PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

Richardsof
29th November 2014, 09:09 AM
http://i61.tinypic.com/1584d1g.jpg

Richardsof
29th November 2014, 09:10 AM
http://i58.tinypic.com/2nqf9dl.jpg

Richardsof
29th November 2014, 09:11 AM
http://i61.tinypic.com/2hmgbig.jpg

vasudevan31355
29th November 2014, 09:13 AM
'காற்றினிலே வரும் கீதம்' கதை வாசித்து பாராட்டிய நல்மனங்கள் கல்நாயக் (சார் போடவில்லை. போதுமா நாயக்!) கிருஷ்ணா, முரளி சார், கலைவேந்தன் சார், ரவி சார் அனைவருக்கும் நன்றி.

Richardsof
29th November 2014, 09:15 AM
http://i60.tinypic.com/sltlpy.jpg

Richardsof
29th November 2014, 09:16 AM
http://i60.tinypic.com/10diq0i.jpg

vasudevan31355
29th November 2014, 09:34 AM
அன்பு நண்பர் கலைவேந்தன் சார்,

தாமத பதிலுக்கு மன்னிக்கவும். சற்று பிஸி. தங்கள் பொன்னான நேரத்திலும் கூட எங்கள் விருப்பப்படி மதுர கானங்களை சுவைக்க வருவது ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது.

நீங்கள் என்னதான் சொன்னாலும்

'உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே'

என்று யாரையோ தேடிக் கொண்டு

கூண்டுக்கிளி' பறவை எப்போது வெளிவரும்?

என்று காத்துக் கொண்டு

'கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ'

என்று ஏக்கம் கொண்டு

'கோபாலன் எங்கே உண்டோ கோபியர் அங்கே உண்டு கிருஷ்ணாரி ராமாரி'

என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டு

இருப்பதை நாங்கள் அறியவில்லை என்று நினைக்க வேண்டாம். 'பொறுப்பாக மாட்டேன்' என்று தட்டிக் கழிக்க முயற்சித்தால் ஏற்றுக் கொள்ளப்படாது. அவ்விடமும் அதே ஏக்கம்தான்.:) அது கைபேசியில் என்னிடம் பேசும் போதே தெரியும். முதல் வார்த்தை 'எப்படிடா இருக்கே? அடுத்த வார்த்தை 'கலை அப்படி... கலை இப்படி... அப்புறம் கலை எப்படி? என்று எப்போதும் கலை புராணம்தான் தான். நானே இரண்டாம் பட்சம்தான். எனக்கே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கும். ஆமா. நீங்க வச்சி இருக்கிற வசிய மருந்து பெயர் என்ன?:)

தங்கள் பதிவுகள் எங்களை மேலும் மேலும் உற்சாகப் படுத்துகின்றன கலை சார். தாங்களும் அடிக்கடி பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

நன்றி!

rajeshkrv
29th November 2014, 09:53 AM
வணக்கம் வாசுஜி

காலை வணக்கம்

Richardsof
29th November 2014, 09:57 AM
ஒருவரின் அராய்ச்சி கட்டுரைகள் இந்த பெட்டியில் உள்ளதால்
அதை என்ன செய்வது என்று தெரியாமல் ''ஆராய்ச்சின் நாயகன்''
சுமக்க முடியாமலும் , தூக்கி வீச முடியாமலும் உள்ளது போல்
காட்சி தருகிறது - இந்த நிழற் படம் இல்லையா வாசு சார் ?

http://i57.tinypic.com/ea5nat.jpg

rajeshkrv
29th November 2014, 11:03 AM
https://www.youtube.com/watch?v=zHqj-GWDHUY

https://www.youtube.com/watch?v=bveHTadaJc4

gkrishna
29th November 2014, 11:54 AM
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம் (நவ.29- 1908)

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Nov/fdbdbc11-653e-44f7-84f7-3741fee81c2b_S_secvpf.gif

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார்.

அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936-களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார். இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர்.

நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப் படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர். அண்ணல் காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர்.

அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 49-வது வயதில் கலைவாணர் மறைந்தார். தமிழ்நாடு அரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது.

இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.

http://www.youtube.com/watch?v=k3q6RCSyWMk

gkrishna
29th November 2014, 12:13 PM
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

Posted Date : 08:52 (29/11/2013)Last updated : 08:33 (29/11/2014)- ஆனந்த விகடன்

நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு...

நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்
டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.

நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்

திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு "இவன் என் நாடக கம்பெனி ஆள் !"என்றவர் என்.எஸ்.கே.

இதே போன்று ஒரு காட்சி லிங்குசாமியின் ஆனந்தம் திரை படத்தில் 2000 களில் இடம் பெற்றது. மம்மூட்டி தன வீட்டுக்கு திருட வரும் திருடனை தனது பலசரக்கு கடையில் வேலைக்கு சேர்த்து கொள்வார் -இது கிருஷ்ணாவின் செருகல்

இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.

சீர்திருத்த கருத்துக்களை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டுஉழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று

அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.

என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .

என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்

என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி

"நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? "என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.
அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு

ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று

சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.

பூ.கொ. சரவணன்

http://www.vikatan.com/news/images/ns_29_2.jpghttp://www.vikatan.com/news/images/ns_29_3.jpg

vasudevan31355
29th November 2014, 12:17 PM
அன்பு முரளி சார்,

நன்றி! 'காற்றினிலே வரும் கீதம்' படத்தை நீங்கள் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டது சுவை. கவிதா 'அந்தமான் காதலி' படத்தில் நடிகர் திலகம் வளர்ப்பு மகளாக நன்றாகவே செய்திருப்பார்.

கடலூர் பாடலி திரையரங்கும், அது செய்த அக்கிரமங்களும்

http://i.ytimg.com/vi/EsxdeG2boLk/0.jpg

26.1.1978 அன்று கடலூர் பாடலியில் 'அந்தமான் காதலி' ரிலீஸ். 10.11.1977 தீபாவளி அன்று 'அண்ணன் ஒரு கோவில்' நியூசினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது. கடலூர் பாடலி திரை அரங்கில் அதற்கு முன் 'டாக்டர் சிவா' (2.11.1975) வெளியாகி இருந்தது. அதற்கு பிறகு 'அந்தமான் காதலி' தான். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக பாடலியில் நடிகர் திலகம் படம் எதுவும் வெளியாகவில்லை. அதனால் பாடலி அரங்கு திருவிழாக் கோலம் பூண்டு விட்டது. வழக்கமான ஆர்ப்பாட்டங்களையும் மீறி இன்னும் இன்னும் அதம் பறந்து கொண்டிருந்தது. ரூபாய் 1.10 கவுண்ட்டரில் நீண்ட கியூ. ஒருத்தரையொருத்தர் முண்டியடித்துக் கொண்டு நிற்கிறோம். போலீஸ் வேறு. எனக்கோ மனதில் முக்தா படம்தானே என்று அவ்வளவாக இன்ட்ரெஸ்ட் இல்லை. டைட்டில் வேறு தலைவரை சாராமல் நாயகியின் புகழ் பாடியதால் இன்னும் எரிச்சல். ஒருவழியாக நெருக்கி சட்டை கசங்கி போய் நண்பர்கள் நாங்கள் ஒரு முப்பது பேர் வரிசையாக இடம் பிடித்து உட்கார்ந்தோம். எடுத்தவுடனேயே படத்தைப் போட்டு விட்டார்கள். தினசரி 5 காட்சிகள். காலை 9 மணி காட்சி நாங்கள் பார்க்கிறோம். படம் ஆரம்பித்தவுடனே பரபரப்பு தொற்றிக் கொண்டது. அப்புறம் காட்சிக்கு காட்சி கைதட்டல் கிழிகிறது. எதிர்பார்த்ததை விடவும் திருப்தி. படத்தின் கதையும், தலைவருக்கு அல்வா சாப்பிடுவது போன்ற கேரக்டரும் இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன. சுஜாதா வேறு நெஞ்சில் நிலைத்து விட்டார். அப்போதெல்லாம் 'அந்தமான் காதலி' அஞ்சலிதேவி தலைவரை வைத்து முன்னால் எடுத்த 'பரதேசி' படத்தின் மூலம் என்றெல்லாம் தெரியாது.

சுஜாதாவிடம் தலைவர் செய்யும் காதல் குறும்புகள், பணத்தை மையமாக வைத்து நடிகர் திலகம் பேசும் வசனங்கள், சுஜாதாவிடம் சவால், அத்தனைப் பாடல் காட்சிகள் குறிப்பாக தலைவர் புகுந்து விளையாடிய 'பணம் என்னடா பணம் பணம்' நடிப்பு விளையாட்டுக்கள். 'ஹா' எனும் போது தியேட்டர் ரெண்டுபட்டது. (இப்பாடலின் இடையில் ஒரு காட்சியில் கால்களை வலி பொறுத்துக் கொண்டு மிகவும் தாங்கி தாங்கி கையில் ஸ்டிக் கொண்டு சமாளித்து ந(டி)டப்பார். ரொம்ப பாவமாக இருக்கும்.) என்று படம் நெடுக ஒரே ஆரவாரக் கூச்சல்கள்தான்.

திலகத்தின் சூப்பர் விளக்கக் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AndhamaanKaadhali-wwwdragonz-prscom-cd2avi_001782248.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AndhamaanKaadhali-wwwdragonz-prscom-cd2avi_001782248.jpg.html)

('நினைவாலே சிலை செய்து' பாடலில் யானைகள் பெரிய மரத் துண்டுகளை தும்பிக்கைகளில் சுமந்து போகும். அப்போது சுஜாதாவிடம் தலைவர் அதை காண்பிப்பார். அப்போது அந்த யானைகள் தும்பிக்கையால் மரக் கட்டைகளை மேலே தள்ளி உருட்டுவது போலவே ஒரு அருமையான பாவத்தை அப்படியே நடிகர் திலகம் ஒரு செகண்ட் சுஜாதாவிடம் செய்து காண்பிப்பார் பாருங்கள். அடடா! காணக் கண் கோடி வேண்டும். இந்தக் காட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும்) படம் இடைவேளையின் போதே மாபெரும் வெற்றி என்று தெரிந்து விட்டது. எல்லோரும் இடைவேளையில் டீ கூடக் குடிக்காமல் படத்தைப் பற்றியும், நடிகர் திலகத்தைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் ஒரு சிறு ஏமாற்றம். 'அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி' பாடல் நடிகர் திலகத்திற்குத் தான் என படம் பார்க்கும் முன் நினைத்திருந்தோம். டி .எம் .எஸ். அவர்களும் கிட்டத்தட்ட தலைவருக்கு பாடியிருப்பது போலவே இந்தப் பாடலைப் பாடி வேறு இருந்ததால் மிகவும் எதிர்பார்த்தோம். அருமையான பாடல். ஆனால் பாடல் சந்திரமோகனுக்குப் போனது செம ஷாக். (அந்த ஆத்திரம் 'திரிசூலம்' படத்தில் 'என் ராஜாத்தி வாருங்கடி' பார்த்து தான் தணிந்தது)

படம் முடிந்து ஆர்ப்பாட்டக் கூக்குரலிட்டபடியே நம் ரசிகர்கள் வெளியே ஓடி வந்து ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து அப்படியே 'அலாக்'காகத் தூக்கி சுற்றிக் கொண்டனர். ஒவ்வொருவர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம் குடிகொண்டது. அடுத்த காட்சி 12 மணிக்கு. பாடலி தியேட்டரே தெரியவில்லை. அந்த அளவிற்குக் கும்பல். கியூவில் நிற்கும் ரசிகர்கள் படம் பார்த்து விட்டு வரும் எங்களை 'படம் எப்படி'? என்று ரிசல்ட் கேட்க, நாங்கள் எல்லோரும் கட்டை விரலை உயர்த்தி 'ஓகோ' என்று சொல்ல அந்த ரசிகர்கள் மத்தியில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம். இன்னும் கும்பல் நெருக்க ஆரம்பித்தது. ஐந்தே நிமிடங்களில் 'ஹவுஸ்புல்' போர்ட். என்ன விசேஷம் தெரியுமா? தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அத்தனை காட்சிகளும் அதே போல மிக வேகமாக அரங்கு நிறைந்தன. தாய்மார்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. சில காட்சிகள் தாய்மார்களுக்கு என்றே டிக்கெட் முழுதுமாக ஒதுக்கப்பட்டது. தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் இரண்டும் ஆண்களுக்குக் கிடையாது. பெண்களுக்கு மட்டுமே.

முப்பத்து ஏழு நாட்கள் ஓடி அபார வெற்றி பெற்று அடுத்தடுத்து வந்த நடிகர் திலகம் படங்களில் பெரும்பாலானவற்றை பாடலி நிர்வாகமே திரையிட்டு வெற்றிக் களிப்பில் மிதந்தது. அதற்கு மீண்டும் அடித்தளமிட்டது 'அந்தமான் காதலி'. அதிலிருந்து பாருங்கள். 'அந்தமான் காதலி' கடைசி (3.3.1978) நாளில் கூட ஈவ்னிங் ஷோ, நைட் ஷோ ஃபுல் போர்ட் விழுகிறது. ஆனால் அடுத்த நாள் பாலாஜி 'தியாகத்'தை (அதாவது மார்ச் 4) வெளியிட்டு பாவத்தைக் கட்டி கொள்கிறார். இதே பாடலியில் 'தியாகம்' ரிலீஸ். 'அந்தமான் காதலி'அபார வெற்றி பெற்று நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் போது கூட படத்தைத் தூக்கி விட்டு பாடலி நிர்வாகம் 'தியாக'த்தைப் போட, அதுவும் பேய் வெற்றி அடைகிறது. இத்தனைக்கும் 19 ம் தேதி அதே மார்ச் 'என்னைப் போல் ஒருவன்' வேறு நியூசினிமாவில் ரிலீஸ். விட்டால் அதையும் பாடலி நிர்வாகம் பிடித்திருக்கும். நல்ல வேளை. 16 நாட்களே இடைவெளி என்பதால் நாங்கள் தப்பித்தோம்.

50 நாட்கள் ஈஸியாகப் போய் இருக்க வேண்டிய 'அந்தமான் காதலி' தியாகத்தின் குறுக்கீட்டு வெளியீட்டால் 37 நாட்களே போக வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. காலக் கொடுமை.

அதே போல 'தியாகம்' வெகு இலகுவாக 50 நாட்களைத் தொட்டிருக்க வேண்டியது. அதையும் 'என்னைப் போல் ஒருவன்' வந்து கெடுக்கிறது. அதையும் மீறி 'தியாகம்' படத்திற்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. அதே கூட்டம் 'என்னைப் போல் ஒருவனு'க்கும் போகிறது. கூட்டம் கொஞ்சமும் குறையாமல் இருக்கும் போதே 'தியாகம்' இருபத்து எட்டு நாட்களில் எடுக்கப்படுகிறது. என்ன காரணம் என்றே இதுவரை தெரியவில்லை. தியேட்டர் சிப்பந்திகளைக் கேட்டால் 'தியாகம்' வசூலை வாரிக் குவித்து விட்டது... போதும் என்று எடுத்து விட்டார்கள்' என்று கூறி கடுப்பைக் கிளப்புகிறார்கள். இதே பாடலியில் அடுத்த படமான 'புண்ணிய பூமி' மே 12 அன்று ரிலீஸ். ஏமாற்றம் தந்தது.

உடனே ஜூன் 16 இல் 'ஜெனரல் சக்கரவர்த்தி' மீண்டும் இதே பாடலியில். (இதிலும் நடிகர் திலகத்தின் மகளாக கவிதா. நடிகர் திலகம், கவிதா இணைந்தால் சூப்பர் ஹிட் என்று மீண்டும் நிரூபணம் ஆனது .) மறுபடி சரித்திரம் படைக்கிறது. சூப்பர் டூப்பர் ஹிட். எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றி. பம்பர் பரிசு. பாடலி நிர்வாகம் சலிக்காமல் 'எல்லா சிவாஜி படங்களும் எனக்கே' என்று போட்டி போட்டு கடலூரின் எந்தத் தியேட்டர்களை விடவும் அதிக விலை கொடுத்து நடிகர் திலகம் படங்களை வாங்கிக் குவித்து வசூலையும் குவிக்கிறது. ஆனால் அதே சமயத்தில் மிக நன்றாகப் படம் போய்க் கொண்டிருக்கும் போதே படத்தைத் தூக்கவும் செய்கிறது. ஒரு புறம் சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு புறம் ஆத்திரமாக வருகிறது.

அடுத்த படமான 'தச்சோளி அம்பு' மலையாளம் கடலூரில் வெளியாகவில்லை. பின்னால் ஒருமுறை 1981 என்று நினைவு கடலூர் ஐ.டி.ஐ மாணவர்கள் நாங்கள் அனைவரும் சைக்கிளிலேயே பாண்டி சென்று பாலாஜியில் அதைப் பார்த்து விட்டு வந்தோம். இன்றும் என்னுடைய நண்பர்கள் அதைப் பற்றி போனில் பேசி மகிழ்ந்து, நினைவு கூறி உரையாடுவது உண்டு.

1978 ன் தீபாவளி விருந்தான 'பைலட் பிரேம்நாத்' (28.10.1978) கடலூர் பாலாஜி திரையரங்கில் வெளியாகி கொட்டும் மழையில் வசூல் மழை பொழிந்து சாதனை சரித்திரம் படைக்கிறது. இந்தப் படத்தை வாங்க பாடலி நிர்வாகம் எவ்வளவோ போட்டி போட்டும் பாலாஜி நிர்வாகமே இறுதியில் வெற்றி பெற்றது. இத்தனைக்கும் பாலாஜி தியேட்டர்தான் அப்போது கடலூரில் ஏ.ஒன். பாடலி ரொம்ப சுமார்தான். அதே தீபாவளிக்கு வெளியான ஜெயசங்கரின் 'வண்டிக்காரன் மகன்' முத்தையாவில் சக்கை போடு போடுகிறது. 'பைலட்'டை பிடிக்க முடியாமல் திரும்புபவர்கள் எல்லாம் 'வண்டிக்கார'னைப் பிடிக்கிறார்கள்.

அடுத்த நடிகர் திலகத்தின் படமான ஜஸ்டிஸ் கோபிநாத்தை (16.12.1978) நியூசினிமா போட்டி போட்டு வாங்கி வெளியிடுகிறது. ஆஹா என்றுமில்லை ஓஹோவென்றுமில்லை. கையைக் கடிக்கவும் இல்லை. சுமாரான வெற்றி. 4 வாரங்கள் போனது. 'விமானி'யை 'நீதிபதி' அந்த அளவிற்கு வெற்றி கொள்ள முடியவில்லை. பின்னால் வந்த பாலாஜியின் 'நீதிபதி' (26.01.1983) இரண்டையும் வென்று வெள்ளி விழாக் கொண்டாடினார் என்பது வேறு கதை

இதையெல்லாம் பார்த்த பாடலி நிர்வாகம் அடுத்து வந்த எமப் படமான, நடிகர் திலகத்தின் 200 ஆவது படமான 'திரிசூல'த்தை விடுவதாவது என்று பலத்த போட்டிக்கிடையில் 'திரிசூல'த்தைப் பெற்று (26.01.1979) மீண்டும் பணத்தைக் கூடை கூடையாக கல்லாவில் ரொப்பிக் கொண்டது. (தன் திரையரங்கு வாழ்க்கையில் அதிக வசூல் பெற்ற படம் என்ற சாதனையைத் தக்க வைத்தும் கொண்டது அதனுடைய வாழ்நாள் வரை. இன்று அந்த தியேட்டர் இடிக்கப்பட்டு விட்டது.)

'திரிசூலம்' படத்தின் வெற்றி விவரத்தை இப்போது எழுதினால் என்னை அடிக்கக் கூட வந்து விடுவீர்கள். பூக்கடைக்கு எதற்கு விளம்பரம்? 'திரிசூலம்' பண்ணின களேபரத்திற்கு கண்டிப்பாக பாடலியில் நூறு நாட்கள் நிச்சயம் என்று முடிவு செய்து விட்டோம். ஒவ்வொரு நாளும் கூட்டம் ஜாஸ்தியாகிறதே தவிர குறைந்த பாடில்லை. நாங்கள் அங்கேயேதான் கிடக்கிறோம். திருவிழாதான். தினம் தினம் திருவிழாதான். பாடலி நிர்வாகமே பொது மக்கள் பார்வைக்கு தியேட்டரின் வெளியே தினம் தினம் வசூல் போர்டு வைக்கிறது. இந்த சாதனை இதுவரை வேறு எந்தப் படத்திற்கும் செய்யப்பட்டது இல்லை. 'படம் பெரிதாகையால் காட்சிகள் முன்னமே ஆரம்பிக்கப்படும் 'என்ற போர்ட் அகற்றப்படவே இல்லை படம் எடுக்கும் வரை.

5.4.1979 அன்று 'திரிசூலம்' அத்தனை காட்சிகளும் ஃபுல். ஆனால் அடுத்த நாள் ஆறாம் தேதி இதே பாடலி நிர்வாகம் பேராசைப்பட்டு 'கவரிமான்' படத்திற்காக திரிசூலத்தை தூக்கிவிட்டது வழக்கம் போல். 'கவரிமான்' ஆறாம் தேதி ரிலீஸ் ஆகிறது. எங்கள் எல்லோருக்கும் கோபமான கோபம். அநியாயமாக 100 நாட்கள் போய் இருக்க வேண்டிய படத்தை இப்படி ஆக்கி விட்டார்களே என்று. சரியாக 70 நாட்களில் 'திரிசூலம்' எடுக்கப்பட்டு 'கவரிமான்' போடப்பட்டு விட்டது. இந்த அநியாயத்தை எங்கு போய் சொல்ல? பாடலி நிர்வாகம் அது நினைத்தது போலவே 'கவரிமான்' படத்திலும் நல்ல வசூல் பார்த்தது. ஆம். கடலூரில் அட்டகாசமாகப் போனது 'கவரிமான்'.

முரளி சார்,

வளர்ந்து கொண்டே போகிறது. பிறகு ஒருமுறை தொடர்கிறேன்.

உங்கள் நினைவலைகளை நான் அந்த நாட்களுக்கே அழைத்துச் சென்றதாக தாங்கள் எழுதி இருந்தீர்கள். அதே குதூகலிக்கச் செய்யும் குற்றச்சாட்டை உங்கள் மீது வைக்கிறேன்.:) நீங்கள் என்னை அந்த 1978, 1979 இரண்டு ஆண்டுகளுக்கே அழைத்து... இல்லை... இழுத்துச் சென்று விட்டீர்கள். எல்லாம் கண் முன்னே படமாக ஓடுகின்றன. அப்படியே அனைத்து கடலூர் தலைவர் பட நிகழ்வுகளையும் இப்போதுதான் பார்ப்பது போல் இருக்கிறது.

என்ன மாதிரி நாட்கள்! என்ன இன்பம்! எத்தனை மகிழ்ச்சி! இப்போது என் கண்களில் ஏனோ ஒரு நீர்த்துளி.

எப்படி 72 ஐ மறக்கமுடியாதோ அப்படியே 78 ஐயும் மறக்கவே முடியாது. அது 'சுனாமி' என்றால் இது 'தானே'

இந்த வசூல் புயல்களுக்கெல்லாம் நிரந்தர சொந்தக்காரர் நம் இதயதெய்வம் அல்லவோ!

நன்றி முரளி சார்.

gkrishna
29th November 2014, 12:18 PM
தீனா - மூனா - கானா - எங்கள் தீனா - மூனா - கானா அறிவினைப் பெருக்கிடும். உற வினை வளர்த்திடும் திருக்குறள் முன்னணிக் கழகம் (தீனா...)

பகுத்தறிவோடு நாட்டினர் வாழ திருக்குறள் தந்தவர் பெரியார்.

வள்ளுவப் பெரியார்! தங்கைகளுக்கு ஒரு தமக்கையைப்போலே,

தம்பியோருக்கொரு அண்ணாவைப் போலே

சரியும், தவறும் இதுவெனக் காட்டும்

தமிழன் பெருமைகளை நிலைநாட்டும்

தீனா - மூனா - கானா

ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த என் எஸ் கே அவர்களின் சூப்பர் பாடல்

chinnakkannan
29th November 2014, 01:10 PM
குட் மார்னிங்க் ஆல்
//நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த
தமிழ்மாலை தனைச் சூடுவான்-----// ரவி. ஜி.. இது போல் நான் எப்போது பாடல் எழுதுவேன்.. தங்கள் பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி.. அடுத்த பதிவில் வருத்தமும் பட்டிருந்தீர்கள்..அதுவும் நல்லதே.. வேறு எழுத யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.. எதிர்பார்க்கிறேன்/ றோம்..

என்.எஸ்.கே நினைவலைகள் அருமை கிருஷ்ணா ஜி. அம்பிகாபதியா.. தேனே உந்தனை நான் தேடிவந்தேனே.. பாட்டு நினைவுக்கு வருகிறது..இன்னொரு படத்தில் புறா தோளில் இருக்க காம்பவுண்டின் அந்தப்புறம் ஹீரோயின்.. இவர் புறாவை மட்டும் பிடிப்பதற்கு அலைவது..மாடியிலிருந்து பார்க்கும் மனைவிக்கு (மதுரம்) இவர்கள் இருவரும்சேர்ந்து விளையாடுவது போல் தெரிய.. பின் தொடரும் நகைச்சுவை..(என்னபடம் மறந்து விட்டது)

வாசு சார்.. ம்ம் பாடலி திரையரங்கின் நினைவலைகள் குட். எனக்கு அந்த அளவுக்கு புள்ளிவிவரம் தர இயலாது..அந்தமான் காதலி சினிப்ரியா பின் சாந்தியில் வந்ததாக நினைவு.. அப்போது பார்க்க முடியாமல் வெகு காலத்திற்குப் பின் வீடியோவில் பார்த்ததாய் நினைவு… நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடிவா மிகப் பிரபலம்..பலவித கெட் அப்கள் சிவாஜிக்காகப் போட்டுப் பார்த்து கடைசியில் மீசை இல்லாமல் அந்த கெட் அப் பொருந்திப்போனதாக ஒரு பத்திரிகையில் யாரோ கூறியிருந்த நினைவு.. யாரென்று மறந்து விட்டது.. மற்ற படங்கள் மதுரையில் வந்த தியேட்டர்கள் சொல்லலாம்.. தியாகம் சிந்தாமணி. கவரிமான் ஸ்ரீதேவி, ஜெனரல் சக்ரவர்த்தி அலங்கார், பைலட் ப்ரேம் நாத் சென் ட்ரல், ஜஸ்டிஸ் கோபி நாத் சினிப் ப்ரியாவோ மினிப்ப்ரியாவோ, திரிசூலம் சிந்தாமணி, அண்ணன் ஒருகோவில் நியூசினிமா, ம்ம்..

Murali Srinivas
29th November 2014, 03:37 PM
வாசு,

நான் 1978-ன் ஆரம்பத்தை மட்டும்தான் குறிப்பிட்டேன். நீங்கள் மொத்த வருடத்தையும் அலசி விட்டீர்கள். அதுவும் அருமையான தகவல்களோடு.

உண்மை. 1978-ம் நமக்கு மற்றொரு 1972 போலதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதே 1977 - 1978 பற்றி, அண்ணன் ஒரு கோவில் வெளியீட்டில் ஆரம்பித்து மே மாதம் வரை நடந்த விஷயங்களைப் பற்றி ஒரு பதிவும் பின் தியாகம் மதுரையில் ஓடிய 175 நாட்களைப் பற்றி நான் எழுதிய பதிவும் நினைவிற்கு வருகிறது.

நீங்கள் சொன்னது போல் அனைத்தும் அற்புதமான தருணங்கள். அது போன்ற தருணங்களை உருவாக்கவும் முறியடிக்க முடியாத சாதனைகளை படைப்பதற்கும் நடிகர் திலகத்தால் மட்டும்தானே முடியும்!

அன்புடன்

கண்ணா,

நீங்கள் போட்ட படங்களும் அவை வெளியான தியேட்டர் லிஸ்டும் சரியானவைதான். நான் மதுரைக் கல்லூரி இல்லை. அமெரிக்கன்!

sss
29th November 2014, 04:52 PM
அன்புள்ள நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள் :

கீழ் கண்ட படங்களின் பாடலாசிரியர்கள் யார் என்பதைத் தெரியப் படுத்த வேண்டுகிறேன்...

இனிக்கும் இளமை - எம்.எ.காஜா மற்றும் ??? (http://spinningwax.ecrater.com/p/2702232/bollywood-indian-inikkum-ilamai-shankar#)
பௌர்ணமி நிலவில்
மாம்பத்து வண்டு
கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

எனது நண்பர் ஒருவர் இந்த காலத்து பாடல்களைத் தொகுத்து வருகிறார் , அவருக்கு தேவைப்படும் சமாசாரம்....
நன்றி

kalnayak
29th November 2014, 05:04 PM
வாசு, உங்களுடைய 'அந்தமான் காதலி' அனுபவம் வழக்கம் போல் சுகம். நான் பின்னாளில் டீ.வி.யில்தான் பார்க்க முடிந்தது. தியாகம், மதுரை சிந்தாமணியில் அம்மா அழைத்துக்கொண்டு போய் பார்த்திருக்கிறேன். திரிசூலம் கடலூர் பாடலியில் அப்பாவோடு. பைலட்டை கடலூர் ரமேஷில் (பாலாஜி - இதுவும் இப்போது இல்லையெனத் தெரியும்) பார்த்தேன். எனக்கும் மிகப்பிடித்த திரையரங்கம். முதலில் பைலட்டிற்கு டிக்கட் கிடைக்காமல் ஓ.டி கமரில் சிவகுமாரின் 'கண்ணாமூச்சி' பார்த்தோம். அசோகன் பூதமாக நடித்திருப்பார். ஆமாம் இந்த படத்தோட பாடல்களை இங்கே அலசியாச்சா?
சின்னக் கண்ணன் நீங்க இந்த படத்தை பாத்திருந்தா/தெரிஞ்சிருந்தா எங்கே சொல்லுங்க பார்ப்போம். மாட்டினீங்களா!!!
விட்டால் இப்படியே என்னை எழுத வைச்சுடுவீங்க. நான் ரவியோட பதிவெல்லாம் படிச்சு லைக் போடணும். கோச்சுக்கறார்.

chinnakkannan
29th November 2014, 05:35 PM
hi kalnayak sir. kanna moochi as usual it came in Madurai Sridevi. sivakumar heroine pEr maranthu pOche..ashokan bootham yes..oru pugaiyaa irukku.. ezhuthunga..Oy.. I think heroine is sangeetha isnt it. sorry my tamil font not working now..Oh American aa murali sir..good..

uvausan
29th November 2014, 05:41 PM
நான் ரவியோட பதிவெல்லாம் படிச்சு லைக் போடணும். கோச்சுக்கறார்.

கல்நாயக் : நான் என் பதிவுகளை படிச்சு லைக் போடணும் என்று உங்களை கேட்டுக்கொள்ளவில்லை - நீங்கள் லைக் பண்ணும் மாதிரி நான் பதிவுகள் போட வேண்டும் என்ற அர்த்தத்தில் எழுதி இருந்தேன் - பாருங்கள் - எவ்வளவு வித்தியாசம் , நான் சொல்ல வந்ததிற்கும் , நீங்கள் புரிந்து கொண்டதிர்க்கும் --- அது சரி உங்கள் நகைச்சுவை அரும்பிய பதிவுகள் இந்த திரியில் இடம் பெறாதா ??
:smokesmile::smokesmile:

RAGHAVENDRA
29th November 2014, 05:54 PM
வாசு சார் முரளி சார்
இருவருமே 1978 1979 கால கட்டத்தை மிகச் சிறப்பாக நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள். நடிகர் திலகத்தின் திரையுலக வாழ்க்கையில் இன்னொரு வெற்றி இன்னிங்ஸ் தீபம் மூலம் தொடங்கிய கால கட்டம். நடிகர் திலகத்தின் படம் என்ற வகையில் தீபத்தின் வெற்றி சந்தோஷத்தைத் தந்தாலும், நம்மைப் போன்ற ரசிகர்களின் லட்சியப் படமான அவன் ஒரு சரித்திரத்திற்கு வில்லனாக வந்தது மன்னிக்கவே முடியவில்லை. இன்று வரை நம் நினைவில் இதை நினைத்தால் ஒரு லேசான சோக இழை ஓடுகிறது.
இந்தக் கால கட்டங்களில் புதிய தலைமுறை ரசிகர்கள் நடிகர் திலகத்திற்கு உருவானதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன். அது விஸ்வரூபம் எடுத்தது திரிசூலம் படம் மூலம் தான்.
அந்தமான் காதலி படத்தைப் பொறுத்தமட்டில் சென்னை நகர விநியோகஸ்தர்களின் அலுவலகத்திற்கு நாங்கள் நடந்த நடையை அளந்தால் சென்னையிலிருந்து டில்லிக்கு நடையாகவே சென்று திரும்பியிருக்கலாம். ஆனால் அவர்களை மிகவும் பாராட்ட வேண்டும். எங்களுக்கு மிக நன்றாக ஒத்துழைப்புத் தந்து விளம்பரங்களைப் பதிவிட்டார்கள். அது மறக்க முடியாத அனுபவம். சென்னைப் பதிப்பில் வரும் விளம்பரமே எல்லா ஊர்களுக்கும் வரும் என்பதால் எங்களுக்கு பன்மடங்கு மகிழ்ச்சி. இனனும் சொல்லப் போனால் ஒரு சந்தர்ப்பத்தில் வாசகங்களைக் கூட நாங்களே அவர்களின் அலுவலகத்தில் எழுதிக் கொடுத்து அது பிரசுரமானதும் நடைபெற்றுள்ளது.

இதை எழுதும் இந்த ரசிகருக்கும் தீவிர சிவாஜி பைத்தியம் தொற்ற ஆரம்பித்ததும் இக்காலகட்டத்தில் தான்.

இது போன்ற மலரும் நினைவுகளை இன்னும் விஸ்தாரமாக கீற்றுக் கொட்டகையில் பகிர்ந்து கொள்வோம்.

RAGHAVENDRA
29th November 2014, 05:55 PM
கிருஷ்ணா
கலைவாணரின் நினைவை அருமையாக போற்றியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
29th November 2014, 05:56 PM
அன்புமிக்க சிக சார்
தங்கள் உடல்நிலை எவ்வாறுள்ளது.
உடல்நிலையை கவனிக்கவும்.
ராகவேந்திரன்

RAGHAVENDRA
29th November 2014, 05:57 PM
வினோத் சார்
அருமையான அதே சமயம் அபூர்வமான அந்நாள் நிழற்படங்கள் தங்களுடைய பங்களிப்பின் மேன்மையை உணர்த்துகின்றன.
மேலும் தங்கள் பொக்கிஷத்தை எங்களுக்காக திறவுங்கள்.

rajraj
29th November 2014, 06:16 PM
NSK sings about " test tube" babies in 1949 ? :)

vingnanathai vaLarkka poreNdi......

http://www.youtube.com/watch?v=nMBkOcKJSls

gkrishna
29th November 2014, 06:24 PM
http://wondersinthedark.files.wordpress.com/2013/02/1978.jpg?w=500&h=280

அன்பு முரளி சார்/வாசு ஜி /நண்பர் சி கே

வாசுவின் 'காற்றினிலே வரும் கீதம் ' பதிவு, முரளி சார்,மீண்டும் வாசு சார்,சி கே சார் பதிவுகளின் மூலம் மிக சிறந்த மலரும் நினைவுகளாக வாடா மலர் ஆக பரிமளிக்க செய்து விட்டது 1978 ஆம் ஆண்டு. 1978 ஆம் ஆண்டு ஆரம்பமே அமர்க்களம் . 1977 ஆம் ஆண்டில் தான் தேர்தல் முடிந்து மக்கள் திலகம் முதல்வராக பதவி ஏற்று கொண்டார். 1977 தீபாவளி மறக்க முடியாத அண்ணன் ஒரு கோயில், அதோடு வேடசந்தூர் புயல்,மேலும் நெருக்கடி நிலை தளர்வு காரணமாக கல்லூரியில் போராட்டங்கள் அதன் காரணமாக தேதி அறிவிக்கபடாமல் கால வரையற்ற கல்லூரி விடுமுறை ,அதனால் தள்ளி போன கல்லூரி முதல் செமஸ்டர் தேர்வுகள் எல்லாம் டிசம்பர் இல் முடிந்து 1978 ஆம் ஆண்டு பிறக்கிறது.எங்களுக்கும் இரண்டாம் செமஸ்டர் ஆரம்பம்

அப்போது எல்லாம் இப்போது போல் ஜனவரி முதல் தேதி கொண்டாட்டங்கள் என்பது எதுவும் கிடையாது. ஜனவரி பிறந்தால் பொங்கல் அதனை ஒட்டி வரும் 3 தினங்கள் விடுமுறை ,அதனால் வெளியாகும் திரைப்படங்கள் ,ஜனவரி 26 அன்று ஏதாவது கே பாலாஜியின் ஹிந்தி திரை படங்களை தழுவி எடுக்கப்பட்ட நடிகர் திலகதின் படம் இப்படி தான் கொண்டாட்டங்கள் இருக்கும். 1978 ஜனவரி பொங்கலுக்கு மக்கள் திலகத்தின் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் நெல்லை சென்ட்ரலில் ரிலீஸ் . இதனை MMS பாண்டியன் என்று அந்நாளில் சுருக்கி அழைப்பார்கள் 68 தினங்கள் ஓடியதாக கருதுகிறேன்.மெல்லிசை மன்னரின் இனிய கீதங்கள் 'அமுதும் தமிழும் எழுதும் கவிதை','தென்றலில் ஆடும் ','தாயகத்தின் சுதந்திரமே ' நிறைந்த படம்.மார்ச் 24 அன்று நிழல் நிஜமாகிறது ரிலீஸ்.மக்கள் திலக ரசிகர்கள் MMS பாண்டியன் 100 நாட்கள் ஓடாததால் கொஞ்சம் அப்செட். 1977 தேர்தல் கூட்டணியால் மக்கள் திலகம் நடிகர் திலகம் ரசிகர்கள் ஓரளவு ராசியாக இருந்த நேரம். மக்கள் திலகமும் திரை உலகை விட்டு முழு நேர அரசியல் வாதியாக மாறிய நேரம்
.
இந்த நேரத்தில் 26 ஜனவரி அன்று கே பாலாஜியின் திரை படத்தை எதிபார்த்து இருந்த எங்களுக்கு முக்தா ஸ்ரீனிவாசனின் 'அந்தமான் காதலி' நெல்லை பூர்ணகலாவில் ரிலீஸ் என்ற உ டன் கொஞ்சம் பயந்தோம். 1974 தீபாவளி வெளியீடு 'அன்பை தேடி' வெற்றியை தேட வேண்டியதாகி அதனால் 3 ஆண்டுகள் 75,76,77 நடிகர் திலகம் படம் எதுவும் எடுக்காமல் இருந்த முக்தா ஸ்ரீனிவாசனின் படம் என்ற உடன் ஒரு பயம். ஏற்கனவே கண் பார்வை போன காதலிகாக வருந்தும் நிறைகுடம்(நெல்லை ராயல்) ,மாலை கண் நோய் தவப்புதல்வன் (நெல்லை ரத்னா) ,கனவுலக மனநோய் அன்பை தேடி (நெல்லை பூர்ணகலா) என்று நோய் வாய்ப்பட்ட முக்தா படம் கொஞ்சம் நெல்லை ரசிகர்கள் அவ்வளவாக முக்தாவின் மீது நாட்டம் இல்லாமல் இருந்த காலம் .அதே 26/1/78 நாளில் கமலஹாசனின் பருவ மழை நெல்லை ரத்னாவில் ரிலீஸ் (மதனோற்சவம் மலையாள டப்பிங்).

முதல் காட்சி ரசிகர் மன்ற காட்சி வழக்கம் போல் நடிகர் திலகம் தரிசனம் கண்டு படம் நல்ல ரிசல்ட் என்ற களிப்புடன் மாலையில் திரை அரங்கின் வாசலில் நின்று வரிசையில் நின்று கொண்டு இருந்த மற்ற ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் படம் பற்றி சிலாகிக்து விட்டு இரவு காட்சி மதனோற்சவம் என்ற பருவ மழையில் நனைந்த மாட புறாவாக திரும்பினோம்.இரவு முழுவதும் சரீனா வாஹாப் (பருவ மழை கதாநாயகி) நினைவுடன் 'அடி லீலா கிருஷ்ணா ' என்று பாடல் அடிகடி நினைவுக்கு வந்து,
அதிலும் 'பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா' என்ற வரிகளிலும்

'பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்
ஏனடி அழகுப் பெண்ணே
பாராடி அபலைப் பெண்ணே
கையில் இல்லாத குற்றம் தானே
கேட்டாய் பொன்னை

அடி ரங்கன் சிங்கன் சுப்பன் வரிசையில்
என்னையும் சேர்த்தாயோ
நான் நாளது வரையில் ராதா கிருஷ்ணன்
சொன்னேன் கேட்டாயோ

பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா' வரிகளிலும்

மனதை பறி கொடுத்து பாட்டு புத்தகம் வாங்கி வாசு சொன்னது போல் சந்திர மோகனுக்கு பதிலாக நடிகர் திலகத்தை கற்பனை செய்தே பிற நண்பர்கள் உடன் பாடி கழித்த பாடல்.டி எம் எஸ் கொடி கொஞ்சம் தாழ்வாக பறந்த காலம் .அப்போது நெல்லையில் பாடகர்களுக்கு 3 குரூப் டி எம் எஸ் குழு,ஜேசுதாஸ் குழு,எஸ் பி பி குழு என்று நண்பர்களிடம் இருக்கும்.அதே போன்று இசையில் 'மெல்லிசை மன்னர்','இளையராஜா ' (இசை ஞானி,மொட்டை எல்லாம் 80 களுக்கு பின் தான் ).அந்தமான் காதலியில் எஸ் பி பி பாடல் இல்லை என்ற உடன் அந்த நண்பர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர்.

இதற்கிடையில் தியாகம் மார்ச் 4 அன்று நெல்லை பார்வதி ரிலீஸ்.தீபத்திற்கு பிறகு நடிகர் திலகத்திற்கு இளையராஜா இசை .நடிகர் திலகம் பட்டையை போட்டு பட்டையை கிளப்பிய திருவிழா டான்ஸ்,ஜஸ்டின் சண்டை ,'தேன் மல்லி பூவே','உலகம் வெறும் இருட்டு', போன்ற ஜனரஞ்சக பாடல்களால் பார்வதி திரை அரங்கமே அல்லோகலம். இதிலும் பாலா பாடல் கிடையாது. இந்நிலையில்,சிவாஜி ரசிகர்கள் எல்லாம் சந்தோசமாக இருந்த நேரத்தில் நன்றாக ஓடி கொண்டு இருந்த அந்தமான் காதலி எதிர்பாராத விதமாக 51வது நாள் கடைசி என்று செய்தி காதில் இடியாக விழுந்தது. மார்ச் 18 முதல் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ராமண்ணாவின் 'என்னை போல் ஒருவன் ' நெல்லை பூர்ணகலாவில் ரிலீஸ் என்று செய்தி அறிந்ததும் அந்தமான் காதலி திரைப்பட விநியோகஸ்தர் சுவாமி பிலிம்ஸ் அலுவலகத்திற்கும்,என்னை போல் ஒருவன் திரைப்பட விநியோகஸ்தர் ராணி பிலிம்ஸ் (இதன் அதிபர் திரு மு சூரியநாராயணன் முன்னாள் மேயர் -விஜயா சூரி combines மறுபிறவி,வைரம்,தங்கத்திலே வைரம்,குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்-மிசா நெருக்கடி கால நிலையில் கைது செய்யப்பட்டு தனக்கும் தி மு க விற்கும் தொடர்பு கிடையாது என்று நாள் இதழ்களில் விளம்பரம் கொடுத்தார் ) அலுவலகத்திற்கும் நாய்கள் போன்று நெல்லை மன்றத்தில் இருந்து சென்றோம். என்னை போல் ஒருவன் படத்திற்கு கொடி கட்ட மாட்டோம்,மன்ற வரவேற்பு பதாகை எதுவும் வைக்க மாட்டோம்,மறியல் போராட்டங்களில் ஈடு படுவோம் என்று எல்லாம் சொல்லி பார்த்தோம். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். ராணி பிலிம்ஸ் விநியோக அலுவலர்களே (அனைவரும் தி மு கழகத்தை சேர்ந்தவர்கள் ) காங்கிரஸ் கொடி கட்டி,நெல்லை தலைமை மன்ற வரவேற்பு பதாகைகளையும் தோரணங்களையும்,வளைவுகளையும் செய்து விட்டனர்.காலத்தின் கட்டாயம் என்பது இதுதான் போலும். இவ்வளவுக்கும் நெல்லை பூர்ணகலா திரை அரங்க நிறுவனர் அந்நாளைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.நடிகர் திலகத்தின் பரம விசிறி .மேலும் தலைமை மன்ற வரவேற்பு பதாகையை மன்றத்தில் இருந்த ஒருவரே எங்களுடன் அந்தமான் காதலி இறுதி நாள் இரவு காட்சி பார்த்த சிவாஜி மன்ற உறுப்பினரே ராணி பிலிம்ஸ்/திரை அரங்கில் கொண்டு கொடுத்த அவல நிலை .பின்னாளில் இந்த உறுப்பினரே காங்கிரஸ் கட்சியிலும் ,மன்றத்திலும் மிக பெரிய பொறுப்புக்கு வந்த துர்ப்பாக்கிய நிலை .

சிலர் இப்போது சொல்லலாம்
'என்னை போல் சிவாஜி ரசிகர் கிடையாது .அவர் படத்தை நான் பார்த்தது போல் யாரும் பார்க்க முடியாது . பார்த்தாலும் என்னை போல் ரசிக்க முடியாது. ரசித்தாலும் என்னை போல் எங்கும் யாராலும் சிலாகித்து எழுத முடியாது போனால் போகிறது என்று தருமி போல் உங்களை எல்லாம் இந்த திரியில் ஒரு பதிவாளராக ஏற்று கொண்டு இருக்கிறோம் ' .என்று

1978/79/80 கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் காங்கிரஸ் கட்சியால் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா ..என்னை போல் ஒருவன் பரபரப்பு எதுவும் இல்லாமல் 45 நாட்கள் ஓடியது

மார்ச் 24 அன்று பாலச்சந்தர் கமல் இணைந்த 'இலக்கணம் மாறிய கம்பன் ஏமாந்த' கருப்பு வெள்ளை நிழல் நிஜமாகிறது நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் .பாலா ரசிகர்களும்,மெல்லிசை மன்னர் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் .இதே நேரத்தில் ரஜினி,லதா ,விஜயகுமார் நடித்து என் வீ யார் pictures 'ஆயிரம் ஜென்மங்கள் 'நெல்லை ரத்னாவில் வெளியாகி 'வெண் மேகமாக' வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. ரஜினி,லதா கிசு கிசு பரவலாக பட்டி தொட்டி எங்கும் மாய மூக்குத்தி ஆக பரவி கொண்டு இருக்கிறது.இதற்கு முன்னரே பிப்ரவரியில் ரஜினி ,லதா,விஜி,மஞ்சு,ஜெய் கணேஷ்,வசந்தி(பஞ்ச கல்யாணி) ஜோடிகளில் நெல்லை சிவசக்தியில் வெளியான நடிகர் திலகம் முகாமில் இருந்து பிரிந்து வந்த பி மாதவன் இயக்கிய அருண் பிராசாத் மூவிஸ் சங்கர் சலீம் சைமன் படத்தில் இடம் பெற்ற 'அவனுக்கும் ஆசை வந்து அவளுக்கும் ஆசை வந்தா அரசாங்கம் கூட தடுக்க முடியாது ' என்ற பாடலின் போது பிளந்த விசில் சப்தம் இன்றும் காதை நொய் என்று குடைந்து கொண்டு தான் இருக்கிறது

ஏப்ரல் 14 நடிகர்திலகம் 'கௌரவ வேடம்' என்று டைட்டில் கார்ட் போட்ட ஆனால் படம் முழுவதும் வரும் 'வாழ்க்கை அலைகள் ' நெல்லை சென்ட்ரல் ரிலீஸ். பாலா சுசீலா இணைந்த குரல்களில் 'உன் கண்களிலோ கனிகள் ' பாடல் நெல்லை வானொலி ஞாயிறு இரவு நேயர் விருப்பம் 8-8.30 நிகழ்ச்சியில் படு பிரபலம் .

மே மாதத்தில் மீண்டும் நடிகர் திலகத்தின் 'புண்ணிய பூமி' சிவசக்தியில் .இதே நேரத்தில் நெல்லை ரத்னாவில் ஆயிரம் ஜென்மங்கள் 50 நாட்கள் கடந்து விழா கொண்டாடி பின் ரஜினி வில்லனாக நடித்த சந்திர போஸ் இசையில் வெளிவந்த வி சி குகநாதனின் கருப்பு வெள்ளை 'மாங்குடி மைனர்' ரிலீஸ். விஜயகுமார் மக்கள் திலகம் புகழ் பாட ஆரம்பித்த நேரம்.மக்கள் கலைஞர் வர்ணம் மாற ஆரம்பித்த நேரம் .நெல்லை சென்ட்ரலில் நிழல் நிஜமாகிறது 50 நாள் முடிந்து 'வருவான் வடிவேலன் ' வெளியீடு .மெல்லிசை மன்னர் இசையில் லத்து பக்தி பரவசத்துடன் காவடி ஆடிய படம். பெண்களின் அரோகரா சப்தத்தில் ,பாலாவின் 'ஜாய் புல் சிங்கபூர் ,கலர் புல் மலேசிய ' என்று சப்தமில்லாமல் 70 நாட்கள் கடந்த வெற்றி படம்

ஜூன் தியாகம் 100வது நாள் விழா நெல்லை பார்வதியில் மீண்டும் சிவாஜி ரசிகர்கள் -காங்கிரஸ் கட்சியினர் ரகளை அரங்கேற்றம் . 100வது நாள் மாலை காட்சி காங்கிரஸ் கட்சி விழாவாகவும் ,இரவு காட்சி ரசிகர் மன்ற விழாவாகவும் நடந்தேறியது . நடிகர் திலகத்தின் ஜெனரல் சக்கரவர்த்தி நெல்லை பார்வதியில் தியாகத்திற்கு பிறகு வெளியாகிறது .இதே மாதத்தில் தான் நெல்லை பூர்ணகலாவில் கமல்,ரஜினி நடித்த ஸ்ரீதரின் மீண்டும் முக்கோண காதல் கதை 'ஒரே நாள் உன்னை நாள் ' என்று இளைமை ஊஞ்சல் ஆட ஆரம்பித்தது. நியூ ராயலில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் ரஜினி தனி ஹீரோவாக அரங்கேற்றம் ஆகிய நடிகர் திலகத்தின் ஸ்டைல் பாடல் 'நண்டூருது நரியூருது' பைரவி '

ஜூலையில் நெல்லை ரத்னாவில் வெளியான 'வணக்கத்துக்குரிய காதலியே' விஜி ஸ்ரீதேவி ,ரஜினி ஸ்ரீதேவி இணைவில் வந்த ஞே ராஜேந்திர குமார் கதை .மெல்லிசை மன்னர் இசை -ஜாலி ஆபிரகாம் ஜல்லி அடிக்க ஆரம்பித்த நேரம் . திருலோக் இயக்கம் அவ்வளவாக பரபரப்பை கிளப்ப வில்லை .

ஆகஸ்ட் பராதி ராஜவின் இரண்டாவது படம் 'கிழக்கே போகும் ரயில்' நெல்லை நியூ ராயல் திரை அரங்கில் மாஞ்சோலை குயிலாக கூவ ஆரம்பிக்க ,பின்னாலேயே மகேந்திரனின் செந்தாழம் பூ நெல்லை சென்ட்ரலில் முள்ளும் மலராக பரிமளிக்க, நெல்லையில் உள்ள எந்த டீ கடைக்கு சென்றாலும் ரசிகர்கள் 15 பைசா டீக்கும் 25 பைசா விவா டீ க்கும் டீ மாஸ்டர் தாடையை கொஞ்சியும் கெஞ்சியும் LP இனிரிகோ ,HMV இசைக்க கேட்ட காலம் .கிழக்கே போகும் ரயில் 100வது நாள் விழா நெல்லை ராயலில் கோலாகலமாக நடந்தேறியது . சுதாகர் என்ற மொக்கை ஹீரோ 'ஆல' மரமான தமிழ் சினிமாவை 'ஆழ'ம் இல்லாமல் 'ஆள' ஆரம்பிக்கிறார் . தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம் என்ற புது விதி நமது தலை விதியாகிறது. பாரதிராஜா ஆரம்பித்த மாற்றம் இன்றும் தொடர்கிறது. 78 களில் ஏற்பட்ட சில கெட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று.

வருகிறது தீபாவளி மாதம் அக்டோபர்
வந்தார் அய்யா 'இலங்கையில் இளங்குயில் உடன் இன்னிசை பாடிய' எங்கள் பைலட் பிரேம்நாத் .நெல்லை சென்ட்ரல்லில் .பெல்ட் எடுத்து கொண்டு உறுமி நிற்கும் போஸ்டர் கூட நினைவில் இருக்கிறது. நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் மாடி ஏறும் போது ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் .அதற்கு அருகில் வாயிலை பார்த்து ஒரு ஷோ கேஸ் இருக்கும். அதில் இந்த போஸ் உள்ள போஸ்டர் ஒட்டப்பட்டு ரசிகர்களால் மாலை போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது .

78 தீபாவளி கோலாகலத்தை மறக்க முடியுமா ? நெல்லை பூர்ணகலாவில் வண்டிக்காரன் மகன்,சிவசக்தியில் 'தப்பு தாளங்கள்',
ரத்னாவில் 'மனதிரில் இதனை நிறங்களா ',பார்வதியில் 'தாய் மீது சத்தியம் '.லக்ஷ்மியில் ஜேப்பியாரின் 'தங்க ரங்கன் ' ,பாபுலர் இல் 'சிகப்பு ரோஜாக்கள் ' .கிழக்கே போகும் ரயில் ராயலில் தீபாவளிக்கு தொடர்ந்தது . ரத்னாவில் 10 தினங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் மைல் கல் ருத்ராய்யாவின் 'அவள் அப்படிதான்' 3 தினங்கள் மட்டுமே (3 திங்கள் ஓட வேண்டிய படம்) .கொஞ்சம் தினங்கள் கழித்து மீண்டும் நடிகர் திலகத்தின் தசோலி அம்பு சாக்கடை சந்து என்று அந்நாட்களில் சொல்லப்படும் நெல்லை லக்ஷ்மியில் .நடிகர் திலகத்தின் தெய்வமகன்,பாபு,ஞான ஒளி எல்லாம் இங்கே தான் சாக்கடையில் விழுந்து டிக்கெட் எடுத்து திரை அரங்கு உள் சென்று சட்டையை 'எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ' சபரிமலை பாடல் போல் எப்போதும் நறுமணம் கமிழும் நெல்லை லக்ஷ்மி கக்கூஸ் இல் பிழிந்து காய போட்டு மேல் சட்டை இல்லாமல் நோஞ்சான் பாடி உடன் பார்த்த களித்த, கழித்த நாட்கள் தான் எத்துனை எத்துனை

டிசம்பர் இல் நடிகர் திலகத்தின் பரபரப்பு இல்லாமல் நெல்லை நியூ ராயலில் 'ஜஸ்டிஸ் கோபிநாத் ', நெல்லை பார்வதியில் மேற்கத்திய சங்கீதத்தை தமிழ் ரசிகர்களின் நாடி நரம்புகளில் கிடார் கம்பிகளின் மூலமாக ஏற்றிய (டார்லிங் டார்லிங் I லவ் யு) ப்ரியா,நெல்லை ரத்னாவில் ரஜினிகாந்த் - விஜயகாந்த் இணைந்து வந்து இருக்க வேண்டிய இறுதியில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்கள் தாங்கி வந்த மீண்டும் அருண் பிரசாத் மூவிஸ் மாதவனின் 'என் கேள்விக்கு என்ன பதில் '

இதனை களேபரங்களுக்கும் நடுவில் வெள்ளிகிழமை ஹீரோ ஜெய்

'டாக்ஸி டிரைவர் (Parvathi),சக்கை போடு போடு ராஜா (Rathna),'உள்ளத்தில் குழந்தையடி' (Sivasakthi),'மேள தாளங்கள்' (central),'முடி சூடா மன்னன் ' (lakshmi),'வாழ நினைத்தால் வாழலாம் '(popular),ராஜ்வுகேற்ற ராணி' (lakshmi),'மக்கள் குரல்' (lakshmi),'இது எப்படி இருக்கு' (sivasakthi),'இளையராணி ராஜலக்ஷ்மி' (rathna)

சிவகுமார்
'கண்ணாமூச்சி' (central),'சொன்னது நீதானா ' (rathna),'அதை விட ரகசியம்' (poornakalaa),'சிட்டு குருவி (sivasakthi)(வாசு சிலாகித்து எழுதிய இளைய ராஜாவின் இனிய பாடல்கள் நிறைந்தும் பறக்க முடியாமல் போனது )
,'கை பிடித்தவள்' (not in memory),'கண்ணன் ஒரு கை குழந்தை' (lakshmi),'ராதைகேற கண்ணன் ' (rathna)

முத்துராமன் 'வயசு பொண்ணு (rathna),அவள் தந்த உறவு (pornakalaa),வாழ்த்துங்கள் (sivasakthi),உறவுகள் என்றும் வாழ்க(lakshmi) ,பேர் சொல்ல ஒரு பிள்ளை (parvathi),அன்ன பூரணி (sivasakthi),அச்சாணி (lakshmi) போன்ற படங்கள்

ஸ்ரீகாந்த் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (central),சதுரங்கம் (sivasakthi)(ரஜினியும் உண்டு),கருணை உள்ளம் (lakshmi),ஒரு வீடு இரு உலகம் (rathna) ,அக்னி பிரவேசம் (central) -கருணை உள்ளம் ஸ்ரீகாந்திற்கு சிறந்த நடிகர் என்ற தமிழ் நாடு அரசு விருது வழங்கியது

என்று சிந்து பாடி கொண்டு தான் இருந்தார்கள்.

மிகவும் நீண்டு விட்டது . மன்னிக்க வேண்டுகிறேன்

இத்தனைக்கும் நடுவில் இரண்டாம் செமஸ்டர்,மூன்றாம் செமஸ்டர் எந்த arrear இல்லாமல் பாஸ் செய்தேன் :) (கொஞ்சம் sj ப்ளீஸ் பொறுத்தருள்க
)

திரைப்படங்களும் arrear இல்லை :)

பொறுமையாக படித்த அனைவருக்கும் என் நன்றி

மலரும் நினைவுகளை மீட்ட வாய்ப்பு அளித்து உங்களுக்கு எல்லாம் ஆப்பு வைத்த நண்பர் வாசு/முரளி/சி கே/கல்நாயக் அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்

Russellisf
29th November 2014, 06:45 PM
Sweet memories krishna ji


thanks



http://wondersinthedark.files.wordpress.com/2013/02/1978.jpg?w=500&h=280

அன்பு முரளி சார்/வாசு ஜி /நண்பர் சி கே

வாசுவின் 'காற்றினிலே வரும் கீதம் ' பதிவு, முரளி சார்,மீண்டும் வாசு சார்,சி கே சார் பதிவுகளின் மூலம் மிக சிறந்த மலரும் நினைவுகளாக வாடா மலர் ஆக பரிமளிக்க செய்து விட்டது 1978 ஆம் ஆண்டு. 1978 ஆம் ஆண்டு ஆரம்பமே அமர்க்களம் . 1977 ஆம் ஆண்டில் தான் தேர்தல் முடிந்து மக்கள் திலகம் முதல்வராக பதவி ஏற்று கொண்டார். 1977 தீபாவளி மறக்க முடியாத அண்ணன் ஒரு கோயில், அதோடு வேடசந்தூர் புயல்,மேலும் நெருக்கடி நிலை தளர்வு காரணமாக கல்லூரியில் போராட்டங்கள் அதன் காரணமாக தேதி அறிவிக்கபடாமல் கால வரையற்ற கல்லூரி விடுமுறை ,அதனால் தள்ளி போன கல்லூரி முதல் செமஸ்டர் தேர்வுகள் எல்லாம் டிசம்பர் இல் முடிந்து 1978 ஆம் ஆண்டு பிறக்கிறது.எங்களுக்கும் இரண்டாம் செமஸ்டர் ஆரம்பம்

அப்போது எல்லாம் இப்போது போல் ஜனவரி முதல் தேதி கொண்டாட்டங்கள் என்பது எதுவும் கிடையாது. ஜனவரி பிறந்தால் பொங்கல் அதனை ஒட்டி வரும் 3 தினங்கள் விடுமுறை ,அதனால் வெளியாகும் திரைப்படங்கள் ,ஜனவரி 26 அன்று ஏதாவது கே பாலாஜியின் ஹிந்தி திரை படங்களை தழுவி எடுக்கப்பட்ட நடிகர் திலகதின் படம் இப்படி தான் கொண்டாட்டங்கள் இருக்கும். 1978 ஜனவரி பொங்கலுக்கு மக்கள் திலகத்தின் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் நெல்லை சென்ட்ரலில் ரிலீஸ் . இதனை mms பாண்டியன் என்று அந்நாளில் சுருக்கி அழைப்பார்கள் 68 தினங்கள் ஓடியதாக கருதுகிறேன்.மெல்லிசை மன்னரின் இனிய கீதங்கள் 'அமுதும் தமிழும் எழுதும் கவிதை','தென்றலில் ஆடும் ','தாயகத்தின் சுதந்திரமே ' நிறைந்த படம்.மார்ச் 24 அன்று நிழல் நிஜமாகிறது ரிலீஸ்.மக்கள் திலக ரசிகர்கள் mms பாண்டியன் 100 நாட்கள் ஓடாததால் கொஞ்சம் அப்செட். 1977 தேர்தல் கூட்டணியால் மக்கள் திலகம் நடிகர் திலகம் ரசிகர்கள் ஓரளவு ராசியாக இருந்த நேரம். மக்கள் திலகமும் திரை உலகை விட்டு முழு நேர அரசியல் வாதியாக மாறிய நேரம்
.
இந்த நேரத்தில் 26 ஜனவரி அன்று கே பாலாஜியின் திரை படத்தை எதிபார்த்து இருந்த எங்களுக்கு முக்தா ஸ்ரீனிவாசனின் 'அந்தமான் காதலி' நெல்லை பூர்ணகலாவில் ரிலீஸ் என்ற உ டன் கொஞ்சம் பயந்தோம். 1974 தீபாவளி வெளியீடு 'அன்பை தேடி' வெற்றியை தேட வேண்டியதாகி அதனால் 3 ஆண்டுகள் 75,76,77 நடிகர் திலகம் படம் எதுவும் எடுக்காமல் இருந்த முக்தா ஸ்ரீனிவாசனின் படம் என்ற உடன் ஒரு பயம். ஏற்கனவே கண் பார்வை போன காதலிகாக வருந்தும் நிறைகுடம்(நெல்லை ராயல்) ,மாலை கண் நோய் தவப்புதல்வன் (நெல்லை ரத்னா) ,கனவுலக மனநோய் அன்பை தேடி (நெல்லை பூர்ணகலா) என்று நோய் வாய்ப்பட்ட முக்தா படம் கொஞ்சம் நெல்லை ரசிகர்கள் அவ்வளவாக முக்தாவின் மீது நாட்டம் இல்லாமல் இருந்த காலம் .அதே 26/1/78 நாளில் கமலஹாசனின் பருவ மழை நெல்லை ரத்னாவில் ரிலீஸ் (மதனோற்சவம் மலையாள டப்பிங்).

முதல் காட்சி ரசிகர் மன்ற காட்சி வழக்கம் போல் நடிகர் திலகம் தரிசனம் கண்டு படம் நல்ல ரிசல்ட் என்ற களிப்புடன் மாலையில் திரை அரங்கின் வாசலில் நின்று வரிசையில் நின்று கொண்டு இருந்த மற்ற ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் படம் பற்றி சிலாகிக்து விட்டு இரவு காட்சி மதனோற்சவம் என்ற பருவ மழையில் நனைந்த மாட புறாவாக திரும்பினோம்.இரவு முழுவதும் சரீனா வாஹாப் (பருவ மழை கதாநாயகி) நினைவுடன் 'அடி லீலா கிருஷ்ணா ' என்று பாடல் அடிகடி நினைவுக்கு வந்து,
அதிலும் 'பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா' என்ற வரிகளிலும்

'பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்
ஏனடி அழகுப் பெண்ணே
பாராடி அபலைப் பெண்ணே
கையில் இல்லாத குற்றம் தானே
கேட்டாய் பொன்னை

அடி ரங்கன் சிங்கன் சுப்பன் வரிசையில்
என்னையும் சேர்த்தாயோ
நான் நாளது வரையில் ராதா கிருஷ்ணன்
சொன்னேன் கேட்டாயோ

பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா' வரிகளிலும்

மனதை பறி கொடுத்து பாட்டு புத்தகம் வாங்கி வாசு சொன்னது போல் சந்திர மோகனுக்கு பதிலாக நடிகர் திலகத்தை கற்பனை செய்தே பிற நண்பர்கள் உடன் பாடி கழித்த பாடல்.டி எம் எஸ் கொடி கொஞ்சம் தாழ்வாக பறந்த காலம் .அப்போது நெல்லையில் பாடகர்களுக்கு 3 குரூப் டி எம் எஸ் குழு,ஜேசுதாஸ் குழு,எஸ் பி பி குழு என்று நண்பர்களிடம் இருக்கும்.அதே போன்று இசையில் 'மெல்லிசை மன்னர்','இளையராஜா ' (இசை ஞானி,மொட்டை எல்லாம் 80 களுக்கு பின் தான் ).அந்தமான் காதலியில் எஸ் பி பி பாடல் இல்லை என்ற உடன் அந்த நண்பர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர்.

இதற்கிடையில் தியாகம் மார்ச் 4 அன்று நெல்லை பார்வதி ரிலீஸ்.தீபத்திற்கு பிறகு நடிகர் திலகத்திற்கு இளையராஜா இசை .நடிகர் திலகம் பட்டையை போட்டு பட்டையை கிளப்பிய திருவிழா டான்ஸ்,ஜஸ்டின் சண்டை ,'தேன் மல்லி பூவே','உலகம் வெறும் இருட்டு', போன்ற ஜனரஞ்சக பாடல்களால் பார்வதி திரை அரங்கமே அல்லோகலம். இதிலும் பாலா பாடல் கிடையாது. இந்நிலையில்,சிவாஜி ரசிகர்கள் எல்லாம் சந்தோசமாக இருந்த நேரத்தில் நன்றாக ஓடி கொண்டு இருந்த அந்தமான் காதலி எதிர்பாராத விதமாக 51வது நாள் கடைசி என்று செய்தி காதில் இடியாக விழுந்தது. மார்ச் 18 முதல் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ராமண்ணாவின் 'என்னை போல் ஒருவன் ' நெல்லை பூர்ணகலாவில் ரிலீஸ் என்று செய்தி அறிந்ததும் அந்தமான் காதலி திரைப்பட விநியோகஸ்தர் சுவாமி பிலிம்ஸ் அலுவலகத்திற்கும்,என்னை போல் ஒருவன் திரைப்பட விநியோகஸ்தர் ராணி பிலிம்ஸ் (இதன் அதிபர் திரு மு சூரியநாராயணன் முன்னாள் மேயர் -விஜயா சூரி combines மறுபிறவி,வைரம்,தங்கத்திலே வைரம்,குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்-மிசா நெருக்கடி கால நிலையில் கைது செய்யப்பட்டு தனக்கும் தி மு க விற்கும் தொடர்பு கிடையாது என்று நாள் இதழ்களில் விளம்பரம் கொடுத்தார் ) அலுவலகத்திற்கும் நாய்கள் போன்று நெல்லை மன்றத்தில் இருந்து சென்றோம். என்னை போல் ஒருவன் படத்திற்கு கொடி கட்ட மாட்டோம்,மன்ற வரவேற்பு பதாகை எதுவும் வைக்க மாட்டோம்,மறியல் போராட்டங்களில் ஈடு படுவோம் என்று எல்லாம் சொல்லி பார்த்தோம். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். ராணி பிலிம்ஸ் விநியோக அலுவலர்களே (அனைவரும் தி மு கழகத்தை சேர்ந்தவர்கள் ) காங்கிரஸ் கொடி கட்டி,நெல்லை தலைமை மன்ற வரவேற்பு பதாகைகளையும் தோரணங்களையும்,வளைவுகளையும் செய்து விட்டனர்.காலத்தின் கட்டாயம் என்பது இதுதான் போலும். இவ்வளவுக்கும் நெல்லை பூர்ணகலா திரை அரங்க நிறுவனர் அந்நாளைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.நடிகர் திலகத்தின் பரம விசிறி .மேலும் தலைமை மன்ற வரவேற்பு பதாகையை மன்றத்தில் இருந்த ஒருவரே எங்களுடன் அந்தமான் காதலி இறுதி நாள் இரவு காட்சி பார்த்த சிவாஜி மன்ற உறுப்பினரே ராணி பிலிம்ஸ்/திரை அரங்கில் கொண்டு கொடுத்த அவல நிலை .பின்னாளில் இந்த உறுப்பினரே காங்கிரஸ் கட்சியிலும் ,மன்றத்திலும் மிக பெரிய பொறுப்புக்கு வந்த துர்ப்பாக்கிய நிலை .

சிலர் இப்போது சொல்லலாம்
'என்னை போல் சிவாஜி ரசிகர் கிடையாது .அவர் படத்தை நான் பார்த்தது போல் யாரும் பார்க்க முடியாது . பார்த்தாலும் என்னை போல் ரசிக்க முடியாது. ரசித்தாலும் என்னை போல் எங்கும் யாராலும் சிலாகித்து எழுத முடியாது போனால் போகிறது என்று தருமி போல் உங்களை எல்லாம் இந்த திரியில் ஒரு பதிவாளராக ஏற்று கொண்டு இருக்கிறோம் ' .என்று

1978/79/80 கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் காங்கிரஸ் கட்சியால் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா ..என்னை போல் ஒருவன் பரபரப்பு எதுவும் இல்லாமல் 45 நாட்கள் ஓடியது

மார்ச் 24 அன்று பாலச்சந்தர் கமல் இணைந்த 'இலக்கணம் மாறிய கம்பன் ஏமாந்த' கருப்பு வெள்ளை நிழல் நிஜமாகிறது நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் .பாலா ரசிகர்களும்,மெல்லிசை மன்னர் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் .இதே நேரத்தில் ரஜினி,லதா ,விஜயகுமார் நடித்து என் வீ யார் pictures 'ஆயிரம் ஜென்மங்கள் 'நெல்லை ரத்னாவில் வெளியாகி 'வெண் மேகமாக' வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. ரஜினி,லதா கிசு கிசு பரவலாக பட்டி தொட்டி எங்கும் மாய மூக்குத்தி ஆக பரவி கொண்டு இருக்கிறது.இதற்கு முன்னரே பிப்ரவரியில் ரஜினி ,லதா,விஜி,மஞ்சு,ஜெய் கணேஷ்,வசந்தி(பஞ்ச கல்யாணி) ஜோடிகளில் நெல்லை சிவசக்தியில் வெளியான நடிகர் திலகம் முகாமில் இருந்து பிரிந்து வந்த பி மாதவன் இயக்கிய அருண் பிராசாத் மூவிஸ் சங்கர் சலீம் சைமன் படத்தில் இடம் பெற்ற 'அவனுக்கும் ஆசை வந்து அவளுக்கும் ஆசை வந்தா அரசாங்கம் கூட தடுக்க முடியாது ' என்ற பாடலின் போது பிளந்த விசில் சப்தம் இன்றும் காதை நொய் என்று குடைந்து கொண்டு தான் இருக்கிறது

ஏப்ரல் 14 நடிகர்திலகம் 'கௌரவ வேடம்' என்று டைட்டில் கார்ட் போட்ட ஆனால் படம் முழுவதும் வரும் 'வாழ்க்கை அலைகள் ' நெல்லை சென்ட்ரல் ரிலீஸ். பாலா சுசீலா இணைந்த குரல்களில் 'உன் கண்களிலோ கனிகள் ' பாடல் நெல்லை வானொலி ஞாயிறு இரவு நேயர் விருப்பம் 8-8.30 நிகழ்ச்சியில் படு பிரபலம் .

மே மாதத்தில் மீண்டும் நடிகர் திலகத்தின் 'புண்ணிய பூமி' சிவசக்தியில் .இதே நேரத்தில் நெல்லை ரத்னாவில் ஆயிரம் ஜென்மங்கள் 50 நாட்கள் கடந்து விழா கொண்டாடி பின் ரஜினி வில்லனாக நடித்த சந்திர போஸ் இசையில் வெளிவந்த வி சி குகநாதனின் கருப்பு வெள்ளை 'மாங்குடி மைனர்' ரிலீஸ். விஜயகுமார் மக்கள் திலகம் புகழ் பாட ஆரம்பித்த நேரம்.மக்கள் கலைஞர் வர்ணம் மாற ஆரம்பித்த நேரம் .நெல்லை சென்ட்ரலில் நிழல் நிஜமாகிறது 50 நாள் முடிந்து 'வருவான் வடிவேலன் ' வெளியீடு .மெல்லிசை மன்னர் இசையில் லத்து பக்தி பரவசத்துடன் காவடி ஆடிய படம். பெண்களின் அரோகரா சப்தத்தில் ,பாலாவின் 'ஜாய் புல் சிங்கபூர் ,கலர் புல் மலேசிய ' என்று சப்தமில்லாமல் 70 நாட்கள் கடந்த வெற்றி படம்

ஜூன் தியாகம் 100வது நாள் விழா நெல்லை பார்வதியில் மீண்டும் சிவாஜி ரசிகர்கள் -காங்கிரஸ் கட்சியினர் ரகளை அரங்கேற்றம் . 100வது நாள் மாலை காட்சி காங்கிரஸ் கட்சி விழாவாகவும் ,இரவு காட்சி ரசிகர் மன்ற விழாவாகவும் நடந்தேறியது . நடிகர் திலகத்தின் ஜெனரல் சக்கரவர்த்தி நெல்லை பார்வதியில் தியாகத்திற்கு பிறகு வெளியாகிறது .இதே மாதத்தில் தான் நெல்லை பூர்ணகலாவில் கமல்,ரஜினி நடித்த ஸ்ரீதரின் மீண்டும் முக்கோண காதல் கதை 'ஒரே நாள் உன்னை நாள் ' என்று இளைமை ஊஞ்சல் ஆட ஆரம்பித்தது. நியூ ராயலில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் ரஜினி தனி ஹீரோவாக அரங்கேற்றம் ஆகிய நடிகர் திலகத்தின் ஸ்டைல் பாடல் 'நண்டூருது நரியூருது' பைரவி '

ஜூலையில் நெல்லை ரத்னாவில் வெளியான 'வணக்கத்துக்குரிய காதலியே' விஜி ஸ்ரீதேவி ,ரஜினி ஸ்ரீதேவி இணைவில் வந்த ஞே ராஜேந்திர குமார் கதை .மெல்லிசை மன்னர் இசை -ஜாலி ஆபிரகாம் ஜல்லி அடிக்க ஆரம்பித்த நேரம் . திருலோக் இயக்கம் அவ்வளவாக பரபரப்பை கிளப்ப வில்லை .

ஆகஸ்ட் பராதி ராஜவின் இரண்டாவது படம் 'கிழக்கே போகும் ரயில்' நெல்லை நியூ ராயல் திரை அரங்கில் மாஞ்சோலை குயிலாக கூவ ஆரம்பிக்க ,பின்னாலேயே மகேந்திரனின் செந்தாழம் பூ நெல்லை சென்ட்ரலில் முள்ளும் மலராக பரிமளிக்க, நெல்லையில் உள்ள எந்த டீ கடைக்கு சென்றாலும் ரசிகர்கள் 15 பைசா டீக்கும் 25 பைசா விவா டீ க்கும் டீ மாஸ்டர் தாடையை கொஞ்சியும் கெஞ்சியும் lp இனிரிகோ ,hmv இசைக்க கேட்ட காலம் .கிழக்கே போகும் ரயில் 100வது நாள் விழா நெல்லை ராயலில் கோலாகலமாக நடந்தேறியது . சுதாகர் என்ற மொக்கை ஹீரோ 'ஆல' மரமான தமிழ் சினிமாவை 'ஆழ'ம் இல்லாமல் 'ஆள' ஆரம்பிக்கிறார் . தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம் என்ற புது விதி நமது தலை விதியாகிறது. பாரதிராஜா ஆரம்பித்த மாற்றம் இன்றும் தொடர்கிறது. 78 களில் ஏற்பட்ட சில கெட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று.

வருகிறது தீபாவளி மாதம் அக்டோபர்
வந்தார் அய்யா 'இலங்கையில் இளங்குயில் உடன் இன்னிசை பாடிய' எங்கள் பைலட் பிரேம்நாத் .நெல்லை சென்ட்ரல்லில் .பெல்ட் எடுத்து கொண்டு உறுமி நிற்கும் போஸ்டர் கூட நினைவில் இருக்கிறது. நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் மாடி ஏறும் போது ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் .அதற்கு அருகில் வாயிலை பார்த்து ஒரு ஷோ கேஸ் இருக்கும். அதில் இந்த போஸ் உள்ள போஸ்டர் ஒட்டப்பட்டு ரசிகர்களால் மாலை போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது .

78 தீபாவளி கோலாகலத்தை மறக்க முடியுமா ? நெல்லை பூர்ணகலாவில் வண்டிக்காரன் மகன்,சிவசக்தியில் 'தப்பு தாளங்கள்',
ரத்னாவில் 'மனதிரில் இதனை நிறங்களா ',பார்வதியில் 'தாய் மீது சத்தியம் '.லக்ஷ்மியில் ஜேப்பியாரின் 'தங்க ரங்கன் ' ,பாபுலர் இல் 'சிகப்பு ரோஜாக்கள் ' .கிழக்கே போகும் ரயில் ராயலில் தீபாவளிக்கு தொடர்ந்தது . ரத்னாவில் 10 தினங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் மைல் கல் ருத்ராய்யாவின் 'அவள் அப்படிதான்' 3 தினங்கள் மட்டுமே (3 திங்கள் ஓட வேண்டிய படம்) .கொஞ்சம் தினங்கள் கழித்து மீண்டும் நடிகர் திலகத்தின் தசோலி அம்பு சாக்கடை சந்து என்று அந்நாட்களில் சொல்லப்படும் நெல்லை லக்ஷ்மியில் .நடிகர் திலகத்தின் தெய்வமகன்,பாபு,ஞான ஒளி எல்லாம் இங்கே தான் சாக்கடையில் விழுந்து டிக்கெட் எடுத்து திரை அரங்கு உள் சென்று சட்டையை 'எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ' சபரிமலை பாடல் போல் எப்போதும் நறுமணம் கமிழும் நெல்லை லக்ஷ்மி கக்கூஸ் இல் பிழிந்து காய போட்டு மேல் சட்டை இல்லாமல் நோஞ்சான் பாடி உடன் பார்த்த களித்த, கழித்த நாட்கள் தான் எத்துனை எத்துனை

டிசம்பர் இல் நடிகர் திலகத்தின் பரபரப்பு இல்லாமல் நெல்லை நியூ ராயலில் 'ஜஸ்டிஸ் கோபிநாத் ', நெல்லை பார்வதியில் மேற்கத்திய சங்கீதத்தை தமிழ் ரசிகர்களின் நாடி நரம்புகளில் கிடார் கம்பிகளின் மூலமாக ஏற்றிய (டார்லிங் டார்லிங் i லவ் யு) ப்ரியா,நெல்லை ரத்னாவில் ரஜினிகாந்த் - விஜயகாந்த் இணைந்து வந்து இருக்க வேண்டிய இறுதியில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்கள் தாங்கி வந்த மீண்டும் அருண் பிரசாத் மூவிஸ் மாதவனின் 'என் கேள்விக்கு என்ன பதில் '

இதனை களேபரங்களுக்கும் நடுவில் வெள்ளிகிழமை ஹீரோ ஜெய்

'டாக்ஸி டிரைவர் (parvathi),சக்கை போடு போடு ராஜா (rathna),'உள்ளத்தில் குழந்தையடி' (sivasakthi),'மேள தாளங்கள்' (central),'முடி சூடா மன்னன் ' (lakshmi),'வாழ நினைத்தால் வாழலாம் '(popular),ராஜ்வுகேற்ற ராணி' (lakshmi),'மக்கள் குரல்' (lakshmi),'இது எப்படி இருக்கு' (sivasakthi),'இளையராணி ராஜலக்ஷ்மி' (rathna)

சிவகுமார்
'கண்ணாமூச்சி' (central),'சொன்னது நீதானா ' (rathna),'அதை விட ரகசியம்' (poornakalaa),'சிட்டு குருவி (sivasakthi)(வாசு சிலாகித்து எழுதிய இளைய ராஜாவின் இனிய பாடல்கள் நிறைந்தும் பறக்க முடியாமல் போனது )
,'கை பிடித்தவள்' (not in memory),'கண்ணன் ஒரு கை குழந்தை' (lakshmi),'ராதைகேற கண்ணன் ' (rathna)

முத்துராமன் 'வயசு பொண்ணு (rathna),அவள் தந்த உறவு (pornakalaa),வாழ்த்துங்கள் (sivasakthi),உறவுகள் என்றும் வாழ்க(lakshmi) ,பேர் சொல்ல ஒரு பிள்ளை (parvathi),அன்ன பூரணி (sivasakthi),அச்சாணி (lakshmi) போன்ற படங்கள்

ஸ்ரீகாந்த் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (central),சதுரங்கம் (sivasakthi)(ரஜினியும் உண்டு),கருணை உள்ளம் (lakshmi),ஒரு வீடு இரு உலகம் (rathna) ,அக்னி பிரவேசம் (central) -கருணை உள்ளம் ஸ்ரீகாந்திற்கு சிறந்த நடிகர் என்ற தமிழ் நாடு அரசு விருது வழங்கியது

என்று சிந்து பாடி கொண்டு தான் இருந்தார்கள்.

மிகவும் நீண்டு விட்டது . மன்னிக்க வேண்டுகிறேன்

இத்தனைக்கும் நடுவில் இரண்டாம் செமஸ்டர்,மூன்றாம் செமஸ்டர் எந்த arrear இல்லாமல் பாஸ் செய்தேன் :) (கொஞ்சம் sj ப்ளீஸ் பொறுத்தருள்க
)

திரைப்படங்களும் arrear இல்லை :)

பொறுமையாக படித்த அனைவருக்கும் என் நன்றி

மலரும் நினைவுகளை மீட்ட வாய்ப்பு அளித்து உங்களுக்கு எல்லாம் ஆப்பு வைத்த நண்பர் வாசு/முரளி/சி கே/கல்நாயக் அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்

vasudevan31355
29th November 2014, 07:20 PM
வாசு, முதலில் பைலட்டிற்கு டிக்கட் கிடைக்காமல் ஓ.டி கமரில் சிவகுமாரின் 'கண்ணாமூச்சி' பார்த்தோம். அசோகன் பூதமாக நடித்திருப்பார். ஆமாம் இந்த படத்தோட பாடல்களை இங்கே அலசியாச்சா?


நன்றி கல்நாயக் சார்,

நீங்கள் 'கண்ணாமூச்சி' படம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது மேலும் என் பழைய நினைவுகளை (நடிகர் திலகம் அல்லாது) கிளர்ந்து எழச் செய்து விட்டது.

நான் அப்போது கடலூர் துறைமுகம் அதாவது கடலூர் ஓ.டி (கடலூர் ஓல்ட் டவுன்) இல் தான் தங்கியிருந்தேன். ரங்கப்ப செட்டி தெரு என்பதுதான் எங்கள் தெருவின் பெயர். தெருக்கள் பெரும்பாலும் ஜாதிப் பெயர்களில் இருக்கும். இருசப்ப செட்டி தெரு, காசு கடை வீதி, சுண்ணாம்புக்காரத் தெரு, பள்ள வானியா சந்து, சராங்கு தெரு என்றெல்லாம் இருக்கும். பாட்டி வீடு அங்கே தான். அது மட்டுமல்ல. ஓ.டியில் இருந்த ஒரே ஒரு திரையரங்கும் அதுதான். திரையரங்கு 'கமர்' கள்ளக்கடத்தல் புகழ் மஸ்தான் அவர்களுடையது. (நாங்கள் வீட்டுக்குள் திருடன் வந்தால் கூட திருடர் வந்தார் என்றுதான் மரியாதையாகச் சொல்லுவோம். கல்நாயக்கிற்கு பதில் போட்டால் நமக்குக் கூட நகைச்சுவை தானாக வருகிறதே).:)பக்கத்தில் பச்சையாங்குப்பம் என்ற கிராமத்தில் சுகந்தி என்ற டூரிங் தியேட்டர் இருந்தது.

நீங்கள் சொன்னது போல 'கண்ணாமூச்சி' ஓ.டியில் வெளியானது. நான் அப்போது பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். கடலூர் ஆர்டஸ் காலேஜில்தான்.

'கண்ணாமூச்சி' சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து மகிழ்ந்த படம்.

சிவக்குமார், லதா, சுருளி, மனோரமா என்று செம காமெடி. பூதம் படம் என்பதால் மந்திர தந்திர காட்சிகள் நிறைய.

இந்தப் படத்தில் பூதமாக நடித்தவர் அசோகன் அல்ல. அது உங்கள் தவறுமல்ல. அலாவுதினும் அற்புத விளக்கும் படத்தில் அசோகன் 'ஆலம்பனா' என்று பூதமாக மொட்டை அடித்து இழுத்து இழுத்துப் பேசியதால் வந்த வினை. அதற்கு முன் பூதம் என்றால் 'ஜாவர்' சீதாராமன் தான். 'பட்டணத்தில் பூதம்' படத்தின் பூதம். திருவிளையாடலையும், எங்க வீட்டுப் பிள்ளையையும் தினசரிப் பேப்பரில் பார்த்து ரசித்த பூதம்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். 'கண்ணாமூச்சி'யில் பூதமாக நடித்தவர் பழம்பெரும் நாடக நடிகர் உடையப்பா அவர்கள். தேவர் இனத்தைச் சார்ந்ததால் உடையப்ப தேவர் என்றும் சொல்வார்கள். ஆஜானுபாகுவான உயரமான தோற்றம். தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு. பட்டிகாட் டு வலுவான விவசாயி போன்ற தோற்றம். அதிகம் சினிமாவில் பரிச்சயம் ஆகாதவர். நல்ல நாடக நடிகர். கிராம பெரிய மனிதர், பஞ்சாயத்துத் தலைவர் போன்ற வேடங்களில் வருவார். நடக்க உலகில் மிகவும் புகழ் பெற்றவர்.

'கண்ணாமூச்சி' படம் முழுதும் பூதம் கேரக்டருக்கான ஒரு வசனம் சொல்லுவார். அம்சமாக இருக்கும்.

'ஈசாவாக்யம் இதம் சர்வம்'

என்பதுதான் அது. அற்புதமான வேடப் பொருத்தம்.

வி.குமார்தான் இப்படத்திற்கு இசை.

'கண்ணே உலகமே பள்ளிக் கூடம்' என்ற அருமையான பாடலும், 'பொன்னை நான் பார்த்ததில்லை' என்ற இன்னொரு அற்புதமான பாடலும் மனதை மயக்கும். குமார் பியானோ இசையில் வல்லவர். எனவே நாங்கள் அவரை 'பியானோ' குமார் என்றுதான் செல்லமாக அழைப்போம். தான் இசையமைத்த எல்லா படங்களிலும் பியானோ இசையுடன் கூடிய பாடல்களைத் தர அவர் மறக்க மாட்டார்.

புகழ் பெற்ற

'உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்'

என்ற 'தேன் சிந்துதே வானம்' படத்தில் ஜேசுதாஸ் பாடிய, பியானோவுடன் கூடிய இனிமையான பாடலைத் தந்தவர் நம் குமார் என்பது பலருக்கும் தெரியும்.

இப்போது மீண்டும் உடையப்பா பற்றி. இவர் நம் நடிகர் திலகம் நடித்த 'நாம் பிறந்த மண்' படத்திலும் நடித்துள்ளார். இப்போது ஈஸியாகப் புரிந்து கொள்ளலாம். நடிகர் திலகத்தின் (சந்தனத் தேவர்) தங்கை 'படாபட்'டை ஆங்கிலேயே அதிகாரி கெடுத்துவிட , 'படாபட்' இறந்து போவார். நடிகர் திலகம் அந்த அதிகாரியைப் பழி வாங்க வீறு கொண்டு எழுவார். அந்தக் காட்சிக்குத் தோதாக ஒரு நாடகம் நடக்கும். ('காவல் தெய்வம்' படத்தில் வரும் உணர்ச்சிமிகு நாடகம் போல) துரௌபதியை துச்சாதனன் துகில் உரிந்தவுடன் பீமன் கதை கொண்டு கோபமுற்று அந்த நாடகத்தில் பாடுவான்.

'பாரதத்தில் ஒரு போர் நடக்கும்
சத்தியம் சத்தியம்
பார்த்தனோடு ஒரு தேர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்'

அந்த நாடகக் காட்சியில் பீமனாக வெகு கம்பீரமாக நடிப்பவர்தான் உடையப்பா அவர்கள். சில படங்களிலேயே நடித்திருப்பார். இப்போது கேட்ச் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

'நாம் பிறந்த மண்' டைட்டிலில் உடையப்பா பெயர் இருப்பதைக் கவனியுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355018/---NaamPirandhaManmp4_000109759.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355018/---NaamPirandhaManmp4_000109759.jpg.html)

'கண்ணாமூச்சி' படம் பற்றி இன்னொருமுறை விரிவாக முழுதும் எழுதுகிறேன்.

பழைய நினைவலைகளை கிண்டி விட்டதற்கு நன்றி கல்நாயக் சார். ஒரு நல்ல நடிகரை நினைவு கூறச் செய்து அதை எல்லோருக்கும் தெரியப்படுத்த வைத்ததற்கும் சேர்த்து நன்றி!

இப்போது 'நாம் பிறந்த மண்' படத்தில் உடையப்பா பீமனாக கர்ஜிக்கும் ஸ்டில் உங்களுக்காக இதோ.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---NaamPirandhaManmp4_005006384.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---NaamPirandhaManmp4_005006384.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---NaamPirandhaManmp4_004935108.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---NaamPirandhaManmp4_004935108.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---NaamPirandhaManmp4_004909742.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---NaamPirandhaManmp4_004909742.jpg.html)

உங்களுக்காக 'கண்ணாமூச்சி' திரைப்படத்திலிருந்து ஒரு அருமையான பாடல் வீடியோவாக.

'பொன்னை நான் பார்த்ததில்லை'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iOB8HH2vvLo

vasudevan31355
29th November 2014, 08:07 PM
கிருஷ்ணா!

http://www.clipartbest.com/cliparts/xig/KrA/xigKrAa4T.gif

ருத்ர தாண்டவம் ஆடி விட்டீர்களே!

என்ன ஒரு ஞாபக சக்தி! அபாரம். எவ்வளவு நினைவலைகள்.!

நம் உறுப்பினர்கள் அனைவராலும் நமது மதுர கானங்கள் திரி தகவல் களஞ்சியமாக திகழ்வது பெருமைக்குரிய விஷயம். எதிர்கால சந்ததியினர் நமது திரியப் பாரத்தாலே பழைய தமிழ் சினிமா பற்றி பாடல்கள் மட்டுமல்லாது அத்துணை இதர தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் என்ற அளவிற்கு திரி பீடு நடை போடுவது உங்களைப் போன்றவர்கள் ஒவ்வொருவரின் ஈடு இணையில்லாத உழைப்பே.

உங்கள் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.

போற்றிப் பாதுகாக்கப் படவேண்டிய பதிவு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

vasudevan31355
29th November 2014, 08:09 PM
//மலரும் நினைவுகளை மீட்ட வாய்ப்பு அளித்து உங்களுக்கு எல்லாம் ஆப்பு வைத்த நண்பர் வாசு/முரளி/சி கே/கல்நாயக் அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்//

ஆப்பு இல்ல கிருஷ்ணா! நெல்லை சூப்பு.:)

Richardsof
29th November 2014, 08:16 PM
THANKS RAGAVENDRAN SIR

http://i61.tinypic.com/t7hled.jpg

uvausan
29th November 2014, 08:20 PM
கிருஷ்ணாஜி - அருமையான மலரும் நினைவுகள் - இதுவரை 1978 ஒரு மாயை என்று நினைத்திருந்தேன் - மாயை இல்லை , அப்படி பட்ட இனிமையான வருடங்களும் இருந்தன என்பதை எவ்வளவு சிரமப்பட்டு , நேரத்தை ஒதுக்கி எழுதி உள்ளீர்கள் - உங்கள் பதிவுகள் எல்லாம் பார்க்கும் பொழுது , எனக்கு பதிவுகள் போடவே பயமாக இருக்கின்றது - உண்மையில் சிறந்த பதிவு - நன்றி பல

vasudevan31355
29th November 2014, 08:23 PM
அன்புள்ள நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள் :

கீழ் கண்ட படங்களின் பாடலாசிரியர்கள் யார் என்பதைத் தெரியப் படுத்த வேண்டுகிறேன்...

இனிக்கும் இளமை - எம்.எ.காஜா மற்றும் ??? (http://spinningwax.ecrater.com/p/2702232/bollywood-indian-inikkum-ilamai-shankar#)
பௌர்ணமி நிலவில்
மாம்பத்து வண்டு
கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

எனது நண்பர் ஒருவர் இந்த காலத்து பாடல்களைத் தொகுத்து வருகிறார் , அவருக்கு தேவைப்படும் சமாசாரம்....
நன்றி

அன்பு நண்பர் சுந்தர பாண்டியன் சார்,

நன்றி!

இப்படி ஒரு கஷ்டமான பரிட்சையா?:) தேற முடியுமா?:)

SSS என்பதற்கு என் விளக்கம் :)

சிக்கல் சண்முக சுந்தரனார்.
Sikkal Shanmuga Sundharanar.:)

பதில் தர முயற்சிக்கிறேன்.

vasudevan31355
29th November 2014, 08:25 PM
வினோத் சார்,

அற்புதமான நடிகர் திலகத்தின் படத்திற்கு நன்றி! நான் கொஞ்சமும் எதிர்பாராதது.

vasudevan31355
29th November 2014, 08:27 PM
ரவி சார்,

உங்கள் பதிவுகளுக்கு இங்கு பலரும் ரசிகர்கள். உங்கள் பாணி தனி பாணி. நல்ல கருத்துக்களை சுவைபட கலந்து கூறும் பாணி. நீங்கள் உங்கள் வழியில் பயணியுங்கள். நாங்கள் ரசிக்கக் காத்திருக்கிறோம்.

vasudevan31355
29th November 2014, 08:29 PM
நன்றி ராகவேந்திரன் சார், கோபு சார், சுந்தர பாண்டியன் சார், கல்நாயக் சார்,,வாசுதேவன் சார், கல்நாயக் சார்.

RAGHAVENDRA
29th November 2014, 08:31 PM
கிருஷ்ணா...
அட்டகாசம்... ஹ்ம்ம்... நானும் மண்டையைப் போட்டு பிய்த்துக் கொள்கிறேன். ஞாபகசக்திக்கு... அப்புறம் தான் தெரிகிறது.. இருந்தால் தானே பிய்த்துக் கொள்வதற்கு...

நடுவில் சில வரிகள்...

தூள்...

RAGHAVENDRA
29th November 2014, 08:34 PM
Thank you Vinod Sir for a rare image of NT

vasudevan31355
29th November 2014, 08:39 PM
வணக்கம் ராகவேந்திரன் சார்.

Murali Srinivas
29th November 2014, 09:30 PM
கிருஷ்ணாஜி! சூப்பர்!

வாசு சொன்னது போல ருத்ர தாண்டவம்தான். வாழ்த்துகள்!

அன்புடன்

chinnakkannan
29th November 2014, 09:38 PM
Krishnaji.. Malarum ninaiugal suprO super.. kalakkal..ennE njabaka sakthi..

Vasu sir..kannamoochi pada alasal and
lathu paattukku nandri..

Raghavendra sir, I am ok now. Thanks ji.

chinnakkannan
29th November 2014, 09:42 PM
//நன்றி ராகவேந்திரன் சார், கோபு சார், சுந்தர பாண்டியன் சார், கல்நாயக் சார்,,வாசுதேவன் சார், கல்நாயக் சார். // mikka nandri :) nara nara.. oh.. pal valikkuthu :) thideernu Barrister aa aahittenga! enna nadakkuthu avathaar maarkkitte irukku..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5oENOUx8olM

vasudevan31355
29th November 2014, 10:12 PM
சி.க,

நீங்க தனி. உங்களை மறப்பேனா? பல்லைக் கடிக்க வேணாம். அவதார் மாற்றிக் கொண்டிருக்கிறேன். உடல்நிலை தேவலயா? நன்றாக ரெஸ்ட் எடுத்து பின் வரவும்.

vasudevan31355
29th November 2014, 10:13 PM
பல் வலியில என்ன லத்து வேண்டிக் கிடக்கு. சமத்தா போய்த் தூங்குங்க.

chinnakkannan
29th November 2014, 10:24 PM
mm I saw the video now.. sivakumaarukku laththu konjam overaa theriyalai vaasu sir?! thookkam vanthaath thaanE jOraa oru paat pOdunga..! :)

vasudevan31355
29th November 2014, 10:26 PM
ராஜ்ராஜ் சார்.

என்னுடைய இன்னொரு இசைக்குயில் கீதா தத் பாடிய பாடல்.

தினம் தவறாமல் கேட்கும் பாடல்களுள் ஒன்று.

இன்பத்தின் எல்லைக்கே அழைத்துக் செல்லும் பாடல்.

ஷ்யாமா என்ன ஒரு அழகு. ஆனால் அசோக் குமார் கிழவருக்கு?!!! ம்ம்...

'அய் தில் முஜே பதா தே'

ராஜ்ராஜ் போல 'Bhai Bhai' படத்தில்.:) எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது. வெறித்தனமாக கேட்ட, கேட்கும், கேட்கப் போகும் பாடல். சி.க, உங்களுக்கும்தான். கேளுங்கள். தன்னால் உறக்கம் வரும்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hKcaNydkNMg

vasudevan31355
29th November 2014, 10:27 PM
mm I saw the video now.. sivakumaarukku laththu konjam overaa theriyalai vaasu sir?! thookkam vanthaath thaanE jOraa oru paat pOdunga..! :)

ராமன் பரசுராமன் பார்த்தா என்ன சொல்லுவீங்க.

vasudevan31355
29th November 2014, 10:29 PM
'ஆராரோ ஆராரோ தூங்கடா கண்ணா'! சின்னக் கண்ணா!


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tHhLlQWGS0g

chinnakkannan
29th November 2014, 10:45 PM
Vasu sir..super.. rendu paattumE.. Thanks ji.. mm eppadi thookkam varum.

.kaNNai iRukka kaanjanaiyin vattamugam
thannaalE thOndruthE thaan..

hyaang.. tamil font pOttuttu vaRREn..!

chinnakkannan
29th November 2014, 10:48 PM
//ராமன் பரசுராமன் பார்த்தா என்ன சொல்லுவீங்க.// athilEyum laththuvaa.. niaivilillai.. aanaal went to night show in central cinema.. While coming back we had one strong pasum paal in one of the shop. athu ninaivirukku..(sivakumar dual role.. thaangaathu saami endru ninaitha ninaivu)

uvausan
29th November 2014, 10:52 PM
வாசு

சற்று முன் "தெய்வ மகன் " சன் லைப் இல் பார்த்தேன் - ஒரு நப்பாசை - முடிவில் கண்ணன் இறக்காமல் , குடும்பம் ஒன்று சேராதா என்று - ஆனால் முடிவில் சிறிதும் மாற்றம் இல்லை - கண்ணன் சொல்லும் ஒரு வசனம் " இல்லாமல் போனதை யாருமே இழக்க முடியாது " என்று - எவள்ளவு உண்மை -- நடிப்பு என்று ஒன்று இப்பொழுது இல்லாமல் போனதை எந்த நடிகரால் ஈடு கட்ட முடியும் ?? விருதுகள் கிடைக்கும் நடிகர்களுக்கும் " கொஞ்சம் நடிங்க பாஸ்" என்று தானே இப்பொழுது சொல்ல வேண்டியுள்ளது . கிரேசி மோகனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது - " NT - overacting ?" அதற்கு அவர் ஒரு முத்தான பதிலை தந்தார் " NT யுடன் acting is over " என்று --- உண்மைதான் . Today actor is alive but not acting - it was last seen in 2001

rajraj
29th November 2014, 11:20 PM
From ThirumaNam

en eNNam inippadheno.......

http://www.youtube.com/watch?v=g-dCeb9ZV88






'அய் தில் முஜே பதா தே'

ராஜ்ராஜ் போல 'Bhai Bhai' படத்தில்.:) எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது. வெறித்தனமாக கேட்ட, கேட்கும், கேட்கப் போகும் பாடல். சி.க, உங்களுக்கும்தான். கேளுங்கள். தன்னால் உறக்கம் வரும்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hKcaNydkNMg

eNNam inithaal thookkam thannaal varum :)

JamesFague
30th November 2014, 08:31 AM
Mr Krishna,


Hats off to you for the bringing up the old memories and certainly proves that you are also capable of

doing wonders in writing it in your unique style. A job well done.

Regards

JamesFague
30th November 2014, 08:32 AM
Andaman Kadahali - Srirangam Rangaraja

Thyagam - Trichy Jupiter


I have seen the above two movies after crossing the 100 days and that too during vacation time.

JamesFague
30th November 2014, 09:13 AM
Melody from the movie Kannil Therindha Kadhaigal


http://youtu.be/ql0WiPN28f8?list=PLlRh778b-M2YYETjEcaH5emudGBzqu3HC

rajeshkrv
30th November 2014, 10:40 AM
காலை வணக்கம் நண்பர்களே

rajeshkrv
30th November 2014, 11:05 AM
https://www.youtube.com/watch?v=DuYU7zQqVnI

vasudevan31355
30th November 2014, 11:38 AM
ராஜேஷ்ஜி

வணக்கம்.

rajeshkrv
30th November 2014, 11:39 AM
என்ன வாசுஜி
நலம் தானே

vasudevan31355
30th November 2014, 11:40 AM
//Jugalbandi 11 (with Vasu)//

Thank u rajraj sir for jikki's 'tirumanam'.:) 50% of geeta dutt. Am I right?

vasudevan31355
30th November 2014, 11:41 AM
ஜி!

நேற்று எங்கே காணோம்? நேற்று நம்ம திரி கலக்குச்சே!

rajeshkrv
30th November 2014, 11:51 AM
ஜி!

நேற்று எங்கே காணோம்? நேற்று நம்ம திரி கலக்குச்சே!

நேற்று வெளி வேலை அதனால் இங்கே வர முடியவில்லை.
ஆம் நிறைய பக்கங்கள் நிறைய தகவ்ல்கள் என ஒரே தூள்.

rajeshkrv
30th November 2014, 11:56 AM
ஓடுகிற தண்ணியில

https://www.youtube.com/watch?v=cCxTeBdpw9g

rajeshkrv
30th November 2014, 11:57 AM
இதுவும் மிக அழகான பாடல்
எனக்கு பிடித்த சீர்காழியாரும் இசையரசியும்

https://www.youtube.com/watch?v=IDwCQOpHoAI

Russellzlc
30th November 2014, 12:56 PM
அன்புசால் நண்பர் திரு.வாசு சார் அவர்களுக்கு,

தங்கள் பதிலுக்கு நன்றி. எனக்கும் நேற்று அலுவல் நெருக்கடியால் உடனே பதிலளிக்க முடியவில்லை. மன்னிக்கவும். நான் வைத்திருக்கும் வசிய மருந்து பெயர் என்ன? என்று கேட்டுள்ளீர்கள். நிச்சயமாக அதை சொல்லத்தான் போகிறேன். அதுவும் இந்த பொது மன்றத்தில் சொல்வதன் மூலம் அதைப் படிக்கும் அனைவரும் பலனடையட்டுமே. ஆனால், நீங்கள் மட்டும் பலனடைய முடியாது. அதற்கான பதிலை பின்னால் கேள்வியாகத் தருகிறேன்.

அரிய வசிய மருந்தான அது எனக்கே சமீபத்தில்தான் கிடைத்தது. முன்பே கிடைத்திருந்தால் உலகையே வசியம் செய்திருப்பேன். அந்த மருந்தின் பெயர் கொஞ்சம் நீளம்தான். இருந்தாலும் சொல்லியே தீர வேண்டும். பெயர்.... ‘‘நண்பர்களை அன்பெனும் வேலியால் சிறைப்படுத்தும் நெய்வேலி வாசுதேவன்’’. தெரிந்து கொண்டீர்களா? இப்போது சொல்லுங்கள். மருந்தே மருந்தை பயன்படுத்தி பலனடைய முடியுமா?

நேரம் கிடைக்கும்போதெல்லாம், திரு.சின்னக் கண்ணன் சார் கோரியபடி பாடலோடு இங்கு வந்து பங்கு பெற்று மகிழ்வேன். நன்றி.

அன்புள்ள: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

vasudevan31355
30th November 2014, 02:03 PM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 24)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

'காற்றினிலே வரும் கீதம்' கதை முடிந்து இப்போது பாடல்கள்.

1. முத்துராமனின் மனம் கவர்ந்த கவிதா பாடும் கானம் 'காற்றினிலே வரும் கீதம்'.

முத்துராமனுக்கு மட்டுமா? நம் எல்லோருக்கும் தான்.

ராஜாவின் டிபிகல் டைப் பாடல். அதே சுவையோடு. அதே தரத்தோடு. அதே ஜானகியோடு.

அத்தனை இடங்களிலும் ஒலித்த கீதம். பாபுவின் ஒளிப்பதிவு பாடலைத் தூக்கி நிறுத்தும். இயற்கை காட்சிகள் குளு குளு ரம்மியம்.

'கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்'

இனம் புரியா சுகம் இனிமையாய் உடலில் பரவும் சுகம் தந்த பாடல்.


https://www.youtube.com/watch?v=od2N2tZnu14&feature=player_detailpage



2. 'சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா'

தமிழ் திரையுலகை புரட்டிப் போட்ட பாடல்

ஜெயச்சந்திரனை எங்கேயோ கொண்டு தூக்கி நிறுத்திய பாடல்.

'செம்மீனி'ன் 'கடலின் அக்கர போனோரே' ஞாபகம் வராமல் இருக்காதே. ராஜா புகுந்து விளையாடி களேபரம் பண்ணிய பாடல். கொலை ஹிட். கட்டை குட்டையாய் கம்பர் ஜெயராமன் துடுப்பு பிடித்து படகோட்டியபடியே பாட, உடன் இருக்கும் மீனவர்கள் 'தையரதய்யா...தையரதய்யா பாட, அலங்கரிக்கப்பட்ட படகில் கவிதாவும், முத்துராமனும் காதல் புரிய, மிக அழகாக ஒலிக்கும் பாடல்.

பொதுவாகவே இந்த மாதிரி வரும் மீனவ பாடல்கள் பெரும்பாலும் மீனவர்களின் சோகத்தையே பிரதிபலிப்பதாக இருக்கும். ஆனால் இந்தப் பாடல்

'மொத மொதலா தொட்டேனே
வாய்க்காக் கரையோரம்
சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே'

என்று தன் மனம் விரும்பிய பெண்ணைப் பற்றி சந்தோஷமாகப் பாடி வரும் மீனவன். தொழில் சம்பந்தமாக அவன் பாடவே இல்லை. காதலி நினைவை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறான் இவன்.

'ஏய் குரிய ஏலவாலி
தண்ட ஏல வாலம்
தையரதய்யா... தையரதய்யா'

அடடா! என்ன இனிமை! மிக மிக அழகான பாடல்.


https://www.youtube.com/watch?v=Bk4R0ZfkRwg&feature=player_detailpage



3. 'ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்'

முரளி சார் மிக அழகாக எழுதியிருந்தார்.

ஜெயச்சந்திரனுக்கு கொண்டாட்டம். ஜானகியும் செம ஈடு. பாடலின் துவக்க இசை சொர்க்கத்தின் உச்சம். உறுத்தாத மிக மெல்லிய இசை. மலைப் பிரதேச காட்சிகளுக்காக அமுதாக ஒலிக்கும் புல்லாங்குழல். சப்போர்ட் செய்யும் வயலின். பாடலின் இடையிசையில் காதுகளில் தேனாகப் பாயும் கிடார் ஒலி. அருமையான பாடல் வரிகள்.

'கலைமானின் உள்ளம் கலையாமல்
களிக்கின்ற கலைஞன் எங்கே
கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாட வா'

வரிகளில் கவிதா முத்துராமனை காமெரா மூலம் அப்படி இப்படி தாலாட்டிப் பார்க்கும் பாபு.

இலக்கணம் மீறிய இயல்பான லவ் சாங்.

அதுவும் பாடலின் முடிவில் ஜானகி பல்லவி வரிகளைத் தொடங்க, ஜெயச்சந்திரன் 'ம்ஹு ம் ம்ஹு ம்' என்று ஜானகியுடனே இழைவதும், பின் ஜெயச்சந்திரன் அடுத்த வரிகளைப் பாடத் தொடங்க, ஜானகி அவருடனேயே 'ம்ஹு ம் ம்ஹு ம்' 'ஹா ஹ ஹா ஹா' என்று இழையோ இழை என்று இழைவதும் முரளி சார் சொன்னது போல இப்பாடலை தொட்டபெட்டா சிகரத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nLst0Zrq4k8

chinnakkannan
30th November 2014, 02:21 PM
//கள்ளமில்லை கபடமில்லை காவலுக்கு யாருமில்லை..// ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் வாசு சார் :)

//ஏய் குரிய ஏலவாலி
தண்ட ஏல வாலம்
தையரதய்யா... தையரதய்யா'// சும்மா மெட்டுக்குத்தான் எழுதின வரிகளா..இல்லாங்காட்டி அர்த்தம் எதுவும் இருக்குதா..

vasudevan31355
30th November 2014, 02:45 PM
மீனவர் பாட்டு என்றதும் ஜேசுதாஸ் பாடிய இந்தப் பாடலை எவரும் மறந்திருக்க முடியாது. 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' வீராசாமி துலாபாரம் படத்தில் பாடும் அற்புதமான பாடல்.

'காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்'

என்னவோ இந்தப் பாடலை கேட்பவர் நெஞ்சங்களை பாரம் அழுத்தி சோகத்தில் தோய்த்து எடுப்பது நிஜம்.

தேவராஜன் அவர்களின் இசை இதயத்தை சுக்குநூறாக்கும். ராஜனையும், சாரதாவையும் பார்க்கும் போது கண்கள் கலங்காமல் இருக்கவே முடியாது.

'ஆண்டவனும் கோயிலில் தூங்கி விடும் போது
யாரிடத்தில் கேள்வி கேட்பது?'.

'ஆடுவது நாடகம்
ஆளுக்கொரு பாத்திரம்
இறைவனுக்கு வேஷம் என்னவோ'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=84wGc5kNryM

vasudevan31355
30th November 2014, 02:55 PM
இதே பாடல் மலையாளம் 'துலாபாரம்' படத்தில். வயலாரின் வரிகளுக்கு தேவராஜன் இசை.

காட்டடிச்சு கொடும் காட்டடிச்சு
காயலிலே விளக்கு மரம் கண்ணடச்சு
சொர்க்கமும் நரகமும் காலமாம் கடலில்
அக்கரையோ இக்கரையோ

ஜேசுதாஸின் குரலிலேயே.

இதில் ராஜனுக்கு பதிலாக பிரேம்நசீர். ஜோடி அதே பாவப்பட்ட சாரதா.


https://www.youtube.com/watch?v=Od27_L3WNKM&feature=player_detailpage

chinnakkannan
30th November 2014, 03:24 PM
வாசு சார்.. ரெண்டுமே நல்ல பாட்டுதான் இல்லைங்கல.. ஏன் சோகம்.. ஜாலியா இருக்கலாமில்லை..


ஆனந்த ராகம் படத்திலிருந்து மீனவர் பாட்டு..உற்சாகம்..

கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்

வலை வீசு வலை வீசு
வாட்டம் பார்த்து வலை வீசு

அம்மா கடலம்மா
எங்க உலகம் நீயம்மா

தினம் ஆடி ஓடி பொழைக்கும்
எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே


வயலில்ல வாய்க்காலில்ல
விதை போடவில்ல
மரம் வச்சு தண்ணி ஊத்தி
பலன் தேடவில்ல

நீ தந்தா சாப்பாடு

இல்லேன்னா கூப்பாடு

இருப்பதையெல்லாம்
கொடுப்பாயே என் அம்மா

இல்லேன்னு சொன்னதில்ல
எங்க கடலம்மா


நிலத்துக்கு சொந்தக்காரன்
பல பேரு உண்டு
கடலுக்கு சொந்தம் பேச
உலகத்தில் யாரு


உழைச்சாக்க கைமேலே
பொன்னாக தருவாயே

இருப்பதையெல்லாம்
கொடுப்பாயே என் அம்மா

இல்லேன்னு சொன்னதில்ல
எங்க கடலம்மா



http://www.youtube.com/watch?v=PB8s20sGTRo

அச்சோ.. இதைத் தொழில் பாட்டுல போட்டிருக்கலாமில்லை..ம்ம் வேற பாட் கிடைக்காமயாப் போய்டும் :)

chinnakkannan
30th November 2014, 03:29 PM
ம்ம்.. கடலோரம்னு பாட் போட்டாச்சா..அங்கிட்டிருந்து எஸ்வி. சாரும் கலைவேந்தன்சாரும் வந்துடுவாங்க..( ஹி.ஹி. நானும் தான்)

மடந்தை அழகினை மாண்புறக் கூட்டும்
கடலோரம் வீசிய காற்று..:)


கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து



http://www.youtube.com/watch?v=8HrHWIMcHts

Richardsof
30th November 2014, 03:35 PM
[QUOTE=chinnakkannan;1186666]ம்ம்.. கடலோரம்னு பாட் போட்டாச்சா..அங்கிட்டிருந்து எஸ்வி. சாரும் கலைவேந்தன்சாரும் வந்துடுவாங்க..( ஹி.ஹி. நானும் தான்)

வந்துட்டேன் சி.க .சார்
என்ன ஒரு ரம்மியமான பாடல் . கடலோரம் ... தங்க தாரகை மஞ்சுளா ... புன்னகை மன்னன் எம்ஜிஆர்
பாடகர் திலகம் .. வாலிப வாலி ...மெல்லிசை மன்னர் ...கூட்டணி மனதை மயக்கும் மதுர பாடல்

vasudevan31355
30th November 2014, 03:38 PM
//ஏப்ரல் 14 நடிகர்திலகம் 'கௌரவ வேடம்' என்று டைட்டில் கார்ட் போட்ட ஆனால் படம் முழுவதும் வரும் 'வாழ்க்கை அலைகள் ' நெல்லை சென்ட்ரல் ரிலீஸ். பாலா சுசீலா இணைந்த குரல்களில் 'உன் கண்களிலோ கனிகள் ' பாடல் நெல்லை வானொலி ஞாயிறு இரவு நேயர் விருப்பம் 8-8.30 நிகழ்ச்சியில் படு பிரபலம் //.

கிருஷ்ணா!

நீங்கள் எழுதியிருந்த நடிகர் திலகம் நடித்த 'வாழக்கை அலைகள்' படத்தின் உங்களுக்கும், எனக்கும் மிக விருப்பமான, நெருக்கமான பாடல் இதோ. என்ஜாய் செய்யுங்கள்.

மிக அரிய தூள் பாடல்

உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்

உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
வளைந்து போனேன்
மகிழ்ந்து போனேன்
வளைந்து போனேன்
மகிழ்ந்து போனேன்

என் தோள்களிலே என் விழிகள்
காணும் ஜாலங்கள்
நான் சொல்வதென்ன வடிவழகே
காதல் கோலங்கள்

நீ துடிதுடித்து தழுவுகின்ற
சொந்தம் கோடி
நீ துடிதுடித்து தழுவுகின்ற
சொந்தம் கோடி
நாம் புதியதோர் பருவங்களில் காதல் ஜோடி

உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்

வந்து வந்து வந்து வந்து (சுசீலா அமர்க்களம்)

வந்து என்ன செய்தியோ

நல்ல வயது வந்ததே
தாகம் தாபம் தாகம் தாபம்

தாபமானதென்ன சொல்லடி

ஆசையென்ற தாகம் தான்

ஓ... முத்த முத்திரை வீசவே
எல்லை இங்கு ஏனடி
எல்லை இங்கு ஏனடி

ஆ... ஆ

மொட்டு விரிந்த பூவெல்லாம்
மாறிடும் அழகுமணி
வெட்கமென இக்கணம்
தொட்டுப் படர்ந்த கண்மணி

திருமஞ்சள் நூலால்
இனி வளைக்கும் காலம் வந்தது
திருமஞ்சள் நூலால்
இனி வளைக்கும் காலம் வந்தது
மனம் இணைந்த இக்கணம்
மண நாளாய் மாறுது

மனம் இணைந்த இக்கணம்
மண நாளாய் மாறுது

உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்

உன் சிரிப்பினிலே மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
வளைந்து போனேன்
மகிழ்ந்து போனேன்


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8cdY1t1COnQ

chinnakkannan
30th November 2014, 03:52 PM
//உன் கைகளிலோ தளிர்கள்
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன் // வாலி? ஆனால் இப்பாடல் கேட்டிருக்கிறேன்..நைஸ்.. உருகிப்ப்போனேன் உருகிப்போனேன் என உருகுதல் அழகு.. நன்னி வாசுண்ணாவ் :)

gkrishna
30th November 2014, 05:01 PM
//உன் கைகளிலோ தளிர்கள்
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன் // வாலி? ஆனால் இப்பாடல் கேட்டிருக்கிறேன்..நைஸ்.. உருகிப்ப்போனேன் உருகிப்போனேன் என உருகுதல் அழகு.. நன்னி வாசுண்ணாவ் :)

வாசு

உருகி போனேன் உறங்கி போனேன் கிறங்கி போனேன் மயங்கி போனேன்

என்ன பாடல் பாலாவின் ரம்மியமான குரல் உடன் கலக்கும் சுசீலா அம்மா

இதன் ஒரிஜினல் தெலுகு பாடல் இருந்தால் அதுவும் கேட்டு பார்க்க வேண்டும் .

முத்த முத்திரை வீசடி
எல்லை இங்கு ஏதடி
எல்லை இங்கு ஏதடி

இந்த வரிகளை பாலா பாடி முடிக்கவும் சுசீலாவின் ஹம்மிங் மார்வலஸ் .பாடல் முழுவதும் ஒரு flute இசை தொடர்ந்து கொண்டே இருக்கும் .சக்கரவர்த்தியின் நல்ல மெலடி

நன்றி வாசு .


நண்பர் சி கே நீங்களும் இந்த பாடலை ரசித்து உள்ளீர்கள். இந்த பாடல் krishnamaraaju வாணிஸ்ரீ ஜோடியில் . பாடல் எழுதியது வாலியா ,கண்ணதாசனா என்று நினைவில் இல்லை

chinnakkannan
30th November 2014, 05:45 PM
உருகுதல் என்றால் என்ன.. மெல்ட்டிங்க் பாய்ண்ட்.. உருக்குதல் மெல்ட்டிங்..அப்படியே உருகிட்டேம்ப்பா அவளோட கண்ணோரம் கண்மை கொஞ்சமாய்க் கரைஞ்சு அவள் பார்த்த பார்வையிலே - எனச் சொல்லும் காதல்ர்கள் உண்டாக்கும்..

ம்ம்.. இந்த உருகும் தன்மை ஆடவர்களுக்குத் தான் நிறைய உண்டோ.. ஸோ என்ன சொல்ல வர்றேன்னா..அதான் உங்களுக்கே தெரியுமே :)

முதலில் வருவது அலைபாயுதே கண்ணா ஆணும் பெண்ணும் பாடும் பாடல்..

நிலை பெயராது சிலை போலவே நின்று நேரமாவதறியாமலே
வினோதமான முரளீதரா..அலைபாயுதே கண்ணா..


//கதறி மனம் உருகி நான் அழைக்கவோ//

அலைபாயுதே படத்தில் வந்தாலும் முன்னால் வந்த புதிய சங்கமம் என்ற படத்தில் வெகு அழகாக இருக்கும் கேட்க.. பிரபு சுஹாசினி சாருஹாசன்..யாராவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால் அவங்களுக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் பார்க்கும் போது வழங்கப் படும்!

**

மனிதனென்பவன் தெய்வமாகலாம்ல பிபிஎஸ் இப்படிச் சொல்றார்..

//உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம் //

*

பாதகாணிக்கைல செக்கச் சிவந்த இதழோ இதழோ பவழம் பவழம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூ மலரும்னு ஜெமினி பிபிஎஸ் வாய்ஸ்ல ஜொள்ளு விடறார்..எஸ்.ஜே என்னடான்னா இப்படி உருகறாங்க..

//அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு //

களத்தூர் கண்ணம்மால ஏ.எம்.ராஜா.. ஜெமினிக்காக...

//அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே //

*

ம்க்கும்.. நம்ம யூத்க்கு ப் பிடிச்ச பாட்டு..அந்தக்கால மூக்கோட அந்தக்கால ஸ்ரீ தேவி..ப்ளஸ் யங்க் கமல்ஹாசன்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி ..அதுல..

//வெள்ளிப்பனி உருகி மடியில் வீழ்ந்தது போல் இருந்தேன் //

இப்படி வருது..

**

நிறைய உருகற பாட்டு இருக்கு..புதுசுலயும்..உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே, மன்னிப்பாயாவிலயும் உருகுது வரும்..

சரி சரி..வந்ததுக்கு ஸ்ரீ தேவி பாட்..

http://www.youtube.com/watch?v=_qF3iXoC3Nk

ராகம் ஆபேரின்னு போட்டிருக்கு..சரியான்னு க்ருஷ்ணா ஜி தான் சொல்லணும்

vasudevan31355
30th November 2014, 06:15 PM
நன்றி கிருஷ்ணா சார், சி,க ,சார்

கிருஷ்ணா! இன்னொரு பாடல். 'வாழ்க்கை அலைகள்' தெலுங்கு 'ஜீவன தீராலு' படத்திலிருந்து 'கெரட்டானிக்கி ஆராட்டம்' என்ற அற்புதமான பாடல்.

நம்ம 'டைகர்' உர்ர்ர் ... கிருஷணம்ராஜ் மற்றும் ஜெயசுதா பங்கு பெறும் பாடல். சக்கரவர்த்தி மியூசிக். சுசீலா அம்மாவின் குரல் அப்படியே கொல்லிமலைத் தேனாய் இனிக்கிறது. உடன் நம்ம பாலா.

மிக மிக அழகான அற்புதமான பாடல். சி.நாராயண ரெட்டியின் பாடலுக்கு இசை சக்கரவர்த்தி.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Nbq_BgE4Hx8

vasudevan31355
30th November 2014, 06:19 PM
//அலைபாயுதே படத்தில் வந்தாலும் முன்னால் வந்த புதிய சங்கமம் என்ற படத்தில் வெகு அழகாக இருக்கும் கேட்க.. பிரபு சுஹாசினி சாருஹாசன்..யாராவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால் அவங்களுக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் பார்க்கும் போது வழங்கப் படும்!//

சி.க சார்,

அவ்வளவுதானா? இதெல்லாம் ரொம்ப அநியாயங்காணும்.:) அவ்வளவு லேசுல கிடைக்கிற பாடலா? என்ன விளையாட்டா இருக்கா? சாக்லேட் 5 ரூவாதான்.

vasudevan31355
30th November 2014, 06:29 PM
மாலை மதுரம்.

'வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா'

எமன் ராஜம் ஜெமினியையும் விட்டு வைக்கவில்லை.

இப்பாடலில் ஜெமினியின் மானரிஸங்கள் சிரிப்பை சுலபமாய் வரவழைக்கின்றன.


https://www.youtube.com/watch?v=pIklIeTG1L4&feature=player_detailpage

vasudevan31355
30th November 2014, 06:35 PM
சி.க சார்!

என்ன ஒரு உருகல்! அதற்கேற்ற பாடல்கள் உங்கள் திறமைக்கு ஒரு உரை கல்.

முக்கியமான இதை விட்டு விட்டீர்களே!

'நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே'(சதாரம்)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=s5M5mQZNUuM

இன்னொன்னு சூப்பர். 'முருகா என்றதும் உருகாதா மனம்'.

நீங்கள் கன்னியைப் பார்த்து உருகினால் நான் கந்தனைப் பார்த்து உருகுவேனாக்கும்.:) ம்க்கும்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=R-q-bDo7AYQ

JamesFague
30th November 2014, 06:39 PM
All time favourite song from the movie Dilwale Dulhania Le Jayenge. The movie going still strong in Mumbai. Starring the one & only King Khan and Kajol. One of the top most melody song. Watched the movie in Urvashi Theatre in Bangalore during the movie release.


http://youtu.be/BOWvnwxGFzg

vasudevan31355
30th November 2014, 06:39 PM
இந்தாங்க இன்னொரு உருகல்

'உருகிடும் வேளையிலும்
நல்ல ஒளிதரும் மெழுகுத் திரி'

சி.க உங்களுக்காகத் 'தாகம்' படத்தை சர்ச் செய்தால் பருவ தாகம், இளமை தாகம், தணியாத தாகம் அப்படின்னு வருதே.:) உங்களைப் பத்தி 'யூ ட்யூப்' கூட நல்லா தெரிஞ்சி வச்சிருக்கே!:)

JamesFague
30th November 2014, 06:42 PM
Mohammed Rafi classic Hit Song from the movie Jeene Ki Raah.


http://youtu.be/GNTNnp5rk5E

JamesFague
30th November 2014, 06:45 PM
Superb Melody song of Mohd Rafi - a song for all times. Enjoy.


http://youtu.be/SEKdN9sT45Q

chinnakkannan
30th November 2014, 06:47 PM
வாவ் வாசு சார்.. என்ன பாட்டு நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே.. முருகா என்றதும் உருகாதா மனம்.. அந்த மெழுகுத்திரி பாட்டுத்தான் தெரியலை.. ஒரு பெரிய ஓ + தாங்க்ஸ்..:) (உள்ளம் உருகுதய்யா முருகா..:) )

தாகம் நு எதுக்கு இப்போ.. ம்ம் ஏதோமோஹம் ஏதோ தாஹம்னு தான் குரல் கேக்குது :)

chinnakkannan
30th November 2014, 06:49 PM
//அவ்வளவுதானா? இதெல்லாம் ரொம்ப அநியாயங்காணும். அவ்வளவு லேசுல கிடைக்கிற பாடலா? என்ன விளையாட்டா இருக்கா? சாக்லேட் 5 ரூவாதான்.// அது ஒரு பேச்சுக்குச் சொன்னேங்காணும்..மீட் பண்றச்சே சாக்லேட் ஷவரே பண்ணிடலாம்.. பாட் கொடுங்க..:) மதுண்ணா காணோம்..உடம்பு முடியலைன்னு சொல்லியிருந்தார்.. கேக்கணும்..:sad:

JamesFague
30th November 2014, 06:53 PM
Enjoy the song from the movie Daag starring original Super Star of Hindi Cinema Rajesh Khanna.


http://youtu.be/nhd4CBmhDgk

JamesFague
30th November 2014, 06:56 PM
Enjoy the melody song of Vade karle Sajna from the movie Haath ki safai


http://youtu.be/Z9lx-6eun9s

JamesFague
30th November 2014, 06:59 PM
Fantastic melody from the movie Manzil by the one & only RD Burman.


http://youtu.be/cmD6GfZgKX8

chinnakkannan
30th November 2014, 10:32 PM
//'வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா'// ஹப்பாடி இப்பத் தான் முழுப் பாட்டு கேட்டேனாக்கும்..இப்பத்தான் முதன் முதலாக் கேக்கறேன் பாக்கறேன்..அதென்ன அது வாசு சார்..அந்தக் காலத்திலேயே சிம்ரன் ஸ்டெப்ஸ்லாம் போட்டிருக்காங்க எம்.என். ராஜம்..

//நீங்கள் கன்னியைப் பார்த்து உருகினால் நான் கந்தனைப் பார்த்து உருகுவேனாக்கும்// ஹி ஹி..

//உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன்// இப்போ பாட்டு முழுக்க க் கேட்டேன் வாஸ் ஸார்..நைஸ்.. என்ன கொஞ்சம் நீளமா எழுதி சுருக்கறதுக்குப் பதிலா கொஞ்சம் ஏற்ற வார்த்தைகளும் போட்டிருந்தா இன்னும் நன்னாயிருக்கும் உதா..// திருமஞ்சள் நூலால்
இனி வளைக்கும் காலம் வந்தது//

//என்ன ஒரு ரம்மியமான பாடல் . கடலோரம் ... தங்க தாரகை மஞ்சுளா ... புன்னகை மன்னன் எம்ஜிஆர் பாடகர் திலகம் .. வாலிப வாலி ...மெல்லிசை மன்னர் ...கூட்டணி மனதை மயக்கும் மதுர பாடல்// தாங்க்ஸ் எஸ்விசார்..உடன் வந்துரசித்ததற்கு (எனி டைம் கேட்கக் கூடிய பாடல்) அண்ட் ஸாரிங்ன்க்ணா தாங்க்ஸ் உடனே சொல்லாததற்கு .. ஏனெனில் காரணம் வாசு சார்..உருகவச்சுட்டார்!

//இக்கரையில் நானிருக்க அக்கரையில் நீயிருக்க
இருவரையும் பிரிக்க இடையில் இந்த ஆறிருக்க// பக்கத்தில் வந்தவுடன் பாசமுள்ள எம்மனசு..சொக்காமல் சொக்கிடுது சுத்திச் சுத்திஆடிடுது..ம்ம்பேஷ்//

ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை..ம்ம் இந்த வரி அப்படியே அச்சமில்லை அச்சமில்லைல எடுத்தாண்டுவிட்டார்கள்.. தாங்க்ஸ் ராஜேஷ் பாட்டுக்கும் எஸ்.சரோஜா பாட்டுக்கும் (பின்ன!)

rajeshkrv
1st December 2014, 06:21 AM
இதே பாடல் மலையாளம் 'துலாபாரம்' படத்தில். வயலாரின் வரிகளுக்கு தேவராஜன் இசை.

காட்டடிச்சு கொடும் காட்டடிச்சு
காயலிலே விளக்கு மரம் கண்ணடச்சு
சொர்க்கமும் நரகமும் காலமாம் கடலில்
அக்கரையோ இக்கரையோ

ஜேசுதாஸின் குரலிலேயே.

இதில் ராஜனுக்கு பதிலாக பிரேம்நசீர். ஜோடி அதே பாவப்பட்ட சாரதா.


https://www.youtube.com/watch?v=Od27_L3WNKM&feature=player_detailpage

அக்கரையோ இக்கரையோ ஆஹா

rajeshkrv
1st December 2014, 06:27 AM
சி.க
அது ஈ.வி.சரோஜா (பிள்ளைக்கனியமுது)

rajeshkrv
1st December 2014, 07:32 AM
My Favourite Bhava Gayakan P.Jayachandran's songs

superb classical by PJ music M.B.Sreenivasan, fetched state award for PJ

https://www.youtube.com/watch?v=u1H3e_sgmzQ


Another stunner from Narayana guru. fetched National award
music by Devarajan master

https://www.youtube.com/watch?v=GlBnzmX8EV0


one under our own MSV which fetched PJ his first state award

https://www.youtube.com/watch?v=VGM96W39kog


my fav of PJ with PS

Seethadevi swayamwaram cheithordu thretha yugathile sreeraman

satyan & sheela

https://www.youtube.com/watch?v=x8icFGofoxo

rajeshkrv
1st December 2014, 10:38 AM
i was impressed by this movie
a different movie , for a change banumathi a subtle acting ..

https://www.youtube.com/watch?v=gpwusIe9Umw

sss
1st December 2014, 11:45 AM
நேற்று தனது எழுபத்து ஒன்றாவது பிறந்த நாள் கொண்டாடிய (இசை)வாணி ஜெயராம் பாடிய மீரா ஹிந்தி பட பாடல்களை கேட்டு உள்ளீர்களா ?

பண்டிட் ரவி சங்கர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் (வாணி பாடியது தான் !!!!) இனிமையே ... நவீன உலகின் மீரா வாணி தான் என எல்லோரும் பாராட்டிய பாடல்களில் இருந்து ஒரு துளி இதோ :

https://www.youtube.com/watch?v=fMdvoMJG6h4

மீராவாக ஹேமா மாலினி ... பார்த்து கேட்டு ரசிக்கவும்...

(இணையத்தில் உள்ள ஒரு கமெண்ட் :
Originally Laxmikant-Pyarelal was contacted for this film. But as Lata sentimentally declined to sing meera's bhajan which once she already sang under tune of his brother Hridaynath, LP regretted the offer. then Ravishankar was given music direction, who utilized Vani jaram's voice.)


பீகார் முதல்வர் லல்லு பிரசாத் அவர்கள் ஹேமா மாலினி கன்னம் போலே ரோடு பளபள என இருக்க வேண்டும் என சொன்னது நினைவில் வருகிறது...

chinnakkannan
1st December 2014, 02:19 PM
hi goodmorning every body..

என்னவாக்கும் இது.. முன்னால கேட்டது தான் இது.. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.. ஆனாக்க இப்படியா..

இனிமைகள் எல்லாம் இறந்துதான் போகும்
தனிமை வந்ததால் தான்..

இந்த சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் வைரமுத்து எழுதிய கவிதையாக்கும்..அதற்கு பரத்வாஜ் போட்ட மெட்டு..

வேறென்ன தனிமை இருக்கு

தனிமையிலே ஒரு ராகம் ஒரு பாவம் உருவாகும்

தனிமையிலே இனிமை காண முடியுமா..


ஓயெஸ்ங்கறாங்க இந்த டூயட்ல

இரவும் நிலவும் வளரட்டுமே.. பாட்டுல .. நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமேங்கறாங்க..

தனிமையில் என்கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ ந்னு கீரவாணி பாடி ஒரு காதலன் கூப்பிடறார்..

காதலன் இல்லாத தனிமைல காதலி..

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடுங்கறா//

இன்னொரு காதலர் உணர்ச்சிப் பிழம்பாய் ப் பாடறார்..

//திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரின் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகளிட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ……// ம்ம் அழகான பாட்டு..பாடறது கொஞ்சம் கஷ்டம் தான்.

பாவம் இந்தப் பொண்ணு.. நீராழி மண்டபத்தில் காத்திருக்கு..ஆனா மெடிசினா கிங்க் வந்துடறான்..உடனே வெக்கம் வந்துருச்சாம்..

//நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்//

பாவம் இந்தப் பொண்ணு.. கணவனை இழந்தவ..

//தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமையிலை வாழ்வில் எதற்கு இந்த இளமை// பொங்கிப் பொங்கி ஆடிப் பாடறது நன்னா படமாக்கியிருப்பாங்க..

இங்கே நிலவைக் காயும் தம்பதிகள்...

// ஏலக்காய் ப் பெட்டகம் போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய்ப் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்//

ஹை.. தனியாய் உருகும் லத்து..அவங்களோட ஃபீலிங்க்.. உருகியிருப்பது வாணி ஜெயராம்..

தனிமையில் யார் இவள்..

. எனில் இத்தோட தனிமை முடிச்சுக்கலாம்..!

http://www.youtube.com/watch?v=RIxJfCsDqcA

kalnayak
1st December 2014, 03:39 PM
கல்நாயக் : நான் என் பதிவுகளை படிச்சு லைக் போடணும் என்று உங்களை கேட்டுக்கொள்ளவில்லை - நீங்கள் லைக் பண்ணும் மாதிரி நான் பதிவுகள் போட வேண்டும் என்ற அர்த்தத்தில் எழுதி இருந்தேன் - பாருங்கள் - எவ்வளவு வித்தியாசம் , நான் சொல்ல வந்ததிற்கும் , நீங்கள் புரிந்து கொண்டதிர்க்கும் --- அது சரி உங்கள் நகைச்சுவை அரும்பிய பதிவுகள் இந்த திரியில் இடம் பெறாதா ??
:smokesmile::smokesmile:

மன்னிக்கவும் ரவி, உங்க பதிவுகளுக்கு 'டிஸ்லைக்' நான் போடறதா சொன்ன உங்க பதிவுக்கு நான் தவறாக எடுத்துக்கொண்டு உங்க பதிவுகளை பார்த்து மறக்காமல் நல்ல பதிவுகளுக்கு (கட்டாயம் எல்லா பதிவுகளும் நல்லவைகளே) லைக் போடவேண்டும் என்று சொன்னதில் சில வார்த்தைகள் ஒரு அவசரத்தில் மிஸ்ஸாகிவிட்டன. தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
அப்புறம் என்ன சொன்னீங்க - நகைச்சுவையா? தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.

kalnayak
1st December 2014, 03:50 PM
வாசு,
சின்னக்கண்ணன் சொன்னதிற்கும் அதிகமாகவே நீங்கள் செய்து விட்டீர்கள். ஆம். 'கண்ணாமூச்சி' என புள்ளிதான் வைத்தேன். அதுவும் தப்பாக (அசோகனை பூதம் என்று சொன்னதைத்தான்). அதையும் திருத்தி என்னென்ன விபரங்கள் - அற்புதமான கான்கிரீட் ரோடு போட்டு வண்ணக்கோலங்களாய் வரைந்து தள்ளிவிட்டீர்கள். நன்றி. நன்றி!!!

kalnayak
1st December 2014, 04:08 PM
வாசு,
காற்றினிலே வரும் கீதம் - பாடல்கள் பதிவிற்கு நன்றிகள் பல.

kalnayak
1st December 2014, 04:30 PM
உருகுற பாட்டா எடுத்துக்கலைன்னா விடுங்க. கடலோரப்பாட்டா எடுத்துக்கோங்க!!!
'தரைமேல் பிறக்க வைத்தான். எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான். ...'

https://www.youtube.com/watch?v=LgIqmSMsNTw

ரெண்டு பேர் துடுப்பெடுத்து என்னைத் துரத்துவது போல் தெரிவதால் ...

vasudevan31355
1st December 2014, 05:33 PM
சி.க,

ஜமாயுங்க. தனிமை நினைவூட்டல் இனிமைதான்.

இதோ. இன்னொரு தனிமை.

என் பாடகி பாடுவதைக் கேளுங்கள்

'தேடுவதோ தனிமை.

ஆமாம். துள்ளுவதோ இளமை...தேடுவதோ தனிமை.


https://www.youtube.com/watch?v=N5g-6po9i0A&feature=player_detailpage

vasudevan31355
1st December 2014, 05:42 PM
இந்த வயதான தனிமைத் தம்பதிகளைப் பாருங்கள்.

இந்த ஸ்கூல் மாஸ்டரும், அவர் மனையாளும் உடல் தள்ளாடும் வயதில் ஒருவருக்கொருவர் ஆறுதலாய்....

'தன்னைத் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dvIQFMz771Q

vasudevan31355
1st December 2014, 05:57 PM
மிக்க நன்றி கல்நாயக். (பார்த்தீங்களா! இப்போது கூட மறக்காமல் சார் போடவில்லை)

அவசியம் தங்களுக்கு பிடித்த நல்ல பாடல்களை தங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் அலசலாமே. ரொம்ப விவராமாக்க் கூட வேண்டாம். ஸ்வீட்டாக. ஷார்ட்டாக. நாம் இருவரும் கடலூர்க் காரர்கள் அல்லவா.

kalnayak
1st December 2014, 06:04 PM
தனிமை-ன்னு ஆயிருச்சு. இந்தாங்க என் நினைவில் வந்தவை:

https://www.youtube.com/watch?v=kya4P-4lSUE

https://www.youtube.com/watch?v=aBgwFy4ejd8

https://www.youtube.com/watch?v=MrojbC2SiUs

அடியாட்களை கூட்டி வந்தால் ஆகவே ஆகாது!!!

vasudevan31355
1st December 2014, 06:10 PM
அன்பு நண்பர் கல்நாயக்,

கடலூர் துறைமுகமே மீன் பிடித் தொழிலைத்தான் நம்பி இருக்கிறது. உங்களுக்கு கடலூர் நன்கு பரிச்சயமான ஊர் என்பதால் நீங்கள் படகோட்டியின் அருமையான மீனவர் படும் துயரங்களை விளக்கும் பாடலை டைமிங்காக பதித்துள்ளீர்கள் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.

காலாகாலத்துக்கும் அழியாத அற்புத பாடலுக்கு நன்றி!

kalnayak
1st December 2014, 06:10 PM
மிக்க நன்றி கல்நாயக். (பார்த்தீங்களா! இப்போது கூட மறக்காமல் சார் போடவில்லை)

அவசியம் தங்களுக்கு பிடித்த நல்ல பாடல்களை தங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் அலசலாமே. ரொம்ப விவராமாக்க் கூட வேண்டாம். ஸ்வீட்டாக. ஷார்ட்டாக. நாம் இருவரும் கடலூர்க் காரர்கள் அல்லவா.

நன்றி வாசு, முயற்சிக்கறேன்!!!
அடியாட்களை, வரும்போது அடையாளம் காட்டுகிறேன். என்னை என்கரேஜ் பண்ணிட்டீங்க இல்ல. எதுக்கும் தயாராக இருங்கள்!!!

kalnayak
1st December 2014, 06:40 PM
அன்பு நண்பர் கல்நாயக்,

கடலூர் துறைமுகமே மீன் பிடித் தொழிலைத்தான் நம்பி இருக்கிறது. உங்களுக்கு கடலூர் நன்கு பரிச்சயமான ஊர் என்பதால் நீங்கள் படகோட்டியின் அருமையான மீனவர் படும் துயரங்களை விளக்கும் பாடலை டைமிங்காக பதித்துள்ளீர்கள் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.

காலாகாலத்துக்கும் அழியாத அற்புத பாடலுக்கு நன்றி!

வாசு,
என் பள்ளி வாழ்க்கையில் சில நண்பர்கள் இருந்தார்கள்- மீன் பிடி சார்ந்த தொழில்களை நம்பி. இப்போது என்னால் கடலூரில் வந்து தங்கி எனது நண்பர்களை எங்கேயென்று தேடி சந்தித்து பேசி ... சாத்தியமேயில்லை. தொடர்பேில்லை. கடலூர் அவ்வப்போது வந்தாலும், சில மணி நேர வேலை. சிறிது நேரம் கிடைத்தால் பாடலீஸ்வரரையும், தேவநாதப்பெருமாளையும் காண அப்பாயிண்ட்மெண்ட் விண்ணப்பம். முடிந்ததும் திரும்பி ஓடி வரவேண்டிய சூழ்நிலை. பார்ப்போம் என் ஆட்டோகிராப்பிற்கு சற்றே நேரம் கிடைக்குமாவென்று பின்னாட்களில்!!!

அடியாட்கள் கடலூரில் தேட வசதி செய்து கொடுத்துவிட்டேனோ!!!
நாளை திரியில் சந்திப்போம்.

JamesFague
1st December 2014, 06:44 PM
Classic Romantic Song from the movie Abhiman starring Big B and Jayabhaduri.


http://youtu.be/F8IVa-7-2_w

JamesFague
1st December 2014, 06:46 PM
One more melody from the movie Abhiman Meet na mila. Superb song.


http://youtu.be/LqQKzTi7JDU

JamesFague
1st December 2014, 06:48 PM
Evergreen superb melody Mera Jeevan Kora Kagaz. What a composition. Enjoy the super song.


http://youtu.be/81v-RHKZbiw

JamesFague
1st December 2014, 06:52 PM
Super Hit song from the movie Kati Patang starring the one & only Rajesh Khanna. Enjoy


http://youtu.be/YIWX9vCffms

JamesFague
1st December 2014, 06:55 PM
Enjoy the classic melody song starring Rajendra Kumar & Vyjayanthimala from the movie Suraj.


http://youtu.be/McP9D114BfU

RAGHAVENDRA
1st December 2014, 06:57 PM
சித்தூர் வாசு சார்
மேரே தில் மே க்யாஜ் க்யாஹே...தாக் படத்தின் மிகச் சிறந்த பாடல்... அக்காலத்தில் இப்பாட்டிற்காகவே தேவி பாலா திரையரங்கில் மறுமுறையும் பார்த்தேன். ப்ளூ டைமண்ட், எமரால்டு தியேட்டர்களைத் தொடர்ந்து லிட்டில் ஆனந்த், அதன் பிறகு தேவிபாலா என சின்னத் திரையரங்குகள் படம் பார்க்கும் அனுபவத்தைப் புதியதாக உருவாக்கியிருந்த நேரம். தாக் படம் ஒளிப்பதிவிற்காகவே பல ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த படம். ஆராதனா படம் மூலம் தமிழகத்திலும் ராஜேஷ் கன்னாவிற்கு ஏராளமான ரசிகர்(கை)களும் உருவாகியிருந்த நேரம். சென்னை மட்டுமென்ன விதிவிலக்கா.. தாக் படத்திற்கு தேவிபாலாவில் ஏராளமான கல்லூரி மாணவியர் படையெடுத்து வந்தனர். இடைவேளைகளில் அவர்கள் ராஜேஷ் கன்னாவைப் பற்றிப் பரிமாறிக் கொண்ட எண்ணங்கள் சிலாகித்ததெல்லாம் அவர்கள் மனதில் அவர் எந்த அளவிற்கு ஊடுருவியிருந்தார் என்பதைக் காட்டியது. மறக்க முடியாத படம் தாக்.

இந்த அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.

RAGHAVENDRA
1st December 2014, 07:00 PM
1970களில் ஹிந்திப் படப்பாடல்கள் தமிழகத்திலும் வேகமாக ஹிட்டாயின. அதற்கு அடித்தளமிட்டது ஆராதனா. ஒரு பக்கம் ஹிந்திப் பாடல்களின் ஆதிக்கத்தை அப்போதைய தமிழ்த் திரைப்படப்பாடல்கள் தடுக்க முடியவில்லை என்ற வருத்தமிருந்தாலும் பாடல்கள் அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவை என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் சித்தூர் வாசு சார், 70களின் ஹிட் பாடல்களைத் தாங்கள் வழங்கி வருகிறீர்கள். அதன் மூலம் நம் நினைவுகளையும் அந்நாளுக்கு இட்டுச் செல்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
1st December 2014, 07:06 PM
வாசு சார்
தனிமையைப் பற்றிய பாடல் வரிசை ... சூப்பர்..

இங்கே தனியாக வந்த ஆடவனை அறிந்து கொண்ட பெண் என்ன செய்தாள்..

கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..

https://www.youtube.com/watch?v=8Ltkq5_iCMI

RAGHAVENDRA
1st December 2014, 07:09 PM
தனியே தன்னத்தனியே இவர் காத்துக் காத்து நின்றாராம்..

நிலத்தை விடவும் இவர் பொறுமைசாலியாம்..

பெருமை பீற்றிக் கொள்கிறார் இந்தப் பாடலில் நாயகன்..

ஹ்ம்.. சில பதிவுகளை நாம் பொறுத்துக் கொள்வதை இவர் அறிந்திருக்க மாட்டார் போலும்..

https://www.youtube.com/watch?v=csya4nt4Fuo

தனியே காத்து நின்றதைக் கூட்டம் கூட்டிச் சொல்கிறாரே.. இதை என்ன சொல்வது...

JamesFague
1st December 2014, 07:10 PM
Mr Raghavendra Sir,

If i remember correct the first hindi film I have watched was Yadhon Ki Bharat at Star Theatre which ran for a year. We must also acknowledge that certain mannerism of

Rajesh Khanna no one can do it in Hindi Film and also the music of RD and LP certainly deserves credit for the super hit songs.


Regards

RAGHAVENDRA
1st December 2014, 07:53 PM
Yes S Vasu
RD & LP simply rocked during that period.

However, there are millions and millions of fans and pages to take care of them.

We will cover Tamil to the maximum extent possible.

rajeshkrv
1st December 2014, 09:35 PM
வணக்கம் வாசுஜி

vasudevan31355
1st December 2014, 10:08 PM
வணக்கம் ராஜேஷ்ஜி!

vasudevan31355
1st December 2014, 10:24 PM
ராஜேஷ்ஜி

பந்தனம், ஸ்ரீ நாராயண குரு, வாழ்வே மாயம் பாடல்கள் அனைத்தும் அருமை! அருமை!
எம்.பி ஸ்ரீனிவாசன், தேவராஜன் மாஸ்டர் எல்லாம் எப்பேர்பட்ட திறமை சாலிகள்!

இதோ 'கன்யாகுமாரி' (1974) மலையாளப் படத்தில் எம்.பி.ஸ்ரீநிவாசன் இசையில் நம் கமல் மற்றும் ரீட்டா பாதுரி மிக சிம்பிளான உடை மற்றும் மேக்-அப்பில் ஜேசுதாஸ், ஜானகி குரலில் பாடும்

http://oldmalayalamcinema.files.wordpress.com/2013/05/kamal-haasan-and-rita-bhaduri-in-kanyakumari-1974.jpg?w=665http://www.thehindu.com/multimedia/dynamic/02216/24KIMP_OLDISGOLD_2216863e.jpg

'சந்த்ர பளிங்கு மணிமாலா
சங்கு மாலா
கன்யாகுமாரி கல்லு மாலா'

செம பாட்டு. அதுவும் இருவரும் பண்ணும் அந்த ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ஹம்மிங் செம டக்கர். கமலின் பெரிய கட்டம் போட்ட கைலி ஒரு கட்சிக் கொடியின் கலரை நினைவுபடுத்துகிறது. ரீட்டா செம ஸ்லிம்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VOUXuc0jhFk

vasudevan31355
1st December 2014, 10:30 PM
எம்.பி.ஸ்ரீனிவாசன் இசையமைக்கும் அற்புத காட்சி.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lxRv4VfYJv4

chinnakkannan
1st December 2014, 10:33 PM
கல் நாயக் சார்.:) நான் தொழில் பாட்டுக்காக விட்டு வைத்திருந்தேன்..கரை மேல்மிதக்கவிட்டான்பாட்டை.. நன்றி :)

ஹை.. துள்ளுவதோஇளமை தேடுவதோதனிமை எப்படி மறந்தேன்.. தாங்க்ஸ் வாசு சார்..

க்ல் நாயக் சார் இரண்டு நான் சொன்ன பாட் வீடியோக்களுக்கும் நான் சொல்லாத் பாட் கார்த்திகாவோட ஒரு கிளியின் தனிமையிலே பாட்டுக்கும் நன்றி.. ஆமா அந்தப் பொண்ணு சி.ஏ முடிச்சுச்சா இல்லியா..

தன்னந்தனியாக நான் வந்த போது நல்ல பாடல் ராகவேந்தர் சார்..ஆனா கே.ஆர்.வி வர்ற இடங்கெல்லாம் அவங்க மட்டும் தான் தெரிவாங்க..இயற்கையெல்லாம் மறைஞ்சுடும்.. அவ்ளோ கொஞ்சம் வெய்ட் ஜாஸ்தி போட் இருப்பாங்க.. தாங்க்ஸ்..

s.vasudevan sir..I will listen to the songs on Friday okyaa..

கல் நாயக்கிற்காக கடல்னு ஆங்கிலத்துல டைப்பண்ணி பாட் கேட்டா ஈ பாட்டு வருண்ணு…

நெல்லு ஜெயபாரதி மோகன் (வாசு சார் போட்டாச் போட்டாச்சா)

கதலி கங்கதலி செங்கதலிப் பூவேணோ
கவிலில் பூமதமுள்ளொரு பெண்பூ வேணோ பூக்காரா

முகலில் ஜிலு ஜிலு ஜிலு ஜின்கில் மோடே
முகில்பூ விதர்த்தும் பொன் கூடகீழே
வரிலே நீ வனமாலி தரிலே தாமரத்தாலி
தையர தையர தையரே..

கிளிகள் வலகிலுக்கன்ன வல்லியூர்க்காவில்
கலபம் வழியும் கிக்கிலிக் கூட்டில் ( அழகான வார்த்தைகள்..அர்த்தம் தான் புரியலை)
உறங்கும் நித்யமென் மோஹம்
உணர்த்தும் வன்னொரு நாணம்
தையர தையர தையர..

சலீல் செளத்ரி இசையில் லதா மங்கேஷ்கர்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=rh2djsTR9hI

முழுக்கப் பாட்டுக் கேட்டு முடிச்சாக்க ..ஹா.ஆ.ஆவ்..தூக்கம் வர்றா மாதிரி இருக்கு :) வெகு மென்மையான மயக்கம் தரும் பாடல்..

rajraj
1st December 2014, 10:40 PM
chinnakkaNNan: Your 'inbox' is full. My pm did not go through ! :)

vasudevan31355
1st December 2014, 10:43 PM
எம்.பி.ஸ்ரீனிவாசன்

சேர்ந்திசை பாடல்களின் மன்னவரான எம்.பி.ஸ்ரீனிவாசன் 'மதன மாளிகை' படத்தில் உஷா உதூப் பாடிய புகழ் பெற்ற பாடலான 'under a mango tree' பாடலை எவரால் மறக்க இயலும். ரோஜாவின் ராஜா திரைப்படத்தில் மிகவும் புகழ் பெற்ற காட்சியான திரையரங்கு காட்சி அதாவது நடிகர் திலகம் படம் பார்த்துக் கொண்டே வாணிஸ்ரீயிடம் வழிய, இடம் மாறி வாணிஸ்ரீயும், சுகுமாரியும் இடைவேளைக்குப் பிறகு அமர்ந்துவிட இதை கவனிக்காத நடிகர் திலகம் வாணிக்கு சாக்லேட் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு சுகுமாரியிடம் சாக்லேட் நீட்ட, பின்னால் இருந்து வீர்ராகவன் இதையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, திரையில் அப்போது ஓடும் பாடல் என்ன தெரியுமா?

'மேங்கோ ட்ரீ' பாடல்தான். கிட்டத்ததட்ட அல்கா நடித்துப் பாடும் இந்தப் பாடலை முழுதுமாகவே 'ரோஜாவின் ராஜா' படத்தில் பார்த்து விடலாம். ஏனென்றால் இரண்டு படங்களுமே NVR Pictures தயாரிப்பே.

'பப் பபாப்பா பப் பபாப்பா பப் பபாப்பா பப் பபாப்பா'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BANjHjwfeUo

vasudevan31355
1st December 2014, 10:51 PM
ராஜ்ராஜ் சார்,

வணக்கம்.
-Khayalon mein kisi ke is tarah aaya nahi karte
Kisi ko bewafa ke tadpaya nahi karte..
Khayalon mein kisi ke

from 'bawre nain'. கீதா மற்றும் முகேஷ் இணைவில். ராஜ்கபூர் ரொம்ப சின்னக் கண்ணன் ஸாரி ரொம்ப சின்னப் பையன் மாதிரி இருக்கிறார். கீதாதத் குரல் மேக்னட். Hope u like it.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3cAhn5vetZo

chinnakkannan
1st December 2014, 11:00 PM
ஹாய் ராஜ்ராஜ் சார் இப்ப பாருங்க போகுதான்னு..

rajeshkrv
1st December 2014, 11:43 PM
அருமை வாசு ஜி

rajeshkrv
1st December 2014, 11:57 PM
ராஜேஷ்ஜி

பந்தனம், ஸ்ரீ நாராயண குரு, வாழ்வே மாயம் பாடல்கள் அனைத்தும் அருமை! அருமை!
எம்.பி ஸ்ரீனிவாசன், தேவராஜன் மாஸ்டர் எல்லாம் எப்பேர்பட்ட திறமை சாலிகள்!

இதோ 'கன்யாகுமாரி' (1974) மலையாளப் படத்தில் எம்.பி.ஸ்ரீநிவாசன் இசையில் நம் கமல் மற்றும் ரீட்டா பாதுரி மிக சிம்பிளான உடை மற்றும் மேக்-அப்பில் ஜேசுதாஸ், ஜானகி குரலில் பாடும்

http://oldmalayalamcinema.files.wordpress.com/2013/05/kamal-haasan-and-rita-bhaduri-in-kanyakumari-1974.jpg?w=665http://www.thehindu.com/multimedia/dynamic/02216/24KIMP_OLDISGOLD_2216863e.jpg

'சந்த்ர பளிங்கு மணிமாலா
சங்கு மாலா
கன்யாகுமாரி கல்லு மாலா'

செம பாட்டு. அதுவும் இருவரும் பண்ணும் அந்த ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ஹம்மிங் செம டக்கர். கமலின் பெரிய கட்டம் போட்ட கைலி ஒரு கட்சிக் கொடியின் கலரை நினைவுபடுத்துகிறது. ரீட்டா செம ஸ்லிம்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VOUXuc0jhFk

reeta indrum slim thaan.. paati vedangalil varugirare (chinna marumagal-choti bahu etc )

rajeshkrv
2nd December 2014, 12:38 AM
Vasu ji

under a mango tree performer is not singer Alka yagnik, but an actress Alka i guess

vasudevan31355
2nd December 2014, 04:38 AM
Vasu ji

under a mango tree performer is not singer Alka yagnik, but an actress Alka i guess

Yesji! u r correct. She is Alka only.:-D:) .Thanks for the correction.:ty:

vasudevan31355
2nd December 2014, 04:42 AM
Alka

http://i.ytimg.com/vi/kv87jmRp7zo/hqdefault.jpg

vasudevan31355
2nd December 2014, 04:50 AM
P.Susheela with Bollywood Singers

suseela amma with rafi

https://4.bp.blogspot.com/-7QxVSmhfE1o/VGNvlqyUR0I/AAAAAAAABFs/jSJexRFhdcM/s320/WITH%2BMOHD%5B1%5D_RAFI.jpg

with asha

https://3.bp.blogspot.com/-s-PK6bOCRmQ/VGNveYIgSvI/AAAAAAAABFc/Z0GS0MKlnX0/s320/asha_ps.jpg

with kishore

http://4.bp.blogspot.com/-WZtdczRvnc8/VGNvhk-75nI/AAAAAAAABFk/9bTK3xjaPwA/s1600/kishore_ps.jpg

rajeshkrv
2nd December 2014, 07:23 AM
வாசு ஜி
எங்கள் இசையரசி குழுமத்தின்/இணையதளத்தின் முக்கிய பங்காளர் திரு கலைக்குமார் இசையரசியும் பாலிவுட் பாடகர்களும் என்று ஒரு தொகுப்பை தொகுத்துள்ளார்

நான் இங்கே ஏற்கனவே சில ஹிந்தி பாடல்களை பதிவு செய்தேன்
இன்னும் சில பாடல்களை தருகிறேன்.

கிஷோருடன் சின்ஹாசன் திரையில்

https://www.youtube.com/watch?v=hY1zgL0oBhg

ரபியுடன் அழகான கவ்வாலி

https://www.youtube.com/watch?v=IctO5VjlBW0

rajeshkrv
2nd December 2014, 07:51 AM
another G.Venugopal song
https://www.youtube.com/watch?v=TvCSH14pAzY

rajeshkrv
2nd December 2014, 08:04 AM
எப்படி ஜெயசந்திரன் அவர்கள் அற்புத பாவ காயகனோ அதே போல் இன்னொரு அருமையான குரலாக வந்தவர் திரு ஜி.வேணுகோபால்
மிருதுவான குரல் பல அழகான பாடல்களை பாடியவர். கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை

http://www3.telus.net/adwyth/venunadam/images/sidephoto9.jpg
இதோ அவரது குரலில் ஒரு அற்புத பாடல்

https://www.youtube.com/watch?v=R_827OBolRg


அதே போல் கிருஷ்ணசந்திரன் காதல் பாடல்களும் காமெடி பாடல்களும் பாடிய அவரை
கே.வி.மகாதேவன் அவர்கள் சித்ராவுடன் அழகாக பாடல் கொடுத்தார்.
இதோ ரங்கம் திரையில் கிருஷ்ணசந்த்ரன் , அப்பொழுது வந்திருந்த சித்ராவுடன்

https://www.youtube.com/watch?v=vJlBdbL-314

rajeshkrv
2nd December 2014, 08:05 AM
எனக்கு பிடித்த வேணுகோபாலின் அற்புத பாடல்

https://www.youtube.com/watch?v=q4E6JSHsbxc

rajeshkrv
2nd December 2014, 08:12 AM
வாசு ஜி,
இசையரசியும் ஆஷாவும் இருக்கும் புகைப்படம் “அடிமைப்பெண்” ஹிந்தி(கோயி குலாம் நஹி) ஒலிப்பதிவு (காலத்தை வென்றவன் பாடலை ஹிந்தியில் ஆஷாவும் இசையரசியும் பாடினார்கள்)

rajeshkrv
2nd December 2014, 08:22 AM
தமிழில் இது போல பக்தி படங்களும் நல்ல பாட்லகளும் வருவதில்லையே என்ற ஏக்கம் உண்டு

தெலுங்கில் இப்பொழுதும் அண்ணமய்யா, ஸ்ரீராமதாசு, பாபா, ராமராஜ்யம் என நல்ல படங்களும் அதையொட்டி பக்தி பாடல்களும் நம்மை மகிழ்வித்து கொண்டிருக்கிறது.

அதற்கு சாட்சி இதோ கீரவாணி இசையமைத்த அற்புத பாடல் சங்கர் மகாதேவனும் விஜய் யேசுதாஸும் இருவரும் பாடிய ஸ்ரீராமதாசு படப்பாடல்

https://www.youtube.com/watch?v=-9NI5nLMqqE

Richardsof
2nd December 2014, 08:30 AM
வித்தியாசமான விளம்பரம்

மகனே

நீ எங்களிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பிறகு படுத்த படுக்கையாய் இருந்த உன் தாயார் பூர்ணகுணமடைந்து நலமாக உள்ளார் . உன் சகோதரியின் திருமணமும் நல்லபடியாகநடந்து விட்டது . பல வருடங்களாக நடைபெற்று வந்த நம்முடைய சொத்து விவகார தீர்ப்பு நமக்கு
சாதகமாக வந்து விட்டது .நீ இல்லை என்ற குறை எங்களுக்கு இல்லவே இல்லை . எல்லோர் வீட்டிலும் அமைதி நிலவுகிறது . மகனே நீ எங்கிருந்தாலும் வாழ்க . மறந்தும் எங்களை பார்க்க வந்து விடாதே .

rajeshkrv
2nd December 2014, 08:33 AM
vanakkam esvee Ji

Richardsof
2nd December 2014, 08:48 AM
THANKS RAJESH SIR
SUPER HIT SONG

http://youtu.be/K68ZzCWqGMo?list=PLc6_VelBgqdTSSrz0jcKb3gBLltsirl0 6

kalnayak
2nd December 2014, 11:02 AM
அல்லாருக்கும் வணக்கமுங்க!!!
ஆரும் நான் இங்கத்தான் கீறேன்னு சொல்லிப்பீடாதிங்கோ!!!

kalnayak
2nd December 2014, 11:08 AM
ராஜேஷ் ஜீ - உங்க பன்மொழி பாடல்கள் அறிவ பாத்து நான் வியக்கேன். ஒரு பெரிய சல்யூட். இசையரசி அம்மாவாண்ட 'கல்நாயக்'-னு ஒருத்தன் அவங்க பரம ரசிகன் கீறேன்னு சொல்லிடுங்க. நன்றி

kalnayak
2nd December 2014, 12:08 PM
I don't have knowledge of songs from non-Tamil language movies, except a few. One of my favorite Hindi song from a classic Tamil movie:

https://www.youtube.com/watch?v=yUI1FLexJrY

kalnayak
2nd December 2014, 12:28 PM
முழு மலையாளப்பாடல்தான் என்று சொல்லமுடியுமா... எனக்குத் தெரியவில்லை. எனக்கு பிடித்த பாடல் மற்றொரு பிரபலமான தமிழ் படத்திலிருந்து:

https://www.youtube.com/watch?v=5jPmr1KaRLw

chinnakkannan
2nd December 2014, 12:45 PM
ஹாய் குட்மார்ஙின் ஆல்.

கல் நாயக் அவர்களே..

சப்தஸ்வரதேவி உணரு.. அந்த ஏழு நாட்கள்..
தூ ஹே ராஜா மேதூ ராணி என ஹிந்தியில் ஆரம்பித்து பாதியில்முடியும் சிலவரிப்பாடல் - வறுமையின் நிறம் சிவப்பு ஸ்ரீதேவி

எர்ராணி கொரதண்டி கோபாலா...தெலுங்கில் ஆரம்பித்து தமிழில் வேகமாக ஆடி ஓடும் பாடல் காதலன்

ம்ம் இப்போதைக்கு இவ்வளவு தான் நினைவுக்கு வந்தது..

kalnayak
2nd December 2014, 12:52 PM
சின்னக் கண்ணன்,
கொஞ்சம் உதவுங்க ... தமிழ் படங்களின் பிற மொழி பாடல்கள் வரிசையை இன்னும் பெரிசாக்கணும். சந்திரமுகி-யின் ரா...ரா இதில் வருமா?
பாட்ஷா-வின் 'ரா..ரா..ராமையா ...', அருணாச்சலம் - 'மாத்தாடு மாத்தாடு மல்லிகே' போன்ற பாடல்களை சொன்னால் பலர் காணாமல் போய் விடுவார்கள். எச்சரிக்கை

kalnayak
2nd December 2014, 12:55 PM
ஹா... என்ன ஒரு sync. என்னோட request பதிவிற்கு முன்னாடியே வேலைய ஆரம்பிச்சிட்டீங்க. Very Good.

போறும். மத்தவங்களுக்கும் பங்கெடுக்க வாய்ப்பு தருவோம்.

ஈஸியானதெல்லாம் நான் சொல்லிட்டேனா? இதைச் சொல்றது யாரு? யாரங்கே?

Richardsof
2nd December 2014, 03:37 PM
CLASSIC LOVE SONG . MADE FOR EACH OTHER.

http://i57.tinypic.com/73ngc9.jpg

http://youtu.be/KSFTdt6I1n8

vasudevan31355
2nd December 2014, 09:04 PM
மாலை மதுரம்.

ஆஹா! ஆஹா! என்ன சுகமான பாடல்! அப்படியே குற்றாலத் தென்றல் உடலை வந்து தழுவும் சுகம்.

'தண்டி ஹவா காலி கட்டா'

மயக்கும் பேரழகு கொண்ட இரட்டை சடை போட்ட மதுபாலா, குரலால் குதூகலிக்கச் செய்யும் கீதாதத், இசையால் இன்பத்தை அள்ளித் தரும் ஓ.பி.நய்யார்.

'மிஸ்டர் அண்ட் மிஸஸ் 55' படத்தில் குமரிகள் வித வித குடை பிடித்துக் கொண்டு கும்மாளம் போடும் பாடல். (அது சரி 'தண்டி ஹவா' வின் போது வெயில் கொளுத்துகிறதே!)

திகட்டாத மதுரம்தான். அருமையான குவாலிட்டியில் கண்டு மகிழுங்கள்.


https://www.youtube.com/watch?v=WqRrG8NSVfw&feature=player_detailpage

rajeshkrv
2nd December 2014, 09:17 PM
வணக்கம் வாசு ஜி

vasudevan31355
2nd December 2014, 09:18 PM
மாலை மதுரம்.

'கஹி பே நிகாஹே கஹி பே நிஷானா'

என்னுடைய காவியப் பாடகி ஷம்ஷத் பேகம் பாடின பாடல்.

'சி.ஐ.டி' படத்தில் வஹீதா ரஹ்மானுக்காக.

சும்மா வெண்கலக் கடையில் ஆனை புகுந்தது போல குரல் 'டாண் டாண்' என்று கம்பீரமாக ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் பேகம். நம்ம 'ஸ்டைல் மாஸ்டர்' தேவ் ஆனந்துடன் வெகு இயல்பான குழந்தை போல முகம் கொண்ட வஹீதா. இதுவும் ஓ.பி.நய்யர்தான் இசை. பேகம் இந்தப் பாடலை தன்னுடைய பேவரிட் ஹஸ்கி வாய்ஸில் பாடாமல் படு மென்மையாக அடக்கி வாசித்து வித்தியாசப்படுத்திப் பாடி இருப்பதை உணர முடியும்.

என்னுடைய மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று.


https://www.youtube.com/watch?v=PoHnHnB4_js&feature=player_detailpage

vasudevan31355
2nd December 2014, 09:20 PM
வணக்கம் ராஜேஷ்ஜி!

சுகந்தன்னே?

rajeshkrv
2nd December 2014, 09:30 PM
வணக்கம் ராஜேஷ்ஜி!

சுகந்தன்னே?

Nannayitu sugam. avvide ellam sugamano

vasudevan31355
2nd December 2014, 09:30 PM
Rajeshji

What do u think about Shamshad Begum?

vasudevan31355
2nd December 2014, 09:31 PM
Nannayitu sugam. avvide ellam sugamano

valara:)

rajeshkrv
2nd December 2014, 09:39 PM
Rajeshji

What do u think about Shamshad Begum?

shamshad, suraiyya . all are my favourites.. though they had limitations in their voices , it's always pleasant to hear their songs.

Also Vasu ji, Kaatrnile varum geetham analysis was wonderful.. One movie analysis in 2 different parts , you took it to another level
Jayachandran's Chithira chevvanam sirikka kanden was class while oru vaanavil pole was thalatuthe vaanam version 2 .

IR did mention long back that Kaatrinile varum geetham song (female solo)- 3 versions recorded with SJ, VJ & PS .
i've not been able to get the PS version at all.

vasudevan31355
2nd December 2014, 09:41 PM
இதோ ஒரு வித்தியாசமான அபூர்வ பாடல். அபூர்வ நடிகரின் நடிப்பில்.

திருவிளையாடலையும், மோகனாம்பாளையும் தந்த இந்த ஆஜானுபாகுவான நாகராஜ நக்கீர பெருமான்

பொன்னே புதுமலரே
பொங்கி வரும் காவியிரியே
மின்னும் தாரகையே
வெண்மதியே

என்று நின்ற வாக்கிலேயே 'நல்ல தங்காள்' படத்தில் பாடலை முடித்து விடுவதைக் காணுங்கள்.

பாடகர் திலகம் மிக அருமையாகப் பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலைக் கேட்கும் போது நடிகர் திலகம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.


https://www.youtube.com/watch?v=c073XNqZUkw&feature=player_detailpage

vasudevan31355
2nd December 2014, 09:49 PM
நன்றி ராஜேஷ்ஜி! 1985 ஆம் வருடம் என்னுடைய மைத்துனர் ஆபீஸ் வேலை நிமித்தம் பாம்பே சென்றார். நான் அவரிக்டம் பேகம் பாடிய பாடல்களின் கேசெட் கிடைத்தால் வாங்கி வரச் சொன்னேன். அவர் அங்கு கடைகடையாய் அலைந்ததுதான் மிச்சம். பல கடைக்காரக்ளுக்கு பேகம் என்றால் யாரென்றே தெரியவில்லையாம்.

http://i.ndtvimg.com/mt/movies/2013-04/shamshadnewbig.jpg

'நல்ல வேலை கொடுத்தாய் போ' என்று என் மைத்துனர் என்னைக் கடிந்து கொண்டது நன்றாக நினைவிருக்கிறது. ஒரு வழியாக எங்கோ ஒரு கடையில் தேடி பிடித்துக் கொண்டு வந்து என்னிடம் தந்து விட்டார். இன்றும் அதைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன். எச்.எம்.வி.வெளியிட்டிருந்த அந்த கேசட் கவரில் பேகம் படம் கூட இல்லை. எனக்கு அவரின் முகமே இணையத்தின் மூலம்தான் முதன் முதல் தெரிந்தது.

vasudevan31355
2nd December 2014, 09:51 PM
i've not been able to get the PS version at all.

viraivil naan thara muyarchikkiren.

rajeshkrv
2nd December 2014, 09:52 PM
பேகம் மட்டுமல்ல பலரது முகங்களும் மறந்தோ இல்லை மறக்கடிக்கப்பட்டு விட்டன. நான் முகனூலில் பாடலாசிரியரை அறிவோம் தொடருக்காக எங்கு தேடியும் தஞ்சை ராமய்யா தாஸ் போன்றவர்களின் புகைப்படம் கிடைக்கவே இல்லை .. இப்படி பலர் உண்டு ..

rajeshkrv
2nd December 2014, 09:53 PM
viraivil naan thara muyarchikkiren.

தன்யன் ஆவேன்.. கிடைத்தால் போதும் ஆடுவேன்( நினைத்தால் போதும் ஆடுவேன் மெட்டில் பாடி மகிழுங்கள்) .... கூத்தாடுவேன்... உன்னை கொண்டாடுவேன்

vasudevan31355
2nd December 2014, 09:57 PM
IR did mention long back that Kaatrinile varum geetham song (female solo)- 3 versions recorded with SJ, VJ & PS .
i've not been able to get the PS version at all.

Like 'Nee enge' songs from "mannippu"? T.M.S, P.S and another one I think A.P.K. Right?

rajeshkrv
2nd December 2014, 09:59 PM
நேற்று நிறைய பாடல்கள் பதிவு செய்தேன் கேட்டு உங்கள் கருத்துக்களை கூறவும் வாசு ஜி.

உங்களுக்கு நெடு நாளாயிற்று நான் கன்னட பாடல் தந்து .

இதோ சுபாஷையா என்ற திரைப்படம் . எம்.ரங்காராவ் அவர்களின் இசையில் இசையரசி நம்மை மெய் மறக்க செய்யும் பாடல்

ப்ரேம வீணையா ஷ்ருதிய சேரிசிதே நானு

https://www.youtube.com/watch?v=donleNN4wao

rajeshkrv
2nd December 2014, 10:00 PM
Like 'Nee enge' songs from "mannippu"? T.M.S, P.S and another one I think A.P.K. Right?

இல்லை.
ஒன்று டி.எம்.எஸ், மற்ற இரண்டுமே இசையரசி தான்(ஒன்று லெக்*ஷ்மி, ஒன்று வெ.ஆ. நிர்மலா என்று நினைவு)

கோமளாவும் இசையரசியும் சேர்ந்து பாடுவது குயிலோசையை வெல்லும்

vasudevan31355
2nd December 2014, 10:01 PM
தன்யன் ஆவேன்.. கிடைத்தால் போதும் ஆடுவேன்( நினைத்தால் போதும் ஆடுவேன் மெட்டில் பாடி மகிழுங்கள்) .... கூத்தாடுவேன்... உன்னை கொண்டாடுவேன்

'நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை இந்தப் பாடல் கிடைக்கும்.
கொடுத்தே தீருவேன்.
காலம் ஒருநாள் கை கொடுக்கும்
அது வரை பொறுத்து விடு(ங்கள்):)

vasudevan31355
2nd December 2014, 10:02 PM
இல்லை.
ஒன்று டி.எம்.எஸ், மற்ற இரண்டுமே இசையரசி தான்(ஒன்று லெக்*ஷ்மி, ஒன்று வெ.ஆ. நிர்மலா என்று நினைவு)

கோமளாவும் இசையரசியும் சேர்ந்து பாடுவது குயிலோசையை வெல்லும்

ya. ya. ya. Bravo! That's my Rajesh.:)

vasudevan31355
2nd December 2014, 10:03 PM
குயிலோசையை வெல்லும் குழப்பத்தை உண்டு பண்ணும் எப்போதும்.:confused2:

rajeshkrv
2nd December 2014, 10:04 PM
பாலு மூன்று மொழிகளிலும் அறிமுகப்பாடல் இசையரசியுடன் தான்.

கன்னடத்தில் இதோ அவரது அறிமுகப்பாடல்.
ஆரம்ப காலத்தில் கண்டசாலாவைப்போலவே பாட முயலுவார்.

இதோ
கனசிதோ நனசிதோ (எம்.ரங்காராவின் இசை)

https://www.youtube.com/watch?v=E9hcspj9kAA

rajeshkrv
2nd December 2014, 10:04 PM
குயிலோசையை வெல்லும் குழப்பத்தை உண்டு பண்ணும் எப்போதும்.:confused2:

அதே அதே சபாபதே
10 நிமிடத்தில் மீண்டும் வருகிறேன்.

vasudevan31355
2nd December 2014, 10:05 PM
அது என்ன லெக்*ஷ்மி?:)

rajeshkrv
2nd December 2014, 10:23 PM
அது என்ன லெக்*ஷ்மி?:)

க் ஷ் பக்கத்தில் ஒரு கேப் இருந்தால் தானே * போட்டு கொள்கிறது ..ஹ்ம்ம்ம்ம்ம்ம்

vasudevan31355
2nd December 2014, 10:39 PM
'மன்னிப்பு' செம படம் ஜி! ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் கொன்னுடுவார். கொலை செய்து விட்டதாக நடுநடுங்கி... வியர்த்து விருவிருத்து... சஸ்பென்ஸ் ஜோர். நாகேஷ் ஷேவிங் செய்பவராக தத்ரூபமாக நடித்திருப்பார். அவர் பயந்து நடுங்கிப் புலம்பும் காட்சிகளில் சிரித்து நம் வயிறு புண்ணாகி விடும்.

rajeshkrv
2nd December 2014, 11:01 PM
'மன்னிப்பு' செம படம் ஜி! ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் கொன்னுடுவார். கொலை செய்து விட்டதாக நடுநடுங்கி... வியர்த்து விருவிருத்து... சஸ்பென்ஸ் ஜோர். நாகேஷ் ஷேவிங் செய்பவராக தத்ரூபமாக நடித்திருப்பார். அவர் பயந்து நடுங்கிப் புலம்பும் காட்சிகளில் சிரித்து நம் வயிறு புண்ணாகி விடும்.

ஆம் நல்ல படம். ஏ.வி.ம் ராஜன் நன்றாகவே செய்திருப்பார்.

vasudevan31355
3rd December 2014, 09:16 AM
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 24)

http://www.upperstall.com/files/imagecache/preview/profile/ilayaraja-stills-1.jpg

https://dozeu380nojz8.cloudfront.net/uploads/video/horizontal_cover/1661/large_8e69b5e097_kizhakkepoggumrail.jpg

அடுத்து ராஜாவின் தொடரில் 'கிழக்கே போகும் ரயிலை' விட்டு விட்டேன். அத்தனை பேரும் அந்த ரயிலில் சுகமாகப் பயணித்ததால், அந்த ரயிலைப் பற்றி எல்லோருக்கும் அக்கு வேறாக ஆணி வேறாக தெரிந்திருக்கும் என்பதால் இந்த 'ஸ்கிப்' முடிவு.

http://cdn.raaga.com/r_img/250/t/t0001694-no-cd.jpg

http://i.ytimg.com/vi/q4oeYOBffNM/hqdefault.jpg

அடுத்ததாக ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ் அளிக்கும் 'மாரியம்மன் திருவிழா'. இதுவும் 1978ல் வெளி வந்து காணமல் போன படம்தான்.

வழக்கம் போல் அன்றைய ஜோடி சிவக்குமார், சுஜாதா, டெல்லி கணேஷ், எஸ்.வி.சுப்பையா, தங்கவேலு, ராஜசுலோச்சனா, பேபி நித்யா (பின்னாளைய குமாரி நித்யா) நடித்த வெங்கடேஷ் இயக்கிய இந்த கருப்பு வெள்ளைப் படத்திற்கு ராஜா இசை என்று பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

'துணையிருப்பாள் மீனாட்சி' என்று ராஜா இசையமைத்த படத்தைப் பற்றி முன்னம் தொடரில் எழுதியிருந்தேன். எனவே அந்தப் படமும், இந்தப் படமும் பெரும் குழப்பம். இதிலும் அதே ஜோடி. இதுவும் கருப்பு வெள்ளை.

சரி! இந்தப் படத்தைப் பற்றி கதையோ அல்லது மற்ற விஷயங்கள் பற்றி ஏதாவது சொல்லலாம் என்றால் ஒன்றுமே தெரியாது. நான் இந்தப் படம் பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால் பாடல்கள் தெரியும். தப்பித்தேன்.

இந்தப் படத்திலும் ஒன்றிரண்டு குறிப்பிடத் தகுந்த பாடல்கள் உண்டு. ராஜாவாச்சே! விட்டுடுவாரா?

"அறுக்காதே! பாடலை சொல்" என்கிறீர்கள். சரி! சொல்கிறேன்.

1. "ஆத்தாடி ஆத்தா! இந்த அழகான தங்கக் கட்டி... பார்த்தாக்கா கட்டுப் பெட்டி... பாய்ஞ்சாக்கா சிங்ககக் குட்டி... ஏண்டிக் கண்ணு...என்னடி அச்சச்சோ"

என்ன விழிக்கிறீகள்? பாடலே இப்படித்தான் ஆரம்பிக்கும்.

ஆரம்பிப்பவர் இசையரசி. (ராஜேஷ்ஜிக்கு 'குளுகுளு' ன்னு இருக்குமே) உடன் வந்து 'மாப்பிள்ளை பார்த்துக்குங்க' என்றபடி ஜாய்ன் செய்வார் ராஜாவின் ஆஸ்தான பாடல் நாயகி ஜானகி. ஆமாம். சுசீலாவும், ஜானகியும் இணைந்து இப்பாடலைத் தந்திருப்பார்கள். இரு பிரபல பாடகியர் பாடியும் இப்பாடல் ஹிட் அடிக்க வில்லை 'கூண்டுக்கிளி' படம் போலவே. வீடியோவும் நஹீ. 'ஜானகி' என்று ஜானகியே பாடி நிறுத்தி பின் 'ஜானகி ராமன் போல் வந்த பாசம்' என்று தொடர்வது ஜானகி அந்த நேரத்தில் பெரிய ஆளாகிக் கொண்டு வருகிறார் என்பதை சொல்லாமல் நமக்கு சொல்லும்.


2. பொழுது எப்ப புலரும்?
பூவும் கூட எப்ப மலரும்?
மலரை எப்ப பறிப்பே கன்னையா?
மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா?

ஜானகி கேள்விகளாகக் கேட்டுக் கொண்டு ஆரம்பிப்பார் இப்பாடலை. 'பூ முல்லைக் கொடியே... புதுப் புனல் நதியே' என்று மலேஷியா வாசுதேவன் தொடர்வார். அஸ் யூஷுவல் ஜானகி, மலேஷியா டப்பாங்குத்துப் பாடல். வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

பாடல்களின் ஆடியோவிற்கு

http://play.raaga.com/tamil/album/mariamman-thiruvizha-t0001694

3. இரண்டு சுமார் பாடல்கள் சோதித்த நிலையில் இது பாடகர் திலகம் காமெடிக்காக தேங்காய் சீனிவாசனுக்காகப் பாடிய பாடல். கர்நாடக சங்கீத பாணிப் பாடல். ஓரளவிற்குப் பிரபலம்.

'சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே'

சற்று வித்தியாசமான முயற்சி என்று கூட சொல்லாம். பாடகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் உருகிப் போவார்கள். ராஜ உடையில் தேங்காயும், மனோரமாவும் அடிக்கும் கூத்து. நிறைய செட்டிங்க்ஸ் வேற. மனோரமா பரதம் வேறு ஆடுகிறார்.:)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eru0xTbsUNM

4.ஆஹா! மாட்டுச்சு சூப்பர் ஹிட் பாடல். ஜெயித்தவர் நம்ம ராஜேஷ்ஜி. ஆமாம் இசையரசி பாடிய அற்புத பாடல். அந்தக் குரலின் காந்த சக்தியை அப்படியே உணரலாம்.

சுஜாதா குழந்தையைத் தூங்க வைக்கும் அருமையான தாலாட்டுப் பாடல். 'வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா' என்று 'துணையிருப்பாள் மீனாட்சி' திரைப்படத்தில் வருமே... அது போலவே இந்தப் பாடலும் இருக்கும். இரண்டிலும் சுஜாதா. இரண்டுமே இசையரசி பாடியவை.

'தங்கக் குடத்துக்குப் பொட்டும் வைத்தேன்
தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன்'

சுஜாதாவின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வில்ல குரூப்( ராஜ சுலோச்சனா?) முயற்சி செய்ய, சிவக்குமார் செய்வதறியாது திகைக்க, சுஜாதா தான் கற்பில் நெருப்பானவள் என்று பாடுவது போல வருகிறது. வரிகள் மிக நன்றாகவே இருக்கின்றன. குறிப்பாக

'தேவகி கொண்டது சிறைவாசம்
கண்ணன் பிறந்ததும் தீர்ந்ததடா
சீதை புரிந்தது வனவாசம்
திருமகன் வந்ததும் மறைந்ததடா
நெருப்பினையே அவன் சாட்சி வைத்தான்
நானே நெருப்பல்லவோ'

அருமை. 'ராமன் சீதையை நெருப்பில் குதிக்க வைத்து அவள் கற்பை நிரூபித்தான்... ஆனால் இங்கு நானே நெருப்பு அல்லவோ' என்று சுஜாதா அருமையான தீர்க்கமான பார்வையில் அருமையான முகபாவம் காட்டுவார். அதைவிட இசையரசி தன் தன்னிகரில்லாக் குரலில் அந்த கற்பின் ஜ்வாலையை குரலில் தீயாகவே காட்டுவார். மிகப் பிரமாதமாக பாடியிருப்பார் இசையரசி. கதைக்கேற்றபடி பாடலின் வரிகளும் பொருளோடு இருக்கும். எழுதியவர் பஞ்சு அருணாச்சலாமா? அப்படித்தான் நினைக்கிறேன்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q4oeYOBffNM

chinnakkannan
3rd December 2014, 10:44 AM
வணக்கம் வாசு ஜி ராஜேஷ் ஜி

//அடுத்ததாக ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ் அளிக்கும் 'மாரியம்மன் திருவிழா'. இதுவும் 1978ல் வெளி வந்து காணமல் போன படம்தான். // சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி இது மட்டும் தான் தெரியும்.. தாங்க்ஸ் வாசு சார்..


கல் நாயக் அவர்களுக்காக என்ன பாட் போடலாம் என யோசித்து யோசித்து.. சரின்னு இந்த ரெண்டு பாட் போட்டுட்டேன்..

இது எல்லாருக்கும் தெரிந்த பாடல்..

பைம்பொழிலாய்க் கண்களின் பார்வையினால் இப்பாவை
ஐம்புலனை ஆட்கொண்டாள் ஆம்..

http://www.youtube.com/watch?v=gLiZFaAbWb8


நாயகன் அவன் ஒருபுறம் அவள் விழியில் மனைவி அழகு.. நான் இந்த ஒரு விடுகதை ஒரு தொடர்கதை படமும் பார்த்ததில்லை.. பாடல் கேட்கமட்டும் செய்திருக்கிறேன்..பார்த்ததில்லை..யார் அந்தப் பெண்..? மீரா ஷோபா என்றிருக்கிறது..ஆனால் இவர் மீரா இல்லை..

ஆனபடி காத்திருக்க ஆடிவந்து நின்றுவிட்ட
வானவில்லே நானணைக்க வா..!


http://www.youtube.com/watch?v=XP7zCEqrAYs


எஸ்ஸ்கேப்! :)

kalnayak
3rd December 2014, 04:44 PM
வாசு,
'கிழக்கே போகும் ரயில்' எல்லோரும் சுகயாத்திரை செய்திருந்தாலும், நீங்கள் அழைத்துச் செல்லும்போது கிடைக்கின்ற அனுபவம், அனுபவிக்கின்ற எங்களுக்குத்தான் தெரியும். இப்போதைக்கு பரவாயில்லை. வேறொரு வாய்ப்பு 'கிழக்கே போகும் ரயில்'-க்கு கிடைக்காமலா போய்விடும்.

மாரியம்மன் திருவிழா எங்களூரில் பார்த்ததுதான் - வேறு எந்த ஊரின் தியேட்டரில் கூட பார்த்ததில்லை. ஆம் நான் திருவிழாவைப்பற்றிதான் சொல்கிறேன் - திரைப்படத்தைப் பற்றியல்ல. நீங்கள் கொடுத்திருப்பது நல்ல அறிமுகம். எங்கேயிருந்துதான் இவ்வளவு தகவல் திரட்டுகிறீர்களோ!!!

kalnayak
3rd December 2014, 04:53 PM
சி.க.,
எனக்காக நீங்கள் கொடுத்திருக்கின்ற 2 பாடல்களும் அருமை. முதல் பாடல் - பலமுறை திரையிலும், டீவியிலும் பார்த்து கொண்டிருந்தாலும், எப்போதும் என் கவனத்தை ஈர்க்கின்ற பாடல். 2வது பாடல் எங்கேயோ நான் கேட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. இனிமையாக உள்ளது. மறக்க மாட்டேன். நன்றி.

kalnayak
3rd December 2014, 05:03 PM
சி. க.,

உங்களுக்காக இந்த நகைச்சுவை காட்சி - விஜயனின் 'வள்ளி மயில்' படத்திலிருந்து.

https://www.youtube.com/watch?v=ZUXk-qL0jAE

vasudevan31355
3rd December 2014, 08:55 PM
கல்நாயக்

தங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி கூறிக் கொள்கிறேன்.

கிழக்கே போகும் ரயிலில் மீண்டும் பயணம் செய்வோம் நிச்சயமாக.

'வள்ளி மயில்' நகைச்சுவை காட்சிக்கு நன்றி சிரித்து ரசித்தேன்.

vasudevan31355
3rd December 2014, 08:57 PM
சி.க சார்,

நன்றி! இரு பாடல்களும் ஹா ஹா ஹா அருமை. ஆமாம்! அந்தப் பெண் யார்?

vasudevan31355
3rd December 2014, 09:10 PM
மாலை மதுரம்

'வக்த் னே கியா
கியா ஹசி சித்தம்'

'நைட்டிங் கேர்ள் ஆப் இந்தியா' கீதா தத் 'Kaagaz Ke Phool' படத்தில் பாடிய இன்னொரு மனதை உருக்கும் பாடல். உடன் குருதத். என்ன வாய்ஸ்! அப்படியே மெழுகாக உருகுகிறதே!

இந்தப் பாடலில் ஏதோ ஒரு மந்திர சக்தி இருக்கிறது. அப்படியே நம்மை ஒன்றும் செய்ய முடியாமல் கட்டிப் போட்டு விடுகிறது. வஹீதா ரஹ்மான் மைண்ட் வாய்ஸ் பாடல்.

ஒரே வார்த்தை! அட்டகாசம்.


https://www.youtube.com/watch?v=MZ3S4-bm70s&feature=player_detailpage

rajeshkrv
3rd December 2014, 09:27 PM
மாரியம்மன் திருவிழா .. நல்ல படம்
முகனூலில் திரு டெல்லி கணேஷ் பற்றி எழுதிய போது வந்த போதே அன்றைய முன்னணி மற்றும் திறமைசாலி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தார் என்று எழுதியிருந்தேன் ஆம் சுமித்ரா சுஜாதா என பல நல்ல நடிகைகள் அவருக்கு ஜோடி. அவரும் அதை படித்து விட்டு மகிழ்ந்து பாராட்டினார்.

சரி மாரியம்மன் திருவிழாவில் எனக்கு பிடித்த பாடல்கள் ஆத்தாடி ஆத்தா மற்றும் தங்க குடத்துக்கு பொட்டும் இட்டேன்.

ஆத்தாடி ஆத்தா பிரபலமான பாடல் தான். சிலோன் ரேடியோ அடிக்கடி ஒலிபரப்பிய பாடல் காலத்தின் போக்கால் மறைந்தே போனது.

ராஜசுலோசனாவிற்கு இசையரசி மீராவிற்கு ஜானகி .. பட்டய கிளப்பும் பாடல்

ஆனாலும் நெஞ்சை வருடும் பாடல் தங்க குடத்துக்கு பொட்டும் பாடல் ஆஹா ஆர்பாட்டமில்லாத இசை குரல் வரிகள் என எல்லாமே கன கச்சிதம்

உங்கள் விமர்சனம் அருமை வாசு ஜி.

rajeshkrv
3rd December 2014, 09:30 PM
வாசு ஜி
மாரியம்மன் திருவிழாவில் சுஜாதா டெல்லி கணேஷின் மனைவி
சிவகுமாருக்கு மீரா ..

vasudevan31355
3rd December 2014, 09:57 PM
மாலை மதுரம்

அடுத்து செம ஜாலியாக ஒரு காமெடி பாட்டு. உங்களுக்கு இந்தி தெரிகிறதோ இல்லையோ புரிகிறதோ இல்லையோ கண்டிப்பாக இப்பாடலைப் பார்த்துத்தான் தீர வேண்டும். என்ன ஒரு ஜாலி. விஸ்வஜித் பெண் வேடமணிந்து அடிக்கும் கூத்து. உடன் ஆண் வேடத்தில் பபிதா கபூர்.

'கஜ்ரா மொகபத் வாலா'

'கிஸ்மத்' திரைப்படத்தில் ஷம்ஷத் பேகமும், ஆஷாவும் இணைந்து கலக்கோ கலக்கு என்று கலக்க குஜாலான இசை தந்தவர் ஓ.பி.நய்யார்.

விஸ்வஜித்

http://memsaabstory.files.wordpress.com/2008/10/kismat_biswajeet.jpghttp://www.filmyfriday.com/wp-content/uploads/2009/11/Producer-_Biswajeet.JPG

இந்தப் படத்தின் ஹீரோ விஸ்வஜித் இருக்கிறாரே! அப்படியே நம்ம ஊர் நம்பியார் மாதிரியே முகம். மீசை இல்லாத நம்பியார் 'மக்களைப் பெற்ற மகராசி' திரைப்படத்தில் வருவாரே. அதே போன்ற முக அமைப்பு. இவருக்கு அதிகமாக நடனம் வராது. அவரே இந்தப் பாட்டில் நடனத்தில் அசத்தியிருப்பார்.

'கிஸ்மத்' ஒரு துப்பறியும் கதை அம்சம் கொண்ட காமெடி கலந்த படம்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kItK3kQlyko

vasudevan31355
3rd December 2014, 09:59 PM
ஒ! நன்றிஜி. நான் இந்தப் படம் பார்த்ததில்லை. இப்போது தங்களால் மேலும் விவரங்கள் அறிந்து கொண்டேன். நன்றி! சுஜாதா மிகவும் கவர்ந்தார்.

vasudevan31355
3rd December 2014, 10:01 PM
ஆனாலும் நெஞ்சை வருடும் பாடல் தங்க குடத்துக்கு பொட்டும் பாடல் ஆஹா ஆர்பாட்டமில்லாத இசை குரல் வரிகள் என எல்லாமே கன கச்சிதம்

.

100% 100% 100% 100% 100% 100%

vasudevan31355
3rd December 2014, 10:09 PM
Babita kapoor

http://im.rediff.com/movies/2013/apr/20babita.jpghttp://media2.intoday.in/indiatoday/images/stories//2014April/babita-2_650_042014124334.jpg

vasudevan31355
3rd December 2014, 10:14 PM
http://filmsplusmovies.com/wp-content/uploads/2012/11/babita-5.jpg

rajeshkrv
4th December 2014, 01:08 AM
viswajeet my fav.. enna romance .. wow..

RAGHAVENDRA
4th December 2014, 07:13 AM
பொங்கும் பூம்புனல்

ஆஹா...ஆஹா.. அந்த கிராமஃபோன் இசைத்தட்டைக் கேட்பதில் இருக்கும் சுகமே தனி... என்று நாம் அனைவருமே இன்புறுவோமே.. அந்த நினைவை மீட்டும் வண்ணம் இதோ..

நமது பேராசிரியர் சேக்கரக்குடி கந்தசாமி அவர்களின் தயவில்..

துவக்க இசையுடன் அத்திக்காய் அத்திக்காய் பாடல்... 78 கிராமஃபோன் இசைத்தட்டு வடிவத்தில்..

http://www.mediafire.com/download/j7d3w27u1yqbxb3/BHALEY+PAANNNDIYAA+-+TMS%2C+PS%2C+PBS%2C+KJR+-+Aththikkaai+Kaai+Kaai+-+SSKFM+RECORDING.mp3

பேராசிரியர் சார் மிக்க நன்றி. மீண்டும் மீண்டும்..

rajraj
4th December 2014, 08:13 AM
From kaalam maari pochchu(1955)

yEru pootti povaaye aNNe chinnaNNe....

http://www.youtube.com/watch?v=9RJfMjq3fcU

From Rojulu maaraayi(1955)

http://www.youtube.com/watch?v=4uWIX1pSt_0

From Bombai ka Babu (1960)

http://www.youtube.com/watch?v=-0dPCZencLo


yEru pootti povaaye aNNe chinnaNNe.. could have been yeru pootti povaaye paiyaa chinna paiyaa... where I am the chinna paiyan. As I mentioned earlier I used to visit my ancestral villages during summers. One summer I stayed till the beginning of the farming season. For some unknown reason the village gave me the honour of inaugurating the season. That meant ploughing the land. The problem was that the handle of the plough was as tall as I was. I held it with both hands. An adult was standing by me and escorting me to make sure the handle did not slip from hands. I went round the paddy field once just scratching the surface! :)

I visited the village three years back. No yEru! :( I saw tractors and other farm equipment. What surprised me more was a minibus dropping kids attending an English medium school three miles away! :) That brought back memories of my debating medium of instruction in colleges during my engineering college years (1958). My team supported English medium in colleges and Tamil medium till college. When I finished my opening statement the leader of the opposition made this comment about me: " paal maNam maaRaa baalakan" ! :lol: I took it as a compliment ! :)
Next time I visit India I will meet him and as him about Tamil medium! :lol:

chinnakkannan
4th December 2014, 10:29 AM
குட்மார்னிங்க் ஆல்

ராஜ் ராஜ் சார்.. நாஸ்டால்ஜியா சுவையோ சுவை

கல் நாயக் ஜி.. நன்றி.. நேற்று ந.காட்சி பார்க்க முடியவில்லை..இன்று பார்க்கிறேன்..

வாசு சார்.. நான் உங்களைக் கேட்டால் நீங்கள் என்னைக் கேட்கிறீர்களே..எங்கே க்ருஷ்ணாஜி..

parthasarathy
4th December 2014, 02:50 PM
viswajeet my fav.. enna romance .. wow..

Rajesh Ji / Vasu Ji,

He is Biswajeet. Apart from the song you have posted, there will be another superhit song - of course sung by the inimitable Mohd. Rafi - Pukarta Chala Hoon from Mere Sanam. Two songs from Bees Saal Baad - sung by another Bengali (Biswajeet also is a Bengali) - the great Hemant Kumar, Singer-cum-Composer

Vasu Ji - In fact, Biswajeet was once used to be called poor man's Shammi Kapoor (like Vijayakant once used to be called as poor man's Rajini). He, Uttam Kumar and Sourav Ganguly will look almost alike!

Regards,

R. Parthasarathy

kalnayak
4th December 2014, 06:27 PM
A rare song to hear. IRs music. Malaysia Vasudevan & Uma Ramanan Singers. Film: Anbe Odi Vaa.


https://www.youtube.com/watch?v=dsISk1V2x74&index=80&list=PLC9E1F23443CA8AF5

Russellzlc
4th December 2014, 08:05 PM
‘எங்கே போய்விடும் காலம்?..’

திரு.வாசு சார், திரு.ஜி.கிருஷ்ணா சார், எப்படி இருக்கிறீர்கள்?

நண்பர்களோடு இரண்டாவது ஆட்டம் படம் பார்த்து விட்டு, சாலையோர கடையில் டிபன் சாப்பிட்டு, ஆள் அரவமற்ற சாலையில் மூடியிருக்கும் ஏதாவது ஒரு கடை வாசலில் அமர்ந்து படத்தை பற்றி அலசி, அதிகாலையில் டீக்கடையில் பால் குடித்தபின், இனிய நினைவுகளோடு படுக்கச் சென்ற, இழந்து விட்ட அந்த சுகமான அனுபவங்களை இங்கே மீண்டும் பெற முடிகிறது. உங்கள் அனைவருக்கும் நன்றி.

இங்கே உள்ள எல்லாருமே சிறப்பாக எழுதுகிறீர்கள். எந்த பயிற்சியோ, வாய்ப்போ இல்லாத நிலையில் நீங்கள் அற்புதமாக எழுதுவது வியப்பளிக்கிறது. திரு.வாசு சார், பொய் கலப்பற்ற அபரிமிதமான நினைவாற்றல் உங்கள் எழுத்துக்களுக்கு கூடுதல் பலம். திரு.ஜி.கிருஷ்ணா சாரின் அனுபவங்கள் அருமை. திரு.சின்னக் கண்ணன் சாரின் அட்டகாசம் தாங்க முடியல. குறிப்பாக, பல் டாக்டரிடம் அவர் சென்றபோது, ‘தாச்சுக்க சொல்லி ஆ காட்டு...’, இன்னொரு பல்லில் கேவிட்டி இருந்ததைப் பார்த்ததும் (வருமானத்தை நினைத்து) டாக்டரின் முகத்தில் தெரிந்த மலர்ச்சி, ‘பெண்களை விட ஆண்களே அதிகம் உருகுவார்கள் போலிருக்கிறது... ஸோ, நான் என்ன சொல்ல வர்றேன்னா......’ என்று அவர் இடைவெளி விட்டதும், என்ன சொல்லப் போகிறார்? என்று ஒரு விநாடி மனத்துக்குள் கேள்வி எழும்போதே, கண்கள் அடுத்த வார்த்தையில் பாய, அங்கே ‘அதான்..உங்களுக்கே தெரியுமே’ என்று இருந்ததைப் பார்த்ததும் வாய்விட்டு சிரித்தேன். கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், அவருடைய சில கருத்துக்கள் எனக்கு உடன்பாடற்றவை என்றாலும் நண்பர் திரு.கோபாலின் எழுத்துக்களும் எனக்கு பிடிக்கும்.

திரு.சின்னக் கண்ணன் சிரிக்க வைக்கிறார் என்றால் திரு. ஐதராபாத் ரவி அவர்கள் பெருந்தலைவர் பற்றிய கட்டுரையை வெளியிட்டு கண்கலங்க வைத்து விட்டார். (மக்கள் திலகம் திரியில் ‘தரை மேல் பிறக்க வைத்தான்... பாடலுக்கு தங்கள் விமர்சனம் சூப்பர் சார். தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்) அந்த கட்டுரையை வெளியிடும்போது பாடல்களில் இருந்து சற்று விலகி அதை எழுதுவதாக தெரிவித்துள்ளார். இல்லை திரு.ரவி சார். அருமையான பாடலை தெரிவு செய்ய நீங்கள் வழிகாட்டியிருக்கிறீர்கள்.

நேற்று (டிசம்பர் 3) போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின் 30வது ஆண்டு நினைவுநாள். 1984ம் ஆண்டு இதே நாளில் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து வெளியான நச்சுவாயுவால் இறந்தோர் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர். பார்வை இழந்தும் ஊனமடைந்தும் பாதிக்கப்பட்டோர் லட்சக்கணக்கில். இந்த துயரம் நடந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக தப்பிய (தப்ப வைக்கப்பட்ட) யூனியன் கார்பைடு நிறுவன தலைவராக இருந்த வாரன் ஆண்டர்சனும் சமீபத்தில் காலமாகி விட்டார். ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அதைவிட கொடுமை, போபாலில் பூட்டியுள்ள அந்த நிறுவனத்தில் இன்னும் நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் இருக்கின்றன. சுற்றுச் சூழலுக்கும் அந்தப் பகுதி மக்களுக்கும் இப்போதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

1954ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, முதல்வராக பதவியேற்ற பின், ‘கொல்லைப்புற வழியாக (சட்ட மேலவை) வர விரும்பவில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறி குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திரு.காமராஜர். அந்த தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே’ என்று கூறி காமராஜருக்கு முழு ஆதரவு அளித்தார் பேரறிஞர் அண்ணா. இப்படி மாற்றுக் கட்சியினரும் மதிக்கும் தலைவராக, அய்யா பெரியாரால் ‘பச்சைத் தமிழர்’ என்று புகழப்பட்டவராக, ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று புரட்சித் தலைவரால் போற்றப்பட்டவராக.... அன்று ஒரு மண்ணாங்கட்டியின் கண்ணீரைத் துடைக்க ஒரு பெருந்தலைவர் இருந்தார்.

இன்று, தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை அறியாதவர்களாக, ஏமாற்றப்படுகிறோம் என்பதையே உணராதவர்களாக, கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் இந்த நாட்டிலே இருக்கும் கோடிக்கணக்கான ‘மண்ணாங்கட்டி’களின் துயரைத் துடைக்க எந்தத் தலைவர் வரப் போகிறார்? காலம் பதில் சொல்லட்டும்.

அதுவரை.. இந்தப் பாடல் நம்மை ஆற்றுப்படுத்தட்டும். மக்கள் திலகம் நடித்த ‘தாழம்பூ’ படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல். டி-ஷர்ட்டில் மக்கள் திலகம் மட்டுமின்றி, கே.ஆர்.விஜயாவின் பொய்க்கோபமும் அழகு. எனக்கு பாடல்களை தரவேற்றத் தெரியாது. நண்பர்கள் தரவேற்றினால் அனைவரும் பார்த்து ரசிக்கலாம். திரு. டி.எம்.எஸ்.சின் கம்பீரக் குரலில், திரு. கே.வி.மகாதேவனின் இசையில், வாலிபக் கவிஞர் வாலியின் வரிகளில், கேட்போருக்கு நம்பிக்கையூட்டும் பாடல்...

‘எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்...’

நம்பிக்கையுடன் காலம் வரும்வரை காத்திருப்போம்..... நம்பிக்கைதானே வாழ்க்கை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

rajeshkrv
4th December 2014, 09:30 PM
Rajesh Ji / Vasu Ji,

He is Biswajeet. Apart from the song you have posted, there will be another superhit song - of course sung by the inimitable Mohd. Rafi - Pukarta Chala Hoon from Mere Sanam. Two songs from Bees Saal Baad - sung by another Bengali (Biswajeet also is a Bengali) - the great Hemant Kumar, Singer-cum-Composer

Vasu Ji - In fact, Biswajeet was once used to be called poor man's Shammi Kapoor (like Vijayakant once used to be called as poor man's Rajini). He, Uttam Kumar and Sourav Ganguly will look almost alike!

Regards,

R. Parthasarathy

yes yes biswajeet... oru vegathula "V" type panniteen.. there are lot of fav films of biswajeet. April fool with saira banu is my fav .

raagadevan
4th December 2014, 09:39 PM
Here's another one of (my favorite) Biswajeet songs...

https://www.youtube.com/watch?v=p2MWlgXYAzU

rajeshkrv
4th December 2014, 09:59 PM
RD kalakittel
my fav and ur fav... super :thumbsup:

uvausan
5th December 2014, 06:59 AM
இந்த இனிய தீப திருநாளில் , இந்த மதுர கான நண்பர்கள் எல்லோரும் எல்லாமும் பெற்று , இல்லாதோர் இல்லாத நிலைமை வரவேண்டும் என்று மன பூர்வமாக ப்ராத்தனை செய்துகொண்டு , இந்த இனிய பாடலை சமர்பிக்கின்றேன்

அன்புடன்
ரவி

http://youtu.be/IN2yT6ShxLc

vasudevan31355
5th December 2014, 08:25 AM
Thank u Parthasarathi sir.

Thanks again for watching 'mathura ganam' thread.

Biswajit in 'Meri sanam' with Asha parekh. Beautiful song.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ibs7dN2cYsk

vasudevan31355
5th December 2014, 08:29 AM
Another song from Bees Saal Baad (1962 film)

'Kahin deep jale kahin dil'


https://www.youtube.com/watch?v=NHNb5uypKvA&feature=player_detailpage

rajeshkrv
5th December 2014, 08:54 AM
Vanakkam Vasu ji

rajeshkrv
5th December 2014, 09:17 AM
இரண்டு பிரபலமாகாத பாடல்கள்

1. பேசாமல் வா என் பக்கம் நெருங்கு. பாடகர் திலகத்திற்கு வழக்கத்திற்கு மாறாக கீழ் ஸ்தாயில் கலக்க ராட்சசி வழக்கம் போல் கலக்க
விஜயபாஸ்கரின் இசை. படம்:உங்க வீட்டு கல்யாணம்

http://www.divshare.com/download/16498195-ca9



2. அகரம் தமிழுக்கு சிகரம்
இரு துருவம் திரையில் வெங்கல குரலோன் சீர்காழியார்

https://www.youtube.com/watch?v=xGK4Tk6oHI4

vasudevan31355
5th December 2014, 10:12 AM
அன்பு கலைவேந்தன் சார்,

தங்கள் வளமான பாராட்டிற்கும், வாழ்த்துதல்களுக்கும் மிகவும் நன்றி! இங்கே உள்ள எல்லாருமே சிறப்பாக எழுதுகிறீர்கள் என்று மிகவும் பெருந்தன்மையோடு கூறி இருந்தீர்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாங்கள் எல்லோருமே தங்கள் எழுத்திற்கு ரசிகர்கள். அதுதான் நிதர்சனமான உண்மை. அமர்க்களமான சரளமான நடையில் சிறப்பாக எழுதி வெகு குறுகிய காலத்திலேயே எங்களுக்குள் ஐக்கியமாகி விட்டீர்கள்.

இன்னொன்று சார். 'தாழம்பூ' சஸ்பென்ஸ் கலந்து தந்த படம். 'தாழம்பூ' என்ற புத்தகத்தில்தான் அந்த ரகசியம் அடங்கியிருக்கும் என்று என்றோ பார்த்த நினைவு. அசோகன் மறைந்து மறைந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தெரியாமல் மணிமாலாவைப் பார்க்க வருவார். சரிதானே! எம்.ஜி.ஆரின் அண்ணன் என்று நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் காவல் துறை அதிகாரியாய் இருப்பார் அல்லவா! எம்.ஜி.ஆர் இந்தப் படத்தில் 'தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரம் இருக்கும் தரமிருக்கும்' என்ற பாடலும் ரொம்ப பிடிக்கும். அதே போல இன்னொரு பாடல். முன் சொன்ன பாடலை விடவும் பிடிக்கும்.

'தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது'

அதை விடவும் இந்தப் பாடல் பிடிக்கும்.

'வட்ட வட்டப் பாத்தி கட்டி
வண்ண வண்ண சேலை கட்டி
கட்ட்டழகி நடப்பது நாட்டியமா
அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா'

சுசீலா அம்மா கோரஸுடன் சேர்ந்து பாடிய அமர்க்களம்.

இதே பாணியில் ஒரு பாடல் கே.ஆர் விஜயாவிற்கு சுசீலா அம்மா பாடி அற்புதமாக 'சர்வர் சுந்தரம்' படத்தில் அமைந்த பாடல்.

'சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணிற்கு
கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணிற்கு'

'தாழம்பூ' படத்தில் வரும் இன்னொரு பாடல் என்னுடைய முதல் சாய்ஸ்.

'ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும் என்ன வைத்தால் தோப்பாகும்?

மிக மிக அற்புதமான பாடல்.

'வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்'

வளமான வரிகள். விவசாயத்தின் மகிமையை எவ்வளவு உன்னதமமாக உணர்த்துகிறார் பாடலாசிரியர்.


http://www.dailymotion.com/video/xooknr_erikkarai-orathile-mgr_creation

இதோ எனக்கும், உங்களுக்கும் மிகவும் பிடித்த 'எங்கே போய் விடும் காலம்' பாடல் நம் இருவருக்காகவும், பாடலைப் பிடித்த பலருக்காகவும்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=c3bpxkc6BH8

vasudevan31355
5th December 2014, 10:16 AM
வணக்கம் ராஜேஷ்ஜி!

//பேசாமல் வா என் பக்கம் நெருங்கு. பாடகர் திலகத்திற்கு வழக்கத்திற்கு மாறாக கீழ் ஸ்தாயில் கலக்க ராட்சசி வழக்கம் போல் கலக்க
விஜயபாஸ்கரின் இசை. படம்:உங்க வீட்டு கல்யாணம்//

தினம் தினம் நான் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் பாடல். நேற்று இரவு கூட முழுப் பாட்டையும் பாடிப் பார்த்துக் கொண்டேன்.

அதிலும் என் ராட்சசி

'நித்தம் இப்படி ஒத்திகை பார்த்தால் நாடகம் அரங்கேறும்
இந்த பிச்சைக் கண்ணின் இச்சைகள் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்'

என்று பாடும் அழகும், வரிகளின் அர்த்தமு இருக்கிறதே! வாவ்.!

இந்தப் பாடல் இல்லாமல் என் நாளே தொடங்காது முடியாது. நிஜம் நிஜம்.

கலக்கல் பாடலுக்கு நன்றியோ நன்றி.

vasudevan31355
5th December 2014, 10:21 AM
Iru Dhuruvam - Full SongsJuke Box.

அகரம் தமிழுக்கு சிகரம் உண்டு.


https://www.youtube.com/watch?v=zlvYm6FQ-zA&feature=player_detailpage

uvausan
5th December 2014, 10:43 AM
வாழ்க்கை என்பது ஒரு குறுகிய வழிபயணம் . அதற்குள் , நாம் கற்று கொள்ளவேண்டியவைகள் ஏராளம் - முக்கியமானவைகளை தவிர நாம் பல தேவை இல்லாத விஷயங்களை கற்று கொள்கிறோம் - இந்த ஆங்கில கவிதை வாழ்க்கையின் முக்கிய தத்துவத்தை எவ்வளவு அழகாக சொல்கின்றது என்று பாருங்கள்
This message is beyond all relationships, read this poem all.. it's touching reality

When I'll be dead.....,
Your tears will flow,..
But I won 't know...
Cry for me now instead !

you will send flowers,..
But I won't see...
Send them now instead !

you'll say words of praise,..
But I won't hear..
Praise me now instead !

you'll forget my faults,..
But I won't know...
Forget them now, instead !

you'll miss me then,...
But I won't feel...
Miss me now, instead

you'll wish...
you could have spent more time with me,...
Spend it now instead !!

Moral......

''Spend time with every person around you, your families, friends, lover, acquainted....
Make them feel Special,
Because you never know when time will take them away from you forever''...

Life is too short...
Love all
and
Forgive all.

raagadevan
5th December 2014, 12:30 PM
Moral......

''Spend time with every person around you, your families, friends, lover, acquainted....
Make them feel Special,
Because you never know when time will take them away from you forever''...

Life is too short...
Love all
and
Forgive all.

:clap:

This is what I try to tell others, but haven't been too successful in changing too many minds so far! :)

vasudevan31355
5th December 2014, 12:40 PM
http://1234diwali.com/wp-content/uploads/2014/11/Karthigai-Deepam.jpg

கார்த்திக்கை தீப நன்னாளை ஒட்டி கார்த்திகை தீப பாடல்.

'எங்க வீட்டுப் பெண்' படத்தில் சுசீலா அம்மாவின் அமுதக் குரலில் குழுவினரோடு சேர்ந்து ஒலிக்கும்


'கார்த்திகை விளக்கு திருக் கார்த்திகை விளக்கு
கார்த்திகை விளக்கு திருக் கார்த்திகை விளக்கு
கந்தன் வேலன் கடம்பனுக்கு கார்த்திகை விளக்கு
நெஞ்சில் கருணை பொங்க ஏற்றி வைக்கும்
கார்த்திகை விளக்கு'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=O5i89m729cM

uvausan
5th December 2014, 02:01 PM
அருமை வாசு - இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று - நீங்கள் இல்லை என்று சொல்லமுடியாத விஷயங்கள் ஒன்றுமே இல்லையோ !!

uvausan
5th December 2014, 02:14 PM
கார்த்திகை சம்பந்தமாக இன்னும் சில பாடல்கள் :

1. http://youtu.be/mzvLk0n3Nyw

Devaraagam is a 1996 Indian Malayalam-language film starring Arvind Swamy, Sridevi, KPAC Lalitha and Nedumudi Venu.Devaragam is a romantic movie which have a positive ending

2. http://youtu.be/fot8XXvga7g

Movie name : devadhai
director : Nazar
music : gr8 ilayaraja

3. http://youtu.be/aE8i-KSbTMU

Vaanathaippola (English: Like the Sky) is a 2000 Tamil drama film written and directed by Vikraman. The film features Vijayakanth in dual lead roles as well as Prabhu Deva, Livingston, Meena, Kausalya and Anju Aravind. Produced by Venu Ravichandran under Oscar Films, the film has a score and soundtrack composed by S. A. Rajkumar and cinematography handled by Arthur A. Wilson. The film tells the story of a caring brother who makes sacrifices to ensure his three younger brothers succeed in life.

4. http://youtu.be/RUng5gnSj-U
Kayil Deepam-Manasellam Tamil Movie -Ayyangarkulam

uvausan
5th December 2014, 03:07 PM
In an ancient temple, a number of pigeons lived happily on roof top. When the renovation of the temple began for the annual temple feast the pigeons relocated themselves to a Church nearby. The existing pigeons in the Church accommodated the new comers very well.

Christmas was nearing and the Church was given a facelift. All the pigeons had to move out and look for another place. They were fortunate to find a place in a Mosque nearby. The pigeons in the Mosque welcomed them happily.

It was Ramadan time and the Mosque was repainted. All the pigeons now came to the same ancient temple.


One day the pigeons on top found some communal clashes below in a market square. The baby pigeon asked the mother pigeon "Who are these people ".


The mother replied; they are "Human beings". The baby asked, "but why are they fighting with each other". The mother said "These human beings going to temple are called 'Hindus' and the people going to Church are called 'Christians' and the people going to Mosque are called 'Muslims'.


The Baby pigeon asked, "why is it so? Look, when we were in the Temple we were called Pigeons, when we were in the church we were called Pigeons and when we were in the Mosque, we were called Pigeons. Similarly they should be called just 'Human beings' wherever they go".


The mother Pigeon said, 'You and me and our Pigeon friends have experienced God and that's why we are living here in a highly elevated place peacefully. These people are yet to experience God. Hence they are living below us and fighting and killing each other".

Reflect!

எதனை கண்டான் - மதம் தன்னை படைத்தான் - மனிதன் மாறிவிட்டான் , மதத்தில் ஏறிவிட்டான் - காலத்தால் அழிக்க முடியாத வரிகள்
http://youtu.be/Yhrp0_XgjdQ

chinnakkannan
5th December 2014, 04:35 PM
ஹாய் ஆல்..

குட் ஆஃப்டர் நூன்

கலைவேந்தன் சார்.. மிக்க நன்றி.. தங்கள் பாராட்டுக்களுக்கும் ரசித்ததற்கும்.. நீங்கள் மேடையில் பேசுபவர் என நினைக்கிறேன்..சரி தானா.. சரளமாக வருகிறது நடை.வாசு சார் சொல்லியதில் பிழையில்லை.. இன்னும் இன்னும் எழுதுங்கள்...

உடனே சொல்லாததற்கு மன்னிக்க.. நேற்றுப் பார்த்துவிட்டு தாங்க்ஸ் மட்டும் போட முடிந்தது.. நண்பர்கள் வீடு வந்து விட்டனர்..காலையில் கொஞ்சம் வேலை எனப் போய் விட்டது..

போபால் விஷயம் பற்றி எழுதியிருந்தீர்கள்..அதைப்பற்றி –அந்த சம்பவம் நடப்பதற்கு சிலவருடங்கள் முன் போபாலில் இருந்திருந்த என் சகோதரியின் கணவர் கூறியது நினைவில்…” மதுரை பஸ்ஸ்டாண்ட்டிலிருந்து பசுமலை தாண்டியும் உள்ள தூரம் வரை மக்கள் (கிட்டத்தட்ட 6 கி.மி) ஓடி வந்தார்களாம் உயிர்பிழைப்பதற்காக..துயரமான சம்பவம் தான்.. போபாலில் இருக்கும் சில அலுவலக நண்பர்களும் எனக்கு உண்டு..

வாசு சார்.. கார்த்திகை தீபப் பாடல்கள் ஜோர்.. சில பாடல்கள் கேட்டிருக்கிறேன்.. கேட்காத இரண்டு பாடல்கள் கேட்டுச் சொல்கிறேன்..கலைவேந்தன் சார் கேட்ட எங்கே போய்விடும் காலம் பாடலுக்கும் நன்றி.. தூவானம் இது தூவானம், தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் வட்ட வட்ட ப்பாத்திகட்டி எல்லாப்பாட்டுமே ஜோர் தான்.. ஹிந்திப் பாடல்கள் ..ஸாரி..கொஞ்சம் ஹோம் வொர்க் பெண்டிக்க்..

//''Spend time with every person around you, your families, friends, lover, acquainted....
Make them feel Special,
Because you never know when time will take them away from you forever''..// Ravi you made us to feel special..
புறா க்கதையும் ஜோர்.. இங்கு வந்து கிட்டத்தட்ட பன்னிரு வருடங்கள் ஆயிற்று..மூன்றாவது மாடி ஃப்ளாட்.. பால்கனியிலிருந்துபார்தால் தூரத்தில் தெரியும் வறண்ட மலைகள், பின் அருகில் தெரியும் அடுத்த தெருவின் ஒரு வீட்டின் மொட்டை மாடி..ம்ஹூம் தெரியாது..ஏனெனில் ஒரு அழகிய பெரிய மரம் தன் கிளைகளைப் பரப்பி முக்கால் வாசிப் பகுதியை மறைத்திருக்கும்..

சாயந்திரம் ஐந்து மணி ஆனால் போச் (வீக் எண்ட் மட்டும் இருக்கும் போதுகவனித்திருக்கிறேன்..) எங்கிருந்தெல்லாமோ பறந்துவரும் குருவிகள் சர சர வென வானத்திலிருந்து விழுவது போல் அந்த மரத்தில் அடைக்கலம் புகும்.. கீச் கீச் என்ற சத்தம் வெகு இனிமையாக இருக்கும்..2007 என நினைக்கிறேன்.. மஸ்கட்டிற்கும் புயல் என்ற ஒன்று வந்தது..

கோனு என்ற அந்தப் புயல் வந்த பொழுது நான் விடுமுறையில் சென்னையில் இருந்தேன்.. ஜூன் 7 என்னவோ வந்து ஒரு அழிச்சாட்டியம் செய்து விட்டுப் போய் விட்டது.. நான் லீவ் முடிந்து திரும்பியது ஜூன்9 என நினைக்கிறேன்.. சாலைகள் எல்லாம் தண்ணீரால் அரித்துப் போயிருக்க குர்ரம் என்ற இடத்தில் தண்ணீர் முதல் மாடி வரை போயிருந்தது என சொன்னார்கள்..

வீடு இருக்கும் ரூவி அடைந்தால்..குடிதண்ணீர்ப் ராப்ளம்.. நல்ல வேளையாக ஊருக்குப் போ,குமுன் நான்குபாட்டில் குண்டு – தண்ணீர் வாங்கி வைத்துப்போயிருந்ததால் பிரச்னை இல்லை.. வீடு திரும்பி கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு பால்கனி திறந்தால் …எல்லாம் ஓகே தான்…என நினைத்துத்திரும்பலாம் எனப் பார்த்தால்..இல்லை..ஓகேயாக இல்லை..எதிர்த்தெரு மரம் வேரொடு சாய்ந்திருந்தது..

இருந்தாலும் மாலை நேரத்தில் பறவைகள் சாய்ந்த மரத்திலேயே வந்து சென்று கொண்டிருந்தன…கீச் கீச் கூட க் கொஞ்சம் சோகமாய்க் கேட்டதாய் என் மனப்ப்ரமை…

சில தினங்களில் மஸ்கட் முனிசிபாலிட்டி ஆட்கள் வந்து அந்த மரத்தை அடியோடு அகற்றிவிட மனதுக்குள் கொஞ்சம் வருத்தம் கவலை..எங்கு போகும் அந்தக் குருவிகள்..

அவைகளும்காலப் போக்கில் அலைந்து திரிந்து கண்டுபிடித்துவிட்டன போலும் வேறிடத்தை.. வரவில்லை..இல்லை..

என் ஃப்ளாட்டில் என்னறையில் முதலில் விண்டோ ஏசி இருந்தது.சரிவர வொர்க் செய்யவில்லையெனில்.அதை விடுத்து ஒரு ஸ்ப்ளிட் போட்டுவிட்டேன்.. வி.ஏ உபயோகப் படுத்துவதில்லை..

ஒரு வெள்ளிக்கிழமை மதியத் தூக்கத்திற்காக உள் சென்றால் பேச்சுவார்த்தைகள்.. கீச் கீச்.. கண்ணா தூங்கப் போறான் போல.. பாவம் தூங்கட்டும் நீ பேசாதேயேன்.. ஏன்.. ராத்திரி தூங்கறான்ல..இப்ப எதுக்குத்தூங்கணும்.. நீர் என்னுடன் பேசும். அது போய் உருப்படியா ஏதாவது எழுதட்டும்.கீச் கீச் எனக் குரல்கள்.. ஆம்..அவற்றில் சில என் ஃப்ளாட்டின் ஏசி டக்டில் குடிபுகுந்து விட்டன..இன்னும் இன்றும் இருக்கின்றன..(எத்தனாவது தலைமுறையோ!)

உங்கள் புறாக்கதை இந்த நினைவைக்கொண்டு வந்து விட்டது...ரவி சார்..நன்றி..

அனைத்து நண்பர்களுக்கும் எனதுகார்த்திகை தீபத் திரு நாள் வாழ்த்துக்கள்.. ( இங்கே நாளைக்குத் தானாமே..)

chinnakkannan
5th December 2014, 04:49 PM
கார்த்திகை விளக்கு திருக்கார்த்திகை விளக்கு தனிப்பாடல் என எண்ணியிருந்தேன் தாங்க்ஸ் வாசுண்ணாவ்

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்னா நல்லமனசு ரவிண்ணா உங்களுக்கு ..தாங்க்ஸ்..எனக்கு வர்றச்சே ரெண்டு ஆவின்பால்பாக்கெட் வாங்கிண்டு வாங்க!! எங்க ஏரியால இல்லையாம்!

கார்த்திகை தீபம் பாட்டுல்லாம் இல்லாததுனால் கேஜே ஜேசுதாஸின் ஹரிவராசனம்.. சரணம் ஐயப்பா பாட்டு..

http://www.youtube.com/watch?v=_erwHbpNN20&feature=player_detailpage

kalnayak
5th December 2014, 05:37 PM
அனைவருக்கும் கார்த்திகை தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.

https://www.youtube.com/watch?v=kTyd1rrQIQE

Russellzlc
5th December 2014, 06:45 PM
திரு.வாசு சார்,

தாழம்பூ பட பாடல் பாணியிலேயே ‘சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணிற்கு..’ பாடலும் இருக்கிறதே என்று நானும் நினைத்திருக்கிறேன். ஜாம்பவான்கள் நிறைந்த இந்த திரியில் சாமானியனான என்னையும் ஐக்கியப்படுத்திக் கொண்ட உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. நான் ஒரு பாடல்தான் கேட்டேன். நீங்கள் மக்கள் திலகத்தின் இரண்டு பாடல்களை தரவேற்றி மகிழ்ச்சியில் திளைக்க வைத்து விட்டீர்கள். உங்களுக்குப் பிடித்தவர் நடிகர் திலகம் என்றால், நீங்கள் ரசிகர் திலகம். நன்றி சார்.

திரு. சின்னக் கண்ணன் சார், பாராட்டுக்கு நன்றி. நான் மேடையில் பேசுபவன் அல்ல, தொலைவில் இருந்தாலும் எழுத்துக்கள் மூலம் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுடன் பேசுபவன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
5th December 2014, 07:39 PM
கலைவேந்தன் சார்..பேசுங்கள் பேசுங்கள் நிறைய..
உங்களுக்காக பேசுங்கள் எனப் பாட்டு தேடினால் பேசுவது கிளியா வருகிறது..அதை உங்களைச் சொல்லமுடியாது.!.

பேசு என் அன்பே, பேசக்கூடாது என்றெல்லாம் இருக்கிறதா.. என்ன செய்யலாம் என யோசித்ததில்…படத்தின் பெயர் மெல்லப்பேசுங்கள்.. இது வரை இங்கு வராதது என நினைக்கிறேன்..

காதல் சாகாது ஜீவன் போகாது…. ஹீரோயின் யங்க் பானுப்ப்ரியா..ஹீரோ யாரோ! (ஹை தமிழ்ப்படுத்திட்டேனே!)


http://www.youtube.com/watch?v=JamNf5HTGps&feature=player_detailpage

raagadevan
5th December 2014, 08:04 PM
எல்லோருக்கும் வணக்கம்! :)

Here is another "rare" மெல்லப் பேசு song from the movie கண்ணாடி;
lyrics by கவிஞ்சர் கண்ணதாசன், set to music by வி. குமார்,
and sung by வாணி ஜெயராம் & கே.ஜே. யேசுதாஸ்...

https://www.youtube.com/watch?v=5a6syFhcuqQ

chinnakkannan
5th December 2014, 08:30 PM
வாவ் ராகதேவரே மெல்லப் பேசு மேகங்கள் கேட்டாலும் நாணும்.. முதன் முதலில் கேட்கிறேன்

கட்டுக்காவல் ஏதும் இல்லை கையைக் கொஞ்சம் காட்டு..
ம்ம்..
மின்னலைப் போலக் கண்ணால் பின்னலைப் போட்டால் என்ன
அடிக்கடிப் பாடுங்கள் ஆனந்தபைரவி..

இந்தாங்க ராகதேவரே..உங்களுக்காக பகலில் பேசும் நிலவைக் கண்டேன்..செங்கமலத் தீவு ( பேசியது நானில்லைகண்கள் தானே தேடிப்பார்த்தேன் கிடைக்கலை..) வாசு சார் போட்டாச் போட்டாச்சா (ஏன் மெளனம்..என்னோடு வாசுசார் ஏன் பேசவில்லை)

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6tQNQVOCQVM

vasudevan31355
5th December 2014, 09:14 PM
சி.க சார்,

இரண்டு மூன்று நாட்களாக வீட்டில் கார் ஷெட் போடும் வேலை. பெண்டு நிமிர்த்துகிறது வேலை. அதனால்தான் உங்களுடன் மேச் ஆக வில்லை. உங்களுடன் பேசாமல் இருந்தால் எனக்குதான் என்னவோ போல் உள்ளது. நாளை மறுநாள் ஓடி வந்து விடுகிறேன். இந்த ஆட்களை வைத்து ஷெட் போடுவதற்குள்... போதுமடா சாமி.

சி.க, ராஜேஷ், கல்நாயக்,கிருஷ்ணா நாளை சந்திப்போம். இன்று நைட் ஷிப்ட். விடு ஜூட். குட் நைட்.

chinnakkannan
5th December 2014, 09:16 PM
இந்தப் பாட்டு வாசு சார்க்காக.. உலகம் பலவிதம்..ஆசைக் கனவே நீ வா அழகுச் சிலையே நீவா..
பேசும்கண்ணா நீ வா..வா பிரியா நிழலே நீ வா ஆ ஆ லலிதா வித் ந.தி..படம் பார்த்ததில்லை..வாசு சார்..இதுபற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்களா..
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ug13QIPRc6k

ஹை இதுலயும் பேசும் வந்துடுத்தே.. கலைவேந்தன் சார்..
தென்றலாய்த் தெள்ளுதமிழ்த் தேன்பேச்சுப் பேசிடுவார்
நண்பர் கலைவேந்தர் தான்..

நீங்கள் பேசினால் எங்களுக்கு என்ன ஆகும்….,,ம்ம்

ஆடாத மனமும் உண்டோ..கலையலங்காரமும் வண்ணச் சிருங்காரமும் கண்டு..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ogtom7PGgoI

Russellzlc
5th December 2014, 09:34 PM
நண்பர் திரு.சின்னக் கண்ணன் சார்,

பள்ளியில் படிக்கும்போது சிவாஜி ரசிகர்களான உடன் படிக்கும் மாணவர்கள்

சி வா ஜி
வா யி லே
ஜி லே பி

என்று சிலேட்டில் எழுதிக் காட்டுவார்கள். இதை எப்படி படித்தாலும் ஒரே அர்த்தம்தான். இதற்கு போட்டியாக எழுத அப்போது எவ்வளவோ சிந்தித்து தோற்றிருக்கிறேன். இப்போது, உங்கள் தமிழிடமும் நான் அப்படியே. நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

RAGHAVENDRA
6th December 2014, 06:46 AM
பொங்கும் பூம்புனல்

ஆடு புலி ஆட்டம் திரைப்படத்தில் விஜய பாஸ்கர் இசையில் கவியரசர் வரிகள் - வாணி ஜெயராம் குரலில்..

பூங்குயில் பாடுது

http://play.raaga.com/tamil/album/Aadu-Puli-Aattam-1977-T0002090

rajeshkrv
6th December 2014, 07:55 AM
சங்கர் கணேஷின் இசையில் அருமையான பாடல்

https://www.youtube.com/watch?v=vqKNR8kF6qo

வணக்கம் ராகவ் ஜி

Gopal.s
6th December 2014, 07:58 AM
நேற்றுதான் நேரம் கிடைத்து காவியத் தலைவன் பார்த்தேன். ஒரு intense period drama என்ற வகையில் மிக ரசனைக்குரியது.நடிகர்கள் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ஜெய மோகன்- வசந்த பாலன் கூட்டணியில் இன்னுமோர் நல்ல படம்.

இருங்கள் ,இருங்கள் . நான் சொல்ல வந்ததே வேறு.

இத்தனை பண்ணியவர்கள் இதயத்தை கோட் ஸ்டாண்டில் வைத்து techno -music பண்ணி கொண்டிருக்கும் திலிப் என்கிற ரகுமான் என்ற robot இடமா அதனை ஒப்படைப்பது? கே.வீ.மகாதேவன் போன்ற மேதைகள் உயிரோடு இல்லையென்றாலும், பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இதய சுத்தியுடன் , படத்தில் ஆன்மா அறிந்து இசையமைக்கும் இளைய ராஜாவை எப்படி மறந்தார்கள்? இளைய ராஜாவை வைத்து, பழைய கால இசை கருவிகளையே உபயோகித்தோ,அல்லது ஹே ராம் போல புதுமையுடன் ஜீவன் கெடாமலும் பண்ணியிருக்கலாமே? இந்த படம் பார்க்கும் மனநிலையுடன் வரும் பண்பட்ட ரசிகர்கள், ரகுமானின் கன்றாவி இசை கேட்கவா வருவார்கள்?

இவரின் மிக பெரிய ரசிகன் என்ற விதத்தில் ,இவர் சமீப பத்து வருடங்களாக என்னை ரொம்பவே சோதிக்கிறார் ரகுமான். இப்படி involvement இல்லாமல், ஏனோதானோ பின்னணி இசை, பாடல்கள் நான் கேட்டதே இல்லை. இந்த படத்தை இசையே இல்லாமல் எடுத்திருந்தால் கூட ,இதை விட சிறந்த அனுபவத்தை கொடுத்திருக்கும். இளைய ராஜாவின் ஆத்மார்த்த இசை, அவதாரம் அளவிற்கு படத்தை கொண்டு சென்றிருக்கும். அருமையான ஒரு படத்தை ,ஆத்மார்த்தமாக ரசிக்கும் அனுபவத்தை கெடுத்த ரகுமானை, வசந்தபாலன்,பாலா,செல்வராகவன்,மிஸ்கின் போன்ற நல்ல இயக்குனர்கள் நாடாமல் இருப்பது நல்லது.

rajeshkrv
6th December 2014, 08:04 AM
இதயம் தேடும் உதயம் திரையில் இசையரசியின் குரலில் சங்கர் கணேஷின் இசை

https://www.youtube.com/watch?v=bvipnMzwikc

rajraj
6th December 2014, 09:09 AM
( பேசியது நானில்லைகண்கள் தானே தேடிப்பார்த்தேன் கிடைக்கலை..)


chinnakkaNNan: Here is 'pesiyadhu naanillai....' :)


http://www.youtube.com/watch?v=tJP8HTF8ZtI

uvausan
6th December 2014, 03:54 PM
Adi Sankara was walking through the market place with his disciples.

They saw a man dragging a cow by a rope.Sankara told the man to wait
and asked his disciples to surround them. 1“I am going to teach you something” and continued...

“Tell me who is bound to whom? Is the cow bound to this man or the man is bound to the cow?

The disciples said without hesitation “Of course the cow is bound to the man! The man is the master. He is holding the rope. The cow has to follow him wherever he goes. The man is the master and the cow is the slave.”

“Now watch this”, said Sankara and took a pair of scissors from his bag and cut the rope.

The cow ran away from the master and the man ran after his cow. “Look, what is happening”, said Sankara
“Do you see who the Master is? The cow is not at all interested in this man. The cow in fact, is trying to escape from this man.” This is the case with our MIND.

Like the cow, all the non-sense that we carry inside is not interested in us. WE ARE INTERESTED IN IT, we are keeping it together somehow or the other. We are going crazy trying to keep it all together under our control.

The moment we lose interest in all the garbage filled in our head, and the moment we understand the futility of it, it will start to disappear. Like the cow, it will escape and disappear.” We can allow disappearing of all the unwanted things from our mind and feel relaxed.

If all unwanted things go from our minds , we can happily own and sing this song - Is it not ?


ஆண் =தென்றல் தொடாத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோ -அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ ? பெண் = இந்த உறவினில் தடை ஏது ? இந்த பிறவியல் கிடையாது , பனி ஓடுவதும் மலை தேடுவதும் நம்மை பார்ததினால்தானே .!! என்னே காதல் வரிகள் .................கண்ணதாசனுக்கு மரணமே இல்லை என்று உணர்த்திய பாடல் .

http://youtu.be/iEzkwgYXYY0

JamesFague
6th December 2014, 10:30 PM
Enjoy the melody song


http://youtu.be/N2RXpMC-1r8

JamesFague
6th December 2014, 10:32 PM
Enjoy the lovely song from the movie Hamraaz


http://youtu.be/XXICci7VtbU

uvausan
7th December 2014, 10:33 AM
Once upon a time, there lived school of fish in a pond. Everyday, they would wake up in the morning with a dread - the fisherman’s net! The fisherman would be there every morning, without fail to cast his net. And without fail every morning, some fish would get caught in it. Some would be taken by surprise, some caught napping, some would not find any place to hide while some others, even though aware of the lurking danger, would simply find no means to escape the deadly net.

Among the fish was one young fish that was always cheerful. It had no fear of the fisherman’s net and it seemed to have mastered the art of being alive and staying lively. All the senior fish wondered as to what might be the secret of this little fish. How could it manage so well when their cumulative experience and wisdom were not enough to save them from the net. Unable to bear their curiosity and desperate to find a way to escape the net, all the fish went to this little fish one evening.

“Hey little one! We have all come here to talk to you.”

“Me!?” said the little fish, “What do you want to speak to me about?”

“We actually want to ask you something. Tomorrow morning, the fisherman will be back again. Are you not scared of getting caught in his net?”

“The little fish smiled, “No! I will not be caught in his net ever!”

“Share with us little one, the secret behind your confidence and success”, the elders pleaded.

“Very simple”, said the little fish. “When the fisherman comes to cast his net, I rush and stay at his feet. That is one place that the net can never reach, even if the fisherman wants to cast! So, I never get caught.”

All the fishes simply marveled at the simplicity of the little fish’s wisdom.

Similarly when we cling to the company of good people , we can escape the net others throw at us .

We are in the last month of this year . Just felt I should thank everyone who made me smile this year. You are one of them - so here is a Big " Thank You"

இந்த திரியில் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த இனிய பாடலை சமர்ப்பணம் செய்கிறேன் - இந்த பாடலில் சந்தோஷம் , மன அமைதி , பிறரை பாராட்டும் தன்மை , எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறும் வாழ்த்துக்கள் , சேர்த்து இருந்தால் மகிழ்ச்சிக்கு அளவேது என்று முடியும் வரிகள் எல்லாமே கிடைக்கும் - வருடங்கள் ஓடலாம் - நண்பர்கள் மாறலாம் - ஆனால் என்றும் தேவையாக இருப்பது நம்முள் இருக்கும் ஒற்றுமைதான் ------

http://youtu.be/0lFpu5z0oPU

JamesFague
7th December 2014, 12:58 PM
Classic song from the movie Navrang Adha hai chandrama. Superb melody song


http://youtu.be/8Ni0ryO4V_E

JamesFague
7th December 2014, 01:01 PM
Great song from the movie Geet Gata Chal Shyam teri bansi pukare


http://youtu.be/LK352D916ZA

JamesFague
7th December 2014, 01:04 PM
Enjoy the song from the movie Anurodh starring Rajesh Khanna


http://youtu.be/YnVlwM9f7n0

JamesFague
7th December 2014, 01:06 PM
Enjoy the superb song starring Rajesh Khanna from the movie Agar Tum na Hota



http://youtu.be/1PoKegwKnVo

JamesFague
7th December 2014, 01:11 PM
Enjoy the superb melody song from the movie Aasha. Nice composition.


http://youtu.be/_CBRbv3dGYM

Richardsof
7th December 2014, 03:07 PM
http://i60.tinypic.com/2il2f0w.jpg

Richardsof
7th December 2014, 03:11 PM
http://i59.tinypic.com/263hw0h.jpg

sivaa
8th December 2014, 08:55 AM
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை
காவியத்தலைவன் விமர்சனம்
கனடாவில் வெளிவரும் வீடு பத்திரிகையிலிருந்து

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/001_zps97d6b28b.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/001_zps97d6b28b.jpg.html)

http://i157.photobucket.com/albums/t55/sivaa14/005_zps79265135.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/005_zps79265135.jpg.html)
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/006_zpsacda5cd8.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/006_zpsacda5cd8.jpg.html)

kalnayak
8th December 2014, 03:38 PM
நிறைய முரணான விமர்சனங்களை காவியத்தலைவன் படம் பெற்றுக்கொண்டுள்ளது. கதை, திரைக்கதை, நடிப்பினை விடுங்கள். இசையும், பாடல்களும் சரியாக இப்படத்திற்கேற்றவாறு பொருந்தவில்லை என்பது பலராலும் சொல்லப்படுகிறது. எனக்கும் அவ்வாறே படுகிறது!!!

vasudevan31355
8th December 2014, 05:24 PM
மாலை மதுரம்

துள்ளி துள்ளி எங்கே போராய் தாரா
சுகமாக வாழ்வோம்
கண்ணால் பாராய் தேவியே
உன்னால் நானே ஓடி அலைந்தேன் தாரா
ஓ... வாராய்

'நாட்டியத் தாரா' படத்தில் என்.டி.ஆர் அஞ்சலிதேவியைத் துரத்தி துரத்தி பாடும் உற்சாகப் பாடல். கண்டசாலாவின் கந்தர்வக் குரலில்.


https://www.youtube.com/watch?list=PLavWHS_Nw0fNDu47A6nyKuR5URmKUbYSx&v=BOjYVutwaoQ&feature=player_detailpage

vasudevan31355
8th December 2014, 05:31 PM
யானை வளர்த்த வானம்பாடி மகன் மாஸ்டர் பிரபாகரன் தன் அன்னையைப் பற்றி குட்டிப் பொண்ணு ஸ்ரீதேவியிடம் சொல்லும் கதை. அம்மா வளர்ந்த விதம். பின்னணியில் ஒலிக்கும் சீர்காழியின் குரல். 'கண்ணே வண்ணப் பசுங்கிளியே...கண்ணின் பாவையே கண்ணுறங்காயே...


https://www.youtube.com/watch?feature=player_profilepage&v=QnDEBnksyn4

vasudevan31355
8th December 2014, 05:40 PM
'எங்கள் குடும்பம் ரொம்பப் பெரிசு' படத்தில் ஒலிக்கும் சுசீலா அம்மா, பாடகர் திலகம் பாடும் பாடல்

'ராதா மாதவ விநோத ராதா'

பாடலைக் கேட்கும் போது 'அமுதைப் பொழியும் நிலவே' பாடலும், 'ஆஹா இன்ப நிலாவினிலே' பாடலும் ஞாபகம் வராமல் இருக்க முடியாது.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=APn9qLdxBxU

vasudevan31355
8th December 2014, 05:46 PM
நிறைய முரணான விமர்சனங்களை காவியத்தலைவன் படம் பெற்றுக்கொண்டுள்ளது. கதை, திரைக்கதை, நடிப்பினை விடுங்கள். இசையும், பாடல்களும் சரியாக இப்படத்திற்கேற்றவாறு பொருந்தவில்லை என்பது பலராலும் சொல்லப்படுகிறது. எனக்கும் அவ்வாறே படுகிறது!!!

கல்நாயக்,

உங்களின் இந்தப் பதிவுக்கு கீழ்வரும் பாடலே பதில்

'நினச்சது ஒன்னு... நடந்தது ஒன்னு... அதனாலே முழிக்குது அம்மாக் கண்ணு'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oRR2iaB6miI

JamesFague
8th December 2014, 07:26 PM
Classical song from the movie Guddi starring Jaya Baduri sung by Vani Jayaram Humko mann ki shakthi dena



http://youtu.be/a0VhLqzPqVA

JamesFague
8th December 2014, 07:28 PM
Superb song from the movie Julie. All time super song.


http://youtu.be/-vixa5ipGzQ

JamesFague
8th December 2014, 07:29 PM
One more superb song from the same movie.


http://youtu.be/-woNniQJZPQ

JamesFague
8th December 2014, 07:35 PM
Enjoy the fantastic song from the movie Parichay


http://youtu.be/woYpl85_l6A