PDA

View Full Version : Makkal thilakam mgr part-11



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16

ainefal
6th November 2014, 09:57 AM
http://www.youtube.com/watch?v=zTH8fxXDzS0&list=UUHwHwTJ9FX612v1xXDdz6Hw

Richardsof
6th November 2014, 01:20 PM
1961ல் மாபெரும் வெற்றி பெற்ற பல படங்களில் மக்கள் திலகத்தின் இரண்டு படங்கள் மிகப்பெரியவெற்றி அடைந்து ரசிகர்கள் மத்தியில் மக்கள் திலகத்தின் புகழும் , மக்களிடையே செல்வாக்கும்கிடைத்தது .

திருடாதே

தாய் சொல்லை தட்டாதே

சமூக படங்களில் மாபெரும் திருப்பத்தை உண்டாக்கிய படம் ''திருடாதே ''

திருடுவதால் சமுதாயத்தில் எந்த அளவிற்கு பாதிப்பு என்பதை அழகாக படம் பிடித்து காட்டிய படம் .மக்கள் திலகத்தின் நடிப்பு - அறிவுரை - சமூக சிந்தனை தூண்டும் பாடல் படத்திற்கு கிடைத்த வெற்றி . எல்லா இடங்களிலும் abc எனப்படும் மூன்று சென்டர்களிலும் வசூலில் சக்கை போடுபோட்டு வெற்றி கொடி நாட்டிய படம் .

ainefal
6th November 2014, 03:05 PM
http://i57.tinypic.com/ou2xs5.jpg
http://i62.tinypic.com/2vjamwk.jpg

Russellzlc
6th November 2014, 03:15 PM
வாழ்த்துக்கள் திரு.கோபால்,

சுவாமிமலையில் 1952ம் ஆண்டு திரு.சிவாஜி கணேசன் அவர்கள் திருமண விழாவில், தலைவரும் கலந்து கொண்டார். அவரே தன் கையால் எல்லாருக்கும் உணவும் பரிமாறியுள்ளார். அப்போது, தலைவர் நடித்த அந்தமான் கைதி சமூகத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், அவரைப் பார்த்து ‘‘அண்ணே, நீங்க கத்தி எடுத்து சண்டை போட்டால் கைதட்டி ரசிக்க ஜனங்க இருக்கும்போது, உங்களுக்கு எதுக்குண்ணே பேண்டும், சூட்டும்?’’ என்று திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தலைவரைப் பார்த்து பலர் முன்னிலையில் கேட்டுள்ளார்.

விழா முடிந்து தலைவரை காரில் ஏற்றி விட வந்த ராம. அரங்கண்ணலிடம் தலைவர் ‘‘கணேசு, என்ன சொல்லுது பார்த்தீங்களா? இருக்கட்டும்’’ என்று கூறியுள்ளார். இதை ராம. அரங்கண்ணல் தனது ‘நினைவுகள்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அதை நானும் படித்துள்ளேன். இதைத்தான் தாங்கள் மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று கருதுகிறேன். தனக்கு பேண்ட், சட்டை சரியாக இருக்காது என்று திரு. சிவாஜி கணேசன் சொன்னதை தலைவர் சவாலாக ஏற்றுக் கொண்டதாகவே நாங்கள் அர்த்தம் எடுத்துக் கொள்கிறோம். இதைத் தவிர ராம. அரங்கண்ணல் அந்த நூலில் திரு. சிவாஜி கணேசனுக்கு தலைவர் தொல்லை கொடுத்ததாக எதுவும் குறிப்பிடவில்லை.

கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக, சாதியை ஒழிக்க பாடுபட்டவர் பெரியார். ஆனால், சாதியை அங்கீகரிக்க வேண்டும் என்று நேற்று கூறிய தாங்கள், உங்களை பெரியாரின் அறிவு பாசறையில் வெளிவந்த பகுத்தறிவாளன் என்று கூறிக் கொள்வது.......... எங்கோ இடிக்கிறது. எங்கே முரண் என்று தெரியவில்லை. ஆராய விரும்பவில்லை.

கருத்துக்கள் மாறுபடலாம், தவறில்லை. உங்களுக்கு கோபம் வந்தால் ‘கலைவேந்தன் ஒரு முட்டாள்’ என்று வேண்டுமானாலும் திட்டிவிட்டுப் போங்கள். நானும் பேரறிஞர் பாணியில் ‘வாழ்க வசவாளர்’ என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டு போய்விடுவேன். ஆனால், குண்டடி பட்டு சிகிச்சைக்கு பின் கண் விழித்ததும் தன்னை சுட்டவரை ‘‘அண்ணன் எப்படி இருக்கிறார்?’ என்று விசாரித்த குணமெனும் குன்றேறி நின்ற அந்த குணாளனை தவறாக விமர்சிக்காதீர்கள் என்றுதான் அன்போடு கோருகிறேன்.

ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் நமக்கு அதிகரிக்க வேண்டியது வயது மட்டுமல்ல, பண்பும் முதிர்ச்சியும் கூட. தங்களின் இன்றைய பொறுமையான, நிதானமான பதிலில் இருந்து அவை உங்களிடம் அதிகரித்திருப்பது தெரிகிறது. இது மேலும் அதிகரிக்கட்டும் என்பதே உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்து.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
6th November 2014, 03:30 PM
நண்பர் திரு. ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,

தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த தொடரில் திரு.விஜயகுமார் கூறியிருந்த செய்தியை நான் தெரிவித்திருந்தேன். நான் மட்டுமல்ல, பலரும் அதைப் படித்திருக்கலாம். அது புத்தக வடிவில் கூட வந்துள்ளது.

தயவு செய்து உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஆனால், எனக்கு நிஜமாகவே ஒன்று புரிவதே இல்லை. டில்லியிலும் திருமதி. இந்திரா காந்தி அம்மையாரிடமும் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்த திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு கடைசி வரை ஏன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கவே இல்லை? அகில இந்திய காங்கிரசில் மூப்பனார் ஐயாவுக்கு இருந்த மரியாதையும் அங்கீகாரமும் திரு.சிவாஜி கணேசனுக்கு கிடைக்காதது எனக்கும் வருத்தமே.

ஆமாம், எங்கே இவ்வளவு நாட்களாக காணோம்?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

Richardsof
6th November 2014, 04:03 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தான் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதும் அண்ணாவின் மீதும் அளவு கடந்த பற்றும் பாசமும் வைத்திருந்த காரணத்தாலும் , கொள்கை பிடிப்பு இருந்ததாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரி பார்த்து குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து வந்தார்
.திமுக என்றஇயக்கத்தை பட்டி தொட்டி எங்கும் பரவிட பிரச்சாரம் செய்தார் . தன்னுடைய உழைப்பை , வருமானத்தை கட்சிக்காக செலவழித்து திமுக இயக்கத்தை வளர்த்தார் .

எம்ஜிஆரின் பேராற்றல் வியக்கத்தக்கது .ரசிகர்களுக்காக புதுமை படைப்புகள் . மக்களுக்கு அறிவுரைகள் ,பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் என்று தரமான படைப்புகளை
தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கினார் .

இன்று பார்த்தாலும் கூட எம்ஜிஆரின் படங்கள் சந்தோஷத்தை தருகிறது , பாடல்கள் இனிக்கிறது .
மனதிற்கு நிறைவாக உள்ளது . இத்தனைக்கும் 115 படங்கள் மட்டுமே நடித்துள்ளார் .

எம்ஜிஆர் என்ற பிம்பம் திரையில் தோன்றும்போது நமக்கு உண்டாகும் உற்சாகம் அளவிட முடியாது . அந்த அளவிற்கு அவரின் தோற்றம் - சிரிப்பு - நடிப்பு - வீரம் - கம்பீரம் - எளிமை
நம்மை கட்டி போட்டு விடுகிறது . உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம் .

உலகில் முதுமையில் இளமை கண்ட ஒரே பேரழகன் நம் எம்ஜிஆர் .

எம்ஜிஆர் வேற்று மொழிகளில் நடிக்காமல் தமிழ் மொழியில் மட்டுமே நடித்த கொள்கை வேந்தன் . அதனால்தான் உலகமெங்கும் வாழும் தமிழ் இனம் அவரை ரசித்தது . என்றென்றும்
தமிழ் இனம் எம்ஜிஆர் என்ற தனி மனிதனை மறக்கவே மறக்காது . எம்ஜிஆர் ஒரு சரித்திர சகாப்தம் .

நன்றி - முக நூல் . திரு .மெய் போக வசந்த ராயன் .

Stynagt
6th November 2014, 04:04 PM
நண்பர் திரு. ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,

தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த தொடரில் திரு.விஜயகுமார் கூறியிருந்த செய்தியை நான் தெரிவித்திருந்தேன். நான் மட்டுமல்ல, பலரும் அதைப் படித்திருக்கலாம். அது புத்தக வடிவில் கூட வந்துள்ளது.

தயவு செய்து உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஆனால், எனக்கு நிஜமாகவே ஒன்று புரிவதே இல்லை. டில்லியிலும் திருமதி. இந்திரா காந்தி அம்மையாரிடமும் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்த திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு கடைசி வரை ஏன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கவே இல்லை? அகில இந்திய காங்கிரசில் மூப்பனார் ஐயாவுக்கு இருந்த மரியாதையும் அங்கீகாரமும் திரு.சிவாஜி கணேசனுக்கு கிடைக்காதது எனக்கும் வருத்தமே.

ஆமாம், எங்கே இவ்வளவு நாட்களாக காணோம்?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.


திரு. கலைவேந்தன் சார். தங்களின் பதிவுகள் அனைத்தும் பொருள் பதிந்த அற்புத பதிவுகள். மிக்க நன்றி. தாங்கள் கூறியதை நானும் இதற்கு முன்பு படித்திருக்கிறேன். அந்த தகவல் அடங்கிய பதிவு கிடைத்தால் பதிவிடுகிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
6th November 2014, 04:09 PM
http://i58.tinypic.com/ibkz9y.jpg
http://i59.tinypic.com/i2rsaq.jpg

siqutacelufuw
6th November 2014, 05:11 PM
நண்பர் திரு. ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,

தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த தொடரில் திரு.விஜயகுமார் கூறியிருந்த செய்தியை நான் தெரிவித்திருந்தேன். நான் மட்டுமல்ல, பலரும் அதைப் படித்திருக்கலாம். அது புத்தக வடிவில் கூட வந்துள்ளது.

தயவு செய்து உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஆனால், எனக்கு நிஜமாகவே ஒன்று புரிவதே இல்லை. டில்லியிலும் திருமதி. இந்திரா காந்தி அம்மையாரிடமும் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்த திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு கடைசி வரை ஏன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கவே இல்லை? அகில இந்திய காங்கிரசில் மூப்பனார் ஐயாவுக்கு இருந்த மரியாதையும் அங்கீகாரமும் திரு.சிவாஜி கணேசனுக்கு கிடைக்காதது எனக்கும் வருத்தமே.

ஆமாம், எங்கே இவ்வளவு நாட்களாக காணோம்?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.


சகோதாரர் கலைவேந்தன் அவர்கள் அறிவது :

திரு. ஆர். கே. எஸ்ஸுக்கு அருமையான கேள்வி விடுத்துள்ளீர்கள். மக்கள் எவருமே கேள்விப்படாத செய்தி எப்படித்தான் திரு. ஆர். கே. எஸ். அவர்களுக்கு மட்டும் தெரிகிறதோ ? .

siqutacelufuw
6th November 2014, 05:22 PM
சகோதரர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள், கோவை மாநகரை கலக்க வரும் மக்கள் திலகத்தின் காவியங்கள் அணிவகுப்பு பற்றிய செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ! இப்படிப்பட்ட ஒரு எழுச்சியையும், புரட்சியையும் நமது பொன்மனச்செம்மல் அவர்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே கிடையாது.

அரசியல் மூலம் பெற்ற பட்டப்பெயர் “புரட்சித்தலைவர்”

கலையுலக சாதனைகள் மூலம் பெற்ற பட்டப் பெயர் எக்காலத்துக்கும் ஏற்ற “ புரட்சி நடிகர் “

என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

siqutacelufuw
6th November 2014, 05:31 PM
நல்ல ரசிகர் - நல்ல விமர்சகர் என்ற முறையில் உங்கள் ''மாட்டுக்கார வேலன் '' பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் கோபால் .
-------------------------------
எனக்கு ஒன்றும் தடையில்லை எஸ்.வீ.

எனக்கு பிடித்த எம்.ஜி.ஆர் படங்கள். சர்வாதிகாரி,மலைக்கள்ளன்,நாடோடி மன்னன்,பாசம்,கலையரசி,பெரிய இடத்து பெண் படகோட்டி,எங்க வீட்டு பிள்ளை,ஆசை முகம்,ஆயிரத்தில் ஒருவன்,அன்பே வா,பறக்கும் பாவை,குடியிருந்த கோயில் ,அடிமை பெண்,மாட்டுகார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை..

அவர் நடிப்பில் என்னை கவர்ந்தவை. மலை கள்ளன்,கொடுத்து வைத்தவள்,எங்க வீட்டு பிள்ளை,அன்பே வா,பெற்றால்தான் பிள்ளையா,குடியிருந்த கோயில்,நீரும் நெருப்பும்.

---------------
ஹைய்யோ..... ஹைய்யோ...

நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு,

பாரத் பட்டம் பற்றி எல்லாம் இப்போது தேவையில்லாமல் கருத்து கூறியுள்ளீர்கள். அதற்கு தலைவரே பதிலளித்துள்ளார். தனக்கு கிடைத்த பட்டத்தை கலையுலகுக்கு வழங்கிய வள்ளல் அவர் என்பதோடு, உங்களைப் போன்றவர்கள் சர்ச்சை கிளப்பியபோது அதை தூக்கி எறிந்தார்.

கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் சிரமம் தராமல் நடிப்பது பற்றி குறிப்பிடுகிறீர்கள். ஓஹோ... புரிந்தே விட்டது. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, சந்திப்பு, எமனுக்கு எமன் படங்கள் பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் படங்களையும் அதில் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பையும் விமர்சிக்கத் தயங்காதவராயிற்றே நீங்கள்.

எங்கள் பக்கம் இருந்து indirect dig இருப்பதாகவும் முதலில் அதை பாருங்கள் என்றும் திரு.எஸ்.வி.க்கு கூறுகிறீர்கள். நாங்களும் அதையேதான் உங்களுக்கு கூறுகிறோம். நான் காஞ்சித் தலைவன் படத்தில் தலைவரின் மல்யுத்த சண்டைக் காட்சியைப் பாராட்டி எழுதினால் பதிலுக்கு இதுதான் ஒரிஜினல் மல்யுத்தம் என்றும் 3 அடி அடிக்கும் சலுகை மட்டுமே வில்லனுக்கு உண்டு என்றும், 1964 தீபாவளிக்கு காணாமல் போன காஸ்ட்லி கலர் படங்கள் என்றும், தங்கள் பக்கத்தில் indirect digs மட்டுமல்ல, நேற்று கூட ‘யாரை எப்போது எப்படி தனக்கு உதவிகரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தேர்ந்தவரான எம்.ஜி.ஆர்.’ என்று direct dig (அது பழைய பதிவு என்றாலும் கூட) இடம் பெறுகிறதே. முதலில் அதைப் பாருங்கள். தலைவர் எப்போதும் யாரையும் பயன்படுத்திக் கொண்டதில்லை. அவர்தான் மற்றவர்களுக்கு பயன்பட்டும் உதவியும் இருக்கிறார். திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு கூட அவர் கோரிக்கை வைக்காமலே உதவியிருக்கிறார்.

நாகப்பட்டிணத்தில் அவரது மகள் வீட்டில் குடியிருந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தது குறித்தும் அதனால் படப்பிடிப்பில் சோகமாக இருந்த திரு.சிவாஜி கணேசன் அவர்களிடம் திரு.விஜயகுமார் விசாரிக்க, அவர் விஷயத்தை சொன்னதும் உடனே விஜயகுமார் முதல்வராக இருந்த தலைவருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். ‘இதை தம்பி (சிவாஜி கணேசன்) ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்று கூறிய தலைவர், உடனடியாக நாகப்பட்டிணம் போலீசாரிடம் பேசி அடுத்த 20 நிமிடத்தில் வீட்டை மீட்டுக் கொடுத்ததை தினத்தந்தி நாளிதழில் திரையுலக வரலாறு தொடராக வந்தபோது திரு.விஜயகுமார் தெரிவித்திருந்தாரே?

திரு.சிவாஜி கணேசன் அவர்களை நாங்கள் போட்டியாளராகவே கருதவில்லை. அவர் பாணி வேறு. தலைவரின் பாணியே வேறு. ஒரு காலத்தில் போட்டி இருந்திருக்கலாம். 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் எங்கள் போட்டியாளராக திரு.கருணாநிதியைத் தான் பார்க்கிறோம்.

உங்கள் திரியில் எழுத்து வன்மையும் விஷய ஞானமும் உடையவர்கள் என்று என் மனதில் ஒரு பட்டியல் உண்டு. அதில் உங்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், சமயத்தில் நீங்கள் இப்படி காமெடி செய்வது வேடிக்கை.

சரி.. போகட்டும். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மேலே நீங்கள் குறிப்பிட்ட தலைவரின் படங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்பதிலும் எங்கள் ரசனையோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்கள் என்பதிலும் எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்களே மேலே குறிப்பிட்டது போல உங்களுக்குப் பிடித்த மாட்டுக்கார வேலன் திரைப்பட விமர்சனத்தை எப்போது எழுதப் போகிறீர்கள்? நவம்பர் 7ல் பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள். அந்தப் பிறந்த நாளில் உங்கள் எழுத்துக்களால் தலைவருக்கு புகழ்மாலை சூட்டினால் பெருமகிழ்ச்சி அடைவோம்.

சரி... கிட்டே வாருங்கள்... இன்னும் கொஞ்சம்.. அட.. பயப்படாதீர்கள்... ஒன்றும் செய்துவிட மாட்டேன். ..எங்கே? காதைக் கொடுங்கள்... (உங்களுக்கு தலைவரை உள்ளூர பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அது வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே தலைவரைப் பாராட்டும் உங்கள் நண்பர்களை திட்டுவது போல நடிக்கிறீர்கள் என்பதும் தெரியும். உங்கள் இரண்டாவது மகனுக்கு தெய்வமகன் பட பாதிப்பால் விஜய் என்று பெயர் வைத்ததாக நீங்கள் கூறிக் கொண்டாலும் ‘நீதிக்குத் தலைவணங்கு’ படத்தில் தலைவரின் பெயர் விஜய் என்பதால் அந்தப் பெயரை வைத்தீர்களோ? என்று கூட எங்களுக்கு சந்தேகம் உண்டு. நீங்கள் மட்டும் என்ன சும்மாவா? குமரிக் கோட்டத்தில் தலைவரின் பெயர்தானே உங்கள் பெயர். இதற்காகவே உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் தலைவரின் ஆசிகள் உண்டு. தலைவரின் ரசிகர்கள், ஆதரவாளர்கள், அதையும் தாண்டிய விசுவாசிகள் எல்லா தளங்களிலும் உண்டு. அவர்கள் எங்கே, எப்படி, எந்த ரூபத்தில் இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. நீங்கள் அந்தப் பக்கம் இருக்கிறீர்கள். ம்.. ஜமாயுங்கள்...) இந்த ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும். ஹைய்யோ.. ஹைய்யோ.... நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


சகோதரர் கலைவேந்தன் அவர்களே !

தங்களுக்கே உரிய பாணியில், நையாண்டியுடன் கூடிய நகைச்சுவை கலந்து, தக்க பதிலளித்திருப்பது சிந்திக்கத்தக்கது.

தங்களின் எழுத்து வளம் மிகவும் ரசிக்கத்க்கது, பாராட்டுக்குரியது, போற்றத்தக்கது.

super punch. வாழ்த்துக்கள் !

Richardsof
6th November 2014, 05:31 PM
7.11.2014 அன்று மக்கள் திலகத்தின் 3 படங்கள் திரைக்கு வந்த நாள் .

தாய் சொல்லை தட்டாதே - 54வது ஆண்டு . 7-11 1961

நம்நாடு - 46வது ஆண்டு. - 7.11.-1969

உரிமைக்குரல் - 41வது ஆண்டு . 7.11.1974


தாய் சொல்லை தட்டாதே- 1961ல் வெளிவந்த தமிழ் படங்களில் வசூலில் வெற்றி வாகை சூடிய படங்களில் இந்த படமும் ஒன்று .

நம்நாடு - 1969 ல் அடிமைப் பெண்ணை தொடர்ந்து மாபெரும் வெற்றி கண்ட படம் .

உரிமைக்குரல் - 1974ல் 200 நாட்கள் ஓடி வசூலில் மாபெரும் வெற்றி அடைந்த படம் .

siqutacelufuw
6th November 2014, 05:32 PM
http://i59.tinypic.com/33mu6wx.jpg

இங்கு பி. பா என்று குறிப்பிட்டிருப்பது, பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் குரு “ சண்டே அப்சர்வர் “ என்ற செய்தி தாளின் ஆசிரியர், அப்போதைய நீதிக்கட்சி செயலாளர் மறைதிரு. பாலசுப்ரமனியம் அவர்கள்.

siqutacelufuw
6th November 2014, 05:34 PM
மணமக்களுடன் நமது மக்கள் திலகத்தின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா

http://i60.tinypic.com/2u546tv.jpg

Russellzlc
6th November 2014, 05:36 PM
சகோதாரர் கலைவேந்தன் அவர்கள் அறிவது :

திரு. ஆர். கே. எஸ்ஸுக்கு அருமையான கேள்வி விடுத்துள்ளீர்கள். மக்கள் எவருமே கேள்விப்படாத செய்தி எப்படித்தான் திரு. ஆர். கே. எஸ். அவர்களுக்கு மட்டும் தெரிகிறதோ ? .


நன்றி திரு. செல்வகுமார் சார், திரு.ஆர்.கே.எஸ்.அவர்கள் உடனே பொம்மை பத்திரிகையில் ஆர்.கே.தவானுடன் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான செய்தியை வெளியிடுவார். அந்த செய்தி உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், அவ்வளவு செல்வாக்கு பெற்றவருக்கு ஏன் காங்கிரஸ் தலைவர் பதவியை திருமதி. இந்திரா காந்தி அம்மையார் வழங்கவில்லை? என்பது இன்று வரை உண்மையிலேயே எனக்கு புரியாத புதிர். ஒருவேளை மூப்பனார் ஐயா முட்டுக்கட்டையாக இருந்தார் என்றால் அவரது பேச்சைத்தான் இந்திரா காந்தி கேட்டாரா?

நன்றி திரு. கலிய பெருமாள் சார், அந்தப் பதிவு (விஜயகுமார் கூறியது) தங்களுக்கு கிடைத்து அதை பதிவிட்டால் மகிழ்ச்சி அடைவேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
6th November 2014, 05:38 PM
மணமேடையில், காஞ்சி தந்த தலைவர் பேரறிஞர் அண்ணா

http://i60.tinypic.com/vexfsl.jpg

siqutacelufuw
6th November 2014, 05:39 PM
மங்கள நாணை எடுத்து தருகிறார் தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணா

http://i57.tinypic.com/t83ha1.jpg

siqutacelufuw
6th November 2014, 05:43 PM
http://i61.tinypic.com/2ewgo0i.jpg

siqutacelufuw
6th November 2014, 05:45 PM
http://i62.tinypic.com/j5uwsh.jpg

இங்கு பி. பா என்று குறிப்பிட்டிருப்பது, பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் குரு “ சண்டே அப்சர்வர் “ என்ற செய்தி தாளின் ஆசிரியர், அப்போதைய நீதிக்கட்சி செயலாளர் மறைதிரு. பாலசுப்ரமனியம் அவர்கள்.

siqutacelufuw
6th November 2014, 05:46 PM
http://i60.tinypic.com/2dl87wz.jpg

மேடையில் பேசுபவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த தி. சு. கிள்ளிவளவன். புரட்சித்தலைவருடன் மேடையில் வீற்றிருப்பவர் முத்தமிழ் காவலர் மறைதிரு. கி. ஆ. பொ. விசுவநாதம் அவர்கள்.

siqutacelufuw
6th November 2014, 05:50 PM
http://i59.tinypic.com/2wpjqjs.jpg

siqutacelufuw
6th November 2014, 05:53 PM
http://i57.tinypic.com/r79c36.jpg

siqutacelufuw
6th November 2014, 06:51 PM
நவம்பர் மாதம் 7ம் தேதியன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் மகத்தான காவியங்கள் :

தாய் சொல்லை தட்டாதே
http://i57.tinypic.com/2a6jotc.jpg


நம் நாடு
http://i57.tinypic.com/2dr6ip0.jpg


உரிமைக்குரல்
http://i61.tinypic.com/2ngefsy.jpg

பற்றிய தகவல்கள் மற்றும் சிறப்பு பதிவுகள் நாளை (௦7-11-14)

Russellzlc
6th November 2014, 06:53 PM
http://i62.tinypic.com/j5uwsh.jpg

இங்கு பி. பா என்று குறிப்பிட்டிருப்பது, பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் குரு “ சண்டே அப்சர்வர் “ என்ற செய்தி தாளின் ஆசிரியர், அப்போதைய நீதிக்கட்சி செயலாளர் மறைதிரு. பாலசுப்ரமனியம் அவர்கள்.


பொக்கிஷமான புகைப்பட அணிவகுப்பு திரு. செல்வகுமார் சார். திரு.பி.பா. அவர்களின் மகள் திருமணத்தை பேரறிஞர் நடத்தி வைத்துள்ளார். பி.பா. அவர்களின் மகன் திருமணத்தை பேரறிஞரின் தம்பியாம் நமது தலைவர் நடத்தி வைத்துள்ளார். என்ன பொருத்தம். மிக்க நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
6th November 2014, 07:07 PM
பொக்கிஷமான புகைப்பட அணிவகுப்பு திரு. செல்வகுமார் சார். திரு.பி.பா. அவர்களின் மகள் திருமணத்தை பேரறிஞர் நடத்தி வைத்துள்ளார். பி.பா. அவர்களின் மகன் திருமணத்தை பேரறிஞரின் தம்பியாம் நமது தலைவர் நடத்தி வைத்துள்ளார். என்ன பொருத்தம். மிக்க நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

பேரறிஞர் அண்ணா அவர்களின் அருமை தம்பி, உண்மை தம்பி, அன்பு தம்பி, அவர் மீது பாசமும் நேசமும் கொண்ட தம்பி நம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள்தான். அதனால்தான், தான் தோற்றுவித்த கட்சிக்கு அறிஞர் அண்ணா அவர்களின் பெயர், கட்சிக் கொடியிலும் அவரின் உருவம், கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம், தன்னுடைய உரையின் முடிவில் "அண்ணா நாமம் வாழ்க " ---- இப்படி மூச்சுக்கு மூச்சு, பேச்சுக்கு பேச்சு, பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தவர் அல்லவா, நம் ஈடில்லா இதயக்கனி எம். ஜி. ஆர். அவர்கள்.

நன்றி கலைவேந்தன் அவர்களே !

idahihal
6th November 2014, 08:40 PM
http://i59.tinypic.com/2wpjqjs.jpg

பேராசிரியர் அவர்களுக்கு,
நன்றி. அபூர்வமான புகைப்படங்கள். அவற்றைப் பற்றிய ஆழமான செய்திகள். நுணுக்கமான தகவல்கள் இவைகள் உங்கள் அடையாளங்கள். நன்றி. நன்றி. நன்றி.

oygateedat
6th November 2014, 08:41 PM
http://s24.postimg.org/5qpoov23p/GFF.jpg (http://postimg.org/image/sfevofjhd/full/)

ainefal
6th November 2014, 08:52 PM
http://i59.tinypic.com/14uc1na.jpg

தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு

oygateedat
6th November 2014, 08:53 PM
http://s3.postimg.org/9x0a6itpf/VFFF.jpg (http://postimg.org/image/6q5qmw99b/full/)

INFORMATION FROM MR.R.SARAVANAN, MADURAI

ainefal
6th November 2014, 09:47 PM
http://i60.tinypic.com/10d9q1y.gif

http://i61.tinypic.com/osbw2h.jpg

http://i61.tinypic.com/e8wivq.png

ainefal
6th November 2014, 10:50 PM
http://i59.tinypic.com/bgb32a.gif http://i60.tinypic.com/nygw2g.gif
http://i60.tinypic.com/2v02981.jpg
http://www.youtube.com/watch?v=cTii8Jgh7a4
http://www.youtube.com/watch?v=V46Gord5puA

oygateedat
6th November 2014, 11:23 PM
http://s23.postimg.org/jay6m7x63/vddd.jpg (http://postimg.org/image/c7qb6lrqf/full/)

ainefal
7th November 2014, 12:15 AM
http://i61.tinypic.com/2iu5ac2.jpg
http://i57.tinypic.com/25z0z6d.jpg

ainefal
7th November 2014, 12:27 AM
http://i59.tinypic.com/28kivyr.png

ainefal
7th November 2014, 01:07 AM
http://i62.tinypic.com/25zqyqd.jpg

ainefal
7th November 2014, 01:08 AM
http://www.youtube.com/watch?v=FSlGWQ7adiI

ainefal
7th November 2014, 01:09 AM
http://www.youtube.com/watch?v=syqEFuG-i6o

ainefal
7th November 2014, 01:09 AM
http://www.youtube.com/watch?v=A7IBPID_cz8

ainefal
7th November 2014, 01:10 AM
http://www.youtube.com/watch?v=UpzA1lcdnUY

ainefal
7th November 2014, 01:10 AM
http://www.youtube.com/watch?v=ogY07oKFhRQ

ainefal
7th November 2014, 01:11 AM
http://www.youtube.com/watch?v=T_tU9eWbZYw

ainefal
7th November 2014, 01:11 AM
http://www.youtube.com/watch?v=1giUWvaSBR0

ainefal
7th November 2014, 01:41 AM
http://i60.tinypic.com/k4wfbr.gif
http://i60.tinypic.com/2a7arnd.png
http://i62.tinypic.com/b6adcl.png

Richardsof
7th November 2014, 05:34 AM
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

அண்ணா , மக்கள் திலகம் கலந்து கொண்ட திருமண விழா நிழற் படங்கள் இது வரை பார்த்ததில்லை . பதிவிட்டமைக்கு நன்றி .

இனிய நண்பர் திரு கலை வேந்தன் சார்

உங்களின் பதில்கள் அருமை .நகைச்சுவையாகவும் , சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது பதிவுகள் .மகிழ்ச்சி .

இனிய நண்பர் திரு சைலேஷ் சார்

மக்கள் திலகத்தின் பதில்கள் சூப்பர் . அருமையான பதிவுகள் . தாய் சொல்லை தட்டாதே - பதிவுகளும் அருமை . நன்றி

Richardsof
7th November 2014, 05:44 AM
நாகிரெட்டி நினைவுகள்:

என் தந்தையாரை எம்.ஜி.ஆர். சந்தித்து, தான் நடிக்க விஜயா பேனரில் அடுத்த படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டபோது அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சமுதாய மேம்பாட்டினை வலியுறுத்தும் வகையில் படம் எடுக்க விரும்பினார் எம்.ஜி.ஆர். அது எப்படி இருக்க வேண்டும், அதில் எம்ஜியாருக்கு எந்த மாதிரியான வேடம் அமைய வேண்டும் என சிந்தித்தார் என் தந்தையார்...

பாரதம் ஒரு புனித பூமி. பாரம்பரிய செல்வாக்கு மிக்க புண்ணிய தேசம். தியாகச்சிந்தை படைத்தோர் தீரமிக்க போராட்டத்தினால் விடுதலை பெற்ற சுதந்திர நாடு

நமது மக்கள் பண்பாட்டுக்குரியவர்கள். பிற நாட்டவர்கள். மதிக்கத்தக்க அறிவுச் செறிவு மிக்கவர்கள். வணங்கத்தக்க வரலாற்றுச் சிறப்புக்குரியவர்கள்.

ஆனால், பரந்து கிடக்கும் இந்த சமுதாயத்தில் சில நச்சுக் கிருமிகள், பல நயவஞ்சகர்கள் மறைந்திருக்கிறார்கள்.

அவர்களால், அவர்களது செயல்களால் இந்த நாட்டில் வெட்கப்படத்தக்க வேதனைகள் நிகழ்கின்றன...

நீதிக்காக, நேர்மைக்காக, ஜாதிவெறி கூடாது என்பதற்காக, ஏழை, பணக்காரன் வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக, சமூகத்தில் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதற்காக அண்ணல் காந்தியடிகள் போராடினார்.

தனக்காகவோ, தன் புகழுக்காகவோ, தன் சுயநலத்துக்காகவோ, இந்த போராட்டங்களை அவர் மேற்கொள்ளவில்லை.

நாட்டு மக்களின் நல்வாழ்க்கைக்காக, நாட்டு மக்களின் உயர்வுக்காக, நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக இந்தப் போராட்டங்களை மேற்கொண்டார்...

இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கதாநாயகனும் தன்னைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடன் இருக்கும் மக்களுக்காக போராடுகிறான். அந்த அளவுக்கு நமது அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிய சம்பவங்களை அழகாக, வரிசைப்படுத்தப்பட்டு சுவையான படமாக உருவாக்கப்பட்ட படம் "நம் நாடு'.

"நம் நாடு' படத்தில் இத்தனைச் சிறப்புகளுடன் கூடிய கதாநாயகன் துரையாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகரா அல்லது நடிகருக்கு ஏற்ற கதாபாத்திரமா என்று சொல்ல முடியாதபடி நடித்திருந்தார்.


"நம் நாடு' படத்திற்கு காலத்திற்கேற்ற, கருத்தோவியமான வசனங்களை எழுதியவர் சொர்ணம்.

"நம் நாடு' படத்தைப்பற்றி... அப்படத்தில் தமக்கு ஏற்பட்ட புதுமையான அனுபவங்களைப் பற்றி சொர்ணம் சொல்லக் கேட்போம்:

""எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி அவர்கள் சத்யராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்த "அரச கட்டளை' படத்தை அடுத்து, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் உருவாக்கிய "அடிமைப்பெண்' படத்துக்கு உரையாடல் அமைக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தேன்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். ""விஜயா-வாகினி அதிபர் பி.நாகிரெட்டியார் நான் நடிக்க அடுத்த படம் தயாரிக்கவிருக்கிறார். அவரிடம் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி ஓகே பெற்று வாருங்கள், நான் உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறேன்'' என்றார்.

அப்போது நான் அண்ணாசாலையில் முரசொலி நாளேட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். விஜயா - வாகினி ஸ்டூடியோ நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். சிறிது நேரத்தில் முரசொலி அலுவலகத்திற்கு வாகினியிலிருந்து காரில் வந்து என்னை விஜயா கார்டனுக்கு அழைத்துச் சென்றார்கள்.

விஜயா கார்டனில் நாகிரெட்டியார் முன் உட்காருவதற்கே எனக்குக் கூச்சமாக இருந்தது. அந்த அளவுக்கு அவரைப் பார்த்தவுடன் என்னையறியாமலேயே மரியாதை உணர்வு ஏற்பட்டது.

""எம்.ஜி.ஆர். நடிக்க அடுத்த படம் எடுக்கப் போகிறேன்... எங்களிடம் கதை இலாக்கா இருக்கிறது. இருந்தாலும் நீங்கதான் எழுதணும்'' என்றார் ரெட்டியார்.

நான் உடனே பதிலே சொல்ல முடியாமல் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தேன். இந்த நிலையில் எந்தக் கதையை... அதுவும் எம்.ஜி.ஆருக்கு ஏற்றமாதிரி எப்படிச் சொல்வது?

இரண்டு, மூன்று கதைகளின் அவுட்லைன் சொன்னேன். பொறுமையாகக் கேட்ட பின்பு என்னைப் பார்த்த ரெட்டியார், ""இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி...'' என்று ஆரம்பித்து முடிக்கும் முன்பே... ""அதாவது எலெக்ஷன் வரப் போகுது... அதை அடிப்படையாகக் கொண்டு செய்யலாமே?'' என்றேன் நான் அவரிடம்.

""வெரிகுட் ஐடியா'' என்றார்.

""ஓரிரு மாதங்களுக்கு முன் ஒரு தெலுங்குப் படம் (கதாநாயகுடு) பார்த்தேன். அதில் சாதாரண மனிதன் மாநில முதல்வராகி, ஊழல் பேர்வழிகளைப் பழிவாங்குவதுபோல இருந்தது. அதையே நமது கதாநாயகர், நகராட்சித் தலைவராகி... எதிரிகளை எப்படிப் பழிவாங்குகிறார் என்பது போலச் செய்யலாமே?'' என்றேன்.

""சரி... இதை எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஓகே பண்ணுங்கள்'' என்று சொல்லி அனுப்பினார்.

எம்.ஜி.ஆரிடம் ரெட்டியாரைச் சந்தித்து கதையைச் சொன்ன விபரத்தைச் சொன்னபோது, ""என்ன சொக்குபொடி போட்டீர்? எனக்கு ரெட்டியார் போன் பண்ணினார், கதையை ஓகே பண்ணிவிட்டார்'' என்று சொல்லி என்னைப் பாராட்டினார் எம்.ஜி.ஆர்.

வாகினி ஸ்டூடியோவில் ஒரு மேக்அப் அறையை, நான் தங்கி கதை,வசனம் எழுதுவதற்கேற்ப வசதிகளை செய்து, ரெட்டியாரே உதவியாளர் ஒருவரையும் எனக்காக நியமித்தார்.

நான் எனது எழுத்துப் பணியைத் தொடங்கி, தொடர்ந்து செய்து கொண்டிருந்த நாளில், தினமும் அதிகாலையில் ரெட்டியார் பல் குச்சியால் பல் துலக்கிக் கொண்டே ஸ்டூடியோ விசிட் செய்வார். அப்போது என் அறையின் வாசலில் வந்து, ""சொர்ணம் காரு பாகவுன்னரா?'' என்று நலம் விசாரிப்பார். அந்த அதிகாலையில் அவர் என்னைத்தான் சந்திக்க முடியும். நான்கு நாள்களுக்குள் மாதிரி ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டேன்.

ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகிகளுடன் என்னையும் கலந்தாலோசித்து எம்.ஜி.ஆரிடம் கால்ஷீட் பெறச் சொன்னார். அப்படியே செய்தேன். "அடிமைப்பெண்' கால்ஷீட் தேதிகளில் இருந்து எடுத்து 1ந் தேதி முதல் 10ந் தேதிவரை என பத்து நாள்களுக்கு எம்.ஜி.ஆர் கால்ஷீட் கொடுத்தார்.

படத்திற்குப் பெயர் "நம் நாடு'.

அப்போது வாகினியில் இருந்த பதினான்கு தளங்களிலும் மாறி மாறி "நம் நாடு' படப்பிடிப்புதான் நடைபெற்றது. அதற்காகவே மற்ற தயாரிப்பாளர்களிடம் முன் அனுமதி பெற்றுவிட்டார் ரெட்டியார்.

படப்பிடிப்பு நடந்த நாட்களில் அன்றாடம் எடுக்கப்படவேண்டிய காட்சிகளைப் பற்றி காலை ஏழு மணிக்குள்ளும் எடுத்த காட்சிகளைப் பற்றி அன்று மாலை இரவில் விஜயா கார்டனுக்குச் சென்று ரெட்டியாரிடம் படித்துக் காண்பிப்பேன். ஒரு கதாசிரியராக மட்டுமல்ல, ஒரு தயாரிப்பு நிர்வாகியாகவும் அவரிடம் பணியாற்றியபோது, என் தகுதிக்கு மீறிய பெரிய மனிதரிடம் பேசுவது போன்ற அனுபவம் எனக்குக் கிடைத்தது.

நம் நாடு படப்பிடிப்பு தினங்களில், சில நாள்களில் இரவு இரண்டு மணி வரையில் படப்பிடிப்பு நடைபெறும். அப்போது எம்.ஜி.ஆர். என்னுடனேயே மேக்அப் அறையில் தங்கிவிடுவார். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து வழக்கம்போல ஆயத்தப் பணிகளை மேற்கொள்வார் எம்.ஜி.ஆர்.

பாடல் பதிவு விஜயா கார்டனில் நடைபெற்றது. அந்த சமயத்தில் காலை 9 மணிக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும், கவிஞர் வாலியும் வந்துவிடுவார்கள். நான்கு டியூன் போட்டுக் கொடுப்பார் எம்.எஸ்.வி. அந்த டேப்பைக் கொண்டுபோய் எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பிப்பேன். அவர் அதைக் கேட்டு ஓகே செய்த ட்யூனுக்கு எழுதப்பட்ட பாடல் வரிகள் அன்றே பாடலாகப் பதிவு செய்யப்படும்.

தான் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் எம்.ஜி.ஆர். படமாக்குவார். ஏனைய காட்சிகளை இயக்குநர் ஜம்பு படமாக்குவார். அதற்கு முன்தினமே இயக்குநர், ஒளிப்பதிவாளர் பி. கொண்டா ரெட்டி, சுந்தர்பாபு ஆகியோர்கள் அடுத்த நாள் படப்பிடிப்புக்கான காட்சிகளைப் பற்றி திட்டமிட்டுவிடுவார்கள்.

இப்படியாக பத்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த நாள் படமாக்கப்படவேண்டிய காட்சிகளைப் பார்க்க ஃபைலைப் பார்த்து, அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதை அறிந்து வியந்தோம், மகிழ்ந்தோம். அதன்பின் எம்.ஜி.ஆர். மற்றும் டைரக்டர் ஜம்பு அவர்களுடன் எடிட்டிங் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டார். திரைப்பட வரலாற்றில் எம்.ஜி.ஆர். நடிக்க பத்தே நாட்களில் ஷூட்டிங் முடிந்த ஒரே படம் "நம் நாடு' தான்

இந்த ஷூட்டிங் நாட்களில் ஒருநாள்கூட படப்பிடிப்பைக் காண ரெட்டியார் வரவில்லை. ""படத்தை எடுத்து முடியுங்கள், முதல் காப்பியை ஒரு ரசிகன் மாதிரி பார்க்கிறேன்'' என்றார்.

எம்.ஜி.ஆர். அதிக மதிப்பும் மரியாதையும் காண்பித்த ஒரே படத்தயாரிப்பாளர் நாகிரெட்டியார். இது நட்பின் காரணமாகவும் இருந்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் நாகிரெட்டியாரை திரை உலகின் அதிசயப்பிறவி என்றே சொல்வேன்.

நம்நாடு படத்தை எடுக்கும்போது வேறு இந்திப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் ராஜேஷ்கன்னா வந்திருந்தார்.

வாகினியில் நம்நாடு படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே கட்சிக்காரர்கள் சுமார் 100 பேர் எம்.ஜி.ஆரைப் பார்க்க காத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் காட்சியைப் பார்த்த அந்தப் படத்தின் டைரக்டர், ""என்ன விசேஷம்?'' என்று என்னிடம் கேட்டார்.

எம்.ஜி.ஆரைப் பற்றியும் கட்சித் தெண்டர்களைப் பற்றியும் குறிப்பிட்டேன். இதன் பலன் எம்.ஜி.ஆர். - ராஜேஷ்கன்னா சந்திப்பு படப்பிடிப்பு தளத்தின் வெளியிலேயே நடந்தது. அந்தப் படத்தை இந்தியில் எடுக்கவும், அதில் நடிக்கவும் விருப்பப்பட்டார் ராஜேஷ்கன்னா. ஆனால் நாகிரெட்டியார் நாமே இந்தியில் எடுத்துவிடலாம் என்று சொல்லிவிட்டார். எனினும் வீனஸ் பிக்சர்ஸ் இந்திப்பட உரிமையை வாங்கி "அப்னாதேஷ்' படமெடுக்க எம்.ஜி.ஆர். ஏற்ற வேடத்தில் ராஜேஷ்கன்னா நடிக்க, அவரது ஆசை பூர்த்தியாயிற்று.''



"நம் நாடு' படத்தைப் பற்றி இனி தந்தையார் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?

""நான் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை அறிய ஒரு படம் எடுக்க விரும்புகிறேன். அந்தப் படத்தை நீங்கள்தான் தயாரிக்க வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர்.

""அப்படிப்பட்ட படத்தை நீங்களே தயாரிக்கலாமே?'' என்றேன்.

என்னைவிட நீங்கள் தயாரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னபடியே அவரது சொந்தப் படம் மாதிரியே படத்தைத் தொடங்கி, குறிப்பிட்ட தினத்துக்கு முன்னரே முடித்தார். அதற்கு எம்.ஜி.ஆருடன் இணைந்து எங்களது எடிட்டர் இயக்குநர் ஜம்பு, உரையாடல் சொர்ணம், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞர் வாலி ஆகியோர் ஆற்றிய பணி இங்கே குறிப்பிடத்தக்கது.

அவரது அரசியல் கருத்துக்களை மையமாக வைத்து, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட முதல் படம் "நம் நாடு'.

எம்.ஜி.ஆரின் அரசியல் கருத்துக்கேற்ற படம் என்பதை படம் வெளியாகும் முன்பே மக்களுக்கு உணர்த்த, முதன் முறையாக வார இதழ்கள் அட்டைப்பட சிறப்புக் கட்டுரை, செய்திகளுடன் வெளியிட்டன. அத்துடன் போஸ்டர்களிலும் வித்தியாசமான அணுகுமுறை கையாளப்பட்டது.

படம் திரையிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை நேரடியாக அறிய விரும்பினார் எம்.ஜி.ஆர். நாங்கள் இருவரும் மாலைக் காட்சிக்காக முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சென்றோம். நாங்கள் வருவது தியேட்டர் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மாலைக்காட்சியாதலால் அரங்கின் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருந்தது.

அரங்கின் உள்ளே பிரதான நுழைவாயிலின் கதவருகே ஒருபுறம் எம்.ஜி.ஆரும், இன்னொருபுறம் நானும் சாய்ந்தபடியே நின்றோம்.

நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் திரையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மக்களுடன் பாடி வரவேற்கும் "வாங்கய்யா... வாத்தியாரய்யா...' பாடல் காட்சி வந்தது. அவ்வளவுதான் தியேட்டர் முழுவதும் கைதட்டி, விசில் அடித்து, கரகோஷம் எழுப்பி அப்பாடலை வரவேற்று ரசித்தது.

பாடல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் வேண்டுகோளின்படி "ஒன்ஸ்மோர்' என அப்பாடல் திரையிடப்பட்டது. இரண்டாம் முறையாக திரையில் பாடல் தோன்றியவுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்தேன். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர். ""ரெட்டியார்... நான் ஜெயிச்சுட்டேன்... எனக்கு அங்கீகாரம் கிடைச்சுட்டுது'' என்று மகிழ்ச்சி பொங்க என்னை ஆரத் தழுவியபடியே கூறினார். அப்போதே தமது அரசியல் வெற்றியை உறுதி செய்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

Richardsof
7th November 2014, 05:57 AM
http://i57.tinypic.com/swep8k.jpg

Russellisf
7th November 2014, 06:39 AM
லண்டன் ரேடியோவுக்கு எம்.ஜி.ஆர்
அளித்த பேட்டி

லண்டன் (பி.பி.சி.)
ரேடியோவுக்கு அளித்த பேட்டியில்,
சினிமாவிலும், அரசியலிலும்
தனக்கு ஏற்பட்ட
அனுபவங்களை எம்.ஜி.ஆர். கூறினார்.

1974_ம் ஆண்டு, ரஷியத் தலைநகரான
மாஸ்கோவில் நடந்த திரைப்பட
விழாவில் கலந்து கொண்ட
எம்.ஜி.ஆர்., அங்கிருந்து லண்டன்
சென்றார். அங்கு “பி.பி.சி.”
க்கு அளித்த பேட்டியில் அவர்
கூறியதாவது:-

என்னுடைய 2 வயதில் என்
தந்தை இறந்துவிட்டார். என்
தந்தையும், தந்தைக்கு உயிரூட்டிய
அறிவைத் தந்த பாட்டனாரும் பெரும்
லட்சாதிபதிகளாக இருந்தவர்கள்.
ஆனால்; கேரளத்தில் தந்தையின்
சொத்துகள்
குழந்தைகளுக்கு இல்லை என்ற
காரணத்தால் நாங்கள் அனாதைகளாக
ஆக்கப்பட்டோம். என் தாயின்
அரவணைப்பில்தான் வளர
வேண்டி இருந்தது.
என் தந்தை மாஜிஸ்திரேட்டாக
இருந்தார். பிரின்சிபாலாகவும்
இருந்தார். பிரின்சிபாலாக அவர்
இலங்கையில் பணியாற்றும் போது,
கண்டியிலே நான் பிறந்தேன். 2 வயதில்
தந்தையை இழந்து அதற்கு பிறகு 4, 5
வயதில் தமிழ்
நாட்டிற்கு வந்துவிட்டோம்.
என்னை வளர்த்த வேலு நாயர் என்பவர்
போலீஸ் இலாகாவில் போலீஸ்காரராக
பணியாற்றினார். அவரது ஆதரவில்
நாங்கள் வளர வேண்டி இருந்தது.
முதன் முதலில் நான் எழுதப்படிக்க
கற்றுக்கொண்ட மொழி தமிழ். நான்
பார்த்துக்கொண்டு,
பழகிக்கொண்டு இருக்கும் மக்கள் தமிழ்
மக்கள். என்
உடம்பிலே இத்தனை ஆண்டுகளாக
குருதி பாய்ந்து கொண்டு இருக்கிறது,
சூடு தணியாமல் இருக்கிறது, நான்
வளர்ந்திருக்கிறேன்,
வாய்ப்பு பெற்றிருக்கிறேன் என்றால்,
அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த
வாய்ப்பாகும்.
ஆகவே, தமிழ்
நாட்டுக்கு தொண்டு செய்ய
வேண்டும் என்ற ஆர்வம்
என்னை உந்தித் தள்ளிக்கொண்டிரு
க்கிறது. அதிகமாகக் கல்வி பெறுகின்ற
வாய்ப்பு எனக்கு இல்லை.
எனது 7_வது வயதில், நாடகக்
கம்பெனியில் சேர்ந்துவிட்டேன்.
நாடகங்களில் நடித்து,
பிறகு திரை உலகில் சேர்ந்தேன்.
தொடக்கத்தில் நான் காங்கிரசில்
இருந்தேன். காங்கிரஸ் உறுப்பினராக
இல்லாமல் ஊழியனாக இருந்தேன்.

1933_ 34_ம் ஆண்டில்
உறுப்பினரானேன்.
அதன்பிறகு அங்கே சில
குறைபாடுகளை கண்டதால், நான்
விலகி, அஞ்சாதவாசம்
என்று சொல்வார்களே, அதுபோல எந்த
அரசியல் தொடர்பும் இல்லாமல்
இருந்து கொண்டிருந்தேன்.
ஆயினும் நான்
மகாத்மா காந்தியடிகளின்
கொள்கைகளில் பிடிப்பும்,
நம்பிக்கையும் கொண்டவன்.
தமிழகத்தில், அக்கொள்கைகள்
அனைத்தையும் கொண்டிருந்த
ஒரே தலைவராக அமரர் அண்ணாதான்
இருந்தார்கள். அவருடைய
புத்தகங்களை படித்தேன். அவருடைய
நியாயமான கோரிக்கைகள்தான்,
தமிழகத்திற்கும், இந்திய
துணை கண்டத்திற்கும் பயனுள்ளதாக
இருக்கும் என்ற காரணத்தால்
தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.
1972_ல் தி.மு.கழகத்தைவி
ட்டு வெளியேற்றப்பட்ட பிறகு,
தொண்டர்களுடைய, மக்களுடைய
வற்புறுத்தலின்படி அண்ணா திராவிட
முன்னேற்றக்கழகம் என்ற
அமைப்பை உருவாக்கினேன். அதில்
நான் முதல் தொண்டனாக
இருக்கிறேன்.” இவ்வாறு “பி.பி.சி.”க்கு
அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர்.
குறிப்பிட்டார்.
திரைப்படத்துறையிலும்,
அரசியலிலும் நண்பர்களாக இருந்த
கருணாநிதியும், எம்.ஜி.ஆரும்
பிற்காலத்தில் பிரிய நேரிட்ட போதிலும்
தொடக்க காலத்தில், நெருங்கிய
நண்பர்களாக இருந்தார்கள்.
கோவையில் ரூ.14 வாடகையில்
ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார்
கள். திரைப்படத்துறையில் முன்னேற,
ஒருவருக்கொருவர்
உதவிக்கொள்வது வழக்கம்.
சென்னையில் குடியேறிய
பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று,
சத்யா அம்மையார் பரிமாற
உணவு சாப்பிட்டிருக்கிறார்
கருணாநிதி. அதேபோல்
கருணாநிதி வீட்டுக்குச் சென்று, அவர்
தாயார் அஞ்சுகம் அம்மையார் படைத்த
உணவை உண்டு மகிழ்ந்தவர்,
எம்.ஜி.ஆர்.
1963 ஜனவரியில் கருணாநிதியின்
தாயார் அஞ்சுகம் அம்மையார்
மறைந்தபோது எம்.ஜி.ஆர். விடுத்த
இரங்கல் செய்தியில்
கூறியிருந்ததாவது:-
சகோதரர் மு.க. அவர்களின்
அருமை அன்னையார் அவர்களோடு,
பழகவும், அவர்களுடைய ஈடுகாட்ட
இயலாத அன்புள்ளத்தை உணரவும்
வாய்ப்பைப் பெற்றவன் நான்.
பார்த்தவுடனே, “தம்பி வா!”
என்று அழைப்பதிலேதான்
எவ்வளவு பாசம். `சாப்பிடத்தான்
வேண்டும்’ என்று வற்புறுத்துவதில
ேதான் எவ்வளவு அழுத்தமான
தாய்மை உணர்ச்சி. உட்கார்ந்து பேச
ஆரம்பித்தால்,
வீட்டு விஷயங்களிலேயிருந்து,
தொழில், அரசியல்
வரையிலே அளவளாவும்
அன்னையைத் தவிர
வேறு யாருக்குமே இராத_
அன்புள்ளம். இவைகளையெல்லாம்,
என்னாலேயே மறக்க
முடியவில்லையே! சகோதரர் மு.க.
எப்படித்தான் மறப்பாரோ?
இன்பத்தைப் பிரிந்தால்,
மறுபடி இன்பத்தை அடையலாம்.
நட்பைப் பிரிந்தால், பிறகு நட்புக்
கிடைக்கலாம். வாழ்க்கைத்
துணையைப் பிரிந்தால் கூட
வேறொரு வாழ்க்கை துணையை பெறலாம்.
மக்கட்செல்வத்தை இழந்தாலும்,
மறுபடி பெற்று விடலாம். ஆனால்,
அன்னையைm, அன்புத்தாயை,
உலகத்தை வளர்க்கும் தாய்மையைப்
பிரிந்து விட்டால், மறுபடி நமக்கு யார்
அன்னை? நினைத்தாலே நெஞ்சம்
நடுங்குகிறது.”
இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும்
புகழின் உச்சத்தில் இருந்தபோது, “யார்
சிறந்த நடிகர்? யார் வசூல்
சக்ரவர்த்தி?”
என்று இருதரப்பு ரசிகர்களும் மோதிக்
கொள்வது வழக்கம்.
ஆனால், எம்.ஜி.ஆரும், சிவாஜியும்
ஒருவர் மீது ஒருவர் பாசமும்,
மரியாதையும் வைத்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆரை சிவாஜி “அண்ணன்”
என்றே அழைப்பார்.
சிவாஜியை எம்.ஜி.ஆர். “தம்பி”
என்று குறிப்பிடுவார். பொங்கல்
போன்ற முக்கிய பண்டிகைகளின்போத
ு, எம்.ஜி.ஆர். வீட்டில்
இருந்து சிவாஜி வீட்டுக்கு இனிப்பு போன்ற
உணவுப் பண்டங்கள் போகும்.
அதேபோல்
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி கணேசன்
வீட்டில் இருந்து பொங்கல், பழங்கள்
முதலியன போகும்.
எம்.ஜி.ஆர். “டாக்டர்” பட்டம்
பெற்றபோது,
அவருக்கு திரை உலகத்தினர்
பாராட்டு விழா நடத்தினர். அதில்
சிவாஜிகணேசன்
கலந்து கொண்டு பேசுகையில்,
இருவருக்கும் இடையே இருந்த
பாசத்தைக் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர்.
தமது ஏற்புரையில் கூறியதாவது:-
“தம்பி சிவாஜி பேசும்போது நாங்கள்
இருவரும் ஒரு தாயின் கையால்
உண்டு வளர்ந்தவர்கள்” என்றார். என்
தாய் கையில் அவரும்
சாப்பிட்டு இருக்கிறார். அவர் தாய்
கையில் நானும்
சாப்பிட்டு இருக்கிறேன்.
என் மறைந்த மனைவியின்
(சதானந்தவதி) மரணத்தின் போது யார்
யாரெல்லாமோ வந்தார்கள்.
எனக்கு அழத்தோன்றவில்லை.
அப்போது என்
வீட்டிற்கு சிவாஜி வந்தபோதுதான்
என்னையும் மீறி அழுகை வந்தது.
அஸ்திவாரம் வெடிக்கும்
அளவு என்பார்களே, அந்த
அளவு அழுதேன்.
அன்று இறுதி வரை இருந்த
சிவாஜி என்றும் இருப்பார்.
எங்களுக்குள் பிளவு ஏற்படுத்துவதற்க
ாக யார் யாரோ முயன்றார்கள்.
“சிவாஜி மன்றத்தை எம்.ஜி.ஆர்.
மன்றம் தாக்கியது, எம்.ஜி.ஆர். மன்றம்
ஒட்டிய போஸ்டர்களை சிவாஜி மன்றம்
கிழித்தது” என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால் ஆடு -
மாடு ஏதாவது போஸ்டரை தின்றுவிட்டுப்
போனால்கூட `சிவாஜி மன்றத்தார்
கிழித்தார்கள்’, `எம்.ஜி.ஆர். மன்றத்தார்
கிழித்தார்கள்’ என்று கூறினார்கள்.
அன்றிருந்த சூழ்நிலையில் அவரும்
சிலவற்றை நம்பக்கூடிய நிலையும்,
நானும் சிலவற்றை நம்பக்கூடிய
நிலையும் இருந்தது.
தம்பி சிவாஜி பேசும்போது, “பாழாய்
போன அரசியல் நம்மைப்
பிரித்துவிட்டதே” என்று சொன்னார்.
அண்ணன்_ தம்பி உறவைப் பிரிக்க
முடியாது.
எப்போதாவது ஒன்று சேருவோம்.
அது எதற்காக என்று எனக்குத்
தெரியாது.”

இவ்வாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.

Russellisf
7th November 2014, 06:52 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps293aa650.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps293aa650.jpg.html)

Russellbpw
7th November 2014, 08:37 AM
நண்பர் திரு. ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,

தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த தொடரில் திரு.விஜயகுமார் கூறியிருந்த செய்தியை நான் தெரிவித்திருந்தேன். நான் மட்டுமல்ல, பலரும் அதைப் படித்திருக்கலாம். அது புத்தக வடிவில் கூட வந்துள்ளது.

தயவு செய்து உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஆனால், எனக்கு நிஜமாகவே ஒன்று புரிவதே இல்லை. டில்லியிலும் திருமதி. இந்திரா காந்தி அம்மையாரிடமும் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்த திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு கடைசி வரை ஏன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கவே இல்லை? அகில இந்திய காங்கிரசில் மூப்பனார் ஐயாவுக்கு இருந்த மரியாதையும் அங்கீகாரமும் திரு.சிவாஜி கணேசனுக்கு கிடைக்காதது எனக்கும் வருத்தமே.

ஆமாம், எங்கே இவ்வளவு நாட்களாக காணோம்?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

ஹலோ கலை வேந்தன் சார்

வணக்கங்கள் !

விசாரித்தமைக்கு நன்றி ! அலுவல் நிமித்தமாக ஒன்றிரண்டு வாரங்கள் வெளியூர் சென்றிருந்ததால் தொடர்ந்து பங்களிக்கமுடியாமல் போனது. இதை நான் type செய்யும்போது கூட..இன்று குல்பர்கா செல்ல இருக்கிறேன் அலுவல் நிமித்தமாக தான். நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன். சென்னையில் conjunctivitis பரவுகின்றது. தாங்கள் சென்னையில் இருப்பின் கவனம். மருத்துவ துறையில் sales பிரிவில் உள்ளதால் கூறுகிறேன்.

"பொம்மை பத்திரிகையில் ஆர்.கே.தவானுடன் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான செய்தியை வெளியிடுவார். அந்த செய்தி உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், அவ்வளவு செல்வாக்கு பெற்றவருக்கு ஏன் காங்கிரஸ் தலைவர் பதவியை திருமதி. இந்திரா காந்தி அம்மையார் வழங்கவில்லை? என்பது இன்று வரை உண்மையிலேயே எனக்கு புரியாத புதிர். ஒருவேளை மூப்பனார் ஐயா முட்டுக்கட்டையாக இருந்தார் என்றால் அவரது பேச்சைத்தான் இந்திரா காந்தி கேட்டாரா?" <---------இது உங்கள் கேள்வி ! :-d

மூப்பனார் அவர்கள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எப்படி வந்தார் என்பது உங்களுக்கு தெரியாததால் வந்த கேள்வி என்பதை இதிலிருந்து எனக்கு ...எனக்கு மட்டும் அல்ல ....அதை தெரிந்த அனைவருக்கும் ஊர்ஜித படுத்துகிறது..! நீங்கள் கேட்ட கேள்வியை அவர் பாராட்டியதால் உங்களை போல தான் திரு செல்வகுமார் அவர்களின் நிலையும் என்றே இது உணர்த்துகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவி பற்றிய கேள்வி திரு இந்திரா காந்தி அவர்களிடம் times magazine அன்று எழுப்பியது. அதன் தமிழாக்கம் இதோ.

கேள்வி. நீங்கள் தமிழக காங்கிரஸ் தலைமைக்கு திரு. சிவாஜி கணேசன் அவர்களை தேர்ந்தேடுதுள்ளதாக பேச்சு நிலவுகிறது. அப்படி அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் எதன் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்க படுகிறார் என்பதை உரைக்க முடியுமா ?

பதில் : தமிழக காங்கிரஸ் தலைமைக்கு நல்ல அனுபவமும் காங்கிரஸ் பற்றி நன்கு அறிந்தவர் மட்டுமே வரமுடியும். திரு சிவாஜி கணேசன் காங்கிரஸ் அஸ்திவாரம் தொட்டு இன்றுவரை நன்கு அறிந்தவர். மேலும், (இதை நான் ஆங்கிலத்திலேயே குறிப்பிடவிரும்புகிறேன் திரு கலைவேந்தன் )

if he is selected he deserved it . He has worked like dog for sustaining congress principles and ideologies across every street of tamilnadu than any other . Why not he head the tamilnadu congress , if we announce ?

மேற்கூறியது தான் பாரத பிரதமர் இந்திராவின் பதில் times பத்திரிகைக்கு அவர் கொடுத்தது.

திரைத்துறையில் 1953 முதல் மற்ற எந்த நடிகரை காட்டிலும் நடிகர் திலகம் பிஸியாக இருந்தவர் என்பது உலகறிந்த விஷயம். அது 1989 வரை பெருகிக்கொண்டு போனதே தவிர எள்ளளவும் குறையவில்லை.

தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தகுதிவாய்ந்த ஒருவர் தேவை என்பதை உணர்ந்த திருமதி இந்திரா காந்தி, தேர்ந்தெடுத்த முதல் நபர், இன்னும் சொல்லப்போனால் ஒரே நபர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது காங்கிரஸ் பற்றி நன்கு அறிந்த அனைவரும் ஒத்துகொள்ளும் விஷயம்.

தன்னுடைய திரை அலுவல் அதிக அளவில் இருந்ததால் திரு மூப்பனார் அவர்களை திருமதி இந்திராகாந்தி அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்து அவரை பற்றி நல்ல ஒரு recommendation கொடுத்து தமிழ காங்கிரஸ் தலைமைக்கு இவர் ஏற்றவர் என்று அந்த பதவியை மூபனாருக்கு கிடைக்க செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் திரு கலைவேந்தன் அவர்களே...!

இதை நீங்கள் உங்களை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு verify செய்து கொள்ளலாம்..! நீங்கள் மட்டுமல்ல திரு செல்வகுமார் கூட இதை செய்யலாம். !

Regards

rks

siqutacelufuw
7th November 2014, 10:04 AM
07-11-1961 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் காவியம் “ தாய் சொல்லை தட்டாதே “ ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :

http://i58.tinypic.com/29gbei9.jpg

siqutacelufuw
7th November 2014, 10:05 AM
07-11-1961 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் காவியம் “ தாய் சொல்லை தட்டாதே “ ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் (வேட்டைக்காரன் விளம்பரம்) ::

http://i60.tinypic.com/1yv5fl.jpg

siqutacelufuw
7th November 2014, 10:08 AM
07-11-1961 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் காவியம் “ தாய் சொல்லை
தட்டாதே “ தொடர் விளம்பரங்கள் :

http://i59.tinypic.com/309kcc5.jpg

siqutacelufuw
7th November 2014, 10:10 AM
http://i59.tinypic.com/mvsz5w.jpg

siqutacelufuw
7th November 2014, 10:15 AM
http://i57.tinypic.com/264p1xc.jpg



குறிப்பு :

மேற்கண்ட இந்த விளம்பரம், நமது பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த " நடிகன் குரல் " பத்திரிகையில் வெளிவந்தது என்பது கவனிக்கத்தக்கது.

siqutacelufuw
7th November 2014, 10:17 AM
http://i59.tinypic.com/vy7h4k.jpg

siqutacelufuw
7th November 2014, 11:27 AM
http://i58.tinypic.com/sv022g.jpg

siqutacelufuw
7th November 2014, 11:28 AM
http://i62.tinypic.com/34igxzl.jpg

ainefal
7th November 2014, 11:50 AM
http://i60.tinypic.com/71sbvs.jpg
http://i62.tinypic.com/suyijk.jpg

ainefal
7th November 2014, 11:53 AM
http://i58.tinypic.com/6zm3p4.png

siqutacelufuw
7th November 2014, 12:00 PM
07-11-1969 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் காவியம் “ நம் நாடு “ ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :

http://i59.tinypic.com/iem3p1.jpg

ainefal
7th November 2014, 12:14 PM
http://www.youtube.com/watch?v=RzDg5jM1Kr0

ainefal
7th November 2014, 12:16 PM
http://www.youtube.com/watch?v=cwhexFJVEyY

ainefal
7th November 2014, 12:20 PM
http://www.youtube.com/watch?v=85ApezdvRLU&feature=youtu.be

siqutacelufuw
7th November 2014, 12:38 PM
07-11-1969 அன்று வெளிவந்த நம் பொன்மனச்செம்மலின் காவியம் “ நம் நாடு “ விளம்பரங்கள் :

http://i62.tinypic.com/34nnmf7.jpg

siqutacelufuw
7th November 2014, 12:40 PM
http://i61.tinypic.com/2nrlk7q.jpg

siqutacelufuw
7th November 2014, 12:41 PM
http://i58.tinypic.com/ae0hut.jpg

siqutacelufuw
7th November 2014, 12:42 PM
http://i57.tinypic.com/28ldoxw.jpg

siqutacelufuw
7th November 2014, 12:44 PM
07-11-1974 அன்று வெளிவந்த நம் புரட்சித்தலைவரின் காவியம் “ உரிமைக்குரல் “ விளம்பரங்கள் :

http://i60.tinypic.com/2mxpff7.jpg

siqutacelufuw
7th November 2014, 12:48 PM
http://i58.tinypic.com/2yubu51.jpg

siqutacelufuw
7th November 2014, 12:52 PM
http://i58.tinypic.com/2ajox2b.jpg

siqutacelufuw
7th November 2014, 12:54 PM
http://i57.tinypic.com/a44cwz.jpg

siqutacelufuw
7th November 2014, 12:56 PM
http://i61.tinypic.com/65r0ih.jpg

siqutacelufuw
7th November 2014, 01:02 PM
07-11-1974 அன்று வெளிவந்த நம் புரட்சித்தலைவரின் “ உரிமைக்குரல் “ காவியத்தினையொட்டி, அப்போதைய “ திரை உலகம் “ பத்திரிகை வெளியிட்ட சிறப்பு மலர் முன் அட்டை தோற்றம் ::

http://i61.tinypic.com/29gjtvq.jpg

ainefal
7th November 2014, 01:02 PM
http://i61.tinypic.com/f1imq.jpg
http://i58.tinypic.com/2pq100p.jpg

siqutacelufuw
7th November 2014, 01:03 PM
07-11-1974 அன்று வெளிவந்த நம் புரட்சித்தலைவரின் “ உரிமைக்குரல் “ காவியத்தினையொட்டி, அப்போதைய “ திரை உலகம் “ பத்திரிகை வெளியிட்ட சிறப்பு மலர் பின் அட்டை தோற்றம் ::

http://i58.tinypic.com/2l9nzmw.jpg

siqutacelufuw
7th November 2014, 01:05 PM
07-11-1974 அன்று வெளிவந்த நம் புரட்சித்தலைவரின் “ உரிமைக்குரல் “ காவியத்தினையொட்டி, அப்போதைய “ திரை உலகம் “ பத்திரிகை வெளியிட்ட சிறப்பு மலரில் இடம் பெற்ற செய்திகளின் தொடர்ச்சி வருமாறு

செய்தி 1
http://i59.tinypic.com/2dv6836.jpg

siqutacelufuw
7th November 2014, 01:13 PM
செய்தி 2

http://i61.tinypic.com/35ddvu1.jpg

siqutacelufuw
7th November 2014, 01:15 PM
செய்தி 3

http://i59.tinypic.com/30mqvs1.jpg

ainefal
7th November 2014, 01:16 PM
http://www.youtube.com/watch?v=vo2smrNy4DQ

ainefal
7th November 2014, 01:19 PM
http://www.youtube.com/watch?v=239v5faNG8k

ainefal
7th November 2014, 01:20 PM
http://www.youtube.com/watch?v=7CutgPcJPW8

siqutacelufuw
7th November 2014, 01:20 PM
செய்தி 4

http://i61.tinypic.com/fva902.jpg

ainefal
7th November 2014, 01:20 PM
http://www.youtube.com/watch?v=Vnz-Xi-Aw-g

ainefal
7th November 2014, 01:21 PM
http://www.youtube.com/watch?v=2e3CUUQMthk

ainefal
7th November 2014, 01:22 PM
http://www.youtube.com/watch?v=MWX95aHj4SA

siqutacelufuw
7th November 2014, 01:25 PM
http://i59.tinypic.com/2r23m9k.jpg

siqutacelufuw
7th November 2014, 01:29 PM
http://i60.tinypic.com/28vqd1v.jpg

ainefal
7th November 2014, 01:43 PM
http://i60.tinypic.com/207qef5.jpg

ainefal
7th November 2014, 02:02 PM
http://i62.tinypic.com/2u8xjc4.jpg

Russellzlc
7th November 2014, 02:41 PM
ஹலோ கலை வேந்தன் சார்

வணக்கங்கள் !

விசாரித்தமைக்கு நன்றி ! அலுவல் நிமித்தமாக ஒன்றிரண்டு வாரங்கள் வெளியூர் சென்றிருந்ததால் தொடர்ந்து பங்களிக்கமுடியாமல் போனது. இதை நான் type செய்யும்போது கூட..இன்று குல்பர்கா செல்ல இருக்கிறேன் அலுவல் நிமித்தமாக தான். நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன். சென்னையில் conjunctivitis பரவுகின்றது. தாங்கள் சென்னையில் இருப்பின் கவனம். மருத்துவ துறையில் sales பிரிவில் உள்ளதால் கூறுகிறேன்.

"பொம்மை பத்திரிகையில் ஆர்.கே.தவானுடன் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான செய்தியை வெளியிடுவார். அந்த செய்தி உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், அவ்வளவு செல்வாக்கு பெற்றவருக்கு ஏன் காங்கிரஸ் தலைவர் பதவியை திருமதி. இந்திரா காந்தி அம்மையார் வழங்கவில்லை? என்பது இன்று வரை உண்மையிலேயே எனக்கு புரியாத புதிர். ஒருவேளை மூப்பனார் ஐயா முட்டுக்கட்டையாக இருந்தார் என்றால் அவரது பேச்சைத்தான் இந்திரா காந்தி கேட்டாரா?" <---------இது உங்கள் கேள்வி ! :-d

மூப்பனார் அவர்கள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எப்படி வந்தார் என்பது உங்களுக்கு தெரியாததால் வந்த கேள்வி என்பதை இதிலிருந்து எனக்கு ...எனக்கு மட்டும் அல்ல ....அதை தெரிந்த அனைவருக்கும் ஊர்ஜித படுத்துகிறது..! நீங்கள் கேட்ட கேள்வியை அவர் பாராட்டியதால் உங்களை போல தான் திரு செல்வகுமார் அவர்களின் நிலையும் என்றே இது உணர்த்துகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவி பற்றிய கேள்வி திரு இந்திரா காந்தி அவர்களிடம் times magazine அன்று எழுப்பியது. அதன் தமிழாக்கம் இதோ.

கேள்வி. நீங்கள் தமிழக காங்கிரஸ் தலைமைக்கு திரு. சிவாஜி கணேசன் அவர்களை தேர்ந்தேடுதுள்ளதாக பேச்சு நிலவுகிறது. அப்படி அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் எதன் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்க படுகிறார் என்பதை உரைக்க முடியுமா ?

பதில் : தமிழக காங்கிரஸ் தலைமைக்கு நல்ல அனுபவமும் காங்கிரஸ் பற்றி நன்கு அறிந்தவர் மட்டுமே வரமுடியும். திரு சிவாஜி கணேசன் காங்கிரஸ் அஸ்திவாரம் தொட்டு இன்றுவரை நன்கு அறிந்தவர். மேலும், (இதை நான் ஆங்கிலத்திலேயே குறிப்பிடவிரும்புகிறேன் திரு கலைவேந்தன் )

if he is selected he deserved it . He has worked like dog for sustaining congress principles and ideologies across every street of tamilnadu than any other . Why not he head the tamilnadu congress , if we announce ?

மேற்கூறியது தான் பாரத பிரதமர் இந்திராவின் பதில் times பத்திரிகைக்கு அவர் கொடுத்தது.

திரைத்துறையில் 1953 முதல் மற்ற எந்த நடிகரை காட்டிலும் நடிகர் திலகம் பிஸியாக இருந்தவர் என்பது உலகறிந்த விஷயம். அது 1989 வரை பெருகிக்கொண்டு போனதே தவிர எள்ளளவும் குறையவில்லை.

தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தகுதிவாய்ந்த ஒருவர் தேவை என்பதை உணர்ந்த திருமதி இந்திரா காந்தி, தேர்ந்தெடுத்த முதல் நபர், இன்னும் சொல்லப்போனால் ஒரே நபர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது காங்கிரஸ் பற்றி நன்கு அறிந்த அனைவரும் ஒத்துகொள்ளும் விஷயம்.

தன்னுடைய திரை அலுவல் அதிக அளவில் இருந்ததால் திரு மூப்பனார் அவர்களை திருமதி இந்திராகாந்தி அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்து அவரை பற்றி நல்ல ஒரு recommendation கொடுத்து தமிழ காங்கிரஸ் தலைமைக்கு இவர் ஏற்றவர் என்று அந்த பதவியை மூபனாருக்கு கிடைக்க செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் திரு கலைவேந்தன் அவர்களே...!

இதை நீங்கள் உங்களை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு verify செய்து கொள்ளலாம்..! நீங்கள் மட்டுமல்ல திரு செல்வகுமார் கூட இதை செய்யலாம். !

Regards

rks

திரு. ஆர்.கே.எஸ். தங்கள் விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் கூறியதை நான் யாரிடமும் verify செய்ய மாட்டேன். உங்கள் உண்மைத்தன்மை மீது எனக்கு நம்பிக்கை உண்டு.

ஐயா மூப்பனார் அவர்கள் பரம்பரை காங்கிரஸ்காரர். அவர் தந்தையார் திரு.கோவிந்தசாமி மூப்பனாரும் காங்கிரஸ் தலைவர். அவர் இருந்த சுந்தர பெருமாள் கோயில் வீட்டுக்கு 1951ம் ஆண்டு காமராஜரும் ‘லோக் நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களும் செல்லும் அளவுக்கு செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் குடும்பம். காமராஜர் காலத்திலேயே 1965ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டவர் ஐயா மூப்பனார்.
அப்படிப்பட்டவரை திருமதி. இந்திரா காந்தி அம்மையாருக்கு திரு.சிவாஜி கணேசன் அறிமுகம் செய்து வைத்து பதவி வாங்கிக் கொடுத்ததாகவே இருக்கட்டும். அப்போது இல்லை என்றாலும் பிற்காலத்தில் கூட அவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படாதது மட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த எம்.பழனியாண்டி காலத்தில் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தினருக்கு காங்கிரஸ் உறுப்பினர் அட்டை புத்தகம் கூட வழங்கப்படாமல் அதற்காக உண்ணாவிரத அறிவிப்பு எல்லாம் வந்தது உண்டு.

மேலும் காங்கிரசில் பல கோஷ்டிகள். அந்தந்த கோஷ்டிகளுக்கு தக்கவாறு தேர்தலில் சீட் ஒதுக்கப்படும். திரு.சிவாஜி கணேசன் அவர்களின் மன்றத்துக்கு குறைந்த அளவு, அதிலும் மிகவும் போராடிய பிறகே அகில இந்திய காங்கிரஸ் தலைமை சீட் ஒதுக்கும். அப்படி ஒதுக்கப்பட்ட சீட்களில் 1984ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற சிலரில் (5 பேர் என்று நினைக்கிறேன்) ஒருவர்தான் இன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர்.

திருமதி. இந்திரா காந்தி அம்மையாரிடமும் காங்கிரசிலும் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்று நான் கூறவில்லை. அப்படி செல்வாக்கு பெற்றிருந்தவருக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை இருந்தது? என்பதுதான் என் வருத்தம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
7th November 2014, 02:43 PM
http://i58.tinypic.com/107j56o.jpg

Russellzlc
7th November 2014, 02:47 PM
http://i59.tinypic.com/264qjuv.jpg


‘உரிமைக்குரலும் நம்நாடும்’

‘நீங்கள் ஏன் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்க கூடாது?’.... பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இயக்குநர் ஸ்ரீதர் அதிலிருந்து மீள்வது குறித்து தனது நெருங்கிய நண்பர் இந்தி நடிகர் ராஜேந்திர குமாரிடம் ஆலோசனை கேட்க, அவர் கூறிய யோசனைதான் முதல் வாக்கியம். ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் தலைவரை வைத்து சில காட்சிகள் எடுத்த ஸ்ரீதர், பின்னர் அந்த படம் நின்று போக (காதலிக்க நேரமில்லை வண்ணப்படம் எடுத்த ஸ்ரீதர், எம்.ஜி.ஆரே ஒரு கலர்தான் என்பதால் அவர் நடித்த படத்தை கறுப்பு வெள்ளையில் எடுத்ததாகவும் இதை அவரிடம் விளக்காதது தன் தவறுதான் என்றும் ஸ்ரீதரே கூறியுள்ளார்) அதனால் தயங்கியுள்ளார். ஆனாலும் ராஜேந்திர குமாரின் வலியுறுத்தலை ஏற்று தனது நண்பர் கண்ணையா என்பவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்து தலைவரின் ஒப்பனைக் கலைஞராக இருந்த பீதாம்பரம் (இயக்குநர் பி.வாசுவின் தந்தை)மூலம் தலைவருக்கு தெரிவிக்கப்பட, அதை ஏற்று ஸ்ரீதருக்காக அவர் நடித்துக் கொடுத்ததே உரிமைக் குரல் என்பதெல்லாம் வரலாறு.

இன்று உரிமைக்குரல் படத்தின் 41ம் ஆண்டு துவக்கம். மேலும் நம்நாடு, தாய் சொல்லைத் தட்டாதே படங்களின் வெளியான நாளும் இன்று. 3 வெற்றிப் படங்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று ஆசை என்றாலும் நேரமில்லை. பரவாயில்லை. கிணற்று நீரை வெள்ளமா கொண்டுசெல்லப் போகிறது? எப்போது வேண்டுமானாலும் அந்தப் படங்களைப் பற்றி எழுதலாம். என்றாலும் என்னை மிகவும் கவர்ந்தவை உரிமைக்குரலும் நம்நாடும். அதனால்தான் இந்த படங்களின் தலைப்பையே மேலே வைத்தேன். இந்தப் படங்களின் காட்சிகள், தலைவரின் நடிப்பு, தொழில்நுட்ப சிறப்பு போன்றவற்றை பற்றி இப்போது நான் விவரிக்கப் போவதில்லை. அதை விவரித்தால் கட்டுரை நீளும் என்பதோடு நேரமும் போதாது. உரிமைக்குரலும் நம்நாடும் தலைப்பையொட்டிய கருத்துக்களைப் பார்ப்போம்.

அதிலும் 1974ம் ஆண்டு அன்றைய காலகட்டத்தில் அராஜக ஆட்சி நடந்து வந்த காலத்தில் ‘உரிமைக்குரல்’ என்ற தலைப்பே எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த ‘உரிமைக் குரலை’ அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக எழுப்புபவர் ‘புரட்சித் தலைவர்’ என்பதால் பலத்த எதிர்பார்ப்போடு வெளியாகி வெள்ளிவிழா கண்ட காவியம் உரிமைக் குரல். இதில் தலைவர் கட்டி வந்த வித்தியாசமான ஆந்திரா மாடல் வேட்டி பாணியை பல ஆண்டுகள் வரை திரையில் கட்டாத நடிகர்கள் கிடையாது.

கடந்த திங்கட்கிழமையன்று திரு.எஸ்.வி.அவர்கள் முகநூலில் இருந்து எடுத்து ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் தலைவருக்கும் 7ம் எண்ணுக்கும் உள்ள பொருத்தங்கள் சில குறிப்பிடப்பட்டிருந்தன. பிறகுதான் யோசித்தேன். 7ம் எண்ணுக்கும் தலைவருக்கும் உள்ள பொருத்தங்களை.

தலைவர் வாழ்வில் ஆரம்பம் முதல் இறுதி வரை கலந்தும் தொட்டுக் கொண்டும் 7 இருந்துள்ளது என்பது மட்டுமல்ல, இன்று கூட ஒட்டிக் கொண்டே இருக்கிறது.

தலைவருக்கு முன் இருந்த(இவரையும் சேர்த்து 8) வள்ளல்கள் - 7

தலைவருக்கு முன் இருந்த (இவரையும் சேர்த்து 8)அதிசயங்கள்-7.

தலைவர் பிறந்த தேதி - 17, அவர் பிறந்த ஆண்டு - 1917, அவர் இரண்டாவது பிறவி எடுத்த ஆண்டு 1967, அவர் எம்.எல்.ஏ. ஆன ஆண்டு 1967, அண்ணா தலைமையில் அவர் இருந்த திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967, அவர் படவுலகை விட்டு விலகிய ஆண்டு 1977, அவர் முதல்வரானது 1977, அவர் ஆட்சி நிறைவடைந்து அவர் மறைந்தது 1987.

அவர் மறைந்த நாள் 24-12-1987 (என்ன ஆச்சரியம் இதன் கூட்டுத் தொகை கூட 7.)

அவர் அடக்கம் செய்யப்பட்ட நாள் டிசம்பர் 25. (இந்த தேதியின் கூட்டுத் தொகையும் 7)

அவர் பயன்படுத்திய கார் எண் 4777 (இதன் கூட்டுத் தொகை 7)

அவர் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட....

தந்தை பெரியார் ( 7 எழுத்து),

அறிஞர் அண்ணா (7 எழுத்து)

அவர்கள் கொண்ட கொள்கையை ஏற்று தலைவர் எழுப்பிய

உரிமைக் குரல் (7 எழுத்து)

அதற்கு மக்கள் ஆதரவால் அதனால் அவர் பெற்ற பதவி முதலமைச்சர் (7 எழுத்து)

உரிமைக் குரல் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது (இதன் கூட்டுத் தொகை 7)

அராஜக ஆட்சிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்ப அவர் கண்ட இயக்கத்துக்கு இன்று நடப்பது 43ம் ஆண்டு (இதன் கூட்டுத் தொகை 7)

இன்று 7ம் தேதி அதே நாளில்தான் நாம் அந்தப் படத்தை பற்றி பேசுகிறோம் என்பதால் இதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனால், மற்றொரு வியப்பு காத்திருக்கிறது. இன்றைய தேதி, மாதம், ஆண்டு என்று பார்த்தால் அதன் கூட்டுத் தொகை 7-11-2014 = 7.

இப்படி தன்னோடு தொடர்புபடுத்தி 7 ஐ நமக்கு தலைவர் சுட்டிக் காட்டு விட்டு சென்றுள்ளார். எதற்கு? ஏழு என்றால் ‘எழு’ என்றும் சுருக்கமாக கூறுவதுண்டு. எழு பிறவி என்பார்கள்.

வள்ளுவரும், ‘‘ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் (ஏழு பிறவி) ஏமாப்பு உடைத்து’’ என்று கூறுகிறார்.

ஆக ஏழு என்றால் ‘எழு’ என்றும் கொள்ளலாம். அந்த ‘எழு’வை ‘எழுந்திரு’ என்ற அர்த்தத்தில் ‘எழு’ என்று தலைவர் கட்டளையிடுவதாகவே நாம் கொள்ளலாம்.

எதற்காக தலைவர் நம்மை ‘எழு’ என்கிறார்?. உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரரான ஊருக்கு உழைத்த நம் தலைவர், உழைப்பவரே உயர்ந்தவர் என்று எழுதி கையெழுத்திடும் தலைவர் வேறு எதற்காக நம்மை எழச் சொல்லப் போகிறார். உழைக்கத்தான். யாருக்கு? ‘ஊருக்கு உழைத்தல் யோகம்’ என்றார் பாரதி. அந்த யோகக்காரரான நம் தலைவரும் நமக்கு யோகமான வழியைத்தான் காட்டுகிறார். நாமும் ஊருக்கு உழைப்போம்.

இதற்காக பெரிய சிரமம் எதுவும் பட வேண்டாம். நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பணியில் அல்லது தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். நமது தேவைகள், கண்ணியமான வாழ்க்கை, நம்மை நம்பி இருப்போரை காப்பாற்றும் பொறுப்பு இவற்றுக்காக நாம் பணியாற்றினாலும் அது, ஆசிரியர், அலுவலர், அதிகாரி, மருத்துவர், வக்கீல், பொறியாளர், தொழில் முனைவோர் என்று எந்த பணியில் அல்லது தொழிலில் ஈடுபட்டாலும் அது சமூகம் சார்ந்ததே. சமூகத்துக்கு பலனிக்காமல் எந்த பணியும் தொழிலும் நம்மை சார்ந்ததாக மட்டும் இருக்காது. இருக்க முடியாது. எனவே, பணியில், தொழிலில் நேர்மையும் திறமையுமாக செயல்படுவதே ஊருக்கு உழைத்தல்.அதுவே சமூகத் தொண்டு.

அந்த தொண்டை திறம்படச் செய்வதன் மூலம்....

லஞ்சத்துக்கு எதிராக,

ஊழலுக்கு எதிராக,

கருப்பு பணத்துக்கு எதிராக,

கள்ளச் சந்தைக்கு எதிராக,

பெண்ணடிமைக்கு எதிராக,

சாதிக் கொடுமைக்கு எதிராக,

மத வெறிக்கு எதிராக,

மிக முக்கியமாக ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் மனதைப் போல பசியை ஒழிக்கப் பாடுபட்ட நம் தலைவரின் விருப்பம் நிறைவேறும் வகையில்,

வறுமைக்கு எதிராக, இல்லாமை கொடுமைக்கு எதிராக,

தலைவரின் பெயரால் நாம் எழுப்பும் உரிமைக்குரல் தேசமெங்கும் ஒலிக்கட்டும்.

ஒரு கவளம் சோற்றுக்கும் மானத்தை மறைக்கும் ஆடைக்கும் மக்கள் ஆலாய் பறக்கும் அவலநிலை ஒழியட்டும்.

பட்டினியோடு ஒரு மனிதன் கூட உறங்கப் போவதில்லை என்ற நிலை உருவாகட்டும்.

இதற்காக தலைவரின் தொண்டர்களான நாம் அவரது நினைவோடு எழுப்பும்

‘உரிமைக் குரலின்’

அதிர்வுகளால் நாட்டை பீடித்து பிணைத்துள்ள தளைகள் அறுபட்டு, பாரினில் புகழ்க் கொடி பறக்கவிட்டு உலகத் தலைமை ஏற்கட்டும்..

‘நம்நாடு’.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
7th November 2014, 03:20 PM
http://i59.tinypic.com/264qjuv.jpg


‘உரிமைக்குரலும் நம்நாடும்’

‘நீங்கள் ஏன் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்க கூடாது?’.... பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இயக்குநர் ஸ்ரீதர் அதிலிருந்து மீள்வது குறித்து தனது நெருங்கிய நண்பர் இந்தி நடிகர் ராஜேந்திர குமாரிடம் ஆலோசனை கேட்க, அவர் கூறிய யோசனைதான் முதல் வாக்கியம். ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் தலைவரை வைத்து சில காட்சிகள் எடுத்த ஸ்ரீதர், பின்னர் அந்த படம் நின்று போக (காதலிக்க நேரமில்லை வண்ணப்படம் எடுத்த ஸ்ரீதர், எம்.ஜி.ஆரே ஒரு கலர்தான் என்பதால் அவர் நடித்த படத்தை கறுப்பு வெள்ளையில் எடுத்ததாகவும் இதை அவரிடம் விளக்காதது தன் தவறுதான் என்றும் ஸ்ரீதரே கூறியுள்ளார்) அதனால் தயங்கியுள்ளார். ஆனாலும் ராஜேந்திர குமாரின் வலியுறுத்தலை ஏற்று தனது நண்பர் கண்ணையா என்பவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்து தலைவரின் ஒப்பனைக் கலைஞராக இருந்த பீதாம்பரம் (இயக்குநர் பி.வாசுவின் தந்தை)மூலம் தலைவருக்கு தெரிவிக்கப்பட, அதை ஏற்று ஸ்ரீதருக்காக அவர் நடித்துக் கொடுத்ததே உரிமைக் குரல் என்பதெல்லாம் வரலாறு.

இன்று உரிமைக்குரல் படத்தின் 41ம் ஆண்டு துவக்கம். மேலும் நம்நாடு, தாய் சொல்லைத் தட்டாதே படங்களின் வெளியான நாளும் இன்று. 3 வெற்றிப் படங்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று ஆசை என்றாலும் நேரமில்லை. பரவாயில்லை. கிணற்று நீரை வெள்ளமா கொண்டுசெல்லப் போகிறது? எப்போது வேண்டுமானாலும் அந்தப் படங்களைப் பற்றி எழுதலாம். என்றாலும் என்னை மிகவும் கவர்ந்தவை உரிமைக்குரலும் நம்நாடும். அதனால்தான் இந்த படங்களின் தலைப்பையே மேலே வைத்தேன். இந்தப் படங்களின் காட்சிகள், தலைவரின் நடிப்பு, தொழில்நுட்ப சிறப்பு போன்றவற்றை பற்றி இப்போது நான் விவரிக்கப் போவதில்லை. அதை விவரித்தால் கட்டுரை நீளும் என்பதோடு நேரமும் போதாது. உரிமைக்குரலும் நம்நாடும் தலைப்பையொட்டிய கருத்துக்களைப் பார்ப்போம்.

அதிலும் 1974ம் ஆண்டு அன்றைய காலகட்டத்தில் அராஜக ஆட்சி நடந்து வந்த காலத்தில் ‘உரிமைக்குரல்’ என்ற தலைப்பே எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த ‘உரிமைக் குரலை’ அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக எழுப்புபவர் ‘புரட்சித் தலைவர்’ என்பதால் பலத்த எதிர்பார்ப்போடு வெளியாகி வெள்ளிவிழா கண்ட காவியம் உரிமைக் குரல். இதில் தலைவர் கட்டி வந்த வித்தியாசமான ஆந்திரா மாடல் வேட்டி பாணியை பல ஆண்டுகள் வரை திரையில் கட்டாத நடிகர்கள் கிடையாது.

கடந்த திங்கட்கிழமையன்று திரு.எஸ்.வி.அவர்கள் முகநூலில் இருந்து எடுத்து ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் தலைவருக்கும் 7ம் எண்ணுக்கும் உள்ள பொருத்தங்கள் சில குறிப்பிடப்பட்டிருந்தன. பிறகுதான் யோசித்தேன். 7ம் எண்ணுக்கும் தலைவருக்கும் உள்ள பொருத்தங்களை.

தலைவர் வாழ்வில் ஆரம்பம் முதல் இறுதி வரை கலந்தும் தொட்டுக் கொண்டும் 7 இருந்துள்ளது என்பது மட்டுமல்ல, இன்று கூட ஒட்டிக் கொண்டே இருக்கிறது.

தலைவருக்கு முன் இருந்த(இவரையும் சேர்த்து 8) வள்ளல்கள் - 7

தலைவருக்கு முன் இருந்த (இவரையும் சேர்த்து 8)அதிசயங்கள்-7.

தலைவர் பிறந்த தேதி - 17, அவர் பிறந்த ஆண்டு - 1917, அவர் இரண்டாவது பிறவி எடுத்த ஆண்டு 1967, அவர் எம்.எல்.ஏ. ஆன ஆண்டு 1967, அண்ணா தலைமையில் அவர் இருந்த திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967, அவர் படவுலகை விட்டு விலகிய ஆண்டு 1977, அவர் முதல்வரானது 1977, அவர் ஆட்சி நிறைவடைந்து அவர் மறைந்தது 1987.

அவர் மறைந்த நாள் 24-12-1987 (என்ன ஆச்சரியம் இதன் கூட்டுத் தொகை கூட 7.)

அவர் அடக்கம் செய்யப்பட்ட நாள் டிசம்பர் 25. (இந்த தேதியின் கூட்டுத் தொகையும் 7)

அவர் பயன்படுத்திய கார் எண் 4777 (இதன் கூட்டுத் தொகை 7)

அவர் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட....

தந்தை பெரியார் ( 7 எழுத்து),

அறிஞர் அண்ணா (7 எழுத்து)

அவர்கள் கொண்ட கொள்கையை ஏற்று தலைவர் எழுப்பிய

உரிமைக் குரல் (7 எழுத்து)

அதற்கு மக்கள் ஆதரவால் அதனால் அவர் பெற்ற பதவி முதலமைச்சர் (7 எழுத்து)

உரிமைக் குரல் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது (இதன் கூட்டுத் தொகை)

அராஜக ஆட்சிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்ப அவர் கண்ட இயக்கத்துக்கு இன்று நடப்பது 43ம் ஆண்டு (இதன் கூட்டுத் தொகை 7)

இன்று 7ம் தேதி அதே நாளில்தான் நாம் அந்தப் படத்தை பற்றி பேசுகிறோம் என்பதால் இதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனால், மற்றொரு வியப்பு காத்திருக்கிறது. இன்றைய தேதி, மாதம், ஆண்டு என்று பார்த்தால் அதன் கூட்டுத் தொகை 7-11-2014 = 7.

இப்படி தன்னோடு தொடர்புபடுத்தி 7 ஐ நமக்கு தலைவர் சுட்டிக் காட்டு விட்டு சென்றுள்ளார். எதற்கு? ஏழு என்றால் ‘எழு’ என்றும் சுருக்கமாக கூறுவதுண்டு. எழு பிறவி என்பார்கள்.

வள்ளுவரும், ‘‘ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் (ஏழு பிறவி) ஏமாப்பு உடைத்து’’ என்று கூறுகிறார்.

ஆக ஏழு என்றால் ‘எழு’ என்றும் கொள்ளலாம். அந்த ‘எழு’வை ‘எழுந்திரு’ என்ற அர்த்தத்தில் ‘எழு’ என்று தலைவர் கட்டளையிடுவதாகவே நாம் கொள்ளலாம்.

எதற்காக தலைவர் நம்மை ‘எழு’ என்கிறார்?. உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரரான ஊருக்கு உழைத்த நம் தலைவர், உழைப்பவரே உயர்ந்தவர் என்று எழுதி கையெழுத்திடும் தலைவர் வேறு எதற்காக நம்மை எழச் சொல்லப் போகிறார். உழைக்கத்தான். யாருக்கு? ‘ஊருக்கு உழைத்தல் யோகம்’ என்றார் பாரதி. அந்த யோகக்காரரான நம் தலைவரும் நமக்கு யோகமான வழியைத்தான் காட்டுகிறார். நாமும் ஊருக்கு உழைப்போம்.

இதற்காக பெரிய சிரமம் எதுவும் பட வேண்டாம். நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பணியில் அல்லது தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். நமது தேவைகள், கண்ணியமான வாழ்க்கை, நம்மை நம்பி இருப்போரை காப்பாற்றும் பொறுப்பு இவற்றுக்காக நாம் பணியாற்றினாலும் அது, ஆசிரியர், அலுவலர், அதிகாரி, மருத்துவர், வக்கீல், பொறியாளர், தொழில் முனைவோர் என்று எந்த பணியில் அல்லது தொழிலில் ஈடுபட்டாலும் அது சமூகம் சார்ந்ததே. சமூகத்துக்கு பலனிக்காமல் எந்த பணியும் தொழிலும் நம்மை சார்ந்ததாக மட்டும் இருக்காது. இருக்க முடியாது. எனவே, பணியில், தொழிலில் நேர்மையும் திறமையுமாக செயல்படுவதே ஊருக்கு உழைத்தல்.அதுவே சமூகத் தொண்டு.

அந்த தொண்டை திறம்படச் செய்வதன் மூலம்....

லஞ்சத்துக்கு எதிராக,

ஊழலுக்கு எதிராக,

கருப்பு பணத்துக்கு எதிராக,

கள்ளச் சந்தைக்கு எதிராக,

பெண்ணடிமைக்கு எதிராக,

சாதிக் கொடுமைக்கு எதிராக,

மத வெறிக்கு எதிராக,

மிக முக்கியமாக ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் மனதைப் போல பசியை ஒழிக்கப் பாடுபட்ட நம் தலைவரின் விருப்பம் நிறைவேறும் வகையில்,

வறுமைக்கு எதிராக, இல்லாமை கொடுமைக்கு எதிராக,

தலைவரின் பெயரால் நாம் எழுப்பும் உரிமைக்குரல் தேசமெங்கும் ஒலிக்கட்டும்.

ஒரு கவளம் சோற்றுக்கும் மானத்தை மறைக்கும் ஆடைக்கும் மக்கள் ஆலாய் பறக்கும் அவலநிலை ஒழியட்டும்.

பட்டினியோடு ஒரு மனிதன் கூட உறங்கப் போவதில்லை என்ற நிலை உருவாகட்டும்.

இதற்காக தலைவரின் தொண்டர்களான நாம் அவரது நினைவோடு எழுப்பும்

‘உரிமைக் குரலின்’

அதிர்வுகளால் நாட்டை பீடித்து பிணைத்துள்ள தளைகள் அறுபட்டு, பாரினில் புகழ்க் கொடி பறக்கவிட்டு உலகத் தலைமை ஏற்கட்டும்..

‘நம்நாடு’.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

super

Richardsof
7th November 2014, 03:30 PM
மக்கள் திலகத்தின் தாய் சொல்லை தட்டாதே , நம்நாடு , உரிமைக்குரல் - மூன்று படங்கள் வெளிவந்த நாளான இன்று அந்த படங்களை பற்றிய செய்திகள் - விளம்பரங்கள் - நிழற்படங்கள் - வீடியோ க்கள் என்று அருமையாகபதிவிட்ட இனிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

இனிய நண்பர் திரு கலை வேந்தனின் '' உரிமைக்குரலும் நம்நாடும் '' கட்டுரை அருமை .

7 எண் - பட்டியல் அருமை

Richardsof
7th November 2014, 03:45 PM
http://i62.tinypic.com/2j4qc87.jpg



மக்கள் திலகத்தின் அன்புக்கு பத்திரமான நடிகர் கமல் அவர்களின் பிறந்த நாள் இன்று .

மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக அவருக்கு நம்முடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து

கொள்கிறோம் .

Richardsof
7th November 2014, 03:59 PM
உரிமைக்குரலில் எனக்கு மிகவும் பிடித்த காட்சியும் பாடலும் .

ஒரே வீட்டில் வசிக்கும் அண்ணன் - தம்பி இருவருக்கும் ஏற்பட்ட உறவு விரிசல் காரணமாக அண்ணன் வீட்டை
இரண்டாக பிரிததிடும் காட்சியில் மக்கள் திலகம் அவர்களின் நடிப்பு அபாரம் ..தடுப்பு சுவர் வராது ..கீற்று தடுப்புதான் வரும் என்று லதாவிடம் ஒரு நமட்டு புன்னகையுடன் கூறுவாரே என்ன ஒரு நடிப்பு .ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக புன்சிரிப்புடன் பாடுவாரே அந்த பாடல் மறக்க முடியுமா ? மக்கள் திலகத்தின் ஆந்திர ஸ்டைல் வேட்டி சூப்பர்
.
http://youtu.be/DDnRakNvBKk

Scottkaz
7th November 2014, 04:10 PM
வேலூர் records 70
http://i61.tinypic.com/1zev4lu.jpg

Richardsof
7th November 2014, 04:12 PM
தாய் சொல்லைதட்டாதே - மக்கள் திலகம் எம்ஜிஆர் - தம்பி - அசோகன் -அண்ணன்


நம்நாடு -மக்கள் திலகம் எம்ஜிஆர் - தம்பி - டி .கே . பகவதி -அண்ணன்


உரிமைக்குரல் -மக்கள் திலகம் எம்ஜிஆர் - தம்பி- எஸ். வி .சகஸ்ரநாமம் -அண்ணன்


1961- 1969- 1974 ஆண்டுகளில் சாதனைகள் நிகழ்த்திய படங்கள் .

தாய் சொல்லைதட்டாதே- 19 வாரங்கள்

நம்நாடு - 21 வாரங்கள்

உரிமைக்குரல்- 200 நாட்கள்

Scottkaz
7th November 2014, 04:13 PM
வேலூர் records 71

இவை அனைத்தும் பார்வைக்கு மட்டுமே விவாதத்திற்கு அல்ல
http://i58.tinypic.com/15rzkma.jpg

Scottkaz
7th November 2014, 04:14 PM
வேலூர் records 72
http://i58.tinypic.com/15qt8yg.jpg

Scottkaz
7th November 2014, 04:17 PM
வேலூர் records 73
http://i57.tinypic.com/30aquf5.jpg

Scottkaz
7th November 2014, 04:20 PM
வேலூர் records 74
இவை அனைத்தும் பார்வைக்கு மட்டுமே விவாதத்திற்கு அல்ல
http://i60.tinypic.com/29mm9au.jpg

Scottkaz
7th November 2014, 04:22 PM
வேலூர் records 75
http://i62.tinypic.com/besqp0.jpg

Scottkaz
7th November 2014, 04:26 PM
வேலூர் records 76
http://i62.tinypic.com/210ds7b.jpg

Scottkaz
7th November 2014, 04:28 PM
வேலூர் records 77
http://i59.tinypic.com/zswvog.jpg

Richardsof
7th November 2014, 04:37 PM
வேலூர் records 73
http://i57.tinypic.com/30aquf5.jpg

வேலூர் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற நோட்டீஸ் , நம்நாடு பட விளம்பரங்கள் , வசூல் விளம்பரங்கள்

ஆவணங்கள் சூப்பர் ராமமூர்த்தி சார் . .

Scottkaz
7th November 2014, 04:47 PM
வேலூர் records 78
http://i1276.photobucket.com/albums/y472/mgrraamamoorthi/856dfabc-3759-47fd-93b3-b44edd5d0220_zps649ce745.jpg (http://s1276.photobucket.com/user/mgrraamamoorthi/media/856dfabc-3759-47fd-93b3-b44edd5d0220_zps649ce745.jpg.html)

Russelldvt
7th November 2014, 06:16 PM
http://i60.tinypic.com/1zlakiv.jpghttp://i57.tinypic.com/awrzfd.jpghttp://i62.tinypic.com/vxlt28.jpghttp://i58.tinypic.com/2e390yq.jpghttp://i58.tinypic.com/90n0wo.jpghttp://i61.tinypic.com/11hbhxl.jpghttp://i60.tinypic.com/4uv3mt.jpghttp://i60.tinypic.com/2ewm7wn.jpghttp://i59.tinypic.com/av1krd.jpg

Russelldvt
7th November 2014, 06:23 PM
http://i61.tinypic.com/2e307te.jpghttp://i62.tinypic.com/ngejpu.jpghttp://i60.tinypic.com/2nl66oy.jpghttp://i62.tinypic.com/315d92w.jpghttp://i62.tinypic.com/10fntao.jpghttp://i61.tinypic.com/5oie0w.jpghttp://i61.tinypic.com/k1t53r.jpghttp://i60.tinypic.com/wrm340.jpghttp://i58.tinypic.com/1kqqb.jpghttp://i60.tinypic.com/25rhx5y.jpg

Russelldvt
7th November 2014, 06:27 PM
உரிமைக்குரல் 07.01.1974 அன்று வெளியிடப்பட்டது http://i59.tinypic.com/28qpvmh.jpg

Russelldvt
7th November 2014, 06:31 PM
http://i62.tinypic.com/8wmrl1.jpghttp://i57.tinypic.com/2py6lgp.jpghttp://i62.tinypic.com/2m2jpc4.jpghttp://i57.tinypic.com/2m69vkw.jpg

Richardsof
7th November 2014, 06:45 PM
சென்னை - சரவணா அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''விவசாயி '' திரைப்படம் .


மதுரை - முருகா அரங்கில் '' ஆயிரத்தில் ஒருவன் ''


கோவை - நாஸ் அரங்கில் '' நம் நாடு ''.

**** 7.11.1969ல் வந்த நம்நாடு

பல வருடங்கள் பல ஊர்களில் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தது .

45வது ஆண்டு துவக்க நாளில் அதே தினத்தில் கோவையில் நம்நாடு - விஜயம் .

காலத்தை வென்றவர் மக்கள் திலகம் .

Stynagt
7th November 2014, 06:49 PM
http://i58.tinypic.com/2nrfz3q.jpg

கலைவேந்தன் சார்.

தங்களின் உரிமைக்குரலும் நம்நாடும் என்ற கட்டுரை அற்புதம். உரிமைக்குரல் நம்நாட்டில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடல் கடந்த இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது வரலாறு. தலைப்பிற்காகவே இந்த சிறந்த திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்கவில்லை சிங்கள அரசாங்கம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அப்படி வெளியிடப்பட்டிருந்தால், உரிமைக்குரல் தகர்க்க முடியாத சாதனையை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, தலைவர் அவர்கள் இறுதி காட்சியில் பேசும் வசனங்கள், அன்றைக்கே, அந்த நாட்டின் அரசியல் மாற்றத்திற்கு மாபெரும் உரமாக இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th November 2014, 06:50 PM
http://i59.tinypic.com/so9u1c.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th November 2014, 06:51 PM
http://i62.tinypic.com/344ckuc.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th November 2014, 06:52 PM
http://i60.tinypic.com/10r45ud.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
7th November 2014, 06:53 PM
http://i61.tinypic.com/1r5e1t.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
7th November 2014, 07:09 PM
THANKS - ROOP SIR- SRI MGR.COM
http://i62.tinypic.com/2nhi4jb.jpg

Russellzlc
7th November 2014, 07:27 PM
http://i62.tinypic.com/2j4qc87.jpg



மக்கள் திலகத்தின் அன்புக்கு பத்திரமான நடிகர் கமல் அவர்களின் பிறந்த நாள் இன்று .

மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக அவருக்கு நம்முடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து

கொள்கிறோம் .


கில்லாடி ஊரிலே யாரடா ? கூறடா!
மல்லாடி பார்ப்பமா? வாங்கடா!
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே!
எந்த தோட்டாவும் என்னைத் துளைக்காதே!

இது திரு.கமல்ஹாசன் நடித்த படத்தின் பாடல் வரிகள் என்றாலும் தலைவருக்கு என்னமாய் பொருந்துகிறது? அதிலும் அந்த கடைசி இரண்டு வரிகள்.தன்னைக் கொல்ல வந்த துப்பாக்கி குண்டு கூட தனது உடலை துளைத்து வெளியே செல்ல விடாமல் தொண்டையில் இடம் கொடுத்த வள்ளலாயிற்றே நம் தலைவர்?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
7th November 2014, 08:46 PM
http://www.youtube.com/watch?v=8HqEwTGjWAE

ainefal
7th November 2014, 08:47 PM
http://www.youtube.com/watch?v=tjxsK1NiyWQ

ainefal
7th November 2014, 08:48 PM
http://www.youtube.com/watch?v=6hbvj_b0Jao

ainefal
7th November 2014, 08:48 PM
http://www.youtube.com/watch?v=JKxagFBTpBM

oygateedat
7th November 2014, 09:04 PM
http://s28.postimg.org/3lhuqd0a5/scan0003.jpg (http://postimg.org/image/b1h4c5nzd/full/)

ainefal
7th November 2014, 09:11 PM
http://i60.tinypic.com/k4wfbr.gif
http://www.youtube.com/watch?v=D2kQOWCzcl4

ainefal
7th November 2014, 09:12 PM
http://i60.tinypic.com/k4wfbr.gif
http://www.youtube.com/watch?v=pZV_DncXU-4

ainefal
7th November 2014, 09:13 PM
http://i60.tinypic.com/k4wfbr.gif
http://www.youtube.com/watch?v=ZdwICt5hPUI

Russellbpw
7th November 2014, 09:30 PM
சென்னை - சரவணா அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''விவசாயி '' திரைப்படம் .


மதுரை - முருகா அரங்கில் '' ஆயிரத்தில் ஒருவன் ''


கோவை - நாஸ் அரங்கில் '' நம் நாடு ''.

**** 7.11.1969ல் வந்த நம்நாடு

பல வருடங்கள் பல ஊர்களில் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தது .

45வது ஆண்டு துவக்க நாளில் அதே தினத்தில் கோவையில் நம்நாடு - விஜயம் .

காலத்தை வென்றவர் மக்கள் திலகம் .

மற்றும் பட் ரோடு ஜெயந்தியில் தர்மம் தலைகாக்கும் !

Russellbpw
7th November 2014, 09:38 PM
வேலூர் records 71

இவை அனைத்தும் பார்வைக்கு மட்டுமே விவாதத்திற்கு அல்ல
http://i58.tinypic.com/15rzkma.jpg


Dear Sir,

Nothing to worry..!

I will not react for this.

We are aware of the exaggerations in Rasigar Mandra Notices especially with reference to the content.

Regards
RKS

oygateedat
7th November 2014, 09:46 PM
http://s10.postimg.org/ypmlo44eh/DSC_0324.jpg (http://postimg.org/image/k6fgmpb9h/full/)
IMAGE F0RWARDED BY MR.V.P.HARIDAS, COIMBATORE

oygateedat
7th November 2014, 10:04 PM
http://s11.postimg.org/4fwq5pu4j/vff.jpg (http://postimg.org/image/55fii2unz/full/)

Russellbpw
7th November 2014, 10:40 PM
திரு. ஆர்.கே.எஸ். தங்கள் விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் கூறியதை நான் யாரிடமும் verify செய்ய மாட்டேன். உங்கள் உண்மைத்தன்மை மீது எனக்கு நம்பிக்கை உண்டு.

ஐயா மூப்பனார் அவர்கள் பரம்பரை காங்கிரஸ்காரர். அவர் தந்தையார் திரு.கோவிந்தசாமி மூப்பனாரும் காங்கிரஸ் தலைவர். அவர் இருந்த சுந்தர பெருமாள் கோயில் வீட்டுக்கு 1951ம் ஆண்டு காமராஜரும் ‘லோக் நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களும் செல்லும் அளவுக்கு செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் குடும்பம். காமராஜர் காலத்திலேயே 1965ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டவர் ஐயா மூப்பனார்.
அப்படிப்பட்டவரை திருமதி. இந்திரா காந்தி அம்மையாருக்கு திரு.சிவாஜி கணேசன் அறிமுகம் செய்து வைத்து பதவி வாங்கிக் கொடுத்ததாகவே இருக்கட்டும். அப்போது இல்லை என்றாலும் பிற்காலத்தில் கூட அவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படாதது மட்டுமல்ல, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த எம்.பழனியாண்டி காலத்தில் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தினருக்கு காங்கிரஸ் உறுப்பினர் அட்டை புத்தகம் கூட வழங்கப்படாமல் அதற்காக உண்ணாவிரத அறிவிப்பு எல்லாம் வந்தது உண்டு.

மேலும் காங்கிரசில் பல கோஷ்டிகள். அந்தந்த கோஷ்டிகளுக்கு தக்கவாறு தேர்தலில் சீட் ஒதுக்கப்படும். திரு.சிவாஜி கணேசன் அவர்களின் மன்றத்துக்கு குறைந்த அளவு, அதிலும் மிகவும் போராடிய பிறகே அகில இந்திய காங்கிரஸ் தலைமை சீட் ஒதுக்கும். அப்படி ஒதுக்கப்பட்ட சீட்களில் 1984ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற சிலரில் (5 பேர் என்று நினைக்கிறேன்) ஒருவர்தான் இன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர்.

திருமதி. இந்திரா காந்தி அம்மையாரிடமும் காங்கிரசிலும் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்று நான் கூறவில்லை. அப்படி செல்வாக்கு பெற்றிருந்தவருக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை இருந்தது? என்பதுதான் என் வருத்தம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

திரு கலைவேந்தன்..

வணக்கங்கள் !

ஏற்கனவே இதற்க்கு பதில் உரைத்தாகிவிட்டது.

சற்று நிதானமாக படித்து பாருங்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி தேடி வந்தது நடிகர் திலகத்திர்க்கே தவிர நீங்கள் உரைப்பது போல திரு மூப்பனார் அவர்களுக்கு அல்ல.

2. காங்கிரஸ் என்கிற மூழ்கிகொண்டிருக்கின்ற கப்பலை நீங்கள் கூறிய மூபனாரோ அவரது தந்தையாரோ மற்றும் எவரும் முன் வரவில்லை காரணம் அவர்கள் அதில் படு தோல்வி ஏற்கனவே கண்டதால் தான் காமராஜர் இவர்கள் அனைவரையும் விட சிறந்த மாலுமியான நடிகர் திலகம் உதவிகொண்டு காங்கிரஸ் கட்சியை கரையேற்றும் வகையில் கரையேற்றினார் என்பது உலக உண்மை. காமராஜர் மறைவிற்கு பிறகும் நீங்கள் மேற்கூறிய கனவான்கள் என்ன கிழித்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே !

நீங்கள் கூறிய மூபனர் அவர்கள் தரப்பு கிழித்தது என்ன தெரியுமா ? கோஷ்டிபூசல் வளர்த்தல்...சுயநல கொள்கைகள்...பகிரங்க தாக்குதல்...எதிலும் ஒத்துழையாமை....இப்படி..பல..பல...மூபனரின் தந்தை செய்தார் ....பின்பு மூப்பனார் அதை தொடர்ந்தார்...இன்று வாசன் அதை follow செய்கிறார்....மூப்பனார், அவருடைய முந்தைய தலைமுறையினர்...பிறகு வாசன்...இவர்கள்..காங்கிரஸ் வளர ஒரு முயற்சியும்...எந்த காலத்திலும் செய்ததில்லை..இனி செஇய்யபொவதும் இல்லை. இவர்கள் சொத்தை பாதுகாக்க ஒரு CONGRESS தேவை பட்டது ! அவ்வளவுதான் !

நீங்கள் கூறிய காமராஜர் கால கட்டத்தில் காங்கிரஸில் சேர விரும்புகிறவர்கள் வரும்போது அவர்களை திரு காமராஜரே சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் மூலமாக வர சொல்வது வழக்கம்.

காரணம் காங்கிரஸ் கட்சியின் தோற்றம், வளர்ச்சி, PRINCIPLES & IDEOLOGY இவைகளை திரு சிவாஜி கணேசன் அவர்களின் மன்றம் முறையாக அனைவருக்கும் விளக்கி அவர்களை காங்கிரஸின் முக்கியத்துவம் பற்றி உணர செய்தது. இதை காங்கிரஸ் கட்சி கூட முறையாக செய்ததில்லை அவர்கள் தொண்டர்களுக்கு. ஆனால் சிவாஜி கணேசன் அவர்களுடைய மன்றம் இந்த தலையாய பணியை செய்தது.

இது கூட செய்யாதவர்கள் நீங்கள் கூறிய மூப்பனாரின் தந்தையோ அல்லது திரு மூபனாரோ அல்லது இவர்களது மூதாதையரோ !


ஆனால் நீங்கள் வருத்தப்பட்ட நடிகர் திலகம் எந்தளவு காங்கிரஸ் ப்ரின்சிப்லஸ் & ideology நிலை நிறுத்த எந்தளவிற்கு உழைத்தார் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என்பது ஊர் அறிந்த உண்மை, உலகறிந்த சத்தியம்..!

காரணம் அவர் திரையுலகில் என்றுமே (உடல் நிலை முற்றிலும் ஒத்துழைக்காத வரை) மற்ற எந்த நடிகரை காட்டிலும் எவ்வளவு புதிய நடிகர்கள் வந்தபோதிலும் திரை உலகம் என்ற காட்டில் வீறு நடை போட்டுகொண்டிருந்த சிம்ஹமாக வலம் வந்தது இந்திய திரை உலகு மட்டும் அல்ல...உலக எழுத்தாளர்கள் கூட வந்து, அறிந்து, உணர்ந்து அவரை பற்றி மட்டும் INDIAN CINEMA என்ற புத்தகத்தில் இரண்டு பக்கங்களுக்கு எழுதியுள்ளார்கள். அதை பதிவு செய்யவேண்டும் என்றால் கூறுங்கள், பதிவு செய்கிறேன்..!

இதை எழுதியது காசு கொடுத்தால் "நீ தான் கம்பன்" "நீ தான் பாரி"..."நீதான் ஓரி"... என்று எழுதும் இரெண்டாம் தர, மூன்றாம் தர ஜால்ரா எழுத்தாளர்கள் அல்ல !

Eric Barnav & (MKT அவர்களை திரையுலகிற்கு அறிமுகபடுத்திய, அவரை வைத்து பல வெற்றிப்படங்களை மட்டுமே தயாரித்த) Dr S கிருஷ்ணசுவாமி என்பவர்கள்.

அவர்கள் யார் என்பதை நீங்களே தெரிந்துகொண்டால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்வீர்கள்.

காரணம் அவர்கள் தான் இதன் எழுத்தாளர்கள் !

தனக்கு கட்சி பதவி மீது பற்றில்லை, தன்னுடைய தொழிலில் செய்யவேண்டியது நிறைய உள்ளது ஆகையால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிஎல்லாம் எப்போதும் வேண்டாம் என்று நடிகர் திலகம் மூபனாருக்கு கொடுத்த தானம் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி.

உண்மை நிலை இப்படி இருக்க...நடிகர் திலகம் அவர்கள் போராடிய பிறகு..குறைந்த சீட் கிடைக்கும்..என்றெல்லாம் நீங்கள் கூறுவது உங்களிடம் அப்படி உரைத்தவர்களின் கற்பனை வளத்தினை மட்டுமே சுட்டி காட்டுகிறது.

மேலும் நீங்கள் குறிப்பிட்டஅந்த தேர்தலில் நடிகர் திலகம் ஆதரவு எத்துனை seat என்பது அனைவருக்கும் தெரியும், அதுமட்டுமல்ல அவருடைய ஆசி பெற்றவர்கள் போட்டியிட்ட இடங்கள் பெரும்பாலும் அவர்கள் மட்டுமே வெற்றிபெற்றார்கள். நடிகர் திலகம் ஆசிபெற்ற நீங்கள் குறிப்பிட்ட இன்றைய தலைவர் திரு இளங்கோவன் மட்டுமல்ல வெற்றிபெற்றது திரு கலைவேந்தன்...அவர் ஆதரவு கொடுத்த மற்ற பெரும்பாலானவர்களும் வெற்றிபெற்றார்கள் என்பதே உண்மை. !

நீங்கள் கூறிய மூப்பனார் குடும்ப ஆதரவு ஆட்கள் வெற்றிபெற்றார்களா ? எத்துனை பேர் என்பதை நீங்களே அறிந்துகொள்வது உங்களுக்கு பல உண்மைகளை விளக்கும் !

மேலும் திரு பழனியாண்டி யாருடைய ஆள் என்பதை நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமா ? பழனியாண்டி என்று நீங்கள் கூறும்போதே இதை படிக்கும் பெரும்பான்மையான அப்போதைய காங்கிரஸ் மற்றும் DMK ஆட்கள் மூப்பனார் குடும்பதுடன் உறவாடிய பழனியாண்டி என்று கூறுவார்கள் திரு கலைவேந்தன்.

அப்படி இருக்க அடையாள அட்டை எப்படி அவ்வளவு எளிதில் கிடைக்கும் ? தஞ்சாவூர் ஜமீந்தார் பரம்பரையுடன் பின்னி இருந்த ஆண்டி தான் அதற்க்கு இடம் கொடுப்பாரா? ஆட்டுவித்தால் யாரொருவர்..ஆடாதாரே கண்ணா..அல்லவா ?

இனி அடுத்தது நீங்கள் நடிகர் திலகம் சொந்த கட்சியை தேர்தல் விளைவு பற்றி கூற வருவீர்கள் என்பது எனக்கு தெரியும். காரணம் எப்போதுமே நமக்குள் நடக்கும் எந்த கேள்வியாயினும் என்னுடைய பதில் பதிவுகள் பதியும்பொது அது ..."என்ன கைய புடிச்சு இழுத்தியா ?" ரகம் !

:yakyak:


BEST REGARDS,
RKS :D

Russellisf
8th November 2014, 12:06 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps96e0b756.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps96e0b756.jpg.html)

Russellisf
8th November 2014, 12:12 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps1cb64f53.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps1cb64f53.jpg.html)

ainefal
8th November 2014, 12:26 AM
http://i57.tinypic.com/2s138rl.gif

http://www.youtube.com/watch?v=jM1IrZHq4ws

ainefal
8th November 2014, 12:45 AM
http://youtu.be/3fl0XZVuaGo

ainefal
8th November 2014, 01:00 AM
http://www.youtube.com/watch?v=WN4owGPpD7w

ainefal
8th November 2014, 01:03 AM
http://www.youtube.com/watch?v=d8O2OiyWN_w

Richardsof
8th November 2014, 05:13 AM
கோவை - நாஸ் திரை அரங்கில் நம்நாடு - நிழற்படம் பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .

சென்னை - பட்ரோடு - ஜெயந்தி அரங்கில் ''தர்மம் தலைகாக்கும் '' - தகவலுக்கு நன்றி திரு ரவிகிரண்.

Russellisf
8th November 2014, 06:10 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsdb8d38d2.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsdb8d38d2.jpg.html)

Russellisf
8th November 2014, 06:56 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A6_zps6a5423ce.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A6_zps6a5423ce.jpg.html)



முதலில் சாரி கோபால் சார் ஏன் என்றால் நீங்கள் கலைவேந்தன் அவர்களுக்கு கூறிய பதிலில் நான் நுழைவது கடவுளை பற்றி ஒரு கடவுள் மறுப்பாளர் வைக்கும் அபாண்டங்கள் சொல்லும்பொழுது எந்த வொரு பக்தனுக்கும் கோபம் வருவது நியாயம் தானே

திமுக விற்கு நீங்கள் இந்த கருத்தை எல்லாம் சொல்லினால் நீங்கள் தான் கொ ப செ .

தலைவர் சொல்லியதால் தான் என்னை போல் அவருடைய ரசிக கண்மணிகள் யாரும் எந்த வித தீய பழக்கத்திற்கு ஆளாக்ம்மால் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

கட்சி ஆரம்பித்தவுடன் பச்சை குத்த சொன்னவர் என்று சொல்லுபவரே அதற்கு முன்னாலே எத்தனை லட்சம் பாட்டாளி மக்கள் பெயர் அவர் பெயரை பச்சை குத்தி கொண்ட கணக்கு தெரியுமா அவர்கள் எல்லாம் கழக கொடி தனை பச்சை குத்தி கொள்ளவில்லை அவருடைய தமிழ் வார்த்தை கொண்ட பெயரை விட ஆங்கிலத்தில் உள்ள mgr என்ற பெயரை தான் பச்சை குத்தி கொண்டது உங்களுக்கு தெரியுமா ?

உங்களுக்கு ஒரு விண்ணப்பம் தயவு செய்து அன்புமணி ராமதாஸ் என்ற சாக்கடையோடு எங்கள் புண்ணிய தலைவரை ஒப்பிடாதிர்கள் .

1)சிவாஜி ஆரம்பத்திலிருந்தே ,தன்னுடைய செல்வாக்கினால் கட்சியை வளர்த்தவரே தவிர,கட்சியினால் வளர்ந்தவர் அல்ல.சில சில்லறை நடிகர்கள்,கட்சியினால் தங்களை வளர்த்து கொண்டது ஊரறிந்த விஷயம்.( உங்களை போல் சிலர் அறிந்த விசயம் )

2)அவர் தனக்காக எதுவும் கேட்டதில்லை.பதவி சுகம் நாடியதில்லை.தன்னை நம்பியவர்களுக்காகவே போராடினார்,.அதுவும் வெளிப்படையாக.தனக்கு அமைச்சர் பதவி கேட்டு ,கட்சியை உடைத்தவரும் இல்லை.புதியதாய் வந்த ஒரு நடிகனின் ஓரிரு படங்கள் வெற்றி கண்டதும்,raw அமைப்பு புண்ணியத்தில் புது கட்சி கண்டவரும் அல்ல.இந்திரா காந்தி ,காமராஜ் இருந்த போதே சிவாஜிக்காக தூது விட்டு வெற்றி காண முடியாத போது ,இன்னொரு கட்சியை இலகுவாக உடைத்தார்.(வாழ்க பாரத் ) ( தலைவரின் ஒப்புதலோடு தான் அண்ணாவின் முதல் அமைச்சரவை அமைந்தது உலகம் அறிந்த விசயம் )

3)தி.மு.கவில் அவர் திருப்பதி போன போது அவ்வளவு கொந்தளிப்பு கண்டது,திட்டமிட்ட சதி. தனி பிறவிகள் முருகனாகி,கொல்லூர் சென்றதில் திராவிட கொள்கைகள் என்னவானது? ( தெய்வம் இன்னொரு தெய்வத்தை பார்க்க செல்வதில் தவறு ஒன்றும் இல்லை )


தன் இறுதி காலம் வரை தமிழக மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவர் கோடி கணக்கான மக்கள் நேசித்த நேசிக்க பட்டு கொண்டு இருக்கின்ற ஒரே தலைவர் எங்கள் புரட்சிதலைவர் மட்டுமே உங்களைவிட மோசமாக விமர்சித்தவர்கள் எல்லோரும் இன்று எங்கள் தெய்வத்தின் புகழை பாடி கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் எம் மாத்திரம் ?

Russellisf
8th November 2014, 07:37 AM
Today daily thanthi thalaiyangam

யார் பக்கம் தொண்டர்கள் இருப்பார்கள்?

இந்தியாவில், தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஏராளமான அரசியல் கட்சிகள் உண்டு. இந்த கட்சிகள் எல்லாமே ஏதாவது சந்தர்ப்பங்களில் பிளவுகளை சந்திப்பது வழக்கம். இவ்வாறு பிளவுபடும்போது, பிரிந்துபோன கட்சிகள் பலநேரங்களில் கரைந்துபோய் காணாமல் போய்விடுவதும் உண்டு. ஒருசில கட்சிகளே நிலைத்து நிற்கும். கம்யூனிஸ்டு கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியுமே நிலைத்து நின்றுள்ளது. 1949–ல் திராவிடர் கழகத்தில் இருந்து, தி.மு.க. என்று தனியாக அண்ணா கட்சி தொடங்கினார். தி.மு.க.வில் இருந்தும் சிலர் தனியாக பிரிந்துபோய் தனிராகம் பாடி புதுகட்சிகள் தொடங்கினாலும், அவையெல்லாம் காற்றிலே கலந்த கீதங்களாகிவிட்டன. ஆனால், 1972–ல் அ.தி.மு.க. என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கி 1977–ல் ஆட்சியை பிடித்து, அவர் உயிரோடு இருக்கும்வரை யாரும் அ.தி.மு.க.வை வெற்றிபெற முடியாது என்ற சாதனையைப்படைத்து மறைந்தார்.

நாடு சுதந்திரம் அடைந்து 3 தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சியை, 1967–ல் தி.மு.க. தோற்கடித்து ஆட்சி அமைத்தது. அதன்பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., அல்லது அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கமுடியும் என்ற அசைக்கமுடியாத நிலையை இன்றளவும் இரு திராவிட கட்சிகளும் உருவாக்கிவிட்டன. வேறு எந்த கட்சியும் வெற்றியின் பக்கத்தில்கூட போகமுடியவில்லை. அ.தி.மு.க.வில் இருந்தும் பல கட்சிகள் பிரிந்துசென்றாலும், தலையெடுக்க முடியாமல் மங்கிபோய்விட்டன. பின்னாளில் தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க.வை வைகோ தொடங்கி அந்த கட்சியை நடத்திவருகிறார்.

காங்கிரஸ் கட்சியும் பிளவுகளைச் சந்தித்துள்ளது. 1949–ல் முதலில் ராஜாஜி விலகி, சுதந்திரா கட்சியை தொடங்கினார். 1969–ல் காங்கிரஸ் மற்றொரு பிளவை சந்தித்தது. காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும், இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் தனித்தனியாக இயங்கியது. அகில இந்திய அளவில் இந்திரா காங்கிரஸ் வலுவோடு இருந்தாலும், தமிழ்நாட்டில் காமராஜர் உயிரோடு இருந்தவரையில் ஸ்தாபன காங்கிரசுக்குத்தான் பலம் இருந்தது. அவர் மறைவுக்குப்பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சியோடு இணைந்தது. இந்திரா காங்கிரசே காங்கிரஸ் கட்சியாக வலம் வந்தது. 1979–ல் நெடுமாறனும், 1989–ல் நடிகர் சிவாஜி கணேசனும் காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சிகள் தொடங்கினாலும் நீடிக்க முடியவில்லை. அகில இந்திய அளவில் திவாரி தனியாக கட்சி தொடங்கிப்பார்த்தார், முடியவில்லை. ஆனால், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத்பவாரும், மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய மம்தாவும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சவாலாகிவிட்டனர். இதுபோல, தமிழ்நாட்டில் 1996–ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் தொடங்கி நடத்தியபோது, அவரே காங்கிரஸ் என்ற நிலையை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் அவர் பக்கமே அணிவகுத்து நின்றனர். அவர் மறைவுக்குப்பிறகு 2001–ல் காங்கிரசோடு அந்த கட்சியை ஜி.கே.வாசன் இணைத்துவிட்டு, இப்போது மீண்டும் விலகி தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார்.

இப்போதுள்ள நிலையில், ஏற்கனவே ஒருகாலத்தில் தமிழக அரசியலில் மலையாக இருந்த காங்கிரஸ் கரைந்து 4 சதவீதத்துக்கும் சற்றே அதிகமான ஓட்டுகளைப்பெற்றுள்ள நிலையில், யார் எவ்வளவு ஆதரவை தங்கள் வலையில் பெறப்போகிறார்கள்? என்பது தெரியவில்லை. பொதுவாக அனைத்து கட்சிகளுமே பிளவுபடும்போது, கட்சிகளின் மூலக்கொள்கையைவிட்டு பெரும்பாலும் விலகிப்போய்விடுவதில்லை. எந்த தலைமை அந்த கட்சியின் கொள்கைகளை உறுதியாக நிறைவேற்றும் என்று தொண்டர்கள் நம்புகிறார்களோ, அதன் அடிப்படையில்தான் பின்பற்றுகிறார்கள். ஆக, தனிப்பட்ட தலைவர்கள், தலைமையின்கீழ்தான் தொண்டர்களின் ஆதரவும் நிர்ணயிக்கப்படுகிறது. இப்போதும் ஜி.கே.வாசன், காங்கிரசின் கொள்கையில் இருந்து வேறுபட்டு தனிக்கட்சியை தொடங்கியதாக அறிவிக்கவில்லை. கட்சி செயல்படவில்லை என்பதால்தான் புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார். இதை எந்த அளவுக்கு தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு அவர் பக்கம் செல்வார்கள், அல்லது ஏற்றுக்கொள்ளாமல் காங்கிரசிலேயே தங்குவார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.


Courtesy today daily thanthi

Richardsof
8th November 2014, 08:03 AM
யுகேஷ் பாபு

சரியான பதில் - அருமையான தலையங்கம் பதிவு .

கேள்விகள் கேட்பது சுலபம்- அவர் சொன்னார் - இவர் கூறினார் .அதோ ஆதாரம் என்று மேம்போக்காக ஆத்திரத்தின்
வெளிபாடுதான் சிலரின் பரிதாபமான நிலை .

மக்கள் திலகத்தின் அரசியல் மாற்று கருத்து கொண்டவர்களின் பிற்கால நிலையில் எப்படி எல்லாம் தங்களை
மாற்றி கொண்டு மக்கள் திலகத்தின் புகழ் பாடினார்கள் என்பதை நாடே அறியும் .

இருட்டு உள்ளத்தில் தேங்கி கிடக்கும் பொறாமை வெளிப்பாடுகளை பற்றி கவலை இல்லை .

தனிப்பட்ட எம்ஜிஆர் என்ற மனிதரின் சக்தி - தாங்கி கொள்ள முடியாதவரின் நடுக்கம் புரிகிறது .

அவரின் மனப்புண்ணுக்கு மருந்து இல்லை .

ஒரு பாமர ரசிகனுக்கு தெரிந்த அளவிற்கு கூட படித்த ரசிகனுக்கு தெரியாமல் கருத்து குருடாகி போனது வருத்தமே

Richardsof
8th November 2014, 08:30 AM
முதல்முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு வருகை புரிந்த இனிய நண்பர் திரு கோபால் அவர்களை
மகிழ்ச்சிய்டன் வரவேற்கிறேன் . ஆயிரம் கருத்து மாறு பாடுகள் இருந்தாலும் நட்பு ரீதியாக உங்களின் வரவு
எங்களுக்கு ஆனந்தமே .

பதிவிட்ட சில நொடிகளில் இங்கிருந்து நீக்கியதையும் ரசிக்கிறோம்

siqutacelufuw
8th November 2014, 11:03 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A6_zps6a5423ce.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A6_zps6a5423ce.jpg.html)



முதலில் சாரி கோபால் சார் ஏன் என்றால் நீங்கள் கலைவேந்தன் அவர்களுக்கு கூறிய பதிலில் நான் நுழைவது கடவுளை பற்றி ஒரு கடவுள் மறுப்பாளர் வைக்கும் அபாண்டங்கள் சொல்லும்பொழுது எந்த வொரு பக்தனுக்கும் கோபம் வருவது நியாயம் தானே

திமுக விற்கு நீங்கள் இந்த கருத்தை எல்லாம் சொல்லினால் நீங்கள் தான் கொ ப செ .

தலைவர் சொல்லியதால் தான் என்னை போல் அவருடைய ரசிக கண்மணிகள் யாரும் எந்த வித தீய பழக்கத்திற்கு ஆளாக்ம்மால் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .

கட்சி ஆரம்பித்தவுடன் பச்சை குத்த சொன்னவர் என்று சொல்லுபவரே அதற்கு முன்னாலே எத்தனை லட்சம் பாட்டாளி மக்கள் பெயர் அவர் பெயரை பச்சை குத்தி கொண்ட கணக்கு தெரியுமா அவர்கள் எல்லாம் கழக கொடி தனை பச்சை குத்தி கொள்ளவில்லை அவருடைய தமிழ் வார்த்தை கொண்ட பெயரை விட ஆங்கிலத்தில் உள்ள mgr என்ற பெயரை தான் பச்சை குத்தி கொண்டது உங்களுக்கு தெரியுமா ?

உங்களுக்கு ஒரு விண்ணப்பம் தயவு செய்து அன்புமணி ராமதாஸ் என்ற சாக்கடையோடு எங்கள் புண்ணிய தலைவரை ஒப்பிடாதிர்கள் .

1)சிவாஜி ஆரம்பத்திலிருந்தே ,தன்னுடைய செல்வாக்கினால் கட்சியை வளர்த்தவரே தவிர,கட்சியினால் வளர்ந்தவர் அல்ல.சில சில்லறை நடிகர்கள்,கட்சியினால் தங்களை வளர்த்து கொண்டது ஊரறிந்த விஷயம்.( உங்களை போல் சிலர் அறிந்த விசயம் )

2)அவர் தனக்காக எதுவும் கேட்டதில்லை.பதவி சுகம் நாடியதில்லை.தன்னை நம்பியவர்களுக்காகவே போராடினார்,.அதுவும் வெளிப்படையாக.தனக்கு அமைச்சர் பதவி கேட்டு ,கட்சியை உடைத்தவரும் இல்லை.புதியதாய் வந்த ஒரு நடிகனின் ஓரிரு படங்கள் வெற்றி கண்டதும்,raw அமைப்பு புண்ணியத்தில் புது கட்சி கண்டவரும் அல்ல.இந்திரா காந்தி ,காமராஜ் இருந்த போதே சிவாஜிக்காக தூது விட்டு வெற்றி காண முடியாத போது ,இன்னொரு கட்சியை இலகுவாக உடைத்தார்.(வாழ்க பாரத் ) ( தலைவரின் ஒப்புதலோடு தான் அண்ணாவின் முதல் அமைச்சரவை அமைந்தது உலகம் அறிந்த விசயம் )

3)தி.மு.கவில் அவர் திருப்பதி போன போது அவ்வளவு கொந்தளிப்பு கண்டது,திட்டமிட்ட சதி. தனி பிறவிகள் முருகனாகி,கொல்லூர் சென்றதில் திராவிட கொள்கைகள் என்னவானது? ( தெய்வம் இன்னொரு தெய்வத்தை பார்க்க செல்வதில் தவறு ஒன்றும் இல்லை )


தன் இறுதி காலம் வரை தமிழக மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவர் கோடி கணக்கான மக்கள் நேசித்த நேசிக்க பட்டு கொண்டு இருக்கின்ற ஒரே தலைவர் எங்கள் புரட்சிதலைவர் மட்டுமே உங்களைவிட மோசமாக விமர்சித்தவர்கள் எல்லோரும் இன்று எங்கள் தெய்வத்தின் புகழை பாடி கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் எம் மாத்திரம் ?



நல்ல பதிலை அளித்துள்ள திரு. யூகேஷ்பாபு அவர்களுக்கு நன்றி !

அந்த பதிலுடன், என்னுடைய சில விளக்கங்களையும் அளிக்க விரும்புகிறேன்.

நமது மக்கள் திலகம் அவர்கள் மகத்தான மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த காரணத்தினால் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் சேர்ந்த பொழுது பலத்த வரவேற்பு இருந்தது.

நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தனக்கிருந்த செல்வாக்கினால் காங்கிரஸ் கட்சியை வளரத்தவர் என்றால் அவர் தமிழர் முன்னேற்ற முன்னணி ஆரம்பித்த கால கட்டத்தில், அவர் ஒருவராவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்தலில், ஒரு. பி. எச். பாண்டியன் அவர்கள் சுயேட்சையாக வெற்றி பெறும்போது மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களால் ஏன் வெற்றி பெற முடியாமல் போனது.

எந்த கட்சியினையும் சாராமால் சுயேட்சையாக வெற்றி பெற்ற மக்கள் செல்வாக்கு படைத்த சட்டமன்ற உறுப்பினர்கள் அறந்தாங்கி திருநாவுக்கரசு சாத்தூர் ராமச்சந்திரன், பேராவூரணி குழ. செல்லையா, காங்கேயம் ராமசாமி, ஆலங்குடி வெங்கடாசலம், ஸ்ரீ வில்லிப்புத்தூர் தாமரைக்கனி, தாரமங்கலம் செம்மலை உள்ளிட்ட பலரை தமிழக சட்டப் பேரவை கண்டிருக்கிறது.

1957 முதல் வெற்றி கண்ட சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட நீண்ட பட்டியல் ஆதாரப்பூர்வமாக காட்ட முடியும்.

படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று கூறிய, நடிகர் சிவாஜிகணேசன் அவர்கள் ஏற்றுக்கொண்ட, பெருந்தலைவர் காமராஜர் கூட தோற்று விட்டார். ஆனால் அவ்வாறு படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று கூறாமல், மருத்துவனமனையில் இருந்துகொண்டே 1967 மற்றும் 1984 தேர்தல்களில் வெற்றி பெற்ற பெருமை எங்கள் புரட்சித்தலைவருக்கு மட்டுமே உண்டு !
.
தி.மு.க. வில் கடவுள் மறுப்பு இயக்கம் கொள்கை தீவிரமாக இருந்த பொழுதுதான் சிவாஜி கணேசன் அவர்கள் திருப்பதி சென்றார். எனவே அவர் விமர்சிக்கபட்டார். ஆனால் எங்கள் பொன்மனச்செம்மல் அவர்கள் தனிப்பிறவியில் “ முருகனாக " காட்சியளித்தபோதும் சரி, கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்ற பொழுதும் சரி, தி. மு.க வில் கடவுள் மறுப்பு இயக்கம், மற்றும் திராவிட நாடு பிரிவினை கொள்கைகள் கைவிடப்பட்டன என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு புரியும்.

மந்திரி பதவி கேட்டு மறுக்கப்பட்டதால் கட்சியை உடைத்தார் என்று திரு. கோபால் அவர்கள், மக்கள் திலகத்தை மறைமுகமாக சாடியதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த போலி வார்த்தைகள் அப்போதைக்கு, (1972) கால கட்டத்தில்) சரிந்து வரும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான கட்சிக்கு (உண்மையான தி.மு.க. பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்டதுதான்) ஆறுதலாக தேவைப்பட்டதால் திட்டமிட்டு பரப்பிய வதந்தி செய்தி.

எந்த சில்லறை நடிகர் (திரு. கோபால் அவர்களின் வார்த்தைப்படி) படங்கள் வெற்றி பெற்றாலும் அது பற்றிய கவலை மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தியான எங்கள் பொன்மனசெம்மலுக்கோ கவலை இருந்ததில்லை அவரது காவியங்களை திரும்ப திரும்ப பார்ப்பதெற்கென்றே நிரந்தரமான ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இது உலகத்தில் எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு பெருமை. அவரது படங்கள் என்றென்றும் வசூல் சாதனைகள் புரிந்து கொண்டிருப்பதால்தான் அவர் நிரந்தர “ வசூல் சக்கரவர்த்தி “ என்று அழைக்கப் படுகிறார்.

எங்கள் புரட்சித்தலைவர் ஆரம்பத்தில், தான் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியையும் பின்னர் தி. மு. க. வையும் வளர்த்தவர்தானேயொழிய எந்த கட்சியை உடைத்தவர் அல்ல. கலைஞர் கருணாநிதி தலைமையிலான கட்சி தான் அவரை விலக்கியதே தவிர அவர் உடைக்க வில்லை என்பதை இந்த நாடறியும். கட்சிகளை உடைத்தவர் என்ற தனிப்பெயர் வேறொரு அரசியல் வாதிக்கு உண்டு. அவர், இன்றும் தமிழக அரசியலில் இருந்து வருகிறார்.

திரு. கோபால் அவர்களுக்கு ஒரு வினா !

நீங்கள் உண்மையிலேயே திரு. சிவாஜி கணேசன் அவர்கள் மீது பற்று கொண்டவர்தானா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்து வருகிறது. இல்லையென்றால், இப்படி அவருக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ணி, எங்கள் வாயை கிளறி, பழைய உண்மைகளை வெளிக்கொண்டு, திரியின் பார்வையாளர்கள் பலரும் அறிந்திட செய்வீரா !

எங்கள் புரட்சித்தலைவரை பற்றி தவறான விமர்சனம் செய்து உண்மைக்கு மாறான செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தால், அதற்கு தக்க பதிலடியாக மேலும் என்னிடமுள்ள ஆதாரப்பூர்வமான செய்திகளை பலவற்றினை பதிவிட நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

Stynagt
8th November 2014, 12:04 PM
நம் திரியின் ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். உலகிலேயே மக்கள் திலகம் ஒருவர்தான் திரையுலகம் மற்றும் அரசியல் உலகத்தில் முதல் இடத்தில் இருந்தவர். திரையுலக வசூலிலும் சரி அரசியல் வெற்றியிலும் சரி இவரது இடத்தை நிரப்ப இதுவரை ஒருவரில்லை. அப்படிப்பட்ட நமது மக்கள் திலகம் அவர்கள் தனது மனித நேயத்தினால் மனிதப் புனிதராகி உலகத் தமிழரின் உள்ளங்களில் தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தன்னிகரில்லா நம் தலைவரை, எங்கள் இதய தெய்வத்தை யாருடனும் ஒப்பிடவேண்டாம் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன். மேலும், மற்றொரு திரியில் கூறப்படும் கருத்துகளுக்கு இங்கே விளக்கம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறேன். அது அந்தந்த திரிகளின் தரம். அந்த தரத்தை இங்கே பதிவிட்டு நம் திரியின் வேகத்தையும், புனிதத்தையும் கெடுத்து விடவேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுகொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
8th November 2014, 12:19 PM
வரும் 16/11/14 ஞாயிறு மாலை 4 மணி முதல் 9 மணி வரை சென்னை பத்திரிகை நிருபர்கள் சங்க ஹாலில் (சேப்பாக்கம்) புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் ஆயிரத்தில் ஒருவன் 190வது நாள் விழா 1964 - படங்களின் பொன்விழா ஆகியன பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் உரிமைக்குரல் இதழ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.

http://i61.tinypic.com/33w5ff8.jpg

fidowag
8th November 2014, 12:22 PM
http://i60.tinypic.com/ifvj28.jpg

fidowag
8th November 2014, 12:24 PM
http://i57.tinypic.com/10geef5.jpg

fidowag
8th November 2014, 12:25 PM
http://i62.tinypic.com/2ldevcy.jpg

fidowag
8th November 2014, 12:26 PM
http://i61.tinypic.com/1on7h3.jpg

fidowag
8th November 2014, 12:50 PM
அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநலசங்க காப்பாளர் திரு.ஹயாத் அவர்களின் பேத்தி தாரணியின் முதல் பிறந்தநாள் விழா சென்னை தி.நகர் - இலக்கியா ஹாலில் நடைபெற்றது பெருந்திரளான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்/பக்தர்கள் விழாவில் கொண்டு சிறப்பித்தனர்.விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

http://i62.tinypic.com/35ktzc3.jpg

fidowag
8th November 2014, 01:00 PM
http://i58.tinypic.com/24mdpas.jpg

fidowag
8th November 2014, 01:01 PM
http://i61.tinypic.com/2hd9o5v.jpg

fidowag
8th November 2014, 01:03 PM
http://i59.tinypic.com/vh6zo9.jpg

siqutacelufuw
8th November 2014, 01:31 PM
நம் திரியின் ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். உலகிலேயே மக்கள் திலகம் ஒருவர்தான் திரையுலகம் மற்றும் அரசியல் உலகத்தில் முதல் இடத்தில் இருந்தவர். திரையுலக வசூலிலும் சரி அரசியல் வெற்றியிலும் சரி இவரது இடத்தை நிரப்ப இதுவரை ஒருவரில்லை. அப்படிப்பட்ட நமது மக்கள் திலகம் அவர்கள் தனது மனித நேயத்தினால் மனிதப் புனிதராகி உலகத் தமிழரின் உள்ளங்களில் தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தன்னிகரில்லா நம் தலைவரை, எங்கள் இதய தெய்வத்தை யாருடனும் ஒப்பிடவேண்டாம் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன். மேலும், மற்றொரு திரியில் கூறப்படும் கருத்துகளுக்கு இங்கே விளக்கம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறேன். அது அந்தந்த திரிகளின் தரம். அந்த தரத்தை இங்கே பதிவிட்டு நம் திரியின் வேகத்தையும், புனிதத்தையும் கெடுத்து விடவேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுகொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

அன்பு சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது :

தங்களின் வேண்டுகோள் நியாயமானதே ! ஆனால், சில சமயங்களில் உண்மைக்கு மாறாக திரித்து கூறப்படும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிப்பது கட்டாயமாகிறது. சகோதரர் திரு. ஆர். கே. எஸ். அவர்கள் கூற்றுப்படி, தவறான செய்திகளை பார்வையாளர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் நம்பி விடக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட மறுப்பே ! இதைப்போல் மறுப்புக்கள் எழுதப்படும்போது, ( உதாரணத்துக்கு ) சுயேட்சையாக வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் பட்டியல் வெளி உலகிற்கு தெரிய வருகிறது. உண்மைகளை ஓங்கி உரைக்கும் போதுதான் போலி வாதங்கள் காணாமல் போய் விடுகிறது. பொய்த்தகவல்கள் மேலும் பதிவிடாமல் தடுக்க வாய்ப்பும் இருக்கிறது.

விதி என்று ஒன்று உண்டென்றால் அதற்கு விலக்கு ஒன்றும் இருக்கும் பட்சத்தில், சகோதரர் யூகேஷ் பாபு மற்றும் எனது பதில்களை ஒரு exemption ஆக ஏற்றுக்கொள்ளவும்.

நன்றி !

fidowag
8th November 2014, 01:57 PM
http://i57.tinypic.com/20z48xk.jpg

ainefal
8th November 2014, 02:04 PM
http://i58.tinypic.com/24mdpas.jpg

http://www.youtube.com/watch?v=3fl0XZVuaGo

Stynagt
8th November 2014, 02:14 PM
Happy birthday to Dharani. Our god will shower upon you His blessings.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

orodizli
8th November 2014, 05:33 PM
நம் திரியின் ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். உலகிலேயே மக்கள் திலகம் ஒருவர்தான் திரையுலகம் மற்றும் அரசியல் உலகத்தில் முதல் இடத்தில் இருந்தவர். திரையுலக வசூலிலும் சரி அரசியல் வெற்றியிலும் சரி இவரது இடத்தை நிரப்ப இதுவரை ஒருவரில்லை. அப்படிப்பட்ட நமது மக்கள் திலகம் அவர்கள் தனது மனித நேயத்தினால் மனிதப் புனிதராகி உலகத் தமிழரின் உள்ளங்களில் தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தன்னிகரில்லா நம் தலைவரை, எங்கள் இதய தெய்வத்தை யாருடனும் ஒப்பிடவேண்டாம் என்று நான் பலமுறை கூறியிருக்கிறேன். மேலும், மற்றொரு திரியில் கூறப்படும் கருத்துகளுக்கு இங்கே விளக்கம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறேன். அது அந்தந்த திரிகளின் தரம். அந்த தரத்தை இங்கே பதிவிட்டு நம் திரியின் வேகத்தையும், புனிதத்தையும் கெடுத்து விடவேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுகொள்கிறேன்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

நமது மக்கள்திலகம் பெருமை மிகு திரியில் திரு கலியபெருமாள் விநாயகம் சார் வெளியிட்டுள்ள அற்புத கருத்துக்களில் நமக்கு (எனக்கு) 100% மட்டுமல்ல... 200% இசைவு உண்டு... ஏன்? எனில் இது எல்லோரும் அறிந்த உண்மைதானே! மக்கள்திலகம் சர்வதேச - உலக திரைப்பட துறை - மற்றும் அரசியல் உலகிலும் மகத்தான வெற்றி...ஈடு இணையில்லா வெற்றி...அடைந்த, தன்னை சார்ந்தவர்களையும் கூட வெற்றி முகம் காண வைக்கும் அவதார பிறவி அல்லவா?! ஆகையால் mgr - அவர்களோடு வேறு எவரையும் தயவு செய்து ஒப்பிட்டு எழுத வேண்டாம் என்பதே என் தாழ்மையான கருத்து ...

Russelldvt
8th November 2014, 06:28 PM
http://i57.tinypic.com/11t50e9.jpg

ainefal
8th November 2014, 09:18 PM
Happy birthday to Dharani. Our god will shower upon you His blessings.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Very true Kaliyaperumal Sir:

http://www.youtube.com/watch?v=pW1t8gTzFlw

http://www.youtube.com/watch?v=w--I-3Z6Wrk

http://www.youtube.com/watch?v=I37WRWIFZv4

oygateedat
8th November 2014, 09:49 PM
http://s16.postimg.org/vgot600hh/css.jpg (http://postimg.org/image/odgxqdv1t/full/)

oygateedat
8th November 2014, 10:10 PM
http://s16.postimg.org/xnowzjxbp/image.jpg (http://postimage.org/)

ainefal
8th November 2014, 10:21 PM
http://www.youtube.com/watch?v=g8lzNkq4FXY&list=UUDeym31jTvHAwr-MM_hwRTA

Please watch the above video carefully and not how Thalaivar does a similar one, very casually [remember he was not 20 at that time]:

http://www.youtube.com/watch?v=9bUWo_ek4Q8

Russellisf
8th November 2014, 10:25 PM
Two decades on, MGR is still a vote-catcher

‘Koduthathelam koduthan, avan yarukkaka koduthan, orutharuka koduthan, illai oorukaka koduthan' (Whatever he gave, he gave it for all and not just for one) … belts out the lead singer of a small-time orchestra in a small village near Tiruchi. The boisterous crowd of avid MGR fans and AIADMK cadre goes into raptures at this popular MGR number from yesteryears.

The orchestra's job is to keep the crowd entertained until party general secretary Jayalalithaa arrives. The music troupes and the accompanying dancers may not be big crowd pullers by themselves, but there is little doubt that the politically-loaded MGR songs continue to sway the masses. More than two decades after his death, they stand the party that he founded in good stead.

For MGR fans and the party cadre, this is a valuable inheritance, and a singular legacy which no other party can lay claim to. “There is no doubting their (MGR hits) popularity, especially in the rural areas. They seem to give the audience a sense of déjà vu and bring MGR back before their eyes,” observes M. Sivaraman alias Jayanthi Siva, who runs the Shadjam Music Troupe, which played in many of the villages during Ms.Jayalalithaa's recent visit to Tiruchi.

For troupes such as Shadjam, the opportunity to perform at election rallies offers a platform to exhibit their talents and brings in some seasonal income. Most of these small time groups are made up of amateurs, but some have some good professional musicians too, waiting for a break. “We can compete with anybody. But recognition is hard to come by,” says Mr. Sivaraman, who is about to celebrate his troupe's 1000th performance soon.

Son of late morsing Mahadeva Iyer of Pudukottai, Mr. Sivaraman has been running the troupe for the past 15 years. An AIADMK supporter, he has been playing at party election rallies since 2009. His troupe has 28 members, including a lecturer and an employee of BHEL. Some, like C. Sahayaraj, a lead singer from Jayamkondam, are well grounded in music. Sahayaraj has studied music at the Kalai Kaviri College of Fine Arts in the city. Many among the troupe entertain ambitions of becoming playback singers.

“I am hopeful of getting a break, right now I manage by singing for local troupes and bringing out albums,” says Mr. Sahayaraj.

“Recognition depends on your performance. We constantly strive to improve our quality,” says S.Arun, a singer who runs the Geetanjali Music troupe in Thanjavur.

The troupes get paid about Rs.20,000-30,000 for a performance, which is split among the members, which means a paltry remuneration of Rs.1,000 to Rs.2,000 per head.

Yet they are game enough. “At times we are called to perform at short notice. We have to be ready. Our troupe can play about 500 numbers from MGR films any time,” says Mr. Sivaraman, who plays the drums and sings too.

Very often, he says, his troupe has to play for three to six hours at election or political meetings. “It is our job to hold the crowd together.” Most of the AIADMK cadre are crazy about MGR songs. “I have seen MGR fans moved to tears on hearing us play his songs,” he says.

According to him, “ethanai kalam thaan aemattruvar intha nattilae,” (how much longer will you fool this nation?) “neenga nalla irukkonam nadu munnera,” (you have to be taken care of if the nation is to progress), ‘naan aanai ittal, athu nadanthu vittal' (if my commands can become reality), and ‘ninanithathai mudipavan naan,' (I do what I set out to do) are among the most sought after hits. They also have some popular numbers from MGR-Jayalalithaa starrers such as ‘Amma Endral Anbu' to play to the gallery.


courtesy the hindu

Russellbpw
8th November 2014, 10:35 PM
நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தனக்கிருந்த செல்வாக்கினால் காங்கிரஸ் கட்சியை வளரத்தவர் என்றால் அவர் தமிழர் முன்னேற்ற முன்னணி ஆரம்பித்த கால கட்டத்தில், அவர் ஒருவராவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்தலில், ஒரு. பி. எச். பாண்டியன் அவர்கள் சுயேட்சையாக வெற்றி பெறும்போது மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களால் ஏன் வெற்றி பெற முடியாமல் போனது.

அதற்க்கு காரணம் நடிகர் திலகம் அவர்கள் கூட்டணி வைத்த கட்சியால் தான் அந்த தோல்வி. நடிகர் திலகம் அவர்களுடைய த மு மு சார்பில் போட்டியிட்ட அனைத்து வாக்காளர்கள் வாங்கிய மொத்த வோட்டினை கணக்கில் எடுங்கள்...பிறகு FRONT END செய்த அந்த கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வாங்கிய மொத்த வோட்டுக்களை கூட்டுங்கள் ...யார் அதிகம் VOTE பெற்றார்கள் என்று விளங்கும்.

2. FRONT END செய்த ADMK பிரிவு கட்சியுடன், அதன் FOUNDER உக்கு பாசத்தினால் கட்டுண்டு, அவருக்கு கொடுத்த வாக்கினை காப்பாற்ற, நாங்கள் எடுத்த முடிவினால் நஷ்டம் உங்களுக்கு ஒன்றுமே இல்லை...முழுவதும் எங்களுக்குதான்...இதை உங்களால் மறுக்க முடியுமா ?

யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதறியாமல் கூட இருந்து குழிபறித்த ADMK 2ஆம் பிரிவு ஆதரவாளர்கள் ADMK என்ற கட்சியை பாடுபட்டு உருவாக்கியவரை, அவரை கடைசிவரை கூடவே இருந்து கண்ணை இமை காப்பது போல காத்தவரை, காலை வாரிவிட்டு, தோற்கடித்து அவரை அவமானபடுத்தி, இன்று அந்த தருணத்தில் கூட அண்ணன் என்று உறவுமுறை கௌரவத்தை கட்டி காத்தவர் நடிகர் திலகம். சந்தர்ப்பவாதம் சிறிது காட்டியிருந்தால் உங்களுடைய இந்த நன்றி மறந்த சொற்கள் அவர் கேடிருக்கவேண்டியதில்லை.

எந்த கட்சியினையும் சாராமால் சுயேட்சையாக வெற்றி பெற்ற மக்கள் செல்வாக்கு படைத்த சட்டமன்ற உறுப்பினர்கள் அறந்தாங்கி திருநாவுக்கரசு சாத்தூர் ராமச்சந்திரன், பேராவூரணி குழ. செல்லையா, காங்கேயம் ராமசாமி, ஆலங்குடி வெங்கடாசலம், ஸ்ரீ வில்லிப்புத்தூர் தாமரைக்கனி, தாரமங்கலம் செம்மலை உள்ளிட்ட பலரை தமிழக சட்டப் பேரவை கண்டிருக்கிறது.


நீங்கள் மேற்கூறிய இவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தலில் வேண்டுமானால் எந்த கட்சியும் சாராமல் சுயேச்சையாக இருந்திருக்கலாம்..ஆனால் அதற்க்கு முன்னால் அவர்கள் எந்த கட்சியையும் சாரவில்லையா..கட்சி பணியாற்றவில்லையா ? எங்கே இல்லை என்று கூறுங்கள் பார்க்கலாம் ? உண்மையை மறைத்து ஏன் இப்படி எழுதுகிறீர்கள் ?

இவர்களுக்கு இன்றைய நிலை என்ன ? அந்த செல்வாக்கு இன்னும் உள்ளதா அல்லது மக்கள் இன்னும் இவர்களை நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்களா ...அவ்வளவு செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தால் இன்றும் இவர்கள் மக்கள் மனதில் வாழ்கிறார்களா நடிகர் திலகத்தை போல ?

நீங்கள் கூறலாம் நடிகர் திலகம் ஒரு நடிகர் என்று...ஆனால் அதையும் மீறி அவர் மக்கள் நெஞ்சங்களில் ஒரு அண்ணனாக, தம்பியாக, அப்பனாக, மாமனாராக, மைத்துனனாக இன்னும் சாமானிய மக்களில் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக கருதுகிறார்கள்...அதை வெளிபடையாக கொடி பிடித்து காட்டாமல் இருக்கலாம் ...காரணம் கட்சியை மீறி உள்ள மக்கள் செல்வாக்கு நடிகர் திலகத்திற்கு மக்கள் மனதில் குடும்பத்தில் ஒருவனாக இந்த உலகம் அழிந்தபின்னரும் இருக்கும் சார் ! அரசியல்வாதிகளுக்கு அது இருக்காது !


படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று கூறிய, நடிகர் சிவாஜிகணேசன் அவர்கள் ஏற்றுக்கொண்ட, பெருந்தலைவர் காமராஜர் கூட தோற்று விட்டார். ஆனால் அவ்வாறு படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று கூறாமல், மருத்துவனமனையில் இருந்துகொண்டே 1967 மற்றும் 1984 தேர்தல்களில் வெற்றி பெற்ற பெருமை எங்கள் புரட்சித்தலைவருக்கு மட்டுமே உண்டு !

1967....மற்றும் 1984 ...இதே போல ஒரு நிலை 1967இல் காமராஜருக்கு நிகழ்ந்திருந்தால் நீங்கள் கூறிய அந்த சம்பவம் முதலாவதாக காமராஜருக்கு நடந்திருக்கும் என்பதை நீங்களும் மறுக்க முடியாது !

இருந்தவரை இறக்கும் வரை மக்கள் நலம் ஒன்றே கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் பல திட்டங்கள் வகுத்து ..வகுத்ததோடு மட்டும் நில்லாமல் திட்டங்கள் நடைமுறைபடுத்தி, இன்றுவரை அந்த பலன் மக்கள் அனுபவிக்க செய்த மூன்றுமுறை தொடர்ந்து தடையில்லாமல் முதல்வர் பதவி வகித்து புண்ணிய ஆத்மா கர்ம வீரர் காமராஜர் என்பதை உலகறியும் !
.
தி.மு.க. வில் கடவுள் மறுப்பு இயக்கம் கொள்கை தீவிரமாக இருந்த பொழுதுதான் சிவாஜி கணேசன் அவர்கள் திருப்பதி சென்றார். எனவே அவர் விமர்சிக்கபட்டார். ஆனால் எங்கள் பொன்மனச்செம்மல் அவர்கள் தனிப்பிறவியில் “ முருகனாக " காட்சியளித்தபோதும் சரி, கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்ற பொழுதும் சரி, தி. மு.க வில் கடவுள் மறுப்பு இயக்கம், மற்றும் திராவிட நாடு பிரிவினை கொள்கைகள் கைவிடப்பட்டன என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு புரியும்.

ஏன் திமுக கைவிட்டது ? அவர்களுக்கு அதன் பிறகு கடவுள் நம்பிக்கை வந்துவிட்டதா ?

திராவிட நாடு கைவிடப்பட்டது என்பது ஒரு விஷயம் ..அனால் எந்த சூழ்நிலையில் ...எதற்க்காக கைவிடப்பட்டது ?

இதில் மக்கள் திலகம் சம்பந்தம் இருக்க சாத்தியம் நிச்சயமாக இல்லை என்றாலும் இதன் உண்மை நிலை அனைவரும் அறிய இங்கு உரைக்கிறேன்.

திராவிட நாடு கொள்கை இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவை துண்டாடநினைக்கும் ஒரு திட்டம். இது ஒரு தேச துரோக செயலுக்கு ஈடானது..

சுயநலம் கொண்ட அரசியல்வாதிகள் ஒன்றுசேர்ந்து இதை செயல்படுத்த நினைத்தபோது அப்படி செய்தால் தேச துரோகிகள் என்று அறிவிக்கப்படலாம் என்ற ஒரு நிலை வந்தபோது அதற்க்கு உள்ளுக்குள் பயந்து ஐயோ சாமி..வேணாம்டா இந்த வம்பு என்று வீராப்பாக கைவிட்டதுபோல ஒரு சால்ஜாப்பு செய்து கைவிட்டனர் ! இது உண்மை..!

கடவுள் எதிர்ப்பு..தீவீரம் காட்டி அடுக்கு முறை கையாள நினைத்து செயல்கள் புரிந்தபோது...ஒரு திருவிளையாடல் வெளிவந்து அதனை தொடர்ந்து சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை, திருவருட்செல்வர் மற்றும் பல கடவுள் ஐக்கிய திரைப்படங்கள் வந்து அரசியல்வாதிகள் காட்டிய கடவுள் எதிர்ப்பு திவீரத்தை விட மக்கள் கடவுள் ஐக்கியத்தில் தீவீரம் காட்ட தொடகியதால் வேறு வழியில்லாமல் அமுங்கி போனது அந்த காற்றடைத்த பை கொண்ட திட்டம் !


மற்ற விஷயங்களை பற்றி எனக்கு அக்கறை இல்லை ! கடவுள் இல்லை ..நம்புவது மூடநம்பிக்கை என்று கூறிய அனைவரும் அந்தந்த காலகட்டங்களில் கிரகங்களின் கடைகண் பார்வைக்காக மஞ்சை, பச்சை, ஊதா, சிவப்பு, கருப்பு என்று கலர் கலராக துண்டு போர்த்திக்கொண்டு இன்றுவரை உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள், குலதெய்வம் கோவிலுக்கு, யாராவது பார்த்து விடபோகிரார்கள் என்று நடுநிசியில் போய் கும்பிட்டு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்..இவர்களுக்கு கல்லூரியோ கம்பனிகளோ இருந்தால் அந்த கட்டிடத்திற்கு நுழையும் முன், இவ்வளவு ஏன்...வீடுகள் அருகில் கூட வரவேற்ப்பது விநாயகர் கோவிலோ அல்லது சிலையாகவோ தான் இருக்கும் என்பதை தாங்களே நன்கு அறிவீர்கள் !



.......

Russellisf
8th November 2014, 10:38 PM
MGR Remembered – Part 20

Politics in Movies
Part 19

by Sachi Sri Kantha, August 24, 2014

A synopsis of MGR’s political career

Was it Amma (aka Jayalalitha) magic or MGR magic? In the recently held India’s general election (May 2014), All India Anna DMK, founded by MGR in 1972 (and currently led by his protégé Jayalalitha) made a convincing sweep in Tamil Nadu electorates. It won 37 among the 39 constituencies. It was the first time that the party contested alone, without any seat-sharing arrangement with any other national or regional party. AIADMK whacked convincingly its chief rival DMK party led by Karunanidhi, Sonia-Rahul led Congress Party, Modi-led BJP party and its allies, Vijayakanth-led DMDK party.

Though 26 years had passed since MGR’s death, how could one explain the performance and popularity of AIADMK? Many reasons can be cited, which may include, (1) MGR ‘vote bank’ still remains solid; (2) Jayalalitha was a no-nonsense leader; (3) DMK led by Karunanidhi, with dynastic policies is nauseating to voters; (4) Grand –old Congress Party is faction ridden, had lost its moorings, and never have a chance of revitalization; (5) It will be tough for BJP (though successful in the North) to root itself in Tamilnadu; (6) Communist Parties, like that of Congress Party, totally lack voter base and voter confidence.

One fact which deserves admiration is that, even after 42 years of its establishment by MGR as an offshoot of DMK party, and 26 years after the death of its founder, that AIADMK should possess some exceptional degree of attachment with Tamilnadu voters to shine so big in this year’s general election. This was the party, which was ridiculed as a ‘100-day movie show’, by MGR’s political opponents (including Karunanidhi), many media pundits and wags in Tamilnadu, when it was founded. Latest technological advances in media in the past 20 years (computer use, DVDs, cell phones and YouTube) perpetuate MGR’s memories via his movies and ‘philosophy-packed’ songs.

courtesy ilangai tamil sangam

ainefal
8th November 2014, 11:01 PM
How to Ban, Ban?

Russellisf
8th November 2014, 11:16 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsab588ab8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsab588ab8.jpg.html)

Above: fans garlanding a framed poster of MGR before the re-release of a MGR film at Central theatre, Madurai, 2012. To this day MGR’s films of the yore are frequently re-released in various parts of Tamil Nadu.



“A Rickshaw man is regarded as the archetype of the MGR fan, the poor man of the labouring classes.” (Robert L. Hardgrave, Jr. 2008, p 68)
Rickshaws are adorned with photos of MGR film. This is perhaps a way of displaying their loyalty to MGR, a man whom they believe seamlessly lived the real and cinematic life as one.

Russellisf
8th November 2014, 11:18 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsab588ab8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsab588ab8.jpg.html)

Above: fans garlanding a framed poster of MGR before the re-release of a MGR film at Central theatre, Madurai, 2012. To this day MGR’s films of the yore are frequently re-released in various parts of Tamil Nadu.



“A Rickshaw man is regarded as the archetype of the MGR fan, the poor man of the labouring classes.” (Robert L. Hardgrave, Jr. 2008, p 68)
Rickshaws are adorned with photos of MGR film. This is perhaps a way of displaying their loyalty to MGR, a man whom they believe seamlessly lived the real and cinematic life as one.

Russellisf
8th November 2014, 11:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps633ee70e.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps633ee70e.jpg.html)

Russellisf
8th November 2014, 11:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps7efbcc31.png (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps7efbcc31.png.html)

எம்.ஜி.ஆரின் தாய் மொழி தமிழா..மலையாளமா..?
இரண்டும் இல்லை...
இறைவனின் தாய் மொழி எதுவோ...
எம்.ஜி.ஆரின் தாய் மொழியும் அதுதான்...!
அது ...அன்பு மொழி ..!!!
எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின் ...பேச்சு வராமல் பெரும்பாடு பட்டார்...
அப்போது அவருக்கு பேச்சு சிகிச்சை அளிக்க , மனோகரன் என்ற மருத்துவர் நியமிக்கப்பட்டார்..
எம்.ஜி.ஆரோடு பழகிய அந்த நாட்களைப் பற்றி டாக்டர் மனோகரன் பின்னர் ஒருமுறை அளித்த பேட்டி...
“ஒருமுறை கோவைக்குச் சென்றிருந்தோம். விமானத்தில்தான் சென்றோம். எனக்கு அது முதல் விமானப் பயணம். சற்றே அச்சத்தோடு ஏறினேன். பெரிய பெரிய அமைச்சர்கள் எல்லாரும் அந்தப் பிளைட்டில் இருக்க, எம்.ஜி.ஆர்.., என்னை அவர் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். சீட் பெல்ட்டை அவரே மாட்டிவிட்டார். ஜூஸ் வந்தது. ஒரு கிளாசை அவரே தன் கையால் எடுத்து என்னிடம் கொடுத்து "குடிங்க" என்றதை என்னால் இப்போதும் மறக்க முடியாது.
பக்கத்தில்தான் எம்.ஜி.ஆர் பிறந்த ஊரான பாலக்காடும் இருந்தது. அங்கு கிளம்புகிற நேரம். எனக்குத் திடீரெனக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் படுத்துவிட்டேன்.
நான் வராததைக் கவனித்த எம்.ஜி.ஆர், ‘மனோகரன் வரலயா?’ என்றாராம். அவர்கள் எனக்கு உடம்பு சரியில்லாத தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
பாலக்காட்டிலிருந்து திரும்பியதும் என்னைப் பார்க்க வந்துவிட்டார். நான் அவர் வருவது தெரியாமல் படுத்திருந்தேன். திடீரென்று யாரோ பக்கத்தில் நிற்கிற உணர்வு. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் என் கன்னத்தில் கை வைத்து, "ஆமாம்.. ரொம்ப காய்ச்சலா இருக்கே"...என்று கூறியவர், "உடம்ப பார்த்துக்கங்க.." என்று கூறிவிட்டுப் பக்கத்தில் அவருக்காக நியமிக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவிடம், "மனோகரனை கவனிச்சுக்கங்க" என்று கூறிவிட்டுக் கிளம்பினார்...... நான் உருகிப் போனேன்...!!!”
# எப்படி உருகாமல் இருக்க முடியும்..?
எம்.ஜி.ஆரைப் பற்றி முன்னர் ஒருமுறை எழுதியது இப்போதும் நினைவுக்கு வருகிறது..!!
“ஆண்மைக்கும் தாய்மை உண்டு..”
அந்த தாய்மையின் தனி வடிவம் ..எம்.ஜி.ஆர்..!!!

Russellisf
8th November 2014, 11:41 PM
"தமிழுக்காக, தமிழ் இனத்திற்காகப் பாடுபட்டு கொள்கைக்காக இருக்கின்ற , தியாகம் செய்த நல்லவர்களை , நான் என்றும் மறக்க மாட்டேன். விட்டுவிடவும் மாட்டேன். "===மக்கள் திலகம்

Russellisf
8th November 2014, 11:45 PM
ஒரு நடிகன் , ஒரு ஸ்டார் , தன்னை ரசிகர்கள் எப்படி திரையில் பார்கிறார்களோ அப்படியே நிஜ வாழ்விலும் இருக்க முடியுமா என்கிற கேள்விக்கு பல விதமான பதில்களை பார்த்திருக்கலாம் , எனக்குத் தெரிந்து இதை விட இயல்பாக எவரும் பதில் அளித்திருக்க முடியாது , அவ்வாறு பதில் அளிக்க முடியாமல் போவதற்கு காரணம் , அவர்கள் திரைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே வைத்திருக்கும் இடைவெளி என்பது மிகவும் அதிகம் என்பதால் தான் ....

ஜூலை 1978 ம் ஆண்டு வெளி வந்த இந்தியா டுடே பத்திரிக்கையில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் பேட்டி ... அதில் அவர் இவ்வாறு கூறுகிறார் ....

கேள்வி : அரசியல் பிரசாரத்துக்கு , நீங்கள் சினிமாவை பயன்படுத்துகிறீர்களா ?

மக்கள் திலகம் பதில் : " ஆம் நிச்சயமாக , எனது திரைப் படங்களில் கதைகள் மூலமாகவும் எனது கொள்கைகளையும் திட்டங்களையும் விளக்குகிறேன் .

கேள்வி : ஆனால் , அதில் வேறுபாடுகள் இருப்பதாகவும் , படங்களில் நடிப்பது போல் உண்மையில் நீங்கள் இல்லை என்று கூறப் படுகிறதே ?

மக்கள் திலகம் பதில் : " எந்த ஒரு மனிதனும் தான் எப்படி வாழ நினைக்கிறானோ அதையே செயல் படுத்தி வாழ்வது என்பது இயலாத காரியம் . ஆனால் , அவன் எப்படிப் பட்டவன் என்பதை நிச்சயம் மக்கள் நன்கறிவார்கள் . நான் எதை படத்தில் சொல்கிறேனோ , அதை நான் கடைபிடிக்கவில்லை , அப்படி உண்மையில் செயல்படவில்லை என்றால் நீண்ட காலத்துக்கு முன்பே பொது மக்கள் என்னை புறக்கணித்திருப்பார்கள் .

உண்மையில் நான் எப்படி இருக்கிறேனோ , அப்படியே தான் சீராகவும் நேர்த்தியாகவும் திரைப் படங்களில் தொன்றிவருகிறேன் . நான் இப்படிச் சொல்கிறேன் என்பதற்காக " ரிக்ஷாகாரனாகவும் , சுரங்கத் தொழிலாளியாகவும் நடிக்கிறீர்களே ! அப்படியா நீங்கள் வாழ்கிறீர்கள் ?" என்று நீங்கள் என்னை கேட்பீர்களேயானால் எனது பதில் எதிர்மறையாகத் தானிருக்கும் ஆனாலும் கூடிய அளவில் மிகவும் எளிமையாகவே வாழ்ந்து வருகிறேன் ....


courtesy net

Russellisf
8th November 2014, 11:55 PM
குட்டி பத்மினி 'பேபி'யாக நடித்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த 'நம் நாடு' படம் முக்கியமானது. இந்தப் படத்தில் குட்டி பத்மினியும், பேபி ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். படத்தில் இருவரும் எம்.ஜி.ஆரின் அண்ணன் டி.கே.பகவதியின் மகள் - மகனாக (ஸ்ரீதேவிக்கு பையன் வேடம்) நடித்தனர்.

எம்.ஜி.ஆருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-

"அப்போது நான் தொடர்ந்து பல படங்களில் மற்ற மொழிப் படங்களில் பிசியாக இருந்ததால் எம்.ஜி.ஆர். சாரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வந்து வந்து கைநழுவிப் போகும். காரணம் அவர் படம் என்றால் நிறைய நாட்களை மொத்தமாக கேட்பார்கள். ஆனால் படத்தை தயாரித்த நாகிரெட்டி அங்கிள் "இந்தப் படத்தில் குட்டி பத்மினி இருந்தேயாக வேண்டும்" என்று சொல்லி விட்டதால், என் வாய்ப்பு உறுதியானது.

எம்.ஜி.ஆர். சார் எனக்கு உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி வகுப்பே எடுப்பார். தினமும் காலையில் என்னைப் பார்த்ததும், "ஸ்கிப்பிங் பண்ணினாயா?" என்று கேட்பார். "இல்லை" என்று சொன்னால் தன் காரில் இருக்கும் ஸ்கிப்பிங் கயிறை எடுத்து வரச்செய்து, 'ஷாட்' இல்லாத நேரத்தில் பயிற்சி எடுக்கச் செய்வார்.

மதியம் சாப்பாட்டு நேரத்தில் அவருடனே சாப்பிடச் செய்வார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மணி நேரம் ஆகும் வரை தண்ணீர் சாப்பிடக்கூடாது என்பார். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது தவறில்லை என்பார்.

ஒருமுறை செட்டில் அம்மாவிடம் கோபமாக பேசிவிட்டேன். இதை கவனித்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். "அம்மாவை மட்டும் எப்போதும் மரியாதையாய் பேசணும். "தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை"ன்னு பெரியவங்க எதுக்காக சொல்லி இருக்காங்க? அந்த அளவுக்கு அம்மாங்கறவங்க தெய்வத்துக்கு சமமானவங்க. எனக்கு எங்கம்மா இருந்தப்ப அவங்களோட அருமை தெரியலை. அவங்க இல்லாதப்பதான் 'தெய்வத்தை அல்லவா இழந்திருக்கிறோம்'னு புரிஞ்சுது. அம்மா என்கூட இல்லைங்கறது இப்ப வரைக்கும் எனக்கு இழப்புதான். அதனால் ஒருநாளும் அம்மா கிட்ட முகம் சுளிக்கிற மாதிரி கூட பேசக்கூடாது" என்றார்.

இதை அவருக்கே உரிய பாசக்குரலில் அவர் சொன்னபோது, 'அம்மா'வின் அன்பு எனக்கும் புரிந்தது. அதன் பிறகு அம்மாவிடம் கொஞ்சம் குரல் உயர்த்தி பேசுவதைக்கூட விட்டுவிட்டேன்.

நான் பார்த்தவரை அவரைப் பார்த்து உதவி கேட்க, எப்போதும் யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். இதற்கென்றே அவரது மானேஜராக இருந்த பத்மனாபன் பணத்துடன் தயாராக இருப்பார். அத்தியாவசிய உதவி என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுப்பார். ஆயிரம் ரூபாய் என்பது அப்போது மிகப்பெரிய தொகை. யாராவது 'ஸ்கூல் பீஸ்' கேட்டு வந்தால், "முகவரி கொடுத்திட்டுப் போங்க. பணம் அனுப்புகிறேன்" என்பார். அது மாதிரி உதவி பெற்ற பலர் அவரை சந்தித்து கண் கலங்க நன்றி சொல்வதையும் பார்த்திருக்கிறேன்.

இப்படி ஒரு தர்மத்தலைவரை என் சிறு வயதில் பார்த்ததால்தான் நானும் வளர்ந்த நேரத்தில் "மித்ராலயா" டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி என்னாலான உதவிகளை ஓசைப்படாமல் செய்து வருகிறேன்."

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

ainefal
9th November 2014, 12:00 AM
http://i59.tinypic.com/2upg3ux.jpg
http://i60.tinypic.com/ru5kdk.jpg

Russellisf
9th November 2014, 12:02 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps2a077c03.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps2a077c03.jpg.html)

eehaiupehazij
9th November 2014, 08:45 AM
திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.

இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் 'கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்" என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.

டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் 'கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது" என்று வர்ணித்திருந்தது. by Yukesh Babu

மணம் வீசாத எந்த மலரும் வெறும் அலங்கார மலராகவோ காகித மலராகவோதான் இருக்க முடியும். மல்லிகை எங்கிருந்தாலும் மண(ன)முள்ள மலரே... அது மாற்றார் தோட்டத்தில் மலர்ந்திருந்தாலும்! நடிகர்திலகம் பற்றிய ஆரோக்கியமான தங்களது பதிவுவரவேற்புக்குரியது நண்பரே! நன்றிகள்.

நடிகர்திலகம் என்னும் திமிங்கிலத்தின் முன் மற்றெல்லாம் சிறுகுறுமீன்களே! ஆனாலும் இந்தத்திமிங்கிலம் வித்தியாசமான டால்பின் வகை திமிங்கிலம்.

சிறார்களான சிறு ஜிலேபி மீன்களுக்கும், சுறாக்களான பெரியவர்களுக்கும் கூட நாம் இந்தத்திமிங்கிலத்தையே விழுங்கிவிட்டோம் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி அவர்களையும் தனது தோளில் சுமந்து வளைந்து நெளிந்து 'டைவ்' அடித்து வலம்வந்து மனம் மகிழ வைக்கும் மாயக்கார திமிங்கிலம்!.

திருவிளையாடலின் தருமி வாளைமீன் நாகேஷ் , குருதட்சணையின் வஞ்சிரமீன் பத்மினி படிக்காத மேதை சுறாமீன் ரங்காராவ், பாவமன்னிப்பு Piranhaaமீன் ராதா, தூக்குதூக்கியின் பாறைசுறாமீன் பாலையா...தெய்வமகன் திருக்கைமீன் நாகையா காவல் தெய்வம் கட்லா மீன் சுப்பையா .. மனோகராவின் விண்மீன் கண்ணாம்பா, கர்ணனின் தாய்செம்மீன் ராஜம்மா, தில்லானாவின் மின்சார மீன் மனோரமா ..........புதிய பறவை கெளுத்திமீன் சவுகார், பாலும்பழமும் கெண்டைமீன் சரோஜாதேவி, நீலவானம் நெத்திலிமீன் தேவிகா...பந்தம் படத்தின் குட்டிமீன் ஷாலினி....... பார்த்தால் பசிதீரும் ஆக்டோபஸ் மீன்குடும்பம் ஜெமினி/சாவித்திரி/இரட்டைக் கமல்....வரை அடுக்கிகொண்டே போகலாம்.

நடிப்பின் திமிங்கிலம் நடிகர்திலகமே....ஒப்புக்கொண்டு மகிழ்வான மாற்றங்களையும் முதிர்வான புரிதல்களையும் திரிகளுக்கு இடையே உருவாக்கிட தூண்டில் போடும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் யுகேஷ்!

முயற்சிகள் தவறலாம்..... முயற்சிக்கத்தவறலாமா !

Illusion made by our Acting Magician with a Midas touch!:

Small fish 'engulfing' the Big fish!? illusion thanks to the magnanimity of the Nadippin Thesaurus (NT)!!

https://www.youtube.com/watch?v=hJx2T0lNxHc&list=PLE5C1AE2A472A45C1&index=3

Crouching Tiger and Hidden Dragon?! A hallucination only!!

https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk

Gripping Octopus 'arresting' the Slipping Dolphin!? just a Mirage!

https://www.youtube.com/watch?v=J4QCNQi17a8

Russellzlc
9th November 2014, 01:27 PM
திரு. கோபால்,

தலைவர் மூகாம்பிகை கோயிலுக்கு போனது பற்றி கேள்வி கேட்கிறீர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் பேரறிஞர் அண்ணா. அந்த ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்கள் நாங்கள். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், பெரியார் பாசறையில் வளர்ந்தவன் என்று கூறிக் கொள்ளும் நீங்கள் சாதிகளை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே? எப்படி?

உண்மைகளை சந்திக்கவும் ஏற்கவும்( அவை உண்மை என்றால்) நாங்கள் என்றுமே தயங்கியதில்லை. ராம.அரங்கண்ணல் உரையாடல்களை வெளியிடுங்கள். விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறோம். அதே நேரம், திரு. சிவாஜி கணேசன் அவர்களை காமராஜர் அவர்களே கட்சியில் ஒதுக்கி வைத்திருந்தார் என்று பி.சி.கணேசன் அவர்கள் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அவர் காமராஜர் காலத்தில் காங்கிரசின் அதிகாரபூர்வ நாளிதழான நவசக்தியில் ஆசிரியராக இருந்தவர். அவைகளை நானும் வெளியிடத் தயாராக இருக்கிறேன். திரு.சிவாஜி கணேசன் அவர்கள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டாம் என்றும் இந்திய அரசியலுக்கு தேவையான தலைமைப் பண்புகள் அவரிடம் இல்லை என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். உங்கள் கருத்துதான் எங்கள் கருத்தும்.

புகை, மதுவை தலைவர் திரையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையில் தவிர்த்த எங்கள் தலைவரைப் பார்த்து என்னைப் போன்ற ஏராளமானோர் அந்த பழக்கத்துக்கு ஆட்படாமல் வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம்.இன்பம் துய்ப்பதில் உம்மர் கய்யாம், கண்ணதாசன் ஆகியோருக்கு மேலானவர்களாக நாங்கள் இருக்கவில்லை என்பதற்கு தலைவர்தான் காரணம்.

இன்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு இருப்பதற்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறும் வகையில் இடஒதுக்கீடு சதவீதம் உயர்த்தப்பட்டதற்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது தலைவர் முதல்வராக இருந்தபோதுதான்.

அவரைப் பற்றி தரக்குறைவாக பேசுவதை முதலில் நீங்கள் நிறுத்துங்கள்.

சமீ்ப காலமாகவே உங்களிடம் நல்ல மாற்றங்களை பார்க்கிறோம். தலைவர் பெயரைக் குறிப்பிட்டீர்கள். பிடித்த படங்களை பட்டியல் போட்டீர்கள். மாட்டுக்கார வேலன் படத்தின் விமர்சனம் எழுத தடையில்லை என்றீர்கள். இப்போது எங்கள் திரிக்கும் வந்து வீட்டீர்கள். எங்கள் தலைவரைப் பற்றி அதிகமாக தாக்கியவர் நீங்கள். அதனால் தயக்கம் இருக்கலாம். எங்களுக்கு தனி மனித வெறுப்பு கிடையாது. கூச்சப்படாமல் வாருங்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
9th November 2014, 01:45 PM
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

என்னைப் பற்றிய உங்கள் அர்த்தமற்ற, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.

‘நான் என்றைக்காவது திரு.எம்.ஜி.ஆரைப் பற்றி தவறாக எழுதியிருக்கிறேனா’ என்று கேட்பீர்கள். ஆனால், ‘யாரை, எப்படி, எப்போது பயன்படுத்திக் கொள்வது என்பதில் தேர்ந்தவரான எம்.ஜி.ஆர் ’என்று விஷத்தை கக்குவீர்கள்.

தகவல்களிலும் கூட உண்மைகள் இல்லை. உங்களது திரியில் 260வது பக்கத்தில் திரு.சிவாஜி கணேசனும் ஆனந்த விகடனும் என்ற கட்டுரையின் ( பழைய பதிவு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது) இரண்டாவது பாகத்தில் (part II) மூன்றாவது பத்தியில் கடைசி வரியில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு விஷயமாக ‘அவரும் (மணியனைக் குறிப்பிட்டுள்ளீர்கள்) அவருடன் சக்தி கிருஷ்ணசாமியும் சென்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

சக்தி கிருஷ்ணசாமி என்பவர் சக்தி நாடக சபாவில் நாடகங்கள் எழுதியவர். படகோட்டி, பறக்கும் பாவை படங்களுக்கு வசனம் எழுதியவர். அவர் மணியனுடன் செல்லவில்லை. மணியனுடன் சென்றது சித்ரா கிருஷ்ணசாமி என்பவர். அவர் படத் தயாரிப்புக்கான பணிகளில் ஈடுபடுபவர். தலைவருக்கு நெருக்கமானவர். சகோதரர் செல்வகுமார் சமீபத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தில் தலைவருக்கு இளையராஜா வணக்கம் தெரிவிக்கும் காட்சியில் அவர் அருகே நின்று கொண்டிருப்பவர்தான் சித்ரா கிருஷ்ணசாமி.

சக்தி கிருஷ்ணசாமிக்கும் சித்ரா கிருஷ்ணசாமிக்கும் வித்தியாசம் தெரியாத உங்களை வரலாற்றுச் சுரங்கம் என்று உங்கள் நண்பர்கள் புகழ்ந்துள்ளனர். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், நீங்கள் எழுதும் தகவல்கள் உண்மையானவை என்று அதைப் படிக்கும் மக்கள் நம்பி விடக்கூடாதே. அதற்குத்தான் இதை குறிப்பிடுகிறேன். இனிமேலாவது உண்மையான தகவல்களை எழுதுங்கள்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
9th November 2014, 04:21 PM
பட்ரோடு ஜெயந்தியில் , 07/11/2014 முதல் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் தர்மம் தலைகாக்கும் தினசரி மூன்று காட்சிகள் நடைபெறுகிறது அதன் சுவரொட்டி நண்பர்களின் பார்வைக்கு
http://i59.tinypic.com/w85bi0.jpg

fidowag
9th November 2014, 04:27 PM
சென்னை சரவணாவில் புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களின் விவசாயி 07-11-2014 முதல் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது அதன் சுவரொட்டி நண்பர்களின் பார்வைக்கு
http://i58.tinypic.com/59ye0m.jpg

fidowag
9th November 2014, 04:28 PM
http://i62.tinypic.com/34s2l5c.jpg

fidowag
9th November 2014, 04:37 PM
சென்னை சைதாபேட்டை,கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் நண்பர்களின் பார்வைக்கு
http://i57.tinypic.com/rvx9ae.jpg

fidowag
9th November 2014, 04:41 PM
http://i57.tinypic.com/316vuj5.jpg

ujeetotei
9th November 2014, 07:15 PM
November months header image for srimgr.com

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/header_11_14_zps6e502a8c.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/header_11_14_zps6e502a8c.jpg.html)

ainefal
9th November 2014, 09:44 PM
http://www.youtube.com/watch?v=Hgi0V7TudcE

ujeetotei
9th November 2014, 10:03 PM
Padagotti Golden Jubilee second post.

http://mgrroop.blogspot.in/2014/11/padagotti-golden-jubilee-2.html

fidowag
9th November 2014, 10:10 PM
தொலைக்காட்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படங்கள்
---------------------------------------------------------------------
04-11-2014 சன் லைப் இரவு 7 மணி தாய்சொல்லைதட்டாதே

08-11-2014 ஜெயா காலை 10-30 மணி இதயவீணை

08-11-2014 வசந்த் மதியம் 2 மணி தனிப்பிறவி

பாலிமர் மதியம் 2 மணி நல்லநேரம்

சன்லைப் இரவு 7 மணி தேடிவந்த மாப்பிள்ளை

09-11-2014 சன்லைப் இரவு 7 மணி சபாஷ் மாப்ளே

fidowag
9th November 2014, 10:29 PM
மதுரை முருகன் மூவி ஹாலில் dts 07-11-2014 முதல் மக்கள்திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் தொடர் சாதனை இந்த ஆண்டில் மூன்றாவது முறையைய வெளி ஆகி உள்ளது
http://i58.tinypic.com/r0ozus.jpg

புகை படங்கள் உதவி மதுரை திரு s குமார்

fidowag
9th November 2014, 10:29 PM
http://i58.tinypic.com/2s0bzm9.jpg

fidowag
9th November 2014, 10:30 PM
http://i57.tinypic.com/2aaj2mx.jpg

fidowag
9th November 2014, 10:30 PM
http://i58.tinypic.com/20gl5w5.jpg

fidowag
9th November 2014, 10:32 PM
http://i61.tinypic.com/15ftc12.jpg

fidowag
9th November 2014, 10:32 PM
http://i59.tinypic.com/sxevqw.jpg

fidowag
9th November 2014, 10:33 PM
http://i58.tinypic.com/j7spvp.jpg

fidowag
9th November 2014, 10:38 PM
மதுரை ராம் திரை அரங்கில் தற்போது மாட்டுக்காரவேலன் வெற்றிகரமாக நடைபெறுகிறது
தகவல் திரு கருப்பசாமி

http://i57.tinypic.com/inqw7o.jpg
http://i60.tinypic.com/2mmy745.jpg

fidowag
9th November 2014, 11:10 PM
கடந்த 03/10/2014 முதல் மதுரை மீனாட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் ஜொலித்து மக்களின் உள்ளங்களை கவர்ந்த "மாட்டுக்கார வேலன் " வெளியாகி
வெற்றி முரசு கொட்டியது.


http://i62.tinypic.com/2lal3l.jpg



சுவரொட்டிகளின் புகைப்படம் நமது திரி நண்பர்களுக்காக உதவியவர் :மதுரை திரு. எஸ்.குமார்.

சென்ற மாதம் மீனாட்சி அரங்கில் மாட்டுக்காரவேலன்

fidowag
9th November 2014, 11:19 PM
அட்டகாசம் சார் சாதனை மன்னன் என்றுமே சாதனை மன்னன்


என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

தீபாவளிக்கு மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் மக்கள்திலகத்தின் கருப்பு வெள்ளை படமான நான் ஆணையிட்டால் ஒன்பது நாட்கள் ஓடி 1,27,500.00 வசூலாக தந்து கடந்த பத்து ஆண்டுகளில் மாபெரும் சாதனை புரிந்து உள்ளது
தகவல் மதுரை s.குமார்
http://i58.tinypic.com/wv8jyw.jpg

ainefal
9th November 2014, 11:51 PM
http://www.youtube.com/watch?v=Ma410RAP4nM

ainefal
10th November 2014, 08:22 AM
http://www.youtube.com/watch?v=ODsBMRcGo9g

Richardsof
10th November 2014, 08:58 AM
இனிய நண்பர் கலைவேந்தன் சார்

மக்கள் திலகத்திற்கு கிடைத்த புகழ் , அவர் அடைந்த அரசியல் மற்றும் திரை உலக வெற்றிகள் , எல்லா மதத்தினர்களின் பாராட்டுக்கள் , எல்லா தரப்பு மக்களின் ஏக போக ஆதரவு ,பத்திரிகைகள்
பாராட்டுக்கள் - இன்றளவும் கட்டுக்கோப்பான ரசிகர்கள் - ரசிக மன்றங்கள் - 1989 முதல் 2014 தேர்தல்கள் வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் - அவரின் இயக்கம் அதிமுக - இரட்டை இலை வெற்றிக்காக உழைத்த ரசிகர்கள் . நம் பயணம் என்றுமே வெற்றியின் இலக்குதான் .

கடந்த கால நிகழ்வுகளை - உள்நோக்கம் கற்பித்து அதன் மூலமாவது எம்ஜிஆரை பற்றி ஏதாவது
தகவலை நியாயபடுத்தி அதற்கு சாயம் பூசி [ மேல்தட்டு - அதிகம் படித்தவர்கள் - குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் - மொழி பேதம் ] என்று தங்கள் முகத்திற்கே கரியை பூசி கொள்வதை
எண்ணி பரிதாபம் படுவதை தவிர என்ன செய்ய முடியும் ?

எம்ஜிஆர் என்ற மாமனிதரின் வெற்றிகளை ஜீரணிக்க முடியாத புயலாய் அந்நிய மண்ணில் இருப்பவரின் உள்ளத்தில் நெருப்பாய் கொதித்தாலும் அந்த ''மனிதரின் '' வேதனையான நேரத்தில்
நீரும் நெருப்பும் - மாட்டுக்கார வேலனும் அவரை மகிழ்ச்சி கடலில் நீந்திட வைப்பது நம் மக்கள் திலகம் அல்லவா ?

விரல்கள் கி போர்ட் டைப்பிங் ]எம்ஜிஆரை தாக்கலாம்
உதடுகள் - உள்ளம்- விரல்கள் - மூவரின் ஆளுமையில் கோபாலரின் மூன்று வேடங்களில் ''உள்ளம் '' வெற்றி பெற்று விடுகிறது . அந்த உள்ளம் தான் எம்ஜிஆரை மறக்க முடியாமல் தவிக்கிறது . மக்கள் திலகம் எம்ஜிஆர் நம் உள்ளங்களை விட எதிர்ப்பாளர்களின் உளங்களில் தான் அதிகம் குடி இருக்கிறார் . இதுவே நமக்கு கிடைத்த வெற்றி .

Stynagt
10th November 2014, 12:13 PM
http://www.youtube.com/watch?v=g8lzNkq4FXY&list=UUDeym31jTvHAwr-MM_hwRTA

Please watch the above video carefully and not how Thalaivar does a similar one, very casually [remember he was not 20 at that time]:

http://www.youtube.com/watch?v=9bUWo_ek4Q8

Yes. Sailesh sir. Thank you very much for this video. I didn't pay attention on this step and compared till date. I exclaimed that how u r watched and loaded this video. I very much admired it. Thank you once again Sir.


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Russellisf
10th November 2014, 01:47 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps51aaa25c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps51aaa25c.jpg.html)

எம்.ஜி.ஆர் விழா 2014" என்ற தலைப்பில் நேற்று (8.11.2014) பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் நடைபெற்றது.... சிறப்பு விருந்தினராக பாரீஸ் மேயர் டிடியர் பைலர்ட், துணை மேயர் ஜாக்குலின் பாவில்லா, பிரபல நடிகர் அசோகனின் மகன் வின்சென்ட் அசோகன்,இதயக்கனி ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்....

விழா ஏற்பாடு: பிரான்ஸ் எம்.ஜி.ஆர் பேரவை தலைவர் முருகு பத்மநாபன் மற்றும் குழுவினர்...

Russellisf
10th November 2014, 01:49 PM
குழந்தையும் தெய்வமும்-

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse95d92d9.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse95d92d9.jpg.html)

Russellisf
10th November 2014, 01:50 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpse190898c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpse190898c.jpg.html)

Russellisf
10th November 2014, 02:06 PM
மு.கோவிந்தராசன் எழுதிய, 'கவியரசு கண்ணதாசன்' நூலிலிருந்து: தமிழ் சங்க விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்த கண்ணதாசன், அக்., 17, 1981 அன்று, இந்திய நேரப்படி இரவு, 10:45 மணிக்கு, (அமெரிக்காவில் பகல், 12:00 மணி) அமெரிக்க மருத்துவமனையில் காலமானார். அப்போது, அவருக்கு வயது 54.
கண்ணதாசனின் உடலை சென்னைக்கு கொண்டுவர, அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர்., ஏற்பாடு செய்திருந்தார். தமிழகத்தின் அரசவைக் கவிஞராக கண்ணதாசன் இருந்ததால், அவரது சிகிச்சை செலவு முழுவதையும், தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்திருந்தார்
எம்.ஜி.ஆர்.,
கண்ணதாசனின் இரண்டாவது மனைவி பார்வதி, மூன்றாவது மனைவி வள்ளியம்மை, மகன் கலைவாணன் ஆகியோர் அமெரிக்கா சென்று கவனித்து வந்தனர். இதனால், கண்ணதாசன் உயிர் பிரியும்போது, அவர்கள் கண்ணதாசன் அருகிலேயே இருந்தனர்.
சென்னை தியாகராய நகரில், கண்ணதாசனின் வீட்டில் அவருடைய உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. முதல் மனைவி பொன்னம்மாளும், மற்ற உறவினர்களும், படத்தின் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதவண்ணம் இருந்தனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, கண்ணதாசன் வீட்டிற்குச் சென்று, கண்ணதாசனின் மனைவி, மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.
விமானம் மூலம் கண்ணதாசன் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, நடிகர் சங்க கட்டடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது; உடல் மீது அவர் எழுதிய, 'இயேசு காவியம்' புத்தகம் வைக்கப்பட்டு இருந்தது!

courtesy dinamalar varamalar thinnai

Russellisf
10th November 2014, 02:32 PM
http://www.youtube.com/watch?v=c4uLLFKaKkg

Russellisf
10th November 2014, 02:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/maxresdefault_zps4ab44c51.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/maxresdefault_zps4ab44c51.jpg.html)

Russellisf
10th November 2014, 02:38 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/images_zps8ac8eeb3.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/images_zps8ac8eeb3.jpg.html)

Russellisf
10th November 2014, 02:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps94081f1a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps94081f1a.jpg.html)

Russellisf
10th November 2014, 02:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps86f7086b.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps86f7086b.jpg.html)

Russellisf
10th November 2014, 02:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/c_zps576cbdc1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/c_zps576cbdc1.jpg.html)

Russellzlc
10th November 2014, 06:00 PM
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

தங்கள் விளக்கத்துக்கு நன்றி. ‘பயன்படுத்திக் கொள்வதில் தேர்ந்தவர்’ என்று புரட்சித் தலைவரைப் பற்றி சொல்லுவதற்கு முன் நீங்கள் பயன்படுத்தியுள்ள மற்றொரு வார்த்தை ‘தனக்கு உதவிகரமாக’ என்பது. இது சுயநல நோக்கம் என்றாகாதா? மேலும் அந்தக் கட்டுரையின் ஆரம்பமே இரண்டு பேர் ‘பரஸ்பர தேவைகளுக்காக’ என்று கூறியுள்ளீர்கள். மணியனுக்கு என்ன தேவையோ? எனக்கு தெரியாது. ஆனால், தலைவரை ‘தனது தேவைக்காக’ என்று குறிப்பிடுவது அவருக்கு பெருமை தரும் விஷயம் இல்லையே.

அதோடு, நான் குறிப்பிட்ட பத்தியிலேயே ஆரம்பத்தில் ‘முதல் வாய்ப்பு போய்விட்டது. இந்தப் படத்தையும் விட்டு விட்டால், அது தமக்கு ஒரு ‘அவமானமாகி’விடும் என்பதை உணர்ந்த அவர்’ (தலைவரைக் கூறுகிறீர்கள்) என்று கூறியிருக்கிறீர்கள். ஏன் இப்படி தவறான கருத்துக்களை விதைக்கிறீர்கள்? அதுவும் நிச்சயம் புரட்சித் தலைவர், ‘எனக்கு ரொம்ப அவமானமாகிவிடும் முரளி’ என்று உங்களிடம் கூற வாய்ப்பில்லாதபோது? இதெல்லாம் பாராட்டும் வார்த்தைகளா என்பதையும் திரியின் வாசகர்கள் முடிவு செய்யட்டும்.

நாராயணசாமி முதலியாரை, அவரது சட்ட அறிவை நாட்டுக்காக பயன்படுத்திக் கொள்வது பொதுநலம். ஆனால், தலைவரைப் பற்றி ‘தனக்கு உதவிகரமாக’ என்ற விளக்கத்துடன் நீங்கள் கூறுவது சுயநலம் என்ற தொனியில்.

உண்மையில், இதயம் பேசுகிறது பத்திரிகையில் அந்தக் கட்டுரையை நானும் படித்திருப்பதோடு அதன் பின்னணியையும் அறிவேன்(வோம்). அந்த கால கட்டத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் உடலமைப்பை பற்றியும் அவர் டூயட் பாடுவது பற்றியும் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு பதிலளித்த திரு.சிவாஜி கணேசன் அவர்கள் ‘என்னை விட 14 வயது மூத்தவரான எம்.ஜி.ஆர்.(உண்மையில் 11 வயதுதான் மூத்தவர், அவர் தவறாக கூறினாரா? அல்லது நிருபர் தவறாக காதில் வாங்கிக் கொண்டாரா? அல்லது அச்சுப் பிழையா? என்று தெரியவில்லை) இளைஞராக நடித்தபோது யாரும் இப்படி கேட்கவில்லையே? என்று பதிலளித்திருந்தார். அதன் எதிர்வினையாகவே அந்த கட்டுரை வெளியானது. ‘எம்.ஜி.ஆர். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். நீங்கள் அப்படி இல்லையே?’ என்று கூட அந்தக் கட்டுரையில் தாமரை மணாளன் கேட்டிருந்தார். பின்னர், சிவாஜி கணேசன் அவர்கள் ரசிகர்களால் மாநிலம் முழுவதும் இதயம் பேசுகிறது பத்திரிகை கொளுத்தப்பட்டது.

நான் மணியனுக்கோ, தாமரை மணாளனுக்கோ, இதயம் பேசுகிறது பத்திரிகைக்கோ வக்காலத்து வாங்கவில்லை. பின்னணி விவரங்களை சொன்னேன். இது உங்களுக்கும் தெரிந்திருக்கும். சொல்வது என்றால் எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கலாமே? நான் மேலே குறிப்பிட்ட பகுதிகளை ஏன் மறைக்கிறீர்கள்? நான் சொல்வது பொய் என்றால் மேற்படி கட்டுரையை பதிவிட்டு என் முகத்திரையை கிழிக்க தாராளமாக உங்களுக்கு உரிமை உண்டு.

காதல்வாகனம் படத்துக்கு மார்க் போட்டதற்காக திரு. எஸ்.வி பட்டபாடு பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். தலைவரைப் பற்றி இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறாரே என்று எனக்கு நண்பர் திரு.கோபால் மீது வருத்தம் உண்டு. என்றாலும் தனி மனித வெறுப்போ, அவர் மீது கோபமோ கிடையாது. நான் புரிந்து கொண்ட வரையில் தனது குறைகளையும் பலவீனங்களையும் கூட வெளிப்படுத்த தயங்காத, எதையும் மறைக்கத் தெரியாத மனிதர் அவர். அதனால் சில சங்கடங்களிலும் சிக்கிக் கொள்பவர். அவர் ‘ராஜராஜ சோழனை’ விமர்சித்ததற்காக அவரைப் படுத்தாமல் கொஞ்சினீர்களா? என்று கேட்க விரும்புகிறேன். அந்தப் பதிவையே நீக்கச் சொன்னதுதானே உங்கள் ஜனநாயகம்?

நீங்கள் ஒரு மாடரேட்டர் என்பதையும் மறந்து, எனக்கு ‘திரு.சிவாஜி கணேசன் அவர்களை தாக்கும்படி அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்றெல்லாம் கடுமையான குற்றச்சாட்டுகளை வீசியிருப்பதன் மூலம் என் மீது நீங்கள் காட்டியுள்ள கோபத்தை விட நான் உங்கள் மீது குறைவான அளவு கோபமே காட்டியிருக்கிறேன் நண்பர் திரு. முரளி அவர்களே. இருந்தாலும் அந்தக் கோபம் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
10th November 2014, 06:02 PM
நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு,

சித்ரா கிருஷ்ணசாமி விஷயமாக நீங்கள்தான் நண்பர் திரு.முரளி அவர்களுக்கு சுட்டிக் காட்டினீர்கள் என்பது நீங்கள் குறிப்பிடும் வரை எனக்குத் தெரியாது. சமீபத்தில் நான் உங்கள் திரியில் எழுத்து வன்மையும் விஷய ஞானமும் உள்ளவர்களில் உங்களுக்கு முக்கிய இடம் உண்டு என்று கூறியிருந்தேன். என் கணிப்பு சரிதான் என்று நிரூபித்துள்ளீர்கள்.

பெரியார் கொள்கைகளை பின்பற்றுவோர் எல்லாம் தாடி வைத்திருக்க வேண்டும் என்று கருதும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. உங்கள் கொள்கைகள் எதுவாக இருந்தால் எனக்கென்ன வந்தது? ஆனால், பெரியார் பற்றாளன் என்று கூறிக் கொண்டு சாதிகளை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறாதீர்கள் என்பதே என் வேண்டுகோள். அது உங்களைப் போலவே நானும் மதிக்கும் அய்யா பெரியாருக்கு பெருமை சேர்க்காது.

திரு.சிவாஜி கணேசன் அவர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சி சிறிதும் கிடையாது. இதை எத்தனை முறை சொல்வது? திரு. முரளியும் இதே குற்றச்சாட்டை கூறுகிறார். அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. இதை ஓராயிரம் முறை உரத்துக் கூவத் தயார். அவர்தான் கலைத் தெய்வம் என்று கூறினால்தான் அவர் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை என்று அர்த்தம் என்றால்... நான் கேட்கிறேன், எங்கள் தலைவரை ஏழைகளின் ஏந்தல், பொன்மனச் செம்மல், எட்டாவது வள்ளல் என்று கூறினால்தான் உங்களுக்கு அவர் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை என்று அர்த்தம் என்றால் நீங்கள் ஏற்பீர்களா? அல்லது அப்படி சொல்லத்தான் முன் வருவீர்களா?

சுவை மாறுபாடு சகஜமே. ‘மைசூர் பாகை வாயில் போட்டால் சலிக்கப்பட்ட மணலாய் அது உதிர்ந்து உமிழ் நீருடன் சேர்ந்து பாசந்தி பதத்தில் உள்ளே இறங்கும்போது.... அருமை’ என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு.

அதே நேரம், ‘ஜீராவில் தோய்ந்த குலோப் ஜாமூனை பல்லில் படாமல் நடு நாக்கில் வைத்து மேலண்ணத்தால் மெதுவாய் நசுக்கி வழிந்து பரவும் ஜீராவுடன் இனிப்பு பஞ்சாய் தொண்டையில் இறங்கும்போது... ஆஹா’ என்று சொல்ல எனக்கும் உரிமை உண்டே.

என்னைப் பொருத்தவரை இரண்டும் இனிப்புகளே. என்ன.... உங்களுக்கு மைசூர் பாகு பிடித்திருக்கிறது. எனக்கு குலோப் ஜாமூன் பிடிக்கிறது. ஆனால், மைசூர் பாகுதான் சூப்பர். குலோப் ஜாமூனை மனிதன் சாப்பிடுவானா? எட்டிக்காயாய் கசக்கும் என்று நீங்கள் கூறும்போதுதான் பிரச்னையே. எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள் என்றுதான் கோருகிறோம்.

நேற்று பணிச் சுமை காரணமாக என்னால் விரிவாக பதில் அளிக்க முடியவில்லை. சால்ஜாப்பு பதில்கள் என்று கூறுகிறீர்கள்.

சிகரெட் விவகாரத்தில் அன்புமணி அவர்களின் முயற்சி பாராட்டக் கூடியதுதான். ஆனால், அவராலேயே வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லையே. புகையிலை மாபியாக்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்று அவர் கூறியிருந்தாரே. இதில் மாநில அரசோ ஒரு முதல்வரோ மட்டுமே எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசின் கடுமையான அணுகுமுறை தேவை.

மதுவிலக்கைப் பொருத்தவரை திமுக ஆட்சியில் முதல் முறையாக மதுவிலக்கு தளர்த்தப்பட்டபோது, மது விலக்கு பிரசாரக் குழு தொடங்கப்பட்டு அதன் தலைவராக புரட்சித் தலைவர் இருந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். அவர் ஆட்சியிலும் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. அதற்கு என்ன காரணம்? ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்து மாண்டார்கள். அதுவும் கிடைக்காமல் போதைக்கு அடிமையானோர் வார்னீஷ்களை குடித்து இறந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் கண் பார்வையும் பறிபோனது. இதைத் தவிர்க்கவே மது விலக்கை புரட்சித் தலைவர் தளர்த்தினார். மகன் தறுதலையாக இருந்தாலும் பரவாயில்லை. உயிரோடு இருந்தால் போதும் என்ற தாயின் பாச மனம் போன்ற புரட்சித் தலைவரின் பரிவு மனமே அதற்கு காரணம். அதற்காக பிள்ளை தறுதலையாக இருப்பதில் தாய்க்கு மகிழ்ச்சி என்று அர்த்தமல்ல. மிகவும் வேதனையோடு எடுக்கப்பட்ட முடிவு அது.

ஒரு மாதத்துக்கு முன் நீங்கள் ஒரு பதிவை போட்டிருந்தீர்கள். விபசாரத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். அந்தப் பதிவு உடனே தூக்கப்பட்டது. உங்கள் கருத்தில் எனக்கு மாறுபாடு உண்டு. அதற்கு காரணங்கள் பல உண்டு. இங்கே விவரிக்க விரும்பவில்லை. விவாதப் பொருளும் அதுவல்ல. ஆனால், மனதை கட்டுப்படுத்த முடியாத மனிதன் தவறான வழிகளில் சென்று உயிர் குடிக்கும் நோய்களுக்கு ஆளாவதை விட அது மேல் என்ற உங்களின் நோக்கத்தை புரிந்து கொண்டேன். அதற்காக, கோபால் விபசாரத்தை ஊக்குவிக்கிறார் என்று நான் கூறினால் அது சரியாகுமா? அது போல புரட்சித் தலைவரின் நோக்கத்தை குறை கூறாதீர்கள்.

மேலும், அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாதபோது தமிழகத்தில் மட்டும் மது விலக்கு என்பது நெருப்பு வளையத்தின் நடுவே வைக்கப்பட்ட கற்பூரமாகவே இருக்கும். உத்தமர் காந்தியடிகள் பிறந்த குஜராத் மண்ணிலேயே மதுவிலக்கு பெயரளவுக்குத்தான் இருக்கிறது. அண்டை மாநிலங்களில் கிடைக்கும் மதுவும் கள்ளச்சாராயமும் அங்கே ஓடுகிறது என்பது நாளிதழ் படிப்போர் அனைவருக்கும் தெரியும். எனவே, இந்த விவகாரத்தில் தேசிய அளவிலான கொள்கை தேவை. எனவே, நீங்கள் தலைவரை மட்டுமே குறை கூறி பலனில்லை.

அதெல்லாம் இருக்கட்டும்.... உங்கள் எழுத்துக்களை முழுமையாக படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். தலைவரை நீங்கள் தாக்குவதை தவிர்த்துப் பார்த்தால் உங்கள் எழுத்துக்களை ரசித்திருக்கிறேன். இன்று கூட உங்கள் திரியில் உங்கள் தொடருக்கு பிறகு உடனடியாக உங்கள் வார்த்தைகளின்படி ஒரு மக்குப் பதிவு. (நீங்கள்தான் சொல்கிறீ்ரகள். நான் சொல்லவில்லை) உங்கள் திறமையையும் அறிவையும் உழைப்பையும் காட்டில் நிலவாய், கடலில் மழையாய் ஏன் வீணடிக்கிறீர்கள்? ஆளே இல்லாத கடையில் எதற்காக இப்படி டீ ஆத்தி தள்ளுகிறீர்கள் என்று புரியவில்லை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
10th November 2014, 06:27 PM
மக்கள் திலகத்தின் ''பறக்கும் பாவை ''

11.11.1966

48 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று .

ராமண்ணாவின் முதல் வண்ணப்படம் . பல புதுமைகள் நிறைந்த பொழுது போக்கு சித்திரம் .

1966ல் வந்த மக்கள் திலகத்தின் 9 படங்களும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த படங்கள் .

அன்பே வா - முற்றிலும் மாறுபட்ட காதல் வரலாற்று காவியம் .

முகராசி - 12 நாட்களில் படமாக்கப்பட்டு 100 நாட்கள் ஓடிய படம் .

நான் ஆணையிட்டால் - சமூக சீர்திருத்த படம் .

நாடோடி - சாதி கொடுமையை எதிர்த்து வந்த படம் .

சந்திரோதயம் - பத்திரிகை அதர்மத்தை எதிர்த்து வந்த சமூக படம் .

தாலி பாக்கியம் - முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட படம் .

பறக்கும் பாவை - சர்க்கஸ் மையாமாக கொண்டு வந்த சிறந்த படம்

தனிப்பிறவி - இனிய பாடல்களுடன் வந்த மக்கள் திலகத்தின் புதுமை படம் .

பெற்றால்தான் பிள்ளையா - நடிக பேரசரின் நவரச காவியம் .

இனி பறக்கும் பாவை ..........

ஏராளமான நட்சத்திர கூட்டங்களோடு மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பாடல்கள் மக்கள் திலகத்தின்
சிறப்பான நடிப்பில் - புதுமையான சண்டைகாட்சிகள் - பாடல் காட்சிகள் - நடனங்கள் என்று காட்சிக்கு காட்சி
விறுவிறுப்புடன் வந்த பொழுது போக்கு படம்

எனக்கு பிடித்த சில காட்சிகள் - பாடல்கள்



மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றென்றும் விரும்பும் படங்களில் பறக்கும் பாவையும் ஒன்று .


http://youtu.be/fye8ENxzdJY?list=UUZia4cfjDQIJ_q7Ap2gq-vw

http://youtu.be/RtgXOOOxw5Q

Richardsof
10th November 2014, 06:43 PM
கலைவேந்தன் சார்

இந்த டீ கடை - ஜோக்கிற்கும் உங்கள் கோபலரின் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை .ஜஸ்ட் ரிலாக்ஸ் .

http://youtu.be/eoCwwsA2_7w

Russellzlc
10th November 2014, 09:02 PM
திரு.கோபால்,

நானும் உங்களுடன் வாதாடி அலுத்து விட்டேன். நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்திருக்கிறேன். இதில் யார் பக்கம், யார் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பது படிப்பவர்களுக்கு புரியும். உங்களுக்கு தலைவர் மீது ஏன் இவ்வளவு குரோத உணர்ச்சி என்று தெரியவில்லை.

கடைசியாக ஒன்று கேட்கிறேன். சினிமாவையே விட்டு விடுவோம். அது வெறும் பொழுதுபோக்கு. (அதிலும் கூட தலைவர் நல்ல கருத்துக்களை கலையின் மூலம் சொன்னார் என்பது வேறு விஷயம்) ஆனால், இதையெல்லாம் தாண்டி தான் உழைத்து சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வழங்கியவர் பொன்மனச் செம்மல்.

தன் உழைப்பால் வாங்கிய சத்யா ஸ்டூடியோவில் தொழிலாளர்களையும் பங்குதாரர்களாகச் சேர்த்து லாபத்தில் அவர்களுக்கும் பங்களித்த உலகின் ஒரே முதலாளி என்ற பெயரில் வாழ்ந்த தொழிலாளி. ஆயிரக்கணக்கானவர்களின் பசிப்பிணியை தீர்த்தவர். அந்த வகையில் கூட உங்களுக்கு அவர் மீது soft corner இல்லையா? இதயமே இல்லாமல் ‘இல்லை’ என்பது உங்களது பதிலாக இருக்குமானால் அதற்கு மேல் நான் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. இனி தலைவர் தொடர்பாக உங்களுடன் விவாதத்திலும் ஈடுபடப் போவதும் இல்லை.

ஆமாம்... தலைவரைப் பார்த்து முதுமை, ஆபாசமாக நடித்தார் என்றெல்லாம் கூறுகிறீர்களே? எனக்கு ஒரு படமும் அதில் நடித்த நடிகரின் பெயரும் மறந்து போய் விட்டது. உங்களைக் கேட்டால் தெரியும் என்பதற்காக கேட்கிறேன்.

‘தொந்தி சரிய.. மயிரே வெளிர ...’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதைப் போல, ஒரு நடிகர் ஒரு நடிகையை தனது மூக்கு நசுங்க உடல் முழுவதும் முகம் புதைத்து புரட்டி எடுத்திருப்பார். அந்த பாடல் கூட ‘நாலு பக்கம் வேடருண்டு, நடுவினிலே மானிரண்டு.. காதல்..அம்மம்மா...’ என்று வரும். அந்த படம் மற்றும் நடிகரின் பெயர் என்ன?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
10th November 2014, 09:25 PM
http://www.youtube.com/watch?v=now5pCZEkMI

ainefal
10th November 2014, 09:32 PM
http://www.youtube.com/watch?v=Mdm6soN6QPM

ainefal
10th November 2014, 10:49 PM
http://i60.tinypic.com/169ouh4.png
http://i58.tinypic.com/w1cuvr.jpg

ainefal
10th November 2014, 11:06 PM
http://i58.tinypic.com/2mmd4ir.jpg
http://i61.tinypic.com/23j5uop.jpg

Richardsof
11th November 2014, 06:26 AM
பறக்கும் பாவையில் எனக்கு பிடித்த காட்சிகள் .

* அறிமுக காட்சியில் ஆணுடை அணித்து வரும் சரோஜாதேவி யை அடையாளம் கண்டு கொண்டு பின்னர்தன்னுடைய
வீட்டுக்கு அழைத்து வந்து கிண்டலடிக்கும் இடம் . பிறகு சரோஜாதேவி தப்பிக்க ஓடும்போது கையிற்றால் பிடி போட்டு இழுத்து பாடும் பாடல் ''பட்டு பாவாடை எங்கே ''- சூப்பர் பாடல் . மக்கள் திலகத்தின் சூப்பர் டான்ஸ்


** காஞ்சனா அறிமுக காட்சியில்எம்ஜிஆரை கண் கொட்டாமல் பார்க்கும் இடம்.

*** ஒரே இடத்தில நாகையா - சகுந்தலா - நம்பியார் - காஞ்சனா - எம்ஜிஆர் இடம் பெறும் காட்சி . பின்னர் நடராஜனுடன் மோதும் அனல் பறக்கும் சண்டை காட்சி .


**** சர்க்கஸ் காட்சிகளில் ராஜ சுலோச்சனா - அசோகன் - சந்திர பாபு - ராமதாஸ் - மனோகர் - மனோரமா - மாதவி தங்கவேலு அறிமுக காட்சிகள் .


காஞ்சனாவின் கனவு பாடல் - முத்தமோ மோகமா - கண்ணுக்கு விருந்து . மக்கள் திலகம் எம்ஜிஆரின் நடனம் அருமை .

நிலவென்னும் ஆடைகொண்டாளோ

உன்னைத்தானே ...

இரண்டு பாடல்கள் இனிமையான காட்சிகள் .

தன்னை தக்க வரும் புலியிடம் இருந்து எம்ஜிஆர் வெகு சாமர்த்தியமாக ஸ்டூலை வைத்தே விரட்டும் இடம் .

கூண்டில் இடம் பெற்ற கல்யாண நாள் பார்க்கலாமா பாடல் - புதுமை

வலையில் இடம் பெற்ற எம்ஜிஆர்-அசோகன் - மனோகர் சண்டை காட்சிகள்

நடராஜனோடு ஒ.ஏ.கே . தேவர் வீட்டில் இடம் பெற்ற சண்டை காட்சி .

ஓட்டலில் பாடும் புதுமையான ''சுகம் எதிலே '' பாடல் மற்றும் நடனம் .

பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சிகள் -

இனிமையான படம் . இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கிறது .

எம்ஜிஆரின் பிம்பம் இந்த படத்தில் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது .

oygateedat
11th November 2014, 08:02 AM
NAMNADU

COIMBATORE

NAAZ THEATRE

FIRST 3 DAYS COLLECTION

Rs.48000/-.

INFORMATION FROM

MR.V.P.HARIDAS, COIMBATORE

Russellisf
11th November 2014, 08:13 AM
https://www.youtube.com/watch?v=kPKcsLrVePc

Russellisf
11th November 2014, 08:14 AM
https://www.youtube.com/watch?v=-HWGvZpEDjg

Russellisf
11th November 2014, 08:15 AM
https://www.youtube.com/watch?v=ndzRG92Eufw

ainefal
11th November 2014, 08:26 AM
http://www.youtube.com/watch?v=-3dY16nwJzA

ainefal
11th November 2014, 08:28 AM
http://www.youtube.com/watch?v=4XvnqPbGYi0

Russellisf
11th November 2014, 09:23 AM
பழைய கதை இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு பொருந்துகிறது கலைவேந்தன் சார்

இதிகாசத்தில் விஷ்ணுவின் திருவடி அடைய ஏழு ஜென்மங்கள் எவன் ஒருவன் விஷ்ணுவின் புகழை துதி பாடுகிறானோ அவனே விஷ்ணுவின் திருவடி அடையாளம் என்ற நிலை இருந்தது அப்பொழுது பக்தர்கள் ஏழு ஜென்மங்கள் எங்களால் காத்திருக்க முடியாது சீக்கிரமே உங்கள் திருவடி அடையவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அதற்கு விஷ்ணு என்னையும் என் பக்தர்களையும் உங்களால் எவ்வளவு கொடுமைகள் செய்ய முடியுமோ அவ்வளவு செய்தால் என்னை நீங்கள் மூன்றே ஜென்மத்தில் என்னுடைய திருவடி அடையலாம் என்றார் விஷ்ணு உடனே அவருடைய பக்தன் கம்சன் , இரணியன் ,இராவணன் என மூன்று ஜென்மம் எடுத்து மிகப்பெரிய இன்னல்களை விஷ்ணுவின் பக்தர்களுக்கும் , விஷ்ணுவை கண்டபடி பேசியும் மூன்றே ஜென்மங்களில் விஷ்ணுவின் திருவடி அடைந்தான்

siqutacelufuw
11th November 2014, 09:28 AM
மக்கள் திலகம் தனது மாம்பலம் அலுவலகத்தில் :

http://i62.tinypic.com/30jk9jd.jpg

siqutacelufuw
11th November 2014, 09:57 AM
http://www.youtube.com/watch?v=now5pCZEkMI

மாற்றுத்திரியில் தங்கள் அபிமான நடிகரின் புகழ் பரப்பும் செய்திகளை விட, நம் மக்கள் திலகத்தைப் பற்றிய அவதூறு செய்திகளையும், பொய்யான தகவல்களையும் பதிவிட்டு அற்ப சந்தோஷமடையும் சில அன்பர்களுக்கு தகுந்த பாடலை, தக்க சமயத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி, சகோதரரர் சைலேஷ் பாசு அவர்களே !

siqutacelufuw
11th November 2014, 10:14 AM
பழைய கதை இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு பொருந்துகிறது கலைவேந்தன் சார்

இதிகாசத்தில் விஷ்ணுவின் திருவடி அடைய ஏழு ஜென்மங்கள் எவன் ஒருவன் விஷ்ணுவின் புகழை துதி பாடுகிறானோ அவனே விஷ்ணுவின் திருவடி அடையாளம் என்ற நிலை இருந்தது அப்பொழுது பக்தர்கள் ஏழு ஜென்மங்கள் எங்களால் காத்திருக்க முடியாது சீக்கிரமே உங்கள் திருவடி அடையவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அதற்கு விஷ்ணு என்னையும் என் பக்தர்களையும் உங்களால் எவ்வளவு கொடுமைகள் செய்ய முடியுமோ அவ்வளவு செய்தால் என்னை நீங்கள் மூன்றே ஜென்மத்தில் என்னுடைய திருவடி அடையலாம் என்றார் விஷ்ணு உடனே அவருடைய பக்தன் கம்சன் , இரணியன் ,இராவணன் என மூன்று ஜென்மம் எடுத்து மிகப்பெரிய இன்னல்களை விஷ்ணுவின் பக்தர்களுக்கும் , விஷ்ணுவை கண்டபடி பேசியும் மூன்றே ஜென்மங்களில் விஷ்ணுவின் திருவடி அடைந்தான்



நம் புரட்சித்தலைவரை விஷ்ணுவாக பாவித்தும், கம்சன், இரணியன் மற்றும் இராவணன் ஆகியோரை குறிப்பிட்டு உதாரணமாக எழுதி இருந்தாலும், புராணக் கதையில் மகாவிஷ்ணு தன் பக்தர்களுக்கு எந்த அளவுக்கு துன்புறுத்த முடியுமோ அந்த அளவுக்கு துன்புறுத்தலாம் என்று பச்சைக்கொடி காட்டுவது சற்று நெருடலாக இருக்கிறது.

இத்தருணத்தில், பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1972 கால கட்டத்தில், நம் புரட்சித்தலைவரை கட்சியை விட்டு நீக்கி, பின்பு அவருடன் சமாதானம் பேச அன்றைய ஆளும் கட்சியினர் முற்பட்டிருந்த வேளையில், தனது கட்சி தொண்டர்களும், அனைத்துலக எம். ஜி. ஆர். மன்ற தலைவர் மறைதிரு. முசிறிப்புத்தன் அவர்களும் தாக்கப்பட்டனர். இதனை அறிந்த, பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் எந்த சமரச பேச்சுக்கும் இனி இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

அதுதான் புரட்சித்தலவைரின் மாண்பு ! கலியுகத்தில் மக்களை காப்பாற்ற வந்த மகான் என்பதால்தான், அவர் " கலியுக கடவுள் " என்று அவர் அழைக்கப்படுகிறார்.

eehaiupehazij
11th November 2014, 12:00 PM
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல் காட்சியமைப்பு இப்படி இருக்கலாமா?



ஆமாம்... தலைவரைப் பார்த்து முதுமை, ஆபாசமாக நடித்தார் என்றெல்லாம் கூறுகிறீர்களே? எனக்கு ஒரு படமும் அதில் நடித்த நடிகரின் பெயரும் மறந்து போய் விட்டது. உங்களைக் கேட்டால் தெரியும் என்பதற்காக கேட்கிறேன்.

‘தொந்தி சரிய.. மயிரே வெளிர ...’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதைப் போல, ஒரு நடிகர் ஒரு நடிகையை தனது மூக்கு நசுங்க உடல் முழுவதும் முகம் புதைத்து புரட்டி எடுத்திருப்பார். அந்த பாடல் கூட ‘நாலு பக்கம் வேடருண்டு, நடுவினிலே மானிரண்டு.. காதல்..அம்மம்மா...’ என்று வரும். அந்த படம் மற்றும் நடிகரின் பெயர் என்ன? by Kalaivendhan



தமிழ் திரைப்படங்களில் காதல் காட்சியமைப்புக்கள் வரையறை மீறும்போது நடிப்பது திரையுலக மூவேந்தர்களே என்றாலும் மனம் கசப்படைவது தவிர்க்க இயலாது
குடும்பத்துடன் அமர்ந்து நாம் திரைப்படங்களை ரசிக்கும்போது வியாபாரநோக்கில் காமம்கலந்த கவர்ச்சிப்பூச்சில் வெளிவந்த இந்தவகை 'காதல்' நோதலே!

மென்மையான இதமான இனிமையான காதல் காட்சியமைப்புக்களில் காதல் மன்னராக முடிசூட்டப்பட்ட ஜெமினிகணேசனும்கூட காலம்கடந்த வேளையில் குறத்திமகன் திரைப்படத்தில் ஒரு சிறிய திருஷ்டிப்பொட்டு வைத்தவர்தான்!


எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்

https://www.youtube.com/watch?v=cy58kizXUSY

https://www.youtube.com/watch?v=MBepNZJjK-4

இப்படி இருக்கலாமா?

https://www.youtube.com/watch?v=vylKWIFujkI

எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்

https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg

https://www.youtube.com/watch?v=zkTZUSTmGsw

இப்படி இருக்கலாமா?

https://www.youtube.com/watch?v=L6CwgtFCJVo

எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்

https://www.youtube.com/watch?v=Kg0CUJH9doQ

https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4

இப்படி இருக்கலாமா?

https://www.youtube.com/watch?v=UYZ4Ou8GcY0

Better not to continue such bitter matters as it may shatter the cult images of our icons, augmenting only hatred among us!

Russellisf
11th November 2014, 12:23 PM
எம்ஜிஆருக்கும் ,சிவகுமாருக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு...
இருவருமே பிஞ்சுப் பருவ பிள்ளை வயதிலேயே , தந்தையை இழந்தவர்கள்....
எம் ஜி ஆருடன் தன் முதல் சந்திப்பு பற்றி சிவகுமார்....
“முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார்.”
“அப்படிப்பட்ட ஆள் வந்து துப்பாக்கியால் சுடப்பட்டு , பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது , நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர். எம்.வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார்.
எம்.ஜி.ஆர்.அருகில் சென்று “அண்ணே ..சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல..” அப்படீன்னு சொன்னேன்.
“ஊருக்கு போயிருந்தியா? ...அம்மா செளக்கியமா..?” அப்படின்னு விசாரித்தார்.
அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார்.
அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.”
# சிவகுமார் சொன்ன இந்த செய்தியைப் படித்ததும் எனக்கு ஏனோ இப்படி தோன்றியது...
"அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!!!"

Stynagt
11th November 2014, 12:33 PM
மற்றவர்கள் ஒத்துக்கொண்டால்தான் நம் மக்கள் திலகம் மகான் ஆவார் என்றில்லை. அவர் வாழ்வாங்கு வாழ்ந்து வையத்தில் தெய்வமாகிவிட்டார்.

திரையில் தன்னிகரில்லா நடிகராகி, அரசியலில் எவரும் அடைய முடியா புகழடைந்து, அனைத்திற்கும் மேலாய் மனித நேயத்தால் மனிதப் புனிதராகி, தமிழ் மக்களின் உள்ளங்களில் எல்லாம் மங்காத தீபமாய் ஒளிவீசிக்கொண்டிருக்கிறார். அவர் புகழை பொறுக்கமுடியாத ஒரு சிலரின் வெற்றுக்கூச்சல் இது என்பது நமக்கல்ல...இந்த திரியைக் கண்ணுறும் அனைவருக்கும் வெளிச்சமாய் தெரியும்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒளிவிளக்கை, எவருடனும் ஒப்பிட்டு, அவர் தனித்தன்மை அறியாதவர்களிடம் வாதிட்டு அதை இந்த திரியில் பதிவிட்டு, அதனால், ஆக்க பூர்வமான பதிவுகளுக்கு தேவைப்படும் நேரத்தை குறைத்துக்கொள்வதில் யாருக்கு என்ன லாபம். அவர்களுக்கு நீங்கள் என்னதான் அறிவுறுத்தினாலும், ஆதாரங்கள் காட்டினாலும், திரும்பவும் அவர்கள் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடுகிறார்கள். இதையெல்லாம் பல காலம் பார்த்தாகிவிட்டது. எனவே தாங்கள் பதிவிடும் மிகச் சிறந்த பதிவுகள் விழலுக்கு இறைத்த நீராகின்றன. நம் திரியின் மாண்பு குறையாமல் இருக்க வேண்டுமானால், மாற்று திரியில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு இங்கே பதில் சொல்லி நம் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து.

நம் தலைவரின் புகழ் பொங்குதமிழ் போல பெருகிக்கொண்டே இருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் காட்டாற்று வெள்ளம்போல் வந்துகொண்டே இருக்கிறது. அவற்றை நாம் ஆராய்ந்தாலே நமக்கு ஆயுள் போதாது. அப்படியிருக்க எதற்கு இந்த வீண் வாதங்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
11th November 2014, 01:03 PM
“அட்வகேட் அமரன்” நாடகத்தில் ஒரு க்ளைமாக்ஸ் காட்சி இடம்பெறும். தாயார் வேடத்தில் நடிக்கும் பி.ஸ்.சீதாலக்ஷ்மிக்கு எம்.ஜி.ஆர்தான் தன் உண்மையான மகன் என்று தெரிய வருகிறது. துக்கம் தொண்டையை அடைக்க அவரை கட்டிப்பிடித்து அழுவார். இவருடைய அழுகைக்கு ஈடு கொடுத்து எம்.ஜி.ஆரும் அதைவிட உணர்ச்சியைக் கொட்டி அழுவார். மேடையில் “ஜுகல் பந்தி” நடப்பது போலிருக்கும். நடந்துக் கொண்டிருப்பது நாடகம் என்பதையும் மறந்து ரசிகர்களும் விசும்பலுடன் அழ ஆரம்பித்து விடுவார்கள்.

“எல்லோரையும் அழவைத்து வேடிக்கை பார்ப்பவரல்லவா நீங்கள்” என்று மறைமுகமாக சீதாலக்ஷ்மியின் நடிப்புத்திறனைப் பாராட்டுவார் பழம்பெரும் வில்லன் நடிகர் ஓ.ஏ.கே.தேவர்.

எம்.ஜி.ஆருக்கு அழவேத் தெரியாது என்று பொதுவாகவே ஓர் அபிப்பிராயம் நிலவுவது உண்டு. ஆனால் அது உண்மையல்ல.

நிருபரொருவர் எம்.ஜி.ஆரிடம் “நாடகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே உங்கள் அனுபவத்தில் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்?” என்று கேட்டபோது “எனக்கு அழுவதென்றால் மிகவும் இஷ்டம். நாடகத்தில் கிளிசரீன் எல்லாம் பயன்படுத்த மாட்டேன். சினிமாவிலும் கிளிசரீன் உபயோகப்படுத்தவே கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஒரு சில படங்களில் நான் அழுது படப்பிடிப்பு செய்த காட்சிகளில் திரையில் அழுவது போலவே தெரியாது. அதிகப்படியான விளக்கின் சூட்டில் கன்னத்தில் விழுமுன்னரே கண்ணீர் உலர்ந்து விடும். அதற்குப் பிறகுதான் நான் கிளிசரீன் போடவே ஆரம்பித்தேன்” என்று பேட்டி கொடுத்தார்.

courtesy - net

ainefal
11th November 2014, 02:00 PM
பழைய கதை இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு பொருந்துகிறது கலைவேந்தன் சார்

இதிகாசத்தில் விஷ்ணுவின் திருவடி அடைய ஏழு ஜென்மங்கள் எவன் ஒருவன் விஷ்ணுவின் புகழை துதி பாடுகிறானோ அவனே விஷ்ணுவின் திருவடி அடையாளம் என்ற நிலை இருந்தது அப்பொழுது பக்தர்கள் ஏழு ஜென்மங்கள் எங்களால் காத்திருக்க முடியாது சீக்கிரமே உங்கள் திருவடி அடையவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அதற்கு விஷ்ணு என்னையும் என் பக்தர்களையும் உங்களால் எவ்வளவு கொடுமைகள் செய்ய முடியுமோ அவ்வளவு செய்தால் என்னை நீங்கள் மூன்றே ஜென்மத்தில் என்னுடைய திருவடி அடையலாம் என்றார் விஷ்ணு உடனே அவருடைய பக்தன் கம்சன் , இரணியன் ,இராவணன் என மூன்று ஜென்மம் எடுத்து மிகப்பெரிய இன்னல்களை விஷ்ணுவின் பக்தர்களுக்கும் , விஷ்ணுவை கண்டபடி பேசியும் மூன்றே ஜென்மங்களில் விஷ்ணுவின் திருவடி அடைந்தான்


V.V.correct historical fact [for persons who have belief in religion].

In my personal opinion who is responsible is one chief [intentionally misspelt] personality. We should always see the core issue every other problems will disappear on its own.

I leave it to your assumption!

Scottkaz
11th November 2014, 04:40 PM
http://i60.tinypic.com/169ouh4.png
http://i58.tinypic.com/w1cuvr.jpg
realy super sir

Scottkaz
11th November 2014, 04:44 PM
வேலூர் records79
http://i58.tinypic.com/iyhg85.jpg

Scottkaz
11th November 2014, 04:51 PM
வேலூர் records80
http://i60.tinypic.com/29g0w8k.jpg

Scottkaz
11th November 2014, 04:53 PM
வேலூர் records81
http://i59.tinypic.com/14t4fwn.jpg

Scottkaz
11th November 2014, 04:56 PM
வேலூர் records82
http://i58.tinypic.com/11lidxc.jpg

Scottkaz
11th November 2014, 04:59 PM
வேலூர் records83
http://i60.tinypic.com/23lyyyg.jpg

Scottkaz
11th November 2014, 05:09 PM
வேலூர் records84
http://i62.tinypic.com/23sc7c2.jpg

Russellzlc
11th November 2014, 05:42 PM
http://i61.tinypic.com/2iu5ac2.jpg
http://i57.tinypic.com/25z0z6d.jpg

நண்பர் திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

தங்கள் விளக்கத்துக்கு நன்றி. திரு.மணியனைப் பற்றியோ திரு.தாமரை மணாளனைப் பற்றியோ நீங்கள் விமர்சிப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபம் இல்லை. அந்தக் கட்டுரையில் தேவையில்லாமல் தலைவரைப் பற்றி அதுவும் பெயர் குறிப்பிட்டு விமர்சித்திருந்ததால் நான் விளக்கம் அளிக்க வேண்டி வந்தது.
நான் எழுத்துக்களை (அது யார் எழுதியதாக இருந்தாலும்) ரசிப்பவன். அதிலிருந்து நாமும் ஏதாவது கற்றுக் கொள்ள முடியுமா? என்று பார்க்கும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்த மிகச் சாமானியன். மற்றபடி, யாரையும் பெயர் குறிப்பிட்டு நான் எழுதாதபோது (நீங்களே கூறியுள்ளபடி) இன்னாரைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்று அர்த்தம் கற்பித்து கூறும் அளவுக்கு கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு வார்த்தைகளை தேடும் வழக்கம் எனக்கில்லை.
தலைவரின் திரையுலகம், அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது சிறப்பு, மேதைமை,புகழ், பெருமை, சாதனைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், திரியை படிக்கும் உலகத் தமிழர்களுக்கும் கொண்டு செல்வதே என் நோக்கம். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
11th November 2014, 07:39 PM
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி

வேலூர் பறக்கும் பாவை - நோட்டீஸ் - விளம்பரங்கள் சூப்பர் ,இது வரை பார்க்காதது .நன்றி .

கோவை - நாஸ் நம்நாடு மூன்று நாட்கள் வசூல் நிலவரம் - சாதனை ரவிச்சந்திரன் சார் .

Russellzlc
11th November 2014, 07:42 PM
http://i60.tinypic.com/169ouh4.png
http://i58.tinypic.com/w1cuvr.jpg

நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு, உங்கள் பதிலுக்கு நன்றி.

அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
11th November 2014, 08:02 PM
12.11.1976

ஊருக்கு உழைப்பவன்-

பொன்மனச்செம்மல் எம்ஜிஆர், வாணிஸ்ரீ, வெண்ணிறஆடை நிர்மலா, எம்.என்.ராஜம், குமாரி பத்மினி, பேபி ராஜகுமாரி, பி.எஸ்.வீரப்பா, தேங்காய் சீனிவாசன், கே.கண்ணன், சண்முகசுந்தரி, ஆஷாத் பயில்வான், ஷெட்டி, ஜஸ்டின், வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்.

இசையமைப்பு:-மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

பாடல்கள்:-"புரட்சித்தலைவரின் அரசவைக்கவிஞர்"புலவர்.புலமைப்பித்தன் & "கவிஞர்"முத்துலிங்கம் & "கவிஞர்"நா.காமராசன் & வாலி & "கவிஞர்"ரெண்டார்கை ஆகியோர்.

மூலக்கதை:-பூவை கிருஷ்ணன் அவர்கள்.

உரையாடல்:-ஆர்.கே.சண்முகம் அவர்கள்.

தயாரிப்பு:-எஸ்.கிருஷ்ணமூர்த்தி & டி.கோவிந்தராஜன் ஆகியோர்.

இயக்கம்:-எம்.கிருஷ்ணன்அவர்கள்.


இதயத்தை வருடும் இன்பகானங்கள்...


1. இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி!
தலைவா கொஞ்சம் பொறுத்திரு
வெட்கம் போனபின் என்னைச் சேர்த்திரு!

2. இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்-நெஞ்சில்
இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல்க் காற்றினிலே ஒன்றைத் தூது விட்டான்.

3. அழகெனும் ஓவியம் இங்கே-அதை
எழுதிய ரதிவர்மன் எங்கே?
இலக்கிய காவியம் இங்கே-அதை
எழுதிய பாவலன் எங்கே?

4. பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்-ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகைபோல் மனதில் வாழும்
மழலைக்காகப் பாடுகிறேன்! நான் பாடுகிறேன்