
பேசும் தெய்வம் Part II

தமிழகத்தில் திராவிட இயக்கம் தன் கொள்கைகளை திரைப்படம் என்ற வலிமையான ஊடகம் மூலமாக பரப்பி வந்த காலத்தில் அதற்கு மாற்றாக அதே ஊடகத்தை பயன்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் எதிர்த்து அதற்கு மாற்றாக இறை நம்பிக்கையை ஊட்டும் கதைகளை திரைப்படம் வாயிலாக மக்களுக்கு சொன்னவர் ஏ.பி.என். என்றால் அதே பாதையில் பயணம் செய்தவர் கே.எஸ்.ஜி. அப்படி, அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையும் உலகத்திலே மிகவும் உயர்ந்த செல்வமாக கருதப்படும் மழலை பாக்கியமும் சேர்ந்த ஒரு கதை கிடைத்த போது பேசும் தெய்வம் பிறந்தது. ரசிகர்களையும் மகிழ்ச்சிப் படுத்தக்கூடிய டைட்டில் என்ற வகையில் டபுள் ஓகே.

அறுபதுகளில் வந்த நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்களை எடுத்துக் கொண்டால் அந்த கதாபாத்திரங்களை எல்லாம் நடிகர் திலகம் அனாயசமாக ஊதி தள்ளியிருப்பார். அந்த லிஸ்ட்-ல் பேசும் தெய்வம் சந்துருவிற்கும் இடம் உண்டு.

இந்த படத்தில் வெகு இளமையாக சிக்கென்று இருப்பார். முதல் பகுதியின் பாதி வரை ரொம்ப ஜாலியாக ரொமன்ஸ் பண்ணுவார். பத்மினியை பார்த்த பிறகு அந்த உணர்வை ஒரு தவிப்போடு நாகேஷிடம் சொல்லுவது, பத்மினியை அருகில் பார்த்தவுடன் சொல்ல நினைத்தது வார்த்தையாக வராமல் தடுமாறுவது, அத்தான் உதவியோடு கல்யாணத்தை முடிப்பது வரை அந்த மூட் நிலை கொள்ளும். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்கவில்லையே என்று மூட் மாறும் போது ஒரு டல்னஸை பிரதிபலிப்பது, பிறக்கப் போகும் குழந்தையை தருகிறேன் என்றதும் வேலைக்காரிக்கு விழுந்து விழுந்து பணிவிடை செய்வது, குழந்தை இறந்து போனவுடன் மனம் கலங்கி பேசுவது, தனக்கே குழந்தை பிறந்தவுடன் வரும் அந்த சந்தோஷம், குழந்தையை கல்யாணத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என்று சொன்னவுடன் பத்மினி குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவரின் முக பாவம், சட்டென்று வரும் கோபம், உடனே மனைவியின் மன நிலயை புரிந்துக் கொண்டு இயல்பான பேச்சுக்கு திரும்புவது, கல்யாணத்தில் சீட்டு கச்சேரியில் மூழ்கியவர்கள் எப்படி இருப்பார்களோ அதை அப்படியே வெளிப்படுத்துவது, குழந்தையை காணோம் என்றதும் சாதாரணமாக இருக்கும் அந்த முகம், அந்த பேச்சு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது, ஊருக்கு வந்த பிறகு பத்மினியிடம் உண்மையையும் சொல்ல முடியாமல் பொய்யும் சொல்ல முடியாமல் தவிப்பது கொடைக்கானலில் பள்ளிகூடத்திற்கு வெளியிலிருந்து குழந்தையை பார்த்து விட்டு பத்மினி அது என் பாபு இல்லை என்று சொன்னவுடன் சும்மா சொல்லாதே என்று சத்தம் போட்டு விட்டு பத்மினியின் நேரடி பார்வையை தாங்க முடியாமல் மெல்லிய குரலில் நல்லாப் பாரு என்று திரும்பிக் கொள்வது - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

பத்மினியை பொருத்த வரை முதலில் மாணவி என்பது சிறிது நெருடலாக இருந்தாலும், சிவாஜியை சந்திக்கும் முன்பும் அதற்கு பின்பும் அவர் காட்டும் அந்த பருவ ஏக்கங்கள் சிறிது ஓவராக இருந்தாலும் திருமணத்திற்கு பின் அந்த பாத்திரத்தின் முதிர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். குழந்தையை ஊருக்கு அனுப்பும் அந்த காட்சி அவர் நடிப்புக்கு ஒரு உரைகல். கணவனின் நடவடிக்கைகள் இயல்புக்கு மாறாக இருப்பதை எண்ணி குழந்தைக்கு என்னவோ என்று பதறுவதை நன்றாக செய்திருப்பார்.

படத்தில் ஸ்கோர் செய்பவர்கள் என்று இருவரை சொல்லலாம். முதலில் ரங்காராவ். அவரது காஷுவல் நடிப்பு பிரச்சிதி பெற்றது என்றாலும் இந்த படத்தில் அதை எடுத்து சொல்ல வேண்டும். ஏழுமலையானிடம் அவர் ஒன் டு ஒன் பேசுவதே அழகு. அதீத உரிமையோடு அவர் கோரிக்கைககளை வைப்பது, மனைவியிடமும், மகனிடமும், மருமகன் மற்றும் மருமகளிடமும் அவர் தன் தரப்பை எடுத்து சொல்வது எல்லாம் ரஸகரம்.

இன்னொருவர் சகஸ்ரநாமம். எந்த சூழ்நிலையிலும் அலட்டிக் கொள்ளாத அந்த காரக்டர், பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், உணர்ச்சிவசப்படும் எல்லோரையும் அவர் சமாதானப்படுத்துவது, சூழ்நிலையை சமாளிக்க அவர் தரும் லாஜிக் ஐடியாக்கள், இப்படி ஒருவர் நம் பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பார்வையாளர்களுக்கு ஒரு எண்ணம் வரும்.

அம்மா வேடத்தில் சுந்தரி பாய் வழக்கம் போல். நாகேஷ் முதல் அரை மணி நேரத்தோடு சரி. படத்தின் இறுதிக் கட்டத்தில் சௌகார் மற்றும் சத்யன் என்ட்ரி. சத்யனின் திறமையை வெளிப்படுத்தக் கூடிய அளவுக்கு அந்த வேடம் இல்லையென்றால் கூட அந்த திருவனந்தபுரம் - நாகர்கோவில் வட்டார தமிழ் இனிமையாக இருக்கும். குழந்தையை பத்மினி எடுத்துக் கொண்டு விட ஏர்போர்ட்-ல் வைத்து கதறும் அந்த ஒரே சீன் மட்டுமே சௌகாருக்கு வாய்ப்பு என்றாலும் அதில் ஸ்கோர் செய்திருப்பார்.

முதலில் படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த கே.எஸ்.ஜி பிறகு படங்களை இயக்க ஆரம்பித்தார். அந்த படங்கள் வெற்றி பெற்றவுடன் நடிகர் திலகத்தின் படத்தை இயக்கினார். முதலில் கை கொடுத்த தெய்வம். 1964-ல் வந்த அந்த படத்திற்கு பிறகு 1966-ல் நடிகர் திலகம் நடித்த வி.கே.ஆரின் சொந்த படமான செல்வம் படத்தை டைரக்ட் செய்தார். பிறகு தானே நடிகர் திலகத்தை வைத்து பேசும் தெய்வம் ஆரம்பித்தார். 1961-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்ற பத்மினியை மீண்டும் தமிழ் திரையுலகிற்கு சித்தி மூலமாக கொண்டு வந்த கே.எஸ்.ஜி இதில் மீண்டும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜோடியான நடிகர் திலகத்தையும் நாட்டியப் பேரொளியையும் இணைத்தார். 1961-ல் வெளி வந்த ஸ்ரீவள்ளிக்கு பிறகு அவர்கள் இணைந்தது இந்த படத்தில் தான் [1962 -ல் வெளி வந்த செந்தாமரை படத்தில் இந்த ஜோடி இருந்தது. ஆனால் அது வெகு நாட்களாக படப்பிடிப்பில் இருந்த படம். பிறகு 1966-ம் ஆண்டு வெளியான சரஸ்வதி சபதம் படத்தில் சேர்ந்து நடித்தாலும் ஜோடியாக நடிக்கவில்லை. அதே வருடத்தில் வெளியான தாயே உனக்காக படத்தில் இருவருமே கௌரவ வேடத்தில் தோன்றியிருந்தனர்].

படத்தின் துவக்கத்தில் கே.எஸ்.ஜியின் குரல் ஒலிக்கும் போது ஒரு டாகுமெண்டரி பீல் வந்தாலும் கூட அதை மேற்கொண்டு கதை சொன்ன விதத்தில் சரி செய்திருப்பார். பெண்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்திருந்த கே.எஸ்.ஜி அதற்கேற்றார் போல் காட்சிகள் அமைப்பார். திருப்பதி கோவிலில் துலாபாரம் கொடுக்கும் போது எல்லா நகையும் வைத்தும் தராசு முள் கீழ் நோக்கியே இருக்க பத்மினி தாலியை கழட்டி தராசில் வைக்கும் காட்சி அந்த வகையை சார்ந்தது.[அந்த காலக் கட்டங்களில் தியேட்டரில் பெண்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தை இந்த காட்சி அள்ளிக் கொள்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்]. பெண்களை நம்பி எடுத்த இந்த படமும் அவரை ஏமாற்றவில்லை.

நாம் இதுவரை பதிவு செய்த படங்களிலிருந்து பேசும் தெய்வம் வித்தியாசப்படுவது இசையமைப்பில். ஆம், இந்த படத்திற்கு இசை - திரை இசை திலகம் மாமா மகாதேவன். பாடல்கள் வாலி. இந்த படத்தில் இந்த கூட்டணி மிக பெரிய வெற்றி பெற்றது. இதற்கு முன் வாலி முதன் முறையாக நடிகர் திலகத்தின் அன்புக் கரங்கள் படத்திற்கு எழுதினார். பிறகு பேசும் தெய்வத்திற்கு முன் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு என்ற ஒரே பாடலை எழுதினார். ஆனால் அவருக்கு இந்த பட பாடல்கள் தான் பெரும் புகழ் தேடி தந்தது.

1.நான் அனுப்புவது கடிதம் அல்ல- டி.எம்.எஸ்.

வாலி எதுகை மோனைகளுக்கு பெயர் பெற்றவர். அது இந்த பாடலில் சிறப்பாக இருக்கும்.

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

இந்த பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தோற்றமும் வாயசைப்பும் அருமையாக இருக்கும்.

2. அழகு தெய்வம் மெல்ல மெல்ல- டி.எம்.எஸ்

இதில் ராஜ உடையில் வரும் நடிகர் திலகம் முதல் சரணத்தில்
"இளநீரை சுமந்து நிற்கும் தென்னை மரம் அல்ல" என்ற வரியின் போது ஒரு சின்ன நடை நடப்பார். நான் முதன் முதலில் இந்த படத்தை பார்த்தது ஒரு மறு வெளியீட்டின் முதல் நாள் (வெள்ளிகிழமை) மதியக் காட்சி. அதிகமாக பொது மக்களே வந்திருந்த அந்த காட்சிக்கே தியேட்டர் அதிர்ந்தது என்றால் ரசிகர்கள் அதிகமாக இருக்கும் காட்சிகளில் சொல்லவே வேண்டாம்.

3. இதய ஊஞ்சல் ஆடவா- டி.எம்.எஸ், சுசீலா.

இந்த டூயட் பாடல் முதலில் மெலடியாகவும் பிறகு கள்ளபார்ட் நடராஜன் அன் கோஷ்டி ஆடும் போது ஷோக்கா ஜொலிக்குதப்பா என்று குத்து ஸ்டைல்-க்கு மாறும். தியேட்டரில் ஆட்டம் கூடும்.

4. பத்து மாதம் சுமக்கவில்லை செல்லையா- டி.எம்.எஸ்,சுசீலா.

முந்தைய பாடல் போலவே இதுவும் ஸ்லோ பிறகு பாஸ்ட் என்று பீட்ஸ் மாறி மாறி வர ரசிகர்கள் ஆட்டம் அணை மீறும்.

5. நூறாண்டு காலம் வாழ்க- ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி, சரளா.

குழந்தையை தொட்டிலிட்டு பாடும் பாடல்.

6. பிள்ளை செல்வமே பேசும் தெய்வமே- சுசீலா

குழந்தையை வைத்து கொண்டு சௌகார்,சத்யன் பாடும் பாடல்.

இந்த படத்தை பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் வெளியான முதல் நடிகர் திலகம் படம். ஆனால் அரசியலில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் தன் படங்களை அது எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை நடிகர் திலகம் நிரூபித்தார். படம் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் கூட அனைவருக்கும் லாபம் ஈட்டி தந்த படமாக அமைந்தது. படம் வெளியாகி 35 நாட்களுக்குள் (வழக்கம் போல்) அடுத்த படமான தங்கை வெளியானது. அடுத்த நான்கு வாரத்தில் கிட்டத்தட்ட இதே போன்ற கதையம்சம் கொண்ட பாலாடை வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

படம் வெளியான போது சென்னை கெயிட்டி தியேட்டரில் திருப்பதி கோவில் போலவே அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது என்பது சிறப்பு செய்தி.

மொத்தத்தில் பார்க்கலாம், ரசிக்கலாம்.

JamesFague
26th September 2014, 11:42 AM
a recap from Mr Murali old posting

சித்தூர் ராணி பத்மினி - Part I

தயாரிப்பு: உமா பிக்சர்ஸ்

இயக்கம்: Ch.நாராயண மூர்த்தி

வெளியான நாள்: 09.02.1963

சரித்திர பின்னணியில் அமைந்த கதை. தமிழக வரலாற்று பின்னணியைக் கொள்ளாமல் ராஜஸ்தானின் ரஜபுத்திர சாம்ராஜ்ஜியத்தில் நிகழும் கதையை தமிழில் எடுத்திருக்கிறார்கள்.

ரஜபுத்திர நாடான உதயபூர் (உதய்பூர்) தலைநகரில் இளவரசி பத்மினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களோடு கதை தொடங்குகிறது. அன்றைய டெல்லி பாதுஷா அலாவுதின் கில்ஜியின் தூதுவனான மாலிக்காபூர் விருந்தினராக வந்திருக்கிறான். இளவரசியின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தும் போட்டியில் மாலிக்காபூரை வெல்கிறான் சித்தூர் சிப்பாய் என்ற மாறு வேடத்தில் வரும் சித்தூர் மன்னன் பீம்சிங். இளவரசியின் கையிலிருந்து பரிசு பெறும் அவன், அவள் அழகில் கவரப்படுகிறான். தொடர்ந்து இரண்டு மூன்று முறை அவளை சந்திக்கும் பீம்சிங் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான்.அவளுக்கும் அது சம்மதமே.

மன்னன் என்பதை காட்டிக் கொள்ளாமல் சிப்பாய் போன்றே நடிக்கிறான். ஒரு சமயம் அவன் பாட பத்மினி நடனம் ஆடுகிறாள். ஒரு போட்டி அங்கே அரேங்கேறுகிறது. யாருக்கு வெற்றி என்று தெரியும் முன்னரே மன்னரே போட்டியை நிறுத்தி விடுகிறார். பீம்சிங்கிடம் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க அவன் அவரது மகளையே பரிசாக கேட்க, அவன் அரசன் என்று தெரியாமலே அவனை கைது செய்து தண்டிக்க முற்படுகிறார்கள். அவர்களிடமிருந்து பீம்சிங் தப்பித்து செல்கிறான்.

இதனிடையே டெல்லி சென்றடையும் மாலிக்காபூர், அலாவுதினிடம் பத்மினியின் அழகை வர்ணிக்க, டெல்லி பாதுஷாவிற்கு அவளை அடைய வேண்டும் என்ற ஆசை வருகிறது. பத்மினியை மணந்து கொள்ள மன்னரிடம் மாலிக்காபூரையே தூது அனுப்புகிறான். செய்தி கேட்டவுடன் மன்னன் பெண் தர மறுத்து விடுகிறான். அந்நேரம் பீம்சிங் சித்தூர் நாட்டின் தூதனாக (மறுபடியும் மாறு வேடம்) வந்து தங்கள் மன்னனுக்கு பத்மினியை பெண் கேட்க, மாலிக்காபூர் முன்னிலையிலே மன்னன் சம்மதித்து விடுகிறான் . மிகுந்த கோவத்துடன் மன்னனை எச்சரிக்கும் மாலிக்காபூரை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

மன்னன் பீம்சிங்கும் தன் காதலன் சிப்பாயும் ஒன்றே என்றறியாத பத்மினி திருமணத்திற்கு மறுக்கிறாள். அவளை சந்திக்கும் சிப்பாய் கல்யாணத்தன்று தான் வந்து அவளை அழைத்து செல்வதாக கூறி சம்மதிக்க வைக்கிறான். கல்யாணத்திற்கு முதல் நாள் பரிவாரங்களோடு வரும் பீம்சிங் இரவு நேரத்தில் அந்தபுரத்தில் பத்மினியை சந்திக்கும் போது மன்னர் வந்து விடுகிறார். அவனை சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் போது, சித்தூர் நகர பிரதானிகள் வந்து உண்மையை விளக்க அனைவரும் மகிழ்ந்து திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

பத்மினி தனக்கு கிடைக்கவில்லை என்றதும் மிகுந்த கோவம் அடையும் அலாவுதின் சித்தூர் நாட்டின் மீது படை எடுக்கிறான். கோட்டையை முற்றுகையிட்டும் அவர்களால் சித்தூரை பிடிக்க முடியவில்லை. படை பலம், ஆயுத பலம் பலன் தராது என்பதை உணரும் அலாவுதீன் மாலிக்காபூரை சமாதான பேச்சுக்கு அனுப்புகிறான். அதை ஏற்றுக் கொள்ளும் பீம்சிங் அலாவுதினை விருந்தினராக வரவேற்கிறான்.

பத்மினியின் நடனத்தை காண வேண்டும் என்று ஆவலை வெளிப்படுத்தும் அலாவுதினிடம் ரஜபுத்திர வம்சத்து பெண்கள் திருமணத்திற்கு பிறகு அந்நிய ஆடவர்கள் முன்னிலையில் ஆட மாட்டார்கள் என பீம்சிங் மறுத்து விடுகிறான். மீண்டும் மீண்டும் அலாவுதீன் வற்புறுத்தவே, வேறொரு அறையில் பத்மினியை நடனமாட செய்து அதை கண்ணாடி மூலம் அலாவுதின் காண ஏற்பாடு செய்கிறான். தன்னை அவமானப்படுத்தி விட்டதாக குமுறும் அலாவுதீன் அதை வெளி காட்டிக் கொள்ளாமல் திரும்பி செல்கிறான்.

தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி வாங்க நினைக்கும் அலாவுதீன் தன் பிறந்த நாளுக்கு மனைவியுடன் வருமாறு பீம்சிங்கிற்கு ஓலை அனுப்புகிறான். போக வேண்டம் என்று பீம்சிங்கின் தாய் தடுக்க, தன்னை கோழை என்று நினைத்து விடுவான் என்று பீம்சிங் வாதிடுகிறான். அப்படியென்றால் பீம்சிங்கை மட்டும் போய் விட்டு வரும்படி தாய் சொல்ல, அவன் செல்கிறான்.

அங்கே நடக்கும் ஒரு நடன நிகழ்ச்சியிலே அவனை கொல்ல நடக்கும் சாதுர்யமான முயற்சியிலிருந்து தப்பிக்கும் பீம்சிங்கை அவன் இரவு உறங்கும் போது கட்டிலோடு சேர்ந்து கட்டி போட்டு சிறை பிடிக்கிறார்கள். அவன் மனைவியை வரச்சொல்லி ஓலை அனுப்புகிறார்கள். அவள் தங்கள் அரச சபையில் ஆடினால் அவளது கணவனை விடுதலை செய்வதாக சொல்கிறார்கள். நூறு சேடி பெண்களுடன் வருவதாக அவள் தகவல் கொடுத்து விட்டு வருகிறாள். பீம்சிங்கிற்கு இது அவமானமாக இருக்கிறது. சபைக்கு வரும் பத்மினி தன்னுடன் அழைத்து வந்தது எல்லாம் ஆண்கள். அரசவையில் அவர்கள் தீடீர் தாக்குதல் நடத்த, பீம்சிங்கும் பத்மினியும் தப்பித்து செல்கிறார்கள்.

பின் தொடர்ந்து வரும் அலாவுதீன் இம்முறை தாக்குதலை தீவிரப்படுத்துகிறான். தன்னை சிறைப் பிடித்ததனால் மனம் தளர்ந்த பீம்சிங் ஆரம்பத்தில் போருக்கு செல்லாமல் இருக்க, அவனது படைகள் பெரும் பின்னடைவை சந்திக்கின்றன. இறுதியில் களத்திற்கு செல்லும் பீம்சிங், எதிரி ஒருவன் எறியும் ஈட்டி கொண்டு மரணமடைகிறான். போரில் தன் கணவனுக்கு உதவியாக பங்கு பெறும் பத்மினியும் அதைக் கண்டு மரணத்தை தழுவ, படம் நிறைவு பெறுகிறது.

JamesFague
26th September 2014, 11:43 AM
சித்தூர் ராணி பத்மினி - Part II

இந்தப் படத்தை இப்போதுதான் நான் முதன் முறையாக பார்க்கிறேன். ஏனென்றால் அவ்வளவாக மறு வெளியீடு காணாத திரைப்படம். படத்தைப் பற்றி செய்திகளும் குறைவாகவே கேள்விப்பட்டிருந்தேன். தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெற்றிக் கோட்டை தொட முடியாமல் போன படம் என்பதும் அதில் ஒன்று.

எந்த வித முன் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் படம் பார்த்தேன்.டைட்டில் போடும் போது இரண்டு ஆச்சர்யங்கள். கதை வசனம் ஸ்ரீதர்- இளங்கோவன் என்பது ஒன்று. பின்னணி பாடியவர்கள் பட்டியலில் டி.எம்.எஸ். பெயர் இல்லை என்பது இரண்டாவது.

தூய தமிழில் அடுக்கு மொழி வசனம் எழுதி தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் இளங்கோவன் என்றால் இயல்பான வசனம் மூலம் மக்களை கவர்ந்தவர் ஸ்ரீதர். இந்த இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள் என்பது ஒரு புதுமையாக இருந்தது. ஜி.ராமநாதன் இசையில் படத்தில் நடிகர் திலகம் பாடும் அனைத்துப் பாடல்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார் சீர்காழி. இது வரை இதைப் பற்றி கேள்விப்படாததால் இதுவும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.

இனி படத்திற்கு வருவோம். மாற்றான் ஒருவன் தன் மீது ஆசைக் கொண்டு கணவனை சிறை செய்து தன் மானத்தை விலை பேசிய போது, தந்திரமாக செயல்பட்டு தன் கணவனை காப்பாற்றிய ரஜபுத்திர ராணியின் கதை சரித்திரத்தில் இருக்கிறது. அதை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசையில் எடுக்கப்பட்ட படம். கதாநாயகியின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையமைப்பு. இதற்கு ஒரு நடிகர் திலகம் தேவையில்லை. எப்பவும் போல் யாருக்கோ உதவி செய்ய நடிகர் திலகம் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். கதையும் பாத்திரமும் எப்படி இருந்தாலும் தன் முழு பங்களிப்பையும் தருபவர் நடிகர் திலகம். இதிலும் அப்படியே.

சித்தூர் சிப்பாய் வேடத்தில் வந்து மாலிக்காபூரை வெற்றிக் கொண்டு இளவரசியிடம் இளமைக் குறும்போடு பேசும் அந்த முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை அவரது presence படத்திற்கு உதவியிருக்கிறது. தான் யார் என்பதை வெளிக்காட்டாமல் வைஜயந்தியிடம் அவர் சரசமாடும் காட்சிகள் எல்லாம் சுவை. மாறு வேடங்களில் அவர் வைஜயந்தியை ஏமாற்றும் காட்சிகளும் அப்படியே. வைஜயந்தி நடனமாட சிவாஜி பாடும் அந்த பாடல் காட்சி ["பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்"] பிரமாதம். இதற்கு முன் எந்தப் படத்திலும் இவ்வளவு ஸ்வர பிரஸ்தாரங்கள் / ஜதிகள் ஒரு பாடலில் பயன் படுத்தப்பட்டு நான் கேட்டதில்லை. அதற்கு அவர் வாயசைப்பு அற்புதம். மாலிக்காப்பூரை வாதத்தில் அடக்குவது, சிறையில் அவனை எடுத்தெறிந்து பேசி விட்டு சிரிப்பது, தன்னை சூழ்ச்சியின் மூலமாக கட்டிப் போட்ட அலாவுதினிடம் அவர் காட்டும் பாவம், அவர்களை துச்சமென மதித்து அவர் பேசுவது எல்லாம் அக்மார்க் சிவாஜி முத்திரை. என்னதான் மனைவி சாதுரியமாக செயல்பட்டு தன்னை மீட்டாலும், தன் வீரத்தின் மூலமாக விடுதலை பெறாமல் இப்படி தப்பித்து வரும் படியாகி விட்டதே என்று மனம் தளர்ந்து அவர் ஒரே இடத்தில சலனமற்று உட்கார்ந்திருக்கும் காட்சி குறிப்பிட தகுந்த ஒன்று. அதே போல் நடனம் ஆடிக் கொண்டே தன் உடை வாள் கத்தியை எடுத்து குத்த வரும் நடன மங்கையை அவர் அலட்சியமாக சமாளிக்கும் இடம். இப்படி நடிகர் திலகம் என்ற யானைக்கு சோளப் பொறியாக சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.

நடனத்தில் தேர்ந்த ராணி என்றதும் பத்மினி அல்லது வைஜயந்தி தான் நினைவுக்கு வருவார்கள். இந்த படம் தயாரிக்க தொடங்கிய போது பத்மினி திருமணம் செய்துக் கொண்டு திரையுலகத்திலிருந்து விலகிய நேரம் என்பதால் வைஜயந்தி நாயகியாகி இருக்கிறார். அவரும் அந்த நேரம் இந்தி படவுலகில் பிசியாகி விட படம் தாமதமாகி இருக்கிறது.

அழகான வைஜயந்தி. நடனக் காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தும் வைஜயந்தி மற்ற காட்சிகளிலும் சோடை போகவில்லை. ஆனால் அந்த பாடல் vs நடனம் போட்டி காட்சியில் பாடல் சிறப்புற்ற அளவுக்கு நடனம் அமையவில்லை. வஞ்சிக்கோட்டை வாலிபன் போட்டி நடனத்தை பார்த்த நமக்கு இது அந்த ரேஞ்சுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. காதல் காட்சிகளில் அவரிடம் நல்ல இளமை துள்ளல்.

மாலிக்காபூராக நம்பியார், அலாவுதினாக பாலையா. நம்பியார் எப்போதும் போல. பாலையா என்பதால் அலாவுதீன் பாத்திரம் அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறதா இல்லை சரித்திரத்திலேயே இப்படித்தானா என்று தெரியவில்லை. படம் முழுக்க மது மாது மயக்கத்திலே கேளிக்கை போகத்தில் திளைக்கும் அரசனாகவே அந்த பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் பாலையா பளிச்சிடுகிறார்.

மற்றவர்கள் யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. சித்தூர் நாட்டின் தளபதியாக கவர்ச்சி வில்லன் கண்ணனை அடையாளம் தெரிகிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கு ஹெலன் மற்றும் ராகினி வந்து போகிறார்கள்.

காதலனை சிப்பாய் என்றே குறும்போடு அழைக்கும் பாங்கு எல்லாம் ஸ்ரீதர் டச்.அரண்மனை ஆவேச வசனங்கள் எல்லாம் இளங்கோவனின் கைவண்ணம் என்று தோன்றுகிறது.

இசையமைப்பு ஜி.ராமநாதன் என்று சொல்லும் போதே கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட மெட்டுகள் என்பது மட்டுமல்ல இனிமையான சுவையைக் கொண்டவையாய் இருக்கும் என்பது இதிலும் வெளிப்பட்டிருக்கிறது.

1.தேவி விஜய பவானி

வைஜயந்தியின் அறிமுக பாடல்

2. ஓஹோ நிலா ராணி

சிப்பாய் வேடத்தில்வரும் நடிகர் திலகம் நிலவை நாயகியோடு ஒப்பிட்டு பாடும் பாடல்.

3. பார்த்து கொண்டு இருந்தால் போதும்

போட்டி பாடல். சீர்காழி பிய்த்து உதறி விட்டார். Hats off to him.

4.ஹம் தேகே மேல பாருங்கோ

அலாவுதினின் தர்பாரில் ராகினி ஆட இடம் பெறும் பாடல்.

5.சிட்டு சிரித்தது போல

சிவாஜி -வைஜயந்தி டூயட் பாடல்

6. வானத்தில் மீன் ஒன்று

வைஜயந்தி வேறொரு அறையில் கண்ணாடி முன் நின்று ஆடும் போது வரும் பாடல்.

7. ஆடல் பாடல் காணும் போது

அலாவுதினின் அரண்மனைக்கு பீம்சிங் வரும் போது ஹெலன் ஆடும் நடனப் பாடல்.

எல்லாமே கேட்க இனிமையானவை.

நடிகர் திலகத்தின் அன்னையின் ஆணை போன்ற படங்களை இயக்கிய நாராயண மூர்த்தி இதை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் கதையும் திரைக்கதையும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.

Curate's egg என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். முழுமையாக இல்லாமல் அங்கங்கே நன்றாக இருப்பது. இந்த படத்திற்கு அது பொருந்தும். தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம், சரித்திர கதைகள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன ஒரு காலக்கட்டத்தில் வெளியானது, நடிகர் திலகத்திற்கு ஏற்ற பாத்திரப் படைப்பு அமையாமல் போனது, இப்படிப்பட்ட காரணங்கள் இருக்கும் போது படம் வெற்றி வாய்ப்பை இழந்ததில் வியப்பொன்றுமில்லை.

அன்புடன்

Harrietlgy
26th September 2014, 12:21 PM
20.07.1958 ஆனந்தவிகடன் விமர்சனம்


சினிமா விமர்சனம்: அன்னையின் ஆணை

சந்தர் - சேகர்
சந்தர்: ஹலோ சேகர், எங்கே இப்படி?
சேகர்: மார்லன் பிராண்டோ படம் ஒண்ணு ஓடுகிறதே, அதைப் பார்க்கப் போயிருந்தேன்!
சந்தர்: என்ன மிஸ்டர் அளக்கறே? எனக்குத் தெரிந்து அப்படி ஒரு படம் எங்கேயுமே ஓடலியே?
சேகர்: தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோ சிவாஜிகணேசன் நடித்த படம்!
சந்தர்: ஓ... சிவாஜியா? ஏன் அந்த மார்லன் பிராண்டோ தான் ஆங்கில நாட்டின் சிவாஜிகணேசனாக இருக் கட்டுமே! நீயா அவருக்குப் பட்டங்களெல்லாம் கொடுக்காதே!
சேகர்: நான் கொடுக்கலே. படத்திலேயே கொடுத்திருக்காங்க! 'சாம்ராட் அசோகன்' நாடகம் ஆன பிறகு, கணேசனை இப்படிப் புகழ்ந்து பாராட்டுகிறார் கருணாகரர்.
சந்தர்: சரி, ஸ்டோரி என்ன?
சேகர்: கொஞ்சம் புதுமை! பிளாஷ்பாக் கதையும் நேர்முறைக் கதையையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்கள்.
சந்தர்: 'அவுட்லைன்' சொல்லேன்?
சேகர்: பலரை வஞ்சித்து வாழுகிறார், பணக் கார பரோபகாரம். மானேஜர் சங்கர் இல்லாத சமயம் அவர் மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயல்கிறார். விஷயம் அறிந்த சங்கர், சண்டைக்குப் போகிறான். ஆனால், தந்திர மாக அவன் மீதே கொலைக் குற்றம் சாட்டி விடுகிறார் பரோபகாரம். சங்கர் சிறைப்படுகிறான்.பிரசவ வேதனையில் இருக்கும் தன் மனைவியை நினைத்துக்கொண்டு, ஒரு நாள் சிறையிலிருந்து தப்பித்துவிடுகிறான். ஆனால், போலீசாரால் சுடப் பட்டு இறந்துவிடுகிறான். அந்த இடத்தில் கணேசனின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!
சந்தர்: என்னது... வந்த உடனேயே இறந்துவிடுகிற வேஷமா அவருக்கு?
சேகர்: முழுக்கக் கேளேன்... இறந்தது தந்தை கணேஷ்! பிறகுதான் மைந்தன் கணேஷ் வருகிறார்.
சந்தர்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? டபிள் ரோலா?
சேகர்: டபிள் மட்டும் இல்லை இன்னும் அநேக ரோல்கள்! கல்லூரி மாணவனாக கலாட்டா செய்யும் போதும், சாம்ராட் அசோ கனாக நடிக்கும்போதும், பரோபகாரத்தைப் பழி வாங்கும்போதும் அவருடைய நடிப்பில் எவ்வளவு முகபாவங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள்! அநேக இடங்களில் இங்கிலீஷிலேயே வெளுத்துவாங்குகிறார். லவர்ஸ் அறிமுகமே பிரமாதம்! 'பூப்பறிக்கக் கூடாது என்ற போர்டு கண்ணுக்குத் தெரியவில்லையா?' என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்கிற தோரணையே ஜோர்! அப்புறம் 'வெரி மிஸ்ச்சிவஸ் கேர்ள்'னு அலட்சியமாக...
சந்தர்: வில்லன் யார்?
சேகர்: பரோபகாரம் ரங்காராவ்தான் வில்லன். நம்பியார் அவருக்கு மேலே பெரிய வில்லன். எம்.என். ராஜத்தை மயக்கி, கடைசியில் வேறு வழியில்லாமல் மணந்துகொண்டு, பரோபகாரத்திற்கும் அவர் மகள் சாவித்திரிக்கும் தீங்கு செய்கிறார். இந்தப் படத்தில் எல்லோர் நடிப்புமே அற்புதம். ஆனால், அன்னையின் ஆணையை நிறைவேற்ற பரோபகாரத்தைப் பழிவாங்கும் படலம்தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இருந்தாலும் நாராயண மூர்த்தியின் டைரக்ஷனும், மாறனின் வசனங்களும் பிரமாதம். எல்லாவற்றையும்விட சிவாஜி நடிப்புதான்...
சந்தர்: சிகரமா..?
சேகர்: சாதாரண சிகரமல்ல; எவரெஸ்ட்!

Georgeqlj
26th September 2014, 12:27 PM
Hello!
senthilvel45 shared an album with you.


View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

Russellbpw
26th September 2014, 04:52 PM
Hello!
senthilvel45 shared an album with you.


View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/


http://i1055.photobucket.com/albums/s509/senthilvel45/IMG_13508151640187_zpszu0qlrlv.jpeg (http://s1055.photobucket.com/user/senthilvel45/media/IMG_13508151640187_zpszu0qlrlv.jpeg.html)

Russellbpw
26th September 2014, 05:00 PM
20.07.1958 ஆனந்தவிகடன் விமர்சனம்


சினிமா விமர்சனம்: அன்னையின் ஆணை


சேகர்: போலீசாரால் சுடப் பட்டு இறந்துவிடுகிறான். அந்த இடத்தில் கணேசனின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!
சந்தர்: என்னது... வந்த உடனேயே இறந்துவிடுகிற வேஷமா அவருக்கு?
சேகர்: முழுக்கக் கேளேன்... இறந்தது தந்தை கணேஷ்! பிறகுதான் மைந்தன் கணேஷ் வருகிறார்.

சந்தர்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? டபிள் ரோலா?

சேகர்: டபிள் மட்டும் இல்லை இன்னும் அநேக ரோல்கள்!

கல்லூரி மாணவனாக கலாட்டா செய்யும் போதும், சாம்ராட் அசோ கனாக நடிக்கும்போதும், பரோபகாரத்தைப் பழி வாங்கும்போதும் அவருடைய நடிப்பில் எவ்வளவு முகபாவங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள்! அநேக இடங்களில் இங்கிலீஷிலேயே வெளுத்துவாங்குகிறார்.

லவர்ஸ் அறிமுகமே பிரமாதம்! 'பூப்பறிக்கக் கூடாது என்ற போர்டு கண்ணுக்குத் தெரியவில்லையா?' என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்கிற தோரணையே ஜோர்! அப்புறம் 'வெரி மிஸ்ச்சிவஸ் கேர்ள்'னு அலட்சியமாக...

நாராயண மூர்த்தியின் டைரக்ஷனும், மாறனின் வசனங்களும் பிரமாதம். எல்லாவற்றையும்விட சிவாஜி நடிப்புதான்...
சந்தர்: சிகரமா..?

சேகர்: சாதாரண சிகரமல்ல; எவரெஸ்ட்!


the use of appropriate english in the appropriate sequence is certainly to be appreciated.

Though the dialogue writer needs equal appreciation, the respect the english language itself grows multifolds...when nadigar thilagam speaks it....!

Even though there were other actors both graduated or otherwise in the film industry those days.....when nadigar thilagam speaks english.....it is always "britain" !!! Such is his command over the language when it comes to dialogues in english !!!!


Rks !!!

joe
26th September 2014, 05:24 PM
கலைஞர் இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர் குறித்து நடிகர் திலகம் பேசிய ஒளிக்காட்சியை பகிர்ந்திருக்கிறார்கள்
https://www.facebook.com/Kalaignar89/posts/855638611115012

JamesFague
26th September 2014, 09:21 PM
Dear RKS,


NT spoken the word NEVER in different accent and he gave new dimension. Example in Niraikudam when he have a conversation with Major before the operation and

in Gowravam with Pandaribai. I still do know how he uses the word for two different situation with different accent. That is why we called him as an Acting God.

Russellbpw
26th September 2014, 10:13 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/nt_zps511dce83.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/nt_zps511dce83.jpg.html)

eehaiupehazij
26th September 2014, 10:19 PM
Bachelor's child play differs from the child care by a Wedlocked!

NT's penchant for comedy has been revealed in many movies like Bale Paandia, the hilarious one being Galaatta Kalyaanam (for the first time teaming up with Jayalalitha as his love interest though he dared to act as her father alongside Kaanchanaa too, in MSP earlier). His much slim and slender getup sometimes stirs up mixed feelings in us as to why he could not concentrate on maintaining his frame that is very handsome even today! In Deivamagan too NT dominated in comedy scenes with an edge over Nagesh! Enjoy with a smile, the way a bachelor novice NT foreshores his expressions in a delicate situation of quandry in pacifying an abandoned child that goes into uncontrollable crying, in the apt company of Nagesh, with his trade mark copying of Jerry Lewis pattern comical expressions!!Also enjoy the maturity with which the trained NT alone deals with a child in Uththaman in a different situation.

https://www.youtube.com/watch?v=kAntINJE0s0

https://www.youtube.com/watch?v=hF98K5ToYUU

Russellbpw
26th September 2014, 10:32 PM
நடிகர் திலகம் அவர்கள் மேக்-அப் பற்றி

மேக்-அப் என்பது ஒரு தனி கலை.

முக அலங்காரம் பற்றி பேசும்போது ஒரு குறிப்பிட்ட மேக்-அப் மேன் பற்றி ஒரு சிலர் மிகவும் மிகைபடுத்தி பேசுவார்கள். அதாவது அவரிடம் மேக்-அப் போட்டுக்கொள்ள வரிசையில் நின்று காத்து கிடந்து போட்டுகொள்வார்கள் , அவர் தாடி ஓட்டும் கலையில் வல்லவர்...அப்படி இப்படி என்று...!

அவர் நடிகர் திலகம் அவர்களுக்கு மேக்-அப் போட்டு அது பேசப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரையில் நடிகர் திலகம் அவர்கள் எதிர்பார்க்கும் தரத்திற்கு அவர் ஈடுகொடுக்க முடியாததால் அவர் இவருடைய மேக்கப் உதவியாளர் என்ற அந்தஸ்த்தை பெற முடியவில்லை என்று நினைக்கிறன் !

ஏதோ கொஞ்சம் பவுடர் பூசினோம், pancake தடவிவிட்டோம், மீசை வரைந்தோம், உதட்டுசாயம் பூசினோம் என்று ஏனோ தானோ என்று அலங்காரம் செய்பவர்கள் நடிகர் திலகத்திடம் நிச்சயம் ஈடுகொடுக்க முடியாதல்லவா !

ஆனால் நடிகர் திலகம் அவர்கள் போட்டுக்கொண்ட மேக்கப் - அது எந்தளவிற்கு மேக்கப் கலையிலும் நடிகர் திலகம் அவர்கள் கைதேர்ந்தவராக இருந்திருந்தால் சர்வ சாதாரணமாக இவரே கையாண்டுள்ளார் என்று பாருங்கள். !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/RareStill_zpsc9ebfad2.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/RareStill_zpsc9ebfad2.jpg.html)

Russellbpw
26th September 2014, 10:33 PM
நடிகர் திலகம் அவர்கள் போட்டுக்கொண்ட மேக்கப் - அது எந்தளவிற்கு மேக்கப் கலையிலும் நடிகர் திலகம் அவர்கள் கைதேர்ந்தவராக இருந்திருந்தால் சர்வ சாதாரணமாக இவரே கையாண்டுள்ளார் என்று பாருங்கள். !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4185a_zps2e32d906.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4185a_zps2e32d906.jpg.html)

Russellbpw
26th September 2014, 10:34 PM
நடிகர் திலகம் அவர்கள் போட்டுக்கொண்ட மேக்கப் - அது எந்தளவிற்கு மேக்கப் கலையிலும் நடிகர் திலகம் அவர்கள் கைதேர்ந்தவராக இருந்திருந்தால் சர்வ சாதாரணமாக இவரே கையாண்டுள்ளார் என்று பாருங்கள். !!!


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4186a_zpsbad6ae00.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4186a_zpsbad6ae00.jpg.html)

Murali Srinivas
27th September 2014, 12:10 AM
கடந்த சில வாரங்களாக குமுதம் இதழில் சொல்வது நிஜம் என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் மணா அவர்கள் எழுதி வரும் அனுபவ தொடர் இடம் பெறுகிறது. அதில் இந்த வாரம் நடிகர் திலகத்துடனான தன அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் உண்மைகளை எழுதி இருக்கிறார். இன்றைய சூழலில் நடிகர் திலகத்தைப் பற்றிய உண்மைகளை எழுதுவதனால் எந்த வித லாபங்களும் கிடைக்காது என்று தெரிந்தும் உண்மைகளை சரியான முறையில் பதிவு செய்ததற்கு அவருக்கு மனங்கனிந்த நன்றி.

இன்றைக்கு நம்மை சுற்றிலும் காணும் வரலாறு தெரியாத [அரசியல், சினிமா, விளையாட்டு என்று எந்த அரங்கை எடுத்துக் கொண்டாலும்] பத்திரிக்கையாளர்கள் மத்தியில், தெரியாதவற்றை தெரிந்தது போல் அள்ளி விடும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், பொய் செய்திகளை பொய்யான வரலாறு தகவல்களை உண்மை போல் எழுதி மக்களை ஏமாற்றும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், தாங்கள் சார்ந்த இயக்கத்தைப் பற்றி அல்லது தங்களுக்கு பிடித்தவரை, அபிமானத்துக்குரியவரை வரலாற்று பொய்களின் மூலம் அவர்களின் பிம்பங்களை உயர்த்திப் பிடிப்பதற்கு மக்களின் நம்பகதன்மையைப் பெற்ற பாரமபரியமிக்க பத்திரிக்கைகளை பின்புலமாகவும் ஆடுகளமாகவும் பயன்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இன்றும் உண்மை பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தானே!

மீண்டும் நன்றி மணா அவர்களே! Let your tribe grow!

அன்புடன்

Murali Srinivas
27th September 2014, 12:12 AM
மாநகர் மதுரையில் நடிகர் திலகத்தின் வெள்ளை ரோஜா இன்று முதல் சென்ட்ரல் திரையரங்கில் வெளியிடப்பட்டு எப்போதும் போல் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்றைய தினத்தில் 4 காட்சிகளில் ஏறத்தாழ 700 பேர்கள் கண்டு களித்திருக்கின்றனர். சற்றேறேக்குறைய 15,000/- ரூபாயை மொத்த வசூலாக பெற்றிருக்கிறது. முதல் நாளைப் பொறுத்தவரை அண்மையில் வெளியான தங்க சுரங்கம் படத்திற்கு அடுத்தபடியான வசூல் இது. சென்ட்ரல் திரையரங்க வளாகமே முழுமையாக அலங்கரிக்கப்பட்டு அரங்கிற்கு வெளியேயும் மிகப் பெரிய பானர்கள் கட்டப்பட்டு ஒரு புதுப் பட ரிலீஸ் தோரணையில் டவுன் ஹால் ரோட்டில் போவோர் வருவோர் கவனத்தையெல்லாம் கவர்ந்து கொண்டிருக்கிறது என்று நண்பர் சந்திரசேகர் தகவல் தெரிவித்தார். குறிப்பாக நண்பர் சுந்தர்ராஜன் அவர்கள் பதிவிட்ட ரசிகர்கள் அமைத்துள்ள நடிகர் திலகத்தின் பல படங்களின் போஸ்கள் ஸ்டாண்டிஸ் கட் அவுட் ஆக அமைக்கப்பட்டு ஸ்டார் attraction ஆக திகழ்கிறது என்பதையும் சொன்னார்.

சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கும் [முன்னரே குறிப்பிட்டது போல் இப்போது மகாலட்சுமியில் இரண்டு காட்சிகள் மட்டுமே ஒரு படம் திரையிடப்படுகிறது] நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. மேலதிக விவரங்கள் கிடைத்தவுடன் அதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

JamesFague
27th September 2014, 07:20 AM
Courtesy The Hindu Tamil

ராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அடைமழை பெய்து எங்கு நோக்கினும் வெள்ளக்காடாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

1959 அல்லது 1960 நவம்பர் மாதம் என நினைவு. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம். வீடு மற்றும் உடமைகளை இழந்த மக்கள் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வெள்ளச் சேதங்களைப் பார்வையிட அன்றைய முதலமைச்சராக இருந்த காமராஜர் எங்கள் பகுதிக்கும் வந்திருந்தார்.

குடியிருப்புப் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், அவர் தனது வேட்டியைத் தூக்கி மடித்துக் கட்டிக்கொண்டு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய பகுதிக்குள் சென்று மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிகழ்வு இன்னும் எனது நினைவில் பசுமையாக நிற்கிறது.

காமராஜர் போன்று எந்த முதல்வரும் மழை வெள்ள நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களை நேருக்கு நேர் சந்தித்து ஆறுதல் கூறியதாக நினைவில்லை. எளிமை, நேர்மை இவற்றுடன், ஊழல் கறை ஏதும் இல்லாது வாழ்ந்த தன்னலமற்ற அரசியல்வாதி காமராஜர். அத்தகைய நேர்மையாளர் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்பது பெருமையே.

- சசிபாலன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

Keywords: காமராஜர், அடைமழை, அது பெருமையே

RAGHAVENDRA
27th September 2014, 10:08 AM
https://scontent-a-nrt.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/1391594_796396993744308_7803986238689889482_n.jpg? oh=3cc9bba2e0433085a3f668f603f0dda3&oe=54C321B2

மஹாராஜா மார்த்தாண்ட பூபதி...Simply superb performance in Sarithira Nayakan... A different diction in pronouncing the word "Bhuvaneshwari". One scene is a classic example. தன்மேல் கோபமும் ஆத்திரமும் பழிவாங்கும் உணர்ச்சியும் கொண்டு வாழும் தங்கையின் கணவர் கொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன் பாண்டியராஜாவின் பரிதவிப்பு .... நடிகர் திலகம் என்ற உலகமகா கலைஞனின் புதிய பரிமாணம் இந்த இடத்தில் வெளிப்படும். வார்த்தைகளை முழுங்கி முழுங்கி பாதியிலேயே நிறுத்தி நிறுத்தி அதன் மூலம் தங்கையின் மேல் பாசத்தையும் பிரதிபலித்து, அவளுடைய அறியாமையை எண்ணி வருத்தமும் கொண்டு, தன் தங்கையின் வாழ்க்கையில் இத்தகைய அவலநிலையைக் கொண்டு வந்தவர்கள் மேல் கோபமும் கண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக தன்னுடைய சுயகௌரவத்தையும் விட்டுக்கொடுக்காமல் அந்த சூழ்நிலையிலும் தலைநிமிர்ந்து நிற்கும் புதியதொரு காட்சிச்சூழல்.. இவ்வளவு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டுமானால் அதற்கு உலகில் இருக்கும் ஒரே கலைஞன் நடிகர் திலகம் மட்டுமே.. சும்மாவா சொன்னார்கள் சரித்திர நாயகன் என்று...

Two saving graces for this movie

நடிகர் திலகத்தின் மாறுபட்ட உச்சரிப்பு... குறிப்பாக புவனேஸ்வரி என்ற வார்த்தையை அவர் இந்தப் படத்தில் பிரயோகித்திருக்கும் விதம்...பல்வேறு காட்சிகளில் பல்வேறு உணர்ச்சிகளில் தன் தங்கையை புவனேஸ்வரி என அழைக்கும் போது, ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்ப அதனை வேறுபடுத்தியிருப்பது... பிரமிக்க வைக்கும் பரிமாணம்...

படத்தின் துவக்கத்தில் பிரபுவிற்குக் கிடைத்த ஒரு அருமையான கராத்தே சண்டைக் காட்சி.

படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்...

வேண்டாம் ... விட்டு விடுவோம்...சொல்வதற்கு வேறொன்றுமில்லை.

KCSHEKAR
27th September 2014, 10:55 AM
கடந்த சில வாரங்களாக குமுதம் இதழில் சொல்வது நிஜம் என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் மணா அவர்கள் எழுதி வரும் அனுபவ தொடர் இடம் பெறுகிறது. அதில் இந்த வாரம் நடிகர் திலகத்துடனான தன அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் உண்மைகளை எழுதி இருக்கிறார். இன்றைய சூழலில் நடிகர் திலகத்தைப் பற்றிய உண்மைகளை எழுதுவதனால் எந்த வித லாபங்களும் கிடைக்காது என்று தெரிந்தும் உண்மைகளை சரியான முறையில் பதிவு செய்ததற்கு அவருக்கு மனங்கனிந்த நன்றி.
உண்மை முரளி சார்.
Kumudham

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KumudhamSep2014/KumudhamPg1_zpsebfdb1bf.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KumudhamSep2014/KumudhamPg1_zpsebfdb1bf.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KumudhamSep2014/KumudhamPg3_zps582a8a09.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KumudhamSep2014/KumudhamPg3_zps582a8a09.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KumudhamSep2014/KumudhamPg4_zps74311142.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KumudhamSep2014/KumudhamPg4_zps74311142.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KumudhamSep2014/KumudhamPg5_zps5600d33a.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KumudhamSep2014/KumudhamPg5_zps5600d33a.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KumudhamSep2014/KumudhamPg6_zps384fdb9f.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KumudhamSep2014/KumudhamPg6_zps384fdb9f.jpg.html)

Russellbpw
27th September 2014, 11:25 AM
சிகரம் தொட்ட திரைப்படங்கள்:


நகைச்சுவை நடிப்பில் நாகேஷ் சிகரம் தொட்ட திரைப்படங்கள் பல.

எம்.ஜி.ஆர்.,- சிவாஜியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவையின் பரிமாணங்களை நயமாகவும் நுட்பமாகவும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

குறிப்பாக, 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் அவர் ஏற்ற வைத்தி வேடமும்,

'திருவிளையாடல்' படத்தில் ஏழை தருமி பாத்திரமும் சாகா வரம் பெற்றவை.

நகைச்சுவை நடிகர்கள் வேறு எவரிடமும் காணப்பெறாத - நாகேஷிடம் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு - நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நாகேஷ் முக பாவனையில் காட்டி இருக்கும் எதிர்வினை ஆகும்.

சிவாஜிக்கு இணையாக, ஜாடிக்கு ஏற்ற மூடியாக நடிப்பில் சோபித்தார் நாகேஷ்

Russellisf
27th September 2014, 12:14 PM
http://www.youtube.com/watch?v=Cc2sHiUvYuU




சிகரம் தொட்ட திரைப்படங்கள்:


நகைச்சுவை நடிப்பில் நாகேஷ் சிகரம் தொட்ட திரைப்படங்கள் பல.

எம்.ஜி.ஆர்.,- சிவாஜியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவையின் பரிமாணங்களை நயமாகவும் நுட்பமாகவும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

குறிப்பாக, 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் அவர் ஏற்ற வைத்தி வேடமும்,

'திருவிளையாடல்' படத்தில் ஏழை தருமி பாத்திரமும் சாகா வரம் பெற்றவை.

நகைச்சுவை நடிகர்கள் வேறு எவரிடமும் காணப்பெறாத - நாகேஷிடம் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு - நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நாகேஷ் முக பாவனையில் காட்டி இருக்கும் எதிர்வினை ஆகும்.

சிவாஜிக்கு இணையாக, ஜாடிக்கு ஏற்ற மூடியாக நடிப்பில் சோபித்தார் நாகேஷ்

Russellisf
27th September 2014, 12:15 PM
http://www.youtube.com/watch?v=uS7269g5d5Y

KCSHEKAR
27th September 2014, 12:37 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Annadhanam-2014/OldAgeHomeFunction_zpsff23ae20.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Annadhanam-2014/OldAgeHomeFunction_zpsff23ae20.jpg.html)

KCSHEKAR
27th September 2014, 12:38 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Annadhanam-2014/AnnadhanamOldAgeHome_zps2b219921.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Annadhanam-2014/AnnadhanamOldAgeHome_zps2b219921.jpg.html)

Russelldwp
27th September 2014, 06:46 PM
நடிகர் திலகதிதின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாரிஸ் குருப் சிவாஜி பக்தர்கள் வெளியிட்டுள்ள நாங்கு பிட் போஸ்டர்


https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=148b61dedb86b352&attid=0.1&disp=inline&realattid=f_i0ko4ewc1&safe=1&attbid=ANGjdJ-zKWL2r6B1IDbhC46W2VwzzvpMRCAJh5OcYrpQDv1aaKA70fgxi 9D3bIkxTa5weudVzwdOnftr5g5IzR1C-ba-kYDvgsZQwmZO_FVgVFWdx7mRqOTBpXrRRa0&ats=1411823139100&rm=148b61dedb86b352&zw&sz=w1337-h488

Russelldwp
27th September 2014, 06:51 PM
நடிகர் திலகதிதின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை ரசிகர் வெளியிட்டுள்ள போஸ்டர்

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=148b5f2e4f3d4a06&attid=0.1&disp=inline&realattid=f_i0kmgf700&safe=1&attbid=ANGjdJ-cQfgPGrYv-NaGb0UkPrMIBEr2d-es7HWFPS7t9dPBZURp-8sSVB8knrzWflWbNcuQInM2OytBebX0EJRUCXWWyWtz9YHfJ0H goYBYKf-NdgWzahhFhw6TBec&ats=1411823139098&rm=148b5f2e4f3d4a06&zw&sz=w1337-h488

Russelldwp
27th September 2014, 06:54 PM
நடிகர் திலகதிதின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிவாஜி ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்


https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=148b5cbdebf0f539&attid=0.1&disp=inline&realattid=f_i0kkxek41&safe=1&attbid=ANGjdJ8YXtk05n5RVNEmW1qkuzXhjbMbsGA0Nyq5qZU etLIcwMkbGC4L-CLxB1BdEZY8vVCiNNEtm7FdtmJE3DtCrxQUZC4WOvBw6Q69Gps EddCRnr5MdrD3Iv66igA&ats=1411823139161&rm=148b5cbdebf0f539&zw&sz=w1337-h488

JamesFague
27th September 2014, 08:35 PM
உலகம் போற்றும் பெண் :

1995 am aandu nagarkovilil nadandha oru thirumana nigazchiyil kalandhu kondu
vazhthi pesiya nadigar thilagam sivaji ganesan kooriyathu:

" palar thangalukku பெண் குழந்தை பிறந்தால் ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று வருத்தபடுகிரர்கள். மகாத்மா காந்திக்கு ஆண்
குழந்தைகள் மட்டுமே பிறந்தன. இன்று உலகில் காந்திஜியை மட்டும்தான் தெரியும். அவர் பிள்ளைகளை யாருக்கு theiryum?
Aanal, Nehruvirku ore oru பெண் குழந்தை than pirandhadhu. Ulagam போற்றும்
piradhamar indiravaga அவர் thigalthandadai kankooda parthom. enave, பெண் குழந்தை பிறந்தால் kavalaipadathergal.

From the issue of Kumudam dt 24.09.14

Murali Srinivas
28th September 2014, 12:41 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

தர்மம் எங்கே படத்திற்கு ஜூலை 16-ந் தேதி மாலைக் காட்சி போவதற்கு நாங்கள் ஓட்டமும் நடையுமாய் தேவி டாக்கீஸ் சென்றோம். தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு மாசி வீதி கடந்து கிருஷ்ணாராயர் தெப்பக்குள தெரு தாண்டி B 4 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்து தெருவில் நுழைந்தபோதுதான் புரிந்தது கூட்டம் பற்றி பல ரசிகர்களும் சொன்னது எந்தளவிற்கு சரி என்று!

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

நான் என் சிறு வயது முதல் பல நடிகர் திலகத்தின் படங்களுக்கு பெரிய அளவில் மக்கள் கூட்டத்தைப் பார்த்திருக்கின்றேன். பிரம்மாண்ட கூட்டத்தையும் பார்த்திருக்கிறேன். முதல் நாள் அல்லாமல் படம் வெளியான சில நாட்களுக்குள் பெரிய கூட்டம் என்று சொன்னால் அது தங்கத்தில் கர்ணன் படத்திற்கும் ஸ்ரீதேவியில் திருவிளையாடல் படத்திற்கும் பார்த்த கூட்டத்தை குறிப்பிட வேண்டும். அவை இரண்டுமே மிக சிறிய வயதில் பார்த்தது என்பதனால் நாங்கள் சென்றது எத்தனையாவது நாள் என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் ஓரளவிற்கு விவரம் தெரிய ஆரம்பித்தவுடன் முதல் நாள் கூட்டம் பார்த்தது என்றால் அது முதன் முதலில் 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று சென்ட்ரலில் ஊட்டி வரை உறவு படத்திற்கு பார்த்த கூட்டம்தான். இப்போதும் நினைவிருக்கிறது. யாரோ உறவினர்கள் அந்த தீபாவளிக்கு வந்திருந்ததால் ஒரு சினிமாவிற்கு போவோம் என்ற முறையில் வீட்டிலிருந்து சென்ற படம் என்பது நினைவில் இருக்கிறது.[ஏன் என்றால் அதற்கு முன்போ அல்லது பின்போ முதல் நாள் படம் பார்க்க வீட்டில் பெற்றோருடன் போனதேயில்லை. பின்னாட்களில் கசினுடன் சேர்ந்து முதல் நாள் போனதுண்டு]. தாயாருடன் சென்றதால் [தந்தை மற்றும் ஆன் உறவினர்கள் வெளியில் நிற்க] சென்ட்ரல் உள்ளே போக முடிந்தது. ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. அப்போது பார்த்த கூட்டம் சரியான கூட்டம்.

அதன் பிறகு மதுரையில் பெரிய அளவில் வந்த முதல் நாள் கூட்டங்கள் என்று சொன்னால் தில்லானா, எங்க மாமா, சொர்க்கம், ராஜா, வசந்த மாளிகை, ராஜ ராஜ சோழன், எங்கள் தங்க ராஜா, கெளரவம், சிவகாமியின் செல்வன், தங்கபதக்கம், அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோவில் திரிசூலம் இவற்றையெல்லாம் குறிப்பிடலாம். ஆனால் எனக்கு தெரிந்தவரை அல்லது நான் பார்த்தவரை பிரம்மாணடமான பயங்கரமான கூட்டம் என்று சொன்னால் நான் இரண்டு படங்களைத்தான் குறிப்பிடுவேன். ஒன்று சிவந்த மண் மற்றொன்று தர்மம் எங்கே! மற்ற படங்களுக்கு வந்தது பெரிய கூட்டம். ஆனால் சிவந்த மண் மற்றும் தர்மம் எங்கே படத்திற்கு வந்ததோ பிரம்மாண்டத்தையும் தாண்டியது.

மதுரையில் ஸ்ரீதேவி திரையரங்கம் அமைந்திருந்த [ஆம், இப்போது அந்த அரங்கம் இல்லை. apartment ஆக மாறி விட்டது] தெருவிற்கு ஒர்க் ஷாப் ரோடு என்று பெயர். ஸ்ரீதேவி திரையரங்கம் அன்றைய நாட்களில் மதுரையில் ஏனைய அரங்குகளை விட [தங்கம் திரையரங்கை தவிர்த்து விட்டுப் பார்த்தால்] பெரிய வளாகத்தை கொண்டது. தெருவில் ஆரம்பித்தால் உள்ளே அரங்கம் அமைந்திருக்கும் இடம் வரை நல்ல விசாலமான ஏரியா. சைக்கிள் மற்றும் கார் பார்க்கிங் வரை செய்யலாம். இரு பக்கமும் நீளமான கம்பிகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ticket counter வரிசை. உள்ளே பெண்களுக்கு என்று தனி counter என பலவேறு வசதிகள். நான் முன்னர் குறிப்பிட்டது போல் அவையெல்லாம் இடிக்கப்பட்டு குடியிருப்பு வளாகமாக மாறி விட்ட போதிலும் அந்த திரையரங்கை காண வேண்டுமென்றால் இயக்குனர் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஹவுஸ் புல் [House Full] படத்தில் காணலாம். அந்த படம் முழுக்க ஸ்ரீதேவி திரையரங்கிலேதான் படமாக்கப்பட்டது.

(தொடரும்)

அன்புடன்

Russellbpw
28th September 2014, 07:35 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Annadhanam-2014/AnnadhanamOldAgeHome_zps2b219921.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Annadhanam-2014/AnnadhanamOldAgeHome_zps2b219921.jpg.html)

Dear Sir

Please check your inbox. I have sent a mail to you !

Regards
RKS

RAGHAVENDRA
28th September 2014, 07:59 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/krishna2000grtgs_zps07046b8c.jpg

மனமார்ந்த வாழ்த்துக்கள் கிருஷ்ணாஜி... சமீப காலத்தில் அசுர வேகத்தில் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு 2000 பதிவுகளைக் கடந்து உள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

Russellbpw
28th September 2014, 08:13 AM
Ancient Times Marina was called as Chola Mandala Kadarkarai then it was named as Coramandala Kadarkarai.

Sivaji hailed from Cholas clan so the right man in right place

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsf3e59189.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsf3e59189.jpg.html)

http://www.youtube.com/watch?v=ulNjLsIV3JU

Gopal.s
28th September 2014, 09:20 AM
பம்மலார் ,

தங்கள் calender மிக சிறப்பு என்று நண்பர்கள் சிலாகித்தனர். எந்த pose என்பதில்தான் போர் நடக்கிறதாம். நன்றிகள்.

தங்களுக்கு அளிக்க நினைத்த பிறந்த நாள் பரிசு தாமதமானதற்கு மன்னிப்பு கோருகிறேன். நேரமின்மை (அதுவும் விடுமுறை நாட்களில் இதை செய்ய இயலாதே)

KCSHEKAR
28th September 2014, 12:15 PM
தினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி - 28-09-2014

தமிழகத்தின் அதிர்ஷ்டம் சிவாஜி கணேசன்! - ஏ.வி.எம். சரவணன்

அக்., - 1 சிவாஜி பிறந்த நாள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த் திரையில் அறிமுகமான படம், பராசக்தி. இப்படத்தை, பி.ஏ.பெருமாளுடன் இணைந்து தயாரித்தவர் ஏ.வி.மெய்யப்பன். ஏ.வி.எம்., மகனும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன், சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர்; சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி, அவரைப் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை, வாரமலர் இதழுக்காக பகிர்ந்து கொண்டார். அது:

கடந்த, ஏப்., 9, 1958ஐ என்னால் மறக்க முடியாது. அன்று தான், ஏ.வி.எம்., ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு பொறுப்பாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். ஸ்டுடியோ நிர்வாகியான ரங்கஸ்வாமி அய்யங்கார், ஸ்டுடியோவில் இருந்தோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது, ஸ்டுடியோவின் ஐந்தாவது தளத்தில், தெய்வப் பிறவி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு தான் முதன் முதலில் சிவாஜியைச் சந்தித்தேன். அவருடைய நல்வாழ்த்துக்களுடன் என் சினிமாப் பயணம் துவங்கியது.

எங்கள் குடும்பத்தின் நல்ல நண்பர் சிவாஜி. என்னை எங்கு எப்போது சந்தித்தாலும், 'நல்லா இருக்கிங்களா?' என்று மனதார கேட்பார். அத்துடன், 'உங்க மனைவி லட்சுமி, பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா...' என்று பாசத்தோடு கேட்பதுடன், 'மறக்காமல் உங்க மனைவி லட்சுமிகிட்டே நான், அவங்களை விசாரிச்சேன்னு சொல்லுங்க...' என்பார். அடுத்து, எப்பவாவது என் மனைவியை சந்திக்கும் போது, 'என்னம்மா லட்சுமி... நான் உங்களை விசாரிச்சேனே... உங்க வீட்டுக்காரர் சொன்னாரா?' என்று, 'கன்பர்மேஷனு'க்கு கேட்டு விடுவார்.

என் தந்தையிடம் மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர் சிவாஜி. அவரது மகள் சாந்தியின் திருமணத்தின் போது, என் தந்தைக்கு தான் முதல் பத்திரிகை கொடுத்தார். எங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், சிவாஜியை முதல் வரிசையில் உட்கார வைப்பார் என் தந்தை.
அதேபோன்று, தன் அமெரிக்க நண்பர்களிடம், சிவாஜியை அறிமுகம் செய்யும் போதெல்லாம், 'தமிழகத்தின் அதிர்ஷ்டம், சிவாஜி கணேசன் இங்கு பிறந்திருக்கிறார்; அமெரிக்காவின் துரதிருஷ்டம், அவர் அங்கு பிறக்கவில்லை...' என்று கூறுவார்.
சிவாஜி சிறந்த நடிகர் மட்டுமல்ல; நல்ல குடும்பத் தலைவர். சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என்று கூட்டுக் குடும்பமாக, ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்.

இப்படத்தின் ஐம்பதாவது ஆண்டை, ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்று மிகவும் விரும்பினார் சிவாஜி. ஆனால், துரதிருஷ்டவசமாக விழா எடுக்க அவர் இல்லை. அப்படத்திற்காக எடுக்கப்பட்ட முதல் காட்சியில், 'சக்ஸஸ்...' என்று சொல்வார் சிவாஜி. அக்காட்சி, ஸ்டுடியோ தளத்திற்குள் எடுக்கப்படாமல், ஏ.வி.எம்.,மில் வெளிப்புற காட்சியாக எடுத்திருந்தனர். அதே இடத்தில், அவரது நினைவு சின்னம் ஒன்றை வைத்தோம். சிவாஜியின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும், 'நினைவுச் சின்னம் திறப்பதற்கு நடிகர் கமலை கூப்பிடலாம்; அது தான் பொருத்தமாக இருக்கும்...' என்றனர். தன் கலை வாரிசு என்று, சிவாஜியால் அறிவிக்கப்பட்ட கமல், அக்.,19, 2002ல், சிவாஜி சிலையை திறந்து வைத்தார்.

அகில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு என்னை தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதைத்தொடர்ந்து சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற உலக அமைப்பிற்கு, ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற ஆசிய நாடுகளின் பிரதிநிதியாகவும், சர்வதேச சங்கத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். அதன் தலைமை செயலகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. இந்த பொறுப்பு எனக்கு கிடைத்ததற்காக, சிவாஜி தன்னுடைய தலைமையில் எல்லா நடிகர்களையும் அழைத்து, எனக்கு பாராட்டு விழா நடத்தினார். அத்துடன். தனிப்பட்ட முறையிலும், தேனீர் விருந்தும் கொடுத்தார். அவர், என் மீது கொண்டிருந்த பாசத்தை நினைத்தால், இன்னும் மெய் சிலிர்க்கிறது.

சிவாஜி நடித்த, 125வது படம் ஏ.வி.எம்.,மின், உயர்ந்த மனிதன். உத்தர் புருஷ் என்ற வங்காள மொழி படத்தை, தமிழில் தயாரிக்க முடிவு செய்தோம். அப்படத்தை சிவாஜிக்கு போட்டு காண்பித்தோம். படத்தை பார்த்ததும், அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. உத்தர் புருஷ் படத்தின் கதைக் கருவை ஒட்டி எடுக்கபட்ட, உயர்ந்த மனிதன் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதிய ஜாவர் சீதாராமனிடம், சிவாஜியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக எழுதும்படி கேட்டுக் கொண்டோம். கிருஷ்ணன் - பஞ்சு இயக்குனர்கள். இப்படத்திற்கு சிவாஜி முன்பணமோ, வேறு தொகையோ வாங்கிக் கொள்ளவில்லை. படம் வெளியான பின் தான் அவருக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டார்.

கலைத்துறைக்கு சிவாஜி ஆற்றியுள்ள அளப்பரிய சேவையைப் பாராட்டி, பிரஞ்சு அரசு, மிக உயர்ந்த, 'செவாலியே' விருதை அளித்து கவுரவித்தது. அதை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சத்ரபதி சிவாஜி குதிரையில் அமர்ந்திருப்பது போன்று வெள்ளியில் செய்யப்பட்ட (தோட்டா தரணி உருவாக்கியது) சிலையை, தமிழ்த் திரை உலக சார்பில், சிவாஜிக்கு வழங்கினேன்.

ஒரு முறை, திருலோகசந்தர் டைரக்ட் செய்யும் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தேன். அங்கு, படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை பார்த்து, 'ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள், உடம்பு சரியில்லையா?' என்று கேட்டேன். 'உடம்பைத் தொட்டுப்பார்...' என்றார். தொட்டுப் பார்த்தால், உடம்பு அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. 'உடம்பு கொதிக்கிறதே... ஓய்வு எடுத்துக்க வேண்டியது தானே?' என்று கேட்டேன்.
'நாளை, 'வியட்நாம் வீடு'ன்னு ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்றேன்; அதிலே எனக்கு ஒரு பிராமணர் கேரக்டர். அதை சிறப்பாக செய்யணுமேன்னு டென்ஷன்; அதனால் தான் ஜுரம்...' என்றார் சிவாஜி. 'பிராமணர் கேரக்டரிலே நடிக்கிறது உங்களுக்கு ஒன்றும் சிரமமானது இல்லையே...' என்றேன்.
'அது, சாதாரண பிராமணர் ரோல் இல்லை; பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற எமோஷனலான கேரக்டர். அந்த சீரியசான கேரக்டரிலே நடிக்கிறபோது, ஏதாவது தப்பா போயிட்டா மக்கள் காமெடியா நினைச்சு சிரிச்சுடுவாங்க...' என்றார்.

அவர் அழைத்ததை அடுத்து, மறுநாள் மியூசிக் அகாடமியில் நடந்த, 'வியட்நாம் வீடு' நாடகத்தின் அரங்கேற்றத்திற்கு போயிருந்தேன்; திரை விலகியது... நான் அங்கே சிவாஜியைப் பார்க்கவில்லை; பிரஸ்டீஜ் பத்மநாபனைத்தான் பார்த்தேன்.

ஒரு முறை கமல்ஹாசன், சிவாஜியைப் பற்றி கூறும் போது, 'ஒருவர் தன் நூறாவது படத்தில் நடிக்கிறபோது கிடைக்கிற பர்பெக் ஷனை தன் முதல் படத்திலேயே கொடுத்தவர் சிவாஜி...' என்று குறிப்பிட்டார். 'சிவாஜியிடம் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கப் பிடிக்கும்?' என்று கேட்டால், 'நடிக்க, 'ஸ்கோப்' இருக்கிற கேரக்டர்களில்...' என்று சொல்வார்.

நடிப்பில் ஈடு இணை இல்லாத நடிகராக இருந்த போதும், கடைசி வரை சிறந்த நடிகருக்கான, 'பாரத்' விருது அவருக்கு தரப்படவில்லை என்பது வருத்தமான விஷயம். முதல் மரியாதை படத்துக்காக அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய விருது கூட நழுவி, ஒரு வங்காள நடிகருக்கு போய்விட்டது.
எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய, 'பால்கே சாகிப்' விருது கூட, அரசியல் காரணமாக தள்ளிப்போய், 1997ல் தான் கிடைத்தது. அவருக்கு விருது அளித்ததற்காக, அப்போதைய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஜெயபால் ரெட்டியை சந்தித்து, நன்றி சொன்னேன். 'இந்த விஷயத்தில் நான் தலை இடவே இல்லை; அவார்டுக்குரிய தேர்வு கமிட்டி அவரை தேர்ந்தெடுத்தது; எனவே, எனக்கு எதற்கு நன்றி சொல்கிறீர்கள்...' என்று கேட்டார். 'ஒரு கமிட்டியை போட்டு, அதில் எந்தத் தலையீடுமின்றி சுதந்திரமாக தகுதியான நபரை தேர்ந்தெடுத்து, கவுரவிக்க வாய்ப்பு தந்ததற்காகவே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்றேன் பதிலுக்கு!

சிவாஜி - சினிமாவுக்கு, சினிமா ரசிகர்களுக்கு கிடைத்த வரம்!

எஸ்.ரஜத்

Russelldwp
28th September 2014, 12:16 PM
திருச்சி மாரிஸ் குரூப் சிவாஜி பக்தர்கள் நடிகர் திலகத்தின் 86 வது பிறந்தநாள் விழாவிற்கு வெளியிலட்ட 4 பிட் போஸ்டர்

https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10678634_1519954698221206_4528708300765892973_n.jp g?oh=382686d5c1e97187ef0f481ab342978a&oe=54C64512

gkrishna
28th September 2014, 05:33 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/krishna2000grtgs_zps07046b8c.jpg

மனமார்ந்த வாழ்த்துக்கள்... சமீப காலத்தில் அசுர வேகத்தில் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு 2000 பதிவுகளைக் கடந்து உள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

நன்றி ராகவேந்தர் சார்
நிச்சயம் பங்கு கொள்வேன் பதிவு இடுவேன் திரி வளர பாடுபடுவேன்
என்றும் எல்லோர் நட்புடன்

கிருஷ்ணா

gkrishna
28th September 2014, 05:35 PM
பம்மலார் ,

தங்கள் calender மிக சிறப்பு என்று நண்பர்கள் சிலாகித்தனர். எந்த pose என்பதில்தான் போர் நடக்கிறதாம். நன்றிகள்.

)

மிக அருமையாக வந்து உள்ளது நண்பர் கோபால்
ரசிகர்கள் அனைவரின் கையிலும் தவழ வேண்டிய ஒன்று
ப்ம்மலரின் கடும் உழைப்பு நிச்சயம் தெரியும்

RAGHAVENDRA
28th September 2014, 05:56 PM
பம்மலாரின் காலண்டர் கையில் வாங்கியவுடன் ஏற்படக்கூடிய சிலிர்ப்பினை அனுபவித்தால் தான் அதன் சிறப்பை உணர முடியும்

gkrishna
28th September 2014, 07:58 PM
நான் ரசித்த கலைஞர் நிகழ்ச்சி இப்போது கலைஞர் தொலை காட்சி
பராசக்தி பற்றிய சில காட்சிகளை லட்சிய நடிகர் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்

RAGHAVENDRA
28th September 2014, 08:17 PM
நீயா நானா நடிகர் திலகம் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் திரையரங்க அலங்காரங்களைப் பற்றிய நேயர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பகுதி தனியே யூட்யூப் இணைய தளத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் தான் முரளி சார் பேசும் தெய்வம் திரைப்படத்தின் நினைவுகளையும், கிருஷ்ணாஜீ ரோஜாவின் ராஜா திரைப்படத்தின் நினைவுகளையும் அடியேன் சொர்க்கம் திரைப்படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

http://www.youtube.com/watch?v=eicTiUl8NNg

நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் விஜய் டிவி

eehaiupehazij
28th September 2014, 11:27 PM
Tributes to NT : in commemoration to his ensuing Birthday celebrations


Mangaiyar thilagam : A movie with a difference in concept and performance by lead artists NT and Padmini who used to pair up hitherto but this time the later acting as the wife of NT's brother character!
Vaidya Films’ Mangaiyar Thilagam- 1955 was produced by A.C.Pillai, and directed by L.V.Prasad. Based on a Marathi story, it was a moving tale of an elder brother (S.V.Subbiah), and his wife (Padmini) who shower love and affection upon the younger brother, who grows up to become Sivaji. As he is much younger to Subbiah, he worships Padmini as his mother and is deeply attached to her. However, his wife (M.N.Rajam) gradually starts resenting his affection for Padmini, and the family’s tranquility is soon lost. (courtesy net)

https://www.youtube.com/watch?v=730Zdr-L5Pw


https://www.youtube.com/watch?v=0MCg1F3e20Q

https://www.youtube.com/watch?v=r4H5gzfuBlo

Murali Srinivas
28th September 2014, 11:31 PM
மாநகர் மதுரையில் நடிகர் திலகத்தின் வெள்ளை ரோஜா சென்ட்ரல் திரையரங்கில் வெளியிடப்பட்டு முதல் நாள் சிறப்பான வரவேற்பை பெற்றதை பகிர்ந்து கொண்டிருந்தேன். நேற்றைய தினம் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக மாலை மற்றும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நேற்று காலை முதல் பதற்றமான சூழல் இருந்தும் காலை மற்றும் மதிய காட்சிகளுக்கு 200-க்கும் அதிகமான மக்கள் வந்திருக்கிறார்கள். இன்று சற்று இயல்பு நிலை திரும்பியவுடன் பொது மக்கள் குறிப்பாக தாய்மார்கள் திரையரங்கிற்கு கணிசமான அளவில் வந்திருக்கின்றனர். இன்று நண்பகல் முதலே மதுரையில் சரியான மழை. விட்டு விட்டு பெய்த மழை மாலை நேரத்தில் வலுவாகவே பெய்திருக்கிறது. ஒரு பக்கம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுமோ என்ற பயம், பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாமல் குறைந்த அளவிலே ஓடும் சூழல், இவை போதாதென்று தொடர்ந்து பெய்த மழை இப்படி எதிர்மறை சூழல்களிலும் இன்று மாலைக் காட்சிக்கு வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 450. ஞாயிறு மாலைக் காட்சியைப் பொறுத்தவரை தங்கசுரங்கதையும் தாண்டிய வசூல். இன்றைய தினம் இரவுக் காட்சியோடு மொதத் வசூல் ரூபாய் 40,000/--ஐ கடந்திருக்கிறது. நேற்றைய தினத்தில் மட்டும் அந்த இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால் மூன்று நாள் மொத்த வசூலில் புதிய சாதனை படைத்திருக்கும்.

சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். தமிழகமெங்கும் நேற்று மாலைக் காட்சி நடைபெறவில்லை என்பதனால் நேற்று மதியக் காட்சி ஓடிய சங்கிலி திரைப்படமும் நேற்று மாலைக் காட்சி ரத்து செய்யப்பட்டது. இன்றைய தினம் பகல் மற்றும் மாலைக் காட்சிக்கு மக்கள் திரளாக வந்திருந்து ரசித்தனர்.மூன்று நாட்களில் நடைபெற்ற 5 காட்சிகளில் மொத்த வசூல் சுமார் ரூபாய் 30, 000/-.

கோவையில் அசாதாரண சூழ்நிலை சற்று தீவிரமாகவே இருந்தது. பதற்றம் முற்றிலும் தணிந்து விடாத நிலைமை. கோவை நகரை பொறுத்தவரை தனியார் பேருந்துகள்தான் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து. இன்றும் பெரும்பான்மையான தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலைமை. டிலைட் அரங்கை அடைவதற்கே பஸ் இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து வரவேண்டிய நிலை. சென்னை போன்று ஷேர் ஆட்டோக்கள் இல்லாத இடம். நேற்று முதல் டிலைட் அரங்கில் தினசரி 2 காட்சிகளாக திரையிடப்பட்ட எங்க மாமா திரைப்படத்தை இரண்டு தினங்களில் நடைபெற்ற 3 காட்சிகளில் [டிலைட்டில் பகல் மற்றும் மாலைக்காட்சி என்று இரண்டே காட்சிகள்தான், அதிலும் நேற்று மாலைக்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது] இந்த அசாதாரண சூழலிலும் டிலைட் போன்ற அரங்கில் திரையிடப்பட்டும் கூட 460-க்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்திருக்கின்றனர். இன்றைய பதற்றமான சூழலில் கோவையில் புதுப் படங்களுக்கு கூட பெரிய அளவில் ஆட்கள் வரவில்லையெனும் போது இது ஒரு மெச்சத் தகுந்த நிகழ்வு.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

sivaa
29th September 2014, 12:24 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/KumudhamPg4_zps324821d3.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/KumudhamPg4_zps324821d3.jpg.html)


நமக்கு வெலை இருக்கிறமாதிரி கூட்டத்துக்கு வந்திருக்கிறவன்
ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வேலை இருக்கும்லே

நாம கூட்டம் முடிஞ்சு நம்ம வேலைய பார்க்கிறமாதிரி
ஆளுக்காள் பார்பாங்க இல்லே

எதுக்காக அவங்கள காக்க வைக்கணும்
என்று எதுவித பகட்டும் இல்லாமல் சொன்னவர்
சரியான நேரத்திற்கு கூட்டத்திற்கு கிளம்பிவிட்டார்

தன்னை காண மற்றவர்களை காக்க வைத்தவர்கள் மத்தியில்
உங்களுக்காக மற்றவர்கள் காத்திருக்கக்கூடாது
அவர்கள் வேலைகள் கெட்டுவிடக்கூடாது
என நினைத்து செயல்பட்ட நீங்கள்தான் ஐயா
பொன்மனச்செம்மல்

sivaa
29th September 2014, 12:56 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/KumudhamPg6_zps6e5d571d.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/KumudhamPg6_zps6e5d571d.jpg.html)


தாங்கள் சொன்னதை சொல்லும்படியும் எழுததும்படியும் கூறி
அவற்றை சொல்லவைத்தும் எழுதவைத்தவர்களுக்கு முன்னால்

உனக்கு தோணுறத அப்படியே எழுது எனச்சொன்ன
ஐயா கணேசனே உன்போல் யார் உளர்?

உண்மையானவர்கள் நேர்மையானவர்கள் மனச்சாட்சி
உள்ளவர்கள் மட்டுமே உன்னை புரிந்துகொண்டவர்கள்

sivaa
29th September 2014, 01:06 AM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.09.2014 வெள்ளி முதல் திரையிடும் வெள்ளைரோஜா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/vellairoja_zps33fdde26.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

சூப்பர் சார்

சுமார் 25 ஊர்களிலேயே ஒரு கோடியை தாண்டியுள்ளது

மொத்த ஊர்களையும் சேர்த்தால் வெள்ளைரோஜா

எக்கச்சக்கமாக வசூலை குவித்திருக்குமபோல் தெரிகிறது

eehaiupehazij
29th September 2014, 07:46 AM
Tributes to NT : in commemoration to his ensuing Birthday celebrations

பழுத்த மரம்தான் கல்லடி வாங்கும். பசுமரமோ இடி தாங்கும் . பட்டமரமோ அடியோடு விழுந்து விடும்! மனிதவாழ்வும் இந்தத் தத்துவத்திற்கு உட்பட்டதே! வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம்!

நான் பெற்ற செல்வம் (1958) திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் காட்சியில் நடிகர்திலகத்தின் Close-up shot superimpose செய்யப்பட்டு அவரது நுண்ணிய முகபாவ மாற்றங்கள் ஒரே shotல் நம்மை மெய்மறக்க வைக்கும்!
இத்தகைய concept shots ரசிகர்களின் மனதில் பதிவது நடிகனின் திறமையான பாடல் வரிகளுக்கேற்ற expressions மூலமே! சிவாஜிகணேசன் ஏன் நடிகர்திலகமாக நடிப்புப்பேரரசராக ரசிகர் மனதில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறார் என்பதற்கு இக்காட்சி ' ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'

பாவமன்னிப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்...' பாடலும் இத்தகைய concept பாடலே!

இதன்பிறகு 1964ல் வெளிவந்த சங்கம் ஹிந்தி திரைப்படத்திலும் கதாநாயக இயக்குனர் ராஜ்கபூர் அவர்கள் இதே conceptல் ஒரு பாடல் காட்சியை அமைத்திருப்பார்

https://www.youtube.com/watch?v=_ongMRRVZrk

https://www.youtube.com/watch?v=OrrHhgNBMX8

https://www.youtube.com/watch?v=OLnSZSSJp5M

KCSHEKAR
29th September 2014, 11:26 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/sivajiperavai-3bit-2709_zpse74b3e87.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/sivajiperavai-3bit-2709_zpse74b3e87.jpg.html)

KCSHEKAR
29th September 2014, 12:01 PM
Dear Sir
Please check your inbox. I have sent a mail to you !
Regards
RKS

Dear R.K.S Sir,

தங்களுடைய PM பார்த்தேன்.

தங்களுக்கு PRIVATE MESSAGE ஆகவே பதிலை அனுப்பலாம் என்று முயற்சி செய்தேன்.

(The following errors occurred with your submission
• RavikiranSurya has exceeded their stored private messages quota and cannot accept further messages until they clear some space.)
அது இயலவில்லை.

இது ரகசியமான ஒன்றல்ல என்பதாலும், மற்றவர்களுக்கும் என்னுடைய விளக்கம் தெரியவேண்டும் என்பதற்காவும், இதனை இங்கே பதிவிடுகிறேன்..

தங்களுடைய கடிதம்.

A LETTER TO CONSIDER
திரு சந்திரசேகர் சார் அவர்களுக்கு

நடிகர் திலகம் அவர்களுடைய திரைப்படங்களை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்கள் சிலரை (அவர்கள் அடிப்படையில் நடிகர் திலகம் அவர்களின் பரம ரசிகர்கள்) சந்திக்க நேர்ந்தது. அவர்கள் நம்முடைய சிவாஜி சமூக நல பேரவை பற்றி சிறிது குறைபட்டுகொண்டார்கள். அதாவது, நடிகர் திலகம் திரையிடப்படும் திரை அரங்குகளின் பேரவையில் உள்ள எவரும் திரைப்படம் பார்க்க வராததுதான் அந்த குறை.

பேரவை நண்பர்கள் அனைவரும் அந்த நிலையை கடந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் நம்முடைய நடிகர் திலகம் அவர்கள் திரைப்படங்கள் திரையிட மிக பெரிய முயற்சி மேற்கொள்ளும்போது, மிகுந்த ஸ்ரமத்துக்கிடையில் திரையிடும்போது, உங்கள் அமைப்பை சேர்ந்தவர் எவரும் வராமல் இருப்பது நல்ல எடுத்துக்காட்டு அல்ல !

நடிகர் திலகம் அவர்கள் பெயரில் இயங்கும் இயக்கம் என்பதாலேயே சற்று உரிமையுடன் தங்களிடம் கேட்கவேண்டிய நிலை. திரைப்படம் தான் நடிகர் திலகம் அவர்கள் முதலில் வந்தது. அதன் விரிவாக்கம்தானே அரசியல், பொதுநலம் எல்லாம் .

ஆகையால் நடிகர் திலகம் திரைப்படங்கள் திரையிடும் இடங்களில் நல்லதொரு ஊக்கம் கொடுத்து பேரவையின் மூலம் நல்ல ஒரு SUPPORT பேரவையின் நண்பர்களை கொடுக்கும்படி நீங்கள் அறிவுரைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைகிறார்கள்..!

தங்களுடைய ஒத்துழைப்பு இதற்க்கு மிகவும் அவசியம் என்று நானும் கருதுகிறேன் !

நம்மிடம் இல்லாதது ஒற்றுமை ஒன்றுதான்.

மாற்றுமுகாம் நண்பர்களிடம் உள்ளது ஒற்றுமை ஒன்றுதான் !
இதில் எதற்கு பலம் ...எதற்கு பலவீனம் என்பதை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை சார் !

PLEASE ADVISE YOUR PERAVAI PEOPLE TO GO & SUPPORT ALL NADIGAR THILAGAM FILMS WHEN IT IS GETTING SCREENED IN THEATERS !!!

OUR FRIENDS ARE TRYING OUR BEST TO BRING BACK THE HUGE POPULARITY OF NT BY RELEASING HIS FILMS, MAKING PUBLIC TO SEE IT .....!!!

END OF THE DAY, YOUR ASSOCIATION TOO WOULD GET THE BENEFIT IS N't IT ?
THANKS
RKS

என்னுடைய பதில்
டியர் R .K .S சார்,

நான் என்றுமே நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்படும்போதெல்லாம் ஆதரவு தெரிவித்தே வந்திருக்கிறேன். அதுமட்டுமால், டிஜிட்டலில் மறுவெளியீடு செய்யப்பட்ட, கர்ணன், வசந்தமாளிகை, பாசமலர் என்று எல்லா படங்களுக்கும், தமிழகம் முழுவதும் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் விளம்பரங்கள், விழாக்கள் செய்ததை அனைவரும் அறிவார்கள். என்னைப்பொறுத்தவரை, (சமீப காலமாக) மகாலட்சுமி போன்ற திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்பதை விரும்புவதில்லை. அதே நேரத்தில், யாரையும் செல்லாதீர்கள் என்று சொல்லியதும் இல்லை.

தாங்கள் நடிகர்திலகத்தின் படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் குறைப்பட்டுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். அத்தகையவர்களிடம் எனக்குள்ள குறைகளையும் அவர்களிடம் கேட்டு தாங்கள் பதிலளித்தால் நன்றாக இருக்கும்.

1) இவர்கள் நடிகர்திலகத்தின் திரைப்படத்தை வாங்கி வெளியிட்டு சம்பாதிக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு பகுதியையாவது, நடிகர்திலகத்தின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளுக்கு விளம்பரம், போஸ்டர் என்று ஏதாவது செய்தது உண்டா?

2) நாங்களெல்லாம் (நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை) மற்றும் தனிப்பட்ட முறையில் கூட சிவாஜி ரசிகர்கள் பலர் பிறந்தநாள், நினைவுநாளுக்கு, அவரவர்களுடைய சொந்த சம்பாத்தியத்தில் ஒரு பகுதியைக் கொண்டு, அன்னதானம், நோட்டுப் புத்தகங்கள் கொடுத்தல் என்று பணிகளை செய்துவருகிறார்கள். ஆனால், இந்த விநியோகஸ்தர்கள் என்ன செய்தார்கள்?

3) நடிகர்திலகத்தின் சிலைக்கு பிரச்சினை என்றபோது, அதற்காக குரல் கொடுத்ததோடு, வழக்கு மன்றத்திலும், களத்தில் இறங்கிப் போராடவும் செய்தது நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை. இன்றளவிலும், நடிகர்திலகத்தின் சிலை அதே இடத்தில் நீடிப்பது என்பது மட்டுமல்ல, நடிகர்திலகத்திற்கு போராட இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று உணர்த்தியது நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை.

ஆனால், அப்போதெல்லாம், இத்தகைய விநியோகஸ்தர்கள் எங்கே போனார்கள்? (அவர்கள் அடிப்படையில் நடிகர் திலகம் அவர்களின் பரம ரசிகர்கள் என்று வேறு குறிப்பிடுகிறீர்கள்)

திரியிலும், முகநூலிலும் கண்டனங்களைத் தெரிவித்தவர்கள் கூட, களத்தில் இறங்கவில்லையே? அது சிவாஜி பேரவையுடன் இணைந்துதான் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டுமென்றில்லை, தனிப்பட்ட முறையிலோ, போஸ்டர்கள் மூலமோகூட கண்டனங்களைத் தெரிவிக்கவில்லையே?

மாற்றுமுகாம் நண்பர்களிடம் உள்ளது ஒற்றுமை ஒன்றுதான் ! என்று குறிப்பிடிருக்கிறீர்கள். உண்மைதான். அந்த ஒற்றுமை திரைப்படம் பார்ப்பதில் மட்டுமல்லாமல், சமூக நல, பொது விஷயங்களிலும் அவர்களிடம் ஒற்றுமை இருக்கிறது என்பதை தாங்கள் அறியாதவர் அல்ல.

இதுமாதிரி தொடர்ந்து என்னுடைய, என்னைப்போன்றவர்களுடைய குறைகள் இன்னும் ஏராளம் இருக்கிறது. அடிப்படையில் சிவாஜி ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு, நடிகர்திலகத்தின் திரைப்படங்களை மறு வெளியீடு செய்பவர்களை, முதலில் அவர்களை சரிசெய்துகொண்டு மற்றவர்களைக் குறைகூறச் சொல்லுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

ஒரு ரசிகன் என்ற முறையிலும், ஒரு அமைப்பை பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் நடத்தி வருபவன் என்ற முறையிலும் என்னுடைய உணர்வுகளையும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

K . சந்திரசேகரன்.

Gopal.s
29th September 2014, 01:04 PM
வசந்த மாளிகை-1972

எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.

மதனுடன் ரதி இணையின் இன்பம் இத்தரணி க்கல்லவோ
அதனுடன் விடுக்க பட்ட விரக பாணங்கள் வீசிய காதற்புயல்

ஆனந்தன் தன் கண்ணான லதாவை காணு முன்பு கிண்ணத்தை ஏந்திய எண்ணங்களில்
ஞானந்தனை முறித்து மது மாது ஆனந்தங்களில் தன்னை தொலைத்தவன்

கெட்டு போனவனே அன்றி கெட்டவனுமல்ல கெடுத்தவனுமல்ல
விட்டு விட்ட மனசாட்சியை தேடியலையும் தூய துணையரியா வீட்டு அனாதை

தொட்டு பார்த்து தூசு தட்டி கலைமகள் கைபொருளை சீராட்ட வந்தாள் ஒரு வாணி
விட்டு பட்ட வீட்டு சொந்தங்களோ தங்களுக்குள் விலங்கிட சுயநல சூழல் வளர்க்க

குடிலில் இணைந்தாலே குதூகல இணைப்பு மாளிகையில் வசந்தமாக தரும் மயக்கமென்ன
முடிவில் வசந்த மாளிகையில் யாருக்காக என உலகே உணர்ந்து ஊருக்கும் உணர்த்தியது

தாயிருந்தும் செவிலி மடியில் உறங்கிய சேய் இரவல் தாயை கௌரவ கொலை கொள்ளும்
பேயிடமிருந்து ஞாயமற்ற காயங்களில் மனதை தொலைக்க சுயம் தொலைத்தவன்

வசந்த மாளிகை வடித்து தன்னை மீட்டியவளால் தான் தன்னை மீட்ட அதிசயம்
கசந்த மாளிகையானதோ காயம் தரும் இங்கிதமற்ற ஒரே கேள்வியால்

மருந்தானவளே காயம் தருகிறாள் தன் சுயம் காக்க மீட்ட வீணையின் தந்தியருக்கிறாள்
அருமையான ஆத்மாவை மீட்க ஆட்கொண்ட தேவதையின் சிரத்தில் செய்த சத்தியம்

மருத்துவரோ மதுவை மருந்தாக்க நாடிய மாதுவுக்கு நாடேன் மதுவை என்ற
இருமனம் கேட்கும் வாலிப சேயை நாடாதே என சொந்தமின்றி சொல்லி விட

திருமணம் முடிக்க செல்லும் திருமகளை தீர வாழ்த்தி நஞ்சுதனை
விரும்பி நாடி ஓலமிடும் ஊமை காதலனின் உரத்த ஓசையின் உளமறிந்து

அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.

மானிட ஜாதியை விளித்து துவங்கும் நடிப்பு தேவன்
வானிடை உலவும் வனிதா தேவதையின் கை கோர்க்கும்

வைபவம் காண வசந்த மாளிகைகளின் கொட்டகை வாசல்களில்
எய்பவன் எங்கோ இருக்க எங்கள் மீதெல்லாம் மன்மத அம்புகள்

கிண்ணத்தை ஏந்தி களிநடம் புரிபவன் விசையுறு பந்தாக
எண்ணத்தை எல்லாம் வண்ண ஜாலமாய் வாரியிறைப்பதை

கண்ணதாசன் பாடலுக்கு என்னத்தை சொல்ல இதய கண்ணனின்
விண்ணதிரும் சிருங்கார ஜால வித்தை விண்ணவரும் காணா விந்தை

கன்னியருடன் கன்னமிடும் இக்கள்வனா எல்லோரின்
இன்னுயிரை கவ்வி சென்ற ஆலம் விழுதுகள் போல் வந்த

ஆயிரம் உறவுகளுடன் கண்ணீர் கடலில் குளிக்க செய்தவன்
பாயிர பாடல்களில் ஆலத்துடனே ஆடி களிக்கிறான்

வண்ண காஞ்சனாவுடன் சிவந்து மண்ணில் ஒருநாள் கண்டு
கன்னமிட்டவன் இந்த சின்ன காஞ்சனாவையும் கொஞ்சி சுவைக்கிறான்.

அப்பராக அப்பர் மக்களை அதி உன்னத அமைதியால் அசத்தியவன்
தப்பராக தோன்றி லோயர் தளத்தையும் துதி பாட துள்ளுகிறான்

வானத்து தேவதையோ வரவேற்பறையில் வரவேற்க வாலிப வண்ணங்கள்
கானத்தின் கணத்தில் காமுகன் கண்களுக்கு கன்னல் கரும்பாக

வாலிப வண்ண எண்ண விடலை கனவுகளில் கடலை கடக்கும் காற்றாக
ஜாலி பண்ண ஜோலி பார்க்கும் வெறி வேங்கையின் வெற்றிகாணா

இந்த நேரம் இன்னும் கூடாதா என் கனவு கன்னியின் தனங்கள் தரிசனம்
வந்த வாலிப மதனோ காக்கும் கரங்களாய் கனவை கலைக்க

உந்தலுடன் உன்மத்தினிடம் வேண்டாமெனில் விடு விரும்பினால் தொடு
கந்தலை மேலுடையால் போர்த்தி கன்னியை கனிய காண்பான்

குடிமகனை களிக்க வரும் கணிகையை காம கண்களால் களித்து
கடித்து முடிக்கும் கள்வெறியுடன் காந்த கவர் கண்களின் கவர்ச்சி

உதைத்து தள்ளி உன்மத்தம் ஊட்டி பதைத்து எழுப்பி பஞ்சணையில்
கதைத்து நெஞ்சணைத்து உடையென்ற திரை உடைக்கும் ஆனந்தனின் ஆனந்தம்

வீணை மீட்டும் வாணியை வீண் பொருளாய் வாட்டிஎடுத்து வெகுண்டவன்
இணை தேடும் இன்ப பரப்பின் பரபரப்பின் பார்வையில் கனிந்த நோக்கு

காந்தமென்ற சொல்லுக்கு கண்ணழகன் கண்களே காணு பொருளாய் கண்டோம்
சாந்தம் வென்ற சந்தத்தில் சாந்தியை பெற்றவன் சாந்தி பெரும் சாரம்

பறப்பதை தடுக்க விரும்பா திருந்திய குறும்பனின் விருதா விருப்பம்
திறப்பதை திறந்த திருமகளை தீர தீண்டுமன கரும்பனான விரும்பன்

ஆதி மனிதன் ஆடும் நடனம் வருணனையே வானம் திறக்க செய்யும்
பாதியில் நின்று ராசாவுடன் ராணி இணைவு காண குடிலில் மன்மத

பாணத்துடன் பருவ தாக போக பார்வையுடன் பழத்தை சுவைக்கும்
நாணத்துடன் நல்கி நாடும் நல்லிதயம் விளித்து கொள்ளியால் புகை நாடும்

இளமானுடன் இளமானுடன் இதம் காணும் இளமையுடன் தனிமை
வளமான வாலிபனுக்கு வருமோ உளம்நாடும் உள்ளத்துணிவு

குடிலிலே இணைவு காணும் இணைக்கு இல்லம் காண மாளிகை
மடியிலே மகிழ்ந்து கன்னத்தில் முத்தமிட்டு கள்வெறி கொள்வதும்

கழுத்திலே முத்தமிட்டு காண்போரையல்லாம் கனவு கடலில் கவிழ்த்து
எழுத்திலே வடிக்கவொன்னா ஏந்திழையாளுடன் மெல்லிசைவு அசைவு நடமாடி

பிரிவு துயருக்கு பெருங்காப்பியமே படித்து துவண்டு துடித்து
பரிவு துயர் ஊட்டி இருமனம் வேண்டிய பெருமன வேள்வி வடித்து

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
பாருக்காக இது ஊருக்காக என்று உலகே வியந்து ஊரறியா வெற்றி தந்து

முடியா மாளிகையாய் காதல் காவியங்களுக்கு கதை மாளிகையாய்
அடிமுடியறியா நடிப்பு சுரங்கத்தின் விடிவெள்ளி வடிவு வண்ணம்

கண்டங்கள் கண்டு வென்ற நடிப்பினை கண்டெங்கள் இதயம்
வண்டென நாடி நல்கும் வண்ண மலர் வாணிக்கும் வாழ்த்து சொல்லி வணங்கும்

Gopal.s
29th September 2014, 01:30 PM
Thanks to ESVEE for his write-up on Vasanthamaligai.


நடிகர் திலகத்தின் "வசந்த மாளிகை" ஒரு காவியம்!

தெய்வமாக மதிக்கவேண்டிய அம்மா ஒரு தாய்ப்பாசம் இல்லாத ஒரு ஜமீந்தாரிணி, கொலைகாரி என்று அறிந்து குடிக்க ஆரம்பித்து குடிகாரனாக வளர்ந்தவிட்ட நல்ல இதயம்கொண்ட இளைய ஜமீந்தார், ஆனந்த் என்கிற சின்னதுரை தான் சிவாஜி. இவரை ஏன் நடிகர் திலகம் னு சொல்றாங்க னு யாருக்கும் இன்னும் சந்தேகம் இருந்தால் இந்த டி வி டி பார்க்கவும்!

குடிகாரராக இருக்கும் இளைய ஜமீன் இடம் பர்சனல் செக்ரட்டரியாக வேலைக்கு சேரும் அழகான கவர்ச்சியான, நேர்மையான அகம்பாவம் பிடித்த, சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக்கொடுக்காத லதாவாக நடித்துள்ளார் வாணிஸ்ரீ.

லதா, குடிகாரராக, பெண்பொறுக்கியாக இருக்கும் சின்னதுரை ஆனந்தை நற்பாதைக்கு கொண்டு வருகிறார், ஆனந்த் தன் மனதை லதாவின் அழகுக்கும், அன்புக்கும் பறிகொடுக்கிறார். தன்னை நல் வழிப்படுத்திய லதாவுக்கு தன் இதயத்தை அளிக்கிறார். லதா ஆசையுடன் அந்த அன்பு இதயத்தை பெற்றுக் கொள்கிறார்.

ஜமீந்தார் ஏழைப்பெண்ணை மணப்பதா? அவ்வளவு சீக்கிரம் ஜமீன் விட்டுவிடுமா? இதுதான் படம்! தெலுங்கு படத்தை ரி-மேக் செய்த படம் இது. தமிழில் சுமூகமாக முடிகிறது.


இந்தப்படத்தில் சிவாஜி பேசும் சில வசனங்கள்!

* தன்னிடம் புதிதாக வேலைக்கு வரும் பெண்ணிடம்:

இதுதான் அழகாபுரி ஜமீன். இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க ஆனால் கடைசியில் மனுஷனுக்கு தேவை ஆறடிமண்!

* தன்னைப்பெற்ற தாய்ப்பாசமில்லா அம்மாவிடம்:

பாசமா? அது ஏதும்மா இந்த வீட்டிலே?

*லதாவை கற்பழிக்க முயலும் கெட்டவனிடம்:

இடியட்! சரினா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. அதுதான் நம்ம ப்ரின்சிப்பிள்.

* தன்னை தன் சுற்றத்தார் அவமானப்படுத்தும்போது, லதாவிடம்:

குடிகாரன்கூட வருத்தப்படுமளவுக்கு பேசுவதுதான் இவர்களுக்கு தெரிந்த மரியாதை.

* நன்றியுள்ள வேலைக்காரனிடம்:

பொறந்தநாளா? எனக்கா? நான் பிறந்தது எப்போ என்று என்னைப்பெத்த தாய்க்கும் தெரியாது, என்னை படச்ச ஆண்டவனுக்கும் தெரியாது, ஏன் எனக்கே தெரியாது. ஆனால் என் பொறந்த நாளை நீ மட்டும் ஞாபகம் வச்சிருக்கியே? இதை பாசம்னு சொல்வதா? இல்லை விஸ்வாசம்னு சொல்வதா? இதுதான் தூய்மையான அன்பு! அதான் அன்பை கடவுளுக்கு சமமா சொல்றாங்க இல்லையா? நான் யாருக்காக் பிறந்தேனோ, தெரியலை? ஆனால் நீ பிறந்தது மட்டும் எனக்காகத்தான்!


பாடல்கள்:

கண்ணதாசன் பாடல்வரிகள் எழுத கே வி மஹாதேவன் இசையமைக்க டி எம் சவுந்தர்ராஜன், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி பாடியவை.

* மானிட ஜாதியே * ஏன் ஏன் ஏன் * குடிமகனே * கலைமகள் கைப்பொருளே * மயக்கமென்ன
* இரண்டு மனம் வேண்டும் * யாருக்காக! எல்லாமே நல்ல பாடல்கள்!


இந்தப்படத்தில் காதல் கட்டமா இருக்கட்டும், வசனமா இருக்கட்டும், ஸ்டயிலாக இருக்கட்டும், சிவாஜி பின்னி இருப்பார்.

வாணிஸ்ரீ இவருக்கு ஈடுகொடுத்து நடித்து இருப்பார். கவர்ச்சியிலும், காதலிலும், தன் சுயமரியாதயை காப்பாற்றும் சீன்களிலும் கிளப்பி இருப்பார் வாணிஸ்ரீ.

பாலாஜி, மேஜர் சுந்தர் ராஜன், ஸ்ரீகாந்த், நாகேஷ், வி கே ராமசாமி, ரமாபிரபா, சுகுமாரி, பேபி ஸ்ரீதேவி எல்லோரும் நடித்துள்ளார்கள்

வசந்த மாளிகை, 1972 வில் வந்த ஒரு காவியம்தான்!

Gopal.s
29th September 2014, 01:32 PM
]http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_001330643-1.jpg?t=1352268224

http://padamhosting.com/out.php/i44913_vlcsnap46007.png

http://padamhosting.com/out.php/i44914_vlcsnap46751.png

http://padamhosting.com/out.php/i44915_vlcsnap46959.png

http://padamhosting.com/out.php/i119943_vlcsnap2011102312h31m36s233.png

Gopal.s
29th September 2014, 01:38 PM
Maalaimalar

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sivaji%20ganesan/v2.jpg

வசந்த மாளிகையில் நடித்த வாணிஸ்ரீ

இன்றைய திரைப்பட ரசிகர்களாலும் 'காதல் காவியம்' என்று போற்றப்படுகிற 'வசந்தமாளிகை'யில், சிவாஜியுடன் நடித்தவர், வாணிஸ்ரீ.மற்றும் 'உயர்ந்த மனிதன்', 'சிவகாமியின் செல்வன்', 'வாணி- ராணி', உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

வாணிஸ்ரீயின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் நெல்லூர். அவரது இயற்பெயர் ரத்தினகுமாரி. நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறியது, வாணிஸ்ரீ குடும்பம். அப்போது மயிலை ஆந்திரசபையில் படித்து வந்தார்.பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது நடனம் கற்றுக்கொள்ள ஆசைப் பட்டார். அந்த ஆசையை பெற்றோரிடம் வாணிஸ்ரீ தெரிவித்தார். எனவே, ஒரு நடனஆசிரியரை ஏற்பாடு செய்தார்கள்.

நடனம் கற்றுமுடித்ததும் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன்விளைவாக நாடக மேடைகளில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது 'பீஷ்மர்' என்ற தெலுங்குப்படத்தில் சிறுவேடத்தில் நடிக்கவாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் நாடகத்தில் நடிக்கத்தொடங்கினார்.

'சில்லரகொட்டு சின்னம்மா' என்ற நாடகத்தில் கதாநாயகியாக தோன்றிய இவரது நடிப்பு, பலரையும் கவர்ந்தது.

அதன்பின்னர் முதன்முதலாக 'வீரசங்கல்ப்' என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு தொடர்ந்து தெலுங்கில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.

இந்த சமயத்தில் 'காதல் படுத்தும் பாடு' என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்தார். அந்த படம் வெளிவந்த பிறகு தமிழ்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தேடி வரத்தொடங்கின.

1968-ம் ஆண்டு வெளியான 'உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜியுடன் வாணிஸ்ரீ ஜோடி சேர்ந்தார்.

ஏவி.எம்.தயாரிப்பில் வெளிவந்த 'உயர்ந்த மனிதன்' வெற்றிப் படமானது.

சிவாஜியுடன் நடித்தது பற்றி வாணிஸ்ரீ கூறியதாவது:-

'நெல்லூரில் நான் வசித்தபோது, சிவாஜி நடித்த 'மனோகரா' தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு வெளிவந்தது. அந்த படத்தில் தான், முதல் முதலாக சிவாஜியை பார்த்தேன்.

பின்னர், சிவாஜியுடன் நடிக்க ஆரம்பித்த பிறகுகூட, அவரிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏவி.எம்மின் உயர்ந்த மனிதன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற இருந்தது. அதில் நடிக்க, நானும் சென்றேன்.

இதில் சிவாஜி எனக்கு ஹீரோ என்றதும், இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. மறுநாள் காலையில் சிவாஜியுடன் நடிக்கவேண்டும். முன்பின் அறிமுகம் கூடநமக்கு இல்லையே, எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று கலக்கமாக இருந்தது.

நெல்லூரில் திரையில் பார்த்தவரை, நேரில் பார்த்தேன். அதுவும் அவரது கதாநாயகியாக.

சிவாஜி என்னை பார்த்தவுடன் 'உன் போட்டோக்களை பத்திரிகைகளில் பார்த்து இருக்கிறேன். நல்லா நடிப்பியா? தமிழ் நன்றாக பேசவருமா?" என்று கேட்டார். நான் சிரித்தபடி தலை அசைத்தேன்.

'வெள்ளிக்கிண்ணம் தான்' என்ற பாட்டுக்குத்தான் முதன் முதலாக சிவாஜியுடன் நடித்தேன்'.

இவ்வாறு வாணிஸ்ரீ கூறினார்.

'உயர்ந்த மனிதன்' படத்திற்கு பிறகு சிவாஜிக்கு ஜோடியாக அதிக படங்களில் நடிக்க வாணிஸ்ரீக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

அப்படி நடித்தப்படங்களில் `சிவகாமியின் செல்வன்', `வசந்தமாளிகை' ஆகிய படங்களில் வாணிஸ்ரீ நடிப்பின் சிகரத்தைத் தொட்டார் என்று கூறலாம். இந்தியில் வெளியாகி, சக்கைபோடு போட்ட 'ஆராதனா' படம், 'சிவகாமியின் செல்வன்' என்ற பெயரில் தமிழில் தயாராகியது. சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கன்னா நடித்த இரட்டை வேடத்தில் சிவாஜி நடித்தார். சார்மிளா டாகூர் நடித்த வேடத்தில் வாணிஸ்ரீ நடித்தார்.

முன் பகுதியில் இளமையான கதாநாயகி. பின் பகுதியில், வயோதிகத் தோற்றம்! மாறுபட்ட இரு வேடங்களில் அற்புதமாக நடித்தார், வாணிஸ்ரீ. அதேபோலத்தான் தமிழத் திரைப்பட ரசிகர்களால், காதல் காவியம் என்று போற்றப்படும் 'வசந்தமாளிகை' திரைப்படத்தில் வாணிஸ்ரீ நடிப்பில் அசத்தி இருந்தார்.

எந்த நேரமும் போதையில் தள்ளாடும் சிவாஜியை திருத்தி காதலிக்கும் விமானப் பணிப்பெண் கதாபாத்திரத்தில் வாணிஸ்ரீ நடித்தார். அனைத்து பாடல்களும் அருமையாக அமைந்த 'வசந்தமாளிகை', சிவாஜி, வாணிஸ்ரீ நடிப்பால், என்றென்றும் வாழும் காவியமாக இருந்து வருகிறது.

Russellbpw
29th September 2014, 01:43 PM
dear r.k.s sir,

தங்களுடைய pm பார்த்தேன்.

தங்களுக்கு private message ஆகவே பதிலை அனுப்பலாம் என்று முயற்சி செய்தேன்.

(the following errors occurred with your submission
• ravikiransurya has exceeded their stored private messages quota and cannot accept further messages until they clear some space.)
அது இயலவில்லை.

இது ரகசியமான ஒன்றல்ல என்பதாலும், மற்றவர்களுக்கும் என்னுடைய விளக்கம் தெரியவேண்டும் என்பதற்காவும், இதனை இங்கே பதிவிடுகிறேன்..

தங்களுடைய கடிதம்.

[b][u]


திரு kc சேகர் சார் அவர்களுக்கு

தாங்கள் அனுப்பிய இன்பாக்ஸ் மின் அஞ்சல்உம் கிடைத்தது.

சம்பந்தம் உள்ளது சபைக்கு வந்தபிறகு சபையில் என் எண்ணங்களை பகிர்வது தானே முறை. ஆகையால் இங்கு இந்த சபையில் நான் உங்களுடைய சில கேள்விகளுக்கு பதில் தர கடமைபட்டவனாகிறேன் !

தாங்கள் கூறியவற்றை படித்து நிலைமையை புரிந்துகொண்டேன். உங்களுடைய எண்ணங்கள் மற்றும் பேரவையின் இதர உறுப்பினர்களின் எண்ணங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டவை சரியான ரீதியில் புரிந்துகொள்ள முடிகிறது !

என்னிடம் குறைபட்டுக்கொண்ட, ஆதங்கப்பட்டு கூறியவற்றை தங்களிடம் பகிர்ந்துகொண்டேன். அவ்வளவே. அவர்கள் குறைபட்டு, ஆதங்கபட்டார்களே தவிர கோபம் கொள்ளவில்லை.

ஆனால் தங்களுடைய பதிலில் ஒரு மறைமுக கோபம் தெரிகிறது.

எனக்கு தெரிந்த வரையில் நடிகர் திலகம் திரைப்படம் வெளியிடும் அனைவரும் வியாபாரிகள் அல்ல !

வியாபாரம் என்றால் ஒரு பொருளை வாங்கி அதனை அதிக விலைக்கு விர்ப்பதாகும் அல்லவா ? அல்லது ஒரு பொருளை வாங்கி திரும்ப திரும்ப அந்த பொருளை பயன்படுத்தி வாங்கிய விலை வந்த பிறகும் கூட அதில் இருந்து வருமானம் பார்த்தால் அது வியாபாரமாகும் என்று நினைக்கிறன். அப்படி செய்பவன் வியாபாரி ஆவான் என்பதுவே நான் அறிந்தவரை வியாபாரம் அல்லது வியாபாரி என்பதன் பொருள் !

ஓர் இருவர் இருக்கலாம்..திரு சொக்கலிங்கம் போன்றவர்கள் ..இதை தொழிலாக செய்பவர்கள். அவர்களுக்கு வியாபாரி என்ற பட்டம் பொருந்தும் என்பதை நீங்கள் அல்ல நான் அல்ல அனைவருமே அறிவார்கள்.

மீதம் இருப்பவர்களில் பலர் நீங்கள் கூறியதைப்போல உங்களையும் உங்கள் பேரவையின் மற்ற உறுப்பினர் போல அவர்களுடைய சொந்த மாத சம்பளத்திலிருந்து தான் இதை செய்கிறார்கள். அவர்களுக்கும் யாரும் எந்த நன்கொடையும் கொடுத்து அதில் படத்தை வாங்கி திரையிடுவதில்லை என்றே நினைக்கிறன்.

மேலும் அவர்களுடைய அந்த முயற்சி ரசிகர்களின் ஆதங்கத்தை தீர்பதற்காக செய்யப்படும் முயற்சியே தவிர அதில் நீங்கள் கூறியிருப்பதை போல வியாபார நோக்கம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

காரணம் முதலில் வெளியாகும் திரை அரங்கு தவிர வேறு எங்கும் அவர்கள் திரையிடுவதில்லை. நடிகர் திலகம் திரைப்படத்தை வெளியிடுவதை நீங்கள் கூறுவதை போல வியாபாரமாக அதை பார்ப்பார்களேயானால் அப்படி, ஒரு திரைஅரங்குடன் நிறுத்திகொள்வார்களா என்று சற்றே யோசித்துப்பார்க்க வேண்டுகிறேன்.

நீங்கள் கூறியதை சரியா தவறா என்று எப்படி ஆராய வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது ! இது என்னுடைய opinion அவ்வளவே !

நீங்கள் செய்வது ஒரு சமூக சேவை. நிச்சயம் போற்றத்தக்கது ! பெருமை படத்தக்கது ! அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது சார் !

அதே சமயத்தில் நகரில் நடிகர் திலகம் அவர்கள் படங்கள் வரவிடாமல் பல சதிகள் திரை அரங்குகளில் நடந்தேறியபோது, அதை முறியடித்து, மறுத்த திரை அரங்குகளில் நடிகர் திலகம் திரைப்படங்களை திரை இட செய்து இப்போது தமிழகமெங்கும் அவர் படங்கள் காண்பிக்க படுகிறது என்றால் ...மக்களால் தங்களுடைய வாழ்வில் பயன்படும் அளவிற்கு கருத்துக்களை கொண்ட நடிகர் திலகம் படங்களை சமீப காலமாக பார்க்க முடிகிறது என்றால் ...இதை செய்பவர்கள் பொருத்தவரை அதுவும் ஒரு சேவை தான் சார் !

அந்த சமயத்தில் அதே ரசிகர்கள், சமூக நல பேரவை அப்போது எங்கே சென்றது ? நடிகர் திலகம் படங்கள் திரையிட என்ன செய்தார்கள் என்று வினா எழுப்பினால் அது சரியா ? முறையா ? எழுப்பதான் முடியுமா ?

நடிகர் திலகம் சிலை விவகாரம் பற்றி நான் இங்கு எதுவும் பேசவில்லை. உங்களுடைய அந்த செய்கைக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள், வந்தனங்கள், தலைவரின் ஆன்மா ஆசிகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி !

நடிகர் திலகம் திரைப்படம் திரையிடும் வியாபார நோக்கம் அல்லாத ரசிகர்கள் ஒரு சிலர் முகநூல் வழியாக, இணையத்தளம் வழியாக மின் அஞ்சல் வழியாக இதனை கண்டித்தும், இதனை பற்றி எண்ணங்களை பகிர்ந்தும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் சரியாக விஷயத்தை உணரும் வண்ணம் செய்திகளை பகிர்ந்துள்ளார்கள் !

அதன் தாக்கம் ஒரு tv , ஒரு பத்திரிகை என்று ஒரு வட்டத்திற்குள் மட்டுமே அடங்காது உலகம் முழுதும் தாகத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதும் கூட என்பதை நான் கூறிதான் நீங்கள் அறியவேண்டுமா சார் ! தாங்கள் அனுபவசாலி !

தொலைகாட்சியில் வந்தால்தான், போஸ்டர் அடித்து ஓட்டும் முறையில்தான், அன்னதானம் மற்றும் இதர உதவி திட்டங்கள் செய்தால்தான் ஒருவர் நடிகர் திலகத்திற்கு சேவை செய்கிறார் என்று பொருள் இல்லை !

நடிகர் திலகத்தை பற்றி, அவருக்கு சேவை செய்வது மேற்கூறிய முறை மட்டுமே சரியான முறை என்பதில்லை,.

ஒரு brand / society name இல்லாமல் கூட, விளம்பரம் செய்யாமல் கூட சேவைகள் செய்யலாம் என்ற கருத்து உள்ளவன் நான். இவ்வளவு ஏன்...நடிகர் திலகம் அவர்கள் கூட பல நல்ல காரியங்களை வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் என்பது போல செய்துள்ளார். அவருக்கு advertisement தேவை இல்லை மற்றும் அவருக்கு அப்படி செய்வதில் எந்த உள்நோக்கமும் இல்லை. There is no hidden agenda ....in whatever good deeds he did !!!

விளம்பரம் செய்யாமல் கூட பல நல்ல காரியங்களை செய்யலாம். அப்படி செய்யும் பல ரசிகர்களை எனக்கும் பரிச்சயம் உண்டு...எதற்கு சொல்கிறேன் என்றால்...நமக்கு தெரியாத விஷயத்தை பற்றி ஆணித்தரமாக நாம் உரைத்தல் கூடாது ! நம்முடைய எண்ணங்களை மற்றவர் மேல் திணிக்கவும் கூடாது !

மேலும் சிவாஜி சமூக நல பேரவை பல நல்ல காரியங்கள் செய்து வருவது அனைவரும் அறிந்தது. இது பாராட்டபடவேண்டியது, பெருமைபடவேண்டிய விஷயமும் கூட ...!

அனைவரும் அறியாதது என்னவென்றால், பேரவை மற்ற நடிகர் திலக குழுக்களுடன் கலந்தாலோசனை செய்து நல்ல காரியம் செய்யும்போது எந்த banner உம் ...அதாவது "சிவாஜி சமூக நல பேரவை" ...அல்லது " இதயராஜ சிவாஜி மன்றம் " இப்படி எந்த ப்ராண்டிங்கும் இல்லாமல்

" நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் பொது நல வைபோகம் " என்று இதை செய்யலாம் என்று எப்போதாவது கலந்தாலோசனைக்கு அழைத்ததுண்டா ? அல்லது மற்ற குழுக்கள் தான் தங்களிடம் அணுகினார்களா ? இரெண்டும் இல்லை ...!

காரணம் அவர் அவர்களுக்கு அவர் அவர் organization பிராண்டிங் ஏதோ ஒரு காரணத்திற்க்காக அவசியமாகிறது. ! சுயநலம் இல்லாத ஒரு இடத்தில் நடிகர் திலகம் மட்டுமே பிரதானமாக இருப்பார் ! அந்த நல்ல காரியங்கள் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் !

என்னிடம் பேசியவர்கள் மையம் பற்றி அவ்வளவு KNOWLEDGE இல்லாதவர்கள் ! ஆகையால் அந்த எண்ணங்களை உங்களிடம் through inbox பகிர்ந்தேன்.

நடிகர் திலகம் அவர்களுடைய படங்களை திரையிடுபவர்கள் ஒற்றுமையை முன்னிட்டு அவர்கள் கருத்துக்களை முன்வைத்தார்களே தவிர, பேரவை உள்ளவர்களின் financial support கிடைக்கவில்லை ..அதாவது...இன்னும் பச்சையாக சொல்லப்போனால் ...பேரவை சேர்ந்தவர்கள் ஒரு 50 பேர் வந்திருந்தால் 50 டிக்கட் இன்னும் போயிருக்கும் ...1000 மோ 500 ஒ அதிகம் வசூல் ஆகி இருக்கும் என்ற ரீதியில் கூறவில்லை. !

இதை நான் இங்கு குறிப்பிட காரணம் உங்களுடைய மனதில் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதை நீக்கிவிட இது வழி வகை செய்யும் என்பதால் குறிப்பிடுகிறேன். காரணம் உங்களுடைய பதிலில் ஆதங்கத்திற்கு பதில் என்கிற தொனியில் பொருள் குறைவாகவும்...கோபத்தின் தொனி சற்று அதிக சதவிகிதத்தில் இருப்பது என்னால் உணர முடிகிறது !

பேரவை எந்த நல்ல காரியம் செய்யும்போதும் அதன் உறுப்பினர்கள் நம் ரசிகர்களை ..அவர்கள் வெறும் ரசிகராக இருந்தாலும் சரி...நடிகர் திலகம் திரைப்படம் வெளியிடும் ரசிகராக இருந்தாலும் சரி அல்லது உங்கள் எண்ணப்படி அப்படி ஒரு வியாபாரியாக இருந்தாலும் சரி...பேரவை உறுப்பினர்கள் அணுகியிருந்தால் நிச்சயம் அவர்களும் அந்த நல்லகாரியங்களில் பெரும் பங்கு வகிப்பார்கள் !

அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள் ..நான் இங்கு கூறுவது உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள் !

Regards
rks

Gopal.s
29th September 2014, 01:45 PM
http://i37.tinypic.com/2008aq8.jpghttp://i36.tinypic.com/2dlrjwy.jpg
http://i38.tinypic.com/9b8w1h.jpghttp://i36.tinypic.com/qnsdpw.jpg
http://i36.tinypic.com/e5mv6a.jpghttp://i33.tinypic.com/33dzjaa.jpg
http://i38.tinypic.com/2ceet0.jpghttp://i33.tinypic.com/2s0g042.jpg
http://i36.tinypic.com/256fj2f.jpghttp://i35.tinypic.com/2upefbl.jpg

Gopal.s
29th September 2014, 01:58 PM
http://chennaionline.com/images/gallery/2012/November/20121124101502/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_Photos_29.jpg

http://chennaionline.com/images/gallery/2012/November/20121124101502/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_Photos_26.jpg


http://chennaionline.com/images/gallery/2012/November/20121124101502/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_Photos_27.jpg


http://chennaionline.com/images/gallery/2012/November/20121124101502/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_Photos_25.jpg

Gopal.s
29th September 2014, 02:03 PM
http://chennaionline.com/images/gallery/2012/November/20121124101502/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_Photos_08.jpg

http://chennaionline.com/images/gallery/2012/November/20121124101502/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_Photos_21.jpg

http://chennaionline.com/images/gallery/2012/November/20121124101502/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_Photos_24.jpg

http://chennaionline.com/images/gallery/2012/November/20121124101502/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_Photos_15.jpg

Gopal.s
29th September 2014, 02:10 PM
Listed the centres where VM had celebrated runs.

1. Chennai - Shanthi -176 Days

2. Chennai - Crown - 140 Days

3. Chennai - Bhuvaneswari - 140 Days

4. Madurai - New Cinema- 200 Days

5. Tiruchy - Raja - 140 Days

6. Coimbatore - Raja -107 Days

7.Salem - Jaya - 107 Days

8. Erode -Muthukumar - 107 Days

9. Thanjai - Jupiter - 119 Days

10. Kudandhai - Noor Mahal- 101 Days

11. Mayiladuthurai - Alagappa - 101 Days

12. Colombo - Capitol - 287 Days

13. Jaffna - Wellignton - 217 Days.

Such was the power of Vasantha Maligai.

Russellisf
29th September 2014, 04:33 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/sivaji_jpg_1598732h_zps36cd0ed2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/sivaji_jpg_1598732h_zps36cd0ed2.jpg.html)



வாழ்க்கை என்பது எதிர்பாராத கணங்களினால் நிறைந்தது. உலகத்திலேயே ஆகச் சிறிய சிறுகதையை எழுதியவர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே. அந்தச் சின்னஞ்சிறு கதை உச்சத்தை எட்டியது அதனுடைய எதிர்பாராத முடிவினால். ஆறே ஆறு வார்த்தைகள். ‘விற்பனைக்கு. குழந்தையின் சப்பாத்து. புத்தம் புதிது. அணியப்படவேயில்லை.’

சிவாஜியும் பத்மினியும் நடித்த ’எதிர்பாராதது’ திரைப்படம் 1950-களில் வெளிவந்தது. படத்தில் சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா இரண்டாம் தாரமாக பத்மினியை மணந்துகொள்கிறார். சிவாஜி நாகையாவின் மகன் என்பதால், இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னை முறை ஆகிவிடுகிறார். நாகையா இறந்துபோக… ஒருநாள் சிவாஜி பத்மினியைத் தொடுகிறார். பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி அவர் மூன்று நாட்களாகப் படப்பிடிப்புக்கு வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க பத்மினி அவர் வீட்டுக்குப் போய் சமாதானம் செய்து அவருக்குப் புத்தம்புது ஃபியட் கார் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கிறார். அதுதான் சிவாஜியின் முதல் கார். எதிர்பாராத அடி; எதிர்பாராத பரிசு.


courtesy the hindu tamil

ScottAlise
29th September 2014, 05:09 PM
Vasantha Maaligai pics are refreshing

Thank you Gopal Sir

Also Thanks for stylish pic of NT Yukesh babu sir

ScottAlise
29th September 2014, 05:17 PM
It has /is been a trend to use the name of old classic for the new movies , Sathileelavathi, Billa, Naan Mahaan Alla, Kazhuku, Raja Rani, Raja, Ambikapathy , Padikaathavan

Nadigar Thilagam & MGR movies are no exceptions

சவாலே சமாளி title is kept for a movie

It might be remembered Saraswathi Sabatham title was used which was withdrawn later by following objections raised by NT fans & NT Peravai

KCSHEKAR
29th September 2014, 05:19 PM
திரு kc சேகர் சார் அவர்களுக்கு

ஆனால் தங்களுடைய பதிலில் ஒரு மறைமுக கோபம் தெரிகிறது.

எனக்கு தெரிந்த வரையில் நடிகர் திலகம் திரைப்படம் வெளியிடும் அனைவரும் வியாபாரிகள் அல்ல !

ஓர் இருவர் இருக்கலாம்..திரு சொக்கலிங்கம் போன்றவர்கள் ..இதை தொழிலாக செய்பவர்கள். அவர்களுக்கு வியாபாரி என்ற பட்டம் பொருந்தும் என்பதை நீங்கள் அல்ல நான் அல்ல அனைவருமே அறிவார்கள்.

அதே சமயத்தில் நகரில் நடிகர் திலகம் அவர்கள் படங்கள் வரவிடாமல் பல சதிகள் திரை அரங்குகளில் நடந்தேறியபோது, அதை முறியடித்து, மறுத்த திரை அரங்குகளில் நடிகர் திலகம் திரைப்படங்களை திரை இட செய்து இப்போது தமிழகமெங்கும் அவர் படங்கள் காண்பிக்க படுகிறது என்றால் ...மக்களால் தங்களுடைய வாழ்வில் பயன்படும் அளவிற்கு கருத்துக்களை கொண்ட நடிகர் திலகம் படங்களை சமீப காலமாக பார்க்க முடிகிறது என்றால் ...இதை செய்பவர்கள் பொருத்தவரை அதுவும் ஒரு சேவை தான் சார் !

அந்த சமயத்தில் அதே ரசிகர்கள், சமூக நல பேரவை அப்போது எங்கே சென்றது ? நடிகர் திலகம் படங்கள் திரையிட என்ன செய்தார்கள் என்று வினா எழுப்பினால் அது சரியா ? முறையா ? எழுப்பதான் முடியுமா ?

ஒரு brand / society name இல்லாமல் கூட, விளம்பரம் செய்யாமல் கூட சேவைகள் செய்யலாம் என்ற கருத்து உள்ளவன் நான். இவ்வளவு ஏன்...நடிகர் திலகம் அவர்கள் கூட பல நல்ல காரியங்களை வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் என்பது போல செய்துள்ளார். அவருக்கு advertisement தேவை இல்லை மற்றும் அவருக்கு அப்படி செய்வதில் எந்த உள்நோக்கமும் இல்லை. There is no hidden agenda ....in whatever good deeds he did !!!

விளம்பரம் செய்யாமல் கூட பல நல்ல காரியங்களை செய்யலாம். அப்படி செய்யும் பல ரசிகர்களை எனக்கும் பரிச்சயம் உண்டு...எதற்கு சொல்கிறேன் என்றால்...நமக்கு தெரியாத விஷயத்தை பற்றி ஆணித்தரமாக நாம் உரைத்தல் கூடாது ! நம்முடைய எண்ணங்களை மற்றவர் மேல் திணிக்கவும் கூடாது !

அனைவரும் அறியாதது என்னவென்றால், பேரவை மற்ற நடிகர் திலக குழுக்களுடன் கலந்தாலோசனை செய்து நல்ல காரியம் செய்யும்போது எந்த banner உம் ...அதாவது "சிவாஜி சமூக நல பேரவை" ...அல்லது " இதயராஜ சிவாஜி மன்றம் " இப்படி எந்த ப்ராண்டிங்கும் இல்லாமல் " நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் பொது நல வைபோகம் " என்று இதை செய்யலாம் என்று எப்போதாவது கலந்தாலோசனைக்கு அழைத்ததுண்டா ? அல்லது மற்ற குழுக்கள் தான் தங்களிடம் அணுகினார்களா ? இரெண்டும் இல்லை ...!

Regards
rks

டியர் R .K .S சார்,

நடிகர்திலகம் செய்த, கொடுத்த நன்கொடைகளை வெளியில் தெரியாமல் செய்ததால்தான் இன்றுவரை நாம் அதனை காட்டு கத்தலாகக் கத்தி மற்றவர்களுக்குத் தெரியவைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நடிகர்திலகத்தின் புகழை, சேவைகள் பல செய்து, தனி மனிதனாக, யாருக்கும் தெரியாமல், ரகசியமாகப் பரப்புகிறேன் என்று சொல்பவதேல்லாம் இந்தக் காலத்தில் எடுபடாது. விநியோகஸ்தர்கள் எல்லாம் வியாபாரிகள் அல்ல என்றால், நஷ்டம் அடைகிறார்களா? லாபம் அடைகிறார்கள் என்றால், அவர்களே நடிகர்திலகத்தின் புகழ் காக்க ஏதாவது நிகழ்ச்சிகள் செய்யவேண்டியதுதானே? அவர்களும், ரகசியமாக நற்பணிகள் செய்கிறார்களா?

எனக்கு தங்களுடன் அறிமுகமும் இல்லை, பழக்கமும் இல்லை. தாங்கள் சென்னையில் இருப்பவர் என்றால், பிறந்தநாள், நினைவுநாளுக்கு, நடிகர்திலகத்தின் சிலைக்குக் கூட மரியாதை செலுத்தலாமே? அதையும் நான் மானசீகமாகவே செய்துகொள்வேன் என்று கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். Atleast இந்த நிலையிலாவது தங்களுடைய பின்னணியைச் சொன்னால், தங்களுடைய பணியைப் போற்றுவதற்கு எதுவாக இருக்கும்.

பரம ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்கள் பெரும்பாலும், லாபம் சம்பாதித்த பிறகு, மாற்று முகாம் படங்களை வெளியிடுவதை நாம் பார்க்கிறோம் (சொக்கலிங்கம் மட்டுமல்ல)

இன்று, பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் என்று பல தலைவர்களுக்கு புகழ் சேர்க்க, பல்வேறு பெயரில் அமைப்புகள், இயக்கங்கள் இருக்கின்றன. எனவே தனித்தனியாக அமைப்புகள் இருந்து தலைவன் புகழ் பாடுவது ஒன்றும் குற்றமல்ல. கர்ணன் திரைப்பட வெற்றிக்குப் பிறகுதான் பல தியேட்டர்கள் பழைய, குறிப்பாக நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வெளியிட முன்வந்தார்கள் என்பதுதான் உண்மை. இதற்காக எந்தப் பெரிய போராட்டங்களும் நடைபெறவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில், புத்தம் புதிய DVD க்களில், நடிகர்திலகத்தின் திரைப்படங்களைக் கண்டுகளித்துக்கொண்டிருக்கும், இன்றைய தலைமுறையினர், நவீன திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறார்களே தவிர மகாலட்சுமி திரையரங்கு போன்றவற்றில் அல்ல.

நான் எல்லாவற்றிற்கும் பதிலுக்கு பதில் சொல்பவன் அல்ல. இருந்தாலும் என்னைச் சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்து வந்துள்ளேன். இனியும் அப்படியே.

நன்றி.

JamesFague
29th September 2014, 05:48 PM
எனக்கு பிடித்த பாடல் :


ஒரு தரம் ஒரே தரம். இது சுமதி என் சுந்தரியில் வரும் அற்புத பாடல். இந்த பாடலில் நடிகர் திலகம் ஒரு அழகு மன்மதன் ஆக இருப்பார். டுஎட்யில் கலைசெல்விய்ம் ஒரு கலக்கு கலக்கி இருப்பார். இதில் உள்ள
சிறப்பு அம்சம் என்னவென்றால் வண்ண சிலை எதிர் வந்தாலோ என்ற
வரிகளில் நடிகர் திலகத்தின் முக பாவனை அப்பப்பா வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. ஒரு வெட்டு வெட்டி ஒரு கண் அசைத்து திரும்பவும் கன்னத்தில் ஒரு பாவனை காட்டி இவன் தான்யா நடிகன்.
அதே பாடலில் ஒரு த்ரோவிங் போடுவது போன்று கட்டி ஒரு அசத்து
அசதிறுப்பர்.

இந்த பாடலை பார்ர்க்கும் போது கூர்ந்து பார்க்கவும்

Regards

eehaiupehazij
29th September 2014, 06:20 PM
Tributes to NT : on the occasion of his ensuing B'day!

A Man's look gets enhanced by the way he chooses to dress up besides his facial make-up! NT being a connoisseur of dress combinations, it had always been a visual feast to our eyes to see him in various attire irrespective of his age based get ups!! In my personal choice I prefer to enlist the top 10 best looking get-ups of our NT (in social themes only)!! Of course,opinions always differ from individuals perspectives and perseverance!!! (historic character get ups will appear in another exclusive presentation)

1. Sorkkam dreamsong 'Ponmagal Vandhal......' : he looks so handsome in that blue coat-suit ably aided by the scence setup, color and the swift dance by Vijayalalitha in an eye-catching attire!

https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo

2. Pudhiya Paravai : Paartha Gyapagam Illaiyo...song sequence : The typical blue based James Bond Tuxedo fits like a hand in glove to NT especially the way he is seated and shows the peak style of cigarette smoking and taking the glass in his hands. ( Of course, this scene is just a fabulous extension of the immortal intro scene of James Bond in DrNo!)

https://www.youtube.com/watch?v=xNInBEF8E7M

eehaiupehazij
29th September 2014, 06:36 PM
3. Raajaa : the song sequence 'Kalyaana Ponnu Kadaipakkam Ponaa... :the most stylish outfit for our NT and his dance steps and mannerisms.... you cannot take out your eyes!

https://www.youtube.com/watch?v=_5yRH4RxlBE

4. Enga Maama : Sorkkam Pakkaththil song sequence : The dress combination and his stylish dance steps always etch in our memory

https://www.youtube.com/watch?v=7KqCOT4Qito

5. Vasantha Maaligai: Yen...Yen song sequence : A fittingly rich costume true to the characterization of the role by NT as a misguded playboyish rich lad in his B'day wet party celebrations with chic young ladies!

https://www.youtube.com/watch?v=su0lZwoaUfE

eehaiupehazij
29th September 2014, 06:47 PM
6. Ooty Varai Uravu : Poo maalayil oar malligai song sequence : very little make up or no make up with a simple T-shirt enjoy the handsome NT for his stylish movements!

https://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U

7. Gowravam : Adhisaya Ulagam song in an old get up but see how that dress adds to the legacy of NT

https://www.youtube.com/watch?v=QKkw0-tbqmk

8. Deiva Magan : the song sequence with young ladies to tease the heroine! Neat dress up!

https://www.youtube.com/watch?v=Josn11_oBqE

eehaiupehazij
29th September 2014, 06:54 PM
9. Sumathi En Sundhari : Pottu vaiththa mugamo... song sequence! His check shirt and his fantastic modification of lip movement to the new singer SPB's voice!

https://www.youtube.com/watch?v=op4GivMzxNY

10. Paarthaal Pasi Theerum : Ullam enbadhu aamai! See the perfect mannerism of limping his legs in a coat-suit get up apt for a retired (due only to injury)military man!!

https://www.youtube.com/watch?v=1WCxSHN4aUE

Russellbpw
29th September 2014, 08:09 PM
டியர் r .k .s சார்,

நடிகர்திலகம் செய்த, கொடுத்த நன்கொடைகளை வெளியில் தெரியாமல் செய்ததால்தான் இன்றுவரை நாம் அதனை காட்டு கத்தலாகக் கத்தி மற்றவர்களுக்குத் தெரியவைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நடிகர்திலகத்தின் புகழை, சேவைகள் பல செய்து, தனி மனிதனாக, யாருக்கும் தெரியாமல், ரகசியமாகப் பரப்புகிறேன் என்று சொல்பவதேல்லாம் இந்தக் காலத்தில் எடுபடாது. விநியோகஸ்தர்கள் எல்லாம் வியாபாரிகள் அல்ல என்றால், நஷ்டம் அடைகிறார்களா? லாபம் அடைகிறார்கள் என்றால், அவர்களே நடிகர்திலகத்தின் புகழ் காக்க ஏதாவது நிகழ்ச்சிகள் செய்யவேண்டியதுதானே? அவர்களும், ரகசியமாக நற்பணிகள் செய்கிறார்களா?

எனக்கு தங்களுடன் அறிமுகமும் இல்லை, பழக்கமும் இல்லை. தாங்கள் சென்னையில் இருப்பவர் என்றால், பிறந்தநாள், நினைவுநாளுக்கு, நடிகர்திலகத்தின் சிலைக்குக் கூட மரியாதை செலுத்தலாமே? அதையும் நான் மானசீகமாகவே செய்துகொள்வேன் என்று கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். Atleast இந்த நிலையிலாவது தங்களுடைய பின்னணியைச் சொன்னால், தங்களுடைய பணியைப் போற்றுவதற்கு எதுவாக இருக்கும்.

பரம ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்கள் பெரும்பாலும், லாபம் சம்பாதித்த பிறகு, மாற்று முகாம் படங்களை வெளியிடுவதை நாம் பார்க்கிறோம் (சொக்கலிங்கம் மட்டுமல்ல)

இன்று, பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் என்று பல தலைவர்களுக்கு புகழ் சேர்க்க, பல்வேறு பெயரில் அமைப்புகள், இயக்கங்கள் இருக்கின்றன. எனவே தனித்தனியாக அமைப்புகள் இருந்து தலைவன் புகழ் பாடுவது ஒன்றும் குற்றமல்ல. கர்ணன் திரைப்பட வெற்றிக்குப் பிறகுதான் பல தியேட்டர்கள் பழைய, குறிப்பாக நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வெளியிட முன்வந்தார்கள் என்பதுதான் உண்மை. இதற்காக எந்தப் பெரிய போராட்டங்களும் நடைபெறவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில், புத்தம் புதிய dvd க்களில், நடிகர்திலகத்தின் திரைப்படங்களைக் கண்டுகளித்துக்கொண்டிருக்கும், இன்றைய தலைமுறையினர், நவீன திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறார்களே தவிர மகாலட்சுமி திரையரங்கு போன்றவற்றில் அல்ல.

நான் எல்லாவற்றிற்கும் பதிலுக்கு பதில் சொல்பவன் அல்ல. இருந்தாலும் என்னைச் சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்து வந்துள்ளேன். இனியும் அப்படியே.

நன்றி.

திரு சேகர் அவர்களுக்கு

உங்களுடன் நான் ஒரு சொற்போரில் ஈடுபடுவதற்கு இங்கு பதிவை பதியவில்லை. உங்களுக்கு நான் அனுப்பிய கோரிக்கைக்கு உங்கள் பதில் மையத்தில் பகிரங்கமாக நீங்கள் கேள்வியுடன் பதிவிட்டதால் தான் நான் இங்கு பதில் பதிவு செய்தேன்.

இந்த காலத்தில் எது எடுபடும் எது எடுபடாது என்ற கேள்விக்கே முதற்க்கண் இங்கு இடமில்லை. ஒருவர் செய்யும் நல்ல காரியங்கள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்வதாகும். நீங்கள் விளம்பரபடுத்தி செய்யும் விருப்பம் கொண்டவர் என்றால் அதே போல எல்லாவரும் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

ஒரு நல்ல காரியம் செய்ய என்னுடைய புகைப்படத்தை, பெயரை போட்டுகொண்டு செய்யவேண்டும் என்ற நிர்பந்தம், நான் செய்கிறேன், நான் தொடங்கிய இயக்கம் செய்கிறது என்ற எதிர்பார்ப்பு, எனக்கில்லை. அதே போல மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கவும் இல்லை.

மற்றவர்கள் அதை எதிர்பார்த்தால் அது அவர்கள் தவறு. I dont need any publicity to do a good cause !

விநியோகஸ்தர்கள் எல்லாம் நஷ்டம் அடைவதில்லை என்று கூற ஏதாவது ஆதாரம் உள்ளதா ? அல்லது அவர்கள் திரைப்படங்களை ஓசியில், நன்கொடையில் வாங்குகிறார்கள், வாங்கி திரையிட்டு அந்த பணத்தில் நகரத்தில் அரை கிரௌண்ட் நிலம் வாங்கி போடுகிறார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்களா அப்படியென்றால் ?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாள், திருமணநாள் இதை முன்னிட்டு திரைப்படம் தங்கள் சொந்த சம்பளத்தில் வாங்கி திரையிடும் ரசிகர்கள் என்னென்ன நன்கொடைகள் பெயர் போடாமல், விளம்பரம் செய்யாமல் இதயவேந்தன் நற்பணி மன்றத்திர்ற்கு நன்கொடை செய்துள்ளார்கள் என்று திரு.கேசவனிடம் கேட்டு நீங்கள் முதலில் தெரிந்துகொள்ளுங்கள் !

லாபம் சம்பாதித்து மாற்று முகாம் படங்களை யார் வெளியிடுகிறார்களோ அவர்கள் யார் என்று தெரியபடுத்துங்கள் தகுந்த ஆதாரங்களோடு. அதைவிடுத்து எல்லோரும் திரு வேலுமணி, பந்துலு, நாகராஜன் ஆகிவிடமாட்டார்கள் என்பதே உண்மை !

நடிகர் திலகம் படங்கள் எத்துனை சத்யம் வளாகத்தில் வந்துள்ளது சேகர் சார் ? கர்ணனுக்கு முன்பு ? இல்லை எத்துனை படங்கள் மகாலட்சுமி, பிராட்வே, கோவை delite , கோவை ராயல், மதுரை சென்ட்ரல், திருச்சி கெஇடீ, திருநெல்வேலி சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் கர்ணன் வருவதற்கு முன் வந்துள்ளது என்று பட்டியல் இடுங்கள் முடிந்தால் பார்க்கலாம்.

அல்லது மேற்கூறிய திரை அரங்குதான் நடிகர் திலகம் படங்களை மாதம் ஒருமுறை திரயிட்டுளதா?

திரை அரங்குகளில் என்ன அரசியல் நடக்கிறது, என்ன நடந்தது என்று உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் தெரியுமா ?

இருக்கையில் அமர்ந்து யார் வேண்டுமானாலும் அறிவுரை, சொற்பொழிவு நடத்தலாம். நானும் அதை செவ்வன செய்வேன்.

மகாலட்சுமி போன்ற திரையரங்கில் வருபவர்கள் ஆதிகால மனிதர்கள் மட்டும் அல்ல திரு சந்திரசேகர் அவர்களே...கணிசமான அளவில் இந்த கால இளைஞர்களும் தான் வருகிறார்கள். நீங்கள் மகாலச்மிக்கு வந்துதான் ஆகவேண்டும் என்று யாரும் உங்களை, மற்றவர்களை கட்டாயபடுத்தவில்லையே !

போராட்டம் என்று நான் கூறியது ...உப்பு சத்யக்ரகம் போன்ற போராட்டம் அல்ல. ...கஷ்டப்பட்டு என்பதன் பொருள் பட போராட்டம் என்பார்கள். அதனை எப்படி போராட்டம் அவசியம் இல்லை என்று நீங்கள் கூறலாம் ? எப்படி நீங்கள் அவசியம் இல்லை என்கிறீர்களோ அதே போல

ஒரு நல்ல காரியம் நடிகர் திலகம் பிறந்த, நினைவு மற்றும் மண நாளில் செய்திட போஸ்டர், அரசியல் தலைவர்கள் அதுவும் ஊழல் கட்சிகளின் இன்றைய அரசியல்வாதிகள் விழாவை தலைமை தாங்குவதும் அப்படி பார்த்தால் மிகவும் தேவையில்லாத தகுதியில்லாத ஒன்றே !

இதுமட்டுமல்லாது, அதில் தமது படத்தை, பெயரை போட்டுகொண்டு, அமைப்பின் ஆட்கள் பெயர்களை போடுவது தேவையில்லாத ஒன்று. இவ்வளவு பேசும்போது, செய்யும் நல்லகாரியத்துக்கு விளம்பரம் தேவையா அல்லது செய்பவர்களுக்கு விளம்பரம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது ?

நான் சென்னையில் இருந்தவன் தான். இருக்கும் வரை சிலைக்கு மாலை அணிவித்தவன் தான். அன்னை இல்லத்திற்கு காலை 10 மணிக்கு சென்று மரியாதை செய்தவன் தான். நான் சென்னையில் இப்போது இல்லாததால் மதியம் அவருக்காக உணவு அருந்தாமல் விரதம் இருப்பவன் கூட...

இதை எல்லாம் நான் வீடியோ பதிவு செய்தோ போஸ்டர் அடித்தோ விளம்பரமா செய்ய முடியும் ? என்னை பொருத்தவரை எனக்கு விளம்பரம் தேவை இல்லை ! அவர் நினைவு நாளில் நான் செய்யும் நல்ல காரியங்கள் எனக்கு அந்த ஆன்மாவுக்கு தெரிந்தால் போதும்.

போஸ்டர் அடித்து என் பெயரை கொட்டை எழுத்தில் போட்டு இந்தகால போலி அரசியல்வாதி அழைத்து புப்ளிசிட்டி செய்யும் வழக்கம் தேயவில்லாத ஒன்று !


செய்யும் நல்லகாரியத்துக்கு விளம்பரம் தேவை என்றால் ..நடிகர் திலகம் பிறந்தநாளில் ...அவர் பிறந்த நாளை முன்னிட்டு ...இந்த இடத்தில் ...இந்த தேதியில் ...நலிவடைந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும்....உதவிகளுக்கு நன்கொடை - நடிகர் திலகம் ரசிகர்கள் மற்றும் மக்கள் நலம் பற்றி சிந்தனை உள்ள நல் உள்ளங்கள் என்று மட்டும் கொட்டை எழுத்தில் போஸ்டர் அடிக்கலாமே..?

அதை விடுத்து தன்னுடைய புகைப்படம் மற்றும் கொட்டை எழுத்தில் பெயர் எதற்கு அமைப்பை சேர்ந்தவர்கள் போட்டுகொள்கிறார்கள்?

காரணம், நான் செய்தேன், நான் செய்தேன் என்று விளம்பரம் தேடுவதற்கு தான்.

அரசியல் உள்நோக்கம் சிறிதும் இல்லை பொதுநலம் ஒன்றே கருத்தில் கொண்டு செய்யும் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையில்லை. நான் சொல்வதன் பொருள் இன்று உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது காரணம் என்ன என்று உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்...காலம் வரும்போது அது அனைவருக்கும் புரியும் !

ஆகவே ..வாய் புளித்ததோ ..மாங்காய் புளித்ததோ என்று தயவு செய்து எழுதாதீர்கள் ! சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன். நினைப்பது தவறு என்றால் மன்னிக்கவும்...

Rks

Russellxss
29th September 2014, 09:06 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/sundar_zps4cead215.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
29th September 2014, 09:12 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/5x210_zpsa8d42f52.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Georgeqlj
29th September 2014, 09:21 PM
நடிகர்திலகத்தின் பிறந்தநாளுக்கு
கோவை மாவட்ட விக்ரம்பிரபு மன்றம் சார்பாக அடிக்கப்பட்ட போஸ்டர்,


View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

Georgeqlj
29th September 2014, 09:24 PM
நடிகர்திலகத்தின் பிறந்தநாளுக்கு
கோவை மாவட்ட விக்ரம்பிரபு மன்றம் சார்பாக அடிக்கப்பட்ட போஸ்டர்,


View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

Russellxss
29th September 2014, 10:03 PM
மதுரையில் மழை மற்றும் பந்த் நடந்த போதும் வெள்ளைரோஜா வசூல் மழை

படம் வெளியான வெள்ளி அன்று பெரிய வசூலுடன் தனது பயணத்தை ஆரம்பித்த நமது தலைவர். சனி அன்று காலை மற்றும் மதியம் மட்டும் ஓடியது. மாலை மற்றும் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது. மறு நாள் ஞாயிறு அன்று காலை, மாலை காட்சி நல்ல வசூல். மாலை காட்சிக்கு மாலை 4 மணி முதல் பரவலான மழை, இருந்தபோதும் மழையில் நனைந்து கொண்டே ரசிகர்கள், மற்றும் பொதுமக்கள் குவிய தொடங்கினர். பஸ் போக்குவரத்து கிடையாது, மழை இதையெல்லாம் தகர்த்தெறிந்து மாலை காட்சிக்கு 421 பார்வையாளர்கள் வந்து திரை அரங்கையே அதிர வைத்தனர். பட வெளியீட்டாளர் நல்ல விளம்பரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரமேஷ்பாபு, சோமசுந்தரம், வெங்கடேஷ், பழனி, குமார், ராஜன் போஸ், பாண்டி, வைகை சுந்தர் மற்றும் ரசிகர்களின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. இதை பார்ப்பதற்கென்றே தியேட்டர்க்கு ஒரு கூட்டம் வந்தது என்பது மற்றொரு விஷயம்.

மொத்தத்தில் விநியோகஸ்தர்கள் மத்தியில் நமது தலைவரின் வெள்ளைரோஜா வசூல் வியப்பை தந்தது.


http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/v1_zps36d85c1d.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/v3_zps698b48e6.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/v4_zps073dd071.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/v2_zpsa2ee79ce.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/v5_zpsfaf8f117.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

Murali Srinivas
30th September 2014, 12:56 AM
நண்பர்கள் KCS மற்றும் RKS ஆகிய இருவருக்கும்,

என் பணிவான வேண்டுகோள். இந்த விவாதத்தை தவிர்க்கலாமே!

சந்திரசேகர் சார்,

தன்னிடம் கூறப்பட்ட ஒரு செய்தியை உங்களிடம் பகிர்ந்துக் கொண்டார் rks. அதற்கு சற்று அதிகப்படியாகவே உங்கள் எதிர் வினை அமைந்து விட்டதோ என்று ஒரு ஐயம். சினிமா விநியோகத்தை தொழிலாக கொள்ளாதவர்கள் சொன்ன செய்தி. அதைதான் உங்களிடம் சொல்லியிருக்கிறார். தொழில் முறை விநியோகஸ்தராக இல்லாமல் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியாக வேண்டும் அதை இக்கால இளைஞர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக செயல்படும் மனிதர்கள் இருக்கின்றார்கள். இதில் லாபம் நட்டம் என்பதை தாண்டி பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இந்த பொது மன்றத்தில் விவாதப் பொருளாக வைக்க முடியாது என்பதனாலும் எந்தவித லாப நோக்கின்றி செயலபடும் ஒரு சில மனிதர்கள் அவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை இங்கே பொது மேடையில் விளக்க முடியாது என்பதனாலும் இந்த விவாதத்தை தொடர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். சுமார் 6,7 வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை நீங்களே வினியோக துறையில் ஒரு முயற்சி செய்து பார்த்தவர் என்ற முறையில் நான் அதிகம் உங்களிடம் சொல்ல வேண்டிய தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.

RKS,

நண்பர் சந்திரசேகர் அவர் நடத்தும் அமைப்பின் மூலமாக ஆற்றி வரும் பணி மிக சிறப்பானது பாராட்டுக்குரியது. அதை நீங்களும் ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். சமூக நலம் என்ற இலக்கை முன் வைத்து அதற்கு ஒரு பாதையை வகுத்துக் கொண்டு பயணம் செய்கிறார். ஆகையால் அவர் தலைமையேற்று நடத்தும் அமைப்பின் உறுப்பினர்களை சினிமாவை ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல அவருக்கு ஒரு தயக்கம் இருப்பது புரிந்துக் கொள்ளக் கூடியதே! ஆகவே உங்கள் வினியோகஸ்த நண்பர்களிடம் படத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஆவன செய்யுமாறு சொல்லவும். நமக்கு எப்போதும் பொது மக்கள்தான் துணை!

இருவரும் இதை விடுத்து நடிகர் திலகம் பற்றிய பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
30th September 2014, 01:00 AM
மதுரை மாகரம் குறிப்பாக திரையரங்குகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடும் என்று எண்ணி இருந்த நேரத்தில் இன்றும் சில பிரச்சனைகளை எதிர்க் கொண்டிருக்கிறது வெள்ளை ரோஜா திரைப்படம். இன்றைய தினம் வினியோகஸ்த சங்க தலைவர் அன்புச்செழியன் உண்ணாவிரதம் இருப்பதை காரணம் காட்டி மதுரை மாநகரிலே நண்பகல் காட்சியையும் பகல் காட்சியையும் ரத்து செய்ய சொல்லி தாக்கீது வரவே இரண்டு காட்சிகள் ரத்து என்று சென்ட்ரல் திரையரங்கில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு காலைக் காட்சிக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பகல் காட்சியும் இல்லை என்று இருந்த நேரத்தில் மதியம் இரண்டு மணி அளவில் நாளை தமிழகம் தழுவிய அளவில் நண்பகல் மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறவிப்பு வரவே அவசர அவசரமாக இன்றைய பகல் காட்சி நடைபெறும் என்று சொல்லி திரையிட்டு இருக்கிறார்கள். காலைக் காட்சிக்கு வந்து காட்சியில்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற கணிசமான மக்கள் சரியான தகவல் சொல்லியிருந்தால் பகல் காட்சிக்காவது வந்திருப்பார்கள். சரியான முறையில் இந்த விஷயத்தை கையாளாமல் இப்படி சொதப்புவதின் மூலம் பாதிக்கப்படுவது படத்தை வெளியிட்டவர்தான். இனி நாளையும் இரண்டு காட்சிகள் இல்லை என்று சொன்னால் அது சரியான ஒரு முறைதானா என்ற சந்தேகம் எழுகிறது! ஒழுங்காக அனைத்தும் நடந்திருந்தால் மிகப் பெரிய வசூலை ஈட்டியிருக்க வேண்டிய படம் இப்படிப்பட்ட செய்கைகளினால் பாதிக்கப்படுகிறது.

கோவை சென்னை ஆகிய ஊர்களிலும் இது போன்ற பிரச்சனைகளே!

எப்போதும் போல அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டுதான் நடிகர் திலகம் வெற்றி வாகை சூடுகிறார்!

அன்புடன்

Murali Srinivas
30th September 2014, 01:03 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

நான் முன்னர் குறிப்பிட்டது போல் அவையெல்லாம் இடிக்கப்பட்டு ஸ்ரீதேவி திரையரங்கம் குடியிருப்பு வளாகமாக மாறி விட்ட போதிலும் அந்த திரையரங்கை காண வேண்டுமென்றால் இயக்குனர் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஹவுஸ் புல் [House Full] படத்தில் காணலாம். அந்த படம் முழுக்க ஸ்ரீதேவி திரையரங்கிலேதான் படமாக்கப்பட்டது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

தியேட்டரை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறும் திலகர் திடல் அமைந்திருக்கும். தியேட்டரின் ஒரு புறத்தில் விபி சதுக்கம் என்ற இடமும் மற்றொரு பக்கம் ராஜா மில் பாலமும் அமைந்திருக்கும். நாங்கள் அன்று தர்மம் எங்கே படத்திற்கு செல்லும்போது கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் தியேட்டருக்கு எதிரே அமைந்திருந்த தெருவில் பாதி தூரம் வரை மக்கள். ஒர்க் ஷாப் ரோட்டில் இந்த பக்கம் விபி சதுக்கம் வரை மக்கள் கூட்டம். அந்த பக்கம் அதே அளவிற்கு கூட்டம். அவ்வளவு பெரிய அரங்க வளாகமோ எள் போட்டால் எள் விழாது என்பது போல் பிதுங்கி வழிகிறது. எப்படியாவது டிக்கெட் வாங்கி விட மாட்டோமா என்று இரண்டு முறை உள்ளே போய் விட்டு வெளியே வருவதற்குள் உன் பாடு என் பாடு ஆகி விட்டது.

உள்ளே வரிசையில் நிற்கும் கூட்டம் நடுநடுவே ஆட்கள் உட்புக முயற்சிக்க அதன் காரணமாக வரிசை சிதற ஏற்கனவே பெருங்கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த காவல் துறையினர் லத்தியை சுழற்ற கூட்டம் சிதறி மக்கள் மெயின் ரோட்டிற்கு ஓடி வர அங்கே போக்குவரத்து ஸ்தம்பிக்க ஒரு கட்டத்தில் போலீசார் அந்த ரோட்டில் போக்குவரத்தை நிறுத்தி விட்டு மாற்று வழியில் திருப்பி விட்டனர். அதன் பிறகும் கூட்டத்தின் ஆவேசம் குறையாமல் வளாகத்துக்குள் செல்ல முயற்சிக்க மீண்டும் அங்கே தடியடி. டிக்கெட் ஏற்பாடு செய்வதாக உள்ளே சென்றிருந்த நண்பரை காணவில்லையே என்று நாங்கள் மீண்டும் உள்ளே செல்ல முயற்சிக்க அப்போது வரிசையில் நின்றிருந்த ஒரு சில ஆட்களின் நிலையை கண்டதும் மயக்கமே வந்து விட்டது. கால் முட்டியிலிருந்து ரத்தம் வழிந்தோட ஒருவர் நிற்க, லத்தி வீசியபோது கீழே விழுந்து கைகளில் காயத்தோடு இருவர் நிற்க எல்லாவற்றிருக்கும் மேலாக தலையிலிருந்து ரத்தம் வழிய அப்படியும் வரிசையை விட்டு விலகாமல் படம் பார்த்தே தீருவேன் என்று கூட வந்தவர்களுடன் வாதம் செய்துக் கொண்டிருந்த நபர். இது தவிர சட்டை கிழிந்தவர்கள், வேட்டி கிழிந்தவர்கள், சிதறி ஓடும்போது விட்டுப் போன செருப்புகள் ஆங்காங்கே கிடக்க இவை அனைத்தையும் தாண்டி படம் பார்க்க நின்ற அந்த மக்கள் வெள்ளத்தை இன்று வரை மறக்க முடியவில்லை. அதாவது நடிகர் திலகத்திற்காக எதையும் செய்ய தயாராக இருந்த கூட்டம் அது. அப்படிபட்ட ஒரு loyal crowd நடிகர் திலகத்திற்கு மதுரையில் இருந்தது. கால ஓட்டத்தின் சுழற்சியில் சிக்கினாலும் கூட இப்போதும் அந்த loyal crowd மதுரையில் நடிகர் திலகத்திற்கு இருக்கிறது என்பதுதான் நிஜம். இதற்கிடையில் எங்களுக்கு பின்னர் தியேட்டருக்கு வந்த என் மாமன் அந்த கூட்டத்தில் எங்களை தேடி கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி சென்றதை இரவு வீட்டிற்கு செல்லும்போது தெரிந்துக் கொண்டோம்.

அரங்க வளாகத்திற்கு வெளியே ஒரு பெருங்கூட்டம் நின்று அந்த வருடத்தில் வெளிவந்த படங்களின் சாதனைகள் பற்றியும் வெளிவரப் போகும் படங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்க என் கசின் எக்ஸ்ட்ரா டிக்கெட் வைத்திருந்த அறிமுகமான ஒரு ரசிகரிடம் கேட்க அவர் உடனே நீதான் ஏற்கனவே இரண்டு தடவை பார்த்து விட்டாயே உனக்கு எதற்கு? வேண்டுமென்றால் இந்த பையனுக்கு [என்னை சுட்டிக் காட்டி] தருகிறேன் என்று சொல்ல அவன் சின்ன பையன் அவனை தனியாக அனுப்ப முடியாது என்று என் கஸின் சொல்ல சரி இருக்கும் இந்த இரண்டு டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு உள்ளே போய் விடுவோம். அங்கே எப்படியாவது தேற்றி விடுவோம் என சொல்லி கையில் வைத்திருக்கும் டிக்கெட்டுகள் மன்ற டோக்கன் என்பதால் அதற்குண்டான வரிசைக்கு போனால் அங்கேயும் கூட்டம் மென்னியை நெரிக்கிறது. நான் முன்னரே குறிப்பிட்டது போல் ஒரு நேரத்தில் ஒரு ஆள் மட்டுமே நகர்ந்து செல்ல முடியும் என்பது போன்ற அமைப்பு கொண்ட வரிசை. அந்த வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிற்கும் போது கூட்டம் அப்படியே நெருக்க முதன் முறையாக நான் பயந்தேன். அதுவரை கூட்டத்தில் போகும்போது ஏற்படாத பயம் அப்போது ஏற்பட்டது. அந்த மூர்க்கத்தனமான நெருக்கலில் மூச்சு திணற நமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்தது. வேண்டாம் வெளியே போய் விடலாம் என்று பார்த்தால் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறோம், வரிசையை விட்டு வெளியே போக முடியாது எனபது புரிந்தது. நான் சிறுவன் என்பதால் எனக்கு முன்னும் பின்னும் உள்ளவர்கள் என்னை விட உயரம் என்பதால் ஏற்படும் இந்த சிக்கலை போக்க இரண்டு பக்கமும் இருந்த கம்பிகளின் மேல் கால் வைத்து மேலேறி கவுன்ட்டர் வரை அப்படியே முன்னேறினோம். கவுன்ட்டரில் இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்து மீண்டும் டிக்கெட் வேட்டையை தொடர்ந்தோம். பெண்கள் டிக்கெட், தியேட்டர் நிர்வாக அலுவலகம் ஒன்றையும் விடவில்லை. ஆனால் பலன் பூஜ்யம்.

இதற்கிடையில் படம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட அனைவரும் உள்ளே நுழையும் முயற்சியில் ஈடுபட்டனர். அன்று ஐந்து காட்சிகள் நடைபெற்றதாலும் மாலை மணி 6.30 மணிக்கு மேல் ஆகிவிட்டதாலும் நியூஸ் ரீல் மற்றும் விளம்பரங்கள் ஏதுமின்றி படம் நேரடியாக துவங்கும் என்று தியேட்டர் ஆட்கள் சொல்லிக் கொண்டிருக்க அது ஒரு பக்கம் ஆவலும் மறுபக்கம் டிக்கெட் கிடைக்கவில்லையே என்ற பதட்டமும் ஒரே நேரத்தில் ஏற்பட, இவ்வளவு முயற்சி எடுத்து இத்தனை தூரம் வந்து விட்டு டிக்கெட் கிடைக்காமல் போவதா என்ற ஏமாற்றம் மனதை பிசைய இருவரும் அலைகிறோம். எக்ஸ்ட்ரா டிக்கெட் கொடுத்த நண்பர் உள்ளே சீட் கிடைக்காது. ஆகவே நான் உள்ளே செல்கிறேன் என போய்விட அரங்கத்தினுள்ளேயிருந்து பயங்கர கைதட்டல் சத்தம் காதைப் பிளக்கிறது. படம் சென்சார் சான்றிதழ் காண்பிக்கிறார்கள். கிட்டத்தட்ட அழுகையே வந்து விட்டது. ஆபிஸ் ரூம் பக்கத்தில்தான் குளிர்பான தின்பண்ட கடை. அங்கே உள்ளே உட்கார்ந்திருந்த ஒருவர் எங்களைப் பார்த்துவிட்டு [வெகு நேரமாக எங்களை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்] டிக்கெட் வேண்டுமா என்று கேட்க அப்படியே நாங்கள் மலைத்துப் போக [சென்ட்ரல் சினிமாவில் பட்டிக்காடா பட்டணமாவிற்கு நடந்தது போல] தெரிந்த ஒருவர் டிக்கெட் வேண்டும் என்று சொல்லியிருந்தார். அவருக்காக எடுத்து வைத்தது. அவர் இந்த கூட்டத்தில் சிக்கி கொண்டார் போல, நீங்கள் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்ல தெய்வமே என்று அவரை வணங்காத குறையாக அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு டிக்கெட் எடுத்து உள்ளே நுழையும் இடத்தில டிக்கெட் கிழிக்கும் தியேட்டர் ஊழியர், ஒரு constable மற்றும் இரண்டு நபர்கள் நின்று எங்களையும் மற்றும் எங்கள் முன் உள்ளே செல்ல முயன்றவர்களையும் தடுக்கிறார்கள். காரணம் என்னவென்றால் படம் பார்க்க வந்த அந்த இரண்டு நபர்களில் ஒருவரின் கை கடிகாரம் தொலைந்து போய் விட்டதாம். ஆகவே ஒவ்வொருவரையும் சோதனை செய்தே உள்ளே அனுப்பிக் கொண்டிருக்க எங்களுக்கோ தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் படம் ஓடிக் கொண்டிருக்கிறதே என்ற கவலை. ஒரு வழியாக சோதனை முடிந்து டிக்கெட் கிழிக்கப்பட்டு உள்ளே நுழைந்தால் காது செவிடாகும் வண்ணம் ஒரு வெங்காய வெடி வெடிக்க அந்த சத்தத்திற்கு இணையான கைதட்டலகளுடன் ஸ்க்ரீனில் நடிகர் திலகம் முதுகில் கூடையை மாட்டிக் கொண்டு அறிமுகமாகும் காட்சி.

(தொடரும்)

அன்புடன்

RAGHAVENDRA
30th September 2014, 06:37 AM
நம் அன்புச் சகோதரர் பம்மலாரின் காலண்டர் மிகச் சிறப்பான முறையில் வெளிவந்துள்ளதோடு மட்டுமின்றி சிறப்பான வரவேற்பையும் பெற்று வருகிறது. அவருக்கு நமது பாராட்டுக்கள்.

நமது நீண்ட நாள் ஆவலைப் பூர்த்தி செய்யும் வண்ணம் விரைவில் வெளிவருகிறது நடிகர் திலகம் புகழ் மாலை. இதோ புகழ் மாலை விளம்பரம்...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/PammalarSivajibookadSep1401_zps821ba1e6.jpg

பம்மலாருக்கு நமது உளமார்ந்த நன்றி.

eehaiupehazij
30th September 2014, 11:46 AM
Tributes to NT : ensuing B’day remembrance!

இதிகாச , வரலாற்று, புதின மற்றும் சாதனை நாயகர்களின் ஆடையலங்கார வடிவமைப்பில் பொருந்தும் Top 10 get-ups of நடிகர்திலகம்

1. மராட்டிய மாமன்னர் சிவாஜி coming alive right before our eyes in the form of NT with his magic touch and mesmerizing acting skill to depict the traits of Shivaji, the warrior!

https://www.youtube.com/watch?v=ij1XPqCSVOA

Enjoy the original amazing horse riding skills and sword wielding style of NT without any body double!

https://www.youtube.com/watch?v=N4BpZfujEyQ

eehaiupehazij
30th September 2014, 11:54 AM
2. வீரபாண்டியகட்டபொம்மன் : Does not require any prelude in as much as VPKB lives in our hearts in the format crystallized and template carved by NT!

https://www.youtube.com/watch?v=jKI0IJY5jp8

https://www.youtube.com/watch?v=LZhpfHiumGw

eehaiupehazij
30th September 2014, 12:00 PM
3. சிவனடி அப்பர் பெருமான் : make-up made up NT as the pioneer for such painstaking efforts to result in a gainful performance that remains matchless till today!

https://www.youtube.com/watch?v=Mc3dcuS_5us

https://www.youtube.com/watch?v=kpCzej-Sr04

eehaiupehazij
30th September 2014, 12:03 PM
4. செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார்

https://www.youtube.com/watch?v=hJnX2BQC9To

https://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg

eehaiupehazij
30th September 2014, 12:05 PM
4. மஹாபாரதம் தந்திட்ட கொடைவள்ளல் காலத்தை வென்ற கர்ணன்

https://www.youtube.com/watch?v=iC6RJSe97S8

https://www.youtube.com/watch?v=6K9UgFkelyA

eehaiupehazij
30th September 2014, 12:10 PM
6. தென்னாடுடைய சிவனே போற்றி:What is Sean Connery to 007Bond and NTR to Lord Krishna....NT is the definitive Siva Peruman!

https://www.youtube.com/watch?v=RJhyuTQb0hY

https://www.youtube.com/watch?v=Cc2sHiUvYuU

eehaiupehazij
30th September 2014, 12:14 PM
7. சிக்கல் ஷண்முகசுந்தரம் : wonderful depiction of a novel character that lives evergreen in our memories!

https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw

https://www.youtube.com/watch?v=lStfK_y034k

eehaiupehazij
30th September 2014, 12:19 PM
8. ராமபாதுகை வணங்கிட்ட பரதன்: acclaimed by Shri Raajaaji as 'Kanden Barathanai' : any need for other endorsement?!

https://www.youtube.com/watch?v=0bEUZ-hfPT0


9. உத்தமவில்லன் விக்கிரமன்: The get up and the superstyle that paved way for later year superstars to emulate and to follow the foot prints!

https://www.youtube.com/watch?v=x7RTO13aa9I


10. நாராயண நாராயண நாரதமாமுனி: the heavenly hermit with mischievous eyes on bringing only good things to happen after all menacing proceedings!

https://www.youtube.com/watch?v=Rxthj4WsTzY

KCSHEKAR
30th September 2014, 12:37 PM
நண்பர்கள் KCS மற்றும் RKS ஆகிய இருவருக்கும்,
என் பணிவான வேண்டுகோள். இந்த விவாதத்தை தவிர்க்கலாமே!
இருவரும் இதை விடுத்து நடிகர் திலகம் பற்றிய பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
டியர் முரளி சார்,

தங்களின் ஆலோசனைக்கு நன்றி.

நேற்று கூட மதுரையில் வெள்ளை ரோஜா திரைப்படத்திற்கு பேரவையைச் சேர்ந்தவர்கள் சென்றுள்ளார்கள். நாம் முதலில் நடிகர்திலகத்தின் ரசிகன் என்ற நிலைதான் அடிப்படை என்பதை நான் அறியாதவனல்ல.

நான் தனி அமைப்பாக செயல்படுவதன் காரணங்கள் தாங்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். NTF (Nadigarthilagam Film Appreciation Society) -ல் கூட நான் உறுப்பினராக விரும்பியும், என்னை அனுமதிக்க இயலாத சூழ்நிலையையும் தாங்கள் அறிவீர்கள்.

ஆனால், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில்தான் என்னுடைய செயல்பாடுகள் எல்லாம் உள்ளன என்பதையும் அறிவீர்கள்.

இதுமாதிரி பல பிரச்சினைகளை, சூழ்நிலைகளை, விளக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும், வீணான சர்ச்சைகளைத் தவிர்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களில் ஒருவன் என்ற முறையில், இனி, என்னைப்பற்றியே விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு பதிலளிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்.

நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

Gopal.s
30th September 2014, 02:07 PM
சந்திர சேகரின் பணிகள் எப்போதுமே பாராட்ட பட வேண்டியன. பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் வேண்டும் காலம். (என் பூதான் நிறைய வாசனை அவன் பூவை விட) அதனால் கவன ஈர்ப்பு ,விளம்பரம் அவசியம். நம் ரசிகர்கள் அதை செய்யாமல் விட்டதால்தான் ,பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவறெல்லாம் ,நம்பர் ஒன்னு என்று காமெடி பண்ணி கொண்டுள்ளார்கள்.எனக்கு தெரிந்த ஒரே அமைப்பு சிவாஜி பேரவை மட்டுமே. அவரின் பெயர் தொடர்ந்து பல பத்திரிகைகளில் வர பேரவையே காரணம்.



எனக்கு தெரிந்து, அரசியலில் அவருக்கு இருக்கும் மதிப்பை விட,என்னை மாதிரி பொது மக்களில்தான் அவருக்கு பக்தர்கள் அதிகம்.(அரசியலில் அவரால் பலன் பெற்றவர்கள் கூட நன்றியோடு இருப்பதில்லை) கடந்த 40 வருடங்களில் இந்த திரிதான் நான் இணையும் குழு இது வரை தனி மனிதனாகவே அவரை தொடர்ந்தவன். என்னை மாதிரி பல கோடி பக்தர்கள்.கர்ணன் எப்படி அவர்களை ஈர்த்ததோ, அதே போல சரியான theatre தேர்ந்தெடுத்து அவர் படங்கள் தொடர்ச்சியாக திரையிட பட வேண்டும் .சாய் சாந்தி போல ,மாயாஜால் போல (குறைந்த பட்சம் அண்ணா போல)அமைவது அவசியம்.



ஆர்.கே.எஸ்.- தயவு செய்து சந்திர சேகர் போன்றோரை பாராட்டா விட்டாலும் குறைத்து பேசாதீர்கள்.

Russellbpw
30th September 2014, 04:35 PM
சந்திர சேகரின் பணிகள் எப்போதுமே பாராட்ட பட வேண்டியன. பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் வேண்டும் காலம். (என் பூதான் நிறைய வாசனை அவன் பூவை விட) அதனால் கவன ஈர்ப்பு ,விளம்பரம் அவசியம். நம் ரசிகர்கள் அதை செய்யாமல் விட்டதால்தான் ,பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவறெல்லாம் ,நம்பர் ஒன்னு என்று காமெடி பண்ணி கொண்டுள்ளார்கள்.எனக்கு தெரிந்த ஒரே அமைப்பு சிவாஜி பேரவை மட்டுமே. அவரின் பெயர் தொடர்ந்து பல பத்திரிகைகளில் வர பேரவையே காரணம்.

எனக்கு தெரிந்து, அரசியலில் அவருக்கு இருக்கும் மதிப்பை விட,என்னை மாதிரி பொது மக்களில்தான் அவருக்கு பக்தர்கள் அதிகம்.(அரசியலில் அவரால் பலன் பெற்றவர்கள் கூட நன்றியோடு இருப்பதில்லை) கடந்த 40 வருடங்களில் இந்த திரிதான் நான் இணையும் குழு இது வரை தனி மனிதனாகவே அவரை தொடர்ந்தவன். என்னை மாதிரி பல கோடி பக்தர்கள்.கர்ணன் எப்படி அவர்களை ஈர்த்ததோ, அதே போல சரியான theatre தேர்ந்தெடுத்து அவர் படங்கள் தொடர்ச்சியாக திரையிட பட வேண்டும் .சாய் சாந்தி போல ,மாயாஜால் போல (குறைந்த பட்சம் அண்ணா போல)அமைவது அவசியம்.



ஆர்.கே.எஸ்.- தயவு செய்து சந்திர சேகர் போன்றோரை பாராட்டா விட்டாலும் குறைத்து பேசாதீர்கள்.


கோபால் சார்

தயவு செய்து நீங்கள் சைக்கிள் GAP இல் விமான சவாரி செய்வதை முதலில் நிறுத்துங்கள்.
கூறை எரிந்துகொண்டிருக்கும்போது அதில் உள்ள கழுகோலை உருவி அந்த தீயை வைத்து CIGARETTE பிடிக்கும் குணம் ஒரு நல்ல குணமல்ல ! தயவு செய்து நிறுத்தவும் !

தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில் அது நீச்சல் குளம் என்று நீங்களே முடிவுகட்டி "தொபுகடீர்" என்று குதிப்பதை நிறுத்தவும்.
குதிப்பதற்கு முன் குறைந்தபட்சம் அது நீச்சல் குளமா...குட்டையா...அல்லது தண்ணீர் தேக்கமா என்பதை அறிந்தபிறகு குதிப்பது உங்களுக்குதான் நல்லது...!

நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை முழுமையாக படித்த பிறகு ...அதற்க்கு சம்பந்தம் உள்ள வகையில் எழுதவும்...!

உங்களால் முடிந்தால் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி சென்று... உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு திரை அரங்கில் contract ஏற்படுத்தி நடிகர் திலகம் திரைப்படங்களை திரையிடும் ரசிகருக்கு கொடுங்கள். ஏதாவது ஒரு இடத்தில் ஏற்படுத்தி தந்தாலும் ஓகே !

அந்த கட்டுமரத்தை வைத்து மீதி இடத்தில் சென்றுவிடலாம் !!! முடிந்தால் முயன்று பாருங்கள்...! செய்து தாருங்கள் !

அல்லது VIETNAM இல் நல்ல திரை அரங்கு உள்ளதென்றால் அதில் கூட உங்களுடைய இதுபோல திறமையான பேசினால் அவர்களை CONVINCE செய்து ஒப்பந்தம் ஏற்படுத்தி கொடுங்கள்.

கர்ணன் மட்டுமல்ல...வசந்தமாளிகை...பாசமலர்....இன்னும் மற்றவர் பார்காத படங்கள் QUBE முறையில் நான் தயார் செய்து வெளியிடுகிறேன். !

யாரும் யாரையும் இங்கு குற்றம் அல்லது குறை சொல்லவில்லை.

மூட்டிவிட வசனங்களை தேடவேண்டாம்.

ஞாயம் விளம்பிகள் நாணயத்தின் இரண்டு பக்கங்களும் பார்த்து விளம்புங்கள் !

RKS

Georgeqlj
30th September 2014, 05:38 PM
காமராஜர் சிலை உடைப்பு
நடிகர்திலகம் திறந்து வைத்தது.
விபரத்திற்கு இணைப்பைக் காண்க.

View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/nadigartilagam

Georgeqlj
30th September 2014, 05:49 PM
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

eehaiupehazij
30th September 2014, 06:09 PM
Tributes to NT on the eve of his B'day on Oct 1

அக்டோபர் 1 நடிப்பிலக்கணத்தின் பிறந்தநாள். ஒப்புவமையற்ற நடிப்புச்சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் தன் குடிமக்களை காண வரும் மஹாபலி சக்கரவர்த்தியைப் போல விண்ணுலகிலிருந்து அமரத்துவம் வாய்ந்த அவர்தம் நினைவலைகளை இப்பூவுலகிற்கு தன் கோடானுகோடி ரசிகப்பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்திட அனுப்பிவைக்கும் நன்னாள். நம் மன்னவரை அத்தக்கோலமிட்டு வரவேற்க தயாராவோமே!

https://www.youtube.com/watch?v=5-y-J9Pabq8

திரையுலகைப் பொருத்தவரை பாட்டும் அவரே பாவமும் அவரே! கூத்தும் கூத்தின் முறையும் வரையறுப்பவரும் அவரே!

https://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0

eehaiupehazij
30th September 2014, 06:32 PM
Tributes to NT on the eve of his B'day on Oct 1
செல்வமும் செல்வாக்கும் நிறைந்த திரைத் தோற்றங்கள் மட்டுமன்றி சாமான்யனின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் உடையலங்காரங்களிலும் விஞ்சி நிற்பவர் நடிகர்திலகம் ஒருவரே! Top 10 Common man get-ups!

1. படிக்காத மேதை ரங்கன் : ஈங்கிவனை நான்(ம்) பெறவே என்ன தவம் செய்திட்டோம்!

https://www.youtube.com/watch?v=Htoa_maG9Jo

https://www.youtube.com/watch?v=rV8yRtU8jmo

eehaiupehazij
30th September 2014, 06:36 PM
2. ராமன் எத்தனை ராமனடி: What a transformation to a சாப்பாட்டு ராமன் characterization with a built-in innocence!

https://www.youtube.com/watch?v=cU9_w77CM1k

When NT turns into a celebrated actor,see the oceanic changes in his traits with traces of the poor old raman!
https://www.youtube.com/watch?v=y0khGzjDhNQ

eehaiupehazij
30th September 2014, 06:39 PM
3. கழனிகாக்கும் உழவன் பழனி!

https://www.youtube.com/watch?v=i7wZg2jW2ag

https://www.youtube.com/watch?v=31lPks6WVLE

eehaiupehazij
30th September 2014, 06:48 PM
4. என்றுமே தரம் நிரந்தரமான தங்கம் : பாகபிரிவினை

https://www.youtube.com/watch?v=ZCwKgD9E7Qo

5. சவாலே சமாளி: all challenges get evaporated when Lord Shivaa opens his third eye!

https://www.youtube.com/watch?v=uPJC_T-iEAA

eehaiupehazij
30th September 2014, 07:01 PM
6. பாபு : சாமான்யனான ஒரு ரிக்ஷா ஓட்டி இளம்தளிரின் பாசப்பிணைப்பில்
https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0

7. மணப்பாறை மாடு கட்டி
https://www.youtube.com/watch?v=WQQwUqxBaFg

eehaiupehazij
30th September 2014, 07:15 PM
8. அம்மம்மா தம்பியென்று நம்பி...

https://www.youtube.com/watch?v=LAvh6WYCdjU

9. நெஞ்சில் குடியிருக்கும் அன்பர்: இரும்புத்திரை

https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg

10.கல்யாணியின் கணவன்

https://www.youtube.com/watch?v=v2mZUk6vm_c

eehaiupehazij
30th September 2014, 07:36 PM
NT the King-pin of Acting Hub!

Special mention to Aandavan Kattalai song Aaru Maname Aaru as this does not come under a rich get up or poor get up but a richly dressed Professor transformed into a self exploratory god-man dress! Even NT's silhouette acts!!

https://www.youtube.com/watch?v=G97Q6mVk4yc

Also for comparison, Hindi Raaj Kumaar's song from Heer Ranjha hindi film. Though a good actor Raajkumar is uncomfortable in close-up scenes to show emotions! That is why NTis construed as the King-pin of Acting-hub!!

https://www.youtube.com/watch?v=wHw0h1kDPvA

eehaiupehazij
30th September 2014, 09:13 PM
Oct 2 Gandhi Jayanthi : Tributes to our Father of Nation and the Mahaathmaa.

On behalf of our humble NT thread we salute his relentless contributions to sustain humanity and to instill humility and brotherhood among the unitedly divided states of our country. Satyameva Jayathey!

(We think of Gandhi/Ben Kingsley we thank Attenborough!)

https://www.youtube.com/watch?v=duZm6OytAns

https://www.youtube.com/watch?v=SNmJqRV7LOA

https://www.youtube.com/watch?v=R1XqHDd6K9k

https://www.youtube.com/watch?v=WW3uk95VGes

joe
30th September 2014, 09:24 PM
NTF (Nadigarthilagam Film Appreciation Society) -ல் கூட நான் உறுப்பினராக விரும்பியும், என்னை அனுமதிக்க இயலாத சூழ்நிலையையும் தாங்கள் அறிவீர்கள்.

என்ன கொடுமை சார் இது ? :((

RAGHAVENDRA
30th September 2014, 11:26 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBirthDay2014/NTBD2014COLLAGE01_zpseebd5d89.jpg

Murali Srinivas
1st October 2014, 12:09 AM
சந்திரசேகர் சார்,

நான் போட்ட பதிவிற்கு உங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு உங்களை குறை சொல்லும் நோக்கமில்லை. இன்னும் சொல்லப் போனால் நான் உங்கள் உறுப்பினர்களை குற்றம் சாட்டவும் இல்லை. என் concern என்னவென்றால் RKS ஒரு தனி மடல் அனுப்பியுள்ள நிலையில் நீங்களும் அவ்வாறே செய்திருக்கலாம் என்பதுதான். அவரது இன்பாக்ஸ் நிறைந்து விட்ட காரணத்தினால் நீங்கள் உங்கள் பதிலை திரியிலே பதிந்திருந்தாலும் கூட தனி மடலின் சாராம்சத்தை பொது விவாதப் பொருளாக கொண்டு வந்ததை தவிர்த்திருக்கலாம் என்ற என் கருத்தைதான் குறிப்பிட்டேன். அது உங்கள் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நண்பர் RKS முன் வைத்த விஷயங்களிலும் சரி நீங்கள் பதிலில் குறிப்பிட்ட விஷயங்களிலும் சரி நியாயங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

உங்களின் ஒரு வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அதுவும் பொது மன்றத்தில் விவாதிக்கப்பட முடியாத ஒன்று என்பது உங்களுக்கு தெரியும். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் உங்கள் மனக்குறை அகலும் என்பது என் நம்பிக்கை. அதற்கு இன்றைய நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஒரு தொடக்கமாக அமையட்டும். நல்லதை நினைப்போம். நல்லதே நடக்கும்.

அன்புடன்

Murali Srinivas
1st October 2014, 12:18 AM
இன்றைய தினமும் மதுரையில் கடையடைப்பு, பேருந்துகள் இயக்கப்படாமை, பதற்றம் நிறைந்த சூழல் இவற்றோடு இன்றும் பலத்த மழை பெய்திருக்கிறது. இப்படி இருந்தும் வேலை நாளாக இருந்தும் மாலைக் காட்சிக்கு கணிசமான மக்கள் கூட்டம். இன்று இரவோடு மொத்த வசூல் சுமார் ரூபாய் 60,000/- ஐ எட்டியிருக்கிறது. 5 காட்சிகள் ரத்து செய்யபட்டும் 5 நாட்களில் இந்த வசூல். அதுவும் 1980-களில் வெளியான படத்திற்கு. இந்தப் படங்கள் எல்லாம் சரியாகப் போகாது என்று சொன்னவர்களையெல்லாம் திகைக்க வைத்து வசூல் செய்து வருகிறது சென்ட்ரல் சினிமாவில் வெள்ளை ரோஜா.

எப்போதும் போல் வெற்றி நடிகர் திலகத்திற்குதானே!

அன்புடன்

Murali Srinivas
1st October 2014, 12:38 AM
என்றென்றும் எங்கள் மனங்களில் நிறைந்தவனே!

எந்நேரமும் எப்போதும் எங்கள் மனத்தை ஆட்கொள்பவனே!

எங்களின் காலையும் நீயே மாலையும் நீயே

எங்களின் மதியமும் நீயே இரவும் நீயே!

எங்களின் தலையாய சந்தோஷமே!

அன்று எங்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதல்

இன்று 86-வது வயதை நீ நிறைவு செய்யும்போது கூட; ஏன்

நாங்கள் வாழும் வரை உன் நினைவோடுதான் பயணிப்போம்.

இனியும் பல நூற்றாண்டுகள் நீ வாழும் வரை

அன்றும் இது போன்ற ரசிகர்கள் உன் கலையை ரசிப்பார்கள்!

இப்பூவுலகம் உள்ளவரை நீ வாழ்ந்திருப்பாய்!

நடிகர் திலகமே

இன்றைய உன் பிறந்த நாளில் என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்!வாழ்த்துகள்!

அன்புடன்

Richardsof
1st October 2014, 06:37 AM
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் .அவரது பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கின்றோம் .
http://i60.tinypic.com/vdzfwi.jpg

Gopal.s
1st October 2014, 07:49 AM
உன்னை தவிர யாராவது நான் சோழ மன்னன் பரம்பரை என்று சொல்லியிருந்தால் நகைத்திருப்போம். நீ சொன்ன போது வருந்தினோம். உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் சக்கரவர்த்தி ,ஏன் சோழ பரம்பரை என்று தமிழ் நிலத்தை மூன்றிலொரு பங்காக குறுக்க வேண்டும்?



உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே.



அவதார புருஷர்களில் தந்தை தாய் இருவரையுமே பெருமையாக அடையாளம் காட்டி வாழும் ஒரே அவதாரன் நீ.

சரியான நிலத்தில் சரியான விதையாக ,நாடக உரத்தில் தழைத்த அற்புத பயிரே! உன்னை சுவைக்க வேண்டிய இனமோ , அந்நிய கள் குடித்து அறியாமையில் உழன்றது.

நாங்கள் ஏற்றுமதி செய்திருக்க வேண்டிய முதல் உலகத்தரம் வாய்ந்த இந்திய பொருள் நீதான்.ஆனால் தரமான பொருளுக்கு அழகான உறை போட்டு அலங்கரிக்க தவறினோம் . இப்போது சரியான உறைகளில் தவறான பொருளெல்லாம் ஏற்றுமதி கண்டு தழைக்கிறது.



நீ மட்டுமே பணம்,அதிகாரம் விளம்பர போதைகளால் போலி புகழில் வாழாமல், எங்கள் குடிசை வீடுகளிலும் நிரந்தர தெய்வமாய் எங்களை உன்னதம் பெற வைத்து எங்கள் ஒவ்வொரு அணுக்களிலும் அனுதினமும் உயிர்க்கிறாய்.இந்த உயிர்ப்பு ,சமாதிகள் அல்ல.சந்நிதிகள் .



ஒரு பிறவியால் ,இத்தனை பிறவிகளுக்கு வாழும் போதே மோட்சமளித்த நடிப்பு ராமானுஜனே!!!



உலகத்திற்கு பல நாட்கள் ,பல தினங்கள். தாய்க்கு,தந்தைக்கு,நண்பர்களுக்கு,காதலர்களுக்க ு என்று. தமிழர்களுக்கு ஒரே நாள். அக்டோபர் 1 மட்டுமே.



தமிழர் பெருமை நாள்.



திருவள்ளுவனுக்கு பிறகு பெருமை மீட்ட நாள்.



சேர பாண்டியர்களை தலை குனிய வைத்த சோழ திருமகனின் அவதார நாள்.



மேதைமையும்,திறமையும் ,உழைப்பும்,நேர்மையும்,புகழும் அதிசயமாக இணையும் ஒரே நாளின் நினைவு திருநாள்.



உன்னால் தலை நிமிர்ந்த தமிழே தலை குனிகிறது. உன்னை போற்ற போதிய சொற்களின்றி.



என் உயிர்,உடல் என்றவற்றை தாண்டி எதை உனக்கு காணிக்கையாக்குவேன்?அழியும் இவைகள் அழியாத உனக்கு எப்படி காணிக்கையாகும்?



என் எழுத்தே உனக்கு நானளித்த காணிக்கை. அது என்றும் வாழும் சரஸ்வதி தேவி.என் எழுத்துக்களே நான் உன்னை அர்ச்சித்து போற்றும் சத்திய பூஜை.



எங்கள் போற்றுதலுக்குரிய தலை தமிழ் மகனே!!! தரம் கேட்ட தமிழர்களையும் உன் ஆன்மா மன்னிக்குமாக.வாழும்போதே நண்பர்-பகைவர், உற்றோர்-மற்றோர் என்று பேதம் காட்டாத நீயா ,தெய்வமாகிய பின் பேதம் காட்டுவாய்? உன்னை திரிக்கும் ,திரிக்கும் ,தமிழர்களாய் வாழாமல் தாழும் நரிக்கும் கூட அருள் தருவாய்

நடிப்புக்கும்,ஆண்மைக்கும்,அழகுக்கும்,திண்மைக்கும், தன்மைக்கும்,தகைமைக்கும்,பண்புக்கும்,நட்புக்கும்,தூ ய மனதுக்கும், சொற் தமிழுக்கும் இலக்கணம் வகுத்த எங்கள் தலை தெய்வமே!!



தமிழனான எனது முழு முதற் கடமை நிறைவேறிய திருப்தியில் ,நான் நிஜமாக நேசிக்கும் ஒரே நாளில் என் பணிகளை தொடங்குகிறேன்.

Russellxss
1st October 2014, 07:49 AM
தினமலர் நாளிதழுக்கு நன்றி.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/img028_zpsb2119a43.jpg

இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

venkkiram
1st October 2014, 07:56 AM
நடிகர் திலகத்தின் பிறந்த நாளை ஒட்டி, ஓவியர் கோவை ஜீவானந்தன் கைவண்ணத்தில் நேற்று பிறந்த ஓவியம்.

https://imagizer.imageshack.us/v2/480x601q90/538/ADNtqQ.jpg

பலவித உணர்ச்சிகளை திரையில் கொணர்ந்த சிவாஜியை பலவித வண்ணங்களால் அழகுபடுத்தியிருக்கிறார்.

:notworthy:

venkkiram
1st October 2014, 08:00 AM
அன்பர்களே! இணையத் திருட்டு இப்போதெல்லாம் நிறைய நடக்க ஆரம்பித்துவிட்டது. யாரேனும் இதுபோன்ற ஓவியங்களை ஓவியரின் பெயரை நீக்கிவிட்டு எங்கேனும் பயன்படுத்த ஆரம்பித்தால் முடிந்த அளவு கண்டிக்க முயலுங்கள். முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஓவியர்களிடம் தெரிவிக்கலாம்.

JamesFague
1st October 2014, 08:13 AM
Irandhum Irava Pughazudan Irrukkum Em Thalaiva Unakku En Namaskarangal.

JamesFague
1st October 2014, 08:18 AM
There is a article by Mr NPN Ponnusamy about NT in Kungumam lates issue. If anyone have the facility can

upload the same.


Regards

guruswamy
1st October 2014, 08:31 AM
MY DEAR NADIGAR THILAGAM WISHING YOU A MANY MORE HAPPY RETURNS OF THE DAY!!


SUCCESS!!

Even after going through
A lifetime of struggle
Even after having so many
Responsibilities to juggle
We are happy to see you
Standing so strong and tall
Celebrating your Eighty Seventh Birthday
Is a proud moment for us all
Happy 87th Birthday Dear Nadigar Thilgam (AVL)

God gave a gift to the world when you were born—
a person who loves, who cares,
who sees a person's need and fills it,
who encourages and lifts people up,
who spends energy on others
rather than herself,
someone who touches each life,
and makes a difference in the world,
because ripples of kindness flow outward
as each person you have touched, touches others.
Your birthday deserves to be a National Holiday,
because you are a SPECIAL TREASURE

HAPPY BIRTHDAY GOD OF ACTING

JAIHIND
M. Gnanaguruswamy

parthasarathy
1st October 2014, 09:30 AM
கலைமகளின் அவதாரமே,

கலைமகள், அலைமகள், மலைமகள் மூவரையும் போற்றும் நவராத்திரி சமயத்தில் உலகத்தில் நீ அவதரித்ததே, நீ கலைமகளின் அவதாரம் என்பதைப் பறை சாற்றத்தானோ?

எங்கள் ஊன், உடல், உயிர் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து விட்ட கலைக்குரிசிலே, நடிகர் திலகமே, எப்பிறவி எடுத்தாலும், என்னை உன் ரசிகனாகவே படைத்து விடு.

இரா. பார்த்தசாரதி

Gopal.s
1st October 2014, 09:57 AM
Thanks Vasu for the Good write-up.

'திரும்பிப் பார்' (நடிகர் திலகம் பிறந்தநாள் சிறப்பு ஆய்வுக் கட்டுரை)

திரும்பிப் பார்

நடிகர் திலகத்தின் 5 ஆவது அற்புதப் படைப்பு.

வெளியான நாள் - 10.07.1953

தயாரிப்பு - மாடர்ன் தியேட்டர்ஸ்

கதை வசனம் - மு.கருணாநிதி

சென்னையில் வெளியான திரையரங்குகள் - பாரகன், பிரபாத், சரஸ்வதி, நூர்ஜஹான்

இசை - 'இசைமேதை' ஜி.ராமநாதன்

படத்தொகுப்பு - எல்.பாலு

ஒளிப்பதிவு - w.r.சுப்பாராவ்

இயக்கம் - டி.ஆர். சுந்தரம்

நடிக நடிகையர்:

நடிகர் திலகம், பி.வி.நரசிம்ம பாரதி, பண்டரிபாய், கிரிஜா, கிருஷ்ணகுமாரி, டி.எஸ்.துரைராஜ், ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி மற்றும் பலர்

கதை:

பெற்றோரை இழந்து தன் தம்பி பரந்தாமனுடன் கோவையில் தனியே வாழ்ந்து வருகிறாள் நல்மனம் கொண்ட பூமாலை. தம்பி பரந்தாமனோ பரம அயோக்கியன். கபடதாரி, வேஷதாரி, காமுகன், நயவஞ்சகன் போன்ற பல பட்டங்களுக்கு முதல் சொந்தக்காரன். பெண்களிடம் காதல் போதையூட்டும் களிப்பான கனிமொழி வார்த்தைகளை தேன் குழைத்து பேசி, வாளிப்பான அவர்கள் அழகை சூறையாடி விட்டு அவர்கள் வாழ்வை நாசம் செய்து சுகம் காணுவதில் கை தேர்ந்த சூத்ரதாரி. தம்பியைத் திருத்த பல வழிகளில் முயன்று முடியாமல் முழிக்கிறாள் பூமாலை.

கோவை சிவசக்தி மில் தொழிலார்களின் மேஸ்திரி புண்ணிய கோடியின் மகன் பாண்டியன் ஒரு எழுத்தாளன். நல்லவன். அவன் எழுதும் கதைகளைத் திருடி அவற்றை தான் எழுதுவதாக தன் பெயரை அச்சிட்டு ஊரை ஏமாற்றுகிறான் பரந்தாமன். அவனுக்கு உடந்தை கருடா பதிப்பகத்தின் உரிமையாளன் கருடன். அவனும் ஒரு எத்தன். பணப் பித்தன். இந்த ஏமாற்று அக்கிரமத்தைத் தட்டிக் கேட்கும் பாண்டியனுக்கும், பரந்தாமனுக்கும் அடிக்கடி தகராறு எற்பட்டு இருவரும் பகையாளியாகிறார்கள்.

பாண்டியனின் எழுத்தை தன் எழுத்தாக கருதி தெரியாமல் ஏமாளியாக நம்பும் பாமா என்ற இளம் பெண்ணை தன் காதல் வலைக்குள் சிக்க வைக்கிறான் பரந்தாமன். அந்தப் பேதையும் இவனுடைய காதல் ரசம் சொட்டும் பேச்சுகளுக்கு மயங்கி அடிமையாகிறாள்.

பூமாலைக்கு குமுதா என்றொரு சொந்தம். பரந்தாமனுக்கு முறைப்பெண். குமுதாவை தன் தம்பி பரந்தாமனுக்கு மணமுடித்து வைக்க எண்ணியிருக்கிறாள் பூமாலை. ஆனால் பரந்தாமன் பாமாவைக் காதலிப்பதை அறிந்து பாமாவை அவனுக்கு மணமுடித்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள் பூமாலை. திருமணத்தன்று பாமாவைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் அவளை வெறும் மணக் கோலத்திலேயே விட்டுவிட்டு தாலி கட்டாமல் யாருக்கும் தெரியாமல் வெளியே கம்பி நீட்டி விடுகிறான் கயவன் பரந்தாமன். தன் கல்யாணம் நின்று போனதை எண்ணிக் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள் பாமா.

சில நாட்கள் சென்று வீட்டிற்கு திரும்பி வரும் தம்பி பரந்தாமனை பாமாவை ஏமாற்றி ஓடிய குற்றத்திற்காக அக்காள் பூமாலை கடுமையாக கடிந்து கொள்ள, திருமணத்திற்கு முன் பாமா நடத்தை கெட்டவள் என்று தனக்குத் தெரிந்தததால் கல்யாணம் பிடிக்காமல் ஓடி விட்டதாக வாய் கூசாமல் பொய் கூறி பாமாவின் மீது பழி சுமத்தி அக்காள் வாயை அடைத்து விடுகிறான் அந்த பசப்பு வார்த்தை பரந்தாமன் எனும் கபட நரி. என்றாலும் பூமாலை அதை நம்ப மறுக்கிறாள். தம்பியை எவ்வழியிலும் திருத்த இயலவில்லையே எனக் கவலை கொள்கிறாள்.

பாண்டியனின் தந்தை அவனுக்கு திருமணம் செய்ய பாமாவைப் பெண் பார்த்து முடிக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பரந்தாமன் தன் விரோதியான பாண்டியனின் வாழ்வை சீர்குலைக்க முடிவு செய்கிறான். அவன் கல்யாணத்தை நாசமாக்கவும் சதி செய்கிறான்.

அதனால் பாண்டியனுக்கு நிச்சயத்திருக்கும் பாமாவின் வீட்டிற்கு திரும்ப வந்து தன் சதித் திட்டங்களை நிறைவற்றத் தொடங்குகிறான் பரந்தாமன். திருமணத்தன்று தாலி கட்டாமல் ஓடிப் போன பரந்தாமன் தன் மேல் கோபமுற்றிருக்கும் பாமாவை பல கட்டுக் கதைகள் கூறி அவளை சமாதானப் படுத்தி, மறுபடியும் அவளுக்குக் காதல் போதையூட்டி, அவளை வீட்டை விட்டே தன்னுடன் ஓடி வந்து விடும் படியும் தூண்டுகிறான். இதனால் பாண்டியனின் வாழ்வு நாசமாகும் அல்லவா! அவன் எண்ணியபடியே எல்லாம் நடக்கிறது. அந்த அப்பாவி பாமாவும் இவன் பேச்சை நம்பி அவனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். மணமகள் பாமா ஓடிப் போன நிலையில் திருமணம் தடைப் பட்டு பாண்டியன் பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறான். அன்று பரந்தாமன் பாமாவை திருமணத்தன்று தவிக்க விட்டு ஓடிப் போனான். இன்று பாமாவோ பாண்டியனைத் தவிக்க விட்டு விட்டு பரந்தாமனுடன் ஓடிவிட்டாள். இரண்டு குற்றங்களுக்கும் மூல காரணம் பகல் வேஷக்காரன் பரந்தாமனே!

பாமாவை சென்னைக்கு அழைத்து செல்லும் பரந்தாமன் அவளுடன் சில நாட்கள் உல்லாசமாய் இருந்து விட்டு அவளை தன்னந்தனியே தவிக்க விட்டு விட்டு ஊருக்கு ஓடி வந்து விடுகிறான். தான் மீண்டும் பரந்தாமனால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த பாமா கடற்கரையில் மூர்ச்சையாகிறாள். வாழ வேறு வழி தெரியாமல் வேசியாகிறாள். தன் வாழ்வை சூறையாடிய பரந்தாமனை பழி வாங்க சமயம் பார்த்திருக்கிறாள்.

தன் திருமணம் தடை பட்டதை எண்ணி வருந்தும் பாண்டியனை தற்செயலாக ரயிலில் சந்திக்கிறாள் பூமாலை. அவன் நிலைமை அறிந்து அவனை சென்னையில் உள்ள குமுதா வீட்டில் வைத்து ஆதரிக்கிறாள் அவள். பாண்டியன் மேல் ஒருதலைக் காதலும் கொள்கிறாள். ஆனால் குமுதாவும் பாண்டியனைக் காதலிக்கிறாள். பாண்டியனும் அவளை விரும்புகிறான்.

ஊர் திரும்பிய பரந்தாமன் அங்குள்ள சிவசக்தி மில் தொழிலாளிகளின் நியாயமான போராட்டங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். 'பாட்டாளியின் குரல்' என்ற ஒரு புத்தகத்தை தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல் எழுதி அவர்களின் நம்பிக்கையை நயவஞ்சகமாகப் பெறுகிறான். தொழிலாளர்களின் தலைவனாகவும் ஆகி விடுகிறான்.வேலை நிறுத்தத்தையும் அறிவிக்கிறான். மேஸ்திரியும், தொழிலாளர்களும் அவனை மலை போல் நம்பி ஏமாறுகின்றனர்.

இது சம்பந்தமாக பேச அழைக்கும் மில் முதலாளியிடம் தொழிலார்களை விலை பேசி பெரும் பணத்தையும் அவரிடமிருந்து லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு தொழிலார்களை ஏமாற்றுகிறான் பரந்தாமன். அது தெரியாத தொழிலார்கள் இன்னும் அவன் மாய்மாலப் பேச்சை நம்பி அவன் சொன்னபடி திரும்ப வேலைக்கு செல்கிறார்கள்.

குமுதா பாண்டியன் இவர்களுடன் சென்னையிலிருந்து கோவை திரும்புகிறாள் பூமாலை. பாண்டியன் அங்கிருப்பது கண்டு ஆத்திரமுற்று அவனை அடித்து விடுகிறான் பரந்தாமன். இதனால் மனம் நொந்து தன் தந்தையிடமே சென்று விடுகிறான் பாண்டியன்.
இதனால் வேதனையடையும் குமுதா பூமாலையிடம் தான் பாண்டியனைக் காதலிப்பதை சொல்ல அதிர்ச்சியடையும் பூமாலை தன் ஒருதலைக் காதலை மனதுக்குள்ளேயே பூட்டி அழுகிறாள். பாண்டியனை குமுதாவிற்கு திருமணம் செய்து தருவதாக உறுதி கூறுகிறாள்.

பாண்டியனின் தந்தை மேஸ்திரி ஒரு ஊமைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் தன் மகனின் எதிர்ப்பை மீறி. . பாண்டியன் இது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். திரும்பவும் அவனைச் சந்தித்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாண்டியனுக்கும், குமுதாவிற்கும் திருமணம் செய்து வைக்கிறாள் பூமாலை தன் காதல் தோல்வியுற்ற நிலையில்.

தான் இல்லாத நேரத்தில் சொன்னபடி குமுதாவை தனக்கு திருமணம் செய்து வைக்காமல் பாண்டியனுக்குத் திருமணம் செய்து வைத்த விட்டதாக அக்காளின் மேல் பாய்கிறான் பரந்தாமன்.



பரந்தாமனின் தொழிலாளர் நயவஞ்சகத்தை எண்ணிக் கொதிப்படையும் பாண்டியன் தொழிலார்களிடம் பேசி பாண்டியனின் அக்கிரமங்களைப் பற்றி அவர்களுக்குப் புரிய வைக்கிறான். தவிர தொழிலாளர்களின் தலைவனாகவும் ஆகிறான்.தொழிலாளர்களுக்காக முதலாளியிடம் பரிந்து பேசுகிறான். முதலாளி தரும் கையூட்டையும் தூக்கி தூர எறிகிறான் அந்த நல்லவன். முதலாளியின் மகள் டாக்டர் உஷாவும் தொழிலாளர்களுக்காகப் பரிந்து பேசுகிறாள்.

மேஸ்திரி புண்ணியகோடி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அந்த ஊமைப் பெண்ணையும் கூட சூறையாடத் துடிக்கிறான் பரந்தாமன். மேஸ்திரி புண்ணியகோடி பரந்தாமனின் உண்மையான சொருபத்தை அறிந்து கொள்கிறான்.

உஷாவைத் தனக்குத் திருமணம் செய்து தரும்படி முதலாளியிடம் நிர்ப்பந்திக்கிறான் பரந்தாமன். ஆனால் முதலாளி அதற்கு மறுத்து விடுகிறார்.

குமுதாவை தன்னிடமிருந்து பிரித்து திருமணம் செய்து கொண்டது, தொழிலாளிகளிடம் தன் துரோக செயல்களை எடுத்துரைத்து தன் முகமூடியைக் கிழித்தது என்று பாண்டியன் மேல் கடும் கோபம் கொள்ளும் பரந்தாமன் பாண்டியனைக் கொலை செய்ய முயற்சிக்கிறான். இதை அறிந்த குமுதா பரந்தாமன் மேல் கடும் கோபம் கொள்கிறாள். இனியும் இருந்தால் தன் கணவனைக் கொன்று விடுவான் பரந்தாமன் என்று பயந்து கண்ணீர் வடிக்கிறாள். இதனால் பூமாலை அவர்கள் இருவரையும் திரும்ப சென்னைக்கே அனுப்பி விடுகிறாள்.



சென்னையில் தங்கியிருக்கும் பாண்டியனை சாமர்த்தியமாக ஒரு திருட்டுக் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறான் பரந்தாமன். கர்ப்பவதியான குமுதா ஆதரவற்று நிற்கிறாள். ஒரு ஆஸ்பத்திரி வாட்ச்மேன் அவளை ஆதரித்து தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

வேலை நிறுத்தத்திற்காக தொழிலாளர்களைத் தூண்டி விட்டதற்காக போலீஸ் பரந்தாமனைத் தேட, பரந்தாமன் மாறு வேடத்தில் தப்பி சென்னை செல்கிறான். அங்கு எதிர்பாராவிதமாக வேசியாக பாமாவை சந்திக்கும் பரந்தாமன் அவளிடமிருந்தும் தப்பி விடுகிறான். போலீசிலும் சிக்கி கோர்ட்டாரிடம் தன் சாமர்த்திய வாதத் திறமையினால் முதல் மன்னிப்புப் பெற்று வெளியே வந்து விடுகிறான். ஆனால் தொழிலாளிகள் பாண்டியனின் கயமைத்தனத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.

ஜெயில் வாழ்க்கையில் வாடும் பாண்டியனும் சுதந்திரதின நாளன்று கருணை விடுதலை செய்யப்பட்டு பல கஷ்டங்களுக்கிடையே கைக்குழந்தையுடன் கஷ்டப்படும் தன் மனைவி குமுதாவைத் தேடிக் கண்டு பிடித்து அவளுடன் சேர்கிறான். மில் முதலாளி வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை வேலையை விட்டே நீக்கி விட, மேஸ்திரி புண்ணியகோடியும்,இதர தொழிலார்களும் பிச்சைக்காரர்களாய் சென்னை வந்து சேர, அவர்களை காணும் பாண்டியன் தன் தந்தையும், மற்றவர்களும் வேலை இழந்து தவிப்பதை அறிந்து அவர்கள் மீண்டும் வேலை பெற வேண்டி முதலாளியைச் சந்திக்க அனைவருடனும் கோவை செல்கிறான்

பரந்தாமனின் பேச்சை நம்பி வேலை பறி போன தொழிலாளர்களுக்காக வேலைக் கேட்க முதலாளியைச் சந்திக்க செல்லும் பூமாலையின் வேண்டுகோளை நிராகரிக்கிறார் முதலாளி. அங்கு மயக்கமாகும் பூமாலையை முதலாளி மகள் டாக்டர் உஷா முதல் உதவி செய்து பூமாலையின் வீட்டிற்குக் கொண்டு சென்று உடன் இருந்து கவனிக்கிறாள். உஷாவின் மேல் ஒரு கண்ணாயிருக்கும் பரந்தாமன் அங்கே இரவில் உறங்கிக் கொண்டிருப்பது தன் அக்காள் பூமாலை என்பது தெரியாமல் அவளை உஷா என்று நினைத்து காம வெறியில் நெருங்கித் தொட, திடுக்கிட்டு எழுந்திருக்கும் பூமாலை தன் தம்பியின் கெட்ட எண்ணத்தைப் தெரிந்து கொண்டு கோபத்தின் உச்சத்தில் பொங்கி விடுகிறாள். "உனக்கு பெண் சுகம் தானே வேண்டும். இதோ உன் அக்காள் நான் இருக்கிறேன். என்னிடமே அதைப் பெற்றுக் கொள்' என்று அவனை வார்த்தை அம்புகளால் தைக்கிறாள். நீ ஏமாற்றிய பெண்களின் வாழ்க்கையைத் 'திரும்பிப் பார்'... நீ செய்த கொடுமைகளைத் திரும்பிப் பார்... நீ நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்' என்று கர்ஜிக்கிறாள். சற்றும் இதனை எதிர்பாராத பரந்தாமன் அக்காளின் கடும் கோபச் சொல்லையும், அக்காவே தன் காம வெறியைத் தீர்க்க அவளையே தனக்கு அர்ப்பணிக்கத் தயாரான நிலையையும், தன்னைத் திருத்த அவள் மேற்கொண்ட அந்த கொடுஞ் செயலையும் கண்டு துடித்துத் துவள்கிறான். கதறுகிறான். கண்ணீர் வடிக்கிறான். மனம் திருந்துகிறான். ஆனால் அக்காள் நம்ப மறுக்கிறாள்.

தன் முறைப் பெண் கோமதி வாழ்வு தன்னால் தானே கேட்டது என்று எண்ணி அவளிடம் மன்னிப்பு கேட்க கோமதியின் விலாசம் தேடி அவள் வீட்டிற்கு செல்கிறான் பரந்தாமன்.ஆனால் அங்கு தன்னால் பாதிக்கப்பட்டு வேசியான பாமா துப்பாக்கியுடன் தன்னை சுட வந்தததை அவன் எதிர்பார்க்க வில்லை. தான் திருந்திவிட்டதைக் கூறும் பரந்தாமன் தன்னை சுடாமல் இருக்கும்படி பாமாவிடம் வேண்ட, வழக்கம் போல பரந்தாமன் நாடகமாடுகிறான் என்று பாமா மறுக்க, இருவரும் துப்பாக்கியுடன் போராடும் போது துப்பாக்கி வெடித்து பாமா கொலையுண்டு விழ, அங்கே தம்பி பரந்தாமனைத் தேடி வரும் பூமாலை பரந்தாமன் கோமதியைத்தான் பழி உணர்ச்சியின் காரணமாக சுட்டு விட்டான் என்ற தவறுதலான கோபத்தில் தம்பியையே தான் கொண்டு வந்த துப்பாக்கியால் சுட்டு விடுகிறாள். திருந்திய தம்பியாக பரந்தாமன் தான் இப்போது நல்லவன் என்று அக்காளிடம்கூறி உயிரை விடுகிறான். தன் தம்பியைத் தன் கையால் சுட நேர்ந்த துரதிருஷ்டத்தை எண்ணி கலங்குகிறாள் பூமாலை. இறந்தது கோமதி அல்ல...பாமா என்றும் கண்டு கொள்கிறாள்.

ஊர் திரும்பி முதலாளியைச் சந்திக்கும் பாண்டியன் வேலை இழந்த அனைவருக்கும் வேலையைத் திருப்பித் தருமாறு அவரிடம் வேண்டுகிறான். மில் முதலாளி தன் மகள் உஷாவால் மனம் திருந்தி பாண்டியனிடம் மில் நிர்வாகத்தை ஒப்படைகிறார். தொழிலாளர் மனம் மகிழ்கின்றனர். அனால் செய்தித்தாளில் பூமாலை தன் தம்பி பரந்தாமனைக் கொலை செய்ததாக வந்த செய்தியைப் படித்து அதிர்ச்சியாகும் பாண்டியனைப் போலீஸ் கைது செய்கிறது. போலீஸ் பாண்டியனுக்கும் பரந்தாமனுக்கும் இருந்த முன் விரோதத்தின் காரணமாகவே பாண்டியன் பரந்தாமனைக் கொலை செய்தான் என்று பாண்டியனைக் கைது செய்கிறது

கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. 'பூமாலை பரந்தாமனை சுட்டிருக்க முடியாது....முன் விரோதம் காரணமாக பாண்டியன்தான் பரந்தாமனை சுட்டு விட்டான். பாண்டியன் மேல் உள்ள அன்பினால் கொலைப் பழியை பூமாலை ஏற்றுக் கொண்டாள்' என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடுகிறார். ஆனால் பூமாலை 'தன் தம்பியைக் சுட்டுக் கொன்றது நானே! பாண்டியன் அல்ல... அவன் நிரபராதி' என்று நீதிபதி முன் வாக்குமூலம் கொடுத்து, நடந்த கதைகள் அத்தனையையும் விளக்க, உண்மைகள் அனைவருக்கும் புரிகிறது. நீதிபதி பூமாலைக்கு மரண தண்டனை விதிக்கிறார். பாண்டியன் நிரபராதி என விடுவிக்கப் படுகிறான்.


பரந்தாமனாக நடிகர் திலகம்




பரந்தாமன் என்னும் அனைவரையும் மிரள வைக்கும் வில்லன் பாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆண்டி-ஹீரோ. ஹீரோவும் அவரே. (நரசிம்மபாரதி ஒப்புக்கு சப்பாணி நாயகர்) கதாநாயகர்கள் எவருமே செய்யத் துணியாத பாத்திரம். அதுவும் முதல் படத்தில் முழு ஹீரோவாக நடித்து விட்டு ஐந்தாவது படத்தில் கொடிய வில்லன் என்ற பாத்திரத்தை ஏற்று நடிக்க நடிகர் திலகத்திற்கு மட்டுமே துணிச்சல் வரும். அந்த அளவிற்கு தன் திறமை மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.

பல பெண்களை ஏமாற்றும் காமுகன் வேடம். அக்கா குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது குழந்தைகள் போடும் சப்தம் பிடிக்காமல் அக்காவிடம் சலித்துக் கொள்வது, சோம்பேறித்தனத்தின் உச்சியில் போட்டிருக்கும் நைட் கவுனுடனே ஷவர் பாத் எடுப்பது, கருடன் பதிப்பகம் நடத்தும் டி.எஸ். துரைராஜுடன் சேர்ந்து எழுத்தாளன் பாண்டியன் எழுத்துக்களைத் திருடுவது, பாண்டியனின் எழுத்தை தன் எழுத்து என்று நம்பி ஏமாறும் கிருஷ்ணகுமாரியிடம் காதல் மொழி வசனங்கள் பேசி ஏமாற்றுவது, கள்ளச் சிரிப்பு, பேச்சிலே நயம் காட்டி பசப்பு வார்த்தைகளால் பாவையரை மயக்குவது, பாண்டியன் தனக்குப் போட்டியாக தொழிளார்களுக்கு தலைவன் ஆகி விட்டானே என்ற பொறாமையில் வெந்து தணிவது, அக்கா தன்னைக் கண்டிக்கும் போதெல்லாம் ஏதாவது சமாதானம் சொல்லி அவள் வாயை அடைப்பது, தன் செயலுக்கு நியாயம் கற்பிப்பது, புத்திசாலித்தனமாக பேசி பிரச்னைகளிடமிருந்து தப்பிக்கும் சாமார்த்தியம், கிருஷ்ணகுமாரியை மீண்டும் மயக்கும் பேச்சுக்களால் மதி மயங்கச் செய்து சென்னை அழைத்துச் சென்று அவளை பரிதவிக்க விட்டு விட்டு ஓடி வந்து விடும் துரோகம், தொழிலாளர்களின் அவல நிலையை தனக்கு சாதகமாக்கி அவர்களை வேலை நிறுத்தத்திற்கு தூண்டும் மேடைப் பேச்சு சாமர்த்தியம், முதலாளியிடம் தொழிலாளர்களை அடகு வைத்து விட்டு லஞ்சம் வாங்கும் கோரம், பாண்டியனை கொலை செய்யவே போகும் அளவிற்கு கண்மண் தெரியாத ஆத்திரம், கோர்ட்டில் எசகுபிசகாக மாட்டிக் கொண்டவுடன் 'இது என்னுடைய முதற்குற்றம்... அதற்காகவே நான் மன்னிக்கப் படலாம்' என்று சாதுர்யமாக வாதிட்டு தண்டனையில் இருந்து தப்பிக்கும் விவேகம், மேஸ்திரி தங்கவேலுவின் ஊமை மனைவியியைக் கூட விட்டு வைக்காத காமுக குணம், முதலாளி மகள் டாக்டர் உஷா மீதும் கண், பாண்டியனின் மீது சாமர்த்தியமாக சுமத்தும் நகை திருட்டு குற்றம் என்று அத்தனை கெட்ட குணங்களையும் கொண்ட ஒரு வஞ்சக நரி கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்ய நடிகர் திலகத்தை விட்டால் செய்ய ஆளேது?

மனிதர் கண்களாலேயே அசத்துகிறார். கண்களில் தெரியும் கள்ளத்தனம், ஓரப்பார்வையில் தெரியும் வஞ்சகக் குணம், சிரிப்பில் காட்டும் குரூரம் என்று அச்சு அசலாக ஒரு பெண்பித்தனையையும்,பஞ்சமாப் பாதகம் செய்யும் ஒரு கொடூரனையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் நடிகர் திலகம்.

கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பின் பல பரிமாணங்களைத் தொடுகிறார் அந்த இளம் வயதிலேயே. டாக்டார் உஷா என்று நினைத்து படுக்கையில் படுத்திருக்கும் தன் அக்காளைத் தெரியாமல் தொட்டு விட , அக்கா பண்டரிபாய் எழுந்து இவருடைய அக்கிரமக் குணங்களை வசைபாடி 'என்னை எடுத்துக் கொள்' என்று அதிர்ச்சி தரும்போது மனம் திருந்தும் நடிகர் திலகத்தின் நடிப்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது. இறுதியில் நல்லவனாகத் திருந்தியும் தன் உடன் பிறந்த அக்காவினால் விவரம் அறியாமல் சுடப்பட்டு சாவின் வாசலைத் தொடும் போது 'நான் குற்றமற்றவன் அக்கா' என்று தன்னை நிரூபித்து கண் மூடும் போது எல்லோரையும் கலங்கடித்து விடுவார்.

இந்தப்படத்தில் நடிகர் திலகம் வில்லனாக நடித்திருந்தாலும் முதன் முதலாக வில்லன் நடிப்பையும் ரசிக்க வைத்த பெருமைக்கு உரியவராகிறார். அதே போல நடிகர் திலகம் இப்படத்தில் வித விதமாக அணிந்து வரும் உடை அலங்காரங்கள் மிக பிரசித்தி பெற்றவை இன்றளவும் கூட.

பரந்தாமனாக நடிகர் திலகம், பாண்டியனாக நரசிம்ம பாரதி, அக்கா பூமாலையாக பண்டரிபாய், கோமதியாக கிரிஜா, பாமாவாக கிருஷ்ணகுமாரி, கருடனாக டி.எஸ்.துரைராஜ், மேஸ்திரி புண்ணிய கோடியாக தங்கவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

"திரும்பிப் பார்"

திரும்பிப் பார்க்க வைக்கும் சில விசேஷ தகவல்கள்.

1. நடிகர் திலகத்தின் ஐந்தாவது படம் இது.

2. நடிகர் திலகமும், கலைஞரும் இணைந்த மூன்றாவது படம் இது.

3. மாடர்ன் தியேட்டர்ஸ் சிவாஜி அவர்களை வைத்து தயாரித்த முதல் படம்.

4. இயக்குனர் டி.ஆர். சுந்தரம் அவர்களின் சிவாஜிக்கான முதல் இயக்கம்.

5. முதன் முதலாக கிருஷ்ண குமாரி (நடிகை சௌகார் ஜானகியின் தங்கை), கிரிஜா, தனலக்ஷ்மி ஆகியோர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தனர்.

6. நடிகர் திலகமும், நரசிம்ம பாரதியும் நடித்த முதல் படம் இது.

7. பராசக்திக்குப் பிறகு நிறைய புரட்சிக் கருத்துக்களும், புதுமையான வசனங்களும் நிறைந்த படம்.

8. 'கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்" என்ற பாடல் அப்போது ரொம்பவும் பிரபலம். அரிசியில் கால், நெய்யில் டால்டா, காபித் தூளில் புளியங்கொட்டைத் தூள் என்ற கலப்பட சந்தையின் தகிடு தத்தங்கள் இப்பாடலில் அப்பட்டமாக எதிரொலிக்கும். காணொளி வடிவில் காணுங்கள்.



9. திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படங்களை சாதகமாக்கி வளர்ந்து வந்த வேளையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பல்வேறு விமர்சனங்கள் செய்தது. இதனால் கோபமுற்ற நேரு திராவிட முன்னேற்றத் தலைவர்களை நான்சென்ஸ் என்று திட்டி விட்டார். இந்த சம்பவத்தை திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் இப்படத்தின் வசனங்கள் மூலம் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். சிவாஜி அவர்கள் கூலிங் கிளாஸ் அணிந்து அடிக்கடி 'நான்சென்ஸ்' என்று பலரை அடிக்கடி கடிந்து கொண்டே இருப்பார். நேருவை நக்கல் செய்வதற்காகவே இப்படிப்பட்ட காட்சிகள் உருவாக்கப் பட்டனவாம்.

10. இப்படத்தில் சிவாஜி அவர்கள் அணிந்திருந்த பல நவீன புதுவிதமான உடையலங்காரகளைக் கண்டு அனைவரும் அப்போது மிகவும் அதிசயப்பட்டனராம் . குறிப்பாக பத்திரிகைகள் சிவாஜி அவர்களின் உடை தேர்வினை பாராட்டி மகிழ்ந்தனவாம்.


11. ஜி.ராமநாதன் அவர்கள் இசையமைத்த முதல் நடிகர் திலகத்தின் படம் இது.

13. குறிப்பாக நடிகர் திலகத்தின் வில்லன் நடிப்பு அப்போது மிக மிகப் பேசப்பட்டது. 'திரும்பிப் பார்' படத்தின் புரட்சிமிகு வசங்கள் மிக பிரபல்யமாயின.

14. 'கருடன் பதிப்பகம்' என்ற வாசகம் உள்ள பலகையில் 'க' என்ற எழுத்தை 'தி' என்று மாற்றி எழுதி 'திருடன் பதிப்பகம்' என்று மாற்றி வைத்து விட்டு செல்லுவார் அங்கு வேலை செய்யும் ஊழியர். இந்தக் காட்சியும் அப்போது மிகவும் பேசப்பட்ட ஒன்று.

15. படத்தில் வரும் பரந்தாமன் (சிவாஜி ) எழுதும் 'பாட்டாளியின் குரல்' என்ற புத்தகத்தின் பெயரும் அப்போது ரொம்ப பிரபலமடைந்த ஒரு பெயராம்.

16. அப்போது தெலுங்கில் புகழ் பெற்றுக் கொண்டிருந்த நாயகி கிருஷ்ணகுமாரி சிவாஜி அவர்களுடன் நடித்த ஒரே படம் இது.

17. 'பராசக்தி' அளவிற்கு இந்தப் படம் பிரம்மாணடமான வெற்றியடைய முடியாவிட்டாலும் நல்ல வெற்றியடைந்த படம் இது. சிவாஜி அவர்களின் மறக்கவொண்ணா சிறந்த படங்களின் பட்டியலில் 'திரும்பிப்பாரு'ம் நிச்சயம் இடம் பெறும்.

இக்கட்டுரைத்தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே!

நன்றி!

Gopal.s
1st October 2014, 10:04 AM
அவருடைய பிறந்த தினத்தில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ரிலீஸ் ஆன ஒரே காவியம் "துணை"(1/10/1982). ஆனால் மறக்க முடியாத பெருமைக்குரிய படமாக அமைந்தது.

இதில் தசரத ராமன் பாத்திரம் பிரமாதமாக படைப்பு பெற்று நடிகர்திலகத்தால் அற்புதமான உருவம் பெற்றது. உயிர்ப்பு பெற்றது.உணர்வு பெற்றது. அமரத்துவம் பெற்றது.

தசரத ராமன்-

1)மகனுடன் தனித்து மகனுக்காகவே வாழும் possessive தந்தை.

2)சமூக உயர் நோக்கம் கொண்ட அரசாங்க அதிகாரி.

3)எந்த மாதிரி மனநிலையில் இருந்தாலும், extrovert ஆக எல்லோரிடமும் (பெண்கள் உட்பட) மிக நட்பாக பழகி,சரளமான நகைச்சுவை உணர்வோடு பழகும் இனிய மனிதன்.

4)தன்னுடன் உடன் இருக்கும் அக்கம்பக்கத்தார் நண்பர்கள் நலனில் மிக அக்கறை செலுத்துபவன்.

5)ஒரு சிறிய அசந்தர்ப்பம் (மகனும் நண்பனும் பேசி இவரிடம் சொல்லாமல்)அவருக்கு வாய்க்க போகும் மிக முக்கியமான (மருமகள் cum மகள்)ஒரு உறவை திரிந்த பார்வையில் பார்க்க வைக்கிறது.

6)கல்யாணத்துக்கு பிறகும் உறவு சீர்படாமல் ,மேலும் திரிவே காண்கிறது.

7)உன்னை சொல்லி குற்றமில்லை,என்னை சொல்லி குற்றமில்லை,காலம் செய்த கோலமடி ரீதியில்.

8)தசரத ராமனின் outdated மனநிலை,புலம்பல்,possessiveness ,disciplinarian attitude (out of care ) சூழ்நிலையை சீர்கெடுத்து,மருமகளை இவரை எதிரியாகவே பார்க்க வைத்து கொஞ்சம் vicious ஆகவே மாற்றுகிறது.

9)எனக்கு பிடித்த இரு அற்புத காட்சிகள். சம்பந்தியிடம் தேவையில்லாமல் பேசி,புலம்பி, (insulting tone கொண்டு )வாங்கி கட்டும் இடம்.வேறு ஏதோ நினைவில் இருக்கும் போது,அலுவலகம் வந்து கூப்பிடும் மகனிடம், சடாரென்று அங்கே இங்கே பார்த்து நினைவு வந்து சுதாரிக்கும் இடம்.

10)தசரத ராமன், தன்னிலை மறந்து ,dejection ,depression ,loneliness ஆகியவற்றில் தவித்து ,வீட்டை விட்டு போகும் நிலைக்கு ஆளாகும் கட்டங்களில் நடிகர்திலகம் தவிர வேறு யாரையேனும் நினைத்தேனும் பார்க்க முடியுமா?

இளைய தலைமுறையினர் பார்த்தே ஆக வேண்டிய எண்பதுகளின் நடிகர்திலகத்தின் பெருமைக்குரிய படம்.(இசையை மறந்து,தவிர்த்து விடவும்)

வியட்நாம் வீடு சுந்தரம்,துரை ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

sivaa
1st October 2014, 10:11 AM
கள்ளம் கபடம் இல்லாத
வெள்ளை உள்ளம் கொண்ட படிக்காத மேதை
கலைத்தாயின் தவப்புதல்வன்
கலைத்தாயின் ஒரே சூரியன்
அண்ணன் சிவாஜி கணேசன்
அவர்களின் இன்றைய பிறந்த நாளில்
அனைவருக்கும் இனிய
சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்

Russellbpw
1st October 2014, 10:19 AM
அக்டோபர் - உலக உத்தமர்களில் முதன்மையானவர்கள் பல திறமையாளர்கள் பல மகான்கள் பிறந்த மாதம்

1ஆம் தேதி - திரை உலகின் அதிசயம்...தமிழ்நாட்டின் பெருமையாம் நடிகர் திலகம் உண்மை தமிழர்களின் தந்தையாம் நமது செவாலியர் சிவாஜி கணேசன் அவர்கள் அவதரித்த நாள் !

தொழிலிலும் சரி, சொந்தவாழ்கயிலும் சரி ..ஒரு நடிகன் எப்படி இருக்கவேண்டும் ..நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியர், விளங்கிகொண்டிருப்பவர் நம்முடைய நடிகர் திலகம்.

நாடக உலகிலும் சரி...திரை உலகிலும் சரி - அவர் நிகழ்த்திய சாதனைகள் பட்டியலிடமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

தமிழ் திரை உலகில் ஒரு மிகபெரிய மாற்றத்தை விதைத்தவர் நமது சிம்மகுரலோன் ! விதைத்ததோடு அல்லாமல் அதை வழிநடத்தி காட்டியவர்.

திரை உலகில் கதாநாயகனுக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்றால் அது இவர் ஒருவருக்குதான் ! காரணம் அதை கையாளும் திறமை கொண்ட ஒரு திரை உலக சித்தராக நமது நடிகர் திலகம் இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இவரை போட்டியாக நினைத்தவர்கள்....நினைப்பவர்கள் கூட....முதலில் இவரை போட்டியாக நினைத்து..அதன் பிறகு...இவருடைய நடிப்பிற்கும், கலைனயத்திர்க்கும் அடிமையாக போனார்கள் என்பதே உண்மை.

இன்னும் சொல்லப்போனால் ....போட்டியே இல்லாமல் ஒரு தனி ராஜாங்கமே நடிகர் திலகம் அவர்கள் கிட்டத்தட்ட கலை உலகில் 60 வருடங்களுக்கு மேல் நடத்தினார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

நடிகர் திலகம் -

கதாபாத்திரம் - இவர் நடிப்பில் மெருகேறியது !
அபிநயம் - இவர் நடிப்பில் தனது பசியை தீர்த்துகொண்டது !
தமிழரின் கலை புகழ் - இவரால் உலகளவில் பேசப்பட்டது !
நடிப்பு - இவர் ஒருவரே பல்கலைகழகம் என்று சரண் அடைந்தது !
தனித்தன்மை - இவரிடம் இருந்துதான் அதன் பலம் அதிகரித்தது !
திரை உலகம் - இவரால் புனிதமடைந்தது.
கலை உலகம் - இவரால் சிரஞ்சீவித்தன்மை கண்டது !

வல்லரசு நாடுகள் இவரால்

அமெரிக்கா - தமிழனை அவன் திறமையை அடையாளம் கண்டு...இவரிடம் சரண் அடைந்து தனது மாநில மேயராக இரண்டு முறை அமரச்செய்து அழகு பார்த்தது. பண்டித நேருவுக்கு பிறகு நம் நடிகர் திலகம் ஒருவருக்குதான் அந்த பெருமை. இந்திய அமெரிக்காவின் காலச்சார தூதுவராக கௌரவித்து பெருமைக்கு பெருமை சேர்த்தது !

ஆசிய - ஆப்ரிகா - இரண்டு கண்டங்களும் அதில் உள்ள அனைத்து கலைஞர்களும் - இவர் திறமை முன் சரண் அடைந்து - இவரே இந்த கண்டங்களின் சிறந்த நாயகன் என மார்தட்டி பெருமை பட்டுகொண்டது !

ஐரோப்பா - மாவீரன் நெப்போலியன் உயிருடன் இருந்தால் எப்படி கெளரவம் செய்திருப்பானோ அந்த கௌரவத்தை இவர் இருக்கும் இடம் சென்று கௌரவித்து மகுடத்தில் வைரமாக மின்ன செய்தது !

உலக விருதுகள் நோக்கி ஓடுபவர்கள் மத்தியில் உலக விருதுகளை தமிழனை நோக்கி வரவழைத்த சிங்க தமிழன் சிவாஜி கணேசன் அவர்கள்.

முதல் படத்திலயே நாயக அந்தஸ்த்து - படம் வந்ததிலிருந்து உச்ச நட்சத்திரமாக இன்று வரை தொடர்வது ...நாயகனா...தீயவனா...நகைச்சுவயாளனா...இன்னும் எத்துனை விஷயங்கள் இருக்கிறதோ அத்தனையும் ஒரு கை பார்த்து ...அனைத்திலும் எவரும் கனவு கூட காண முடியாத வெற்றி திருமகன் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

தான் பெற்ற பல உலக விருதுகளால் உண்மையான உலகநாயகனாக வலம் வந்த நம் நடிகர் திலகம் !

எதிரிகளோ..அல்லது துரோஹிகளோ ...அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு தன்னுடைய வெற்றிகளை மட்டுமே பரிசாக கொடுத்து பழக்கப்பட்ட எங்க ஊரு ராஜா ....

எண்ணிக்கையில் அடக்க முடியாத...எண்ணிக்கையில் அடங்காத வள்ளல் தவப்புதல்வன், நடிப்புலகின் தந்தை புகழ் எட்டு திக்கும் வானம் தொடட்டும் !

இந்தியாவின் மகாத்மா காந்தி பிறந்த நாளுக்கு முதல் நாள் அவதரித்த இந்த திரை உலக மகான் நடிகர் திலகம் அவர்களின் புகழ் இந்த புவி உள்ளமட்டும் வளர்ந்துகொண்டே இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் !

தமிழனை உலகளவில் பெயர் புகழ் பெறவைத்த நடிகர் திலகம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பணிவுடன் சமர்பித்து வளர்க திரை உலக சித்தரின் புகழ் தாரணி எங்கும் !

https://www.youtube.com/watch?v=EcqXs94XVe8

https://www.youtube.com/watch?v=MmYciykHXMM

ScottAlise
1st October 2014, 10:30 AM
Happy Birthday NT Sivaji Sir

You are a true Legend we miss you always

Russellbpw
1st October 2014, 10:38 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/masthanbnr01fw_zps10172e49.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/masthanbnr01fw_zps10172e49.jpg.html)

ScottAlise
1st October 2014, 11:48 AM
சிவாஜி 25

சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...

* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!


* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!

* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!

* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

- மானா பாஸ்கரன்
ஆனந்த விகடன்

abkhlabhi
1st October 2014, 01:00 PM
Tribute to NT

http://www.youtube.com/watch?v=xelh19f7sM0&list=UUAE3mFmsoIZTAM5BNC7Y8XA

http://www.youtube.com/watch?v=EiOivO1-86U&list=UUAE3mFmsoIZTAM5BNC7Y8XA&index=3

http://www.youtube.com/watch?v=U_iZNV8ic3Q&index=4&list=UUAE3mFmsoIZTAM5BNC7Y8XA

abkhlabhi
1st October 2014, 01:02 PM
இறந்து போன தமிழ் திரை உலகை ஊயிர்பிக்க மீண்டும் பிறந்து வா

ScottAlise
1st October 2014, 01:44 PM
Nadigar Thilagam's birthday on Saraswathi Puja. What a pious coincidence. Saraswathi takes different Avataars, one is V.C.Ganesan.
What a privilege this bachaa Balu had to sing to SARASWATHI ! BLESSED AM I.
I was blessed to have his abundance of love, which continues to flow to our family from his family.
Anna is ETERNAL.
Long live the legacy of Sivaji Anna.

SPB Sir on his Facebook

ScottAlise
1st October 2014, 01:47 PM
சினிமாவிற்கு இன்று பிறந்தநாள்

இறவாபுகழ் பெற்ற நடுப்புச்செம்மலே!
உறங்காத நினைவுகளால் உள்ளங்களை ஆட்கொண்டீர்!
பறவையினம் போல் பரந்த மனம் கொண்டவரே! இனி
பிறந்துதான் வரவேண்டும் உம்மைப்போல் ஒருவர்!

காலத்தை வென்றவர் பலருண்டு! ஆனால்
ஞாலத்தில் கணேசனை வென்றவர் எவருண்டோ!
கோலத்தில் இட்ட புள்ளிகள் போன்று
நீலதிரகடலின் துரும்பு போன்று

நுண்ணிய நிகழ்வுகளையும் தெளிவாக தன்
பண்பட்ட நடிப்பாற்றலால் காட்டியவரே! உமது
கண்ணசைவில் நவரசங்களையும் அள்ளி வழங்கினீர்!
பெண்களின் நளினத்தையும் கண்முன் கொணர்ந்தீர்!

நேரம் தவராமையைத் தவமாக கடைபிடிதவரே!
பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியாரின் அன்பைபெற்றவரே!
பாரம்பரியமிக்க நாடககலை மூலம் கலைத்துறைக்கு வந்து
ஊரறிய உலகறிய கலைத்தாயின் தவபுதல்வனாநீர்!

கனல்தெரிக்கும் வசனங்களால் உமது புகழை
அனல்பறக்க செய்தீர்! ஆற்றுபெருக்கு போன்ற
நினைவாற்றல் உமது அற்புதசிறப்பு!
மனமென்னும் கோயிலில் தெய்வமென நின்றீர்!

ஏழு வயது முதல் கலைத்தாயின் மடியில் தவழ்ந்தீர்!
ஏழேழு பிறப்புக்கும் ஈடேற்ற இயலாத நடிப்பை தந்தீர்!
ராஜாமணி அம்மையாரின் மணிவயிறு விளங்கிடசெய்தீர்!
பார்போற்றும் கலைஞநாக இன்றும் வலம் வருகின்றீர்!

தெய்வங்களையும் அடியார்களையும் உமது நடிப்பால் செதுக்கினீர்!
மெய்வருத்தி பலவேடங்கள் புனைந்தீர்! வான்மழை
பெய்திட வளரும் பயிர்போல் உமது வருகையால்
உய்ந்திட்ட கலைஞர்கள் ஏராளம் ஏராளம்!

வாழ்க சிவாஜி புகழ்!!!!!!!!!!

By Shankar Muthuswamy
in SIVAJI GANESAN THE GREAT FB pg

HARISH2619
1st October 2014, 01:51 PM
நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கு இனிய சிவாஜி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

HARISH2619
1st October 2014, 01:53 PM
From the facebook

"நந்தகோபாலனோடு
நான் ஆடுவேனே!"
-என்று நளின பாவங்களோடு
நகைச்சுவை செய்த போது,
நாங்கள் அடைந்த மகிழ்வு..

"நலந்தானா" கேட்கும்
நாட்டியப் பேரொளிக்கு,
"நல்ல சௌரியம்" என்று
கண்களாலேயே
பதில் சொன்ன போது,
நாங்களடைந்த உற்சாகம்..

"மன்னவன் வந்தானடி"
பாடலில் நடக்கும்
ராஜநடை பார்த்து,
எங்கள் நடைக்கும் வந்த
கம்பீரம்..

"கை வீசம்மா" பாடி
பாசமலரில் அழுத போது,
நெஞ்சுக்குள் நிகழ்ந்த
நெகிழ்வு..

தன் தமிழில் குறை கண்ட
நக்கீரனிடம்
தர்க்கம் பேசும்
கோபத் தமிழிலும்
நாங்கள் கண்ட
இனிமை..

புன்னகை ஒளிரும்
அழகுதடுகள் அசைத்து
"அன்பாலே தேடிய"
பாடிய போது,
எங்கள் இதயம் பெற்ற
பேரமைதி..

விழி உருட்டி,
உடல் நிமிர்த்தி,
குரல் உயர்த்தி
வீரபாண்டிய கட்டபொம்மனாய்
"வெற்றிவேல்..வீரவேல்"
முழக்கமிட்ட போது
எங்களுக்கும் வந்த
உத்வேகம்..

அலைக்கழிப்புக்குப் பிறகு
சந்தித்த காதலியோடு
ஒரு வார்த்தை கூட
பேசாமல்,
சத்தமே இல்லாமல் துவங்கி,
பெருஞ்சத்தத்தோடு
சிரித்து முடிக்கும்
"நவராத்திரி" இறுதிக்காட்சியில்
நாங்கள் அடைந்த
சந்தோஷம்..

உடம்பு முழுக்க
அம்புகள் செருகிக் கிடக்க
தேர்ச் சக்கரத்தின் மேல்
சாய்ந்திருக்கும்
"உள்ளத்தில் நல்ல உள்ளம்",
எங்களுக்குத் தந்த
உருக்கம்..

"காவிரி தந்த
தமிழகத்துப் புது மணலில்.."
-என்று துவங்கி,
மடை திறந்த
வெள்ளமெனப் பாயும்
அழகுத் தமிழ் மேல்
நாங்கள் கொண்ட மயக்கம்..

கன்னக் குழி
கண்டிருக்கிறோம்.
அதிசயமான அதிசயமாய்
இடுப்பில் குழி விழ
எழிலாய்..மீனவனாய்
நடந்த போது,
எங்கள் இதயம்
துள்ளிய துள்ளல்..

கப்பலோட்டிய தமிழனாகவே
மாறி நின்ற போது,
எங்கள் உடல் பெற்ற
புல்லரிப்பு..

பரிசுகள், விருதுகளென்று
மேடையேறும் போதெல்லாம்
ரசிகர் பெருங்கூட்டம் உகுத்த
ஆனந்தக் கண்ணீர்..

"பராசக்தி"க்குப் பிறகு
திரையுலகம்
உங்கள் மேல் வைத்த..
"நீங்கள் இருந்தால்தான்
பராசக்தி" என
பெருமாள் முதலியார் எனும்
பெருமகனார் வைத்த..
நம்பிக்கை..

"சிவாஜி" என்று
எழுதினாலும்,பேசினாலும்,
நினைத்தாலும்,
நெஞ்சம் பெறுகிற
நிறைவு..
நிம்மதி..

-இவையத்தனையும்
எங்களுக்குக் கிடைத்தது
வெவ்வேறு காலங்களில்.

ஆனால்..

01.10.1928-என்கிற
தேடினாலும் கிடைக்காத
தெய்வீகத் திருநாளில்
பிறந்து,
அத்தனையையும்
ஒரே தினத்தில்
அன்னை ராஜாமணியாருக்குக்
கிடைக்கச் செய்தவரே..

வணங்குகிறேன்..
உங்கள் அவதாரத் திருநாளில்.

Russellxss
1st October 2014, 02:34 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/mayyam_zps31233793.jpg

Russellisf
1st October 2014, 03:15 PM
http://tamil.filmibeat.com/heroes/today-chevalier-sivaji-ganesans-85th-birthday-031114.html

abkhlabhi
1st October 2014, 03:16 PM
http://tamil.filmibeat.com/heroes/today-chevalier-sivaji-ganesans-85th-birthday-031114.html

abkhlabhi
1st October 2014, 03:18 PM
http://tamil.filmibeat.com/news/sivaji-ganesan-s-13th-death-anniversary-206542.html

abkhlabhi
1st October 2014, 03:18 PM
http://tamil.filmibeat.com/interview/vikram-prabhu-remembers-legendary-actor-sivaji-ganesan-on-his-13th-death-anniversary-206539.html

Gopal.s
1st October 2014, 04:38 PM
http://tamil.filmibeat.com/heroes/today-chevalier-sivaji-ganesans-85th-birthday-031114.html

http://behindwoods.com/tamil-movies-cinema-news-14/remembering-the-timeless-actor-sivaji-ganesan.html

IliFiSRurdy
1st October 2014, 04:56 PM
பக்தர்களுக்கு என் பணிவான வணக்கம்.

இந்த வருடம் ஒரு விசேஷம்

இன்று அவர் பிறந்த நாள்

நாளை அவர் தாயின் நாள்.

எல்லா வருஷமும் உள்ள விசேஷம்

முதல்நாள் நம் மகாகலைஞன் பிறந்த நாள்

அடுத்த நாள் நம் மகாத்மா பிறந்த நாள்.

தலைவர் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும்

புதிதாக ஒன்று புரிபடுவதால் அவருடைய பழைய படம் எனும்

கேள்விக்கே இடமில்லை

அவர் நம் எண்ணத்திலே இரண்டற கலந்து விட்டதால் அவர்

நம்மை பிரிந்து விட்டார் எனும் பேச்சுக்கும் இடமில்லை.

நம் ரசனை எனும் திறன் இவர் நடிப்பினால் அன்றோ பட்டை தீட்டப்பட்டது!

இன்று அவரே நடிப்பின் அளவுகோல்.

அவரை வைத்து பிறரை மதிப்பிடலாமே அன்றி ஒப்பிடுவது தகாத செயல்.

அந்த தேவையற்ற செயலை நாம் செய்யாமலிருக்க இந்நன்னாளில் உறுதி பூணுவோம்.

“♫ ♬எல்லோரும் கொண்டாடுவோம் தலைவரின் பெயரை சொல்லி

நல்லோர்கள் வாழ்வைஎண்ணி.”♫ ♬♫ ♬

Harrietlgy
1st October 2014, 05:42 PM
Today's Dinamalar

நடிகர் திலகம் சிவாஜியை பற்றி திரைபிரபலங்களின் பேட்டி!!
01 அக்,2014 - 14:54 IST



துடிக்கும் இதயமும், இவர் பெயர் கேட்டால் நடிக்கும். கேமரா முன் முகம் சிவந்தால், எரிமலை கூட வெடிக்கும். அதனால் தான், ஏற்ற பாத்திரங்களுக்கே, அவரை பிடிக்கும். சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த அந்த மூன்றெழுத்து, மூச்சுக் காற்றிருக்கும் வரை மறையாது. பிற குழந்தைகளை போலவே, பிறந்ததும் அழுதது அக்குழந்தை; பின்னர் தான் தெரிந்தது, அது மறையும் போது, அனைவரும் இப்படித்தான் அழுவார்கள் என்பதை, அன்றே நடித்துக் காட்டியிருக்கிறது, அந்த குழந்தை. உடல், பொருள், ஆவி அத்தனையும், தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்த அந்த அதிசய பிறவிக்கு பெயர் "சிவாஜி. தன்னை படைத்த கடவுளுக்கே, தன் நடிப்பில் முகம் கொடுத்தவர். பராசக்தியில் தொடங்கி, படையப்பா வரை, இவரை மிஞ்ச எவரப்பா? இன்று அவரது 86வது பிறந்தநாள், இந்தநாளில் அவரைப்பற்றிய சில நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர் சில பிரபலங்கள். இதோ உங்களுக்காக...


விஜய் சேதுபதி


சிவாஜி பற்றி நான் சொல்லணும் என்றால், தமிழ் சினிமாவின் டிஸ்னரியே அவர் தான். டெக்னாலாஜி வளராத அந்தக்காலத்திலேயே இவரது நடிப்பை பார்த்து, இன்றைக்கும் நாம் பார்த்து பிரமிப்பு அடைகிறோம். பல புதுமைகளை படைத்து விட்டு சென்று விட்டார். சமீபத்தில், ''ராஜபாட் ரங்கதுரை'', ''தில்லானா மோனாம்மாள்'', ''கர்ணன்'' போன்ற அவருடைய படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. படத்தில் அவரது ஒவ்வொரு அசைவுகளும் நடித்து இருக்கிறது என்று சொல்லலாம். பிரமாண்ட நடிப்புக்கு சொந்தக்காரர் சிவாஜி, அவரைப்போல் இன்னொரு நடிகர் வர சான்ஸே இல்லை என்கிறார் விஜய் சேதுபதி.


டி.ஆர்.


நடிகர் திலகம் தனக்கென்று இலக்கணம் வகுத்தவர், நடிப்பில் வரலாற்றை படைத்தவர் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர், ரெஸ்ட் இல்லாத கலைஞர். குணச்சித்ர பாத்திரங்களில் தன்னை பிறவி கலைஞராக பிரதிபலித்த அற்புத நடிகர். என் வாழ்க்கையில் ''தங்கைக்கு ஓர் கீதம்'', ''என் தங்கை கல்யாணி'' போன்ற படங்கள் எடுக்க அவரின் ''பாசமலர்'' படமே காரணம். என் வாழ்க்கையில் மிகப்பெரிய படிப்பினை கொடுத்த படம் பாசமலர். அவருடைய ''முத்துக்கள் மூன்று'' படத்திற்கு இசையமைத்தேன். நான் எம்.ஜி.ஆரின் தீவிர வெறியன். ஆனால் சிவாஜியின் தீவிர ரசிகன் என்று அப்போது அவரிடமே சொன்னேன். மல்லிகையின் மனம் ரோஜாவுக்கு இருக்காது, ரோஜாவின் மனம் மல்லிகைக்கு இருக்காது. சிவாஜி என் கண்ணை விட்டு எப்போதும் அகலாதவர். ஒருவன் நடக்க ''ஆஹா மெல்ல நட மெல்ல நட...'' என்று அப்போதே கற்றுக்கொடுத்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றவர். சிவாஜிக்கு கர்ஜிக்கவும் தெரியும், கருணை காட்டவும் தெரியும். மொத்தத்தி்ல வீர தமிழர் சிவாஜி என்கிறார் டி.ஆர்.


கருணாகரன்


நான் படித்தது தஞ்சாவூர். நான் சூரக்கோட்டையை தாண்டும்போதெல்லாம், என் தாயார், இது தான் சிவாஜி வீடு என்று காண்பிப்பார். நான் திரைக்கு வருவேன் என்று நினைத்து பார்த்தது இல்லை. இந்த வயது ரசிகர்கள் என்றில்லாமல், எல்லா வயது ரசிகர்களையும் உட்கார வைத்தவர். மரியாதைக்குரிய பெரிய மனிதர். அவரை சந்திக்க முடியவில்லை என்று சங்கட்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் பிரபு அவர்கள், என்னை பார்த்து நல்லா நடிக்கிறீங்க என்று பாராட்டினார். அதுவே எனக்கு சிவாஜியிடமிருந்து பாராட்டு கிடைத்தது போன்று இருந்தது என்றார் கருணாகரன்.


ஸ்ரீகாந்த்


நான் சமீபத்தில் தான் சினிமா பீல்டுக்கு வந்தேன், அதனால் அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது படங்களை பார்த்து என்னை ஒரு நடிகனாக மாற்றிக் கொண்டேன். நடிப்புன்னா சிவாஜி என்று சொல்கிறோம். தேவர் மகன் படத்தை பார்த்து அசந்து போய் உள்ளேன். சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள அவர் காட்டும் ஈடுபாடை பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். அதுக்கு தனி திறமை வேண்டும். ஸ்கிரீன் பிரசண்ட் அவரிடம் இருக்கு. அவர் ஒரு பிறவி நடிகர். அந்தமாதிரி நடிகர்கள் ஒருமுறை தான் பிறப்பார்கள். இன்று மட்டுமல்ல என்றுமே பேசக்கூடிய ஒரு நடிகர் சிவாஜி என்கிறார் ஸ்ரீகாந்த்.


விமல்


இன்னைக்கு மட்டுமல்ல, நடிப்புக்காக படைக்கப்பட்டவர் தான் சிவாஜி. அவரது ஒவ்வொரு படமும் இப்போது வரும் நடிகர்களுக்கு பெரிய உதாரணமாக இருக்கு. எனக்கு யார் கதை சொன்னாலும், சிவாஜியின் 10 படங்களின் ரெபரென்ஸ் கிடைக்கும். பட்டிதொட்டியெல்லாம் சிவாஜிக்கு ரசிகர்கள் உண்டு. தலைமுறை தாண்டி நிற்பவர் சிவாஜி. இந்தநாளில் அவரை பற்றி பேச பெருமைப்படுகிறேன் என்கிறார் விமல்


விதார்த்


நான் கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவன். கூத்துபட்டறைக்கு முன்பே, பராசக்தி படத்தில் சிவாஜி வைத்த ஹேர் ஸ்டலைத்தான் நானும் வைத்தேன். என் தாத்தா சிவாஜியின் தீவிர ரசிகர், பராசக்தி படத்தில் ஒரு பெரிய ரோலில் நடித்து இருந்தார். சிவாஜி, தேவகோட்டைக்கு வளாமஊர்மத்தேவரை பார்க்க வரும்போது நான் அவரை பார்த்துள்ளேன். நான் சிறுவனாக இருந்தபோது 3 முறை அவரை பார்த்துள்ளேன். அந்தநாள் இன்னும் என் கண்முன் நிற்கிறது. ஒரு நடிகர் என்று ஒருவரை முதல்முறையாக நான் பார்த்தது சிவாஜியைத்தான். இன்றும் என் குடும்பத்தோடு அவரது படங்களை பார்க்கிறேன். நடிகர்களுக்கே குருவாக இருந்தவர். இப்போதும் ஒரு நடிகன் உருவாகும் போது பராசக்தி படத்தின் டயலாக்கை உச்சரிக்காமல் இருந்தது கிடையாது. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது நமக்கு பெருமை என்கிறார் விதார்த்.
- See more at: http://cinema.dinamalar.com/tamil-news/22488/cinema/Kollywood/Celebrities-speaks-about-Sivaji-Ganesan.htm#sthash.Axz2XpId.dpuf

sankara70
1st October 2014, 05:51 PM
தமிழ் தாயின் தவ புதல்வன்
எங்கள் இதய தெய்வம்
அண்ணன் சிவாஜி நடிப்பு கடவுள்
அவதார தினம்

Russelldwp
1st October 2014, 07:39 PM
இன்று திருச்சியில் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி நகரின் முக்கிய இடங்களில் அவருடைய படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு சீரும் சிறப்புமாக கொண்டாட பட்டது. திருச்சி மாநகரில் மொத்தம் 8 வகையான போஸ்டர்களை ரசிகர்கள் வெளியிட்டனர்.இன்றைய மாலை மலர், மாலை முரசு பேப்பர்கள் இந்த செய்திகளை வெளியிட்டுள்ளனர்.


திரு. சந்திர சேகர் அவர்களுக்கு இந்த பிறந்த நாளில் சமூக நலப் பேரவை சார்பாக நடிகர் திலகத்திற்கு பாரத் ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசை கேட்கும் படி கோரிக்கை வைக்க வேண்டுகிறேன்.

ரசிகர்கள் அனைவருக்கும் எமது சிவாஜி ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்





C. RAMACHANDRAN







https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10678699_1521099258106750_5125888705555144969_n.jp g?oh=96c2c194bf525a082969be453f9903d4&oe=54BFF3EE&__gda__=1422549694_317eef4ea56edcc8f97e6bb2c01cdbe 1

joe
1st October 2014, 09:01 PM
http://www.radiospathy.com/2014/10/blog-post.html

eehaiupehazij
1st October 2014, 10:03 PM
இன்று உலக முதியோர் தினமும் கூட இளம் வயதிலேயே இமேஜ் பாராமல் வயது முதிர்ந்த கதாபாத்திரங்களில் துணிந்து நடித்து சிகரம் தொட்டவர் நடிகர்திலகம். முதுமை தவிர்க்க முடியாதது. முதுமையில் பாதுகாப்பு இன்றியமையாதது. முதுமையிலும் தன்னம்பிக்கை மெச்சத்தகுந்தது.

https://www.youtube.com/watch?v=gqIX9OQHxUU

https://www.youtube.com/watch?v=BkpXqNt6DBE

https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM

JamesFague
1st October 2014, 10:10 PM
Recognition for our veteran hubber Mr Raghavendra Sir at NT's Birthday function. I take this opportunity to congratulate Mr Raghavendra for the
memonto received from Mr G Ramkumar. Remaining details I request Mr Murali to post here for the benefit of Millons of NT's fans.

a function will be remembered for the thought provoking speech by Mr Pon Radhakrishnan.

Now overto Mr Murali.

Regards

Murali Srinivas
2nd October 2014, 12:52 AM
இன்று முதல் திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதாக திருச்சி தகவல் கூறுகின்றன. இன்றைய தமிழக சூழ்நிலையிலும் வேலை நாளிலும் ஆயுத பூஜைக்கு முன்னேற்பாடுகள் நடக்கும் நிலையிலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் பிறந்த நாள் விழாவில் மும்முரமாக இருந்த நேரத்திலும் இன்றைய தினம் 450 பேர் கண்டு களித்திருக்கின்றனர். இதில் வியப்பூட்டும் விஷயம் வந்தவர்களில் 100 பேர் பெண்கள் என்பதாகும். படத்திற்கு கிடைத்திற்கும் வரவேற்பு மற்றும் வசூல் பற்றி மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
2nd October 2014, 12:56 AM
Recognition for our veteran hubber Mr Raghavendra Sir at NT's Birthday function. I take this opportunity to congratulate Mr Raghavendra for the
memonto received from Mr G Ramkumar. Remaining details I request Mr Murali to post here for the benefit of Millons of NT's fans.

a function will be remembered for the thought provoking speech by Mr Pon Radhakrishnan.

Now overto Mr Murali.

Regards

வாசு,

முந்தைய வருடங்களில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நடைபெறும்போது அவ்விழாவைப் பற்றிய செய்திகளை திரியில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். காரணம் அன்றைய காலத்தில் அவை முழுமையாக மக்கள் மத்தியில் சென்று அடைய வழி இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த 2,3 வருடங்களாக விழா நிகழ்வுகள் You Tube போன்ற இணையதளங்களில் இவை தரவேற்றப்படுவதால் நாம் விழாவையோ அல்லது சிறப்பு விருந்தினரின் பேச்சையோ எழுத தேவையில்லாத சூழல்.

மிக மிக முக்கியமான மூன்று சந்தோஷங்கள் இன்றைய விழாவின் மூலம் கிடைத்தது. முதலும் முக்கியமான சந்தோஷம் அருமை நண்பர் ராகவேந்தர் சார் மேடையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதை விட சந்தோஷம் அவரையும் அவரின் நடிகர் திலகம். காம் இணையதளத்தைப் பற்றியும் குறிப்பிட்டு பிரபு பேசியது. ராகவேந்தர் சாரை எழுந்து நிற்க சொல்லி அனைவரையும் கரகோஷம் செய்யுமாறு பிரபு கேட்டுக் கொள்ள அனைவரும் கைதட்டியது. இன்றைய பிறந்த நாள் விழாவில் சிவாஜி விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் நடிகர் திலகத்துடன் இனைந்து நடித்த காட்சிகளை தொகுத்திருந்தது நமது ராகவேந்தர் சார்தான். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தைப் பற்றிய தனிப் பாடல் பின்னணியில் ஒலிக்க நடிகர் திலகத்தின் பல்வேறு வகையான கெட் அப்கள் அடங்கிய புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் மின்னியதை தொகுத்தவரும் அவரே. வ்வாழ்துகள் ராகவேந்தர் சார்.

இரண்டாவது சந்தோசம் வெளி நாட்டிலிருந்தும் கூட நடிகர் திலகத்தின் ரசிகர்கள் கலந்துக் கொண்டது. பர்மா இன்றைய மியன்மார் நாட்டிலிருந்து வந்தவர்கள் ஒரு புறம் என்றால் என்னோடு நீண்ட நாட்களாக மின்னஞ்சல் தொடர்பில் இருக்கும் கனடா வாழ் இலங்கை தமிழர் ஞானேந்திரன் தன குடும்பத்தோடு இதற்காகவே வந்தது. கிளிப்பிங்க்ஸ் திரையிட்ட போதெல்லாம் மகிழ்வும் அது தந்த ஆனந்தக் கண்ணீரும் பொங்க பார்த்தவர் விழா முடிந்ததும் மனம் நெகிழ பல வருடங்களுக்கு பிறகு இப்படி ஒத்த ரசனையுடைய ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு அவர் நன்றி சொல்ல, விழாவிற்கு வந்ததற்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சொல்லி அவரை சந்தோஷத்தோடு வழியனுப்பியது இரண்டாவது பெரிய சந்தோசம்.

Last but not the least சிறப்பு விருந்தினர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களின் சிறப்புரை. 30 நிமிடம் பேசிய அவர் தன்னை முழுக்க முழுக்க ஒரு சிவாஜி ரசிகராகவே இனம் காட்டிக் கொண்டு பேசினார் என்பதுதான் சிறப்பு. நடிகர் திலகத்தின் பல்வேறு வேடங்களை சுட்டிக்காட்டி [குறிப்பிட வேண்டிய விஷயம் அனைவருக்கும் தெரிந்த படங்களைப் பற்றி மாவு அரைக்காமல் ரங்கோன் ராதா திரும்பிப் பார் போன்ற படங்கள் மற்றும் வாழ்க்கை படத்தைப் பற்றியும் சிலாகித்து பேசி] இன்றைய திரை உலகத்திற்கு மட்டுமல்ல இன்றைய தமிழக இந்திய குடிமகனின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளுக்குக் கூட நடிகர் திலகம் எப்படி relevant ஆகப் பொருந்துகிறார் என்பதை எடுத்துரைத்து நடிப்பு என்பது ஒரு மதமானால் அதற்கு நடிப்புக் கடவுள் நடிகர் திலகம் அவரின் பிறந்த நாளை கொண்டாடாத நடிகர் சங்கத்திற்கு பலமாக குட்டு வைத்து, வரும் காலங்களில் நடிகர் திலகத்திற்கு புகழ் சேர்க்கும் விதம் அவருக்குரிய கெளரவம் செய்யப்படும் என்ற நம்பிக்கையை விதைத்து, அவர் பெயில் அரசாங்க விருதுகள் வழங்கப்பட வேண்டும் அதற்கான நேரம் காலம் கனிந்து வருகிறது என்று உற்சாகப்படுத்தி சுருக்கமாக சொன்னால் விழாவிற்கு வந்திருந்த அனைவரின் மனத்திலும் நல்ல இடத்தைப் பிடித்தார் இந்த நாகர்கோவில் ராசாக்கமங்கலம் ஊர்காரர்.

வீடியோ தரவேற்றப்படும்போது இவரின் பேச்சை முழுமையாக அனைவரும் கண்டு கேட்டு ரசிக்கலாம்.

அன்புடன்

RAGHAVENDRA
2nd October 2014, 09:16 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k.jpg

இணைபிரியாத இரு மேதைகள்... ஒருவரின் பிறந்த நாளும் இன்னொருவரின் நினைவு நாளும் ஒரே மாதம்.. அதே போல் ஒருவரின் நினைவு நாளும் இன்னொருவரின் பிறந்த நாளும் ஒரே மாதம்...

பெருந்தலைவரின் உண்மையான ஒரே தொண்டன் என்பதற்கு இதைவிட சாட்சி இல்லை..

தூய்மையான அரசியலின் அடையாளங்கள்...

தங்களின் புகழ் வாழ்க...

RAGHAVENDRA
2nd October 2014, 09:18 AM
முரளி சார்
தங்களுடைய சிறப்பான பதிவின் மூலம் நிகழ்ச்சிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பினை மீண்டும் தந்தமைக்கு உளமார்ந்த நன்றி.
நடிகர் திலகம் இணைய தளத்தைப் பற்றிக் கூறியதன் மூலம் இணைய வழி நடிகர் திலகம் புகழைப் பரப்பும் முயற்சிகளுக்கு பிரபு அவர்கள் கூறிய நன்றியாகவே இதை நான் நினைத்துக் கொள்கிறேன். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

eehaiupehazij
2nd October 2014, 10:04 AM
My Life Is My Message : Mahaathmaa Gandhiji

Today for Gandhian Thoughts! Gandhi himself became a philosophy that teaches us to win through 'Ahimsaa', the term which has almost become a lip service only on the occasion of his birth day celebrations. Though not a direct disciple of Gandhi, NT served the nation through his films upon the Gandhian messages adopted by his mentor Kamaraj. We all try to understand Gandhian thoughts as if six blind men trying to understand how an elephant looks! The true tribute to Gandhiji is the implementation of total 'madhuvilakku' and 'pulaal unnaamai' besides the 'ahimsaa' way of our struggles to any cause! The 'white' elephant is possible?!(Wikipedia: Gandhiji considered the consumption of alcohol as a major social evil and encouraged complete prohibition in India.Prohibition in India exists in the states of Gujarat and Nagaland; parts of Manipur; as well as the Union Territory of Lakshadweep. Kerala is implementing prohibition in phased manner. All other Indian states and union territories permit the sale of alcohol.)

A small film made for children, but certainly, it teaches everyone!
https://www.youtube.com/watch?v=ZvnSIOtQ8hc

https://www.youtube.com/watch?v=OuZXRN6Rct0

https://www.youtube.com/watch?v=gM61HhWsB60

eehaiupehazij
2nd October 2014, 10:25 AM
NT Thread's tributes to the Father of our Nation:

https://www.youtube.com/watch?v=3PVy4tFjITY

eehaiupehazij
2nd October 2014, 10:27 AM
NT Thread's tributes to the Father of our Nation:



the only tamil movie song devoted to Gandhiji!?

https://www.youtube.com/watch?v=k9Hfx1MNO9U

https://www.youtube.com/watch?v=zKUpbXldBA4

KCSHEKAR
2nd October 2014, 10:35 AM
முக்கியமான சந்தோஷம் அருமை நண்பர் ராகவேந்தர் சார் மேடையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதை விட சந்தோஷம் அவரையும் அவரின் நடிகர் திலகம். காம் இணையதளத்தைப் பற்றியும் குறிப்பிட்டு பிரபு பேசியது. ராகவேந்தர் சாரை எழுந்து நிற்க சொல்லி அனைவரையும் கரகோஷம் செய்யுமாறு பிரபு கேட்டுக் கொள்ள அனைவரும் கைதட்டியது. இன்றைய பிறந்த நாள் விழாவில் சிவாஜி விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் நடிகர் திலகத்துடன் இனைந்து நடித்த காட்சிகளை தொகுத்திருந்தது நமது ராகவேந்தர் சார்தான். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தைப் பற்றிய தனிப் பாடல் பின்னணியில் ஒலிக்க நடிகர் திலகத்தின் பல்வேறு வகையான கெட் அப்கள் அடங்கிய புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரையில் மின்னியதை தொகுத்தவரும் அவரே. வ்வாழ்துகள் ராகவேந்தர் சார்.
திரு.ராகவேந்திரன் சார் அவர்களுக்குக் கிடைத்த இந்தப் பெருமை, கெளரவம், நடிகர்திலகம் ரசிகர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படத்தக்க, மகிழத்தக்க ஒரு நிகழ்வு. வாழ்த்துக்கள் ராகவேந்தர் சார்.

RAGHAVENDRA
2nd October 2014, 10:55 AM
Video rendering of a poem on Nadigar Thilagam

http://www.youtube.com/watch?v=3sWf_ddXQfc

eehaiupehazij
2nd October 2014, 12:09 PM
Tributes to NT the Raajapaart of Movie arena!

ராஜபார்ட் கள்ளபார்ட் அக்கால நாடக மேடைகளில் பிரதானமான பாத்திரங்கள் நடிகர்திலகத்தின் திரைப்பாத்திரங்களுக்கு வலிமையின் மூலம் அவரது நாடக
அனுபவங்களே ! சாதாரணமாக நம் கண் முன்னே உலவும் ஏழ்மையில் உழலும் ஒரு தெருக்கூத்துக் கலைஞன் விட்டலாச்சார்யா படம்போல ராஜபார்ட் / கள்ளபார்ட் ஆக கூடுவிட்டுக் கூடு பாய்ந்து அந்தப்பாத்திரமாகவே மாறிவிடும் தோரணை கெத்து நடையுடை பாவனைகளை உலகளவில் நடிகர்திலகத்திற்கு இணையாக சாதித்துக் காட்டியவர் எவருமேயில்லையே! நவராத்திரி ராஜபார்ட், கள்வனின் காதலி/என் தம்பி கள்ளபார்ட் மற்றும் நாடகக்கலைஞர்களுக்குப் பெருமை சேர்த்திட்ட சொர்க்கம், ராஜபார்ட் ரங்கதுரை.......பிறவிக்கலைஞனின் குறளிவித்தையைக் கண்டிட எம் கண்கள் புண்ணியம் செய்தனவே!

https://www.youtube.com/watch?v=DqWKRny75nc

If the Raajapaart entertained us, this Kallapaart enthralls us!

https://www.youtube.com/watch?v=STeAHQyK1Kw

Gopal.s
2nd October 2014, 12:27 PM
ராகவேந்தர் சார்,



இதை நான் இரண்டு வருடம் முன்பு எழுதி,முரளி என் ஆசை நிறைவேற போவதாக சொன்ன ஞாபகம். என்னிடம் இதை தேர்ந்தெடுக்க சொல்லி பத்து சீட்டு கொடுக்க பட்டிருந்தாலும் ,பத்திலும் உங்கள் பெயரையே குறிப்பிட்டிருப்பேன். நீங்கள் நடிகர்திலகமே மூச்சாக வாழ்வதால், நாமெல்லாம் ஆரோக்யமான ஒரே காற்றை சுவாசித்து ஜீவிக்கும் ஒரு மரத்து பறவைகள்.



நமக்குள் மாறுபாடுகள் வந்த போதும் ,மதிப்பீடுகள் தேய்ந்ததில்லை. மதிப்புகள் குலைந்ததில்லை. நீங்கள் எப்பாடு பட்டாவது அவர் பெயரை காக்க அத்தனையையும் அணைப்பீர்கள். நானோ அவருடைய படங்களே அவர் மாண்பை குலைக்குமானால் ,உதறி விட எண்ணுபவன். ஆனால் இரண்டுமே அவருக்காக நாம் செய்யும் வெவ்வேறு வகை பூஜைகளே.(நாயன்மார்,ஆழ்வார்கள் வழியில் ஒவ்வொன்றும் ஒரு விதம்)



உங்களை விட தகுந்தவரை எங்கள் யாராலும் நினைக்க கூட முடியாது. கெளரவம் பெற்றதற்கு எங்கள் வாழ்த்துக்கள் .எனக்கே கிடைத்த மகிழ்ச்சி.

eehaiupehazij
2nd October 2014, 12:47 PM
Devotion : Thy name is Sivaji Ganesan!

https://www.youtube.com/watch?v=-zyxs-tVB_Q

https://www.youtube.com/watch?v=QDNfqMAd5pQ

Gopal.s
2nd October 2014, 01:02 PM
நடிகர்திலகத்தை வைத்து படமெடுத்த 90% சதவிகித தயாரிப்பாளர்கள் முதல் வெளியீட்டிலேயே லாபம் கண்டு அவரை திரும்ப திரும்ப வைத்து படமெடுத்தவர்கள்.இது நடிகர்திலகத்தின் வெற்றி விகிதம்,ஒரு முறை எடுத்தவர்கள் திரும்ப திரும்ப எத்தனை முறை எடுத்தனர் என்ற கணக்கை போட்டாலே தெரியும்.(உ.ம் -பக்ஷிராஜா,வேலுமணி,பீ.எஸ்.வீரப்பா,பந்துலு,ஏ.பீ.நாகர ாஜன்,ஸ்ரீதர்,ஜெமினி,ஏ.வீ.எம்,பாலாஜி, முக்தா,ஏ.சி.டி,பீ.மாதவன் என்று பெரும் படை ,பல படங்கள்)


ஆடி பாடி கதிரறுப்பார் ஆனந்தத்தோடு. ஆனால் அறுத்த கருது போற இடம் வேறொரு வீடு என்பது போலத்தான் மறு வெளியீடுகள்.தயாரிப்பாளர் துண்டை காணோம் துணியை காணோம் என்று போன பிறகு ,மற்றவர் அடிமாடு விலையில் வாங்கி நடத்தும் முறையில்லா வியாபாரம். எதற்கும் புள்ளி விவரமோ,நிரூபணமோ செய்ய முடியாத வெற்று கூச்சல்களே.



நடிகர்திலகம் படங்கள் மட்டுமே போட்டிக்காக இல்லாமல்,இயல்பாக பொது மக்கள் பார்த்து ஓடிய படங்கள். அவருக்கு அரசியல் சார்ந்த உதவிகளோ, கைகாசு போட்டு படத்தை ஓட வைக்க வேண்டிய அவசியமோ அல்லது அதை மாதிரி செய்து அவரை தூக்கி பிடிக்க பார்க்கும் போலி ரசிகர் படைகளோ இருந்ததில்லை. இதை பெருமையாகவே கூறி கொள்ளலாம்.



இப்போதுதான் தெள்ளதெளிவாக முரளி சார் மறு வெளியீட்டு சாதனைகளையும் உரைத்து, யார் வசூல் சக்ரவர்த்தி என்று நிருபித்து விட்டாரே?



மறு வெளியீடுகளிலும் புதிய பறவைக்கும்,சிவந்த மண்ணுக்கும், பராசக்திக்கும்,கட்டபொம்மனுக்கும்,வசந்த மாளிகைக்கும் சென்னையில் நான் மாணவனாக இருந்த போது (1976-1984) யார் படத்திற்கும் எந்த காலத்திலும் கண்டதேயில்லை. புதிய பறவை பைலட் திரையரங்கில் 1977 வாக்கில் மறு வெளியீடு கண்டு ,கிட்டத்தட்ட சென்னை நகரை நான்கு வருடங்கள் தொடர்ந்து, பல திரையரங்குகள் கண்டு ஆண்டது வரலாறு.

eehaiupehazij
2nd October 2014, 01:20 PM
NT's 'senjotrukkadan' to drama base in his films!

In a way, Saamrat Asokan might have inspired Gandhiji on his principle of non-violence after seeing the perils of war ! Terrific portrayal by NT in Annaiyin Aanai and RajaRani!!

https://www.youtube.com/watch?v=q929CuI7UZA

Sivaji Ganesan's longest dialogue!

https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34

eehaiupehazij
2nd October 2014, 01:27 PM
Sivaji Ganesan transforms into Socretes and Othello!

உன்னையே நீ அறிவாய்! (உன்னையறிந்தால்...நீ உன்னையறிந்தாலின் முன்னோடி!)

https://www.youtube.com/watch?v=sEipFRf3-8s

நடிகர்திலகத்தின் பசுமை நிறைந்த நாடக நினைவுகள்

https://www.youtube.com/watch?v=lSAcVpljPE0

HARISH2619
2nd October 2014, 01:44 PM
Dear raghavendra sir,
congratulations for the recognition and momento you got from the first family of tamil cinema

anm
2nd October 2014, 02:07 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/k.jpg

இணைபிரியாத இரு மேதைகள்... ஒருவரின் பிறந்த நாளும் நினைவு நாளும் ஒரே மாதம்.. அதே போல் ஒருவரின் நினைவு நாளும் பிறந்த நாளும் ஒரே மாதம்...

பெருந்தலைவரின் உண்மையான ஒரே தொண்டன் என்பதற்கு இதைவிட சாட்சி இல்லை..

தூய்மையான அரசியலின் அடையாளங்கள்...

தங்களின் புகழ் வாழ்க...


Dear Raghvendra Sir,

Tears filled seeing the Great Personalities, both will be remembered in History for their Service to People.

I take this opportunity to congratulate you as you are recognized in yesterday's NT's Shivaji Function.


Anand

Russelldwp
2nd October 2014, 02:48 PM
Dear Ragavendran Sir

My Heartiest Congratulations for Recognition got from Ilayathilagam Prabhu on NT'S function at chennai yesterday

C. Ramachandran.

parthasarathy
2nd October 2014, 04:33 PM
Dear Raghavender Sir,

I was fortunate to be there in Music Academy to witness our Acting God's 86th Birth Anniversary celebration and to hear and witness the ultimate honour bestowed on you by none other than the NT family.

You truly deserve every bit and all of us cherish it.

Hearty congratulations and awaiting more from you,

Regards,

R. Parthasarathy

Harrietlgy
2nd October 2014, 05:40 PM
Congratulations Mr. Ragavendar sir. For the NT award.

Georgeqlj
2nd October 2014, 06:33 PM
Puthiya paravai dubbed in Russian. Language
courtesy FB
Thanks to mr N swami duraivelu


View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/nadigartilagam

Georgeqlj
2nd October 2014, 06:37 PM
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/nadigartilagam

JamesFague
2nd October 2014, 06:43 PM
Courtesy: Dinamalar

சிவாஜி பிறந்த நாள் விழாவை நடிகர் சங்கம் கொண்டாட வேண்டும்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
02 அக்,2014 - 15:26 IST கருத்தைப் பதிவு செய்ய
0 0
எழுத்தின் அளவு:

நடிகர் திலகம் சிவாஜியின் 86வது பிறந்த நாளை சிவாஜி குடும்பத்தினர் சென்னை மியூசிக் அகாடமியில் கொண்டாடினார். இதையட்டி கலை உலகில் சாதனை படைத்த பாடகி ஜமுனா ராணி, நாட்டிய பேரொளி பத்மா சுப்பிரமணியம், நடிகர்கள் வி.எஸ்.ராகவன், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபன் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சான்றிதழுடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.


இதனை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்து தன் நடிப்பு வாழ்க்கையை தொடங்கியவர் சிவாஜி. நாடக நடிப்பால் வெறும் கணேசன், சிவாஜி கணேசன் ஆனார். சிவபெருமான், முருகன், பாரதத்தாய் போன்ற கடவுள்களையும், திருவருட் செல்வர் போன்ற ஆன்மீக குருக்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சுதந்திரபோராட்ட தியாகிகளையும் நமக்கு காட்டியவர் அவர்.


அழுகை, சிரிப்பு, ஆடல், பாடல் என எல்லாவற்றையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டோம். ஒரு வழக்கறிஞர், போலீஸ் அதிகாரி, நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். சிவாஜி ஒரு பல்கலைகழகம் அவரிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கல்விக்கு சரஸ்வதி பூஜை நடத்துவதைப்போல நடிப்புக்கு சிவாஜி பூஜை நடத்த வேண்டும்.


சினிமாவில் ஜெயித்த அவரால் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போனது. காரணம் அவருக்கு நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியவில்லை. ஆனாலும் தமிழ் சினிமாவின் நிரந்தர முதல்வர் அவர்தான்.


கலைத்துறை சிவாஜிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பது என் ஆதங்கம். அவரது பெயரில் மிகப்பெரிய விருதுகள் வழங்கப்பட வேண்டும். சிவாஜி குடும்பம் அவரது பிறந்த நாளை கொண்டாடினால் போதாது. நடிகர் சங்கம் ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அதுதான் அவர்கள் சிவாஜிக்கு செய்யும் மரியாதை. அடுத்த ஆண்டு முதலே சிவாஜி பிறந்த நாளை நடிகர் சங்கம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.


முன்னதாக சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் வரவேற்றார். முடிவில் இளையமகன் பிரபு நன்றி கூறினார்.
- See more at: http://cinema.dinamalar.com/hindi-news/22519/cinema/Bollywood/Central-minister-Pon.-Radhakrishnan-wants-the-actors-association-to-celebrate-Sivajis-bday.htm#sthash.Xy8GZuPb.dpuf

Georgeqlj
2nd October 2014, 06:49 PM
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

Georgeqlj
2nd October 2014, 07:33 PM
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
திரு ராகவேந்திரா அவர்களுக்கு...

RAGHAVENDRA
2nd October 2014, 08:03 PM
பாராட்டு நல்கிய அன்புள்ளங்கள்
முரளி சித்தூர் வாசுதேவன், சந்திரசேகர், கோபு எ கோபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், கோபால், பெங்களூர் கார்த்திக், ஆனந்த், பார்த்தசாரதி, பரணி, கோவை செந்தில்
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றிகள்.
எல்லாப் புகழும் நம் இதய தெய்வம் நடிகர் திலகத்துக்கே...

அன்புடன்
ராகவேந்திரன்

இளைய திலகம் பிரபு அவர்களின் உரை....

http://www.youtube.com/watch?v=ZPCWzywEXwY

eehaiupehazij
2nd October 2014, 09:08 PM
Punishment mode in Kollywood differs from Hollywood!!


Have nice pooja celebrations with NT daring an elephant in Saraswathi Sabatham! GG prefers to punish the hero NT tied onto a wooden plank this Kollywood way!!to be trampled by an elephant!!!!

https://www.youtube.com/watch?v=YIPFopNqSos

But, Goldfinger (GertForbe) wishes to punish James Bond (Connery) tied onto table in this Hollywood way!! Laser beam replacing Elephants leg percussion !!!!

https://www.youtube.com/watch?v=DoQwKe0lggw

eehaiupehazij
2nd October 2014, 09:26 PM
Tomorrow vidhyaarambam day for children! NT's vidhyaarambam in saraswathi sabatham!!

https://www.youtube.com/watch?v=usLFng3LZiE

eehaiupehazij
2nd October 2014, 09:32 PM
Mahakavi Kaalidas!!: Yaar tharuvaar indha ariyaasanam when your fans have already offered you an immortal simmaasanam!

https://www.youtube.com/watch?v=Fm7QOXpd3jU

RAGHAVENDRA
2nd October 2014, 09:55 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02137/sivaji_2137556f.jpg

கலையுலக சிரஞ்சீவி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 86வது பிறந்த நாள் விழாவில் விருது பெற்றோர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுடன் ராம்குமார் மற்றும் பிரபு அவர்கள்.

மேற்காணும் நிழற்படத்தில் அமர்ந்திருப்போர் .. (இடமிருந்து வலமாக) டாக்டர் பத்மா சுப்ரமணியம், செல்வி கே.ஜமுனா ராணி, திரு வி.எஸ்.ராகவன், திரு சி.ஆர். பார்த்திபன். நின்றிருப்போர் (இடமிருந்து வலமாக) - திரு துஷ்யந்த் ராம்குமார், திரு ராம்குமார் கணேசன், மத்திய அமைச்சர் திரு பொன். ராதாகிருஷ்ணன், திரு பிரபு கணேசன், திரு விக்ரம் பிரபு ஆகியோர்.

RAGHAVENDRA
2nd October 2014, 10:01 PM
சென்னை முதல் கன்னியாகுமரி வரை: சிவாஜி ரசிகர்கள் மது விலக்கு வாகனப் பிரசாரம்

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை முதல் கன்னியாகுமரி வரை வாகனப் பிரசாரத்தை நடிகர் சிவாஜி ரசிகர்கள் தொடங்கினர்.

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை அருகே இந்தப் பிரசாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தொடங்கி வைத்தார். மதுவிலக்கை வலியுறுத்தி போராடி வரும் காந்தியவாதி சசிபெருமாள், காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த வாகனப் பிரசாரத்துக்கு தமிழ்நாடு காமராஜர், சிவாஜி தேசியப் பாசறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து, பாசறையின் தலைவர் சிவாஜிநாதன் கூறியது: மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வாகனப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம். சென்னையில் தொடங்கிய இந்தப் பயணம் பண்ருட்டி, கடலூர், புதுக்கோட்டை வழியாக அக்டோபர் 3-ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடையும். இந்தப் பிரசாரப் பயணத்தில், 50 ஆயிரம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க இருக்கிறோம். நிறைவு விழாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, காந்தியவாதி சசிபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

http://www.dinamani.com/tamilnadu/2014/10/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A F%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%A E%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0% E0%AE%BF-%E0%AE%B5/article2459095.ece

Russelldwp
2nd October 2014, 10:21 PM
தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திரையிடப்பட்டுள்ள அண்ணன் ஒரு கோவில் நுழைவாயில் உங்கள் பார்வைக்கு




https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s851x315/10420148_1521650111384998_1202469573684791226_n.jp g?oh=c6bf6ec4a255ca9d7423fdfd1e3f36ac&oe=54CC037C&__gda__=1421272279_f5d0d6c7b39c0c649361287087573ec e

திருச்சி மாநகரில் நிறுவப்பட்டு 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் இருக்கும் நடிகர் திலகத்தின் சிலை உங்கள் பார்வைக்கு

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10291070_1521650968051579_8080215789854754791_n.jp g?oh=5fb9843f3ba23584a0def6eee4b50713&oe=54BB8F12&__gda__=1422398840_e9fe0db91fd853db8235ea5ca955cd2 9

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s851x315/10456764_1521650628051613_5153727787725008836_n.jp g?oh=32e74fa7cfdb286db0d2a19fdd4c1cb5&oe=54CD6F3C&__gda__=1421490583_e9329aa5139ed9639eefcb45e2189d2 0

https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s851x315/1544551_1521650388051637_4517030100818509353_n.jpg ?oh=933a2544cb4801998d028f51187580d0&oe=54C7B50C

Russelldwp
2nd October 2014, 10:25 PM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10620540_1521653968051279_463142917362792051_n.jpg ?oh=5a6f1cb01728774d21de148b419510e2&oe=54851626&__gda__=1420923212_a1ad2842b1759ff7d5c5b616037244a c

eehaiupehazij
3rd October 2014, 07:54 AM
Today has been declared as a day for laughter too!

for a change....

https://www.youtube.com/watch?v=IxWhaFrBz64

https://www.youtube.com/watch?v=mpjEyBKSfJQ

https://www.youtube.com/watch?v=n_1apYo6-Ow

Neeye unakku endrum nigaraanavan. True! You have no parallels our dear NT!! enjoy the elastic face of NT that expresses all...particularly when MRR clowns!!

https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30

JamesFague
3rd October 2014, 10:04 AM
Only in Hindu celebrations of NT given prominence. It is not the case of the other Newspapers.

Gopal.s
3rd October 2014, 11:59 AM
நடிகர்திலகத்தின் மதிப்புக்கும்,மரியாதைக்கும் உரிய ம.பொ .சி நடிகர்திலகத்தின் மிக பெரும் ரசிகர். வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன் உருவாக்கங்களில் பங்கு வகித்தவர்.



தமிழ் பற்றும்,மாநில பற்றும்,தேச பற்றும் கொண்ட இவர் ஆற்றிய சேவைகள் நினைத்து போற்ற தக்கன. தலைநகராம் சென்னையை காத்து தமிழர்களுக்கு அளித்தவர்.



பாரதியார் பக்தர். சிலப்பதிகார தேர்ச்சியால் சிலம்பு செல்வர் என்று அழைக்க பட்டவர்.



அன்னார் நினைவு தினத்தில் நினைவு கூர்வதில் பெருமை அடைகிறோம்.

ScottAlise
3rd October 2014, 05:10 PM
Dear Ragavendran sir,

Congrats for your well deserving award

Subramaniam Ramajayam
3rd October 2014, 06:44 PM
dear ragavendran sir,

congrats for your well deserving award

true sir. Long awaited honour has come at last one satisfaction is that it was duly honured in the presence of large sivaji fans public and lot of dibnatories.
Congrats your sevices to be cotinued that is our wish.

eehaiupehazij
3rd October 2014, 06:45 PM
Ego : The Divide and Rule Tool

இன்று சரசுவதி பூஜையை முன்னிட்டு வசந்த் தொலைகாட்சி ஒளிபரப்பிய சரசுவதி சபதம் திரைப்படம் நடிகர்திலகத்தின் நினவு கூர்தலுக்கும் பொருத்தமாக அமைந்து விட்டது. 'Forgetting ego if we are united we stand. If our ego rules us to divide then we fall' is the one line description of the story combining the trinity of divinity with the eternity of humanity. இரு முற்றிலும் மாறுபட்ட ஜோடியில்லாத கதாபாத்திரங்களில் (கதைக்களத்தின் கருவை விதைத்து நன்மையிலேயே முடியும் கலகத்தை நடத்திச்செல்லும் நாரதமாமுனி மற்றும் தன்மானமிக்க கல்விச்செருக்கற்ற புலவராக) நடிகர்திலகம் நம்மைக்கட்டிப்போடும் நயம் மிக்க திரைக்காவியம். தெருப்பிச்சைக்காரி யானை மாலையிட்டதால் மமதை கொண்ட மகாராணியாகும் விஜயா, கோழையாக உலவி வீரமல்லனாக உருவெடுத்து வீரத்தின் அகங்காரத்தை வெளிப்படுத்தும் ஜெமினிகணேசன்.....
இந்த கல்வியா செல்வமா வீரமா முக்கோணத்தின் ஈர்ப்பு மையமாக நடிகர்திலக நாரதர் எவ்வண்ணம்
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா அதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா என்னும் தத்துவத்தை நிலைப்படுத்துவதே விறுவிறுப்பான திரைக்கதை. மூன்று கதாபாத்திரங்களுமே தங்கள் வாதங்களை நியாயப்படுத்தும் வண்ணம் வசன அமைப்பு, (சொல்வாக்கை செல்வாக்கு வெல்ல இயலுமா .....enjoy this one liner quip from NT) அருமையான வண்ணக்கலவையில் அற்புதமான அரங்க அமைப்புக்கள், செவிக்கினிய இசையும் பாடலும்.......காலத்தை வென்று இன்றும் என்றும் நின்று நிலைக்கும் நடிகர்திலகத்தின் வெற்றிக்காவியங்களில் தனியிடம் பெற்ற திரையோவியம்.

https://www.youtube.com/watch?v=OHDLyB70GJo

https://www.youtube.com/watch?v=AzE8Wtz7SaA

https://www.youtube.com/watch?v=CJIzSGiE4oc

Subramaniam Ramajayam
3rd October 2014, 06:45 PM
dear ragavendran sir,

congrats for your well deserving award

true sir. Long awaited honour has come at last one satisfaction is that it was duly honured in the presence of large sivaji fans public and lot of dignatories.
Congrats your sevices to be cotinued that is our wish.

RAGHAVENDRA
3rd October 2014, 07:11 PM
Thank you Ragul and Ramajayam Sir for your kind complements.
All credit go to NT only.

RAGHAVENDRA
3rd October 2014, 07:14 PM
quoted from Silver Screen website:



ETERNAL LOVE: SIVAJI GANESAN’S 86TH BIRTHDAY CELEBRATION

n Wednesday (October 1), the Music Academy shed its usual Margazhi ambience. Men clad in white veshti and shirts, and women in Kanchivarams alighted from private buses that arrived from several parts of Tamil Nadu.

All vehicles, though, had a singular photo on the windshield: a black and white portrait of Sivaji Ganesan.

It was the 86th birthday of the Nadigar Thilagam.

Fans of all ages thronged the auditorium to celebrate, with stars like Y Gee Mahendra, Mohan Raman, Chithra Lakshmanan, and Santhanam arriving in time too.

While the hall was filling fast, a large group of fans waited outside to receive Sivaji Ganesan’s family. Some held placards featuring a picture of Sivaji Ganesan. Some chanted slogans hailing the star. And, when actor Prabhu’s Audi arrived, the crowd went berserk. Young men tried prostrating at Prabhu’s feet. The older lot held Prabhu’s hands and ushered him into the packed auditorium. As we tried finding our way to the hall, we overheard an ecstatic fan saying, “Prabhu marave illa. Appa pola!”

After hugging his father’s fans, Prabhu went on-stage right away, where his elder brother Ramkumar awaited him.

*****

It was one of those well-arranged events.

The curtains slid smoothly, quite dramatically to the sides.

And revealed with folded hands, were Central Minister Pon. Radhakrishnan, Ramkumar, Prabhu, dancer Padma Subrahmanyam, singer Jamuna Rani, yesteryear actors VS Raghavan and CR Parthiban. When they greeted the audience, the auditorium rang with applause for several minutes.

Fans chanted the name of their beloved star. “Nadigar Thilgam vaazhga!”

*****

http://content.silverscreen.in/wp-content/uploads/2014/10/sivaji-ganesan-86-th-birthday-celebration-lq-001.jpg

When the cheers died down, Ramkumar announced that the Sivaji Ganesan Memorial Foundation would honour the artistes seated on-stage. And without much ado, an AV that explained their individual achievements was played, along with a clip from the movies in which they starred with Sivaji Ganesan.

During VS Raghavan’s turn, quite fittingly, a popular scene (from 9:17) from Vasantha Maligai, in which the Man Friday wishes Sivaji Ganesan on his birthday was featured. Paavaiyin Mugathai Paarthaar Oruvar from Pasamalar, a song rendered by Jamuna Rani, was played. And the iconic scene from Veerapandiya Kattabomman, where CR Parthiban plays Jackson Durai was screened to whistles and deafening applause.

Fans struggled to contain their excitement and often interrupted the host’s speech to add more trivia about their idol. The atmosphere grew more electric when Padma Subrahmanyam, Jamuna Rani, VS Raghavan and CR Parthiban were given their certificates and cash award of Rs 50,000. The onlookers were even more pleased when Vikram Prabhu and Dushyanth Ramkumar brought the garlands and certificates to their fathers whenever an artiste was honoured. Rest of the time, the young actors stood behind the screen, watching the event with a bright smile on their faces, ready to follow their fathers’ instructions.

*****

on Radhakrishnan made an interesting observation; as to how a Sivaji Ganesan film would be used to describe emotion. “When I become emotional, my family used to say, “periya pasamalar Sivaji ivaru.” His movies have become a part of our lives, quite organically. Those days, police officers wanted to be like SP Choudhry of Thanga Pathakkam, lawyers wanted to be like Rajinikanth of Gauravam…”

Adding that he admired Sivaji Ganesan as a great villain and drag-queen too, Radhakrishnan said, “He couldn’t succeed in politics. Thiraila nadikka therinjavarukku, nijathula nadikka therila!”

*****

The actor’s birthday is celebrated by the family every year. Radhakrishnan also declared that the Tamil industry should come forward to celebrate Sivaji Ganesan’s birthday. “To honour Nadigar Thilagam, an award at a national level must be instituted in his name. Avar thaan indha thiraiulgathukku mudhalvar.”

When the curtains were drawn, Prabhu and Vikram zoomed away in their cars, as fans raced the vehicles to wave at the stars one last time.

Muruganandham, a teacher and an ardent fan, who has come all the way from Madurai and who has been attending the celebration since 2002 said, “When we sit with Sivaji’s family, when we listen to the speeches of people who have worked with him, we are reassured that he hasn’t left us yet. And we will forever be in touch with his family, for they know how much we meant to the Nadigar Thilagam.”



Thank you Siverscreen for an indepth coverage [http://silverscreen.in/events/eternal-love-sivaji-ganesans-86th-birthday-celebration/]

RAGHAVENDRA
3rd October 2014, 07:24 PM
Video of the function covering the speeches of Shri Prabhu, Shri Ramkumar and Shri Pon.Radhakrishnan, Hon'ble Union Minister of State (video in that order)

http://www.youtube.com/watch?v=kMgHWO2v__Q

RAGHAVENDRA
3rd October 2014, 07:29 PM
Reproduced from Tamil Cine Talk website:



“நடிகர் சங்கம் சிவாஜியின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்..”-அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்..!"

[img]http://www.tamilcinetalk.com/wp-content/uploads/2014/10/375A8579.jpgp/img]

நடிகர் திலகம் சிவாஜியின் 86-வது பிறந்த நாளை வழக்கம்போல சிவாஜியின் குடும்பத்தினர் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

அவர்களது குடும்பத்து மாப்பிள்ளையான ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் ஜெயிலில் இருப்பதால் கொஞ்சம் உற்சாகம் குறைந்த நிலையில் இருந்தனர் சிவாஜியின் குடும்பத்தினர்.

ஆனாலும் நிகழ்ச்சிகளில் குறைவில்லை. சிவாஜியின் பிள்ளைகள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வேன்களில் வந்து குவிந்துவிட்டனர். இனி வரும் காலங்களில் காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவை நடத்தினால் நல்லது. இடம் தாங்கவில்லை..

வருடாவருடம் சினிமாவில் சாதனை படைத்தவர்களுக்கு சிவாஜி விருதினை வழங்குகிறார்கள் சிவாஜியின் குடும்பத்தினர். இந்த விருது 50000 ரூபாய் பரிசுத் தொகை கொண்டது.

இந்த வருடம் பாடகி ஜமுனா ராணி, நாட்டிய பேரொளி பத்மா சுப்பிரமணியம், பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த நடிகர் சி.ஆர்.பார்த்திபன் ஆகியோர் சிவாஜி விருதினை பெற்றார்கள்.

இந்த விருதுகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கி கெளரவித்தார்.

பின்பு அவர் பேசும்போது, “சிவாஜி ஒரு பல்கலைகழகம்.. அவரிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய நடிகர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கல்விக்கு ‘சரஸ்வதி பூஜை’ நடத்துவதைப்போல நடிப்புக்கென்று ஒரு நாளை ஒதுக்கி அன்றைக்கு ‘சிவாஜி பூஜை’ நடத்த வேண்டும்.

சிவபெருமான், முருகன், பாரதத்தாய் போன்ற கடவுள்களையும், திருவருட்செல்வர் போன்ற ஆன்மீக குருக்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளையும் நமது தலைமுறையினருக்கு அடையாளம் காட்டியவர் நமது நடிகர் திலகம்தான்..

அழுகை, சிரிப்பு, ஆடல், பாடல் என எல்லாவற்றையும் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டோம். ஒரு வழக்கறிஞர், போலீஸ் அதிகாரி, நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நடித்துக் காட்டியிருக்கிறார்.

சினிமாவில் ஜெயித்த அவரால் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போனதற்குக் காரணம் அவருக்கு நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியவில்லை. ஆனாலும் தமிழ் சினிமாவின் நிரந்தர முதல்வர் அவர்தான். இதில் சந்தேகமில்லை.

இந்த கலைத்துறை சிவாஜிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பது என் ஆதங்கம். அவரது பெயரில் மிகப் பெரிய விருதுகள் வழங்கப்பட வேண்டும். சிவாஜி குடும்பம் மட்டுமே அவரது பிறந்த நாளை கொண்டாடினால் போதாது. நடிகர் சங்கம் ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அதுதான் அவர்கள் சிவாஜிக்கு செய்யும் பெரிய மரியாதையாக இருக்கும். அடுத்த ஆண்டு முதலே சிவாஜியின் பிறந்த நாளை நடிகர் சங்கம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

இதை அப்படியே நடிகர் சங்கம் பக்கம் போனீங்கன்னா அங்க இருக்குறவங்ககிட்ட சொல்லிருங்க ஐயா.. அப்பவாச்சும் கேப்பாங்களான்னு பார்க்கலாம்..?



Courtesy: http://www.tamilcinetalk.com/central-minister-pon-radhakrishnan-speech-in-sivajy-birthday-function/

Harrietlgy
3rd October 2014, 07:51 PM
Today's tamil.the Hindu article by சினிமாப் பித்தன்
அரிமாவின் அரியாசனம்


ரஜினி ரஜினி தான், கமல் கமல் தான் ஆனால் இவ்விருவர்களின் விதை நம் நடிகர் திலகமே!

‘இதனினும் ஒரு மரியாதை எந்த கலைஞனின் இறுதி படைப்பிற்கு கிடைத்திருக்காது’. இவ்வாறு தான் இவ்வருடத்தில் அக்கினேனி நாகேஸ்வரராவ் நடித்த ‘மனம்’ திரைப்படம் ஆந்திரா முழுதும் பேசப்பட்டது.

நாகர்ஜுனா, அமலா, நாக சைதன்யா, அகில் இப்படி மகன், மருமகள், பேரன்கள் என நாகேஷ்வராவ்வின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து நடித்த இப்படம் ‘நாகேஷ்வரராவ்வின்’ கலைப்பயணத்தை புன்னகையுடன் வழியனுப்பி வைத்தது. படம் அற்புதமான படம் தான் இதனினும் அறிய முடிவு எந்த ஒரு கலைஞரின் கலைப்பயணத்திற்கும் கிடைத்திடாது என்று கேட்ட ஒரு வாசகம் தான் நம் நடிகர் திலகத்தின் இறுதிப்பயணங்களை கண்முன் நிறுத்தியது.

தமிழ் திரையுலகமே சிலாகித்த ஒரு நடிகர், என்றும் நடப்பில் சிம்மமாய் விளங்குபவர் நம் நடிகர் திலகம். அள்ளிஅள்ளி நடிப்பு பசியை பலருக்கும் ஊட்டிய இக்கர்ணன் நடிப்பிற்கு இலக்கணம் அமைத்த காலம் மறுத்தற்குரியதல்ல. உங்களுக்கு எப்படி சார் இவ்வளவு ஸ்டைல் வந்தது என்று கேட்டால் ‘எல்லாம் சிவாஜி சார் கிட்டேந்து கத்துகிட்டது தான் அவர் நடிச்ச புதிய பறவை, ஊட்டி வரை உறவு ஸ்டைல்லாம் தான் என்னை ஆட்பறித்தது’- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ‘நாங்கலாம் பராசக்தி வசனம் பேசி கோடம்பாக்கத்துக்கு வந்தவங்க’- உலக நாயகன் கமல்ஹாசன்.

16 வயதினிலே சப்பாணி (கமல்) வசனம் பேசி சினிமாவிற்கு வர ஆசைப்பட்டோம், அண்ணாமலையில் ரஜினி சவால் விடும் ‘அஷோக்!!’ வசனத்தை பேசி சினிமாவிற்கு வர ஆசைப்பட்டோம் என்று தற்கால நடிகர்கள் கூறுகின்றனர். உண்மையில் பார்த்தால் நம் சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் சிவாஜி எனும் ஆலமரத்தின் விழுதுகள் தானே! இன்றைய வட்டார மொழியில் கூறினால் மாஸ் அண்ட் கிளாஸ் இவ்விரண்டின் சங்கமம் தான் சிவாஜி. ஒவ்வொரு மனிதனும் தன் பயணத்தின் முடிவில் அடுத்து வருபவர்களுக்கென எதையாவது விட்டுச்செல்வது அவசியம். அதுவும் கலைஞர்க்கு வித்தை தானம் செய்வது கடமை. அப்படி இருக்கையில் நம் நடிகர் திலகம் என் கடமை அனைத்தையும் முடித்து விட்டேன் இனி நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள், உங்களால் தான் முடியும் என்று ரஜினி, கமலுக்கு பெருமிதத்துடன் தம் சிம்மாசனத்தை அளித்து திரைப்பயணத்தை முடித்துக் கொண்டது போன்று தான் இப்போது தோன்றுகிறது.

படையப்பா, தேவர் மகன் பார்க்கையில்.உச்சத்தில் ஏறி உரியடிக்கும் சூப்பர் ஸ்டார் அதை அப்படியே ஓரமாக நின்று அன்னார்ந்து ரசித்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம். கன்னத்தை அன்போடு தடவி ‘தலையை லேசாக குனித்தபடி அது நீ இந்த ஸ்டைல்லா அப்படி ஒரு சல்யுட் போடுவியே! அப்படி போடு பார்க்கலாம்’ என்று சிவாஜி கேட்க ‘உங்க முன்னாடி எப்படிப்பா..’ என்று ரஜினி தயங்க ‘அட போடு டான்னு சொல்றேன்’ என்று கட்டளையிட ‘நெற்றி முன் தலைமுடி விழ, விரல்கள் கன்னத்தை தொடும் படி ஸ்டைல்லாக ஒரு சல்யூட்டினை நம் சூப்பர் ஸ்டார் அடிக்க’, அட யாரு மகன் இவன் என்ற இறுமாப்புடன், மீசையை மடக்கி சிவாஜி நடந்து செல்லும் காட்சி; ‘எனக்கு எதுக்கப்பா சொத்து, எதுக்கு சொத்து? எனக்கிருக்கிற ஒரே சொத்து இந்த படையப்பன் தான் இனிமே அவன் பார்த்துப்பான்’ என்று சிவாஜி கூறும் வசனங்களின் குறியீடு இப்போது தான் புரிகிறது.

‘நீ முன்னாடி போப்பா, இனிமே நாங்க எல்லாரும் உனக்கு பின்னாடி தான்’ என்று சிவாஜி பேச ‘என்னிக்குமே எங்க எல்லாருக்கும் முன்னோடி நீங்க தானப்பா’ என்று ரஜினி பேசும் வசனம் எத்தனை சிறப்பு. கலைக்காக வாழ்ந்த கலைஞனுக்கு இதைவிட மரியாதை செலுத்தும் அழகிய வசனம் வேறொன்று அமையப் பெற்றிருக்குமா?

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த அற்புதமான காட்சி ‘வீட்டிற்குள் மழை பெய்து கொண்டிருக்க அறக்கபறக்க அவசர அவசரமாக நடந்து வரும் கமல்ஹாசன். ஐய்யா என்னால இந்த காட்டு மிராண்டி கூட்டத்தோடு இருக்க முடியாது என்று கூற ‘இந்த காட்டுமிராண்டி கூட்டத்துல நானும் ஒருத்தான்ப்பு. நாம என்னிக்காவது ஒரு நாள் சாகதான் போறோம் ஆனா நம்ம சாவு அடுத்தவனுக்கு பயனுள்ளதா இருக்கணும். விதை விதைச்ச உடனே பழம் வரும்ன்னு எதிர்ப்பார்க்கலாமோ? இன்னைக்கு நீ பழம் திண்ப நாளைக்கு உன் மகன், அதுக்கு அப்புறம் அவன் மகன், ஆனா விதை நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை. நான் என் கடமையா செஞ்சுட்டேன் நீ உன் கடமையை செய் என்று சிவாஜி கூற. ‘ஐயா நான் இந்த ஊருக்கு எதாவது நல்லது செய்வேன் ஐயா என்ன நம்புங்க’.- கமல். ‘உங்கள தான நம்பனும் இந்த வீட்டுல வேற யார் இருக்கா நம்பறதுக்கு’ என்று கண்கள் கலங்க சிவாஜி பேசும் வசனங்கள் என் கலைப் பயணம் முடியப் போகிறது, என் கடமையை உங்களுக்கு தாரை வார்த்துவிட்டேன் இனிமேல் நீங்கள் தான் நான் சுவாசித்த இந்த சினிமாவை பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கண்ணீர் மல்க கூறுவதை போலத் தான் இப்போது தோன்றுகிறது.

வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டையுடன், முறுக்கிய மீசையுடன் ஊர்சனம் முன் சிவாஜி இருக்கையில் கமல் அமர்கின்ற காட்சி, படையப்பா’வில் சிவாஜி முதற்காட்சியில் அமர்ந்த சிகப்பு இருக்கையில் இடைவெளிக்கு பிறகு ரஜினி அமர்கின்ற காட்சி யதார்த்தமாக அமைந்த காலத்தின் கட்டாயங்கள் என்று கூற முடியுமா?

இதனினும் சிறப்பான முடிவுகள் வேறு எந்த கலைஞனின் கடைசி படத்திலாவது அமைந்திருக்குமா என்று தெரியவில்லை. என் கடமையை நான் முடிந்த வரை செய்துவிட்டேன் இனிமேல் நீங்கள் தான் தமிழ் திரையுலகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை உணர்த்தியபடியே நம் நடிகர் திலகத்தின் கலைப்பயணம் முடிந்திருக்கிறது. நடிப்பிற்காக வாழ்ந்தவரின் பயணத்திற்கு இதனினும் அழகிய முற்றுப்புள்ளி கிடைக்குமா என்பதும் சிவாஜி போல் ஒரு நடிகர் இனிமேல் கிடைப்பாரா? என்பதும் கேள்விக்குறியான் விஷயங்கள் தான்.

ரஜினி ரஜினி தான், கமல் கமல் தான் ஆனால் இவ்விருவர்களின் விதை நம் நடிகர் திலகமே!

sivaa
3rd October 2014, 09:30 PM
Congratulations Mr. Ragavendar sir. For the NT award.

sivaa
3rd October 2014, 09:35 PM
சென்னை முதல் கன்னியாகுமரி வரை: சிவாஜி ரசிகர்கள் மது விலக்கு வாகனப் பிரசாரம்

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை முதல் கன்னியாகுமரி வரை வாகனப் பிரசாரத்தை நடிகர் சிவாஜி ரசிகர்கள் தொடங்கினர்.

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை அருகே இந்தப் பிரசாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தொடங்கி வைத்தார். மதுவிலக்கை வலியுறுத்தி போராடி வரும் காந்தியவாதி சசிபெருமாள், காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த வாகனப் பிரசாரத்துக்கு தமிழ்நாடு காமராஜர், சிவாஜி தேசியப் பாசறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து, பாசறையின் தலைவர் சிவாஜிநாதன் கூறியது: மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வாகனப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம். சென்னையில் தொடங்கிய இந்தப் பயணம் பண்ருட்டி, கடலூர், புதுக்கோட்டை வழியாக அக்டோபர் 3-ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடையும். இந்தப் பிரசாரப் பயணத்தில், 50 ஆயிரம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க இருக்கிறோம். நிறைவு விழாவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, காந்தியவாதி சசிபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

http://www.dinamani.com/tamilnadu/2014/10/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A F%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%A E%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0% E0%AE%BF-%E0%AE%B5/article2459095.ece

பாராட்டத்தக்க மகிழ்ச்சியானவிடயம்

RAGHAVENDRA
3rd October 2014, 10:37 PM
Congratulations Mr. Ragavendar sir. For the NT award.

மிக்க நன்றி சிவா சார்

RAGHAVENDRA
3rd October 2014, 10:39 PM
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xap1/t31.0-8/s720x720/1965558_1516233221950456_5677530631156106354_o.jpg

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t31.0-8/s720x720/10668949_1516233218617123_8446724076012609136_o.jp g

to attend this function contact Kurinji Balaji at 9444031360

Harrietlgy
3rd October 2014, 11:52 PM
NT birthday special-1

http://www.youtube.com/watch?v=6Tz-FES-cP4

Harrietlgy
3rd October 2014, 11:56 PM
NT birthday special-2
http://www.youtube.com/watch?v=FNxY9mDFlCI

joe
4th October 2014, 12:14 AM
பொன்.ராதா :clap:
நாஞ்சில் நாட்டுக்கு நடிகர் திலகம் ரசிகன் பிரதிநிதியாய் இருப்பது சாலப்பொருத்தம்.

Harrietlgy
4th October 2014, 12:23 AM
NT Birthday special-3

http://www.youtube.com/watch?v=RkN6IxnlqFs

Harrietlgy
4th October 2014, 12:24 AM
NT Birthday special-4

http://www.youtube.com/watch?v=BfjeLTkwt0g

Harrietlgy
4th October 2014, 12:25 AM
NT Birthday special-5

http://www.youtube.com/watch?v=MYcReiSdV4o

Harrietlgy
4th October 2014, 12:26 AM
NT Birthday special-6

http://www.youtube.com/watch?v=V8NMZR_YhOM

eehaiupehazij
4th October 2014, 08:05 AM
Remembrance of 'Old is Gold' Stars in the NT galaxy!

Buster Keaton (Oct 4,1895) : The original comedy Action King of Silent Era of movies!

It was learnt that NT was an ardent admirer of some of the stars of the 'Silent Era' particularly the comedy king Charlie Chaplin, Comedy Action pioneer Buster Keaton, Slapstick comedians like Laurel, Hardy and Norman Wisdom! After the cyclonic entry of NT, (though in Tamilnadu where the sons of soils are normally not properly recognized or discouraged by way of filthy criticisms without understanding the worthiness of our own diamond jewel in the crown), for us the acting galaxy has been virtually named as the 'NT galaxy' that encompasses all other stars too! (Before NT and After NT is the phrase in the field of acting)

Today we commemorate the Birthday of the Comedy-Action thriller 'jaambavaan' and pioneer for such comedy mixed action choreography Buster Keaton ( as further manifested and amplified by such stars as Terence Hill and Jackie Chan), who was on parallel rails of fame with Charlie Chaplin. Chandrababu borrowed liberally from his action slips and jumps! Even Daniel Craig, now in duty as 007 emulated Keaton in his rooftop runs, slips, jumps and bounces in Quantum of Solace!

Joseph Frank "Buster" Keaton (October 4, 1895 – February 1, 1966) was an American actor, vaudevillian, comedian, filmmaker, stunt performer, and writer. He was best known for his silent films, in which his trademark was physical comedy with a consistently stoic, deadpan expression, earning him the nickname "The Great Stone Face".(Courtesy : Wikipedia)



https://www.youtube.com/watch?v=_J8XM1_rOTg

https://www.youtube.com/watch?v=qpk7O6HNT7E

https://www.youtube.com/watch?v=f-y36kHok4U

https://www.youtube.com/watch?v=LWEo4M8nZQQ

https://www.youtube.com/watch?v=9qzradFgPxU

https://www.youtube.com/watch?v=53FSGl1yev8

RAGHAVENDRA
4th October 2014, 09:13 AM
கானடா நாட்டு ரசிகர் சிங்கத்தமிழன் சிவாஜியின் தீவிர வெறியர் ஞானேந்திரன் அவர்களின் முகநூல் பக்கங்களிலிருந்து...

தலைமுறை கடந்த தவப்புதல்வனுடன் இளைய தலைமுறை

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/10689749_10152719022439410_8706474714149805910_n.j pg?oh=4d145a901a48d2c3a3c18a87cb9151f3&oe=54BF6276&__gda__=1422923469_0e3f47a62c7057a61ba0215ae342eed f

திரியின் தளபதி முரளி சாருடன் ஞானேந்திரன்

https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/q81/s720x720/10670262_10152719025044410_4855006739400289043_n.j pg?oh=38e1078be1b1ca1644b292516c5044a9&oe=54C304EA

நமது திரியின் பங்களிப்பாளர்கள் மதுரை சந்திரசேகர், முரளி சார், பம்மலார், மற்றும் அம்பத்தூர் சுப்ரமணியம் உள்ளிட்ட நண்பர்களுடன் ஞானேந்திரன்

கையில் காணப்படுவது பம்மலாரின் உன்னத காலண்டரின் முகப்பு

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s720x720/10407984_10152719025309410_6963401411441712328_n.j pg?oh=3eeabbcc77ca0afed546771212912019&oe=5485D10B&__gda__=1421816562_de1b2df92b1013a41aa6bbd591a294c 2

அரங்கை அதிர வைத்த அந்த காணொளியின் நிழற்படம்

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/s720x720/10177501_10152719023864410_979842654431865714_n.jp g?oh=b039145f2ed21f90402253979d837e47&oe=54C546BB&__gda__=1417991863_643bce4dd72d1861aac685515be37b9 a

நன்றி ஞானேந்திரன் சார்

RAGHAVENDRA
4th October 2014, 09:40 AM
முதல் படத்தை முதல் வெளியீட்டிலேயே பார்த்து அன்றே தீவிர ரசிகனாகிவிட்ட அன்புக்குரிய பெரியவர் நடராஜன் அவர்களின் நெகிழ்ச்சியூட்டும் நினைவலைகள்.. தலைவன் சிவாஜி இணைய தளத்திலிருந்து..

https://docs.google.com/viewer?url=http%3A%2F%2Fwww.thalaivansivaji.com%2F wp-content%2Fuploads%2F2014%2F03%2F1.pdf%3F1412395157&docid=047f832d2c355b0e64dbf6c1ca93cc64&a=bi&pagenumber=2&w=832

- நன்றி தலைவன் சிவாஜி இணைய தளம்

முரளி சார் நம் அன்பு நண்பர் நடராஜன் அவர்கள் இத்திரியில் பங்கு கொண்டு சிவாஜி ரசிகராக தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார். தாங்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள். விரைவில் அவருடைய பதிவுகள் இங்கே இடம் பெற வேண்டும் என்ற நம் விருப்பம் நிறைவேறட்டும்.

Russellbpw
4th October 2014, 10:35 AM
திரியில் தனக்கு தானே மானியம் விட்டு கொள்ளும் சில அறிவாளிகள் என்ன எழுதுகிறோம் என்பதை தெரிந்து இனி பதிவிட்டால் நன்று.

இவர்களுடைய அறிவாளித்தனமான பதிவுகளால் மற்றவர்களும் பாதிப்புஉக்கு உள்ளாகி வருகின்றனர். தேவையில்லாத கமெண்ட்ஸ் மற்றவர்கள் பதில் பதிவு செய்யும்போது நம்மால் அதை பார்த்துகொண்டு சும்மாவும் இருக்கமுடியவில்லை.

நடிகர் திலகத்தின் படங்கள் அனைவரும் பார்த்து பரவசம் அடையும் வகையில் உள்ள திரைப்படங்கள்.

குப்பையை கோபுரம் என்று மற்றவர்கள் போல கூற உங்களை சொல்லவில்லை. அது குப்பை என்றாவது கூறாமல் இருக்கலாம் அல்லவா ?

நம்மவர்களே நம் படங்களை பற்றி தரமற்ற முறையில் விமர்சனம் செய்வதை இன்னியும் நிறுத்தாவிட்டால் அப்படி பதிவு செய்பவர்களை கடுமையாக தாக்கி நான் பதிவடவேண்டி வரும் என்பதை தாழ்மையுடன் எச்சரிக்கிறேன் !

பதிவு போட தெரிந்தால் போடவேண்டும் இல்லையென்றால் "லைக்" தேங்க்ஸ்" பொத்தான் இருக்கவே இருக்கிறது. அதை அழுத்தி செல்ல வேண்டியதுதானே !

இது ஒரு non stop nuisance ஆக இருக்கிறது !


Rks

Murali Srinivas
4th October 2014, 02:07 PM
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் திரு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்றைய கலை, அரசியல் உலகிற்கு மட்டுமல்ல மக்களின் அன்றாட வாழ்விலும் நடிகர் திலகம் எந்தளவிற்கு relevant-ஆக இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டி பேசினார். இதே கருத்தை நாமும் இங்கே பலமுறை வழி மொழிந்திருக்கிறோம். அதன் எதிரொலியாகவே அண்மைக் காலத்தில் பலவேறு ஊடகங்களிலும் நடிகர் திலகத்தைப் பற்றிய செய்திகள், நிகழ்ச்சிகள் இடம் பெறுவதையும் பார்க்கிறோம். நடிகர் திலகம் புகழ் பாடும் நிகழ்வுகளும் பொது மேடைகளில் அரங்கேறுகின்றன.

அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் நடைபெறும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளையும் பார்க்க வேண்டும். காங்கிரஸ் இயக்கத்தின் பல்வேறு தலைவர்கள் பங்கு பெறும் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா இன்றைய தினம் சென்னையில் நடைபெறுகிறது. இது போன்றே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அதிகாரபூர்வமாக நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா திரு. ஞானதேசிகன் தலைமையில் அடுத்த வாரம் [11-ந் தேதி?] ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

நடிகர் திலகத்தையும் அவர் சம்மந்தப்பட்ட விஷயங்களையும் அண்மை காலம் வரை புறக்கணித்தே வந்த தினமலர் நாளிதழ் சில மாதங்களுக்கு முன்னர் திரு. ஒய். ஜி. மகேந்திரனின் நான் சுவாசிக்கும் சிவாஜி தொடரை வெளியிட்டது. அது நிறைவுற்று ஒரு சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு தொடர் தினமலர் வாரமலர் இதழில் நாளை முதல் தொடங்குகிறது. பல வருடங்களுக்கு முன் பொம்மை மாத இதழில் நடிகர் திலகமே எழுதிய கதாநாயகனின் கதை என்ற தொடர் வெளியானது. [இந்த தொடரை பொம்மை மாத இதழை வெளியிட்டுக் கொண்டிருந்த சந்தமாமா பதிப்பகமே புத்தகமாகவும் வெளியிட்டது]. இந்த தொடர்தான் இப்போது மீண்டும் தினமலர் வாரமலர் இதழில் தொடராக வெளியாகப் போகிறது.

எப்படி பார்த்தாலும் எந்த external push -ம் இல்லாமல், ஆட்சி அதிகார அரசியல் பின்புலங்கள் இல்லாமல் தமிழகத்தில் என்றென்றும் நடிகர் திலகம் relevant-ஆக இருப்பார் என்பதற்கு நமக்கு தேவைப்படாவிட்டாலும் கூட தேவைப்படுபவர்களுக்கு இவை சான்றுகள்.

அன்புடன்

eehaiupehazij
4th October 2014, 03:23 PM
நடிகர் திலகத்தையும் அவர் சம்மந்தப்பட்ட விஷயங்களையும் அண்மை காலம் வரை புறக்கணித்தே வந்த தினமலர் நாளிதழ் சில மாதங்களுக்கு முன்னர் திரு. ஒய். ஜி. மகேந்திரனின் நான் சுவாசிக்கும் சிவாஜி தொடரை வெளியிட்டது. அது நிறைவுற்று ஒரு சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு தொடர் தினமலர் வாரமலர் இதழில் நாளை முதல் தொடங்குகிறது. பல வருடங்களுக்கு முன் பொம்மை மாத இதழில் நடிகர் திலகமே எழுதிய கதாநாயகனின் கதை என்ற தொடர் வெளியானது. [இந்த தொடரை பொம்மை மாத இதழை வெளியிட்டுக் கொண்டிருந்த சந்தமாமா பதிப்பகமே புத்தகமாகவும் வெளியிட்டது]. இந்த தொடர்தான் இப்போது மீண்டும் தினமலர் வாரமலர் இதழில் தொடராக வெளியாகப் போகிறது.
by Murali Srinivas


ஊடகங்கள் ஊடுருவாத துறை என்று எதுவுமில்லை. திரைத்துறையும் பல்வேறு ஊடகங்களைச் சார்ந்தே செயல்பட்டாக வேண்டிய காலகட்டம் இன்னும் மாறவில்லை.
எந்தக்காலத்திலும் கூர்வாளினும் வலிய பேனாமுனை பத்திரிக்கைத்துறையின் பலமிக்க பின்புலம். நியாய அநியாயங்களுக்கு அப்பாற்பட்டு நேர்மை தவறாத பொய்கலப்பற்ற செய்திகளை வெளியிடுவது தனிநபர் விலை போவதைப் பொறுத்ததே. நடிகர்திலகம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு தன் உழைப்பை மட்டுமே அடித்தளமாக்கி தன்னிகரற்ற நடிப்பு சாம்ராஜ்யத்தை அதன்மேல் நிறுவி அண்ணாந்து பார்த்து மலைக்க வைத்த மகாகலைஞன். சில நாளிதழ்கள் இருட்டடிப்பு செய்தபோதும் ஒளிவீசிய திரைக்கதிரவன். மக்கள் மனதில் பசுமரத்தாணி யாக ஆலம்விழுதாக வேரூன்றி நிற்பவர் ஒதுக்கிய பத்திரிக்கைகளையே தன்னை நோக்கி வரவைத்ததில் வியப்பேதுமில்லை !

eehaiupehazij
4th October 2014, 04:13 PM
NT's view on the strength and weakness of newspaper media!

https://www.youtube.com/watch?v=ePriq_xpWLo

NT's self pity and desperation on mistaken identity!

https://www.youtube.com/watch?v=KabWTXPNKsI

Russellbpw
4th October 2014, 06:06 PM
https://www.youtube.com/watch?v=vjZ9ZCOXxPo

Russellbpw
4th October 2014, 06:08 PM
அழிந்துவிடுவது - நிலையற்ற செல்வம்
புவியாள்பவர் முடிவு - முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடிசாம்பல்ஆவர்
பார்க்கமுடியாதது - அடக்கமில்லாமை
அதற்க்கு உதாரணம் - உங்களது ஆட்சி !!!

தளபதி அனைவரும் கேட்க அரசியை பாராட்டி ஒரே ஒரு கவி பாடிவிட்டு போ...!

வித்யாபதி நரஸ்துதி பாடுவதில்லை !!!!

அரசி எப்படி ? (சற்று திமிருடன் ! )

வித்யாபதி இறைவனை பாடும் வாயால் ...இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களை பாடுவதில்லை !!!!

வித்யாபதி என் ஆட்சியில் எனது நாட்டில் ....என்னுடைய பிரஜையாக இருந்துகொண்டு ...என்னை எதிர்க்க துணிவு வந்துவிட்டதா ?

வித்யாபதி நாடு...ஆட்சி...மன்னன் ...பிரஜை....இவை அனைத்தும் விதி விளயாடிவிட்டால் நாளை மாற்றான் கையில்....அதற்குள் இத்தனை நாடகமா ? வேடம் புனைந்து களைவது போல விடிந்தால் எத்தனை எத்தனை மாற்றங்களோ ...!

வித்யாபதி நேற்றிருந்தான் இன்றைகில்லை என்ற தத்துவத்தை நினைவிற்கொண்டு சற்று நிதானத்துடன் நடந்துகொள்ளுங்கள் ! மற்றவரை அடக்கியாள நினைத்தவர் அதிக நாள் வாழ்ந்ததில்லை ...வாழபோவதும் இல்லை !

தளபதி இவனை சிறையில் அடையுங்கள் ....!

வித்யாபதி நல்ல ஆட்சி....உயர்ந்த அரசு....சிறந்த தளபதி....பாவம் மக்கள் !!!

எக்காலத்திற்கும் ஏற்ற தீர்க்க தரிசன உரையாடல் !


https://www.youtube.com/watch?v=AzE8Wtz7SaA

Harrietlgy
5th October 2014, 01:34 AM
Thalaivarin Thodar in Varamalar
கதாநாயகனின் கதை! - சிவாஜி கணேசன்[B]




வி.சி.கணேசனாக இருந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக சிகரம் தொட்ட சுயசரிதை இது. சிவாஜி கணேசன், 'பொம்மை' இதழில் எழுதிய கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு; நுாலாகவும் வெளிவந்தது. சாதனை புரிய எவ்வளவு உழைக்க வேண்டும் என்ற படிப்பினையை, இத்தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை.

விழுப்புரம், சின்னையா மன்றாயரின் மகனான என்னை, 'சிவாஜி' கணேசனாக்கி, 'பராசக்தி' கணேசனாக உருவெடுக்கச் செய்து, 'நடிகர் திலகம்' கணேசன் என அன்புடன் அழைத்து, பத்மஸ்ரீ விருது பெரும் கணேசனாக மாற்றியது யார்?
கலை உள்ளம் கொண்ட நீங்கள் தான்! திருச்சி, சங்கிலியாண்ட புரத்து, என் இளமைக் காலத்து வாழ்க்கை, இப்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு வகை அலாதியான வாழ்க்கை! சங்கிலியாண்டபுரத்தில் எனக்கென்று தனியாக, ஒரு நண்பர்கள் கூட்டம் உண்டு.
ஊருக்குள் எங்களுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டு. அது, 'துஷ்டர்கள்!' ஆக, சின்ன வயதிலேயே எனக்கும், பட்டத்திற்கும் ஒரு தனிப்பிடிப்பு உண்டு.
வீதியிலே நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். திடீரென்று ஏதேனும் ஒரு அழுகுரல் கேட்கும். 'யாரடிச்சா... பாவம் பையன் அழறானே...'என்று கேட்டால், 'கணேசன் அடிச்சிட்டான்...' என்று, பல குரல்கள் ஒலிக்கும். அந்த அளவுக்கு, அப்போது என் கை ஓங்கி, தவறு... நீண்டிருந்தது.
அடி வாங்கிய சிறுவனின் தாயோ, அக்காவோ என் தாயாரிடம், என் வீரத்தை பற்றி புகார் சொல்வர்.
என் தாயார் நான் வீடு திரும்புவதை எதிர்பார்த்து, கையில் வெங்காயத்துடன் ஆவலாக காத்திருப்பார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, 'வாடா மகனே... ஏன்டா என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறே...' என்று அன்புடன் அழைத்து, கையில் மறைத்து வைத்திருந்த வெங்காயத்தை, என் தந்தையின் துணையுடன், கண்களில் பிழிந்து விடுவார்.
துடிப்பேன்... கதறுவேன்... கண்ணீர் வடிப்பேன்.
'இனிமே இப்படிச் செய்ய மாட்டியே... வீண் வம்புக்கு போக மாட்டியே...'என்று, முதுகிலும் அன்பளிப்பு வழங்குவார்.
இவ்வளவு வாங்கியும், நான் திருந்தினேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.
மறுநாளே என் துஷ்டத்தனம் மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்து விடும்.
இதனாலேயே என் பெற்றோர் எங்காவது வெளியே செல்வதென்றால், என்னை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டே செல்வர். சில சமயம், வெளிக்கதவை பூட்ட மறந்து, தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு போய் விடுவர். அதைத் தெரிந்து, நானும் கதவை சாமர்த்தியமாக ஆட்டி அசைத்து, தாழ்ப்பாளை விடுவித்து, மதில் சுவரை தாண்டி குதித்து வெளியேறி விடுவேன்.
'கணேசன் வந்துட்டான் டோய்...' என்று என் சகாக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்புவர்; அதைக் கேட்கும் போது, பெருமையாக இருக்கும்.
என் பெற்றோர் வீடு திரும்பியதும், நான் வீட்டில் இல்லாததைக் கண்டுபிடித்து விடுவர். இரவு வீட்டிற்கு வரும் போது, வழக்கம் போல வெங்காயம் காத்திருக்கும்.
அந்த அளவுக்கு படு துஷ்டை நான்.
ஒரு சமயம் என் அண்ணன் தங்கவேலுக்கும், எனக்கும் ஏதோ தகராறு வந்து விட்டது.
'வாடா வா... இன்னிக்கு ராத்திரி உன்ன அடிச்சுக் கொன்னுடறேன் பாரு...' என்று ஒரு தடியை துாக்கி வைத்துக் கொண்டேன்.
பயந்து போய் அம்மாவிடம் தஞ்சம் அடைந்து விட்டார் என் அண்ணன்.
'பாவிப்பய, உதவாக்கரை... செஞ்சாலும் செஞ்சுப்புடுவான்...' என்று, அன்றிரவு முழுவதும் துாங்காமல், என் அண்ணன் பக்கத்திலேயே படுத்திருந்தார் அம்மா.
ஆனால், நானோ தடியை பக்கத்தில் வைத்துக் கொண்டே நிம்மதியாக துாங்கி விட்டேன்.
அப்போது, ஊர்க்காவல் என்று ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. திருடர்கள் வராமல் தடுக்க, நான்கு வீட்டுக்கு ஒருவராக சிலர் சேர்ந்து, இரவு நேரத்தில் தெருவில் ரோந்து வருவது வழக்கம்.
திருடனை சமாளிக்க வேண்டுமென்றால், முரட்டுத்தனம் உள்ளவர்கள் தானே வேண்டும்? என்னிடம் அப்போது அது தாராளமாக இருந்ததால், இந்த ரோந்து காவல் குழுவில் நானும், என் வீட்டின் சார்பில் கலந்து கொண்டேன்.
எங்களுக்கு சின்ன வயதாக இருக்கலாம்; ஆனால் முரட்டுத்தனமும், பிடிவாதமும் எக்கச்சக்கமாக இருந்தன.
ஏதாவது பாட்டு பாடியோ, கோஷமிட்டபடியோ வீதியை சுற்றி வருவோம்.
சில சமயங்களில் விளையாடவும் செய்வோம்.
'பச்சை இலை கொண்டு வருவது' என்று ஒரு விளையாட்டு; 'கண்ணாமூச்சி' விளையாட்டைப் போன்றது.
'இன்ன இடத்தில், இன்ன மரத்தில் இருந்து, பத்து இலை பறித்து வா...' என்று ஒருவனிடம் சொல்வர். அவன் போவான்; அவன் கூடவே மற்றவர்களும் போவர். அவன் மரத்தில் ஏறி இலை பறிக்கும் நேரத்தில், மற்றவர்கள் ஓடிப் போய் ஒளிந்து கொள்வர். சொன்னபடி இலையை பறித்து திரும்பும் அவன், யாரை முதலில் பார்த்து பிடித்து விடுகிறானோ, அவன் தோற்றவனாகி விடுவான். தோற்றவன் இலை பறிக்க வேண்டும்.
இந்த விளையாட்டின் போது, சில சமயம் வேண்டுமென்றே, 'சுடுகாட்டு பக்கத்தில் உள்ள மரத்திலிருந்து இலை பறித்து வா...' என்று சொல்வர். ஒருசமயம் நானே இம்மாதிரி போய் பறித்து வந்திருக்கிறேன்.
இம்மாதிரியான விளையாட்டுகள், சில சமயங்களில் விபரீதமாகவும் முடியும்!
ஒரு நாள், விளையாடிக் கொண்டிருந்த போது, ராஜு என்ற நண்பன், ஏதோ ஆத்திரத்தில் பேனாக் கத்தியால், என் முதுகில் குத்தி விட்டான். அந்தத் தழும்பு, இப்போதும் என் முதுகில் இருக்கிறது.
என் தாயார் என்னை கண்டிக்கும் போது, சில நேரம் எனக்கு கோபம் வந்து விடும்.
'வீட்டை விட்டு போய் விடுகிறேன்...' என்று சொல்லி, ஆத்திரத்துடன் வெளியே கிளம்பி விடுவேன்.
எங்கே போவேன் என்று நினைக்கிறீர்கள்... மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் போய் உட்கார்ந்து விடுவேன் அல்லது வேறு எங்காவது மரத்தடிக்கு போய் விடுவேன்.
மாலை வரும்; என் வீராப்பை விட்டு, 'ஜம்'மென்று வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன்.
என் தாயார் என்னைப் பார்த்ததும், பார்க்காதது போல நடிப்பார்.
எந்தப் பெற்றோருக்கும், தன் மகன் நன்றாக படித்து பெரிய உத்தியோகத்தில், சீரும் சிறப்புமாக இருப்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கை.
என் பெற்றோருக்கும், அந்த ஆவல் இருந்தது.
திருச்சியில், ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் என்னை சேர்த்து விட்டனர். அப்போதெல்லாம், நான் அருமையாகப் பாடுவேன். 'ஞான சங்கீதப்பன் மணி மண்டபம்...' என்று, நான் பாட ஆரம்பித்து விட்டால், அதைக்கேட்டு ரசிக்க, என்னைச் சுற்றி ஒரு கூட்டமே நிற்கும். பள்ளியில் படிக்கும் போதும், எனக்கு பாட்டில்தான் நிறைய மதிப்பெண் கிடைக்கும். அதில் தான், முதலில் வருவேன்; மற்றவற்றில் சுமாரான மதிப்பெண்கள் தான் கிடைக்கும். கணக்கிலோ பெரிய பூஜ்யம்!
'காட் சேவ் தி கிங்' (கடவுள் அரசரைக் காக்கட்டும்) என்ற ஆங்கில பாட்டுத்தான், அப்போது பள்ளியில் கடவுள் வணக்கப்பாட்டு. என் குரலில் இனிமையைக் கண்ட ஆசிரியைகள், என்னையும் கடவுள் வணக்கம் பாடும் மாணவர்கள் கோஷ்டியில் சேர்த்து விட்டனர்.
என் வீட்டுக்கும், பள்ளிக்கும் குறைந்த துாரமோ அல்லது நீண்ட துாரமோ அது எனக்கு தெரியாது. ஆனால், படிப்புக்கும், எனக்கும் வெகு துாரம் என்பது உடனே தெரிந்துவிட்டது.
அந்த பதினைந்து மாத பள்ளி வாழ்க்கைக்கு பின், என்ன நடந்தது...
— தொடரும்.

eehaiupehazij
5th October 2014, 09:12 AM
நடிகர் திலகம் குதிரையேற்றத்தில் வல்லவர் என்பதை பலபடங்களில் நம்மை பரவசப்படுத்தியிருக்கிறார். யானைகளை கட்டுப்படுத்துவதிலும் வல்லமை பெற்றவர் என்பதையும் நமக்கு தெரியப்படுத்துகிறாரோ?!

Remember slim, sleek and slender NT rolling fast away from an elephant in Vilayaatuppillai!? In Thangamalai Ragasiyam too effortlessly he rides an elephant.

https://www.youtube.com/watch?v=uE25fCTYP7g

https://www.youtube.com/watch?v=YIPFopNqSos

JamesFague
5th October 2014, 09:47 AM
Coming sunday on 12.10.14 NT's classic Hit Muradan Muthu at Russian Cultural Centre on behalf of
NT Fans.

The details will be posted shortly by Mr Raghavendra.

Gopal.s
5th October 2014, 09:59 AM
சந்திர சேகர்,

உங்களிடம் நான் வேறு பட்டு நிற்பது ஒரு விஷயத்தில்.(உங்களை நான் ஆதரித்தாலும்) சிவாஜி முதலில் உலக நடிகர். கலை சார்ந்த விஷயங்களே அவர் பற்றி பேசும் போது ,செயல் படும் போது முன்னிலை படுத்த பட வேண்டும்.

அவர் தொடக்கத்திலிருந்தே ,அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தாலும்,தேச பற்று,மொழி பற்று,தெய்வ பற்று,சமூக பற்று கொண்ட உண்மை மனிதர் என்ற போதும் ,எந்த காலத்திலும் அதனால் லாபம் வேண்டி நேரடி அரசியலுக்கு வராதவர். வந்த போது நேரம் காலம் தவறி ,மிக மிக அபத்தமான முடிவெடுப்புகளால் தன் பொருளையும் ,புகழையும் பணயம் வைத்தார்.எல்லா கட்சியிலும் இருந்திருந்தாலும் (தி.க,தி.மு.க,காங்கிரஸ்,ஸ்தாபன காங்கிரஸ்,இந்திரா காங்கிரஸ்,சுய கட்சியால் அ .தி.மு.க வுடன், ஜன மோர்ச்சா (ஜனதா தளம்) ,எந்த கட்சியிலும் நன்றி உணர்ச்சி கொண்டவர்களோ அல்லது அவருக்கு கிடைக்க வேண்டிய இடைத்தை கொடுத்தவர்களோ இல்லை.

அவர் எப்போதுமே ,காற்று வீசும் திசையில் பயணம் செய்த சராசரி சந்தர்ப்பவாத அரசியல் வாதியல்ல.அதனால் லாபமடைய நினைத்தவரோ,தன் மனதுக்கே ஒவ்வாத கருத்து கொண்டவர்களிடம் வெற்று இணக்கம் காட்டியவரோ இல்லை.

நம்ம நாட்டின் கீழ்த் தர அரசியல் அவருக்கு வராத ஒன்று. சிவாஜி பேரவை அவரின் கலை வாழ்க்கைக்கு ,அதன் சாதனை சுமந்த மறுமலர்ச்சி காலங்களில் பங்கெடுத்து ,பணி புரிவது அத்யாவசியமே.அரசியல் நமக்கு இரண்டாம் பட்சமே.

Gopal.s
5th October 2014, 10:02 AM
ஆர்.கே.எஸ்

ஆணுக்கென்று சில பல அறிகுறிகள் உள்ளன. அதில் நேர்மையான நேரடி அணுகுமுறை ஒன்று.விடாய் காலங்களில் ஒதுங்கி நிற்கும் பெண்கள் போல ,தினத்தந்தி கிசு கிசு பாணியில் பேச வேண்டிய அவசியமில்லை.
அவர் இவர் என்றெல்லாம் இல்லாமல் யார் ,எந்த பதிவை குறித்து என்று சொல்லி விடேன். சம்பத்த பட்டவர் வரட்டும் .விளக்கமளிக்கட்டும்.

நமது திரி சிந்தையாளர் கூடாரம். உலகத்திலேயே ஆண்மையான மிடுக்கு அழகு கொண்ட திராவிட நடிகனின் ரசிகர்கள். இங்கு சிந்தனைகள் விதைக்க பட வேண்டும். இது மூளை சலவை செய்ய பட்ட பொய்யர்களின் பஜனை வழிபாட்டு கூடமல்ல.நமக்கென்று சுதந்திர சிந்தனைகள் உண்டு. அதுதான் இத்திரியின் அழகு. இது சிவாஜியை மட்டுமே நேசிப்பவர்கள்,சிவாஜியையும் நேசிப்பவர்கள்,சிறு வயது கோளாறால் வேற்று முகாமில் இருந்தாலும் உள்ளுக்குள் சிவாஜி என்ற உலக நடிகன் மற்றும் தமிழனிடம் மாறா மதிப்பு கொண்டவர்கள் என்ற மூன்று வகை கொண்ட அனைத்து தமிழ் பேசும் ,அனைத்து தமிழ் அசல் வித்துக்களை அடக்கியது.(சுமார் 8 கோடி பேர்).இங்கு வேறுபாடுகள் உண்டு. சிவாஜியின் திறமை பற்றியல்ல. அத்திறமை போற்ற பட வேண்டிய விதம் ,ஊருக்கு உரைக்க பட வேண்டிய முறை பற்றியே அவை சுற்றி வரும். இவை தவிர்க்க இயலாதவை.

இங்கு யாரும் சுயலாபம் கருதியோ,அரசியல் கள முக்கியத்துவத்துக்காகவோ,அல்லது வேலையற்றோ இல்லை.அதனால் இது சுயசிந்தனையற்ற ,பகுத்தறிவற்ற பஜனை கூடாரமாக மாறும் வாய்ப்பே இல்லை. அப்படி மாறினால் ஒரு வாசு,ஒரு ராகவேந்தர்,ஒரு கார்த்திக்,ஒரு கோபால்,ஒரு வெங்கி ,ஒரு பீ.ஆர், ஒரு சாரதி ,ஒரு ஜோ இங்கு வந்து பங்களித்திருக்க முடியாது.
புரிந்து கொள்.(நான் எழுதியதை முழுவதும் படித்து புரிந்து கொள்ள முடியாத எவனும் சிவாஜி ரசிகன் என்று சொல்லி கொள்ளவே யோக்யதை அற்றவர்கள்)

JamesFague
5th October 2014, 10:25 AM
Courtesy: Mr S Balaji

A TRIBUTE TO THE IMAYAM OF TAMIL FILM INDUSTRY

IMHO, for Nadigar Thilagam , after the 150th movie – Savaalay Samaalee , very few movies were noteworthy….Even savallay samaalee was not that great compared to his established standards

The mid 70s , the late 70s and the early 80s…..witnessed the emergence and the consolidation phase of 2 great actors, Kamal and Rajinikanth…..and Shivaji has to compete with them to sustain , despite his advancing age

He was under compulsion to act with heroenes who were well below his age group….and were no match at all….( somehow Makkal Thilagam managed to overcome this vexatious generation gap )

Some of the movies were so mediocre, terrible and aweful that we started chiding the Legend , when this old man will be calling it a day…..

Again, I won’t blame Shivaji for this as HE WAS LIKE A GOLDMINE….one has to have the talent and creative thinking to get a theme for him

Even at the evening of his life, Nadigar Thilagam had all the energy , enthusiasm and the urge to outperform others…..basically because he was one of those few actors born……

One reason could be that for the kind of variety of roles that he had played , very little was left out……

KB had everything but he was such a dominating director and he used to impose his style on each character that he portrayed … Its impossible to do such things with a lion , Shivaji….

At last , it needed extraordinary imagination and creative thinking and an extraordinary guy like BR to dig out the hidden treasure in Shivaji…..

BR was very particular even for the choice of the movie title….MUDHAL MARIYAADHAI ….

he was determined to honour the IMAYAM in a befitting way…..

The story line has to suit with the ageing Colossus….

The character has to be unique…..at the same time maintain BR’s originality and style…….

By garlanding the Doyen of Tamil Cinema, the voice of BR speaks…ORU IMAYATHIRKU NANGAL SEYYUM MUDHAL MARIYAADHAI…..
Yes, ultimately it found to be THE MOST IDEAL STORY AND CHARACTER FOR NADIGAR THILAGAM…..

An ageing village chief , in the mid 50s , a kind hearted person, didn’t have a good understanding / supportive / LOVING and CARING life partner despite his monumental sacrifice for marrying her ( despite her poor background )….was craving for love and affection …which he gets through a young woman finally ……

Through various sequence of scenes, BR very poetically makes them understand each other and finally a love and bondage emerges…..

The first step to that was through a song sequence….POONKAATRU THIRUMBUMAA…..
Lets go few steps back to get into the core of the song requirement……An uncontrollable wife , chides and insults openly at regular intervals….it was another day at office but this time it was too frustrating and intolerable for even a matured person to absorb within himself…..
So , how to vent out one’s frustration ?? HERE BR’s CREATIVE THINKING AND IMAGINATIVE SKILLS COME OUT ….

1.BR choses a sober song
2.Esai paattu…….

In our villages, esai paattu is a well known phenomenon….one starts with a theme ….which the other one responds immediately …this will be followed by a bit of further developing and finally improvising them and they join together and giving a finishing touch…..Esai paattu can work out successfully only when there is absolute silence , the distance communication has to reach the other party

The old man moves out of the house, wanders in a isolated area in an agricultural field and lakeside , riverside and starts venting his sadness….

Poonkaatru thirumbumaa
Yen paatta virumbumaa
Paaraata, madiyi vachu thaalataa
Yenakoru thai madee kidaikumaa…..

Terrific lyrics from Vairamuthu ! Lets quickly understand what the poet conveys….Madiyil vachu thaaltaataa ? the aggrieved character wants a MOTHERLY AFFECTION from someone to share his agony ! splendid lyrics…..

IR – BR – VM had a wonderful equation and their chemistry was excellent

BR said once, Naan enna ninaikireno….adhai appadiyay , ennudaya Raja isayil kondu varuvaan ….. Naan avanukku sollavay vendaam……BR, in other words, says that IR understand BR’s thought vibration and quickly will come out with a precise composition !

IR, those days wrote exactly for the time required for the sequence. Without using a stop watch or music editor, he normally wrote music that exactly fitted the required timing. May be, he had a mental clock that while deciding the start cue and end cue for a music bit, was also capable of calculating the exact footage and the required timing for that footage!

Back to the song…. after Shivaji completes the first part, Poongaatru thirumbumaa….. there will be a typical IR pause , this silence was needed for the communication to reach the other end !……. its SJ this time to reciprocate for Radha …Raasaavay varuthamaa…..followed a flute resembling a Kuyil !

Now Shivaji starts looking with anxiety …who is responding to his concern ?

Again , its lovely lyrics….. Aagayam surungumaa
Engaadhey…adha ulagam thaangaadhey
Adukkumaa , Suriyan , karukkumaa !

One of the best lyrics that I have seen , giving a befitting tribute to the GREATEST ACTOR …. Equating him with a sky and Sun !

As the song moves to the second phase, both the characters exchange their thoughts …while the old man further expresses his concern, the lady , comforts by saying some soothing words…..

Indha vedhanai yaarukuthaan illai
Suga raagam sogam thaanay ( here an extended flute resembling a kuyil again !)

All through the song, the old man will be searching for that elusive lady who comforts him from a distance…..

Finally he realizes that the response is coming from a small boat / parisil which is inching towards the banks….

Now , unable to wait for the suspense any longer , he asks….

Maanay en nenjukku paal vaartha thenay…
Munnai en paarvaikku vaa vaa pennayyyyy

For which the respondent replies, esai paattu padichen naanay ! vow , terrific…. By now Shivaji , having got complete relief as someone had shared his grief, hence VM made a subtle change to the word ….

Poonkuyil yaaradhu……

Konjam paarunga pen kuyil naanunga

From now, its BR who leads the show !

There will be small small shots, showing reactions from Shivaji, Radha, the pond, the trees, the nature etc etc…all in just few seconds…..

Shivaji , showing a pleasant surprise in his face, ……

Adee nee dhaana andha kuyil ( here IR at his imaginative best ) yaar veettu sondha kuyil…. Aathaadee , manasukkula kaathaadee parandhadhey….

IMO, this ranks amongst one of the best picturisation from BR……

Another fascinating element of Nadigar Thilagam’s character ….. very few dialogues….normally he is penchant for extensive dialogue delivery….but BR chose the visual route….just few clippings, facial reaction, mini expressions ….thats all for Shivaji….

The way BR builds the bondage between the 2 characters is a story by itself ……

Whatever aspects that the old man is missing from his wife , BR gives them through the young lady ……….its not mere age or biological needs which a man or a woman looks at ….but what is real love and care for each other is paramount ……behind a successful man or an unsuccessful man , there will be a woman .....

This movie should top in the list of the greatest among the greatest characterization of THE IMAYAM OF TAMIL FILM INDUSTRY

JamesFague
5th October 2014, 10:26 AM
Courtesy: Mr S Balaji

UTHAMA PUTHIRAN - A PATH BREAKING MOVIE


When we analyse the artists of yesteryears, we get into a notion, rather conclusion that certain actors followed defined , mundane mannerisms and style.

This assessment is based on the fact that seldom the actors dared to experiment , playing totally a different role

Another reason could be that the audience view a hero on a glorified platform compared to a villain

Only few heros took up the challenge and tried villain roles

Nadigar Thilagam was an exception

In Andha naal, you will realize that way back he had played a semi villain character with aplomb. Even in Annayin Aanai, while the main objective was to seek revenge over his Father’s arch enemy S.V.Rangarao, it was another villain role only. However, he will successfully play a balancing act between Savithri ( SVR’s daughter and Shivaji’s lover ) and SVR ….

He was all grace and charm personified even while playing the role of a Villain in UTHAMA PUTHIRAN

Nadigar Thilagam’s landmark movie !.....

the youthful years of Shivaji …..

released in 1958

This movie redefined Tamil cinema’s horizon.

A dual role , the Villain was superb and more popular than the hero ! …….this role is being recognized for the STYLE AND DIFFERENT MANNERISM tried by Nadigar Thilagam….

The Villain guy Vikraman was diametrically opposite …....he displayed a plethora of emotions and also was the first of anti-hero roles ….it was well ahead of times and path breaking….

He had looks of a ROYAL, PRINCELY, ARROGANT and also NAIVE look with a naughty smile !
A happy go lucky type who enjoys life to the brink and flirts , often misguided by Nambiar and others …..he was like a puppet to Nambiar’s plans…..but never bothered about life…..

A song is needed to give proper definition to that character and its through YAARADEE NEE MOHINEE

The way he extends his hands while dancing and for the royal strides he makes during the song……it’s a treat to watch …..worth seeing again and again….

Its conclusive that Shivaji’s walk was like that of a lion …. A walk resembling an Emperor……..Even while the walk will be majestic and exceptional, his steps will be measured and precisely to the composition for this super hit song…..

The director probably wanted to show the big difference between the 2 characters through a song…..which could have made G.R. create a unique tune ….. CHARACTER BASED COMPOSITION !!

The great composer G.Ramanathan was equal to the task….G.R. showed his imaginative skills by giving A MIX OF WESTERN AND CONVENTIONAL rhythm which came out as a resounding success……..Its TMS-P.Leela combination created waves this time . This song is also well appreciated for the splendid use of tabla , drums and guitar chords …..

As the song moves to the final stage, there will be clapping from Shivaji and the other star ….a suddenly change in the rhythm !! Actually , the rhythm changes atleast 4 times….

•The first is when TMS starts with yaradee nee mohini….( a tabla support )
•The second….Unmayaana vendhanay ….its P.Leela ( tabla again )
•The third…..TMS….. Onnum onnum rendu…unmel aasai undu….briefly Jikki’s voice will come ( drums now )
•The fourth….Vaa vaa ….vaa vaa vaa….enanbay odivaa….. P.Leela ( drums )

Inch by inch, shot by shot, Shivaji will be awesome in his foot work and strides with a royal touch ! the editing will be crisp covering all the characters simultaneously …One can observe that for the above 4 rhythms, the dance movements and the steps of Shivaji will be different !

The hero character was gentle and majestic…… warm and matured look will be prevalent …..Vivacious and pleasant ParthibanFor the hero , MULLAI MALAR MELAY…MOIKUM VANDU POLAY .. a beauty …..a full fledged Kaanadaa raagam based composition….


A young Nadigar Thilagam, on a boating with a lovely looking Naatiya peroli Padmini ( in this movie and Vanji kotai vaaliban , Padmini will look like an angel ! ) its once again the great TMS-PS combination

One should also watch how Nadigar thilagam responds when TMS goes in high pitch for …Indha nilai marinadhalay endhan munaalay….anna nadai payila kanden aasayinaalay ….the song’s rhythm also will be in line with the movement of the boat ….

The creator was not finished yet with the villain character….. a climax is always needed to complete a movie…..and its UNNAZAGAI KANNIYARGAL SONNADHINAALAY !!!!!

Teaching on how to give a royal walk to Shivaji is like lending coal to New Castle

This song was needed for Padmini to seduce the villain shivaji to fall to a set trap and what a climax…..the tabla rhythm was a befitting response to Nadigar thilagam’s ROYAL WALK …The song gets into a high speed mode in the final stages …

It’s a big bonus for Nadigar thilagam fans as they got a double feast, a young and charming shivaji and also dual role which means variety…..

At the end , one will feel sad for the Villain character…as Nadigar Thilagam had made it a lovable one !

Russellbpw
5th October 2014, 12:45 PM
ஆர்.கே.எஸ்

ஆணுக்கென்று சில பல அறிகுறிகள் உள்ளன. அதில் நேர்மையான நேரடி அணுகுமுறை ஒன்று.விடாய் காலங்களில் ஒதுங்கி நிற்கும் பெண்கள் போல ,தினத்தந்தி கிசு கிசு பாணியில் பேச வேண்டிய அவசியமில்லை.
அவர் இவர் என்றெல்லாம் இல்லாமல் யார் ,எந்த பதிவை குறித்து என்று சொல்லி விடேன். சம்பத்த பட்டவர் வரட்டும் .விளக்கமளிக்கட்டும்.

நமது திரி சிந்தையாளர் கூடாரம். உலகத்திலேயே ஆண்மையான மிடுக்கு அழகு கொண்ட திராவிட நடிகனின் ரசிகர்கள். இங்கு சிந்தனைகள் விதைக்க பட வேண்டும். இது மூளை சலவை செய்ய பட்ட பொய்யர்களின் பஜனை வழிபாட்டு கூடமல்ல.நமக்கென்று சுதந்திர சிந்தனைகள் உண்டு. அதுதான் இத்திரியின் அழகு. இது சிவாஜியை மட்டுமே நேசிப்பவர்கள்,சிவாஜியையும் நேசிப்பவர்கள்,சிறு வயது கோளாறால் வேற்று முகாமில் இருந்தாலும் உள்ளுக்குள் சிவாஜி என்ற உலக நடிகன் மற்றும் தமிழனிடம் மாறா மதிப்பு கொண்டவர்கள் என்ற மூன்று வகை கொண்ட அனைத்து தமிழ் பேசும் ,அனைத்து தமிழ் அசல் வித்துக்களை அடக்கியது.(சுமார் 8 கோடி பேர்).இங்கு வேறுபாடுகள் உண்டு. சிவாஜியின் திறமை பற்றியல்ல. அத்திறமை போற்ற பட வேண்டிய விதம் ,ஊருக்கு உரைக்க பட வேண்டிய முறை பற்றியே அவை சுற்றி வரும். இவை தவிர்க்க இயலாதவை.

இங்கு யாரும் சுயலாபம் கருதியோ,அரசியல் கள முக்கியத்துவத்துக்காகவோ,அல்லது வேலையற்றோ இல்லை.அதனால் இது சுயசிந்தனையற்ற ,பகுத்தறிவற்ற பஜனை கூடாரமாக மாறும் வாய்ப்பே இல்லை. அப்படி மாறினால் ஒரு வாசு,ஒரு ராகவேந்தர்,ஒரு கார்த்திக்,ஒரு கோபால்,ஒரு வெங்கி ,ஒரு பீ.ஆர், ஒரு சாரதி ,ஒரு ஜோ இங்கு வந்து பங்களித்திருக்க முடியாது.
புரிந்து கொள்.(நான் எழுதியதை முழுவதும் படித்து புரிந்து கொள்ள முடியாத எவனும் சிவாஜி ரசிகன் என்று சொல்லி கொள்ளவே யோக்யதை அற்றவர்கள்)

கோபால் சார் ,
ஆணுகென்று உள்ள அறி குறிகள் பற்றிய விளக்கம் நன்று. என்ன நீங்கள் விளக்கத்தோடு நிறுத்துபவர் நானோ விளக்கத்தோடு மட்டும் அதை நிறுத்தாமல் எப்படி நடக்கவும் வேண்டுமோ அதுபோல நடப்பவன். இது தான் இருவருக்கும் உள்ள வித்தியாசம். ஆணுக்கு அறிகுறிகள் சில பல இருக்கலாம்...ஆனால் ஆண்மைக்கு ஒரு அறிகுறிதான் ! அது செயலில் காட்டுவது !

மேலும் பெண்கள் சம்பந்தப்பட்ட காலம், எப்படி எல்லாம் இருப்பார்கள் என்று இந்த திரியில் நாகரீகம் இல்லாமல் எழுத எனக்கு தெரியாது. காரணம் எனக்கு அந்தளவிற்கு பெண்கள் பழக்கம் கிடையாது. ஆகவே அதை பற்றி எனக்கு அக்கறையும் இல்லை.

நடிகர் திலகத்தை பற்றி அவர் படங்களை பற்றி தவறான உண்மைக்கு புறம்பான கடும் விமர்சனங்கள் வருகின்ற இடங்களில் எல்லாம் ஆணுக்கு விஸ்தாரமாக இன்று விளக்கம் சொன்ன நீங்கள் அப்போது என்ன செய்தீர்கள் ? அல்லது நீங்கள் பட்டியளிட்டவர்களில் சிலர் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி அந்த பஜனை கூடாரத்தில் பஜனை செய்ததல்லாமல் வேறு என்னதான் செய்தார்கள் ?

ஆண் என்றால் என்ன என்கிற விளக்கத்தை விட...ஆண்மை என்றால் என்ன என்று செயலில் புரியவைப்பவன் நான் !

யோக்யதையை பற்றி பேசுவதற்கு ஒரு யோக்யதை வேண்டும் என்று நினைக்கிறன் ! "காபி" என்ற எளிய முறையில் கூறினால் கோடி பேருக்கு புரியும்....அதை விடுத்து "கொட்டை வடி நீர்" என்று எழுதினால் வெறும் 10 பேருக்கு கூட புரிவது கடினம்.

அதே போல தான் எந்த ஒரு விஷயமும்...எளிய நடையில் எல்லோருக்கும் பயன் பெரும் வகையில் எதுவும் இருக்கவேண்டுமே தவிர...தனக்கு தான் அறிவு இருக்கிறது என்கிற பாணியில் எது இருந்தாலும் அதை பற்றி அனைவரும் பீற்றிகொள்ளமுடியாது, பெருமை பாடவும் முடியாது சம்பந்தப்பட்டவர்களை தவிர.

நடிகர் திலகம் ரசிகர்களில் "ரவி" என்று ஒருவர் சென்னையில் இருக்கிறார். எந்த திரைப்படம் வந்தாலும் அவர் வந்து பார்பார்.நாக்கில் சூடம் கொளுத்துவார். அவர் உங்கள் எழுத்துக்களை படிக்காதவர்...ஆனால் நீங்களோ அல்லது நீங்கள் பட்டியலிட்ட ஒரு சிலரோ அவரின் 10% ரசிகத்தன்மை கிட்டகூட வரமுடியாது, பல விதத்திலும் நீங்களே அவரை பார்த்து உங்களை நினைத்து வெட்கி தலைகுநிவீர்கள் அவர் ரசிகத்தன்மை பற்றி கூறினால் !!

ஆகையால் ரசிகன் என்பதன் அளவுகோல் உங்கள் எழுத்தல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும். உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதினீர்கள். நீங்கள் எழுதியதில் அப்படி என்ன பெரிதாக உள்ளது என்று யாராவது கேட்டால் அந்த அளவுகோல் மதிப்பற்றதாகிவிடும் ! அதே போல் தான் இதர விஷயங்களும்.

கற்றது கை அளவு கல்லாதது உலகளவு ! இதை நான் கூறிதான், வாய்க்கு வாய் திராவிடன்..திராவிடன் என்று கூறிகொள்ளும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமோ ?

நான் ...எனது....எனக்கு....என்று அஹங்காரம் தலைகேறிய பலரின் நிலை இன்று நாடே பார்த்துகொண்டிருக்கிறது !

Rks

Russelldwp
5th October 2014, 02:53 PM
[QUOTE=Murali Srinivas;1169536]நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் திரு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்றைய கலை, அரசியல் உலகிற்கு மட்டுமல்ல மக்களின் அன்றாட வாழ்விலும் நடிகர் திலகம் எந்தளவிற்கு relevant-ஆக இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டி பேசினார். இதே கருத்தை நாமும் இங்கே பலமுறை வழி மொழிந்திருக்கிறோம். அதன் எதிரொலியாகவே அண்மைக் காலத்தில் பலவேறு ஊடகங்களிலும் நடிகர் திலகத்தைப் பற்றிய செய்திகள், நிகழ்ச்சிகள் இடம் பெறுவதையும் பார்க்கிறோம். நடிகர் திலகம் புகழ் பாடும் நிகழ்வுகளும் பொது மேடைகளில் அரங்கேறுகின்றன.


முரளி சார்

தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. கர்ணனின் இமாலய வெற்றியை பார்த்த பின்பு மீடியாக்கள் இந்த அற்புத கலைஞனின் பெருமையை உணரத்தொடங்கி விட்டார்கள். மக்கள் கொடுத்த ஆணித்தரமான ஆதரவை பார்த்து பிரமித்து போய் விட்டார்கள்.

ஆட்சி பலம் பண பலம் சாதி பலம் இன்றி ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நினைவு நாளுக்கும் ரசிகர்கள் இடைவிடாமல் தன் சொந்த செலவில் போஸ்டர் அடித்தும் படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்துகிறார்கள். இந்த மாறா ரசிகர்களின் ஆர்வத்தை கண்டு வியக்காதவர்கள் இல்லை.

குறிப்பாக இந்த பிறந்த நாள் அன்று தலைவரின் படத்திற்கு மலர் அங்காரம் செய்து திருச்சியில் 4 இடங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி மாலைமலர், மாலைமுரசு, தினகரன் மற்றும் தமிழ் இந்து பத்திரிகைகளில் கலரில் மிகப்பெரிய அளவில் பிரசுரிக்கப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது.

உண்மையான ரசிப்புத்தன்மை, உண்மையான வெற்றி, உண்மையான உணர்வு, உண்மையான உழைப்பு அனைத்தும் மீடியாக்களுக்கு நன்கு தெரிய ஆரம்பித்து விட்டது. பத்திரிகைகள் சிவாஜியை பற்றிய நிகழ்ச்சி என்றால் தவறாமல் போடுகிறோம் என்கிறார்கள்.

தர்மம் என்றும் வெல்லும் - அதர்மம் அழியும் என்பது தெளிவாக புரிகிறது.

Russelldwp
5th October 2014, 03:13 PM
தற்போது நடைபெறும் அரசியல் சூழலால் எப்போது பேருந்து ஓடும் எப்போது ஓடாது என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில்
எந்த திரைஅரங்கிலும் புதுப்படங்களுக்கே கூட்டம் இல்லாத நிலையிலும் தலைவரின் அண்ணன் ஒரு கோவில் துளி கூட தடுமாறாமல்
நான்காவது நாளாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இன்று ஞாயிறு மதியம் காட்சி வரை வினியோகஸ்தர் பங்கு ரூ. 7500 தாண்டிவிட்டது.கண்டிப்பாக நாளைக்குள் ரூ.10000 ஐ தொட்டுவிடும் என்பதில் தயக்கமில்லை.


இந்த வருடத்தில் வெளியான எங்கள் தங்க ராஜா, உயர்ந்த மனிதன், வெள்ளை ரோஜா, தங்கப்பதக்கம், அண்ணன் ஒரு கோவில் அனைத்துமே வினியோகஸ்தருக்கும் தியேட்டர் நிர்வாகத்திற்கும் சிறந்த லாபத்தை தந்துள்ளது என்பது மகிழ்ச்சியான் செய்தி.


மேலும் சிவாஜி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து தியேட்டர் நிர்வாகமே தெய்வமகன், இருவர் உள்ளம் படங்களை தேடி அலைகிறார்கள்


https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s851x315/10420148_1521650111384998_1202469573684791226_n.jp g?oh=c6bf6ec4a255ca9d7423fdfd1e3f36ac&oe=54CC037C&__gda__=1421272279_f5d0d6c7b39c0c649361287087573ec e

Harrietlgy
5th October 2014, 05:04 PM
Todays's Dinamalar

மீண்டும் வெளிவருகிறது ராஜபார்ட் ரங்கத்துரை

நடிகர் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், வசந்த மாளிகை, திருவிளையாடல் போன்ற படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் 1973ம் ஆண்டு வெளிவந்த ராஜபார்ட் ரங்கத்துரை படமும் டிஜிட்டல் படுத்தப்பட்டு வருகிறது.வி.சி-.குகநாதன் தயாரித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கி இருந்தார். சிவாஜியுடன் உஷா நந்தினி, நம்பியார், வி.கே.ராமசாமி, மனோரமா, டி.கே.பகவதி நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படம் அப்போது பெரும் வெற்றி பெற்றதுடன் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானது. சிவாஜி கோமாளி வேஷமிட்டு பாடி ஆடும் "ஜிங்கினிக்கா சின்ன கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தா மேடையிலே ஆட்டமாட..." பாடலை இப்போது பார்த்தாலும், கேட்டாலும் கண்ணீர் வரும்.
இப்போது ராஜபார்ட் ரங்கத்துரையை அபி சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தார் டிஜிட்டலில் மெருகூட்டி வருகிறார்கள். நவம்பர் மாதம் ரிலீசாகும் என்று தெரிகிறது. - See more at: http://cinema.dinamalar.com/tamil-news/22623/cinema/Kollywood/Rajabart-Rangadurai-is-back.htm#sthash.k9XNePHl.dpuf

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_141005154040000000.jpg

eehaiupehazij
5th October 2014, 07:05 PM
Raajappart Rangadurai : Paraak Paraak!!



1973ம் ஆண்டு வெளிவந்த ராஜபார்ட் ரங்கத்துரை படமும் டிஜிட்டல் படுத்தப்பட்டு வருகிறது.வி.சி-.குகநாதன் தயாரித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கி இருந்தார். சிவாஜியுடன் உஷா நந்தினி, நம்பியார், வி.கே.ராமசாமி, மனோரமா, டி.கே.பகவதி நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படம் அப்போது பெரும் வெற்றி பெற்றதுடன் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானது. சிவாஜி கோமாளி வேஷமிட்டு பாடி ஆடும் "ஜிங்கினிக்கா சின்ன கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தா மேடையிலே ஆட்டமாட..." பாடலை இப்போது பார்த்தாலும், கேட்டாலும் கண்ணீர் வரும்.
இப்போது ராஜபார்ட் ரங்கத்துரையை அபி சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தார் டிஜிட்டலில் மெருகூட்டி வருகிறார்கள். நவம்பர் மாதம் ரிலீசாகும் என்று தெரிகிறது. Barani

ராஜபார்ட் ரங்கதுரை ஒருவகையில் தெய்வமகன், புதிய பறவையை அடுத்து நடிகர்திலகத்தின் பன்முக வைரப் பட்டைதீட்டப்பெற்ற நடிப்பு விருந்து. சோளப்பொரிகளை வரிசையாக கொடுத்து அந்த நடிப்பு யானை பட்டினியில் வாடிடுமோ என்ற ஐயப்பாட்டை நீக்கி பசிதீருமட்டும் புகுந்து விளையாடிய கரும்புத்தோட்டம் பரணி குறிப்பிட்ட ஜின்ஜினுக்காம் சின்னக்கிளி பாடல் வெளியே சிரித்துக்கொண்டே உள்ளே சோகம் கப்பிய சூழலில் கோமாளி வேடமிட்ட நாயகன் உணர்வுகளை உன்னதமான திரைகாட்சியாக நடிகர்திலகம் செதுக்கிய சாதனை.பள்ளி கல்லூரி விழாக்களில் தொடர்ச்சியாக மாணவர்கள் தம் மேடை ஆடல் பாடல் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த தேர்வு செய்த favorite item. ராஜ்கபூர் தனது மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் இதே உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தாலும் ராமன் கால் பட்ட அகலிகை மாதிரி நடிகர்திலகத்தின் தனித்துவம் மிக்க ஆழம் நிறைந்த பாவனைகள் இப்பாடல் இன்றும் சிரஞ்சீவியாக விரும்பப்படுவதே அவரின் வெற்றிக்குக் கட்டியம் கூறுகிறது!

https://www.youtube.com/watch?v=mU5127S9EPQ

https://www.youtube.com/watch?v=XSG2MFQhPX0

Manna Dey the singer of this bewitching song won the National Award!

Russellbpw
5th October 2014, 09:23 PM
Special Pattimandam | Sivaji Ganesan | Vasanth TV | 1 OCT 2013

http://www.youtube.com/watch?v=t7tefL9i4dQ

JamesFague
5th October 2014, 10:06 PM
Mr KC Sir,


Please post NT's function conducted at Raja Annamalaipuram and Trichy for the benefit
of the millions of NT's fans.

Regards

JamesFague
5th October 2014, 10:11 PM
Wonderful song for NT's fans from Babu. If anyone watches the movie even today it will bring tears on his face. That is the greatness of NT who lives forever in
the hearts of tamil speaking people all over the world. The once scene where he shares the food with Baby sridevi is a touching one. Now you can see one dead face
in today's actors who does not know how to give expression or modulate in a particular situation.



http://youtu.be/k3YN6RCZHs0

Murali Srinivas
6th October 2014, 12:34 AM
தற்போது நடைபெறும் அரசியல் சூழலால் எப்போது பேருந்து ஓடும் எப்போது ஓடாது என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில்
எந்த திரைஅரங்கிலும் புதுப்படங்களுக்கே கூட்டம் இல்லாத நிலையிலும் தலைவரின் அண்ணன் ஒரு கோவில் துளி கூட தடுமாறாமல்
நான்காவது நாளாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இன்று ஞாயிறு மதியம் காட்சி வரை வினியோகஸ்தர் பங்கு ரூ. 7500 தாண்டிவிட்டது.கண்டிப்பாக நாளைக்குள் ரூ.10000 ஐ தொட்டுவிடும் என்பதில் தயக்கமில்லை.


இந்த வருடத்தில் வெளியான எங்கள் தங்க ராஜா, உயர்ந்த மனிதன், வெள்ளை ரோஜா, தங்கப்பதக்கம், அண்ணன் ஒரு கோவில் அனைத்துமே வினியோகஸ்தருக்கும் தியேட்டர் நிர்வாகத்திற்கும் சிறந்த லாபத்தை தந்துள்ளது என்பது மகிழ்ச்சியான் செய்தி.


மேலும் சிவாஜி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து தியேட்டர் நிர்வாகமே தெய்வமகன், இருவர் உள்ளம் படங்களை தேடி அலைகிறார்கள்


https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s851x315/10420148_1521650111384998_1202469573684791226_n.jp g?oh=c6bf6ec4a255ca9d7423fdfd1e3f36ac&oe=54CC037C&__gda__=1421272279_f5d0d6c7b39c0c649361287087573ec e

திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக சொல்லியிருந்தேன். அதை உறுதிப்படுத்தும் வண்ணம் சரியான தகவலை வெளியிட்ட ராமச்சந்திரன் சாருக்கு நன்றி. பட வெளியிட்டாளர் பங்கை ராமச்சந்திரன் சார் சொல்லியிருக்கிறார். படம் பார்த்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை எடுத்தோமென்றால் இந்த 5 நாட்களில் 2100 பேர் பார்த்திருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 400க்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள் என்று சொன்னால் படம் எந்தளவிற்கு steady-ஆக போயிருக்கிறது என்பது புரியும். கெயிட்டி தியேட்டர் அமைந்திருக்கும் ஏரியாவில் திரையரங்கிற்கு முன்னால் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடைபெற்று அதன் காரணமாக அங்கே பந்தல் சேர்கள் போன்றவை போடப்பட்டதால் அரங்க முகப்பே மறைக்கப்பட்டு படம் பார்க்க வந்த பலர் இதன் காரணமாக திரும்பி செல்ல நேர்ந்திருக்கிறது.

நடிகர் திலகத்தின் படங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடுவதை தடுக்கத்தான் எத்துனை முயற்சிகள்? இங்கேயெல்லாம் நடக்கும் நுண்ணரசியல் 99% மக்களுக்கு தெரிவதில்லை. சிவாஜி படங்கள் வராமல் தடுக்க முயற்சி எடுத்த பலரும் அது முடியாமல் புறமுதுகிட்டனர். இப்போது ஒரு சிலர் திருச்சியில் கையிலெடுத்திருக்கும் ஆயுதம் மண்ணின் மைந்தர் concept. என்னவென்றால் இப்போது திருச்சியில் அண்ணன் ஒரு கோவில் படத்தை வெளியிட்டிருப்பவர் மதுரையை சேர்ந்தவர். சிவாஜி படங்கள் வருவதை விரும்பாத ஒரு சில மனிதர்கள் [இவர்கள் எண்ணிக்கையில் குறைவான நபர்களே. ஆனாலும் சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்] அதை காரணம் காட்டி வெளியூர்காரர்கள் இங்கே வந்து படம் எப்படி போடலாம் என்ற கேள்வியை அரங்க உரிமையாளரிடம் எழுப்பி மறைமுகமாக ஒரு மிரட்டல் தொனியில் பேசி நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட விடாமல் முட்டுக்கட்டை போடுவது அதையும் மீறி படம் வெளியிடப்பட்டால் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்ற படங்களை கழுத்தை நெரித்து அதன் காரணமாக படங்களை குறைந்த நாட்களில் மாற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிவாஜி படங்கள் நன்றாக வசூலிப்பதால் அவற்றை திரையிட அரங்க உரிமையாளர் ஆவல் காட்டுகிறார், முயற்சி எடுக்கிறார் என்றபோதினும் இது போன்ற சூழ்ச்சிகளையும் நாம் சமாளிக்க வேண்டியுள்ளது.

எத்துனை இடர்பாடுகள் வந்தாலும் எப்போதும் போல் வெற்றி நடிகர் திலகத்திற்குதானே!

சென்னை மகாலட்சுமியில் சென்ற வாரம் வெள்ளி முதல் இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் சங்கிலி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். சென்ற வாரம் [ இப்போதும் கூட] நிலவிய அரசியல் சூழல், பல இடங்களிலும் தெருவெங்கும் நடந்த போராட்டங்கள், சில பல சங்கங்கள் நடத்திய பந்த்கள் அதன் காரணமாக நிறுத்தப்பட்ட காட்சிகள் என்று பலவகையான குழப்பத்திலும், மொத்தம் திரையிடப்படுவதாக இருந்த 14 காட்சிகளில் 3 காட்சிகள் ரத்து செய்யப்பட்டு 11 காட்சிகளே நடைபெற்ற நிலையிலும் சங்கிலி திரைப்படம் அந்த 11 காட்சிகளில் ரூபாய் 55,000/- வசூல் செய்திருக்கிறது. இரண்டு காட்சிகள் என்ற concept அறிமுகப்படுத்தப்பட்டபின் எந்த படமும் 11 காட்சிகளில் இந்தளவிற்கு வசூலிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது அமைதியும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் வந்திருக்கும் இந்த அருமையான வசூல், அனைத்துக் காட்சிகளும் ஓடியிருந்தால் இன்னும் மிகப் பெரிய அளவில் இருந்திருக்கும் என்பது நாம் சொல்லாமலே அனைவருக்கும் புரியும்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

கோபால்,

பல ஊர்களிலும் இது போன்று நடக்கும் பிரச்சனைகளை ஆங்காங்கே இருக்கும் நண்பர்கள் RKS அவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள அந்த சூழ்ச்சிகளை முறியடிக்கத்தான் RKS, நண்பர் சந்திரசேகர் அவர்களின் பேரவை உறுப்பினர்களின் ஒத்துழைப்பை வேண்டினார். அதன் உட்பொருள் தெரியாமல் நீங்கள் [நீங்கள் கூட] என்னவோ RKS சந்திரசேகர் அவர்களை தவறாக பேசியது போல் நினைத்துக் கொண்டு பதிவிட்டது வருந்ததக்கது. நமது திரியில் பங்களிப்பாளர்கள் அனைவரும் யார் யார் எந்த எந்த பதிவுகளை என்ன தொனியில் பதிவிடுகிறார்கள் என்பதை புரிந்து எதிர் வினை புரிந்தாலே இங்கே எந்த குழப்பமும் வராது.

sivaa
6th October 2014, 07:23 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/004_zpsa4098094.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/004_zpsa4098094.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/005_zps6bc27416.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/005_zps6bc27416.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/007_zpsaa678921.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/007_zpsaa678921.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/006_zps308625e8.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/006_zps308625e8.jpg.html)


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/008_zpse7856588.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/008_zpse7856588.jpg.html)



நன்றி குங்குமம்

sivaa
6th October 2014, 08:13 AM
நடிகர் திலகத்தின் படங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடுவதை தடுக்கத்தான் எத்துனை முயற்சிகள்? இங்கேயெல்லாம் நடக்கும் நுண்ணரசியல் 99% மக்களுக்கு தெரிவதில்லை. சிவாஜி படங்கள் வராமல் தடுக்க முயற்சி எடுத்த பலரும் அது முடியாமல் புறமுதுகிட்டனர். இப்போது ஒரு சிலர் திருச்சியில் கையிலெடுத்திருக்கும் ஆயுதம் மண்ணின் மைந்தர் concept. என்னவென்றால் இப்போது திருச்சியில் அண்ணன் ஒரு கோவில் படத்தை வெளியிட்டிருப்பவர் மதுரையை சேர்ந்தவர். சிவாஜி படங்கள் வருவதை விரும்பாத ஒரு சில மனிதர்கள் [இவர்கள் எண்ணிக்கையில் குறைவான நபர்களே. ஆனாலும் சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்] அதை காரணம் காட்டி வெளியூர்காரர்கள் இங்கே வந்து படம் எப்படி போடலாம் என்ற கேள்வியை அரங்க உரிமையாளரிடம் எழுப்பி மறைமுகமாக ஒரு மிரட்டல் தொனியில் பேசி நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட விடாமல் முட்டுக்கட்டை போடுவது அதையும் மீறி படம் வெளியிடப்பட்டால் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்ற படங்களை கழுத்தை நெரித்து அதன் காரணமாக படங்களை குறைந்த நாட்களில் மாற்ற வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிவாஜி படங்கள் நன்றாக வசூலிப்பதால் அவற்றை திரையிட அரங்க உரிமையாளர் ஆவல் காட்டுகிறார், முயற்சி எடுக்கிறார் என்றபோதினும் இது போன்ற சூழ்ச்சிகளையும் நாம் சமாளிக்க வேண்டியுள்ளது.
[/COLOR]
எத்துனை இடர்பாடுகள் வந்தாலும் எப்போதும் போல் வெற்றி நடிகர் திலகத்திற்குதானே!
.

இப்படி தடை எல்லாம் செய்துகொண்டுதான்
வீரப்பிரதாபங்கள் செய்கிறார்களா?

eehaiupehazij
6th October 2014, 08:37 AM
அம்மம்மா ....உன்னதநடிப்பின் உச்சநாயகன்!

Value Addition to Rajapart Rangadhurai (1973) rerelease in 2014!

தெய்வமெனத் தான் மதித்த நடிப்புத்தொழிலில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் நேரம் தவறாமை என்னும் சீரிய பண்பை ஏனைய சக கலைஞர்கள் மட்டுமன்றி எத்தரப்பினரும் கடைப்பிடிக்கும் வண்ணம் கற்றுத்தந்து வழிகாட்டிய ஆசான் நடிகர்திலகம். ராஜபார்ட் ரங்கதுரையில் கையில் இரு கட்டைகளை
வைத்துக்கொண்டு தாளம் தப்பாமல் அடித்துக்கொண்டு 'அம்மம்மா...' பாடலுக்கு அவர் தந்திருக்கும் அவருக்கே உரிய பிரமிக்க வைக்கும் வாயசைப்பும் முகபாவனைகளின் தேக்கமும் வெளிப்பாடுகளும்......உன்னத நடிப்பலையின் உச்சம்! (சிறுவயது ரங்கதுரையாக நடிகர்திலகத்தின் பராசக்தி திரைப்படத் தோற்றத்தை நினைவுறுத்தும் விதமாக வரும் சிறுவன் Master Rajkumar மிகப்பொருத்தமான தேர்வு.....இவர் ராமு(1966) திரைப்படத்தில் ஜெமினியின் மகனாக நடித்தவர். See how the legend of NT descends on even a child artist when he enacts the younger part of NT! that is the magical touch and the silky neurotic charm of NT's acting prowess!!)

https://www.youtube.com/watch?v=XjZP2reKBlU

https://www.youtube.com/watch?v=CkE6t8c9ibI

https://www.youtube.com/watch?v=bceucNMzPLE

eehaiupehazij
6th October 2014, 09:03 AM
Another Tip of the Acting Iceberg in Raajapaart Rangadhurai!

https://www.youtube.com/watch?v=bflp40ReqeE

JamesFague
6th October 2014, 10:19 AM
Mr Siva


Thanks for the initiative taken by you in uploading the Kungumam article on NT. I have requested last week itself if anyone have the facility can upload the same.

Once again thanks for your support.


Regards

abkhlabhi
6th October 2014, 10:19 AM
http://ramaniecuvellore.blogspot.in/2014/10/blog-post_95.html

JamesFague
6th October 2014, 10:26 AM
From the old issue of Ananda Vikatan

இந்த வார ஆனந்த விகடனில் இயக்குநர் சேரன் நம் நடிகர் திலகத்தை சந்தித்ததை இப்படி எழுதுகிறார்...

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது!

இயக்குநர்கள் அத்தனை பேரும் வாழ்த்தப் போயிருந்தோம்.'அன்னை இல்லம்'...எங்கேயோ தொலைதூரத்துக் கிராமத்துச் சிறுவனாக இருந்தபோதே ,என் கனவுகளில் உலவிய நாயகனின் அரண்மனை.என் எத்தனையோ சாயங்காலங்களைச் சந்தோஷப்படுத்திய ராஜகுமாரனை நேரில் சந்திக்கப் போகிறேன்.

"வாங்கப்பா டைரக்டர்ஸ்" எழுந்து நின்று வரவேற்கிறார் சிவாஜி.ஜிப்பா வேட்டியில் சிகப்பான பெரியப்பா போல இருக்கிறார்..கூச்சத்தில் ஓரமாக ஒதுங்கிய என்னை முன்னே இழுத்து "இவன் சேரன்.இவன் தான் இப்போ பெரிய டைரக்டர்" என்று சிவாஜியின் காலடியில் தள்ளுகிறார் பாரதிராஜா சார். விழுந்து வணங்கிய என் கை பற்றி "நல்ல்ல்ல்ல படம்ப்பா.நல்ல்ல்ல்லா பண்ணியிருந்தே .நல்ல்ல்ல்லா இரு!" என்று சிம்மக் குரலில் ராகம் போட்டு சிவாஜி சார் என்னை வாழ்த்த..இதைப் பார்க்க என் அம்மாவும் அம்மாச்சியும் பக்கத்தில் இல்லயே என ஏங்கினேன்.

சிவாஜி அய்யாவை வைத்து ஒரு படம் இயக்கவும் ஆசைப்பட்டேன்.'தேசிய கீதம்' படத்துக்கு என் முதல் சாய்ஸ் சிவாஜி சார்தான்.கதை சொல்லப் போயிருந்தேன்.

முழுசாக இரண்டரை மணி நேரம் நான் கதை சொல்ல சொல்ல ..என் முகத்தையே குறுகுறுவெனப் பார்த்தார்.எமோஷனலாக நான் சில காட்சிகளை விவரிக்கும் போது ,அவர் புருவங்கள் விளையாட..கண்கள் உருண்டோட முகபாவங்கள் மாறுவதை பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டுமே..அத்தனை அழகு!

நடுவே ஏதோ வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டு இருந்த அவரது பேத்தி ,தாத்தாவிடம் ஆசி வாங்க வந்து தயங்கி நிற்க "எக்ஸ்க்யூஸ் மி டைரக்டர் சார்..ஒரே ஒரு நிமிஷம் ப்ளீஸ்" என்று பேத்தியின் தலை தொட்டு ,கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பினார்.

"நல்ல கதை.பெருந்தலைவர் காமராஜர் ,என் நண்பன் கக்கன் மாதிரி நல்ல மனுஷங்க அரசியல்ல இருந்த காலமெல்லாம் எங்கடா போச்சுன்னு கேக்க வந்திருக்கே..நான் நிச்சயமா நடிக்கிறேன்..அந்த கிளைமாக்ஸ் சொன்னல்ல..ந்தா பாரு..இப்பிடி!" என்று எழுந்தார்.

ஒரே ஒரு ரசிகனுக்காக நடிகர் திலகமே நடிக்க எழுகிறார். முதுமையில் உடல் தள்ளாட,பெருங்கோபத்தில் உள்ளம் கொதிக்க .."நான் இப்படி நிக்கிறேன் .நீ எதிர்ல பேனை புல்லா போடு .காத்துல என் தாடி ,தலைமுடியெல்லாம் பறக்குது. என் கண்ணு செவக்குது .கன்னம் துடிக்குது .எதிர்ல இருக்குற ஒவ்வொருத்தனையும் பார்வையாலயே பஸ்பமாக்குற மாதிரி என் நெஞ்சு கொதிக்குது .'இதுக்காடா நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு சொதந்திரம் வாங்கினோம்?" னு அழுகையும் ஆத்திரமுமா நான் கேக்கிறேன். நல்லா இருக்கா? இது ஓ.கே.யா?'

எத்தனை உயர்ந்த மனிதர் .என்னைப் போன்ற ஒரு சின்ன பையனிடம் ,ஏதோ தன் முதல் படத்துக்கு வாய்ப்பு கேட்பதைப் போன்ற வேகத்துடன் தாகத்துடன் நடித்துக்காட்டுகிறாரென்றால்..அது தானே தொழில் பக்தி!

இன்றைக்கு கேரவேன்களுக்கு வெளியே இயக்குநர்களைக் காக்கவைத்துவிட்டு திமிருடன் திரியும் சில நடிகர்களை நினைத்தால் எனக்குள் வேதனை வழியும்.

காரைக்குடியில் கொளுத்தும் வெயில் காலத்தில் படப்பிடிப்பு .கதைக்களம் அப்படி .அப்போது உடல்நலக்குறைவில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சிவாஜி சாரை கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்பதால் ,எனக்கு அந்த பாக்கியம் இல்லாமல் போயிற்று.

நன்றி : விகடன்

Harrietlgy
6th October 2014, 02:29 PM
NT 86th Birthday celebration new video

http://www.youtube.com/watch?v=-w_xCMB4Xs4

JamesFague
6th October 2014, 03:17 PM
KATHANAYAGANIN KATHAI BY NADIGAR THILAGAM Courtesy: Dinamalar Varamalar

பதிவு செய்த நாள்
05அக்
2014
00:00
வி.சி.கணேசனாக இருந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக சிகரம் தொட்ட சுயசரிதை இது. சிவாஜி கணேசன், 'பொம்மை' இதழில் எழுதிய கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு; நுாலாகவும் வெளிவந்தது. சாதனை புரிய எவ்வளவு உழைக்க வேண்டும் என்ற படிப்பினையை, இத்தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை.

விழுப்புரம், சின்னையா மன்றாயரின் மகனான என்னை, 'சிவாஜி' கணேசனாக்கி, 'பராசக்தி' கணேசனாக உருவெடுக்கச் செய்து, 'நடிகர் திலகம்' கணேசன் என அன்புடன் அழைத்து, பத்மஸ்ரீ விருது பெரும் கணேசனாக மாற்றியது யார்?
கலை உள்ளம் கொண்ட நீங்கள் தான்! திருச்சி, சங்கிலியாண்ட புரத்து, என் இளமைக் காலத்து வாழ்க்கை, இப்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு வகை அலாதியான வாழ்க்கை! சங்கிலியாண்டபுரத்தில் எனக்கென்று தனியாக, ஒரு நண்பர்கள் கூட்டம் உண்டு.
ஊருக்குள் எங்களுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டு. அது, 'துஷ்டர்கள்!' ஆக, சின்ன வயதிலேயே எனக்கும், பட்டத்திற்கும் ஒரு தனிப்பிடிப்பு உண்டு.
வீதியிலே நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். திடீரென்று ஏதேனும் ஒரு அழுகுரல் கேட்கும். 'யாரடிச்சா... பாவம் பையன் அழறானே...'என்று கேட்டால், 'கணேசன் அடிச்சிட்டான்...' என்று, பல குரல்கள் ஒலிக்கும். அந்த அளவுக்கு, அப்போது என் கை ஓங்கி, தவறு... நீண்டிருந்தது.
அடி வாங்கிய சிறுவனின் தாயோ, அக்காவோ என் தாயாரிடம், என் வீரத்தை பற்றி புகார் சொல்வர்.
என் தாயார் நான் வீடு திரும்புவதை எதிர்பார்த்து, கையில் வெங்காயத்துடன் ஆவலாக காத்திருப்பார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, 'வாடா மகனே... ஏன்டா என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறே...' என்று அன்புடன் அழைத்து, கையில் மறைத்து வைத்திருந்த வெங்காயத்தை, என் தந்தையின் துணையுடன், கண்களில் பிழிந்து விடுவார்.
துடிப்பேன்... கதறுவேன்... கண்ணீர் வடிப்பேன்.
'இனிமே இப்படிச் செய்ய மாட்டியே... வீண் வம்புக்கு போக மாட்டியே...'என்று, முதுகிலும் அன்பளிப்பு வழங்குவார்.
இவ்வளவு வாங்கியும், நான் திருந்தினேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.
மறுநாளே என் துஷ்டத்தனம் மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்து விடும்.
இதனாலேயே என் பெற்றோர் எங்காவது வெளியே செல்வதென்றால், என்னை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டே செல்வர். சில சமயம், வெளிக்கதவை பூட்ட மறந்து, தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு போய் விடுவர். அதைத் தெரிந்து, நானும் கதவை சாமர்த்தியமாக ஆட்டி அசைத்து, தாழ்ப்பாளை விடுவித்து, மதில் சுவரை தாண்டி குதித்து வெளியேறி விடுவேன்.
'கணேசன் வந்துட்டான் டோய்...' என்று என் சகாக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்புவர்; அதைக் கேட்கும் போது, பெருமையாக இருக்கும்.
என் பெற்றோர் வீடு திரும்பியதும், நான் வீட்டில் இல்லாததைக் கண்டுபிடித்து விடுவர். இரவு வீட்டிற்கு வரும் போது, வழக்கம் போல வெங்காயம் காத்திருக்கும்.
அந்த அளவுக்கு படு துஷ்டை நான்.
ஒரு சமயம் என் அண்ணன் தங்கவேலுக்கும், எனக்கும் ஏதோ தகராறு வந்து விட்டது.
'வாடா வா... இன்னிக்கு ராத்திரி உன்ன அடிச்சுக் கொன்னுடறேன் பாரு...' என்று ஒரு தடியை துாக்கி வைத்துக் கொண்டேன்.
பயந்து போய் அம்மாவிடம் தஞ்சம் அடைந்து விட்டார் என் அண்ணன்.
'பாவிப்பய, உதவாக்கரை... செஞ்சாலும் செஞ்சுப்புடுவான்...' என்று, அன்றிரவு முழுவதும் துாங்காமல், என் அண்ணன் பக்கத்திலேயே படுத்திருந்தார் அம்மா.
ஆனால், நானோ தடியை பக்கத்தில் வைத்துக் கொண்டே நிம்மதியாக துாங்கி விட்டேன்.
அப்போது, ஊர்க்காவல் என்று ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. திருடர்கள் வராமல் தடுக்க, நான்கு வீட்டுக்கு ஒருவராக சிலர் சேர்ந்து, இரவு நேரத்தில் தெருவில் ரோந்து வருவது வழக்கம்.
திருடனை சமாளிக்க வேண்டுமென்றால், முரட்டுத்தனம் உள்ளவர்கள் தானே வேண்டும்? என்னிடம் அப்போது அது தாராளமாக இருந்ததால், இந்த ரோந்து காவல் குழுவில் நானும், என் வீட்டின் சார்பில் கலந்து கொண்டேன்.
எங்களுக்கு சின்ன வயதாக இருக்கலாம்; ஆனால் முரட்டுத்தனமும், பிடிவாதமும் எக்கச்சக்கமாக இருந்தன.
ஏதாவது பாட்டு பாடியோ, கோஷமிட்டபடியோ வீதியை சுற்றி வருவோம்.
சில சமயங்களில் விளையாடவும் செய்வோம்.
'பச்சை இலை கொண்டு வருவது' என்று ஒரு விளையாட்டு; 'கண்ணாமூச்சி' விளையாட்டைப் போன்றது.
'இன்ன இடத்தில், இன்ன மரத்தில் இருந்து, பத்து இலை பறித்து வா...' என்று ஒருவனிடம் சொல்வர். அவன் போவான்; அவன் கூடவே மற்றவர்களும் போவர். அவன் மரத்தில் ஏறி இலை பறிக்கும் நேரத்தில், மற்றவர்கள் ஓடிப் போய் ஒளிந்து கொள்வர். சொன்னபடி இலையை பறித்து திரும்பும் அவன், யாரை முதலில் பார்த்து பிடித்து விடுகிறானோ, அவன் தோற்றவனாகி விடுவான். தோற்றவன் இலை பறிக்க வேண்டும்.
இந்த விளையாட்டின் போது, சில சமயம் வேண்டுமென்றே, 'சுடுகாட்டு பக்கத்தில் உள்ள மரத்திலிருந்து இலை பறித்து வா...' என்று சொல்வர். ஒருசமயம் நானே இம்மாதிரி போய் பறித்து வந்திருக்கிறேன்.
இம்மாதிரியான விளையாட்டுகள், சில சமயங்களில் விபரீதமாகவும் முடியும்!
ஒரு நாள், விளையாடிக் கொண்டிருந்த போது, ராஜு என்ற நண்பன், ஏதோ ஆத்திரத்தில் பேனாக் கத்தியால், என் முதுகில் குத்தி விட்டான். அந்தத் தழும்பு, இப்போதும் என் முதுகில் இருக்கிறது.
என் தாயார் என்னை கண்டிக்கும் போது, சில நேரம் எனக்கு கோபம் வந்து விடும்.
'வீட்டை விட்டு போய் விடுகிறேன்...' என்று சொல்லி, ஆத்திரத்துடன் வெளியே கிளம்பி விடுவேன்.
எங்கே போவேன் என்று நினைக்கிறீர்கள்... மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் போய் உட்கார்ந்து விடுவேன் அல்லது வேறு எங்காவது மரத்தடிக்கு போய் விடுவேன்.
மாலை வரும்; என் வீராப்பை விட்டு, 'ஜம்'மென்று வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன்.
என் தாயார் என்னைப் பார்த்ததும், பார்க்காதது போல நடிப்பார்.
எந்தப் பெற்றோருக்கும், தன் மகன் நன்றாக படித்து பெரிய உத்தியோகத்தில், சீரும் சிறப்புமாக இருப்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கை.
என் பெற்றோருக்கும், அந்த ஆவல் இருந்தது.
திருச்சியில், ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் என்னை சேர்த்து விட்டனர். அப்போதெல்லாம், நான் அருமையாகப் பாடுவேன். 'ஞான சங்கீதப்பன் மணி மண்டபம்...' என்று, நான் பாட ஆரம்பித்து விட்டால், அதைக்கேட்டு ரசிக்க, என்னைச் சுற்றி ஒரு கூட்டமே நிற்கும். பள்ளியில் படிக்கும் போதும், எனக்கு பாட்டில்தான் நிறைய மதிப்பெண் கிடைக்கும். அதில் தான், முதலில் வருவேன்; மற்றவற்றில் சுமாரான மதிப்பெண்கள் தான் கிடைக்கும். கணக்கிலோ பெரிய பூஜ்யம்!
'காட் சேவ் தி கிங்' (கடவுள் அரசரைக் காக்கட்டும்) என்ற ஆங்கில பாட்டுத்தான், அப்போது பள்ளியில் கடவுள் வணக்கப்பாட்டு. என் குரலில் இனிமையைக் கண்ட ஆசிரியைகள், என்னையும் கடவுள் வணக்கம் பாடும் மாணவர்கள் கோஷ்டியில் சேர்த்து விட்டனர்.
என் வீட்டுக்கும், பள்ளிக்கும் குறைந்த துாரமோ அல்லது நீண்ட துாரமோ அது எனக்கு தெரியாது. ஆனால், படிப்புக்கும், எனக்கும் வெகு துாரம் என்பது உடனே தெரிந்துவிட்டது.
அந்த பதினைந்து மாத பள்ளி வாழ்க்கைக்கு பின், என்ன நடந்தது...
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை - 26.

KCSHEKAR
6th October 2014, 03:43 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/STATE%20EXECUTIVE%20MEETING%20TRICHY%2005%20OCT%20 2004/TamilMurasu05-10-2014_zps3eaaf78a.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/STATE%20EXECUTIVE%20MEETING%20TRICHY%2005%20OCT%20 2004/TamilMurasu05-10-2014_zps3eaaf78a.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/STATE%20EXECUTIVE%20MEETING%20TRICHY%2005%20OCT%20 2004/Dinamani06-10-2014_zps9794ea2a.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/STATE%20EXECUTIVE%20MEETING%20TRICHY%2005%20OCT%20 2004/Dinamani06-10-2014_zps9794ea2a.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/STATE%20EXECUTIVE%20MEETING%20TRICHY%2005%20OCT%20 2004/DinakaranPhoto06-10-2014_zps5a70e0ea.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/STATE%20EXECUTIVE%20MEETING%20TRICHY%2005%20OCT%20 2004/DinakaranPhoto06-10-2014_zps5a70e0ea.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/STATE%20EXECUTIVE%20MEETING%20TRICHY%2005%20OCT%20 2004/DinakaranNews06-10-2014_zps1ac59cb3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/STATE%20EXECUTIVE%20MEETING%20TRICHY%2005%20OCT%20 2004/DinakaranNews06-10-2014_zps1ac59cb3.jpg.html)

eehaiupehazij
6th October 2014, 03:52 PM
நல்லதொரு குடும்பம் (1979).

வசந்தமாளிகைக்குப் பிறகு நடிகர்திலகம் வாணிஸ்ரீ இணைவில் பதமான நடிப்பில் மனதை இதமாக வருடிச்சென்ற மயிலிறகு! எந்த வயது முதிர்வடைந்து கொண்டிருக்கும் திரைக்கதாபாத்திரத்திற்கும் இவ்வையகத்தில் தனக்கு இணை எங்குமில்லை எதுவுமில்லை எவருமில்லை என்று வெகு இலகுவாக தன் வலிமையை மீண்டும் அவர் உணரவைத்த தென்றல்!!

https://www.youtube.com/watch?v=8ffOiZUNIIQ

JamesFague
6th October 2014, 05:06 PM
a Recap of Mr Murali's old post


Sivaji with KB,BR,Balu Mahendra and Mani ratnam ()
One question that is often raised here is why NT didn't act in these director's movies or why he didn't choose new directors etc. I thought of replying to these questions later during the course of NT's political innings. Since that would take time, let me answer these "allegations".

The names that are mentioned are KB, BR, BM, Mahendran & MR.
Let us take one by one.

KB: As everyone knows NT-KB combo came together for Ethiroli, but it didn't take off. This was during June 1970. I had explained earlier that period starting from 1967 was a transition period where the face of NT films changed from story oriented to entertainment oriented. More over the intense rivalry between NT and MGR at the film and political level that existed at that point of time was invariably getting reflected in movies of that period. So Ethiroli (a subtle yet superb performance from NT) went down.

Again it is a well known secret that KB is a egoistic person(no offence meant, but to say that his stature mattered to him most than anything else) who had not even worked with his shishyas like Kamal and Rajini after certain period. The last he did with Rajini was Thillu Mullu which was in 1981. Therafter he said he cannot make films with Rajini anymore but used him in his Kavithalaya movies directed by others.

Samething happened with Kamal and Unnal Mudiyum Thambi (1988)was the last one. If you check out he did only Punnagai Mannan and UMT after Ek duje in 1981.

So with this back ground of KB you don't expect a Giant of NT's stature to go all out to woo him. But KB realised it later. When Duet was in the making, NT visited the sets and had a long chat with KB. Later on in a interview, KB confessed that it was his mistake to have made Ethiroli like that at that part of a time and given a chance, he would have corrected.

BR: Of course NT- BR combo made history with MM. That was in 1985. But even before that BR expressed his desire to do a film with NT. That was in 1978, when NT presided over the Silver Jublie celebrations of Kizakke Pogum Rayil, the second movie of BR. He said in the stage itself that he is a big fan of NT and would love to direct him. But that could materialise only 7 years later.

Here one thing needs to be stressed. Whoever be the Hero and whoever be the director, a good script needs to be there. That's why when MM became a Super Duper hit, the same combo's Pasumponn failed. The second one was a artificial script where NT was forcefully brought in.

Balu Mahendra: The person who made his debut with Kokila (Kannada) in 1976 came to Tamil as a cinematographer thro' Mullum Malarum in 1978 and went on to do Ayiyatha Kolangal in 1979, Moodu Pani in 1980. [On the sidelines he was the cinematographer for the famous Sankarabharanam]. Then he did Moondram Pirai in 1982. Meanwhile he also did Olangal in Malayalam (Amol Palekar & Poornima ) and one more movie (don't remember the name) in Malayalam which had Y.G.Mahendra as hero. Again he did MP as Sadma in Hindi in 1983. At this point of time NT decided to do a movie with him and NT's brother VC Shanmugam contacted BM and he agreed to do a film for Sivaji Productions with NT. This was in 1984. BM met NT and they discussed some story threads. It was a preliminary discussion and BM was doing Neengal Kettavai at that time. So it was decided to start the film after NK.

At this point of time, Sivaji Productions own venture Neethiyin Nizhal was on the floors with Ilaya Thilagam Prabhu and Radha. The movie launched in 1983 was directed by Bharathi-Vasu. But as Prabhu's career had a slump in 1984, NN got stuck. The distributors were a bit hesitant and after much delibrations Sivaji Productions agreed to bring in NT into the film as a Spl appearance. So NT and SriVidya were drafted in as parents of Prabhu. Because of this sudden development, the dates of NT that were kept for BM's movie were utilised for NN and it was agreed with BM that his movie would start after sometime. In the meantime BM started doing Un Kannil Neer Vazhindhal with Rajini. During that shooting, for reasons best known to the establishment of TN at that point of time, BM was arrested on the charges of passport forgery case and he was physically assaulted by police it was alleged. BM was so cut off with the treatment meted out to him,he made the police high handedness as a background for his next film in 1985 which he made in Malayalam as Yatra ( A Superb film where Mammootty gave out a standout performance.The same was remade by BM after 20 years as Athu oru Kana Kalam with Dhanush). So the NT-BM project got delayed and BM went on to do Veedu, Sandhya Raagam and Rettaival Kuthirai and NT was busy with his own projects. So the project never took off.

Mahendran: He was the one who wrote Thanga Pathakkam and later when he became a director he did good movies like Mullum Malarum[1978] and Uthiri Pookal [1979]. But the continuous failures of his films like Pootatha Pootukkal, Johny (1980), Nandu and Metti in the early 80's forced him into hibernation, though he wrote story dialogue for Rishimoolam in 1980. So the NT- Mahendran combo was never even concieved.

MR: The second son of Venus Gopalarathinam (better known as Venus Rathinam Iyer) whose original name was Subramanian and who did a MBA, choose films as a career and his debut was again in Kannada (" Pallavi Anupallavi") and rechristened himself as Mani Rathinam. Then he did "Unaru" in Malayalam in 1984. Venus Films had two partners Govindarajan and Rathinam (earlier Sridhar also had a stake) and Govindarajan's sons are G.Thiagarajan & G.Saravanan who launched Sathya Jothi Movies. So they gave the first break to MR thro' Pagal Nilavu in 1985 and Kovai Thambi's Idhya Kovil followed in the same year. Mouna Ragam in 1986 gave the big break and Nayagan in 1987 made it big for him.

NT having known the Venus family from the early 50's [ Amara Dheepam and Uthama Puthiran were produced by Venus] saw Nayagan and he expressed his desire to do a film with MR. Nayagan was released for 1987 Deepavali (October) and MR was already shooting for Agni Natchathiram. So after that, it was decided. But came Dec 24, 1987,TN's political situation turned topsy turvy and NT took the political plunge and his filmy commitments were reduced. After all the political storm, when he again showed interest in acting, GV films booked him. It was announced that MR would direct Thalapathy and Suhasini would direct NT movie which also had Mammootty. MR was telling Suhasini to leave the project to him.

At that point of time NT went to attend Singapore show where he was to be felicitated. But alas, he swooned on the dias and he was rushed to hospital where he was diagonised with enlarged Heart problems. The Doctors advised fixing of pacemaker in his heart and that was done. The after effects of that prevented NT from active cinema for some time and MR in the meantime had gone to Bollywood range with the release of Roja. So again the spirit was there for NT but body was not willing.

These are the facts and hope NT's stand is clear now.

As for as he not selecting good movies or stories, let me come back to it after some time.

Regards

eehaiupehazij
6th October 2014, 06:19 PM
ரிஷிமூலம்?! (1980) : நதி (நடிகர் திலகம்) மூலம் தேவைப்படும் போது!

முதுமை நெருங்க நெருங்க வாழ்வின் கடமைகள் நிறைவுற்ற நிலையில் கணவன் மனைவியிடையே அரும்பும் கனிந்த காதல் என்பது திருமண வாழ்வு தந்திட்ட அன்பு மட்டுமே சார்ந்திட்ட ஆசைக்கு வித்திடும் பந்தம். ஐம்பதிலும் வரும் ஆசையை என்னவொரு பாந்தமாக வெளிப்படுத்துகிறார் நடிகர்திலகம்!

https://www.youtube.com/watch?v=7UH6qn9v6wM

https://www.youtube.com/watch?v=b35qMps703A

sivaa
6th October 2014, 06:27 PM
Mr Siva


Thanks for the initiative taken by you in uploading the Kungumam article on NT. I have requested last week itself if anyone have the facility can upload the same.

Once again thanks for your support.


Regards

அன்பின் வாசு சார்

தங்களது வேண்டுகோள் பதிவை கண்டதனால்தான்
இதனை தேடி எடுத்து பதிவுசெய்ய முடிந்தது
நன்றி உங்களுக்கு

ScottAlise
6th October 2014, 07:38 PM
என் தம்பி படத்தில் நடிகர் திலகம்

இந்த திரியில் நான் பார்த்ததில் பிடித்தது என்ற ஒரு series தான் அதிகமாக எழுதி உள்ளேன் . வெகு நாட்களுக்கு பிறகு எழுதுவதினால் என் routine ல் இருந்து ஒரு சின்ன deviation


இனி என் தம்பியில் நம் நடிகர் திலகத்தின் நடிப்பு விஸ்வரூப தரிசனம்

1968 ல் வெளிவந்த நடிகர் திலகத்தின் படம் , இந்த படம் வந்த நேரத்தில் பல படங்களில் பல வேடங்களில் நடித்து கொண்டு புது புது அவதாரங்கள் எடுத்து கொண்டு இருந்தார் , நம் நடிகர் திலகம்

நடிகர் பாலாஜி என்றால் ரீமேக் படங்கள் தான் , அந்த நேரத்தில் எந்த மொழி படம் ஹிட் என்று பேசபடுகிறதோ அதை சுட சுட ரீமேக் செய்து விடுவார் , இந்த படமும் அது போல வந்த ஒரு தெலுங்கு ரீமேக் தான்

ஒரு commercial படத்தில் logic always goes for an toss . அதை நம்பும் படி சொல்வதில் தான் இருக்கிறது சவால்

இந்த படத்தில் நம்மவர் ஏற்று கொண்டு இருக்கும் பாத்திரத்தின் பெயர் கண்ணன் , அது என்னமோ தெரியவில்லை கண்ணன் என்ற பாத்திரத்துக்கும் நம்மவருக்கும் அப்படி ஒரு நெருக்கம் , Melo dramatic shade அதிகமாக தாய் பாசத்துக்கு ஏங்கும் கண்ணனாக நம்மை தெய்வமகன் ல் உருக வைத்தார் என்றால் இதில் எழில் கொஞ்சும் கண்ணனாக , அழகில் , நேர் வழில் செல்லும் பொது தன் சொந்த தம்பியின் சூழ்ச்சியால் வஞ்சிக்க படுவதால் , பகவான் கண்ணனின் அம்சமான சமயோஜித்த புத்தியினால் ஆள் மாறாட்டம் செய்து தர்மத்தை நிலை நாட்டுகிறார்.

இந்த படத்தில் நடிகர் திலகத்துக்கு பல முகங்கள்.

ஒரு மிக பெரிய ஜமீன் அதை நிர்வகிக்க சின்ன வயதில் இருந்தே பயிற்சி எடுத்து qualify ஆகிறார் . அதை அவர் கையாளும் அணைத்து விஷயங்களில் பார்க்க முடிகிறது . உதவி கேட்டு வரும் வேலைகாரனிடம் கனிவு , எஸ்டேட் ல் வேலைசெய்யும் நபர் தவறு செய்த நபரிடம் ரௌத்திரம் என்று ஒரே காட்சியில் இரண்டு முக பாவனை .

நிறை குடம் தளும்பாது ,அதை போல் அதிகம் படித்து , அமைதின் ரூபமாய் இருக்கும் கண்ணனின் முகத்தில் தான் எத்தனை சாந்தம் , கருணை , அதுவும் கோவிலில் அவர் பேசும் வசனமும் , அந்த காட்சி வேறு ஒரு தளத்துக்கு நம்மை அழைத்து செளுகிறது .

ScottAlise
6th October 2014, 07:39 PM
ஒரு ஆண் பாசத்தில் அதுவும் தாய் பாசத்தில் மிஞ்ச முடியுமா , முடியாது என்று தான் நானும் நினைத்து கொண்டு இருந்தேன் , இந்த படத்தில் கண்ணனை பார்க்கும் வரையில்

பாசத்தை பிரதிபலிக்க நம்மவருக்கு சொல்லிய தர வேண்டும் , நிஜ வாழ்வில் பாசமிக்க கணவராக , அண்ணனாக , மகனாக இருபவருக்கு , தங்கையிடம் பாசம் காட்ட சொல்லி தரவா வேண்டும் . தன் தங்கைக்கு சாப்பாடு ஊட்டும் காட்சி , தங்கையிடம் அன்பை பொழியும் காட்சி பாசமலர் போல் melo dramatic ல இல்லமல் கொஞ்சம் அதை அளவாக காட்டி உடனே அடுத்த காட்சிக்கு நம்மை அழைத்து செல்வது நல்ல உக்தி
எனக்கு தெரிந்து இந்த ஒரு நடிகர் தான் ஒரே காட்சி கொடுத்தாலும் அதை தன் நடிப்பு ஆற்றலினால் each and every time வேறு படுத்தி நடித்து நம்மை திக்கு முக்கு அட செய்யும் மாய கள்வன் .
முத்து நகையே என்ற பாடலில் தன் தங்கையை வைத்து கொண்டு அவர் பாடும் பொது அவர் முகத்தில் தவழும் ஒரு வித DIVINE SMILE க்கு ஈடு இணை இல்லை , எப்படி ,பிறந்த குழந்தையின் சிரிப்பில் , மழை துளியில் , பனி கட்டியில் கலப்படம் இருக்காதோ , அதை போன்றது தான் இந்த காட்சியில் அவர் தன் தங்கையை கை ஆளும் பொது அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு
ஊனம் உற்ற குழந்தைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வராமல் பார்த்து கொள்ள வேண்டும் . அதே சமயம் SPECIAL TREATMENT காட்ட கூடாது . இதை புரிந்து கொண்டு சாப்பிடும் பொது விளையாடுவது ஆகட்டும் , அந்த குழந்தையை உடன் உரையாடும் போதும் இந்த உணர்வை பிரதிபலித்து கொண்டே இருப்பார்

ஒரு நடிகர் நடித்தால் மட்டுமே போதாது , அவர் நடிப்புக்கு வலு சேர்க்க அவர் அணியும் உடைகள் , அவர் அச்செச்சொரீஸ் அவருக்கு complementary ஆக இருக்க வேண்டும் , aristocrat கண்ணனாக அவர் அணியும் உடை நேர்த்தி . அதுவும் அவர் தம்பி வரும் பொது அவர் வெள்ளை உடை , சூ , அணிந்து கொண்டு , கையில் புத்தகத்துடன் , நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர் தம்பி வருவதை பார்க்கும் காட்சி , signature pose for posters

இப்படி ஒரு பக்கம் பாசத்தை பொழியும் கண்ணன் , வள்ளலாக அறிய படும் கண்ணன் , வீரத்தின் விளைநிலமாக அறிய படும் கண்ணன் காதல் வைய பட்டால் ? எப்படி இருக்கும் . பொதுவாக பாசம் அதிகமாக வைத்து இருக்கும் ஆண்மகன் தன் காதலி , அல்லது மனைவியை அணுகும் விதம் , பேசும் விதம் அனைத்துலும் ஒரு வித ஆண்மை கலந்த பெண்மை + மேன்மை இருக்கும் . இந்த படத்தில் காதல் காட்சிகள் கம்மி என்றாலும் கிடைத்த காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்து இருப்பார் நம்மவர் அதுவும் அடியே நேற்று பிறந்தவள் நீயே பாடலில் இவர் கொடுக்கும் expressions ஆகட்டும் , தட்டட்டும் கை தழுவட்டும் பாடலில் சரோஜாதேவியின் கூந்தலில் உள்ள பூவைப் சாட்டையின் மூலமாக பறிக்கச் சொல்லும் பரிட்சையின் போது வரும் பொது அவர் காடும் ஒரு வித அதிர்ச்சி கலந்த முக பாவம் top
பணம் , மரியாதை , படிப்பு , தங்கை பாசம் , உளம் கவர்ந்த காதலி அனைத்தும் இருக்கிறது கண்ணனிடம் , எல்லாம் ஒரு மனிதருக்கு கிடைப்பது இல்லை , அப்படி கண்ணனிடம் எது இல்லை , தம்பி பாசம்

தன் தம்பியிடம் அளவில்லா பாசம் காட்டும் கண்ணனுக்கு அது ஒரு one way டிராபிக் ஆகவே இருக்கிறது , தன் தம்பியை எப்பாடு பட்டு திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தோல்வியை சந்திக்கும் கண்ணன் , தன் தம்பி திருந்தி விட்டேன் என்று சொல்லும் பொது , அது வரை மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கும் கண்ணன் பாசத்தினால் அறிவு கண் குருடு ஆகி பிரச்சனையில் சிக்கி கொள்ளுகிறார் .

ScottAlise
6th October 2014, 07:40 PM
கந்தப்பா

ஜமிந்தார் பாத்திரத்தில் இருக்கும் பொது ஒரு வித வட்டத்துக்குள் இருக்கும் சிவாஜி சாரின் நடிப்பு , கந்தப்பா பாத்திரத்துக்கு கூடு விட்டு கூடு பாயும் பொது அணைத்து inhibitions யையும் சற்று தள்ளி வைத்து break free zone க்கு வரும் பொது , the actor takes us for an enjoyable ride. தெற்கத்தி கள்ளனடா என்ற தெரு கூத்து பாடல் , அந்த காலத்தில் தெருக்கு தெரு கலக்கி இருக்கும் , இதற்க்கு முன் நான் பார்த்த இரண்டு தெரு கூத்து பாடல் ஒன்று நவராத்திரி படத்தில் வரும் , மற்றுஒன்று தில்லானாவில் மனோரமா ஆடும் பாடல் . இதில் நவராத்திரியில் வரும் பாடலும் , இதற்கும் ஒரே நடிகர் , ஒரே சூழ்நிலை , நடிப்பில் complete வேற்றுமை. இந்த ஒரு பாடல் போதும் நடிகர் திலகத்தின் நடிப்பு பெருமையை பறைசாற்ற . இந்த ஒரே பாடலில் அவர் ஹீரோக்கு என்று இருக்கும் அணைத்து இலகனங்களை உடைத்து , எந்த வித limitations இல்லாமல் ஆடி அதுவும் கன்வின்சிங் ஆக ஆடி இருப்பார் , அதுவும் , மீசையை முறுக்கி ஆடும் பொது 1969 ல் தியேட்டர் எப்படி இருந்து இருக்கும் , நினைத்து பார்த்தாலே சுகமாக இருக்கிறது
கந்தப்பா transform ஆகும் காட்சிகள் நம் சிரிப்புக்கு உத்தரவாதம் , (இந்த காட்சிகளின் சாயல்களை பிற்காலத்தில் வரும் பல படங்களில் பார்க்க முடியும் , பில்லா படத்தில் டானாக ரஜினியை மாற்றும் காட்சி , பட் , புட் என்ற வார்த்தை விளையாட்டை , நல்லவனுக்கு நல்லவன் படத்திலும் பார்க்க முடியும்)

இந்த காட்சியில் அவர் செய்யும் சேஷ்டைகளை பார்க்கும் பொது , நாகேஷ் என்ற நகைச்சுவை நடிகரை JUST LIKE THAT கடந்து இருப்பார்
நாகேஷ் அவரிடம் மாட்டி கொண்டு முழிக்கும் போதும் , அவர் முதல் முறையாக கோட் சூட் அணிந்து , நாடக நடிகருக்கு உரித்தான , கம்பீரத்துக்கு அடையாளமாக நடித்து நடித்து , தோளை உயர்த்தி நடக்கும் பொது சிரிக்காமல் இருக்க முடியாது . நாகேஷ் வீட்டை பற்றி சொல்லுவதும் , இவர் தூங்கி விடுவதும் அனைத்தும் படத்தில் காமெடி இல்லை என்ற குறையை , அதுவரை குடும்ப படமாக இருந்த படத்தின் genre யை மாற்றி விடும்


கண்ணன் கந்தபாவாக உருமாறி மீண்டும் கண்ணனாக வரும் பொது முதலில் குடும்ப படமாக இருந்த படம் பிறகு action படமாக மாறுகிறது ,
அவர் பங்களா வுக்குள் நுழையும் பொது தங்க நிறத்தில் ஷு அணிந்து இருப்பார் , தங்கம் கிழே இருக்கிறது , பரிசுத்தமான வஸ்து கிழே இருக்கிறது என்று சொல்லுவது போல் இருந்தது என்னக்கு .

என்ன தான் ஒருவன் அணைத்து அமசங்களையும் சொல்லி கொடுத்தாலும் ஒரு நாடக நடிகன் மாளிகையில் தடுமாற தான் செய்வான் , அதை மிகவும் எதார்த்தமாக பிரதிபலித்து இருப்பார் , சிநேமடிசாக எடுக்க நல்ல ச்கோபே இருக்கும் காட்சிகள் இவை , இருந்தும் சற்று under play செய்து இருப்பார் so that scene does get a natural effect and does not go overboard . உதரணத்துக்கு தங்கையுடன் உணவு அருந்தும் காட்சி .


குடும்ப படத்தில் action block பெரிதாக எதிர்ப்பாக முடியாது, அதை குறையை சரி செய்து விடுகிறது கத்தி சண்டை
கத்தி சண்டை என்பது cliched ஆக இருக்காது , கத்தியை முதலில் வாங்கும் பொது ஒரு வித பட்டதம் , பிறகு துணிவு , பிறகு கோபம் , வெல்ல வேண்டும் என்ற வெறி என்று அனைத்தும் காட்டும் அவர் முகம் , அதுவும் துள்ளி குடித்து , தாவி , அதே சமயம் கத்தியையும் லாவகமாக கை ஆளுவதை பார்க்கும் பொது ,கத்தி சண்டையில் சில நடிகர்கள் தான் தேர்ந்தவர் என்று சொல்லும் பொது OMG என்ன வென்று சொல்வதம்மா என்று கேட்க தான் தோன்றுகிறது . அவர் கத்தியை வைத்து கொண்டு நிற்கும் காட்சி , signature ஸ்டைல்

மொத்தத்தில் கண்ணனாக வந்து , கந்தபாவாக சிரிக்க வைத்து , மீண்டும் கண்ணனாக வந்து ஆக்ரோஷமாக மெய் சிலிர்க்க வைக்கும் சிவாஜி சாரின் நடிப்பை போற்றுவோம்

ScottAlise
6th October 2014, 07:41 PM
Dear Vasudevan Sir,

The above post is for you, You have asked about En thambi some time back , I hope you remember and hope I would have fulfilled atleast 5 % of your expectation

Russellbpw
6th October 2014, 08:48 PM
இந்த போஸ் - இதற்க்கு ஈடு இணை உண்டோ ? !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10710986_306404846217584_1875890319378975039_n_zps 96f403fb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10710986_306404846217584_1875890319378975039_n_zps 96f403fb.jpg.html)

Russellbpw
6th October 2014, 08:50 PM
Courtesy - NET

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/pic2_zps80fbe96e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/pic2_zps80fbe96e.jpg.html)

Russellbpw
6th October 2014, 08:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/pic1_zpsee2c1f9f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/pic1_zpsee2c1f9f.jpg.html)

Russellbpw
6th October 2014, 08:51 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/pic3_zps329b3307.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/pic3_zps329b3307.jpg.html)

eehaiupehazij
6th October 2014, 09:41 PM
Dear Ragulram. Happy for staging your comeback with an appropriate write-up on En Thambi. As far this therukkooththu is concerned, NT has no equals. First choice goes to the Sadhaaram play in Kalvanin Kaadhali, as you can enjoy the very young NT's energetic outflow of dance steps. Number two is Navaraaththiri's rajapart kooththu that is quite unforgettable due to the transformation of an ordinary drama actor totally getting transformed into a raajaa, with style in his talk and walk! Third place goes to En Thambis 'naan porandhadhu' thanjaavooru soorakkoattaiyile! Of course one more spoof on therukkooththu was from Manorama in Thillaanaa Mohanambal! I could upload all these except the enthambi therukkooththu sequence. For the pleasure of NT fans, if anybody has that...please!

eehaiupehazij
6th October 2014, 09:44 PM
DearRKS. any briefing on Mr. Ramakrisnan's association with NT?

RAGHAVENDRA
6th October 2014, 09:46 PM
இந்த போஸ் - இதற்க்கு ஈடு இணை உண்டோ ? !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10710986_306404846217584_1875890319378975039_n_zps 96f403fb.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10710986_306404846217584_1875890319378975039_n_zps 96f403fb.jpg.html)

நீயா நானா நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தின் எந்த போஸில் சிலை வைக்க நீங்கள் விரும்புவீர்கள் என கோபிநாத் கேட்டபோது, நான் விருப்பம் தெரிவித்த போஸ் இதுதான்.. நிகழ்ச்சியில் இது ஒளிபரப்பப்படவில்லை.

Murali Srinivas
6th October 2014, 11:12 PM
செந்தில் சார்,

நண்பர் ரவிகிரண் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களை எடுத்தவர் அந்த புகைப்படங்களில் நடிகர் திலகத்துடன் இணைந்து காட்சியளிக்கும் ராமகிருஷ்ணன் அவர்கள். தினமலர் நாளிதழில் மதுரை பதிப்பில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய இவர் பல திரை நட்சத்திரங்களுடன் நல்ல தொடர்பில் இருந்து அவர்கள் மதுரை வரும்போதும் அல்லது இவர் சென்னை செல்லும்போதோ அவர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்து பிரசுரிப்பது இவரது வழக்கம். தன்னுடைய அனுபவங்களை தினமலர் வார இதழில் தொடர் கட்டுரையாக எழுதியிருக்கிறார். உங்களுக்கு மிகவும் பிடித்த காதல் மன்னனின் நெருங்கிய நண்பர் இவர். அவரை பற்றி பலமுறை எழுதியிருக்கிறார். எம்ஜிஆர் அவர்களிடம் நெருங்கி பழகியவர். நமது நடிகர் திலகத்தோடு இவருக்கு மற்ற இருவரோடு ஒப்பிடுகையில் அந்தளவிற்கு பழக்கம் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இந்த புகைப்படங்கள் மதுரையில் வைத்து எடுக்கப்பட்டவை.

முதல் புகைப்படம் [01.02.1972] செவ்வாய்க்கிழமை மதுரையில் பாண்டியன் ஹோட்டலில் வைத்து எடுக்கப்பட்டது. ஞான ஒளி வெளிப்புற படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் வந்திருந்தார் நடிகர் திலகம். தேவனே என்னைப் பாருங்கள் பாடல் காட்சியும் மற்றும் சில வெளிப்புற காட்சிகளும் 3, 4 நாட்களில் படமாக்கப்பட்டது. ராஜா திரைக்காவியம் ஜனவரி 26 அன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நேரமிது. அதற்கு பத்து நாட்கள் முன்புதான் சரியாக சொல்ல வேண்டுமானால் ஜனவரி 19 அன்று காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம் வசந்த மாளிகை ஆரம்பிக்கப்பட்டு அதன் ஒரு வார schedule முடித்து விமானப்படை வீரர் நல்வாழ்வு நிதிக்காக நடத்தப்பட்ட ராஜா திரைபடத்தின் பிரிமியர் காட்சியில் கலந்துகொண்டு விட்டு கொடைக்கானல் கிளம்பி சென்றார் நடிகர் திலகம். அதை முடித்து விட்டு மீண்டும் மதுரை வந்து சென்னை கிளம்புவதற்கு முன் எடுக்கப்பட்ட படம். மதுரையிலிருந்து சென்னை வந்து மறுநாள் அதாவது பிப்ரவரி 2-ந் தேதி அன்று அவரது புதுப் படத்தின் துவக்கவிழா பூஜை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அது என்ன புது படம் என்று கேட்கிறீர்களா? அதுதான் நம் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமான அருமை நண்பர் கோபால் அவர்களுக்கும் மாற்று முகாம் ரசிகராக இருந்த போதினும் பத்து பதிவுகள் இட்டால் அதில் எட்டு பதிவுகளிலேனும் இந்தப் படத்தின் பெயரை குறிப்பிட மறக்காத அருமை நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கும் "மிகவும் பிடித்த" ராஜ ராஜ சோழன்.

இரண்டாவது புகைப்படம் 1971 பொது தேர்தலின்போது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு நடிகர் திலகம் தமிழகமெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பிரச்சாரத்திற்கு மதுரை வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைதான் ராமகிருஷ்ணன் நடிகர் திலகத்திடம் காண்பிக்கிறார்.

மூன்றாவது புகைப்படமும் மதுரையில் எடுக்கப்பட்டது என்றே நினைக்கிறேன். இதன் பின்புலம் சரியாக தெரியவில்லை. அக்டோபர் 30 சனிக்கிழமை. அந்த வருடம் தீபாவளி அக்டோபர் 22 அன்று வந்தது. அதற்கு ஒரு எட்டு நாட்கள் கழித்து எடுக்கப்பட்ட படம். என்னுடைய நினைவு சரியாக இருக்குமென்றால் அந்த நேரத்தில் நடிகர் திலகம் நடித்த தீபம் திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். அதன் வெளிப்புற காட்சிகள் கேரளத்தில் உள்ள மூணாறு தேக்கடி போன்ற இடங்களில் நடைபெற்றது [ராஜா யுவ ராஜா, அந்தபுரத்தில் ஒரு மகராணி மற்றும் பூவிழி வாசலில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன]. அதற்காக அந்த இடங்களுக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து மதுரை வந்து தேனி கம்பம் குமுளி வழியாக சென்றார் என நினைக்கிறேன். இல்லை வேறு ஏதேனும் நிகழ்ச்சிக்காக வந்திருந்தாரா என்பது நினைவில்லை.எப்படி இருப்பினும் அழகான ஆண்மையான நடிகர் திலகம். அருமையான புகைப்படங்கள். அமிழ்தினும் இனிய அந்த பொன்னாட்களை நினைவு கூற ஒரு வாய்பளித்த நண்பர் RKS அவர்களுக்கும் அதை பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி என்னை பதிவிட வைத்த உங்களுக்கும் நன்றி.

அன்புடன்

கோபால்,

ஒரு நகைச்சுவை ரசதிற்காக குறிப்பிட்டிருக்கிறேன். இதுதான் சாக்கு என்று உங்கள் வழக்கமான அர்ச்சனையை ஆரம்பித்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர் கலைவேந்தன் அவர்களே, ஜாலியாக எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

Murali Srinivas
6th October 2014, 11:20 PM
ராகுல்,

என் தம்பி அருமையாக வந்திருக்கிறது. சிறிது இடைவெளிக்கு பின் வந்ததாலோ என்னவோ உங்கள் எழுத்துக்களில் ஒரு மெருகு தெரிகிறது. படத்தின் சிறப்பம்சங்களை கோர்வையாக எழுதிய நேர்த்தி பாராட்டத்தக்கது. நீங்கள் சித்தூர் வாசுதேவன் அவர்களுக்காக எழுதினாலும் "என் தம்பி" என்று பாசத்தோடு உங்களை அழைக்கும் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள். வாழ்த்துகள்!

சந்திரசேகர் சார்,

திருச்சி விழா வெற்றிகரமாக நடைபெற்றதற்கு பாராட்டுகள்! தடைபட்டு நிற்கும் பல விஷயங்கள் உங்கள் முயற்சியால் முழுமை அடையட்டும்! வாழ்த்துகள்!

அன்புடன்

eehaiupehazij
7th October 2014, 07:01 AM
முரளி சார். காலம் ஒதுக்கி என் சாதாரண கேள்விக்கு மிக விரிவான பதில் தந்தமைக்கு என் நன்றிகள். திரியை விட்டு சற்று ஒதுங்கி நின்ற ராகுல் போலவே ஏனைய நண்பர்களும் விரைந்து திரும்பி திரியின் வளர்ச்சிக்கு தங்கள் மெருகேறிய பதிவுகள் வாயிலாக உறுதுணை புரிந்திட வேண்டுகிறேன்.