PDA

View Full Version : அனைவர்க்கும் இனிய நவராத்திரி வாழ்த்துக&#



Russellutp
23rd September 2014, 06:04 PM
அனைவர்க்கும் இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்

http://eluthu.com/user/greetings/largecards/Navratri0.jpg

பெண் தெய்வங்கள் 9 இரவுகள் கடுமையான விரதம் இருந்து அசுரர்களை வதம் செய்தனர்.அனைத்து பெண் தெய்வங்களும் இனைந்து வதம் செய்வதற்காக உருவாக்கபட்டவரே பரலக்ஷ்மி. இந்த பரலக்ஷ்மியைதான் ராதா என்று அழைக்கிறார்கள்.பரலக்ஷ்மி என்பதில் பரா என்றால் சுப்பீரிம் என்று பொருள்படும்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோம்பர் மாதங்களில் நமது தேவியர்களின் வம்சாவளியை போற்றும் விதமாக நவராத்திரிவிழா கொண்டாடபட்டு வருகிறது.இந்த 9நாட்களிலும் இரவு நேரத்தில் துர்கையை வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டில் அலைமகள்,மலைமகள்,கலைமகள் ஆகிய மூவரின் முன்னிலையில் தான் 9நாட்களிலும் விரதம் மேற்கொள்கின்றனர்.விரதம் மேற்கொள்ளும் போது மனிதர்களின் தீய குணங்களான வெறுப்பு,பொறாமை,அறியாமை,பேராசை,போன்ற அனைத்து குணங்களையும் மனதில் இருந்து நீக்கி விட வேண்டும். 9தாம் நாள் தான் அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இது தெய்வங்களின் ஜோதிட முறைப்படி ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.நவராத்திரி பூஜை மாங்கல்யம் ஆனவர்களாள் கொண்டாடபடுகிறது.அதன் பின்பு நிலா வளம் வருகிறது

http://eluthu.com/user/greetings/largecards/Navratri-Tamil0.jpg

பெண் தெய்வங்களின் 3 முக்கிய நிகழ்வுகள்:
9நாட்களிலும் இரவு நேர வழிபாட்டில் தங்களுடைய குறைகள்,நன்மைகள்,தீமைகள் அனைத்தையும் சமர்பிக்கின்றனர்

முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு:
துர்க்கை வழிபாட்டில் நோய்கள்,கிரக சூழ்நிலை,ஜோதிட தாக்கங்கள் ஆகியவற்றை -குறிப்பிடுகின்றனர்.

நடுவில் உள்ள 3 இரவும் லக்ஷ்மி வழிபாடு:
லக்ஷ்மி வழிபாட்டில் வற்றாத செல்வம் மற்றும் மனவளம் வேண்டும் என சமர்பிக்கின்றனர்

வேத ஜோதிடத்தின் படி லக்ஷ்மி வீனஸ் கிரகத்திற்கு அதிபராக வளம் வருகின்றார்.அதனால் நம் வாழ்வின் இன்பத்திற்கும் வசதிகளுக்குக்காகவும் வேண்டிகொள்ளலாம்

கடைசி 3 இரவுகளில் சரஸ்வதி வழிபாடு:
அறிவு,ஆற்றல்,தீய சக்திகளை எதிர்க்கும் தன்மைகாக வேண்டி கொள்ளலாம்.சரஸ்வதி கிரகத்திற்கு அதிபராக இல்லாமல் இருந்தாலும் ஆற்றல்,பாகுபாடு போன்றவைகளில் வல்லவராக விளங்குகிறார்