PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

Russellbpw
6th July 2014, 11:10 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரை உலக கலைபயணம் பற்றி பல்வேறு தகவல் கொண்ட பாகம் 14 துவக்கி நல்ல முறையில் எழுத , கொண்டு செல்ல நடிகர் திலகம் அவர்களின் ஆன்மாவின் ஆசி மற்றும் அருள் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு முதற்க்கண் வேண்டிகொள்கிறேன்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsd0b4a951.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsd0b4a951.jpg.html)

இந்த திரி பாகம் 14 துவக்கி எழுத முன்மொழிந்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

போட்டி என்பது ஒரு கருத்து பரிமாற்றம் என்பதை உணர்ந்து பாராட்டும் வேளையில் பாராட்டியும், தமாஷ் நய்யாண்டி செய்யும் வேளையில் அதையும் செய்து ஊக்குவிக்கும் "GENTLEMAN OF THREAD " என்று அன்பாக கருதப்படும் திரு எஸ்வி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கும் மிகுந்த நன்றிகள்.

மஹாகவி காளிதாஸ் காவியத்தில் ஒரு பாடல் வரும்...யார் தருவார் இந்த அரியாசனம்..புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் அம்மா என்று ! அந்த பாடல் வரிகள் இந்த தருணத்தில் எனக்கு நினைவிற்கு வருகிறது.

இந்த பாகத்தை பொருத்தவரை நடிகர் திலகம் திரியை அலங்கரித்த பலரது எண்ணங்கள், தகவல்கள், ஆவணங்கள், அனுமானங்கள் ,அனுபவங்கள் இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து அதனுடன் என்னாலான கற்களை பாலம் அமைக்க சுமந்து சென்று பொறுபபாக சேர்க்க அனைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 100 நாட்கள் மற்றும் 175உம் அதற்க்கு மேலும் ஓடிய படங்களின் எண்ணிக்கை விபரங்கள் அனைவரின் பார்வைக்கும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsd2417045.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsd2417045.jpg.html)


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps7def0b43.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps7def0b43.jpg.html)

இந்த பாகம் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் இப்போதுமுதல் எங்கு வெளியிட்டாலும் அதன் தகவல்கள், நினைவலைகள் இவற்றை கொண்டு சாதனை மலர்களாக சார்த்தப்படும்.

நமது ஜாம்பவான்கள் திரு நெய்வேலி வாசு சார், ராகவேந்திரன் சார், ஜோ சார், ராகுல்றாம் சார், ச. வாசுதேவன் சார், செந்தில் சார், ஹைதராபாத் ரவி சார், திரு.கார்த்திக் சார், கல்நாயக் சார் , பரணி சார், ஆதிராம் சார் மற்றும் பெயர் விட்டுப்போன அனைவரும் திரும்பவும் வந்து முன்பு போல பதிவிட வேண்டுகிறேன்.

கோபால் சார் பற்றி கூற தேவை இல்லை. காரணம் அவரால் இங்கு வந்து பதிவிடாமல் இருக்க முடியாது. கோபால் சார் அவர்களுடைய பொக்கிஷமாம் SCHOOL OF ACTING தொகுப்பை ஒரு குறு தொகுப்பாக ஒரு சாதாரண பாமரன் படித்து மகிழும் வண்ணம் எளிய நடையில் இங்கு REPHRASE செய்து பதிவிட்டால் மிகவும் மகிழ்ச்சி. அந்த கௌரவத்தை அவர் எனக்கு பரிசாக அளிப்பார் என்று நம்புகிறேன்.

அனைவருக்கும் எனது நன்றிகலந்த வணக்கங்கள்.

:2thumbsup:

http://www.youtube.com/watch?v=WngSPSrIRJM

Russellisf
6th July 2014, 11:13 PM
VALTHUGAL RKS SIR FOR OPENING THE NEW THREAD NO 14

http://www.youtube.com/watch?v=6FQEFdXE3Io

Russellbpw
6th July 2014, 11:31 PM
இன்று இணையதளத்தில் ஒரு செய்தியை பார்க்க நேர்ந்தது. அது நம்முடைய நடிகர் திலகம் அவர்களின் கொடையை பற்றியது.

பெரிய கோவிலுக்கு நடிகர் திலகம் 1960இல் 10வயது நிரம்பிய வெள்ளையம்மாள் என்ற யானையை தானமாக கொடுத்தது.

இன்று நம்மிடையே இந்த கஜராஜன் இல்லையென்றாலும் ,மக்கள் மனதில் நடிகர் திலகம் போல இந்த கஜராஜனும் நிறைந்துள்ளான் என்பதற்கு இந்த செய்தித்தாளில் வந்த செய்தியே சாட்சி !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zpscd056cb5.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zpscd056cb5.jpg.html)


கட்டபொம்மன் திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரம் வெள்ளையம்மாள் .

என்னே நமது நடிகர் திலகத்தின் தேசியமும் தெய்வீகமும் !

எண்ணிக்கையில் அடங்கிய வள்ளல்களை கண்ட நாட்டில் எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத தனிப்பெரும் வள்ளலே ! வளர்க உங்கள் புகழ் !

sivaa
6th July 2014, 11:34 PM
அன்பு ரவிகிரண்சூரியா
நமது நடிகர் திலகம் திரியின் 14 வது பாகத்தை தங்களது அன்புக்கரங்களால் மிகமிக மங்களகரமாக ஆரம்பித்து வைத்திருக்கும் தங்களுக்கு
எனது அன்பான பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !! நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/IRVMBNR06_zpsed1199a5.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/IRVMBNR06_zpsed1199a5.jpg.html)

Russellbpw
6th July 2014, 11:38 PM
VALTHUGAL RKS SIR FOR OPENING THE NEW THREAD NO 14

http://www.youtube.com/watch?v=6FQEFdXE3Io

திரு யுகேஷ் சார்

மிக்க நன்றி. உண்மையை சொல்லவேண்டும் என்றால் எங்கே நீங்கள் வாழ்த்து சொல்லாமல் இருப்பீர்களோ என்று நினைதேன்.

உங்கள் மென்மையான மனமும் மேன்மையான குணமும் நீங்கள் வாழ்த்தின் மூலம் தெளிவுபடுத்திஉள்ளீர்கள்.

மிக்க நன்றி சார் ! எனது நன்றியை இந்த பாடல் வரிகளின் மூலம் தங்களுக்கு சமர்பிகின்றேன் !

http://www.youtube.com/watch?v=ft44mIGumqY

Russellbpw
6th July 2014, 11:42 PM
இனிய நண்பர் திரு சிவா அவர்களுக்கு

தங்களுடைய அருமையான இலங்கை தகவல்கள் என்றும் எங்களை கவர்ந்தவை.

இந்த வாழ்த்து செய்தி பதிவிட்டு இன்னும் சந்தோஷ பட வைத்துள்ளீர்கள்.

மிக்க நன்றி சார்

உங்களுக்கு எனது RETURN WISHES !

http://www.youtube.com/watch?v=kzNpKiXhM9A

Russellbpw
6th July 2014, 11:52 PM
உருவங்கள் மாறலாம் என்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் நடிக்கும் காட்சியும் அதை விளக்கும் அபஸ்வரம் ராம்ஜியும்

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10464057_10152572958689874_941123170574342113_n_zp sc51b9272.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10464057_10152572958689874_941123170574342113_n_zp sc51b9272.jpg.html)

Russellbpw
6th July 2014, 11:55 PM
நடிகர் திலகம் உள்ளவரை தஞ்சை கோயிலுக்கு கொடுத்த யானையை வருடா வருடம் சென்று பார்த்துவிட்டு வருவார் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/templeelephant_t31_0_zps4a3b6d5d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/templeelephant_t31_0_zps4a3b6d5d.jpg.html)

Russellbpw
6th July 2014, 11:58 PM
COIMBATORE ROYAL THEATER THOSE DAYS WHERE LOT OF NADIGAR THILAGAM FILMS HAVE CELEBRATED 100 PLUS DAYS RUN !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/2011060150710101_zpsa0ccb950.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/2011060150710101_zpsa0ccb950.jpg.html)

Russellbpw
7th July 2014, 12:02 AM
COURTESY - TIMES OF INDIA

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zpsdab2580d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zpsdab2580d.jpg.html)

Russellbpw
7th July 2014, 12:06 AM
ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் ஏரியில் ஒரு ஓடம் என்ற பாடலுக்கு நடிகர் திலகத்தின் நடன அசைவு !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sivaji_zps4f1879b3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sivaji_zps4f1879b3.jpg.html)

http://www.youtube.com/watch?v=6JLNomHAmtU

Russellbpw
7th July 2014, 12:10 AM
இரவு நேரம் பிறரை போலே என்னையும் கொள்ளும் ..துணை இருந்தும்..இல்லை என்று போனால் ஊர் என்ன சொல்லும்.....ஆகவே இன்றைக்கு ...

http://www.youtube.com/watch?v=KR_0wPPEctc

Russellbpw
7th July 2014, 12:14 AM
தனியார் நிகழ்சிகளில் மறக்க முடியுமா நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தின் நிகழ்ச்சிதான் இதுவரையில் அதிக வாரங்கள் மற்றும் அதிக TRP rating !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/capture_zps5afc8316.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/capture_zps5afc8316.jpg.html)

Russellisf
7th July 2014, 12:17 AM
THALAIVAR PARTICPATED HIS YOUNGER BROTHER THIRU SIVAJI GANESAN JALLIKATTU MOVIE 100 DAYS FUNCTION

https://www.youtube.com/watch?v=g3VxzkzmTPk



ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் ஏரியில் ஒரு ஓடம் என்ற பாடலுக்கு நடிகர் திலகத்தின் நடன அசைவு !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sivaji_zps4f1879b3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sivaji_zps4f1879b3.jpg.html)

http://www.youtube.com/watch?v=6JLNomHAmtU

Gopal.s
7th July 2014, 04:30 AM
Thanks Ravi Kiran Surya for successful opening of this new thread.Wish it reaches the new heights. I think all of us will come and participate again. I decided to concentrate on what I do without commenting on others.(even humour ,I will try to avoid as people appear to be over-sensitive and takes criticism as insult).Otherwise I will continue my thiruvilayadals ,ofcourse,as usual.

Gopal.s
7th July 2014, 05:51 AM
பம்மலாரின் அடுத்த பதிப்பாக எஸ்.வியின் "அண்ட புளுகுகள்,ஆகாச புளுகுகள்" பதிப்பிக்கலாம்.

RAGHAVENDRA
7th July 2014, 07:52 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/congratsrks_zps3d67581b.jpg

eehaiupehazij
7th July 2014, 09:47 AM
Hearty congratulations once again RKS. This new thread shall encourage new writers to come in and all the seniors to come back. Long live NT's glory!

eehaiupehazij
7th July 2014, 09:54 AM
[
quote=gopal,s.;1145738]பம்மலாரின் அடுத்த பதிப்பாக எஸ்.வியின் "அண்ட புளுகுகள்,ஆகாச புளுகுகள்" பதிப்பிக்கலாம்.[/quote]

We just leave it Gopal Sir. We are also fed up with those spontaneous lies and inherent false informations from some of them. Are we shaken or stirred?! All those paper arrows too fall on NT's neck as garlands and NT grows ever to show his 'viswaroopam'. We just ignore them and concentrate on quality postings in this thread. பிள்ளையார் சுழிபோட்டு உங்கள் அதிரடியை ஆரம்பியுங்களேன்!

parthasarathy
7th July 2014, 10:02 AM
Dear RKS:

Hearty congratulations on starting Part-14.

Mr. Raghavender has arrived and with him all other friends will certainly arrive.

Regards,

R. Parthasarathy

KCSHEKAR
7th July 2014, 11:12 AM
டியர் ரவிகிரன் சூர்யா சார்,
தங்களால் துவக்கப்பட்டிருக்கும் நடிகர்திலகத்தின் புகழ் பாடும் திரி-14, நடிகர்திலகத்தின் பல்வேறு சிறப்புகளை உலகறியச் செய்யும் விதத்தில் அமைந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.

eehaiupehazij
7th July 2014, 02:55 PM
[quote=ravikiransurya;1145716]ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் ஏரியில் ஒரு ஓடம் என்ற பாடலுக்கு நடிகர் திலகத்தின் நடன அசைவு !



வாழு! வாழ விடு!' இந்தத் தாரக மந்திரத்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து, எத்தனையோ வளரும் இளம் நடிகர்களின் வாழ்வில் உண்மையான ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் நடிகர் திலகம். மாபெரும் நடிப்புச்சக்கரவர்த்தியாக உச்ச நட்சத்திரமாக இருந்தபோதும் கூட நடிப்பவர்கள், ஆணோ பெண்ணோ, எவராயினும் தன்னோடு சேர்ந்து அவர்களும் வளரட்டுமே நன்கு வாழட்டுமே என்று எண்ணிய பெருந்தகை. தன் தொழிலை தெய்வமாக எண்ணி காலம் தவறாமையை தன் அடையாளமாக நிலைநிறுத்தி வேறு எந்தவொரு நடிகருக்கும் முன்மாதிரியாக விளங்கி ரசிகர்களின் நடிப்புத்தெய்வமாக என்றும் சுடர்விடும் தீபம் அவர் மட்டுமே. ஜெமினிகணேசன் போன்ற சமகால நடிகச்செம்மல்களும், பின்வந்த அனைத்துத் தலைமுறை நடிகர்களும் விரும்பி உடன் நடித்திட வித்திட்ட மாபெரும் நடிப்புச்செல்வம். எத்தனை புதிய இயக்குனர்கள்! எத்தனை புதிய தயாரிப்பாளர்கள்!'எத்தனை தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு வாழ்வு ! நடிகர் திலகத்தால் வளர்ந்தவர், செழித்தவர், வாழ்ந்தவர் உண்டே தவிர அவரால் இழந்தவர், ஒழிந்தவர், தாழ்ந்தவர் எவருமில்லையே! கர்ணன் மகாகாவியம் காலத்தை வென்று நின்று உரத்த குரலில் இந்த உண்மையை மேன்மையுடன் இந்தத்தலை முறையினரையும் மனம் கவர்ந்து எட்டாத உயரத்தில் வெற்றிக்கொடி நாட்டி சம்மட்டியால் அடித்ததுபோல்உணர்த்தியபோதும் தூங்குவது போல் நடிப்பவர் ...... இருந்தும் இல்லாதவரே!

kalnayak
7th July 2014, 03:07 PM
Hearty Congratulations RKS. I wish this new thread to get back all its legend writers and grow positively, glorifying NT's fame.

joe
7th July 2014, 03:55 PM
நடிக மன்னனின் 14-வது திரிக்கும் அதனை தொடங்கி வைத்த ரவிக்கிரண்சூர்யா அவர்களுக்கும் வாழ்த்துகள்

eweaxagayx
7th July 2014, 04:44 PM
Best wises Sri.Ravikiran Surya on opening this new thread. Though I am not a regular participant of NT threads I made it a point to read all posting to read every day. to speak openly I used some of your postings in my FB to show the records of our NT to my FB Friends.
with thanks - N.V.Raghavan

gkrishna
7th July 2014, 05:19 PM
http://www.hindu.com/thehindu/gallery/sg/sg003.htm

திரி மென்மேலும் வளர உளம் கனிந்த நல்வாழ்த்துகள்

வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்
வளர்க அவர் தம் ரசிகர்களின் தொண்டு

HARISH2619
7th July 2014, 05:54 PM
திரு ரவிகிரன்சூரியா சார்,
நடிகர்திலகத்தின் புகழ் பாடும் 14வது திரியை துவக்கி வைத்தமைக்கு வாழ்த்துக்கள்.இந்த திரியிலாவது நமது பழைய நண்பர்கள் அனைவரும் வந்து பங்கு கொள்ள வேண்டும் என கேட்டுகொள்கிறேன் .எந்த வித சண்டை சச்சரவுகள் ,ஈகோ இல்லாமல் அனைவரும் நமது தலைவரின் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.

Russellmai
7th July 2014, 07:11 PM
நடிகர் திலகத்தின் 14-வது திரியினைத் துவக்கி உள்ள
திரு ரவிகிரண்சூரியா அவர்களுக்கு பாராட்டுக்கள்
அன்பு கோபு

Subramaniam Ramajayam
7th July 2014, 07:39 PM
Hearty congrats RKS for the inaugral of NT 14 th thread which will definitely further glorify NT's sadhanaigal.
all the very best.

Subramaniam Ramajayam
7th July 2014, 07:44 PM
Has any one have the vidieo recordings of last saturday;s KALAIZNAR tv;s programme about NT,which went unnoticed for many of us like me. if so kindly upload here.

sivaa
7th July 2014, 08:15 PM
மையம் இணையத்தில் இணைந்த அனைத்து
சிவாஜி ரசிகர்களினதும் பெயர்களை என்னால்
முடிந்தவரை அவர்கள் மையத்தில் இணைந்துகொண்ட
ஆண்டு ரீதியாக வரிசைப்படுத்தியுள்ளேன்

அன்பு உறவுகளே நீங்கள் எங்கிருந்தாலும்
மறவால் இங்குவந்து வாரத்தில் ஒன்றோ இரண்டோ
நடிகர்திலகம் பற்றிய பதிவை வழங்கி
இத்திரியினை மேம்படுத்துமாறு அண்ணனின் பெயரால்
அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்
ஒற்றுமையே பலம் நன்றி

joe
kalnayak
saradha.n.a
mr.karthik
sankar1970
mahendraraj
tacinema
groucho070
murali srinivas
chinnakannan
adiram
ragavendra
harish2619
pammalaar
Krishna
j.radhakrishnan
mahesh.k
gold star(sathish)
k.s.shekar
parthasarathy
vasudevan31355
anm(anand)
subramaniam ramanujam
sivaji dhasan
ragulram11
gopal.s
balaa
sunildurai
ganpat
sivaji senthil
uthamaputhiran
vankv
g94127302(ravi)
vcs2107
s.vasudevan
barani
senthivel sivaraj
n j raghavan
spchowthryram
ponravichandran
kiruba
ravikiransuriya
gopu1954
ramdos

விடுபட்டுபோன சில உறவுகள்

P_R
abkhiabhi
plum
tamiz
rangan_08




யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால்
அதனை தவறாக எண்ணாமல்
அனைவரும் வந்து இந்தத் தேரை
தேங்கவிடாமல் இழுத்து செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றென்
வேறு பெயர்கள் தவறியிருந்தால் தெரிந்தவர்கள்
அவர்களது பெயர்களை குறிப்பிட்டுவிடுங்கள்

Russellbpw
7th July 2014, 09:25 PM
மையம் இணையத்தில் இணைந்த அனைத்து
சிவாஜி ரசிகர்களினதும் பெயர்களை என்னால்
முடிந்தவரை அவர்கள் மையத்தில் இணைந்துகொண்ட
ஆண்டு ரீதியாக வரிசைப்படுத்தியுள்ளேன்

அன்பு உறவுகளே நீங்கள் எங்கிருந்தாலும்
மறவால் இங்குவந்து வாரத்தில் ஒன்றோ இரண்டோ
நடிகர்திலகம் பற்றிய பதிவை வழங்கி
இத்திரியினை மேம்படுத்துமாறு அண்ணனின் பெயரால்
அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்
ஒற்றுமையே பலம் நன்றி

joe
kalnayak
saradha.n.a
mr.karthik
sankar1970
mahendraraj
tacinema
groucho070
murali srinivas
chinnakannan
adiram
ragavendra
harish2619
pammalaar
krishna
j.radhakrishnan
mahesh.k
gold star(sathish)
k.s.shekar
parthasarathy
vasudevan31355
anm(anand)
subramaniam ramanujam
sivaji dhasan
ragulram11
gopal.s
balaa
sunildurai
ganpat
sivaji senthil
uthamaputhiran
vankv
g94127302(ravi)
vcs2107
s.vasudevan
barani
senthivel sivaraj
n j raghavan
spchowthryram
ponravichandran
kiruba
ravikiransuriya
gopu1954
ramdos

யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால்
அதனை தவறாக எண்ணாமல்
அனைவரும் வந்து இந்தத் தேரை
தேங்கவிடாமல் இழுத்து செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றென்
வேறு பெயர்கள் தவறியிருந்தால் தெரிந்தவர்கள்
அவர்களது பெயர்களை குறிப்பிட்டுவிடுங்கள்

இந்த ராஜ கம்பீரம் நிறைந்த தேரை இழுப்பதற்கு முதல் கை வைத்த திரு சிவா அவர்களுக்கு மிகவும் நன்றி.

ஊர்கூடி தேர் இழுப்பது என்ற பழமொழி பழமொழி மட்டும் அல்ல அது உண்மை மொழி !

உங்கள் முயற்சிக்கு எனது நன்றிகள்.

Rks

Russellbpw
7th July 2014, 10:01 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10487156_1429404824008308_1715832820_n_zpsf775e220 .jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10487156_1429404824008308_1715832820_n_zpsf775e220 .jpg.html)

Russellbpw
7th July 2014, 10:02 PM
தெய்வாம்சம் உள்ள ஒரே நடிகர் !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10429837_1430571580558299_5670222687481352067_n_zp sf8dacb5a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10429837_1430571580558299_5670222687481352067_n_zp sf8dacb5a.jpg.html)

Harrietlgy
7th July 2014, 10:09 PM
Hearty congratulations Mr. RKS to start the new thread. I wish all the participants to give the memorable postings. And thanks to Mr. Siva for mentioning all hubber names.

J.Radhakrishnan
7th July 2014, 10:21 PM
திரு ரவிகிரன் சூர்யா அவர்களே,

நடிகர் திலகத்தின் 14ம் பாகத்தை இனிதே துவங்கி உள்ளீர்கள், வாழ்த்துக்கள்

Russellbpw
7th July 2014, 11:00 PM
சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10429837_1430571580558299_5670222687481352067_n_zp sf8dacb5a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10429837_1430571580558299_5670222687481352067_n_zp sf8dacb5a.jpg.html)

“இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்;

அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.

Russellbpw
7th July 2014, 11:31 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/466085596415262720_zpsc0b1982e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/466085596415262720_zpsc0b1982e.jpg.html)

Russellbpw
7th July 2014, 11:34 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsa1babec8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsa1babec8.jpg.html)

abkhlabhi
8th July 2014, 09:48 AM
Congrats to RKS for starting NT's 14th Thread.

http://www.youtube.com/watch?v=W6JLyiKPN5o

abkhlabhi
8th July 2014, 10:00 AM
http://www.youtube.com/watch?v=XP7bEX4_cDk

Russellbpw
8th July 2014, 11:00 AM
நடிகர் திலகம் நடிக்கவந்த காலம் தொட்டு அவருடைய உண்மை சாதனைகளை மறைத்தும், அவருடைய பல முரியடிக்கபடாத சாதனை, பெருமைகளை தனதாக்கிகொண்டும், தம்முடைய சிறுமைகளை மற்றவர்கள் தலைமீது சுமத்தி பழக்கப்பட்டும் உள்ளவர்கள், உண்மை செய்திகளை ஆதாரமாக ஆவணங்களுடன் மற்றவர் வெளியிடும்போது எரிச்சல் கொள்வது இயல்பே. இதற்க்கு முக்கிய காரணம் இதுதான்.

தகவல் தொழில்நுட்பம் சற்றும் இல்லாத காலங்களில் துண்டு சீட்டு மூலம் அடிமட்ட தொண்டன் வரையில் (19 years with the help of DMK caders )பரப்பப்பட்ட பொய் செய்திகளையும், தகவல்களையும் இந்த தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் ஆதாரத்துடன் மற்றவர் வெளியிடும்போது இவர்களுடைய பரப்பப்பட்ட செய்திகள் அனைத்தும் பொய் செய்திகள் "காயமே அது பொய்யட..காற்றடைத்த பையடா " என்ற பழமொழிக்கு சான்றாக உள்ளதை நடுநிலையாளர்களும் பெருவாரியான மக்களும், இந்த கால இளைஞர்களும் உணர்ந்து பதில் கேள்வி ஆதார ஆவணம் சகிதம் கேட்கும்போது வாயடைத்து போகிறார்கள். காரணம் இவர்கள் சட்டியில் இவர்கள் கூறும் பொய்க்கும், பொய் தகவலுக்கு அதை உண்மை என்று நிரூபிக்கும் ஆதாரம் ஆவணம் ஒன்று கூட கிடையாது.

அவர் கூறினார்...இவர் அங்கிருந்து கொடுத்த தகவல்....அவர் இங்கு அனுப்பிய தகவல் என்பதை போலவே இன்றுவரை பரப்பிக்கொண்டு உள்ளது இங்கு அனைவரும் பொதுமக்கள் உட்பட கண் கூடாக காண்கிறார்கள்.

எவ்வளவோ தடவை இவர்கள் மற்றவரை பற்றி உரைக்கும் பொய்யான தகவலை ஆதார ஆவணத்துடன் இங்கும் சரி மற்ற இடத்திலும் சரி ...புளுகள் என்று நிரூபித்தாகிவிடது.

உதாரணம் : 6 வருடத்திற்கு முன்பு வெளிவந்து சாதனை படைத்த வசூல் ஒரு தொகை. ....அதே படத்தின் வசூலை இவர்கள் தங்களுடைய 6 வருடத்திற்கு பிறகு வந்த திரைப்படத்தின் டிக்கெட் விலை ஏற்றப்பட்டு கிடைத்த வசூலோடு ஒப்பிட்டு....இந்த வசூல் முரியடிக்கபடவில்லை என்று மார்தட்டிகொள்வது சிரிப்பை தான் வரவழைக்கிறது.

இதை விட இன்னொரு கொடுமை...பத்திரிகை ஆவணம் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட நாட்களில் ஒரு திரைப்படம் வசூல் செய்து ..அதுவரை வந்த திரைப்படங்களிலே இந்த படம்தான் எல்லா சாதனைகளையும் முறியடித்துள்ளது என்று புள்ளி விவர கணக்குடன் கொடுத்தும்கூட அது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல்....நடிகர் வடிவேல் பாணியில்...."என்ன கைய புடிச்சு இழுத்தியா " என்று பதிவு செய்வதை பார்த்து என்ன சொல்ல...!

இவர்களே ஒரு சட்டத்தை போடுவார்கள் ....அதை நாம் follow செய்ய வேண்டும்...ஆனால் இவர்கள் மட்டும் follow செய்ய மாட்டார்கள் !

உபதேசம் ஊருக்குதான்....!

1952 முதல் உயிருடன் உள்ளவரை நேரிடையாக திரையுலகை வாழவைத்தது யார்...இப்பூவுலகு விட்டும் மறைந்தும் இவர்படத்தால் நாம் வாழலாம் என்று ஒரு விநியோகஸ்தர் வெளியிடும்போது அப்படி வெளியிடுபவர்களை இவரும் வாழ வைத்துகொண்டுதான் இருக்கிறார் என்பது திரை உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்...


ஒரு வருடத்தில் சராசரி 8 படங்கள் நடிகர் திலகதினுடயது 1952 to 1986 வெளிவந்தபோது...எங்கெல்லாம் வெளிவருகிறதோ அங்கெல்லாம் உள்ள

எத்துனை தயாரிப்பாளர்கள்..
எத்துனை இயக்குனர்கள்..
எத்துனை இசை கலைஞர்கள்...
எத்துனை சக நடிகர்கள் ..
எத்துனை சக நடிகைகள்..
எத்துனை துணை நடிகர்கள்...
எத்துனை கேமரா ஆட்கள்...
எத்துனை ஸ்டுடியோக்கள் அங்குள்ள தேநீர், காபி, சிற்றுண்டி மற்றும் பீடி விற்பவர்கள்
எத்துனை போஸ்டர் ஓட்டுபவர்கள்
எத்துனை போஸ்டர் பிரிண்ட் செய்பவர்கள்
எத்துனை போக்குவரத்து செய்பவர்கள்
எத்துனை சம்பத்தப்பட்ட இதர கலைஞர்கள்...
எத்துனை விநியோகஸ்தர்கள்..
எத்துனை திரை அரங்கு உரிமையாளர்கள்...
லீஸ் பார்ட்டிகள்,
சைக்கிள் ஸ்டான்ட் வைத்திருப்பவர்கள்...
கான்டீன் வைத்தவர்கள்...
முறுக்கு விற்பவர்கள்...
கார் ஸ்டான்ட் வைத்தவர்கள்...

இன்னும் எத்துனை எத்துனை பேர் நேரிடையாகவும் மறைமுகமாகவம் அந்த திரைப்படங்கள் வெளிவரும்போது ஜீவனம்...வாழ்வாதாரம் பெற்றார்கள் என்பது இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் ! .....!

இத்துனை கணக்கில் அடங்க பேர்கள் யாரால் வாழ்ந்தார்கள் ?

யாரால் ஜீவனம் பெற்றார்கள் ? யாரால் காசு சம்பாதித்தார்கள் ?

என்னமோ .....இவர்கள்தான் உண்மை விளம்பிகள் போல மற்றவர் கூறுவது பொய் போல ...ஏன் இந்த ஜோடனை ? இன்னும் எத்துனை காலங்கள் இது தொடரும்...!

நடிகர் திலகம் இல்லாத ஒரு திரை உலகு.....இருள் கொண்ட ஒரு பாழடைந்த மண்டபமாக தான் இருந்திருக்கும் !

சிவாஜியை வெறும் காழ்புணர்ச்சி, வயிதெரிச்சல் கொண்டு அவர் வளர்ச்சியை அவரது சாதனைகளை பார்த்து பொறாமைகொண்டு இப்படி தூஷணம் ஏன் ?

திரை உலகில் , நடிகர்கள் எப்படி நடிக்கவேண்டும் ..எப்படி தமிழ் ஏற்ற இறக்கத்துடன் பேசவேண்டும், எப்படி சொன்ன நேரத்தில் படத்தை முடித்து கொடுக்கவேண்டும், முக்கியமாக பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை எந்த விதத்திலும் சித்ரவதை செய்யாமல் எப்படி punctual ஆக படபிடிப்புக்கு வரவேண்டும் என்பதை அனைவருக்கும் கற்றுகொடுத்த ஆசான் நடிகர் திலகம் ! அது நினைவிருக்கட்டும் முதலில் !

ஏழேழு ஜென்மம் ....எத்துனை பிறவி எடுத்தாலும் nobody can ever think or even dream of achieving the status of nadigar thilagam in the entire world of cinema !!
They can perhaps try & maintain their fake tall claims like an air filled balloon only !

Subramaniam Ramajayam
8th July 2014, 11:07 AM
DEAR SIVA SIR YOUR LIST IS PERFECT. mY NAME IS subramaniam RAMAJAYAM not ramanujam as mentioned in the list. it is okay otherwise. from the age of 10 i was an ardent fan of NT.TODAY iam 65. by god's grace iam able to get along with three geneations of NT fans and associates.

eehaiupehazij
8th July 2014, 11:38 AM
dear abkhlabhi. Thanks for exhibiting the undisputed talent of NT in horse riding and his majestic walk and talk in his avtaar as Shivaji. This footage should be preserved to show to the future generations how the original Marathi Warrior Shivaji would have behaved, as depicted by NT with perfection.

KCSHEKAR
8th July 2014, 02:50 PM
செல்லுலாய்ட் சோழன் – 20
சுதாங்கன்
தன் முதல் படமான `பராசக்தி’ யில் பாடிய சி.எஸ். ஜெயராமன் படியதை சிவாஜி இன்னும் மறக்கவில்லை. அவரே தான் தனக்கு தொடர்ந்து பாட வேண்டும் என்று ஒவ்வொரு தயாரிப்பாளர்களிடமும் சிவாஜி சொல்லிக்கொண்டிருந்த சமயம் அது!

`தூக்குத் தூக்கி’ படத்தில் நாட்டுப்புறப் பாணி பாடல்கள் தான் அதிகம். `தெம்மாங்கு பாடுவதில் செளந்தரராஜனுக்கு ஈடு கிடையாது’ என்றார் இசையமைப்பாளர் ராமநாதன். எல்லாம் சரி இப்போது செளந்தரராஜன் குரலை சிவாஜி ஒத்துக்கொள்ள வேண்டுமே ? சரி! சிவாஜி தொடரில் ஏன் இத்தனை விஷயம் டி.எம்.எஸ்ஸீக்கு இன்று ஒரு கேள்வி எழலாம்! இதற்கு பிறகுதான் சிவாஜியின் இன்னொரு பரிமாணத்தை நாம் பார்க்கப்போகிறோம்! அதற்காகவே இந்த பீடிகையோடு கூடிய டி.எம்.எஸ். அறிமுகம் தேவை!

இந்தக் கேள்வியும் கூடவே செளந்தரராஜனின் தன்மான உணர்ச்சியும் குத்திக்கொண்டே இருந்தது. ! தயாரிப்பாளரிடம் சொன்னான், ` எட்டுப் பாட்டுல சிறப்பா இருக்கிற மூணு பாட்டை கொடுங்க ! அத மட்டும் முதல்ல பாடறேன். பதிவான பாடலை சிவாஜி கேட்கட்டும்! அவர் ஒத்துக்கிட்டா மத்தப் பாடல்களையும் பாடறேன். இல்லேன்னா நீங்கள் எனக்கு பணமே கொடுக்க வேண்டாம்!

படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ராதாகிருஷ்ணனின் ஒலிப்பதிவுக்கூடத்தில் முதல் பாடல் பதிவானது.
`சுந்தரி செளந்தரி நிரந்தரியே’ அடுத்த பாடல் ` பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே ‘ அப்புறம் ` ஏறாத மலை தனிலே ‘ முதல் பாடலை பி.லீலாவும், ஏ,பி. கோமளாவும், டி.எம்.எஸ்ஸுடன் பாடினார்கள்.பாடலை மருதகாசி எழுதியிருந்தார். பெண்களை நம்பாதே பாடலை உடுமலை நாராயண கவி எழுதியிருந்தார்.
மூன்றாவது முற்றிலுமான தெம்மாங்கு! திஸ்ர நடை, மூன்று கட்டை சுருதி! ஏறாத மலை தன்னிலே ஜோரான கவுதாரி ரெண்டு’ தஞ்சை ராமய்யதாஸ் பாடல்! `பாகவதர் மாதிரி சாரீரம். கள்ளத் தொண்ட கலக்காமல், வார்த்தைகள் திரண்டு நிக்குது. உணர்ச்சி வேகத்தில் எப்படி பாடுகிறார் ‘ வியந்து பாராட்டினார் தஞ்சை ராமய்யதாஸ்!
பாடல் பதிவானவும் சிவாஜி வீட்டுக்கு போன் பறந்தது. ! இரவு பகலாக படப்பிடிப்பில் இருந்த சிவாஜி தனக்காக பதிவான பாடலைக் கேட்க பறக்கிறார்! காரை விட்டு இறங்கிய சிவாஜியை அப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறார் செளந்தரராஜன். தான் பாடிய பாடலுக்கு இவர் எப்படியெல்லாம் நடிப்பார் ! செளந்தரராஜன் மனதில் கற்பனை ! மரியாதையுடன் ராமநாத அய்யரின் பக்கத்தில் நிற்கிறார் செளந்தரராஜன். `சுந்தரி செளந்தர் நிரந்தரியே ‘ நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்கிறர் சிவாஜி! `கண்டால் சொல்லும் விஷமாம்’ என்று அடுத்த பாடல் ஒலிக்கிறது அடுத்து `ஏறாத மலை மீது பாடல் ஒலிக்கிறது. சாய்ந்து உட்கார்ந்திர்ந்த சிவாஜி நிமிர்ந்து உட்காருகிறார்.
பாட்டுக்கள் முடிந்தது. நிமிர்ந்து உட்கார்ந்திருந்த சிவாஜி ஒரு புன்னகையுடன் எழந்து நிற்கவும் சரியாக இருந்தது.

சிவாஜி : ` இந்தப் பாட்டுக்களை யார் பாடியது ?’
ராமநாதன்: `இதோ இந்த மதுரைப் பையன். செளந்தரராஜன்னு பேரு ..’’ அறிமுகப்படுத்துகிறார்!
`வாங்கய்யா ‘ என்று செளந்தரராஜனை அருகில் அழைத்தார் சிவாஜி
`நல்லா பாடியிருக்கீங்க.. எல்லாப் பாட்டுக்களையும் நீங்களே பாடுங்க’ அன்பாக செளந்தரராஜனை முதுகில் தட்டிகொடுக்கிறார் சிவாஜி.

ஒரு நடிப்புக் கலைஞன் ஒரு பாட்டுக் கலைஞனுக்கு கொடுத்த முதல் பாராட்டு!
`தூக்குக் தூக்கி படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்! பட்டித் தொட்டியெங்கும் அதே பாடல்கள் தான் ` படம் வசூலை வாரிக் கொட்டியது.

1954ம் வருடம் வந்த படம் தூக்குத் தூக்கி. மற்ற எல்லாத் தயாரிப்பாளர்களையும் திகைப்பில் ஆழ்த்திய படம் தூக்குத் தூக்கி. ஒரு நாடோடிக் கதைக்கு மக்களிடம் இத்தனை வரவேற்பா என்கிற கேள்வி ஒரு புறம். இல்லை படத்தின் அத்தனை பாடல்களும் பிரமாதம்! அதுவே மக்களை கொட்டகைக்கு வரவழைத்துவிட்டது என்று சொல்பவர்கள் இன்னோரு புறம்.

இந்த வருடம் அதாவது 1954ம் வருடம் மட்டும் சிவாஜிக்கு மொத்தம் எட்டு படங்கள் வெளியானது.
தூக்குத்தூக்கி, இல்லறஜோதி, `அந்த நாள்’ `கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி’ `துளிவிஷம்’ `கூண்டுக்கிளி’ எதிர்பாராதது.

இதில் ஜனரஞ்சகமாக ஒடி வெற்றியை கண்ட படம் தூக்குத் தூக்கிதான். இந்த படத்தின் பாதிப்பினால் தனக்கு இப்படி ஒரு படம் வேண்டுமென்று எம்.ஜி.ஆர் இயக்குனர் ராமண்ணாவிடம் கேட்டு, இதே பாணியில் அவர் எடுத்த படம்தான் குலேபகாவலி அந்த அளவுக்கு இந்த படத்தின் பாதிப்பு இருந்தது. நவரசங்களையும் கலந்து ஜனரஞ்சகமான படத்தை தன்னால் தரமுடியும் என்பதை இந்த படத்தில் சிவாஜி நீருபித்தார். அரசகுமாரனான சிவாஜி இந்த படத்தில் பல மாறு வேடங்களைப் போட்டு பிரமாதமாக நடித்தார். குறிப்பாக ` குரங்கிலிருந்து பிற்ந்தவன் மனிதன் படத்திற்கு அவர் லலிதா, பத்மினியுடன் சிவாஜி நடனமாடும்போது, கொட்டகையே அதிருமாம், விசில் பறக்கும் !
இந்த படத்தில் ` அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு’ என்று ஒரு பாட்டை சிவாஜி , யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையிடம் பாடுவார். இந்த யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை யார் ? இவருடைய நாடக சபாவில் தான் சிவாஜி முதன் முதலாக சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார்.

இந்தப் படத்திற்குப் பிறகு தான் சிவாஜிக்கு பின்னனி இனி டி.எம்.எஸ்தான் என்பது உறுதியானது!
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் `தூக்குத் தூக்கி’ வெளியான அதே தினத்தில்தான் 26.81954 அன்று எம்.ஜி. ஆர் சிவாஜி முதல் முறையாகவும், கடைசியாகவும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படமும் வெளியானது.
இருபெரும் நடிகர் நடித்த ஒரே படம் என்கிற ஒரே ஒரு சிறப்புத்தான் இந்த படத்திற்கு உண்டு. சிவாஜி இந்த படத்தில் வில்லம் கதாபாத்திரம். படம் இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்களுக்கு திருபதியில்லை. படம் படு தோல்வி. இந்த படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்கியிருந்தார்.

அடுத்து வந்த படம் `துளிவிஷம்’ `நரசு காபி’ நிறுவனத்தின் அதிபரான வி.எ. நரசு தயாரித்த படம்தான் இந்த துளி விஷம். திரைக்கதை வசனம் எழதி படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ. சாமி. இந்தப் படத்தில் ஒரு திருப்பம். இதில் கதாநாயகன் கே.ஆர். ராமசாமி. சிவாஜி மீண்டும் இந்த படத்திலும் வில்லன்.

இந்த இடத்தில் சிவாஜியை பற்றி ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். தனக்கு நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்துத்தான் படத்தை ஒப்புக்கொள்வர். அது வில்லனா ? கதாநாயகனா அவருக்கு கவலை கிடையாது !
(தொடரும்)
விமர்சனங்களுக்கு: sudhangan@gmail.com

parthasarathy
8th July 2014, 04:59 PM
செல்லுலாய்ட் சோழன் – 20
சுதாங்கன்
ஒரு நடிப்புக் கலைஞன் ஒரு பாட்டுக் கலைஞனுக்கு கொடுத்த முதல் பாராட்டு!
`தூக்குக் தூக்கி படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்! பட்டித் தொட்டியெங்கும் அதே பாடல்கள் தான் ` படம் வசூலை வாரிக் கொட்டியது.

1954ம் வருடம் வந்த படம் தூக்குத் தூக்கி. மற்ற எல்லாத் தயாரிப்பாளர்களையும் திகைப்பில் ஆழ்த்திய படம் தூக்குத் தூக்கி. ஒரு நாடோடிக் கதைக்கு மக்களிடம் இத்தனை வரவேற்பா என்கிற கேள்வி ஒரு புறம். இல்லை படத்தின் அத்தனை பாடல்களும் பிரமாதம்! அதுவே மக்களை கொட்டகைக்கு வரவழைத்துவிட்டது என்று சொல்பவர்கள் இன்னோரு புறம்.

இந்த வருடம் அதாவது 1954ம் வருடம் மட்டும் சிவாஜிக்கு மொத்தம் எட்டு படங்கள் வெளியானது.
தூக்குத்தூக்கி, இல்லறஜோதி, `அந்த நாள்’ `கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி’ `துளிவிஷம்’ `கூண்டுக்கிளி’ எதிர்பாராதது.

இதில் ஜனரஞ்சகமாக ஒடி வெற்றியை கண்ட படம் தூக்குத் தூக்கிதான்.
(தொடரும்)
விமர்சனங்களுக்கு: sudhangan@gmail.com

Dear KCS Sir:

Excellent article. However, there are certain facts not represented fully/correctly. First, the biggest movie of NT after "Parasakthi", i.e., "Manohara" is not in the list of movies released in 1954. Though Manohara was the most reputed movie of 1954 till date, Thookku Thookki has the distinction of better movie in terms of box office and NT got the best actor (Pesum Padam - cinema rasigargal award, if am right) for Thookku Thookki.

1954 - I've earlier also indicated somewhere in the earlier threads about this year. Typically, this is the second year of NT's career - 1952's debut movie 'Parasakthi' got released at the fag end of 1952. See within a year, he was able to churn out 8 different movies out of which 4 are 100 day movies. Kalyanam Panniyum Bramhachari (KPB), Manohara, Edhirparadhadhu & Thookku Thookki (Murali Sir to confirm) of which Thookku Thookki and Manohara are blockbusters (2 tangentially different characters). Edhirparadhadhu, KBP along with "Andha Naal" (anti-hero that too national traitor) and others are also different characters.

The underlying fact is only one thing. The confidence combined with the guts and talent of NT was evident right from his first film and getting better even at his young age.

You can use your good offices to correct Mr. Sudhangan's article AS WE NEED TO EMPHATICALLY PROJECT OUR NT. No doubt, Mr. Sudhangan has been doing great service by this series. However, without hurting his ego, we have to fine tune.

Regards,

R. Parthasarathy

Russellbpw
8th July 2014, 06:04 PM
ஒருவருக்கொருவர் ஆறுதல் இப்படிதான் கூறிகொள்ளவேண்டும்.

நம் சாதனையால் அடுத்தவருக்கு வலி, வேதனை, ஏமாற்றம்...இதை தான் இனி வரும் காலங்களில் சொல்லி சமாளித்தாகவேண்டும்...என்ன செய்வது...ஆதாரத்துடன் ஒரு செய்தி வெளிவந்து அதற்க்கு முன் பரப்பப்பட்ட பொய் செய்தி, தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்போது..இப்படி பொதுபடையான வாக்கியங்கள் உபயோகிப்பது நல்ல ஒரு STRATEGY

இதை தான் நாம் முன்பே உரைத்தது போல....காலம் காலமாக தம்முடைய சிறுமையை அடுத்தவர் தலையில் கட்டி ...அடுத்தவர் பெருமைகளை தனதாகி அதை தமுடயது என்று பறை சாற்றும் கலை என்பது !
அடேயப்பா...! என்ன திறமை...என்ன திறமை..!

நடிகர் திலகம் செய்த புண்ணியம்...பெரிய மனது வைத்து ஏதோ 4 வருட இடைவெளியில் வந்த இரண்டு படங்களை ஒப்பிட்டார்கள் ...கொஞ்சம் விட்டால் இவர்கள் வசூல் ஒப்பீடு 1952இல் வெளிவந்த பராசக்தி ரிலீஸ் வசூலுடன் 1977இல் வந்த மற்றொரு படத்தின் வசூலை ஒப்பிட்டு...பராசக்தி வசூலை முறியடித்தது மேலும் இந்த படத்தின் வசூலை எந்த படமும் முறியடிக்கவில்லை என்று வழக்கம் போல எந்த ஆவணம்...ஆதாரம் இல்லாமல், கூறவில்லையே அதுவே ஒரு பெரும் ஆறுதல்...

பாவம் அரசியல் வெற்றி வேறு ...திரைப்பட சாதனை ..சாதித்தல் என்பது வேறு என்பதை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை....அரசியல் முழு வெற்றி...திரைபடத்துறயிலும் அப்படி இருக்கவே வாய்ப்பு என்று (ASSUMPTION) கருதிய, கருதும் மக்கள் அந்த கருத்து மாறி ..VICE VERSA வாக தான் இருந்திருக்கிறது அந்த காலத்தில் என்று ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது என்பதை தகவல் தொழில்நுட்பம் வளர தொடங்கிய காலத்தில் இருந்தே ஆவணங்களையும் ஆதாரங்களையும் பார்த்து படித்து எது உண்மை எது புருடா என்று உணர தொடங்கிவிட்டார்கள் என்பதை காலம் கனியும்போது உணர்ந்துகொள்வார்கள் !


வேறு வழி...? இப்படி ஒரு சமாளிப்பு செய்யாமல் போனால் ..மற்றவர்கள் கண்டுபிடித்து விடுவார்களே என்ன செய்வது....ஆகையால் என்ன ஆதார ஆவணம் யார் பதிவிட்டு அதற்க்கு முன் வந்த செய்தி பொய்...தவறு என்று நிரூபித்தாலும் ...

இவர்களுக்கு மட்டும்...."என்ன கைய புடிச்சு இழுத்தியா?" மற்றும்..." "ஒன்னு இந்தா இருக்கு...இன்னொன்னு எங்கே.....என்று கேட்கும்போது...."அதுதாண்ணே இது " என்ற கதைதான் !

நல்ல வேளை இணையதளத்தில் பொதுமக்களும் பெருவாரியாக பார்கிறார்களா பிழைத்ததா...இல்லையென்றால் அவ்வளவுதான் !

" திரை உலகில் சிவாஜி என்றொரு நடிகர் இல்லவே இல்லை ! " என்று கூறினாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை !


Rks...

Russellbpw
8th July 2014, 07:35 PM
http://www.youtube.com/watch?v=xp7bex4_cdk

அருமையான இந்த காவியம் !

இதில் நாம் சற்று கவனிதோமேயானால், நடிகர் திலகத்தின் திறமை, தரம் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தது என்பதை உணரலாம்.

பேசி கொண்டிருக்கும்போதே முகபாவ மாற்றம் முகத்தில் உள்ள நெற்றி புருவம் முதல் உதடு தாடை வரை கோர்த்த அபிநயம்.

மராத்த மன்னர் சிவாஜி போல உள்ள இறைவன் அருளால் வந்த அதே உருவ அங்க அமைப்பு...குதிரை ஓட்டும் லாவகம்..!

கேமரா எந்த கோணத்தில் வந்தால் எப்படி நிற்கவேண்டும்..ஓடிகொண்டிருக்கும் கமெராவுடன் எந்த கோணத்தில் நடக்கவேண்டும் என்ற துல்லியமான அந்த technical knowledge ...இன்னும் எவ்வளவோ இந்த ஒரு சில நிமிட video மூலம் நாம் உணர முடிகிறது ...! இத்தனைக்கும் இது வேறு மொழி திரைப்படம் !

வீம்பளப்பவர்கள் பலரும் இந்த ஒரு சில நிமிட video விற்கு பதில் சொல்ல முடியுமா ?

அதுதான் பிறவி கலைஞன் !

Gopal.s
8th July 2014, 08:34 PM
திருவிளையாடல்- 1965.

சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.

1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.

திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)

முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).

இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)

இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.

உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.

"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).

இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )

நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.

கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.

இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.

முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.


அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.

அடுத்த episode love teasing பிரச்சினை.

அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.

இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.

இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )

முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.

என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.

Gopal.s
8th July 2014, 08:39 PM
சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.

சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)

குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).

மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.

அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.

கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.

நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?

ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.


இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.

eehaiupehazij
8th July 2014, 08:42 PM
Nadigar Thilagam Sivaji Ganesan : A Never Before Never Again Neglected Phenomenon in Global Cinema!

Dr.S.Senthilvel

Cinema remains till today the powerful medium of entertainment encompassing breathtaking visuals, enchanting music and enterprising story telling alongside effervescent acting histrionics that keeps the viewer spellbound with psychological impulses in their minds. Ever since this medium came in vogue, started the domination of the heroes as their 'larger than life' portrayals penetrated into the hearts and minds of the viewers culminating into the so called 'hero worship' adoring them as demigods inseparable from all walks of life! The cross-current ingredients of cinema worldwide have been varying spatially and temporally but the unique hallucination of hero worship remains unaffected irrespective of the country or culture. In other words, a hero is construed as the backbone of success for a film even as other vital ingredients like the direction, background music, story content, supporting characters, audio-visual qualities, dialogues and dialogue deliveries, action scenes, dances,....what not, also exist alongside the hero's histrionics. The Global Cinema has witnessed an incessant array of actors over decades, who have enthralled the 'fans' to their delight.....Gregory Peck, Ronald Coleman, Marlon Brando, Charlton Heston, Cary Grant, Humphry Boghart, John Gielgud, Lawrence Olivier, Richard Burton, Errol Flynn, Fred Astaire,Gene Kelley ....Sean Connery, Clint Eastwood,Jack Nicholson, Stallone, Schwarzenegger, ..Robin Williams, Di Caprio... Raj Kapoor, .....M.G. Ramachandran, Gemini Ganesan,.....and above all the one and the only one 'never before never again' but 'neglected' global phenomenon ... Sivaji Ganesan... the Celluloid God of acting! ................( I purposely stop at this stage as I wish to convey some message to our fellow hubbers, whether I am bound to receive bouquet or brickbats)

The principal objective of this technical article is to analyse the traits of actor of actors Sivaji Ganesan as to why he should be given the 'better late than never' recognition for a 'life time achievement award' by the Globally acclaimed Oscar Award commitee!

dear RKS, I sincerely feel that as the hard core Sivaji fan I must do justice by way of initiating 'original' articles on NT's calibre and legacy as a stepping stone for aspirants to follow (with a hidden agenda of bringing into limelight the latent talents of our fellow hubbers to write more on glorifying NT with a simultaneous wish of converting these resource material into a thesis quality for getting M.Phil or Ph.D from appropriate Universities through our Hub)

I invite suggestions from our friends for further actions in taking our threads to meaningful activities and dignified higher levels rather than wasting our time and energy with 'school-children' type filthy quarrels on movie collection statistics (which may be beneficially utilized for such value added articles). I will be elated if authors can also join together for their contributions (both in Tamil and English) to be documented properly as 'degree' award winning articles or valuable resource materials for reference by research scholars on Sivaji Ganesan and his films! I think this will be truly a service to the society by a chartered union that sings the name and fame of NT in unison, rather than building castles in air!

eehaiupehazij
8th July 2014, 08:42 PM
dear RKS and Gopal Sir. I hope you can take a lead prompting other seasoned and wisdom filled writers on NT taking mypersonal views and suggestions in an optimistic angle! Let us not give way for a stalemate situation by responding to ignorable comments and neglectable criticisms from other threads which may have different objectives for their existence and survival.We have grown up to this dignified level 14....which warrants something different from us rather than exchanging paper arrows and verbal dynamites!

sivaa
8th July 2014, 09:13 PM
ஒருவருக்கொருவர் ஆறுதல் இப்படிதான் கூறிகொள்ளவேண்டும்.

நம் சாதனையால் அடுத்தவருக்கு வலி, வேதனை, ஏமாற்றம்...இதை தான் இனி வரும் காலங்களில் சொல்லி சமாளித்தாகவேண்டும்...என்ன செய்வது...ஆதாரத்துடன் ஒரு செய்தி வெளிவந்து அதற்க்கு முன் பரப்பப்பட்ட பொய் செய்தி, தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்போது..இப்படி பொதுபடையான வாக்கியங்கள் உபயோகிப்பது நல்ல ஒரு STRATEGY

இதை தான் நாம் முன்பே உரைத்தது போல....காலம் காலமாக தம்முடைய சிறுமையை அடுத்தவர் தலையில் கட்டி ...அடுத்தவர் பெருமைகளை தனதாகி அதை தமுடயது என்று பறை சாற்றும் கலை என்பது !
அடேயப்பா...! என்ன திறமை...என்ன திறமை..!

நடிகர் திலகம் செய்த புண்ணியம்...பெரிய மனது வைத்து ஏதோ 4 வருட இடைவெளியில் வந்த இரண்டு படங்களை ஒப்பிட்டார்கள் ...கொஞ்சம் விட்டால் இவர்கள் வசூல் ஒப்பீடு 1952இல் வெளிவந்த பராசக்தி ரிலீஸ் வசூலுடன் 1977இல் வந்த மற்றொரு படத்தின் வசூலை ஒப்பிட்டு...பராசக்தி வசூலை முறியடித்தது மேலும் இந்த படத்தின் வசூலை எந்த படமும் முறியடிக்கவில்லை என்று வழக்கம் போல எந்த ஆவணம்...ஆதாரம் இல்லாமல், கூறவில்லையே அதுவே ஒரு பெரும் ஆறுதல்...

பாவம் அரசியல் வெற்றி வேறு ...திரைப்பட சாதனை ..சாதித்தல் என்பது வேறு என்பதை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை....அரசியல் முழு வெற்றி...திரைபடத்துறயிலும் அப்படி இருக்கவே வாய்ப்பு என்று (ASSUMPTION) கருதிய, கருதும் மக்கள் அந்த கருத்து மாறி ..VICE VERSA வாக தான் இருந்திருக்கிறது அந்த காலத்தில் என்று ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது என்பதை தகவல் தொழில்நுட்பம் வளர தொடங்கிய காலத்தில் இருந்தே ஆவணங்களையும் ஆதாரங்களையும் பார்த்து படித்து எது உண்மை எது புருடா என்று உணர தொடங்கிவிட்டார்கள் என்பதை காலம் கனியும்போது உணர்ந்துகொள்வார்கள் !


வேறு வழி...? இப்படி ஒரு சமாளிப்பு செய்யாமல் போனால் ..மற்றவர்கள் கண்டுபிடித்து விடுவார்களே என்ன செய்வது....ஆகையால் என்ன ஆதார ஆவணம் யார் பதிவிட்டு அதற்க்கு முன் வந்த செய்தி பொய்...தவறு என்று நிரூபித்தாலும் ...

இவர்களுக்கு மட்டும்...."என்ன கைய புடிச்சு இழுத்தியா?" மற்றும்..." "ஒன்னு இந்தா இருக்கு...இன்னொன்னு எங்கே.....என்று கேட்கும்போது...."அதுதாண்ணே இது " என்ற கதைதான் !

நல்ல வேளை இணையதளத்தில் பொதுமக்களும் பெருவாரியாக பார்கிறார்களா பிழைத்ததா...இல்லையென்றால் அவ்வளவுதான் !

" திரை உலகில் சிவாஜி என்றொரு நடிகர் இல்லவே இல்லை ! " என்று கூறினாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை !


Rks...

திரு RKS
விட்டுவிடுவோம் பாவம் சுய இன்பம் அடைபவர்கள்

தங்களது அபிமான நடிகரின் படங்கள்தான் சாதனை
செய்யும் செய்தது வேறு எந்த நடிகர்களது படங்களும்
சாதனை செய்யாது செய்யவில்லை செய்யக்கூடாது
என்ற மனநோய் பிடித்தவர்கள்

என்னதான் ஆதாரம் காட்டினாலும் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது
ஏனெனில் மனநோய் ஏற்றுக்கொள்ளவிடாது

அங்கே ஒருவராவது உண்மைகளை தெரிந்துகொள்ள விருப்பமுள்ளவர்
இருக்கக்கூடும் அவருக்காகவும் நம்மவர்கள் தெரிந்துகொள்ளவும்
என்னைபொறுத்தவரை இலங்கைவிபரங்களில் மட்டும்
என்னிடம் உள்ள சரியான விபரங்களையே தருகிறேன்

இலங்கையில் எம் ஜீ ஆர் படங்கள் 100 நாட்கள் 200 நாட்கள்
ஓடவில்லை என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா?
பிழையான தகவல்களை சுட்டிக்காட்டியுள்ளேனே தவிர ஓடவில்லை
என்று எங்குமே சொல்லவில்லை

ஆனால் நான் எழுதுவதை
சரிபிழை பார்க்கக்கூட அவர்களது மனநோய் விடுவதாக இல்லை
உதாரணத்துக்கு சில விபரங்களை தருகிறேன்

(ஒரு உதாரணம் இங்கே ரிக்ஷாகாரன் படம்18 ..02..1972ஆம் ஆண்டு
திரையிடப்பட்டது
ரிக்ஷாகாரன் திரையிட்ட அதே அரங்குகளில் 12..04..1972..ஆண்டு
தங்கைக்காக திரையிடப்பட்டது அந்த காலப்பகுதியில்
திரை உலகம் பதத்pரிகையில் ஒருவர் ரிக்ஷாகாரன் 10வது வாரத்தையும் கடந்து
ஓடிக்கொண்டிருப்பதாக எழுதியிருந்தார் தங்கைக்காக திரையிடும்பொழுது ரிக்ஷாகாரன்
முழுமையான 8 வாரங்கள் ஆகவில்லை
அப்படியிருக்க எப்படி 10 வாரத்தை தாண்டி ஓடமுடியும்
அதற்கான பதிலடியை மின்மினி
பத்திரிகைக்கு எழுதி அனுப்பியிருந்தேன் அதில் எனது கடிதம் பிரசுரிக்கப்பட்டது
அது பழைய கதை அதை விடுவோம்
புது கதையை பாருங்கள்
ரிக்ஷாகாரன்..கெப்பிட்டல் 84 நாட்களாம..;வெலிங்டன்..79.. நாட்களாம்
ஒலிக்கிறது உரிமைகுரல் மே மாதம் 2013ல் பிரசுரித்துள்ளார்கள.;இப்படித்தான் வெற்றி
அல்லது சாதனை காட்டுகிறார்கள)

மேலே குறிப்பிட்டுள்ளது இலங்கை நண்பர்
டேவிட் பெயரில பிரசுரிக்கப்பட்டுள்ளது தந்த வசூலைதான் பிரசுரித்துள்ளார்கள்
ரிக்ஷாகாரன் ஓடிய நாளில் 20 நாட்களை அதிகரித்து காட்டியவர்
உ சு வாலிபன் வசூலில் எத்தனை லட்சங்களை அதிகரித்து
கள்ளக்கணக்கு காட்டியிருப்பார்
மனச்சாட்சி உள்ள எம் ஜீ ஆர் ரசிகர்கள் சிந்திப்பார்கள்

கொழும்பு வசூல்விபரங்கள் தியேட்டர் உரிமையாளர்கள்
வெளியிட்டால் தவிர பெரும்பாலும் வெளிவருவதில்லை
யாழ்நகர் வசூல்விபரங்கள் மட்டுமே அங்கே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது
கிடைக்கமுடியாத கொழும்பு வசூலை பிரசுரித்தவர்கள்
கிடைக்கககூடிய கிடைத்த யாழ்நகர் வசூலை ஏன் மரைறத்து வைத்திருக்கிறார்கள்?

ஒளிவிளக்கு ஓடிய நாள் விபரத்தில்
மட்டுநகர் சாந்தி என்பதற்குபதிலாக
தவறுதலாக யாழ்நகர் சாந்தி என பதிந்துள்ளார்கள்
1969ல் யாழ்நகரில் சாந்தி தியேட்டர் கிடையாது

இவற்றையெல்லம் சொன்னால் நாங்கள் எம் ஜீ ஆர் பட சாதனைகளை ஜீரணிக்கமுடியாமல்
கூக்குரல் இடுகிறோமாம்

இதற்கெல்லாம் பதில் சொல்லதேவையில்லலையாம்
நாங்கள் உள்ளதை சொல்கிறோம்
அவர்களிடத்தில் பதில் இல்லை
என்னே சமாளிப்பு வார்த்தைகள்
எங்கள் முலம் உண்மைகள் வெளிவருவதனால்
அவர்களுக்கு எங்கள்மேல் ஆத்திரம் விரோதம் ஏற்படுகிறது
அதனை சாமர்த்தியமாக எங்கள்மேல் பழிபோடுகிறார்கள்
ஏனெனில் தங்கள் தோல்விகளை எதிரிகளின் தோல்விகளாக
சுமத்தி பழக்கப்பட்டவர்களாயிற்றே

joe
8th July 2014, 09:39 PM
சிவாஜி கணேசன்
- R.P.ராஜநாயஹம்

திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை,
மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை,
’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை
’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!
பராசக்தி மூலம் புயலாக வீசி,
மனோகராவில்கொந்தளித்து ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!
’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக
ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல பேசிய அடுக்கு மொழி வசனங்கள்.
“காவிரி தந்த தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்து
சேர சோழ பாண்டி மன்னர், கோபுரத்துக் கலசத்தில் யார் கொடி தான் பறப்பதென்று இன்று போல் போர்
தொடுத்துக்கொண்டிருந்த காலமது!”
எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.
குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள் ” என்ற குமுறல்.
வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.
தமிழர்கள் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் எங்கள் சிவாஜி கணேசன்.
கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...
இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.
”அன்பாலே தேடிய ”என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.
சபாஷ் மீனா ”காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ”
”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.
கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!
”காதலிக்கிறேன் என்றாள். பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
இடி.. ..மின்னல்! இடி.. மின்னல்!
’ ராதா!ராதா!ராதா’என்ற கதறல்!
தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
’உன்னைச்சொல்லி குற்றமில்லை
என்னைச்சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி’
இன்றைக்கு அடிடா அவளை!ஒதடா அவளை!...
why this கொலவெறி..... என்று வந்த காட்சிகளுக்கெல்லாம் மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே!
ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்!
’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.
’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.
’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா
’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ என்ற வரிகளுக்கு முகத்தின் குளோஸ் அப் மூலம் அர்த்தம் சொன்ன கலை மேதை.
’நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா!
சட்டி சுட்டதடா கை விட்டதடா’
’நவராத்திரி’ நவரச நாயகன்.
’புதிய பறவை’ ஜென்டில்மேன்.
ஸ்டைலாக சிகரெட் குடிப்பதில் எவ்வளவு வகைபாடு காட்டலாம்?’சாந்தி’ படத்தில் -”யார் அந்த நிலவு!ஏனிந்த கனவு!”
சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??
’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள்!தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி!
ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’
’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’
உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 124 படங்களுக்குப்பிறகு புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது கணேசனின் சாதனை வீச்சு.
சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும் முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.
கிருஷ்ணன் பஞ்சு, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.சி.திருலோக்சந்தர் போன்ற இயக்குனர்களின் படைப்புகளில் விதவிதமான அவதாரங்கள் எடுத்த மகத்தான கலைஞன்!
1960களில் மேக்கப் இல்லாமல் வேட்டி சட்டை போட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.
ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.
இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாதஒரே ஹீரோ நடிகர்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்!
ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.
’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்
மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்
புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்...........’
’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.
அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில் ‘என்னடா ! உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்.
நேரில் சந்திக்கிற மனிதர்களை தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.
’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.
திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு காஞ்சி பரமாச்சாரியாள்
காவல் தெய்வம் பட கௌரவ வேடத்திற்கு மதுரை சென்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்
தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்
வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா
( டி.வி.எஸ்).
பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’
1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”
சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!

eehaiupehazij
8th July 2014, 10:17 PM
சிவாஜி கணேசன்
- R.P.ராஜநாயஹம்
தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்
வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா
( டி.வி.எஸ்).
பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’
1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”


Joe Sir. Thanks a lot for posting such a 'true to the type' write-up on NT's glory with a silky neurotic charm!

KCSHEKAR
9th July 2014, 10:30 AM
சிவாஜி கணேசன்
- R.P.ராஜநாயஹம்
உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!
திரு.ஜோ,
உணர்ச்சி மற்றும் உணர்வுப் பூர்வமான கவிதை. எழுதிய திரு.ராஜநாயகம் அவர்களுக்கும், பதிவிட்ட தங்களுக்கும் நன்றிகள்.

KCSHEKAR
9th July 2014, 11:33 AM
Dear KCS Sir:
Excellent article. However, there are certain facts not represented fully/correctly. You can use your good offices to correct Mr. Sudhangan's article AS WE NEED TO EMPHATICALLY PROJECT OUR NT. No doubt, Mr. Sudhangan has been doing great service by this series. However, without hurting his ego, we have to fine tune.
Regards, R. Parthasarathy
Dear Sarathy Sir,
I will forward your corrections/points to Mr.Sudhangan. However, you can also send your comments to Mr.Sudhangan to sudhangan@gmail.com.

Russelldwp
9th July 2014, 12:08 PM
Dear Mr.Ravi kiran Surya

My Heartiest wishes for Staring New Thread 14 of Great Supreme actor Sivaji Ganesan and thanks for your valuable postings

C. Ramachandran.

Russelldwp
9th July 2014, 12:17 PM
Good News and Confirmed News to All Sivaji Fans

Thalaivar's RAJA PART RANGA DURAI ALL OVER RIGHTS PURCHASED BY TIRUNELVELI PERSON FROM AVM LIMITED AND COMPLETE DIGITALIZATION WILL BE TAKEN CARE BY HIM AND HE WAS PLANNED TO RELEASE THE DIGITAL VERSION OF THE SAME IN OCTOBER-2014


This is Confirmed News we had from Trichy AVM office

parthasarathy
9th July 2014, 12:52 PM
Dear Sarathy Sir,
I will forward your corrections/points to Mr.Sudhangan. However, you can also send your comments to Mr.Sudhangan to sudhangan@gmail.com.

Thank you very much Sir. However, I feel such info should be forwarded by you only, as you may know him well. Besides, such authentic data based info should be taken up by none other than our Murali himself.

Regards,

R. Parthasarathy

ifohadroziza
9th July 2014, 07:12 PM
Congrats rks sir for making new thread 14 of our god of cinema nadigar thilagam.hope our thread members will actively participate and deliver lot of true datas about our nt films.

Georgeqlj
10th July 2014, 02:12 PM
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
14ம் பாகம் துவக்கி வைக்கும்
r
k
s
அவர்களுக்கு

Georgeqlj
10th July 2014, 02:55 PM
நன்றி
சிவா சார்
அவர்களுக்கு
என் பெயரையும்
குறிப்பிட்டதற்கு

Russellbpw
10th July 2014, 02:58 PM
ஹ்ம்ம்...

Nothing wrong in being superstitious at the accepted level .

Those who claim that they are not, have always worn yellow ....green .......& other multi-color towel around their shoulders.. Time and again only because of their superstition ...!

But they have always pretended in front of the world that they are not !!

2)
தவறு நம்முடையது தான் . ரசிகர் மன்ற நோட்டீஸ் ஒரு ஆதாரமாக எப்படி ஒத்துகொள்ளமுடியும் என்று கேட்டோம்.

பதிலுக்கு...சரி..நோட்டீஸ் ஆதாரம் அல்ல..ஒத்துகொள்கிறோம்...ரசிகர் மன்றம் / ரசிகர் நடத்திவரும் நாளிதழ் பற்றி கூறவில்லையே என்று அதை ஆதாரம் போல பதிவிட்டுள்ளனர்...! தங்கபதக்கம் ..அவன்தான் மனிதன் பற்றி இவர்களுடைய வயிதெரிச்சல்..பொறாமை...வெதும்பல்கள்...என்றுதா ன் தீருமோ இலங்கையிலும் இருந்தது கண்டு மகிழ்ச்சி ..!

...அதுசரி...பராசக்தி பற்றியே வெதும்பல்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை...அதற்குள் தங்கபதக்கம் அவன்தான் மனிதன் பற்றி வந்துவிட்டேன்.

இன்னொரு "என்ன கைய புடிச்சு இழுத்தியா ராகம் ! "

அவர்கள் அறிவுரை படி....அதில் உள்ள புரட்டுக்கு ஒரு நன்றி...!

பொதுமக்கள் இதை கவனிக்க தான் செய்கிறார்கள்..! இதெல்லாம் ஒரு ஆதாரம் ...ஆவணம்...சிரிப்பு தான் வருது ! இல்லை இல்லை..சிரிப்பு வருது என்றால்..உடனே ....அந்த பாட்டு பதிவிடுவார்கள் நாம் என்னவோ ஆணவத்தால் சிரிக்கிறோம் என்று ! ...!

நம்முடைய சிரிப்பு என்றுமே...

"சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே.."
"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே "
"சிலர் சிரிப்பார்..சிலர் அழுவார்...!
"மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன்.."

நம் தலைவர் பாடியதில்லை என்றாலும்...அவர் பட பாடல்

சிரிப்பு வருது..சிரிப்பு வருது..சிரிச்சு ..சிரிச்சு..சிரிப்பு வருது...
சின்ன மனுஷன்..பெரிய மனுஷன்..செயல பாத்து சிரிப்பு வருது....

மற்றும்

கலைவாணர் முதல் தேதியில் பாடிய...."சிரிப்பு..." பாடல்...!


சிறிது நேரம் இளைபாறியாயிற்று !

இன்றுமுதல் இந்த திரியின் - பாகம் 14 இதுவரை காணாத வேகத்துடன் பயணம் செய்ய தயாராக உள்ளது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/thiruvilayadal_in-the-know_zps4ef812e7.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/thiruvilayadal_in-the-know_zps4ef812e7.png.html)

பயணத்திற்கு தயாராகுங்கள் நண்பர்களே !

Russellbpw
10th July 2014, 03:18 PM
நடிகர் திலகம் திரி பாகம் 14 எதை பற்றி எழுதலாம் என்று சற்றே 13 பாகங்களையும் பார்த்தேன். எல்லா விஷயங்களையும் தொட்டுள்ளோம் அந்த 13 பாகத்தில்.

ஆகையால் இந்த பாகம் 14 நமது நடிகர் திலகம் அவர்களின் அனைத்து தகவல்களையும் பல கோணங்களில் இரத்தின சுருக்கமாக கொடுக்கலாமே என்றால் அந்த அரும்பணியை நம்முடைய ராகவேந்திரன் சார் செய்துகொண்டிருக்கிறார்.

அதை பார்த்தபொழுது சிந்தையில் ஒரு சிந்தனை. அதன் அடிப்படையில் இந்த பாகத்தில் நடிகர் திலகம் filmography ஒரு புதிய கோணத்தில் தொடங்கலாம் என்று முடிவேடுத்துளேன்.

இத்தனை நாட்கள் ஒடியாது இவளவு வசூல் செய்தது என்று திரும்ப திரும்ப எழுதி எதற்கு அரைத்த மாவை அரைப்பது ?

நம் பாத்திரம் என்ன ஒரே விஷயத்தை அரைக்கும் wet grinderஆ அல்லவே ...பல விஷயத்தை அரைக்கும் mixie அல்லவா !

Russellbpw
10th July 2014, 03:47 PM
காவிரி தந்த தமிழகத்து புதுமாணலில் களமமைத்த சேர சோழ பாண்டிமன்னர் கோபுரத்து கலசமதில் யார்கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்த காலமது !

தமிழகத்து திரைஉலகில் மற்றவர்போல் களமமைத்து தனது திறமையை காட்சிவைக்க என்றுதான் காலம் கைகூடுமோ என்று நடிகர் திலகம் ஏக்கமும் கைவிடாத முயற்சியும் செய்துகொண்டிருந்த காலமது...!

அன்றொருநாளில்......


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps5fff0d30.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps5fff0d30.jpg.html)

gkrishna
10th July 2014, 05:17 PM
dear rks sir

ஆரம்பமே அமர்க்களம்
ராஜ நடை தொடரட்டும்

Russellbpw
10th July 2014, 06:18 PM
1952உக்கு முன் :

தமிழ் திரை உலகம் அதுவரை பாடல்களை மையமாக கொண்டு கதை களம் அமைத்த திரைப்படங்கள் பல வந்தவண்ணம் இருந்தன...அதற்க்கு மத்தியில் சில சமயங்களில் சில சமூக படங்கள், மாயாஜால படம் என்று ஒன்றிரண்டு வந்துகொண்டும் இருந்தன...

பல நடிகர்கள் முக்கியமாக ஆந்திரா, கேரளா மாநில நடிகர்கள் தமிழ்நாட்டில் நன்றாக மகசூல் செய்து கொண்டிருந்த காலம். அந்த சமயத்தில் எந்த ஒரு புரட்சிகரமான திரைப்படங்களோ, புரட்சிகரமான கருத்தை சொல்லும் நடிகர்களோ தமிழக திரை உலகில் வலம் வரவில்லை.

இவை அனைத்தையும் விட முக்கியமாக, எந்த கதாபாதிரதிரமும் திறம்பட ஏற்று அதை நன்கு உணர்ந்து நடிக்க கூடிய நடிகர் என்பவர்கள் மிக மிக குறைவு அல்லது இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம்.

நல்ல திரைபடம் நிறைய வந்தாலும் மக்களை திரைப்படத்துடன் ஒன்றிவிடசெய்யும் காவியங்கள் வரவில்லை. அப்படி வந்தாலும் அதில் நடிப்பவர்கள் நடிப்பு மக்கள் மனதில் தொடவோ அல்லது ஒரு பாதிப்பை ஏற்படுத்தவோ இல்லை. ஆகையால் மக்களும் எதற்கோ ஏங்குவதை போலவே நிலைமை இருந்தது.

தயாரிப்பாளர்களும் அதை உணர்ந்தாலும் எதற்கு இந்த நிலை, என்ன எதிர்பார்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை.

புரட்சி என்றால் என்ன என்று தெரியாத திரை உலகம் அதை உணராத திரை உலகம் இப்படி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் ஒரு திரை புரட்சிக்காக காத்திருந்த நேரம் ...ஏங்கிகொண்டிருந்த நேரம் ...என்று கூறுவதே சரியாகும்..

தமிழ் திரைஉலகம் ஒரு spark என்று கூறுவார்களே அதற்காக ஏங்கிய தருணம் !


RKS

Russellbpw
10th July 2014, 06:22 PM
இது ஒருபுறம் இருக்க , நாடகங்களில் பல கதாபாத்திரங்களை சர்வ சாதாரணமாக நடித்து, போட்ட வேடம் அனைத்திற்கும் பல கரகோஷங்கள் பெற்று வந்த ஒரு இளம் வயது நடிகன் ...

அவர் தான் கலை கடவுள் கலைவாணியின் ஒரே தவப்புதல்வன் என்று என்றும் பல கோடி மக்கள் நம்பிகொண்டிருக்கும் நமது இப்போதைய நடிகர் திலகம் !

அப்போதைய v c கணேசன்.

நாடகங்களில் எந்த வேடமானாலும் அதை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து சக்கை போடு போடும் திறம் கொண்ட நடிகர் என்ற பெயர் மட்டும் இருந்தது.

தன்னுடன் இருந்த மற்ற நண்பர்கள் என்று கருதப்பட்ட சக நடிகர்கள் திரைப்படங்களில் அவ்வபோது தலைகாட்டிய வண்ணம் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட நடிகர் திலகத்தை விட 10 - 18 வயது மூத்த கலைஞர்கள். இருந்தாலும் தங்களுக்கு கதாநாயக வேடம் இல்லை என்றாலும் கிடைக்கும் வேடங்களில் நடித்து அந்த ஒரு சந்தற்பத்திர்க்காக காத்திருந்தார்கள் ஒரு சில நடிகர்கள்..

மற்றும் சிலரோ கதாநாயகன் வேடம் புனைந்தார்கள் என்றாலும் அவர்களால் தொடர்ந்து பரிமளிக்க முடியவில்லை, தொடர்ந்து படங்கள் கிடைக்கவும் வழியில்லை. தயாரிப்பாளர்கள் ஏனோ அவர்களை திரும்ப திரும்ப அணுகவில்லை. .ஆந்திரா நடிகர்கள் பக்கம் காற்று தொடர்ந்து வீசிகொண்டிருந்தது...!

தமிழ் நடிகர்கள் என்று கூறப்பட்டவர்கள், இந்த நிலை எவ்வளவு நாள் இனியும் தொடர்ந்துகொண்டு இருக்கும் என்று கவலைப்பட்ட நேரம் !

அப்படி இருக்கும்போது...அவர்கள் நிலையே நிரந்தரம் இல்லாதபோது அவர்கள் எப்படி நடிகர் திலகத்தையும் தங்களுடன் இணைக்க முடியும் ?

நிலைமை இப்படி இருக்க நாடகத்தின் மூலம் வரும் வருவாய் போதுமானதாக வருமா என்று ஒரு ஏக்கம் ஒருபுறம், வந்த வருமானத்தை வைத்து குடும்பத்தில் உள்ள (சுமார் 8 முதல் 10 பேர் தாய் தந்தையார் தவிர )அனைவரையும் காப்பாற்றி கரை ஏற்ற, தானும் கரை ஏற முடியுமா என்ற கவலை மற்றொருபுறம் ....

இப்படி ஒரு நிம்மதி இல்லாத நிலை இருந்தாலும் நாடகத்தில் நடிக்கும்போது தொழிலில் அப்படி ஒரு பக்தி. நேரம் தவறாமை, பேச்சில் கண்ணியம், செயலில் கண்ணியம், எந்த வேடமானாலும் திறம்பட நடித்தல் இப்படி அசாத்ய திறமை கொண்ட ஒரு நடிகர் ..இப்படி ஒரு கலைஞனை தமிழ் நாடக கலை மன்றம் அதுவரை கண்டதில்லை !



RKS

Russellbpw
10th July 2014, 06:32 PM
வரும் காலங்களில் இந்த நாடக நடிகர்தான் திரை உலகை அதுவும் தமிழ் திரை உலகை ஒரு சில வருடங்களிலே உலகளவில் கொண்டுசெல்லகூடியவர் பலரை வாழவைக்க போகிறவர், பலருக்கு வாழ்கை கொடுக்கபோகிறவர், படம் பார்க்கும் அனைவரையும் தனது அதீத நடிப்பு திறமையால் கட்டிபோட்டு ஆண்ட சராசரங்களையும் ஆச்சர்யபடுத்த போகிறார் என்று என்று யாராலும் கருத, எண்ண முடியவில்லை.

1948ஆம் ஆண்டு முடிவில் அப்போதைய பெரும் பட நிறுவனமாம் avm திரைப்பட நிறுவனம் மற்றும் தரமான படங்கள் தயாரிக்கும் நிறுவனமாம் perumal pictures நிறுவனமும் இனைந்து ஒரு திரைப்படம் தயாரித்தால் என்ன? என்ற எண்ணத்தில் பேச்சு வார்த்தை நடத்திகொண்டிருந்த நேரம் !

புதுமையான சமூக சீர்திருத்த கதை ஒன்று அனைவரின் கவனத்தையும் கவர அதையே திரைப்படமாக தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது !

அதற்க்கு முன்பு இது போல கதைகள் அதில் சிறந்த வசனங்களும் எழுதிய கருணாநிதி என்ற திராவிட கழகத்தில் பெரியார் பாசறையில் இருந்து சீர்திருத்த நாடங்களுக்கு வசனம் மற்றும் கதை எழுதுபவராக இருந்தார்.
நல்ல வசனம் எழுதினாலும் அதை மக்களிடத்தில் சரியாக உச்சரித்து அதன் உயிரை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டிய விதத்தில் கொண்டு செல்ல ஒரு நல்ல நடிகர் தேவை. அப்படி ஒரு நடிகர் திரை உலகம் அதுவரை கண்டதில்லை என்ன செய்வது.

ஆகவே அந்த வசனகர்தவிர்க்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்து அதுவரை கிடைக்கவே இல்லை ! அவரும் அந்த அந்தஸ்தை எதிர்பார்த்து காத்து இருந்த நேரம் !

Gopal.s
10th July 2014, 06:32 PM
நேற்று நண்பர்களிடம் தற்காலிக ஓய்வெடுத்து வெளியூர் வந்தேன்.இங்கு வந்தால் எனது supplier china விமானம் தாமதம். ஐந்து நட்சத்திர விடுதியில் எதிர்பாரா ஓய்வு. திடீரென்று ஒரு எண்ணம். நேற்று சோ சார் ரொம்ப கவலைக்கிடமாக மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டதாக கேட்டதிலிருந்து அவரை சுற்றியே சிந்தனை. அவருடைய ஒன்றரை பக்க நாளேடுகளை மிகவும் ரசித்தவன் என்ற விதத்தில்,அதை பின்பற்றி நம் திரி நண்பர்களை வைத்து ஒரு parody பண்ணினால்?இது ஒரு உயர் ரக நகை பாணி.யார் மனதையும் புண் படுத்த வாய்ப்பே இல்லை .

நம் திரியில் தொடர்ந்து வரும் நண்பர்களுக்கு ,பதிவாளர்களின் பாணி ஓரளவு பரிச்சயம் என்பதால் பெயர் சொல்லாமல் பதிவிட்டு ஊகத்துக்கு விடுகிறேன்.(தயவு செய்து சிரிக்க மட்டுமே)

kalnayak
10th July 2014, 06:37 PM
துவக்கமே வித்தியாசமாக இருக்கிறது rks. பாராட்டுக்கள்!!! தொடருங்கள்.

kalnayak
10th July 2014, 06:42 PM
கோபால். ரிஸ்க் எடுக்கிறது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி-ன்னு எங்களுக்கு நல்லா தெரியும்! நடத்துங்க... நடத்துங்க...

Gopal.s
10th July 2014, 06:57 PM
பதிவு எண் -1

அப்போதுதான்,ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்து ,வசதியான கல்லூரி கால ஜீன் ,டி.ஷர்ட் துறந்து,படவைக்கு மாறிய நேரம்(அம்மா சொல்படி).கொஞ்சம் சோகமாக இருந்தாலும் பழகியது.அப்போது ஹரிதாஸ் ரிலீஸ் ஆகி எம்.கே.டி.பாகவதர் சிறை சென்றிருந்த நேரம்.ஹரிதாஸ் படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு ,எனது சித்தப்பா,பெரியப்பா இருவருக்கும் இரண்டு பாஸ்கள் மட்டுமே வழங்க பட்டிருந்தது,.நான் இந்த படத்தை 20 முறைகளுக்கு மேல் பார்த்தவள் என்பதால்,பாஸை தியாகம் செய்யவே மனமில்லாத அவர்களிடம் போராடி நானும் ,என் சித்தப்பா பையன் மணியும் விழாவிற்கு கிளம்பினோம்.

அப்போது அண்ணா சாலை,மவுண்ட் ரோடு என்று அழைக்க பட்டது.இப்போது இருக்கும் l .i c கட்டிடம் அப்போது காலி மனை. அங்கேதான் பந்தல் போட்டு விழா.ஒரே தள்ளு முள்ளுதான்.என் சித்தப்பா மகன் சைக்கிளை நானே ஓட்டும் வசதிக்காக அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி ஜீனுக்கு மாறி,சுலபமாய் இரு கால்களையும் போட்டு சீட்டில் உட்கார்ந்து பின்னாடி மணியையும் உட்கார வைத்தேன்.

பந்தலுக்குள் கூட்டமான கூட்டம்.பீ.யு.சின்னப்பா,வசந்த கோகிலம்,டி.ஆர்.ராஜகுமாரி ஜி.ராமநாதன்,பாபநாசம் சிவன்(அடுத்ததடுத்து ஹிட் படங்களை தந்த ஜோடி அசோக் குமார்,சிவகவி,ஜகதல பிரதாபன்,ஹரிதாஸ் இப்படி),அந்த நாள் கவர்ச்சி புயல் தவமணி தேவி,எம்.எஸ்.பாக்கியம் என்று அதுவரை பிரமிப்போடு திரையில் கண்டு களித்த நட்சத்திரங்கள் நேரில் பார்க்கும் பொன்னான வாய்ப்பு.பாகவதரை நினைவு கூறும் விதமாக ஜெயில் வடிவிலேயே பிரம்மாண்ட மேடை.தம்பிக்கு ஏக பட்ட நண்பர்கள்.சமீபத்தில் வந்த வசந்த சேனா படத்தின் ரிசல்ட் திருப்தியளிக்கவில்லை என்று வருத்த பட்டனர்.நண்பர்கள் என்னை பற்றி விசாரிக்க,என் அக்கா ,இப்பதான் காலேஜ் முடிச்சா என்று அறிமுக படுத்தினான் மணி.

அப்போது ஒருவர் ஹெர்குலிஸ் சைக்கிளில் வந்து இறங்கினார்.(அவர்தான் பட இயக்குனர் என்று காதில் முணுமுணுத்தான் மணி).என்னையும் என் தம்பியையும் பார்த்து ,அட்லஸ் சைக்கிள் நல்ல வண்டிதான் என்று தட்டி கொடுத்து விட்டு மேடையேறினார். விழா தொடங்கி களை கட்டியது.

அடுத்த பதிவில் ,நான் பள்ளியில் படிக்கும் போது ,பாவாடை சட்டையுடன் ,என் அப்பா கைப்பிடித்து அழைத்து சென்ற கல்தூண் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டங்களை பற்றி எழுத இருக்கிறேன்.

Russellbpw
10th July 2014, 07:05 PM
நடிகர் திலகம் திரை உலகிற்கு நடிக்க வருவதற்கு முன்பு

திரு mk தியாகராஜா பாகவதர்,
திரு pu சின்னப்பா ,
திரு நாகேஸ்வர ராவ்,
திரு mk ராதா,
திரு நாகையா,
திரு ntr ,
திரு mr ராதா,
திரு திகுருசி சுகுமாரன் நாயர்,
திரு சத்தியன்,
திரு mg ராமசந்திரன்
திரு mn நம்பியார்,
திரு ரஞ்சன்,
திரு kr ராமசாமி ,
திரு tr மகாலிங்கம்,
திரு tr இராமச்சந்திரன்,
திரு. ஜகய்ய,
திரு ஸ்ரீராம் ,
திரு காளி n ரத்தினம் ,
திரு பாலையா
திரு mg சக்ரபாணி,
திரு ஜெமினி கணேசன்
திரு ராமசாமி,
திரு s பாலச்சந்தர் (வீணை)
திரு பந்துலு,

மற்றும் பலரும் தமிழ் திரைப்படங்களில் அப்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டும், கதாநாயகதன்மை கொண்ட கதாபத்திர வேடம் புனைந்துகொண்டும் கோலோசிகொண்டிருந்தார்கள்.

Gopal.s
10th July 2014, 07:08 PM
பதிவு எண் -2.

உலக சரித்திரத்திலேயே முதல் முறையாக

பிரம்மாண்டமாய் புதிய சகாப்தம் படைக்க,

இதுவரை அச்சிலே எழுத்து வடிவிலே மட்டுமே வந்த "சரோஜாதேவி"

பட வடிவில் (வண்ணம்),வித விதமான கோணங்களில்,போஸ்களில்....

கண்கள் பிதுங்க, இதயம் இனிக்க,

பொக்கிஷாதி பொக்கிஷம்.

இன்றே முன்பதிவு செய்யுங்கள்.

பிரதி ஒன்றின் விலை ரூபாய் 10,000.

பணத்தை இன்றே அனுப்பி விடவும்.

வெளிவரும் நாள்/தேதி/வருடம்-வெகு விரைவில் இந்த நூற்றாண்டு முடிவுக்குள்.

உலக விநியோக உரிமையாளர்- டி.டபுள்யு . (பெங்களூர்)

Gopal.s
10th July 2014, 07:13 PM
பதிவு எண் -3.

ஈந்த பாடம் எங்க ஆமா ஆப்பு கூட நேத்து காட்டில் பத்தேன் .சீவஜீ ஆந்த வாருஷாம் நலு முலு நீல படத்தில் அடித்திருந்தார் .

நல்ல தடிப்பு.கானிலூயெ தடிப்பு தரியும் .

முத்தத்தில் சுமங்கிலி ...முழ சூமங்காலி ஈல்ளை .

Gopal.s
10th July 2014, 07:25 PM
பதிவு எண் -4.

இஸ்கி புஸ்கியின் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது டுபாகூர் பாணி.(சிஷ்யன் என்றாலும்)இஸ்கி புஸ்கி every action should have reaction and verse versa என்றதற்கு மாறாக டுபாகூர் action is behaving என்றார்.

உதாரணம் (உங்களுக்கு புரிய)நீங்கள் ஒரு குடிகாரர் என்று வைத்து கொள்ளுங்கள்.குடித்து விட்டு இரவு வீடு செல்கிறீர்கள்.உங்கள் மனைவி "இன்னாய்யா ,நீயெல்லாம் ஒரு மனுசனா "என்று திட்டிய பிறகு உதைத்தால் reaction .தூங்கி கொண்டிருக்கும் மனைவியை அப்படியே காலால் உதைத்தால் behaving .

இப்போது என்னை தொடருங்கள்.

ஹரிதாஸ் படத்தில் மன்மத லீலையை வென்றாருண்டோ பாட்டில் ஒரு முத்தம் என்றதும் ராஜகுமாரி ,பாகவதர் கையில் முத்தம் கொடுப்பது இஸ்கி புஸ்கி பள்ளி என்றாலும்,பாகவதர் மரக்கட்டை போல உட்கார்ந்து பாடுவது டுபாகூர் பள்ளி சார்ந்ததே.

இயக்குனர் ,அந்த காலத்திலேயே ,எல்லா பள்ளிகளையும் சார்ந்த நடிப்பை ,நடிகர்களிடம் வெளிக்கொண்டு வந்தது,நட்கர்னியின் சாதனையில் ஓர் மகுடம்.

Russellbpw
10th July 2014, 07:35 PM
பதிவு எண் -4.

இஸ்கி புஸ்கியின் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது டுபாகூர் பாணி.(சிஷ்யன் என்றாலும்)இஸ்கி புஸ்கி every action should have reaction and verse versa என்றதற்கு மாறாக டுபாகூர் action is behaving என்றார்.

உதாரணம் (உங்களுக்கு புரிய)நீங்கள் ஒரு குடிகாரர் என்று வைத்து கொள்ளுங்கள்.குடித்து விட்டு இரவு வீடு செல்கிறீர்கள்.உங்கள் மனைவி "இன்னாய்யா ,நீயெல்லாம் ஒரு மனுசனா "என்று திட்டிய பிறகு உதைத்தால் reaction .தூங்கி கொண்டிருக்கும் மனைவியை அப்படியே காலால் உதைத்தால் behaving .

இப்போது என்னை தொடருங்கள்.

ஹரிதாஸ் படத்தில் மன்மத லீலையை வென்றாருண்டோ பாட்டில் ஒரு முத்தம் என்றதும் ராஜகுமாரி ,பாகவதர் கையில் முத்தம் கொடுப்பது இஸ்கி புஸ்கி பள்ளி என்றாலும்,பாகவதர் மரக்கட்டை போல உட்கார்ந்து பாடுவது டுபாகூர் பள்ளி சார்ந்ததே.

இயக்குனர் ,அந்த காலத்திலேயே ,எல்லா பள்ளிகளையும் சார்ந்த நடிப்பை ,நடிகர்களிடம் வெளிக்கொண்டு வந்தது,நட்கர்னியின் சாதனையில் ஓர் மகுடம்.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/hqdefault_zps57b71d0a.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/hqdefault_zps57b71d0a.jpg.html)

joe
10th July 2014, 07:53 PM
கோபால் ..கோபால் :rotfl:

Gopal.s
10th July 2014, 08:01 PM
பதிவு எண் -5.

அப்போது பாகவதருக்கும்,சின்னப்பாவிற்கும் போட்டி உச்சத்தில் இருந்த நேரம்.மகாலிங்கம்,ராமசந்திரன் போன்றோர் வளர்ந்து கொண்டிருந்தனர்.ஹொன்னப்ப பாகவதர்,கிட்டப்பா போன்றோர் கிட்டத்தட்ட ஓய்வு பெற்று விட்ட நிலையில்,போட்டி என்றால் முதலில் கூறிய இருவருக்குள்தான் ,நிறைய ரசிகர்களை கொண்டிருந்ததால் ,ரசிகர்களுக்கும் போட்டிதான்.(அதிலும் மதுரை மண் தனிதான்).பெரிய நகரங்களில் எல்லாம் இந்த ஜுரம் பரவியது. எங்கள் மதுரையில் கேட்கவே வேண்டாம்.

அப்போது நாங்கள் அல்லோல கல்லோல புரத்தில் குடியிருந்தோம். ஆண்டியடியில் என்னை விட எட்டு வயது மூத்த என் கசின்.

மேல கூசி தெருவில் இருந்து,நடு ஊசி தெரு பிரியும் சந்தில் இருந்த வெள்ளி திரையரங்கில் சின்னப்பா நடித்த தர்ம வீரன் படம் 23.2.41 இல் ரிலீஸ்.பாகவதரின் திருநீலகண்டர் 14.1.41இல் (13.8.40 இல் பூஜை போட்டது)ரிலீஸ் ஆவதாக இருந்து,வெற்றிலை பாக்கு கடை வைத்திருந்த முருகேஷ் என்ற சின்னப்பா ரசிகர் ,இந்த படம் வெளியாக இருந்த அலங்கோல் தியேட்டர் அத்தனை சேர்களையும் கொளுத்தி நாசம் செய்து விட்டதால்,அந்த படமும் ரிலீஸ் தள்ளி போய் ,23.2.41 அன்று கார்னெர் தியேட்டரில் ரிலீஸ்.

ஒரு சின்ன பிளாஷ்பாக் ஆக பார்த்துவிடலாம்.

அப்போதைய அரசியல் நிலவரத்தை கூர்ந்து கவனித்தவர்களுக்கு ,தெரிந்த விஷயம்,சுதந்திர போராட்டம் உச்ச நிலையில் இருந்த நேரம்.அப்போது ஆங்கிலேயரை ஆதரித்த ஜஸ்டிஸ் கட்சி சார்பாக k .முதலியாரும்,காங்கிரஸ் சார்பாக எஸ்.செட்டியாரும் தேர்தலில் போட்டியிட்டனர்.அப்போது சென்னை கன்னிமரா ஹோட்டல் அறையில் அவர்கள் தங்கியிருந்த போது , தற்செயலாய் அங்கு வந்த சின்னப்பா முதலியாருக்கு வணக்கம் சொல்ல,இன்னொரு தற்செயலாய் இன்னொரு இடத்தில் பாகவதர் செட்டியாரை தற்செயலாய் வணங்க ,வெவ்வேறு திசையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த செட்டியாரும்,முதலியாரும் ஒருவரையொருவர் பார்க்காமல் தற்செயலாக மோதி விட ,இந்த மோதல் சின்னப்பா-பாகவதர் ரசிகர்களை கொதிப்படைய செய்து ,இருவர் ரசிகர்களும் மோதி கொண்டதில் 2500 பேர் சம்பவ இடத்திலேயே மரிக்க (சின்னப்பா ரசிகர்கள் 602 பேர்,பாகவதர் ரசிகர்கள்-1898 பேர்),35008 பேருக்கு காயம். (சின்னப்பா ரசிகர்கள் முன்னணி)


இதை இத்தனை விளக்கமாக சொல்வதற்கு காரணம்,இந்த நேரத்தில் ,இந்த இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் பதட்டத்தை உண்டு பண்ணியிருந்தது.நாங்கள் உஷாராக எதற்கும் தயாராகவே இருந்தோம்.அப்போது ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள்,சனி ஞாயிறு 3 காட்சிகள்.(வாரம் 16 ஷோ,மாதம் 64 ஷோ).பின்னாளில் 27/4/1963 முதல் தினசரி 3 காட்சிகள் ,சனி ஞாயிறு 4 காட்சிகள் பழக்கத்திற்கு வந்தது.நிறைய இட்லி கடைகள் மூட பட்டு மதுரையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி விட்டதால்,1980 இல் தினசரி 4 காட்சிகள்,சனி ஞாயிறு 5 காட்சிகளாயிற்று.வெள்ளி தியேட்டரில் 861.5 இருக்கைகள்.(865 இல் 3 உடைந்தும்,ஒன்று பாதி உடைந்தும்).கார்னெர் தியேட்டரிலோ 675 இருக்கைகள். (அத்தனை சேரும் உடைந்திருக்கும்)அதனால் எல்லா வகுப்புகளும் நின்று கொண்டே பார்ப்போம்.

இந்த நிலையில்தான் ,அந்த செய்தி நம் ரசிகர்களை இடி போல தாக்கியது.

(தொடரும்)

Gopal.s
10th July 2014, 08:18 PM
பதிவு எண் -6

சின்னப்பா ஒரு சிறந்த internaliser என்பது என் அபிப்ராயம்.பாத்திரத்துக்குள் தன்னை நுழைத்து அதுவாகவே மாற பார்க்கும் சிறந்த கலைஞர் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.எதையும் கூர்ந்து கவனித்து ,ஆராய்ந்து அணுகும் திறன் ,அவர்க்கு கலைமகள் அளித்த வரமாகும்.

சில நாட்கள் முன்பு ,நமது நண்பர் கிருஷ்ணப்பா ஒரு காட்சியை தரவேற்றி இருந்தார்.அதில் சின்னப்பாவின் அந்த காட்சியை பார்த்தவர்கள்,அவர் நெற்றியில் குங்கும பொட்டை கவனித்தார்களா என்று தெரியாது.(இந்த படம் கன்னடத்தில் ஹூவு ஹோன்ன ஹேவு ,தெலுங்கில் மீறு செப்பின காவு படங்களின் re -make )அந்த காட்சியின் ஆரம்பத்தில் அவர் பொட்டு சிறிய அளவிலும்,காட்சி நடுவில் பெரிதாகவும் இருக்கும்.பெரிய பொட்டு 46 இல் வந்த பிரித்திவிராஜன் படத்தில் வைத்தது.இதன் படி பார்த்தால் 44 இல் வெளிவந்த இந்த படத்தின் காட்சியின் ஒரு பாதியை 41 இலும் ,மீதியை 46 இலும் ஷூட் பண்ணி இருக்க வேண்டும்.சிறிய பொட்டுடன் "ஆமாம் அம்மா" என்று பேசி,பெரிய பொட்டுடன் "இல்லை அம்மா"என்பார்.5 வருட இடைவெளியில் எடுக்க பட்ட இந்த காட்சியில் எப்படி ஒரு பரிபூரணதுவத்தை அந்த மேதை காட்ட முடிந்தது.

கேதுசெந்தன் அவர்களே,அந்த காட்சியை பதித்து ,எங்கள் நெஞ்சை நிறைய செய்யுங்கள்.

joe
10th July 2014, 08:20 PM
:rotfl: :rotfl:

joe
10th July 2014, 08:24 PM
ஓய் கோபால் ! இப்போது தான் தொடங்கப்பட்ட திரியில் இது தேவையா ? அடுத்த சண்டைக்கு தயாராகி விட்டீரோ !
ஆனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை ..செம .

Gopal.s
10th July 2014, 08:48 PM
பதிவு எண் -7

சின்னப்பா படங்கள் வருடத்திற்கு மூன்று. (நமக்குதான் அந்த ராசி.எதிர்முகாமை பாருங்கள் 2 வருடத்திற்கு ஒரு படம் )ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன. திரும்பதிரும்ப பார்ப்பதென்றாலும் எந்தப்படத்தைப் பார்ப்பதென்பதில் திணறல். சென்னையில் அப்போது இருந்ததோ 8 திரையரங்குகளே.அப்போது அண்ணா நகர்,கே.கே.நகர்,வேளச்சேரி,பெசன்ட் நகர் எல்லாம் கிடையாது.அபிராமி,உதயம் காம்ப்ளெக்ஸ் ,தேவி,சாந்தி இவையெல்லாம் கூட கிடையாது.சித்ரா,பிராட்வே ,அசோக் (இப்போது இடிக்க பட்டு விட்டது)இவை போல ஒரு சில திரையரங்குகளே.இப்போது போல கம்ப்யூட்டரில் ரிசர்வ் பண்ணும் வசதியெல்லாம் இல்லை.கியூவில் கால் கடுக்க நின்று டிக்கெட் வாங்க வேண்டும்.

பிரித்திவி ராஜன் பட ரிலீஸ் அன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்து ,வழியில் எதிர்பட்ட பிச்சை காரர்களிடம் எல்லாம் சில்லறை வாங்கி,நோட்டாக திருப்பி கொடுப்போம்.சில்லறை நிறைய சேர்ந்ததும் சித்ரா திரையரங்கை அடைந்தோம்.அப்போது சின்னப்பா முதல் காட்சியில் தோன்றும் போது சின்னப்பா வாழ்க வாழ்க என்று கத்தி சத்தமிட்டு எழுந்து நின்று சில்லறை வாரி இறைப்போம்.

இதனால் சின்னப்பா ரசிகர்களை போலிஸ் கைது செய்வது வழக்கமான நிகழ்வாகி போனது. இரண்டு முறை சின்னப்பா போலிஸ் ஸ்டேஷன் வந்து எங்களை பார்த்து ,வீணாக இறைக்கும் சில்லறையை தன்னிடம் நேரில் கொடுத்திருக்கலாமே என்று சொன்னது எங்களுக்கு பசுமையாக நினைவிருக்கிறது.


இந்த நேரத்தில்தான் ஒரு பிரச்சினை தோன்றியது.மாட்டினி ஷோ புல் .நாங்கள் பொடி நடையாக பிராட்வே சென்று ,அங்கும் டிக்கெட் கிடைக்காமல் ,அசோக் சென்றோம்.தியேட்டர் மேனேஜர் தெரிந்தவராகையால்,படம் ரிசல்ட் எப்படி என்று விசாரிக்க,சூப்பர் பா என்று கட்டை விரல் உயர்த்திய பாணியிலேயே,படம் சூப்பர் ஹிட் என்று முடிவானது.பிறகு மீண்டும் சித்ரா தியேட்டருக்கே வந்து மாலை காட்சிக்கு காத்திருந்தோம்.மாட்னி முடிந்து வெளியில் வந்த ரசிகர்கள் அனைவருமே படம் ரொம்ப ஜோர் என்று சொல்ல,ஒரு ரசிகர் எங்களிடம் வந்து முழு கதையையும் ஒவ்வொரு சீனாக விவரிக்க தொடங்கி விட்டார்.

மாலைக்காட்சிக்கு முன் துடைப்பத்துடன் பணியாளர்கள் சென்று குப்பை வாரிய பிறகு,நாதஸ்வரம் போட பட்டது.மாலை காட்சி ஆரம்பிப்பதற்கான அறிகுறி தெரிந்தது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் காட்சி .வரிசையாக சின்னப்பாவின் மூன்று பாடல்கள்.மேலே ஒன்றுமே போடாமல் வேட்டி மட்டுமே கட்டி ஜொலிப்பார்.சின்னப்பாவை நோக்கி சில்லறைகளை வீசினோம்.

சித்ராவில்தான் அந்த படம் அதிக நாட்கள் ஓடியது.

ஆஹா ..நினைக்கும் போதே இனிக்கும் தெவிட்டாத நாட்கள்...
யாரவது எங்களை அந்த நாட்களுக்கு திருப்பி அனுப்ப மாட்டார்களா?

இந்த படத்திற்கு சகோதரி .......... அவர்களின் ஆய்வு ஒன்றின் மீள் பதிவினை இத்துடன் பதிவு செய்கிறேன்.

Gopal.s
10th July 2014, 09:02 PM
பதிவு எண் -8

காலையில் தூக்கம் முழித்ததும் , பல் விளக்கி விட்டு டீ சாப்பிட ,எதிரே இருந்த கடைக்கு சென்றேன் .கடை ஒனர் தெரிந்தவர் என்பதால் ,டீ கிளாசை கழுவி ,டீயை போட்டு பாலை விட்டு , என்னிடம் கொடுத்தார். சார் ,எனக்கு ஒரு காவலுக்கு வாட்ச்மேன் வேண்டுமே என்றார். எந்த மாதிரி வாட்ச்மேன் என்று கேட்டதும், பெரிய மீசை வைத்திருக்க வேண்டும்.வீரமாய் நடக்க தெரிய வேண்டும்.அரச உடைகள் அணிந்திருக்க வேண்டும்.வாள் ஒன்று உரையில் தொங்க வேண்டும்.வானம் பொழிகிறது ,பூமி விளைகிறது என்று யாரவது திருடன் வந்தால் பேச வேண்டும் என்றார்.

அவர் கேட்பது வீர பாண்டிய கட்டபொம்மனையே என்று தெரிந்து கொண்டு ,அந்த வீரனை நினைவு கூர்ந்தேன்.

மீதி பகுதிகளாக பிரித்து பழசிலிருந்து cut paste .

eehaiupehazij
11th July 2014, 08:07 AM
dear RKS.

நடிகர் திலகத்தின் நினைவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. உலகப் பெருநடிகர்கள் என்று ஊடகங்களால் கொண்டாடப்படும் எந்தவொரு நடிகரையும்விட அளப்பரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரரான 'பாரத நாட்டின் ஒப்பாரும் மிக்காருமற்ற நடிப்பின் இமயம்' உலக திரைச் சாதனைக்கு அடையாளமாகப் போற்றப் படும் 'ஆஸ்கார் வாழ்நாள் சாதனையாளர்' விருதுக்கும் சொந்தக்காரராக இத்தருணத்தில் நம் மேன்மைத் திரி 14 வரை உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்களை முறைப்படுத்துவதன் வாயிலாகவும், உரிய ஊடகங்கள் வழியாக அவற்றை ஆஸ்கார் குழுவின் கொண்டு செல்லவும் முயற்சிகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். திரு KCS தமது பேரவை வாயிலாக திரையுலக ஜாம்பவான்களை ஒருங்கிணைத்து அவர்தம் கருத்துக்களையும் ஊடகங்கள் வாயிலாக உலக அளவில் கொண்டுசென்றிட உதவிட வேண்டும். நடிகர்திலகத்தின் புகழார்வலர்களாகிய நாமும் நமது பங்களிப்பை நல்கிட கருத்துக்களைப் பதிவிட்டு திரியின் மாண்பும் வேகமும் குன்றாமல் காத்திடவேண்டும் என்று கோருகிறேன்.

I am optimistic that with RKS, his dynamism and event management skills will help achieve this long pending 'dream comes true', as a fitting "once for all 'reply'" to comments and criticisms from other threads with vested interest on degrading NT's unshaken name and fame.

Gopal.s
11th July 2014, 08:22 AM
டாக்டர் செந்தில்,



முதலில் எல்லா பதிவுகளையும் ஒரே மாதிரி போட்டு விட்டு மார் தட்டுவதை நிறுத்தி, கொஞ்சமாவது உருப்படியாக பதிவு போடுங்கள்.அல்லது போட்ட பதிவுகளுக்கு என்ன எதிர்வினை கொடுத்தீர்கள்?(திருவிளையாடல் பதிவு வந்த உடனே ,அதை ஒரு insipid பதிவு கொண்டு மூடினீர்கள்). உங்கள் டாக்டர் ஆராய்ச்சியின் பலனை நாங்கள் அனுபவிக்கும் படி,ஒரு முழு ஆங்கில பதிவாவது போட்டு விட்டு,தலைமஎற்பது,ஒருங்கிணைப்பது,பட்டங்கள் வழங்குவது இவற்றை தொடருங்களேன்.

ஒரு முறை முழுக்க senior களின் பதிவையாவது படித்து ,புரிந்து கொள்ள முயலுங்கள்.

இது என் பணிவான விண்ணப்பம்.

Russellbpw
11th July 2014, 08:22 AM
Senthil Sir

முதலில் கோபால் சார் அவர்களுடைய ஹாஸ்ய பதிவுகள் நிறைவடையட்டும் சார் ..

பிறகு நாம் நடிகர் திலகத்தின் பதிவுகளை பதியலாம்...நமக்கு இதுவா முக்கியம் ? ஹாஸ்யம் தானே முக்கியம் ...இல்லையா ?

நடிகர் திலகத்தின் புகழ் எங்கே போய்விடபோகிறது ...எப்போது வேண்டுமானாலும் நாம் அதைப்பற்றி ஏதாவது கிறுக்கலாம்...


RKS

Gopal.s
11th July 2014, 08:28 AM
RKS/Senthil,

It is agreed that only two of you are upholding the fame of Great Nadigarthilagam. I appreciate it fully and proceed with your great antics. Dr.Senthil will present your work to Oscar committee.

Russellbpw
11th July 2014, 08:45 AM
RKS/Senthil,

It is agreed that only two of you are upholding the fame of Great Nadigarthilagam. I appreciate it fully and proceed with your great antics. Dr.Senthil will present your work to Oscar committee.


Dear Sir,

With due respect to your contribution...I had requested you to provide your contribution on the school of acting in a simpler fashion in this thread. All of us were expecting that as per your reply in this thread.

While the expectation is one....how do you expect all of us to digest and take this "parody" as a part of this threat part 14 eventhough everyone has got their own humor sense and would like to enjoy your calligraphic skills.

All of us are ardent admirers of NT and nobody would expect anything in return for our work...however superior or inferior our work may be. Do you expect your work on School of Acting to reach the committee ? No isn't it ? It is for your self satisfaction to contribute something of high standards comparing the work of NT internationally, you had spend / spending enough / considerable time in sculpting the greatness of the GOD of ACTING..!

Similar are others ! They do this to their best of their capacity !

Nobody expects anything in return ATLEAST don't anyone have the right to expect that the purpose of the thread doesn't get deviated? One (or) Two posts of deviation is always fine as everybody needs a change but not continuous posts that deviates the mindset and flow of thoughts !

Regards
RKS

Gopal.s
11th July 2014, 08:49 AM
RKS,

Agreed with you. It is only a comical relief,from the mundane feel. that's it. Otherwise,I am your fan and appreciate your aggressive approach. I only object 500 posts coming with the same content and pretending that they are the saviours of this thread and its dignity. Proceed normally,no problem.I will never be an intrusion.Let me park my conversation here.(Do not charge parking fees)

Russellbpw
11th July 2014, 08:52 AM
dear RKS.

நடிகர் திலகத்தின் நினைவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. உலகப் பெருநடிகர்கள் என்று ஊடகங்களால் கொண்டாடப்படும் எந்தவொரு நடிகரையும்விட அளப்பரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரரான 'பாரத நாட்டின் ஒப்பாரும் மிக்காருமற்ற நடிப்பின் இமயம்' உலக திரைச் சாதனைக்கு அடையாளமாகப் போற்றப் படும் 'ஆஸ்கார் வாழ்நாள் சாதனையாளர்' விருதுக்கும் சொந்தக்காரராக இத்தருணத்தில் நம் மேன்மைத் திரி 14 வரை உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்களை முறைப்படுத்துவதன் வாயிலாகவும், உரிய ஊடகங்கள் வழியாக அவற்றை ஆஸ்கார் குழுவின் கொண்டு செல்லவும் முயற்சிகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். திரு KCS தமது பேரவை வாயிலாக திரையுலக ஜாம்பவான்களை ஒருங்கிணைத்து அவர்தம் கருத்துக்களையும் ஊடகங்கள் வாயிலாக உலக அளவில் கொண்டுசென்றிட உதவிட வேண்டும். நடிகர்திலகத்தின் புகழார்வலர்களாகிய நாமும் நமது பங்களிப்பை நல்கிட கருத்துக்களைப் பதிவிட்டு திரியின் மாண்பும் வேகமும் குன்றாமல் காத்திடவேண்டும் என்று கோருகிறேன்.

I am optimistic that with RKS, his dynamism and event management skills will help achieve this long pending 'dream comes true', as a fitting "once for all 'reply'" to comments and criticisms from other threads with vested interest on degrading NT's unshaken name and fame.

Dear Sir,
Am not doing this for any appreciation even though I am extending my thanks for your appreciation.

Every individual is dynamic and has all the skills and whenever it is required, they have also demonstrated their skills here..and that department is not a domain ONLY of me.

Am doing my duty...and therefore, appreciations if deserved, can be mentioned like "Good article "

This is more than sufficient for all of us.

Regards
RKS

Russellbpw
11th July 2014, 09:08 AM
RECAP FOR CONTINUITY


காவிரி தந்த தமிழகத்து புதுமாணலில் களமமைத்த சேர சோழ பாண்டிமன்னர் கோபுரத்து கலசமதில் யார்கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்த காலமது !

தமிழகத்து திரைஉலகில் மற்றவர்போல் களமமைத்து தனது திறமையை காட்சிவைக்க என்றுதான் காலம் கைகூடுமோ என்று நடிகர் திலகம் ஏக்கமும் கைவிடாத முயற்சியும் செய்துகொண்டிருந்த காலமது...!

அன்றொருநாளில்......


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps5fff0d30.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps5fff0d30.jpg.html)

Russellbpw
11th July 2014, 09:11 AM
RECAP FOR CONTINUITY - 1952 க்கு முன் :

தமிழ் திரை உலகம் அதுவரை பாடல்களை மையமாக கொண்டு கதை களம் அமைத்த திரைப்படங்கள் பல வந்தவண்ணம் இருந்தன...அதற்க்கு மத்தியில் சில சமயங்களில் சில சமூக படங்கள், மாயாஜால படம் என்று ஒன்றிரண்டு வந்துகொண்டும் இருந்தன...

பல நடிகர்கள் முக்கியமாக ஆந்திரா, கேரளா மாநில நடிகர்கள் தமிழ்நாட்டில் நன்றாக மகசூல் செய்து கொண்டிருந்த காலம். அந்த சமயத்தில் எந்த ஒரு புரட்சிகரமான திரைப்படங்களோ, புரட்சிகரமான கருத்தை சொல்லும் நடிகர்களோ தமிழக திரை உலகில் வலம் வரவில்லை.

இவை அனைத்தையும் விட முக்கியமாக, எந்த கதாபாதிரதிரமும் திறம்பட ஏற்று அதை நன்கு உணர்ந்து நடிக்க கூடிய நடிகர் என்பவர்கள் மிக மிக குறைவு அல்லது இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம்.

நல்ல திரைபடம் நிறைய வந்தாலும் மக்களை திரைப்படத்துடன் ஒன்றிவிடசெய்யும் காவியங்கள் வரவில்லை. அப்படி வந்தாலும் அதில் நடிப்பவர்கள் நடிப்பு மக்கள் மனதில் தொடவோ அல்லது ஒரு பாதிப்பை ஏற்படுத்தவோ இல்லை. ஆகையால் மக்களும் எதற்கோ ஏங்குவதை போலவே நிலைமை இருந்தது.

தயாரிப்பாளர்களும் அதை உணர்ந்தாலும் எதற்கு இந்த நிலை, என்ன எதிர்பார்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை.

புரட்சி என்றால் என்ன என்று தெரியாத திரை உலகம் அதை உணராத திரை உலகம் இப்படி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் ஒரு திரை புரட்சிக்காக காத்திருந்த நேரம் ...ஏங்கிகொண்டிருந்த நேரம் ...என்று கூறுவதே சரியாகும்..

தமிழ் திரைஉலகம் ஒரு spark என்று கூறுவார்களே அதற்காக ஏங்கிய தருணம் !


RKS

Russellbpw
11th July 2014, 09:12 AM
RECAP FOR CONTINUITY

இது ஒருபுறம் இருக்க , நாடகங்களில் பல கதாபாத்திரங்களை சர்வ சாதாரணமாக நடித்து, போட்ட வேடம் அனைத்திற்கும் பல கரகோஷங்கள் பெற்று வந்த ஒரு இளம் வயது நடிகன் ...

அவர் தான் கலை கடவுள் கலைவாணியின் ஒரே தவப்புதல்வன் என்று என்றும் பல கோடி மக்கள் நம்பிகொண்டிருக்கும் நமது இப்போதைய நடிகர் திலகம் !

அப்போதைய v c கணேசன்.

நாடகங்களில் எந்த வேடமானாலும் அதை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து சக்கை போடு போடும் திறம் கொண்ட நடிகர் என்ற பெயர் மட்டும் இருந்தது.

தன்னுடன் இருந்த மற்ற நண்பர்கள் என்று கருதப்பட்ட சக நடிகர்கள் திரைப்படங்களில் அவ்வபோது தலைகாட்டிய வண்ணம் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட நடிகர் திலகத்தை விட 10 - 18 வயது மூத்த கலைஞர்கள். இருந்தாலும் தங்களுக்கு கதாநாயக வேடம் இல்லை என்றாலும் கிடைக்கும் வேடங்களில் நடித்து அந்த ஒரு சந்தற்பத்திர்க்காக காத்திருந்தார்கள் ஒரு சில நடிகர்கள்..

மற்றும் சிலரோ கதாநாயகன் வேடம் புனைந்தார்கள் என்றாலும் அவர்களால் தொடர்ந்து பரிமளிக்க முடியவில்லை, தொடர்ந்து படங்கள் கிடைக்கவும் வழியில்லை. தயாரிப்பாளர்கள் ஏனோ அவர்களை திரும்ப திரும்ப அணுகவில்லை. .ஆந்திரா நடிகர்கள் பக்கம் காற்று தொடர்ந்து வீசிகொண்டிருந்தது...!

தமிழ் நடிகர்கள் என்று கூறப்பட்டவர்கள், இந்த நிலை எவ்வளவு நாள் இனியும் தொடர்ந்துகொண்டு இருக்கும் என்று கவலைப்பட்ட நேரம் !

அப்படி இருக்கும்போது...அவர்கள் நிலையே நிரந்தரம் இல்லாதபோது அவர்கள் எப்படி நடிகர் திலகத்தையும் தங்களுடன் இணைக்க முடியும் ?

நிலைமை இப்படி இருக்க நாடகத்தின் மூலம் வரும் வருவாய் போதுமானதாக வருமா என்று ஒரு ஏக்கம் ஒருபுறம், வந்த வருமானத்தை வைத்து குடும்பத்தில் உள்ள (சுமார் 8 முதல் 10 பேர் தாய் தந்தையார் தவிர )அனைவரையும் காப்பாற்றி கரை ஏற்ற, தானும் கரை ஏற முடியுமா என்ற கவலை மற்றொருபுறம் ....

இப்படி ஒரு நிம்மதி இல்லாத நிலை இருந்தாலும் நாடகத்தில் நடிக்கும்போது தொழிலில் அப்படி ஒரு பக்தி. நேரம் தவறாமை, பேச்சில் கண்ணியம், செயலில் கண்ணியம், எந்த வேடமானாலும் திறம்பட நடித்தல் இப்படி அசாத்ய திறமை கொண்ட ஒரு நடிகர் ..இப்படி ஒரு கலைஞனை தமிழ் நாடக கலை மன்றம் அதுவரை கண்டதில்லை !


RKS

Russellbpw
11th July 2014, 09:15 AM
RECAP FOR CONTINUITY

வரும் காலங்களில் இந்த நாடக நடிகர்தான் திரை உலகை அதுவும் தமிழ் திரை உலகை ஒரு சில வருடங்களிலே உலகளவில் கொண்டுசெல்லகூடியவர் பலரை வாழவைக்க போகிறவர், பலருக்கு வாழ்கை கொடுக்கபோகிறவர், படம் பார்க்கும் அனைவரையும் தனது அதீத நடிப்பு திறமையால் கட்டிபோட்டு ஆண்ட சராசரங்களையும் ஆச்சர்யபடுத்த போகிறார் என்று என்று யாராலும் கருத, எண்ண முடியவில்லை.

1948ஆம் ஆண்டு முடிவில் அப்போதைய பெரும் பட நிறுவனமாம் avm திரைப்பட நிறுவனம் மற்றும் தரமான படங்கள் தயாரிக்கும் நிறுவனமாம் perumal pictures நிறுவனமும் இனைந்து ஒரு திரைப்படம் தயாரித்தால் என்ன? என்ற எண்ணத்தில் பேச்சு வார்த்தை நடத்திகொண்டிருந்த நேரம் !

புதுமையான சமூக சீர்திருத்த கதை ஒன்று அனைவரின் கவனத்தையும் கவர அதையே திரைப்படமாக தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது !

அதற்க்கு முன்பு இது போல கதைகள் அதில் சிறந்த வசனங்களும் எழுதிய கருணாநிதி என்ற திராவிட கழகத்தில் பெரியார் பாசறையில் இருந்து சீர்திருத்த நாடங்களுக்கு வசனம் மற்றும் கதை எழுதுபவராக இருந்தார்.
நல்ல வசனம் எழுதினாலும் அதை மக்களிடத்தில் சரியாக உச்சரித்து அதன் உயிரை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டிய விதத்தில் கொண்டு செல்ல ஒரு நல்ல நடிகர் தேவை. அப்படி ஒரு நடிகர் திரை உலகம் அதுவரை கண்டதில்லை என்ன செய்வது.

ஆகவே அந்த வசனகர்தவிர்க்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்து அதுவரை கிடைக்கவே இல்லை !

அவரும் அந்த அந்தஸ்தை எதிர்பார்த்து காத்து இருந்த நேரம் !

வசனங்கள் பல புனைந்திருந்தாலும் அதுவரை பல நடிகர்கள் அந்த வசனத்தை பேசி இருந்தாலும்...என்னமோ அந்த வசனங்கள் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டிய விதத்தில் சென்றடையவில்லை.

ஏதோ ஒரு குறை இருந்துகொண்டே இருந்தது...என்ன என்பது எவருக்குமே விளங்கவும் இல்லை !

Russellbpw
11th July 2014, 09:20 AM
RECAP FOR CONTINUITY

நடிகர் திலகம் திரை உலகிற்கு நடிக்க வருவதற்கு முன்பு

திரு mk தியாகராஜா பாகவதர்,
திரு pu சின்னப்பா ,
திரு நாகேஸ்வர ராவ்,
திரு mk ராதா,
திரு நாகையா,
திரு ntr ,
திரு mr ராதா,
திரு திகுருசி சுகுமாரன் நாயர்,
திரு சத்தியன்,
திரு mg ராமசந்திரன்
திரு mn நம்பியார்,
திரு ரஞ்சன்,
திரு kr ராமசாமி ,
திரு tr மகாலிங்கம்,
திரு tr இராமச்சந்திரன்,
திரு. ஜகய்ய,
திரு ஸ்ரீராம் ,
திரு காளி n ரத்தினம் ,
திரு பாலையா
திரு mg சக்ரபாணி,
திரு ஜெமினி கணேசன்
திரு ராமசாமி,
திரு s பாலச்சந்தர் (வீணை)
திரு பந்துலு,

மற்றும் பலரும் தமிழ் திரைப்படங்களில் அப்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டும், கதாநாயகதன்மை கொண்ட கதாபத்திர வேடம் புனைந்துகொண்டும் கோலோசிகொண்டிருந்தார்கள்.

eehaiupehazij
11th July 2014, 10:29 AM
டாக்டர் செந்தில்,



முதலில் எல்லா பதிவுகளையும் ஒரே மாதிரி போட்டு விட்டு மார் தட்டுவதை நிறுத்தி, கொஞ்சமாவது உருப்படியாக பதிவு போடுங்கள்.அல்லது போட்ட பதிவுகளுக்கு என்ன எதிர்வினை கொடுத்தீர்கள்?(திருவிளையாடல் பதிவு வந்த உடனே ,அதை ஒரு insipid பதிவு கொண்டு மூடினீர்கள்). உங்கள் டாக்டர் ஆராய்ச்சியின் பலனை நாங்கள் அனுபவிக்கும் படி,ஒரு முழு ஆங்கில பதிவாவது போட்டு விட்டு,தலைமஎற்பது,ஒருங்கிணைப்பது,பட்டங்கள் வழங்குவது இவற்றை தொடருங்களேன்.

ஒரு முறை முழுக்க senior களின் பதிவையாவது படித்து ,புரிந்து கொள்ள முயலுங்கள்.

இது என் பணிவான விண்ணப்பம்.

Dear Gopal Sir. I agree with you. First, I would like to clear this. This Thread is meant for glorifying our NT and I always remain grateful to all my 'seniors' of this thread including you for all your indelible postings and write-ups, without which this development upto thread 14 would not have happened. From my part, I post write-ups only in the interest of documenting all your valuable contributions not only for taking the glory of NT to a global level but also to try with means for getting the fruits for your excellent workmanship by way of some degrees from relevant institutions. I never tried to offend you, Gopal Sir. I also never tried to tomtom about my postings or write-ups but I wanted more and more youngsters to come in to show their latent talents, with an ultimate objective of projecting NT's achievements. I have gone through all the earlier write-ups almost in all threads and 'understanding' or 'trying to understand' what they have written...I hope I can, as you wish. Gopal Sir, still I feel that your valuable contributions should not go unnoticed and you should get your due recognitions and I maintain the same feel of respect on you and other seniors in these threads. I need not live upto anybody's expectations I do my service to NT in my way that need not necessarily be intersected. Your recent postings, though you say that they are intended to be hilarious parodies, they don't evoke any such thing in me rather than some pains for the way our fellow hubbers are discouraged from continuing their write-ups, particularly Ravi and Ragulram. Kindly try to maintain your cult status of respect and reverence (due to your earlier worthwhile postings) in our hearts and minds, Gopal Sir, by avoiding such parodies and satires on our own hub family members

Gopal.s
11th July 2014, 10:36 AM
Senthil,

Do you know that parodies and satires are the best compliments bestowed on individual talents rather than superstar titles and they are the best form of flattery? I could see the concerned individuals enjoy this parody as they know pretty well that I read and enjoyed their postings to do this pain-staking postings.(They are not easy ).If the sense of humour is dead ,we are only living corpses.

eehaiupehazij
11th July 2014, 10:43 AM
RKS,

Agreed with you. It is only a comical relief,from the mundane feel. that's it. Otherwise,I am your fan and appreciate your aggressive approach. I only object 500 posts coming with the same content and pretending that they are the saviours of this thread and its dignity. Proceed normally,no problem.I will never be an intrusion.Let me park my conversation here.(Do not charge parking fees)

Dear Gopal Sir. There is no such thing as a 'saviour of thread' or one needs to 'pretend' as a saviour, inasmuch as we are all here for the cause of NT. Also, your 'objection' on posts...ok..no comments sir. 2300 posts from a contributor....each differing from one another! Amazing!!! ....Having seen many comments and criticisms in my life, and feeling like a seasoned wood, I am neither shaken nor stirred by your comments or the phrases you use!!

Russellbpw
11th July 2014, 11:14 AM
RECAP FOR CONTINUITY

நடிகர் திலகம் திரை உலகிற்கு நடிக்க வருவதற்கு முன்பு மக்கள் மனதில் நன்கு பதிந்த நடிகர்கள்

திரு mk தியாகராஜா பாகவதர்,
திரு pu சின்னப்பா ,
திரு நாகேஸ்வர ராவ்,
திரு mk ராதா,
திரு நாகையா,
திரு ntr ,
திரு mr ராதா,
திரு திகுருசி சுகுமாரன் நாயர்,
திரு சத்தியன்,
திரு mg ராமசந்திரன்
திரு mn நம்பியார்,
திரு ரஞ்சன்,
திரு kr ராமசாமி ,
திரு tr மகாலிங்கம்,
திரு tr இராமச்சந்திரன்,
திரு. ஜகய்ய,
திரு ஸ்ரீராம் ,
திரு காளி n ரத்தினம் ,
திரு பாலையா
திரு mg சக்ரபாணி,
திரு ஜெமினி கணேசன்
திரு ராமசாமி,
திரு s பாலச்சந்தர் (வீணை)
திரு பந்துலு,

மற்றும் பலரும் தமிழ் திரைப்படங்களில் அப்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டும், கதாநாயகதன்மை கொண்ட கதாபத்திர வேடம் புனைந்துகொண்டும் கோலோசிகொண்டிருந்தார்கள்.

இத்துனை நடிகர்கள் ஏற்கனவே உள்ளனர். இவர்களையும் மீறி நடிகர் திலகம் சாதித்து விட முடியுமா ?

காத்திருப்போம் ..!

Russellbpw
11th July 2014, 11:15 AM
1949 இரெண்டாவது அரையாண்டு தொடங்கிய பின்னர் ...அப்போதைய திரைப்பட நிறுவனம் திரு avm அவர்களின் avm மற்றும் அவருடைய நண்பர் திரு பெருமாள் (பெருமாள் pictures ) அவர்களும் அந்த கதையில் நடிக்க யாரை அணுகலாம் என்ற பரிசீலனையில் இறங்கினர்.

திரு மெய்யப்பன் அவர்கள் திரு MK ராதா..திரு kr ராமசாமி மற்றும் ஒரு சிலர் பெயர் முன்மொழிந்து அதில் தனது தேர்வு திரு krr அவர்கள் என்பது போல முடிவெடுக்க..திரு பெருமாள் அவர்கள் அந்த கதாபாத்திரம் சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை பகுத்தறிவால் சாடும் பாத்திரம் என்பதால் அப்போதுள்ள நடிகர்களை விட ஒரு புதிய நடிகர் இதை செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அப்படி ஒருவர் தனக்கு தெரியும் என்றும் அந்த இளம் நடிகர் நாடகங்களில் பல கதாபாத்திரம் சர்வ சாதாரணமாக புனைந்து நல்ல பெயர் எடுத்து வருகிறார் என்றும் அவரே இதில் நடிப்பதற்கு தகுந்தவர் என்றும் கூற...திரு மெய்யப்பன் அவர்கள் அரை மனதுடன் சமதம் தெரிவிக்கிறார்.

நமது நடிகர் திலகம் அவர்களை தேர்வு செய்து திருச்சியில் இருந்து அவரை விமானம் மூலம் MAKEUP டெஸ்ட் எடுக்க வரவழைக்க படுகிறார். முதல் முதலில் அந்த காலத்தில் ஒரு புதுமுக நாடக நடிகர் திரைப்படத்தில் நடிக்க MAKEUP TEST எடுக்க விமானத்தில் வரவழைக்கபடுவது இதுவே முதல் முறையாகும்.

AVM நிறுவனமும் பெருமாள் Pictures தயாரிப்பில் புதிய திரைப்படத்திற்கு முதன் முதலில் விமானம் மூலம் ஒரு புதுமுகம் MAKE UP டெஸ்ட் செய்ய வரவழைக்கப்பட்டுள்ளார் என்பது காட்டு தீ போல பரவி ஒரு பெரும் நிகழ்ச்சியாக அப்போது திரை உலகில் பேசபடுகிறது !

அப்போதுள்ள மற்ற நடிகர்களுக்கும்...யார் அந்த புதுமுக நடிகர் என்ற கேள்வி எழுகிறது...!

இப்படி தொடங்கும்போதே, முதல் சாதனையின் முதல் நாயகனாக விமானத்தில் வந்திறங்குகிறார் விழுப்புரம் சின்னையா கணேசன் என்ற திரு"சிவாஜி" கணேசன் .

ஒருவழியாக படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் இதர கலைஞர்களை தேர்வு செய்தாகிவிட்டது.

இதற்க்கு முன்பு நடிகை திருமதி அஞ்சலி தேவி அவர்கள் தனது சொந்த படநிறுவனம் மூலம் ஒரு திரைப்படத்தை எடுக்க முடிவு செய்து நமது நடிகர் திலகம் அவர்கள் அந்த திரைபடதிர்க்காக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Russellbpw
11th July 2014, 12:11 PM
இரெண்டாவது திரைப்படம் அதுவும் மிக பெரிய ஜாம்பவான்கள் தயாரிப்பில் ....இந்த சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும்..என்னதான் திறமை இருந்தாலும் திரை உலகில் ஏற்கனவே உள்ள அவ்வளவு கதாநாயகர் மத்தியில் நிற்கமுடியுமா, நின்றாலும் நிலைக்க முடியும்மா இப்படி பல கேள்விகள்..!

சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற கேள்வி போய்...நிற்க முடியுமா ...நிலைக்கமுடியும்மா என்ற கேள்வி வருகிறது ..அடுத்த கட்டத்திற்கு போய் ஆயிற்று என்பதால் !

இப்படி ஒரு வழியாக அனைத்தும் முடிவு செய்த பின்னர் பராசக்தி என்று பெயரிட்டு திரைப்படம்" தொடங்கபடுகிறது என்ற செய்தி பத்திரிகையில் வெளிவருகிறது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/wrkingStill_zpsfa8eac74.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/wrkingStill_zpsfa8eac74.jpg.html)

"பராசக்தி" படபிடிப்பு தொடக்கம் -

மகிழ்ச்சி நிலைக்குமா ?

சற்றே பொறுப்போம் !

joe
11th July 2014, 02:49 PM
45. ''யாரை மறக்க முடியவில்லை?''
''சிவாஜியை. அவரை எரித்த தளத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில்தான் நான் குடியிருக் கிறேன். பழைய படங்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர் நினைவு வந்து வாட்டுகிறது!''

--வைரமுத்து ஆனந்தவிகடனில்

joe
11th July 2014, 02:52 PM
''நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நெருக்கமாக இருந்தவர் நீங்கள். கடைசிக் காலத்தில் அவருடைய மனநிலை என்னவாக இருந்தது?''
''சினிமாவில் என் ஆதர்ஷக் காதலன், குரு எல்லாமே சிவாஜிதான். ஏழு வயசுல படம் பார்க்க ஆரம்பிச்சு, 14 வயசு வரை நான் பார்த்த மொத்தப் படங்கள் 14-தான். அதில் பாதிக்கும் மேலே 'பராசக்தி’, 'மனோகரா’, 'வணங்காமுடி’ 'உத்தமபுத்திரன்’னு சிவாஜி நடிச்ச படங்கள்தான். 'பராசக்தி’யைப் பார்த்த அடுத்த சில நாட்கள்லயே 'நீதிமன்றக் காட்சி’ வசனங்களை மனப்பாடம் பண்ணிட்டேன். அப்போல்லாம், நான் சாகுறதுக்குள்ள சிவாஜியை ஒரு தடவை சந்திச்சா போதும்கிறதுதான் என் லட்சியம். அது மெட்ராஸ் வந்ததும் நிறைவேறுச்சு. 'உத்தமபுத்திரன்’ பட கேரக்டரை வரைஞ்சு எடுத்துட்டுப் போய் சிவாஜியைப் பார்த்தேன். அப்புறம் சில வருஷங்கள்ல அந்த மகா கலைஞனோடு 'மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவர்கூட சேர்ந்து 16 படங்கள் நடிச்சேன். அவர் உச்சத்துல இருந்த காலம் முழுக்க அவர்கூடவே பயணிச்சேன்.
பிறகு அவர் பையன் பிரபு நடிக்க வந்துட்டார். தேக்கடியில் 'உறுதிமொழி’ பட ஷூட்டிங். பிரபு ஹீரோ; நானும் அதுல நடிக்கிறேன். அப்ப சிவாஜி அங்கே வந்திருந்தார். என் தோள்ல கைபோட்டு பேசிட்டே வந்தவர் திடீர்னு, 'சிவாஜி கணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேன்டா’னு சொல்லிட்டு அழ ஆரம்பிச்சுட்டார். எனக்கும் அழுகை வந்திடுச்சு. 'அண்ணே... என் தாய் மேல சத்தியம், நான் போடுற வேஷம் மேல சத்தியமா சொல்றேன், நீங்க சாப்பிட்டுப் போட்ட மிச்ச சோத்தைத்தான் நாங்க தின்னுட்டு இருக்கோம். இங்கே எந்தக் கொம்பன் நீங்க பேசின தமிழ் பேசி நடிக்க முடியும்?’ அப்படின்னு பேசி சமாதானப்படுத்தினேன்.

3405



அப்புறம் சிங்கப்பூருக்கு, ஒரு நிகழ்ச்சிக்குப் போனவருக்கு அங்கே ரொம்ப சீரியஸ் ஆகிருச்சுனு சொன்னாங்க. 'திரும்ப இந்தியா வர்றது கஷ்டம்... அந்தளவுக்கு நிலைமை மோசமா இருக்கு’னு சொல்லிப் பதறவெச்சாங்க. ஆனா, 10 நாள் கழிச்சு ஃப்ரெஷ்ஷா திரும்பி வந்தார். வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன். தரைல உக்காந்த என் தோள்ல கையைப்போட்டு தலையைத் தடவிக்கிட்டே மெதுவாப் பேசுறார்... 'நாமல்லாம் ஒன்ஸ்-அப்பான் எ டைம் ஆக்டர்’டா. உலகம் நம்மளை மறந்துடுச்சு. சிங்கப்பூர்ல 'ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ளே... அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே’னு பட்டுக்கோட்டையார் பாட்டு போட்டானுங்க. இன்னொரு பக்கம், 'கட்டபொம்மன் - ஜாக்சன் துரை’ காட்சிகளைப் போட்டு என்னைக் கொண்டாடிட்டானுங்க. வாட் எ ஃபைன் மொமென்ட்?! உங்க அண்ணன் ஏன்டா அங்கே சாகலை. ஒரு கலைஞனுக்கு அதைவிட சந்தோஷமான ஒரு தருணம் கிடைக்குமா? திரும்பி வந்துட்டேன்டா. எப்படிச் சாகப்போறேன்னு தெரியலை’னு கலங்கிப்போய் பேசிட்டு இருந்தார்.
இப்பவும் திடீர் திடீர்னு அவர் ஞாபகம் வந்துடும். 'சிவாஜியை இனிமேல் பார்க்க முடியாதுல்ல. உண்மையில் அந்த மனுஷனை இனி பார்க்கவே முடியாதுல்ல’ அப்படினு தோணினா, தனியா உக்காந்து அரை மணி நேரம் அழுவேன். இன்னிக்கு அவரு நம்மகூட இல்லைன்னாலும் 'கட்டபொம்மன்’, 'கப்பலோட்டிய தமிழன்’, 'திருவிளையாடல்’, 'தில்லானா மோகனாம்பாள்’னு படங்கள் வழியா என்னைக்கும் நம்மகூட வாழ்ந்துட்டுத்தானே இருக்கார்!''

-விகடன்

eehaiupehazij
11th July 2014, 03:29 PM
dear Joe Sir. I am just reminded of the movie "Uyarndha Manithan" in which Sivakumar co-starred with NT. In all the scenes and frames he shared with NT one can observe the fear in his eyes as a novice of acting. However, of all who have enacted the role of a screen 'son' to NT, Sivakumar stands out for his performance in UM as "SIVAji KUMARar" as some prominent magazines described in their reviews at that time. A song sequence for Sivakumar in TMS voice and extended portions to encourage his acting skills.....so also with Mr. Asokan's role as the doctor, allowed to steal the show in his death scene! The kind of generosity and gesture shown by NT for his co-stars remains his watermark in making genuine cinema without an egoist heroism to have all the limelight self centered!

Joe Sir, Kindly bear with me. Have you reached your complacense with these more than 8000 postings/imprints in these prestigious NT threads? Happy to see your postings after a long time, I suppose.

Russellawz
11th July 2014, 05:38 PM
ரவிகிரண்

வாழ்த்துக்கள்.

கடுமையான வேலை நிமித்தம் திரியில் கலக்க இயலவில்லை.

ரவி

திரியை விறுவிறுப்பாக கொண்டு செல்வது ஆரம்பித்த உங்கள் பொறுப்பு.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Ramadoss,

This is unacceptable behaviour. No individual in this hub has got the right to attack another individual. If you don't find somebody's post interesting, then you can very well skip it. Or you can send a PM but in a public forum, you need to maintain a certain dignity. This is the second time you are doing this. Please avoid such posts in future.

Regards

Murali

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

KCSHEKAR
11th July 2014, 05:47 PM
Thank you very much Sir. However, I feel such info should be forwarded by you only, as you may know him well. Besides, such authentic data based info should be taken up by none other than our Murali himself.
Regards,R. Parthasarathy
Dear Sarathy Sir,
Mr.Sudhangan's reply about your comments:
அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? நான் வருட ரீதியாக சிவாஜியை எழுதவில்லை! மனோகராவை மறந்துவிட்டு நான் சிவாஜியை பற்றி எழுத முடியுமா என்ன ?

Russellbpw
11th July 2014, 06:19 PM
தமிழ் திரை உலகில் எவரும் "பராசக்தி" வெளிவரும்வரை பல விஷயங்களை கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் ..அவை யாதெனில்...

1) இந்த நடிகர் இத்துனை நடிகர்கள் மத்தியில் வளருவார் என்று.

2) அவரது வளர்ச்சி தடுக்கமுடியாத, அடைக்கமுடியாத, கட்டுகடங்காத காட்டாற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் என்று !

3) குறைந்த வருடங்களில் நிறைந்த திரைப்படங்கள் நடித்து திரை உலகில் உள்ள 90 சதவிகித தயாரிப்பாளர்கள் ஏக மனதாக மற்ற மொழி நடிகர்களை ஓரம்கட்டி மண்ணின் மைந்தன் சிவாஜியை வைத்து திரைப்படம் எடுக்கவே முடிவெடுப்பார்கள் என்று.

4) இந்த நடிகர்தான் திரை உலகிலயே வரும் காலங்களில் எந்த நடிகரை காட்டிலும், எவ்வளவு கடுமையான போட்டிகளுக்கு இடையிலும் சர்வ சாதாரணமாக

a) அதிக 50 நாட்கள் படங்கள்
b) அதிக 75 நாட்கள் படங்கள்
c) அதிக 100 நாட்கள் படங்கள்,
d) அதிக 125 நாட்கள் படங்கள்,
e) அதிக 150 நாட்கள் படங்கள்,
f) அதிக 175 நாட்கள் படங்கள்,
g) ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளிவந்து இரெண்டுமே 100 நாட்கள் ஓடும் படங்கள்,
h) வெளிநாடுகளில் அதிக விருதுகள்,
i) அண்டை நாடான இலங்கையில், மற்ற நாடுகளில் அதிக 100 மற்றும் 175 நாட்கள் படங்கள், 200 நாட்கள் படங்கள்,
250 நாட்கள் வெற்றிப்படங்கள், வசூல் படங்கள்

இப்படி பல முதல் சாதனைகளுக்கு சொந்தக்காரராக இவர் மட்டுமே என்றும் இருப்பார் என்று எவருமே நினைத்து பார்க்காத தருணம் !

Russellbpw
11th July 2014, 06:34 PM
5) இந்திய மட்டும் அல்ல..ஆசியா ஆப்ரிக்க ஐரோப்பா அமெரிக்க ஆகிய நான்கு கண்டங்களை கொண்ட உலகத்தில் அனைத்திலும் விருதுகளும் பட்டங்களும் பாராட்டுக்களும் எந்த நடிகரும் பெறாத அளவுக்கு இவர் பெறுவார் என்று எவருமே கனவில் கூட நினைத்து பார்க்காத தருணம் !

6) உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவின் இரண்டு மாகாணங்களின் ஒரு நாள் கௌரவ மேயர் பதவி கெளரவம் கொடுக்கப்பட்ட ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையை பெறுவார் என்றோ...எள்ளளவும் எவரும் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை !

7) தமிழகத்திலும் இவ்வளவு ஏன்..இந்தியாவிலும் இத்துனை நடிகர்கள் இருக்க, அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு ....அமெரிக்க அதிபராம் JOHN F KENNEDY அவர்களே நேரிடையாக திரு சிவாஜி கணேசன் அவர்களை இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக பாரத பிரதமர் ஆசியாவின் ஜோதி என்று அழைக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு இணையாக அழைக்கப்படுவார் என்று எவருமே நினைத்து பார்க்காத தருணம் !

8) அதுமட்டுமா ? இவர் நடிக்க வந்த
a) 3 வருடங்களில் 25 படங்கள்,
b) 6 வருடங்களில் 50 படங்கள்,
c) 9 வருடங்களில் 75 படங்கள்,
d) 12 வருடங்களில் 100 படங்கள்,
e) 15 வருடங்களில் 125 படங்கள்,
f) 18 வருடங்களில் 150 படங்கள்,
g) 22 வருடங்களில் 175 படங்கள்,
h) 25 வருடத்தில் 200க்கு மேற்பட்ட படங்கள் (அதாவது 1952 முதல் 1979 முடிய )

இப்படி ...இவர் நடிக்க வருவதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே திரை உலகில் வலம் வர தொடங்கிய நடிகர்கள் கூட சிவாஜி அவர்கள் தொட்ட எல்லையில் பாதிகூட திரைத்துறையில் தொடமுடியாமல் திணறுவார்கள் என்று யாரும் அப்போது நினைத்து பார்க்க கூட முடியாத தருணம் !

ஒரே போல கதையம்சம் உள்ள படங்கள் அல்லாமல் பலவிதமான கதையம்சங்கள், கதாபாத்திரங்கள், சமூக, இதிகாச, வரலாறு, விஞ்ஞான, மெய்ஞான திரைக்காவியங்கள் இந்த ஒரு நடிகரே அத்துணை பாத்திரங்கள் ஏற்று தமிழ் திரை உலகில் "புரட்சி " என்ற வார்த்தையை முதன் முதலில் புரளவிட்டு, திரை உலக வரலாற்றில் புழக்கத்தில் நடைமுறைபடுத்துவார் கணேசன் என்ற இந்த இளம் நடிகர் என்று எவரும் எதிர்பார்க்காத தருணம்...!

இந்த தருணத்தில்தான் இவருடைய பராசக்தி படத்தில் இவருடைய நடை, உடை, பாவனை, நடிப்பு, வசனம் பேசும் யுக்தி, மற்றும் பல திறைமைகள் ஒரே சேர பளிச்சிட ...அதுவரை இவை அனைத்தையும் மருந்துக்கு கூட காணாத அதே சமயம் காழ்புணர்ச்சி மட்டுமே கொண்ட, எதிலும் குற்றம் மட்டுமே கண்டு மற்றவர்களை உருப்பட விடாமல் தடுக்கும் ஒரு சில ஸ்டுடியோ ஆசாமிகள், தமிழ்நாட்டில் தமிழன் ஒருவன் முனேருகிறான் என்றவுடன் முதலில் அதை தடுப்பவன் ஒரு தமிழனாகவே இருப்பான் என்ற நடைமுறை பழமொழிபோல ,...லைட் மேன் வடிவில், துணை இயக்குனர்கள் வடிவில், ஸ்டுடியோ வேலையாட்கள் வடிவில் முதலாளியிடம் மிகுந்த விஸ்வாசம் கொண்டவர்களை போல பொய் தகவல்களை படம் எடுத்துகொண்டிருக்கும்போதே திரு A V மெய்யப்பனிடம் கூறலானார்கள்...

அவை.....!

eehaiupehazij
11th July 2014, 06:41 PM
கடுமையான வேலை நிமித்தம் திரியில் கலக்க இயலவில்லை.

வந்து பார்த்தால்தான் தெரிகிறது திரி அதலபாதாளம் நோக்கி போய்விட்டது என்று.

கோபால் பல பேரை வம்புக்கு இழுத்தாலும் சில உண்மைகளை அவர் உரைப்பதை மறுக்க முடியாது.

சிவாஜி செந்தில் பதிவுகள் நிச்சயமாக போரடிக்கவே செய்கின்றன. என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மௌன வாசகர்களை செந்தில் காலி பண்ணி விடுவார் போலிருக்கிறது.



திரு ராமதாஸ். நீண்ட மௌனத்திற்கு பிறகு வருகை தரும் உங்களுக்கு நன்றி. ஆனால் வரும்பொழுதே என் மீது கோபத்தையும் மதிப்புக்குரிய கோபால் மீது திடீர் பாசத்தையும்காட்டுவது சிறிது நெருடலாக உள்ளதே ஐயா! தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மற்றவர்கள் கருத்தாகவும் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லையே ஐயா! இந்தவேகத்தை நமது திரி தொய்வடையும்போதும், மாற்றுத்திரியின் நண்பர்கள் நம்மை விமர்சிக்கும்போதும் காட்டியிருந்தால் தங்கள் மதிப்பு உயர்ந்திருக்கும். தங்களது திடீர் வருகையின் நோக்கம்.....நிச்சயமாக நடிகர்திலகத்தின் புகழ் பரப்புவது கிடையாது......ஐயா உங்களை நீங்களே வெளிப்படுத்திக்கொள்கிறீகளே! உங்களை நான் தாழ்த்தி உயர விரும்பவில்லை. உணமைகளை உணரும்போது வருத்தப்படுவீர்கள். திரியில் பங்கேற்ப்பதும் பதிவிடுவதும் தனி மனித உரிமை. முன்பின் தெரியாத உங்களது விமர்சனம் என்னைப் பாதிக்கவில்லை ஐயா!! உங்கள் போரடிக்காத விறுவிறுப்பான பதிவுகளை படித்துப் பரவசமடையும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு நன்றிகள்.இத்திரியின் மேன்மைமிகுந்த சகபதிவாளர்கள் மெளனமாக உங்களது எழுத்துக்களையும் பார்க்கவே செய்கிறார்கள் நண்பரே! குறைகுடங்கள் கூத்தாடுவது இயல்பே!

Russellbpw
11th July 2014, 07:22 PM
திரியை விரும்பிப் படிக்கும் என் நண்பர்கள் என்னிடம் மிகவும் குறைபட்டனர். திரியில் விறுவிறுப்பாக ஒன்றுமே இல்லையே என்று. உண்மைதான். திரி சீக்கு வந்த கோழி போல் சுருண்டு கிடக்கிறது.
இன்ட்ரெஸ்ட்ட்டாக ஒரு பதிவும் இல்லை. நன்றாகப் பதிவு போட்ட கார்த்திக் சாரும் இப்போது காணோம்.

ரவி

திரியை விறுவிறுப்பாக கொண்டு செல்வது ஆரம்பித்த உங்கள் பொறுப்பு.

அருமை தம்பி ராமதாஸ் அவர்களுக்கு

முதற்க்கண் உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்.

இந்த திரியை விரும்பி படிக்கும் தங்களுடைய அருமை நண்பர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.

அந்த நண்பர்கள் இவ்வளவு வருத்தபடுவார்கள் தங்களிடம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆகையால் அவர்கள் பெயரும் தொலைபேசி இருந்தால் அல்லது மினஞ்சல் இருந்தால் இங்கு பகிர்ந்துகொள்ளவும்.

அவர்களுக்கு திரியின் இந்த பாகத்தை ஆரம்பித்தவன் என்ற முறையில் நானே நேரிடையாக விளக்குகிறேன்.

சீக்கு என்பது கோழிகளுக்கு மட்டுமல்ல இந்த திரியில் பதிவிடுபவர்களுக்கும் எப்போதாவது வரதானே செய்யும் !

என்ன செய்வது தம்பி.....
நம் நடைமுறை வாழ்கை உதாரணமாக எடுத்துகொண்டால் கூட எப்போதும் எந்தநேரமும்
சுறுசுறுப்பும்..
துறுதுறுப்பும்...
பரபரப்பும் இருந்துகொண்டே இருக்குமா ..?

எப்போதாவது பிசுபிசுப்பும் இருக்கும்...இருக்கதானே செய்யும் ?

நாம் தான் அதை ஒரு சில வேளைகளில் கசகசப்பாக பார்க்காமல்
வெதுவெதுப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும் தம்பி ராமதாஸ் அவர்களே !

திரு கார்த்திக் மட்டுமா நன்றாக பதிவுபோட்டார்கள் ?...அவரோடு திரு ஆதிராம், திரு. Vankv , சாரதா அம்மையார் போன்றோரும் பிரமாத பதிவு பல போட்டார்கள் என்று பழைய திரியை பார்த்தாலே தெரியுமே தம்பி ! ...

இவர்களில் திரு கார்த்திக் பெயரை மட்டும் குறிப்பிட்ட தாங்கள் ஏன் ஜாம்பவான்களான திரு நெய்வேலி வாசுதேவன், திரு பம்மலார், திரு ராகவேந்திரன் சார், திரு s வாசுதேவன் சார் , ராகுல்ராம் சார் , ஹைதராபாத் ரவி அவர்கள் இவர்கள் பெயர்களை பதிவிட மறந்துவிட்டீர்கள் தம்பி ?

இருந்தாலும் உங்கள் நண்பர்களுக்கு பதில் சொல்ல நான் கடமைபட்டுள்ளேன்..எனவே தான் அவர்கள் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் பகிர்ந்துகொள்ள கேட்டுகொள்கிறேன்.!

முடிந்தவரையில்...உங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற ஆவன செய்கிறேன் தம்பி ராமதாஸ் அவர்களே.
முடியாத பட்சத்தில் நீங்களும் வந்து சிறிது பரபரப்பு பதிவுகள் பதிவு செய்து திரியின் பரபரப்பை தக்க வைக்க வேண்டுகிறேன் !

ஊக்கத்திற்கு நன்றி !

Rks

eehaiupehazij
11th July 2014, 07:50 PM
dear RKS. Your reply to Mr. Ramdoss thambi shows your level of diplomacy and maturity. Now I think you have a good company to enjoy and to keep you like a busy bee. I really thank you for the fitting reply and now this Ramdoss thambi, having exhibited his 'knowledge' and his inherent 'wisdom' qualities, fellow hubbers will certainly exercise caution!

Divide and rule ...... enjoy this fiasco Ramdoss thambi!I will not just run away from this thread ramdoss thambi,as my mission is with a well defined vision of disseminating the name and fame of my icon NT, alongside the leadership of RKS!!

Russellbpw
11th July 2014, 07:56 PM
dear RKS. Your reply to Mr. Ramdoss thambi shows your level of diplomacy and maturity. Now I think you have a good company to enjoy and to keep you like a busy bee. I really thank you for the fitting reply and now this Ramdoss thambi, having exhibited his ignorance and his inherent qualities, fellow hubbers will certainly exercise caution! Divide and rule ...... enjoy this fiasco Ramdoss thambi!

Dear Sir,

it is not a fitting reply sort of a reply...

I tried to genuinely address his agony.

He spending his valuable time here and so is his friends even though they are not publishing anything.

it is our duty to explain to them as to why this happens..that's why i asked for their contact number or email and their name so that i can call or write them directly.

I called him "Thambi" because I assumed he is younger to me by age going by his aggression in writing. Mostly young guys are aggressive

Regards
RKS

eehaiupehazij
11th July 2014, 09:16 PM
dear RKS and my dear fellow hubbers for the cause of NT. Take this opportunity to thank you one and all. Realizing the place where I should be, I bow out of this thread for the sustained happiness of our friends. I will do my service from outside this thread for the glory of NT as a free lancer. Wish this thread grow well and flourish. Bye!(thanks Gopal Sir for our short period association)

sivaa
11th July 2014, 09:35 PM
அன்பு உறவுகளே

இத்திரியை எப்படி பரபரப்பாக
விறுவிறுப்பாக கொண்டுசெல்லலாம்
என்பதில் மட்டும் குறியாக இருங்கள்
மற்ரைய எல்லாவற்ரையும் மறந்துவிடுங்கள்

நன்றி
அன்புடன்

சிவா


http://i157.photobucket.com/albums/t55/sivaa14/ntcal2011WP_zpsaa787fa1.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/ntcal2011WP_zpsaa787fa1.jpg.html)

JamesFague
11th July 2014, 09:57 PM
In the history of Cinema, our NT the only actor went by flight for a makeup test.

This feat no one can beat.

Regards

joe
11th July 2014, 10:48 PM
முரளி சார்,
நெறியாளர் என்ற வகையில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் .. சாத்தியப்பட்டால் செய்யலாம் .

நடிகர் திலகம் பற்றிய இந்த தலையாய திரியில் நடிகர் திலகம் பற்றிய விவாதங்களை விட நீ ஏன் எனக்கு நன்றி சொல்லல்ல .. என்னை விட அவனுக்கு நீ ஏன் சப்போர்ட் பண்ணுற ? அவரை விட இவர் எழுதுவதில் என்ன குறைச்சல் ? நன்றி சொன்னா ஏன் நீ பதில் நன்றி சொல்லல .. பதில் நன்றிக்கு ஒரு பதில் நன்றி சொல்லும் நாகரீகம் ஏன் இல்லாமல் போச்சு -ன்னு பேஸ்புக்ல லைக்குக்கு அடிச்சுக்கிற சின்ன பசங்க போல நடக்குற அக்கப்போருல படிக்க வர்றவன் தலை தெறிக்க ஓடிட்டிருக்குக்கான் .

இங்கு யாருடைய பதிவுக்காவது நன்றியோ பாராட்டோ பதிவு செய்ய நினைத்தால் ஒவ்வொரு பதிவிலும் அதற்காக ஏற்பாடு ஏற்கனவே இருக்கிறது .. தேவைப்படுகிறவர்கள் இந்த திரியில் அதை மட்டும் உபயோகிக்கலாமே .. அதற்குப்பின்னரும் நீ எனக்கு லைக் போடல்ல ..அவனுக்கு லைக் போட்டியே எனக்கு ஏன் போடல்ல போன்ற அக்க போர்களுக்கென்றே தனியாக ஒரு திரி தொடங்கினால் புண்ணியமாக போகும் .. எல்லோரும் தங்கள் கோஷ்டி சண்டைகளையும் சுயசொறிதல்களையும் அங்கு வைத்துக்கொள்ளலாம் ..முடியல.

Gopal.s
12th July 2014, 03:31 AM
Joe ,

தாங்கள் சொல்வதில் உடன்பாடும் உண்டு.எதிர்கருத்துக்களும் உண்டு.

1)face book போல ஒற்றை வரிகளில் நன்றி/பிடித்தம் என்று போட்டால் ,சில பதிவுகள் சரியாக சென்று சேர்ந்ததா என்றே இனம் காண முடியாது.

2)நிறைய உழைப்பை கோரும் பதிவுகளுக்கு சிறிதே வாசிப்பிற்கு இடம் விட்டு, எதிர்வினை தர வேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.

3)நிறைய பிரபல எழுத்தாளர்களும்,ஒரு வார்த்தையில் ,உங்க எழுத்து பிடிக்கும் என்று சொல்வதை விட ,சில கதைகளை,எழுத்தின் பகுதிகளை சிலாகிப்பதையோ ,எதிர்ப்பதையோ விரும்புவதை கண்டிருக்கிறேன் ,கேட்டிருக்கிறேன்.

4)ஆனால் மொக்கையாக சூப்பர்,பின்னி விட்டீர்கள் ,நன்றி போன்ற பதிவுகளை பிடித்தம்/நன்றி கிளிக் பண்ணி காண்பித்து விடலாம்.

5)பிறந்த நாள்,landmark achievement appreciation எல்லாம் உழைப்பவர்களுக்கு ஒரு மரியாதை,நட்பின் பரிமாறல் என விட்டு விட்டு கடக்கலாமே?

6)criticism அவசியம். சூப்பர் பதிவை ரசிக்கும் போது ,திட்டையும் தாங்க வேண்டியது எழுதுபவரின் பொறுப்பு.

7)நிச்சயம் இது ஒரு interactive திரி .தாங்கள் சொல்வது போல நடிகர்திலகத்தை பற்றி செய்தி போட்டு விட்டு போய் கொண்டே இருக்க முடியாது.

8)இந்த விதத்தில் கார்த்திக் பாணி எனக்கு உவப்புடையது.எதிர்வினை/உடன்வினை/ புரிந்து கூடுதல் தகவல்களை பகிர்வார்.

Gopal.s
12th July 2014, 06:49 AM
K .c .s ,

காமராஜ் படத்தை மீண்டும் தூசு துடைக்க போகிறார்களாம் நன்றி கெட்டவர்கள். சிவாஜியை விட்டு விட்டு எவனாவது காமராஜ் சரித்திரத்தை சொன்னால் அது எப்படி சரித்திரமாகும்? காமராஜின் கடைசி நிகழ்ச்சியே சிவாஜியின் பிறந்த நாள்தானே? இருட்டடிப்பு செய்வதால் இவர்கள் எதை சாதித்தார்கள்?

கொஞ்சம் நீங்கள் இதில் கவனம் செலுத்தி,உரியவர்களிடம் சேர்ப்பீர்களா?

Gopal.s
12th July 2014, 09:28 AM
திராவிட பேரழகன், மன்மதனை நாண செய்யும் உயிர்ப்பான விழிகள்,கத்தியை கூர்பார்க்கும் நாசி, ஆண்மையின் ஆதி சரித்திரம் சொல்லும் உதடுகள், பிரம்மனுக்கு சவால் விட்ட காது மடல்கள், தலைவனின் கம்பீரம்,தோழனின் நேசம்,காதலனின் இளக்கம் ,சகோதரனின் பாசம்,கலையின் சிருங்காரம் அனைத்தும் காட்டும் உடலமைப்பு, எத்தனை என்று எண்ண இயலா நடையழகை கூட்டிய கால்கள்,அதற்கு இசையும் கரங்கள் என்று பிரம்மா இவரை படைக்க தன்னை பல லட்ச வருடங்கள் அர்பணித்து ,மற்ற அனைத்து மாந்தரையும் தன் உதவியாளர்கள் கொண்டே படைத்து தள்ளினானோ ,என்று எண்ண வைக்கும்.

இந்த பேரழகன்,பாத்திரங்களுக்காக ,தன்னை உருமாற்றி சிதைத்து கொண்ட சரித்திரங்கள் ஏராளம். ஆனாலும் ஆண்மை நிறை அழகின் ஜொலிப்பு எல்லா நேரங்களிலும்,எல்லா கோணங்களிலும் விகசித்த பேரதிசயம் என் சொல்வேன்?

அதிலும் என்னை அடிமையாக்கிய சிறந்த பத்து.

1)சிவந்த மண் .
2)தங்க சுரங்கம்.
3)ராஜா.
4)சுமதி என் சுந்தரி.
5)வசந்த மாளிகை.
6)எங்க மாமா.
7)சவாலே சமாளி.
8)ராஜா ராணி.
9)கோடீஸ்வரன்.
10)செல்வம்.

joe
12th July 2014, 11:29 AM
Joe ,

தாங்கள் சொல்வதில் உடன்பாடும் உண்டு.எதிர்கருத்துக்களும் உண்டு.

1)face book போல ஒற்றை வரிகளில் நன்றி/பிடித்தம் என்று போட்டால் ,சில பதிவுகள் சரியாக சென்று சேர்ந்ததா என்றே இனம் காண முடியாது.

2)நிறைய உழைப்பை கோரும் பதிவுகளுக்கு சிறிதே வாசிப்பிற்கு இடம் விட்டு, எதிர்வினை தர வேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.

3)நிறைய பிரபல எழுத்தாளர்களும்,ஒரு வார்த்தையில் ,உங்க எழுத்து பிடிக்கும் என்று சொல்வதை விட ,சில கதைகளை,எழுத்தின் பகுதிகளை சிலாகிப்பதையோ ,எதிர்ப்பதையோ விரும்புவதை கண்டிருக்கிறேன் ,கேட்டிருக்கிறேன்.

4)ஆனால் மொக்கையாக சூப்பர்,பின்னி விட்டீர்கள் ,நன்றி போன்ற பதிவுகளை பிடித்தம்/நன்றி கிளிக் பண்ணி காண்பித்து விடலாம்.

5)பிறந்த நாள்,landmark achievement appreciation எல்லாம் உழைப்பவர்களுக்கு ஒரு மரியாதை,நட்பின் பரிமாறல் என விட்டு விட்டு கடக்கலாமே?

6)criticism அவசியம். சூப்பர் பதிவை ரசிக்கும் போது ,திட்டையும் தாங்க வேண்டியது எழுதுபவரின் பொறுப்பு.

7)நிச்சயம் இது ஒரு interactive திரி .தாங்கள் சொல்வது போல நடிகர்திலகத்தை பற்றி செய்தி போட்டு விட்டு போய் கொண்டே இருக்க முடியாது.

8)இந்த விதத்தில் கார்த்திக் பாணி எனக்கு உவப்புடையது.எதிர்வினை/உடன்வினை/ புரிந்து கூடுதல் தகவல்களை பகிர்வார்.

கோபால்,
உங்கள் ஒவ்வொரு பாயிண்டுக்கும் பதில் இருக்கு .ஆனா நானும் அக்கப்போர் களத்தில் குதிக்க விரும்பல்ல.
தேவையில்லையென்று எதுவுமில்லை , தேவைக்கதிகமாக சென்று நோக்கத்தையே குலைக்காமல் இருக்கும் வரை .
ஆக மொத்தத்துல இப்ப நடந்துட்டிருக்கதுக்கு விமோசனமே கிடையாதுங்குறீங்க :)

Russellbpw
12th July 2014, 11:42 AM
RECAP......FOR CONTINUITY

இரெண்டாவது திரைப்படம் அதுவும் மிக பெரிய ஜாம்பவான்கள் தயாரிப்பில் ....இந்த சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும்..என்னதான் திறமை இருந்தாலும் திரை உலகில் ஏற்கனவே உள்ள அவ்வளவு கதாநாயகர் மத்தியில் நிற்கமுடியுமா, நின்றாலும் நிலைக்க முடியும்மா இப்படி பல கேள்விகள்..!

சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற கேள்வி போய்...நிற்க முடியுமா ...நிலைக்கமுடியும்மா என்ற கேள்வி வருகிறது ..அடுத்த கட்டத்திற்கு போய் ஆயிற்று என்பதால் !

இப்படி ஒரு வழியாக அனைத்தும் முடிவு செய்த பின்னர் பராசக்தி என்று பெயரிட்டு திரைப்படம்" தொடங்கபடுகிறது என்ற செய்தி பத்திரிகையில் வெளிவருகிறது !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/wrkingStill_zpsfa8eac74.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/wrkingStill_zpsfa8eac74.jpg.html)

"பராசக்தி" படபிடிப்பு தொடக்கம் -

மகிழ்ச்சி நிலைக்குமா ?

சற்றே பொறுப்போம் !

Russellbpw
12th July 2014, 01:41 PM
ஒரு நல்ல காரியம் நடக்கும்போது நான்கு தடைகளும் கூடவே வருவது இயற்கைதானே நம் நாட்டை பொருத்தவரை.

அதே போலதான் பராசக்தி படபிடிப்பு நடுவிலும் வந்தது...

அது....

Russellbpw
12th July 2014, 01:47 PM
படபிடிப்பில் கேமரா, lighting பார்பவர்கள், மற்றும் துணை ஆட்கள் மூலம் திரு AV மெய்யப்பன் அவர்களுக்கு கணேசன் என்ற இந்த இளம் நடிகரை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக தூபம் போடபடுகிறது...எப்படி என்றால்...

அதுவரை வசனத்தை பாடியே, மொனகியே நாயகர்கள் பேசுவதை பார்த்த இந்த புல்லுருவிகளுக்கு நடிப்பு என்ற ஒன்று இருக்கிறதென்றே தெரியாத இந்த கனவான்கள் ...திரு AV மெய்யப்பன் அவர்களிடம் சென்று...இந்த நடிகர் செய்வது எல்லாமே வித்தியாசமாக புதிர்ரக உள்ளது...பேசும்போது வாயை மீன் மாதிரி திறக்கிறார்...முகம் நீளமாக உள்ளது...மக்கள் இதெல்லாம் ரசிப்பது சந்தேகம்....இப்படி பல ஏதிர்மறை கருத்துக்கள் நடிகர் திலகம் காதுபடவும்...AVM இடம் காதுகடித்தும் கோள் மூட்டபடுகிறது..!

நடிகர் திலகம் பற்றி அதிகம் அறியாத AVM அவர்களும் இவர்கள் நீண்டநாட்கள் வேலை செய்பவர்கள் இவர்கள் கூறுவது உண்மையாக இருக்கும் என்று எண்ணுகிறார்....

இந்த எண்ணத்தால் திரு பெருமாள் அவர்களை அழைக்கிறார் !

எதற்க்காக ?

Russellbpw
12th July 2014, 05:02 PM
STATISTICAL TID-BITS OF NADIGAR THILAGAM SIVAJI GANESAN -
THE REAL BOX OFFICE SAMRAAT OF ALL TIMES !

THE ONLY HERO WHO GAVE THE MOST NO OF STRAIGHT 100 DAYS RUN FILMS
(DATA GIVEN BELOW DOES NOT INCLUDE 100 DAYS RUN BY SHIFTING LIKE OTHERS) &

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsd2417045.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsd2417045.jpg.html)


THE MOST NO OF SILVER JUBILEE HITS IN THE ENTIRE FILM WORLD !!


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps7def0b43.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps7def0b43.jpg.html)

eehaiupehazij
12th July 2014, 06:24 PM
நான் உண்மையை ஒத்துக் கொள்கிறேன். எனக்கு பதிவுகள் போட வராது. அதனால் ஒதுங்கி இருக்கிறேன். நல்ல பதிவுகளை ரசிக்கிறேன்.
அப்படியாவது என்னைப் போல் இந்த செந்தில் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் இல்லை.

இன்ட்ரெஸ்ட்ட்டாக ஒரு பதிவும் இல்லை. நன்றாகப் பதிவு போட்ட கார்த்திக் சாரும் இப்போது காணோம்.

ஆமாம் ! இந்த ரவி, ராகுல்ராம், கார்த்திக், வாசுதேவன், பார்த்தசாரதி, ராகவேந்திரன், பம்மலார் எல்லாம் ஏன் ஓடி விட்டார்கள். ஏன் ஓட மாட்டார்கள் இப்படி திரியில் போட்டு அறுத்தால்.by one "Rama Doss"

dear moderator of this thread/RKS Sir.

This posting by one "Rama Doss" is 'intentional' in order to keep me away from this thread. However such a personal attack on me, that too, suddenly by a gentleman who was 'off'the thread for a long time is unwarranted and regrettble. Perhaps due to his relative literacy deficit level, he was unable to understand my write-ups in a proper grammar structured pattern, as frequently appreciated by other well educated friends of this thread. If I go through his 'dust bin' quality write-ups I can also make very critical reviews, analyses and interpretations as a qualified doctoral holder that will really drive him getting admitted in his own "sethu" hospital as a coma psychy! Ever since I entered this thread I have not used such phrases or revealed my educational background but now due to the purposeful insult from a relatively low educated person compared to my standards I am forced to defend and retaliate like this only.

If that posting is not deleted by the moderator, let this also remain, reminding that gentleman his relative status of merit in this esteemed thread and what he is upto!.

I continue to write as my aim is only to contribute to the glory of NT and I am not answerable to such low standard and filthy postings which deserve immediate deletion (That Gentleman could have preferred to post a PM to me rather than making an attempt to degrade my name openly with a vested interest, eventually becoming the Jungleman of this thread)

Ravi and Raghul can kindly reply who made them to bow out of this thread. The other resource persons... I do not at all know any of them...better ask them too! the truth will come out and the cats too...!If this gentleman is a newbie hubber, how dare he addresses the stalwart seniors by their names in a tone without any respect...It shows that he may not be a newbie....and well known to have moved with these seniors!!

with regards,
Dr.S.Senthilvel

JamesFague
12th July 2014, 08:17 PM
Enjoying Watching Thillana Mohanambal in Sun Life.

Those who do not know please watch it.

Regards

Russellbpw
12th July 2014, 09:02 PM
பராசக்தியில் சிவாஜி கதாநாயகனாக நீடிக்கவேண்டுமா ? எதற்கு ரிஸ்க் எடுக்கவேண்டும் ? - மறுபரிசீலனை செய்யுங்கள் - av மெய்யப்பன் அவர்கள் கேள்வி

திரு pa பெருமாள் அவர்கள் திரு avm அழைப்பின் பெயரில் அவரை சந்திக்க செல்கிறார். அங்கு மிகபெரிய அதிர்ச்சி அவருக்கு காத்திருப்பது தெரியாமல் !

சென்று அமர்ந்ததும் திரு avm அவர்கள் இந்த புது பய்யன் சரியில்லை என்று அனைவரும் கூறுகிறார்கள்...அவன் பேசுவது, நடிப்பது எல்லாமே புதுமையாக இருக்கிறதாம், மிகவும் நோஞ்சானாக இருப்பதாக கூறுகிறார்கள்.

அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். பொதுமக்கள் ஒத்துகொள்ள மாட்டார்கள் என்று அபிப்ராயம் கூறுகிறார்கள். நம் ஆட்களிடத்தில் இப்படி ஒரு ரிசல்ட் கிடைக்கும்போது திரைப்படம் வெளிவந்தால் வெற்றிபெறுமா என்பது தெரியவில்லை ...!

எதற்கு இந்த ரிஸ்க் ? பேசாமல் எடுத்தவரை நஷ்டமானாலும் பரவில்லை. கே ர ராமசாமியை வைத்து முதலில் இருந்து எடுக்கலாம் என்று கூறுகிறார்.

இதை கேட்டதும் திரு பெருமாள் அவர்கள் அதை எதிர்கிறார். நோஞ்சானாக இருப்பது ஒரு குறை அல்ல...நன்றாக உணவு சாபிடவைத்தால் உடம்பு தேறிவிடும். மேலும் இந்த பய்யன் தனது முதல் படத்தில் நடிக்கிறான். நாம் இதிலிருந்து நீக்கிவிட்டால் அவன் வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும். அதற்க்கு நாம் ஆளாகக்கூடாது என்று வாதிடுகிறார்.

என்ன சொன்னாலும் avm அவர்கள் ஒத்துகொள்வதாக தெரியவில்லை. அவர் ஒரு business man என்பது ஒருபுறம் இருந்தாலும் எப்போதும் ஒரு minimum calculated risk மட்டுமே எடுத்து பழக்கப்பட்டவர்.

இப்படியாக படபிடிப்பு ஒரு முடிவுக்கு வராதபடியால் நிறுத்திவைக்க படுகிறது.

Russellbpw
12th July 2014, 09:14 PM
நடிகர் திலகத்துக்கோ இது மிக பெரிய ஷாக் !

நன்றாக நடித்தும் சிறப்பாக வசனம் பேசியும் இப்படி கோள் சொல்பவர்கள் தவறாக தன்னை சித்தரித்து இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்களே என்ற வருத்தம் ஒருபுறம்.

மற்றொருபுறம், AVM போன்ற மிகபெரிய பட நிறுவனம் ஒரு புதுமுகத்தை reject செய்தால் தன்னுடைய திரை உலக வாழ்வு கவலைகிடமாகவும் கேள்விக்குறியாகிவிடும் என்ற துக்கம் ஒருபக்கம்.

இந்த நிலையில் இவரது அறை நண்பர் மற்றும் நடிகர் SSR அவர்களிடத்தில் சென்று கவலையுடன் இதனை கூறும் நடிகர் திலகத்திற்கு SSR அவர்கள் தைரியம் கொடுத்து அப்படி ஒன்றும் ஆகிவிடாது கவலை வேண்டாம். தர்மமே வெல்லும் என்று ஆறுதல் கூறுகிறார்.

தர்மம் வென்றதா....?

நடிகர் திலகத்தின் பிரார்த்தனை கலைவாணி கேட்டு அருள் பாலித்தார்களா ?

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sivaji_zps2d0735e8.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sivaji_zps2d0735e8.jpg.html)


ஷூட்டிங் மீண்டும் தொடங்கியதா ?...

அப்படி தொடங்கினால் யாரால் எப்படி தொடங்கியது ...?

பொறுத்திருப்போம் ...அறிவதற்கு !

Russellbpw
12th July 2014, 09:58 PM
இந்த புவியே உங்களுடையதுதானே ...! அப்படி இருக்க உங்களால் நாடாள முடியவில்லை என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/capture2_zps6caacdee.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/capture2_zps6caacdee.jpg.html)

courtesy - கோவை செந்தில்

Russellbpw
12th July 2014, 10:01 PM
நவரச நாயகர்கள் உலகத்திலயே இருவர்தான் - இருவரில் ஒருவர் தேசிய தெய்வீக நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ! மற்றொருவர் ஹாலிவுட் புகழ் மர்லான் பிராண்டோ

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zps02ca778f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zps02ca778f.jpg.html)

courtesy - கோவை செந்தில்

Russellbpw
12th July 2014, 10:31 PM
பராசக்தி பற்றி தொடர்வதற்கு முன் ஒரு சிறு இடைவேளை

இந்த இடைவேளையில் நடிகர் திலகம் இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதாம் "பால்கே" விருது பெற்றபோது முதலில் கௌரவிக்கப்பட்டது கேரளா மாநிலத்தில் ! அந்த நிகழ்ச்சி தொகுப்பு பத்திரிகை செய்தி வாயிலாக மீண்டும் நினைவு கொள்ளலாம் !

கேரளாவை பொறுத்தவரை நடிகர் திலகம் அவர்களுக்கென்று எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு அவர்காலத்தில் மிகபெரிய ரசிகர் மற்றும் வெறியர் கூட்டமே உள்ளது என்பது திரை உலகம் அறிந்த ஒன்று

ஆகையால் தான் நடிகர் திலகம் அவர்கள் விருது பெற்றவுடன் முதலில் கேரளா நாட்டில் அனைத்து நடிகர்களும் முதன் முதலில் விழா எடுத்தார்கள் !

21 அமைப்புகள் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து இவர் தமிழ் நடிகர் என்ற பாராபட்சம் பார்க்காமல் விழா எடுத்து ஆனந்த தாண்டவம் புரிந்தனர் ! !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4247a-1_zps7a1681bf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4247a-1_zps7a1681bf.jpg.html)

Russellbpw
12th July 2014, 10:35 PM
குடும்ப விழா போல கொண்டாடிய மலையாள சூப்பர் ஸ்டார்கள் !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4250a-1_zps2603b2ad.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4250a-1_zps2603b2ad.jpg.html)

Russellbpw
12th July 2014, 10:37 PM
திரை உலகை பொறுத்தவரை சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்து காட்டியவர் நடிகர் திலகம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4251-1_zpsda6b8f2f.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4251-1_zpsda6b8f2f.jpg.html)

Russellbpw
12th July 2014, 10:38 PM
தெய்வமகனின் சத்தியவாக்கு !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC4252-1_zps6413de6e.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/GEDC4252-1_zps6413de6e.jpg.html)

Russellbpw
12th July 2014, 10:52 PM
எண்ணிக்கையில் அடங்கிய வள்ளல்களை மட்டுமே கண்டு பழக்கப்பட்ட தமிழகத்தில்,
எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத வள்ளல் நடிகர் திலகம் என்ற "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு இது" !


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Kalki20497_zps5a4896a7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Kalki20497_zps5a4896a7.jpg.html)

Russellbpw
12th July 2014, 11:08 PM
பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்..!
தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் ..!
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்..!
கண்ணசைவில் கோடி கோடி...கற்பனைகள் தந்தாள் ..! உருவான விதம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/TSRengasamyonNT_zps82d23cef.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/TSRengasamyonNT_zps82d23cef.jpg.html)


கண்களுக்கு காதுகளுக்கு இனிய விருந்து !

http://www.youtube.com/watch?v=Vd_RC89xYeg

Murali Srinivas
12th July 2014, 11:27 PM
Dear RKS,

Heartiest Congrats for having successfully started the NT thread no 14 and steering the same with the required speed. Will catch up.

Regards

Joe/Gopal,

Points noted.

sivaa
13th July 2014, 03:17 AM
இலங்கையில் 17 ..09 ..1976 ல் திரையிடப்பட்டது

அவன்தான் மனிதன்

கொழும்பு...............கிங்ஸ்லி....83..நாட்கள ்

கொழும்பு..............கல்பனா......51..நாட்கள்

யாழ்நகர்...............லிடோ.........122..நாட் கள்


யாழ்நகர்......லிடோவில்...105 தொடர் house full காட்சிகள்


(ஞாபகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி)



http://i157.photobucket.com/albums/t55/sivaa14/untitled_zps0534fbde.png (http://s157.photobucket.com/user/sivaa14/media/untitled_zps0534fbde.png.html)

sivaa
13th July 2014, 03:21 AM
பைலட் பிரேம்நாத்

யாழ்நகர் வின்சர் 92 நாட்கள்
தினசரி 5 காட்சிகள் நடைபெற்று

மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியது


அத்துடன்

ஒன்றுவிட்ட 105 தொடர் house full காட்சிகள்

(ஞாபகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/Image46_zps399241e1.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/Image46_zps399241e1.jpg.html)

Gopal.s
13th July 2014, 07:06 AM
முரளி,

நீங்கள் ராமதாஸ் அவர்களின் பதிவை நீக்கியது சரியாகவே இருக்கலாம். பதிவின் தரத்தை விமரிசிப்பது தவறில்லை. ஆனால் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்று ஒப்பு கொள்கிறேன்.

ராமதாஸ் அவர்கள்,என்னை புகழ்ந்தும் உள்ளார்.இகழ்ந்தும் உள்ளார். ஆனால் என் பதில்கள் எல்லை மீறி அவர் தரத்தை தாழ்த்துவது போல இருந்ததே இல்லை. கிண்டல் பண்ணி இருக்கிறேனே தவிர ,,சீண்டியிருக்கிறேனே தவிர ,மற்ற படி சிவாஜி செந்தில் போல ,படிப்பு,பணம் இவற்றை வைத்து யாரும் யாரையும் விமர்சித்ததில்லை.

டாக்டர் செந்திலின் இந்த பதிவு ,நான் டாக்டர் ,நீயும் டாக்டர் பட்டம் வாங்கியிருந்தால் என்னோடு மோது என்ற சவால் வேடிக்கையானது.விபரீதமானது.

புலிகேசி கரடியின் மீது விடுவது போல அம்பு விட்ட அர்ஜுனன் ,சரியாக கரடியின் தலையை கொய்த கர்ணனை பார்த்து,நீ ஷத்ரியனா என்று கேட்பது,மகாபாரத காலத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று.

எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் செந்தில்?

இதில் எனக்கு சந்தோஷமே. என்னுடைய பதிவு எண் 9 ,நகைச்சுவையின் உச்சம் தொட, டாக்டர் செந்தில் எனக்கு உதவியுள்ளார்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோபால்,

பல முறை உங்களிடம் கூறியாகி விட்டது. ஏன் இப்படிபட்ட பதிவுகளை மீண்டும் மீண்டும் பதிவிடுகிறீர்கள்? எந்த ஒரு நபரையும் selective adjectives உபயோகித்து வசை பாட யாருக்கும் இங்கே உரிமையில்லை. தனி நபர் தாக்குதலை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் சட்டை செய்யாமல் சென்று விடுங்கள். அதை விடுத்து இது போன்ற மனதை வேதனைப்படுத்தும் அமில வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்துவது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்.

முரளி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

eehaiupehazij
13th July 2014, 07:51 AM
திரு கோபால் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை நான் மதிக்கிறேன். மற்றபடி இத்திரியில் என்னைத் தனிமைப்படுத்த எண்ணி இழிவான வகையில் புண்படும் வகையில் விமரிசித்தவருக்கு என் பதில் அதுவே. திரிநாகரீகம் சக பதிவாளர்களின் மனங்களை 'ஹாஸ்யம்' , 'self proclaimed தரக்கட்டுப்பாடு' ... என்னும் போர்வையில் தொடர்ந்து காயப்படுத்திவரும் உங்களிடம் நானகற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணிகளை நீங்கள் தொடருங்கள். எனது பணியை பங்களிப்பை தேவையில்லாமல் குறுக்கிட வேண்டாம். திரி பொதுவான ஒன்று. Warning should have been given to you in several occasions....you are talking about that!

Russellbpw
13th July 2014, 08:01 AM
dear comrades

None can measure the height of EGO, when it grows !
So,please do not allow your EGO to take control of you as far as this thread is concerned.

Stop exchange of compliments & allow others to enjoy !

Always remember that nobody is indispensable !

Rks

eehaiupehazij
13th July 2014, 08:04 AM
dear Mr.Murali. At this stage...I feel it is not conducive for me to continue in this thread. It is my personal feel that if my postings are going to be interrupted with vested interest ... thank you, I leave. But if my name is unnecessarily dragged in a malicious and provocative manner in this thread anymore... I will certainly come back with fitting replies in my way.

dear RKS. thanks for all and I do not want to embarrass you, when you are in your mission in a balanced way. I wish you bring in more and more prolific writers for the betterment of this thread and kindly don't pave way for 'monopoly' in this thread, which may lead to aversions and inevitable loss of good writers,who are indispensable for this thread.
I just ignore the comments on me!!

Russellbpw
13th July 2014, 08:18 AM
முரளி,

நீங்கள் ராமதாஸ் அவர்களின் பதிவை நீக்கியது சரியாகவே இருக்கலாம். ஆனால் இது வரை எந்த அங்கத்தினரும் செய்யாத அநாகரிகமாய் ஒருவர் தன் படிப்பு தகுதியை சொல்லி மற்றவர்களை அவமான படுத்தி உள்ளார். பதிவின் தரத்தை விமரிசிப்பது தவறில்லை. ஆனால் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்று ஒப்பு கொள்கிறேன். ஆனால் பணம்,படிப்பு இவைகளை வைத்து ,மற்றோரை அவமான படுத்தும் புது trend உருவாவதை கவனித்தீர்களா?இது வடித்தெடுத்த அயோக்யத்தனம்.கயமை.இதுவரை எந்த உறுப்பினரும் செய்யாதது.

ராமதாஸ் அவர்கள்,என்னை புகழ்ந்தும் உள்ளார்.இகழ்ந்தும் உள்ளார். ஆனால் என் பதில்கள் எல்லை மீறி அவர் தரத்தை தாழ்த்துவது போல இருந்ததே இல்லை. கிண்டல் பண்ணி இருக்கிறேனே தவிர ,,சீண்டியிருக்கிறேனே தவிர ,மற்ற படி சிவாஜி செந்தில் போல ,படிப்பு,பணம் இவற்றை வைத்து யாரும் யாரையும் விமர்சித்ததில்லை.

டாக்டர் செந்திலின் இந்த பதிவு ,நான் டாக்டர் ,நீயும் டாக்டர் பட்டம் வாங்கியிருந்தால் என்னோடு மோது என்ற சவால் வேடிக்கையானது.விபரீதமானது.

புலிகேசி கரடியின் மீது விடுவது போல அம்பு விட்ட அர்ஜுனன் ,சரியாக கரடியின் தலையை கொய்த கர்ணனை பார்த்து,நீ ஷத்ரியனா என்று கேட்பது,மகாபாரத காலத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று.

எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் செந்தில்?

இதை தாங்கள் அனுமதித்தால் ,திரிக்கே மோசமான முன் உதாரணம் ஆகி விடும்.சிவாஜி செந்திலுக்கும் ஒரு warning கொடுக்க பட்டே ஆக வேண்டும்.தொடர்ந்து சீனியர் அங்கத்தினர்களை சீண்டுவது போல ,தரமற்ற விஷயங்களை தூக்குவது,சமமாக பேசுவது,பட்டங்களை வாரி விடுவது என்று மோசமான அரசியல் செய்து வந்தார். தன்னை தானே self proclaimed leader ஆக எண்ணி.

இப்போது நான் சொல்கிறேன். டாக்டர் படித்த இவர் பதிவை விட ராமதாஸ் பதிவுகள் நேர்மையானவை.சுவையானவை. அவர் எல்லார் பதிவையும் படித்தே உள்ளார். சிலர் போல ,ஆ....காந்தியடிகள் இறந்து விட்டாரா என்று outdated ஆக பேசவில்லை.

இதில் எனக்கு சந்தோஷமே. என்னுடைய பதிவு எண் 9 ,நகைச்சுவையின் உச்சம் தொட, டாக்டர் செந்தில் எனக்கு உதவியுள்ளார்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

சார்
இப்போ உங்களுக்கு என்ன சார் வேணும் ?

எவ்வளோ தடவை உங்ககிட்ட வேண்டுகோள் விடுக்கறது ?

ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் வரமுடியுமா ?

உங்க அஞ்சு வெரல் மொதல்ல ஒண்ணா இருக்கா ?

எல்லாராலயும் நெய்வேலி வாசுதேவன் மாதிரி, முரளி சார் மாதிரி, ராகவேந்திரன் சார் மாதிரி எழுதமுடியுமா ?

ஒவோருத்தரும் அவங்களால முடிஞ்சுது செய்றாங்க இங்கே. இதுல என்ன பெரிய correction , clarification , consistence எல்லாம் ?

ஒவோருத்தரும் அவங்களால முடிஞ்ச வரையில் contribute பண்றாங்களேன்னு சந்தோஷபடுங்க சார் !

Please avoid தேவையில்லாத provoking கமெண்ட்ஸ் !

Rks

Gopal.s
13th July 2014, 08:25 AM
I leave. But if my name is unnecessarily dragged in a malicious and provocative manner in this thread anymore... I will certainly come back with fitting replies in my way.
I just ignore the comments on me!!

Dont worry. Your "Name" will not be dragged . If nadigarthilagam character name coincides with your name, we cant help it.

Gopal.s
13th July 2014, 08:29 AM
RKS,

I never interfered with your work and always appreciated your daring aggressive contributions and your hard ,dedicated work.Pl.Continue. Enjoying your parasakthi serial.I am the one who proposed your name to open the new thread. Actually,all these eruptions started when I appreciated you openly in thread -12.

Russellbpw
13th July 2014, 08:30 AM
இலங்கையில் 17 ..09 ..1976 ல் திரையிடப்பட்டது

அவன்தான் மனிதன்

கொழும்பு...............கிங்ஸ்லி....83..நாட்கள ்
கொழும்பு..............கல்பனா......51..நாட்கள்
யாழ்நகர்...............லிடோ.........122..நாட் கள்


யாழ்நகர்......லிடோவில்...105 தொடர் house full காட்சிகள்


(ஞாபகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/untitled_zps0534fbde.png (http://s157.photobucket.com/user/sivaa14/media/untitled_zps0534fbde.png.html)


சார்

விடுங்க சார் .

Let us ignore those invalid RASIGAR MANDRA BIT NOTICES & INFORMATION PUBLISHED IN MAGAZINES THAT SUPPORT THEIR FAVORITE ACTOR published by others from here on !

We do not want to consider any BIT NOTICES OF RASIGAR MANDRAM and give our reply. It is meaningless because, the same bit
notice will be re-drafted with hiked figures once we prove it wrong..and this will go on.....

All neutral and knowledgeable readers know Rasigar Mandram Notices on Collections are Faque and more hyped information.
So, there is no point in talking about that

Rks

eehaiupehazij
13th July 2014, 08:32 AM
Mr. Gopal. I enjoy your 'humour' sense!I will continue to enjoy all your 'humerous' and 'rib-tickling comedy' write-ups!! Please continue your service to this thread in your 'brand'way to keep every one always 'happy' like this!!!

Russellbpw
13th July 2014, 08:32 AM
RKS,

I never interfered with your work and always appreciated your daring aggressive contributions and your hard ,dedicated work.Pl.Continue. Enjoying your parasakthi serial ????? .

:idontgetit: Looks like spelling mistake... should it be series ? !

Gopal.s
13th July 2014, 08:38 AM
:idontgetit: Looks like spelling mistake... should it be series ? !

Yah.Yah. Watching lot of TV serials on weekend. Some confusion.:-D

Russellbpw
13th July 2014, 09:07 AM
Yah.Yah. Watching lot of TV serials on weekend. Some confusion.:-D

Looks like selective amnesia ?

:-D

Jeev
13th July 2014, 09:13 AM
இலங்கையில் 17 ..09 ..1976 ல் திரையிடப்பட்டது

அவன்தான் மனிதன்

கொழும்பு...............கிங்ஸ்லி....83..நாட்கள ்

கொழும்பு..............கல்பனா......51..நாட்கள்

யாழ்நகர்...............லிடோ.........122..நாட் கள்


யாழ்நகர்......லிடோவில்...105 தொடர் house full காட்சிகள்


(ஞாபகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி)



http://i157.photobucket.com/albums/t55/sivaa14/untitled_zps0534fbde.png (http://s157.photobucket.com/user/sivaa14/media/untitled_zps0534fbde.png.html)

Siva,

அவன் தான் மனிதன் கொழும்பு கிங்ஸ்லி திரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்க வேண்டிய படம்.
வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்த மனிதன் வாலிபனின் வருகையால் முன் அறிவுப்பின்றி கிங்ஸ்லியில் இருந்து ஜெசீமா திரைக்கு மாற்றப்பட்டது. கொழும்பு நகரில் 17.09.76 முதல் 26.12.76 வரை ஓடியது (98 நாட்கள்+ 3 பௌர்ணமி நாட்கள்).

கொழும்பு நவா திரையிலும் சில வாரங்கள் ஓடியது (Deatails not available).

Russellbpw
13th July 2014, 09:13 AM
RKS,
I am the one who proposed your name to open the new thread.
Actually,all these eruptions started when I appreciated you openly in thread -12.

Thanks for Line No. 1

Is that so ? for Line No. 2

All i request is, Let such eruptions need not erect more and nothing else sir

RKS

sivaa
13th July 2014, 09:41 AM
ஆசிரியர்

வைத்தியர்

பொறியிலாளர்

கணக்காளர்

எழுத்தாளர்

விவசாயி

இன்னும் ஏனைய தொழில்கள்

அவர் அவர் தொழிலை அவரவர்களால்தான் செய்யமுடியும்

அசிரியரால் வைத்தியம் பார்க்கவோ பொறியியல் வேலை பார்க்கவோ
கணக்காய்வு செய்யவோ முடியாது
அதேபோலத்தான் ஏனையவர்களால் மற்ரைய தொழில்களை செய்யமுடியாது

கணக்காளரை பார்த்து வைத்தியம் செய் என்றோ
விவசாயியை பார்த்து ஆசிரியர் வேலை பார் என்று
சொன்னால் அவர்களால் பார்க்கமுடியுமா?
அவரவர் அவரவர்களால் முடிந்த தொழிலைதான் செய்யமுடியும்

இல்லை வைத்தியன் விவசாயம் செய்
ஆசிரியன் வைத்தியம் செய்
பொறியியலாளன் ஆசிரியத் தொழிலை கவனி
என்றால் முடியிற காரியமா?

அதுபோலத்தான் இதுவும்
ஒருவரால் முடிந்தது மற்ரவரால்முடியாது
எனவே அவரவர்களுக்கு இயன்றதை அவர்களை எழுதவிடுங்கள்
மற்றவர் எழுத்தில் யாரும் தலையிடாதீர்கள்

ஒருவருடைய பதிவு பிடித்தால் பாராட்டுங்கள்
இல்லையேல் கடந்து செல்லுங்கள்
இந்தத்திரியை பிரகாசமாக எரிய வைப்பது
நம் எல்லோரினது கையிலும்தான் தங்கியுள்ளது

sivaa
13th July 2014, 10:33 AM
மையம் இணையத்தில் இணைந்த அனைத்து
சிவாஜி ரசிகர்களினதும் பெயர்களை என்னால்
முடிந்தவரை அவர்கள் மையத்தில் இணைந்துகொண்ட
ஆண்டு ரீதியாக வரிசைப்படுத்தியுள்ளேன்

அன்பு உறவுகளே நீங்கள் எங்கிருந்தாலும்
மறவால் இங்குவந்து வாரத்தில் ஒன்றோ இரண்டோ
நடிகர்திலகம் பற்றிய பதிவை வழங்கி
இத்திரியினை மேம்படுத்துமாறு அண்ணனின் பெயரால்
அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்
ஒற்றுமையே பலம் நன்றி

joe
kalnayak
saradha.n.a
mr.karthik
sankar1970
mahendraraj
tacinema
groucho070
murali srinivas
chinnakannan
adiram
ragavendra
harish2619
pammalaar
Krishna
j.radhakrishnan
mahesh.k
gold star(sathish)
k.s.shekar
parthasarathy
vasudevan31355
anm(anand)
subramaniam ramanujam
sivaji dhasan
ragulram11
gopal.s
balaa
sunildurai
ganpat
sivaji senthil
uthamaputhiran
vankv
g94127302(ravi)
vcs2107
s.vasudevan
barani
senthivel sivaraj
n j raghavan
spchowthryram
ponravichandran
kiruba
ravikiransuriya
gopu1954
ramdos

விடுபட்டுபோன சில உறவுகள்

P_R
abkhiabhi
plum
tamiz
rangan_08




யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால்
அதனை தவறாக எண்ணாமல்
அனைவரும் வந்து இந்தத் தேரை
தேங்கவிடாமல் இழுத்து செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றென்
வேறு பெயர்கள் தவறியிருந்தால் தெரிந்தவர்கள்
அவர்களது பெயர்களை குறிப்பிட்டுவிடுங்கள்

விடுபட்டுபோன சில உறவுகள்

P_R
abkhiabhi
plum
tamiz
rangan_08

parthasarathy
13th July 2014, 10:53 AM
Dear Sarathy Sir,
Mr.Sudhangan's reply about your comments:
அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? நான் வருட ரீதியாக சிவாஜியை எழுதவில்லை! மனோகராவை மறந்துவிட்டு நான் சிவாஜியை பற்றி எழுத முடியுமா என்ன ?

Dear KCS Sir:

Thank you very much.

While I thank Mr. Sudhangan, I still indicated that because he was mentioned all the films of NT in 1954 except Manohara. Anyway, not only Mr. Sudhangan, but; no one can say about NT's career without mentioning Manohara.

Regards,

R. Parthasarathy

KCSHEKAR
13th July 2014, 11:44 AM
K .c .s ,
காமராஜ் படத்தை மீண்டும் தூசு துடைக்க போகிறார்களாம் நன்றி கெட்டவர்கள். சிவாஜியை விட்டு விட்டு எவனாவது காமராஜ் சரித்திரத்தை சொன்னால் அது எப்படி சரித்திரமாகும்? காமராஜின் கடைசி நிகழ்ச்சியே சிவாஜியின் பிறந்த நாள்தானே? இருட்டடிப்பு செய்வதால் இவர்கள் எதை சாதித்தார்கள்? கொஞ்சம் நீங்கள் இதில் கவனம் செலுத்தி,உரியவர்களிடம் சேர்ப்பீர்களா?
டியர் கோபால் சார்,
நடிகர்திலகத்தை விட்டுவிட்டு காமராஜரின் சரித்திரத்தை எழுதவே முடியாது. ஆனால், அதனை மறைக்கவே பலரும் முயல்கிறார்கள். ஏற்கனவே, கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்திலும் , சென்னையிலுள்ள காமராஜர் நினைவு இல்லத்திலும், காமராஜரை ஒருமுறை நேரில் சந்தித்தவர்களின் புகைப்படங்களெல்லாம் இருக்க, காமாராஜர் - நடிகர்திலகம் புகைப்படம் இல்லாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனை அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றும் இதுவரை பலனில்லை. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல, இந்த காமராஜர் திரைப்பட விஷயத்திலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள நிச்சயம் முயற்சி செய்கிறேன்.

KCSHEKAR
13th July 2014, 11:53 AM
Dear RKS,
தங்களுடைய சிறப்பான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!

Russellbpw
13th July 2014, 01:27 PM
TWO SONGS - SAME SITUATION - TWO DIFFERENT PERFORMANCES


http://www.youtube.com/watch?v=YKo4y7B1iWI


http://www.youtube.com/watch?v=MNx6Oz7KDxc

Russellbpw
13th July 2014, 01:40 PM
எப்பேர்பட்ட விருப்பு வெறுப்பு பார்க்காமல் இந்த பாடலை பாருங்கள். நம்முடைய மனதை ஒரு சில வினாடிகள் பிசையும் இந்த பாடல் முடிவதற்குள்....


நடிகர் திலகத்தின் நடிப்பு என்பது அதுதான் ! அவர் தான் நடிகர் !


http://www.youtube.com/watch?v=ZMUfKlNYulM

Gopal.s
13th July 2014, 06:44 PM
Re-Cap of our Pammalar from Part-7.

1963-ம் ஆண்டு "குங்குமம்" திரைப்படம் வெளியான சமயத்தில் ["குங்குமம்" வெளியான தேதி : 2.8.1963], திராவிட முன்னேற்றக் கழக இதழ் ஒன்றின் கேள்வி-பதில் பகுதியில், கழகக் கண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வி:

"குங்குமம்" படம் பார்த்தீர்களா?

கேள்விக்கு பதிலளித்தவர் அப்படத்தைப் பற்றி தனது மனதில் பட்ட கருத்தையோ அல்லது நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிததோ அல்லது அப்படத்தில் இடம்பெற்ற மற்ற கலைஞர்களின் பங்களிப்பு பற்றியோ எழுதியிருக்கலாம். அது ஜனநாயக முறை. ஆனால் அவர் என்ன பதில் கொடுத்தார் தெரியுமா?! அதை அறிந்தால் அனைவருக்குமே அதிர்ச்சியாயிருக்கும் ! ஆம், அவர் இந்தக் கேள்விக்கு அளித்த பதில்:

"இந்தப் படத்துடன் சிவாஜி காலி" என்பது தான்.

நமது நடிகர் திலகம் இன்றும் வாழ்கிறார். என்றென்றும் வாழ்வார். பதிலளித்தவர் தான் காலியாகியிருப்பார்.

அவருடைய காலத்தில், அவர் வாழ வேண்டும் என அவரை நேசித்த ஒரு பெரிய கூட்டமும், அவர் வீழ வேண்டும் என அவரைக் கண்டு அஞ்சிய ஒரு கூட்டமும் முழக்கமிட்டு கொண்டிருந்ததது மறுக்க முடியாத உண்மை. அவரைப் பிடிக்காத கூட்டததையும் இரு வகையாகப் பிரிக்கலாம்.

ஒன்று - அவரது சினிமாக் கூட்டத்தை, செல்வாக்கைக் கண்டு ஒரு முகாமுக்கு அச்சம்

மற்றொன்று - அவரது அரசியல் கூட்டத்தை, செல்வாக்கைக் கண்டு இன்னொரு முகாமுக்கு பயம்.

இவை தவிர, கூட இருந்தே குழிப்பறிக்கும் துரோகிகளும் இருந்தனர். எண்ணிலடங்கா எதிர்ப்புகளையும், துரோகங்களையும் சமாளித்து ஜெயக்கொடி நாட்ட அவர் போட்ட எதிர்நீச்சல் இருக்கிறதே, அப்பப்பா.....அது அவரால் மட்டுமே முடியும். ஆரம்பமுதற்கொண்டே கலையுலகிலும் சரி, அரசியலிலும்
சரி, நடிகர் திலகம் எதிர்நீச்சல் போட்டேதான் சாதித்துக் காட்டினார். எந்த நிலையிலும், எந்த சமயத்திலும், எந்தவொரு காலகட்டத்திலும் அவர் தன்னை எதிர்த்தவர்களையோ, துரோகம் செய்தவர்களையோ பழி வாங்கியதில்லை. பழிவாங்கும் எண்ணம் கூட அவருக்கு கிடையாது. அப்பேர்ப்பட்ட ஒரு தெய்வப்பிறவி அவர்.

நமது நடிகர் திலகம் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தது மார்கழி 1954 [அதாவது 16.12.1954 - 13.1.1955] காலகட்டம். "பராசக்தி" [17.10.1952] வெளியான பிறகு சிவாஜி அவர்கள் சற்றேறக்குறைய இரண்டே கால் வருடங்களே கழகத்தில் இருந்திருக்கிறார். "பராசக்தி" முதல் "தூக்கு தூக்கி" [26.8.1954] வரை அவரது எல்லா பட விளம்பரங்களும், செய்திகளும் கழக ஆதரவு ஏடுகளில் வந்திருக்கிறது. அதன் பின்னர் அத்திபூத்தாற் போலத்தான் அவரது செய்திகளும், பட விளம்பரங்களும். கழகத்தை விட்டு அவர் கிளம்புவதற்கு முன்பு வெளியான படம் "எதிர்பாராதது" [9.12.1954]. எதிர்பாராத விதமாக அவர் திருமலை திருப்பதிக்கு திடீரென புனிதயாத்திரை செல்ல அதன் பின்னர் எதிர்பார்த்தது, அந்தப் பெருமாள் நினைத்தது நல்லபடியே நடந்தது. மொத்தத்தில் திரையுலகிற்கு அவர் வரக் காரணமும் பெருமாள், திரையுலகில் அவருக்கு சிறந்ததொரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததும் பெருமாள். கழகத்துக்குள்ளே குடத்துக்குள் நீராய் இருந்து வந்த அவர், புதுவெள்ளமாய்ப் பொங்கி "காவேரி"யாய்ப் பெருக்கெடுத்தார். ஆம், கழகத்தை விட்டு வெளிவந்த பின், வெளிவந்த படம் "காவேரி" [13.1.1955]. "காவேரி" 100 நாள் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. முந்தைய படமான "எதிர்பாராதது"வும் 100 நாள் வெற்றிப்படம். மேலும், 1955-ல் "மங்கையர் திலக"மும்[100 நாள்], "கள்வனின் காதலி"யும் சிறந்த வெற்றிப்படங்களாக வலம் வந்தன. "முதல் தேதி", "உலகம் பல விதம்", "கோடீஸ்வரன்" ஆகியவை Average ரகத்தில் ஓடியவை.

1956-ல், "அமரதீபம்", "பெண்ணின் பெருமை" இரண்டும் 100 நாள் பெருவெற்றிப்படங்கள். "நான் பெற்ற செல்வம்" நேரடியாக 100 நாள் ஓடவில்லை என்றாலும் வசூலில் சக்கை போடு போட்டது. பல ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. பகைமை பாராட்டாமல், ஏற்கனவே கழகத்தில் இருந்த போதே, ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்த படங்களான "ராஜா ராணி", "ரங்கோன் ராதா" ஆகிய படங்களை பிரச்னை ஏதுமின்றி முடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். "ரங்கோன் ராதா" வெற்றி பெற்றது. தி.மு.கழக முக்கியப் பிரமுகரான ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் கதை-வசனத்தில் "வாழ்விலே ஒரு நாள்" படத்தில் நடித்தார்.

1957-ல், "வணங்காமுடி" 100 நாள் பெருவெற்றிக்காவியம். அதற்கு அடுத்த நிலையில், "மக்களைப் பெற்ற மகராசி", "தங்கமலை ரகசியம்", "பாக்கியவதி" ஆகியவை அமோக வெற்றியைப் பெற்றன. "புதையல்" நல்லதொரு வெற்றிப்படம். "அம்பிகாபதி" ஓட்டத்தில் OK.

1958-ம் ஆண்டு குறித்து முரளி சாரும், 1959 பற்றி சகோதரி சாரதாவும் கூறி விட்டார்கள். அதற்கு பின்னர் அவர் சாதித்த விண்ணளந்த சாதனைகள் அனைவரும் அறிந்ததே.

அவர் மண்ணை விட்டு மறைந்து பத்து ஆண்டுகள் ஆகப் போகிற நிலையிலும் என்றென்றும் வான்புகழ் கொண்டு,

அவர் வாழ்கிறார் ! வாழ்கிறார் !! வாழ்ந்து கொண்டேயிருக்கிறார் !!!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
13th July 2014, 10:29 PM
திரு கோபால் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை நான் மதிக்கிறேன். மற்றபடி இத்திரியில் என்னைத் தனிமைப்படுத்த எண்ணி இழிவான வகையில் புண்படும் வகையில் விமரிசித்தவருக்கு என் பதில் அதுவே. திரிநாகரீகம் சக பதிவாளர்களின் மனங்களை 'ஹாஸ்யம்' , 'self proclaimed தரக்கட்டுப்பாடு' ... என்னும் போர்வையில் தொடர்ந்து காயப்படுத்திவரும் உங்களிடம் நானகற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணிகளை நீங்கள் தொடருங்கள். எனது பணியை பங்களிப்பை தேவையில்லாமல் குறுக்கிட வேண்டாம். திரி பொதுவான ஒன்று. Warning should have been given to you in several occasions....you are talking about that!

செந்தில் சார்,

இதுவரை நீங்கள் நாகரிகத்தின் எல்லை மீறி ஒரு பதிவு கூட இட்டதில்லை. இப்போதும் அந்த ஒரு பதிவு கூட மற்றொரு நபர் உங்கள் மேல் தொடுத்த வார்த்தை தாக்குதலினால் வந்த எதிர் வினையே என்பதையும் புரிந்துக் கொள்கிறேன். ஆயினும் நமது திரியை பொறுத்தவரை அனைவரும் நடிகர் திலகம் என்ற ஒரு மனிதனின் மேல் வைத்த அன்பின் காரணமாகவே ஒரு குடையின் கீழ் கூடியிருக்கிறோம் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை. சம கல்வியறிவு படைத்தவர்கள்தான் இந்த திரியில் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று சொன்னால் நானே உங்கள் முன் தேற மாட்டேன். காரணம் நீங்கள் முனைவர். நான் வெறும் பட்டதாரி மட்டுமே. எனவே இது போன்ற சிறிய அளவிலேனும் சிலர் மனதில் பேதம் தோன்றக் கூடிய வாக்கியங்களை தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Murali Srinivas
13th July 2014, 10:49 PM
கோபால்,

உங்களின் ஒன்றரை பக்க நாளேடு ரசனையாக் இருந்தது. என் எழுத்து நடையும் களப் பின்னணியும் அழகாய் வடிவமைத்திருந்தீர்கள். அது போன்றே கார்த்திக் மற்றும் சாரதியின் நகல் பதிவுகளும். சாரதா நகல் மட்டும் சற்று முழுமையடையாதது போல தோன்றியது.

ஒருவரின் நடையைப் போலவே எழுதுவது என்பது கடினமான வேலை. அதை வெகு இலகுவாக கையாளும் உங்களை பார்க்கும் போது மீண்டும் அதே கேள்விதான் மனதில் எழுகிறது. இது போன்ற மற்றும் திருவிளையாடல் அலசல் போன்ற பதிவுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் எத்தனை ஆக்கபூர்வமாக இருக்கும்? இனி மேலாவது இதை மட்டும் செய்வீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன்

ஆமாம், ராகவேந்தர் சார், வாசு மற்றும் சின்னக் கண்ணன் இவர்களை எல்லாம் ஏன் விட்டு விட்டீர்கள்?

sivaa
13th July 2014, 11:37 PM
Siva,

அவன் தான் மனிதன் கொழும்பு கிங்ஸ்லி திரையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்க வேண்டிய படம்.
வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்த மனிதன் வாலிபனின் வருகையால் முன் அறிவுப்பின்றி கிங்ஸ்லியில் இருந்து ஜெசீமா திரைக்கு மாற்றப்பட்டது. கொழும்பு நகரில் 17.09.76 முதல் 26.12.76 வரை ஓடியது (98 நாட்கள்+ 3 பௌர்ணமி நாட்கள்).

கொழும்பு நவா திரையிலும் சில வாரங்கள் ஓடியது (Deatails not available).

தகவலுக்கு நன்றி ஜீவ்
2 தியேட்டர்களில் 100 நாட்கள்
ஓடியிருக்கவேண்டிய படம் ஒரு தியேட்டர்
தவறிவிட்டது
(என்னுடைய pm பார்க்கவும்)

eehaiupehazij
14th July 2014, 04:47 AM
செந்தில் சார்,

இதுவரை நீங்கள் நாகரிகத்தின் எல்லை மீறி ஒரு பதிவு கூட இட்டதில்லை. இப்போதும் அந்த ஒரு பதிவு கூட மற்றொரு நபர் உங்கள் மேல் தொடுத்த வார்த்தை தாக்குதலினால் வந்த எதிர் வினையே என்பதையும் புரிந்துக் கொள்கிறேன்.எனவே இது போன்ற சிறிய அளவிலேனும் சிலர் மனதில் பேதம் தோன்றக் கூடிய வாக்கியங்களை தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். by Murali Sir

dear Murali Sir. Grateful to you for your rational way of understanding my pains. When we go up by educational qualifications naturally we get refined and maturity of mind too goes up to become an unbiased human being showing no aggressiveness or differences among our fellow beings. This I had always followed and practiced in my life and I never wanted to exhibit my qualifications ever since I entered this thread. When Hyderabad Ravi Sir came to know about my academic credentials he started addressing me"Dr." but I politely requested him not to do so since it may create differences and we may not freely move with to deliberate on the common platform of NT's glory. Even I had expressed due respects to Mr.Gopal and Mr. Ramdoss, who are much younger to me, if my earlier postings are referred to. However it was unfortunate that my self respect was put to an acid test when some filthy and derogatory remarks, like illiterates, about my write-ups were openly instigated in this thread instead of a decent way of expressing through a PM to me. If one, who is really unbiased and rational goes through my entries right from the beginning, and their inteludes too, he can understand that I never made any 'politics' or 'self proclamation as leader' like that! I only rised up to the occasion to persuade our friends to keep the thread moving instead of sagging at the end of the earlier thread at the call of RKS Sir to all fellow hubbers. My intention was not to become a competitor for anybody who is virtually unknown to me and insignificant as well, but only to contribute my share for the glory of NT, which I did in my original ways of articulated expressions, that's all! Point blank attack with vested interest to degrade me... kindly tell me sir, is it right?. Murali Sir, as the respected moderator could also take note at the initial stage itself... I was helpless with no other fellow hubbers coming to my support! Hence out of my anguish, I admit I slipped to exhibit my status only to inform that gentleman to correct his approach before mudslinging on a person who never did any harm to him, without knowing about him!
I do not have ill feelings on any one of this thread and I regret for whatever has happened from my part to have hurt anybody's feelings. But what about the person or persons who opted to degrade me!?will they also regret for the harsh words used on me? I can prove my prowess in write-ups in a better way...but there is no need for me! I just want to keep off this thread having understood the way it is being taken up lest a feel of 'monopoly'.

No more hastles from my side Sir. From my point of view, as the person unnecessarily got a beat...I reiterate that my reaction was just a response to an impulse! Let this not happen to anybody else in future...Good luck! My fellow hubbers... leave this issue at this stage to your conscience as I am totally out of this thread now but will continue to do the service to NT in my way outside. I thank my friends who expressed their soft words of heal personally.Happy if those gentlemen have a feel of winning and me lost. Regretted again, from my part.

Gopal.s
14th July 2014, 08:11 AM
தமிழில் ஒரு பழ மொழி ஞாபகத்துக்கு வருது.




சரக்கு முறுக்கா ,செட்டியார் முறுக்கா என்று.




சோதிப்புக்கு ஆட்படாத வரை எல்லோரும் புத்தர்களே.ஆட்பட்ட பிறகுதான் சாயம் எத்தனை முறை வெளுத்து கந்தையாவது ?"முனை"ந்தாலும் முனிவர் போல பேசும் முனைவரால் சினம் காக்க முடியவில்லையே ,கந்தையா ,காப்பாற்று.

eehaiupehazij
14th July 2014, 11:20 AM
எனக்கும்தான்...... உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. அதன்கொடுப்பினை வாழ்நாள் முழுவதும் புழுங்கியே பொசுங்கவேண்டியதுதான்!!

Mr. Gopal. Whoever you are... Kindly dont try to drag this issue as I have already expressed my regrets in a polite way in response to our respected moderator's posting.

Dear Moderator. / dear RKS sir. I am not a stumbling block for the movement of this thread, as I had volunteered to keep away, and now kindly realise the situation with such type of intentional dragging!! If he continues, I will also see to it to the end! then don't blame me, as I have gone out to keep this thread run for the cause of NT's glory rather than personal projections!

அடுத்தவர் பதிவில் குதிரையேறும் 'தரக்கட்டுப்பாடு' மே(பே)தையால் தராதரம் தர இயலவில்லையே! ஒளிக்கடவுளே!
திரி தரம் திரிந்துவிடாமால் காப்பாற்று!

Gopal.s
14th July 2014, 11:29 AM
கோபால்,

அது போன்றே கார்த்திக் மற்றும் சாரதியின் நகல் பதிவுகளும். சாரதா நகல் மட்டும் சற்று முழுமையடையாதது போல தோன்றியது.


அன்புடன்

ஆமாம், ராகவேந்தர் சார், வாசு மற்றும் சின்னக் கண்ணன் இவர்களை எல்லாம் ஏன் விட்டு விட்டீர்கள்?
அதன் பேர் நகல் பதிவல்ல.என்னுடையது நக்கல் அங்கத பதிவு.

Gopal.s
14th July 2014, 11:32 AM
அடடா, முல்லை நில கிணற்று தவளை ,குருவி,பருந்தை எல்லாம் தெரிந்து வைத்துள்ளதே.

Gopal.s
14th July 2014, 11:42 AM
டாக்டர் சார்,



இவ்வளவு முரளி சொல்லி,நாங்கள் அடங்கிய பிறகும்,கடைசி பதிவிலும் ,அதே தொனி .illiteracy என்ற வார்த்தை பிரயோகம் வேறு.



இதே ராமதாஸ் என் மேல் தூஷனை செய்த போது ,உங்கள் பார்வையில் Stalwart ஆக தெரிந்தது எப்படி?தற்போது நீங்களே ஆசிரியர் என்று ஒப்பு கொண்ட அவர் illiterate ஆனது எப்படி?ஓய்வு பெற்ற ஆசிரியரும் டாக்டர் ஆக இருக்க வாய்ப்பு உள்ளதே?ஆராய்வோம்.

eehaiupehazij
14th July 2014, 11:59 AM
Please concentrate! Best of luck within our lifetime!!
கல்லுக்குள் பதுங்கியிருக்கும்பாலைநிலத்தேரையே !

Gopal.s
14th July 2014, 12:17 PM
அடடா ,வாயிலே நல்ல வருதே.முரளி சார் கைகளை கட்டி விட்டாரே? பேசாமல் டாக்டர் prescribe பண்ணிய படி P .M தான் சிறந்தது. இதையெல்லாம் public ஆ எழுத எனக்கே கூச்சமா இருக்கு.

eehaiupehazij
14th July 2014, 12:24 PM
அடடா ,வாயிலே நல்ல வருதே.முரளி சார் கைகளை கட்டி விட்டாரே? பேசாமல் டாக்டர் prescribe பண்ணிய படி P .M தான் சிறந்தது. இதையெல்லாம் public ஆ எழுத எனக்கே கூச்சமா இருக்கு.


PM is better Mr.Gopal. I thank you since you also pave way for the smooth run of the thread. You write whatever you feel like writing! I enjoy since I continue to learn some more with your interactions!! And it will serve as an outlet for you to pour out all your anger on me so that at one stage you will become soft and sober.

Gopal.s
14th July 2014, 02:06 PM
ஹா ஹா ஹா,முரளி சார்,



நானும் செந்தில் சாரும் பேசி வைத்து விளையாடி கொண்டோம். நட்பான ஜாலி சண்டை. பாருங்கள் திருவிளையாடல் போட்ட போது யாரையும் காணோம்.இப்போ நிறைய விருந்தாளிகள். செந்தில் சாரும் சும்மாதான் விளையாடினார்.

Don't worry. No more fights in this thread and I will concentrate only on my postings. Do you remember similar thing done by Kamal &Gemini in Anandha Vikatan?

Gopal.s
14th July 2014, 02:28 PM
புரியல,புரியல என்று எல்லோரும் குறை படுவதால்,நிஜமாகவே எல்லோருக்கும் புரியும் படி எனக்கு மிக பிடித்த 1973 ஆம் வருட படம் ஒன்றை ஆய்வுக்கு எடுக்கிறேன்.கோபாலின் புரியும் படியான முதல் விமர்சன் ஆய்வு.

Murali Srinivas
15th July 2014, 12:50 AM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/10553464_780064792043539_2422004576901627067_n.jpg

[புகைப்படத்திற்கு நன்றி வாசு சார்!]

இன்றைக்கு 111 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் உதித்த துருவ நட்சத்திரமே!

விருதுபட்டி ஈன்றெடுத்த கர்ம வீரரே!

சுதந்திர பாரதத்தின் சோஷலிச சிற்பியே!

விடுதலை இந்தியாவில் தமிழகத்தின் விடிவெள்ளியே!

1947-க்கு பின் இந்த

அறுபத்தேழு ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரே ஒரு பொற்கால ஆட்சி வழங்கிய அற்புத முதல்வனே!

தொழிற் புரட்சி ஏற்படுத்திய தொழிலாளர் தோழனே!

பல்வேறு அணைகளை கட்டி பாசன வசதியை மேம்படுத்தி

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்த ஏழை பங்காளனே!

பள்ளி சிறார்களுக்கு மதிய உணவு அள்ளி தந்த படிக்காத மேதையே!

எண்ணிக்கையில் வெறும் 9 அமைச்சர்களை வைத்துக்கொண்டு [அதிலும் முதல் இரண்டு அமைச்சரவைகளில் எட்டே பேர்] ஊழலற்ற அரசாங்கமாய் வெளிப்படையான நிர்வாகமாய் எண்ணிலடங்கா மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றிய செயல் வீரனே!

அகில இந்தியாவையும் ஆர் ஆள வேண்டும் என்பதை

அகிலத்திற்கே அறிவித்த பாரத ரத்தினமே!

ஆட்சியிலிருந்தவரை ஆராலும் தோற்கடிக்கப்பட முடியாத சாதனை சரித்திரமே!

1947-க்கு பின் இந்த

அறுபத்தேழு ஆண்டு தமிழக வரலாற்றில்

ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று

ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து மீண்டும்

ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று

வெற்றி பெற்ற ஒரே தமிழக தலைவனே!

என்றென்றும் எங்கள் பெருந்தலைவனே!

ஏங்கி கிடக்கிறோம் பல்லாயிரம்

எப்போது வரப்போகிறது உன் மறு அவதாரம்

அன்றுதான் ஆரம்பமாகும்

தாழ்ந்து கிடக்கும் தமிழகம்

தலை நிமிரப் போகும் பொற்காலம்!

அன்புடன்

eehaiupehazij
15th July 2014, 04:49 AM
dear Murali Sir. A timely write-up on our 'Thennaattu Gandhi'the legend living in our hearts and minds forever. NT Ninaivu Naal nerungum velayil, a fitting tribute with NT, the ardent follower of Shri. Kamaraj, the Karmaveerar who wiped out the hungerpains of children through his Noon Meal scheme

Gopal.s
15th July 2014, 05:09 AM
பெரும் தலைவர் காமராஜர் அவர்களுக்கு அவர் பிறந்த நாளில் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.



இந்த நேரத்தில் சில விண்ணப்பங்கள்.



காமராஜர் தன்னுடைய அற்புதமான காமராஜர் திட்ட வலையில் அவரே வீழ்ந்து ,காங்கிரெஸ் ,தமிழகத்தில் தலையெடுக்க விடாமல் வீழ்ச்சியுற வைத்தார். பக்தவத்சலத்தின் ஆட்சியே காங்கிரஸ் முதல் வீட்சி. திராவிட கட்சியின் (அப்போது ஒன்றுதான்) எழுச்சிக்கு இணையாக ,தமிழகத்தில் காங்கிரஸ் திட்டமிடவே இல்லை.

தேசிய அரசியல்,நேரு மறைந்த பிறகு கிங் மேக்கர் என்பதெல்லாம் ஒரு புறம். இந்திரா அழகாக திட்டமிட்டு சீனியர் தலைவர்களை டம்மியாக்கி விட்டார்.



இதனால் பெரும் இழப்பு தமிழ் நாட்டுக்கு. தன் உயரம், limitation தெரியாத ,தேசிய விளையாட்டு காமராஜ் திட்டம்.



இந்த நேரத்தில் காங்கிரஸ் புத்துயிர் பெற,தன்னுடைய புகழை பணயம் வைத்து,பலன் கருதாமல் உழைத்த சிவாஜி என்ற நல்ல உள்ளம் கொண்ட ,பெரும் தலைவரின் தொண்டரை,பெரும் தலைவராலேயே அங்கீகரிக்க பட்டு, இறப்புக்கு முன் அவர் இல்லம் தேடி சென்ற அவரின் செல்ல பிள்ளையான சிவாஜி அவர்களை காங்கிரஸ் நன்றாக உறிஞ்சி,அவர் உழைப்பை பயன் படுத்தி ,அவரை கறிவேப்பிலை போல நடத்துவது வருத்தமளிப்பது.ஓரளவாவது காங்கிரஸ் 1967 முதல், 1987 வரை தமிழ் நாட்டில் ஜீவித்தது சிவாஜியின் ரசிகர் கூட்டத்தால் மட்டுமே. என்னை மாதிரி பலரை காங்கிரஸ் கட்சிக்கு ஈர்த்த பெருமை சிவாஜிக்கு மட்டுமே.



சத்யமூர்த்தி பவன், காமராஜ் மணி மண்டபம்,நினைவு இல்லம்,காமராஜர் சினிமா படம் இவற்றில் நடிகர்திலகத்தின் பங்கை உரிய வகையில் அங்கீகரித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் ,காங்கிரஸ் ,திரும்ப தூசு தட்ட இருக்கும் காமராஜ் சினிமா சிவாஜி ரசிகர்களின் புறக்கணிப்பை சந்திக்கும்.உரியவர்களுடன் சேர்ப்பிக்க வேண்டியது ராகவேந்தர்,சந்திர சேகர் போன்றோர் கடமை.



சிவாஜியை செல்ல பிள்ளையாக கருதிய காமராஜருக்கு ,அவர் நினைவு பிறந்த நாளில் எங்கள் மானசீக தலை வணக்கம்.

RAGHAVENDRA
15th July 2014, 07:52 AM
முரளி சார் கோபால் சார் இருவரின் கருத்துமே நம் அனைவரின் கருத்தும்.

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Kamarajar6.jpg

பெருந்தலைவர் பிறந்த நாளில் மாலை அணிவித்து விட்டு மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற மனப்போக்கில் இருக்கும் தமிழக காங்கிரஸார் இருக்கும் வரை திராவிட இயக்கங்களின் தாக்கம் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.

தவறு திராவிட இயக்கங்களின் மீதல்ல.

தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அரசியல் காய்களை நகர்த்தாத காங்கிரஸின் பிற்போக்குத் தனமே இதற்குக் காரணம்.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத வகையில் தமிழக மீனவர்களின் அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இதற்கெல்லாம் காமராஜர் தான் வழி காட்ட வேண்டும்

joe
15th July 2014, 08:23 AM
பெருந்தலைவரே!
உன்னாலே படித்தோம் .உன்னாலே வளர்ந்தோம் .உயிருள்ளவரை உன்னை மறக்க மாட்டோம்
--உன்னை கைவிடாத நாஞ்சில் நாட்டுக்காரன் என்ற பெருமையுடன்

Gopal.s
15th July 2014, 09:16 AM
நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா? அல்லது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமை தேசங்களில் ஒன்றின் நீட்சியாக வாழ்கிறோமா? சில விடுதிகளில் வேட்டி கட்டி உள் செல்ல தடையாம்.அதுவும் தமிழ் நாட்டில்?? என்ன பைத்தியகாரத்தனம்?



நான் சென்ற பல நாடுகளில் ,குறிப்பாக இந்தோனேசியாவை எடுத்து கொள்வோம். அங்கு dress code -Formal wear என்று குறித்திருந்தால் கோட்டு சூட்டு அல்லது அதற்கு மாற்றான அவர்கள் பாரம்பரிய தேசிய உடையான batik சட்டை (முழுக்கை)in பண்ணாமல் அணிய பட்டால் அது formal ஆகவே கருத படும்.அவர்கள் பாரம்பரியத்தை அவ்வளவு மதிக்கிறார்கள்.



நம் அறிவு கெட்ட ,தமிழ் மேட்டு குடிகளுக்கோ(எல்லா சாதி பணக்கார ,மேல் நடுத்தரவர்க்கங்களும் அடக்கம் ) ,நம் கலாசார உடை வேட்டி என்றால் கேவலம். தமிழ் மொழி என்றால் இளப்பம். பிளாஸ்டிக் பைக்கு(உலகின் அழிவு) பதில் பருத்தி அல்லது சணல் பை (உலகின் நண்பன்)எடுத்து சென்றால் அவமானம். ச்சீ.....இவர்களை பொறுக்கும் நாம் ஒரு நல்ல குடி மகன்களா?



இதை நம் நடிகர்திலகம் (இரண்டு உடைகளும் பொருந்தும் திராவிட அழகன்)திரியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

KCSHEKAR
15th July 2014, 10:20 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarKamarajarArticle14July2014_zps4696909d.j pg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarKamarajarArticle14July2014_zps4696909d.j pg.html)

gkrishna
15th July 2014, 01:58 PM
அருமை முரளி சார்

gkrishna
15th July 2014, 02:09 PM
[QUOTE=Gopal,S.;1147712]நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா? அல்லது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமை தேசங்களில் ஒன்றின் நீட்சியாக வாழ்கிறோமா? சில விடுதிகளில் வேட்டி கட்டி உள் செல்ல தடையாம்.அதுவும் தமிழ் நாட்டில்?? என்ன பைத்தியகாரத்தனம்?

dear gopal sir

இந்த அநியாயம் நீண்ட நாட்களாக சென்னையில் உள்ள எல்லா மனமகிழ் மன்றதில் நடைபெற்று கொண்டு இருக்கிறது . இப்போது மூத்த வழக்கறிஞர் அவர்களுக்கும் நீதிபதி அவர்களுக்கும் நடைபெற்றதால் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. நீதிபதி கிருஷ்ண ஐயர்க்கு 1990 கால கட்டத்தில் இதே போல் நடந்து உள்ளது

Russellisf
15th July 2014, 03:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps0a2baa01.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps0a2baa01.jpg.html)

sivaa
15th July 2014, 05:13 PM
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த தினம் இன்று... 15/07

விருதுப்பட்டி, தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு இந்த ஊரை தெரியும் என தெரியவில்லை. ஒரே ஒரு மனிதனால் இந்த பட்டியின் மேல் இந்தியா மக்களின் பார்வை பட்டது. அவர் தான் பெருந்தலைவர் காமராஜ...ர் அவர்கள். அந்த பட்டி அவர் பிறந்த சில நாட்களுக்கு பிறகு நகர் ஆனது. அது தான் தற்போதைய விருதுநகர். காமராஜர் ,விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார்.

903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.

படிப்பு

”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.

சிறை

காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராசு சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.

அரசியல்

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் தன் பணியைத் தொடங்கினார்.

தமிழக ஆட்சிப் பொறுப்பு

1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.

1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.

வித்தியாசமான அமைச்சரவை

காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:

மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.

அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)

அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.

முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.

அகிலஇந்திய காங்கிரசு தலைமை
மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

கல்விக்கண் கொடுத்தவர்

ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.

“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.

“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.

“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.

“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.

உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.

அணைக்கட்டுகள்

காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.நெல்லை மாவட்டம்தாமிர பரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது. இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொழில் நிறுவனங்கள்

காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.

இறுதிக் காலம்

இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

நன்றி : Wikipedia, Dr.Google

sivaa
15th July 2014, 05:18 PM
அத்தனை பேரும் படிக்கனும் என்கின்றேன்...

வயிற்றில் ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்..? அவனும்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன்..?

ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிகூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்கனும். தேவைப்பட்டால் பகல் உணவிற்கென்று தன...ியாக வரி போடத் தயங்கமாட்டேன்...

அதனால் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு இதே வேலையாக ஊர் ஊராகப் பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன்...!

-காமராஜர்

(அதனால் தான் மக்கள் மனதில் உயர்ந்து நி்ற்க்கிறார்..)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/10489789_777405888976409_2015184419819680824_n_zps d30a840f.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/10489789_777405888976409_2015184419819680824_n_zps d30a840f.jpg.html)

sivaa
15th July 2014, 05:28 PM
மின் உற்பத்தி பற்றி காமராஜர் கொடுத்த விளக்கம்
--------------------------------------------------------------------------
காமராஜரின் பேச்சுப்பாணி எளிமையாக இருக்கும். குழந்தைகளோடு உரையாடுவது போல் இருக்கும். எவ்வளவு பெரிய தத்துவமானாலும் அதை எள...ிமைப்படுத்தி விளக்குவதிலே வல்லவர் காமராஜர். ஒரு தடவை தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றி ஏழை மக்களிடம் காமராஜர் விளக்கினார்.

எப்படி தெரியுமா? மேட்டுத் தெரு பண்ணையார் வீட்டிலே வாரத்துக்கு ஒரு தரம் மொட்டை மாடியைக் கழுவி விடுவாங்க பாத்திருக்கீங்க இல்ல, மூணாவது மாடியிலே கழுவி விடற அந்தத் தண்ணி ஒரு பைப் வழியாக கீழே வரும். அந்தக் குழாய் தரை வரைக்கும் வராது. 3, 4 அடி மேல நின்னுடும்.

அப்படி விழற தண்ணியில் ஊர்ல இருக்கிற மொட்டைப் பசங்க தலையை நீட்டுவாங்க. அவங்களுக்கு அது ஒரு குஷி. மேலே இருந்து வர தண்ணியிலே ஒரு சக்தி இருக்குது. அது குஷியைக் கொடுக்குது.

3-வது மாடியிலேயே ஒருந்து விழற அந்த தண்ணிக்கு இவ்வளவு சக்தின்னா, மலைமேலே இருந்து விழற தண்ணிக்கு எவ்வளவு சக்தி இருக்கும். அந்தச் சக்தியை மலையடிவாரத்திலேயே மிஷின் வச்சுப்பிடிக்கிற அந்த சக்திதான் மின்சாரம். அந்த மின்சாரம் எதற்கு? எல்லாம் உங்களுக்குத்தான்.

Russellisf
15th July 2014, 08:53 PM
பெருந்தலைவர் காமராஜர் பெரும்பாலும் திரைப்பட
நிகழ்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை . ஒரு முறை
ஏவிஎம் நிறுவனத்தின் ' பார்த்தால் பசி தீரும் ' படத்
தொடக்க விழாவில் கலந்து கொள்ள நேரிட்டது . அப்போது
பேசிய பெருந்தலைவர் , " இந்தப் படத்தின் தலைப்பு ,
' பார்த்தால் பசி தீரும் ' என்பது . பார்த்தால் ஒருவனுக்கு
எப்படி பசி தீரும் ? சாப்பிட்டால் தானே தீரும் . பிறகுதான்
எண்ணிப் பார்த்தேன் . இந்தப் படத்தை மக்கள் பார்த்தால் ,
படம் எடுத்தவர்களின் பசி தீருமல்லவா " என்று
நகைச்சுவையுடன் குறிப்பிட்டாராம் .

sivaa
15th July 2014, 09:08 PM
அன்புமிக்க உறவுகளே
பங்களிப்போர் பங்களித்தால்தான் பார்வையாளர்களை கொண்டுவரமுடியும்

பதிவிருந்தால்தானே பார்வையாளர்கள் பார்ப்பதற்கு

எல்லோரும் பார்வையாளர்களானால் பதிவு எங்கிருந்து வரும்

நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்

எல்லாவற்ரையும் மறந்து
எல்லோரும் ஒன்று சேருங்கள்

பழையன மறப்போம் புதியன நினைப்போம்
எல்லோரும் வாருங்கள் பதிவிடுங்கள்

நன்றி நன்றி நன்றி

sivaa
15th July 2014, 09:12 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/003_zps19567123.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/003_zps19567123.jpg.html)

sivaa
15th July 2014, 09:13 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/001_zpsbc385a07.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/001_zpsbc385a07.jpg.html)

sivaa
15th July 2014, 09:14 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/a43_zpsc5cf4037.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/a43_zpsc5cf4037.jpg.html)

sivaa
16th July 2014, 10:01 AM
http://i265.photobucket.com/albums/ii215/kumarasamyy/meee_zps3abd65e6.jpg (http://s265.photobucket.com/user/kumarasamyy/media/meee_zps3abd65e6.jpg.html)
குளத்தில கிடந்த 50 மீன்களில்
பலவற்றை பருந்து இப்படித்தான் கவ்விக்கொண்டுபோய் சேர்குது

sivaa
16th July 2014, 10:13 AM
https://scontent-a-lhr.xx.fbcdn.net/hphotos-xpa1/t1.0-9/10384688_639245796170987_4621629850385668391_n.jpg

சோத்துக்கு ஏங்கும் நிலையில் நாங்கள் இருக்க... உங்கள் பிள்ளைகள் பீட்சாவை வாங்கி வீதியில் வீசுதல் தகுமோ..??!

KCSHEKAR
16th July 2014, 11:02 AM
நடிகர்திலகம் பற்றி பெருந்தலைவர்

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamTamilnaduLeaders/Kamarajar_zpsc0e846db.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamTamilnaduLeaders/Kamarajar_zpsc0e846db.jpg.html)

KCSHEKAR
16th July 2014, 11:04 AM
பெருந்தலைவர் பற்றி நடிகர்திலகம்

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamTamilnaduLeaders/NTaboutKamarajar_zpsd8f5f29a.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamTamilnaduLeaders/NTaboutKamarajar_zpsd8f5f29a.jpg.html)

KCSHEKAR
16th July 2014, 11:08 AM
நடிகர்திலகம் சிவாஜி 13-ஆம் ஆண்டு நினைவு நாள் - 21-07-2014

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/FunctionatStatue_zpse42142b2.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/FunctionatStatue_zpse42142b2.jpg.html)

KCSHEKAR
16th July 2014, 11:09 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/SivajiInvitationFrontKCS_zps743aecd1.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/SivajiInvitationFrontKCS_zps743aecd1.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/InvitationPg2_zps748eab98.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/InvitationPg2_zps748eab98.jpg.html)

Russellbpw
16th July 2014, 11:23 AM
தமிழக அரசியல் வரலாற்றில் கர்ம வீரர் காமராஜர் போல உண்மையான பொற்கால ஆட்சி செலுத்திய முதலமைச்சர்கள் எவரும் இல்லை !

மக்களுக்கு தேவையில்லாத திட்டங்கள் எதுவும் அவர் கொண்டுவரவில்லை. கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்கு பார்வை கொண்ட அருமையான திட்டங்கள்.

காமராஜர் போல ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட முதல்வர் தமிழகத்தில் இதுவரை யாரும் இல்லை இனி வரபோவதும் இல்லை.

கல்விக்கண் திறந்துவைத்த காமராஜர் குழந்தைகள் பசியுடன் இருந்தால் படிப்பு வராது என்பதன் அவசியம் உணர்ந்து மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார்.

அதற்க்கு நடிகர் திலகமும் முதல் ஆளாக ஒரு லட்சம் ருபாய் பண்டித ஜவஹர்லால் நேஹ்ருவிடம் கொடுத்தார், காமராஜர் மற்றும் c சுப்ரமண்யம் ஆகியோர் முன்னிலையில்

இந்த திட்டத்தின் மூலம் உண்மையிலயே குழந்தைகள் பசியாறி நன்றாக படித்தார்கள்.

இதே திட்டம் பிறகு என்னவெல்லாமோ விரிவுபடுத்தி...இன்று 3 முட்டை..வாழைபழம்...(இன்னும் தாம்பூலம் மட்டும் தான் இல்லை) இப்படி தேவையில்லாமல் குழப்பி குதப்பி, ஊழலுக்கு ஒரு திட்டமாக பயன்பட்டுவருகிறது.

இவ்வளவும் வயிறு முட்ட கொடுத்தால் எப்படி ஒரு குழந்தை மதியம் படிக்கும்..? தூக்கம் தான் வரும் !

கொண்டு வரும் திட்டம் கூட பயன் பெரும் வகையில் செயல்படுத்தவேண்டும்.

கர்மவீரருக்கு அந்த vision இருந்தது...மற்றவர்கள் இதை ஒரு vote bank நிரப்பும் ஒரு திட்டமாக எந்த ஒரு தரமும் இல்லாமல் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் !

அரசியலிலும் சரி சொந்த வாழ்கையிலும் சரி...கர்மவீரர் எவனுக்காகவும் பரிந்துபேசியதில்லை, பயந்ததும் இல்லை. !

அனால் ஒரு சிலர் , என்னமோ கர்மவீரர் யாரையோ பார்த்து பயந்தது போல ஒரு மாயை அந்தகாலத்திலிருந்து பரப்பிகொண்டுவருவது வேதனையான விஷயம். மற்றவர்களை போல பதவிக்கு ஆசைபட்டவரில்லை கர்ம வீரர் .

பிரதமராக பிரகாசமாக வாய்பிருந்தும்...பதவியை துச்சமென நினைத்து மக்கள் சேவையை உண்மையாக செய்தே ஒரே முதல் அமைச்சர் காமராஜர் ஒருவரே !

Russellawz
16th July 2014, 12:34 PM
எங்கள் ஊரில் தூறல் நின்னு போச்சு பட வெளியீட்டு சமயம். 1982 லே என்று ஊகிக்கிறேன். கோமதி தியேட்டர் என்ற புது திரையரங்கு ஒன்று திறக்கப்பட்டது. முதல்படம் தூறல் நின்னு போச்சு போட்டார்கள். என்னுடைய நண்பர் ரிச்சர்ட் என்பவர் வேறு ஒரு பழைய திரையரங்கில் சினிமா படம் ஓட்டும் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். அது அவர்களுடைய குடுமபத் தொழில். அவரை திறக்கவிருக்கும் கோமதி திரை அரங்கிற்கு ஆப்பரேட்டராக நியமித்து விட்டார்கள். அந்தத் திரையரங்கை திறக்க ஏற்பாடு செய்யப்பட்ட விஐபி நம்முடைய நடிகர் திலகம்தான். ஜனத்திரள் என்றால் அப்படி ஒரு ஜனத்திரள். சமுத்திரம் போல கூட்டம் சேர்ந்து ஆரவாரம்.திரையரங்கு தாஜ்மஹால் போல ஜொலிக்கிறது. ரசிகர் மன்ற துணி பாணர்கள் எங்கு பார்த்தாலும் தொங்குகின்றன. சரியாக 9 மணிக்கெலாம் சொன்னபடி சிவாஜி டாண் என்று ஆஜராகி விட்டார். சந்தன நிறத்தில் ஜிப்பாவும்,சட்டையும் அணிந்து கையிலே வாட்ச் கூட கட்டாமல் ரொம்ப எளிமையாக தெரிந்தார். நானும் ரிச்சர்டும் காபின் அறையில் இருந்தோம். பாதுகாப்பாக அழைத்துவரப்பட்ட சிவாஜி ஆபரேட்டர் ரூமுக்குள் நுழைந்தார். மடித்து விடப்பட்ட ஜிப்பா. கருகருவென்று தலைமுடியை நிறைய எண்ணெய் தடவி அழுத்தி வாரி இருந்தார்.பார்க்க ரொம்ப ஸ்டைலாக தெரிந்தார். என் நண்பன் ரிச்சர்ட் ஒரு சிவாஜி பைத்தியம். நான் அதைவிட பைத்தியம். எங்களுக்கு கைகால்களில் நடுக்கம் ஏற்பட ஆரம்பித்து விட்டது.

நேராக உள்ளே நுழைந்த சிவாஜி யார் ஆபரேட்டர் என்று வினவினார். ரிச்சர்ட் அருகில் வந்தவுடன் அவன் தோள் மேல் கூடப் பிறந்த தம்பி போல கையைப் போட்டுக் கொண்டார். தம்பி..இப்போ நான் என்ன செய்யணும் என்றார். மெஷினில் ஒரு சுவிட்சைக் காட்டி இதை நான் சொல்லும் போது அழுத்தினால் போதும் அண்ணே என்றார் ரிச்சர்ட். ஆனால் டைமிங் முக்கியம் அண்ணே நான் சொல்லும் போது நீங்கள் அழுத்தினால் போதும் என்றார்.கீழே கடல் மாறிக் கூட்டம். யாரும் திரையை நோக்கவில்லை. அத்தனை பேரும் ஆபரேட்டர் ரூமையே வெறித்தபடி நோக்கியிருக்க ரிச்சர்ட் முதலில் வேறொரு மிஷினில் ஏதோ செய்ய திரையில் 14,13,12, என்று ரீல்கள் நம்பர் குறைந்து கொண்டே வந்தது. சரியாக 1 வந்ததும் போடுங்கண்ணே என்றார் ரிச்சர்ட். அவர் சொன்னபடி கரெக்டாக புது மிஷினில் சுவிட்சை முடுக்கி தூறல் நின்னு போச்சை தொடக்கி வைத்தார் சிவாஜி. ஒரு சிரமும் படாமல் ரிச்சர்ட் சொன்னதை கவனமாக உற்றுக் கேட்டு சரியான டைமிங்கில் மிஷினை இயக்கினார் பல படங்களில் நடிப்பால் துடிப்பை உண்டாக்கிய சிவாஜி. கீழே பெரும் சப்தம்.பின் தம்பி வரட்டுமா என்று கூறி விடை பெற்றார். அருகில் இருந்த நான் பிரமை பிடித்து நின்று விட்டேன். ரிச்சர்ட் புலம்பித் தள்ளிவிட்டான். தொடர்ந்து அவரால் படம் ஓட்ட முடியவில்லை. சிவாஜி போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். நிறைய ரசிகர் மன்றத்தினர் நடிகர் திலகத்தை வரவேற்று சிலைடுகள் போடச் சொல்லிக் கொடுத்தனர். அதுவும் சிலைடுகளை நிறுத்திக் காட்டு என்று ரிச்சர்ட் கையில் பணம் வேறு தந்தனர். ஐம்பது சிலைடுகளுக்கு மேல் இருக்கும். சிவாஜி சிலைடைப் பார்த்ததும் விசில் பறந்தது.

இன்றுகூட ரிச்சர்டைப் பார்த்தால் அவன் தோளைத் தொட்டு அவனே முத்தமிடுவான். சிவாஜி தொட்ட தோளாம். நேற்று ரிச்சர்ட் கூட தொடர்பு கொண்டபோது செல்போனில் இதுபற்றி பேசினோம்.

DHANUSU
16th July 2014, 01:13 PM
சிவாஜி கணேசன்
- R.P.ராஜநாயஹம்

திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை,
மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை,
’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை
’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!
பராசக்தி மூலம் புயலாக வீசி,
மனோகராவில்கொந்தளித்து ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!
’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக
ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல பேசிய அடுக்கு மொழி வசனங்கள்.
“காவிரி தந்த தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்து
சேர சோழ பாண்டி மன்னர், கோபுரத்துக் கலசத்தில் யார் கொடி தான் பறப்பதென்று இன்று போல் போர்
தொடுத்துக்கொண்டிருந்த காலமது!”
எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.
குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள் ” என்ற குமுறல்.
வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.
தமிழர்கள் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் எங்கள் சிவாஜி கணேசன்.
கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...
இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.
”அன்பாலே தேடிய ”என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.
சபாஷ் மீனா ”காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ”
”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.
கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!
”காதலிக்கிறேன் என்றாள். பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
இடி.. ..மின்னல்! இடி.. மின்னல்!
’ ராதா!ராதா!ராதா’என்ற கதறல்!
தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
’உன்னைச்சொல்லி குற்றமில்லை
என்னைச்சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி’
இன்றைக்கு அடிடா அவளை!ஒதடா அவளை!...
why this கொலவெறி..... என்று வந்த காட்சிகளுக்கெல்லாம் மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே!
ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்!
’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.
’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.
’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா
’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ என்ற வரிகளுக்கு முகத்தின் குளோஸ் அப் மூலம் அர்த்தம் சொன்ன கலை மேதை.
’நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா!
சட்டி சுட்டதடா கை விட்டதடா’
’நவராத்திரி’ நவரச நாயகன்.
’புதிய பறவை’ ஜென்டில்மேன்.
ஸ்டைலாக சிகரெட் குடிப்பதில் எவ்வளவு வகைபாடு காட்டலாம்?’சாந்தி’ படத்தில் -”யார் அந்த நிலவு!ஏனிந்த கனவு!”
சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??
’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள்!தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி!
ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’
’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’
உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 124 படங்களுக்குப்பிறகு புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது கணேசனின் சாதனை வீச்சு.
சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும் முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.
கிருஷ்ணன் பஞ்சு, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.சி.திருலோக்சந்தர் போன்ற இயக்குனர்களின் படைப்புகளில் விதவிதமான அவதாரங்கள் எடுத்த மகத்தான கலைஞன்!
1960களில் மேக்கப் இல்லாமல் வேட்டி சட்டை போட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.
ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.
இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாதஒரே ஹீரோ நடிகர்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்!
ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.
’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்
மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்
புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்...........’
’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.
அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில் ‘என்னடா ! உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்.
நேரில் சந்திக்கிற மனிதர்களை தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.
’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.
திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு காஞ்சி பரமாச்சாரியாள்
காவல் தெய்வம் பட கௌரவ வேடத்திற்கு மதுரை சென்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்
தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்
வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா
( டி.வி.எஸ்).
பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’
1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”
சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!


Very touchy description..I could not concentrate on anything for one hour after reading this article....





Dear RKS

Congratulations on opening 14th thread.

Very glad that you are taking things forward.

Good luck.

Russellisf
16th July 2014, 03:59 PM
சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.

இந்தியாவின் முதல் சினிமா படமான "ராஜா அரிச்சந்திரா''வை தயாரித்தவர் தாதாசாகிப் பால்கே. வாழ்நாள் முழுவதும் திரைப்படத்துறையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறவர்களுக்கு, ஆண்டு தோறும் மத்திய அரசு பால்கே பெயரால் விருது வழங்குகிறது. இந்தியாவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது.

1952-ல் "பராசக்தி'' மூலம் பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்'') கடைசி வரை வழங்கப்படவில்லை. கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய -ஆப்பிரிக்கப் பட விழாவில் விருது பெற்ற சிவாஜிக்கு, அகில இந்திய விருது கிடைக்கவில்லை.

இதன் காரணமாக, பால்கே விருது சிவாஜிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகத்தினர் தீவிரமாகப் போராடினார்கள். கடைசியில் 1997-ம் ஆண்டுக்கான "பால்கே'' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

"பால்கே'' விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் பாலசந்தர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டது பற்றியும், சிவாஜியின் பெயர் முடிவாவதற்கு முன் அந்தக் குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பாலசந்தர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

"எண்ணற்ற படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் அகிலமெல்லாம் புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், வருத்தம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்து வந்தது.

சிவாஜிக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த... சிவாஜிக்கோ மனதில் எந்த வருத்தமும் இல்லை. "நம்ம... நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு'' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

இந்த நேரத்தில்தான் `தாதா சாகேப் பால்கே' விருது வழங்கிட மத்திய அரசு ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு சிபாரிசு செய்பவருக்குத்தான் இனிமேல் விருது வழங்குவது என்றும் தீர்மானித்தது.

குழு நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆண்டில், தென்னிந்தியாவின் சார்பில் உறுப்பினராக என்னை நியமிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து, அதுபற்றி என் சம்மதத்தை கேட்டார்கள். அவர்கள் இப்படிக் கேட்டதும் சிவாஜி பெயரை சிபாரிசு பண்ணிட இது ஒரு நல்ல வாய்ப்பு என எண்ணினேன்.

சிவாஜிக்கு நான் சிபாரிசு செய்துதான் விருது வாங்கித்தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் திறமை உலகறிந்த ஒன்று. இருந்தாலும், ராமருக்கு உதவிய அணில் போல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன்.

சிவாஜிக்கு அந்த விருது வழங்கப்படாமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. இங்கிருந்து பல பேர் சிபாரிசு செய்தாலும், அது நிறைவேறாமலே இருந்தது. இது எல்லாம் எனக்குத் தெரிந்ததுதான்.

அதற்கு முந்திய ஆண்டே நான் பிலிம் சேம்பர் தலைவராக இருந்தேன். அப்போதே நாங்கள் சிவாஜிக்கு விருது வழங்க வேண்டும் என சிபாரிசும் செய்து இருந்தோம். குழு போட்ட பிறகு அதன் முடிவே இறுதியானது என அறிவித்து விட்டார்கள்.

குழுவில் ஆறேழு பேர் இருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து நான் நியமிக்கப்பட்டதைப் போல, ஆந்திராவில் இருந்து நாகேஸ்வரராவ் இருந்தது மிகப்பெரும் பலமாக அமைந்தது. மற்றவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள்.

இது தொடர்பான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பெரும்பாலும் இப்படி விழாக்கள், கூட்டங்களுக்காக நான் பயணிப்பதைத் தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த முறை மும்பை செல்ல தீர்மானித்து, அதன்படி சென்றேன்.

நானும் நாகேஸ்வரராவும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தோம்.

ஓட்டலில் நாகேஸ்வரராவைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சிவாஜிக்கு இந்த முறை விருது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருப்பது தெரியவந்தது.

ஏனெனில் நாகேஸ்வரராவுக்கு ஏற்கனவே விருது கிடைத்து விட்டது. "இந்த முறை சிவாஜிக்கு விருது வழங்கியே தீரவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே நானும் வந்தேன்'' என அவரும் சொன்னார். இருவருக்கும் ஒரே எண்ணம்.

கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் ஒரு வங்காளி எழுந்து, அவர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் எனச் சொன்னார்.

அதே போல் -இந்திக்காரர்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை வலியுறுத்தினார்கள். யாரும் சிவாஜி பெயரைச் சொல்வதாக இல்லை.

பின்னர் நான் எழுந்தேன். "இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது'' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.

"சிவாஜிக்கு இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதித்தது பெரும் தவறு. அவர் மிகப்பெரும் நடிகர். விருது, சிவாஜியை பெருமைப்படுத்துவதாக அமையாது. சிவாஜிக்கு வழங்கப்பட்டால் அந்த விருதுக்குத்தான் பெருமை. ஒரு தலைசிறந்த நடிகருக்கு இந்த விருது கிடைத்தது என்பதால் பெருமை'' என்றெல்லாம் நாங்கள் வாதாடினோம்.

வங்காளத்தில் இருந்து வந்தவர், ஒரு டைரக்டர் பெயரை வலியுறுத்தினார்.

சிவாஜிக்கு அப்போது சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரம். இதனைச் சுட்டிக்காட்டி, "அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?'' என்று பேசினேன்.

இதேபோல் நாகேஸ்வரராவும், "சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு'' என ஆணித்தரமாக பேசினார். "இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநíதி'' என்றார்.

நாங்கள் இப்படிப் பேசவும், மற்றவர்கள் அடங்கிப் போனார்கள். ஆனாலும் வங்காளத்துக்காரர் விடுவதாக இல்லை.

மூன்று பெயர்களை குழு சிபாரிசு செய்யவேண்டும் என்பது விதி. முதலில் சிவாஜியின் பெயர், அதன் பிறகு மற்றவர்கள் பெயர் எனத் தீர்மானித்து விட்டோம்.

குழு தனது சிபாரிசை மத்திய அரசுக்குத் தெரிவித்தது. தமிழ் மக்களின் விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. சிவாஜிக்கு `பால்கே' விருது வழங்கப்பட்டது.

இதை நான் சொல்வதால், சிவாஜிக்கு நான் சொல்லித்தான் விருது வழங்கப்பட்டது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது. அவருக்கு விருது வழங்கும் நேரத்தில் நானும் ஒரு கருவியாக, துரும்பாக இருந்தேன் என்பதற்காகத்தான் அந்த மகிழ்ச்சிக்காகத்தான் சொல்கிறேன்.

தமிழ் மக்களின் நெஞ்சில் பல்லாண்டு காலமாக தேங்கிக் கிடந்த கனவு, சிவாஜிக்கு பால்கே விருது வழங்கப்பட்டதால் நிறைவேறியது.

தமிழ்நாடு பெற்ற தன்னிகரில்லாத அந்தத் தலைமகன் சிவாஜிக்கு விருது என மத்திய அரசு முறைப்படி அறிவித்தது.

மகிழ்ச்சிப் பெருக்கால் தமிழ்நாடு குதூகலித்தது. அந்த நல்ல நாளில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குனர் சங்கம், நடிகர், நடிகையர் வாழ்த்துச் சொல்ல சிவாஜி வீட்டுக்குச் சென்றோம்.

ஆளுயர மாலை அணிவித்து அவரை வாழ்த்தினோம். தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களை அன்போடு வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் சிவாஜி.

நான் அவர் அருகே சென்றதும் என்னைக் கட்டிப்பிடித்து `தேங்க்ï பாலு' எனச் சொன்னார். சொன்னதோடு இல்லாமல் என்னை ஆரத் தழுவிக் கொண்டார்.

அவர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக உணர்ந்தேன்.

நான் அந்த விருது தேர்வுக்குழுவில் இருந்தது அவருக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவாஜிக்காகப் பரிந்து பேசியதை நாகேஸ்வரராவ் கூட சிவாஜியிடம் சொல்லி இருக்கலாம்.

அன்றைய தினம் நாங்கள் மட்டுமல்ல, சிவாஜியும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.

பட்டங்களும், விருதுகளும் சரியான நேரத்தில் சரியானவருக்கு வழங்கப்பட்டு விடவேண்டும் என்பதில் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு.

அந்த வகையில் தாமதம் ஆனாலும், சிவாஜிக்கு உரிய மரியாதை கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.''

இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

gkrishna
16th July 2014, 04:31 PM
டியர் kcs சார்

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் . முடிந்தால் 21ஆம் தேதி உங்களை கபாலி கோயிலில் சந்திக்க முயற்ச்சி செய்கிறேன்
சென்ற ஆண்டு நாம் சந்தித்து உரையாடினோம்

gkrishna
16th July 2014, 05:16 PM
1980 க்கு பிறகு பிறந்த ஒரு வலைபதிவு நண்பர், சிம்மகுரலோன் அவர்களை பற்றிய எழுதி உள்ள ஒரு பதிவு . நண்பர்களின் பார்வைக்கு

http://vayalaan.blogspot.com/2014/07/blog-post_15.html

Murali Srinivas
17th July 2014, 12:38 AM
வாழ்த்துகள் சந்திரசேகர் சார்! நற்பணி விழாவும் அன்னதானமும் எப்போதும் போல் வெற்றிகரமாக நடக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Welcome Back Dhanusu!

நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி அவர் நடித்த சில திரைப்படங்கள் வெளியாகியும் மற்றும் சில வரும் வெள்ளியன்று வெளியாகவும் போகின்றன.

கோபி நகரில் வீராஸ் திரையரங்கில் கடந்த ஞாயிறு (ஜூலை 13) முதல் வசந்த மாளிகை தினசரி 4 காட்சிகள் வீதம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

வரும் வெள்ளி ஜூலை 18 முதல் சென்னை பிராட்வே திரையரங்கில் தினசரி நண்பகல் காட்சியாக வைர நெஞ்சம் திரையிடப்படுகிறது.

மதுரை சென்ட்ரலில் வரும் வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள் வீதம் நடிகர் திலகத்தின் சந்திப்பு வெளியாகிறது. மதுரை சென்ட்ரல் திரையரங்க வளாகமே இப்போதே விழாக் கோலம் பூண்டிருக்கிறது என்ற செய்தியை மதுரையிலிருந்து நண்பர் சந்திரசேகர் பகிர்ந்துக் கொண்டார்.

அன்புடன்

Murali Srinivas
17th July 2014, 12:45 AM
நடிகர் திலகத்தின் மறு வெளியீடுகளின் வெற்றி செய்திகளை பகிர்ந்து கொண்டிருந்த இந்த திரியில் நடுவில் சிறிது இடைவெளி விழுந்து விட்டது. விட்டுப் போன செய்திகளின் சுருக்கம் இதோ.

சென்னை மகாலட்சுமியில் மே முதல் வாரம் திரையிடப்பட்ட வைர நெஞ்சம் பலரின் எதிர்பார்ப்பையும் தாண்டிய ஒரு வெற்றியை அடைந்தது. படம் வெளிவருவதற்கு முன் படம் வெளியான காலத்தில் சரியாக போகாதை சுட்டிக் காட்டி அது போலவே இப்போதும் நடக்கும் என்று ஆரூடம் கூறியவர்களின் வாக்கை பொய்யாக்கி இந்த 2014-ம் ஆண்டு மகாலட்சுமியில் வெளியான பல படங்களையும் பின்னுக்கு தள்ளி அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 70,000/- ஐ தாண்டிய வசூலைப் பெற்றது.

மே இரண்டாம் வாரம் பிராட்வேயில் வெளியான நீதி, அந்த திரையரங்கில் கடந்த 3,4 மாதங்களாக திரையிடப்படும் எந்த படமும் வாடகையை கூட கவர் பண்ணுவதில்லை என்ற நிலையை மாற்றி வாடகையை தாண்டிய வசூலை பெற்று லாபத்தை ஈட்டியது.

ஜூன் முதல் வாரத்தில் மகாலட்சுமியில் வெளியான தங்கச் சுரங்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பைலட்டில் வசூலித்ததை விட அதிகமாக மகாலட்சுமியில் வசூல் செய்தது. அதே நாட்களில் [ஜூன் 6 முதல் 12 வரை] பைலட்டில் நடிகர் திலகத்தின் மற்றொரு மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெளியிடப்பட்ட சூழலிலும் பொதுமக்களின் பேராதரவைப் பெற்று அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 78,000/- அளவிற்கு வசூலித்தது.

அதே நாட்களில் சென்னை பைலட்டில் இரண்டு காட்சிகளாக வெளியான எங்கள் தங்க ராஜா [அதற்கு ஒன்றரை மாதம் முன்புதான் மகாலட்சுமியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியிருந்தது] அந்த குறிகிய கால இடைவெளியையும் தங்கச்சுரங்கதின் போட்டியையும் சமாளித்து கணிசமான வசூலையும் பெற்றது.

மதுரையில் அதே நேரத்தில் சென்ட்ரலில் திரையிடப்பட்ட சங்கிலி திரைப்படம் எப்படி சந்திப்பு சென்னையில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி சாதனை புரிந்ததோ அதே போன்றே சாதனையை புரிந்தது. நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் குறிப்பாக 1980-களில் வந்த படங்கள் ஓடாது என்று கொண்டிருந்ததையெல்லாம் முறியடித்து ஒரு வார வசூலில் ரூபாய் 80,000/- ஐ தொட்டு கணிசமான லாபத்தை வினியோகஸ்தருக்கு பெற்று தந்தது சங்கிலி.

இதே போல் நெல்லையில் எடுத்துக் கொண்டால் நெல்லை சென்ட்ரலில் பராசக்தி ஒரு வார காலம் கலக்கியதை தொடர்ந்து ஸ்டைல் சக்கரவர்த்தியின் ராஜா அதே திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டது. அண்மைக் காலமாக எந்த பழைய படத்திற்கும் கிடைக்காத வரவேற்பை பெற்று ஒரு வார விநியோகஸ்தர் பங்காக சுமார் பதினாலயிரம் [Rs 14,000/-] பெற்று தந்திருக்கிறது.

அதே நெல்லை சென்ட்ரலில் ஜூனில் வெளியான எங்கள் தங்க ராஜாவும் சரி தன பங்குகிற்கு விநியோகஸ்தர் பங்கு தொகையாக சுமார் 11,000/- ரூபாய் பெற்று தந்திருக்கிறது. இதை பார்த்து உள்ளம் பூரிப்படைந்த அரங்க உரிமையாளர் என்னவெல்லாம் நடிகர் திலகத்தின் படங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் கொண்டு வாருங்கள் திரையிட்டு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்பவர் நடிகர் திலகம் என்பதற்கு மற்றும் சில சான்றுகளும் தருகிறோம்.

மதுரையில் ஜெய்ஹிந்தபுரம் ஏரியாவில் அமைந்திருக்க கூடிய B கிளாஸ் தியேட்டர் அரவிந்த். பொதுவாக கிளாஸ் ஆடியன்ஸ் எனப்படுபவர்கள் அந்த திரையரங்கிற்கு வருவதை தவிர்ப்பார்கள். அந்த திரையரங்கில் மே மாதம் மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெற்றிகரமாக ஓடி வாடகைக்கு எடுத்து போட்டவருக்கு லாபம் கொடுத்தது கூட பெரிய விஷயமில்லை. கிளாஸ் படமான உயர்ந்த மனிதன் இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த திரையரங்கில் வெளியிடப்பட்டு அதுவும் வெளியிட்டவர்க்கு ஷேர் பெற்று கொடுத்திருக்கிறது.

இது போன்றே கோவை மாநகரில் அமைந்திருக்கும் டிலைட் திரையரங்கம். கிளாஸ் ஆடியன்ஸ் மற்றும் பெண்கள் தவிர்க்கும் திரையரங்கம். காரணம் அதன் அருகே அமைந்திருக்க கூடிய டாஸ்மாக் பார். இதன் காரணமாகவே அங்கே இரவுக் காட்சி கிடையாது. இப்படிப்பட்ட எதிர்மறையான சூழலிலும் அண்மையில் அங்கு வெளியான தங்கபதக்கம் வெளியிட்டவருக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது.

ஆக எந்த ஊரிலும் எந்த சூழலிலும் எந்த அதிகார அரசியல் பின்பலமும் இல்லாமல் சாதனை புரிபவர் நடிகர் திலகம் என்பது நாம் சொல்லாமலே அனைவருக்கும் புரியும்.அது வரும் காலங்களிலும் தொடரும். அந்த மகிழ்ச்சியான செய்திகளை நாம் இங்கே பகிர்ந்து கொள்வோம்.

அன்புடன்

eehaiupehazij
17th July 2014, 04:55 AM
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 1

முத்தமிழ் முழக்கமும் மூவேந்தர் முரசமும் முக்கனிச்சாரமும் மும்மூர்த்திகளின் அருளும், எமது மகளிரின் நால்வகை குணங்களும், ஐவகைநிலங்களும் பஞ்சபூதமும், அறுசுவையும், ஏழுகடல் ஏழுமலையும், எண்திசையும் நிறைந்திட்ட இப்புவியில் நவரசமும் காட்டி, பத்துத்திங்கள் கலைத்தாய் ஈன்றெடுத்த அவனியின் பத்தும் பறந்திடாத நடிப்புப் பசியுடன் கோலோச்சிய ஒரேஒரு நடிப்புக்கடவுளே! இருவிழிநீர் கோர்த்திட இருகரம் கூப்பி உங்கள் நினைவலைகளில் மூழ்கி முத்தெடுக்கும் இத்திரியில் நடிகர்திலகத்தின் கோடானுகோடி புகழார்வலர்களில் ஒருவனாக இருப்பதே என் வாழ்வின் பாக்கியம்!

https://i1.ytimg.com/vi_webp/xsCtzX-9TiU/mqdefault.webp

https://www.youtube.com/watch?v=GvTuUhcqEaw
https://www.youtube.com/watch?v=pgoqYK2fw08

gkrishna
17th July 2014, 10:12 AM
அருமையான தொகுப்பு முரளி சார்

Richardsof
17th July 2014, 11:23 AM
JULY-1971

ANANTHA VIGADAN

http://i58.tinypic.com/23rqu7o.jpg

gkrishna
17th July 2014, 12:05 PM
esvee sir


என்ன சொல்லி எப்படி சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை

மிக அருமை

sivaa
17th July 2014, 07:45 PM
மூவேந்தர்கள்
(என அன்நாளில் அழைக்கப்பட்டார்கள்)

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/t1.0-9/10351741_523560177772159_5572180951320311334_n.jpg

Murali Srinivas
17th July 2014, 11:21 PM
நண்பர் RKS அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார். பெருந்தலைவரின் பிறந்தநாள் பற்றியும் நடிகர் திலகத்தின் நினைவு நாள் பற்றியும் உரையாடல் நடந்தது. சென்ற வருடம் பெருந்தலைவரின் பிறந்த நாள் அன்று அவர் தமிழக முதல்வராக இருந்தபோது ஏற்படுத்திய தொழிற் புரட்சி பற்றி நமது நடிகர் திலகம் திரியில் பதிவு செய்திருந்தேன். அதை மீண்டும் தனக்காக மீள் பதிவு செய்ய முடியுமா என்று நண்பர் கேட்க இதோ அவருக்காக இந்த மீள் பதிவு.

தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்

தமிழகத்தில் ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அமைத்த ஒரே ஏழை பங்காளன்.

கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கடமையை நிறைவேற்றிய ஒரே கர்ம வீரன்

தமிழகத்தில் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய ஒரே மனிதன். அந்த மனிதனின் ஆட்சியில்தான்

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்

2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை

3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்

4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை

5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை

6.கல்பாக்கம் அணுமின் நிலையம்

7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை

8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை

9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை

11.துப்பாக்கித் தொழிற்சாலை

12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

13.சேலம் இரும்பு உருக்காலை

14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை

15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் பிளான்ட் தொழிற்சாலை

16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்

17.சென்னை அனல்மின் நிலையம்

18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

போன்றவை துவக்கப்பட்டன.

இவை மட்டுமா?

மணிமுத்தாறு

ஆரணியாறு

சாத்தனூர்

அமராவதி

கிருஷ்ணகிரி

வீடூர்

வைகை

காவிரி டெல்டா

நெய்யாறு

மேட்டூர்

பரம்பிக்குளம்

புள்ளம்பாடி

கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் அனைத்துமே பெருந்தலைவர் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14.

இன்னும் சொல்லவா?

159 நூல் நூற்பு ஆலைகள்

4 சைக்கிள் தொழிற்சாலைகள்

6 உரத் தொழிற்சாலைகள்

21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்

2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்

ரப்பர் தொழிற்சாலை

காகிதத் தொழிற்சாலை

அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

இவை அமைக்கப்பட்டதும் அவரின் 9 ஆண்டு கால ஆட்சியில்தான்.

அது மட்டுமல்ல இன்றைக்கு Industrial clusters என்று அழைக்கப்படும்

கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.

தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கிய ஒப்பற்ற நிர்வாகி.

இத்தனை சாதனைகள் புரிந்தும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ள தெரியாத எளிய மனிதன்.

எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.

மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?

அன்புடன்

Russellbpw
18th July 2014, 09:58 AM
மீள் பதிவு.

தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்

தமிழகத்தில் ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அமைத்த ஒரே ஏழை பங்காளன்.

கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கடமையை நிறைவேற்றிய ஒரே கர்ம வீரன்

தமிழகத்தில் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய ஒரே மனிதன். அந்த மனிதனின் ஆட்சியில்தான்

PRESTIGIOUS SCHEMES WITH FUTURISTIC VISION !

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்

2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை

3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்

4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை

5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை

6.கல்பாக்கம் அணுமின் நிலையம்

7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை

8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை

9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை

11.துப்பாக்கித் தொழிற்சாலை

12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

13.சேலம் இரும்பு உருக்காலை

14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை

15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் பிளான்ட் தொழிற்சாலை

16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்

17.சென்னை அனல்மின் நிலையம்

18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

போன்றவை துவக்கப்பட்டன.

இவை மட்டுமா?

மணிமுத்தாறு

ஆரணியாறு

சாத்தனூர்

அமராவதி

கிருஷ்ணகிரி

வீடூர்

வைகை

காவிரி டெல்டா

நெய்யாறு

மேட்டூர்

பரம்பிக்குளம்

புள்ளம்பாடி

கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் அனைத்துமே பெருந்தலைவர் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14.

இன்னும் சொல்லவா?

159 நூல் நூற்பு ஆலைகள்

4 சைக்கிள் தொழிற்சாலைகள்

6 உரத் தொழிற்சாலைகள்

21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்

2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்

ரப்பர் தொழிற்சாலை

காகிதத் தொழிற்சாலை

அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

இவை அமைக்கப்பட்டதும் அவரின் 9 ஆண்டு கால ஆட்சியில்தான்.

அது மட்டுமல்ல இன்றைக்கு Industrial clusters என்று அழைக்கப்படும்

கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.

தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கிய ஒப்பற்ற நிர்வாகி.

இத்தனை சாதனைகள் புரிந்தும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ள தெரியாத எளிய மனிதன்.

எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.

மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?

அன்புடன்


THANKS MURALI SIR

THE ONLY CHIEF MINISTER WHO DID PHENOMENAL CONTRIBUTION JUSTIFYING HIS JOB WAS / IS / WILL BE Mr.KAMARAJ !!

NONE CAN DREAM TO COME NEAR HIM !!

Gopal.s
18th July 2014, 10:47 AM
Thanks Yukesh Sir, Senthil Sir,Esvee sir ,Siva,Murali,and RKS.

Murali Srinivas
18th July 2014, 04:07 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

இப்படி 1971 முடிவிற்கு வரும்போது அதற்கு முந்தைய வருடமான 1970 இறுதியில் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளைப் பொறுத்தவரை நாம் சந்தோஷமாக இருந்தோம். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. 1971 இறுதியில் நிலைமை அப்படியே மாறியது. 1971-ல் ஹாட்ரிக் அடித்திருக்கலாமே, விட்டு விட்டோமே என்ற வருத்தம் இருந்தாலும் 1972- ஐ ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

1972 பிறந்தது. முதல் படமாக ஸ்டைல் சக்கரவர்த்தி ராஜா ஜனவரி 26 அன்று திரையரங்குகளுக்கு விஜயம் செய்தார். மதுரையில் சென்ட்ரலில் வெளியான படத்தின் ஓபனிங் ஷோ பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். இனி இந்த முதல் படமே 100 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல் என்ற வெற்றி இலக்கை அடைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஜனவரி 26 புதன்கிழமை. அன்று 4 காட்சிகள். படத்தின் excellent ரிப்போர்ட் பார்த்ததும் வேலை நாட்களாக இருந்தும் 27 மற்றும் 28 வியாழன், வெள்ளி தினங்களிலும் காலைக் காட்சி சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இதற்கு பிறகு வந்த சனி ஞாயிறு இரண்டையும் சேர்த்தால் ஆக முதல் 5 நாட்களில் நடைபெற்ற 20 காட்சிகளும் புல். ப்ளாக் டிக்கெட் heavy rate-ல் போனது. முதல் 15 நாட்களில் நடைபெற்ற 52 காட்சிகளும் புல். அதே வேகத்தில் முதல் 23 நாட்களில் நடைபெற்ற 78 காட்சிகளும் அரங்கு நிறைந்தது. 25-வது நாள் சனிக்கிழமை காலைக் காட்சிதான் சற்று கவலை தரக் கூடியதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க 24-வது நாள் வெள்ளியன்று மதியக் காட்சியில் சவாலே சமாளி படத்திற்கு ஏற்பட்டது போல் ஒரு ஷாக் ஏற்பட்டது. ஸ்ரீதேவியில் நடந்தது போலவே எண்ணிகையில் வெகு குறைவான டிக்கெட்டுகள் மட்டும் மீதம் இருக்க தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது. இது ரசிகர்களை மிகவும் கோபத்துகுள்ளாகியது. மன்ற நிர்வாகிகள் அல்லது ரசிகர்கள் அரங்கின் வெளியே இருந்திருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.

அந்த பக்கம் பிப்ரவரி 4 அன்று சிந்தாமணியில் சங்கே முழங்கு ரிலீஸ். 1972-ல் வெளியான எம்ஜிஆரின் முதல் மூன்று படங்களும் சிந்தாமணியில் வெளியாக இருந்த விஷயத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.கடைசி நேரத்தில் நல்ல நேரம் படம் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸால் அரங்கு மாற்றப்பட்டதையும் குறித்திருக்கிறேன். இந்த சூழலில் வெளியான சங்கே முழங்கு ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை. படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். சொல்லப் போனால் 72-ல் வெளியான படத்தில் 1968-ல் நடைபெற்ற தென்காசி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற்ற செய்தியை தாங்கிய முரசொலி நாளிதழை எம்ஜிஆர் படித்துக் கொண்டிருப்பது போல் காட்சி வரும். இந்த படம் தொடர் ஹவுஸ் புல் ஆகவில்லை.

மார்ச் 10 அன்று நல்ல நேரம் மார்ச் 11 அன்று ஞான ஒளி ரிலீஸ். இரண்டு படங்களின் ரிப்போர்ட் பற்றி ஏற்கனவே பேசினோம். தொடர் ஹவுஸ் புல் காட்சிகளை பொறுத்தவரை ஞான ஒளி மற்றொரு பாபு என்றே சொல்லலாம். அதாவது உணர்வுபூர்வமான roller coaster ride. இதற்கு repeat ஆடியன்ஸ் factor ஒரு முக்கியமான காரணி. அதையும் தாண்டிய ஒரு ரெஸ்பான்ஸ் படத்திற்கு கிடைத்து தொடர் ஹவுஸ் புல் ஆகிக் கொண்டிருக்கும் போது இரண்டாம் வாரம் என நினைக்கிறேன். வியாழன் அல்லது வெள்ளி ஏதோ ஒரு விசேஷ நாள் வரவே அதற்காக அன்றைய தினம் சிறப்புக் காட்சியாக காலைக் காட்சி போடப்பட்டது. அது தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு வினையாக வந்தது. நல்ல நேரம் படத்தைப் பொறுத்தவரை அலங்கார் மற்றும் மூவிலாண்ட் திரையரங்குகளில் வெளியாகி இரண்டிலும் சேர்த்து 100 காட்சிகள் ஹவுஸ் புல் ஆனது என்று ஞாபகம்.

இத்தகைய பின்புலத்தில்தான் பட்டிக்காட பட்டணமா வெளியானது. தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட பிளாஷ் பாஃக்கை முடித்து மீண்டும் 1972 ஜூன் 10-ந் தேதிக்கு வருவோம்.

(தொடரும்)

அன்புடன்

eehaiupehazij
18th July 2014, 06:36 PM
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 2

தமிழ் திரையுலகில் பாடல் காட்சிகளில் பாடலின் கருத்து மற்றும் காட்சி சூழ்நிலைக்கேற்ற close-up expressions and body language, பின்னணி பாடும் கலைஞரின் குரல் modulations மற்றும் பாடல் வரிகளுக்கேற்ற perfect lip movement synchronization.....இவற்றின் சொந்தக்காரர் என்றுமே நடிகர்திலகம் மட்டுமே! தனது முதல் காவியமான பராசக்தியில் ஒரு புதுமுக நடிகர் என்ற எண்ணமே தோன்றவிடாது இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமனின் கடினபாவமிக்க பாடல்வரிகளை உள்ளத்தில் வாங்கி உதட்டில் வெளிப்படுத்தும் அழகை கா...கா பாடலின் மூலமும் (பெரும்பாலும் single shot frames per stanza of the song! without any camera fear....), பலே பாண்டியா திரைப்படத்தில் தனது குரலாகவே மாறிவிட்ட TMS வாயிலாக நீயே உனக்கு நிகரானவன் பாடலின் மூலமும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்திய மந்திரவித்தையை ( இக்காட்சியின் பாதிப்பை மோகன்லாலின் "சித்ரம்" மலையாளத் திரைப்படத்தில் உணரமுடியும்) இக்காணொளிகள் உறுதி செய்கின்றன!

https://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE


https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30


https://www.youtube.com/watch?v=eX_F2JR7Etk

sivaa
18th July 2014, 08:34 PM
10.01.1973
திரையிடப்பட்ட
வசந்த மாளிகை
யாழ்நகர்
வெலிங்டன்.....208 ..நாட்கள்
லிடோ...............28......நாட்கள்
ஓடிமுடிய பெற்ற மொத்த வசூல்
5.54.419.00
யாழ்நகரில் முதல்முதலாக 5லட்சத்தை தாண்டிய படம் வசந்த மானிகை
இரண்டாவதாக 5லட்சத்தை தாண்டிய படம் பைலட் பிரேம்நாத்
மூன்றாவதாக 5 லட்சத்தை தாண்டிய படம் உத்தமன்


சாதனையின் சிகரம் சிவாஜி சிவாஜி சிவாஜி


http://chennaionline.com/images/gallery/2012/November/20121124101502/Vasantha_Maligai_Re-Releasing_Movie_Stills_Photos_38.jpg

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/IRVMBNR06_zpsed1199a5.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/IRVMBNR06_zpsed1199a5.jpg.html)

Thomasurink
18th July 2014, 09:00 PM
Dear All,

Due to hectic work schedule I was not able to visit this thread for the last 7/8 months.
How are you Ramajayam Sir?
After Pasamalar Function we are not in touch.Hope you are doing well.
Pammalar sir please let me know how to transfer Rs.1000/- for one copy of N T Filmography.
When it will be ready.I am eagerly awaiting to see that.

Regards to all fans.
Mohan Shivaji

eehaiupehazij
18th July 2014, 09:04 PM
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 3

மழையில் நனைந்து ஆடிப் பாடும் (Romantic Monsoon songs) அனுபவத்திற்கு தயாராகுங்கள் !!!!


Just for breaking the monotony....enjoy Gene Kelly's fantastic immortal dance sequence in his "Singing in the Rain"

தமிழ்த் திரையுலகில் காதல் பாடல்கள் தொகுப்பில் 'மழையில் நனைந்து' பாடும் பாடல்கள் ஏராளம்! காதல் மன்னரின் 'அவளுக்கென்று ஒரு மனம்', ரேவதியின் நடிப்பில்ஒரே மாதிரியான காட்சிகளில் வெளிவந்த 'புன்னகை மன்னன்' மற்றும் 'மௌனராகம்' , நடிகர்திலகத்தின் 'சபாஷ் மீனா' .........ராஜ்கபூர் நர்கிஸ் நடிப்பில் Shree420 குறிப்பிடத்தக்கவை! ஆனால் இப்படங்களுக்கெல்லாம் முன்மாதிரி மிகப்பழைய ஆங்கில பிரம்மாண்டமான Gene Kelly's Singing in the Rain என்பது வியப்பாக இருக்கும்!

சந்திரபாபு, நாகேஷ், ரவிச்சந்திரன், கமலஹாசன் துவங்கி பிரபுதேவா, லாரன்ஸ் வரை நமது நடன கதாநாயகர்கள் கடமைப்பட்டிருப்பது Fred Astaire and Gene Kelly , Elvis Presley and Michael Jackson என்னும் நான்குHollywood நடன ஜாம்பவான்களே!

https://www.youtube.com/watch?v=D1ZYhVpdXbQ

https://www.youtube.com/watch?v=2pjQ9qXwffg

https://www.youtube.com/watch?v=y01uvU0UAoU

https://www.youtube.com/watch?v=o1vOgWuXqhM

https://www.youtube.com/watch?v=ofVnjzqy6cE

https://www.youtube.com/watch?v=mWbC_0o8J4k

Murali Srinivas
18th July 2014, 11:52 PM
இன்று மதியம்தான் மதுரை மாநகரில் ஹீரோ 72-ன் சாதனைகளைப் பற்றி பேசினோம். 72-ல் மட்டுமல்ல 2014-லும் தன்னை வெல்ல யாரும் இல்லை என்பதை மீண்டும் இன்று நிரூபிக்கிறார் நடிகர் திலகம். 1980-களுக்கு பிறகு வந்த நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியீடுகளில் ஓடாது என்ற மாயை தோற்றம் மீண்டும் பொய் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது இன்று சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட சந்திப்பு புதிய சாதனை படைக்கிறது. இன்று நான்கு காட்சிகளில் மட்டும் படத்தை கண்டு களித்தவர்கள் 716 பேர். இதில் பெரிதும் குறிப்பிட வேண்டிய விஷயம் இன்றைக்கு மட்டும் கண்டு களித்தவர்கள் எண்ணிக்கையில் பெண்கள் மட்டுமே 100 பேர். இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? தொலைக்காட்சி பெட்டியை விட்டு வெளியே வராத பெண்கள் அதுவும் இன்று முதலாம் ஆடி வெள்ளி, அந்த நாளில் காலைக் காட்சி [பல வருடங்களுக்கு பிறகு பெண்கள் வந்திருக்கின்றனர்] பகல் காட்சி மற்றும் மாலைக் காட்சி [இதற்கு மட்டும் 50 பேர்] என்று அனைத்துக் காட்சிகளுக்கும் பெண்கள் [நான் குறிப்பிடுவது பெண்கள் தனியாக திரையரங்கிற்கு வருவது] வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதுதான் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரீச். தொடரும் நாட்களின் விவரங்கள் இங்கே பகிர்ந்து கொள்வோம்.

அன்புடன்

Russellbpw
19th July 2014, 12:29 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10562620_1444375469162954_1764953135510890889_o_zp sfb9846f4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10562620_1444375469162954_1764953135510890889_o_zp sfb9846f4.jpg.html)

Russellbpw
19th July 2014, 12:30 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10498041_1444375475829620_8575935569574323762_o_zp s2277e91d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10498041_1444375475829620_8575935569574323762_o_zp s2277e91d.jpg.html)

Russellbpw
19th July 2014, 12:30 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10544400_1444375745829593_81302019554479197_n_zpsa 528ba8b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10544400_1444375745829593_81302019554479197_n_zpsa 528ba8b.jpg.html)

Russellbpw
19th July 2014, 12:37 AM
10.01.1973
திரையிடப்பட்ட
வசந்த மாளிகை
யாழ்நகர்
வெலிங்டன்.....208 ..நாட்கள்
லிடோ...............28......நாட்கள்
ஓடிமுடிய பெற்ற மொத்த வசூல்
5.54.419.00
யாழ்நகரில் முதல்முதலாக 5லட்சத்தை தாண்டிய படம் வசந்த மானிகை
இரண்டாவதாக 5லட்சத்தை தாண்டிய படம் பைலட் பிரேம்நாத்
மூன்றாவதாக 5 லட்சத்தை தாண்டிய படம் உத்தமன்


சாதனையின் சிகரம் சிவாஜி சிவாஜி சிவாஜி



It is quite evident sivaa sir that our God of World Cinema is the UNDISPUTED BOX OFFICE EMPEROR IRRESPECTIVE OF COUNTRIES....


We can see 10 different magazine giving 10 different totals of number of 100 days films !

PEOPLE HAVE ALREADY STARTED MAKING NOTE OF IT AND NOW STARTED REALIZING POLITICAL SUCCESS IS DIFFERENT ....FILM CAREER SUCCESS IS DIFFERENT.....though better late than never !

I AGAIN REPEAT ! NONE HAS ACHIEVED THIS STATUS SO FAR !

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 100 நாட்கள் மற்றும் 175உம் அதற்க்கு மேலும் ஓடிய படங்களின் எண்ணிக்கை விபரங்கள் அனைவரின் பார்வைக்கும் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsd2417045.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsd2417045.jpg.html)
UNLIKE OTHERS, THIS DOES NOT INCLUDE 100 DAYS RUN FILM BY SHIFTING


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture1_zps7def0b43.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture1_zps7def0b43.jpg.html)

Russellbpw
19th July 2014, 08:27 AM
July ஜூலை மாதத்தில் வெளியான நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியல் - Courtesy :- Raghavender Sir

1. Thirumbi Par திரும்பிப்பார் 10.07.1953
2. Anbu அன்பு 24.07.1953
3. Thuli Visham துளி விஷம் 30.07.1954
4. Annaiyin Aanai அன்னையின் ஆணை 04.07.1958
5. Ellam Unakkaga எல்லாம் உனக்காக 01.07.1961
6. Sri Valli ஸ்ரீ வள்லி 01.07.1961
7. Vadivukku Valaikaappu வடிவுக்கு வளைகாப்பு 07.07.1962
8. Paar Magalae Paar பார் மகளே பார் 12.07.1963
9. Kai Kodutha Deivam கை கொடுத்த தெய்வம் 18.07.1964
10. Thiruvilaiyaadal திருவிளையாடல் 31.07.1965
11. Thiruvarutchelvar திருவருட் செல்வர் 28.07.1967
12. Thillaana Mohanambal தில்லானா மோகனாம்பாள் 22.07.1968
13. Savaalae Samaali சவாலே சமாளி 03.07.1971
14. Thaenum Paalum தேனும் பாலும் 22.07.1971
15. Dharmam Engey தர்மம் எங்கே 15.07.1972
16. Engal Thanga Raaja எங்கள் தங்க ராஜா 15.07.1973
17. Imayam இமயம் 21.07.1979
18. Loory Driver Raajaakkannu லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 03.07.1981
19. Thaaikku Oru Thaalaattu தாய்க்கு ஒரு தாலாட்டு 16.07.1986
20. Once More ஒன்ஸ் மோர் 04.07.1995

சிறப்புத் தோற்றம்
21. Kuzhandaigal Kanda Kudiyarasu (G) குழந்தைகள் கண்ட குடியரசு 29.07.1959
22. Pillalu Thechina Thellalu Raajyam (G) (T) பில்லலு தெச்சின தெல்லலு ராஜ்யம் (தெலுங்கு) 01.07.1960
23. Baktha Thukkaaraam (G) (T) பக்த துகாராம் (தெலுங்கு) 18.07.1973

Russellbpw
19th July 2014, 08:34 AM
DURING THE INDO CHINA WAR - NADIGAR THILAGAM TOOK ALONG WITH HIM ALMOST ALL ACTORS TO ENTERTAIN OUR SOLDIERS WHO ARE TOILING IN THE BORDERS.

THIS WAS CALLED SIVAJI-SRIDHAR NIGHT.

OUR NATIONAL ACTOR's MAGNANIMITY TO SERVICE THE WARRIORS OF OUR BORDER :

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsadca91d0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsadca91d0.jpg.html)

Russellbpw
19th July 2014, 08:36 AM
BEFORE PARASAKTHI, OUR ACTING GOD HAS EVEN LENT HIS VOICE - Courtesy Raghavender sir

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/CHN_2014-07-12_tabp24_5_zps1fc83655.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/CHN_2014-07-12_tabp24_5_zps1fc83655.jpg.html)

Russellbpw
19th July 2014, 08:37 AM
PARASAKTHI - THE POST INTERVAL SESSION !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/avm_zps778b6bf4.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/avm_zps778b6bf4.jpg.html)

Russellbpw
19th July 2014, 08:41 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/8thwonder_zps8e06e95b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/8thwonder_zps8e06e95b.jpg.html)

Russellbpw
19th July 2014, 08:43 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/15237_487576191287072_829013908_n_zpsd0ccd8e9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/15237_487576191287072_829013908_n_zpsd0ccd8e9.jpg. html)

Russellbpw
19th July 2014, 08:46 AM
A LION's LOOK !!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/10342496_743657159012306_4025560639364458490_n_zps 789fca38.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/10342496_743657159012306_4025560639364458490_n_zps 789fca38.jpg.html)

Russellbpw
19th July 2014, 08:46 AM
TIGER HUNTED BY OUR LION IN EARLY 60s


http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/LionTiger_zps389861b9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/LionTiger_zps389861b9.jpg.html)

Russellbpw
19th July 2014, 08:49 AM
THE REAL TALENT OF NADIGAR THILAGAM UNLIKE THE REEL TALENT OF OTHERS

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/282433_3483142337021_179122526_n_zps398d02d6.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/282433_3483142337021_179122526_n_zps398d02d6.jpg.h tml)

Russellbpw
19th July 2014, 08:50 AM
THEDI VANDHA MAAPILLAI !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/6503_348650978593860_1945095738_n_zps37242ba9.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/6503_348650978593860_1945095738_n_zps37242ba9.jpg. html)

Russellbpw
19th July 2014, 08:51 AM
SIMMA KURALUM VENGALA KURALUM

SEE THE RESPECT NADIGAR THILAGAM GIVES FOR THE ISAI KALAIGNAR !
ORU KALAIGNARUKKU KALAIGNANIN MARIYAADHAI

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/970253_360955870696704_1517662113_n_zps60f0cd49.jp g (http://s501.photobucket.com/user/subbuchennai/media/970253_360955870696704_1517662113_n_zps60f0cd49.jp g.html)

Russellbpw
19th July 2014, 08:56 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/150thday_zps85dbda15.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/150thday_zps85dbda15.jpg.html)

Russellbpw
19th July 2014, 08:58 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/120th_zpsb8f1a86d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/120th_zpsb8f1a86d.jpg.html)

tacinema
19th July 2014, 09:21 AM
Wonderful collection Mr. RKS. Please keep it up.

எங்கள் கர்ணன் ஓடிய படம். மற்ற நடிகரின் படம் மாதிரி ஒட்டப்பட்ட படம் அல்ல - அதுவும் ஒரே ஒரு சென்னை தியேட்டரில், ஒரே ஒரு ஷோ!!??

Regards

Russellbpw
19th July 2014, 09:49 AM
நடிகர் திலகத்தின் படங்கள் ஒரு குறிப்பிட்ட விநியோகஸ்தர் மட்டுமே வாங்கி அந்த விநியோகஸ்தர் அவரை வசூல் சக்ரவர்த்தி என்று புகழாரம் சூட்டவில்லை.

நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பல தரப்பட்ட விநியோகஸ்தர்கள் வாங்கி அவற்றை விநியோகம் செய்து அதில் வந்த வருமானத்தில் பல தரப்பட்ட தொழில்களை (diversified பிசினஸ்) இன்றும் செய்து வருகிறார்கள்.

நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே அதிக அளவில் எந்த காலகட்டத்திலும் தயாரிக்கப்பட்டது.

நடிகர் திலகம் தயாரிப்பாளர் வசதிக்காக பல தரப்பட்ட சம்பளங்கள் நிலவில் கொண்டுவந்தவர்.

இன்று அனைவரும் பேசும் ..." இந்த நடிகர் ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் சம்பாதிக்கிறார் " போன்றவை நடிகர் திலகம் 1950இல் கொண்டுவந்ததுதான். திரைப்படம் : அந்த நாள்

அதே போல "இந்த நடிகர் திரைப்பட சம்பளமாக ஒரு கணிசமான தொகையும் அத்துடன் இந்தேந்த ஏரியாவின் விநியோக உரிமையும் பெறுகிறார் என்று கேள்வி படுகிறோமே" ..அதையும் 1950இல் நடைமுறைக்கு கொண்டுவந்தவர் முதன் முதலில் நடிகர் திலகமே.

ஆகவே நடிகர் திலகத்தின் சம்பளம் ஒரு கணிசமான தொகையுடன் சென்னை நகர் விநியோக உரிமையும் கொண்டது. அவருடைய பல படங்களின் விளம்பரங்கள் பார்த்தாலே நமக்கு உண்மை புரியும்.

இதுதவிர...இதிகாச, சரித்திர கதாபாத்திரம் என்றால் ஒரு தொகை, சமூக திரைப்படம் என்றால் ஒரு தொகை இப்படி பெற்றுவந்தார்.

தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தின் சம்பளம் இவ்வளவு உள்ளது என்பது தெரிந்தும் அவரை வைத்து தொடர்ந்து பல படங்கள் தயாரித்து அவற்றை விட அதிக லாபம் சம்பாதிக்கவும் செய்தார்கள்.

Russellbpw
19th July 2014, 10:25 AM
எந்த பத்து வருட காலேண்டர் எப்படி எடுத்துபோட்டாலும் அதிக நூறு நாட்கள் படங்கள் மற்றும் அதிக வெள்ளிவிழா படங்கள் கொடுத்துள்ளது நடிகர் திலகம் மட்டுமே என்பது இதிலிருந்து வெளிச்சத்திற்கு வருகிறது.

நடிகர் திலகத்தின் வெள்ளிவிழா (175 days) படங்கள் - 1960 - 1970 வரை

1. இரும்புத்திரை - கோவை கர்நாடிக்
2. பாவ மன்னிப்பு - சென்னை சாந்தி
3. பாசமலர் - சென்னை சித்ரா
4. திருவிளையாடல் - சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி
5. தர்தி - டெல்லி - அம்பா, லிபர்ட்டி, நடராஜ், மோட்டி
பாம்பே : மினேர்வ, ஆனந்த், அசோக் மற்றும்
கல்கத்தா - இம்பெரியால்

1960 முதல் 1970 வரை நடிகர் திலகத்தின் 100 நாட்கள் திரைப்படங்கள் எண்ணிக்கை 37.

100 நாட்கள் ஓடிய படங்கள் - 1960 - 1970 வரை

1. இரும்புத்திரை
2. தெய்வபிறவி
3. படிக்காத மேதை
4. விடிவெள்ளி
5. பாவமன்னிப்பு
6. பாசமலர்
7. ஸ்ரீவள்ளி
8. மருதநாட்டு வீரன்
9. பாலும் பழமும்
10. பார்த்தல் பசி தீரும்
11. படித்தால் மட்டும் போதுமா
12. ஆலயமணி
13. இருவர் உள்ளம்
14. அன்னை இல்லம்
15. கர்ணன்
16. பச்சை விளக்கு
17. கை கொடுத்த தெய்வம்
18. புதிய பறவை
19. நவராத்திரி
20. சாந்தி
21. திருவிளையாடல்
22. மோட்டார் சுந்தரம் பிள்ளை
23. சரஸ்வதி சபதம்
24. கந்தன் கருணை
25. இரு மலர்கள்
26. ஊட்டி வரை உறவு
27. கலாட்ட கல்யாணம்
28. தில்லான மோகனம்பாள்
29. உயர்ந்த மனிதன்
30. தெய்வமகன்
31. திருடன்
32. சிவந்த மண்
33. தர்தி (ஹிந்தி)
34. வியட்நாம் வீடு
35. ராமன் எத்தனை ராமனடி
36. எங்கிருந்தோ வந்தாள்
37. சொர்க்கம்


தமிழ் திரை உலகில் அதிக நாட்கள்

அதிக வசூல்

தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் என்று சாதனைகள்

புரிந்து முதலிடத்தை பெற்று சாதனைகள் நிகழ்த்தியவர் யார் என்பதை இதிலிருந்து பொதுமக்கள் புரிந்துகொள்ளலாம் .

வசூல் சக்கரவர்த்தி என்று எல்லா பத்திரிகைகளும் - வார - மாத இதழ்களும் - தயாரிப்பளர்களும் - விநியோகஸ்தர்களும் வாய் வார்த்தையால் மட்டும் கூறாமல் அவர்களது செயலால் திரும்ப திரும்ப பல புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள் நடிகர்திலகத்தை வைத்துதான் திரைப்படங்கள் தயாரிக்கலானார்கள், அவர் படங்களை தான் அதிக அளவில் விநியோகம் செய்து பயனடைந்தார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

Russellbpw
19th July 2014, 11:31 AM
தமிழ் திரை உலகில் நடிகர் திலகம் படங்கள் படைத்த சாதனைகள் .

1971 - 1977

1971

1. சவாலே சமாளி - அதிக தொடர்ந்த அரங்கு நிறைவு காட்சி சாதனை - வசூல் வசூல் என்று சவால் விட்டவர்களுக்கு சவுக்கடி கொடுத்த படம்

2. குலமா குணமா - அனைத்து குடும்பங்களும், பத்திரிகைகளும் பாராட்டுபெற்ற 100 நாட்கள் ஓடிய படம்

3. எந்தவித முக அலங்காரமும் இல்லாமல் ஒரு நாயகனால் நடிக்க முடியுமா ? முடியும் என்று மீண்டும் நிரூபித்த படம் மூன்று தெய்வங்கள். இதில் நடிகர் திலகம் மேக் அப் துளி கூட இல்லாமல் நடித்தபடம். மற்ற மசாலா படங்களுக்கு இணையாக வசூல் செய்த படம் !

4. பாபு - நீண்ட இடைவெளிக்கு பின் பல நட்சத்திர பட்டாளங்களுடன், பல விளம்பரங்களுடன் பரபரப்பாக வந்த வண்ண படங்களை மண்ணை கவ்வ செய்த 100 நாட்கள் மேல் ஓடிய கருப்பு வெள்ளை படம் . இரண்டு மூன்று கதாநாயகிகள் கேட்கும் நாயகர் மத்தியில் கதாநாயகி இல்லாமல் கனவு காட்சி கூட இல்லாமல் நடிப்பால் மட்டுமே ஓடிய சிறந்த படம்.

தேசிய விருதை நடிகர் திலகம் அவர்களுக்கு வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக , காழ்புனற்சிக்காக அப்போதைய ஆட்சியாளர்கள் ஒரு சிலரை திருப்தி படுத்த சௌந்தர கைலாசம் என்பவரை பயன்படுத்தி நடிகர் திலகம் பெயரை வேண்டுமென்றே முன்மொழியாமல் இருந்தது திரை உலகில் அனைவராலும் வன்மையாக அந்தகாலத்தில் கண்டிக்கப்பட்டது.

1972 -

நடிகர் திலகம் வெற்றியின் உச்சதிலிருந்தபடியே அதீத வெற்றிப்படங்கள் கொடுத்த ஆண்டு - எந்த நடிகரும் பொறாமைப்படும் அளவுக்கு நடிகர் திலகம் வெற்றியின் வீச்சு இருந்தது .

1972 வெளிவந்த படங்கள் - 7 ..அதில் 6 படங்கள் 100 நாட்களும் அதற்க்கு மேலும் ஓடியது. அந்த ஆறில் 2 படங்கள் 175 days கடந்து பெருவெற்றி பெற்றன !

1. ராஜா - தென்னகமெங்கும் புதிய வசூல் சாதனை - நடிகர் திலகத்தின் ஸ்டைல் இதுவரை திரை உலகம் காணாதது !

2. ஞான ஒளி - சென்னையில் பிளாசா அரங்கில் அதுவரை வந்த அனைத்து படங்கள் வசூல் முறியடிக்கப்பட்டன. தபால் முறையில் மக்களிடம் கேட்டறிந்து சென்னையில் மக்கள் விருப்பம் போல 5 திரை அரங்கில் வெளிவந்த திரைப்படம். தொடர்ந்து 1000 வெற்றி காட்சி சாதனை

3. பட்டிக்காட பட்டணமா - கருப்பு வெள்ளை படங்களில் தமிழகத்தில் இதுவரை அதிக வசூல் சாதனை புரிந்த படம் - 175 நாட்களுக்கு மேல் ஓடிய படம். - அதிக காட்சிகள் அரங்கு நிறைவு கண்ட படம். முந்தைய சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன !

4. தர்மம் எங்கே - நூறு நாள் தவற விட்ட ஒரே ஒரு படம் இந்த ஆண்டில்.

5. தவப்புதல்வன் - கருப்பு வெள்ளை படம் மீண்டும். 100 நாட்கள் ஓடிய சிறந்த வெற்றிகாவியம். பாடல் அனைத்தும் புது ராகம். நடிகர் திலகம் ஆங்கில பாடல் பாடி அசத்திய படம்.

6. வசந்தமாளிகை - இந்திய மட்டுமல்ல , அண்டை நாடுகளில் கூட 250 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் பிரளயம் ஏற்படுத்திய படம்.

7. நீதி - 1972அம் ஆண்டின் கடைசி 100 நாட்கள் படம்

1973 -

பாரத விலாஸ், ராஜ ராஜ சோழன் , எங்கள் தங்க ராஜா , கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை - 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடிய படங்கள்.,

1973 - நடித்த படங்கள் - 7 : 100 நாட்கள் படங்கள் - 5

1974 - வாணி ராணி , என் மகன் - 100 நாட்கள் தங்கபதக்கம் - 175 நாட்கள்

தங்கபதக்கம் - 175 நாட்கள் - அதற்க்கு முன் வெளிவந்த அனைத்து தமிழ் படங்களின் வசூலையும் முறியடித்து 1979 திரிசூலம் வெளிவரும் வரை வசூலில் முதன்மையாக இருந்த திரைப்படம்.

1975 - அவன்தான் மனிதன் மற்றும் மன்னவன் வந்தானடி - 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடிய படங்கள் !

1976 - மாறிய அரசியல் சூழல் ஏற்பட்டாலும் சிறிது செட்பாக் இருந்தாலும் உத்தமன் திரைப்படம் 100 நாட்கள் தமிழகத்தில் அண்டை நாடான இலங்கையில் உத்தமன் ஏற்படுத்திய சாதனைகள் பல - தொடர்ந்து அரங்கு நிறைவு , அதிக திரை அரங்குகளில் 100 மற்றும் 175 நாட்கள் - அங்குள்ள பத்திரிகையில் நடிகர் திலகம் என்பதற்கு பதில் வசூல் சக்ரவர்த்தி சிவாஜி கணேசன் என்று பதிவிடும் அளவிற்கு சாதனை.

1977 - தீபம் மற்றும் அண்ணன் ஒரு கோவில் - 100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - தொடர்ந்த அரங்கு நிறைவு மற்றும் வசூல் சாதனை - அண்ணன் ஒரு கோவில் சிறிய ஊரில் கூட 100 நாட்கள் மேல் ஓடிய அருமையான குடும்ப சித்திரம் !

nadigar thilagam is the only actor who was the real box office emperor during his time !

rks

gkrishna
19th July 2014, 11:46 AM
INDO CHINA WAR - NADIGAR THILAGAM



அன்பு rks சார்

இந்த போட்டோ நான் நெல்லை மாவட்ட 1968 சிவாஜி ரசிகர் மன்ற மலரில் பார்த்த நினைவு சார் . அதில் இந்த படத்தின் தலைப்பில் 'பாளையில் கலாட்டா' என்று போட்டு இருக்கும் என்று நினைவு

காதலிக்க நேரமில்லை படத்தின் 'விஸ்வநாதன் வேலை வேண்டும் '
பாடலை எங்கு பாடினாலும் நடிகர் திலகம் அவர்கள் ரசித்து ஆடுவார்கள்
என்று கேள்விபட்டேன்

மிக அபூர்வமான போட்டோ

வலது புறத்தில் வீ கோபாலகிருஷ்ணன் (டவுன் கோபி) சிரித்து கொண்டு இருப்பார்

eehaiupehazij
19th July 2014, 05:59 PM
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 4 : Action Scenes


நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைவில் வெளிவந்த சிவந்தமண் திரைப்படம் அந்தக்காலகட்டத்தில் மிகவும் வித்யாசமான தமிழ்த்திரைத்தர உயர்வுக்கு எடுத்துக்காட்டான முயற்சியாகும். தொழில்நுட்ப அடிப்படையில் நாம் பின் தங்கியிருந்தும் நல்ல திரைக்கதை அமைப்பில் அருமையான கேமரா கோணங்களிலும், மிகமிகச்சிறந்த இசையமைப்புடனும், பாடல் காட்சிகளுடனும், அரங்கமைப்புக்களுடனும், இயற்கை எழில் கொஞ்சும் வெளிநாட்டு படப்பிடிப்புடனும் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் நடிகர்திலகத்தின் சீரான நடிப்பாற்றலை முறையாகப் பயன்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்த பெரும்பொருட்செலவில் தயாரான பிரம்மாண்டமான படம். வெளிநாட்டுப்படங்களுக்கு இணையாகப் பேசப்பட வேண்டும் என்ற நோக்கில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு ஹெலிகாப்டர் துரத்தலை படமாக்கியிருந்தார். நடிகர்திலகம் without a body double மிகுந்த ரிஸ்க் எடுத்து நடித்த அந்தக்காட்சி From Russia with Love (Starring Sean Connery) திரைப்படத்தை அடியொற்றியதாகும்.

https://www.youtube.com/watch?v=4oD3vvgb3vk

https://www.youtube.com/watch?v=j6OwV8cz9jE



(watch from 55:50 to 59:30) same way, the inflight fight (36:20 to 38:10) with thengai sreenivasan (!?) was inspired by Goldfinger climax plane fight.

https://www.youtube.com/watch?v=pHXevnoAciY

JamesFague
19th July 2014, 06:40 PM
Pattaikada Pattanama is the highest grosser in the history of Black & White Movie.


Regards

Murali Srinivas
20th July 2014, 12:10 AM
சந்திப்பு -இரண்டாம் நாள்

இன்றைய கால கட்டத்தில் பழைய திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்குகளில் படம் பார்க்க வரும் pattern என்று ஒன்றை குறிப்பிடுகிறார்கள். படம் வெள்ளியன்று வெளியாகிறது. அன்று வசூல் நல்ல முறையில் இருக்கிறது. ஆனால் இரண்டாம் நாள் சனிக்கிழமை அன்று வசூல் டிராப் ஆகிறது. மீண்டும் ஞாயிறன்று பெரிய அளவில் சென்று திங்கள் செவ்வாய் என்று படிப்படியாக முடிகிறது. சென்னை மதுரை கோவை திருச்சி என்று அனைத்து நகரங்களிலும் இதே patternதான். முன்காலங்களில் வெள்ளியன்று ஆரம்பித்து சனி ஞாயிறு தினங்களில் peak-ற்கு சென்று திங்கள் அன்று sustain ஆகி பின் டிராப் ஆகும்.

நாம் சொல்ல வந்தது இப்படி இரண்டாம் நாள் சனிக்கிழமையான இன்று சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட சந்திப்பு மற்ற படங்களை விட அதிக வசூல் பெற்று முன்னணியில் நிற்கிறது. நேற்று 716 நபர்கள் பார்த்தார்கள் என்று சொன்னால் இன்று 600-க்கும் அதிகமான நபர்கள் பார்த்திருக்கின்றனர். இரண்டு நாட்களிலும் சேர்த்து 1300-க்கும் அதிகமாக பார்வையாளர்கள் வந்திருக்கின்றனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த மொத்த எண்ணிகையில் ரசிகர்கள் 20 பேர் கூட இல்லை எனபதுதான். பொது மக்கள் மட்டுமே வந்து சிறப்பித்திருக்கின்றனர்.

அரங்க நிர்வாகத்தினர் பல விஷயங்களில் அசந்து போய் பாராட்டியிருக்கின்றனர். "என்னங்க இது மார்னிங் ஷோவிற்கு லேடீஸ் வராங்க, ஆடி வெள்ளி அன்னிக்கு ஈவினிங் ஷோவிற்கு 50 லேடீஸ் வராங்க, சனிக்கிழமை நைட் ஷோவிற்கு பால்கனி டிக்கெட் 50 போகுது, அதிலும் family audience வந்திருக்காங்க, சிவாஜி படத்துக்கு மட்டும்தாங்க இப்படியெல்லாம் பாக்க முடியும்" என்று வியந்து பாராட்டியிருக்கின்றனர்.

உண்மைதானே! நமது நடிகர் திலகத்தால் மட்டும்தானே இதையெல்லாம் சாதிக்க முடியும்!

அன்புடன்

eehaiupehazij
20th July 2014, 03:52 AM
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 5 : மழலையருக்கு என்றும் 'எங்க மாமா'!

குழந்தைகள் 'வானுறையும்தெய்வத்திற்கு' சமம். 'காய்' விட்ட கோபதாபங்களை உடனே மறந்து 'பழம்' விட்டு முகம் நிறைந்த முல்லைச்சிரிப்பில் பகைவிரட்டும் பண்பு நெஞ்சங்கள்! தமிழ் திரையுலகில் எவர் மீதும் காழ்ப்போ கசப்போ இன்றி தனது குழந்தை மனப்பாங்கால் குறுகிய மனப்பான்மையில் தன்னை விட்டு விலகிச்சென்றவரையும் விரும்பி திரும்பிவந்திடும் மனநிலைக்கு வித்திட்ட பண்புக் குழந்தை NT!.

A tribute to our NT for his evergreen association with children in movies 'Enga Mama' and 'Ennaip pol oruvan'. A bonus song featuring Shammi Kapoor in the Hindi original 'Brahmachaari'!


https://www.youtube.com/watch?v=KR_0wPPEctc

https://www.youtube.com/watch?v=YzqHAAsA9h0

https://www.youtube.com/watch?v=HY9iDjNVnyY

https://www.youtube.com/watch?v=Xr4gvXXgCnU